Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17206 articles
Browse latest View live

டைரி

$
0
0

dairy

ஜனவரி பதினாறாம் தேதி காலையில்தான் நான் இவ்வருடத்திய டைரியை வாங்கினேன்.  மலிவானதும் அதேசமயம் அதிக பக்கங்கள் வருவதுமான டைரி. நூறு ரூபாய். வழக்கமாகவே நான் டைரி எழுத தாமதமாகும். நாஞ்சில்நாடன் அவரது ‘பிராடி ஆண்ட் கம்பெனி’ டைரியை ஜனவரி பத்து வாக்கில்தான் தருவார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்– அதாவது ‘நாஞ்சில் ஏஜென்ஸீஸ்’ உரிமையாளராக ஆகிவிட்டார். இவ்வருடம் நான் சென்ற டிசம்பர் பதினெட்டு அன்று ஊரைவிட்டு கிளம்பியபின் பதினாறாம்தேதிதான் வந்துசேர்ந்திருக்கிறேன். அதாவது எனக்கு இப்போதுதான் இவ்வருடம் ஆரம்பிக்கிறது.

நான் பலவருடங்களாக டைரி எழுதுகிறேன். 1986ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவர் என்னிடம் ‘எழுத்தாளர்கள் கண்டிப்பா டைரி எழுதணும். அவனோட மனநிலைகளை அவனே அப்ஸெர்வ் பண்றதுக்கு அது அவசியம். ரொம்ப அந்தரங்கமா எழுத ஆரம்பிக்கிறப்பதான் நம்ம மொழி எவ்ளவு போதாமைகளோட இருக்குங்கிறது தெரியும். டைரி எழுதறப்ப யாருமே வாசிக்கப்போறதில்லைங்கிற ஒரு சுதந்திரம் வருது. அதில நாம் இன்னும் கொஞ்சம் சகஜமா இருப்போம். எந்த எழுத்தாளனோட டைரியும் அவனோட கிரியேட்டிவ் லேங்வேஜிலே இருக்காது…அது பாட்டுக்கு இருக்கும்…”என்றார்.

சுந்தர ராமசாமி உண்மையில் தொடர்ச்சியாக டைரி எழுதுபவரல்ல. எழுதுவார், எழுதாமலும் இருப்பார். அவரது டைரியை அவரே தந்த சில பக்கங்களை நான் படித்திருக்கிறேன். அவரது வழக்கமான நடையில்தான் அவை இருக்கும். தன்னால் தான் நினைத்ததுபோல நாட்குறிப்புகள் எழுத முடியவில்லை என்று சுந்தர ராமசாமி வருந்துவது உண்டு.

நான் டைரி எழுத ஆரம்பித்தபின் எனக்கு அது ஒரு இன்றியமையாக ஆகிவிட்டது. என் டைரியில் அந்தரங்கமாக ஏதும் இருக்காது. அந்தரங்கமாக நேரடியாக எழுத முடியாது என்பதே என் எண்ணம். ஏனென்றால் அந்தப் பார்வை நம்மை பலவகையான சங்கடங்களை நோக்கித்தள்ளக்கூடியது. நம்முடைய அந்தரங்கத்தை நாம் நேரடியாகச் சொல்ல முடியாது என்ற கட்டாயமே நம்மை புனைவெழுத்தை நோக்கி கொண்டுசெல்கிறது.  நம் அந்தரங்கத்தை நாம் ஒரு புனைவுச்சூழலுக்குக் கொண்டுபோனால் சுதந்திரமாக எழுத முடியும்.

ஆகவே நான் என் நாட்குறிப்புகளை மிகவும் பொத்தாம் பொதுவாக , அவசியமான நினைவுகள் மற்றும் நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் மிகமிக அலட்சியமாகவும் சொல்வதற்காகத்தான் எழுதியிருக்கிறேன்.பெரும்பாலும் கதைகளை எழுதியது, பிரதி எடுத்தது, அனுப்பியது, வாசித்த நூல்கள், அவற்றின் மீதான கருத்துக்கள், பயணங்கள், நண்பர்களைச் சந்தித்தது இப்படித்த்தான் இருக்கும். மிக அபூர்வமாகவே உணர்வெழுச்சிகள். படைப்பு சார்ந்த மன எழுச்சிக்கு ஆளாகி தூக்கமிழந்த இரவுகளில் விரிவான குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

தியானம் பழகிய நாட்களில் அந்த அனுபவங்களை மட்டும் தனியாக ஒரு குறிப்பேடாக எழுதிவந்தேன். அவற்றில் தியானத்தைப்பற்றி மட்டுமே இருக்கும். அந்த குறிப்புகள் மிகத்தீவிரமான மொழியில், பலசமயம் உச்சகட்ட கவித்துவத்துடன், ஆனால் கட்டற்ற நடையில் இருக்கின்றன. அவற்றை என்றாவது பிரசுரம்கூட செய்யலாம். இந்த டைரிக்குறிப்புகள் எனக்கு என் நினைவுகளை மீட்டுவதற்கு மட்டுமே உதவக்கூடியவை.

ஆனால் எனக்கு டைரி ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே மிக முக்கியமானது. என் வாழ்நாளை நான் பயனுள்ளமுறையில் செலவிட்டிருக்கிறேனா என்று அதன் வழியாக நான் கண்காணிக்கிறேன். என்னுடைய டைரிக்குறிப்புகள் எல்லாமே ஒரே கேள்வியுடன் தான் ஆரம்பிக்கின்றன. அந்த நாளை நான் எப்படிச்செலவிட்டேன்? எழுதுவது, படிப்பது, பயணம்செய்வது ஆகியவற்றைச் செய்யும் நாளை மட்டுமே நான் என்னுடைய நாளாக எண்ணிக்கொள்கிறேன்.

பிற நாட்கள் எல்லாமே வீண்தான் எனக்கு. வீடுகட்டும் வேலைகள், அலுவலகவேலைகள், உறவுகளைப்பார்க்கப்போவது, கல்யாணங்கள், சடங்குகள் எல்லாமே என் நோக்கில் நாளை வீணடித்தலாகவே பொருள்படுகிறது. அவ்வகையில் நான் நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட நாளைப்பற்றி மகிழ்ச்சியுடன் குறித்திருக்கிறேன். அப்படி அல்லாத நாட்களைப் பற்றி சோர்வுடன் எழுதியிருக்கிறேன்.

இப்போது என் டைரிகளை எடுத்துப்புரட்டும்போது ஆச்சரியமாக இருக்கும் விஷயம் ஒன்று உண்டு. மிகப்பெரும்பாலான நாட்களை ‘இன்று உற்சாகமான நாள். இன்று …. எழுதினேன்.’ என்ற வகையான சொற்றொடருடன்தான் ஆரம்பித்திருக்கிறேன்.  கடந்த பதினைந்து வருடங்களில் நான் உற்சாகமில்லாமல் இருந்த நாட்கள் மிகமிகக் குறைவு. எழுதாமல் வாசிக்காமல் பயணம்செய்யாமல் அன்றாடவாழ்க்கையில் வீணடித்த நாட்கள் ஒருசதவீதம் கூட இருக்காது. மகிழ்ச்சியின் பரப்பிலேயே இந்நாட்களை முழுக்கக் கழித்திருக்கிறேன் என்பதை எண்ணும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

அதற்கு நான் முக்கியமாக அருண்மொழிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்பதையும் இந்த டைரிகள் காட்டுகின்றன. எனக்கும் அருண்மொழிக்கும் இடையேயான பெரிய மனக்கசப்பு அல்லது பூசலின் நாட்கள் ஒன்றுகூட பதிவுபெறவில்லை. அப்படி ஒரு குறிப்பிடத்தக்க மோதல் எதுவும் இந்த பதினேழு வருடங்களில் எங்களுக்கிடையே நிகழவேயில்லை. பெரும்பாலான தருணங்களில் அன்றாடவாழ்க்கையின் சிக்கல்கள் என் வரையில் வந்துசேராமல் அவளே பார்த்துக்கொண்டிருக்கிறாள். என்னுடைய உறவினர்கள் அனைவரிடமும் மிக நல்ல உறவை தெளிவாக மேற்கொண்டு அதன் விளைவான மனச்சிக்கல்கள் ஏதும் விளையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

இரண்டாவதாக, இந்த வருடங்கள் முழுக்க கீதை எனக்களித்திருக்கும் ஊக்கத்தைச் சுட்டிக்காட்டவேண்டும். 1987 ல் நான் காஸர்கோட்டில் இருக்கும்போது  என் யோகசாதனையில் முழுமை கைநழுவிப்போய்க்கொண்டே இருந்ததனால் கடும் மனஉளைச்சலுக்காளாகி ஊரைவிட்டுக் கிளம்பி நெடும் அலைச்சலை அடைந்து சோர்ந்து கர்நாடக மாநிலத்தில் தார்வாட் அருகே ஒரு ஊரில் இருக்கையில் கீதையை மீண்டும் வாசித்தேன். அங்கிருந்து வேறு ஒருமனிதனாக எழுந்த நாள்முதல் இக்கணம் வரை என்னுடன் கீதை இருந்துகொண்டிருக்கிறது

இந்த இருபதுவருடங்களாக எனக்கு சோர்வென்பதே இல்லை. நான் ஒரு கணம்கூட சலிப்பையும் விரக்தியையும் உணர்ந்ததில்லை. எந்த விளைவுக்காகவும் நான் மனம் தளர்ந்ததில்லை. இந்த இருபது வருடங்களில் எத்தனையோ எதிரிகள் உருவாகி இருக்கிறார்கள், மறைந்திருக்கிறார்கள், மீண்டும் எதிரிகள் உருவாகியிருக்கிறார்கள். என் மீது வசைகள் கொட்டப்பட்டிருக்கின்றன. அவதூறுகள் பொழியப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் எப்போதும் நகைச்சுவையுடன் மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த டைரிகளில் நான் ஒருமுறைகூட ஒரு தாக்குதலைக்கூட பொருட்படுத்தி ஏதும் எழுதியதில்லை என்பதைக்காண எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னை ஓயாது தாக்கி எழுதிய பலரின் பெயரையே இந்த டைரிகளில் காணமுடியவில்லை.

என்னுடைய கர்மங்களின் தளத்தில் எப்போதும் தீவிரமாக இருந்துகொண்டிருப்பவன் நான். தீவிரம் இன்றி எதையுமே சாதிக்க முடியாதென உணர்ந்தவன்.ஆனால் உள்ளூர இந்த ஆட்டம் ஒருவகை விளையாட்டு மட்டுமே என்ற உணர்வுடன்தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஆகவேதான் இதை உள்ளூரப்பொருட்படுத்தாமல் இருக்கிறேன்.

இந்த டைரிகளைப் புரட்டும்போது என் பார்வையில் முக்கியமாகப்பட்டிருப்பதைப் பார்க்கையில் என்னை எனக்கு பார்க்க முடிகிறது. குழந்தைகளைப்பற்றி எழுதித்தள்ளியிருக்கிறேன். நாய்களைப்பற்றி குறிப்பு இல்லாத நாளே இல்லை. இந்த டைரிகளை வைத்தே என் நாய்களுக்கு எப்போதெல்லாம் வயிறு சரியில்லாமல் இருந்தது என்று பட்டியலிட்டுவிடலாம் என்றாள் அருண்மொழி. இந்த டைரிகளில்  பல இடங்களில் வெயில், மழை, இனிய காலை நேரங்கள் பற்றிய உணர்ச்சிகரமான சித்திரங்கள் உள்ளன. பயணம்போன ஊர்களைப்பற்றிய அற்புதமான வர்ணனைகள் உள்ளன. தற்கொலைக்குத்தப்பிய் ஒருவருக்க்கே இந்த பூமி என்பது எத்தனை பெரிய ஆனந்தவெளி என்பது புரியும்.

அத்துடன் அருண்மொழியைப்பற்றிய வர்ணனைகள் நெகிழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. என்னை மணம் செய்யும்போது அவள் மிக்ச்சிறிய பெண். இருபது அப்போதுதான் முடிந்திருந்தது. மன அளவில் பதினெட்டு எனலாம். அவளுடைய வளர்ச்சியின் சித்திரத்தை முழுமையாக இந்த டைரிகளைக் கொண்டு உருவாக்கிவிடலாம்.

சென்ற 2008 ஜனவரி பதினாறு அன்று கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து திரும்பி வந்திருக்கிறேன். நாகர்கோயில் வந்ததே தெரியாமல் தூங்கி யாரோ ஒருவரால் தட்டி எழுப்பப்பட்டு பதறியடித்து இறங்கியிருக்கிறேன். ஆதிமூலம் இறந்த செய்தி இரவில் ரவி சுப்ரமணியத்தின் குறுஞ்செய்தியாக வந்திருக்கிறது. காலைவில் வீடுவந்துசேர்ந்தபோது அதைக் கண்டேன் அவரைப்பற்றிய நினைவுகள் அலைந்தன மனதில்

ஆதிமூலம் பற்றி ஒரு குறுங்கட்டுரை எழுதி என் இணையதளத்தில் போட்டிருக்கிறேன். நாகார்ஜுனனுக்கு அவரைப்பற்றி நான்  நகைச்சுவையாக எழுதியது ஒருவகை எழுத்துமுறையே ஒழிய அவர்மீதான விமரிசனம் அல்ல என்று ஒரு நீள்கடிதம் போட்டிருக்கிறேன். அலுவலகம் சென்று சுரேஷிடமும் பாலாவிடமும் ஷாஜியிடமும் பேசியிருக்கிறேன். ‘தி மாஸ்டர் கிறிஸ்ட்டியன்’ என்ற நாவலையும் ‘சீவசிந்தாமணியை’யும் படித்திருக்கிறேன்.

பழைய டைரிகளை எடுத்து வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். சென்ற நாட்கள் வழியாக உலவுவது ஓர் இனிய அனுபவம். சென்ற காலம் போல கனவுத்தன்மை கொண்ட ஒன்று வேறு இல்லை. நாம் தொடமுடியாத ஓர் உலகம். ஆனால் நாம் இருந்துகொண்டிருக்கும் உலகமும் கூட.

1991ல் டைரி ஆரம்பிக்கும்போதே ஒரு கவிதைவரி. ‘பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலனழிந்தொரு புத்துயிர் எய்துவேன்’  அருண்மொழியின் காதல் வெறியுடன் இருந்த காலகட்டம் அது. ஏராளமான கவிதைகள். ஜனவரி 15 ஆம் தேதி ஒரு கவிதை. தலைப்பில்லாதது
மௌனமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

சிறு குருவி போல இயல்பான எச்சரிக்கையுடன்
கவனிக்கப்படாத அழகின் அத்தனை நளின சலனங்களுடன்
கோயில்சிற்பத்தின் சலனமில்லா முழுமையுடன்
அமர்ந்திருக்கிறாள்
ஒரு பெண் மட்டுமல்ல அவள் என்பதுபோல

மௌனமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
முடிவற்ற இந்தக்கணத்தில்
இப்படியே ஸ்தம்பிக்க வேண்டும் இந்த மாலை
என் கண்கள் என் சித்தம் என் தூய இளமை..

மானுடக்கனவின் முடிவிலாத திரையில்
இப்படியே படிந்திருக்கவேண்டும் இவள் வடிவம்
நிரந்தரமாய்

நிலையற்றதென ஒவ்வொருகணமும் கூவியபடி .

*
அனேகமாக இக்கவிதையை இதுவரை அருண்மொழி மட்டுமே படித்திருப்பாள் என நினைக்கிறேன்.

அதற்கு அடுத்தநாள், ஜனவரி 16 அன்று காலிப்பக்கம். முந்தையநாள் அடைந்த மன எழுச்சியின் மறுபக்கம் அது.  பொங்கிய கடல் அடங்குகிறது. ஒருவரிகூட எழுத முடியாத வெறுமையின் இன்பம். அவ்வருடம் ஆகஸ்ட் 8 அன்றுதான் அருண்மொழியை மணம்புரிந்துகொண்டேன்.

1992ல் ஜனவரி 16 ஆம்தேதி அருண்மொழி ஜனவரி 17 அன்று அவள் அம்மாவீட்டுக்குச் செல்லப்போகும் மனநிலையில் உற்சாகமாக இருக்கிறாள். அவள் பிரிவை விசித்திரமாகக் கற்பனைசெய்துகொண்டு சற்று சீண்டப்பட்டு நான் எழுதியிருக்கிறேன். என்னைப்பிரிந்துபோவது அத்தனை உற்சாகமா அவளுக்கு என்ற தொனியில். ஆனால் தாயைப்பார்க்கப்போவது யாருக்கும் உற்சாகமானதுதானே என்ற சமாதானமும் எழுதப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தை எடுத்து படித்துப்பார்த்து சில பகுதிகளை திருப்பி எழுதியிருக்கிறேன்.

1993ல் ஜனவரி 16 அன்று மதுரை பெருங்குடி கிராமத்தில் இருந்தேன். அருண்மொழி தபால்துறையில் வேலைகிடைத்து பயிற்சிக்காக வந்திருந்தாள். அஜிதனைக் கருவுற்றிருந்தாள். எட்டு மாதம். சுரேஷ்குமார இந்திரஜித் பிடித்துக்கொடுத்த வீடு. அருண்மொழியின் அப்பாவும் அம்மாவும் வந்து அவளுடன் அங்கே தங்கியிருந்தார்கள். நான் நேற்று பெருங்குடி வந்து அங்கே தங்கியிருந்தேன். பகலில் அருண்மொழி வகுப்புக்குச்செல்ல நான் பகலெல்லாம் வீட்டில் இருந்து கன்னடநாவல் ‘ஒருகுடும்பம் சிதைகிறது’ [எஸ்.எல்.பைரப்பா] வாசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். மாலையில் செம்பிழம்பாக சூரியன் அஸ்தமிக்கும் பெருங்குடி ஏரிக்கரை ஓரமாக நானும் அருண்மொழியும் நடந்துசென்றிருக்கிறோம்.

1994ல் ஜனவரி 16 ஆம்தேதி மதுரையில் இருந்திருக்கிறேன். வைகை சிவராமன் வீட்டில். சுந்தர ராமசாமியும் கூட இருந்தார். இரவெல்லாம் பேசிக்கோண்டிருந்துவிட்டு காலையில் எழுந்து மீண்டும் பேசி பின்மதியத்தில் நான் அங்கிருந்து கிளம்பினேன். இரவு பன்னிரண்டு மணியளவில் பட்டுக்கோட்டைக்கு வந்தேன். எடித் வார்ட்டன் என்ற நாவலாசிரியரைப்பற்றி சிவராமன் சொல்லி அவரது ஒரு சிறுகதைத்தொகுதியைத் தந்தார். அந்த நூலை பஸ்ஸில் படித்துக்கொண்டே வந்தேன். சுந்தர ராமசாமியுடனான என் உரையாடல்களை ஒரு தொகுப்பாக எழுதினாலென்ன என்ற எண்ணத்தை எழுதியிருக்கிறேன். அது முழுக்க முழுக்க என் அனுபவம் சார்ந்ததாக இருக்க வேண்டும். என்னுடைய எதிர்கொள்ளல்களும் அதில் இருக்க வேண்டும்.

1995 ல் ஜனவரி 16 ஆம் தேதி காலையில் பட்டுக்கோடையிலிருந்து நானும் அருண்மொழியும் அஜிதனும் என் மாமனாருமாக கிளம்பி புதுக்கோட்டை அருகே அருண்மொழியின் அத்தை விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்றோம். மதியம்தான் சென்றுசேர்ந்தோம். போகும் வழியில் அருண்மொழி அழகாக இருப்பதாக உணர்ந்து பரவசம் கொண்டதைப்பற்றி ஒரு பெரும் வர்ணனை

அஜிதனுக்கு அங்கிருந்த கீபோர்டு பொம்மை மிகவும் பிடித்துப்போக பகல் முழுக்க ஒரே கீய்ஞ் கீய்ஞ் என்ற ஒலி கேட்டபடியே இருந்தது. அஜிதனின் குணத்தில் ஒரு சிறப்பம்சத்தைக் கவனித்தேன். அருண்மொழியின் அத்தையின் மகன் மோகன் போடும் பந்தைப்பிடிக்க அஜிதன் முயல்கிறான். பிடிக்க முடியாதபோது வேணாம் என்று விட்டுவிட்டு திரும்பிக்கொள்கிறான். மோகனே பந்தைக் கொடுப்பான் என எதிர்பார்க்கிறான். பெரியவர்களிடம் மட்டுமே விளையாடியதனால் வந்த குணம் அது என்று எழுதியிருக்கிறேன்.

1996ல் ஜனவரி 16 ஆம் தேதி காலையில் பட்டுக்கோட்டையில் இருந்து தருமபுரி வந்தேன்.  அருண்மொழியின் பெரியப்பா ராஜப்பா தற்கொலை செய்துகொண்டமையால் அவர்கள் வீட்டில் அவ்வருடம் பொங்கல் இல்லை. சும்மா ஊருக்குப்போய் இருந்துவிட்டு பேருந்தில் திரும்பிவந்தோம். அருண்மொழி விடுப்பு எடுத்து படுத்துவிட்டாள். நான் தூங்கி எழுந்து கொஞ்சநேரம் வாசித்துவிட்டு மாலை நான்கு மணி நாற்பது நிமிடத்தில் தொடங்கும் வேலைக்கு வந்துவிட்டேன்.

1997ல் ஜனவரி 16 ஆம் தேதி முழுக்க சிறுகதை ‘தாண்டவ’ த்தை பிரதியெடுப்பதில் செலவாகியிருக்கிறது. கதையில் நிறைய கிளீஷேக்கள் இருப்பதாக அருண்மொழி சொல்லியிருக்கிறாள். ஆகவே சற்றே மனம் சோர்ந்து அதை உடனே தபாலில் சேர்க்க வேண்டாமென முடிவுசெய்து கதையை மறு அமைப்புசெய்தாலென்ன என்று எண்ணியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் தோன்றவில்லை. ‘கரியபறவையின்குரல்’ என்ற என்னுடைய கதை நன்றாக இருக்கிறதென்று செல்வம் என்ற மொரப்பூர் நண்பர் தொலைபேசியில் சொன்னார்.

1998 ல் ஜனவரி 16 ஆம் தேதி நான் ஆனந்த் என்ற நண்பருடன் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். ஆற்றூர் இருப்பாரெனச் சொல்லபப்ட்ட விடுதியில் ஆற்றூர் ரவிவர்மா வந்துசேர்ந்திருக்கவில்லை. ஆகவே அப்படியே திருவையாறுக்குச் சென்றிருக்கிறோம். ஆற்றூர் திருவையாறிலும் இல்லை. அருண்மொழியிடம் கிளம்பி தஞ்சை வரச்சொல்லி போன்செய்தேன். தனியாக எப்படி வருவது என்று அவள் சொல்ல கோபித்துக்கொண்டு ·போனை வைத்துவிட்டேன். ஆற்றூர் திருவையாற்றுக்கு வந்தார். காலையில் தஞ்சை பெரியகோயிலுக்குச் சென்றாராம்.

அருண்மொழியிடம் கோபித்துக்கொண்டு மதியம் சாப்பிடாமல் இருந்தேன். அருண்மொழியிடம் மீண்டும் ·போனில் பேசினேன். சாப்பிட்டாயா என்றாள். இல்லை என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டேன். மாலை ஆறுமணிக்கு அருண்மொழி தனியாகவே கிளம்பி வந்துவிட்டிருந்தாள். வந்ததுமே என்னை அழைத்துச்சென்று டிபன் சாப்பிட வைத்தாள். அவள் வந்த பிறகுதான் மனம் இசையில் சென்றது. ராஜ்குமார் பாரதி நன்றாக பாடினார். இரவு ஒன்பது மணிக்கு புல்லாங்குழல் ரமணி. இரவு 12 மணிக்குக் கிளம்பி இருவருமாக வீடு திரும்பினோம்.

2000 ஜனவரி 16 அன்று கன்யாகுமரி நாவலை மிகுந்த ஊக்கத்துடன் எழுதிக்கொண்டிருந்திருக்கிறேன்.பிந்தொடரும் நிழலின்   குரலுக்கு நல்ல எதிர்வினைகள் வரவில்லை என்ற மனக்குறையை அடுத்த நாவலைஎழுதுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். கன்யாகுமரி நன்றாக வந்துகொண்டிருக்கிறது என்ற திருப்தி பதிவாகியிருக்கிறது. வசந்தகுமாரிடம் அந்நாவலைப்பற்றி நிறையப்பேசியிருக்கிறேன்.

2006 ஜனவரி 16 ல் எர்ணாகுளத்தில் இருந்தேன். ‘ஹோட்டல் பெரியாறு’. லோஹித் தாஸ் ஒரு திரைப்படம் குறித்து யோசிப்பதற்காக வரச்சொல்லியிருந்தார். சிறுநீரகச்சிக்கலால் பிற்பாடு மறைந்த பிரமோத் என்ற நண்பர் காலையில் தேடிவந்தார். இசையைப்பற்றியும் மலையாளப்படங்களைப்பற்றியும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். லோகித் தாஸ¤ம் அவர் மகன்களும் காரில் வந்தார்கள். அவர்களுடன் ஆலுவா அருகே இருந்த அவரது வீட்டுக்குச் சென்றேன். லோஹித் தாஸின் மனைவி சோர்ந்த நிலையில் இருந்தார். கஸ்தூரிமானின் நஷ்டம் அவர்களுக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை அளித்திருக்கிறது. இரவு ஊருக்குக் கிளம்பினேன்.

2007  ஜனவரி 16 ல் நானும் சண்முகமும் காரில் கொடைக்கானல் சென்றோம். 10 மணிக்கு ஆப்சர்வேட்டரி அருகே வித்ரா தங்கும் விடுதியை அடைந்தோம். அங்கே செந்தில் கிருஷ்ணன் சிவா ஆகியோர் இருந்தார்கள். அழகிய பங்களா அது. அதில் தங்கினோம். மதியம் சாப்பிட்ட பின் கிளம்பி மலையேறுவதற்காகச் சென்றோம். மாலையில் பங்களாமுன்பாக கேம்ப் ·பயர் போட்டுக்கொண்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாலாவும் கும்பலும் அலஹாபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாகத்தகவல் வந்தது.

2008  ஜனவரி 16 ல் சென்னையில் பிரதாப் பிளாஸா ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறேன். புத்தகக் கண்காட்சி நடக்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு எஸ். ராமகிருஷ்ணனும் ஆர்தர் வில்சனும் வந்தார்கள். நண்பர் இளங்கோ கல்லானை, அவரது வட இந்திய மனைவி புதிய குழந்தை ஆகியோரை புத்தகக் கண்காட்சியில் பார்த்தோம். கெ.பி.வினோத் அன்பு ஆகிய நண்பர்களும் இருந்தார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.,

பல டைரிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்காவது  அருண்மொழி எடுத்து வைத்திருப்பாள். அருண்மொழியை திருமணம்செய்வதற்கு முன்பு எழுதிய எண்பதுகளைச்சேர்ந்த டைரிகள் நிலையான குடியிருப்பு இல்லாமல் அலைந்த காலத்தில் தொலைந்துபோய்விட்டன. ஒரு கத்தை டைரிகள் எலியால் சுரண்டப்பட்டு அழிந்தன. டைரிகள் கைப்பிரதிகள் அச்சுவடிவங்கள் நூல்கள் எவற்றையுமே நான் சேர்த்து வைப்பதில்லை.

டைரி எழுதுவது ஒரு எளிய கணக்கெடுப்பு மட்டுமே. கணக்கிடப்படுவது நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை, நாம் செலவிட்ட காலம்..

 

[மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 19, 2009 ]

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82

$
0
0

82 எரிமலர்க்கிளை

உணவருந்தி முடித்ததும் முதுமகள் ஒருத்தி காட்டிய கொப்பரையில் இருந்த புல்தைலம் கலந்த வெந்நீரில் கைகளை கழுவிக்கொண்டு தேவயானி எழுந்தாள். வெளியே முன்முழுமைச் செந்நிலவு எழுந்திருந்தது. மரங்கள் நிழல்களென மாறிவிட்டிருந்தன. குடில்களனைத்திலும் ஊன்நெய் விளக்குகள் எரியத்தொடங்க அணுகிவரும் காட்டெரிபோல் குடில்நிரையின் வடிவம் தெரிந்தது. வானிலிருந்து நோக்கினால் தீப்பந்தம் ஒன்றை விரைவாகச் சுழற்றியதுபோல் அச்சிற்றூர் தெரியுமென்று அவள் எண்ணிக்கொண்டாள்.

“தாங்கள் இளைப்பாறலாமே, பேரரசி?” என்றாள் சாயை. “ஆம். உடல் களைத்திருக்கிறது. துயில் நாடுகிறேன். ஆனால் இந்த இளங்காற்றை விட உளமெழவில்லை. எழுந்து வரும் விண்மீன்களையும் முழுநிலவையும் சற்று துய்த்துவிட்டுச் செல்லலாம் என்று தோன்றுகிறது. பிறிதொருமுறை இப்படி ஒரு மலைச்சிற்றூரில் இயல்பாக தங்கும் வாய்ப்பு அமையப்போவதில்லை” என்றாள். “தாங்கள் விரும்பினால் முற்றத்தில் சென்று அமர்ந்து நிலவை நோக்கலாம். பீடங்களைக் கொண்டு அங்கு இடச் சொல்கிறேன்” என்றாள் சாயை.

“வேண்டியதில்லை. இந்த முற்றத்தை ஒருமுறை சுற்றி நடந்து வரலாமென்று எண்ணுகிறேன். பகல் முழுக்க தேரில் அமர்ந்திருந்ததின் அசைவு உடலில் எஞ்சியிருப்பதுபோல் உள்ளது” என்றபடி தேவயானி கைநீட்ட சாயை மேலாடையை எடுத்து அவளுக்களித்தாள். அதை தன் தோளிலிட்டபடி வெளியே சென்று வட்டப்பெருமுற்றத்தில் இறங்கி காற்றில் மேலாடையும் குழலும் எழுந்து பறக்க சற்றே முகவாய் தூக்கி விண்ணை நோக்கியபடி ஓய்ந்த உடலுடன் நடந்தாள்.

சாயை அவளையும் அந்தப் பெருமுற்றத்தையும் நோக்கிக்கொண்டு உடன் நடந்தாள். பறவைக்குரல்கள் அடங்கியமையால் குடில்களில் இருந்து மகளிரும் சிறுவரும் எழுப்பும் ஓசைகள் வலுத்து ஒலித்தன. சிறுகுழந்தைகள் குடில்களின் படிகளில் பாய்ந்திறங்கி அப்பால் இருந்த மரங்களில் தொற்றி ஏறி குதித்தும், ஒருவரை ஒருவர் துரத்தியும், பிடித்துத் தள்ளியும், கட்டி மண்ணில் விழுந்து புரண்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். மலைக்குடி மகவுகள் பொழுதுமுழுக்க விளையாடிக்கொண்டே இருப்பதனால் விளையாட்டில் தங்களை மறக்கும் இயல்பு கொண்டிருந்தன. நகரங்களில் எக்குழந்தையும் தன் இல்லத்தையும் ஆற்றவிருக்கும் கடமைகளையும் விளையாடுவதில்லை என்று அப்போது தோன்றியது.

விலங்குகள் விளையாடுவதுபோல என்று ஒரு சொற்றொடர் எழுந்தது உள்ளத்தில். வளர்ந்தபின்னரும்கூட அவர்கள் விளையாடுகிறார்கள். உடல் ஓய்ந்த முதியவர்களுக்குக் கூட விளையாட்டுகள் உள்ளன. விளையாடாத உயிர் எதை இழக்கிறது? ஏன் விளையாடுகிறார்கள்? அத்தனை விளையாட்டுக்களும் வாழ்க்கையின் போலிக்குறுநடிப்புகள். வேட்டைகள், புணர்தல்கள், சமையல்கள், பூசல்கள். வாழ்க்கையை தனக்குரிய நெறிகளுடன் தன் சொல்திகழும் எல்லைக்குள் அமைத்துக்கொள்வதே விளையாட்டு. தெய்வங்களும் ஊழும் அமைக்கும் இடர்களும் துயர்களும் இல்லாத பிறிதொரு வாழ்க்கை. விளையாட்டை இழந்தமையால்தான் அரசாடுகிறேனா?

