Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17077 articles
Browse latest View live

விஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்

$
0
0

 

கன்னட இலக்கியம் சமகாலமும் வாழும்காலமும்- எச்.எஸ்,.சிவப்பிரகாஷ்

 

 

கே.சி.நாராயணன் உரை – தென்னக இலக்கியப்போக்குகள் – மலையாளம். சென்னையில் 10-1-2020 அன்று நிகழ்ந்த பத்துநூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசப்பட்டது

சு வேணுகோபால்; உரை. தென்னக இலக்கியப்போக்குகள், தமிழ்

 

பத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை

பத்துநூல் வெளியீடு உரைகள்.

========================================================================================

பத்துநூலாசிரியர்கள்

 

 

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ் எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன் கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன் இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார் அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்  தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

=====================================================================================================

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

=====================================================================================================

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

 

 

தொடர்புடைய பதிவுகள்


வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

$
0
0

வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும் 2

அன்புள்ள ஜெ,

உங்களின் வைக்கமும் காந்தியும் 1/2 வாசித்திருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டு சிலரிடம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் “தமிழ் இந்து” வில் இந்த கட்டுரை வந்து சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பழ அதியமான்

இனிமேல் எதையும் சொல்ல முடியாது, சொல்லி வைத்ததுபோல் மூர்க்கமாக இந்த சுட்டியைக் காட்டுவார்கள்.

நாராயண குருவின் பெயர் எப்படி இந்த கட்டுரையில் மறைக்கப்பட்டுள்ளது என்று கவனித்தீர்களா. அதேபோல் காந்தியும் இறுதியில் தான் வருகிறார்!!,.

“போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் வைக்கம் வந்த காந்தியுடனும் பெரியார் தொடர்பில் இருந்தார். “

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா

***

அன்புள்ள பழனிவேல்,

நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம். எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்கு வசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி கும்பிடுகிறார்கள். அதில் பகுத்தறிவுக்கோ தர்க்கத்துக்கோ இடமில்லை. விமர்சனநோக்கு என்பதே இல்லை. போற்றிப் பாடடி ஒருபக்கம், கூடவே மொட்டை வசையும் திரிபுகளும் மறுபக்கம்.

திரு.பழ அதியமானின் நூலை, அதைப்பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். மதநூல்கள் முழுக்க முழுக்க அந்த மத நம்பிக்கையாளர்களை நோக்கி திரும்பி நின்று பேசுபவை. அவர்களுக்கு ‘சமாதானம்’ சொல்லும் நோக்கம் கொண்டவை. இதுவும் அப்படியே. இதை ஓர் ஆய்வுநூல் என்று ஆய்வு என்றால் என்ன என்று அறிந்த, ஆய்வில் நேர்மை என ஒன்று உண்டு என்று உணர்ந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவரிடமிருந்து என்றும் அப்படி ஒரு நூல் வரக்கூடும் என நான் எண்ணவுமில்லை.

இத்தகைய நூல்களின் அடிப்படை விதி ஒன்றே. முதலில் எதிர்த்தரப்பை குறுக்குவது, அதை முத்திரையிட்டு தங்கள் வழக்கமான எதிரிகளின் பட்டியலில் சேர்ப்பது. அதன்பின் கைவசமுள்ள எல்லா எதிர்வசனங்களையும் அதன்மேல் பொழிவது. அந்தக் குறுக்கலைத்தான் தப்பாமல் செய்திருக்கிறார் பழ.அதியமான்.“பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?” என எவரோ கேட்பதாக திரித்து அதற்கு மாய்ந்து மாய்ந்து பதில் எழுதியிருக்கிறார். இதற்கு முன்னர் எழுதியவர்களும் இதையே எழுதியிருக்கிறார்கள்.

நான் நூறுமுறை சொன்னதையே திரும்பச் சொல்கிறேன்.

அ. ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தை ‘தொடங்கியதாக’ தமிழ்நாட்டு பாடநூல்கள் உட்பட பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது [ Periyar launched Vaikkom struggle ] .

ஆ. வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈவேரா உரிமைகளை ‘வாங்கிக் கொடுத்ததாக’ பலமுறை எழுதப்பட்டுள்ளது. அத்தகைய சுவரொட்டிகளைக் காணாதவர்களே அரிது.

இ. வைக்கத்தில் போராட்டத்தை தலைமை தாங்க தலைவர்கள் இல்லை என்பதனால் ஈவேரா அழைக்கப்பட்டதாக அவரே சொன்னார் என மேற்கோள்காட்டி பலமுறை சொல்லப்பட்டுள்ளது

இவை ஈவேரா அவர்களின் பங்களிப்பை மிகையாக்கிப் பரப்பப்படும் பொய்கள். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக ஈ.வே.ரா எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை, கீழ்வெண்மணி போன்று தலித் மக்களை ஒருங்கிணைத்து இடதுசாரிகள் போராடியபோது எதிராகவே செயல்பட்டார் என்னும் வரலாற்று உண்மையை மழுப்பும்பொருட்டு சொல்லப்பட்ட வெற்றுப்பிரச்சாரம்.

ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தார், போராடினார். ஆனால் அவர் அதை தொடங்கவில்லை – நடத்தவில்லை – முடிக்கவில்லை. இதையே நான் சொன்னேன். இப்போதும் இதுவே உண்மை. இது இன்றுவரை எந்த பெரியாரியராலும் மறுக்கப்படவில்லை. மறுக்கவும் முடியாது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின், நான் இப்படி ஒரு விவாதத்தை கிளப்பிய பின், பழ.அதியமான் போன்ற ஒருவர் வைக்கம் போராட்டம் முன்னரே தொடங்கப்பட்டு விட்டிருந்தது என்று ஒத்துக்கொண்டு டி.கே.மாதவன் பெயரைச் சொல்ல நேர்ந்ததை ஒரு சிறு வெற்றியாக கொள்கிறேன். அதை முடித்து வைத்தவர் காந்தி என்றும் அதில் கேரளத் தலைவர்கள் பலர் பங்குகொண்டனர் என்றும் தமிழகத்தில் இருந்தேகூட ஈ.வே.ராவுக்கு நிகராக , கோவை அய்யாமுத்து போன்றவர்கள் கலந்துகொண்டார்கள் என்றும் இன்று இவர்கள் சொல்ல வருவதே மிகப்பெரிய வெற்றிதான். கோவை அய்யாமுத்து அன்று ஈவேராவை விட முக்கியமான காந்தியத்தலைவர் – சர்வோதயப் பணியாளர். அவருடைய தன்வரலாற்றை ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். விடுபட்டுப்போன இன்னொரு பெயர் எம்.வி.நாயுடு.

இவ்வாறு மெட்ராஸ் மாகாண காங்கிரச் சார்பில் இங்கிருந்து சென்றவர்களில் ஒருவர் ஈவேரா. அவரே முதல்வர் என்றோ, இவர்களைவிட ஈவேராவின் பங்களிப்பு சற்றே மேல் என்றோ அவருடைய ஆதரவாளர்கள் சொல்வதில்கூட எனக்கு மாற்றுச்சொல் இல்லை. ஈவேராவின் பங்களிப்பை அவருடைய ஆதரவாளர்கள் சற்று கூட்டிச் சொல்வதைக்கூட ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மீண்டும் சொல்கிறேன், அவர் அப்போராட்டத்தை தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அவர் அதில் பங்கெடுத்தார். அதுவும் அதன் நடுப்பகுதியில் மட்டும்

வைக்கம் போராட்டம் அது பல படிகள் கொண்ட ஒரு பெரிய அறிவியக்கம் – சமூக இயக்கம். கேரளவரலாற்றின் ஒரு திருப்புமுனை பகுதி அது. பல தலைவர்கள் பங்கெடுத்தது, பலதலைவர்களை உருவாக்கியது. கேரள கம்யூனிஸ்டு இயக்கத்தின் தொடக்கமே கூட அதிலிருந்துதான். அதில் பங்கெடுக்கையில் ஈவேரா ஒன்றும் பெருந்தலைவரும் அல்ல. ஆனால் அதை தங்கள் தலைவருக்கு போற்றிப் பாடுவதற்காக பெரியாரியர்கள் கொச்சைப்படுத்தினர். இனிமேல் குறைந்தபட்சம் மேலே சொன்ன மூன்று பொய்களைச் சொல்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வார்கள் என எண்ணுகிறேன்

வைக்கம் போராட்டத்தைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். அதில் ஒரு தகவல்கூட இன்னமும் மறுக்கப்படவில்லை. நான் பழைய கட்டுரைகளில் ஆதார பூர்வமாக விளக்கமாகச் சொன்னவற்றையே மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்.

* வைக்கம் போராட்டம் ஒரு குறியீட்டுத்தன்மை கொண்டது. ஒரு தலைமுறைக்கு முன்பு, திவான் வேலுப்பிள்ளை காலகட்டத்தில் வைக்கம் ஆலயத்திற்குள் நுழைவதற்கான ஒரு போராட்டம் நடந்து படுகொலையில் முடிந்தது. ஆகவேதான் அதை டி.கே.மாதவன் முன்னெடுத்தார்.

* அவர் நாராயணகுருவின் மாணவர், ஆனால் காங்கிரஸ்காரர். நாராயணகுரு எதிர்ப்பியக்கங்கள் மேல் நம்பிக்கை அற்றவர். ஆகவே டி.கே.மாதவனின் வைக்கம் நுழைவுப்போராட்டத்தை ஆதரிக்க மறுத்துவிட்டார்.

* டி.கே.மாதவன் முதலில் அன்னிபெசண்டின் உதவியை நாடினார். ஆனால் அன்னிபெசண்டால் ஒரு பெரிய இயக்கத்தை வழிநடத்த முடியாது என உணர்ந்தார்.

* அதன் பின்னரே டி.கே.மாதவன் காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டார். ஆனால் காந்தி அந்தப் போராட்டத்தால் இந்துக்களிடையே பிளவு உருவாகக்கூடும், அது சுதந்திரப்போருக்கு எதிரானதாக முடியலாம் என அஞ்சினார். ஆகவே ஆதரவு அளிக்கவில்லை.

* டி.கே.மாதவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவே காந்தி அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். ஆனால் அது உள்ளூர் மக்களால் மட்டும் நடத்தப்படவேண்டும் என்றும், போராட்டத்தின் எல்லா நிலைகளிலும் அதில் உயர்சாதியினரும் கலந்துகொண்டு சிறை செல்லவேண்டும் என்றும் அது வன்முறையற்ற அகிம்சைப் போராட்டமாக நீடிக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அதை ஏற்று டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்தை தொடங்கினார்.

* காந்தியின் நெறிப்படியே போராட்டம் நடைபெற்றது. அப்போராட்ட வடிவை வகுத்தவர் காந்திதான். ஒவ்வொருநாளும் ஒரு சிறுகுழு தடைமீறி சிறைசெல்வதே அந்த வழிமுறை. அதில் ஈழவர், தலித், உயர்சாதினர் அடங்கியிருப்பார்கள்

* காந்தியின் போராட்ட வழிமுறை என்பது மெல்ல மெல்ல மக்களின் சாதி சார்ந்த கருத்துநிலையை மாற்றுவதும் அனைவரையும் ஆதரவாளர்களாக ஆக்குவதும்தான். வைக்கம் போராட்டம் அதன் மாபெரும் பிரச்சார வல்லமையால் தான் உண்மையான வெற்றியை அடைந்தது. சாதி, மதம் பற்றிய கேரளத்தின் எண்ணங்களை அது மாற்றியது

* வைக்கம் போராட்டத்தை ஒட்டித்தான் கேரளத்தின் இரு நாளிதழ்கள் தொடங்கப்பட்டன. பின்னாளில் தலைவர்களாக எழுந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, ஏ.கே.கோபாலன் போன்ற பலர் மைய அரசியலுக்கு வந்தனர். அது கேரளம்தழுவி நடந்த ஒரு மிகப்பெரிய அறிவியக்கம். அதை நடத்தியது காங்கிரஸ். அதன் பெருந்தலைவர்களான கே.பி.கேசவமேனன், கேளப்பன் போன்றவர்கள். அது ஒரு ஊரில் நடந்த கிளர்ச்சி அல்ல.

* வைக்கம் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. பஞ்சாபிலிருந்தும் வங்கத்திலிருந்தும் எல்லாம் தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர். பிரம்மசமாஜம் ஆரியசமாஜம் போன்ற அமைப்புகள் கலந்து கொண்டன.

* தமிழகத்திலிருந்து, காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஈவேரா. அவருடைய பங்களிப்பு அவ்வகையிலேயே. அது அவருடைய அன்றைய இளமைவீச்சால் ஆற்றல் கொண்டதாக இருக்கலாம். ஆனால் அத்தகைய பல பங்களிப்புகள் அதில் உள்ளன. அப்படி பங்களிப்பாற்றிய பலர் ஈவேராவை விட முக்கியமானவர்கள்.

* போராட்டத்தின் பொருட்டு காந்தி இரண்டு முறை வைக்கம் வந்திருக்கிறார். ஆலயநுழைவை எதிர்த்த இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாட்டை நேரில் கண்டு பேசமுயன்றிருக்கிறார். நாராயணகுருவை கண்டு ஆதரவு கோரியிருக்கிறார். அய்யன்காளியையும் சந்தித்திருக்கிறார்

.* போராட்டம் இரண்டு புதிய நுழைவுகளால்தான் அறுதிவெற்றியை அடைந்தது. ஒன்று, நாராயணகுரு நேரடியாகவே வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களம் வந்தது. இரண்டு உயர்சாதியினரான நாயர்களின் அமைப்பாகிய நாயர் சர்வீஸ் சொசைட்டி நிறுவனரான மன்னத்து பத்மநாபன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கியது. அன்றும் இன்றும் கேரளத்தின் பிரம்மாண்டமான மக்களியக்கங்கள் இவை. பல லட்சம் உறுப்பினர்கள் கொண்டவை, அமைப்பாக திரட்டப்பட்டவை. இவையிரண்டும் ஆதரவளித்ததுமே கிட்டத்தட்ட போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களை போராட அழைத்து வந்ததே காந்திய அமைப்புக்களின் வெற்றி

* எந்தப் போராட்டத்தையும் போல வைக்கமும் ஒரு சமரசத்துடன்தான் முடிவுக்கு வந்தது. அது காந்திய வழி. வைக்கம் ஆலயத்தின் மையக் கோபுர வாசல் வழியாக பிறசாதியினர் நுழையமாட்டார்கள் என ஒப்புக்கொண்டார்கள் போராட்டக்காரர்கள். ஆனால் ஓராண்டுக்குள் அந்த உரிமையும் போராடிப் பெறப்பட்டது

* வைக்கம் போராட்டம் தொடர்ந்து காந்தியால் வழிநடத்தப்பட்டது. அத்தனை போராளிகளுடனும் காந்தி தொடர்பில் இருந்தார். திருவிதாங்கூர் அரசரைச் சந்தித்தார். திருவிதாங்கூர் போலீஸ் தலைவர் காப்டன் பிட்ஸுடன் காந்தி நேரடியாக நடத்திய உரையாடல் போராட்டத்தின் வெற்றிக்கு ஒருகாரணம். பிட்ஸின் மனமாற்றம் திருவிதாங்கூர் அரசவர்க்கத்தை பணிய வைத்தது

*. பேச்சுவார்த்தை காந்திய வழிகாட்டு நெறிப்படி நடந்தது. காந்தியின் ஏற்பின்படி தேவதாஸ் காந்தி கையெழுத்திட மகாராஜாவின் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது.

* வைக்கம் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். இங்கே காங்கிரஸ் கட்சியில் அவருக்கிருந்த பூசல்கள் அவரை இங்கே கொண்டுவந்தன. தன் குருநாதராகிய வரதராஜுலு நாயுடுவுடன் அவர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். வைக்கம் போராட்டத்தில் அவர் அதன்பின் ஆர்வம் காட்டவில்லை.

* .வைக்கம் போராட்டம் ஒரு மாதிரி முயற்சி. .அது முடிந்த சில மாதங்களிலேயே கேரளம் முழுக்க ஆலய நுழைவுப் போராட்டங்கள் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டன. திருவார்ப்பு, குருவாயூர் போராட்டங்கள் தொடங்கி வெற்றிபெற்றன. தமிழ்நாட்டிலும் இந்தியா முழுக்கவும் ஆலயநுழைவு போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுத்தது.

ஈவேரா ஒரு தனிமனிதர், அவ்வாறே அவர் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய பங்களிப்பு முக்கியமானதே. ஆனால் அது ஒரு தனிநபர் செயல்பாட்டால் நிகழ்ந்த போராட்டம் அல்ல. அது பல ஆண்டுகள் நீடித்த ஒரு இயக்கம். அதை அமைப்புகளே நடத்தமுடியும். காங்கிரஸும் பின்னர் நாராயணகுருவின் அமைப்பும் கடைசியாக என்.எஸ்.எஸுமே அதை நடத்தின. அவர்களே வெற்றியை ஈட்டினர்.

இந்த தெள்ளத்தெளிவான வரலாற்றை இவர்கள் நமக்கு எப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள். ஈவேரா வைக்கத்தில் போராடினாரா, அனல்பறக்க பேசினாரா, சிறை சென்றாரா, அவருடைய தியாகம் போற்றப்படுகிறதா என்றல்ல கேள்வி. அது அவர் பங்குகொண்ட போராட்டம், ஆனால் அவர் தொடங்கிய, நடத்திய, வென்ற போராட்டம் அல்ல. அதன் நாயகர்கள் பிறர். அதில் பங்குகொண்டமையால் இன்றும் ஈவேரா மதிக்கப்படுகிறார். ஆனால் அதை அவருடைய போராட்டம் என திரிப்பது அநீதி. அற்பப் பிரச்சாரம். அதையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.மீண்டும் மீண்டும்.

இன்று வேறுவழியில்லாமல் வைக்கம் போராட்டம் முன்னரே தொடங்கப்பட்டு நடந்தது, அதில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் ஈவேரா, அதை வெற்றிபெறச் செய்தவர்கள் வேறுதலைவர்கள் என்பதை பெரியாரியர்கள் மழுப்பி மழுப்பி ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அடுத்த திரிபுகளை சந்தடி சாக்கில் செய்கிறார்கள். பழ.அதியமானே அதை செய்து வழிகாட்டுகிறார்.

போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஈழவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சிகள் தொடங்கின. டி.கே.குஞ்ஞுராமன் என்னும் ஈழவர் தலைவர் ஒட்டுமொத்த மதமாற்றம் என்னும் எண்ணத்தை முன்வைத்ததை ஒட்டி அந்த முயற்சிகள் தொடங்கின. சிலர் சீக்கியர்களாகக்கூட மதம் மாறினர். இந்த மதமாற்றம் வைக்கம் போராட்டத்தை திசை திருப்பியது. அது இந்துமதத்திற்கு எதிராக பிற மதத்தவர் செய்யும் தாக்குதல் என போராட்ட எதிர்ப்பாளர்களால் விளக்கப்பட்டது. வைக்கம் ஆலயத்தில் நுழைய கிறித்தவர்கள் முயல்கிறார்கள் என்று கடுமையான எதிர்ப்பிரச்சாரம் நிகழ்ந்தது.

அதை முறியடிக்க காந்தி ஓர் ஆணையை இட்டார். வைக்கம் போராட்டம் முழுக்கமுழுக்க இந்துக்களால் நடத்தப்படவேண்டும் என்றார். ஜான் ஜோசப் போன்றவர்கள் களத்திலிருந்து விலகவேண்டும் என்றார். ஆனால் ஜான் ஜோசப்பும் அவருடைய ஆதரவாளராக திகழ்ந்த ஈவேராவும் அதை எதிர்த்தனர். ஆனால் காங்கிரஸ் காந்தியை ஏற்றுக்கொண்டது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டமையால்தான் இந்துக்கள் பெருவாரியாக வைக்கம் போராட்டத்தை ஆதரித்தனர். என்.எஸ்.எஸ் களத்திற்கு வந்தது.

வைக்கம்போராட்டம் முதன்மையாக வைக்கத்தவரால் நடத்தப்படவேண்டும் என்று காந்தி ஆரம்பம் முதலே சொல்லிவந்தார். அதன் வெற்றி தோல்விகளை வைத்தே பிற ஊர்களில் ஆலயப்பிரவேசம் பற்றி அவர் முடிவெடுக்க எண்ணினார். ஆகவே கூடுமானவரை அயலவர் கலந்துகொள்ளக்கூடாது என்பது அவர் எண்ணம். தான் ஆலயவழிபாட்டாளர் அல்ல என்பதனால் வைக்கம் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்று அவர் சொன்னார். வைக்கம் போராட்டம் வென்றபின் திருவார்ப்பிலும் குருவாயூரிலும் தொடங்கிய அகிம்சைப் போரிலும் முதன்மையாக அந்த ஊர் மக்களே கலந்துகொள்ளவேண்டும் என அவர் ஆணையிட்டார். வெளியே இருந்து செல்பவர்கள் ஒருங்கிணைப்பு, பிரச்சாரம் ஆகியவற்றை மட்டுமே செய்யவேண்டும் என்றார். அது வைக்கத்தில் முழுமையாக நிறைவேறவில்லை.

இவ்விரு செய்திகளையும் மழுப்பி திரித்து காந்தி வைக்கம் போராட்டத்தை ஒடுக்க முனைந்தார், தவிர்க்கப் பார்த்தார், ஈவேரா துணிந்து நின்றார் என்னும் வகையில் பொய்யைக் கக்கும் பெரியாரியப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். வைக்கம் போராட்டம் முடிந்ததுமே இந்தியநிலம் எங்கும் காந்திய இயக்கம் ஆலய நுழைவை ஆரம்பித்தது, எதிலுமே ஈவேரா கலந்து கொள்ளவில்லை என்பது வரலாற்று உண்மை. இவர்களுக்கு உண்மை என்பதன் மேல் ஏதாவது மதிப்பிருக்கிறதா?

ஆர்வமூட்டும் ஒன்றுண்டு. வைக்கம் போராட்டத்திற்காக கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் வந்த காந்தியை காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சென்று பார்த்து ஆலயப் பிரவேசத்தை முன்னெடுத்து இந்து மதத்தை அழித்துவிடவேண்டாம் என்று மன்றாடினார். காந்தி அவரை பொருட்படுத்தவில்லை. அவரிடம் தீண்டாமையை ஆதரிக்கும் சுருதிகள் எவை என்று கேட்டார். அதற்கு சந்திரசேகரரால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி அன்று கோவையில் நிகழ்ந்த கூட்டத்தில் பெயர் சொல்லாமல் போகிற போக்கில் அச்சந்திப்பைப்பற்றிக் குறிப்பிடுகிறார்

ஆனால் ஐம்பதாண்டுகளுக்குப்பின் காந்திக்கு சந்திரசேகரர் ‘ஆசி வழங்கினார்’ என்று ஒரு பொய் கட்டமைக்கப்பட்டது. டி.எம்.பி. மகாதேவன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அந்தப்பொய் பேசிப்பேசி நிலைநிறுத்தப்பட்டது. நான் உண்மையில் என்ன நடந்தது என்று விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது ஈவேரா பற்றிய உண்மைகளை எப்படி பெரியாரியர்கள் எதிர்கொள்கிறார்களோ அதேபோலத்தான் வைதிகப் பிராமணர்களும் எதிர்கொண்டனர். எந்த வேறுபாடும் இல்லை. செய்திகளை திரிப்பது, அரைகுறை தகவல்கள். எதிர்தரப்பை வசைபாடி திரித்து முத்திரை குத்தி தன் தரப்பை நிறுவும் உத்திகள்.எந்த தர்க்கத்துக்கும் உடன்படாத கண்மூடித்தனமான நம்பிக்கை.

மதநம்பிக்கைகளை போலவே ஒரு நம்பிக்கைதான் பெரியாரியர்களுடையது. இன்னும்பெரிய மூடநம்பிக்கை. அதனுடன் விவாதிக்கவே இயலாது. இதையும் கொஞ்சமேனும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காகச் சொல்லி வைக்கிறேன்

ஜெ

***

பெரியார்மதம்

வைக்கமும் ஈவேராவும்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

சந்திரசேகரரும் ஈவேராவும்

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48

$
0
0

பகுதி ஐந்து : விரிசிறகு – 12

சம்வகை நெடுந்தொலைவில் முதல் கொம்பொலியை மிக மெல்லிய செவித்தீற்றலென கேட்டாள். அது வானில் ஒரு பறவை புகைத்தீற்றலென, ஒளிச்சுழல்கை என வளைந்து செல்லும் அசைவுபோல் அவளுக்குத் தோன்றியது. அவளைத் தவிர அங்கு காவல்மாடத்தில் நின்றிருந்த எவரும் அதை கேட்கவில்லை. அவள் மீண்டுமொரு கொம்பொலி எழுவதற்காக விழியும் செவியும் கூர்ந்தாள். அவ்வொலியை தன் விழிகளால் பார்த்ததாக அவளுக்குத் தோன்றியது. அவள் படிகளில் இறங்கி கீழே வர சுதமை அவளை நோக்கி ஓடி வந்தாள். “கொம்பொலியை நான் கேட்டேன். அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றாள். “ஆம், அணிவகுப்பை பிறிதொரு முறை சீர்நோக்குக! அது பிழையற்றிருக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். “ஆணை தலைவி, அதைத்தான் செய்யவிருக்கிறேன்” என்று சுதமை சொன்னாள்.

முழுக் கவசஉடையில் நின்றிருந்த சம்வகை உள்கோட்டை முற்றத்தில் நான்கு நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்த கவசப் படைவீரர்களையும், அவர்கள் அருகே வலப்பக்கம் நீள்நிரையென நின்ற அணிச்சேடியரையும் இடப்பக்கம் நின்றிருந்த இசைச்சூதர்களையும் பார்த்தாள். அவர்கள் அனைவருமே அஸ்தினபுரிக்கு புதியவர்கள். அங்கு முன்பு நிகழ்ந்த எந்த அரச வரவேற்பு நிகழ்ச்சியையும் பார்க்காதவர்கள். அவர்களுக்கு இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொரு முறையும் பயிற்சியில் ஏதேனும் ஒன்றை பிழையாகவே செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்ன நிகழவேண்டும் என்பது புரிந்திருந்தது. ஆனால் எப்போதும் சடங்குகளை உடல்கள் கற்று மறந்து சலித்து பின் தன்னியல்பாக இயற்றுகையிலேயே ஒழுங்காக அமைந்தன.

பிழையின்றி ஒன்று இருக்காது என்று அவள் அறிந்திருந்தாள். அது அவர்கள் மட்டுமே அறிந்ததாக, நிகழ்கையில் அரசி அறியாது கடந்து செல்வதாக அமையும் என்றால் அது வெற்றி. ஆனால் எப்பிழை நிகழும் என்று அங்கே நின்று மீளமீள நோக்கியபோது கண்டுபிடிக்க முடியவில்லை. கைவிடுபடைகளும் படைத்திரளும் எந்நிலையிலும் நிகழவிருக்கும் பிழையொன்றை தன்னுள் முன்னரே கொண்டிருக்கின்றன என்றன அரசநெறிநூல்கள். அது மிகத் திறமையாக மறைந்திருக்கிறது. அவ்வாய்ப்பு ஏன் விழிகளுக்குப் படுவதில்லை? நிகழும் வரை அது எங்கிருக்கிறது? அது எவருடைய உள்ளத்தில் முளைத்துக்கொண்டிருக்கிறது? பொருளில் அது வெளிப்படுவதில்லை. பொருளில் வெளிப்படுகையில் மட்டுமே உள்ளத்தில் அது நிகழ்ந்திருப்பது தெரிகிறது.

அனைத்து வீரர்களும் உள்ளம் கிளர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்வின் முதன்மையான தருணம் ஒன்றை இயற்றவிருப்பதாக எண்ணினர். ஆனால் மீளமீள அளிக்கப்பட்ட பயிற்சிகளால் சலிப்பும் அடைந்திருந்தனர். ஆகவே இருநிலை கொண்டிருந்தனர். அந்த அலைவால் அவர்களால் அந்தத் தருணத்தை முழுமையாக நிறைக்க முடியவில்லை. பயின்று பழகிய முந்தைய வீரர்கள் அத்தருணத்தில் முற்றிலும் ஆர்வம் இழந்தவர்கள்போல, முழுமையாக வேறெங்கோ உளம்சென்றுவிட்டவர்கள்போல இருப்பார்கள் என சுரேசர் சொல்வதுண்டு. அவர்களிடம் தெரியும் அந்த ஆர்வமின்மை சடங்கு தொடங்குவதற்கு முன்புவரை பதற்றம் அளிப்பது.

இளமையில் சுரேசர் ஒவ்வொரு முறையும் அந்தப் பதற்றத்தை அடைவதுண்டு என்றார். ஒருமுறை அவருடைய நிலைகொள்ளாமையைக் கண்ட அமைச்சர் கனகர் “அமர்ந்திருக்கும் பறவையைக் கண்டால் அது பறக்குமென எவராலும் எண்ண இயலாது. சிறகு விரிக்கையில் பறவை பிறிதொன்று என ஆகிறது” என்றார். அன்றைய சடங்கில் அர்ஜுனன் நகர்நுழைந்தபோது அத்திரள் வாழ்த்தொலி கூவியது. என்றும் அங்கே அவ்வண்ணம் வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருப்பதுபோல. பிறிதொன்றை அறியாததுபோல. அவ்வாழ்த்தொலியின் உணர்வுகளால் அள்ளிக் கொண்டுசெல்லப்பட்டது. அக்கணம் புதிதென நிகழ்ந்ததுபோல அங்கே நிறைந்து அலைகொண்டது.

அதை பின்னர் எண்ணிக்கொண்டபோது சுரேசர் ஒரு அறியாத் தெய்வம் வந்திறங்கி ஆடி பின்னடைந்ததாகவே கருதினார். “ஆம், அது அனைவரின் கனவுக்குள்ளும் கருவடிவில் உறங்குகிறது. அங்கிருந்து வந்தால் மட்டுமே அது இயல்பாக நிகழும், இல்லையேல் அது வெறும் நடிப்பு” என்றார் கனகர். “அந்த தெய்வம் இங்குள்ள அனைவரையும் வாழ்த்துகிறது. ஒருவரை வாழ்த்தும்போதும் வணங்கும்போதும் மட்டும் மானுடரில் வந்திறங்கும் ஒன்று உண்டு. மானுடரை மானுடர் வாழ்த்துவதில்லை என்று உணர்க! மானுடரில் எழுந்த பிறிதொன்றையே அவர்கள் வாழ்த்துகிறார்கள். வீரத்தை, தன்னளிப்பை, அழகை, மாண்பை, மூப்பை, இளமையை.”

“எந்த வாழ்த்தும் மெய்யாக எழுகையில் தான் எழும் நெஞ்சை கிளரச் செய்கிறது. வாழ்த்தப்படுவது அதிலும் வந்தமைகிறது. அவ்வுள்ளம் விரிவுகொள்கிறது. அதன் ஆழங்கள் வரை ஒளி நிறைகிறது. ஆகவேதான் நூல்கள் வாழ்த்துக என்கின்றன. மூத்தவரை, பெரியவரை, கடந்தவரை வணங்கி வாழ்த்துக! இளையவரை, எழுபவரை, சிறியோரை கனிந்து வாழ்த்துக! வாழ்த்து சொல்லில் எழும் ஒளி. வாழ்த்து நிறைந்திருக்கும் இடங்களில் இருள் திகழ்வதில்லை. வாழ்த்தொலிபோல் மங்கலம் பிறிதொன்றில்லை. இனிய இல்லத்தில் வாழ்த்தொலி ஒழியாதமைய வேண்டும். வெற்றிச்சிறப்புகொள் நகரில் வாழ்த்தொலி என்றும் நிறைந்திருக்க வேண்டும். வாழ்த்தச் சித்தமான மானுடர் தெய்வங்களால் வாழ்த்தப்படுகிறார்கள்.”

சம்வகை அதை முன்னரே கண்டிருந்தாள். வாழ்த்துகூவும் பொருட்டு சாலையோரங்களில் கூடியிருப்பவர்களை. அவர்கள் அரசப்படையினரால் திரட்டப்பட்டோர் என அவளுக்குத் தோன்றும். அமைப்போர் பதறி அலைவார்கள். எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் ஆராய்வார்கள். வாழ்த்தொலிப்போர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. சில தருணங்களில் அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள். விரல்களாலோ படைக்கலங்களாலோ ஒருவரை ஒருவர் தொட்டு செய்திகளை சொல்லிக்கொள்வார்கள். விழிகள் ஒன்றையொன்று நோக்கி உரையாடிக்கொண்டிருக்கும். அத்திரளை நோக்காமல் செவி மட்டும் கூர்ந்தால் மெல்லிய காற்று உலாவும் புதர்போல் ஓசை எழுவதை கேட்க முடியும். அறியாத ஒருவர் அத்திரளைப் பார்த்தால் அது முற்றிலும் ஒழுங்கற்றது என்று தோன்றும்.

ஆனால் உரிய தருணம் எழுந்ததும் அது மிக இயல்பாக செயல்களை செய்யத்தொடங்கும். அவர்களின் குரல்கள் வெடித்தெழும். களிகொண்டு கூச்சலிடுவார்கள். கூத்தாடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அதற்கென்றே வடிவமைக்கப்பட்டவர்கள்போலத் தோன்றுவார்கள். சம்வகை தன் தந்தையுடன் பலமுறை அணிவகுப்புகளை காண வந்திருக்கிறாள். மக்கள்திரளில் இருந்து பார்க்கையில் அங்கே ஒற்றை உயிர் ஒன்று முட்களுடனும் பீலிகளுடனும் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவே தோன்றும். அவளுடைய இளம்விழிகளுக்கு அது ஒரு விந்தைப் பெருவிலங்கென மாயம் காட்டும்.

சம்வகை மீண்டும் மீண்டும் கொம்புகள் எழுவதை கண்டாள். சுதமையிடம் கைகாட்டிவிட்டு அவள் தன் புரவியிலேறி கோட்டைக்கு வெளியே சென்றாள். வெளி முற்றத்தின் விரிந்த பிறைவடிவப் பரப்பில் முந்தையநாளே அங்கிருந்த அயலாரையும் வணிகர்களையும் விலக்கி மையவெளி ஒழித்து இடப்பட்டிருந்தது. அங்கு தங்கியிருந்தவர்கள் இருபுறமும் பிளந்து விலகி காடுகளை ஒட்டி திரண்டிருந்தார்கள். கங்கையிலிருந்து அஸ்தினபுரி வரைக்குமான நெடும்பாதை முழுக்க நிலம்நிறைத்து வந்துகொண்டிருந்த மக்கள்திரளுக்கு நடுவே ஒரு பலகைப்பாதை உருவாக்கப்பட்டிருந்தது.

ஒரே இரவில் அதை தென்னகத்து தச்சர்கள் அமைத்தனர். பலகைகளை நீள்வாட்டில் அமைப்பதே அஸ்தினபுரியில் வழக்கம். சிந்துகங்கை நிலம் முழுக்கவே அவ்வண்ணம்தான். தென்னகத்தார் அதை குறுக்காக அடுக்கினர். அது விந்தையெனத் தோன்றியது. ஆனால் அதை விரைவாகச் செய்ய முடிந்தது. எல்லா வகையான பலகைகளையும் அடுக்க முடிந்தது. பலகையின் ஒருமுனையில் தேர் ஏறும்போது மறுமுனை மேலெழுவதனால்தான் பலகைப்பாதை உடைந்து உருமாறுகிறது எனப் புரிந்தது. “தென்னகத் தச்சர்கள் திறன்கொண்டவர்கள்” என்றார் சுரேசர். “இச்சிறு உண்மை இங்குள்ள தச்சர்களுக்கு ஏன் தோன்றவில்லை?” என்று சம்வகை கேட்டாள். “இங்கே குடிகள் வேரூன்றிவிட்டிருந்தன. புதியவர்கள் எவரும் சேரமுடியாமல் குடிவாயில்கள் மூடப்பட்டிருந்தன. தென்னகம் வளரும் குழவி என ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டிருக்கும் நிலம்” என்றார் சுரேசர்.

சம்வகையும் காவல்படையும் கோட்டைமுகப்பில் வந்து நின்றதும் இரு மருங்கிலும் செறிந்துநின்று நோக்கிக்கொண்டிருந்த மக்கள் உரத்த குரலில் ஓசையிட்டனர். பலர் அவர்களை நோக்கி கைநீட்டி எதையோ கூறினர். பலர் நகைத்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். மீள மீளக் காண்பது அந்த நகைப்பு. தொடக்கத்தில் அவர்களுக்கு ஒரு பெண் அத்தகைய பொறுப்பிலிருப்பது உடன்பாடாக இல்லையோ என்று தோன்றியது. ஆனால் நகைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதை கண்ட பின்னர்தான் அது உவகை வெளிப்பாடுதான் என்றும், அவ்வாறு மட்டுமே அவர்களால் அதை வெளிப்படுத்த இயல்கிறது என்றும் தெரிந்தது. தன்னியல்பாக எழும் சிரிப்பு அது. அவர்களை அவள் பொருட்படுத்துவதில்லை எனினும் அவர்களின் நோக்குகளுக்கு முன்பாக வந்தவுடன் அவள் உடல்மொழி மாறத் தொடங்கியிருக்கும். ஒருபோதும் கடுமையான ஆணைகளை அவர்களை நோக்கி செலுத்த அவளால் இயலாது.

ஆனால் அந்தத் தருணத்தில் அவர்களின் சிரிப்பு சிறு ஒவ்வாமையை உருவாக்கியது. அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும் என்று அவள் அஞ்சினாள். பொதுமக்களுக்கும் முற்றத்தின் திறந்த வெளிக்கும் நடுவே படைவீரர்கள் தங்கள் வேல்களாலும் ஈட்டிகளாலும் ஒரு வேலியை உருவாக்கியிருந்தனர். ஆகவே அவர்கள் முற்றம் நோக்கி பிதுங்கி வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் அவ்வீரர்கள் அனைவருமே புதியவர்கள். அவர்களுக்கு படைக்கலப் பயிற்சி இருந்தது, படைப்பயிற்சியும் இருந்தது, ஆனால் அவை பிறிதொரு நிலத்தில் பிறிதொரு படையில் இணைவதற்கான பயிற்சி இல்லை. அஸ்தினபுரியின் நிலத்தில் அமைந்த அந்தப் புதிய படையில் அவர்கள் இன்னும் தங்களை முழுமையாக பொருத்திக்கொள்ளவில்லை.

