Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16748 articles
Browse latest View live

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 53

$
0
0

[ 17 ]

சூக்திமதியின் அரண்மனை மகளிரறையில் நடந்த தொடர் குடியமைவுச் சடங்குகளிலும், மங்கலநிகழ்வுகளிலும் சேதிநாட்டுக் குடித்தலைவர்களின் துணைவியரும், வணிகர்களின் மனைவியரும், மூதன்னையரும் புதிய அரசியை வந்து பார்த்து வணங்கி பரிசில் கொடுத்து மீண்டனர். அந்நிகழ்வுகளில் தான் இருந்த கூடத்திலும் உள்ளறையிலும் எங்கும் உடனிருந்த விசிரையை கண்டதாகவே பத்ரை காட்டிக்கொள்ளவில்லை. அந்த முழுமையான புறக்கணிப்பே அவள் விசிரையை உள்ளூர எத்துணை பொருட்படுத்துகிறாள் என்பதை அனைவருக்கும் காட்ட சேடியரும் செவிலியரும் விழிகளுக்குள் நோக்கிக் கொண்டனர்.

அவள் தன்னை புறக்கணிப்பதை உணர்ந்தும் முறைமைச் செயல்கள் அனைத்திலும் இயல்பாக உடனிருந்த யாதவ அரசி பின்னர் அவள் கொண்ட தத்தளிப்பை உணர்ந்ததும் தன் சிறிய உதடுகளில் புன்னகை குடியேற வேண்டுமென்றே அவள் அருகே வந்து நின்றாள். இயல்பாக தொட்டு குழலையும் ஆடையையும் சீரமைத்தாள். அவள் அருந்த நீர் கேட்டபோது தானே கொண்டு வந்து கொடுத்தாள். எவ்வகையிலும் தவிர்க்க முடியாதபடி மீண்டும் மீண்டும் விழிகளுக்கு முன் தோன்றினாள். அவளை முகம் நினைவுகூரத் தேவையில்லாத சேடிப்பெண்ணென்ற நிலையிலேயே பத்ரை நடத்தினாள். இருவரும் ஆடிய அந்த நாற்களச் சூழலை கண்டிருந்த சேடியர் அவர்கள் முன்னிருந்து விலகியதுமே ஒருவருக்கொருவர் கைகொட்டி சிரித்தனர். அச்சிரிப்பு எஞ்சியிருக்கும் விழிகளுடன் மீண்டும் அவர்கள் இருந்த அறைக்குள் வந்து உதடுகளை இறுக்கியபடி பணியேற்றனர்.

நள்ளிரவில் சடங்குகள் அனைத்தும் முடிந்து அரசணியைக் கழற்றி நீராடி வெண்பட்டாடை அணிந்து சிசுபாலனின் மந்தண அறைக்குள் வந்து அவனருகே அமர்ந்ததுமே பத்ரை அதுவரை அவளைப்பற்றி மட்டுமே தான் எண்ணிக் கொண்டிருந்ததை உணர்ந்து கடும் சினம் கொண்டாள். அவள் முகம் அச்சினத்தால் நோயுற்றது போலிருந்தது. அவளை அழைத்து வந்த சேடியர் மந்தண அறைவாயிலை மூடிவிட்டு விலகிச் செல்ல சிசுபாலன் மஞ்சத்தில் அவளருகே அமர்ந்து அவள் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டான். அவனுடலில் இருந்து எழுந்த புனுகும் சவ்வாதும் கலந்த மணம் அவளை எரிச்சல்படுத்தியது. காற்றிலாடிய தன் மேலாடையை சலிப்புடன் இழுத்தபடி அவள் கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பவள்போல பார்வையை திருப்பிக்கொண்டாள்.

சிசுபாலன் மென்குரலில் “பெண்கவர்தல் அரசர்களுக்குரிய மணமுறை என்று இருப்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. கடுஞ்செயல்தான். ஆயினும் ஓர் ஆடலென எண்ணி பொறுத்தருள்க, தேவி!” என்றான். அவள் தலைநிமிர்ந்து “அந்த யாதவப்பெண் இங்குதான் இருப்பாளா?” என்றாள். “யார்?” என்றான். “உங்கள் துணைவி. யாதவ பஃப்ருவின் மனைவி” என்றாள். “பஃப்ரு இன்றில்லை” என்றான். “அவள் உடலில் அவன் மணம் இருக்கும்” என்றாள். அவன் கூசி விழிகளை திருப்பிக்கொண்டான். சினமெழுகையில் பெண்களுக்கு ஆண்களின் அனைத்து நரம்புமுடிச்சுகளும் தெரியும் விந்தை. “அவளுக்கு இங்கு என்ன வேலை?” என்றாள். சிசுபாலன் சினத்துடன் “அவளையும் நான் துணைவி என்றே கவர்ந்து வந்தேன்” என்றான். அவள் அவன் உளவலியை உணர்ந்து மேலும் கூர்மைகொண்டாள். “பிறிதொருவனுடன் இருந்தவள் ஒருபோதும் ஒருவனுக்கு முழுமனைவியாவதில்லை” என்றாள்.

சிசுபாலன் “இத்தருணத்தில் நாம் ஏன் அவளைப்பற்றி பேசுகிறோம்?” என்றான். “அவளைப்பற்றி மட்டுமே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அவன் தன் உடல் மெல்ல களைப்புறுவதை உணர்ந்தான். “நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான். கேட்டதுமே அதிலிருந்த களைப்பு ஆணைக்குப் பணிவதுபோல் ஒலித்துவிட்டதை உணர்ந்தான். ஆனால் மேற்கொண்டு ஒன்றும் செய்யவியலாதென்றும் அறிந்தான். “அவள் இவ்வரண்மனைக்குள் இருக்கலாகாது. நகரில் சூத்திரர்களுக்குரிய பகுதியில் அவளுக்கொரு அரண்மனை அமையுங்கள். அவள் அங்கு இருக்கட்டும்” என்றாள் பத்ரை. அவன் “அவள் அரசி!” என்றான்.

“அரசியென அவளை எவரும் சொல்லலாகாது. அதற்கெனவே சூத்திரர் பகுதியில் மாளிகை அமைக்கச் சொன்னேன். அது எத்தனை பெரிய மாளிகையாகவேனும் இருக்கட்டும், அங்கு சேதி நாட்டின் கொடி பறக்கட்டும். அம்மாளிகை அங்கு இருக்கும் வரை அவளை அரசி என்று எவரும் சொல்லமாட்டார்கள்” என்றாள். சிசுபாலன் “இதை நாம் பிறகு பேசலாமே” என்றான். “இப்போது பேசவேண்டியது இது ஒன்றுதான். பிறிதொன்றுமல்ல” என்று அவள் சொன்னாள். “உங்கள் உள்ளத்தை அவளே நிறைத்திருக்கிறாள். நீங்கள் அங்கேதான் விழுந்துகிடப்பீர்கள்.” அவன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “அவள் உடலில் தெரிந்த மிதப்பே அதை சொன்னது. ஆணை வென்ற பெண்ணின் அசைவுகள் அவை.”

அவன் அவளருகே சற்று நெருங்கி அமர்ந்து கைகளை மீண்டும் பற்றிக்கொண்டு “உன் உள்ளம் நிலையழிந்திருப்பது எனக்குத் தெரிகிறது. இதை நாம் சற்று இயல்பானபின்பு பிறிதொருமுறை பேசுவோம்” என்றான். அவன் கைகளை உதறி எழுந்து “இன்று இத்தருணத்தில் இவ்வாக்குறுதியை எனக்களித்தபின் அன்றி உங்களை என் கொழுநனாக ஏற்கமாட்டேன்” என்றாள். “வேண்டுமென்றால் என்னை நீங்கள் உடலாளலாம். கவர்ந்துவந்தவருக்கு உரிய காதல் அதுவே.” விழிகள் சுருங்க சினந்து “என்ன சொல்கிறாய்?” என்றான் சிசுபாலன். “ஆனால் அது உயிரற்ற உடலாகவே இருக்கும். நான் என் கழுத்தை உடைவாளால் வெட்டிக்கொள்ள முடியும் அல்லவா?” என்றாள் அவள். தளர்ந்து “சொல்லெண்ணி பேசு! நீ அரசி” என்றான். “இதற்கப்பால் ஒரு சொல்லும் நான் சொல்வதற்கில்லை” என்றாள் அவள்.

சிசுபாலன் அமைதியாக தலைகுனிந்து சொல்லிழந்து அமர்ந்திருந்தான். களைப்பு எழுந்து கண்பார்வை மங்கலாகியது. உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் கழன்று அகல்வதாக எப்போதும் எழும் உளமயக்கு அவனுக்கு ஏற்பட்டது. வலிப்பு வந்துவிடுமோ என அஞ்சியதுமே அவன் உடல் மேலும் நடுங்கத்தொடங்கியது.

அவள் கதவைத் தொட்டு “முடிவெடுத்தபின் அழையுங்கள். காத்திருக்கிறேன்” என்றாள். சிசுபாலன் தலை தூக்கி “நில்!” என்றான். அவள் புருவம் தூக்கி திரும்பிப் பார்த்தாள். “இன்று இக்கதவைத் திறந்து நீ வெளியே சென்றால் அரண்மனை முழுக்க அலராகும். எண்ணிப்பார்” என்றான். “அதைப்பற்றி நான் ஏன் கவலைகொள்ள வேண்டும்?” என்றாள். “நீ என் துணைவி. இந்நகரின் பட்டத்தரசி. என் மதிப்பு உனக்கு ஒரு பொருட்டல்லவா?” என்றான். “இல்லை” என்று அவள் சொன்னாள். “என் மதிப்பைக் குறித்து மட்டுமே நான் எண்ணமுடியும். என் மதிப்பின் மீதுதான் உங்கள் மதிப்பு அமர்ந்திருக்கிறது. நீங்களும் அதைக் குறித்து எண்ணவேண்டும்” என்றாள்.

மூச்சிரைக்க “இங்கு நான் பட்டத்தரசி என்றால் இவ்வரண்மனை வளாகத்தில் அவள் இருக்கமாட்டாள்” என்றபின் மேலாடையை இழுத்து வளைத்தணிந்து “நன்று” என கதவை தட்டினாள். சிசுபாலன் “பிறிதொருமுறை நாம் இதைக் குறித்து…” என்று இழைந்தகுரலில் சொல்ல “இதைக் குறித்து நான் சொல்லும் இறுதி வார்த்தை இது” என்றபின் அவள் கதவை இழுத்தாள். மறுபக்கம் சேடியர் வந்து “அரசி!” என்றனர். “நில்” என்றபடி சிசுபாலன் எழுந்து அவள் அருகே வந்தான். “இதோ என் சொல். அவளை சூதர்கள் பகுதிக்கு அனுப்புகிறேன். ஒருபோதும் அரசியென அரண்மனை விழவுகளில் அவள் கலந்து கொள்ள மாட்டாள். எத்தருணத்திலும் உன் விழிமுன் அவள் வரமாட்டாள். போதுமா?” என்றான்.

ஆனால் அவள் கண்கள் மேலும் ஐயமும் துயரமும்தான் கொண்டன. “ஒருசொல்லிலும் சேதி நாட்டரசி என்று அவள் குறிப்பிடப்படலாகாது” என்றாள். “ஆம், உறுதி அளிக்கிறேன்” என்றான் சிசுபாலன். அவள் வெறுப்புடன் புன்னகைத்து “நன்று” என்றாள். அவள் மேல் அவனுக்கு எப்போதும் காமம் எழுந்ததில்லை. அழகற்ற பெண் என்றே அவளை ஓவியத்தில் கண்டதுமுதல் எண்ணியிருந்தான். ஆனால் அவள் விழிகள் அப்போது கொண்டிருந்த கூர்மை அவனை கிளரச்செய்தது. வென்றடக்கவேண்டும் என்றும் அவளை முழுமையாக வெற்றுடலெனச் சுருக்கிவிடவேண்டும் என்றும் அவன் உடல் வெறிகொண்டது.

[ 18 ]

சிசுபாலன் மஞ்சத்தறையில் பத்ரையுடன் இருக்கையில்தான் இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் சேதி நாட்டெல்லைக்குள் புகுந்த செய்தி வந்தது. வாயிற்கதவை மெல்ல தட்டிய சேடிப்பெண் “அரசே!” என்று மும்முறை அழைத்தாள். துயில்கலைந்து எழுந்த சிசுபாலன் உடைவாளை கையிலெடுத்து இடையில் அணிந்தபடி வந்து கதவைத் திறந்தான். சேடி தலைவணங்கி “அமைச்சர் இச்செய்தியை தங்களிடம் அளிக்கச்சொன்னார்” என்றாள். ஓலையை வாங்கி விரித்ததுமே மந்தணச்சொற்களில் அதில் எழுதியிருந்த செய்தியை ஒரே கணத்தில் அவன் வாசித்துவிட்டான். ஓலைச்சுருளை கையில் அழுத்தி நொறுக்கியபடி உள்ளே சென்று கதவை மூடினான்.

மஞ்சத்தில் கையூன்றி எழுந்தமர்ந்து மேலாடையை எடுத்து தோளிலிட்டபடி துயிலில் சற்றே வீங்கிய முகத்துடன் “என்ன செய்தி?” என்றாள் பத்ரை. மணமாகிவந்த நாட்களிலிருந்த எரியும் முகம் அணைந்து மிதப்பும் கசப்பும் நிறைந்தவளாக அவள் உருமாறியிருந்தாள். “இளைய பாண்டவரின் படைகள் சேதி நாட்டு எல்லைக்குள் நுழைந்துவிட்டன. இன்று புலரிக்குள் அவை நகர்நுழையும்” என்றான். அவள் புன்னகையுடன் குழலை அள்ளிக்கோதி முடிந்தபடி “ஆகவே இன்று அவருடன் களம் கோக்கவிருக்கிறீர்கள்?” என்றாள்.

காலிலிருந்து அமிலம் என கொப்பளித்து தலையை அடைந்த சினத்துடன் “ஆம், பெரும்பாலும் இன்று உச்சிப்பொழுதில் நீ கைம்பெண்ணாவாய்” என்றான். “ஷத்ரியப் பெண்களுக்கு அதுவும் வாழ்வின் ஒருபகுதியே” என்றாள் அவள். இதழ்களைக் கோணியபோது கன்னத்தில் ஒரு மடிப்பு விழுந்து அவள் முகம் ஏளனத்திற்கென்றே அமைக்கப்பட்டதுபோல் இருந்தது. இத்தனை ஆண்டுகளாக சினமூட்டியே அவனை தன்னைநோக்கி ஈர்த்துக்கொண்டிருந்தாள். ஏளனம் வழியாக வெல்லமுடியாதவளாக தன்னை ஆக்கிக்கொண்டு அவனை தக்கவைத்துக்கொண்டிருந்தாள்.

“ஷத்ரியப்பெண்ணாக அன்றி நீ ஒருபோதும் வாழ்வதில்லையா?” என்றான் சிசுபாலன். “வைசாலியில் இருக்கையில் ஷத்ரியப்பெண் என்று ஒரு கணமும் எண்ணியதில்லை. கவர்ந்து வரப்பட்ட பின்பு அதையன்றி வேறேதும் எண்ணியதில்லை” என்றாள். சிசுபாலன் “உன்னை தீயதெய்வமொன்று ஆட்கொண்டிருக்கிறது” என்றான். “ஆட்கொண்டிருப்பவர்கள் எனது மூதன்னையர். ஆயிரம் ஆண்டுகாலம் அவர்கள் காத்த என் குருதித் தூய்மை” என்றாள் அவள். “உன்னை அறிந்த நாளிலிருந்து பிறிதொரு உரையாடல் நமக்குள் நிகழ்ந்ததில்லை” என்றான். “நமக்குள் குருதித் தூய்மை அன்றி பிற ஏதாவது உள்ளனவா?” என்று அவள் கேட்டாள். “எதன் பொருட்டு என்னை மணந்தீர்கள் என்பது பாரதவர்ஷம் முழுக்க தெரியும். வேறு எதைப்பற்றி நாம் பேச முடியும்?”

“நாம் பேசாமல் இருப்பதே நன்று” என்றபடி சிசுபாலன் சென்று பீடத்தில் அமர்ந்து கைகளைக்கட்டி கால்களை நீட்டிக்கொண்டான். அவள் எழுந்து தன் இடையாடையை நன்றாகச் சுற்றி சீரமைத்து அதன் நுனியை தோளில் போட்டபடி “மூத்தவள் என்ற நிலையில் உடன்கட்டை ஏற விழைவதாக அவள் சொல்லியிருப்பாளே?” என்றாள். “ஏன்? நீ உடன்கட்டை ஏற விழைகிறாயா?” என்றான். “ஒருபோதும் இல்லை” என்று அவள் சொன்னாள். “எனது மைந்தன் அரசாளவேண்டுமென்றால் நான் இருந்தாக வேண்டும்.”

சிசுபாலன் “நீ இதையன்றி பிறிதெதையும் எண்ணாதவள் என்று அறிவேன். ஆனால் உன் சொற்களில் அதை கேட்கையில் இழிவுகொள்கிறேன். உன் பொருட்டல்ல, என் பொருட்டு” என்றான். “இதில் இழிவு கொள்ள என்ன இருக்கிறது? இது உண்மையென்று நாமிருவரும் அறிவோம். உங்கள் தந்தையும் தாயும் அறிவர். உங்கள் நாட்டுக் குடிகள் அறிவர்” என்றாள் பத்ரை. “என் மைந்தனைவிட அவள் மைந்தன் இரண்டாண்டு மூத்தவன். உங்கள் அரசத்தோழர்களும் குடித்தூய்மை இல்லாதவர்கள். மகதத்தின் அரையரக்கன் போல. உதிரி யாதவர்கள். நாளை முடி அவனுக்குரியதென்று ஒரு சொல் எழுமென்றால் பட்டத்தரசியென்று நின்று நான் எதிர்ச்சொல்லெடுக்கவேண்டும். என் குலத்தால் ஷத்ரியர்களைத் திரட்டி என் மைந்தனுக்காக அணிநிரத்தவேண்டும்.”

“பட்டத்து இளவரசன் என்று முன்னரே முடி சூட்டப்பட்டுவிட்டதே?” என்றான் சிசுபாலன். “ஆம். ஆனால் வாளெடுத்து களம் நிற்பதுவரை அவனை காத்து நிற்கவேண்டிய பொறுப்பு எனக்குண்டு. பூஞ்சீப்பு முதிரும்வரை வாழைமடல் காத்து நிற்க வேண்டும், வளைந்து மேலெழும் தருணத்தை அது அறிந்திருக்கவும் வேண்டும் என்று சொல்வார்கள்” என்றபடி பத்ரை கழற்றி ஆமாடச்செப்பில் இட்டு பீடத்தின் மேல் வைத்திருந்த தன் அணிகளை எடுத்து பூணத்தொடங்கினாள்.

“ஒருவகையில் இத்தனை வெளிப்படையாக நீ இருப்பதும் நன்றே. எதையும் எண்ணி ஏமாற நீ இதுநாள்வரை இடமளித்ததில்லை” என்றான். “ஆம், எண்ணி ஏமாற்றிக் கொண்டிருப்பவள் அவள். அழியா பத்தினியாக உடன்கட்டை ஏறி சூதர் சொல்லில் வாழலாம் என்று எண்ணுகிறாள்.” சிசுபாலன் சீற்றத்துடன் “ஏன், அவள் பத்தினி அல்லவா?” என்று கேட்டான். தலையை பின்னுக்குத்தள்ளி சிரித்தபடி பத்ரை வாயிலை நோக்கி சென்றாள். “நில்! ஏன் அவள் பத்தினி அல்லவா?” என்றான். அவள் சிரித்தபடியே தாழை விலக்கினாள்.

“சொல்! சொல்லிவிட்டுச் செல்!” என்று சிசுபாலன் சினத்துடன் அவள் பின்னால் வந்தான். “அவளென்ன உங்கள் உடலை மட்டுமே அறிந்தவளா?” என்றாள் பத்ரை. “இன்று என்னுடன் இருக்கிறாள், முழுமையாக” என்றான் சிசுபாலன். “உடல் தன் நினைவுகளை விடுவதில்லை” என்றபின் “பத்தினி என்று உங்களுக்கு அமைவது அவளே என்றால் அது உங்கள் ஊழ்” என்றபடி வெளியே சென்றாள்.

உடல் தளர்ந்தவனாக சிசுபாலன் மீண்டும் வந்து மஞ்சத்தில் அமர்ந்தான். பின்பு எப்போதோ விழித்துக் கொண்டபோது வானிலிருந்து கீழே விழுந்து அம்மஞ்சத்தில் கைகால் விரித்து துயின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். எழுந்து வாயிலுக்கு வந்தபோது நீராட்டறை ஏவலன் காத்து நின்றிருந்தான். விரைந்து அவனுடன் சென்றபடி “இளைய பாண்டவர் வந்துவிட்டாரா?” என்றான். “நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது” என்றான் ஏவலன்.

[ 19 ]

நீராடி உடைமாற்றி இடைநாழிக்கு சிசுபாலன் வந்தபோது நிஸ்ஸீமர் அவனுக்காக காத்திருந்தார். “வணங்குகிறேன், அரசே!” என்றார். அவன் அவர் விழிகளை நோக்கினான். “இளைய பாண்டவர் நகர்புகவிருக்கிறார். முறைப்படி தாங்கள் நகர்முகப்பில் அவரை வரவேற்று வாள் தாழ்த்த வேண்டும்.” அவன் பேச வாயெடுப்பதற்குள் “அதற்கு விருப்பமில்லையென்றால் அங்கேயே அவரைத் தடுத்து ஒற்றைப்போருக்கு அறைகூவலாம். படைக்கலத்தை அவர் தேர்வு செய்ய அங்கேயே போர் நிகழவேண்டும். உங்களை அவர் வென்று நகர்புகலாம். தோற்றால் படையுடன் திரும்பிச் செல்லவேண்டும். அதுவே முறை” என்றார்.

சிசுபாலன் அவர் விழிகளைப் பார்க்காமல் “அது நிகழட்டும்” என்றான். நிஸ்ஸீமருக்குப் பின்னால் நின்றிருந்த ஏவலர் அனைவர் முகமும் இறுகியிருப்பதை அவன் உணர்ந்தான். இடைநாழியில் அவன் இறங்குகையில் அவர்கள் அவனைத் தொடர்ந்து வந்த காலடி ஓசையிலேயே அவர்களின் உள்ளத்தின் முறுக்கம் தெரிந்தது. முற்றத்தில் அவனுக்காக அணுக்கர்களும் படைத்துணைவர்களும் காத்து நின்றிருந்தனர். தேரில் அவன் ஏறிக்கொண்டதும் அரண்மனைக்கோட்டையின் முகப்பிலும் இரு காவல் கோட்டங்களிலும் பெருமுரசுகள் எழுந்தன. முற்றத்தில் கூடி நின்ற வீரர்கள் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர்.

அவ்வோசைகள் நடுவே சென்று முற்றத்தைக் கடந்தபோதுதான் அவ்வாழ்த்தொலிகளில் எப்போதுமிராத உணர்வெழுச்சி இருப்பதை அவன் அறிந்தான். அறியாது திரும்பி வீரர்களின் முகங்களை ஒருநோக்கு கண்டு உடனே தலை திருப்பிக்கொண்டான். அவ்வொரு கணத்திலேயே பலநூறு விழிகளை சந்தித்துவிட்டதை அவன் உணர்ந்தான். அனைத்திலும் எப்போதும் அவன் அறிந்திராத நெகிழ்விருந்தது. பல விழிகள் மெல்லிய ஈரம் கொண்டிருப்பதைப் போன்று தோன்றின. புன்னகையுடன் தேரில் கைகளை கட்டிக்கொண்டு நின்றான். நகரின் இருபுறமும் தெய்வ ஊர்கோலம் காண்பதற்கு நிற்பது போல் சூக்திமதியின் குடிகள் செறிந்திருந்தனர். அவன் தேர் கடந்து சென்றபோது அழுபவர்கள் போல், களிவெறி கொண்டவர்கள் போல், சினம் எழுந்தவர்கள் போல் கைகளை வீசி தொண்டை நரம்புகள் புடைக்க வாழ்த்தொலி எழுப்பினர்.

புலரி ஒளி தரையை துலங்க வைக்கத் தொடங்கியது. இலைகள் மிளிர்ந்தன. ஓசைகள் கார்வையிழந்து தனித்துப் பிரிந்து கேட்டன. மணியோசைகளும் ஆலயங்களின் குந்துருக்க, அகில்புகை மணமும் காற்றில் நிறைந்திருந்தன. தலைமுடியை அளைந்த இளங்காற்றில் கோட்டைக் கரும்பரப்பில் முளைத்திருந்த புற்களின் பசும்பரப்பு பெருநடையிடும் புரவியின் மென்மயிர்த்தோல் வளைவுகளென அலையடித்தது.

கோட்டைக் கதவு மூடப்பட்டிருந்தது. உள்முற்றத்தில் சேதி நாட்டின் மூன்று வில்லவர்படை வீர்ர்கள் முழுக்கவச உடைகளும் நாய்வால்களென தோளில் வளைந்தெழுந்த விற்களுமாக காத்து நின்றனர். அவன் அணுகியதும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் நடுவே துலங்கி வந்த பாதை வழியாகச் சென்று கோட்டைக் கதவை அடைந்து தேரிலிருந்து இறங்கினான். காவலர்தலைவன் வணங்கி திறந்தளித்த திட்டிவாயிலினூடாக மறுபக்கம் சென்றான். வெளிமுற்றத்தில் ஐந்து படைப்பிரிவுகள் போரணிக்கோலத்தில் நிரை வகுத்திருந்தன. வில்லவரும் வேல்படையினரும் இரு பக்கமும் நின்றிருக்க நடுவே தேர்களும் யானைகளும் நின்றன.

படைமுகப்பை அவன் அடைந்தபோது அங்கு நின்றிருந்த படைத்தலைவன் மத்தசேனன் இரும்புக்கவசம் அணிந்த உடல் மின்ன அருகே வந்து தலைவணங்கி “அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், அரசே” என்றான். “நன்று” என்றபடி முன் நிரையில் சென்று சிசுபாலன் நின்றான். அருகே நின்ற வீரன் அவனது கவசங்களைக் காட்ட தேவையில்லை என்று மறுத்தான். காலைக்காற்றில் அவன் அணிந்திருந்த பட்டுச் சால்வை உடல் சுற்றி நெளிந்து கொண்டிருந்தது. குழல் சுருள்கள் காற்றில் பறந்து தோளில் விழுந்து எழுந்தன. நீண்ட தாடி எழுந்து தோளுக்குப்பின்னால் பறந்தது.

தன் உள்ளம் அதுநாள் வரை அடைந்த அனைத்து அலைக்கொந்தளிப்புகளையும் முற்றிலும் இழந்து காற்றுபடாத குளம் என குளிர்ந்து கிடப்பதை அவன் உணர்ந்தான். அந்த அமைதி இனிதாக இருந்தது. அனைத்திலிருந்தும் விடுதலை. ஒருபோதும் கடிவாளம் இழுத்து நிறுத்த முடியாத உணர்வெழுச்சிகள். வடிவற்றுச் சிதறும் எண்ணங்கள். கலைந்து தோன்றி மீண்டும் கலையும் நினைவுகள். ஒருங்கு குவிந்த மனம் ஒரு பருப்பொருள் போல இருந்தது. தன் வடிவை தானே மாற்றிக்கொள்ள இயலாது வடிவெனும் சிறைக்குள் இருப்பை சுருக்கிக் கொண்டது. உடலுக்குள் கைவிடமுடிந்தால் உள்ளத்தை கையால் தொட்டு அழுத்திப் பார்க்க முடியும் போலிருந்தது. வெளியே எடுத்தால் பந்துபோல் கையில் வைத்து ஆட முடியும். பிறர்மேல் வீசியெறிய முடியும். அதோ ஓடும் அந்த ஓடையில் ஒழுக்கிவிட்டு ஒழிந்த அகத்துடன் அரண்மனை மீளமுடியும்.

அந்த வீண் எண்ணங்களை எண்ணி அவனே புன்னகைத்தான். சற்று நேரத்தில் அவ்வமைதி சலிப்பூட்டத் தொடங்கியது. விரையாத உள்ளம் காலத்தின் விரைவை காட்டி நின்றது. பொருண்மை கொண்டுள்ள அனைத்தையும் தழுவி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் காலம். கணங்கள் கணங்களென அவன் காலத்தை உணரத்தொடங்கினான். ஒவ்வொரு இலையசைவையும் கண்டான், ஒவ்வொரு மணல் பருவின் புரளலையும் காண்கிறோம் என்று மயங்கினான். அங்கு பிறவிகள்தோறும் நின்று கொண்டிருக்கிறேனா? சினமோ, வஞ்சமோ, அச்சமோ, செயலூக்கமோ கொள்ளாதபோது உள்ளம் எத்தனை வீண் செயல்பாடென்று தெரிகிறது. செயல்விழைவுடன் முனைகொள்ளாதபோது உள்ளம் தன்னையே பகடி செய்துகொள்ளும் பொருட்டு இயங்குகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

தொலைவில் கொம்பொலி எழுந்தபோது அவன் நீள்மூச்சு விட்டான். கோட்டை மேலிருந்த கொம்புகளும் முரசுகளும் முழங்கத்தொடங்கின. சாலைக்கு மறுபக்கம் அணுகிவரும் கொம்பும் முரசும் முழங்கின. இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் பொறிக்கப்பட்ட பட்டுப்பெருங்கொடியுடன் கரிய புரவியில் முதற்படைவீரன் நிலமுதைத்துச் சுழலும் குளம்புகள் புழுதியைக் கிளப்பி பின்னால் பறக்கவிட நீர்ப்பெருக்கிலேறி வருபவன் போல அணுகினான். அவன் படைகளெங்கும் மெல்லிய உடலசைவு கவசங்களின் படைக்கலங்களின் ஒலியாக மூச்சாக பரவியது.

சிசுபாலன் கைகாட்ட சேதிநாட்டின் பன்னிரு வீரர்கள் வேல்களுடன் முன்னால் சென்று கொடி ஏந்தி வந்த வீரனை மறித்து வேல்களை சரித்து நாட்டினர். அவன் புரவியிலிருந்து இறங்கி அக்கொடியை தரையில் ஊன்றி கால் சேர்த்து அசையாது நின்றான். துவண்டு கம்பத்தில் சுற்றி இளங்காற்றில் படபடத்தது கொடி. அவனுக்குப் பின்னால் தாவிவந்த பாண்டவப்படையின் பன்னிரண்டு வெண்புரவிகள் கவச உடையணிந்த வீரர்களுடன் தயங்கி மெல்ல பெருநடையாகி அணுகின.

அவன் மறிக்கப்பட்டதைக் கண்டதும் அவர்களில் முன்னால் வந்த தலைவன் கைதூக்க ஒவ்வொரு புரவியாக ஒன்றுடன் ஒன்று முட்டி குளம்புகளின் ஒலியுடன் நிரை கொண்டன. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் கழுத்தைத் தூக்கி மெல்ல கனைத்தன. தூக்கிய குளம்புகளால் தரையை தட்டின. பொறுமை இழந்து முன்னும் பின்னும் அசைந்தன. ஆணை பின்னுக்கு பரவிச் செல்ல வேலேந்தி வந்த காலாள் படையும் அவர்களுக்குப் பின்னால் வந்த தேர்வரிசையும் அசைவிழந்து நின்றன.

தொலைவில் பாதைவளைவு வரை வேல்களின் ஒளிவிடும் கூர்முனைகள் அலையலையென அசைந்தன. அங்கு ஒரு கொம்பொலி எழ படைகள் பிளந்து வழிவிட்ட இடைவெளி வழியாக தன் வெண்புரவியில் பீமன் அவர்களை நோக்கி வந்தான். சீரான குளம்படிகளுடன் அவன் புரவி தலையசைத்து பெருநடையிட்டு வந்தது. ஆடும் கிளையில் தொற்றி அமர்ந்திருக்கும் பறவை போல அதன் முதுகின்மேல் இருவிரல்களால் கடிவாளத்தைப் பற்றியபடி பீமன் அமர்ந்திருந்தான். அவர்கள் அனைவரும் தன்னை நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த சிசுபாலன் தன் உடலிலிருந்த இறுக்கத்தை மெல்லத் தளர்த்தி இடக்காலை ஊன்றி வலக்காலை நெகிழ்வாக்கி சற்றே தோள்வளைத்து நின்றான். அது உடல்தளர்வைக் காட்டுகிறதா என்ற எண்ணம் வர மீண்டும் கால்களைச் சேர்த்து தோள்களைத் தூக்கி நின்றான்.

பீமன் புரவியை இழுத்து நிறுத்தி கால்சுழற்றி இறங்கி கடிவாளத்தை அருகே நின்ற காவலனிடம் கொடுத்துவிட்டு அவனை நோக்கி வந்தான். காலை இளவெயிலில் இடையில் புலித்தோல் ஆடை மட்டும் அணிந்து தோளில் புரண்ட நீள்குழலுடன் வெண்கலத்தில் வார்த்த பெருஞ்சிலைபோல் நடந்து வந்த அவனை சிசுபாலன் நோக்கி நின்றான். நீலநரம்பு புடைத்துப்பின்னிக் கட்டிய தோள்கள். நரம்புவிழுந்திறங்கிய புயங்கள். இருபிளவென நெஞ்சு. ஒவ்வொரு தசையும் முழுவளர்ச்சி கொண்டு முழுத்து இறுகி நெகிழ்ந்து அசைந்தது. உடல் அதன் வடிவிற்குள்ளேயே சிற்றலைகளாக ததும்பியது.

புன்னகையுடன் இரு கைகளை விரித்து சிசுபாலனை அணுகி “வணங்குகிறேன், சேதி நாட்டரசே. மீண்டும் தங்களை சந்தித்தமை எனது இந்நாளை ஒளி பெறச்செய்கிறது” என்று முகமன் உரைத்தான். சிசுபாலன் இருகைகளையும் தடுப்பதுபோல் விரித்தபடி உரத்த குரலில் “இளைய பாண்டவரே, இந்நகரை வென்று ஆநிரை கொள்ள தாங்கள் வந்தீர்கள் என்றால் நகர் வாயிலில் தங்களைத் தடுக்கும்பொருட்டு இங்கு நிற்கிறேன். சேதி நாடு எந்தக் கொடிக்கும் தலைவணங்காது என்று அறிவிக்க விழைகிறேன்” என்றான்.

பீமன் நின்று அவனையும் அருகில் நின்ற படைத்தலைவனையும் நோக்கியபின் உரக்க நகைத்து “இது என்ன குழப்பம்? அரசே, இது ஓர் எளிய சடங்கு. இதன் பொருட்டு என் சிறிய தாயாரின் நாட்டுடன் எங்ஙனம் போர் தொடுப்பேன்? இந்திரப்பிரஸ்தம் சென்று என் அன்னைக்கு என்ன மறுமொழி உரைப்பேன்? அவர் இங்கே நான் செல்வது என் பிறந்த மண்ணுக்குச் செல்வதுபோல என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்” என்றான்.

அவன் தோளில் கைவைத்து “அரசே, நான் ஆநிரை கவரவோ சூக்திமதியின் கொடியை வெல்லவோ இங்கு வரவில்லை. விரிந்த கரங்களுடன் நட்புகொள்ளவே இங்கு வந்தேன். எங்கள் வேள்வியை சேதி நாடு ஏற்கிறதென்றால் ஒற்றைப் பசுக்கன்றை மட்டும் அன்பளிப்பாக கொடுங்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறேன். மறுத்தீர்கள் என்றால் இந்நகர்வாயிலில் தலைவணங்கி உங்களுக்கு வாழ்த்து சொல்லி என் சிறிய அன்னைக்கும் பேரரசருக்கும் வணக்கமுரைத்து திரும்பிச் செல்கிறேன்” என்றான் பீமன்.

சிசுபாலன் அக்கையின் எடையை உணர்ந்தபடி தன்னருகே நின்ற இரு வீரர்களையும் நோக்கி விழிசலித்து “எவ்வகையில் எனினும் ஆகொள்ளுதல் ஒருநாட்டை வெல்லுதலே ஆகும். தாங்கள் கோரியபடி கன்று தர இயலாது” என்றான். “நன்று. எனில் தங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். நகர் நுழைந்து சிற்றன்னையைக் கண்டு நான் கொண்டு வந்த பரிசிலை அளித்து வாழ்த்து பெற்று மீள தங்கள் ஒப்புதல் உண்டா?” என்றான் பீமன். சிசுபாலன் “ஆம், அது தங்கள் உரிமை” என்றான்.

பீமன் அருகே வந்து இருகைகளையும் விரித்து “குருதி முறையில் நாம் உடன்பிறந்தோர். தங்களை நெஞ்சு தழுவும் உரிமையும் எனக்குண்டு என்று எண்ணுகிறேன்” என்றான். சிசுபாலன் சற்று பின்னடைந்து “ஜராசந்தனைக் கொன்ற கைகள் அவை” என்றான். “ஆம், அவரால் கொல்லப்பட வாய்ப்பிருந்த நெஞ்சு இது. சிசுபாலரே, முற்றிலும் முறைமைப்படி அப்போர் நிகழ்ந்தது. விலங்குமுறைமை. போரின் எங்கோ ஓரிடத்தில் ஷத்ரிய முறைமை அழிந்து அரக்கர் முறை எழுந்தது. அது விலங்குமுறைமையென்றாகியது. அதன் தொடக்கம் என்னிடமிருந்தல்ல. அம்முறைப்படி போரை முடித்துவைப்பதல்லாமல் பிறிதொன்றும் நான் செய்வதற்கில்லை” என்றான் பீமன். “விண்ணேறி வீரர் உலகில் ஜராசந்தரை பார்ப்பேன் என்றால் என் தோள்கள் விரிவதற்குள்ளேயே உவகையுடன் அவர் தோள்கள் விரியும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.”

சிசுபாலன் “நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றான். “தாங்கள் விழையவில்லை என்றால் தோள் தழுவுதலை தவிர்க்கிறேன்” என்று பீமன் அருகே நின்ற மத்தசேனனை நோக்கி கைகளை விரித்தான். அவன் அலையொன்றால் தள்ளப்பட்டவனைப்போல ஓரடி எடுத்து முன்சென்று இருகைகளையும் விரித்து பீமனின் தோள்களைத் தழுவி தன் தலையை அவன் தலை அருகே சாய்த்தான். அவன் விலகியதும் சிசுபாலனின் மறுபக்கம் நின்றிருந்த துணைப்படைத்தலைவனை பீமன் தழுவிக்கொண்டான். தன் படைகளனைத்தும் அறியாக் கைகளால் அப்போது அந்த மாமல்லனைத் தழுவுவதை சிசுபாலன் விழியோட்டி கண்டான். அவர்களின் உடல்களனைத்தும் ததும்பிக்கொண்டிருந்தன. விழிகள் ஒளிகொண்டிருந்தன. முகங்கள் கந்தர்வர்களுக்குரிய மலர்வுகொண்டிருந்தன.

பீமன் சிசுபாலன் கைகளை பற்றிக்கொண்டு “சேதி நாட்டு அரசரை வணங்குகிறேன். நாம் நகர்புகலாம். என் படைகள் கோட்டைக்குள் வரா. என் சிற்றன்னையைக் கண்டு பாதங்களை சென்னிசூடி மீள்கிறேன்” என்றான். அப்பெருங்கைக்குள் தன் கை அடங்கியபோது அவை கற்பாறையின் உறுதியுடன் இருப்பதையும் தனது கை அதிர்ந்து கொண்டிருப்பதையும் சிசுபாலன் உணர்ந்தான். பீமன் அவன் கையைப்பற்றியபடி ஓரடி எடுத்து வைக்க சிசுபாலன் இருகைகளையும் விரித்தான். உரக்க நகைத்தபடி பீமன் அவனை நெஞ்சுடன் தழுவிக்கொண்டான்.

பீமனின் விரிந்த மார்பில் தன் தலையை சாய்த்து மெல்ல அதிர்ந்த உடலுடன் சிசுபாலன் “எடுத்துக் கொள்ளுங்கள், இளைய பாண்டவரே! இந்நகரின் அனைத்து ஆநிரைகளும் தங்களுக்குரியவை” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்


திருமா

$
0
0

1

சமீபத்தில்  தமிழக அரசியல்ச் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது.

மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு நீள்கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது

சமூகத்தின் உள்நீரோட்டங்களின் விளைவாகவே எப்போதும்  புதிய அரசியல்தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். நாமும் அந்தப் பின்னணியில் வைத்தே அவர்களை எப்போதும் புரிந்து மதிப்பிடுகிறோம். ஆனால் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் அரசியல்தலைவர்கள் அந்த நாற்றங்காலில் இருந்து தங்கள் ஆளுமைத்திறனால் மேலெழுந்து வேரோடி கிளைவிரிக்கிறார்கள். நாம் அறிந்த அத்தனை பெருந்தலைவர்களின் வளர்ச்சிக்கோடும் இப்படிப்பட்டதுதான்

திருமாவளவன் எண்பதுகளில் தமிழக அரசியலில் உருவான தலித் எழுச்சியின் விளைவாக உருவான தலைவர். இந்திய அரசியலில் முற்பட்ட வகுப்பினரின் ஆதிக்கத்திற்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுந்து அதிகாரத்தை அடைந்தது. அதற்கு அடுத்தபடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் அதிகாரம் உருவாகவில்லை என்று உணர்ந்தனர். அதை அடையும்பொருட்டு மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் கர்நாடகத்திலும் தலித் அரசியல் உருவாகி தமிழகத்தை வந்தடைந்தது. திருமாவளவன் அவ்வரசியலின் விளைகனி

ஆனால் சென்ற ஆண்டுகளில் திருமாவளவன் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் தலைவர்களில் ஒருவராக மலர்ந்திருப்பதைக் காட்டுகிறது அவரது சமீபத்திய செயல்பாடுகள். பொறுமையின்மையுடன் எழுந்து வந்தவர் அவர். வெறுப்பு கலந்த குரலில் அவர் பேசிய காலங்கள் உண்டு. எதிர்மறை அரசியலையும் வன்முறை அரசியலையும் அவர் முன்வைத்ததுண்டு என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கான நியாயங்களும் அவருக்கிருந்தன. உண்மையில் எவருக்கேனும் அதற்கான நியாயம்  இங்கு உண்டென்றால் அவருக்கு மட்டுமே.

ஆனால் காலப்போக்கில் அவர் கனிந்து நிதானமான அரசியல்வாதியாக உருவாகியிருக்கிறார். சென்ற பல கொந்தளிப்பான நிகழ்வுகளில், அவரது சாதி நேரடியான ஒடுக்குமுறைக்குள்ளானபோதுகூட, அவர் காட்டிய நிதானமும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் முன் நின்று பேசிய ஜனநாயக உணர்வும் பலவகையிலும் முன்னுதாரணமானது.  அவரை ஒரு ‘தலித்’ தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்.