இளையவரும் கன்னியரும்கூட நாணமோ ஒதுக்கமோ இன்றி ஒருவரை ஒருவர் கைபற்றி தோள்தழுவி விளையாடினர். அவள் நகர் நுழைந்தபோது வரவேற்புக்கு வந்து நின்ற மக்களைவிட பத்துமடங்கினர் அங்கிருப்பதாக தோன்றியது. குடில்களில் இருந்து இளையோரும் சிறுவர்களும் மகளிரும் மையமுற்றத்திற்கு வந்தபடியே இருந்தனர். அங்கே சிறு குழுக்களாக அமர்ந்து தங்கள் இல்லங்களிலிருந்து கலங்களிலும் தாலங்களிலும் உணவை கொண்டு வந்து வைத்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு உண்டனர். சிரித்தும் கூச்சலிட்டும் உவகை கொண்டாடினர். சிறு குழந்தைகள் சிறுகுருவிகள் என ஒவ்வொரு அன்னையிடமிருந்தும் ஒவ்வொரு வாயென வாங்கி உண்டு அக்கூட்டத்தினூடாக எழுந்தும் அமர்ந்தும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

இருட்டுக்கு மேலும் அழுத்தம் வந்தது. விண்மீன்கள் கம்பளம்போல ஒளியுடன் விரிந்தன. நிலவு எண்ணியதைவிட மேலெழுந்துவிட்டதை தேவயானி கண்டாள். முற்றத்தில் எவரும் விளக்குகளை வைத்திருக்கவில்லை என்பதனால் நிலவொளி ஈரத்தண்மையுடன் படிந்து குழல்களையும் ஆடைகளையும் ஒளிரச்செய்தது. கண்களும் பற்களும் மின்னின. தேவயானி “நாமும் இங்கு நம் உணவை கொண்டுவந்து அமர்ந்துகொண்டிருக்கலாம்” என்றாள். “அரசியர் உடன் உணவருந்துவதென்பது குருநகரியில் ஒரு பெரிய சடங்கென்றே கொள்ளப்படுகிறது. அதற்குரியவர்கள் ஓராண்டுக்கு முன்னரே தெரிவு செய்யப்பட்டு அதற்கென பயிற்சி அளிக்கப்பட்டு வந்து சேர்வார்கள். அவ்வாறு உணவருந்தியவர்கள் அதை ஒரு தகுதியெனக் கொள்ளவும் செய்வார்கள்” என்றாள் சாயை.

அவள் குரலில் இருந்த நகையாட்டை உணர்ந்து மெல்லிய எரிச்சலுடன் “ஆம், அது ஒரு அரசுசூழ்தல் முறை. இங்கு நாம் மலைக்குடிகளென ஓரிரவை கழித்திருக்கலாம். சில தருணங்களிலேனும் கவசங்களை கழற்ற வேண்டியுள்ளது” என்றாள் தேவயானி. பேசிபடி விழிதிருப்பியவள் ஒரு கணம் திகைத்து “யார் அது?” என்றாள். “எவர்?” என்றாள் சாயை. “அவ்விளைஞர்கள்… அங்கே செல்லும் அம்மூன்று இளையோர். மூவரில் இருவரின் நடையும் ஒன்று போலிருக்கிறது. அது நான் மிக நன்கறிந்த அசைவு” என்றாள். சாயை “அவர்கள் இக்குடியின் இளைஞர்கள். நாளை அவர் எவரென்று உசாவுவோம்” என்றாள்.

“அல்ல, அவர் இக்குடியினர் அல்ல” என்று கூர்ந்து நோக்கியபடி தேவயானி சொன்னாள். “மலைக்குடியினர் அனைவருக்கும் தனித்த நடையும் அசைவும் உள்ளன. இம்மலைச்சரிவில் பாறைகளினூடாக நடப்பதனாலாக இருக்கலாம். மரங்களில் தொற்றி அலைவதனால் உருவான தோளசைவுகள் அவை. அவர்கள் இங்கு வேட்டை விலங்குகள்போல் சூழலைக் கூர்ந்து எண்ணி காலெடுத்து நடக்கிறார்கள். இவர்கள் நிகர்நிலத்து ஊர்களில் வளர்ந்தவர்கள்” என்றாள். மீண்டும் விழிகூர்ந்து “நான் நன்கறிந்த அசைவு. நன்கறிந்த நடை” என்றபின் “அது அரசரின் நடை” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள் அரசி?” என்று சாயை கேட்டாள். “ஆம், ஒளியில் அவர்களைப் பார்த்திருந்தால் இவ்வசைவு அத்தனை துலக்கமாக தெரிந்திருக்காது. நிழல் என அசைவு மட்டுமேயாகி செல்கிறார்கள். அது நன்றாக காட்டிக் கொடுக்கிறது. அவர்களில் மூத்த இருவரின் நடையும் அசைவும் நமது அரசர் யயாதிக்குரியவை” என்றாள் தேவயானி. “அவர்களை அழைத்துவா” என்றாள். சாயை அப்பால் நின்றிருந்த மலைக்குடி ஒருவனை அருகழைத்து தொலைவில் ஒருவரோடொருவர் பேசிச் சிரித்தபடி சென்றுகொண்டிருந்த அந்த மூவரையும் சுட்டிக்காட்டி அவர்களை அழைத்து வரும்படி சொன்னாள்.

“ஐயமே இல்லை” என்றாள் தேவயானி. “ஐயம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு, வழியில் தடுத்து நிறுத்தஇயலாது” என்றாள் சாயை. “என்ன சொல்கிறாய்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “இந்த ஐயம் அசோகவனிக்கு வருவதற்கு முன்னரே இருந்தது உங்களுக்கு.” தேவயானி “என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் உரத்த குரலில் கேட்டாள். “ஏனெனில் நீங்கள் உங்களை அறிவீர்கள். இங்கிருந்து நீள்தொலைவுக்கு விலகிச்சென்றுவிட்டதை அறிந்திருப்பீர்கள். அவரையும் அறிவீர்கள்” என்றாள். “கலை காமத்தை எழச்செய்கிறது.”

தேவயானி உடல் நடுங்க இருகைகளையும் மார்பிலிருந்து கட்டிக்கொண்டு விழிநிலைத்து அணுகிவரும் அவ்விளைஞர்களை நோக்கினாள். மூவரும் அவள் அருகே வந்து முறைமைப்படி இடைவளைய வணங்கி நின்றனர். மூத்தவனிடம் “நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றாள். மூத்தவன் “என் பெயர் திருஹ்யூ. இவர்கள் என் இளையோர். இவன் அனுதிருஹ்யூ, மூன்றாமவன் புரு. நாங்கள் அசோகவனியின் சேடியாகிய சர்மிஷ்டையின் மைந்தர்” என்றான். “உங்கள் தந்தை எவரென்று அறிவீர்களா?” என்று தேவயானி கேட்டாள்.

மூத்தவன் நாவெடுப்பதற்குள் முந்திக்கொண்டு “ஆம் அறிவோம்” என்று புரு மறுமொழி சொன்னான். “அவர் குருநகரியின் அரசர் யயாதி.” தேவயானியிடம் சிறுமாறுதலும் உருவானதாக உடல் காட்டவில்லை. சாயை அவள் மேலும் சொல்லெடுப்பதற்காக காத்து நின்றாள். தேவயானி மிக இயல்பான குரலில் “அதை உங்கள் அன்னை சொன்னார்களா?” என்றாள். “ஆம், ஆனால் அதைவிட நாங்களே தெளிவாக உணர்ந்திருந்தோம். எங்கள் அன்னையைப் பார்ப்பதற்காக அரசர் வந்து அசோகவனியின் காவலர் மாளிகையில் தங்குவதுண்டு. அங்கிருந்து கிளம்புவதற்கு ஒருநாள் முன்னர்கூட வந்திருந்தார். உடன் அவரது அணுக்கத்தோழர் பார்க்கவனும் இருந்தார்.”

தேவயானி தலையசைத்தபோது அவள் இருகுழைகளும் ஆடி கன்னங்களை தொட்டன. சாயை அவர்கள் செல்லலாம் என்று கையசைத்தாள். அவர்கள் திரும்பியதும் தேவயானி “பொறுங்கள்” என்றாள். புரு திரும்பிப் பார்த்தான். தேவயானி இருகைகளையும் விரித்து தலையசைத்து அவனை அருகே அழைத்தாள். அவன் ஐயுற்று நிற்க அவள் புன்னகை செய்து “நான் உங்கள் தந்தையின் முதல் மனைவி. உனது அன்னை… வருக!” என்றாள். தயங்கியபடி அருகே வந்த அவனுடைய மெலிந்த தோளில் கைவைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு வலக்கையால் அவன் குழலை வருடி “உன் பெயர் புரு அல்லவா?” என்றாள்.

“ஆம் அரசி” என்றான் புரு. “அன்னையே என்று சொல்க!” என்றாள். “ஆம் அன்னையே” என்றான் புரு. “அது உங்கள் மூதாதையர் புரூரவஸின் பெயர் என்று அறிவாயா?” என்றாள். “ஆம், அறிவேன்” என்றான் புரு. “அன்னை என என் பாதங்களைப் பணிக!” என்றாள் தேவயானி. அவன் குனிந்து அவள் கால்தொட்டு சென்னிசூட “நலம் திகழ்க! வெற்றியும் புகழும் விளங்குக! காலத்தில் படரும் கொடிவழி அமைக!” என்று தேவயானி அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினாள். பிற இருவரும் வந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவள் அவர்கள் தலையில் கைவைத்து வாழ்த்தினாள்.

சாயையிடம் “இவர்களுக்கு பரிசுகள் அளிக்கவேண்டியிருக்கிறது” என்றாள். சாயை ஆணையேற்று குடிலுக்குள் சென்றாள். தேவயானி இருகைகளையும் விரித்து மூன்று மைந்தரையும் தன் உடலுடன் அணைத்துக்கொண்டாள். திருஹ்யூவின் தோள்களைத் தொட்டு “உங்கள் அன்னையின் தோள்கள் போலிருக்கின்றன. மைந்தா, அரசகுடிப்பிறந்தவர்கள் ஒருபோதும் வலுவற்ற உடல் கொண்டிருக்கலாகாது. உள்ளம் உடலை தான் என பதித்துவைத்துக்கொள்ளும். உடலின் வலுவின்மையை அது தானும் நடிக்கும். நன்கு உடல் தேர்க!” என்றாள். “ஆம் அன்னையே” என்று அவன் தலைவணங்கினான். அனுதிருஹ்யுவிடம் “மூத்தவனிடம் எப்போதும் உடனிரு மைந்தா. ராகவராமனின் உடன் அமைந்த இளையவனைப்போல” என்று அவள் சொன்னாள். அவன் வணங்கினான்.

புரு “தாங்கள் எங்களை ஒடுக்கக்கூடுமென்று அஞ்சினோம், அன்னையே” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உண்மையிலேயே அவ்வச்சம் இருந்ததா?” என்றாள். அவன் “தாங்கள் அணித்தேரிறங்கி வருகையில் நேரில் கண்ட கணமே அது முற்றிலும் விலகியது. தாங்கள் பேரன்னை. அவ்வாறன்றி பிறிதெவ்வகையிலும் அமைய முடியாதவர். ஆகவேதான் நான் உணர்ந்த உண்மையை உங்களிடம் சொன்னேன்” என்றான். “அது நன்று. அன்னையிடம் பொய் சொல்லலாகாது என்று நீ எண்ணியதை உணர்கிறேன்” என்றாள் தேவயானி. “நீ வெல்பவன். உன் கொடிவழியினர் என்றும் உன்னை வழிபடுவர். பாரதவர்ஷத்தில் உன் குருதி பெருநதியென கிளைவிரிந்து பரவும்” என்றாள்.

சாயை உள்ளிருந்து மூன்று மணிமாலைகளையும் அரசக் கணையாழிகளையும் எடுத்து வந்தாள். அவற்றை தேவயானி அவர்களிடம் கொடுத்தாள். திருஹ்யூ “இவற்றை நாங்கள் அணிகையில்…” என்று தயங்கியபடி சொல்லத் தொடங்க “ஆம், நீங்கள் எவரென்ற வினா எழும். யயாதியின் மைந்தர், குருகுலத்து இளவரசர் என்றே சொல்லுங்கள்” என்றபின் சாயையிடம் “கிருபரிடம் கூறுக! இவர்கள் குருநகரியின் இளவரசர்கள். சூதர்களுக்குரிய கல்வியும் அடையாளங்களும் இனி இவர்களுக்கு இருக்கலாகாது” என்றாள். அவள் தலை வணங்கி “அவ்வாறே, பேரரசி” என்றாள். தேவயானி அவர்களிடம் “செல்க, நாம் மீண்டும் சந்திப்போம்” என்றாள். அவர்கள் மீண்டும் அவள் கால்தொட்டு வணங்கி விடைகொண்டனர்.

tigerகுடிலுக்குள் சென்றதுமே தேவயானி உடலசைவுகள் மாற பிறிதொருத்தி என்றானாள். அரவென சீறித்திரும்பி தன்னைத் தொடர்ந்து உள்ளே வந்த சாயையிடம் “உனக்குத் தெரிந்திருக்கிறது” என்றாள். “ஆம், முன்னரே தெரியும்” என்று சாயை சொன்னாள். “அவளுக்கு முதற்குழந்தை பிறந்ததுமே கண்காணிக்கத் தொடங்கினேன். அரசர் இங்கு வந்து தங்கிச் செல்லும் ஒவ்வொரு தருணத்தையும் நன்கு அறிந்திருந்தேன்.” தேவயானி உரத்த குரலில் “நீ இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என் நலனுக்காக என்று பொய் சொல்லமாட்டாய் என்று எண்ணுகிறேன்” என்றாள்.

“சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. உங்கள் நலனுக்காக அல்ல” என்றாள் சாயை. “ஏன்?” என்றாள் தேவயானி. “என் வஞ்சத்துக்காக” என்று சாயை சொன்னாள். தேவயானி திகைத்து பின் மீண்டு உடைந்தகுரலில் “நான் உன்னை நம்பினேன். உன்னை என் ஒருபகுதியென எண்ணினேன்” என்றாள். “உங்கள் ஒரு பகுதியாக இருப்பதனால்தான் சொல்லவில்லை. ஏனென்றால் உங்கள் மேல் நச்சுமிழ விரும்பினேன்” என்றாள். “முற்றிலும் உங்களுக்கு படைக்கப்பட்ட உள்ளம் கொண்டவள் நான். ஆனால் என்னுள் இவ்வஞ்சத்தின் நச்சுப்பல் இருந்துகொண்டே இருந்தது.”

“துயில்கையில் பலமுறை உடைவாளை உருவி உங்கள் கழுத்தில் பாய்ச்ச வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். பின்னர் அறிந்தேன், இது இன்னும் கூரிய உடைவாள். இன்னும் குளிர்ந்தது, குருதி சிந்தாதது, அமைதியானது. எனவே இதை தேர்வு செய்தேன்” என்றாள் சாயை. அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பைக் கண்டு அஞ்சி தேவயானி பின்னடைந்தாள். “ஏன் இதை செய்தாய்?” என எழாக்குரலில் கேட்டாள்.

அவளை அசையாவிழிகளுடன் நோக்கி சாயை அணுகிவந்தாள். “என்னை அறியமாட்டீர்களா, அரசி? என்னையன்றி நீங்கள் நன்கறிந்த எவருளர்?” அவள் மூச்சுக்காற்று தேவயானிமேல் நீராவியுடன் பட்டது. “நான் வேங்கை. கசனின் குருதிச் சுவையை அறிந்தவள். உனது குருதிச் சுவையையும் அறிய வேண்டாமா?” சன்னதமெழுந்த வாயிலிருந்து கிளம்பும் தெய்வக்குரல் போலிருந்தது அவள் உரை.

தேவயானி மேலும் பின்னடைந்து பீடத்தில் முட்டி, சுவரை நோக்கிச் சென்று சாய்ந்து நின்றாள். “நிழல் கருமையாக இருப்பதே தெய்வ ஆணை” என்றாள் சாயை. “நிழல் எழுந்து உருவை விழுங்கும் தருணம் ஒன்றுண்டென்று உணர்க! நீ சென்று நின்ற உச்சம். அசோகவனிக்குள் நுழைவதற்கு முன் அதை நீ உணர்ந்திருந்தாய். ஆனால் உன்னுள் ஒன்று வீழ்ச்சியடைய விழைந்தது. விந்தை அது, அழிவதற்கு மானுடர் கொள்ளும் விழைவு. தங்கள் நெஞ்சிலேயே ஈட்டியை பாய்ச்சிக்கொள்கையில் அவர்கள் கொள்ளும் உவகை.” அது உளமயக்கா கனவா என தேவயானி வியந்தாள். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் உடலை இறுக்கி விழாமலிருக்க முயன்றாள்.

“என் கடன் அவ்வுச்சத்திலிருந்து இழுத்து உன்னை இருள் நிறைந்த ஆழங்களுக்குத் தள்ளுவது. இது அத்தருணம்” என்றாள் சாயை பிறிதெங்கோ இருந்து என ஒலித்த குரலில். தேவயானி இருகைகளும் நடுங்க எதையாவது பற்றிக்கொள்ளத் துழாவி மீண்டுவந்த கைகளை ஒன்றோடொன்று சேர்த்து நெஞ்சோடு அழுத்திக்கொண்டு திறந்த வாயுடனும் ஈரம் நிறைந்த விழிகளுடனும் சாயையை நோக்கி நின்றாள்.

“இப்போது உன்னுள் கொதிக்கும் நஞ்சனைத்தையும் உமிழ்ந்து ஒழிக! அதன் பின்னரே உனக்கு மீட்பு” என்ற சாயை தன் கைகளை கழுத்துக்குப் பின் கொண்டுசென்று அணிந்திருந்த மணியாரத்தின் பட்டு நூல் முடிச்சை இழுத்து அறுத்து வீசினாள். கூரையிலிருந்து நாகக்குழவி விழுந்ததுபோல அது தரையில் நெளிந்து கிடந்தது. சரப்பொளி ஆரத்தையும் கண்டமாலையையும் மேகலையையும் அறுத்து மணிகளும் காசுகளும் சிதற நிலத்தில் எறிந்தாள். கடகங்களையும் வளையல்களையும் சிலம்புகளையும் கழற்றியிட்டாள். இடையணிந்த பொன்னூல்பின்னிய பட்டு நூலாடையையும் களைந்தபின் அங்கிருந்த பேழையொன்றின் மீது கிடந்த மரவுரி மேலாடையை எடுத்து இடைசுற்றி அணிந்தபின் “நான் செல்கிறேன். மீண்டும் நாம் காண ஊழிருந்தால் அது நிகழ்க!” என்றாள்.

அவள் திரும்பியதும் தேவயானி கைகள் காற்று உலைக்கும் மரக்கிளைகள் என பதறிச் சுழல உடைந்த குரலில் “உன்னை கொல்வேன். உன் தலை கொய்து உருட்டுவேன். இழிமகளே… உன்னை கழுவேற்றுவேன்” என்றாள். சாயை திரும்பி புன்னகையுடன் “என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. நான் உன் மறுபாதி” என்றபின் வெளியே இறங்கி இருளில் அமிழ்ந்து மறைந்தாள். அவளைத் தொடர்ந்து ஓடிச்சென்று வாயில்சட்டத்தில் கைபற்றி நின்று வெளியே நோக்கிய தேவயானி அவள் முற்றத்தில் காற்றில் சருகுகளென சுழன்று உலைந்து அலைகொண்டிருந்த தலைகளுக்கு நடுவே புகுந்து அறிய முடியாதபடி கடந்து மறைவதைக் கண்டாள்.

tigerசில கணங்களுக்குப்பின் மீண்டு உடல் எடை மிகுந்தவள்போல தள்ளாடி மெல்ல நடந்து மஞ்சத்தை சென்றடைந்தாள். அதன் இழுபட்ட கயிறுகள் முனகும்படி விழுந்து இறகுத் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் உடல் துள்ளி விழுந்தது. உள்ளங்கால்கள் இரண்டும் அனலில் நின்றவை போலிருந்தன. பின் உள்ளங்கைகளும் எரியத் தொடங்கின. நாவும் மூச்சும் விழியும் கண்களும் அனலென கொதித்தன. தழலெழுந்து வயிற்றை நெஞ்சை உருக்கி பற்றி எழுந்தாடத்தொடங்கியபோது முற்றிலும் காலம் இல்லாதாயிற்று.

அவள் தன்னை உணரத் தொடங்கியபோது களைத்து கைகளும் கால்களும் தனித்தனியாக உதிர்ந்து கிடக்க சித்தம் கம்பத்தில் கொடியென தனித்து படபடத்தது. கொடி கிழிந்துவிடுவதுபோல் துடித்தது. நெய்யில் சுடரென தனித்தெழுந்து வெறும்வெளியில் நின்று தவித்தது. தலையை இருபக்கமும் அசைத்தபோது கண்கள் பெருகி வழிந்து காதுகளை அடைந்திருப்பதை உணர்ந்தாள். ஓங்கி அறைந்து நெஞ்சை உடைக்க வேண்டும் என்று வெறி கொண்டாள். ஆனால் இமைகளை அசைப்பதற்குக்கூட எண்ணத்தின் விசை எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

அந்த இரவு தன்னை என்ன செய்கிறதென்று அவளால் உணர முடியவில்லை. பளிங்குக் கலம் விழுந்து உடைந்து பலநூறு துண்டுகளானதுபோல் உள்ளம் வெறும் சொற்களின் தொகையாக இருந்தது. ஒன்றோடொன்று இணையாதபோது சொற்கள் முற்றிலும் பொருளற்றிருந்தன. பொருள் தேடி அவை ஒன்றையொன்று முட்டி மோதி குழம்பின. அந்த ஒழுங்கின்மையின் வலி தாளாமல் அவள் எழுந்தமர்ந்தாள். குடிலுக்குள் உலவினாள். சாளரத்தினூடாக குருதிநிறைந்த தாலமென எழுந்துவந்த நிலவை பார்த்தாள். முற்றமெங்கும் எழுந்தமர்ந்து விளையாடியும் உண்டும் குடித்தும் களித்துக்கொண்டிருந்த மக்களை நோக்கினாள். காட்சிகளில் உளம் பொருளேற்றாவிட்டால் அவற்றுக்கு ஒன்றுடனொன்று தொடர்பும் இசைவுமில்லை என்று அறிந்தாள்.

மீண்டும் வந்து சேக்கையில் படுத்து முகத்தை புதைத்துக்கொண்டாள். உடல்நோய் எளிது, நோயுறா உடல்பகுதியால் நோயை வெல்லமுயலலாம். உள்ளம் நோயுறுகையில் நோயே உள்ளமென்றாகிவிடுகிறது. இச்சொற்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று பொருள் கொள்ளும்படி இணைத்துவிட்டால் மட்டும் போதும். உள்ளமென்ற ஒன்று மீண்டு வந்தால் போதும். ஆனால் ஒரு சொல்லை பற்ற முயல்கையில் ஒரு நூறு சொற்கள் கிளைகளிலிருந்து பறந்து எழுந்து கலைந்து கூச்சலிட்டு சுழன்று பறந்தன. பற்றிய சொல் வெறித்த விழிகளுடன் செத்துக் குளிர்ந்திருந்தது.

இவ்விரவை தான் கடக்கவே போவதில்லை என்று தோன்றியது. ஆடைகள் அணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறுமொரு விலங்கென இவ்விருளில் பாய்ந்து திசை எல்லைவரை ஓடினால் இவையனைத்திலிருந்தும் விடுதலை பெறக்கூடும். அந்த முடிவின்மையின் பொருளிலாமை அளித்த அச்சம் பெருகி திரும்பி வந்து ஊருக்குள் இல்லத்திற்குள் உடைகளுக்குள் புகுந்து கொள்ளச்செய்தது. நானென்பது ஓர் இன்மை என உணர்வதே துயரத்தின் உச்சம். அவ்வின்மையின் மேல் சூடிக்கொண்டவையே பெயர், குலம், தன்னிலை, ஆணவம், உடல், அணிகள், உறவுகள் அனைத்தும்.

ஏன் இத்தனை துயருறுகிறேன்? இழந்தது எதை? எண்ணியிரா வஞ்சத்தை முன்னரும் சந்தித்திருக்கிறேன். புழுதியென சருகென உதிர்க்கப்பட்டிருக்கிறேன். ஆணவமென ஒரு துளியும் எஞ்சாது கவிழ்ந்து தரையில் சிந்திய அழுக்குக்கீற்றென கிடந்திருக்கிறேன். அவ்வின்மையிலிருந்துதானே முளைத்தெழுந்தேன்? பின்னர் வென்றடைந்து அள்ளிச் சுற்றிக்கொண்ட அனைத்தும் அவ்வெறுமையின்மீது அமைந்தவையே என்று உள்ளூர அறிந்திருந்தேன் அல்லவா? இவையனைத்தும் உதிர்ந்து மீண்டும் அந்த வெறுமைக்குச் செல்லும்போது நான் இழப்பதென்ன?

இழப்பல்ல, தோற்கடிக்கப்படுதல். முற்றாக வீழ்த்தப்படுதல். முழுத் தோல்வியில் இருந்து மீண்டு எழுவது எளிதல்ல. ஆணவத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி எழுந்து மண்ணில் ஆழ வேரூன்றி விண்ணைப்பற்றி முகில்தொட்டு உலாவும்படி தலைதூக்கி நிற்கவேண்டியிருக்கிறது. அங்கிருந்து மீண்டும் சரிவதென்பது பெருவீழ்ச்சி. எதை இழந்தேன்? இத்தருணத்தில் அரசனென அமர்ந்திருக்கும் அவனை சிறைபிடித்து கழுவிலேற்ற என்னால் ஆணையிடமுடியும். அவை நடுவே நிற்கச்செய்யலாம். காடேகும்படி சொல்லலலாம். இல்லை, அவை இயல்வதல்ல என்று அவள் உள்ளம் அறிந்திருந்தது. தன் மைந்தருக்குத் தந்தை என்பதனால், குருநகரியின் சந்திரகுலத்துக் கொடிவழியின் குருதி என்பதனால்.

நான் அடைந்ததனைத்தும் அவன் உவந்து அளித்ததே என்று அறிந்துகொண்டதே இத்தருணத்தின் தோல்வியா? அவன் அளிக்காத ஒன்றும் என்னில் எஞ்சவில்லை என்று எண்ணும் தன்னிரக்கமா? உயிரை மாய்த்துக் கொள்ளலாம். அது இத்தருணத்தின் தோல்வியை மீண்டும் வலியுறுத்துவது. இப்புள்ளியிலிருந்து சீறி மேலெழுவது எப்படி? இக்கணத்திலிருந்து விண்ணளாவ எழுவது எப்படி? இனி ஒளி உண்டு வளர இயலாது. இருள் குடித்து மண்ணுக்குள், பாதாளங்களில் விரிவதே வழியென்றாகும். பெருவஞ்சமே சுக்ரரின் மகளுக்கு தெய்வங்கள் வகுத்ததென்பதாகும்.

தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை வெறுக்கிறேன்? கடுங்கசப்பன்றி ஒரு சொல் இல்லை. இத்தனை தொலைவுக்கு ஓர் உயிரை பிறிதொன்று வெறுக்கலாகுமா? தெய்வங்கள் சினக்குமோ? ஆனால் செய்வதொன்றுமில்லை. என்றும் அவனை வெறுத்துக்கொண்டுதான் இருந்தேன். என் உடலை கைப்பற்றியவன். என் உடலை அவன் ஆள்கையில் உள்ளிருந்த கசப்பு நொதித்து நுரைத்து பெருகியது. அவனுக்கு நான் என்னை அளித்தேன்? அன்று என் அகம் களித்திருந்தது. இவனை ஒருகணமும் விரும்பியதில்லை. அதனால்தானா? ஆம் அதனால்தான். தன் உடல்வெம்மை சேக்கையை கொதிக்கச்செய்வதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். எழுக இருள்! எழுக நஞ்சு! எழுக ஆழுலகங்கள்! இருகைகளின் நகங்களும் கைவெள்ளையை குத்திக்கிழிக்க விரல்சுருட்டி பற்கள் உதடுகளில் குருதியுடன் இறங்கின.

புற்றுவாய் திறந்தெழும் ஈசல்களென என்னிலிருந்து கிளம்பி இவ்வறை நிறைத்து சுழன்று பறந்து சிறகுதிர்ந்து ஊர்ந்துகொண்டிருக்கும் இவ்வெண்ணங்கள் எவை? ஒவ்வொரு தருணத்திலும் மானுட உள்ளத்தில் எண்ணங்களைப் பெய்யும் தெய்வங்கள் விழி அறியாதபடி சுற்றிலும் காத்து நிற்கின்றன. முன்பு இத்தருணத்தை எதிர்கொண்ட மானுடர் நுரைத்து பெருக்கி இங்கு விட்டுச்சென்ற சொற்களா இவை? என்றும் இங்குள்ளனவா? மானுடர் பிறந்து வந்து இவற்றில் பொருந்தி பின் விலகி மறைகின்றார்களா? நதியென காற்றென கடலென மலைகள் என இச்சொற்கள் முடிவிலி வரை இருந்துகொண்டிருக்குமா என்ன?

அவள் தன்னினைவு அழிய விரும்பினாள். மது அருந்தலாம். அகிஃபீனாவுக்கு ஆணையிடலாம். கிருபரை அழைத்துச் சொன்னால் விரைவிலேயே அவை இங்கு வரும். ஆனால் அவள் இருக்கும் நிலை அவர்களுக்கு தெரிந்துவிடும். மூவரையும் இளவரசர்கள் என அவள் அறிவித்துவிட்டதை இப்பொழுது குருநகரியின் அகம்படியினரும் காவலரும் அறிந்திருப்பார்கள். இவ்விரவு முழுக்க அவர்கள் அதைப்பற்றித்தான் பேசி சலிக்கப்போகிறார்கள். அனைத்தையும் களைந்து வெறும் பெண்ணென அவர்கள் முன் சென்று நிற்பது என்பது சுட்டுப்பழுத்த வாள் ஒன்றை நெஞ்சில் தைத்துக்கொள்வதற்கு நிகர். பிறிதொன்றில்லை. இவ்விரவுதான்… இதைக்கடப்பதொன்றுதான் வழி. அந்தக் கீழெல்லையில் ஒரு கீற்று ஒளி எழுவது வரைதான்.

ஒழுக்கு எத்தனை எடைகொண்டதாக ஆயினும், கணங்கள் சுட்டுப்பழுத்து வெம்மை கொண்டிருப்பினும், சென்றவையும் வருபவையும் குருதி சுவைக்கும் முட்பெருக்கென்று சூழினும் காலத்தால் நின்றுவிட முடியாதெனும் அருளைக் கொண்டுள்ளது மானுடம். கணம் பிறிதொரு கணம் மீண்டும் ஒரு கணம் என அது உருண்டு முன்சென்றே ஆகவேண்டும். அள்ளி தானளிக்கும் அனைத்தையும் இறந்தகாலம் என்று ஆக்கியே ஆகவேண்டும். தேர் கடந்து சென்றபின் நிலைத்திருக்கும் திறன் புழுதிக்கு இல்லை.

