Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16971 articles
Browse latest View live

சல்வா ஜூடும் -சா. திருவாசகம்- ஒரு கடிதம்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன்,

 

வணக்கம்.

 

விசிக அலுவலகம் சென்னையில் நேற்று நடந்த பொன்பரப்பி உள்ளிட்ட சாதிய மதவாத பாசிச நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன உரை நிகழ்வில் உங்களைப் பார்த்தேன். இதற்கும் முன்பு உங்களை ஓரிரு மேடைகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேச தோன்றியதில்லை். காரணம் நீங்கள் அறிந்ததுதான். உங்களுக்கு இடப்பட்டிருக்கும் முத்திரை.

 

ஆனால், சமீப காலமாக தொல்.திருமாவளவன் என்கிற அரசியல் ஆளுமை குறித்து மிக நேர்மையான கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லிவரும் உங்களிடம் உரையாட வேண்டும் என்கிற எண்ணம் என் மனதின் ஆழத்திலிருந்து ஏற்பட்டது.

 

நீங்கள் நிகழ்விலிருந்து வெளியேறும் தருணத்தில் வாசலில் வைத்து உங்களுடன் பேசினேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘சல்வா ஜூடும் ‘ என்கிற நூலை உங்களிடம் தந்தேன். நினைவிருக்கிறதா? சன்னா அவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தார்

 

வாய்ப்பிருந்தால் நேரமிருந்தால் அந்நூல் குறித்த உங்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ( அந்த புத்தகம் இருக்கிறதுதானே!) இலக்கியம் குறித்த உங்களின் கறாரான பார்வையின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையாலேயே இதை எழுதுகிறேன்.

 

நன்றி !

 

சா.திருவாசகம்.

 

 

அன்புள்ள திருவாசகம்

 

உங்கள் கதைகளை வாசித்தேன். எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். எழுதுவதற்கான முனைப்பும் அதற்கான வாழ்க்கைப்புலமும் உணர்வுச்சீண்டல்களும் உங்களிடம் உள்ளன. இனி வேண்டியது கதைத்தொழில்நுட்பம், எதை எழுதவேண்டும் என்னும் தெரிவு இவை மட்டுமே. இவற்றை மிக எளிதில் கற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் நீங்கள் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அமையவும் இயலும் உங்களிடம் எந்தப் பாசாங்கும் இல்லை. அது மிகப்பெரிய தகுதி.

 

என் அவதானிப்புக்களை தெரிவிக்கிறேன். இதை பொதுவில் விவாதிக்கவேண்டும் என எனக்குத் தோன்றுவதற்கான காரணம் உங்கள் தொகுதி மீது கவனம் அமையட்டும் என்பது ஒன்று. இவை அறுதியான தீர்ப்புகள் அல்ல, விவாதக்குறிப்புகளே என்பது இன்னொன்று

 

அ. எழுதும்காலத்தில் கதைகளை தன்னிலையில் ‘நான்’ என எழுதலாகாது. அது வெவ்வேறுவகையில் கற்பனை விரிவதை இல்லாமலாக்கிவிடக்கூடும். வெறும் தன் அனுபவங்களை குறிப்புகளாக மட்டுமே எழுதுவதே எழுத்து என ஆகிவிடலாம். எழுத்து என்பது இன்னொரு அனுபவத்திற்குள் கூடுபாய்தல். இன்னொரு மானுடனுக்குள் சென்று வாழ்தல். இன்னொருவராக ஆசிரியர் தன்னை மாற்றிக்கொள்ளல்

 

அது அமைந்த பின்னர் நான் என எழுதலாம். அந்த நான் என்பது நீங்கள் அல்ல. நீங்கள் கற்பனைசெய்துகொள்ளும் நான். அதாவது இன்னொருவருக்குள் அமைந்து நீங்கள் நான் என எழுதுவீர்கள். அதுவே புனைவு

 

.அன்றாட அரசியல்கருக்களை எழுதவேண்டாம். ஏனென்றால் அவை ஏற்கனவே பேசப்பட்டவை. சலித்தவை. எழுதுவது பிறர் சொல்லாத ஒன்றை, பிறர் நோக்காத ஒன்றைச் சொல்வதாக அமையட்டும். வழக்கமான ஒன்றைச் சொல்ல இலக்கியம் தேவையில்லை. அது எத்தனை முக்கியமானதாக இருந்தாலும்

 

உதாரணமாக இத்தொகுதியில் பெரும்பாலான கதைகள் நம் கல்வியமைப்புகளுக்குள் உள்ள ஊழல்கள், சாதிய அடிப்படை ஆகியவற்றைப் பற்றியவை. நேரடியான விமர்சனம் மற்றும் நையாண்டியாக இவை உள்ளன. ஆனால் ஓர் எழுத்தாளராக நீங்கள் இவற்றை மேலும் விரித்துக்கொள்ளலாம். கல்விநிலையம் என்பது நம் சமூகத்தின் ஒரு பிரதிநிதித்துவ அமைப்பு. ஒரு குறியீடு, அல்லவா? இந்தியாவில் ஜனநாயக மாற்றம் வந்தபோது பிரச்சினைக்குள்ளான இடங்கள் சாலை, கல்விநிலையம் இரண்டும்தான். பின்னர்தான் கோயில். ஏனென்றால் அனைவரும் சமமாக அமையவேண்டியவை இந்த் இடங்கள். ஆகவே உரிமைப்பிரச்சினைகள் எழுந்தன. இன்று அவை எந்நிலையில் உள்ளன?

 

இந்த வரலாற்றுண்டவுடன் மேலும் நுட்பமாக, பொதுவான வாசகன் பார்க்காத ஒரு கோணத்தில் கதைகள் அமையவேண்டும் அல்லவா?.

 

. இலக்கியம் என்பது அகவயமான உண்மைகளுக்கு உரியது. புறத்தே நிகழ்வன அல்ல, உங்களுக்குள் ஆழத்தில் அவை என்ன உருவாக்குகின்றன என்பதே இலக்கியத்திற்குத்தேவை. ஆகவே உங்களுக்குள் நோக்குக. நீங்கள் ஆழமாக என்ன உணர்கிறீர்களோ அதை மட்டும் எழுதுங்கள். நேரடிஅனுபவங்களில் இருந்து அந்தரங்கமாக எதைக் கண்டடைகிறீர்கள்?

 

ஈ. வாசகன் நம்மைவிட புத்திசாலி என எண்ணுங்கள். ஆகவே வாசகனுக்கு எதையும் போதிக்கவேண்டாம். வாழ்க்கையை மட்டுமே காட்டுங்கள். எதையும் விளக்கவேண்டாம். உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கைச்சித்திரம் உங்களுக்குள் உறையும் வாழ்க்கைநோக்கை நோக்கிச் செல்லும். வாசகனையும் அவ்வாறு கொண்டுசெல்லும். அதுபோதும்,

 

. அவ்வப்போது எழுதாதீர்கள். எழுத்து கைவரும்வரை நாள்தோறும் எழுதுங்கள் நீங்கள் வந்து அமரவேண்டிய ஒரு படைப்பாளிகளின்  வரிசை இங்கே உள்ளது.

 

வாழ்த்துக்களுடன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அமேசான் குப்பைகள்

$
0
0

 

அன்பின் ஜெ,

 

1000 மணி நேர வாசிப்புச் சவாலுக்காக கிண்டில் படிப்பானில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். மற்ற கண்டுபிடிப்புகளைப் போல இதையும் abuse செய்ய ஆரம்பித்துவிட்டனர். தினமும் ஆயிரக்கணக்கான குப்பைகள் புத்தகம் என்ற பெயரில் கொட்டப்படுகின்றன. அதை எழுதியவர்களுக்கு எழுத்துப்பிழைகளைத் திருத்தும் அளவு கூட மெனக்கெடல் இல்லை. இணையம், முகநூல் போன்று கிண்டில் வெளியீடும் ஆரவார வெற்றுக் கூச்சல் ஆகிவிடும் போல. சமீபத்தில் நடந்த pen to publish போட்டியே இதற்கு சாட்சி. இந்தக் குப்பைகளை விட அதற்கு கிடைக்கும் வரவேற்பு அச்சத்தைத் தருகிறது.

 

தமிழ்ச்செல்வன்

திண்டுக்கல்

 

 

அன்புள்ள தமிழ்ச்செல்வன்,

எந்த ஊடகமும் அப்பண்பாட்டில் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொண்டுவந்து சேர்க்கும். ஊடகம் பெரிது என்றால் அப்பண்பாட்டில் உள்ளவற்றை பெரிதாக்கிக் காட்டும். இதை தொடர்ந்து காணலாம்

 

1870 வாக்கில் தமிழில் அச்சு இதழ்கள் வரத்தொடங்கின. முதலில் சில ஆண்டுகள் அது அறிவுப்பரவலுக்கான ஊடகமாக இருந்தது. மிகச்சில ஆண்டுகளிலேயே அதில் வணிகக்கேளிக்கை மட்டுமே கிடைக்கும் என்ற நிலை வந்தது. குறிப்பாக ஆரம்பகட்ட அச்சுநூல்களில் பெரும்பகுதி ஆண்மைவிரிவாக்கம் தொடர்பானவை. எஞ்சியவை பாலியல் நூல்கள். அக்கால ஹிக்கிம்பாதம்சின் முதன்மையான வணிகம் என்பது பாலியல்நூல்கள், தெரிந்திருக்கும்.

 

அக்காலகட்டத்தில்தான் தமிழின் தொன்மையான இலக்கியச் செல்வங்கள் அச்சேறின. தமிழ்மரபே மீட்டு எடுக்கப்பட்டது.ஆனால் அவை மிகச்சில அறிஞர்களால் மட்டுமே அறியப்பட்டன. பணமுள்ளவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான் அந்நூல்கள் வெளியாயின. [அதற்கு கையெழுத்து பெற்றுக்கொள்ளுதல் என்று பெயர். நூல்களை வாங்கிக்கொள்கிறேன் என உறுதி அளித்தல், முன்பணம் கொடுத்தல்] ஆனால் அவற்றிலும் பெரும்பகுதி கொள்வாரின்றி வெளியீட்டாளரிடமே குவிந்து கிடந்தது. உ.வே.சாமிநாதய்யரின் வீட்டில் அவர் வெளியிட்ட தொல்நூல்கள் எப்படி வெறும்சரக்காக குவிந்து இடத்தை அடைத்து மட்கிக்கொண்டிருந்தன என எஸ்.வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார்.

 

அதேபோல சினிமா. அது உருவானதுமே நேராக கேளிக்கை நோக்கியே சென்றது. புராணங்கள், தழுவல்கதைகள். இன்றுவரை அப்படித்தான். அதில் இன்றுகூட நல்ல கலைக்கு இடமில்லை. பார்க்க ஆளில்லை. நீங்களே பார்க்கலாம், ஒரு வணிகசினிமாவுக்கு எத்தனை அறிவுஜீவிகள் மாய்ந்து மாய்ந்து மதிப்புரை எழுதுகிறார்கள் என. கலைப்படங்களை திரும்பிப்பார்க்கவே ஆளில்லை

 

தொடர்ந்து தொலைக்காட்சி வந்ததும், அது அன்று அரசுத்துறையில் மட்டும் இருந்தமையால், நல்ல இலக்கியங்கள் திரைவடிவம் கொண்டன. தமிழில் சா.கந்தசாமி, வண்ணநிலவன் போன்றவர்களின் நாவல்கள் படமாயின. இந்தியிலும் மலையாளத்திலும் ஏராளமான இலக்கிய ஆக்கங்கள் அதில் வெளிவந்தன. தில்லி தொலைக்காட்சி தரமான கலைப்படங்களை வாங்கித் திரையிட்டது. என் மனைவி உட்பட பலர் அன்றெல்லாம் காத்திருந்து இந்திய கலைப்படங்களை பார்த்திருக்கிறார்க்ள்.

 

சில ஆண்டுகளில் தனியார்த் தொலைக்காட்சிகள் வந்தன. அவ்வளவுதான், இன்று அதில் என்ன வருகிறது என உங்களுக்கே தெரியும். போட்டியில் நிற்கமுடியாமல் அரசுத்தொலைக்காட்சியும் அதேவழியில் சென்றது. ஏனென்றால் மக்களிடம் இருப்பது, மக்கள் விரும்புவதே அதைப்போன்ற வணிக ஊடகத்தில் வரமுடியும்.

 

அதன்பின் இணையம். இணையம் வந்ததும் ஒரு சிறு விழிப்புணர்வு. பரவலாக இலக்கியம் அறிமுகமாகியது. நூல்களைப்பற்றிய பேச்சு உருவானது. வலைப்பூக்கள் வந்தபோது பலர் எழுதவும் தொடங்கினர். இன்று பாருங்கள், சினிமா வம்புகள், அரசியல் வசைகள் அன்றி இணையத்தில் ஏதேனும் உள்ளதா? சமீபத்தில் வெளிவந்த ஏதேனும் நூல் பேசப்படுகிறதா? எவராவது ஏதாவது தீவிரமான தலைப்புகளில் பேசுகிறார்களா? ஏற்கனவே என்ன இருந்ததோ அதே விகிதம்தான்.

 

அதன் தொடர்ச்சியே அமேசான். அது ஒர் ஊடகம். தமிழில் என்ன இருக்கிறதோ, தமிழருக்கு என்ன தேவையோ அதுதான் அங்கே வரும். விகிதம் இப்படி இருக்கும். பெண்களுக்குரிய மென்பாலியல் –மெல்லுணர்ச்சிக் கதைகள், ஆண்களுக்குரிய வன்பாலுணர்ச்சிக் கதைகள், பிழைகள் மலிந்த எளிய பயன்தரு நூல்கள், மாற்றுமருத்துவம் முதல் மாந்த்ரீகம் வரையிலான பொய்நூல்கள், கொஞ்சம் சோதிடம் மற்றும் மதவழிபாட்டு நூல்கள். இலக்கியம், அறிவுத்தள நூல்கள் மிகக்குறைவாகவே இருக்கும். ஏனென்றால் உண்மையில் தமிழ்ப்பண்பாட்டில் அவற்றுக்கான இடமும் தேவையும் அந்த விகிதத்திலேயே

 

ஆனால் அச்சுநூல்களில் தரமான நூல்களின் விகிதம் உண்மையில் மிகுதி. ஏனென்றால் இங்கே அச்சுநூல் என்பது பெரும்பாலும் கல்விநிலையங்களின் நூலகங்கள் மற்றும் அமைப்புகளின் நூலகங்களை நம்பி அச்சிடப்படுகிறது. ஓரிரு எழுத்தாளர்கள் தவிர பெரும்பாலான எழுத்தாளர்களின் நூல்களில் பத்துபிரதிகள் கூட வாசகர்களால் வாங்கப்படுவதில்லை. அந்த ‘ஸ்பான்ஸர்’கள் அமேஸான் போன்ற மென்பிரதி விற்பனையாளர்களுக்கு இல்லை. ஆகவே அங்கே குப்பைகளின் விகிதம் 99 விழுக்காடு இருக்கும். காலம் செல்லச்செல்ல மேலே கூட செல்லும்.

 

நல்ல ஆக்கங்களை அமேஸானில் எவரும் இயல்பாக கண்டடைய முடியாது. தேடி அடைவது மேலும் கடினம். ஆகவே அதன்வழியாக எவரும் இலக்கியம் நோக்கி வரமுடியாது. ஒருவர் முகநூல் வழியாக இலக்கியம் நோக்கி வரமுடியுமா என்ன? அதேபோலத்தான்.

 

அதற்கு மீண்டும் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் அறிவியக்கச் செயல்பாடுகள், இலக்கியச்செயல்பாடுகளையே சார்ந்திருக்கவேண்டும். இங்கே அறிவியக்கமும் இலக்கிய இயக்கமும் மைய ஓட்டச் செயல்பாடுகள் அல்ல, அவை மிகச்சிறுபான்மையினரால் நிகழ்த்தப்படும் மாற்றுச்செயல்பாடுகள் மட்டுமே.

 

இங்கு மட்டும் அல்ல, உலகமெங்கும் அறிவுச்செயல்பாட்டில், கலை இலக்கியச் செயல்பாட்டில் செல்லுபடியாகும் பொது விதி ஒன்று உண்டு. எது வணிகவெற்றிபெற்றதோ, எது அனைவருக்கும் பிடித்திருக்கிறதோ, எது பெரும்புகழ்பெற்றிருக்கிறதோ அதற்கு எந்த அறிவுமதிப்பும், கலைமதிப்பும் இருக்க  வாய்ப்பில்லை. ஏனென்றால் அது சராசரியானது. சராசரிகளை முன்னால் கண்டு உருவாக்கப்பட்டது. பொதுவான உணர்ச்சிகள், பொதுவான அறிவுத்தரம் ஆகியவற்றைக் கொண்டது.

 

கலையும் சரி, மெய்யான அறிவும் சரி அரிதானவை. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு ஏற்ப தேடிச்சென்று கண்டடைய வேண்டியவை. அவை நம் ரசனைக்கும் அறிவுத்திறனுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டவையாக இருக்காது. நம் அறிவுத்தரத்தையும் நம் ரசனையையும் மேம்படுத்திக்கொண்டு,  நம் கவனத்தையும் உழைப்பையும் அளித்து நாம் சென்றடையவேண்டியவையாகவே இருக்கும். பிறிதொன்றிலாத தனித்தன்மையே மெய்யான அறிவுக்கும் கலைக்கும் முதற்தகுதி.

 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொதுரசனை – பொதுப்புரிதல் சார்ந்த ஆக்கங்கள் தொழில்நுட்பரீதியாக மேம்பட்டவையாக இருக்கும். நூல்களோ சினிமாவோ தொலைத்தொடரோ, அவை இந்தியச்சூழலில் நமக்கு சற்று அறைகூவலை விடுப்பதாகவும் இருக்கும். நமக்கு அவர்களை அறிந்துகொள்வதற்கான வேட்கை மிகுதி. ஏனென்றால் அவர்கள் நம்மை ஆள்பவர்கள். அதை நம் ஆழ்மனம் அறியும். அடிமை எப்போதுமே ஆண்டையை அகத்தால் பின்தொடர்வான். அதோடு நாம் ஒரு சிறு சூழலில் அடைபட்டவர்கள். உலகை அறியும் துடிப்பு நம்மில் எழும்போது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே உலகமாக நம் காட்டப்படுகிறது.

 

ஆகவே நாம் அவர்களின் வணிகவெற்றிபெற்ற, புகழ்பெற்ற, பொதுவான நூல்களையும் சினிமாக்களையும் பெருவிழைவுடன் ஏற்கிறோம். உழைப்பை அளித்து புரிந்துகொள்ள முயல்கிறோம்.அதை அறிவுச்செயல்பாடு என்றும் கலைச்செயல்பாடு என்றும் எண்ணிக்கொள்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வாறு சில மேற்கத்திய வணிகப்படைப்புகள், பொதுரசனை ஆக்கங்கள் இங்கே அறிவுத்தளத்தில் கொண்டாடப்படுகின்றன. நான் அவ்வாறு குறைந்தது நான்கு அலைகள் வந்துசென்றதை இதற்குள் கண்டடைகிறேன். இது ஒரு பின்தங்கிய நாட்டில் வாழ்பவர்களின் அசட்டுத்தனம் மட்டுமே

 

நாம் ஐரோப்பாவை, அமெரிக்காவைக் கவனித்தால்கூட அங்கிருக்கும்  அறிவுச்செயல்பாட்டை, கலைச்செயல்பாட்டை மட்டுமே  கருத்தில்கொள்ள வேண்டும். அவை அங்கேயே கூட சிறுபான்மையினருக்குள் புழங்குபவையே. அங்குள்ள கலைப்படங்கள், அங்குள்ள தரமான இலக்கியம், அங்குள்ள அறிவுச்செயல்பாடுகள் அவையே நாம் அறியவேண்டியவை. அவர்கள் உலகுக்காகச் சமைக்கும் கல்யாணச் சமையல்கள் அல்ல.

 

சென்ற தலைமுறைவரை  தமிழ் அறிவியக்கம் அப்படித்தான் இருந்தது. இங்கே சிற்றிதழ்ச்சூழலில் ‘பார்ட்டிஸான் ரெவ்யூ;வும் “என்கவுண்டர்’ரும்தான் பேசப்பட்டனவே ஒழிய  ‘நியூயார்க் டைம்ஸ்’ அல்ல. ஐசக் பாஷவிஸ் சிங்கர் பேசப்பட்டாரே ஒழிய ஜான் அப்டைக்கோ ஜான் ஓ ஹாராவோ அல்ல. இணையம் போன்ற பெரிய ஊடகம் அவ்வேறுபாட்டை இல்லாமலாக்கியது. அமேஸான் அதை மேலும் இல்லாமலாக்கும்.

 

பொழுதுபோகாமல் படம்பார்ப்பவர்கள், படிப்பவர்கள் அதில் விழுந்து கிடப்பதில் பிரச்சினை இல்லை. அவர்கள் வேறு எதையாவது செய்து தொலைக்காமல் இருக்கும் வரை நல்லதும்கூட. ஆனால் அறிவியக்கத்திலும் கலையிலும் ஈடுபடுபவர்கள், அதில்  எதையாவது இயற்ற நினைப்பவர்கள் அந்த பொதுப்போக்கு எனும் சருகுப்புயலில் சிக்கிக்கொண்டால் இழப்புதான்.

 

ஆகவேதான் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக இலக்கிய அறிமுகநிகழ்ச்சிகளை, இந்த இணையதளம் போன்ற ஊடகங்களை நடத்தவேண்டியிருக்கிறது. இன்றுகூட இந்த இணையதளம் உட்பட அனைத்துமே நன்கொடைகளால்தான் நிகழ்கின்றன – இயல்பான மக்கள் ஆதரவு, வணிகவாய்ப்பு இல்லை என்பதை மறக்கவேண்டாம்.ல

 

உங்கள் வீடிருக்கும் பகுதியை, உங்கள் அலுவலகத்தை, உங்கள் கல்விநிலையத்தை சுற்றிப்பாருங்கள். குறைந்தபட்ச அறிவியக்க ஈடுபாடு உடையவர், மிக எளிமையான அளவிலேனும் புதியவற்றை தெரிந்துகொள்ள முயல்பவர் எவர்? ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவர். அப்படி இருக்க அமேஸானில் அல்லது முகநூலில் அல்லது தொலைக்காட்சியில் மட்டும் எப்படி அறிவியக்கமும் இலக்கியமும் திகழமுடியும்?

 

மாற்றம் தொடர்ச்சியான முயற்சிகள் வழியாக உருவாகும் பண்பாட்டுப் பரிணாமத்தால் மட்டுமே நிகழும். அதற்கு பொருளியல், கல்விச்சூழல் போன்ற சில புறக்காரணிகளின் உதவியும் தேவை. எதிர்காலத்தில் வளர்ச்சி நிகழும் என நம்புவோம்.

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அரியணைகளின் போர் –வாசிப்பு -கடிதங்கள்

$
0
0

காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்

போதைமீள்கையும் வாசிப்பும்

அரியணைச் சூதுகளும் வாசிப்பும்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா.? அண்மையில் அவசரகாலக்கட்டத்தில் வாழும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். உங்களது தளத்தில் நீங்கள் வேண்டுமென்றே நீட்டி நீட்டி எழுதுகுறீர்கள் என்று கூறினார். இது என்னை சீண்டியது, இருப்பினும் வாசிப்பு என்னும் கடின உழைப்பை பயின்றுக்கொண்டிருக்கும் நான் அதன் மூலம் கிடைத்த நிதானத்திலும் அந்நிதானம் இருந்தால் மட்டுமே சிந்தனை உருவாகும் என்பதாலும் சற்றே நிதானித்து அவரிடம் சிலவற்றை பகிர்ந்துக்கொண்டேன்.

 

 

எந்த காலகட்டமாக இருந்தாலும் ஒரு வருடம் ஒரு நாளாக மாறிவிடாது. கருத்தரித்த ஒரே நாளில் குழந்தை பிறந்துவிடாது. பிறந்த குழந்தை மறுநாளே வளர்ந்து வேளைக்கு சென்றுவிடாது. இதுபோன்ற நிகழ்வுகள் அதன்ப்போக்கில்தான் செல்லும். அப்படிதான்  மொழியூடகமும். அவசரகாலக்கட்டம் என்பது ஒருவித மாயைதான். மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜியும் கூட. அதில் நாம் இயந்திரமாகவே இருந்திட வேண்டும் மாறாக சிந்திக்கத் தொடங்கினோம் என்றால் ஒன்று அதிலிருந்து வெளியேறிவிடுவோம் அல்லது வெளியேற்றப்பட்டுவிடுவோம்.

 

 

ஒருவர் நமக்காக நேரம் எடுத்து எழுதுகிறார் என்றால் அதை நினைத்து பெருமைக்கொள்ள வேண்டும் அல்லது அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இவ்விரண்டும் ஒத்துவரவில்லை என்றால் விலகிச் சென்றிட வேண்டும். ஏனெனில் அவ்வெழுத்துக்கள் பல வாசகர்களின் பற்பல கேள்விகளுக்கு பதில் அளித்தும் அவர்களை அக்கருத்துக்கள் மீதான சிந்தனைகளில் இட்டுச்செல்லும், என்றேன்.

 

 

அவர் எதற்காக இதையெல்லாம் என்னிடம் கூறுகிறீர்கள் என்று கேட்டார். எனது பேச்சுத்திறனை பரிசோதித்து பார்த்தேன் என்று கூறியபடி நகர்ந்தேன்.

