Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

விழா 2015- கிருஷ்ணன்

$
0
0

1

இது போன்ற கூடுகைகளின் முக்கிய பங்களிப்பே ஜெ தனது விழா உரையில் கூறியது போல “ஊசிகளைக் கூர் தீட்டிக் கொள்வது”.

 

 
ஒவ்வொரு முறையும் புதிய நோக்குகள், தகவல்கள் மற்றும் உணர்வு நிலைகளுடன் திரும்புவேன். சில ஆண்டுகள் தோய்வடைந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக இவ்விழா ஒரு அறிவார்வலனுக்கு நல் விருந்து. தேவதச்சன் ஒரு ஆளுமையாக ஒரு பாத்திரமாக இந்த இரு நாட்களிலும் பரந்து விரிந்தார். அவர் ஒரு இசை ரசிகன் போல உரையாடல்களில் தலையை ஆட்டி ஆட்டி ரசிப்பது பார்பதற்கு வெகு சுவாரஸ்யம். கூட அந்தத் தாம்பூலம் தரித்தலும்.


காலம் ஒரு ஒழுக்கல்ல அது சம்பவங்களால் நிரப்பப் படுவது சம்பவங்கள் துண்டு துண்டானது ஆகவே காலமும் துண்டு துண்டானது எனக் கூறிக் கொண்டிருக்கையில் நான் நுழைந்தேன். நாமக்கல் நண்பர்களுடன் ஈரோட்டில் இருந்தே காரில் எங்கள் விழா துவங்கி விட்டது, பின் திரும்ப நான் ஈரோட்டில் இறங்கியபோது தான் அது முடிந்தது. காங்கோ மகேஷ் உணர்சிகரமான வெண் முரசு வாசகர் , வாசு IIT பட்டதாரி, வரதராஜன் ஒரு லாரி அதிபர் இவர்களின் நட்பு மிக இனியது . எனக்கு எனது ஈரோட்டு நண்பர்கள் வட்டத்தை நினைவூட்டியது.


வாசு வெண் முரசு வழியாக தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் வந்தவர் , குறிப்பாக இதன் மொழி அவரைக் கவர்ந்துள்ளது, சில புதுச் சொற்களை இதிலிருந்து அன்றாட உரையாடல்களில் கையாள்வது நாம் எண்ணியதை சொல்லி விட்டோம் என்கிற நிறைவைத் தருகிறது என்கிறார், பெரிதும் அதற்காகத் தான் படிக்கிறார். வராத ராஜன் இலகுவான மகிழ்ச்சியுடன் எப்போதும் இருப்பவர் , அறிவுத் தேடலில் ஆர்வமுடையவர். இவரைப் போன்றவர்களுக்கு இந்த இருண்டு நாட்கள் சொல்லில் அடங்கா திருப்தியை அளித்துள்ளது.

 


தேவதச்சன் இந்த இரு நாள் அமர்வுகளில் பேசியதில் மிகக் குறிப்பிடத் தக்கதாக நான் எண்ணுவது முடிவிலி குறித்த அவரின் அவதானிப்பு. ஒவ்வொரு குழந்தையும் ஒரு முடிவிலியின் முனையில் பிறக்கிறது ஆகவே நாம் முடிவிலியை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு குழந்தை ஒரு மானிட மரபுத் தொடரின் பகுதி ஆகவே அது தனித்த உயிரல்ல.
மேலும் ஒரு தனது பேத்தியை இழந்த கிழவி மயில் போலக் கிடக்கிறாள் எனக் கூறியது அத்தருணத்தின் கணத்தில் யாரையும் கவிஞராகுவது என்றார். இதைத் தொடர்ந்து மேலும் கூறப் பட்ட வெவ்வேறு சம்பவங்களில் சில சாதாரணர்கள் உகுத்த சில வாக்கியங்களை பதிவு செய்யும் பொறுப்பை சென்னை ஜோதி போன்ற இளம் வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.


அடுதத்தது நான் முக்கியமாகக் கூற விரும்புவது , K .N . செந்திலின் அவதானிப்பு . ஒரு சம காலப் போக்கை சம காலத்திலேயே அவதானிப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. தற்போதைய சமூகம் ஒரு கருணையற்ற சமூகமாக உள்ளது , அது எந்த மதிப்பீட்டையும் அதன் உள் விதை என்ன எனக் கீறிப் பார்க்கும், மானுட மேன்மை பற்றி மெய் சிலிர்ப்பதற்கு தற்காலத்தில் ஏதுமில்லை

 

 

மாறாக தஸ்தவெஸ்கி திடீரென ஒரு அன்பின் , மானுட மேன்மையின் பேரொளியை நம்முன் பாய்ச்சுவார் , குற்றமும் தண்டனையும் நாவலில் சோனியாவின் பாத்திரம் அத்தகையது என்றார். அப்போது தற்காலத்தைய எழுதாளர்களிடம் காணப்படும் spreading என்கிற தன்மையைக் குறித்து எதிர்மறையாக ஜெ குறிப்பிட்டார். அது தேவையற்ற விஸ்தாரம் மற்றும் தகவல் குவிப்பு பற்றியது.


சென்ற முறை சு வேணுகோபால் என்றால் இம்முறை ஒரு படி மேலாக ஜோ டி குருசின் அமர்வு . இது எல்லோரையும் முற்றிலுமாக கட்டிப் போட்டுவிட்டது. அவர் தனது படைப்புகளை விடவும் அவர் சார்ந்த சமூகத்தை நமக்கு அறிமுகப் படுத்துவதை விரும்பினார். அவரின் இரு நாவல்களின் மூலம் ஏற்பட்ட எதிர்ப்புகளை தனது உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டதும், எதிர்ப்புகளை தூபம் போட்டு வளர்த்ததும் ஒரு நாவலில் இடம் பெறும் சம்பவம். அவரது அஞ்சாமை அவரது ஆளுமை.

அவர் குறிப்பிட்ட wedge bank மிக மிக புதிய செய்தி. அதாவது குமரிக்கு கீழே முழுக்க முழுக்க நமது எல்லைக்கு உட்பட்டு ஒரு மீன் வளச் சுரங்கம் உள்ளது , அங்கு இலங்கை மீனவர்கள் அத்து மீறி மீன் பிடிக்கிறார்கள், பற்பல கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு பிற வெளி நாடுகளுக்கு இந்த அனுமதியை இந்திய அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள். இது வெளிபட்டால் 2g யை சிறு ஊழலாகிவிடும்.

 

 

மேலும் வியாபர மீன்பிடி முதலாளிகளின் கீழ் பணியாற்றும் நமது மீனவர்களின் எல்லை மீறல்கள் மற்றும் அத்து மீறல், இலங்கை மீனவர்களின் தரப்பு நியாயம் மற்றும் நமது மோட்டார் மீன்பிடி (mechanized fishing) அநீதி ஆகியவற்றையும் பதிவு செய்தார். கீழே இணையத்தில் நான் தேடி எடுத்த ஒரு குறிப்பு.

 

Wedge Bank

Wedge bank is a fertile fishing found where rich marine biological diversity occurs. Wedge bank may also be defined as a place of marine environment, where there is a rich availability of fish food organisms. The water depth of this region is low. The physical features of the water like under-water current, tides and waves will have less impact on the fishes and animals of this region. Fishes select this region for feeding and breeding purposes. Throughout the maritime countries of the world there are about twenty such wedge banks. Of these one is situated near Kanyakumari on the coastline of Kanyakumari District on the eastward as well as on the westward region for about 34 nautical miles20 . Here representatives of fish species of the three seas occur.

(http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/15709/10/10_chapter%204.pdf)

இடையே வந்த லட்சுமி மணிவண்ணன் அமர்வுகளுக்கு ஒரு தொய்வு.   Anti -thought என ஒன்று உண்டு என்றால் அவர் பேசுவதைக் கேட்டால் போதும். வரலாற்றுவாதம் என்பது முன் நிகழ்ந்தவற்றை குறித்துக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பது , வரலாற்றிற்கு ஒரு திசையும் நோக்கும் உள்ளது.

பின்நவீனத்துவ சிந்தனை என்பது வரலாறு ஒரு புனைவே எனக் கூறுவது இது சொல்லுபவரின் தேர்வுக்குத் தக நிறத்தை மாற்றிக் காட்டும் ஆகவே வரலாறு என்பது ஒரு பல் கதையாடல்.
புது வரலாற்று வாதம் என்பது அப்படியென்றால் நாமும் ஒரு புனைவை உருவாக்கி வரலாற்றில் சேர்த்து அதை சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக பயன்படுத்துவோம் என்பது.
இதில் பின் நவீனத்துவ சிந்தனையை லட்சுமி மணிவண்ணன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என ஜெ கூறினார். மிக முக்கியமான உரையாடல் அது.


இசையின் வருகையும் , யுவனின் வருகையும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமக்கியது. இசையின் பேச்சில் contemplative poetry என்கிற வகைமை குறித்து பேசப் பட்டது. யுவன் தனது பேச்சில் தேவதச்சன் தன்னை ஒரு மாற்று குறைவாகவே நடத்துகிறாரோ என்கிற மனக்குறை இருந்ததாகவும் ஒரு மாலை நடையில் அவரிடம் அதைக் கூறிய போது இரு கைகளையும் விரித்து என்னிடம் ஏதேனும் ஒளிந்துள்ளதா எனப்பார் எனக் கூறியது ஒரு குரு சிஷ்ய உறவில் மட்டுமே வாய்க்கும் நெகிழத் தக்க அனுபவம்.


நான் நுழையும் போது தேவதச்சனிடம் ஜெ கேட்டது , நீங்கள் முற்றிலும் வேறொருவராக மாறி என்றேனும் கவிதை எழுதியதுண்டா என்பது. Tranströmer ரிடம் அதிக கண்டதாகவும் சொன்னார். அதற்கு இல்லை என பதிலளித்தார். அதற்கு தடையாக இருப்பது எது என ஜெ கேட்டார், இனிமேல் தான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என தேவதச்சன் கூறினார். அவருக்கும் சிலதூண்டல்களை இந்த இருநாட்கள் வழங்கியது நமது வெற்றி.
அதைத் தக்கவைத்துக் கொள்ளல் எதிர் காலத்தில் நமக்கு காத்திருக்கும் ஒரு போராட்டம்.

 
கிருஷ்ணன்.

 

படங்கள்

தொடர்புடைய பதிவுகள்


விழா 2015 கடிதங்கள் 4

$
0
0

 

1

 

ஜெ

 

நிறைவான தருணம் எல்லா நேரத்திலும் வந்துவிடுமா? வருடத்தின் கடைசியில் தன் கருத்தொத்த நண்பர்களின் ஒரு சந்திப்பில் அது நிகழுமென்றால் அது ஆனந்தத்தின் உச்சம் தான். ஒவ்வொரு ஆண்டும் நிகழும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவமும் அது தரும் சுகம் அலாதியானதுதான். அதற்கு நேரம் ஒதுக்கி தன் உறைந்துபோன செல்களை புதுப்பித்து கொள்ள முயலும் இலக்கிய ஆளுமைகளை நினைத்து பெருமை கொள்கிறேன்.


ஞானக்கூத்தன் விழாப் பற்றி இப்போதுதான் படித்தது மாதிரி இருந்தது அதற்குள் ஒராண்டு முடிந்து அடுத்த ஆண்டும் வந்துவிட்டது. ஆறாவது ஆண்டாக தொடர்ந்து இந்த பணி நடந்து வருவதும் அதில் சளைக்காமல் கலந்து கொள்வது/நடத்துவதும் தமிழ் இலக்கிய உலகின் ஒரு முக்கிய தருணம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!!

 

கே.ஜே.அசோக் குமார்

 

 

ஜெ,

விழா புகைப்படங்களும், விழா குறித்த பதிவுகளும் மிகுந்த சந்தோஷம் தருகின்றன். மிகப் பெரிய ஒரு செயலை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது சிறப்போடு மேலும்  வளரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அன்புடன்
நிர்மல்.

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் கூட்டத்துக்கு வந்திருந்தேன். சந்திப்புகள் அபாரமான அனுபவங்களாக இருந்தன. தேவதச்சன் ‘நாலெட்ஜ் சிந்தனைக்கு எதிரானது.’ என்று சொன்னதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன். அப்படியென்றால் கல்வி தேவையில்லையா என்று கேட்டேன். தேவை, ஆனால் அது மட்டும் நிறைந்துவிடக்கூடாது, கடந்துசெல்லவும் வேண்டும் என்று சொன்னார்
அரங்கிலே மிகச்சிறந்தது கடைசியாக பேசியதுதான். வரலாற்றுவாதம் பற்றிய விவாதம் ஒரு உச்சகட்டம். அப்படி மூன்றுதரப்புகள் மாறிமாறி கூர்மையாகப்பேசிக்கொள்ளும் ஒரு விவாதத்தை நம் கல்லூரிகள் எதிலுமே காணமுடியாது. நிறைவாக இருந்தது. கிக்கானி பள்ளி விழாவில் ஒலியமைப்பு சரியில்லை. ஆகவே எனக்கு பேச்சுக்கள் தெளிவாகப்புரியவில்லை. ஆனால் இரண்டுநாட்கள் நடந்த சர்ச்சைகளின் மனநிலை நீடித்ததனால் உற்சாகமாக இருந்தது
சக்திவேல்
ஜெ,
நலம்தானே? கிக்கானி பள்ளியில் சந்தித்தோம். புல்லின் தழல் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். நான் கரூரில் இருந்து விஷ்ணுபுரம் கருத்தரங்குக்கு வரமுடியவில்லை. ஆகவே விழாவுக்கு வந்தேன். முந்தைய விழாக்களில் எல்லாம் கலந்துகொண்டென். இந்த விழா கொஞ்சம் உற்சாகமாக இல்லாமல் இருந்தது போல தோன்றியது. அறிவிப்பும் அறிக்கைகளும் எல்லாம் மேலோட்டமாக ஆர்வமில்லாமல் சொல்லப்பட்டதுபோல இருந்தன. எல்லாரும் களைத்துப்போய் இருந்திருக்கலாம். நான் தேவதச்சனிடம் சில வார்த்தைகள் பேசினேன். சிறந்த அனுபவம் அது
முருகேஷ்
அன்புள்ள ஜெ சார்
ஒருநாள் விஷ்ணுபுரம் விவாதத்தில் கலந்துகொண்டேன். நான் கலந்துகொண்ட மிகச்சிறந்த இலக்கிய விவாதம் இதுவே, கவிதையை வாசிப்பதிலுள்ள மூன்று தளங்களைப்பற்றிச் சொன்னீர்கள். இன்னொசெண்ட் ரீடிங், காம்ப்ரிஹென்ஸிவ் ரீடிங், காண்டம்ப்லேட்டிவ் ரீடிங் ஆகிய மூன்றையும் பலமுறை யோசித்தேன். வண்ணத்துப்பூச்சி பற்றிய அவரது கவிதையை முன்வைத்து [சிறகுகள் இரு ஜன்னல்கள் மாதிரி இருப்பது] சொன்னபோது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சட்டென்று புரிந்தது.
நாம் வாசிப்பது சரியாகத்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். முதலில் நமக்கு தோன்றக்கூடிய எளிமையான குழந்தைத்தனமான வாசிப்பு மிக முக்கியமானது என்றும் கவிதையை அறிவுஜீவித்தனமாக கருத்துக்களைத் தேடி வாசிக்கவேண்டியதில்லை என்றும் தெரிந்துகொண்டது எனக்கு ஒரு பெரிய தொடக்கம்.சிந்தனைகளையோ அதற்கு அப்பாலுள்ளவற்றையோ பின்னர்தான் புரிந்துகொள்ளவேண்டும். கவிதையை வாசிக்கும்போது வரவேண்டியது ஒரு குழந்தைத்தனமான பரவசம்தான். அது வராவிட்டால் கவிதை தொடங்கவேயில்லை என்றுதான் பொருள். ஒரு பெரிய அரங்கு. அதில் கலந்துகொண்டது பெருமை
செந்தில்

 மேலும் படங்கள்

 


தொடர்புடைய பதிவுகள்

விழா 2015 கடிதங்கள் 5

$
0
0

1

ஜெ

மிகச்சிறப்பான விழா. மிகச்செறிவான உரையாடல்கள். நான் அனைத்திலும் கலந்துகொள்ளமுடியவில்லை. கலந்துகொண்ட அரங்குகள் எல்லாமே அபாரமாக இருந்தன. கே.என்.செந்தில் பேசிய அரங்கும் சரி யுவன் சந்திரசேகர் பேசிய அரங்கும் சரி ஆச்சரியப்படுமளவுக்குக் கூர்மையாக இருந்தன. பல விஷயங்களைக் கிரஹித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உள்வாங்கியவை இந்த வருடம் முழுக்க நினைத்துப்பார்க்கப் போதுமானவையாக இருந்தன

ஒரு கவிஞர் அற்புதமாகப் பாடினார். அவர் பெயரை மறந்துவிட்டேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்
முத்துக்குமார்

 

அன்புள்ள முத்துக்குமார்

அவர் பெயர் ஜான் சுந்தர். கோவையைச்சேர்ந்தவர், ஒரு மெல்லிசைக்குழு வைத்திருந்தார். பாடகர். கவிஞரும் கூட.  ’சொந்தரயில்காரி’என்னும் பேரில் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது

ஜெ

 

அன்புள்ள ஜெ சார்

மிகச்சிறப்பான விழாவாக இருந்தது. நான் இலக்கியக் கூட்டங்களுக்குப்போய் கடிவாங்கி வந்ததுதான் அறிந்தது. வாசகர்களுக்கு நடுவே அமர்ந்து எழுத்தாளர்களைச் சந்திப்பதெல்லாம் உற்சாகமான அனுபவம். கனவு போல. ஆனால் என்ன எவரிடமும் போய்ப்பேசத் தைரியம் வரவில்லை. நான் இன்னார் என்று சொல்லும்படியாக எதையாவது செய்தபின்னர் போய்ச்சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அத்தனைபேரையும் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஜோ டி குரூஸின் பேச்சும் தோரணையும் அற்புதமாக இருந்தன. கம்பீரமான வெள்ளந்தியான மனுஷன் என்று தோன்றியது. அவரது நாவல்களை வாசித்ததில்லை. வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

செல்வராஜன்


அன்புள்ள ஜெ சார்

விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தேன். எளிமையாக விழா நடந்தது. நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு சிறப்பாக இருந்தது. தேவதச்சனை மேடையில் ரசித்துப்பார்த்தேன். குழந்தைபோல காலை ஆட்டியபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். உங்கள் புத்தகங்கள் வாங்கினேன். விவாதங்கள் சிறப்பாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நான் பங்கெடுக்கமுடியவில்லை

எஸ்.கார்த்திக் ராஜா

 


தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிரியாணி மண்டி

$
0
0

photo

விஷ்ணுபுரம் விழா முடிந்து மறுநாளும் கோவையிலேயே தங்கியிருந்தேன். விஜயபார்க் ஓட்டலில். தேவதச்சனும் அங்குதான் இருந்தார். பட்டீஸ்வரம் ஆலயத்திற்கும் அங்கிருந்து ஜக்கி வாசுதேவ் குருகுலத்திற்கும் சென்றுவிட்டு வந்தார். செல்வேந்திரனும் அன்றுதான் நெல்லை கிளம்பினார். அனைவரும் ஒன்றாக எட்டரை மணிக்கு நாகர்கோயில் எக்ஸ்பிரஸில்தான் கிளம்பினோம்

கோயில்பட்டி ஒரு சிக்கலான இக்கட்டு கொண்ட ஊர். அங்கே அத்தனை ரயில்களும் நள்ளிரவில் அல்லது விடியற்காலையில்தான் வரும். தேவதச்சன் சொன்னபோது பரிதாபமாகத்தான் இருந்தது. நாகர்கோயில் அற்புதமான ஊர். எந்த ஊருக்குப்போனாலும் 12 மணிநேரத்தூக்கத்துக்கு உத்தரவாதித்தம் உண்டு

நண்பர்கள் அறைக்கு வந்துபேசிக்கொண்டிருந்தார்கள். மதிய உணவுக்கு ராம்நகர் காளிங்கராயர் தெருவில் உள்ள பிரியாணி மண்டி என்னும் உணவகத்திற்குச் செல்லலாம் என்று நடராஜன் சொன்னார். இயகாகோ சுப்ரமணியம் அவர்கள் அழைத்துச்செல்ல வந்தார். நான் உணவுகளில் பெரிய நாட்டமுடையவன் அல்ல. ஆனால் விழா முடிந்த வெறுமைக்கு உற்சாகமாக இருக்குமே என்று கிளம்பிச்சென்றேன்

வித்தியாசமான உள்வரைவமைப்பு கொண்ட உணவகம். கரிக்கோட்டுச் சித்திரங்கள் கொண்ட உட்சுவர்கள். சிறிய வசதியான இருக்கைகள். அதை நடத்தும் பிரியா திருமூர்த்தி நல்ல இலக்கியவாசகர் என அறிந்தேன். என் அறம் தொகுப்பால் பெரிதும் கவரப்பட்டவர். மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார்.

வசதியான தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி கற்றவர் பிரியா. இயற்கைவேளாண்மை மேல் ஆர்வத்தால் ஒரு பண்ணையை பொள்ளாச்சி அருகே நடத்துகிறார். முற்றிலும் இயற்கையான காய்கறிகள், தானியங்கள், பால். அத்துடன் சமையலிலும் ஆர்வம். ஆகவே இயற்கையான உணவு அளிக்கப்படும் ஒரு உணவகத்தை கோவையில் ஆரம்பித்தார். அவரே பெரும்பாலும் சமையலைச் செய்கிறார் என்றபோது அதிர்ச்சியாகவே இருந்தது

“சமைக்கிறதனால என் கையே சொரசொரப்பாகத்தான் இருக்கும். விவசாய வேலையெல்லாம் செய்வேன். பால்கறப்பேன். களைபறிப்பேன்” என்றார். அசாதாரணமான தேடல் கொண்ட வாழ்க்கை. மானசரோவருக்கு இருமுறை சென்றிருக்கிறார். இமையமலையில் அலைந்திருக்கிறார்.

சமீபத்தில் நான் சாப்பிட்ட மிகச்சிறந்த அசைவ உணவு. சிக்கன் மட்டன் பிரியாணிகள். மட்டன் சுக்கா. இனிப்பு வகைகள். சுவை என் கவனக்குறைவையும் மீறி என்னை நிறைத்தது. பொதுவாக பிரியாணி சாப்பிட்டால் ஒரு வகை அசௌகரியத்தை நாள் முழுக்க உணர்வேன். அது அசைவ உணவால் அல்ல, அதனுடன் சேர்க்கப்படும் செயற்கைப்பொருட்களால் என்று தெரிந்தது. வயிறு இதமாக இருந்தது

உண்மையில் மிகவும் நிறைவூட்டிய ஓர் உணவனுபவம். பிரியாவிடம் விடைபெற்றுக்கொண்டபோது நெஞ்சுணர்ந்து ‘நன்றி” என்றேன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்…. அழகியசிங்கர்

$
0
0

12471435_892919390777533_1590969941982009484_o (1)
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது தேவதச்சனுக்கு அளிக்கபபட்டிருக்கிறது. கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேவதேவன், ஞானக்கூத்தன், தேவதச்சன் என்று மூன்று முக்கிய கவிஞர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதில் இன்னும் ஒருவரும் இருக்கிறார். எழுத்து காலத்திலிருந்து எழுதிவரும் வைதீஸ்வரன்தான் அவர்.

இது மாதிரி விருது வழங்குவதன் மூலம் படைப்பாளிகள் உற்சாகமடைவார்கள். பொதுவாக எந்த விருது வழங்கினாலும், அவருக்குக் கொடுத்தது சரியில்லை அல்லது சரி என்று விவாதம் நடக்கும். ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதில் அதுமாதிரி விவாதத்திற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த விருதை கொடுப்பது மட்டுமல்ல. அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக இந்த விருது கொடுப்பவர்கள் மாற்றி விடுகிறார்கள். தற்செயலாக இந்த நிகழ்வைப் கோவையில் பார்க்க ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

ஜெயமோகன் பேசும்போது ஒன்றை குறிப்பிட்டார். ‘இந்த விருதை தேவதச்சன் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்,’ என்று. இப்படி சொல்வதற்குப் பெரிய மனது வேண்டும். இந்தக் குழுவினருக்கு அது மாதிரி சொல்கிற தைரியம் இருக்கிறது. தேவதச்சனுக்கு விருது வழங்கும்போது கிட்டத்தட்ட அந்த ஹால் முழுவதும் நிரம்பி விட்டது.

அந்த மேடையில் பேசின அத்தனைப் பேர்களும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பேசினார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அங்கு கூடியுள்ள கூட்டம் அமைதியாக இருந்தது. எனக்கு லட்சுமி மணிவண்ணன் பேசியது ரொம்பப் பிடித்திருந்தது. அவர் பேசிய விதமும் நன்றாக இருந்தது. அவர் நம் முன் ஒரு கூட்டம இருக்கிறது. அதற்காகப் பேசுகிறோம் என்றில்லாமல் அவருக்காக பேசுவதுபோல் பேசினார். முதலில் அவர் ஆரம்பிக்கிறபோது எங்கே தேவதச்சனைப் பற்றி பேசாமல் இருந்து விடுவாரோ என்று கூடத் தோன்றியது. அதேபோல் அவர் எங்கே பேச்சை முடிக்காமல் போய்விடுவாரோ என்று கூடத் தோன்றியது.

தேவதச்சனைப் பற்றி பேசும்போது யுவன் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். மேடையில் அவர் பேசும்போது அப்படித்தான் இருந்தது. நான் தேவதச்சனை யுவன் மூலமும் ஆனந்த் மூலமும் பேசிக் கேட்டிருக்கிறேன். இரண்டு முறை அவரை ஆனந்த்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். யுவன் ஒவ்வொரு முறையும் கோவில்பட்டியில் தேவதச்சனைப் பார்த்து பரவசப்பட்டு எங்களிடம் (ஆனந்திடமும் என்னிடமும்) பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது மாதிரி பேச்சைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

இதெல்லாம் முன்பு.பொதுவாக தேவதச்சன் தன்னைப் பற்றி விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார். தன் கவிதைக்குக் கிடைத்த அங்கிகாரத்தைக் கூட பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனந்த் பையன் திருமணத்தின் போது அவரைப் பார்த்துக் கேட்டேன். அந்த சமயத்தில் அவருக்கு விளக்கு பரிசு கிடைத்திருந்தது. உங்கள் கவிதைக்காக விளக்கு பரிசு கிடைத்திருக்கிறதே என்று. தன் கவிதைக்காக இது மாதிரி பரிசு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக நினைத்துதான் அவர் பேசினார். அவர் பேசியதைக் கேட்கும் போது, நான் சாதாரண ஆள். ஏதோ கவிதைகள் எழுதுவேன். இந்த அங்கிகாரம் அதிகம்தான் என்பதுபோல்தான் பேசினார். எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் பேசியது அவ்வளவுதான். அதற்குள் தேவதச்சனை வேற யாரோ தேடி வந்து விட்டார்கள்.

குரு ஸ்தானத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை வைத்திருக்கிறார்கள். அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலவிதங்களில் பிரபலமாகி விட்டார்கள். அவர்கள் பிரபலம் ஆகும்போது தேவதச்சனும் பிரபலம் ஆகாமல் இருக்க முடியாது. அதுதான் நிகழ்ந்திருக்கிறது. புதியதாக எழுத வருபவர்கள் கூட தேவதச்சனை தேடிப் போகிறார்கள். இப்படி அபூர்வமான ரசிகர் கூட்டம் எந்த எழுத்தாளருக்கும் அதுவும் குறிப்பாக கவிஞருக்குக் கிடைக்காது. யாரும் அவரைத் தேடி வராமல் இருந்தால்கூட அவர் பேசாமல்தான் இருப்பார். அதைப் பற்றி அவர் கவலைப் பட மாட்டார்.