வெளியே முற்றத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கடந்து சென்றனர். சூழ்ந்திருந்த குடில்களில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. மறுஎல்லையில் மேடைப்பணியின் குறை தீர்க்கும் தச்சர்களின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பேச்சுக்குரல்கள், மரை திருகும் ஒலிகள். அங்கிருந்து நெய்விளக்குகளின் ஒளி செந்நிறக்கசிவாக பரந்து முற்றத்து மண்ணில் நீண்டிருந்தது. ஒளியை அங்கு சென்று தொட்டு காலால் கலைக்க முடியுமென்பது போல. இப்பெருவலியை நானே எனக்கு அளித்துக்கொள்கிறேன். ஆணவம் மிக்கவர்கள் தங்களை துன்புறுத்துவதில் பெருந்திறன் கொண்டவர்கள்.

எத்தனை இனிது குருதிச் சுவை? தன் குருதிச் சுவை. தன் சிதைச் சாம்பலைத் தொட்டு நெற்றியிலிடும் வாய்ப்பு ஒருவனுக்கு அளிக்கப்படுமென்றால் அவனடையும் பெருநிறைவுதான் என்ன? பேரரசி இங்கு இறந்தாள். வெளியே சென்று அப்பெருமுரசின் முழைதடி எடுத்து மும்முறை முழக்கி உலகுக்கு அறிவிக்க வேண்டும் அதை. இம்மேடையில் இதுவரை நடந்த நாடகம் முடிவுக்கு வருகிறது. பெருநதி மீண்டும் ஊற்றுக்குத் திரும்புவதுபோல சுக்ரரின் சிறு குடிலுக்குச் சென்று அமையவேண்டும். அங்கு அவள் விட்டு வந்த இளமை காத்திருக்கக்கூடும். கற்று நிறுத்திய காவியத்தின் இறுதிச்சொல் நுனி துடித்து காத்திருக்கக்கூடும்.

கிளம்புவதொன்றே வழி. உளம் உளத்தின்மேல் செலுத்திய பெருவிசையாலேயே அவள் களைப்புற்றாள். மஞ்சத்தில் சென்று படுத்தபோது ஒன்றோடொன்று முட்டிக்கொண்ட நூறு சொற்றொடர்கள் இறுகி அசைவிழந்து நின்றன. பின் அவள் உளநெருக்கடி மட்டுமே அளிக்கும் ஆழ்துயிலில் அமிழ்ந்தாள்.

தொடர்புடைய பதிவுகள்

காலடியோசை -கடிதங்கள்

$
0
0

ravi

 

அன்புள்ள ஜெ.,

காலடி ஓசையிலே வாசித்தேன்

சிறுவயதில் இந்தப்பாடல் ‘உன் காலடி ஓசையிலே ஒரு காவியம் நான் படைப்பேன்’ என்றே மனதில் நின்றிருந்தது..

கல்லூரிப் பருவத்தில் முதன்முதலாக ‘உன் காலடி ஓசையிலே உன் காதலை
நானறிவேன்’ என்று கவனித்துக்கேட்டபோது ஒருமுறை அதிர்ந்தது இதயம்..

கவிதை உணர்வு எனக்குக் குறைவுதான்.. ஆனால் சிலவரிகள் பொருளைத்தாண்டி
சட்டென்று ஏதோ ஒரு நரம்பைத் தீண்டிவிடுகின்றன.. என்னாலும் மறக்கமுடியாத
ஒருவரி இது..

நன்றி,
ரத்தன்

 

அன்பின் ஜெ

 

நானும் கலந்து ரசித்துத் தோயும் பாடல் ஓராயிரம் பார்வையிலே…

ரஃபியின் குரலிலும் அதை ரசிக்க வைத்ததற்கு நன்றி.

 

பாடல் சார்ந்த உங்கள் வாழ்க்கை அனுபவங்கள்…  அந்தப்பாடல் சார்ந்து ஒவ்வொருவருக்கும் எழும்  வெவ்வேறான அனுபவங்களை மீட்டெடுக்க வைத்திருக்கின்றன.

 

நன்றி அதற்கும் கூடத்தான்

சுசீலா

 

அன்புள்ளஜெ

 

ஓராயிரம் பார்வையிலே எனக்குப்பிடித்த பாடல். அது இந்தி நகல் என இப்போதுதான் தெரிந்தது. இந்தி இன்னும் சிறப்பாகவும் இருந்தது. அது கொஞ்சம் ஏமாற்றம்தான்

 

ஆனாலும் அற்புதமான பாடல். பிளாட்டானிக் லவ் மாதிரி பாடலை அழகாக ஆக்கும் அம்சமே கிடையாது இல்லையா?

 

ராஜேந்திரன்

 

 

அன்புள்ள ஜெ

 

காலடி ஓசையிலே வாசித்தேன். அம்மா மாதிரி நமக்கு மிக அணுக்கமானவர்களை இப்படி வெறும் தின்பண்ட ஞாபகமாக ஆக்கிக்கொள்கிறோம். ஆனால் அதை ஒன்றும் செய்யவும் முடியாது

 

மகேந்திரன்

 

அன்புள்ள மகேந்திரன்

 

அதில் என்ன தப்பு? மூளையெல்லாம் இல்லாமல் வெறும், வயிறாகவும் நாவாகவும் அறியும் உறவுகள் அல்லவா அவை?

 

ஜெ

காலடி ஓசையிலே

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலம்- கடிதம்

$
0
0

அன்புள்ள ஜெ..

மலம் கட்டுரையில் நீங்கள் கொடுத்த இணைப்பை படித்தேன்..[.‘மலம்’ ] எனக்கு அது சாதியக் கட்டுரையாகத் தோன்றவில்லை.. சுஜாதா போல , மாற்றுப்பார்வையை அவரது நடையில் சொல்லிப்பார்க்கும் அசட்டு எழுத்தாகவே தோன்றியது

 

சுஜாதாவை ரசிக்கும் பலர் , அவரது பாணி என அவர்களாகவே நினைத்துக்கொண்டு , அவரைப்போல எழுத முயல்கிறார்கள்..

செய்யலாமா என கேட்டால் , லாமே என பதில் அளிப்பது , போன் டயலினேன் , அவனுக்கு மெயிலினேன் , வாட்ஸ்ப்பினான் ,


ங்
கி’
னா
ன்

என்றெல்லாம் எழுதுவதுதான் சுஜாதா என நினைத்துக்கொண்டு இப்படி எழுதுகிறார்கள்.. இதே நினைப்புள்ள அவர்களது நண்பர்கள் , சுஜாதா மாதிரியே எழுதுறீயே என உசுப்பேத்தி விட , இதை பாராட்டாக எடுத்துக் கொண்டு அதை தொடர்கிறார்கள்

சுஜாதாவைப் பொறுத்தவரை தன் மத சாதி நம்பிக்கைகளை வெளிப்படையாக முன் வைக்காதவர் ..இன்னும் சொல்லப்போனால கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல காட்டிக்கொண்டவர்

இருபதில் கம்யூனிசம் பேசாதவனும் , அறுபதில் ஆன்மிகம் பேசாதவனும் உலகில் இல்லை என்கிறார்களே என்ற கேள்விக்கு இருக்கிறேனே என பதில் அளித்தவர் அவர்

ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் அப்படி ஒன்றும் மனிதர் அல்லர் என்பதை அவருடன் நேரில் பழகிய உங்களைப் போன்றோர் அறிவீர்கள்

பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற கருத்து அவருக்கு உண்டு.

ஆனால் அவர் எழுத்து , அவர் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் ஆயுதமாக இல்லாமல் , அவர் அறிவு சார்ந்த தேடலை வெளிப்படுத்தும் ஆயுதமாகவே இருந்தது

சுஜாதாவின் வெற்றிக்கு என்ன காரணம் என புரியாமல் அவரை அரைகுறையாக போலி செய்யும் சில ஃபேக் எழுத்தாளர்கள் எழுதும்போது மேற்கண்ட கட்டுரை போன்ற விபத்துகள் நிகழ்கின்றன..

இதை எழுதியவர் , சுஜாதா இப்படித்தான் எழுதி இருப்பார் என நினைத்தே இப்படி எழுதி இருப்பாரே தவிர , வேறு உள் நோக்கம் இருந்திருக்காது

சுஜாதாவின் நிழல்கள் இவர்கள்.. ஒரு நிழலுக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் சற்று அதிகம்தான்…

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

அக்கட்டுரைக்கு நான் எழுதிய கண்டனத்துக்கு கண்டனம் தெரிவித்து அக்கட்டுரைக்கு  ஆதரவாக எழுதுபவர்களின் குரல்களை மட்டும் கவனியுங்கள், அக்கட்டுரையைப்பற்றி நான் சொன்ன அனைத்தும் முழுமையான உண்மைகள் என்பதற்கு அதுவே சான்று

ஓர் அத்வைதியாக நான் சடங்குகளில் நம்பிக்கை அற்றவன். என் தந்தைக்கான சடங்குகளையே செய்தவன் அல்ல. ஆலயவழிபாடுகளிலும் பூசைகளிலும் கூட ஈடுபடுவதில்லை. ஆனால் அவற்றைப்பற்றிய என் தரப்பை நான் வலியுறுத்துவதில்லை. நான் சொல்வது பொதுத்தரப்பை மட்டுமே.

ஆசாரங்களை மீட்டெடுப்பதென்பது சமீபகாலமாக வலுவடைந்துவரும் குரல். இது ஒரு தனிக்குரல் அல்ல. ஒரு வைணவ உபன்யாசகர் தீண்டாமை உட்பட அனைத்தையும் வலியுறுத்தும் வலுவான சாதியத் தரப்பாக இன்று புகழ்பெற்றுவிட்டிருக்கிறார். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு இன்று இருக்கிறார்கள். உண்மையில் அவருடைய ஓர் உள்வட்டபேச்சின் இணைப்பாகவே இக்கட்டுரை எனக்கு ஒரு வைணவ நண்பரால் அனுப்பப்பட்டது.

இக்குரலை முதன்மையாக, வன்மையாகக் கண்டிக்கவேண்டியவன் நான். ஏனென்றால் இந்து ஞானமரபின் மையத்தரிசனங்களை முன்னிறுத்தி வலுவாகப்பேசிவருகிறேன். அவற்றை ஆசாரங்கள், நம்பிக்கைகள், அமைப்புகளுடன் இணைத்துநோக்கவேண்டியதில்லை என்று வாதிட்டுவருகிறேன்.

இந்தக்குரலை இங்குள்ள இந்துவெறுப்பாளர்கள் வரவேற்பார்கள். ஏனென்றால் இந்துமரபு குறித்து அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் இது ஆதாரமாக அமைகிறது. இதை நிராகரிக்காமல் நான் முன்வைக்கும் மெய்மையின் தரப்புகளை என்னால் பேசமுடியாது.

நான் பேசுவது இந்துமெய்மை மரபின் கொள்கைகளை இந்த சாதியப்பதர்களிடமிருந்து காக்கவே. திருக்குலத்தோரை அணைத்துக்கொண்ட ராமானுஜரை இந்தச்சாதிவெறியர்களின் ஆசாரவாதங்களில் இருந்து விலக்காமல் பேசுவது கடினம். திரும்பத்திரும்ப இந்துமெய்ஞானத்தை சாதியாசாரமாக மட்டுமே கண்டு முன்வைக்கும் ஒரு கும்பலைத்தான் விவேகானந்தர் காந்தி நாராயணகுரு முதல் அனைவரும் எதிர்கொள்ளநேர்ந்தது

ஜெ

8

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் இந்தக் கட்டுரையின்( http://www.jeyamohan.in/97425#.WPZq44grLIU ) தலைப்பையும் படங்களையும் பார்த்து ஒரு நிமிஷம் திகிலடைந்தேன்; உங்கள் அருவருப்பின் குறியைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன் – நீங்கள் எந்த மனப்பான்மையை கடுமையாக எதிர்க்கின்றீர்களோ , அதே மனப்பான்மையை தீவிரமாக ஒரு வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள் . பரிசுத்தவாதம் , ஆங்கிலத்தில் – ப்யூரிடேனிசம் எனப்படுவது , தன் சொந்த தூய்மையிலும் அதற்கு மாறானதை அருவருப்புடன் பார்ப்பதிலும் உள்ளது. தனிவாழ்வுதூய்மையையும், அதே சமயம் பொது , கூட்டு வாழ்வின் துப்புரவில் அக்கறையின்மையும் நம் இந்திய மரபு கற்றுக்கொடுப்பவை . இது கலாசாரத்தில் பல இடங்களில் வருவது. உங்களுக்கு “கொள்ளுத்தாத்தாக்களின் காலகட்டத்தைய மனநிலை” அருவருப்பாக இருக்கின்றது, ‘தனிதமிழ்’ ஆர்வலர்களுக்கு ‘மொழிக்கலப்பு’ அருவருப்பாக உள்ளது ; பலருக்கு பிறஜா தி அல்லது மத ஆசாரங்களோ, கருத்துக்களோ  அருவருப்பை கொடுக்கின்றன . படிப்பும் , நகரவாழ்க்கையும் அவ்வளவு சீக்கிரம் இந்த அருவருப்புகளை நீக்கப்போவதில்லை. அருவருப்பின் காரணிகள்தான் மாறுகின்றன

அன்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்,

உங்கள் ஒவ்வாமை புரிகிறது. நான் எழுதியதற்கும் நீங்கள் எடுத்துக்கொண்டதற்கும் தொடர்பில்லை. நான் சொல்லவந்ததை முடிந்தவரை திரிக்க முயல்கிறீர்கள். பிறிதொருவகையில் உங்களால் செயல்படமுடியாதென நான் அறிவேன். என் கணிப்பில் இவ்விஷயத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என நான் எண்ணிய எவருமே மாறாக நடந்துகொள்ளவில்லை.

முன்னரும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் அயல்நாட்டுவாசம், உங்கள் கல்வி எதுவுமே உங்களுக்குள் இருக்கும் சாதியவாதியை ஒன்றும் செய்யவில்லை. உங்கள் விரிந்தவாசிப்பு, உழைப்பு அனைத்தும் உங்கள் சாதியக்குரலை நிறுவும்பொருட்டு பொதுவெளியில் களமாடவே பயன்படுத்தப்படுகிறது. இந்த மாபெரும் வீணடிப்பு சிலசமயங்களில் அளிக்கும் துணுக்குறல் சாதாரணமானதல்ல

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தேவதேவனும் நானும்

$
0
0

 

தேவதேவனும் நானும்

http://www.jeyamohan.in/?p=29602
தேவதேவனின் கவிதையுலகம்
http://www.jeyamohan.in/2312
தேவதேவனின் கவித்தரிசனம்
http://www.jeyamohan.in/?p=32529


கவிதையின் அரசியல் தேவதேவன்
http://www.jeyamohan.in/?p=240
தேவதேவனின் பரிணாமம்
http://www.jeyamohan.in/?p=32517
தேவதேவனின் படிமங்கள்
http://www.jeyamohan.in/?p=32523


தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு
http://www.jeyamohan.in/20
தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி
http://www.jeyamohan.in/?p=32675
தேவதேவனின் பித்து
http://www.jeyamohan.in/?p=32677


கவிதையின் அரசியல்– தேவதேவன்
http://www.jeyamohan.in/240
விரல்நுனி வண்ணத்துப்பூச்சி
http://www.jeyamohan.in/33397
நிழலில்லாத மனிதன்
http://www.jeyamohan.in/16876
மாசு
http://www.jeyamohan.in/21424


பாலையின் மலர்மரம்
http://www.jeyamohan.in/48548
மார்கழியில் தேவதேவன்
http://www.jeyamohan.in/2315
உதிர்சருகின் முழுமை
http://www.jeyamohan.in/95486
தேவதேவன் மகள் திருமணம்
http://www.jeyamohan.in/22559a

http://www.jeyamohan.in/?p=29602
தேவதேவனின் கவிதையுலகம்
http://www.jeyamohan.in/2312
தேவதேவனின் கவித்தரிசனம்
http://www.jeyamohan.in/?p=32529
கவிதையின் அரசியல் தேவதேவன்
http://www.jeyamohan.in/?p=240

deva
தேவதேவனின் பரிணாமம்
http://www.jeyamohan.in/?p=32517
தேவதேவனின் படிமங்கள்
http://www.jeyamohan.in/?p=32523
தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு
http://www.jeyamohan.in/20


தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி
http://www.jeyamohan.in/?p=32675
தேவதேவனின் பித்து
http://www.jeyamohan.in/?p=32677
கவிதையின் அரசியல்– தேவதேவன்
http://www.jeyamohan.in/240
விரல்நுனி வண்ணத்துப்பூச்சி
http://www.jeyamohan.in/33397
நிழலில்லாத மனிதன்
http://www.jeyamohan.in/16876
மாசு
http://www.jeyamohan.in/21424


பாலையின் மலர்மரம்
http://www.jeyamohan.in/48548
மார்கழியில் தேவதேவன்
http://www.jeyamohan.in/2315
உதிர்சருகின் முழுமை
http://www.jeyamohan.in/95486
தேவதேவன் மகள் திருமணம்
http://www.jeyamohan.in/22559

 

தேவதேவனின் தீவிரவாசகரான ஸ்ரீஇனிவாச கோபாலன் தொகுத்தது

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலமறுத்தல்

$
0
0

mask

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

‘மலம்’ படித்தேன்.சற்று அளவுக்கு அதிகமாகவே ‘பொங்கிவிட்டீர்கள்’ என நினைக்கிறேன்!.உண்மையான சுத்தம் சார்ந்த ஆச்சாரத்தை பேணுவதில் தவறில்லையென்றே கருதுகிறேன்.(அதை முடிந்தவரை கடைபிடிப்பவர்களையும் அறிவேன்),அதே நேரத்தில் உங்களின் பெரும்பாலான வைணவ ஆலயங்களின் மடப்பள்ளிகளை பற்றிய அவதானிப்பு நூற்றுக்கு நூறு சரி.

அன்புடன்,

அ.சேஷகிரி.


அன்புள்ள சேஷகிரி,
தவறான கருத்து வேறு ஆபத்தான கருத்து வேறு. ஆபத்தான கருத்து என்பது அடிப்படையில் மானுடவளர்ச்சிக்கே எதிரானது. ஒட்டுமொத்த மானுடச்சிந்தனையை எதிர்ப்பது. இன்று ஒருவர் தீண்டாமையை ஆதரித்து எழுதினார் ‘அது அவரது கருத்து நான் மறுக்கிறேன்’ என்பது அதற்கான பதிலாக இருக்கமுடியாது

சுத்தத்தை எவரும் வேண்டாம் என்று சொல்வதில்லை. சொல்லப்போனால் சுத்தம் குறித்த எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே செல்லும் ஒன்று. அதாவது. ஒருவர் எந்த அளவுக்கு நவீனமானவராக ஆகிறாரோ அந்த அளவுக்கு சுத்தம்குறித்த விழிப்புணர்ச்சி கொண்டவராவார்

சுத்தம் என்னும் இன்றைய கருதுகோள் நவீன அறிவியலால் உருவாக்கப்பட்டது என்பதையாவது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சுத்தம் குறித்த தன்னுணர்வு என்றும் உள்ளது. ஆனால் பாக்டீரியாக்கள் வைரஸ்கள் குறித்த சித்திரம் நவீன அறிவியலில் இருந்து நம்மை வந்தடைந்தது. மேலும் நவீன காலகட்டத்தில் நாம் பலவகையான சூழல்களில் வாழும் வாய்ப்பு வந்தபோது சுத்தம் பற்றிய எண்ணத்தை மேலும் மேலும் வகுத்துக்கொண்டிருக்கிறோம்

இக்கோணத்தில் அக்கட்டுரையாளர் செய்யும் திரிபுகளைப் பாருங்கள். ஒன்று சுத்தம் என்பதை பழைமையுடன், மரபுடன் பிணைக்கிறார். நவீன காலம் தூய்மைக்கு எதிரானது, தூய்மை அழிந்துகொண்டிருக்கிறது என்னும் சித்திரத்தை உருவாக்குகிறார். இரண்டாவதாக, சுத்தமும் ஆசாரமும் ஒன்று என்கிறார்..

ஆசாரம் என்பது சுத்தத்துடன் தொடர்புடையது அல்ல- அது அடையாளத்துடன் தொடர்புடையது. எந்தவகையான அடையாளமும் தம்மை தனித்துப் பிரித்துக்கொள்வதிலேயே சென்று முடியும். மிகையான ஆசாரம் மிகையான தனிமைப்படுத்தலாக ஆகும்.

சென்றகாலங்களில் வெவ்வேறு சாதிசார்ந்தும் தொழில்சார்ந்தும் வட்டாரங்கள் சார்ந்தும் ஆசாரங்கள் வரையறுக்கப்பட்டன. அவற்றை கடைப்பிடிக்கவேண்டும் என்னும் சமூகக் கட்டுப்பாடு இருந்தது. அதனடிப்படையில் உயர்வுதாழ்வுகள் உருவாக்கப்பட்டன. இழிவுகள் கற்பிக்கப்பட்டன.

அந்தகாலமே வேறு. அன்று மனிதர்கள் தங்கள் மிகச்சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தனர். இருநூறாண்டுகளுக்குமுன் ஒரு பிராமணர் பிராமணரல்லாத ஒருவரை சந்திப்பதே வாழ்நாளில் அரிது என்னும் நிலை இங்கே இருந்தது. அன்றைய வாழ்க்கைமுறை சார்ந்தது ஆசாரம் என்பது

நவீன காலகட்டம் என்பது வாழ்க்கையின் எல்லைகளை திறந்துகொண்டே இருக்கிறது. நேர்வாழ்க்கையிலும் சிந்தனைகளிலும். அந்த புதிய யுகத்தை எதிர்கொள்ள பெருந்தடையாக இருந்தவை நூற்றாண்டுக்கால பழைமைகொண்ட ஆசாரங்கள்.

சென்ற நூற்றாண்டின் இந்திய மறுமலர்ச்சி என்பது ஆசாரங்களுக்கு எதிரான கிளர்ச்சியாகவே தொடங்கியது. குடுமியை வெட்டிக்கொள்வதில் தொடங்கி பெண்கள் கல்விகற்பது வரை அனைத்தும் ஆசாரத்தின் பெயரால் எதிர்க்கப்பட்டன. காஞ்சி சங்கராச்சாரியாரின் எழுத்துக்களைப்பார்த்தால் அவர் அத்தனை மாற்றங்களையும் ஆசாரத்தின் பெயரால் எதிர்ப்பதைக் காணலாம். மற்ற மடாதிபதிகள் அதிகம் எழுதியதில்லை, எழுதியிருந்தால் அவர்களும் அதைத்தான் சொல்லியிருப்பார்கள்.

இந்தியச்சூழலில் நவீனகாலகட்டம் நமக்கு பள்ளி, சாலை, ரயில், உணவகம் போன்ற பொது இடங்கள் உருவாகிவருவதனூடாகவே பிறந்தது. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அனைத்துமக்களும் கூடுவதற்கான மாபெரும் சமூகப்போராட்டங்கள் இங்கே நிகழ்ந்துள்ளன. அவை அனைத்தும் ஆசாரம் கெட்டுப்போகிறது என்றே எதிர்க்கப்பட்டன.

தீண்டாமை உட்பட ஆசாரங்களை வலியுறுத்திய அத்தனைபேரும் அதை தூய்மை என்னும் காரணம் சொல்லியே நியாயப்படுத்தியிருக்கிறார்கள். சென்றகாலகட்டங்களில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை குளிக்காமல் வீட்டுக்குச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் – கண்ட கண்ட ஆட்களை தொட்டுவிட்டு வந்துவிடுவார்கள் என்று. அதற்கும் முந்தைய காலகட்டத்தில் உயர்சாதியினருக்கான பள்ளிகள். அதற்கும் முன் சாதிக்கொரு பள்ளி.

ஆகவே ஆசாரத்திற்குத் திரும்புதல் என்னும் குரல் எளிமையாக ‘தூய்மையாக இருத்தல்’ என்னும் பொருள் கொண்டது அல்ல.ஆசாரம் நேரடியாக தூய்மையும் அல்ல. ஆசாரமானவர்கள் தூய்மையானவர்களும் அல்ல. ஆசாரம் என்னும்பெயரில் சாதிமேட்டிமை உள்ளிட்ட பழைய வழக்கங்களை நியாயப்படுத்தும் குரலே தூய்மை எனப்பேசுகிறது.

சென்றகாலங்களில் நாராயணகுரு தன் ‘தூய்மையற்ற’ கைகளால் எப்படி சிவனை நிறுவலாம் என வாதிட்டவர்களின் குரல் இது. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் நுழைந்தால் தூய்மை கெட்டுவிடும் என வாதிட்டவர்களின் தரப்பு இது.

ஆசாரம், நெறி, நோன்பு,சடங்குகள் ஆகியவற்றை குழப்பிக்கொண்டுதான் சாதியாசாரத்தை நியாயப்படுத்தும் குரல் எழுப்பப் படுகிறது.ஒருவர் தனக்க்கென கொண்டிருக்கும் சில ஒழுகுமுறைகளை நெறி என்று சொல்லலாம். புலால்மறுப்போ, வெளியிடங்களில் உண்ணாமலிருப்பதோ, பருத்தியாடை அணிவதோ அவருடைய நெறி எனச் சொல்லலாம். ஏதேனும் ஒருவகையில் அத்தகைய நெறிகள் அத்தனைபேருக்கும் உண்டு. என் மனைவியால் மாட்டிறைச்சி உண்பதை எண்ணிப்பார்க்கவே முடியாது..

குறிப்பிட்ட தொழிலுக்கோ வழிபாடுகளுக்கோ அதற்கான நெறிகள் இருக்கலாம். ஆலயப்பூசகர் அசைவம் உண்ணலாகாதென்பது அவருடைய தொழில் சார்ந்த நெறி. சமணர்கள் ஊனுண்ணமாட்டார்கள் என்பது அவர்களின் மதம்சார்ந்த நெறி.

நோன்பு என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கொள்ளப்படும் தன்கட்டுப்பாடு. சபரிமலைக்கு மாலைபோடுபவர்கள் சில நோன்புகளைக் கொண்டிருப்பார்கள்.

சிலவகையான தோற்ற அடையாளங்களும் அப்படிப்பட்டவையே. என் நண்பர் ஷாகுல் ஹமீது உம்ரா சென்று மீண்டபின் இஸ்லாமிய தோற்றத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார். அது அவருக்கு ஒரு தன்கட்டுப்பாட்டை அளிக்கிறது என்றார். நெற்றியில் நாமம் இடுவதோ நீறிடுவதோ எல்லாம் அத்தகையவை.

நெறி நோன்பு  இரண்டும் ஒருவர் தனக்கென விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடுகள். தன்னை வெல்ல, கடந்துசெல்ல கடைப்பிடிப்பவை. பிறரை விட மேலானவனாக எண்ணிக்கொள்ளவோ பிறரிடமிருந்து விலக்கிக்கொள்ளவோ கைகொள்பவை அல்ல.

சடங்குகள் என்பவை தொன்றுதொட்டுவரும் செயல்முறைகள். அவற்றை முழுக்க நிராகரித்தால் மரபுடனான ஆழ்மனத் தொடர்பு அறுந்துவிடும். அது மிகப்பெரிய இழப்பு. அதேசமயம் ஒருசடங்கு தொன்மையானது என்பதனாலேயே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. அச்சடங்கு மானுடவிரோதத் தன்மை கொண்டது என்றால் இன்றைய நிலையில் அநாகரீகமானது என்றால் வெறும் மூடநம்பிக்கை என்றால் அதைத் தவிர்ப்பதற்கான திராணியும் நம்மிடம் இருக்கவேண்டும்.

ஆனால் ஆசாரம் என்பது முற்றிலும் வேறு. அது பழைமையானது , வழிவழியானது என்பதனாலேயே ஒன்றை ஏற்றுக்கொள்வது. அந்தப் பழமையான மனநிலைகளை உடன் சேர்த்துக்கொள்வது. அதன் மேல் விமர்சனங்கள் அற்று இருப்பது.

நவீன காலகட்டத்தின் அடிப்படையே மரபின் மீதான தனிமனித நோக்குதான். நம் தந்தையருக்கும் மூதாதையருக்கும் அது இருக்கவில்லை. ஏனென்றால் உலகமெங்கும் அன்று அது இல்லை. அது மரபை ஒட்டி ஒழுகிய காலம். திரளாக மானுடர் வாழ்ந்த காலம்.

நம் நவீனக் காலகட்டம் முந்நூறாண்டுகளாக உலகமெங்கணுமிருந்த பெருசிந்தனையாளர்களால் மெல்லமெல்ல கருத்தியல்ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படை அலகு தனிமனிதன். அதன் பெருந்தரிசனம் மானுடம். தனிமனித அறச்சார்புடன், தர்க்கநோக்குடன் மரபையும் சூழலையும் நோக்குவதை அது நமக்குக் கட்டாயமாக்குகிறது. நம் சிந்தனைகள் எவையும் மானுடம்தழுவியதாக இருக்கவேண்டும், மானுடப்பிரிவினை சார்ந்ததாக அமையலாகாது என நமக்கு அது கட்டளையிடுகிறது. அதற்கு நேர் எதிரானது ஆசார நோக்கு.

ஆசாரம் என்பது தூய்மை என வாதிடும் அக்கட்டுரை மரபான ஆசாரநெறிகள் எல்லாமே தூய்மையை இலக்காகக் கொண்டவை என்றும், அவற்றை கடைப்பிடித்தவர் தூய்மையானவர்கள் என்றும். கடைப்பிடிக்காதவர் தூய்மையற்றவர் என்றும், தூய்மையைப்பேணி தன்னை ஆசாரவாதியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறது. அது உருவாக்கும் பிரிவினை அப்பட்டமான சாதிக்காழ்ப்பு. ஒருபோதும் பொதுவெளியில் முன்வைக்கப்படக்கூடாதது

உண்மையிலேயே ஒருவருக்கு அக்கட்டுரையின் அந்த உட்பொருள் புரியவில்லை என்றால் அவர் பத்தொன்பதாம்நூற்றாண்டை கடக்கவே இல்லை. புரிந்துகொண்டும் தன் சாதிமேட்டிமை நோக்கின்பொருட்டு வாதிடுபவர்கள் இருப்பார்கள். அந்தப்பட்டியலில் நாம் சேரக்கூடாது.

ஒர் இந்து இந்துமதத்தை மூடத்தனமாக முழுமையாக நம்பவேண்டியதில்லை. அதன்மேல் விமர்சனரீதியான பற்றைக்கொள்ளவும் அதன்படி ஒழுகவும் இந்துமதம் அனுமதிக்கிறது. அவனே முதன்மைநூல்களை கற்கமுடியும். அவனே உகந்த ஆசிரியர்களைத் தெரிவுசெய்து தன் ஞானப்பயணத்தை மேற்கொள்ளமுடியும். அவனுக்கு ஆணையிடும் அமைப்போ மரபோ ஏதுமில்லை. அவன் மீறக்கூடாத முன்முறைமை என ஏதுமில்லை

சென்றகாலங்களில் இந்துமதத்தில் வந்து படிந்த மூடநம்பிக்கைகளை, பிளவுபடுத்தும் ஆசாரங்களை, இழிவுபடுத்தும் நோக்குகளை இன்று கடுமையாக விமர்சித்து விலக்கும் பொறுப்பு ஓர் இந்துவுக்கு உண்டு. அதன் வழியாகவே இந்துமரபின் மையப்போக்கான மெய்மைத்தரிசனங்களை அவன் மீட்டு இக்காலத்திற்கென முன்வைக்கமுடியும். எக்காரணம் கொண்டும் அந்த சென்றகால இருட்டுகளை அவன் நியாயப்படுத்தலாகாது. நியாயப்படுத்துபவன் அந்த மையத்தரிசனங்களை அழுக்குபடியச் செய்கிறான்.அத்வைத நோக்கில் ஆணவம் கன்மம் மாயை மட்டும் மலங்கள் அல்ல, பேதபுத்தியைப்போல பெரிய மலம் பிறிதொன்றில்லை

அன்புள்ள சேஷகிரி, நவீனகாலகட்டத்தில் விரிந்து பரவிய இவ்வுலகம் இன்று நம் ஒவ்வொருவரின் அணைப்புக்கென அணுகிவந்துகொண்டிருக்கிறது. மானுடரில் எவரும் இழிவென்று நம் மைந்தருக்குக் கற்பிக்காமலிருப்போம். எவரும் எதன்பொருட்டும் ஒருபடித் தாழ்ந்தவர் என எண்ணுவது நம் மண்டையில் ஊறும் மலம் என அவர்களிடம் சொல்வோம். உணவு., ஒழுக்கம், தோற்றம் காரணமாக பிறர் மேல் விலக்கம் கொள்வதனூடாக நம்மை நாம் தோற்கடிக்கிறோம் என அவர்களிடம் சொல்வோம். அத்தகைய ஆசாரங்களை மாறுவேடமிட்டு மேடையேற்றும் கீழ்மையை இனியேனும் தவிர்ப்போம்.