 

 

நன்றி,

த. செந்தில் வேல் கண்ணன்

 

அன்புள்ள ஜெ

 

இன்றைய வாசிப்பு பற்றிய பல எண்ணங்களை நீங்கள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி எழுதிய கட்டுரை அளித்தது. ஒருவர் சுருக்கமாகச் சொல், ஒரே காட்சியில் காட்டிவிடு என்றெல்லாம் சொல்கிறார் என்றால் அது பொறுமையின்மையை மட்டுமே காட்டுவது அல்ல. அதற்குப்பின்னால் உள்ள மனநிலை சிக்கல்களைப் பார்த்து எரிச்சலடைவது. எதையும் எளிமையாக அணுகுவது. எதையும் எளிமையாக அணுகும் மனநிலை கொண்டவர்கள் எல்லாமே உண்மையில் எளிமையானவைதான், வேண்டுமென்றேதான் சிக்கலாக ஆக்கிக்கொள்கிறார்கள் என்று வாதிடுவார்கள். இதை நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன்

 

பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும்போது எளிமையாக புரிந்துகொள்ளும் வழி ஒன்று உண்டு. இது கணக்குப்பாடங்களுக்கு பொருந்துவது. தத்துவத்துக்கும் பொருந்தலாம். அதாவது பிரச்சினைகளை முடிந்தவரை எளிமையாக்கி அதன் மையமுடிச்சை பிடிப்பது. அதன்பின் அதை சிக்கலாக விரிக்கலாம். இதேபோல ஒரு விஷயத்தை விளக்கும்போதும் மையத்தை சொல்லிவிட்டு அதன்பின் விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் பிரச்சினையே அவ்வளவுதான் என நினைத்தால் அது அறிவின்மை.

 

நம்முடைய கல்விமுறை மிக எளிமையாக்கப்பட்ட ஒரு சித்திரத்தை எல்லாவற்றுக்கும் அளிக்க முயல்கிறது. இவ்ளவுதாண்டா விஷயம் என்று வகுப்பில் சொல்லவேண்டியிருக்கிறது. அது எல்லாமே இவ்வளவுதான் என்று பையன்கள் நினைக்க வைக்கிறது. நான் புகழ்பெற்ற சில நாவல்களின் சினிமா வடிவங்களைப் பார்க்கையில்தான் அவை எவ்வளவு சுருக்கப்பட்டு எளிமையாக ஆக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டேன். எனக்கு அது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. ஆனால் அந்த மீடியாவின் வழி அது. அதற்கு ஒரு ரோல் எங்கும் உண்டு. ஆனால் அது அல்ல அறிவின் வழி. அறிவு என்பது ஒவ்வொன்றையும் முழுமையாகப் புரிந்துகொள்வது. முழுமையாகப் புரிந்துகொள்வது என்றால் சிக்கலாகப் புரிந்துகொள்வதுதான்.

 

சத்யமூர்த்தி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

செல்பேசித் தமிழ் -கடிதங்கள்

$
0
0

மாயாவிலாசம்!

அன்புள்ள ஜெ,

 

பயனுறு எழுத்தை செல்பேசியில் அடிக்கலாம், இலக்கியத்தை அடிக்க முடியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. கண்டிப்பாக மொழிச்சிபாரிசு செய்யும் மென்பொருளின் உதவியுடன் அடிப்பது மிகமிகப்பிழையானது. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் நெறிகளில் ஒன்று கடிதங்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்பது. சாதாரண செய்திக்கடிதங்களுக்கு வழக்கமான ஃபார்மாட் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட கடிதங்கள் தனிப்பட்ட முறையிலேயே எழுதப்படவேண்டும். புதிய சொற்கள் சொற்றொடர்கள் இருக்கவேண்டும். வழக்கமான சொற்றொரர்கள் டெம்ப்ளேட்கள் இருக்கக்கூடாது. உண்மையில் ஒருவருக்கு தனிப்பட்டமுறையில் எழுதும்போது டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்துவது ஒரு பெரிய இன்ஸல்ட்.

 

அலுவலகக் கடிதங்களிலேயே இப்படி என்றால் இலக்கியத்தை டெம்ப்ளேட் சொற்களைக்கொண்டு எழுதுவது ஒரு பெரிய வெட்டிவேலையாகவே முடியும். வழக்கத்திற்கு மாறானது, வழக்கத்தை மீறியது ஆகியவையே நல்ல உரைநடையின் சிறப்பம்சங்கள் என நினைக்கிறேன்

 

எஸ்.ராமச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ ,

இந்த கடிதத்தை நீங்கள் பயன்படுத்திய அதே  செயலியில்தான்  தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்;

“மொழிக்கு பிழையாக  ஆகும் ஒர்  இயல்பு உண்டு। நதி கரைகளை முட்டிக்கொண்டிருப்பதுபோல। கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்வதுபோல மொழியை கொண்டுசெல்லவேண்டும்। மிகவும் பழகினால் செக்குமாடாகிவிடும்”;

உண்ணமைதான், மேலும் நம் எண்ணத்தை, சிந்தனையை  மொழியை கொண்டு அணுகும் போதே சிந்தனையின் கூர் மழுங்கிவிடுகிறது அல்லவா? எண்ணத்தில் உருவாகும் மொழியின் வேகத்திற்கும், செயலியில் தட்டச்சு வேகத்திற்கும் ஒருமித்த ஒரு  synargize உருவானால், ஓரளவேனும் கூர்மையை மழுங்காமல் பார்த்துள்கொள்ளலாம் ।।।

“உள்ளமும் மென்பொருளும் இணைந்த மாபெரும் மென்பொருள் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது”,
நான் கருதுகிறேன் அந்த மாபெரும் மென்பொருள் ஏற்கனவே உருவாகி விட்டன, இவ்வாறு கூறலாம் நாம் இப்பொழுது 2 பாயிண்ட்  O இல் இருக்கிறோம்
artificial intelligence பற்றி நீங்கள் ஒரு அறிவியல் புனை எழுத வேண்டும் என் நீண்ட நாள் ஆசை।

ஒவொரு நேரத்திலும் நீங்கள் வாழக்கை கோணத்தை எனக்கு அளிக்கிறீர்கள், மருத்துவ மனையில் சிகிழ்ச்சியிலும், வலியிலும் வாழ்க்கையை நோக்கும் விதம், அருமை என் சிரம் தாழ்ந்த வணக்கம் ।।। எந்த இடத்திலும் மீண்டும் மீண்டும் உரக்க கூறுவேன் நான் உங்கள் வாசகன், நீங்கள் என் மதிப்பிற்குரிய ஆசிரியன்,

ராம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பனிமனிதன் -கடிதங்கள்

$
0
0

 

பனிமனித வாங்க

பனிமனிதன் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ வணக்கம்…

 

தத்துவம், வரலாறு ,அறிவியல் ,அரசியல், ஆண்மீக,பயணக் கட்டுரைகள் என பல தளங்களில் நீங்கள் எழுதினாலும் புனைவு எழுத்தாளராக நீங்கள் தரும் இன்பம் சொல்லிவிட முடியாதது.

 

பெருங்கனவுகளின் உலகில் நீங்கள் வாழ்கிறீர்கள், இந்த நடைமுறை யதார்த்த உலகில் வலுவாக கால்களை ஊன்றிக் கொண்டே விண்ணில் பறக்கிறீர்கள்.

 

எந்த ஒரு கலைப்படைப்பும்  வெற்றி அடைகையில் மண்ணில் விண்ணை சமைக்கிறது, பனிமனிதன் அவ்வாறான ஒரு ஆக்கம்.

 

குழந்தைகளை மையப்படுத்திய ஒரு கதையை இதைவிட சிறப்பாக துவங்கி விட முடியாது, பத்தாயிரம் அண்டாக்கள் நிறைய ஐஸ்கிரீமை கொட்டி பரப்பி வைத்திருந்த பனிமலை சரிவு, எனத் துவங்கும் கதை ,பக்கத்துக்குப் பக்கம் அத்தியாயத்துக்கு அத்தியாயம் குழந்தைகளுக்கு (வாசகர்களுக்கு)

 

  1. மானுடவியல்
  2. புவியியல்

3.அறிவியல்

4.விலங்கியல்

  1. உளவியல்
  2. உயிரியல்
  3. உலோகவியல்
  4. பரிணாமவியல்
  5. சூழலியல்
  6. கட்டிடவியல்

11.ஆண்மிகம்

  1. பனியுகம்

 

என வாழ்க்கையை செம்மையாக ,ஆழமாக, உயிரோட்டத்தோடு வாழ்வதற்கு தேவையான  துறைகளைப் பற்றிய அறிவார்ந்த அறிமுகத்தை வழங்குகிறது.

 

சமநிலையோடு கூடிய அறிவியல் பார்வை இன்மையே பல்வேறு சிக்கல்களுக்கு அடித்தளமிடுகிறது. உதாரணமாக ராமர் பாலம் கட்டினார் என்று ஒரு தரப்பும், ராமாயணம் என்ற ஒரு தொன்ம காவியமே வர்ணாசிரமத்தை புகுத்தி திராவிடத்தை அழிக்க புனையப்பட்ட ஆரிய சதி என்று மற்றொரு தரப்பும் இரு துருவங்களாக எதிர்நிலை எடுக்கின்றனர்,

 

மாறாக இந்த நாவலில் சிவாலிக் நதி எப்படி மலைத்தொடராக மாறியது, அமெரிக்கரான ஜி.இ.லூயிஸ்ன் அர்ப்பணிப்பு நிறைந்த ஆய்வில்அவர் கண்டறிந்த குரங்கு மனிதனின் எலும்புக் கூடுகளும் அதற்கு அவர் இட்ட ராமபிதாகஸ் என்ற பெயரும்,

இதைப்பற்றி இந்நாவலில் இடம் பெற்றுள்ள குறிப்புகளும்.

 

தொன்மங்களும் ,அறிவியலும் ,நடைமுறை உண்மையும் , ஒன்றிணையும் புள்ளி அற்புதம், எனக்கு அது பல கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.

 

பழந்தமிழரின் அறிவியல், தமிழன் தான் அனைத்தையும் கண்டு பிடித்தான், தமிழனை அழிக்க உலகமே திரண்டு சதி செய்கிறது, போன்ற உளறல்களை எதிர்கொள்ள, பின்னிருக்கும் உண்மைகளை அறிந்துகொள்ள நல்லதொரு கருவி எனக்கு கிட்டியுள்ளது.

 

டாக்டரும், பாண்டியனும், கிம்மும், செல்லும் யதிகளின் காடு,கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பரிணாம மாற்றம் நிகழாத இடம், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் மரம் தாவும் குதிரைகள், பச்சை நிற காகங்கள், யானையளவு பசுமாடு, முயல் அளவு யானை, சிவப்பு நிற மயில்கள், சிறகு முளைத்த அணில்கள்,பூனை முக பல்லிகள் , குரங்கின் கால் ஆட்டுக்கொம்பு கொண்ட மரத்தில் விளையாடும் நாய்கள், மரம் ஏறும் மீன்கள் எட்டுக்கால் எருமைகள், அட்டையின் கால்களைக் கொண்ட மலைப்பாம்பு, பனியுகத்து மாமதயானைகள், குருவியளவுள்ள கொசு, கிளைடர் வடிவில் வவ்வால்கள்,ட்ராகன்கள், பல வண்ண மின்மினிகள், பெரும் பாறையை ஒத்த ஆமைகள் என இப்பகுதி கற்பனையின் உச்சம். ,அதேநேரத்தில் பரிணாமவியல் கோட்பாடுகளின்படி அங்கிருந்து இன்றைய உயிரினங்கள் வரை ஒரு கோடு இழுக்கும்படியான அறிவியல் கூறும் உள்ளது.

 

எல்லாம் சிவமயம் என்பதைப்போல,சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் அற்புதங்களையும், ஆபத்துகளையும், அழகான தருணங்களையும், புத்தரோடு இனைத்து பொருள் கொள்ளும் கிம்மின் வார்த்தைகள் மகத்தான விரிவு கொண்டவை.

 

வெண்ணிற பனிமலை” புத்தரின் தூய்மையான மனம்”

 

அந்திச் சூரியனை எதிரொலிக்கும் சிவந்த பனி மலைகள் “புத்தரின் புன்னகை”

 

முற்றிலும் ஒளியற்ற பனிமலை”புத்தரின் உறக்கம்”

 

பனிமலையில் வீசும் பெரும் புயல்கள்”புத்தரின் விளையாட்டு”

 

வட்ட வடிவான வானவில்”புத்தரின் தர்ம சக்கரம்”

 

இந்த புவி மொத்தமும்”புத்தரின் ஓவியக்கூடம்”

 

புத்தரில்லா இடமில்லை அழகு ஆபத்து இரண்டுமே “புத்தர் தான்”

 

நாம் நமது கால்களையும் கைகளையும் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் மற்றவற்றை “புத்தர் பார்த்துக் கொள்வார்”.

 

நீ யார் என்ற கேள்விக்கு கிம்மின் பதில் இந்த பூமியில் உள்ள புழுவும் எனக்கு சமமானது, ஒரு சிறு கிருமி கூட எனக்கு நிகரானது

 

“நான் தான் புத்தர்”.

 

கிம் லாமாவாக  அறியப்பட்ட கணத்திலேயே வட இந்திய பின்னணி கொண்ட டாக்டர் காலில் விழுந்து வணங்குகிறார்,திராவிட மண்ணின் பாண்டியன் ஒரு மலை ஜாதி பையன் காலில் ஏன் விழுகிறீர்கள் என பகுத்தறிவு கேள்வி எழுப்புகிறார்.

 

அவதார் திரைப்படம் வருவதற்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நாவல் இது,எத்தனை அம்சங்களில் நாவலும் படமும் ஒத்துப்போகிறது பெரும் வியப்பு தான் ஏற்படுகிறது.

 

“வௌவால்களின் கழுத்தில் இருந்த சதையை இறுக பிடித்தவுடன் பறந்தது”இந்த வரிகளைப் படித்தவுடன் சிலிர்த்துப் போனேன்.

 

நாவலில் திருஷ்னை குறித்து வரும் பகுதிகளிலும் தியானம் ,ஞானம், குறித்தெல்லாம் பேசப்படும் இடங்கள் என்னுள் பரவசப் புயல்களை வீசச்செய்தது.கோடி நன்றிகள் அதற்கு.

 

அவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொண்டேன்.

 

பரிணாமவியலின் படி மீன் தான் பல்லியாக, ஓணானாக மாறியது.

ஓணானோ,பறவையாய் ,முதலையாய் ஏனைய விலங்குகளாக பரிணமித்தது.(புல்லாகி,பூடாகி, பல் மிருகமாகி)

 

அடிப்படை காரணம் இன்னும் வேண்டும் என்ற நிறைவின்மை, அவா,வேட்கை, முன்னேற வேண்டும் என்ற துடிப்பு ,தவிப்பு.

 

ஒரு புழுதான் இன்று நான் ஆகியுள்ளது. தொடர்ந்து இயங்கியதால்.

 

உண்மையில் துறவு என்பது முற்றிலும் அனைத்தையும் நிறுத்துவது தானே. ஒன்று திருஷ்னை என்னும் துடிப்பை கடந்து பரிணாமத்திற்கு முந்திய ஆதி நிலைக்குச் செல்வது, அல்லது மேம்பட்ட உயரிய பரிணாமத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மலர்வது.

 

விசேஷ வீடுகளுக்குச் செல்லும் பொழுதும் பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கு பரிசளிக்க நேரும் பொழுதும், நூல்களை அளிப்பது என் வழக்கம்.

 

ஆரம்ப காலங்களில் ஆன்மீக நூல்களை கொடுத்து வந்தேன், உங்களை வாசிக்கத் துவங்கிய பின்பு விசும்பு  கொடுத்தேன், யானை டாக்டர் வந்த பிறகு பெரும்பாலும் அறம் தொகுதிதான், இவ்வரிசையில் பனிமனிதன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான்.எவ்வயதினருக்கும் ஏற்றதொரு பொக்கிஷம் பனிமனிதன்.

 

ஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…

 

மு.கதிர்முருகன்

கோவை

பனிமனிதன் – கடிதம்

பனிமனிதன்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

பனிமனிதன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

$
0
0

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் எம்.எஸ் அவருடைய தனிப்பட்ட சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். அவற்றில் பெரும்பாலானவை நேஷனல் ஜியோஜிகிராஃபிக் நேச்சர் முதலிய பத்திரிகைகளிலிருந்து வெட்டி சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள். அன்று அந்தப்படங்களை பார்க்கும்போது ஒரு விந்தை உணர்ச்சி உருவாகியது. ஒருவகை கடந்தகால ஏக்கம். ஆனால் அப்போது என்னுடன் இருந்த இளம் நண்பர் ஒருவர் திரும்பிவரும்போது “அந்தப்படங்களை எல்லாம் எதற்காக வெட்டி சேர்த்திருக்கிறார்?” என்று என்னிடம் கேட்டார் நான்  “அந்தக் காலகட்டத்தை உங்களால் உணர முடியாது” என்று சொன்னேன்.

 

இன்று காட்சி ஊடகம் பெருகி பேய்க்கூட்டங்களென நம்மைச்சூழ்ந்திருக்கிறது. தொலைக்காட்சி வந்தபோதே காட்சி ஊடகம் மலியத்தொடங்கிவிட்டது. அதற்கு முன்னால் திரைப்படங்கள்தான் அனைவரும் அறிந்த ஒரே காட்சி ஊடகம்.திரைப்படங்களும் மிகக்குறைவாகவே வெளிவந்தன. ஓவியமும் காட்சியூடகம்தான். ஆனால் ஒர் எளிய சுவரோவியத்தைப் பார்த்திருப்பவர்களே மிக அரிதானவர்கள். அன்று திரையரங்கு இருக்கும் ஊரிலிருந்து பெரும்பாலான மக்கள் வாழும் சிற்றூர்கள் ஒருசில நாட்கள் பயணத்தொலைவில் இருந்தன. வாழ்நாள் முழுக்க ஒரு படம்கூட பார்க்காதவர்களே மிகுதி

 

அச்சூழலில் நாகர்கோவில் போன்ற ஒருசிறிய ஊரில்,  உலகத்தின் ஒருமூலையில்,  வாழும் ஒருவருக்கு உலகம் எனும் வார்த்தையே எண்ண எண்ண பரவசமூட்டுவது. பிரம்மாண்டமான கனவு அது. உலகம் என்பதை அறிய நேர்ந்தவர் உலகைப்பார்க்கும் வாய்ப்பிற்காக ஒவ்வொருவரும் தவித்துக்கொண்டிருந்தனர். மெக்கனாஸ் கோல்டு என்னும் திரைப்படம் நாகர்கோவில் நகரில் மட்டும் நூறு நாட்கள் ஓடியிருக்கிறது. மீண்டும் திரையிடப்படும்போது அது மீண்டும் பலநாட்கள் ஓடும். பார்த்தவர்களே மீண்டும் வருவார்கள். காரணம் அதில் காட்டப்படும் கிராண்ட் கான்யன் காட்சிகள். விரிந்த நிலக்காட்சிகள் கொண்ட கௌபாய் படங்கள், நகரங்களைக் காட்டும் போர்க்களப் படங்கள் இங்கே பெரிய அளவில் வெற்றி பெற்றன. கிரிகரி பெக் நடித்த ரோமன்ஹாலிடே என்ற காதல் படம் நாகர்கோவிலில் ஒரு மாதம் ஓடியிருக்கிறதென்றால் அது இன்னும் வியப்பிற்குரியது. காரணம் ரோம் அதில் காட்டப்பட்டது

 

இப்படங்கள் அனைத்தும் ஆங்கிலம் ஒருவார்த்தை கூட புரியாத பெரும்பான்மையினரால் பார்க்கப்பட்டவை. அந்த வாழ்க்கை, அந்தச் சிக்கல்கள் எதுவுமே அவர்களுக்குப் பிடிபடவில்லை. அதில் காட்டப்பட்ட போர் அதைவிட அந்நியமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் அதை கூட்டாலுமூடு பகவதி கோயிலில் நிகழும் வாணவேடிக்கையைப் போலவேதான் ரசித்திருக்கிறார்கள். அதையும்தாண்டி அப்படங்களில் அவர்களை ஈர்த்தது உலகம் என விரிந்திருக்கும் இந்த பூமி. அவர்கள் திரையரங்கில் அமர்ந்து உலகமெங்கும் பயணம் செய்தனர்

 

அன்று புகைப்படங்களே  மிக அரிதானவை தமிழில் எந்த இதழிலும் தரமான ஒரு புகைப்படத்தை பார்க்க இயலாது. ஆங்கில இதழ்களில் வரும் புகைப்படங்கள் உலகம் எனும் மகத்தான கனவை விதைக்கக்கூடியவையாக இருந்தன. நேஷனல் ஜியோகிராஃபிக் நேச்சர் முதலிய இதழ்களை வாங்க முடியாதவர்கள் கூட ரஷ்ய வெளியீடுகளான ஸ்புட்னிக். சோவியத் லேண்ட் முதலிய பத்திரிக்கைகளை வாங்கினார்கள். பின்னர் குறைந்த விலையில் யுனெஸ்கோ கூரியர் வந்தது. அவற்றை அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காகத் தொகுத்து வைத்தார்கள். இணையான ஆர்வமுள்ள நண்பர்கள் சந்திப்பில் கூடி அமர்ந்து அந்த புகைப்படங்களை பார்த்தார்கள். வரலாற்றில் எப்போதேனும் புகைப்படங்கள் அப்படி கூர்ந்து பார்க்கப்பட்டிருக்குமா, இனி அதற்கான வாய்ப்புண்டா என்பதே சந்தேகம் தான்.

நானே புகைப்படப்பித்து எடுத்து அலைந்திருக்கிறேன். ஒரு புகைப்படத்தை நினைவுகூர்கிறேன். ஆர்க்டிக்கின் பனிவெளியில் எஸ்கிமோ ஒருவர் தன்னந்தனியாக நடந்துசெல்கிறார் .பனிச்சரிவின் கீழே ஒரு கரடி மூன்று குட்டிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .இந்த ஒரு புகைப்படத்திலிருந்து நான் உருவாக்கிக்கொண்ட கனவுகளை இன்று எந்த திரைப்படமும், எனக்குத்தரமுடியும் என்று தோன்றவில்லை. குமுதம் அட்டையில் துறவி ஒருவர் எடுத்த புகைப்படத்தில் ஒரு காட்டுமாடு [யாக்] குட்டி அமர்ந்திருக்கும் காட்சியை இப்போதும் நேரில் எனக் காண்கிறேன்.

 

இன்று உலகம் திடீரென்று சுருங்கிவிட்டது. உலகத்தின் அனைத்து மூலைகளையும் காட்டும் ஒரு சாளரமாக தொலைக்காட்சி மாறிவிட்டது .பயணத்திற்கென்றே தொலைக்காட்சி நிலையங்கள் இருக்கின்றன. உலகத்தின் அனைத்து பகுதிகளும் மிக விரைவாக தங்கள் மர்மங்களை இழந்து கொண்டிருக்கின்றன. திடீரென அகன்றிருந்த உலகம் அணுகிவந்து மூச்சுமுட்ட நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது

 

இதற்கிணையான இன்னொரு சூழ்கை என்று தகவல்களை சொல்லவேண்டும் என்னுடைய கல்லூரியில் ஒரு கலைக்களஞ்சியத்தொகுதி இருந்தது. அன்றெல்லாம் தரமான பெரிய நூலகம் என்றால் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா வரிசை கீழ்த்தட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை நூலகரிடம் அனுமதி பெற்று எடுத்து அங்கிருந்தே பார்க்கவேண்டும் .பெரும்பாலானவர்கள் அவற்றை படிப்பதில்லை. கட்டுரைகள் எழுதவேண்டுமெனில் மட்டும் அதற்கான சிலதகவல்களை அதிலிருந்து எடுப்பார்கள். நான் கலைக்களஞ்சியங்களின் மிகப்பெரிய வாசகனாக இருந்தேன். கலைக்களஞ்சிய அடுக்குகளின் கீழேயே  தரையில் அமர்ந்து அகன்ற அதன் பக்கங்களை விரித்துப்போட்டு கைபோன போக்கில்  புரட்டி படித்துக்கொண்டிருப்பேன்

வெவ்வேறு வாழ்க்கை முறைகள் இலக்கியங்கள், சிந்தனை அலைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள். , உலகமெனும் வெளி. இன்று இணையம் பல்லாயிரம் மடங்கு பெரிய கலைக்களஞ்சியங்களை நமக்குச் சுற்றும் பரப்பி விரல் தொடுகையில் வந்து நின்றிருக்கச் செய்கிறது. கணிப்பொறி வந்த காலத்திலேயே கூட என்கார்ட்டா என்ற பெயரில் ஒரு கலைக்களஞ்சியக் குறுவட்டு என்னிடம் இருந்தது. அதை ஒவ்வொரு நாளும் அமர்ந்து மணிக்கணக்காக படிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். அதிலிருந்த முக்கியமான செய்திகளை  தாளில் குறிப்புகளாக எடுத்துக்கொள்வேன் .அக்குறிப்புகள் மட்டும்தான் எனக்கு நினைவில் நிற்கும் என்பதனால். இன்று ஒரு நாளில் பத்து முறையாவது விக்கிபீடியா பக்கத்திற்கு செல்கிறேன்.

 

இவ்வாறு காட்சிகளும் செய்திகளும் திரண்டு நம்மை சூழ்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் பயணக்கட்டுரைகளுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? சென்ற சில ஆண்டுகளாக கூகிள் எர்த் காட்சிகளையும் தகவல்களையும் இணைத்து ஒரு மெய்நிகர் புவியைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பயணங்களுக்கு கிளம்புவதற்கு முன் ஒவ்வொருமுறையும் ஊர்களுக்கு இடையே இருக்கும் சாலையையும் நிலக்காட்சிகளையும் கூகிள் எர்த்தில் பார்த்த பிறகே கிளம்புகிறோம். இரண்டாயிரத்து பத்தில் எங்கள்  இந்தியப் பயணத்தின் போது அச்சிடப்பட்ட வரைபடம் ஒன்றையே துணைகொண்டிருந்தோம் .அதை விரித்து வைத்து சுட்டு விரலால் தொட்டு அடையாளப்படுத்தியபடி அதை சாலைகளாக உள்ளத்துள் விரித்தபடி தேடிச் செல்வோம்.