சம்வகை காத்து நின்றாள். அத்தகைய தருணங்களில் காலம் துளித்துத் துளித்து சொட்டத் தொடங்கிவிடுகிறது. உள்ளம் பதறிப்பதறி சூழப் பறந்து பின் சலித்து அமர்கிறது. மிகத் தொலைவில் ஒரு முரசொலி. நீரில் ஒரு கொப்புளம்போல தோன்றிய கணமே மறைந்தது. ஒரு கொம்பொலி. ஓர் அலையெனத் தோன்றி மறைந்தது. அவள் நெஞ்சு படபடத்தது. எத்தனை பெரிய தருணம்! பேரரசி நகர்புகுகிறாள். பாரதவர்ஷத்தின் மும்முடியை சூடவிருப்பவள். அழியாச் சொற்களில் இங்கே வாழவிருப்பவள். ஆனால் அவளன்றி எவரும் அதை அப்போது உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதை உணரும் தனிமை அவளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் மீண்டும் முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. அதை அத்திரள் கேட்டுவிட்டிருந்தது. அவர்கள் அமைதியடைந்தனர். கோட்டை மேலிருந்த பெருமுரசு முழங்க கொம்புகள் தொடுத்துக்கொண்டு நீளொலியாகி எழுந்து சுழன்றன. கோட்டை பிளிறி நெளிவதாகத் தோன்றியது. அவள் திரும்பி நோக்கினாள். நீர்ப்பரப்பென ஒளியலைகள் பரவிய வெண்ணிறக் கோட்டை. அதற்கு முகில்கோட்டை என்று பெயர் வந்துவிட்டிருந்தது. அதற்கு ஐராவதீகம் என சூதர்கள் பெயரிட்டிருந்தனர். வெண்களிற்றுயானைநிரை. “முகில்களே யானைகளென்று எழுந்த கோட்டை. தேவர்கள் வந்திறங்குவது அந்த வெண்மதில்களுக்குமேல் என உணர்க!”

கோட்டைக்கு வெண்மை பூசப்பட்டபின் ஒவ்வொரு நாளும் பலநூறு பறவைகள் வந்து அதில் முட்டிமுட்டி இறகொடிந்து விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் உடல்கள் சருகுகள் என கோட்டைக்குக் கீழே கிடந்தன. யானைகள் கோட்டையைக் கண்டதுமே பிளிறியபடி உடல்குறுக்கி நின்றன. துதி நீட்டி துழாவி உடல் அதிர்ந்தன. காளைகளும் அத்திரிகளும் விழிசுருக்கி நின்று மெய்ப்புகொண்டன. நகரில் நிறைந்திருந்த ஒளி அனைத்து நிழல்களையும் அழித்திருந்தமையால் மக்கள் கோட்டையருகே வருவதை தவிர்த்தனர். பெருஞ்சாலைகள் மேலும் பெரிதாகத் தெரிந்தன. அங்கிருந்த கூழாங்கற்கள்கூட ஒளிகொண்டன. ஆனால் சில நாட்கள்தான். விரைவிலேயே அது விழிகளுக்குப் பழகியது. என்றும் அவ்வண்ணமே இருந்தது எனத் தோன்றியது.

அவள் கோட்டையின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தாள். அது வீசிய ஒளியில் அவள் நிழல் காலடியில் விழுந்து மண்ணில் கரைந்ததுபோல் தெரிந்தது. அந்நிழல் முரசொலியில் அதிர்ந்தது. இக்கணத்தில் என் அகம் இத்தனை எண்ணங்களாகப் பிரிவது ஏன்? இதன் கூர்மையை ஏன் இப்படி தவிர்க்கிறேன்? இக்கோட்டையின் கற்கள் என, இந்த அறியா மக்கள் என, இவ்விலங்குகள் என ஏன் இத்தருணத்தில் மிதந்து நிற்க என்னால் இயலவில்லை? அறிந்தோர் அறிவின் சுமை பொறுத்தாக வேண்டிய பொறுப்பை கொள்கிறார்கள். அறிந்தோர். அறிந்தோர். அறிந்தோர். அது முரசொலியின் தாளம். அறிந்தோர் அறிந்தோர் அறிந்தோர் என ஓசையிடுகின்றன தொலைவில் முரசுகள்.

உடைவாளின் பிடியில் கைவைத்தபடி நிமிர்ந்து நின்றாள். அவளுடைய அசைவே ஆணையென்றாக அவளுக்குப் பின்னால் அணிப்படையினர் வெள்ளி மின்னும் கவசங்களுடன் நான்கு நிரைகளாக சீர் நடையிட்டு வந்தனர். தனக்குப் பின்னால் அவர்களின் ஓசைகள் திரள்வதை அவள் கேட்டாள். அவ்வோசையிலிருந்தே அவர்களின் அணிநிரையை உணர முடிந்தது. இசைச்சூதர்கள் இடப்புறமும் மங்கலச்சேடியர் வலப்புறமுமாக திரண்டனர். உள்ளிருந்து நூற்றெட்டு அந்தணர்கள் நிறைகுடங்களுடன் வந்து முகப்பில் மூன்று நிரைகளாக அணிவகுத்தனர். அவள் தலையைத் திருப்பி அவர்களை பார்க்கவில்லை. ஆனால் அந்த அணிவகுப்பு முற்றிலும் சீராக அமைந்திருப்பதை ஓசைகளிலிருந்து உணர்ந்தாள்.

முழுமை, பிழையின்மை, முழுமை. பிழையெழுவது அம்முழுமையின்மேல்தான். பெருமரத்தில் நாய்க்குடை என அது முளைக்கிறது. அவள் கவலை பெருகி வந்தது. அவள் பெருமூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டாள். தொலைவிலிருந்து முரசொலியும் கொம்பொலிகளும் பெருகி எழுந்து வந்தன. கோட்டைச்சுவரில் அறைந்து திரும்ப அதே விசையுடன் எழுந்தன. கோட்டையை அவள் ஒருகணம் திரௌபதியின் பார்வையில் பார்த்தாள். அங்கு அவள் எதிர்பார்க்கக்கூடியது கரிய இருட்திரை என்று எழுந்து நின்ற தொன்மையான கோட்டையை. மகாமரியாதம் என்று அது சூதர்களால் அழைக்கப்பட்டது. கருங்களிற்றுயானைநிரை. அதன் மீதமைந்த மரத்தாலான காவல்மாடங்களை. இரும்புக் கீல்களும் உருளைகளும் கொண்டு கல்லென்றே மாறிவிட்டிருந்த கதவுகளை.

இதோ வெண்ணிற ஒளியுடன் புதிய கோட்டை நின்றிருக்கிறது. “பாற்கடலின் அலையொன்று எழுந்து நின்றதுபோல!” என்று அதை ஓர் அயல்நிலத்துச் சூதன் பாடினான். “ஒரு மாபெரும் புன்னகை. ஒளிரும் பல்நிரை” என்றான் அவன் தோழன். “மண்மகள் அணிந்த வெண்பட்டு மேலாடை” என்றான் இன்னொருவன். அதன் காவல்மாடங்கள் அரக்கு மின்னும் மரத்தாலானவை. அனைத்துக் கீல்களும் குமிழ்களும் பொன்னென மின்னின. உள்ளே நகரத்தெருக்களின் இருமருங்கும் அன்று கட்டப்பட்டவை போன்ற கட்டடங்கள். அவை பீதர்நாட்டு ஆடிகளால் விழிகள் கொண்டன. அஸ்தினபுரி சற்று முன்னர் கருவூலத்திலிருந்து எடுத்து வெண்பட்டுத் துணியால் துடைத்து பீடத்தின்மேல் வைக்கப்பட்ட அருநகை போலிருந்தது.

நகர் மாறிவிட்டிருப்பதை பேரரசி அறிந்திருப்பாள். ஆனால் அவள் விழிகள் இயல்பாக பழைய நகரையே தேடும். புதிய நகர் அவளை துணுக்குறச் செய்யும். அவள் எதை காண்பாள், எவ்வண்ணம் உணர்வாள்? ஒருகணம் அவள் விழி விரிவதை தான் காணவேண்டும் என்று சம்வகை எண்ணினாள். அத்தனை நாட்கள் அங்கு பணியாற்றியதன் உளநிறைவை அப்போது அவள் அடையக்கூடும். இந்திரப்பிரஸ்தத்தை எழுப்பிய அரசியின் முன் இந்நகரின் புதுமை ஒன்றும் பெரிதல்ல எனினும்கூட அந்த ஒருகண விழியசைவே போதுமானது.

அத்தனை விரைவாக அந்நகர் மீண்டெழுமென்று அப்பணிகளைத் தொடங்கியபோது அவள் எண்ணவே இல்லை. யுதிஷ்டிரன் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சினம் கொண்டு விசையூட்டிக்கொண்டே இருந்தார். “அவர் என்ன எதிர்பார்க்கிறார்? ஒரு முழு நகரையும் ஏழெட்டு நாட்களில் திருப்பிக்கட்டுவதா?” என்று அவள் சொன்னாள். “இயலும், மீண்டெழுபவை மிகமிக விரைவாகவே எழுந்திருக்கின்றன” என்று சுரேசர் சொன்னார். “நம்மிடம் செல்வம் உள்ளது. கைகள் உள்ளன. காலம் ஒரு பொருட்டா என்ன?” அவள் எண்ணியதைவிட பலமடங்கு விசையுடன் அப்பணி நடந்தது. ஒவ்வொரு பணிக்கும் பத்துபேர் செய்யவேண்டிய இடத்தில் நூறுபேர் வந்தமர்ந்தனர். நூறு பேரும் திறன் மிக்கவர்களாக, அத்துறையில் தேர்ச்சிமுதன்மை கொண்டவர்களாக இருந்தனர். அஸ்தினபுரி தன்னை தானே பழைய அஸ்தினபுரியிலிருந்து கீறி வெளியே எடுத்துக்கொண்டது.

சம்வகை திரௌபதி அங்கு வந்து அவ்வரவேற்பை ஏற்று கடந்துபோவதை உள்ளத்திற்குள் ஒருமுறை நடித்துவிட்டாள். பின்னர் ஒருகணம் திகைப்பெழுந்து அதை திரும்பப் பார்த்தபோது அரசி அணிகளேதுமின்றி இருப்பதை தான் கண்டதைப்போல் உணர்ந்தாள். நெடிய மெல்லுடல் கொண்ட கரிய அன்னைவடிவம். நிமிர்ந்த தலை சற்றே சரிய, பெரிய குழல்சுருள்கள் தழைய, கடுமையும் கனிவுமென விரிந்த தெய்வ விழிகள் கொண்டு நோக்குபவள். உடலில் பொன்னென்றும் அணியென்றும் ஒரு துளி மின்கூட இல்லை. கருவறையில் முதற்புலரியில் அணியிலி கோலத்தில் நின்றிருக்கும் கற்சிலை.

அவள் படபடப்படைந்தாள். முந்தைய நாளே அனைத்து அணிகளையும் கங்கைக்கரைக்கு அனுப்பியிருந்தார்கள். துணையமைச்சர் சுதமன் அவ்வணிகளுடன் உடன் சென்றார். அவர் அங்கே தங்கி, அரசி வந்திறங்கியதும் நேரில் கண்டு, அனைத்து அணிகளையும் கொடுத்து அவை பேரன்புடன் யுதிஷ்டிரனால் அவளுக்காக தேர்ந்தெடுத்து அளிக்கப்பட்டவை என்று கூறவேண்டும் என பணிக்கப்பட்டிருந்தார். அவற்றை அணிந்தே அரசி நகர்புக வேண்டுமென்று அரசர் கனிந்து கோருகிறார் என்று கூற ஆணையிடப்பட்டிருந்தது. அவர் அங்கு சென்று காத்திருந்தார். முந்தைய நாள் அந்தியிலேயே அங்கு திரௌபதி வந்திருந்தாள். அவளிடம் அணிகளை அளித்த செய்தியும் வந்துவிட்டிருந்தது.

அரசி இரவு துயின்று புலரியில் எழுந்து கிளம்பியிருந்தாள். அவள் அணிநகை அணிந்திருக்கிறாளா என்பதை சுதமன் செய்தியென அனுப்பியிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. அதை சுதமன் செய்ய இயலாது. அரசி தன் தனியறையில் அந்நகைகளை அணிந்திருக்கலாம். மூடுதேரில் அவளை நோக்க அவரால் இயலாமலிருக்கலாம். அந்நகைகளை அணிவிக்கும் பொருட்டு ஏழு அணிச்சேடியர் சுதமனுடன் அங்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் உசாவி அச்செய்தியை சுதமன் அஸ்தினபுரிக்கு அனுப்பியிருக்கலாம். ஒருவேளை அச்செய்தி சுரேசரை வந்தடைந்திருக்கலாம்.

அவள் காலையிலிருந்து சுரேசரை பார்க்கவில்லை. கோட்டையையும் அரண்மனையையும் முழுமையாக சுற்றி அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தானே சீர்நோக்கிவிட்டு அவள் கிழக்குமுகப்பிற்கு வருவதற்குள் இளவெயில் வாளொளி கொண்டிருந்தது. அஸ்தினபுரிக்குள் பேரரசி அணியேதும் இல்லாமல் நுழைவதைப் பற்றி அவளால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. அது அங்கு திரளென கூடியிருக்கும் அனைத்து விழிகளையும் ஏமாற்றம் அடையச்செய்யும். எளிய குடியினர் மானுடரை அரசரென்று பார்ப்பது அணிகளினூடாகவே. முடிசூடுகையிலேயே அரசர்கள் தெய்வச் சாயல் கொள்கிறார்கள். ‘அகல் விளக்குக்கு சுடர் என அரசருக்கு மணிமுடி’ என்று சூதர் பாடல் உண்டு. சுடரிலா விளக்கு ஒரு வெற்றுச் சிமிழ் மட்டுமே.

அணிகள் இன்றி ஓர் அரசி மணிமுடிசூடி அமர்ந்தது முன்பெப்போதேனும் நிகழ்ந்திருக்கிறதா என்று அவள் எண்ணிப்பார்த்தாள். அரசநூல்கள் எவையும் அவ்வண்ணம் சொன்னதாக அவள் நினைவுக்குப் படவில்லை. முன்பு தேவயானியும் தபதியும் தமயந்தியும் சத்யவதியும் அவையமர்ந்தபோது சூடிய அணிநகைகளின் நீண்ட அட்டவணையையே நூல்கள் கூறின. அவர்கள் மண்ணில் உள்ள அனைத்து அழகுகளையும் நகைகளாக்கி தங்கள்மேல் அணிந்திருந்தனர். தளிர்களை, மலர்களை, கற்களை, நீரை, நெருப்பை, முகிலை. ‘நிலம் அனைத்து அழகுகளையும் சூடுவதுபோல பெண்டிர் நகைகொள்கிறார்கள்’ என்று அதை அரசநூல் கூறியது.

அவள் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற எண்ணத்தை அடைந்தாள். இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கலக் கொடியுடன் தொலைவில் முதல் வீரன் வருவதை பார்த்தாள். அக்கொடி மட்டும் ஒரு பொன்னிறப் பறவை என வருவதாகத் தோன்றியது. தொடர்ந்து கவசஉடை அணிந்த புரவிவீரர்கள் அணிவகுத்து அணைந்தனர். அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் நெருங்கி வந்தன. வாழ்த்தொலி எழுப்பியபடி சூதர்கள் நிறைந்திருக்க தட்டுத்தேர் முதலில் வந்தது. இசைச்சூதருடன் இன்னொரு தேர். அவை வளைந்து இருபுறமும் விலக நடுவே புரவிவீரர்களால் காக்கப்பட்ட திரௌபதியின் தேர் தொலைவில் அணுகி வந்தது.

இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியுடனும், அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடனும், பாஞ்சாலத்தின் விற்கொடியுடனும் வந்த மூன்று கவசவீரர்கள் ஒளிரும் வெள்ளிக் கவசமணிந்த புரவிகளில் மூன்று அம்புகள் பாய்ந்துவருவதுபோல் சுடர் கொண்டு அணுகினர். விரைவழிந்து புரவிகள் நிரைகொள்ள அவர்கள் கொடியை ஊன்றி உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். “பாஞ்சாலத்தின் அனல்மகள், இந்திரப்பிரஸ்தத்தின் தலைவி, அஸ்தினபுரியின் அரசி, குருகுலத்தின் அன்னை, குடிகளின் தெய்வம், பேரரசி திரௌபதி அணுகுகிறார்!” என்று கூவினர்.

அங்கு கூடிநின்ற படைவீரர்கள் அனைவரும் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி “பேரரசி வாழ்க! பேரரசி வாழ்க! வெல்க பாஞ்சாலப் பேரரசி! வெல்க கொற்றவை! வெல்க திருமகள்! வெல்க கலைமகள்!” என்று கூவினர். கொடிவீரர்கள் இருபுறமும் விலகி அகல திரௌபதியின் தேர் அணுகி புரவிகள் குளம்புகள் மாற்றி மிதித்து நிலைகொள்ள விசையழிந்து கரையணுகும் படகென அசைந்தாடி நின்றது. வேதியர் பொற்குடங்களில் கங்கை நீருடன் வேதம் ஓதியபடி மூன்று நிரைகளாக தேரை அணுகினர்.

திரௌபதி திரைவிலக்கி தேரின் படிகளில் இறங்கி மண்ணில் கால் வைத்தாள். வேதியர் வேத முழக்கத்துடன் அவள் மேல் கங்கை நீர் தெளித்தனர். மஞ்சள் அரிசியும் மலர்களுமிட்டு அவளை வாழ்த்தினர். கைகூப்பி குனிந்து அவள் அந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டாள். வேதியர் வாழ்த்தியபடி பிரிந்து அப்பால் விலக அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் அவளை அணுகி வாழ்த்துரைத்தனர். “மங்கலச்செல்வி, பெருவளத்தாட்டி, விளைபெருகும் பெருநிலமென்றானவள், குடிகாக்கும் அன்னை, அஸ்தினபுரியின் பேரரசி திரௌபதிக்கு நல்வரவு” என்று மூத்த சேடி கூறினாள். அவள் மேல் மஞ்சள் நீர் மலருடன் தெளித்து வாழ்த்தி அவர்கள் இடப்பக்கமாக விலக இசைச்சூதர் இருபிரிவினராக பிரிந்து வழிவிட்டு நின்று மங்கல இசைமுழக்கினார்கள்.

சம்வகை சீர்நடையிட்டு முன்னால் செல்ல அவளுக்குப் பின்னால் கவசஉடை அணிந்த வீரர்கள் சீரான நடையோசையுடன் வந்தனர். அவள் அருகணைந்து தன் உடைவாளை உருவி நிலம் நோக்கி தாழ்த்தி தலைவணங்கினாள். திரௌபதி புன்னகைப்பதை அவள் நோக்காமலேயே உணர்ந்தாள். நிமிர்ந்தபோது அப்புன்னகையைக் கண்டு தானும் புன்னகைத்தாள். “உன் பெயர் சம்வகை அல்லவா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அரசி” என்றபோது சம்வகை மெய்ப்பு கொண்டாள். “உன்னைப்பற்றி யுயுத்ஸுவிடம் கேட்டறிந்தேன். அவன் விழிகளில் ஒரு சிறு மின்னலைக் கண்டேன்” என்றாள். சம்வகை நெஞ்சு படபடக்க நின்றாள்.

“நன்று” என்றபடி பேரரசி திரும்பும்போதுதான் அவள் அணி நகைகள் எதுவுமே அணிந்திருக்கவில்லை என்பதை சம்வகை கண்டாள். தேரிலிருந்து இறங்கி வரவேற்புகளையும் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளும் போதெல்லாம் அது தெரியவும் இல்லை. அவள் முழுதணிக்கோலத்தில் இருப்பவள் போலத்தான் தோன்றினாள். எண்ணியிராக் கணத்தில் பின்னால் அணிவகுத்து நின்ற படைவீரர்களில் ஒருவன் நிரைமுறித்து முன்னால் பாய்ந்து தனது ஈட்டியை வான் நோக்கி வீசி “பேரரசி திரௌபதி வெல்க! பாரதவர்ஷத்தின் பேரரசி வெல்க! எரியெழுந்த மங்கை வெல்க!” என்று கூவினான். அணிவகுத்து நின்றிருந்த அனைத்து வீரர்களும் கலைந்து அவனை திரும்பிப்பார்த்தனர். சம்வகை திகைத்து உடல் செயலிழந்து நின்றாள்.

ஆனால் அதற்குள் இருபுறங்களிலும் கூடி நின்ற பொதுமக்கள் பெரும் வாழ்த்துக் கூச்சலுடன் தங்களைக் காத்து நின்றிருந்த படைவேலியை உடைத்தபடி முற்றத்தை நிறைத்து அவர்களை நோக்கி வந்தனர். கைகளை வீசி, துள்ளிக்குதித்து, வெறிகொண்டு வாழ்த்தொலி எழுப்பினர். கையிலிருந்த ஆடைகளை வான் நோக்கி வீசிப்பிடித்தனர். கண்ணீரும் சிரிப்பும் அழுகைகளுமாக முகங்கள் வெறித்து மிதந்து அலைந்து கொந்தளித்தன. ஒரு கணத்தில் அஸ்தினபுரி அதன் முந்தைய யுகத்தை சென்றடைந்தது. முதல் முறையாக அதில் குடிகள் உருவாகி வந்துவிட்டிருப்பதை சம்வகை கண்டாள். முதலில் எழுந்த பதற்றமும் திகைப்பும் அகல உளம் நிறைந்து விழிநீர் மல்கி அவள் புன்னகைத்தாள்.

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2

$
0
0

புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை

புத்தகக் கண்காட்சி – கடிதம்

 

அன்புள்ள ஜெமோ,

 

புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை பற்றிய செய்திகளை வாசித்தேன். எனக்கு இதுவே தோன்றியது. சென்ற பல ஆண்டுகளாகவே புத்தகக் கண்காட்சியைக் கைப்பற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. புத்தகக் கண்காட்சியை எப்போதும் அரசுசார்பானவர்களே நடத்துவார்கள். நாளை திமுக வந்தால் இதுவே திமுக விழா போல ஆகிவிடும். இப்படி அரசியலை கலந்தால் நாளடைவில் இங்கே இலக்கியமோ அறிவுச்செயல்பாடோ இல்லாமலாகிவிடும்.

 

சு.வெங்கடேசன் எம்பி கீழடி பற்றி பேசவந்த இடத்தில் அரசை கண்டித்துப் பேசினார். மிகக் கடுமையான கண்டனம். கூடவே அரங்கிலிருந்தும் கூச்சல்கள். இனி இதை எல்லாரும் செய்வார்கள். கைதட்டல் கிடைக்கும். மேடைகளை கைப்பற்றுவார்கள். இது தவறான முன்னுதாரணம். இனி எல்லாரும் இப்படி பேச ஆரம்பித்தால் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். ஒரு போலீஸ் உத்தரவை போட்டலே புத்தகக் கண்காட்சியைக் காலிபண்ணிவிடலாம்.

 

அதை அஞ்சி இனி இவரைப் போன்றவர்களைக் கூப்பிடாமலிருந்தால் இடதுசாரிகளைப் புறக்கணிக்கிறார்கள் என்று கூச்சல் எழும். எடப்பாடி வந்ததற்கு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் தமிழக முதல்வர். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். ஆனால் மதுரை புத்தக விழாவை பார்வையிட அழகிரி ஏன் வந்தார்? அவருக்கு எழுதப்படிக்க தெரியுமா என்ன?

 

இவர்கள் செய்வதை எதிர்த்து அதிமுகவும் பாஜகவும் இதே புத்தகக் கண்காட்சிக்கு வந்த கூச்சலிட ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்? இவர்கள் தங்கள் அரசியலை தெருவில் வைத்துக்கொள்ளட்டும். இங்கே கூட்டம் வருகிறது என்று இங்கே வந்து கூச்சலிடுகிறார்கள். இவர்களின் இந்த அரசியலால் இங்கே எதையுமே பேசமுடியாமலாகி விடுகிறது. இவர்களின் கூச்சலுக்கு ஒத்துபோகாமல் வேறு எதைப்பேசினாலும் இவர்களின் பார்வையில் அது துரோகம்தான். உண்மையில் கருத்துரிமைக்கு எதிரானவர்கள் இவர்கள்தான்.

 

டி.ராஜ்குமார்

 

அன்புள்ள ஜெ

 

நீங்கள் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதியதை ஒட்டி ஒரு கேள்வி எழுந்து எங்கள் நண்பர் வட்டாரத்திலே பேசப்பட்டது – அரசியல் பேசப்படாத ஒரு தளம் இருக்கமுடியுமா? அரசியல் அண்டாமல் கருத்துச்செயல்பாடு நடைபெற முடியுமா? அது இயல்பாக இருக்குமா?

 

இல்லை என்றே அரசியல்வாதிகள் சொல்வார்கள். அரசியல் இல்லாத இடமே இல்லை என்பார்கள். அரசியல் இல்லாத இடம் தேவையில்லை, இருக்கவிடமாட்டோம் என்பதே அதன் பொருள்

 

அரசியல் தேவை. அரசியலுணர்வும்தேவை. ஆனால் அதைத்தவிர வேறேதும் தேவையில்லை என்பது அப்பட்டமான ஃபாஸிஸம். அதுவும் எங்கள் அரசியல் மட்டுமே எங்கும் தேவை என்பது ஃபாஸிசத்தின் உச்சம். அதுவே இங்கே நடைபெறுகிறது.

 

இங்கே இருப்பது அதிகார அரசியல். இருதரப்பும் வெறிகொண்டிருக்கின்றன. வேறெந்த மூச்சொலியும் கேட்கக்கூடாது என்கின்றன. ஆனால் இந்த அரசியலுக்கு அப்பாலும் சில இடங்கள் இருந்தாகவேண்டும். சில நுட்பமான அந்தரங்கமான இடங்கள்

 

சுதந்திரப்போர் உச்சத்திலிருந்த காலகட்டத்தில்கூட தத்துவவிவாதம், மொழியாக்கம் எல்லாம் அதனுடன் சம்பந்தமில்லாமல் நடந்துகொண்டிருந்தன. அதைச்செய்தவர்களில் பலர் அன்றைக்கு துரோகிகள் என்றுகூட பழிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று அவர்களின் சாதனைகளே நின்றுகொண்டிருக்கின்றன. உதாரணம் உவேசா

 

ஆகவே இந்தக் கூட்டம் எல்லாவற்றையும் தங்கள் அரசியலாக ஆக்குவதை தடுக்கத்தான் வேண்டும். இதற்கு அப்பால் தன் தனியான தேடலையும் தவத்தையும் இயற்றும் ஒரு வெளியை நாம் பேணிக்கொள்ளவே வேண்டும்

 

எனக்கு பறவையியலில் ஈடுபாடு. அதற்காகத்தான் நான் புத்தகம் வாங்கவந்தேன். [நாம் விசும்பு வழியாக சந்தித்துக்கொண்டோம்] என்னை தடுத்து என் கையில் துண்டுப்பிரசுரம் தருகிறார்கள். நான் கண்டுகொள்ளாமல் போனபோது ஒருவர் என்னை பெட்டை என்று பழித்தார். நான் தலைகுனிந்து நடந்து உள்ளே போனேன். புத்தகம் பார்க்கமுடியாமல் ஒரே கூச்சல். குழப்பம். பல மதங்களின் ஸ்டால்கள். ஆளுக்காள் மதக்கூச்சல். புத்தகக் கண்காட்சியில் மதச்சண்டை தொடங்கினாலும் ஆச்சரியப்படமாட்டேன். மனம் நொந்து வெளியே வந்துவிட்டேன்

 

 

ஜெயக்குமார் அர்விந்த் .

 

[பிகு- க.ரத்னம் அவர்களின் பறவைகளைப் பற்றிய நூலை உங்களுக்கு வாங்கி அனுப்பியிருந்தேன். நீங்கள் ஒரு மதிப்புரை எழுதவேண்டுமென எதிர்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை

$
0
0

சென்னையில் ஜனவரி 11, 2020 அன்று நிகழ்ந்த ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய தீம்புனல் நாவல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.

==========================================================================================

தீம்புனல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் ஆம்ரே கார்த்திக்

==========================================================================================

 

ஸ்ரீனிவாசன் நடராஜன் உரை

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சோஃபியாவின் கடைக்கண்

$
0
0

Ancient marble statue of Sophia, Goddess of Wisdom, at the Celcus Library at Ephesus, Turkey — Photo by igercelman 

அன்புள்ள ஜெ

 

புத்தகக் கண்காட்சி பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்தக்குறிப்பு என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. இதிலுள்ளது ஓர் உண்மையான உணர்ச்சி. உண்மையிலேயே அறிவியக்கத்துள் இருக்கும் ஒருவரின் உள்ளம் இது

*

போன வருடம் வாங்கிய படித்த புத்தகங்கள், இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள் என பலரும் இடும் பட்டியல் தமிழ் அறிவுப்பரப்பு எவ்வளவு பெரியது என்பதை நினைவூட்டுகிறது. அந்தப் பட்டியல்களை நான் கவனமாக சேமித்துக்கொள்கிறேன். இன்னும் நாம் படிக்க விரும்பி படிக்காத புத்தகங்கள் , வாங்க ஆசைப்படும் புத்தகங்களின் பட்டியல்களும் முக்கியம்தான்.

 

எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு சூழலில் எழுதிக்கொண்டும் பதிப்பித்துக்கொண்டும் வாசித்துக்கொண்டும் ஒரு இரகசியப்படை இங்கு செயல்படுகிறது. புதிதாக வெளிவந்த தன் புத்தகத்தை அன்று முழுக்க எடுத்து தடவிப்பார்க்கும் எழுத்தாளனும் புதிதாக வாங்கி வந்த புத்தகங்களை அடுக்கிவைத்து அவற்றைக் கனவுகாணும் வாசகனும் ஒரே மனநிலையால் பிணைக்கப்பட்டவர்கள். இந்த பைத்திய நிலை இருக்கும்வரைதான் இங்கே அறிவார்ந்த பண்பாடு என்று ஒன்று இருக்கும்.

 

நேற்று ஒரு பதிப்பக ஸ்டால் எங்கே இருக்கிறது என்று கண்காட்சியில் கேட்ட பார்வையற்ற மனிதனுக்கு வழிசொன்னேன். அறிவின் ஒளியே கண்களின் ஒளி.

 

இதற்கெல்லாம் வெளியே ஒரு கும்பல் கண்காட்சி, பதிப்பாளன், எழுத்தாளன், புத்தகங்கள் என அனைத்திற்கும் எதிராக ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்தவாரம் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நாம் இருப்போம்.

 

மனுஷ்யபுத்திரன்

 

ஆனால் இணையத்தில் ஒருசாரார் நூல்களுக்கு எதிராக ,வாசிப்புக்கு எதிராக எழுதும் கேலிகளையும் கிண்டல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த மனநிலை எங்கிருந்து வருகிறது? இதில் எழுத்தாளர்களும் பலர் உள்ளனர்.

 

ஆர், மகேந்திரன்

 

 

அன்புள்ள மகேந்திரன்

 

நான் 20 ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர்.வேதசகாயகுமாரின் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அவர் பெரிய வாசகர், விமர்சகர். அவருடைய ஆசிரியத்தோழர் ஒருவர் என்னிடம் சொன்னார். “நான் ஒண்ணுமே படிக்கிறதில்லீங்க. சொந்தமா அறிவிருக்கறவன் படிக்க வேண்டாம். இல்லாதவன்தான் படிச்சு தேறணும்..”

 

இதுதான் தமிழகத்தின் பொதுவான உளநிலை. அறிவியக்கத்தை, அது எதுவாக இருந்தாலும், தமிழ் பாமர உள்ளம் அஞ்சுகிறது. அதன்முன் தாழ்வுணர்ச்சி கொள்கிறது. ஆகவே அதை ஏளனம்செய்து கடக்க முயல்கிறது, இதைச் சந்திக்காத எந்த வாசகரும் இருக்க முடியாது.

 

“வாசிச்சா பைத்தியம் புடிச்சிரும்” “வாசிச்சா படிப்பு வியாபாரம்லாம் பாதிக்கும்” “வாசிக்கிறவன் உலகம்தெரியாதவன்” இந்த வகையான எத்தனை சொற்களைக் கேட்டிருப்போம். உண்மையில் இலக்கியவாசிப்பைப் பற்றி மட்டுமல்ல எந்தவகையான வாசிப்பைப் பற்றியும் இதே எண்ணம்தான் இங்குள்ளது. நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவரைக்கூட ஏளனமாகத்தான் நம் சமூகம் பார்க்கிறது.

 

அதையும்விடுங்கள், நேரடியாக பணமாக மாறாத ஏதாவது ஒரு திறமை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். மண்ணைப் பற்றி நீரைப் பற்றி வானைப் பற்றி ஏதேனும் அறிவு இங்கே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? இசைக்கல்வி, மதக்கல்வி, மரபிலக்கியக் கல்வி கூட இன்று ஏளனத்திற்குரியதே.

 

நான் ரயிலில் அல்லது வேறு பொது இடங்களில் சந்திப்பவர்கள் என் கையில் நூல் இருப்பதைக் கண்டால் உடனே உபதேசத்தை தொடங்கிவிடுவார்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியிலிருந்து வந்தபோது ஒருவர் நக்கலுடன் “இப்டில்லாம் வாசிச்சா வாழ்க்கையிலே முன்னேற முடியுமா?” என ஆரம்பித்தார். ஏதோ வியாபாரம் செய்பவர். “உங்க வருஷ  வருமானம் என்ன?” என்றேன். அவர் சொன்னதும் “அதை விட எட்டு மடங்கு கூடுதல் என் வருமானம். பொத்திட்டு இருய்யா” என்றேன். வாயை மூடிக்கொண்டார். இந்த மொழி மட்டுமே அவர்களுக்குப் புரியும்

 

இந்த உளநிலை இன்று இணையத்திலும் வந்துள்ளது. காரணம் ஜியோ. ஜியோ இணையசேவையை இலவசமாக்கி, செல்பேசியிலேயே அளித்தது. ஆகவே பொதுவாக எந்தவகையான அறிவார்ந்த தகுதியுமில்லாதவர்கள்கூட இணையவெளிக்கு வந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் இணையம் வாசிப்பு பரவ, நூல்களைப் பற்றிய செய்திக்ளை விரிவாக்க உதவியது. அதிலிருந்தவர்கள் ஓரளவு படித்த, உலகமறிந்த இளைஞர்கள். இன்று எல்லா வகையான பாமரக்குரல்களும் உள்ளே ஒலிக்கின்றன. அப்படியே நம் டீக்கடைத்தரம் அமைந்துள்ளது. இதுவே நீங்கள் காண்பது.

 

எழுத்தாளர்களில் எழுத்து, வாசிப்புக்கு எதிரான உளநிலை கொண்டிருப்பவர்கள் எவர்? இலக்கியவாதிகளாக தங்களை கருதிக்கொள்பவர்களில் பலர் ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் மட்டும் இலக்கியம் வாசித்தவர்கள். எழுதுவதற்கான ஒரு பொதுவான வடிவ அறிமுகம் கிடைத்ததும் எழுதத் தொடங்கிவிட்டவர்கள். அவர்களை விட இங்குள்ள பொதுவான இலக்கிய வாசகன மேலும் படித்தவன், மேலும் அறிந்தவன். ஆகவே அவன் இவர்களை பொருட்படுத்துவதில்லை.

 

”திரள்” என்பது இரக்கமற்றது. இதை சினிமாக்காரர்கள் அளவுக்கு அறிந்த எவரும் இருக்க மாட்டார்கள். அது எவருக்கும் எந்த கனிவையும் காட்டுவதில்லை. முக்கியமானவர்களா, பயனுள்ளவர்களா  என்று மட்டுமே பார்க்கும். இல்லையென்றால் தூக்கிவீசிவிட்டுச் செல்லும். கொண்டாடியவர்களையே வீசிவிட்டுக் கடந்துசெல்லும்.

 

புத்தகக் கண்காட்சியில் வருவது திரள். அது ஒவ்வொரு எழுத்தாளரிடமும் அவர்கள் எவர் என இரக்கமில்லாமல் சொல்கிறது. அது மேலே சொல்லப்பட்ட ‘சிறிய’ எழுத்தாளர்களின் தன்முனைப்பை அடிக்கிறது. வீங்கி நீலம் பாரிக்க வைக்கிறது. அந்த பதற்றம், தவிப்பு, தனிமை மெல்லமெல்ல கசப்பாக ஆகிறது. தன்னை நிராகரிக்கும் ஒன்றை தான் நிராகரிப்பதே மனிதர்களின் இயல்பு. அதற்குத்தான் இந்த நக்கல் நையாண்டி எல்லாமே.என்றேனும் நானும் வெல்வேன் என தன்னுள் மெய்யாகவே சொல்லிக்கொள்பவனிடம் இந்த நையாண்டி எழுவதில்லை.

 

மனுஷ்யபுத்திரன் சொல்வதுபோல அறிவியக்கம் என்பது பலவகையான உளக்கிளர்ச்சிகளால் ஆனது. இன்றும் புதியநூல்கள் எனக்கு பரவசத்தையே அளிக்கின்றன. அருண்மொழி புத்தகவிழாவில் வாங்கி வந்த நூல்களை நானே கைப்பட மாற்றிமாற்றி அடுக்கி வைத்தேன். என் வீடே ஒரு நூலகம். ஆனாலும் நூல்களை கொண்டுவந்தபடியே இருக்கிறேன். நூல்களை அடுக்கிவைப்பதில் பேருவகை அடைகிறேன்

 

நினைத்துக்கொண்டு ஒரு நூலை எடுத்துப்பார்ப்பது இன்னொருவகை கிளர்ச்சி. நேற்று முனைவர் யோ.ஞானசந்திர ஜான்சன் எழுதிய இராபர்ட் கால்டுவெல் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நடுவே சம்பந்தமே இல்லாமல்   சுந்தரராமசாமி கட்டுரைகளை கொஞ்சம் வாசித்தேன். பி.கேசவதேவுக்கும் ஆரியசமாஜத்திற்கும் இடையேயான உறவை கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன். இந்தப்போதையும் கிளர்ச்சியும் அஸ்வலாயனரில், அரிஸ்டாட்டிலில் இருந்தே இருந்துகொண்டிருப்பது. மானுடம் உள்ளளவும் இருக்கும். இதுவே அறிவியக்கத்தில் இருப்பவர் அடையும் மகிழ்ச்சி. இதை வெளியே எவரும் உணரவே முடியாது.

 

எழுத்தாளர்கள் அன்றும் இன்றும் எனக்கு முக்கியமானவர்களே. கி.ராஜநாராயணனை சமீபத்தில் கைகளை தொட்டுப்பேசினேன். அந்த தருணத்தின் இனிமையை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். எச்.எஸ்.சிவப்பிரகாஷின் அருகே அமர்ந்திருக்கையில் என் உள்ளம் கிளர்ந்தபடியேதான் இருந்தது. இளைய படைப்பாளிகளின் கைகளைப் பற்றிக்கொண்டு பேசுகையில் உவகை எழுகிறது. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் கொப்பளித்தபடியே இருக்கிறேன். எந்தக் கேளிக்கையும் அதற்கு நிகர் அல்ல

 

அறிக, இந்தியாவில் ஒருவன் காணச்சாத்தியமான எல்லா உச்சகட்ட கேளிக்கையிடங்களிலும் நான் இருந்திருக்கிறேன். நானறியாத கொண்டாட்டங்கள் மிகமிகக் குறைவே. இங்கே சாமானியன் எண்ணி வாய்பிளக்கும் பல பேரழகிகளை நான் நேரில் அறிவேன். அவர்களெல்லாம் ஓர் இளம் எழுத்தாளனின், ஆர்வம்கொண்ட வாசகனின் மின்னும் கண்களுக்கு முன் ஒரு பொருட்டே அல்ல.