அப்போதுதான் வசுதைவ குடும்பகம் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் நம் முன்னோர் அடைந்த மெய்மையை மாற்றுக்குறையாமல் ஏற்றுக்கொண்டவர்களாவோம்
ஜெ

 

எச்சிலில் புரளுதல் என்னும் சடங்கு

சடங்குகள் தேவையா?

சாதி சமூகம் -கடிதம்

சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?

சடங்குகள் ஒரு கடிதம்

சாதியும் ஜனநாயகமும்

 

தொடர்புடைய பதிவுகள்

நாகர்கோயிலில் வம்சி நூல் வெளியீட்டு விழா

$
0
0

in

 

நாளை [23- 4-2017 அன்று நாகர்கோயில் கஸ்தூரிபா மகிளா சமாஜம் அரங்கில் வம்சிபதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஐந்து நூல்களின் நூல்வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. நான் பேசுகிறேன். மாலை ஐந்து மணி

 

1

2

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிறந்தநாள்

$
0
0

பவா

 

 

இன்று காலையிலிருந்தே மின்னஞ்சல்கள், அழைப்புக்கள்.இம்முறை வாழ்த்துச்சொன்னவர்களில் எனக்கு முற்றிலும் அறிமுகமற்றவர்களே அதிகம். ஆச்சரியமென்னவென்றால் தேவதேவன் கூப்பிட்டு வாழ்த்து சொன்னார். ‘ஜெயமோகன், மனுசங்க பிறந்ததை எல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?’ என நினைக்கும் உலகைச்சேர்ந்த ஆத்மா. ஆச்சரியம்தான்.

 

நானே தேவதச்சனைக் கூப்பிட்டு நாளை நிகழவிருக்கும் அவருடைய படைப்புக்கள் பற்றிய கருத்தரங்குக்கு வாழ்த்துக்களைச்சொல்லி எனக்கு வாழ்த்துக்களைக் கோரிப் பெற்றுக்கொண்டேன்.

 

பிறந்தநாளுக்கு பெரிதாகக் கொண்டாட்டமெல்லாம் இல்லை. இம்முறை நான் வீட்டிலிருந்தமையால் அருண்மொழி சர்க்கரைப்பொங்கல் செய்திருந்தாள். காலை எழுந்ததும் அதை சாப்பிட்டேன். செய்தித்தாள்கூட வாசிக்காமல் படுத்து உடனே தூங்கிவிட்டேன். நெய்மயக்கம் என்று அதை எங்களூரில் சொல்வார்கள்.

shy

ஷைலஜா

 

வெளியே ஒரே சத்தம். யாரோ வந்து என் வீட்டு வாசலில் நின்றிருக்கும் பேச்சொலி. என் செல்பேசிக்கு ஒரு சிக்கல், வேகமாக வைத்தால் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடும். வேறொன்று வாங்கவேண்டும். ஆனால் நான் வைத்திருப்பது நோக்கியா சாதாரண மாடல். அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம்.

 

எழுந்து  நோக்கினால் பவா செல்லத்துரை. கிட்டத்தட்ட பதினாறுபேர் வந்திருந்தார்கள் அவருடன். ஷைலஜா, ஜெயஸ்ரீ ,வம்சி ,மானசி ,சுஹானா என பெரிய கூட்டம். இங்கே புத்தகக் கண்காட்சி நடந்து நேற்றோடு முடிகிறது. தலைமையுரை ஆற்ற பவா வந்திருந்தார். விகடன் ஊழியராக இருக்கும் ராம் ஏற்பாடுசெய்திருந்தார்

 

பிறந்தநாள் அதுவுமாக காலையில் குளிக்கவில்லை. ஷேவ் செய்யவில்லை. தூக்கக் கலக்கம். ஒரு நல்ல சட்டை போடலாமென்றால் பீரோ சாவி எங்கே என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் உற்சாகமாக இருந்தது. ராம் ஒரு கேக் வாங்கிவந்தார். அதை வெட்டினேன்.

 

நான் பிறந்தநாள் கேக்கே வெட்டியதில்லை. எங்களூரில் சாஸ்தா, யக்‌ஷி கோயில்களில் ’வழிபாடு’ அளிப்பதே பிறந்தநாள் கொண்டாட்டம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாஸ்தா. எனக்கு அளப்பங்கோடு கண்டன் சாஸ்தா. அவர் மாடு கன்று விலங்குகளுக்கு உரிய தெய்வம். யானைகளுக்கு விசேஷமாக. அங்கே விறகு பச்சரிசி வெல்லத்துடன் சென்று பொங்கலிட்டு வணங்கி வருவோம்.

jeya

ஜெயஸ்ரீ

 

வளர்ந்தபின் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. பிள்ளைகளுக்காக கேக் வெட்டுவோம். நான்தான் வெட்டுவேன்.நானே சாப்பிடவும் செய்வேன். முதல்முறைக் கேக் வெட்டியபோது கூச்சமாகத்தான் இருந்தது. வீட்டில் அருண்மொழி இல்லை. பால் இருந்தது, ஆனால் டீயெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

 

மதியம் வரை தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொன்னேன். பின் ஒரு நீண்ட தூக்கம். மாலை ஐந்துமணிக்கு அருண்மொழி வந்தாள். நானும் அவளும் அஜிதனும் கிளம்பி புத்தகக் கண்காட்சி சென்றோம். நான் தேவிபாகவதம் வாங்கினேன். அஜிதன் ‘சென்னை மாதிரி வெளியே நிருபர்கள் நின்னுட்டு என்ன புக் வாங்கினீங்கன்னு கேட்டா காமெடியா போயிரும்” என்றான்.

 

ஆனால் அறிவுஜீவி என்பவன் சம்பந்தமில்லாத புத்தகங்களை வாங்குபவன்தான். நான் ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் கட்டைப்பை நிறைய புத்தகங்களை வாங்கிக்கொண்டு சுஜாதாவை பார்க்கச்சென்றேன். “என்ன புக்?” என்று ஆர்வமாகக் கேட்டார். ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தார். போகர்மருத்துவம், ரசவாதம், சங்க இலக்கியத்தில் தாவரங்கள், வேர்ச்சொல் அகராதி என கலவையான புத்தகங்கள்.

uthaya

உதயகுமார்

 

சுஜாதா முகம் மலர்ந்து “அட அட…இதைத்தான் நான் சொல்லிட்டே இருக்கேன். இண்டெலக்சுவல்னா வினோதமா எதையாவது வாசிக்கணும்… ஒருத்தர் கையிலே பனிக்கோடாரி மாதிரி நினைக்கவே முடியாத ஒரு புத்தகம் இருந்தாத்தான் அவர் வேற ஆளுன்னு அர்த்தம்’. நான் வைத்திருந்த அடிப்படைஹோமியோபதி, தமிழ்நாட்டுக்கொலைவழக்குகள் போன்ற நூல்களை அவர் ஆர்வமாக எடுத்துக்கொண்டார்.

 

விழாவில் ஷைலஜா சிறப்பாகப் பேசினார். முன்னுரை, வரவேற்புரை அளித்தவர்கள் ஆளுக்கு ஒருமணிநேரம் பேசியமையால் கடைசியில் சிறப்பு அழைப்பாளரான பவா பேசநேரமில்லை. இந்தமாதிரி நகைச்சுவைகள் தமிழ்நாட்டில் சாதாரணம். விழாவில் என்னையும் அருண்மொழியையும் அஜிதனையும்  மேடைக்கு அழைத்து மீண்டும் கேக் வெட்டவைத்தார்கள். ஒரு பிறந்தநாளுக்கு இரண்டு கேக்.

 

மிஷ்கின் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய குரலும் சிர்ப்பும்போல என்னை கவரும் பிறிதொன்றில்லை. பொங்கிக்கொண்டே இருக்கும் ஆளுமை. தன்னம்பிக்கை, மூர்க்கமான அன்பு, நேற்றும் நாளையுமில்லாத பித்து. மிஷ்கின் நாம் புனைவுகளில் மட்டுமே கண்டறியும் கலைஞனின் ஆளுமை கொண்டவர்.

mysh

மிஷ்கின்

 

பறக்கை ரோட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட   உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஒரு கூட்டமே உள்ளே வந்ததில் அவர்கள் கொஞ்சம் திணறிப்போனார்கள். செயற்கை ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மீன் உணவுகள் அங்கே கிடைத்தன. சமீபத்தில் நான் சாப்பிட்ட நல்ல உணவு. [ம்கும், மல்லுக்களுக்கு மீனை தொட்டியிலிருந்து நேரடியாக எடுத்து வாயிலிட்டாலும் ருசிதான் என அருண்மொழி எண்ணிக்கொண்டதை அறிந்தேன்]சூழியல்போராளி உதயகுமார் அவர்களின் வீடு அருகில்தான். அவரும் வந்து எங்களுடன் கலந்துகொண்டார்.,

 

சாப்பிட்டு பத்தரை மணிக்கு வீட்டுத்திரும்பினேன். ஒரு முழுநாளும் பிறந்தநாள் கொண்டாட்டமாகவே முடிந்தது. இப்படி முன்னர் நடந்ததில்லை. ஆனால் நாள் அணைகையில் ஒரு நிறைவு இருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு விடுபடல்

$
0
0

வெண்முரசு மாமலரில் ஓர் அத்தியாயம் பிரசுரத்தில் விடுபட்டுவிட்டது. நேற்று அதற்கு முந்தைய அத்தியாயம் பிரசுரமாகியது. அதை இன்று நேற்றைய தேதியிட்டு வெளியிட்டிருக்கிறோம் . கதைத்தொடர்ச்சியில் ஓர் இடக்குழப்பம் வந்ததைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அது இதன் விளைவே

தவறுக்கு வருந்துகிறோம் நன்றி

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நேர்காணல்கள் முழுத்தொகுப்பு

நித்யா -கடிதங்கள்

$
0
0

muni nara

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

என்னுடைய மின் அஞ்சலுக்கு பதிலாக, நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்ட ‘நித்யாவின் இறுதிநாட்கள் ‘ ( http://www.jeyamohan.in/97384#.WPRyxoh97IU )என்ற கட்டுரையைப் படித்தேன்.

உங்கள் கட்டுரை எனக்கு பயனுள்ளதாக உள்ளது. திரு. நித்ய சைதன்ய யதி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு தூண்டுதலாக இருந்தது,அவரைப் பற்றி United Writers வெளியிட்டுள்ள ‘அனுபவங்கள் அறிதல்கள்’ என்ற புத்தகத்துக்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை.

அந்தப் புத்தகத்தில், அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு ‘மரணத்தை எதிர்கொள்ளல்’ (பக்கம் 101) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

அக் கட்டுரையை படித்த பின்தான், திரு. நித்ய சைதன்ய யதி, அவருடைய மரணத்தை எவ்வாறு எதிர் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது.அக்கேள்வியால் உந்தப்பட்டு, நான் உங்களுக்கு என்னுடைய முந்தைய மின் அஞ்சலை அனுப்பினேன். உங்களுக்கு, என்னுடைய நன்றிகள் பல.

எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே, இறப்பு, மரணம் என்ற சொற்கள் என்னை ஈர்த்தே வந்துள்ளன.

மரணம் என்ற வார்த்தையின் முழுப் பொருள், மகா + ரணம், அதாவது மிகப் பெரிய ரணத்தால் வேதனைப்பட்டு, உயிரானது உடலை விட்டுவெளியேறுதல் என்பார் என் அக்குபங்சர் ஆசான்களில் ஒருவரான அக்கு ஹீலர். உமர் பாரூக்.

அவர் மேலும் சொல்வார்:

1. நாம், இயற்கையின் விதிகளான பசித்த பின் உணவு உண்டு,தாகமெடுத்த பின் நீர் அருந்தி, உடல் கேட்கையில் அதற்கு ஓய்வுகொடுத்து, இரவு 9 மணிக்கு உறங்கச் சென்றால், நோயற்ற வாழ்வுவாழ்ந்து, நம் உடலை விட்டு உயிர் பிரிகையில், வலிகள், தொந்தரவுகள், நோய்கள், எதுவும் இன்றி இயற்கையாக உயிர் பிரியும். அதனைத்தான் நம் முன்னோர்கள் இறப்பு என்கிறார்கள்.

2. நமக்கு வரும் சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை, நம் உடலே, உடலை சுத்தம் செய்யும் ஒரு கழிவு நீக்க வேலை. இந்த வேலையை நாம் மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், அனுமதிக்கையில், நமக்கு பெரிய எந்த ஒரு நோயும் வராது. இன்று மனிதர்களுக்கு வரும் கான்சர், சிறுநீரக செயலிழப்பு, உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம், சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு, போன்றவற்றுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான்.

3. மருந்துகள், எந்த ஒரு நோயையும் தீர்ப்பதில்லை.

பாயசம் இல்லாத விருந்து இல்லை. பக்க விளைவு இல்லாத மருந்து இல்லை. மருந்துகளின் பக்க விளைவுகள்தான், மனித குலம் இன்று எதிர் கொள்ளும் அனைத்து நோய்களுக்கும் காரணம்.

4. ‘பட்டினியே சிறந்த மருந்து (லங்கணம் பரம அவுஷதம்)’ என்றனர் நம் முன்னோர்கள்.

இதனையே திருவள்ளுவர் சொன்னார்:

குறள் 942:

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

பொருள்:

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே
தேவையில்லை.

5. நோய்க்கு சிகிச்சை அளித்தால் சரியாகும். இறப்பு என்பது நோய் அல்ல. அதற்கு சிகிச்சை கிடையாது. எனவே சிகிச்சை அளித்து இறப்பை நிறுத்த, முடியாது.

இது போன்ற உண்மை விளம்பும் கோட்பாடுகளால் கவரப்பட்டு நான் அக்குபங்சர் பயின்று, அக்குபங்சரிஸ்டாக சிகிச்சை அளித்து வருகிறேன். மருந்துகள், ஆய்வுக் கூட அறிக்கைகள், அறுவை சிகிச்சைள் இன்றி, மிக, மிக குறைந்த செலவில் பலர் குணமடைந்துள்ளார்கள்.

நோய்கள், இறப்பு ஆகியவை பற்றிய பயத்தை, என்னிடம் இருந்து விரட்டியதில் அக்கு ஹீலர். உமர் பாரூக் உள்ளிட்ட என்னுடைய அக்குபங்சர் ஆசான்கள் 17 பேர்களின் பங்கு, முதன்மையானது.

ஒருவரின் உயிர் பிரிந்ததை,மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் போது, காசர்கோட்டில் என்னுடைய கிராமத்தில் அவருடைய ஆயுள் முடிந்து விட்டது எனச் சொல்வோம். அவர் மரணித்து விட்டார் எனச் சொல்ல மாட்டோம். காரணம், மரணம் என்பது எதிர் மறைச் சொல்.

காசர்கோட்டில் உள்ள பெர்லா கிராமம் என்னுடைய சொந்த ஊர். அங்கு என்னுடைய பரம்பரை வீடு Kuntikana உள்ளது. என்னுடைய இன்னொரு தாத்தாவின் (அம்மாவின், அப்பா) பரம்பரை வீடு, காசர்கோட்டில், சட்டஞ்சால் அருகில் உள்ள ‘தயிரா’ ஆகும்.

என்னுடைய இரு தாத்தாக்களின் பரம்பரை வீடுகளிலும் சில நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி
கோயில்கள் உள்ளன.
என்னுடைய கிராமம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் நான் காசர்கோட்டுக்கு ரயிலில் செல்லும் போது, அந்த ஊர் பற்றி, அங்கு நீங்கள் இருந்ததைப் பற்றி நீங்கள் எழுதியது அவ்வப்போது நினைவுக்கு வரும்.

நன்றியுடன்.
ஆர் ராதாகிருஷ்ணன்

 

nitya sea

அன்புள்ள திரு ஜயமோகன்,

திரு நித்ய சைதன்ய யதி பற்றி வாசித்தேன்.[நித்யாவின் இறுதிநாட்கள் ] தொடர்புடைய கட்டுரைகளையும் வாசித்தேன்.

ஸ்ரீ நாராயண குரு கல்வி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவு அறிந்திருந்த எனக்கு அவருடைய வேதாந்த ப்ரதிபத்தி ப்ரமிப்பை ஏற்படுத்திது.

1992-95 ஆண்டுகளில் அஸ்ஸாமில் பணியாற்றியபோது ஸ்ரீ சங்கரதேவரைப்பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது. நாம்கர்கள் (Namgarh) பற்றி முதன்முதலாக தெரிந்துகொண்டேன். பௌத்த மதம் குறித்தும் அறிந்தேன்.

அஸ்ஸாம் கீழை பௌத்த நாடுகளின் நுழைவாயில். தாய்லாந்து பர்மா பாக்கு தேக்கு, சீனத்துப்பட்டு இவற்றின் விளைநிலம் இங்கு ஆரம்பம். குவாஹாடி என்றால் வடமொழியில் பாக்குச்சந்தை என்று பொருள்.

தென்மேற்கில் நாராயணகுரு சங்கரமூர்த்தியை ப்ரதிஷ்டை செய்தார். வடகிழக்கில் சங்கரதேவர் நாராயணமூர்த்தியை நாம்கர்களில் ஷராய்களில் எழுந்தருளப்பண்ணி அனைத்து வகுப்பினரும் வழிபட உதவினார். மேலும் பல ஒற்றுமைகள். மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போல ஒரு அருள் பொழியும் தெய்வம், தாய் போல எதுவும் எதிர்பாராமல் அன்பு காட்டும் தேவதை தேவை. இந்த இரண்டு ஸாதுக்களும் அந்த தெய்வத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.

இன்றளவும் ஷராய் அஸ்ஸாமின் அதிகார பூர்வமான கலாசார சின்னம்.ஷராய் என்பது ஒரு புத்தவிஹார வடிவில் பித்தளையில் செய்யப்பட்ட சிறிய வழிபாட்டுப்பொருள். இதனுள் ஸாளக்ராமம் இத்யாதிகளை எழுந்தருளப்பண்ணி ச்ரவணம்,கீர்த்தனம் முதலிய அனுஷ்டானங்களை செய்வர்.

யார் ஆலய பூஜை, ஆவாஹனம் பண்ணலாம்? ஸம்ஸ்காரம், தீட்சை உடையவர்கள் மட்டும் தானே? இதிஹாஸ புராண காலத்திலிருந்தது ,இன்று வரை, தெரிந்தும் தெரியாமலும், தீக்ஷித குடும்பங்களில் கண்டெடுத்த, கொண்டெடுத்த குழந்தைகள் உண்டு. ஈச்வர ஸங்கல்பம் என்று சொல்வார்கள். ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக்கூடாது என்பது நியதி.
சாஸ்த்ர மர்யாதை குலையாமல் மனித தர்மம் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிது. அதனால்தான் இந்த ஸாதுகள் வேத வேதாந்தங்களுக்கு தங்கள் அங்கீகார முத்ரையை பதித்தார்கள். ஆனால்
தற்கால ஜாதீய அரசியல் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல இயலாது.

அன்புடன்

கிருஷ்ணன். சாமவேதம்

 

நித்யாவின் இறுதிநாட்கள்

தொடர்புடைய பதிவுகள்

கலைஞனின் தொடுகை

$
0
0
john paul

ஜான் பால்

 

மலையாள இயக்குநர் பரதனுக்கும் அவருடைய திரைக்கதையாசிரியர் ஜான் பால் அவர்களுக்கும் இடையேயான உறவு முழு வாழ்நாளும் நீண்ட ஒன்று. பூசல்களும் பேரன்புமாக. மிக அபூர்வமாகவே அத்தகைய உறவுகள் அமைகின்றன. பரதன் ஜான் பால் மாஸ்டரைவிட நான்கு வயது மூத்தவர். ஜான் பால் அவர்களை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். நாங்கள் இணைந்து ஒரு படம் எழுதுவதாக இருந்தது.

 

நான் சினிமாவில் மட்டுமல்ல இதுவரையிலான தனிவாழ்க்கையில்கூட நேரில் சந்திக்கநேர்ந்த மனிதர்களில் ஜான் பால் மாஸ்டர் மிக மிக அபூர்வமானவர். சில மனிதர்கள் இயல்பிலேயே அன்பில் கனிந்தவர்கள். நேர்நிலையான அதிர்வுகளை மட்டுமே கொண்டவர்கள். சந்தித்த ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நீங்காத நினைவாகப் பதிபவர்கள். ஜான் பால் மாஸ்டருடனான என் நாட்கள் அனைத்துமே இன்றும் நினைத்தாலே மனம் மலரும் நாட்களாக நீடிக்கின்றன.

 

ஜான் பால்மாஸ்டரின் மனைவி அரிய நோய் ஒன்றுக்கு ஆட்பட்டு சில ஆண்டுகள் வேலூர் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்கள். அன்றெல்லாம் வேலூரிலும் சென்னையிலுமாக அலைந்து ஜான் பால்மாஸ்டர் படங்களுக்கு எழுதியிருக்கிறார். ஆண்டுக்கு மூன்றுபடங்கள்கூட வெளிவந்திருக்கின்றன. அந்த மனஅழுத்தத்தால் தைராய்ட் பாதிக்கப்பட்டு அவர் உடல் எடை கூடத் தொடங்கியது. இருநூற்றைம்பது கிலோ எடை வரைக்கூட சென்றிருக்கிறார். அறுவைச்சிகிழ்ச்சை செய்தபின் வேறுபல உடல்நிலைச்சிக்கல்கள். நடப்பதும் அமர்வதுமே கடினம்.

 

ஆனாலும் அவர் முகம் எப்போதுமே மலர்ந்திருக்கும். பேச்சில் நகைச்சுவை எழுந்துகொண்டே இருக்கும். நினைவுகள் இலக்கியம் சினிமா என விரிந்துசெல்லும். jஜான் பால் மாஸ்டரைப்பற்றி நெகிழ்ந்து பேசாதவர்களை நான் பார்த்ததில்லை. அவரிடமிருந்து உதவி பெறாதவர்கள் குறைவு.  விடைபெறும்போதெல்லாம் நான் ஜான் பால் மாஸ்டர் கால்களைத் தொட்டு வணங்காமலிருந்ததில்லை.

 

ஜான் பால் மாஸ்டரின் தந்தை பௌலோஸச்சன் புதுச்சேரி புகழ்பெற்ற கத்தோலிக்க இறையியலாளர். இன்றும் கேரள குருமார்களுக்கான பயிற்சிநிலையங்களில் அவர் எழுதிய நூல்களே பாடமாக உள்ளன. ஜான் பால் இளமையில் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். திரைப்படச் சங்க இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சிறுகதைகளும் சிறிய படங்களுக்கான திரைக்கதைகளும் எழுதினார்.

bharatathan

பரதன்

 

கனரா  வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது பரதனின் நட்பு கிடைத்தது. 1980ல் அவர் எழுதி பரதன் இயக்கிய சாமரம் வெளிவந்தது. பரதன் 1975ல் பிரயாணம் வழியாக .அறிமுகமாகியிருந்தார். முப்பதாண்டுகளுக்குப் பின்னரும்கூட பேசப்படும் படமாக உள்ளது அது. தொடர்ந்து ஜான் பால் மாஸ்டர் பரதனுக்காக திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தார். அவர்களின் கூட்டு மலையாளத் திரையுலகம் என்றும் மறக்காத பல படங்களை உருவாக்கியது. 1997ல் வெளிவந்த மஞ்சீரத்வனி வரை பரதனுக்காக 15 படங்களை எழுதியிருக்கிறார்.

 

மொத்தம் நூறு படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் ஜான் பால். ஆனால் இன்னொரு திரைக்கதையாசிரியரான எம்.டி,வாசுதேவன்நாயரின் ரசிகன் அவர். எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய ஒரு செறு புஞ்சிரி படத்தை ஜான் பால் மாஸ்டர்தான் தயாரித்தார்.

 

நான் ஜான் பால் மாஸ்டர் பற்றியும் அவருக்கும் பரதனுக்குமான உறவைப்பற்றியும் பிறிதொரு தருணத்தில்தான் விரிவாக எழுதவேண்டும். மாஸ்டர் என்னிடம் பரதன் பற்றி விரிவாக உணர்ச்சிகரமாகப் பேசியிருக்கிறார். அவர் நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். [தமிழில் வெளிவரவேண்டிய நூல்] அதில் ஒரு நிகழ்ச்சி

 

பரதனின் தாய்மாமன்தான் புகழ்பெற்ற இயக்குநரான பி.என்.மேனன். அவர் இயக்கிய ஓளமும் தீரமும், செம்பருத்தி போன்ற படங்கள் பெரிய அலைகளை உருவாக்கியவை, இன்றும் விரும்பிப்பார்க்கத்தக்கவை. பின்னாளில் குடிப்பழக்கம் அவரை ஆட்கொண்டது. ஆனால் இறுதிவரை கலை இயக்குநராகவும் சுவரொட்டி வடிவமைப்புக் கலைஞராகவும் சினிமாவுக்குள் இருந்தார். கடம்பா, மலைமுகளிலே தெய்வம் போன்ற கலைப்படங்களை இயக்கினார்

 

இளமையிலேயே ஓவியக்கலையில் ஈடுபாடு கொண்டிருந்த பரதன் சென்னைக்கு வந்து பி.என். மேனனுடன் தங்கினார். அங்கே அவருக்கு கலை உதவியாளராகப் பணியாற்றினார். மாமனுக்கும் மருமகனுக்கும் நாள்தோறும் அடிதடி. குடிதான். ஆகவே கிளம்பி வேலைதேடி அலைந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மலையாளத்தின் முதன்மையான இயக்குநர். கே.எஸ்.சேதுமாதவன் வின்செண்ட் இருவரும்தான் மலையாளத் திரையின் எக்காலத்திற்கும் முதன்மைகொண்ட கிளாஸிக் படங்கள் சிலவற்றை இயக்கியவர்கள்.

vincent

ஏ.வின்செண்ட்

 

வின்செண்ட் உதயா சினிமாவுக்காக படம் ஒன்றை இயக்கப்போவதாக பரதன் அறிந்தார். வின்செண்ட் வரும்நேரம்  சென்னையில் எ.வி.எம்.ஸ்டுடியோவுக்கு  சென்று காத்து நின்றார். டென்னிஸ் ஆடியபின் வெள்ளை அரைக்கால் சட்டையுடன் வின்செண்ட் காரில் வந்து இறங்கினார். மெலிந்த உடலும் பெரியதலையுமாக நின்றிருந்த 26 வயதான இளைஞனாகிய பரதன் சென்று வணங்கினார். என்ன வேண்டும் என்று கேட்ட வின்செண்ட் மாஸ்டரிடம் தன் ஓவியங்களை நீட்டி சினிமாவில் கலை இயக்குநராக ஒரு வாய்ப்பு கொடுக்கும்படி பரதன் கோரினார்

 

வின்செண்ட் மாஸ்டர் ஓவியங்களை அலட்சியமாக புரட்டிப்பார்த்தார். பதினெட்டு படங்களை மொத்தம் மூன்றுநிமிடம்கூட அவற்றை பார்க்கவில்லை. திருப்பிக்கொடுத்துவிட்டு “நீ சென்று உதயா அப்பச்சனைச் சென்றுபார். நான் சொல்கிறேன்” என்றபின் செட்டுக்குள் சென்றுவிட்டார். பரதனுக்கு ஏமாற்றம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் வயது அல்ல.

 

உதயா ஸ்டுடியோவில் ஏதேனும் வேலைக்குச் சொல்லியிருப்பார் போலும் என எண்ணி பரதன் மறுநாள் சாவகாசமாகச் சென்று உதயா ஸ்டுடியோ அதிபர் குஞ்சாக்கோவின் மகன் அப்பச்சனைச் சந்தித்தார். “எங்கே போனாய்? உன்னை  எங்கள் படத்தின் கலை இயக்குநராக ஆக்கவேண்டும் என்று வின்செண்ட் மாஸ்டர் சொல்கிறார். அட்வான்ஸ் வாங்கிக்கொள். உடனடியாகக் கிளம்பு. அங்கே எர்ணாகுளத்தில் கலை அமைப்பு வேலை நடக்கிறது. பதினைந்துநாளில் படப்பிடிப்பு தொடங்கவேண்டும்” என்றார் அப்பச்சன்

 

பரதன் எர்ணாகுளத்தில் உதயா ஸ்டியோவுக்குச் சென்றார். அங்கே அவர்கள் எடுக்கவிருந்த  கந்தர்வக்ஷேத்ரம் படத்திற்கான செட் அமைப்புகள் நடந்துகொண்டிருந்தன. அனைத்தையும் மரத்திலும், களிமண் வார்ப்பிலும் நாடகசெட் போல அலங்காரமாக செய்வது உதயா ஸ்டுடியோவின் வழக்கம். பரதன் அனைத்தையும் மாற்றினார். நம்பகமான மிக எளிய செட்டுகளை அமைத்தார். செயற்கை நிலவு. உண்மையான மரங்கள். எளிதில் இடம்மாற்றத்தக்க பொருட்கள்.

 

‘இது எப்படி சினிமாவுக்குப் போதும்? மாஸ்டர் ஏதோ தெரியாமல் சின்னப்பையனை அனுப்பிவிட்டார்’ என்றனர் தயாரிப்புநிர்வாகிகள். ”மாஸ்டர் வந்ததும் பையனை கிழித்து போடப்போகிறார்’ என எதிர்பார்த்தார்கள். ஆனால் வின்செண்ட் மாஸ்டர் வந்து செட் அமைப்புகளை பார்த்ததுமே முகம் மலர்ந்தார்.  “சினிமாவுக்கு இதுதான் தேவை. சினிமாவுக்குத் தேவையானவை பொருட்கள் மட்டும் அல்ல, அவற்றுக்கிடையேயான இடைவெளியும்கூடத்தான். இதுதான் சினிமா தெரிந்தவன் போட்ட செட்” என்றவர் பரதனை அழைத்து “நீ ஒருநாள் இயக்குநர் ஆவாய்” என்றார்

 

1972 ல்முதல் 1975 ல் தன் முதல்படத்தை இயக்குவதுவரை பரதன் கலை இயக்குநராகத்தான் இருந்தார். அவருக்கு உதயா ஸ்டுடியோ வளாகத்தில் நிரந்தரமாக ஒரு வசிப்பிடமும் ஸ்டுடியோவும் அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் படங்களுக்கு அவர் கலையமைத்திருக்கிறார். தன் படங்களுக்கு கலையமைப்பும் சுவரொட்டி வடிவமைப்பும் எப்போதும் அவர்தான்

gandharva

கந்தர்வக்ஷேத்ரம் படத்தை இப்போதுதான் பார்த்தேன். முக்கியமான படம். தகழி சிவசங்கரப்பிள்ளையின் கதை. தோப்பில் பாஸி திரைக்கதை. இளவயதிலேயே உளச்சிக்கலுக்குள்ளான பெண் தன் கனவுலகில் கந்தர்வனை சந்திக்கிறாள். பெண்ணின் காமத்தின் நுட்பமான ஒரு குறியீட்டுச் சித்திரமாகவும் காணவேண்டிய படம்.