 

வரைபடத்தில் இருக்கும் இடங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் அங்கிருக்கும் உண்மைப்பெயர்களுடன் ஒத்துப்போவதில்லை .வாரங்கல் என்று பத்துமுறை கேட்டபின்னரே அது வரங்கல்  அதாவது ஒற்றைக்கல் என்று தெரிந்துகொண்டோம். மிகச்சிறிய இடைவெளியில் அதாவது ஒரு மில்லிமீட்டர் வேறுபாட்டில் வழியைத் தவறவிட்டு ஒருநாள் முழுக்க சுற்றியலைந்த அனுபவமும் உண்டு. தவறாகப் புரிந்துகொண்டு பெல்லாரி அருகே ஒருமுறை காரை கடப்பைக்கல் அகழும் மாபெரும் குவாரிக்குள் இறக்கி சுழன்று சுழன்று கீழே சென்று ஒரு பெரிய குளத்தை அடைந்து திகைத்து நின்றிருக்கிறோம். இன்று நாம் இரண்டு பயணங்களை மேற்கொள்கிறோம். ஒன்று மெய்ப்பயணம், கூடவே கூகிள் எர்த்தில் ஒரு மெய்நிகர் பயணம்.

 

ஆகவே இன்றைய ஒரு பயணக்கட்டுரையில் தகவல்கள் பெரிய அளவில் முக்கியமானவை அல்ல. நானே கூட பெரும்பாலான தகவல்களை இணையத்திலிருந்து தான் எடுத்துக்கொள்கிறேன். அங்கு நேரில் சென்றால் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அதே தகவல்கள், சுற்றுலா வெளியீடுகளில் உள்ள அதே செய்திகள் அப்படியே நமக்கு விக்கிபீடியாவிலே கிடைக்கின்றன. அவற்றுக்கும் அப்பால் பயணத்தை உள்ளத்தை ஈர்க்கும் அழைப்பாக, உள்ளம்விரியச் செய்யும் பேரனுபவமாக ஆக்குவது எது?. அங்கு நாம் நேரில் செல்கிறோம் என்பதுதான். இத்தனை செய்திகளுக்குப் பின்னரும், இத்தனை விரிவான காட்சிகளுக்குப் பின்னரும், மெய்நிகர் உலகில் அங்கு நின்று சென்று நின்றிருக்க முடியும் என்பதற்குப் பின்னரும் மெய்யாகச் சென்று நின்றிருப்பது முற்றிலும் புதிய ஓர் அனுபவமாகவே இருக்கிறது

ஏனெனில் அங்கு சென்று நின்றிருப்பது தகவல்களின் தொகுதியால் ஆன ஒரு மூளை அல்ல. அதற்கப்பால் உள்ள ஒரு பண்பாட்டு தன்னிலை. நுண்ணுணர்வுகளின் தொகுப்பு. அறிந்தும் உணர்ந்தும் அது உள்வாங்கிக்கொள்வது முற்றிலும் வேறொன்று. இப்படி சொல்கிறேன், ஒரே ஊருக்கு ஒவ்வொரு நாளும் தமிழிலிருந்து ஒருவர் சென்று ஒரு பயணக்கட்டுரை வீதம் எழுதுகிறார் எனக்கொள்வோம். அப்படி ஆயிரம் முறை எழுதப்பட்ட பின்னரும் கூட ஆயிரத்தொன்றாவது முறை செல்லும் ஒருவர் நுண்ணுணர்வும் மொழியுணர்வும் கொண்டவராக இருப்பார் என்றால் முற்றிலும் புதிய ஒரு நிலத்தை, வாழ்க்கையை, பண்பாட்டை சுட்டிக் காட்டி  எழுத முடியும். இதுவே பயணக்கட்டுரைகளின் பொருளாக இருக்கிறது. பயணம்செய்பவர் ஒரு மென்பொருள் அல்ல, உணர்வும் நுண்ணுணர்வும் கொண்ட மனிதர் என்பதே காரணம்.

 

இதற்கப்பால் பயணக்கட்டுரை என்பது ஒரு நிலைத்த விந்தை.. காலம் கணமொழியாது ஒழுகிக்கொண்டிருக்கிறது. நாம் பார்க்கும் எதுவும் அந்நிலையில் இல்லை. நான் காலை நடை செல்லும் நிலம் சென்ற மூன்று மாதங்களில் முற்றிலும் மாறி பிறிதொன்றாக ஆகிவிட்டது .ஒவ்வொரு முறை செல்லும்போதும் நாம் பார்ப்பது முற்றிலும் புதிய கன்னியாகுமரியை. சிறிது காலம் கடக்கையிலேயே பயணக்கட்டுரைகள் மிகப்பெரிய ஆவணப் பதிவாக மாறிவிடுகின்றன. பகடாலு ராமானுஜுலு நாயுடு கன்னியாகுமரிக்கு நாகர்கோவிலிலிருந்து  மாட்டுவண்டியில் சென்ற சித்திரத்தை அங்கிருக்கும் நான்கு பூசாரி இல்லங்களில் ஒன்றில்தான்  தங்க வேண்டும் அவர்கள் அளிக்கும் சட்டி பானைகளை வாங்கி நாமே தான் சமையல் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் எழுதியிருக்கும் காட்சியை இன்றைய கன்னியாகுமரியுடன் பொருத்தி பார்ப்பதென்பது கிளர்ச்சியூட்டும் ஓர் அனுபவம்

 

நான் இந்திய விரிநிலத்தில் அலைந்து கட்டுரைகள் எழுதி அவற்றை நூல்களாக வெளியிடத்தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. இரண்டாயிரத்து எட்டில் நாங்கள் சென்ற இந்தியா இன்று இல்லை.  காட்சிகள் முற்றாக மாறிவிட்டன.. வாழ்க்கைச் சூழல் இன்னொன்றாக ஆகிவிட்டது .அன்றிருந்த பத்து வயதுச் சிறுவர்கள் இன்று இளைஞர்களாக நின்றிருப்பார்கள் .எழுதும்போதே மாறிக்கொண்டிருக்கும் இந்த விந்தையை அறிவதற்காகவே இப்பயணக்கட்டுரைகளை மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இனி நான் செல்லவிருக்கும் நிலம் எப்படி இன்னும் உருவாகாமல் இருக்கிறதோ அப்படியே சென்ற நிலம் காலத்தில் கரைந்துவிட்டிருக்கிறது.

 

ஆகவே செல்லவிருக்கும் பயணங்கள் என்னை கவர்ந்திழுப்பது போலவே சென்ற பயணங்களும் கவர்ந்திழுக்கின்றன. சில தனி இரவுகளில் முந்தைய பயணங்களை இணையத்தில் சென்று பார்த்து தாளா ஏக்கம் கொள்வதுண்டு .அப்பயணத்தில் உடன் வந்த கிருஷ்ணனையோ பிற நண்பர்களையோ அழைத்து அவற்றை பகிர்ந்துகொள்கையில் அவர்களும் நினைவுகளால் நெகிழ்ந்துருகுவதைக்காண முடியும். பயணம் போல் வாழ்க்கையை நிறைவு செய்வது பிறிதொன்றில்லை என்று அப்போது தோன்றுகிறது. பயணம் என்பது நம்மை நாமே பலநூறு இடங்களில் பல நூறு வகைகளில் நிகழ்த்திக்கொள்வது.

 

ஆனால் கற்பனை அற்ற ஒருவரின் பயணம் தன் வாழ்விடத்தை செல்லுமிடமெல்லாம் கொண்டு செல்வதுதான். அவர் அங்கு பார்ப்பதெல்லாம் வேறுபாடுகளை மட்டுமே. ‘அங்கு இட்லி கிடைக்குமா ? அங்கு நம்மைப்போல் மக்கள் அன்பாக இருப்பார்களா?’ என்றெல்லாம் பயணம் செய்யாதவர் கேட்கும் அனைத்து கேள்விகளும் தங்கள் வாழ்நிலத்தை கொண்டு பொருத்தி பார்க்கும்முயற்சியின் விளைவுகளே. கற்பனை உடையவனுக்கு பயணம் என்பது தன் வாழ்விடத்தை உதறிவிட்டு செல்லுதல். இங்கு இவ்வண்ணம் நிகழ்ந்த தன்னிலையை பிறிதொரு இடத்தில் பிறிதொரு வண்ணம் நிகழ்த்தி பார்த்தல். ஒரு வாழ்வில்  ஆயிரம் வாழ்க்கைகளை நடத்துதல்.

 

சமீபத்தில் நான் சென்ற பல பயணங்களை கட்டுரைகளாக எழுத முடியவில்லை. என் உள்ளத்தில் மிகப்பெரிய அனுபவமாக இருந்த கம்போடிய பயணத்தை நான் எழுதமுடியாமல் ஆகிவிட்டது. என்னை நான் மீள மீள கண்டடைந்த இரு பயணங்கள் ஐரோப்பாவில் நிகழ்த்தியவை. அவற்றை எழுதுவதென்பது நான் என்னை மறுவரையறை செய்து கொள்வது .கலையினூடாக பண்பாட்டினூடாக சென்ற கனவுப்பயணங்கள் அவை. ஐரோப்பாவும் பிரிட்டனும் நம்மை ஆட்கொண்ட நிலங்கள். நமது தொல் மரபு நம் உருவாக்கத்தில் எந்த பங்கு வகிக்கிறதோ அப்பங்கை பிரிட்டனும் ஐரோப்பாவும் வகிக்கின்றன.

 

ஐரோப்பாவை விரிவாக எழுத வேண்டுமென்ற கனவு இன்னும் எனக்குள்ளது. நீண்ட பயணங்களின்போது எழுத முடியாமல் ஆகிவிடுகிறது .திரும்பி வரும்போது எழுதியாகவேண்டியவை குன்றென குவிந்து கிடக்கின்றன. இப்பொறுப்புகள் என்னை எழுதவிடாமல் செய்துவிடுகின்றன. அக்குறை இன்னும் என்னில் உள்ளது .ஜப்பானை பார்த்துவிட்டு திரும்பும்போது அதை எழுதவேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் நான் ஜப்பானில் பார்த்தவற்றை மேலும் பலர் இங்கு எழுதியிருக்கக்கூடும். மிக எளிதில் அச்செய்திகளை எவரும் அடையக்கூடும். மீண்டும் அவற்றை எழுதுவதா என்ற தயக்கம் எழுந்த போது தோன்றியது, அனைவரும் பார்ப்பதற்கப்பால் நான் பார்த்த ஒன்றுண்டு .மிகச்சிறு காட்சிகள். அதைவிடச்சிறிய அனுபவங்க்ள். சிறியவற்றினூடாக ஜப்பானை கண்டடையலாம் என்று தோன்றியது. ஜப்பானிய பண்பாடென்பதே நுண்மைக்குள் விரிவு காணும் தன்மை கொண்டதுதான்

 

[மேலும்].

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பாரி மொழியாக்கம் செய்த கதைகள் –கடிதங்கள்

$
0
0

பாரி, புகைப்படம் விஜய் ரங்கநாதன்

நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ

அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக்

தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்

முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி

பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்

அன்புள்ள ஜெ

 

இந்த தளத்தில் பாரி மொழியாக்கம் செய்து வெளியிட்டுவரும் சிறுகதைகள் புதிய வாசல்களைத் திறக்கின்றன. அறிவியல்கதைகள் என்றாலும் அவையெல்லாம் வெறும் ஆச்சரியத்தை மட்டும் அளிக்காமல் வாழ்க்கையின் பல கோணங்களை திறந்துகாட்டுவனவாக உள்ளன. மொழியாக்கமும் மிகவும் சரளமானதாகவும் எளிமையாக வாசிக்க வைப்பதாகவும் உள்ளது.

 

நான் மொழியாக்கக்கதைகளை பொதுவாக விரும்பி வாசிப்பதில்லை. ஏனென்றால் அவை எனக்கு அத்தனை வாசிப்பு அளிப்பவையாக இல்லை. ஆர்.சிவக்குமார், எம்.சிவசுப்ரமணியம் ஆகியவர்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்த கதைகள்தான் மிகவும் பிடித்தமானவை. மலையாளத்தில் இருந்து யூசுப், யூமாவாசுகி ஆகியோரின் மொழியாக்கங்கள் சிறப்பானவை.

 

இதுவரை வந்த கதைகளில் முக்கியமானது நிலவின் தொலைவு அதை கதை என்பதைவிட ஒரு நீண்ட கவிதை என்றுதான் சொல்லவேண்டும்.நிலவைப்பற்றிய எல்லா பழைய உவமைகளையும் புதிய பாணியில் பயன்படுத்தியிருந்தார். அற்புதமான கதை. நிலவு வானத்தில் இருக்கும் ஒரு பெரிய பசுவின் மடி என்ற எண்ணம் வந்தது

 

ஆர்.எஸ்.மகாதேவன்

 

அன்புள்ள ஜெ,

 

அறிவியல்புனைகதைகளை மொழியாக்கம் செய்துகொண்டிருந்த டிஏ பாரி நிலவின் தொலைவை மொழியாக்கம் செய்திருக்கிறார். அற்புதமான கதை. கவிதை போல இருக்கிறது. மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் இது அறிவியல்கதை அல்ல. இதை உருவகக்கதை அல்லது ஒருவகை ஃபெயரி டேல் என்றுதான் சொல்லமுடியும்

 

எஸ்.ராமச்சந்திரன்

 

அன்பின் ஜெ,

 

‘தீயின் எடை’ அறிவிப்பு கண்டு மகிழ்ச்சி :)

 

ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் ‘முட்டாள் கிம்பெல்’ மொழியாக்கத்தை இணைத்துள்ளேன். இதுவரை செய்த மொழியாக்கங்களிலேயே மிகவும் நிறைவளித்த கதை.

 

நான் மொழியாக்கத்திற்குத் தேர்வு செய்யும் கதைகள் குறித்து ஓர் சிறிய விளக்கம்: மொழியாக்கம் எனும் செயல்பாடு தன்னளவில் அளிக்கும் நிறைவின் பொருட்டே இதை தொடர்ந்து செய்வதாக முடிவெடுத்தேன். எனவே கதைத் தேர்வை பொருத்தவரை சுதந்திரமான போக்கையே மேற்கொண்டு வருகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த கதைகள் என்பது ஊட்டி முகாமை ஒட்டி இயல்பாக அமைந்த தேர்வு. இவற்றிலும் சில கதைகள் அறிவியலுக்கான தர்க்கங்கள் இன்றி ஒருவகை மிகை கற்பனையின் (Fantasy) எல்லைக்குள் இருப்பதை வாசகர்கள் காணலாம். எனவே கறாரான அறிவியல் சிறுகதைகளின் வரிசையில் இவற்றை கொள்ளத் தேவையில்லை.

 

மற்றபடி நான் மொழியாக்கத்திற்கு தேர்ந்தெடுக்க வைத்துள்ள அளவுகோல்கள் மிகவும் எளியவை. முதலாவாதாக ஒருகதை இலக்கிய பிரதியா இல்லையா? அடுத்து அக்கதை தனித்துவம் கொண்டதாகவும் என் ரசனைக்கு ஏற்பவும் உள்ளதா? இவ்விரண்டிற்கும் ஆம் எனில் தேர்ந்தெடுக்கலாம் என்பதே என் இப்போதைய அளவுகோல். வகைபிரிக்கும் வேலையெல்லாம் பின்னர் பாத்துகலாம், தற்போது பணியைச் செய்வோம் என்பதே என் மனநிலையாக உள்ளது. உதாரணமாக தற்போது மொழியாக்கம் செய்துவரும் ஐசக் சிங்கரின் கதைகளுக்கும் அறிபுனைவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உண்மையில் இவ்வாறு வெவ்வேறு கதைக் களங்களில் ஈடுபடுத்திக் கொள்வது உற்சாகமான மீட்பாகவே உள்ளது. இது தொடர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

 

இரண்டாவது இக்கதைகளை ஆங்கிலத்தில் வாசிப்பது குறித்து: ஒருவர் ஆங்கிலம் சரளமாக வாசிப்பாரெனில் நிச்சயம் இவற்றை ஆங்கிலத்தில் வாசிப்பதையே பரிந்துரைப்பேன். எனவேதான் ஆங்கில மூலத்திற்கான சுட்டியை எப்போதும் அளித்து வருகிறேன். மொழியாக்கம் தமிழில் வாசிக்க விரும்புபவர்களுக்கானது. மேலும் துவக்கம்முதலே இம்மொழியாக்கங்களின் பயன்மதிப்பு சார்ந்து எனக்கு எந்தச் சிந்தனையும் இருக்கவில்லை. முன்னரே சொன்னதுபோல் இச்செயல்பாட்டின் மூலம் படைப்பு மற்றும் மொழியில் ஆழ்ந்திருப்பதன் இன்பமே என்னை வழிநடத்துகிறது.

 

பாரி,

பெருந்துறை.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இன்றைய காந்திகள் -கடிதங்கள்

$
0
0

இன்றைய காந்திகள்

அன்புள்ள ஜெ

 

இந்தத் தளத்தில் வெளிவந்த நவகாந்தியர்கள் பற்றிய கட்டுரைகள் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவை காந்தியம் என்றால் என்ன என்று காட்டுகின்றன. இதுவரைக்கும் நானே காந்தியம் என்பது ஒரு தரப்பு கம்யூனிசமும் திராவிடவாதமும் வேறு தரப்புக்கள் என்றே நினைத்துவந்திருந்தேன். ஆனால் காந்தியம் செயல்படுபவர்களின் தரப்பு. மற்றவை வெறுமே கருத்துசொல்பவர்களின் தரப்புக்கள் என்று இன்றைக்குத் தெரிந்துகொண்டேன்.

 

மற்றவர்கள் எதிரிகளை வசைபாடுகிறார்கள். தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். காந்தியம் சொல்வதற்கு சான்றாகச் செய்து காட்டுகிறது. எதையும் வசைபாடுவதில்லை. எதிர்ப்பதுகூட இல்லை. இந்தப்போராட்டம் ஆக்கபூர்வமானது. அத்தனை காந்தியவாதிகளுக்கும் தலைவணங்குகிறேன்

 

டி.சந்தானகிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

முன்பு ஒரு கட்டுரையில் காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் பலநூறு மகாத்மாக்களை உருவாக்கியவர் என்பதனால் என்று சொல்லியிருந்தீர்கள். இன்றையகாந்தியர்களைப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் செய்திருக்கும் சாதனைகளை கணக்கிடுகையில் காந்தியை நினைத்து வணங்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு மனிதர் எப்படி இத்தனை பெரிய பலருக்கு ஆதர்சமாக இருந்தா? அவரை இவர்கள் நேரில்பார்த்ததுகூட இல்லை. ஆனால் அவர்கள் அனைவருக்கும் காந்தி குருநாதராக வழிகாட்டியாக இருந்திருக்கிறார்

 

காந்தியைவிட தர்க்கபூர்வமாகச் சிந்தனைசெய்தவர்கள் பலர் உண்டு. காந்தியைவிட பெரிய சிந்தனையாளர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களிடமிருந்து காந்தியை வேறுபடுத்திக் காட்டுவது காந்தி செய்துகாட்டினார் என்பதுதான். காந்தியின் செயல்களே அவரை காட்டுகின்றன. என் வாழ்க்கையே என் செய்தி என அவர் சொன்னதுதான் மிகப்பெரிய தத்துவம்.

 

அவ்வாறு காந்தியின் வாழ்க்கையையே அவருடைய செய்தியாக எடுத்துக்கொள்ளும்போது ஒன்று தெரிகிறது, அவருடைய வெற்றிகள் மட்டும் அல்ல அவருடைய தோல்விகளும்கூட அவருடைய செய்திதான். ஆகவேதான் செயல்வீரர்கள் அவரை பின்பற்றுகிறார்கள். மற்ற சிந்தனையாளர்கள் தங்கள் சிந்தனைகள் அப்பழுக்கற்றவை என்றும் தப்பே செய்யாதவை என்றும் சொல்கிறார்கள். மாற்றுத்தரப்பை நிராகரிக்கிறார்கள். இதுவே அவற்றை நடைமுறையில் பயனற்றவை ஆக ஆக்கிவிடுகின்றன. நடைமுறையில் என்னென்ன தப்புகள் நிகழும் என்ற செய்தியையும் உள்ளடக்கிய செய்தியே பயனுள்ளது. காந்தியின் வாழ்க்கை என்னும் தத்துவம் அப்படிப்பட்டது

 

பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இக்கட்டுரைகள் விரைவில் நூலாகவேண்டும்

 

எம்.ஆர்.பார்த்திபன்

இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா

ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா

சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா

போற்றப்படாத இதிகாசம் -பாலா

ஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

செல்பேசி எழுத்து -கடிதங்கள்

$
0
0

மாயாவிலாசம்!

அன்புள்ள ஜெ,

மாயாவிலாசம் படித்தேன்.

வேண்டாத வார்த்தை தானம் இல்லாமல் மென்பேசியில் தமிழ் தட்டச்சு செய்ய கீ பேடையே த‌மிழுக்கு மாற்றிக் கொள்ளும் எழுத்தாணி என்ற செயலி உள்ளது. (ezhuthani) .

செயலியைத் தரவிறக்கம் செய்த பின் தெவைப்படும்போது அதை தூண்டிவிட்டு

get started > setting up ezhthani > switch to ezhuthani> Finished.

இதன் பின் எங்கு கீ பேட் எழுந்தாலும்  தமிழில் தட்டச்சு செய்யலாம். “அ” வை அழுத்தினால் தமிழ். “ENG” யை அழுத்தினால் ஆங்கிலம்.

 

மெதுவாக இருப்பினும் உபயோகமானது.ஏற்கனவே இது உங்களுக்குத் தெரிந்திருக்கவும் கூடும்

தேவையானால் முயற்சி செய்து பார்க்க்கவும்.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ வணக்கம்…

 

 

கைப்பேசியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு  பல மென்பொருட்களும், செயலிகளும் ,இணையதளங்களும் இருந்தாலும், கூகிளின்

G board Tamil voice typing செயலிக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

 

இந்தக் கடிதம் உட்பட நான் உங்களுக்கு அனுப்பியுள்ள கடிதங்கள் சமூக ஊடக பதிவுகள் அனைத்தும் நான் வாய்ஸ் டைப்பிங் முறையில்தான் செய்கிறேன்.

 

என் அனுபவத்தில் தட்டச்சினைவிட குரல்வழி பதிவின்(speech to text=குரலச்சு)சிறப்பம்சங்களாக நான் நினைப்பது.

 

அ. ஈடு இணையற்ற வேகம், கொஞ்சம் பழகி விட்டால் நாம் பேசும் வேகத்திலேயே குரலச்சு செய்ய முடியும்.

 

தட்டச்சு செய்வதில் ஐந்தில் ஒரு பங்கு நேரமே போதுமானது.

 

ஆ. எவ்வளவு விலையுயர்ந்த கைப்பேசியாக இருந்தாலும் அதன் திரையின் அளவு காரணமாக ஓரிரு விரல்களை பயன்படுத்தி மட்டுமே தட்டச்சிட முடியும், குரலச்சில்அவ்வாறு தடுமாற வேண்டியதில்லை.

 

இ. speech to text செயலிகள் நிறைய இருந்தாலும் கூகுளின் பிரம்மாண்டமும் ,தொழில்நுட்பநேர்த்தியும்,  நாள்தோறும் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் தன்மையும் பயன்படுத்துவோருக்கு நிகரற்ற அனுபவம் தரவல்லது.

 

ஈ. குரலச்சு, விரல் மூலம் தட்டச்சு இரண்டுமே கூகுளின் கீ போர்டில் செய்து கொள்ளலாம்.

 

உ. விசைப்பலகையில் ஒரே ஒரு தொடுகையின் மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

 

ஊ. பயணங்களிலும் எந்தவிதமான நெரிசலிலும் ஒரு ஹெட்போனை மாட்டிக் கொண்டால் இயல்பாக கைபேசியில் உரையாடுவது போலவே டைப் செய்து விடலாம்.

 

 

மு. கதிர்முருகன்

கோவை

 

 

அன்பு ஜெமோ,
நடந்ததை அறிவேன், நடப்பதை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பூரண நலம் பெற்று மீண்டு வர என்னுடைய வாழ்த்துகள், பிரார்த்தனைகள். என்னுடைய ஆதரவும் அன்பும் எப்போதும் உங்களுக்கு உண்டு.
முறைப்படி தமிழ் தட்டச்சு கற்றுக்கொண்டவனல்ல என்று நீங்கள் குறிப்பிட்டதில் எனக்கு பெரிய ஆச்சர்யம்.  ஒரே இரவில் பல நூறு பக்கங்கள் எப்படி உங்களால் தட்டச்சு முடிந்தது?  நான் முறைப்படி தமிழ் தட்டச்சு கற்று, தேர்ச்சி பெற்று இன்றும் Old TypeWriter Layout பயன்படுத்தி வருகிறேன். முரசு தொடங்கி என்எச்எம் வரை இதை சப்போர்ட் செய்வதால் கையாள்வதற்கு வசதியாகவும், விரைவாக தட்டச்சு செய்யவும் உதவியாக இருக்கிறது. மொபைலில் phonetic முறையில் தட்டச்சு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் அதையும் செய்ய வேண்டியிருக்கிறது.
Old TypeWriter முறை காலப்போக்கில் குறைந்துவிட்டது, இன்னும் எத்தனைகாலம் அதை தொடரமுடியும் என்பது கேள்விக்குறி என்றாலும் இன்றைய நிலையில் விரைவாக தட்டச்சு செய்வதற்கும் நிறைய பக்கங்கள் எழுதுவதற்கும் அதுவே பெரும் காரணமாக இருந்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் முறைப்படி தமிழ் தட்டச்சு கற்றுக்கொண்டிருந்தால் இன்னும் பல்லாயிரம் படைப்புகளை உருவாக்கியிருப்பீர்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

$
0
0

 

ஜப்பானைப்பற்றிய எனது நினைவுகள் தொடங்குவது எங்கள் இல்லத்தில் இருந்த ஒரு சிறிய பொருளில் இருந்து. அது ஒரு மூக்குக்கண்ணாடி. அந்த கண்ணாடியை எனது அப்பாவின் சிறிய தந்தையார் பயன்படுத்தியிருந்தார். வெள்ளி விளிம்பு கட்டியது. இன்றைய கணக்குக்கு எடை மிக்கது. அன்று அதை தொட்டு எடுக்கையில் குளிர்ந்த தளிர்க்கொடியால் ஆன ஒன்று என தோன்றியது. அதை போட்டு வைப்பதற்கு அரக்கில் செய்த கூடும் இருந்த்து. அது கட்டெறும்பு நிறமானது . மெழுகென குன்றிமணி என மின்னுவது. அப்பா அதை ஒர் அரிய நினைவுப்பொருளாக பாதுகாத்து வந்தார். அவருக்கு இளமையிலேயே மறைந்த தன் தந்தையின் இடத்தில் இருந்தவர் அந்தச் சிறிய தந்தை

 

அந்த கண்ணாடி அப்பாவின் சித்தப்பாவின் பார்வையென்றே ஆகிவிட்டது. உள அழுத்தங்கள் உருவாகும்போது அப்பா அந்த மூக்குக்கண்ணாடியை மேஜையில் வைத்து சிறிய தந்தையின் கண்களைப்பார்ப்பது போல் அவற்றை பார்த்துக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மேஜையில் அவற்றை கழற்றி வைத்தாலும் அப்பாலிருக்கும் ஜன்னலின் துளிச் சித்திரங்கள் அவற்றில் வளைந்து தெரியும். மிக அருகே மேஜை மேல் இரு நுண்ணிய ஜன்னல்கள் ஒளி வடிவாக நீண்டு வழிந்திருக்கும். அந்தக்கண்ணாடி ஜப்பானில் செய்யப்பட்டது. அப்பா அதை ஜப்பான்கண்ணாடி என்றுதான் சொல்வார்.

