Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16742 articles
Browse latest View live

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29

$
0
0

பகுதி மூன்று : முதல்நடம் - 12

கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால் வளைக்கப்பட்ட அந்நிலத்தில் மண்தோன்றிய காலம் முதலாக மானுடர் காலடி பட்டதில்லை. எனவே விண்வாழும் தேவர்களும் இருள் வாழும் பெருநாகங்களும் வந்து விளையாடி மீளும் களியாட்டுச் சோலை என அது திகழ்ந்தது.

பளிங்கு ஊசிகள் போல் இறங்கி மண் தொட்டு நின்று அதிரும் பல்லாயிரம் கால்களுடன் சூரியன் அக்காட்டை கடந்து செல்லும்போது ஒவ்வொரு சாய்வுக்கும் ஒரு நற்தருணமென வகுத்து விண்ணவரும் பிறரும் அங்கிறங்கி களித்து மீண்டனர். அங்கு கனிகள் அனைத்தும் மதநீரின் இனிய நறுமணம் கொண்டிருந்தன. வெயில் பட்ட இலைப்பரப்புகள் வேட்கையில் சிவந்த பெண் உடலென மிளிர்ந்தன. அவர்களின் வெம்மை மிக்க மூச்சென காற்று அங்கு உலாவியது. ஈரமண்ணில் பட்ட கதிரவனின் ஒளி விந்துவின் நறுமணமென ஆவியெழச் செய்தது. தேவர்களின் விந்துத் துளிகள் விழுந்து முளைத்தெழுந்த வெண்காளான்களால் நிறைந்திருந்தது அக்காடு.

மகரராசியில் கதிரவன் புகும் முதற்தருணத்தை காண விழைந்த அம்மையுடன் கயிலை நின்றாடும் ஐயன் கீழ்த்திசை காண வந்தான். மேருவுக்கு மேல் செவ்வொளியும் நீலப்பேரொளியுமென எழுந்து இருவரும் மணிநீலவட்டம் சுடர்ந்தெரிய செம்மை சூழ்ந்து திளைத்தாட ஏழுவண்ண புரவிகள் இழுத்த ஒளித்தேரிலேறிச் சென்ற வெய்யோனை கண்டனர். “நலம் வாழ்க!” என்று வாழ்த்தி மீளும்போது அம்மை தன் ஓர விழியால் காமிதத்தை கண்டாள். அங்கிருந்து எழுந்த காமத்தின் நறுமணத்தால் ஏதென்றறியாது நாணி முகம் சிவந்தாள்.

அவளில் எழுந்த நறுமணத்தை அறிந்து விழி திருப்பி புன்னகைத்த சிவன் “அதன் பெயர் காமிதம். அங்கு தேவரும் தெய்வங்களும் நாகங்களும் வந்து காமம் கொண்டாடி மகிழ்கின்றனர்” என்றார். சினந்து விழி தூக்கி “நான் ஒன்றும் அதை குறித்து எண்ணவில்லை” என்றாள் அவள். நகைத்து “ஆம், நீ எண்ணவில்லை என்று நானும் அறிவேன். எண்ணியது நான்” என்றபடி சிவன் அவள் இடையை வளைத்து தன்னோடு அணைத்து “ஆகவே நாம் மண்ணிறங்கி அங்கு சென்று ஆடி மீள்வோம்” என்றார். அவர் கையைப்பிடித்து உதறி சினந்து “நான் சொல்வதென்ன? நீங்கள் புரிந்து கொண்டதென்ன? மைந்தரைப்பெற்று இவ்வுலகாக்கி விழிமூடாமல் இதை ஆளும் எனக்கு காமம் கொண்டாடுவதற்கு நேரமும் இல்லை. மனமும் இல்லை. நான் இங்குள அனைத்திற்கும் அன்னை” என்றாள்.

“நல்ல காமத்தை அறிந்தவரே நல்ல அன்னையராகிறார்கள். எனவே நல்ல அன்னையர் நல்ல காமத்திற்குரியவர்” என்றார் சிவன். “என்னை சினம் கொள்ளச் செய்வதற்கென்றே வீண்பேச்சு பேசுகிறீர்கள். இனி ஒரு கணம் இங்கிருந்தால் நான் நாணற்றவள் என்றே பொருள்” என்று சீறி அவர் நெஞ்சில் கை வைத்து உந்தித் தள்ளி அவ்விரைவில் குழல் பறந்து முதுகில் சரிய நூபுரங்கள் ஒலிக்க மணிமேகலைகள் குலுங்க அன்னை நடந்து சென்றாள். பின்னால் சென்று நழுவிய அவள் மேலாடையின் நுனியைப்பற்றி கையில் சுழற்றி தன் உதடுகளில் ஒற்றி “என்ன சினம் இது? ஈரேழு உலகங்களை ஈன்றாலும் என் கண்ணுக்கு நீ கன்னியல்லவா? உன்னிடம் காமம் கொள்ளாது இருப்பதெங்ஙனம்?” என்றார்.

சிவந்த முகத்தை குனித்து இதழ் கடித்து நகையடக்கி “போதும் வீண்பேச்சு. இன்னும் இளையோன் என நினைப்பு. ஈன்ற மைந்தர் தோளுக்குமேல் எழுந்துவிட்டனர்” என்றாள் சக்தி. சிவன் “இக்காமிதக் காட்டை கடந்து என்னால் வரமுடியவில்லை. இவையனைத்தும் பிறப்பதற்குமுன் இளம் கன்னியென நீ இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் மீள்கின்றன. பிறிதொருமுறை உன்னை அப்படி பார்க்க மாட்டேனா என்று அகம் ஏங்குகிறது” என்றார். கனிவு எழுந்த விழிகளால் அவரை நோக்கி “அவ்விழைவு தங்களுக்கு உண்டென்றால் அதை தீர்க்கும் பொறுப்புள்ளவள் அல்லவா நான்?” என்றாள் சக்தி.

“அதைத்தான் உன் இடை வளைத்து கேட்டேன்” என்றார் சிவன். “இல்லை, அதை கேட்கவில்லை. நீங்கள் பேசியதே வேறு” என்றாள் அன்னை. “எடுப்பது தங்கள் உரிமை. கொடுப்பது என் கடமை. அதை மட்டும் சொல்லியிருந்தால் போதுமே” என்றாள். “இப்போது சொல்கின்றேன், போதுமா?” என்று சிவன் அவள் கைகளை பற்றினார். காமம் நிறைந்த அவர் விழிகளை நோக்கி “நெடுங்காலம் நுரைத்த காமம் போலும்… தொல்மது என மயக்கு அளிக்கிறது” என்றாள் அன்னை. அவள் குறும்புச் சிரிப்பை நோக்கி “ஆயிரம் யுகங்கள்” என்று சிவன் சொன்னார். “வா, நமக்காக காத்திருக்கிறது காமிதம்.”

முகிலலைகளை படிகளாக்கி இருவரும் இறங்கி காமிதத்திற்கு வந்தனர். இரு சிறு வெண்புழுக்களாக மாறி புரியென ஒருவரையொருவர் தழுவி சுருண்டதிர்ந்து சித்தமற்ற பெருங்காமத்தை நுகர்ந்தனர். சிறு வண்டுருவாக மண் துளைத்துச் சென்று ஒருவரை ஒருவர் துரத்தி பற்றி ஆறு கால்களால் பின்னி ஒருவரை ஒருவர் கடித்து இறுக்கி ஓருடலாகி ரீங்கரித்து பறந்தெழுந்தனர். நா பறக்க சீறி பல்லாயிரம் முறை முத்தமிட்டு உடல் பிணைத்து நாகங்களாயினர். மான்கள் என துள்ளி குறுங்காடுகளை புதர்களைக் கடந்து பாய்ந்து மகிழ்ந்தனர்.

விழி மருண்டு நின்ற மடமான் இணை அருகணையும் வரை காத்து பின் தாவி கடந்து சென்றது. பெண்மையின் மென்மையே அவளுக்கு துள்ளலின் ஆற்றலாகியது. ஆண்மையின் தவிப்போ உடல் எடை மிகச்செய்து மூச்சிரைக்க வைத்தது. காடெங்கும் துரத்தி பற்றி தழுவிக் கொண்ட அக்கணமே அவரை உதைத்துத் தள்ளி நகைத்து மீண்டும் பாய்ந்தாள். நடை தளர்ந்து நுரை வாயில் ததும்ப விடாது தொடர்ந்தது மான்களிறு. தெளிந்த காட்டுச் சுனையருகே சென்றதும் அதில் எழுந்த நீர்ப் பாவையைக் கண்டு மயங்கி அருகே சென்று மூச்சு எழுப்பிய சிற்றலைகளில் நெளிந்த தன் முகம் கண்டு உடல் விதிர்த்து அசையாது நின்ற பிடியை புன்னகையுடன் மெல்ல பின்னால் அணைந்து தழுவி ஒன்றானது ஏறு.

தோகை மயிலென ஆகி மரக்கிளையிலிருந்து இறங்கி பீலி விரித்து ஓராயிரம் விழிகளைத் திறந்து அவளை நோக்கி அதிர்ந்தார். ஒரு நோக்கில் நாணுபவள் போல ஒசிந்தாள். மறு நோக்கில் ஊதப்பட்ட செங்கனல் போல் சிவந்து சீறினாள். பிறிதொரு நோக்கில் சரடு இழுத்த பாவையென அருகணைந்து அவரை தழுவிக் கொண்டாள்.

மத்தகம் குலுக்கி வெண்தந்தம் தூக்கி வந்த பெருங்களிறாக வந்தார். கருமுகிலென இடியொலி எழுப்பி அருகணைந்து அவருடன் மத்தகம் முட்டி அதிர்ந்து அசைவிழந்து நின்றாள். துதிக்கை பிணைத்து சுற்றி வந்தனர். பெருமரங்கள் குடை சரிய பாறைகள் உருண்டு சரிந்தோட காட்டை கலக்கி நிகர்வலு கொண்டு அசைவிழந்து ஒருவரை ஒருவர் அறிந்தனர்.

சிறகடித்து மரக்கிளையிலிருந்து எழுந்து இணைச்சிறகு விரித்து ஒளி நிறைந்த காட்டை சுற்றி வந்தனர். காற்றிலாடும் சிறுசில்லையில் அமர்ந்து ஐயன் வசந்தத்தின் காதல் பாடலை மீட்ட புள்ளிச்சிறகு குவித்து குமிண் சிரிப்புடன் இலைத்தழைப்புக்குள் அமர்ந்து அன்னை கேட்டிருந்தாள்.

செம்பருந்தென எழுந்து சூரியனை எதிர்கொண்டு பொன்னாகி அவன் சுற்றி வர மண்ணிலிருந்து எழுந்து அவன் அருகே சென்று அந்நிழலை தன் முதுகில் வாங்கி கீழே சுற்றி வந்தாள் அன்னை. மேலிலாத கீழிலாத வெளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தனர். நான்கு சிறகுகளால் காற்றைத் துழாவி பறந்து அமைந்தது புதிய பறவை.

நூறு உடல் கொண்டு முயங்கி விலகி நிறைவின்மையை உணர்ந்து மீண்டும் பொங்கி மீண்டும் முயங்கி உச்சம் கண்டு அவ்வுச்சத்தில் கால் வைத்தேறி மறு உச்சம் அடைந்து இன்னும் இன்னுமெனத் தவிக்கும் அகத்தை உணர்ந்து இதுவோ இதுவோ என்று வியந்தனர்.

பருகும் தோறும் விடாய்மிகும் நீர். எரிந்தெழுந்தாலும் கருகி அணைக்காத அனல். உண்டு தீராத தேன். முடிவற்ற பேரிசை. ஆயிரம் காலங்கள் கடந்திருந்தன. அவர்கள் காமம் கொண்டாடிய காடு பல்லாயிரம்முறை பூத்து தழைத்து செறிந்து பொலிந்தது. அவர்கள் காமம் காண்பதற்கென்று விண்ணிலும் மண்ணிலும் வியனுருக்கள் விழி என்றாகி வந்து நிறைந்தன.

இரு நுண்ணணுக்களாக மாறி நீரில் நொடித்து காமம் களித்தனர். பெரும் பசி கொண்டு ஒன்றை ஒன்று விழுங்கின கையற்ற காலற்ற விழியற்ற செவியற்ற வாயும் வயிறும் பசியும் மட்டுமேயான வெற்றுடல்கள். ஒன்றை ஒன்று உண்டு பசி தீர்த்தன. முற்றிலும் நிகர் நிலையில் காலம் மறைந்து சமைந்தன. விலகி விடிந்த வெறும்வெளி காலப்பொழுதில் தன்னை உணர்ந்த அன்னை நீள் மூச்சுடன் “ஆம், இது காம முழுமை” என்றாள். நகைத்தபடி அவளருகே எழுந்த சிவன் “ஆம், இனி ஒன்றில்லை” என்றார்.

“பிரம்மனை அழைத்து இக்கணமே அவனெண்ணிய முழுமையா என்று கேட்போம்” என்றார். கயிலைக்கு வந்து வணங்கி நின்ற பிரம்மன் “தங்கள் ஐயத்தை அறிந்தேன். இறைவா, தாங்கள் இருவரும் அறிந்தது மாமலையின் ஒரு பக்கத்தை மட்டுமே” என்றார். “மண்ணிலுள்ள அத்தனை உயிர்களாகவும் காமம் களியாடி மீண்டிருக்கிறோம். இனி பிறிதெது?” என்று சினந்தார் சிவன். “அத்தனை உயிர்களிலும் ஆணில் நின்றாடியிருக்கிறீர்கள் ஐயனே. ஆணறியும் காமமன்றி பிறிதெதை அறிந்தீர்கள்?” என்றார் பிரம்மன்.

தேவியை நோக்கி “பெண் அறியும் காமத்தை மட்டுமே தாங்களும் அறிந்துள்ளீர்கள் தேவி” என்றார். சிவன் சினந்து “அவ்வண்ணமெனில் அதுவே அறிதலின் எல்லை என்று கொள்க! செல்” என்றார். தலை வணங்கி பிரம்மன் சென்றதும் தேவி தலைகுனிந்து அசைவற்று நிற்கக் கண்ட சிவன் “சினந்தாயா? மூவரில் சிறியோன் அவன். அவன் சொல்லை பொருட்டாக எண்ணாதே. விடு” என்றார். “இல்லை, அவர் சொன்னது சரியென்று உணர்கிறேன்” என்றாள் அன்னை.

“என்ன சொல்கிறாய்? சக்தியென்றும் சிவமென்றும் நீயும் நானும் கொள்ளும் இருமையால் ஆக்கப்பட்டுள்ளது புடவி எனும் பெரும் படைப்பு. ஊடு பாவு அவிழ்வதென்றால் இந்நெசவு அழிவதென்றே பொருள்.” சினத்துடன் விழி தூக்கிய அன்னை “எச்சொற்களையும் நான் வேண்டேன். நான் விழைவது முழுக்காமம்” என்றாள். “எழுந்தபின் கனியாது அணைவதல்ல பெண்ணின் காமம் என்று அறியாதவரா நீங்கள்?”

“தேவி” என்று சொல்லெடுத்த இறைவனை நோக்கி கை நீட்டி “பேச வேண்டாம். என் விழைவு அது மட்டுமே” என்றாள். அழகிய வனமுலைகள் எழுந்தமைந்தன. குளிர் வியர்வை கொண்டது கழுத்து. மூச்சில் முகம் ஊதப்படும் பொன்னுருக்கு உலையென சுடர்ந்தணைந்தது. “உலகு புரக்கும் அன்னை நீ. அதை மறவாதே. ஆணென்றாகி நீ அக்கருணையை அழித்தால் என்னாகும் இப்புடவிப்பெருவெளி?” என்றார் சிவன். “அன்னையென்றானதால்தான் இப்பெரும் காமம் கொள்கிறேன். இனி இது கடக்காது ஒரு கணமும் இல்லை” என்றாள். அவள் தோளைத்தொட வந்த சிவனின் கையை தட்டி மாற்றி “இக்கணமே” என்றாள். பெரு மூச்சுடன் “எனில் அவ்வாறே ஆகுக!” என்றார் சிவன்.

காமிதவனத்தில் சிவன் நுதல்விழியும் செஞ்சடையும் குழல் கற்றைகளும் மகர நெடுங்குழை ஆடும் செவிகளும் மானும் மழுவும் சூலமும் துடியும் எனக்கொண்டு வந்து நின்றார். அவர் காலின் கட்டைவிரல் நெளிந்து தரையில் சுழன்றது. கணுக்கால்கள் குழைந்து மென்மை கொண்டன. தொடை பெருத்து, இடை சிறுத்து, பின்னழகு விரிந்து, முலைகள் எழுந்து குவிந்து, தோள்கள் அகன்று வில்லென வளைந்து, மென்புயங்கள் தழைந்து, தளிர் விரல்கள் மலர்மொக்குகளென நெளிந்து, கழுத்தின் நஞ்சுண்ட நீலக்கறை மணியொளி கொண்டு கன்னங்கள் நாணச்செம்மை பூண்டு, குறுநகை எழுந்த இதழ்கள் குவிந்து, நாணம் கொண்ட கண்களின் இமைசரிந்து சிவை எனும் பெண்ணாகி நின்றார்.

அருகே நீலஒளி கொண்ட உடலும் இமையா நீள்விழிகளும் பாசமும் அங்குசமும் சூலமும் விழிமணி மாலையும் கொண்டு நின்ற மலைமகள் விழிகளில் நாணம் மறைந்து மிடுக்கு கொண்டாள். கூர் மூக்கு நீள அதற்கு அடியில் கரிய குறுவாளென மீசை எழுந்தது. குறும்பு நகைப்பெழுந்த இதழ்கள். கல்லென இறுகி விம்மி புடைத்தெழுந்தன தோள்கள். முலை மறைந்து மென்மயிர் பரவல் கொண்டு புல்முளைத்த மலைப்பாறை என்றாயிற்று மார்பு. அடிமரங்களென நிலத்தில் ஊன்றின கால்கள். சக்தன் என்று அவன் தன்னை உணர்ந்தான்.

சிவையை நோக்கி சக்தன் கை நீட்ட நாணி அக்கையை தட்டிவிட்டு விழி விலக்கி துள்ளி பாய்ந்தோடினாள் சிவை. இரும்புச் சங்கிலிகள் குலுங்கும் ஒலியில் நகைத்தபடி அவளைத் தொடர்ந்து ஓடினான் சக்தன். பாய்ந்து நீரில் இறங்கி மூழ்கி விலாங்குமீனாக மாறி நெளிந்து அவள் மறைய தொடர்ந்து வந்து குதித்து பிறிதொரு மீனாக மாறி அவளை தொடர்ந்தான். நீர் நெளிந்து அவர்களை சூழ்ந்தது. கவ்வித்தழுவி புல்கி ஒருவர் பிறரை உணர்ந்தனர். புல்லாக, புழுவாக, வண்டாக, பாம்பாக, மானாக, மயிலாக, களிறாக, சிம்புள்ளாக, செங்கழுகாக காமம் ஆடினர்.

பின்பு இளஞ்சேறு படிந்த சுனைக்கரையில் காமத்தில் கனிந்த சிவையின் உடலை விழைவு நிமிர்த்த தன்னுடலால் அறிந்து இறுகி புதைந்து கரைந்து மறைந்தான் சக்தன். ஒன்றை ஒன்று விழுங்கி உச்ச கணத்தில் அசைவிழந்தன இரு அணுக்கள். ஒன்றான அவ்வணுவை தன் சுட்டு விரலால் தொட்டெடுத்து கண் முன் நோக்கி பிரம்மன் சொன்னான் “இது முழுமை.”

சக்தனும் சிவையும் இணைந்து அடைந்த காமத்தில் பிறந்தவள் காணபத்யை என்னும் பெண் தெய்வம். செவிகள் விரிந்த யானைமுகமும் பண்டி பெருத்த குற்றுடலும் கொண்டவள். மழுவும் பாசமும் ஏந்தி அவள் காமிதத்தின் நடுவே மலை ஒன்றில் கோவில் கொண்டாள். அவளுக்கு இளையவள் கௌமாரி. நீள்விழியும் மென்னகையும் பொன்னொளிர் திருமுகமும் கொண்ட சிறுமி. வேலேந்தி மயிலமர்ந்து தன் தமக்கை அருகே அவள் கோயில் கொண்டாள். காணபத்யையும் கௌமாரியும் காமிதத்தின் தனித்தெய்வங்களென்று அங்கிருந்த உயிர்கள் வழிபட்டன.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நதி கடந்து அக்காட்டில் கால் வைத்த முதல் முனிவர் அத்தெய்வங்களை கண்டுகொண்டார். அவர்களை கொண்டுவந்து மணிபுரி நாட்டின் வடகிழக்கு எல்லையில் இருந்த கௌமாரவனத்திலும் காணபத்யவனத்திலும் பதிட்டை செய்தார். மணிபுரத்தின் வசந்தமெழும் வனங்களில் எல்லாம் அவ்விரு பெண்தெய்வங்களும் கோவில் கொண்டிருந்தன.

பெருமழை காடு மூடி பெய்யும் காலத்திலும், பனி இறங்கி காடு திரையிடப்பட்டிருக்கும் போதும் அத்தெய்வங்களை எவரும் எண்ணுவதில்லை. இளவேனில் எழுந்து இலையுதிர்த்த மரங்கள் தளிர்கொள்ளும்போது சிறு துடி எடுக்கும் பாணனின் முதற் சொல்லில் இருந்து முளைவிட்டெழுந்து வருவார்கள் அவர்கள். களிமண்ணிலும் மென் மரத்திலும் அவர்கள் உருவங்களை அமைத்து ஏழு வண்ணங்களில் அணிசெய்து களித்தேரில் அமர்த்தி தெருக்களில் இழுத்து வந்து கொண்டாடுவார்கள். இளையோரும் மகளிரும் அதை சுற்றி கோலாடியும் வண்ணத் துணி வீசி நடனமாடியும் மகிழ்வார்கள்.

பாணர் சொல்லில் காமநோயுற்றெழும் காலம். வயல்களில் உறைந்த விதைகள் உயிர் கொண்டு உறைபிளந்து புன்னகைக்கும் காலம். வசந்தம் மணிபூரக நாடெங்கும் காமனும் தேவியும் இறங்கி களி கொண்டாடும் பருவம். அன்று ஒவ்வொரு உயிரும் சிவையும் சக்தனுமென ஆகும். காதலின் உச்சத்தில் சிவசக்தியென உருமாறும்.

லோகதடாகத்தின் வடக்கு எல்லையில், கரைச்சதுப்பு ஏறிச்சென்று இணைந்த நாணல் சரிவுக்கு அப்பால், குறுங்காடு எழுந்து பரவி வளைந்து முகில்சூடி நின்ற மலைகளின் அடிவாரத்தை அணுகியது. நீலப்பச்சை இலைத்தழைப்பு கொண்ட தேவதாரு செறிவாக மாறியது. குறுங்காட்டின் நடுவே நிரைவகுத்து நின்ற ஏழு தொன்மையான தேவதாருக்களின் கீழே காணபத்யையும் கௌமாரியும் இருபக்கமும் நின்றிருக்க நடுவே சக்தனும் சிவையும் அமர்ந்து அருள் செய்த சிற்றாலயம் இருந்தது.

மலைக்கற்களை அடுக்கிக் கட்டி மேலே மூங்கில் கூரையிட்ட ஆலயத்தின் உள்ளே கருங்கல் பீடத்தின்மேல் அமர்ந்திருந்த சிலைகள் முன்பு எப்போதோ சுண்ணமென்கல்லில் செதுக்கப்பட்டவை. காற்றும் நீரும் வழிந்தோடி உருவம் கரைந்திருந்தாலும் அவற்றின் விழிகளில் உயிர் இருந்தது. சருகை மிதித்து எவரோ வரும் ஒலியை கேட்ட சக்தன் சிவையிடம் புன்னகைத்து “அவர்கள்தாம்” என்றார். “முழுமை” என்று அவள் சொல்லி நாணினாள்.

ஆடையற்ற உடலுடன் அர்ஜுனன் சித்ராங்கதையை இடைசுற்றி அணைத்துக் கொண்டு அங்கே வந்தான். காய் பெருத்த கொடி என அவன் தோளில் குழல் சரித்து தலைசாய்த்து உடன் நடந்து வந்தாள் அவள். குறுங்காட்டின் சருகு மெத்தையில் அர்ஜுனனில் இருந்த ஃபால்குனையை அவள் அறிந்தாள். சித்ராங்கதையை அவன் அணைந்தான். பொழுது நிறைந்த மணல் கடிகை தன்னை தலைகீழாக்கிக்கொள்வது போல காமநிறைவின் கணத்தில் மீண்டும் அவர்கள் உருமாறினர். சித்ராங்கதையுடன் இருந்த அர்ஜுனன் ஃபால்குனையை அவளில் உணர்ந்தான். அவனில் எழுந்த சித்ராங்கதனில் திளைத்தாள் அவள்.

பெண்ணென திகழ்ந்தும் ஆணென எழுந்தும் உருமாறினர். தன் வாலை தானுண்டது நாகத்தின் செவ்வாய். ஒன்று மென்மை ஒன்று கடினம். ஒன்று நீர் ஒன்று தழல். ஒன்று வான் ஒன்று மண். ஒன்று கொடை ஒன்று நிறைவு. ஒன்று பெரிது. ஒன்று சிறிது அது பெரிது பிறிது சிறிது.இரண்டும் என்றான ஒன்று. இரண்டென எழுந்து இங்கு நடிப்பது. இரண்டுக்கும் அப்பால் நின்று துடிப்பது. ஒன்றுளது. இரண்டுளது. ஒன்றில் எழுந்த இரண்டு. இரண்டறியும் ஒன்று. அதை சிவசக்தி என்றனர். சக்தசிவை என்றனர். ஆம் என்றனர். அதுவே என்றனர்.

தொடர்புடைய பதிவுகள்


விஷ்ணுபுரம் முன்னுரை பற்றி

$
0
0

பாலுணர்வெழுத்து தமிழில்…

$
0
0

ஜெ

பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்].

சாரங்கன்

1

அன்புள்ள சாரங்கன்,

தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. வாசகரிடமுள்ளன என்பதுதான் முக்கியமானது. உண்மையில் வாசக ஏற்புதான் பாலுறவைச் சித்தரிப்பதன் அளவைத் தீர்மானிக்கிறது. அதாவது எழுத்தாளரின் நோக்கம் பாலுறவைச் சித்தரிப்பதாக இருக்கமுடியாது, அது மட்டுமே என்றால் அது இலக்கியம் அல்ல. மானுட இயல்பை, அதனூடாகத் தெளியும் வாழ்க்கைத்தரிசனத்தை வெளிப்படுத்துவதே அவ்வெழுத்தின் நோக்கமாக இருக்கும்.

அந்நிலையில் பாலுறவைச் சித்தரிக்கும்போது அது சரியான அளவிலிருந்தாகவேண்டும். மிகையாக ஆகிவிட்டது என்றால் வெறுமே அதிர்ச்சியோ பரபரப்போ அளித்து எதை நோக்கி வாசகனின் கவனத்தை ஆசிரியன் கொண்டுசெல்ல விரும்புகிறானோ அதை நோக்கி வாசகன் கற்பனை மூலம் செல்வதை தடுப்பதாக ஆகிவிடும். அதாவது காமமும் வன்முறையும் மிதமிஞ்சிய உணர்ச்சிகரமும் படைப்பின் மேல்மட்டத்தில் வாசகனைக் கட்டிப்போடும்தன்மை கொண்டவை.
2

கலைஞன் எப்போதுமே அளவாகச் சொல்லி வாசகனை ஊகிக்கவைக்கவே முயல்வான். உடைத்து வைப்பது வாசகன் செல்லும் பயணத்தை இல்லாமலாக்கிவிடுகிறது.கலையை நிகழ்த்தும் எழுத்தாளன் காமம், வன்முறை, உணர்ச்சிகரம் ஆகியவற்றை மிகமிக நுட்பமாக , தேவையான அளவுக்கு மட்டுமே கையாள்வான். வாசகனை சீண்டி அருகே கொண்டுவருமளவு இருக்கவும் வேண்டும், வாசகனிடமிருந்து நுட்பங்களை மறைக்குமளவு மிகையாகவும் இருக்கக்கூடாது.அந்த அளவை நல்ல கலைஞன் அவன் சமகாலத்துடன் அவன் கொண்டுள்ள மானசீகமான உரையாடல் வழியாகவே கண்டடைகிறான்.