 

வின்செண்ட் மாஸ்டரின் அற்புதமான ஒளிப்பதிவு. இரவு,நிலவு காட்சிகளுக்கு கறுப்புவெள்ளை அபாரமான அழகை அளிக்கிறது. சினிமாவில் வண்ணம் வந்ததுமே இல்லாமலானது இரவின் அழகுதான். அதை என்னென்ன வகையிலோ முயன்றும்கூட கொண்டுவரவே முடியவில்லை. அன்றைய ஒளிவாங்குதன்மை குறைந்த படச்சுருளில் அன்றிருந்த விளக்குகளைக் கொண்டு வின்செண்ட் மாஸ்டர் உருவாக்கியிருக்கும் காட்சிகளின் அழகை ஒருவகை இழப்புணர்வுடன்தான் நோக்கிக் கொண்டிருந்தேன்

 

பின்னாளில் புகழ்பெற்ற பரதன் டச் அதன் தலைப்புகளிலேயே தொடங்குகிறது. அக்காலத்திலேயே நவீன ஓவியங்கள் முகப்புப் படங்களாக அமைந்துள்ளன. மலையாள அலங்கார எழுத்துக்கள் பரதனுக்குப்பின்னர்தான் இந்த வடிவம் கொண்டன. கலையமைப்பு அவருக்கே உரிய எளிமையும் நம்பகத்தன்மையும் கொண்டது

 

படத்தில் ஒரு பாடல். மலையாளத்தின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று இது. இதில் கைதொடுகை, கையின் அழைப்பு  என்னும் மையக்கரு துருத்தித் தெரியாமல் ஓடுவதை அன்றுகூட அதிகம்பேர் கவனித்திருக்க மாட்டார்கள். அதை எப்படி அன்றைய நிலையில் எடுத்தார்கள் என்று இன்று ஒளிப்பதிவாளர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். நல்ல இயக்குநர் படங்களை ஒருவகையில் தனக்காகத்தான் எடுக்கிறார். என்றோ எவரோ பார்ப்பார்கள் என நம்பி.

 

ஜான் பால் மாஸ்டர் சொன்ன நிகழ்வுகளை அப்பாடலுடன் இணைத்து எண்ணிக்கொண்ட்டேன். அதில் ஒரு புனைவுக்குரிய அழகுடன் இருப்பது ஒரு கலைஞனை பிறிதொருவர் அடையாளம் கண்டுகொள்ளும் இடம்தான்.

 

 ===========================================================================================

முழுப்படம் கந்ந்தர்வக்‌ஷேத்ரம்

 

==========================================

பழைய கட்டுரைகள்

 

ஆதல்

ஆதல் கடிதங்கள்

பிச்சகப்பூங்காட்டில்…

காமத்தின் கலை, பரதனின் நினைவில்…

அழியாச்சித்திரங்கள்

வாழ்க்கை என்னும் அமுதத்துளி

பத்மராஜனுடன் ஓர் உரையாடல்
கரைகாணாக்கடல்

 

 

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–84

$
0
0

84. பிறிதொரு சோலை

தேவயானி தன்னை உணர்ந்தபோது ஒரு கணம் சோலையில் இருந்தாள். ஹிரண்யபுரியா என வியந்து இடமுணர்ந்து எழுந்தமர்ந்தாள். பறவையொலிகள் மாறுபட்டிருந்ததை கேட்டாள். உடல் மிக களைத்திருந்தது. வாய் உலர்ந்து கண்கள் எரிந்தன. சாளரத்தினூடாகத் தெரிந்த வானம் கரியதகடு போலிருந்தது. சாளரத்திரையை விலக்கி தொலைவை நோக்கியபோது விடிவெள்ளியை கண்டாள். எண்ணியிராத இனிய சொல் போன்று அது அவளை உளம்மலரச் செய்தது. விழியசைக்காது அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு முத்து. ஓர் ஊசித் துளை. ஒரு விழி. ஒரு யாழ் நரம்புத்துடிப்பு. ஒற்றைச்சிறுமணியோசை.

மொத்தப் புவியையும் ஒரு பெருங்கலமென உந்திக்கவிழ்த்து அதில் நிறைந்திருக்கும் இருளனைத்தையும் உருகி ஓடசெய்கிறது. இருள் கரைவதை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். முதற்பறவை ஒலியை தொடர்ந்தெழும் ஒலிக்கலவை. முதல் செந்தீற்றல். பெருஞ்சோர்வுக்குப் பின் விடிபவை புத்தம்புதிய காலைகள். ஒரு சிறு சாம்பல்நிறக் குருவி சிறகடித்து வந்து சாளரத்தினூடாக பாய்ந்து உள்ளே நிறைந்த விடிகுளிர்காற்றில் தாவித் தாவி சுழன்று மீண்டும் சாளரத்தை அடைந்தது. சட்டத்தில் அமர்ந்து இருமுறை சிறகடுக்கியபின் மணிக்கண்களை உருட்டி சிறு அலகைத் திறந்து ரிப் ரிப் என்றது. துடித்தெழுந்து காற்றில் ஏறி அரையிருளைக் கிழித்து அப்பால் சென்று மறைந்தது.

காலடி ஓசை கேட்டு கிருபர் வருவதை அவள் உணர்ந்தாள். வாயிலுக்கு அப்பால் நின்று அவர் வாழ்த்துரைக்க உள்ளே வரும்படி கையசைவால் ஆணையிட்டாள். கிருபர் உள்ளே வந்து தலைவணங்கி “அனைத்தும் சித்தமாகிவிட்டன, பேரரசி. முதல்ஒளி எழுகையில் குடித்தெய்வங்களுக்கு பூசனைகள் தொடங்குகின்றன. அதன் பின்னர் படையலும் கூட்டுணவும். தொடந்து இளையோரின் போர்விளையாடல்கள். உச்சிப்பொழுதில் உணவுக்கும் ஓய்வுக்கும் பின்னர் அந்தியில் பெண்களும் இளையோரும் ஆடல்நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள்” என்றார். “நான் சித்தமாக வேண்டும். சேடியரை அனுப்பச் சொல்லுங்கள்” என்றாள். கிருபர் எந்த மாற்றமும் தெரியா விழிகளுடன் “நேற்று அந்தியிலேயே சாயாதேவி தனிப்புரவியில் கிளம்பிச் சென்றார். தங்கள் ஆணை என்று தெரிவிக்கப்பட்டது” என்றார். அவள் ஆம் என்று தலையசைத்தாள். மீண்டும் ஒருமுறை தலைவணங்கி அவர் வெளியே சென்றார்.

எழ எண்ணம் இருந்தும் உடல் அசையாமலிருந்தது. வெளியே வானம் ஒளிக்கசிவு கொண்டு வருவதை எண்ணமில்லாது ஒழிந்த உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தாள். கல்வளையல்களின் ஒலி கேட்டது. தொல்குடியைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளே வந்து கதவருகே நின்றனர். ஒருத்தி கதவை அசைத்து ஒலியெழுப்பினாள். புன்னகையுடன் தேவயானி எழுந்தபோது ஒருத்தி “நீங்கள் எங்களைவிட மிக உயரமாக இருக்கிறீர்கள், பேரரசி” என்றாள். அவர்களுக்கு முறைமைச்சொல் உரைக்கவும் வணங்கவும் தெரிந்திருக்கவில்லை.

தேவயானி புன்னகையுடன் ஒருத்தியின் அருகே சென்று தோளைத்தொட்டு “ஆம், ஆனால் என்னளவு உயரமிருந்தால் உங்களால் காடுகளுக்குள் எளிதில் புகுந்து செல்ல முடியாதல்லவா?” என்றாள். “ஆம்” என்றாள் அவள். “ஆகவே உங்கள் உடல் உங்களுக்குப் பொருத்தமானதே. இருவருமே இளமான்களைப்போல் அழகிகள்” என்றாள். இருவரும் நாணி உடல் வளைத்து பின் கைகளால் வாய்பொத்தி ஓசையிட்டு சிரித்தனர். “நான் நீராடவேண்டும். எனது ஆடைகளை எடுத்துக்கொண்டு வருக!” என்றாள். முதல்பெண் “இதோ, எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்றபின் குழம்பி “எந்த ஆடை என்று எங்களுக்குத் தெரியவில்லை, பேரரசி. தாங்களே எடுத்துத் தந்தால் நாங்கள் கொண்டுவருகிறோம்” என்றாள்.

சிரித்தபடி தேவயானி சென்று பேழையைத் திறந்து தன்னுடைய அணியாடைகளையும் உள்ளாடைகளையும் எடுத்து வைத்தாள். அவர்கள் அதை மூங்கில் கூடைகளில் அடுக்கி எடுத்தபடி அவளுடன் வந்தனர். முற்றத்தைக் கடந்து சுனைக்குச் செல்லும்போது இருவரும் அவளுடன் இடைவெளி அழிந்து அணுகிவிட்டிருந்தனர். “பேரரசி என்று சொன்னபோது நாங்கள் தெய்வங்களைப்போல என்று கற்பனை செய்துகொண்டிருந்தோம். ஏனென்றால் கதைகளில்தானே தெய்வங்களும் பேரரசிகளும் வாழ்கிறார்கள். ஆனால் நேரில் பார்த்தபோதுதான் நீங்கள் மானுடர் என்று தெரிந்து கொண்டோம்” என்றாள் ஒருத்தி. “ஆனால் தேரில் வருகையில் உண்மையில் தெய்வம் போன்றே தெரிந்தது. நீங்கள் பேசி சிரித்தபோதுதான் மானுடப்பெண் என்று தெளிந்தது” என்றாள் இன்னொருத்தி.

“இங்கெல்லாம் பெண்கள் இவ்வாறு நிமிர்ந்து அமர்வதற்கு ஆண்கள் ஒப்புவதில்லை. நாங்கள் மீறினால் எங்கள் ஆண்கள் அடிப்பார்கள்” என்றாள் முதல் மலைப்பெண். “ஆண்கள் ஒருபோதும் நம்மை அடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது” என்றாள் தேவயானி. “ஏன்?” என்று அவள் கேட்டாள். “உடல்மேல் அவர்கள் செல்வாக்கு செலுத்தினார்கள் என்றால் உள்ளத்திலும் எண்ணத்திலும் அவ்வாறே ஆகிவிடும். பிறகு அவர்களின் அடிகளை நாமே கேட்டு பெற்றுக்கொள்வோம்” என்றாள் தேவயானி. “ஆம், உண்மைதான். ஆனால் அவர்கள் அடிக்கும்போது என்ன செய்வது?” என்றாள் இரண்டாமவள். “கண்ணில் மண்ணை வாரி வீசிவிட்டு அப்படியே ஓடிவிடவேண்டியதுதான்” என்றாள் முதலாமவள்.

இருவரும் அந்தச் சிறு நகைச்சுவைக்கு உடல்குலுங்க சிரித்தனர். சிரிப்பை நிறுத்தி கண்களைத் துடைத்தபின் மீண்டும் வெடித்துச் சிரித்தனர். முகம் சிவந்து உடலே அதிர சிரித்து பின் மூச்சிரைக்க ஓய்ந்தனர். தேவயானி தன் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்தாள். ஒரு சிரிப்பில் மிக எளிதாக ஒதுக்கித் தள்ளக்கூடியவைதானா இவையனைத்தும்? முகில்களைத்தான் மலையென எண்ணிக்கொண்டிருந்தோமா? அவ்வெண்ணம் வந்ததும் அவள் மீண்டும் சோர்வடைந்தாள்.

நீர் விளிம்பருகே அரசமரத்தின் வேர்களில் ஆடைக்கூடையை வைத்தனர். முதலாமவள் “தாங்கள் நீராடும்போது ஆண்கள் அனைவரும் வெளியே சென்றுவிட வேண்டுமென்று சொல்கிறார்கள்” என்றாள். “யார்?” என்று தேவயானி கேட்டாள். “உங்கள் அமைச்சர்” என்று அவள் சொன்னாள். “எவருமே பார்க்கவில்லையென்றால் பெண்களுக்கு வருத்தமாக இருக்காதா என்று நான் அவரிடம் கேட்டேன். நான் கேட்டதே அவருக்குப் புரியவில்லை” என்றாள். இரண்டாமவள் சிரிப்பை அடக்கி பின் கையைத் தட்டியபடி உரக்க நகைத்தாள்.

குளிர்ந்த சுனை மரக்கூட்டங்களுக்கு நடுவே வானில் கசிந்த மெல்லிய ஒளியை தான் வாங்கி மான்விழிபோல் உள்ளொளிகொண்டு சருகுகள் உதிர மெல்ல சிலிர்த்தபடி கிடந்தது. ஆடைகளைக் களைந்து இடையில் மட்டும் சிற்றாடை அணிந்து நீரில் இறங்கினாள் தேவயானி. குளிர் கால்களைத் தழுவியபோதுதான் உடல் எத்தனை வெம்மை கொண்டிருக்கிறதென்று தெரிந்தது. கைநீட்டி பாய்ந்து நீரில் நெடுந்தொலைவு சென்று மூழ்கி முகத்தில் விழுந்த கூந்தலை தலைக்குப் பின்னால் சுழற்றி முடிந்தபடி எழுந்தபோது உடலிலிருந்து வெப்பம் ஒழுகிச் செல்வதை உணரமுடிந்தது. உள்ளே இருந்து ஒரு வெம்மை எழுந்து காதுமடல்களை சிவக்கச் செய்தது.

சேடியர்போல் தரையில் நின்று பொருட்களுக்கு காவல் இருக்காமல் இரு மலைப்பெண்டிரும் ஆடை களைந்து நீரில் பாய்ந்து நீந்தி அருகே வந்தனர். முதலாமவள் “மறுஎல்லை வரை சென்று வருவோமா?” என்றாள். “ஆம்” என்றபடி தேவயானி நீந்தினாள். நீண்ட கைகளைத் தூக்கி வைத்து அவள் நீந்தியபோதிலும்கூட ஒரு மலைப்பெண் கால்களால் நீரை உந்தி மீன்போல துள்ளித் துள்ளி விழுந்து அவளை முந்திச் சென்றுவிட்டாள். மறுகரையில் சரமலர் சிலிர்த்த நாணல்கள் நடுவே நின்ற பாறை ஒன்றில் ஏறி நின்று கைகளை அசைத்து வெண்பற்களைக் காட்டி உரக்க நகைத்தாள். தொடர்ந்து நீந்திச்சென்ற தேவயானி அப்பாறையில் ஏறிக்கொண்டாள்.

“உங்கள் முலைகள் பெரியவை, அரசி. யானை மத்தகம் போலிருக்கின்றன அவை” என்றாள் அவள். தேவயானி நகைத்து “ஆம், எங்களுக்கு அப்படித்தான்” என்றாள். “உங்கள் குழந்தைகளும் பெரிதாக இருக்குமோ?” என்றாள் தொடர்ந்து நீந்தி அவளருகே வந்து நின்ற இன்னொரு பெண். “ஆம், அவர்கள் அரசர்கள் அல்லவா?” என்று கரையில் நின்ற முதலாமவள் சொன்னாள். தேவயானி “வருக!” என்று சொல்லி மீண்டும் நீரில் பாய்ந்து நீந்தி முதற்கரைக்கு   செல்லலானாள். கூவிச் சிரித்தபடி அவர்கள் தொடர்ந்து வந்தனர். ஒருத்தி தேவயானியின் முடியைப்பற்றி இழுத்து மூழ்கடித்த பின் தாவி விலகிச்சென்றாள். தேவயானி சிரித்தபடி அவளை அணுகி பிடித்து நீரில் மூழ்கடித்து தலைக்குமேல் தாவி அப்பால் சென்றாள்.

நீராடும்போது முழுக்க அவர்கள் இடைமுறியாது பேசிக்கொண்டே இருந்தனர். சிட்டுக்குருவிகளைப்போல களிப்பு இயல்பாக சொற்களாகி சிந்திக்கொண்டே இருந்தது. அச்சிற்றூருக்கு வெளியே மனிதர்களையோ நிலங்களையோ அவர்கள் பார்த்ததில்லை. ஆனால் மொழி வழியாக அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுமையும் தெரிந்திருந்தது. அணிகளைப்பற்றி ஆடைகளைப்பற்றி அவர்கள் அவளிடம் உசாவிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு செய்திக்கும் மகிழ்ந்து சிரித்து குலுங்கி மீண்டும் வினாக்களை எழுப்பினர். அணிகளைப்பற்றிய பேச்சில் சலித்து உறவுகளைப்பற்றிய பேச்சுக்கு சென்றனர். அதில் குன்றா ஆர்வம் அவர்களுக்கு எழுந்தது. ஆண்களைப் பற்றித்தான் அவர்கள் கேட்டனர். வீரர்களை, பயணிகளை.

“அங்கே தெற்கு முனையில் கடல் இருக்கிறது” என்றாள் முதலாமவள். “கடலென்றால் இந்தச் சுனைபோல ஆயிரம் மடங்கு பெரிது.” கைகளை விரித்து “அவ்வளவு பெரிது. அதன் முனையில் ஒரு சிறுமியை தெய்வமாக நிறுத்தியிருக்கிறார்கள். மெய்யான சிறுமி அல்ல. முன்பு மெய்யான சிறுமியாக இருந்தாள். அதன் பிறகு அவளை சிலையாக ஆக்கிவிட்டார்கள். அவளை கன்னித்தெய்வம் என்று தொழுகிறார்கள். அந்தத் தெய்வம் எப்படி இருக்குமென்று நான் கேட்டபோது பெரிய கண்களுடன் அஞ்சிய சிறுமி போலிருக்கும் என்று எங்கள் பூசகர் சொன்னார். அவள்தான் வெல்லப்படாத அரசி. ஏனென்றால் அவள் கன்னி” என்றாள்.

அவர்கள் உதவ தேவயானி அரசிக்குரிய ஆடை அணிந்து மணிமுடி சூடி ஒருங்கி வந்தாள். அவர்கள் “சென்றுவிடாதீர்கள் அரசி, இதோ நாங்களும் ஆடை மாற்றி வருகிறோம்” என்றபடி விரைந்து ஓடி தங்கள் குடி முறைப்படி இடைசுற்றி தோளிலிட்ட மான்தோல் ஆடை அணிந்து கல்மாலைகளும் கல்வளைகளும் குலுங்க ஓடி வந்தனர். “நீங்கள் இருவரும் என் அருகே நில்லுங்கள்” என்று தேவயானி சொன்னாள். “ஆம், நாங்கள் உங்கள் அருகே இருக்க வேண்டுமென்று அமைச்சர் சொன்னார். எங்கள் கல்மாலைகளைப் பார்த்துவிட்டு பொன்னணிகள் வேண்டுமா என்றும் கேட்டார். வேண்டாம் என்றோம்” என்றாள்.

“ஏன்?” என்று தேவயானி கேட்டாள். “அவற்றை நாங்கள் அணியலாமா என்று எங்கள் குடிமூத்தார் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் அதைப்பற்றி இன்னும் பேசி முடிக்கவே இல்லை. எந்த ஒரு செய்தியையும் அவர்கள் பேசி முடிப்பதற்கு பல மாதங்களாகும். நீங்கள் அந்த அணிகளை இங்கு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். அவர்கள் முடிவெடுத்த பிறகு நாங்கள் அணிகிறோம்” என்றாள். “வேண்டாம் என முடிவெடுத்தால்?” என்று தேவயானி சிரித்தபடி கேட்டாள். “அப்படி முடிவெடுத்தால் நான் முதுதந்தையின் முடியைப்பிடித்து உலுக்குவேன். வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா என்ன?”

வெளியே சூதர்கள் தங்கள் இசைக்கலங்களுடனும் அணித்தாலங்களுடனும் காத்து நின்றிருந்தனர். காலையொளி சுழித்தும் வளைந்தும் மின்னும் கவச உடையணிந்த காவலர்கள் படைக்கலங்களுடன் நிரைவகுத்தனர். அவள் கைகூப்பியபடி வெளியே வந்ததும் வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் ஒருங்கே எழுந்தன. குருநகரியின் செங்கோலுடன் கவசவீரன் முன்னால் செல்ல கொடிஏந்திய வீரன் தொடர படைக்கலமேந்திய வீரர்கள் நிரைவகுத்து முன்னேகினர். அவர்களுக்குப் பின்னால் தேவயானி இருபுறமும் மலைக்குடிச்சேடியர் தொடர அரசியருக்குரிய நீள்காலடிகொண்ட சீர்நடையில் சென்று மேடையை அடைந்தாள்.

பணிக்குறை தீர்க்கப்பட்டு மலர்களும் மாலைகளும் கொண்டு அணி செய்யப்பட்ட மேடையின் நடுவே தோதகத்தி மரத்தால் புதியதாக செய்யப்பட்ட அரியணை இருந்தது. அவள் அதில் அமர்ந்ததும் முற்றம் முழுக்க கூடிநின்ற குடியினர் கைகளைத் தூக்கி வாழ்த்தி குரலெழுப்பினர். பெண்கள் குரவையிட்டனர். அவர்களை முற்றிலும் புதியவர்களைப்போல அவள் நோக்கிக்கொண்டிருந்தாள் அவ்வாழ்த்தொலிகள் வேறெவருக்கோ அளிக்கப்படுவதுபோல் தோன்றியது. அத்தனை விரைவாக அனைத்திலிருந்தும் தன் உள்ளம் விலகிவிடுமென்று எண்ணியபோது அவளுக்கே விந்தையாக இருந்தது. விலகிநின்று நோக்குகையில் அவை எத்தனை வேடிக்கையாக பொய்யாகத் தெரிகின்றன என்று வியந்துகொண்டாள். அத்தனை அவைகளிலும் முற்றிலும் விலகிய சிலர் இருந்திருப்பார்கள். அவர்கள் முன் இளிவரல்நடிகையாக அமர்ந்திருந்திருக்கிறேன்.

அணிச்சொல் கோத்து அமைத்த வாழ்த்துக்கள் நகைகள் போலிருந்தன. நகைகள் எத்தனை பொய்யானவை! மானுடனின் ஆணவமே நகைகள். எனக்கு மலர் போதவில்லை தளிர் திகையவில்லை என அவன் தெய்வங்களிடம் சொல்கிறான். முகமனுரைகள். உணர்வெழுச்சியால் சொல்லப்படுவனவற்றைச் சேர்த்து உணர்வை நீக்கி அணிமொழிகளென்று ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். பொய்மலர்கள்போல. எவரை புகழ் பாடுகிறார்கள்? மண்ணாளும் அனைவருக்கும் ஒரே புகழ்மொழி என்றால் புகழப்படுவது மண்ணாள்வதென்னும் செயல்பாட்டை அல்லவா? வணக்கமுறைமைகள். நடனங்களிலிருந்து எடுக்கப்பட்ட அசைவுகளை நடனமறியாதோர் நிகழ்த்தும் பகடிக்கூத்து. காணிக்கைகள். இவற்றிற்கு இருமடங்கு தாங்கள் கொள்ளப்போவதில்லை என்றால் இவற்றை எவர் கொண்டுவருவார்கள்? இது விலை. சொல்லில்லா வணிகம். அடிபணிதல்கள். பணிபவன் அதைக்கொண்டு ஆற்றலை ஈட்டி பிறிதொரு இடத்தில் ஆணையிடமுடியும்…

ஒவ்வொரு சடங்காக கடந்து செல்லும்தோறும் அவள் முற்றிலும் விலகி வேறெங்கோ இருந்துகொண்டிருந்தாள். போர்விளையாட்டு பயின்ற இளைஞர்கள் புலிகளையும் சிம்மங்களையும் குரங்குகளையும் கரடிகளையும் நடித்தனர். கலைவிளையாடிய பெண்கள் மான்களையும் மயில்களையும் மரக்கிளைகளையும் உடலில் காட்டினர். மொழி முதிராத தொல்குடியினர் என்பதனால் தலைமுறைகளாக அனைத்தையும் உடலசைவுகளாகவே அவர்கள் காட்ட வேண்டியிருந்தது. நகரங்களில் அவைகளில் நிகழும் பயின்று தேர்ந்த கூத்தரின் நடன அசைவுகளுக்கு இல்லாத இயல்புத்தன்மையும் ஒத்திசைவும் அவர்களின் ஆடலுக்கு இருந்தது. அது விழியசைவுபோல, நா நெளிவுபோல சொல்லெழுப்பும் உடலின் நடனம்.

அவை தொடர்புறுத்தும் சொற்களனைத்தையும் பிரித்தபின் நகரங்களில் நடனத்தையும் போர்க்கலையாடல்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பொருளிழக்க வைத்த பின்னர் அவற்றை கலையென்று பயின்று நுண்மையாக்கிக்கொள்கிறார்கள் போலும். பின் மேலும் மேலும் நுண்மை. மேலும் மேலும் பொருளிழப்பு. அது ஒரு பூசல். தெய்வங்களிடம் அறைகூவுகிறான் மானுடன். நீ அளித்த மூவகை ஊழின் ஆயிரம்கோடி உணர்வுகளை விலக்கி எங்கள் அசைவுகளை தூய்மை செய்துகொண்டிருக்கிறோம். ஒன்பது மெய்ப்பாடுகள். மலையில் ஒரு கல்லை எடுத்து வைத்து தெய்வமெனக் கும்பிடுவதுபோல. இதோ, ஒவ்வொன்றும் பொருளிழக்கிறது. ஒவ்வொன்றும். ஆம், ஒவ்வொன்றும் பொருளிழக்கின்றது.

அச்சொல்லாகவே அவள் நாள் முழுக்க எண்ணச்சுழல் கொண்டிருந்தாள். உச்சிப்பொழுது குடிலுக்கு வந்து உணவுண்டு சற்று இளைப்பாறி தோழியருடன் சொல்பரிமாறி மீண்டும் அரங்குக்குச் செல்லும்போது ஆழம் அச்சொல்லாக இருந்தது.  இரவில் நிகழ்வுகள் முடிந்து குடிலுக்கு வந்து ஆடைகளை மாற்றி அமர்ந்தபோது கிருபர் வந்து தன் நிழல் உள்ளே விழும்படி வெளியே நின்றார். மெல்லிய கனைப்போசையால் அவரை உள்ளே அழைத்து “நாளை புலரியிலேயே நான் கிளம்பவேண்டும், அமைச்சரே” என்றாள்.

“இங்கு நாம் மூன்று நாட்கள் இருப்பதாக சொல்லியிருந்தோம், அரசி” என்றார் கிருபர். “ஆம், ஆனால் நான் சென்றாகவேண்டும். இன்று காலையே நான் கிளம்பவேண்டியிருந்தது. இவர்களின் கலைநிகழ்வுகள் இத்தனை ஒருங்கிணைக்கப்பட்டபின் ஏமாற்றத்தை அளிக்கவேண்டாம் என்றுதான் இங்கு தங்கினேன். நாளை இங்கு வேட்டையும் விருந்தும் மட்டும்தான் அல்லவா?” என்றாள். “ஆம் அரசி, நாளை மறுநாள் முற்றோய்வு. அதன் பிறகு கிளம்புவதாக இருந்தது.” தேவயானி “நன்று! நீங்கள் இங்கிருந்து விருந்தையும் பிறவற்றையும் சிறப்பியுங்கள். நான் கிளம்புகிறேன். எனக்கு இரு புரவிகள் வேண்டும்” என்றாள்.

கிருபரின் விழிகள் எதையும் காட்டவில்லை. “ஆணை!” என்றார். “நான் ஹிரண்யபுரிக்கு செல்வதாக இருக்கிறேன். மாற்றுப் புரவிகளுடன் நான்கு புரவிவீரர்கள் மட்டும் துணை வந்தால் போதும்” என்றாள். “ஆணை!” என்று தலைவணங்கி கிருபர் வெளியே சென்றார்.

tigerசரபஞ்சரத்திலிருந்து கிளம்பியபோது இருந்த விரைவில் குதிமுள்ளால் புரவியை உதைத்து உதைத்து அதன் உச்ச விரைவுக்கு கொண்டு சென்றாள். சிறு செவிகளை பின்னுக்குச் சரித்து, விழிகளை உருட்டி, தலைதூக்கி மூக்கை விடைத்து, மூச்சு சீறி நுரைத்துளிகள் அவள்மேல் முன்மழைச்சாரலோ என தெறிக்க மலைச்சரிவில் கூழாங்கற்கள் உருண்டு சிதற பாய்ந்திறங்கியது புரவி. சிற்றோடைகளை தாவிக்கடந்தது. சேறுபதிந்த சாலைவளைவுகளில் குளம்புகள் உதைத்து பறக்கவிட்ட சேற்றுத்துளிகள் அவள் முதுகில் விழுந்தன. உரக்க கூச்சலிட்டு அதை மேலும் மேலும் தூண்டி மூச்சிரைக்க உடலெங்கும் அனல் பறக்க விரைந்துகொண்டே இருந்தாள்.

உச்சிப்பொழுதில் ஆலமரத்தடியில் சற்றுநேரம் இளைப்பாறியபோது அனைத்து எலும்புகளும் உடைந்து உடலுக்குள் ஒரு குவியலாகக் கிடந்து குலுங்குவதுபோல் உணர்ந்தாள். தொடைத்தசை இழுத்துக்கொண்டிருக்க வலியுடன் பல்லைக் கடித்தபடி நடந்தாள். மரத்தடியில் துணைவீரன் இலைபறித்துப் பரப்பி செய்த மெத்தையில் படுத்தபோது மேலே பசுந்தழைவெளி தலைக்குமேல் குவியம்கொண்டு சுழன்றது. துயின்ற அரைநாழிகைக்குள் உள்ளம் துடித்தெழுந்து அப்பாலென நின்று பொறுமையிழந்து அவளை உலுக்கியது. மீண்டும் பாய்ந்து புரவிமேல் ஏறிக்கொண்டாள். அவளுடன் வந்த காவல் வீரர்கள் மூச்சோசையுடன் மார்பில் தலைகவிந்து துயின்று கொண்டிருந்தனர். அவள் எழுந்து சென்ற ஓசைகேட்ட பிறகே அவர்கள் விழித்தெழுந்து பாய்ந்து புரவிகளில் ஏறிக்கொண்டு அவற்றைத் தூண்டி கூச்சலிட்டபடி உடன் வந்தனர்.

அன்று மாலை வழிவிடுதி ஒன்றில் தங்குகையில் அவள் தோளிலும் கையிலும் தொடையிலும் இழுதசைகள் அனைத்தும் அடிபட்டு வீங்கியவைபோலிருந்தன. எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி அனல் கொண்டு தேய்ந்தவை போலிருந்தன. புரவியிலிருந்து இறங்கிய பின்னரும் புரவியில் இருப்பதுபோலவே கால்கள் அகன்று உடல் அசைவு நீடிக்க அவளால் விடுதியின் படுக்கை அறை வரைகூட நடக்க முடியவில்லை. மரக்கிளைகளை பற்றிக்கொண்டு ஆங்காங்கே நின்று அவள் அச்சிறு மரக்கட்டடத்தை அணுகினாள். அதன் பொறுப்பாளன் தன் மனைவியுடன் அவளுக்காக காத்து நின்றிருந்தான். அவன் வணங்குவதை அறியாதவளாக உள்ளே சென்றாள்.