 

ஹக்யுன் எஸாகு

அன்றெல்லாம் தரமான கண்ணாடிகள் பெல்ஜியத்திலும் ஜெர்மனியிலும் செய்யப்படுபவை. அவற்றை வாங்குவது நெடுங்கால சேமிப்புக்குப் பின்னரே இயல்வது .வாழ்நாள் முழுக்க ஒரு கண்ணாடியைத்தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள். விலை மதிப்பு மிக்க கலைப்பொருளொன்றை பேணுவது போல் அவற்றை பாதுகாத்தனர். அப்பாவின் பேனா லண்டனில் செய்யப்பட்டது. கைக்கடிகாரம் சுவிட்ஸர்லாந்தில். எழுப்பு கடிகாரம் ஜெர்மனியில். அப்பா அவற்றினூடாக உலகக்குடிமகனாகத் திகழ்ந்தார்

 

ஆனால் அன்று .ஜப்பானிய பொருள்கள் மிக மலிவானவை. அதேசமயம் உறுதியானவை. சாதாரண மக்களுக்கு வேறுபாடு தெரியாது. ஆகவே அன்றெல்லாம் சந்தையில் ஜப்பானியப் பொருள் வந்தால் சொல்லி வைத்து வாங்குவார்கள். அவற்றை விற்க திருவனந்தபுரத்தில் சில கடைகள் இருந்தன. ஜப்பானிய மூக்குக்கண்ணாடி தரத்தில் எந்த வகையிலும் ஜெர்மானிய, பெல்ஜிய கண்ணாடிகளுக்கு குறைந்ததல்ல. ஒரு படி மேலானதென்று கூட சொல்லலாம் .ஆனால் ஐந்தில் ஒரு பங்கு விலையே இருக்கும். முதலாளிகள் பெல்ஜிய கண்ணாடி போட்டபோது என் தாத்தாவைப்போன்ற பள்ளி ஆசிரியர்கள் ஜப்பானிய கண்ணாடியை அணிந்தார்கள் திருவனந்தபுரம் சாலை பஜாரில் வாங்கிய அந்தக்கண்ணாடி ஒருமுறை கூட பழுது பார்க்கப்பட்டதில்லை என்று என் தந்தை சொல்வார்.

 

யசுநாரி கவபத்தா

யூகியோ மிஷிமா

கோபோ ஆப்

அதன் பின் ஜப்பான் தொடர்ந்து வெவ்வேறு பொருட்களாகவே என்னை வந்தடைந்தது. எழுபதுகளில் துபாய்க்கு சென்று மீண்டவர்கள் பேனாசோனிக் டேப் ரிக்கார்டுகளுடன்  வந்தார்கள். தொண்ணூறுகளில் மிட்சுபிஷி யமஹா சுஷுகி டொயோட்டோ என வண்டிகள் இங்கு பெருகின. இன்று ஒரு சராசரி தமிழன் அவனுக்கு தெரிந்த ஜப்பானிய வார்த்தைகளை பட்டியலிடப் புகுந்தால் ஐம்பது சொற்களையாவது சொல்லிவிட முடியும். இறுதியாக தமிழர்களின் நாவில் மறக்க முடியாதபடி நிலை கொண்ட சொல் சுனாமி.

 

நான் பள்ளியில் படிக்கும்போதே தி.ஜானகிராமனின் உதயசூரியனின் நாட்டில் என்ற பயணக்கட்டுரை நூலை ஆர்வக்கொந்தளிப்புடன் படித்திருக்கிறேன். பயணக்கட்டுரைகள் புனைவுகளை விட உளஎழுச்சியை உருவாக்கிய காலம் அது. மலையாளத்தில் எஸ் கே பொற்றைகாடும் தமிழில் மணியனும் சென்ற பயணக்கட்டுரைகள் .அப்பயணக்கட்டுரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தன தி.ஜானகிராமனின் பயணக்கட்டுரைகள் .இடங்களைவிடவும் மனிதர்களையும் அவர்களின் இயல்புகளில் இருக்கும் நுட்பமான பொதுமைகளையும் வேறுபாடுகளையும் கவனிப்பது ஜானகிராமனின் வழக்கம். அவர் எழுதுவது பெரும்பாலும் உரையாடி அறிந்த ஊர்களைத்தான். மணியனின் பயணக்கட்டுரைகளினூடாகச் செல்பவர்கள் அமெரிக்காவிலோ அலாஸ்காவிலோ தமிழர்கள் வாழ்வதை தெரிந்து கொள்வார்கள் .எஸ் கே பொற்றைக்காடின் பயணக்கட்டுரைகள் வழியாக செல்பவர்கள் மனிதர்கள் குரலற்றவர்களாக நிறைந்திருக்கும் மாபெரும் நிலவெளியின் சித்திரங்களை அடைவார்கள்.. ஜானகிராமன் அங்கிருந்து  சில மனிதர்களை இங்கு அழைத்துக்கொண்டுவந்து விட்டவர் போல் தோன்றுவார்

யாசுஜிரோ ஒஸு

 

மஸாகி கோபயாஷி

 

ஜப்பான் என்றும் எனக்கு ஒரு கனவை ஊட்டிய நிலமாகவே இருந்தது ஏனெனில் இருபதாம் நூற்றாண்டு உலக கலை இலக்கியத்தை உருவாக்கியதில் ஐரோப்பாவுக்கு அடுத்த படியான இடம் ஜப்பானுக்கு உண்டு நம் சிந்தனையை, நுண்ணுணர்வை வடிவமைத்தவர்களில் மாபெரும் ஐரோப்பிய சிம்ந்தனையாளர்கள் மற்றும் கலையாசான்கள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி என ஒரு வரிசை. வால்டேர், ரூசோ, ஹெகல், நீட்சே, மார்க்ஸ், ஃப்ராய்ட் என ஒரு வரிசை கதே . டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, செக்காவ்,மாப்பசான் ரோமன் ரோலண்ட், விக்டர் ஹியூகோ என ஒரு வரிசை. வின்சென்ட் வான்கோ, கிளாட் மோனே, பிக்காஸோ என இன்னொரு வரிசை. இங்மார் பர்க்மான், பாஸ்பைண்டர், தர்கோவ்ஸ்கி, என இன்னொரு வரிசை மேலும் வரலாற்றுக்குள் பின்னகர்கையில் பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், மைக்கேல் ஏஞ்சலோ, ரூபன்ஸ் என நாம் அடுத்த அடுக்கை காண்கிறோம்.மலைமுடிகள் சூழ் பள்ளத்தாக்கில் நின்றிருப்பவர்களை போல் உணர்கிறோம்.

 

ஐரோப்பிய சிந்தனை, ஐரோப்பியக் கலை வழியாகவே நாம் கீழைத்தேயமான ஜப்பானைச் சென்றடைகிறோம் என்பது ஒரு விந்தை. பொதுவாக ஐரோப்பிய எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டு, ஐரோப்பிய விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, ஆங்கில மொழியாக்கம் வழியாக நாம் ஜப்பானிய இலக்கியம் கலை ஆகியவற்றைக் கண்டடைகிறோம். ஐரோப்பிய நுண்ணுணர்வால் பிரதிபலிக்கப்பட்ட பிம்பம் என்றாலும்கூட  ஜப்பானிய கலையும் இலக்கியமும் தத்துவமும் நமக்கு முற்றிலும் வேறாக தெரிகின்றன. இந்த வேறுபாடே விலக்கத்தையும் பின் தீவிர ஆர்வத்தையும் உருவாக்குகிறது. சிற்றிதழ்ச்சூழலில் ,ஐரோப்பிய எழுத்தாளர்களையோ கலைஞர்களையோ பேசிக்கொண்டிருக்கும் ஓர் அரங்கில் ,ஒரு ஜப்பானிய எழுத்தாளனையோ கலைஞனையோ பற்றி பேசத்தொடங்குகையில் நமக்கொரு தனி மதிப்பு உருவாவதைக்காண்கிறோம்.

 

 

யாமகுச்சி

ஜப்பானிய இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது. ஐரோப்பிய இலக்கியம் நோக்கி தமிழின் சாளரத்தைத் திறந்த பாரதியே ஜப்பானியக் கவிதையையும் இங்கே அறிமுகம் செய்திருக்கிறார். ஜப்பானிய கவிதை வடிவான ஹைகூ இங்கே ஒரு வெகுஜனக் கவிதைவடிவம். ஜப்பானிய தத்துவமான ஜென் ஒரு நூறுநகல்களால் போற்றப்படுவது. ஆனால் இன்னமும் கூட ஓர் ஐரோப்பியக் கலைஞனுக்கு ஜப்பானியக் கலைஞனுக்குமான அடிப்படை வேறுபாடென்ன என்பதை தன் வாசிப்பை, அனுபவத்தைக் கொண்டு வகுத்துச் சொல்லும் தகுதி கொண்ட வாசகர்கள் எழுத்தாளர்கள் மிகச்சிலரே எவ்வண்ணமோ அதை உணராதவர்களோ எவருமிருக்க மாட்டார்கள்

 

ஒற்றை உதாரணம் கொண்டு அதை நான் விளக்குவதுண்டு. மசானபு ஃபுகுவோகா அவருடைய ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற மகத்தான நூலில் ஐன்ஸ்டீனை நிராகரிக்கிறார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை பிழையான ஒரு பிரபஞ்சப் பார்வை கொண்டது என்கிறார். அது முரணியக்கத்திலிருந்து சென்று ஒருமையைக்கண்டடைவது .இப்பிரப்ஞ்சம் முரண்பாடுகளால் அல்ல ஒத்திசைவால் இயங்குகிறது .முரணியக்கம் என்பதே இல்லை என்கிறார்.முற்றிலும் கீழைத்தேய தத்துவப் பார்வையில் நின்று அதை சொல்கிறார். ஐன்ஸ்டீனுக்கும் ஃபுகுவோகோவுக்குமான தொலைவுதான் ஐரோப்பாவுக்கும் ஜப்பானுக்குமான தொலைவு. இயற்கையுடன் போராடுவது வெல்வது  ஐரோப்பாவை இன்றும் ஆட்டிப்படைக்கிறது முரண் கொள்வது என்பதே இன்றி இயற்கையுடன் முற்றிசைவதே வெற்றி என கொள்ளும் ஃபுகுவோகாகோவின் ஸென் பார்வை அதிலிருந்து தனித்து நிற்கிறது

 

வெவ்வேறு வகையில் ஜப்பானிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரிடமும் இந்த அடிப்படை வேறுபாடு உண்டு உண்மை முடிவிலாத பக்கங்கள் கொள்வது என்பதும், உண்மை X பொய் என்று இப்புவி மெய்மையை எவரும் பகுத்துவிட முடியாதென்றும் கீழைத்தேயவியல் நம்புகிறது. ஜப்பான் கீழைத்தேய பண்பாட்டின் கூர்முனை. மாக்ரோபயாட்டிக்ஸ் போன்ற ஒரு கீழைத்தேய வாழ்க்கைநோக்கு மிஷியோ குஷி போன்ற  ஞானியால் முன்வைக்கப்படுவது இவ்வாறுதான். இவை அனைத்துக்கும் அடியில் ஜப்பானிய ஆன்மிக நோக்கான ஜென் உள்ளது.

ஒகுரா யூரி

ரயோஹி கொய்சொ

ககாகு முரகாமி

ஜப்பானிய எழுத்தாளர்கள் சிலர் என் இலக்கிய வாசிப்பின் தொடக்க காலத்திலேயே கவர்ந்தவர்கள் . ஜப்பானிய தொல்நாவலான செஞ்சி கதை  கா. அப்பாத்துரை அவர்களின் மொழியாக்கத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே தமிழில் வெளிவந்துள்ளது.  நான் படித்த முதல் ஜப்பானிய படைப்பு அது. யஸுநாரி கவபத்தா என்னை முதன்மையாக கவர்ந்த ஜப்பானியப் படைப்பாளி. அதன்பின் யூகியோ ,மிஷிமா, கோபோ ஆப் வரை ஒரு படைப்பாளிகளின் நிரையை சொல்லமுடியும். தமிழில் ஜென் கவிதைகளை அறிமுகம் செய்தவர்களில் சி.மணி, ஆனந்த் இருவரும் முக்கியமானவர்கள். பாஷோ ஒரு தமிழ்க் கவிஞர் அளவுக்கே பிரபலமாகி போலி பாஷோக்கள் கூட உருவாகிவிட்டிருக்கின்றனர். யுவன் சந்திரசேகர் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஜென் கவிதைகள்’ முக்கியமான ஒரு மொழியாக்க நூல்.

 

எண்பதுகளில் சினிமாக் கூட்டமைப்புக்கள் வழியாக கலைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய போது முதலில் அகிரா குரசேவா கவர்ந்தார். வசந்தகுமார் [தமிழினி] வழியாக கோபயாஷியையும் ஒசுவையும் அறிமுகம் செய்து கொண்டேன். மிகப்பிந்தி ஊட்டி குருகுலம் வழியாகவே ஜப்பானிய ஜென் ஞானிகளையும் ஓவியர்களையும் அறிமுகம் செய்துகொண்டேன் ஜப்பானிய இளம் ஓவியர் ஒருவர் தான் வரைந்த நீர்வண்ண ஓவியத்த்தின் மீது நீரை மென்மையாகப் பீய்ச்சியடித்து கடற்பஞ்சால் மென்மையாக ஒற்றி எடுப்பதை ஒருமுறை கண்டேன். அவர்கள் படங்களை மென்மையான வண்ணங்களுடன் அமைப்பதற்குக் கையாளும் வழி அது. கழுவுதல் ஜப்பானிய ஓவியமரபின் தனித்தன்மை. என்னை குறியீடாகவும் பெரிதும் கவர்ந்தது அது.

 

ஜப்பான் தமிழ்நாட்டில் கராத்தே வழியாகவே தொடக்கத்தில் பரவலாக அறியப்பட்டது. நான் கல்லூரியில் படிக்கும்காலத்தில் 1980ல்  புரூஸ் லீ நடித்த எண்டர் த டிராகன் தமிழகத்தில் வெளியானது. அது கராத்தே மீது பேரார்வத்தை இங்கே உருவாக்கியது. அதையொட்டி கராத்தேயின் முதிய ஆசானாகிய யாமகுஷி [Gōgen Yamaguchi] இந்தியா வந்தார். அன்று அது பெரிய செய்தியாக பலவாரம் பேசப்பட்டது. அவர் மிக ஒல்லியாக இருந்தது இங்கே ஒரு கேலியையும் உருவாக்கியது. [ஒரு படத்தில் கராத்தே மாஸ்டர் ஆக நடித்த நரசிம்மன் தன்னை ஓமக்குச்சி என்று சொல்லிக்கொள்வார். ஓமக்குச்சி நரசிம்மன் என்று பின்னர் அறியப்பட்டார்]

 

சென்ற ஜூன் ஆறாம்தேதி ஜப்பானுக்குக் கிளம்பும்போது பாஷோவும் கோபயாஷியும் கவபத்தாவும் சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளி எங்கோ உள்ளது என்றும் அதைத் தேடி சென்று கொண்டிருக்கிறேன் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒரு பயணத்தை இப்படி நாமே நம்முள் பெரிதாக்கிக் கொள்ளமுடியும். நிலப்பரப்புகளின் மேல் வரலாற்றால் நாம் பரப்பும் கனவுப்படலமே அங்குள்ள ஒவ்வொன்றையும் அர்த்தம் கொள்ள செய்கிறது. அனைத்து பொருட்களையும் படிமங்கள் என்று ஆக்குகிறது.

ஊட்டி நாராயண குருகுலத்தில் குருநித்யா ஆய்வரங்கு முடிந்தபின் அங்கிருந்து கோவை வந்து சென்னை சென்றோம். சென்னையிலிருந்து நானும் அருண்மொழியும் டோக்கியோவுக்குக் கிளம்பினோம். நண்பர்கள் விமான நிலையம் வந்து வழியனுப்பிவிட்டார்கள் டோக்கியோவில் வசிக்கும் நண்பர் செந்தில் இப்பயணத்தை ஒழுங்கமைத்திருந்தார். செந்தில் முழுமதி அறக்கட்டளை என்னும் பேரில் ஓர் இலக்கிய- பொதுச்சேவை அமைப்பை நடத்தி வருகிறார். ஆனால் இவ்வழைப்பு அவர் தனிப்பட்ட முறையில் வகுத்தது .ஆகவே இதை ஒரு முறையான இலக்கிய பயணம் என்று சொல்ல இயலாது.

 

சென்னையிலிருந்து கோலாலம்பூர் சென்று மூன்று மணி நேர இடைவெளிக்குப்பின் விமானத்திலேறி மறுநாள் மாலை ஜப்பானில் நரித்தா விமானநிலையம் சென்றடைந்தோம். விமான நிலையத்திற்கு செந்திலும் அவர் நண்பரும் வந்திருந்தார்கள். டொக்கியோவில் நிசி கசாய் என்னும் ஊரில் இருக்கும் செந்திலின் வீட்டுக்கு சென்று அன்று ஓய்வெடுத்தோம். டோக்கியோவில் இறங்கி கார்களினூடாக செந்திலின் இல்லத்தை சென்றடையும் வரை இரு பக்கச் சாளரங்களினூடாக விரிந்த நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்

 

டோக்கியோ விமான நிலையம் உலகெங்கும் பெருநகர்களில் உள்ள பிரம்மாண்டமான விமான நிலையங்கள் அனைத்தையும் போலவே தெரிந்தது. வெளியே உள்ள கார் நிறுத்துமிடம் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ எந்த நகரத்திலும் இருப்பதாக ஒரு திரைப்படத்தில் காட்டிவிடமுடியும். வெளியே சென்று நகரத்தின் இல்லங்களையும் ஓங்கிய கட்டிடங்களையும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தெருக்களையும், ஓசையின்றிச் செல்லும் கார்களையும் பார்க்கும்போதும் எந்த வேறுபாடும் தென்படவில்லை. உலகெங்கும் சாலைக்ளில் ஓடும் கார்கள் பெரும்பாலானவை டொயொட்டோ கார்கள் தான் .மஞ்சள் இனத்தை சார்ந்த மக்கள் அன்றி எவ்வகையிலும் டோக்கியோ ஐரோப்பிய அமெரிக்க நகரங்களிலிருந்து வேறுபடவில்லை என்ற எண்ணமே எழுந்தது

 

இந்த வளர்ந்த நாடுகள் அனைத்தும் நகரக் கட்டமைப்பில் பல பொதுக்கூறுகளை கொண்டுள்ளன. இவை கட்டுமானமாக பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலானவை சீனாவிலிருந்து இங்கு வரவழைக்கப்படுபவை. அவை ஒரேவகையான காட்சியமைப்பையே அளிக்கின்றன.  ஐரோப்பாவின் தொன்மையான சில நகரங்கள் தவிர பெரும்பாலானவை இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களினாலானவை, அல்லது பல முறை புதுப்பிக்கப்பட்டவை .ஆகவே நாம் செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்னர் தான் அந்நகரங்கள் கட்டி முடிக்கப்பட்டு குறை தீர்ந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்படும். கூரைகள் சாம்பல் நிற கூரையோடு வேயப்பட்டவை. இளவெயிலில் யானை முதுகென மின்னுபவை. கண்ணாடிகள் நிறைந்த முகப்பு, அடுக்கடுக்காக மேலே செல்லும் உப்பரிகைகள்…

என்ன வேறுபாடு என என் உள்ளம் துழாவிக்கொண்டே இருந்தது.  செந்திலின் இல்லத்தை சென்றடைந்தோம். ஒருகணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் சென்ற தங்கிய ஒரு வீடென்றே தோன்றியது.  நன்கு வடிவமைக்கப்பட்ட சிறிய இல்லம். ஒழுங்கான நடைபாதை .பிசிறில்லாத தூய்மை. அமைதி. என்ன வேறுபாடு? நிமிர்ந்து பார்த்தால் ஒன்றுடன் ஒன்று பின்னி சிக்கி இருக்கும் பல நூறு உறையிடப்பட்ட கம்பிகளின் தொகுதி நான் சற்று ஐயத்துடன் செந்திலிடம் கேட்டேன்  “இத்தனை சிறப்பாக வடிவமைக்கபப்ட்டிருந்தும் நகரங்களில் இன்னும் மின்சாரம் தலைக்குமேல் கம்பிகள் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது? நிலத்தடி மின்குழாய்கள் இல்லையா?”

 

செந்தில் நிமிர்ந்து பார்த்துவிட்டு ”ஆம் பிற நாடுகளில் மண்ணுக்கடியில் அமைக்கிறார்கள். இங்கு பூகம்ப அபாயமிருப்பதால் பெரும்பாலும் தலைக்குமேல்தான் மின்கம்பிகள் செல்கின்றன”. முதல் வேறுபாடு என்று சொல்லிக்கொண்டேன். இது பூகம்பங்களின் நாடு. சுனாமிகளால் அறையும் கடலால் சூழப்பட்ட சிறிய நிலம். நிலையற்ற மண்மேல் எழுந்த பண்பாடு. இதன் ஆழத்தில் எப்போதும் உள்ளன எரிமலைகள்.

 

[மேலும்]

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்

வாசிப்பு: யுகியோ மிஷிமா எழுதிய Confessions of a Mask

முரகாமி, சராசரி வாசிப்பு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மாயாவிலாசம் -கடிதங்கள்

$
0
0

 

இந்தப் பதிவிற்காக எவ்வளவு வருடங்கள் காத்துக்கொண்டுருந்தேன் !!!

 

மென்பொருள் என்ற சொல்லே ஒரு தனி பரிமாணம் அல்லவா ? அதைப் பற்றி இதுவரை நீங்கள் எதுவும் எழுதியதில்லை.

 

ஆனால் நீங்கள் சொல்வது போல ‘ அது புறவயமாக ஒரு கருவியில் ஏற்றப்பட்ட உள்ளத்தின் ஒரு செயல்பாடு’ – அது ஒரு சவால், கலைவெளிப்பாடு போல, ஒவ்வொரு மென்பொருளிலும் எவ்வளவு சாத்தியமாகியிருக்கிறது என்பதைத் தான் பார்க்கமுடியும்

 

என்னளவில், பல மென்பொருள்களில் உள்ள undo option என்பதை முதன்முதலில் வடிவமைத்தவன் காலத்தின் விதிகளை மீறி திரும்பச்செல்லும் விழைவு கொண்டிருந்திருப்பான் என்று தோன்றும். இன்னும் ஆயிரம் வருடங்களில் இந்த undo optionக்கும் காலத்திற்கும் உள்ள கடக்க முடியாத இடைவெளி மனிதனை மிகவும் படுத்தும் என்று படுகிறது

 

அன்புடன்
மது

 

 

அன்புள்ள ஜெ

 

நகைச்சுவையும் இன்னொரு பக்கம் தீவிரமும் கலந்தது மாயாவிலாசம் என்னும் கட்டுரை. உண்மையாகவே இன்றைய பிரம்மாண்டமான தகவல்தொழில்நுட்பமும் அதிலுள்ள மென்பொருட்களும் ஒன்றாக இணைந்து நம் சிந்தனையை கட்டுப்படுத்துகின்றன. நாம் என்ன வாங்கவேண்டும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதுடன் எந்தெந்த சேனல் வழியாகச் சிந்திக்கவேண்டும் என்பதையும் அவையே முடிவெடுக்கின்றன அவற்றை உருவாக்குபவர்கள் மறைமுகமாக நம் சிந்தனையை வடிவமைக்கிறார்கள்

 

ஏற்கனவே இதை நான் கவனித்திருக்கிறேன். நான் குழந்தைகளை பார்க்கும்போது அவர்கள் இப்போது வரும் அனிமேஷன் படங்களில் இருந்து அசைவுகளை அறியாமல் இமிடேட் செய்கிறார்களோ என்று தோன்றும். அவர்களிடமிருக்கும் வன்முறையும் அங்கிருந்து வருகிறதா என்று தோன்றும்

 

இந்த கம்யூட்டர் கேம்ஸ் நம் குழந்தைகளின் சிந்தனையை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதெல்லாம் இன்னும் ஆழமாக யோசிக்கவேண்டியது. வன்முறையை மட்டும் சொல்லவில்லை. ஒருவிஷயத்தை எப்படி அணுகவேண்டும் எப்படி பிரச்சினைகளை தொகுத்துக்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி இயற்கையிலிருந்தும் விளையாட்டின் வழியாகவும் கற்றுக்கொள்கின்றன. அதையெல்லாம் ஒன்றாக ஆக்க இவை முயல்கின்றன.

