Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16737 articles
Browse latest View live

சிங்கப்பூர் இலக்கியம் பற்றி…நவீன்

$
0
0

Navin-M.மலேசிய – சிங்கைப் படைப்பாளிகளிடம் பேசும்போது பொதுவாக ஒரு கருத்து வெளிப்படுவதைப் பார்ப்பதுண்டு. அதாவது ‘தமிழ்நாட்டு படைப்பாளிகள் திட்டமிட்டே இருநாட்டுப் படைப்புகள் குறித்தும் பேசுவதில்லை. அவர்களுக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டல்ல’ எனும்போக்கில் குற்றச்சாட்டுகள் இருக்கும். இங்கு, அவர்கள் ‘பேசுவதில்லை‘ எனும் சொல்லை ‘பாராட்டுவதில்லை‘ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றனர்.

 

சிங்கப்பூர் இலக்கியம் குறித்த சர்ச்சைகள் பற்றி நவீன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கசப்பெழுத்தின் நூற்றாண்டு

$
0
0

unnamed (1)

 

 

நான் சிறுவனாக வகைதொகையில்லாமல் வாசித்துத்தள்ளிய காலகட்டத்தில் விந்தனின் பசிகோவிந்தம் என்னும் நூலை தற்செயலாகக் கண்டடைந்தேன். அது ‘புடைநூல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததே எனக்கு ஆச்சரியம் அளித்தது. ராஜாஜியின் பஜகோவிந்தத்தைச் சாடி எழுதப்பட்ட அந்நூல் அன்று என்னை மிகவும் கவர்ந்தது.

அதன்பின் ராணிமுத்து நாவல் வரிசையில் வெளிவந்த பாலும்பாவையும் நாவலை வாசிக்கும்போது என் ரசனை சற்று மிகுந்திருந்தது. அந்நாவல் முழுக்க ஓடிய எரிச்சல் மிக்க நையாண்டியை நான் விரும்பினாலும் அது சற்று மிகையானது, கலையமைதி கூடாதது என்றே தோன்றிக்கொண்டிருந்தது.

விந்தனின் சிறுகதைகளை நான் அதன்பின் வாசித்தேன். அவரது ஆளுமை என்னுள் மிகச்சிறியதாக ஆகிவிட்டிருந்தது. ஆனால் விந்தனைப்பற்றி அ.மா.சாமி எழுதிய ஒரு குறிப்பு பாலும் பாவையும் நூலின் முன்னுரையாக இருந்தது. அது எனக்கு எப்போதுமே நினைவில் நிற்கும் ஒரு பதிவு. விந்தனின் படைப்புகள் கலையொருமை அற்றவை.நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் அவருக்கு இடமில்லை. ஆனால் அவரது வாழ்க்கை ஒர் இலக்கியவாதியின் வாழ்க்கைக்குரிய அனைத்து மடத்தனங்களும் அபத்தங்களும் சரிவுகளும் பெருந்தன்மையும் இலட்சியவாதமும் கொண்டது

விந்தனின் நூற்றாண்டு இது. [1916 -2016] அவரது மகன் கோ.ஜனார்த்தனன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விந்தன் அறக்கட்டளை சார்பாக விந்தனின் நூல்கள் மறுபதிப்பாக வந்துகொண்டிருக்கின்றன. விந்தனின் கட்டுரைகள் கதைகளை விட இன்று வாசிப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. நேரடியான தாக்கும்தன்மையும் நையாண்டியும் உடையவை அவை.

விந்தனின் நண்பரான திரு செ.து.சஞ்சீவி அவர்கள் விந்தன் நினைவுகளை சுருக்கமாக எழுதிய  விந்தன் நினைவாகச் சில பதிவுகள்ஆர்வமூட்டும் வாசிப்பு கொண்ட நூல். விந்தனின்முன்னுரை, மற்றும் கட்டுரைகளில் இருந்து சிலபகுதிகளும் அவர் எழுந்திய இரு சிறுகதைகளும் கொண்டது. இதிலுள்ள விந்தனின் வாழ்க்கைச்சித்திரம் மிகையற்றது. ஆகவே நம்பகத்தன்மை கொண்டது. ஒரு காலப்பதிவு என்றே சொல்லலாம்.

விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்த விந்தன் விவசாயம் நலிந்தபோது சென்னைக்கு பிழைப்புதேடி வந்த பல்லயிரக்கணக்கான மக்களில் ஒருவர். இயற்பெயர் கோவிந்தன். அன்றைய சென்னையின் அடித்தளச் சமூகத்தில் அவர்களின் வாழ்க்கை அமைந்தது. ஓவியக்கலை கற்க விரும்பினார். அதற்கான வசதி அமையவில்லை. படிப்பைத் தொடர முடியவில்லை. ஆகவே அச்சகத்தில் அச்சுக்கோப்பவராக வேலைக்குச் சேர்ந்தார்.

vindan

அச்சுக்கலை விந்தனின் அழகுணர்வை நிறைவுசெய்தது. கடைசிவரை அச்சு என்னும் மாயமோகினியில் இருந்து அவர் தப்பவே முடியவில்லை. அச்சுவேலை முடிந்த ஓய்வுநேரத்தில் ரகசியமாக அச்சுக்கோத்து விடுதலைப்போர் குறித்த துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார். சினிமாவுக்குச்சென்று சு கையில் வந்ததுமே அச்சகம்தான் ஆரம்பிக்கிறார். அச்சகத்தை மூடியபின்னரும் அச்சகவேலைக்கே செல்கிறார்.

அச்சுத்தொழிலாளியாகத்தான் கல்கி வார இதழுக்குள் நுழைந்தார் விந்தன். அவரது நண்பரும் அச்சுக்கோப்பாளருமான ராஜாபாதர் அவரை அங்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர் மொழித்திறனைக் கண்ட கல்கி சிறுவர்களுக்கான கதைகள் எழுதும்படிச் சொன்னார். அதன்பின் அவரே கோவிந்தன் என்றபெயரை விந்தன் எனச் சுருக்கி கல்கியில் கதை எழுதும்படி ஆணையிட்டார்.

விந்தன் என்னும் எழுத்தாளர் கல்கியின் உருவாக்கம். தன்னை கல்கியின் மாணவராகவே விந்தன் எண்ணினார். மொழிநடையிலும் கல்கியையே பின்பற்றினார். கல்கிக்கு தன் முதல்நூலைச் சமர்ப்பணம் செய்தார். ஆனால் கல்கியில் வேலைசெய்த பிராமண எழுத்தாளர்கள் விந்தனை சாதி நோக்கில் நடத்தினர். தொடர்ந்து அவமதிப்புக்கு உள்ளான விந்தன் தன்னை ‘நான் ஒரு லோ கிளாஸ்’ என அறிவித்துக்கொண்டார். கடுமையான போக்குள்ளவராக மாறினார்.

விந்தனுக்கும் சு.சமுத்திரத்திற்கும் நெருக்கமான உளத்தொடர்புண்டு. தனக்குப்பிரியமான முன்னோடி எழுத்தாளர் விந்தன் தான் என சு.சமுத்திரம் சொல்லியிருக்கிறார். அவரது நடையும் நையாண்டியும் விந்தனை முன்மாதிரியாகக்கொண்டதே. வாழ்விலும் பல ஒற்றுமைகள். இருவருமே காங்கிரஸ்காரர்கள். சமுத்திரம் மத்திய அரசுப்பணியில் நுழைந்து பிராமணர்களிடமிருந்து சாதிய அவமதிப்புகளை அடைந்தபோது தன்னை மூர்க்கமான எதிர்ப்புணர்ச்சியும் நக்கலும் நிறைந்தவராக மாற்றிக்கொண்டு அதை எதிர்த்துக்கடந்தார். ஈ.வே.ரா மீது ஈடுபாடு கொண்டவராக ஆனார்.

விந்தனும் காங்கிரஸ்காரராக, கல்கி பக்தராகத் தொடங்கினாலும் கடைசியில் முழு திராவிடர் கழகக்காரராக ஆனார். சமுத்திரம் கடைசிவரை காங்கிரஸை விட்டுக்கொடுக்கத் தயங்கினார். அந்தத் தயக்கங்கள் விந்தனுக்கு இருக்கவில்லை. விந்தனின்  பெரியார் அறிவுச்சுவடி திராவிடர் கழகத்தால் இன்றும் வெளியிடப்படும் முக்கியமான நூல்

ஆனால் விந்தனின் இறுதிக்காலகட்டத்தில் அவருக்கு கைகொடுத்தவர் பிராமணரான சாவி.  விந்தனுக்கு இளையவர். கல்கியின் மாணாக்கர். விந்தன் சாவியுடன் மோதிக்கொண்டே இருந்தார். ஆனால் சாவி விந்தனை பேணி தன்னுடன் வைத்திருந்தார். இல்லையேல் விந்தன் வறுமையில் இறந்திருப்பார்.

விந்தன் எழுத்தை நம்பி வாழ்ந்தார். சினிமாக்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆகவே ஓரளவு பணமும் அவருக்கு வந்தது. ஆனால் அதையெல்லாம் அச்சகம் நடத்தியும் பத்திரிகை நடத்தியும் வீணாக்கினார். மனிதன் என்னும் அவரது பத்திரிகையை  அடித்தள மக்களுக்காகக் குரல்கொடுக்கும் ஓர் இடதுசாரிப் பத்திரிகையாகவே நடத்தினார். அதை வணிகரீதியாக வெற்றிகரமாக நிகழ்த்த அவரால் இயலவில்லை.

எம்.ஆர்.ராதாவை விந்தன் நீண்ட பேட்டி கண்டு நூலாக வெளியிட்டார். ராதா விந்தன் மீது பிரியம் கொண்டிருந்தார். விந்தனுக்காக ஒரு மணிவிழா நடத்தி நிதி திரட்டி அளிக்கும் திட்டம் ராதாவுக்கு இருந்தது. ஆனால் மணிவிழாவுக்கு சிலநாட்களுக்கு முன்னரே விந்தன் மாரடைப்பில் காலமானார்

விந்தனின் குணாதிசயங்கள் பற்றி சஞ்சீவி சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார். அவர் கையிலிருப்புப் பணத்தை அவ்வப்போதே செலவிடுபவர். நண்பர்கள்கூட அவர் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துச்செல்வதுண்டு. சேர்த்துவைக்கத் தெரியாதவர். சினிமாக்காசில் ஒரு வீடு வாங்கினார். ஆனால் கடன்களை முறையாகக் கட்டாமல் வட்டியில் வீடே முழுகிப்போகும் நிலை வந்தது

அவருடைய நூல்களுக்கு அன்று நல்ல சந்தைமதிப்பு இருந்தது. ஆகவே பதிப்பாளர்கள் பணம் கொடுக்க முன்வந்தனர். அதை முறைப்படுத்தவும் விந்தனால் இயலவில்லை. ஆகவே அவ்வப்போது கடும் வறுமையும் நடுநடுவே செல்வச்செழிப்புமாக அவர் வாழ்ந்தார். பேரா. கல்கி இறந்த்போது கல்கி வார இதழுக்கு ஆசிரியராக விந்தன் அழைக்கப்பட்டார். குறிப்பிட்ட சிலரை நீக்கினால் மட்டுமே பணியாற்றமுடியும் என அவர் கடுமையாகச் சொன்னார். அவ்வாய்ப்பு பறிபோனது. அந்தப்பிடிவாதம் காரணமாகவே தினமணிகதிர் ஆசிரியராக ஆகும் வாய்ப்பும் இல்லாமலாயிற்று. சாவி உதவாவிட்டால் நடுத்தெருவில் நின்றிருப்பார்.

கல்கியில் ஆசிரியராக ஆகி தன் இன்றியமையாமையை நிறுவியபின் பிடிக்காதவர்களை மெல்லமெல்ல வெளியேற்றியிருக்கலாம். அதுதான் திட்டமிட்டுச் செயல்படுபவர்களின் இயல்பு. விந்தனிடம் அவ்வியல்பே இருக்கவில்லை. அவர் கொந்தளிப்பும் நிலையின்மையும் கொண்டவராகவே கடைசிவரை இருந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் கல்கி இதழுக்கு விந்தனால் தனி வாசகர் வட்டம் உருவானபோது கல்கியால் அதை ஏற்கமுடியவில்லை என்பதை விந்தன் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அன்றைய அச்சகச்சூழல், பதிப்புச்சூழல், இதழியல்சூழல் பற்றிய ஒரு எளிய கோட்டுச்சித்திரம் இந்நூலில் உள்ளது. அன்று எழுதுவது ஓரளவு பதிப்புரிமைப்பணம் அளிக்கும் தொழிலாகவே இருந்துள்ளது. இன்றுபோல வெற்று உழைப்பு அல்ல. இதில்  ஜெயகாந்தன் பற்றி வரும் பகுதிகள் சுவாரசியமானவை. சஞ்சீவி ஜெயகாந்தனை நன்கு அறிந்தவர். ஜெயகாந்தன் காரியவாதியாகவும் நன்றி மறப்பவராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதை ஐயப்படவும் தோன்றவில்லை. அதுவும் எழுத்தாளனின் முகமே.

விந்தனின் நூற்றாண்டு இது. அவரது நூல்கள் முறையாகத் தொகுக்கப்படவேண்டும். திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்களின் பட்டியலிடுபவர்கள் விந்தனின் பெயரை விட்டுவிடுவது வழக்கம். விந்தன் கல்கியில் தொடங்கி ஈ.வே.ராவை வந்தடைந்தவர். அவ்வகையில் அவரை ஒரு திராவிட இயக்க எழுத்தாளர் எனச் சொல்லமுடியாவிட்டாலும் திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர் எனலாம். அவர்களில் அவரே முக்கியமானவர் என ஐயமின்றிச் சொல்லலாம்.

 

விந்தன் நினைவாகச் சில பதிவுகள்

செ து சஞ்சீவி

விந்தன் எண்டோவ்மெண்ட் டிரஸ்ட் 17 அருணாச்சலம் தெரு ஷெனாய் நகர் சென்னை 30

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்

$
0
0

index

 

அன்புள்ள ஜெ

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் வாசித்தேன். இரவு நாவலுக்கு நேர் எதிரான படைப்பு. பலவகையிலும் சிந்தனையை சுழலவைத்தது

ஒளி என்ற பெயர் கொண்ட பெண் விளக்குகளை அணைக்கச்சொல்லும் இடம் தான் கதையின் தொடக்கம். இருளுக்குள் அவள் சென்று காத்திருக்கிறார். காதலன் இரவிலிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கிறான்.

ஆனால் எவ்வளவு ஓடமுடியும்? எப்படியானாலும் இருட்டுதானே முழுமையானது? அங்கே சென்றுதானே ஆகவேண்டும்? மிச்ச எல்லாமே வெறும் பாவனைகள்தானே?

அதைத்தான் கதை முடிவில் சுட்டுகிறது. ஆச்சரியமென்னவென்றால் இரவு நாவலும் அதைத்தான் சொல்கிறது

மதி

***

அன்புள்ள ஜெ,

ஆனந்த விகடனில் வந்துள்ள இக்கதை உங்களின் படைப்புகளில் முக்கியமான ஒன்று. நீங்கள் வருங்காலத்தில் நடைபெறும் வகையில் எழுதிய கதைகள் குறைவே. சட்டென்று நினைவுக்கு வருவது நம்பிக்கையாளன். பொதுவாக இத்தகைய வருங்காலக் கதைகள் ஏதேனும் ஒரு அறிவியல் முன்னேற்றம், இயந்திரங்களுக்கு அடிமையாகும் மானுடம், மானுட அழிவிற்குப் பிறகு இணைந்து வாழும் ஒரு சிறு குழு, மானுட நன்மைக்கென இடப்பட்ட சட்டங்கள் மற்றும் அதை மீற விழையும் ஒரு சிறு குழு அதன் சாகசங்கள் என ஒரு சில குறிப்பிட்ட வகைமைகளிலேயே நிகழும். அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, கிட்டத்தட்ட எதார்த்தத்தை நெருங்கிய ஒரு படைப்பைத் தந்திருக்கிறீர்கள்.

இதில் வெளிப்படும் சீனாவுடன் இணையும் ஜப்பான் பற்றிய அரசியல் பார்வையும், அணுவெடிப்பு விசை (Nuclear fission) விமானமும் அபாரம். கதை நடப்பதாகச் சொல்லப்படும் 2௦95 ம் வருடத்தில் இவை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். (என்னளவில் அணு இணைவு விசை (Nuclear Fusion) விமானங்களுக்கான சாத்தியம் இருப்பதாகவே படுகிறது)

ஆனால் இக்கதையின் முக்கியமான அம்சம் இவையெல்லாம் அல்ல. சூரியனைத் தொற்றிக் கொள்வதன் வாயிலாக தன் பகலை மீட்டு அதன் மூலம் உயிரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் ஒருவரின் போராட்டமே. அப்போராட்டத்தை நடத்துபவர் ஒரு ஜப்பானியர் என்பதே இக்கதையை மிக மிக முக்கியமான ஒரு படைப்பாக ஆக்குகிறது. கதை நடக்கும் காலத்தில் ஜப்பான் என்றொரு அரசியல் தேசம் இல்லை. ஆனால் ஜப்பான் என்றொரு பண்பாட்டு தேசம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் வளைந்த பணிவான குரலும், அதன் பின்னால் இருக்கும் மேட்டிமைத் தனமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது முக்கியமான பார்வை.

ஜப்பான் தற்போது எதிர்கொண்டு கொண்டிருக்கும் சரிவுக்கு முக்கியமான ஒரு காரணமாக சமூகவியலாளர்கள் கருதுவது அவர்களின் மரபிலிருந்தான விலக்கமே. இது ஜப்பான் என்று மட்டுமல்ல பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆன்மாவை, ஆன்மீகத்தைத் தொலைத்து இயந்திரமாகி, தொழில்நுட்ப கருவிகளின் கைப்பாவையாகி, நேரத்தை ஆன்மா அற்ற உழைப்பிலேயே கொன்று, பொழுது போக கட்டற்ற நுகர்வைச் சாத்தியாமக்கி, அந்த நுகர்வையே ஒரு பொருளாதார இயக்கத்தின் அச்சாக மாற்றி வைத்துள்ள எந்த ஒரு சமூகமும் எதிர்கொண்டேயாக வேண்டிய ஒரு சரிவு. முக்கியமாக நமது கீழைத்தேசங்களில் இதைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

இங்கே அந்த ஜப்பானியர் கொண்டிருக்கும் ‘ஒரே பகல்’ – மிக முக்கியமான குறியீடு. இது அவரின் மீட்சிக்கான கடைசி வாய்ப்பு. இதன் பிறகு வரும் இருள் மொத்தமாக அவரின் இருப்பை அழித்து விடும். இங்கே அவர் என்பதை மரபை நோக்கிச் சென்று, தன் இழந்த அடையாளங்களை மீட்டுக்கொண்டு, மீளுருவாகத் துடிக்கும் ஜப்பானிய சமூகம் என்று வாசித்தால் மிக உக்கிரமான ஒரு சித்திரம் நம் முன் விரியும். இக்கதையில் வரும் ஒரே பெயர் கொண்ட கதாபாத்திரம் அவரின் இளமைக் கால காதலி – அகேமி. அதன் பொருளும் சுடர் என்றே!!

ஜப்பான் – சூரியன் உதிக்கும் தேசம் என்று அழைக்கப்படுவது. அத்தேசம் தன் சூரியனை இழக்காமல் அவனைத் தொற்றிக் கொண்டாவது மீளத் துடிப்பதே இக்கதையின் அடிநாதம். இங்கிருந்து இவ்வாறு சரிவை நோக்கிச் செல்லும் நமது சமூகமும் நாளை தம்மை மீட்டுக் கொள்ள உலகத்திடம், யார் யாரென்றே தெரியாதவர்களிடம் மீள மீள மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தாக வேண்டும் என்பது நம் குழந்தைகளுக்கு நாம் எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பு.

உண்மையில் அமெரிக்கா எறிந்த அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் விழவில்லை, ஜப்பான் என்ற பண்பாட்டின் ஆன்மாவில் விழுந்திருக்கிறது. இயந்திர கதியில் மீண்டு வரத் துடித்த ஒரு தேசம் அதற்கு விலையாகத் தன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வந்து, அந்த அழிவுகளையும், இழப்புகளையும் உணரவே இயலாத எல்லைக்குச் சென்று இருந்த ஒரே கடைசிச் சுடரையும் அணைத்து முடிவிலா இருளில் மூழ்குமிடம் உக்கிரம்.

நான்கு முறை கழுவப்பட்ட சுமி-இ ஓவியம் என்பது அபாரமான படிமம். சுமி-இ முறை என்பது தூரிகையில் தோய்க்கப்பட்ட வண்ணங்களின் அடர்வின் வேறுபாட்டால் ஓவியங்களைத் தீட்டுவது. நீரில் தோய்க்கப்பட்ட வண்ணங்கள் மேலும் மேலும் அடர்வு குறைந்து வெளிறிச் சென்று கொண்டிருக்கும் ஒரு சித்திரத்தை நல்கும் இப்படிமம் மையக்கதைக்கு மட்டுமல்ல, மேலும் மேலும் பல தளங்களுக்குக் கொண்டு சென்று விரித்தெடுக்கக் கூடியது.

குறைந்த பட்சம் மீண்டு வர வேண்டும் என்ற உணர்வை அடைந்த ஓர் பண்பாடு அதை நோக்கிச் செல்லும் ஒரு ஒளிமயமான பாதையில் இக்கதை முடிகிறது. ஆம், பண்பாடுகள் ஆழ்மனத்தில் இருப்பவை. அழிய விரும்பாதவை. தன்னை அழித்தவரின் ஆழுள்ளத்தில் இருந்து ஓர் ஒளித் தெறிப்பாகவேனும் வெளிவந்து பரவத் துடிப்பவை. எவரேனும் ஒருவர் அதைப் பற்றிக் கொண்டு, தொற்றிக் கொண்டால் செவ்வாய்க்குச் சென்றாலும் இறவாமல் தொடர்பவை. அவற்றைத் தொடர்புறுத்தும் இலக்கியங்கள், குறியீடுகள், சடங்குகள் அனைத்தின் தேவையும் வேறு எக்காலத்தை விடவும் இப்போதே தேவை. இல்லாவிட்டால் தொற்றிக் கொண்டு பறப்பதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு.

அன்புடன்,

மகராஜன் அருணாச்சலம்

***

ஜெ

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் ஒரு கதை வடிவை கொண்டிருந்தாலும் அதன் கவித்துவம் மூலமே நிற்கிறது

இருட்டிலிருந்து தப்பி ஒளிக்காகத் தவித்துக்கொண்டே இருக்கும் ஆத்மா. அதை ஒரு குறியீடாகவே நினைக்கிறேன்

ஆனால் சாஸ்வதமான ஒளியை சூரியன் அளிக்கமுடியாது இல்லையா?

கணேசமூர்த்தி

8

அன்புள்ள நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.
“காந்தி தோற்கும் இடங்கள்“ உரையை youtube கவனித்தேன். உரையை நீங்கம் ஆரம்பித்த விதமும் முடித்த முறையும் சிறப்பு. முக்கியமாக உரையை முடிக்குமிடம் மிகத் தாக்கமாகவிருந்தது. கிராம ராஜ்ஜியத்தைப் பற்றி இளமைக்காலத்திலேயே சிந்தித்திருந்த காந்தி, மைய அதிகாரத்தை உடைக்கும் சிந்தனைமுறையை பல ஆண்டுகளுக்கு முன்னேயே முன்வைத்திருக்கிறார். மையம் என்பது எங்கும் ஒரு இடத்தில் இல்லை. எல்லா இடங்களிலும் மையம் உண்டு என்று நீங்கள் விளக்கிய விதம் கவனத்திற்குரியது.
காந்தி தோற்கும் இடம் மட்டுமல்ல, உங்களுடைய அத்தனை எழுத்துகளையும் உரைகளையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்.
தவிர, சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் சிறுகதையைப் படித்தபோது அதிர்ந்து விட்டேன். என்ன ஆச்சரியமென்றால், இதே உணர்வோடு எங்களுடைய மகன் மகிழ் இருக்கிறான். அவனுக்கு எப்போதும் வெளிச்சம் வேண்டும். இரவோ, பகலோ அவன் இருக்குமிடத்தில் ஒளி தேவை. இரவு படுக்கும்போதும் மின்குமிழ்களை எரியவிட்டிருப்பான். பகலில் அறையிலிருக்கும் அத்தனை யன்னல்களையும் திறந்து வைத்தபிறகும், பளிச்சென வெளிச்சம் இருக்கும் மதியப்பொழுதிலும் லைற் எரிய வேணும். வெளிச்சமில்லாமல், ஒளியில்லாமல் தன்னால் இருக்க முடியாது என்பான்.
உங்களுடைய கதையைப் படித்தவுடன் அதை அவனிடம் படிக்கக் கொடுத்தேன். தன்னைப்பற்றி உங்களிடம் நான் சொல்லித்தான் இந்தக் கதையை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னான். சிரிப்பதைத் தவிர, வேறு என்ன சொல்ல முடியும் நான்.
மெய்யான உணர்வுக்கு இடமோ காலமோ இல்லை.அது உள்ளுணர்வின் தடத்தில் கிளைப்பதல்லவா.
அருண்மொழி, சைதன்யா, அஜிதன் எல்லோருக்கும் எங்கள் அன்பு.
- கருணாகரன்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ருத்ரை

$
0
0

nodes3

 

ஆந்திரம் எனக்கு என்றுமே ஒரு வியப்பை அளிக்கும் நிலம். அதை ஒரு மாநிலம் என்று சொல்வதைவிட தனி நாடு என்று தான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட பிரான்சுக்கு சமம் என்று நினைக்கிறேன். முற்றிலும் வேறுபட்ட பல நிலப்பகுதிகள் கொண்டது. தெற்கே ராயலசீமாவும் சரி, அதற்குமேல் கோதாவரியும் சரி, வடக்கே தெலுங்கானா பகுதிகளும் சரி, ஒன்றுக்கொன்று முற்றிலும் சம்பந்தமற்றவை. பண்பாட்டிலும் நிலக்காட்சியிலும்.