நீராடாமல் உணவருந்தாமல் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். விடுதிக்காவலன் அவள் ஆணைக்காக வாயிலில் காத்து நின்றிருக்க அவள் அப்படியே துயிலில் ஆழ்ந்தாள். சிறுமியாக எங்கோ சிறு காடு ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தாள். மூன்று புலிகள் உடனிருந்தன. அவள் சிரித்தபடி ஓடி மல்லாந்து விழ அவள்மேல் கால்வைத்து எழுந்த வேங்கை ஆழ்ந்த கார்வைக் குரலில் “என்னால் உன்னை உண்ணமுடியும்” என்றது. அவள் சிரித்தபடி அதைப் பிடித்து தள்ளினாள். “நான் உண்ணவில்லை என்பதனால் நீ என் உணவல்லாமலாவதில்லை” என்றது அப்பால் நின்ற புலி. பிறிதொன்று “மூவரில் ஒருவர் எப்போதும் மீறவே விழைகிறோம்” என்றது.

அவள் காட்டுக்குள் ஊனுணவின் மணத்தை உணர்ந்தாள். “ஊனுணவு!” என்றாள். “எங்கள் குருளைகளில் ஒன்றைக் கொன்று சமைத்திருக்கிறார்கள்” என்றது இன்னொரு புலி. அவள் விழித்துக்கொண்டபோது ஏவலன் உள்ளே வந்து ஊனுணவை அவள் அறைக்குள் வைத்துவிட்டு அவள் எழுவதற்காக காத்து நின்றிருப்பதை கண்டாள். உணவை பார்த்த பின்புதான் எத்தனை பசி என்று புரிந்தது. ஆயினும் எழுந்து உணவருகே சென்று அமருமளவுக்கு உடலை உந்த முடியவில்லை. அவள் நோக்கியதைக் கண்டு “உணவை படுக்கைக்கு கொண்டு வரவா, அரசி?” என்று ஏவலன் கேட்டான். “வேண்டாம்” என்றபடி கையை ஊன்றி உடலை நெம்பித்தூக்கி துணியால் ஆனவைபோல் துவண்டிருந்த கால்களை மரத்தரையில் ஊன்றி நின்றாள்.

அறை படகென தள்ளாடியது. கண்களை மூடி நிலைகொண்டபின் சென்று பீடத்தருகே அமர்ந்து அவ்வுணவை உண்டாள். முதல் வாய்க்குப் பின் உணவை உள்ளம் மறுக்கத் தொடங்கியது. செலுத்திச் செலுத்தி மீண்டும் சற்று உண்டுவிட்டு எழுந்தாள். கைகழுவிவிட்டு மீண்டும் படுக்கைக்கு வரும்போது மரவுரி விரிக்கப்பட்ட அம்மெத்தை எத்தனை இனியதென்று உளம் மகிழ்ந்தது. இதில் விடியும்வரை படுத்திருக்கப்போகிறோம் என்னும் எண்ணமே இனித்தது. கையால் அதன் மென்மையை அழுத்தி உணர்ந்தாள். சிதையும் புதைகுழியும் சேக்கையென வந்து எப்போதும் உடனிருக்கின்றன. விழுந்து புதைந்துகொள்பவள்போல் தன்னை உள்ளே அழுத்திக்கொண்டாள். ஏவலன் கதவை சாத்தியபடி வெளியே சென்றான்.

அவள் துயிலில் ஆழத்தொடங்கியிருந்தாள். பாய்ந்து செல்லும் புரவியொன்றின்மேல் அப்படுக்கை அமைந்திருந்தது. மலைச்சரிவொன்றில் உச்சவிரைவில் அவள் இறங்கிக்கொண்டிருந்தாள். முதல் புள் ஒலிப்பதற்கு முன்னரே அவள் விழித்துக்கொண்டாள். ஆழ்ந்த துயில் உள்ளத்தை தெளிவடையச் செய்திருந்தது. எழுந்தபோதே முகத்தில் ஒரு புன்னகை இருப்பது தெரிந்தது. கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபின் வெளியே சென்று இருண்ட வானில் தெரிந்த விடிவெள்ளியை நோக்கினாள். அது ஒரு துண்டு இனிமையெனத் தெரிந்தது. நாவால் அதை வருடி அறியமுடியும். முதற்புட்குரல் அதை நோக்கி எழுந்தமைய அது மெல்ல அதிர்ந்தது. புட்குரல்கள் பெருகி எழத்தொடங்கின.

ஏவலன் அவளை அணுகி “ஒளிஎழும்போது கிளம்பிவிடுவோம், பேரரசி” என்றான். “ஆம்” என்று திரும்பி உள்ளே வந்து தன் மாற்று ஆடையை எடுத்துக்கொண்டு நீராடச் சென்றாள். குளிர்ந்த நீர் சிற்றலைகளுடன் கரை தொட்டுக்கிடந்த சுனையில் மென்மணலில் கால் புதைய இறங்கி இடைவரை நீண்டு சுருட்டிக் கட்டியிருந்த குழலை அவிழ்த்து நீட்டிவிட்டு பாய்ந்து மூழ்கி எழுந்தாள். குளிர்நீர் எண்ணங்கள் அனைத்தையும் நனைத்து படியச் செய்தது. மழைக்குப்பின் மணல் அலைகளென சித்தம் மென்மையாக பரவிக்கிடந்தது. ஒரு பறவைச் சுவடுமில்லா மென்கதுப்பு. சுனையின் விளிம்புகளில் இரவெல்லாம் நெளிந்த சுனையின் அலைவடிவுகள்.

சுற்றிலும் மரக்கிளைகளின் விளிம்புகள் தீட்டப்பட்ட வேல்முனைகள், வாள்கருக்குகள், அம்புநுனிகள் என ஒளிகொள்ளத் தொடங்கின. காடு குரங்குகளின் ஒலியால் எக்களித்துக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் புலரி அளிக்கும் நம்பிக்கைதான் மானுடனை வாழ வைக்கிறது. இருத்தல் என்பது இனிமை. அனைத்து துயர்களுக்கும் மாற்று அதுதான். உண்ணுதல், உறங்குதல், நீராடுதல். மரங்கள் நடுவே, ஓடைகளின் அருகே, விண்ணுக்குக் கீழே இனிய காற்றில், நறுமணத்தில், மெல்லோசைகளில் கரைதல். துயரென்பது இருத்தலை மறுத்தல். இருத்தல் பொருளிழந்துபோதல். இருத்தல் இனிமை என உறுத்து வந்து உரைக்கும் இயற்கை ஒன்றே அதற்கு மாற்று.

அப்போது அங்கிருந்தே கிளம்பி எங்கோ அவளுக்கென காத்திருக்கும் அந்த இனிய தவச்சோலை ஒன்றுக்கு சென்றுவிட வேண்டுமென்று தோன்றியது. இப்புவியில் எவரும் அவளுக்கு பகைவர்களில்லையென்பதுபோல, எவரிடமும் கடன்கள் இல்லையென்பதுபோல. எப்போதும் இருந்தது அச்சோலை அவளுக்குள். அவளுக்கு மட்டுமே உரியது. அங்கு ஆண்டு முழுக்க மலரும் கல்யாண சௌகந்திகம் ஒன்று நின்றிருக்கிறது. நினைத்த மணத்தை காட்டும் வானத்து மலர்ச்செடி. அதன் அருகே சிறு குடில் வளைத்தோடும் சிறு இன்சுனை. அங்கு சென்றுவிட வேண்டும்.

அவ்வெண்ணம் எழுந்ததுமே தன் வஞ்சத்தை சிக்கிமுக்கிக் கற்களென உரசி அனலெழுப்பிக் கொண்டாள். இல்லை, இவ்வெறுப்பை ஒருபோதும் அணையவிடலாகாது. என் ஆணவம் எஞ்சவேண்டும். எனக்கிழைக்கப்பட்ட தீங்கிற்கு நிகர்செய்யும் வரையாயினும். மீண்டும் மீண்டும் ஆண்களால் தோற்கடிக்கப்படும் பெண் நான். அவர்களைவிட உயர்ந்தவள் என்பதனாலேயே அஞ்சப்படுகிறேன். நுகர்ந்து துறக்கப்படுகிறேன். நல்லுணர்வால் ஏமாற்றப்படுகிறேன். பெண்ணின் பெருஞ்சினமென்ன என்று இவர்கள் அறியவேண்டும். அது சூதர் சொல்லில் என்றும் வாழவேண்டும். நிகர்செய்யப்படா பழி பெருகும். எரியை எரியே அணைக்கமுடியும் என்பது நெறி.

தொடர்புடைய பதிவுகள்

கிளம்புதல் -ஒரு கடிதம்

$
0
0

suresh

 

அன்புடன் ஆசிரியருக்கு

எழுந்து அமர்ந்திருக்கிறேன். இன்னும் அண்ணனோ அம்மாவோ அப்பாவோ எழுந்திருக்கவில்லை. கிருட்டிகள் (சீவிடுகள்?) இன்னும் உயரழுத்த மின் கம்பியின் ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரேயொரு நார்த்தங்குருவி தொடர்ந்து தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது. சீனு அண்ணனின் கிளம்புதலும் திரும்புதலும் பதிவினைப் படித்த கொந்தளிப்பு அடங்கவே இல்லை. எல்லா அம்மாவும் இப்படித்தானா?

நான்காண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த என் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு அப்பாவை கட்டாயம் வரக்கூடாது எனச் சொல்லி சண்டை போட்டேன். ஆயிரம் பேருக்கு நடுவே எந்த முக்கியத்துவமும் இல்லாமல் அமர்ந்திருந்து அந்த கெட்டித்தாளை யாரோ ஒருவர் கையில் இருந்து வாங்குவதை அவர் பார்க்கக்கூடாது என்று தான் அப்போது தோன்றியது. ஆனால் அப்பா வந்தார். பிடிவாதமோ மூர்க்கமோ ஏதோவொன்று உந்த அவர் வந்திருந்தார். என் நண்பன் முத்து குமரன் எங்கள் இருவரையும் புகைப்படம் எடுத்தான். நேற்று முழுக்க அந்த படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் வாக்கியமே இதுதான். “இந்த ஊரவிட்டு ஓடிப்போயிடணும். ஜென்மத்துக்கும் திரும்பக்கூடாது.”

என் வீட்டையும் ஊரையும் விட்டு ஓடவே முயன்று கொண்டிருக்கிறேன்.ஏதோவொன்று தடுக்கிறது. ஒருவேளை கூட நான் அங்கு இல்லையென்ற குற்றவுணர்வு இல்லாமல் ஒரு நல்ல உணவை அவர்களால் சாப்பிட முடிவதில்லை. எனக்கு உடனே அழைப்பு வரும். ஏதாவது நல்ல உணவகத்தில் சாப்பிடு எனச்சொல்லி. எனக்கு அது போன்ற சமயங்களில் கோபம் தான் தலைக்கேறும்.  புரிந்து கொள்ள முடியாத ஏதோவொன்று என் வீட்டுக்கும் எனக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது. திருப்பி செலுத்த முடியாத ஏதோவொரு பெருங்கடனை (பிறவிக்கடனோ?)வலுக்கட்டாயமாக என் வீடு எனக்கு அளித்திருக்கிறது. அண்ணனை கேட்டதாகச் சொல்லுங்கள்.

 

அன்புடன்

 

சுரேஷ் பிரதீப்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தியடோர் பாஸ்கரன் –ஒரு கடிதம்

$
0
0

theo

 

அன்புள்ள ஜெயமோகன்,

தியடோர் பாஸ்கரன் அவர்களின் கல் மேல் நடந்த காலம் புத்தகத்தை படித்து உள்ளேன் உங்களின் இணையத்திலும் அதன் விமர்சனத்தை படிக்கநேர்ந்தது. அவரின் சுற்றுச்சூழல் எழுத்துகளை மட்டும் தனித்து எழுதி உள்ளேன் அவற்றை  உங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன். அவரும் இதை தன் முக நூல் பக்கத்தில் இணைப்பை தந்தது  மிகிழ்ச்சியை அளித்தது.

http://birdsshadow.blogspot.in/2016/01/blog-post.html

அன்புடன்

செழியன்

கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு
தியடோர் பாஸ்கரன்:கடிதங்கள்
மீசை
பறக்கும் புல்லாங்குழல்
தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்
தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது

 

.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தனிப்பயணியின் தடம்

$
0
0
bhaira

எஸ்.எல்.பைரப்பா

அனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதிய எஸ்.எல்.பைரப்பா பற்றிய இக்குறிப்பு மிக முக்கியமானது. பைரப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய மதிப்புரையே ஒரு வாழ்க்கைச்சுருக்கக் கட்டுரை போல் உள்ளது

இச்சுருக்கம் காட்டும் சித்திரம் நமக்கு அறிமுகமானதே. ஃபைரப்பாவின் அம்மா, அப்பா உட்பட அனைவருமே அவருடைய கிருகபங்கா [ஒரு குடும்பம் சிதைகிறது – தமிழில்] ஏறத்தாழ இப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளனர்

ஃபைரப்பாவை தேடித்தேடி வாசித்திருக்கிறேன், தமிழிலும் மலையாளத்திலும். அவரைப்பற்றி தமிழில் முதலில் எழுதியதும், தொடர்ந்து எழுதுவதும் நான்தான். இந்திய இலக்கியமேதைகளில் ஒருவர் என ஐயத்திற்கிடமில்லாமல் சொல்வேன். ஆனால் அவர் அவருக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெறவில்லை. சொல்லப்போனால் ஞானபீடப்பரிசு அவருக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே நவீன இந்திய இலக்கியம் என இயல்பாகத் திரண்டுவரும் செவ்வியல்தொகையில் பைரப்பா இடம்பெறுவது அரிதாகவே உள்ளது

கர்நாடக இலக்கியச்சூழல் முற்போக்கு – நவ்யா  [நவீனத்துவ, முற்போக்கு]  குழுவினரின் பிடியில்தான் சென்ற ஐம்பதாண்டுகளாக உள்ளது. அவர்கள் அவர்களுக்கு வெளியே உள்ளவர்களை அனைத்துவகையிலும் புறக்கணிக்க, ஒழித்துக்கட்ட முயல்பவர்களாகவே செயல்பட்டுள்ளனர். யூ.ஆர். அனந்தமூர்த்தி அவருடைய அனைத்து கூர்மைகளுடனும் பெருந்தன்மைகளுடனும் அந்த மனநிலை கொண்டவராக இருந்தார் என்பதே உண்மை. அவரிடமே அதைப்பற்றி நான் இருமுறை பேசியிருக்கிறேன். ஒருமுறை சுந்தர ராமசாமியும், எம்.கோவிந்தனும் அருகிருந்தனர். முதிரா இளைஞனின் கூற்றாக அது காற்றில்போனது என்பது வேறுவிஷயம்.

கோகாக், பி.சி ராமச்சந்திர ஷர்மா, பி லங்கேஷ்,  அனந்தமூர்த்தி, பி.வி.காரந்த், கிரீஷ் கர்நாட் ஆகியோரால் ஏற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நவ்யா இலக்கிய அலை காலப்போக்கில் ஒரு சிண்டிக்கேட் ஆக மாறியது. காங்கிரஸ் அரசின் நல்லெண்ணத்தை வென்று இந்திய இலக்கியச்சூழலில் உள்ள பெரும்பாலான அமைப்புகளில் இடம்பெற்றது அதன் முதன்மை எழுத்தாளரான கோகாக் கல்வித்துறை உயர்பதவிகளை பெற்றார். . அனந்தமூர்த்தி சாகித்ய அக்காதமியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆங்கிலத்தில் கன்னட இலக்கியம் பற்றி எழுதிக்குவித்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே நவ்யா பண்டாயா இயக்கத்தினரே.  கன்னட இலக்கியவாதிகளில் நவ்யா இலக்கியமரபின் சார்பு இல்லாமல் ஞானபீடப் பரிசு பெற்றவர்கள் குவெம்பு,  தத்தாத்ரேய பேந்த்ரே இருவர் மட்டுமே.மற்றபடி கோகாக் முதல் சந்திரசேகரக் கம்பார் வரையிலானவர்கள் நவ்யா இயக்கச்சார்பு கொண்டவர்கள்தான்..

பைரப்பா ஒரு தனிப்போக்காகவே விளங்கினார். மிக அடித்தட்டிலிருந்து எழுந்து வந்தவராக இருந்தாலும் இடதுசாரிகளின் கோஷங்கள் அவரை ஈர்க்கவில்லை. அவருடைய அணுகுமுறை தத்துவம் மெய்யியல் சார்ந்ததாகவும் அதேசகயம் கறாரான யதார்த்தவாத நோக்கு கொண்டதாகவுமே இருந்தது. ஆகவே அவர் தொடர்ந்து நவ்யா, பண்டாயா, தலித் இலக்கிய இயக்கத்தவரால் வலதுசாரி என பழிக்கப்பட்டார். எங்கும் புறக்கணிக்கப்பட்டார்

ஆனால் ஆச்சரியமென்னவென்றால் பைரப்பா கர்நாடகத்தின் பிராமண சமூகத்தின் உறைநிலையை, அவர்களின் மூடநம்பிக்கைகளை, அங்குள்ள மடங்களின் பிற்போக்குத்தனத்தை கதைகளிலும் கட்டுரைகளிலும் மிகமிகக் கடுமையாக விமர்சித்தார். உண்மையில் அனந்தமூர்த்தியோ அல்லது நவ்யா இயக்கத்தவரில் எவருமோ பைரப்பா அளவுக்கு கடுமையாக சாதிமரபையும் மத அமைப்பையும் விமர்சிக்கவில்லை.

நான் பைரப்பா பற்றிக் கேள்விப்படுவதே அவருடைய வம்சவிருக்‌ஷா நாவலை ஒட்டி உருவான உக்கிரமான வெறுப்புப் பிரச்சாரம் வழியாகவே. அது பிராமணர்களின் ஆசாரவாதம் என்பது எத்தகைய உள்ளீடற்ற மூடநம்பிக்கை என்றும், அது மெய்யான ஆன்மீகத்திற்கு எப்படி முற்றிலும் எதிரானது என்றும் காட்டும் நாவல் [அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா பைரப்பாவின் வம்சவிருக்‌ஷா  ஆகியவற்றை ஒப்பிட்டு நான் எழுதியிருக்கிறேன்]  அவருடைய அத்தனை கதைகளும் எண்பதுகளில் ஆசாரவாதிகளின் வெறுப்பையும் வசையையும் பெற்றன. மறுபக்கம் நவீனத்துவராலும் அவர் வசைபாடப்பட்டார்.

பைரப்பா கடைசிக்காலத்தில் இந்துத்துவ சக்திகளின் அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கினார். அவர் திப்புசுல்தானின் மதவெறியை அம்பலப்படுத்தி எழுதிய ஆய்வுக்கட்டுரைகள், கர்நாடகத்தில் நிகழும் இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியை பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய  ஆவரணா என்னும் நாவல் போன்றவை அவர்களால் ஏற்கப்பட்டன. அந்நூல்கள் வழியாக அவர் இன்று அறியப்படுவது அவருக்குப் பெருமைசேர்ப்பது அல்ல. ஆவரணா கலைரீதியாக மிகமிக குறைவுபட்ட ஆக்கம். இன்றும் வம்சவிருட்சா போன்றவை தீண்டப்படாத நாவல்கள்தான். இன்றும் அவர்மீது உச்சகட்ட கசப்பு பொழியப்படுகிறது.

பைரப்பா சரியாக வாசிக்கப்பட இன்னும் காலமாகும். எழுத்தாளனின் மறைவுக்குப்பின்னரே அவன்மீதான கோபதாபங்கள் குறைகின்றன. பின்னர் அவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

எஸ் எல் ஃபைரப்பா

பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது

விருதுகள் அமைப்புக்கள்

யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

அனந்தமூர்த்தியின் அரசியல்

வம்ச விருட்சம்

ஞானபீட விருதுகள்
ஞானபீடம்

மொழியாக்கம்

மொழியாக்கம் பற்றி

*

தலைகொடுத்தல்

உரையாடல்கள்

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85

$
0
0

85. இறுதி நஞ்சு

ஹிரண்யபுரியை அடைய ஒரு நாள் இருக்கையில்தான் யயாதி குருநகரியிலிருந்து கிளம்பி தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை தேவயானி அறிந்தாள். அவன் பெயர் நீண்ட இடைவேளைக்குப்பின் காதில் விழுந்ததும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். உடலே நாவென கசப்பை உணர்ந்தவள்போல. உடலே முகமென சுளிப்பு கொண்டவள்போல. ஏழு நாட்களாக சுடரொன்றை அணையாது காப்பதுபோல் அவள் தன் வஞ்சத்தை உள்ளத்தில் பொத்திக்கொண்டு சென்றாள். புரவிமேல் உடலை எளிதாக அமைத்துக்கொண்டு சீரான விரைவுடன் சென்றாள். புரவியின் தாளத்தை உடல் அடைந்த பின்னர் உடல்வலி குறைந்தது. ஆனால் இரவில் படுத்ததுமே துயில்வந்து மூடியது.

நன்கு துயின்றமையால் காலையில் விழிகள் துலங்க உடல் புத்துயிர்கொள்ள எழுந்தாள். சுனைநீராட்டும் குறைந்த உணவும் அவளை விடுவித்துக்கொண்டே இருந்தன. பசு ஒன்று மானாகி பின் கொக்கென்று எழுந்ததுபோல. உடலின் எடை குறையும்தோறும் உள்ளம் விடுதலைகொள்வதன் விந்தை என்ன? உடலசைவுகளை உள்ளம் எங்கோ நடிக்கிறது போலும். உடலே எடைகொள்கிறது. அவள் பின் மேலும் பின் என சென்று துழாவும் எண்ணங்கள் இயல்பாக விலகி தூயவிழிகளுடன் சூழ்ந்திருக்கும் காட்டையும் ஒளிர்ந்து ஊடுசென்ற ஓடைகளையும் சாலைமுன் எழுந்து மருண்ட விழிகளுடன் நோக்கிய மான்கணங்களையும் இருளலையென மலைச்சரிவொன்றில் எழுந்து குறுக்காகக் கடந்துசென்ற காட்டுயானைக் கூட்டத்தையும் நோக்கியபடி சென்றாள். பின்னர் எண்ணிக்கொண்டு தன்னுள் இருந்து வஞ்சத்தை மீட்டெடுத்தாள். துயிலும் குழந்தையை உலுக்கி உலுக்கி விழிக்கச்செய்வதுபோல அதை திகழச்செய்தாள்.

ஹிரண்யபுரி ஒரு நாள் பயணத்தில் இருக்கிறதென்று உணர்ந்தபோது அவள் தன் வஞ்சத்தை மேலும் பெருக்கும் பொருட்டு நடந்த அனைத்தையும் சொல் தொட்டு தீட்டிக்கொண்டாள். நிகழ்வின் காட்சிகளும் உளப்பதிவின் ஓவியங்களும் தன்னுள் சொற்களாகவே அங்கிருப்பதை உணர்ந்தாள். ஒவ்வொரு நிகழ்வையும் நோக்கையும் அசைவையும் சொல்லென மாற்றிக்கொள்ள முடியும், பொருட்களை பணமென ஆக்கிக்கொள்வதுபோல. அந்தப் பணத்தை மீண்டும் பொருளென்றாக்கினால் அது பிறிதொன்று.

அச்சொல்லை நானே தெரிவு செய்ய முடியும் என்பது எத்தனை பெரிய வாய்ப்பு! இழந்ததை பறிகொடுத்தது என்றும் பழிசூடியதை சிறுமைசெய்யப்பட்டது என்றும் சொல்மாற்றம் செய்துகொண்டால் அது அவ்வண்ணமே ஆகிவிடுகிறது. மானுடனுக்கு உளமென்ற ஒன்றை அளித்த தெய்வங்கள் பயந்தது நற்கொடையா தீச்சொல்லா? தனிமையை கைவிடப்படுதல் என்றும் இயலாமையை வெறுமை என்றும் சினத்தை அறச்சீற்றம் என்றும் வஞ்சத்தை நெறியுணர்வு என்றும் மாற்றி அங்கே சேர்த்து வைத்திருக்கிறேன். நான் என நானுணரும் அனைத்தும் சொல் சொல்லென தேர்ந்து நான் அடுக்கிப் பின்னி படைத்தெடுத்தவை.

பதினேழாண்டுகால வாழ்விலிருந்து தன் வஞ்சத்திற்குரிய நிகழ்வுகளை மட்டுமே திரட்டி ஒற்றைப்பெரும்பரப்பென ஆக்கி அதில் தன் பிறிதொரு உருவை கொண்டுசென்று நிறுத்தினாள். அங்கு மீண்டும் வஞ்சம் ஊடென சினம் பாவென பின்னிய வாழ்க்கையொன்றை வாழ்ந்தாள். மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டவளாக புறக்கணிக்கப்பட்டவளாக சிறுமை செய்யப்பட்டவளாக. நச்சு மட்டுமே நெய்யெனக் கரைந்த சிறுகடல். அதைக் கடைந்தெடுத்த ஆலகாலம்.

இறுதிச் சாவடியில் இருந்து அவள் கிளம்பும்போதுதான் குருநகரியிலிருந்து வந்த ஒற்றன் குதிரை வியர்வை மணமெழுப்ப சாலையில் இருந்து புழுதிமூடிய மீசையும் தாடியுமாக முற்றத்திற்குள் நுழைந்தான். அவனை முன்னரே அறிந்திருந்த தேவயானி கூர்ந்து நோக்கியபடி நின்றாள். அவளைக் கண்டதும் புரவியிலிருந்து இறங்கி அருகணைந்து முறைப்படி தலைவணங்கி முகமன் சொன்னபின் “செய்தியுடன் வந்துள்ளேன், பேரரசி” என்றான். அவள் திரும்பிப்பார்க்க குரல் கேட்கா தொலைவுக்கு காவலர்கள் விலகி நின்றனர்.

“குருநகரியிலிருந்து அரசரும் அமைச்சர் பார்க்கவரும் சிறு காவல்படையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவள் சொல் என விழியொளி காட்ட “சரபஞ்சரத்தில் நிகழ்ந்தது அனைத்தையும் கிருபர் பறவையோலை வழியாக அரசருக்கு அறிவித்துவிட்டார். செய்தியறிந்ததுமே கிளம்பிவிட்டார்கள். அவர்கள் வரும் செய்தியை வழியிலிருந்த ஒற்றர்கள் எனக்கு பறவையோலை வழியாக அறிவித்தனர்” என்றான். தேவயானி “சிறைப்படுத்திச் செல்ல விழைகிறாரா என்ன?” என்றாள். அவ்வினாவின் பொருளின்மையை உணர்ந்தாலும் உள்நிறைந்த வஞ்சம் அதைக் கேட்டு நிறைவுகொண்டது.

“இல்லை அரசி, சிறிய காவல்படையுடன்தான் வருகிறார். தங்களைச் சந்தித்து மன்றாடும்பொருட்டு, பிழை பொறுத்தல் கோரும்பொருட்டுதான்” என்றான் ஒற்றன். “தாங்கள் இளைய அரசியைக் குறித்த செய்தியை அறிந்ததை பார்க்கவர்தான் அரசரிடம் சென்று சொன்னார். அப்போது தன் தனியறையில் நூலாய்ந்துகொண்டிருந்த அரசர் அஞ்சி உளம் உடைந்து குரல் எழுப்பினார். கைகால்கள் நடுங்க எழுந்து நின்றபின் சுவடியை வீசிவிட்டு ஓடிச்சென்று தன் மஞ்சத்தறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். பார்க்கவர் அக்கதவைத் தட்டி நெடுநேரம் அவரை அழைத்துக்கொண்டிருந்தார். பின்னர் அரசர் கதவைத் திறந்தபோது மூக்கு வழிவார மது அருந்தி நிலையழிந்திருந்தார். நாம் காட்டுக்குச் செல்வோம், காட்டில் வாழ்வோம் என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.”

“பார்க்கவர் உள்ளே நுழைந்து அவர் கையை பற்றிக்கொண்டு சொன்ன சொற்களை அவர் கேட்கவில்லை. பீடத்தில் அமர்ந்து தன் தலையை தானே அறைந்தபடி அழுதுகொண்டிருந்தார். பார்க்கவர் அவரது இரு கைகளையும் பிடித்து தடுத்து கடுஞ்சொல் சொல்லி சொல்நிலைக்கச்செய்து பின்னர் இனிய தாழ்ந்த குரலில் தேற்றினார். அதன் பிறகு இருவரும் அங்கிருந்தே பாய்ந்து வெளிவந்து புரவிகளில் ஏறிக்கொண்டு தங்களைத் தொடர்ந்து வரத்தொடங்கினர்” என்றான் ஒற்றன். “மூன்று குறுக்கு வழிகளினூடாக விரைவில் அவர்கள் அணுகமுடிந்தது. வழியில் இரு ஆறுகளில் படகுகளில் ஏறிக்கொண்டு விரைவுகொண்டனர். இன்னும் ஏழெட்டு நாழிகையில் அவர்கள் இங்கு வந்துவிடக்கூடும்.”

தேவயானி நீள்மூச்சுடன் படியிறங்க “தாங்கள் இங்கு காத்திருப்பது நன்று. அரசரின் சொற்களைக் கேட்டுவிட்டு தாங்கள் முடிவெடுக்கலாம் என்பது அமைச்சரின் சொல்” என்றான் ஒற்றன். அவன் செல்லலாம் என்று இடக்கை காட்டிவிட்டு திரும்பி காவலரிடம் “செல்வோம்” என்றாள் தேவயானி. அவர்கள் புரவியிலேறிக்கொண்டு விரைந்து சாலைகளில் குளம்புகள் தொட்டுப்பறக்க தாவிச்சென்றனர். அந்த இடத்தை விட்டு நீங்கியபோதிருந்தே தன் பின்னால் யயாதி வந்துகொண்டிருப்பதாக ஓர் உணர்வு இருந்துகொண்டிருந்தது அவளுக்கு. விலக விலக அது வலுத்தபடி வந்தது.

இரு தேவதாருமரத்தில் செதுக்கப்பட்ட இரு குலக்குறித்தூண்கள் நின்றிருந்த ஹிரண்யபுரியின் எல்லை வாயிலை அடைந்தபோது அவள் வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிந்து எல்லைக்காவலர்தலைவனும் பன்னிரு காவலரும் காத்து நின்றிருந்தனர். காவலர் தலைவன் தன் கையிலிருந்த அமுதகலசக் கொடியைச் சுழற்றி மும்முறை தாழ்த்தி வணங்கினான். அவன் அருகே புரவி வந்து நிற்க மூச்சிரைத்தபடி தேவயானி “தந்தை எங்கிருக்கிறார்?” என்றாள். அந்த நேர்வினாவால் அவன் திகைத்து பின் மீண்டு “அவர் ஹிரண்யபுரிக்குத் தெற்கே அமைந்துள்ள காகவனம் எனும் சோலையிலிருக்கிறார். மாணவர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள். சென்ற ஏழாண்டுகளாக சொல்லவி நோன்பு கொண்டிருக்கிறார்” என்றான்.

புரவி கடிவாளத்தின் இழுப்புக்கு தலைதிருப்பி கால்தூக்க அவன் “பேரரசி, தாங்கள் அவரை பார்க்க வேண்டுமெனில் முன்னரே செய்தி அனுப்புவது நன்று. அறிவிப்பின்றி எவரையும் அசுரப்பேராசிரியர் பார்ப்பதில்லை” என்றான். தேவயானி அவனை திரும்பி நோக்கியபின் மறுமொழி சொல்லாமலேயே புரவியை தட்டினாள். மாந்தளிர் உடலில் வியர்வை வழிந்து உப்புமணத்துடன் புழுதிசுருட்டி மணிகளாகி உருள, மூச்சில் குருதியின் அனல் வெம்மை எழ, குஞ்சி உலைய தலை குலுக்கி வாயில் தொங்கிய நுரையை உதறித்தெறிக்கவிட்டு புரவி முன்னங்காலால் தரையை மும்முறை தட்டியது. நீரிலிருந்து எழுந்ததுபோல மூச்சுசீறி, காதுகளை முன் கோட்டி, விழிகளை உருட்டி ஒருமுறை கனைத்தபின் தாவி ஹிரண்யபுரியின் எல்லையென அமைந்த பாலத்தை துடிதாளத்துடன் கடந்து அப்பால் சென்றது.