 

இந்தக் கிளர்ச்சியை அடையாதவரை நீங்கள் அறிவியக்கத்தில் இல்லை. இதை தக்கவைத்துக்கொள்ளும் வரைத்தான் அறிவியக்கத்தில் இருக்கிறீர்கள். மானுடருக்கு மண்ணில் அளிக்கப்பட்டுள்ள இன்பங்களில் தலையாயது இது என்கிறார்  அரிஸ்டாட்டில்.எந்தப்பேரழகியின் காதல்நோக்கை விடவும் அறிவின், மெய்மையின் தேவதையான சோஃபியாவின் விழிகளே ஒருவனை ப் பித்தனாக்குபவை, முடிவிலாது தேடவைப்பவை, தவிப்பை அளிப்பவை, பிற அனைத்தையும் பொருளற்றவை என காட்டுபவை, பேரின்பத்தில் நிறைவுறச்செய்பவை.

 

அந்த கடைக்கண் அனைவருக்கும் உரியது அல்ல. அது அருளப்படாதவர்களின் நையாண்டி அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. அவர்களை தொடர்ந்து மன்னிப்போம். அவர்களை தொடர்ந்து கூர்ந்து நோக்குவோம். நம் வாசகர்கள் அல்ல அவர்கள், ஆனால் நாம் எழுதும் கதாபாத்திரங்களாக அவர்கள் ஆகக்கூடும் அல்லவா?

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முழுமகாபாரதம் நிறைவு

$
0
0

 

கிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச் செய்து முடித்திருக்கிறார். எளிமையான நேரடி மொழி. எவரும் வாசிக்கும் படியான ஒழுக்குள்ள உரைநடை. தமிழுக்கு இது ஓர் அருங்கொடை

 

விரைவிலேயே இது நூல் வடிவில் அமேசானிலும் அச்சிலும் வெளிவரவேண்டும். அருட்செல்வப் பேரரசன் அவர்களை மனமாரத் தழுவிக்கொள்கிறேன்

முழு மஹாபாரதம் -அரசன்

 

====================
கங்கூலி பாரதம் தமிழில்
அருட்செல்வப் பேரரசன் சந்திப்பு
விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49

$
0
0

பகுதி ஐந்து : விரிசிறகு – 13

பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை நோக்கும்பொருட்டு இருபுறமும் நின்றிருந்த மக்கள் முண்டியடித்தனர். அத்தனை கட்டுப்பாடுகளும் அழிய சாலை மழைவிழும் ஓடைநீர் என கொந்தளித்தது. அதன் நடுவே அவளுடைய தேர் சுழன்றும் அமைந்தும் சென்றது. வாழ்த்தொலிகளின் அதிர்வு தன் பற்களை கூசவைப்பதுபோல் உணர்ந்து சம்வகை வாயை இறுக்கிக்கொண்டாள். அவள் விழிகள் கூசி நிறைந்து நீர்வழிந்து உலர்ந்து மீண்டும் கலங்கின.

பேரரசியின் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டையை முதலில் நோக்கியபோது அவள் விழிகளில் எந்த மாறுதலும் தென்படவில்லை. தேர் மாற்றிக்கொண்டபோது, கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோது, கோட்டைக்குள் கிழக்கு உள்முற்றத்தில் பெருகிநிறைந்திருந்த மக்கள்திரளை நோக்கியபோது அவள் முகம் உறைந்ததுபோல் இருந்தது. உவகையென்றோ நெகிழ்வென்றோ கசப்பென்றோ ஏதுமில்லை. எதையும் நினைவுகூர்பவளாகவோ எதிர்பார்ப்பவளாகவோ தோன்றவில்லை. கற்சிலை முகம். தெய்வங்களுக்குரியது கல்முகமே.

சம்வகை விழிகளால் துழாவிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒற்றர்கள் சார்வாகர்களின் ஒரு குழு நகருக்குள் நுழைந்துவிட்டிருக்கும் செய்தியை அளித்திருந்தனர். அவர்கள் நகருக்கு வெளியே இடுகாட்டில் தங்கியிருந்தனர். முதலில் அவர்களில் ஒருவரே தோன்றினார். மேலும் எழுவர் பின்னர் வந்தனர். சுடுகாட்டின் பெருச்சாளிகளையே அவர்கள் உணவாக்கினர். பெருச்சாளித்தோலையே ஆடையென அணிந்தனர். கையிலேந்திய ஞானக்கோல் அன்றி துணையின்றி இருந்தனர். இரவும் பகலும் இன்றி சிவமூலிகையின் புகையில் மெய்மறந்து அகமழிந்து விழிசிவந்து அமர்ந்திருந்தனர்.

அவர்கள் நகர்நுழைய ஒப்புதல் இல்லை. ராஜசூயம் போன்ற பெருவேள்விகளின்போது மட்டுமே ஞானத்தின் தரப்பினரும் உள்ளே வர அழைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை எவரும் தடுக்கவும் முடியாது. மக்கள் அவர்களை அஞ்சினர் என்பதொன்றே அவர்களை தடுத்தது. அவர்களைக் கண்டதும் அனைவரும் விலகி வழிவிட்டனர். எந்தப் பெருந்திரளிலும் அவர்கள் தன்னந்தனியர்களாகவே நடந்தனர். அவள் அவர்களில் எவரேனும் விழிக்கு தென்படுகிறார்களா என்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவர் எக்கணமும் அங்கே தோன்றக்கூடும். ஏதேனும் ஒன்றை சொல்லக்கூடும். அந்த நாளின் மங்கலங்களை அழிக்கும் ஒரு சொல்லை. அவர்களின் தோற்றமே மங்கலங்களை சிதைப்பது. அவர்கள் வாழ்வது அதற்காகவே.

“மங்கலங்களுக்கு எதிர்நிற்பதே அவர்களின் செயல்பாடு. அதன்பொருட்டே தங்களை அவ்வண்ணம் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அமங்கலர் என்றே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்” என்றார் சுரேசர். “அதுவே அவர்களின் பணி. அவர்களின் கொள்கை. ஏனென்றால் எந்த மங்கலமும் நிலைபேறின் விளைவு, எந்த நிலைபேறும் அடித்தளத்தில் குருதி கொண்டது என அவர்களின் நூல்கள் சொல்கின்றன.” அவள் அதை தன்னுள் சொல்லிக்கொண்டே இருந்தாள். பின்னர் சுரேசரிடம் “அது மெய் என்று என் அகம் சொல்கிறது” என்றாள்.

“நன்று” என்று அவர் வெடித்து நகைத்தார். “இன்றுவரை பாரதவர்ஷத்தில் மாறாத ஒரு வரலாறு உள்ளது. இளமையில் எளியோருக்கு இரங்கி அரசை வெறுத்தவர்களே பின்னாளில் அரசின்பொருட்டு ஏழைகளை வெறுப்பவர்களாக ஆனார்கள். அரசாண்ட கொடுங்கோலர்களோ முடிதுறந்து கானேகிக் கனிந்தனர்.” அவள் சுரேசரிடம் வெறுத்தது அதைத்தான். அவரிடம் இரக்கமற்ற ஓர் இளிவரல் இருந்தது. கூரியது, துணித்துக் கடந்துசெல்கையிலும் குருதிபடியாத ஒளிகொண்டது.

உள்கோட்டை முற்றத்தில் சுரதன் தன் இளையோன் சுகதனுடன் அரசஉடை அணிந்து நின்றிருந்தான். அவனைச் சூழ்ந்து அணியுடையுடன் வீரர்கள் நின்றனர். அவர்கள் இருவரும் மலர்ந்த முகங்களுடன் இருப்பதை சம்வகை கண்டாள். பேரரசி சற்றே திரும்ப அவள் உதடசைவாக “சிந்துநாட்டு அரசர் ஜயத்ரதனின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும்” என்றாள். பேரரசி அச்சொற்களை புரிந்துகொண்டு விழிமலர மைந்தர்களை நோக்கினாள். முதல்முறையாக அவள் முகத்தில் புன்னகை எழுந்தது. அது கனிந்து மானுடத்தன்மை கொண்டது. அவள் உதடுகளில் ஒரு சொல் எழுந்து அமைந்தது. “மைந்தர்கள்” என்று அவள் சொன்னாள். மேலும் கனிந்து “இனியவர்கள்” என்றாள்.

பெருந்திரளிலும் பேரோசையிலும் உதட்டுமொழியே உதவுவது என்று அவளிடம் சுரேசர் பலமுறை சொல்லியிருந்தார். நெடுநாள் அவளால் அதை கற்க இயலவில்லை. ஓசையெழாதபோது அச்சொல் நாவை விட்டு வெளியே கிளம்பவில்லை என்று எப்போதுமே தோன்றியது. ஆனால் பின்னர் அதை கற்றேயாகவேண்டுமென்ற நிலை எழுந்தது. முயன்றபோது ஒரே நாளில் அதை உள்வாங்க முடிந்தது. அதன்பின் ஒன்றை அவள் உணர்ந்தாள், ஒலியிலாச் சொல் முற்றிலும் பிறிதொன்று. அது செய்திகளை மட்டுமே சொல்லமுடியும், உணர்வுகளை அல்ல. ஆகவே அதில் கரவுகளும் மடிப்புகளும் இல்லை. அது இலக்கு நோக்கிச் செல்லும் அம்பு, அதனால் வளைய இயலாது. அதன் சொற்கள் அனைத்துமே முனைமழுங்காமல், தேய்வுகொள்ளாமல் அன்று செய்தவை போலிருந்தன.

அதை கற்றுக்கொண்ட நாள் முதல் அவளைச் சூழ்ந்திருந்த உலகம் முற்றாக மாறியது. நெடுந்தொலைவில் சேடிப்பெண் பேசுவதை அவளால் அறியமுடிந்தது. காவல்மாடத்திலிருக்கும் படைவீரர்கள் சொல்லும் இழிசொற்கள் குருதித்தசைத் துண்டுகள் என வந்து முன்னால் விழுந்தன. அகன்று கூடி நின்றிருக்கும் மக்கள்திரளின் பேச்சொலி ஒற்றை முழக்கமாகவே எப்போதுமிருந்தது. அது தனித்தனியான பல்லாயிரம் உரையாடல்களாக உடைந்து பெருகி விரிந்தது. விழிகளால் சாலையில் செல்லும் தெய்வவடிவை நோக்கிக்கொண்டிருக்கும் அன்னை தன் இடைக்குழவியிடம் இன்சொல்தான் உரைக்கிறாள். இளம்பெண் எங்கோ நின்று நோக்கும் காதலனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். வசைச்சொற்கள், பழிச்சொற்கள், இளிவரல்கள்.

மானுடர் தனித்துச் சொல்லும் சொற்களை அவள் கேட்கலானாள். அவர்கள் துயருற்றிருக்கையிலும் இன்புற்றிருக்கையிலும் அரற்றினார்கள். நினைவுகளின் பெருக்கு சொற்களென உதடுகளில் கசிந்தது. காதலின் போதையில் பிதற்றினார்கள். அவர்களின் உள்ளத்திலிருந்து உதடுகளுக்கு அவர்களே அறியாத பாதை ஒன்றிருந்தது. அதை உணர்ந்தபின் அவள் மானுடரை விரும்பலானாள். “இன்னும் செல்லும் தொலைவு உண்டு. பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில், விலங்குகள் அசைபோடுவதில் எல்லாம் சொல்லெழத் தொடங்கும். நாய்வாலும் மான்செவியும் உன்னிடம் பேசத்தொடங்கும்” என்றார் சுரேசர்.

திரௌபதி மைந்தரின் பெயர்களை சொல்லிக்கொண்டிருப்பதை அருகே சென்றபடி அவள் பார்த்தாள். அஸ்தினபுரியின் மீட்டுக் கட்டிய சாலையினூடாகச் செல்கையில் பேரரசி புது விழிகள் கொண்டு நின்ற மாளிகைகளை பார்க்கிறாளா என்று சம்வகை நோக்கினாள். அவள் எதையுமே நோக்கவில்லை என்று தோன்றியது. மெய்யாகவே எவையும் அவள் கண்ணுக்குப் படவில்லையா என்ன? அவள் தன்னுள் மட்டுமே நோக்குபவளாக ஆகிவிட்டிருக்கிறாளா என்ன? மைந்தர்துயர் அவளை அவ்வண்ணம் ஆக்கிவிட்டிருக்கிறதா? அஸ்தினபுரியை அவள் வென்றெடுத்திருக்கிறாள். வஞ்சநிறைவு செய்து நகர்புகுந்திருக்கிறாள். இத்தருணம் காவியங்களால் பாடப்படவிருப்பது. முடிவற்று மீள நிகழ்த்தப்படவிருப்பது. இன்று அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் காலம் பல்லாயிரம் கைகள் நீட்டி பெற்றுக்கொள்ளவிருக்கிறது.

“அரசருக்குரிய இயல்பென்ன என்று கேட்கப்பட்டபோது முதுமன்னர் யயாதி சொன்ன சொல் ஒன்று உண்டு, யானைமேல் இயல்பாக இருத்தல்” என்று சுரேசர் ஒருமுறை சொன்னார். “அது எவருக்கும் இயல்வதல்ல என்றே நான் உணர்கிறேன். யானையின் மேலிருக்கையில் யானை என தன்னை ஆக்கிக்கொள்ளா மானுடர் அரிது. யானையை தானாக்கிக்கொள்வதை நோக்கி செல்லாதவருமில்லை. யானையென எளிய மானுடத்திரள் நடுவே செல்கையில் நிலத்தில் காலூன்றி எளியோன் என உணர்வதென்பது யோகியர் மட்டுமே அடையும் பெருநிலை. பிரம்மவடிவென்றும் ஊனுடலென்றும் ஒரே தருணத்தில் தன்னை உணர்தலுக்கு நிகரானது அது.”

சுரதனும் சுகதனும் மெய்யான உவகையுடன் இருப்பதாகவே அவளுக்குப் பட்டது. அவர்கள் பேசிக்கொள்வதை அவள் கேட்டாள். அவர்கள் இன்சொற்களையே சொன்னார்கள். சுரதன் அகஎழுச்சியுடன் “பேரரசி என்னை அறிந்திருக்கிறார். என் பெயர் அவருக்கு முன்னரே தெரிந்திருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டிருந்தான். சுகதன் “நான் அவர் தேரிறங்கியதுமே சென்று பேசுவேன்” என்றான். சுரதன் “அவ்வாறு செல்ல முறைமை இல்லை…” என்றான். “நான் அவர் மைந்தன்… எனக்கு எந்த முறைமையும் தேவையில்லை” என்றான் சுகதன். “எனில் நீ முன்னால் செல்… நான் உன்னைப் பிடிக்க வருபவன்போல தொடர்ந்து அவர் அருகே வந்துவிடுகிறேன்” என்றான் சுரதன்.

அவள் அவன் விழிகளை நோக்க விழைந்தாள். மேலும் அருகே சென்று, மேலும் ஆழமாக. அங்கே அந்தப் பித்து எஞ்சியிருக்கிறதா என்று. அது பேரரசியைக் கண்டதும் கரைந்தழிந்துவிட்டிருக்கக் கூடும். அவனுடைய உள்ளம் ஒரு சிறு நுரைக்குமிழி. அது அத்தனை பெரிய விசையை தாளாது. அவன் விழைந்ததே பேரரசியின் விழிகளுக்கு முன் திகழவேண்டும் என்பதாக இருக்கலாம். எளியோனாக ஆகிவிடக்கூடாதென்பதே அவனை அவ்வண்ணம் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவன் காணும் தந்தையுருவென்பது ஒரு மெய்மை. விழியற்ற தந்தையால் ஆட்டுவிக்கப்படுபவன் அவன் என்பது உண்மை. ஆனால் அவன் பித்தன். பித்து தன்னை மறைக்கவும் கற்றிருக்கக் கூடும்.

அஸ்தினபுரியின் காவல்கோட்டங்களில் முரசு முழங்கிக்கொண்டிருந்தது. ஆனால் பெருமுரசுகளின் இடியோசை நகரில் நிறைந்திருந்த பேரோசையில் குமிழிகளென உடைந்தழிந்தது. தலைக்குமேல் எழுந்த காவல்மாடத்தில் முரசுத்தோல்மேல் முழைக்கழிகள் ஓசையில்லாமல் துள்ளி நடமிடுவதை அவள் கண்டாள். அவற்றின் தோலதிர்வை மட்டுமே உணரமுடிந்தது. அரண்மனைக் கோட்டைக்குமேலிருந்து கொம்புகள் ஒலித்தன. குருவிகளின் அகவலோசை என. பாஞ்சாலத்து அரசியின் விற்கொடி எழுந்து பறக்கத் தொடங்கியது. தேர் உள்கோட்டையைக் கடந்து அரண்மனை முகப்பை அடைந்தது.

சம்வகை விழிகளைச் செலுத்தி சிந்துநாட்டு அரசி அங்கே நின்றிருப்பதை கண்டாள். சிந்துநாட்டு அரசி முதலில் தன் மைந்தர்களையே நோக்கினாள். அவர்கள் மெய்யான மகிழ்வுடன் வருவதைக் கண்டதும் அவள் கொண்ட உளக்குழப்பம் அழிய புன்னகை புரிந்தாள். அவர்கள் அருகணைந்ததும் சிந்துநாட்டு அரசியின் அணிச்சேடிகள் முன்னால் வந்து அவளை வாழ்த்தி மங்கலத்தாலம் காட்டி வரவேற்றனர். இசைச்சூதர் முழங்க சேடியர் வாழ்த்துரை எழுப்பினர். சிந்துநாட்டு அரசி சுடரேற்றிய பொன்னகல் விளக்குடன் முன்னால் வந்து புன்னகையுடன் அவளை வரவேற்றாள். “அஸ்தினபுரிக்கு பாரதவர்ஷத்தின் பேரரசியை வரவேற்கிறேன்” என்றாள். “இந்நாள் இனிவருவோர் சித்தத்தில் இனிதென என்றும் திகழ்க! தங்கள் வருகையால் திருவும் சொல்லும் பெருகி இந்நகர் பொலிவுறுக! அன்னை கொற்றவை என இங்கே அமைக! இங்குள்ளோர் தேவர்களென மகிழ்க!”

பேரரசி அச்சொற்களால் உளம்நெகிழ்வதை சம்வகை கண்டாள். அது அவளுக்கு உடனே உருவாக்கியது ஒரு சிறு ஏமாற்றத்தைத்தான். பேரரசி மெல்லுணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கையில் ஒரு மெல்லிய எரிச்சலை உருவாக்கினாள். ஆனால் அவள் அவ்வண்ணம் இருப்பது நிறைவையும் அளித்தது. அவள் எண்ணிய வடிவம் அது. நெகிழும் கொற்றவையை கோயிலில் அமைக்க முடியாது. அவள் விழிநீர்விடுவதைக் கண்டால் தன் உள்ளம் கசந்துவிடும் என்று தோன்றியது. அவ்வாறு நிகழலாகாது என அவள் வேண்டிக்கொண்டாள். ஆனால் அஞ்சுவதெல்லாம் நிகழும் என்று எங்கோ எவரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அஞ்சுவன எல்லாம் அகத்தே வாழ்வன, அவை அச்சமென எழுந்து தங்களை காட்டுகின்றன.

பேரரசியை சிந்துநாட்டு அரசி உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு கையில் நிறைநீர் பொற்குடமும் மறுகையில் ஏற்றிய பொன்னகலுமாக பேரரசி அஸ்தினபுரியின் அரண்மனைக்குள் நுழைவதை சம்வகை நோக்கி நின்றாள். மெல்ல அவள் உள்ளம் சலித்து தளர்ந்து மண்ணுடன் படிந்தது. எங்கேனும் படுத்து துயிலவேண்டும் என்று தோன்றியது.

 

சம்வகை விழித்துக்கொண்டபோது சுரேசரின் ஏவலன் அவளுக்காக காத்திருந்தான். அவள் ஆடைமாற்றி வந்ததும் வணங்கி “அமைச்சர் காணவிழைகிறார்” என்று அவன் சொன்னான். அவள் தன் கவசங்களை அணிந்துகொண்டு அரண்மனைக்குச் சென்றாள். அஸ்தினபுரியின் அரண்மனை மையக்கோட்டத்திற்கு வெளியே முந்தைய படைத்தலைவரின் மாளிகையை அவளுக்கு அளித்திருந்தார்கள். அங்கே ஏவலரும் பணிப்பெண்களுமாக அவள் தனித்து தங்கியிருந்தாள். பின்னிரவில் மட்டுமே அவள் அங்கே வந்தாள். புலரிக்கு முன்னரே கிளம்பிச் சென்றாள். அந்த மாளிகை அவள் உள்ளத்தில் எவ்வகையிலும் பதியவில்லை. ஆனால் அவள் கால்கள் அதை அறிந்திருந்தன. அவை அவ்விடத்தை பல பிறவிகளாக அறிந்திருக்கின்றன என அவள் எண்ணியதுண்டு.

சுரேசர் தன் அறையில் இருந்தார். காலடியோசை கேட்டு திரும்பி நோக்கி புன்னகைத்து “வருக!” என்றார். அவள் வணங்கி முகமன் உரைத்து தலைக்கவசத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தாள். சுரேசர் புன்னகையுடன் “ஒரு பெரும்பணியை முடித்துவிட்டீர்கள்” என்றார். “நான் எனக்கான ஆணைகளை நிறைவேற்றினேன்” என்று அவள் சொன்னாள். “நீங்கள் ஓய்வெடுக்கச் சென்றிருப்பீர்கள் என எண்ணினேன்” என்றார் சுரேசர். “ஆம், அரண்மனைக்குள் செல்லலாகாது என முடிவெடுத்திருந்தேன். அப்பொறுப்பை சிந்துநாட்டு அரசியிடம் அளிப்பதே முறை எனத் தோன்றியது” என்றாள். “துணைக்கு சுஷமையும் இருக்கையில் நான் செய்வதொன்றுமில்லை.”

“ஆம், அனைத்தும் முறைப்படி முடிந்தன” என்று சுரேசர் சொன்னார். “பேரரசி அரண்மனையில் தன் பழைய அறையையே விரும்பினார். அதை நான் உணர்ந்திருந்தேன். அது ஒருக்கப்பட்டிருந்தது, என்றாலும் வேறு அறைகளையும் ஒருக்க ஆணையிட்டிருந்தேன். ஆனால் நானும் எதையும் சிந்துநாட்டு அரசியின் தெரிவை மீறி செய்ய முனையவில்லை. பேரரசி தன் அறைக்குள் சற்று முன்னர்தான் சென்றார். இப்போது அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்” என்றார் சுரேசர். “அவரது தனிப்பணிக்குரிய ஏவற்பெண்டுகள் உடன் வந்திருக்கிறார்கள். ஆகவே நாம் பெரிதாக இனி ஏதும் செய்வதற்கில்லை. நகரம் அவர்களை எவ்வண்ணம் எதிர்கொள்ளும் என்ற சிறு ஐயம் எனக்கிருந்தது. பொருந்தாத ஒன்றை நான் எதிர்பார்த்தேன். உங்கள் ஆட்சியே நகர்நுழைவை மங்கலம்மிக்கதாக நிகழ்த்தி முடித்தது.”

“என் கடமை” என்றாள் சம்வகை. “பேரரசியிடம் நான் ஓரிரு சொற்களே பேசினேன். அவர் களைத்திருந்தார்.” சுரேசர் “ஆம், அது பயணக்களைப்பு. இந்த இடத்திற்கு அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து கிளம்பி வரவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து, பாஞ்சாலத்தில் இருந்து கிளம்பி வந்திருக்கிறார்” என்றார். சம்வகை பெருமூச்சுவிட்டாள். “அந்தியில் அரசவை கூடவிருக்கிறது. அதில் பேரரசியை அரசர் முறைப்படி சந்திக்கிறார். நெடுநாளாகிறது அவர்கள் சந்தித்துக்கொண்டு” என்று சுரேசர் சொன்னார். “அதில் சிந்துநாட்டு இளவரசர்களை அரசர் சந்திக்கிறாரா?” என்று சம்வகை கேட்டாள். ”ஆம், அதை தவிர்க்கமுடியாது” என்றார் சுரேசர். “அவர்கள் சந்திப்பதே முறை.”

“சிந்துநாட்டரசியின் கோரிக்கையை இன்னமும் முறைப்படி நாம் அரசர்முன் வைக்கவில்லை” என்றாள் சம்வகை. “ஒருவேளை துணிந்து சிந்துநாட்டரசியோ அல்லது அந்த இளவரசர்களோ அதைப்பற்றி அவையில் பேசுவார்களென்றால்…” சுரேசர் இடைமறித்து “அதைப்பற்றிப் பேசத்தான் நான் உங்களை அழைத்தேன்” என்றார். “சிந்துநாட்டரசிக்கு பேரரசி சொல்லளித்துவிட்டார்.” சம்வகை திகைப்புடன் “எதைப்பற்றி?” என்றாள். “சிந்துநாட்டை அஸ்தினபுரியின் படைகள் கைப்பற்றி ஜயத்ரதனின் முடியை சுரதனுக்கு அளிப்பார்கள்” என்றார் சுரேசர். சம்வகை சொல்லவிந்துவிட்டாள். “எப்போது?” என முனகலாகக் கேட்டாள்.

“பேரரசி அரண்மனைக்குள் புகுந்து அகத்தளத்திற்குச் சென்றபோதே அச்சொல் பெறப்பட்டுவிட்டது” என்று சுரேசர் சொன்னார். “மூதரசி காந்தாரியின் அகத்தளத்தை அப்படியே பேணவேண்டுமென ஆணையிட்டிருந்தேன். அரசியின் இருப்பென அங்கே ஓர் அகல் எப்போதும் எரிந்துகொண்டிருக்கட்டும் என்று நிமித்திகர் சிந்துநாட்டு அரசியிடம் சொன்னார்கள். அரசி அவ்வண்ணம் அங்கே ஒரு நெய்விளக்கை ஏற்றினார். பின்னர் அவர் தன் கனவில் அது ஒரு நீலப் பட்டால் மூடப்பட்டிருப்பதாகக் கண்டார். ஆகவே அந்த அகல்சுடர் நீலப் பட்டால் சுற்றப்பட்டுள்ளது. அங்கே நின்றிருக்கையில் அச்சொல் அளிக்கப்பட்டது.”

சம்வகை பேசாமல் நோக்கி அமர்ந்திருந்தாள். “சிந்துநாட்டரசி பேரரசி திரௌபதியை அங்கே அழைத்துச்சென்றார். அச்சுடருக்கு மலரிட்டு வணங்கிவிட்டு அரண்மனைக்குள் குடியேறுவதே முறை என்று அவர் சொன்னார். பாஞ்சாலத்துப் பேரரசி அங்கே நுழைந்தபோது உணர்வுருகிய நிலையில் இருந்தார். அவரால் காலெடுத்து வைத்து உள்ளே நுழைய முடியவில்லை. மலரிட்டு வணங்கியபோது அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் சிந்துநாட்டு இளவரசர்களுடன் வெளியே நின்றிருந்தேன். அறையிலிருந்து வெளியே வந்தபோது பேரரசியின் முகம் அனல்கொண்டதுபோலிருந்தது.”

“எதிர்பாராத தருணத்தில் சிந்துநாட்டு இளையோன் அந்த இடத்தின் உணர்வுநிலையை பொருட்படுத்தாமல் பாஞ்சாலத்துப் பேரரசியின் அருகே சென்று அவரது ஆடைமுனையை பற்றிக்கொண்டு அன்னையே நான் சிந்துநாட்டு இளவரசனாகிய சுகதன் என்றார். பேரரசி முகம் மலர்ந்து அவரை இழுத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார். அவர் விழிகளில் நீர்த்துளிகளைக் கண்டேன். உதடுகள் விம்முவதுபோல குவிவதைக் கண்டேன். அவர் தோளையும் கைகளையும் வருடியபடி நான் உன்னை இளமைந்தனாகக் கண்டதுண்டு என்றார். ஆம், நானும் உங்களை இளமைந்தனாகக் கண்டேன் என்று அவர் சொன்னார். பேரரசி நகைத்துவிட்டார். எப்படி என்றார். நீங்கள் என்னை கண்டால் நானும் கண்டிருப்பேன் அல்லவா என்றார். நானே புன்னகைத்துவிட்டேன்.”

“அத்தருணத்தில் மூத்த இளவரசராகிய சுரதன் முன்னகர்ந்து அன்னையே, எங்கள் நிலத்தை எதிரிகள் கைப்பற்றிக்கொண்டுவிட்டார்கள். எங்கள் தந்தைக்குக் கீழே கோல்கொண்டிருந்த சிற்றரசர் வஜ்ரபாகுவால் நாங்கள் நிலம்விட்டு துரத்தப்பட்டோம்… நாடிலியாக உங்களை நம்பி வந்தோம்” என்றார். பேரரசியின் விழிகள் ஒருகணம் சற்றே மாறின. “அவனைக் கொன்று சிந்துநாட்டு முழு நிலமும் உனக்கு அளிக்கப்படும். உன் கோலுக்கு எதிராக எவரும் ஒரு சொல்லும் உரைக்கமாட்டார்கள்” என்றார். பதைப்புடன் மைந்தனை பேசாமல் தடுக்கமுயன்ற சிந்துநாட்டரசி அச்சொற்களைக் கேட்டு திகைத்து நெஞ்சை பற்றிக்கொண்டார்.”

“பேரரசியின் கால்களைத் தொட்டு சுரதன் வாழ்த்து பெற்றார். அவர் தலைதொட்டு வாழ்த்தியபின் தோளைப் பற்றிக்கொண்டு இன்மொழி சொன்னார். இளையவரைத் தழுவி தன் அறைக்கு அழைத்துச்சென்றார். சிந்துநாட்டரசி விழிநீர் பொழிய அமர்ந்துவிட்டார். சுரதன் என்னை நோக்கி பிறிதொரு ஆணை தேவையா என்றார். இல்லை, அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன என்றேன். சுரதன் புன்னகையுடன் அறைநீங்கினார். நான் இங்கே வந்தேன். உங்களை அழைத்துவர ஏவலனை அனுப்பினேன்.”

சம்வகை பெருமூச்சுவிட்டாள். “பாரதவர்ஷத்தில் இனி என்றும் மறுசொல் என ஒன்று திகழப்போவதில்லை” என்றார் சுரேசர். “உண்மையில் வஜ்ரபாகுவின் அமைச்சர் இங்கே நேற்றே வந்து தங்கியிருக்கிறார். அந்தணர், அனைத்தும் அறிந்தவர். நான் இங்கே வருவதற்கு முன் அவர் இங்கே வந்துவிட்டார். என்னிடம் வஜ்ரபாகுவின் உயிரை மட்டும் விட்டுவிடமுடியுமா என்றார். முடியாது, அவர் அடிபணிந்தாலும் தலைதுணிக்கப்படும். இங்கே அரசியின் சொல் வேறு தெய்வ ஆணை வேறு இல்லை என்றேன். நான் என்ன செய்வது என்றார். வஜ்ரபாகு அங்கிருந்து தப்பி ஓடட்டும். எவ்வண்ணமேனும் இங்கே நகர்புகுந்து அரசியின் கால்களில் விழுந்து அளி இரக்கட்டும். அரசி சொல்மாற்றுவார் என்றால் அவர் உயிர்நிலைக்கும். அன்றி பாரதவர்ஷத்திலோ வெளியிலோ எங்கும் அவர் வாழமுடியாது என்றேன். ஆவன செய்கிறேன் என சற்றுமுன் கிளம்பிச்சென்றார்.”

சம்வகை ஒன்றும் சொல்லாமலிருந்தாள். “சொல்க!” என்றார் சுரேசர். “சுரதன் நிலையுள்ளம் கொண்டவர் அல்ல” என்று சம்வகை சொன்னாள். “ஆம், ஆனால் நச்சுவண்டுகளால் யானைக்கு தீங்கில்லை” என்று சொல்லி சுரேசர் சிரித்தார்.

தொடர்புடைய பதிவுகள்


இரு தினங்கள் –சுரேஷ் பிரதீப்

$
0
0

 

அன்புடன் ஆசிரியருக்கு

 

சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ஒரு பரபரப்பன நகரில் இருக்கிறோம் என்ற பிரக்ஞை தவிர்க்க முடியாததாக இருக்கும். குறைந்த தூரமே பயணிக்க வேண்டி இருந்தாலும் இரண்டு மூன்று பேருந்துகள் மாறிப் பயணிக்கும்படியாகும். ஒவ்வொரு பேருந்தின் எண்ணாக சரியாகப் பார்த்து ஏறும்படி இருக்கும். ‘நடந்தே வந்திருக்கலாமோ’ என்று நினைக்கும்படி ஐந்து கிலோமீட்டர் தூரத்தை பேருந்தில் கடக்க ஒரு மணிநேரம் ஆகும். இவற்றை மனதில் கொண்டே சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒரு தெளிவான பயணத் திட்டத்துடன் வருவேன். அந்த பயணத் திட்டங்கள் ஒருமுறை கூட இதுவரை பிசகியதில்லை. இந்த கணக்கீடும்  ஓட்டமும் மிகச் சோம்பலாக இயங்கும் ஒரு சிறிய நகரில் வேலை செய்கிற என்னைப் போன்றவனுக்கு சற்று உவப்பானதுதான். ஆனால் வெள்ளிக்கிழமை காலை மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கியது முதல் என் நண்பர் ஜெயவேல் மெட்ரோவில் என்னை ஏற்றி கிண்டிக்கு அனுப்பும் வரை இந்த இரண்டு நாட்களும் சென்னையில் இருந்த உணர்வே எழவில்லை.

 

ஒன்றரை வருடம் கழித்து சென்னை வருகிறேன். இப்போது மேலும் விரிவடைந்து மேலும் பரபரப்பாகி இருக்கிறது. எனினும் இந்த இரு நாட்களில் ஒரு கணம் கூட மனம் இந்த பரபரப்புகளுடன் தன்னை முடிச்சிட்டுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. மாம்பலம் ரயில் நிலையத்தில் சுனிலும் இறங்கினார். இருவருமாக ஃபிரெண்ட்ஸ் பார்க் வந்தோம்.

 

முதலில் மூன்றாம் தளத்தில் ஒரு அறையில் இருந்தோம். அந்த அறையை காலி செய்து கொண்டு கீழே வந்த போத  நீங்கள் வந்துவிட்டிருந்தீர்கள்.கிருஷ்ணன் உருவகம் (metahor),படிமம்(image), குறியீடு(symbol) சார்ந்து ஒரு நல்ல விவாதத்தை தொடங்கினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்த போது அவற்றுக்கு இடையேயான தொடர்புகளையும் வேறுபாடுகளையும் நீங்கள் தெளிவுபடுத்தியது முக்கியமானது. இந்த விவாதத்தை முகாந்திரமாகக் கொண்டு கலைச்சொற்களை தெளிவான அர்த்தத்தில் பயன்படுத்துவதில் இருக்கும் அவசியத்தை கூறினீர்கள்.

 

நானும் இதை கவனிக்கிறேன். ஒரு படைப்பு குறித்து துல்லியமாக பேசுவது செயற்கையான ஒரு dissection செயல் என்ற ஒரு பலகீனமான வாதம் இங்கு திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. துல்லியப்படுத்திக் கொள்ளுதல் அந்த படைப்பை மேலும் அணுகி அறியவையே உதவும் என்று விளங்கிக் கொண்டேன். ‘ஒரு படைப்பு கிளர்த்தும் உணர்வுகள் அருவமானவை’ , ‘படைப்பினை ஒரு வாசகன் முழுமையாக உணர்ந்துவிட முடியாது’ – இதுபோன்ற சொற்றொடர்களை இலக்கிய விவாதங்களில் இப்போது அடிக்கடி கேட்க முடிகிறது. இவை ஒரு படைப்பினை கடந்த வாசகர்களால் சொல்லப்படுவதில்லை. படைப்பினை துல்லியமாக நெருங்க இயலாதவர்களாலேயே இப்படி பேசப்படுகின்றன.  இதுபோன்ற ‘உன்னத தீர்ப்புகள்’ படைப்பின் மீது மேற்கொண்டு நிகழ்த்தப்படும் விவாதங்களை தடுத்து அதனை உறையச் செய்து விடுகின்றன. அதேநேரம் வெறுமனே நுண்தகவல்களில் துல்லியம் தேடிக் கொண்டிருப்பதிலும் பொருள் இல்லை. அதன் கலைத்தன்மையை எவ்வாறு நிறுவிக் கொள்ள வேண்டும்  என்பதிலேயே ஒரு வாசகனின் பிரதான அக்கறை இருக்க வேண்டும். ஒரு நுண்தகவல் அந்த படைப்பின் ஆதார கலைத்தன்மையுடன் முரண்படும்வரை அல்லது அதன் கலைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வரை நுண்தகவல் பிழைகளை பொறுத்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.

 

இந்த கலைச்சொல் பயன்பாட்டின் துல்லியத்தைத் தொடர்ந்தே உணர்வெழுச்சி (emotion), மிகையுணர்ச்சி (sentiment), நாடகீயத்தருணம் (dramatic moment) இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை பற்றிய பேச்சு வந்தது. இது குறித்து ஏற்கனவே நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறீர்கள். இந்த முறை அந்த வேறுபாட்டை மேலும் துல்லியப்படுத்திக் கொள்ள முடிந்தது. மதிப்பீட்டுடன் கூடிய உணர்ச்சியே உணர்வெழுச்சியாகிறது என்று சொல்லிவிட்டு ஒரு உதாரணம் கேட்டபோது சரியாக திஜாவின் கடன் தீர்ந்தது என்ற கதை நினைவுக்கு வந்தது. அக்கதை மிகச் சரியான உதாரணம் என்று உணர்கிறேன். தன்னுடைய செல்வத்தை இழந்த ஒருவர் யாரிடம் அதை பறிகொடுத்தாரோ அவன் மோட்சத்துக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுவதை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்று வாசகனை பறிதவிக்கச் செய்யும் அந்த இடம் உணர்வெழுச்சியானது. அதுபோல நாடகீயத்தருணம். அது யதார்த்த சித்தரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. டால்ஸ்டாய் புனைவுகளில் அப்படி ஒரு தருணத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் தஸ்தாவெய்ஸ்கி என்ற பெயரைச் சொன்னதும் ஆளுக்கொரு  நாடகீயத் தருணத்தை சொல்லத் தொடங்கி விட்டோம். ஒரு தத்துவ விவாதத்தின் பகுதியாக மதிப்பீடுகளின் மோதலாக நிகழும் இத்தகைய தருணங்கள் நிச்சயமாக மற்ற அனைத்த வகையான தருணங்களை விட ஒரு படி மேலானவையே. The last temptation of Jesus Christல் இதுபோன்ற எண்ணற்ற தருணங்களை கண்டெடுக்க இயலும். கிறிஸ்துவுக்கும் யூதாஸுக்குமான விவாதங்கள்,கிறிஸ்துவுக்கும் மகதலீனுக்குமான உரையாடல்கள், கிறிஸ்துவுக்கும் அவருடைய Guardian angelக்குமான உரையாடல்கள் என பல பகுதிகள் நினைவுக்கு வருகின்றன.