 

இன்றைய மானுட மனம் இந்த மென்பொருட்களால் ஒற்றை மனமாக ஆக்கப்படுகிறது என நினைக்கிறேன். இனி கொஞ்சநாள் கழித்து இந்த மென்பொருட்களால் பாதிப்படையாத ‘பிற்பட்ட’ தொழில்நுட்பம் கொண்ட ஊர்களிலிருந்து புதிய சிந்தனைகள் வந்துசேரக்கூடும். ஏற்கனவே மிதமிஞ்சிய தகவல்தொடர்பு காரணமாக அமெரிக்க ஐரோப்பிய இலக்கியங்களும் கலைகளும் சூம்பிவிட்டன. லத்தீனமேரிக்காவும் ஆப்ரிக்காவும் அவர்களுக்கு மேலான இலக்கியத்தை அளிப்பவையாக ஆகிவிட்டன. அந்தப்போக்கு தொடரலாம்

 

சொ. ராமநாதன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அரியணைகள்,வாசிப்பு -கடிதங்கள்

$
0
0

காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்

போதைமீள்கையும் வாசிப்பும்

அரியணைச் சூதுகளும் வாசிப்பும்

அரியணைகளும் வாசிப்பும் 1

 

 

அன்புள்ள ஜெ

 

காட்சியூடகத்தை வாசிப்பை அழிப்பது என்று சொல்வது எந்தவகையிலும் பொருந்தக்கூடிய பேச்சு அல்ல.  காட்சியூடகம் நாம் அறியாத உலகத்தை நமக்கு உருவாக்கிக் காட்டுகிறது. நாம் இன்றைக்கு கற்பனைகள் இல்லாத சமூகமாக ஆகிவிட்டோம். புறவுலகம் யதார்த்தமானது. அது இரும்பு போல நெகிழ்வில்லாததாக உள்ளது. இந்தவகையான கதைகள் காட்டும் கதைஉலகம் நம்மை ஓர் கற்பனை உலகில் வாழச்செய்கிறது . அதன்வழியாக வாழ்க்கையின் பல தளங்களை நாம் கண்டடைகிறோம். அது நம் சிந்தனையை வளர்க்கவே செய்கிறது என்பது என் எண்ணம்

 

மேலும் பலகோடிப்பேர் இதை பார்க்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உண்மையையே அடைகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையான கதாபாத்திரத்துடன் தான் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அக்காலத்தில் பொன்னியின் செல்வன் வெளிவந்தபோது பலர் அதை இழிவாகப்பேசினார்கள். அவர்களெல்லாம் கிளாஸிக் எழுத்தை முன்வைத்தார்கள். இன்று பொன்னியின் செல்வன் ஒரு கிளாசிக் ஆக நிலைகொண்டிருக்கிறதென்பதை எவராலும் மறுக்க முடியாது

 

காட்சி ஊடகமாக இருந்தாலும் இவ்வளவு பெரிய புனைவு மக்களிடையே செல்வதும் மக்கள் அதில் வாழ்க்கைநடத்துவதும் மிகச்சிறந்த விஷயம். அது இலக்கியவாதிகளுக்குப் பிடிக்காமலிருப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். எழுத்துவடிவ கிளாஸிக்குகள் காலாவதியாகிவிட்டன. இனி இம்மாதிரியான காட்சிவடிவ கிளாஸிக்குகளே உலகில் நிலைகொள்ளும்

 

செல்வ கணேஷ்

 

 

 

ஜெ

 

மேலும் மூன்று கடிதங்கள். மூன்றாவது கடிதம் இன்ப அதிர்ச்சி. பிரியமுள்ள அண்ணன், மலேஷியா எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் பாராட்டி ஊக்கமளித்து எழுதிய கடிதம். முந்தய இரண்டும் வழமை போல  GOT  ரசிக இலக்கியர்களின் முறைப்பே . அதிலும் சுனில் குறித்த பிலாக்கணம்.

 

நண்பர்களுக்கு என்னதான் பிரச்னை? விருது பெற்ற சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை தொகுதிக்கு நூலக ஆணை கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயம் அந்தத் தொகுதி அவர் விருது பெற்ற நாள் முதல் பைரேடட் காப்பியாக இணையவெளியில் இலவசமாக கிடைக்கிறது. ஒரு இலக்கிய வாசகனின் பிரச்னை இதுவாகத்தானே இருக்க இயலும்.? இதுதானே சூழலின் சரிவு? சுனில் தொகாதொடர் ரசிகராக இருப்பதா சரிவு?

 

எஸ்ரா கனவுகளுடன் துவங்கிய பதிப்பகத்தின் அத்தனை நூல்களும், விரும்பிய கோப்பு வடிவில் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் மொத்த நூல்கள்,காலச்சுவடு பதிப்பகத்தின் பெஸ்ட் செல்லர்கள் அனைத்தும் இலவசமாக விரும்பிய கோப்பு வடிவில் தரவிறக்கிக்கொள்ளக் கிடைக்கிறது.

 

இந்த சூழலில் அமேசான் பெரும் விளம்பரம் இலவசம் வழியே, புதிய எழுத்தாளர்கள் எனும் பெயரில், பெரும் டெங்குக் கொசு படையையே கொண்டு வந்து இறக்குகிறது. பதிப்பகம் துவங்கி வாசிப்பு சூழல் வரை அனைத்தும் அதன் நசிவின் தீவிர கணத்தில் இருக்கிறது. இந்த சூழலில் நமது காசையும் பிடுங்கிக் கொண்டு நமது  எழுத்தை இடம் பெயர்க்கும் இந்த சீரியல் மீது  அப்படி என்னதான் காதல் நமது வாசக தெய்வங்களுக்கு?

 

வெகுஜன ரசனை என்பதன் எல்லையை ஹாலிவுட் விரிக்கும் முயற்சியில் அது அடைந்த வெற்றியின் சாட்சியமே g o t, கதை திரைக்கதை, நடிப்பு,காட்சியமைப்பு என அத்தனையிலும் ஒரு தீவிர சினிமா ரசனைப் பார்வையாளன் எதை எதிர் பார்ப்பானோ, அதையும் இணைத்து, அந்த ரசிகனுக்கும் சேர்த்து சமைக்கப்படும் வெகுஜன ரசனைப் படமே இன்றைய பெரும்பாலான ஹாலிவுட் படங்கள். அந்தப் பயணத்தின் உச்சமே got. அது ஒரு வெகு ஜன ரசனை சீரியலே அன்றி, வேறில்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள அப்படி என்ன தயக்கம்?

 

நமது பதிப்பு,வாசிப்பு சூழல் மொத்தமும் தரை தட்டி நிற்க, அப்படி நிறுத்தி வைக்கும் காரணிகளில் ஒன்றான got ஐ தலைக்கு மேல் தூக்கி கூத்தாடும் இலக்கிய வாசகனை, தீவிர இலக்கிய எழுத்தாளரை, கொஞ்சம் நுண்னுணர்வு கொண்ட வாசகன் எவனும் மனதுக்குள் இதைத்தான் நினைப்பான். பல வாசகர்கள் இங்கிதம் அறிந்தவர்கள்.வெளியே சொல்ல மாட்டார்கள். எனக்குதான் எந்த எழவும் கிடையாதே வெளியே சொல்லி விட்டேன்.

 

போதும் ஜெ.ஊதும் சங்கை ஊதிவிட்டேன். got ரசிகர் எவரும் தீக்குளிகுமுன் இங்கே இதை நிறுத்திக் கொள்கிறேன்.  :)

 

கடலூர் சீனு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

$
0
0

 

எந்த ஒரு பண்பாட்டையும் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்ட ஏட்டுச்சுவடிபோல உருவகிக்கலாம். அல்லது மேலும் சிறந்த உதாரணம் மேல்மேலாக வரையப்பட்ட ஓவியம். தஞ்சைப் பெரியகோயிலில் நாயக்கர்கால ஓவியங்களுக்கு அடியில் சோழர்கால ஓவியங்கள் உள்ளதுபோல. இதை நகரங்களைக் கொண்டு மேலும் துல்லியமாக உணரமுடியும். உதாரணமாக இன்றைய சென்னைக்கு முன்னோடி நகரம் என்றால் அது கும்பகோணம்தான். இன்றைய தஞ்சைக்கு அடியில் இருக்கும் நகரம் உறையூர். இன்றைய டெல்லிக்கு கல்கத்தாதான் முன்னோடிநகரம்.இந்நகரங்களில் எது பொதுவாக இருந்தது, எது வளர்ந்து மாறுபட்டது என்பதைப் பார்ப்பது ஒரு வரலாற்றுப்புரிதலை அளிக்கும்.

 

இன்றைய டோக்கியோவுக்கு அப்படி மூன்று முன்னோடி நகரங்கள் உள்ளன. ஒன்று கியோட்டோ இன்னொன்று நாரா அதற்கு முந்தையது காமகுரா.செந்தில் முதலில் கியோட்டோவுக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். புல்லட் ரயிலில் கியோட்டோ வரைச் செல்வதாக திட்டம். ஷின் கான் சென் எனப்படும் புல்லட் ரயிலுக்கு இந்தியாவிலிருந்தே டிக்கெட் எடுத்துக்கொள்வது செலவு குறைவானது, ஏனென்றால் சுற்றுலாப்பயணிகளுக்கு அது குறைவான கட்டணம் பெறுகிறது. பொதுவாக புல்லட் ரயில் செலவேறியது.

நான் புல்லட் ரயிலை முன்பு வெளிவந்த புல்லட் டிரெயின் என்னும் சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். இயற்கையையும் அறிவியலையும் அழிவுச்சக்தியாக, விபரீதமாகப் பார்க்கும் படங்களின் வரிசையில் ஒன்று. மானுடவல்லமையை உயர்த்திக்காட்டுவது அதன் கட்டமைப்பு. சாகசத்தன்மை அப்போதுதான் பெருகித்தெரிகிறது. ஆனால் அதற்கும் அடியிலிருப்பது சாமானியர்களுக்கு அறிவின்மேல் உள்ள அவநம்பிக்கை. எந்த ஓர் அறிவியல்விந்தையை கண்டாலும் அது நிலைகுலைந்தால் என்ன ஆகும் என்னும் அச்சமே எளியமானுடரில் எழுகிறது. இந்த வணிகச்சினிமாக்கள் அந்த அச்சத்தின்மேல் கட்டமைக்கப்படுகின்றன. எளிதில் பார்வையாளன் அதில் தொற்றிக்கொள்கிறான்

 

புல்லட் ரயில் மிகமிக கச்சிதமாகத் திட்டமிடப்பட்டுள்ளது என அதன் நேர அட்டவணை காட்டுகிறது. அல்லது அப்படிக் காட்டும்படி அதன் அட்டவணை அமைந்துள்ளது. ஒருநிமிடம் இரண்டு நிமிடம் என அதில் நேரத்தைப் பார்க்கையில் நான் வாழும் காலம் நீண்டு விரிந்து நிமிடங்கள் மணிகளாக ஆனதுபோல் ஓர் உணர்வு. புல்லட் ரயில் ஜப்பானில் விமானப்பயணத்திற்கு மாற்று. சுமார் நான்கு மணிநேர நேரத்தில் அது மொத்த தேசத்தையும் இணைக்கிறது. விமானநிலையம் சென்று சோதனைகள் முடித்து இறங்கி மீண்டும் காரில் ஊருக்குச் செல்வதும் இதன் நேரமும் இணையானது. இது பெரும்பாலும் நகரின் நடுவே மண்ணுக்குள் ஆழத்தில் இறக்கிவிட்டுவிடுகிறது.

வசதியான இருக்கைகள். கிளம்பும்போது சிறு உந்தல் தவிர விசையை உணரவே முடியாது. இருபக்கமும் விமானச்சாளரம் போல ஏதுமற்ற வெறுமைதான். ஆனால் வசதியாக அமர்ந்து பேசமுடியும். அலுவலகக்கூட்டங்களையே நடத்திவிடமுடியும். அதற்கேற்றாற்போல இருக்கைகளை மாற்றியமைக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் குட்டித்தூக்கம்தான் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

கியோட்டோவில் இறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளைக்காரப் பயணிகள். பல மின்படிகள் வழியாக மேலேறி வெளியே வந்தபோது அந்த ரயில்நிலையம் ஒரு பெரிய சிதல்புற்றின் வாய் எனத் தோன்றியது. பிலுபிலுவென மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஜப்பானியர்களில் நடப்பவர்களைப் பார்ப்பது மிக அரிது. குற்றோட்டம்தான். அவர்களின் உடலும் ஒத்துழைக்கிறது. பின்னாலிருந்து பார்த்தால் நம் இந்தியக் கண்கள் பெரும்பாலானவர்களை பையன்கள் என்றே நினைக்கச்செய்கின்றன.

 

கியோட்டோவுக்குள் நுழைந்தோம். கியோட்டோ சென்று பார்க்கவேண்டிய ஊர் என்பதைவிட தங்கியிருக்கவேண்டிய ஊர் என்பதே பொருத்தமானது. அங்கே முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஜென் ஆலயங்களும் புத்தர் ஆலயங்களும் ஷிண்டோ ஆலயங்களும் வெவ்வேறு அரண்மனைகளும் உள்ளன. இரு நூற்றாண்டாகவே ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் கியோட்டோவை நாடி வந்துகொண்டிருக்கிறார்கள.

 

பொதுவாக கியோட்டோ இன்று ஜப்பானிய ஜென் மத்த்தின் மையமாக மேலைநாட்டவரால் கருதப்படுகிறது. காசியில் திரும்பும் இடம் எல்லாம் யோகா குருக்கள் இருப்பதுபோல இங்கே ஜென் ஆசிரியர்கள். இந்தவகையான நுண்ணிய தளங்களில் முறையான ஆசிரியரைக் கண்ட்டைவது கடினம். உலகிலேயே உணர்தற்கு நுட்பமானது ஆன்மிகம், அடுத்தபடியாகக் கவிதை, பின்னர் ஓவியம். மூன்றிலும்தான் போலிகள் மிகுதி.

கியோட்டோ கிபி ஆறாம் நூற்றாண்டு முதலே உருவாகத் தொடங்கிய நகரம். இங்கே ஆண்ட தொன்மையான அரசகுலம் ஷிமோகமோ என்று தொல்லியல் சான்றுகள் உள்ளன.  கியோட்டோவுக்கு முன் நாரா தலைநகரமாக இருந்த்து. நாராவிலிருந்த பௌத்த மடாலயங்களின் நேரடி தலையீடுகளில் இருந்து ஆட்சியைக் காப்பாற்றும்பொருட்டு கிபி 794ல் கியோட்டோ தலைநகராக ஆக்கப்பட்டது. ஹீயன் கியோ என்பது பழைய பெயர், அமைதி நிலவும் நகர் என்று பொருள். கிபி 1869ல் டோக்கியோ ஜப்பானின் தலைநகரமாக ஆகும்வரை கியோட்டோவே தலைநகரமாக நீடித்தது.

 

முற்காலத்தில் கியோட்டோ மக்களிடமிருந்து முற்றாக அந்நியப்படுத்தப்பட்டு அரசர்கள் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மட்டுமே தங்கும் இடமாக இருந்தது சொல்லபோனால் இதுஒரு ராணுவ மையம். ராணுவ அதிகாரிகளை ஷோகன் என்கிறார்கள் இதை ஷோகனேட் என்று குறிப்பிடுகிறார்கள். ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவுக்கு மாற்றப்பட்ட பிறகு கியோட்டோ கலாச்சார நகரமாக உருமாற ஆரம்பித்தது.

நாரா தலைநகராக இருண்ட்ந்ஹ காலகட்ட்த்தில் ஜப்பானிய பேரரசு அதன் முழு வீச்சை அடையவில்லை வெவ்வேறு தீவுப்பகுதிகள் தனித்தனிப் போர்த்தலைவர்களால் ஆளப்பட்டன. கியோட்டோவின் காலகட்டம்தான் ஜப்பானிய வரலாற்றின் பொற்காலம்.  பௌத்தம் செழித்தது,        அது இங்கிருந்த பல்வேறு வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைத்து ஒரு பெருமதமாக உருவாக்கியது.பெருமத உருவாக்கமும் பேரரசு உருவாக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பெருமதங்கள் பேரரசுகளை தாங்கி நிற்கின்றன. பேரரசுகள் பெருமதங்களை ஆதரித்து வளர்க்கின்றன.

 

பெருமதமும் பேரரசும் ஒன்றாக திகழ்ந்ததை காட்சிவடிவாக விளக்கும் பல தொல்நகர்கள் உலகமெங்கும் உள்ளன. கியோட்டோ அதில் ஒன்று. இந்நகர்களுக்கே உரிய தனித்தன்மை என்பது வைரப்பட்டை போல வெவ்வேறுமுகம்காட்டித் திரும்பிக்கொண்டே இருப்பது.  ஒரு கோணத்தில் அன்றைய மையஅதிகாரத்தின் செருக்கையும் குரூரத்தையும் காட்டுகிறது. கூடவே செல்வவளத்தையும் உயர்குடி மிதப்பையும். ஆனால் அதிகாரம் செல்வமாக மாறி மதத்தை ஆளத் தொடங்கும்போதே செவ்வியல்கலை பிறக்கிறது.

மதம் என்பது மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள், தொல்உருவகங்கள் ஆகியவற்றின் பெருந்தொகை, அவற்றிலிருந்து மையத்தரிசனத்தையும் தத்துவக்கட்டமைப்பையும் அறத்தையும் நெறிகளையும் உருவாக்கமுயல்கிறது. அவற்றை மக்களிடையே படிமங்களாக, கதைகளாக நிலைநாட்ட முயல்கிறது.

 

மதத்தின் இத்தகைய தொடர்ச்செயல்பாடு. விளைவாகவே ஆன்மிகஉருவகங்களும், தத்துவமும்,  அறவியலும், இலக்கியமும், கலைகளும் உருவாகின்றன. அவற்றை பேண, நிலைநிறுத்த பேரரசு தேவை. சோழப்பேரரசு ஓர் அதிகாரக் கட்டமைப்பு. ஆனால் அது இல்லாமலிருந்தால் தமிழ்ப்பண்பாடே இல்லை. கியோட்டோ அத்தகைய ஓர் அதிகார – ஆன்மிக- பண்பாட்டு – கலை மையம். கியோட்டோ இன்று ஒரு சுற்றுலா மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் முதலில் சென்றது ஒரு ஜென் ஆலயத்திற்கு. டெய்ட்டோக்குஜி [Daitokuji ] ஆலயம் ரின்ஸாய் ஜென் பௌத்த மரபினரின் ஆலயத்தொகை. பல சிறு ஆலயங்கள் அமைந்த வளாகம்.1319ல் இது நிறுவப்பட்ட்து. 1467ல் நிகழ்ந்த போரில் எரிந்து அழிந்தபின் மீண்டும் கட்டப்பட்டது.  சென் நோ ரிக்யூ என்னும் ஜென் குரு இங்கே அவருடைய ஆன்மிகத் தேநீர் விருந்தை நிகழ்த்தியிருக்கிறார். ஓடா நொபுங்கா மற்றும் டொயோடோமி ஹிடயோஷி போர்த்தளபதிகள் இதைப் பேணியிருக்கிறார்கள்.

அதை ஒர் ஆசிரமம் என்றோ தியான மையம் என்றோதான் சொல்ல முடியும் பெரிய மதில்களால் வளைக்கபப்ட்ட நன்கு பராமரிக்கப்பட்ட சோலை நடுவே மரத்தாலும் இரும்பாலும் பித்தளை, செம்பு முதலிய பிற உலோகங்களாலும் ஆன ஒற்றைமாடிக் கட்டிடம். செம்பால் ஆன சரிந்த கூரை. தொல்காலத்தில் இங்கே முற்றிய மூங்கிலால் கூரைகள் அமைத்திருக்கிறார்கள் – நம்மூர் வளையோட்டுக் கூரை வடிவில். பின்னர் அதே வடிவில் பித்தளையாலும் செம்பாலும் கூரை அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அகன்ற இடைநாழிகள். குளிர்ந்து அமைதியில் இறுகிய தியான அறைகள். இது வெவ்வேறு தியான அறைகளின் தொகுப்புதான். அறைகளுக்குள் மிகக்குறைவான அலங்காரம், மிகக்குறைவான பொருட்கள். ஜப்பானிய ஆலயங்கள் எவையும் பிரம்மாண்டமானவை அல்ல. ஆனால் இடம் மிகச்சிறப்பாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே விரிவு என நம் விழியும் உள்ளமும் அவற்றை உணர்ந்தபடியேதான் இருக்கின்றன

 

ஜப்பானிய அறையலங்காரக் கலை மிகத்தொன்மையானது. ஜப்பானிய அறையலங்காரம் இன்று நம் கண்ணுக்கு வேறுபாடாகத் தெரிவதில்லை. ஏனென்றால் ஐரோப்பா வழியாக நம் இல்லங்களுக்கே அது வந்துவிட்டது. உதாரணமாக  tokonoma எனப்படும் அறைமூலை. இங்கே அழகுப்பொருட்கள் வைக்கப்படும். Fusuma எனப்படும் ஓவியத்தட்டிகள் நீண்ட கலைமரபு கொண்டவை . கூழாங்கற்களால் ஆன அலங்காரங்கள். உலர்ந்த சுள்ளிகளின் கட்டுகள். கலங்கள், கூடைகள்.

ஜப்பானிய அறையலங்காரத்தின் அடிப்படை ஒன்றே, பார்வையை உறுத்தாத பொருட்கள். அடர்வண்ணங்களோ ஒளிரும் உலோகங்களோ செறிவான செதுக்குகளோ இல்லை. பொருட்கள் அறைக்குள் இருப்பதை நாம் அறியமுடியாது, அவை ஒட்டுமொத்த்த்தின் பகுதியாக ஆகி நம் விழியறியாமல் ஆழுள்ளத்துடன் உரையாடிக்கொண்டும் இருக்கும்

 

ஜப்பானின் மிகப்பழைமையான துப்பாக்கியான Tanegashima Musket இங்குள்ளது.  1583 ல் செய்யப்பட்டது அது. ஜென் ஆலயத்தில் துப்பாக்கி. அது ஒரு போதும் வெடித்திருக்காது என நினைத்துக்கொண்டேன். முழு வெடித்திறனுடன், குண்டு நிறைக்கப்பட்டு ஒருபோதும் வெடிக்காமல் அமைந்திருக்கும் துப்பாக்கி.

அங்கு வழிபாட்டுக்கான கோயில்கள் இல்லை. ஜென் முறையான பூசைமுறைகளைக் கொண்டது அல்ல. தியான அறைகளில்  புத்தரின் சிறியசிலை போதிசத்துவர் சிலைகளுடன் தியானத்திற்கான உருவமாக வைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் ஜென்பௌத்த பிக்ஷு ஒருவரைப்பார்த்தோம் அவரை வணங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கண்கள் இடுங்க சிரித்து புகைப்படத்திற்கு எங்களுடன் நின்றார்.

 

இப்பிக்ஷுக்களின் உடைகள் பிரம்மாண்டமான கிமோனாக்கள். தடித்த கம்பளியால் ஆனவை. மிகுந்த எடை கொண்டவை. அவர் ஒரு மாபெரும் பட்டாம்பூச்சி போலத் தோன்றினார். ஜென் பௌத்த கவிதைகளில் ஏன் பட்டாம்பூச்சிகள் அவ்வளவு வருகின்றன என நமக்கு ஓர் வியப்பு உண்டு. இங்கே பலர் ஜென் பட்டாம்பூச்சிகளைப் பற்றி எழுதிவிட்டார்கள். ஆனால் இங்கே தோட்டம் முழுக்க பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருக்கின்றன. இவர்களின் கிமோனோக்கள் பட்டாம்பூச்சி இறகுகளேதான்.

இங்கு குளிர் காலத்தில் உறைபனி வருகிறது. ஜப்பானின் இந்த கட்டிடங்கள் எவையுமே உண்மையில் மேலை நாடுகளைப்போல் குளிர்தாங்கும் வகையில் அமைக்கப்படவில்லை. திறந்த பெரிய சாளரங்களும் கதவுகளும் கொண்டவை .உயரமான ஓட்டுக் கூரைகள் கொண்டவை. தடிமனான சுவர்களோ இரட்டைச்சுவர்களோ இல்லை. குளிர்காலத்தில் இந்த அறைகள் நன்கு குளிருமென்று தோன்றியது .எந்த அறையிலும் கணப்பென்பதே இல்லை.

 

குளிர்காலத்தை இவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது விந்தையாகவே இருக்கிறது. இந்த கிமோனாக்களே ஒவ்வொருவரையும் சுற்றி ஒரு கூடாரத்தை அமைத்துவிடும் என்று தோன்றியது. அதற்குள் உடலின் வெப்பமே நிறைந்திருக்கும். நத்தைக்குள் நத்தை இருப்பது போல.  இவர்கள் இந்த கூடாரத்துக்குள் ஒண்டிக்கொண்டு வாழ்கிறார்கள் போலும்  இன்னொரு உடல். அதிலிருந்து இன்னொரு கிமோனோவுக்குள் செல்வது மறுபிறப்பு.

அங்கிருந்த பெண்மணி எங்களை வரவேற்று அந்த இடத்தை பற்றி அறிமுகம் செய்தார். அது ஜென் பௌத்தத்தின் தியான முறை என்பது மிகச்சுருக்கமாக சொல்லப்போனால் உள்ளும் புறமும் சும்மா இருத்தலே. ஆகவேஅமைதியான ஒரு வெறுமையை அங்கு உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வெறுமையை அனைத்திலும் பிரதிபலிக்க வைப்பதில்தான் ஜென் முறையின் வெற்றி உள்ளது. அறைகளைப் பிரிக்கும் தட்டிகளிலுள்ள ஓவியங்கள் முக்கியமானவை .ஜப்பானிய ஓவியங்களின் தனித்தன்மையை உருவாகி வந்த காலத்தில் வரையப்பட்டவை அவை.

 

இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் செவ்வியல் ஓவியங்களில் இருப்பதைப்போல ஓவியக்களம் முழுக்கவே உருவங்களால் நிறைந்திருப்பதில்லை. நிறைய வெற்றிடங்கள் விடப்பட்டுள்ளன. ஆங்காங்கேதான் உருவங்கள். தற்செயலாக தூரிகைபட்டு தீற்றப்பட்டவை போல. மெல்லிய இறகுகள் வந்து விழுந்து படிந்தவைபோல. அந்த வகை வரைகலைக்கு ‘பறத்தல்’ என்னும் கருவுடன் நெருக்கம் உள்ளது. ஜப்பானிய ஓவியங்களில் தெய்வங்கள், பறவைகள், முகில்கள் பறந்துகொண்டிருக்கின்றன. மூங்கில் இலைகளும் காற்றிலாடி பறப்பவை போல தோன்றுகின்றன. அமர்ந்திருக்கும் புத்தரில் கூட ஆடை பறந்துகொண்டிருக்கிறது. அனைத்து உருவங்களும் மங்கிய வண்ணங்களில் உள்ளன.