அவர் கவிதைகளையும் ரொம்ப குறைவாகத்தான் எழுதி உள்ளார். அதை உடனடியாக பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைக்கவும் மாட்டார். அவருடைய கவிதைப் புத்தகங்கள் பிரசுரமானது கூட மற்றவர்கள் முயற்சியாகத்தான் இருக்கும். யாராவது கவிதைத் தொகுதி கொண்டு வந்தால் தேவதச்சன் பெயரை அதில் தெரியப் படுத்தினால் அந்தத் தொகுதிக்கு ஒரு மதிப்பு கூடத்தான் செய்யும்.

அவர் எதை எழுதினாலும் ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும்.
1988ல் நான் விருட்சம் ஆரம்பித்தபோது, தேவதச்சன் எனக்கு சில கவிதைகளை அனுப்பினார். கவிதை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதால்தான் அனுப்பினார். அதில் ஒரு கவிதை. என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அந்தக் கவிதையின் பெயர் : ஒரு நிமிஷம். இக் கவிதைவிருட்சம் 2வது இதழில் வெளிவந்தது. அதாவது அக்டோபர் – டிசம்பர் 1988ல்.

உயிர் பிரிவதற்கு
எப்போதும்
ஒரு நிமிடம்தான் இருக்கிறது
மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
துயரத்தில் சாய்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.
இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
இருண்ட சரிவில் உருள்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.
இவ்வொரு
நிமிஷத்தில்
அண்டசராசரம் ஆடி
ஒரு நிமிஷம்
வளர்ந்து விடுகிறது.
இந்தக் கவிதையை நான் படித்தபோது விருட்சம் இதழையே கொண்டு வரவேண்டாம் என்று அப்போது நினைத்தேன். ஏன் கவிதைகள் எல்லாம் இப்படி நம்மை தொந்தரவு செய்கிறது என்று என் சிந்தனை போயிற்று. அதன் பின் அவர் எனக்கு அனுப்பிய கவிதை டினோசரை நெருங்குவது எப்படி? என்பது.

விஷ்ணுபுரம் கூட்டம் முடிய இரவு 9 மணி ஆகிவிட்டது. நான் தேவதச்சனை நேரிடையாகப் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்க நினைத்தேன். ஆனால் அவரைச் சுற்றி கூட்டமாக இருந்தது. நான் அங்கு போய் அவரைப் பார்த்து வாழ்த்த முடியாது என்று திரும்பிப் போய்விட்டேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருந்தது. அநதப் படத்தில் தேவதச்சன் பேசியது எனக்கு சரியாகப் புரியவில்லை. அவர் குரல் சரியாக எடுபடாமல் இருந்ததுபோல் தோன்றியது.

நான் தூரத்தில் உட்கார்ந்திருந்ததால் அப்படித் தோன்றியிருக்கும். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சுப்ரபாரதி மணியனைக் கேட்டேன். அவரும் ஆமாம் என்றார். மேலும் அத்துவான வெளியின் கவிதை என்ற தலைப்பில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள். 144பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. தமிழில் இந்த அளவிற்கு ஒரு கவிஞரை கௌரவப்படுத்தியதை நினைக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

– அழகிய சிங்கர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ்1

இளவேனிற்காலத்தின் தொடக்கம் பறவையொலிகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு பறவையும் அதற்கென்றே உயிரெடுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் சிற்றவையில் துரியோதனன் நீள்மஞ்சத்தில் கால்நீட்டி அமர்ந்திருக்க அவன் முன் போடப்பட்ட வெண்பட்டு விரிக்கப்பட்ட சிறிய இசைக்கட்டிலில் அமர்ந்து வங்கத்து சூதன் விருச்சிகன் பாடிக்கொண்டிருந்தான். துரியோதனனின் வலப்பக்கம் சாளரத்தருகே போடப்பட்ட பீடத்தில் சாய்ந்து வெளியே காற்றில் குலுங்கிய மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். இடதுபக்கம் பானுமதி தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

இளைய கௌரவர்கள் நால்வர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். தங்கள் தாழ்ந்த பீடங்களில் பெரிய கைகளை ஊன்றி முகம் தளர அமர்ந்திருந்தனர். பிறர் எல்லைக்காவல் சீரமைப்புக்காக சப்தசிந்துவின் கரைகளுக்குச் சென்றிருந்த துச்சாதனனை தொடர்ந்திருந்தனர். சூதனுக்குப் பின்னால் இரு முதிய சூதர்கள் மரத்தாளமும் ஒற்றைத்தந்தி முழவுமாக நின்றனர். அவன் தன் கையிலிருந்த குடவீணையை பாம்புவிரலால் சுண்டி வண்டென முரளச்செய்து அதன் மென்சுதிக்கு குரலை உலவச்செய்து பாடிக்கொண்டிருந்தான்.

சூதன் பாடிக் கொண்டிருந்ததை துரியோதனன் உளம் கொள்ளவில்லை. உச்சிப்பொழுதின் மிகையுணவுக்குப்பின் அரைத்துயிலில் விழிகள் சரிய பட்டுத்தலையணைகள் மேல் உடலழுத்தி கைகள் தளர அவன் படுத்திருந்தான். கர்ணன் அச்சொற்களிலும் அவை தொட்டு தன் உள்ளே எழுந்த சித்திரங்களிலும் சித்தம் உலாவ விட்டு அங்கிலாதவன் போல் அமர்ந்திருந்தான். கால்முட்டின் மடிப்பில் ஊன்றிய கையில் தாடையை வைத்து சிறிய உதடுகள் ஒட்டியிருக்க, சற்றே தாழ்ந்த இமைகள் கண்களை பிறை வடிவாக மாற்ற, காற்றில் உலையும் குறுஞ்சுருள்கள் சூழ்ந்த வெண்ணிற முகம் சிறிய மூக்குடன் கொழுவிய கன்னங்களுடன் ஏதோ கனவிலென நிலைத்திருக்க, பானுமதி அக்கதைக்குள் இருந்தாள்.

“அரசே, அழகிய அரசியே, அவையே, கேளுங்கள் இப்பிறப்பு வரிசையை! பிரம்மனின் மைந்தன் அங்கிரஸ். அவருக்கு உதத்யர், பிரஹஸ்பதி என்று இரண்டு மைந்தர்கள் பிறந்தனர். அன்றிருந்த வழக்கப்படி தமையனும் இளையவனும் ஒரே மனைவியையே கொண்டிருந்தனர். உதத்யரால் கருவுற்ற மமதை அவரது தவக்குடிலில் இருந்தபோது இளையவர் பிரஹஸ்பதி மமதையை எண்ணி காமம் கொண்டு உள்ளே வந்தார். மதம் கொண்டெழுந்த யானையைப்போல வந்து அவர் அவளை உறவுகொள்ள அழைக்க பதறி எழுந்து கை நீட்டி மமதை அதை தடுத்தாள். “இது முறையல்ல. இவ்வுடலும் உள்ளமும் உங்கள் இருவருக்கும் உரியதே. ஆயினும் வயிறு ஒருமுறை ஒருவர் கருவை ஏற்பதற்கே வாய்த்துள்ளது. இப்போது நான் உங்களுடன் இருப்பதற்கு நூல் ஒப்புதல் உண்டெனினும் என் உடல் ஒப்பவில்லை” என்றாள்.

அந்த இளவேனில்காலம் முழுக்க துணைவியின்றி தனித்து வாழ்ந்த பிரஹஸ்பதி தவத்தில் தன்னை ஒடுக்கி முடிவிலியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கீற்றிளநிலவென ஒரு மைந்தனை அந்த செந்நிறக் குருதிப்பாதையில் கண்டார். அருகே சென்று அவன் விழிகளை நோக்கினார். அவை சிறிய கரிய விதைகளைப்போல ஒளிகொண்டிருந்தன. இதழ்கள் விரிய நகைத்து அவன் “என் தருணம் இது தந்தையே” என்றான். “ஆம்” என்று எண்ணிய அக்கணமே பிரஹஸ்பதி மலைபிளந்து நிலமதிர்வதுபோன்ற பெருங்காமத்தை உணர்ந்தார். அவ்விசையில் விழித்துக்கொண்டு எழுந்து வெளியே வந்து கருவறைமணம் பெற்ற ஆண்விலங்கு போல கிளம்பி வந்தார்.

தவம் என்பது குவிதல். அரசே, தவம் எதில் குவிகிறதோ அது எல்லையற்ற விசை கொள்கிறது. காமமென்றாகிய தவம் கொண்டிருந்த பிரஹஸ்பதி துணைவியின் மன்றாட்டை செவிகொள்ளவில்லை. சித்தத்தை சிதறடித்து ஞானத்தை திரிப்பதில் காமத்திற்கு நிகரென பிறிதொன்றுமில்லை. காமம் கொண்ட களிறு பாறையில் மத்தகத்தை முட்டி உடைத்துக் கொள்கிறது. காமம் கொண்ட குரங்கு முகிலில் பாய்ந்து ஏற எண்ணி மரஉச்சியில் இருந்து தாவுகிறது. காமம் கொண்ட மான் நீர்ப்பாவையை துணையென்றெண்ணி ஆழ்சுனையில் குதிக்கிறது. காமம் கொண்ட பறவை வேடனின் வலையை வயலென்று மயங்குகிறது.

13

“பெண்ணே, இத்தருணத்தில் ஒரு சொல்லும் என் சித்தத்திற்கு ஏறாது. காமமன்றி பிறிதெதுவும் இன்றென்னை செலுத்தாது” என்று சொல்லி அவள் இரு கைகளையும் இறுகப்பற்றி மூங்கில் பட்டைகளாலும் ஈச்ச இலைகளாலும் அமைக்கப்பட்ட அத்தவக்குடிலின் உள்ளறைக்கு இழுத்துச் சென்றார் பிரஹஸ்பதி. இளம்கருவால் குருதி உண்ணப்பட்டு மெலிந்த கழுத்தும் வெளிறிய உதடுகளும் உடலும் தேமல்படர்ந்த தோள்களும் கொண்டிருந்த மமதை அவரை உந்திவிலக்க முடியாதவளாக கண்ணீர் வார அழுதபடி “என்னை விட்டுவிடுங்கள்… என் மேல் கருணை கொள்ளுங்கள். உத்தமரே, என் கருவை அழிக்காதீர்கள்” என்று கெஞ்சி அழுதாள்.

“அறம் பிழைக்கலாகாது இளையவரே. நெறிமணமும் குலமணமும் மட்டுமல்ல, கொடுமணங்கள் அனைத்துமேகூட கருவுறுதல் என்னும் பெருங்கடமைக்காக என்றுணர்க! கருவுற்ற பெண் தன் உடல்மேல் தானே உரிமை கொண்டவள் அல்ல. பார்த்திவப் பரமாணுவாக அவளுடைய குருதியில் இறங்கி உயிர் கொண்டு, உளம் கொண்டு, இங்குளேன் நான் எனும் ஆணவம் கொண்டு எழுந்த பிரம்மம் அவளை தன் பீடமெனக் கொள்கிறது. என் உளமும் உடலும் உங்களுக்கும் உரியதாயினும் அதை உங்களுக்கு அளிக்கும் பொறுப்பு என் கருவாழும் குழந்தைக்குரியது. சொல் கேளுங்கள். ஆணவம் தவிருங்கள்” என்றாள்.

ஆனால் பிரஹஸ்பதி கடும் சினம்கொண்டு தன் மார்பிலும் அருகிருந்த தூணிலும் அறைந்து “இப்போது என் உடலில் கனிந்து துளித்து நிற்கும் விந்துவும் பிரம்மத்தின் ஒரு துளியே. அதில் முளைக்கும் உயிரும் இப்புவி காண எழுந்ததுதான். நெறிகளை நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை. இப்புவியில் உள்ள அனைத்து உடல்களும் பிரம்மம் வெளிவரக் காத்திருக்கும் விதைகள் என்று நானும் அறிவேன். காமமென என் உடலில் எழுந்தது முடிவிலியின் பெருவிழைவே. இதைத் தவிர்க்க என்னால் முடியாது” என்றார்.

அழுதபடி கைகூப்பி “என்னை தவிருங்கள். என் உடல் மேல் கருணை கொள்ளுங்கள். பெண்ணென்று பிறந்த பிழைக்காக நான் பெருநிலை அடைய முடியாமல் ஆக்காதீர்கள்” என்று மமதை கண்ணீர் விட்டாள். அவர் அவளை தோள்பற்றி அணைக்க முயல அவள் உடல்சுருக்கி கண்களை மூடி “என் உடல் உங்களுக்காக மலராது” என்றாள். பிரஹஸ்பதி அவளைப்பற்றி இழுத்துச் சென்று அருகிருந்த சுடர்நெருப்பின் அருகே நிறுத்தி “இத்தருணத்தில் எனக்கு நீ காமம் அளிக்கமாட்டாய் என்றால் இச்சுடரைத் தொட்டு அணைத்து நீ என்னை விலக்குவதாகச் சொல். இனி எனக்கு நீ துணைவியல்ல என்றுரைத்து குடில் விட்டு வெளியே செல்கிறேன். செய்க!” என்றார்.

“அதை எங்ஙனம் செய்வேன்? இருவருக்கும் துணைவி என்று கைபற்றி நான் இவ்வில்லத்திற்கு வருகையில் சான்று நின்றது இச்சுடரல்லவா? என் வயிறு திறக்கும் மைந்தர் உங்களுக்கும் நீர்க்கடன் செய்யவேண்டும் என்பது அன்று உருவான மூதாதையரின் ஆணை அல்லவா?” என்றாள். “ஆம். அவ்வாறென்றால் என்னுடன் இரு. இன்று என் உடலில் ததும்பும் என் மைந்தனைப் பெற்று எனக்களி. இல்லையெனில் மூதாதையருக்கு முன் உன் சொல்லை சுருட்டி திரும்ப எடுத்துக் கொள்” என்றார் பிரஹஸ்பதி.

“இச்சுடரை தொட்டணைத்து அச்சொல்லை திரும்ப எடுத்துக்கொள்ள என்னால் முடியும். ஆனால் உளம்கனிந்து உங்களுடன் இருந்த இனியபொழுதுகளின் நினைவுகளை எப்படி எடுத்துக் கொள்வேன்? அவை என்னில் இருக்கையில் நீங்கள் என் கணவர் அல்லவென்று எப்படி சொல்லமுடியும்? இச்சுடரை அணைத்து பின் ஒரு கணமேனும் உங்களை என் கணவர் என்று எண்ணினேன் என்றால் நான் கற்பிழந்தவள் ஆவேன். இல்லை, இப்பிறப்பில் ஒருபோதும் சுடர் தொட்டு அணைத்து உங்களை விலக்க என்னால் இயலாது” என்றாள் மமதை. “வா! அவ்வண்ணமெனில் என்னுடன் இரு. என் அனலுக்கு அகல் ஆகுக உன் உடல். என்னுள் எழும் சுடர் உன்னில் பற்றிக் கொள்ளட்டும்” என்று சொல்லி அவள் கூந்தலை சுற்றிப்பிடித்து இழுத்து மஞ்சத்திற்கு கொண்டு சென்றார் பிரஹஸ்பதி.

“அரசே, அரசமர்ந்த இனியவளே, நால்வகை முறைகளும், முறைசெலுத்தும் அறமும், அறமுணர்ந்த முனிவரும், அம்முனிவர் எடுக்கும் சொற்களும், அச்சொற்களில் அனலென அமைந்த பிரம்மமும் ஆகிய இப்புவி என்றும் பெண்களின் விழிநீரால் நனைந்து விதைமுளைத்து பசுமைகொள்வது என்பார்கள் காவியம் கற்றவர்கள். வேதநூலுணர்ந்தவரோ, நூலுக்கு அப்பால் உறையும் முடிவிலியை தொட்டறிந்தவரோகூட பெண்ணின் பெருந்துயரை அறியாதிருக்கும் மாயத்தால் நம்மை ஆட்டுவிக்கின்றது ஊழ். பெண்ணுக்கிழைக்கும் பெருந்தீங்குகளாலேயே ஆண் மீண்டும் மீண்டும் அவள் மைந்தன் என பிறக்கிறான். ஆண்மேல் கொண்ட பிரேமையாலேயே அவள் மீண்டும் மீண்டும் அவனை கருவுறுகிறாள்” என்றான் சூதன். ஆம் ஆம் ஆம் என்றது ஒற்றைத்தந்தி.

கண்ணீருடன் பிரஹஸ்பதியுடன் இருந்த மமதை தன்னுள் கருவடிவாய் எழுந்தருளிய தேவன் இருளாழத்தில் குரலெழுப்புவதை கண்டாள். இருண்ட பாதைகளில் நுரைக்கும் வெய்யநீரில் சுழித்தோடி அவள் சென்று சேர்ந்த செந்நிறப் பெருங்கூடம் நீளுருளை வடிவமாக இருந்தது. அதன் உள்ளே நுரைக்குமிழிகள் மிதந்த செவ்வொளி நிறைந்திருக்க நடுவே கருநிறப் பேருடலுடன் மிதந்தவன் போல் நின்றிருந்த மைந்தன் நீலமணியென சுடரும் அழகிய விழிகள் கொண்டிருந்தான். அவன் கைகளும் கால்களும் மீன்சிறகுகள் என துழாவிக்கொண்டிருந்தன.

“அன்னையே என்ன இது? நான் இப்புவி ஆள விழையும் பேராற்றல் கொண்டவன் என்பதை அறிய மாட்டீர்களா நீங்கள்? இங்குள்ளவை எனக்கே அரிதானவை அல்லவா?” என்றான். செவ்வொளிக்கு அப்பால் நீலச்சுடரென எரிந்த அவ்விழிகளை நோக்கி மண்டியிட்டு கைகூப்பி அவள் சொன்னாள் “நான் எளியவள். என் உடலை பகிர்ந்து அளித்தவள். உள்ளத்தால் அந்த அடிமைநீட்டில் கைச்சாத்திட்டவள். என் பிழையன்று. பொறுத்தருள்க!”

கடும்சினம் கொண்டு அங்கு ஆலமர விழுதுகளைப் போன்று நிரைபரவி நின்று நெளிந்த தூண்களையும் சுருங்கி விரிந்தது போல் அசைந்த சுவர்களையும் ஓங்கி அறைந்து பெருங்குரலெடுத்து அம்மைந்தன் கூவினான் “இது என் தவக்குடில். இங்கு சென்ற பதினான்கு பிறவிகளில் நான் அடைந்த தவப்பயன்கள் அனைத்தையும் துளித்துளியென ஊறிச் சுரந்து எடுத்துக் கொண்டு என்னை நிரப்புகிறேன். என் அகம் மண் நிகழ்ந்து தொட்டு எழுப்பப்போகும் அனைத்தையும் இங்கே தொடக்கங்கள் என சமைத்துக் கொள்கிறேன். அன்னையே! இங்கு நான் இயற்றும் தவத்தில் எனைச்சூழ்ந்து ஒலிக்க வேண்டியவை என் மூதாதையர் இம்மண்ணில் விட்டுச் சென்ற நுண்சொற்கள் மட்டுமே. பிறிதொரு உயிரின் துயரும் விழைவும் அல்ல. தவமென்பது தனிமையே என்றறியாதவரா நீங்கள்?”

“நான் எளியவள். சிறியவள். ஏதும் செய்ய இயலாதவள்” என்பதற்கப்பால் மமதையால் ஒன்றும் சொல்வதற்கு இயலவில்லை. கைகளை விரித்து தன் உடலையும் சூழ்ந்துள்ள அனைத்தையும் அறைந்து உறுமியும் அமறியும் அம்மைந்தன் சுற்றிவந்தான். “ஒப்பமாட்டேன். இங்கு பிறிதொருவன் நுழைய ஒப்பமாட்டேன்” என்றான். அவ்வறையின் சிறுவாயிலை முட்டும் ஒலி கேட்டு நின்று செவிகூர்ந்து “யாரது?” என்றான். அவள் உதடுகளை அழுத்தி அமைதியாக நின்றாள். “யாரது? யாரது?” என்றான் இளமைந்தன் சிம்மக்குரலில். சிறுவாயில் சொல்லெழுந்த உதடுகளென திறக்க வெண்ணிற சிறு மகவு ஒன்று உள்ளே தவழ்ந்து வந்தது. இனிய விழிகளால் அவனை நோக்கி இதழ்விரியச் சிரித்து “மூத்தவரே, என்னிடம் கனிவுகொள்க! நான் உங்கள் அடிபணிந்து இப்புவியில் வாழவிழையும் இளையோன்” என்றது.

இரைமேல் பாயும் சிம்மம் என கைவிரித்து அவனை நோக்கிச் சென்று “இது என் தவக்குடில். என் தனிமையில் இக்கறை படிய ஒருபோதும் ஒப்பேன்” என்றான் மைந்தன். “செல்! விலகிச்செல்!” என்று கூவியபடி தன் வலக்காலால் ஓங்கி உதைத்து அவ்வெண்ணிறத் தவழ்குழந்தையை வெளியே தள்ளினான். மழலைக் குரல் எடுத்து அழுதபடி இளையவன் அவ்வறையின் சிறிய செந்நிற வாயிலை இரு கைகளாலும் பற்றிக் கொண்டான். “மூத்தவரே, மூத்தவரே, என் ஊழ் என்னை இங்கனுப்பியது… என்னிடம் கனிவுகொள்க!” என்றான். “விலகிச் செல் மூடா! இப்புவியில் நீ நிகழப்போவதில்லை” என்றபடி அம்மைந்தன் இளமகவின் புன்தலையை ஓங்கி மிதித்து வெளியே தள்ளி வாயிலை மூடினான்.

சினம் மேலும் எரிந்த முகத்துடன் பற்களைக் கடித்தபடி திரும்பி “செல்க! சென்று சொல் உன் இளைய கணவனிடம். என் தவம் கலைத்த அவன் அதற்காக வருந்துவான்” என்றான். அவள் “இரு மலைகளுக்கு நடுவே ஓடும் ஆறு என என்னை உணர்கிறேன். எனது வழியே வேறு. உங்கள் தனிமையின் உயரங்களும் கனிவுறைந்த குளிரும் நான் அறியாதவை. அவ்வண்ணமே ஆகுக!” என்றபடி பின் நடந்து மீண்டும் வெய்ய நீரோடும் இருண்ட ஓடைகளில் மிதந்து திரும்பி வந்தாள்.

சுவர்களுக்கு அப்பால் பிரஹஸ்பதியின் சினந்த பேரோசையை அவள் கேட்டாள். மஞ்சம் விட்டு எழுந்து தன் புலித்தோல் ஆடையை அள்ளி உடல் சுற்றி அணிந்தபடி வெகுளி பெருகி உடல் நடுங்க கலைந்த சடைமுடிக்கற்றைகள் தோளில் புரள “என்ன நிகழ்ந்தது? நான் அறிந்தாக வேண்டும். என்ன நிகழ்ந்தது?” என்று அவர் கூவிக் கொண்டிருந்தார். அறைக்குள் ஆடிய சித்திரத் திரைச்சீலையில் விழிகொண்டு எழுந்து அவள் அவ்வறையை நோக்கினாள். மஞ்சத்தில் தன் மரவுரி ஆடையை அள்ளி இடையையும் முலைகளையும் மூடிக்கொண்டு உடல் சுருட்டி தலை குனிந்து விழிநீர் வார அமர்ந்திருந்த மமதையை அவள் கண்டாள்.

நீண்ட கருங்கூந்தல் தோளிலிருந்து இடைவரை சரிந்து மஞ்சத்தில் விழுந்து கிடந்தது. விம்மலில் மெலிந்த சிறுதோள்கள் அதிர்ந்தன. பிரஹஸ்பதி திரும்பி “யார் தட்டியது என் வாயிலை? சொல், இங்கு நான் காமம் ஆடுகையில் என் தோளை தன் குளிர்க்கைகளால் தொட்டது யார்?” என்றார். அவள் “அறியேன்… நானறியேன்” என்றாள். “நீ பிறிதொருவனை உளம் கொண்டாய். காமமாடும் ஆடவனை தொட்டுக் கலைப்பது அப்பெண் நினைக்கும் பிறிதொரு ஆண்மகன் மட்டுமே” என்றார் பிரஹஸ்பதி. “நானறியேன்… நானறியேன்” என்று அவள் அழுதாள்.

“இந்த வாயிலே முட்டப்பட்டது” என்று கூவியபடி சிறிய வாயிலைத் திறந்து “யார்? யாரது?” என்று அலறினார். குனிந்து அங்கே கிடந்த வெண்ணிறமான சிறிய குழந்தைச் சடலத்தை இழுத்து அவள் முன் போட்டார். “இவனைக் கொன்றது யார்? மண் நிகழ்ந்து வேதச்சொல் உணர்ந்து அறம் பெருக்கி விண்ணகம் நிறைக்கவிருந்த முனிவன் இவன். இவனைக் கொன்றது யார்? சொல்” என்றார். அவள் விழிதூக்கி “இது உங்களுக்கும் உங்களுக்கு நிகரான பிறிதொருவருக்குமான போர். நடுவே இருப்பது முலையும் கருப்பையும் குருதிப்பாதையும் கண்ணீர் ஊற்றும் கொண்ட இவ்வுடல் மட்டுமே” என்றாள்.

இடையில் கைவைத்து ஒரு கணம் அவளை நோக்கி நின்ற பிரஹஸ்பதியின் நெஞ்சு நீள் மூச்சுகளால் எழுந்து அதிர்ந்தது. பற்கள் கடிபட்டு அறைபடும் ஒலி கேட்டது. “நானறிவேன். அவனை நானறிவேன்” என்றபடி குனிந்து அவள் வயிற்றில் கையை வைத்து “குருதிக் குகையில் வாழும் சிறியவனே, இதை இயற்றியது நீயா?” என்றார். அறை சூழ பேரொலி எழுந்தது “ஆம். நானே. என் பெயர் தீர்க்கஜோதிஷ். இத்தவக்குடிலில் இப்போது என் விழிகள் மட்டுமே திரண்டுள்ளன. உளம் திரட்டி, உடல் அமைத்து, தசை சிறுத்து, எலும்பு இறுக்கி நான் வெளிவர இன்னும் பத்து மாதங்கள் உள்ளன.”

கைகளைத் தூக்கி “நீ வரப்போவதில்லை மைந்தா! இது என் தீச்சொல்” என்றார் பிரஹஸ்பதி. உரக்க நகைத்து “நான் வருவது முன்னரே வகுக்கப்பட்ட ஊழ். உங்கள் தீச்சொல் பிரம்மனின் நெறியை தடுக்கப்போவதில்லை” என்றான் தீர்க்கஜோதிஷ். பிரஹஸ்பதி “ஆம், நதியை மலையேற்ற எவராலும் முடியாது. ஆனால் திசை மாற்றுவது எளிது. இதோ என் இக்கணம் வரைக்குமான முழுச்சொல்லையும் எடுத்து உன் மேல் தொடுக்கிறேன். நீ விழியிழந்தவனாவாய். இன்று முதல் தீர்க்கதமஸ் என்று அழைக்கப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் தன் வலக்கையை ஓங்கி தொடை மேல் அறைந்து கூர்நகங்களால் அத்தசையைப் பிய்த்து எழுந்த குருதியை கையில் பற்றி தூக்கி நெற்றிப்பொட்டில் அழுத்தி சொல்லனல் ஆக்கி “இங்கு திகழ்க என் சொல்!” என்று அவள் வயிற்றின் மேல் உதறிவிட்டு திரும்பினார்.