 

தொடர்ந்து நகைச்சுவை எழுத்து குறித்து பேசினோம். எஸ்விவி விகேஎன் என்று ‘பழைய’ ஆட்களைப் பற்றி பேசினாலும் அவர்களுடைய நகைச்சுவைகள் மீண்டும் பேசப்படுவதற்கான காரணங்களை சொன்னீர்கள். மறுநாள் புத்தக கண்காட்சியில் விகேஎன் கதைகள் (சாகித்ய அகாடமி பதிப்பகம்)  என்ற பெருந்தொகுப்பை சற்று சலுகை விலையில் வாங்கினேன். நண்பர்கள் சிலரும் வாங்கினார்கள். செயற்கையாக சூழ்நிலைகளை கட்டமைக்காமல் அன்றாடத்தின் சிரமங்களில் இருக்கும் நகைச்சுவையை தொட்டெடுப்பது எப்போதும் நம்மை புன்னகைக்க வைக்கிறது. தொடர்ந்து எழுத்தாளர்களின் குணநலன் சார்ந்து எழும் நகைச்சுவையை சொன்னீர்கள்.தோப்பில் பற்றி நீங்கள் சொன்ன ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமளித்தது.

 

“உருவாக்கப்படும் எழுத்து” சார்ந்த விவாதமும் முக்கியமானது. வாழ்க்கையுடன் ஒரு தொடர்பினை ஒரு படைப்பு வாசகனுக்கு ஏற்படுத்தவில்லை என்றால் அப்படைப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று சொன்னீர்கள். படைப்புச் செயலுக்கு பின்னிருக்கும் உத்திகளை மட்டும் பண்ணிப் பண்ணி பின்னப்படும் எழுத்தின் பயனின்மை குறித்து பேசியது உதவிகரமானது. வாசிப்பு சவாலினை அளிக்கும் படைப்புகளை உடைத்து உள்நுழைந்து புரிந்து கொள்ளும்போது ஒரு அகங்கார நிறைவு ஏற்படுகிறது. ஆனால் அப்போது வாசிப்பு என்கிற செயல்பாடு உயிரிழந்து விடுகிறது என்று எண்ணுகிறேன். எழுத்தாளனின் வெளிப்பாட்டில் இருக்கும் இயல்பான சிக்கல் மட்டுமே ஒரு படைப்புக்கு வடிவச் சிக்கலை அளிக்கலாமே தவிர மேற்கின் வடிவச் சிக்கலை போலி செய்வது அபத்தமானது.

 

மாலை நிகழ்வும் சிறப்பாக அமைந்தது. ஹெச் எஸ் சிவபிரகாஷ் கன்னட இலக்கியத்தை விமர்சனப்பூர்வமாக அணுகிப் பேசினார். கே சி நாராயணன் மலையாள இலக்கியத்தின் கவிதையியலில் நிகழ்ந்துவரும் புதுத்திறப்புகள் குறித்து பேசினார். அவர் வாசித்து நீங்கள் மொழிபெயர்த்த அசோகனின் (மலையாளத்தின் உள்மொழி ஒன்றில் அமைந்த கவிதை) கவிதையில் ஒரு துள்ளலும் கள்ளமின்மையும் தெரிந்தது. சு வேணுகோபால் நவீன தமிழ் இலக்கியம் குறித்த ஒரு கோட்டுச் சித்திரத்தை அளிக்க முற்பட்டார்.

 

தொடர்ந்து நான் கிரியின் தொகுப்பு குறித்து பேசினேன். இந்த முறை பேச்சாளர்களில் விஷ்ணுபுர மேடைகளில் நானும் சுனிலுமே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்.மேலும் சிவபிரகாஷ் நாராயணன் ஆகியோரின் செறிவான உரைகளுக்கு பின் இந்த அறிமுக உரைகள் சிறுத்து விடுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் நண்பர்கள் அனைவரும் நன்றாகப் பேசினர். சுனில் ஒரு தேர்ந்த பேச்சாளர் ஆகிவிட்டதை இந்த அரங்கில் உணர்ந்தேன். ராஜகோபாலனின் ஆட்டத்தின் ஐந்து விதிகள் நூல் குறித்து விஜய் கிருஷ்ணன் அவர்களின் உரையை கடைசியாக அமைத்தது மொத்த நிகழ்விலும் மற்றொரு வண்ணத்தை சேர்த்தது. சிறப்பாக பேசினார். நீங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறினீர்கள். ஒரே ஊர்க்காரர்கள். ஆனால் நானும் அருண்மொழி அக்காவும் இப்போதுதான் முதன்முறை பார்த்துக் கொள்கிறோம்! கொஞ்ச நேரமே என்றாலும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது மகிழ்வளித்தது.

 

இரவு திரும்பிய போது நண்பர்கள் அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சியும் பெருமிதமும் இருந்தது. தொடர்ந்து பேச்சு அறிவியல் புனைவகள் குறித்து திரும்பியது. தொடர்ந்து அறிபுனைவு வாசிப்பில் இருப்பதால் அது சார்ந்த உரையாடல் பயனுள்ளதாக அமைந்தது. மறுநாள் சுனிலின் பரிந்துரையில் ‘காலமே வெளி’ என்ற மொழியாக்க அறிபுனைவுத் தொகுப்பு ஒன்றைத் தமிழினியில் வாங்கினேன். வெள்ளிக்கிழமை இரவு காஞ்சி சிவாவுடன் பேசிக் கொண்டிருந்தேன்.  தூங்குவதற்கு மூன்று மணியானது. மறுநாள் காலை ஆறரை எழுந்து ஒரு சிறிய காலைநடை. நாஞ்சில் நாடன் அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதுவதற்கு தாள்களை சேமிக்கும் வழக்கத்தைப் பற்றிச் சொன்னீர்கள். ஒரு பழங்கதை போல ஒலித்தது!

 

நண்பர்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஒரு வகையில் புறப்பட மனமில்லாமல் தான்.சென்னை நூற்காட்சியில் நான் முதன்முறையாக கலந்து கொள்கிறேன். வாங்கிய நூல்களைவிட பரிசாகப் பெற்ற நூல்கள் இருமடங்கு. ஒரு பெரிய திருவிழாவில் புகுந்து வெளிவந்த மனக்கொந்தளிப்பு. நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. வருடாவருடம் வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்படாவிட்டாலும் முதல்நாள் நிகழ்ந்த தீவிரமான உரையாடல்களின் தொடர்ச்சியாக இப்படி புத்தகங்களில் மூழ்கி இருக்கும் பண்டிகை நிறைவானதே.

 

மதிய உணவுக்கு பெருந்தேவி அழைத்திருந்தார். கீரை வடை, muddar வடை, கேரட் அல்வா, பிரதமன் என வித்தியாசமானதொரு விருந்து ஈஷாவால் நடத்தப்படும் ஒரு உணவகத்தில். ஒன்றரை மணிநேரம் நானும் சுனிலும் அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய எதிர்காலத் திட்டங்கள் எங்களுடைய படைப்புகள் என்று பேச்சு நீண்டது. மாலை பெருந்தேவியின் ‘உடல் பால் பொருள்’ நூல் ஸ்டாலின் ராஜாங்கத்தால் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வை முடித்துக் கொண்டு கிளம்பினேன். பேருந்துக்கு இரண்டு மணிநேரம் இருந்தாலும் நந்தனத்தில் இருந்து தாம்பரத்துக்கு அந்த நேரத்தில் போய்ச்சேர முடியுமா என்று சந்தேகம் வந்துவிட்டது. மூன்று பைகள் கனக்க நூல்கள். என்னுடைய தர்மபுரி நண்பர்கள் ஜெயவேல்,வேலு அந்த பைகளை சுமந்து வந்து மெட்ரோ ரயிலில் ஏற்றிவிட்டனர். மெட்ரோவில் முதன்முறையாக ஏறினேன் என்றாலும் பத்து நிமிடத்தில் இறங்கும்படியானதால் எதையும் கவனிக்க இயலவில்லை. அங்கிருந்து மின்சார ரயிலில் தாம்பரம் அங்கிருந்து பெருங்களத்தூர் என்று திடீரென சென்னையில் இருப்பதை உணர்ந்தேன்.

 

வீட்டுக்கு வந்து சேர்ந்ததை சுனிலிடம் தெரிவித்ததுடன் இந்த இரு தினங்கள் முடிவுக்கு வந்தன. எதிர்பார்த்திராத உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் இந்த வருடம் தொடங்கி இருக்கிறது.

 

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

 

அன்புடன்

suresh pradeep on ra giridharan's short story collection

சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப்

 

 

அன்புள்ள சுரேஷ்

 

எதையும் தெளிவாக்கிக்கொள்ளக் கூடாது என்ற ஒரு மொக்கை வாதம் எப்போதும் சிற்றிதழ் சூழலில் உண்டு. அது பெரும்பாலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் வாசிப்பை நிறுத்திவிட்டு இலக்கியவாதிகளாக உலவத் தொடங்குபவர்களுக்கு உகந்தது

 

தெளிவின்மை படைப்பூக்கம் மிக்கதே. அறிந்து அறிந்து சென்று நாம் திகைத்து நிற்கும் எல்லையில் அது இருக்கவேண்டும். மேலும் அறிவதற்கான அறைகூவலாக. கற்பனையும் நுண்ணுணர்வும் பறந்தெழுவதற்கான வெளியாக. அறியாமையின் இன்னொரு முகமாக அல்ல.

 

உலகமெங்கும் அழகியல் குறித்து , இலக்கியவிமர்சனம் குறித்து பேசப்படுவது இந்த அடிப்படையில்தான்

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்

$
0
0

 

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

அன்புள்ள ஜெ,

 

அருண்மொழிநங்கை அவர்களின் உரையை பார்த்தேன். முதல் உரை என்றே சொல்லமுடியாது. எந்தக்குறிப்பும் கையில் இல்லாமல் நாவலின் எல்லா கதாபாத்திரங்களையும் நினைவுகூர்ந்து பேசினார். முன்னர் வாசித்த நாவல்களின் கதாபாத்திரங்களைக்கூட நினைவுகூர்ந்து ஒப்பிட்டுப் பேசினார். இலக்கியச் சூழலுக்கு இத்தகைய உரைகளே தேவையாகின்றன. இத்தகைய உரைகளில்தான் நம்பகத்தன்மை இருக்கிறது. சொல்பவர் தன் உள்ளத்திலிருந்து சொல்கிறார் என்பது தெரிகிறது. அதில் செயற்கையான பாவனைகள் ஏதுமில்லை.

 

அருண்மொழி அவர்கள் நவீனின் நாவலில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவருடைய சிரிப்பு, திடீரென அவருக்கு தோன்றும் இணைப்புக்கள் எல்லாம் காட்டுகின்றன. முக்கியமான உரை. தடையே இல்லாமல் ஒழுகிச்செல்லும் பேச்சு. நவீனின் நாவலை வாசிக்க ஆர்வம் கொண்டேன்

 

எம்.பாஸ்கர்

 

அன்புள்ள ஜெ

 

அருண்மொழி நங்கை உரை சிறப்பு. இங்கே படைப்புக்களைப் பற்றி பெண்கள் பேசுவது மிகவும் குறைவு. சமீபகாலமாக பெண்கள் பேசுவதற்கு விஷ்ணுபுரம் மேடையும் பிற மேடைகளும் அமைந்திருப்பது மிக முக்கியமானது. ஏனென்றால் பெண்களின் பார்வை வேறு. அது பெண்ணியப்பார்வையாக இருக்கவேண்டியதில்லை. அவர்கள் எதை முக்கியமாக நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது

 

உதாரணமாக அருண்மொழி நங்கை புதிய நிலத்தில் பெண்கள் எப்படி வேரூன்றினார்கள் என்பதைத்தான் கூர்ந்து கவனிக்கிறார். நாம் பார்ப்பதிலிருந்து அது வேறுபட்டது. சிறுவர்கள் ,விலங்குகள் ,செடிகள் என்றே அவருடைய பார்வை குவிகிறது. இது ஓர் ஆண்வாசிப்பில் நிகழாமல் போகக்கூடும். பெண்களின் வாசிப்பில் ஓலம்மா பெறும் இடம் ஒருவேளை ஆண்களின் வாசிப்பில் பெறாமல் போகக்கூடும்

 

மிகவும் லயித்து, தானே சிரித்துக்கொண்டு பேசும் உரை நேரில் ஒருவர் பேசுவதுபோலவே இருந்தது. வரும்காலங்களில் இதுபோல நல்ல உரைகள் பல பெண்களிடமிருந்து வரவேண்டும்

 

ராஜசேகர்

அருண்மொழியின் உரை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வைக்கம், ஈவேரா –என் மதிப்பீடு

$
0
0

‘வைக்கம் வீரர்’ டி,கே.மாதவன்

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

அன்புள்ள ஜெமோ,

 

பெரியாரின் மறுபக்கம் என்ற பேரில் ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது. விரிவான மூலநூல் ஆதாரங்களுடன் உள்ளது. மறுப்பு தெரிவிப்பவர்கள் இதைத்தான் மறுக்கவேண்டும். வைக்கம் போராட்டத்தில் காந்தியே ஈடுபடவில்லை, அவர் வைக்கம்போராட்டத்தை உண்மையில் எதிர்த்தார், பெரியார்தான் நடத்தினார் என்று திகவினர் சொன்னதற்கு எதிரான விரிவான ஆதாரங்கள் அவர்களின் தரப்பினர் எழுதிய நூலில் இருந்தே எடுத்து அளிக்கப்பட்டுள்ளன.

 

http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part16/?fbclid=IwAR0x7E6wiBE-SwnLQYkarTSvC9JM2dRXf4YjMw2W7cu0L7oU3pi280grH04

 

ஈவெராவின் மறுபக்கத்தை வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி.

 

ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,

 

ஈவேரா அவர்களைப் பற்றிய என் கருத்து எந்த சிலையுடைப்பு நோக்கமும் கொண்டது அல்ல. சிலையுடைப்புப் பணிகளில் எனக்கு ஆர்வமும் இல்லை.

 

நான் ஆய்வாளன் அல்ல. முறையான விரிவான ஆய்வுகளைச் செய்ய என் புனைவிலக்கியப் பணி எனக்கு பொழுது அளிக்காது. நெடுநாட்கள் ஓர் ஆய்வை தொடருமளவுக்கு பொறுமைகொண்டவனும் அல்ல. நான் கூறுவன எவையுமே ஆய்வுமுடிவுகள் அல்ல. தேடிச்சென்று கண்டடைந்த தகவல்களும் அல்ல. மிகமிக அடிப்படையான தரவுகளையே நான் சொல்கிறேன். எந்த வாசகனும் சாதாரணமாகக் கண்டடையக்கூடிய பொதுச்செய்திகள்.

 

நான் அவற்றைக்கொண்டு ஒரு எளிமையான பொதுப்பார்வையை மட்டுமே உருவாக்குகிறேன். அரிய, சிக்கலான வாதங்களை உருவாக்குவதில்லை. அது நேர்மையும் அறவுணர்வும் கொண்ட இயல்பான வரலாற்றுநோக்கு. அது அரசியல்சார்ந்த கழைக்கூத்தாட்டங்களுக்கு எதிரானதாக நிலைகொள்கிறது.

 

ஈவேரா அவர்களைப்பற்றி நான் எழுதவில்லை. 2008 முதல் நான் எழுதியது காந்தி பற்றி. அவருடைய வைக்கம்போராட்டம் பற்றி எழுதியபோது அது ஈவேரா நடத்தியதல்லவா, காந்தி அதை உடைக்கத்தானே முயன்றார் என்றவகையில் கேள்விகள் வந்தன.

 

அதற்குப் பதிலாக வைக்கம் போராட்டம் என்பது எவ்வளவு பெரிய, எவ்வளவு சிக்கலான ஒரு போராட்டம், எத்தனை மாமனிதர்களால் நடத்தப்பட்டது, எத்தனையெத்தனை அமைப்புக்கள் அதில் ஈடுபட்டன என்பதை எழுதினேன். அவையெல்லாம் பொதுத்தளத் தகவல்கள். மிகமிக அடிப்படைத் தரவுகள்.

 

அவற்றைக்கூட இங்கே எவரும் சொல்லவில்லை. அவற்றை முற்றாக மறைத்து ஈவேரா அவர்களைப் பற்றிய ஒரு தொன்மமாக வைக்கத்தை கட்டமைத்துவிட்டிருக்கிறார்கள். அதையே நான் எதிர்த்து எழுதினேன்

 

ஈவேரா அவர்களைப்பற்றிய என் மதிப்பீட்டை நான் எழுதியிருக்கிறேன். இன்றைய இந்த்துத்துவர்களின் வெறுப்பு நோக்கு எனக்கில்லை. ஈவேராவை நிராகரித்துவிட்டு சாதிவெறிகொண்ட பிற்போக்காளர்களை முன்வைக்கும் அவர்களின் நோக்கு எனக்கு அருவருப்புக்குரியதே.

 

பெரியாரியர்கள் பதினொரு ஆண்டுகளுக்கு முன் நான் வைக்கம் பற்றிச் சொன்னவற்றை இன்று ஏற்றுக்கொண்டு தங்கள் வரலாற்றுவரைவை கொஞ்சம் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் மாற்றுவார்கள். நடுவே என்னை வசைபாடியிருக்கிறார்கள், ஆனாலும் இந்த மாற்றம் நல்லதுதான்.

 

வைக்கம் போராட்டத்தை தொடங்கி – அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தி – வெற்றிகரமாக முடித்து உடனடியாக திருவார்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து மேலே சென்ற சமூகப்போராளியான டி.கே.மாதவனே மெய்யான ‘வைக்கம்வீரர்’ அவரைப்பற்றி பெரியாரியர் சொல்லத் தொடங்கியதே வெற்றிதான்.

 

காந்தியைப்பற்றிய பொதுவான எண்ணங்கள் அனைத்துமே இவ்வாறு மாறியிருப்பதைக் காண்கிறேன். அதிலும் எனக்கு ஒரு பங்கு உண்டு. சிந்தனைத்துறையில் பொறுமையான நெடுங்கால  செயல்பாட்டுக்கு எப்போதும் பயனுண்டு என மீண்டும் உறுதிகொள்கிறேன்.

 

ஈவேரா அவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். பலமுறை. மீண்டும் சுருக்கமாக.

 

ஈவேரா அவர்களை நான் எப்படி மதிப்பிடுகிறேன்?

 

அ. ஈவேரா அவர்களை நான் ஒரு சமூகசீர்திருத்தவாதியாகவே காண்கிறேன். நிரூபணவாத அறிவியல்நோக்கையும், மானுட சமத்துவம் சார்ந்த அறவியலையும், நவீன ஜனநாயகத்திற்குரிய குடிமைப்பண்புகளையும் அன்றைய சூழலில் முன்வைத்தவர். ஆகவே தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த முன்னேற்றத்திற்குப் பங்களிப்பாற்றியவர்.

 

ஆ. ஈவேரா அவர்கள் இந்துமதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவர். அன்றைய மதநிறுவனங்களின் மூர்க்கமான மேலாதிக்கம், ஆசாரங்களின் குருட்டுத்தனம் ஆகியவை தளர அவர் ஒரு முக்கியமான காரணம். அவ்வகையில் அவர் இந்துமதச் சீர்திருத்தவாதியும்கூட

 

இ. ஈவேரா ஈவேரா அவர்கள் முன்வைத்த பொருள்முதல்வாதமும் இறைமறுப்பும் இந்துசிந்தனை மரபில் என்றுமிருந்த ஒரு தத்துவநிலைபாடு. என்றும் சிந்தனையில் இருந்துகொண்டிருக்கும் ஒன்று. அது இல்லாமல் சிந்தனையே செயல்பட முடியாது. ஆகவே அவர் நம் சிந்தனையின் ஒரு முக்கியமான சரடின் முதன்மை ஆளுமை

 

ஈ. ஈவேரா முன்வைத்த இந்த பொருள்முதல்வாத கொள்கை, மதமறுப்பு அணுகுமுறை நம் பண்பாட்டின் முக்கியமான ஒரு அறிவுத்தரப்பு.எல்லா அறிவுத்தரப்புகளையும்போல அதில் சிதைவுகள் திரிபுகள் உண்டு. மூடநம்பிக்கைத்தன்மையும் உண்டு. ஆனாலும் அவர் உருவாக்கியது ஓர் அறிவியக்கத்தை. இன்றுவரை திராவிட இயக்கம் என நீளும் அந்த இயக்கம் ஓர் அறிவியக்கமே. அந்த அறிவுத்தளம் இந்நூற்றாண்டில் இங்கே உருவானது, அதன் அடிப்படைக் காரணிகள் தென்னகநிலத்தில் என்றும் இருந்துகொண்டிருப்பவை. நாளை ஒருவேளை இன்னொருவடிவில் எழவும்கூடியவை.

 

உ. ஈவேரா அவர்களின் தனிவாழ்க்கையைப் பற்றி கூறப்படும் கூச்சல்களில் எனக்கு உடன்பாடில்லை. அவர் தன் கொள்கைகளை நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்தவர் என்பதே என் மதிப்பீடு. ஆகவே மதிப்பின்றி எதையும் அவரைப்பற்றி நான் சொல்வதில்லை.

 

என்னுடைய எதிர்கருத்துக்கள் என்ன?

 

அ. ஈவேரா அவர் கையாண்ட சிந்தனைகளையே வரலாற்றறிவுடன், உளச்சமநிலையுடன் கற்றறிந்தவர் அல்ல. அன்றைய அறிவுச்சூழலில் திகழ்ந்த குறைவான வரலாற்று –தத்துவக் கருத்துக்களை அவர் கற்றுக்கொண்டார் என்றாலும்கூட அவர் கற்றுக்கொண்டிருந்தது மிகமிகக் குறைபாடு கொண்டது.

 

ஆ. தன் கொள்கைத்தரப்பை அதற்குரிய நிலைபாடுடன்,உணர்வுச்சமநிலையுடன் அவர் முன்வைக்கவில்லை. தன் கருத்துக்களை அன்றன்று மனம்போன போக்கில் அள்ளி இறைத்தார். ஆகவே ஏராளமான முரண்பாடுகள் நிறைந்தவை அவருடைய சிந்தனைகள்.

 

இ. ஈவேரா தன்  வரலாற்றுநோக்கில் தனிப்பட்ட காழ்ப்புகளை கலந்தார். ஆகவே கருத்துக்களை உச்சகட்ட வெறுப்புடன் முன்வைத்தார். இந்த எதிர்மறைத்தன்மை அவருடைய நோக்கங்களையே சிதைக்கும் அளவுக்கு இருந்தது. அவரை தொடர்ந்து வந்தவர்கள் அந்த எதிர்மறைத்தன்மையை மட்டுமே கற்றுக்கொண்டார்கள். இன்றுவரை காழ்ப்பின்குரலில் மட்டுமே பேசுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்

 

ஈ. ஆங்கிலேய ஆட்சி அது சென்ற இடத்தில் எல்லாம் எளிமையான இனக்கொள்கையை உருவாக்கிப் பரப்பி அச்சமூகங்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்தது. அந்த  ‘ஒன்றரையணா’ இனக்கொள்கையை ஈவேரா கற்றுக்கொண்டு அதை ஆவேசமாக முன்வைத்தார். அது இன்றும் நாளையும் மிகப்பெரிய அழிவை உருவாக்கும் ஆபத்து கொண்டது. அது அழிவை உருவாக்கவில்லை என்றால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனாலேயே. அத்தகைய இனப்பிளவுக் கொள்கை எங்கு எவரால் முன்வைக்கப்பட்டாலும் எதிர்ப்புக்குரியது.

 

உ. ஐரோப்பியர் உருவாக்கிய இனவாதத்தை உள்ளூர் சாதிக்காழ்ப்புகளுடன் இணைத்தார் ஈவேரா. அவருக்கு இன்றிருக்கும் பீடம் என்பது அந்தச் சாதிக்காழ்ப்பினூடாக இடைநிலைச் சாதியினருக்கு உவப்பானவராக அவர் இருப்பதனால்தான். அதாவது அவர் இடைநிலைச் சாதியினரின் சாதிக்காழ்ப்பின் கொள்கைமுகம்

 

ஊ. இனவாதம் ஃபாஸிசமாக ஆவது அது உடனடி எதிரிகளாக ஒரு சாராரை கற்பிதம் செய்துகொள்ளும்போதுதான். ஈவேராவின் பிராமண எதிர்ப்பு என்பது நேரடியான சாதிக்காழ்ப்பே .சிந்தனையில், மானுடநாகரீகத்தின் வளர்ச்சியில் , மானுடசமத்துவத்தில் நம்பிக்கைகொண்ட எவராலும் அதை ஏற்கமுடியாது. ஒரு சாதியினர், மதத்தினர், இனத்தினர், நிறத்தினர் மீதான பொதுவான காழ்ப்பு என்பது வேறெந்த சிறப்புகள் இருந்தாலும் நம்மை ஆன்மீகமான இருளில் தள்ளிவிடக்கூடியது. சிறுமையை நிறைக்கக்கூடியது. சிந்திப்பவர் எவரும் அஞ்சி அருவருத்து தவிர்க்கவேண்டிய உணர்வுநிலை அது.

 

எ. ஈவேராவின் சமூகவியல் கருத்துக்கள், வரலாறு சார்ந்த பார்வைகள், இலக்கிய மதிப்பீடுகள் எல்லாமே மிகநுட்பமான, சிக்கலான களங்களுக்குள் ஒன்றும்தெரியாத மூர்க்கத்துடன் ஊடுருவிச் செல்வதன் விளைவாக உருவானவை. எந்தத்துறையிலும் சற்றே நுட்பமாக பயில்பவர் அவற்றை கண்டு திகைப்பே அடைவார். ஆனால் அவை மிக எளிமையானவை. ஆகவே பாமரர்களுக்கு புரிபவை, அவர்களால் ஏற்கப்படுபவை. இதன் விளைவாக தமிழ்ச்சிந்தனையின் அனைத்து தளங்களிலும் பாமரத்தனமான ஒரு மூர்க்கம் படர்ந்தது. சிந்தனைக்கு, கலைகளுக்கு, ஆய்வுக்கு எதிரானது அது

 

ஏ. ஈவேரா அவர்களின் மரபு குறித்த பார்வைகள் மிகமிக மேலோட்டமான நவீனத்துவ அணுகுமுறை கொண்டவை. அவை உடனடியாக அவருடைய வழித்தோன்றல்களாலேயே நிராகரிக்கப்பட்டன. அவர்கள் அவர் குறள் குறித்தும் சிலப்பதிகாரம் குறித்தும் சொன்னவற்றை நிராகரித்தனர்

 

மொத்தமாக,

 

ஈவேரா அவர்கள் ஒரு காலகட்டத்தின் சிந்தனையாளர். அவரை அங்கே நிறுத்தி விமர்சனரீதியாக அவருடைய பங்களிப்பை ஆய்ந்து ஏற்பதே அறிவார்ந்தது. விமர்சனமில்லாமல் அவரை திருவுரு ஆக்குபவர்கள் சமூகக்காழ்ப்புக்கான கருவியாக அவரை பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான்

 

ஈவேரா அவர்களின் நோக்கில் இருந்து இன்று பெற்றுக்கொள்ள வேண்டியவை  இவை. அறிவியல்மீதான நம்பிக்கை, மானுட சமத்துவத்திற்கு ஆதரவான உலகநோக்கு, மதச்சார்பில்லாத ஜனநாயகம் குறித்த கனவு ஆகியவை. நிராகரிக்கப்படவேண்டியவை அவருடைய இனவாத நோக்கு, வெறுப்பரசியல், எதையும் இரட்டைத்தன்மையாக எளிமைப்படுத்தும் அறிதல்முறை ஆகியவை

 

ஜெ

ஈவேரா என எழுதுவது ஏன்?

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

 

 

பெரியார்மதம்

கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2

கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50

$
0
0

பகுதி ஐந்து : விரிசிறகு – 14

யுதிஷ்டிரன் களைப்புடன் இருந்தார். சுரேசரை வரவேற்கக்கூட அவருடைய குரல் எழவில்லை. சுரேசர் அமர்ந்ததும் அவர் சம்வகையிடம் அமரச்சொல்லும்பொருட்டு திரும்பினார். இயல்பாகவே அவர் விழிகள் விலகிக்கொண்டன, அவர் அமரும்படி சொல்லவில்லை. சம்வகை சுவர் அருகே நின்றாள். சுரேசர் அவளை திரும்பி நோக்கிவிட்டு யுதிஷ்டிரனிடம் “பேரரசி விடுத்த ஆணை குறித்து செய்தி அனுப்பியிருந்தேன்” என்றார். “ஆம், அது அரசியின் ஆணை. நம் அனைவரையும் ஆள்வது அவள் சொல்” என்றார் யுதிஷ்டிரன். சுரேசர் “அதை சிந்துநாட்டுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டேன்” என்று சொன்னார்.

யுதிஷ்டிரன் “இதில் இனி நாம் செய்வதற்கு என்ன? நம் படைகளை அனுப்பவேண்டுமா?” என்று கேட்டார். “அரசே, நமது நான்கு படைகள் பாரதவர்ஷத்தை ஊடுருவியிருக்கின்றன. இதுவரை நூற்றிப்பதினேழு நாடுகளை அவை கடந்துள்ளன. ஓர் இடத்தில்கூட போர் என ஏதும் நிகழவில்லை” என்று சுரேசர் சொன்னார். “நம் நகரின் பெயரே ஒரு பெரும் படைக்கலம். நம்மை அஞ்சாதவர்கள் எவரும் இங்கில்லை. இனி நெடுங்காலம் அது அவ்வண்ணமே இருக்கும்.”

யுதிஷ்டிரன் புன்னகைத்தார். அவருடைய சோர்வு அகன்றதை சம்வகை கண்டாள். அவர் “ஆம், அதைத்தான் நான் விந்தையென எண்ணிக்கொண்டிருந்தேன். இளையோர் வென்றவை தொலைநாடுகள். சகதேவன் தெற்கே மலைகளையும் நதிகளையும் காடுகளையும் கடந்து சென்றிருக்கிறான். அங்கெல்லாம்கூட நம் மீதான அச்சம் சென்றடைந்திருக்கிறது” என்றார். “நாம் குருக்ஷேத்ரத்தில் வென்றது பாரதவர்ஷத்தைத்தான்” என்று சுரேசர் சொன்னார். “மெய், அதை இங்கிருக்கையில் ஒவ்வொரு செய்தியிலும் உணர்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

சம்வகை சலிப்புடன் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவருடைய சோர்வு எதனால் என அவளுக்கு அப்போது சற்றே புரிந்தது. அதை அவள் உணர்ந்ததை புரிந்துகொண்டவர்போல அவர் திரும்பி அவளிடம் “இன்று பேரரசிக்கு இந்நகர் பெரும் வரவேற்பை அளித்தது என்று அறிந்தேன்” என்றார். “ஆம் அரசே, மக்கள் கொந்தளித்தனர்” என்று அவள் சொன்னாள். “நன்று, எனக்கு வரவேற்பளித்ததுபோல நீ கடுஞ்செயல் எதையும் செய்ய நேரவில்லை” என்றார் யுதிஷ்டிரன். உடனே வாய்விட்டு சிரித்தபடி “அல்லது இதுவும் உன் கடுஞ்செயலேதானா?” என்றார்.

அவர் வாய்விட்டு நகைக்கும்போதும் விழிகள் நகைப்பில்லாமல் இருப்பதைக் கண்டு சம்வகை விழிவிலக்கிக்கொண்டாள். அவருடைய விழிகள் ஒருபோதும் நகைப்பதில்லை என்று அவள் அப்போது புரிந்துகொண்டாள். சுரேசர் ”இது மக்கள் திரண்டு எழுந்து அளித்த வரவேற்பு. நகரே மக்களால் நிறைந்துள்ளது. அவர்கள் எதையேனும் கொண்டாட விழைகிறார்கள்” என்றார். “ஆம், அவர்களுக்கு கொண்டாடுவதற்கு தெய்வங்கள் தேவை” என்றார் யுதிஷ்டிரன். “பேரரசி ஒருங்கிக்கொண்டிருக்கிறார், அவர் அவையமையும் பொழுது எழுகிறது” என்று சுரேசர் சொன்னார்.

“இது குடியவையா என்ன?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இல்லை அரசே, இது அரசவை மட்டுமே. எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் மட்டுமே இடம்பெறுகின்றன. பேரரசிக்கு அவைவணக்கம் செலுத்தும்பொருட்டு” என்றார் சுரேசர். “அவள் வென்று நகர்புகும் தருணம் இது. நன்று” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இத்தருணத்தைப் பாட நமக்கு கவிஞர்கள் தேவை. அரசி பழிமுடித்து கூந்தல்முடிந்து அவைபுகுந்ததை அவர்கள் பாடட்டும். அவள் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்த தருணம் சொல்லில் நிலைகொள்ளட்டும்.”

சுரேசர் “ஆம், இது காவியத் தருணமே. ஆனால் நம்மிடம் உரிய முறையில் சொல்லெடுக்கக் கற்ற பாவலர் இன்றில்லை. நம் மொழி இங்கே மாறிக்கொண்டிருக்கிறது. சூதர்கள்கூட அயல்நிலத்தவர்” என்றார். “கேகயத்திற்கும் கோசலத்திற்கும் ஏவலரை அனுப்பியிருக்கலாமே?” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அதற்குப் பொழுதில்லை. ஆனால் இங்கே உருவாகி வந்துள்ள புதிய மொழியிலேயே பாட்டிசைக்கும் பாவலர்கள் சிலரை வரச்சொல்லியிருக்கிறேன். அவர்கள் பாடட்டும்” என்று சுரேசர் சொன்னார்.

“முச்சந்திப் பாடகர்களா?” என்று யுதிஷ்டிரன் முகம் சுளித்தார். “அமைச்சரே, இது பெருங்காவியங்களுக்குரிய தருணம். சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் அணியிலக்கணமும் அறிந்த நாவலர் பாடவேண்டிய பொருள் இது.” சுரேசர் “ஆம், ஆனால் இந்த வெற்றி வெறுமொரு போர்வெற்றி அல்ல. இது புதிய வேதம் எழுந்த வெற்றியும்கூட. புதியவை புதிய மொழியிலேயே பாடப்பட முடியும். அரசே, நீங்கள் கூறும் அந்தப் பழைய மொழி இலக்கணத்திற்கு பழகிவிட்டிருக்கிறது. இலக்கணம் மொழியின்மேல் யானையின் சங்கிலிபோல கிடக்கவேண்டும் என்கின்றது தொன்மையான அணிநூலான குசுமாலங்காரம். யானையை அது ஆளவேண்டும், ஆனால் அதை யானை ஆழத்தில் உணர்ந்திருக்கவும்கூடாது. அகத்தே சங்கிலியை உணர்ந்துவிட்ட யானை வெறும் ஓர் ஊர்தி மட்டுமே” என்றார்.

யுதிஷ்டிரன் “ஆனால் இந்த மொழி… இதை அங்காடிமொழி என்கின்றனர்” என்றார். “முன்பும் இச்சொல் எழுந்ததுண்டு. வேதங்களை ஆராய்ந்த முனிவர்களின் மொழியை கான்மொழி என்றனர் வைதிகர். ஆரண்யகங்கள் என அவற்றை விலக்கினர். ஆனால் ஆரண்யகங்களினூடாகவே வேதம் மலர்சூடி ஒளிகொண்டது என்பது வரலாறு. ஏற்கெனவே எழுதப்பட்ட மொழியில் பெருங்காவியங்கள் எழுவதில்லை. அவை புதுக்கருக்கு அழியாத மொழியிலேயே நிகழ முடியும். எங்கே கான்மொழியை நகர்மொழி அறிகிறதோ அங்கே. எந்த மொழியில் சேறும் பொன்னும் ஒன்றே என ஆகிறதோ அதிலேயே காவியம் பிறக்கும்” என்று சுரேசர் சொன்னார்.

“புது மொழியில் இந்நிகழ்வு பாடப்படட்டும். கட்டில்லாததாக, இலக்கணமற்றதாக அப்பாடல்கள் திகழட்டும். அவற்றை ஆளும் சொல்லுடன் பெருங்காவிய ஆசிரியன் ஒருவன் எழுவான். அவன் நாவில் இருந்து அழிவிலா நூல் பிறந்தெழும்.” யுதிஷ்டிரன் அவருடைய சொற்களை மறுக்க முடியாதவராக ஆனால் ஒப்புதலும் அற்றவராக திரும்பிக்கொண்டார். அவரிடம் அந்த ஒவ்வாமை மீண்டும் எழுந்தது. “நம் இளையோர் வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா?” என்றார். அவர் அப்பேச்சை மாற்ற முயல்கிறார் என்று உணர்ந்து சுரேசர் “ஆம் அரசே, நாளை மறுநாள் நகுலன் நகர்புகுவார்” என்றார்.

“நாளை நாளை என்கிறீர்கள். அவன் அணுகுவது பிந்திக்கொண்டே இருக்கிறது” என்று யுதிஷ்டிரன் சலிப்புடன் சொன்னார். “சகதேவனும் வந்துகொண்டிருக்கிறான் என்றீர்கள்.” சுரேசர் “அதற்கு அடுத்த நாள் அவர் வந்தணைவார். மேலும் இரு நாட்களில் பீமசேனனும் பார்த்தனும் நகர்புகுவார்கள். அவர்கள் வந்தமைந்ததும் நாம் ராஜசூயம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம்” என்றார். யுதிஷ்டிரன் “ஏன் அதை இப்போதே அறிவித்தாலென்ன?” என்றார். “அஸ்வமேத நிறைவுக்குப் பின் அதை அறிவிப்பதே மரபு” என்றார் சுரேசர். யுதிஷ்டிரன் “மரபுகளை அவ்வப்போது தொட்டுக்கொள்கிறோம். நன்று” என்றார்.

ஏவலன் வந்து வணங்கினான். ”நாம் அவைக்கு கிளம்பவேண்டிய பொழுது” என்றார் சுரேசர். “ஆம், ஆனால் அவைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன” என்று சொன்னபடி யுதிஷ்டிரன் எழுந்தார். ஏவலர்கள் அருகணைந்து அவருடைய ஆடைகளை சீரமைத்து அணிகளையும் ஒத்திசைவாக்கினர். “அவை என நான் எண்ணுவது சான்றோர் அமைந்தது. புலவரும் கலைஞரும் செறிந்தது. இந்த அவை ஒரு அங்காடிபோல் இருக்கிறது.” கசப்புடன் சிரித்து “அங்காடிமொழியில் காவியம் எழவும் வழியமைத்துவிட்டீர்கள். நன்று” என்றார். சுரேசர் “அங்காடியில் திருமகள் வாழ்கிறாள் என்பது மரபு. அரசவை, கருவூலம், அடுமனை, ஈற்றறை, அங்காடி, வயல், ஆநிலை, நீர்நிலை என்னும் எட்டு இடங்களில் திருமகள் நிலைகொள்கிறாள்” என்றார். “நான் பேச விழையவில்லை” என்றார் யுதிஷ்டிரன்.