கி.மு.ஒன்றாம் நூற்றாண்டில் சாதவகனப்பேரரசின் காலம் தொடங்கி ராஷ்டிரகூடப்பேரரசு, ஹொய்சாளப்பேரரசு, சாளுக்கியப்பேரரசு, நாயக்கர் பேரரசு என தொடர்ச்சியான வெவ்வேறு அரசகாலகட்டங்கள் அங்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு பேரரசும் அவர்களுக்குரிய கலை மரபையும் பண்பாட்டையும் தனித்தன்மைகளையும் உருவாக்கி நிலைநிறுத்தின.

முதல் முதலாக நான் ஆந்திரத்திற்குள் நுழைந்த போது எனக்கு 23 வயது. அதற்கு முன்பு பலமுறை அவ்வழியாக கடந்து சென்றிருந்த போதும் கூட ஆந்திரத்தில் இறங்கி அந்நிலப்பகுதியை அலைந்து சுற்றிப்பார்த்தது அப்போதுதான். அன்று தொடங்கி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அனேகமாக வருடந்தோறும் ஆந்திரத்திற்குள் சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் அப்பண்பாட்டுவெளியில் பத்தில் ஒன்றைக்கூட நான் பார்த்திருக்கவில்லை என்ற சோர்வு எனக்கு உண்டு.

உண்மையில் அதற்கு பொருளே இல்லை. எந்த ஒரு பண்பாட்டையும் எவரும் முழுக்க அறிந்துவிட முடியாது. ஒரு பண்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தன் ஆய்வை அமைத்துக் கொண்டு முழு வாழ்வையும் செலவிட்ட அறிஞர்கள் கூட  அதன் பல பகுதிகள் தங்களுக்குப் புரியவில்லை. பல பகுதிகள் தங்களுக்குப் பிடிபடவில்லை என்று சொல்வதை நாம் பார்க்கலாம்.

நான் முதன்முதலாக வரங்கலுக்கு சென்றிறங்கினேன். எதிர்படும் நபரிடம் “வாரங்கல் கோட்டை அருகில் தான் இருக்கிறதா?” என்று கேட்டேன். எட்டாவது பாடப்புத்தகத்தில் திப்பு சுல்தான் ’வாரங்கல்’ கோட்டையைக் கைப்பற்றினார் என்று படித்த நினைவில் அவரிடம் வாரங்கல் என்று கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்து ’வரங்கல்’ என்று என்னைத் திருத்தினார். நான் ’வாராங்கள்’ என்று சொல்வது போன்று உச்சரித்தேன்.’ஒரங்கல்’ அதாவது ’ஒற்றைக்கல்’ என்பதன் மரூஉ தான் வரங்கல்.

அது காகதீயப்பேரரசின் தலைநகரம். ராணி ருத்ரம்மா இருந்து ஆண்டது அப்பகுதி. இந்திய வரலாற்றின் மாபெரும் அரசிகளில் ஒருவர். தன் நாட்டை எழுபத்திரண்டு பாளையப்பட்டுக்களாக பிரித்து முறையான நீர் நிர்வாகமும், நீதி நிர்வாகமும், நிதி நிர்வாகமும் அமைத்தார். அந்த முன்னுதாரணத்தைத்தான் பின்னர் நாயக்க மன்னர்கள் தொடர்ந்தனர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது இங்கும் அந்த பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.

ருத்ரம்மா என்றால் கருங்காளி. ருத்ரனின் துணைவி. ஆனால்ராணி ருத்ரம்மா பெரும்போர்களில் ஈடுபட்டவரல்ல. மாபெரும் வெற்றிக்கதைகள் அவர் வரலாற்றில் இல்லை. அவர்கள் ஒரு அன்னை. குடிமக்களை தன் மைந்தர்களாக எண்ணினார். ருத்ரம்மாவின் சாதனை என்பது வறண்ட வரங்கல் பகுதி முழுக்க அவர்கள் அமைத்த மாபெரும் ஏரிகள் தன் மொத்த ராணுவத்தையும் எப்போதும் ஏரிவெட்டும் பணியிலேயே ஈடுபடுத்தியிருந்தார் என்று அவர்களைப்பற்றி வரலாறு சொல்கிறது. வரங்கல் அருகே உள்ள ராமப்பா கோயில் போகும் வழியில் உள்ள ’ருத்ரமகாசாகரம்’ என்னும் மாபெரும் ஏரி இன்றும் அன்னையின் நினைவுச்சின்னமாக நீடிக்கிறது.

ராமப்பா கோயில் இந்தியாவின் மாபெரும் கலைப்பொக்கிஷங்களில் ஒன்று. வரங்கல் அமைந்துள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் அனைத்துமே கரிய சலவைக்கல்லால் கட்டப்பட்டவை. தார் உருக்கி வடித்தது போன்றிருக்கும் சிற்பங்கள். ஒளியில் மின்னும் கருமுத்து போன்ற பெண்கள். கரிய உலோகத்தில் செதுக்கி எடுத்தது போன்ற ஆலயங்கள் ஒவ்வொன்றையும் பிரம்மாண்டமான ஆபரணங்கள் என்று தான் சொல்ல முடியும்.

வரங்கல் பகுதியின் ஒரு ஆலயத்தின் சிற்பங்களை உண்மையாகப் பார்த்து முடிப்பதற்கு ஒரு மாதமோ அதற்கு மேலோ கூட ஆகும். ஒவ்வொரு கணுவிலும் சிற்பங்களும் செதுக்கு வேலைகளும் நிறைந்த கனவுவெளிகள் அவை. முதன்முறை நான் சென்றபோது இணையம் போன்ற வசதிகள் இல்லாததனால் ராமப்பா கோயிலைப்பற்றியோ அங்குள்ள பிற ஆலயங்களைப்பற்றியோ எனக்குப் பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆந்திர மாநிலம் தொல்பொருள்துறை வெளியிட்ட சாணித்தாள் வழிகாட்டி ஒன்றே என்னிடம் இருந்தது. அதில் ராமப்ப கோயிலைப்பற்றி வெறும் நான்கு வரிகள் மட்டும்தான் இருந்தது. அதைச் சுற்றியுள்ள பிற ஆலயங்களைப்பற்றி அந்த அளவுக்குக் கூட தகவல்கள் இல்லை.

அங்கு சென்றபின் அந்த ஆலயத்தில் நுழைந்தபோது கால் தவறி குளிர்ந்த ஏரிக்குள் விழுந்தது போல உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தபடியே இருந்தது. உண்மையில் நான் பார்ப்பது ஒரு கனவோ, பிரமையோ அல்ல என்று நெடுநேரம் நம்பமுடியவில்லை. அதன் பிறகு 2008-ல் நண்பர்களுடன் மீண்டும் ஒரு முறை ராமப்பா கோயிலுக்குச் சென்று பார்த்தேன். முதல் முறை அடைந்த அதே பிரமிப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்தது. ராமப்பா கோயில் கரிய சிலைகள் இன்றும் கனவுகளில் எழுந்து வருகின்றன.

நமது தென்னிந்திய மனம் கருமையின் அழகை காணப்பழகியது. செதுக்கி எடுக்கப்பட்ட அழகிய கரிய முகம் நமக்கு மானுட முகமல்ல, நம்மை ஆளும் அன்னை முகம். ருத்ரமாதேவி எப்படி இருப்பாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கரிய ஓங்கிய உடல் கொண்ட ஒர் அன்னையாக நான் அவர்களை உருவகித்திருந்தேன். சமீபத்தில் ருத்ரமாதேவி என்று ஒரு படம் வந்தபோது அதில் வெண்ணிறமான அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார். நூற்றுக்கணக்கான முறை அந்த விளம்பரங்களை பார்த்தும் கூட அது ருத்ரமாதேவி என்று எனக்குத் தோன்றவே இல்லை.

ராமப்பா கோயில் தூண்களில் கரிய அழகிகளின் சிலைகளைப் பார்த்துக் கொண்டு வண்டுபோலச் சுற்றிவந்தேன். செவிகளும் தோலும் மூக்கும் நாவும் செயலிழந்துவிட விழிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை அது. சிற்பங்களைக் கூர்ந்து பார்க்கும் போது சிற்பங்கள் நம்மை பார்க்க ஆரம்பிக்கும் கணம் ஒன்று வரும், அதன் பிறகு சிற்பங்களிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு சிற்பமும் ஓர் உணர்வைக் கொண்டிருக்கும். அவற்றின் உதடுகளில் ஒரு சொல் உறைந்திருக்கும். அவர்களின் விழிகளில் உயிரின் ஒளி வந்து நிற்கும்

அழகிகள்! திரண்ட தொடைகள், இறுகி ஒல்கிய சிற்றிடைகள், வனமுலைகள், பணைத்தோள்கள், நீண்ட பெருங்கைகள். மலரிதழ்கள் போல் நெளிந்து முத்திரை காட்டும் விரல்கள், குமிண் உதடுகள், ஒளி பரவிய கன்னங்கள், குழையணிந்த காதுகள், சரிந்த பெருங்கொண்டைகள். பெண்ணுடலின் அழகு குழைவுகளில் நதி போல. ஒவ்வொரு வளைவும் அணைத்துக் கொள்ள விரும்பும் அழைப்பு. காமம் என்றும் அன்னையின் கனிவு என்றும் ஒரே சமயம் தம்மைக்காட்டும் கற்பெண்கள்.

மானுடப்பெண்ணின் உடலில் அவ்வழகு இருக்கக்கூடும். ஆனால் எப்போதும் அல்ல. அவள் உண்பதும் உறங்குவதும் சலிப்பதும் துயர் கொள்வதும் இருக்கலாம். அவள் அழகு அவ்வுடலில் உச்சம் கொள்ளும் ஒரு கணத்தை அழியாது நிலைக்க வைத்தவை இச்சிற்பங்கள். கோபுரத்தின் கலசம் மட்டும் என. மானுடப் பெண்ணை நாம் இப்படி தூய அழகு வடிவில் பார்க்க முடிவதில்லை. கலை அவளிடம் இருந்த மானுடத்தன்மை அகற்றி அவ்வழகை மட்டும் எடுத்து கல்லில் அமைத்த பின்னர் அவள் பெண்ணல்ல, தெய்வம்.

ராமப்பா கோயிலிலிருந்து நான் திரும்ப வரங்கலுக்கு வருவதற்காக வந்து சாலையோரமாக நின்றேன். அங்கு அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. இன்று கூட தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது ஆந்திரப்பகுதிகளில் பேருந்துகளை நம்பிப் பயணம் செய்வதென்பது நம்மை பெரிய இக்கட்டுகளில் மாட்டி விடக்கூடியது. சற்று நேரம் நின்றபிறகு தெரிந்தது, பேருந்துகள் வராது என்று. அங்கே தனியார் வண்டிகளை கைகாட்டி நிறுத்து ஏறிக்கொள்ள முடியும்.

ஒருலோடு ஆட்டோ குலுங்கி ஒலியெழுப்பியபடி வந்தது. நான் கைகாட்டியதும் நிறுத்தி, “எங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டார். வரங்கல் என்றதும் “வரங்கலுக்கு இது போகாது வழியிலேயே நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். அங்கே வேறு வண்டிகள் உண்டு.” என்றார்.  “பஸ் உண்டா?” என்று நான் கேட்டேன். “பஸ் இந்நேரத்தில் இருக்காது. வேன்கள் வரும் நீங்கள் ஏறிக்கொள்ளலாம். அதுவரைக்கும் போவதற்கு ஆறு ரூபாய் “என்று அவர் சொன்னார்.

நான் லோடு ஆட்டோவின் பின்பக்கம் ஏறிக்கொண்டேன். நான் மட்டுமே இருந்தேன். மிகப்பழைய வண்டி ஒரு ரங்கராட்டினத்தில் செல்வது போல அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருப்பது போல உடற்பயிற்சி செய்யவைத்தது என்னை. சற்று நேரத்தில் வண்டியை நிறுத்தி புளியமரத்தடியில் காத்து நின்றிருந்த ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டார்.

அவள் பாய்ந்து ஏறி என் முன்னால் அமர்ந்த போதுதான் சரியாக அவளைப்பார்த்தேன். ஒரு கணம் திகைத்துவிட்டேன். ராமப்பா கோயிலில் நான் பார்த்த அதே கற்சிலை. கன்னங்கரிய பளபளப்புடன் கன்னங்கள். கனவு நிறைந்த விரிந்த கண்கள். கனத்த குழற்சுருள். இறுகிய நீண்ட கழுத்து. உருண்ட கைகள். சிற்றிடை. பெருத்த பின்னழகு . செதுக்கி வைத்தது போன்ற முலைகள் ஒரு பிசிறு கூட இல்லாமல் சிற்ப முழுமையுடன் ஒரு மனித உடல் அமைவதை அப்போதுதான் பார்த்தேன்.

பின்னர் என் கதைகளில் அவளை பல்வேறு கதாபாத்திரங்களாக மாற்றி திரும்பத் திரும்ப வர்ணித்திருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணை கூர்ந்து பார்ப்பது தவறு என்று நான் உணர்ந்து விழிகளைத் திருப்புவதற்கே அரைமணி நேரத்திற்கு மேலாயிற்று. அவள் என் பார்வையை பொருட்படுத்தவில்லை. இயல்பாக என்னைப்பார்த்து சீராக அமைந்த வெண்ணிற பற்கள் காட்டி சிரித்து தனக்குள் ஏதோ பாடியபடி கைவிரல்களால் வண்டியின் இரும்பு விளிம்பில் தாளமிட்டபடி உடலை மெல்ல அசைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

நான் மீண்டும் அவளைப்பார்த்தவுடன், இயல்பாகச் சிரித்து   “எந்த ஊர்?” என்று தெலுங்கில் கேட்டாள்.  “தெலுங்கு தெரியாது” என்றேன்.  “தமிழா?” என்று மறுபடியும் கேட்டாள். ”ஆம்” என்றதும் தெலுங்கு கலந்த தமிழில் என்னிடம் பேசத் தொடங்கினாள்.

”உனக்கு எப்படித்தமிழ் தெரியும்?” என்று கேட்டேன். ”சினிமாவில் நடிப்பதற்காக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே நான்கு வருடம் இருந்தேன்.” என்றாள்.”எப்போது?” என்று நான் திகைப்புடன் கேட்டேன். “நான் சென்னைக்குச் செல்லும் போது எனக்குப்பதினைந்து வயது.” என்றாள் . எனக்கு சிரிப்பாகவும் இருந்தது.”சினிமாவில் நடித்தாயா?” என்றேன். ”நிறைய படங்களில் பின்னணியில் நடனமாடியிருக்கிறேன்” என்றாள்.

”அதன்பின் ஏன் இங்கு வந்தாய்?” என்றேன். ”அதன் பின் என் தாய்மாமன் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் இங்கு அழைத்து வந்தார்” என்றாள். “இங்குதான் இப்போதும் இருக்கிறாயா?” என்றேன். “ஆமாம் இங்கே என் அக்காவுடன் இருக்கிறேன்” என்றாள். அதன்பிறகு ”அவளே என் அக்காவையும் என் தாய்மாமன் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்” என்றாள்.

எனக்கு அவள் மேலும் என்னிடம் பேசுவது பிடித்திருந்தது. பேச்சைக் கேட்கும்பொருட்டு அவளை நான் பார்க்கமுடியுமே.. ”இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன். ”மெட்ராசில் செய்து கொண்டிருந்ததைத்தான்” என்றாள். எனக்குப்புரியவில்லை. ”மெட்ராசில் நட்னம்தானே ஆடினாய்?” என்றேன். ”நடனம் எங்கே ஆடினேன்? அது எப்போதாவது தான் பெரும்பாலும் என் அத்தை என்னை அழைத்துக் கொண்டு செல்வாள்.”

திகைப்புடன் ”எங்கே?” என்று கேட்டேன். ”மகாபலிபுரத்திற்கு கழுகுமலைக்கு அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள் அவர்களுடன் இருப்பேன்” என்றாள். ஒருகணம் கழித்துத்தான் அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப்புரிந்தது. எனக்குக் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அப்போதும் நம்பிக்கையிழக்காமல் ”வாடிக்கையாளர்கள் என்றால்…?” என்றேன்.

”எங்கள் குடும்பத்தில் எல்லாரும் இதே தொழில் தான் செய்கிறார்கள். இப்போதும் அதே தொழில் தான் செய்கிறோம். இப்போதுகூட இங்கு ஒரு பண்ணையாரின் வீட்டுக்குப்போய்விட்டுத் திரும்பிப் போகிறேன்” என்றாள். ”என்ன செய்வாய்?” என்றேன். ”நடனமாடுவேன். அவருடன் இரவில் இருப்பேன். நேற்று இரண்டு பேர் இருந்தார்கள்.”

”என்ன நடனம்?” என்றேன். ”இவர்களுக்கெல்லாம் ஆடையில்லாமல் ஆடினால் தான் பிடிக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள். என்னுடைய படபடப்பை பார்த்து ”பயப்படாதீர்கள். சும்மா தான் சொன்னேன்” என்றாள். ”சும்மா என்றால் என்ன?” என்றேன். ”நீங்கள் எப்படி படபடப்படைகிறீர்கள் என்று பார்ப்பதற்காகத்தான்” என்றாள்.

பிறகு என்னைப்பற்றிக் கேட்டாள். நான் காசர்கோட்டில் தொலைபேசித்துறையில் பணியாற்றுகிறேன். ஆந்திராவில் கோவில்கள் பார்ப்பதற்காக அங்கு வந்தேன் என்றேன். அவள் அங்குள்ள ஆலயங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். நான் அதுவரை பார்க்காத பல நூறு அற்புதமான ஆலயங்கள் அங்கிருப்பதை அவள் சொன்னாள்

”இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்?” என்று கேட்டேன். ”எனக்கும் கோயில்களில் சிற்பங்களைப்பார்ப்பதில் ஆர்வமுண்டு. கையில் கொஞ்சம் பணம் இருந்தால் உடனே கிளம்பி கோயில்களைப் பார்ப்பேன்” என்றாள். அதன் பிறகு இளவயதில் முதன் முதலாக அவள் ராமப்பா கோயில் வந்ததை பற்றிச் சொன்னாள்.

அவளுடைய குடும்பம் நல்கொண்டா மாவட்டத்தைச் சார்ந்தது. பரம்பரையாக துணி துவைக்கும் வேலையை செய்து வந்தார்கள். ஆண்டைகளுக்கு பாலியல் அடிமைகளாகவும் அவர்கள் இருந்தாகவேண்டும். அதன்பிறகு பாலியல் தொழில் செய்பவர்களாக அவர்கள் மாறினார்கள். நிறைய பேர் சினிமாவில் நடிக்கப்போய் திரும்பி வந்திருக்கிறார்கள். சிலர் சென்னையிலேயே பணக்காரர்களாக மாறித் தங்கிவிட்டார்கள்.

தன்னுடைய குடும்பம், அம்மா, அக்காக்கள், இப்போது அக்காவுக்கு இருக்கும் மூன்று குழந்தைகள், வீட்டில் வளரும் இரண்டு ஆடுகள், அவள் விரும்பி வாங்கி வளர்த்துக் கொண்டு வரும் இரண்டு வான்கோழிகள் என்று பேசிக் கொண்டே இருந்தாள். அவளே மகிழ்ந்து சிரித்தாள். சிரிக்கும்போது கைகளைத் தட்டிக்கொண்டு கால்களுக்கு நடுவே கைகளைப்புதைத்துக் கொண்டு நெளியும் வழக்கம் அவளுக்கு இருந்தது. சிறிய அழகிய நடனம் போல.

என்ன ஒரு கருமை என்றுதான் நான் வியந்து கொண்டிருந்தேன். ”உனக்கு குழந்தைகள் இல்லையா?” என்று கேட்டேன். ”எனக்குக் குழந்தைகள் பிறக்காது என்று டாக்டர் சொன்னார்?” என்றாள். ”என் அக்காவுக்கு மூன்று குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக் கூடத்தில் படிக்கிறார்கள். எனக்குக் குடைக்கும் பணத்தை அவர்களுக்கு தான் கொடுக்கிறேன்” என்றாள். செல்லும் வழியிலேயே ஒவ்வொரு சாலை திருப்பத்தை சுட்டிக் காட்டி அங்கு சென்றால் இருக்கும் கோயில்களைப்பற்றிச் சொன்னாள்.

இறங்குமிடம் வந்தபோது நான் அவளிடம் ”நீ ஏன் இவ்வளவு தூரம் உன்னைப்பற்றி சொல்கிறாய்?” என்றேன். ”சும்மா எனக்குப்பிடித்திருக்கிறது. யாரிடமாவது இதையெல்லாம் நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றியது”. நான் அவளை புண்படுத்த வேண்டுமென்று சிறிய குரூரம் கொண்டு ”நீ போகும் வாடிக்கையாளரிடம் சொல்ல வேண்டியது தானே?” என்றேன்.

”அவர்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்கள் எதையாவது சொல்வார்கள். அதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களை நான் கொஞ்ச வேண்டும் அல்லது அழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்” என்றாள். அதன்பின் ”பெண்களிடம் சொல்ல முடியாது. என்னைப்போன்ற பெண்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்கள். வேறு பெண்களிடம் நான் பேசுவதில்லை” என்றாள்.

அவளும் என்னுடன் இறங்கிக் கொண்டாள். ”நீ இங்கா இறங்க வேண்டும்?” என்றேன். ”இல்லை.நான் வேறு வண்டி பிடித்து போய் கொள்கிறேன். இங்கிருந்து இந்த இருளில் நீங்கள் வண்டி பிடித்து வரங்கல் செல்வது கஷ்டம் நான் ஏற்றிவிடுகிறேன்” என்றாள்.

நான் மறுத்தும் என்னுடன் நின்றுகொண்டள். இன்னொரு வண்டி வந்ததும் அவளே கைநீட்டி என்னை ஏற்றிவிட்டு வரங்கலில் இறக்கிவிடும்படி சொன்னாள். நான் அவளிடம் விடைபெற்றுக் கொண்டேன். ”உன்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றாள். ”ஏன்?” என்றேன். ”தெரியவில்லை. சும்மா பேசிக் கொண்டிருப்பது எனக்குப்பிடிக்கும்” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை.

நீண்ட நாட்களுக்குப்பிறகு நினைத்துக் கொண்டேன். மொத்த வாழ்நாளிலேயே வேறெந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவளிடம் பேசிய ஒருவனாக இருக்கலாம் வழிப்போக்கர்களைப்போல நமக்கு அணுக்கமானவர்கள் எவருமில்லை. அவர்களை நாம் மீண்டும் சந்திக்கவே போவதில்லை என்றால் அவர்கள் வெறும் மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள்.

 

என் உள்ளத்தில் அவளுக்கு ’ருத்ரமாதேவி’ என்று பெயரிட்டேன். கடைசி வரை அவள் பெயரை நான் கேட்டுத்தெரிந்து கொள்ளவே இல்லை.

முகங்களின் தேசம் குங்குமம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கிய வாசிப்பும் பண்படுதலும்

$
0
0

tolstoy1

ஜெ,

சமீபத்தில் ஒரு நண்பரிடம் உரையாடும்போது இலக்கிய வாசிப்பு புதிய பார்வைகளையும், சிந்தனைகளையும் அளித்து பண்படுதல் என்கிற நிலைநோக்கி நகர்த்துவதாகக் குறிப்பிட்டேன். ஆனால் அவர் இலக்கியத்தைப் பண்படுதலுக்கான கருவியாகக் கொள்ள முடியாதென்றும் அது ஒரு கலை மட்டுமே என்றும் குறிப்பிட்டார். பண்படுதலுக்காக இலக்கியம் என்றால் இலக்கியவாதிகளே பண்படவில்லையே எனக் கேட்கிறார். ஒரு எழுத்தாளர் காமம் சார்ந்த சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு செல்கிறார். ஆனால் அவரிடமிருந்து ஒரு நல்ல இலக்கியம் கிடைக்கிறது. இப்பொழுது அவரது எழுத்தை நாம் எப்படி அணுகவேண்டும்? எழுதுபவரின் ஆளுமையை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாதா? ஒரு எழுத்தாளனே கொலைகாரனாய் இருந்துவிட்டு, இலக்கியம் படித்தால் மக்கள் உருப்படுவார்கள் என்று அறைகூவல் விடுத்தால் அதை எப்படிப் பார்ப்பது?

ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்குப்பின்பு சமகால எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே பேசப்படும் அவர்மீதான விமர்சனங்கள் பெரும்பாலும் மறைந்துவிடும் எனும்போது எழுத்தாளரின் ஆளுமை தேவைப்படாமல் போய்விடுமா? எழுத்தாளனையே பண்படுத்தாத எழுத்து எப்படி சராசரி மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும். ஒருவேளை நண்பர் சொல்கிறபடிக்கு அது வெறுமனே மகிழ்ந்திருப்பதற்கான, துக்கப்படுவதற்கான ஒரு கலை மட்டும்தானா ?அது பண்படுதலை எல்லாம் நிகழ்த்தாதா? ஒரு இலக்கிய வாசிப்பின் தேவைதான் என்ன?

அன்புடன்,
அகில் குமார்.

***

அன்புள்ள அகில்

எப்போதுமிருக்கும் கேள்விதான் இது. கம்பனைப்பற்றியும் காளிதாசனைப்பற்றியும் புழங்கும் கதைகள் எவையும் கௌரவமானவை அல்ல. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் ஆழ்ந்த விழுமியங்களை நிறுவிவிட்டுச்செல்ல கம்பனால் முடிந்தது அல்லவா? இன்றும் கம்பன் சொல்வழியாகத்தானே அவ்விழுமியங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம்?

அப்படியென்றால் ‘அதெப்படி கெட்டவன் நல்ல விழுமியங்களைப் பரப்பமுடியும்?” என்ற கேள்விக்கு பொருளே இல்லை. பரப்பி நிலைநாட்டியிருக்கிறான். அது கண்ணெதிரே மலைபோல நின்றிருக்கிறது. எப்படி நிலைநாட்டினான் என்றுதான் ஆராயவேண்டும்.

உங்கள் கேள்வியில் உள்ள பிழை இலக்கியவாதியை அறநெறி சொல்லும் உபதேசகனாக நினைத்துக்கொள்வதுதான். அதாவது கம்பன் காமத்திலாடலாம். வள்ளுவர் அப்படி இருக்கமுடியாது. இதுதான் வேறுபாடு. இலக்கியப்படைப்பு நெறிகளை அறிவுறுத்துவது அல்ல. அது வாழ்க்கையைச் சித்தரிப்பது. வாசகனை நிகர்வாழ்க்கை ஒன்றை வாழச்செய்வது

அவ்வாழ்க்கை அனுபவத்தை அடையும் வாசகன் தான் நெறிகளை அதிலிருந்து பெற்றுக்கொள்கிறான். எப்படி ஓர் உண்மை வாழ்வனுபவத்தில் இருந்து நெறிகளைப் பெற்றுக்கொள்கிறானோ அப்படி. அவ்வாறு உணர்வுச்செறிவுடன் வாழ்க்கையை அளிக்கும் எழுத்தாளன் பிறரை விட மேலதிக மென்மையுடன் மேலதிக நுண்மையுடன் மட்டுமே இருக்கமுடியும். சுந்தர ராமசாமியை மேற்கோளாக்கிச் சொன்னால் ஜன்னல் கம்பிகளுக்கும் வீணைத்தந்திகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு சாமானிய மக்களுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே உள்ளது

இந்த மென்மை, நுண்மை காரணமாகவே எழுத்தாளன் அல்லலுறுகிறான். வாழ்க்கையை வாழ அவனால் முடியவில்லை, வாழ்க்கையின் பொருளைத் தேடிக்கொண்டே இருக்கிறான். ஆகவே எல்லாரையும்போல ’நிம்மதி’யாக வாழமுடிவதில்லை. சின்னச்சின்ன விஷயங்களில் அமைதி இழக்கிறான். சாதாரண வாழ்க்கையைத் தாங்கமுடியாமல் அதை விசைகொள்ளச்செய்யும்பொருட்டு குடிக்கிறான். மிதமிஞ்சிய சினம் கொள்கிறான். கட்டற்று காமம் கொள்கிறான். அதீதமான மரணபயத்தில் உழல்கிறான். சாமானியரிடமில்லாத அறச்சீற்றம் கொள்கிறான். மிகப்பெரிய நம்பிக்கையையும் கனவையும் சென்றடைகிறான். சமயங்களில் விரக்தி மீதூறச் சரிகிறான். கட்டுமீறி களியாட்டமிடுகிறான். வறுமையில் உழல்கிறான். பூசலிடுகிறான். ஆணவம் கொள்கிறான். தனிமையில் இருக்கிறான்.

நீங்கள் ஓர் உதாரணபுருஷன் இலக்கியம் படைக்கவேண்டும் என விரும்பினால் அது எப்படி எளியவர்களின், வீழ்ச்சி அடைந்தவர்களின், புறக்கணிக்கப்பட்டவர்களின், தீயவர்களின் வாழ்க்கையாக ஆகும்? அது சான்றோர் மட்டுமே அறியும் ஓர் இலக்கியமாக அல்லவா இருக்கும்? அதற்கு என்ன உண்மையின் மதிப்பு இருக்கமுடியும்?

இலக்கியவாதி சமூகத்தின் வெவ்வேறு உறுப்பினர்களாக தான் மாறி நடிப்பவன். அதனூடாக தன் உள்ளத்தைக்கொண்டு அவ்வாழ்க்கையின் உள்ளாழத்தை அறிந்து எழுதுபவன். அத்தனை கீழ்மைகள் தீமைகளையும் அவன் தன்னுள் இருந்தே எடுக்கிறான். ஆகவே அத்தனை துயர்களையும் சரிவுகளையும் அவன் அடைகிறான். அத்துடன் அத்தனை மேன்மைகளையும் எழுச்சிகளையும் அவன் அடைகிறான்

எழுத்தாளன் நல்லுபதேசம் செய்யும் ஞானி அல்ல. அவன் வாழ்க்கையின் கீழ்மைகளில் தொடங்கி ஞானி அமர்ந்த உச்சம் வரைச் செல்பவன். ஆகவேதான் அவன் முழுவாழ்க்கையையும் எழுதமுடிகிறது. தல்ஸ்தோயை எப்படிச் சொல்வது? ஞானி அல்லவா? ஆம். மனைவியின் தங்கையுடன் கள்ளக்காதல் கொண்டவர் அல்லவா? ஆம். மாபெரும் அறச்சீற்றம் கொண்ட தத்துவவாதி அல்லவா? ஆம். காமத்தில் திளைத்தவர் அல்லவா? ஆம்

உங்கள் விவாதத்தின் சிக்கல் என்ன தெரியுமா? நீங்கள் விவாதித்தது இலக்கியவாசிப்பு அற்றவரிடம். இலக்கியவாசிப்பற்றவர்கள் இலக்கியம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டும் நன்னெறிகளின் தொகுதி என நினைப்பார்கள். இலக்கியவாசகன் அது ஒரு உயிருள்ள வாழ்க்கை என அறிவான். வாசிக்காதவர்கள் இலக்கியவாதியை ஒரு சான்றோன் என்பார்கள். வாசிப்பவர்கள் அவன் ஓர் உடலின் பல வாழ்க்கை வாழ்பவன் என நினைப்பார்கள்

ஜெ

 

afa94486-788b-411c-970d-f7e64d3c6edd

அகில்குமார் இணையதளம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கிராதம்,அய்யனார்,கதகளி

$
0
0

338px-Kalamandalam-Gopi-2

 

இனிய ஜெயம்,

 

 

ஜன்னல் இதழில்  நாட்டார் தெய்வங்கள் உருவான சாரத்தின் வித விதமான  வண்ண பேதங்கள் கூடிய உலகில் கற்பனையில் உலவிக்  கொண்டிருக்கிறேன்.  இதழ்களை சேர்த்து வைக்கும் பழக்கத்தை தற்ச்சமயம் கை விட்டு விட்ட்டதால், உண்மையில்  இத் தொடர் நூல் வடிவம் கொள்கையில்தான் அதில் மூழ்கித் திளைக்க வேண்டும். முன்பு ஒரு உரையாடலில்   சடங்குத் தெய்வம், தத்துவ தெய்வம் இவற்றுக்காண  பேதத்தை விளக்கி, தொடர்ந்து  அருள்மிகு எனும் அடைமொழியுடன்  நாட்டார் தெய்வங்கள்  பெருந்தெய்வங்களின் வரிசைக்குள் உயரும் பரிணாம கதிவரை   விளக்கினீர்கள்.  அன்றைய  உரையாடலின் தொடர்ச்சியாக சில வாரங்களுக்குள் இத் தொடர் வாசிக்கக் கிடைத்தது  என் நற்பேறு.

 

 

ஊரில் பெரிய சண்டியன், பெண்களை கவர்ந்து செல்கிறான், கைகலப்புக்கு அஞ்சாதவன், அரசனின் சட்ட திட்டங்களுக்கும் தண்டனைக்கும் கூட பயப்படாதவன். வஞ்சனையால் கொலை செய்யப் படுகிறான். பேயாய் அலைகிறான். கொல்லப்பட்டவன் சண்டியன் மட்டுமல்ல, அவன் உருவில் இங்கே வந்த, மானுடத்தின் சாரமான ”அடங்காமை”. வென்று செல்லும் ஷாத்ரம்,  குற்ற உணர்வில் ஊரார் அவனை சாமியாக்கி வழி படுகிறார்கள்.வீரத்துக்கு ஒரு சாமி.  பல நாட்டார் தெய்வங்களின் தோற்றப் பின்னணி இது. இந்தப் புள்ளியில்  வைத்து,  சந்தன வீரப்பன், [சாதி அமைப்புக்குள் என்றாலும் கூட] சில இடங்களில் குல சாமி அளவு கொண்டாடப்படும் நிலையின் பின்னுள்ள   காரணியை அறிய முடிகிறது.

 

நேர் எதிராக, கள்ளர் குடியில், மல்லர்கலான தந்தை தாய்க்குப் பிறக்கும் சோப்ளாங்கியின் கதை. பரிதாபமாக வாழ்ந்து, பரிதாபமாக செத்து, ஊரார் பரிதாபப்பட்டு அவனை சாமியாக்கி, அவன் ஒரு நாட்டார் தெய்வம். பரிதாபத்துக்கு ஒரு சாமி. தென்னன் தோப்பை காக்க, ஐயனாரின் நாயை தோப்புக்கு காவலாக மாமா மாற்றும் கதை மிக்க சுவாரஸ்யம் கொண்டது. அக் கதையின் இறுதியில் ஒரு வரி,// ” இன்று  பேய், என பயப்படும் பல விஷயங்கள், முன்பு வென்றவர்களின் [இன்றைய தோல்வியாளர்கள்] தெய்வமாக விளங்கியவை.’// ‘ மார்க்சிய சிந்தனையாளர் எஸ் ஏ டாங்கே, தனது கட்டுரை ஒன்றினில் இப்படி எழுதுகிறார், // ஒரு அரசியல் பண்பாடு பின்வாங்கி, புதிய அரசியல் பண்பாடு நிலைபெற்ற பின், முந்தய பண்பாட்டின் உயர்வான பல அலகுகள், இப்போது கீழான வெறுக்கத்தக்க, அல்லது பயப்படத் தக்க விஷயமாக காணக் கிடைக்கிறது//.

 

முன்பு ஆ கா பெருமாள் அவர்கள் வசம் ஒரு வினா எழுப்பினேன்.  இன்று எங்கெங்கும் காணக் கிடைக்கும் திரௌபதி அம்மன் கோவில், மயானக் கொள்ளை நிகழ்ச்சி, அனைத்துக்கும் மேலாக சபா பார்வ, பாரதப் போர் கூத்துக்கள், இங்கே வலுவான நாட்டார் கலையாக நிலை பெற்றது எப்படி?

 

அவர் சொன்னார், செவ்வியல் பாரதம்  நாட்டார் கலைகளை பாதித்து போல, நாட்டார் கலைகளில் இருந்தும் பல  அம்சங்களை செவ்வியலுக்குள் காணலாம். குறிப்பாக இந்த பரிவர்த்தனை தமிழகத்தில் பல்லவர் காலத்தில் வேகம் பெற்றது. அன்றைய அரசியல் நிலரவரப் படி, மக்கள் மத்தியில் போர் சார்ந்த விழுமியங்களை நிலை நிறுத்த, இங்கு ஏற்க்கனவே இருந்த வேறு கூத்துப் பிரதிகளுக்குப் பதிலாக, பாரதத்தின் பகுதிகள் பல்லவ அரசு மானியத்தில் கூத்தாக அரங்கேறின.

 

இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளின் ஒரு இழை  பாம்பும் கீரியும், கதையில் வருகிறது.  தொடரின் கதை வரிசை நெடுக வித விதமான தாய்களின் கண்ணீர்.  இக் கதையில் அந்த பிராமணத்தி ஏன் கிரியை, கொள்கிறாள் ? தனது மகனுக்கு இணையாக மறு முலையை கீரிக்கு அளித்து அதை வளர்த்தவள், ஒரு கணம் கூட சிந்திக்காமல் அதை அவளால் கொல்ல முடிகிறது என்றால் என்ன பொருள்? எந்த எல்லைக்கு சென்றாலும் தாயால் தன்னுடைய மகவுக்கு மட்டும்தான் தாயாக இருக்க முடியும், மற்றைய எல்லாம் வெறும் உள மயக்கு தானா? சிந்தனைகளை எங்கெங்கோ அழைத்து செல்லும் கதை. மகனை, கணவனை இழந்து, ஆற்றில் விழுந்து இறக்கிறாள், வெள்ளம் வந்து ஊரே அழிகிறது. ஊரார் அவளை சாமி ஆக்குகிறார்கள். ஊரை வெள்ளத்தில் இருந்து நோய் நொடிகளில் இருந்து காக்கும் சாமி ஆகிறாள் அவள். இன்னொரு எல்லையில் பாம்பும் கீரியும் எதிர் எதிர் நிலைகளில் நின்று அக் கூறு தத்துவ  எல்லைக்குள் காலடி வைக்கிறது. சடங்குத் தெய்வம், தத்துவ தெய்வத்தின் வரிசைக்கு உயரும் கூறு.  இக் கதை மகா பாரதத்திலும் வரும் கதை  என எழுதுகிறீர்கள்.

 

 

கிராதம் நாவல் குறித்த அறிவிப்பு கண்டேன். கிராதம் கதகளியில் முக்கிய இடம் வகிப்பது என்றும் எழுதி இருந்தீர்கள்.  இனிய ஜெயம், வெண் முரசு  வழங்கும் உணர்சிகரம், கதகளியில் தோயாமல் முழுமை கொள்ளாது என கடந்த சில நாட்கள் கிடந்தது ஊறிய கதகளி காணொளிகள் உணர்த்து கின்றன. உங்களது கலைக் கணம் வாசித்ததில் இருந்தே [அதற்க்கு முன் ஊட்டி குரு குலத்தில் ராஜீவன் அவர்களின் வெளிப்பாடு]  ஒரே ஒரு முறையாவது கதகளியை பார்த்து விட வேண்டும் என ஆவல் உந்தியது. சிதம்பர நாட்யாஞ்சலியில் என்னென்னவோ நடக்கிறது ஏன் ஒரே ஒரு முறை கூட கதகளி நடைபெற மறுக்கிறது என்ற என் உள்ளத்து வினாவுக்கு ஆலப்புழாவில் பதில் கிடைத்தது.

 

 

 

அஜிதனுடன் தொற்றிக் கொண்டு ஆலப்புழா சென்றேன். அருகே ஒரு கிராமத்தில் அன்று கிருஷ்ணன் கோவிலில் கதகளி.  ஒப்பனை துவங்கி, அதி காலை அனைத்தும் நிர்மால்யம் கொள்ளும் கணம் வரை அருகிருந்து கண்டேன். முதலில் ஒரு கதகளி நிகழ்ச்சி நடத்தி முடிக்க குறைந்த பக்ஷம் ஐம்பதாயிரம் முதல், ஒரு லட்சம் வரை தேவை, அதன் ஒப்பனை துவங்கி, ஒப்பனை கலைதல் வரை நடிகர்களுக்கு தேவையான நேரம், கதகளி இரவெல்லாம் அப்போதும் முடியவில்லை எனில் மறுநாள் இரவும் தொடரும் கலை, இது எதற்கும் நாட்யாஞ்லியில்  இடமே இல்லை.

 

 

 

அனைத்துக்கம் மேலே கதகளி ஒரு ரணகளமான நிகழ்த்துக் கலை. தமிழக சக்கரைப் பொங்கல் கோவில்கள் இதற்க்கு தாங்காது.  கதகளி ஒரு எல்லையில் மிகுந்த பிராந்திய தன்மை கொண்டது. மலையாளம் அறிந்திருந்தால் மட்டுமே முதல் கட்ட பிடி கிடைக்கும், [பாவம் அன்றெல்லாம் அஜிதனை நிகழ்வின் கூடவே அதை தமிழில்  மொழி மாற்றம் செய்ய சொல்லி அவனது கதகளி ஆவலை கொன்றேன்] அடுத்தது கை முத்திரைகள், இதில் தேர்ச்சி கொண்டால் மட்டுமே கதகளி ருசிக்கத் தொடங்கும்.

 

 

அன்று ஒரு இளம்பெண் முதன் முதலாக அணி புனைந்து புறப்பாடு செய்ய மேடை ஏறினாள். மணிமுடி, வாத்தியக் கலைங்கர்கள், மேடை என அப் பெண் ஒவ்வொன்றாக வணங்கும் போது, என்ன என்னவோ உணர்சிகள் உள்ளே முட்டி கண்கள் பனித்தன. அதன் பின் ருக்மாங்கத சரிதம், அதன் பின் வாலி வதம் . என்ன சொல்ல ஒரு புதிய கலை அறிமுகம் ஆகும் போது கிடைக்கும் புரியாமையும், பரவசமும், அதுதான் வாழ்வின் காதலனை உயிர்த்திருக்க செய்கிறது. அதை அன்று மீண்டும் அனுபவித்தேன்.

 

 

 

 

இல்லம் மீண்டு, கதகளி சார்ந்த அணைத்து காணொளிகள்களிலும் விழுந்து எழுந்து புகுந்து புறப்பட்டேன். கதகளி அறியாதவர்களால் செய்யப்பட்ட ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு. அந்த இடர் தாண்டியும் அக் கானோளிகளின் வசீகரம் குறையவில்லை. குறிப்பாக கர்ண சபதம். மனதுக்குள் ஆயிரம் முறை அம் மேடையை விழுந்து தொழுதேன். கர்ணனின் மனோ தர்மத்தில் ஒரு இடம்,  கர்ணன் குற்ற உணர்ச்சி மேலிட புலம்புகிறான், ”என்  தனுஷுக்கு எதிர் இங்கே ஏதும் இல்லை. ஆனால் இந்த ஞானம், குரு உளம் கனிந்து எனக்கு அருளியது அல்ல, குருவின் இதயத்தைப் பிளந்து நான் எடுத்துக் கொண்டது.” மொட்டை மாடி, இரவு, தனிமை, கலை மட்டுமே கிளர்த்தும் தூய துயரம்.

 

 

மனோ தர்மம்ஒ ரே உருவம், துரோணராக, பரசுராமராக, குந்தியாக, கர்ணனாக மாறி மாறி கூடு விட்டு கூடு பாய்ந்து மாயம் நிகழ்த்தியது. அந்த உருவத்தில் எதை நாம் துரோணராக, குந்தியாக, கர்ணனாக காண்கிறோம்?  குந்திக்கு பாண்டாவர்களின் உயிரை கர்ணன்உ த்திரவாதம் செய்யும் இடம். பல முறை மீண்டும் மீண்டும் கண்டு, அந்தக் கணத்தின் உணர்வு உச்சத்துக்கு சென்று சேர்ந்தேன். இனிய ஜெயம் உங்கள் நாவல் ஒன்றினில் ஒரு வரி வரும், பறந்து, பறந்து, பறவை உதிர்ந்து வெறும் பறத்தல் மட்டுமே எஞ்சும் கணம் என, அதைத்தான் அங்கே கண்டேன். அங்கே இருந்தது கர்ணனின் மேன்மை அல்ல,  வெளிப்பட்டத்து மேன்மை மட்டுமேயான மேன்மை. எனது கர்ணனை இங்குதான் முழுதாக கண்டு கொண்டேன்.

 

 

 

கர்ணனாக நடித்தவர் கலாமண்டலம் கோபி. இன்றைய கதகளியின் லிவிங் லேஜான்ட்.  அன்று அஜிதனுடன்  நெல்லியோடு வாசுதேவன் நாயர், மார்கி விஜயகுமார், கலாமண்டலம் கோபி  இவர்களின்  முன்னிலையில், இவர்கள் காலடியில் அமர்ந்து முதன் முதலாக கதகளியை அறிந்தேன். ருக்மாங்கதன் மகனை கொல்ல வாளுயர்த்தும் போது உயர்ந்த செண்டை,  வாலியின் இறுதித் துடிப்பு அடங்குகையில் வெளியே சன்னமாக பெய்துகொண்டிருந்த மழை, அனைத்தையும் நோக்கிக் கொண்டு நின்றிருந்த பம்பா விளக்கு. என்ன சொல்ல, எல்லாம் என் நல்லூழ்.  கிராதம் துவங்க வாழ்த்துக்கள் .

 

கடலூர் சீனு

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆழத்தின் முகங்கள்

$
0
0

முகங்களின் தேசம் குங்குமம்

 

lothal 7

 

குஜராத் சுற்றுலாப்பயணிகளின் கனவு பூமி .நமது தொன்மையான பண்பாட்டு அடையாளங்களில் பலவும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் தான் உள்ளன. பல காரணங்கள். முதன்மையானது, இவை அரைப்பாலைவனங்கள். அடர்ந்த காடுகள் பெரிய நாகரீகங்களை உருவாக்குவதில்லை. ஏனென்றால் நவீனச் சாலைகளும் எந்திரங்களும் வருவதற்கு முன்பு மழைக்காடுகளை அணுகுவதோ அழிப்பதோ அவ்வளவு எளிதல்ல. ஓரளவுக்கு மழை பொழிவுள்ள அரைப்பாலைவனங்கள்தான் இரும்பு கண்டுபிடிக்கப்படாத வெண்கலக்காலத்தில் மக்கள் குடியேறி வாழ்வதற்கும் விவசாயம் செய்வதற்கும் மிக ஏற்றவை.

ஆகவே தான் இந்திய பண்பாட்டின் தொடக்க கால அடையாளங்கள் அனைத்தும் சிந்து சமவெளியிலும், ராஜஸ்தான் பாலைவனத்திலும், குஜராத்தின் கட்ச் பாலைவனத்திலும் காணப்படுகின்றன. அவை ‘மறைந்த நாகரீகங்கள்’ என்று சொல்லப்படுகின்றன. ஆனால் தொல்பண்பாட்டின் அடையாளங்கள் எந்நிலையிலும் அழிவதில்லை. அந்த நாகரீகம் மறையும், ஆனால் அந்த பண்பாட்டு அடையாளம் ஏதோ ஒரு வகையில் மறுபிறப்பு எடுத்தபடியே இருக்கும்.

2012 ஜனவரி 28 ஆம்தேதி ஏழுநண்பர்களுடன் குஜராத்திற்குள் நுழைந்து அகமதாபாத் வழியாக குஜராத்தின் கடற்கரை பகுதியை சுற்றிக் கொண்டு கட்ச் நோக்கிச் சென்றோம். முதலில் தொன்மையான நகரமாகிய லோத்தலைப் பார்த்தோம். பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் சிந்து சமவெளி நாகரிகம் என்று படிக்கும்போது மொகஞ்சதாரோ ஹரப்பா என்று மனப்பாடம் செய்திருப்போம். அவை இந்தியாவில் ஆரியர்கள் புகுவதற்கு முன்பிருந்த மக்களின் நாகரிகம் என்றும் திராவிட நாகரிகமாக அவை இருக்கலாம் என்றும் நாம் சொல்லிக்கேட்டிருப்போம்.

ஜான் மார்ஷலும் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாமும் ஆர்.டி.பானர்ஜியும் மொகஞ்சதாரோவையும் ஹரப்பாவையும் 1870களில் அகழ்ந்து எடுத்த போது அந்த இரு தொல்நகரங்களே அறிய வந்தன. அவற்றைக் கொண்டு அந்தப் பண்பாடு ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்த ஒரு மிகச் சிறிய நகரப்பண்பாடு என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தார்கள். அந்த பண்பாடு அத்தனை வளர்ச்சி அடைந்திருந்ததைக் கண்டு அவர்கள் எப்படி வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை ஊகிக்க முயன்றார்கள். அப்படித்தான் அன்றைய குறைந்த தகவல்களைக்கொண்டு அவர்கள் ஆரியரல்லாத நகரநாகரீகத்தினர் என ஊகித்தனர்.

ஆனால் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மொகஞ்சதாரோ ,ஹரப்பா நாகரிகத்தை சேர்ந்த அதைவிடவும் காலத்தால் முந்தைய பல தொல்நகரங்கள் இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை லோத்தல், டோலவேரா, காலிஃபங்கன் ஆகியவை. இவ்வளவு பெரிய நாகரீகம் போரால் அழிந்திருக்காது, சூழியல் மாற்றமே காரணம் என்று இன்று ஊகிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல அந்த நிலம் வரண்டு பாலைவனமாகியபோது அந்த நாகரீகம் அழிந்தது. ஆனால் அந்த மக்கள் மறையவில்லை, அவர்கள் வேறுநிலங்களில் குடியேறி வேறுவகையில் வளர்ந்தனர். அவர்கள்தான் நாம்.