அவர் காலடியில் இடறியது அந்தக் குழந்தையின் வெண்ணிறச் சடலம். முழந்தாளிட்டு அதை அள்ளித் தூக்கி “என் மைந்தா” என்றார். அது விழிதிறந்து இறப்பு வெளிறிய ஒளியென பரவிய விழிகளால் அவரை நோக்கியது. “என் மைந்தா” என்று பிரஹஸ்பதி அழுதார். “தந்தையே, இனி நான் மண்நிகழலாகுமா? என் செயற்பெருக்கு இப்புவியில் ஆற்றப்படாது எஞ்சுகையில் மீண்டும் மூதாதையரிடம் சென்று சேர என்னால் இயலாதே” என்றது அக்குழந்தை. “ஆம், இதற்கு விடை என்னிடம் இல்லை. கருவில் கலையும் குழந்தைகள், மழலை மாறாது இறக்கும் மைந்தர்கள் தங்கள் வினை முடிக்க சென்று காத்திருக்கும் விண்ணுலகம் ஒன்றுள்ளது போலும். அதை நான் அறியேன்” என்றார் பிரஹஸ்பதி.

“நான் எங்கு செல்லவேண்டும் தந்தையே? நான் பார்த்திவப் பரமாணுவாக கருவில் ஒருகணம் ஊறியிருந்தேன் என்றால் மட்டுமே மிருத்யூதேவி என்னை அணுக முடியும். இன்று நான் உங்கள் உளம்கொண்ட ஒரு தினவு மட்டுமே அல்லவா?” என்றான் மைந்தன். “நானறியேன். நானறியேன்” என அவர் அழுதார். கையூன்றி எழுந்தமர்ந்த குழவி சினந்த பெருங்குரலில் “மூடா, நான் உன் மூதாதை. என் வழியென்ன? சொல்!” என்றது. “என்னை பொறுத்தருளுங்கள் எந்தையே. காமத்தால் விழியிழந்தேன்” என்றபின் எழுந்து திரும்பி நடந்தார். அவரது வெண்ணிற நிழலென தொடர்ந்து சென்றது அவ்வெளிறிய சிற்றுடல் மகவு.

சித்ரகூடத்தின் ஏழுகாடுகளில் தவப்பயணம் முடித்து இல்லம் திரும்பிய முதற்கணவர் உதத்யர் செய்தி அறிந்து சினம் கொண்டார். “என் இளையோனை நான் பழிக்கமாட்டேன். அது ஆணின் இயல்பு. கருவுற்ற பெண்ணை நோக்கி காமம் கொள்வது விலங்குகளின் இயல்பு. அது அப்பெண்ணில் எழும் உயிரின் எழில் விடுக்கும் அழைப்பு. ஆனால் கொண்ட கருவை பேணி பிறப்பு அளிக்காத சிறு விலங்குகள்கூட உலகில் இல்லை. பிழை செய்தவள் நீ” என்றார். “இழிமகளே, என் மைந்தன் விழியற்றவனாக ஆனது உன்னால்தான் என்று உணர்க!”

“நான் என்ன செய்திருக்க முடியும்?” என்றாள் அவள். “சிற்றுயிர்களும் அறிந்த வழி ஒன்றுண்டு கீழ்மகளே. முற்றிலும் ஒவ்வாத ஒன்றின் முன் அவை ஓசையின்றி உயிர்விடுகின்றன” என்றார் உதத்யர். மமதை “எங்கு விலங்கு எங்கு தெய்வம் என்றறியாததுதானே மானுடனின் பிழை? பணிவது பத்தினியின் கடமை என்பதால் அதை செய்தேன்” என்றாள். உதத்யர் திரும்பி அவ்விழிகளை நோக்கி “பெண்ணே, எவருக்கும் அவர் பெயர் தற்செயலாக அமைவது அல்ல. அப்பெயர் சூட்டப்படும் கணத்தை அமைக்கும் தெய்வங்கள் அவர் இயல்பை அறியும். அவர்கள் அப்பெயராக முழுதமையும் கணமும் வரும்” என்றார்.

“மமதை என்னும் பெயர்கொண்ட நீ பெரும்பற்றினால் ஆன உளம் கொண்டவள். சொல்! அவ்வுறவில் ஒரு கணமேனும் நீ மகிழவில்லையா?” அவள் விழி தாழ்த்தி “ஆம், என் உடல் மறுத்தபோதும் உள்ளம் மயங்கியது உண்மை. ஏனெனில் நான் விரும்பும் ஆண்மகன் அவர்” என்றாள். “அதுவே உன் பிழை. அப்பிழையை தன் வாழ்நாள் முழுக்க சுமக்கப்போகிறவன் உன் மைந்தன்” என்றார் உதத்யர்.

அவள் நெஞ்சுடைந்து அழுது உடல் மடிந்தமர நீள்மூச்சுடன் திரும்பிய உதத்யர் “அகம் நடுங்குகிறது. என் மைந்தன் சூரியன் இல்லாத நீளிருள் உலகில் வாழவிருக்கிறான். தீர்க்கதமஸ்! முடிவுறா இருள்!” அச்சொல்லால் அச்சுறுத்தப்பட்டவள் போல மெய்ப்பு கொண்டு அவள் திரும்பி நோக்க “முடிவுறா இருள்! எத்தனை பேருருக் கொள்ளும் சொல்! பிரம்மத்திற்கு நிகரானது” என்றார். அப்போதுதான் அதன் முழுவிரிவை உணர்ந்தவள் போல் தன் நெஞ்சை கைகளால் அள்ளிக் கொண்டாள்.

“மறு கரையற்ற ஒன்று எங்கும் இருக்கலாகாது பெண்ணே. மீட்பற்ற சொல் ஒன்று எங்கும் திகழலாகாது. அவ்வண்ணம் ஒன்று இருக்கும் என்றால் அதுவும் பிரம்மமே” என்ற உதத்யர் இடறிய குரலில் “எந்தையரே, முடிவற்ற இருள் அவனுக்கு பிரம்மம் என தோன்றுவதாக! தந்தையின் நற்சொல்லென இதை உரைக்கிறேன். ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்றுரைத்து தன் கமண்டலத்தையும் கோலையும் எடுத்துக்கொண்டு குடில் நீங்கி அடர்கானகம் ஏறி மறைந்தார். அவர் காலடிகளை நோக்கியபடி கண்ணீருடன் அவள் அமர்ந்திருந்தாள்.

தொடர்புடைய பதிவுகள்

விழா, சந்திப்பு, மீட்பு

$
0
0
WP_20151227_15_54_47_Pro(1)
திருஜெயமோகன்அவர்களுக்கு

 

வணக்கம்…

 

       கிளம்புவதற்கு மனமில்லாமலே நான் புதுக்கோட்டைக்கு திரும்பினேன். விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ளவது இது மூன்றாவது வருடம். இம்முறைதான் நான் உங்களிடம் நெருங்கிவிட்டிருக்கிறேன். இதற்கு முன்பு நான் தான்  தயங்கி நின்றேன். எல்லோரையும் அரவனைத்து போவதும்,ஒவ்வொரு புது நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதும் கை பிடித்து பேசி பழகிவிடுவதும்  ஒரு மிகப்பெரிய எழுத்தாளரின் பண்பு வியக்கச் செய்கிறது. இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விஷேசம் போல அலைந்து திரிந்து வேலை செய்வதை பார்க்கையில் உன்னதமான இலக்கியத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

 

     இரண்டாம் நாள் இலக்கிய அமர்வில் தான் என்னால் கலந்து கொள்ள முடிந்தது. வந்ததுமே முதல் நாள் தவறவிட்டதை நினைத்து வருந்தினேன். தேவதச்சனின் கவிதைகள் குறித்த விவாதம் அவருடைய கவிதைகளுக்கு மட்டுமின்று தமிழ் இலக்கியத்தின் நவீன கவிதைகள் அனைத்துக்குமே சேர்ந்த ஒரு சரியான மதிப்பீடாக இருந்தது. தேவதச்சன் குறித்த ஆவணப்படம் மட்டுமில்லாமல் அவரின் கவிதை குறித்த கட்டுரை கொண்ட தொகுப்பும் வெளிவந்திருந்தது பிடித்திருந்தது.

 

    மதியம் யுவன் சந்திரசேகருடனான அமர்வு ‘நாவலில்’ உங்களுக்கும் யுவனுக்கும் இருக்கின்ற கருத்து பரிமாறுதல் போல அமைந்திருந்தது. எனக்குள் நெடுநாட்களாக இருந்த ஒரு ஐயம் “வாசகன் படைப்பில் எழுதாளனை தேடலாமா? எழுத்தாளனை ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றினைப்பதா?”…
மிக அற்புதமான விவாதம் ஜெ சார். ‘ஜேஜே சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி, காதித மலர்கள்- ஆதவன், போரும் அமைதியும்-டால்ஸ்டாய்” என இந்த விவாதம் முழுவதும் தீவிர வாசிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல தீனி… உங்களுடைய பதில் என்னைப்போன்று புதிதாக எழுத வந்தவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை தருகிறது. நான்  யுவன் சந்திரசேகரிடம் அவரின் ‘கதைக்குள் கதை பானி’ வடிவத்தை ஒட்டி எழுப்பிய கேள்விக்கு யுவனின் பதில் மிக நுட்பமாக இருந்தது.

 

     மாலை கூட்டமாக நடந்து சென்று  சாலையோரக் கடையில் தேநீர் அருந்தச் சென்றது, பின் தேநீர் கடையிலேயே ஒரு ‘மினி இலக்கிய அமர்வு’ உருவானது. நாஞ்சில் நாடன், லெட்சுமி மணிவண்ணன், நிர்மால்யா, எம்.ஏ. சுசிலா, அலெக்ஸ் என திரும்புகிற இடமெல்லாம் நிறைந்து நின்ற முக்கிய ஆளுமைகளிடம் இலக்கியம் குறித்து நாங்கள் விவாதித்த வண்ணமிருந்தோம்.

 

அஜிதனிடம் பேசினேன். எளிமையாக, பகட்டில்லாமல் தெளிவாக பேசினார்.  திரைப்படத்துறை குறித்தும், இயக்குநர் மணிரத்னம் பற்றியும் கேட்டறிநதேன். தேவதச்சனின் ஆவணப்படம் பற்றியும், குறும்படம் பற்றியும் பேசினார்.

 

    அக்டோபர் 24 தேதியிட்ட  கடிதத்தில் நான் உங்களிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்.. எழுத்தாளனின் குடும்பம், சமுதாயம் சிக்கல்கள் குறித்து…விழா சுமை காரணமாக நீங்கள் பதில் அனுப்பவில்லை.. காலம் இதழில் ‘இயல் விருதுக்கான உங்கள் ஏற்புரையில்’ மிகத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள்…அது தான் உண்மை… வாங்கி படித்துவிட்டு சிலாகித்தேன்.

 

    விழாவில் மிகச்சுருக்கமாக பேசினாலும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு கச்சிதமாக அமைந்திருந்தது. லெட்சுமி மணிவண்ணன் அவர்களின் பேச்சு தான் மனதளவில் கொஞ்சம் சோர்வை கொடுத்தது. அதன் பிறகு உங்களின் கவிதை குறித்த பேச்சு மிக அழகாக ரீங்கரித்தது. ஒரு அறிவியல் புணை கதை கொடுத்திருந்தீர்கள். கவிதைக்கான வடிவமும் கவிதைகளின் நிலைப்பாடும் அதுதான். கவிதை வாசிப்பில் ஏற்படும் தரிசனத்தை அடைவதே சரியான வாசிப்பு..

 

மணி ஒன்பதுக்கு நெருங்கியதும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால் கிளம்ப வேண்டியிருந்தது. வெளியே என்னுடன் எம்.ஏ சுசிலா அவர்களும் வந்தார்கள். அப்போது அவர், “உடல் நிலை சரியில்லை…ஜெயமோகன் ஸ்பீச் கேட்கத்தான்  இவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது” என்றார். இந்தவயதிலும் உங்களுடன் பேசுவதற்கு  அவர்களை போன்றவர்களும், எங்களைப் போன்றவர்களும், வானவன் மாதவி வல்லபி போன்றவர்களும் உன்னதமான இலக்கியத்திற்காக வந்து சேர்வது மனதில் பரிபூரணமான சந்தோசத்தை தருகிறது..

 

தூரத்தில் நின்று பார்த்தேன்..விஷ்ணுபுரம் மாபெரும் கோவில் கோபுரம் போல எழுந்து நிற்கிறது..ஒரு தரிசனத்தை அது வாசகனுக்கும் எழுதுபவர்களுக்கும் தருகிறது…இளம் படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், பெரும் சவாலையும் அது கொடுக்கும்…..
நன்றி
மு.தூயன்
 புதுக்கோட்டை

 

 

அன்புள்ள தூயன்

 

உங்கள் கடிதம் இந்தப்புத்தாண்டின் முக்கியமான பரிசு. நான் சற்றுச் சோர்வில் இருந்தேன். விஷ்ணுபுரம் விழா சிறப்பாக நடைபெற்றாலும் தவிர்க்கமுடியாமல் இத்தகைய சோர்வுகள் வந்து சேர்கின்றன.

 

நாகர்கோயில் வந்தபின் நான் தொண்ணூறுகளில் நிகழ்த்திய இலக்கியச் சந்திப்புகளில் பங்கெடுத்தவர்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தேன். அன்று வந்தவர்களில் யுவன் சந்திரசேகர், க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன் செங்கதிர் போன்ற சிலர் இப்போதும் பங்கெடுத்தனர் பலர் பலவகையிலும் இலக்கியத்திலிருந்து அல்லது என்னிடமிருந்து விலகிவிட்டனர். எதிரிகளாகி காழ்ப்பைக் கொட்டும் சிலரும் இல்லாமலில்லை.

 

இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஓர் ஆர்வத்தில் உள்ளே வருபவர்களில் கணிசமானவர்களுக்கு இலக்கியம் சலிப்பூட்டுகிறது..சந்திப்புகள்  வெறும் கேளிக்கையாக ஆகிவிடுகிறது. இந்தச் செயலே பொருளற்றதாக, கேலிக்குரியதாகத் தெரிகிறது. அப்படி எப்போதும் சிலர் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.

 

சென்ற காலங்களில் விலகிச்சென்றவர்களை எண்ணியபோது வந்த சோர்வு என்னை மூடியது. அது இத்தகைய விழாக்கள் முடியும்போது இயல்பாக எழுவதும்கூட. மீண்டும் வெண்முரசில் பொருந்துவது வரை இது நீடிக்கும்

 

இந்தச்செயல்பாட்டில் இருப்பது ஒருவகையான இலட்சியவாதம் அன்றி வேறேதும் இல்லை. தமிழ்நாட்டின் பத்துகோடி மக்களில் சில ஆயிரம்பேர் படிக்கும் இலக்கியமும் சிலநூறுபேர் கூடும் விழாவும் ஒரு லௌகீகநோக்கில் பொருளற்றவை. அதை எங்காவது ஐயப்பட்டால், கொஞ்சம் லௌகீகமாக விலகிநோக்கத்தொடங்கினால் அவ்வளவுதான். மாயக்காரனின் மாயவலையத்திலிருந்து வெளியே போனதுபோல ஆகிவிடும்.

 

விழாவில் லட்சுமி மணிவண்ணன் சொன்ன ஒரு சொற்றொடரில் இருந்தே ஆரம்பம். நானும் கோணங்கியும் மட்டுமே சென்ற கால்நூற்றாண்டாக சற்றும் சோர்வுறாமல் முழுநம்பிக்கையுடன் இலக்கியத்தில் இருக்கிறோம் என்று அவர் சொன்னார். அதைக் கேட்டதுமே ஒரு திகைப்பும், நான் சோர்வுறுவதற்கான காரணங்களும் நினைவில் தோன்றத்தொடங்கின. மனம் செய்யும் மாயம்.

 

உங்கள் கடிதம் ஒரு கணத்தில் என்னை மலரச்செய்து மீட்டது. இந்த சந்திப்புநிகழ்ச்சியின் மிகப்பெரிய சிறப்பே பாதிக்கும் மேலானவர்கள் புதியவர்கள் என்பதுதான். இப்புதியவர்களை நம்பி முன்னால்செல்லவேண்டும் என்னும் பெரிய உத்வேகத்தை அடைந்தேன். இதில் என்ன கிடைக்கும் இதனால் என்ன நிகழும் என்று எண்ணவேண்டியதில்லை. இதைச்செய்ய இங்கு வந்தோம், செய்துவிட்டுச் செல்வோம் அவ்வளவுதான் என எண்ணிக்கொண்டேன். பத்துபேர் அளிக்கும் சோர்வை ஒருவர் மீட்கமுடியும் என்பதில்தான் இலக்கியத்தின் அடிப்படையே உறைகிறது

 

இத்தருணத்தில் உங்களை ஆரத்தழுவிக்கொள்கிறேன்

 

அன்புடன்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விழா 2015 கடிதங்கள் 6

$
0
0

 

8

அன்புள்ள ஜே சார்

 

 

வெண்முரசை வாசித்ததுமே உங்களைச் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. பலமுறை தயங்கினேன். பிறகு சந்தித்தே தீர்வது என முடிவெடுத்தபடித்தான் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கே வந்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது . நான் முதல்நாளே வரமுடியவில்லை. அங்கே வேலைசெய்வதற்கு ஆளில்லை என்று தோன்றியது. உங்கள் நண்பர் ஆடிட்டர் சுரேஷ் பலரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது. நான் சென்று உதவலாமா என நினைத்தேன். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாததனால் கூச்சமாக இருந்தது.

 

 

நிகழ்வுகளெல்லாம் அருமை. நம்மூரில் எந்தக் கல்லூரியிலும் இதைப்போன்ற ஒரு இலக்கியப்பாடம் நடப்பதில்லை என்று தோன்றியது. ஒன்றரைநாட்களுக்குள் எத்தனைவகையான சிந்தனைகள். தமிழில் இத்தனை வகையான சிந்தனைகள் இருந்துகொண்டிருக்கின்றன என்பதே ஆச்சரியமானதுதான். ஒருவரோடு ஒருவர் அவற்றை அவர்கள் மோதவிட்டுப்பார்ப்பதும் நீங்கள் இரண்டுதரப்புக்குமே ஆதரவாக பாயிண்ட் எடுத்துக்கொடுப்பதும் ஆச்சரியமான விவாதங்களாக இருந்தது.

 

3

உண்மையிலேயே கலையில் பிரக்ஞ்சாபூர்வமாக எழுதவேண்டுமா இல்லை செய்யவேண்டுமா என்பதும் சரி சரித்திரம் என்பது மனித உள்ளத்துக்கு அப்பால் தனியாக உண்ட அல்லது அதுவெறும் கற்பனைதானா என்பதும் சரி பேசி முடிக்கக்கூடியவை அல்ல. ஆனால் முருகவேள் அவர்கள் சொன்னதுபோல அதனால் என்னபயன் என்பதைவைத்தே முடிவுசெய்யவேண்டும். சரித்திரத்தை உண்டுபண்ணி நம்மை ஒருவன் சுரண்டினால் சரித்திரமே இல்லை என்று சொல்லிக்கொட்டு சும்மா இருக்கமுடியுமா என்ன? எங்கள் நண்பர்களுடன் இதைப்பற்றித்தான் நிறைய பேசிக்கொண்டிருந்தோம்.

 

eeeee

பலகோணங்களில் விவாதங்கள் நடந்தன. எல்லா எழுத்தாளர்களையும் பார்த்தோம். நான் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் மட்டுமே சில சொற்களைப்பேசினேன். ஏதோ ஒரு தயக்கம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம்மை சாதாரண வாசகன் என நினைத்துவிடுவார்களோ என்ற சந்தேகம்தான். நாம் நல்ல வாசகன் என்ரு காட்டும்படியாக சிறப்பாகப்பேச நம்மால் முடியாது. பேச ஆரம்பித்தாலே குரல் அணைந்துவிடுகிறது. ஆகவே எவரிடமும் பேசவில்லை. அடுத்தவருடம் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

 

5

அரங்கத்தில் நடந்த விழா மற்ற விவாதங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் மிகச்சாதாரணம்தான். பெரிய ஏற்பாடுகள் இல்லை. ஸ்டாண்ட் மைக் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆடியோ சரியாக இல்லாததனால் பேசியது சரியாக்ப்புரியாமல் போய்விட்டது. நீங்கள் மைக்கை கொஞ்சநேரம் கழித்து கீழே வைத்துவிட்டுப்பேசியதனால் பேச்சில் ஒலி மாறிக்கொண்டே இருந்தது. பரவாயில்லை, குறைவான வசதிகளைக்கொண்டு அதிகம் பேர் வேலைசெவதற்கு இல்லாமல் இத்தனைசெய்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்

 

 

அடுத்தமுறை நிறையத்தயாரிப்புகளுடன் வருவேன் சார்

 

 

முருகேஷ்

 

 

 

1

 

அன்புள்ள ஜெ

 

 

மிகச்சிறந்த இரண்டு நாட்கள். எனக்கு நட்பு வட்டம் என்கிற ஒன்று கை நழுவிப்போய் 18 வருடங்களாகின்றன. பதினெட்டாம் வயதில் வேலை தேடி சென்னை வந்த காலம் முதல் நண்பர்கள் என்றால் உறவினரும் அலுவலகத்தில் கூட வேலை செய்பவரும்தான். என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தவிர வேறெதிலும் அதிகம் ஈடுபடாத நண்பர்களே அதிகம்.

 

 

சென்னையில் இப்போது உங்கள் மூலம் ஒரு நட்பு வட்டம் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தமுறை எங்களுடன் வந்த அருண் புதியவர். டெம்போ டிராவலரில் கிளம்பினோம். எப்போதும் போல சீனிவாசன் சாரும் சுதா மேடமும் உற்சாகத்தோடு பயணத்தை துவங்கி வைத்தார்கள். உளுந்தூர்பேட்டை சேலம் சாலையில் டிரைவர் சாமியாட ஆரம்பித்தார். தமிழிலக்கியத்திற்கு களப்பலியாகிவிடுவோமோ என்ற பயத்தில் மெல்லமாக வந்ததில் நல்ல தாமதமாகிவிட்டது.விஜயராகவன், ப்ரசாத், சிவாகி (செல்வாவின் ஆருயிர்த்தொழர்) ஆகியோர் வழியில் இணைந்துகொண்டனர்.

 

1

கோவையில் வேனிலிருந்து இறங்கிய போது விஜய் சூரியன் கூவி அழைத்தபடி ஓடி வந்து கட்டியணைத்தபோது அத்தனை வருடங்களுக்கும் பின்னோக்கி சென்றது போல தோன்றியது. எப்போதும் போல சிரித்த முகத்துடன் சுரேஷ் அண்ணா.. கக்கத்தில் ஆடிட்டர் பையோடு ஆங்காங்கு அலைந்து மேற்பார்வையிட்டுக்கொண்டும், ” ஒருவரின் சிரிப்பினிலே விளைவது கவிதையடா” என்று பாடிக்கொண்டும் அதே நேரம் நேற்று வந்த நாவல் வரை படித்து தெரிந்து வைத்திருப்பதும் ஆச்சரியம்.

 

 

விழா அன்று காலை தேநீர் மண்டகபடி எனக்குத்தான் என்று முதல் மரியதையை விட்டு கொடுக்காமல் வந்த ஆடிட்டர்.. அவரை இப்போதே முதல் முறை பார்க்கிறேன். நல்ல பெயர்..(எப்படியும் நினைவிற்கு வந்துவிடும்..)

 

 

காலை உணவு முடித்து 10:30 மணிக்கு வந்த போது உங்களை சுற்றி 30 பேர் உட்காரந்து வெய்யோன் குறித்தான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கர்ணனுக்கு துரியோதன்னை பிடித்து போனதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஒரு குதிரைக்காரன் மகனை ராஜாவாக்கியதற்கு அவன் காலம் முழுதும் கடன் பட்டவனாகிறான். ஆனால் துரியோதனனுக்கு கர்ணன் மேல் ஏன் இந்தளவு நட்பு மற்றும் பாசம் என்ற கேள்வியும் அதற்கான உங்கள் பதிலும் நல்ல புரிதலை அளித்தன.

 

1

வாரம் ஒருமுறை எப்படியேனும் சந்திக்கும் செளந்தர் வரவில்லையென்பது ஒரு குறை. முத்துராமன்சார் வந்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தார். ( கிசு கிசுக்கள் அனுமதியென்றால், ஆறுமாதமாக முறைத்துக்கொண்டிருந்த ஒரு நண்பர் அன்று அவருடன் பேசிவிட்டார்..பெரியவர்களும் டூ விட்டுக்கொள்வதை காண ஆசையாக இருந்தது)

 

 

ஊட்டி கூட்டம் ஒருவகை ராணுவ பரேடு என்றால் இது ஒருவகை பள்ளிக்கூட வகுப்பு என்று இரண்டிற்கும் தலா ஒரு முறை வருகை புரிந்தவன் என்கிற வகையில் சொல்வேன்..

 

ee

கவிஞர் தேவதச்சன் அவர்களின் உடல்மொழி நான் என் பதின் பருவத்தில் கண்ட தஞ்சைவாழ் மக்களை நினைவுபடுத்தியது. கால்களை ஆட்டிக்கொண்டு குழந்தைகள் போல தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அந்த எண்ணம் அப்படியே வந்துடு்ச்சி அது!!! என்று அவர் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தஞ்சைமாவட்டத்தில் என் சின்ன வயதில் இவரைப்போல பார்த்திருந்த என் சுற்றமும் நட்பும் நினைவிற்கு வந்தனர்.மணிகண்டனும், பாண்டி ரமேஷும் தேவதச்சனிடம் கேட்ட கேள்விகள் மிக நுட்பமாக இருந்தன.

 

பிரம்மராஜன் கவிதைகளுக்கும் தன் கவிதைக்குமான வித்யாசங்களையும், நாற்காலியை கவிழ்த்து போட்டு கவிதையின் அமைப்பு பற்றி விளக்கியபோதும் தேவதச்சன் அவர்கள் ஒரு தேர்ந்த ஆசிரியர் போல விளக்கினார். குறிப்பாக அது அப்படித்தான் நீங்கதான் விளங்கிக்கணும் என்கிற கர்வம் சார்ந்த உடல்மொழி எங்கும் இல்லை. கோடு விழுந்ந நெற்றியுடன் அவர் சிரிக்கும் போதும் தலையை ஆட்டி ரசிக்கும் போதும் அவரை மிக நெருக்கமாக உணர்ந்தேன். அது என்ன என்பதை யுவன் தன் மேடைப்பேச்சில் குறிப்பிட்டார். கவிஞர் தனக்குள் இருக்கும் குழந்தையை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்.

 

DSCN0929

அத்துவான வெளியின் கவிதை, பதிவுகள் வழியாக மட்டுமே அறிந்திருந்தவர் இவர் எனபதை சொல்லும்போது மிக சங்கோஜமாக உணர்கிறேன். ஆனால் அந்த பத்திகளின் மூலமே இவர் ஒரு தனித்துவமான கவிஞர் என உணர்ந்து கொண்டேன். அவர் infinity பற்றியும் குழந்தை ஒரு மரபின் தொடர்ச்சி எனவும் விவரித்த விதம் மிகவும் தெளிவாக புரியவைக்கும் நோக்குடன் இருந்தது. ஒருவழியாக தட்டுத்தடுமாறி என் கவிதைமுகூர்த்தம் வாய்த்துவிட்டது என நினைக்கிறேன்.

 

 

கவிஞர் இசை அவர்கள் விவரித்த கையசைப்பு கவிதையாகும் இடம் அனைவரையும் கவர்ந்தது. ஷண்முகவேல் சென்னை வந்த போது அதை குறிப்பிட்டு சொல்லிக்கொண்டிருந்தார். திரு கே.என் செந்தில் அவர்களுடன் விவாதித்த போது சிறுவர் இலக்கியம் குறித்தான பேச்சில் பதினைந்து வயதிற்குள் போரும் அமைதியும் படிக்கலாம் என நீங்கள் சொன்னது என்னை ஆச்சரியபடுத்தியது. தேநீர் இடைவெளியில் ஒரு நண்பருடன் உரையாடியபோது அவரும் இது பற்றி பேசினார். எங்களுக்கு கிடைத்த சிறுவர் இதழ்கள் இன்றைய குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நானும் பேசாமல் வெண்முரசை கொடுத்துவிடலாமென இருக்கிறேன்.