Masahisa Fukase/ crows

நோக்கியபடிச் சென்றபோது எனக்கு அனைத்து ஓவியங்களும் பறந்துகொண்டிருக்கும் கொடியில் தெரிவன போல தோன்றின ஓவியங்கள் வரையப்பட்டபின் அவற்றின் மீது அவற்றை கரைக்கும் எண்ணை ,அல்லது நீர் தெளிக்கப்பட்டு மெல்ல ஒற்றி எடுக்கப்பட்டு வண்ணங்கள் மிக மென்மையாக மாற்றப்பட்டுள்ளது .ஆகவே வண்ணங்கள் அனைத்தும் ஒளி ஊடுருவுவன போல தோன்றின.

 

தொடக்க கால ஜப்பானிய ஓவியங்கள் கரிய வண்ணங்களால் ஆனவை. அடர்கருமை அல்ல, கழுவப்பட்ட சாம்பல் கருமை. ஒளிரும் மழைமுகில்களைஅப்போல.  உருவங்கள் உருகி ஒன்றானவை போலிருக்கும். பின்னர்தான் வண்ணம் வந்தது. ஆயினும்கூட கரிய ஓவியங்களையே அவர்கள் முதன்மையாகக் கருதினர். பிற்காலத்தில் கருப்புவெள்ளை புகைப்படக்கலை வந்தபோது அதில் ஜப்பானிய மேதைகள் உருவாகி வந்தனர்.

Masahisa Fukase

ஏ.வி.மணிகண்டன் ஒருமுறை மசாகிசா ஃபுகாஸேயின் கருப்புவெள்ளைப் புகைப்படங்களை எனக்குக் காட்டி ஜப்பானிய கருப்புவெள்ளைப் புகைப்படக்கலையை விளக்கினார் அன்று கண்ட காகங்கள், கடல் அலைகளின் காட்சிகள் பின்னர் கனவிலும் எழுந்துள்ளன. ஜப்பானிய கருப்புவெள்ளைப் திரைப்படங்களும் உலக அளவில் புகழ்பெற்றவை. ஜப்பானிய திரைப்பட ஒளிப்பதிவுக் கலை வண்ணம் வந்ததுமே அழிந்துவிட்டது என ஒருமுறை மிஷ்கின் அவருக்கே உரிய கொந்தளிப்புடன் சொன்னார்

 

இன்று ஜப்பானின் கருப்பு வெள்ளைப் புகைப்படக்கலையின் வெளிப்பாடாக உள்ளது அங்குள்ள மாங்கா போன்ற வரைகலை நூல்கள். உடலின் விசை, உணர்வெழுச்சிகள் , கனவுகள் போன்றவற்றைக்கூட அவர்கள் கோட்டோவியங்களில் அடைந்துவிடுகின்றனர். இந்த ஜென் மடாலயத்தின் தட்டிகளில் உள்ள கறுப்பு வெள்ளை படங்கள்  அக்கலையின் தொல்காலத்தைச் சேர்ந்தவை.

நடக்கும்போதும் அமரும்போதும் ஓசை எழாமலிருப்பதற்காக தரைகள் மெத்தையிடப்பட்டு அவற்றின் மேல் ஜப்பானியக் கோரைப்புல்லாலான பாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. முற்றிய கோரைப்பாய்கள் பித்தளையால் வேயப்பட்டவை போல் தோன்றின. உயிருள்ள பித்தளை. கதவுகளின் தாழ்கள் பொன் எனவே மின்னின. அங்கு எவரும் ஓசை எழுப்பி பேசாததனால் எவரோ ஒருவர் ஒரு சொல் உரைத்தால் கூட மந்திரம் போல் அது முழங்கியது.

 

முற்றங்களும் குறிப்பிட்ட முறையில் பேணப்படுகின்றன. முற்றங்களை கல்லாலான தோட்டங்கள் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள் .மணல், சரளைக்கற்கள், பெரிய கூழாங்கற்கள்,  உருளைக்கற்கள் குத்துப்பாறைகள் ஆகியவற்றைக்கொண்டு விதவிதமான வடிவங்களை அங்கு அமைந்த்திருக்கிறார்கள். நாங்க்ள் சென்றபோது அமைக்கப்பட்டிருந்தது கடல். இரும்பு கரண்டியால் உருவாக்கப்பட்ட அலைகள். நடுவே தீவுகள்போல கூழாங்கற்பாறைகள் அமைந்திருந்தன. எங்களுக்கு அந்த இடத்தை அறிமுகம் செய்த பெண்மணி அவ்வடிவங்கள் ஒவ்வொரு வாரமும் மாற்றப்படும் என்றார். அதற்குரிய நாள் கணக்குகளும் தொன்மங்களும் உள்ளன

 

முற்றத்தில் ஒருபுறத்தில் இருந்த செடியை சுட்டிக்காட்டி அது சால மரம் என்றார். மறுபுறம் போதி .ஆனால் குங்கிலியமோ அரசோ அல்ல. நான் ”இது இந்தியாவில் வேறு மரமல்லவா?” என்று செந்திலிடம் சொன்னேன். அந்தப்பெண்மணி “ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். இந்தியாவில் உள்ள சால மரமும் அரச மரமும் இங்கு வளர்வதில்லை .ஆகவே இங்கு வளரக்கூடிய இந்த இரு மரங்களையும் சால அரச மரங்களுக்கான பிரதிநிதியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ” என்றார். ஒரு கணத்தில்  உள்ளத்தில் ஒரு புன்னகை வந்தது ஜென் என்பதே அந்த மரங்களைப்போலத்தான் .பௌத்தம் தான் ,ஆனால் பௌத்தம் அல்ல. பௌத்தத்திற்கு பதிலாக வைக்கப்பட்ட இன்னொரு பௌத்தம்.

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தாது உகு சோலை

$
0
0

கம்பன் சிலை தேரழுந்தூர்

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி

கம்பன் நிகழாத களங்கள்

கம்பன் கண்ட மயில்

கம்பனும் குழந்தையும்

கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி

கம்பராமாயணம் வகுப்பு

அணிகளின் அணிநடை

தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

வெண்முரசு வாசிப்பின் இடைவேளையில் சுவரேறி கம்பராமாயணம் என்னும் அவ்வுலகை கொஞ்சம் எட்டிபார்த்து பரவசத்தில் நிலையழிந்து விழுந்துவிட்டேன்.  கிட்டத்தட்ட இப்போது வெண்முரசு எப்படி எதிர்கொள்ளப்படுகிறதோ அப்படித்தானே கம்பராமாயணமும் எதிர்கொள்ளப்பட்டிருக்கும்.?

 

தாது உகு சோலை தோறும்,

சண்பகக் காடு தோறும்,

போது அவிழ் பொய்கை தோறும்,

புது மணல் தடங்கள் தோறும்,

மாதவி வேலிப் பூக வனம் தோறும்,

வயல்கள் தோறும்,

ஓதிய உடம்பு தோறும், உயிர்

என உலாயது, அன்றே.

 

இப்படி இனிமையால் அழகால் மொழியால் சரயு என்னுடையதாகி விடுகிறதே? சுப்ரதர் விருஷாலி பிரசேனனுக்காக பலாமரத்தடியில் காத்து நிற்பார்.  குருஷேத்திரத்தில் பலாமரம் வருமா? அது எனக்குத் தெரியாது.  ஆனால் குருஷேத்திரம் எனதாகிவிட்டது.  பிரம்மத்தை பெருமான் என்று சுவீகரிப்பதுபோல.  யாமறிந்த இன்மலர்கள் கொண்டு எம் வந்தனையும் வழிபாடும்.  பிரம்மம் மலர்களை நேசிக்கிறது, அது நாள்தோறும் நறுமண மலர்களை சூடுகிறது.

 

கம்பருக்கும் வெண்முரசு எழுதுபவருக்கும் ஓரே டெம்பிளேட்தான்.  ”எவ்ளோ பெரிய கவி / எழுத்தாளர் தன் திறமையை இப்படி வீணடிக்கலாமா?

 

உலகில் தமிழ்க்கவிஞன் என்று கொண்டுநிறுத்த உலகு தலைவணங்கி ஏற்கும் ஒரே சொல் கம்பன் என்பதாகத்தானே இருக்கமுடியும்?

 

இதெல்லாம் பலநூற்றாண்டுகளுக்கான சமாச்சாரம்.  நாம் சாவதற்கு முன்னமே தலையில் இடிந்துவிழும் நம் மாநில அரசின் குடியிருப்பு கட்டிடம் போன்றது அல்லவே.

 

 

அன்புடன்

விக்ரம்

கோவை

 

மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6

குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

கம்பனும் காமமும், இரண்டு

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இரு விமர்சனங்கள் –கடிதங்கள்

$
0
0

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்

விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

 

யுவன் சந்திரசேகர் சுரேஷ்குமார இந்திரஜித் இருவருடைய கதைகளைப்பற்றியும் வெளிவந்த கட்டுரைகள் சமீபத்தில் வாசித்த நல்ல விமர்சனங்களாக இருந்தன. பொதுவாக வாசகனே ஏற்கனவே அறிந்திருக்கும் சின்ன விஷயங்களை ஏகப்பற்ற கோட்பாட்டுச் சொற்களுடன் சுற்றிச்சுற்றி சொல்வதாகவே இந்தவகையான விமர்சனங்கள் இருக்கும். நான் விமர்சனங்களை அதிகமாக வாசிக்காமலிருப்பதற்கான காரணம் இதுவே. மாறாக இந்தக்கட்டுரைகளில் விரிவான நுட்பான பல கருத்துக்கள் உள்ளன. நாம் ஏற்கனவே தெரிந்துவைத்திருப்பவற்றை வேறு ஒரு தளத்தில் தொகுத்துக்கொள்ள இக்கட்டுரைகள் உதவுகின்றன.

 

இரண்டு எழுத்தாளர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள். அதை சுனில் கிருஷ்ணன் அவருடைய கட்டுரையில் சொல்கிறார். யுவன் சந்திரசேகரை சுரேஷ்குமார இந்திரஜித்தின் தொடர்ச்சி என்று நான் நினைக்கிறேன். இருவருமே கதையில் வாசகனுடன் விளையாடுகிறார்கள். விதவிதமாகச் சொல்லிப்பார்க்கலாமே என்றுதான் நினைக்கிறார்கள். இது முக்கியமான விஷயம் என நினைக்கிறேன். இரண்டு கட்டுரைகளுமே ஒரே கட்டுரையின் இரண்டு பகுதிகள் போல இருந்தன.

 

சிவராம்

 

ஜெ,

 

சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய கட்டுரையில் சுனீல்கிருஷ்ணன் இவ்வாறு எழுதுகிறார்சுரேஷ்குமார இந்திரஜித் உண்மை, பொய், புனைவு, எனும் பிரிவினையை அழித்து வாசகனுடன் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துகிறார். ஒரு வகையில் காலம்காலமாக இலக்கியம் வலியுறுத்தும் சத்தியம், தரிசனம் போன்றவற்றை தலைகீழாக்குகிறது என இவ்வகை கதைகளை சொல்லலாம்.

 

இது உண்மை. இக்கதைகளை ஆரம்பத்தில் படிக்கும்போது ஏற்பட்ட இரு சிக்கல்கள் இவர் என்ன சொல்லவருகிறார் என்று யோசித்து ஒன்றும் பிடிகிடைக்காமல்போனது. இன்னொன்று இவை உண்மையை சொல்கின்றனவா என்று பார்த்து யதார்த்தமான வார்த்தைகளில் இருந்தாலும் இது யதார்த்தவாதமே அல்ல என்று ஆனது. அதை கடந்து இவற்றை புனைவுவிளையாட்டுக்கள் என்று நினைத்தால் சிறப்பான வாசிப்பாக அமைகிறது

 

எஸ்.ஆனந்த்

 

அன்புள்ள ஜெமோ

 

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளின் சிறப்புகளாகச் சொல்லப்பட்டிருப்பதையே அவற்றின் பிரச்சினைகளாகவும் சொல்லலாம். அவர் மினிமலிஸ்ட் வகை எழுத்துநடை கொண்டவர் எந்த ஆப்சர்வேஷனும் இல்லை. மனமோ புறவுலகமோ நுட்பமாகச் சொல்லப்படவில்லை. நகைச்சுவையும் இல்லை. ஒரு விஷயத்தை வேறு ஒருவகையிலும் சொல்லலாமே என்றுதான் அவருடைய கதைகள் முயல்கின்றன. இது ஒரு இடத்தில் பிடிகிடைத்ததுமே நமக்கு மேலதிகமாகத் தேவையாகிறது. அது ஏமாற்றமாகிவிடுகிறது. இது என்னுடைய அனுபவம். இவருடைய கதைகளில் எங்கெல்லாம் குற்றம் வன்முறை கொஞ்சம் இருக்கிறதோ அங்குமட்டுமே ஆழம் இருக்கிறது. மற்றபடி வரலாறு தத்துவார்த்தமான தன்மை எல்லாமே கொஞ்சம் சல்லிசாகவே உள்ளது

 

சதீஷ்குமார்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன்

$
0
0

 

சேப்பியன்ஸ் வாங்க

 

ஜெ

 

யுவல் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் குறித்து.

 

மனித குலம் தனது வரலாற்றை பல காரணங்களுக்காக வியப்புடன் பரிசீலித்து  வந்திருக்கிறது. நாம் இன்று சந்திக்கும் சிக்கல்கள் நம் முன்னோராலும் எதிர்கொள்ளப்பட்டவையா என்ற வினா எப்போதும் எழுந்து வந்துள்ளது. வெறும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நாம் இருக்கும் ஊரின் படத்தைப் பார்க்கும்போதே ‘ எப்படி இருந்த்து இப்படி ஆகி விட்டது ‘ என்று வியக்கிறோம்.  . நம் முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து அவர்கள் நுகர்ந்த காற்றை சுவாசித்து அவர்களின் மரபணுத் தொகுப்புடன் வாழும்போதும் வரலாற்று வாழ்வை நினைவு படுத்தும் ஒவ்வொரு கல், மணி, எலும்பு, ஓவியக் கிறுக்கல்கள், பழம்பொருளும் நம்மை அறுபடாத காலச் சங்கிலியில் பல கண்ணிகள் கடந்து நம்மைக் கொண்டு வைத்து விடுகின்றன.

 

காடு நாவலில் கிரிதரன் ஒரு கல்வெர்டில் பொறித்து வைத்த தன் பெயரையும் உடன் பதிந்த ஒரு மிளாவின் தற்செயலான காலடித்தட்த்தையும் சில பத்தாண்டுகள் கழித்துப் பார்க்கும்போது எழும் நினைவுக் குமிழிகள் எல்லோருக்கும் அமைவதில்லை. தனது இருப்பை இயற்கையில் பதியும் விழைவு தான் பரிணாம வளர்ச்சியோ?

 

ப்ரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் ஒரு குகைச் சுவரில் பதிந்துள்ள மனிதக் கைவிரல்களின் வயது 39000 ஆண்டுகள் என்று துவங்குகிறது சேப்பியன்ஸ். நாம ரூபம் அறியாத அந்த மூதாதையின் ஜீன்களில் ஒரு சிறு படிமம் நமது செல்லில் இருக்கும் வாய்ப்பே சிலிர்ப்பூட்டுகிறது.

13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புடவியில் ஒரு குழந்தையாக 3.5 பில்லியன் ஆண்டுகள் முன் தோன்றிய புவியில் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ என்னும் பேரினத்தின் (ஜீனஸ்) பகுதியாக   2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சேப்பியன்ஸ் எனும் சிற்றினம் (species) , 70000 ஆண்டுகள்  முன் வரை வரலாற்றில் சொல்லும்படி எதுவும் செய்யவில்லை; அல்லது வரலாற்றில் அப்படி எதுவும் பதிவாகவில்லை.

ஆப்பிரிக்காவில் தோன்றி நடந்தே ஐரோப்பா ஆசியா அமெரிக்காக்கள்,  ஆஸ்திரிலேயாக்கண்டங்களை அடைந்துள்ளனர்.

மூன்று புரட்சிகளின் மூலம் வரலாற்றி போக்கை முன்வைக்கிறார் ஆசிரியர் அறிவாற்றல் (cognition) , வேளாண்மை  மற்றும் அறிவியல் புரட்சிகளின் வழியே சேப்பியன்கள் படிப்படியாக  பரிணாம ஏணியின் உச்சியை அடைந்துள்ளனர்.

பெரிய மூளை அதிக சிந்தனையை வளர்த்தது., நிமிர்ந்து நடத்தல் வேட்டையை எளிதாக்கியது., நடத்தலில் இருந்து விடுபட்ட கைகளால் புதிய வேலைகளைச் செய்வதன் மூலம் மனித இனத்தின் பாய்ச்சல் தொடங்கியது. பிற மிருகங்களை விட அதிக காலம் மனிதக் குழந்தைகளை வளர்க்கவேண்டி இருந்ததால், குடும்ப – சமூக பிணைப்பு தேவையானது.   பிற மனிதர்களுடன் பழகவேண்டிய தேவைக்காக   கிசுகிசு (அலர்) உருவானது. இதற்காகவே மொழி உருவானது. எனவே புறங்கூறலுக்கும் பயன் இருந்திருக்கிறது

 

பிற மனித  சிற்றினங்களை வென்று அழித்துத்தான் இப்போதைய மானுடம் நின்றிருக்கிறது.  ஹோமோ சேப்பியன்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அரேபியாவிற்கு பெயர்ந்த போது அங்கே முன்பே சில லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நியண்டர்தால் எனும் வேறொரு ஹோமோ சிற்றினத்துடன் கலந்தனர்; அல்லது அந்த இனத்தை அழித்திருக்கலாம். இவ்விரண்டு கொள்கைகளுக்கிடையே அறிஞர்கள் பிரிந்து நிற்கின்றனர். ஆயினும் மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய மக்களில் 1 முதல் 4 விழுக்காடு நியண்டர்தால் மரபணு கலந்துள்ளது. கிழக்காசியாவின் ஹோமோ எரக்டஸ் ,ஆஸ்திரேலியாவின் டெனிசோவன்கள், ப்ளாரன்ஸ் தீவின் போளோரோஸன்ஸிஸ் சிற்றினம் – இவை அனைத்துடனும் சிறிது கலந்தும் மீதியை அழித்தும் ஹோமோ பேரினத்தின் ஒரே சிற்றினமாக சேப்பியன்ஸ் நிலைபெற்றது. ஆயினும் பெரிய மூளையும் வலிமையும் கொண்ட நியண்டர்தால்களை சேப்பியன்கள் எப்படி வென்றனர் என்பது வரலாற்றின் புதிர்தான்.

 

வெவ்வேறு சிற்றினங்களும் ஒரு காலத்தில் வெவ்வேறு தொகைகளாக (population)  இருந்து, கால ஓட்டத்தில் தனி உயிரியல் சிற்றினமாக கிளைத்தன என்பது முக்கிய அவதானிப்பாகும். இனவாதம் வருவதை விரும்பாத அறிவியலாளர்கள் ஜீன் தொகுப்பின் வேறுபாடுகளையும் அடக்கியே வாசிக்கிறார்கள்.

சமூகமாக சேர்ந்து வாழத்துவங்கிய மானுடம் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டது. அனைவரும் நம்பி, பகிரும்இந்த புனைவுகளே (myth ) மானுடம் ஒன்றுபட்டு வெல்ல உதவியது.

 

10000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேட்டையாடிய ஊனை உண்டு, 10000 ஆண்டுகளாக பயிர்செய்து உண்டு, 200 ஆண்டுகளாக தொழிலாளியாக, அலுவலகம் செல்பவனாக உருவெடுத்த சேப்பியனின் நவீன வாழ்வும், உடையும் கருவிகளும் வரலாற்று நோக்கில் பச்சைக் குழந்தைகள்

 

எப்படியோ கடல் கடந்து 45000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவை அடைந்தும் 44000 ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு சைபீரியாவிலிருந்து நடந்தே வடமேற்கு அலாஸ்கா வழியே அமெரிக்காவில் நுழைந்தும் வினோதமான விலங்கினங்களை வென்றழித்த சேப்பியன்களின் முதல் (அறிவாற்றல்) புரட்சி இவ்வாறு நிறைவடைகிறது.

வேளாண் புரட்சி

 

10000 ஆண்டுகளுக்கு முன்பு  சிறு பயிர்களை வளர்க்கத் துவங்கினர். தென்மேற்கு துருக்கி- மேற்கு ஈரான் இடையே 8500 ஆண்டுகள் முன்பு கோதுமை மற்றும் ஆடு வளர்ப்புடன் வேளாண்மை துவங்கியது

 

வேளாண்மையால் மனிதன் அதிகம் பயன்பெற்றான் என்பதை மறுக்கிறார் ஆசிரியர். உணவு, ஊட்டம் காலத்தை மிச்சப்படுத்தவில்லை . மக்கள் தொகை வெடிப்பு, நிலவுடைமை சமுதாயம், சுரண்டல் காரணமாக விவசாயி தனது முன்னோரான வேட்டை சமுதாயத்தாரை விட குறைந்த உணவையே பெறமுடிந்த்து

 

வெறும் காட்டுப் புல்லாக இருந்த கோதுமை திடீரென உலகில் பரவியது. மனிதனை ஆட்டிப் படைக்கத் துவங்கி விட்ட்து. நில சீரமைப்பு, பூச்சிக்காப்பு, நீர் மேலாண்மை, தாவர நோய்கள்  என மனிதன் மிகவும் பரபரப்பானவனாகி விட்டான். வேட்டையாடி வந்ததை கூட்டாக அமர்ந்து உண்டு, குறைந்த வேலை, நிறைந்த ஓய்வு என்றிருந்தவன் இப்போது விளைநிலத்தில் கட்டப் பட்டு விட்டான். ஓய்வு கிடைத்தது. யாருக்கெனில் மிகச்சிலருக்கு. ஆனந்தமாக வேட்டையாடிக்கொண்டிருந்த சேப்பியன் வேளாண்மையால் தண்ணீர் வாளியைத் தூக்கிக் கொண்டான். மக்கள் தொகை 50 லட்சத்திலிருந்து 25 கோடியாக உயர்ந்துவிட்ட்து

ஆட்சியாளர்கள் உருவாயினர். விவசாயியின் உபரியில் ஆதிக்கம் செலுத்தினர். அரசர், அதிகாரிகள், வீர்ர்கள், குருமார்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் அரசியல்,  போர்க்கலை, தத்துவம் மூலம் சுரண்டலைத் துவங்கிவிட்டனர்.

 

கிராமம் உருவாகி, மெல்ல நகரமாகி , பெருநகரமானது.  1770 இல் உலகின் பெருநகராக பாபிலோன் திகழ்ந்தது புதிய அரசுகளும் வணிகப் பாதைகளும் உருவாயின. சட்டம் உருவானது. பெண்கள் ஆண்களின் சொத்துகளாக கருதப்பட்டனர் . புகழ்பெற்ற சட்டமியற்றியவரான ஹமுராபியின் நீதி முறையில் ஒருவன்  மற்றொருவனின் அடிமைப் பெண்ணைக் கொன்றால் உரிமையாளருக்கு 20 ஷெகல் வெள்ளி தந்தால் போதும்.

பெருங்கற்கால நடுகற்கள் காஷ்மிரிலிருந்து ஐரோப்பா வரை பரவி இருந்ததையும் காரணம் தெரியாத , முன்னோரின் மவுன மொழியான அவற்றின் முன் திகைப்புடன் நின்றிருந்ததையும் இமயச்சாரல் தொடரில் ஜெ பதிவு செய்திருப்பார். (ஆனால் இணையத்தில் அகழ்விடத்தின் சதுரக் களம் மட்டுமே படமாக உள்ளது. 15 அடி கல்லைக் காணக் கிடைக்கவில்லை – பதிவு நாள் 10.8.2014)

துருக்கியின் Gobekli Tepe என்ற இடத்தில் 50 டன் எடையும் 30 மீட்டர் உயரமும் கொண்ட பெருங்கற்கள் புதைபொருளாய்வில் கண்டெடுக்கப் பட்டதை குறிப்பிடுகிறார் ஹராரே.  இவற்றை அமைத்த வேட்டையாடிய முன்னோர்கள் நாம் அறியாத யாதொன்றை அறிந்து உணர்ந்தனர் என்ற வினாவே வரலாற்று வாசிப்பின் பயனும் கிளர்ச்சியும்.

 

வேளாண்மையால் மானுடம் பல சிக்கல்களுடன் விரிந்து வளர்ந்தது. சமூக அடுக்குகள் பெருகின.  புனைவுகளும் myth களும் வளர்ந்தன. கலாச்சாரம் என்பதே செயற்கையாக உருவாக்கப் பட்ட உணர்ச்சிகளின் வலைப்பின்னலே என்கிறார் ஆசிரியர் . சிறு பண்பாடுகள் மெதுவாக இணைந்து பெரிய சிக்கலான நாகரிகங்களை உருவாக்குகின்றன. வெடித்து வளர்ந்தாலும் மானுடம் ஒருமையை நோக்கியே பயணிக்கிறது. நம் நாட்டில் சாதிகள் பகுக்கப் படவில்லை , தொகுக்கப் பட்டிருக்கின்றன என்ற ஜெ யின் பதிவு ஒப்பு நோக்கத்தக்கது.

மானுடத்தை ஒன்றுதலை நோக்கி செலுத்திய மூன்று முக்கிய விசைகள் பணம், பேரரசுகள்  மற்றும் மதம் என்கிறார் ஆசிரியர்.  பேரரசுகள் இரு முக்கியப் பண்புகள் கொண்டுள்ளன. வெவ்வேறு வகையான மக்கள் கூட்டங்களை ஆள்வது மற்றும் விரிந்துகொண்டே இருக்கும் எல்லைகள். நிலையான அரசைத்தருவதே பேரரசுகளின் முக்கியப் பங்களிப்பாகும் வெல்லப்பட்ட சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக மைய சமுதாயத்தில் உள்ளிழுக்கப் படுகின்றன.