1954ல் லோதல் பற்றிய முதல் தடயம் கிடைத்தது. 1955இல் பெப்ருவரி 13 ஆம் தேதி லோதல் எஸ்.ஆர்.ராவ் தலைமையிலான குழுவால் முதல்முறையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஐந்தாண்டுக்கால ஆராய்ச்சிக்குப்பின் 1960 இல் இந்தியத் தொல்லியல் துறை அந்நகரைப் பாதுகாக்க ஓர் அமைப்பை உருவாக்கியது. அதைப்பற்றிய ஆய்வேடுகள் வெளியிடப்பட்டன.

கிமு இருபத்துநான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்நகரம் இது. லோதல் என்றால் மரணமேடு என்று குஜராத்தி மொழியில் பொருள். மொகஞ்சதாரோவுக்கு சிந்தி மொழியில் அதே பொருள்தான். இன்று ஒரு மேடாக இருக்கும் இந்த இடம் வரை சமீபகாலம் வரை கடல் இருந்திருக்கிறது. லோதல் நெடுங்காலம் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது.

லோதலின் ஆச்சரியங்களில் முதலானது அங்குள்ள நுட்பமான சுடுமண் முத்திரைகளும் எழுத்துக்களும். பாடநூல்களில் மட்டுமே கண்ட சிந்துசமவெளி எழுத்துக்களை நேரில் கான்பது பிரமிப்பூட்டும் அனுபவம். பெரும்பாலான முத்திரைகளில் சிந்துவெளிக்காளையும் ஒற்றைக்கொம்பு மிருகமும் இருந்தன.

லோதல் நகருக்குள் நடந்தோம். உறுதியான சுட்டசெங்கற்களால் ஆன அடித்தளங்கள். சுவர்கள். அவை நாலாயிரத்தைநூறு வருடம் முந்தையவை எனக் கற்பனை செய்யவே பிரமிப்பாக இருந்தது. உயர்ந்த நகர்மையம். அங்கே பெரிய மாளிகைகளுக்கான அடித்தளங்கள். குளியலறைகள். அங்கிருந்து நீர் வழிந்தோடும் கச்சிதமான சாக்கடை அமைப்புகள். நகர் நடுவே சதுக்கபீடங்கள்.

லோதலின் முக்கியமான அமைப்பு என்பது அங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய துறைமுகக்குளம்தான். ஒரு பெரிய படகுத்துறை இது. அறுபதடி நீளமான படகுகளைக்கூட லோதல் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் ஏறி நெடுந்தூர கடற் பயணங்களைச் செய்திருக்கிறார்கள். சுமேரியாவுடன் வணிகம் செய்திருக்கிறார்கள். அக்காலத்தில் கடல் மிக அருகே இருந்தது, கடல்பாசிகளின் புதைவடிவத் தடம் வழியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

படிப்படியாக இறங்கி சென்று ஆழத்தில் மண்ணுக்கு அடியில் ஆழத்தில் நமது தொல்வரலாற்றில் இருப்பது போன்ற ஒரு அனுபவம். அக்கால மக்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்த சிறிய களிமண் பொம்மைகளை பார்த்தபோது பெருவியப்பே ஏற்பட்டது.

கட்ச் பகுதியின் ஆச்சரியங்களில், ஒன்று சிந்து சமவெளியின் இலச்சினைகளில் இருக்கும் அதே காளையை அங்கே அரைப் பொட்டலில் மேய்ந்து கொண்டிருப்பதாக காணமுடியும் என்பது. காலம் நான்காயிரம் வருடம் ஓடிப்போய்விட்டதை அது அறியவே இல்லை என்று தோன்றும். உயர்ந்த புள்ளிருக்கையும் தாழ்ந்த கழுத்து மடிப்புகளும் குட்டைக் கால்களுமாக அது சிலிர்த்தபடி நம்மைப் பார்க்கையில் ஹரப்பா நாகரிகம் நம்மை திகைப்புடன் நோக்குவதாகத் தோன்றும்.

லோத்தலில் இருந்து டோலவேராவுக்கு கட்ச் வளைகுடாக்கரை வழியாகச் செல்லும் போது வழியில் ஒரு உப்பு வளைகுடாவை பார்த்தோம். கடல் நீர் தேங்கி கடுமையான வெயிலில் ஆவியாகி வற்றி கீழிறங்கி செல்கிறது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெண்ணிற உப்பு மட்டுமேயான கடல். கண்ணாடி பரப்பு போல அதில் படர்ந்த வெயில் கண்களை கூசி நீர்வழியச் செய்தது. எங்கள் எவரிடமும் கறுப்புக்கண்ணாடிகள் இருக்கவில்லை. ஆகவே கண்களை மூடியபடி அந்த உப்புப் பரப்பின் மேல் ஏறி நடந்தோம். மீன்களும் நண்டுகளும் உப்புக்குள் செத்து கலந்திருந்தன. சேறும் உப்புமாக காலடியில் மிதிபட்டு குழம்பின. உள்ளே செல்லச் செல்ல உப்புக் குவியல்கள் கால்பட்டவுடன் நொறுங்கி உள்ளே இழுத்துக் கொண்டன. மேலும் செல்வதற்கு அஞ்சி திரும்பிவிட்டோம்.

உப்பு வளைகுடாவிலிருந்து செல்லும் பாதை எங்களுக்குத் தவறிவிட்டது. இந்த நிலம் உயரமற்ற குட்டை மரங்களும் முட்புதர்களும் மட்டும் கொண்டது. தொலைவிலிருந்து பார்க்கையில் வண்டிச்சாலைகள் கூட ஒற்றையடிப்பாதை என்று தோன்றும் அளவுக்கு விரிந்து பரந்தது. சாலை அடையாளங்கள் என ஏதுமில்லை. சாலையில் எவரிடமும் வழி கேட்கவும் முடியாது. ஏனெனில் மனிதர்களைப்பார்ப்பதே மிக அரிது. பார்க்கும் மனிதர்களுக்கும் அவர்களின் உள்ளூர் குஜராத்தி தவிர எந்த மொழியும் தெரிவதில்லை. அவர்கள் வாழும் மிகச்சிறிய வட்டத்திற்கு அப்பால் வழியும் தெரிவதில்லை.

ஒரு இடத்தில் வழி தவறிவிட்டால் கூட மீண்டும் ஒரு சாலையை பிடிப்பதற்கு முன்னூறு கிலோமீட்டருக்கு மேல் சென்றாக வேண்டும். நெடுந்தொலைவு சென்ற பிறகுதான் வழி தவறிவிட்டது என்பதை உணர்ந்தோம். அன்றெல்லாம் GPS இல்லை என்பதனால் வழியை வரைபடத்தை வைத்து தான் கண்டுபிடிக்கவேண்டும். வரைபடங்களோ இருபது முப்பது வருடம் பழையவை. ஒரு வழியாக ஊகித்து திரும்பி ஓட்டினோம். மாலையில் பலநூறாண்டுகளுக்கு முன்பு வற்றிப் போன பிரம்மாண்டமான ஏரி ஒன்றுக்குள் சென்று இறங்கினோம்.

என் வாழ்வின் மிக அற்புதமான காட்சிகளில் ஒன்று அந்த ஏரி. மழைக்காலத்தில் அது நனைந்து சேறாகிவிடுகிறது. மழை முடிந்ததும் அந்தச் சேறு வெடித்து பாளங்களாகிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை களிமண் ஓடுகளைப் பரப்பி தரையிட்டதைப் போல் இருந்தது.

அந்தி சாய்ந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டியின் டயர் பொத்தலாகி சரிந்து நின்றுவிட்டது. ஓட்டுநர் சபித்தபடி அதை மாற்ற ஆரம்பித்தார். அதைப்பற்றி கவலையே படாமல் இறங்கிச் சென்று அந்தப்பாளங்களை எடுத்து சுழற்றி வீசி விளையாடினோம் ஒரு இஞ்சு கனம் கொண்ட களிமண் பாளங்கள். தொலைவில் நின்று பார்க்கையில் பிரம்மாண்டமான தோல்பையின் மேல் பகுதி போலவோ மாபெரும் முதலை ஒன்றின் தோல் போலவோ மரப்பட்டையின் பரப்பு போலவோ பிரமை தட்டியது. அல்லது வேறு ஏதோ கிரகத்தில் சென்று அங்குள்ள நிலப்பரப்பில் நடப்பது போல

பழுதை நீக்கி புதிய சக்கரத்தை மாட்டியவுடன் கிளம்பியபோது சிவப்பு வானம் குடைபோலச் சூழ்ந்திருந்தது. செல்லச் செல்ல எதுவுமே தென்படாமல் நான்கு பக்கமும் அந்த மாபெரும் களிமண் பரப்பே வந்து கொண்டிருந்தது. நிலம் மாறுபடாத போது உண்மையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோமா இல்லை ஒரே இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் வந்துவிட்டது.

நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் புழுதியுடன் விரைந்து கொண்டிருந்தது கார். ஒருமணி நேரம் ஆகியும் எதிரே எந்த வண்டியும் வரவில்லை. எந்த ஊரும் தெரியவில்லை. “இதன் மறுபக்கத்தில் கடல்தான் இருக்க போகிறது திரும்பிவிடுவோம்” என்றார் கிருஷ்ணன். சேற்று வெளிக்கு அப்பால் சூரியன் குழம்பி சிவந்து அணைந்தது. “இருட்டாகிறது. நம்மிடம் குடிநீர் கூட இல்லை” என்றார் கடலூர் சீனு. “திரும்புவோம்” என்று பல குரல்கள் எழுந்தன. ஓட்டுநர் “அவ்வளவு தூரம் திரும்பிப் போனால் அங்கும் பாலைவனம் தான் இருக்கிறது. எங்கு போவது?” என்றார்.

”மிகச்சரியாக நடுவில் வந்து மாட்டிக் கொண்டுவிட்டோம்” என்றார் ராஜமாணிக்கம். “வேறு வழியே இல்லை முன்னால் சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். எப்படியும் இதன் மறுபக்கம் ஒன்று இருக்கும்” என்றார் டிரைவர். “செல்வோம்” என்று துணிந்தோம். வேறுவழியே இல்லை.

மிக விரைவிலேயே காற்று இருட்டாகிவிட்டது. வானத்தில் மட்டும் மெல்லிய ஒளி இருந்தது. சற்று நேரத்தில் வேறெங்கும் பார்க்க முடியாதபடி வானம் விண்மீன்கள் செறிந்து ஒளி கொண்டது. விண்மீன்களின் ஒளியை நிலவொளி போல பார்க்க முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன். அந்த வெளிச்சத்தில் தகடுகளாக அடுக்கப்பட்டிருந்த நிலம் லேசாக மின்னியபடி எங்களைச் சுழன்று வந்தது.

நெடுநேரம் கடந்தபின் மிகத் தொலைவில் ஒரு சிவந்த புள்ளியை பார்த்தோம். ”நெருப்பு! நெருப்புதான் அது!” என்று நண்பர்கள் கூவினார்கள். ”யாரோ விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள்” என்றார் கிருஷ்ணன். “விளக்கென்றால் அவ்வளவு தூரம் தெரியாது” என்றார் கடலூர் சீனு. “காட்டுத்தீயாக இருக்குமோ?” என்றார் கே.பி.வினோத். “அதற்கு இங்கே காடு எங்கே இருக்கிறது?” என்றேன் நான். “அங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் தானாக தீ எரிய வாய்ப்பே இல்லை. மட்டுமல்ல, அந்த தீ பரவவும் இல்லை. அதை நோக்கி செல்வோம்” என்றேன்.

கார் அதை நோக்கி சென்றது எவ்வளவு ஓடியும் அந்நெருப்பு கூடவோ குறையவோ இல்லை என்று தோன்றியது. ஆனால் மெல்ல அத்தீக்கு சுற்றும் மாடுகள் நிற்பதை மெல்லிய நிழலுருவமாக கண்டோம். மேலும் அணுகியபோது உயரமற்ற துணிக் கூடாரங்களை கண்டோம். ”மனிதர்கள்! மனிதர்கள்!” என்று உற்சாகத்துடன் கூவினோம். நாங்கள் அணுகிய போது அவர்கள் நெருப்பை தணித்து கனலாக்கி வைத்திருந்தார்கள்.

வண்டியை நிறுத்தினோம். நூறு மாடுகளுக்கு மேல் அங்கே பட்டி கட்டப்பட்டிருந்தன. எல்லாமே சிந்துசமவெளியின் இலச்சினையில் உள்ள மாடுகள். அவற்றின் உரிமையாளர்கள் ஐவர் அந்தக் கனலைச் சுற்றி கம்பளிகளைப்போர்த்தியபடி அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் மூன்று துணிக்குடில்களுக்குள் குழந்தைகளும் பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் இறங்கி அவர்களை நோக்கி சென்றோம்.

எங்களைப்பார்த்ததுமே ”ஆவோ பாய்” என்று ஒருவர் உரக்க வரவேற்றார். ”வாருங்கள்! சகோதரனே!” என்று முற்றிலும் முகமறியாத ஒருவரை அழைக்க மனிதர்களை காண்பதே அரிதாக உள்ள பாலைவனத்தில் வாழவேண்டும்போல. நாங்கள் எதுவும் கேட்பதற்குள்ளேயே ”அமருங்கள் டீ குடியுங்கள்” என்றார். நாங்கள் ‘அமுதம் அருந்துங்கள்’ என்ற அழைப்பாகவே அதை எடுத்துக் கொண்டோம். நெருப்பை சுற்றி உடல் குறுக்கி அமர்ந்தோம்.

ஒருவர் ஒரு பெரிய அலுமினிய கெட்டிலை அந்தக் கனல் மேல் இருந்த கம்பியில் கட்டித்தொங்கவிட்டு நீர் ஊற்றினார். கொதிக்கும் ஒலி கேட்டதும் எடுத்து மண் கோப்பைகளில் ஊற்றி சூடான பால்விட்டு தேநீர் தயாரித்து எங்களுக்கு அளித்தார். ”மன்னிக்கவேண்டும் உண்பதற்கு ஏதும் இல்லை” என்றார். ”இல்லை நாங்களே வைத்திருக்கிறோம்” என்றோம். கிருஷ்ணன் சென்று காரிலிருந்து பிஸ்கட்டுகளையும் ரொட்டியையும் எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்தார்.

நாங்கள் வழி தவறிவிட்டதைச் சொன்னோம். ”நீங்கள் வழி தவறவே இல்லை இதுதான் அந்த வழி” என்றார் ஒருவர். “இங்கிருந்து இடமாக சென்றால் அரை மணி நேரத்தில் முதல் ஊர் வரும் அங்கிருந்து தார் சாலை இருக்கிறது அதில் மேலும் ஒரு மணி நேரம் சென்றால் நீங்கள் தங்குவதற்கு விடுதிகள் உள்ள சிறிய ஊர் வரும்” என்றார்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்றேன். ”நாங்கள் இப்பகுதியில் மாடுமேய்க்கிறோம். இங்கு மாடுகளை நெடுந்தொலைவுக்கு கொண்டு சென்றால் மட்டும்தான் புல் கிடைக்கும்” என்றார். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விடை பெற்று வண்டியில் ஏறிக் கொண்டோம்.

சென்று அடுத்த ஊரை அடைந்த போதுதான் ராஜமாணிக்கம் சொன்னார். “அவங்க முகமே நாம பாக்கலை சார்!” அவர்கள் எவருடைய முகமும் எங்களுக்குத் தென்படவே இல்லை. அவர்கள் குனிந்து அமர்ந்திருந்தமையாலும் தலையை கம்பளியால் மூடிக் கொண்டிருந்தமையாலும் முகங்கள் இருளுக்குள் இருந்தன.

“அவங்க சிந்துசமவெளியிலே வாழ்ந்தவங்களா இருப்பாங்களோ? மாடுகளைப்பாத்தீங்கல்ல?” என்று கிருஷ்ணன் சொன்னார். வாய்விட்டுச் சிரித்தாலும் அப்படிக் கற்பனைசெய்வது நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது

 

 

முகங்களின் தேசம் குங்குமம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்

$
0
0

index

அன்புள்ள ஜெ.

ஒரு புதிய வாசிப்பனுபவம்.

இரண்டு அல்லது மூன்று குறியீடுகள் தோன்றி மறைந்தன.. மனதில். சுக்கிரன் அல்லது வீனஸ் ஒரு முகம் மட்டுமே சூரியனை நோக்கி. எனவே ஒருபுறம் அதிக வெப்பம். மறுபுறம் அதிக குளிர். என்றென்றும் பகல் தரும் கிரகம். (அல்லது இரவு தரும்). தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும், சூரியனைச் சுற்றி வரவும் சுமார் 230 பூமி நாட்கள். (ஒரு சில அறிஞர்கள் இந்த கணக்கில் வேறு படுகிறார்கள்) எனினும் மனதில் அசை போட ஒரு நல்ல சிந்தனை.

நம் சந்திரனும் அது போன்றே. நமக்கு ஒருமுகமே காட்டும் ஒரு பேரழகி.

குட்டி இளவரசன் – என்கிற கதையில் (லிட்டில் பிரின்ஸ் தமிழாக்கம்) – அவன் சூரிய அஸ்தமனத்தில் அதன் அழகில் மயங்கி, அவனது சிறிய கிரகத்தில் நடந்து சென்று பலமுறை (47 தடவை?) அனுபவித்ததை கதை ஆசிரியரிடம் சொல்வான். அதுவும் நினைவிற்கு வந்தது.

பட்டி விக்ரமாதித்தன் – நாடாறு மாதம், காடாறு மாதம் என்கிற கதைகள் வேறு.

ஒரு வேளை நம் மரங்களும் அன்றாட பகலை விரும்புமோ? சுட்டெரிக்கும் வெயிலைத் தேடி, அன்புள்ள, என்புள்ள ஓருயிரின் முடிவற்ற பகலில் ஒரு சோகம்.. ஒரு அழகு.

அன்புடன்

முரளி

கதை முடித்தவுடன், விகடனில் வந்திருக்கிறதே, வார பத்திரிக்கைகளில் எழுத படும் contentஐ கிழி கிழி என கிழித்திருக்கிறாரே. இந்த கதை விகடனில்  பிரசுரமே பகடிதானோ என்று தோன்றியது. அதுவும் முடிவு. இலக்கியம் என்றால் இடைவெளி் இருக்க வேண்டும். எதை வேண்டுமானால் போட்டு நிரப்பி கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுகிறார் என்று பட்டது.  கதையில் அகழ்வாராய்ச்சியெல்லாம் செய்ய கூடாது என்பவர்களுக்கான உள்குத்து  இருக்கிறதோ என்றும் தோன்றியது.

திரும்பவும் கதையின் ஆரம்ப வரிகள் படித்தால் “கணக்கு” என்ற சொல் கதையை திறந்து விட்டது.

உலகத்தை சுற்றி எண்பது நாட்களில் (Around the world in 80 days), கதை நாயகன், பிளியாஸ் ஃபாக் (Philleas Fogg), இலண்டனில் ஒரு க்ளபில், ஒரு பெரிய தொகையை பந்தயமாக வைத்து, உலகத்தையே எண்பது நாட்களில் சுற்றி வருகிறேன் என்று கிளம்புகிறான். இந்தியாவில் புது இரயில் தடம் அமைக்கபட்டுள்ளதால், இது சாத்தியம் என்று “டெய்லி டெலிகிராஃப்” செய்தி ஒன்றின் விவாதம், பந்தயமாக மாறுகிறது. சூயஸ் கனல், இந்தியா, ஹாங்காங்க், சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் வழியாக இலண்டன் வந்தடைகிறான். வழியில், யானை, உடன் கட்டையிலிருந்து ஒரு இளவரசியை காப்பாற்றுவது, கப்பலை தவறவிடுவது, வங்கி கொள்ளைகாரன் என்று ஒரு துப்பறிவு சிங்கம்  இவனை பின்னால் தொடர்வது  என்று கதை முழுவதும் சாகசங்கள். இலண்டன் வந்து சேரும் பொழுது 81 நாட்கள் ஆகி விடுகின்றன. பந்தயத்தில் தோற்றுவிட்டோம் (இன்றைய பணம் படி 15 கோடி ரூபாய்) என்றிருக்கையில், அவனது வேளையாள் நாட் கணக்கில் ஏதோ தவறு. உங்கள் கெடு முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளன என்று வந்து சொல்ல, அடித்து பிடித்து க்ளபிற்க்கு சென்று பந்தயத்தை வெல்லுகின்றான்.

81 நாட்கள் 80 நாட்கள் ஆன விந்தை, International Dateline உடன் தொடர்புள்ளது. கிழக்கே சென்று உலகத்தை சுற்றினால் ஒரு நாள் நாளடேனின் படி பயணிப்பவருக்கு அதிகம் கிடைக்கும். ஃபாக் 81 நாட்கள் வாழ்ந்திருக்கிறான் ஆனால் இலண்டன் கணக்குபடி 80 நாட்கள்தான்.

உங்கள் கதையும் இதையே தொட்டு செல்லுகிறது. உயிர் விசையான சூரிய ஒளியை, இறப்பை தவிர்க்கும் பொருட்டு பாவிக்கும் ஜப்பானியனின் கதை. வாழ்வது என்பது எது, இறப்பு என்பது எது என்ற கேள்விகளை வாசகனின் மனதில் விவாதிக்க தூண்டும் கதை.

24 மணி நேரத்தில் ஒரு முறை உலக்கத்தை சுற்றி வருகிறான். அவன் கணக்கு படி 28 வருடங்கள்.  ஐன்ஸ்டீனின் சார்பியில் கோட்பாடின் மற்றும் Time dilation படி மேற்கே 1200 mph பறக்கும் விமானத்தில் சுற்றுபவன் ஒரு சுற்றுக்கு நானோ வினாடிகள் அளவுக்கு தான் அவனால் நிலத்தில் இருப்பவர்களைவிட அதிகம் வாழ முடியும். 28 வருடங்களில் ஒரு வினாடியைவிட குறைவான அளவுதான். அந்த மைக்கரோ வினாடி இறப்பை தள்ளி வைக்க 28 வருடங்கள் விமானத்தில் சுற்றல்.

இந்த கணக்கைதான், கதை சொல்லி கதையின் ஆரம்பத்தில் போட எண்ணுகிறார்.

கிரேக்க தொன்மங்களில் ஒரு கூறு உண்டு. கடவுள்கள் எப்பொழுதும் மனிதர்களை பார்த்து பொறாமை கொள்வார்கள். வாழ்வது என்பது நொடி பொழுதில் மறைந்து போக கூடியது. அதனால் மனிதர்கள் வாழ்வை அநுபவிக்க பல விதங்களை கண்டு பிடிக்கின்றனர். ஆனால் கடவுள் என்பவர் இறப்பே அற்றவர். சலிப்பு அளிக்க கூடிய வாழ்க்கை. கதையிலும் சலிப்பு என்பது நிறைய இடங்களில் வருகிறது.

இந்த ஜப்பானியரும் airport விட்டு வெளிவருவதில்லை. உலகத்தை சுற்றினாலும் உலகத்தை அநுபவிக்காதவர். Philleas fogg எண்பது நாட்களில் வாழ்ந்த்தில் ஒரு துரும்பும் வாழாதவர். இவர் வாழ்பவரா? இறந்ததவரா?

கதை சொல்லி இரவையும் அநுபவிக்கிறார், அதன் நீராவி தன்மையையும் உறக்கத்தில் உணர்கிறார்.

வாழ்வில் இந்த கதையை போட்டு பார்த்தால், ஒரு நாளையில் நான்கு மணி நேரம் வேலைக்கு பயணம் செய்யும் என் நண்பனின் புலம்பல் நினைவுக்கு வந்தது. அந்த நொடியில் வாழ்க்கை வாழுவது வாழக்கையா இல்லை வாழ்க்கை  காலையில் குழந்தைகள் எழும் முன் புறப்பட்டு, அவர்கள் உறங்கிய பின் வீட்டிற்க்கு செல்லும் வாழ்வு. இத்தனைக்கும் அடிப்படை தேவைகளுக்கு மேல்  உயரிய பொருளியல் சூழலில் வாழ்க்கை தரம். எலி ஓட்டத்தில் ஒடு்வது, சூரியன் அஸ்தமித்து இரவு வந்துவிடாமல் இருப்பதுக்கு  மட்டுமே வாழுவது வாழ்க்கையா என்ற கேள்வி எஞ்சுகிறது.

சதீஷ்.

ஜெ,

கதை முடித்தவுடன், விகடனில் வந்திருக்கிறதே, வார பத்திரிக்கைகளில் எழுத படும் contentஐ கிழி கிழி என கிழித்திருக்கிறாரே. இந்த கதை விகடனில்  பிரசுரமே பகடிதானோ என்று தோன்றியது. அதுவும் முடிவு. இலக்கியம் என்றால் இடைவெளி் இருக்க வேண்டும். எதை வேண்டுமானால் போட்டு நிரப்பி கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுகிறார் என்று பட்டது.  கதையில் அகழ்வாராய்ச்சியெல்லாம் செய்ய கூடாது என்பவர்களுக்கான உள்குத்து  இருக்கிறதோ என்றும் தோன்றியது.