சமீபத்தில் தமிழ் இந்துவில் வெளியான சமஸின் நீண்ட பேட்டி திருமாவளவனின் சமூக, அரசியல் பார்வைகளை வெளிக்கொணர்வது. இன்று தமிழக்த்தில் இத்தனை தெளிவான சிந்தனை கொண்ட இன்னொரு தலைவர் இல்லை. பலரை பற்றி நான் மேலும் தனியாக அறிவேன் என்பதனல் உறுதிபடச் சொல்லமுடியும்.  மிக எளிய அளவில்கூட வாசிப்போ பொதுவான புரிதலோ இல்லாத பாமரர்களே பலர்.அரசியல், சமூகவியல் என பல தளங்களில் தெளிவான கருத்துக்களும் செயல்திட்டங்களும் கொண்டவராக திருமாவளவன் அப்பேட்டியில் தெரியவருகிறார். தன் பலத்தை மட்டுமல்லாது பலவீனங்களையும் அறிந்திருக்கிறார். தன் சாதனைகளை மட்டுமல்லாது பிழைகளையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

திருமாவளவன் என்னும் தலைவரை அவரது ஆளுமையின் அனைத்து இழைகளையும் தொட்டு எடுத்து அடையாளப்படுத்துகிறது அந்த பேட்டி.  எதிர்காலத்தில் அப்பேட்டியிலிருந்து நாம் மேலும் விரிவாக்கி அவரைப்பற்றிப் பேசவிருக்கிறோம் என்று எண்ணிகொண்டேன். அதை சமஸுக்கு எழுதினேன்

திருமாவளவனின் அரசியலுக்கும் பிற அத்தனை அரசியல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? முதன்மையாக, பிற எவருக்கும் எந்தவகையான பொதுநல நோக்கமும் இல்லை. பதவி, அதிகாரம், பணம் அன்றி. இதை அறியாத அப்பாவிகள் எவரும் இன்று தமிழ்நாட்டில் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. திருமாவளவன் ஒருவரே தன் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகண்டு கொதித்து, அவர்களின் நலனுக்காக அரசியலுக்கு வந்தவர். அந்நோக்கத்தை மேலும் தமிழகம் சார்ந்து விரிவுபடுத்திக்கொண்டு வருபவர்

திருமாவளவன் வெல்லவேண்டுமென விழைகிறேன்

 

தொடர்புடைய பதிவுகள்

எங்கே இருக்கிறீர்கள்?

$
0
0

S

 

எங்கே இருக்கிறீர்கள்? எத்தனை தூரம் தெரிகிறது எங்களை? காலமின்மையின் உயர்மேடையில் அல்லது அடியிலா புதைமணலில்
நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே?

ஒருவேளை கண்ணீருடன். ஒருவேளை புன்னகையுடன். ஒருவேளை வெறுமைப்பார்வையுடன். ஒருவர் கைகளை ஒருவர் பற்றிக்கொண்டு,
ஒரு சொல்கூட பேசாமல்…. எங்கள் சுற்றங்களே, அங்கிருந்தால் அனைத்தும் தெரியும்தானே?

இன்று எங்கள் இல்ல முற்றங்களில் களியாட்டங்கள், விருந்துகள், உபசரிப்புகள். நடனங்கள், பாடல்கள், போதைச்சிரிப்புகள்.ஒருவருக்கொருவர் நாங்கள் சூட்டும் புகழ்மாலைகள். ஆம், நாங்கள் வெற்றிபெற்றவர்கள் அல்லவா?

காலக் கொந்தளிப்பை கடந்துவருதலே வெற்றி என்று அறிந்திருக்கிறோம். கண்களை மூடிக்கொண்டு, எதையும் பொருட்படுத்தாமல், தாண்டியதையெல்லாம் அவ்வப்போதே மறந்து,புழுதிகளை அக்கணங்களிலேயே உதறி, காலடிச்சுவடுகள்கூட மிஞ்சாமல் இக்கரையில் எஞ்சிவிடுதல் மட்டும்தானே வெற்றி? அதைத்தான் இதோ மதுக்கிண்ணங்களாலும் மலர்மாலைகளாலும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

மரணத்துக்கு அப்பாலும் மரணங்கள் உள்ளன. நிராகரிப்பின் மரணம், கைவிடப்படுதலின் மரணம், மறக்கப்படுவதன் மரணம். மரணங்களின் அலைகள் எங்கள் கரைகளில் இருந்து உங்களை தள்ளித்தள்ளிக் கொண்டுசெல்கின்றன. இருண்ட வாள்முனையெனத்தெரியும் முடிவின்மையின் தொடுவானம் நோக்கி.

மிக அருகே நின்றிருக்கிறீர்கள் நீங்கள். உங்கள் மூச்சுக்காற்றை, உங்கள் உலர்ந்த உதடுகள் ஒட்டிப்பிரியும் ஒலியை கேட்க முடிகிற அண்மை. ஆகவேதான் நாங்கள் உரக்கப்பேசுகிறோம் , கெக்கலித்துச் சிரிக்கிறோம். தயவுசெய்து விலகிச் செல்லுங்கள். விரிந்து விரிந்து செல்லும் அந்த இடைவெளியில் நிறையட்டும் உங்கள் அமைதி, எங்கள் மௌனம்.

அதை நிரப்பட்டும் நீங்கள் கடைசியாக எங்கள் பரம்பரைகளுக்கு அளிக்கும் பொதுமன்னிப்பு.

 

[முதற்பிரசுரம் மே17, 2010]

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54

$
0
0

[ 20 ]

வழக்கமான கனவுடன் சுருதகீர்த்தி விழித்துக்கொண்டாள். நெடுந்தொலைவிலென ஒரு யானையின் பிளிறலை கேட்டாள். அது ஒரு மன்றாட்டுக்குரலென ஒலித்தது. கோட்டையின் மேற்குப் பக்கமிருந்த கொட்டிலில் இருந்து முதிய பிடியானையாகிய சபரி பிளிறுகிறது என்று மேலும் விழிப்புகொண்ட பின்னரே அவள் சித்தம் அறிந்தது.

நெடுநாட்களாகவே அது நோயுற்றிருந்தது. முதுமை உலர்ந்த சேற்றிலிருந்து புதைந்து மட்கிய மரத்தடிகள் எழுந்து வருவதுபோல அதன் உடலில் எலும்புகள் புடைத்தெழச்செய்தது. கன்ன எலும்புகள் எழுந்தபோது முகத்தில் இரு ஆழமான குழிகள் விழுந்தன. நெற்றிக்குவைகள் இரும்புக்கம்பிச்சுருள்கள் போன்ற முடிகளுடன் புடைத்தன. அமரமுடியாதபடி முதுகெலும்பு குவிந்தெழுந்தது. தொடையெலும்புகளும் மேலெழுந்து வந்தபோது அதன் கால்கள் வலுவிழந்தன. அது படுக்க விழைந்தது. “படுத்தால் அதன் எடை அப்பகுதியின் தோலை கிழிக்கும். புண் வந்து புழுசேரும். துயரமான இறப்பு அது” என்றார் யானைமருத்துவரான குந்தமர்.

அதன் கால்களுக்குக் கீழே மரத்தாலான பெரிய தூண் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்மேல் பரப்பப்பட்ட மரவுரிவளைவின் மேல் தன் வயிற்றை அழுத்தி எடையை கால்களிலும் அத்தூணிலுமாக பகிர்ந்து சபரி நின்றது. ஒவ்வொருநாளும் சூடான மூலிகைநீரை ஊற்றி அதன் சுருங்கிக்கொண்டிருந்த தசைகளை வெம்மையூட்டி மரவுரியால் நீவி உயிர்கொள்ளவைத்தனர் யானைப்பாகர். செக்கிலிட்டு ஆட்டிய பசுந்தழையுடன் கம்புசோறும் வெல்லமும் கலந்த கூழை சிறிய அளவில் இருமுறையாக அதற்கு ஊட்டினர்.

சபரி எப்போதும் தன்னருகே பாகர்கள் எவரேனும் இருக்கவேண்டுமென விரும்பியது. அதன் விழிகள் பார்வையை இழந்து வெண்சோழிகள் போல ஆகிவிட்டிருந்தன. மெல்ல அசைந்தும் நிலைத்துக்குவிந்து சிற்றொலிகளையும் தேரும் செவிகளாலும் நிலையற்று அலைந்து காற்றை துழாவித்தவிக்கும் சுருங்கிய துதிக்கையின் முனையாலும் அது தன் சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. எதன்பொருட்டேனும் அணுக்கப்பாகன் விலகிச்சென்று, அவன் ஓசையும் கேட்காமலானால் பெருமுரசில் துணிமுண்டுகொண்ட கோல் விழுந்ததுபோல மெல்ல அதிர்ந்து அழைத்தது. அவ்வழைப்புக்கு மறுமொழி உடனே எழாவிட்டால் அஞ்சி பிளிறத்தொடங்கியது.

“எதை அஞ்சுகிறது அது?” என்று ஒருமுறை சுருதகீர்த்தி குந்தமரிடம் கேட்டாள். “பிடியானை பெருங்குலத்தின் பேரரசி அல்லவா? காட்டில் அவளுக்கு தனிமையென ஒன்றில்லை, பேரரசி” என்றார் குந்தமர். “ஆனால் அவள் தனிமையில்தானே இறந்தாகவேண்டும்?” என்றாள் சுருதகீர்த்தி. குந்தமர் புன்னகைத்து “எவராயினும் தனிமையில்தான் இறக்கவேண்டும்” என்றார். சுருதகீர்த்தி புன்னகைத்து “ஆனால் பெருங்குடிபுரந்த அன்னைக்கு பேருருக்கொண்ட தனிமையாக வருகிறது சாவு” என்றாள்.

சூக்திமதியின் யானைக்கொட்டிலில் நின்றிருந்தவற்றில் இருபத்துமூன்று களிறுகளும் முப்பத்தாறு பிடிகளும் அவள் குருதிநிரையிலெழுந்தவர்கள் என்று அரண்மனைக் கணக்குகள் சொல்லின. அவையனைத்தும் அவளை வாசனையால் அறிந்திருந்தன. காலையில் தளையவிழ்க்கப்படுகையில் அவை அவளருகே வந்து துதிக்கை தூக்கி மூக்குவிரல் அசைய மூச்சு சீறி அவளை வாழ்த்திச் சென்றன. எப்போதாவது அன்னைப்பிடி மெல்ல உறுமி அவளிடம் ஒரு சொல் பேசியது.

மூதன்னை அவர்கள் வந்துசெல்வதை அறியாதவள்போல தன் இருண்ட தவிப்புக்குள் உழன்றுகொண்டிருப்பாள். அவள் அவர்களை அறியவேயில்லை என்று தோன்றும். ஆனால் எப்போதாவது இளங்கன்று ஒன்று உடல்நலமிழந்தால் முதலில் அதை அறிபவளும் மூதன்னையே. நிலையற்ற துதிக்கையுடன் உடலை அசைத்தபடி அவள் மெல்ல பிளிறிக்கொண்டே இருப்பாள். தன் கொடிவழிவந்த யானை இறந்ததென்றால் இருநாட்கள் உணவும் நீருமின்றி நிலத்தில் ஊன்றிய துதிக்கையுடன் செவியசைய இளங்காற்றில் ஆடும் மரம்போல நின்றுகொண்டிருப்பாள்.

அவள் குலத்தின் பெருங்களிறான அம்புஜன் துவாரகையுடனான ஓர் எல்லைப்போரில் நச்சுவாளி ஏற்று நோய்கொண்டு இறந்தான். அவள் அவ்விறப்பை அறியவேண்டாம் என்று நோயுற்ற அம்புஜனை அப்பால் கொண்டுசென்று சத்ரபாகம் என்னும் குறுங்காட்டில் கட்டியிருந்தனர். ஆனால் அம்புஜன் நோயுற்றிருப்பதை மூதன்னை அறிந்திருந்தாள். அவன் இறந்த செய்தியை அவன் அருகே இருந்த பாகன் அறிந்த கணமே நெடுந்தொலைவிலிருந்த மூதன்னையும் அறிந்தாள். துதிக்கையை தூக்கி தொங்கிய வாய்க்குள் எஞ்சிய கரிய ஒற்றைப்பல் தெரிய பிளிறிக்கொண்டே இருந்தாள்.

“களிறுகள் அவற்றுக்குரிய காணாத்தேவர்களால் ஆளப்படுபவை, அரசி… அத்தெய்வங்கள் சொல்லியிருக்கும்” என்றான் பாகன். “அவை தங்கள் நுண்மணங்களால் இணைக்கப்பட்டவை” என்றார் குந்தமர். அவள் பழுத்து அழுகிய கனிபோல தெரிந்த முதியவளின் கண்களை நோக்கிக்கொண்டு நின்றாள். அதிலூறிய விழிநீர் வெண்பீளையுடன் உருகிவழிவதுபோல வெடித்த சேற்று நிலமெனத் தெரிந்த கன்னங்களில் தயங்கிப்பிரிந்து வழிந்தது. ஒருகணம் அந்த இருட்குவைக்குள் நுழைந்து வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்ட உணர்வு எழ அவள் அஞ்சி திரும்பி ஓடினாள். அதன் பின் அவள் சபரியை நேரில் காணவே இல்லை.

ஆனால் ஒவ்வொருநாளும் அவள் குரலைக் கேட்டே விழித்தாள். எங்கோ அந்நகரின் ஒலிப்பெருக்கின் அடியில் அக்குரல் ஒலித்துக்கொண்டே இருப்பதை எப்போதும் அவள் சித்தம் உணர்ந்திருந்தது. மெல்ல அதை அவள் தவிர்க்கத் தொடங்கினாள். தவிர்க்கத்தவிர்க்க அது பெருகியதென்றாலும் ஒரு கட்டத்தில் பொருளிழந்தது. பொருளற்றவற்றை சித்தம் அறிவதேயில்லை.

அன்று ஏன் அதை கேட்டோம் என எண்ணியபடி அவள் நீராட்டறைக்குச் சென்றாள். “சபரி மேலும் நோயுற்றிருக்கிறதா?” என்று அணுக்கச்சேடி ரம்யையிடம் கேட்டாள். “ஆம் பேரரசி, சென்ற ஒருவாரமாகவே அதன் நோய் முதிர்ந்துள்ளது. பின்காலில் பெரிய நெறிகட்டியிருக்கிறது. நகவளையங்களுக்குமேலாக பெரிய புண் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கிறது. அது மேலும் ஒரு வாரம் உயிர்வாழலாமென்று சொல்கிறார்கள்” என்றாள் ரம்யை. அதன் பின் மேற்கொண்டு கேட்க ஆர்வமில்லாதவளாக அவள் விழிகளை மூடிக்கொண்டாள்.

ஆனால் அவள் எண்ணங்கள் அந்தப்புள்ளியிலேயே முளைகட்டப்பட்டிருந்தன. அதை தவிர்க்கமுடியாதென உணர்ந்ததும் அதையே எண்ணத்தொடங்கினாள். அவள் மணமுடித்து சூக்திமதியில் நகர்நுழைந்தபோது கோட்டைமுகப்பில் பொன்முகபடாமணிந்து சிறுகொம்புகளில் பொற்பூண் மின்ன பட்டுத்திரை நலுங்க வந்து மாலைசூட்டி வரவேற்றவள் சபரிதான். அத்தனை பெரிய பிடியானையை அவள் அதற்கு முன் பார்த்ததில்லை என்பதனால் அது அணுகும்தோறும் அச்சம் எழ தேரின் பீடத்திலிருந்து அறியாது எழுந்துவிட்டாள்.

கல்மண்டபம் போல அவள் பார்வையை முழுமையாக மறைத்து அது அருகணைந்தது. அஞ்சி அமர்ந்த அவள் விழிகளுக்கு நேராக யானையின் தலை வந்தபோது தேர்வாயிலை அதன் கன்னம் மட்டுமே முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. கற்பாறை வைத்து குகைவாயிலை மூடியதுபோல. தோலின் விரிசல்களின் சந்திப்பில் மின்னும் ஒற்றைவிழி ஏதோ கனவில் ஆழ்ந்தது என தெரிந்தது.

“எழுந்திருங்கள், அரசி” என்று அணுக்கச்சேடி ரம்யை சொன்னாள். அவள் எழுந்து தேர்த்தூணை பிடித்துக்கொண்டாள். “வலக்காலெடுத்து வைத்து இறங்குங்கள்… இனி இது உங்கள் மண்” என்று சொன்ன ரம்யை அருகிலிருந்த பொற்குடத்து நீர்மேல் ஒரு செந்தாமரையை வைத்து அவளிடம் அளித்தாள். அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு அவள் வலக்கால் எடுத்து வைத்து தேரிலிருந்து இறங்கினாள். சபரியின் துதிக்கை அவள் தலைக்குமேல் ஆலமரக்கிளை என எழுந்தது. அது தாழ்ந்து வந்து அவள் கழுத்தில் ஓர் வெண்மலர் மாலையை சூட்டியது. அதன் தண்மையும் ஈரமும் எடையும் அதை ஒரு நாகம் என அவள் உடல் எண்ணி சிலிர்க்கவைத்தது.

“ஏறிக்கொள்ளுங்கள், அரசி” என்றாள் ரம்யை. அவள் தயங்க சபரி அவள் இடையை வளைத்துத் தூக்கி தன் மத்தகத்தின்மேல் அமர்த்திக்கொண்டது. அவள் பதறி அதன் கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருந்த பட்டுவடத்தை கால்களால் பற்றிக்கொண்டாள். கையில் பொற்குடத்துடன் அவளைக்கண்டதும் சூக்திமதியின் படைவீரர்களும் குடிகளும் எழுப்பிய வாழ்த்தொலி பொங்கி வந்து அவளைச் சூழ்ந்தது. அப்போதுதான் அவள் முதல்முறையாக தன்னை அரசியென உணர்ந்தாள்.

 

[ 21 ]

மதுவனத்தின் ஹ்ருதீகரின் கொடிவழிவந்த இளவரசி அவள் என இளமையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் சுருதகீர்த்தி வாழ்ந்த ருதுவனம் என்னும் ஆயர்பாடியில் காடுகளில் கன்றோட்டியும் பால்கறந்தும் வெண்ணைதிரட்டி நெய்யுருக்கியும்தான் அவள் வளர்ந்தாள். இளவரசி என்னும் அழைப்பை ஒரு பெயர் என்றே அவள் உணர்ந்திருந்தாள். ஆயர்குல முறைமைகளுக்கு அப்பால் அரசச்சடங்குகளையோ அரண்மனைநடத்தைகளையோ அவள் அறிந்திருக்கவில்லை.

அவள் பெரிய தந்தையரான தேவவாகரும் கதாதன்வரும் ருதுவனத்தின் இளவேனில் விழவுக்கு வந்து உணவுக்குப் பின்னர் குடிமன்றின் சாணிமெழுகிய பெரிய திண்ணையில் படுத்து பனையோலை விசிறிகள் ஒலிக்க தளர்ந்த அரைத்துயில் குரலில் சொல்லாடிக்கொண்டிருக்கையில் அவள் முதல்முறையாக தான் ஓர் எளியபெண் அல்ல என்றும் தன்னைச்சூழ்ந்து அரசியல் அலையடிப்பதையும் அறிந்தாள்.

அவள் அருகிருந்த சிறிய வைப்பறைக்குள் ஒளிந்திருந்தாள். கண்டுபிடியாட்டத்தில் அவள் தோழிகள் அவளை அங்குள்ள புதர்களிலும் மரக்கிளைகளிலும் இல்லங்களிலும் தேடிக்கொண்டிருந்தனர். ஒலிகேட்டு அவள் எட்டிப்பார்த்து தந்தையர் படுத்திருப்பதை உணர்ந்து பின்னடைந்தாள். புரண்டு படுத்த தேவவாகர் “எளிதில் முடிவெடுக்கக் கூடியதல்ல அது, இளையோனே. நீ பெற்றிருப்பது ஒற்றை மகளை. உனக்கு மைந்தருமில்லை. யாதவமுறைப்படி மகளூடாகச் செல்வது கொடிவழி என்பதனால் அவளை கொள்பவன் உன் குடியை அடைகிறான்” என்றார்.

கிருதபர்வர் “ஆம், அதைத்தான் அத்தனைபேரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அரசியலோ நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. நான் எம்முடிவையும் எடுப்பதாக இல்லை. நீங்களிருவரும் சொல்லுங்கள், செய்வோம்” என்றார். “பத்மாவதியின் மைந்தன் கம்சனைப்பற்றி கேள்விப்படுவன எவையும் நன்றாக இல்லை” என்று தொடர்பில்லாமல் கதாதன்வர் சொன்னார். “அவன் ஒரு விழியற்ற காட்டெருமை என்று ஒரு சூதன் சொன்னான். மிகச்சரியான சொல்லாட்சி அது. அவனுக்கு இருப்பது விழியின்மை மட்டுமே அளிக்கும் பேராற்றல்.”

கிருதபர்வர் “ஆம்” என்றார். கதாதன்வர் தொடர்ந்து “விழியற்ற காட்டெருமை பாறையை எதிரியென எண்ணி தன் தலையுடைத்துச் சாகும் என்றான் சூதன்” என்றார். “ஆனால் நாம் என்னதான் சொன்னாலும் இன்று யாதவர்களிடமிருக்கும் வலுவான அரசென்பது மதுரா மட்டுமே. மகதத்தின் படைக்கூட்டு இருக்கும் வரை ஷத்ரியர் எவராலும் வெல்லப்பட முடியாததாகவே அது நீடிக்கும்” என்றார் தேவவாகர். “ஆனால்…” என்று சொன்னபின் “ஒன்றுமில்லை” என்று கதாதன்வர் கையை வீசினார்.

“அதையெல்லாம் நாம் பார்க்கவேண்டியதில்லை. நாம் எளிய யாதவக்குடி அல்ல இன்று. அரசு என்று வந்துவிட்டால் பிறகெல்லாமே அரசுசூழ்தல்தான். நம் பெண்டிரின் மணம் என்பது இனி அவர்களின் நலனுக்குரியது அல்ல, நம் குடியின் நலம் சார்ந்தது மட்டுமே. அதை அவர்களும் உணர்ந்தாக வேண்டும்.” ஏதோ சொல்லவந்த தந்தையை தடுத்து “உண்மை, அவன் கொடியவன். ஆனால் வல்லமை மிக்கவன்” என்றார் தேவவாகர். கிருதபர்வர் “நான் சொல்லவருவது அதுவல்ல, மூத்தவரே, குந்திபோஜனின் எடுப்புமகள் பிருதையை கம்சன் மணக்கக்கூடும் என சொல்கிறார்களே?” என்றார்.

“அவன் அவ்வாறு விழைகிறான் என்கிறார்கள். அவன் கணக்குகள் அப்படிப்பட்டவை. அவனுடன் அமைச்சனாகவும் தோழனாகவும் இருப்பவன் பிருதையின் தமையன் வசுதேவன். யாதவர்களுக்கு இன்றிருக்கும் பிற மூன்று அரசுகள் உத்தரமதுராவின் தேவகனின் அரசு. குந்திபோஜனின் மார்த்திகாவதி. சூரசேனரின் மதுவனம். குந்திபோஜன் மகளை மணந்து வசுதேவனுக்கு தேவகன் மகளை மணம்புரிந்து உடன் வைத்துக்கொண்டால் நான்கு யாதவ அரசுகளும் இணையும் என்பது அவன் கணக்கு.”

“அவனுக்கு மகதமன்னன் பிருஹத்ரதரின் தங்கைமகளின் புதல்விகளை மணம்புரிந்து வைக்கப்போவதாக செய்தி உள்ளது” என்று தேவவாகர் சொன்னார். “ஆம், அது ஒரு அழியா முடிச்சு. ஆனால் அப்பெண்கள் அரசரின் நேரடிக்குருதியினர் அல்ல. பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள். ஆஸ்தி, பிராப்தி என அவர்களுக்கு பெயர்.” கிருதபர்வர் “மகளை கம்சனுக்கு அளிக்க குந்திபோஜனுக்கு எண்ணமிருக்குமா?” என்றார்.

“கம்சனைப்பற்றி அவனும் அறிவான். அவன் மகள் அவனைவிட நன்கறிந்தவள்” என்றார் தேவவாகர். “அவள் ஒருநாள் பாரதவர்ஷத்தை முழுதாளும் பேரரசி ஆவாள் என நிமித்திகர் குறியுரைத்துள்ளனர். இந்த யாதவச்சிற்றரசனை மணந்து அவள் எப்படி பேரரசி ஆகமுடியும்?” கிருதபர்வர் “அவள் வயிற்றில் இன்னொரு கார்த்தவீரியன் பிறக்கலாகுமே? அவன் பாரதவர்ஷத்தை வென்று மணிமுடியை அவள் தலையில் கொண்டுவந்து வைக்கக்கூடும் அல்லவா?” என்றார்.

அச்சொற்கள் தலையைச்சுற்றி ரீங்கரிக்க அதன்பின் அவள் நிழலென உலவினாள். தோழியரிடமிருந்து விலகி தனிமையிலமர்ந்து கனவுகண்டாள். அக்கனவில் மதுராவின் கம்சன் முகமும் விழிகளும் நகைப்பும் குரலும் கனிவும் காதலும் கொண்டு எழுந்துவந்தான். அவனுடைய கொடுமைகுறித்த செய்திகளெல்லாம் ஆற்றல்குறித்தவை என அவளுக்குத் தெரிந்தன. அவனுடைய அறிவின்மை குறித்தவை வேடிக்கைகளென்றாயின. சின்னாட்களிலேயே அவள் அவனுக்கு மணமகளென்றாகி அகத்தே வாழ்ந்துகொண்டிருந்தாள்.

மார்த்திகாவதியில் பிருதையின் தன்மண நிகழ்வுக்கான செய்தி அறிந்ததும் அவள் கைகள் குளிர்ந்து நடுங்க கால்கள் தளர சுவருடன் சாய்ந்து நின்றாள். பேசிக்கொண்டிருந்த ஆய்ச்சியர் மேலும் மேலும் அக எழுச்சி கொண்டனர். பத்மை அத்தை “வேறெவர் வருவார்? சிறுகுடி ஷத்ரியர் வரக்கூடும். அவர்களில் கம்சரின் ஒரு கைக்கு இணையானவர் எவருமில்லை” என்றாள். “பிருதையை அவர் மணந்தால் மகதத்துடன் போர் வரும்… ஐயமில்லை” என்றாள் சுருதை மாமி. “போரில் கம்சர் வெல்வார்… அவர் கார்த்தவீரியனின் பிறப்பு” என்று முதுமகளாகிய தாரிணி சொன்னாள்.

கண்ணீருடன் சென்று தனித்தமர்ந்து தானறிந்த தெய்வங்களை எல்லாம் எண்ணி எண்ணி வேண்டிக்கொண்டாள். “அன்னையரே! அன்னையரே!” என அரற்றிக்கொண்டே இருந்தது உள்ளம். இரவெல்லாம் துயிலழிந்து மறுநாள் உலர்ந்த உதடுகளும் நிழல்பரவிய விழிகளுமாக எழுந்தாள். அவளுக்கு வெம்மைநோய் என்று அன்னை எண்ணி சுக்குநீர் செய்து அளித்தாள். இருளுக்குள் உடல்சுருட்டி படுத்துக்கொண்டு ஓசையின்றி கண்ணீர் விட்டாள். உள்நிறைந்த எடைமிக்க ஒன்று உருகி கண்ணீராக சேக்கையை நனைத்தது. மறுநாள் அவளால் எழவே முடியவில்லை. தன்னினைவில்லாது அவள் “காட்டெருமை! கொம்புகள்!” என்று பிதற்றிக்கொண்டிருந்தாள்.

அவளைச்சூழ்ந்து பெண்கள் நிறைந்திருந்தபோதிலும் தமையன் சக்ரகீர்த்திதான் அவள் உள்ளத்தை புரிந்துகொண்டான். அவளருகே அமர்ந்து அவள் கால்களின் சிலம்பை கையால் அசைத்து ஓசையெழுப்பியபடி மெல்லியகுரலில் “எதன்பொருட்டு துயருறுகிறாய் இளையோளே?” என்றான். யாதவரில் என்றுமே பெண்ணுக்கு அணுக்கமானவன் தமையனே. அவள் உளமுருகி அழத்தொடங்கினாள். “நீ கம்சரை எண்ணுகிறாயா?” என்றான். அவள் தன் ஆழம் வரை வந்த அவன் உள்ளத்தை உணர்ந்து திடுக்கிட்டாள். மறுகணமே ஆறுதல் கொண்டாள். ஆம் என தலையசைத்து சுருண்டு படுத்தாள்.

“அஞ்சாதே… நான் அனைத்தையும் ஒழுங்குசெய்கிறேன். அவளை கம்சர் மணந்தால்கூட நீ அவரை மணக்கலாம். பிருதை உன் தமக்கைதான்” என்றான். சீறி எழுந்து “சீ” என்றாள். அவள் உதடுகள் துடித்தன. “வேண்டாம்” என்று சொல்லி படுத்துக்கொண்டாள். அவன் அந்த எல்லைக்கும் அவளுடன் வந்து “ஆம், அதை உன்னால் ஏற்கமுடியாது. வேண்டியதில்லை. கம்சர் பிருதையை மணக்காமல் போனால் நீ மதுராவின் அரசியாவாய்” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் அவள் கால்சிலம்பை அசைத்துவிட்டு அவன் எழுந்து அகன்றான்.

நான்காம்நாள் செய்திவந்தது, பிருதை அஸ்தினபுரிக்கு அரசியென சென்றுவிட்டாள் என்று. முதலில் அதை ஆய்ச்சியர் நம்பவில்லை. “யார்? அஸ்தினபுரியின் இளவரசனா?” என்று மாறிமாறி கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் அவனைப்பற்றிய செய்திகள் வரத்தொடங்கின. வெண்சுண்ணநிறமானவன் என்றனர். “அவ்வண்ணமென்றால் அவனால் தந்தையென்றாக முடியாது” என்றாள் மருத்துவச்சியான காரகை. “ஏன்?” என்று கேட்ட இளம்பெண்ணிடம் “எழுந்து போடி” என்று அவள் அத்தை சீறி அடிக்க கையோங்கினாள்.

“ஏன் அவனை தெரிவுசெய்தாள் பிருதை? மூடச்சிறுமகள்!” என்றாள் அவள் அன்னை. “சாத்வி, உனக்கு அவளை தெரியாது. அவள் எட்டுகைகளும் நூறுவிழிகளும் கொண்டவள், பிறவியிலேயே பேரரசி என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவள் பிறவிநூலில் பாரதவர்ஷத்தின் பேரரசியென முடிசூடுவாள் என்று எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.” யாரோ சிலர் சிரித்தனர். “அதை நம்பி இம்முடிவை எடுத்துவிட்டாள் போலும்… சூதர்கள் எழுதியபடி மானுடர் வாழ்கிறார்கள். மானுடர் வாழ்வதை சூதர் பாடுகிறார்கள்” என்றாள் பத்மை அத்தை. மீண்டும் சிரிப்பு எழுந்தது.

ஒரு முதுமகள் “உண்மைதானோ?” என்றாள். அனைவரும் அவளை திரும்பி நோக்கினர். “மூத்த இளவரசர் திருதராஷ்டிரர் விழியற்றவர். அப்படியென்றால் இப்பாண்டுவே அரசன். எண்ணிநோக்குக, யயாதியின் குலத்திற்கு யாதவப்பெண் அரசியாக செல்கிறாள். தேவயானியும் சத்யவதியும் அமர்ந்த அரியணையில் அமரவிருக்கிறாள். அவள் மைந்தர்கள் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சந்தனுவும் அமைந்த அரசநிரையில் எழுவார்கள். யாரறிவார், பரதனைப்போன்ற சக்ரவர்த்தி அவள் கருவில் விதையென உறங்கிக்கொண்டிருக்கக் கூடும்.” ஆய்ச்சியர் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர்.

அவள் அரையிருளில் மூலையில் அமர்ந்து அவ்விழிகளின் ஒளிப்புள்ளிகளை நோக்கிக்கொண்டிருந்தாள். மெல்லிய தசைநூல் ஒன்று அவளுக்குள் அறுபடுவது போல உணர்ந்தாள். வலியும் ஆறுதலும் கலந்த ஒன்று. அதன்பின் அவள் கம்சனைப்பற்றி எண்ணவில்லை. கம்சனைக் கடந்து மாலையுடன் செல்லும் பிருதையின் காட்சியை தன்னுள் எழுப்பிக்கொண்டாள். ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் தெளிவடைந்து நுணுக்கமாகியது அது. முதலில் படபடப்பை அளிப்பதாக இருந்தது மெல்ல மெல்ல உருமாறி உள்ளாழத்தில் இனிய சிலிர்ப்பை நிறைப்பதாக மாறியது.

சக்ரகீர்த்தி தந்தையிடம் பேசி கம்சருக்கு மணத்தூதனுப்ப அவரை ஒப்பவைத்ததையும் அச்செய்தியை அவர் யாதவர்களின் குடியவையில் முன்வைத்ததையும் மதுவனத்தின் சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்து கொந்தளித்ததையும் அவள் பின்னர்தான் அறிந்தாள். “தந்தையைச் சிறையிட்டு முடிசூடிய இழிமகனுக்கு மகள்கொடையளித்துத்தான் முடிப்பெருமை கொள்ளவேண்டுமா கிருதபர்வரே? நாணில்லையா  உமக்கு?” என்று அவர் கூவியபோது குங்குரர்களும் அந்தகர்களும் போஜர்களும் விருஷ்ணிகளும் “ஆம்! கீழ்மை!” என்று கூவியபடி எழுந்தனர்.

தேவவாகர் “பொறுங்கள்… இளையோனே பொறு. இது பெண்ணின் விழைவு. நம் யாதவக்குடிகளின் நெறிப்படி பெண்ணின் விழைவை எவரும் விலக்க இயலாது” என்றார். “மூத்தவரே, பெண் தன் குடிக்கு உரிமையானவள் என்றும் சொல்கிறார்கள்” என்றார் சூரசேனர்.  “எதற்கு வீண் சொல்லாடல்? அவள் வந்து இந்த அவைநின்று சொல்லட்டும், மதுராவின் அரசனுக்கு மணமகளாக விழைகிறாள் என்று…” என்றான் சக்ரகீர்த்தி. “ஆம், அதுவே முறை” என்றார் தேவவாகர்.

சக்ரகீர்த்தி அவள் இருந்த அறைக்குள் வந்து “இளையோளே, அவைபுகுந்து உன் விழைவை சொல். நீ யாதவப்பெண். உன் விழைவை மறுக்க பன்னிரு  யாதவரும் ஒருங்கே எண்ணினாலும் இயலாது” என்றான். அவள் பெருமூச்சுடன் ஆடைதிருத்தி எழுந்தாள். அவன் அவள் அருகே வந்தபடி “முன்பு பிருதை இதேபோன்ற தருணத்தில் எடுத்த முடிவால்தான் அவள் குந்திபோஜருக்கு மகளானாள்” என்றான்.

யாதவமன்று நடுவே சென்றுநின்ற கணம் வரை அவள் எம்முடிவும் எடுக்கவில்லை. கம்சனைப்பற்றிய எண்ணமேகூட அப்போதுதான் எழுந்தது. உடனே உடல் அருவருப்புடன் உலுக்கிக்கொண்டது. குனிந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆழியைத் தொட்டு “நான் யாதவப்பெண். யாதவக்குலமன்றுக்கு முழுமையாக கட்டுப்பட்டவள். கம்சரை விலக்குகிறது இந்த அவையென்றால் அது என் கடமை” என்றாள். திரும்பி தந்தையரையும்  சூரசேனரையும்  அக்ரூரரையும் வணங்கிவிட்டு தமையனின் கண்களை நோக்கினாள். அதில் தெரிந்த திகைப்பைக் கடந்து அப்பால் சென்றாள். அவன் அவளை தொடர்ந்து வரவில்லை. அவள் மெல்ல தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்.

சிலநாட்களிலேயே கம்சன் மகதத்தின் ஜராசந்தனின் இரு குலமுறை மகள்களை மணந்துகொண்ட செய்தி வந்தது. மகதத்தின் முடிசூடி அமர்ந்த பிருஹத்ரதரின் மைந்தன் ஜராசந்தன் போரில் கணவனை இழந்த தன் முறைப்பெண்ணின் புதல்வியரை குலமுறைப்படி புதல்வியராக ஏற்றான். அவர்கள் சூத்திரக்குருதிகொண்டவர்கள் என்றாலும் ஜராசந்தன் பிராப்தியையும் ஆஸ்தியையும் மகதத்தின் முதன்மை இளவரசிகளாக அறிவித்தான். அரசமுறைமைப்படி நிகழ்ந்த மணம் கம்சனை மகதத்தின் மணவுறவுநாட்டின் அரசனென நிலைநிறுத்தியது.

அதன்பின் அவள் அவ்வெண்ணங்களை முழுமையாகவே தன் உள்ளத்திலிருந்து விலக்கிக்கொண்டாள். மீண்டும் இடைச்சியென்றாக முயன்றாள். பால்கறக்கவும் சாணியள்ளவும் கன்றுமேய்க்கவும் புல்லரியவும் சென்றாள். செயல்கள் மெல்ல உள்ளத்தை மாற்றும் விந்தையை உணர்ந்தாள். சிலநாட்களிலேயே அவையெல்லாம் பொய்க்கதையாய் பழையநினைவாய் மாறின. அவள் உலகில் அன்றைய ஆபுரத்தல் மட்டுமே எஞ்சியது. உடல் மீண்டும் உரம் கொண்டது. உள்ளம் அதில் செழித்து அமைந்தது.

தமகோஷரின் மண ஓலை அவள் தந்தையை வந்தடைந்த செய்தி அவளுக்கு எந்த எழுச்சியையும் உருவாக்கவில்லை. தேவவாகர் “அவன் அரசனே அல்ல. அவனிடமிருப்பவர்கள் நாநூறு படைவீரர்கள். அவன் வாழ்வது நூற்றியெட்டு வீடுகள் கொண்ட மண்கோட்டைக்குள். முடிகொண்டு ஆண்ட அரசனின் மைந்தன் என்பதற்கு அப்பால் அவனிடம் நாம் கருதுவதொன்றுமில்லை” என்றார். கதாதன்வர் “நாம் படையளிப்போம். நம் மூவரின் படைகள் சென்றால் சூக்திமதியை வெல்லமுடியும்… ஆனால் அவன் வாக்களிக்கவேண்டும், நம் குலமகள் அரசியாகவேண்டும்” என்றார்.

அரசி என்னும் சொல் அப்போது அவளுக்குள் முற்றிலும் பொருளிழந்திருந்தது. மணமாகிப்போனால் தன் கன்றுகளை பிரியவேண்டுமே என்னும் எண்ணமே எழுந்தது. அவளுடைய பசு ஆதிரை தன் முதல் கன்றை ஈனும் நிலையிலிருந்தது. அதைப்பற்றியன்றி அவள் எதையும் எண்ணவில்லை. ஓரிருநாட்களிலேயே அனைத்தும் முடிவாயின. சிறியதொரு குழுவுடன் வந்த தமகோஷர் அவளுக்கு மலராடை அளித்து கருகுமணி சூட்டி மாலையிட்டு மணமகளாக்கிக்கொண்டார். அவர் தன்னைவிட இருமடங்கு வயதானவர் என்பதை அவள் அந்த மலராடையை பெறும்போதுதான் பார்த்தாள். அப்போதிருந்த பதற்றத்தில் அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரே வாரத்தில் யாதவப்படை கிளர்ந்துசென்று சூக்திமதியை கைப்பற்றியது. தமகோஷர் அதன் அரசராக முடிகொண்டார். அவளை அழைத்துச்செல்ல சூக்திமதியிலிருந்து அகம்படிப்படையும் பல்லக்குகளும் வந்தன. ருதுவனத்தை நீங்கும்போது ஆதிரையின் உடல்நிலை குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். “அன்னையே, அவள் எப்படி இருக்கிறாள் என எனக்கு செய்தியறிவியுங்கள்” என்று சொன்னபோது “போடி, கன்றுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை போதும். இனி நீ அரசி” என்றாள் அன்னை. அவள் “அன்னையே, அவளைப்பற்றி சொல்லியனுப்புங்கள்… மறந்துவிடாதீர்கள்” என்று பல்லக்கிலேறி திரைமூடும் கணம் வரை சொல்லிக்கொண்டிருந்தாள்.

சூக்திமதியின் தெருக்களினூடாக பிடியானை மேல் அமர்ந்து கையில் மலர்நீர்க் குடத்துடன் சென்றுகொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அவள் வளர்ந்துகொண்டிருந்தாள். மிகத்தொலைவில் ஒரு சிறுபுள்ளியெனத் தெரிந்த பறவை சிறகும் அலகும் உகிரும் கொண்டு பெருகியணுகுவதுபோல. பிறகு பலநூறுமுறை அந்தப் பயணத்தை அவள் கணம் கணமாக நினைத்ததுண்டு. அன்று யானை எடுத்துவைத்த ஒவ்வொரு காலடியையும் அவளால் தன் உடலதிர்வாக அப்போது உணரமுடியும். சூழ்ந்தொலித்த வாழ்த்துக்களை, மங்கல இசையை, சிரிக்கும் முகங்களை சித்தத்திலிருந்து முடிவிலாது சுருளவிழ்த்து நீட்டிக்கொண்டே இருக்கமுடியும்.

அப்போது அவள் உள்ளத்தில் தமகோஷர் ஒரு கணமும் எழவில்லை. அன்னையோ தந்தையோ அவள் விட்டுவந்த ருதுவனமோ கிளம்பும் கணம் வரை பதைப்புடன் எண்ணிக்கொண்ட பசுவோ அவளுக்குள் இருக்கவில்லை. அவள் குந்தியையும் கம்சனையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தாள். அக்கூட்டத்தில் மின்னிய ஒரு முகம் குந்தியாகியது. நெஞ்சு அதிர விழி சலித்தபோது கம்சனை கண்டாள். பின்னர் மீண்டும் மீண்டும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரையும் நேரில் கண்டதேயில்லை என்னும் எண்ணம் பின்னர் எழ சிரித்துக்கொண்டாள்.

அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கியபோது அவள் நோக்கும் உடலசைவும் முழுமையாக மாறிவிட்டிருந்தன. சபரி துதிக்கையை மேலே சுழற்றித்தூக்க அதன் மீது காலெடுத்துவைத்து இறங்கி தரையில் நின்று அதன் சிறிய கொம்பைப் பற்றியபடி நடந்து அரண்மனைமுகப்பில் நின்ற அணிச்சேடியரை நோக்கி சென்றாள்.

மங்கல இசை அவளைச்சூழ்ந்து எழுந்தது. தமகோஷரின் தமக்கையான பார்வதி அவள் நெற்றியில் செம்மஞ்சள் குறியிட்டு அரிமலர்தூவி வாழ்த்தினாள். மஞ்சள்நீரில் காலாடி அவர்கள் அளித்த நிறைநாழியும் குத்துவிளக்கும் ஏந்தி அரண்மனைவாயிலைக் கடந்தபோது தனக்குப்பின்னால் சபரி மட்டுமே காதசைய நின்றிருப்பதாக உணர்ந்தாள். அது அகன்று பரவி இருட்டாகி இரவாகி நகரை மூடியது.

தொடர்புடைய பதிவுகள்

சாதிமல்லி பூக்கும் மலை

$
0
0

1

 

https://ecommerceherald.com/vanchesa-palan-ozhimuri/

அன்புள்ள ஜெ

ஒழிமுறி வந்தபோதே இந்த தலைப்புப்பாடலைக் கேட்டேன். அன்றும் இது ஒரு முக்கியமான பாட்டாகவே தோன்றியது. ஆனால் இன்றைக்குத் தனியாக இதைக்கேட்கும்போது ஒரு பெரிய நெகிழ்ச்சி ஏற்பட்டது.

குமரிமாவட்டத்தின் ஒரு multi cultural face இந்த பாடலில் அற்புதமாக வந்திருக்கிறது. முதலில் பழைய தமிழ்-மலையாள [அல்லது மலையாண்மை] மொழியில் ஒரு தோத்திரம். அது சேர் அரசனுக்குரியது. அடுத்தது நல்ல மலையாளத்தில் திருவிதாங்கூர் அரசனைப்புகழ்கிறது. அடுத்து நேரடியான அடித்தளத்தமிழ். அடுத்து கேரளத்தின் அடித்தளத்து நாட்ட்ப்புற மலையாளப்பாட்டு. அடுத்து மீண்டும் தமிழ்பாட்டு.