வரலாற்றின் முதல் பேரரசு கி மு 2250ல் ஆண்ட அக்காடியன் அரசு- பேரரசர் சார்கன் மெசபடோமியாவிலிருந்து கொண்டு, தான் உலகை ஆள்வதாக சொல்லிக் கொண்டார். ஆனால் இதன் எல்லையோ பாரசிக வளைகுடா முதல் மத்தியதரைக்கடல் வரை தான்.

பேரரசர்கள் குடிகளின் காவலர்களாகவும் சமத்துவம் கொண்டவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றனர். பாரசிக மன்ன்ன் சைரஸ் உலகின் நலத்திற்காக உலகை ஆள்வதாகச் சொன்னார். யூதர்களை அவர்கள் அகதிகளாக இருந்த பாபிலோனில் இருந்து குடியேற அனுமதித்து கோயிலைக் கட்டிக்கொள்ள அனுமதித்தார்.

மதம் மக்களைப் பிரிக்கவில்லை; இணைத்திருக்கிறது என்கிறார் ஆசிரியர்

ஒவ்வொரு மதமும் காலப்போக்கில் மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறது என்கிறார். ஒரு கடவுள் கொள்கையை அடிநாதமாகக் கொண்ட கிறித்துவம், தீமைகளை விளக்க சாத்தான் – கடவுள் (இருமைத் தத்துவம்), புனிதர்களை வழிபடல் மூலம் (மறைமுகமாக) பலகடவுள் வழிபாடு, மற்றும் பேய் நம்பிக்கைகள் மூலம் ஆவியுலகக் கோட்பாடு என அனைத்து அம்சங்களையும் தன்னுள் இழுத்துக் கொண்டது. (syncretism)

 

மானுடத் துன்பம் தீர புத்தரின் தீர்வு வேட்கையை விடுதல். மதங்களைப் பொறுத்தவரையில் ஆசிரியர் ஆழமான தத்துவ ஆய்வில் புகவில்லை. ஒரு நக்கலான நம்பிக்கையற்றவரின் பார்வையை வைக்கிறார். நூலின் நோக்கம் , மதம் ஒட்டுமொத்த மானுடத்தின் மீது செலுத்திய ஆளுமையை அறிவது தான்.

அறிவியல் புரட்சியால் மானுடன் ஆயுதங்கள், நாடுபிடித்தல், ரயில் பாதைகள், இயந்திரங்கள் என நவீனமாகத்துவங்கினான்..

ஐரோப்பாவை விட அதிக வலிமையும் அறிவுத்தளமும் கொண்டிருந்த அரேபிய, சீன சமுதாயங்களில் வெளிப்படாத அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஐரோப்பாவில் மட்டும் சாத்தியமாகக் காரணத்தை ஆராய்கிறார் ஆசிரியர். பிற சமுதாயங்கள் அனைத்தும் அறியப்பட்டு விட்டன் என்று மனத்தை மூடிக்கொண்டபோது ஐரோப்பியன் தனக்குத் தெரியாதவை உள்ளன என்ற புரிதலும் அவற்றை அறிந்துகொள்ளும் தேடலும் கொண்டு தேடலை தொழில்நுட்பமாக மாற்றிக் கொண்டுவிட்டான். இதுவே ஐரோப்பா விஞ்ஞானத்தில் கோலோச்சக் காரணம் என்கிறார். ஆனால் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் படித்த “கான்ஸ்டான்டினோபிலை துருக்கி தாக்கியது – அறிஞர்கள் ஐரோப்பாவிற்கு குடிபெயர்தல்  – மறுமலர்ச்சிக்கு வித்திடுதல் குறித்து ஆசிரியர் பேசுவதாகத் தெரியவில்லை

 

நாடுபிடிக்கும் போட்டியில் ஹாலந்து- பிரான்சு – பிரிட்டன் –ஸ்பெயின் இடையே மாறிவந்த சமநிலைகளை சுவைபட விவரிக்கிறார்.  உள்நாட்டு அமைதியின்மையால் ஹாலந்து பந்தயத்தில் பிந்தியது. பிரான்சில் நிலவியதை விட அதிகமான ஜனநாயக விழுமியங்களும் சட்டத்தின் ஆட்சியும் இங்கிலாந்தில் திகழ்ந்தன. சூரியன் மறையாத பேரரசின் வெற்றிக்கு அதன் சமூக அமைப்பு முக்கியக் காரணம். பிரான்சில் 1717 இல் பதினைந்தாம் லூயியின் நண்பரான ஜான் லா  என்பவர் அமெரிக்காவில் தங்கவேட்டை நடத்த மிசிசிபி என்னும் கம்பெனியைத் துவங்குகிறார். இவரே பிரான்சின் ரிசர்வ் வங்கித் தலைவர் மற்றும் நிதி அமைச்சர். {அம்பானியையே நிதிஅமைச்சராக்கியது போல) . செயற்கையாக கம்பெனியின் பங்குகளை வீங்க வைக்கிறார். குமிழ் வெடித்து பங்கு விலை விழும்போது முட்டுக்கொடுக்க அதிகம் கரன்சிகளை அடித்து இறக்குகிறார் ரிசர்வ் வங்கி தலைவர் லா. அதனாலும் பயனில்லை பங்கு விலை தரையைத் தொடும்போது பிரான்சின் பொருளாதாரம் பாதாளத்தில்.  பின் மன்னர் 150 ஆண்டுகளாக்க் கூடாமல் இருந்த பாராளுமன்றத்தைக் கூட்ட , பிரெஞ்சு புரட்சிக்கு வித்திடப்படுகிறது.

 

முதலாளித்துவப் பொருளியலில் பங்குச் சந்தையே கோயில். நவீன பொருளியலில் சந்தையும் அரசும் மனிதனை தனிமனிதனாக்கி , குடும்பம் – சமுதாயத்தின் பிடிகளிலிருந்து தளர்த்தி , ‘எனக்கு வேலை செய்; உன் தேவையை நான் கவனிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டன.

 

ஒபியம் போரை கோடிட்டுக் காட்டும் ஆசிரியர் சீனாவில் போதை விற்றுவந்த பிரிட்டன் கம்பெனிகளில் முதலீடு செய்திருந்த  பிரிட்டிஷ் M P க்கள் சீன அரசர் நடவடிக்கை எடுத்தபோது ராணியிடம் முறையிட ராணி கப்பலை அனுப்பி  வைக்கிறார். ஒபியம் விற்கும் நற்செயலைத் தொடர்ந்து கொள்ள அனுமதிக்கிறது சீனா

எதிர்கால அறிவியல் எங்கு இட்டுச் செல்லும் எனும் வியப்புடன் முடிக்கிறார். சுய கற்கும் நிரல்கள், மெய்நிகர்,  DNA   நிரல்படம், உணர்வும் உயிரும் கொண்ட கணிணி நிரல்கள் இவை சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன.

 

இறுதிப் பகுதியான அறிவியல் குறித்த பக்கங்கள் ஆர்வத்தைத் தூண்டவில்லை. 10000 ஆண்டுக்கு முன்னுள்ள பழைய செய்திகளின் மணம் இதயத்தை நிறைத்திருக்கிறது

தேசங்கள் அரசுகள் , வளம் , மனிதனின் அடுத்த நகர்வு குறித்த சிந்தனைகளைத் தூண்டும் நூல்.

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கலை வாழ்வுக்காக

$
0
0

 

சமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்மநாபா, கோவையில் வாழ்ந்துகொண்டு கவிதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தமிழ் இலக்கிய பரப்பில் இயங்கி வந்த ஒரு கலைஞன். அவர் மறைவிற்குப்பிறகு நமது சமூகம் அவர்கள் குடும்பத்தை கைவிட்டு விடலாகாது. ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் நிதி திரட்டி வருகிறார்கள்.

“ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார். நன்கு படிக்கும் பெண்ணான பாரதிஅன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட பள்ளிப் படிப்பை பாதிலேயே கைவிட்டுவிட்டு இந்த வருடம்தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இப்படியான சிக்கலான தருணத்தில்தான் ஸ்ரீபதி

இக்குடும்பத்தையும் நம்மையும் தவிக்க விட்டுப் போயிருக்கிறார்.
இந்தத் தருணத்தில் ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா மற்றும் மகள் பாரதி இருவருக்கும் உதவ வேண்டியது, சகபடைப்பாளிகள் மற்றும் நண்பர்களாகிய நமது கடமை என்றே கருதுகிறோம்.” என்று எழுதியிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

 

ஒரு சக கலைஞனாக ஸ்ரீபதிக்கு செய்யமுடிவது இது தான் . தெருக்கூத்து மற்றும் கதகளி முகங்களை இணைத்து இதற்காகவே இந்த அக்ரிலிக் ஓவியத்தை நேற்று வரைந்தேன். கலை அன்பை, இணக்கத்தை, அரவணைப்பை சொல்லும் வழி.

 

ஸ்ரீபதி அவர்களின் மனைவி சரிதா இப்போது கேரளாவில் இருக்கிறார். அவருடைய வங்கி எண்ணை கீழே கொடுத்திருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் அந்த வங்கி எண்ணிற்கு உங்கள் நிதிபங்களிப்பை அனுப்புங்கள். பணம் அனுப்பியதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையோ அல்லது மெசேஜையோ எனது 98402 59414 நம்பருக்கு உங்கள் பெயர் விவரத்துடன் whatsappஇல் அனுப்புங்கள். இன்றிலிருந்து அடுத்த புதன் கிழமை (03-07-19) இரவிற்குள் யார் அதிகபட்ச தொகையை அனுப்பியிருக்கிறார்களோ அவருக்கு இந்த அக்ரிலிக் ஓவியத்தை நான் எனது அன்பின் நினைவாக வழங்குவேன். (மற்றவர்களுக்கு என் மனதின் ஆழத்திலிருந்து நன்றி) அடுத்த வியாழன் அதன் விவரங்களை அறிவிக்கிறேன். ஓவியத்தை சென்னையில் என்னிடமிருந்து நேரடியாக நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ பெற்றுக்கொள்ளலாம். (டேமேஜ் ஆக வாய்ப்புள்ளதால் கொரியரோ பார்சலோ அனுப்ப இயலாது) Acrylic on Canvas board, Size 16×20 inches.

 

சரிதா அவர்களின் வங்கி எண்.

MRS SARITHA

AC NO 12530100122961
MICR Code 689049003
IFSC FDRL0001253

THE FEDERAL BANK Ltd
KAVUMBHAGOM Branch
KERALA 689102

 

அன்புடன்
சந்தோஷ் நாராயணன்.                                   …

http://ensanthosh.wordpress.com/

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

$
0
0

கியோட்டோவில் 24 அருங்காட்சியகங்களும் 37 பௌத்த ஜென், ஷிண்டோ மதப் பல்கலைக்கழகங்களும் தத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கிட்டத்தட்ட முன்னூறு ஆலயங்கள். இவற்றை முழுமையாக பார்ப்பதற்கு பல வாரங்கள் ஆகும் நாங்கள் கியோட்டோவின் ஒரு கீற்றை மட்டும் ஒரு நாளில் அறிமுகம் செய்துகொள்ளும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆகவே நகரத்தின் சாலைகளினூடாக சுற்றி வந்தோம் நகரத்தை ஓரிரு முறை சுற்றிப்பார்த்து புரிந்துகொண்டோம். ஒரு நகரம் நம்மில் ஆழ்ந்த பதிவொன்றை உருவாக்குகிறது. மனித முகங்களை அவற்றின் வெவ்வேறு சிறுகூறுகளை முன்பு அறிந்த முகங்களின் கூறுளுடன் ஒப்பிட்டு நாம் அடையாளம் கண்டுகொள்வது போலத்தான் நகரங்களையும் நுண்ணுணர்வால் அறிகிறோம்

 

கியோட்டோ சுற்றுலாபயணிகளால் நிறைந்திருந்தது மற்றபடி வழக்கமான நகரம். ஒழுங்கு, ஒழுங்கு குலைந்துவிடுமோ எனும் அச்சத்தால் ஏற்பட்ட மேலும் ஒழுங்கு, ஒழுங்காக இருக்கிறோம் எனும் பெருமிதத்தில் உருவான மேலும் ஒழுங்கு என நம்மைப்போல் ஒழுங்கின்மையில் திளைக்கும் இந்தியர்களுக்கு மூச்சுத் திணறவைக்கும் ஒரு நகரம். ஆனால் ஒழுங்குக்குள் சென்றுவிட்டால்  விரைவிலேயே அதை நாம் அதை உளப்பூர்வமாக உணர ஆரம்பித்துவிடுகிறோம். ஒழுங்கின்மை உருவாக்கும் பதற்றமும் எச்சரிக்கை உணர்வும் இல்லாமலாகும்போது ஒழுங்குக்குள் இயல்பாக படிந்து அதை மறந்தும் விடுவதனால் ஒரு விடுதலையை உணர்கிறோம்.

உண்மையில் ஒழுங்கின்மை அல்ல ஒழுங்கே தனிமனித விடுதலை. ஒழுங்கின்மை ஒவ்வொரு தனிமனிதன் மேலும் ஒட்டுமொத்தச் சூழலும் வந்து அழுத்தம் அளிக்க செய்கிறது. ஒழுங்கு ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் அமைத்து ஒவ்வொருவருக்கும் உரிய வழியை உருவாக்கிக்கொடுத்துவிடுவதனால் முழுமையான விடுதலையை இயல்பாக்குகிறது. மிகச்சரியாக வகுக்கப்பட்ட ஒரு நகரத்தெரு நம் கவனத்தை தெருவின் அமைப்பிலிருந்து விடுவித்து வேறு நுண்ணிய செய்திகளை நோக்கி கொண்டுசெல்கிறது. ஜப்பானிய நகரத்தில் எவரும் தொலைந்துபோக முடியாது.

 

கின்காகுஜி  [Kinkaku-ji]  என்னும் ஆலயம் இதனருகே உள்ளது. ஒரு சோலைசூழ்ந்த தடாகத்தின் கரையில் அமைந்த்து. மரத்தாலான மூன்றடுக்குக் கட்டிடம். பொன்முலாம் பூசப்பட்டது, பொன்மாளிகை என்பதே அப்பெயரின் பொருள். இங்கே இருந்த பழைய மாளிகை சையோஞ்சி கிண்ட்சன் என்னும் போர்த்தளபதிக்கு உரியதாக இருந்த்து. 1397ல் இது அஷிகாகா யோஷிமிட்சு என்னும் தளபதியால் வாங்கப்பட்டு விரிவாக்கிக் கட்டப்பட்டது. யோஷிமிட்சு இறந்தபோது அவருடைய விருப்பப்படி அவருடைய மகனால் ஜென் கோயிலாக மாற்றப்பட்டது.

1467 போரின்போது இது எரித்து அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டப்பட்ட பொற்கோயில் 1950ல் 22 வயதான ஹயாஷி யோகன் என்னும் பௌத்த துறவியால் எரியூட்டப்பட்டது. அவர் தற்கொலைக்கு முயன்றார். காப்பாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு ஏழாண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் சித்தப்பிரமை கொண்டவர் என நிரூபிக்கப்பட்டமையால் விடுதலையானார். 1956ல் காசநோயால் மறைந்தார். அதன்பின் பொற்கோயில் மீண்டும் கட்டப்பட்டது.

 

தங்க ரேக்கு பதிக்கப்பட்ட கோயில் இது. அந்தியொளியில் என எப்போதுமே தென்படுகிறது.  40 அடி உயரமானது. அதை நம் கண்கள் ஆலயம் என எடுத்துக்கொள்வதில்லை, ஒரு வசந்தமண்டபம் என்றே தோன்றுகிறது. சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய பொற்கலம் என்றும் தோன்றியது. அந்த குளம் மலர்கள் நிறைந்து அந்த மலர்கள் நடுவே ஒரு மாபெரும் மலர் என பொற்கோயிலின் நீர்ப்பாவையைக் காட்டிக்கொண்டிருந்தது.  நீருக்குள் தீப்பற்றிக்கொண்டதுபோல. அந்த மாளிகையையே ஓங்கி எழுந்த தீ என்றே என் உள்ளம் எண்ணியது.

 

 

அந்த பௌத்த துறவி ஏன் பொன்மாளிகையை எரியூட்டினார்? சித்தப்பிரமை ஐயமில்லை. ஆனால் சித்தமயக்கத்தினாலும் எரியூட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்தப்பொன் அவரை எரிச்சலுறச்செய்ததா? அல்லது அந்த எரிவண்ண மாளிகையை மேலும் எரியழகு பெறச்செய்ய விரும்பினாரா?  ஒரு ஜென் துறவி மாளிகையை எரியூட்டுவது, அற்புதமான ஒரு கதைக்கான முதன்மைப் படிமம். எனக்கு தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் படத்தில் வீட்டை எரிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. “உன் வீட்டை எரித்துவிட்டு கிளம்பு” என ஒரு ஜென் நன்னெறிச்சொல் உண்டு.  அந்த ஜென் துறவியை அச்சொல் ஊக்கியிருக்குமா என்ன?

 

அது ஒரு சுற்றுலாமையம் என்பதனால் பெரிய கூட்டம். காதல் இணைகள் வந்து தழுவித்தழுவி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நாம் காதல்கொண்டாலும் கொஞ்சம் காத்திருந்தே இடம் பெற்றுக்கொண்டு படம் எடுத்தாகவேண்டும். உலகம் முழுக்க காதலர்களின் பாவனை ஒன்றே. ஆனால் ஜப்பானில் எவர் எந்தப் புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் எம்ஜியார் முத்திரை காட்டுகிறார்கள்.

மேலும் காலத்தில் அமிழ்ந்து நாரா நகரைச் சென்றடைந்தோம். கன்சாய் பகுதியின் மையநகரமான நாரா ஜப்பானின் தொன்மையான தலைநகரம், பின்னர் ஆன்மிக நகரம், இன்று சுற்றுலா மையம். கிபி 708ல் சக்கரவர்த்தினி ஜென்மேயி தலைநகரை நாராவுக்கு மாற்றும் ஆணையை பிறப்பித்தார். 710 ல் நாரா இன்றைய வடிவில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து நாரா மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. 784ல் கியோட்டோவுக்கு தலைநகர் மாற்றப்படும் வரை இதுவே ஜப்பானின் ஆட்சிமையமாகத் திகழ்ந்தது.

நாராவின் முதன்மை கவற்சி அங்குள்ள மான்கள் என நினைக்கிறேன். எங்கு பார்த்தாலும் அவை கட்டின்றிச் சுற்றி வருகின்றன. தவிடு கலந்து செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகளை இங்கே விற்கிறார்கள். அவற்றை வாங்கி அந்த மான்களுக்குப்போடுவது சுற்றுலாப்பயணிகளின் கொண்டாட்டம். மான்களும் முறையாக பழகி ஜப்பானிய ஒழுங்கை கற்றுக்கொண்டிருக்கின்றன.  பிஸ்கட்டுகளை விற்பவர்களை அவை அணுகுவதே இல்லை, இவ்வளவுக்கும் அவர்கள் கையில் மான்களை விரட்டுவதற்கான குச்சிகள் ஏதுமில்லை. சுற்றுலாப்பயணிகளை பிஸ்கட்டுகளை வாங்கும்படி கிட்டத்தட்ட மிரட்டுகின்றன.  வாங்கிவிட்டால் சூழ்ந்துகொண்டு முட்டி மோதி அலைக்கழித்து பிடுங்கி உண்கின்றன.

ஒர் அம்மணி கூச்சலிட்டுக் கதறினாள். மகிழ்கிறாரா இல்லையா என்று சொல்லத்தெரியவில்லை. அருண்மொழி ஒரு பொட்டலம் பிஸ்கட் வாங்கிவிட்டு மான்களால் சூழப்பட்டு அலறி கையிலிருந்து வீசிவிட்டாள். அவை அதன்பின்னரும் அவளைத் துரத்திவந்தன. நாராவில் வாழ்ந்த பழைய அரசு அதிகாரிகளின் மறுபிறப்புகளாக இருக்கலாம். எந்த அரசும் அடிமட்ட அதிகாரிகளுக்கு ஊழல் செய்யும் உரிமையை அளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்பது அரசியல்கொள்கைகளில் தலையாயது.

 

நாராவின் முதன்மையான கவற்சி என்பது இங்குள்ள டோட்டய் ஜி [ Tōdai-ji ] என்னும் பௌத்த ஆலயம். ஜப்பானிலுள்ள ஏழு மாபெரும் பௌத்த ஆலயங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது.  கிபி 738ல் இந்த ஆலயம் கட்டப்பட்டது – ஒரு ஒப்புமைக்காக நம் பல்லவர் காலத்தில் என்று சொல்ல்லாம்  நாம் அப்போது பல்லாவரம், மாமண்டூர் போன்ற ஊர்களில்  சிறிய குடைவரைக்கோயில்களை உருவாக்க ஆரம்பித்திருந்ந்தோம். நம் ஆலயக்கலை வளர்ச்சி அடைந்தது மேலும் இருநூறாண்டுகள் கடந்தபின்னர்தான். இந்த ஆலயம் கிபி 752ல் தான் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. உலகிலுள்ள மிகப்பெரிய பித்தளை புத்தர்ச்சிலை இங்குதான் உள்ளது. 

 

பேரரசர் ஷோமுவின் ஆட்சிக்காலத்தில் பஞ்சம் , விபத்து முதலிய இழப்புகள் உருவாயின. அவருடைய ஆணைப்படி ஜப்பான் முழுக்க இத்தகைய சிலைகள் உருவாக்கப்பட்டன. உச்சகட்டமாக இந்த பெரிய சிலை வார்க்கப்பட்டது. இச்சிலை டாய்பிட்சு [Daibutsu] எனப்படுகிறது. கிட்டத்தட்ட ஐம்பதடி உயரம் கொண்டது. முகம் மட்டும் 17 அடி. கண்கள் மூன்றடி நீளம் கொண்டவை. மூக்கு இரண்டு அடி நீளம். 500 டன் எடைகொண்டது இந்தச் சிலை.

 

இதன் கட்டுமானத்தின் சிறப்பம்சமே இந்த எடைதான். அமெரிக்க்ச் சுதந்திரதேவிச் சிலை இத்தனை தடிமனான உலோகத்தால் ஆனது அல்ல. ஆகவே அதற்குள் சிக்கலான பொறியியல் தாங்குக் கட்டுமானம் தேவைப்பட்டது. நிலையற்ற மண்கொண்ட ஜப்பானில் இச்சிலை ஆயிரத்துமுந்நூறு ஆண்டுகளாக அசைவிலாதிருப்பது இந்த பேரெடையால்தான். டோடோய்ஜி சிலையின் காலடியில் உள்ளே சில எலும்புகளும் பல்லும் புதைக்கப்பட்டுள்ளன என சமீபத்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. அவை பேரரசர் ஹோமுவுடையவையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

தத்துவ அடிப்படையிலும் இந்த ஆலயம் முக்கியமானது. பௌத்த மெய்ஞானியான க்யோகி [Gyōki] ஏழுநாட்கள் நீண்ட பெருநோன்பை மேற்கொண்டபின் ஷிண்டோ மதத்தையும் பௌத்த மதத்தையும் ஒன்றாக்கும் மெய்யறிதலை வெளியிட்ட இடம் இது.  வைரோசன புத்தரை ஷிண்டோ மதத்தின் அமடெரசு [ Amaterasu] என்னும் சூரியதெய்வத்தின்  இன்னொரு வடிவமாக வழிபடலாம் என உடலிலிக் குரல் ஒலித்ததாக அவர் சொன்னார். அது ஜப்பானிய பௌத்த மரபின் ஒரு மாபெரும் திருப்புமுனை

 

வைரோசன புத்தர் ஊழ்கத்தில் அமர்ந்திருந்தார். வைரோசனர் என்றால் விண்ணில் நிறைந்திருந்து அறம் உரைப்பவர், தன் அறத்துடன் மண்ணில் எழவிருப்பவர். வைரோஜன புத்தர் பல தோற்றங்களில் இந்தியாவில் மலைப்பகுதி ஆலயங்களில் இருக்கிறார். ஆயிரம் கைகள் கொண்ட சிலை புகழ்பெற்றது.

 

டோடோய்ஜி ஆலயத்தின் கோபுரமுகப்பும் பிரம்மாண்டமானது. சமீபத்தில் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் தமிழகக் கோபுரக்கலை என்னும் நூலில் தொன்மையான கோபுரங்களைப் பற்றி வாசித்தேன். பசுக்கொட்டில்களின் முகப்பில் அமைக்கப்பட்ட காவல்மாடம் கொண்ட முகப்புதான் பின்னர் கோபுரமாக ஆகியது. தொன்மையான கோபுரங்களின் வடிவம் தோரணவாயில் போலவே உள்ளது. அவர் மாதிரிக்கு அளித்திருந்த கோபுரங்கள் சாஞ்சி பௌத்த தூபியின் முகப்பிலுள்ள வாயில்வளைவுகள் போலவே இருந்தன.

 

கேரளத்து ஆலயங்களின் முகப்புகளின் அமைப்பும் இவ்வாறே. அவை ஒருவகை மாபெரும் வாயில்மண்டபங்கள். இங்கே அதை கொட்டியம்பலம் என்போம். இல்லங்களுக்கும் அது உண்டு. என் முன்னோர்களின் தொன்மையான  வீட்டு முகப்பிலும் கொட்டியம்பலம் இருந்தது. கோட்டு அம்பலம் – வளைந்த மண்டபம்- என்று அதன் சொற்பொருள். டோடாய்ஜி ஆலயத்தின் முகப்பு மாபெரும் கொட்டியம்பலம். தடிமனான மரத்தால் ஆனது.

 

உள்ளே – ஷிண்டோ பௌத்த இணைவை உலகுக்கு அறிவித்த இடத்தில் ஒரு தூபி கட்டப்பட்டுள்ளது. அறத்தை அறிவிக்கும் மணி தொங்கவிடப்பட்ட ஒரு மண்டபம். திபெத்தியபாணி மணி. நம் மணிகளைப்போல கவிழ்ந்த மலர் வழிவம் அல்ல. குவளை கவிழ்த்த வடிவம். இவை உலோக ஓசையால் அதிர்வதில்லை. ஓங்காரம் போல் முழங்கி ரீங்கரிக்கின்றன.