அந்த அளவை எப்போதும் அவன் தீர்மானிப்பதில்லை, அவன் முன்னால் உள்ள உத்தேச வாசகர்களின் மனநிலையே தீர்மானிக்கிறது. உதாராணமாக பிரெஞ்சுப்பண்பாடு பாலுறவை சற்றே நெகிழ்வுடன் அணுகும் நோக்கு கொண்டது. பாலியலை நேருக்குநேர் நோக்கவும் மொழியில் வெளிப்படுத்தவும் அங்கு ஒரு முந்தைய மரபுத்தொடர்ச்சி உள்ளது. தமிழகமோ ஒழுக்கநெறிகளாலும் குடும்ப ஆசாரங்களாலும் இறுக்கமாக கட்டிவைக்கப்பட்ட ஒன்று. இங்கே பாலுறவை பொதுவில் பேசமுடியாது. பாலுறவுச் சித்தரிப்புகள் எப்போதுமே பதற்றத்தை உருவாக்குகின்றன.
3

ஆகவே பிரெஞ்சில் எழுதும் எழுத்தாளன் பாலுறவை எழுதும்போது உருவாகும் வாசக எதிர்வினையை விட பத்துமடங்கு எதிர்வினை தமிழில் உருவாகும். ஆகவே அங்குள்ள ஓர் எழுத்தாளன் எழுதுவதைவிட பத்துமடங்கு குறைவாகவே இங்கே பாலியலை சித்தரிக்கமுடியும். அதேபோல நேற்று பாலியலை எழுதினால் உருவாகும் அதிர்ச்சியை விட பாதியே இன்று உருவாகிறது. காரணம் நம் அளவுகோல்கள் மாறிவிட்டன. ஆகவே இன்றைய எழுத்தாளன் இன்னும் கூடுதலாகச் சொல்லி கலையமைதியை தக்கவைத்துக்கொள்ளலாம்.

ஆகவே ஒரு காலகட்டத்தில் அதிர்ச்சியூட்டும் பாலியல்சித்தரிப்பு என கருதப்பட்ட நூல் ஒரு தலைமுறைக்குள் சாதாரணமாகிவிடுகிறது. டி.எச். லாரன்ஸின் லேடி சேட்டர்லிஸ் லவர் நாவலை இப்போது வாசித்தால் இது எதற்காக நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது, எதற்காக ஆசிரியர் அத்தனை பெரிய தாக்குதல்களைச் சந்தித்தார் என நாம் திகைப்போம். இன்றைய ‘எரியும் நூல்’ நாளை சாதாரணமாக ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.

7

ஆகவே எந்த அளவுக்கு வெளிப்படையாகப் பாலியலை சொல்லியிருக்கிறது என்பது ஓர் அளவுகோலே அல்ல. அது அக்கலைஞன் அவன் கலைக்குள் தீர்மானிக்கும் அளவு மட்டுமே. படைப்பை மதிப்பிடவேண்டியது அதில் மானுட இயல்பை, வாழ்க்கை குறித்த முழுமைநோக்கை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று மட்டும்தான். அதற்கு அவர் பாலியல்சித்தரிப்பை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான். ஆகவேதான் ஆல்பர்ட்டோ மொரோவியோ இன்றைக்கு வெறும் பழங்கால பாலியல் எழுத்தாளர். டி.எச்.லாரன்ஸ் இன்றும் ஆர்வமூட்டும் கலையை படைத்தவர்

நவீனத்தமிழிலக்கியம் எழுதப்பட்ட காலம் முதலே நுட்பமாக பாலியலை எழுதிய பல படைப்புகள் வெளிவந்துள்ளன. நான் இதில் பாலியல்வேட்கையை எழுதிய படைப்புகளைச் சுட்டவில்லை. கு.ப.ராஜகோபாலன் முதல் வண்ணதாசன் வரை அது ஒரு தனி மரபு. நான் கூறுவது பாலியல்சித்தரிப்பினூடாக வாழ்க்கையை காட்டிய படைப்பாளிகளைப்பற்றி.

4 [ராஜேந்திரசோழன்]

முதன்மையாக சொல்லவேண்டிய படைப்பு அ.மாதவையா எழுதிய முத்துமீனாட்சி. அன்றைய பிராமணக்குடும்பங்களில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வதையைச் சித்தரிக்கும் வலுவான நாவல் இது. சிறுமியை பணத்திற்காகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவளை பாலுறவுக்கு தயாராக்கும்பொருட்டு வன்முறையால் வயதுக்குவரச்செய்யும் சித்தரிப்பே தமிழின் முதல் நேரடியான பாலியல் சித்தரிப்பு

தமிழின் எல்லா போக்குகளுக்கும் புதுமைப்பித்தனிடம் முன்னுதாரணம் இருக்கும் என்பார்கள். அவரது விபரீத ஆசை தமிழ் பாலியல்சித்தரிப்பு எழுத்தின் முக்கியமான முன்னுதாரணம். நண்பனின் பிணத்தருகே அவன் மனைவியுடன் உறவுகொள்வதன் விசித்திரமான சித்தரிப்பு இக்கதையை ஆழ்ந்த மனக்கொந்தளிப்பை நோக்கிக் கொண்டுசெல்கிறது. ஆனால் இவையிரண்டுமே இருவகை தொடக்கங்கள் மட்டுமே.

5 [சு வேணுகோபால்]

சமூக அவலங்களை சித்தரிப்பதில் மாதவையாவும் பாலுறவின் முனையில் மானுட உளநிகழ்வை ஆராய்வதில் புதுமைப்பித்தனும் இரு வழிகளைக் காட்டினர். ஆனால் அவை பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனென்றால் தமிழில் மென்மையான ஆண்பெண் சல்லாபத்திற்கு இருந்த வரவேற்பு இப்படி உடைத்து உட்சென்று நோக்கும் இரக்கமற்ற அணுகுமுறைக்கு இருக்கவில்லை. காமச்சித்தரிப்பின் மிகப்பெரிய பிரச்சினையே அது கற்பனாவாதமாக இருக்கமுடியாது என்பதுதான். அந்தக் கறார்தன்மை எளிய வாசகர்களுக்கு எப்போதும் உவப்பானது அல்ல.

எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’அவ்வகையில் தமிழில் நிகழ்ந்த அபூர்வமான ஒரு முன்னெடுப்பு. மிகச்சரியாக பாலியல்சித்தரிப்பு கலையாவதன் சிறந்த உதாரணம் அது. மு.தளையசிங்கத்தின் தொழுகை, கோட்டை போன்ற கதைகளையும் குறிப்பிடலாம்.

spo87988784654 [எஸ். பொன்னுத்துரை]

ஜானகிராமனின் அம்மாவந்தாளில் நுட்பமான பாலுறவுச்சித்தரிப்பு உள்ளது என்றாலும் அவரது மரப்பசுதான் அதில் அவர் குறிப்பிடும்படி முன்னகர்ந்த படைப்பு என்று சொல்லமுடியும். அதிலுள்ள பாலியல்சித்தரிப்பு பெண்ணின் நோக்கில் அமைந்திருப்பதும் முக்கியமானது. ஆனால் ஜானகிராமன் பெரும்பாலும் கிழித்து உட்புக விழைவதில்லை. மென்மையாக சுற்றிச்செல்லவே முயல்கிறார். அவரது எழுத்திலுள்ளது பெரும்பாலும் ஆண்பெண் சல்லாபத்தின் சித்தரிப்பே. அது தமிழில் முக்கியமான முன்னுதாரணம்.

ஜி.நாகராஜைன் அடுத்த கட்டத்தைத் தொடங்கி வைத்த படைப்பாளி என்று சொல்லலாம். அவரது இரு படைப்புகள், குறத்திமுடுக்கு , நாளை மற்றுமொரு நாளே பாலியல் சித்தரிப்பை நுண்ணிய அகவெளிப்பாடாக ஆக்கியவை. அவரது ‘நான்செய்த நற்செயல்கள்’ போன்ற சிறுகதைகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மெல்லிய அங்கதத்துடன் பாலுறவுச்சிக்கலை, ஒழுக்கமற்ற வாழ்வுச்சூழலைச் சொன்ன நாகராஜன் அக்காரணத்தாலேயே ஒரு முக்கியமான முன்னுதாரணமாக ஆனார்

அவ்வகையைச் சேர்ந்த ‘எங்கோ எப்போதோ யாருக்காகவோ’ போன்ற சில கதைகளை ஜெயகாந்தனும் எழுதியிருக்கிறார்.

தமிழில் பாலியல்சித்தரிப்பு எழுத்தில் முக்கியமான திருப்புமுனை என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய புற்றில் உறையும் பாம்புகள் போன்ற சிறுகதைகளையும் சிறகுகள் முறியும் என்னும் சிறிய நாவலையும் [இது அஸ்வகோஷ் என்னும் பெயரில் அவர் எழுதியது] சுட்டிக்காட்டலாம். அவை அக்காலகட்டத்தில் ஆழமான விவாதங்களை உருவாக்கியவை. ஒழுக்கநெறிகளுக்கு அப்பால் பாலுறவுத்தளத்தில் நிகழும் நுட்பமான சுரண்டலை ஆழமாகச் சித்தரித்தவை அவரது ஆக்கங்கள்.

ஜே.பி.சாணக்யா

ஜே.பி.சாணக்யா

 

கே. என் செந்தில்

கே. என் செந்தில்

 

எஸ் செந்தில்குமார்

எஸ் செந்தில்குமார்

 

வா மு கோமு

வா மு கோமு

அடுத்த கட்ட நகர்வு என்று நான் சு.வேணுகோபாலைத்தான் சுட்டிக்காட்டுவேன். ஒருவகையில் தமிழிலக்கியத்தில் பாலுறவின் நுண்ணிய சிடுக்குகளுக்குள் தயக்கமே இன்றி நுழைந்த முதல் கலைஞர் என்றே அவரைச் சொல்ல முடியும். அவருக்கு அடிப்படையில் மானுட நல்லியல்பு மேல் நம்பிக்கையே இல்லையோ என்று தோன்றும். காமம் தேரும் விலங்குகள் என மக்களை பார்க்கும் அவரது பார்வையில் இருட்டின் ஒரு துளிகூட தப்புவதில்லை.

இன்றைய இளைஞர்கள் உடல்சித்தரிப்பை மேலும் விரிவாக எழுதுகிறார்கள். எஸ்.செந்தில்குமார், ஜே.பி.சாணக்யா,கே.என்.செந்தில், வா.மு.கோமு போன்றவர்களின் கதைகள் இன்னும் நேரடியான சித்தரிப்பை முன்வைப்பவை. அந்த நேரடித்தன்மையால் அவ்வப்போது நுட்பங்கள் இல்லாமலாவதையும் காண்கிறேன். காமத்தை எழுதுவது என்பது காமத்தைத் தூண்டுவது அல்ல, அது கலைஞனின் வேலை அல்ல. காமத்தை மானுடனின் முதன்மையான வெளிப்பாட்டுக்களங்களில் ஒன்று என்று காண்பவனே கலைஞன்

ஜெ

பாலுணர்வெழுத்தும் தமிழும்

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரமும் மனுஷ்யபுத்திரனும்

$
0
0

ஜெ

எதிர்காலத்தில் தனக்கு வழங்கப்படவிருக்கும் விஷ்ணுபுரம் விருதை இப்போதே திருப்பியனுப்புபதாக மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறாரே? உங்கள் எதிர்வினை என்ன?

ஜெயராமன்

images

அன்புள்ள ஜெயராமன்,

உண்மையிலேயே மனுஷ்யபுத்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்குமெல்லாம் விஷ்ணுபுரம் விருது வழங்கவிருக்கிறோம். சீனியாரிட்டிதான் பிரச்சினை. சாரு நிவேதிதா மறுக்கமாட்டார் என நினைக்கிறேன், அவருக்கு வேறு எவரும் விருது வழங்க வாய்ப்பே இல்லை. மனுஷ்யபுத்திரன் மீது எங்களுக்கு பெருமதிப்புண்டு, பல்லாயிரம்தான் இருந்தாலும் அவர் நல்ல கவிஞர் அவருக்கு அவர் ஆற்றும் சொற்பொழிவுகளுக்காக திமுக விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஆகவே அவர் எதிர்காலத்தில் நாங்கள் வழங்கவிருக்கும் விருதை இப்போதே திருப்பித்தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ ஒருலட்சத்திற்கான காசோலையுடன் அவரது கடிதத்தை எதிர்பார்க்கிறேன். விஷ்ணுபுரம் விருதை கஷ்டப்பட்டு நிதி திரட்டி ஒருங்கிணைக்க மூச்சுத்தள்ளிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிகுந்த உதவியாக இருக்கும் அந்தத் தொகை.

மனுஷ்யபுத்திரன் சாகித்ய அக்காதமி விருதுபெற்ற திமுக எழுத்தாளர்களான அப்துல் ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து,ஈரொடு தமிழன்பன் போன்றவர்கள் விருதை திருப்பியளிக்கும்படி கலைஞர் வற்புறுத்தவேண்டும் என்று கோரியிருப்பதை அறிந்தேன். மேலும் கலைஞர் தான் அவ்விருதைப் பெறுவதற்கு இனிமேலும் முயலக்கூடாதென்று கண்ணீர் மல்க கோரியிருப்பதும் தெரியவந்தது.

ஒரு அடையாளமாக மனுஷ்யபுத்திரன் சம்ஸ்கிருதி சம்மான் விருதை திருப்பியனுப்பலாமென்று நினைக்கிறேன். அது ஜெயின் சமூகத்தாரால் வழங்கப்படும் விருது. மாட்டிறைச்சித்தடை கோரி வற்புறுத்தும் எதிராக மிகக்கடுமையான நிலைபாடு கொண்டவர்கள் அவர்கள்.மேலும் சம்ஸ்கிருதி சம்மான் நிறுவனம் இதுவரை இவ்விஷயத்தில் ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஜெ

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30

$
0
0

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 1

மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று… நிறைய நாகர்களை கொன்று…” என்று சொன்னபடி கையிலிருந்த சிறிய மூங்கில் வில்லை எடுத்துக்கொண்டு குறுங்காட்டை நோக்கி ஓடினான். மரநிழல் ஒன்று அவனுக்குக் குறுக்கே விழுந்து நெளிய திகைத்து நின்று உடல் நடுங்கியபின் பறவை ஒலி போல் அலறி வில்லை கீழே போட்டுவிட்டு திரும்பி ஓடி வந்து மாலினியின் மடியிலேறி அமர்ந்து கொண்டான்.

வீரர் என்ன சென்ற விரைவிலேயே திரும்பிவிட்டார்?” என்றாள் சுபகை. “போ, நீ கெட்டவள்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் மாலினியின் மார்பில் முகம் புதைத்தான். “என்ன சொல்கிறீர்கள் இளவரசே?” என்று அவள் அவன் கன்னத்தை பற்றினாள். “என் மாவீரனல்லவா? அரசனுக்கு அரசனல்லவா? சொல்லுங்கள்!” அவன் கண்களை விழித்து “அங்கே அவ்வளவு பெரிய நாகம்! பாதாளத்திலிருந்து அது வந்து படுத்திருக்கிறது” என்றான். “யானை நாகம் அது.”

மாலினி அவன் தலையை தடவியபடி “நாம் சொல்வனவற்றில் அவன் எதை கேட்கிறான், அவை எங்கு சென்று எப்படி உருமாறுகின்றன என்று யார் அறிவார்!” என்றாள். சுபகை  “பாதியைத்தானே கேட்கிறார்? எஞ்சிய நேரம் துயில்” என்றாள். “அறிதுயில்“ என்றாள் மாலினி. “நாம் சொல்லாத கதைகள் அவன் துயிலுக்குள் வளர்கின்றன.” சுபகை “ஆம்… இவரைப் பார்க்கையில் ஒரு சிறிய விதை என்றே தோன்றுகிறது” என்றாள். “அல்லது ஒரு துளி நெருப்பு” என்று மாலினி சொன்னாள். “அவனுக்குள் இருக்கும் ஆத்மன் துயிலில் எழுந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றுமடி.”

சுஜயனை வருடி “ஆத்மனுக்கு அனைத்தும் தெரியும் என்பார்கள். இங்கு அது அடைவதெல்லாம் நினைவூட்டல் மட்டுமே” என்றாள் மாலினி. சுபகை குனிந்து சுஜயனின் கண்களைப் பார்த்து “இக்கண்களுக்கு எல்லாமே தெரியும் என்றே தோன்றுகிறது” என்றாள். சுஜயன் “எனக்கு எல்லாமே தெரியும்” என்றான். “என்ன தெரியும்?” என்றாள் சுபகை. “அர்ஜுனரும் சித்ராங்கதையும் விளையாடினார்கள்” என்றான். அவள் “என்ன விளையாட்டு?” என்று சிரித்தபடி கேட்டாள். “பாம்பு விளையாட்டு” என்று அவன் சொன்னான்.

மாலினியின் கண்களைப் பார்த்தபின் “என்ன பாம்பு விளையாட்டு?” என்றாள். “இருவரும் பாம்பாக மாறினார்கள்” என்றபின் அவன் மூக்குக்குள் கையை விட்டு துழாவியபடி கண்களை உருட்டி தலையை அசைத்தான். சொற்களுக்காக அவன் முட்டித் ததும்பி பின்பு எழுந்து நின்று கைகளை விரித்து “அர்ஜுனர்! அவர் பெண்பாம்பு. சித்ராங்கதை ஆண்பாம்பு” என்றபின் கைகளைப் பிணைத்து “அப்படி விளையாடினார்கள்” என்றான். “அதன் பிறகு… அதன்பிறகு…” என்றபின் “அதன்பிறகு சித்ராங்கதை பெண்பாம்பு, அர்ஜுனர் ஆண்பாம்பு” என்றான்.

சுபகை வியந்து வாயில் கை வைத்து “அய்யோ!” என்றாள். “நாம் இவர் துயிலும்போது பேசுகிறோம். எங்கோ ஒரு செவி நம் குரலுக்காக வைத்திருக்கிறார்” என்றாள். “இல்லையடி, நாம் சொன்னவற்றிலிருந்து அவனது ஆத்மா நீட்டித்து கொள்கிறது. ஜாக்ரத் புறவுலகு என்றால் அதை அறியும் ஸ்வப்னம் ஆத்மாவின் உலகம். சுஷுப்தி ஆன்மாவை ஆளும் தெய்வங்களின் உலகம். துரியம் பிரம்மத்தின் உலகத்தை சார்ந்தது” என்றாள் மாலினி.

அவள் கன்னத்தை பற்றித் திருப்பி “நான் பார்த்தேன்” என்றான் சுஜயன். “என்ன பார்த்தீர்கள்?” என்று சுபகை கேட்டாள். “அர்ஜுனர் அவ்வளவு பெரிய வாள்… இல்லை… மூன்று வாளால் சித்ராங்கதையை வெட்டினார்” என்றான். திகைப்புடன் “ஏன்?” என்றாள் சுபகை. “ஏனென்றால் அவள் பெரிய வாளால் அர்ஜுனரை வெட்டினாள். இருவரும்… ஒரே குருதி. அவ்வளவு குருதி… சிவப்பாக… ஏழு குருதி” என்றான். “சரி” என்றபோது சுபகையின் விழிகள் மாறியிருந்தன. “அந்தக்குருதியில் அவர்கள் பாம்பாகி…” என்றபின் அவன் வாயில் கட்டை விரலை விட்டு சுபகையை நோக்கி பேசாமலிருந்தான்.

“சொல்க இளவரசே” என்றாள் மாலினி. சுபகையை சுட்டிக்காட்டி “இவளை பார்க்க எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான் சுஜயன். “ஏன்?” என்று மாலினி கேட்டாள். “இவள் கண்கள் பாம்புக் கண்கள் போல் உள்ளன” என்றான். “என் கண்களா?” என்று சுபகை அருகே வந்தாள். “அருகே வராதே. நீயும் பாம்பாகிவிட்டாய்” என்றான் சுஜயன். “வேறு யார் பாம்பாக இருந்தார்கள்?” என்று மாலினி கேட்டாள். “அவர்கள் இருவரும் பாம்பாக இருந்தார்கள். இருவர் விழிகளும் பாம்பு போல் இமைக்காதிருந்தன. இதோ உன் விழிகளும் அப்படித்தான் உள்ளன.”

“நீ அவளிடம் பேசவேண்டாம் என்னிடம் பேசு” என்று சொல்லி மாலினி சுஜயனை தூக்கி மடியில் வைத்து மார்புடன் அணைத்துக் கொண்டாள். “எனக்கு அவளை பிடிக்கவில்லை” என்றான் சுஜயன். “நீ அவளிடம் பேசவேண்டாம்” என்று மாலினி அவன் கன்னங்களை முத்தமிட்டாள். பின்பு “எதற்காக அவர்கள் வெட்டிக் கொண்டார்கள் இளவரசே?” என்றாள்.

“அவர்கள் பாம்பாக இருந்து தண்ணீரில் நீந்தி கரையேறியபோது மனிதர்களாகி விட்டார்கள். அப்போது இரண்டு தேவர்கள் வந்து அவர்களிடம்…” என்றபின் அவன் சிந்தனை செய்து தலையை சரித்து “தேவர்களில்லை… பேய்கள்” என்றான். “பேய்களா?” என்றாள் சுபகை. “நீ என்னிடம் பேசாதே. நீ பாம்புக் கண்களுடன் இருக்கிறாய்” என்றான். “சரி அவள் பேசவில்லை. நான் கேட்கிறேன், தேவர்களா பேய்களா?” என்றாள் மாலினி.

அவன் இரண்டு விரல்களை காட்டி “ஒரு பேய் ஒரு தேவர்” என்றான் சிரித்தபடி. “சரியாக சொல்கிறார்” என்றாள் சுபகை. “பேசாமல் இரடி” என்று அவளை கடிந்தபடி மாலினி அவன் தலையை தடவி “சொல்க இளவரசே” என்றாள். “பேய்… பிறகு ஒரு தேவன்… இருவரும் வந்தனர். பேய் பெண்ணாக இருந்தது. தேவன் ஆண். இருவரும் கையில் வாள் வைத்திருந்தார்கள். அந்த வாளை அவர்கள் அர்ஜுனருக்கும் சித்ராங்கதைக்கும் கொடுத்தார்கள். அதை வைத்துக் கொண்டு அவர்கள் போர் புரிந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டார்கள். இருவர் உடலிலும் குருதி வழிந்தது. பிறகு…”

அவன் நாணம் கொண்டு இரு கால்களையும் குறுக்கி கைகளை நடுவே வைத்துக் கொண்டு உடலை இறுக்கினான். “என்ன?” என்றாள் மாலினி. “சொல்லமாட்டேன்” என்று அவன் தலை அசைத்தான். “சொல், என் கண்ணல்லவா?” என்றாள் மாலினி. “ம்… சொல்லமாட்டேன்” என்று சொல்லி முகத்தை அவள் மார்பில் புதைத்துக் கொண்டான். ஆவல் தாளாமல் அருகே வந்த சுபகை “சொல்லுங்கள் இளவரசே’’ என்றாள். “நீ என் அருகே வராதே. நீ கெட்டவள்’’ என்றான் சுஜயன். “சொல்லுங்கள் இளவரசே, நான் உங்களுக்கு கார்த்தவீரியன் கதை சொல்கிறேன். என்ன பார்த்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

சுஜயன் எழுந்து அவள் கழுத்தை தன் கைகளால் வளைத்து காதுக்குள் “அவர்கள் நக்கிக் கொண்டார்கள்” என்றான். அவள் “ஏன்?” என்றாள். “அவள் உடலில் இருந்த குருதியை அர்ஜுனர் நக்கினார். அர்ஜுனர் உடலில் இருந்த குருதியை அவள் நக்கினாள். சிவந்த பெரிய நாக்கு… நாய் போல… இல்லை புலி போல.” சுபகை “எவ்வளவு நேரம் நக்கினார்கள்?” என்றாள். “நிறைய நேரம். ஏழு நேரம்” என்று அவன் சொன்னான். பின்பு ”நக்க நக்க குருதி வந்து கொண்டே இருந்தது” என்றான்.

“பிறகு?” என்றாள் சுபகை. அவன் அவளைப் பார்த்தபின் “இவள் அரக்கி. சிறிய குழந்தைகளை தின்பாள்” என்றான். “அவளை நுண் சொல் ஏவி கட்டிவிடலாம். நான் உன்னுடன் இருக்கிறேன் இளவரசே” என்று மாலினி சொன்னாள். சுஜயன் “நீ நல்லவள்” என்று அவள் கையைப்பற்றி தன் வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டான். “அதன் பின் என்ன பார்த்தீர்கள்?” என்றாள் சுபகை. “அதன்பின்… அதன் பின்னும் அதே போல ஒரு பேய். இன்னொரு தெய்வம். அந்தப்பேய் ஆண். அதன் தலையில் மணிமுடி இருந்தது. அந்த தேவதை நீண்ட ஆடை அணிந்திருந்தாள். காற்றில் அந்த ஆடை நெடுந்தூரம் பறந்தது, முகில் போல. அவர்கள் கையிலிருந்த வாளை மீண்டும் கொடுத்தார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் வாட்போர் புரிந்தனர்.”

”அதன்பிறகு குருதியை நக்கிக் கொண்டனர் அல்லவா?” என்றாள் மாலினி. “எந்த தெய்வம் உருவாக்குகிறது இக்கனவுகளை?” சற்றே பதறியவள் போல் மாலினியிடம் கேட்டாள் சுபகை. மாலினி “கனவுகளை கட்டுப்படுத்தும் சொற்கரைகள் அவனிடம் இல்லை” என்றாள். சுஜயன் “அதன் பிறகு அவர்கள் இருவரும் காட்டுக்குள் ஓடி ஒரு சுனையில் இறங்கினர். அதில் மீன்களைப்போல விளையாடினார்கள். பிறகு அவர்கள் காட்டுக்குள் சேற்றில் படுத்திருந்தார்கள்” என்றபின் கிளுகிளுத்து சிரித்து எழுந்து வந்து “அவள் இவ்வளவு சிறிய குழந்தை” என்றான். “யார்?” என்றாள் சுபகை. “அவள்தான் சித்ராங்கதை… இளவரசி” என்றான். “அர்ஜுனர் இவ்வளவு சிறிய குழந்தை” என்று கையால் மேலும் சிறிய அளவை காட்டினான்.

“இவ்வளவு சிறிய குழந்தைகளா? புழுக்கள் போல் இருப்பார்களே” என்றாள் மாலினி. “புழுக்களைப்போல” என்று சொன்னபின் அவன் விரலை நெளித்து “புழுக்களைப் போன்ற குழந்தைகள். அவர்கள் அருகருகே ஒட்டிக்கொண்டு படுத்து அழுதார்கள்” என்றான். “அழுதார்களா?” என்றாள் மாலினி. ”அழவில்லை” என்று அவன் தலை அசைத்தான். “அசையாமல் அப்படியே படுத்திருந்தார்கள்” என்றான்.

“அதன் பிறகு?” என்று சுபகை கேட்டாள். “அதன் பிறகு நான் அந்தக் காட்டை விட்டு வந்தேன். வானத்தில் மூன்று கழுகுகள்” என்றபின் அவன் அதை அழிப்பது போல சைகை காட்டி “ஏழு கழுகுகள்… யானைகளை தூக்கி வந்தன” என்றான். “அவ்வளவுதான். தெய்வம் மலைக்கு திரும்பிவிட்டது” என்றாள் சுபகை. “கழுகுகளை நான் துரத்திக் கொல்லும்போது அவை பாறைகளை தூக்கி வீசுகின்றன. அதோ அந்த மலை மேல் இருக்கும் பாறைகள் அளவுக்கு பெரிய பாறைகள்” என்றான் சுஜயன்.

சற்றே துள்ளி கைவிரித்து “அவற்றை நான் என்னுடைய வாளால் உடைத்தேன். இல்லை என்னுடைய கதாயுதத்தால் ஓங்கி அடித்தேன். ஆனால்…” என்று திக்கலும் விரைவுமாக சுஜயன் சொன்னான். “என்னுடைய கதாயுதம் மிகவும் பெரியது. கரிய இரும்பு அது. அதை வைத்து ஒரே அடியில் இந்தப்பாறைகளை உடைக்கமுடியும்.” ஓடிச்சென்று இருகைகளை விரித்து அங்கிருந்த மரத்தை காட்டி “அந்த மரத்தை நான் ஒரே அடியில் உடைப்பேன்” என்றான்.

மாலினி சுபகையிடம் “மிகச் சரியாகவே சென்றடைந்திருக்கிறான்” என்றாள். “எனக்கு புரியவில்லை” என்றாள் சுபகை. “ஏனெனில், நீ காதலையும் காமத்தையும் அறிந்திருக்கிறாய். நான் இளைய பாண்டவனை அன்றி பிறிதொரு ஆண்மகனை தொட்டதில்லை” என்றாள் மாலினி. சுபகை சிரித்து “நானும்தான்” என்றாள். “சீ போடி” என்று அவள் தொடையில் அடித்தாள் மாலினி.

“அப்படியென்றால் எப்படி அறிந்தீர்கள்?” என்று சுபகை கேட்டாள். “நதியில் இறங்குபவர்கள் அதை அறிவதில்லை. உயிர் காக்க மூச்சு குவித்து நீச்சலிடுவதை மட்டுமே செய்கிறார்கள். நான் நெடுங்காலமாக இதன் கரையில் இப்பாறைமேல் விழிகூர்த்து அமர்ந்திருக்கிறேன்” என்று மாலினி சொன்னாள்.

“இளைய பாண்டவன் இரண்டு வருடங்கள் அங்கிருந்ததாக காவியம் சொல்கிறது” என்றாள் மாலினி. சுபகை நகைத்து “இக்காவியங்களில் ஒவ்வொரு ஊரிலும் அவர் இருந்த வருடங்களை கூட்டி நோக்கினால் இதற்குள்ளாகவே அவருக்கு நூறு வயது கடந்திருக்கும்” என்றாள். மாலினி “காவிய நாயகர்கள் ஒருவரல்ல. ஓருடலில் திகழும் மானுடத்திரள். அவர்களை விராடர்கள் என்பது வழக்கம்” என்றாள். “காட்டிலிருந்து ஆணும் பெண்ணுமாக உருமாற்றம் அடைந்து அவர்கள் இருவரும் அரண்மனைக்கு வந்தபோது மணிபுரி நகரமே திகைத்தது. அவர்களுக்குப்பின்னால் நகரமக்கள் சொல்விக்கியவர்களாக ஆயிரம் படகுகளில் தொடர்ந்து சென்றனர்.’’