இப்போது உங்கள் இரண்டு மொழிகளும் மொழிகளுக்கு அப்பாலும் என்னும் கட்டுரையை வாசித்தபோது இந்தப்பாட்டு நினைவுக்கு வந்தது. ஒரு நல்ல எழுத்தாளன் எதையும் எழுதமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த ஒரு பாடல். ஒருபாடலுக்குள் எத்தனை பாடல்.

பாண்டிக்காத்தடிச்சா சாதிமல்லி புக்கும் மலை- ஆன வேளிமலைக்கு அந்தப்பக்கம் பூதப்பாண்டிதான் நமக்கும் சொந்த ஊர். அங்கே சாதிமல்லி பூத்துக்கொண்டே இருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறேன்

பகவத் அருணாச்சலம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

செவ்வியல்கலையும் நவீனக்கலையும்

$
0
0

SONY DSC

அன்புடன் ஆசிரியருக்கு

கலைக்கணம் வாசித்தேன்

 அந்த தெய்வக்கணம் எனக்கு  வாய்க்கவில்லையே என்ற ஆற்றாமையே முதலில்  எழுந்தது. உங்கள்  கண்கள்  வழியாக  நானும்  கதகளியை கர்ணனை குந்தியை கண்டு விட்டிருந்தேன்.

பிரித்துக்  கொட்டித் தேடினால்  என்னுள்  நம் மரபின்  கூறுகள்  எதுவும்  மிஞ்சவில்லை என்ற ஏக்கமே மேலிடுகிறது. பதின்ம  வயதிலேயே  நீங்கள்  நாட்டார்  ஆய்வுகளை  மேற்கொள்ளத் தொடங்கி விட்டீர்கள்.

அந்தக்  கண்ணீரின்  பெருமிதத்திற்கு பின்னிருப்பது கடும்  உழைப்பு. திரு. வேதசகாயகுமார்  அவர்கள்  காடு நாவலின்  முன்னுரையில்  உங்களுள் மரபின்  கூறுகள் சிறப்பாக  செயல்படுவதாகக் கூறியிருப்பார். அதைப்  புரிந்து  கொள்ளும்  அளவிற்கு  அறிவிருக்கிறது என அமைதி  கொள்கிறேன்.

 வெண்முரசு  வாசகனால் தன் குணத்திற்கும்  கற்பனைக்கும் ஏற்றவாறு தன்னுள்ளேயே கலையை நிகழ்த்திக் கொள்ளவும்  பொறுமையாக கவனித்து உணர்ந்து கொள்ளவும்  முடியும்  என நம்புகிறேன்.

இரண்டு  வாரங்களாக  பன்னிரு  படைக்களம் படிக்க  முடியவில்லை. இந்திர நீலத்திலிருந்தே (காண்டவம் கைவிடப்பட்டு  இந்திர நீலம் தொடங்கிய போது  தான் ஆறு நூல்களையும் படித்து  முடித்து  இணைந்து கொண்டேன்) இந்த “இருவார இடைவெளி” எப்படியோ ஒருமுறை  உருவாகி  விடுகிறது. அதை இரு நாட்களில்  சரி செய்து  விடுவேன்  என்றாலும்  இனி இதையும்  அனுமதிக்கப் போவதில்லை. கலைக்கணம் ஒரு காட்சியின்  வழியாக  ஒரு வாழ்க்கையைக்  கண்ட  உணர்வு.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சுரேஷ்

செவ்வியல் என்னும் அழகியலை ரசிக்க அதற்கென ஒரு தனிப்பயிற்சி தேவைப்படுகிறது. நம் மரபான கோயில்கலைகளில் பல செவ்வியல்கலைகள். அவற்றிலிருந்து நாம் அன்னியப்படும்போது செவ்வியலுக்குள் நுழையும் மனப்பயிற்சி அற்றவர்களாக ஆகிறோம். இது ஒரு பெரிய இழப்பு.

இன்று நமக்கு இயல்பாக அறிமுகமாவது நவீனப்படைப்புகளே. அவற்றின் அடிநாதம் யதார்த்தவாதம். அவற்றை நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி, நம் அன்றாட வாழ்க்கையின் நீட்சியாக வாசிக்கிறோம். அவற்றை நம் வாழ்க்கையால் விரிவாக்கம் செய்கிறோம். அவற்றைக்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையை விரிவாக்கம் செய்துகொள்கிறோம். யதார்த்தம் என்று நவீன இலக்கியம் சொல்வது அன்றாட யதார்த்தத்தைத்தான்

இதுதான் செவ்வியலுக்குள் செல்வதற்கான முதல்தடை. செவ்வியல் அன்றாட யதார்த்தத்தை மென்மையாக ரத்துசெய்கிறது. அதற்கான வழிமுறைகள் பல உண்டு. ஒன்று, அழகியல்வடிவங்களாக அனைத்தையும் ஆக்கிக்கொள்வது. இதை நாடகக்கலைச்சொல்லான ஒயிலாக்கம் என்பதால் சுட்டுகிறார்கள். கதகளியில் குந்தியும் கர்ணனும் சந்திப்பது இரு அழகிய பொம்மைகள் போன்ற வடிவங்களின் ஆடலாக ஆக்கப்பட்டுவிடுகிறது. அழகிய கைமுத்திரைகள் ஆடலசைவுகள் வழியாக மட்டுமே அது வெளிப்படமுடியும்.

இரண்டாவது, உச்சங்களை மட்டுமே கருத்தில்கொள்ளுதல். நவீன இலக்கியத்திற்குரிய அன்றாடத்தன்மை அதில் புறக்கணிக்கப்படுகிறது. குந்தியும் கர்ணனும் சந்திக்கும் அந்த உச்சத்தின் உணர்வுநிலைகள் மட்டுமே அதற்கு முக்கியம்.

மூன்றாவதாக, திரும்பத்திரும்பச் சொல்லுதல். நவீன இலக்கியத்தின் அடிப்படையான ‘புதுமை’ [நாவல்டி என்று ஐ ஏ ரிச்சர்ட்ஸ் சொல்லும் அம்சம்] முற்றாகத் தவிர்க்கப்படுகிறது. திரும்பத்திரும்பச் செய்தல் செவ்வியலின் முக்கியமான அம்சம். ஒவ்வொரு முறை நிகழும்போதும் உருவாகும் நுணுக்கமான மாறுதலும் வளர்ச்சியுமே அதன் இலக்கு. நுண்மையாக்கம் என இதை சொல்லலாம். ஒரே குந்தி கர்ணன் சந்திப்பை நூறுமுறை நிகழ்த்தியிருப்பார்கள் அக்கலைஞர்கள். ஒவ்வொரு முறையும் மிகநுணுக்கமான ஒன்று எழுந்து வருகிறது என்பதே அதன் அழகியல்

கடைசியாக தலைகீழாக்கம். இத்தனை அம்சங்களுடன் சட்டென்று ஒரு கேலிக்கூத்துத்தன்மையை, சர்வசாதாரணத்தன்மையை கலந்து சமன்செய்துகொள்வார்கள்.

செவ்வியல்கலை மட்டுமே அறிந்தவர்கள் ஒரு தலைமுறைக்கு முன் இருந்தனர். அவர்களுக்கு நவீனக்கலை அதிர்ச்சி ஊட்டியது. புதுமைப்பித்தனும் தல்ஸ்தோயும் அருவருப்பூட்டும் விஷயங்களைச் சொல்பவர்களாக தெரிந்தனர். இந்தத்தலைமுறையில் நாம் நவீனக்கலை மட்டுமே அறிந்து செவ்வியலுக்குள் நுழையமுடியாதவர்களாக இருக்கிறோம். அது ஒன்றையே சொல்வதாகவும், மிகைகளும் கேலிக்கூத்தும் மட்டும் கொண்டதாகவும் தோன்றுகிறது

நம் இழப்பு உண்மையில் மிகப்பெரியது. அதை நாம் உணர ஏதாவது வெள்ளைக்காரன் வந்து நம்மிடம் சொல்லவேண்டும்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55

$
0
0

[ 22 ]

சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. அவள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது?” என்றாள். “காலையில் ஏதோ எண்ணியதுபோல கிளம்பிச்சென்றிருக்கிறது. பத்தடி தொலைவில் சரிந்துவிழுந்திருக்கிறது. வயிற்றுக்குள் குடல்கள் நிலைபிறழ்ந்துவிட்டன. உயிர்பிழைப்பது அரிது என்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் தலையசைத்துவிட்டு நடந்தாள்.

சற்றுநேரத்திலேயே சபரியை முழுமையாக மறக்கமுடிந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தபோது உணர்ந்து வியந்தாள். அதன் ஒலி கேட்டுக்கொண்டிராததனால்தான் அது என்று எண்ணிக்கொண்டாள். அதைப்பற்றி கேட்கவேண்டுமென்று தோன்றினாலும் உடனே தவிர்த்தாள். காலையுணவுக்குப்பின் அவளுக்காக சூதப்பெண் ஒருத்தி யாழிசைக்க மஞ்சத்தில் படுத்தபடி அதை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உள்ளம் இசையில் படியவில்லை. எப்போதுமே அவள் இசையை செவிகொடுத்து கேட்டதில்லை. இளைப்பாறுதலுக்குரிய ஓர் ஒலி என்றே இசையை அறிந்திருந்தாள்.

விசிரையை வரச்சொல்லவேண்டுமென்று தோன்றியது. அவள் மாளிகை அரசமாளிகைத் தொகுதியிலிருந்து விலகியிருந்தது. அவளை எண்ணும்போதெல்லாம் அந்தத் தொலைவும் சேர்ந்தே எண்ணத்தில் எழுந்தது. சபரியை பார்ப்பதென்றால் விசிரையுடன் செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். பார்க்கப் போகாமலிருக்கமுடியாது. அவள் அதை பார்க்கவருவாள் என்று அங்கே அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள்.

தமகோஷர் அவளை பார்க்கவிழைவதாக சேடிவந்து சொன்னாள். “பேரரசர் வந்துகொண்டிருக்கிறார், பேரரசி” என்றாள். அவர் பெரும்பாலான நேரங்களில் சூக்திமதியில் இருப்பதில்லை. சூக்திமதியை வென்று முடிசூடி கொண்டாட்டங்கள் முடிந்தபின்னர் அந்நகரம் அவருக்கு ஒரு பொறுப்பு என்று பொருள் அளிக்கத் தொடங்கியது. அரசப்பணிகளுக்கு அப்பால் அங்கு அவர் ஆற்ற ஏதுமில்லையென்று உணர்ந்தார். களியாட்டும் ஓய்வும் கராளமதியில்தான் நிகழ்ந்தன. நாள் செல்லச்செல்ல அவர் பெரும்பாலான நாட்களில் கராளமதியிலேயே இருந்தார். சிசுபாலன் முடிசூட்டிக்கொண்டபின் அரிதாகவே தலைநகருக்கு வந்தார். கராளமதியில் அவரால் தன் இளமைக்குள் செல்ல முடிந்தது. அச்சமும் பதற்றமுமாக அரசிழந்திருந்த இளமைநாட்களின் துடிப்பையும் கனவையும் அங்கு மீட்டெடுத்தார்.

அவளறிந்த தமகோஷரின் முகம் கவலையும் நிலையின்மையும் கொண்டதாகவே இருந்தது. இளம்மனைவியாக அவள் அங்கே வந்தபோது அவர் நிலைகொள்ளாத அரசின் தலைவராக ஒவ்வொருநாளும் பதற்றம் கொண்டிருந்தார். யாதவர்களின் உதவியுடன் அவர் அரசை வென்றதை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் ஏற்கவில்லை. அவர்கள் படைதிரள்வதைத் தடுத்தது மகதத்துடன் அவர் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயம். மகதத்தின் புதிய அரசன் ஜராசந்தன் கம்சனுக்கு அணுக்கமானவனாக இருந்தான். கம்சனுக்கு யாதவர் மணம் மறுத்துத்தான் அவளை சேதிநாட்டுக்கு அரசியென்று அனுப்பியிருந்தனர்.

அந்த ஊடுபாவுகளில் ஒவ்வொரு கணமும் தமகோஷர் ஈடுபட்டிருந்தார். முதல் மந்தணஇரவில்கூட அவர் அரச ஓலைகளை கொண்டுவந்து இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்தார். “நீ துயில்கொள்க… நம் அரசுக்கு எதிராக வங்கமும் கலிங்கமும் படைகொண்டு எழக்கூடும் என்கிறார்கள். மாளவப்படைகள் முன்னரே கிளம்பி எல்லைவரை வந்துவிட்டன” என்றார். அவள் மஞ்சத்தில் சுருண்டு படுத்து நெய்யகலின் செவ்வொளியில் தெரிந்த அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். களைத்த விழிகளுக்குக் கீழே இருமடிப்புகளாக தசைவளையங்கள். உலர்ந்து சுருங்கிய கனிபோல கரியதடம். உதட்டைச்சுற்றி வெடிப்பு போல கன்னமடிப்பு. கண்கள் நீர்மைகொண்டிருந்தன. கராளமதியில் முடிவில்லாத காத்திருப்பில் தமகோஷரை ஆற்றுப்படுத்தியது மதுதான் என அவள் அறிந்திருந்தாள்.

ஏவலர் கதவைத்தட்டி புதியசெய்திகளை அளித்துக்கொண்டே இருந்தனர். அவள் எப்போதோ துயின்று அதில் கம்சனை கண்டாள். விழித்தபோது சாளரங்கள் ஒளிகொண்டிருந்தன. அருகே அவர் படுத்திருந்த சேக்கையின் குழி குளிர்ந்திருந்தது. அவள் எழுந்து நீராடி மகளிர்கோட்டத்திற்கு சென்றாள். மீண்டும் அவரை பதினெட்டு நாட்களுக்குப் பின்னர்தான் கண்டாள். அன்று அவர் அவளுடன் இருக்கையிலேயே பதற்றம் கொண்டிருந்தார். வாயிலிருந்து மட்டுமல்லாது வியர்வையிலும் யவனமதுவின் நாற்றம் எழுந்தது.

மூன்றுமாதங்களுக்குள் துலா நிகர்நிலைகொண்டது. தமகோஷர் அஸ்தினபுரியின் பாண்டுவிடம் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயத்தை உருவாக்கினார். அதை பயன்படுத்தி மகதத்துடன் படைக்கூட்டு செய்துகொண்டார். ஜராசந்தனுக்கு பரிசில்கள் அனுப்பி பரிசில்கள் பெற்றார். அவள் தமகோஷருடன் அரசமுறைப்பயணமாக ராஜகிருஹத்திற்கு சென்றாள். முதல்முறையாக ஜராசந்தனை அப்போதுதான் பார்த்தாள். அவனை யாரோ அரசிளங்குமரன் என்றே எண்ணினாள். மீசையற்ற மஞ்சள்நிற முகமும் கரிய நீள்குழலும் விரிந்த பெருந்தோள்களுமாக அவன் சிறுவனைப் போலிருந்தான்.

“சிறுவர் போலிருக்கிறார், இத்தனை இளையோன் என்று நான் எண்ணவேயில்லை” என்றாள். “ஏன், அவனுக்கு அரசியென்றாக விழைவு எழுகிறதா?” என்றார் தமகோஷர். “இதென்ன கேள்வி? அரசர்களின் சொற்கள் மூதாதையரால் எண்ணப்படுகின்றன” என்றாள். “பெண்களின் எண்ணங்களை பாதாளமூர்த்திகள் ஆள்கின்றன” என்றார் தமகோஷர். “இழிமகனைப்போல பேசவேண்டாம்” என்று அவள் சொன்னதும் கையை ஓங்கியபடி எழுந்து “இழிமகள் நீதான். கன்றோட்டி வாழ்ந்த சிறுகுடிப்பெண். உன் குலத்தில் பசு சூல்கொள்வதுபோல பெண்கள் கருவுறுகிறார்கள் என உலகே அறியும்” என்றார்.

அவள் புன்னகைத்து “அந்தக் குடியின் வாளால்தான் உங்கள் முடி அமைந்தது” என்றாள். “சீ! வாயை மூடு. சிறுமகளே” என்றபடி அவர் அவளை அடிக்க கையோங்கினார். “அடிக்கலாம்… உபரிசிரவசுவின் குருதியில் ஒரு களிமகன் பிறந்ததை அவர் கொடிவழிமூதாதையர் விண்ணிலிருந்து நோக்கட்டும்” என்றாள். அவர் மூச்சிரைக்க கை தாழ்த்தி “உன்னை மணந்தது என் வாழ்வின் வீழ்ச்சி. அவ்விழிசெயலுக்கு தண்டனையாக அத்தனை ஷத்ரிய அவையிலும் கூசி நிற்கிறேன். இதோ இந்த அரக்கமைந்தன் முன் முடிதாழ்த்துகிறேன்…” என்றார். “வாள்கொண்டு வெல்லாத முடியை சூடலாகாது. அது பாறையென எடைகொள்ளும். கழுத்தெலும்பை முறிக்கும்” என்றாள் சுருதகீர்த்தி.

அவளை வெல்வதற்காக அவர் உள்ளம் பரபரத்தது. கிடைத்த நுனியைப்பற்றி உவகைகொண்டு எழுந்தது. “உன் உள்ளமுறையும் கரவுருவோனும் வருகிறான்… மகதத்தின் சிற்றரசனாக எனக்குப்பின்னால் அவையமர்கிறான்” என்றார். “இல்லை, மதுராவின் கம்சரின் பீடம் முன்னிரையில்தான். அவர் மகதத்தின் மணமுறையரசர்” என்றாள் சுருதகீர்த்தி.

ஒருகணம் பதைத்து என்ன செய்வதென்றறியாமல் திகைத்தபின் “முறையிலி, ஒருநாள் உன் கழுத்தில் வாள்பாய்ச்சுவேன். அன்றுதான் முழு ஆண்மகனாவேன்” என்றார். “ஆம்” என்று அவள் மெல்லிய புன்னகையுடன் அவர் விழிகளை நோக்கி சொல்ல உளம் நடுங்கி கைகள் பதற வெளியே செல்ல முயன்றவர் கைகால்கள் இழுத்துக்கொள்ள வலிப்பு வந்து பின்னால் சரிந்து மரத்தரையில் ஓசையுடன் விழுந்தார். அவர் உடல் அதிர வலிப்புகொண்டு கிடப்பதை அவள் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவர் நெற்றிமடிப்பில் ஒரு ஆழ்ந்த குழி விழுந்தது. கைகால்கள் உடலில் இருந்து விலகியவை போல திசையழிந்து அசைந்தன. ஏவலர் உள்ளே வந்து அவரை நோக்கி குனிந்து மெல்ல தலையைத்தூக்கி வாய்க்கோழை புரைக்கேறாமல் வெளியே வழியும்படி செய்தனர். அவரது விழிகள் செருகி உள்ளே சென்றன. களைத்த கைகள் இருபக்கமும் சரிய விரல்கள் இல்லையென விரிந்தன. முழுமையாக தோல்வி கண்டவரைப்போல.

முதல்முறையாக அன்று அவள்முன் வலிப்பு வந்தபின் அவர் அவளை தவிர்க்கத் தொடங்கினார். எப்போதாவது மகளிர்கோட்டத்திற்கு வரும்போதும் மூக்குவழியக் குடித்து ஏவலரால் தாங்கப்பட்டு வந்தார். அவளுடன் விலங்கென உறவுகொண்டார். அவளை அறைந்து வீழ்த்தி புணர்ந்து விலகியபின் “நீ இழிமகள்… உன் உள்ளத்தில் உறைபவனை அறிவேன்” என்று குழறிக்கொண்டிருப்பார். அவரது வன்முறைக்கு அப்போதுதான் அவளால் நிகரீடு செய்யமுடியும். புன்னகையுடன் ஒருசொல்லும் பேசாமல் படுத்திருப்பாள்.

“பேசு… இழிமகளே!” என்று அவர் அவளை அறைவார். “என்ன எண்ணுகிறாய்? எதற்காக சிரிக்கிறாய்? கீழ்பிறவியே!” என்று அவளை உதைப்பார். ஆனால் அவர் உடல் நான்குபக்கமும் முடிச்சவிழ்ந்து சரியும். அவரது அடிகளில் பெரும்பகுதி சேக்கைமேல்தான் விழும். மெல்ல தளர்ந்து “தெய்வங்களே! மூதாதையரே! இழிமகன் ஆனேன்! இழிவுசூடினேன்!” என்று அவர் அழத்தொடங்குவார். விம்மி அழுது மெல்ல ஓய்வார். ஒருமுறை அவ்வழுகையின் உச்சத்தில் அவருக்கு வலிப்பு வந்தது. அவள் அருகே படுத்தபடி அவ்வுடலை நோக்கிக்கொண்டிருந்தாள். நான்கு பக்கமும் கண்ணுக்குத்தெரியாத கந்தர்வர்கள் சூழ்ந்து அதை ஓங்கி ஓங்கி மிதிப்பதுபோலிருந்தது.

கம்சன் கொல்லப்பட்ட செய்தியை அவர்தான் அவளிடம் வந்து சொன்னார். அது பறவைத்தூதாக வந்ததுமே அவர் மகளிர்கோட்டத்திற்கு வந்தார். அவள் இசைகேட்டு அரைத்துயிலில் இருந்தாள். அரசர் வருவதை செவிலி அறிவிப்பதற்குள் அவர் உள்ளே வந்தார். “அரசச்செய்தி, உன்னிடம் அறிவித்தாகவேண்டும்” என்றார். அவள் எழுந்து புருவம் சுருக்கி நோக்க “இன்று உச்சிப்பொழுதில் மதுவனத்தின் யாதவ இளையோர் இருவரும் தங்கள் தாய்மாமனாகிய கம்சனை மற்போரில் கொன்றனர்” என்றார். அவள் அவரது உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

“யாதவர்களில் அது தந்தைக்கொலைக்கு நிகரானது. குங்குரர்களும் போஜர்களும் அந்தகர்களும் சினம் கொண்டிருக்கிறார்கள். இளையோர் மதுராவை கைப்பற்றி மதுவனத்தின் கொடியை கோட்டைமேல் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். விருஷ்ணிகள் அதை கொண்டாடுகிறார்கள். விருஷ்ணிகளும் பிறரும் போரிலிறங்கக்கூடும் என்று செய்தி வந்தது.” அவள் ஒரு பெருமூச்சில் தன்னுள் நிறைந்த அனைத்தையும் ஊதி வெளியே விட்டாள். ஏன் தன் உள்ளம் கொந்தளிக்கவில்லை, ஏன் சினமோ துயரோ எழவில்லை என்று வியந்துகொண்டாள்.

“நெஞ்சைப்பிளந்து குருதியாடியிருக்கிறார்கள்… அதிலும் யாதவ இளையோனை கார்த்தவீரியனுக்கு நிகரான கருணையின்மை கொண்டவன் என்கிறார்கள்.” அவள் முற்றிலும் தொடர்பில்லாமல் “நான் கருவுற்றிருக்கிறேன்” என்றாள். “என்ன?” என்றார் அவர் புரியாமல். “நான் கருவுற்றிருக்கிறேன். மருத்துவச்சி அது சேதியின் இளவரசன் என்கிறாள்” என்றாள். அவர் வாய் திறந்திருக்க அவளை அலையும் விழியிணைகளுடன் நோக்கினார். “நன்று” என்றார். “முறைமைச் சடங்குகளுக்கான அரசாணைகளை பிறப்பிக்கவேண்டும். நான் மருத்துவச்சியிடம் ஆணையிட்டிருக்கிறேன். அவள் நிஸ்ஸீமரிடம் சொல்வாள்” என்றாள்.

அன்று மாலையே திருமுகமறைவோர் சபரியின் மேலேறி இரட்டைமுரசை முழக்கி அவள் கருவுற்றிருக்கும் செய்தியை சூக்திமதிக்கு அறிவித்தனர். “உபரிசிரவசுவின் கொடிவழியில் ஒரு இன்மலர். சேதிக்கு ஓர் இளவரசர். தமகோஷ மாமன்னரின் அரியணைக்கு உரியோர். பாரதவர்ஷத்தின் பெருவீரர்!” என அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் இருளசைவாகத் தெரிந்த சபரியின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

தமகோஷர் களைத்த நடையுடன் வந்து அவருக்கான மந்தண அறைக்குள் செல்வதைக் கண்டபின்னரே அவள் எழுந்து அவ்வறைக்குள் சென்றாள். அவர் மஞ்சத்தில் அமர்ந்து மார்பின்மேல் கைகளை கட்டிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்து கதவை சாத்தியதும் “உன் மைந்தனை சந்தித்தாயா?” என்றார். “ஆம்” என்றபடி அவள் அருகே அமர்ந்தாள். “இப்போது அவன் மறுஎல்லைக்கு சென்றுவிட்டான். ராஜசூயவேள்விக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நாட்கணக்காக நிகழ்கின்றன. கருவூலத்தையே கொண்டுசென்று அங்கே கவிழ்த்துவிட்டு மீள்வான் என அஞ்சுகிறேன்” என்றார்.

அவள் புன்னகை செய்தாள். “அவனைப்பற்றி பேசவே உன்னிடம் வந்தேன்” என்றார். “அவன் இருக்கும் நிலையை நீ அறியமாட்டாய். அந்நிலையிலிருந்து நான் மீண்டு கடந்து முதுமையை வந்தடைந்தேன்…” அவள் “அவன் உடல்நிலை உங்களைப் போன்றதே” என்றாள். “அது மட்டும் அல்ல…” என அவர் தடுமாறினார். “எந்தப் பெண்ணிடமும் உறவு சீரமையவில்லை” என்றார். அவள் புன்னகை புரிந்தாள். “எனென்றால் அவன் உடல் முழுமையாக இறுக்கி நரம்புகளால் கட்டப்பட்டிருக்கவில்லை… அவன்…” என்றபின் அவள் கையை எட்டி தொட்டு “நான் அஞ்சுகிறேன் சுருதை…” என்றார்.

“அவன் பாரதவர்ஷத்தின் மாவீரன்” என்றாள். “ஆம், ஆனால் அவன் வெற்றியை நோக்கி செல்லவில்லை. பலிபீடத்தை தேடிக்கொண்டிருக்கிறான். மண்டையை கற்பாறையில் முட்டி உடைத்து உதிரும் வரையாட்டின் வெறிகொண்டிருக்கிறான்.” அவள் “உங்கள் உளமயக்கு அது” என்றாள். “இருக்கலாம். நீ அவனிடம் பேசு. அவன் எல்லைகளைப்பற்றி சொல்.” அவள் முகம் இறுகியது. “எல்லை என்றால்?” என்றாள். “சுருதை, அவன் மாவீரன். ஆனால் இளைய யாதவனுக்கு எவ்வகையிலும் நிகரானவனல்ல.”

“அது உங்கள் எண்ணம்” என்று சுருதகீர்த்தி பற்களைக் கடித்தபடி சொன்னாள். “அவர்களிருவரும் ஒரே துலாவின் இருதட்டுகள். முள் எங்கு நிற்கவேண்டுமென ஊழ் முடிவுசெய்யட்டும்.” அவர் சலிப்புடன் “நான் பலமுறை உன்னிடம் சொன்னது இது. இளமைமுதலே அவன் உள்ளத்தில் இளைய யாதவன்மேல் காழ்ப்பை உருவாக்கிவிட்டாய். அவன் வாழ்க்கையையே அவ்வாறாக நீ வடித்தாய்” என்றார். சுருதகீர்த்தி “ஆம், ஆகவேதான் அவன் பாரதவர்ஷத்தின் முதன்மை வீரர்களில் ஒருவனானான். வீழ்ந்தாலும் அவ்வாறே எண்ணப்படுவான்” என்றாள்.

“சூதர் பாடுவதென்ன என்றறிவாயா?” என்றார் தமகோஷர். “உன் கோரிக்கைக்கு ஏற்ப இளைய யாதவன் உன் மைந்தனின் நூறுபிழைகளை பொறுத்தருள்வதாக வாக்களித்திருக்கிறானாம். ஒன்றுகுறைய நூறுபிழை ஆகிவிட்டது என்கிறார்கள்.” அவள் புன்னகைத்து “அந்த ஒன்று என்ன என்கிறார்கள்?” என்றாள். “சிரிப்பதற்குரியதல்ல இது. அப்பாடலைக் கேட்டபோது என் உள்ளம் நடுங்கிவிட்டது. எங்கோ என் அகம் அது உண்மை என்று சொன்னது.” அவர் மீண்டும் அவள் கையைப்பற்றி “அவன் சென்றுகொண்டிருப்பது அந்த நூறாவது பிழையை நோக்கித்தான்…” என்றார்.

“நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். “அவன் ராஜசூயவேள்விக்கு செல்லவேண்டியதில்லை… நீ ஆணையிட்டால் மட்டுமே அவன் அதை கேட்பான். அவன் இளைய யாதவனை நேர்கொள்ளலாகாது.” அவள் “உங்கள் வீண் அச்சத்திற்காக…” என்று சொல்லப்போக அவர் தடுத்து “ஆம், வீண் அச்சம்தான். அப்படியே கொள். ஆனால் அதன்பொருட்டு நீயும் உன் மகனும் என்மேல் இரக்கம் கொள்ளலாம். முதிய வயதில் மைந்தர்துயர் போல பெருங்கொடுமை பிறிதில்லை. அதை எனக்கு அளிக்கவேண்டாமென அவனிடம் சொல்… நான் உன்னிடம் கோரும் ஒரே வேண்டுகோள்” என்றார்.

அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். “சொல்” என்றார் தமகோஷர் “ஆம், சொல்கிறேன்” என்றாள். “எனக்கு ஆணையிட்டு உறுதிகொடு” என்றார். “ஆணையிடமாட்டேன். என் அன்னைதெய்வங்களின் விழைவுப்படியே என் நா எழும்” என்று அவள் சொன்னாள். அவர் பெருமூச்சுடன் தளர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர். பின்னர் அவர் எழுந்து “நான் செல்கிறேன்… அங்கே அவை எனக்காக காத்திருக்கிறது” என்றார். அவளும் எழுந்தாள்.

வெளியே சபரியின் பிளிறல் கேட்டது. “அன்னைக்களிறு… அது இன்றிரவு விண்புகும் என்று மருத்துவர் சொன்னார்கள்” என்றார் தமகோஷர். அவள் “ஆம்” என்றாள்.

 

[ 23 ]

அந்தியில் அவள் அழைப்பை ஏற்று சிசுபாலன் அவளைப்பார்க்க மகளிர்கோட்டத்திற்கு வந்தான். அவள் தன் மஞ்சத்தறைக்குள் இருந்தாள். உச்சியுணவுக்குப்பின் அவளுக்கு கடும் உளச்சோர்வும் தலைவலியும் ஏற்பட்டிருந்தது. மருத்துவச்சியர் அளித்த மலைப்புல் தைலத்தை தேய்த்துக்கொண்டு படுத்திருந்தாள். வெளியே திறந்த சாளரம் வழியாக குளிர்ந்த ஒளி உள்ளே வந்து அலையடித்தது. சிசுபாலன் வாயிலில் வந்து வணங்கி “அன்னையே, நலம் அல்லவா?” என்றான். “வருக!” என்றாள். அவன் வந்து அவளருகே பீடத்தில் அமர்ந்தான்.

அவன் உடல்நிலை தேறியிருந்தான். தாடியும் தலைமுடியும் நீண்டு வளர்ந்திருந்தபோதிலும் கரியபளபளப்புடன் நெய்பூசப்பட்டு சீவி முடிச்சிட்டு கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் செம்மணி ஆரம் அணிந்து பட்டாலான இடைக்கச்சை கட்டியிருந்தான். அதில் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிடியும் சிப்பியாலான உறையும்கொண்ட குத்துவாள் இருந்தது. முகம் தெளிந்து கண்களில் சிரிப்பு கொண்டிருந்தான். “நீ உளம் தேறியிருப்பதை கண்டு மகிழ்கிறேன்” என்றாள். “ஆம், இப்போது என்னிடம் அல்லல்கள் ஏதுமில்லை” என்றான்.

“இளையவளை பார்த்தாயா?” என்றாள். “இல்லை, அதனால்தான் அல்லல்கள் இல்லையோ என்னவோ” என்றான். அவள் புன்னகைத்து “அவள் உள்ளத்தை புரிந்துகொள்… அவள் அஞ்சுவதும் முறையானதே” என்றாள். “ராஜசூயத்திற்கு கிளம்புவதற்குமுன்னர் அவள் மைந்தனை முறைப்படி பட்டத்திளவரசனாக சேதியின் எண்வகைக் குடிகளின் தலைவர்களுக்கும் அறிவித்து ஓலையளிப்பதாக ஒப்புக்கொண்டேன். ஓலைகள் நாளைக்கே சென்றுவிடும். விடைபெறும்போது புன்னகைப்பாள் என நினைக்கிறேன்” என்றான்.

“நீ ராஜசூயத்திற்கு செல்லக்கூடாதென்று ஆணைபெறும்படி உன் தந்தை என்னிடம் கோரினார்” என்றாள். “என்னிடம் முதலில் அதை சொன்னார். நான் மறுத்துவிட்டேன்” என்றான். “சூதர்கதை எதையோ கேட்டு நிலையழிந்திருக்கிறார்.” அவன் சிரித்து “துவாரகையின் யாதவன் என் நூறுபிழை பொறுப்பதாக வாக்களித்திருக்கிறான் என்னும் கதை அல்லவா?” என்றான். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “அதை அவன் அனுப்பிய சூதர்களே பாடியிருக்கலாம். அன்னையே, பாரதவர்ஷத்தை சூதர்கதைகள் வழியாக வெல்லமுடியுமென்றால் அவன் ஏழுமுறை வென்றுவிட்டான்” என்றான்.

“ஆனால் அது உண்மை” என்று அவள் சொன்னாள். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் சிரிப்பு மாறாமலேயே கேட்டான். “அவன் கம்சரைக் கொன்ற அன்று காலைதான் மருத்துவச்சி நான் கருவுற்றிருப்பதை சொன்னாள். அச்செய்தியை அவள் சொன்னபோது நான் உவகைகொள்ளவில்லை. ஏதோ வரவிருப்பதான பதைப்பை அடைந்தேன். உள்ளம் ஓய்ந்தே கிடந்தது. உன் தந்தை வந்து கம்சர் கொலையுண்டதை சொன்னார். அதுவும் என்னை நிலையழிய வைக்கவில்லை. ஆனால் இருசெய்திகளும் ஒரு துலாவின் இருமுனைகளையும் நிகர்செய்வதாக ஓர் எண்ணம் எழுந்தது.”

“அன்று இரவு நான் துயிலவில்லை. தாளாவலிகொண்டவள் போல படுத்துப்புரண்டும் எழுந்து இருள்நோக்கி நின்றும் மீண்டும் படுத்தும் கங்குல்பெருக்கை நீந்திக்கடந்தேன். அன்றும் இன்றுபோல சபரியின் பிளிறல் எழுந்துகொண்டிருந்தது. இன்றைய பட்டத்துயானை காரகனை அவள் கருவுற்றிருந்த நாள் அது. இரவெல்லாம் அலறிக்கொண்டிருந்து காலையில் அவள் அவனை பெற்றாள். நம் நாட்டின் பெருங்கொம்பர்களில் அவனே தலையாயவன். அன்னை உடல்கிழித்தே பிறந்தான். பேரெடை கொண்டிருந்தான். அவன் விழுந்த ஓசையை அன்று விடியலில் இங்கிருந்தே கேட்டேன். அன்னையின் குருதி நின்று அவள் உணவு கொள்ள ஏழுநாட்களாயின.”

“உன் கருநாட்களில் கனவுகளால் சூழப்பட்டிருந்தேன். இன்று எக்கனவையும் என்னால் எண்ணமுடியவில்லை. இருளுக்குள் அலைந்துகொண்டிருப்பதைப்போல. சில சமயம் சில முகங்கள் மின்னி அணையும். மகதத்தில் முதல்முறையாகக் கண்ட கம்சரின் முகம். ஓவியத்தில் கண்ட இளைய யாதவனின் முகம். ஒவ்வொருமுறையும் கடும் சினத்துடன் விழித்துக்கொள்வேன். சினம் எவரிடம் என்று நான் அறிந்திருக்கவில்லை. எண்ணி எண்ணி நோக்கியும் ஏதும் புலப்படவில்லை. ஆனால் உச்சகட்ட சினத்தில் உடல்நடுங்கிக்கொண்டிருக்க எழுந்தமர்ந்து என்னை உணர்கையில் கைகள் இறுகி சுருண்டிருக்கும். பற்கள் கடிபட்டு அரையும் ஒலி எழும். முகம் இழுபட்டு வலிப்புகொண்டிருக்கும்…”

“அந்நாளில் எனக்கு வந்த கனவுகளில் இன்றும் நினைவிலிருப்பது ஒன்றே. இன்றும் அவ்வப்போது அக்கனவு மீள்வதுண்டு. ஒரு மென்மணல் பரப்பை நான் கையால் அள்ளி அள்ளி அகற்றுகிறேன். ஒரு கை கிடைக்கிறது. உயிருடன் அசையும் விரல்களுடன் வெம்மைகொண்ட குழவிக்கை. மீண்டும் அள்ளும்போது இன்னொரு கை. நான்கு கைகள். அவற்றை எடுத்து அருகே வைத்தபின் உன் உடலை காண்பேன். நெற்றியில் ஆழ்ந்த ஒற்றைவிழி திறந்து என்னை நோக்கிக்கொண்டிருப்பாய். பிற இரு விழிகளும் வெறும் தசைக்குழிகள்.”

“உன்னை அகழ்ந்தெடுப்பேன். உன் கால்கள் தனியாக அடியில் கிடக்கும்… அவற்றை உன் உடலுடன் பொருத்தி வைப்பேன். உன்னை என் கைகளால் தடவித்தடவி உலுக்குவேன். மைந்தா மைந்தா என்று அழைப்பேன். உன் உடல் நான்குபக்கமும் குழைந்து சரியும். நான் அலறியழுதுகொண்டே இருப்பேன். என் மேல் நிழல் விழும். நிமிர்ந்து நோக்கினால் நான்கு கைகளும் நுதல்விழியுமாக ஒரு தெய்வம் நின்றிருக்கும். அதை நான் அறிவேன். கருமுழுமைகொள்ளாது பிறக்கும் குழவிகளைக் காக்கும் தெய்வம் அது. சிசுபாலன் என்று அதை சொல்வார்கள்.”

“ருதுவனத்திற்கு அருகே உள்ள சப்தமம் என்னும் காட்டுக்குள் ஒரு கரும்பாறையில் புடைப்புச்சிற்பமாக அது செதுக்கப்பட்டிருக்கும். கருவிளையாத குழவியரை அங்கே கொண்டுசென்று தைலக்கிண்ணத்திலிட்டு உயிர்மீட்க முயல்வார்கள். உயிரிழந்தால் வாளால் நெடுகப்போழ்ந்து அத்தெய்வத்தின் காலடியிலேயே புதைத்துவிட்டு மீள்வார்கள்” என்றாள் சுருதகீர்த்தி. “முதல்கனவில் அத்தெய்வத்தைக் கண்டு நான் என் மூதாதையே, என் மைந்தனை எனக்களி என்று கூவினேன். தன்னைத் தொடரும்படி கைகாட்டிவிட்டு அவன் நடக்க நான் உன்னை கையிலேந்தியபடி உடன் சென்றேன். நீ நீர்நிறைந்த வடிவற்ற தோல்பை போல என் கையில் ததும்பினாய். புதர்களில் கால்கள் சிக்க தள்ளாடியபடி சென்றேன். காட்டுக்குள் செறிந்த இருளுக்குள் அவன் நுழைந்தான்.”

“அதன்பின் அவனை நான் கேட்கவில்லை. ஒரு குரல் மட்டும் என்னை வழிநடத்தியது. இவ்வழி இவ்வழியேதான் என அது என் காதருகே சொன்னது. செவிகூர்ந்தால் மிகத்தொலைவில் ஒலித்தது. இருளுக்குள் அப்பால் ஓர் வெள்ளி ஒளியை கண்டேன். அது ஒரு படையாழி. நான் அணுகியபோது அக்குரல் இங்கே இதுவரையில் என்றது. நான் விழித்துக்கொண்டேன்” என்று சுருதகீர்த்தி சொன்னாள். “நிமித்திகரிடம் கனவைப்பற்றி கேட்டேன். குழவி குறைமாதத்தில் பிறக்கக்கூடும் என்றார். ஆனால் தெய்வம் கனவில் வந்தமையால் நீ பிழைத்தெழுவாய் என்றும் சொன்னார்.”

“பிழைத்தெழுந்தால் உனக்கு சிசுபாலன் என்றே பெயரிடுவதாக வேண்டிக்கொண்டேன்” என்றாள் சுருதகீர்த்தி. “எண்ணியதுபோலவே நீ ஏழாம் மாதத்தில் பிறந்தாய். உன் உடல் என் கருவில் உருவாகிய சித்தத்தால் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. வலியே இல்லாமல் மிக எளிய ஓர் எண்ணம் போல வெளிப்பட்டுவிட்டாய். உன் உடல் பலபகுதிகளாக சிதறி தன் கைக்கு வந்ததாக வயற்றாட்டி சொன்னாள். உனக்கு மூன்று விழிகளும் நான்கு கைகளும் இருந்ததாக அவளுக்கு தோன்றியது. அலறியபடி உன்னை கீழே போடப்போனாள். செவிலி உன்னை பிடித்துக்கொண்டாள். வயற்றாட்டி வலிப்பு கொண்டவள்போல விழுந்துவிட்டாள். அவள் அந்த உளமழிவிலிருந்து மீளவேயில்லை.”

“உன் நெற்றியில் ஆழமான வடுபோல குழி ஒன்றிருந்தது. ஒரு வெட்டுப்புண் போல. தசை மடிப்பு போல. பார்வையற்ற விழி என. பிறந்த அன்று செவிலியின் கையிலிருந்தபோதே உனக்கு மூன்றுமுறை வலிப்பு வந்தது. கைகால்கள் அதிர கரைவந்த மீன்போல நீ வாய் குவித்து காற்றை உண்டு விக்கிக்கொண்டிருப்பதை கண்டபோது என் உடலில் இருந்து உதிர்ந்த புழு என்றே எண்ணினேன். அருவருப்புடன் விழிகளை விலக்கிக்கொண்டேன். நீ உயிர்வாழ வாய்ப்பே இல்லை என்றனர் மருத்துவர். ஆனால் முலைச்சேடியரின் பாலை நீ உண்ணும் விரைவை வைத்து நீ வாழ்வாய் என கணித்தனர் முதுசெவிலியர்.”

“நீ வளர்ந்தாய். ஆனால் வலிப்புநோய் எப்போதுமிருந்தது. உன் உடல் ஓராண்டுகாலம் வரை ஒருங்கிணையவே இல்லை. எதிரெதிர் திசைகளில் அமைத்து சேர்த்துக் கட்டி நிலத்திலிட்ட இரு தேள்களைப்போல நீ தோன்றினாய் என்று ஒரு செவிலி ஒருமுறை சொன்னாள். நீ எழுந்து நடப்பாய் என்றே நான் எண்ணவில்லை. உன் அழுகையொலியே மானுடக்குழவிக்குரியதாக இருக்கவில்லை. அது கழுதையின் ஒலி என இங்கே செவிலியர் நடுவே பேச்சு இருந்தது. பின்னர் அதை சூதர்கள் பாடலாயினர்.”