வழிகளனைத்தும் மாறிவிட்டிருந்தபோதிலும்கூட தன் உள்ளத்தில் அவை மிகத் தெளிவான அடையாளத்துடன் எழுவதை அவள் உணர்ந்தாள். அனைத்தும் மாறுகையிலும் மாறாமல் இருக்கும் ஒன்றை ஆழம் அறிந்திருக்கிறது. சுக்ரரின் குருநிலை அணுகுந்தோறும் அவள் புரவி விரைவுகொண்டது. அதன் தாளம் சூழ்ந்திருந்த காட்டுக்குள் பசுமையின் துடிப்பென ஒலித்தது. சிற்றோடை ஒன்றின் கரையில் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து அதை நிறுத்தினாள். வந்தடைந்துவிட்ட உணர்வு அவள் உள்ளத்தில் எழுந்ததும் அதுவரை செலுத்தி வந்த விசை முற்றிலும் தீர்ந்துவிட்டிருந்தது.

புரவியிலிருந்து இறங்கி எருமைத்தோல் காலணிகளை கழற்றி வீசிவிட்டு வெற்றுக்கால்களுடன் நடந்து சிற்றோடைக்குள் இறங்கி நீர் தழுவிச்சென்ற கரிய பாறையொன்றில் அமர்ந்தாள். கால்களை ஓடும் நீருக்குள் விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தபோது உடலெங்கும் எரிந்தெழுந்த வியர்வை குளிர்ந்து தோல் சிலிர்க்கத் தொடங்கியது. குளிர்ந்த தெளிநீரை அள்ளி முகத்திலும் உடலிலும் விட்டுக்கொண்டாள். உடல் குளிரக் குளிர உள்ளே கிழிந்து பறந்து துடித்துக்கொண்டிருந்த எண்ணங்களும் மெல்ல நனைந்து படியத்தொடங்கின. கண்களை மூடிக்கொண்டு தன்னைச் சூழ்ந்திருந்த நீரோசையை மட்டும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். காட்டின் காற்றோசை அதனுடன் இணைந்துகொண்டது.

எழுந்து சென்று சுக்ரரை பார்க்கவேண்டுமென்று ஒரு சிறு உளப்பகுதி அவளை அழைத்தது. முரண்டு பிடிக்கும் யானையை செவி பற்றி இழுப்பதுபோல். அவள் தன்னிலை அங்கேயே நின்றிருக்க விழைந்தது. வந்தது அதற்காகத்தான் என்பதுபோல. சென்று செய்ய வேண்டியது என்னவென்று அறியாதது போல. தந்தையிடம் சொல்ல தன்னில் சொற்கோவை ஏதும் இல்லையென்பதால்தான் அந்தத் தயக்கம் என்று உணர்ந்தாள். ஐந்து சொற்றொடர்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தால் அங்கிருந்து கிளம்ப முடியும். நிகழ்ந்த அனைத்தையும் அவ்வைந்து சொற்றொடர்களில் சொல்ல வேண்டும். அதற்குள் உணர்வுகள் கிளர்ந்து அனைத்தும் கட்டற்று எழுந்துவிடும்.

எண்ணி எண்ணி நோக்கினும் சொல்லென ஆகாமல் விரிந்து கிடந்தது அந்தப் பதினேழாண்டுப் பெருவெளி. வழிநெடுக சொல்லெடுத்துக் கோத்து அவள் தீட்டிக்கொண்டிருந்த அனைத்தும் பிறிதொரு வெளியாக அப்பால் பரந்து கிடந்தன. ஒன்றையொன்று அறியாதவை. இரண்டும் அவளுடன் தொடர்பற்றவை என்று தோன்றியது. பலமுறை அவள் அங்கிருந்து உள்ளத்தால் எழுந்தாள். உடல் அங்கேயே அமர்ந்திருந்தது. நெடுநேரமாயிற்றென்று தோன்றியது. நீரருந்தி பிடரி சிலிர்க்க காற்றில் நின்று உடல் ஆற்றிக்கொண்ட அவள் புரவி அவள் எழாது அமர்ந்திருப்பதைக் கண்டபின் இருமுறை மெல்ல கனைத்து தலையை உலுக்கி காதுகளை அடித்துக்கொண்டபின் சென்று அப்பால் புல் மேயத்தொடங்கியது. தங்கள் புரவிகளை நீரூட்டி மேயவிட்டபின் வெவ்வேறு மரநிழல்களிலாக அவளது காவல்வீரர்களும் படுத்துக்கிடந்தனர். புரவிகளின் தும்மலோசையும் செருமலோசையும் கேட்டுக்கொண்டிருந்தன. சிறு குருவிகள் வந்து அவற்றின்மேல் அமர்ந்து விளையாடத்தொடங்கின.

தொலைவில் வண்ண அசைவுகளாக அவள் யயாதியும் பார்க்கவனும் பிறரும் வருவதைக் கண்டாள். அவள் தலைக்குப் பின்னால் புரவிக்குளம்படி ஓசை ஒலித்துக்கொண்டிருக்க சரடில் சிலந்தி பறந்து அணுகுவதுபோல் அவர்கள் ஓசையின்றி வந்தனர். வண்ணங்கள் வடிவக்கூர் கொண்டன. முகமென்றாயின. விழிகள் என்று தெளிந்தன. யயாதி தன்னைப் பார்த்துவிட்டதை அவள் உணர்ந்தாள். அவன் புரவி விரைவழிந்தது. புரவியின் காதுகளின் மயிர்கூடத் தெரியுமளவுக்கு அணுகி வந்தனர். பிற காவலர்கள் நின்றுவிட பார்க்கவனும் அவனும் மட்டும் புரவிகளின் மேலிருந்து இறங்கி நடந்தனர்.

நீரைப் பார்த்ததும் யயாதியின் புரவி தலையைச் சிலுப்பி நீள்மூச்சு விட்டது. அவன் கடிவாளத்தை விட்டதும் ஆணை பெறாமலேயே புரவி நீரைநோக்கிச் சென்று குனிந்து குடிக்கத் தொடங்கியது. நீர் உள்ளே சென்றதும் உடல் சிலிர்த்து வால்சுழற்றி பசுஞ்சிறுநீர் கழித்தது. அச்சிறுநீரின் மணத்தை உணர்ந்து மேய்ந்து கொண்டிருந்த புரவிகள் தலைதூக்கி செவிகோட்டி மூக்கை நீட்டிச் சுழித்து விரித்து கனைத்தன. யயாதி தன் தோல்காலணிகளுடன் சில அடிகள் எடுத்து வைத்தபின் குனிந்து அவற்றைக் கழற்றிவிட்டு அவளருகே வந்தான். ஓடைக்கப்பால் மணற்சரிவில் நின்று அவளை நோக்கினான்.

அவள் அவன் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கைகூப்பி “நான் பிறிதொன்றும் சொல்வதற்கு இல்லாதவன். என்னை வெறுமொரு உடல் மட்டுமே என்று இப்போது உணர்கிறேன். குருதி விந்து சீழ் மலம் இவையே நான். அரசி, நான் விழிநீரும்கூட. உடலின் விசைகளால் இயக்கப்பட்டவன். நிகழ்ந்தவை அனைத்திற்கும் என் விழைவன்றி பிறிதெதையும் விளக்கமென சொல்லமாட்டேன்” என்றான். அவள் கண்களைத் தாழ்த்தி நீரோடையை பார்த்துக்கொண்டிருந்தாள். “அறியா இளமைந்தனாக பிழைசெய்து மீண்டு அன்னையின் முன் வந்ததுபோல் இங்கு நின்றிருக்கிறேன்” என்று யயாதி சொன்னான்.

அவள் தன்னுள் எங்கெங்கோ தத்தளித்துக்கொண்டிருந்தாள். ஓடையில் மிதந்து வந்த சருகொன்று காலைத் தொட்டதும் திடுக்கிட்டு எங்கிருக்கிறோம் என வியப்பவள்போல திகைத்து பின்னர் நிமிர்ந்து அவனை நோக்கியபோது அவளுக்குள் சொல் முளைத்திருந்தது. “இது உன் மீதான வஞ்சம் மட்டும் அல்ல” என்றாள். பற்களைக் கடித்தபடி “ஆணென்பதாலேயே நீ பழி சுமந்தாகவேண்டும்” என்றபின் எழுந்து திரும்பி நடந்தாள்.

tigerகிருதர்தான் தேவயானியை முதலில் பார்த்தார். அவரால் அவளை அடையாளம் காண முடியவில்லை. பதினேழாண்டுகளில் ஒன்பது முறை அவர் குருநகரியின் அரண்மனைக்கு வந்து சக்ரவர்த்தினியாக அவைவீற்றிருந்த தேவயானியை பார்த்திருந்தார். அத்தோற்றம் அவர் உள்ளத்தில் பதிந்து இளமை முதல் அவர் அணிந்த மற்ற தோற்றங்கள் அனைத்தையும் முற்றாக அழித்துவிட்டிருந்தது. குடிலுக்கு முன் சிறு கோடரியால் வேள்விக்கென சமதையை வெட்டிக்கொண்டிருந்தவர் விழி சுருக்கி மண்சாலையில் நடந்து வரும் பெண்ணை பார்த்தார். எளிய வெண்ணிற ஆடை அணிந்து நீண்ட குழல் காற்றில் அலையடிக்க வெற்றுக்கால்களுடன் வந்தவள் நிமிர்ந்த நடையும் சீராகச் சுழலும் கைகளும் கொண்டிருந்தாள். அவர் அறிந்த வேறெவரையோ அவள் நினைவுறுத்தினாள். பின் உள்ளம் பற்றிக்கொண்டு வியப்புக்குரலுடன் அவர் எழுந்தார்.

தேவயானி குடில் வாயிலை அடைந்ததும் அவர் படிகளில் இறங்கி அவளை நோக்கி கைவிரித்தபடி ஓடி “வருக! வருக தேவி! என்ன இது? ஏன் எளிய தோற்றம்?” என்றார். “தந்தையைப் பார்ப்பதற்காக” என்று அவள் சுருக்கமாக சொன்னாள். “ஆம். தாங்கள் அரச உடையில் வராமல் இருந்தது நன்றே” என்றார் கிருதர். அவளுடன் நடந்தபடி “ஏன் என்று தெரியவில்லை. ஒருகணம் தொலைவில் உங்கள் அன்னை ஜெயந்தி என்று எண்ணிவிட்டேன். அதே நடை, அதே நோக்கு. நடுவயதில் பெண்டிர் தங்கள் அன்னையைப்போல் ஆவது எண்ணியிராத வியப்பளிப்பது” என்றபின் படலை விலக்கி உள்ளே சென்று நின்று புன்னகையுடன் “வருக!” என்றார்.

தொலைவில் சுஷமரும் சத்வரும் அவளைப் பார்த்து சிரித்து உவகைக் குரல் எழுப்பியபடி விரைந்து வந்தனர். சத்வர் அவளருகே வந்து “அரச அணிகளால் உங்கள் அழகும் நிமிர்வும் உருவாகவில்லை என்பது இப்போது தெரிந்தது. கலையமர் செல்வி வெண்கலை உடுத்து வந்ததுபோல் இருக்கிறீர்கள், தேவி” என்றார். தேவயானி புன்னகைத்து “நான் தந்தையை பார்க்கவேண்டும்” என்றாள். “அவர் சொல்லெழா நோன்பு கொண்டிருக்கிறார். நெடுநாட்களாகிவிட்டமையால் இப்போது விழிகளிலும் சொற்களின்றி ஆகிவிட்டிருக்கிறது. உங்களை அவர் சந்திக்க விழைகிறாரா என்று தெரியவில்லை” என்றார் சுஷமர்.

கிருதர் “நான் உள்ளே சென்று நீங்கள் வந்திருப்பதை சொல்கிறேன்” என திரும்ப தேவயானி அவர் தோளைத் தொட்டு “வேண்டியதில்லை. நானே சென்று அவரை பார்க்கிறேன். தீச்சொல்லிட்டு என்னை அழிப்பார் என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றபின் அவர்களைக் கடந்து பின் மையக்குடில் நோக்கி சென்றாள். நெடுநாட்களுக்குப்பின் தங்கள் தவக்குடிலுக்கு வந்திருந்தபோதிலும்கூட நலம் உசாவவோ முகமன்கள் உரைக்கவோ அவள் முற்படவில்லை என்பதைக் கொண்டே அவள் நிலையழிந்திருக்கிறாள் என்பதை கிருதர் உய்த்துணர்ந்து கொண்டார்.

அவள் உள்ளே சென்றதும் “என்ன ஆயிற்று?” என்றார் சத்வர். “அவள் பாரதவர்ஷத்தின் பேரரசி. ஒவ்வொரு புயலும் விசை பெருகி மையம்கொண்டு தேடி வரும் மலைமுடி போலிருக்கிறாள்” என்றார் கிருதர். “போர்க்களத்தில் யானைமேல் அமர்ந்திருப்பது போன்றது அரசனின் இடம் என்றொரு கவிச்சொல் உண்டு” என்றார் சுஷமர். “இது அரசுமுறைப் பயணமல்ல. தனிப்பட்ட முறையில் இடரோ துயரோ கொண்டிருக்கிறார்கள்” என்றார் சத்வர். “பார்ப்போம்” என்று கிருதர் குனிந்து தன் கைக்கோடரியை எடுத்துக்கொண்டார்.

மையக்குடிலில் வாயிலில் நின்றிருந்த இளம்மாணவன் தேவயானியைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொண்டு தலைவணங்கி விலகினான். அவள் குடிலின் கதவென அமைக்கப்பட்டிருந்த மூங்கில் படலைத் திறந்து உள்ளே சென்றாள். தரையில் விரிக்கப்பட்ட புலித்தோல் மீது மலரமர்வில் கால் மடித்து கைகளை மார்பில் கட்டியபடி விழிமூடி அசைவிலாது அமர்ந்திருந்த சுக்ரரைக் கண்டு ஒருகணம் நின்றாள். அவர் இறந்து சிலையாக்கப்பட்டு அங்கிருக்கிறார் என்னும் எண்ணமே முதலில் எழுந்தது. “தந்தையே…” என்றாள். அவர் விழிகள் அதிர்ந்து இமைகள் மேலெழுந்தன. கண்கள் குருதிச் செம்மை கொண்டிருப்பதை அவள் கண்டாள். ஒருகணம் உளம் நடுங்கி பின்னடைந்தாள்.

திரும்பி வந்த உள்ளம் உந்தி முன்செலுத்த காலடி எடுத்து வைத்து அவர் அருகே சென்று முழந்தாளிட்டு அவரை நெற்றிநிலம்பட வணங்கி “தங்களைப் பார்ப்பதற்கென்று வந்திருக்கிறேன், தந்தையே” என்றாள். சுக்ரர் செவ்விழிகளால் அவளை நோக்கியபடி அசைவிலாது அமர்ந்திருந்தார். கொடுஞ்சின மூதாதைத் தெய்வமொன்றின் முன் நின்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். “நான் உங்களிடம் துயர் ஒன்றை முறையிடும்பொருட்டு வந்துள்ளேன், தந்தையே” என்றாள் தேவயானி.

அவள் மேலும் சொல்ல வாயெடுப்பதற்குள் அவர் கைகாட்டி “போதும்” என்றார். நெடுங்காலத்திற்குப் பிறகு நாவிலெழுந்தமையால் அவரது சொல் வெறும் மூச்சொலியாக இருந்தது. “நான் என்ன நிகழ்ந்ததென்று சொல்லவேண்டியுள்ளது. எவரிடமேனும் சொல்லும் பொருட்டே இத்தனை தொலைவு வந்தேன்” என்றாள். “அவன் சர்மிஷ்டையிடம் மைந்தரை ஈன்றுளான், அதுதான் இல்லையா?” என்றார் சுக்ரர். “ஆம், தங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் தேவயானி. சுக்ரர் “விருஷபர்வனின் ஒற்றர் அதை அறியாமல் இருப்பரா? அவனறிந்தால் என்னிடம் உரைக்காமலிருப்பானா? அம்மைந்தர் அரசகுடி பிறந்தோர். மானுடரின் வஞ்சங்களும் துயர்களும் குடிப்பிறப்பையும் ஊழையும் மாற்ற முடியாது” என்றார்.

நீள்மூச்சுடன் மெல்ல கால்மடித்து அமர்ந்துகொண்டு “ஆம் தந்தையே, அவர்களை முறையான அரசகுடியினராக அறிவித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்” என்று தேவயானி சொன்னாள். “ஆனால் என் வஞ்சம் அரசன் மீது பெருகிக்கொண்டே இருக்கிறது. என் நெஞ்சு ஒழியாது நான் அமைதி கொள்ள இயலாது. இச்செயலின் பொருட்டு அவன் துயர்கொள்ள வேண்டும். இதை எண்ணி நொந்து அழிய வேண்டும்.” இத்தனை எளிதாகவா சொல்வது என்று ஓர் உள்ளம் வியந்தது. பிறிதொரு சொல் இல்லை தன்னுள் என உணர்ந்துகொண்டது.

சுக்ரர் “அவ்வஞ்சம் வெளிப்பட்டபின் உன் உளம் ஒழியுமென்று உறுதியாக எண்ணுகிறாயா?” என்றார். “ஆம், ஒழியும். ஒருவேளை ஒழியவில்லையென்றால்கூட நான் அதை வெல்லும்பொருட்டு தவம் மேற்கொள்ள முடியும். ஆனால் இவ்வஞ்சத்தை என்னுள் கரந்தபடி என்னால் வாழமுடியாது” என்றாள். சுக்ரர் “அவனை நீ ஏன் பொறுத்தருளலாகாது? எப்படி மணிமுடியைத் துறந்து மீண்டாயோ அதைப்போல அவனையும் துறந்து காடேகினால் நீ விடுதலை கொள்வாயல்லவா?” என்றார்.

“இனி குருநகரிக்குச் சென்று மணிமுடி சூடி அமர்ந்திருக்கும் எண்ணமெனக்கில்லை. எண்ணினாலும் அது இயல்வதல்ல. ஆனால் ஒருமுறை தீண்டாமல் நான் படம் சுருக்க இயலாது” என்றாள் தேவயானி. “அன்று என்னைத் துறந்து சென்ற கசன்மேல் தீச்சொல் இடுகையில் என்னுள் உறைந்த அன்னையொருத்தி எழுந்து வந்து சொற்களை பற்றிக்கொண்டாள். அன்றே நான் அவனை அழித்திருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இன்று இத்தனை நஞ்சு கொண்டிருக்கமாட்டேன்.”

சுக்ரர் புன்னகைத்து “இதற்கு விளக்கமென எதையும் எவரும் சொல்லிவிடமுடியாது. இருந்தால்களும் ஆனால்களும் கொண்டதல்ல வாழ்க்கை. அது அவ்வண்ணமே அமைய வேண்டுமென்று ஊழால் வகுக்கப்பட்டது. ஊழுக்கு மானுடன் ஆற்றும் எளிய எதிர்வினைகளே இருந்தால்களும் ஆனால்களும். அவை வெற்றுச் சொற்கள். பொருளற்ற பொருமல்கள், ஏக்கங்கள்…” என்றார்.

தேவயானி பொறுமையிழந்து “நான் சொல்லாட விரும்பவில்லை. இதோ, அவன் வந்துகொண்டிருக்கிறான். இத்தருணத்தில் நம் குடில் வாயிலை அவன் அடைந்திருப்பான் என்று எண்ணுகின்றேன். உங்கள் தவச்சீற்றத்தால் அவனை பொசுக்குங்கள், தந்தையே! ஆயிரமாண்டு அவன் இருள் நரகில் திளைக்கட்டும்” என்றாள்.

சுக்ரரின் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தன. “நீ காவியங்களையும் தொல்கதைகளையும் முற்றும் மறந்துவிட்டாய் போலும். தீச்சொற்களின் வரலாறை அறிவாயா? முற்றழிக்கும் தீச்சொல்லிட தெய்வங்களுக்கும் உரிமையில்லை. புதுப்பிறவி கொண்டெழும் வாய்ப்பையே தீச்சொல்லெனும் பேரில் அளிக்கவேண்டும்” என்றார். “அதிலும் அன்னையரும் ஆசிரியர்களும் அந்தணரும் முனிவர்களும் தேவர்களும் தெய்வங்களும் அளிக்கும் தீச்சொற்கள் காலம் கனிகையில் நற்கொடைகளாகவும் அமைந்தாகவேண்டும்.”

தேவயானி பெருஞ்சினம் எழ தன் கையை ஓங்கி தரையில் அறைந்தபடி “அவ்வண்ணமெனில் நான் தீச்சொல்லிடுகிறேன். அவனை இக்கணமே மீளா இருளுக்கு அனுப்புகிறேன்” என்றாள். சுக்ரர் “தீச்சொல் என்பது என்ன? அம்பை தொடுப்பவன் நிகர் விசையுடன் கையை தன்னை நோக்கி இழுக்கிறான். துலாவின் ஒரு தட்டில் தீச்சொல்லை வைக்க மறுதட்டில் நீ வைப்பதென்ன என்பதுதான் முதன்மையான வினா. அன்னை தன் கடனை, ஆசிரியன் தன் கொடையை, அந்தணன் தன் நோன்பை, முனிவர் தன் தவத்தை, தேவர்கள் தங்கள் மேன்மையை, தெய்வங்கள் ஊழை அங்கே வைக்கலாம். நீ உன் வஞ்சத்தையே வைக்க முடியும். மகளே, நிகராக உன் துலா தட்டும் தாழும். அவனுக்கு நீ அளிப்பதை நீயும் அடைந்தாலொழிய உன்னால் தீச்சொல்லிட இயலாது” என்றார்.

தேவயானி தொண்டையில் குருதிக்குழாய்கள் புடைக்க நரம்புகள் நீலமென முடிச்சுவிழ விழிகளில் நீர்மையொளிர “நான் அழிகிறேன். நானும் இருளில் உழல்கிறேன். இனி இந்த இரு கால் மாக்களின் இழிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. தந்தையே, இக்கணம் நான் எழுந்து கசந்து நோக்குவது என் கையைப்பற்றிய இக்கீழ்மகனை அல்ல. ஆணெனத் தருக்கியபடி வெற்றுக்காமம் மட்டுமே உளமென்றாகி அலையும் மானுடரில் பாதியை. அனைவருக்குமான ஒரு தீச்சொல்லை இட்டு அமையாமல் இந்த அகஇருளில் இருந்து எழ என்னால் இயலாது” என்றாள்.

“நீ கசனுக்கு அளித்த தீச்சொல்லின் மறுவிசையாலேயே இப்பெருந்துயரை இன்று அடைந்தாய். இத்தருணத்திலாவது அதை நீ உணர்ந்தாக வேண்டும். இன்றளிக்கும் தீச்சொல்லின் விசையை எங்கு சென்று முடிப்பாய்? ஒரு முடிச்சு பிறிதொரு முடிச்சாவதை உணரவில்லை என்றால் வாழ்க்கையில் நீ எதை கற்றாய்? அறுத்து விடுபடுவதன்றி அவிழ்த்து மீள்வது வாழ்வில் எவருக்கும் இயல்வதல்ல” என்றார் சுக்ரர். “நன்று, என்னை நீங்களும் கைவிடுகிறீர்கள். இச்சொல்லுக்கு அது ஒன்றே பொருள். இறுதிப் புகலிடமென நான் வந்த தந்தையின் நாவிலிருந்து உன் துயர் உன்னுடையது மட்டுமே என்று கேட்கையில் என் ஊழுறவு வலையின் இறுதிக் கண்ணியும் அறுபடுகிறது போலும்” என்றபடி தேவயானி திரும்பினாள்.

வாயிலில் தோன்றிய கிருதர் தலைவணங்கி “யயாதி” என்றார். “அவனை வரச்சொல்” என்றார் சுக்ரர். “இங்கு அவன் வரவேண்டியதில்லை. தங்கள் முன் வந்து விழிநீர் சிந்தி இரந்து கருணை பெற்று திரும்பவிருக்கிறான். ஆணிலி, கோழை, சிறுமதியாளன்” என்று தேவயானி கூவினாள். “பிழை இயற்றாத மானுடர் எவர்? மாமுனிவரும் காமத்தால் நடை தவறியவர்களே” என்றார் சுக்ரர்.

தேவயானி “கரந்து ஒன்று செய்பவன் தான் செய்யும் அனைத்தையும் கரந்தே செய்யும் சிற்றுயிராகிறான். தெய்வங்கள் பறவைகளை விண்ணிலும் விலங்குகளை மண்ணிலும் உலவும்படி செய்தன. அரவுகளையும் முயல்களையும் எலிகளையுமே ஆழங்களுக்குள் வாழச்செய்தன. பறக்க எண்ணி விண்நோக்குவதே விலங்கின் மீட்பு. மண்ணுக்குள் புக விழைவது கீழ்நெறி. அவன் கீழ்மகனாக தன்னை ஆக்கிக்கொண்டவன். தந்தையே, மறுஎண்ணமின்றி அவனை தீச்சொல்லிட்டு எரித்தழித்தால் மட்டுமே நீங்கள் என் தந்தை. இல்லையேல் நீங்கள் எனக்களித்த ஒவ்வொரு சொல்லையும் மறப்பேன். என் உள்ளத்திலிருந்து இறுதி ஆண்மகனென எஞ்சியிருக்கும் உங்களையும் கழற்றி வீசுவேன்” என்றாள்.

“அணிந்தவை அனைத்தையும் கழற்றி வீசினால் மட்டுமே துறவு நிகழும். துறவு இன்றி கல்வி இல்லை. எத்தனை துறக்கிறோமோ அத்தனை கற்கிறோம். முழு துறவு முழுமை அறிவிற்கான வழி” என்றார் சுக்ரர்.

தொடர்புடைய பதிவுகள்

பழைய அரிய தமிழ் புத்தகங்கள்

$
0
0

Tamil_News_large_696867

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

போக முனிவர் அருளிய ஜெனன சாகரம்,தமிழ் சித்த வைத்திய அகராதி,ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்,சங்க இலக்கிய இன்கவி திரட்டு போன்ற *பழைய அரிய தமிழ் புத்தகங்கள்* வருடம் 1886 ல் இருந்து பதிப்பிக்கப்பட்டவை (5376 புத்தங்கள்) ‘pdf’ வடிவத்தில் கிடைக்கும் ‘சுட்டியை’ நண்பர் அனுப்பியிருந்தார்.அதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் நமது தளத்தில் பகிர வேண்டுகிறேன்.

 http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700

அன்புடன்,

அ .சேஷகிரி

***.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கொடிக்கால்- ஆவணப்படம்

$
0
0

kodikkal

கொடிக்கால் அப்துல்லா அவர்கள் நேற்று என் இல்லத்திற்கு வந்திருந்தார்கள். அஜிதனும் வீட்டில் இருந்தான், ஆகவே பெரியவரின் ஆசிகளைப் பெறும் நல்வாய்ப்பு அவனுக்கு அமைந்தது. இன்றைய அரசியல் குறித்தும் நேற்றைய நிகழ்வுகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவரைப்போன்ற இலட்சியவாதிக்கு சமகால நிகழ்வுகள் அளிக்கும் துயரமும் பதைப்பும் புரிந்துகொள்ளக்கூடியவையே. நான் அக்கசப்புகளை மேலும் தீவிரமாகக் கொண்டவன்.

ஆனால் அவரிடம் ஒன்றைச் சொன்னேன். இந்தியாவெங்கும் சென்ற இருபதாண்டுகளில் நிகழ்ந்துள்ள முக்கியமான மாற்றம் அது. உணவு, உடை உறைவிடம் ஆகியவற்றில் இந்தியா ஒருவகையான தன்னிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்று தமிழகத்தில் தஞ்சை, கடலூர் போன்ற சில பகுதிகளைத் தவிர பொதுவாகவே குடிசைகள் கண்ணுக்குப்படுவது அரிதாகிவிட்டது. குடிசைகள் மண்டிய ஒரு பகுதியை சினிமா எடுப்பதாக இருந்தால்கூட செட் போடவேண்டிய நிலைமை. குடியிருப்பதன் நெருக்கடி அதிகமாக நகரங்களில்தான்

கிராமங்களில் சென்ற பத்தாண்டுகளில் விரைவாக சிறிய கான்கிரீட் வீடுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 80 சதவீதத்தை இலவசமாக அளிக்கும் மத்திய அரசின் நிதிக்கொடை முதன்மையான காரணம். கழிப்பறைகள் சாதாரணமாக ஆகி தொடர்ந்த உச்சகட்ட பிரச்சாரமும் நிகழ்வதனால் கிராமங்களில் பொதுஇடங்களில் மலக்குவியல்கள் இருப்பது வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் முறையே பிகார், வங்காளம், உத்தரபிரதேசம் ஆகியவைதான் வறுமையான மாநிலங்கள். அங்கேயும்கூட இன்று உணவில்லை என்னும் நிலை இல்லை. ஒருநாள் கூலிப்பணியாற்றி ஊதியம் பெற்றால் ஒருவாரம் உண்ணலாம் என்பதே இந்தியா முழுக்க இருக்கும் நிலை. முன்பெல்லாம் சாலையில் நல்ல உடை அணிந்தவர் நூற்றில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். இன்று நேர்மாறு.

என்னதான் அரசியல் சிக்கல், சூழியல் அழிவு என்றெல்லாம் சொன்னாலும் இந்த மாற்றம் அபாரமானது. பட்டினியையே பார்த்து வளர்ந்த, பிறர் பசி கண்டு கொதித்து அரசியலுக்கு வந்த கொடிக்கால் அப்துல்லா போன்றவர்களுக்கு அதன் அருமை புரியும். நான் இளமையில் பட்டினி கிடக்கும் மக்கள் நடுவே வளர்ந்தவன். சின்னக்குழந்தைகள் உணவுக்கு ஏங்கி நின்றிருக்கும் காட்சி எப்போதுமே என்னை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. அது அக்குழந்தைக்கு ஒட்டுமொத்த உலகும் செய்யும் வஞ்சகம் என தோன்றும் இன்று அக்காட்சி மறையத் தொடங்கியிருக்கிறது. அது சமகாலத்தின் பெருங்கொடை

பெரியவரின் முகம் மலர்ந்தது. ஆனால் நான் ஒரு தவறு செய்தேன். மேலும் சொல்லிப்போய் இந்தியாவுடன் இணைந்து சுதந்திரம் பெற்ற பிறநாடுகள் இருக்கும் நிலையை விளக்கினேன். ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் பல்லாயிரம்பேர் பட்டினியால் சாகும் பெரும்பஞ்சங்கள் எழுந்திருக்கின்றன என்றேன். பலநாடுகளில் உள்நாட்டுப்போரின் விளைவான பஞ்சங்கள், அழிவுகள். பெரியவரின் முகம் மீண்டும் கூம்பிவிட்டது. அவர் ஆப்ரிக்காவுக்கான மனத்துயருடன் கிளம்பிச் சென்றார்.

கொடிக்கால் அவர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். அமீர் அப்பாஸ் இயக்க எம். முகம்மது ஷெரீஃப் தயாரித்திருக்கிறார். எம்.எஸ்.அலிகான் தயாரிப்பு நிர்வாகம். முக்கியமான ஒரு பதிவு. அனைத்து வகையிலும் பாராட்டப்படவேண்டியது. கொடிக்கால் அவர்களின் பேச்சும் அவரைப்பற்றிய சமகாலத்தவரின் பதிவுகளும் இதில் உள்ளன.