இடைநாழி வழியாக நடக்கையில் “நகுலன் நகர்புகும்போது மேலும் திரள் இருக்கவேண்டும்” என்றார். “அதை நிகழ்த்துவதற்கு உரியவற்றை செய்க! இம்மக்கள் பொன்னை விழைகிறார்கள் என்றால் அதை அளிக்கவும் தயங்க வேண்டியதில்லை.” சுரேசர் ஒன்றும் சொல்லவில்லை. “அர்ஜுனன் நகர்நுழைகையில் அதுவரை காணாத கொண்டாட்டம் இங்கே நிகழவேண்டும்.” சுரேசர் “நாம் மக்களை ஆளலாம், அவர்களை நடத்தமுடியாது” என்றார். “மக்கள் என இங்கே திரண்டிருப்போர் யார்? எவருக்காக நாம் போரிட்டு வென்றோம்? எவர் பொருட்டு எல்லாவற்றையும் செய்தோமோ எவரும் இங்கில்லை. இருப்பவர்கள் எளிய மக்கள். விழைவுகொண்டு வந்தமைந்தோர்” என்றார் யுதிஷ்டிரன்.

“அரசே, அவர்கள் நம்மை முழுதேற்று வந்தவர்கள். புத்துலகொன்றை சமைப்பவர்கள்” என்று சுரேசர் சொன்னார். “மெய்யாகவே என்னால் ஏற்க முடியவில்லை. இந்த நகரைப்போல் எனக்கு அயலான பிறிதொன்று இல்லை. இதற்கும் எனக்கும் எந்த உறவுமில்லை. இதன் எந்த உணர்வும் எனக்கு புரியவில்லை. முற்றிலும் அயலான ஒரு நிலத்திற்கு வந்துவிட்டவன்போல் உணர்கிறேன்.” அவர் முதுமைகொண்டு புலம்புபவர் போலிருந்தார். சம்வகை அவருடன் நடந்தபடி அவருடைய மெலிந்த தோள்களையும் தள்ளாடும் சிற்றடிகள் கொண்ட நடையையும் நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவர் “இந்நகரில் இனி என்ன நிகழ்ந்தால் எனக்கென்ன? இந்நகரில் இனி என் ஆணையும் செல்லாதென்று நினைக்கிறேன். அவள் தனக்குரிய நகரில் தனியரசு காண்பாள் என்றார்கள். இன்று இதோ இந்நகரமும் அவளுக்கென பொங்கி எழுகிறது. அங்கே இந்திரப்பிரஸ்தம் அவளையே அன்னையென எண்ணுகிறது என்றார்கள். என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. நான் கிளம்பி துறவுபூணவேண்டும் என்று நினைக்கிறேன். என் இளையோர் வரட்டும். அவர்களில் ஒருவர் அரசனாகட்டும். எனக்கு இந்த அரியணை ஒரு பொருட்டே அல்ல. நான் விழைவது விடுதலை… உண்மையில் எப்போதும் அதை மட்டுமே நான் விழைந்து வந்திருக்கிறேன். பிற அனைத்துமே எனக்கு பொருளில்லாமல்தான் தோன்றியிருக்கிறது” என்றார்.

 

அவைக்கு அருகிலிருந்த சிறு கூடத்திற்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கே அவர் அமர்வதற்கான பீடம் வெண்ணிறப் பட்டு விரிக்கப்பட்டு ஒருக்கப்பட்டிருந்தது. அவர் அமர்ந்துகொண்டு ஏவலனை நோக்கி “இன்நீர்… சற்று சூடாக” என்றார். அவன் கொண்டுவந்த இன்நீரை அருந்தியபடி பெருமூச்சுவிட்டார். சுரேசர் “அங்கநாட்டிலிருந்து இளவரசர் வந்துகொண்டிருக்கிறார். இங்கே ஒரு சொல் உலவிக்கொண்டிருக்கிறது, ஒருவேளை அவரை நாம் அரியணைக்குரியவராக தெரிவுசெய்யலாம் என்று” என்றார். யுதிஷ்டிரன் “அதெப்படி? அவர்கள் அங்கநாட்டுக்கு அல்லவா இளவரசர்கள்?” என்றார்.

“ஆம், ஆனால் இங்கே மூத்தவரின் மைந்தர் அவர்” என்றார் சுரேசர். “அவ்வண்ணம் சொல்லலாம். ஆனால் அவன் ஷத்ரியன் அல்ல. அவன் அன்னை சூதப்பெண். அந்த அடையாளத்தை நம்மால் மாற்றமுடியாது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “புதிய வேதத்தின் பிறப்பு என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் மெய்யாக ஒன்றுண்டு, அது ஷத்ரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது. ஷத்ரியர்கள்கூட இன்று ஏற்றுக்கொள்வார்கள், அசுரரும் அரக்கரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூதமைந்தனை அஸ்தினபுரியின் அரியணைக்குரியவனாக ஆக்கினால் இப்பேரரசு அவன் கண்ணெதிரே சிதறும். இதை ஈட்டியது அவ்வண்ணம் அழிப்பதற்காகவா என்ன?”

“நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று மட்டும் சொன்னார் சுரேசர். “நாம் முன்னரே முடிவுசெய்துவிட்டோம், அஸ்தினபுரியின் முடிக்குரியவன் பரீக்ஷித். அவன் துவாரகையில் வளர்கிறான். அவன் உடல் தேறிவருகிறது என செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவன் ஆற்றல்மிக்கவனாக வந்து இந்நகரில் கோலேந்தி அமர்வான்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அவன் நிஷாதகுடியின் அன்னைக்கு ஷத்ரிய குடியில் பிறந்தவன். யாதவ குடியின் அன்னையின் பெயர்மைந்தன். ஆகவே அத்தனை குடிகளாலும் ஏற்கப்பட்டவன். ஆகவே அவனே இந்தப் பெருநகரை ஆளமுடியும். வேறு எண்ணமே தேவையில்லை.”

“பேரரசி திரௌபதி வருகை” என ஏவலன் உள்ளே வந்து வணங்கி அறிவித்தான். யுதிஷ்டிரன் “வருக!” என்றபின் மேலாடையை சீரமைத்தார். சம்வகை வெளியே கிளம்ப “நிற்கலாம். இங்கே அரசமுறைச் சந்திப்புக்கு அப்பால் யாதொன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரன். அவள் சுவர் சாய்ந்து நின்றாள். யுதிஷ்டிரன் திரும்பி சுரேசரிடம் “அவள் எந்த அணிகளையும் கொள்ளவில்லை என்றார்கள். இன்று அவையமர்கையிலும் அவ்வண்ணம்தான் அமரவிருக்கிறாளா?” என்றார். “அவர் என்ன செய்கிறார் என அறியேன். அங்கே ஒற்றரை வைப்பது உகந்தது அல்ல என்று எனக்குத் தோன்றியது” என்றார் சுரேசர்.

திரௌபதியின் முதன்மைச் சேடி உள்ளே நுழைந்து “அஸ்தினபுரியின் அரசி!” என கட்டியம் சொன்னாள். அவள் தன் கையில் இருந்த மங்கலத்தாலத்துடன் முன்னால் வந்து அதை பீடத்தில் வைத்தாள். தொடர்ந்து திரௌபதி உள்ளே வந்தாள். சுரேசரும் சம்வகையும் தலைவணங்கினர். திரௌபதி எந்த அணியாடையும் நகைகளும் அணிந்திருக்கவில்லை. சிறிய செந்நிற மலர்களால் ஆன கரை கொண்ட வெண்ணிற ஆடையை மட்டும் அணிந்திருந்தாள். அதன் நுனியை தலைமேல் வளைத்து கொண்டையை மூடியிருந்தாள். கைகளும் தோள்களும் செவிகளுமெல்லாம் ஒழிந்திருந்தன.

யுதிஷ்டிரன் ”வருக, அரசி!” என முறைமைச்சொல் கூறினார். “அமர்க… இது தங்களின் நகரம், தங்களின் அவை. தாங்கள் வஞ்சினநிறைவு கொண்டு அரியணை அமரவிருக்கும் நாள் இது.” அந்த வேளையில் அந்த முறைமைச்சொல் அவப்பேச்சு என சம்வகைக்கு கேட்டது. திரௌபதி பீடத்தில் அமர்ந்து மேலாடையை மடிமேல் இழுத்து வைத்துக்கொண்டாள். மறுமொழியாக அவள் ஏதும் சொல்லவில்லை. யுதிஷ்டிரன் அதை எதிர்பார்த்து சற்று இடைவெளிவிட்டார். அறியாமல் விழிதூக்கி சம்வகையைப் பார்த்துவிட்டு “நீண்ட பயணம்… இன்றே அவைச்சந்திப்பை வைத்துக்கொள்ளவேண்டாம் என்று எண்ணினேன். ஆனால் நாளை ஒருவேளை நகுலன் நகர்புகக்கூடும். அது மிகப் பெரிய நிகழ்வு. அதில் இந்த அவைநிகழ்வு மறைந்துவிடக்கூடாது…” என்றார்.

திரௌபதி புன்னகைத்தாள். “இந்நகரையும் அரண்மனையையும் பழைய காலத்திலிருந்து மீட்டு எடுத்தேன். அரண்மனையிலுள்ள ஓவியங்களை அரசி பார்த்திருக்கலாம். அனைத்தும் புதியவை. தொல்கதைகளைக் கூட புதியவை என வரைந்திருக்கிறோம்” என்றார். “நகரமே விழிகொண்டுவிட்டிருக்கிறது… நான் நகரில் நுழைகையில் ஒவ்வொரு மாளிகையும் என்னை நோக்கி புன்னகை செய்தது.” அவர் அப்பேச்சினூடாக அதுவரை இருந்த இறுக்கத்தை இழந்து இயல்படைந்தார். அவரில் ஒரு சிறுவன் தோன்றினான்.

“உண்மையில் நான் பழைய நகரை மறக்க விழைந்தேன். அங்கே எனக்கு கசப்பான நினைவுகளே இருந்தன என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் இன்று இதை மாற்றியமைத்த பின் உணர்கிறேன், நான் அந்தப் பழைய நகரை முற்றாக இழந்துவிட்டேன். இனி அதை திரும்ப கொண்டுவர முடியாது. இவையனைத்தையும் அகற்றினாலும்கூட காலத்தில் முன்னால் நகரவே முடியும். இன்று திரும்பி நோக்கும்போது என் நினைவுகள் இனிக்கின்றன. இங்கே இளமைந்தனாக உலவியிருக்கிறேன். இளைஞனாக வாழ்ந்திருக்கிறேன். இளமைக்காலம் இனியது, அதில் நிகழ்ந்த துயர்களில்கூட இனிமை கலந்திருக்கிறது…”

“அன்னை நகர்நுழையக்கூடுமா?” என்று திரௌபதி கேட்டாள். அதை யுதிஷ்டிரன் எதிர்பார்க்கவில்லை. “அன்னையா?” என்றார். “ஆம், அன்னை” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “இல்லை, அன்னை நாங்கள் அனுப்பிய எந்தச் சொல்லுக்கும் மறுமொழி அளிக்கவில்லை. அவர் விதுரரின் குடிலில் அவருக்குப் பணிவிடைகள் செய்தபடி தங்கியிருக்கிறார். அவர் சொல்லடங்கும் தவத்திலிருக்கிறார்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இன்று அவர்களின் உலகில் நாங்கள் இல்லை. அன்னை இனி இந்நகரில் நுழைய வாய்ப்பே இல்லை.”

அவரே பெருமூச்சுடன் தொடர்ந்தார். “மூதரசி காந்தாரியும் நகரை மறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் இருவரும் காட்டில் தங்கள் நினைவுகளுடன் தனித்திருக்கிறார்கள். அவர்களுடன் ஓர் இரும்புச்சிலை உள்ளது. முன்பு துரியோதனன் செய்த பாவை அது. அதை அவர்கள் கொண்டுசென்றிருக்கிறார்கள். அவர் காட்டில் நடக்கையில் அதுவும் உடன் செல்கிறது என்று ஒற்றர்கள் சொன்னார்கள். அவர் அதனுடன் பேசிக்கொண்டே காட்டில் உலவுகிறார். அவர்களுக்குக் காவலாகவும் அவர்களால் பேணப்படும் மைந்தனாகவும் அது உடனிருக்கிறது. அவர்கள் அதை தங்கள் இருவருக்கும் நடுவே படுக்கவைத்துக்கொள்கிறார்கள். அதை அருகிருத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”

திரௌபதி “அவர்களுக்கு விடுதலை இல்லை” என்றாள். யுதிஷ்டிரன் உரக்க “எவருக்கும் விடுதலை இல்லை” என்றார். “இந்த நற்பொழுதில் ஏன் இதை நான் நினைவுகூர்கிறேன்? ஏன் துயரடைகிறேன்? எனக்கு இதிலிருந்து விடுதலையே இல்லை. அந்தப் பாவையை எண்ணிய மறுகணமே என் மைந்தர் நினைவிலெழுந்தனர். அவர்களையும் அவ்வண்ணம் பாவையெனச் செய்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். இனி அவர்களை அவ்வாறு செய்யமுடியாது. அவர்கள் மறைந்துவிட்டனர். இத்தனை விரைவில் அவர்கள் நம் கண்ணில் இருந்தும் கைகளிலிருந்தும் கரைந்தழிவார்கள் என எண்ணியிருக்கவே இல்லை. ஆனால் சாவென்பது அதுதான். எச்சமிலாதாகுதல். எச்சமென எஞ்சுவதெல்லாம் எச்சமல்ல, அவை வெறும் நடிப்புகள். வெறும் ஏமாற்றுக்கள்…”

அவர் சினம்கொண்டு எழுந்தார். “ஏன் இப்போது அதை கேட்டாய்? சொல், ஏன் அந்தப் பேச்சை எடுத்தாய்?” அவர் குரல் உடைந்தது. “நீ அறிவாய், என் நெஞ்சு எவ்வண்ணம் என நீ அறிந்ததுபோல் அறிந்தோர் எவருமில்லை. என் நெஞ்சை தொட்டு உலுக்க உனக்கு ஒரு விழியசைவே போதும். நீ அன்னையைப் பற்றிக் கேட்டது அதனால்தான். அங்கே தொடங்குமென நீ அறிவாய். இத்தருணத்தில் நான் கொண்ட இந்த மகிழ்ச்சியை அழித்தாகவேண்டுமென முடிவெடுத்தே அதை கேட்டாய்.”

அவர் விம்மலோசையுடன் மீண்டும் அமர்ந்தார். தலையை தன் கைகளால் பற்றிக்கொண்டார். “நான் இங்கே இதை நடித்துக்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியை, வெற்றியை, நிறைவை நடித்து நடித்து எனக்குள் அதை செலுத்திக்கொண்டிருக்கிறேன். நீ ஒரு கணத்தில் அதை அழித்தாய். பெண்களில் உன்னைப்போல் இரக்கமற்றவளை இப்புவி இதற்கு முன் கண்டிருக்காது” என்றார். திரௌபதி ஒரு சொல்லும் கூறாமல் அவரை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் மெல்ல மூச்சடங்கி உடலை ஒடுக்கி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

திரௌபதி திரும்பி சம்வகையிடம் மெல்லிய குரலில் “அவை கூடிவிட்டதா?” என்றாள். “ஆம் அரசி, அவைநிறைவை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது” என்று சம்வகை சொன்னாள். “நாம் கிளம்பவேண்டியதுதான்” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “இல்லை, நான் அவைக்கு வரப்போவதில்லை. அங்கே சென்று அமர்ந்து நடிக்க என்னால் இயலாது. நீயே முடிசூடுக! இது உன் வஞ்சம், உன் குருதிப்பசியின் நிறைவு. நீயே கொண்டாடுக!” என்றார். “ஆம், எல்லாக் குருதியும் எனக்காகவே” என்றபடி திரௌபதி எழுந்தாள். அவள் முகத்திலிருந்த கனிவு சம்வகையை குழப்பியது. அது கனிவா என்ன? எனில் அதன் பொருள் என்ன?

முதுசேடி உள்ளே வந்து தாலத்தை எடுத்துக்கொண்டாள். சுரேசர் “அரசே, எழுக!” என்றார். “இதற்கெல்லாம் என்னதான் பொருள், சுரேசரே?” என்று யுதிஷ்டிரன் சிலம்பும் குரலில் கேட்டார். “எவரால் அதற்கு மறுமொழி சொல்லமுடியும்?” என்றார் சுரேசர். திரௌபதி “பீஷ்ம பிதாமகர் எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று சுரேசரிடம் கேட்டாள். “அவரை கங்கர்குடி பிணிநோக்கி சூழ்ந்திருக்கிறது, அரசி. அவர் உடலில் நோய் முதிரவுமில்லை, தளரவுமில்லை” என்று சுரேசர் சொன்னார். “அவர் பேசுகிறாரா?” என்று திரௌபதி கேட்டாள். “ஆம், சிலமுறை விழிப்பு வந்துள்ளது. ஐவரில் பீமசேனனை மட்டும் உசாவுகிறர்” என்று சுரேசர் சொன்னார்.

யுதிஷ்டிரன் எதனாலோ சீற்றம்கொண்டவர்போல எழுந்துகொண்டு “கிளம்புவோம்… அவை கூடிவிட்டதென்றால் ஏன் இங்கே நின்றிருக்கிறோம்?” என்றார். திரௌபதி “ஆம், கிளம்பவேண்டியதுதான்” என்றாள். யுதிஷ்டிரன் அவளை நோக்காமல் சம்வகையிடம் “ஆணையிடுக… அனைத்தும் ஒருங்கட்டும்!” என்றார். அரசியும் அரசரும் இணையாக நடந்து அவைநோக்கி சென்றனர். சம்வகை வெளியே ஓடி கைகாட்ட காத்து நின்றிருந்த அவைக்காவலர் சங்கும் முழவும் மணியும் கொம்பும் சேங்கிலையும் என ஐந்திசை முழக்கத்தை எழுப்பினர். அவர்கள் இருவரும் மெல்ல அரசமென்நடையில் அவை நோக்கி சென்றனர்.

சம்வகை அவர்களுக்குப் பின்னால் சென்றாள். மங்கல இசையுடன் சூதர்கள் அவைநுழைந்தனர். தொடர்ந்து அணிச்சேடியர் சென்றனர். நிறைந்த அவையின் ஓசை முழக்கமென எழுந்து அவளைச் சூழ்ந்தது. அரசரும் அரசியும் அவை நுழைவதை அவள் ஓசையிலிருந்தே அறிந்தாள். “பேரரசி வாழ்க! அனல்மகள் வாழ்க! வெல்க கொற்றவை! வெல்க பாஞ்சாலக்குலமகள்!” என அவை முழக்கமிட்டது. அலையலையென வாழ்த்தொலி எழுந்தபடியே இருந்தது. அனைத்து இடைவெளிகளினூடாகவும் ஒலி பீறிட்டு காற்றில் அதிர்ந்தது. அவள் வாயிலில் நின்று அவைக்குள் நோக்கினாள். குடித்தலைவர்கள் அனைவருமே களிவெறிகொண்டு கூவிக்கொண்டிருந்தனர். அரிமலர்மழையால் அவை நிறைந்திருந்தது.

அந்த அவையிலிருந்த எவருமே அவளை அறிந்தவர்கள் அல்ல. அவர்கள் அஸ்தினபுரிக்கே புதியவர்கள். அந்நகரை கதைகளினூடாக வந்தடைந்தவர்கள். அவளையும் அவ்வண்ணமே அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் வஞ்சநிறைவின் பெருங்களிப்பை கொண்டிருந்தனர். கதைகளினூடாகவே அவர்கள் அடைந்த வஞ்சம். அவர்கள் ஒவ்வொருவரையாக அவள் பார்த்தாள். பீதர்முகங்கள் கண்கள் இடுங்க மரப்பாவைகள் என தெரிந்தன. கரிய தென்னிலத்து முகங்களில் வெண்விழிகள் துறித்திருந்தன. மேற்குநிலத்து யவனர் முகங்கள் குருதியெனச் சிவந்திருந்தன.

அந்தணர் வேதமோதி கங்கைநீர் தூவி அரியணையை வாழ்த்தினர். முதிய அந்தணர் வந்து அழைக்க திரௌபதி கைகூப்பியபடி சென்று அரியணையில் அமர்ந்தாள். அவள் அருகே யுதிஷ்டிரன் அமர்ந்தார். அந்தணர் அவர்களை நீரிட்டு வாழ்த்தினர். முதிய குடிகள் எழுவர் அஸ்தினபுரியின் தொன்மையான மணிமுடியை பொற்தாலத்தில் அரசமேடைக்கு கொண்டுசென்றனர். அதுதான் தேவயானியின் மணிமுடிபோலும் என சம்வகை எண்ணிக்கொண்டாள். குடித்தலைவர் அதை எடுத்து அவள் தலையில் சூட்டினர். அவள் முகம் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிலையெனத் தெரிந்தது. அவையினர் எழுப்பிய வாழ்த்தொலியும் இசைமுழக்கமும் அவளை தொடவில்லை. வேறெங்கோ என அவள் குளிர்ந்து அமைந்திருந்தாள்.

அருகே அமர்ந்த யுதிஷ்டிரன் அவளை ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் வியந்ததுபோல, அஞ்சுவதுபோல, ஒவ்வாமைகொண்டதுபோல உணர்வுகள் மாறிக்கொண்டிருந்தன. குடித்தலைவர்கள் கொண்டுவந்த ஹஸ்தியின் மணிமுடியை சூட்டினர். அவையின் வாழ்த்தொலிகளும் இசைமுழக்கங்களும் சூழ அவர்கள் அளித்த செங்கோலைப் பெற்று அவர் அரியணையில் நிமிர்ந்து அமர்ந்தார். அவையை நோக்கியபோது அவர் முகம் மலர்ந்தது. தோள்கள் விரிந்து நெஞ்சு நிமிர்ந்தது. செங்கோலை நாட்டிப்பற்றியபடி அவர் கனவு விரிந்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவர் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை சம்வகை கண்டாள்.

அவையினரின் வாழ்த்தொலிகளுக்கு நடுவே வெள்ளிக்கோலுடன் நிமித்திகன் மேடைக்கு வந்தான். அவன் கோலை மும்முறை சுழற்றியபோது அவை அமைதியடைந்தது. “வெற்றி சிறக்கட்டும்! வெற்றியே நிகழட்டும்! வெற்றியே என்றென்றும் தொடரட்டும்!” என்று அவன் உரத்த குரலில் கூவினான். “இந்நாளில் மகிழ்க தேவர்கள்! நிறைவடைக அஸ்தினபுரியின் மூதாதையர்! கொண்டாடுக குடிகள்! நினைத்து நினைத்து நெஞ்சுநிறைக நம் கொடிவழிகள்! இதோ கொற்றவை என நம் அரசி எழுந்தார். அவையில் உரைத்த வஞ்சம் முடித்து கொழுங்குகுருதி கொண்டு பழி துடைத்து நகர்நுழைந்தார். வெற்றிச்சிறப்புடன் அரியணை அமர்ந்தார்!”

“பாடுக பாவலர், புகழ் பாடுக சூதர்! இது தெய்வங்களின் தருணம். பொலிக அஸ்தினபுரியின் அரியணை! தேவயானியும் தபதியும் சத்யவதியும் அமர்ந்த பீடம் நிறைவுறுக! அன்னை அமர்ந்த இந்த மேடை என்றென்றும் ஆலயத்தூய்மை கொள்க! சொல்பெற்று அழிவின்மை சூடுக! ஆம், அவ்வாறே ஆகுக!” அவை வெறிகொண்டு ஆர்ப்பரித்தது. குடித்தலைவர்கள் எழுந்து கைகளை வீசி தொண்டைநரம்புகள் புடைக்க கூச்சலிட்டனர். கொம்புகளும் முரசுகளும் முழக்கமிட வெளியே முற்றத்தில் நின்றிருந்த இசைக்குழு அதை ஏற்று முழக்கமிட்டது. அதிலிருந்து பற்றிக்கொண்டு நகரமெங்கும் இருந்த காவல்கோட்டங்களில் முரசுகளும் கொம்புகளும் முழங்கின. நகரமே ஒரு இசைக்கலமென்றாகியது.

அதன் நடுவே திரௌபதி அயலவள் என அமர்ந்திருந்தாள். அவள் முகமும் விழிகளும் முற்றிலும் பொருளில்லாதவையாக இருந்தன. அந்நிகழ்வுகளின் மையமெனத் திரண்ட பொருளின்மை அது என சம்வகை எண்ணிக்கொண்டாள்.

தொடர்புடைய பதிவுகள்

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் –கடிதங்கள்

$
0
0

 

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

அன்புள்ள ஜெ

 

நான் இளம் வாசகனாக உள்ளே வந்தபோது வாசித்த தொகுப்பு அறம். அதிலிருந்த கதைகளே என்னை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தன. மேலோட்டமான எளிமை கொண்ட யானைடாக்டர், நூறுநாற்காலிகள், சோற்றுக்கணக்கு போன்ற கதைகளை முதலில் பெரிய மனக்கொந்தளிப்புடன் வாசித்தேன். அவற்றைப்பற்றிப் பேசினேன். அன்று எனக்கு அலுவலகத்தில் இலக்கியம் வாசிக்கும் சீனியர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களெல்லாம் இலக்கியத்தை நன்றாக அறிந்தவர்கள் என்று நினைத்தேன்.

 

ஆனால் என் மனதில்

 

 

அன்புள்ள ஜெமோ,

பெரியார்-வைக்கம் பற்றிய உங்கள் சமீபத்திய பழ.அதியமானுக்கு எதிரான பதிவை படித்தேன். இதற்க்கு சில வருடங்கள் முன்பே நீங்கள் எழுதிய கட்டுரைகள் பின் அதற்கான பதிலுரைகளை தொடர்ந்திருக்கிறேன்.  வைக்கம் போராடடத்தில் பெரியாரின் பங்களிப்பு சார்ந்த உங்களது வாதம் அல்லது அதன் தொனி இன்னும் என் அறிவுக்கு ஏற்புடையதாக இல்லை.

 

பெரியாரை எப்போதும் பெரியாரிஸ்டுகள் வழியாகவே அணுகி, அதன் மூலமே அளவிட வேண்டுமா என்றும் எனக்கு தெரியவில்லை. பெரியாரிஸ்ட்டுகளை சார்ந்து அல்லது அவர்களுக்கு எதிராக எனது பெரியார் சார்ந்த கருத்துக்களை கட்டடமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். எனக்கு பெரியார், அவரது பங்களிப்பு, அந்த காலகட்டம், அதற்கான தரவுகள் அவ்வளவுதான்.

வைக்கம் போராடடம் மார்ச் 30, 1924ல் ஆரம்பிக்குது, உடனே பேசசுவார்த்தை நடந்து, அது தோல்வியுற்று, பின் மீண்டும் ஏப்ரல் 7 போல மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 13, 1924 அன்று பெரியார் தன் மனைவி நாகம்மையுடன் வந்து வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு, தொடர்சியாக அங்கேயே இருந்து பின்  செப்டம்பர் 10-ம் தேதிதான் ஊர் திரும்புகிறார்

தமிழகத்தில் இருந்து இன்னொரு சமஸ்தானத்துக்கு போயி, 5 மாதங்கள் தொடர்ச்சியாக  போராட்டம், கைது, விடுதலை, போராட்ட தலைமை தாங்குதல், பிரட்சாரம் என்று வைக்கத்தை ஒற்றிய பகுதிகளில் இருந்துவிட்டு, அரசின் பேச்சுத்தடை, நுழைய தடை என அனைத்தையும் மீறி இரண்டாம்முறை கடுங்காவல் தனிமை சிறைக்கு பின் 30 ஆகஸ்ட் விடுதலையாகி, மீண்டும் பிரட்சாரம் செய்துவிட்டு, ஈரோட்டுக்கு செப்டம்பர் 10-ம் தேதி திரும்புகிறார்.  ஊர் திரும்பிய உடனேயே சென்னை மாகாணக் காவல் துறையால் செப் 11-ம் தேதியே கைது செய்யப்படுகிறார்.

ஏறக்குறைய 5 மாதங்கள் இன்னொரு மாகாணத்திற்கு சென்று, அங்கேயே தங்கி,   தொடர்சியாக பங்கு பெற்று வருவது என்பது அவ்வளவு குறைத்து மதிப்பிடக் கூடியதோ, எளியதோ இல்லை என்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் அப்போது அவர் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்.

அவர் “தொடங்கவில்லை” என்ற உங்கள் ஒற்றை வார்த்தையை நானும் ஏற்கிறேன். அது இன்னொரு மாகாணத்தில் நடந்த நிகழ்வு, கண்டிப்பாக அதை இவர் தொடங்கி இருக்க முடியாது, தொடங்கவும் இல்லை. ஆனால் அந்த போராடடத்துக்கு சென்ற பெரியார் போன்ற ஒருவர் தொடர்சியாக 5 மாதங்கள் வெளிமாகாணத்தில் தங்கி ஓய்வை கழித்திருக்கமாடடார் என்று நம்புகிறேன். அவர் செப் 10 தேதி திரும்பும் வரை தொடர்ந்து போராடடத்தில், பிரட்சாரத்தில் தான் ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த முன்னணி போராளிகள் சிறையில் அடைக்கப்படடதால்தான் பெரியார் அங்கு சென்றிருக்கிறார், போராடடத்துக்கு தலைமை தாங்கி இருக்கிறார். மெட்றாஸில் இருந்து வந்த நிதியும், தலைமைத்துவமும் போராடடம் மீண்டும் வலுவடைய காரணம் என்ற அரசு ஆவண பதிவுகள் இருக்கிறது.  பெரியாரை தவிர வைக்கம் போராடடத்தில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்கள் அய்யாமுத்துக்கவுண்டர் மற்றும் எம் பெருமாள் நாயுடு என்பதும் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களை விட பெரியாரின் பங்களிப்பு குறைவு என்று சொல்வதற்க்கிடம் இல்லை. பெரியாருக்கு இரண்டாம் முறை சிறை தண்டனை அளிக்கப்படட பின்பும் நாகம்மை, திருமதி. மாதவன், திருமதி.ஜோசப், திருமதி, கோவிந்தன் போன்ற போராளிகளின் மனைவிகளோடு இணைந்து மகளிர் கமிட்டியை உருவாக்கி தொடர்ந்து பிரட்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களும் மே 20 கைது ஆகி இருக்கிறார்கள். இதில் அவர்களின் தொடந்த தீவிரம் போற்றத்தக்கது. இப்படி 5 மாதம் அங்கே தங்கி இருந்து, தொடர்சியாக செயல்படடவரை “நடத்தவில்லை” என்ற வார்த்தைக்குள் அடைக்கமுடியாது என்றே நினைக்கிறேன். வைக்கம் போராடடம் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு அழைக்கப்பட்டு மீண்டும் அங்கே சென்று 29.11.25 ஆம் தேதி பெரியார் அந்த கூடடத்தில் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்.

இந்த நிகழ்வில் பெரியாரின் பங்களிப்பு சார்ந்து திராவிட கழகம் அல்லாமல் கேரளாவை சார்ந்தவர்களின்/வெளிநபர்களின்  தரவுகளே ஏகப்பட்ட்து இருக்கிறது, ராஜாஜி அறிக்கை, யங் இந்தியா உள்பட. அதை யாரும் மறுக்கவில்லை. நீங்களும் உங்கள் பழ. அதியமானின் கட்டுரையில் எதையும் தகவல் பிழை என்று மறுக்கவில்லை.

வைக்கம் போன்ற ஒரு போராடடம் பெரியாரால் மட்டுமே இங்கு நினைவில் கொள்ளப்படுகிறது, அது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அதுதானே இயல்பானது, எந்த வரலாறு, அரசியல், சமூக நிகழ்வுகளும் பள்ளிக்கல்வியில்  பிராந்திய முக்கியத்துவம் சார்ந்ததே. சுதந்திர போராடடத்தில் தமிழக போராடடவீர்கள் பற்றி நமக்கு படிப்பிக்கப்படுவதை விட கேரளா, ஆந்திரா, கர்நாடக சுதந்திர போராடடவீர்கள் பற்றி படிப்பிக்கப்படமாடடார்கள். இதேதான் அந்த அந்த மாநிலங்களிலும். பாண்டிய, சோழ வரலாறை விட சேர வரலாறு அவ்வளவாக நமது பள்ளிக் கல்வியில் இருக்காது. சோழர்கள் அல்ல, சாளுக்கியர்களும் புலிகேசியும்தான் கர்நாடக கல்வியில் முக்கியத்துவம் பெருவார்கள். இதுதான் பொதுவான நியதி. வைக்கத்திற்கும் தமிழகத்திற்கும் நேரடி சம்பந்தம் இல்லாதபோது அது வைக்கம் போராடடமாக இங்கு நினைவுறுத்தப்படாது. பெரியார் பங்கு கொண்டதாலேயே அது பிராந்திய முக்கியத்துவம் கொண்டு இங்கு பள்ளிக் கல்விக்கு வந்திருக்கிறது. இல்லையெனில் அய்யன்காளி, கந்துகுரி வீரசலிங்கம், பாக்ய ரெட்டி வர்மா போன்றவர்கள் செயல்பாடுகள் சார்ந்து எப்படி நாம் அறியமாடடோமோ, அப்படியே வைக்கமும் பள்ளிக்கல்வியில் அறியப்படாமல்தான் போயிருக்கும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளில் கதை வேறு. கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் இருக்கும் எனது நண்பர்களிடம் கேட்டேன், அவர்கள் இப்போதும் வைக்கம் பற்றி அறியவில்லை, அவர்கள் படித்தபோது  கல்வி திட்டத்தில் வைக்கம் சார்ந்து ஏதும் இல்லை.

 

 

பெரியாரை வைக்கம் போராடடத்தில் அவரது பங்களிப்பு சார்ந்து நிராகரிக்கவோ, குறைவாகவோ மதிப்பிடவோ முடியாது. நீங்கள் அப்படி குறைவாக மதிப்பிடுகிறீர்கள் என்றும் நான் நினைக்கவில்லை, ஆனால் பெரியாரிஸ்ட்டுகள் வைக்கத்தை பெரியாரின் முகமாக முன்னிறுத்துவது உங்களை தொந்தரவு செய்கிறது என்று நினைக்கிறேன், அது வைக்கம் போராடடத்தை முன்னெடுத்த பல்வேறு பெரும் சீர்திருத்தவாதிகளை மறைப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் அது இயல்பானது என்பதே என் எண்ணம். கேரளாவில் வைக்கம் பற்றி படிப்பவர்கள் அதன் பின் இருந்த முக்கியத்துவர்கள் எல்லோரையும் விரிவாகவே படிப்பார்கள், ஒருவேளை பெரியார் அதில் ஒரு அடிக்கோடாக மட்டுமே இருக்கலாம், ஆனால் தமிழகத்தில் வைக்கம் பெயர் தெரிவதற்கும் அது சார்ந்தவை பிரபலமானதற்கும் பெரியாரின் வைக்கம் போராடட பங்களிப்புதான்  காரணம் என்று நினைக்கிறேன், அப்படி இல்லையெனில் அது இவ்வளவு முக்கியத்துவமாக பள்ளிக்கல்வியில் அறியப்பட்டு கூட இருக்காது என்பது இயல்பானது என்றே நம்புகிறேன். அதேபோல் அவர் சும்மா போராடடத்தில் பங்குகொண்டு திரும்பவில்லை.  வைக்கம் போராடட  ஆரம்ப கடடத்திலேயே அதன் முன்னணி தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்ட சூழ்நிலையில் பெரியார்  அங்கு சென்று தொடர்ச்சியாக போராடியது அந்த போராடடத்தை தொடர்ந்து தக்கவைக்க, நீங்கள் சொல்வது போல்  அவருடைய அன்றைய இளமைவீச்சால் ஆற்றல் கொண்டதாக, பெரும் தூண்டுகோலாக இருந்திருக்கும். எனவே தமிழக சூழ்நிலையில் அவரை வைக்கம் வீரர் என்று சொல்வது நியாயமானது என்பதே என் எண்ணம்.

 

அன்புடன்

சரவணன் விவேகானந்தன்

 

அன்புள்ள சரவணன்

நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஒன்றுதான் இது. வைக்கம் போராட்டம் கேரளப்பண்பாட்டின் பெருநிகழ்வு. காந்தி நடத்திய மாபெரும் போராட்டமான ஆலயநுழைவு இயக்கத்தின் தொடக்கப்புள்ளி

 

வைக்கம்போராட்டம் நாராயணகுரு, காந்தி உள்ளிட்ட பெரும் ஆளுமைகளால் வழிநடத்தப்பட்டது. டி.கே,மாதவன், பி.கே.குஞ்ஞிராமன், சகோதரன் அய்யப்பன் போன்ற சமூகசீர்திருத்தவாதிகளாலும் கேளப்பன், கே.பி.கேசவமேனன் போன்ற காங்கிரஸ் தலைவர்களாலும் நடத்தப்பட்டது. ஈஎம்எஸ், ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்களை உருவாக்கியது. அதை ஈவேராவின் ஒற்றையாள் போராட்டம் என திரிப்பது மோசடி.

 

அவர் அதில் பங்குகொண்டார், போராடினார் என்று சொல்வதில் எந்தப்பிழையும் இல்லை. அவர் அதை தொடங்கினார், வழிநடத்தினார், வெற்றிவாங்கி தந்தார் என்றெல்லாம் புனைவதுதான் சிக்கலே. காந்தி உட்பட அதில் ஈடுபட்டவர்களின் பங்களிப்பை திரிப்பதும் சிறுமைசெய்வதும்தான் கண்டிக்கத்தக்கது.

 

 

ஜெ

ஜார்ஜ் ஜோசப்

ஜெ

 

காந்தி ஜார்ஜ் ஜோசப் அவர்களை போராட்டக்களத்திலிருந்து மாறியிருக்கச் சொன்னது உண்மைதான். ஆனால், காந்தி கடிதமெழுதிய அடுத்தநாள் (7ஏப்ரல்1924) டி.கே. மாதவன் மற்றும் கே.பி.கேசவன் இருவரும் கைதானபிறகு, வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ஜார்ஜ் ஜோசப். ஏப்ரல் 11, 1924-ம் நாள் காந்திக்கு “வைக்கம் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. போலிஸ் வழிதரவில்லை. கைதுசெய்யவும் மறுக்கிறது. சத்தியாகிரகிகள் முன்சாலையில் அமர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்னும் பல சத்தியாகிரகிகள் இணையவுள்ளார்கள். இந்த போரட்ட வடிவத்தில் ஏதேனும் மாற்றமிருந்தால் தெரியப்படுத்துங்கள். அவசரம்” என்று தந்தியனுப்பினார். காந்தியிடமிருந்து அடுத்தநாள், “உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு, கைது செய்யப்படும்வரை அமைதியாக முறையில் நிற்கவோ உட்காரவோ செய்யுங்கள்” என்று பதில் வந்தது.

 

ஏப்ரல் 11, 1924 அன்று ஜார்ஜ் ஜோசப் கைதுசெய்யப்பட்டு ஆறுமாதம் சிறைலடைக்கப்பட்டார். கைதானபோது, அவர் காந்திக்கு அனுப்பிய தந்தி, “நான் கைதுசெய்யப்பட்டுள்ளேன். சத்தியாகிரகம் கண்டிப்பாக தொடரவேண்டும். பொதுமக்களின் பெருத்த ஆதரவும், ஏராளமான தன்னார்வலர்களும் இருக்கின்றார்கள். தலைவர்கள் தான் தேவையாக இருக்கின்றார்கள். எனவே தேவதாஸ் காந்தியையோ அல்லது மகாதேவ் தேசாவையோ அனுப்புங்கள்…”

 

எனவே, ஜார்ஜ் ஜோசப் அவர்கள் ஒருபோதும் போராட்டக்களத்திலிருந்து விலகியதில்லை.