“குழவியென உன்னை நான் தொட்டதே இல்லை. உன்னை காணவும் அஞ்சினேன். உன் நினைவை அழிக்கவே முனைந்தேன். ஆனால் ஒவ்வொருகணமும் உன்னையே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சுருதகீர்த்தி. “நீ இறந்தால் நான் விடுதலை பெறுவேன் என எண்ணினேன். அதற்கென தெய்வங்களை வேண்டினேன்.” சிசுபாலன் புன்னகைத்து “இவையனைத்தையும் முன்னரும் பலமுறை சொல்லிவிட்டீர்கள், அன்னையே” என்றான். “உங்கள் ஆழத்தில் உறையும் இருளொன்றின் சான்று நான்.”

அவள் விழிதூக்கி நோக்கி “ஆம்” என்றாள். பின்னர் “நீ ஒருங்கிணைந்தது உன் மாமனின் மடியமர்ந்தபோதுதான்” என்றாள். சிசுபாலன் “கதைகளை கேட்டுள்ளேன்” என்றான். “முதல்முறையாக இளைய யாதவனும் மூத்தவனும் சேதிநாட்டுக்கு வந்தது உன் ஓராண்டு நிறைவுநாளன்று. நாம் மகதத்தின் நட்புநாடானபோதே எனக்கும் என் குலத்திற்குமான உறவு முறிந்தது. யாதவர் அஸ்தினபுரிக்கு அணுக்கமாக ஆனபின்னர் அவர்கள் சேதிக்கு எதிரிகளென்றே ஆனார்கள். ஆனால் எந்தப் பகைக்கும் நடுவே குறுகிய நட்புக்காலங்கள் உண்டு. அத்தகைய காலத்தில் உன் முதல் ஆண்டுமங்கலம் வந்தது.”

“விழவு முழுக்க நீ தொட்டிலில்தான் கிடந்தாய். உன் உடலசைவைக்கொண்டு உன்னை தேள் என்றே சொன்னார்கள் அனைவரும். விருச்சிகன் என்று உன் தந்தையே உன்னை அழைத்தார். சிசுபாலன் என்று அழைத்தவள் நான் மட்டுமே. விழவில் உன் மேல் அரிமலரிட்டு வாழ்த்தியவர் அனைவருக்குள்ளும் எழுந்த இளிவரல் நகைப்பை நான் என் உள்ளத்தால் கேட்டுக்கொண்டிருந்தேன். எவரும் உன்னை குனிந்து தூக்கவில்லை. இளைய யாதவன் உன்னை கையிலெடுத்து தன் மடியில் வைத்தான். மைய முடிச்சு சரியாக கட்டப்படாத கூடைபோலிருக்கிறான் என்றான். அவையோர் நகைத்தனர்.”

“அவன் உன் கழுத்துக்குப்பின் ஏதோ எலும்புமுடிச்சை தன் சுட்டுவிரலால் ஓங்கி சுண்டினான். உன் உடல் துள்ளி அதிர்ந்து வலிப்புகொண்டது. உன் கைகளையும் கால்களையும் அவ்வலிப்பின்போதே பிடித்து அழுத்தி சேர்த்துவைத்தான். என்ன செய்கிறாய் இளையோனே என உன் தந்தை பதறினார். முடிச்சிடுகிறேன் என்று சிரித்தான். நான் அவனையே நோக்கிக்கொண்டிருந்தேன். உன்னை மீண்டும் அவன் தொட்டிலில் படுக்கவைத்தபோதே தெரிந்துவிட்டது, உன் நரம்புகள் சீராகிவிட்டன என்று. ஏழுமாதங்களில் நீ எழுந்து நடந்தாய்.”

“பதறும் நரம்புகள் கொண்டவன் என்று சிரித்தபடியே சொல்லி உன்னை படுக்கவைத்தான். தன் உடலைச் சுண்டி தெறித்துச்செல்லும் புல்புழு போன்றவன், அவ்விசையாலேயே மாவீரனாவான் என்று அவன் சொன்னபோது நான் சிரித்தபடி யாதவனே, இவன் யாதவர்களின் எதிரிநாட்டரசனாகப் போகிறவன். நாளை அவன் உனக்கு எதிர்வந்து நின்றால் என்ன செய்வாய் என்றேன். இந்த முடிச்சு நான் போட்டதென்பதனால் இவனை பொறுத்தருள்வேன் அத்தை என்றான். எத்தனை முறை பொறுப்பாய் என்றேன். நூறுமுறை பொறுப்பேன், போதுமா என்றான். மூத்த யாதவன் உரக்க நகைத்து பாவம், நூறு பிழை செய்ய இவன் மொத்த வாழ்க்கையையே செலவிடவேண்டுமே என்றான். அவையே சிரித்துக்குலுங்கியது அன்று.”

சிசுபாலன் அவளை நோக்கியபடி அமைதியாக அமர்ந்திருந்தான். “நீ வளர்ந்தபோது உன்னிடம் ஒருமுறை சொன்னேன், நீ இளைய யாதவனால் அமைக்கப்பட்ட உடல்கொண்டவன் என்று.” அவன் “ஆம்” என்றான். “பிறகு ஒருபோதும் நான் அவனைப்பற்றி உன்னிடம் பேசவில்லை” என்றாள் சுருதகீர்த்தி. சிசுபாலன் தலையசைத்தான். இருவரும் சொல்முடிந்த வெறுமையில் சற்றுநேரம் அமர்ந்திருந்தனர். வெளியே பறவைகளின் ஓசை கேட்டது. மிக அப்பாலென சபரியின் உறுமல் ஒலித்தது.

சிசுபாலன் “அன்னையே, அவ்வாறென்றால் ஏன் இளைய யாதவன் மேல் தீரா வஞ்சத்தை என்னுள் வளர்த்தீர்கள்?” என்றான். அவள் அவனை புரியாதவள் போல நோக்க உதடுகள் மட்டும் மெல்ல பிரிந்தன. “நீங்கள் ஊட்டிய நஞ்சு அது. என்னுள் இக்கணம் வரை அதுவே நொதிக்கிறது. சொல்க, அவ்வஞ்சத்தின் ஊற்றுக்கண் எது?” அவள் பெருமூச்சுவிட்டு “அறியேன்” என்றாள். பின்பு “ஒருவேளை இம்மண்ணில் வைத்து அதை புரிந்துகொள்ளவே முடியாதுபோலும்” என்றாள்.

“நான் நாளை முதற்புலரியில் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்புகிறேன்” என்றான் சிசுபாலன். “தந்தையின் விழைவை சொன்னீர்கள். உங்கள் ஆணையை சொல்லுங்கள். நான் செல்லலாமா?” அவள் அவனை நடுங்கும் தலையுடன் நீர்மை மின்னிய விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பு துரும்பு விழுந்த நீர்ப்பாவை என அசைவுகொண்டு “செல்க!” என்றாள். அவன் மறுமொழி ஏதும் சொல்லாமல் எழுந்து அவள் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள், அன்னையே” என்றான். “நிறைவுறுக!” என்று அவள் அவன் தலைதொட்டு வாழ்த்தினாள்.

அவன் திரும்பி அறைக்கதவைத் திறந்து வெளியே சென்றான். கதவு மூடப்படவில்லை. இடைநாழியில் ஏற்றப்பட்டிருந்த சுடர்களின் ஒளியில் அதன் நீள்பிளவு செஞ்சதையால் ஆன தூண் போல தெரிந்தது. அவள் அதையே இமைகொட்டாமல் நோக்கிக்கொண்டிருந்தாள். நெஞ்சம் முற்றிலும் அமைதியாக இருந்தது. முதியசேடியின் முகம் அதில் எழுந்தபோது என்ன செய்தி என்று அவள் உணர்ந்துகொண்டாள்.

தொடர்புடைய பதிவுகள்

ஆதல்- கடிதங்கள்

$
0
0

Lohitadas_and_Bharathan

ஜெ

சமீபத்தில் நீங்கள் எழுதிய முக்கியமான கட்டுரை ஆதல். ஒரு மனிதர் எதை ஆக நினைக்கிறார் எதை ஆகாமலிருக்க நினைக்கிறார் என்பதற்கான காரணங்களை எங்கே தேடமுடியும்? லோகிததாஸ் எம்டி ஆகாமலிருக்க முயன்றார். ஆனால் பரதன் ஆக முயன்றார். இரண்டுமே அவருக்கு இரண்டுவகையான பயணங்கள்

எம்.டி. வாசுதேவன் நாயர் லோகிததாஸ் போன்றவர்களுக்கு அப்பா போல. அப்பாவாக இல்லாமலிருக்கத்தான் நாமனைவருமே முயற்சிசெய்கிறோம். பரதன் அவருக்கு ஒரு மூத்தவழிகாட்டி. அதைப்போல ஆக நினைக்கிறோம். குருவாக ஆக முயலாதவர் எவரும் இல்லை

பரதனுக்கும் லோகிததாஸுக்குமான உறவை நீங்கள் சொல்லியிருந்த விதம் மிகச்சுருக்கமானது. மிக அழகானதும்கூட

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

லோகி பரதன் உறவைப்பற்றிய கட்டுரை மிக அழகு. அந்தக்கட்டுரை சினிமா பற்றியது அல்ல. இரண்டு மனிதர்களைப்பற்றியதும் இல்லை. லோகிததாச் ஏன் அப்படி ஆக முயன்றார் என்பதைக்கூட அது பேசவில்லை

நாம் ஏன் ஒருவரைப்போல ஆக நினைக்கிறோம் ஏன் ஒருவரைப்போல ஆகாமலிருக்க முயல்கிறோம் என்பதைப்பற்றியது அந்தக்கட்டுரை. அப்படி மாறமுயலாத எவருமே இருக்கமாட்டார்கள். அதேபோல விலகிக்கொள்ளவும் அவர்களுக்குள் சில பிம்பங்கள் இருக்கும்

நான் எவரைப்போல ஆக நினைத்தேன், எவராக ஆகக்கூடாதென்று நினைத்தேன் என்று நினைத்துப்பார்க்கவைத்தது இக்கட்டுரை

 

செல்வராஜன்

 

தொடர்புடைய பதிவுகள்


பழையபாதைகள்

$
0
0

1

 

 

 

என் அப்பாவும் அம்மாவும் இறந்தபின் நான் சொந்த ஊரான திருவரம்புக்குச் சென்றதேயில்லை. இருபத்தாறு வருடங்களாகின்றன. நாகர்கோயிலில் நான் குடியிருக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரம்தான், ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் என் கால்கள் அந்த எல்லையைத் தாண்டுமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அப்பாவை எரியூட்டியபிறகு காலையில் ஒரு தோல்பையை தோளில் தூக்கியபடி தலைகுனிந்து அந்தச் சின்னஞ்சிறு ஆற்றோர கிராமத்தைவிட்டு விலகிச் சென்றேன். அப்போது வடகேரளத்தில் காசர்கோட்டில் வேலைபார்த்தேன். அங்கே திரும்பிச்செல்லவும் மனமில்லை. திருவனந்தபுரத்தில் ஒருமலிவான விடுதியை வாடகைக்கு எடுத்து அதில் தங்கிக்கொண்டேன்.

இரவும்பகலும் ஒரே எண்ணம் ஓடிக்கொண்டிருப்பதை, அந்த எண்ணம் மீது நமக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமலிருப்பதையே மனிதநிலைமைகளில் மிகமிகக் கொடுமையானது என்பேன். கொடிய இழப்புகளில் பெரும் அவமதிப்புகளில் மட்டுமே அந்நிலை கைகூடுகிறது. நான் நான்குநாட்கள் அந்த விடுதியிலேயே அடைந்துகிடந்தேன். நள்ளிரவில் மட்டும் எழுந்து வெளிவந்து எதையாவது உண்பேன். தூக்கமும் விழிப்புமற்ற இருப்பும் இன்மையுமற்ற நிலை.

நான்காம் நாள் எனக்கு விசித்திரமான ஒரு பிரமை எழுந்தது. என் கிராமம் அங்கே தூரத்தில் அப்படியே இருப்பதாக. நான் திரும்பிச்சென்றால் அங்கே என் அம்மாவும் அப்பாவும் வீடும் எல்லாம் அப்படியே இருக்கும் என்று. அந்த பிரமையை நான் அந்தரங்கமாக வளர்த்துக்கொண்டேன். அந்த ஒளிமிக்க நினைவில் என் பிரியத்துக்குரிய எல்லாம் அப்படியே இருந்தன. அழியவே அழியாமல். அந்த உலகை நான் வார்த்தைகளாக ஆக்கிக்கொண்டேன். என் நூற்றுக்கணக்கான கதைகள் வழியாக அதை எழுதி எழுதி நிறுவினேன்.

அந்த கிராமத்துக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்குவது எளிது. ஆனால் நான் விட்டுவந்த அந்த கிராமத்துக்குச் செல்லமுடியாது. ஒருவேளை இப்போதிருக்கும் கிராமம் அந்த அந்தரங்கமான கிராமத்தை அடியோடு அழித்துவிடக்கூடும். ஆகவே நான் பிறகு திரும்பிச்செல்லவேயில்லை.

எப்போதாவது நண்பர்கள் எவரேனும் வந்தால் அவர்களுடன் திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்குச் செல்வேன். என் ஊர் அதிலிருந்து மிக அருகேதான். ஆறுவழியாகச் சென்றால் மூன்றுகிலோமீட்டர். மழைக்காலத்தில் அருவியின் பேரோசை எங்களூரில் கேட்கும். இரவுகளில் நெருங்கி வரும் கடல்போல அருவி முழங்கிக்கொண்டிருக்கும். அன்றெல்லாம் நாங்கள் ஆறுவழியாக நடந்து அருவிக்கு வந்து குளித்துவிட்டுச்செல்வோம்.

மறுபக்கம் ரப்பர்தோட்டங்கள் வயல்வரப்புகள் வழியாக வருவதற்கான பாதை உண்டு. சைக்கிளில் வரலாம். அப்போதுகூட பாடகச்சேரிக்கும் குருவிக்காடு சந்திப்புக்கும் நடுவே அரைகிலோமீட்டர் தூரத்துக்கு வயல்வரப்பு வரும். சாரைப்பாம்புபோல வளைந்து கிடக்கும் வரப்பில் சைக்கிளில் செல்ல ஒல்லிகோலப்பனால் மட்டும்தான் முடியும். மற்றவர்கள் இறங்கி தள்ளித்தான் செல்வார்கள். அதுவேகூட ஒரு நல்ல சர்க்கஸ்தான்.

பாடகச்சேரி அந்தக்காலத்தில் வயலில் வேலைசெய்பவர்களுக்கு எஜமானர்கள் ஒதுக்கிக் கொடுத்த மேட்டுநிலம். அதற்குஅப்பால் இருந்த பொற்றைக்காடுகளில் ரப்பர்தோட்டங்கள் வந்தபோது அவர்களில் பலர் ரப்பர்வெட்டும் தொழிலாளர்களாக ஆனார்கள். கூடைகவிழ்த்தது போலிருந்த குடிசைகளை மண்சுவர் வைத்து கட்டி எழுப்பினார்கள். சிலர் ஓடுகூட போட்டுக்கொண்டார்கள். அங்கே சிறியகடைகள் வந்தன. சர்ச்சுகள் முளைத்தன.

ஆனால் குலசேகரத்துக்கும் திருவட்டாறுக்கும் போவதற்கு குருவிக்காடு ஜங்ஷனுக்கு வந்துதான் பஸ்பிடிக்கவேண்டும். அதற்கு அந்தச் சிறிய இடைவழியினூடாக செல்ல வேண்டும். பனையில் இருந்து விழுந்த அம்புரோஸை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்ல அழைக்கப்பட்ட டாக்ஸி குருவிக்காடு மீனவர் சர்ச் அருகே நின்றுவிட நேர்ந்தது. அவரை ஒரு கயிற்றுக்கட்டிலில் போட்டு தூக்கிக்கொண்டு நான்குபேர் ஓடினார்கள். பாதை அகலமில்லாததனால் சேறு நிறைந்த வயலில் மிதித்து சென்றார்கள். முழங்காலளவுச்சேற்றில் இரு இடங்களில் காலிறங்கி விழப்போனார்கள். ஒரு முறை அம்புரோஸே கட்டிலில் இருந்து சரிய அவனை பின்னால்வந்த பொன்னுமணி பிடித்துக்கொண்டார். டாக்ஸியில் ஏற்றுவதற்குள் அம்புரோஸ் ‘மாதாவே எனக்க பிள்ளியள காப்பாத்தம்மா!’ என்று முனகி இறந்துவிட்டிருந்தார்.

அதன்பின் ஒரு சாலை அமைப்பதைப்பற்றி பேச்சுகள் எழுந்தன. ரட்சணியசேனை சர்ச்சில் ஜெபக்கூட்டம் முடிந்தபின் கூடிப்பேசினார்கள். அவர்களின் பிரதிநிதிகள் வந்து கோயிலில் கூடியிருந்த எஜமானர்களிடம் சாலையைப்பற்றி விவாதித்தார்கள். ஆரம்பத்தில் ‘அதுக்கொண்ணும் அவசியம் இல்ல…ஆண்டுக்கொருத்தன் பனையிலே இருந்து விளுறான். அது அவனுக்க விதியாக்கும். அதுக்காக ஊரெளகி ரோடுவெட்டுகதுக்கு அவசியமில்லை’ என்று மறுப்புகள் வந்தன. சாலை வந்தால் சேரியில் இருந்து ஆட்கள் வயல்வேலைக்கு வரமாட்டார்கள், பெண்கள் அண்டியாப்பீஸுக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள் என்று பட்டாளம் ஸ்தாணுமாலையன் சொன்னார்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பொதுக்கருத்து எட்டப்பட்டது. ஒரு இதுக்காக முரண்பட்டவர்கள் செல்லமாக மிரட்டி அடக்கப்பட்டார்கள். பாடகச்சேரியில் இருந்து ஆறடி அகல மண்சாலை வெட்டப்பட்டு வயல் வரப்பு வரை இறங்கியது. காளிகோயில் நிலமும் கத்தோலிக்க சர்ச்சின் நிலமும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்பிபெருவட்டரின் ரப்பர்தோட்ட விளிம்பு சகாயவிலைக்கு அளிக்கப்பட்டது. ஆனால் சாலை வயல் வெளிவரை வந்து நின்றுவிட்டது. காரணம் காலாயம்வீட்டு தம்பி.

காலாயம்வீடு எங்களூரின் பழைய நிலப்பிரபுக்குடும்பம். ஏகப்பட்ட நிலங்கள். முக்கால்வாசி குத்தகைதாரர் கைகளில் இருந்தன. அவர்களுடைய இரண்டுபெரிய வயல்கள் பாடகச்சேரி குருவிக்காடு சாலையில் குறுக்காக அடைத்திருந்தன. கடந்துசெல்ல வழியே இல்லை. ஃபாதர் வடக்கப்பன் தலைமையில் காலாயம்வீட்டுக்குச் சென்று தம்பிசாரிடம் பேசினார்கள். அவர் அவர்களை அமரும்படிகூட சொல்லவில்லை. ‘டேய், அந்தப்பேச்சையும் பேசிக்கிட்டு இனி இந்தப் படி தாண்டப்பிடாது கேட்டியா? எதுக்குடே ரோடு? நேத்துவரை இந்த வீட்டு முற்றத்திலே காலுவைக்க தைரியமில்லாம துண்ட இடுப்பிலே கெட்டிகிட்டு கும்பிட்டு நின்னவனெல்லாம் நான் போற வளியிலே நின்னு பீடி பிடிக்கான். அவனுகளுக்கு நான் மண்ணு விட்டுக்குடுக்கணுமா? எனக்கு மனசில்லை. போய் கோர்ட்டுலே பேசிக்கோ..போ’

மீண்டும் மீண்டும் மன்றாடினார்கள். கோயில் அர்ச்சகர் நாராயணன் போற்றியை அனுப்பி சொல்லவைத்தார்கள். ‘நல்ல கதை. நாடு நாறியாச்சு. அவனுகளுக்காக பிராமணன் நீரு வந்து பேசுதீராக்கும்..போவும் ஓய்’ என்றுவிட்டார் தம்பி. பின்பு மெல்ல நம்பிக்கை இழந்து திட்டம் கைவிடப்பட்டது. மண்சாலை வந்து காலாயம்வீட்டு வயலில் இறங்கி பச்சைப்பரப்பில் மூழ்கி மறைந்தது. அதுவரை சைக்கிளில் ‘விட்டு வந்தவர்கள்’ அங்கே இறங்கி தள்ள ஆரம்பித்து அதுவே ஒரு பழக்கமாக ஆகியது. எவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.

அப்போதுதான் அப்பகுதி வழியாக ’சகாவு’ ஓட்டு கேட்க வந்தார். எங்களூரில் மார்க்ஸிய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜெ.ஹேமசந்திரனை மட்டுமே வெறுமே சகாவு என்பார்கள். வழக்கமாக ரப்பர் தோட்டங்களில் ஓட்டு கேட்டபின் அப்படியே பாடகச்சேரிக்கு வந்து செல்லும் தோழர் ஜெ.எச். அவ்வழி வந்தது தற்செயலாகத்தான். அவர் எனக்கு தூரத்துச் சொந்தமாதலால் நான் அவருக்குப்பின்னால் உற்சாகமாக துண்டுப்பிரசுரம் வினியோகித்துக்கொண்டு ஓடினேன். சிவப்புத்தாள் துண்டுப்பிரசுரங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கும். தண்ணீர் தொட்டு கையில் ஒட்டி வைத்தால் மருதாணிபோல சிவக்கும். ‘அண்ணா அண்ணா’ என்று பின்னால் ஓடிவரும் பிள்ளைகளை ‘ஓடுலே ..லே ஓடுலே’ என்று துரத்திவிட்டு பெரியவர்களுக்கு மட்டும் துண்டுப்பிரசுரம் கொடுப்பது என் பொறுப்பு. அவர்களில் பாதிப்பேர் வாசிக்கத்தெரியாமல் பிள்ளைகளிடமே கொடுத்துவிடுவதில் எனக்குப் பிரச்சினை இல்லை.

தோழர் ஜெ.எச். என்னும் ’ஹேமேந்திரன் அம்மாவன்’ குட்டையான உருவம் கொண்டவர். ஒட்டடைக்குச்சி போல சிலிர்த்து நிற்கும் தலைமுடி. குறுகிய நெற்றிக்குமேல் வரப்பில் புல்போல அது வெட்டிவிடப்பட்டிருக்கும். கனத்த மீசை. பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் வக்கீலுக்குப் படித்துவிட்டு தொழிலைப்பார்க்காமல் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். எங்களூரில் கட்சியே அவரது சொத்தில் கட்டப்பட்டதுதான். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கட்சி அலுவலகத்தில் ஒரு பெஞ்சியில் படுத்து இரவுறங்குவார். நிறையமுறை ஜெயிலில் கிடந்திருக்கிறார். காங்கிரஸ் காலத்தில் அவரை விலங்கிட்டு ஒரு மாட்டுவண்டியில் கட்டி முரசறைந்தபடி தெருத்தெருவாக அழைத்துச்சென்றார்கள் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

தோழர் ஜெ.எச். வயல் வரப்பில் நின்று கண்களைச் சுருக்கி பார்த்து ‘டே இது என்னடே? மயிராண்டி, பஞ்சாயத்திலே சொல்லி ஒரு ரோடு போடப்பிடாதாடே” என்றார். மெம்பர் நேசையன் மெல்லிய குரலில் பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே கூட வர அவர் செருப்பைக் கழற்றிவிட்டு சேற்றில் கால் வைத்து நடந்து மறுபக்கம் போனார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறரை மணிக்கு ஜெ.எச். குருவிக்காடு ஜங்ஷனில் பதிமூன்று ஜி பஸ்ஸில் வந்திறங்கினார். கண்ணன் பார்பர்ஷாப்பிலும், தண்டுநாயர் டீக்கடையிலும் பனையேறி முடித்து வந்தவர்களும் மண்வெட்டிவேலைக்குப் போகிறவர்களுமாக நல்ல கூட்டம். யாரோ ‘லே சகாவுலே’ என்றார்கள்.

ஜெ.எச். வேட்டியை மடித்துக்கட்டியபடி வந்து கண்ணன் பார்பர்ஷாப் முன்னால் நின்றிருந்த ஏசுவடியானிடம் ‘சகாவே ஒரு பீடி எடு’ என்று கேட்டு வாங்கி பற்றவைத்தார். ஆழமாக நான்கு இழுப்பு இழுத்து ஊதியபடி என்னிடம் ‘எந்தெடா?’ என்றார். ‘அப்பாவுக்குப் புகையிலை..’ என்று பம்மினேன். ‘ம்ம்’ என்று ஆழ இழுத்தார்.

அதற்குள் சொத்தி நாணப்பன் சூடான டீ டம்ளருடன் வந்துவிட்டான். அதைக் கலக்கிக் கலக்கி குடித்துவிட்டு கடைசி இழுப்பு. பின்பு பீடிக்கொள்ளியை சுண்டி வீசி காறிதுப்பிவிட்டு ‘டேய் அந்த நம்மாட்டியை இஞ்ச குடு’ என்று ஞானப்பனின் மண்வெட்டியை வாங்கிக்கொண்டு நடந்தார்.

‘சகாவு எங்க போறாரு?’ என்று நாணப்பன் கேட்டான். ‘இவருக்கு இஞ்ச வாளயா நிக்குவு?’ என்று கேட்ட மிக்கேல்ராஜை அருளப்பன் ஓங்கி அறைந்து ‘நாறப்பயலுக்க வாயப்பாரு…லே வாலே. சகாவு தனியாட்டுல்லா போறாரு” என்றான்.

மண்வெட்டிகளுடன் பத்துபேர் ஜெ.எச். பின்னால் நடந்தார்கள். வேதக்கோயிலை அணுகும்போது இருபதுபேர். திண்ணைகளில் சீட்டாடிக்கொண்டிருந்த மீனவர்கள் ‘லே சகாவுலே’ என்று சீட்டுகளை செருகிவிட்டு எழுந்து நின்று முண்டாசை அவிழ்த்தார்க்ள். அவர் அவர்களைப் பார்க்காமல் கடந்துசென்றார். ‘இஞ்சேருங்க…என்னண்ணு பாருங்க போங்க’ என்று மீனவப்பெண்கள் கணவர்களைத் தூண்ட அவர்களும் பின்னால் வந்தார்கள்.

வயல்வரப்பை அடைந்தபோது ஐம்பதுபேர் வரை திரண்டிருந்தார்கள். ஜெ.எச். நேராகச்சென்று செருப்பைக் கழட்டிவிட்டு வயலில் இறங்கினார். வரப்பை ஓங்கி மண்வெட்டியால் வெட்டினார். காலாயம்வீட்டு அடங்கல்வேலைக்காரன் ரவீந்திரன் ஓடிவந்தான். ‘சகாவு இது என்ன செய்யுது? வேண்டாம்…வேண்டாம் கேட்டுதா?’ என்றான்.

‘டேய், நான் இங்க பாதை போடப்போறேன். ஒண்ணு இங்க பாதை வரும். இல்லேன்னா நான் செத்துகிடப்பேன். ஆனா போறதுக்குள்ள பத்தாள வெட்டிப்போட்டுட்டுதான் போவேன்..ம்ம் வெலகு’ என்றார் ஜெ.எச்.  ரவீந்திரன் பீதியுடன் பின்னால் நகர்ந்தபின் சேற்றை மிதித்து ஓடி மறுபக்கம் ஏறி அப்பால் சென்றான். ஓ என்று கூச்சலிட்டபடி அத்தனைபேரும் மண்வெட்டிகளுடன் வயலில் இறங்கினார்கள்.

சற்றுநேரத்தில் மேல்துண்டும் வேட்டி நுனியும் காற்றில் பறக்க காலாயம்வீட்டு தம்பிசார் விரைந்து வந்தார். வரும்போதே ‘டேய்..ஹேமேந்திரா, நாயே…’ என்று கூச்சலிட்டபடி வந்தார். ’கரையில் ஏறுடா…நான் சும்மா விடமாட்டேன். இந்நாட்டில் போலீஸும் பட்டாளமும் உண்டா என்று பார்க்கிறேன்’ என்றார்.

‘தம்பிசாரே…இப்ப வேலை நடந்துட்டிருக்கு. இதில தலையிட்டா தலை இருக்காது…சாரு போகணும்..ம்ம்’ என்றார் ஜெ.எச்.

‘டேய் எங்கிட்ட வெளையாடாதே’ என்று தம்பிசார் கைநீட்டி கூச்சலிட்டார்.

‘டேய் போடா..’ என்றார் ஜெ.எச்.

தம்பிசார் அப்படியே உறைந்து விட்டார். சுற்றி நின்ற நூற்றுக்கணக்கான ஆணும்பெண்ணும் சிலைபோல குளிர்ந்து நின்றார்கள்.

‘நான் விடமாட்டேன்…நான் இத விடமாட்டேன்…’ என்ற ஊளையுடன் அடிபட்ட நாய் போல சுருண்டுபோய் தம்பிசார் திரும்பி ஓடினார்.

ஜெ.எச். உரக்கக் கூவினார் ‘டேய்….டேய் தம்பி…இதோ இந்த ரோடு இங்கதான் கிடக்கும். உனக்கு சங்கிலே ஊற்றம் இருந்தா இதிலே மண்வெட்டியாலே ஒரு வெட்டு வெட்டிப்பாரு…டேய், எந்தப்போலீஸும் பட்டாளமும் காவல் நின்றாலும் உன்னை தேடிவந்து வெட்டுவோம். உன் வீட்டு முற்றத்திலே உன்னை வெட்டிப் போடுவேன்…இந்தா நூறுபேரு கேக்கத்தான் இதைச் சொல்லுதேன்…’

தம்பிசார் விழுந்துவிடுவார் போலிருந்தது. நல்லவேளையாக ஊன்றிநடக்கும் குடை வைத்திருந்தார். தள்ளாடியபடி அவர் போய் மறைந்தார். சிலநிமிடங்கள் வரை அனைவரும் வாய் பிளந்து பார்த்து நின்றார்கள். சட்டென்று பொன்னுமணிக்கிழவர் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று கூச்சலிட்டார். மொத்தக்கூட்டமும் ‘ஜே’ என்று கூச்சலிட்டது. நேசையன் மெம்பர் ’இங்குலாப் சிந்தாபாத்!’ என்று முழங்கினார். அத்தனைபேரும் அதை திருப்பிக்கூவினர்.

மாலைவரை அந்தக்கூச்சல் நீடித்தது. இருட்டும் நேரத்தில் மறுபக்கம் வரை சாலை போடப்பட்டிருந்தது. ஓடையில் ஜெ.எச். கைகளைக் கழுவிக்கொண்டிருக்கும்போது மறுபக்கம் வேதக்கோயில் அருகே ஜீப்பை நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிளுடன் இறங்கி வந்தார்.

‘நமஸ்காரம் சகாவே’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘ஒரு கம்ப்ளெயிண்ட் உண்டும்’

‘எழுதிக்கிடும்வே…முதல்குற்றவாளி ஜே.ஹேமசந்திரன்…அட்ரஸ் தெரியுமே..ரப்பர்தோட்டத்தொழிலாளர் சங்கம், குலசேகரம். கண்டாலறியக்கூடிய நூறுபேர் கூட்டுக்குற்றவாளிகள். எழுதும்.’’ சட்டென்று குரல் மாறியது ‘முறையா கேஸு நடக்கட்டும். ஆனா இனி எவனாவது இந்த ரோட்டிலே கைய வச்சா அவனுக்க கொலைக்காக்கும் அடுத்த கேஸு’

இரண்டுவருடம் கேஸ் நடந்த நினைவு. அதற்குள் அந்தச்சாலையில் தாரே போட்டுவிட்டார்கள். இப்போது அது திற்பரப்பு அருவியின் கரை வழியாக திருவட்டாறுக்குப் போகும் முக்கியமான பேருந்து வழி. அவ்வழியாக நண்பரின் பைக்கில் அமர்ந்து வந்துகொண்டிருந்தேன். ‘இந்தவழியா போனா திருவரம்பு கோயில்…அங்கதான் எங்க வீடு’’ என்றேன்.

‘போவோமா?’ என்றார் நண்பர் பைக்கை நிறுத்தி.

‘வேண்டாம்’ ’’ என்றேன்.

எதிரே வந்த ஒரு பையனைச் சுட்டிக்காட்டி நண்பர் கேட்டார் ‘கேட்டுப்பாக்கட்டா?’

‘கேளும்’ ’’ என்றேன்

‘லே மக்கா…இந்த ரோடு ஆரு போட்டதிலே? ’’ என்றார் நண்பர்.

‘வெள்ளக்காரன் காலத்திலே போட்டதில்லா?’ ’’ என்றான் அவன்.

நண்பர் என்னைப் பார்த்தார். பையன் சுதாரித்துக்கொண்டு ’’’காமராஜு போட்டதாக்குமா?’’’ என்றான்.

‘ஆரு போட்டா என்ன? நீ நிமுந்து நடக்குதே இல்ல? அது போரும் மக்கா’’’ என்றபடி நண்பர் பைக்கைக் கிளப்பினார்.

‘ஆமா.சகாவு இருந்திருந்தா அவரும் அதைத்தான் சொல்லுவார்’ என்றேன்.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 20, 2012

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56

$
0
0

பகுதி ஒன்பது : மார்கழி

[ 1 ]

மார்கழித்திங்கள் முதல்நாள் இந்திரப்பிரஸ்தப் பெருநகரியில் ராஜசூய வேள்விக்கான அறிவிப்பு எழுந்தது. இருள் விலகா முதற்புலரியில் மயில்நடைத்தாளத்தில் ஒலித்த விடிமுரசின் ஓசை அடங்கி, நூற்றியெட்டு முறை பிளிறி பறவைகளை வணங்கிய கொம்புகள் அவிந்து, கார்வை நகருக்குள் முரசுக் கலத்திற்குள் ரீங்காரம் என நிறைந்திருக்க அரண்மனை முகப்பின் செண்டுவெளியில் அமைந்த ராஜசூயப்பந்தலின் அருகே மூங்கிலால் கட்டி உயர்த்தப்பட்ட கோபுரத்தின்மீது அமைந்த பெருங்கண்டாமணியின் நா அசைந்து உலோக வட்டத்தை முட்டி “இங்கே! இங்கே! இங்கே! இங்கே!” என்று முழங்கி வேள்வியை அறிவித்தது.

அன்று ராஜசூய வேள்வி தொடங்குவதை முன்னரே அறிந்திருந்தபோதிலும்கூட அந்த மணியோசை நகர்மக்களை உளஎழுச்சி கொள்ள வைத்தது. நீராடி, புத்தாடை அணிந்து, விழித்திருந்த நகர்மக்கள் கைகளைக் கூப்பியபடி இல்லங்களிலிருந்து வெளிவந்து முற்றங்களிலும் சாலையோரங்களிலும் கூடி ராஜசூயப்பந்தல் இருந்த திசை நோக்கி “எங்கோ வாழ் எந்தையே! மூதாதையரே! துணை நின்றருள்க! எண்ணிசை தேவர்களே சூழ்க! தெய்வங்களே மண்ணிறங்குக! சிறகொளிர் பூச்சிகளே, இன்குரல் புட்களே, விழிகனிந்த விலங்குகளே, ஐம்பெரும் ஆற்றல்களே இங்கு வந்தெங்களை அருள்க!” என்று வாழ்த்தினர்.

நகரெங்கும் வேள்வி அறிவிப்பை முழக்கியபடி பெருமுரசுகள் யானைநடைத் தாளத்தில் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் அவற்றுடன் இணைந்துகொண்டன. மார்கழியின் குளிர் எழத் தொடங்கியிருந்தமையால் கைக்குழந்தைகள் நடுங்கி தோள்சுற்றி அணைத்து அன்னையர் உடம்பில் ஒட்டிக்கொண்டன. முதியோர் மரவுரிச் சால்வைகளை உடலெங்கும் சுற்றிக்கொண்டு மெல்லிய நடுக்கத்துடன் நின்று இருளுக்குள் வாழ்மரங்களுக்கு திரும்பிக்கொண்டிருந்த வௌவால்களின் சிறகடிப்பை பார்த்தனர். கீழ்ச்சரிவில் வலசைநாரைகளின் மெல்லிய அசைவு தெரிந்தபோது “புலரிகொணரும் புட்களே எழுக! இரவாளும் புட்களே நிறைவுகொள்க!” என்று கூவினர்.

வானை முகில் மூடியிருந்ததனால் விடிவெள்ளி கண்ணுக்கு தென்படவில்லை. காற்று இல்லாதபோது மழை ஓய்ந்த துளிகளென மரங்களிலிருந்து பனி சொட்டும் தாளம் அவர்களை சூழ்ந்தது. உடல் சிலிர்க்க வடக்கிலிருந்து வீசிய குளிர்காற்று பனித்துளிகளை அள்ளி சுவர்கள் மேல் பொட்டுகள் வைத்து கடந்து சென்றபின் சற்று நேரம் செவிகளை வருடிச்செல்லும் அமைதி நிலவியது. அமைதிகேட்டு துயில் கலைந்த சிறுபறவை அன்னையை உசாவ ‘விடியவில்லையே’ என்று சொல்லி சிறகுகளால் மூடிக்கொண்டது அன்னை.

முந்தி எழுந்த காகங்கள் சில கருக்கிருட்டின் அலைகளின் மீது சிறகடித்து சுழலத்தொடங்கின. விண்ணில் மெல்ல தணிந்து திரண்ட விண்மீன்கள் குளிருக்கென நடுங்கி அதிர்ந்து இருளில் மீண்டும் புதைந்து மறைந்தன. தெற்கிலிருந்து முகில்நிரைகள் வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியிருந்ததனால் நகரெங்கும் மெல்லிய நீராவி நிறைந்திருந்தது. வெட்டவெளியில் குளிரையும் அறைகளுக்குள் நீர்வெம்மையையும் உணரமுடிந்தது. காலைக்குளிரை விரும்பிய காவல்புரவிகள் வால்சுழற்றி குளம்போசையுடன் கடந்துசென்றன.

இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனைப்பெருவாயிலில் நூற்றெட்டு வைதிகர்கள் கங்கையும் யமுனையும் நிறைந்த பொற்கலங்களும், மஞ்சளரிசியும், பொன் மலர்களுமாக காத்து நின்றிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் இசைச்சூதர்களும் அணிச்சேடியரும் நிரை வகுத்து நின்றனர். அரண்மனைக்குள்ளிருந்து சிற்றமைச்சர் சுரேசர் வெளியே ஓடிவந்து கைகளை அசைக்க வெள்ளிக்கோலேந்திய நிமித்திகர் இருவர்
“ஓம்! ஓம்! ஓம்!” என்று கூவியபடி அவற்றைச் சுழற்றி வான் நோக்கி தூக்கினர். வேத ஒலி எழுந்தது. மங்கல இசை அதை சூழ்ந்தது. அனைத்து வீரர்களும் ஏவலர்களும் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கினர். “விண்சுடர் சூடிய பெருநகர் ஆளும் வேந்தர் வாழ்க! மின்கதிர் நகர் வெல்க! எரியெழுந்த மங்கை ஒண்மலர் சூடுக! வில்திறல் விஜயனும் தோள்திறல் பீமனும் இணைதிறல் இளையரும் வாழ்க! இந்திரப்பிரஸ்தம் எழுக! விண்ணவர் இங்கு இறங்குக!”

நகரின் மாபெரும் முற்றம் மீனெண்ணெய் பந்தங்களால் எரியெழுந்த காடுபோல் செவ்வொளி அலைகொண்டிருந்தது. புரவிகளின் விழிகளில், தேர்களின் உலோகச்செதுக்குகளில், படைக்கலங்களில் பளிங்குத் தூண் வளைவுகளில் எல்லாம் சுடர்கள் எழுந்திருந்தன. அரண்மனையின்  உள்ளிருந்து வெள்ளிக் கோலேந்தியபடி நிமித்திகன் வெளியே வந்தான். மும்முறை அதைச் சுழற்றி மேலே தூக்கி “பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசர்! இந்திரப்பிரஸ்தம் ஆளும் பாண்டவர்குடி மூத்தோர்!  யயாதியின் குருவின் ஹஸ்தியின் சந்தனுவின் விசித்திரவீரியனின் பாண்டுவின் கொடிவழி வந்த கோன்! அறம்வளர்ச்செல்வர், தென்திசை தெய்வத்தின் மைந்தர்  யுதிஷ்டிரர் எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான்.

அவனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது நிமித்திகன் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி! எரியெழுந்த கொற்றவை! ஐங்குழல் கொண்ட அன்னை! பாஞ்சாலி, திரௌபதி எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான்.  அவனைத் தொடர்ந்து இசைச்சூதர்கள் முழங்கியபடி வர, நூற்றெட்டு அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களில் நெய்யகல்கள் சுடர, பொன்னணிகள் பந்தங்களில் அனலுருவாகி வழிய, சீர்நடையிட்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால் எட்டு வீரர்கள் வாளேந்தி வர நடுவே தருமனின் செங்கோலை படைத்தலைவன் ஒருவன் ஏந்தி வந்தான். அவர்களுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியைச் சூடி தருமன் நடந்து வந்தார். அவர் இடக்கையை பற்றியபடி மணிமுடிசூடி திரௌபதி வந்தாள். அவர்களுக்கு மேல் வெண்குடை முத்துச்சரம் குலுங்க முகில்பிசிறு ஒளிர கவிந்த பிறை நிலவென வந்தது. தருமனுக்குப் பின்னால் அரசஉடையில் பீமனும் அர்ஜுனனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் வாள்களை ஏந்தி நடந்து வந்தனர்.

செங்கோல் ஏந்திய வீரன் முற்றத்தில் இறங்கியதும் வாழ்த்தொலிகள் உச்சம் கொண்டன. முற்றத்தில் காத்து நின்ற வைதிகர்களின் தலைவர் சிரௌதர் முன்னால் சென்று அரசனையும் அரசியையும் அரிமலரிட்டு வாழ்த்தினார். வைதிகர்கள் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதினர். சுரேசர் அருகே வந்து “தேர்கள் சித்தமாக உள்ளன, அரசே” என்றார். தருமன் மெல்ல தலையசைத்தபின் காத்து நின்றிருந்த தன் அரசப்பொற்தேர் நோக்கி சென்றார்.  அவர்கள் தேரில் ஏறிக்கொண்ட அசைவை உணர்ந்ததும் நெடுநேரம் நின்றிருந்த அதன் ஏழு புரவிகளும் குளம்புகளை தூக்கிவைத்து உடலில் பொறுமையின்மையை காட்டின. மணிகளுடன் தேர் குலுங்கியது.

சுரேசர் கையசைக்க எழுந்த பீடத்தில் அமர்ந்திருந்த சூதன் ஏழு கடிவாளங்களையும் மெல்ல சுண்டினான். மணிகள் சலங்கைகள் ஒலிக்க நடனமங்கை அவையேறுவதுபோல இடையொசிந்து அசைய, கொண்டைச்சரங்கள் உலைந்தாட, செம்பட்டுத்திரைகள் அசைய தேர் மேட்டிலேறியது. எதிர்காற்றில் மின்கதிர்க் கொடி எழுந்து பறந்தது. பந்தங்களின் செவ்வொளியில் அனல் உருகி வழிவது போல தேர் முற்றத்தைக் கடந்து சாலையில் நுழைந்தது. அதைச்சூழ்ந்து வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் முழங்கின.