 

 

அடுத்தநாள் மாலையில் அரங்கில் தமிழினி வசந்தகுமார் அவர்களை ராஜமாணிக்கம் அண்ணா வழியாக அறிமுகபடுத்திக்கொண்டேன். சிவாத்மா மற்றும் தங்கவேல் ஆகியோர் நேரடியாக அரங்கிற்கே வந்திருந்தார்கள். வெற்றிமாறனிடம் சிடி பெற்றுக்கொண்ட கடலூர் சீனு, குடுமியும், கருப்புச்சட்டையுமாக அவர் படங்களில் வரும் நாயகன் போலவே இருந்தார். எப்போதும் போல இந்த முறையும் அவர் அதிகம் பேசவில்லை (என்னுடன்)

 

33

திங்கள் காலை முதல் நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினேன். இந்த இரண்டு நாட்கள் ராஜோபசாரமாக எங்களை கவனித்துக்கொண்ட ஒவ்வொரு கோவை நண்பர்கள் பலரும் அங்கிருந்த நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற முடியவில்லை. அது சற்று வருத்தமாக இருந்தது.

 

 

துறைவன் நாவலை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுவரை சுவாரசியமாக இருக்கிறது. முடித்தவுடன் அது குறித்து எழுதுகிறேன்

 
இன்றைய ஜன்னல் இதழில் தேவதச்சன் மற்றும் ஆ.மாதவன் அவர்களின் பேட்டி வெளியாகியிருக்கிறது. ஆ.மாதவன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளர்களும் வாசகர்களும் இணைந்து வழங்கும் விஷ்ணுபுரம் விருது தனக்கு 2010 ல் கொடுக்கப்பட்டது என சொல்லியிருக்கிறார். எத்தகையதொரு நிகழ்வில் கலந்துகொண்டு வந்திருக்கிறேன் என மீண்டும் உணர்ந்து மகிழும் தருணம்

 

காளிப்பிரசாத்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவையில் சங்கரர் பற்றிப் பேசுகிறேன்

$
0
0

1

 

நண்பர்களுக்கு,

வரும் ஜனவரி 3 ஆம் தேதி நான் கோவையில் கிக்கானி அரங்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் நிகழவிருக்கும் , ஆன்மீக குருநாதர்களைப்பற்றிய ‘எப்போ வருவாரோ’ என்னும் சொற்பொழிவு வரிசையில் சங்கரர் பற்றி பேசவிருக்கிறேன். சென்றமுறை வியாசர் பற்றிப்பேசினேன் என்பது நினைவிருக்கலாம். மாலை ஆறுமணிக்கு விழா.

 

சங்கரரின் வரலாற்று இடம், இந்திய சிந்தனைமரபில் அவரது தொடர்ச்சி, அத்வைதத்தின் அடிப்படைகள், பின்னாளில் அத்வைதம் எப்படி இந்திய மறுமலர்ச்சிக்கு தூண்டுதலாக அமைந்தது ஆகியவற்றைப்பற்றிப் பேசப்போகிறேன். வழக்கம்போல முற்றிலும் தீவிரமான உரை. ஆர்வமுள்ளவர்கள் மட்டும் வரலாம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வரும் ஆண்டும்…

$
0
0

Sun-God1

புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேதசகாயகுமார் கூப்பிட்டிருந்தார். ‘பெரிய விடுதலைல்லா உங்களுக்கு?” என்றார். “ஏன்?” என்றேன். ‘இந்தியாவிலே ஒரு எழுத்தாளனைப்பற்றிச் சொல்ல என்ன உண்டோ எல்லாத்தையும் சொல்லிட்டானுக. இந்துத்துவா,, சாதிவெறியன்,, மதவெறியன்,, பழமைவாதி,, பெண்ணடிமைவாதி, எழுதப்படிக்கவே தெரியாது…எல்லாம் வந்தாச்சு. இனிமே ஒண்ணுமே சொல்றதுக்கில்லை. அதனால புதிசா ஒரு வருத்தம் மிச்சமில்லை’

’அதானே’ என ஆச்சரியமாக நினைத்துக்கொண்டேன். எவ்வளவு பெரிய விடுதலை. கிட்டத்தட்ட காந்தி!  ஆனால் என்ன சிக்கல் என்றால் எதிர்காலத்தில் ஜெயமோகன் என்பது ஒரு குட்டி ராணுவத்தின் பெயர் என நினைத்துக்கொள்வார்களோ.  நான்காம் ஜெயமோகனுக்கும் எட்டாம் ஜெயமோகனுக்குமான சண்டைகளைப்பற்றி ஆய்வுக்கட்டுரைகள் வருமோ? தெரியவில்லை.

சென்ற ஆண்டும் வழக்கம்போலத்தான். செயல்செறிந்தது. பயணங்கள். எழுத்து. வெறிகொண்ட வாசிப்பு.இந்த ஒருவருடத்தில் நான் வாசித்த வரலாற்றுநூல்கள், தொல்தத்துவநூல்களை திரும்பிப்பார்க்க பீதி ஏற்படுகிறது. கொஞ்சநாள் கழித்து மூளையை ஹோஸ்பைப்பால் நீர் பீய்ச்சி தூய்மை செய்யவேண்டும் போல என நினைத்துக்கொண்டேன்

இத்தனை வெறியுடனிருக்க என்ன காரணம் என கேட்டுக்கொள்கிறேன். எதையும் செய்யாமல் எங்கோ சென்றுவிடவேண்டும் என உள்ளம் தவிப்பதே என அறிகையில் திகைப்பு எழுகிறது. பேசுவதற்குக் காரணம் பேசாமலிருக்க விழையும் உள்ளத்தை அடக்குவதே. என்றாவது பேச்சை சற்று நிறுத்தினேன் என்றால் மீண்டும் தொடங்கவே முடிவதில்லை. சென்றவருடத்தில் பலநாட்கள் ஒருசொல்லும் பேசாமலிருந்திருக்கிறேன்

பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை போலும். இந்த நாட்கள் அவ்வண்ணமே சென்றுகொண்டிருக்கின்றன. ரயிலைப்பிடிக்க நிற்பவனின் பதற்றமும் பணப்பையை மறந்துவைத்துவிட்டவனின் நிலையின்மையும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. எதற்காக எவர்மேல் சினம் கொண்டிருக்கிறேன், எதற்காக மீண்டு வருகிறேன் என்றே தெரியவில்லை.

என்னைச் சகித்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார நன்றி. சகித்துக்கொள்ள மறுத்த நண்பர்கள் அனைவரிடமும் தாழ்ந்து மன்னிப்பும் கோருகிறேன். இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது எளிய பணி அல்ல. இது ஒருகணம் தெய்வங்களும் மறுகணம் பேய்களும் மாறிமாறி பற்றிக்கொள்ளும் ஆபத்தான ஆடல். இதன் விளைவு ஒன்றே அனைத்தையும் நியாயப்படுத்துமென நினைக்கிறேன்

இந்த ஆங்கிலப்புத்தாண்டின் மாலையில் வழக்கம்போல என் மெய்ஞானநூல்களில் ஒன்றை கைபோன போக்கில் புரட்டிக்கொண்டிருந்தேன். இவ்வரிகள் இந்த வருடத்திற்கு.

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.

[விவிலியம் திருப்பாடல் 19]

நலம் திகழ்வதாக!

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

களரி கிராமியக்கலைவிழா

$
0
0

ma

மணல்வீடு ஹரிகிருஷ்ணன் சென்ற சில வருடங்களாகச் சலிப்பில்லாமல் நாட்டர் கலைகளுக்கான ஒரு விழாவையும் பயிற்சிநிலையத்தையும் நடத்திவருகிறார். நன்கொடைகளைக்கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இந்தவருடம் சென்னை வெள்ளம் காரணமாக போதிய நிதி இன்றி நிகழவிருக்கிறது என்றார்.

 

நாளை [2-1-2016] முதல் நிகழ்வு தொடங்குகிறது. நிதியளிக்கும்படி ஆர்வமுடையவர்களைக் கோருகிறேன்

அவரது கடிதத்தை இணைத்துள்ளேன்

ஜெ

 

அன்புடையீர் வணக்கம்

மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் ,தெருக்கூத்து,முதலான நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு மண் அளித்தமாபெருங்கொடையென்று இவற்றைச் சொல்லலாம். நவீனயுகத்தில் இதுபோன்ற மண்சார் நிகழ்த்துக்கலைகள்,மற்றும் கிராமியக்கலைகள் கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாகி நாம் தொலைத்துவரும் வாழ்வாதாரங்களின் பட்டியலில் இடம் பெறத்துவங்கிவிட்டாலும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான்கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு

இன்று ஏகோபித்த சனங்களிடையே புழங்கும் சினிமா, டி.வி, இன்னும்பிறவுள்ள ஊடகங்களின் வழியே வெளிப்படும் கலை உற்பத்திகளில் மேலதிகமான வறட்சியேஎஞ்சி நிற்கிறது. அது மட்டுல்ல விளம்பரயுகத்தில் வலிந்து வெளிச்சப்படுத்தப்படும் கலைவடிவங்கள்தாம் கவனம் பெற்றுவருகின்றன,, பெற வைக்கிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் எட்டாத உயரத்தில் மிக உன்னதமான கலை சிருஷ்டிகளென நிகழ்த்துக்கலைகள் ஜீவிதம் பெற்று காலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன. சினிமா உள்ளிட்ட நவீன ஊடகங்கள் போன்றே தோற்பாவை, கட்டபொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகியனவற்றையும் வெறும் பொழுது போக்குச்சாதனங்கள் என்கின்றாற்போல் தீர்த்துப்பார்க்க முடியாது.

மரபார்ந்த தொல்கலைக்கூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும் ,அக்கறையையும் , அதிகாரங்களுக்கு எதிரான, போர்க்குணங்களையும் கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உத்சாகத்தையும் உத்வேகத்தையும் இவற்றைத்தவிர வேறெந்த கொம்பு முளைத்த கலை இலக்கிய உற்பவனங்களும் தந்துவிட முடியாது கலைத்தாயிடம் ஞானப்பால் அருந்தியவர்களுக்கு மாத்திரமே பீடம் என்றாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் படிப்பு வாசனை ஏதுமின்றி வழிவழியாக தாம்பெற்ற கேள்வி அறிவை முதலாக வைத்து கைக்கொண்ட காரியத்தில் துலங்கி அந்த அரியக்கலைகளுக்கு உயிரூட்டிவரும் கிராமியக்கலைகளின் சூத்ரதாரிகள்தாம் உண்மையான கலையின் பிதாமகர்கள் என்று அறைகூவ வேண்டியிருக்கிறது.

நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதும், அவர்தம் வாழ்வாதரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை உருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது பராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது.

மேற்சென்ன களப்பணிகளில் கடந்த 9 ஆண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்|சாஸ்தா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நிகழ்த்து கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக மக்கள் கலையிலக்கிய விழாவை எதிர் வரும் 2016 ஜனவரி மாதம் இரண்டாம் நாள் சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம் , ஏர்வாடி கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது . ஆகவே ஆர்வமுள்ள அன்பர்கள்   நேரில்  வந்திருந்து  நிகழ்வை  சிறப்பு  செய்வதுடன்   தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி உதவவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

மு. ஹரிகிருஷ்ணன்,

ஆசிரியர் -மணல்வீடு.

தொடர்புக்கு manalveedu@gmail.com

9894605371

முன்னூட்டம்

https://www.youtube.com/watch?v=cdJeNl7h2ZY

https://www.youtube.com/watch?v=UCcLbRFSLj8

https://www.youtube.com/watch?v=8Qh-uKOkuBU

https://www.youtube.com/watch?v=ZzErA5Qh3tM

https://www.youtube.com/watch?v=upwyHSw0Xk0

https://www.youtube.com/watch?v=QHoFGghuAwE

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 2

தன் குடிலில் தனித்து விடப்பட்ட மமதை ஒவ்வொரு நாளும் அக்கருவை எண்ணி கண்ணீர் விட்டாள். நூல் அறிந்த மறையோர் அனைவரையும் அணுகி அவர்கள் காலடியில் அமர்ந்து நான்மறையும் செவிபருகி அம்மகவுக்கு அளித்தாள். தனித்த இரவுகளில் விண்மீன் பழுத்த வானைநோக்கி அமர்ந்து “வளர்க என் மைந்தா! பேருடல் கொண்டு எழுக! விண்ணகமென உளம் பெருகி எழுக! நான் இழைத்தவை எல்லாம் உன் வருகையால் நிகர்த்தப்படுக!” என்று வேண்டினாள். குகைக்குள் உறைந்த மைந்தன் “ஆம் ஆம் ஆம்” என பேரோசை எழுப்புவதை அவள் கேட்டாள்.

முதிய அந்தணன் ஒருவன் சொன்னான் “பெண்ணே, நீ செய்வதென்ன என்று அறியாதிருக்கிறாய். விழியிழந்த மகன் ஒருவன் உனக்கு பிறக்க இருக்கிறான் என்றால் அவன் மதியிழந்தவனாகவும் இருத்தல் நன்று. அவன் இழந்ததென்ன என்று அவன் அறிய மாட்டான். நீயோ வேதம் கேட்டு நிறைகிறாய். அச்சொற்பெருக்கினூடாக ஏழுலகங்களையும் அவனுக்கு அளிக்கிறாய். அங்கு எதையும் பார்க்கவியலாத விழிகளுடன் அவன் பிறப்பான். அறிய முடியாதவற்றால் ஆன உலகில் வாழ்வது எத்தனை துயரென்று எண்ணிநோக்கு. அவன் அளியவன்.”

தலை குனிந்து கண்ணீர் வழிய மெல்லிய குரலில் அவள் சொன்னாள் “இல்லை அந்தணரே, என் உள்ளம் சொல்கிறது இங்குள்ள அனைத்தும் சொல்லே என்று. பிரம்மமும் ஒரு சொல்லே. சொல்லை அறிந்தவன் அனைத்தும் அறிந்தவனே. அவனுக்கு வேதமே விழியாகுக!” அந்தணர் நீள்மூச்செறிந்து “நான் சொல்வது எளிய உலகியல். உலகியலின் விழிமுன் மெய்மை கேலிக்குரியது. மெய்மைக்கு உலகியலும் அவ்வாறே” என்றார்.

பின்னொருநாள் கொடுவனம் விட்டு வந்த முனிவர் ஒருவர் அவளிடம் சொன்னார் “இருளென்பது நீ எண்ணுவது போல் எளியதல்ல பெண்ணே. அது இங்கு அனைத்தையும் நிகழ்த்தும் அக்கதிரவன் இல்லாத இரவு. நீளிரவில் வாழப் போகிறவன் உன் மைந்தன். இங்கு நெறியென்றும், குலமென்றும், அறமென்றும் ஆகி நிற்பது நாளவனே என்று உணர்க! வெய்யோன் கதிர்ச் சுடர் சுருட்டி மறைந்தபின் இப்புவியில் எஞ்சுவதென்ன? இம்மானுடத்தை ஆக்கி ஆட்டிப்படைக்கும் காம குரோத மோகங்கள் அல்லவா? ஆதவன் இல்லாத உலகில் வாழும் உன் மைந்தன் அறம் அறியான், குலம் உணரான், நெறி நில்லான். எஞ்சும் இருள் விசைகளால் மட்டுமே அவன் இயக்கப்படுவான். அவன் பிறவாதொழிவதே உகந்தது.”

“நான் என்ன செய்ய வேண்டும் உத்தமரே?” என்றாள் மமதை. “அவன் இப்புவி நிகழ வேண்டியதில்லை. அதோ கங்கை ஓடுகிறது. அதில் மூழ்கி இறப்பவர் எவரும் இழிநரகு செல்வதில்லை. அவனை நீ உன் மூதாதையரிடம் சென்று சேர். அவன் அவர்களின் நற்சொல் பெற்று பிறிதொரு பிறவியில் சுடர்விழிகளுடன் இங்கு வரட்டும். அவனுக்கென எழாச்சொல்லின் பெருவெளியில் திரண்ட அபூர்வம் அனைத்தும் மெய்ஞானமென வந்தடையட்டும்” என்றார் முனிவர். “இல்லை. இது அறம் உணர்ந்தோர் சொல் அல்ல. என் மைந்தன் இப்புவியில் உள்ள அனைத்து அறங்களை விடவும், அவற்றை இயற்றி விளையாடும் பிரம்மத்தை விடவும் எனக்கு உயர்ந்தவன். அவன் இப்புவிக்கு வரட்டும். அவனில் முளைப்பன முளைக்கட்டும். பயிரே ஆயினும் களையே ஆயினும் அது எனக்கு நன்றே” என்றாள் மமதை.

பதினெட்டு மாதம் அவள் கருவில் தவமியற்றிவிட்டு விழியென இரு குருதிக்கட்டிகளுடன் தீர்க்கதமஸ் மண்ணுக்கு வந்தான். மைந்தனை நெஞ்சோடணைத்து அவள் கண்ணீர் விட்டாள். அவன் குருத்துக் கால்களை சென்னி சூடி “விழியற்றது என் பிரம்மம்” என்றாள். அச்சிறிய முகத்தை உற்று நோக்கி “என்னை நோக்க உனக்கு விழி வேண்டியதில்லை மைந்தா” என்றாள். அவள் முலைக்குருதியை இறுதிச்சொட்டுவரை உறிஞ்சிக் குடித்தான். ஒரு போதும் அவள் உடலில் இருந்து இறங்காதவனாக அவன் வளர்ந்தான்.

விழியிழந்த குழந்தை விரல்களையே விழிகளாகவும் விழைவையே ஒளியாகவும் கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக தொட்டு அதற்குரிய சொல்லை தன் உள்ளத்திலிருந்து எடுத்துப் பொருத்தி இருளில் பெருகி எல்லையற்று விரிந்த வாழ்வெளி ஒன்றை தனக்கென சமைத்துக் கொண்டது. தான் மட்டுமே உலவிய அவ்வுலகில் அது விண்ணில் இருந்தெழும் உருவிலிக் குரல்களாகவே பிறரை அறிந்தது. எங்கும் தன் இருப்பை, தன் தேவையை, தன் விழைவை, தன் வெறுப்பை மட்டுமே அது முன் வைத்தது.

அன்னை விழித்திருக்கும் நேரமெல்லாம் அதன் காலடிகளில் பணி செய்யும் ஏவல்பூதமாக இருந்தாள். கைகளால் தரையை ஓங்கி அறைந்து அது வீறிட்டழுகையில் பால்சுரந்து முலைத்தடம் நனைய மூச்சிரைக்க அவள் ஓடிவந்தாள். வருகையில் ஆடை தடுக்க அவள் பிந்தினால் முலைக்கண்ணை கடித்து இறுக்கி அவளை அலறித்துடிக்க வைத்தது அது. எப்போதும் தன் அருகே அவள் இருக்க வேண்டும் என்று அது விழைந்ததால் மரவுரியாலான தூளி ஒன்றைக் கட்டி தன் தோளில் அதை ஏற்றிக் கொண்டாள். அடர்காடுகளிலும் மலைச்சரிவுகளிலும் நதிக்கரைகளிலும் விறகும் அரக்கும் தேனும் மீனும் தேடி அவள் சென்ற போதெல்லாம் அவள் மேல் அமர்ந்து ’ஊட்டுக என்னை’ என அது ஓயாது ஆணையிட்டது.

இறங்காத போர்த்தெய்வம் ஒன்று ஏறி அமர்ந்திருக்கும் காட்டுப்புரவி போல அவள் எங்கும் அலைக்கழிக்கப்பட்டாள். அவள் கண்கள் குழி விழுந்தன. அவள் கன்னம் ஒட்டி உலர்ந்தது. முதுமை அவள் மேல் பரவி உலர்ந்த சுள்ளியென ஆக்கியது. அவள் குருதியை உண்டு எழுவது போல கரிய பேருடலில் எழுந்தான் தீர்க்கதமஸ். நடக்கத் தொடங்கியபோது அன்னையை வெறும் ஓடென களைந்துவிட்டு தன் வழியை தானே தேர்ந்தான். மகாகௌதமரின் தவச்சாலை வாயிலில் சென்று நின்று மார்பிலறைந்து ஒலியெழுப்பி உரத்த குரலில் “இங்குள்ள முனிவர் எவராயினும் அவர் எனக்கு கல்வியளிக்கக்கடவது” என்றான்.

சினந்தெழுந்து வெளியே வந்த கௌதமர் “மூடா, விலகிச் செல்! இல்லையேல் தீச்சொல் இடுவேன்” என்றார். “அத்தீச்சொல்லை நானும் இட முடியும் மாமுனியே” என்றான் தீர்க்கதமஸ். அவன் செல்லும்போது கௌதமர் பன்னிரு மாணவர்களை சூழ அமரச்செய்து அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட மந்திரங்களை ஒப்பிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒற்றை மந்திரத்தை பன்னிரு சொற்களாக பிரித்து ஒவ்வொருவருக்கும் அளித்து அச்சொற்களால் ஆன பொருளில்லா மந்திரத்தையே ஒவ்வொருவரும் அறியச்செய்திருந்தார். பன்னிரண்டையும் ஒருசொல் மேல் பிறசொல்லென்று அடுக்கும் முறையை அவருக்கு மட்டுமென வைத்திருந்தார். அவர்கள் ஒரே காலத்தில் ஒப்பித்த மந்திரம் அவர்களின் காதுக்கு ஒலித்தொகையாகவே இருந்தது.

தொண்டையை செருமிக்கொண்டு தீர்க்கதமஸ் அவர் சற்றுமுன் கேட்ட சொல்லலையை அணுவிடை பிறழாது மீளச்சொன்னான். பின் ஒவ்வொரு குரலுக்குரியதையும் தனித்தனியாக சொன்னான். பின்னர் பன்னிரண்டு சொல்வரிசையையும் பன்னிரண்டு முறைகளில் இணைத்துச்சொன்னான். இணைப்புகளின் வழியாக மந்திரம் மெல்ல உருப்பெறுவதைக் கண்டதும் மகாகௌதமர் அவன் கைகளை பற்றிக்கொண்டு “போதும், அழியாச் சொல்லை கற்பதற்கென்றே பிறந்த செவிகள் கொண்டவன் நீ. வருக!” என்றழைத்து உள்ளே கொண்டு சென்றார்.

“மகாகௌதமரிடம் மூன்று வேதங்களையும் வேதாங்கங்களையும் கற்றார் விழியிழந்த முனிமைந்தர். அங்கிருந்து கிளம்பி மகாபிரஹஸ்பதியிடம் சென்று நான்காவது வேதத்தை கற்றார். ஒவ்வொன்றையும் முன்னரே அவர் கற்றிருந்தார் என்றும் தாங்கள் அளித்த கல்வி அனைத்தும் நினைவு கூரலே என்றும் ஆசிரியர்கள் உணர்ந்தனர். உச்சிப்பாறையின் பள்ளம் மழைநீர் மட்டுமே கொண்டு நிறைவதுபோல வேதம் முழுதுணர்ந்து பிறிதில்லாத உள்ளத்துடன் தீர்க்கதமஸ் கல்விநிலைகளை விட்டு நீங்கினார்” சூதன் பாடி நிறுத்தி சந்தம் மாறுவதற்காக தன் உடலை அசைத்தான்.

கர்ணனின் உடல் மெல்ல அசையக் கண்டு சூதன் திரும்பி அவனை நோக்கி தலைவணங்கினான். துரியோதனன் எழுந்தமர்ந்து கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் ஏவலனை நோக்கி குடிக்க நீர் கொண்டுவரும்படி கையசைத்தான். “அங்க நாட்டரசே, தீர்க்கதமஸின் கதை ஏழு சூதர்களால் பாடப்பட்டு தமோவிலாசம் என்னும் பெருமைமிக்க நூலாக திகழ்கிறது. சார்த்தூலவிக்ரீதம் சந்தத்தில் அமைந்த அதன் ஆறாவது சர்க்கத்தை இங்கு பாட சொல்லரசி என்னைப்பணித்தாள். கஜராஜவிராஜிதத்தில் அமைந்த ஏழாவது சர்க்கத்தைப்பாட அழைக்கிறாள். அவள் வாழ்க!” என்றான் சூதன். “சிம்மநடையில் அமைந்த பாடலில் அவரது இளமையைப் பாடிய மகாசூதர் பாஸ்கரர் மதயானைநடையில் காமவாழ்வை இயற்றியிருக்கிறார். அவர் புகழ் வாழ்க!”

துரியோதனன் ஏவலன் அளித்த நீரை அருந்தும் ஒலி அமைதியில் எழுந்தது. சூதன் தொடரலாம் என்று பானுமதி கையசைத்தாள். அவன் தலைவணங்கி “அரசி, வேதமென்பது கடலென்றுணர்க! எந்தை விண்ணவன் பள்ளி கொள்ளும் பாற்கடல் அது. மெய்யறிவு கொண்டு அதைக் கடைந்து பிரித்து அமுதைக் கொண்டு நச்சைத் தள்ளும் ஞானியர்க்குரியது. அறிக, வேதத்தின் வேர்ப்பிடிப்பு விழைவுகளால் ஆனது. அதன் தண்டு செயலூக்கம். உணர்வுகள் தளிர்கள். ஞானம் அதன் கனி. பிரம்மஞானம் அதன் இனிய தேன்” என்றான். “பிரஜாபதியாகிய தீர்க்கதமஸ் அப்பெருமரத்தின் வேர்களில் வாழ்ந்தவர் என்கின்றன நூல்கள்.”

பெருவிழைவே உளமென்றும் உடலென்றும் ஓயா அசைவென்றும் அறைகூவும் குரலென்றும் ஆன கரியமுனிவரை காடே அஞ்சியது. அவர் முன் வந்தவர்கள் பணிந்து மறுசொல்லுக்காக உடல் விதிர்த்து காத்திருந்தனர். முனிவர்கள் அவரை அகற்றி வளைந்தவழி சென்றனர். அமர்ந்த இடத்திலிருந்து தன் குரலெட்டும் தொலைவனைத்தையும் அவர் ஆண்டார். அவர் உடல் இளமையை அடைந்ததும் சித்ரகூடத்தின் முனிவர்கள் பிரத்தோஷி என்னும் அந்தண குல மங்கையை அவருக்கு மணமுடித்து வைத்தார்கள்.

பிறர் விரும்பும் எழிலற்று இருந்தமையால் எவராலும் விரும்பப்படாதிருந்தவள் பிரத்தோஷி. விழியற்றவருக்கு அழகற்றவளே துணை என்று முடிவெடுத்த முனிவர்களிடம் அவர் “எத்தோற்றம் கொண்டவள் அவள்? நிகரற்ற அழகியா? நிறைந்த உடல் கொண்டவளா?” என்றார். “ஆம் முனிவரே, அவள் பேரழகி” என்றனர் அணுக்கர்.

ஆனால் அவள் கழுத்தில் மங்கலநாண் பூட்டி மணப்பந்தலில் அவள் கைகளைப் பற்றியதுமே அவள் அழகற்றவள் என்று அவர் அறிந்துகொண்டார். உரத்த குரலில் “என்னை அழகிலியை மணக்க வைத்தீர்கள். உங்கள் விழியறியும் அழகுகளைவிட நுண்ணழகை அறியும் விரல்கள் கொண்டவன் நான் மூடரே” என்று கூவினார். “இல்லை, இவளல்ல என் துணைவி. விலகுங்கள்” என்றார். அவை நின்ற முனிவர்கள் “இளையோனே, மங்கலநாண் பூட்டி இவளை மணம் கொண்டுவிட்டபின் மறுப்பதற்கு நூல்நெறி இல்லை. நீ கற்ற வேதம் அதற்கு ஒப்புமென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்றார்கள். “ஆம், என்னுள் வாழும் வேதம் இன்று இங்கு சான்றென எழுந்த எரிதழலுக்கு மட்டுமே கட்டுப்பட்டது. இவளை ஏற்கிறேன்” என்று குரல் தாழ்த்தி சொன்னார் தீர்க்கதமஸ்.