 

அன்புடன்

கிறிஸ்

 

அன்புள்ள கிறிஸ்

 

காந்தியின் ஆலோசனைகளை ஜார்ஜ் ஜோசப் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கிடையே மோதல்களும் கண்டனக் கடிதப்போக்குவரத்தும் நிகழ்ந்தன. ஆனால் ஜார்ஜ் ஜோசப்பை இழக்கவும் காந்தி தயாராகவில்லை. வைக்கம் இயக்கத்தில் பிளவு நிகழக்கூடாது என்று தொடர்ந்து எழுதினார். ஜார்ஜ் ஜோசப் காந்தியை கண்டித்தபடி காங்கிரஸிலேயே நீடித்தார். பின்னர் காந்தியின் ஹரிஜன இயக்கத்தின் முன்னணிப் போராளியாக ஆனார். இதையெல்லாம் நான் முன்னரே எழுதியிருக்கிறேன்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலேசிய இலக்கிய முகாம் உரைகள்

$
0
0
மலேசியாவில்  கூலிம் இலக்கிய முகாமில் சென்ற ஆண்டு டிசம்பர் 20 முதல் 22 வரை நிகழ்ந்த உரைகளின் தொகுதி. நான் நான்கு உரைகள் ஆற்றியிருக்கிறேன். பேருரைகள் அல்ல. ஒருவகை பயிற்சி உரைகள்.

 

 மரபு இலக்கியம் – ஜெயமோகன்

 

 

நாவல் எனும் கலை – ஜெயமோகன்

 

இலக்கிய விமர்சனம் – ஜெயமோகன்

 

உலக இலக்கியம் – ஜெயமோகன்

 

 

https://youtu.be/cGOJQXMeUMM –

நாட்டார் வழக்காற்றியல் – சு.வேணுகோபால்

https://youtu.be/zPlXqKJatlA –

மலைக்காடு நாவல் விமர்சனம் – சு.வேணுகோபால்

https://youtu.be/HgCjtfZ0m1I –

அக்கினி வளையங்கள் – சு.வேணுகோபால்

https://youtu.be/5QttdXnHZ9w –

பேய்ச்சி – அருண்மொழி நங்கை

https://youtu.be/7HYb90dKcAw –

வல்லினம் பரிசுக்கதைகள் – சு.வேணுகோபால்

https://youtu.be/anvZ_s7C6CQ –

மலேசியாவின் சமகால கவிதைகள் – சாம்ராஜ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…

$
0
0

 

குடிமக்கள் கணக்கெடுப்பு

குடிமக்கள் கணக்கெடுப்பு குறித்த முதன்மையான ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன். அதைப்பற்றிய எல்லா முக்கியமான தரப்புகளையும். மிகமிகக் குறைவாகவே நடுநிலையான, உண்மையைச் சொல்லும் பதிவுகளைக் கண்டேன். பெரும்பாலானவை தங்கள் அரசியலுக்கேற்ப எல்லாவற்றையும் வளைத்துக்கொள்பவை. அதற்கேற்ற தரவுகளை சமைப்பவை. மிகையுணர்ச்சிக்கொந்தளிப்புகள்; இன்றைய சூழலில் ஒருவன் உண்மைநிலையை உணர முதலில் தன்னை எளியகுடிமகனாக நிறுத்தி தன் புரிதலை நம்பி, நீதியுணர்வைச் சார்ந்து பேசவேண்டியிருக்கிறது.

 

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவிலிருந்து தொடங்கவேண்டும். பெரிய அளவில் நிதியளிக்கும் தொழிலதிபர்கள், வணிகர்கள் எங்கள் தொடர்பில் இல்லை. எங்களுக்கு நிதியளிப்பவர்கள் பெரும்பாலும் இலக்கியம் மேல் ஆர்வம் கொண்ட குறுந்தொழிலதிபர்கள். இன்றுவரை அவர்களிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டதில்லை. குறிப்பாக எவரிடமும் நிதிகோரியதுமில்லை. பொதுவான அறிவிப்புடன் சரி. நிதி வந்துவிடும். அது உளமுவந்து அளிப்பது.எஞ்சும் நிதியை வறுமையில் இருக்கும் படைப்பாளிகளுக்கு அளிப்பது வழக்கம்.

 

ஆனால் இவ்வாண்டு பெரும்பாலானவர்கள் கடுமையான நிதிநெருக்கடியில், அதைவிட அச்சத்தில் இருந்தார்கள். தனியார்த்துறைகளில் பணியாற்றும்பலர் வேலையிழந்தும் வேலையிழப்பு வாய்ப்பிலும் இருந்தார்கள். வேலையிழந்து வேறுவேலைக்கு முயல்வதனால் விழாவுக்கு வரமுடியாது என்று எழுதியவர்களே பலர். ஒரு பதினைந்து நாளில் ஒரு சின்ன வட்டத்திற்குள் இந்த நாடு இன்றிருக்கும் பொருளியல்நிலையை புரிந்துகொள்ள முடிந்தது.

 

உண்மையில் இதுதான் சரியான புரிதல். பொருளியல் கணக்குப்புலிகள் , அரசியல் தர்க்கச்சிங்கங்கள் இருபுறம் நின்று இணையாகப் போரிடும் சமரில் இருந்து நாம் எதையும் புரிந்துகொள்ள முடியாது. எதைச் சொன்னாலும் அதை ‘ஆதாரபூர்வமாக’ இரு தரப்பும் மறுப்பார்கள். நாமறியும் நம் வாழ்க்கையே நமக்கு ஆதாரம். அதில் நாம் அறிவதே உண்மை. அது பொய் என எவர் நம்மிடம் சொல்லும்போதும் நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை

 

நாடு பொருளியல் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தொழில்களின் வீழ்ச்சி என்பது ஒரு வளரும் நாட்டில் சிறியவிஷயம் அல்ல. ஒவ்வொருநாளுமென வேளாண்மையிலிருந்து வெளியே வரும் தொழிலாளர்களை உள்ளே இழுத்து வைத்திருப்பது தொழில்துறை. குறிப்பாக நாடெங்கும் பரவியிருக்கும் சிறுமுதலீட்டுத் தொழில்துறை.அது நலிவடைந்துகொண்டே செல்கிறது

 

படித்த இளைஞர்களுக்கான பெரும்பகுதி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சிறுதொழில்துறையே. ஒர் அடிநிலைக் குடும்பம் வாழ்க்கையில் மேலே செல்வதற்கான வழி என்பது படிப்பு, அதன்பின் ஒரு வேலை என்பது. அந்த வாய்ப்புகள் அடைபடுமென்றால் எதிர்காலமே இல்லாத சூழல் என்றே பொருள். அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சட்டென்று நாடு முப்பதாண்டுகள் பின்னகர்ந்துவிட்டது

 

பெட்ரோலியப்பொருட்கள் உலகச்சந்தையில் மிகக்குறைந்த விலையில் கிடைத்தபோது உள்ளூரில் விலையை குறைக்காமல் வைத்திருந்தார்கள். அது விலையில் நிலைத்தன்மையை உருவாக்குவது என நமக்குச் சொல்லப்பட்டது. அந்த வணிகத்தால் உருவான மிச்சப்பணம் சேமிக்கப்பட்டு உலகச்சந்தையில் விலை கூடும்போது உள்ளூர்விலை கூடாமலிருக்க பயன்படுத்தப்படவேண்டும். ஆனால் அந்நிதி பொதுக்கணக்குக்கு எடுக்கப்பட்டு செலவிடப்பட்டது. இப்போது பெட்ரோலியப்பொருட்கள் விலையேறுமென்றால் பெரிய விலைவாசி ஏற்றம் உருவாகக்கூடும்.

 

பெட்ரோலியப்பொருட்களின் விலை நிலையாக இருக்கவேண்டுமென ஏன் சொல்கிறார்கள் என்றால் ஏற்றுமதி ஒப்பந்தம் போட்டுக்கொண்ட சிறு தொழில்கள் அவ்விலையேற்றத்தால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகக்கூடாது என்பதனால்தான். ஆனால் அந்த நம்பிக்கை இன்றில்லை. ஒவ்வொருவரும் பதறிக்கொண்டிருக்கிறார்கள்.

 

இதற்கு எல்லாவகையிலும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டியவர்கள் ஆளும் பாரதியஜனதாக் கட்சியினர். முதிர்ச்சியற்ற பொருளியல் அணுகுமுறையும், தங்களுக்கு அணுக்கமான பெருந்தொழிலதிபர்களுக்குச் சாதகமான நெறிவகுப்பும் கொண்டு நமக்கு இந்நிலையை உருவாக்கியவர்கள் அவர்கள்.

 

ஆனால் அவர்கள் இச்சரிவைப்பற்றி கவலையே படாமலிருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை நமக்கு அளிக்கிறார்கள். அடிவயிற்றிலிருந்து எழும் ஐயங்களைக்கூட வன்மமும் வஞ்சம்மும் கொண்டு எதிர்க்கிறார்கள், தேசத்துரோகம் எனத்  திரிக்கிறார்கள்

 

இந்த குடிமக்கள் கணக்கெடுப்புத் திட்டமும் , அதன் சட்டத்திருத்தமும் ஒற்றைவரியில் சொல்வதென்றால் நாம் சென்றுகொண்டிருக்கும் இருள்மிக்க எதிர்காலத்தைப் பற்றிய உண்மையான அச்சங்களை திசைதிருப்ப செய்யப்படும் மாபெரும் நாடகம் அன்றி வேறல்ல. நாள் செல்லச் செல்ல அந்த எண்ணம் வலுப்பெறவே செய்கிறது

 

குடிமக்கள் கணக்கெடுப்புத்திட்டத்தின் அரசியலைப்பற்றிய நீளநீளமான கட்டுரைகளை, தொலைக்காட்சி உரைகளைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. இந்த செய்திமிகை உலகில் அவற்றால் எந்தப்பயனும் இல்லை. நம் அனுபவ உலகமே மெய்யானது.

 

நான் அஸாமிலும் வங்கத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச மக்கள் குடியேற்றத்தால் உருவாகியிருக்கும் நெருக்கடிகளை நன்றாகவே அறிவேன். அதைப்பற்றி தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். அக்குடியேற்றக்காரர்கள் மிக வறியநிலையில் வருகிறார்கள். லஞ்சம் கொடுத்து  உள்ளெ நுழைந்து இங்கே நிலைகொள்கிறார்கள். ஆனால் மிகமிக விரைவில் அவர்களின் இன- மத அடையாளத்துடன் ஒருங்கிணைந்து கும்பல் அதிகாரமாக ஆகிவிடுகிறார்கள்.

 

அஸாமிலும் வங்கத்திலும் நாகாலாந்திலும் எல்லாம் பல ஊர்களில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்டின் கொடி பறப்பதை, அவ்வமைப்பினர் வழியில் சாலை தடை வைத்து சோதனைசெய்தபின்னரே பயணிகளை உள்ளே விடுவதை நேரில் கண்டிருக்கிறேன். பல ஊர்களை ‘விடுவிக்கப்பட்ட பகுதி’ என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்பதை கண்டிருக்கிறேன். இவர்களின் ஒருங்கிணைந்த வாக்குவல்லமையே வங்கத்தில் முன்பு இடதுசாரிகளை நிலைநிறுத்தியது. இன்று மம்தாவுக்கு அவர்கள் வாக்கு திரும்பியிருக்கிறது.

 

வங்கத்தில், அஸாமில் இந்துக்களிடையே இதைப்பற்றிய கடுமையான கசப்பு உள்ளது. நாகாலாந்தில் கிறித்தவர்களிடையேகூட அக்கசப்பு உள்ளது.அதை  அங்கே பயணம் செய்து கண்டு நான் எழுதியபோது அது அப்பட்டமான பொய் என வசைபாடினர் நம்மூர் முற்போக்கர். சிலநாட்களிலேயே திமாப்பூர் கலவரம் உண்மைநிலையை வெளிக்காட்டியது.

 

இந்த வங்கக்குடியேறிகள் இந்தியதேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவர்கள். எல்லாவகையிலும் இந்திய சிவில்வாழ்க்கைக்கு எதிரானவர்கள். இதில் போலிமனிதாபிமான நிலைபாடெல்லாம் என்னிடமில்லை. இங்கே அவர்களுக்காக ஆதரவுக் கூச்சலிடும் இஸ்லாமிய தீவிரவாத நோக்கு கொண்டவர்களிடம் நல்லெண்ணமும் இல்லை.

 

இனிமேல் குடியேறிகள் வராமல் முற்றாக கட்டுப்படுத்தவேண்டும், வந்தவர்களைக் கணக்கெடுக்கவும் வேண்டும். இன்றிருக்கும் குடியேறிகளின் இடங்கள் முழுமையாகவே அரசுக்கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். அதற்கு அங்கிருக்கும் ஊழல்மிக்க அரசுநிர்வாக அமைப்பு அகற்றப்பட்டு நேரடியான மைய அரசுக்கட்டுப்பாடு வரவேண்டும். உள்ளூர் அரசியலை பயன்படுத்தி அவர்கள் எல்லைமீற அனுமதிக்கக்கூடாது.

 

ஆனால் அவர்களில் அவர்களில் மிதவாதிகள் உருவாகி வர, அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் பகுதியாக எழ வாய்ப்பளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு அரசாதரவு அளிக்கப்படவேண்டும். இந்தியாவின் கல்வி, ஜனநாயக அமைப்புக்குள் அவர்கள் இழுக்கப்படவேண்டு, வேறுவழியே இல்லை, இதை மட்டுமே செய்யமுடியும் இன்று.

 

அஸாமில் குடியேறி அம்மாநிலத்தின் வாக்காளர்விகிதத்தையே மாற்றிய வங்கக்குடியேறிகளுக்கு எதிராக எழுந்த அஸாமிய கிளர்ச்சியாளர்கள் முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுப்பிய கோரிக்கை குடியேற்றக் கணக்கெடுப்பு. அஸாம் ஒப்பந்தத்தில் ராஜீவ்காந்தியால் ஏற்கப்பட்டது. ஆனால் அதன்பின்னரும்கூட முப்பதாண்டுகள் எந்த தடையுமில்லாமல் வங்கக்குடியேறிகள் அஸாமில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் காங்கிரஸின் வாக்குவங்கியாக அமைந்தமையால் அது ஏற்கப்பட்டது.

 

ஊடுருவல்காரர்கள் இன்று இத்தனைபெரிய சிக்கலாக ஆகியமைக்கு காங்கிரசும் இடதுசாரிகளும் திருணமூல்காங்கிரஸும் முதன்மைக்காரணம் என்பதை இன்றைய சூழலில்கூட நாம் மறந்துவிடவேண்டியதில்லை. அவர்கள் அதற்குப் பொறுப்பேற்றாகவேண்டும். நாளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதை மீண்டும் செய்யமாட்டாரகள் என்ற உறுதியாவது அவர்களிடமிருந்து வரவேண்டும்.

 

இன்று குடிமக்கள் கணக்கெடுப்பு அஸாம் வங்கம் வடகிழக்கு மாநிலங்களில் தேவை என்பதில் ஐயமில்லை. ஒரு தேசம் தன் நிலத்தில் அகதிகளாகக் குடியேறியவர்களை பற்றிய செய்திகளை சேகரிப்பதில் பிழையே இல்லை. அது அதன் கடமை. பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அதை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

 

ஆனால் அது ஒரு நிர்வாகச்செயல்பாடு மட்டுமே. அதில் கருத்தில்கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, இன்று அதை இன்று உரியமுறையில் செய்வதற்கான நேர்மையான, திறமையான நிர்வாக அமைப்பு நம் அரசிடம் இல்லை . இன்னொன்று, அவ்வாறு குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகள்தான் முன்பு பணம் வாங்கிக்கொண்டு ஆதார் அட்டை வரை அகதிகளுக்கு அள்ளி அளித்தவர்கள்.

 

இந்த யதார்த்தத்தை கருத்தில்கொள்ளாது மூர்க்கமாக செய்யப்படும் ஒரு கணக்கெடுப்பு அரசதிகாரிகளுக்கு தடையற்ற அதிகாரத்தை அளிக்கிறது. அவர்களின் கருணையில் மக்களை வாழச்செய்கிறது. அரசதிகாரிகளுக்கு அளிக்கப்படும் எந்த மிகையதிகாரமும் ஊழலையே உருவாக்கும் – அரசுத்துறையில் வேலைபார்த்த எவரும் இதை மறுக்கப்பாட்டார்கள்

 

ஆகவே ஒருபக்கம் அத்தனை ஆதாரங்களையும் எளிதில் பணம்கொடுத்துப்பெற முடியும்  என்னும் நிலை. இன்னொருபக்கம் பணமில்லாமல் எவரும் அசல் ஆதாரங்களைக்கூடப் பெறமுடியாது என்னும் நிலை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எளிய குடிகள். இதை கருத்தில்கொண்டு இந்தக் கணக்கெடுப்பை நடத்த செலவுகுறைவான, நம்பகமான வழிமுறைகளை நாடியிருக்கவேண்டும்.

 

உண்மையில் ஒரு வழக்கமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் பகுதியாக, சத்தமில்லாமல் இதைச் செய்திருக்கவேண்டும். அப்படி எத்தனையோ கணக்குகளை அரசுகள் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு தனியார் அமைப்புக்களை நாடியிருக்கவேண்டும். ஆவணங்களை கணினிப்பதிவுகளாக்கி ஒப்பிட்டிருக்கவேண்டும். மிகநிதானமாக, சீரான கண்காணிப்புடன், நம்பகத்தன்மையை உருவாக்கியபடிச் செய்யவேண்டிய நிர்வாகப்பணி இது.

 

ஆனால் இந்த அரசு அதை ஆராவாரமான அரசியல்நடவடிக்கையாக ஆக்கியது. அதன் முதன்மை முகங்கள் மேடைமேடையாக இதை ஏதோ தேசப்பாதுகாப்புப் போர் போல சவடால் அடித்தன. தேசமெங்கும் இன்றுள்ள அச்சமும் ஐயமும் இவர்களால் உருவாக்கப்பட்டவை. தற்செயலாக அல்ல, திட்டமிட்டு. ஓர் அரசியல்நடவடிக்கையாக.

 

இந்த நடவடிக்கை அஸாமில் எந்த வகையான பதற்றத்தை உருவாக்கியது என நன்கறிந்த பின்னரே இந்தியாமுழுக்க அதைக்கொண்டுவருவோம் என அறைகூவினார்கள். அதனால் விளைந்ததே இந்தப் பதற்றம். கணக்கெடுப்பின் நோக்கத்தையே இவர்கள் திசைமாற்றினார்கள். இது தேசப்பாதுகாப்பு என்னும் இலக்கைக் கொண்டது அல்ல, சிறுபான்மையினருக்கு எதிரான ஒர் ஒடுக்குமுறைச் செயல்பாடு என்னும் எண்ணம் அவ்வாறுதான் உருவானது. இன்று அவ்வெண்ணத்தை உருவாக்கியமைக்காக இவர்களே பிறரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இது தேசப்பாதுகாப்புக்கான சட்டம் மட்டுமே என கண்ணீர்மல்க கூச்சலிடுகிறார்கள்.

 

அந்த அச்சத்தை இந்தியா முழுக்க பரப்பி, நாட்டைக் கவ்வும் கலவரமாக ஆக்கும்பொருட்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே இந்து அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை என்னும் மேலதிகத் திருத்தம். உண்மையில் அதனால் இன்று பயன்பெறுபவர்கள் மிகமிக குறைவானவர்கள். அதிகபட்சம் இருபதாயிரம்பேர் என்கிறார்கள். ஆகவே அது ஒரு சாதாரண நிர்வாகச் செயல்பாடு மட்டுமே. அதை ஓர் அரசாணை வழியாகவே நிறைவேற்றியிருக்க முடியும்.  பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து அதை நாடளாவிய விவாதமாக ஆக்கவேண்டிய தேவையே இல்லை. அது உள்நோக்கம் கொண்ட செயல்பாடு.

 

அஸாம்- வங்க- வடகிழக்கு குடிமக்கள் கணக்கெடுப்புகூட சூழலைப் புரிந்துகொள்ளவும் எதிர்காலக் கொள்கைகளை வகுக்கவும் மட்டுமே பயன்படும் என்பதே நடைமுறை உண்மை. நேர்மையான ஆட்சி என்றால் இத்தனைபெரிய அகதிப்பட்டாளத்தை உள்ளே விட்ட ஊழல்மிக்க அமைப்பின் ஓட்டைகளை அடைக்கவே அதை பயன்படுத்திக்கொள்ளும்.

 

மற்றபடி  நடைமுறையில் அவ்வாறு கணக்கெடுக்கப்பட்டு குடியேற்றக்காரர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களை என்ன செய்யமுடியும்? அவர்களை வெளியேற்ற முடியுமா? எந்த நாடேனும் அவர்களை ஏற்றுக்கொள்ளுமா? கோடிக்கணக்கானவர்களை தடுப்புமுகாம்களில் வைக்க முடியுமா? அதற்கான நிதி நம்மிடம் உள்ளதா?

 

ஆக, அவர்கள் இங்குதான் இருப்பார்கள். அன்னியராக சுட்டிக்காட்டப்பட்டு. அவர்களை தேர்தலரசியலில் இருந்து அகற்றலாம். ஆனால் அதன் விளைவு என்ன? ஒரு மக்கள்திரள் ஜனநாயக அரசியலில் இருந்து முழுக்க அகற்றப்பட்டால் அவர்கள் செல்வது வன்முறை அரசியலுக்காகவே இருக்கும். இத்தனைபெரிய திரளில் பத்துசதவீதம்பேர் வன்முறையரசியலை நோக்கிச் சென்றால் இந்தியா தாங்குமா?

 

அனைத்துக்கும் மேலாக நாடளாவ ஒரு குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்துமளவுக்கு இன்றைய சூழலில் இந்த அரசிடம் நிதி உண்டா? அஸாம் கணக்கெடுப்பின் செலவே பதினைந்தாயிரம் கோடி என்கிறார்கள். அதிலும் பெரும்பகுதி ஊழலுக்கே சென்றது என்கின்றனர் உள்ளே இருப்பவர்கள். அதிலுள்ள குளறுபடிகளை களையவே ஐம்பதாயிரம்கோடி வரை செலவாகும் என்கின்றனர். முழுஅரசநிர்வாகமும் அதற்கே செலவிடப்படுவதனால் ஆட்சியே உறைந்துவிட்டிருக்கிறது. இந்தியா முழுக்க அதைச்செய்வதென்றால் ஒருலட்சம்கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும். எனில் ஏன் இதைச் சொல்கிறார்கள்? வெறும் அரசியல் உத்தி.

 

வெறியோ கூச்சலோ பயனற்றவை. நடைமுறையில் எது இயலுமோ அதையே செய்யமுடியும். இன்றைய சூழலில் குடியேறிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வது, அவர்கள் உள்ளே வரும் வழியை கண்டடைவது, அதை மூடுவது என்பதற்கு அப்பால் இக்கணக்கெடுப்பால் எதையுமே செய்யமுடியாது. இந்துத்துவர் நினைத்தாலும்கூட செய்யமுடியாது.

 

உண்மையில் இந்த குடிமக்கள் கணக்கெடுப்பு திட்டமும், அதையொட்டி வந்த திருத்த மசோதாவும் கவனத்தைக் கலைக்க கூரைக்கு தீவைக்கும் முயற்சி மட்டுமே. அந்த நோக்கமே கண்டனத்திற்குரியது. அதன் விளைவாக உருவான ஐயமும் குழப்பமும் நீடித்த தீங்கு பயப்பவை. இன்றைய நவீன உலகில் எந்த நாடும் தங்களில் ஒரு பங்கு மக்களுக்கு எதிராக ஆட்சி செய்ய முடியாது. எந்தச் சிறுபகுதியினருக்கும் பங்களிப்பே இல்லாமல் செய்துவிட்டு ஓர் ஆட்சியை வெற்றிகரமாக நிகழ்த்தமுடியாது

 

அரசியின் இந்நோக்கமும் அதன் விளைவும் கேள்விக்குரியதாக்கும்போது  அப்படியென்றால் கஊடுருவலை அனுமதிக்கவேண்டுமா, சட்டத்திருத்தங்களால் பழைய குடிமக்கள்  பாதிக்கப்பட மாட்டார்கள் என்றெல்லாம் பேசுவது உண்மையை திசைதிருப்புவது மட்டுமே.

 

கச்சிதமான வாக்கரசியல் கணிப்பும் இதில் உள்ளது. இது இந்து இஸ்லாமிய பிரிவினையை மேலும் வலுப்படுத்தும். இந்த மசோதாவுக்கு எதிரான எந்த எதிர்ப்பும் இஸ்லாமியர்களின் வன்முறையாகச் சித்தரிக்கப்படும், அவ்வாறு அதை காட்டுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இங்குள்ள இஸ்லாமிய அமைப்புக்களும் இங்குள்ள இடதுசாரிகளும் உருவாக்கி அளிப்பார்கள். இந்திய எதிர்ப்பாளர்கள், இந்து வெறுப்பாளர்களின் மேடையாக இந்த எதிர்ப்புப்போராட்டத்தை மாற்றுவார்கள்.

 

இப்போதேகூட குடிமக்கள் கணக்கெடுப்பிற்கு எதிரான போராட்டங்களில் காஷ்மீருக்கு விடுதலை போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. அதன் முகமாக அறியப்பட்ட ஒர் இளம்பெண்  கேரளத்தில் ஒரு பொதுமேடையில் ஓர் இஸ்லாமிய அரசுக்காக மட்டுமே அவர் போராடுவதாக சொன்னதை கேட்டேன். இவ்வாறு ஒரு இருமுனைப்படுத்தல் உருவானால் அதன் விளைவாக பாரதிய ஜனதா நோக்கிய இந்து வாக்கு நகர்வு மிகுதியாகும். அவர்கள் தேர்தலரசியலில் நன்மை பெறுவார்கள்.

 

பொருளியலை அழித்து வாக்கரசியலில் வெல்லும் உத்தி இது. இவ்வாறு வெல்லமுடியும் என்பதனாலேயே பொருளியலைப்பற்றிய எந்தக்கவலையும் இல்லாமலிருக்கிறார்கள். ஒரு பாதிக்கப்பட்ட குடிமகனாக இதில் என் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.

 

ஜெ

 

பிகு: மீண்டும் என் தளத்தில் அத்தனை ஊடகங்களிலும் கொட்டிக்கிடக்கும் இருதரப்பு வாதங்களையும் அள்ளிக்கொண்டுவந்து நிறைக்க விரும்பவில்லை. எழுத்தாளனாக என் நிலைபாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை. எதிர்வினைகள் தேவையில்லை. தேவையான தெளிவு என்னிடம் உள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51

$
0
0

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை 1

அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு உள்ளே பெருமுற்றத்தின் விளிம்பென அமைந்திருந்த நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களில் முதலாவதாக ஓரத்தில் இருந்த புலரியன்னையின் ஆலயத்தின் முகப்பில் எழுபத்திரண்டு சூதர்கள் பன்னிரு குழுக்களாக தங்கள் இசைக்கலங்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த யாழையும் முழவையும் கிணையையும் சல்லரியையும் மெல்லிய பதற்றத்துடன் உடலோடு அணைத்திருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு அவர்கள் புதியவர்கள் என விழிகளும் அடக்கப்பட்ட மூச்சுகளும் காட்டின.

அன்னையர் ஆலயங்கள் அனைத்தும் வாயில் திறந்து அகல்சுடர் ஒளியில் தெய்வத்திருவுருக்கள் அலைகொண்டமைய விழிதொடும் தொலைவுவரை வளைந்து தெரிந்தன. அவற்றின் சிறு குவைமாடத்தின் உச்சியில் அவ்வன்னையரின் அடையாளங்கள் கொண்ட கொடிகள் காற்றில் துடிதுடித்தன. பீதர்நாட்டு நெய்விளக்குகள் அமைந்த கல்தூண்கள் ஒற்றை மலர்சூடிய மரங்கள் என நிரைவகுத்திருந்தன. அப்பால் கிழக்குக் காவல்மாடத்தின் முரசுக்கொட்டில் வானில் மிதந்ததுபோல் செவ்வொளியுடன் தெரிந்தது.

சூதர்களில் மூத்தவரான போத்யர் கூன்விழுந்த உடலை நிமிர்த்து இடையில் கைவைத்து நின்று கிழக்குச் சரிவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். வானில் விண்மீன்கள் செறிந்திருந்தன. அவற்றின் அதிர்வு சொல் சொல் என உதிர்ந்துகொண்டிருந்தது. அப்பால் மேற்குக்கோட்டையை ஒட்டி அமைந்த ஏரியின் மேலிருந்து பாசிமணம் கொண்ட காற்று வீசியது. அது கோட்டைச்சுவரின் வளைவில் முட்டி அகன்று மீண்டும் சுழன்று வந்தபோது புராணகங்கையின் சதுப்புக்காட்டிலிருந்து பச்சிலைவாடை வந்தது. நரிகளின் ஊளை மிகமிக அப்பால் எழுந்தமைந்தது.

முற்காலையின் இருளில் கோட்டையின் வெண்பரப்பு பட்டுத் திரைச்சீலையென மெல்ல நெளிவதாக விழிமயக்கு அளித்தது. கோட்டைக்குமேல் காவல்மாடங்களில் இளஞ்சிவப்பு வட்டங்களென முரசுத்தோலின் பரப்புகள் தெரிந்தன. அங்கிருந்த காவலர்களின் இரும்புக் குறடோசையும், அவர்களின் ஆழ்ந்தகுரல் பேச்சொலியும் எழுந்தன. கவசங்களின் நீர்ப்பளபளப்பும் படைக்கலக்கூர்களின் விழிமின்களும் தெரிந்தமைந்தன. கோட்டை ஒரு கணத்திற்கு முன்னர்தான் ஒரு சொல்லில் இருந்து எழுந்து விரிந்து விரிந்து தன்னை அங்கு நிறுவிக்கொண்டதுபோல் தோன்றியது. எல்லா நோக்குகளும் அதில் சென்று முட்டி மீண்டன. எல்லா எண்ணங்களும் அதைத் தொட்டு வளைந்தன. அதை சேர்க்காமல் அங்கிருக்கும் எவரும் சித்தம் கொள்ளமுடியவில்லை.

கோட்டைக்கு உள்ளிருந்து அஸ்தினபுரியின் அணிப்படை ஓசையில்லாத நீர்ப்பெருக்கென கவசங்கள் அலைகொண்டு பளபளக்க வழிந்து சென்று வெளிமுற்றத்தில் தேங்கி அணிகளாகப் பிரிந்து உறைந்து அமைந்துகொண்டிருந்தது. புரவிகள் அவ்விருளில் நீந்துவனபோல் கால்களை துழாவியபடி ஒழுகின. மையப்பெருஞ்சாலையில் வந்த படையின் இறுதிப் பகுதி வளைந்து கோட்டைக்கு வெளியே சென்று மறைந்தது. முற்றத்தின் செம்மண் பரப்பில் பாதச்சுவடுகள்மேல் பந்தங்களின் செவ்வொளி பரவிக்கிடந்தது. ஒளிகொண்ட கொடிகள் துடித்தன. அத்தனை ஒலிகளையும் மூடியபடி அங்கு ஓர் ஒலியின்மை நிறைந்திருந்தது. எவ்வொலி எழுந்தாலும் அதை தன்னுள் இழுத்துக்கொள்ளும் அழுத்தம் கொண்டிருந்தது அது.

கவசம் அணிந்த பெரிய புரவியில் வந்து இறங்கிய சுதமை கைகளை நீட்டி முற்றத்தையும் கோட்டைச் சுவர்களையும் சுட்டி ஆணைகளை இட்டாள். அவள் சொற்களும் அப்பால் எழுந்த நூற்றுவர்தலைவனின் ஆணைக்குரலும் அந்த அமைதிக்குள் நிகழ்ந்தன. புரவியொன்று கனைத்தது. சகடங்கள் ஒலிக்க கடந்து சென்ற வண்டியொன்றின் ஓசை. கீழே விழுந்த கேடயம் ஒன்றின் உலோகக் கூரொலியும் அந்த அமைதியின்மைக்குள் விழுந்து அதன் அடியில் மறைந்தது. போத்யர் கிழக்குச் சரிவை விழிகளால் துழாவிக்கொண்டிருந்தார். “இன்றென்னவோ விண் முழுக்க மீன்கள்!” என்று அமர்ந்திருந்த தென்னிலத்துச் சூதன் சொன்னான். போத்யர் அவனைத்திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் கீழ்ச்சரிவை நோக்கிக்கொண்டிருந்தார்.

ஆனால் தென்னகத்துச் சூதன் பேச விழைந்தான். “விடிவெள்ளி என்பது கதிரவனின் ஒரு துளி. ஓர் ஒற்றன்” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் முனகிக்கொண்டான். போத்யர் மீண்டும் திரும்பி உறுத்து நோக்கி “பேசவேண்டாம்” என முகம் காட்டினார். அவர்கள் அனைவருமே பொறுமையிழந்திருந்தார்கள். தங்கள் முழவுகளையும் யாழ்களையும் தேவையின்றி தொட்டு முறுக்கினார்கள். ஆணிகளை திருகியும் தோல்பரப்பையும் நரம்பு அடுக்கையும் விரல்களால் வருடியும் அந்த கணங்களை ஒவ்வொன்றாகக் கடந்தனர். சிலர் தேவையில்லாமல் இருமிக்கொண்டனர்.

தென்னகச் சூதன் திரும்பி மகாமரியாதம் பந்த ஒளியில் ஆங்காங்கே சிவந்து இருப்பதை நோக்கி “சில தருணங்களில் பந்த ஒளியில் இது காட்டெரி எழுந்துவிட்டதோ என்ற விழிமயக்கை ஏற்படுத்துகிறது” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் மட்டுமே அதை தெளிவுறக் கேட்டான். பிறர் அதை மெல்லிய முணுமுணுப்பென உணர்ந்தனர். முரசுத்தோல்பரப்பில் காற்று படும்போது வரும் ஒலிபோல எழுந்த அவ்வோசை போத்யர் காதில் விழுந்தது. “ம்” என்று அவர் உறுமினார். அவர்கள் சலிப்புடன் அசைந்தார்கள்.

போத்யர் அவர்கள் ஒவ்வொருவரையும் மாறி மாறி பார்த்தார். அவர்கள் வெவ்வேறு நிலங்களையும் குலங்களையும் சார்ந்தவர்கள். வெண்ணிறம் கொண்ட வடமேற்கு நிலத்தவர், பீதர்களைப்போன்ற காமரூபத்தினர், கன்னங்கரிய தென்னிலத்தவர், கூரிய முகமும் செம்மண் நிறமும் கொண்ட வேசர நாட்டவர். கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அவர்கள் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலருகே அமைந்த சூதர் தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட பெரிய இசை மண்டபத்தில் அமர்ந்து அந்நாளுக்கான புகழ்ப்பாடலை ஒத்திகை பார்த்திருந்தனர். இரவும் பகலுமென அந்த ஒத்திகை நிகழ்ந்தது.

“பிறழும் ஒரு மாத்திரைகூட தவறு என்றே கருதப்படும். பிழையுள்ள பாடல் மங்கலத்தை அழிக்கும். இசையென்பது இசைமை என்று உணர்க!” என்று அவர் மீள மீள கூறியிருந்தார். அவர்கள் விழிகளால் ஏற்றுக்கொண்டனர். ஆனால் முதல் நாளில் அவர்களிடமிருந்த பணிவு மூன்றாம் நாள் இருக்கவில்லை. முதல் நாள் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகவே உறுதியுடன் அதை ஏற்றனர். மூன்றாம் நாள் அந்த ஒத்திகைகள் வழியாகவே அவர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆகவே அதை இளிவரலாக ஆக்கிக்கொண்டனர்.

போத்யர் பெருமூச்சுவிட்டு ஐயத்துடனும் நம்பிக்கையின்மையுடனும் சூதர்களை மீண்டும் பார்த்தார். கோட்டைக்கு மேல் பந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்றென தங்களை தொடுத்துக்கொண்டு செந்நிறச் சரடென்றாகி, ஒழுக்கென நீண்டு விரியத்தொடங்கின. அனல்முடி சூடிய கோட்டைக்கு மேலிருந்து ஒரு கொம்பொலி அறைகூவ கோட்டையின் நான்கு நுழைவாயில் முகடுகளில் இருந்தும் மூன்று எதிரொலிகள் அதற்கு மறுமொழியளித்தன. “கோட்டை ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஒரு சூதன் சொன்னான். போத்யர் “பேசவேண்டியதில்லை” என்றார். “சரி, பேசவில்லை” என்றான் அவன். அனைவரும் மெல்ல சிரித்தனர்.

போத்யர் அவர்களில் இளையவனாகிய சூதனை நோக்கி சற்று கவலையுடன் “உன் முழவை இன்னும் இறுக்குக!” என்றார். அவன் அதை தொட்டு நோக்கி “பதமாகவே உள்ளது, ஆசிரியரே” என்றான். விரல்களால் சுண்டி அதன் ஓசையைக் காட்டி “போதுமல்லவா?” என்றான். பற்களைக் கடித்து ”ஆம்” என்று உரைத்த போத்யர் விழிதிருப்பிக்கொண்டார். அவ்விளையோன் கரிய முகமும், பெரிய பற்களும், சிப்பி போன்ற வெண்பரப்பு கொண்ட கண்களும் கொண்டிருந்தான். தென்னிலத்தவன். அவனிடம் ஓர் அடங்காமை இருந்தது. ஆனால் அவனால்தான் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்தது.

அவனை அந்தச் சூதர் குழுவுக்குள் சேர்ப்பதற்கு முதலிலேயே அவருக்கு தயக்கமிருந்தது. ஏற்கெனவே அவன் பல அவைகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தான். ஆனால் சுரேசர் அவன் அந்தக் குழுவில் இருக்கட்டும் என முடிவுசெய்திருந்தார். அவர் அவனை வெறுப்புடன் பார்த்தார். அவனுடைய குரல் இளமையின் விசையும் தாளமும் கொண்டிருந்தது. அவர் “ஓலமிடுவதற்கு இங்கே கொம்புகள் உள்ளன” என்று முணுமுணுத்தார். சுரேசர் நகைத்து “நீங்கள் இளமையில் இதே குரல் கொண்டிருந்தீர், சூதரே” என்றார். திடுக்கிட்டு இளையோனை நோக்கியபின் போத்யர் “ஆம்” என முனகிக்கொண்டார்.

 

அஸ்தினபுரியின் அரண்மனையில் இருந்து துச்சளையின் அழைப்பு அவருக்கு வந்தபோது அவர் தன் இல்லத்திலிருந்து கிளம்புவதற்கே இயலா நிலையில் இருந்தார். அவருடைய மைந்தரும் குடிகளும் அவரை விட்டு சென்றுவிட்டிருந்தனர். அவருடைய குடிவழி இளையோன் அருகே குடியிருந்தமையால் மட்டும்தான் அஸ்தினபுரிக்குள் அவரால் உயிர்வாழ முடிந்தது. போர் முடிந்த செய்தி வந்ததுமே அவருடைய மைந்தன் “இனி இந்நகர் சொல் திகழும் தகுதி கொண்டதல்ல. நம் முன்னோர் வாழ்த்திய அனைத்தும் இங்கிருந்து மறைந்துவிட்டன” என்றான். அவர் நகரிலிருந்து மக்கள் ஒழிந்து செல்வதை பல நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய குடியினரிலேயே பெரும்பாலானவர்கள் சென்றுவிட்டிருந்தனர்.