[ 2 ]

யுதிஷ்டிரரின் அரசத்தேர் வேள்விக்கூடத்தின் பெருமுற்றத்தை வந்தடைந்ததும் அங்கு நான்கு நிரைகளாக நின்ற வைதிகர்கள் வேதம் ஓதி, அரிமலர் தூவி, கங்கைநீர் தெளித்து அவரையும் அரசியையும் வரவேற்றனர். அமைச்சர் சௌனகர் முன்னால் வந்து அரசரையும் அரசியையும் முகமன் உரைத்து செய்கையால் வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார். நிமித்திகர் குறித்த நற்தருணத்தில் மீனும் கோளும் நோக்கி நின்றிருந்த வானுக்குக் கீழ் தருமன் கைகளைக் கூப்பியபடி தேவியும் தம்பியரும் உடன் வர ராஜசூயப்பந்தலுக்குள் வலக்காலை வைத்து நுழைந்தார்.

ஆயிரத்தெட்டு பெருந்தூண்களின் மேல் நூற்றியெட்டு வெண்குடைக்கூரைகளாக கட்டப்பட்டிருந்த மையப்பந்தலுக்கு வலப்பக்கம் நகர்மக்களும் அயல்வணிகரும் அமர்ந்து வேள்வியை பார்ப்பதற்கான துணைவிரிவுப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இடப்பக்கம் படைவீரரும் அவர்களின் குடும்பங்களும் அமர்வதற்கான பந்தல் விரிந்திருந்தது. மையப்பெரும்பந்தலில் பாரதவர்ஷத்தின் அரசர்களும் இந்திரப்பிரஸ்தத்தின் இணை அரசர்களும் முறை அரசர்களும் அசுர குடித்தலைவர்களும் நிஷாத குடித்தலைவர்களும் நாகர் குடித்தலைவர்களும் அமர்வதற்கான பீடங்கள் ஒருக்கப்பட்டிருந்தன.

நீண்ட மையப்பந்தல் பருந்தின் உடல் போலவும், இரு இணைப்பந்தல்கள் அதன் விரிந்த சிறகுகள் போலவும், வேள்வி மரம் நின்ற முகப்பு அதன் கூர் அலகு போலவும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் தூண்களும் பசுந்தழைகளும் அன்றலர்ந்த மலர் தொடுத்த மாலைகளும் கொண்டு அணி செய்யப்பட்டிருந்தன. வேள்விப்பந்தலில் மலரும் தளிருமன்றி பிற தோரணங்களோ பாவட்டாக்களோ பட்டுத் திரைகளோ அமைக்க வைதிக முறைமை இல்லை என்பதால் அக்கூடம் இளவேனில் எழுந்த குறுங்காடென உயிர் வண்ணத்தால் நிறைந்திருந்தது. மலர் நாடி வந்த வண்டுகளும் பட்டாம் பூச்சிகளும் அங்கிருந்தவர்களின்  தலைக்குமேல் வண்ணச்சிறகடித்தும் யாழ் மீட்டியும் பறந்தலைந்தன. அவை வேள்விக்கு வந்த கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் தேவர்களும் என்று நூல்கள் உரைத்தன.

சிறிய அரைவளையங்களாக அலைகளால் ஆன பேரலை என்னும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்தப்பீடங்களில் காலை முதலே அரசர்களும் அவர்களின் அகம்படியினரும் வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தின் சார்பில் சௌனகர் முதலான அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துணைசெய்ய திருஷ்டத்யும்னனும் சஞ்சயனும் பூரிசிரவஸும் சாத்யகியும் வேள்விக்கூடத்தின் வாயில்களில் நின்று அரசர்களை வரவேற்று உரிய பீடங்களில் அமர்த்தினர். விதுரர் அவற்றை ஒருங்கிணைத்தார். வேள்விப்பந்தலாதலால் வாழ்த்தொலிகளோ வரவுரைகளோ எழவில்லை. வேதமன்றி பிற ஒலி ஏதும் அங்கு எழலாகாது என்ற நெறி இருந்தது.

உடை சரசரக்கும் ஒலிகளும் படைக்கலங்களின் மணியோசையுமாக மெல்லப் பெருகி நிறைந்துகொண்டிருந்தன வேள்விக்கூடத்தின் சிறகுகள். அரசர்களின் அவைகள் அனைத்தும் நிறைந்தன. ஒழிந்து கிடந்த ஒருசில பீடங்களை நோக்கி பிந்தி வந்தவர்களை வழிகாட்டி கொண்டு சென்றவர்கள் மிகமெல்ல ‘அரசே!’ என்றும் ‘உத்தமரே!’ என்றும் அழைத்தனர். அரசர்கள் அவையமர்ந்த பின்னரே வேள்விக்கு வந்த வைதிகரும் முனிவர்களும் முன்னணியில் அவை அமரத்தொடங்கினர். வைதிகர்களை அவையமரச்செய்வது அஸ்வத்தாமனின் தலைமையில் நடந்தது. அக்ரூரர் அவனுக்கு துணைநின்றார். வைதிகர்கள் தங்கள் குருகுலத்து அடையாளச் சால்வைகளை அணிந்தபடி வந்து அரிமஞ்சள் கூடைகளையும் மலர்க்குடலைகளையும் கைகளில் பெற்றுக் கொண்டு தங்கள் குருகுலத்து முறைப்படி சிறு குழுக்களாக அமர்ந்தனர்.

பல்வேறு குருகுலங்களைச் சேர்ந்த முனிவர்கள் தங்கள் மாணவர்கள் சூழ வந்தனர். அவர்களை வரவேற்க துரோணரும் கிருபரும் வேள்விக்கூட முகப்பில் தங்கள் மாணவர்களுடனும் துணைவருடனும் நின்றனர். முனிவர்கள் தங்களுக்கான பகுதிகளில் மாணவர்கள் சூழ  அரை வளையங்களாக எரி நோக்கி அமர்ந்தனர். தனஞ்சய கோத்திரத்தைச்சேர்ந்த முனிவரான சுஸாமர் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் வந்தார். யாக்ஞவல்கிய குருகுலத்தைச்சேர்ந்த பதினெட்டாவது யாக்ஞவல்கியரும் அவரது நூற்றெட்டு மாணவர்களும் தொடர்ந்து வந்தனர். வசிட்ட, வாமதேவ, கௌசிக, விஸ்வாமித்திர குருகுலங்களின் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தனர்.

வேள்விச் செயலர்களான ஆயிரத்தெட்டு வைதிகர்கள் தங்கள் அவியூட்டுமுறைமைக்கான  தோல் போர்வைகளுடன் வலக்கையில் சமித்தும் இடக்கையில் நெய்க்குடமுமாக வந்து வேள்விக்கூட மையத்தில் அமைக்கப்பட்டிருந்த முப்பத்தாறு எரிகுளங்களைச் சுற்றிலும் அமர்ந்தனர். எரியூட்டுக்குத் தலைமைகொண்டிருந்த வசு மைந்தரான பைலர் அவர்களை வாழ்த்தி அமரச்செய்தார்.

பீமனாலும் அர்ஜுனனாலும் எதிர்கொண்டழைக்கப்பட்டு பீஷ்மர் அவைபுகுந்து பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சஞ்சயனால் வழிநடத்தப்பட்டு அவைக்கு வந்தபோது பீமன் எதிர்கொண்டு அவையமரச் செய்தான். கர்ணனுடன் துரியோதனன் உள்ளே வந்தபோது நகுலனும் சகதேவனும் அவர்களை வரவேற்று கொண்டுசென்று அமரச்செய்தனர்.  காந்தாரத்தின் சுபலர் தன் மைந்தர்களுடன் வர பின்னால் சகுனி வந்தார். உடன் கணிகர் ஒரு வீரனால் தூக்கப்பட்டு மெல்ல வந்தார்.  சௌவீர பால்ஹிக சிபிநாட்டு அரசர்கள் அவைபுகுந்தனர். சல்யர் அவர்களுக்கு மேல் எழுந்த தோள்களுடன் நீண்ட கால்களை எடுத்துவைத்து உள்ளே வந்தார்.

மாளவனும் கூர்ஜரனும் ஜயத்ரதனுடன் இணைந்து அவைபுகுந்தனர். துருபதன் அவைபுகுந்தபோது அபிமன்யு அவரை வரவேற்று கொண்டுசென்றான். ஜராசந்தனின் மைந்தன் சகதேவன் தன் மாதுலமுறைகொண்ட பிரக்ஜ்யோதிஷத்தின் முதியமன்னர் பகதத்தருடன் அவைக்கு வந்தபோது அனைத்து விழிகளும் அவர்களை நோக்கின. பீமன் அவர்களை அவைக்கு கொண்டுவந்து அமரச்செய்தான். விதர்ப்பத்தின் ருக்மி தன் தந்தை பீஷ்மகர் உடன்வர அவைக்கு வந்தான். சேதியின் தமகோஷரை சகதேவன் அவையமரச் செய்தான். சிசுபாலன் தனியாக வந்தபோது பீமன் அவனை எதிர்கொண்டழைத்தான்.

அனிருத்தன், கங்கன், சாரணன், கதன், பிரத்யும்னன், சாம்பன், சாருதோஷ்ணன், உல்முகன், நிசடன், அங்காவகன் என்னும் பத்து யாதவக்குடியினருடன் மதுராவின் வசுதேவர் அவைக்கு வந்தார். பலராமர் வந்து முறைமைகளைத் தவிர்த்து துரியோதனன் அருகே அமர்ந்தார்.  அயோத்தி நாட்டரசனுடன் மச்சநாட்டு சூரசேனர் வந்தார். கௌசிகி நாட்டு மஹௌஜசனுடனும்  காசி நாட்டு சுபாகுவுடனும் கோசலத்தின் பிரகத்பலன் அவைபுகுந்தான். அர்ஜுனனால் வெல்லப்பட்ட உலூகநாட்டு பிரஹந்தனும் காஷ்மீரநாட்டு லோகிதனும் இணைந்து அவைபுகுந்தனர். அவர்களை அபிமன்யு வரவேற்று அவையிலமர்த்தினான். திரிகர்த்தர்களும் கிம்புருடர்களும் கின்னரர்களும் தங்கள் மலைநாட்டு மயிராடைகளுடன் அவைக்கு வந்தனர்.

சகதேவன் தன்னால் வெல்லப்பட்ட கோசிருங்கத்தின் சிரேணிமானை பணிந்து வரவேற்று அவையிலமர்த்தினான். அவனால்  தோற்கடிக்கப்பட்ட அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வந்தபோதும் அவனே சென்று தலைவணங்கி அவைக்கு கொண்டுவந்தான்.  தென்னகத்திலிருந்து சகதேவனால் வெல்லப்பட்ட வாதாதிபன், திரைபுரன், பௌரவன் என்னும் அரசர்கள் வந்தனர். அவை முழுமையாக நிறைந்ததும் முற்றிலும் ஓசையடங்கி வண்ணங்களும் ஒளிச்சிதறல்களும் மட்டுமானதாக ஆகியது.

இளைய யாதவர் அவைபுகுந்தபோது அர்ஜுனனும் பீமனும் நகுலசகதேவர்களும் அபிமன்யுவும் சாத்யகியும் அவரை நோக்கி சென்று வணங்கி முகமனுரைத்து அழைத்துவந்தனர். அவர் தன் முடியில் சூடிய பீலிவிழி வியந்தமைய புன்னகை மாறா கண்களுடன் அனைவரையும் தழுவி இன்சொல் பேசி அவைக்குள் வந்தார். அவையின் வலப்பக்க மூலையில் மென்பட்டுத்திரைக்கு அப்பால் அமர்ந்திருந்த அரசியர் நிரை நோக்கி சென்று அங்கே பொற்பீடத்தில் அமர்ந்திருந்த குந்தியிடமும் அருகே அமர்ந்திருந்த காந்தாரியிடமும் தலைவணங்கி மென்சொல் பேசினார்.

அவர்களைச் சூழ்ந்து காந்தார அரசியரும், பானுமதியும், துச்சளையும், அசலையும், சுபத்திரையும், தேவிகையும், பலந்தரையும், விஜயையும்,    கரேணுமதியும்  அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் ஓரிரு சொல் பேசினார். அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கௌரவர்களின் துணைவியர் நூற்றுவரிடமும் அவர் ஒருசொல் தனியாக பேசினார் என்று அவர்கள் உணர்ந்தனர்.  திரும்பி வருகையில் பீஷ்மரையும் துரோணரையும் வணங்கிவிட்டு தன் தமையனருகே சென்று அமர்ந்தார்.

தர்ப்பைப் பீடத்தில் முதல் எரிகுளத்தின் வலப்பக்கமாக வேள்வித்தலைவர் தௌம்யர் அமர்ந்திருந்தார். இடப்பக்கம் சிறிய மேடைமேல் போடப்பட்டிருந்த இந்திரப்பிரஸ்தத்தின் அரியணைகளில் வெண்பட்டு மூடப்பட்டிருந்தது. சௌனகரால் அழைத்து வரப்பட்ட தருமனும் துணைவியும் வேள்விப்பந்தலின் நுழைவாயிலில் அமர்ந்து தங்கள் உடலை தூய்மை செய்துகொள்ளும்பொருட்டு அங்கு அமைந்த சிறிய எரிகுளத்தில் வைதிகர் மூவர் அமைத்த தென்னெரியில் பலாச இலைகளை அவியளித்து தர்வி ஹோமத்தை செய்தனர். புலனின்பத்தால் மாசடைந்த உடலை அப்புகையால் மீட்டனர். மூன்று அழுக்குகளையும் அவ்வெரியில் விட்டு சிவந்த விழிகளுடன் எழுந்தனர். அவர்களின் ஆடைகளை சேர்த்துக்கட்டினர் வைதிகர். அரசியின் கைபற்றி இடம் வரச்செய்து தருமன் வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தார்.

ஆரம்பனீயம், க்‌ஷத்ரம், திருதி, வியுஷ்டி, திவிராத்ரம், தசபேயம் என்னும் ஆறுவகை எரிகளுக்கான ஆறு எரிகுளங்களாக முப்பத்தாறு எரிகுளங்களைச்சூழ்ந்து அவியூட்டுநர் அமர்ந்திருந்தனர். தருமனும் அரசியும் அவர்களை வணங்கி முனிவர்களையும் அந்தணரையும் அரசர்களையும் குடிகளையும் தொழுது எரிகுளங்களை வலம்செய்து கூப்பிய கைகளுடன் தௌம்யரை நோக்கி சென்றனர். தருமன் நெற்றி நெஞ்சு இடை கால் கை என ஐந்துறுப்புகளும் நிலம் தொட விழுந்து தௌம்யரை வணங்கினார். அவர் “வேதச்சொல் துணை நிற்க! எரி அணையாதிருக்கட்டும்! கொடி என்றும் இறங்காதிருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

அரசி கை நெற்றி முழங்கால் என மூன்று உறுப்புகள் நிலம் படிய தௌம்யரை வணங்கினாள். “அறம் வளர உடனுறைக! எரி என நெறி கொண்டிருக்க!  அன்னையென கொடிவழிகள் நினைவில் வாழ்க! ஓம், அவ்வாறே ஆகுக!” என்று தௌம்யர் வாழ்த்தினார். தௌம்யரின் மாணவராகிய பதினெட்டு வைதிகர்கள் வந்து தருமனை எதிர்கொண்டழைத்து வேள்வி மரத்தை நோக்கி கொண்டு சென்றனர். இளைய பாண்டவர்கள் நால்வரும் உருவிய வாட்களுடன் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

வேள்வியறிவிக்கப்பட்டதுமே இடம்பார்த்து வரையப்பட்ட வாஸ்துமண்டலத்தில் செம்பருந்தின் அலகில் நடப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்டு தளிரெழுந்த இரு மென்கிளை கொண்டிருந்த அத்தி மரத்தின் அருகே சென்று இருவரும் பணிந்தனர். பொற்குடங்களில் மும்முறை அதற்கு நீரூற்றினர். வைதிகர் அளித்த மஞ்சள் சரடை வேதம் ஒலிக்க அம்மரத்தில் கட்டி அதை அவ்வேள்விக்குரிய இறை எழவேண்டிய உயிர்ப்பீடமென ஆக்கினர்.

தருமன் அருகே அறத்துணையென நின்றிருந்த திரௌபதி தர்ப்பையால் கங்கை நீர் தொட்டு அதை வணங்கி அகல்சுடராட்டினாள். மலர்தூவி வணங்கி மீண்டாள். தம்பியர் புடை சூழ மும்முறை வேள்வி மரத்தைச் சுற்றி வணங்கி தனது அரியணை நோக்கி நடந்தார் தருமன். தௌம்யரும் பைலரும் அவரை வரவேற்று எதிர்கொண்டு அழைத்துச் சென்று அரியணை பீடத்தருகே நிறுத்தினர். ஐந்து ஏவலர் வந்து பட்டுத்திரையை விலக்க இந்திரப்பிரஸ்தத்தின் செவ்வொளிமணிகள் பதிக்கப்பட்ட அரியணை வேள்விக்கூடத்தின் பலநூறு பந்தங்களின் ஒளியில் கனல்குவையென ஒளியசைவுகொண்டது. தௌம்யர் அரியணைக்குமேல் கங்கைநீர் தெளித்து தூய்மை செய்து முறைப்படி தருமனை அழைத்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! குருகுலத்து விசித்திரவீரியனின் வழித்தோன்றலே! சௌனக வேதமரபின் புரவலரே! பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் தலைவரே! இங்கு யயாதியின் பெயரால் ராஜசூய வேள்வி ஒன்று நிகழவிருக்கிறது. இவ்வேள்வியை முடித்து பாரதவர்ஷத்தின் சத்ராஜித் என அரியணை அமரும்படி சௌனக வேத மரபின் வசிஷ்ட குருகுலத்தின் வைதிகனாகிய தௌம்யன் என்னும் நான் உங்களை வாழ்த்தி கோருகிறேன்.”

தருமன் தன் உடைவாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி “யயாதியின் வழிவந்தவனும் குருகுலத்தவனும் விசித்திரவீரியனின் வழித்தோன்றலும் யாதவப் பேரரசி குந்தியின் குருதியுமாகிய நான் இவ்வேள்வியை என் உடல் பொருள் உயிர் என மூன்றையும் அளித்து காப்பேன் என்று உறுதி கொள்கிறேன். துணை நிற்கட்டும் என் தெய்வங்கள்! அருளட்டும் என் மூதாதையர்! கனியட்டும் ஐம்பெரும் பருக்கள்! காக்கட்டும் எண்திசை தேவர்! அருகணைக என் ஆற்றலுக்கு உறைவிடமாகிய என் அறத்துணைவி! அருகமைக என்னிலிருந்து பிறிது அல்லாத என் இளையோர்!” என்றார். நான்கு பாண்டவர்களும் தங்கள் வாட்களை தௌம்யரின் காலடியில் தாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர்.

உருவிய வாளுடன் தருமன் ராஜசூய காவலனாக அரியணை அமர்ந்தார். அவர் அருகே திரௌபதி அமர்ந்தாள். தௌம்யர் அரிமலரும் கங்கைநீரும் தூவி அவரை வாழ்த்தியபின் திரும்பி அவை நோக்கி இருகைகளையும் விரித்து “அவையோரே! இன்று இவ்வேள்விக்கூடத்தில் பாரதவர்ஷத்தின் நூற்றுப்பன்னிரண்டாவது ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. இதுவரை இவ்வேள்வியை இயற்றி சத்ராஜித் என அறியப்பட்ட நூற்றுப்பதினொரு அரசர்களும் விண்ணுலகில் எழுந்தருளி இவ்வேள்வியை வாழ்த்துவார்களாக! அவர்களின் பெயர்களை இங்கு அறிவித்து எரிகுளத்தில் அவியளித்து நிறைவு செய்வோம். யயாதியும், ஹஸ்தியும், குருவும், சந்தனுவும், பிரதீபரும், விசித்திரவீரியரும் என நீளும் அழியாத அரசநிரையின் பெயரால் இங்கு இவ்வேள்வி நிகழவிருக்கிறது” என்றார்.

“அவ்வரசர் அமர்ந்த அரியணையையும் முடியையும் பாரதவர்ஷத்தின் முதன்மை அரசென்று ஒப்புக் கொண்டு இங்கு வந்திருக்கும் ஐம்பத்துஐந்து தொல்குடி ஷத்ரியர்களையும் அவர்களுடன் வாள் கொண்டு நிகர் நிற்கும் நூற்றுஎட்டு சிறுகுடி ஷத்ரியர்களையும் மண் வென்றதனால் முடி கொண்ட பிற அரசர்கள் அனைவரையும் தலைவணங்கி வரவேற்கிறேன். இங்கு தேவர்கள் எழுக! அவி கொள்ள தெய்வங்கள் எழுக! அவர்கள் அருள் பெற்ற மூதாதையர் வருக! ஐம்பெரும்பருக்கள் நிறைக! எண்திசைக்காவலர் சூழ்க! அவர்கள் அனைவரையும் உணவூட்டிக் காக்கும் எரி ஓங்குக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். வைதிகர்களும் முனிவர்களும் கைகளைத் தூக்கி “ஓம்! ஓம்! ஓம்!” என்று வாழ்த்தினர்.

தொடர்புடைய பதிவுகள்

தட்சிணாமூர்த்தி -கடிதங்கள்

$
0
0

1

ஜெ

தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்

விக்ரமாதித்தனை நான் இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். அன்று ஒரு குறிப்பிட்டவகையான சித்திரம்தான் உருவாகியது. இன்று இக்கட்டுரையை வாசிக்கையில் வேறு ஒரு சித்திரம் மனதில் வருகிறது. அவரது படமும் அதற்கு ஈடுசெய்கிறது

லௌகீகம் எல்லாரையும் வேட்டையாடுகிறது. ஆனால் கனவுகளையே லட்சியமாகக் கொண்டவர்களை அது அடித்துத் துவைத்துப் போட்டுவிடுகிறது. சமநிலை இருந்தால் மட்டுமே அதைக்கடந்து அடுத்தபக்கம் செல்லமுடியும் என்று தோன்றுகிறது

செந்தில்ராஜா

***

அன்புள்ள ஜெ

தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும் என்னும் கட்டுரை மிக நடைமுறை சார்ந்தது. ஆனால் அது இத்தனை கவித்துவமாக இருப்பது ஆச்சரியமானது.

தட்சிணாமூர்த்தி கருப்பசாமியாக ஆவதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன்

ஜெயராமன்

***

ஜெ,

தட்சிணாமூர்த்தியை நான் பார்த்ததில்லை. பலமுறை கருப்பசாமியை கண்டிருக்கிறேன்

நாங்கள் எல்லாம் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்தவர்கள். கருப்பசாமியைக் கொன்று பீடத்தில் உக்கார வைத்துவிட்டோம். அவர் கருப்பசாமியாக ஆடி மலையேறுகிறார். தன்னையே பலிகொடுக்கிறார்

நீங்கள் ஒரு அந்தரங்கத்திலே கருப்பசாமியை வைத்திருக்கிறீர்கள். அவரை முழுமையாக ஆடவிடுகிறீர்கள்

ராஜா குமாரசாமி

தொடர்புடைய பதிவுகள்

ஆண்மையின் தனிமை

$
0
0

vi

 

1992ல் நான் நித்யாவை அறிமுகம் செய்துகொண்டதிலிருந்து அவர் சமாதியான 1998 வரை மாதம் இருமுறை நித்யா குருகுலத்துக்கு செல்வேன். வெள்ளி, சனி ,ஞாயிறு அங்கு தங்குவேன். எப்போதும் அங்கே இருந்து கொண்டிருக்கும் பிரமையை அது அளித்தது. நான் அங்கிருக்கும் போதெல்லாம் நித்யா என்னுடனேயே பேசிக் கொண்டிருப்பார். சேர்ந்து நீண்ட நடை செல்வோம். தான் எழுதிக் கொண்டிருக்கும் நூல்களின் பணியை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு நான் இருக்கும் போது முழுக்க முழுக்க இலக்கியத்தையும் தத்துவத்தையும் பற்றியே நித்யா பேசுவது வழக்கம்.

என் வாழ்நாளில் முழுதாக வாழ்ந்த காலங்கள் என்று அதையே சொல்வேன். அப்போது எனக்குத் திருமணமாகி அஜிதன் பிறந்துவிட்டான். இனிய காதல் வாழ்க்கை. விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளும் விமர்சனக் கட்டுரைகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தொடர்ந்து தீவிர இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டிருந்தேன். பரவலாக அறியப்பட்ட இலக்கியவாதியாக இருந்தேன்.

தமிழ் இலக்கியத்திலும் குறிப்பிடும்படியான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. சிறுபத்திரிகையை ஒட்டியே நிகழ்ந்து கொண்டிருந்த இலக்கியச் செயல்பாடுகள் ஐராவதம் மகாதேவன் ஆசிரியத்துவத்தில் வந்த தினமணியின் தமிழ்மணி இணைப்பின் மூலமாகவும், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா மாத இதழ் மூலமாகவும், மாலன் ஆசிரியத்துவத்தில் வந்த இந்தியா டுடே இதழ் வழியாகவும் அழுத்தமான ஒரு மாற்றத்தை அடைந்தன. பெருவாரியான வாசகர்கள் இலக்கியத்துக்குள் வரத்தொடங்கினர். என் முதல்நூலான ரப்பர் வெளிவந்திருந்தது. அதன் மீதான விவாதங்கள் வழியாக நான் பரவலாக கவனிக்கப்பட்டிருந்தேன்.

அந்நாளில் ஒவ்வொரு வருகையிலும் ஊட்டி குருகுலம் எனக்கு ஒரு புதிய திறப்பை அளித்தது. நரம்பியல் சார்ந்த ஒரு புதிய கொள்கை, தத்துவத்தின் ஒரு புதிய காலகட்டம், இலக்கியத்தின் ஒரு புதிய வாசல் ஒவ்வொரு முறையும் திறந்தது. உலகின் மிகச்சாரமான அறிவியக்கத்துடன் நேரடித்தொடர்பு கொண்டிருப்பதான தன்னம்பிக்கை எனக்கு உருவானது.

தமிழ் சிற்றிதழ் சூழல் என்பது திரும்பத் திரும்ப இலக்கிய வடிவங்கள் என்ற சிறிய வட்டத்திற்குள்ளேயே தேங்கியிருந்த காலம் அது. ஆலிவர் சாக்ஸையோ, ரோஜர் பென்ரோஸையோ, கார்ல் சாகனையோ, கார்ல் பாப்பரையோ, விட்கென்ஸ்டைனையோ அச்சூழலில் எவரும் அன்று பேசிக் கொண்டிருக்கவில்லை. குருகுலத்தில் ஒவ்வொரு நாளும் அவர்களே பேசுபொருளாக இருந்தனர். நித்யா இருந்த போது ஊட்டி குருகுலம் என்பது ஒரு சர்வதேச சமூகம். அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், ஆஸ்திரேலியர்கள் என்று விதவிதமான கலைஞர்களும் ,இலக்கியவாதிகளும், ஆன்மீகத் தேடல் கொண்ட நாடோடிகளும், உளவியலாளர்களும் அங்கிருப்பார்கள். போதை அடிமைகளும், அரைப்பைத்தியங்களும் கூட நிறையவே இருப்பார்கள்.

நித்யாவின் காலை மாலை வகுப்புகளில் உலகின் எந்த மொழியிலும் கேள்விகள் எழும் என்று வேடிக்கையாக சொல்லப்படுவதுண்டு. அன்று ஜெர்மனியிலிருந்து வந்திருந்த உளவியலார் ஒருவர் உல்ஃப் காங் பௌலி என்னும் மாற்று உளவியலாளர் முன்வைத்த ஒரு கருத்தை கடுமையாக மறுத்து பேசிக் கொண்டிருந்தார். உள்ளத்தின் ஆழத்தில் ஒரு அணுவளவாக குடிகொள்ளும் ஒன்று திடீரென்று செயலாக மாறி வெளிப்படும்போது அது கொள்ளும் ஆற்றல் பற்றி வுல்ஃப் காங் பௌலி சொல்கிறார். ஜெர்மானியப் பேராசிரியர் அதை மறுத்து அனைத்தையும் ஃப்ராய்டுக்குள் கொண்டுசென்றார்

நித்யா “இதைப்பற்றி என்னைவிட வினயன் தான் பேசத்தகுந்தவன் .அவனைக் கூட்டிவா” என்றார். அங்கிருந்த ராமகிருஷ்ணன் எழுந்து சென்று அப்பால் முள்ளங்கித் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரைக் கூட்டி வந்தார். அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அங்கு வந்த பல நாட்களாக அவரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அழுக்குக் காவி உடை அணிந்திருந்தார். சமையலறையில் கடும் வேலைகளை அவரே செய்தார். எஞ்சிய நேரமெல்லாம் முள்ளங்கித்தோட்டத்திலும் உருளைக் கிழங்குத் தோட்டத்திலும் மண்ணில் உழைத்தார். வேலை இல்லாதபோது சமையலறைக்கு பின்பக்கம் சாம்பல் குவித்துப்போடப்பட்டிருக்கும் இடத்தில் குந்தி அமர்ந்து பீடியை ஆழ இழுத்தபடி தனக்குள் மூழ்கி அமர்ந்திருந்தார்.

அரைக்கிறுக்கர் என்றோ வேலை அடிமை என்றோ தான் அவரைப்பற்றி எண்ணியிருந்தேன். உடலெங்கும் மண்ணுடன் வந்த வினயா காலைக் கழுவியபின் உள்ளே வந்து அமர்ந்தார். ஜெர்மானிய பேராசியரின் பேச்சுக்கு சுருக்கமான ஆனால் திட்டவட்டமான மறுமொழி அளித்தார். உல்ஃப் காங் பௌலி சொல்லும் மனவெளிப்பாடு விஸ்லேஷணம் என்று தியானமரபில் அது சொல்லப்படுகிறது. ஜாக்ரத்தில் இருந்து ஸ்வப்னத்துக்கு ஒன்று செல்லும் போது ஆயிரம் மடங்கு சிறிதாகி ஆயிரம் மடங்கு எடைகொண்டும் இருக்கும். அங்கிருந்து சுஷுப்திக்கு செல்லும் போது மேலும் ஆயிரம் மடங்கு சிறிதாகி ஆயிரம் மடங்கு எடை கொள்கிறது சுஷுப்தியில் ஒரு அணுவளவாக விழுந்து கிடக்கும் ஓர் எண்ணம் அல்லது உணர்வு அங்கிருந்து ஜாக்ரத்தில் வெளிப்படக்கூடும். அசாதாரண உளவியல் கொண்டவர்களின் நடத்தையில் வெளிப்படும் முன்பின் இலாத தன்மை அத்தகையது. யோகத்தில் கட்டற்ற செயல்பாடுகளாக அது வெளிவருகிறது. பெரும் கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதப்படும் காப்பியங்களில் அது தென்படுகிறது.

வினயா பேசிக் கொண்டே செல்லச் செல்ல அதுவரை நான் வாசித்த காவியத்தன்மை கொண்ட நாவல்களில் வரும் பல அசாதாரண நிகழ்வுகளை என் நினைவிலிருந்து எடுத்து விளக்கிக் கொள்ள முடிந்தது. அறிதல் என்னும் பரவசத்தில் நான் கண்ணீர் மல்கினேன். பேசி முடிந்தபின் தலைவணங்கி வினயா எழுந்து மீண்டும் முள்ளங்கித்தோட்டத்திற்கு சென்றார். அன்று வகுப்பு கலைந்ததும் நான் வினயாவுடன் சென்று அவருடன் தோட்டப்பணி புரிந்தபடி பேசிக் கொண்டிருந்தேன். அவ்வாறுதான் நடராஜ குருவின் பிரியத்திற்குரிய மாணவராகிய வினய சைதன்யா எனக்கு அறிமுகமானார். நடராஜ குருவுக்கும் ஜான் ஸ்பியர்ஸுக்கும் மாணவர். ஃப்ரெடிக்கும் நித்ய சைதன்ய யதிக்கும் முனி நாராயணப்பிரசாதுக்கும் இளையவர்.

“அவன் சற்றும் வினயமில்லாதவன். ஆகவே தான் அவனுக்கு வினயா என்று பெயர் இருக்கட்டும் என்று நினைத்தேன்” என்று நடராஜ குரு சொன்னார் என்று நித்யா வேடிக்கையாகச் சொன்னார். வினயா குருகுலத்தின் எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாதவர். குருகுலத்தில் அசைவ உணவு உண்ணக்கூடாது, அவர் உண்பார். புகைபிடிக்கலாகாது, அவர் பிடிப்பார். பின்பு கஞ்சா பிடிக்கும் பழக்கம் வந்தது. துறவை உதறி திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளுக்குத் தந்தையானார். மீண்டும் காவி அணிந்தார். நித்யாவுக்குப்பின் குருகுலத்தின் தலைமைப்பொறுப்புக்கு வரவேண்டியவர் அவரே. ஆனால் எந்த அமைப்பையும் சார்ந்து இயங்க முடியாதென்பதால் அதை மறுத்துவிட்டார். மோட்டார் பைக்கில் மிக விரைவாகச் செல்லும் பழக்கம் கொண்டவர். திடீரென்று மறைந்து இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் சுற்றிவிட்டு மீண்டு வருவார். எங்கும் அவரை எதிர்நோக்கி எவரேனும் இருப்பார்கள். துறவிகள், சிந்தனையாளர்கள், கஞ்சா புகைப்பவர்கள்.

பின்பொருமுறை பெங்களூரில் நடந்த கன்னட இலக்கிய மாநாடு ஒன்றின் அவையில் நானும் இருந்தேன். வினயா உள்ளே நுழைந்தபோது பேசிக் கொண்டிருந்த யூ.ஆர்.அனந்தமூர்த்தி, “வினயா சைதன்யாவைப் போன்ற ஆசி பெற்ற மனிதர்கள் இந்த அவைக்கு வந்திருப்பது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது” என்றார். அந்த அவையே வினயாவை நோக்கிக் கைதட்டி வரவேற்றதைப்பார்த்தேன். டி.ஆர்.நாகராஜை நான் எடுத்த பேட்டியில் “இந்திய மனம் தன்னியல்பில் அசாதாரணமான சில உச்சங்களைச் சென்றடைய முடியும். அதற்கான ஓர் ரகசியப்பாதை நமது பண்பாட்டில் உள்ளது. உதாரணமாக நான் அறிந்த வினய சைதன்யா என்பவர்” என்றார். நான் “வினயாவை எனக்குத் தெரியும்” என்று சொன்னபோது மகிழ்ச்சியுடன் “எனக்கும் அவரைத் தெரியும்”என்றார்

மிலரேபாவின் பாடல்களை மலையாளத்திற்கு மொழி பெயர்த்தவர் வினயா. நாராயணகுருவின் காளி நாடகம் உட்பட பல படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார். கன்னட வசன கவிதைகளை ஆங்கிலத்திற்கும் மலையாளத்திற்கும் மொழிமாற்றம் செய்திருக்கிறார். நாராயணகுருவின் படைப்புகளை கன்னடத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். இவை ஒவ்வொன்றும் அசாதாரணமான தவம் கூடிய உரைநடை வெற்றிகள். ஆனால் முறைப்படி அமர்ந்து உழைப்பை ஒருங்குவிக்கும் வழக்கமே வினயாவிடம் இல்லை. எதையும் செய்தாகவேண்டுமென்பதில்லை. செய்யக்கூடாது என்றும் இல்லை. அவர் அந்தந்தக் கணங்களின் மனிதர். ஆழ்ந்து கற்றவர். ஆனால் கற்பிக்கும் ஆர்வம் அற்றவர். கேட்பவனின் எதிர்வினாக்களால் மட்டுமே அவரிடமிருந்து சொற்களை எடுக்கமுடியும்.

அசாதாரணமான நகைச்சுவை உணர்ச்சிகொண்டவர் வினயா. பல சமயம் ஒரு போக்கிரிச்சிறுவனுடன் உரையாடுகிறோம் என்னும் உணர்வை அடைவேன். “மலையாளத்தில் பக்தி இயக்கமே இல்லை” என்றார். நான் “அப்படியென்றால் துஞ்சத்து எழுத்தச்சன்?” என்றேன். “அது ஒரு துஞ்சத்தில் அல்லவா?” என்றார் . [துஞ்சம் என்றால் முனை]

வினயாவின் கட்டற்ற தன்மை எப்போதும் என்னை அவரிடமிருந்து அகற்றியிருக்கிறது. கொல்லைப்பக்கத்தில் அமர்ந்து கண்கள் ஒளிர கஞ்சா இழுக்கும் அவரை சற்று அப்பால் நின்றே எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பேன். வயலில் வேலை செய்யும்போது மட்டுமே அவரிடம் என்னால் அணுக முடிந்திருக்கிறது. மலையாள இலக்கியத்தை பற்றி உலக இலக்கியத்தைப்பற்றி அவர் அளிக்கும் முன்பிலாத அறிதல்கள், ஒருவேளை அவருக்கே முன்பு தெரிந்திராத அறிதல்கள், பல தருணங்களில் என்னை உச்சகட்ட உள எழுச்சிக்கு கொண்டு சென்றிருக்கின்றன. அவருடைய ஆளுமையில் ஒருபோதும் என்னை அருகமையச்செய்யாத ஒன்றுள்ளது. அது அவர் இவை அனைத்திலிருந்தும் முன்பே உதிர்ந்துவிட்டவர் என்பது.

ஒருபோதும் அவரிடமிருந்து என்னை விலகச்செய்யாத பெரும் கவர்ச்சி ஒன்றும் உள்ளது அது கருத்துக்களின் ஆண்மை என்பேன். கருத்துக்களை நாம் அடையும்போதே அவற்றுடன் ஒட்டிக் கிடக்கும் வேறுபல கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆகவே அவை நம் கருத்துக்களாக இருக்கையிலேயே பிற கருத்துக்களின் சாயலுடனும் இருக்கின்றன. ஆகவே எப்போதும் அவை நமக்கு ஐயம் தருகின்றன. அந்த ஐயத்தால் நாம் அவற்றை மூர்க்கமாக ஓங்கிச் சொல்வதுண்டு. தயங்கி மென்று விழுங்குவதும் உண்டு.

தன் அனுபவத்தை சொல்லும் தயங்காமை மிகப்பெரிய ஆளுமைகளின் கருத்துக்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. என் அறிதலில் காந்தி தன் கருத்துக்களில் இந்த தயங்காமையைக் கொண்டிருந்தார். அதற்கிணையான ஒரு தயங்காமை வினயாவின் கருத்துக்களில் உண்டு. அதையே கருத்துக்களின் ஆண்மை என்பேன். எங்கும் எவர் முன்னிலையிலும் ‘ஆம், இது நான் அறிந்தது’ என்று சொல்வதற்கான அச்சமின்மை அது. அப்படிச் சொல்லவேண்டுமென்றால் அக்கருத்து முழுமுற்றான அனுபவமாக முன்னரே ஆகிவிட்டிருக்க வேண்டும். தன் அனுபவமாக அல்லாத கருத்துக்களை முழுக்க விலக்கும் நேர்மையும் வேண்டும்.

அமெரிக்க கல்வியாளரான பீட்டர் மொரேஸ் ஒருமுறை குருகுலத்தில் பேசிக்கொண்டிருக்கையில் ஈடிஃபஸ் காம்ப்ளஸைப்பற்றி ஒரு குறிப்பை சொன்னார். இந்திய சிந்தனை மரபின் ஒரு பகுதியுடன் இணைத்து அவர் அதைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கையை நீட்டி எழுந்த வினயா “ஈடிபஸ் காம்பள்ஸ் என்பது அறிதலின் ஒரு சிறிய பக்கம் மட்டுமே. உலகெங்கும் செல்லுபடியாகும் நாணயம் அல்ல அது. இந்தியாவில் ஒர் இளைஞனின் பிரச்னை ஈடிபஸ் உளச்சிக்கல் அல்ல. தந்தையை பெற்றுக் கொள்ளுதல்தான்” [inheritance] என்றார். அந்த குரலில் இருந்த தோரணையை அப்போதிருந்த முகத்தை பின்பு ஒருபோதும் மறக்காத வண்ணம் என் சிந்தையில் தீட்டி வைத்திருக்கிறேன்.

ஊட்டியில் நடந்த ஓரிரு கவியரங்குகளை நித்யாவின் பொருட்டு குருகுலத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தபடி வினயா தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கவியரங்கின் தொடக்கத்தில் ஐந்து நிமிடச் சிற்றுரையை இவ்வாறு முடித்தார். “இலைநுனிகளைத் தொடும்படி பெருவெள்ளமெழுகையில் உங்கள் தனிக்கிணறுகளுக்கு என்ன பொருள்? அது கீதை. நண்பர்களே பெருவெள்ளம் மண்ணுக்கடியிலும் பெருக்கெடுக்கிறது.” அந்த அரங்கில் அன்று பேசப்பட்ட எக்கவிதையையும் விட மேலான ஒருவரியாக அது நின்றது. அரங்கு முடியும் வரை தமிழ்க் கவிஞர்களும் மலையாளக்கவிஞர்களும் பல்வேறு தருணங்களில் அவ்வரிகளுக்குச் சென்று சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.

ஆனால் அக்கவியரங்கு நிகழந்த பெரும்பாலான தருணங்களில் வினயா சமையலறையில் சப்பாத்தி மாவு பிசைந்தார். உருளைக் கிழங்கு கூட்டு சமைத்தார். சாதம் வடித்தார். சாம்பார் வைத்தார். பெரிய கலங்களைத் தூக்கிக் கொண்டு வந்து வைத்து அத்தனை பேருக்கும் பரிமாறினார். அந்த பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு இரவு சமையலறைக்குள்ளேயே பெஞ்சில் படுத்து தூங்கினார்.

ஆண்மை என்ற சொல்லுக்கு ஓர் உலகியல் சமூகம் பலவகையான பொருள்களை அளிக்கிறது. முழுமையான ஆண்மை என்பது முழுமுற்றான தனிமையின் விளைவென்று தோன்றுகிறது. துறவிகளன்றி பிறரிடம் அது கைகூடுமா என்று ஐயம் கொள்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57

$
0
0

[ 3 ]

இந்திரப்பிரஸ்த நகரின் வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்திருந்த கோபுரத்தில் கண்டாமணி கீழிருந்து இளங்களிறொன்று இழுத்த வடத்தால் நாவசைக்கப்பட்டு “ஓம்! ஓம்! ஓம்!” என்று முழங்கியது. அவ்வோசையின் கார்வை நகரை நிறைத்தபோது  குடிகள் தெருக்களிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி கைகூப்பி விண்ணகத்தை நோக்கி “எந்தையரே, தெய்வங்களே, அருள்க!” என்று கூவினர். ஒற்றைக்குரலென திரண்ட அம்முழக்கம் எழுந்து வேள்விச்சாலையை சூழ்ந்தது.

பைலர் தருமனின் அருகே சென்று வணங்கி அவர் ஆணையை கோரினார். இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடி வெண்குடை கவித்து கையில் செங்கோலுடன் அமர்ந்திருந்த தருமன் “தெய்வங்கள் அருள்க! வேள்வியில் எரியெழுக!” என்று ஆணையிட்டார். “அவ்வாறே” என்றபின் பைலர்  வைதிகர் நிரையின் முகப்பில் எழுந்த பன்னிரு இளையோரிடம் “இளைய வைதிகரே, வேள்விக்கென ஆறுவகை எரிகளை எழுப்புமாறு இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் ஆணை வந்துள்ளது. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவர்கள் தலைவணங்கி நிரை வகுத்துச்சென்று தௌம்யரை வணங்கினர். தௌம்யர் அளித்த உலர்ந்த தர்ப்பைச் சுருளை வாங்கிக்கொண்டு வந்து பைலருக்கு முன் நின்றனர். பைலர் எரி எழுப்புவதற்கான அரணிக்கட்டைகளை அவர்களுக்கு அளித்தார். அவற்றை கொண்டுவந்து ஆறு வரிகளாக அமைந்த முப்பத்து ஆறு எரிகுளங்களில் ஒவ்வொரு நிரையின்  தொடக்கத்திலும் நின்று வணங்கினர்.