என்ன குறைகிறது என்றால் அவருடைய காலகட்டம் பற்றிய பதிவுகள்தான். அவருடைய அரசியல் களங்களில் ஆதரவாகவும் எதிராகவும் உடன்நின்றவர்களின் ஒரு புகைப்படத் தொகுதியை உருவாக்கி இணைத்திருக்கலாம். கொலாஜ் முறையில் ஒரு முகப்பெருக்கு அமைந்திருக்கலாம். ஆவணப்படங்களுக்கு முடிவில்லை, இன்னமும்கூட செய்யலாம்

***

கொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை

கொடிக்கால் அப்துல்லா – என் உரை

கொடிக்கால்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கி.ராவுக்கு ஞானபீடம் –இன்றைய தேவை

$
0
0

kiraa

இந்திய இலக்கியம் என்னும் நவீனச்செவ்வியல் திரண்டு வரும் கூட்டுவிவாதத்தில் எவ்வகையிலும் தமிழ் ஒரு பொருட்டாக எடுக்கப்படுவதில்லை என்பதை முன்னர் இரு கட்டுரைகளில் விரிவாக எழுதியிருந்தேன். [செவ்வியலும் இந்திய இலக்கியமும் , கால்கள் பாதைகள் ]அதற்கான காரணங்களில் ஒன்று நம் பெரும்படைப்பாளிகள் ஞானபீடம் போன்ற தேசிய அளவிலான விருதுக்களை வெல்லவில்லை என்பது.

சென்ற சில ஆண்டுகளாகவே அசோகமித்திரன். கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய மூவரும் ஞானபீடப் பரிசுகளுக்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை நாம் போதிய அளவு முன்னிறுத்தாமையாலும், இங்குள்ள அரசியல் பின்னணி கொண்ட சில வெகுஜன எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளாலும் அது தொடர்ந்து தள்ளிப்போகிறது. தமிழுக்கு அது மிகப்பெரிய இழப்பு. இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியதைச் செய்து ஞானபீடம் தமிழுக்கு வரச்செய்யவேண்டும்.

kiraa

ஏன் ஞானபீடம்?

ஞானபீடப்பரிசு என்பது ஜெயின் அறக்கட்டளையால் அளிக்கப்படும் ஒரு தனியார்விருது. ஆனால் அது இதுவரை அளிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனேகமாக அனைவருமே முதன்மையான பெரும்படைப்பாளிகள். ஆகவே அவர்களின் தொகையையே இந்திய இலக்கியம் என இந்திய அறிவுலகம் பொதுவாக ஏற்றுக்கொள்கிறது. ஞானபீடப் பரிசுபெறாமையாலேயே நம் முதன்மையான படைப்பாளிகள் இந்திய அளவில் கவனிக்கப்படவில்லை. தமிழுக்கு இந்திய இலக்கியத்தின் செவ்வியல் தொகுப்பில் உரிய இடமும் இல்லாமலிருக்கிறது.

செவ்வியல் என்பது தனிப்பட்ட ரசனைகளும் தேர்வுகளும் ஒரு பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு தொடர்ச்சியான விவாதங்கள் முன்வைக்கப்பட்டு அதன் விளைவாக திரண்டு உருவாகி வந்து நிற்பது. அகவயமான ரசனையிலிருந்தும் தேர்விலிருந்தும் உருவாகி வரும் புறவயமான மதிப்பீடு என்று அதைச் சொல்லலாம். செவ்வியல் உருவாக்கம் தான் ஒவ்வொரு இலக்கியச்சூழலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிவுச் செயல்பாடு.

செவ்வியல் ஒரு பண்பாட்டின் அதுவரைக்குமான சாதனையை தொகுத்து அதன் மைய ஓட்டத்தை துலக்குகிறது. அதன் பின்னர் அதிலிருந்து மேலும் எழுந்து செல்லும்படி அடுத்த தலைமுறையை அறைகூவுகிறது. எழுந்து வரும் படைப்புகளை மதிப்பிடுகிறது.

இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பண்டைய இலக்கியங்கள் சார்ந்த செவ்வியல் ஒன்று பல நூற்றாண்டுகால இலக்கிய விவாதத்தின் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்திருப்பதைக் காணலாம். தமிழிலும் அத்தகைய ஓர் செவ்வியல்தொகை இன்று நமக்கு உள்ளது. அதில் கம்பனும் வள்ளுவரும் இளங்கோவும் முதன்மை இடம் வகிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

சென்ற நூறாண்டுகளாக நவீன இந்திய இலக்கிய சூழலில் இவ்வாறான ஒரு பொது விவாதம் நடந்து அதன் விளைவாக ஒரு நவீன இந்தியச் செவ்வியல் ஒன்று திரண்டு வந்துள்ளது. அதில் தாரா சங்கர் பானர்ஜியும், மாணிக் பந்தோபாத்யாயவும், விபூதி பூஷன் பந்தோபாத்யாயவும், பிரேம் சந்தும், யஷ்பாலும், அம்ரிதா ப்ரீதம் இஸ்மத் சுக்தாயும், சிவராமகாரந்த்தும், பைரப்பாவும் அனந்தமூர்த்தியும் எம்.டி.வாசுதேவன் நாயரும், பஷீரும். தகழியும் .இருக்கிறார்கள். அதில் தமிழ் படைப்பாளிகளில் எவரும் இடம்பெறவில்லை, ஜெயகாந்தன் பெயர் மட்டும் சொல்லப்படும்.

இந்திய நவீன இலக்கியத்தில் தமிழ் இலக்கியத்தின் அளவுக்கு நுட்பமான படைப்புகள், வெவ்வேறுவகையான புனைவுவெளிகள் பிறமொழிகளில் இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் வங்க இலக்கியமும் மலையாள இலக்கியமும் கன்னட இலக்கியமும் இன்று பெற்றுள்ள அங்கீகாரத்தின் ஒரு துளியையேனும் தமிழ் பெற்றதில்லை. நவீன இந்தியட் செவ்வியல் விவாதங்களில் தமிழின் கொடை என ஏதுமில்லை.

அதற்கான முதன்மையான காரணம் நம்முடைய தகுதியான படைப்புகள் தேசிய தளத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதே. முன்வைக்கப்பட்டவை எந்த வகையிலும் மதிப்பை ஈட்டாத வணிகப்படைப்புகளும் கல்வித்துறைக் குப்பைகளும் தான்.

இவ்வாறாக சென்ற நூறாண்டுகள் நமக்கு நாமே ஒரு பேரிழிவைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவிலான எந்த ஒரு அரங்குக்குச் செல்லும் தமிழ் எழுத்தாளனும் அங்கு தனக்கு ஓர் இடமே இல்லாமல் இருப்பதை, தன்மொழி அங்கு எந்த வகையிலும் மதிப்படாமல இருப்பதை, அந்த மதிப்பின்மையின் ஒரு பகுதியே தனக்குக் கிடைப்பதை உணர்வான். அதே சமயம் அங்கு வந்திருக்கும் அனைவரை விடவும் தனது தகுதி மேலானதென்றும் அவனுக்குத் தெரியும். இந்த உளக்குறுகலைத் தொடர்ந்து நவீன எழுத்தாளன் முன்வைத்துக்கொண்டே இருக்கிறான்.

இச்சூழலில்தான் ஞானபீடம் போன்ற விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

செய்யாப்பிழையும் செய்தபிழையும்

இலக்கிய விவாதங்கள் உருவாகும் விதம். செவ்வியல் திரண்டுவரும் முரணியக்கம் எதையும் அறியாமல் மிக எளிதாக வடவர்களால் தமிழுக்கு விருதுகள் மறுக்கப்படுகின்றன என்று சொல்பவர்கள் இங்கு உண்டு. எதையும் நாம் நம் தாழ்வுணர்ச்சியால்தான் அணுகுகிறோம். ஆகவே உலகமே நம்மை எதிர்ப்பதாக கற்பனை செய்துகொள்கிறோம். முதலில் நாம் நமது படைப்பாளிகளை மதித்து கொண்டாடும்போதுதான் பிறர் அவர்களை மதிப்பார்களா என்ற கேள்விக்கு இடமிருக்கிறது.

சர்வதேச அளவில் நாம் கொண்டு சென்று வைக்க வேண்டிய படைப்பாளிகள் இங்கு எந்த மரியாதையும் இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்கள் என்பது தான் உண்மை. இங்கிருந்து தான் அவர்கள் எழுந்து தேசிய அளவுக்கும் சர்வ தேசிய அளவுக்கும் செல்ல முடியும். அவர்கள் காலூன்றி நின்றிருக்கும் பீடம் நம் பண்பாட்டுச்சூழல். இதை நாம் அவர்களுக்கென அமைத்து அளிக்கத் தவறிவிட்டோம்.

இதை சென்ற ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும் சொல்லி வந்திருக்கிறார்கள். இச்சூழலிலும் மீண்டும் அதை வலுவாக சொல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். ஏனென்றால் அன்று அவர்கள் சொன்னபோது அது எச்சரிக்கை. இன்று அது கண்கூடான பேரிழப்பு.

இரண்டு வகையில் இந்த மாபெரும் துரோகம் தமிழுக்கு இழைக்கப்படுகிறது. ஒன்று கல்வித்துறையால். தமிழக பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளும் சரி, ஒட்டுமொத்தமாக நமது கல்வித்துறையும் சரி, அறிவார்ந்த தகுதியை இழந்து ஊழலை அன்றி எதையும் அறியாதவர்களின் கூட்டமாக மாறிவிட்டிருக்கின்றன. அங்கு அதிகார அரசியலும் சாதி அரசியலும் ஊழலும் அன்றி பிறிதெதற்கும் இடமில்லை என்ற நிலை இருக்கிறது.

ஆகவே எவர் இந்த எதிர்மறை அம்சங்களை பயன்படுத்திக் கொண்டு தன்னை முன்னிறுத்துவதற்கு கல்வித்துறையை பயன்படுத்திக் கொள்கிறாரோ அவர் வெற்றி பெறுகிறார். இக்காரணத்தால் நமது இலக்கிய மேதைகளை நோக்கி கல்வித்துறை வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. அங்கு ரசனையும் அறிவார்ந்த தன்மையும் கொண்ட சிலர் இருக்கலாம். அவர்களுக்குக் குரலோ அதிகாரமோ இல்லாமல் இருக்கிறது.

இரண்டாவதாக தமிழக அரசு சென்ற அறுபதாண்டுகளுக்கும் மேலாக எவ்வகையிலும் தமிழ் இலக்கியத்தின் உண்மையான சாதனையாளர்களை மதிப்பதற்கோ ஊக்குவிப்பதற்கோ ஒட்டு மொத்தமாக நவீன இலக்கியத்தை அங்கீகரிப்பதற்கோ முன்வரவில்லை. தங்கள் அரசியலுடன் ஒத்துப்போகிறவர்களை இலக்கியவாதிகளாக முன்வைப்பதை மட்டுமே அவர்கள் செய்துவருகிறார்கள். இந்த இழிந்த போக்கு திராவிட இயக்கத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இருந்தது.

மலையாளத்தில் கேரள சாகித்ய அகாடமி என்ற அமைப்பு கேரள அரசால் நடத்தப்படுகிறது. ஆனால் அது ஒரு தன்னிச்சையான இலக்கிய அமைப்பாக சென்ற அறுபது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அளிக்கும் விருதுகள் தேசிய அளவில் கேந்திர சாகித்ய அகாடமியின் விருதுகளை வழிநடத்தும் தன்மை கொண்டிருக்கின்றன. கேரள அரசு அளிக்கும் இந்த கௌரவமும் முக்கியத்துவமும் ஏதோ ஒரு வகையில் தேசிய அளவில் எழுத்தாளர்களை மேல் கொண்டு முன்நிறுத்துகிறது.

இவ்வாறு அரசுசார்ந்த ஒர் அமைப்போ ஒரு விருதோ தமிழில் இல்லை. இங்கு இலக்கியத்துக்கு இருப்பது தமிழ் வளர்ச்சிக்கழக விருதுகள். அவை கிட்டத்தட்ட ஏலமிடப்பட்டு பெறும் நிலையில் இருக்கின்றன. அரசியல் எடுபிடிகளான ஏடறியாக் கும்பலுக்கு அளிக்கப்பட்ட அவ்விருதுகளை பெறுவதே இழிவு என்னும் மனநிலை படைப்பாளிகளிடம் உருவாகிவிட்டிருக்கிறது.

சென்ற காலங்களில் தமிழ் வளர்ச்சிக்கழக விருது பெற்றவர்களின் பட்டியலை நீங்கள் எடுத்துப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்ற சந்தேகம் வரும். தமிழ் இலக்கியத்துக்காகக் கூச்சலிடுபவர்கள் செம்மொழிக்காக கோடிக்கணக்காக நிதி பெற்றவர்கள் என்ன செய்தார்கள், எவரை முன்னிறுத்தினார்கள் என்று பார்த்தால் தெரியும் நாம் எங்கிருக்கிறோம், நமது அவலநிலையின் ஊற்று என்ன என்று.

மூன்றாவதாக இங்கிருக்கும் ஊடகங்கள். சென்ற பலகாலங்களாக நாம் வணிக ஊடகங்களில் எழுதும் வணிக எழுத்தாளர்களையே இலக்கிய வாதிகளாக முன்நிறுத்தும் ஒரு பேதைத்தனத்தை செய்து கொண்டிருந்தோம். மலையாளத்திலும் கன்னடத்திலும் வங்கத்திலும் இவர்களைவிட பலமடங்கு ஆற்றலும் செல்வாக்கும்கொண்ட வணிக எழுத்தாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எழுதிய பத்திரிக்கைகளேகூட எம்.டி.வாசுதேவன் நாயரையோ அனந்தமூர்த்தியையோ அதீன் பந்த்யோபாத்யாயோவையோதான் முன்நிறுத்துவார்கள்

வணிக அளவிலும் இந்தியாவின் முதலிடத்தில் இருக்கும் வெகுஜன இதழான மலையாள மனோரமா வார இதழ் கூட அதிலெழுதும் வணிக எழுத்தாளர்களின் படங்களை அட்டையில் வெளியிட்டதில்லை. எம்.டி.வாசுதேவன் நாயரையும் ஓ.வி.விஜயனையும்தான் வெளியிட்டது. இந்தச் சிறு வேறுபாடு நமது ஊடகங்களுக்கு இல்லாத காரணத்தால்தான் திரும்ப திரும்ப வணிக எழுத்துகளை இலக்கியமென முன்நிறுத்திக் கொண்டாடினோம். இந்திய இலக்கியச் சூழலுக்கும் அவர்களைக் கொண்டு சென்று நிறுத்தி நம்மை நாமே இழிவுசெய்தோம்.

செய்யவேண்டியது என்ன?

தேசிய அளவிலான விவாதங்களில், இந்திய செவ்வியல் தொகையில் தமிழிலக்கியம் இடம்பெற நாம் செய்ய வேண்டியதென்ன? நம் படைப்பாளிகளை முன்னிறுத்துவதற்கான வழி என்பது தேசிய விருதுகளை வெல்வதே. அதற்கான வழி என்ன?

ஓர் இலக்கிய மேதை அச்சமூகத்தில் பரவலாக அறியப்படுவது முக்கியமானது. அவரது வாசகர்கள் மட்டும் அறிந்தால் போதாது. அச்சமூகத்தில் வாசிக்காதவர்களாலும் அறியப்பட்டிருக்க வேண்டும். அவர்களைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்தமான கருத்தை அச்சமூகம் தொகுத்து உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறுதான் அவர் ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறுகிறார். அந்த மொழியின் பதாகையாக அவர் ஆகிறார். அதன் பிறகுதான் அவருக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வருகிறது. இந்திய இலக்கிய விவாதங்களில் தமிழ் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மை அவருக்கு வருகிறது. ஞானபீடம் போன்ற விருதுகள் அவரைத் தேடி வருகின்றன.

தமிழகத்தில் ஓரளவுக்கு அறிவார்ந்த துறைகளுக்குள் நுழைந்தவர்களிலேயே எத்தனை பேருக்கு தமிழகத்தின் இலக்கிய மேதைகளின் பெயர்கள் தெரியுமென்று பார்த்தால் வருத்தமாக இருக்கும். இன்று அசோகமித்திரனையோ கி.ராவையோ இந்திரா பார்த்தசாரதியையோ நமது இளைஞர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?

கர்நாடகத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் ஆரம்பப்பள்ளி சுவரில் இலக்கிய மேதைகளின் படங்கள் வரையப்பட்டிருப்பதை பார்த்தேன். இந்தப் படத்தால் என்ன பயன் என்று கேட்கலாம். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் எவரும் இலக்கிய மேதைகளின் நூல்களை உடனே வாங்கி படிக்கப்போவதில்லை. அங்கும் அந்த இலக்கிய மேதைகளின் நேரடி வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் சீரிய இலக்கியம் அதற்கான அறிவுத்தகுதியும் பயிற்சியும் பொறுமையும் தேடலும் கொண்டவர்களால்தான் வாசிக்கபப்டும். ஆனால் அந்த ஒட்டு மொத்த சமுதாயமும் தங்களுடைய பண்பாட்டு அடையாளமாக தங்களுடைய குரலாக அந்த எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது என்பதுதான் அந்த ஓவியங்களின் பொருள்.

அவ்வாறு அவர்கள் எழுந்து வந்தபின் அவர்களை எந்த தேசிய விவாதத்திலும் உதாசீனம் செய்துவிடமுடியாது. அவர்களுடைய இடம் இந்திய பண்பாட்டு வெளியில் இந்திய செவ்வியல் தொகையில் எப்போதும் உறுதி செய்யப்படுகிறது.

இதைத் தான் நாம் செய்யத் தவறிவிட்டோம். இன்னும் சொல்லப்போனால் இங்கு படித்தவர்கள் விவரம் அறிந்தவர்களிடம் கூட இப்படி ஒரு விஷயம் உண்டு என்பதைச் சொல்லி புரிய வைப்பது கடினமாக இருக்கிறது. ‘கி.ரா. ஒருவகையில் எழுதுகிறார், அசோகமித்திரன் இன்னொரு வகையில் எழுதுகிறார், இந்திரா சௌந்தரராஜனும் ராஜேஷ்குமாரும் இன்னொரு வகையில் எழுதுகிறார்கள். எல்லாமே எழுத்துதானே, சுவாரசியமானதை படிக்கவேண்டியதுதானே?” என்று வாதிடும் மொண்ணைக் கூட்டம்தான் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது. இந்த மொண்ணைகளை வென்றுதான் நாம் உலகமெங்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு அடிப்படை மனநிலையை இங்கு நிறுவ வேண்டியுள்ளது.

ஞானபீடம் எனும் அரசபாதை

முதன்மைப் படைப்பாளி ஒருவருக்கு ஞானபீடம் அளிக்கப்படும்போது அவருடைய படைப்புகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்குமென்றால் இந்திய இலக்கியம் என்னும் விவாதத்திற்குள் அவர்கள் சென்று சேர்கிறார்கள். விவாதங்கள் வழியாக அவருடைய இடம் அங்கு அமைகிறது. அவ்வாறுதான் தமிழின் இடம் இந்திய நவீன இலக்கியச் செவ்வியலில் வென்றெடுக்கப்படமுடியும்.

ஆனால் பரிசுபெறுபவர் தகுதியான படைப்பாளி என்றால் மட்டுமே இது நிகழும். ஞானபீடம் பெற்றதனால் அகிலன் மேலும் இழிவுக்குள்ளாகி பிறமொழிகளில் எள்ளிநகையாடப்பட்டு தமிழுக்கும் இழிவைக் கொண்டுவந்தார். ஒருவேளை முயற்சிகள் வென்றால் மேலும் இழிவைக் கொண்டு வருவதனூடாக வைரமுத்து அகிலனை பரவாயில்லை என ஆக்கிவிடக்கூடும். ஞானபீடவிருதுகளில் இதுவும் அபூர்வமாக நிகழ்கிறது. சிறந்த இன்னொரு உதாரணம் ஒரிய நாவலாசிரியரான இந்திரா கோஸ்வாமி. நம்மூர் சிவசங்கரியைப்போன்றவர் அவர்.

இன்று வரை இந்திய நவீன இலக்கிய செவ்வியல் தொகை சார்ந்த விவாதங்களில் தமிழில் வெகுஜன வாசிப்பு எழுத்தும் மார்க்ஸிய நோக்கு கொண்ட வெகுஜன எழுத்தும் மட்டுமே உண்டு என்றும் அதற்கப்பால் தமிழில் நவீன இலக்கியம் எதுவும் இல்லை என்றும்தான் சொல்லப்படுகிறது. என்னிடமே என் ஒரு சிறுகதையை வாசித்துவிட்டு “ஆச்சரியம், தமிழில்கூட இப்படி எழுதுகிறார்கள்” என்றார் ஒரு வங்க விமர்சகர். ‘நீங்கள் எவரை வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அகிலன், சிவசங்கரி, நா.பார்த்தசாரதி என்றார்.

லா.ச.ராமாமிருதமும், சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும், கி.ராஜநாராயணனும் இந்திரா பார்த்தசாரதியும் ஞானபீடம் வென்றிருந்தார்கள் என்றால் இந்த வினா எழுந்திருக்காது. தமிழில் வெவ்வேறு வகையான இலக்கிய மரபுகள் இருக்கின்றன என்று தேசிய அளவில் மறுக்க முடியாதபடி நிறுவப்பட்டிருக்கும். பல அரிய வாய்ப்புகளை நாம் தவறவிட்டுவிட்டோம். இன்றிருக்கும் முதன்மை வாய்ப்பு கி.ராஜநாராயணன். அடுத்து இந்திரா பார்த்தசாரதி.

.

ஏன் கி.ரா?

இத்தருணத்தில் நாம் முழுமையாக முயன்று கி.ராவை முன்னிறுத்துவது மிகமிக இன்றியமையாத ஒரு செயல். கி.ராஜநாராயணன் முறைப்படி முன்னிறுத்தப்பட்டால் எளிதாக ஞானபீடம் வெல்வார். அதற்கான காரணங்கள்

  1. அவரது எழுத்து முற்றிலும் தமிழ்த்தன்மை கொண்டது. நாட்டாரியலையும் நவீன இலக்கியத்தையும் இணைப்பது. அந்தத் தனித்தன்மை கவனிக்கப்படும்.
  2. எளிமையான நேரடியான நடையும் கூறுமுறையும் மொழியாக்கத்தில் பெரிய இழப்புகள் இல்லாமல் அவருடைய படைப்புக்களைக் கொண்டுசென்று சேர்க்கும் மேலும் அவர் கதைகள் கதை என்னும் வடிவத்தை கொண்டிருப்பதனால் மொழியாக்கத்தின் குறைவுகளை கடந்தும் நிற்கும்
  3. இந்திய அளவில் ‘முற்போக்கு’ என்னும் அம்சம் முக்கியமாக கருதப்படுகிறது கி.ரா கதைகள் முற்போக்கு உள்ளடக்கம் கொண்டவை
  4. கி.ரா கதைகள் காலம் கடந்த தன்மை கொண்டவை. அவை கொண்டுள்ள ‘நாட்டார்கதை’ என்னும் வடிவமே அதற்குக் காரணம். அறிவியக்கங்களுடன் இணைந்து எழும் கதைகளைப்போல அவை பழைமை கொள்ளவில்லை.

கி.ராவுக்கு ஞானபீடம் அளிக்கப்படும் என்றால் அதன் நன்மைகள் என்ன?

கி.ராவுக்கு அதனால் பெரிய நன்மை இல்லையென்றே நினைக்கிறேன். அந்தப்பணம் கூட பெரிய அளவில் அவருக்கு இன்று உதவாது. அவரைப்போன்று முதிய வயதில் இருக்கும் ஒருவருக்கு அங்கீகாரங்களும் புகழும் பொருளற்றுப்போய் நெடுங்காலமாகியிருக்கும். ஒரு பிரியமான சிரிப்புடன் அவர் ஏற்றுக்கொள்ளக்கூடும் அவ்வளவுதான்.

அவருக்கு விருதளிப்பதன் மூலமாக நாம் தமிழை ஒரு தேசிய அளவிலான விவாதத்தின் முன்னால் கொண்டு நிறுத்துகிறோம். அவர் எழுதிவரும் தனித்துவமான எழுத்து தமிழின் அடையாளமாக அங்கு சென்று சேரும். நாளை இந்திய இலக்கிய விவாதங்களில் கி.ராஜநாராயணனைப்பற்றி பேசும் போது அவ்வகையான ஒரு எழுத்து முறை தமிழில் இருப்பதை நாம் அடையாளப்படுத்த நேரும்.

கி.ரா.வின் எழுத்து இந்திய அளவில் ஞானபீடம் வழியாக சென்று சேரும் என்றால் கி.ரா எழுதிய ஒரு வகையான அழகியல் தமிழ் அடையாளமாக நிறுவப்படுகிறது. நாட்டார் பண்பாட்டிலிருந்து நவீன இலக்கியத்துக்கான ஒரு இணைப்புச் சாலை அது. முழுக்க முழுக்க நவீனத்துவ படைப்பாகவும் அதே சமயம் முழுக்க முழுக்க இந்திய தொன்மையான நாட்டார் மரபில் வேரூன்றியதாகவும் இருக்கும்.

கோபல்ல கிராமம் நாட்டார் மரபில் நின்று கொண்டே நவீன வரலாற்றை அணுகும் [அடைப்பு. கோபல கிராமத்து மக்கள் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தின் பின்னணியில் அங்குள்ள வாழ்க்கையைக் கொண்டே இந்தியாவின் அனைத்து பண்பாட்டு அசைவுகளையும் மதிப்பிடும் ஆக்கம். அவருடைய வலுவான சிறுகதைகள். நம்முடைய நாட்டார் மரபையும் அதிலிருந்து நவீன இலக்கியம் பெற்றுக் கொண்ட உயிர்த் துடிப்பையும் தேசிய அளவில் கொண்டு சென்று நிறுத்துபவை. நாட்டார் மரபு சார்ந்து எழுதக்கூடிய ஒரு எழுத்தாளரின் பட்டியல் போன்ற ஒரு விவாதம் வரும்போது சந்திர சேகர கம்பார் போல கி.ராவின் பெயரும் அதில் தவிர்க்க முடியாதபடி இடம் பெறும்.

.

kiraa

வழிமுறைகள்

ஞானபீடம் என்பது கெஞ்சியோ கேட்டோ பெறுவது அல்ல. பெறுபவரின் தகுதி ஐயத்துக்கிடமின்றி அவர்களைச் சார்ந்தவர்களால் நிறுவப்பட வேண்டும். பலமுறை அசோகமித்திரனுக்காக இந்த முயற்சிகளை எடுத்தவன் என்ற முறையில் அதற்கான தேவைகளை இப்போது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஒன்று:- நமது கல்வித்துறை சார்ந்து கிராவுக்காக குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு கருத்தரங்குகள் நடத்தப்படவேண்டும். அவை தேசிய அளவிலான கருத்தரங்குகளாக இருக்குமென்றால் மிக நன்று. கன்னடத்திலும் மலையாளத்திலும் வங்கத்திலும் இந்தியிலும் இருந்து முக்கியமான படைப்பாளிகள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கு கி.ராவை மிக எளிதாக தேசிய அள்வில் கொண்டு நிறுத்தும்.

இரண்டு:- அவருக்காக மூன்றோ நான்கோ மலர்கள் போடப்பட வேண்டும். அந்த மலர்களில் அவரைப்பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதக்கூடிய கட்டுரைகள் இடம் பெற வேண்டும். பல்வேறு வாழ்க்கையின் பகுதிகளைச் சார்ந்தவர்கள் எழுதும் கட்டுரைகள் இடம் பெறலாம். அம்மலர்கள் ஆங்கிலத்திலும் அமையவேண்டும்

மூன்று:- அவர்களுடைய படைப்புகளின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாக வேண்டும். அந்நூல்களைப்பற்றி தொடர்ச்சியான கட்டுரைகள் ஆங்கில இதழ்களில் வெளிவர வேண்டும். இந்தியிலும் அவரைப்பற்றிய கட்டுரைகள் வெளிவர வேண்டும். ஒரு ஆண்டுக்குள் குறைந்தது பத்து அல்லது இருபது கட்டுரைகள் அவரைப்பற்றி எழுதப்படவேண்டும்.

இது மிகக்கடினமானது. ஏனெனில் தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில நாளிதழ்களான தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை தமிழ் எழுத்தாளர்களை மிக இளக்காரமான பார்வையுடன்தான் பார்க்கின்றன. நாலாந்தர ஆங்கில வணிக எழுத்துக்களை நமது தலையில் கட்டுபவர்கள் நமது படைப்பாளிகள் எவ்வகையிலும் வெளியே செல்ல உதவுவதில்லை. ஆயினும் அவர்களை நயந்தோ கெஞ்சியோ எவ்வாறாயினும் கிராவைப்பற்றி கணிசமான அளவு கட்டுரைகள் எழுதப்படவேண்டும்.

தி ஹிந்து எந்த வகையிலும் அதற்கு ஒத்துழைக்காது என்பது உண்மை. ஆனால் வடக்கிலிருந்து வரும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பயனீர் போன்ற பத்திரிக்கைகள் இலக்கியத்திற்கான இடத்தை அளிக்கக்கூடியவை. ஒரு காலகட்டத்தில் வெங்கட் சாமிநாதன் ஆங்கிலத்தில் வரக்கூடிய பயனீர் போன்ற நாளிதழ்களில் தமிழில் உள்ள எழுத்தாளர்களைப்பற்றி தொடர்ந்து எழுதி வேறொரு வகையான எழுத்து இங்கு இருக்கிறது என்பதை ஓரளவு நிறுவ முடிந்திருக்கிறது. அந்தப்பாணியில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இன்று நமக்குத் தேவை.

சென்ற தலைமுறையில் எழுதிய இங்கிருந்து சென்று தேசிய அளவில் பேசியவர்கள் இலக்கிய நுண்ணுணர்வற்றவர்களும் சுயமுன்னேற்ற அரசியல் தந்திரசாலிகளுமான கல்வியாளர்கள் மட்டுமே. அவர்கள் தங்கள் வெற்றிகளை அன்றி எதையும் பொருட்டாக எண்ணவில்லை. இன்று உருவாகி வரும் இளைய தலைமுறையில் ஆழமான நடையில் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிராவையும் தமிழ் இலக்கிய மேதைகளையும் குறித்து ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக எழுத வேண்டும்.

இவை நிகழுமென்றால் அதன் பிறகு கிராவை நாம் ஞானபீடம் போன்ற விருதுகளுக்குக் கொண்டு சென்று சேர்க்க முடியும். கிராவின் இடம் இந்திய இலக்கியத் தொகையில் மறுக்க முடியாதபடி நிறுவப்பட்டுவிட்டபின் அவருக்கு ஞானபீடம் கொடுத்தே ஆகவேண்டும்.

இப்போதும் பிந்தி விடவில்லை. கிரா நம்முடன் இருக்கிறார். கிராவுக்காக இந்த விருதை வென்றெடுக்கவேண்டும் என்பது நமது கடமை நமது கல்வியாளர்கள் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் சற்றே மனம் வைக்கலாம் அவர்களில் இன்னமும் கூட அடிப்படை ரசனையும் குறைந்த பட்ச மனசாட்சியும் தமிழ்ப்பண்பாட்டு ஆர்வமும் கொண்டவர்கள் சிலர் உண்டு என்று நான் நம்புகிறேன். அந்நம்பிக்கையில் இந்த வார்த்தைகள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 17206 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>