“அமைச்சரும் அரசியரும் அரசரும் உண்மை என்னவென்று அறிந்திருந்தனர். பிறருக்கு அது எண்ணிப் பார்க்க அகம் பதைக்கும் கனவு போல் இருந்தது. கொலை வாளும் கொடும் சினமும் கொண்ட இளவரசர் விழிகனிந்து உடல் குழைந்து இளவரசியென வந்தாள். சுடரென ஒளிகொண்டு உடல்நெளிந்த நடனப்பெண் இளங்களிறு போன்ற ஆண்மகனாகி உடன் வந்தான்” என்றாள் மாலினி. “அதற்கிணையான ஒன்று கதைகளிலேயே நிகழமுடியுமென்பதனால் ஒவ்வொருவரும் கதைகளுக்குள் புகுந்துகொண்ட உணர்வை அடைந்தனர்.”

சித்ரபாணனின் அவையில் இருவரும் சென்று நின்றபோது ஒற்றை மூச்சொலியாக முகங்கள் செறிந்த அவை ஒலித்தது. அங்கிருந்த குடிமூத்தார் சிலர் அதை நோக்கமுடியாதவர்களாக விழிகளை விலக்கிக்கொண்டனர். சித்ரபாணன் அவையினரை வணங்கி “மூத்தகுடியினர் என் பிழை பொறுக்கவேண்டும். என் அரசி பெற்றது ஒரு மகளையே. மீண்டும் பெண் என்று அறிந்ததும் உளம் சோர்ந்து சென்று அன்னை மணிபத்மையின் ஆலயத்து படியில் அமர்ந்து விட்டேன். என் கண்ணீர் துளிகள் அங்கே விழுந்தன.”

“என் சிறு நாட்டை சூழ்ந்திருந்த எதிரிகள் செய்தியறிந்து சிரித்து கொப்பளிப்பதை கண்டேன். உனக்கென எழுந்த இச்சிறு நாடு அழிவதே உன் சித்தமா என்று அன்னையிடம் கேட்டேன். என்றோ அழியுமென்றால் அது இன்றே அழிக! இப்படிகளிலிருந்து எழுந்து செல்லமாட்டேன். இனி உணவும் நீரும் அறிந்துவதில்லை என்று வஞ்சினம் உரைத்து அங்கு அமர்ந்தேன். உடல் சோர்ந்து அங்கேயே துயின்றபோது என் கனவில் அன்னை எழுந்தாள். எட்டு தடக்கைகளில் படைக்கலன்களும் செம்மணிவிழிகளும் தழற்சடைப் பெருக்கும் கொண்டு நின்றாள். திகைத்து விழித்துக் கொண்டபோது புரியாத வானொளி ஒன்றால் என் அரண்மனையும் ஆலயமுற்றமும் கருவறை சிலையும் ஒளி பெற்றிருப்பதை கண்டேன்.”

“அனைத்தும் மறைந்தபின்னரே அன்னை என்னிடம் சொன்னதை என் சொல்மனம் புரிந்து கொண்டது. திரும்பி வந்து என் பட்டத்தரசியை அழைத்து நமக்குப் பிறந்துள்ளது பெண்ணல்ல, ஆண் என்றேன். என்ன சொல்கிறீர்கள் என்று அவள் திகைத்தாள். இவள் பெயர் சித்ராங்கதன். இனி இவள் ஆண். அன்னை முடிவெடுக்கும் வரை இவள் நாம் விழையும் தோற்றத்தில் இருக்கட்டும். நாமன்றி பிறர் இவள் பெண்ணென்று அறிய வேண்டியதில்லை. அது எப்படி இயலும் என்று அவள் சொன்னாள். இது என் ஆணை. இனி இக்குழவியை கைதொட்டும் விழிதொட்டும் சொல்தொட்டும் அணுகும் எவரும் இவள் பெண்ணென உணர்த்தலாகாது என்றேன்.”

“ஆணென்றே எண்ணவும் ஆணென்றே பழகவும் பயின்றால் இவள் ஆணென்றே ஆவாள் என்று நான் வகுத்தேன். தானொரு பெண் என்று ஒரு போதும் இவள் அறியலாகாது என்றேன். சின்னாட்களிலேயே பெண்ணென இவள் பிறந்த செய்தி அரண்மனையின் ஒருசில உள்ளங்களுக்குள் ஆழ புதைந்து மறைந்தது. இவளில் எழுந்த பெண்மையை அழித்தேன். படைக்கலப்பயிற்சி அளித்தேன். நெறி நூல் கற்பித்தேன். இளவரசனென்றே வளர்ந்தெழச் செய்தேன். இவள் சென்ற களங்கள் எங்கும் ஆண்மையே வெளிப்பட்டது. இங்குள எவரும் இவளை பெண்ணென எண்ணியதில்லை” என்றார் சித்ரபாணன்.

குடி மூத்தார் ஒருவர் எழுந்து “பொறுத்தருள்க அரசே! எங்கள் அனைவரின் கனவிலும் எப்போதும் இளவரசர் பெண்ணென்றே தோன்றினார். எங்கள் குலதெய்வங்கள் சன்னதமெழுகையில் இளவரசரை பெண்ணென்றே குறிப்பிட்டன. உண்மையில் இங்குள்ள குடிகள் அனைத்தும் அறிந்திருந்தோம், அவர் பெண்ணென்று. அதை எங்கள் உள்ளத்தின் முற்றம் வரை கொண்டு வர நாங்கள் துணியவில்லை. பல்லாயிரம் சொற்களால் புனைந்து அவரை ஆணென உளம் கொண்டோம்” என்றார். புன்னகையுடன் “ஆம்” என்றார் அமைச்சர்.

திகைத்து தன் தேவியை நோக்கியபின் சித்ரபாணன் “நானும் என் கனவில் அவளை பெண் என்றே உணர்ந்தேன்” என்றார். சித்ராங்கதை இதழ்களில் நாணப்புன்னகை தவழ விழி சரித்து “என் கனவுகளிலும் எப்போதும் நான் பெண்ணாகவே இருந்தேன் தந்தையே” என்று இனிய மென் குரலில் சொன்னாள். பட்டத்தரசி நகைத்தாள்.

“பெண்ணென தன்னை உணராத இவள் உடல் பெண்ணுருக்கொண்டு வந்த இளைய பாண்டவரை அறிந்த விந்தையை தெய்வங்களே அறியும்” என்றார் சித்ரபாணன். “அன்று சிவதையின் கரையிலிருந்த எல்லைப்புற ஊரிலிருந்து திரும்பியபோது இளவரசியின் உடல் பெண்ணென தன்னை அறிவித்தது. அதை சேடியர் என்னிடம் சொன்னபோது சினத்துடன் அரண்மனை மருத்துவரை அறிந்து உசாவினேன். அவர்கள் பிழை புரிந்தனர் என்றால் அக்கணமே கழுவேற்றவும் சித்தமாக இருந்தேன்.”

“ஏனென்றால் இளவரசி பிறந்த நாள் முதல் ஒவ்வொரு வாரமும் மருத்துவர்கள் அவளுக்கு பெண்மையை தவிர்த்து ஆண்மையை ஊட்டும் மருந்துகளை அளித்து வந்தனர். ஆண் குதிரையின் வெண்துளியை உயிருள்ள சிப்பியின் உடலில் வைத்து வளர்த்தெடுக்கும் மருந்து அது. பதினெட்டு வயது வரை அவளை உடலெங்கும் பெண்ணெனும் பாவனையே இல்லாமலே நிறுத்தியது அம்மருந்துகளின் வல்லமைதான். உடல் அறியாததை அவள் உள்ளமும் அறியவில்லை. ஒவ்வொரு நாளும் புறச்சூழல் அவளை ஆணென்றே நடத்தியதால் ஆணென்றே இருந்தாள். இன்றென்ன நடந்தது என கூவினேன்.”

“மருந்துகளும் மந்தணச் சொற்களும் உடலையும் உள்ளத்தையுமே ஆள்கின்றன. ஆன்மாவை ஆளும் தெய்வங்களுக்கான தருணம் ஒன்று வந்திருக்கலாம் அரசே” என்றார் முதுமருத்துவர். ஒற்றர்களை அனுப்பி அங்கு என்ன நடந்தது என்று கேட்டு வரச் சொன்னேன். ஃபால்குனை என்னும் பேரழகி அங்கு வந்ததைப்பற்றி மட்டும் அறிந்தேன். அவள் உள்ளத்தின் மந்தணச் சுனையைத் தொட்டு ஊற்றெடுக்க வைக்கும் ஒரு ஆணழகன் அங்கு வந்திருக்கலாம் என்பதே என் எண்ணமாக இருந்தது. அவ்வாறல்ல என்று உணர்ந்தபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. கந்தர்வர்களோ தேவர்களோ காட்டில் இறங்கி வந்திருக்கலாம் என்றனர் நிமித்திகர்.”

“என் பட்டத்தரசியிடம் சொல்லி தன் மகளிடம் உரையாடச் சொன்னேன். சேடியரையும் செவிலியரையும் அனுப்பி அவள் உள்ளத்தை அறிந்துவர ஆணையிட்டேன். அவளுக்கே என்ன நிகழ்கிறது என்று தெரியவில்லை என்றும், ஐயமும் அதிர்ச்சியும் கொண்டிருக்கிறாளென்றும் சொன்னார்கள். இருண்ட தனிமையில் சோர்ந்து அமர்ந்திருக்கையில் அவள் இமை கசிந்து விழிநீர் வடிவதைக் கண்டு என்னிடம் சொன்ன செவிலி ‘அரசே, என் ஐம்பதாண்டு வாழ்க்கையில் நூறு முறை நான் கண்டது இது. காதல் கொண்ட இளம் கன்னியின் கண்ணீரேதான், பிறிதொன்றுமில்லை’ என்றாள்.”

“அக்காதலன் யார் என்று அறிந்துவா என்றேன். கன்னியே அறியாத காதலர்கள் அவளுக்கு இருக்கக் கூடும். அவள் சித்தமும் புத்தியும் அறியாமல் ஆன்மாவுடன் விளையாடிச் செல்லும் கந்தர்வர்கள் உண்டு என்றாள் அவள். மீண்டும் ஒற்றர்களை அனுப்பி உசாவியபோது ஃபால்குனை என்னும் அப்பெண் சிவதையின் கரையிலிருந்த எல்லைச் சிற்றூரின் குடியினர் அத்தனை பேரையும் ஆண்மை கொள்ளச் செய்திருப்பதை அறிந்தேன். அவர்கள் தாங்களே படைக்கலம் ஏந்திச் சென்று கீழ்நாகர்களை வென்றார்கள். அவள்தான் என்றது என் உள்ளம். என் அரசுக்குள் நேற்றுவரை இன்றி இன்று வந்தவள் அவளே.”

“அவளை நேரில் காண வேண்டுமென்று இங்கு வரச்சொன்னேன். பெண்ணெழில் கொண்டு இங்கு வந்து நின்ற அவளைக் கண்டபோது அவள்தான் என்று உறுதியாக அறிந்தேன். என் மகளை பெண்ணாக்கியது இப்பெண்ணழகை தானும் அடையவேண்டுமென்ற பெண்ணுடல் விருப்பா என்று குழம்பினேன். நாள் முழுக்க அவை அமர்ந்து நிமித்திகருடனும் அமைச்சருடனும் மருத்துவருடனும் உரையாடினேன். அவர்கள் இணையட்டும். இங்கு எது நிகழ வேண்டுமோ அதை தெய்வங்கள் நிகழ்த்தட்டும் என்றாள் அரசி. அவ்வண்ணமே ஃபால்குனையை இளவரசியின் வில்தொழில் ஆசிரியையாக அமர்த்தினேன்.”

அமைச்சர் நகைத்து “இளவரசியின் பெண்மையை அவர் எழுப்பினார். அவரில் ஆண்மையை இளவரசி எழுப்பினாள். சிவனும் சக்தியும் ஒருவரை ஒருவர் நிகழத்திக் கொள்கிறார்கள் என்கின்றன நூல்கள்” என்றார். அர்ஜுனன் அவையை வணங்கி “பிறிதொரு கோலம் கொண்டு இந்த அவை புகுந்தமைக்கு பொறுத்தருள வேண்டுகிறேன். ஆனால் பெண்ணுருக்கொண்டு இங்கு வந்தமையாலேயே அன்னை மணிபத்மையின் மண்ணை முழுதறியும் தகைமை கொண்டேன். பெண்ணென்று ஆகாதவன் புவியை அறிவதில்லை. முலை கொள்ளாதவன் படைப்பை உணர்வதில்லை. அம்முழுமை இங்கெனக்கு நிகழ்ந்தது” என்றான்.

“இளைய பாண்டவரே, உங்கள் கதைகளைக் கேட்டு எங்கள் மைந்தர் வளர்கிறார்கள். நீங்களே இங்கெழுந்தருளியது அன்னை மணிபத்மையின் அருள். ஓர் ஊரை வெற்றிகொள்ளும் வீரர்களென ஆக்கியபோதே உங்களை நான் உய்த்தறிந்திருக்கவேண்டும்” என்றார் சித்ரபாணன். “உங்கள் குருதியில் எங்கள் குலம் காக்கும் மாவீரன் எழட்டும். அவன் பெயரால் மணிபுரி என்றும் நூலோர் சொல்லிலும் சூதர் இசையிலும் வாழ்வதாக!” அர்ஜுனன் தலைவணங்கி “தெய்வங்கள் அருள்க!” என்றான்.

வந்தவன் இளைய பாண்டவன் என்னும் செய்தி பரவியபோது வெளியே படகுகளிலும் புதர்த்தீவுகளிலும் நின்றிருந்த மணிபுரியின் மாந்தர் துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். ஏரிநீரின் மீது பிறிதொரு அலையென உவகை கடந்துசென்றது. “இளைய பாண்டவர் அவர். இந்திரப்பிரஸ்தத்தின் தலைவர்” என்றான் ஒருவன். “பெண்ணென்றாகி நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.”

குலப்பாடகன் ஒருவன் கைகளைத் தூக்கி “அங்கு நிகழ்ந்தது என்ன என்று நானறிவேன். கொலைவில்லும் கண்களில் கூர்மையுமாக இளைய பாண்டவர் நம் எல்லைக்குள் நுழைந்தபோது யானைகளை குண்டலமாகவும் கழுத்துமாலையின் மணிகளாகவும் கொண்டு அன்னை மணிபத்மை அவர் முன் பேருருக்கொண்டு எழுந்தாள். என் மைந்தரின் மண் இது. உள்ளே அயலவனாகிய உனக்கு இடமில்லை என்றாள்” என்றான்.

எல்லோரும் அவனைச் சூழ்ந்தனர். “படைக்கலமேந்திய போர்வீரர் எவர் இவ்வெல்லை கடந்தாலும் அழிப்பதென்று எண்ணம் கொண்டுள்ளேன் என்று அன்னை மணிபத்மை அவரிடம் சொன்னாள். குட்டிகளுக்கு அருகே கண் துஞ்சாது கிடக்கும் அன்னைப்பெரும்பன்றி நான். கண்கனிந்து அவர்களை நக்கிக்கொண்டே இருப்பவள். ஆனால் அயலவன் காலடியோசை கேட்டால் முள்விரித்து விழி எரிய சினந்து எழுவேன். குடல் இழுத்து நீட்டுவேன். அகல்க! என்றாள்.”

“அன்னையை நோக்கி புன்னககைத்து தானறிந்த புருஷ மந்திரத்தால் தன்னை பெண்ணென்று ஆக்கிக்கொண்டார் விஜயன். தன்னுருவை அன்னை மணிபத்மையின் உருவமென்றே பூண்டார். இனி எனக்கு தடைகளில்லையே அன்னையே என்றபடி எல்லைகடந்து உள்ளே வந்தாள். அவள் எழில்கண்டு அன்னை புன்னகைத்து நீயே நான், இனி உன் குருதி இம்மண்ணில் விளையும் என்று மொழியளித்தாள்” என்றான் பாணன். “அன்னை மணிபத்மையே ஃபால்குனை என்னும் பேரழகுத்தோற்றம் கொண்டு இம்மண்ணுக்கு வந்தாள்.”

“அன்னை வாழ்க! அவள் கால்பட்ட இம்மண் வாழ்க! அவள் விழிதொட்ட எங்கள் குடிவாழ்க!” என்று கூவினர் மணிபுரியின் மக்கள். “அன்னை எழுந்தாள். அவள் அன்னை வடிவம்” என்று ஒருவருக்கொருவர் கூவிக்கொண்டனர். அன்னை மணிபத்மையின் ஆலயங்கள் அனைத்திலும் அன்று சிறப்பு பூசெய்கையும் பலிக்கொடையும் நிகழ்ந்தன. அன்னையின் காலடியில் வலப்பக்கம் அவளுடைய மானுடவடிவான ஃபால்குனைக்கும் மரத்தாலும் களிமண்ணாலும் சுண்ணக்கல்லாலும் ஆன அழகிய சிறிய சிலைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கும் பூவும் மலரும் அளிக்கப்பட்டன.

தொடர்புடைய பதிவுகள்

அழியா ஓவியங்கள் -கடலூர் சீனு

$
0
0

1

இனிய ஜெயம்,

முன்பு ஒரு சமயம் ஒரு ருஷ்ய காமிரா ஒன்று [சல்லிசா கிடைத்தது] வாங்கினேன். என் தங்கையை புகைப்படம் எடுப்பதற்காக. அந்த காமிராவில் பிலிம் மாட்டும் வேலையில் இறங்கினேன். அந்த கேமராவின் கேட்லாக் துவங்கி, கேமராவின் அனைத்து செயலிகளும் ருஷ்ய மொழியில் இருந்ததால், குத்து மதிப்பாக பிலிமை மாட்டி, அனைத்து செயல்களையும் குத்து மதிப்பாகவே செய்து தங்கையை வித விதமாக புகைப்படம் எடுத்தேன்.

கூர்ந்து இதை நோக்கிக்கொண்டிருந்த என் அண்ணன் திடீரென ஆவேசம் கொண்டு குடுடா நான் எடுக்கிறேன் என்று சொல்லிகாமிராவை வாங்கினார், முன்நாள் நீண்டிருந்த ஆடிக் குழாயை கரக் முரக்என்று இடம் வலமாக ஒரு முறை திருகிவிட்டு அவர் ஒரு படம் எடுத்தார். அந்த ஒரு படம் பிலிமின் கடைசி என்பதால் கேமெரா அத்துடன் மௌனம் சாத்தித்தது. அண்ணன் என்னை இவன் என்னமோ சதி பண்றான் என்ற ரேஞ்சுக்கு பார்த்துவிட்டு கேமராவை என்னிடம் ஒப்படைத்தார்.

அதில் முப்பத்தியாறு புகைப்படம் மட்டுமே எடுக்க இயலும் என்று எனக்கும் அப்போது தெரியாததால், கேமராவை விதவிதமாக பிதுக்கினேன். அது ஒரு மாதிரி கிர்ர் புர்ர் என ஓசை எழுப்பிவிட்டு பாட்டரி தீர்ந்ததும் மொத்தமாக ஓய்ந்தது. அடிவயிற்றில் அய்யய்யோ கௌவ அருகிலிருந்த லேபுக்கு ஓடினேன் [ அந்த காலத்துல பிலிம் ப்ராசசிங் லாப்னு ஒண்ணு உண்டு அப்டின்னு இன்னும் சில வருஷத்துல பேசப் போறோம்] . கடைக்காரர் என் பீதியை விலக்கி, நெகட்டிவ்களை படமாக மாற்ற மூன்று நாள் ஆகும் என்றார். மூன்று நாள் கழித்து படங்களை வாங்கிப் பார்த்தேன் .அத்தனையும் பிளாப். அண்ணன் எடுத்த ஒரே ஒரு படம் தவிர.

சற்றே குவிமையம் தவறிய அந்தப் புகைப்படத்தில் தங்கை உள்ளங்கையில் ஒரு கோழிக் குஞ்சை ஏந்தி முத்தம் கொடுப்பாள். கழுத்து வரையிலான அண்மைக் காட்சி. அடர் கேசம் கொழு,கொழு கன்னம். துன்பம் என்றால் என்ன என்று கருத்தளவில் கூட அறியாத பரிசுத்த இளமை.

சில தினங்கள் முன்பு, நள்ளிரவு மொட்டை மாடியில் நின்றிருந்தேன். ஏதேதோ நினைவுகள். இரவுகள் துயரத்தின் தோழன் எங்கோ வாசித்த வரி. தங்கை தேநீர் போட்டு எடுத்து வந்தாள். ”என்னத்தயாவது நினைச்சுக்கிட்டு கிடக்காம வந்து படு” என்றுவிட்டு போனாள். கதிர்வீச்சு சிகிச்சையால் கேசத்தை இழந்து, பற்கள் சிதைந்து, முன்னழகு பின்னழகு என்ற பெண்மையை சமைக்கும் செழுமைகள் முற்றிலும் கரைந்து, யாரோ போல இறங்கிப் போனாள். ப்ருஷ்டமும் மார்பகங்களும் மனித குலம் இங்கே தங்கி வாழ, தாக்குப் பிடிக்க இயற்கை பெண்களுக்கு அளித்த வரம். எந்த ஆணும் பெண்ணை முதலில் முலையாகவும் இடையாகவும் நோக்குவது , இங்கே தங்கி வாழ இயற்கை இட்ட விதியின் ஒரு அலகே. கொலை பஞ்சம் நிகழ்ந்தாலும் பெண் உடல் தன் வனப்புகளில் கொண்ட கொழுப்பைக் கொண்டு இரண்டு மாதம் தாக்குப் பிடிக்கும். இவை எல்லாம் மானிடவியலாளர்கள் கூற்று. ஆக ஒரு பெண் இங்கே வளத்தை இழக்கிறாள் எனில், அவள் இழப்பது அழகை மட்டுமல்ல.. ஏதேதோ நினைவுகள். பிம்பங்கள். படிமங்கள்.

அதிகாலை சட்டென கிளம்பி கும்பகோணம் சென்றேன். ஆம் தலைக்கோலி சிலை முன் நெடுநேரம் நின்றிருந்தேன். வழியில் மயிலாடுதுறை இறங்கினேன். மயூர நாதர் கோவில் போய்விட்டு , அருகிலிருந்த காசி விஸ்வநாதர் கோவில் சென்றேன். காவிரி நீர் அங்கு வர ஒரு இடை வெட்டு உண்டு. கடை முழுக்கு என்றொரு விழா வரும். ஆயிரக் கணக்கில் மக்கள் அன்று அந்த படித் துறையில் மூழ்கி எழுவார்கள். அன்று அந்த படித்துறை வறண்டு வெறும் பாலித்தீன் குப்பைகளால் நிறைந்து கிடந்தது.

அங்கிருந்து சீர்காழி சட்டைநாதர் கோவில் வந்தேன். சீர்காழி திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் என்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தின் கோவில். ஆதீனங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது . தமிழ்நாட்டில் பதினெட்டு ஆதீனங்கள் உண்டு, அனைவரும் பெரும்பாலும் அறிந்தது திருவாவடுதுறை ஆதீனமே. ஆதீன சொத்து பல வகையிலும் முறைகேடுகளின் கையில் கிடக்கிறது. கோவில் யானை பாகனுக்கு ஆதீனம் தரும் சம்பளம் ஆயிரத்து நானூறு ரூபாய். [ அரநிலயத்துறை வழியே அரசு பணியாக சேரும் பாகனுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம்] தமிழகம் எங்கும் கோவிலில் பெண் யானைகளே இருப்பதால், சிதம்பரம் கோவிலுக்கு கொம்பன் ஒருவர் வரப் போகிறார். கேரளாவில் இருந்து யானைகள் கிடைப்பத்தில் எதோ சிக்கல். ஆகவே கொம்பன் அசாமில் இருந்து வருகிறார். இவை எல்லாம் கோவிலில் கைக்குழந்தையுடன் சுற்றி வந்துகொண்டிருந்த குருக்கள் சொன்னது.

கோவில் குளத்தருகே அம்மன் சன்னதியில், கந்த சஷ்டி கவசம் ஒப்பிக்கும் போட்டி நடத்தி எதோ ஒரு அமைப்பு எவர்சில்வர் கிண்ணி பரிசளித்துக் கொண்டிருந்தது. குழந்தை முதல் கிழவி வரை அடுத்தடுத்து திரும்ப திரும்ப கவசத்தை மைக்கில் பிளிறி குளத்து மீன்களை பதறவைத்துக் கொண்டிருந்தார்கள். கோவிலின் மையத்தில், படியேறி கோபுரத்தின் உச்சிக்கு செல்ல பாதை உண்டு. மேலே தோணியப்பர் என்று அழைக்கப்படும் உமா மகேஸ்வரர் சிலை. அமர்ந்த நிலையில் இடது மடியில் உமாவை அமரவைத்த பத்து அடி உயர மகேஸ்வரர் சிலை. ஊழிக் காலத்தின் போது, சிவன் பிரணவத்தை நாதவடிவமாக்கி ஒரு கும்பத்தில் இடுகிறார். ஊழியின் இறுதியில் கும்பம், கும்பகோணத்தில் கரை சேருகிறது. அந்த கும்பத்திலிருக்கும் பிரணவத்தைக் கொண்டு உமையும் சிவனும் ஆடல் நிகழ்த்தி மீண்டும் இந்த பூமியை இயங்க செய்ததாக புராணம். [எந்த புராணம் என்று அர்ச்சகர் சொல்லவில்லை] . உயர்ந்த கிரீடம், புத்தருக்கு உடையதே போன்ற நீண்ட காதுகள், பின்னால் இரு கரங்களிலும் வெற்றி என்பது போல முத்திரை. முன் வலது கை அபய முத்திரை. இடது கையில் பாசம் இருப்பது போல முத்திரை. மடியில் தாயார். தலைக்கு மேல் சாமரம் வீசும் தேவியர்கள். மார்பில் தாமரை அகற்றப்பட்டு உத்ராக்ஷம், பின் கைகளில் சங்கும் சக்கரமும் அகற்றப்பட்டு, நெற்றியில் பலவந்தமாக செய்து மாட்டப்பட்ட முப்பட்டை, என விஷ்ணுவை ரொம்ப கஷ்டப்பட்டு சிவனாக காட்ட முயன்று, அதில் பரிதாபமாக தோற்றிருக்கிறார்கள். ஆனாலும் இந்த படிமை பேரழகு. பேரழகு என்றால் மூச்சை நிறுத்தும் அழகு. சொல்லை அவிக்கும் அழகு. சித்தம் உறையும் அழகு. நிதர்சனத்தில் இதைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு அழகு கூடிய படிமைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறு. சொல்லத் தெரியவில்லை அழகு அழகு அறற்ற வைக்கும் அழகு அது மட்டுமே சொல்லமுடியும். சாளரத்திலிருந்து எழுந்து சிறகடித்த பறவை ஒலியே என்னை மீட்டது. சஷ்டி உளறல் ஓய்ந்திருந்தது அப்போதுதான் உரைத்தது. காக்கும் கடவுளை , அழிக்கும் கடவுளாக மாற்றி, அழிக்கும் கடவுளுக்கு ”ஆக்கும்” புராண பின்னணியை அளித்து ..ரகளையான மரபுதான் நமது. சும்மா யோசித்துப் பார்த்தேன் .ஒரு மார்க்கம் மதமாக முதிர்ந்துவிட்டது என்பதை அதில் இலங்கும் சொர்க்கம் எனும் கோட்பாட்டைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. சைவத்துக்கு கைலாயம். வைணவத்துக்கு வைகுந்தம். மாறாக காணபத்யம், கௌமாரம்,சௌரம்,சாக்தம், இவை எல்லாம் மார்க்கம் என்னும் நிலையில் இருந்து மதம் என்னும் நிலைக்கு உயர்வதற்குள், சைவத்தாலும் வைணவத்தாலும் உள்ளிழுக்கப் பட்டு விட்டது. இவற்றுக்கு சொர்க்கம் எனும் கருத்தியல் வழியே ஒரு முழுமை கிடைத்திருந்தால். எளிதாக சைவத்தாலோ வைனவத்தாலோ கரைக்கப்பட்டிருக்காது. இந்த சொர்க்கம் எனும் கருத்தியலே இன்றும் முழுமையாக சைவ வைணவ இணைப்பு நிகழ தடையாக இருக்கிறது என எண்ணுகிறேன். நான் பார்த்த வரையில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக இருக்கும் எந்தக் கோவிலிலும் அதன் அர்ச்சகர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டுதான் திரிகிறார்கள். ஒரு முறை சிதம்பரம் கோவிலில் இப்படி முறைத்துக் கொண்டு விலகிய அர்ச்சகர்களை [நடராஜருக்கு தீட்சிதர்] கண்ட என் நண்பர், அங்க சைவம் இருக்கு, இங்க வைணவம் இருக்கு இந்த இந்துமதம் எங்கப்பா இருக்கு என்றார். அய்யா வைகுண்டர் துவங்கி நாராயண குரு வரை ஒரு மாதிரி மூர்க்கமாகத்தான் சைவ வைணவ இணைப்புக்கு செயல் புரிந்திருக்கிறார்கள். தங்களது தனித்தன்மையை பேணிக் கொண்டு, முற்றிலும் ஒன்று கலக்க இவர்களுக்குள் என்னதான் தடை?