எரிகுளங்களைச் சூழ்ந்து அமர்ந்திருந்த வைதிகர்கள் தர்ப்பை சுற்றிய கைகளைத்தூக்கி “ஆகவனீயம் எரி எழுக! கார்கபத்யம் எழுக! தட்சிணம் எழுக!” என்று வாழ்த்தினர். இளைய வைதிகர் இடக்கால் மடித்து நிலத்தில் அமர்ந்து அரணிக்கட்டையின் அடிக்குற்றியை தரையில் வைத்து உள்ளங்கைக் குழிவில் நிலைக்கழியை நாட்டி அவற்றில் சுற்றப்பட்ட கயிற்றை மத்துபோல விரைந்து இழுத்து சுழலச்செய்தனர். புறா குறுகும் ஒலி போல அரணிக்கட்டைகளின் ஒலி எழுந்தது.

குழிக்குள் சுழன்ற கட்டை வெம்மை கொள்ள அனைத்து விழிகளும் அவற்றையே நோக்கிக் கொண்டிருந்தன. முதல் எரி எது என்பது வேள்வியில் எழுந்து வரும் முதல் தெய்வம் எது என்பதன் அறிவிப்பு.  மூன்றாவது கட்டையில் தர்ப்பைச் சுருள் புகைந்து பற்றிக்கொண்டதும் வைதிகர்கள் தங்கள் வலக்கையைத் தூக்கி “வெற்றி கொள்பவனாகிய இந்திரனே இங்கெழுக! உன் இடியோசை எழுக! மின்கதிர் எழுக!” என்று வாழ்த்தினர். ஆறாவது கட்டை அடுத்ததாக பற்றிக்கொண்டது. நான்காவது கட்டையும் ஒன்றாவது கட்டையும் இரண்டாவது கட்டையும் ஐந்தாவது கட்டையும் இறுதியாக பற்றிக்கொள்ள ஆறு தீயிதழ்களுடன் வைதிக இளைஞர்கள் எழுந்தனர்.

பைலர்  முதலில் எரிந்த இந்திரனின் சுடரை எடுத்து முதல் எரிகுளத்தில் அடுக்கப்பட்டிருந்த பலாச விறகின் அடியில் வைத்தார். தர்ப்பையை உடன் வைத்து தர்ப்பையாலான விசிறியால் மெல்ல விசிறியபோது பலாசம் சிவந்து கருகி இதழ் இதழாக தீ எழுந்தது. சூழ்ந்தமர்ந்திருந்த அவியளிப்போர் உரக்க வேதம் முழங்கினர். நெய்விட்டு அத்தழலை எழுப்பி அதிலிருந்து அடுத்தடுத்த எரிகுளங்களை அனல் ஆக்கினர். ஆறு எரிகளும் முப்பத்தாறு எரிகுளங்களில் மூண்டெழுந்தபோது வேதப்பேரொலி உடன் எழுந்தது. வேதத்தின் சந்தத்திற்கு இயைந்தாடுபவைபோல நெளிந்தாடின செந்தழல்கள்.  ‘இங்கு!’ ‘இங்கு!’ என்றன. ‘இதோ!’ ‘இதோ!’ என்றன. ‘அளி!’ ‘அளி!’ என நா நீட்டின. ‘இன்னும்!’ ‘இன்னும்!’ என்று உவகை கொண்டன. ‘கொள்க!’ ‘கொள்க!’ என்று கையசைத்தன.

நெய்யும் மலர்களும் அரிமஞ்சளும் எண்மங்கலங்களும் முறை அவியாக்கி வேள்வித்தீயை நிறுத்தினர் வைதிகர். நறும்புகை எழுந்து குவைக்கூரைகளில் திரண்டு மெல்ல தயங்கி பிரிந்து கீழிறங்கி வேள்விச்சாலையை வெண்பட்டுத்திரையென மூடியது. வெளியிலிருந்து பதினெட்டு பெருவாயில்களினூடாகவும் உள்ளே வந்த காற்று வெண்பசுக்களை இடையன் என அப்புகையைச் சுழற்றி ஓட்டிச் சென்றது. காற்று வந்தபோது அசைவு கண்ட நாகமெனச் சீறி மேலெழுந்து நாநீட்டி நெளிந்தாடிய தழல்கள் காற்று மறைந்ததும் மீண்டும் அடங்கி பறந்து விறகில் வழிந்து நெய் உண்டு பொறி சிதற குவிந்து கிழிந்து பறந்து துடித்தாடின.

பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவித்தார். வைதிகர் அனைவரும் வலக்கையை தூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” எனும் ஒலியெழுப்பி அதை ஏற்றனர். பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக்குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த  சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்தனர். அவற்றை தௌம்யரிடம் காட்டி வாழ்த்து பெற்ற பின்னர் அவையமர்ந்திருந்த முனிவர்களிடமும் வைதிகர்களிடமும் அவற்றைக்காட்ட ஒவ்வொருவரும் தங்கள் தர்ப்பை மோதிரம் அணிந்த வலக்கையால் அவற்றைத் தொட்டு வாழ்த்தினர். பதினெட்டு சோமக்கொடிச்சுருள் கூடைகளும் எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன.

பைலர் தருமனை வணங்கி சோமச்சாறு எடுக்க அனுமதி கோரினார். “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டார். மரத்தாலான நூற்றெட்டு உரல்கள் அமைக்கப்பட்டன. வைதிகர்கள் எடுத்தளிக்க இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கினர். பின்னர் அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்கினர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதினர் வைதிகர். அதன்பின் அன்னம் ஆகுதியாக்கும் இடா அளிக்கையையும் நெய்யை அனலாக்கும் ஆஜ்யம் என்னும் அளிக்கையையும் தொடங்க தௌம்யரிடம் ஆணை பெற்று தருமனிடம் ஒப்புதல் பெற்று பைலர் அறிவித்தார். மரச்சக்கரங்கள் கொண்ட நூற்றெட்டு வண்டிகளில் அமைந்த மூங்கில் கூடைகளில் ஆவியெழும் அன்ன உருளைகள் கொண்டுவரப்பட்டன. எரிகுளங்களுக்கு அருகே அவை நிறுத்தப்பட்டு கூடைகள் இறக்கப்பட்டன.

ஒவ்வொரு கூடையிலிருந்தும் ஒரு கவளம் அன்னம் எடுத்து எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்தனர். எண்திசை தேவர்களுக்கும் எட்டு முறை அன்னம் அளிக்கப்பட்டது. அதன்பின் தேனும் இன்கனிச்சாறும் பாலும் கலந்த மதுபர்க்கம் அவியாக்கப்பட்டது. சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. முதலில் மதுபர்க்கமும் பின்னர் சோமமும் இறுதியாக அன்னமும் உண்ட அவர்கள்  கைகூப்பி எரிகுளத்தில் எழுந்த தேவர்களை வாழ்த்தி வணங்கினர். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெருங்குடிகளும் வணிகர்களும் அமர்ந்த கிளையவைகளுக்கு மதுபர்க்கமும் சோமமும் அன்னமும் சென்றன. ஓசையின்றி அவை இறுதி வரை கைமாறி அளிக்கப்பட்டன.

அன்ன அளிக்கை முடிந்ததும் தௌம்யர் எழுந்து வந்து அவையை வணங்கி “இங்கு தேவர்கள் எழுந்தருளியுள்ளனர். இவ்வேள்வி நிகழும் பன்னிரு நாட்களும் இந்நகரை வாழ்த்தியபடி அவர்கள் இவ்வெளியில் நின்றிருப்பார்கள். தேவர்கள் எழுந்த மண் தீங்கற்றது. விண்ணுக்கு நிகரானது. இதில் நடமாடுபவர்கள் அனைவரும் தேவர்கள் என்றே கருதப்படுவார்கள். உவகை கொள்வோம். அன்பில் தோள் தழுவுவோம். மூதாதையரை எண்ணுவோம். தெய்வங்களுக்கு உகந்த உணவை உண்போம். தேவர்கள் மகிழும் சொற்களை பேசுவோம். ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவையமர்ந்திருந்த வைதிகர்கள் வேதம் ஓதியபடி திரும்பி அரிமலரையும் கங்கைநீரையும் அரசர் மீதும் குடிகள் மீதும் தெளித்து வாழ்த்தினர்.

தருமன் எழுந்து அவையோரை வணங்கி “இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உகந்த உணவு அனைத்தும் சித்தமாக உள்ளன. ஒவ்வொருவரின் கால்களையும் தொட்டு சென்னி சூடி உணவருந்தி மகிழ்க என்று யயாதியின், ஹஸ்தியின், குருவின், பிரதீபரின், சந்தனுவின், விசித்திரவீரியரின் பெயரால் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் உணவுண்ட மிச்சில் என் மூதாதையருக்கு உகந்த பலியாக ஆகுக!” என்று வேண்டிக் கொண்டார். உணவுக்கூடத்தை நடத்திய யுயுத்ஸுவும் துச்சாதனனும் அவைக்கு வந்து வணங்கி அனைவரையும் உணவுண்ணும்படி அழைத்தனர்.

துச்சாதனன் உரத்தகுரலில் “அனல் தொடா உணவுண்ணும் முனிவர்களுக்கு கிழக்கு வாயிலினூடாக செல்லும் பாதையின் இறுதியில் அமைந்த சோலைக்குள் கனிகளும் தேனும் காய்களும் கிழங்குகளும் ஒருக்கப்பட்டுள்ளன” என்றான். “உயிர் கொல்லப்படாத உணவுண்ணும் வைதிகர்களுக்காக மேற்கு வாயிலின் வழியாக சென்றடையும் உணவுக்கூடத்தில் அறுசுவைப் பண்டங்கள் சித்தமாக உள்ளன. ஊனுணவு விழையும் ஷத்ரியர்களுக்காக பின்பக்கம் தெற்கு வாயிலினூடாக செல்லும் பாதை எட்டு உணவுப் பந்தல்களை சென்றடைகிறது.”

ஷத்ரியர் கைகளைத் தூக்கி ‘ஆஆஆ’ என கூவிச் சிரித்தனர். துச்சாதனன் “வடக்கே குளிர்நிலத்து அரசர்களுக்குரிய உணவு முதல் பந்தலிலும், மேற்கே பாலை நில அரசர்களுக்கு உரிய உணவு இரண்டாவது பந்தலிலும், காங்கேய நிலத்து அரசர்களுக்குரிய கோதுமை உணவு மூன்றாவது பந்தலிலும், காமரூபத்துக்கும் அப்பால் உள்ள கீழைநாட்டு அரசர்களுக்கான அரிசியுணவு நான்காவது பந்தலிலும், மச்சர்களுக்கும் நிஷாதர்களுக்கும் உரிய மீனுணவு ஐந்தாவது பந்தலிலும், விந்திய நிலத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய  உணவு ஆறாவது பந்தலிலும், எரியெழும் தென்னகத்து உணவுகள் ஏழாவது பந்தலிலும், பீதர் யவனர் நாட்டு உணவுகள் எட்டாவது பந்தலிலும் அமைந்துள்ளன. அனைத்துப் பந்தல்களிலும் உணவுண்ணும் மல்லர்களையே மூதாதையர் விழைவர்” என்றான்.  அவை சிரிப்பால் நிறைந்தது.

துச்சாதனன் “வணிகர்களுக்கும் பெருங்குடிமக்களுக்குமான உணவுச்சாலைகள் அவர்களின் பந்தல்களிலிருந்து பிரிந்து செல்லும் பாதைகளின் இறுதியில்  அமைந்துள்ளன. உணவுக் குறை ஏதும் சொல்ல விழைபவர்கள் தங்கள் மேலாடையை தலைக்கு மேல் தூக்க வேண்டுமென்றும், அடுமனையாளர்களும் அவர்களை அமைத்திருக்கும் நானும் யுயுத்ஸுவும் அவர்களை தேடிவந்து குறைகளைக் கேட்டு ஆவன செய்வோம் என்றும் அரசரின் சார்பில் அறிவிக்கிறோம்” என்றான்.

எரிகுளங்களின் முன் அமர்ந்திருந்த அவியளிப்போரின் முதல் நிரை நெய்யூற்றி வேதம் ஒலித்தபடியே எழ அவர்களுக்கு வலப்பக்கமாக வந்த அடுத்த நிரையினர் அணுகி அவர்களின் நெய்க்கரண்டியை  வாங்கி வேதமோதியபடியே அமர்ந்தனர். உணவுண்பதற்காக முனிவர்களும் வைதிகர்களும் அரசர்களும் குடிகளும் வணிகர்களும் ஓசையின்றி எழுந்து இயல்பாக அணிவகுத்து பாதைகளினூடாக மெல்ல வழிந்தோட சற்று நேரத்தில் எரியூட்டுபவர்கள் அன்றி பிறிதெவரும் இன்றி அம்மாபெரும் வேள்விக்கூடம் ஒழிந்தது. தருமன் திரௌபதியுடன் எழுந்து அவையை வணங்கி அரியணை மேடையிலிருந்து இறங்கினார்.

சௌனகர் வந்து அவரை வணங்கி “முறைப்படி இன்று தாங்கள் மூதாதையருக்கு உணவளித்து நிறைவூட்டிய பின்னரே விருந்துண்ணவேண்டும், அரசே” என்றார். இளைய பாண்டவர்கள் சூழ வேள்விக்கூடத்திலிருந்து தெற்கு வாயிலினூடாக வெளியே சென்ற தருமன் அங்கிருந்த சிறு மண்பாதை வழியாக சென்று  சோலைக்குள் ஓடிய சிற்றோடைக்கரையில் கூடிய வைதிகர் நடுவே தன் தேவியுடன் தர்ப்பை மேல் அமர்ந்தார். ஏழு கவளங்களாக பிடிக்கப்பட்ட அன்னத்தை  நுண்சொல் உரைத்து நீரில் இட்டு மூழ்கி விண்வாழ் மூதாதையருக்கு உணவளித்து வணங்கினார். ஈரத்துடன் கரையேறி தென்திசை நோக்கி மும்முறை வணங்கி உணவுண்டு அமையுமாறு தென்புலத்தாரை வேண்டினார்.

ஏவலர் வெண்திரை பிடிக்க உள்ளே சென்று ஆடை மாற்றி மீண்டும் அரச உடையணிந்து வெளிவந்து உணவுப்பந்தலை அடைந்தார். அங்கு பல்லாயிரம் நாவுகள் சுவையில் திளைத்த ஓசை பெருமுழக்கமென எழுந்து சூழ்ந்தது. “வேள்விக்கூடத்தைவிட மிகுதியான தேவர்கள் இங்குதான் இறங்கியிருப்பார்கள்!” என்றான் பீமன். தருமன் “இளிவரல் வேண்டாம், மந்தா. இது நம் மூதாதையர் உலவும் இடம்” என்றார். பீமன் “ஆம், வேறு எவர் இங்கு வந்திராவிட்டாலும் ஹஸ்தி வந்திருப்பார். அதை என்னால் உறுதிபட சொல்லமுடியும்” என்றான்.

தருமன் சினத்துடன் “பேசாதே! முன்னால் போ!” என்றார். பீமன் சிரித்தபடி முன்னால் செல்ல இடைப்பாதையினூடாக ஓடி வந்த துச்சாதனன் “அரசே, உணவுக்கூடங்கள் அனைத்தும் நிறைந்து நெரிபடுகின்றன. இதுவரை ஒரு மேலாடைகூட மேலெழவில்லை” என்றான். பீமன் “மேலாடை எழாதிருக்காது. இப்போதுதானே அனைவரும் மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள்? மதுவை குறை சொல்வது எவருடைய இயல்பும் அல்ல. உணவு உண்டு முடிக்கையில் மேலாடைகள் எழும்” என்றான். துச்சாதனன் புரியாமல் “ஏன்?” என்றான்.  பீமன் “மேலும் உண்ணமுடியவில்லை என்னும் குறையை உணராத ஊண் விருப்புள்ளவர்கள் எவரிருக்கிறார்கள்?”  என்றான்.

துச்சாதனன் நகைத்தபடி “முனிவர்களையும் வைதிகர்களையும் இன்மொழி சொல்லி ஊட்டும் பொறுப்பை யுயுத்ஸுவிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றான். பீமன் “ஆம், அவன் அதற்குரியவன்தான். ஒவ்வொரு தலைமுறையிலும் அஸ்தினபுரியில் ஒரு விதுரர் இருக்கிறார்” என்றான். “மந்தா, உன் சொற்கள் எல்லை மீறுகின்றன” என்று தருமன் மீண்டும் முகம் சுளித்தார்.

“மூத்தவரே, நாம் ஏன் இங்கு வீண் சொல்லாட வேண்டும்? நாம் இருக்க வேண்டிய இடம் உணவுக்கூடம் அல்லவா?” என்றான் துச்சாதனன். அவர்கள் இருவரும் தோள் தழுவிச்செல்ல புன்னகையுடன் திரும்பிய தருமன் அர்ஜுனனிடம் “இளையவனே, நான் விழைந்த காட்சி இதுவே. நகர் நிறைவு நாளில் நிகழ்ந்தவற்றுக்குப் பிறகு இப்படி ஓர் தருணம் வாய்க்குமென்று எண்ணியிருக்கவே இல்லை”  என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

அவன் முகத்தில் புன்னகை வரவில்லை என்பதைக் கண்டு “துரியோதனன் இருண்டிருக்கிறான். அருகே அங்கனும் அதே இருள் கொண்டிருக்கிறான். அதை நான் பார்த்தேன். ஆனால் இளைய கௌரவர்களும் அவர்களின் மைந்தர்களும் வந்த சற்று நேரத்திலேயே உவகை கொள்ளத்தொடங்கிவிட்டனர்” என்றார் தருமன். “அவர்கள் எளியவர்கள்” என்றான் அர்ஜுனன்.

தருமன் “ஆம், அவ்வெளிமையே அவர்கள்மேல் பெரும் அன்புகொள்ள வைக்கிறது” என்றார். “காட்டு விலங்குகளின் எளிமை” என்றான் அர்ஜுனன். தருமன் திரும்பி நோக்கி அவன் எப்பொருளில் அதை சொன்னான் என்று உணராமல் தலையை மட்டும் அசைத்தார். உணவுக்கூடத்திலிருந்து வெளிவந்த துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சுபாகுவும் பீமனை  அழைத்தபடி உள்ளே நுழைந்தனர்.

தருமன் முதலில் முனிவர்கள் உணவுண்ட சோலைக்கு சென்றார். திரௌபதி பெண்டிரின் உணவறைகளுக்கு சென்றாள். ஒவ்வொரு குருகுலத்தையும் சார்ந்த முனிவர்களை அணுகி தலைவணங்கி இன்சொல் உரைத்து உண்டு வாழ்த்தும்படி வேண்டினார் தருமன். அவர்கள் உணவுண்ட கையால் அவன் தலைக்கு மேல் விரல் குவித்து “வளம் சூழ்க! வெற்றியும் புகழும் நிறைக!” என்று வாழ்த்தினர். பின்னர் வைதிகர் உணவுண்ட கூடங்களுக்கு சென்றார். அங்கு காட்டுத்தீ பற்றி எரியும் குறுங்காடுபோல் ஓசையும் உடலசைவுகளும் நிறைந்திருந்தன. பரிமாறுபவர்களை வைதிகர்கள் பிடித்திழுத்து உணவை தங்கள் இலைகளில் அள்ளிக் கொட்ட வைத்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்து உணவை பாராட்டியும், வசைபாடியும், வெடித்து நகைத்தும் உண்டனர்.

அர்ஜுனன் “இவர்களுக்கு உகந்த வேள்வி இதுதான் போலும்!” என்றான். “வேண்டாம்! அத்தகைய சொற்களை நான் கேட்க விழையவில்லை” என்றார் தருமன். “என் அரசில் உணவருந்தும் ஒலிக்கு இணையானது பிறிதில்லை, இளையோனே.” அர்ஜுனன்  ”வருந்துகிறேன், மூத்தவரே” என்றான். “நீங்கள் நால்வருமே பலநாட்களாக நிலையழிந்திருக்கிறீர்கள். தீயதென எதையோ எதிர்பார்க்கிறீர்கள்” என்றார் தருமன். “இதுவரை இவ்வேள்வி வந்துசேருமென எவர் எண்ணினீர்கள்? இது மூதாதையர் அருள். அது நம்மை இறுதிவரை கொண்டுசெல்லும்.” அர்ஜுனன் “ஆம்” என்று பெருமூச்சுவிடுவதைப்போல சொன்னான்.

தருமன் வைதிகர்களின் பந்திகளினூடாக கை கூப்பி நடந்து உணவிலமர்ந்த மூத்தவர்களிடம் குனிந்து இன்சொல் சொன்னார். “உண்ணுங்கள்! உவகை கொள்ளுங்கள்! உத்தமர்களே, உங்கள் சுவைநாவுகளால் என் குலம் வாழ வாழ்த்துங்கள்!” என்றார். “குறையேதும் உளதோ?” என்றொரு முதியவரிடம் கேட்டார். “ஒரு வாயும் இரு கைகளும் கொடுத்த இறைவனிடம் அன்றி பிறரிடம் சொல்ல குறைகள் ஏதும் இல்லை” என்றார் அவர். அருகிலிருந்த இன்னொரு முதியவர் “தன் வயிறைப்பற்றி அவருக்கு எந்தக் குறையும் இல்லை பார்த்தீர்களா?” என்றார். சூழ்ந்திருந்த வைதிகர்கள் உரக்க நகைத்தனர்.

அரசர்களின் உணவறையில் சிறுசிறு குழுக்களாகக் கூடி அமர்ந்து நகைத்தும் சொல்லாடியும் உணவுண்டு கொண்டிருந்தனர். மூங்கில் குவளைகளில் மதுவும் ஊனுணவும் அனைத்து திசைகளில் இருந்தும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. பீமனும் கௌரவர்களும் அவர்கள் நடுவே உலவி ஒவ்வொருவரையும் நோக்கி பரிமாற வைத்துக்கொண்டிருந்தனர். “ஒரு நோக்கிலேயே பாரதவர்ஷத்தின் அரசியலை காணமுடிகிறது” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்று தருமன் புன்னகை செய்தார்.

தருமன் பீஷ்மரை அணுகி வணங்கி “இன்னுணவு கொள்ளுங்கள், பிதாமகரே” என்றார். பீஷ்மர் “நான் அரண்மனை உணவு உண்டு நெடுநாட்களாகிறது. நாவு சுவை மறந்துளதா என்று பார்த்தேன். இல்லை. சொல் மறந்தாலும் அது சுவை மறப்பதில்லை” என்றார்.  தருமன் “நாங்கள் உங்களை பிதாமகர் என எண்ணியிருப்பது வரை உங்கள் சுவை நாவில் அழியாமலிருக்கும், பிதாமகரே” என்றார். “அவ்வண்ணமென்றால் எனக்கு விடுதலையே இல்லை என்று பொருள்” என்று பீஷ்மர் சிரித்தார்.

திருதராஷ்டிரர் உணவுண்ட இடத்தை அணுகிய தருமன் தலைவணங்கி “உகந்த உணவு என்று எண்ணுகிறேன், தந்தையே” என்றார். இருபுறமும் இரு மடைப்பள்ளியர் நின்று உணவை அள்ளிப்பரிமாற இருகைகளாலும் கவந்தன் போல் பேருருளையை உருட்டி வாயிலிட்டு பற்கள் அரைபட மூச்சிரைக்க உண்டு கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவர் குரல் கேட்டு தலையை சற்றே சரித்து “உண்கையில் பேசுவது என் வழக்கமல்ல. இருப்பினும் இந்நல்லுணவுக்காக உன்னை வாழ்த்துகிறேன்” என்றபின் செல் என்பது போல கையசைத்தார்.

மீண்டும் தலைவணங்கி அகன்று புன்னகையுடன் தருமன் துரியோதனனை அணுகினார். அவன் அருகே அமர்ந்திருந்த கர்ணன் மெல்லிய குரலில் “அரசர்!” என்றான். துரியோதனன் திரும்பிப் பார்த்து மீசையை நீவியபடி புன்னகைத்தான். “அஸ்தினபுரியின் அரசே, இவ்வேள்வியில் தாங்களும் அன்னம் கொள்ள வந்தமைக்காக  பெருமை கொள்கிறேன்” என்றார் தருமன்.  துரியோதனன் “நன்று” என்று மட்டும் சொல்லி விழிதிருப்பிக் கொண்டான். கர்ணன் “நல்லுணவு, அரசே” என்றான். தருமன் அவர்கள் மேலும் ஒரு சொல்லேனும் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தவர் போல நின்றார். அவர்கள் விழிதிருப்பவில்லை.

தருணமறிந்த அர்ஜுனன் “பகதத்தர் அங்கு உணவுண்கிறார், மூத்தவரே” என்று தருமனை மெல்ல தொட்டு சொல்ல தருமன்  அவர்களிருவருக்கும் தலைவணங்கி பகதத்தரை நோக்கி சென்றார். திருதராஷ்டிரரைப் போலவே கால்விரித்தமர்ந்து இரு ஏவலரால் பரிமாறப்பட்டு படைக்கலப் பயிற்சி கொள்பவர் போல உணவுண்டுகொண்டிருந்த பகதத்தர் தொலைவிலிருந்தே அரசரை நோக்கி “இந்திரப்பிரஸ்தம் இனி முதன்மையாக உணவுக்கென்றே பேசப்படும், தருமா” என்றார். தருமன் “அவ்வாறே ஆகுக, மூத்தவரே! அன்னத்திலிருந்தே அனைத்தறங்களும் என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்றார்.

கூடி அமர்ந்து உண்டுகொண்டிருந்த பலராமரையும் வசுதேவரையும் சல்யரையும் சென்று பார்த்து முகமன் சொன்னார். சௌனகர் வந்து அவரருகே நின்று ஒவ்வொரு அரசரையாக நினைவூட்டி அழைத்துச்சென்று ஊண்முகமன் சொல்ல வைத்தார். பின்னர் குடியவையிலும் வணிகர் அவையிலும் சென்று கைகூப்பி அனைவரையும் உண்டு மகிழும்படி வேண்டி முகமன் உரைத்தார்.

உணவு முதற்பந்தி முடிந்ததும் அனைவரும் எழுந்து கைகழுவச் சென்றனர். நீர்த் தொட்டி அருகே நின்று முதலில் வந்த வைதிகர் கைகழுவ தருமனே நீரூற்றி அளித்தார். பின்பு வைதிகர் உண்ட பந்தலுக்குள் நுழைந்து முதல் பன்னிரண்டு எச்சில் இலைகளை அவரே தன் கைப்பட எடுத்து வணங்கி தன்னைத் தொடர்ந்து வந்த ஏவலரின் கூடையிலிட்டு வணங்கினார். ஒவ்வொரு பந்தியிலும் சென்று முதல் பன்னிரு எச்சில் இலைகளை எடுத்து அகற்றினார். இரவலருக்கான பந்தியின் எச்சில்மீதாக ஓடிய ஒரு சிறு கீரியைக் கண்டு அவர் சற்று விலக “கீரி!” என்றான் அர்ஜுனன்.

ஏவலர் அதை ஓட்டுவதற்காக ஓடினர். “வேண்டாம்! அது தேவனோ தெய்வமோ நாமறியோம்” என்று தருமன் சொன்னார். “பழிசூழ்ந்த தேவனாக இருக்கும், அரசே. இரவலர் உணவுண்ட மிச்சிலில் புரள்வது பழிபோக்கும் என்று சொல்லுண்டு” என்றார் உடன் வந்த அடுமடையர். அவர் புன்னகையுடன் “இந்த அனைத்து மிச்சில் இலைகளிலும் மும்முறை புரளவிழைகிறேன், நாமரே” என்றார். அவர் “நல்லூழ் என்பது கருவூலச்செல்வம் போல. எத்தனை சேர்த்தாலும் பிழையில்லை” என்றார்.

எட்டு பந்திகளிலாக வேள்விக்கு வந்த பல்லாயிரம் பேரும் உணவுண்டு முடித்தனர். பீமன் வந்து தருமனிடம் “மூத்தவரே, இனி தாங்கள் உணவருந்தலாம்” என்றான். “நீ உணவருந்தினாயா?” என்று தருமன் கேட்டார். “இல்லை மூத்தவரே, தாங்கள் உணவருந்தாது நான் உண்ணலாகாது என்பது முறை” என்றான். தருமன் விழிகளைச் சுருக்கி “நீ உண்மையிலேயே உணவருந்தவில்லையா?” என்றார். “உணவருந்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு உணவும் உகந்த முறையில் அமைந்திருக்கிறதா என்று சுவை பார்த்தேன். அதை உணவுண்டதாகச் சொன்னால் அவ்வாறும் சொல்லலாம்” என்றான்.

தருமன் மெல்லிய புன்னகையுடன் “எத்தனை கலங்களில் சுவை பார்த்தாய்?” என்றார். பீமன் அவர் விழிகளைத் தவிர்த்து “இங்குதான் பல நூறு கலங்கள் உள்ளனவே?” என்றான். தருமன் புன்னகையுடன் அருகே நின்ற நகுலனை பார்க்க அவனும் புன்னகைத்தான். “அமரலாமே” என்றார் நாமர். “இல்லை, சென்று கேட்டுவருக! ஒருவரேனும் பசியுடனிருக்கலாகாது” என்றார் தருமன்.

இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலர்களும் அமைச்சர்களும் வேள்விச்சாலைச்சூழலின்  ஒவ்வொரு மூலையிலும் சென்று “எவரேனும் உணவுண்ண எஞ்சியிருக்கிறீர்களா?” என்று கூவி அலைந்தனர். நகரில் அனைவரும் உணவுண்டுவிட்டார்களா என்று அறிவதன் பொருட்டு ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சிற்றமைச்சர் மேடையேறி “அனைவரும் உண்டு விட்டீர்களா?” என்று மும்முறை வினவினர். அனைவரும் உண்டாகிவிட்டது என்று அறிந்ததும் தம் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதினர். நகரெங்குமிருந்து கொம்போசைகள் ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு பறவைக்கூட்டங்கள் போல வேள்விச்சாலையை அடைந்தன.

அர்ஜுனன் “அரசே, நகரில் உணவுண்ணாதவர் எவரும் இல்லை” என்றான். “நன்று” என்று கைகூப்பியபடி தருமன் எழுந்து சென்று உணவுண்பதற்காக பந்தியில் அமர்ந்தார். திரௌபதியும் பிற அரசியரும் பெண்களுக்கான தனியறையில் உணவருந்த அமர்ந்தனர். தருமனுக்கு இருபக்கமும் அவன் உடன் பிறந்தோர் அமர துச்சாதனனே உணவு பரிமாறினான். முதல் உணவுக்கவளத்தை எடுத்து கண் மூடி “தெய்வங்களே, மூதாதையரே, நிறைவடைக!” என்றபின் தருமன் உண்டார்.

தொடர்புடைய பதிவுகள்

இன்றைய அரசியல்

$
0
0

.images

அன்புள்ள ஜெயமோகன்,

 

நலம்தானே?

பொதுவாகவே உங்களைத் தொடர்பு கொள்வதென்றால் சற்று தயங்குவேன். உங்களை தொந்தரவு செய்கிறோமோ என்ற தயக்கம். ஆனால் இந்த முறை ஆர்வம் தாங்காமல் இதை எழுதுகிறேன்.

சமீபத்திய தமிழக தேர்தல் முடிவுகளை கவனித்திருப்பீர்கள். பெருநகர் சார்ந்த பலரும் இந்த எதிர்திசை மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த முடிவு, எதிர்பாராததாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது. நிர்வாக மெத்தனத்திற்கும் அராஜகத்திற்கும் பரவலான ஊழலிற்கும் மக்கள் மீண்டும் எப்படி ஆதரவளித்தார்கள் என்று தெரியவில்லை. அதே சமயம் பெருந்திரளின் எதிர்வினையில் உள்ள பொதுத்தன்மையை மதிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. சற்று குழப்பமான நிலைமை.

ஜனநாயக அமைப்பு குறித்து நீங்கள் தினமலரில் எழுதி வந்த கட்டுரைகள் அனைத்தையும் ஏறத்தாழ வாசித்து முடித்தேன். அரசியல் விழிப்புணர்வு குறித்து மிகப் பெரிய திறப்பையும் மனவெழுச்சியையும் அக்கட்டுரைகள் எனக்கு அளித்தன. நான் அரசியல் வம்பு நோக்கில் இதைக் கேட்கவில்லை என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.

இதர மாநிலங்களின் தேர்தல் முடிவுகளையும் கவனித்திருப்பீர்கள். இது குறித்த ஒட்டுமொத்த பார்வை கொண்ட உங்கள் கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கிறேன்.

வெண்முரசு தொடரில் முனைப்பாக இருப்பீர்கள் என அறிவேன். மேலும் ‘சமகால அரசியல் பற்றி பேசுவதில்லை’ என்கிற உங்களின் பொதுவான நிலைப்பாடையும் அறிவேன்என்றாலும் இது குறித்து நீங்கள் எழுத வேண்டும் என்பது என்  கோரிக்கை. பல வாசகர்களுக்கு அது உபயோகமாக இருக்கக்கூடும்.

இயன்றால் எழுதுங்கள் என்பதை ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன்

நன்றி

 

சுரேஷ் கண்ணன்

 

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

 

நான் ஏன் அரசியல் அலசல்கள் எழுதுவதில்லை என்பதற்கான காரணங்கள் மூன்று. ஒன்று, எங்கே பார்த்தாலும் அரசியலும் சினிமாவும்தான் பேசப்படுகிறது. நாமும் ஏன் சேர்ந்துகொள்ளவேண்டும், நாம் இலக்கியம் தத்துவம் வரலாறு மட்டும் பேசுவோம் என்னும் எண்ணம். எனக்கு ஆர்வமுள்ள துறைகள் அவையே.

 

இரண்டு, அரசியல் பற்றி இங்கே எதைச்சொன்னாலும் கடுமையான காழ்ப்புகள். கோபங்கள். கொந்தளிப்புகள். தனிப்பட்ட நட்புகளே அறுந்துபோகின்றன. எனக்கு உள்ள வாசகர்களில் மிகச்சிறந்தவர்களை வெறும் அரசியலால் இழந்திருக்கிறேன். வந்துகுவியும் வாசகர்களின் கடிதங்களையும் விவாதங்களையும் எதிர்கொள்ள நான் வெண்முரசை நிறுத்திவிடவேண்டியிருக்கும். மாற்றுக்கருத்து என்பது எதிரியின்  தரப்பு என்னும் மூர்க்கங்களுடன் விவாதிக்க எனக்குத்திராணி இல்லை.

 

மூன்றாவதாக, எழுத்தாளன் என்பவன் அரசியல் ஆய்வாளன் அல்ல. அவன் உள்ளுணர்வு சார்ந்தே பேசமுடியும். தனியனுபவங்களிலிருந்து உள்ளுணர்வு சார்ந்த சில புரிதல்களை நோக்கிச்செல்வதே எழுத்தாளன் எப்போதும் செய்வது. அதை அறிவுபூர்வமாக விளக்க முடியாமல் போகலாம். எழுத்தாளனின் உள்ளுணர்வை எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாத நம் அறிவுஜீவிகளின் வசைகளை அதற்காக வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும்.

 

சரி, நீங்கள் கோரியதனால் சொல்கிறேன். தேர்தலுக்குப்பிந்தைய என் கருத்தை அல்ல. தேர்தலுக்கு முன் சென்ற மே 8 ஆம் தேதி கோவையில் இருந்தபோது எழுதி மே 9 அன்று மலையாள மனோரமா நாளிதழில் வெளியான தமிழக அரசியல் பற்றிய என் பொது அவதானிப்புகளை மட்டும்

 

[கேரள அரசியல்பற்றி ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஒரு நீண்ட பேட்டியும் கொடுத்தேன். அவை அங்கே எழுத்தாளர்களின் கருத்துக்களாக கருதப்படுகின்றன. அரசியல் ‘நோக்கர்’களின் ஆய்வுரைகளாக அல்ல இது ஆய்வு அல்ல என்பதனால் நான் இதன் மேல் ஒரு விவாதத்தையும் அனுமதிப்பதாக இல்லை ].

 

மலையாள சித்தரான நாறாணத்து பிராந்தன் வலக்காலில் யானைக்கால் நோய் கொண்டவர். ’நீங்கள் சித்தராயிற்றே நோயை மாற்றக்கூடாதா?’ என்று கேட்டனர். [மலையாளத்தில் அகற்றுதல் மாற்றுதல் இரண்டுக்கும் ஒரே சொல்தான்] அவர் மறுநாள் அதை இடக்காலுக்கு மாற்றிக்கொண்டாராம். தலையெழுத்தை மாற்றமுடியும்  அகற்ற முடியாது என்பதைச் சுட்டும் கதை.

 

என் மலையாளக்கட்டுரையின் தலைப்பு ‘ஆகவே இம்முறையும் இந்தக்காலியேயே இருக்கட்டும் யானைக்கால் வீக்கம்’ ஜெயலலிதா மிகக்குறைவான வேறுபாட்டில் வென்று ஆட்சியமைப்பார் என்று அக்கட்டுரையில் சொல்லியிருந்தேன். அதற்கு நான் சொன்ன காரணங்கள் இவை.

 

  1. ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்

 

  1. அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள்.

 

  1. ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள்

 

  1. அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் பொதுவினியோகத்துறை மிகச்சிறப்பாக இயங்கியது. ரேஷனில் அனேகமாக ஊழலே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அரிசி மண்ணெண்ணை போன்றவை சீராக குறைந்தவிலையில் கிடைப்பது பெண்களிடம் நிறைவான எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது

 

  1. திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் எண்ணம் பெண்களிடையே உள்ளது. திமுகவின் வட்டாரத்தளபதிகள் அந்தந்த உள்ளூர்களில் கிரிமினல்களாகவே அறியப்படுகிறார்கள். அவர்களை ஜெயலலிதா மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். சென்ற ஆட்சியில் அழகிரியும் பிறரும் ஆற்றிய நேரடியான வன்முறகளை மக்கள் நினைத்திருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுகவின் இந்த உள்ளூர் கிரிமினல்கள் கிளம்பி வந்தது உடனடியாகவே பெண்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஜெயலலிதாவுக்குச் சாதகமாக உருவாக்கிவிட்டது.

 

  1. ஆகவே ஒரு மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க பெண்கள் விரும்பவில்லை. ஆகவே பெண்கள் ஓட்டில் ஜெயலலிதா மீண்டும் வருவார்.

 

இதுதான் என் அவதானிப்பு. இந்தத்தேர்தலில் அன்புமணி ஒரு முதல்வர் வேட்பாளராக அடிப்படையான பணிகளைச் செய்தார். அவரது தேர்தலறிக்கையின் மங்கலான கார்பன்காப்பிகளைத்தான் மற்ற அத்தனைக் கட்சிகளும் வினியோகித்தன. அவருக்கு தமிழகம் பற்றிய புரிதல் இருப்பதை அந்த தேர்தலறிக்கை காட்டியது

 

 

திருமாவளவன் பொருளியல்குறித்த திட்டங்களையோ கனவுகளையோ முன்வைக்கவில்லை என்றாலும் தமிழகச் சமூகவியல்சூழல் குறித்த நிதானமான நோக்கு இருப்பதை அவரது பேச்சுக்கள் காட்டின. திருமாவளவன் சாதியரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமுரிய பொதுத் தலைவராகச் செயல்படும் முதிர்ச்சியைக் காட்டினாலும் அன்புமணி அவ்வாறு வெளிப்படவில்லை. ஆனாலும் இருவருடைய தோல்வியும் வருந்தத்தக்கது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு அவர்கள் எழுந்துவரவேண்டும் என நினைக்கிறேன்.

 

 

குறிப்பாக திருமாவளவன் இந்த இடைக்காலத்தில் ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாகச்  செயல்பட்டால், தமிழகமக்கள் ஐயத்துடனும் வெறுப்புடனும் அணுகும் இஸ்லாமிய வஹாபிய இயக்கங்களுடன் அணுக்கம் காட்டாமலிருக்கும் துணிவு அவருக்கிருந்தால், அவர் ஒருநாள் தமிழகத்தை ஆளக்கூடும்.

 

சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை என்பது ஜனநாயக அமைப்பின் மிகப்பெரிய சரிவு என்றும் அபாயமான ஒரு திருப்பம் என்றும் நினைக்கிறேன்.

 

இந்தத்தேர்தலில் கருணாநிதி தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தாமலிருந்தால், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி அவரது கனவுகளையும் திட்டங்களையும் இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டுசென்றிருந்தால், திமுகவின் வட்டாரத்தலைவர்களை அகற்றி புதிய முகங்களுடன் களமிறங்கியிருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்றே நினைக்கிறேன்.

 

எளிமையான விஷயம்தான் இது. மக்கள் விரும்புவது முன்னோக்கிய மாற்றம். திமுக முன்வைத்தது பின்னோக்கிய மாற்றம். ஜெயலலிதா அரசுக்கு முந்தைய கருணாநிதி ஆட்சியை. குறைந்தபட்சம் முகங்களையாவது மாற்றியிருக்கலாம்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நீலம்- மொழி மட்டும்

$
0
0

Lord-Sri-Krishna-and-His-perfect-flute1

ஆசிரியருக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப்பின் எழுதுகிறேன். நீலம் வாசிக்கத் தொடங்கி ஒரு கட்டத்திற்குமேல் முடியாமல் நிறுத்திவிட்டேன். வாசிக்கத் தொடங்கியபொழுது ஒவ்வொரு சொல்லாய்
எழுந்து வந்து என் கைப்பிடித்து தனி ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றன.. அங்கு ராதையைக் கண்டேன் .. பித்து.. கண்ணனின் தாயைக் கண்டேன் .. பித்து.. கம்சனைக் கண்டேன் .. பித்து .. மீண்டும் ராதை.. பித்து.. பித்து.. பித்து நிலை..

ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவ்வுலகில் இருக்க முடியவில்லை.. எந்தச் சொற்களால் அழைத்துச் செல்லப் பெற்றேனோ அவையே வெளியே வீசி விட்டன.. வாசிப்பதை நிறுத்திய பின் பல நாட்கள் நீலம் சொற்களின் காட்டாறாய் தோன்றியது.. உள் நுழைய முடியவில்லை.. சொற் கோட்டையாய் தோன்றியது எனக்கு கதவுகள் திறக்கவில்லை.. வெறும் சொற்கள் என்று கோபமாய் வந்தது.. இப்பொழுது மீண்டும் நீலத்தை தேடுகிறது மனம்.. கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர இருக்கின்றேன்

அன்புடன்,
சங்கர்

 

11

அன்புள்ள சங்கர்,

எனக்கும் அந்த விசித்திரமான அனுபவம் ஒருமுறை அமைந்தது. எப்போதோ ஒருமுறை மேஜைமேல் கிடந்த நீலத்தை எடுத்துப்புரட்டி ஒரு பக்கத்தை வாசித்தேன். வெறும் சொற்களின் வரிசை என்று தோன்றியது . ஒன்றுமே பொருள்படவில்லை.