அந்தணர் குலத்து பிரத்தோஷியில் அவருக்கு முதல் மைந்தன் பிறந்தான். அவனுக்கு அவர் தன் குருவின் பெயரை சூட்டினார். பின்னரும் அவள் மைந்தர்களை பெற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் ஆணையிடும்போது தன் முன் உணவு கொண்டு வந்து படைக்கவும், கைபற்றிச் சென்று நீராட்டி மீட்டுக் கொண்டுவரவும், ஆடையணிவிக்கவும், கூந்தல் திருத்தவும், அடிபணிந்து குற்றேவல் செய்யவும், காமத்தை ஒலியில்லாது தாங்கிக்கொள்ளவும் மட்டுமே அவர் அவளை பயன்படுத்திக் கொண்டார். மைந்தர் பெருகி குடி விரிந்த பின்னரும் தந்தையென எக்கடமையையும் ஆற்றவில்லை. “நான் உனக்கு என் மங்கலநாணாலும் மைந்தராலும் வாழ்த்து அளித்தவன். உன் பிறவி எனக்குமுன் படைக்கப்பட்ட பலி” என்றார்.

பிராமணி தண்டகாரண்யத்தில் இருந்த பிற முனிவர்களின் தவக்குடில் தோறும் சென்று நின்று இரந்து கொண்டு வரும் உணவில் பெரும்பகுதியை அவரே உண்டார். அவள் காடுதோறும் அலைந்து சேர்த்து சுமந்து வந்த கிழங்குகளையும் கனிகளையும் அவர் பிடுங்கிப் புசித்தார். பசித்துக் கதறும் மைந்தர்கள் சூழ்ந்திருக்க கரிய தழல் போல் அனைத்தையும் உண்டு நிறைவிலாது அமர்ந்த தன் கணவனை நோக்கியபடி பிரத்தோஷி கண்ணீர் விட்டாள். பசியுடன் துயின்ற மைந்தரைத் தழுவியபடி “எந்த ஊழ்வினையால் இந்த பெரும் பூதம் என் தோளில் ஏற்றிவைக்கப்பட்டது? தெய்வங்களே, இப்பிறவியில் இதை இறக்கி வைத்து மீள்வேனா?” என்று ஏங்கி அழுதாள். இருளில் அவளுடைய தெய்வங்கள் சொல்லில்லாது விழியொளிர நின்றிருந்தன.

பிறரது துயரையும் வெறுப்பையும் எள்ளலையும் அறியாத இருளுலகில் தனித்த மதவேழம் மூங்கில் காட்டில் உலவுவது போல் அவர் கொம்பிளக்கி தலை குனித்து துதிக்கை சுழற்றி அலைந்து கொண்டிருந்தார். அங்கு பல்லாயிரம் ஊற்றுகள் என பெருகி வழிந்தது அவரது காமம். தன் வேதச்சொல் தேர்ச்சியால் அவர் விண்ணுலாவும் சுரபினிகளை கவரும் கலை கற்றார். காலையில் தன்னை கைபிடித்து கூட்டிச் சென்று நதிக்கரையில் அமரச்செய்து அங்கு சொல் மேல் சொல் அடுக்கி எழுந்து பேருருக் கொண்டு விரும்பிய விண்கன்னியை வரவழைத்து ஒளியுடல் கொண்டெழுந்து அவர்களுடன் உறவு கொண்டார்.

அவரைச் சூழ்ந்திருந்த காட்டுப்பொய்கைகளில் அவர் அவர்களுடன் உறவுகொள்ளும் காட்சிகள் தெரிந்தன. அதைக்கண்டு நாணிய காட்டுமக்கள் அவ்வழி செல்வதை தவிர்த்தனர். ஆனால் அக்காட்சிகள் அவர்களின் கனவுக்குள் விரிகையில் காட்டுமங்கையர் அவ்விண்கன்னியரை தாங்களே என உணர்ந்தனர். அவ்வாறு உணர்ந்தபின் அவர்களால் அவரை தவிர்க்க இயலவில்லை. அவரை நாடிச்செல்லும் பித்தெழுந்த பெண்களை அன்னையர் கைத்தளையிட்டு கட்டிவைத்தனர். வேட்கைமிகுந்து அத்தளைகளை உடைத்து அவர்கள் அவரை சென்றணைந்தனர்.

தன் காட்டுக்குள் எங்கானாலும் கேட்கும் ஒலியால் எழும் மணத்தால் பெண்ணை அறியும் திறன்கொண்டிருந்த தீர்க்கதமஸ் அவள் அக்கணமே தன்முன் வந்து காமமாட நின்றிருக்கவேண்டுமென ஆணையிட்டார். வராதவர்களை ஆற்றுநீரை அள்ளி இடக்கை தூக்கி தீச்சொல்லிட்டார். அவர்கள் சித்தம் கலங்கி நாய்போல நரிபோல ஊளையிட்டனர். பரிபோல அஞ்சி உடல்நடுங்கினர். அவரை விரும்பாது அணைந்த பெண்கள் கருவுற்றதும் தீத்தெய்வம் ஒன்று தங்களுக்குள் குடியேறியதாக உணர்ந்து வயிற்றை அறைந்து வீரிட்டழுதனர். தீர்க்கதமஸின் கட்டற்ற பெருங்காமம் அவர் காமம் நுகரும்தோறும் பெருகியது. காட்டின் ஒவ்வொரு இலையிலும் அவரது நாவின் நுண் சொற்கள் நின்று துடித்தன. ஒவ்வொரு வேர் நுனியிலும் அவருடைய விழைவுகள் இருளை துழாவின.

விண்ணக இருப்புகள் அந்தக் காட்டிற்கு வராமலாயின. அவிஅளித்து இரவெலாம் மந்திரம் சொல்லியும் விண் இருப்புகள் மண் இழியாமை கண்டு முனிவர்கள் வருந்தினர். வேள்விக்குளம்கூட்டி தென்னெருப்பில் அளிக்கப்படும் முதல்அவியை பெற்றுச் செல்லும் தேவர்களும் கின்னர கிம்புருடர்களும் கொள்ளும் களியாட்ட ஒலி கேட்டே பெருந்தெய்வங்கள் மண் இறங்குகின்றன என்பது நூல்கூற்று. வேள்விகள் வீணானபோது முனிவர்கள் சினந்தனர். பிரத்தோஷியை வரவழைத்து “உன் கணவனை கட்டுக்குள் நிறுத்து” என்று ஆணையிட்டனர்.

“உத்தமர்களே, என் சொற்களை அவர் கேட்பதில்லை. என் கண்ணீர் அவரை சென்றடைவதில்லை. அவர் உறிஞ்சி உண்ணும் வெறும் கூடு மட்டுமே நான். என் மைந்தருக்கு அரை உணவு அளிப்பதற்காக இக்காடெங்கும் அன்னை நாயென அலைந்து திரிகிறேன். அவரோ தன் அன்னையை உண்டு கூடென ஆக்கி வீசிவிட்டு வந்தவர். என் மேல் ஏறி எங்கோ சென்று கொண்டிருக்கிறார். நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றாள் பிரத்தோஷி. “அது எங்களுக்கு தெரியவேண்டியதில்லை. விழி இழந்த அவருக்கு உணவு இட்டு உயிரீன்று இருத்தி வைப்பது உன் கைகள். உன்னிடம் மட்டுமே அவரைப்பற்றி நாங்கள் குறை சொல்ல முடியும்” என்றனர்.

“நான் என்ன செய்வது? என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்! அதை செய்கிறேன்” என்று பிரத்தோஷி சொன்னாள். “குழந்தைகள் செய்யும் செயல்களுக்கான பழி அனைத்தும் பெற்றோரை சாரும். அந்தணப்பெண்ணே, உறுப்பிழந்தவர்களும் உளம்குலைந்தவர்களும் முதியவர்களும் குழந்தைகளே. அவர்களின் பழி அவர்களை உணவிட்டுப் பேணுபவரைச் சாரும். நீ எங்கள் தீச்சொற்களுக்கு இலக்காவாய். உன் குழந்தைகள் அவற்றை ஏற்க நேரிடும்” என்றார் பிரதீப முனிவர். “நான் என்ன செய்வேன்! நான் என்ன செய்வேன்!” என்று கைகூப்பி கதறி அழுதபடி உடல் குறுக்கி நடந்து திரும்பி தன் குடிலுக்கு வந்தாள் பிரத்தோஷி.

குடில் நிறைத்து கருஞ்சிலையென அமர்ந்திருந்த கணவனைக் கண்டு பற்களை இறுகக் கடித்து உள்ளங்கைகளை கிழித்து துளைக்கும் நகங்களுடன் நின்றாள். தளிர்ச்செடி மேல் சரிந்து விழுந்த கரும்பாறை! அந்த ஒப்புமை உள்ளத்தில் எழுந்ததுமே அவள் உள்ளம் தெளிந்தது. தளிர்ச் செடிகள் எவையும் பாறையால் அழிவதில்லை. வானின் அழைப்பும் மண்ணின் நீரும் அவற்றை வளைந்தும் நெளிந்தும் எழச்செய்கின்றன. “நான் வாழ்வேன்! என் மைந்தருடன் இப்புவியில் வாழ்ந்தே தீருவேன்! அதற்கென எதையும் ஆற்றுவேன்! இப்புவியில் என் தவம் அதுவே. தெய்வங்களே, நீங்கள் அன்னையர் என்றால் என்னை அறிவீர்கள்” என்றுரைத்து நீள் மூச்சுவிட்டாள்.

ஒவ்வொரு நாளும் அவளை பழிச்சொல்லால் சூழ்ந்தனர் முனிவர். அவளோ தன்னுள் மேலும் மேலும் இறுகிக் கொண்டிருந்தாள். மெலிந்து எலும்புக் கூடென ஆனாள். நீள்கூந்தல் உதிர்ந்தது. விழிகள் வறண்ட சேற்றுக்குழிகளாயின. வறுமுலைகள் உடலுடன் ஒட்டி உள்ளே சென்றன. காட்டிலும் சேற்றிலும் ஒயாது உழைத்து காகத்தின் அலகுகள் போல கரிய நகங்கள் நீண்டு வளைந்த கைகளால் கிழங்குகளையும் கனிகளையும் கொண்டு வந்து தன் மைந்தருக்கு தந்தை அறியாது ஊட்டி உடல் வளர்த்தாள்.

ஒருபோதும் தந்தைக்கு அருகே அவர்கள் செல்லலாகாதென்று ஆணையிட்டிருந்தாள். அவர் அவர்கள் வளர்வதை அறிந்து சினம் கொண்டார். “எனக்களிக்க வேண்டிய உணவை இவ்விழிபிறவிகளுக்கு அளிக்கிறாய் நீ. சிறுமையீறே, என்னவென்று என்னை எண்ணினாய்? இவர்களை தீச்சொல்லிட்டு கொல்வேன்… உணவு! எனக்கு மேலும் உணவு கொண்டுவந்து கொடு” என்று கூவினார். மைந்தர் அஞ்சி விலகி நின்று நடுங்கினர். “அவர் வஞ்சவிழிகள் உங்களை நோக்கி திரும்பலாகாது. செவிகளில் விழிகொண்டவர் மைந்தரே” என்றாள் அன்னை.

அவர்கள் கைகளும் கால்களும் வளர்ந்து பெருகியபோது ஒரு நாள் அழைத்துச் சென்று அவர்களின் மூதாதையர் புதைக்கப்பட்ட நெடுங்கல்லின் அருகே அமரச்செய்து தான் கொண்ட ஊழ் பற்றி சொன்னாள். “நீர்க்கடன் கொடுத்து உங்கள் தந்தையையும் மூதாதையரையும் விண்ணில் நிலைநிறுத்த வேண்டிய மைந்தர் நீங்கள். மங்கல நாண் ஏற்று அவர் கைபிடித்த கடன் ஒன்றினாலேயே அவருக்கு நான் அடிமைகொண்டவள். பெண்ணென்பதால் இன்று நீங்கள் தோள்பெருத்து தலையெடுத்தபின் உங்களுக்கு கட்டுப்பட்டவள். உங்கள் தந்தையைப்பற்றி நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் மூதாதையருக்கு நீங்கள் மறுமொழி சொல்லுங்கள். இனி நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றாள்.

மைந்தர் “அன்னையே, இதை நாங்கள் பேசி முடிவெடுக்கிறோம். தாங்கள் இல்லம் திரும்புங்கள்” என்றபின் இரவெலாம் அங்கு அமர்ந்திருந்தனர். ஏழு இளையவர்களும் மூத்தவராகிய கௌதமரிடம் கேட்டனர் “நமது தந்தையை நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” கௌதமர் சொன்னார் “அவரது பெருங்காமமும் எல்லையற்ற விழைவும் உருவாக்கும் பழிகள் அனைத்திற்கும் நாமே பொறுப்பு. இளையோரே, நாம் பிறக்கும்போதே மீட்பற்ற பழிசூழ்ந்தவர்கள் ஆனோம். இவ்வுடல், இந்த முகம் அவரிடமிருந்து வந்தது என்று வந்ததினாலேயே அப்பழியும் அவர் அளித்தது என்று கொள்வதே உகந்தது. அதற்காக நாம் அவரை வெறுக்க இயலாது. ஆனால் நம் அன்னைக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுள்ளது. இனிமேலும் பழி சூழ்ந்தவளாக அவள் இங்கு வாழக்கூடாது.”

“ஆம், ஆம்” என்றனர் இளையோர். “அவரை கொன்றுவிடும்படி என்னிடம் சொல்கிறார்கள்” என்றார் இளையவராகிய சித்ரகர். “உணவு கொடுப்பதை நிறுத்துங்கள். அவரே இறந்துவிடுவார் என்றார்கள்” என்றார் பாசுபதர். “அவரை சிற்றறை ஒன்றுக்குள் அடைத்து வையுங்கள் என்றனர்” என்றார் சுமந்திரர். கௌதமர் “இளையோரே, தந்தை என்பதனாலேயே நாம் அவரை பேணக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் தவம்பொலியும் இக்காட்டை அவர் அழிப்பதை நாம் ஒத்துக்கொள்ள முடியாது. அவரை இங்கிருந்து அகற்றுவோம்” என்றார்.

“எப்படி?” என்றார் இளையவர். “பரிசல் ஒன்று செய்வோம். அவருக்கான உணவும் நீரும் அதில் சேர்த்து இந்த கங்கை நதியில் ஏற்றி அவரை அனுப்பி வைப்போம். இது காலமும் ஊழும் என நாம் அறிந்த பெருவெளிப்பெருக்கு. இந்த நதி முடிவெடுக்கட்டும் அவர் என்ன செய்யவிருக்கிறார் என்று” என்றார் கௌதமர். இளையவர் “ஆம், அதுவே உகந்தது” என்றனர். “இதன் பழியும் நம்மை இணையாக சேர்வதாக! இவர் சென்ற இடத்தில் ஆற்றும் செயல்களின் பழிகளும் நம்மை சூழ்க! நம் அன்னையின் வாழ்த்தொலி ஒன்றே நமக்கு எச்சமென எண்ணுவோம்” என்றார் கௌதமர்.

மறுநாள் கௌதமர் தந்தையை சென்று வணங்கி “தந்தையே, இனி இந்தக் கானகத்தில் தாங்கள் இருப்பதை பிற முனிவர் விரும்பவில்லை. தங்கள் பெருவிழைவால் தங்கள் காமக்கறை படியச்செய்த விண்ணகக் கன்னியரும் கானகப்பெண்டிரும் விட்ட கண்ணீரால் நாங்கள் பழி சூழ்ந்திருக்கிறோம்” என்றார். தீர்க்கதமஸ் சினத்துடன் தரையை ஓங்கி அறைந்து “நான் தீச்சொல் இடுவேன். என்னிடம் வேதம் உள்ளது” என்றார். “ஆம் தந்தையே, தங்களிடம் வேத முழுமை உள்ளது. நீர் நனைந்த மண் போன்றது வேதம். நீங்கள் விதைப்பதை அதில் அறுவடை செய்வீர்கள். விழைவை விதைத்தீர்கள், நூறு மேனி கொய்கிறீர்கள்” என்றார் கௌதமர். “உன்னை அழிப்பேன்! உன் தலைமுறைகளை இருளில் ஆழ்த்துவேன்!” என்றார் தீர்க்கதமஸ். “செய்யுங்கள்! தன் மைந்தருக்கு தீச்சொல்லிடும் ஒருவர் தனக்கே அதை செய்து கொள்கிறார்” என்றார் கௌதமர்.

விழியிலா முனிவர் தணிந்து “என்னை ஏதேனும் அரசனிடம் அனுப்பி வை. என் சொல்லறிவை அவனுக்கு அளித்து நான் உயிர் வாழ்வேன்” என்றார். “அந்த அரசன் தங்களை அவனே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் அனுப்பி வைத்தால் அவனுக்கு நீங்கள் இழைக்கும் பழிக்கும் நாங்களே நேரடிப் பொறுப்பாவோம்” என்றபின் மீண்டும் தலை வணங்கிய கௌதமர் “உங்களை நாளை பிரம்ம முகூர்த்ததில் கங்கையில் ஒரு பரிசலில் ஏற்றி அனுப்பி வைக்க இருக்கிறோம் எந்தையே” என்றார்.

சினத்துடன் இரு கைகளையும் வீசி “நான் வாழ்வேன். நான் அழியமாட்டேன். நான் நீரில் மட்காத விதை. எரியிலழியாத அருகம்புல்லின் வேர். இவ்வுலகை பற்றிக்கொள்ள ஆயிரம் கொக்கிகள் கொண்ட நெருஞ்சி” என்றார். “ஆம், தாங்கள் விழைவின் மானுட வடிவம். விழைவை முற்றழிக்க மூன்று தெய்வங்களாலும் இயலாது. இங்கு மானுடம் பெருகவென உங்களை அனுப்பியவரே உங்கள் விசையை அமைத்திருக்கக்கூடும்” என்றபின் கௌதமர் திரும்பி நடந்தார்.

மறுநாள் காலை எட்டு மைந்தர்களும் தீர்க்கதமஸை தங்கள் குடிலில் இருந்து மூங்கில்கூடை ஒன்றில் தூக்கி வைத்து கொண்டு சென்றனர். இருகைகளாலும் நிலத்தை அறைந்து அவர் கூச்சலிட்டார். திரும்பி தன் மனைவியை நோக்கி “இழிமகளே, தந்தைக்குக் கொடுமை செய்யும் இழிமக்களை உன் கீழ்மைநிறைந்த வயிற்றிலிருந்து பெற்றாய். இனி இப்புவியில் எந்தப் பெண்ணும் தோள்வளர்ந்த மைந்தரை உள்ளத்திலிருந்து இழக்கக் கடவது. அவர்களுக்கு மனைவியர் வந்தபின் அவர்கள் அன்னையருக்கு அயலவராகக் கடவது” என்றார்.

சற்றும் அஞ்சாமல் அவரை நோக்கிய பிரத்தோஷி “இன்று என் மைந்தர் உடல்பெருகி இப்புவியில் வாழ்வதைக் கண்டேன். இதையன்றி வேறெதையும் விரும்பவில்லை. இனி சிலகாலம் அவர்கள் இங்கு மகிழ்ந்து வாழ்வார்கள். அதன் பொருட்டு எத்துயரையும் ஏற்க நான் சித்தமானேன். நான் அன்னை மட்டுமே” என்றாள்.

14

அவர்கள் அவரை இருண்ட நீர் ஒளிர்ந்தோடிய கங்கையின் கரைக்கு கொண்டுவந்தனர். அங்கு இருந்த பெரிய பரிசலில் அவரை ஏற்றி அமரச் செய்து ஏழு நாட்களுக்குரிய உணவும் நீரும் போர்த்தும் மரவுரியும் அதில் அமைத்தனர். “சென்று வாருங்கள் தந்தையே” என்று சொல்லி கௌதமர் அந்தப் பரிசலை நீரில் தள்ளி விட்டார். “நீங்கள் எண்மரும் மனைவியர் இன்றி இப்புவியில் வாழ்ந்து அழியக்கடவது. உயிர்கள் அனைத்தும் அடைந்த காமம் என்னும் பேரின்பம் உங்கள் எவருக்கும் கிடைக்காமலிருக்கக்கடவது” என்று தீச்சொல்லிட்டபடியே அலைகளில் ஏறி அமைந்து சென்ற பரிசலில் சுழன்று இருளில் மூழ்கி மறைந்தார் தீர்க்கதமஸ்.

தொடர்புடைய பதிவுகள்

கோவையில் சங்கரர் குறித்து…

$
0
0

1

[கோவையில் நாளை [3-1-2016] அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி]

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஏன் கோவையை சுற்றியே அமைகின்றன?.கடைசியாக உங்களின் ‘நேர் உரையை’  ‘ஹிந்து தமிழ்’ பதிப்பின் ஆண்டுவிழாவில் நெல்லையில் கேட்டதுதான். அதற்கு பின் இந்தப் பக்கம் வரவேயில்லை. அண்மையில் அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி,

நான் பேச்சாளன் அல்ல. அதற்குரிய குரலும் உச்சரிப்பும் எனக்கில்லை. உரைகளை திரும்பத்திரும்ப பேசி சீரமைப்பதில்லை. ஒவ்வொரு உரையும் புதியவை. ஆகவே அதற்கான எல்லா சிக்கல்களும் உண்டு.

ஆயினும் பேசுவதற்கான காரணம் பேசுவது ஒருவிஷயத்தை ஒட்டுமொத்தமாக தொகுக்க உதவுகிறது. விவாதங்கள் மூலம் விரிவாக்கவும் முடியும் என்பதனால்தான். நண்பர் நடராஜனின் கோரிக்கையும் தூண்டுதலாயிற்று.

கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இந்த அரங்கை அமைக்கிறது. வேறு இடங்களில் இத்தகைய அமைப்பு இல்லை.

மேலும் பிற ஊர்களில், சென்னையில்கூட, இத்தகைய ஒரு கேள்வியாளர் இல்லை. என் உரை பக்திப்பேருரை அல்ல. மதச்சொற்பொழிவும் அல்ல. இத்தகைய உரைகளுக்கு எங்கும் நூறுபேர் தேற மாட்டார்கள். அதற்கும் குறைந்தால் பேசுவதில் பொருளில்லை.

ஜெ

அன்பு ஜெ ,

இதற்கு முன் நான் எந்த கீதை உரையையும் படித்தது கிடையாது உங்கள் உரையைத் தொடர்ந்து கீதை சம்பந்தமான பலவேறு பேச்சுக்களையும் விவாதங்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன் . பொதுத்தளத்தில் கீதை குறித்து புழங்கும் பிழையான வாசிப்பும் , குறுகல் வாசிப்பும் பின் அதிலிருந்து தத்தம் சொந்த தரப்புகளுக்குள் கீதையை அடைக்க உருவாக்கப்படும் பல்வேறு திரிபுகளும் எவ்வாறு நிகழ்கிறது என்று உணர்ந்துகொள்ள முடிந்தது .கீதையை சரியாக அணுக சில நல்ல முயற்சிகளும் தென்பட்டாலும் அம்முறைகளில் ஒரு முழுமை காணக்கிடைக்கவில்லை , அரசியல் பேசுவது தத்துவத்தை தவறவிடுகிறது , ஆன்மீகம் பேசுவது வரலாற்றை தவறவிடுகிறது.

இந்தப் பின்புலத்தில் கீதை குறித்த உங்கள் உரையும் அதன் நோக்கமும் இன்னும் முக்கியத்துவம் கொள்கிறது ஒரு வகையில் உங்கள் நோக்ககு 360 degree view என்று சொல்லலாம். இன்று தளத்தில் சங்கரர் / அத்வைதம் குறித்த தாங்கள் ஆற்றவிருக்கும் உரை பற்றிய அறிவிப்பை கண்டதும் மேலும் உற்சாகமாக இருந்தது.

வேதாந்த மரபின் நோக்கில் அத்வைதம் பற்றி சில உரைகள் கேட்டுள்ளேன் , ராமகிருஷணர் குருமரபில் வந்த யோகிகளுடன் , குறிப்பாக சர்வபிரியானந்தாவின் உரை எளிதாக உள்வாங்கும்படி இருந்தது. மேற்கத்திய மெய்யியல் அறிஞர்களிடையேயும் சங்கரின் அத்வைதம் மிகவும் மதிப்பிற்குரிய இடத்தில் வைத்துப் பார்க்கப்படுவதை உணர முடிந்தது .உங்கள் கோணத்தில் சங்கரர்/அத்வைதம் பற்றிய உரையை கேட்க ஆவலாய் உள்ளேன் .

இதே போன்று ஒரு வரிசையில் உங்கள் உரைகள் தொடர்வது நல்ல விஷயமே.

அன்புடன்

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

என் உரை ஒரு ஒரு நவீன கேள்வியாளனை நோக்கி, அதாவது என் எழுத்துக்களை வாசிக்கும் வாசகனை நோக்கி பேசமுற்படுவது. அதற்கும் ஓர் இடம் உண்டு என நினைக்கிறேன். பார்ப்போம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு

$
0
0

44

 

கும்பகோணத்தில் இருந்து கோவை செல்ல ஜனசதாப்தி ஆறுமணி நேரத்திற்கும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்கிறது. பகல் நேர சலிப்பூட்டும் பயணம். சலிப்பை விரட்டுவது அடுத்த இருபத்துநான்கு மணிநேரங்களுக்குள் நடக்கவிருந்த நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள்தான்

 

கோபி ராமமூர்த்தி பதிவு

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியமெனும் கனவு

$
0
0

kamala

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

ஒவ்வொரு தொடக்கமும் சிறந்த முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடனேயே தொடங்குகின்றன. அனைத்திற்கும் தான் எதிர்பார்க்கிற சிறந்த முடிவுகள் கிடைப்பதில்லை. என் 2015ம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்காத ஒரு சிறந்த முடிவாக விஷ்ணுபுரம் விருது விழா கிடைத்துள்ளது. அவ்வகையில் என் 2015 – என் மனநூலில் என்றென்றும் எடுத்து பார்த்து ரசிக்கப்போகும் – ஒரு அழகிய முழுமை கொண்ட வாக்கியமானது இந்த விழா என்னும் முற்றுப்புள்ளியில்.

சில மின்னஞ்சல் தொடர்புகள் மூலம் ஜெயமோகன் அவர்களைத் தொடர்பு கொண்டிருந்தாலும், முதல் முறை அவரைக் காணப்போகிறோம் என்ற குறுகுறுப்புடன் மங்களூர் விரைவு வண்டியில் கோவை நோக்கி பயணித்தேன் டிசம்பர் 26 அன்று.  காலை 11 மணிக்கு ராஜஸ்தான் நிவாஸில் நுழைகையில், ஏற்கனவே கூட்டம் தொடங்கி இருந்தது.

நான் அவ்விடத்திற்கு புதிதானவன் இருந்தாலும், ஏற்கனவே பெரும்பாலான முகங்களைப் பார்த்த ஒரு எண்ணம் தோன்றியது. (வெண்முரசாளர் மொழியில் சொல்லவேண்டுமெனில் `தெரிந்தது போலவும், தெரியாதது போலவும் ஒரே நேரத்தில் உளமயக்கு ஏற்பட்டது`) ஒவ்வொரு முகமாக மீட்டெடுத்தேன் அவ்வப்போது. அவை ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெவ்வேறு நிகழ்வுகளில் கண்ட முகங்கள். ரொம்ப தாமதமாகத்தான் ஓவியர் ஷண்முகவேலைக் கண்டுபிடிக்க முடிந்தது. வெகு அமைதியாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்குள் என்னுடன் உரையாடிவிட்டார்.