இரவெல்லாம் தோணியப்பரே நினைவின் நதியில் மிதந்தார், எண்ணங்கள் வளர்ந்து சொல்லோடு சொல் பிறந்து போதம் ஆர்த்தப் பூண்முலை அம்மன் எனும் சொல்லில் அகம் முட்டி திகைத்து நின்றது. போதம் ஆர்த்தப் பூண்முலைகள் உன்மத்தம் மீற மீண்டும் பேருந்து ஏறினேன். மனம் போன போக்கு சென்று சேர்த்த இடம் பவானி சாகர்அணை. ஏன் இங்கு வந்தோம் என்று புரியாமல் கொஞ்சநேரம் நின்றிருந்தேன். நகரப் பேருந்து வர, பன்னாரி கோவில் வந்து இறங்கினேன். மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருப்பணியால் புத்தம் புதிதாக இருந்தது கோவில். வீரப்பன் வழிபட்ட கோவில் என்றனர். பிறந்த குழந்தையின் கண் போல குளிர்ந்து கிடந்த வானிலிருந்து , பொழிந்த சாரல், சருமத்தை வைர முனைகள் போல வந்து தொட்டது. அங்கிருந்து காளி திம்பம் என்ற பெயர் நோக்கி பேருந்து ஏற்னேன். நான் பயணித்த பாதைகளில் மிக அழகான பாதைகளில் ஒன்று அது. கனவென விரிந்த பாதாள பசுமை சரிவு, தொட்டு நினைவென எழுந்த மலைத்தொடர் வளைவு. கரும்பச்சை தொடருக்குப் பின், அடர்நீலத் தொடர், அதற்குப் பின் நிழலாய் ஒரு மலைத் தொடர், அதற்குப் பின் தொடுவானின் மாண்பில் புதைந்த மௌனத் தொடர். இருபத்து ஏழு கொண்டைஊசி வளைவுகள் உயர்ந்து காளி திம்பம் அடைந்தேன். பசுமையான சிறிய கிராமம். ஆங்காங்கே காட்டு யானை நுழையா வண்ணம் வேலிகள் அமைத்திருந்தார்கள்.

அங்கிருந்து கல்லேகால் என்ற ஊருக்கு பேருந்து சென்றது. எழுபது கிலோமீட்டர் சத்தியமங்கலம் காட்டுக்குள் மட்டுமே செல்லும் பாதை. கேர்வளம் எனும் ஊர் அருகே[தமிழக எல்லையில்] புலிகள் காப்பகம் ஒன்று இருக்கிறது . வாய்க்கு நுழையாத கன்னட பெயர் கொண்ட ஊரில் அருவி ஒன்று இருக்கிறது. அதைக் கடந்த கிராமம் ஒன்றினில் முழுக்க முழுக்க [மைசூர் பெங்களூரில்] பணிபுரியும் நாகலாந்து,அருணாச்சல பிரதேச மக்கள் மட்டுமே நிறைந்திருந்தனர். சரிவில் இருக்கும் கிராமத்தை வன விலங்குகள் அணுகாமல் கண்காணிக்க மர உச்சிகளில் காவல் வீடுகள். அனைத்தையும் கடந்து முடிவே அற்ற பச்சை குகைக்குள் சென்றுகொண்டே இருந்தது பேருந்து. வழியில் ஒரு மிளா செருக்கடித்தபடி மெல்ல நடந்து புதருக்குள் மறைந்தது. முதன் முதலாக காட்டுப் பன்றி ஒன்றினைக் கண்டேன். போடா புல்லே என்ற தோரணையில் நின்றிருந்தாள் வராகி. அத்தனை பெரிய பேருந்தின் உறுமலும் வருகையும் அதற்க்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

மருத்துவ வேலைகளை பார்க்க வேண்டும் மீண்டும் வீடு வந்தேன். இரவெல்லாம் உறக்கமின்றி மனமெல்லாம் உன்மத்தம் கொண்டு எழுந்து நின்றது. ஆம் இது காமம். தசையின் வெம்மை கொண்டு ஆறும் காமம் அல்ல இது. இந்த உலகையே அள்ளி உண்ட பின்னும் நிறையாமல் எஞ்சி நிற்கப்போவது. எதுவும் அமையாமல் எழுந்து லாப்டாப்பை இயக்கி ஜெயமோகன் தளம் வந்து கைக்கு கிடைத்த பதிவுகளை வாசித்தேன்.

கனி பதிவு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இணையத்தில் துளாவினேன். அந்த ஓவியத்தை வரைந்தவர் பெயர் வில்லியம் அடால்ப் போக்வா. அந்த ஓவியத்தின் பெயர் டென்டேஷன். கிட்டத்தட்ட ஐநூறு ஓவியங்கள் வரை வரைந்திருக்கிறார். ஒரு நூறு ஓவியங்களாவது அதை ரசிக்க ஒரு முழு இரவைக் கோரும்.

தாகம் என்றொரு ஓவியம், சூரிய ஒளி அந்தப் பெண் அருந்தும் பீங்கான் குவளையில் பிரதிபலிக்கும் விதமும், அந்தக் கோப்பை நிற்கும் கருங்கல்லில் பிரதிபலிக்கும் விதமும், அதே ஒளி அந்தப் பெண்ணின் உள்ளங்காலிலும், புரந்கையிலும், அவளது உடைகளில் பிரதிபலிக்கும் விதமும் என அற்ப்புதமான ஓவியம்.

கும்பகோண தலைக்கோலி சிற்பம் சாமுத்ரிக்கா லட்சனங்களின் சிகரம் எனில், அதைக் காட்டிலும் அழகு கூடிய தத்ரூப சிலைகளை அருகர்களின் பாதை பயணத்தில் பார்த்திருக்கிறேன். குறிப்பாக குறுநகையுடன் திரிசூலம் ஏந்தி நிற்கும் மகிஷா சுரமர்த்தினி. உயர்ந்த வலது கையின் காரணமாக வலது முலை உயர்ர்ந்து, இடது முலை தாழ்ந்து, இடை ஒசிந்து, சுண்டு விரல் கூட அத்தனை அழகு. நான் உங்களிடம் கேட்டேன் இதை செதுக்கியவன் எத்தனை பெண்களை பார்த்திருப்பான்? உங்களது பதில் குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் எழுத அவர் பிள்ளை பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஆம் முற்றிலும் உண்மை, நமது அக ஆழம் நம்முடன் முடிந்து விடும் ஒன்றல்ல. என்றோ மண் மறைந்த நமது நியண்டர்தால் மூதாதாதை கண்டதை ஒரு தியான கணத்தில் நம்மால் கண்டுவிட முடியும்.

வில்லியமும் தன் அக ஆழத்திலிருந்து கனவுகளை தூரிகையால் தொட்டெடுத்த கலைஞன்தான். சொல்வதில் வெட்கமென்ன எனக்கு பெண்களின் வடிவ அழகுகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். குறிப்பாக கருவுற்ற மாதம் துவங்கி, அமுதூட்டும் காலம் நிறையும் வரை பெண்மையின் ஸ்தனங்கள் ,இளமை குவிந்து, தாய்மை கனிந்து,உன்னித்து உயர்ந்து, உவந்து ஈந்து, தாழ்ந்து பணியும் கோலம், கோடி கோடி ஜென்மம் எடுத்து மானுடம் கண்டு கரைய வேண்டிய பேருவகை அது.

குழந்தை என்று துவங்கி, பேதை பெதும்பை மங்கை மடந்தை அறிவை தெரிவை என அனைத்து பருவங்களின் பெண்மையின் பேரெழிலை இறவாநிலையில் நிறுத்தி இருக்கிறார். ஒளி ஒன்றை கொண்டே கன்னம், ஸ்தனம், புறங்கை, புயம், இவற்றின் மென்மையில் இலங்கும் வகை பேதங்களை வடித்திருக்கிறார். இவர் தூரிகையில் வண்ணங்களை அள்ளவில்லை. ஒளியே அள்ளுகிறார்.

குறிப்பாக டென் டேஷன் ஓவியத்தின் குழந்தையின் உடலில் இருக்கும் தளும்பல், குளிக்கும் சிறுமி ஓவியத்தில் இருக்கும் மார்பின் அழகு, பூச்செண்டு வைத்திருக்கும் சிறுமி ஓவியத்தில் உள்ள முன்னழகின் தோற்றம் [பிறந்த குழந்தையின் மொக்கு உதடு போல] குளிக்கும் இளம் பெண் ஓவியத்தில் மதர்த்துப் பொங்கும் இளமை, குடும்ப நேரம் ஓவியத்தில் தாய்மையில் கனியும் ஸ்தனம் என்று, வித விதமான கொங்கை அழகுகள்.

அனைத்துக்கும் மேல் இவர் உருவாக்கும் கன்னிகள். பரிசுத்தம் என்ற வார்த்தை அன்றி வேறெதுவும் தோன்றவில்லை. the nymphaeum என்றொரு ஓவியம், கன்னியராகி நிலவினிலாடி என்ற வார்த்தையே திரும்ப திரும்ப காதில் ஒலித்தது. நிர்வாணக் கன்னியுடன், தேவதைகுழந்தை ஒன்று தனது அம்பால் குத்தி விளையாடும் ஓவியம் இணையற்ற அழகென்பேன். தேவதைகளுடன் விளையாடும் பருவம் கன்னிமைப்பருவம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பிடித்தது nymphs and satyr ஓவியம். இடுப்புக்கு கீழே குதிரை உடல் கொண்ட மனிதன் கன்னியர் இடையே சிக்கிக் கொள்கிறான். அவனது கண்களின் மிரட்சி, அவனது கால்களில் உள்ள வெருட்சி, அவனை இழுக்கும் கன்னியின் உடலின் வனப்பு, குதிரை மனிதனின் உடல் திணிவு, அப்பால் அனைத்துக்கும் மேல் அந்தப் பெண்களில் துலங்கும் சுதந்திரம்.

ஓவியர்களில் மகத்தானன்வன் இந்த வில்லியம் அடால்ப் போக்வா.

நூறு நூறு ஆண்டுகள் வாழ்ந்து முடித்த உவகையுடனும் ஆயாசத்துடனும் அவனது உலகை எனது அகத்தில் நிறைத்து கணிப்பொறியை அணைத்தேன். தங்கை சோபாவில் கிடந்தது உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள். அவளுடன் வானின் கீழிருக்கும் அனைத்தையும் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கும் இந்த ஓவியனின் உலகை அறிமுகம் செய்ய வேண்டும்.

இவரது ஓவியங்கள் அனைத்தும் இணையத்தில் உயர் தர ஒளிப்படமாக காணக் கிடைக்கிறது.

அறிமுகத்துக்காக இந்த சுட்டி

http://www.the-athenaeum.org/art/list.php?m=a&s=tu&aid=380.

காண்டீபம் காத்திருக்கிறது .மிச்ச பிலாக்கணத்தை அடுத்த மடலில் தொடர்கிறேன்…

தொடர்புடைய பதிவுகள்

ஜி.நாகராஜன் என்னும் கலைஞன்

$
0
0

ஜெ,

உங்கள் தஞ்சை பிரகாஷ் பற்றிய கட்டுரை எனக்கிருந்த குழப்பங்களைத் தீர்த்துவைத்தது. நானும் தஞ்சை பிரகாஷ் எழுதிய இருநாவல்களை வாசித்து என்னது இது என்று நினைத்தவன். ஆனால் இன்னொரு கும்பல் சமீபமாக ஜி.நகாராஜனை போலி என்றும் பாவலா எழுத்தாளர் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. ஜி.என் பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். ஜி.என் பாலியலைத்தான் எழுதினார். அவர் எழுத்து ஏன் நுட்பமானதாக இருக்கிறது என அறிய விரும்புகிறேன், ஏனென்றால் அப்படி முன்னரே சொல்லியிருக்கிறீர்கள்.

சண்முகம்

3

அன்புள்ள சண்முகம்,

ஜி.நாகராஜனை சிலர் எண்பதுகளில் பெரும்பரவசத்துடன் ‘கண்டுபிடித்துக் கொண்டாடினார்கள். அவரை போல ஏன் அசோகமித்திரன் எழுதவில்லை என்றெல்லாம் கேட்டார்கள். அவர் கிளர்ச்சியாளர் கலகக்காரர் என்றெல்லாம் பேசப்பட்டது. கட்டுரைகள் எழுதப்பட்டன. ஏன் கதைகள் கூட அவரைப்பற்றி எழுதப்பட்டன. [கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன்]

அப்போது ஜி.நாகராஜனை கறாராக மதிப்பிட்டு எழுதினேன். அவருடைய எழுத்து கலகமோ அடித்தள மக்கள் மீதான மனிதாபிமானமோ ஒன்றும் அல்ல என்று விளக்கினேன். அவருடையது பாலியல் விருப்புடன் அடித்தள இருள் உலகை நோக்கிச் செல்லும் ஒருவரின் பார்வைதான். அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது. முழுக்கமுழுக்க நவீனத்துவம் உருவாக்கிய வாழ்க்கை நோக்கு அது.

அன்று ஒப்புநோக்க ஜி.நாகராஜன் எழுத்து பாலியல்தூண்டலை அளிக்கக்கூடியதாக இருந்தமையால் கொண்டாடியவர்கள் இன்று அடுத்த ‘உறைக்கிற சரக்கு’ வந்ததும் ‘அது பத்தலை மச்சி’ என இடம் மாறுகிறார்கள். அது இலக்கிய அபிப்பிராயமே அல்ல. அவர்கள் வாசிக்கவேண்டியதே வேறு.

ஜி.நாகராஜன் நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். அவரைப்பற்றிய என் முழுமையான மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அது நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற பேரில் இருபது எழுத்தாளர்களைப்பற்றி எழுதிய ஏழு நூல்களில் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் உள்ளது

நாகராஜனின் கசந்த அங்கதம் பற்றியும் எதிர்மறை வாழ்க்கைநோக்கு பற்றியும் விரிவாக இங்கே பேசவில்லை. நீங்கள் கோரியபடி அவரது பாலியல்சித்தரிப்பு ஏன் முக்கியமானது என்று சொல்கிறேன். அவர் பாலுறவை சித்தரிக்கிறார். ஆனால் அந்தச் சித்தரிப்பு மேலோட்டமான பரபரப்பை அல்லது ஈர்ப்பை மட்டும் உருவாக்குவதில்லை. அதை வாசகன் கடந்தானென்றால் நுட்பமான கண்டடைதல்கள் வழியாகச் செல்லமுடியும்

’நாளை மற்றும் ஒரு நாளே’ நாவலில் மீனாவை கந்தன் ஒரு விபச்சார விடுதியில்தான் கண்டுகொள்கிறான். விலைகொடுத்து வாங்குகிறான். அவளை விபச்சாரத்துக்கு அனுப்பிச் சம்பாதிப்பதுதான் அவன் நோக்கம். அவள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறான். அவளை இன்னொருவருக்கு விற்றுவிடவும் எண்ணம் கொண்டிருக்கிறான், அவளுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்காக.

ஆனால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ளும் சித்தரிப்பிலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். ’அக்கா வீட்டுக்கு கண்டவனும் வருவானே , இப்பிடித்தான் ரொங்கிப் படுத்திருப்பியா?” என்கிறான். அவளுடன் பிற ஆண்கள் உறவுகொள்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு அப்போது முக்கியமாகப் படுகிறது. அது அவனை உள்ளூர அரிக்கிறது. பெண்ணை தன் உடைமை எனக் கருதும் ஆதி மிருகம்.

அவள் எத்தனை நுட்பமாக அதைப்புரிந்துகொள்கிறாள். ‘அக்கா வீட்டுக்கு கண்டவனும் வரமாட்டான். ஒருமாதிரி டீசண்டானவங்கதான் வருவாங்க’ என்கிறாள். ஆண் மிருகத்திற்கு ஒரு துண்டு மாமிசம்.

உடலுறவு நடக்கிறது. ‘தலையணை வச்சுக்கவா?’ ‘வேண்டாம். சரியா இருக்கு’ கூடவே உள்ளங்களும் உரையாடிக்கொள்கின்றன. ‘எப்டிப்பட்டவங்க வருவாங்க?’ என்கிறான். அவள் நுணுக்கமாகச் சொல்கிறாள். ‘காலேஜ் பசங்க வருவாங்க’. அதாவது அவள் அவனுக்குச் சமானமாகப் பொருட்படுத்தக்கூடியவர்கள் வருவதில்லை. இரண்டு விளையாட்டுக்கள்!

மொத்த நாவலையும் இப்படியே வாசித்துக்கொண்டே செல்லலாம். மீனா தன்னம்பிக்கை கொண்ட உற்சாகமான அடாவடியான பெண். ஆனால் உடலுறவு முடிந்து கந்தன் திரும்பிப்படுத்தால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அது மனஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு. [ஹென்றி மில்லர் அற்புதமாக அந்த பின்மனநிலையை எழுதியிருக்கிறார். நெக்ஸஸ் நாவலில்] உண்மையில் மீனா உள்ளூர துயரமான மனச்சோர்வு கொண்ட இன்னொரு பெண்.

’குறத்திமுடுக்’கில் ‘ஏன் உதட்டிலே முத்தமிடக்கூடாதுன்னு சொல்றாங்க?” என்று தங்கம் அவனிடம் கேட்கிறாள். ‘தெரியலை’ என்கிறான். அவளுடைய நோய் தனக்குத் தொற்றிவிடுமெனும் அவநம்பிக்கை அது என்று சொல்லவில்லை. பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது

அவன் அவளை அள்ளி உதட்டில் முத்தமிடுகிறான். தங்கமும் அவனும் காதல்கொள்ளும் தருணம் அது. மறைந்த நண்பர் குவளைக்கண்ணன் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘வச்சாண்டா பாரு… அவன் அறிஞ்சவண்டா’ என்று குதூகலித்ததை நினைவுகூர்கிறேன்.

தங்கம் மாதாமாதம் போலீஸில் கைதாகி கோர்ட்டில் அபராதம் கட்டி வருபவள். ஆனாலும் அவளுக்கு ஒருமுறை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அபராதம் கட்டாமல் வாதாடவேண்டும் என அடம்பிடிக்கிறாள். அந்த வேகம் எவருக்கும் புரியவில்லை. அவனுக்கும்தான். ‘ஏன்?’ என்கிறான். ‘காலிப்பய சேதுவ நான் கூப்பிட்டதா கேஸ போட்டிருக்கானே. அதை ஏத்துக்கவே முடியாது’ என்கிறாள். ஏன்? அவன் ஒருவனை மட்டும் அவள் ஏன் வெறுக்கிறாள். அவனைக் கூப்பிட்டாள் என்று சொன்னால் ஏன் அவள் சுயமரியாதை புண்படுகிறது? சேது யாரென்றே நாவலில் இல்லை. ஆனால் வாசகன் அந்த மனநிலையை தொட்டு அறியமுடியும்.

இந்த நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

வையாபுரிப்பிள்ளை குறித்து

$
0
0

eS

எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்பவன். என் கருத்துக்கள் ஒரு பொது நோக்கில் அறியக்கிடைத்தவையே.

1] எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையனவா ? இன்று அவரது இடம் என்ன ?

அல்ல. எஸ்.வையாபுரிப்பிள்ளை தன் ஆய்வுகளை நிகழ்த்தி ஏறத்தாழ ஐம்பதுவருடங்கள் ஆகின்றன. இத்தனைகாலம் அவரது ஆய்வுமுடிவுகள் அனைத்தும் அபப்டியே நீடித்து நிற்கும் என்று எவருமே வாதிட இயலாது. முதல்நிலைக் கோட்பாடுகளை உருவாக்கிய ஆய்வாளன்கூட அத்தனைகாலம் நீடித்திருக்கமாட்டான். காரணம் ஆய்வு தொடர்ந்து முன்னேறும் ஒரு பயணம்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆய்வுகளை நிகழ்த்தியபோது தமிழின் முக்கியக் கல்வெட்டுகள் பல படிக்கப்படவில்லை. இன்று தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் முதல்தள தாரமாகக் கணிக்கப்படும் பல புதைபொருள் சான்றுகள் விளக்கப்படவில்லை. மானுடவியல், வேர்ச்சொல்லியல் முதலிய பிற அறிவுத்துறைகளுடன் இலக்கிய, தொல்பொருள் சான்றுகள் உரையாடவைக்கப்பட்டு முழுமையான ஆய்வு நிகழ்த்தும் முறையியல் உருவாகி வரவில்லை. அவரது காலகட்டத்தில் அறிமுகமாகியிருந்த முறைமையை கையாண்டு வையாபுரிப்பிள்ளை தன் முடிவுகளுக்கு வருகிறார். வையாபுரிப்பிள்ளையின் பல முடிவுகள் ஆய்வாளர்களால் மறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஆய்வாளராக அவரது முக்கியத்துவம் சில அடிப்படைக் காரணிகளால் அமைந்தது. ஒன்று ஆய்வுக்கு கொள்கைப்பிடிப்போ உணர்ச்சிகரமான ஈடுபாடுகளோ தடையே ஆகும் என்றும் ஆய்வுக்கு அடிப்படையாக அமைவது புறவயமான முறைமையே என்றும் அவர் நம்பியமை. இரண்டு ஆய்வுக்குப் பின்புலமாக தமிழ்நாட்டில் அன்று இருந்த சமூக அதிகாரத்துக்கான போட்டியில் அவர் பக்கம் சாராமல் நின்றது.

இன்று அச்சூழலை புரிந்துகொள்ளும் உதாரணமாக இரு நூல்களை வாசகர்கள் பரிசீலித்து நோக்கவேண்டுமென்று எண்ணுகிறேன். சு .கி ஜெயகரன் அவர்கள் எழுதிய சமீப கால நூலான ‘ ‘ குமரி நில நீட்சி ‘ ‘ [காலச்சுவடு பதிப்பகம்.] குமரிக்கண்டம் என்ற கருதுகோள் எவ்வாறு தமிழில் உருவாகி பரப்பப்பட்டது என்பதை விவரிக்கிறது. பிரம்மஞானசங்கத்தைச் சேர்ந்த சிலர் ‘உள்ளுணர்வு ‘ மூலம் இந்துமகாசமுத்திரத்தில் ஒரு பெருங்கண்டம் இருந்ததாக ‘ கண்டடைந்து ‘ அதற்கு லெமூரியா என்று பேரிடுகிறார்கள். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் குமரிக் கோடு பஃறுளி று முதலியவற்றை கடல்கொண்டதாக சில வரிகள் வருகின்றன. இங்குள்ள திராவிட இயக்க தமிழறிஞர்கள் இரண்டையும் எளிதாக இணைத்து குமரிக்கண்டம் என்ற பெரிய நிலப்பகுதி தமிழ்நாட்டுக்குத் தெற்கே பரந்து விரிந்துகிடந்ததாகவும், அங்குதான் தமிழ்ப்பண்பாடு பிறந்து ஓங்கியதாகவும் , மானுட இனமே அங்கே தோன்றியிருக்கலாம் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். ‘மேலைநாட்டு ‘ அறிஞர்களை மேற்கோள்காட்டி குமரிக்கண்டத்தை அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட உண்மையாகவே முன்வைத்தார்கள். அது அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு அரசு சார்பில் உலகத்தமிழ்மாநாட்டில் வெளியிடப்பட்ட செய்திப்படங்களில் கூட காண்பிக்கப்பட்டது. இன்றும் தமிழில் அது நிறுவப்பட்ட உண்மையாகவே காணப்படுகிறது. அதை ஐயப்படுவது தமிழ்துரோகமாக கணிக்கப்படுகிறது. தமிழாய்வுகள் எத்தகைய விருப்பக் கற்பனைகளாக இருந்தன என்பதற்கான ஆதாரம் இது. உண்மையில் இவர்களுடைய அப்பாவித்தனத்துக்கு உலக அளவில் கூட ஒரு சமான உதாரணம் இருக்காது.

சு கி ஜெயகரன் குமரிக்கண்டம் என்ற கருத்து எப்படி அறிவியலடிப்படையே இல்லாத ஆய்வுகள் மூலம் அபத்தமாக உருவாக்கப்பட்டது என்று விரிவாக விவரித்து அடிப்படையான சில வினாக்களை எழுப்புகிறார். இக்கருத்து தமிழில் பேசப்பட்ட இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் இந்த எளிமையான அடிப்படைவினாக்கள் எவராலும் எழுப்பபடவில்லை என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். [உதாரணம் குமரிக்கடலில் அடித்தரை எவ்வளவு ஆழம் உள்ளது என்ற கேள்வி] அத்தகைய ஒரு விவாதத்துக்கான சூழலே இங்கே இருக்கவில்லை. இத்தகைய ஒரு நிலை கொண்ட ஆய்வுச்சூழல் தான் ஆபத்தானது ? எப்படி அது உருவாயிற்று ? இவ்வாறு குமரிக்கண்டத்தை ‘நிறுவிய ‘ அதே அறிஞர்கள்தான் எஸ் வையாபுரிப்பிள்ளையை தூக்கிக் கடாசியவர்கள் என்பதை நான் நினைவில்கொள்ள வேண்டும் . வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு நெறி இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு முற்றிலும் எதிரானது.

இன்றும் இதேபோக்கு தொடர்வதற்குச் சிறந்த உதாரணம் தஞ்சை தமிழ் பலகலையைச்சேர்ந்த நெடுஞ்செழியன் எழுதிய ‘தமிழிலக்கியத்தில் உலகாயதம் ‘ என்ற ‘ஆய்வு ‘ நூல். என் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப்படைப்பு இது. கிரேக்க பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவை என்று சொல்லாராய்ச்சி மூலம் நிறுவும் நூல் இது. நம் மேடைகளில் இதை தினமும் காணலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பெரியார் தாசன் சொன்னதாக கேள்விப்பட்டேன். ‘பெற்றோரொத்தல் ‘ என்ற சொல்லில் இருந்தே Betrothal என்ற ஆங்கிலச்சொல் வந்திருக்கிறதாம். வையாபுரிப்பிள்ளை போரிட்டு தோற்கடிக்கப்பட்டது இந்த ‘ஆய்வா ‘ளர்களுடன்தான். இன்றும் அவருக்கு இங்கே இடமில்லாமல் இருப்பதும் இதனால்தான். இந்த ஆய்வுகளை தமிழுணர்வின் பகுதிகளாகக் காண்பவர்கள்தான் வையாபுரிப்பிள்ளை பேரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள். கல்விநிலைய ஆய்வுகளில் அவரது ஒரு மேற்கோளைக் காட்டினாலே அவற்றை விழத்தட்டுகிறார்கள்.

இரண்டாவதாக சமூக அதிகாரப்போட்டி. அன்றைய தமிழ்நாட்டில் சாதிகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போரைப்பற்றி இந்தக் குறிப்பில் கோடி காட்ட விழைகிறேன். வெள்ளையர் எடுத்த இரு மக்கள்தொகை கணக்குகள் இந்திய அளவில் பெரிய சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கின. முதல் கணக்கு சாதி அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு வருண அடிப்படையிலும் எடுக்கப்பட்டது. வருண அடிப்படையில் சாதிக்கணக்கு எடுக்கப்பட்டபோது பல வேளாண் சாதிகள் தங்களை சத்ரியர் என்று அடையாளப்படுத்தின. உதாரணமாக நாடார் மற்றும் தேவர். இது வைசியர்களாக மட்டுமே கூறத்தக்க வேளாளர் , முதலியார் போன்றவர்களை கொதிப்படையச் செய்தது. சத்ரியர் வைசியர்களைவிட மேலானவர்கள் ஆயிற்றே. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதலியோர் இதற்கு எதிராக எப்படி வேளாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டிப் போரிடமுற்பட்டனர் என்பதெல்லாம் வரலாறு . ஆரிய வருணப்பிரிவை முற்றாக நிராகரித்து தங்களை மிகத்தொன்மையான ஒரு இனமாகக் அடையாளம்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது இவ்வாறுதான்.