ஆனால் அதை எழுதியபோது முள்நுனியில் நடுங்கிக்கொண்டிருந்தேன். சித்தப்பிறழ்வின் கணங்கள். அதை எண்ணி எண்ணி வியந்துகொண்டே இருந்தேன் சிலநாள். ஓர் உச்சத்தில் நின்று எழுதிய படைப்பு அதிலிருந்து இறங்கியதுமே எப்படி வெறும் சொற்களாக ஆகிவிடுகிறது. அப்போது நான் அன்றாட உணர்வுகளின் நுட்பங்களால் ஆன வெய்யோனை எழுதிக்கொண்டிருந்தேன். அவ்வுலகில் நீலம் பொருள்படவே இல்லை

நீங்கள் சொல்வது சரிதான். வெறும் சொற்கள். ஆனால் சொற்கள் மட்டுமே என்றுமிருப்பவை. அர்த்தம் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப, அந்தந்த உணர்வுநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கிக்கொள்ளப்படுவது.நாம் செய்யக்கூடுவது மொழியை உருவாக்குவது மட்டும்தானோ என்று தோன்றியது

லலித மதுர கோமள பதாவலி – எளிய இனிய அழகிய சொல்வரிசை என்று கீதகோவிந்தத்தைச் சொல்வார்கள். நீலமும் அப்படி என்று எண்ணிக்கொள்கிறேன். உணர்வுகள் மொழியாக நேரடியாகவே மாறிவிடுவது ஓரு பெருநிலை

 

ஜெ

 

 

நீலம் மலர்ந்த நாட்கள் 1

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58

$
0
0

[ 4 ]

உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும் அவற்றின் அரசியல்விளைவுகளையும் குறித்து சொல்லாடினர். அவர்களை நாடிவந்த சூதரும், பாணரும், விறலியரும் பணிந்து “திருமகள் உடலை நிறைக்கையில் கலைமகள் உள்ளத்தில் அமரவேண்டும் என்கின்றன நூல்கள்… பெருங்குடியினரே, இத்தருணம் பாடலுக்கும் இசைக்கும் உரியது” என்றனர்.

அவர்களை முகமனுரைத்து அரசநிகழ்வுகளை பாடும்படி கோரினர் பெருவணிகர். குடித்தலைவர்கள் தங்கள் குடிப்பெருமைகளை பாடப்பணித்தனர். அவர்கள் முன் தங்கள் கோரைப்புல் பாயை விரித்து அமர்ந்து தண்ணுமையையும் மகரயாழையும் மீட்டி பாணர்கள் பாட விறலியர் உடன் இணைந்தனர். மண்மறைந்து பாடலில் வாழ்பவர்கள் அன்றுபிறந்தவர்கள் போல் எழுந்து வந்தனர். நாவிலிருந்து நாபற்றி அழியாது என்றுமிருக்கும் சொற்களில் அவர்கள் இறப்பெனும் நிழல்தொடா ஒளிகொண்டிருந்தனர். பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வணிகர் தங்கள் கை கீழிருக்க பரிசில்களை அளித்தனர். குடித்தலைவர் தங்கள் கோல்களைத் தாழ்த்தி வாழ்த்தி பொன்னளித்தனர்.

மாமுனிவர் பராசரர் கங்கையில் மச்சகந்தியைக் கண்ட கதையை ஒருவன் பாடினான். ஐந்து பருவாக அமைந்த தெய்வங்கள் அமைத்த திரைக்குள் முனிவர் மீனவப்பெண்ணை மணந்தார். “அறிக அவையீரே, ஆன்றதவம் காமத்தை தொடுகையிலேயே முழுமைகொள்கிறது. அனைத்தையும் கடந்த மெய்யறிவு அடிமண்ணில் நிற்பவர்களிடமே தன்னை உணர்கிறது. தேவர்களின் இசை அசுரர்களின் தாளத்துடன் இணையாது இனிமைகொள்வதில்லை. விண் இறங்கி மண் தொடுகையிலேயே மழை உயிர் என்றாகிறது. அத்தருணத்தை நறுமணங்களால் வாழ்த்துகின்றன தெய்வங்கள்.”

விறலி சொன்னாள் “கிருஷ்ணதுவைபாயனன் என்று அவரை அழைத்தனர் மக்கள். அறிஞர் அவரை வியாசர் என்று அறிந்தனர். அவர் பராசரரை அறிந்தவர்களுக்கு கங்கையை கற்பித்தார். கங்கையிலிருந்து பராசர மெய்ஞானத்தை கற்றறிந்தார்.”  சூதன் நகைத்தான். “காட்டாளனின் குருதி கலக்காமல் கற்றறிந்த சொல் காவியமாவதில்லை, தோழி.”

புதுமழையின் மணம் கொண்டவளானாள் மச்சகந்தி. அஸ்தினபுரியின் சந்துனு அறிந்தது அந்தப் புதுமணத்தைத்தான். இளம்களிற்றேறு என அவன் சித்தத்தை களிவெறி கொள்ளச்செய்தது அது. அவள் தாள்பணிந்து தன் அரண்மனைக்கு அணிசெய்யக் கோரினான். அறுவடை முடிந்த புதுக்கதிரால் இல்லம் நிறைப்பதுபோல அவளை கொண்டுவந்து தன் அரண்மனையில் மங்கலம் பெருகச்செய்தான். அவள் வெயில்விரிந்த வயலின் உயிர்மணத்தை அந்த இருண்ட மாளிகைக்குள் நிறைத்தாள். அவன் பாலையில் அலைந்த களிறு குளிரூற்றின் அருகிலேயே தங்கிவிடுவதைப்போல அவளருகிலேயே இருந்தான்.

தேவவிரதன் தந்தைக்கென அழியா காமவிலக்கு நோன்பு பூண்ட கதையை பிறிதொரு இடத்தில் பாடிக்கொண்டிருந்தனர். “தந்தையின் காமம் பெருகுமென்றால் மைந்தர் ஈடுசெய்வார்கள் என்பதை யயாதியின் கதையிலிருந்தே அறிகிறோம் அல்லவா?” என்றான் சூதன். விறலி “ஆனால் காமம்கொண்டவன் உள்ளத்தில் உறையும் விலக்கையும் விலக்கு கொண்டவனுள் கரந்திருக்கும் காமத்தையும் எவரறிவார்?” என்றாள். “நாம் சொல்லாத சொல்லால்தான் இங்கு அனைத்தும் புரிந்துகொள்ளப்படுகின்றன, தோழி” என்றான் சூதன். அவையமர்ந்தோர் நகைத்தனர்.

இருமைந்தரை ஈன்று சத்யவதி அரியணை அமர்ந்ததும், முதல் மைந்தன் தன் ஆடிப்பாவையாக எழுந்த கந்தர்வனால் கொல்லப்பட்டதும், இரண்டாம் மைந்தன் இருமைந்தரை ஈன்று விண்புகுந்ததும் பன்னிரு பகுதிகள் கொண்ட பெருங்காவியமாக விஸ்வகர் என்னும் சூதரால் பாடப்பட்டிருந்தது. எரிமலர் என்னும் பெயரில் காசியின் அரசி அம்பை பீஷ்மரால் கவரப்பட்டு சால்வனால் ஈர்க்கப்பட்டு அவன் முன் சென்று சிறுமைகொண்டு மீண்டு அவர்முன் நின்று பெண்மை கொண்டு எழுந்து கொற்றவையென்றாகி கங்கைக் கரையில் கோயில் கொண்ட கதையை சூதர் பாடினர்.

தன்னந்தனி மரமாக பாலையில் நின்றிருந்த தாலிப்பனையொன்றின் கதையை அயல் சூதன் ஈச்சமரத்தணலில் அமர்ந்து பாடினான். அதிலிருந்து விரிந்த காந்தாரத்தின் பெருவிழைவின் கதை அங்கிருந்தவர்களை உணர்வெழுச்சி கொள்ளச்செய்தது. கதைகள் ஒவ்வொன்றாக எழுந்து கொடிச் சுருள்களென திசை தேர்ந்து ஒன்றோடொன்று பின்னி ஒற்றைப்பெரும்படலமாகி அவர்களை சூழ்ந்தது. தாங்களும் ஒரு சரடென அவற்றில் சேர்த்து பின்னப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். குடித்தலைவர்களில் ஒருவர் கண்ணீருடன் “அன்று நானும் இருந்தேன். பேரரசி சத்யவதி தன் இரு மருகிகளுடன் தேரில் ஏறி இந்நகர்விட்டுச் சென்றபோது சிறுவனாக அத்தேருக்குப்பின்னால் கதறியழுதபடி நானும் ஓடினேன்” என்றார்.

பிறிதொருவர் “பாண்டு மாமன்னரின் எரிமிச்சத்துடன் யாதவ அரசி நகர்புகுந்தபோது முன்நிரையில் நின்றவன் நான்” என்றார். அவர்கள் அறிந்த ஒவ்வொன்றும் காலத்தால் மும்மடங்கு பெருக்கப்பட்டிருந்தன. ஐந்து மடங்கு உணர்வு கொண்டிருந்தன. நூறு மடங்கு பொருள் கொண்டிருந்தன. ஆயிரம் மடங்கு அழுத்தம் கொண்டிருந்தன. கதை என்பது மொழி வடிவான காலமே என்று அவர்கள் அறிந்தனர். காலம் என்பதோ தன்னை நிகழ்த்தி தான் நோக்கிக் கொண்டிருக்கும் பிரம்மம்.

வைதிகர் கூடிய சோலைகளில் பல்வேறு அறிவு முறைமைகளைச் சார்ந்த அந்தணர் அமர்ந்து நூல் தேர்ந்தனர். தங்கள் தொல் மரபில் திரட்டிய அறிவை முன் வைத்து நிகர் நாடினர். வசிஷ்ட குருகுலத்தின் முன் வந்து நின்ற கௌசிக குருகுலத்தின் பிரசண்ட மத்தர் என்னும் அறிஞர் தன் கையை மும்முறை தட்டி அனைவரையும் அழைத்தபின் வலக்கையிலிருந்த நுனி கூர்ந்த கோலை ஆழ நிலத்தில் நாட்டி உரக்க சொன்னார் “கேளுங்கள் வசிட்டமரபினரே, பிரம்மம் ஒருநிலையிலும் பிறிதொன்றாவதில்லை. பிறிதொன்றாகுமென்றால் இங்கிருப்பவை அனைத்தும் பிரம்மம், இவற்றுக்கு அப்பால் அங்கென ஏதுமில்லை என்றாகும். இங்குள்ள முக்குணமும் மும்மலமும் பிரம்மத்தின் குணங்களே என்றாகும். பிரம்மம் செயலுடையது குறையுடையது என்றால் அது முழுமையல்ல. ஏனென்றால் முதல்முழுமை என்றுணரப்படும் எட்டு இயல்புகளையே பிரம்மம் என்றனர் முன்னோர்” என்றார்.

“பிரம்மம் என்றும் அங்குள்ளது. இங்குள்ளது நம் அறிவினால் உருவாக்கப்படும் உருமயக்கங்களே” என்றார் பிரசண்ட மத்தர். “இச்சொல்லே மையமென கொண்டு என் கோலை இங்கு நாட்டுகிறேன். எதிர்கொள்க!” என்றபடி தனது தண்டத்தினருகே கைகட்டி நின்றார்.  வசிஷ்ட குருகுலத்தின் ஏழுமாணவர்கள் எழுந்து அவரருகே சென்றனர். முதல் மாணவராகிய பிரபாகரர் “அந்தணரே, தங்கள் ஆசிரிய மரபெது? முதன்மை நூல் எது? சொல்சூழ் முறைமை எது?” என்றார். பிரசண்ட மத்தர் “மாமுனிவர் கௌசிகரின் மரபில் வந்தவன் நான். இன்று அமர்ந்துள்ள நூற்றேழாவது கௌசிகரே எனது ஆசிரியர். ஞானகௌசிகம் என்னும் எழுபத்துஎட்டு பாதங்கள் கொண்ட நூல் என்னுடையது. சப்தநியாயம் என்னும் சொல்சூழ் முறைமை நூலை ஒட்டி என் தரப்பை முன்வைக்கிறேன்” என்றார்.

“இங்குள்ளவற்றில் இருந்து அங்குள்ளவை நோக்கி செல்லும் முறைமை என்னுடையது. மண்ணை அறிந்தால் மண்ணென்றானதை அறிய முடியும் என்பதே அதன் முதல் சொல்லாகும்” என்றார் பிரசண்ட மத்தர்.  பிரபாகரர் “அந்தணரே, இங்குள்ளவை அனைத்தும் அறிவு மயக்கம் என்றால் இவற்றை ஆக்கிய அது அவ்வறிவு மயக்கத்திற்கு ஆளாவது என்றல்லவா பொருள்?  மூன்று இயல்புகளுடன் முடிவிலி எனப்பெருகி நிற்கும் இப்பெருவெளியை அறிவு மயங்கிய எளியோன் ஆக்கினான் என்றால் அதற்கப்பால் நின்றிருக்கும் அது ஆற்றுவதுதான் என்ன?” என்றார். பிரசண்ட மத்தர் உரக்க “அது ஆற்றுவதில்லை. ஆவதும் இல்லை. தன் உள்ளில் தானென நிறைந்து என்றுமென அங்குள்ளது” என்றார்.

“அதிலிருந்து முற்றிலும் அப்பாலுள்ளதோ இது?” என்றார் பிரபாகரர். “அல்ல. அதுவே என்றுமாகும் அதற்கப்பால் இவை ஏதுமில்லை. இவை அதிலிருந்து வேறுபட்டவை என்றால் அது குறைவுள்ளது என்று பொருள். அதில் இது குறைவுபடும் என்றால் அதை முதல் முழுமை என்று எப்படி சொல்லலாம்?  அதுவே அனைத்தும். அதுவன்றி பிறிதில்லை” என்றார் பிரசண்ட மத்தர். “அந்தணரே, அறிதலும் அறிபடுபொருளும் அறிவும் ஒன்றே. அவ்வண்ணமெனில் அறிவு மயக்கமும் அதுவே என்றாகும் அல்லவா?” என்றார் பிரபாகரர். அவர் செல்லும் திசையை அறிந்த பிரசண்ட மத்தர் “அது மயங்குதலற்றது” என்றார்.

உரக்க நகைத்து “ஊன்றிய கோலை நீரே சற்று அசைத்துவிட்டீர், பிரசண்டரே. தண்டமின்றி விதண்டாவாதம் செய்ய நீர் வந்திருக்கலாம்” என்றார் பிரபாகரர். “அறிக, ஐந்துவகை வேறுபாடுகளால் பிரம்மம் இவையனைத்தையும் ஆக்கியிருக்கிறது. பிரம்மமும் ஆத்மாவும் கொள்ளும் வேறுபாடு. பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு.  ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு.  ஓர்  ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு.  ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. இவ்வேறுபாடுகளில் ஒன்றை உடனே நீர் அறியலாம். நீர் வேறு நாங்கள் வேறு. அவ்வண்ணமே, நீர் வேறு மெய்யறிதல் வேறு” என்றார் பிரபாகரர். அவரது தோழர்கள் நகைத்தனர்.

“பிரம்மம் கடலென்றறிக! மழை பெருகி ஆறாகி மீண்டும் கடலாகிறது. அலகிலாது பிறப்பித்தாலும் துளிகுறையாது நின்றிருக்கும் முதல்முழுமை அது. உங்களைப் போன்றோர் அதை உணராது உங்கள் மடிச்சீலைப் பொன் என்றே எண்ணுகிறீர்கள். எண்ணி எண்ணிப் பார்த்து மனம் வெதும்புகிறீர்கள். உருமயக்க வாதமும், வளர்ச்சிநிலை வாதமும் எண்ணியறிவோர் கொள்ளும் மயக்கம். நுண்ணிதின் அறிந்தோர் அதை கடந்திருப்போர். அவர்கள் சொல்லுக்கு அப்பால் சென்று அறிவர். நெல்மணி கொத்தும் குருவிகள் அறிவதில்லை விண்மணி கொத்தி வந்து நம் முற்றத்து மரத்திலமரும் செம்பருந்தை.” அவரது மாணவர்கள் “ஆம்! ஆம்! ஆம்!’ என்றனர். பிரசண்ட மத்தர் தன் கோலை எடுத்துக்கொண்டு தலைகவிழ்ந்து சென்றார். “மீண்டும் வருக! மெய்மை என்பது எம்மரத்திலும் கனிவதென்கின்றன நூல்கள்” என்றார் பிரபாகரர்.

[ 5 ]

உணவு மயக்கத்தில் அரண்மனைப் பெருங்கூடங்களில் விருந்தினர்களாகிய அரசர்கள் சிறுமஞ்சங்களில் சாய்ந்தும் சாய்விருக்கைகளில் கால்நீட்டி தலைசரித்தும் ஓய்வெடுத்தனர். மேலே ஆடிய இழுவிசிறிகளின் குளிர்காற்றும் வெட்டிவேரின் ஈரமணமும் விறலியரும் பாணரும் இசைத்த பாடல்களும் அவர்களின் விழிகளை நனைந்த பஞ்சென எடைகொள்ளச்செய்தன. அரைத்துயிலில் ஒவ்வொருவரும் தாங்கள் இயற்றிய ராஜசூயத்தில் சத்ராஜித்துகளாக வெண்குடை சூடி அமர்ந்திருந்தனர். அம்மலர்வு அவர்களின் முகங்களை இனியதாக்கியது.

மஞ்சத்தில் இறகுச்சேக்கை தலையணைகளின் மேல் கைமடித்து கால்நீட்டி அமர்ந்து அரவென விறலிபாடிய இசையை விழிகளால் கேட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். அவனருகே கர்ணனும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் அமர்ந்திருந்தனர். பின்னால் துச்சகனும் துச்சலனும் துர்மதனும் இருந்தனர்.

பர்ஜன்யபதத்தில் அர்ஜுனனை மண்ணுக்கு வரவேற்க எழுந்த பல்லாயிரம் விண்விற்களைப்பற்றி விறலி பாடிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு பனித்துளியும் ஏழு வண்ணம் சூடியது. ஒவ்வொரு மலரும் பனித்துளி சூடியது. வண்ணத்துப்பூச்சிகளின் இறகில் சிட்டுக்குருவிகளின் மென்தூவிகளில் ஏறி கந்தர்வர்கள் மண்ணில் பறந்தலைந்தனர். விண்ணிறங்கிய ஒளிநீர்ச் சரடுகளினூடாக தேவர்கள் மண்ணுக்கு வந்தபடி இருந்தனர். அவர்களின் உடலொளியால் வெயிலின்றியே அனைத்தும் மிளிர்ந்தன. அரை நாழிகை நீண்ட பேரிடி ஒன்று அப்பகுதியைச் சூழ்ந்து அனைத்துப் பாறைப்பரப்புகளையும் ஈயின் இறகுகள் போல் அதிர வைத்தது. அனைத்து விழிகளையும் வெண்குருடாக்கிய மின்னல் ஆயிரம் முறை துடித்தமைந்தது. பின்னர் செவிகளும் விழிகளும் மீண்டபோது அவர்கள் மண்ணுக்கு வந்த இந்திரமைந்தனின் அழுகையை கேட்டனர்.

கர்ணன் சற்றே சரிந்து துரியோதனனிடம் “கதைகளை உருவாக்குவதில் இவர்களுக்கு இணை எவருமில்லை. ஆயிரம் சரடுகளால் இடைவிடாது பின்னிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நாமும் கதைகளாகி விடுகிறோம்” என்றான். “இப்போது இவை எளிய முடைவுகள். நாளை நாமறியாமலேயே இறுகி இரும்புக்கோட்டைகளாகிவிடும்.” அஸ்வத்தாமன் புன்னகைத்து “மண் மறைந்தோர் கதைகளின் கோட்டைகளுக்குள் சிறையிடப்பட்டிருக்கிறார்கள் என்று சூதர் சொல்லுண்டு” என்றான்.

“இந்நகர் முழுக்க கேட்டேன். பாண்டவர் ஐவரின் திசைவெற்றிகளைப்பற்றிய பாடல்கள் மட்டுமே இங்கு ஒலிக்கின்றன. எளியோனாகிய நகுலன்கூட மேற்கே சென்று நூற்றெட்டு கீழை நாடுகளை வென்று வந்ததாக சூதர் பாடிக்கொண்டிருந்தார். காமரூபத்தைச் சுற்றி நூற்றெட்டு நாடுகள் இருக்கும் செய்தியையே அப்போதுதான் அறிந்தேன்” என்றான் ஜயத்ரதன். “அவை வெற்றிகளல்ல. ராஜசூயத்தை ஒப்பி அளிக்கும் ஆகொடைகள் மட்டுமே” என்றான் துச்சகன். “ஆனால் அவை வெற்றிகளல்ல என்று இச்சூதர்களிடம் யார் சொல்வார்கள்? இவர்கள் சொல் என்றும் நிற்பது. அதை வெல்ல வாளால் இயலாது” என்றான் கர்ணன்.

“அர்ஜுனன் வடக்கே பனிமலை அடுக்குகளில் இருந்த நாடுகளை வென்றான். பீமன் நடுநாடுகள் அனைத்தையும் வென்று மேற்கு எல்லை வரை சென்றான். அபிமன்யுகூட மச்சர்நாடுகளை வென்று ஆநிரை கொண்டு வந்திருக்கிறான்” என்று ஜயத்ரதன் சொன்னான். “இப்பாடல்கள் அளிக்கும் செய்தி ஒன்றே. இந்திரப்பிரஸ்தம் பாரதத்தை வெல்லும் ஆற்றல் கொண்டது.” கர்ணன் “வெல்லக்கூடுமென்னும் அச்சம்போல வெல்லும்படைக்கலம் வேறில்லை. சூதர்கள் வாளும் வேலும் ஆக்கும் கொல்லர்களைவிட திறன்வாய்ந்தவர்கள்” என்றான்.

“சூதர்களை வெல்லும் வழி ஒன்றே, மேலும் சூதர்கள்” என்றான் அஸ்வத்தாமன். “நாம் அஸ்தினபுரியில் ஒரு அஸ்வமேதத்தை நிகழ்த்துவோம். பாரதவர்ஷத்தின் அரசர்களை அங்கு அணிவகுக்கச் செய்வோம். ஆயிரம் சூதர்கள் இதைப்பாடினர் என்றால் பத்தாயிரம் சூதர்கள் அதைப்பாட வைப்போம்.” ஜயத்ரதன் “அங்கு ஒரு ராஜசூயமென்றால் முதல் வில்லென வந்து நிற்க வேண்டியது இந்திரப்பிரஸ்தத்திலிருந்துதான் அல்லவா?” என்றான். “ஏன் வராது? எந்த மூதாதையர் ஆணையால் அஸ்தினபுரியின் அரசர் இங்கு வந்திருக்கிறாரோ அந்த மூதாதையர் அப்போதும் இருப்பார்களல்லவா? பீஷ்மர் வந்து ஆணையிடட்டும், தருமன் வருவார்” என்றான் அஸ்வத்தாமன்.

சினம்கொண்டு திரும்பி “வரவில்லை எனில் படைகொண்டு அவனை இழுத்து வருவோம். அஸ்தினபுரியில் ராஜசூயமும் அஸ்வமேதமும் நடக்கும், இது என் சொல்” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “அதை பீஷ்மர் மட்டும் முடிவெடுக்க முடியாது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இறைவன் இளைய யாதவன். இந்திரப்பிரஸ்தம்  அடைந்த இப்பெருவெற்றி இவர்கள் திரட்டி வைத்திருக்கும் இப்படைகளால் ஆனதல்ல, ஒழியா கருவூலமும் யவனர் படைக்கலமும் கொண்ட துவாரகையின் யாதவப் பெருந்திரள் அடைந்த வெற்றி இது” என்றான்.

“பாரதவர்ஷத்திற்கு மேல் தனது செங்கோலை நிறுத்த விழைகிறான் இளைய யாதவன்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவன் ராஜசூயம் செய்தால் ஷத்ரியர்களை எதிராக ஒருங்கிணைக்கவே அது வழிகோலும் என்பதனால் தொல்புகழ் கொண்ட யயாதியின் கொடிவழி வந்த தருமனை இந்திரப்பிரஸ்தத்தில் அமர்த்தி இதை செய்ய வைக்கிறான். இங்குள்ள ஒவ்வொரு மன்னருக்கும் தெரியும், இது எவருடைய செங்கோல் என்று. தங்களுக்குத் தாங்களே இது ஷத்ரியர் நிகழ்த்தும் வேள்வி என்று சொல்லி ஏமாற்றிக் கொள்கிறார்கள்.”

அஸ்வத்தாமன் சிரித்து “அப்படி பலநூறு ஏமாற்றுகளினூடாக கடந்து செல்லும் ஒரு கலைக்கே அரசு சூழ்தல் என்று பெயர்” என்றான். “நான் வேடிக்கை சொல்ல விரும்பவில்லை. இளைய யாதவனின் ஒப்புதலின்றி அஸ்தினபுரியில் பெருவேள்வி எதுவும் நிகழாது, ஐயம் வேண்டாம்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் உரக்க “இளைய யாதவனை போரில் வெல்ல என்னால் இயலாது என்று எண்ணுகிறாயா?” என்றான். ஜயத்ரதன் ஏதோ சொல்வதற்கு முன் மறித்து “நாணில்லையா உனக்கு? பின் என்ன எண்ணத்தில் துவாரகைக்கு எதிராக அங்கு எல்லைகளில் படை நிறுத்தியிருக்கிறாய்?” என்று கர்ணன் கூவினான்.

“இதோ அஸ்வத்தாமன் இருக்கிறான். அர்ஜுனன் அவன் முன் நிற்க இயலுமா என்ன? யாதவனின் படையாழியை நான் வெல்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தை துரியோதனர் வெல்லட்டும். எவரையும் ஏமாற்றி நம் அரசர் வெண்குடை சூடவேண்டியதில்லை. வாளெடுத்து வென்று சூட முடியும். இதோ இங்கு நிகழ்வது ராஜசூயமல்ல, இது இவ்வரசர் அளிக்கும் ஒப்புதலின் மேல் நிகழும் ஒரு வெற்றுச் சடங்கு. வாள் கொண்டு வென்று செய்யப்படுவதே உண்மையான ராஜசூயம். அது அஸ்தினபுரியில் நிகழட்டும்” என்றான் கர்ணன்.

சிலகணங்கள் அங்கு பேச்சு அவிந்தது. அர்ஜுனனை வாழ்த்த வந்த திசைத்தேவர்களின் உருவை விறலி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்  ஆயிரம் நாவுடன் அனலோனும், அலைக்கைகளுடன் ஆழியோனும் எழுந்து வந்தனர். கதிர்விரித்து சூரியன் வந்தான். அல்லி மலர் ஏந்தி சந்திரன் வந்தான். தென்திசை தலைவன் எருமையில் எழுந்தான். வடவன் பொருட்குவையுடன் வந்தான். இன்மதுவின் இறைவன் அமுதகலத்துடன் வந்தான். அவள் உடல் வழியாக அவர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தனர். இசை அவள் அணிந்த ஆடைபோல அவளைத் தழுவி சூழ்ந்திருந்தது.

பேச்சை மாற்றும் பொருட்டு உடலை அசைத்தமர்ந்த அஸ்வத்தாமன் ஜயத்ரதனிடம் “சிசுபாலன் எங்கே?” என்றான். அவ்விறுக்கத்தை கடந்து செல்ல விரும்பிய ஜயத்ரதன் மிகையான ஆர்வத்துடன் “நேற்றுமாலையே இங்கு வந்துவிட்டார். அவர் வந்த செய்தி அறிந்து நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஓய்வெடுப்பதாகவும் எவரையும் பார்க்க விரும்பவில்லையென்றும் ஏவலர் சொன்னார்கள். இன்று காலை வேள்விச்சாலை புகுந்தபோது இளைய பாண்டவரை அன்றி பிற எவரையும் அவர் விழிநோக்கவில்லை. அவர்கள் தோள் தழுவிக்கொண்டார்கள். நான் அணுகி முகமன் உரைத்தபோது வெற்றுச் சொல் ஒன்று உரைத்து கடந்து சென்றார்” என்றான்.

“விதர்ப்பத்தின் ருக்மியும் இதையே சொன்னார்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவரையும் அவர் தன்னருகே அணுகவிடவில்லை. அவர் அன்று சிந்துநாட்டில் என்னைப் பார்க்க வந்தபோது கொலைவஞ்சம் கொண்ட மலைநாட்டு முனிவர் போலிருந்தார். இன்று இங்கு களியாட்டுக்கு வந்தவர் போல ஆடையும் அணியும் புனைந்துள்ளார்.” அஸ்வத்தாமன் “ஜராசந்தனுக்கான வஞ்சத்திற்கு நாம் துணை நிற்கவில்லை என்று சினம் கொண்டிருக்கலாம்” என்றான். “சினம் கொண்டிருந்தால் ஜராசந்தனைக் கொன்ற இளைய பாண்டவனை ஏன் தழுவிக் கொள்கிறார்? உத்தர பாஞ்சாலரே, அவர் நோக்கம் வேறு. இங்கு வந்த பிறகுதான் அதை ஒவ்வொன்றாக புரிந்து கொள்கிறேன். அவர் ஜராசந்தனுக்காக வஞ்சத்திற்காக நம்மைத்தேடி வரவில்லை. அது சேதியின் அரசு சூழ்தலின் ஓர் அங்கம்” என்றான் ஜயத்ரதன்.

கர்ணன் புருவம் சுளித்து “என்ன?” என்றான். “ஜராசந்தனுக்காக சேதியின் தலைமையில் நாம் படைகொண்டிருந்தால் பழிநிகர் செய்த பெருமை அனைத்தும் சேதிக்கு சென்று சேரும். யாதவக்குருதி கலந்தவர் என்ற குலஇழிவு கொண்டிருப்பவருக்கு ஷத்ரியரின் முற்றாதரவு கிடைக்கும்” என்ற ஜயத்ரதன் புன்னகைத்து “என்ன இருந்தாலும் அவரும் அரசர். என்றோ ஒருநாள் சத்ராஜித் என ஒரு ராஜசூயப்பந்தலில் அமர்ந்திருக்கும் கனவு அவருக்கும் இருக்காதா என்ன?” என்றான். “மிகையாக சொல்கிறீர், சைந்தவரே. வெறுப்பைப் போல  நாம் ஒருவரை புரிந்து கொள்ளாமலிருக்கும் வழி பிறிதொன்றில்லை” என்றான் அஸ்வத்தாமன்.  சினத்துடன் “வேறென்ன? இது கீழ்மை அல்லது சிறுமை. பிறிதென்ன? எப்படி அவர் பீமனை தோள் தழுவலாகும்?” என்றான் ஜயத்ரதன். “அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அனைத்து வழிகளும் மூடும்போது நேர்எதிர்திசையில் திரும்புகின்றன விலங்குகள். மானுடரும் அப்படித்தான்” என்றான் அஸ்வத்தாமன்.

“அத்தனை எளியவரென்று நான் சிசுபாலனை சொல்லமாட்டேன். அவரில் தொழில்படுவது பிறிதொன்று…” என்றான் ஜயத்ரதன். “இன்று அவர் உள்ளம் செல்வதெப்படி என்று அறிய நாம் நூறுமுறை அவையமர்ந்து சொல்சூழவேண்டியிருக்கும்.” கர்ணன் அஸ்வத்தாமனை நோக்கி “அரசுசூழ்தலில் அடிப்படை நெறியென ஒன்றை பரசுராமர் சொல்வதுண்டு, பாஞ்சாலரே. அரசுச் செயல்பாடுகளின் ஓர் எல்லையில் அரசர்களின் உள்ளாழம் உள்ளது. அவர்களின் விழைவுகளும், கனவுகளும், ஐயங்களும், அச்சங்களும் அவை முதிர்ந்தும் கனிந்தும் ஒருவரொடு கொள்ளும் மாளாத உறவுச் சிடுக்குகளும் அங்குள்ளன. அவற்றை எண்ணி அரசுசூழ்ந்து முடிவுதேர்வதென்பது ஒரு போதும் நிகழாது.”

“ஆகவே இந்த எல்லைக்கு வரவேண்டும். இங்குள்ளது அரசுகளின் வல்லமைகளும் விழைவுகளும் வாய்ப்புகளும் மட்டுமே. அவை பருவுருவானவை. கைக்கு சிக்குபவை. அவற்றைக் கொண்டு மட்டுமே புறவயமான அரசுசூழ்தலை நிகழ்த்த முடியும். நாம் அறியாதவற்றைப் பற்றி எண்ணி உளவிசையை வீணடிக்கவேண்டியதில்லை. அவ்வறியா ஆற்றல்கள் நாம் அறிந்தவற்றில் வெளிப்படுகையில் மட்டும் அவற்றை கையாள்வோம்” என்று கர்ணன் சொன்னான். “சிசுபாலனின் உள்ளம் எங்கு செயல்படுகிறது என இங்கிருந்து நாம் எண்ணி முடிவெடுக்க முடியாது என்றே நானும் உணர்கிறேன். இளைய யாதவனுக்கெதிரான சினமே அவனை இயக்குகிறது என்பது நாம் அறிந்தது. அதற்கான ஊற்றுமுகம் என்ன என்று அவனே அறிந்திருக்கமாட்டான்.”

ஜயத்ரதன் “ஆம், அதை நான் பல்முறை எண்ணியதுண்டு. உண்மையில் இளைய யாதவரின் உடனுறை உறவாகவும், வெற்றிகளில் பங்காளியாகவும் அமைந்திருக்கும் அனைத்து வாய்ப்புகளும் அவருக்குள்ளன. இருவரும் ஒரே குலம். ஒரே கொடிவழியினர். இருவரும் கைகோத்துக் கொள்வார்களென்றால் இளைய யாதவருக்கு பிறிதொரு ஷத்ரிய நாட்டின் உதவியே தேவையில்லை. சேதிக்கோ பாரதவர்ஷத்தையே ஆளும் பெருஞ்செல்வமும் படை வல்லமையும் கிடைக்கும். ஆம், அவர்கள் இணைந்திருப்பதற்கான அனைத்து வழிகளும் தெளிந்துள்ளன. வேற்றுமை கொள்வதற்கான ஓர் அடிப்படைகூட தென்படுவதில்லை” என்றான். அஸ்வத்தாமன் நகைத்து “நிகரற்ற பெருவஞ்சம் எப்போதும் அத்தகையோருக்கு இடையேதான் உள்ளது, அறிந்திருக்கிறீர்களா?” என்றான்.

ஜயத்ரதன் இயல்பாக “தங்களுக்கும் இளைய பாண்டவருக்கும் இடையே இருப்பது போலவா?” என்றான். வேல்குத்தியவன் போல திரும்பிய அஸ்வத்தாமன் முகம் சிவந்து எரிய “மூடா! என்ன சொல்லெடுக்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று அறிந்திருக்கிறாயா?” என்றான். “தாங்கள் சொன்னதையே திருப்பிச் சொன்னேன்” என்றான் ஜயத்ரதன். “இச்சொல்லுக்காக உன்னை போருக்கு அழைக்கிறேன். என் எதிர்நின்று வில்லம்பால் மறுமொழி சொல். இல்லையேல் உன் நெஞ்சு பிளந்து குருதி அள்ளி என் முகத்தில் பூசிக் கொள்வேன், சிறுமையாளனே” என்றான் அஸ்வத்தாமன்.

துரியோதனன் எழுந்து “போதும் சொல்லாடல்! இது பூசலுக்கான இடமல்ல” என்றான். ஜயத்ரதன் தணிந்து “பொறுத்தருளுங்கள், உத்தரபாஞ்சாலரே! சூதர் சொல்லில் வந்த ஒன்றை சொன்னேன்” என்றான். அஸ்வத்தாமன் மெல்ல உறுமியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.

மீண்டும் அங்கு சொல்லின்மை  ஊறி நிறைந்தது. கர்ணன் “இன்றென்ன நாமனைவருமே நிலையழிந்து அவைக்கு வந்திருக்கிறோமா? எதை பேசினாலும் உச்சத்திற்கு செல்கிறோம்?” என்றான். “நாம் பேசாமலிருப்பதே நன்று. எவருள் எவர் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படி சொல்லாடுவது?” என்றான் ஜயத்ரதன். அஸ்வத்தாமன் எழுந்து நடந்து வெளியே சென்று மறைந்தான். அவன் செல்வதை அவர்கள் நோக்கியிருந்தனர். துரியோதனன் அதை அறிந்ததுபோலவே தோன்றவில்லை.

கர்ணன் ஜயத்ரதனிடம் “மனிதர்களை தெரிந்து கொள்வதில் முதன்மையானது இது. அவர்கள் முற்றிலும் வெறுக்கும் ஒன்று, ஒருபோதும் ஒப்பாத ஒன்று, தங்களுக்குத் தாங்களே கூட அவர்கள் சொல்லிக் கொள்ளாத ஒன்று அவர்களுக்குள் எங்கோ இருக்கும். அதை அறிந்து பின் முழுமையாக மறந்தால் மட்டுமே நாம் அவர்களிடம் அணுக முடியும்” என்றான். ஜயத்ரதன் சிரித்து “மூத்தவரே, தங்களிடம் அவ்வாறு  எது உள்ளதென்று தாங்களே சொல்லிவிடுங்கள். நானே எக்காலத்திலும் அதை கண்டறியப்போவதில்லை. தங்களுக்கு என்மேல் சினம் வர விழையவும் இல்லை” என்றான். கர்ணன் சிரித்து அவன் தோளை மெல்ல தட்டினான்.

தொடர்புடைய பதிவுகள்

வியாசபாரதமும் வெண்முரசும்

$
0
0

LORD-KRISHNA-RADHA-HANDMADE-Modern-Oil-Painting-Hindu-Religious-God-Goddess-Art-200827235978

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

பன்னிரு படைக்களம் படித்துக் கொண்டிருந்தேன்… ஜராசந்தன் வதம் முடிய படித்த போது, எவ்வளவு தகவல்களை இவர் தருகிறார்… இவ்வளவில் பாதி தகவலாவது கங்குலியின் பதிப்பில் திரட்ட முடியுமா என்று திரும்பவும் மஹாபாரதத்தின் சபாபர்வம் கோப்புகளைக் கண்டேன். வியப்படைந்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சின்ன குறிப்புகளையும் நீங்கள் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்… உதாரணத்திற்கு கிருஷ்ணனும், பீமார்ஜுனர்களும் மகதத்தின் கடைவீதிகளில் நடந்தது; பெரு முரசுகள், மற்போர், ஜராசந்த வதம் முடிந்ததும் சகதேவனைச் சந்திப்பது என அனைத்திலும் உள்ள நுணுக்கமான தகவல்களை விவரித்து, பாமரனும் மகாபாரதத்தின் உட்கருத்தை அறியும் வண்ணம் அழகாகக் கூறியிருக்கிறீர்கள். வெண்முரசில் இப்போது சிசுபாலனை உணர்ந்து வருகிறேன். தூரத்தில் கண்ட அதே காட்சியை மீண்டும் அருகில் இருந்து கண்டு, அக்காட்சியில் வரும் பாத்திரங்களின் உள்ளத்தையும் ஊடுருவிப் பார்க்க முடிவதாக உணர்கிறேன். பன்னிரு படைக்களத்தை முழுதும் தொடர நிச்சயம் முயற்சிப்பேன்.

நான் மொழிபெயர்த்து வரும் கங்குலியின் மஹாபாரதத்தைப் படிக்க வேண்டும் என என் கிறிஸ்தவ நண்பர் ஒருவர் கேட்டார். இணையத்தில் படிக்க இயலாதவர் அவர். எனவே, நான் பிழைதிருத்தத்திற்காக அச்செடுத்து வைத்திருக்கும் ஆதிபர்வத்தை அவரிடம் கொடுத்தேன். முதல் 30 அத்தியாயங்களைப் படித்துவிட்டு, “சுவாரசியமாகவே இல்லை சார்” என்றார். நான் “சார், சுவாரசியத்துக்காக அல்லாமல், தகவலை அறிகிறோம் என்று படியுங்கள். உங்கள் பைபிளை நீங்கள் எப்படி அணுகுவீர்களோ, அப்படியே மகாபாரதத்தையும் அணுகுங்கள்” என்றேன். பிறகு, “ஆனால் அது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம்” என்று சொல்லி, அவருக்கு உங்களின் “எரிமலர்” கொடுத்தேன். இரண்டே நாட்களில் வந்து “அற்புதமாக இருக்கிறது. இப்படித்தான் நீங்களும் எழுத வேண்டும்” என்றார். நான், “மொழிபெயர்ப்பை அப்படிச் செய்ய முடியாது சார்” என்றேன்.

பிறகு ஆதிபர்வத்தின் 30 அத்தியாயங்களுக்கு மேலுள்ளதைத் தொடர்ந்து படித்திருக்கிறார். நான் அவர் படிக்க மாட்டார் என்றே இருந்தேன். ஆனால் அவர், “நூறாம் அத்தியாயத்திற்கு மேலேதான் கதையே ஆரம்பிக்கிறது. இப்போது என்னால் உங்களையும் படிக்க முடிகிறது.” என்றார். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் எரிமலரைப் படித்த பின்பு அவருக்கு கங்குலியையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கிறது. இது போன்ற வாசகர்களுக்கும் மகாபாராதத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி வரும் உங்களுக்கு நன்றி. அடுத்து அவருக்கு “புல்லின் தழல்” கொடுக்கப் போகிறேன்.

அன்புடன்

செ.அருட்செல்வப்பேரரசன்

arulselvaperarasan@gmail.com

http://mahabharatham.arasan.info
https://www.facebook.com/arulselva.perarasan
https://www.facebook.com/tamilmahabharatham

 

for web profiles square

 

அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கு,

உங்கள் மகாபாரதத்திற்கு நானும் வந்துகொண்டே இருக்கிறேன். மேலதிகத் தகவல் தேடி. அது ஒரு பெரிய கருவூலம். உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

மகாபாரதத்தை நேரடியாகப் படிப்பதிலுள்ள தடைகள் பல. ஒன்று, அது பழைமையான ஒரு கதைப்பாடல்நூல். அன்று காட்சிகளைச் சித்தரிப்பதும், நிகழ்வுகளை நாடகப்படுத்துவதும் இன்றைய வடிவில் மேம்பட்டிருக்கவில்லை. ஆகவே போர்க்களக்காட்சிகள் பெரும்பாலும் ஒரே வகையான விவரணைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாடகீய நிகழ்வுகளில் உணர்வுகளும் ஒரேவகைச் சொல்லாட்சிகளுடன் இருக்கும். அவற்றில் உள்ளவற்றை நம் கற்பனையால் விரித்தெடுத்தாகவேண்டும்

இரண்டாவதாக பிற்சேர்க்கைகள். பலவகையான பிற்சேர்க்கைகள் உள்ளன. மிகப்பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட நீதிநூல்களும் அறச்சொற்பொழிவுகளும் வந்துகொண்டே இருக்கின்றன அதில் . எந்தக்கதாபாத்திரமும் நீதியைச் சொல்ல ஆரம்பித்துவிடும். முற்பிறவிக்கதைகள் வழியாக நிகழ்வுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விளக்கங்களும் இடைச்செருகல்களே. சற்று காலத்தால் முந்தையவை.