அலயத்திற்குள் அமைந்த மாபெரும் சிலையைச் சுற்றிச்சுற்றி வந்து வெவ்வேறு கோணத்தில் பார்த்தேன். அதன் கால் நம்மருகே பேருருவில் தெரிய தலை எங்கோ அப்பால் என திகழ்ந்தது.  கீழிருந்து நோக்குகையில் விழிகள் விண்ணில் வளைந்த இரு விற்கள். புத்தர்சிலைகளின் அழகே அவை எவரையும் நோக்குவன அல்ல என்பதே. அவற்றின் ஊழ்கவிழிகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. அருகமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தால் நம்மையும் ஊழ்கத்திற்குள் இழுக்கின்றன.

 

வைரோசனரின் கை அருளுரை புரிந்து மலர்ந்திருந்தது. ஆடை உடலெங்கும் வழிந்திருக்க மலைப்பாறை போன்ற தலைமேல் குழல்கற்றையின் அலைகள். நோக்க நோக்கச் சிறிதாகி உளம்புகுகிறது. ஒருகணத்தில் எழுந்து விண் நிறைக்கிறது. பெருஞ்சிலைகளின் முகத்தில் திகழும் அமைதி பேருரு கொண்டுவிடுகிறது. விண்ணின் அமைதி. அந்தப் புத்தர்சிலையே விண்ணில் முகில்திரள் போல நின்றிருப்பதாகத் தோன்றியது

இத்தகைய பேருருவ புத்தர் சிலைகளை உலகில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் ஆண்டுதோறும் ஒரு புதிய பேருருவ புத்தரைப் பார்க்கிறேன்.  இத்தனை பெரிய சிலைகள் வேறு மதங்களில் இல்லை. மிகப்பிந்தைய காலத்தில் விஷ்ணுவுக்குச் சில பெரிய சிலைகள் உருவாக்கப்பட்டன – திருவட்டாறு ஆதிகேசவன் ஆலயம் போல. ஆனால் புத்தருக்கு இணையானவை அல்ல

 

இப்பெரிய சிலைகளை உருவாக்க என்ன உந்துதல்? புத்தரின் உடலை மகாயான பௌத்தம் தர்மகாயம் என்கிறது. இப்புடவியை ஆளும் நெறியையே அவருடைய உடலாக உருவகம் செய்கிறது. ஆகவே அது பேருருவாக அமைக்கப்படுவது இயல்பே.

கியோகி

தீர்த்தங்காரர் சிலைகளையும் பேருருவர்களாக அமைப்பது வழக்கம். ஏனென்றால் அவர்களையும் மானுடர்களுக்கு மேல் எழுந்த விண்வடிவர்களாக சமணர் நினைக்கிறார்கள். சில தீர்த்தங்காரர்களின் காலடியில் முழங்கால் உயரத்தில்தான் மலைகள் இருக்கும். சாஞ்சியின் சிலை ஒன்றில் துறவுபூண்டபின் யசோதரையிடம் பிச்சை ஏற்க வரும் புத்தர் பேருருவர். அவருடைய முழங்கால் அளவுக்கே கபிலவாஸ்துவின் மாளிகைகள் இருக்கின்றன. துறப்பதனூடாக, ஞானம் வழியாக அவர்கள் அடைந்த பேருரு எனக்கொள்ளலாம்

 

ஆனால் எனக்கு எளிமையாகத் தோன்றுவது ஒன்றுண்டு. இச்சிலைகளுக்கும் மலைகளுக்குமான உறவு. மலைமுடிகளை நோக்கும் உணர்வையே இவற்றை நோக்கும்போது நாம் அடைகிறோம். மலைகளை நோக்குகையில் அமைதியிலாழ்ந்த புத்தரை நோக்கும் உணர்வை அவர்கள் அடைந்திருக்கலாம். வைரோசனர் கதிர் எழுந்த மலைமுடி.

 

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆடல்வல்லான் -கடலூர் சீனு

$
0
0

 

 

அம்பலத்து ஆடுவான் 

இந்த ஆடல்வல்லான் 

இவன் அலகில் சோதியன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்

உலகெலாம் உணர்ந்தும் 

ஓதற்கு அரியவன்.

 

 

அரைநூற்றாண்டுக்கு முன்பு, திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட விழா மலரான . ஆடல்வலான் எனும் தலைப்பிட்ட, ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் எழுதிய, நடராஜமூர்த்தம் மீதான நூலை முதல் வாசிப்பின் வழியாக அறிமுகம் செய்து கொண்டேன். ஆம் அறிமுகம் செய்து கொண்டேன் என்பதே சரியான சொல்.இனிதான் அதையும் அதைச்சார்ந்தும்  பயிலவேண்டும்.

 

பொதுவாக என்னிடம் பேசும் புதிய வாசகர்களில் சிலர், அல்லது தீவிர வாசகராக அறியப்பட்ட ‘படிப்பாளி’ சிலர் குறிப்பிட்ட சில நூல்களை சுட்டி, வாசிக்கவே முடியலங்க என்று சொல்வார்கள். படிப்பாளி எனில் பதில் சொல்லாமல் விட்டு விடுவேன். படிப்பாளி என்பது வேறு நிலை. அவர்களுக்கு படிக்கத் தோன்றி விட்டால் அந்தக் கால டெலிபோன்  டைரக்டரியைக் கூட முழுமையாக வாசித்து அது குறித்த கருத்தை சொல்லி விடுவார்கள். அவர்களால் குறிப்பிட்ட நூலைப் படிக்க இயலவில்லை என்றால் அதனால் அவருக்கோ   அந்த நூலுக்கோ  ஒன்றும் பாதகம் இல்லை.

 

ஆனால் தீவிர வாசிப்பின் மீது ஈடுபாடு கொண்ட ‘ வாசகர்’ இந்த சொல்லை சொல்கிறார் எனில் அங்கே அவருக்கு அவர் முயன்று கடக்க வேண்டிய சிறிய இடர் ஒன்று இருக்கிறது என்று பொருள்.  ஒரு நூல் அந்தப் பெயரை ஏன் எடுக்கிறது.? பிழை அந்த நூலை வாசிக்க அணுகும் நமது மனநிலையில்தான் உள்ளதே அன்றி, அந்த நூலில் இல்லை.

 

இந்த இடரை கடக்க நான் கண்டடைந்த வழி, ஒரு புரியாத நூலை, முதல் வாசிப்பாக எந்த விதத்திலும் மனமோ அறிவோ உணர்வோ தோயாமல், இறுதித்தேர்வுக்கு ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தை முழுவதும் படிப்பதைப் போல வாசிப்பது. வாசித்து முடித்த கணமே அந்த நூல் எதோ ஒரு அலகில் எனது வாசிப்பு அறிமுக வட்டத்துக்குள் வந்து விடும். அப்படி முதல் வாசிப்பு வழியே குறிப்பிட்ட நூலை முழுமையாக அறிமுகம் செய்து கொண்ட பின்னரே, மேலதிக வாசிப்பு சார்ந்தது அந்த நூலை மதிப்பிடுவேன். ஆக இந்த அறிமுகம் இன்றி  படிக்கவே முடியலங்க என்று சொல்லும் போது அது நமது திராணி இன்மையைதான் முதலில் காட்டுகிறது. அந்தத் திராணி இன்மை அந்த நூல் பேசும் தளம் சார்ந்த நமது  ஈடுபாடின்மையுடன் இணைந்தது. ஆக நமது ஈடுபாடு எதிலோ அதில் நமது  புரிதலுக்கு மேலே உள்ள விஷயங்களைக் கொண்ட  நூல் அணுக கடினமான ஒன்றாக இருப்பதே அதன் இயல்பு. அதைக் கடக்க அந்த நூலை முற்ற முழுதாக அட்டை முதல் அட்டை வரை மூச்சுக்கட்டி வாசித்து விடுவதே முதல் வழி.இதில் வேறு குறுக்கு வழியே கிடையாது. அப்படி முதல் வாசிப்பு நிகழ்ந்து அந்த நூல் அறிமுகம் கண்ட கணமே, அதைப் பயிலும் முறைக்கான சாவி வழிமுறைகள் துலக்கம் பெற்று விடும். உதாரணமாக விஷ்ணுபுரம் நாவலை கேள்விகளே இன்றி முதன்முறை முழுமையாக வாசித்து அந்த நூல் எனக்கு அறிமுகம் எனும் நிலையை உருவாக்கிக் கொண்டேன். மூன்று முறை அந்த நூலைப் பயின்று அதிலிருந்து எனக்கே எனக்கான ஒரு சாவி நூலை நானே உருவாக்கிக் கொண்டேன். அதன் பிறகே அந்த நாவலை எதிர் கொள்ளும் வாசகனாக அந்த நூலை வாசித்தேன்.

 

இந்த வகைமையில் முதல் வாசிப்பை நிகழ்த்தி, இனி பயில வேண்டிய நூலாக என் முன் அமைந்த நூல் ஆடல்வல்லான். பொதுவாக இன்றைய தமிழ் இலக்கியத்தின் தீவிர வாசகனால் கநாசு துவங்கி சுந்தரராமசாமி அசோகமித்திரன் என இன்றைய தலைமுறை வரை எந்த படைப்பாளி உருவாக்கிய உலகம் மீதும் ஒரு அரைமணிநேரம் பேச முடியும். கூடுதலாக வீசிய பின்நவீனத்துவ அலை வழியே, லத்தீன் அமேரிக்காவில் லாந்திக்கொண்டிருக்கும் சூழல், பெருவில் பெயர்த்து கிடக்கும் வாழ்வு, என்பதைக் குறித்தெல்லாம் கூட ஒரு அரைமணிநேரம் பேச முடியும். அதே சமயம் அவனது சொந்த மொழியான தமிழில், சொந்த நிலமான தமிழ் நிலத்தில், அதன் பண்பாட்டின் பதாகையான ஒரு ஐந்து விஷயங்களை [பேசக் கூட வேண்டாம்] பட்டியல் இடச் சொன்னால், [நான் உட்பட] அவன் திகைத்து நின்றுவிடுவான்.

 

பாரதம் முழுதும் பரவிச் செழித்த பரதநாட்டியத்தின் விதை சதிரும் கூத்தும் தமிழ் நிலத்தின் சொத்து. கர்நாடக சங்கீதத்தின் வேர் தமிழ் இசை. உலகெங்கும் செழித்த பௌத்தத்துக்கு ஒரே ஒரு காப்பியம் அது தமிழில் மட்டுமே உண்டு, கண்ணகி போல பத்தினித் தெய்வ வழிபாடு தமிழுக்கு சொந்தமான பெருமிதம். இந்த வரிசையில் நடராஜதத்துவம் தமிழ்நிலம் உலகுக்கு அளித்த கொடை.இது குறித்தெல்லாம் அனுபவமாக அறிவாக எதுவுமே தெரியாமல்தான் பிற ‘தமிழண்டா’ போலவே நானும் பலகாலம் இருளில்  இருந்திருக்கிறேன்.  இத்தகு  இருள் அகற்றும் ஒளித் துளிகளில் ஒன்று இந்த ஆடல்வல்லான் நூல். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவர், மகா வித்வான் உ.வே.சாமிநாதஐயர்.  இவரது மாணவர் மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர்.  இவரது வாழ்நாள் கல்விப் பணிகளுக்காக பத்மவிருது பெற்றவர் என்கிறது இவரது வாழ்க்கைக் குறிப்பு. இவர் எழுதியதே நடராஜமூர்த்தத்தை அதன் அடிப்படைகளை முழுமையாக அறிமுகம் செய்யும் ஆடல்வல்லான் எனும் நூல்.

 

ஒரு கலை வெளிப்பாடாக நடராஜமூர்த்தம் நடனம்,இசை,தொன்மம்,புராணம்,வழிபாடு,தத்துவம் எனும் கூட்டின் முழுமையின் வடிவாகத் திகழ்கிறது. ஆடல்வல்லானை அணுகி அறிய,அவன் அமைந்திருக்கும் இந்தக் கூட்டின்,முழுமையின் ஒவ்வொரு அலகையும் பகுத்து அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். முதலில் கலை என்றால் என்ன. அதன் தேவை என்ன என வரையறையை அளித்து விட்டே மேலே தொடர்கிறார். கலையில் அடிப்படைப் பிரிவு என்னென்ன,அதில் நுண்கலை கவின்கலை எனில் என்ன, அந்த கவின் கலையில் சிற்பக் கலை எங்கு அமைகிறது, அந்த சிற்பக் கலையில், ஆடல்வல்லானை ஒரு கலை வெளிப்பாடாக அணுகி அறிய, ஒருவர் அடிப்படையாக தெரிந்தது வைத்திருக்க வேண்டிய, பரிச்சயம் கொள்ளவேண்டிய இழைகளை,அதன் அடிப்படைகளை இந்த நூலைக் கொண்டு  அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். ஆடல்வல்லான் குறித்த அடிப்படைகள் யாவும் அடங்கிய அரிச்சுவடி என இந்த நூலைச் சொல்லலாம்.

 

ஆடல்வல்லானை அணுகி அறிய முதல் அலகான பரதத்தை அதன் புராணக் கதையை விளக்கியபின், இந்த பரதத்தில் தாண்டவத்துக்கும் [ஆண்களால் மட்டுமே ஆட இயன்ற சில  நிலைகள் கொண்ட ஆடல்],லாஸ்யத்துக்கும் [பெண்களின் தனித்துவமான உடல்வாகு வழியே வெளிப்பாடு கொள்ளும் நிலைகள் கொண்டது]  உள்ள வேறுபாடுகளைச் சொல்லி, தாண்டவமூர்த்தி வடிவத்தில் கேசாதிபாதம் ஒவ்வொன்றும் பரதத்தின் எந்தெந்த அலகுகளில் இருந்து வந்து உன்னதம் கண்ட ஒன்று என்பதில் மையம் கொள்கிறது நூலின் துவக்க அத்யாயங்கள்.

 

தலை அசைவின் பதினெட்டு நிலைகள், புருவம்,விழிகள்,உதடுகள், இவை கொள்ளும் பாவத்தின் எண்ணிக்கை அதன் பேதங்கள், முகம் கட்டும் மெய்ப்பாடுகள், விரல்கள் காட்டும் அபினயங்களின் எண்ணிக்கை வகை பேதங்கள், ஹஸ்த முத்திரைகள், இரு கைகளும் இணைந்தது பிடிக்கும் அபிநயங்கள், தோள் முதல் விரல் நுனி வரை மொத்த கரமும் கொண்டு உருவாக்கும் பாவங்கள், நெஞ்சு,விலா, இடை,தொடை,கால் விரல்கள், பதங்கள் என ஒரு ஆடல்வல்லான் மூர்த்தம் கைகொள்ளும் நிலைகளை முழுமையாக விவரிக்கிறது நூல்.

 

அடுத்த அத்யாயங்களில் முயலகன் முதல், பனித்த சடை வரை, மான் மழு உடுக்கை ஊழித்தீ நாகாபரணம் வரை, ஆடல்வல்லானின் சிற்பஅமைதி எவ்வாறு அமைகிறது என சிற்ப இலக்கணங்கள் வழியே விவரிக்கிறார் ஆசிரியர். அடுத்த அத்யாயங்களில் தில்லையில் நடராஜ மூர்த்தம் அமைந்த தொன்மக் கதை, அன்னியர் படையெடுப்பில்,தில்லை தீட்சிதர் வழியே ஆடல்வலான் மூர்த்தம் கேரளா ஆலப்புழா வில் சிலகாலம் மறைந்திருந்தது,இடர் நீங்கியதும் அம்பலப்புழாவில் ஆடல்வல்லான் முதன் முதலாக எழுந்தருளிய வரலாறு இவற்றை விவரிக்கும் ஆசிரியர், ஒரு சிறிய அத்யாயத்தில் மாகேஸ்வர சிவவடிவங்களில் ஒன்றாகிய சபாபதி ஆடல்வல்லானுக்கும்,சிற்சபாநாதனாகிய ஆடல்வல்லானுக்கும் இடையே உள்ள மெல்லிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாட்டை விளக்குகிறார்.

 

தமிழ் நிலத்தில் சிவனின் ஏழு வகை தாண்டவங்களும், சிதம்பரம் குற்றாலம் மதுரை போன்ற வேறு வேறு தலங்களில், வேறு வேறு சபைகளில் நிகழ்ந்த,வேறு வேறு தாண்டவ [படைத்தல் காத்தல் முப்புரம் எரித்தல் போல] நிலைகள். ஆனால் அங்குள்ள மூர்த்தங்கள் கொண்டு அந்தத் தாண்டவ வேறுபாடுகளை அறிய இயலாது. காரணம் இந்த ஏழு தலங்களிலும் இருப்பது ஒரே ஆனந்த நடராஜ மூர்த்திதான் எனும் தனித்துவமான தகவல் ஒன்று நூலுக்குள் என்னை வசீகரித்தது.அதிலும் மதுரையில் நிற்கும் ஆடல்வல்லான் மட்டும் நிற்கும் காலை மாற்றி [இடதுகால் ஊன்றி] நிற்கும் வகையில் அமைந்தத மூர்த்தம் என்கிறார் ஆசிரியர்.

 

இந்த நடராஜ மூர்த்தியை வணங்கிய மன்னர் வரிசை, அவர்கள் குறிப்பிட்ட கோவில்களுக்கு அளித்த நிபந்தங்கள் இவற்றைப் பேசுகிறது ஒரு அத்யாயம். பக்தர் கைக்கொள்ள வேண்டிய திருவாதிரை விரதம், உபாசகர் கைக்கொள்ள வேண்டிய உபாசனா முறைகள், எந்திர வழிபாடு, அர்ச்சனை முறைகள்,மந்திரங்கள் இவற்றை அறிமுகம் செய்கிறது ஒரு அத்யாயம். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூலின் சிறப்பு இதிலுள்ள புகைப்படங்களும் ஓவியங்களும், சிவனின் ஏழு வகை தாண்டவம் துவங்கி நூற்றி எட்டு தாண்டவ நிலைகள் வரை,அதன் பெயர்களுடன், அதன் புராண பின்புலத்துடன் புகைப்படங்களுடன் ஓவியங்களுடன் அறிமுகம் செய்கிறது நூல். இருநூறுக்கும் மேலான படங்கள். கஜசம்ஹார தாண்டவ மூர்த்தி எனில் அதன் சிற்பங்கள் எங்கெங்கு பாரதம் முதல் தமிழ் நிலம் வரை இருக்கிறதோ அதன் முக்கிய புகைப்படங்கள், அது போலவே, அந்தகாசுர தாண்டவ மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, அவற்றின் புகைப்படங்கள் அவை இருக்கும் கோவில்கள், இவற்றின் மீதான அறிமுகத்தை அளிக்கிறது நூல். எல்லாமே நடராஜர் எனும் நிலையில் இருந்து எழுந்து, [பாதாமியில் காணும் நடராஜர் காளிகாதாண்டவ மூர்த்தி என்பதைப்போல] ஒவ்வொரு நடராஜர் படிமையின் தனித்துவம் என்ன என்பதை அதன் பெயர் வழியே அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். இந்த நூல் எனக்களித்த ஆச்சர்யங்களில் ஒன்று இந்த நூலில் நான் கண்ட செப்புப் படிமை ஒன்று. இடது கையை முயலகன் மீது ஊன்றி தலைகீழாக நிற்கிறார் ஒரு நடராஜர்.

 

இந்த நூலின் கடினமாக பகுதிகள் இரண்டு.காரணம் இந்த நூலின் ஆசிரியர் வந்த ஆசிரிய மரபு, அந்த மரபு அவருக்கு அளித்த தனித்துவமான சைவ பரிபாஷைகள். அவரது கல்வி மரபுக்குள் முயன்று நுழைந்தாலே சில விஷயங்கள் பிடி கிடைக்கும். உதாரணமாக இந்த நூலில் நடராஜ தத்துவத்தை விளக்கும் அத்யாயம். மனவாசகம் கடந்தார் எனும் ஆசிரியர் அவரது சீடன் ஆடல்வல்லான் குறித்து கேட்கும் வினாக்களுக்கு பதில் என்பதான வடிவில் அமைந்த அத்யாயம் அது. அந்த ஆசிரிய மரபு, குறிப்பிட்ட சைவ மரபை எவ்வாறு கற்றுத் தரும் என்பதை,  அந்த மரபின் சைவக் கல்வியின் கலைச் சொற்கள் மீது அறிமுகம் இருந்தால் மட்டுமே பிடி கிடைக்கும். சற்று முயல வேண்டிய இடம். இரண்டாவது மிக சில இடங்களில் அதன் மொழி .உதாரணமாக

 

//ஸ்ரீமத் பராக்யத்தில் சூரியன் முன் பயிர்கள் வளர்வதுபோலச் சிவ சந்நிதியில் அவரது சக்தியால், கலக்குண்ட விந்து நாதங்களால், தத்துவ தாத்விகமாகிய உலகங்கள் உண்டாகின்றன என்று கூறப்படுவதால், இவருடைய சூக்கும நடனம் சிவதத்தத்துவங்களின் விளக்கத்திற்காகவே என்பது போதரும். இக்கருத்தையே மிக விளக்கமாகச் சிதம்பர மான்மியம் பரசிவம் சண்டதாண்டவ மூர்த்தியாய் உலகத்தை அவ்வவற்றின் காரணத்தொடுக்கி, காரணங்களை மாயையில் ஒடுக்கி, மாயையைச் சக்தியில் ஒடுக்கிச் சங்கரிக்கின்றார். அவரே மீளவும் உண்டாக்க உளங்கொண்டபோது ஆனந்த தாண்டவ மூர்த்தியாய் நாதாதி பஞ்ச தத்துவங்களைப் படைக்கின்றார்.//

 

இப்படி இருக்கிறது. இந்த இடர்கள் எல்லாமே நூலின் ஆசிரியர் பயின்று வந்த சைவக் கல்வி மரபின் அரிச்சுவடி எதுவும் நமக்குத் தெரியாது என்பதில் அமைகிறது. முயன்று பயில வேண்டிய, முயன்றால் கடந்தது விடக்கூடிய இடர்கள்தான் இவை. நூலை வாசித்து முடித்த இரவு இந்த நூலின் சிவனின் நூற்றி எட்டு கரண நிலைகளை, தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் உள்ளே, முதல் தளத்தில், விமான உள் சுற்று சுவற்றில் ஒவ்வொன்றாக தடவிப் பார்த்த நாள் நினைவில் எழுந்தது. இந்த நூற்றி எட்டும் அங்கே முழுமையாக இல்லை எண்பது வரைதான் உள்ளது, வேலை தொடரும் முன்பே ஏனோ நிறுத்தப்பட்டதான சுவடுகளை அங்கே காண முடிந்தது.

 

நினைவுகள் கரைமீறி ரிஷிகேஷில் கங்கைக் கரையில் அமர்ந்திருந்த மாலை நினைவில் எழுந்தது. அந்திச் சூரியன்.  நின்றால் அருவி என தோற்றம் தரும் ஓட்டமும் ஓசையும் கொண்ட  பொன்னொளிர் கங்கைப் பரப்பு. மேலே உள்ளவள் ஆகாய கங்கை.இந்த கங்கையைப் போல் பல்லாயிரம் மடங்கு ஆற்றல் கொண்டவள். பகீரதன் தவம் முறிக்க அவள் மண்ணிறங்குகிறாள். அவளது வேகம் இந்த புவியைப் போழ்து விடும். புவியைக் காக்க சிவன் அவளை தனது ஜடாமகுடம் கொண்டு தாங்குகிறார். கங்காதரர். கங்கா விஜர்சன மூர்த்தியாகி தனது ஜடா மகுடத்தின் ஒரே ஒரு கூந்தல் இழையை விலக்கி,அந்த இடைவெளி வழியே ஒழுகும் ஆகாய கங்கையை மட்டும் பூமிக்கு அனுப்புகிறார்.

 

இன்று காணும் இந்த கங்கை. சிவனின் ஒரே ஒரு கூந்தல் இழையின் இடைவெளி வழியே வழிந்தவள் எனில், அந்த ஆகாய கங்கையை  அணை கட்டியிருக்கும்  சிவனின் ஜடாபாரத்தை  அதன்  உருவ விரிவை எங்கனம் ஊகிப்பது?  எனில் அந்த சிவனின் உருவம் ?  இது சிவனின்  பல ஆடல்களில் ஒன்று. இந்த ஒன்றுக்கே இந்த உருவம். இப்படிப் பல்வேறு ஆடல்கள், அதற்க்கு வெவ்வேறு உருவம்.  எண்ணிறந்த ஆடல்களின் பெருவெளி இந்த பிரபஞ்சம். எண்ணிறந்த ஆடல்களின் அந்த ஆடல் உருவங்களின், முழுமை ஆனந்த நடராஜர் எனும் ஆடல் வல்லான். காஸ்மிக் டான்ஸ். பிரபஞ்ச நடனம். அந்த நடனத்தை ஆடும் ஆடல் வல்லான். உலகெலாம் உணர்ந்த்த அந்த ஓதற்கரியவன் இந்த அம்பலத்தில் ஆடுவதை எங்கனம் அறிவது என்பதற்கு உள்ள வழிகளில் கலை கைகொள்ளும் வழியை, அறிமுகம் செய்யும் சிறப்பான நூல், ச. தண்டபாணி தேசிகர் எழுதிய இந்த ஆடல்வல்லான்  எனும் நூல்.

 

நூல் விரும்புவோர். நூலை தரவிறக்கிக்கொள்ள சுட்டி

 

 

http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtekZt3&tag=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D#book1/

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யாதும்!

$
0
0

அன்புள்ள ஜெ.

 

நலம் தானே. சங்கச்சித்திரங்கள் புத்தகத்தை  படித்து அதிலிருந்து ஊக்கம் பெற்று  நண்பர் ராஜன் சோமசுந்தரம் உலக இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து  சங்கம் ஆல்பத்தை படைத்துள்ளார். இதில்   “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் ஒளி/ஓலி வடிவிலும் சிறப்பாக அமைந்துள்ளது.

 

அவரின் நேர்க்காணல்

 

 

யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல்

 

 

நன்றி

விவேக்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16971 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>