அன்றைய சூழலில் வேளாளர், முதலியார் முதலிய பிராமணரல்லாத உயர்சாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்த முயற்சிகள் ஒருபக்கம். நாடார் போன்ற சாதிகள் தங்கள் இடத்தைக் கோரி நடத்திய போராட்டம் ஒருபக்கம். தலித்துக்கள் முதலியோரை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் ஆங்கில ஆய்வாளர் செய்த ஆய்வுகள் ஒருபக்கம் என்று மூன்று இழுவிசைகள் அன்று நிலவின. திருநாவுக்கரசரின் காலம் குறித்த கால்டுவெல்லின் ஆய்வுதான் அந்த நூற்றாண்டுகால ஆய்வுப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி எனலாம். அது பக்தி இயக்கம் மற்றும் சைவசித்தாந்தத்தின் காலத்தை வெகுவாக பின்னால் கொண்டுவந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு. அவருக்கு வேளாளரின் ஆதிக்கம் பிந்திய காலத்தது என்று காட்டி பறையர் சாதியினரை முதற்குடிகளாக முன்னிறுத்தும் நோக்கம் இருந்தது என்று ஆய்வாளர் வேத சகாய குமார் சொல்கிறார். அந்நூலுக்கு எதிராக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை செய்த கால ஆராய்ச்சியும் மாணிக்கவாசகர் காலம் குறித்து மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியும் அக்காலத்தை வெகுவாக முற்காலத்துக்குக் கொண்டுசென்றன. அதற்குரிய தரவுகள் சேர்க்கப்பட்டன, தர்க்கங்கள் உருவாக்கபப்ட்டன . இந்த நோக்கின் நீட்சியாகவே அடுத்த கட்டத்தில் தமிழின் தொன்மையை மேலும் பின்னகர்த்தி குமரிக்கண்டத்துக்குக் கொண்டுசெல்லும் திராவிட இயக்க அலை எழுந்தது

இதில் வையாபுரிப்பிள்ளை கால்டுவெல்லையே அதிகம் சார்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அவர் வேளாளராக தன்னை உணரவில்லை. அவருக்கு இருந்த ஐரோப்பிய ஆய்வுநெறிகள் மீதான நம்பிக்கையே வென்றது. அவரது முக்கியக் குறைபாடு என்னவென்றால் அவர் ஐரோப்பிய ஆய்வு முறைமை மீதான நம்பிக்கையை ஐரோப்பிய ஆய்வாளர் மீதான நம்பிக்கையாக மாற்றிக் கொண்டார் என்பதுதான். இங்கு கால்டுவெல் பின்னகர்ந்த போது வையாபுரிப்பிள்ளையும் பின்னகர்ந்தார். ஆனால் பொதுவாக தென்தமிழகத்தின் சீரிய ஆய்வாளர்களில் கணிசமானபேருக்கு வையாபுரிப்பிள்ளை முக்கியமான முன்னோடி . கெ கெ பிள்ளை, ப.அருணாச்சலம், பேராசிரியர் ஜேசுதாசன் , அவரது மாணவர்களான அ கா பெருமாள், எம் வேத சகாயகுமார் முதலியோர் உதாரணம்.

ஆய்வுகள் முன்னகரும்தோறும் வையாபுரிப்பிள்ளையை எதிர்த்த ‘கடற்கோள்வாதிகள் ‘ மேலும் மேலும் கேலிக்குரியவர்களாக மாறி காலக்கோளுக்கு ஆளாகி மறைவதையே காண்கிறோம். சமீபத்தில் வெளிவந்த ஐராவதம் மகாதேவனின் நூலும் வையாபுரிப்பிள்ளையின் பாதையிலேயே நகர்கிறது. அதனாலேயே அந்த மகத்தான நூல் குறித்தும் பல தமிழறிஞர்கள் ஐயத்துக்கு இடமான மெளனம் சாதிக்கிறார்கள்.[தொன்மையான தமிழ் எழுத்துரு பிராம்மி என்பது எப்படிப்பட்ட ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கவேண்டும்! ]

வையாபுரிப்பிள்ளை சம்ஸ்கிருத ஆதரவாளரா ?

எந்த ஒரு ஆய்விலும் ஒட்டியும் வெட்டியும் தரப்புகள் விவாதிக்கவேண்டியுள்ளது . தமிழ் சம்ஸ்கிருத உறவைப் புரிந்துகொள்வதில் மூன்று சாத்தியக்கூறுகளை நாம் உருவகிக்கலாம். தமிழ் தொன்மையும் தனித்தன்மையும் உடையது. சம்ஸ்கிருத உதவி இல்லாமலேயே நிலைநிற்கும் வலிமை கொண்டது. தமிழில் சம்ஸ்கிருதம் கலப்பது ஒரு வரலாற்று மோசடி– இது ஒருவாதம். தமிழ் சம்ஸ்கிருதத்த்தை ஒட்டி வளர்ந்த ஒரு இரண்டாம்கட்ட மொழி என்பது இன்னொரு வாதம். தமிழும் சம்ஸ்கிருதமும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பது மூன்றாம் தரப்பு.. மூன்று தரப்புகளும் தொடர்ந்து விவாதிக்கும்போதே ஒரு ஆய்வுச்சூழல் உருவாகிறது. இதில் வையாபுரிப்பிள்ளை நடுநிலையான தரப்பை எடுத்தார். இந்திய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்துடன் உரையாடி வளர்ந்தவை என்றும் தமிழுக்கு சம்ஸ்கிருதத்தின் கொடை மிக மிக முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார் எனலாம். சம்ஸ்கிருதம் சார்ந்த கருத்துக்கள்ளை வையாபுரிப்பிள்ளை வலுவாக முன்வைத்தமைக்குக் காரணம் அவர் ஐரோப்பிய ஆய்வாளர்களை அதிகம் சார்ந்திருந்தமைதான். அப்போது இந்தியவியலில் சம்ஸ்கிருதத்தை மையமாக்கி ஆராய்வதே பொதுவான போக்காக இருந்தது. இன்றும் அப்போக்கு வலுவாக உள்ளது.அன்று சம்ஸ்கிருத வேர்ச்சொல்லாராய்ச்சி வலுவாக இருந்தமையால் அவரது நோக்கு சம்ஸ்கிருதச் சார்பு கொண்டதாக இருந்தது. ஆனால் தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியின் சாத்தியங்களை அவர் அங்கீகரித்தார். அன்று நிலவிய பொதுவான போக்கு முதல்தரப்புதான். அது வையாபுரிப்பிள்ளைக்கு எதிராக ஒரு பெரிய காழ்ப்பு அலையை உருவாக்கி அவரை ஆரிய அடிவருடி தமிழ்த்துரோகி என்றெல்லாம் முத்திரைகுத்தச் செய்தது.

நிரூபணவாதம் சாராத அறிவுத்துறைகளில் எந்த தரப்பும் இறுதியாக நிறுவப்படுவது இல்லை, எந்தத் தரப்பும் முற்றாக அழிவதுமில்லை. ஆகவே மேலே சொன்ன மூன்று தரப்பும் எப்போதும் இருக்கும். எந்த ஒரு புது கருத்தையும் மூன்று கோணங்களும் தங்கள் நோக்கில் ஆராய்ந்து தங்களுக்குள் விவாதித்து தெளிவுபடுத்துவதே ஆரோக்கியமானதாகும். நானறிந்தவரை கேரளக் கலாச்சார ஆய்வில் தமிழ்மைய நோக்கு சம்ஸ்கிருத மைய நோக்கு என்ற இரு நோக்குகளும் ஆக்கபூர்வமான விவாதத்தையே நிகழ்த்திவருகின்றன. இவற்றின் முரணியக்கமே அங்குள்ள ஆய்வு நகரும் விசை. தமிழில் காழ்ப்பும் வசையும் மூலம் பிற தரப்புகள் அடக்கப்பட்டமையால்தான் ஆய்வுகள் அசட்டுத்தனத்தின் எல்லைக்கே சென்றன. [ ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது . ஆய்வுக்கோவை என்ற வருடாந்தர பிரசுரம் தமிழறிஞர்களால் வெளியிடப்படுகிறது. அதில் ஒரு கட்டுரை கண்ணகி ஒரு கன்னி என்று விரிவாக பேசி நிறுவ முயல்கிறது. அதை இந்து நாளிதழில் திறனாய்வுசெய்த இந்திரா பார்த்த்த சாரதி ‘இத்தனை ஆதாரம் காண்பித்த ஆசிரியர் ஒரு டாக்டர் சர்டிஃபிகெட்டையும் இணைத்திருக்கலாம் ‘ என்று எழுதினார்] சம்ஸ்கிருதச் சார்பு உள்ள அறிஞர்கள் பலர் மிக முக்கியமான ஆய்வுகள் செய்துள்ளனர்[ உதாரணம் பக்திகாலகட்டம் குறித்த ப அருணாச்சலம் ஆய்வு] அவை இங்கே உதாசீனம் செய்யபப்டுகின்றன.

வையாபுரிப்பிள்ளையின் தரப்பு வலுவாக நிறுவப்படவேண்டும். அது ஒரு சக்தியாக சூழலில் செயல்பட வேண்டும். அதன் மறுதரப்பு ஆரோக்கியமாக இருப்பதற்குக் கூட அது அவசியம்.

வையாபுரிப்பிள்ளை குறித்து என் கருத்து என்ன ?

என் நண்பர்கள் முழுக்க முழுக்க வையாபுரிப்பிள்ளை ஆதரவாளர்கள். ஆனால் எனக்கு சில ஐயங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. ஆய்வாளன் அல்ல என்பதனால் நான் அது குறித்து எழுதுவது இல்லை.

குமரிக்கண்டம் என்ற கருத்து அறிவியல் அடிப்படை இல்லாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் மொழியின் சொற்கள், எராளமான தொன்மங்கள் ஆகியவற்றை குமரிக்கண்டம் கடல்கொண்டது என்ற மையக்கருத்து இன்றி இணைக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்று எனக்குப் படுகிறது.[உதாரணம் தென்புலத்தோர் என்றால் மூதாதையர்] நான் இப்போது எழுதும் ‘கொற்றவை ‘ என்ற நாவலில் புனைவுசார்ந்து அதை செய்ய முயல்கிறேன். ஒரு கருதுகோளாக, விவாதத் தரப்பாக குமரிக்கண்டம் இருந்தபடியேதான் இருக்கவேண்டும். அதை முழுக்க நிராகரித்துவிட இயலாது.

தமிழ் வேர்ச்சொல்லாக்கம் பலவகையான உள்நோக்கங்களும் அசட்டுத்தனங்களும் உடையது என்றாலும் அதில் முக்கியமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று எண்ணுகிறேன். பாவாணரின் வேர்ச்சொல்லாக்கமுறைமையை நான் ஐயப்படுகிறேன்.ஆனால் அவரது மொழிசார்ந்த நுண்ணுணர்வு பல வாசல்களை திறந்துள்ளது. என் மரபை புரிந்துகொள்ள அவர் மிக மிக முக்கியமானவர். வையாபுரிப்பிள்ளை அளவுக்கே முக்கியமானவர். சொல்லப்போனால் ஒரு படைப்பாளியாக எனக்கு அவர் வையாபுரிப்பிள்ளையை விடவும் முக்கியமானவர். நான் கையாளும் சொற்களை அறிய அவரை நான் சார்ந்திருக்கிறேன். அவர் வையாபுரிப்பிள்ளை மீது கொண்ட காழ்ப்பை ஒருவகை புலமைக்காய்ச்சலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். அவரது தரப்பு தமிழில் எப்போதும் வலுவாகவே இருக்கும் — இருக்க வேண்டும்.

ஆக நான் விழைவது ஒரு பெரிய விவாதப்புலத்தை. அதில் வையாபுரிப்பிள்ளையும் பாவாணரும் இரு முக்கியமான வல்லமைகள். பாவாணர்மீது இன்று குருட்டுத்தனமான பற்று கட்டப்படுகிறது. அவரது பாணியில் அசட்டு ஆய்வுகள் குவிந்து சூழல்சீர்கேட்டை உருவாக்குகின்றன. ஆகவே அவரை எதிர்த்து எழுத நேர்கிறது. வையாபுரிப்பிள்ளையின் மகத்தான சாதனைகள் கூட முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆகவே அவரைப் பற்றி பேசவேண்டியுள்ளது அவ்வளவுதான்.

வையாபுரிப்பிள்ளை பற்றி இன்று செய்யவேண்டியது…

வியாபுரிப்பிள்ளையின் மகன் — அமெரிக்கர் என்றார்கள்– அவரது நூல்களை முழுமையாக பிரசுரிக்க முயன்று சில தொகுதிகலுடன் நின்று விட்டது. தமிழ்ச்சுடர்மணிகள் போன்ற நூல்களை இன்று மீண்டும் கொண்டுவரவேண்டும். யாரிடம் பதிப்புரிமை உள்ளது என்பது சிக்கலாக உள்ளது

வையாபுரிப்பிள்ளை குறித்து நூல் எழுத முற்றிலும் தகுதியானவர் முனைவர் அ கா பெருமாள். அவர் ஏற்கனவே எழுதிய நூலை வையாபுரிப்பிள்ளையின் வரலாற்றுடன் சேர்த்து எழுதும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் தமிழினி பிரசுரமாக நூல்வெளிவரக்கூடும்

[2000 திண்ணை இதழில் வெளிவந்த கட்டுரை. Nov 25, 2004 த்தில் இணையதளத்தில். இது மறுபிரசுரம்]

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31

$
0
0

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 2

அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து எழுவிண்மீன் நோக்கி குடிமுறைப்படி அவளுக்கு கணவனானான். மூதன்னையர் நூற்றெண்மர் நிரைவகுத்து வந்து சித்ராங்கதையை மஞ்சளரிசியும் மலரும் நீரும் சொரிந்து வாழ்த்தி “மாமங்கலையாகுக!” என்று அருளினர். காட்டில் வளைத்து வளர்க்கப்பட்ட பொன்மூங்கில்களை வெட்டிவந்து புதியதோர் கொடித்தீவில் அவர்களுக்கு மாளிகை அமைத்தனர்.

அங்கே அவர்கள் வாழும் காதல்வாழ்க்கையைப் பற்றி மணிபுரியின் பாணர் பல பாடல்களை பாடினர். நள்ளிரவில் அர்ஜுனன் பெண்ணாவான் என்றும் அவள் ஆணாகி அவனை அணைத்துக்கொள்வாள் என்றும் கதைகள் சொல்லின. ஆணும் பெண்ணும் காதலில் ஆடைமாற்றிக்கொண்டு மகிழ்வது அதன்பின்னரே மணிபுரியில் பரவலாயிற்று. அன்னை மணிபத்மையின் திருவிழாவில் ஆண்கள் பெண்களைப்போல முகத்தில் செஞ்சாயம் பூசி பட்டாடை அணிந்து அணியும் மலரும் சூடி ஆடிச்செல்லுதல் சடங்கென ஆயிற்று. பெண்ணுருவில் அழகியென தோன்றுபவனே தகுதியான இளைஞன் என பெண்கள் எண்ணத்தலைப்பட்டனர். வில்லில் நாண் நிலைக்க பெண்ணென ஆகி மீள்க என்று பாணன் பாடிய வரி பழமொழியென்றே ஆகியது.

கார்காலம் வந்தபோது சித்ராங்கதை கருவுற்றாள். மைந்தன் பிறப்பான் என்று நிமித்திகர் வகுத்துரைத்தனர். தந்தைக்கு நிகரான வில்லவன், பாரதவர்ஷம் உள்ளளவும் வரலாறு சொல்லும் மாவீரன் என்று அவனை பாணர் பாடத்தொடங்கினர். மைந்தன் பிறக்க மணிபத்மையின் ஆலயத்தில் நாள்பூசைகளும் பலிக்கொடைகளும் நிகழ்த்தப்பட்டன. இளவரசி வலப்பக்கம் கை ஊன்றி ஒசிகிறாள் என்றாள் ஒரு செவிலி. அவள் தொப்புள் விரிந்து வலப்பக்கமாக இழுபட்டுள்ளது என்றாள் மருத்துவச்சி. கண்களுக்குக் கீழே கருமை படர்ந்துள்ளது. கனவுகளில் சிம்மங்களைக் காண்கிறாள். மைந்தனே வரப்போகிறான் என்றனர் நிமித்திகர்.

மணிபுரியே நோக்கியிருந்த மைந்தன் முதுகோடைகாலத்தில் பிறந்தான். சைத்ரமாதம் ஏழாம் நிலவுநாளில் பிறந்த அவன் அறத்தின் தேவனாகிய தருமனுக்கு பிரபாதை என்னும் மனைவியில் பிறந்த மைந்தனும் எட்டு வசுக்களில் ஒருவனுமாகிய பிரபாசனின் மண் நிகழ்வு என்றனர் நிமித்திகர். தன் தமையனின் தோற்றம் அவன் என்று அர்ஜுனன் மகிழ்ந்தான். இருபத்தெட்டாம் நாள் அவனுக்கு இடைநூல் அணிவிழா அன்று எட்டுமங்கலங்கள் நிரைத்து ஏழுதிரி விளக்கின் முன்வைத்து பப்ருவாகனன் என்று பெயரிட்டனர்.

மைந்தனின் பிறப்பு ஒருமாதகாலம் மணிபுரியின் விழவாக இருந்தது. ஒவ்வொருநாளும் இல்லங்களில் அணிமங்கலங்கள் பொலியவேண்டும் என்றும் அடுமனைகளில் இன்னுணவு சமைக்கப்படவேண்டும் என்றும் அரசாணை இருந்தது. அனைத்து தண்டனைகளும் தவிர்க்கப்பட்டன. அந்நாட்களில் பிறந்த அனைத்து மைந்தர்களுக்கும் அரசரின் அணியும் பட்டும் அளிக்கப்பட்டது. எல்லைப்புற ஊர்களிலிருந்தெல்லாம் ஒவ்வொருநாளும் மைந்தனைக் காண மணிபுரிக்குடியினர் வந்துகொண்டிருந்தனர். காலையிளவெயில் எழுகையில் அரண்மனையில் உப்பரிகை முகப்பில் மைந்தனுடன் செவிலி வந்து அமர்ந்து மும்முறை அவனைத்தூக்கி அவர்களுக்கு காட்டினாள். அவர்கள் ஒற்றைப்பெருங்குரலாக வாழ்த்தொலி எழுப்பினர்.

மைந்தனுக்கு பெயர் அமைவதுவரை அர்ஜுனன் அங்கே இயல்பாக இருந்தான். பெயரற்ற சிற்றுடல் அவன் உடலின் ஓர் உறுப்பென எப்போதும் இருந்தது. மைந்தன் தந்தையை உடலால் அறிந்தான். துயிலில்கூட அவன் தொடுகை நீங்குகையில் சினந்து முகம் சுளித்து அழுதான். பெயரிடப்பட்ட அன்று காலை மங்கலப்பொருட்கள் பரப்பிய மணித்தாலத்தில் படுக்க வைக்கப்பட்ட மைந்தனை சித்ரபாணனும் அவர் அரசியும் கைகளில் ஏந்தி அன்னை மணிபத்மையின் ஆலயத்தை மும்முறை சுற்றிவந்து அதன் படிகளில் வைத்து வணங்கி எடுத்துக்கொண்டனர். தாலத்தை கொண்டுவந்து அர்ஜுனனிடம் நீட்ட அவன் மைந்தனை கையில் எடுத்தான். முத்தமிட்டுவிட்டு சித்ராங்கதையிடம் அளித்தான்.

அன்றுமாலை வழக்கம் போல் மைந்தனை தன் தோளிலேற்றி சிறுதோணியேறிச்செல்லும்போது அர்ஜுனன் ஒரு வேறுபாட்டை உணர்ந்தான். அன்று காலையிலேயே அதை உணர்ந்திருப்பதை அப்போது தெளிவுற அறிந்தான். அது என்ன என்று சொற்களால் நெஞ்சைத் துழாவி பின்பு கண்டடைந்தான். அம்மகவு பிறிதொன்றாக இருந்தது. அவன் மைந்தனாக, அன்புக்குரியவனாக, ஆனால் பிறிதொரு ஆண்மகனாக. அதை திரும்பி வந்து சித்ராங்கதையிடம் சொன்னான். அவள் விழிகளில் இன்னதென்றறியாத சிறிய ஒளியுடன் அவனை நோக்கிவிட்டு “இங்கே கொடுங்கள்” என்று மைந்தனை வாங்கிக்கொண்டாள்.

அதன்பின் அவள் மைந்தனை அர்ஜுனன் முன்னால் கொஞ்சவோ முலையூட்டவோ செய்யவில்லை. எப்போதும் செவிலியே அவனை தந்தைக்குமுன் கொண்டுவந்தாள். மைந்தனை வாங்கி மடியிலிருத்தி விளையாடி நகையாடி முத்தாடி மகிழ்ந்தபின் திருப்பியளித்துவிட்டு அவன் தனியனாகும்போதே அவள் அவன் முன் வந்தாள். மைந்தனைப்பற்றி அவனிடம் பேசும்போது ஒருபோதும் அவள் குரலில் நெகிழ்ச்சி இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் ‘நம் மைந்தன்’ என்ற சொல்லில் அவனை குறிப்பிட்டாள். அவனோ மேலும் மேலும் கனிவும் நெகிழ்வும் கொண்டே மைந்தனைப்பற்றி பேசினான்.

ஆனால் அவன் அங்கிருந்து கிளம்பவிருக்கிறான் என அவள் அறிந்திருந்தாள். அவனே அதை சொல்லும் நாளுக்காக காத்திருந்தாள். சித்ரபாணனின் அமைச்சர்கள் அவரிடம் தன் பெயரனை அவர் மைந்தனென்றும் ஏற்புகொள்ளவேண்டும் என்றனர். அதற்கு ஒரு முறைச்சடங்கை செய்யவேண்டும். அன்றே பப்ருவாகனன் மணிபுரிக்கு பட்டத்து இளவரசன் ஆகிவிடுவான். அவனே தன் தாதனுக்கு நீத்தார்கொடையையும் செய்ய உரிமைகொண்டவனாவான். “தொல்புகழ் மணிபுரியின் கோலுக்கு காவல் அவனே என்றாகும். இனி ஒரு தலைமுறைக்காலம் இங்கு ஒளிரும் வாள் ஒன்று நின்றிருக்கும் என உலகறியும்” என்றனர் அமைச்சர்.

மைந்து ஏற்புச் சடங்குக்கு நாள் பார்க்க முதுவைதிகர் ஒருவரை தேடிவரச்சொல்லி தூதர்களை அனுப்பினார் சித்ரபாணன். காமரூபத்திலிருந்து சாக்தவைதிகரான மணிகர்ணரை கண்டடைந்து ஐந்து மங்கலங்களுடன் பட்டும் பொன்னும் மணியும் வைத்து அழைத்தனர். முதல்மழை விழத்தொடங்கிய பருவத்தில் முதிர்ந்து தசைகனிந்து தொங்கிய உடலும் பழுத்த விழிகளும் கொண்ட மணிகர்ணர் பட்டுமஞ்சலில் மணிபுரிக்கு வந்தார். படகிலேறி அரண்மனைக்கு வந்த அவரை சித்ரபாணரும் அமைச்சர்களும் அரண்மனை முகப்புக்கு வந்து வரவேற்றனர். அவையமர்த்தி முறைமைசெய்தனர்.

மைந்தனுடன் சித்ராங்கதையும் உடன் அர்ஜுனனும் வந்து அவரை பணிந்தனர். நடுங்கும் கைகளால் குழந்தையைத் தொட்டு “புகழ் பெறுக!” என்று வாழ்த்திய மணிகர்ணர் அருகே பட்டுப்பாய் விரித்து மைந்தனை கிடத்தும்படி சொன்னார். பாயில் கிடத்தப்பட்டதும் இடக்காலைத் தூக்கிவைத்து கவிழ்ந்து கைகளால் தரையை அறைந்து செவ்விதழ்களிலிருந்து வாய்நீர் குழாய் இழிய மேல்வாயின் சிறுவெண்பல் காட்டிச் சிரித்த பப்ருவாகனன் தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை ஒளிமிக்க விழிகளால் மாறி மாறி நோக்கினான். பின்னர் வலக்கையை தரையில் மீண்டும் அறைந்து “ஆ” என்று கூவினான்.

சித்ரபாணன் அசைய விழியால் வேண்டாம் என்றார் மணிகர்ணர். மைந்தன் மும்முறை தரையை அறைந்த பின் கூர்ந்து பட்டுப்பாயை நோக்கினான். அதில் ஊர்ந்த ஓர் எறும்பைக் கண்டு கையை அறைந்து அதைப்பிடிக்க இருமுறை எம்பி மீண்டும் நினைவு கூர்ந்து தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி “ஆ?” என்றான். அக்கணம் அவன் அர்ஜுனனை கண்டுகொண்டான். இருகைகளாலும் நிலத்தை அறைந்து முழங்காலை ஊன்றி உந்தி தந்தையை நோக்கிச் சென்று கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்து சிரித்தபடி “ஆ” என்றான். அவன் வாய்நீர் நெஞ்சில் சொட்டியது.

மணிகர்ணர் கைகாட்ட அர்ஜுனன் குழந்தையை தூக்கிக்கொண்டான். அவர் களைத்துச்சரிந்த வலதுகண்ணின் இமை மெல்ல அதிர பெருமூச்சுடன் “சரி” என்றார். “இவனை என் மைந்தனாகவும் மகவேற்பு செய்யவிழைகிறேன் வைதிகரே. நன்னாளும் நலம்தரும் கோளும் உய்த்து சொல்லவேண்டும்” என்றார் சித்ரபாணன். மணிகர்ணர் தலையசைத்துவிட்டு “செய்யலாம்” என்றார். “இவனது பிறவிநூலை எங்கள் நிமித்திகர் கணித்துள்ளார்கள். நற்குறிகள் அனைத்தும் உள்ளன என்கிறார்கள். உடல்குறி கணித்துச் சொல்லும் நிமித்திகர்களும் சிறந்ததையே சொன்னார்கள்” என்றார் சித்ரபாணன்.

“சிறந்தவற்றை மட்டுமே நானும் காண்கிறேன்” என்றார் மணிகர்ணர். “இவர் மணிபுரியின் அரசர்நிரையின் முதல்வர். காமரூபமும் கிழக்குநாடுகள் அனைத்தும் ஒருநாள் இவர் குடைக்கீழ் அமையும். பாரதவர்ஷத்தின் நிகரற்ற வில்வீரர் என்று இவர் புகழ்பெறுவார். தன் தந்தையும் வில்லுக்கு இறைவனுமாகிய இளைய பாண்டவரை ஒருபோரில் வென்று புகழ்பெறுவார்.” அச்சொல் கேட்டதும் அவையினர் ஒருசேர குரலெழுப்பினர். மலர்ந்த முகத்துடன் அர்ஜுனனை நோக்கியபின் “தம்மின் தம் புதல்வர் மேன்மையுறக்காணும் நல்லூழ் இளைய பாண்டவருக்கு அமையட்டும்” என்றார்.

“தன் தந்தையின் தீப்பழி ஒன்றை போக்கவும் மண்ணிலிருந்து அவர் எளிதாக விண்ணேக வழிகோலவும் நல்லூழ்கொண்ட மைந்தன் இவர். இவரை ஈன்றதனால் மட்டுமே இவரது தந்தை பிறவாழிச்சுழல் நீந்தி கரைகாண்பார்” என்றார் மணிகர்ணர். அர்ஜுனன் கைகூப்பினான். சித்ராங்கதை ஓரவிழியால் அர்ஜுனனையே நோக்கி நின்றிருந்தாள். அவள் ஏன் அவ்வாறு தன் கணவனை நோக்குகிறாள் என்று வியந்த சித்ரபாணன் ஓரவிழியால் தன் மனைவியை நோக்கினார். அவள் மகளை நோக்கியபின் அவரை நோக்கி விழிகளை மெல்ல அசைத்தாள். ஒன்றுமில்லை என்பதுபோல. பின்னர் சொல்கிறேன் என அவள் கூறுவதை அடுத்த கணம் அவர் புரிந்துகொண்டார்.

“வரும் முழுநிலவுநாளில் காலை பிரம்மதருணத்தில் மகவேற்பு நிகழலாம். நல்ல நேரம்” என்றார் மணிகர்ணர். “தந்தைக்கும் மைந்தனுக்கும் மட்டுமல்லாது இந்நாட்டுக்கும் குலத்திற்கும் அழியாப்புகழ் சூழும்.” சித்ரபாணன் கைகூப்பி “என் நல்லூழ்” என்றார். ஏவலன் தாலத்தில் கொண்டு வந்து அளித்த மரப்பட்டை ஏட்டில் மை தொட்டு நாளையும் கோளையும் குறித்தார் மணிகர்ணர். அவரது தூரிகையின் அசைவை கேட்டபடி அனைவரும் விழி விரித்து நின்றனர். மணிகர்ணர் எழுந்து ஓலையை நீட்டியதும் சித்ரபாணன் இரு கைகளையும் நீட்டி அதை பெற்றுக்கொண்டார். சேடியர் குரவையிட்டனர். மங்கலப்பேரிசை எழுந்தது. அவ்வொலி கேட்டு நகரெங்கும் செவிகூந்ந்து நின்றிருந்த மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

முதுவைதிகர் மணிகர்ணருக்கு எண்மங்கலம் வைத்த பொற்தாலத்தில் ஏழு அருமணிகளும் நூற்றெட்டு பொன்நாணயங்களும் பன்னிரு பட்டாடையும் வைத்து பரிசில் அளித்தார் சித்ரபாணன். அவர் நீரும் மலருமிட்டு அரசனையும் அரசியையும் மைந்தனையும் அவன் பெற்றோரையும் வாழ்த்தினார். திரும்பி அவையை வாழ்த்தி கைகூப்பினார். அவை எழுந்து முதுவைதிகரை வாழ்த்தி வணங்கி நின்றது. “இக்குடி நலம்பெறுக! இந்நிலம் செழிக்கட்டும். இங்கு அறம் வாழட்டும். தெய்வங்கள் மண்ணிறங்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார் மணிகர்ணர்.