திரும்பவும் கதையின் ஆரம்ப வரிகள் படித்தால் “கணக்கு” என்ற சொல் கதையை திறந்து விட்டது.

உலகத்தை சுற்றி எண்பது நாட்களில் (Around the world in 80 days), கதை நாயகன், பிளியாஸ் ஃபாக் (Philleas Fogg), இலண்டனில் ஒரு க்ளபில், ஒரு பெரிய தொகையை பந்தயமாக வைத்து, உலகத்தையே எண்பது நாட்களில் சுற்றி வருகிறேன் என்று கிளம்புகிறான். இந்தியாவில் புது இரயில் தடம் அமைக்கபட்டுள்ளதால், இது சாத்தியம் என்று “டெய்லி டெலிகிராஃப்” செய்தி ஒன்றின் விவாதம், பந்தயமாக மாறுகிறது. சூயஸ் கனல், இந்தியா, ஹாங்காங்க், சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் வழியாக இலண்டன் வந்தடைகிறான். வழியில், யானை, உடன் கட்டையிலிருந்து ஒரு இளவரசியை காப்பாற்றுவது, கப்பலை தவறவிடுவது, வங்கி கொள்ளைகாரன் என்று ஒரு துப்பறிவு சிங்கம்  இவனை பின்னால் தொடர்வது  என்று கதை முழுவதும் சாகசங்கள். இலண்டன் வந்து சேரும் பொழுது 81 நாட்கள் ஆகி விடுகின்றன. பந்தயத்தில் தோற்றுவிட்டோம் (இன்றைய பணம் படி 15 கோடி ரூபாய்) என்றிருக்கையில், அவனது வேளையாள் நாட் கணக்கில் ஏதோ தவறு. உங்கள் கெடு முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளன என்று வந்து சொல்ல, அடித்து பிடித்து க்ளபிற்க்கு சென்று பந்தயத்தை வெல்லுகின்றான்.

81 நாட்கள் 80 நாட்கள் ஆன விந்தை, International Dateline உடன் தொடர்புள்ளது. கிழக்கே சென்று உலகத்தை சுற்றினால் ஒரு நாள் நாளடேனின் படி பயணிப்பவருக்கு அதிகம் கிடைக்கும். ஃபாக் 81 நாட்கள் வாழ்ந்திருக்கிறான் ஆனால் இலண்டன் கணக்குபடி 80 நாட்கள்தான்.

உங்கள் கதையும் இதையே தொட்டு செல்லுகிறது. உயிர் விசையான சூரிய ஒளியை, இறப்பை தவிர்க்கும் பொருட்டு பாவிக்கும் ஜப்பானியனின் கதை. வாழ்வது என்பது எது, இறப்பு என்பது எது என்ற கேள்விகளை வாசகனின் மனதில் விவாதிக்க தூண்டும் கதை.

24 மணி நேரத்தில் ஒரு முறை உலக்கத்தை சுற்றி வருகிறான். அவன் கணக்கு படி 28 வருடங்கள்.  ஐன்ஸ்டீனின் சார்பியில் கோட்பாடின் மற்றும் Time dilation படி மேற்கே 1200 mph பறக்கும் விமானத்தில் சுற்றுபவன் ஒரு சுற்றுக்கு நானோ வினாடிகள் அளவுக்கு தான் அவனால் நிலத்தில் இருப்பவர்களைவிட அதிகம் வாழ முடியும். 28 வருடங்களில் ஒரு வினாடியைவிட குறைவான அளவுதான். அந்த மைக்கரோ வினாடி இறப்பை தள்ளி வைக்க 28 வருடங்கள் விமானத்தில் சுற்றல்.

இந்த கணக்கைதான், கதை சொல்லி கதையின் ஆரம்பத்தில் போட எண்ணுகிறார்.

கிரேக்க தொன்மங்களில் ஒரு கூறு உண்டு. கடவுள்கள் எப்பொழுதும் மனிதர்களை பார்த்து பொறாமை கொள்வார்கள். வாழ்வது என்பது நொடி பொழுதில் மறைந்து போக கூடியது. அதனால் மனிதர்கள் வாழ்வை அநுபவிக்க பல விதங்களை கண்டு பிடிக்கின்றனர். ஆனால் கடவுள் என்பவர் இறப்பே அற்றவர். சலிப்பு அளிக்க கூடிய வாழ்க்கை. கதையிலும் சலிப்பு என்பது நிறைய இடங்களில் வருகிறது.

இந்த ஜப்பானியரும் airport விட்டு வெளிவருவதில்லை. உலகத்தை சுற்றினாலும் உலகத்தை அநுபவிக்காதவர். Philleas fogg எண்பது நாட்களில் வாழ்ந்த்தில் ஒரு துரும்பும் வாழாதவர். இவர் வாழ்பவரா? இறந்ததவரா?

கதை சொல்லி இரவையும் அநுபவிக்கிறார், அதன் நீராவி தன்மையையும் உறக்கத்தில் உணர்கிறார்.

வாழ்வில் இந்த கதையை போட்டு பார்த்தால், ஒரு நாளையில் நான்கு மணி நேரம் வேலைக்கு பயணம் செய்யும் என் நண்பனின் புலம்பல் நினைவுக்கு வந்தது. அந்த நொடியில் வாழ்க்கை வாழுவது வாழக்கையா இல்லை வாழ்க்கை  காலையில் குழந்தைகள் எழும் முன் புறப்பட்டு, அவர்கள் உறங்கிய பின் வீட்டிற்க்கு செல்லும் வாழ்வு. இத்தனைக்கும் அடிப்படை தேவைகளுக்கு மேல்  உயரிய பொருளியல் சூழலில் வாழ்க்கை தரம். எலி ஓட்டத்தில் ஒடு்வது, சூரியன் அஸ்தமித்து இரவு வந்துவிடாமல் இருப்பதுக்கு  மட்டுமே வாழுவது வாழ்க்கையா என்ற கேள்வி எஞ்சுகிறது.

சதீஷ்.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’  சிறுகதையை படித்துவிட்டு உறைந்து விட்டேன்.
நான் உறைந்தேனா அல்லது காலம் உறைந்ததா தெரியவில்லை. ஒரு படைப்பும்
அதை படிக்கும் மனமும் கண்ணாடியில் எதிரெதிரே பார்த்துக்கொண்டு உறைவதென்பது அரிதாகவே நடக்கிறது.
பெரிய வைரக்கல் ஒன்றில் ஒளி பட்டு சிதறி ஜொலிப்பது போல், இந்த சிறுகதையை எந்த பரிமாணத்தில் பார்த்தாலும் ஒளிர்கிறது. உடைந்த வளையல் துண்டுகளை கலைடோஸ்கோப்பில் போட்டு குலுக்கி குலுக்கி பார்த்து மகிழ்வது போல் , இந்த சிறுகதை மீண்டும் மீண்டும் சுண்டியிழுக்கிறது.
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, இரவு-பகல், கிழக்கு-மேற்கு,ஆண்-பெண், அகம்-புறம், பிறப்பு-இறப்பு, ஊதா-சிவப்பு, உறவு-பிரிவு, புனைவு-உண்மை, கனவு-நிஜம், நோய்-மருந்து, குற்றம்-தண்டனை,  கடந்த காலம்-எதிர்காலம்  என்று சமச்சீராக எழுதி பிரமிக்க வைத்து விட்டீர்கள். இந்த கதையின் களத்தை கீழேயுமின்றி மேலேயுமின்றி அந்தரத்தில் பறக்கும் விமானத்தில் நிகழ்த்தியது , சமச்சீரின் சிறப்பை கூட்டுகின்றது.
அந்த ஜப்பானியரின் காதலி மரண படுக்கையில் இருக்கும் பொழுது நடக்கும் சம்பவங்களை , யோசித்து எழுதி நிரப்பிக்கொள்ளும் பணியை வாசகர்களுக்கும் கொடுத்து விட்டீர்கள். நன்றி. படைப்பாளியும் வாசகரும் கூடு விட்டு கூடு பாயும் தருணங்கள்தான் எத்தனை மகத்தானது?
இந்த சிறுகதையை மிகவும் ரசித்து படித்தேன் என்பது , நீங்கள் சொன்னது போல் ஃப்யூஜியாமா  என்ற வார்த்தையை சொல்வது போன்றுதான். தாக்கத்தை எழுத முயன்று தோற்கிறேன். அதனால் இப்போதைக்கு கையில் வந்து அமர்ந்த இந்த நுரைக்குமிழியை ரசித்தபடி,
ராஜா,
சென்னை.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

$
0
0

vannadasan

 

2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.

 

எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும்  தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார்.

 

அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை மென்மையாகச் சொல்பவர் என அவர் வண்ணதாசனைப்பற்றிச் சொன்னார். மேலோட்டமான வாசகர்கள் — இவர்களில் வண்ணதாசன் ரசிகர்களும் அடங்குவர் — பலர் அவ்வகையிலேயே அவரை மதிப்பிடுகிறார்கள்.

 

இன்னொன்று, வண்ணதாசனின் தனியாளுமை பற்றிய சித்திரத்தை அவர் புனைவுகள் மேல் ஏற்றிக்கொள்வது. வண்ணதாசன் நெகிழ்ச்சியான, மென்மையான மனிதராக இருக்கலாம். அது அவரது சமூகமுகம் மட்டுமே. எழுத்தாளர்களின் தனிப்பட்ட பேச்சு, கடிதங்கள், பேட்டிகள் போன்றவற்றினூடாக வரும் அவரது தனியாளுமையை புனைவுகள் மேல் பரப்பிக்கொள்வது வாசிப்பின் முதிர்ச்சியின்மை .

 

ஏனென்றால் எழுத்து அவ்வெழுத்தாளனில் அறிந்தும் அறியாமலும் வெளிப்படும் பல்வேறு உள்ளோட்டங்களால் நெய்யப்பட்ட பரப்பு. அதை அப்படைப்புகளைக்கொண்டு மட்டுமே நாம் மதிப்பிடவேண்டும். அதன் சொல்லப்பட்ட தளங்களுக்கு அப்பால் அப்பால் என செல்லும் பார்வை வாசகனுக்கு வேண்டும். படைப்பாளியின் தனியாளுமை என்பது அவன் முகங்களில் ஒன்று மட்டுமே.பலசமயம் தனக்கு எதிரான உளநிலைகளையே எழுத்தாளன் வெளிப்படுத்தக்கூடும்.

 

நாம் அறியும் வண்ணதாசனின் ஆளுமை கல்யாணசுந்தரம் என்னும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்குரியது.  தி.க.சிவசங்கரனின் மகன். இடதுசாரி அரசியல் கொண்டவர். திராவிட அரசியல் சார்பும் உண்டு. அன்பானவர். நெகிழ்ச்சியானவர். தனித்தவர். மாறா அலைக்கழிப்புகள் கொண்டவர். ஆகவே பெரும்பாலும் துயரமானவர்

 

ஆனால் கதைகளில் வெளிப்படும் வண்ணதாசன் மேலும் பலமடங்கு வயதானவர். தொன்மையான நெல்லை ஆலயத்தையும் தாமிரவருணியையும் போல அவர் அவரைவிட பெரிய பலவற்றின் பிரதிநிதி. அவரது எழுத்து பெருமைகொண்ட பண்பாடு ஒன்றின் எஞ்சிய பகுதியின் பதற்றங்களும் கனவுகளும் உட்சுருங்கல்களும் கொண்டது. வன்முறையும் வன்மங்களும்  உளச்சிக்கல்களும் வெளிப்படுவது.

 

வண்ணதாசனை முழுமையாக வாசிக்க, அனைத்துக்கோணங்களையும் நோக்க இந்தத்தருணம் வழியமைக்கவேண்டும்.

 

வண்ணதாசனுக்கு அவரது முதன்மை வாசகன், இளையோன் என்னும் நிலையில் வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிச்சகப் பூங்காட்டில்

$
0
0

kadamba_1327470953

இந்தியாவின் மகத்தான சுவாரசியம் என்பது அதன் முடிவற்ற வண்ணங்கள். அவ்வண்ணங்கள் அனைத்தும் பிசிறின்றி இணைந்து உருவாகும் ஒற்றைப்பெரும்பரப்பு. முதல்பார்வையில் ஒன்றென்றும் மறுபார்வையில் முடிவிலா பலவென்றும் தோற்றம் காட்டும் பண்பாட்டுக்கூறுகள்.

சினிமாப்பாடல்கள் வழியாக மீண்டும் மீண்டும் அவ்வண்ணங்களையும் ஒருமையையும் பார்த்துக்கொண்டிருப்பேன். இன்று ஒரு கடந்தகால ஏக்கமனநிலை. ஆகவே என் இளமையில் கேட்ட பாடலொன்றை தேடி எடுத்தேன். இந்தப்பாடலின் மலையாளத் தனித்தன்மை நெஞ்சை நனைத்தது. பழகிய செவிகளை சற்று புதுப்பிக்க முடிந்தால் அந்த மலையாளமணத்தை எவரும் உணரமுடியும்

இதிலுள்ள தாளம் இடைக்கா என்னும் வாத்தியத்தை நினைவூட்டும்படி உள்ளது. நடுவே செண்டை. கண்ணூர் தலைச்சேரி பகுதியின் நாட்டுப்புற இசையின் சாயல் மெட்டில் உள்ளது. படகுப்பாட்டு. அத்துடன் குரல். அது மலையாளத்தின் குரலான ஜேசுதாஸ்.

பி.என் மேனோன் மலையாளத்தின் மூத்த கலை இயக்குநர். பின்னர் ஓளவும் தீரவும் போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். அவரது மருமகன்தான் பிரபல இயக்குநர் பரதன் .

இசை கே.ராகவன். மலையாள சினிமாவின் மூத்த இசையமைப்பாளர். பெரும்பாலும் நாட்டுப்புறமெட்டுகளை ஒட்டியே இசையமைத்தவர்.

இது கடம்பா என்னும் மலையாளப்படத்தில் உள்ள பாடல். செக்ஸ் கலந்த யதார்த்தபடம் என்னும் ஒரு வகைபாடு அன்றெல்லாம் இருந்தது. உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கும். கூடவே மெல்லிய காமம். 1982ல் வெளிவந்த படம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

உலகெலாம் எனும் கனவு

$
0
0

images

அன்புள்ள ஜெ,

வெண்முரசின் இடைவெளி நாட்களை கடத்துவது பெரும் பிரயத்தனமாக உள்ளது. நேற்றுதான் நீண்ட நாட்களாக வாசிக்காமல் விட்டிருந்த ‘வெண்முரசு விவாதங்கள்’ தளத்தை மேய்ந்தேன். சொல்வளர்காட்டில் தவறவிட்ட பகுதிகள் முகத்திலரைந்துகொண்டே இருந்தது. இன்னும் எழுதப்படாத விவாதக் குறிப்புகள் அனைத்தும் தவறவிட்ட நுட்பங்களே என எண்ணியபோது உளம் சோர்வடைந்தது. சரி ‘கற்றது மந்தனளவு கல்லாதது தர்மர் அளவு’ என எண்ணி சமாதானம் கொண்டேன் (மந்தன் அறிந்தால் மண்டையை பிளக்கக் கூடும்).

இந்நிலையில் நீங்கள் சமீபத்தில் விகடனில் எழுதிய ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை இன்று வாசித்தேன். பிரிட்டன் வெளியேற்றம் சமயத்தில் தங்களிடம் முன்பு கேட்க எண்ணிய சில கேள்விகளை இக்கதை நினைவூட்டியது. அதைக் கேட்கவே இக்கடிதம்:

இதுவரை அண்டை மாநிலங்களைத் தாண்டி பயணித்திராதவன் நான். இருப்பினும் கால்நடையாகவோ அல்லது மிதிவண்டியிலோ இலக்கோ முடிவோ இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்வதாக கற்பனை செய்து ஆழ்ந்திருப்பது என் விருப்பத்திற்குரிய பகற்கனவு.

அவ்வாறு பயணிக்கும் போது ஏதோ ஒரு நாட்டு எல்லையில் சாலையில் நிறுத்தி, கடவுச்சீட்டு இல்லாததன் பொருட்டு அதிகாரிகள் என்னை தடுத்தாட்கொள்வார்கள். ‘உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான இப்பூமியை கூறுபோடும் உரிமையை உனக்கு அளித்தது யார் மனிதகுலமே?’ என தயங்கிய குரலில் முழங்கியவாறு என் பகற்கனவுகள் முடிவடையும்.

இளமையில் ‘முற்போக்கு’ என்பதன் அடையாளமாக சில கருத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை இப்படி சொல்லலாம். சாதி கடந்து சிந்திப்பது, மதம் கடந்து சிந்திப்பது, மொழி அல்லது இனம் கடந்து சிந்திப்பது என. இதன் இயல்பான நீட்சியாக வந்து சேரும் இடம் நாடு அல்லது புவியியல் ரீதியான எல்லைகள் கடந்து சிந்திப்பது.. பெரும்பாலும் தேசஎல்லைகள் கடந்து சிந்திப்பது ஒரு ஆரம்பக்கட்ட சிந்தனையளவில் நின்றுவிடும். என்னளவில் இச்சிந்தனைக்கு முழுமையான வடிவம் கொடுத்தது தங்களின் ‘உலகம் யாவையும்’ சிறுகதைதான். வாசிக்கும்தோறும் ‘மகத்தான கனவு’ என்பதையே மனம் அரற்றிக் கொண்டிருந்தது.

‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதை சுமார் எண்பது வருடங்கள் கழித்து 2100 வாக்கில் நடக்கிறது. இக்கதையில் படிப்படியாக நாடுகள் இணைந்து ஒற்றை உலகம் உருவாகும் முன்நகர்தலுக்கான குறிப்புகள் கதையினுடே ஆங்காங்கே இருப்பதை கண்டேன். ஆனால், என் கேள்வியெல்லாம் அப்படி ஒற்றை உலகத்திற்கான கனவோ அதை நோக்கி நகர்வோ தற்காலத்தில் ஊக்கத்துடன் இருந்து வருகிறதா என்பது தான்.

குறிப்பாக பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு பிறகு இச்சந்தேகம் எனக்கு வலுத்து வருகிறது. நவீன ஜனநாயகத்தின் லட்சிய உருவாக்கமான ஐரோப்பாவுக்கே இந்நிலையென்றால் நாள்தோறும் ஏதோவொரு மூலையில் பிரிவினைக் குரல்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் நம் தேசத்தில், தெற்காசிய நாடுகளின் கூட்டு போன்ற அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாய்ப்பேயில்லை எனத் தோன்றுகிறது. பிரெக்சிட் சமயத்தில் இந்தியாவும் சார்க் அமைப்பிலிருந்து வெளியேற வேண்டுமென்ற (எக்காரணமுமில்லாமல்) ஒரு அன்பரின் கோரிக்கையை இணையத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

காஷ்மீர் விவகாரம், காவிரி விவகாரம் என எது தலையெடுத்தாலும் ‘ஆளாளுக்கு அத அத பிரிச்சு கொடுப்பதை’ சர்வரோகநிவாரிணியாக முன்வைக்கும் குரல்கள் ஒலிப்பதை காண முடிகிறது. இதற்காகவே காத்திருக்கும் சீறும் சீமான்கள் ‘அப்பவே சொன்னோம் பாத்தீங்களா..’ என கிளம்பிவிடுகிறார்கள். எந்தவொரு சிறு பிரச்சனைக்கும் பிற மாநில/நாட்டுடனான கூட்டுறவே காரணம் என்றும் தனித்தால் சொர்க்கபூமியாக மாறிவிடலாம் என்றும் எளிதில் சத்தியம் செய்கிறார்கள்.

அமெரிக்க தேர்தலிலும் இம்முறை பிற நாட்டினருக்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பறிபோவது குறித்து பேசப்படுகிறது (ஒருவேளை இது அனைத்து தேர்தல்களிலும் பேசப்படுவது தானோ?).

எங்கும் சுய அடையாளம் சார்ந்த தேடல் தீவிரமடைந்திருப்பதாக நினைக்கிறேன். அதன் நீட்சியாக சுய இனத்தின் மீதான போலிப் பெருமிதங்களும் நாசூக்காக மாற்று இனத்தின் மீதான காழ்ப்புகளும். ஒருவேளை கலாச்சார ரீதியான காழ்ப்புகள் இல்லையெனில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற காரணங்களை முன்வைத்து பிரிவினை பேசப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டின் பிரச்சனைக்கும் பல்வேறுபட்ட வரலாற்றுக் காரணிகள் இருக்குமென்றாலும் இந்த பொதுப்போக்கை எவ்வாறு விளங்கி கொள்வதென தெரியவில்லை. உலகமயமாக்கலின் நிறைச்செறிவு புள்ளியை (saturation point) அடைந்து விட்டோமா? இனி வெளியுறவு என்பது வெறும் வர்த்தகத்துக்கு மட்டுமென எஞ்சுமா? அல்லது உலகமயமாக்கலின் பயணத்தில் இவை தவிர்க்கமுடியாத கட்டங்களா? எனில், என்றேனும் ஒருநாள் எல்லைக்கோடுகளுக்கு பொருளில்லா உலகம் உருவாகும் எனும் கனவோடு நாம் மரிப்பதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா?

அன்புடன்,
பாரி.

***

அன்புள்ள பாரி,

எனக்கு ஒரு விசித்திர அனுபவம். இந்தியாவிலிருந்து தமிழகம் பிரியவேண்டும் என வாதிட்டவர்களின் தர்க்கம் எவவ்ளவு மேலோட்டமானது என்பதைக் காட்டுவதற்காக நான் ஒரு குறிப்பை எழுதினேன். அதே தர்க்கப்படி தமிழகத்தில் குமரிமாவட்டம் இருக்கவேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் எங்கள் பண்பாடு வேறு. எங்கள் வரலாறு தமிழகத்துடன் இணைந்ததல்ல. சுதந்திரம் கிடைத்தபின் வன்முறைமூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட இந்நிலம் அதுவரை தனி நாடுதான். அத்தனைக்கும் மேலாக குமரிமாவட்டம் நீர், மின்சாரம், மீன், விளைபொருட்கள், சுங்கவரி என தமிழகத்திற்குக் கொடுப்பது அதிகம். பெறுவது நூறில் ஒருபங்கு மட்டுமே

அதை எழுதி, அதன் கீழேயே அது எத்தனை அபத்தமானது என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் எனக்குத் தொடர்ச்சியாகக் கடிதங்கள் வந்தன, இன்றும் வருகின்றன. அது எவ்வளவு பெரிய உண்மை என சொல்லி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்திற்கும் நமக்கும் என்ன உறவு என இங்கே ஒருவர் மேடையில் பேசுவதைக் கேட்டேன். அது ஒரு முக்கியமான பேச்சாகவே இன்று இங்கே உள்ளது.

ஒரு குறும்பு எண்ணம் ஏற்பட்டது. குமரிமாவட்டத்தில் விளவங்கோடும் கல்குளமும் ஏன் இருக்கவேண்டும் என்று ஒரு குறிப்பு எழுதினேன். விளவங்கோடு கல்குளம் பகுதிகள் மிக வளமானவை. முக்கியமான அணைகளும் துறைமுகங்களும் அவற்றில்தான் உள்ளன. அவற்றை தனிமாவட்டமாக ஆக்கவேண்டும் என அதில் வாதிட்டிருந்தேன். அதை மார்த்தாண்டத்தில் இருந்து வரும் பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் பரவசத்துடன் அதைப்பிரசுரிக்க முன்வந்தனர். அய்யய்யோ அது நையாண்டி என்று சொல்லி கையைக்காலைப்பிடித்து தடுத்துவைத்தேன்.

அதாவது ‘நாம்வேறு’ என்று சொல்லும் எந்தச்சிந்தனைக்கும் மக்களாதரவு எளிதில் கிடைக்கும். நம்மை பிறர் சுரண்டுகிறார்கள், நாம் ஏன் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று பேசினால் உடனே ஆமாம் என்பார்கள். சொந்தச் சகோதரனுடன் வாய்க்கால் தகராறு செய்பவர்கள்தானே நாம்? பேச்சிப்பாறை தண்ணீரை தேங்காய்ப்பட்டினத்திற்கு விடமாட்டோம் என இங்கே ஒரு பெரிய போராட்டம் நடந்தது. திருநெல்வேலிக்கு தண்ணீர் செல்வதற்கு எதிராக பல கட்டங்களாக போராட்டம் நடந்தது.

இது மனிதகுணம். பிரிந்து நிற்கவும் குழுக்களாகச் சேர்ந்து போரிடவும் அவர்கள் பல்லாயிரமாண்டுகளாக பழகியிருக்கிறார்கள். வெறுப்புதான் இயல்பாக மக்களை ஒன்றுசேர்க்கிறது. வெறுப்பைப் பேசுபவர்கள் எளிதில் புகழ்பெறுகிறார்கள். ’நம்மவர்’ என ஒருவரை நினைத்துவிட்டால் அவரை முழுமையாக ஏற்க நாம் தயாராக உள்ளோம்.

வசுதைவ குடும்பகம் என்பது ஒரு தத்துவ இலட்சியம். அதைநோக்கி மானுடம் செல்கிறதா என்று கேட்டால் ஆம் என்று சொல்ல நடைமுறைமனம் ஒப்பவில்லை. ஆனால் தத்துவார்த்தமாக யோசித்தால் அப்படித்தானே நிகழக்கூடும் என்றும் படுகிறது

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்

$
0
0

images

 

அன்பு ஜெமோ

நலம் தானே?

மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பை உங்கள் இணையத் தளத்தில் படித்தேன் – நம் கல்யாண்ஜிக்கு விஷ்ணுபுரம் விருது.

அழைப்பு அனுப்பி வைக்கச் சொல்லுங்க ஜெமோ, நான் கலந்து கொள்ள வேணும். உங்களோடும் நிறையப் பேசணும்

அன்புடன்

இரா முருகன்

*

அன்புள்ள முருகன்

நலம்தானே?

கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்கிறீர்கள். அழைப்பு என்னுடையது. எங்கள் நண்பர்களுக்கும் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் சார்,

வண்ணதாசனுக்கு விருது வழங்கப்படவுள்ள செய்தி இந்தக்காலையை அழகாக ஆக்கிவிட்டது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் அவர்தான். நான் அவரது கதைகளை 1990 வாக்கில்தான் முதல்முதலாக வாசித்தேன். தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்னும் தொகுப்பு.

அற்புதமான ஒரு தொகுப்பு அது. அன்றைய என்னுடைய வாழ்க்கையைச் சொன்னால் அந்தக்கதைத் தொகுதி எனக்கு அளித்தது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் நான் அன்றைக்கெல்லாம் வேலை இல்லாமல் இருந்தேன். குடும்பச்சூழலால் பத்தாவதுக்குமேலே படிக்கவில்லை. ஒரு கடையில் வேலைபார்த்தேன்.

பழையதாள்களை வாங்கி அட்டியாக்கி விற்கும் கடை. சாப்பாடுக்கு மட்டும்தான் பணமிருக்கும். அதுவும் ஊருக்கு ஆரம்பத்திலேயே பணம் அனுப்பிவிடுவதனால் கடைசி நாட்களில் கையில் ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட பத்தாது. பெரும்பாலும் கையேந்தி பவன்களில் சாப்பிடுவேன். வாயில் வைக்கமுடியாத தக்காளிச்சாதம் உப்புமாதான் பெரும்பாலும் உணவு. ருசி என்பதையே பத்துவருஷம் நான் அறிந்தது கிடையாது.

கடையின் திண்ணையிலேயே தூங்குவேன். மழைக்காலம் பெரிய நரகம். கொசுக்கடி உயிர்போகும். உடம்பில் மண்ணெண்ணை தேய்த்துக்கொண்டு தூங்கியதுண்டு. ஏன் வாழவேண்டும் என்ற எண்ணம்தான் மனசு முழுக்க ஓடிக்கொண்டிருக்கும். ஊரில் என்னை நம்பி அம்மாவும் தங்கச்சியும் இல்லை என்றால் செத்திருப்பேன்.

அதையெல்லாம் விட எனக்கு மத்தவர்கள் மேல் பெரிய பயம். அவமானப்படுவோமோ என்று எவரிடமும் நான் நெருங்கியது கிடையாது. கடையில் உள்ள பழைய காகிதஙகளை வாசிப்பேன். அப்படித்தான் அந்த நூலையும் வாசித்தேன். எனக்கு அது பெரிய திருப்புமுனை.

என் அப்பா எனக்கு என்ன சொல்லித்தரவேண்டுமோ அதையெல்லாம் வண்ணதாசன் தான் சொல்லித்தந்தார். மனுஷங்களை நம்பு என்று அவர்தான் சொன்னார். மனுஷர்கள் பயமும் ஆசையும் கோபமும் எல்லாம் கொண்டிருந்தாலும் மனுஷனை நம்பினால் ஏமாற்றம் கிடையாது என்று அவரது கதைகள் காட்டின.

தாய்க்கோழி குஞ்சுக்கு சொல்லிச் சொல்லி மேயக்கற்றுக்கொடுக்குமே அதேபோல வண்ணதாசன் எனக்குக் கற்பித்தார். அப்படித்தான் நான் மனுஷன் ஆனேன். இன்றைக்கு கடை இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. பெரிய ஆள் எல்லாம் ஆகவில்லை. ஆனால் மனுஷன் ஆகியிருக்கிறேன். அதுக்கெல்லாம் வண்ணதாசன் தான் காரணம்.

நான் அவரை அப்பா என்றுதான் மனசுக்குள் அழைப்பேன். நேரில் ரெண்டுதடவைதான் பார்த்திருக்கிறேன். காலைத்தொட்டு கும்பிட்டபோது அவர் ‘ஏ ஏ ’என்று சொன்னார். நான் அறிமுகம் செய்யாமல் வந்துவிட்டேன். ஆனால் அன்றைக்கு ராத்திரி தனியாக இருந்து அழுதேன். நான் அவருக்கு எழுதியது கிடையாது. அவருக்கு எழுதவும் போவது கிடையாது. அவருக்கு நான் அறிமுகமே ஆகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் இதை எழுதுகிறேன்.

நான் அவர் எழுதிய எல்லா வரியையும் நாலைந்துமுறை வாசித்திருக்கிறேன். அவர் நிறைய எழுதியிருக்கிறார். நான் அதிலிருந்து ‘வாழ்க்கையை நம்பு. இதிலே அழகு நிரம்பியிருக்கிறது. இது போதும் மனுஷப்பிறப்புக்கு’ என்றுதான் புரிந்துகொண்டேன்.

அவரைவிடப்பெரிய எழுத்தாளர்கள் இருக்கலாம். எனக்கு நீங்கள் அப்படிப்பட்ட பெரிய எழுத்தாளர் என்று சொன்னார்கள். நானும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்து எனக்கு பயமாக இருந்தது. பெரிய அறிவாளித்தனம் என்று பட்டது. அதை தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

வண்ணதாசன் கதையெல்லாம் வேறு மாதிரி. எனக்கு சங்கரன்கோயில் பக்கம். ரயிலில் ஒருநாள் ஒரு வயதான நாடாச்சி என் கையைப்பிடித்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் எத்தனை பிள்ளை என்றெல்லாம் கேட்டது. கையில் இரும்பு வளையல் போட்டிருந்தது. பச்சைகுத்தின கையில் நரம்புகள் புடைத்து காணப்பட்டன. அந்த ஆச்சி மாதிரி என்னிடம் பேசுவதெல்லாம் வண்ணதாசன் கதை மட்டும்தான்.

அவர் தமிழிலேயே மிகப்பெரிய எழுத்தாளர் என்றுதான் நான் சொல்வேன். அவருக்கு நான் அறிமுகமாக ஆகக்கூடாது என்று நினைப்பேன். அவரை நினைத்துக்கொண்டே சாகவேண்டும் என்றெல்லாம் நினைப்பேன்.

நான் உங்கள் கதைகள் சிலது மட்டும்தான் படித்திருக்கிறேன். நிறைய அறிவாளித்தனம் கொண்ட கதைகளை வாசித்தால் வண்ணதாசனை இழந்துவிடுவோம் என்று பயம் எனக்கு. ஆகவே நிறைய வாசிப்பதே இல்லை. அவரைத்தான் மீண்டும் மீண்டும் வாசிப்பேன்.

நான் திருமணம் செய்துகொண்டது சொந்த மாமன் மகளைத்தான். எனக்குப்பெண்ணையும் கொடுத்து என்னை ஆளாக்கிவிட்டார். ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை நல்லதாக அவர் பேசியது கிடையாது. எப்போதுமே சுடலைமாடசாமி மாதிரியாகத்தான் முகம். வண்ணதாசனை வாசிக்கவில்லை என்றால் அந்த மனுஷனைப் புரிந்துகொண்டிருக்கமாட்டேன்.

பின்னாடி ஒரு பெரிய நோய் வந்தது எனக்கு. அந்த நோயில் நான் நம்பிக்கை இழக்காமல் இருந்தேன். எலும்பிலே டிபி. இப்பவும் முழுசாகச் சரியாகவில்லை. ஆனால் இப்போது பரவாயில்லை. ஆனால் அதை நான் விலகி நின்று பார்த்தேன். துக்கமே இல்லாமல் இருந்தேன். ஆஸ்பத்திரியை ஒரு வேடிக்கையான இடமாக ஞாபகத்திலே வைத்திருக்கிறேன். அன்பான பலரை அங்கே பார்த்தேன். அதுக்கும் வண்ணதாசன் தான் காரணமாக இருந்தார்.

அதன் பின்னால் என் தங்கை மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஒன்றைச்செய்தாள். ஆனால் இன்றைக்கும் அவளிடம் அன்பான அண்ணனாகத்தான் இருக்கிறேன். வண்ணதாசன் தான் மன்னிக்கச் சொல்லித்தந்தார்.

அவர் கதைகள் மனுஷன் எப்படி ரொம்பச் சின்னவன் என்பதைத்தான் சொல்கின்றன. சிலசில தருணங்கள்தான் மனுஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அந்தத்தருணங்களிலே அவன் தன்னை சரியாக நிறைத்துக்கொண்டு பெருகிவிட்டான் என்றால் வாழ்க்கை இனிப்பானதுதான். அப்போது அவனும் பெரியவன்தான்.

ஒத்தை வரியில் ‘இன்னைக்கிருந்து நாளைக்குப்போற மனுஷனுக்கு இருக்கிற நாளெல்லாம் முக்கியம்தான்’ என்று பெரியவர்கள் சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார். ஆனால் அதை வாழ்க்கையாக காட்டி அதிலே திரும்பத்திரும்ப வாழவைக்கிறார். அதனால்தான் அவர் பெரிய எழுத்தாளர்.

அவரது வாசகர்களுக்கு அவர் காட்டுகிற ஒளி தான் முக்கியம். அவர் இருட்டை எல்லாம் எழுதியிருக்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். அதனால்தான் இதை எழுதுகிறேன். அது உண்மைதான். ஆனால் அவர் காட்டும் ஒளிதான் முக்கியம் என நான் நினைக்கிறேன். இருட்டைக்காட்டத்தான் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்களே. எல்லாரும் இருட்டு என்கிறார்கள். பார்த்தாலும் இருட்டுதான் தெரிகிறது. ஒருவர் ஒளியைக் கொஞ்சம் காட்டுகிறார். அதுதானே வேண்டும்.

நாங்களெல்லாம் வரண்ட மண்ணிலே வந்தவர்கள். பெரிய இருட்டுச்சுரங்கம் மாதிரியான வாழ்க்கை எங்களுக்கு. அந்த மறுபக்கம் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தால் போய்விடலாம். இல்லாவிட்டால் இங்கேயே சாவுதான். அந்த வெளிச்சம்தான் அவருடைய கதைகள்.

அதெல்லாம் அறிவுவாளிகளுக்குத் தெரியாது. அறிவாளிகள் வேறு வகையான வாசிப்புகளுக்குப் போகட்டும். நீங்கள் ஆண்டன் செக்கோவ் வாசித்திருப்பீர்கள். நானும் அவரை தமிழிலே முழுசாகவே வாசித்திருக்கிறேன். செக்கோவ் ஒளியைத்தானே காட்டுகிறார். நம்பிக்கைதானே தருகிறார். நம்மூரில் ஒரு செக்கோவ் என்றுதான் நான் வண்ணதாசனைச் சொல்லுவேன்.

எப்படியென்றாலும் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு கோடி வணக்கம். அவர் எல்லா விருதுக்கும் தகுதியானவர். சாகித்ய அக்காடமி கூட இன்னும் அவருக்கு எவரும் கொடுக்கவில்லை. அவருக்கு கிடைத்த இந்த பெரிய விருது நாம் அவருக்குச் செய்யும் நமஸ்காரம் என்றுதான் நினைக்கிறேன். அதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் அவருடைய பாதங்களை சேவித்துக்கொள்கிறேன்

எஸ்.செல்வராஜ்

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்று அறிவித்திருந்தீர்கள். அச்செய்தியை அறிந்ததுமே உள்ளம் மகிழ்ச்சியில் மிதந்தது. எனக்கு மிகமிகப்பிடித்த எழுத்தாளர். அவருடைய கதைகளை எல்லாம் பத்தாண்டுகளாக விடாப்பிடியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய அனுபவத்தை அளிக்கும் கதைகள் அவையெல்லாம் அவருக்கு நான் வாழ்க்கையிலும் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அவருக்கு அளிக்கப்படும் விருதுக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்

நடராஜன்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசன் என்னும்போது எனக்கு ஒரு பழையபாட்டும் நினைவுக்கு வரும். வெள்ளிமணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே. வெள்ளிமணி ஓசையை கேட்டதே இல்லை. ஆனால் வெண்கலம் மாதிரி ஒலிக்காது என்று நினைக்கிறேன். ரொம்பச் சன்னமாக அழகாக ஒலிக்கும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான கதைகள். வெள்ளைத்தாளிலே தலைமுடி விழுந்துகிடந்தால் கோடுமாதிரி தெரியுமே அதே மாதிரி வரைந்த ஓவியங்கள் அதெல்லாம்.

வண்ணதாசனுக்கு வணக்கம்

சித்ரா

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இருத்தலின் இனிமை

$
0
0

 

 

ladakh 130

 

அமெரிக்காவில் ஒருமுறை சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீட்டு முற்றத்தில் பெரிய சாம்பல்நிற ஓணானின் பொம்மை ஒன்றை இளவெயிலில் மேஜை மேல் வைத்திருப்பதை பார்த்தேன். அதன் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் வணக்கம் சொன்னபின் அது என்ன என்று கேட்டேன். மரகதத்தால் ஆன ஒரு சிற்பம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சட்டென்று அது இமைத்தது. அப்போதுதான் அது உயிருள்ளது என்று தெரிந்தது. ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனேன்.

அது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் ஓணான் என்று அவர் சொன்னார். Tuatara என்றுபெயர்.பழைய டைனோசர்களின் வம்சம். அதை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். ”என்ன உணவு கொடுக்க வேண்டும்?” என்று கேட்டேன். ”மாமிசத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும். ஆனால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு துண்டு மாமிசம் கொடுத்தால் போதும்”. நான் வியப்புடன் “பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையா?” என்றேன். “ஆம் இதன் வாழ்நாள் மிக நீண்டது. சராசரியாக இருநூறு ஆண்டுகள் வாழும். எனது தாத்தா நியூசிலாந்தில் நில அளவையாளராக வேலை பார்த்தபோது இதை கொண்டு வந்தார். இப்போது நான் வைத்திருக்கிறேன் என் பேரப்பையனின் காலம் வரைக்கும் கூட இது இருக்கும்” என்றார் அவர்.

அந்த ஓணானின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் ஒன்றே. அது அநேகமாக அசைவதே இல்லை. அதிகபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை இடம் மாறி அமர்வதோடு சரி இமைகள் கூட அடிக்கடி மூடித் திறப்பதில்லை. பெரும்பாலும் அசைவற்று அரை மயக்கநிலையில் அமர்ந்திருக்கும். குளிர்காலத்தில் ஆழ்ந்த உறக்கம். செதில்கள் இருப்பதனால் உடல் வெப்பத்தை பேணும் பொறுப்பில்லை. உள்ளுறுப்புகளும் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. ஆகவே அது உணவை எரிபொருளாக்குவது மிகக்குறைவு. மிககுறைவான உணவு போதும். அதிகமாக வேட்டை ஆடவேண்டிய அவசியமில்லை. தேடி வரும் உணவை மட்டும் உண்டால் போதும்.

என் நண்பர் கால்கரி சிவா கனடாவில் இருக்கிறார். அவரை அமெரிக்காவில் ஒருமுறை சந்தித்தேன். அவர் ஏற்கனவே அவர் ஐம்பது வருடம் வயதான பிரெசில்நாட்டு கிளி ஒன்றை வளர்க்கிறார். நூறு வருடம் அது உயிர் வாழும். “என் மகனுக்கு அதில் ஆர்வமில்லை. எனக்குப்பின்னால் அதை எவருக்கேனும் விற்றுவிடவேண்டியிருக்கும்” என்று சொன்னார். அதன் வாழ்நாள் ரகசியமும் அதேதான். அசைவின்றி அமர்ந்து கொண்டே இருப்பது.

2013 செப்டெம்பரில் லடாக் சென்றபோது அந்த ஓணானையும் கிளிகளையும் போன்ற இயல்புள்ள மனிதர்கள் அங்குள்ளவர்கள் என்று தோன்றியது. அங்குள்ள அனைவருக்குமே சும்மா இருக்கும் கலை தெரியும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு ஹுக்காவை இழுத்தபடி வெயில் பெருகி சரிந்திருக்கும் மலைச்சரிவுகளை பார்த்து முழு நாளும் அசைவின்றி அமர்ந்திருப்பார்கள். காரில் செல்லும்போது தியானத்தில் என்பது போல் அமர்ந்திருக்கும் முதியவர்களைப் பார்த்துக் கொண்டே செல்வோம். சுருக்கம் அடர்ந்த முகம். சிறிய மின்னும் மணிக்கண்கள்

அவர்கள் உள்ளே என்னதான் ஓடிக் கொண்டிருக்கிறது? காலம் தன்னைக் கடந்து செல்வதை அவர்கள் உணர்கிறார்களா? அதைப்பற்றிய பதட்டம் அவர்களுக்கு உண்டா? அப்பகுதியில் இளைஞர்கள் கூட அப்படித்தான் இருப்பார்கள். பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் வட்டமாக அமர்ந்து சீட்டாட்டம் ஆடுபுலி ஆட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அந்த ஆட்டம் கூட விறுவிறுப்பாக இருக்காது. நெடுநேரம் கழித்தே ஒருவர் சீட்டை விடுவார் அல்லது சோழியை நீக்கி வைப்பார். கூச்சல் சிரிப்பு எதுவுமே இருக்காது. ஒரு மந்திரவாதி தன் கோலை அசைத்து அவர்கள் அனைவருடைய பேச்சையும் செய்கைகளையும் பத்துமடங்கு மெதுவாக ஆக்கிவிட்டது போல் இருக்கும்.

 

அந்த உறைந்த நிலத்தில் நாம் மட்டும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதன் பொருத்தமின்மையை பார்க்கலாம். டீக்கடைக்கு சென்று அமர்ந்து உணவுக்கு உத்தரவிட்டால் அதன் உரிமையாளர் மிக மெதுவாக எழுந்து சென்று அடுப்பைப் பற்ற வைத்து உணவை தயாரித்து கொண்டு வந்து பரிமாறுவதற்கு ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகும். அதற்குள் நாம் பொறுமையிழந்து அசைவோம். எழுந்து சென்று அந்தக் கடையில் மாட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைப் பார்ப்போம். பொருட்களை பரிசீலிப்போம். வெளியே நின்று சாலையை பார்வையிடுவோம். இல்லை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளத்தொடங்குவோம்.

ஏன் நம்மால்அமைதியாக இருக்க முடிவதில்லை? அவர்கள் நடந்து செல்கிறார்கள், நாம் ஒரு ஏணியில் ஏறிக்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கு இன்று மட்டுமே. நாம் நாளை, நாளை என்று இன்றை கடந்து கொண்டிருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவு அனைத்துமே நம் பரபரப்புக்கு எரிபொருளாக மாறுகிறது.

அங்குள்ள பௌத்த மடாலயங்கள் காலத்தில் உறைந்தவை . பௌத்த மடாலயக் கட்டிடங்களே சாதாரணமாக இருநூறு வருடம் பழையவை .உள்ளமைப்புகளும் பாத்திரங்களும் அனைத்தும் பழமையானவை .பெரும்பாலான பிக்ஷுக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் காலமற்றது. அவர்களின் பிரார்த்தனையே ஒருமணிநேரத்திற்குமேல் ஆகும். உணவுண்பதே ஒரு மணிநேரம் ஆகும். அதன் பின் ஆங்காங்கே அமர்ந்திருப்பார்கள்.

அங்கே மலைகளில் ஏறி இறங்குவதே போதுமான உடற்பயிற்சியாக அமைந்துவிடுவதால் அவர்கள் உடலில் மிகையான கொழுப்பு என்பதே இல்லை. லடாக்கில் எங்குமே தொப்பையுடன் ஒருவரை பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவர்கள் உணவு மிகக்குறைவானது ஒரு துண்டு மாமிசம். மிகக்குறைவாகவே மாவு, பெரும்பாலும் அதை நூடில்ஸ் வடிவில் கஞ்சிபோல அருந்துகிறார்கள். உணவு விடுதிகளில் சாப்பிடக் கேட்கும்போது அவர்கள் கொண்டு வருவது நமது கால்வயிற்றுக்குக் கூட போதாது என்று தோன்றும். அதுவும் பெரும்பாலும் ரசம் போன்ற திரவம். வெறுமே அமர்ந்திருக்க அவ்வளவு உணவு போதும் என்று தோன்றும்.

 

 

 

உடலை விட நம் உள்ளத்திற்கு அதிக உணவு தேவைப்படுகிறது. சாப்பிட்டபின் உணவு போதவில்லை என்று தோன்றுவது அதனால்தான். உடகாரவிடாத உள்ளம், ஓடு ஓடு என துரத்தும் உள்ளம், அமர்ந்திருந்தால் நமக்குரிய எதையோ எங்கோ எவரோ கொண்டுபோய்விட்டார்கள் என பதறும் உள்ளம்.

அவர்களின் தெய்வங்களும் அதே போல மடிமீது கைவைத்து அரைக்கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கின்றன. தன் உள்ளாழ்ந்து இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் தியானத்தில் இருக்கும் புத்தர் போல மலைப்பகுதிகளுக்கு பொருத்தமான தெய்வம் பிறிதில்லை. மலைச்சிகரங்களின் அமைதியும் தனிமையும் புத்தரிடம் உண்டு.

சமீபத்தில் ஸ்பிட்டி வேலி சென்றிருந்தோம். லடாக்கை A Tibet out of Tibet என்று சொல்வார்கள். ஸ்பிட்டி வேலியை A Ladakh out of Ladakh என்று சொல்வார்கள். திபெத்தின் ஒரு பகுதியாக இருந்தது, தேசப்பிரிவினையின்போது இமாசலப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சிம்லாவிலிருந்து மேலும் ஒரு முழுநாள் மலைப்பாதையில் ஏறிச்செல்லவேண்டும். இந்தியாவுக்குள் உயரமான மக்கள் குடியிருப்புப்பகுதி இதுதான். அங்கும் அதே காலமில்லா வாழ்க்கை.

நூறாண்டுக்காலம் பழைய தானியங்கி அரைவை மில் ஒன்று இருப்பதாக எண்ணி ஒரு சிற்றூரில் நுழைந்தோம். பனி உருகி வரும் நீரை கொண்டு ஒரு சக்கரத்தை சுழல வைத்து அதில் பொருத்தப்பட்டுள்ள குழவியை இயக்கி கோதுமையை மாவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முழுக்க அது ஓடினால்தான் ஏழெட்டு கிலோ மாவு உருவாகும்.

 

 

அதை பார்த்துவிட்டு வரும்போது லடாக்கிய தோற்றம் கொண்ட ஒரு பாட்டி தன் இரு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கக் கண்டோம். பேத்தியின் பெயர் ரித்திகா. அதை கையில் எடுத்து முகம் சேர்த்து கொஞ்சினேன். ரித்திகா பனி போல குளிர்ந்திருந்தாள். நான் அணைத்துக் கொண்டபோது என் தோளை கையால் வளைந்து மூக்கால் என் கன்னத்தை தொட்டாள். மஞ்சள்ஜாடி போன்ற முகம். குச்சி மூக்கு.நீர்த்துளிக்கண்கள்.

பாட்டிக்கு தன் பேரக்குழந்தையை பற்றி அவ்வளவு பெருமை. லடாக்கிய மொழியில் அவளைப்பற்றி நிறையச் சொல்லி சுருங்கிய முகம் வலைபோல இழுபட சிரித்தாள். “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டோம். அந்தக் குழந்தை பாட்டியின் கொள்ளுப்பேத்தியின் மகள் என்று தெரிந்தபோது பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை. மலைப்பகுதிகளில் நூறுவயதுக்கு மேல் வாழ்க்கை என்பது சாதாரணமானது.

பாட்டி காலையிலேயே பேரக்குழந்தையுடன் அங்கு வந்து அந்த சிறிய முற்றத்தில் அமர்ந்திருக்கிறாள். பகல் முழுக்க இளவெயிலில் அங்குதான் அமர்ந்திருப்பார்கள் .அந்த இளவெயிலை தன் ரத்தத்தில் சேர்த்துக் கொண்டால் அடுத்து வரப்போகும் ஏழு மாத கால பனிப்பருவம் முழுக்க அந்த சூரிய வெப்பம் அவர்கள் ரத்தத்தில் இருக்கும்.