“இனி இங்கு ஒருபோதும் நெய்மணக்கும் ஊன்சோறு பெருகப்போவதில்லை. கருவூலப்பொன் பெருகப்போவதுமில்லை. அத்தனை பேரும் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கிளம்புகிறேன்” என்றான் மைந்தன். அப்போது அவர் தன் இல்லத்திண்ணையில் இளவெயிலை உடலில் ஏற்று அமர்ந்திருந்தார். நெடுநாட்கள் அங்கு திகழ்ந்த உணவின்மையால் அவர் உடல் மெலிந்து, எலும்புகளின் மேல் தோல் படிந்து, அதன் மேல் பூசணம் எழுந்து ஈரமண்ணில் மட்கிக்கிடக்கும் பழைய மரம் போலிருந்தார். அவர் பற்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. தலை நடுங்கிக்கொண்டிருந்தது. குளிரிலென துள்ளி அதிர்ந்துகொண்டிருந்த கைகளை இரு தொடைகளுக்கும் அடியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார். இரு முழங்கைகளும் நடுங்கின.

மைந்தன் “இந்நிலையில் தாங்கள் எங்களுடன் நெடுந்தொலைவு வருவது கடினம். ஆயினும் தாங்கள் வருவதே நல்லது. எவ்வகையிலேனும் தங்களை இங்கிருந்து கொண்டு செல்கிறேன். ஒரு சிறு சகடம் ஒன்றை ஒருக்கியிருக்கிறேன். சற்றே பொறுத்துக்கொண்டீர்கள் என்றால் போதும்” என்றான். “அறுநீர் பறவையென எழுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்று அவர் சொன்னார். “சூதர்களுக்கு நிலமில்லை, நீருமில்லை. வானமே நம்முடையது. நாம் நிறைகதிர் கண்ட இடங்களில் சென்று இறங்குவோம், வானுக்கே மீள்வோம்” என்று மைந்தன் சொன்னான். “இச்சொற்களை சொல்ல வேண்டியவர்கள் உழவர்கள், ஆயர்கள். வணிகர்களும் சூதர்களும் அல்ல.”

“நீ எனக்கு நூல் கற்பிக்க வேண்டியதில்லை” என்று அவர் சலிப்புடன் கூறினார். அவன் சீற்றத்துடன் அவர் முன்னால் வந்து நின்று “அதை விடுங்கள். நான் நேரடியாகவே சொல்கிறேன், நாம் பேசும் மொழியையும் நாம் சொல்லும் கதையையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புகிறார்கள். பெருவணிகர்கள், ஆயர்குடிகள், வேளாண்குடிகள். எஞ்சுவது யார்? களத்தில் மாண்ட மறவர்களின் ஆவிகள். இந்நகரை கைப்பற்றவிருக்கும் இழிசினர். இருளுலக தெய்வங்கள். இவர்களிடம் சொல்பெருக்கி உயிர்வளர்க்கலாகும் என்று எண்ணுகிறீர்களா?” என்றான்.

அவர் அவனுடைய சீற்றத்தை நோக்கிக்கொண்டிருந்தார். “சேர்த்துவைக்கும் கலை நாமறியாதது. இங்கே நாம் கைவிடப்பட்டோம். உணவில்லாது துயருற்றோம். இங்கிருந்தோர் வீசிய சிற்றுணவால் உயிர்பேணிக்கொண்டோம். இதோ அவர்கள் அனைவரும் கிளம்பிச் செல்கிறார்கள். அவர்களே நம்மை புரந்தவர்கள். அவர்களுடன் செல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றான். “ஊன் பொதியைத் தொடரும் காகங்கள்போல, அல்லவா?” என்று அவர் கேட்டார். அவன் பற்களைக் கடித்து கைகளை இறுக்கி சீற்றத்தை அடக்கி “நான் தங்களை எவ்வகையிலும் அறிவுறுத்தவில்லை. நான் கிளம்புவதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் வரவில்லை என்றால் இதுவரை இங்கே எவ்வண்ணம் இருந்தீர்களோ அதை இழக்கப்போகிறீர்கள். இரவலனாக தெருவில் அமர்ந்து பிடி உணவு பெற்று வாழப்போகிறீர்கள். வேண்டாம், அப்பழியை என்மேல் சுமத்தாதீர்கள். கிளம்புக!” என்றான்.

“இந்நகர் விட்டு எங்கும் நான் செல்வதாக இல்லை. எனது பொழுது ஓடிவிட்டது. என் உடலில் ஒவ்வொரு நாளும் குளிர் மிகுந்து வருகிறது. எலும்புகள் ஆற்றடிக் கற்கள் என விறைத்திருக்கின்றன. இனி நெடுநாள் இங்கு வாழப்போவதில்லை. இங்கிருந்து கிளம்பி புது நிலங்களைக் கண்டு வாழும் ஆற்றல் இவ்வுடலில் இனி இல்லை” என்றார் போத்யர். மைந்தன் குரல் தணிந்தான். “நான் என்ன செய்வது? என் மைந்தருடன் நான் என்ன செய்து வாழ்வது?” என்று மீண்டும் கேட்டான். “கிளம்பிச்செல்க, புது நிலம் நாடுக! இங்கே உன்னைப் புரந்த குடிகள் உன்னையும் உன் குடியையும் இன்னமும் வாழச்செய்க! எனக்கு இச்சிறு இல்லம் போதும். இங்கு இயன்றவரை உணவு எஞ்சவிட்டுச் செல்க! நன்று நிகழும்” என்றார் போத்யர்.

அவன் சினம் ஏற அவரை கூர்ந்து நோக்கிவிட்டு இன்னொரு எண்ணம் எழ உடல் தளர்ந்து, குரல் உடைய, விழிகள் நனைய “தங்கள் சொற்களை என்னால் உளம்கொள்ள இயலவில்லை, தந்தையே. நான் இருமுனையில் இருக்கிறேன்” என்றான். “சென்று முல்கலனிடம் கூறுக! அவன் என்னை புரப்பான். கைப்பிடி உணவு ஒருநாளுக்கு, அது போதும் எனக்கு” என்றார் போத்யர். மைந்தன் விழிகளில் எழுந்த திகைப்பைக் கண்டு புன்னகைத்து “என்றேனும் இந்நகர் மீளுமென்றால் நீ திரும்பி வருக! அன்று நானோ என் சொல்லோ உன்னைக் காத்திருப்போம்” என்று மென்மையாக சொன்னார்.

திரும்பி வருதல் எனும் சொல் அவனை மீட்டது. அவன் விழிகள் தெளிந்தன. “ஆம், இப்புலம்பெயர்தல் எப்போதைக்குமென அல்ல. இம்மக்கள் அஸ்தினபுரிக்கு மீண்டு வருவார்கள். இங்கு அறம் நிலைகொள்ளும் கோல் எழுமெனில், மூதாதையர் சொல் திகழுமெனில் அவர்கள் இங்கு தங்கள் தொல்வாழ்வை மீண்டும் தொடங்குவார்கள். அவர்களுடன் நானும் வருவேன். யார் அறிவார், மிகச் சில நாட்களுக்கே நீளும் ஒரு செலவாக இருக்கலாம் இது” என்றான். “ஆம், மிகச் சில நாட்கள்தான்” என்று அவர் சொன்னார். புன்னகைத்து “செல்க, உளம்செழித்த வாழ்த்துகள் என்னிடம் இருந்து உனக்கும் உன் மைந்தருக்கும் வந்தமைக! நீ செல்லும் இடமெல்லாம் என் பெயரும் என் குடிப்பெயரும் உனக்கு துணையும் கோலும் ஆகுக!” என்று வாழ்த்தினார்.

அவர் மைந்தன் முல்கலரிடம் சென்று தந்தையை அவரிடம் ஒப்படைப்பதாகச் சொன்னபோது அவர் நகைத்து “அவ்வண்ணம் அவர் கூறினாரா?” என்றார். “ஆம்” என்று அவன் கூறினான். “அவரே தன் வாயால் அதை உரைத்தாரா?” என்று முல்கலர் மீண்டும் கேட்டார். “மெய்யாகவே அவரே உரைத்ததுதான் இது” என்று அவன் சொன்னான். அவர் உரக்க நகைத்து “நன்று, இவ்வண்ணம் ஒரு காலம் அமைந்தது. இதை நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் இவ்வண்ணமே இது நிகழ்ந்தாகவேண்டும் என இப்போது உணர்கிறேன்” என்றார்.

மைந்தன் தலைகுனிந்தான். ஊசல்பீடத்தில் மெல்ல காலால் உந்தி அதை ஆட்டியபடி அமர்ந்திருந்த முல்கலர் தளிர்வெற்றிலை எடுத்து நீறு தேய்த்து சுருட்டியபடி அவனை சிரிக்கும் விழிகளால் நோக்கி “நீ அறிவாய், நான் களிச்சூதன். சூதுக்களங்களில் என் சொல்லை வைத்து ஆடுபவன். சூதர்கள் இழிந்து சென்றடையும் அடித்தட்டில் அமைந்திருப்பவன். ஆகவே உன் தந்தை முதல்கொண்ட ஏழு பெருங்குலங்களால் கீழ்மகன் என்றே எண்ணப்பட்டவன்” என்றார். அவர் உரக்க நகைத்து “இந்த நாற்பதாண்டுகளில் ஒருமுறைகூட நான் சூதர்மன்றுகளில் அமரச்செய்யப்பட்டதில்லை. ஒருமுறைகூட குடித்தெய்வ ஆலயங்களில் பூசனைசெய்ய எனக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில்லை. சாவு, பிறப்பு, மணம் என எதற்கும் எனக்கு அழைப்பில்லை. என் கைதொட்ட அன்னமும் நீரும் சூதர்களுக்கு விலக்கு என ஆணையிட்டவர் உன் தந்தை” என்றார்.

மைந்தன் தலையசைத்தான். “நன்று, இவ்வண்ணமும் அமைந்தது” என்றார் முல்கலர். “உன் தந்தையும் நானும் இரு எல்லைகள். என் தந்தையின் மூத்தவரின் மைந்தர் அவர். நாங்கள் இருவரும் ஒரு குருதியின் இரு தரப்புகள்” என்றார். அவர் மிகுதியாகப் பேசுபவர் அல்ல என்று மைந்தன் அறிந்திருந்தான். அன்று அவரிடம் பேச்சு ஊறி ஊறி பெருகியது. “உன் தந்தை என்னிடம் சொன்னவை நினைவிலெழுகின்றன. முல்கலா, சூதர்களின் நெறி ஒன்றுண்டு. சொல் என்பது நிலைபேறு கொண்டிருக்கவேண்டும். அதன் பொருள் மட்டுமே பெருக வெண்டும். நிலைபெறாத சொல் பொருளை இருட்தெய்வங்களின் ஆடலுக்கு அளிக்கிறது. நீ சூதுக்களத்தில் வைத்து ஆடும் சொல் உன் மூதாதையரின் குருதி என்று உணர்க என்றார். அவருடைய விழிகளை நான் நேர்நோக்கவில்லை அன்று. ஆகவே சொல்லிலேயே அவருடைய நோக்கு படிந்திருக்கிறது.”

“தன் சொல்லுக்கு அடிமையாகியிருக்கும் சூதன் தெய்வங்களுக்குரியவன். தன் சொல்லை அவைநிறுத்தி வாழ்பவன் மூதாதையரால் வாழ்த்தப்பட்டவன். சொல்லை முச்சந்திகளில் ஒலிக்கவிடுபவன் தன் மைந்தரால் வணங்கப்படுவான். சொல்லை வைத்து களமாடும் சூதன் ஏழு பிறவியிலும் இகழப்படுவான். இதுவும் உன் தந்தை சொன்னது” என்றார் முல்கலர். மைந்தன் “ஆம்” என்று தலையசைத்தான். “நாற்பதாண்டுகள் இரு எதிரெதிர் இல்லங்களில் வாழ்கிறோம். ஒருமுறையேனும் உன் தந்தை எனக்கு வாழ்த்துரைத்ததில்லை. என் விழி நோக்கி புன்னகைத்ததில்லை. உன் இல்லத்தில் நிகழும் நன்று தீதுகள் எதிலும் கலந்துகொள்ள நான் அழைக்கப்பட்டதில்லை” என்றபோது அவர் முகம் இறுகியது. விழிகள் வஞ்சம்கொண்டன.

“என் குருதியினர் அவர் என்று எங்கள் முகங்களே காட்டுவதனால் இந்நகரில் ஒவ்வொருமுறை அவரை காணுகையிலும் ஒவ்வொருவரும் என்னை நினைவுகூர்கிறார்கள்.” அவர் வஞ்சத்துடன் புன்னகைத்தார். “ஆனால் அது மட்டுமல்ல. பெரிதென்றும் மெய்யென்றும் மானுடர் உணரும் ஒவ்வொன்றுடனும் ஒரு கீழ்மையையும் பொய்மையையும் இணைத்துக்கொள்ள அவர்களின் ஆழத்திலிருந்து ஒரு தெய்வம் ஆணையிடுகிறது. உயர்ந்தவை வீழுமென்றும் நன்றென்பவை அனைத்தும் மறுபக்கம் கொண்டவை என்றும் அவர்களுக்கு அது உரைக்கின்றது. மானுடர் ஆடும் முடிவிலாக் களங்கள் அமையும் நெறி இது.”

“உன் தந்தையைப் பார்க்கும் ஒவ்வொரு வணிகனும் என்னை நினைவுகூர்வதுண்டு. என்னைப்பற்றி ஒரு சொல்லும் கூறாமல் இருக்கமாட்டான். ஒவ்வொரு நாளும் அவர் என்னை எண்ணி வெதும்பியபடியேதான் இல்லம் மீண்டிருக்கிறார். இந்நகரில் பழுதுறாச் சொல் கொண்டவர் என்று புகழ்பெற்ற பெருஞ்சூதர் அவர். இவ்வரண்மனையின் தொல்கதைகள் அனைத்தையும் முற்றறிந்தவர். ஆகவே அரசர்களும் எழுந்து நின்று வரவேற்கும் தகைமை கொண்டவர். அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரர் பிறந்த நாளில் அங்கு அரண்மனை அவையில் அமர்ந்து அவர் பிறப்பை பாடியவர்களில் ஒருவர். நன்று, இத்தருணம் இவ்வண்ணம் வாய்க்கும் என்று தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன போலும்” என்றார்.

“தந்தையே, தாங்கள் அவரை பார்த்துக்கொள்ள முடியாதா?” என்று மைந்தன் கேட்டான். அவர் வெடிப்புறச் சிரித்து “நான் ஒழியும் தருணமா இது? இதுகாறும் நான் வாழ்ந்த வாழ்க்கை இங்கல்லவா நிறைவடைகிறது? இனி இங்கு உன் தந்தை நான் அளிக்கும் சிற்றுணவில் வாழப்போகிறார். அறத்தை மறம் அன்னம் ஊட்டவிருக்கிறது. சூதுக்களத்தில் எஞ்சிய சோற்றில் இறுதி நாட்களைக் கழிக்கவேண்டும் என்பது அவரது ஊழெனில் அதை நிறைவேற்றுவதல்லவா என் பொறுப்பு?” என்றார்.

அவன் சீற்றத்துடன் “அதில் மகிழ்கிறீர்களா?” என்றான். “ஆம், மகிழ்கிறேன். அது என் வெற்றி என்று ஒருபுறம் உளம் தருக்குகிறது. அது என் ஈடேற்றம் என்று மறுபுறம் உளம் அமைகிறது” என்றார். அவன் பற்களைக் கடித்து “எனில் வருக! வந்து என் தந்தையிடம் கூறுக, தாங்கள் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக! அவரது இறுதிநாள் வரை சிற்றுணவை அளிப்பதாக எனில் மட்டுமே நான் இங்கிருந்து கிளம்ப இயலும்” என்றான். அவன் குரல் உடைந்தது. “தந்தையே, என் குழந்தைகளும் பசியில் மெலிந்து உயிர் துறந்துகொண்டிருக்கின்றன. இங்கிருந்து கிளம்புவதைக் குறித்து நான் எண்ணவே இல்லை. என் இளைய குழந்தை பூழி மண் அள்ளித்தின்பதை இன்று நான் கண்டேன். இனி இங்கு இருக்கலாகாதென்று உறுதி கொண்டேன். என்னை வாழ்த்துக!”

அவர் புன்னகைத்து அவன் தோளில் கைவைத்து சொன்னார் “நன்று, நானே வந்து உன் தந்தையிடம் கூறுகிறேன். இத்தருணமும் ஊழால் முன்பே வடிக்கப்பட்டதென்றும் அதை மீள நடிப்பதொன்றே நான் இயற்றுவதென்றும் இப்போது உணர்கிறேன்.” அவன் கண்ணீருடன் தலைவணங்கினான். அவர் மேலாடையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் மனைவி வந்து அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு “வேண்டியதில்லை. எண்ணிச் செய்யவேண்டும். அவர் வரவழைத்து தீச்சொல்லிடக்கூடும்” என்றாள். “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் என்ன நிகழ்கிறதென்று அறியவேண்டாமா? இப்புதிருடன் என்னால் வாழமுடியுமா என்ன?” என நடந்தார்.

முல்கலர் தன் முன் வந்து நின்று வணங்கியபோது போத்யர் வெறுமனே விழி தூக்கி நரைத்த விழிகளால் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். “மூத்தவரே, தங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார் தங்கள் மைந்தர். இதுகாறும் இங்கு நாமிருவரும் ஒன்றின் இரு பக்கங்களென இருந்தோம் என்றும் ஒருவரை ஒருவர் புரந்துகொண்டிருந்தோம் என்றும் இப்போது உணர்கிறேன். அதை மீண்டும் நிகழ்த்தவே இங்கு ஊழ் அமைந்துள்ளது. இதனூடாக நான் நிரப்பும் மறுபுறம் உள்ளதுபோல் உங்கள் வாழ்வால் நீங்கள் நிரப்பும் பக்கமும் ஒன்று உள்ளது என்றும் தோன்றுகிறது. என்னை வாழ்த்துக!” என்றார் முல்கலர்.

“ஆம், இதில் எனக்கு நிறைவே” என்று அவர் கைதூக்கி அவர் தலையில் வைத்து “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். தன் மைந்தனை நோக்கி திரும்பி “நன்று மைந்தா, இனி நீ கிளம்பலாம்” என்றார். அத்தருணம் அத்தனை எளிதாக முறுக்கவிழ்ந்து நிகழ்ந்து முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் உடல் தளர்ந்து உள்ளம் நிலை கொண்டபோதுகூட எதையோ இழந்த சலிப்பை அடைந்தான். அதை தன் மீதான சினமாக மாற்றிக்கொண்டான். கையறு நிலையில் அது கண்ணீராக மாறியது. “நான் பெரும்பிழை எதையோ ஆற்றுகிறேன் என்று உணர்கிறேன், தந்தையே. ஆனால் மைந்தர் பொருட்டு எதையும் செய்ய தந்தையருக்கு உரிமையுண்டு என்று கற்றறிந்திருக்கிறேன். என் மூதாதையர் என்மேல் கனிவு கொள்க! இது பிழையெனில் இதற்கான தண்டம் முற்றிலும் எனக்கென அமைக! எந்தை சொல் அனல் ஆகுமெனில் அது என்னை மட்டும் எரிக்கட்டும். என் மைந்தர் அன்னம் கொண்டு வாழட்டும். சொல் பெருகி வளரட்டும். குலம் நிலைகொள்ள அவர்கள் மண்ணில் திகழட்டும்” என்றான்.

அவன் குனிந்து தந்தையின் கால்களை தொட்டபோது அவர் அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினார். அவன் விழிநீரை துடைத்தபடி மைந்தருடனும் மனையாட்டியுடனும் இல்லம் ஒழிந்து கிளம்பிச் சென்றான். திரும்பித் திரும்பி நோக்கியும் அவ்வப்போது நின்று விழிநீர் துடைத்தும் அவன் செல்வதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பத்து உரைகள் –கடிதங்கள்

$
0
0

ப்ரியம்வதா

பத்துநூல் வெளியீடு உரைகள்.

அன்புள்ள ஜெ,

 

விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகளையும் கேட்டேன். கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் உரைகள் சிறப்பாக இருந்தன. விஜயகிருஷ்ணன் பேச்சு என் ஏரியா இல்லை. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை. மற்றபடி அனைவருமே சுருக்கமாகவும் சிறப்பாகவும் பேசினார்கள். எங்கும் எவரும் மீறிப்போகவோ திசைமாறவோ இல்லை. சுருக்கமாக புத்தகம் பற்றியே பேசினார்கள். கதைச்சுருக்கம் சொல்லிவிட்டு போகவும் இல்லை.

 

இளம்பேச்சாளர்களில் பிரியம்வதாவும், நவீனும் நன்றாகப்பேசினார்கள். நவீன் சுருக்கமாகப் பேசினார். முத்துக்குமார் மிகவும் தணிந்தகுரலில் பேசினார். சுரேஷ்பாபுப் மயிலாடுதுறை பிரபு இருவரும் கொஞ்சம் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தேர்ச்சி தேவை. வெண்பா இன்னும் நிறைய பயிற்சி எடுக்கவேண்டும். தாளைப்பாக்காமல் பேசவேண்டும்

 

சாரதி

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகள் என்றபோது ஒரு அதிர்ச்சி. பத்து உரைகளா என்று. ஆனால் விரைவாக கேட்டு முடித்துவிட்டேன். பத்துப்பேருமே நூலை படித்துவிட்டு வந்து பேசினார்கள். நூல் பற்றிய சுருக்கமான மதிப்பீட்டை முன்வைத்தார்கள்

 

சிறந்த உரை சுனீல் கிருஷ்ணனுடையது. இன்றைய காந்திகளுக்கும் இன்றைய காந்தியவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிக முக்கியமான ஒரு கருத்து. காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் பல மகாத்மாக்களை உருவாக்கினார் என்பதனால் என்பது நீங்கள் சொன்ன வரி. அதைத்தான் நினைவுபடுத்திக்கொண்டேன்.

 

இளம்பேச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள். நூலாசிரியர்களை வாசித்துவிட்டு வாழ்த்துகிறேன்

 

செல்வக்குமார்

 

பிகு விழாவின் புகைப்படங்கள், மேடை ஒளியமைப்பு எல்லாமே பரிதாபமாக இருந்தன. ஆனால் சுருதி டிவி ஒளிப்பதிவும் ஒலியும் தரமானவை

 

 

 

சென்னையில் 2020 ஜனவரி 10 அன்று தியாகராஜர் அரங்கில் நிகழ்ந்த 10 நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்வில் சுரேஷ் பிரதீப் ஆற்றிய சிற்றுரை. கிரிதரன் ராஜகோபாலனின் ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை நூல் குறித்து’

 

 

நாகப்பிரகாஷ் எழுதிய எரி சிறுகதைத்தொகுதி பற்றி நவீன் உரை

 

வெண்பா கீதாயன் ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த ,மராட்டிய எழுத்தாளர் விலாஸ் சாரங்கின்  கூண்டுக்குள் பெண்கள் சிறுகதைத் தொகுதி குறித்து

 

காளிப்பிரசாத் மொழியாக்கத்தில் வெளிவந்த விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன் நூல் பற்றிய அறிமுக உரை

ஜா ராஜகோபாலன் எழுதிய ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூல் பற்றிய அறிமுக உரை, விஜயகிருஷ்ணன் திருச்சி

முத்துக்குமார் உரை. நரேந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் சிறுகதை நூல் பற்றி

விஜயராகவன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள தேரையின் வாய் சிறுகதை மொழியாக்கத் தொகுதி பற்றி சுரேஷ்பாபு

 

மயிலாடுதுறை பிரபு – சா.ராம் குமார் எழுதிய அகதி சிறுகதைத் தொகுதி பற்றி.

 

பிரியம்வதா உரை. சுசித்ரா எழுதிய சிறுகதை தொகுதி ஒளி குறித்து

 

சுனில் கிருஷ்ணன்  உரை. பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய இன்றைய காந்திகள் பற்றி

 

==========================================================================================================

மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்

 

=============================================================================================================

பத்துநூலாசிரியர்கள்

 

 

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ் எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன் கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன் இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார் அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்  தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

=====================================================================================================

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

=====================================================================================================

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா

$
0
0

சுசித்ரா

 

ஒளி தொகுப்பு படித்த பிறகு முதலில் நினைவுக்கு எழுந்தது ஒரு ஜெம்ஸ் பேக்கட். பல வண்ணங்களும் பல சுவைகளும் கொண்ட ஜெம்ஸ் பேக்கட் பள்ளிக்கூட சிறுமியாக இருந்த பொழுது என்னை எப்பொழுதும் குதூகலத்தில் ஆழ்த்தும். அதே போன்ற ஒரு அனுபவத்தை ஒளி சிறுகதை தொகுப்பை வாசிக்கையில் அடைந்தேன். பல வண்ணங்கள் ஒரு ஜெம்ஸ் பேக்கட்டுக்குள் புதைந்திருப்பது போல, பல இலக்கிய வகைமைகள் அடங்கியுள்ள தொகுப்பு. மிகை புனைவு (தேள், நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன), அறிவியல் புனை கதைகள் (சிறகதிர்வு, யாமத்தும் யாமே உளேன்), தத்துவக் கதைகள் (லீலாவதியின் தத்துவங்கள், அலாதசாந்தி), தொன்மத்திலிருந்து எழும் யதார்த்தக் கதைகள் (ஒளி, ஒரு மழைநாள்) என்று பல இலக்கிய வகைமைகளை முதல் தொகுப்பிலேயே அளித்திருப்பது ஒரு அரிய முயற்சி.

 

பொதுவாக சிறுவர்களுக்கு ஜெம்ஸ் பேகட்டை கொடுக்கையில் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். உள்ளே இருப்பதெல்லாமே சாக்லேட் தான். ஆனால் அதில் அவர்களுக்கு பிடித்த ஒரே ஒரு நிறத்தை மட்டும் தேடித் தேடி உண்பார்கள். அது போல நான் ரசித்து மீள் வாசிப்பு செய்த கதைகள் இத்தொகுப்பில் உள்ள அதிபுனைவுகள். அலாதியான கற்பனை வீச்சு, வலுவான கேள்விகள், அக உணர்ச்சிகளை நுண்மையாக சித்தரிக்கும் கலை இக்கதைகளில் கைகூடி இருக்கின்றன.

 

தத்துவக் கதைகள் அறிவுப்பூர்வமாக ஈர்த்தாலும் உணர்வுப்பூர்வமாக மனதில் நிகழவில்லை, எனினும் சொல்லாடலைத் தாண்டி அர்த்தங்களை துழாவும் வகையில் கவனிக்கத்தக்க முயற்சிகள்.

ஒளி தொகுப்பின் சிறப்பம்சம்கதை சொல்லல் தன்மை

இவ்வாறு பலதரப்பட்ட கதைகளை கோர்த்து, நூல் இழையென ஓடுவது இத்தொகுப்பில் தென்படும் கதைசொல்லல் தன்மை. இத்தொகுப்பில் என்னை முதன்மையாக வசீகரித்ததும் அதுதான். யாமத்தும் யாமே உளேன் கதையில் “கதைசொல்லி” என்ற குரல் நேரடியாக இடம்பெறுகிறது. ஒளி என்ற கதை வழக்கமான third person narrative-இல் சென்றுகொண்டிருக்கும். சட்டென நடுவில் இந்த வரிகள் “இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஃபிலோமினா தேவதாஸ் அழகியல்ல. நான் சொல்லவில்லை. இது அவளைச்சார்ந்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்ட உண்மையாக இருந்தது”. எங்கிருந்தோ ’நான்’ என்ற அநாமதேய கதைசொல்லி நுழைந்துவிடுகிறான்(ள்).

 

இதுபோன்ற ஒரு குரல் நேரடியாக எழாத மற்ற கதைகளிலும் கூட, கதை சொல்லலில் திளைக்கும் மனம் ஒன்று வலுவாகவே காணக்கிடைக்கிறது (உ. நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன, அலாதசாந்தி).

 

கதைசொல்லல் தன்மை ஏன் முக்கியமானது, அது எழுத்துக்கு என்ன அளிக்கிறது என்றால் முதலில் சலிப்பூட்டாத வாசிப்பனுபவம் என்பேன்.

 

ஆனால் அதற்கும் மேலாக அந்த அம்சம் எழுத்துக்கு, குறிப்பாக கதை கூறுகளில்  பன்முகத்தன்மையை சூட்டுகிறது. அதாவது, ஒரு கதை சொல்லி என்பவளின் பார்வை வாழ்க்கையின் பலதரப்பட்ட அனுபவங்களை – நல்லதோ கெட்டதோ, ஏற்றமோ இறக்கமோ  ஒரு விலக்கம் கலந்த எடையின்மையுடன் அணுகக்கூடியது.  எல்லா நிறங்களும் குணங்களும் குடி கொண்டிருக்கும் களமாக, தீர்ப்புகளற்ற வாழ்க்கை பார்வையை கொண்டது.

 

யாமத்தும் யாமே உளேன் என்ற கதையில், கதைசொல்லியை பற்றிய கீழ்வரும் பத்தி,  இதையே கவித்துவமாக கூறுகின்றது.

அவள் ஒவ்வொரு நாளும் தன்னை அணிசெய்து மகிழ்வித்துச் சிரிக்க வைக்கும் ஆடைகளுக்காகக் காத்திருப்பவள். எல்லா ஆடைகளையும் சமமெனப் பாவித்து எதையும் நீக்காமல் விலக்காமல் தன்மேல் உடுத்திக்கொள்பவள். ஒரு துளி ஒளியையும் வீணென்றாக்காமல் பருகுபவள்.

 

ஒளி, சிறகதிர்வு, போன்ற எழுச்சியின் தருணங்களை பேசும் கதைகள் உள்ள அதே வரிசையில், ஒரு மழை நாள், ஹைட்ரா, மற்றும் தேள் போன்ற கதைகளில், மானுடனின் இருண்ட குணங்களின் துளிகள் தெளித்திருக்கின்றன. ஆனால் இந்த கதை சொல்லித் தன்மை, அவற்றை நாம் மனச்சோர்வடையாமல், சலிப்படையாமல் உள்வாங்கச்செய்கிறது. மொழி, நடை, முன்வைக்கும் கேள்விகளில், சுசித்ரா ஜெயமோகனின் நீட்சியாகத் தெரிந்தாலும், இந்த கதை சொல்லல் தன்மையில் கி ரா, மற்றும் ஐசாக் டினேசனை அவர் எழுத்து நினைவூட்டியது.

ப்ரியம்வதா

ஒளி தொகுப்பின் முக்கியத்துவம்  – கதைகள் எழுப்பும் கேள்விகள்

 

கதை சொல்லல் தன்மை கூடியிருக்கும் அதே சமயம், விளையாட்டாக நின்றுவிடாமல் இக்கதைகள் வலுவான கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்துக்கு – கலை மற்றும் அறிவியலிடையே உள்ள முரண்பாடு, அது விளைவிக்கும் மோதல், கலை மானுடனுக்கு அளிப்பதென்ன, பயம் என்ற உணர்வை சமூகமும் அரசும் தனிமனிதனுக்கு எப்படி புகட்டி ஆள்கிறது என்ற தத்துவார்த்த கேள்விகளை முன்வைக்கின்றது இந்த தொகுப்பு. எனவே அன்றாட வாழ்க்கையிலிருந்து பிறந்த எழுத்துக்கள் பொதுவாகப் பேசும் பாலியல் சார்ந்த, காமம் சார்ந்த, தனி மனித சிக்கல் சார்ந்த கதைகளிலிருந்து தனித்து நிற்கிறது. ஆனால் இங்கு  எழுத்தாளர் சுசித்ரா ஒரு ஆய்வாளர் என்று கூறியாக வேண்டும். அதனால் கலையா அறிவியலா என்ற கேள்வி அவருடைய அன்றாடமாக இருக்கலாம்!

வடிவம் சார்ந்த சில அவதானிப்புகள்

 

பெரும்பாலும் உரையாடலற்ற கதைசொல்லலையே ஆசிரியர் கையாண்டுள்ளார். உரையாடல்கள் வரும் இடங்கள் இன்னும் இயற்கையாக அமைந்திருக்கலாம் என்றும் தோன்றியது (குறிப்பாக ஹைட்ரா கதையைச் சொல்லலாம்)

 

சிறுகதை வடிவத்துக்கு நல்ல தொடக்கம் முக்கியமானது. ஒளி தொகுப்பில் உள்ள கதைகள் (சிலவற்றை தவிர) காத்திரமான தொடக்கம் கொண்டவை. ஆரம்பமே நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. உதாரணமாக

 

அழகுக்கடைக்கு முன்னால் ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு நேரமா நிற்பது?”

 

ஒரு ஊரில் வாழும் அனைவரும், அவரவர்களின் அறைகளில் வீடுகளில் அலுவலகங்களில், ஒரு நாள், எங்குப் பார்த்தாலும் தேள்களாக இருப்பதைக் காணத்தொடங்குகிறார்கள் என்றால், என்ன நினைப்பீர்கள்?”

 

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை.

 

சில இடங்களில் இந்த தொகுப்பு என்னுடைய தங்கையை நினைவூட்டியது. சிறு வயதில் அவள் யோசிக்கும் வேகம் எப்பொழுதும் பேசக்குடிய வேகத்துக்கு இரு மடங்கு அதிகமாக இருக்கும். வார்த்தைகள் விரைந்து வர, அவள் நா அதற்கு போதாத கருவியாகத் தோன்றும். அதுபோல, சில கதைகள் சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்காமல், வெளிவரத்துடிப்பது போல அமைந்துள்ளன. அதையே நாவல் எழுதக்கூடிய எழுத்தாளரின் அறிகுறியாகவும் காண்கிறேன்.

பொற்றாமரை பெருத்த ரசனைக்காரி. நிறைய எதிர்பார்ப்பவள். வாழ்நாளில் அவள் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு கதையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கியிருக்கிறேன் என்று நூல் முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார்.

 

அப்பெருங்கனவை ”ஒளி” தொகுப்பின் கதைகளிலும், அவை செல்ல நினைக்கும் தூரத்திலும் வெளிப்படுத்தியுள்ள எழுத்தாளர் சுசித்ராவுக்கு வாழ்த்துக்கள்.

 

[10-1-2020 சென்னை விஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழாவில் பேசப்பட்டது]

 

 

 

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ்

எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்

அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா

ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

 

=========================================================================================================

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்க

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காந்தி,இந்துத்துவம் –ஒரு கதை

$
0
0

 

அன்புள்ள ஜெ

இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக்கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆகவே அதைப்பற்றிய ஓர் ஏமாற்றம் இருந்தது. அதோடு அன்று இணையத்தில் எழுதும் ஒரு சிலர் எதிர்மறையாக எழுதியிருந்தனர். அந்த எண்ணமும் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். அவர்களெல்லாம் சும்மா வெற்றுவேட்டுக்கள் என்று தெரிய எனக்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியது

இப்போதுதான் வெண்கடலை வாசித்தேன். அதில் பிழை மிகமுக்கியமான கதை. இன்றைக்கு வரை என் வாழ்க்கையில் அவ்வப்போது வந்து முட்டிக்கொண்டே இருக்கும் கதை. எல்லா அறிதல்களும் ஒரு பிழை வழியாகவே நிகழ்கின்றன என்று நான் அடிக்கடி என் ஜூனியர்களுக்குச் சொல்வதுண்டு. மனிதன் ஞானம் அடைவதே கூட ஒரு பிழைவழியாகவே நடக்கும் என்று ஒருமுறை தோன்றியது

அப்போதுகூட நான் நீரும் நெருப்பும் கதையை கவனித்தது இல்லை. அது காந்தியின் வாழ்க்கையில் ஒரு நாள் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. இன்று தற்செயலாக வாசிக்கும்போதுதான் ஒரு திடுக்கிடலுடன் புரிந்துகொண்டேன். அது இன்றைய அரசியலைப்பற்றிய கதை.

இன்றைய அரசியலின் இரு துருவங்கள் காந்தியும் இந்துத்துவமும்தான். மெதுவாக அந்த முரண்பாடு தெளிவாகி வந்துவிட்டது. இன்று குடியிரிமைப்போராட்டத்தில் இடதுசாரிகள், சிறுபான்மையினர், ஜனநாயகவாதிகள் எல்லாரும் காந்தி என்ற பதாகைக்குக் கீழேதான் ஒன்று திரள்கிறார்கள். எதிரில் இருப்பது இந்துத்துவம்

இந்தக்கதையில் நீர் காந்தி. நெருப்பு இந்துத்துவம். காந்தி நெருப்பின்பாதையை நிராகரிக்கிறார். தன்னுடையது நீரின் பாதை என்கிறார். நெருப்பு ஆக்கலாம், அதைவிட அழிக்கவும்கூடும். அது கட்டற்றது. நீரே அன்னைபோல அரவணைப்பது. உயிர்களை உருவாக்குவது.

எத்தனை ஆழமான கதை. தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த அரசியல்கதைகளில் ஒன்று. இதற்கு இணையான நுட்பமான குறியீட்டுத்தன்மையும் கவித்துவமும் விஷனும் கொண்ட கதைகள் மிகமிகச் சொற்பம்தான்.

ஆனால் இங்கே அரசியல்கதை என்றால் நேரடியாக நக்கலோ நையாண்டியோ செய்யவேண்டும். அல்லது கைமுறுக்கி கோஷம்போடவேண்டும் என நினைக்கிறார்கள். இந்தக்கதை வெளிவந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இக்கதையைப்பற்றி எவராவது இவ்வாறு பேசியிருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன். எவருக்குமே தோன்றவில்லை.

இங்கே விமர்சகர்கள் என்பவர்கள் கூட பொத்தாம்பொதுவான கருத்துக்களைச் சொல்பவர்கள், எதையும் புதிதாக தாங்களே கண்டுபிடித்துச் சொல்பவர்கள் அல்ல என்று தெரிந்தது. எளிமையான அரசியல், இலக்கியக் கொள்கைகள் மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். தேர்ந்தவாசகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பார்வையை மட்டுமே முன்வைப்பவர்கள். இலக்கிய அரசியலில் ஊறி அதைக்கொண்டே வாசிப்பை நடத்துபவர்கள்.

ஆகவேதான் இங்கே ஒரு பொதுவான வாசகன் வாசிப்பில் கிடைக்காத ஒரு பார்வையை இலக்கியவிமர்சகனிடமிருந்து பெறமுடியவில்லை. கூடவே நமக்கே இப்போதுதானே தெரிகிறது என்றும்7தோன்றியது. ஆனால் பிந்தியாவது வாசித்துவிட்டேன். ஏனென்றால் நான் முடிவுகளுடன் இல்லை. தேடிக்கொண்டே இருக்கிறேன்.