இன்னும் பின்னுக்குச் சென்றால், பல முக்கியமான நிகழ்வுகளும்கூட இடைச்செருகல்களாக இருக்கலாம். உதாரணம், பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சி. அது வடக்கத்தி மகாபாரதங்களில் இல்லை. பெரும்பாலான மகாபாரதங்களில் உண்டு என்றாலும் துரியோதனன் சறுக்கிவிழுந்து வன்மம் கொள்ளும் காட்சியும் இடைச்சேர்க்கையே. துரியோதனனின் துணைவர்களான ஜராசந்தனும் சிசுபாலனும் கொல்லப்பட்டதே அவனை வன்மம் கொண்டதாக ஆக்குகிறது என்பதே அரசியல். அவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் சறுக்கிவிழுந்தமையால் வன்மம் கொண்டான் என்பது ஒரு கதையாக்கம் மட்டுமே. அது குழந்தைகளுக்கும் எளியோருக்கும் எளிதில் சென்றுசேர்கிறது

மகாபாரத மூலத்தை வாசிக்கையிலேயே அதன் செவ்வியல் அழகுக்கும் அரசியல் ஒத்திசைவுக்கும் இசையாது விலகிநிற்பவற்றை எளிதில் கண்டுகொள்ளமுடியும். கிருஷ்ணன் படைத்துணை தேடி அர்ஜுனனை பார்க்கவருகிறான். எளிய யாதவ அரசன் அவன் அப்போது. ஆனால் அவனே பரம்பொருள் என துரோணர் ஒரு பேருரை ஆற்றுகிறார். கிருஷ்ணனே பரம்பொருள் என்று சொல்லி அவன் பத்து அவதாரங்களையும் விவரித்து சிசுபால வதத்திற்கு முன் பீஷ்மர் பேருரை ஆற்றுகிறார். ஆனால் அவற்றை எவரும் கேட்டு பொருட்படுத்தவில்லை. இவையெல்லாம் கிருஷ்ணன் பெருந்தெய்வமாக ஆனபின் சேர்க்கப்பட்டவை

கடைசியாக மகாபாரத வாசிப்பில் கவனிக்கப்படவேண்டியது, மகாபாரதக் கதை சீரான ஒழுக்காக வியாசபாரதத்தில் இல்லை என்பது. பெரும்பாலானவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னரோ கொல்லப்பட்ட பின்னரோ தான் அவர்களின் முழுக்கதையும் தொகுத்துச் சொல்லப்படுகிறது. பலர் மகாபாரதத்தின் இறுதியில்தான் குணச்சித்திர ஒழுங்கை அடைகிறார்கள் – உதாரணம் திருதராஷ்டிரன்.

வெண்முரசு, இச்சிக்கல்களை களைந்து ஒரு சீரான கதை வடிவை முன்வைக்கிறது என்பதனாலேயே அது நவீன வாசிப்புக்கு உகந்ததாக உள்ளது. அத்துடன் அதன் பங்களிப்பு என்பது, மகாபாரதத்தின் நிகழ்வுகள் வெறுமே கதையாக அல்லாமல் மேலதிக உளவியல், தத்துவப் பொருள்கொண்டவையாக மாற்றப்படத்தக்கவை என்று அது காட்டுகிறது என்பதே. அத்தகைய வாசிப்பு மகாபாரதத்தை மானுடக்கதையாகப் பெருகச்செய்கிறது. ஒருநல்ல வாசகன் அவ்வழியே தானும் நெடுந்தொலைவு செல்லமுடியும். வெண்முரசின் கொடை அதுதான்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தத்துவக்கல்வியின் தொடக்கத்தில்…

$
0
0

1

 

அன்புள்ள ஜெ,

எழுத்தாளர் சுஜாதாவும் அவருடைய சகோதரர் ராஜகோபாலன் அவர்களும் இணைந்து எழுதிய “பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்” எனும் நூலை வாசித்த பின்னரே எனக்கு இந்து தத்துவ தரிசனங்களைத் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் உண்டானது. மேலும் அதன் பின்னர் தங்களின் “விஷ்ணுபுரம்” கதை நூலானது வேதகால வரலாறுகளையும் அக்கால நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் வளர்த்தது.

அவற்றைத் தொடாந்து வாசிக்கும் போது அந்நூல்களில் சொல்லப்படுவனவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது என்கின்ற முறையை, எனக்கென வகுத்து அவ்வாறே பின்பற்றி வாசிக்கிறேன்.

அவை:

1. முதலாவதாக அதை வாசிக்கும் முன் அவற்றின் மீது சுமத்தப்படும் புனிதத் தன்மையை விலக்கி சாதாரண நூல் ஒன்றாகவே வாசித்தல.

2. இக்காலகட்டத்தோடு பொருத்திப்பார்க்காமல் அந்நூல் எழுதப்பட்டதாக குறிக்கப்படும் காலகட்டத்தைப் புரிந்து கொள்ளுதல்.

3 அவற்றில் சொல்லப்படும் வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள் ஆகியவற்றை நம் நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு குழம்பாதிருத்தல்.

4 அவற்றை உள்ளது உள்ளவாறே நம் கற்பனைகளை நுழைக்காமல் இகழ்ந்தோ வியந்தோ அல்லாமல் நேராகப் புரிந்து கொள்ளதல்.

5 பின்னர், அவற்றைப் பற்றித் தெளிவாகச் சிந்தித்து சரியான முடிவை அடைதல்.

தயவு செய்து நான் குறிப்பிட்ட வாசித்தல் மற்றும் புரிந்து கொள்ளும் முறையில் தவறுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

தங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” புரிந்து கொள்ளுவதற்கு மிக எளிமையானதாகவும் விரிவானதாகவும் உள்ளது.

நன்றி,

அன்புடன்
துவாரகநாத்

(Sollaadal-bagu.blogspot.in)

அன்புள்ள துவாரகநாத்

இன்னும்கூட நீங்கள் பாமினியில் எழுதுவது ஆச்சரியம். அதுவும் பிரம்மசூத்திரமும் கிட்டத்தட்ட சமகாலத்தைச் சேர்ந்தவை என்ற மனப்பிரமை எழுகிறது.

ஆம் நீங்கள் சரியாகத்தான் வாசிக்கிறீர்கள். சொந்த வாசிப்பில் அந்தத் தெளிவை நீங்கள் அடைந்திருப்பதை வியக்கிறேன். வாழ்த்துக்கள். உண்மையைத்தேடுபவனுக்கு இந்திய ஞானமரபு ஒரு பெரிய வைரக்களஞ்சியம்.

நீங்கள் சொல்லும் வரிகளை நான் இவ்வாறு மேலும் விளக்குவேன். அதே வரிசையில்

1 தத்துவத்தை மதநம்பிக்கையில் இருந்து பிரித்தல். பிரம்மசூத்திரத்தையோ கீதையையோ நேற்றுவரை நம் முன்னோர் மதநூலாக வாசித்திருக்கலாம். இன்று அப்படி வாசிக்கவேண்டும் என்பதில்லை. தத்துவம் அறிவார்ந்த தர்க்கம் கொண்டது. அறிவார்ந்தமுறையிலேயே அதை அணுகலாம். நம்பிக்கைகளை, தொன்மங்களை அவற்றின்மேல் ஏற்றவேண்டியதில்லை.

2. வரலாற்றுப்பின்னணியில் வைத்துப்பார்த்தல். எந்த ஒரு ஞானநூலையும் அது உருவான, விவாதிக்கப்பட்ட வரலாற்றுப்பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக பிரம்மசூத்திரம் வேதகாலத்துக்குப் பின்னர் வேதவேள்விகள் விரிவாக நிகழ்ந்த ஒரு சூழலில் உருவானது. வேதச்சடங்குகளுக்கு நீட்சியாகவும் அவற்றுக்கான அறிவார்ந்த எதிர்வினையாகவும் எழுந்த ஞானவிவாதங்களில் மைய இடம் கொண்டது. கங்கைசமவெளியில் ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறிய அரசுகள் உருவாகி ஒன்றுடன் ஒன்று போரிட்டும் இணைந்தும் ஒரு பண்பாட்டுப்படலம் உருவான பின்னணியைக் கொண்டது

3. மதவேறுபாடுகளுக்கு அப்பால் , கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று வாசித்தல். இந்திய மெய்ஞானநூல்களை ஒட்டுமொத்தமாக ஒரு ஞானமரபாக வாசிக்கலாம். இந்துஞானநூல்களும் சமணஞானநூல்களும் பௌத்தஞானநூல்களும் எல்லாம் ஒரே ஞானப்பரப்பின் பகுதிகளே என்ற பார்வை மிகவும் தெளிவைத்தருவதாகும். எதன்மேலும் நாம் அவநம்பிக்கையோ மனவிலக்கமோ கொள்ளாமல் வாசிக்கமுடிந்தால் அது ஒரு பேறு.

4. முன்முடிவுகள் இல்லாமலிருந்த்தல். நம்முடைய இன்றைய சமகால அரசியல் அல்லது அழகியல் கோட்பாடுகளைக் கொண்டு அந்த ஞானமரபைப்பற்றிய முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டால் இழப்பு நமக்கே.

5. தத்துவமரபு என்பது ஞானத்தின் தர்க்க வடிவம் மட்டுமே என்ற தெளிவுடன் இருத்தல். தத்துவம் எதற்கும் முழுமையான விடையை அளிக்காது. மெய்ஞானம் என்பது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் அடையப்பெறும் ஒரு தரிசனம். அதை அழகியலுடன் வெளிப்படுத்துகையில் இலக்கியமாகிறது. தர்க்கபூர்வமாக வெளிப்படுத்துகையில் தத்துவமாகிறது. தத்துவமும் அழகியலும் தங்களுக்கான ஒரு முறைமையைக் கொண்டவை. அம்முறைமைக்குள் நின்றபடி நாம் அவற்றைப் பயில்கிறோம். ஆனால் தூய உள்ளுணர்வால் அவற்றின் வழியாகவே அவற்றை மீறிச்சென்றே நாம் மெய்ஞ்ஞானத்தை அறியமுடியும்

ஜெ

தத்துவத்தைக் கண்காணித்தல்

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பதுபற்றி

அறிதல் அறிதலுக்கு அப்பால்


பயனுறு சொல்


இருபுரிச்சாலை

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 24, 2012 @ 0:01

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59

$
0
0

[ 6 ]

விறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த கதையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற சித்தம் சலித்து விட்டுவிட்டு அமைந்தது. அந்தச் சலிப்பு நெஞ்சை அமைதிகொள்ளச் செய்தது. விழிகள் எடைகொள்ள அவர்கள் துயிலத் தொடங்கினர். கர்ணன் தன் குறட்டையொலியைக் கேட்டு விழித்துக்கொண்டபோது அங்கிருந்த ஷத்ரியர் பலரும் துயில்கொண்டிருப்பதை கண்டான்.

அவன் விழித்தெழுந்து உடலை அசைத்த ஒலி கேட்டு ஜயத்ரதன் விழிப்பு கொண்டான். “நெடுநேரமாயிற்றா, மூத்தவரே?” என்றான். கர்ணன் “இல்லை” என்றான். அவர்கள் துயிலாது விழிகளை தொலைவில் நட்டு இறுகிய உடலுடன் படுத்திருந்த துரியோதனனை நோக்கினர். கர்ணன் “நான் சென்று முகம்கழுவி வரவேண்டும்…” என்றான். ஜயத்ரதன் “நானும் எதையாவது அருந்த விழைகிறேன். திரிகர்த்தநாட்டின் கடும் மதுவை அருந்தினேன். என் உடலெங்கும் அதன் மணம் நிறைந்திருக்கிறது” என்றான்.

கர்ணனின் உடலில் தெரிந்த அசைவைக்கண்டு ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது எதிர் வாயிலினூடாக சிசுபாலன் உள்ளே வருவதை பார்த்தான். கர்ணனைத் தொட்டு “மூத்தவரே, அவரில் இருக்கும் தனிமையை பாருங்கள். விரும்பினாலும்கூட அவருடன் எவரும் இருக்க முடியாதென்பதைப்போல” என்றான். கர்ணன் “ஆம், இங்கு இருப்பவன் போல் அல்ல, எங்கோ சென்று கொண்டிருப்பவன் போலிருக்கிறான்” என்றான்.

அங்கிருந்த எவரையும் பார்க்காமல், நிமிர்ந்த தலையுடன், சொடுக்கிய உடலுடன், நீண்ட தாடியை கைகளால் நீவியபடி உள்ளே வந்த சிசுபாலன் தன்னை நோக்கி வந்து பணிந்த அக்கூடத்தின் ஸ்தானிகரிடம் தனக்கொரு மஞ்சம் ஒருக்கும்படி சொன்னதை அவர்கள் கண்டனர். அவனையே விழித்திருந்த அத்தனை ஷத்ரியர்களும் நோக்கினர். அவர்கள் கொண்ட அந்த உளக்கூர்மையை அரைத்துயிலில் உணர்ந்தவர்கள்போல பிறரும் விழிப்பு கொண்டனர். அவர்களும் உடல் உந்தி எழுந்து அவனை நோக்கினர்.

ஸ்தானிகர் சிசுபாலனை அழைத்துச் சென்று கர்ணனுக்கும் ஜயத்ரதனுக்கும் பின்னால் இருந்த ஒழிந்த பீடமொன்றில் அமரச்செய்தார். “இன்னீர் அருந்துகிறீர்களா, அரசே?” என்று அவர் கேட்க அவன் “செல்க!” என்பதுபோல கையசைத்துவிட்டு மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். தன்னைச் சுற்றிலும் சிறகதிரும் பூச்சிகள்போல் மொய்த்த விழிகளுக்கு நடுவே அவன் படுத்திருந்தான்.

கண்களை மூடிக்கொண்டபோதுதான் முகம் எத்தனை ஒடுங்கியிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணுருளைகள் இரு எலும்புக்குழிக்குள் போடப்பட்டவை  போலிருந்தன. பல்நிரையுடன் முகவாய் முன்னால் உந்தியிருந்தது. கன்ன எலும்புகள் மேலெழுந்திருந்தன. கழுத்தின் நரம்புகள் புடைத்து, தொண்டை எலும்புகள் அடுக்கப்பட்ட வளையங்கள் போல புடைத்திருக்க கழுத்தெலும்புகளின் வளைவுக்குமேல் ஆழ்ந்த குழிகள் மூச்சில் எழுந்தமைந்தன. அவற்றில் இரு நரம்புகள் இழுபட்டிருந்தன. ஒடுங்கிய நெஞ்சப்பலகைகள் நடுவே மூச்சு அதிர்ந்த குழிக்கு இருபக்கமும் விலாநிரைகள் நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன.

ஜயத்ரதன் அவனை நோக்கிக் கொண்டிருக்க கர்ணன் அவன் தோளை தொட்டான். “உருகிக்கொண்டிருக்கிறார், அரசே” என்றான் ஜயத்ரதன். “ஆம்” என்றான் கர்ணன். “அவருள் எரிவது எது?” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.

சிசுபாலனுக்கு அப்பால் படுத்திருருந்த உலூகநாட்டு பிரகந்தன் கையூன்றி எழுந்து “சேதி நாட்டரசே, தாங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை கொண்டு  வருவதாகவும், மகதரின் இறப்பிற்கு பழியீடு செய்யப்போவதாகவும் சூதர் பாடல்கள் உலவியதே? ஒருவேளை ராஜசூயத்திற்குப் பிறகு அப்படைப் புறப்பாடு நிகழுமோ?” என்றார். கண்கள் ஒளிர பல ஷத்ரியர் நோக்கினர். கோசலநாட்டு நக்னஜித் “அவர் தவம் செய்கிறார். படைக்கலம் கோரி தெய்வங்களை அழைக்கிறார்” என்றார்.

சிசுபாலன் எதையும் கேட்டதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் தாடை இறுகி அசைவதை கால்களின் இரு கட்டைவிரல்கள் இறுகி சுழல்வதை கர்ணன் பார்த்தான். “மூடர்கள்!” என்றான். “அது அரசர் இயல்பு, மூத்தவரே. ஒருவரை இழிவுபடுத்துவதனூடாக தங்கள் மேன்மையை அவர்கள் நிறுவிக்கொள்கிறார்கள். அவர்கள் இருவருமே தோற்றவர்கள்” என்றான் ஜயத்ரதன். “இவ்விளிவரலுக்கு சில உயர்குடி ஷத்ரியர்கள் புன்னகைப்பார்கள் என்றால் சிறுகுடியினர் அனைவரும் இதை தொடர்வார்கள்.”

கலிங்கனும் மாளவனும் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரிக்க அவந்தியின் விந்தன் “அவர் படைதிரட்டிக் கொண்டிருக்கிறார். இளைய யாதவர் அவருக்கு உதவுவதாக சொல்லியிருக்கிறார் என்று அறிந்தேன். அவர்கள் ஒரு குலம் அல்லவா?” என்றான். அனுவிந்தன் உரக்க நகைத்தான். அவனுடன் மேலும் ஷத்ரியர் இணைந்துகொண்டனர். “ஆனால் இளைய யாதவர் தன் மாமனை கொன்றவர். இளைய யாதவர் இவருக்கு மாமன் மகன் அல்லவா? மாமன்குலத்தை அழிப்பது ஒரு அரசச் சடங்காகவே யாதவர்களில் மாறிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.” மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

கர்ணன் “எத்தனை பொருளற்ற சொற்கள்!” என்றான். “இளிவரல் என்றாலும்கூட அதில் ஒரு நுட்பமோ அழகோ இருக்கலாகாதா?” என்றான்.  ஜயத்ரதன் சிரித்து “அவர்கள் அருந்திய மதுவுக்குப் பிறகு அவர்கள் இத்தனை பேசுவதே வியப்புக்குரியதுதான்” என்றான்.

“ஆனால் சேதிநாடு ஷத்ரியர்களின் அரசாயிற்றே?” என்று கௌசிகி நாட்டு மஹௌஜசன் கேட்டான். “சேதி நாடு ஷத்ரியர்களைவிட மேம்பட்ட குலப்பெருமை கொண்டது. ஷத்ரியர்கள் என்னும் ஈயமும் யாதவர்கள் என்னும் செம்பும் கலந்துருவான வெண்கலம் அது” என்றான்  காஷ்மீரநாட்டு லோகிதன். “அவ்வாறென்றால் தேய்த்தால் பொன் போல் ஒளிரும்” என்றான் தென்னகத்து பௌரவன். “ஆம், நாளும் தேய்க்காவிட்டால் களிம்பேறும்” என்று அவனருகே அமர்ந்திருந்த வாதாதிபன் சொன்னான். நகைப்பு அந்தக்கூடமெங்கும் நிறைந்தது.

சிசுபாலன் எழுந்து அவர்களை நோக்காமல்  கூடத்திலிருந்து வெளியே சென்றான். அவன் எழுந்ததுமே சிரிப்புகள் அடங்கி இளிவரல் நிறைந்த முகங்களுடன் நஞ்சு ஒளிவிடும் கண்களுடன் அவர்கள் அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் வாயிலைக் கடந்ததும் மீண்டும் அக்கூடமே வெடித்துச் சிரித்தது.

[ 7 ]

மீண்டும் வேள்விக்கான அவை கூடுவதற்கான மணியோசை கோபுரத்தின் மேல் எழுந்தது. விண்ணில் முட்டி அங்கிருந்து பொழிந்து அனைவர் மேலும் வருடி வழிவது போலிருந்தது அதன் கார்வை. மரநிழல்களிலும் அணிப்பந்தல்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வைதிகர்களும், மாளிகைகளில் துயின்ற அரசர்களும் விழித்து முகமும் கைகால்களும் கழுவி மீண்டும் வேள்விக்கூடத்தை நிறைத்தனர்.

அதுவரை வேள்விக்கு அவியளித்தவர்கள் எழுந்து புதிய அணியினர் அமர்ந்தனர். ஓய்வெடுத்து மீண்ட தௌம்யர் எழுந்து அவையை வணங்கி “அவையீரே, வைதிகரே, முனிவரே, இந்த ராஜசூயப் பெருவேள்வியின் முதன்மைச் சடங்குகளாகிய வில்கூட்டலும் ரதமோட்டலும் ஆநிரை படைத்தலும் நடைபெறும்” என்று அறிவித்தார். பைலர் சென்று தருமனை வணங்கி வில்குலைக்கும் முதற்சடங்கு நிகழவிருப்பதாக அறிவித்தார். அவர் தலையசைத்து செங்கோலை அருகில் நின்ற ஏவலனிடம் அளித்துவிட்டு  எழுந்து அவைமுன் வந்து நின்றார். புதிய மஞ்சள்மூங்கிலால் ஆன வில் ஒன்றை மூன்று வைதிகர் அவர் கையில் அளித்தனர். அதில் மஞ்சள்கொடி சுற்றப்பட்டிருந்தது. பிரம்புக் கொடியால் ஆன நாணை இழுத்துப்பூட்டி மும்முறை மூங்கில் அம்பை தொடுத்து தௌம்யரின் முன் அதை தாழ்த்தி தலைசுண்டி நாணொலி எழுப்பினார் தருமன்.

அவர் சென்று தௌம்யரை வில்தாழ்த்தி வணங்க அவர் தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு தருமன் தலையில் தெளித்து வேதமோதி வாழ்த்தினார். வைதிகர்கள் அவர் மேல் மலர் தூவி வாழ்த்த வில்லுடன் வேள்விச்சாலைக்கு வெளியே சென்றார். அவருடன் நான்கு தம்பியரும் தொடர்ந்தனர். முதல் அம்பை குறிவைத்து மூன்றுமுறை தாழ்த்தி ஏற்றியபின் இந்திரனின் கிழக்குத்திசை நோக்கி எய்தார். கூடிநின்றவர்கள் கைதூக்கி “ஹோ! ஹோ! ஹோ!” என்று ஓசையிட்டனர்.

எட்டு திசைகளுக்கும் எட்டு அம்புகளை எய்தபின் வில்லுடன் நடந்து அங்கு நின்ற தேரை அடைந்தார். மென்மரத்தாலான சகடங்களும் மூங்கில்தட்டுகளும் கொண்ட அந்த எளிமையான தேர் மலைப்பழங்குடிகளின் வண்டி போலிருந்தது. சௌனகரும் இளைய பாண்டவர் நால்வரும் அவரை வழிநடத்திச் செல்ல, அத்தேரில் ஏறி வில்லுடன் நின்றார்.

மூன்று வெண்புரவிகள் பூட்டப்பட்ட தேர் வேள்விச்சாலையை மும்முறை சுற்றி வந்தது. தேரில் நின்றபடியே தருமன் ஒவ்வொரு மூலையிலும் அம்பு எய்தார். நான்காவது மூலையில் மரத்தில் கட்டப்பட்டிருந்த அத்தி, மா, வாழை எனும் மூன்றுவகை கனிகளை நோக்கி அவர் அம்புவிட அவற்றை அவிழ்த்து அவர் தேரில் வைத்தனர் ஏவலர்.

தேரிலிருந்து இறங்கி வில்லுடன் சென்று வேள்விச்சாலைக்கு இடப்பக்கமிருந்த திறந்த பெருமுற்றத்தை அடைந்தார். பாரதவர்ஷமெங்கிலுமிருந்து கவர்ந்துகொண்டு வரப்பட்ட ஆநிரைகள் அங்கே கட்டப்பட்டிருந்தன. மூன்று வீரர்கள் இடையில் புலித்தோலாடையும் உடம்பெங்கும் சாம்பலும் தலையில் பன்றிப்பல்லாலான பிறையும் அணிந்த காட்டாளர்களாக உருமாற்று கொண்டு அவரை எதிர்கொண்டனர். அவர்கள் மூன்று அம்புகளை தருமனை நோக்கி எய்தனர். அவர்கள் கையை வாயில் வைத்து குரவையொலி எழுப்பினர். தருமன் தன் இடையிலிருந்த சங்கை ஊதினார்.

தருமன் மூன்று அம்புகளை அவர்களை நோக்கி எய்தார். அச்சடங்குப்போர் முடிந்ததும் அவர்கள் மும்முறை நெற்றி நிலம்பட குனிந்து வணங்கி அந்த ஆநிரைகளிலிருந்து குற்றமற்ற சுழிகள் கொண்டதும், செந்நிற மூக்கும் கரிய காம்பும்  உடையதுமான பசு ஒன்றை அவரிடம் அளித்தனர். அப்பசுவை ஓட்டியபடி அவர் வேள்விச்சாலை நோக்கி வந்தார். அவருக்குப்பின் தம்பியர் தொடர்ந்தனர்.

வேள்விச்சாலையிலிருந்த மக்களைக் கண்டு பசு திகைத்து நிற்க ஏவலன் ஒருவன் அதன் கன்றை முன்னால் இழுத்துச் சென்றான். கன்றை நோக்கி நாநீட்டி மூச்செறிந்த பசு தலையைக் குலுக்கியபடி தொடர்ந்து சென்று வேள்விச்சாலைக்கு முன் வந்து நின்றது. அதன் கழுத்தில் வெண்மலர் மாலை சூட்டப்பட்டது. கொம்புகளுக்கு பொற்பூண் அணிவிக்கப்பட்டது. நெற்றியில் பொன்குமிழ் ஆரமும் கழுத்தில் ஒலிக்கும் சிறு மணிமாலையும் சூட்டினர்.

பசுவின் கன்று அதன் முன் காட்டப்பட்டபின் வேள்விச்சாலைக்குள் கொண்டு சென்று மறைக்கப்பட்டது. ஐயுற்று தயங்கி நின்றபின் பசு மெல்ல உடல் குலுங்க தொடை தசைகள் அதிர காலெடுத்துவைத்து கிழக்கு வாயிலினூடாக வேள்விச் சாலைக்குள் நுழைந்தது. அது உள்ளே நுழைந்ததும் அனைத்து வைதிகரும் வேதக்குரல் ஓங்கி முழங்க அதன் மேல் அரிமஞ்சள் தூவி வாழ்த்தினர். மஞ்சள் மழையில் நனைந்து உடல் சிலிர்த்தபடி பசு நடந்து வேள்விச்சாலை அருகே தயங்கி நின்று “அம்பே” என்றது. நற்தருணம் என்று வைதிகர் வாழ்த்தொலி எழுப்பினர்.

பசுவை பைலர் வந்து தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு நெற்றியில் வைத்து வாழ்த்தி அழைத்துச் சென்றார். முதல் எரிகுளத்தருகே நிறுத்தப்பட்ட பசுவின் நான்கு காம்புகளில் இருந்தும் பால் கறக்கப்பட்டு ஒரு  புதிய பாளைக்குடுவையில் சேர்த்து பின் ஆறு மூங்கில் குவளைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு ஆறு தழல்களுக்கும் அவியாக்கப்பட்டது. கிழக்கு நோக்கி நிறுத்தப்பட்ட பசுவின் கருவறைவாயிலை  வைதிகர் பூசை செய்து வணங்கினர்.

அப்பசுவை மஞ்சள் கயிற்றால் கட்டி அரியணைக்கு முன் நின்ற தருமன் அருகே கொண்டுவந்து நிறுத்தினர். அவர் அதன் கயிற்றை வாங்கி கொண்டுசென்று தன் பீடத்தில் அமர்ந்திருந்த தௌம்யரின் அருகே காலடியில் வைத்தார். தௌம்யர் அப்பசுவை கொடையாக பெற்றுக்கொண்டு அவர் தலையில் மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினார்.

ஆநிரை கொள்ளலில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்துசேர்ந்த  அனைத்துப் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு வைதிகக்கொடையாக வழங்கப்பட்டன. முதல் நூற்றெட்டு பசுக்களும் தௌம்யரின் குருகுலத்திற்கு அளிக்கப்பட்டன. தௌம்யரின் சார்பில் அவற்றில் ஒரு பசுவின் கயிற்றை அவரது மாணவன் தருமனிடமிருந்து பெற்றுக் கொண்டான். ஒவ்வொரு வைதிகர் குலத்துக்கும் பசு நிரைகள் அளிக்கப்பட்டன. இந்திரப்பிரஸ்தத்தின் இருபத்து மூன்று பெருமுற்றங்களிலும், நகரைச்சூழ்ந்த பன்னிரண்டு குறுங்காடுகளிலுமாக கட்டப்பட்டிருந்த எழுபத்தெட்டாயிரம் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு கொடையளிக்கப்பட்டன. அந்தணர் எழுந்து தருமனை வாழ்த்தி அவர் குலம் சிறக்க நற்சொல் அளித்தனர்.

பைலரின் வழிகாட்டலின்படி  அன்னம்கொள்ளலுக்காக தருமன் அரியணையிலிருந்து எழுந்து அரசணிகோலத்தில் திரௌபதியுடன்  வேள்விப்பந்தலை விட்டு வெளியே வந்தார். அங்கு காத்திருந்த பன்னிரு வேளாண்குடித்தலைவர்கள் அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்று வேள்விப்பந்தலுக்கு இடப்பக்கமாக செம்மைப்படுத்தப்பட்டிருந்த சிறிய வயல் அருகே கொண்டு சென்றனர். அங்கு தொல்குடிகள் பயன்படுத்துவது போன்ற ஒற்றைக்கணுவில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய கைமேழி மூங்கில் நுகமும் எருமையின் தொடை எலும்பால் ஆன  மண்கிளறியும் மூங்கில் கூடையும் இருந்தன.

பைலர் வயலருகே தருமனை நிறுத்தி “வளம் பெருகுக! விதைகளில் உறங்கும் பிரஜாபதிகள் இதழ்விரியும் காலத்தை கண்டு கொள்க! அன்னம் அன்னத்தை பிறப்பிக்கட்டும். அன்னம் அன்னத்தை உண்ணட்டும். அன்னம் அன்னத்தை அறியட்டும். அன்னத்தில் உறையும் பிரம்மம் தன் ஆடலை அதில் நிகழ்த்தட்டும். அன்னமென்று இங்கு வந்த அது நிறைவுறட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தி திரும்பி வேள்விக்கூடத்திற்கு சென்றார்.

வேளிர்களால் அழைத்துச் செல்லப்பட்ட யுதிஷ்டிரர் தன் மிதியடிகளை கழற்றிவிட்டு மரத்தாலான கைமேழியை எடுத்து கிழக்கு நோக்கி மண்ணில் வைத்தார். அதன் சிறு நுகத்தை அர்ஜுனனும் பீமனும் பற்றிக் கொண்டனர். கரையில் நின்றிருந்த முன்று வைதிகர்கள் வேதச் சொல் உரைக்க அதைக் கேட்டு திரும்பச் சொன்னபடி அவர்கள் நுகத்தைப்பிடித்து இழுத்துச்சென்றனர். தருமன் அவ்வயலை உழுதார். நகுலனும் சகதேவனும் இருபக்கமும் மண் குத்திகளால் நிலத்தைக் கொத்தியபடி உடன் வந்தனர். திரௌபதி மூங்கில் கூடையை இடையில் ஏந்தி அதிலிருந்த  வஜ்ரதானிய விதைகளை அள்ளி வலக்கை மலரச்செய்து விதைத்தபடி பின் தொடர்ந்தாள்.

ஏழுமுறை உழுது சுற்றிவந்து விதைத்ததும் அவர்கள் கரையிலேறி ஓரிடத்தில் அமர்ந்தனர். வைதிகர் சொல்லெடுத்தளிக்க “விடாய் அணையாத அன்னையின் வயிறே! ஊற்று அணையாத முலைக்கண்களே! அளித்துச்சோராத அளிக்கைகளே! எங்களுக்கு அன்னமாகி வருக! எங்கள் சித்தங்களில் அறிவாகவும் எங்கள் குல வழிகளில் பணிவாகவும் இங்கு எழுக!” என்று வாழ்த்தினர். குலமுறை கூறுவோர் தருமனுக்கு முன்னால் வந்து யயாதியிலிருந்து தொடங்கும் அவரது குலமுறையை வாழ்த்தி ஒவ்வொருவருக்கும் உணவளித்த மண் அவர்களுக்கும் அமுதாகுக என்று வாழ்த்தினர்.

பன்னிரு ஏவலர் கதிர் முதிர்ந்த வஜ்ரதானியத்தின் செடிகளை அவ்வயலில் நட்டனர். தருமன் தன் துணைவியுடன் மண் கலங்களில் நீரேந்தி வயலுக்குள் இறங்கி அவற்றுக்கு வலக்கை மேல் இடக்கை வைத்து  நீர் பாய்ச்சினார். பின்னர் கிழக்கு நோக்கி திரும்பி நின்று “எழுகதிரே, இங்கு அன்னத்திற்கு உயிரூட்டுக! அமைந்துள்ள அனைத்திற்குள்ளும் அனலை நிறுத்தி அசைவூட்டுக! ஒவ்வொன்றிலும் எழும் தவம் உன்னால் நிறைவுறுக!” என்று வணங்கினார்.

தொன்மையான முறையில் எருதின் வளைந்த விலா எலும்புகளில் கல்லால் உரசி உருவாக்கப்பட்ட அரம் கொண்ட கதிர் அரிவாளை  வேதியரிடமிருந்து பெற்று வயலில் இறங்கி அதைக் கொண்டு அக்கதிர்களை கொய்தார். அவற்றை அவருக்குப் பின்னால் சென்ற திரௌபதி பெற்று தன் கூடையில் நிறைத்தாள். பத்தில் ஒரு பங்கு கதிரை பறவைகளுக்கென நிலத்திலேயே விட்டுவிட்டு கரையேறினர்.

வரப்பில் நின்று மண் தொட்டு சென்னி சூடி தருமன் “அன்னையே, உன்னிடமிருந்து இவ்வன்னத்தை எடுத்துக் கொள்கிறோம். பெற்றுக் கொண்டவற்றை இம்மண்ணுக்கே திருப்பி அளிப்போம். இங்கு உணவுண்ணும் பூச்சிகள் புழுக்கள் விலங்குகள் அனைவருக்கும் நீ அமுதாகி செல்க! உயிர்க்குலங்கள் அனைத்தும் உன்னால் பசியாறுக! உன்னை வணங்கும் என் சென்னி மீது உன் கருணை கொண்ட கால்கள் அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!”  என்று வேண்டி திரும்பி நடந்தார். அவர் தோளில் அந்த மேழியும் வலக்கையில் கதிர் அரிவாளும் இருந்தன. கொய்த கதிர்களுடன் திரௌபதி அவருக்குப் பின்னால் செல்ல இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர்.

அவர்களை வேள்விப்பந்தலருகே எதிர்கொண்ட பைலரும் வைதிகரும் “நிறைகதிர்களுடன் இல்லம் மீளும் குலத்தலைவரே, பெற்றுக் கொண்டவர்கள் திருப்பி அளிக்க கடமைப்பட்டவர்கள். மண் அளிப்பவை அனைத்தும் விண்ணுக்குரியவை என்றுணர்க! விண்ணோக்கி எழுகிறது பசுமை. விண்ணோக்கி நா நீட்டி எழுகிறது அனல். விண்ணோக்கி பொருள் திரட்டி எழுகிறது சொல். விண்ணிலுறையும் தெய்வங்களுக்கு மண் அளித்த இவ்வுணவை அளிக்க வருக!” என்றனர்.

அவர்கள் வழிகாட்ட தருமனும் துணைவியும் பந்தலுக்குள் சென்று எரிகுளங்களுக்கு நடுவே அமர்ந்தனர். திரௌபதி அவ்வஜ்ரதானியங்களை மென்மரத்தாலான கட்டையாலடித்து உதிர்த்தாள். கையால் அம்மணிகளை கசக்கி பிரித்தெடுத்தாள். மூங்கில் முறத்தில் இட்டு விசிறி, பதரும் உமியும் களைந்து எடுத்த மணிகளை ஐந்து பிரிவாக பிரித்தாள். முதல் பிரிவை தனக்குரிய மூங்கில் நாழியில் இட்டாள். இரண்டாவது பிரிவை அவள் முன் வந்து வணங்கிய வேள்வி நிகழ்த்தும் அந்தணருக்கு அளித்தாள். மூன்றாவது பிரிவை கையில் முழவுடனும் கிணைப்பறையுடனும் விறலியுடன் வந்த பாணன் பெற்றுக்கொண்டான். நான்காவது பிரிவு தென்திசை நோக்கி விலக்கி வைக்கப்பட்டது. ஐந்தாவது பிரிவு தெய்வத்திற்கென சிறு கூடையில் இடப்பட்டது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்று ஐம்புலத்தாரும் ஓம்பி அமர்ந்த அவளை தௌம்யர் வாழ்த்தினார். வேள்விக்கென அளிக்கப்பட்ட வஜ்ரதானியம் முப்பத்தியாறு சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு எரிகுளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு அவியிடப்பட்டது. தௌம்யர் “ஆவும் மண்ணும் அன்னையும் என வந்து நம்மைச்சூழ்ந்து காக்கும் விண்கருணையே! இங்கு அனலென்றும் விளங்குக! இவை அனைத்தையும் உண்டு எங்கள் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அளிப்பாயாக! அவர்களின் சொற்கள் என்றும் எங்களுடன் நிறைந்திருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார். “ஓம் ஓம் ஓம்” என்று அவை முழங்கியது.

தொடர்புடைய பதிவுகள்

அரசியல் கடிதங்கள்

$
0
0

images

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

உங்களதுஏஷியா நெட்பேட்டியில் இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். முதலாவதுபோடி லாங்குவேஜ் (body language)’. மலையாளிகளுக்கென்று தனித்துவமான உடல் மொழி இருக்கிறது. சக மலையாளிகளிடம் சம்சாரிக்கும் போது அந்த உடல்மொழி அவர்களிடம் தூக்கலாக இருப்பதனைக் கவனித்திருக்கிறேன். உங்களிடம் அந்த உடல்மொழி மிஸ்ஸிங்.

 

இரண்டாவது உச்சரிப்பு. உங்களின் மலையாள உச்சரிப்பு ஏறக்குறைய தமிழைப் போல இருந்ததாக என்னுடைய தனிப்பட்ட எண்ணம். மூக்கின் உபயோகம் குறைந்தது தமிழில் புகுந்து விளையாடி கஸரத் எடுத்ததன் காரணமாக இருக்கலாமோ என்று ஒரு சம்சயம். அல்லது ஒருவேளை நாகர்கோவில் மலையாளம் அப்படித்தானோ? எப்படி இருந்தாலும் உங்களின் உச்சரிப்பு மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை விடவும் பெட்டர்தான். மலையாளிகளிடம் மண்டை காய வைக்கும் மலையாளம் பேசுவதில் அவரை மிஞ்ச இன்னொருத்தன் பிறந்துதான் வரவேண்டும்! எனிக்கி மலையாளம் நன்னாயிட்டு மனசிலாகும். கொறச்சு வாசிக்கானும் அறியும் கேட்டோ? பட்ஷே பறயான் வரினில்லா ஸாரே. ஞான் எந்து செய்யும்? :)

 

மற்றபடி நீங்கள் சொன்னபடிதானே தமிழக, கேரள தேர்தல் முடிவுகள் இருக்கின்றன? மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

 

அதே சமயம் நீங்கள் திருமாவளவனை கொஞ்சம் அதிகமாகத் தூக்கிப் பிடிக்கிறீர்களோ என்கிற எண்ணம் எனக்கிருக்கிறது. எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட விரோதமோ அல்லது கொடுக்கல் வாங்கல்களோ இல்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வது போல தமிழ் நாட்டு முதலமைச்சராக வருவதற்கான தகுதிகளை அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறாரா என்பது சந்தேகம்தான். அவருடைய இத்தனை வருட கால நடவடிக்கைகளையும் நான் கவனித்து வந்திருக்கிறேன் என்றாலும் நானறியாத சில தகுதிகள் அவருக்கு இருக்கக் கூடும் என்பதினை மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் அப்பால் திராவிடக் கட்சிகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த கட்டத் தலைவர்களை இரண்டு கட்சிகளும் வளர்த்தெடுக்கவில்லை அல்லது வளர விடுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமாவளவன், அன்புமணி ராம்தாஸ் போன்றவர்களின் முக்கியத்துவம் கூடலாம்.

 

தமிழ்நாட்டில் பா..கவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ தலையெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு. ஓரளவிற்கு வாய்ப்பிருக்கும் பா..கட்சி, பெரும்பாலான தமிழர்களால் வட இந்தியக் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. அதனை மாற்றுவதற்கு அந்தக் கட்சித் தலைவர்களே ஆர்வமற்று இருக்கிறார்கள். எனவே ஒரு காம்ப்ரமைஸ் தலைவராக திருமாவளவன் தமிழ்நாட்டு முதலமைச்சராக வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது. அதற்கு முன்னால் அவருக்கு இன்றைக்கு இருக்கும் எதிர்மறையான இமேஜை அவர் மாற்ற முயற்சிக்க வேண்டும். அவரது கட்சித் தொண்டர்களை வன்முறையைக் கைவிடச் செய்ய வேண்டும். முக்கியமாக கட்டைப் பஞ்சாயத்து. அடுத்த சாதிப் பெண்கள் குறித்தான அவரது வார்த்தைப் பிரயோகங்கள் ஒருபோதும் பிற தமிழக சாதியினரால் ஏற்றுக் கொள்ளப்படவே மாட்டாது என்பதினை அவர் உணரவேண்டும். இதையெல்லாம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. அதையும் விட வஹாபிய அடிப்படைவாத முஸ்லிம்களுடனும், இலங்கையில் இனப்படுகொலையைத் துரிதப்படுத்திய தமிழக கிறிஸ்தவ பாதிரிமார்களுடனான உறவையும் அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதையெல்லாம் அவர் செய்வாரா என்பது சந்தேகமே.

 

எப்படி இருந்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழக அரசியலில் புயல் வீசும் ஆண்டுகளாக இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

 

அன்புடன்,

நரேந்திரன்.

 

 

அன்புள்ள நரேந்திரன்,

வெள்ளையானை வெளியான நாள்முதலே விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பிலுள்ள நண்பர்களுடன் எனக்கு உறவுண்டு. என் அவதானிப்புகள் பல தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்தவை.

ஜெ

 

 

அன்புள்ள ஜெமோ

 

உங்கள் ஏஷியாநெட் பேட்டி மலையாள மனோரமா கட்டுரை இரண்டையுமே கவனித்தேன். சுவாரசியமான அரசியல் ஊகங்கள். பெரும்பாலும் ஒரு நேரடியான நடைமுறைத்தன்மை கொண்டவை உங்கள் கருத்துக்கள். தமிழக அரசியல் பற்றியும் கேரள அரசியல் பற்றியும் நீங்கள் சொன்ன ஊகங்கள் எல்லாமே சரியாகிவிட்டன.

 

இடதுசாரி இலட்சியவாதம் கேரளத்தில் காலாவதியாகி அந்த இடத்தில் நடைமுறை சார்ந்த ஒரு அரசியல் வந்துவிட்டிருப்பதை சொன்னீர்கள். அதுவும் சரிதான். அச்சுதானந்தனைப்பற்றி நீங்கள் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை. நீங்கள் சொன்னதைப்போல தலையில் சிவப்புத்துண்டு கட்டி ‘எந்தா சாரே?’ என்று கேட்டு அட்டிமறிப்பணம் கேட்டுவரும் ரவுடி சகாவுதான் இப்போது முதலமைச்சர்

 

எது பயமாக இருக்கிறது என்றால் கேரளத்தைப்பற்றி நீங்கள் சொன்ன மேலதிக ஊகம்தான். பாரதிய ஜனதா பலமடங்கு வாக்கு பெறும் என்று சொன்னீர்கள். பெற்றுவிட்டார்கள்.கேரளத்தில் அப்படியெல்லாம் பாரதியஜனதாவுக்கு எதிர்ப்பி இல்லை என்றும் , பெரும்பாலான கேரள கிறித்தவர்கள் வணிகர்கள் என்பதனால் அவர்கள் பாரதிய ஜனதாவை ஆதரிக்கவும் கூடும் என்றும் அதுநடந்தால் இப்போது காங்கிரஸ் அங்கே செய்யும் ஒருங்கிணைப்புவேலையை பாரதிய ஜனதா செய்யமுடியும் என்றும் சொன்னீர்கள். நடந்திருமோன்னு பயமா இருக்கு

 

ஜெயசீலன்

 

அன்புள்ள ஜெயசீலன்,

இப்போதேகூட சிரியன் கிறிஸ்தவரர்களுக்கு பாரதிய ஜனதா உவப்பான கட்சிதான். அவர்கள் வணிகர்கள். அடுத்த ஐந்தாண்டும் மத்தியில் காங்கிரஸ் இல்லை என்றால் அவர்கள் பாரதிய ஜனதாவை நாடுவார்கள். வஹாபிய இஸ்லாமின் வெறுப்பரசியலும் வன்முறையும் அவர்களை அத்திசை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16748 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>