ஏவலர் கைபற்றி எழுந்து கூனிய உடலை மெல்ல அசைத்து நடந்த மணிகர்ணர் எண்ணிக்கொண்டு நின்று அர்ஜுனனை நோக்கி “என்னுடன் வருக!” என்றார். “அவ்வாறே” என்று அவன் அவரை தொடர்ந்தான். அரண்மனைக்கூடத்தின் நீண்ட இடைநாழிக்கு வந்த மணிகர்ணர் நின்று திரும்பி நோக்க ஏவலர்கள் அவரை விட்டுவிட்டு விலகினர். அவர் அங்கே நின்ற பெரிய மூங்கில்தூணை பற்றிக்கொண்டு தன் கூன்முதுகை நிமிர்த்தினார். “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும் இளவரசே” என்றார். “காத்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

“உன் மைந்தனே இப்புவி அறியும் மாவீரன், நீயல்ல. உன்னை வென்றவன் என்றே அவன் இங்கு எக்காலமும் அறியப்படுவான்” என்றார் மணிகர்ணர். “அதை நீ மாற்ற முடியாது. ஏனென்றால் அது நல்லூழ். ஆனால் தீயூழ் ஒன்றும் உள்ளது.” அர்ஜுனன் “தங்கள் சொற்களுக்காக காத்திருக்கிறேன்” என்றான். “இம்மைந்தன் உன்னை களத்தில் கொல்வான்” என்றார் மணிகர்ணர். “அதை நான் அருகே என காண்கிறேன். இன்று இடக்கையை மண்ணில் அறைந்து அவன் உன்னை அறைகூவினான்.” அர்ஜுனன் “அது ஊழெனில் அவ்வாறே ஆகுக!” என்றான்.

”ஊழெனினும் வெல்ல வழியுள்ளது” என்றார் மணிகர்ணர். “விற்கலையை அவன் உன்னிடமிருந்தே கற்றாகவேண்டும். அவனுக்கு நீ அனைத்து அம்புகளையும் அளிக்காமலிருக்கலாம். இறுதிவெற்றிக்காக ஒற்றை அம்பை உன்னிடம் தக்கவைத்துக்கொள்ளலாம்.” அர்ஜுனன் வாயெடுப்பதற்குள் “அது போருக்கு உகந்த அறம் என்றே நூல்கள் சொல்கின்றன. வீரன் தான் உயிர்வாழ்தலையே அறங்களில் முதலாவதாக கொள்ளவேண்டும். ஏனென்றால் பிற அறங்களை இயற்றுவதற்கான வாய்ப்பை அவனுக்களிப்பது அதுவே.”

“உத்தமரே, அவ்வண்ணம் ஓர் அம்பை நான் எனக்கென வைத்துக்கொண்டேன் என்றால் அவ்விறுதிக் களத்தில் என்ன நிகழும்?” என்று அர்ஜுனன் கேட்டான். அவர் “அப்படி கேட்கப்போனால்…” என்றார். “நான் அவனை வெல்வேன், அவன் உயிர்கொள்வேன், அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அது நிகழலாம்” என்றார் மணிகர்ணர். “அவன் குருதிபடிந்த கைகளுடன் விண்ணுக்குச்சென்றால் நான் என் மூதாதையருக்கு என்ன மறுமொழி சொல்வேன்?” என்றான் அர்ஜுனன். மணிகர்ணர் “ஆம், ஆனால் தந்தையைக் கொன்றபழியை அவன் சுமப்பதும் உகந்தது அல்ல” என்றார்.

“நான் விண்ணிலிருந்து அவன் பழியை பொறுப்பேன். அவனை என் நுண்கரங்களால் அள்ளி எடுத்து நெஞ்சோடு சேர்த்து நன்றுசெய்தாய் மைந்தா என்பேன். மண்ணில் அவன் பழிகொள்ள நேரலாம். விண்ணில் என்னருகே எனக்கு இனியவனாக வந்தமர்வான்” என்றான் அர்ஜுனன். “ஆகவே, அவன் என்னைக் கொல்வான் என்றால் அதை நான் ஏற்பதே சிறந்ததாகும்.” மணிகர்ணர் “என் எண்ணத்தை சொன்னேன். இந்திரப்பிரஸ்தத்தின் அச்சு நீங்கள். அறம் திகழ உங்கள் அம்புகள் தேவை” என்றார். அர்ஜுனன் “அறம் என்பது தன்னிலிருந்து தொடங்குவதல்லவா?” என்றான்.

“நன்று. நலம் திகழ்க!” என்றார் மணிகர்ணர். “நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நான் முன்னரே அறிந்திருந்தேன், இளையவரே. பிறிதொரு சொல்லை நீங்கள் என்றல்ல எளிய தந்தைகூட சொல்லிவிடமுடியாது. இவ்வண்ணம் கண்காணா வலையால் மானுடரை இணைத்து ஆடச்செய்தபடி நடுவே அமர்ந்திருக்கிறது அந்தப் பெருஞ்சிலந்தி” என்றபின் அவன் தலைமேல் கைவைத்து “அறம் துணைக்கட்டும். புகழ் தொடரட்டும்” என்று வாழ்த்திவிட்டு திரும்பி அப்பால் நின்ற ஏவலரை அருகணையச்சொல்லி கைகாட்டினார்.

மகவேற்பு நிகழ்வு முடிந்து ஒருமாதம் கடந்துதான் தான் விடை பெறவிருப்பதை அர்ஜுனன் சித்ராங்கதையிடம் சொன்னான். அவளுடன் கொடித்தீவில் அமர்ந்திருந்தான். அவன் மடியில் மைந்தன் துயின்று கொண்டிருந்தான். அவள் அதை எதிர்பார்த்திருந்தாள். அத்தடாகத்தைப் போன்றது அவன் உள்ளம் என்று அறிந்திருந்தாள். அதில் பெருநதிகள் இணைகின்றன. அதேயளவு நீர் பெருகி வெளியே வழிந்தோடுகிறது. தடாகமோ என்றும் மாறாமல் அவ்வண்ணமே வானை நோக்கி ஊழ்கத்தில் இருக்கிறது.

மைந்தனின் மென்கால்களை தன் சென்னியில் சூடி முத்தமிட்டு “இந்த ஒரு மாதத்தில் மூன்றுநாட்களுக்கு ஒருமுறை என நானறிந்த அனைத்து அம்புகளையும் நுண்சொல்வடிவில் உனக்களிப்பேன். என் மைந்தனின் கைகள் எழுந்ததும் அவற்றை அவனுக்கு நீயே கற்பித்தளிக்கவேண்டும்” என்றான். அவள் தலையசைத்தாள். “என் பெயர் அவனுடனிருக்கட்டும்” என்றபின் எழுந்து அவள் கன்னங்களை வருடி குழல் கோதி நீவி கூந்தல்கட்டில் ஒதுக்கிவைத்தான். அவள் கண்களை நோக்கி புன்னகைத்து “பிரிவை நீ அரசியென எதிர்கொள்வாய் என எண்ணுகிறேன்” என்றான்.

“ஆம்” என்றாள். “பிரிந்தபின் நீ மீண்டும் சித்ராங்கதனாக ஆகவேண்டும். என் மைந்தனுக்கு நல்லாசிரியனாக நீயே அமர்க!” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் நோக்கை விலக்கிக் கொண்டாள். ஏரிப்பரப்பிலிருந்து நாரைகள் எழுந்து காற்றிலேறிக்கொண்டன. அவள் கழுத்தின் மெல்லிய நீல நரம்பை அவன் நோக்கிக்கொண்டிருந்தவன் “என்ன?” என்றான். “பாரதவர்ஷம் பெரியது” என்று அவள் சொன்னாள். “அல்ல, மிகச்சிறியது. பெரியது நம் ஊழ். நான் எங்கிருப்பேன் என அறியேன். ஆனால் எங்கிருந்தாலும் இங்கிருந்த நான் என்னுள் இருப்பேன்” என்றான். அவள் புன்னகை செய்தாள்.

அர்ஜுனன் விடை பெற்றபோது மழைக்காலம் தொடங்கிவிட்டிருந்தது. வானம் கருமைகொண்டு மூடியிருக்க இளஞ்சாரல் காற்றை எடைகொள்ளச்செய்திருந்தது. கூரைவிளிம்புகள் சொட்டிக்கொண்டிருதன. ஏரிப்பரப்பு சாரல் மழை பட்டு சிலிர்த்து பரந்திருந்தது. அவன் சிறுபடகில் தன் தோல்மூட்டையுடனும் மூங்கில் வில்லுடனும் ஏறிக்கொண்டான். கழை எழுந்து தாழ்ந்து படகை உந்த நீர்த்தடமிட்டபடி அது சென்றது. காலத்தை விரித்து அம்பொன்றை அணுக்கமாக நோக்குவது போல தோன்றியது. அலைகளென மாறிய படகுத்தடம் தீவுகளை உலையச் செய்து கரையை வருடியது.

மணிபுரியின் மாந்தர் அனைவரும் தங்கள் இல்லங்களின் முற்றங்களில் வந்துநின்று அவன் செல்வதை நோக்கினர். சிறுவர் கண்ணீர் வழிய அன்னை உடைகளில் முகம் மறைத்தனர். பெண்கள் முகம் மறைத்து விம்மினர். அவன் ஒருமுறைகூட திரும்பிப்பார்க்கவில்லை. கரை அணைந்து அங்கு காத்து நின்ற குதிரையில் ஏறி சேற்றுப்பரப்பை மிதித்துச்சென்று நீர் சொட்டிய மரக்கிளைகளுக்கு அப்பால் மறைந்தான்.

சுஜயன் “போய்விட்டாரா?” என்றான். “ஆம்” என்றாள் மாலினி. “எங்கு?” என்றான். “அடுத்த ஊருக்கு… .அங்கிருந்து இன்னொரு ஊருக்கு. அர்ஜுனன் இதோ மேலே செல்லும் பறவைகளைப்போல. அவை பறந்துகொண்டேதானே இருக்கின்றன?” சுஜயன் “ஏன்?” என்றான். “ஏனென்றால் அவை சிறகுள்ளவை” என்றாள் மாலினி. அந்த மறுமொழியில் சுஜயன் முழுநிறைவை அடைந்து “ஆம், சிறகிருந்தால் பறந்து போகலாம்” என்றான்.

வானத்தில் பறந்த இரு பறவைகளைப் பார்த்து “அர்ஜுனர், சித்ராங்கதை!” என்றான். சுபகை புன்னகைத்து “அதற்குப் பின்னால் பாருங்கள் இளவரசே, ஆயிரம் அர்ஜுனர்களும் சித்ராங்கதைகளும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றாள். சுஜயன் திரும்பிப் பார்த்து விழி விரித்து வியப்பில் சிறு செவ்வுதடுகள் சற்றே பிரிய அசைவிழந்து நின்றான். அவன் உடல் அதிர்ந்தது. கண்களை மூடித்திறந்து கூடு கட்டிய சிறு மார்பு எழுந்தமைய நீள்மூச்சு விட்டு “ஆயிரம் அர்ஜுனர்! ஆயிரம் சித்ராங்கதை” என்றான்.

“அல்லது ஆயிரம் சித்ராங்கதைகள் ஒரு அர்ஜுனர்” என்றாள்  சுபகை சிரித்து. மாலினி “போதுமடி, ஏற்கெனவே நன்கு குழம்பியிருக்கிறார் இளவரசர்” என்றாள். “சிற்றுடல் எனினும் உள்ளே இருப்பது இவ்வுலகை காமத்தால் வெல்ல எழும் ஆண்மகன் அல்லவா? அவன் அறிவான் அனைத்தையும்” என்றாள் சுபகை. “இப்போது நாம் சொற்களென உள்ளே விதைப்போம். மழை விழுகையில் அவை முளைக்கட்டும்.”

“எப்போது மழை வரும் ?” என்றான் சுஜயன். “வானம் கறுக்கும்போது” என்றாள் மாலினி. “எப்போது வானம் கறுக்கும்?” என்று சுஜயன் மீண்டும் கேட்டான். “கடல் நினைக்கும் போது” என்றாள் மாலினி. சுபகை “எந்த அளவுக்கு விஞ்சிய கற்பனையாக உள்ளதோ அந்த அளவுக்கு அவர் அதை புரிந்துகொள்கிறார்” என்றாள். “கடலா?” என்றான் சுஜயன். “இளவரசே, மழை என்பது கடல் தன் கை நீட்டி அதன் குழந்தையாகிய மண்ணை வருடுவதல்லவா?” என்று மாலினி சொன்னாள்.

அவள் வியப்புறும்படி அதை அவன் சரியாக புரிந்து கொண்டான். அருகே வந்து “பசு நக்குவது போல” என்று நாவால் நக்கிக் காட்டினான் “இப்படி கன்றை பசு நக்குவது போல மழை நக்குகிறது” என்றான். “அய்யோ, இது என்ன? இத்தனை அழகாக சொல்கிறாரே!” என்று சுபகை வியந்தாள். மாலினி “குழந்தைகள் பிறிதொரு பாதையில் நமக்கு முன்னே வந்து கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் நமக்கு வெகு தொலைவில் முன்னால் அவர்களை பார்க்கிறோம்” என்றாள்.

சுஜயன் திரும்பி கையை நீட்டி “அங்கே முதலை” என்றான். மாலினி “ஆம் முதலை… இங்கே வந்துவிடு’’ என்று திரும்பி பார்க்காமலே சொன்னாள். “அந்த முதலையை நான் சாப்பிடமாட்டேன். அது பெரிய பற்களுடன் இருக்கிறது” என்றான் அவன். ”ஆமாம், வேறு முதலையை நான் சமைத்து அளிக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அது கெட்ட முதலை” என்று அவன் மேலும் முன்னகர்ந்து சொன்னான். ”கிளம்புவோம். இன்று மாலையில் மழை வரும் போலிருக்கிறது” என்றாள் மாலினி.

சுஜயனை பிடிக்கச் சென்ற சுபகை “ஆ! உண்மையிலேயே முதலை!” என்றாள். “முதலையா? இங்கா?” என்றபடி மாலினி எழுந்து வந்தாள். கங்கையை நோக்கி இறங்கிய நாணல் சரிவில் அத்தனை நேரம் அவர்கள் விழுந்து கிடந்த பட்ட மரமென்று நினைத்தது இரண்டாள் நீளமுள்ள பெருமுதலை என்று அறிந்தனர். சுஜயனை அள்ளி தோளில் தூக்கிக் கொண்ட சுபகை “அம்மாடி! எத்தனை அருகே சென்றுவிட்டார்! நல்லூழ்தான்” என்றாள். “இங்கு முதலைகள் இல்லையென்று நினைத்தேன்” என்றாள். “கங்கையில் எவ்விடத்திலும் முதலைகள் உண்டு. மானுடர் நடமாடும் இடங்களில் அவை பொதுவாக வருவதில்லை” என்றாள் மாலினி.

மாலினி அதை நோக்கி “பெரிய முதலை” என்றபின் ”பெண்முதலை” என்றாள். “எப்படி தெரியும்?” என்று மாலினியை நோக்கி சுஜயன் கேட்டான். “அது அங்கே முட்டையிட்டிருக்கிறது” என்று சொன்ன மாலினி மணல்குழிகளில் சுட்டிக் காட்டி “அந்த சிறு பள்ளங்களில் கொப்புளங்கள் எழுந்திருக்கின்றன. அச்சிறு குழிகள் தெரிகின்றன. முட்டையிட்டு மணலில் புதைத்து வைத்து அருகே காவலுக்கு படுத்திருக்கிறது. முட்டையிடும் பொருட்டே நீரிலிருந்து இத்தனை தூரம் கடந்து வந்துள்ளது.”

சுபகை சில கணங்கள் திகைத்து திரும்பி புன்னகைத்து “அது அன்னை என்று அறிந்தவுடனே அதன் மேல் இருக்கும் அச்சம் விலகி அணுக்கம் தோன்றுவதையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “விளையாடாதே. முட்டையிட்ட முதலை பெரும் சினம் கொண்டது. இவ்வுலகின் மேல் தீரா ஐயம் நிறைந்தது. மும்மடங்கு உண்ணும் பெரும் பசியும் உண்டு” என்றாள். “ஆம், அவை அனைத்துமே பெருங்கருணையின் வடிவங்களல்லவா?” என்றாள் சுபகை.

“அது ஏன் அழுகிறது?” என்றான் சுஜயன். “முதலைக் கண்ணீர்” என்றாள் சுபகை. “முதலைகள் அப்படித்தான் அழுது கொண்டிருக்கும்.” சுஜயன் அவள் தாடையைப்பற்றி “ஏன்?” என்று கேட்டான். “தெய்வங்கள் அவற்றுக்கு அவ்வாறு ஆணையிட்டுள்ளன. கரையில் பல்லியும் நீரில் மீனும் என அவை வாழும் இரட்டைவாழ்க்கையை எண்ணி கண்ணீர் வடிக்கின்றன.” சுஜயன் “ஏன்?” என்று கேட்ட பின்பு “அந்த முதலை நல்லது. அதை நான் வளர்ப்பேன்” என்றான். சுபகை “என் செல்லமே, துணிவு வந்துவிட்டதே” என்று அவனை முத்தமிட்டாள்.

மாலினி “செல்வோம்” என்று சொல்லி கிளம்ப சுபகை சுஜயனைத் தூக்கிச் சுழற்றி தன் தோளில் வைத்துக் கொண்டாள். அவன் அங்கிருந்து முதலையைப் பார்த்து கை சுட்டி “பெரிய முதலை. ஆனால் மிக நல்லது” என்றான். “இளவரசே, அர்ஜுனன் சந்தித்த ஐந்து முதலைகளைப் பற்றி தெரியுமா?” என்றாள் மாலினி. “முதலையா? ஐந்து முதலையா?” என்றான். “ஆம், ஐந்து முதலைகள்” என்றாள் மாலினி. கால்களை உதைத்து “என்னைத் தூக்கு… என்னைத் தூக்கு” என்று மாலினியிடம் சொன்னான் சுஜயன். “முதலையின் கதை சொல்! முதலையின் கதை” என்றான். “குடிலுக்குச் செல்வோம். நீ அமைதியாக பாலமுதை உண்டால் இக்கதையை சொல்வேன்” என்றாள் மாலினி.

தொடர்புடைய பதிவுகள்

புதியவிழிகள்

$
0
0

Pulveli-Desam1

ஒருநாட்டில் வாழ்ந்து உணர்ந்து அதை அறிவதற்கும் ஓரிருநாட்களில் அங்குசென்று அதை அறிவதற்கும் பெரும் வேறுபாடுண்டு. உண்மையில் அங்கே வாழ்பவர்கள் அறியாத பலவற்றை சிலநாட்கள் வந்துசெல்பவர் அறியமுடியும். காரணம் அவரது பார்வை பழகாமலிருப்பதுதான். தேவை தேவையின்மை, நன்று தீது என அது பகுக்கப்படாமலிருக்கிறது.

இவ்வியல்பையே கலைகள் செய்கின்றன. ஒவ்வொரு நாளும் காணும் ஒரு பொருளை ஓவியத்தின் சட்டகத்திற்குள் காணும்போது அறிமுகம் அழிப்பு ஒன்று நிகழ்கிறது. அப்பொருள் புதியகோணத்தில் தென்படத்தொடங்குகிறது. பயணக்கட்டுரைகளின் பயன்மதிப்பு இதுவே.

நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் நூல்வடிவில் வந்தது இது ஒன்றே. ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப்பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்தில் இருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றில் இருந்து சில மானுட அறிதல்களுக்கும் செல்லும் ஒரு பயணம் இந்நூலில் உள்ளது

பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பயணத்துணைவராக இருந்து வருபவர் வழக்கறிஞர் கிருஷ்ணன். அவரால் ஈரோடு எனக்கு இனிய ஊராகவும் இருந்து வருகிறது. இந்நூல் அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்பதே இதை எனக்கு மேலும் இனிதாக்குகிறது

ஜெ

கிழக்கு வெளியீடாக வரும் புல்வெளிதேசம் மறுபதிப்புக்கான முன்னுரை

தொடர்புடைய பதிவுகள்

கல்பூர்கி ,தாத்ரி,சாகித்ய அக்காதமி

$
0
0

akademi

ஜெ

நீங்கள் அரசியல் கருத்துக்களைப்பேசுவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். பெரும்பாலும் பேசுவதுமில்லை. மோடி தெர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலிலும் சரி அதற்கு முன் த்ரீ ஜி ஊழல், கனிமொழி கைது போன்றவை பெரிதாகப்பேசப்பட்டபோதும் சரி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அவை விவாதங்களை தொடர்ச்சியாக உருவாக்கி உங்கள் பணிகளை சீர்குலைக்கும் என நினைக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் இந்த சாகித்ய அக்காதமி விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் விவகாரத்தில் மட்டும் ஏன் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அது கலாச்சார- இலக்கிய அரசியல் என்று சொல்லலாம். ஆனால் அதற்குள் அரசியல் உள்ளது. அந்த அரசியலுக்கு மட்டும் உங்கள் எதிர்வினையைச் சொல்லியாகவேண்டும் அல்லவா?

சரவணன்

எம்.டி 5
அன்புள்ள சரவணன்,

நான் அரசியல் கருத்துக்களை விவாதிப்பதை தவிர்க்கிறேன். ஏனென்றால் எங்கும் எப்போதும் அதுவே பேசப்படுகிறது. அதை மட்டுமே பேசும்,அதற்கு மட்டுமே எதிர்வினையாற்றும் ஒரு பெரிய வட்டம் உள்ளது. அவர்களுடன் உரையாடத்தொடங்கினால் பின்னர் வேறெதையுமே யோசிக்க, பேச முடியாது. அப்பட்டமான நேரடியான வெறுப்புக்குரலில் மட்டுமே பேசத்தெரிந்தவர்கள் அவர்கள். மாற்றுத்தரப்பை முட்டாள்தனம், அயோக்கியத்தனம் என்று மட்டுமே பார்க்கத்தெரிந்தவர்கள்.

இந்தியச்சூழலில் பொதுவாக அரசியல் எப்போதுமே இரு பெரும் தரப்புகள்தான். மூன்றாம் தரப்பு என்பதே கிடையாது. எப்போதுமே எல்லாம் எரிந்துகொண்டிருப்பதுபோன்ற ஒரு பிரமையை உருவாக்கி ‘அணைக்க வருகிறாயா? இல்லையென்றால் நீதான் கொளுத்தியவன்’ என்று கூச்சலிடுவது இவர்களின் வழக்கம். வருடம்தோறும் அப்படி இரு குவியங்களாக தங்களை தொகுத்துக்கொள்வார்கள் அரசியலாத்மாக்கள். எவர் எங்கிருப்பார் என அந்த தொகுப்புதான் தீர்மானிக்கும். அதற்கான நியாயங்களை அழகாக உருவாக்கி வைத்திருப்பார்கள். ‘தீ எரியிறப்ப சாக்கடையான்னு பாக்கமுடியுமா தோழர்? அள்ளி ஊத்தி அணைக்கவேண்டியதுதானே?” ஒருமுறையேனும் பாரதிய ஜனதாவுடன் குலவியவர்கள்தான் இங்குள்ள அத்தனை முற்போக்கினரும்.

தொலைக்காட்சி விவாதங்கள், செய்தித்தாள்கட்டுரைகள், இணையவிவாதங்கள், டீக்கடைகள் என பேசிப்பேசி ஏராளமான வாதங்களை இருதரப்பும் உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த அனைத்துத் தரப்புகளுடனும் எவரும் வாதிட்டு நிறைவடைய முடியாது. பேசிப்பேசி இரு தரப்புக்குமே தங்கள் வாதங்கள் முழுமையானவை என்று தோன்றியிருக்கும். ஆகவே விவாதங்களில் மிதமிஞ்சிய ஆவேசமும் கசப்பும் வெளிப்படும். அவமதிக்கப்படாமல் இவ்வகை விவாதங்களில் ஈடுபடுவது சாத்தியமே அல்ல. இரு தரப்புமே மிகத்தார்மீகமான மிம அவசியமான நிலைபாட்டை தாங்கள் எடுத்திருப்பதாக நம்புவதனால் அவமதிப்பது என்பது தவிர்க்கமுடியாதது என்றும் தங்கள் தார்மீக ஆவேசத்தின் விளைவு அது என்றும் நம்புகிறார்கள். ஆகவே வேறுவழி இல்லை. நம் அரசியல் விவாதங்கள் இணையத்தில் அல்ல எங்கு நடந்தாலும் பேசாமல் கேட்டுவிட்டு ஒதுங்கிவிடுவதே மேல்.

இந்த அளவுக்கு இல்லை என்றாலும் சினிமா விவாதங்களும் வீண்பேச்சுதான். சினிமாவை விவாதிப்பதற்குத் தேவையான மேலதிக வாசிப்போ சமூகப்புரிதலோ இல்லாத நிலையில் சினிமாவிவாதம் என்பது சினிமாவில் தொடங்கி சினிமாவிலேயே முடிகிறது. அதுவும் வீண்தான். ஆகவே சினிமாவிவாதங்களையும் தவிர்க்கிறேன்.

1

இலக்கியவிவாதங்களிலும் இதெல்லாம் ஓரளவுக்கு உண்டு என்றாலும் ஒட்டுமொத்த பெறுபயனாக நான் நினைப்பது இலக்கியத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை அது நினைவூட்டுகிறது, இலக்கியத்தின் விவாதநீட்சியை நிலைநிறுத்துகிறது, அடிப்படை இலக்கியக் கொள்கைகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது என்பதைத்தான். ஆகவே எல்லா இலக்கியவிவாதங்களிலும் நான் அவ்விஷயம் சார்ந்த வரலாற்றை, இதுவரை நிகழ்ந்த உரையாடல்களை, அடிப்படையான கொள்கைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

பண்பாட்டு விவாதம் என்பதனால் மட்டுமே கல்பூர்கி கொலை முதல் மாட்டிறைச்சித்தடை, சாகித்ய அக்காதமி விருது மறுப்பு வரை எதிர்வினையாற்றுகிறேன். அதிலும் ஏற்பு மறுப்பு அல்ல என்னுடைய தரப்பு. அதன் பின்புலம் என்ன என்பதையே முதன்மையாகச் சொல்கிறேன். இத்தகைய விவாதங்களில் இருந்து வாசகன் பெறும் மதிப்பு என்பது அதன் வழியாக நினைவுறுத்தப்படும் வரலாற்று, பண்பாட்டுப்பின்புலமும் கொள்கைகளும்தான். ஆகவேதான் இந்தவகையான விவாதங்கள் கொந்தளித்து ஓயும்போது இதுசார்ந்து எழுதிக்குவிக்கப்பட்டவை பெரும்பாலும் பொருளிழந்து பழைய குறிப்புகள் ஆகின்றன. என் கட்டுரைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன.

கல்பூர்கி படுகொலை, தாத்ரி படுகொலை ஆகியவற்றை இணைத்து ஓர் அரசியல் அலை கிளப்பப் பட்டுள்ளது. அது பண்பாட்டுத்தளத்தில் நிகழ்வதனால் அதன் உள்ளடக்கம், அதன் இரு தரப்புகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு நான் கருத்துச் சொல்கிறேன். ஏதேனும் ஒரு தரப்பை எடுத்து கூச்சலிடுவதல்ல என் வேலை. ஆகவே இரு தரப்பும் என்னை வசைபாடுகிறார்கள். அரவிந்தன் நீலகண்டனும் யமுனா ராஜேந்திரனும் கிட்டத்தட்ட ஒரே குரலில் என்னை வசைபாடுவதைக் காணலாம். என் தரப்பு சீரானது என்னும் உறுதியை எனக்கு அது அளிக்கிறது.

என் எண்ணங்களை தொகுத்து இவ்வாறு சொல்கிறேன். கல்பூர்கி கொலை, தாத்ரி கொலை இரண்டுமே வன்மையாகக் கண்டிக்கத்தக்க நிகழ்வுகள். இந்தியா எதன் அடையாளமோ அதற்கு எதிரானவை. அவநம்பிக்கைகளை உருவாக்குபவை ஆகையால் முளையிலேயே கிள்ளப்படவேண்டிய நச்சுக்குருத்துக்கள்.

இவ்விரு நிகழ்வுகளுமே காங்கிரஸும் சமாஜ்வாதியும் ஆளும் மாநிலங்களில் நடந்தவை. ஒரு குற்றநிகழ்வாக கண்டு நேரடியான கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுகளுக்கு உள்ளது. அவை அதைச் செய்துள்ளன. அவை அரசால் பொருட்படுத்தாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மை அல்ல. கல்பூர்கி கொலையில் இன்னமும்கூட தெளிவான சான்றுகள் சிக்கவில்லை என்றாலும் மாநில அரசின் காவல்துறை தீவிரமாகவே செயல்படுகிறது. காங்கிரஸ் அரசு என்பதனால் இன்றுவரை சரியாகக் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றாலும் கர்நாடக அரசு மீதோ காவல்துறைமீதோ நம் எழுத்தாளர்கள் குற்றம்சாட்டவில்லை.

இதில் பாரதிய ஜனதாக்கட்சியின் பிழைகள் என்ன? கல்பூர்கி கொலையை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். கல்பூர்கிக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள உதிரி சாதிய -இந்துத்துவக் குழுக்களின் வன்முறைப்பேச்சு பாரதிய ஜனதா தரப்பின் குரலாக தேசிய ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டது.அதையொட்டியே எதிர்ப்புகள் எழுகின்றன

அப்படியென்றால் அந்த உதிரிக்குழுக்களை மிகத்தீவிரமாக பாரதிய ஜனதா கண்டித்திருக்கவேண்டும், அவர்களை அன்னியப்படுத்தியிருக்கவேண்டும், அதைச்செய்யவில்லை. இணையத்தில் எழுதும் உதிரிகளின் பொறுப்பற்ற வெறுப்புக்குரல்களும் பாரதிய ஜனதாவின் குரலாக ஆகிவிட்டன. பாரதிய ஜனதா தேசிய அளவில் வெளிப்படையாக தன் நிலைப்பாட்டை பதிவுசெய்து அவற்றுக்கு முடிவுகட்டியிருக்கவேண்டும். அதைச்செய்யதவரை அவை பாரதியஜனதாவின் தரப்பே.