கூட்டத்தில் , என்னை யாராவது பயன்படுத்துங்களேன் என்ற ஏக்கத்தில் கிடந்த சில நாற்காலிகளுள் ஒன்றை எடுத்து தேவதச்சன் மற்றும் ஜெயமோகன் இருவர் முகமும் தெரியும்படி ஒரு கோணத்தில் அமர்ந்துகொண்டேன். எதிர்பார்த்தபடியே இலக்கியத்தின் `எதிர்பாராத கோணங்களில்` உரையாடல் சென்று கொண்டிருந்தது.

ஆசிரியர் மாணவர் போல மேடைகளில் போல அல்லாமல், வட்டமாக அமர்ந்து சமதளத்தில் பேசியதும், இந்த கலங்கரை விளக்கத்தை நோக்கி அனைவரும் நீச்சல் அடித்து வந்திருப்பதால் கிடைத்த ஒரே அலைநீளமும் உரையாடலை சிறந்த தளத்தில் நிறுத்தியது. ஜெயமோகன் அவர்கள் சற்றே வெளியேறுகையில், எதிர்பாராமல் தேவதச்சன் அவர்களுடன் ஒரு கவிதையைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது.

 

`மொட்டை மாடியிலிருந்து

விருட்டென்று எழுந்து பறந்து செல்கிறது காகம்.
அது விட்டுச் சென்ற
என் வீட்டில்
குக்கர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது`

 

இந்த கவிதையில் எனக்கு கிடைத்த பொருளை நான் வியந்து அவரிடம் பேசி அதன் உண்மைப் பொருளை அவரிடம் பெற முற்பட்டேன். அப்போது, நான் ஜெயமோகன் அவர்கள் `ஒருபோதும் கவிதையின் பொருளை கவிஞரிடம் கேட்கக்கூடாது` என்று குறிப்பிட்டதையும், அதனால்தான் அவர் வெண்முரசு எழுத வெளியே சென்றிறுக்கும் தருவாயில் இதைக் கேட்பதாகவும் கூறியதைக் கேட்டு அனைவரும் ரசித்தது என்னை முழுதும் இலகுவாக்கி `இது நம் அரங்கம்` என்ற எண்ணம் கொள்ள வைத்தது.

அவரும் அதில் ஆழ்ந்து கவிதை எழுதியவர் தரும் பொருளைவிட, கவிதை வாசிப்பாளர்கள் தரும் பொருளை நோக்கியே கவிதைகள் உருவாவதாக ஒரு நுண்மையை பேசினார். தொடர்ந்து பேசுகையில் எழுந்து வந்து ஒரு நாற்காலியைக் கவிழ்த்துக் காட்டி ரூபம் – அரூபம் என்பதன் விவாதத்தை முடித்து வைத்தார்.

அவரது கவிதை ஒன்றில் `நில்லா` என்ற வார்த்தை நிலாவைக் குறிப்பிட்டு பதிவாகி இருந்தது. அதற்கும் ஒரு  சில பொருளை நண்பர்கள் ஏற்றிக் கூற முனைந்தபோது, தேவதச்சன் அவர்கள் எளிதாக, வழக்கம் போல இடவலமாக தலையை ஆட்டி, அவரது கரகரகுரலில், `இல்ல. அது பிரிண்டிங் மிஸ்டேக் ` என்று சொன்னது ஒரு அழகியல் உச்சம்.

எனக்கு இலக்கியம் போலவே சினிமாவின் மீதும் பிரியம் உண்டு. குப்ரிக் போன்ற ஒளியியல் மேதைகள் பயன்படுத்தும் மாண்டேஜ் நுணுக்கங்களை இவரது கவிதையில் நான் கவனித்து வியந்தேன். இதையே விருது விழாவில் வெற்றிமாறன் அவர்களும் ஜெ சொன்னதாக குறிப்பிட்டிருந்தார்.அழகிய மாண்டேஜ்க்கு உதாரணமாக கவிஞரின் `ரயில்` கவிதையைக் குறிப்பிடலாம். இந்த பார்வையில் இதை முழுக்க ரசிக்க முடிந்தவர்கள் பேறு பெற்றவர்கள்.

மற்றுமொரு வழக்கமான கேள்விக்கு வழக்கத்திற்கு மாற்றான பதில் ஒன்று கவிஞரிடமிருந்து பெறப்பட்டது. அந்த வழக்கமான கேள்வி, `நீங்கள் எந்த கவிதை மரபின் அல்லது கவிஞரின் தொடர்ச்சி?` என்பது; அந்த வழக்கத்திற்கு மாற்றான பதில், `காளமேக புலவர்` என்பது! கவி காளமேக புலவரின் சொற் புழக்கங்களோ, சிலேடைகளோ, வசைகளோ கவிஞரிடம் தொடர்ந்து வெளிப்படவில்லை எனினும், அவர் காளமேகப் புலவரிடமிருந்து வந்த அசாத்தியமான `ஜனநாயகப் பார்வை` தன்னை இழுத்ததாக குறிப்பிட்டார்.

இரண்டாம் நாள் ஞாயிறு காலையில் ஜெயமோகன் அவர்களுடன் சிரிப்பும், கேலியும், இலக்கியமுமாக ஒரு சிறு பாத யாத்திரை மேற்கொண்டு டீக்கடையை அடைந்தோம். சில ஃபோட்டோகளும் எடுத்துக்கொண்டோம். ஜெயமோகனின் அத்தகைய எளிமயினை எளிமையின் பிரம்மாண்டம் என்றே சொல்ல முடிகிறது.

மேலும் நண்பர்கள் கடிதங்களில் தெரிவித்தவாறு, ஜோ டி குருஸ் அவர்களின் நேரடியான பேச்சு, மீனைச் சுடச்சுட, காரசாரமாக பகிர்ந்து தின்றது போல இருந்தது. யுவன் சந்திரசேகர் அவர்கள் நண்பர் போல பழகியதும், லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர் போல பேசியதும், நாஞ்சில் அவர்களது எள்ளல் மொழியும் எழுத்தாளர் இப்படித்தான் இருப்பார்கள் என்ற மாய பிம்பத்தை உடைத்தது.

நான் முதல் முறை இங்கு கலந்து கொள்வதால் அரங்கசாமி, சுனீல், பிரசாத், கடலூர் சீனு, தனசேகர், ஷண்முகவேல் போன்ற சிலருடன் பேச நேரம் கிடைத்தது. நண்பர்களது கடிதங்களை இணையத்தில் பார்க்கையில் விழா முடிந்ததென குறிப்பிடுவதைக் கவனித்தேன். ஆனால், உண்மையில் இந்த இரண்டு நாட்கள் என் 2016 என்னும் விழாவின் தொடக்கம் மட்டுமே. விழா தொடங்கி இருக்கிறது எனக்கு!

அன்புடன்

`திருச்சியிலிருந்து` கமலக்கண்ணன்.

 

அன்புள்ள கமலக்கண்ணன்,

இந்த முறை நிறைய புதியவர்கள் வந்திருந்தனர். நான் அவர்களுடன் போதிய அளவு நேரம் செலவிடவில்லை என்னும் எண்ணம் என்னைத் தொடர்ந்தது. காரணம் வழக்கமான நண்பர்களுடன் இயல்பாக நேரம் சென்றது ஒன்று. இன்னொன்று விவாதங்கள் நெருக்கமாக நடந்தமை. அடுத்த சந்திப்புகளில் புதியவர்களுடன் மட்டுமான ஓர் உரையாடல் அரங்கை ஏற்படுசெய்யவேண்டும் என நினைக்கிறேன்.

தொடர்ந்து என் செயல்பாடுகள் புதியவர்களை மையமாக்கியே இருந்து வந்துள்ளன. அதுவே என் விசை. பலசமயம் நட்பு காரணமாக இதை மறந்துவிடுகிறேன். வெறும் நட்பு மட்டுமே கொண்டவர்களை நான் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. நான் கொண்டுள்ள செயலூக்கம், என் இலட்சியவாதம் ஆகியவற்றை எவ்வகையிலேனும் பகிர்ந்துகொள்ளாதவர்கள் என்னுடையவர்கள் அல்ல என்றே உணர்வேன். ஆகவே அந்தக்கனவுடன் வருபவர்களை நோக்கி மிகுந்த தாகத்திடன் திறந்திருக்கிறேன்

இலக்கியம், ஆன்மீகம் இரண்டும் ஒருவகை கனவுகள். அக்கனவுக்குள் இருந்து எளிதில் வெளியே விழுந்துவிடலாம். ஒருமுறை வெளியேறினால் மீண்டும் உள்ளே நுழைய முடியாது. தொடர்ச்சியாக அக்கனவை நண்பர்கள் இழப்பதைக் கண்டுகொண்டிருக்கிறேன். அது உருவாக்கிய சோர்வில் உங்கள் கடிதம் பெரிய ஊக்கமாக வந்து சேர்ந்தது. நன்றி

நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.

அன்புடன்

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 3

“குளிர் காற்றின் வழியாக திசை அறிந்து, கரையோரப் பறவைகளின் ஒலி வழியாக சூழலை உணர்ந்து ஏழு நாட்கள் அந்த நதியில் அவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் அவர் நன்கறிந்தார். “மானுடரே, என்னை கரையேற்றுங்கள். நான் வாழவேண்டும். நான் உணவுண்ணவேண்டும். காமம் கொண்டாடவேண்டும். இங்கு இருந்தாகவேண்டும்…” என நெஞ்சிலறைந்து கூவினார். மானுடரில்லாத காடுகளுக்குள் நுழைந்ததும் “நான் வாழ்வேன். தெய்வங்களே, எது நாணல்களை வளைய வைக்கிறதோ எது ஆலமரங்களை விரிய வைக்கிறதோ எது அசோகமரங்களை எழ வைக்கிறதோ அது என்னிலும் நிறைந்துள்ளது. நான் வாழ்வேன்” என்று கூவினார்.

துரியோதனன் எழுந்து அமர்ந்து சால்வையை சுற்றிக்கொண்டு கர்ணனை நோக்கினான். இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டு மீண்டன. கர்ணன் தன் இடக்கையால் மீசையை நீவியபடி உடலை அசைத்து எழுந்து அமர்ந்தான். சூதன் அவர்களின் அசைவுகளை நோக்கியதாக தெரியவில்லை. குடவீணையை பாம்பு விரலால் மீட்டி, அவ்விம்மலுக்கு ஏற்ப தன் குரலை செலுத்தி தனக்குள் என அக்கதையை அவன் பாடிக்கொண்டிருந்தான். விழிகளால் அவனுக்கு மிக அருகே வந்து அமர்ந்திருந்தாள் பானுமதி.

“அரசர்க்கு அரசே, அவையே, அன்றெல்லாம் கங்கையின் கீழ்க்கரைகளில் எங்கும் நாடுகள் என ஏதுமிருக்கவில்லை. பசுமை அலைபாயும் அடர்காடுகளும் நாணல் திரையிளகும் சதுப்புகளும் மட்டுமே இருந்தன. வேளிர் ஊர்களும் ஆயர் குடிகளும் அமையவில்லை. சதுப்புக் காடுகளுக்குள் திரட்டியுண்டு வாழும் அசுரர் குலங்களும் அடர் காடுகளுக்குள் வேட்டுண்டு வாழும் அரக்கர் குலங்களும் சிற்றூர்களை அமைத்து வாழ்ந்தன. அந்நாளில் மகாபலர் என்னும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த வாலி என்னும் மன்னன் தன் குடிப்படையினருக்கு நீரிலிறங்கி தக்கை மரங்களினூடாக சதுப்புகளில் செல்லும் கலையை கற்பித்தான். அவ்வழியே சென்று அசுரரின் பன்னிரண்டு சிறு குடிகளை வென்றான். கங்கையின் இரு கரைகளிலுமாக அவனுடைய அரக்கர் அரசு ஒன்று அமைந்தது.”

குலங்களை வென்று அவன் கொண்ட செல்வத்தால் முதன்மை அரசனானான். காட்டுக்குள் பெருமரங்களுக்கு மேலே தன் மிதக்கும் மாளிகையை அவன் அமைத்துக் கொண்டான். ஐந்து மனைவியரும் ஐம்பது சேடியருமாக அங்கே அவன் வாழ்ந்தான். ஆயினும் அவனால் அந்நிலப்பகுதியை முற்றாக ஆள இயலவில்லை. வென்ற நிலப்பகுதியிலிருந்து அவன் படைகள் கிளம்பிச்சென்ற மறுநாளே அங்கு குடிகள் கிளர்ந்தெழுந்தனர். திறை கொள்ளவோ வரி கொள்ளவோ இயலாது அப்பெருநிலம் அவனை சூழ்ந்து கிடப்பதை உச்சி மரக்கிளையில் அமர்ந்து நாற்திசையை நோக்கி அறிந்து அவன் நீள் மூச்சு விட்டான்.

கங்கையின் வடக்குக் கரைகளில் அரசுகள் எழுந்து கொண்டிருந்ததை அவன் அறிந்தான். அவர்கள் நீர்ப்பெருக்கில் கொக்குச்சிறகென பாய்விரித்த பெரும்படகுகளில் கீழ்நிலம் நோக்கி சென்றனர். அங்கு நீலநாக்குகள் கொண்ட பெருநீர்வெளி இருப்பதை பாடல்களினூடாக அறிந்தான். அப்படகுகளில் அள்ளக்குறையாத செல்வம் இருந்தது. ஆனால் அணுகவியலாத பெரும்படையும் அவற்றைச் சூழ்ந்து சென்றது. கரைமரங்களில் அமர்ந்து அப்படகுகளைக் கண்டு அவன் ஏங்கினான். குடிபெருகாது தன் கோல்நிலைக்காதென்று உணர்ந்தான். ஆனால் குடிபெருகுகையில் அவர்கள் ஊடிப்பிரிந்து புதுநிலம்நோக்கி சென்றதையே கண்டான். வளரும்தோறும் உடைந்தனர் அரக்கரும் அசுரரும். உடையும்தோறும் போரிட்டனர். போருக்குப்பின் மாறாப் பகைமையை மிச்சமாக்கிக் கொண்டனர். அரக்கரும் அசுரரும் தங்கள் குடில்களில் நெருப்புக்கு இணையாக வஞ்சத்தையும் பேணி வளர்த்தனர்.

குடிகள் பெருகி குலமென ஒருங்கி அரசனை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர். ஒவ்வொரு அரக்கர்குலத்திலும் தோளெழுந்த இளைஞர்கள் அனைவரும் அரசராக ஆகும் கனவு கொண்டிருந்தனர். அவர்களின் குடிநெறிகளின்படி அரசனை அறைகூவி போருக்கு அழைக்கும் உரிமை அத்தனை ஆண்களுக்கும் இருந்தது. அறைகூவும் இளைஞனை களத்தில் கொன்றால் ஒழிய அரசன் அந்நிலையில் நீடிக்க முடியாதென்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு நாளும் திறன் கொண்ட வீரர்களிடம் தோள்பொருதி போரிட்டு அவர்களை கொல்வதே வாலியின் வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் திரண்டுருண்ட உடல் உறுப்புகளுடன் இறந்து கிடக்கும் அவ்விளைஞனைக் கண்டு அவன் கண்ணீர் வடித்தான். தன் குலத்து முத்துகள் ஒவ்வொன்றும் உதிர்கின்றன என்று துணைவியரிடம் சொல்லி வருந்தினான். ஆனால் ஆவதொன்றுமில்லை என்றும் அவன் அறிந்திருந்தான்.

தன் குலத்துப் பெருவீரன் ஒருவனைக் கொன்று அவ்வெண்ணத்தால் வருந்தி அவன் கங்கைக் கரையின் பாறை ஒன்றில் அமர்ந்திருந்தபோது முதிய அந்தணர் ஒருவரை கண்டான். சென்றுகொண்டிருந்த சிறுபடகு துளைவிழுந்தமையால் கரையணைந்த அவர் அவனைக் கண்டு நடுங்கி கைகூப்பி “நான் அந்தணன். அரசத்தோற்றம் கண்டு உன்னை விஷ்ணுவென எண்ணி வணங்குகிறேன். எனக்கு தீங்கிழைக்காதே. நான் உனக்கு வாழ்த்துரைப்பேன். பிறருக்கு ஒருபோதும் தீங்கெண்ணாத அந்தணன் சொல் உன்னையும் உன் குலத்தையும் காக்குமென்று உணர்க!” என்றார்.

“என் நல்லூழால் தங்களை இன்று கண்டேன் அந்தணரே. என் தலை உங்கள் கால்புழுதியை சூடுகிறது” என்று சொல்லி வாலி அவரை வணங்கினான். “என் இல்லத்திற்கு வந்து அறச்சொல் உரைத்து என் காணிக்கைகளைப் பெற்று தாங்கள் மீளவேண்டுமென்று வேண்டுகிறேன்” என்றான். அவன் அளித்த கனியையும் தேனையும் பெற்றுக்கொண்டு அவ்வந்தணர் அவன் விருந்தினராக வந்தார். அவன் குடிமூத்தாருக்கு வணக்கத்தையும் மைந்தருக்கு வாழ்த்துக்களையும் அளித்து அவனுடன் அமர்ந்து உரையாடினார். “உத்தமரே, என் குடியினர் என்னை அரசனென ஏற்க நான் என்ன செய்யவேண்டும்?” என்று வாலி கேட்டான்.

“ஏன் இவர்கள் ஒவ்வொரு கணமும் என்னுடன் போரில் இருக்கிறார்கள்? நன்றேயாயினும் என் குலத்து இளையோர்கூட எனது ஆணைகளை ஏற்க ஏன் மறுக்கிறார்கள்?” என்றான் வாலி. “நீங்கள் அரக்கர் குலம். அரக்கர்கள் அடர்காட்டின் தனிப்புலிகள்” என்றார் கல்மாஷர் என்னும் அந்த அந்தணர். “அரக்கர் அரசாண்டதில்லையா?” என்றான் வாலி. “அரக்கர்களின் அரசுகளே பாரதவர்ஷத்தில் தொன்மையானவை என்று அறிக! தொல்லரக்கர் குலத்தலைவர்கள் அமைத்த பெருநகர்கள் இம்மண்ணின் அடியில் உறங்குகின்றன. அரக்கர்கோன் ராவணனும் அசுரர்தலைவர் மாவலியும் ஆண்ட புகழ் இன்றும் சூதர்நாவில் திகழ்கிறது” என்றார் கல்மாஷர். தென்னிலங்கை நகரின் ஒளிபுகழ் கேட்டு வாலி நீள்மூச்செறிந்தான்.

“நான் செய்யவேண்டியதென்ன அந்தணரே? எவர்க்காயினும் நல்லுரை சொல்வது உங்கள் குலக்கடன். அதை செய்யுங்கள்” என்றான் வாலி. “அரசே, இங்கிருப்பது அரசு அல்ல. குலத்தொகுதி. இங்கு திகழ்வது அரக்கர்களின் குடி நீதி. அது இணைந்து வாழும் விலங்குகளில் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டது. வல்லமை கொண்டதே தலைமையென்று அமைந்திருக்க வேண்டும் என்பது அது. அவ்வல்லமையை ஒவ்வொரு நாளும் உரைத்தறிய வேண்டும் என்பதும் அந்நெறிகளில் ஒன்றே. வேட்டைக்கூட்டமென நீங்கள் இங்கு வாழ்ந்திருக்கும் வரை அந்நெறியே உகந்ததாகும்” என்றார் அந்தணர்.

“ஆனால் அரசமைக்க அந்நெறி எவ்வகையிலும் உகந்ததல்ல. அரசுகள் குலங்கள் கரைவதன் வழியாகவே உருவாகின்றன என்றுணர்க!” என்றார் அந்தணர். “ஒருவருக்கொருவர் நிகரான மக்களால் அரசுகளை அமைக்க முடியாது. ஒன்றன் மேல் ஒன்றென ஏறியமரும் கற்களே கட்டடங்களாகின்றன. அதன் உச்சியிலமையும் கலக்கல்லே அரசன். அரசன் என்பவன் குடிகளால் தேர்வு செய்யப்பட்டவனாக இருக்கலாகாது. குடிகளால் எந்நிலையிலும் அவன் விலக்கப்படக்கூடியவனாகவும் இருக்கலாகாது.”

“குடிகள் மண்ணில் வாழ்கிறார்கள். அரசர்கள் விண்ணிலிருந்தே இறங்கி வருகிறார்கள். அரசன் இறப்பான் என்றால் அவன் முதல் மைந்தன் மட்டுமே அவன் கோலை ஏந்த வேண்டும். கை மாறி பிறர்கொள்ளா கோலே நிலையான அரசுகளை உருவாக்குகிறது என்று உணர்க!” என்றார் அந்தணர். “உத்தமரே, அத்தகைய நிலைமாறா கோல்கொள்ளும் உரிமையை நான் எங்ஙனம் அடைவேன்?” என்றான் வாலி. “விண்ணிலிருந்து அதற்கு ஆணை பெறுக!” என்றார் அந்தணர். “அவ்வாணையை நான் பெற என்ன செய்ய வேண்டும்?” என்றான் வாலி.

“அரக்கர்க்கரசே, வேதங்கள் விண்ணிலிருந்து இழிந்தவை. அவ்விண்ணகக் குரல்கள் உன்னை அரசன் என்று அரிமலரிட்டு அரியணையில் அமைக்குமென்றால் இக்குடிகளும் குலங்களும் உன்னை தங்கள் தலைவன் என ஏற்கும். மறுப்பு இலா கோல் கொண்டு நீ இதனை ஆள்வாய். இதுவே இதுவரை அரசமைத்த அனைவரும் சென்ற வழி. உன் முன்னோன் இலங்கையர்கோன் கொண்ட கோல்நின்றது செவியினிக்கும் சாமவேதத்தினாலேயாகும்.” அந்தணர் வணங்கி எழுந்து “வேதம் முற்றோதிய முனிவர் ஒருவரின் வாழ்த்து உன் குலத்திற்கு அமையவேண்டும். உன் அரியணையில் அவர் உன்னை வாழ்த்தி அமரச்செய்ய வேண்டும். அதற்காக காத்திரு. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உரைத்து விடை கொண்டார்.

வாலி ஒவ்வொரு நாளும் உளம் நிறைந்து ஏங்கி காத்திருந்தான். விண் ஒழிந்த வேதச் சொல்லுடன் ஒரு முனிவர் தன் நிலத்தில் வந்தணைவார் என்று உள்ளுணர்வொன்றால் அவன் அறிந்திருந்தான். பன்னிரு ஆண்டுகாலம் அவன் அவ்வண்ணம் காத்திருந்தபோது ஒரு நாள் காலையில் கங்கைக்கரையில் நின்றிருக்கையில் ஒழுக்குநீர் சுழித்து ஒரு பரிசல் அவனைநோக்கி வரக்கண்டான். சுழன்று அலையிலேறி அமைந்து வந்த பரிசலில் அமர்ந்து வந்த முனிவர் அவன் நிற்பதை உணர்ந்து “எவராயினும் என்னை காக்கும்படி நான் ஆணையிடுகிறேன். இது வேதச்சொல்” என்று கூவினார்.

கரையிலியிருந்த கொடியைப் பறித்து கொக்கியிட்டு வீசி அந்தப் பரிசலைப் பற்றி இழுத்து அருகே கொண்டு வந்தான் வாலி. நீரிலிறங்கி அணுகி தலை வணங்கி “உத்தமரே, தாங்கள் யார்?” என்றான். உரத்த குரலில் “நீ அரக்கன் என எண்ணுகிறேன். பண்பறியாக் குலமென்றாலும் பணிவறிந்திருக்கிறாய். என் பெயர் தீர்க்கதமஸ். விழியிழந்தவன் என எளிதாக எண்ணாதே. இப்புவியில் ஒரு சொல் மிச்சமின்றி ஒரு சந்தம் பிழையின்றி வேதச் சொல்லறிந்த சிலரில் ஒருவன் நான். என்னை வணங்கு. உனக்கு நலம் பயப்பேன்” என்றார் தீர்க்கதமஸ்.

“அருகிலிருந்த வாழையிலையை வெட்டி அதை மண்ணில் விரித்து அதன் மேல் தீர்க்கதமஸை இறங்கி நிற்கச்செய்து அவர் கால்களைக் கழுவி தன் தலையில் தெளித்துக் கொண்டு அவர் கையைப்பற்றி தன் மாளிகைக்கு அழைத்து வந்தான் வாலி” என தொடர்ந்தான் சூதன். “அவனிடம் அக்காட்டை, அவன் குலத்தை அவர் கேட்டு தெரிந்துகொண்டார். எனக்கு உணவுகொடு என்று கூவினார். கனிகளையும் கிழங்குகளையும் அவன் பறித்து அளிக்க அவற்றை உண்டபடியே அவர் நடந்தார்.”

கங்கையில் அவர் கிளம்பி இருபத்தாறுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. அந்தப் பரிசல் மூன்றுமுறை ஆற்றிடைக்குறையின் நாணல்களிலும் பாறைகளிலும் முட்டி அசைவற்று நின்றிருந்தது. உணவு நான்கு நாட்களிலேயே இல்லாதாகியது. மேலுமிருநாளில் குடிநீர் தீர்ந்தது. தன் மேலாடையை நீரிலிட்டு நனைத்து இழுத்து பிழிந்து பருகினார் தீர்க்கதமஸ். ஆடையை வலையாக்கி மீன்களைப் பிடித்து பச்சையாகவே உண்டார். கரைநாணல்களை பிடுங்கி அவற்றை பல்லால் கடித்து கூராக்கி சிறகடியோசை கேட்டு பறவைகளை வீழ்த்தி அலைகளில் கைவைத்து அவை அணுகுவதை அறிந்து ஆடைவீசிப் பற்றி பச்சை ஊனை உண்டு உயிர்பேணினார். கரையணைந்தபோது அவர் பசித்து வெறிகொண்டிருந்தாலும் உடலாற்றல் குறைந்திருக்கவில்லை.

விழியிழந்த மனிதரைப் பார்க்க அரக்கர் குடிகள் சூழ்ந்தன. “யார் இவர்?” என்றார் குலமூத்தார். “வேதச் சொல் முழுமையும் பயின்றவர். என் பன்னிரண்டு ஆண்டுகால தவம் கனிந்து இங்கு வந்துளார். வாழ்த்தி என்னை இம்மக்களின் தலைமையில் அமர்த்தும் பணி கொண்டவர்” என்றான் வாலி. குடிமூத்தார் ஐயத்துடன் அவரை பார்த்தனர். “தங்கள் வேதம் எதை இயற்றும்?” என்று கேட்டனர். தீர்க்கதமஸ் “எண்ணுபவற்றை” என்றார். “அது பறவைகளை உணவாக்கும் அம்பா? விதைகளை கனியாக்கும் மழையா? நெல்லை சோறாக்கும் எரியா?” என்றார் ஒருவர். “அது வெறும் எண்ணம். சொல்லென்று ஒருமுகம் காட்டுகிறது. விழைவென்றும் தேடலென்றும் விடையென்றும் ஆகி நிற்கிறது” என்றார்.

“வெறும் சொல்லா?” என்றாள் முதுமகள் ஒருத்தி. “மூத்தவரே, வெறும் சொல்லா உங்கள் ஆற்றல்?” தீர்க்கதமஸ் “இங்குள்ளவை எல்லாம் சொல்லே” என்றார். “அப்படியென்றால் சொல்லை உண்டு உயிர் வாழ்ந்திருக்கலாமே. எதற்காக ஊனுண்டீர்? இப்போது கனியுண்கிறீர்?” கூடி நின்றவர்கள் வாய் பொத்தி நகைத்தனர். சினந்து தரையை கைகளால் ஓங்கி அறைந்து “தீச்சொல்லிடுவேன். இக்காட்டை எரித்தழிப்பேன்” என்றார் தீர்க்கதமஸ். அஞ்சி அவர்கள் பின்னடைந்தனர். வாலி “விலகுங்கள்… முதியவரை விட்டு விலகிச்செல்லுங்கள்… இதோ உணவு வந்துகொண்டிருக்கிறது உத்தமரே” என்றான்.