விடை பெற்று கிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். ”எது நல்ல வாழ்க்கை என்று எப்படி சொல்வது சார்? கடுமையாக உழைக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், இதெல்லாம் தான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. நமது குழந்தைகள் இரண்டுவயதிலேயே ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் மூளை உழைப்புக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். வெ றி பிடித்ததுபோல் ஒரு நாளின் பன்னிரண்டு மணி நேரம் உழைப்பவரே வெற்றி அடைகிறார். உழைப்பு கொண்டாடப்படும் பண்பாடு மலைகளுக்குமேல் இல்லை. நம் தலைக்குமேல் இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது. இங்கு வாழ்தல் என்பது உயிருடன் இருப்பதன் இனிமையை அனுபவித்தபடி உட்கார்ந்திருப்பதுதான். இதை சோம்பல் என்று நம் மக்கள் சொல்வார்கள். நான் இதை இயற்கையில் ஒன்றி அமர்ந்திருப்பது என்று தான் பொருள் கொள்கிறேன். என்னால் இப்படி வாழமுடியாது. ஆனால் வாழ முடிந்தால் இதுதான் நல்ல வாழ்க்கை”

 

“ஆமாம் அது தெரிந்துதானே கடவுள் அவர்களை நூறுவயதுக்கு மேல் வாழ வைக்கிறார்,. நம்மையெல்லாம் அறுபது எழுபது வயதுகளில் எடுத்துக் கொள்கிறார்?’ என்று சொன்னேன். கீழிருந்து மேலே நோக்கி ராஜமாணிக்கம் சொன்னார்.  “அந்த பாட்டி பகல் முழுக்க வெறுமே அமர்ந்திருப்பது பரவாயில்லை சார். ஆனால் மடியில் அந்த குழந்தையும் அப்படி அமர்ந்திருக்கிறது அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் அப்படியே வளர்கிறது. நம் குழந்தைகள் ஐந்து நிமிடம் அப்படி உட்காருமா?”. அந்தக்குழந்தை நூறாண்டுவாழ பயிற்சி எடுக்கிறது என நினைத்துக்கொண்டேன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

$
0
0

DSC_0125

அன்புள்ள ஜெ

நான் மனதில் நினைத்திருந்தது இவ்வருடம் நடந்தேறியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி !

சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக ஒரு சலூன் கடையில் இந்தியா டுடே (தமிழ்) வாசித்துக் கொண்டிருக்கையில் வண்ணதாசனுடைய “நீச்சல்” சிறுகதை வாசிக்க நேர்ந்தது. என்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி அவருடைய அனைத்து தொகுப்புகளையும் வாசிக்கச் செய்தது. எனக்கு சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்ட ஒருவரை இது ஒத்திருந்ததால் இருக்கலாம். அதையொட்டி அவருக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்டு தனக்கு உதவியும் செய்த ஒருவரை திரும்ப சந்திக்க கிராமத்திற்கு திரும்ப வரும் ஒருவனின் கதை.

“இந்த வீடு, என் மனைவி, மகள், கார் அனைத்தையும் ஒரு பொட்டலத்தில் கட்டி மகாதேவன் பிள்ளையிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஒரு வரி அச்சமயத்தில் என்னை வண்ணதாசனை தேடவைத்தது. அவருடைய அனைத்து கதைகளும் நெகிழ்ச்சியான கதைகள்…

அவரைப்போலவே… அணில் அவருடைய சிநேகத்திற்குரிய ஒரு உயிர் என்று நினைக்கிறேன் ! ஒரு இலை, ஒரு புல், ஒரு ஜன்னல் அல்லது ஒரு பூ போதும்… அதை ஒரு மிக அழகான கதையாக மாற்றிவிடும் வல்லமை அவருக்கு உண்டு.

கதையின் பெயர் மறந்துவிட்டேன்… ஒரு சேர் ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்கச் செல்கையில் ஒரு சிறுவனுடன் நடக்கும் உரையாடல்…. அவர் வாழ்க்கையில் மனிதர்களைப்பற்றி கவனிக்காத இடமே இல்லையோ என்று தோன்றச்செய்தது! இன்னும் எவ்வளவோ அவருடைய கதைகளைப்பற்றி கூற வேண்டியிருக்கிறது.

“வாழ்க்கையில் நடந்த ஒரு மிகச்சாதாரண நிகழ்ச்சிகூட ஒரு அருமையான கலைப்படைப்பாகிறது என்ற ஒரு வரி வண்ணதாசனுக்கு மிகவும் பொருந்தும். அவருடைய கதைமாந்தர்களை நாம் தினமும் நமக்கு அருகாமையில் பார்க்க முடியும் என்பது அவரை படித்தவர்களுக்குப் புரியும்.

ஒருமுறை சென்னையில் மாம்பலத்தில் அவருடைய வீட்டைத் தேடி அலைந்திருக்கிறேன். அவர் நெல்லைக்கு மாறியது தெரியாமல்! மரபின் மைந்தன் வலைப்பூ அறிமுக விழாவில் கோவையில் சந்தித்து சிறிது உரையாடினேன்.

இந்த வருடம் “விஷ்ணுபுரம்” விருதுக்கு மேலும் பெருமை சேர்ந்திருக்கிறது. விஷ்ணுபுரம் கிரீடத்திலுள்ள ரத்தினைக் கற்களின் மையக்கல் வண்ணதாசன்தான் என்பது என்னுடைய கருத்து !

 சுரேஷ்பாபு பாலன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். சென்ற வருடத்திலிருந்தே விஷ்ணுபுரம் விருது பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டிருந்தது. வண்ணதாசனுடனான என் அறிமுகம் என்பது முகநூல் வழியாவே தொடங்கியது.

உயிர் எழுத்தில் பிரசுரமாகிருந்த என் சிறுகதையைப் பற்றி அவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுவரை நான் அவரை எங்கும் சந்தித்ததில்லை. அப்படி அவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தது என்னுள் புது உத்வேகமாக பீறிட்டது. அவரை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் தொற்றிக்கொண்டது.

மதுரை புத்தக் கண்காட்சியில் வெய்யிலின் கவிதை தொகுப்பு வெளியீட்டில் சந்தித்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மெல்லிய புன்னகையுடன் என்னை நினைவுகூர்ந்தவர் என் கைகளைப் பற்றி ‘நிறைய எழுதுங்க” என்றார். மிக மென்மையாக இருந்தார். நிதானமாக வெளிப்படும் குரல். வசீகரமான புன்னகை.அவரது ஆளுமை என்னுள் ஒரு சித்திரம் போல் தங்கிவிட்டிருந்தது. அதன்பின் வண்ணதாசன் என்கிற பெயரை பார்க்கின்றபோதெல்லாம் அச்சித்திரமே நினைவில் வரும்.

இலக்கியம் வாசிக்கத்தொடங்கிய புதிதில் நூலகத்தில் அவரது ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், நடுகை’ வாசித்துவிட்டு அக்கதைகளை அசைபோட்டபடியே புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். கதைகளில் சிறு அசைவுகள் கூட நுண் சித்திரமாக்கியிருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்.

என்னளவில் சிறுகதைகளில் வெளிப்படும் வண்ணதாசனும் கவிதைகளில் வெளிப்படும் கல்யாண்ஜியும் வேறுவேறானவர்கள். சிறுகதைகளில் மெளனமான நதியாக ஓடுவது கவிதைக்குள் நுழைந்ததும் காட்டாறுபோல பாய்ச்சலுறும். நுண்ணிய அவதானிப்பு கொண்ட சொற்கள் கூர்மையாக வந்துவிடும். சில நேரம் அக்கவிதைகள் சட்டென்று ஓங்காரமாகத் எழுந்துவரக்கூடியன

இலக்கிய வாசகர்கள் சங்கமிக்கின்ற நிகழ்வாக விஷ்ணுபுரம் விருது மாறிவிட்டிருக்கிறது. இதை இக்காலக்கட்ட இளம் வாசகர்கள்/படைப்பாளிகளுக்கு பெரும் வரம் என்றே நான் சொல்வேன். சிறுகதைகளிலும் , கவிதைகளிலும் தவிர்க்கவியலாதவொரு ஆளுமையுடன் உரையாட இவ்வருட டிசம்பருக்காக காத்திருக்கிறோம்…..

அன்புடன்
தூயன்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்னும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அடையச்செய்தது. அவரது வாசகர்கள் எப்போதும் அவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரை பொதுவாக இலக்கிய உலகம் போதுமான அளவுக்கு கண்டுகொள்லவில்லை

அதற்கான காரணங்கள் என்று எனக்குத் தோன்றுவது சில உண்டு. பார்த்தால் தெரியும். இங்கே அறிவுஜீவிகள் ஒருவரைக் கொண்டாடுவதென்றால் அவர் பலரால் வாசிக்கப்படாதவராகவும் இவர்கள் மட்டுமே கண்டுபிடித்துச் சொல்பவராகவும் இருக்கவேண்டும். அவ்வப்போது அப்படி எவரையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மிகச்சாதாரணமான எழுத்துக்களைக்கூட எடுத்துவைத்து அக்கக்காக அலசி எதையாவது கண்டுபிடித்துக்கொண்டிருப்பார்கள். பார்த்தாயா நான் உன்னைவிட அபூர்வமானவன், ஆகவே நீ வாசிக்காததை நான் தேடி வாசிக்கிறேன். இதெல்லாம்தான் பாவனை. இவர்களுக்கு பல்லாயிரம்பேர் விரும்பும் வண்ணதாசன் மீது ஈடுபாடு இருப்பதில்லை

மறுபக்கம் வணிக எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவரது எழுத்தின் பூடகமும் நுட்பமும் பிடிகிடைப்பது இல்லை. ஆகவே அவர்களும் விரும்புவதில்லை. அவர்களுக்குரிய அங்கீகாரமும் புகழும் வண்ணதாசனுக்கு வருவது இல்லை.

ஆனால் இதெல்லாம் போலியான பாவனைகள். மனசைத்திறந்துவைத்து வாசிப்பவர்களுக்காக வண்ணதாசன் எழுதிக்கொண்டேதான் இருக்கிறார் என நினைக்கிறேன்

முருகேஷ்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். வழக்கமான சம்பிரதாய வாழ்த்து சொல்லவில்லை. உண்மையாகவே எனக்கு இது கொண்டாட்டமான நிகழ்ச்சி. விஷ்ணுபுரம் விருது இதனால் பெருமைபெற்றுள்ளது

வண்ணதாசனை நான் என் இளமைக்காலம் முதல் வாசிக்கிறேன். இளமையில் அவர் எனக்கு இனிய தித்திப்பை அளித்த எழுத்தாளராகத்தான் இருந்தார். நான் வளரவளர அவரும் வளர்ந்தார். இன்றைக்கு மனிதர்களின் முடிவில்லாத முகங்களைக் காட்டும் எழுத்தாளராக மாறியிருக்கிறார். இன்று அவர் எனக்கு அளிப்பது வேறு உலகம்

வண்ணதாசனை நிறையபேர் இளமையில் வாசித்தபின் விட்டுவிடுகிறார்கள். பிறகு அன்றைக்கு வாசித்த நிலையிலேயே அபிப்பிராயங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வண்ணதாசனை அறியவில்லை என்றுதான் அர்த்தம்

அவர் இனிப்பை மட்டும் எழுதுபவர் என்று சிலர் சொல்வதுண்டு. நான் அவர்களிடம் நீங்கள் கடைசியாக அவரை எப்போது வாசித்தீர்கள் என்றுதான் கேட்பது வழக்கம்

முதிர்ச்சியடைந்த வாசகன் வண்ணதாசனிடம் அடைவதற்கு நிறையவே உள்ளன. இளமையில் வாசித்ததை உடைத்தபடி மீண்டும் அவருக்குள் நுழையவேண்டியிருக்கிறது

இந்தச்சிக்கல் ரூமி, கலீல் கிப்ரான் போன்ற கவிஞர்களுக்கும் உண்டு. இளமையிலேயே அவர்கள் அறிமுகமாகிவிடுகிறார்கள். அப்போது உள்ளக்கிளர்ச்சி அளிக்கிறார்கள். மறுமுறை அவர்களைச் சென்று வாசிக்காவிட்டால் நாம் நிறைய இழந்துவிடுவோம்

மகேஷ் பாலகிருஷ்ணன்

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது – தினமலர்

வண்ணதாசனுக்கு விருது தமிழ்இந்து

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காந்தி கடிதங்கள்

$
0
0

05884aa23728fd8e765d73a75044fe34[1]

அன்புள்ள ஜெ…

 

 

உங்களின் வலைப் பக்க வாசிப்பாளன் என்ற முறையில் உங்களைப் பின் தொடர்பவன் நான்  காந்தியைப் பற்றிய உங்களது உரை என்னை ஒரு வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டது! நீங்கள் எப்படி காந்தியை அவதானித்து எழுதுகிறீர்களோ அதைப் போலவே உங்களை அவதானிக்கும் ஒரு முயற்சி என்னிடம் உண்டு. நான் ஒன்றும் தேர்ந்த அறிவாளி அல்ல. ஆனால் அறிவாளிகள் எழுதுவதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் உடையவன்.

 

 

அமெரிக்காவில் 18 வருடங்களாக உள்ளேன். அமெரிக்காவைப் பற்றி எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. நீங்கள் உங்கள் உரையில் தொட்டுச்  சென்ற எல்லாவற்றுக்கும் முதலான காரணி அமெரிக்கா என்பது என் அசையா நம்பிக்கை. நீங்களே கூட காந்தியை ஆராதித்தாலும் வலதுசாரி சிந்தனைகள் அதிகம் கொண்டவராகவே நான் நினைத்ததுண்டு! ஆனால் Federalism, Consumerism, Globalism என எல்லாவற்றிலுமே நீங்கள்  சொன்ன விடயங்கள் என் கருத்துகளை ஒத்தவையே. அமெரிக்காவின் காபிடலிசத்துக்கும் இவற்றுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன.  நம் வாழ்க்கையே ஒரு hypocrisy என ஆகி விட்டது! என் நண்பரிடம் நான் அடிக்கடி சொல்லுவேன்.  Life is Hypocrisy.  இதை நினைத்து நான் வருந்தும் போது சுற்றிலும்  மற்ற நண்பர்களையும் பார்க்கிறேன். என்னையே ஒரு முட்டாளாக உணர்கிறேன்! ஏன் எல்லாரும் வாழ்க்கையை ஒரு running race மாதிரி நினைத்து ஓடிக் கொண்டுள்ளோம்? அவன நிறுத்தச் சொல்லு …அப்புறமா நான் நிறுத்தறேன் என ஏன் இருக்க வேண்டும். ஆனால் தீவிரமாகச்  சிந்தித்தால் புரிவது என்னவென்றால் இதை இனிமேல் தனி மனிதர்களால் மாற்ற முடியாது என்பதே! இதுவே ஒரு வாழும் முறை என்றாகி விட்டது! செல் போன் பற்றி நீங்கள் சொல்லியதை வைத்து எத்தனை பேர் 3  வருடங்களுக்கு ஒரு செல் போன் வாங்கப் போகிறார்கள்? கடந்த 18 வருடங்களில் நான் 8 செல் போன்கள்  பாவித்துள்ளேன். இப்போது இருப்பது என் இரண்டாவது         ஆண்ட்ராய்ட்  ஸ்மார்ட் போன். மூன்று வருடங்களாகப் பாவிக்கிறேன். எல்லாரும் என்னைக் கஞ்சன் என்கின்றனர்!

எல்லாவற்றிலும் மையம் தேடும் அல்லது மையம் இருக்க வேண்டும் என்ற  நம் மனோநிலையின் விளைவே இந்த வாழ்க்கைமுறை. அதை நீங்கள் மிக அழகாகச் சொன்னது கண்டு வியந்தேன்.  பல நாடுகள் சுற்றும் போது தான் வாழ்க்கை என்றால் என்ன எனப் புரியும். அந்தப் புரிதலுடன் கூடிய இத்தகைய உரைகள் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும். அதனால் அவர்களது வாழ்க்கை முறையில் ஒரு தெளிவு பிறந்தால் நல்லதே!

உங்களிடம் பேச நிறைய உள்ளது. முடியும் போது எழுதுகிறேன்!

அன்புடன்,

பாலா.

 

அன்புள்ள பாலா

 

இன்றையநிலையில் காந்தியைப்புரிந்துகொள்வதென்பது அவர் முன்வைத்த பிரச்சினைகளை புரிந்துகொள்வதே. தீர்வுகளை அவருக்கு நூறாண்டுகளுக்குப்பின் அவர் எண்ணிப்பார்க்காத சூழலில் வாழும் நாம் வேறுவகைகளில்தான் புரிந்துகொள்ளவேண்டும்

 

அது உலகம்தழுவிய பிரச்சினை என்பதனால் உலகளாவிய காந்தியசிந்தனையாகவே தீர்வும் வளரமுடியும் என நினைக்கிறேன்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ..

 

வாசன் , சாவி போன்றோர்களின் நோக்கம் வணிகம் என்றாலும் இலக்கியப்பங்களிப்பும் ஆற்றி இருக்கின்றனர் என சொல்லி இருந்தீர்கள்

 

சாவியின் நவகாளி யாத்திரை நூலை வெகு ஆவலுடன் படித்தேன்.. எப்பேற்பட்ட வரலாற்று சம்பவம் , எப்பேற்பட்ட வரலாற்று மனிதரை சில நாட்கள் அவதானிக்கும் வாய்ப்பு… ஆனால் அந்த புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது..   உங்களாலேயே பாராட்டப்படும் ஒருவர் , இவ்வளவுதான் கவனித்தாரா என தோன்றியது…மற்றபடி அவர் நல்லெண்ணம் புரிந்தது

 

அந்த யாத்திரை குறித்து அன்றைய தமிழ் இதழ்களின் பதிவுகள் அல்லது அது குறித்து எழுதப்பட்ட தமிழ் நூல்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என அறிய ஆவல்…

 

அன்புடன்,

பிச்சைக்காரன்

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

 

உண்மையைச் சொல்லப்போனால் நவகாளி யாத்திரை பற்றி அல்ல  ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைபற்றியும் தமிழில் முறையான பதிவுகள் இல்லை. நுணுக்கமான தகவல்களுடன் எழுதப்படும் சித்திரங்கள் இங்கே இல்லை. எளிய போகிறபோக்கிலான குறிப்புகள். மிகைநவிர்ச்சிகள். நம்பகத்தன்மை என்பது சொல்பவரின் சமநிலை சார்ந்தது. அதைத்தேடித்தான் பார்க்கவேண்டும்

 

ஏன் சமகால வரலாறான ஈழப்போர் பற்றி எத்தனை சமநிலைகொண்ட பதிவுகள் உள்ளன? நான் புஷ்பராஜவின் நூல் ஒன்றை மட்டுமே சுட்டிக்காட்டுவேன். பிற எல்லாமே பொய்யுணர்ச்சிக்கூச்சல்கள்.

 

சில விதிவிலக்குகள் உண்டு. தி.சே.சௌ.ராஜனின் நினைவலைகள், கோவை அய்யாமுத்துவின் வாழ்க்கைக்குறிப்புகள், க.சந்தானத்தின் நினைவலைகள் போன்றவை.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வணங்குதல்

$
0
0

unnamed

அன்புள்ள ஜெ,

கலைக்கணம் வாசித்ததிலிருந்தே கதகளியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. முதற்கட்டமாக அடிப்படை முத்திரைகளை கற்கலாம் என இறங்கினேன். வெறும் ஐந்து விரல்களின் சைகைகள் முற்றிலும் வெவ்வேறான இருபத்திநாலு முத்திரைகள் சமைப்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. சில காணொளிகளை பார்த்த பின்பு முத்திரைகள் ஓரளவு நினைவில் நின்றது. இனி கதகளியை பார்த்தால் கபக்கென புரிந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

கதகளியை நேரடியாக பார்த்தபோதுதான் புரிந்தது நான் கற்றது மிகமிக அடிப்படையானது என. இம்முத்திரைகள் இரு கைகளிலும் பலவகையிலும் இணைந்து கதையின் போக்கிலும் பாவங்களுக்கு ஏற்றவாறும் நுட்பமாக பல்வேறு பொருள்கொள்வதையும் உணர்ந்தேன். தனிமுத்திரைகள் வெறும் எழுத்துருக்களே என்றும் அதை மட்டும் வைத்துக் கொண்டு கதகளி எனும் சங்கபாடலை முழுமையாக பொருள்கொண்டுவிட முடியாது என புரிந்தது. அதுவும் மனோதர்ம பகுதிகளின் நுட்பங்களை புரிந்துகொளவது ஓரளவு பயிற்சியல்லாமல் இயல்வதல்ல.

இருப்பினும் இரு கைகளின் சைககளின் வாயிலாக தனி உலகமே கண்முன் விரிவது பரவசமூட்டும் அனுபவமாகவே இருந்து வந்தது. மேலும் ஓசை நின்ற பின்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் செண்டையின் தாளமும் பெயரறியா தூரத்து கேரள கிராமங்களில் அமைந்திருக்கும் கோயில்களின் இரவில் உருவாகும் கனவுச் சூழல் தரும் இன்பமும் கதகளியை எவ்வகையிலும் ஏமாற்றமளிக்காத ஒன்றாக பார்த்துக் கொள்கிறது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 2 அன்று வடகேரளாவில் அமைந்துள்ள செரிப்பூரில் ‘துரியோதன வதம்’ நடைபெறுவதாக இணையத்தில் அறிவிப்பு கண்டு சென்றேன். இரவு 8 மணி ஆரம்பிக்கும் கதகளிக்கு நான்கு மணிக்கெல்லாம் அருகிலுள்ள ’அரங்கோட்டுகரா’ எனும் ஊர்வரை சென்றுவிட்டேன். நிறைய நேரமிருந்ததால் அங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் நடந்தே பயணித்தேன்.

நானும் ஒருகடையில் கட்டன்சாயா குடித்துக் கொண்டு ‘எந்தா சேட்டா’ என கண்களால் விளித்து பார்த்தேன். ம்ஹூம். யாரும் என்னை மலையாளியாக ஏற்றுக் கொள்வதாக இல்லை. வழியில் குறைந்தது ஐந்து பேராவது ‘எந்தா இவிடே?’ என சாலையில் சென்றவனை மடக்கி விசாரித்தார்கள் (சாலையில் எதிர்கொண்டதே ஐந்து பேரைத்தான்). முதலில் சந்தேகமாக பார்த்தாலும் ’கதகளி காண..’ என விளக்கிய பிறகு அனைவருமே இலகுவாகி வழியனுப்பினார்கள். கதகளி என்றவுடன் சற்றே நட்பான தோரணையும் காண முடிந்தது.

இருமுறை வழிதவறி ஒருவழியாக எட்டு மணிக்கெல்லாம் நிகழ்வு நடைபெறும் ஐயப்பன் காவு வந்தடைந்தேன். வந்தவுடன் பார்வையாளர்கள் அனைவருக்கும் பட்ஷனங்கள் உண்டு எனும் மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவிப்பாளர் ஒலித்தார். ஆனால் வந்திருந்த பத்துபேரில் யார் பந்தியை ஆரம்பித்து வைப்பது எனத் தெரியாமல் சிறிதுநேரம் சோதித்தனர். ஆப்பமும் இட்லியும் மனதை நிறைத்தன.

கேளிகொட்டு முழங்க தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்தார்கள். இரு பெரிய குடும்பங்கள் காரில் குழந்தைகளும் தாத்தா பாட்டிகளுமாக வந்திருந்தார்கள். சட்டென ஐம்பது பேருக்குமேல் திரண்டு அரங்கு நிறைந்தது போன்ற காட்சியளித்ததால் ஏமாற்றமாக இருந்தது. இதற்குமுன் நான் கண்ட களியில் பத்துபேரும் முப்பது பேருமே பார்வையாளர்கள். இது ஒருவேளை வணிக கதகளியோ என்று எழுந்த எண்ணத்தை விலக்கினேன். கதகளியில் அப்படியொன்று கிடையாது. அன்றைய களியில் கிருஷ்ண வேடத்திற்கு தோன்றவிருந்த கலாமண்டலம் பாலசுப்ரமணியன் ஆசான் கதகளி அறிந்தவர்களிடையே புகழ்மிக்கவர் என்பதால் இருக்கலாம்.

கேளிகொட்டு முடிந்தபின் புதியவர்களின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. இரண்டு இளவயது பையன்கள் ராமனும் சீதையுமாக அபிநயம் பிடித்தனர். அரங்கேற்றம் முடிந்தபின்னர் இரண்டு பெரிய குடும்பங்களும் கிளம்பிவிட்டனர். தங்கள் வீட்டு பிள்ளைகளை செல்பி எடுத்து உற்சாகபடுத்தியதுடன் கடமை முடிந்ததாக நிறைவுற்றிருக்கலாம். பாதி அரங்கு காலியானதுபோல் இருந்தது. ஆனால் அதற்குள்ளாக ஊரிலுள்ள கதகளி ரசிகர்கள் வந்திருந்தனர். சில தாத்தாக்கள் கைத்தாங்கலாக கூட்டிவரப்பட்டனர்.

முதல்காட்சி பாஞ்சாலி தனக்கு நேர்ந்த கொடுமையை கிருஷ்ணனிடம் எடுத்துசொல்லி அழுதுபுலம்புவதாக இருந்தது. அவையில் தனக்கு நடந்ததை வாயெடுத்து சொல்லக்கூட இயலாத அபலைபெண். துயரமும் ஆற்றாமையும் நிறைந்த பாஞ்சாலியைக் கண்டேன். கைகள் மேலெழ முயற்சித்து தோற்று துவண்டு விழுந்து கொண்டேயிருந்தன. முகத்தில் எப்போதும் அடுத்தகணம் கதறி அழுதுவிடக்கூடிய பாவம். வெண்முரசின் நிமிர்வும் வஞ்சமும் கொண்ட பாஞ்சாலிக்கு நேரெதிர். ஆனால் இருவரும் ஒன்றே எனவும் தோன்றியது! கிருஷ்ணன் எல்லா கணக்குகளையும் தான் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து ஆற்றுப்படுத்தினான்.