மிரட்டல்களை விடுத்த இந்துத்துவ உதிரிகளை வெறும் கிரிமினல்களாகக் கண்டு கைதுசெய்து குற்றவியல் நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்திருக்கவேண்டும். அவர்களும் அதைச்செய்யவில்லை. அவர்கள் காங்கிரஸ் அரசு என்பதனால் அது எவருக்கும் தவறாகத் தெரியவுமில்லை.

தாத்ரி படுகொலையில் பாரதிய ஜனதாக் கட்சி தெளிவான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. அதை மழுப்பும் விதமாக கருத்துச்சொன்ன அதன் அமைச்சர்கள் வெளிப்படையாகக் கண்டிக்கப்படவில்லை. ஆகவே அதை பாரதிய ஜனதா ஆதரிப்பது போல அல்லது மௌனம் சாதிப்பதாக தோன்றுகிறது.

g
இவ்விரு நிகழ்வுகளும் நாட்டில் அன்றாடம் நிகழும் சிறிய குற்றச்செயல்கள் அல்ல. பல்வேறுபட்ட இனக்குழுக்களும் மதக்குழுக்களும் வாழும் இந்தியா போன்றநாட்டில் , அரசியல்வாதிகள் அவநம்பிக்கைகளைப் பயிரிடுவது நடந்துகொண்டிருக்கும்போது, இத்தகைய செயல்கள் எப்போதும் நிகழ்பவைதான். ஆனால் சில நிகழ்வுகள் குறியீட்டுமுக்கியத்துவம் கொண்டுவிடுகின்றன. அவை தேசமும் உலகமும் கவனிக்கக்கூடியவை ஆகிவிடுகின்றன. அவற்றில் தெளிவான திட்டவட்டமான நிலைபாடுகளை அரசும் ஆட்சியாளர்களும் முன்வைத்தாகவேண்டும். அதை மோடி செய்யவில்லை. ஆகவேதான் இந்த அரசியல் எதிர்ப்பு நீடிக்கிறது. அதை அவர் செய்யவேண்டும். அதற்காக இந்த எதிர்ப்பு பயன்படுமென்றால் நான் இதை வரவேற்கிறேன்.

வடஇந்தியா மாட்டிறைச்சி விஷயத்தில் ஒற்றைத்தரப்பாகவே உள்ளது. ஆகவே கடுமையாகக் கண்டிக்க பீகார் தேர்தல் சூழலில் காங்கிரஸும் லல்லுவும்கூட தயங்கிக்கொண்டிருக்கையில் பாரதிய ஜனதாவின் மௌனம் புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்களின் தேர்தலரசியலின் அடித்தளத்தை அவர்கள் எளிதில் இழக்கமாட்டார்கள், அவர்களும் அரசியல்வாதிகள் மட்டுமே

சாதாரணமாகக் கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரியும். பாரதிய ஜனதாவின் தலைமைக்கும் அதன் வேர்ப்பரவலாக அமைந்துள்ள இந்துத்துவச் சிற்றமைப்புகளுக்கும் இடையே தெளிவான ஒரு முரண்பாடு உருவாகியிருக்கிறது. பாரதிய ஜனதா ஒரு தெளிவான முதலாளித்துவ பொருளியலை, திட்டவட்டமான நிர்வாகத்தை உருவாக்க முயல்கிறது. மாறாக இந்துத்துவக் குழுக்கள் அதிகாரத்தைச் சுவைக்க விரும்புகின்றன. தங்கள் சொந்த திட்டங்களைச் செயல்படுத்த விரும்புகின்றன .நாங்களும் உள்ளோம் என காட்டுகின்றன. முக்கியமாக, தலைமைக்கு

சென்றகாலங்களில் சத்தம்போட்டுக்கொண்டிருந்த அசோக் சிங்கால், வினய் கட்டியார், தொகாடியா போன்றவர்களின் குரல்கள் அடக்கப்பட்டுவிட்டன என்பதை காணலாம். அதேசமயம் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துத்துவத் தீவிரக்குரல்களை தலைமை விட்டுவைத்துள்ளது, அல்லது நேரம்பார்த்திருக்கிறது. அதன் அரசியல் வெளிப்படையானது.

பாரதிய ஜனதாவின் அரசு சார்ந்த ‘அஜண்டா’ அல்ல இந்தக்குழுகக்ளுடையது. அவை அரசின் செயல்திட்டத்துக்கு எதிராகவே செயல்படுகின்றன. ஆனால் கட்சி தேர்தல்களில் இவற்றை நம்பியிருக்கவும் வேண்டியிருக்கிறது. எந்தப்பெரிய அமைப்பும் இத்தகைய முரணியக்கங்கள் வழியாகவே செயல்படும். இந்த முரணியக்கமே இன்றைய அரசின் செயல்பாடாக உள்ளது. இதை ஒற்றைப்படையாக ஆக்கி இந்த இந்துக்குழுக்களே பாரதிய ஜனதா என்று காட்டுவது அதன் எதிர்ப்பாளர்களுக்கு வசதியான அரசியல் உத்தி. அவர்கள் அதைச்செய்கிறார்கள். அதில் பிழையும் இல்லை. எதிரியின் பலவீனமான இடமே எப்போதும் இலக்காக ஆக்கப்படும். ;

எழுத்தாளர்களைத் தாக்குவதற்கு எதிராக எழுத்தாளர்கள் குரல்கொடுப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் இவ்வெதிர்ப்பால் என்ன பயன்? ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. ஏன்? இந்த எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் சென்ற தேர்தலில் மோடிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பொதுக்கோரிக்கை விடுத்தார்கள். அப்போதே அவர்களின் நடுநிலைமை அழிந்துவிட்டது. தனிமனிதர்களாக அவர்கள் அரசியலில் ஈடுபடுவதைப்போன்றதல்ல அது. அது எழுத்தாளர்களாக தங்களை முன்வைத்து அவர்கள் செய்தது. அப்போதே அவர்கள் கட்சி –தேர்தல் அரசியலில் ஒரு தரப்பாக ஆகிவிட்டனர். மோடியோ பாரதியஜனதாவோ அவர்களை எதிர்க்கட்சியாக மட்டுமே பார்க்கமுடியும். சமன்செய்து சீர்தூக்கிச் சொல்லும் சான்றோராக பேசும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர்.

இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில் மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல்கும்பல்தான் இது. சென்ற ஆட்சிக்காலத்தில் அவர்களை அண்டிவாழ்ந்து லாபங்களை அடைந்தவர்கள், இப்போது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் என்றே பாரதிய ஜனதா இதை நோக்குகிறது. நீங்கள் அரசியல்களத்தில் நுழைந்துவிட்டீர்கள் என்றால் அரசியல்ரீதியாகவே கையாளப்படுவீர்கள்.

கல்பூர்கி கொலை பற்றியும் மாட்டிறைச்சிக்க்காக நிகழ்ந்த கொலை பற்றியும் நான் என் வன்மையான எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறேன். அவ்வெதிர்ப்பையும் அதற்கான வசைகளையும் நீங்கள் இணையத்தில் வாசிக்கலாம்.ஆனால் இந்த அரசியல் எதிர்ப்பை ஒட்டி இலக்கியவாதிகளை அவமதித்தும் வசைபாடியும் எழுதும் அரசியல் உதிரிகள்தான் எரிச்சலைக் கிளப்புகிறார்கள்.

ஒரு வருடம் முன்பு முந்தைய காங்கிரஸ் அரசில் மிக உயர்பதவியில் இருந்த ஒருவரைச் சந்தித்தேன். 2009ல் ஈழப்படுகொலை நிகழ்ந்தபோது ஒரு தமிழக அமைச்சராவது ராஜினாமா செய்யலாம், ஒரு சில எம்பிகளாவது பதவிதுறக்கலாம் என காங்கிரஸ்காரர்களே விரும்பினார்கள் என்றும் அவரே அதை அவர் திமுகவிடம் பேசினார் என்றும் சொன்னார்.

ஏனென்றால் காங்கிரஸுக்குள் இருந்து தமிழர்கள்மீதான தாக்குதலை ஒட்டிய கடுமையான அழுத்தத்தை அவர்கள் தலைமைக்கு அளித்துக்கொண்டிருந்தனர். தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பும் விரக்தியும் உருவாகிறது, தேசஒற்றுமைக்கு ஊறு விளையலாம், காங்கிரசே காணாமல்போய்விடலாம் என்றும் வாதாடினார்கள். அப்படித்தான் அவர்கள் சொல்லமுடியும். ஆனால் தலைமை தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை என்று சுட்டிக்காட்டியது. தமிழகத்தின் தனியுரிமைபற்றி அதிதீவிரமாகப்பேசும் பிராந்தியக்கட்சிகள்கூட மௌனமாக உள்ளனவே என்றது.

திமுகவிடம் பலமுறை தனிப்பட்ட முறையில் மன்றாடியதாகவும் தலைமை சொல்லவேண்டும் என எம்பிக்கள் சொன்னார்கள் என்றும் தலைமை அவ்விஷயத்தைப் பேசவே விரும்பவில்லை என்றும் அநத காங்கிரஸ் முக்கியஸ்தர் சொல்லி வருந்தினார். இங்கே ஒரு பஞ்சாயத்துத்தலைவர் கூட ராஜினாமா செய்யவில்லை. உண்மையில் ராஜினாமா மூலம் எதிர்ப்பைத்தெரிவிப்பதற்கான மிகச்சரியான இடம் அதுதான்

நாம் அனைவரும் அறிந்த வரலாறு அது. நூற்றாண்டுக்காலம் நினைவில் நிற்கும் அத்தகைய வரலாற்றுத் தருணத்தில்கூட பதவியை துறக்கும் அடையாளச்செயலைச் செய்யத் தயங்கிய திமுக கட்சியின் மேடைப்பிரச்சாரகர்கள், அதையொட்டி ஒரு வார்த்தை சொல்லத் தயங்குபவர்கள், அந்த மௌனத்திற்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் இன்று சாகித்ய அக்காதமி விருதைத் துறக்காத எழுத்தாளர்கள் மானங்கெட்டவர்கள் என்று எழுதுகிறார்கள். இந்த அரசியல்வேடம் மிகமிக அருவருப்பானது.

அதாவது அரசியல்வாதிகள் தங்கள் லாபங்களுக்காக அவ்வப்போது வேடங்களை மாற்றிக்கொள்ளலாம், அவர்கள் எதையும் இழக்கவேண்டியதில்லை. அதற்கான அனைத்து தர்க்கங்களையும் உருவாக்கி அளிப்பார்கள் இந்த பிரச்சாரகர்கள். ஆனால் விருதுபெறும் இலக்கியவாதிகள்தான் இங்கே ஊழல்வாதிகள், அயோக்கியர்கள்.

அரசியல்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் தொடர்ச்சியாக மாறிமாறிப் போராட்டங்களை உருவாக்கிக்கொண்டேதான் இருக்கும். எப்போதும் அலைகளை உருவாக்கி நிலைநிறுத்தும். அதையொட்டி அனைத்து தளங்களிலும் பேச்சு நிகழும்படி பார்த்துக்கொள்ளும். இந்தச்செயல்திட்டத்தின் ஒருபகுதியாக நின்றிருக்க திட்டவட்டமாக மறுப்பவனே எழுத்தாளனாக இருக்கமுடியும். தன்னுடைய சொந்தச் செயல்திட்டத்தை அவன் முன்னெடுக்கவேண்டும். என் நோக்கில் ஒரு கூட்டு மனுவில் கையெழுத்திடுவதேகூட தன் சுயத்திற்கு இழுக்கு என நம்புபவர்களே பெரும்பாலான எழுத்தாளர்கள்.

கூட்டம் கூடுவது, கோஷமிடுவது, சேர்ந்து செயல்படுவது, எல்லாரும் செய்வதற்கக ஒன்றைச்செய்வது, பொதுவான குரல்களை தானும் எதிரொலிப்பது போன்றவை எழுத்தாளனுக்குரிய செயல்கள் அல்ல என்பது என் எண்ணம். ‘நான் வேறு’ என அவன் எண்ணாத வரை அவனுக்குத் தனித்தன்மை வரப்போவதில்லை. எவரும் நோக்காத ஒன்றை நோக்கும் திறனே எழுத்தாளனை உருவாக்குகிறது. அரசியல்வாதியின் பின்னால் கொடிதூக்கிப்போக எழுத்தாளன் துணியும்கணம் அவன் சாகிறான். பிழைகளைச் சொல்லும்போது, முட்டாள்தனமாக இருக்கும்போது, ஏன் குற்றவாளியாக இருக்கும்போது கூட அவன் கலை அவனைக் கைவிடாது. ஊர்வலத்தில் ஒருவனாக ஆகும்போது அவனும் பிறிதொருவனாக ஆகிவிடுகிறான்.

கல்பூர்கி கொலைக்காக, தாத்ரி படுகொலைக்காக குரலெழுப்பும் எழுத்தாளர்களின் தரப்பை நான் மறுக்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் அரசியல் எழுத்தாளர்கள். என்றும் அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள். சாரா ஜோசஃபோ சச்சிதானந்தனோ அரசியலுக்கு அப்பால் சென்றவர்களே அல்ல. அரசியல் எழுத்து என்பது இலக்கியத்தின் ஒரு வகை அவ்வளவுதான்

எம்.டி.வாசுதேவன் நாயரோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, யு.ஏ.காதரோ, புனத்தில் குஞ்ஞப்துல்லாவோ எம்.முகுந்தனோ எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். சச்சிதானந்தனைச் சுட்டிக்காட்டி எம்.டி.வாசுதேவன் நாயரை எவரும் பிழைப்புவாதி என அங்கே வசைபாடவுமில்லை. நான் சொல்லவிழைவது அதை மட்டுமே.

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32

$
0
0

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 3

வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது. அங்குள்ள புழுதியும் பொன்னே. அங்கு தன் அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் இனிதிருந்து ஆண்டான் குபேரன்.

ஒழியாத கருவூலம் கொண்டவன். எண்ணிமுடியாத செல்வங்களின் மேல் அமர்ந்திருப்பவன். ஆடகப் பசும்பொன்னில் முற்றிய கதிர்மணியில் பழுத்த இலைகளில் அடிமரத்தின் வைரத்தில் அடிவானத்து ஒளியில் கைம்மகவின் கால்களில் இளங்கன்னியர் தோள்களில் எழுபவன். அவன் துணைவியோ உருகிவார்த்த பசும்பொன்னில் எழும் வரியின் வடிவாக தோன்றுபவள். அன்னையர் அடிவயிற்றில், வசந்தகால ஆற்றுமணலில், தேக்குமரப்பரப்பில் பரவியிருப்பவள். அவர்களின் நகரில் அழகென்பதே செல்வமென்று இருந்தது. அடைவதென்பது இல்லாமலாகி அனைத்தும் அறிதலென்று மட்டுமே இருந்தன. கொள்வதோ கொடுப்பதோ இன்றி செல்வம் மங்கலம் என்றே பொருள்பட்டது.

இந்திரன் ஆளும் தேவர்கள் உலகத்தில் ஐந்து தேவகன்னியர் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். வர்கை. சௌரஃபேயி, சமீசி, ஃபுல்புதை, லதை என்னும் ஐவரும் தேவருண்ணும் அமுதத்தால், கற்பகக் கனிகளால், காமதேனுவின் கருணையால் வாழ்த்தப்பட்டிருந்தனர். கண்நிறைக்கும் பெருஞ்செல்வம் தங்களை சூழ்ந்திருக்கும் பேறு கொண்டவர்களாயிருந்தனர். ஆயினும் பெண்ணெனும் அழகிய பேதைமையால் அவர்களின் உள்ளம் திரிபுகொள்ளும் நாள் ஒன்று வந்தது.

வெண்முகில் வடிவம் கொண்ட ஐராவதத்தின் மேல் அமர்ந்து தேவர்க்கரசன் நகருலா செல்லும்போது அவனைத் தொடர்ந்து சென்ற அணியூர்வலத்தில் ஐவரும் முழுதணிக்கோலம் கொண்டு மங்கலம் ஏந்தி சென்றுகொண்டிருந்தனர். இந்திரன் காலில் அணிந்திருந்த பொற்கழலில் இருந்து ஒரு மணி உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அதை அறியாது தேவருலகின் எழிலில் அவன் ஈடுபட்டிருந்தான்.

அவ்வணியூர்வலத்தில் அவனுக்குப் பின் வந்த வர்கை தன் காலடியில் மின்னிக் கிடந்த பொன்மணியை கண்டாள். நடக்கும்போதே இருவிரலால் அதைக் கவ்வி தோழியின் தோள்பற்றி கால் தூக்கி கையில் எடுத்தாள். “கொடுடீ” என்று அதை வாங்கிப் பார்த்த தோழி “அழகியது. இதை அரசரிடம் திருப்பி அளிப்போம்” என்றாள். “எண்ணி முடியா பெரும் பொருள் கொண்ட இந்திரனுக்கு எதற்கு இது மேலும்? இதை நாமே வைத்துக்கொள்வோம்” என்றாள் வர்கை. அவள் அருகே நின்ற சமீசி “ஐயோடி, இது பிழையல்லவா? பெரும் செல்வத்தின் மேல் வாழும் நாம் நமக்கென்று ஒரு துளி செல்வமும் கொண்டிருக்க ஆணை இல்லை. பொன் விழைவு தேவர்க்கு பாவம் என்றே சொல்லப்பட்டுள்ளது. அருந்தவத்தோர் வேள்வி மேடையில் அளிக்கும் அவி ஒன்றே நாம் விரும்பத்தக்கது” என்றாள்.

“போடீ, இதை நான் விடப்போவதில்லை” என்றாள் வர்கை. “வீண் பழி சேரும்” என்றாள் ஃபுல்புதை. அணியூர்வலத்தில் அவர்களைச் சூழ்ந்து ஒலித்த கொம்புகளும் முழவுகளும் சல்லரிகளும் பெருஞ்சங்குகளும் மணிகளும் அவர்களின் பேச்சொலியை மறைத்தன. சூழ்ந்து அசைந்த வண்ணங்களும் அசைவுகளும் அவர்களின் முகங்களை ஒளித்தன. மறைவே அவர்களுக்கு உள்ளக்கரவை அளித்தது. வர்கை சொன்னாள் “ஊழின் விளையாட்டென்றே இருக்கலாம். என் கைக்கு வந்துள்ளது இவ்வணிகலன். தேடிவரும் திருவை எப்படி துறப்பேன்? என் உள்ளத்தை உசாவினேன். இல்லை, இதை ஒருபோதும் வீச என்னால் இயலாது. எனக்குரியது என இவ்வொரு துளி மணி என்னுடன் இருக்கட்டும்.”

“வேண்டாமடி. இது பழிசேர்க்கும் நமக்கு” என்றாள் லதை. “அவ்வண்ணமெனில் இதோ இதை உன்னிடம் அளிக்கிறேன். எடுத்த இடத்திலேயே இதை வீசு” என்றாள் வர்கை. “சரி கொடு” என கையில் அதை வாங்கிய லதை சற்று தெளிந்து “இல்லை, நானும் இதை எனக்கென கொள்ளவே விரும்புகிறேன்” என்றாள்.

“சரி இவளிடம் கொடு, துணிவிருந்தால் அதை இவள் துறக்கட்டும்” என்றாள் வர்கை. சமீசி அதை வாங்கி கை ஓங்கி பின் தோள் தழைத்து “இல்லையடி, என்னால் ஆகவில்லை” என்றாள். “உம், கொடு நான் வீசுகிறேன்” என்றாள் ஃபுல்புதை. ஆனால் கையில் வாங்கியதுமே “ஒரு கணம் துணிந்து இதை வீசிவிடலாம். பின்பு பல்லாயிரம் யுகம் தவம் இருந்தாலும் இது மீளக்கிடைக்காது போகலாம் அல்லவா? என்னால் முடியவில்லை” என்றாள்.

சௌரஃபேயி “என்னால் முடியுமா இல்லையா என்றே அறிகிலேன். அவ்வெல்லையை தொட்டுப் பார்க்க அஞ்சுகிறேன். வேண்டாம்” என்றாள். “இங்கு கொடுடீ அதை” என வர்க்கையே அதை வாங்கி உள்ளங்கையில் வைத்து “பொன்னைப்போல் பெண்ணுடலுடன் பொருந்தும் பிறிதொரு பொருள் எங்கும் உண்டோடி?” என்றாள். தன் நெஞ்சுக் குவையில் அதை வைத்து “பொன் பட்ட உடனே பெண்ணுடல் கொள்ளும் அழகு… இது தெய்வங்களின் ஆணை அல்லவா?” என்றாள்.

“கொடுடி, ஒரு முறை நானும் வைத்துப் பார்க்கிறேன் என்ற சமீசி அதை தன் மூக்கில் வைத்து “எவ்வண்ணம் உள்ளது?” என்றாள். “செந்தாமரை மேல் ஒரு பொன்வண்டு அமர்ந்ததுபோல்” என்றாள் சௌரஃபேயி. “எனக்குக் கொடுடி… ஒரு கணம்… ஒரே கணம்” என்று வாங்கி அதை தன் காதுகளில் வைத்தாள் லதை. “தளிரிதழில் நீர்மணி நின்றதுபோல்” என்றாள் வர்கை. ஃபுல்புதை அதை வாங்கி தன் நெற்றிப்பொட்டில் சூடினாள். செவ்வானில் எழுந்தது இளங்கதிர். சௌரஃபேயி அதை மென்வயிற்றில் வைத்தாள். “இளஞ்சேற்றில் எழும் முதல் தளிர்” என்றாள் வர்கை.

“எங்கும் இது பொருள் கொள்கிறது. ஆலயத்தில் தெய்வம் அமர்வதுபோல் பெண்ணுடலில் பொன் அமைகிறது” என்றாள் வர்கை. தன் நெஞ்சக்குவையில் வைத்து “தீரா பெருங்காமம் கொண்ட இதழ் ஒன்றின் முத்தம்போல் சிலிர்க்க வைக்கிறதடி இது” என்றாள். “பெண்ணுடன் முற்றிலும் ஒன்றாகி ஒளிவிட பொன்னால் மட்டுமே முடியும்” என்றாள் சமீசி. “பொன் என்பது ஒருபோதும் வாடாத வண்ண மலரல்லவா?” என்றாள் லதை.

“பொன் என பிறக்க வேண்டும் ஒரு பிறவி” என்றாள் ஃபுல்புதை. “என்றும் புதிதாக என்பதனாலேயே இது தெய்வங்களாலும் விரும்பப்படுகிறது” என்றாள் சௌரஃபேயி. “அழியா மங்கலங்கள் அழியலாகும். எங்கும் எந்நிலையிலும் மங்கலம் கொள்வதே பொன்” என்றாள் வர்கை.

அணி ஊர்வலம் முடிந்து தங்கள் மாளிகைகளுக்கு சென்றபின் பிற தேவகன்னிகளின் விழி தவிர்த்து தங்கள் அறைக்குள் புகுந்து அமர்ந்துகொண்டு அந்தப் பொன் மணியை மாறிமாறி கைகளில் வைத்து நோக்கி உடல் பொருத்தி உணர்ந்து, ஒளித்துவைத்து எண்ணி உளம் மகிழ்ந்தனர். பின்பு தங்கள் ஆடைப்பட்டில் சுற்றி உடல் மடிப்புகளுக்குள் ஒளித்துக்கொண்டு ஒடுங்கி படுத்துத் துயின்றனர்.

அத்துயிலில் தொலைவில் ஒரு பொற்த்துளி கிடப்பதை வர்கை கண்டாள். ஆவலுடன் சென்று குனிந்து அதை தொட்டாள். மெல்ல அசைந்து அது ரீங்கரித்தபோது அது ஒரு பொன்வண்டு என்று உணர்ந்தாள். விழிகள் மயங்கி மயங்கி மறைய குனிந்து நோக்கியபோது அது பொன்னிறத்து முட்டை என்று தெளிந்தாள். முட்டை ஓட்டை கையால் அழுத்தி விரிசலிடச்செய்து மெல்ல உடைத்துத் திறக்க உள்ளிருந்து பொற்கம்பி சுருளவிழ்வது போல மெல்ல நெளிந்தபடி நாகக்குழவி வெளிவந்தது.

சிறுவால் விடைத்து மெல்ல அசைய தலைதூக்கி பத்தி விரித்து ஆள்நோக்கி நா நீட்டி சீறி அவளை நோக்கி வந்தது. அவள் அஞ்சியபடி கைநீட்டி அதை தொட்டாள். சுட்டு விரலில் பற்றி சுற்றி ஏறி மோதிர விரலில் வளைந்து ஓர் கணையாழி ஆயிற்று. “பாரடி இதை” என்று சொல்லி திரும்புகையில் மெல்ல வளைந்து மணிக்கட்டை அடைந்து கங்கணமாயிற்று. “வளர்கிறது” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலே தோள்வளை வடிவு கொண்டு மேலேழுந்தது. அவள் இடை வளைத்து சல்லடம் ஆயிற்று. எழுந்து முலை இணைகளின் நடுவே சென்று தோளை அடைந்து சுற்றி தோளாரம் ஆயிற்று. முதுகின் பின் எழுந்து அவள் நெற்றி வழியாக வந்து நாகபட மணி முடியாயிற்று.

“பொன்! ஆடகப் பசும்பொன்!” என்று அவள் அடைத்த குரலில் எவரிடமோ சொன்னாள். அவள் தலைக்கு மேல் எழுந்து மரம்போல் வளர்ந்து வான் நோக்கி படம் விரித்தது நாகம். அதன் வால் முனையில் அவள் சுற்றப்பட்டிருந்தாள். எத்தனை விரைவில் அது வீங்கி பேருரு கொள்கிறது என்று அவள் வியந்தபோது, அந்த வியப்பையே பொருளற்றதாக்கும் வண்ணம் அடிமரம்போல் மண்டபத்தூண் போல் கோபுரம் போல் உடல் பெருத்து வளர்ந்தது. காலை இளவெயிலில் அதன் பொற்செதில்கள் ஒளிவிட்டன.

ஈரம் என குளிர்ந்திருந்தது அதன் பொன்னுடல். இடி ஓசையை கேட்டாள். மின்னலென அதிர்ந்து அடங்கியது அதன் நா பறத்தலே என்று கண்டாள். தன்னை கால் முதல் தலைவரை சுற்றி இறுக்கி இருக்கிற அதன் வாலை விலக்க முயலும்போது அது மேலும் இறுகுவதையும் அறிந்தாள். ஆலமரத்தின் வேரால் சுற்றப்பட்ட பாறை என நெரிந்தாள்.

பொருளிலாச் சொல் ஒன்றைக் கூவியபடி எழுந்து அமர்ந்து நெஞ்சை அழுத்தினாள்.   “என்னடி? கனவா?” என்றபடி தோழிகள் சூழ்ந்தனர். “ஆம், கனவுதான்.” அவள் கண்டவற்றை தொகுத்துக் கொள்ள முயன்றாள். ஒரு சொல்லும் எழாமல் தலையை அசைத்ததும் “கொடுங்கனவு” என்றாள். “என்ன கண்டாய்?” என்றாள் லதை. “நாகம்… பொன்னுடல் கொண்ட நாகம்” என்றாள். ஃபுல்புதை அவள் தொடையை அழுத்தி, “நாகத்தை கனவு கண்டால் இனிய கூடல் ஒன்று நிகழ இருக்கிறது” என்றாள். “போடீ” என்று அவளை தள்ளினாள்.

“பொன்னிற நாகத்தை கனவு காண்பவள் பெருந்தோள் கொண்ட வீரனால் அணைக்கப்படுவாள்” என்றாள் சமீசி. “பேசாதே” என்று சொல்லி முழங்கால் மடிப்பில் முகம் சேர்த்து, உடல் ஒடுக்கி அமர்ந்தாள். “என்னடி அக்கனவு?” என்றாள் சௌரஃபேயி. “நான் அஞ்சுகிறேன். இந்தப் பொற்துளியை பெருங்காட்டை தன்னுள் அடக்கிய விதை என்று நான் உணர்கிறேன். என் உடல் சதுப்பென இதை வாங்கிக் கொண்டுள்ளது. இது முளைத்து எழுந்து விரியும்” என்றாள் வர்கை. “அவ்வண்ணமே ஆகட்டும். மட்கி இதற்கு உரமாகுவோம்” என்றாள் லதை.

சமீசி சினந்து “என்னடி வெறுஞ்சொல் சொல்கிறாய்?” என்றாள். “நான் இதை அஞ்சுகிறேன்” என்றாள் வர்கை. “அப்படியென்றால் என்னிடம் கொடுத்துவிடு” என்றாள் லதை. “போடீ” என்று சொல்லி தலையை திருப்பிக் கொண்டாள். சற்று நேரம் கழித்து பெருமூச்சுடன் “என்னை எது கொண்டு அழித்தாலும் சரி, இதன் உறவிலாது இனி வாழ்க்கையில்லை எனக்கு. ஒன்று பிறிதொன்று என நீளும் முடிவற்ற காலம் கொண்ட நம்மால் இத்தகைய நிகழ்வுகளினூடாகவே அலையென ஒன்றை அறியமுடிகிறது” என்றாள்.