ஆறாப்பசி கொண்டிருந்தார் தீர்க்கதமஸ். அவர்கள் அளித்த உணவனைத்தையும் இரு கைகளாலும் அள்ளி உண்டார். “சுவையறியா பெரும்பசி” என்றாள் மூதன்னை. “பசியே முதற்சுவை” என்றாள் இன்னொருத்தி. குழந்தைகள் அவரை அணுக அஞ்சி அப்பால் நின்றன. குலமகள்கள் கைகொண்டு வாய்பொத்தி அகலநின்று நோக்கினர். பெண்களின் மணத்தை தொலைவிலிருந்தே அறிந்து அவர்களை நோக்கி கையசைத்து தன் அருகே வரும்படி அழைத்தார். அவர்கள் அஞ்சி குடில்களுக்குள் ஒளிந்து கொள்ள சினந்து அருகிருந்த மரத்தை அறைந்து ஓலமிட்டார். “பெண்கள் அருகே வருக! இல்லையேல் தீச்சொல்லிடுவேன்” என்றார்.

வாலியின் முதல்துணைவி கரிணி அவனிடம் “இவர் வேதம் கற்றவர் போல் இல்லை. விழியிழந்தவர் எதை கற்க முடியும்? பெருவிழைவே உடல் என ஆனவர் போலிருக்கிறார். இது சிறிய காடு. இங்குள்ள வளங்களும் சிறியவை. இது அனலெழும் பெருங்கோடை. நம் மக்களுக்கே உணவில்லை. மைந்தர் பசிதாளாது சிற்றுயிர்களை வேட்டையாடி உண்கிறார்கள். முதியவர் சொல்லின்றி பசி பொறுக்கிறார்கள். இங்குள்ள சிற்றுலகை எரித்தழிக்கும் தழல்துளி போல் இருக்கிறார். இவரை அஞ்சி வெறுத்து எவரோ பரிசலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள். மீண்டும் இவரை பரிசலில் ஏற்றி கங்கையில் அனுப்புவோம். நமக்கு பழி சேராது. இவரை இத்தனை நாள் வைத்து இங்கு உணவளித்த நற்பயனே நம்மைச்சாரும்” என்றாள்.

வாலி “இல்லை, வேதம் முழுதும் அறிந்த ஒருவர் இங்கு வருவார் என்பது என் உள்ளுணர்வு. இவரே அவர் என்று காட்டுகிறது. இங்கிருப்பார். எவர் என்ன சொன்னாலும் சரி” என்றான். அவள் மேலும் ஏதோ சொல்லப்போக “என்னை எதிர்த்து சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லையும் இனி என் வாளாலேயே எதிர்கொள்வேன், அறிக” என்றான். அவள் அவனிடம் வந்திருந்த மாற்றத்தைக் கண்டு திகைத்து சொல்லவிந்தாள்.

மறுநாள் உச்சிப்பொழுதில் தொலைவில் பறவைப்பேரொலி கேட்டு குடிக்காவலன் ஒருவன் உச்சி மரக்கிளை ஏறி நோக்கி திகைத்து அலறி குறுமுழவை ஒலித்து செய்தி சொன்னான். தென்காற்றில் எழுந்த காட்டு நெருப்பு நூறு சிம்மங்கள் என உறுமியபடி பல்லாயிரம் செம்பருந்துகள் என சிறகுகளை அலைத்து மலையேறி வரக்கண்டார்கள். யானைக்கூட்டங்களைப்போல் கரும்புகை சுருண்டு எழுந்தது. பசுமரக்கூட்டங்களை நக்கி வளைத்து பொசுக்கி உண்டபடி அவர்களை நோக்கி வந்தது எரி. வாலி ஓடிச்சென்று பிறிதொரு மரத்தில் ஏறி நோக்கியபோது சதுப்பு நிலங்கள் அனல்வெளியாகக் கிடப்பதை கண்டான். காடு பறவைகள் பதற பொசுங்கிக் கொண்டிருந்தது.

இறங்கி ஓடிவந்து “கிளம்புங்கள்! அனைவரும் கிளம்புங்கள்!” என்று கூவினான். குழந்தைகளையும் எஞ்சிய உணவுக்கலங்களையும் பெண்கள் தூக்கிக் கொள்ள மீன்பிடிக்கும் கருவிகளையும் வேட்டைக் கருவிகளையும் ஆண்கள் எடுத்துக் கொள்ள அவர்கள் தோள்முட்டி கால்சிக்கி அங்குமிங்கும் ஓடியபோது “இவரை என்ன செய்வது?” என்றாள் கரிணி. “இவரையும் அழைத்துச் செல்வோம்” என்று சொல்லி அருகணைந்து “உத்தமரே, காட்டு நெருப்பு அணுகுகிறது. விலகிச் செல்வோம், வாருங்கள்” என்றான் வாலி.

விழியெனும் தசைத் துண்டுகளால் அவனை நோக்கியபின் “காட்டு நெருப்பா?” என்றார் தீர்க்கதமஸ். தன் வலக்கையைத் தூக்கி உரத்த குரலில் வேதத்தின் வருண மந்திரத்தை சொல்லலானார். அது தவளைக் குரலென ஒலிப்பதைக் கேட்டு திகைத்து தன் குடிமூத்தாரை நோக்கியபின் கைகூப்பி நின்றான் வாலி. குலமூத்தோர் “தவளைக்குரல் எழுப்புகிறார். இதைக் கேட்டு நிற்கிறாயா? மூடா, செல்! இன்னும் சற்று நேரத்தில் மூண்டெழும் நெருப்பு இங்கு வந்துவிடும். உன் எலும்புகளும் சாம்பலாகும்” என்று கூறினார்கள்.

அவர்களை திரும்பி நோக்காமல் கைகூப்பி கண் மூடி தீர்க்கதமஸ் அருகே நின்றிருந்தான் வாலி. தவளைக்குரல் மேலும் மேலும் விரைவு கொண்டது. விண்ணை நோக்கி அது மன்றாடியது, பின் ஆணையிட்டது. சற்று கழித்து அவரைச் சுற்றி மேலும் பல தவளைக்குரல்கள் கேட்பதை வாலி அறிந்தான். சிறிது நேரத்தில் காடெங்கும் பல்லாயிரம் கோடி தவளைகள் ஒற்றைப் பெருங்குரலில் விண்ணை நோக்கி “மழை! மழை! மழை!” என்று கூவத்தொடங்கின. கரும்பாறைகள் உருண்டிறங்குவது போல வடக்கிலிருந்து கார்முகில்கள் விண்ணை நிறைத்தன. இடியோசை ஒன்று எழுந்து தொலைவை அதிரச் செய்தது. மின்னல் இலைகள் அனைத்தையும் ஒளி பெறச்செய்து அணைந்தது.

தோல்பை என நீர் தேக்கி நின்ற வான்பரப்பை மின்னல் கிழித்துச் சென்றது. பல்லாயிரம் அருவிகளென மழை கொட்டத்தொடங்கியது. சற்று நேரத்தில் மறைந்து போயிருந்த அனைத்து ஓடைகளும் உயிர்கொண்டன. சருகுகளை அள்ளிச்சுழற்றியபடி அவை பாறைகளினூடாக வழிந்து சலசலத்து ஓடின. மலைச்சரிவுகளில் அருவிகள் இழியத்தொடங்கின. நிலமடிப்பின் ஆழத்தில் செந்நீர் வளைந்து விழுந்த காட்டாறுகள் சென்று கங்கையை அடைந்தன. புகைந்து அணைந்த காடு கரிநீரென வழிந்தது. உள்காடுகளுக்குள் ஓடிச் சென்றிருந்த குடியினர் திரும்பி வந்தனர். குடி மூத்தார் தலைக்கு மேல் கைகூப்பி கண்ணீர் விட்டபடி வந்து தீர்க்கதமஸின் கால்களை பணிந்தனர்.

“எந்தையே, முழுதுணர்ந்த மூத்தோரே, எங்களை பொறுத்தருளுங்கள். உங்களுக்கு அடிமை செய்கிறோம்” என்று வணங்கினர். “உணவு கொடுங்கள்! மேலும் உணவு கொடுங்கள்!” என்று தீர்க்கதமஸ் கூவினார். சில நாட்களுக்குள் அரக்கர் குலங்களும் அசுரர் குலங்களும் அவர் காலடியில் முழுமையாக பணிந்தனர். வேதச் சொல் உரைத்து பச்சை மரத்தை அவரால் எரியச் செய்ய முடியும் என்று அவர்கள் கண்டு கொண்டனர். கூர்கொண்ட சொல்லென்பது எரியும் ஒளியும் ஆகுமென அறிந்தனர்.

பெருகும் கங்கைக் கரையில் அமர்ந்து வேதத்தால் மீன் பெருகச் செய்தார் தீர்க்கதமஸ். காய்ப்பு மறந்த பாழ்மரத்தை கிளை தாழ கனி பொலியச் செய்தார். ஒவ்வொரு நாளும் அரக்கர் குடியினரும் அசுரர் குடியினரும் அவரை தேனும் தினையும் கனியும் கிழங்கும் ஊனும் மீனுமாக தேடி வந்தனர். தாள் பணிந்து தங்கள் மைந்தரை அவர் காலடியில் வைத்து வாழ்த்து கொண்டு மீண்டனர்.

அவரை தன் குலகுருவாக அமர்த்தினார் வாலி. கங்கை நீரும் அரிமலரும் இட்டு அவரை கல் அரியணையில் அமர்த்தி அரக்கர்களுக்கும் அசுரர்களுக்கும் அரசனாக்கினார் தீர்க்கதமஸ். இளம் பனைக்குருத்தால் செய்த முடியை அவர் தலையில் அணிவித்தார். முதுபனை ஓலையில் செய்த வெண்குடையால் அவருக்கு அணி செய்தார். மருத மரக்கிளையை செங்கோலென ஏந்தி அமர்ந்து அவர் குடி புரந்தார். வேதத்தால் வாழ்த்தப்பட்டவர் என்னும் பொருளில் தன்னை சுருதசேனர் என்று அழைத்துக்கொண்டார். தன் முதல்துணைவி கரிணியின் பெயரை சுதேஷ்ணை என்று மாற்றினார்.

ஆனால் அவரை அப்போதும் தங்களுக்கு நிகரான அரக்கர்தலைவன் என்றே அசுரரும் பிறரும் எண்ணினர். அவர் முடிசூடியதைப்போல் தாங்களும் சூட விழைந்தனர். அசுரகுடிகளும் அரக்கர் குடிகளும் தீர்க்கதமஸை தங்களுக்கும் உரியவர் என உரிமைகோரின. படை கொண்டு வந்து அவரை கவர்ந்து சென்றால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. குடிமன்றுகளில் மூத்தவர் எழுந்து இங்கு “வேதமெய்யறிந்த முனிவர் அவர். ஆனால் அவர் நம் நிலத்துக்கு வந்தபோது முதலில் கண்டவர் வாலி என்பதால் அவருக்கு முற்றுரிமை கொண்டவராக ஆவாரா என்ன? விண்ணிறங்கிய வேதம் அனைவருக்கும் உரியது. அவர் எங்களுக்கும் முறை கொண்டவரே” என்று கூவினர்.

“இங்கு எவருக்கும் அவர் குருதி உறவில்லை. அந்தணர் நம்முடன் அவர்களின் அழியாச்சொல்லாலேயே தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்றார் குலப்பூசகர் ஒருவர். வாலி “அவர் என்னையே அரசன் என்று அரியிட்டு அமரச்செய்தார்” என்றார். “ஆம், ஆனால் பிறரை அப்படி வாழ்த்தியமரச் செய்ய அவர் மறுக்கவுமில்லை. அவர் இங்கு அவைக்கு வரட்டும். எங்களில் எவரையெல்லாம் அவர் அரசராக்குவார் என்று அவரிடமே கேட்போம்.” சுதேஷ்ணையிடம் “உணவும் காமப்பெண்ணும் அளிக்கும் எவரையும் இவ்விழியிழந்த முதியவர் அரசராக்குவார் என்பதில் ஐயமில்லை. இவரை அவர்கள் சந்திப்பதையே தவிர்க்கவேண்டும்” என்றார்.

ஆனால் நாளும் அக்கோரிக்கை வளர்ந்து வருவதை வாலி கண்டார். குழம்பி அலைந்துகொண்டிருந்தபோது ஒருநாள் முன்பு வருங்குறி உரைத்த அதே அந்தணரை கங்கை வழிப்பாதையில் கண்டார். பணிந்து அவரை அழைத்து வந்து “அந்தணரே, தங்கள் சொல் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவ்வண்ணமொரு இக்கட்டும் வந்தது. நான் செய்யத் தக்கதென்ன?” என்றார். “உன் குடியினர் சொல்வதே சரி. குருதி முறையன்றி பிறிதெதுவும் மாறாததல்ல” என்றார் அந்தணர். “என்ன செய்வேன்?” என்றார் வாலி.

“குருதிமுறை உருவாகட்டும்” என்று அந்தணர் சொன்னார். “உன் மனைவியரின் வயிற்றில் அவரது மைந்தர் பிறக்கட்டும். அதன்பின் இவ்வரசும் குடிகளும் அம்மைந்தருடையவை அல்ல என்று அவர்கள் மறுக்கவியலாது. அவர் சொல் நிற்கும் இடமெல்லாம் உன் மைந்தருக்கும் உரியதாகும்.” வாலி “ஆம், அதைச்செய்கிறேன். அரக்கர் குலத்திற்கு அத்தகைய உறவுகள் அயலவையும் அல்ல” என்றார். அந்தணர் “பெண்கள் விரும்பி அவரை ஏற்றாக வேண்டும். காமத்தில் மகிழ்ந்து கருவுறும் மைந்தரே முற்றிலும் தகுதிகொண்டவர்கள் என்றுணர்க!” என்றார். வாலி தலை வணங்கி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

சேகர் பதிப்பகம்

$
0
0

1

 

வெள்ளம் முடிந்தபின்னர் பதிப்பகத்துறையில் உள்ள நண்பர்களிடம் பேசினேன்.  எவருக்கெல்லாம் இழப்பு இருக்கும் என்று கேட்டேன். கிழக்கு பதிப்பகத்திற்கு இழப்பு உண்டு, ஆனால் காப்பீடு செய்திருந்தனர். தமிழினிக்கு இழப்பு இல்லை. தரைத்தளத்தில் அலுவலகம், கிடங்கு இருக்கவில்லை. சில பெரிய பதிப்பாளர்களுக்கு இழப்பு உண்டு, ஆனால் சில லட்சம் இழப்பு என்பது அவர்களால் தாளக்கூடியதுதான். மேலும் அவர்கள் வெறும் வணிகர்கள். வணிகநூல்களை வெளியிடுபவர்கள். ஆகவே அது வணிகவிவகாரம் மட்டுமே

உண்மையான அர்ப்பணிப்புடன் அறிவார்ந்த நூல்களை வெளியிட்டு காப்பீடு செய்யாமையால் இழப்புகளைச் சந்தித்தது சேகர் பதிப்பகம் என்றார்கள். முக்கியமான நூல்களை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்ப்பண்பாட்டாய்வின் முக்கியமான முன்னோடியான பி.எ.சாமியின் நூல்கள். தமிழாய்வுநூல்களே அதிகம். [எனக்கு ஒவ்வாத தமிழறிஞர் நூல்களே அதிகம் என்பது வேறுவிஷயம்] அவை சாக்கடை நீரில் அழிந்து பதிப்பாளரையும் அழிவுக்குக் கொண்டுசென்றன

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் பல உள்ளன. தமிழ்ப்பண்பாட்டு நடவடிக்கைக்காக பதிப்பகம் நடத்திய ஒருவர் நஷ்டமடையாமல் காக்கவேண்டியது தமிழ் மேல் அக்கறை கொண்டிருக்கும் அனைவருடைய கடமையாகும். குறிப்பாக வெளிநாட்டுவாழ் தமிழர்களும் அமைப்புகளும். சேகர் பதிப்பகத்தின் எஞ்சிய நூல்களை வாங்குவது அதற்குரிய சிறந்த வழியாக அமையும்

ஆனால் பதிப்பாளருக்கு உதவவேண்டும் என்றால் அதை நேரடியாக அவரிடமிருந்தே முழுவிலைகொடுத்தே வாங்கவேண்டும். விற்பனைத்தளங்கள், விற்பனைக்கடைகள் வழியாக வாங்கினால் 40 சதவீத பணம் அவர்களுக்கே சென்றுவிடும். பதிப்பாளருக்கு மிகமெல்லிய லாபம் மட்டுமே எஞ்சும்.

 

நல்லது நடக்கட்டும்.

 

சேகர் பதிப்பகம் நூல்களின் பட்டியல்

 

சேகர் பதிப்பகம் நூல்களின் பட்டியல் 2

 

தொடர்பு எண் : 914465383000
முகவரி : 66, பெரியார் தெரு
எம்.ஜி.ஆர் நகர்
சென்னை600078
இந்தியா



தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விழா 2015 கடிதங்கள் 7

$
0
0

1[கவிஞர் இசை]

அன்புள்ள ஜெ ,

நீங்கள் நண்பர் தூயனுக்கு எழுதிய பதிலில் சொன்னது போல ஒரு விழா முடிந்ததும் ஒருவிதமான சோர்வு சூழ்ந்து கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் அதில் நடந்த முக்கியமான விவாதங்கள் சந்திப்புகளை ஆசைப் போடுவதின் மூலமே நம்மை மீட்டுக் கொள்ளவும் முடிகிறது. முக்கியமாக புதியதாக வருகை தரும் நண்பர்களின் ஆர்வமும் பங்களிப்பும் உற்சாகம் தருவதாக உள்ளது.(பழைய நண்பர்கள் சிலர் பல் வேறு காரணங்களால் வராமல் இருக்க  நேர்வது சற்று ஏமாற்றம் அளித்தாலும்). புதியவர்கள் பெரும்பாலும் 30க்குள் இருப்பவர்கள் அநேகமாக எல்லோருமே கடிதங்கள் எழுதுவது காண திருப்தியாக இருக்கிறது.நீங்கள் சொல்வது போல இடைவிடாமல் அவர்கள் அந்த உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.நிறைய எழுத்தாளர்களை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
   ஒரு விஷயம் கவனித்தேன் . நிறைய நண்பர்களுக்கு புதியதாக வெளிவரும் நூல்களில் எதைத் தெரிவு செய்து வாசிப்பது? அது எங்கே கிடைக்கும்? மற்றும் எல்லாவற்றையும் வாங்குவது சாத்தியமா ? என்ற கவலையும் உள்ளது. தெரிவுகள் குறித்து கிருஷ்ணன் கூறியதும் உண்மை. ஏதோ இங்கே கோவையில் எங்களுக்குத் த்யாகு புத்தக நிலையம் இருப்பது ஒரு வரப்பிரசாதம். கோவையிலும், அருகிலும் இருக்கும் நண்பர்களை தியாகு நூல் நிலையத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.
          அப்புறம் நண்பர் முருகேஷ்  // அங்கே வேலைசெய்வதற்கு ஆளில்லை என்று தோன்றியது. உங்கள் நண்பர் ஆடிட்டர் சுரேஷ் பலரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது.// என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியல்ல.ஏதோ விளையாட்டாக நடந்த உரையாடலிலிருந்து அவருக்கு அப்படி ஒரு சித்திரம் கிடைத்திருக்கும் என்று  நினைக்கிறேன். உண்மையில்அந்த இரண்டு நாட்களிலுமே எல்லா நண்பர்களும் மிக உற்சாகத்தோடு போட்டி போட்டிக் கொண்டுதான் எல்லா வேலைகளுக்கும் முன்வந்தார்கள்.பரிமாறும் இடத்தில் நிறைய பேர் இருந்தால் குழப்பம் அதிகமாகும் என்பதால் பலரை வற்புறுத்தித் தடுக்கத்தான்  வேண்டி இருந்தது. ஊர் கூடித்தான்  தேரிழுத்தோம். திருவிழா களைகட்டியது.முருகேஷும் கூச்சப்படாமல் அடுத்த முறை வடம் பிடிக்க வரலாம்.
சுரேஷ் கோவை.
விழாவில் ஷ்ண்முகவேலை கௌரவித்தது  மிகச்சிறந்த விஷயம். அற்புதமான ஒரு மனிதர். நான் அவரிடம் பேசப்போனேன். பேசவே கூச்சப்பட்டார். ஆனால் கைகளிலே கலை இருக்கிறது. அவர் இல்லாவிட்டால் வெண்முரசை என்னைப்போன்றவர்கள் கண்களால் பார்த்திருக்கமாட்டோம். கூச்சப்பட்டபடியே அவர் மேடைக்கு வந்தது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது. வாசகர்களே அவரைக் கௌரவித்ததும் மிகநல்ல விஷயம்
செல்வகுமார்
1
அன்புள்ள ஜெ சார்
விழாவைப்பற்றிய பதிவுகளை வாசிக்கும்போது அங்கு வந்து மேலும் சிலநாட்கள் உடன் தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. நான் 27 ஆம்தேதி மட்டும்தான் வரமுடிந்தது. அன்று நிகழ்ந்த ஒரே விவாதத்தில்தான் கலந்துகொண்டேன். அதில் யுவன் சந்திரசேகரும் கே.என்.செந்திலும் இசையும் சுரேஷும் மிகச்சிறப்பாகப் பேசினார்கள். பல வகையான சிந்தனைகள் ஒரே நாளில் வந்துசென்றன. விவாதம் என்பது என்ன பயனை அளிக்கும் என்று புரிந்தது
நாஞ்சில்நாடனையும் இசையையும் சந்தித்துப்பேசினேன். மேலும் பலரை சந்திக்க ஆசைப்பட்டேன். வழக்கம்போல கூச்சத்தால் தவிர்த்துவிட்டேன். யாராவது அறிமுகம்செய்துவைத்தால் பேசலாம் என்று நினைத்தேன். அப்படி நினைக்கக்கூடாது என்று தெரியும். ஆனாலும் வேறுவழியில்லை. அற்புதமான சந்திப்புகள். அளவளாவல்கள். இத்தகைய இலக்கியச்சந்திப்புகள் இன்றைக்கு கோவையில் இந்த விழாவில் மட்டுமே நடக்கின்றன என நினைக்கிறேன்
நான் ஹைதராபாதில் இருக்கிறேன். விடுமுறைக்கு வந்தபோதுதான் இங்கே வரவேண்டுமென்று தோன்றியது. மிகச்சிறப்பான விழாவாக இருந்தது. அருமையான சந்திப்புகள் அமைந்தன. ஆனால் பெரும்பாலானவற்றைப்புரிந்துகொள்ளமுடியாததும் கஷ்டமாகவே இருந்தது. தேவதச்சனின் கவிதைகள் அங்கே வாசிக்கப்பட்டு அர்த்தம் சொன்னபோதுதான் எனக்குப்புரிந்தன
அனைவருக்கும் நன்றி
கார்த்திக் எம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 4

அஸ்தினபுரியின் அவையில் துரியோதனன் துணைவி பானுமதியுடன் கேட்டிருக்க கர்ணன் அமைதியிழந்து அமர்ந்திருக்க சூதன் தன் கதையை தொடர்ந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த இசைத்துணைவரின் கட்டைத்தாளம் அவன் கால்களை அசையச் செய்தது. உள்ளத்தை அடுக்கியது. சொற்களுக்கு குளம்புகளை அளித்தது.

“அரசே, அரக்கர்குலத்தில் திறல்மிக்க வீரனின் கருவை பெண்கள் தேடி அடையும் குலமுறை முன்பே இருந்தது. ஆகவே அந்தணர் சொல் கேட்டு வாலி மகிழ்ந்து தன் மாளிகைக்கு மீண்டதுமே சுதேஷ்ணையையும் பிறரையும் அழைத்து தீர்க்கதமஸிடமிருந்து தனக்கு குழந்தைகளை பெற்றுத்தரும்படி ஆணையிட்டார்” சூதன் சொன்னான். “அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். சிந்தை உறைய உடல் நிலைக்க விழிகளாக மாறி நின்றனர்.”

அவர்களுள் வாழ்ந்த அன்னையர் அவரது நிகரற்ற சொல்லாற்றலால் உளம் கவரப்பட்டிருந்தனர். அவர் சொல்லில் மழை பெய்தது, வெயில் எழுந்தது. பறவைகள் வானுக்கு அப்பால் இருந்து வந்தணைந்தன. நீருக்கு வளம் சேர்த்து சென்று மறைந்தன. மத வேழங்கள் அவர் முன் தலை தாழ்த்தி துதிக்கை சுருட்டி பணிந்தன. புவி எங்கும் நிறைந்து ஆளும் புவிக்கு அப்பாற்பட்ட பிறிதொன்றின் துளியென அவர் தோன்றினார். அவரை வயிற்றில் நிறைக்க அவர்களின் கனவாழம் விழைந்தது.

ஆனால் அவர்களுள் வாழ்ந்த கன்னியர் அவர் தோற்றத்தை வெறுத்தனர். கரிய உடலில் பொலிக்காளையின் மணம் வீசியது. தாடி அசைய எந்நேரமும் உணவுண்டபடி கைகளால் நிலத்தை அறைந்து கூச்சலிட்டபடி இருந்த கிழவரை அவர்கள் கண்டதுமே முகம்சுளித்து அகன்றனர். அவரிடம் எப்போதுமிருந்த காமவிழைவை எண்ணி உளம் கூசினர். அது அவர்களை புழுக்களென்றாக்கியது. அவர்களுக்குள் வாழ்ந்த தெய்வங்கள் அவரை நோக்கியதுமே சினம் கொண்டு பன்னிரு தடக்கைகளிலும் படைக்கலங்களுடன் எழுந்தன.

வாலியின் பட்டத்து அரசி சுதேஷ்ணை தீர்க்கதமஸை கண்ட முதற்கணமே உளம் திடுக்கிட்டு அந்த உணர்வழியாமலேயே இருந்தாள். விழியின்மை போல் பெண்களை அஞ்சச் செய்வது பிறிதில்லை. ஆணின் விழிமுன்னரே தன் உடலையும் உள்ளத்தையும் வைக்கின்றனர் பெண்கள். விழிகளூடாகவே ஆணின் அகத்தை அறிகின்றனர். விழி மூடிய முகத்தில் முற்றிலும் அகம் மறைந்தபோது உடல் வெளிப்படுத்திய வெறுங்காமத்தால் முழுப்புகொண்டவராக இருந்தார் தீர்க்கதமஸ்.

பெண்களுக்குள் உறைந்த காட்டு விலங்குகள் தீர்க்கதமஸை ஒரு கணமும் மறவாதிருந்தன. அவரது சிறிய அசைவைக்கூட அவர்களின் தோல்பரப்பே அறிந்தது. தனியறைக்குள்ளும் அவரது விழியின்மையின் நோக்கை தங்கள் உடலில் அவர்கள் உணர்ந்தனர். கனவுகளில் எரியும் கண்களுடன் வந்து இரையுண்ணும் சிம்மம் போல உறுமியபடி அவர்களை அவர் புணர்ந்தார். விழித்தெழுந்து நெஞ்சழுத்தி அவர்கள் தங்களை எண்ணியே வருந்தி தலையில் அறைந்து விழிநீர் சோர்ந்தனர்.