துச்சாதனன் தொண்டைகிழியும் வெறிக்கூச்சலுடன் அறிமுகமாகி இரண்டாம் காட்சியை தொடங்கி வைத்தான். துரியன், துச்சாதனன், திருதா, அவைக்கு விருந்தினராக வந்திருந்த ஒரு அந்தணர் என அஸ்தினபுரியின் அவை அங்கே நிகழ்ந்தது. பாண்டவர்களின் தூதுவனாக கிருஷ்ணன் அங்கே வரப்போகும் செய்தி அவைக்கு கிடைத்தது. துரியனும் துச்சாதனனும் கொந்தளித்தனர். கன்றோட்டி பால்கறந்து பிழைக்கும் அந்த எளிய யாதவனுக்கு இந்த அவையில் எவ்வகையிலும் முறைமையோ மரியாதையோ அளிக்கப்படலாகாதென்று அனைவருக்கும் அறிவித்தனர். மீறுபவர்கள் வெட்டி வீழ்த்தபடுவார்கள் என எச்சரித்தனர். தடா புடாவென்று ஒரே அதட்டல். நானும் சற்றே கால்களை குறுக்கி பவ்யமாக அமர்ந்து கொண்டேன்.

திடீரென அவையில் இருந்த அந்தணர் மேடை விட்டிறங்கி கீழே பார்வையாளர்கள் நடுவே ஓடினார். ஒரே குழப்பம்.

பிறகுதான் புரிந்தது, கிருஷ்ணன் பார்வையாளர் அரங்கின் பின்புறத்தில் எழுந்தருளியுள்ளார் என்று. சிறு வணக்கம் கூட வைக்கப்படலாகாதென்று சொல்லப்பட்ட யாதவனுக்கு மொத்த அரங்கே காலில் விழப்போகும் பாவத்துடன் எழுந்துநின்று மரியாதையளித்த காட்சியை பார்த்தேன். அங்கிருந்த அனைவரும் அந்த கிருஷ்ணனை அறிந்திருந்தனர். தோழனாக, அரசனாக, கடவுளாக. அவருடன் கைசைகைகள் வாயிலாகவே உரையாடினர். கிண்டல்கள், சிரிப்புகள்.

சட்டென ஒரு தாத்தாவை பார்த்ததும் பாலசுப்பிரமணியன் ஆசான் தாள்பணிந்து அவரிடம் ஆசி வாங்கினார். அடக்கமான பாவத்துடன் அவருடன் ஏதோ உரையாடினார். புகழ்மிக்க ஆசான் ஒருவர் ஓர் எளிய கதகளி ரசிகரான கிழவரின் காலில் விழுவது பிரமிப்பாக இருந்தது! வேறெந்த கலையிலும் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. கதகளி கலைஞர்களை காட்டிலும் அதன் ரசிகர்கள் கலைஞர்களால் கெளரவிக்கப்படுகிறார்கள்.

கிருஷ்ணன் அனைவரிடமும் பேசியவாறும் உட்கார சொல்லியவாறும் பெண்கள்நிரை பக்கம் சென்றார். பெண்களிடமும் மாமிகளிடமும் களியாடினார். பாட்டிகளிடமும் கூட. அனைத்து பெண்களின் முகத்திலும் வெளிப்படும் காரணமில்லா பிரேமையை கண்டேன். காரணமில்லாமல் ஒருவர்மீது ஏற்படும் பிரேமைதான் எத்தனை மகத்தானது!

இதுவரை பக்தியோடு வழிபடுபவர்களை பார்க்கும் போது பொதுவாக பிழைப்புவாதம் என்றோ அசட்டுத்தனம் என்றோதான் தோன்றும். முதன்முறையாக அவ்வாறல்ல என்றும் அதுவொரு ஆசிர்வதிக்கப்பட்ட நிலை என்பதையும் உணர்ந்தேன். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். வாழ்க்கையில் முதல்முறையாக மனதார என் கடவுளை நானும் வணங்கி நின்றிருந்ததை! என்னவொரு விடுதலையான நிலை! கடவுளும் தோழனுமாகிய என் நாயகனை அங்கு கண்டுகொண்டேன்.

முருகனோடும் பெருமாளோடும் கருப்பனோடும் நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கும் பக்திமரபில்வந்த சென்ற தலைமுறைக்கு இது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அம்மரபிலிருந்து நவீன இளைஞர்கள் வெகுதூரம் விலகி வந்தாயிற்று. திருநீறு இட்டுக் கொண்டால் அவ்வளவு கெத்தாக இருக்காதோ என யோசிக்கும் இன்றைய இளைஞனுக்கு கடவுளரிடம் பேசும் மொழியேதும் மிச்சமிருப்பதாகத் தெரியவில்லை.

ஒருவகையில் வெண்முரசு செய்வது இதைத்தான் என பொருள்கொள்கிறேன். கருவறை அமர்ந்த தெய்வங்களை பீடம்விட்டிறக்கி எங்கள் வரவேற்பறையில் விட்டிருக்கிறீர்கள். தேவர்களோடும் அசுரர்களோடும் இனி நாங்கள் தோள்கோர்த்து களியாடலாம். வெண்முரசல்லாமல் நான் கிருஷ்ணன் எனும் களித்தோழனை அடையாளம் கண்டிருக்கமாட்டேன். நன்றி என்பதற்கப்பால் என்ன சொல்வதென தெரியவில்லை.

அன்புடன்,

தே.அ.பாரி.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்

$
0
0

 

சிறுகதை என்னும் வடிவத்துக்கு முன்மாதிரி யான சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தவர் எனப் புதுமைப்பித்தனை முன்னிறுத்துவதுண்டு. அதற்கடுத்தபடியாக, மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் முன்மாதிரியான சிறுகதைகளை உருவாக்கியவர் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.vannadasan

 

 

மண்குதிரையின் கட்டுரை. தமிழ் தி ஹிந்து நாளிதழில்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

$
0
0

v

வணக்கம்.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருதை அறிவித்திருக்கும் செய்தியைப் படித்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். நான் எழுதத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அவரை விரும்பத் தொடங்கி இன்றுவரை என்னுடைய விருப்பப்பட்டியலில் தொடரும் எழுத்தாளர் அவர். சிறுகதைகளில் அவர் கையாண்டிருக்கும் பல நுட்பங்கள் எதிர்காலத்தில் தமிழில் படைப்பிலக்கியம் ஒரு பாடமாக வைக்கப்படுமெனில் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கான பாடங்களாக இருக்கும். எத்தனை முறை படித்தாலும் சலிப்பேற்படுத்தாத கதைகள்.

இந்த வாழ்க்கையை ஆயிரம் கோணங்களில் எடுத்த படங்களின் தொகுப்பு அவர் கதைகள். இத்தருணம் என் மகிழ்ச்சிக்குரிய தருணங்களில் ஒன்று. இவ்விருதை அவருக்கு அர்ப்பணிப்பது என்பது ஒருவகையில் மகன் தந்தைக்காற்றும் நன்றி. அவரை வணங்கும் உங்கள் கைகளுடன் என் கைகளையும் இணைத்துக்கொள்கிறேன். நம் நண்பர்கள் அனைவருக்கும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

பாவண்ணன்

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நான் நீண்டநாட்களாகவே எண்ணிக்கொண்டிருந்தது இது. அவரை நாம் போதுமான அளவுக்கு கௌரவிக்கவே இல்லை. விஷ்ணுபுரம் விருது என்பது வெறுமே விருதை அளிக்கும் நிகழ்ச்சி அல்ல. அது கொடுக்கும் அமைப்பை முன்னிறுத்துவதும் அல்ல. விருதுபெறும் படைப்பாளியை எப்படி கொண்டாடவேண்டும் என்பதை மற்றவர்களுக்குக் காட்டும் நிகழ்ச்சி.

ஆகவே அதை அவர் பெறுவது மிகமிக மகிழ்ச்சி அளிப்பது. என் ஆதர்ச எழுத்தாளர் வண்ணதாசன். அவரை சொல்லெண்ணி வாசித்தவன். இன்றைக்கும் வாசித்துக்கொண்டிருப்பவன். அவருக்கு விருது என்பது எனக்கே விருது போல. வாழ்த்துக்கள்

மகாதேவன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

வண்ணதாசன் அந்தப்பெயரை ஏன் சூடிக்கொண்டார் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு கண்ணதாசனையும் வல்லிக்கண்ணனையும் பிடிக்கும். வல்லிக்கண்ணதாசன் என்று பெயர் வைத்து அதை வண்ணதாசன் என்று சுருக்கிக்கொண்டார்

ஆனால் அந்தப்பெயரே அவரது எழுத்தாக ஆகிவிட்டது. அவர் வண்ணங்களைக் காட்டக்கூடிய எழுத்தாளர். சிவப்பு என்று சொல்கிறோம். ஆனால் அதிலேயே எவ்வளவு சிவப்பு! என் ஆச்சி ஒருமுறை பட்டுரோசா பற்றி சொல்லும்போது ‘குளிச்ச உள்ளங்காலு நெறம்’ என்று சொன்னார். நாம் வண்ணங்களைச் சொல்லிச் சொல்லிச் சலிப்பது கிடையாது இல்லையா. கத்தரிப்பூ நிறம், வாழைப்பூ நெறம் தீப்பெட்டி நெறம், எள்ளுப்பூ நெறம் என்று வயலட்டையே நூறுவகையாகச் சொல்கிறோம்

அதேமாதிரி வாழ்க்கையின் வண்ணங்களைச் சொல்லிச் சொல்லி சொல்லவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருப்பவர் வண்ணதாசன். அவருக்கு விருது என்பது வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு விருது அளிப்பதுதான்

எஸ். அருண்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி இன்றைக்கு தினமலரிலேதான் வாசித்தேன். மகிழ்ச்சி அடைந்தேன். எழுதவேண்டும் என நினைத்தேன்

உங்கள் குறிப்பிலே நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். அவரை நெகிழ்ச்சியைச் சொல்பவர் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். அவர் மனிதகுணாதிசயங்களின் கதாசிரியர். அப்படிப்பார்த்தால் விதவிதமான சாதாரண மனிதர்களை அவர் காட்டிய அளவுக்கு தமிழில் இன்னொரு எழுத்தாளர் எழுதியதே இல்லை

ஜெயராமன்

 

ஜெ

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கும்செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அவரை நான் இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். அவருடைய அன்பான கைகளைப்பற்றி குலுக்கியிருக்கிறேன்.

 

வண்னநிலவனின் ரெயினீஸ் அய்யர் தெரு நாவலில் அவர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். எல்லாருக்கும் அன்பான கல்யாணி அண்ணனாக. அவருடைய கதாபாத்திரம் அது. அது அவர்தானா இல்லை அவருடைய தோற்றமா என்பது ஒரு கேள்வி

 

ஆனால் ஒருவர் எல்லாருக்கும் அன்புடன் இருக்க முயல்வதும் அதற்காக தன்னை அமைத்துக்கொள்வதுமேகூட இந்நாளில் பெரிய விஷயம்தான் என்று நினைத்துக்கொள்கிறேன்

 

சுவாமிநாதன்

 

Vishnupuram award for Vannadasan- Hindu

======================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜன்னல், குங்குமம் தொடர்கள் —கடிதம்

$
0
0

 

v0_master

இனிய ஜெயம்,

நேற்று இரவு யூ ட்யூபில் தாய்ப்பால் புகட்டுவது சார்ந்த கல்விக்காணொளி ஒன்று கண்டேன். இந்தியத் தாய், மதலையை அள்ளி, குமிண் இதழை இடது முலையில் பொதிந்து கொள்கிறாள். இயல்பாக வலது முலையில் அமுதம் ஊறி சடசடவென சொட்டுகிறது. அள்ளிப் பொத்திய விரல்கள் வழியே வழிகிறது. புறங்கையை புல்லரிக்கவைத்து, நுரையீரலை மூச்சிக்கு ஏங்க வைத்து, பரவசத்துக்குள் தள்ளிய காட்சித் துணுக்கு.

அம்மாவிடம் கேட்டேன், ”அம்மா புள்ளன்னா என்னன்னு நினைச்ச? அம்மா புள்ளைய நினச்சாலே போரும் அவளுக்கு பால் ஊறும”. அங்கு துவங்கித்தான் இன்று” சாப்டியாப்பா” எனும் அம்மாவின் பரிவை உம் எனும் ஒற்றை உறுமலில் கடந்து செல்லும் பெரும்போக்குக்கு வந்திருக்கிறேனா என்பதை ஒரு கணம் எண்ணிக் கொண்டேன். அய்யம்மா [அப்பாவின் அம்மா] சொல்லும் பாரதக் கதையில், குந்தி இழந்த கர்ணனை, திறமையை வெளிக்காட்டும் களத்தில்தான் முதன் முதலாக மீண்டும் பார்க்கிறாள். கண்ட கணம் அவளது ஸ்தனங்கள் அமுதம் சுரக்கிறது. நீலம் நாவலில் வரும் தாய், கண்ணனுக்கு இடது முலையை அளித்துவிட்டு, ததும்பி வழியும் வலது முலையை உள்ளங்கையால் பொத்திக்கொள்கிறாள். பெருகி வெடித்த காட்சிக்குமிழிகளில் இருந்து மீண்டும் எழுந்து வந்தாள், பாம்பும் கீரியும் கதையின் தாய். கீரியைக் கொன்ற பின்பே அவள் தவறை அறிகிறாள். அவள் இப்போது அழுவது கீரி என்ற மிருகத்துக்காக அல்ல, கீரிப் பிள்ளை என்ற தன்னுடைய பிள்ளைக்காக, பிள்ளைக்கு அளித்த முலை நிற்காமல் சுரக்கிறது, நிறுத்தவே இயலவில்லை. கணவன் இறந்ததும் அது குருதியாக சுரக்கிறது. பிள்ளையை தாய் கொன்ற கதை.

நேர் எதிரானது பிள்ளைக் கல் கதையில் வரும் ஆனைதம்பியின் நிலை. கடந்து வந்த அத்தனை மேன்மையையும் ஒரு கணத்தில் மறந்து, நிறைசூலி மனைவியை ஒரே உதையில் கொல்லுகிறான். செத்தவள் கேதம் தீர பிள்ளைக் கல் நட்டு வழிபடுகிறான். செத்தவள் அடங்காமல் ஆவியாக வந்து அழுகிறாள். ஆனைதம்பி மனம் பேதலித்து அந்த பிள்ளைக் கல்லில் தலை மோதிப் பிளந்து இறக்கிறான். பின்னர் ஆவியாக அலையும் அந்தத் தாயின் இரு ஒல்கலையில் அமர்ந்து இரு குழவிகள் முலையருந்திக் கொண்டிருக்கிறது. மாமா சொல்கிறார் அந்த இன்னொரு குழந்தை ஆனைத்தம்பி. தாயை பிள்ளை கொன்ற கதை.

கணவனே ஆயினும் அவனை பெண் தனது அடி ஆழத்தில் அவனை தனது குழந்தையாகக் கொண்டே அதில் அமைகிறாள். பாம்பும் கீரியும், பிள்ளைக் கல் இரு கதைகளிலும் அதன் உள்ளோட்டமாக அமையும் இந்த நோக்கு, என்ன சொல்ல… அதுதான் என் ஜெயம்.

நிற்க. இவை போக முகங்களின் தேசம் தொடரில் நீங்கள் எழுதியவற்றிலேயே முதலிடம் பிடிப்பது இன்றைய ஏழரைப் பொன் பதிவு. முன்பொரு சமயம் கேரளத்தில் திரிந்து கொண்டிருந்தேன். என் கூட்டுக் குடும்பத்தில் தாத்தா அப்பா இரண்டு சித்தப்பாக்கள் இரண்டு மாமாக்கள் என அடுத்தடுத்து ஒவ்வொருவராக அற்பாயுளில் கிளம்பி சென்றுகொண்டே இருந்தார்கள். என் சித்தப்பா இறந்து அவரது இறுதிக் கடனை முடித்து விட்டு சேரன்மாதேவியில் இருந்து அப்படியே பாசன்ஜர் ஏறி கொல்லம் வந்து, அங்கிருந்து நான் கேள்வியே பட்டிராத கேரள கிராமங்களுக்குள் சுற்றித் திரிந்தேன். கல்லுதாழம் எனும் ஊரில், மழை பெய்யும் ஓர் இரவு. அங்கிருந்த முந்திரி கம்பனி காவலாளி தனது அறையில் எனக்கு இடம் தந்தார். இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். பகலில் புறப்படும் போதுதான் அறிந்தேன், நான் தொலைந்து போகவோ, தற்கொலை மனநிலை கொண்டு திரிவதாகவோ அவர் எண்ணி இருந்தார்.

நண்பர் ஒருவர் இளவயது. சில நாட்கள் அலைந்து திரிந்ததில் கடும் அசதி. கேரள துறைமுக நகரம் ஒன்றினில் கடற்கரையில் அந்தியில் சென்று அமர்ந்தார். சில முகமதிய வணிகர்கள் அவர் வசம் பேச்சு கொடுத்தனர். தேநீருடன் இயல்பாக நண்பரின் ஊர் பெயர் கடந்த காலம் அனைத்தையும் விசாரித்து இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். விடிந்த பின்பே அவர்கள் நண்பரை எதோ தற்கொலை செய்து கொள்ள வந்தவர் என எண்ணியதாக சொல்லிச் சிரித்தனர். அங்கிருந்து நண்பர் இதை எனக்கு தொலை பேசினார். அந்த நண்பர் அஜிதன்.

ஏழரைப்பொன் பதிவில் வரும் சூழல் சித்தரிப்பு, உண்மையில் பொறாமை கொள்ள வைக்கிறது. இளம் காற்றில் எஞ்சிய மழையின் நினைவு என்ற கவித்துவ வரி, அப்படியே டிராகுலாவாக மாறி உங்களை கடித்து உறிஞ்சிவிடலாமா எனத் தோன்றியது. நீங்கள் குறிப்பிட்ட சதானந்தம் மானுடத்தை அரவணைத்து முன் கொண்டு செல்லும் சாரமான கருணை ததும்பும் சதானந்தன்களின் ஒரு துளி.

எப்போதும் போல் மானசீகமாக உங்கள் கரங்களுக்கு என் அன்பு முத்தம்.

கடலூர் சீனு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சுபமங்களா, நினைவுகளின் தொலைவில்…

$
0
0

ks-left

 

1991 முதல் வெளிவரத்தொடங்கிய சுபமங்களா என் இலக்கிய வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. அதுவரை சிற்றிதழ்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். கோவை ஞானியின் நிகழ் இதழ் நான் எழுத களம் அமைத்துத் தந்தது. அதில் வெளிவந்த போதி, படுகை போன்ற கதைகள் என்னைப் பரவலாகக் கவனிக்கச்செய்தன. கணையாழி, புதியநம்பிக்கை, கொல்லிப்பாவை, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன்.

ஆனால் நான் எழுதும் வேகத்திற்குச் சிற்றிதழ் போதவில்லை. பெரிய இதழ்களின் அளவுகோல்களுக்கு ஏற்ப எழுத என்னால் இயலவுமில்லை. நான் எழுதவிரும்பியவை எனக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. அவை அன்றைய பொதுவான எழுத்துமுறையைச் சேர்ந்த படைப்புகள் அல்ல.

அன்று கணையாழி ஓர் இலக்கியமையம். அது ஓர் அழகியலையும் சிற்றிதழ்ச்சூழலுக்குள் உருவாக்கியிருந்தது. அன்றாட வாழ்க்கையை  யதார்த்தச்சித்தரிப்புடன் முன்வைப்பது என்பது அதன் இலக்கணம். அக்கதைகளின் சாரமும் பெரும்பாலும் எளிய அன்றாட உண்மைகளாகவே இருக்கும். நான் வாசிக்கத் தொடங்கும்போதே அந்த எழுத்துமுறை சலித்துவிட்டிருந்தது. இன்னொரு பக்கம் முற்போக்கு முகாமில் அதே யதார்த்தச் சித்தரிப்பை கிராமம் சார்ந்த வறுமையுடன் கலந்து முன்வைத்துக்கொண்டிருந்தனர்.

வணிகப்பேரிதழ்களில் அன்று விரும்பப்பட்ட கதைகளுக்கு ஒரே இலக்கணம்தான், ‘ஆண்பெண் உறவைப்பற்றிய புதிய ஒரு கோணம். மீண்டும் மீண்டும் காதல். மீண்டும் மீண்டும் குடும்பப்பிரச்சினைகள். கல்லூரி நாட்களில் அத்தகைய கதைகளை பல்வேறு பெயர்களில் அவ்விதழ்களில் எழுதித்தள்ளி கிடைத்த காசுக்கு பரோட்டா பீஃப் தின்று பரோட்டாவே சலித்துவிட்டிருந்தது.

நானும் கோணங்கியும் தமிழில் புதிய கதைகளுடன் புகுந்தோம். தரையில் கால்பதிக்காத கதைகள் என்று அவற்றைச் சொல்லலாம். யதார்த்தத்தை எளிதாக மீறிச்சென்றவை அவை. படுகை நிகழ் இதழில் வெளிவந்தபோது அந்தத் தேக்கரண்டி நீருக்குள்  உருவான அலையை நினைவுகூர்கிறேன். இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா உள்ளிட்ட பலர் அக்கதையைப் பற்றி எழுதினர். புதியநம்பிக்கையில் மாடன் மோட்சம் வெளியானபோதும் அதே அலை. அதன் குமரிமாவட்ட நடை குறித்த சுஜாதாவின் கிண்டலும்.

ரப்பர் அப்போது வெளியாகி மிகப்பரவலாக வாசிக்கப்பட்டிருந்தது. ரப்பரை வெளியிட்ட அகிலன் கண்ணன் [தமிழ் புத்தகாலயம்] எனக்கு ஃபோன் செய்து சுபமங்களாவுக்கு நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு கதையை அனுப்பும்படி விலாசம் அனுப்பினார். எனக்கு கோமலை அப்போது அறிமுகமில்லை. அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தார். தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்குப்பின் புகழுடன் திகழ்ந்தார். ஆனால் சுபமங்களா என்னும் பெயர் குழப்பம் அளித்தது. இடதுசாரிகளின் இதழ் என்றால் அப்படிப்பட்ட பெயர் இருக்க வாய்ப்பில்லை

கோமலை கவரும் கதை என்றால் அது ஒரு வறுமைச்சித்தரிப்பாகவே இருக்கமுடியும் என தோன்றியது. அதை மிக எளிதாக என்னால் எழுத முடியும். அகிலன் கண்ணன் என்னிடம் அது ஒரு நடுவாந்தர இதழ் என்றும், அதற்கேற்ப எழுதலாமே என்றும் சொன்னார். ஆகவே ஒரு வீம்பு வந்தது. ஜகன்மித்யை கதையை எழுதி அனுப்பினேன். அது அன்றைய சிறுகதை வகைமை எதற்குள்ளும் அடங்குவதல்ல

சிலநாட்களுக்குப்பின் கோமல் என்னை ஃபோனில் அழைத்து அறிமுகம் செய்துகொண்டார். கதையைப் பாராட்டி அதைப்போல எழுதி அனுப்பும்படிச் சொன்னார். சுபமங்களாவை நான் ஆர்வத்துடன் பற்றிக்கொண்டேன். அதில் பல பெயர்களில் தொடர்ந்து எழுதினேன். கதைகள் மட்டும் என்பெயரில். மூன்றுசரித்திரக் கதைகள், ரதம், மண், வெள்ளம என பலகதைகள் அதில் வெளிவந்தன.

எனக்கு முன் எழுதிய சிற்றிதழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இல்லாத தனி அடையாளத்தை எனக்கு சுபமங்களா உருவாக்கியளித்தது. அன்றுமுதல் எப்போதும் எனக்கென்றே வாசகர்கள் இருந்திருக்கிறார்கள். அன்று என்னை அறிமுகம் செய்துகொண்டவர்களின் மைந்தர்கள் இன்று என் வாசகர்களாக இருக்கிறார்கள்

என் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான ‘மண்’ கோமலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அது அச்சாகி வரும்போது அவர் உயிருடன் இருக்கவில்லை. சுபமங்களாவும் நின்றுவிட்டது. இப்போதும் கோமலை பிரியத்துடன் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர்கள் அனைவருக்கும் அவரை அணுக்கமாகத் தெரியும், என் சொற்களினூடாக

கோமல் நடத்திய சுபமங்களா இதழ்கள் அவர் மகள் முன்னெடுப்பில் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. ஒவ்வொரு பக்கமும் எப்படி மூலத்தில் இருந்ததோ அப்படி மின்வடிவில் உள்ளது. புரட்டிப்படிக்கப்படிக்க ஒரு காலப்பயணம் போலிருந்தது

ஆனால் திடீரென நஸ்டால்ஜியா செயலூக்கத்தை அழிப்பது என்று தோன்றி நிறுத்திவிட்டேன். வயதிருக்கிறது. சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடி புரட்டிக்கொண்டிருக்கலாம். கோமலை நினைத்து ஏக்கத்துடன் பெருமூச்சு விடலாம்.

 

சுபமங்களா இணையப்பக்கம். அனைத்து இதழ்களும் மின்வடிவில்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16737 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>