இத்தனைக்கும் மிக வெளிப்படையான கதை. 2013ல் இந்துத்துவ அரசியல் அதிகாரம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில், அதாவது தீ எரியத்தொடங்கும்போது, எழுதப்பட்ட கதை. நரேந்திரமோடி அதிகாரம் நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும்போது எழுதப்பட்டது என்பது இந்தக்கதையை முக்கியமாக்குகிறது. அன்று நீங்கள் இந்துத்துவ அரசியலை எதிர்த்து எழுதிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நரேந்திர மோடி பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இந்தக்கதை உங்கள் அரசியலை ஆழமாகப் பேசுகிறது.

வேதங்களில் இருந்து எழுந்த நெருப்புடன்தான் அந்த பைராகி வருகிறார். நெருப்பைப்பற்றிய அவருடைய வரி வேதப்பாடலாக ஒலிக்கிறது.

உன்னை அழிக்க நினைப்பவற்றை
உண்டுதான் நீ மதம் கொண்டு கூத்தாடுகிறாய்

அதை செவிகொடுத்து கேட்கும் காந்தி அந்த நெருப்பின் தொன்மையை உணர்ந்துகொள்கிறார். ஆனால் மென்மையாக நிராகரிக்கிறார். “ இந்த தேசம் நெருப்புக்குண்டமாக ஆகவேண்டாம். இது ஒரு குளிர்ந்த தடாகமாக ஆனால் போதும்” என்கிறார். நீருக்குள்ளும்நெருப்புதான் இருக்கிறது என்று எங்கேயாவது வேதமே சொல்லியிருக்கும் என்கிறார். பைராகி ஆம் என்கிறார். அந்த நெருப்பு இந்த தேசத்திற்குப் போதும்” என்று காந்தி சொல்கிறார். மென்மையாக ஆனால் மாறாத உறுதியுடன்.

இந்தக்கதையின் சிறப்பு என்பது இந்துத்துவத்தை வில்லனாக்கவில்லை என்பது. அதன் உச்சியில் இருப்பவரைத்தான் அதன் பிரதிநிதியாக கொண்டுவைக்கிறீர்கள். அதன் உயர்ந்த தரிசனத்தைத்தான் காந்திமுன் பைராகி சொல்கிறார். ஆனால் அது இன்று தேவையில்லை, அது அழிவுசக்தி, அது பழங்காலத்தையது மட்டுமே என்று காந்தி நிராகரிக்கிறார்.

வரிவரியாக நான் வாசித்த கதை. எத்தனை நுட்பமான உட்குறிப்புகள். எத்தனை பெரிய கவிதை. இப்படி ஒரு அற்புதமான அரசியல்கதை, இன்றைய அரசியலின் துருவங்களைப்பற்றிய ஆற்றல்மிக்க உருவகம் வேறெந்த மொழியிலாவது எழுதப்பட்டிருக்குமா? இந்தக்கதையில் வரும் அழகான தரிசனம் இப்படி வெளிப்பட்டிருக்குமா? வாய்ப்பே இல்லை.

ஆனால் இந்தக்கதைக்கு இங்கே உண்மையான வாசகர் ஒருவர் கூட ஏழாண்டுகளில் அமையவில்லை. வெறும் அரசியல் கூச்சல்கள், வெற்று அரட்டைகள். அதுதான் சோர்வூட்டுகிறது ஜெ. எவருக்காக எழுதுகிறேன் என்று நீங்கள் எண்ணிக்கொண்டதே இல்லையா?

எம்.பாஸ்கர்

நீரும் நெருப்பும் – சிறுகதை

 

அன்புள்ள பாஸ்கர்,

 

என் கதைகளை நானே கண்டுகொள்வதற்காகவே எழுதுகிறேன். 2013ல் நான் நம்பிக்கையிழப்பில் நம்பிக்கையில் அலைமோதிக்கொண்டிருந்தேன். ஊழல்கள் வெடித்து தேசத்தை நிலைகுலையவைத்த காலம். ஒரு மாற்றாக இந்துத்துவ அரசியல் எழுந்து வந்தது. காந்தியர்களிலேயே சிலருக்கு இந்துத்துவ அரசியல் நேர்மையானதாக, ஊழலற்றதாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் இருந்தது. எனக்கும்கூட ஊழலுக்கு எதிரானவர்களாக அவர்கள் செயல்படக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளூர சற்றே இருந்தது

 

அப்போது நான் காந்தியிடம் கேட்ட வினா அது, அதற்கு காந்தி சொன்ன பதில் அக்கதை. இந்துத்துவம் என்று சொல்லமாட்டேன், பழைமை என்று சொல்வேன். அதன் மகத்தான முகமே கதையில் வருகிறது. தொன்மையானது . ஆனால் அதுவே கூட இந்தத் தேசத்திற்கு இன்று உகந்தது அல்ல என்கிறார் காந்தி. நீரின் பாதை என்று சொல்கிறார்

 

அக்கதையை எழுதியதுமே என் வரையில் நான் தெளிவடைந்துவிட்டேன். அதற்கு முன்பிருந்த எந்தக்குழப்பமும் அதற்குப் பின் இல்லை. அதன்பின் அன்று சூழ இருந்த இந்த்துத்துவ நண்பர்கள் பலர் விலகிச் சென்றனர்.இந்துத்துவ அரசு எனக்கு அளிக்கவிருந்த உயரிய பட்டங்கள் உட்பட எதையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்ற முடிவை எடுக்க இக்கதையின் இறுதியில் திரண்டுவந்த தரிசனமே காரணம். எனக்கு எந்த ஐயமும் இல்லை

 

ஆகவே எனக்காக எழுதிய கதை, நான் பெற்ற பதில். மெய், ஒரு வாசகர்கூட ஏழாண்டுகளில் அங்கே வந்து சேரவில்லை. ஒருவர்கூட அதைப்பற்றி பேசியதில்லை. நானும் பேசியதில்லை. பேசவேண்டியதில்லை. கதை அங்கே கிடக்கட்டும். தன் வாசகனை கண்டடையட்டும் என நினைத்தேன். ஏழாண்டுகள் ஆகியிருக்கிறது, நல்லது. எழுபதாண்டுகள் ஆகியிருந்தாலும் ஒன்றுமில்லை

 

நன்றி

 

ஜெ

 

 

 

=================================================================

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52

$
0
0

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை2

மைந்தன் சென்றபின் போத்யர் தன் இல்லத்தின் சிறிய திண்ணையிலேயே நாளின் பெரும்பகுதியை கழித்தார். ஒவ்வொரு நாளும் அவர் இளையோன் இல்லத்திலிருந்து எவரேனும் அவருக்கு இரு வேளை அன்னம் கொண்டுவந்து படைத்தனர். முதலில் அவர் தயக்கமும் அச்சமும் கொண்டிருந்தார். முதல் நாள் அவரிடம் வந்து “மூத்தவரே, தாங்கள் விழைந்தால் நான் சமைக்காத அரிசியை கொண்டுவந்து படைக்கிறேன். அதில் தீட்டு இல்லை. தாங்கள் வேண்டுமெனில் தங்கள் அன்னக்கலத்தை திண்ணையில் வைக்கலாம். எவரென்றே அறியாமல் அதில் நான் பிச்சையிட்டுச் செல்கிறேன். சூதர் பிச்சை பெறலாம் என்று நெறியுள்ளது. அப்பிச்சை அன்னமென்றால் அதை எவரளித்தார் என்பது பொருட்டல்ல என்பதும் அதன் பொருட்டு அவருக்கு பழி சேராது என்பதும் நமது நூல் கூற்று” என்றார்.

போத்யர் அவரை நேர்நோக்கி “சமைத்த அன்னமே கொண்டுவருக! உன் இல்லத்தில் இல்லாள் உலையில் அரிசி இடுகையில் முதல் கைப்பிடியை வழக்கம்போல நீத்தோர் வடிவிலெழும் காகங்களுக்கு என இடுக! இரண்டாம் கைப்பிடியை எனக்கென எண்ணி இடுக!” என்று கூறினார். முல்கலர் விழிகளில் தத்தளிப்பு தெரிந்தது. “மூத்தவரே, நான் இன்றும்கூட சூதுக்களத்தில் பாடியே பொருளீட்டுகிறேன்” என்றார். “ஆகுக!” என்றார் போத்யர். “பழி சேர்த்த அன்னம் அது. தாங்கள் இதுகாறும் வாழ்ந்து ஈட்டிய அனைத்தையும் அதனூடாக இழக்கிறீர்கள் என உணர்க!” என்று அவர் சொன்னார்.

“ஈட்டிய அனைத்தையும் இழந்தாகவேண்டும் நான்” என்று போத்யர் சொன்னார். “நான் எந்நெறியையும் பேணுவதில்லை. குலநெறியை, குடிநெறியை. மானுடநெறியையும்கூட” என்று முல்கலர் சொன்னார். “ஆகுக!” என்று மீண்டும் போத்யர் சொன்னார் “தங்கள் குடிமூத்தார் ஈட்டியவையும் இவ்வண்ணம் பழி கொள்கின்றன” என்று அவர் மீண்டும் சொல்ல “ஆகுக!” என்று அவர் மூன்றாம் முறையும் மறுமொழி சொன்னார். முல்கலர் அவரை நோக்கி நின்றார். அவரால் மூத்தவரின் உள்ளத்தில் ஓடுவதென்ன என்று உணர முடியவில்லை. அந்தத் தெளிவின்மை அச்சத்தை அளித்தது. அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

முல்கலரின் இல்லத்திலிருந்து அவர் இல்லாள் சமைத்த அன்னம் அவருக்கு வந்தது. அவர் அதை அத்திண்ணையில் வைத்து உண்டார். ஒவ்வொரு முறையும் அன்னத்தை மூன்றாகப் பகுத்து ஒரு பகுதியை மூத்தோருக்கென காகங்களுக்கும், ஒரு பகுதியை இரவலருக்கும் வைத்துவிட்டு, ஒரு பகுதியை தான் உண்பது அவர் வழக்கம். அவ்வன்னத்தையும் அவ்வாறே பகிர்ந்தார், அவ்வன்னத்தை உண்ண காகங்கள் வந்தன. ஒவ்வொரு நாளும் அவர் இடும் அன்னத்தை எதிர்நோக்கி இரவலன் ஒருவன் திண்ணையருகே காத்து நின்றிருந்தான். காகத்திற்கு உணவளிக்கையில் அவர் விழிகள் வெறிப்புகொண்டிருந்தன. இரவலருக்கு அளிக்கையில் அவர் விழிகள் கனிந்திருந்தன. உண்டு முடித்து கைகளையும் வாயையும் கலத்தையும் கழுவி அமர்ந்து வெயில் விரித்த சாலையை பொருளின்றி வெறித்துக்கொண்டிருந்தார்.

அவர் விழிகளின் முன்பாக நகரம் உருமாறிக்கொண்டிருந்தது. போர் நிலைத்தபின் நகர் முற்றொழிந்தது. ஓசையவிந்து இடுகாடென்றாகியது. காற்று வெறுமையில் துழாவி அலைந்தது. பின்னர் புது மக்கள் நகருக்குள் குடிவரத் தொடங்கியதும் மீண்டும் அங்கே பொருள் செறியலாயிற்று. சந்தைகள் முளைத்தெழுந்தன. அங்கு மானுடரின் குரல் எழுந்தது. நுரை நுரையென ஓசைகள் எழுந்து நகர் நிறைந்தது. முல்கலர் முதலில் தயங்கிக்கொண்டிருந்தார். “மூத்தவருக்கு உணவளிக்கிறோம். நாம் இன்றேனும் இதை ஒழியலாம்” என்று அவர் சொன்னார். அவர் மனையாட்டி “வேறென்ன செய்வதாக எண்ணம்? நம் களஞ்சியம் ஊற்று அல்ல” என்றாள். அவர் அவளை சில கணங்கள் நோக்கியபின் பெருமூச்சுவிட்டார். “ஆம், நான் வேறெங்கும் செல்ல இயலாது” என்றார்.

கேளிக்கைநிலைகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. நின்றிருக்க இடமில்லாமல் செறிந்து அவை பக்கவாட்டில் பெருத்தன. முல்கலர் பொருள் மிகுந்தவர் ஆனார். பட்டு அணிந்து, அணிகள் சூடி, பல்லக்கில் ஏறி அவர் நகரத்திற்குள் சென்றார். ஒவ்வொரு நாளும் மது அருந்தி நிலையழிந்து மடி நிறைய பொன்னுடன் பல்லக்கில் படுத்து திரும்பி வந்தார். முதல் சில நாட்களில் அவரிடமிருந்த பணிவு மெல்ல மெல்ல அகன்றது. அவருக்கு அன்னமிடுபவர் தானே என்ற எண்ணம் முதலில் ஓர் கூடாக் கருத்தென எழப்பெற்று நடுங்கி திகைத்து அதை ஒதுக்கினார். பின்னர் தன் ஆழத்திலிருந்து அச்சமும் பதற்றமுமாக அதை எடுத்து எடுத்து நோக்கினார். பின்னர் அதை உடன் வைத்துக்கொண்டார் அதை ஒரு மந்தணப் படைக்கலமெனப் பயின்றார். அது தனக்கு காவலும் துணையுமாவதை பின் உணர்ந்தார். அதில் மகிழலானார்.

பின்பு தன் இல்லாளிடம் அதை சொல்லத் தொடங்கினார். தன் மைந்தரிடம் சொன்னார். ஒவ்வொரு முறையும் அவருக்கு உணவு அனுப்பும்போது அதை கூறினார். பின்னர் ஒருநாள் மெல்லிய மதுக்களியில் அவர் முன் வந்துநின்று அதை உரைத்தார். “அன்னம் வந்துகொண்டிருக்கிறது அல்லவா? அன்னம் நிறைவு அளிக்கிறதா? உண்க, உண்க… அது நான் ஈட்டிய அன்னம்” என்றார். “ஆனால் தங்களுக்கு அன்னமிடுவதென்பது எவ்வகையிலும் என் கடமை அல்ல. ஏனெனில் நெடுநாட்களுக்கு முன்னரே நான் குலமொழிவு செய்யப்பட்டவன். எனக்கு குலமில்லை. மூதாதையரின் வாழ்த்துகள் எனக்கில்லை என்று அறிவேன். எனில் மூதாதையர் எனக்கு அளித்த எக்கடமையையும் நான் செய்யவேண்டியதில்லை. எனக்கு மானுட அறம்கூட பொறுப்பென இல்லை.”

“எனினும் இவ்வன்னம் ஏன் இங்கு வருகிறதென்றால் அது எனது பெருந்தன்மையால். அல்லது நான் ஊழுடன் கொண்ட ஆடலால். அல்லது என் ஆணவத்தால். தங்கள் மேல் கொண்ட அளியால் அல்ல. உடன்குருதியினர் பசித்திருக்க உண்ணமுடியாத எனது நேர்மையாலும் அல்ல. இதை உண்கையில் என்னை பழித்தபடி என் வாழ்வை இகழ்ந்தபடி உண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் பழி சேர்வது எனக்கல்ல, உங்களுக்குத்தான்” என்றார். போத்யர் புன்னகையுடன் அவரை நோக்கியிருந்தார். “புன்னகையுடன் இதை நீங்கள் கடக்க முடியாது. ஏனென்றால் இது குருதிச்சோறு. நிணச்சோறு. சீழ்ச்சோறு. பழிசேர்ந்த கீழ்ச்சோறு. அன்றாடம் நான் உண்பதன் மிச்சில்” என்றார்.

அன்று தன் அறைக்குத் திரும்புகையில் அவர் உடல் பலமடங்கு வீங்கிவிட்டிருப்பதைப்போல் உணர்ந்தார். நிலைகொள்ளாமல் பல இடங்களில் முட்டிக்கொண்டார். மனைவியிடம் “நான் இன்று தெய்வங்களுக்கு மறுமொழி சொன்னேன். என்னைப் பழித்த அத்தனை தெய்வங்களும் தலைகுனிந்து நிற்கக் கண்டேன்” என்று நகைத்தார். “இனி நான் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. எந்தத் தெய்வமும் என் முன் வந்து நின்றிருக்க அஞ்சும்” என்றார். ஆனால் அன்று இரவு களிமயக்கு உடல்நீங்கியதும் விழிப்புகொண்டு திகைப்புடன் இருளை நோக்கிக்கொண்டிருந்தார். உளமுருகி இருளுக்குள் தனிமையில் அழுதார். “தந்தையே, தந்தையே” என்று விசும்பினார். அவர் மனைவி அவ்வழுகையை முன்பும் கண்டவள். அவள் அதை பொருட்படுத்தவில்லை. நெடும்பொழுதுக்குப் பின் அவர் தன் அன்னையை நினைவுகூர்ந்தார். பின் அமைந்து துயில்கொண்டார்.

ஆனால் இரு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அவரிடம் வந்து “இன்று நான் உணவு உண்ணும்போது உணர்ந்தேன் என் உணவு இத்தனை சுவையாக இருப்பது ஏன் என்று”
என்றார். எக்களிப்பும் விக்கலுமாக “அது வெற்றியின் சுவை! ஆம் வெற்றி!” என்று கூவினார். நடுத்தெருவில் நின்று “கேளுங்கள் சூதர்களே, இழிமக்களே, கேளுங்கள். இதோ நான் வென்றிருக்கிறேன். இதோ, நீங்கள் துறந்துசென்ற இத்தெருவில் அரசன் என நின்றிருக்கிறேன். இந்தத் தெருவையே விலைக்கு வாங்கும் பொருள்கொண்டவன் நான். என்னை அடிபணிந்தவர் அனைவருக்கும் அன்னமிடும் ஆற்றல் கொண்டவன்” என்று கூவினார்.

தன் வீட்டுக்குள் புகுந்து கை நிறைய வெள்ளி நாணயங்களை அள்ளிக்கொண்டு வந்தார். அவர் மனைவி பின்னால் ஓடிவந்தாள். “என்ன செய்கிறீர்கள்? நில்லுங்கள்… என்ன செய்கிறீர்கள்?” என்று கூச்சலிட்டாள். அவர் நாணயங்களை தெருவில் அள்ளி வீசினார். “பொறுக்கிக்கொள்ளுங்கள்… நாய்களே, வந்து பொறுக்கிக் கொள்ளுங்கள்” என்று கூவினார். நான்கு பக்கமிருந்தும் வறிய சூதர்கள் பஞ்சை உடல்களுடன் பாய்ந்து வந்து புழுதியில் விழுந்து புரண்டு ஒருவரோடொருவர் போரிட்டு அவற்றை பொறுக்கினர். ஒருவரை ஒருவர் கடித்துக் கீறி கூச்சலிட்டனர். அவர் அவர்களை நோக்கி நின்றார். ஒரு விழியிலிருந்து நீர் வழிந்தது.

அவர் திரும்பி நோக்கியபோது போத்யர் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதை கண்டார். அவர் எதையுமே பார்க்கவில்லை என்று தோன்றியது. முல்கலர் சென்று தன் இல்லத்திண்ணையில் அமர்ந்தார். அங்கிருந்து போத்யரை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கேயே சுருண்டு படுத்துக்கொண்டார். அவர் மனைவி திகைத்து சொல்லற்று நோக்கி நின்றாள். பின்னர் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள். அவர் மேலும் நாணயங்களை வீசக்கூடும் என இரவலர் காத்து நின்றனர். பின்னர் மெல்ல மெல்ல அகன்றனர்.

 

முல்கலர் விழித்துக்கொண்டபோது இருள் பரவியிருந்தது. தெரு வானொளியில் மின்னியது. எதிர்த்திண்ணையில் போத்யரின் விழிகளை அவர் கண்டார். நெடுநேரம் அவற்றை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் எழுந்து அவர் அருகே சென்று அமர்ந்தார். “மூத்தவரே, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார். போத்யர் மறுமொழி சொல்லவில்லை. “கூறுக, என்னைப் பற்றி நீங்கள் எண்ணுவதென்ன?” என்றார் முல்கலர். போத்யர் மறுமொழி சொல்லமாட்டார் என உணர்ந்ததும் சிலம்பிய குரலில் “ஆம், நான் இழிமகன்தான். கீழோன்தான். என்றுமே அதை மறுக்கமாட்டேன்” என்றார்.

“ஆனால் நான் என்ன செய்யக்கூடும்? சொல்க, எனக்கு என்ன வழி இருந்தது?” அச்சொற்களுடன் அவர் உள்ளம் திறந்துகொண்டது. பலநூறுமுறை அவ்வாறு அவ்வண்ணம் அவரிடம் அவற்றை சொல்லிக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தார். “நான் எவரிடமும் சொல்லவேண்டியதில்லை. எவரிடமும் எனக்கு கணக்குகள் இல்லை. உங்களிடம் சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என தெரியவில்லை. மூத்தவரே, இளமையில் நான் மன்றுபாடல் பயிலும்பொருட்டு சூதர்களத்திற்குச் செல்லும்போதெல்லாம் என்னை ஒரு பெரும் தோல்வியென்றே எண்ணினேன். என்னால் பாடல் கூற முடியவில்லை. குலமுறைகளை பிழையின்றி சொல்ல இயலவில்லை. என் குரல் பிறழ்ந்து இசையொழிந்தது. அனைத்து அவைகளிலும் தோற்கடிக்கப்பட்டேன். உடன் வந்த சூதர்களால் இளிவரல் செய்யப்பட்டேன். வாழும் பொருட்டு அவர்களின் இழிந்த சொற்களை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

மூத்தவரே, சிறுமைகொண்டு வாழ்வதென்றால் என்ன என்று தெரியுமா?. அச்சிறுமையை ஒவ்வொருநாளும் அன்னமென உண்டு மூச்சென உயிர்த்து வாழ்வதன் துயரை உங்களால் உணரமுடியுமா? உடலே ஒரு விழுப்புப்பொதியாக ஆகிவிடுகிறது. நாறும் கூண்டு. விடுதலைக்காக உள்ளிருந்து ஏங்குகிறது ஆத்மா. உடலை ஒழிக்கவேண்டும். உடைத்து திறக்கவேண்டும். எத்தனை நாள் கோட்டைமேலிருந்து குதிப்பதைப் பற்றிய கனவுடன் மேலேறிச் சென்றிருக்கிறேன் என அறிவீர்களா? ஒருநாள் துணிந்து மதுக்கடைக்கு சென்றேன். கோட்டையிலிருந்து இறங்கி நேராக அங்கே சென்றேன். மது என்ன செய்யும் என அறிவேன். ஆனால் மதுக்கடையில் குடிப்பதன் பொருளென்ன என்று தெரிந்திருக்கவில்லை.

அது ஒரு குப்பைமேடு போலிருந்தது. மானுடக் குப்பைமேடு. எச்சில்கள், உமட்டல்கள், ஏப்பங்கள், உடல்நாற்றங்கள். சொற்கள் சிதைந்து நாறின. சிரிப்பு அதைவிட உடைந்து கிடந்தது. அங்கு ஓரமாக அமர்ந்துகொண்டிருந்தபோது ஒருவன் என்னைக் கண்டு நீ சூதனா என்றான். ஆம் என்றேன். நீ அரசச்சூதன் அல்லவா என்றான். அக்கணம் என் உள்ளம் பெருமிதம் கொண்ட விந்தைதான் என்ன! நான் ஆம் என்றேன். ஆ, இங்கே ஒரு அரசச்சூதன் வந்துள்ளான். அரசர்களே, நம்மை அவன் பாட விழைகிறான். பாடுக, சூதா. பொன் கொள்க என்று அவன் கூவினான். களிமகன்கள் கூச்சலிட்டனர். ஆயிரம் அரசர்கள் இங்கே என்று கூவினர்.

அங்கே பாடுவதா என்று என் உள்ளம் திகைத்தது. ஆனால் பாடாமலிருக்க என்னால் இயலாது என்று அப்போது அறிந்தேன். ஏனெனில் எனக்கு மீண்டும் மது தேவையாக இருந்தது. என்னிடம் ஒரு செம்புநாணயம்கூட எஞ்சியிருக்கவில்லை. ஆகவே நான் அறிந்தவற்றிலேயே கீழ்மை மிகுந்த காம கேலிப்பாடல் ஒன்றை பாடினேன். அங்கிருந்தோர் கைதட்டி என்னை ஊக்கினர். களிவெறியில் சிரித்து கூச்சலிட்டனர். என்னை இருவர் தூக்கி வைத்து நடனமாடினர். என்னை மாறி மாறி முத்தமிட்டனர். வாழ்வில் முதல் முறையாக பாராட்டை அடைந்தேன். கொண்டாடப்பட்டேன். அன்று திரும்புகையில் பை நிறைய வெள்ளிக்காசும் இருந்தது.

மறுநாள் விழித்தெழுந்து என் அறையில் அமர்ந்து வெதும்பி அழுதேன். வீழ்ந்தேன் என்று, இழிவடைந்தேன் என்று, எஞ்சாதொழிந்தேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இங்கிருந்து கிளம்பிச்சென்றபோது இருந்தவனல்ல திரும்பிவந்தவன் என்று, என் உடல் மாசடைந்துவிட்டது என்று, இனி மூதாதையர் குடிகொள்ளும் எந்த இடத்திற்கும் என்னால் சென்று நின்றிருக்க இயலாதென்று சொல்லிக்கொண்டேன். இனி இல்லை இனி இல்லை என்று எனக்கு நானே வஞ்சம் கூறிக்கொண்டேன். அன்றே இறுதி என்று உறுதி பூண்டேன்.

ஆனால் இரு நாட்களுக்குக் கூட அவ்வுறுதி நீடிக்கவில்லை. அவ்வெள்ளி நாணயங்கள் என்னை ஈர்த்தன. அவற்றை கையிலிட்டு திருப்பித் திருப்பிப் பார்த்தபோது அவற்றின் மென்மையும் தண்மையும் என்னை மெய்ப்பு கொள்ளச் செய்தன. நானே ஈட்டிய வெள்ளி. ஆணென நிமிர்ந்து நின்ற களம். அதை ஒழிய என்னால் இயலாது. மீண்டும் அங்கே சென்றேன். மதுக்களத்தில் பலர் ஓடி வந்து என்னை எதிர்கொண்டனர். அள்ளித் தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். சூதுக்களத்தில் அமர்ந்து அன்று பாடினேன். அன்று தயக்கங்களை களைந்துவிட்டிருந்தேன். வஞ்சத்துடன் எவருக்கோ விடுத்த அறைகூவலென அன்று பாடினேன்.

“இதோ என்னை கீழிறக்கிக்கொள்கிறேன். இன்னும் கீழிறங்குவேன் பார் என்று எவருக்கோ அறைகூவிக்கொண்டேன்” என்றார் முல்கலர். கள்மயக்கில் உதடுகள் கோண நகைத்துக்கொண்டு “சூதுக்களத்தில் பாடுவதன் கலைகளை நான் முனைந்து கற்றுக்கொண்டேன். அது அத்தனை எளிதல்ல. நீங்கள் அரச அவைகளில் அரச உள்ளங்களை அக்கணம் கணித்து கணித்து பாடுவதற்கு ஒரு படி மேல் என்பேன். சூதில் வென்றவனை பாடவேண்டும், தோற்றவனை மேலும் வீறுகொண்டு எழச் செய்யவேண்டும். சூதுக்களத்தில் வென்று கொக்கரிப்பது ஆணவம். தோற்றுச் சீறுவதும் ஆணவம்” என்றார்.

சூதுக்களத்தில் நின்றிருக்கின்றன தெய்வங்கள். அடுத்த கணத்தை முடிவு எடுக்கும் ஆற்றல் கொண்டவை. முந்தைய கணத்தை திரட்டி ஒவ்வொருவருக்கும் ஊழ்ப்பயனென அளிப்பவை. மனிதனின் பெருவிழைவை, ஆணவத்தை ஆள்பவை. அனைத்துக் கீழ்மைகளுக்கும் மேல் தங்கள் சொல்லாற்றல் கொண்டவை. அத்தெய்வங்கள் அனைத்தையும் சொற்கள் அங்கு எழுப்பி நிறுத்தும். என் சொற்களுக்காக அவை ஆடும். என் சொற்கள் அவற்றுக்கு ஆணையிடும். நான் அத்தெய்வங்களின் பூசகன்.

என் சொற்கள் திகழும் சூதுக்களம் புகழ்பெறலாயிற்று. பெருவணிகர் அங்கு தேடிவந்தனர். என் புகழ் சூதுக்களங்கள் அனைத்திலும் பரவியிருந்தது. மேலும் மேலும் பொருள் கொடுத்து என்னை சூதுக்களங்களுக்கு அழைத்தனர். என் சொற்களால் சூதுக்களத்தை ஆளும் தெய்வங்களை ஆட்டுவிக்க முடியுமென்றும், வெறும் சொல்லால் பகடைகளை பன்னிரண்டாக்க இயலுமென்றும் புகழ் பரவியது. அப்புகழில் நான் திளைத்தேன். என் மடி பொன்னொழிந்ததே இல்லை. என் இல்லத்தில் களஞ்சியம் ஒருபோதும் வறண்டதில்லை. என் மைந்தர் பட்டன்றி உடுத்ததில்லை, பல்லக்கிலன்றி பயணம் செய்ததில்லை.

என் மனையாட்டி முதலில் என்னை இகழ்ந்ததுண்டு, இத்தொழில் வேண்டாமென்று. அவளை குலத்தார் பழித்தனர். பிறந்தகமே எதிரியாயிற்று. பிறிதொன்று தேரும்படியும் விழிநீருடன் மன்றாடியதுண்டு. இந்நகர்விட்டுச் செல்வோம் என்றும் பலமுறை அழைத்ததுண்டு. எனக்கு வேறுவழியில்லை என்பேன். பொன் எவரையும் மாற்றும். பசியின்மைக்குப் பழகிய பின்னர் பசி மீதான அச்சம் பெருகுகிறது. வேறுவழியின்றி அமைந்த இடத்தை மானுடர் மெல்ல மெல்ல சொல்லி நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். அவ்வண்ணம் நான் இதில் அமைந்தேன். என்னைவிட உறுதியாக என் மனையாட்டி அமைந்தாள். இன்று அவள் அதன்மேல் அரியணையிலென அமர்ந்திருக்கிறாள். அறத்தின் மேலும் ஒழுக்கத்தின் மேலும் பெண்டிருக்கும் பற்று உறுதி மிக்கது. ஆகவே அறத்தையும் ஒழுக்கத்தையும் துறந்தபின் அவர்கள் அடையும் விடுதலையும் பெரியது.

இழந்ததொன்றுமில்லை என்று நானே எண்ணிக்கொண்டேன். அல்ல என்று என் இல்லத்திற்கு முன் அமைந்த உங்கள் சிறுகுடில் ஒவ்வொருநாளும் எனக்குக் காட்டியது. மூன்றடுக்கு மரவீட்டை கட்டிக்கொண்டபோது எவ்வண்ணமேனும் உங்களை என் முன்னிருந்து அகற்றவேண்டும் என்று பலமுறை முயன்றேன். உங்கள் மைந்தன் ஒப்புக்கொள்ளவில்லை. பொன் கொடுத்து நோக்கினேன். அச்சுறுத்தியும் பார்த்தேன். உங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டிலேயே நீங்கள் வாழ்ந்து இறக்கப்போவதாக கூறினார்கள். நான் இடம்பெயரலாமென்று எண்ணினேன். ஆனால் சூதர்தெருவை விட்டு நீங்கினால் நான் இழிசினர் தெருவுக்கே செல்லவேண்டியிருக்கும். இங்கே இவ்வண்ணம் அரண்மனை என இல்லம் எழுப்பி நான் தங்கியிருப்பது ஓர் அறைகூவல். ஒரு பழிவாங்கல்.

அத்துடன் என்றேனும் நான் மறைந்து பழியும் மறக்கப்பட்ட பின் என் மைந்தர் மீண்டும் குடியில் இணையவும் இந்த இல்லமே வழிவகுக்கும். ஆகவே வேறுவழியில்லை. ஒவ்வொரு நாளும் உங்களைப் பார்த்த பின்னரே என் இல்லம் விட்டு வெளியே வரவேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. மூத்தவரே, உங்கள் விழி ஒவ்வொரு நாளும் என்னை சுட்டியது, உங்கள் கண்ணுக்குப் படாமல் இல்லம் விட்டு வெளியேறவேண்டும் என்று எண்ணுவேன். உங்களை எண்ணாமல் ஒரு நாளை கடந்து செல்ல வேண்டும் என்று திட்டமிடுவேன். ஒருநாளும் இயன்றதில்லை.

என்னைக் காண்பவர் அனைவரும் உங்களைப் பற்றி எண்ணினார்கள். வஞ்சச் சூது ஆடும் இழிசினர் கூட. பிறிதொருவரை நினைவுறுத்துகிறீர்கள் சூதரே, நீங்கள் யார் அரண்மனை முதன்மைச் சூதரின் மைந்தரா இளையவரா என்றார்கள். நான் அச்சொற்களை கேட்காததாக நடிப்பதுண்டு. வேறெவராவது அச்சொற்களை ஏற்று “ஆம், இவர் அவருடைய இளையவரேதான்” என்பார்கள். உயர்ந்தோன் ஒருவன் இழிந்து இங்கு வந்தது அத்தனை உவகையை அவர்களுக்கு அளிக்கிறதா என்று எண்ணிக்கொள்வேன். அவர்கள் இழிந்து வந்த பாதையைவிட மேலும் இழிந்த ஒரு பாதையைக் காண்பது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறதா?

ஆம், அதுவே உண்மை. அதை நான் கண்டிருக்கிறேன். பெருவணிகர் ஒருவர் வந்தால் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். அவன் பொருள் இழந்து வறியவனாகி இரந்து பிழைக்கும் தெருவாழ்பவனாகி அங்கு வந்து நின்றால் அதைவிட கூச்சலிட்டு நகைக்கிறார்கள். அவன் மீண்டும் மீண்டும் அங்கு வரும்பொருட்டு அவனுக்கு சிறு செம்பு நாணயங்களை வீசுகிறார்கள். அன்னமளிக்கிறார்கள். அவன் வேண்டும் அளவுக்கு மது அளிக்கிறார்கள். அவன் களிகொண்டு கீழ்மையில் திளைக்கும்போது கொண்டாடுகிறார்கள். அவர்களால் கொண்டாடப்படும் பொருட்டு அவன் தன்னை மேலும் கீழ்மை நோக்கி செலுத்திக்கொள்கிறான். அவனை இளிவரல் உயிரெனப் பேணுகிறார்கள்.

மூத்தவரே, என் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் உணர்ந்து வந்த வலி நீங்கள். என் வெற்றி வெற்றி அல்ல என்று உள்ளிருந்து முணுமுணுக்கும் ஒரு குரல். இதோ முழு வெற்றி அடைந்துவிட்டிருக்கிறேன். இனி இப்புவியில் நான் அடைவதற்கொன்றுமில்லை. அவ்வெற்றியை தங்கள் தோல்வியினூடாகத்தான் ஈட்ட முடியும் என்பதனால்தான் இந்தச் சிறு அமைதியின்மை. இந்த வெற்றி எனக்கு பிடித்திருந்தது, ஆனால் உங்கள் குருதி மேல் அது நிகழ்வதை நான் விரும்பவில்லை என்று உணர்கிறேன். ஆயினும் அதுவே ஊழின் வழி என இன்று அறிகிறேன்.

நீங்கள் அறியாதது உலகியல் மெய்மை. நூல்களால் அவை சொல்லும் பொய்யறங்களால் மறைக்கப்பட்டது அது. அறிக, இப்புடவி அமைந்துள்ளது பொருட்களால். பொருட்களை இணைக்கும் பொருண்மை நெறிகளால். ஒவ்வொரு பொருளுக்கும் இன்னொன்றுடன் ஒப்பிட மதிப்பு உருவாகிறது. அனைத்துப் பொருளையும் ஒப்பிடும் ஒரு பொருள் பொன்னே. பொன்னில் அளவிடப்படுகின்றன அனைத்துப் பொருள்மதிப்புகளும். பொன்னென்பது இப்புவியே. இப்புவியிலுள்ள அனைத்தும் ஆகும் ஆற்றல் கொண்ட பொருள் அது. எனவே பொன்னன்றி இப்புவியில் வேறு விழுப்பொருள் இல்லை.

பொன்னுக்கு அப்பால் பிறிதொன்றை வைத்த பிழையே நீங்கள் செய்தது. தன்னை மதிக்காது பிறிதொன்றைச் சூடிய ஒவ்வொருவரையும் பொன் தண்டிக்கும். வஞ்சம் கொண்டு பின்னால் வரும். விழிநீர் சிந்தி தன் முன்னால் பணிய வைக்கும். அவர்கள் தலைமேல் கால் வைத்து அழுத்தி மண்ணோடு மண்ணாக்கும். பொன் தன்னை வழிபடுபவரை வாழ்த்துவது. அறியாதோரை விழைவு காட்டி இழுப்பது. அறிந்து புறக்கணிப்போரை அழித்து மகிழ்வது. இவ்வெற்றி என்னுடையதல்ல, பொன்னின் வெற்றி. நான் பொன்னின் எளிய பூசகன். அடிபணிந்து வாழும் அடியோன்.

பொன்னே திருமகள். அவளை கனகை என்கின்றனர் கவிஞர். புவியளந்து, விண்ணளந்து, திசை விரிந்து படுத்திருப்போனின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஒளி. மங்கலங்களில் முதன்மையானது. அழகுகளில் தலையாயது. திருமகள் பொன்வடிவிலேயே உறைகிறாள். என் இல்லத்தில் திகழ்கிறாள். என் நாவில் சொல்லெனவும் என் மைந்தர் விழிகளில் ஒளியெனவும் அவள் வாழ்கிறாள். என் குடி இங்கு பெருக வழிவகுப்பாள். இங்கு அமர்ந்து இன்று எண்ணம்கூர்க! எங்கு பிழைசெய்தோம் என்று உணர்க! அன்னம் அன்னம் என இரந்து அமர்ந்திருக்கையில் ஒருகணத்திலேனும் உங்கள் ஆணவத்தை அழித்து பொன்னுக்கு உங்களை அளியுங்கள். கனகை முன் பணியுங்கள். அவளிடம் உங்களை பொறுத்தருளும்படி கோருங்கள்.

அவர் போத்யரை கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் புன்னகைத்து “பொன்மகளுக்குத் தடையாக இருப்பவள் சொல்மகள் என்பார்கள். சொல்மகளே பொன்மகளை பெற்றுதான் வாழ்கிறாள் என்று உணருங்கள். ஒருமுறையேனும் உங்கள் சொல்லுடன் எங்காவது அமர்ந்து நீங்கள் பொன் பெறாது எழுந்துவந்தது உண்டா? உங்கள் சொல்லுக்கு பொன் மதிப்பே இல்லையென்றால் அதை எவரேனும் மதிப்பார்களா? சொல்மகள் பொருள்மகளின் கொழுநனின் உந்திச்சுழியில் உதித்தவனின் மனைவி. எங்கு இருக்கவேண்டுமோ அங்குதான் அவள் இருக்கவேண்டும்” என்றார்.

போத்யரின் பழுத்த விழிகள் அவரை நோக்கிக்கொண்டிருந்தன. அவர் உரக்க நகைத்து “சொல் நன்று. பொன் எழுத்தாணியால் பொறிக்கப்படுமெனில் மேலும் நன்று” என்றபின் திரும்பிச்சென்றார்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 17077 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>