தீர்க்கதமஸ் காமத்தால் பசியால் நிறைந்திருந்தார். ஆணவத்தாலும் சினத்தாலும் எரிந்து கொண்டிருந்தார். மண் நிறைத்து விண் நோக்கி எழும் விழைவென்றே தெரிந்தார். அவர் வந்த ஓரிரு நாட்களுக்குள்ளேயே அக்குலத்தில் ஆண்கள் அனைவரிலும் அவரது விழைவு பற்றிக் கொண்டது. காமத்தில் தங்கள் ஆண்கள் அனைவரும் அவரென ஆவதை பெண்கள் எங்கோ ஒளிந்து நோக்கிய விழியொன்றினால் அறிந்து கொண்டனர். தங்களை அறியும் பெண்ணுடலுக்குள் அவருக்கான விழைவிருப்பதை ஆண்களும் அறிந்திருந்தனர். தொலைவில் மறைந்து நின்று அவரது கரிய பேருடலை நோக்கி இளைஞர் திகைத்தனர். இருப்பும் விழைவும் ஒன்றான தசைச் சிற்பம். விழைவு பல்லாயிரம் விழிகளாக பல்லாயிரம் கைகளாக மாறுவதை கண்டனர்.

கண்ணீருடன் மீண்டு வந்த சுதேஷ்ணை கைகூப்பி “எங்களை இழிவுக்கு தள்ளவேண்டாம். தன் கருவை வெறுக்கும் பெண்ணைப்போல துயர்கொள்பவள் பிறிதில்லை” என்றாள். வாலி சினந்து “என் குலத்திற்கு மூத்தவள் நீ. நமது குருதி இக்காடுகளை ஆளவேண்டுமென்றால் நாம் இயற்ற வேண்டியது ஒன்றே. வேதம் கனிந்த இம்முனிவரின் குருதி நம் குடிமகள்களின் வயிறுகளில் முளைக்க வேண்டும். சென்று அம்முனிவரிடம் அமைந்து அவரது கருவை பெற்று வருக! இது என்குரலென எழும் மூதாதையர் ஆணை” என்றார். சுதேஷ்ணை அக்காட்சியை அகக்கண்ணால் கண்டதுமே உளம்கூசி உடல் சிலிர்த்து “என்னால் அது இயலாது” என்றாள். “ஏனெனில் நான் அவரை அருவருக்கிறேன்.”

துணைவியை விரும்புபவர்கள் அவள் உள்ளத்தை ஒவ்வொரு கணமும் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வொரு சொல்லிலேயே பாறைப்பிளவுக்குள் பாம்பின் கண்களைப்போல் அவளது காமத்தைக் கண்டடைந்த வாலி “நீ அவர் மேல் காமம் கொண்டிருக்கிறாய், அது நன்று. அவரது குருதியில் பிறந்த மைந்தன் எனக்கு வேண்டும்” என்றார். அவர் அறிந்த அக்காமத்தை அவள் அறிந்திருக்கவில்லை என்பதனால் அவள் நெஞ்சுலைந்து “இல்லை அரசே, எளியவளாகிய என் மேல் பழி தூற்றாதீர்கள். அவரை எண்ணினாலே என் உடல் நடுங்குகிறது. அவரை மானுடன் என்று எண்ணக் கூடவில்லை. விழியின்மை அவரை மண்ணுக்கு அடியிலிருந்து எழுந்து வரும் இருட்தெய்வம் என ஆக்கியிருக்கிறது. அவருடன் என்னால் அணைய இயலாது” என்றாள்.

“இது என் ஆணை” என்றபின் அவளை திரும்பி நோக்காது எழுந்து சென்று மறைந்தார் வாலி. விம்மும் நெஞ்சை அழுத்தி கண்ணீர் விட்டபடி அவள் இருளில் தனித்திருந்தாள். மறுநாள் அரசனின் ஆணை பெற்ற முதுசேடி வந்து சுதேஷ்ணையிடம் “முனிவருடன் சேர உன்னை அனுப்பும்படி எனக்கு ஆணை அரசி. உன்னை மலரும் நறுமணமும் அணிவித்து அவரது மஞ்சத்து அறைக்கு கொண்டுசெல்ல வந்தேன்” என்றாள். சுதேஷ்ணை ஏங்கி அழுதபடி “அன்னையே, இன்றிரவு இதை செய்வேனென்றால் ஒவ்வொரு நாளும் இதை எண்ணி நாணுவேன். பெண்ணென பிறந்துவிட்டாலே கருவறை சுமக்கும் ஊன்தேர்தான் நான் என்றாகிவிடுமா? இரவலனின் திருவோடு போல் இதை ஏந்தி அலைவதன் இழிவு என்னை எரியச் செய்கிறது” என்றாள்.

“குலமகளென நம் குடியின் ஆணையையும் துணைவியென உன் கணவனின் ஆணையையும் அன்றி பிறிதெதையும் எண்ண நீ கடமைப்பட்டவள் அல்ல. விழிதொடும் எல்லையை தெய்வங்கள் வகுத்தளிக்கின்றன. உன் உளம் தொடும் எல்லையை நீயே வகுத்துக் கொண்டால் அறங்கள் எளிதாகின்றன. விரிந்து பரவுபவர் எங்கும் நிலைகொள்ள முடியாதவர். எத்திசையும் செல்ல முடியாதவர். அரசி, இன்றிரவு இது உன் கடமை” என்றாள் முதுமகள்.

ஏழு முதுமகள்கள் அவளை சிற்றோடையின் மலர்மிதந்த நீரில் ஆட்டினர். தலையில் பன்னிரு வகை மலர்களைக் கொண்டு பின்னல் அமைத்தனர். நறுமணம் வீசும் கோரோசனையையும் புனுகையும் ஜவ்வாதையும் அவள் உடலெங்கும் பூசினார்கள். இரவு ஒலிகொண்டு நீர்மணம்கொண்டு தொலைவின் குளிர்கொண்டு இருள் எடைகொண்டு சூழ்கையில் தன் அருகே எரிந்த நெய் விளக்கின் ஒளியில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் சுதேஷ்ணை. “நாங்கள் சென்று முனிவரின் அறையை சித்தப்படுத்திவிட்டு வருகிறோம்” என்று முதுமகள்கள் சென்றதும் நீள்மூச்சுடன் எழுந்து தன் அறை வாயிலில் கூடி நின்ற சேடியரை நோக்கினாள். அவள் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது.

16

“இன்று சென்றால் நான் நாளை மீள மாட்டேன் என்று எண்ணுகிறேன் தோழியரே” என்றாள். “அவரிடம் என்னை அழைத்துச் செல்வதற்கு குறுங்காட்டின் வகிடெனச்செல்லும் நீண்ட பாதை ஒன்றே உள்ளது. பிறவிழி படாது இருளிலேயே அதை கடக்க வேண்டும். எனக்கு மாற்றாக நானென அங்கு செல்ல உங்களில் எவரேனும் உள்ளீரோ?” ஒரு கணம் அக்கன்னியர் கண்களில் எரிந்து அணைந்த அனலைக்கண்டு அவள் நெஞ்சு நடுங்கியது. எவரும் எதுவும் சொல்லாமல் விழிநட்டு நின்றிருந்தனர். மூக்குத்தடம் வியர்க்க ஒருத்தி மூச்சுவிட்ட ஒலி மட்டும் கேட்டது.

“சபரி, உன்னால் இயலுமா?” என்று அவள் தன் உடலை ஒத்த தோற்றம் கொண்ட சேடியிடம் கேட்டாள். அவளோ பின்னால் சென்று சுவரை ஒட்டி நின்று “இல்லை அரசி. நான் அஞ்சுகிறேன்” என்றாள். அவள் இதழ்கள் சொன்னதை விழி சொல்லவில்லை. சுதேஷ்ணை “நீ செல்க!” என்றாள். அவள் தலை குனிந்து “ஆணை” என்றபோது விழிநீர் உருண்டு மூக்கு நுனியில் சொட்டியது. மிக விரைவாக அவளை மலர்சூட்டி மணம் பூசி அணிசெய்து மலர்த்தாலமும் கனிகளும் ஏந்தி பிற இரு சேடியருடன் தீர்க்கதமஸின் மஞ்சத்தறை நோக்கி அனுப்பி வைத்தாள் சுதேஷ்ணை.

அன்றிரவு முழுக்க சேடியர் சூழ தன் அறைக்குள் துயிலாது காத்திருந்தாள். சேடியரும் துயிலவில்லை என்பது அவ்வப்போது எழுந்த நெடுமூச்சுகளிலிருந்து தெரிந்தது. எதை எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்றெண்ணியபோது அவள் உடல் மெய்ப்பு கொண்டது. கருமுதிராத கன்றை பசுவின் வயிறு கிழித்து எடுப்பதுபோல் மறுநாள் காலையில் கதிரவன் எழக்கண்டாள். கருக்கிருட்டிலேயே திரும்பி வந்த சபரி சேடி ஒருத்தியின் துணையுடன் சென்று கங்கையில் நீராடி மாற்றாடை அணிந்து தன் குடிலில் தனித்திருந்தாள். அவளை தன்னிடம் அழைத்து வரும்படி சுதேஷ்ணை சொன்னாள். வந்தவள் இரையுண்ட மலைப்பாம்பென அமைதி கொண்டிருப்பதை உடல் அசைவுகளில் உணர்ந்தாள்.

மதம்கொண்ட கண்களைத் தாழ்த்தி கை கூப்பி தலைகுனிந்திருந்தவளிடம் “பொறுத்தருள் தோழி. என் அரசுக்கென இதை நீ செய்தாய். என்னால் இயலவில்லை. அவரை நான் மானுடன் என்று எண்ணவில்லை” என்றாள். “மதவேழம் சிறுசுனையை என” என்றாள் பின்னால் நின்ற முதுசேடி. அப்போது ஒரு கணம் அனலொன்று அவ்வறையை கடந்துசென்றது போல் சபரியின் முகத்தில் தோன்றிய செம்மையைக் கண்டு சுதேஷ்ணை உளம் அதிர்ந்தாள். பிறிதொரு சொல் எடுக்காமல் செல்க என்று கைகாட்டினாள்.

மறுவாரமும் அவள் அவரிடம் செல்ல வேண்டுமென்று வாலியின் ஆணை வந்தது. அம்முறை பிறிதொரு சேடியை அவள் அனுப்பினாள். திரும்பி வந்த அவளும் சொல்லிழந்து தன்னுள் நிறைந்து தனிமை நாடுபவளாக ஆனாள். அவர்களைக் கண்ட பிற சேடியர் ஒவ்வொருவரும் தீர்க்கதமஸிடம் செல்வதற்கு விழிகளால் முந்தினர். அவர்களின் விழைவு சுதேஷ்ணையை மேலும் மேலும் அகம் பதறச்செய்தது. பன்னிரண்டு சேடியர் மாறி மாறி தீர்க்கதமஸுடன் இரவுறங்கினர்.

தன் துணைவியர் கருவுறாது சேடியர் கருவுற்றதை வாலி அறிந்தார். குலப்பூசகரை அழைத்து குறிநாடச் சொன்னார். அவர்கள் பன்னிரு அன்னையர் ஆலயத்தின் முன் அப்பெண்களை அமரவைத்து மலரீடும் ஒளியீடும் உணவீடும் நீரீடும் செய்து பூசெய் முறைமை முடித்தனர். மூதன்னை வெறியாடி பூண்டு எழுந்த பூசகர் தன் நீள்வேலை நிலத்தில் அறைந்து துள்ளிக் குதித்துச் சுழன்று பெருங்குரலெடுத்து கூவினர். “பன்னிரு பெருவைதிகர் கருவுற்ற மணிவயிறுகளுக்கு வணக்கம்! பன்னிரு வைதிகக் குலங்களை எழுப்பிய விதைநிலமாயிற்று எம் குலம்! வேதம் உரைத்து இவர்கள் வெல்லும் அவைகளில், இவர்களின் சொல்எழுந்து நிற்கும் மன்றுகளில், இவர்கள் விண்ணேறிச் செல்லும் தடங்களில் எழும் ஆலயங்களில் நம் குலப்பெயர் என்றும் நிலை பெறுவதாகுக! ஓம், அவ்வாறே ஆகுக!” கூடி நின்ற குலத்தார் மெய்விதிர்ப்புற்று கண்ணீர் துளித்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கூவினர்.

அன்றிரவு சுதேஷ்ணை கண்ணீருடன் தனித்து தன் அறைக்கு வந்து கதவை மூடி இருளில் உடல் குறுக்கி அமர்ந்தாள். சினந்து அவள் அறைக்கு வந்த வாலி கதவை ஓங்கி அறைந்து “இழிமகளே, திற! அறையை திற இப்போதே!” என்றார். அவள் அசையாது அமர்ந்திருக்க ஓங்கி உதைத்துத் திறந்து உடைவாளை உருவி அவள் தலைமயிரைப் பற்றி இழுத்து வெட்ட ஓங்கினார். கைகூப்பி இறப்புக்குத் துணிந்து அவள் அசையாதிருக்கக் கண்டு வாள் தாழ்த்தினார். “உன்னிடம் நான் இட்ட ஆணை என்ன? இன்று இதோ என் அரசியர் அல்லாத பெண்கள் அவர் கருவை ஏந்தியிருக்கிறார்கள்” என்றார்.

அவள் கண்ணீருடன் விழிதூக்கி “இப்போதே நான் அவரிடம் செல்கிறேன். இத்தருணத்தில் மட்டுமே பெருவிழைவை உணர்கிறேன்” என்றாள். “செல்!” என்று வாலி ஆணையிட்டார். “இக்காடுகளை ஆளும் பெருங்குலத்தலைவனை கருவுற்று மீள். இம்முறை அது தவறினால் உன் தலை கொய்வேன் என்று தெய்வங்களைத் தொட்டு ஆணையிடுகிறேன்.” அன்று அவளே தன்னை மலரும் மணமும் மணியும் கொண்டு அணி செய்து கொண்டாள். புத்தாடை அணிந்தாள். இருளில் மலர்ச்செடியைக் கடந்து வரும் இளந்தென்றல் போல ஒரு நறுமணமாக குறுங்காட்டைக் கடந்து தீர்க்கதமஸின் குடிலை அடைந்தாள்.

அவருடன் இருக்கையில் ஒன்றை உணர்ந்தாள். ஆணென்பது முதன்மையாக தந்தை. காமமென்பது முதன்மையாக ஆண்மை. ஆண்மையென்பது முதன்மையாக கனிவின்மை. உவகை என்பது வெறும் விலங்காக எஞ்சுவது. முற்றிலும் நிறைந்தவளாக அவள் திரும்பி வந்தாள்.

கருக்கிருட்டில் நீராடி வரும் வழியில் பன்னிரு அன்னையர் ஆலயத்தின் முன் கைகூப்பி நின்று வணங்குகையில் காலைமலர் மணமொன்று ஆழ்காட்டில் விழுந்து எழுந்து வந்த குளிர் தென்றலில் ஏறி அவளைச் சூழ்ந்து உள்ளத்தின் ஆழத்தில் எண்ணமொன்றை எழுப்புகையில் அறிந்தாள், தான் கருவுறப்போவதை. அங்கிருந்து கூப்பிய கைகளில் கண்ணீர் உதிர திரும்பிவந்தாள். மறுநாள் வாலியின் இரண்டாவது மனைவி பிரபை தீர்க்கதமஸுடன் இருந்தாள். அவரது பிறமனைவியர் சுதேவியும் பானுப்பிரபையும் சந்திரப்பிரபையும் அவருடன் இரவு அணைந்தனர். அவர்கள் கருவுற்று ஐந்து மைந்தர்களை ஈன்றனர்.

அங்கன் வங்கன் கலிங்கன் புண்டரன் சுங்கன் என்று ஐந்து பேருடல் மைந்தர்கள் அவரது ஆறாப்பெருவிழைவின் வடிவங்களென அப்பெண்டிரின் வயிறு திறந்து இறங்கி மண்ணுக்கு வந்தனர். கரியதோற்றம் கொண்டவர். விழைவு எரியும் கனல் துண்டுகளென விழிகொண்டவர். ஆணையிடும் குரல் கொண்டவர். கருவிலேயே அவர்களுக்கு வேதத்தின் செயல்பருவம் அளிக்கப்பட்டிருந்தது. முக்குணங்களுடன் அது அவர்களில் வேரூன்றி கிளைபரப்பி நின்றது. நான் என்றும் எனக்கு என்றும் இங்கு என்றும் இப்போது என்றும் அவர்களில் நுரைத்துக் கொப்பளித்தது புவியணைந்த முந்தையரின் முதற்சொல்லென திகழ்ந்த எழுதாக்கிளவி.

தன் இடக்காலால் தாளமிட்டு சற்றே சுழன்று விரல் தொட்ட வீணை எழுப்பிய ரீங்காரத்துடன் குரலிணைத்து சூதன் சொன்னான். “அவையீரே, அவ்வாறு உருவாயின ஐந்து பெருங்குலங்கள். அங்கன் வங்கன் கலிங்கன் புண்டரன் சுங்கன் எனும் ஐந்து மைந்தரால் பொலிந்தார் வாலி. ஐந்து பெரும்தோள்கள், ஐந்து விரிமார்புகள், ஐந்து விழைவுகள். ஐந்து அணையாத சினங்கள். ஐந்து இலக்குகள் கொண்ட அம்புகள். அங்கமும் வங்கமும் கலிங்கமும் புண்டரமும் சுங்கமும் என ஐந்து நாடுகள் பிறந்தன. வேதச் சொல் நிலை நிறுத்திய அவர்களின் மேல்கோள்மையை காடுகளிலும் சதுப்புகளிலும் கடல்நிலங்களிலும் வாழ்ந்த நூற்றெட்டு குடிகளும் ஏற்றன.

விழியிழந்த காமம் கொண்டிருந்த தீர்க்கதமஸின் குருதியில் இருந்து மேலும் குலங்கள் எழுந்தன. உசிதை எனும் காட்டுப் பெண்ணில் பிறந்தனர் உசிநாரர்கள். சௌப்யை எனும் காட்டுப் பெண் சௌப்ய குலத்தை உருவாக்கினாள். பதினெட்டு அசுர குடிகளுக்கும் அவர் குருதியிலிருந்து மைந்தர் எழுந்தனர். பிரஜாபதிகள் உயிரின் ஊற்றுக்கள். நூறு பொருள்கொண்ட வேதச்சொல் அவர்களின் குருதித்துளி.

வற்றா பெருவிழைவே உடலென்றான தீர்க்கதமஸ் முதுமை அடைந்தார். அவர் குருதியில் வாழ்ந்த தெய்வங்கள் அனைத்தும் மண்ணிறங்கி பரவின. தசைநார்கள் அவரது விழைவை வாங்கி வெம்மை கொள்ளாதாயின. ஒருநாள் அவர்முன் படைக்கப்பட்ட உணவுக்குவை முன் அமர்ந்தவர் ஓர் உருளை அன்னத்தை எடுத்து கையில் வைத்து அசைவற்று அமர்ந்திருந்தார். அவர் வயிற்றின் அனல் அணைந்திருந்தது. தன்னை கங்கையின் கரையில் கொண்டு சென்று அமர வைக்கும்படி அவர் தன் மைந்தர்களிடம் கூறினார்.

தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த ஆயிரத்தெட்டு மைந்தர்கள் பொன்மஞ்சள் மூங்கிலால் ஆன சப்பரம் ஒன்றை சமைத்தனர். அதில் அவரை ஏற்றி அங்கனும் வங்கனும் கலிங்கனும் சுங்கனும் நான்கு முனைகளை தூக்கிக் கொண்டு செல்ல, புண்டரன் கொம்பூதி முன்னால் சென்றான். கோல்கள் ஏந்தி தந்தையை வாழ்த்தியபடி மைந்தர்கள் அணி ஊர்வலமாக அவரை தொடர்ந்தனர். அவர்கள் அவரது பெயர்களைச் சொல்லி வாழ்த்தினர். தீர்க்கசிரேயஸ் என்றும் தீர்க்கபிரேயஸ் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

கங்கைக்கரையை அடைந்து அங்குள பெரும்பாறை ஒன்றின் மேல் அவரை அமர்த்தினர். வடக்கு நோக்கி தர்ப்பையில் அமர்ந்த தீர்க்கதமஸ் தன் மைந்தரிடம் “கிளைகள் அடிமரத்தை நோக்கலாகாது. திரும்பி நோக்காமல் விலகிச்செல்க!” என ஆணையிட்டார். “தந்தையே, தங்கள் குருதியிலிருந்து நாங்கள் கொண்ட பெருவிழைவாலேயே இங்கிருக்கவும் இவற்றையெல்லாம் மீறி வளரவும் ஆற்றல் கொண்டவரானோம். எங்கள் குடிக்கெல்லாம் முதல்அனலென வந்தது தங்கள் காமம். விழியின்மையால் பெருநெருப்பாக்கப்பட்ட அந்தக் காமத்திற்கு தலைவணங்குகிறோம். அதுவே எங்களுக்கு பிரம்மத்தின் வடிவம் என்று அறிகிறோம். என்றும் எங்கள் குலங்களில் அவ்வனல் அழியாது எரியவேண்டுமென்று அருள்க!” “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தீர்க்கதமஸ் அருளுரை புரிந்தார்.

தனிப்பாறை மேல் பனிரெண்டு நாட்கள் உணவின்றி நீரின்றி தன்னை மேலும் மேலும் ஒடுக்கி சுருங்கி அவர் இறுதித் தவம் இயற்றினார். வேதவேதாங்கங்களைச் சுருக்கி ஒற்றைவரியாக்கினார். அதை ஓம் எனும் ஒற்றைச் சொல்லாக்கினார். அதை ஒலியின்மையென அவர் ஆக்கிக்கொண்டபோது சங்கு சக்கர தாமரை கதாயுதத்துடன் அவர் முன் எழுந்த பரந்தாமன் “வருக!” என்றார். அவரை நோக்கி “உனது உலகில் மாற்றிலா காமத்திற்கு இடமுண்டா?” என்றார் தீர்க்கதமஸ்.

“இல்லை, அனைத்து உணர்வுகளும் சாந்தமெனும் இறுதி உணர்வால் சமன் செய்யப்பட்ட உலகே வைகுண்டமென்பது” என்றார் பெருமாள். “விலகுக!” என்றார் தீர்க்கதமஸ். மானும் மழுவும் சூலமும் உடுக்கையும் ஏந்தி முக்கண் முதல்வன் எழுந்தருளிய போது “அங்குளதா அணைதல் அறியா காமம்?” என்றார். “இங்கு அனைத்தையும் தூய்மைப்படுத்தும் அனல் ஒன்றே உள்ளது. எஞ்சுவது நீறு” என்றார் சிவன். “நன்று, அகல்க!” என்றார் தீர்க்கதமஸ்.

வஜ்ரமும் தாமரையும் ஏடும் விழிமணிமாலையும் என தோன்றிய நான்முகனிடம் “அங்குளதா படைத்தலன்றி பிறிதறியாத காமம்?” என்றார். “இங்குளது படைத்தல். ஆனால் அதில் பற்றென ஒன்றில்லை” என்றார் கலைமகள் கொழுநன். “நன்று, நீங்குக!” என்றார் தீர்க்கதமஸ். மேலும் மூன்றுநாள் தவம் செய்து அவர் உடல் ஒடுங்குகையில் வெண்ணிற யானைமேல் மின்னல்படையும் தாமரையும் ஏந்தி வந்து நின்றார் இந்திரன். “விண்ணவர்க்கரசே அங்குளதா முடிவிலி என நீளும் பெருங்காமம்?” என்றார். “ஆம், புல்நுனிகளிலும் காமம் மட்டுமே ததும்பி நிற்கும் பேருலகம் என்னுடையது” என்றார் இந்திரன்.

“அவ்வண்ணமெனில் என்னை அழைத்துச் செல்க!” என்றார் தீர்க்கதமஸ். ஐராவதம் நீட்டிய துதிக்கை முனையை அவர் பற்றிக் கொள்ள அவரைச் சுருட்டி எடுத்து தன் மத்தகத்தின் மேல் அமர்த்திக் கொண்டது. இந்திரன் தன் பாரிஜாத மாலையைக் கழற்றி அவர் தோளில் இட்டார். ஒளி மிக்க இருவிழிகள் அவர் முகத்தில் திறந்தன. இருண்ட நிழல்கள் ஆடும் மண்ணுலகை நோக்கி “அது என்ன?” என்று கேட்டார். “உத்தமரே, இத்தனை நாள் தாங்கள் இருந்த உலகு அது” என்றார் தேவர்க்கரசன்.

“இவ்விருளிலா மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்றார் தீர்க்கதமஸ். “ஆம், அவ்விருளை ஒளியென நோக்கும் இரு துளைகள் அவர்களின் முகத்தில் உள்ளன” என்றார் அமுதுறைவோன். பொன்னொளியும் மலரொளியும் பாலொளியும் நிறைந்த விண்ணுலகை நோக்கி விழி திருப்பி “இனி நான் இருக்கும் உலகு அதுவா?” என்றார் தீர்க்கதமஸ். “ஆம் உத்தமரே, அங்கு விழியோடிருப்பீர், விழைவதையே காண்பீர்” என்றார் இந்திரன்.

“முதற்தந்தையை வாழ்த்துக! கட்டற்ற பெருவிழைவான கரியோனை வாழ்த்துக! மாளா பேருருவனை வாழ்த்துக!” என்று சூதன் கதையை சொல்லி முடித்தான். “இன்றும் எரிகின்றன ஐந்து நாடுகளின் அனைத்து இல்லங்களிலும் விழியிழந்த முதற்தாதை தன் சொல்லிலும் உடலிலும் கொண்ட பேரனலின் துளிகள். அடுப்பில் அனலாக. அகலில் சுடராக. சொல்லில் விழைவாக. கனவுகளில் தனிமையாக. ஆம், அது என்றென்றும் அவ்வாறே சுடர்க! ஓம்! ஓம்! ஓம்!”

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு சிறியநாவல்கள்

$
0
0

IMG_20151227_173620

வெண்முரசின் நாவல்கள் அனைத்துமே பெரியவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த துணைக்கதைகளும், வெவ்வேறு நூல்களை நோக்கிச் சுட்டும் உள்வழிகளும் மொழியின் கட்டற்ற பாய்ச்சல்களும் கொண்டவை. எனவே அவை இலக்கியப்பழக்கமுடைய நுண்வாசகர்களுக்குரியவை. அவர்களால்கூட விரிவான விவாதம் வழியாகவே புரிந்துகொள்ளக்கூடியவை

இந்தியப்பாரம்பரியத்தையும் அதன் உள்வழிகளையும் அறிந்துகொள்ள ஆர்வமுடைய ஆனால் இலக்கிய அறிமுகம் அற்ற வாசகர்களுக்காக வெண்முரசு நாவல்களில் இருந்து சில கதைகளைத் தொகுத்து சில சிறிய நூல்களாக வெளியிடலாம் என்னும் எண்ணம் நண்பர்களிடம் வந்தது. அதையொட்டி சில கதைகள் மட்டும் வெட்டி தொகுக்கப்பட்டு நான்கு நாவல்கள் வெளிவந்துள்ளன

கர்ணனின் கதையைச்சொல்லும் ’செம்மணிக்கவசம்’ அம்பையின் கதையைச் சொல்லும் எரிமலர் துரோணரின் கதையைச் சொல்லும் ‘புல்லின் தழல்’ கார்த்தவீரியன் – பரசுராமர் கதையைச் சொல்லும் ’ஆயிரம் கைகள்’  திருதராஷ்டிரனின் கதையைச் சொல்லும் ‘இருள்விழி’ ஆகியவை வெளிவந்துள்ளன. நூற்றைம்பது ரூபாய்க்குள் விலையுள்ள சிறிய நாவல்கள் இவை.

மறுதொகுப்பு செய்யப்பட்டவை என்றாலும் வாசகர் இவற்றையும் முழுமையான நாவல்களாகவே அணுகமுடியும். கிழக்கு வெளியீடு

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16754 articles
Browse latest View live