“விளைவுகள் எவ்வகையிலும் ஆகுக! நிகழ்வுகள் எவையாயினும் அவை அறிதலை உள்ளடக்கியவையே. நன்றெனினும் தீதெனினும் அந்நிகழ்வு அளிக்கும் அறிதல் தூயதே. சந்தனத்திலும் மலத்திலும் எரியும் தழல் என்பது அவிகொள்ளும் தேவனே அல்லவா?” என்றாள். “ஞானியைப்போல் பேசுகிறாய்” என்றாள் ஒருத்தி. “அவ்வண்ணம் பெருஞ்சொல் எடுப்பவள் தாளா காமம் கொண்டுவிட்டாள் என்றே பொருள்” என்றாள் ஃபுல்புதை.

அவள் அதை தன்னுடலில் ஒளித்துக்கொண்டாள். விதையிலை நடுவே முளைக் கருத்துளிப்போல் அப்பொன்மணி அவள் உடலில் இணைந்து உயிர்த்தசையென ஆகியது. அதன் பின் அவள் எழுந்து வெளிவந்து நோக்கியபோது தேவர் குலம் முற்றிலும் பிறிதென தெரிந்தது. பொன்னிலும் பளிங்கிலும் செம்மணியிலும் புனையப்பட்ட அப்பெரும் நகரம் துடிக்கும் தசையினால் ஆனது என மயக்கு காட்டியது. சுவர்களைத் தொட்டு தோல் மென்மையை உணர முடிந்தது. தூண்களைத் தழுவி உள்ளே குருதி ஓடும் வெம்மையை உணர முடிந்தது. கட்டடங்களின் மூச்சோட்டத்தை இருண்ட அறைகளில் நிறைந்திருந்த இதயத் துடிப்பை அவள் அறிந்தாள்.

அமராவதியின் அழியா வசந்தத்தை தேன்நிறை மலர்களை தொட்டுத் தொட்டு விலக்கி ரீங்கரித்து தவித்து அலையும் விழிஎழுந்த பட்டாம்பூச்சி போல அவள் சுற்றிவந்தாள். அவள் தோழிகள் உடனிருந்தனர். அவர்கள் அன்றுவரை கண்டதை தங்களிலிருந்து பிறிதென அறியும் அகப்பிரிவு கொண்டிருக்கவில்லை. அவ்விரண்டின்மை அழிய அவர்கள் காண்பவை அனைத்தும் புறம் என்றாயின. அள்ளி அள்ளி நிறைத்துக்கொண்ட அகம் எப்போதும் குறைகொண்டு தவித்தது.

தன் வைஜயந்தம் என்னும் உப்பரிகையில் அமர்ந்து இந்திராணியுடன் நாற்களச் சூது ஆடிக்கொண்டிருந்தான் இந்திரன். எட்டுத் திசைத் தெய்வங்களையும் எட்டு வசுக்களையும் புவி தாங்கும் நாகங்களையும் ஏழு முனிவர்களையும் காய்களென அக்களத்தில் வைத்து அவர்கள் ஆடினர். வெற்றியும் தோல்வியும் இன்றி இந்திரனும் அரசியும் ஆடி முடித்தாக வேண்டும் என்பதே அமராவதியின் நெறி. இருவரில் ஒருவர் வென்றாலும் இந்திரபுரியின் முறையமைவு பிழைவுறும் என்பது தெய்வங்களின் ஆணை. அதை சீரமைத்த பின்னரே நகர் தன் இயல்புக்கு வரலாகும்.

அம்முறை அதில் இறுதிக் காய் ஒன்றை நகர்த்தி இந்திராணி வென்றாள். சினந்து களம் மீது இரு கைநீட்டி “என்ன ஆயிற்று?” என்றான் இந்திரன். “எனது இந்தக் காய் ஏழு காய்களை வெட்டி இங்கு வந்தது” என்றாள் இந்திராணி. குனிந்து இறுதியில் வென்று நின்ற காமனை நோக்கினான் இந்திரன். “நாகங்களையும் திசைத்தேவர்களையும் எப்படி கடந்தது? ஏழு முனிவரையும், எட்டு வசுக்களையும் எப்படி வென்றது காமம்?” என்றான். காமனுக்கு தடை வைக்க ரதியையும் அவன் நகர்த்தியிருந்தான். ஊசி அசையா துலாக்கோலென ஒருவரையொருவர் தடுக்கும் இரு முனைகள் அவை. அன்றோ ரதியை தன்னுடன் தூக்கி மும்முடங்கு விசைகொண்டு முன்நகர்ந்திருந்தான் மலரம்பன்.

களம் நோக்கி சற்று அமைந்திருந்த பின் எழுந்து வெம்மூச்சு விட்டு “என்ன நிகழ்ந்துள்ளது என்று பார்க்கிறேன்” என்றான் இந்திரன். எடை மிக்க கால்களுடனே நடந்து சுதர்மை என்னும் தன் அவைக்கு வந்தான். கால மடிப்புகளின் கதைமுறைகள் அறிந்த நாரதரை அழைத்து வரச்சொன்னான். அவை வந்த இசைமுனிவரிடம் “காலமும் விழியும் கொள்ளும் கணக்குகள் அனைத்தும் நிகர்நிலை கொண்டுள்ள இந்நகரில் எங்கனம் காமம் வென்றது?” என்று அவன் கேட்டான்.

முறுவலுடன் “தேவர்க்கு அரசே, இப்பெரும் நகரிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருத்தி காமம் கொண்டிருக்கிறாள். அவளிடமிருந்து அவள் தோழியர் நால்வருக்கும் அக்கனல் பற்றிக்கொண்டுள்ளது” என்றார். “எவர் அவர்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும் இக்கணமே” என அவன் எழுந்தான். “எவர் என்று எளிதில் காண முடியாது அரசே. ஐம்புலனும் முற்றிலும் நிகரமைந்தமையால் இமையாவிழி அமைந்தவர்கள் தேவர்கள். இமைப்பு என்பது ஐம்புலன்களும் ஐந்து தட்டுகளாக ஆடும் துலாவின் நடுவில் நின்றாடும் முள்ளின் தவிப்பே ஆகும். அது மானுடர்க்குரியது. இமைப்பை வென்றவர் முனிவர். கடந்தவர்கள் தேவர்” என்றார் நாரதர்.

“எழுக என் தேர்” என்றான் இந்திரன். வியோமயானம் என்னும் தன் ஒளித்தேரில் ஏறி அமராவதியின் அகன்ற தெருக்களில் ஊர்ந்தான். பொன்னொளிர் நாடெங்கும் பரந்தும் புணர்ந்தும் இசைத்தும் இனித்தும் இயைந்தும் குறையா பேரின்பத்தில் திளைத்திருந்த தேவர்களிள் முகங்களை நோக்கியபடி கடந்து சென்றான். விழைவின் துயரின் இன்பத்தின் அளவு வேறுபாடுகளாலேயே முகங்கள் ஒன்று பிறிதென ஆகின்றன. காற்றின் குளிரின் அளவின் ஆடலால் மழைத்துளிகள் ஒன்று பிறிதொன்றிலாது ஆவதுபோல. தேவர் உலகில் ஒவ்வொன்றும் முற்றிலும் நிகர் என்பதால் முகங்கள் அனைத்தும் ஒன்றே. ஒரு முகம் தன்னை ஆடிப் பரப்புகளில் பெருக்கிக்கொண்டதைப் போல. முடிவிலாது ஒரு முகமே வந்து விழிகாட்டி திரும்புவதுபோல.

பிறகு இந்திரன் கண்டான், இமைக்கும் ஐவர் விழிகளை. பற்றி எரிந்த சினத்துடன் சென்று அவர்கள் முன் நின்றான். அமராவதியின் பூந்தோட்டத்தில் சகஸ்ரம் என்னும் அழகிய நீலக் குளத்தின் கரையில் பூத்தெழுந்த சௌவர்ணம் என்னும் கொன்றை மரத்தின் அடியில் அவர்கள் இன்மொழி பேசி கனவினிலாடி அமர்ந்திருந்தனர். பொன் மலர்கள் உதிர்ந்த பெருங்கம்பளம் அவர்களைச் சுற்றி விரிந்திருக்க நடுவே அனல் வைத்து மூடிய பளிங்குபோல் ஒளிவிட்டுக்கொண்டிருந்தாள் வர்கை. இந்திரனைக் கண்டதும் தன் நெஞ்சில் அழுந்திய கைகளுடன் எழுந்து நின்றாள். கரவுள்ளம் கொண்ட பெண்ணின் உடல்மொழி அது என இந்திரன் அறிந்திருந்தான்.

“உன் விழிகள் இமைக்கின்றன. நீ உடல்கரந்தது எதுவென அறிவேன். விழைவின் துளிக்கனல் அது. எனவே இங்கு தேவர் என இருந்து வாழும் தகுதியை இழந்துவிட்டாய். இது நிகர் நிலையில் நின்றிருக்கும் நகரம். முள்முனை பனித்துளி என்று இதனை சொல்கின்றனர் முனிவர். உன்னால் இது சரிவுற்றது” என்றான். “வேந்தே, விழைவுகளுக்கு எவரும் பொறுப்பல்ல” என்றாள் வர்கை. “ஆம். பொருள் ஒவ்வொன்றிலும் அனல் உறைகிறது. ஆனால் ஒவ்வொன்றும் தன் அமைப்பால் மட்டுமே இருப்பு கொள்கின்றது. உள்ளிருக்கும் அனல் எழுந்தால் அவ்வமைப்பையே அது உண்டு சாம்பலாக்கும்.”

“தன்னுள் இருக்கும் நெருப்பை சூடும் தகுதி பசுமரத்திற்கில்லை” என்றான் இந்திரன். “இக்கணமே இங்கிருந்து நீ உதிர்க! உன் விழைவு எங்கு உன்னை இட்டுச்செல்கிறதோ அங்கு சென்று விழுக!” என்றான். கைகூப்பி “தேவர்க்கரசே, இத்தீச்சொல்லை தங்கள் ஆணை என்றே கொள்கிறேன். எங்கணம் இங்கு மீள்வோம் அதை மட்டும் கூறி அருள்க!” என்றாள் வர்கை. “ஆம், அருள்க!” என்றனர் தோழியர்.

“கன்னியரே, விழைவு என்பது இன்னும் இன்னும் என்று மீறும் எழுச்சியையும் போதும் போதும் என்று தள்ளும் தவிப்பையும் தன் இரு முனைகளாக கொண்டுள்ளது. அத்தவிப்பு மறைந்த மறுகணமே நீ எங்கிருந்தாலும் அங்கிருந்து எழுந்து மீண்டும் இங்கு வருவாய். இங்கிருந்து சென்றபோது இருந்த கணத்தின் மறுகணத்தை அடைவாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி இந்திரன் மறைந்தான்.

அந்தியில் வாடி உதிர்ந்து புலரியில் முளைத்தெழும் மலர்கள் போல் அவர்கள் குபேரனின் அளகாபுரியில் எழுந்தனர். தன் காலில் இடறி கையில் வந்து உடலில் கரந்த அச்சிறு பொன்மணி பல்லாயிரம் இதழ் விரித்து மலர்ந்து ஒரு நகரமென ஆனதுபோல் அளகாபுரியின் விரிவை வர்கை உணர்ந்தாள். பொன்னன்றி ஏதும் விழி படவில்லை. காற்றும் பொன்னலைகளாக இருந்தது. முகில்கள் பொற்புகைபோல் மிளிர்ந்தன. அங்கு வாழ்ந்த தேவர்களும் பொன்னுடல் கொண்டு இருந்தனர். அவர்களது விழிகள் பொற்சுடர் விட்டன. அவர்களின் இசை கலந்த மொழிகளும் பொன்னென அலையிளகின.

“பொன்னன்றி பிறிதிலா பேருலகு” என்றாள் வர்கை. “அள்ளி அள்ளிக் குவித்தாலும் முடிவிலியே மிஞ்சும் பொன்” என்று நெஞ்சம் அழுத்தி விம்மினாள் லதை. “கடலென கொண்டு கரந்தாலும் ஒரு துளியும் இடைவெளி விழா பெருக்கு இது” என்றாள் சமீசி. களித்தனர். முழுதுடலாலும் அங்கே திளைத்தனர். குபேரனின் அவைக்குச் சென்று அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் அமர்ந்திருந்த அவனை வணங்கினர். “துளி விழைந்தீர். பெருங்கடல் பெற்றீர். மகிழ்ந்திருப்பீர்” என்று குபேரன் அவர்களை வாழ்த்தினான்.

வந்தமைந்த முதல் நாளே களிவெறி கொண்டவர்களாக அப்பொன்வெளியில் அவர்கள் மிதந்தலைந்தனர். சிரித்தும் அழுதும் பொன்னில் விழித்து எழுந்தனர். பொன்நிற அமுதை உண்டனர். பொன்நிற அலைகளில் நீராடினர். பொற்பட்டாடை அணிந்தனர். பொன் மலர் சூடினர். பொன்னில் அளைந்து விளையாடி பொற்சேக்கையில் படுத்து பொற்கனவுகளில் எழுந்தனர். பொற்சரடென சுற்றிக் கட்டி இழுத்துச் சென்ற கனவுகளில் ஆழ்ந்தனர்.

பொற் தூண்களென அடிமரங்கள் சரிந்த பொற்தகடுகளென மின்னும் சருகுகளில் விழுந்து ஒளிர்ந்த கதிர்குழல்கள் வருடிச்சென்ற பொற்காடு ஒன்றுக்குள் வர்கை சென்று கொண்டிருந்தாள். அங்கு விரியத் திறந்து அவளை வரவேற்ற சிறு குடில் ஒன்றுக்குள் நுழைந்தாள். அவளைச் சூழ்ந்து அமைதி கொண்டு உருகி இணைந்து மூடிக்கொண்டன அவ்வில்லத்தின் சுவர்கள். திகைத்து திரும்பும் வழி நோக்க நாற்திசையும் ஒன்றுபோல் வளைந்திருப்பதை கண்டாள். பொன்முட்டை ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்து அஞ்சி பதறி அதன் சுவர்களை அறைய உலோகத்தின் உறுதியை, தண்மையை, அசைவின்மையை, அமைதியை அறிந்தாள். அவள் தவிப்பை இழுத்தும் நீட்டியும் சுருட்டியும் காட்டி களியாடியது அது.

அலறி விழித்து அது கனவல்ல என்று உணர்ந்து மீண்டும் அறைந்து கூவி தளர்ந்து முடிவிலா காலம் அங்கு இருப்பதன் பேரச்சத்தால் உடல் விதிர்த்து பின் தளர்ந்தாள். கூவி ஒலி எழுப்பும்போது அங்கு ஒலி என எதுவும் எழாது என அறிந்தாள். குரல் மறைந்துவிட்டதை உணர்ந்ததும் நெஞ்சு மும்மடங்கு கொப்பளித்து எழுந்து ஓலமிட்டது. உடல் திறந்து எழுந்த ஓசை வெறும் ஒரு பொற்கொப்புளம் என விரிந்து சூழ அக்கொப்புளத்தின் முட்டைக்குள் தான் இருப்பதை கண்டாள்.

இரு கைகளாலும் மஞ்சத்தை ஓங்கி அறைந்து கொண்டிருப்பதை உணர்ந்து, விழித்து எழுந்து நெஞ்சு பற்றி அமர்ந்து அவள் நடுங்கியபோது தோழியர் அவள் கைகளை பற்றிக்கொண்டனர். “என்ன ஆயிற்று? என்ன கண்டாய்?” என்றனர். “ஒரு கனவு” என்றாள் அவள். “என்ன கனவு?” என்றாள் அஞ்சிய லதை. “உலோகம்!” என்றாள் அவள்.

பின்பு தோழியரின் கை பற்றி “பொன் என்பது ஓர் வெறும் உலோகம். அதை எப்படி மறந்தோம்?” என்றாள். “உலோகம் தன்னுள் தானே அமைதி கொண்டது. பிறிதனைத்தையும் தன் பரப்பில் எதிரொளித்து மறுதலித்து உள்ளே தனித்து குளிர்ந்திருப்பது. எத்தனை ஓசையற்றவை இவ்வுலோகங்கள்!” லதை “ஆயினும் பொன் உலோகங்களில் பேரழகு கொண்டதல்லவா?” என்றாள். “இரக்கமின்மை முழுமை அடையும்போது அது பேரழகு கொண்டதாக ஆகிறது” என்றாள் வர்கை.

கண்ணீருடன் தலையசைத்து “இல்லையடி, இங்கு இல்லை நமது இடம்” என்றாள். “என்னடி சொல்கிறாய்?” என்று தோழியர் கேட்டனர். “நாம் அடைந்தது நமக்குரிய வாழ்வு அல்ல. இதை நாம் விழையவில்லை. நம்மில் விழைவெழுப்பியது இச்சிறு பொன்துளி. இது தூண்டிலின் முள்” என்றாள் வர்கை. “அப்பொற்குவைக்குள் என்னை உணர்ந்தபோது நான் விழைந்தது ஒரு சொல். என்னை அறிந்து அழைக்கும் ஒலி. அது மட்டுமே” என்றாள். எழுந்து முழங்கால்மேல் முலை வைத்து குறுகி அமர்ந்து உடல் சிறுத்தாள்.

“இப்பொன்வெளியில் சிறையிடப்பட்டிருக்கிறோமடி” என்றாள். அவள் சொன்னதை பிறர் நால்வரும் உணர்ந்துகொண்டனர். நீள்மூச்சுடன் அவள் அருகே அமர்ந்து “ஆம், அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உணரத் தொடங்கியிருக்கிறோம்” என்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

புதியவற்றின் வாசலில்

$
0
0

Puthiya Kaalam

உருவாகி வரும் இலக்கியம் குறித்து ஆர்வமில்லாத எழுத்தாளர்கள் குறைவு.அந்தப்புதிய காலம் அவனுடைய முகத்தை அவனுக்குக் காட்டும் கண்ணாடி. அவன் சொற்கள் எப்படி அடுத்தடுத்த கால அலைகளில் எதிரொளிக்கின்றன என்று அவன் பார்க்கமுடிகிறது. அத்துடன் அவன் நின்றுபேசும் சூழலின் மாற்றத்தையும் அறியமுடிகிறது

என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகை கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ள்ளேன் என்று படுகிறது

புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது.அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது. க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை தமிழில் நிகழ்ந்தது இதுதான்.

இலக்கியமுன்னோடிகள் வரிசை என ஏழு நூல்களாக தமிழில் எனக்கு முன்னால் எழுதியவர்களை மதிப்பிட்டு எழுதியிருக்கிறேன். இந்நூல் அவ்வெழுத்துக்களின் தொடர்ச்சி. இதற்கு அடுத்த தலைமுறை இன்று எழுதவந்துள்ளது. அவர்களைப்பற்றியும் எழுதுவேன் என நினைக்கிறேன்

ஜெ

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் புதியகாலம் விமர்சனநூலின் மறுபதிப்புக்கான முன்னுரை

தொடர்புடைய பதிவுகள்

விருதுமறுப்பு –கடிதங்கள்

$
0
0

அன்பின் ஜெயமோகன்,

உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் இது தான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். நான் தொழில் முறை எழுத்தாளன் இல்லை என்பதால் கோர்வையாக எழுத இயலாது. மொழியும் தட்டையாக தான் இருக்கும். பொறுத்தருள்க. நெருங்கிய நண்பர்கள் அனைவரும் தங்களின் இந்து மத அரசியல் சாய்வு காரணமாக முழுக்க நிராகரிப்பார்கள், அவர்களிடம் நான் சொல்வது, ‘இலக்கியம் மனிதனை பண்படுத்தும். ‘யானை டாக்டரை’ படித்தபின் எவ்வளவு பெரிய குடிகாரனாக இருந்தாலும் காட்டில் பாட்டிலை உடைத்து வீச மாட்டான். எனவே அரசியல் சாய்வு காரணமாக ஒரு இலக்கியவாதியை முழுவதும் நிராகரிக்க முடியாது, கூடாது’ என்று.

கல்புர்கி மற்றும் தாத்ரி சம்பவங்களுக்கு எதிராக எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பியளிப்பது தொடர்பாக தாங்கள் ஆற்றிவரும் எதிர்வினைகளை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இது தொடர்பாக எனக்கு சில அடிப்படை கேள்விகள் உள்ளது. ஏனெனில் இதுநாள் வரை நான் நம்பிக்கொண்டிருக்கும் அறங்களுக்கும் விழுமியங்களுக்கும் எதிராக உங்கள் கட்டுரை இருப்பது போல தோன்றுகிறது. நான் எந்தக்கட்சியையும், எந்தக் குழுவையும் சாராதவன். இடது சாரி சாய்வு உள்ளவன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.எனவே இக்கடிதத்தை படித்து என் கேள்விகளுக்கு பதிலளித்தால் மகிழ்ச்சியடைவேன்.இனி தங்களின் கட்டுரையின் பகுதியும் கேள்விகளும்

//இவ்விரு நிகழ்வுகளுமே காங்கிரஸும் சமாஜ்வாதியும் ஆளும் மாநிலங்களில் நடந்தவை. ஒரு குற்றநிகழ்வாக கண்டு நேரடியான கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுகளுக்கு உள்ளது….காங்கிரஸ் அரசு என்பதனால் இன்றுவரை சரியாகக் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றாலும் கர்நாடக அரசு மீதோ காவல்துறைமீதோ நம் எழுத்தாளர்கள் குற்றம்சாட்டவில்லை.//

எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டதும், முகமது அக்லக் கொல்லப்பட்டதும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்களா அல்லது குற்றவாளிகளை கைது செய்ய கோரும் போராட்டமா, மாநில அரசை குறை சொல்வதற்கு? கல்புர்கி சொத்து தகராறு காரணமாகவோ அல்லது தனிப்பட்ட விரோதங்களுக்காகவா கொலை செய்யப்பட்டார்? மாட்டிறைச்சி வதந்தியால் கொல்லப்பட்டவருக்கும் கொலை செய்தவர்களுக்கும் ஏதாவது தனிப்பட்ட விரோதம் உண்டா? இந்து அடிப்படைவாதம் சார்ந்த சகிப்புத்தன்மை இல்லாத சில நபர்களால் தானே கொல்லப்பட்டார். இந்து பாசிசத்திற்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது மோடி தலைமையிலான ஆட்சி பதவிக்கு வந்ததற்கு பின்பு தானே? தங்கள் அளவுகோலின் படி காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சனம் செய்யக்கூடாது, போராட்டம் நடத்த கூடாது, பாதுகாப்பு குறைவுக்காக அப்போதிருந்த காங்கிரஸ் அரசு தான் பொறுப்பு என்று கொள்ளலாமா? சில மாதங்களுக்கு முன்பு பூணூல் அறுக்கப்பட்ட சம்பவத்திற்கு வெறுப்புக்குற்றம் என்று பத்ரி உட்பட இந்து மத ஆதரவாளர்கள் எப்போதோ இறந்த பெரியாரை இழுத்து திராவிட இயக்கங்களை குற்றம் சொன்னது எதனால்?

//இதில் பாரதிய ஜனதாக்கட்சியின் பிழைகள் என்ன? கல்பூர்கி கொலையை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். கல்பூர்கிக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள உதிரி சாதிய -இந்துத்துவக் குழுக்களின் வன்முறைப்பேச்சு பாரதிய ஜனதா தரப்பின் குரலாக தேசிய ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டது.அதையொட்டியே எதிர்ப்புகள் எழுகின்றன//

மதத்தின் பெயரால் நடக்கும் குற்றங்களுக்கும் வெறுப்பை விதைத்து அறுவடை செய்யும் பா.ஜ.கவினருக்கும் சம்பந்தமே இல்லையா? தாத்ரி சம்பவத்தில் பா .ஜ.க உறுப்பினர்களும் அவர்களின் உறவினர்களும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாதா? அனைத்து சம்பவங்களும் வெறும் இந்துத்துவ உதிரிகளின் செயல்கள் என்றால் இந்தியாவில் ஒற்றுமைக்கே பங்கம் விளைவித்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு யார் காரணம்? அத்வானி யார்? கல்யாண்சிங் யார்? முரளி மனோகர் ஜோஷி யார்? உமா பாரதி யார்? இவர்களின் பேச்சிற்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் பாபர் மசூதி இடிப்பிற்கும் சம்பந்தம் இல்லையா? குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தொடர்பு இல்லை என்று கருதுகிறீர்களா?

//பாரதிய ஜனதா ஒரு தெளிவான முதலாளித்துவ பொருளியலை, திட்டவட்டமான நிர்வாகத்தை உருவாக்க முயல்கிறது.//

எப்படி? கட்டாயமாக விவசாயிகளின் சம்மதமின்றி நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது போன்றா? அல்லது அடானி போன்ற பெரு நிறுவனங்களுக்காக நாட்டின் வளங்களை சல்லிசான விலைக்கு விற்பதா போன்றா ?

//எழுத்தாளர்களைத் தாக்குவதற்கு எதிராக எழுத்தாளர்கள் குரல்கொடுப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் இவ்வெதிர்ப்பால் என்ன பயன்? ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. ஏன்? இந்த எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் சென்ற தேர்தலில் மோடிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பொதுக்கோரிக்கை விடுத்தார்கள். அப்போதே அவர்களின் நடுநிலைமை அழிந்துவிட்டது. தனிமனிதர்களாக அவர்கள் அரசியலில் ஈடுபடுவதைப்போன்றதல்ல அது. அது எழுத்தாளர்களாக தங்களை முன்வைத்து அவர்கள் செய்தது. அப்போதே அவர்கள் கட்சி –தேர்தல் அரசியலில் ஒரு தரப்பாக ஆகிவிட்டனர். மோடியோ பாரதியஜனதாவோ அவர்களை எதிர்க்கட்சியாக மட்டுமே பார்க்கமுடியும். சமன்செய்து சீர்தூக்கிச் சொல்லும் சான்றோராக பேசும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர்//

கலவரங்களின் மூலம் ஆட்சியை பிடிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் மோடி தலைமையை எதிர்ப்பதை தவிர நடுநிலையாளர்களுக்கு வேறு பணி உள்ளதா? மோடியை எதிர்த்தால் காங்கிரசுக்கு ஆதரவானவர்கள் என்பது இருபடித்தானது இல்லையா? மூன்றாவது குரலுக்காக சாட்டை சுழற்றும் நீங்கள் சமூகத்தின் மனசாட்சியாக இருக்கும் சில எழுத்தாளர்கள் மோடி அரசை எதிர்த்தால் சான்றோராக இருக்கும் தகுதி இழந்து விடுகிறார்கள் என்பது எப்படி? விருதை திருப்பியளிக்கும் எதிர்ப்பு என்பது வெறும் அடையாள ரீதியிலான எதிர்ப்பு என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் செய்ததால் தற்போது சர்வதேச கவனம் கிடைத்திருப்பது பயன் இல்லையா? இது போன்ற கவனம் கிடைப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் செய்ய வேண்டியிருக்கும் இந்தியாவில்? சார்த்தர் என்ன பயனுக்காக நோபல் பரிசை நிராகரித்தார்? தாகூர் என்ன பலனுக்காக நைட் பட்டத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து திருப்பியளித்தார்?

//இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில் மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல்கும்பல்தான் இது. சென்ற ஆட்சிக்காலத்தில் அவர்களை அண்டிவாழ்ந்து லாபங்களை அடைந்தவர்கள், இப்போது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் என்றே பாரதிய ஜனதா இதை நோக்குகிறது//

‘மோடியின் அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில்’ என்று குறிப்பிட்டாலும் அதையே நீங்களும் வழிமொழிகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். தற்போது வரை 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் விருதை திருப்பியளித்திருக்கிறார்கள். அனைவருமே, ‘சென்ற ஆட்சிக்காலத்திற்கு ஆதரவராக இருந்தனர்’, ‘அரசியல் காரணங்களுக்காக’ தான் என்பதை எப்படி எவ்வித ஆதாரமும் இல்லாமல் உங்களால் கூற முடிகிறது? (இப்படி கேள்வி வரும் என்று தான் முன்னெச்சரிக்கையாக பாஜகவை துணைக்கு அழைத்திருக்கிறீர்களா?) அந்த 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்திருக்கிறீர்களா? நாளைக்கே உங்களுக்கு சாகித்ய அகாடமியோ அல்லது ஞான பீடமோ கிடைத்தால் உங்களின் எழுத்துக்களுக்காக அன்றி இந்துத்துவ ஆளும் அரசை அண்டி வாழ்ந்ததால் தான் கிடைத்தது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

//திமுகவிடம் பலமுறை தனிப்பட்ட முறையில் மன்றாடியதாகவும் தலைமை சொல்லவேண்டும் என எம்பிக்கள் சொன்னார்கள் என்றும் தலைமை அவ்விஷயத்தைப் பேசவே விரும்பவில்லை என்றும் அநத காங்கிரஸ் முக்கியஸ்தர் சொல்லி வருந்தினார். இங்கே ஒரு பஞ்சாயத்துத்தலைவர் கூட ராஜினாமா செய்யவில்லை. உண்மையில் ராஜினாமா மூலம் எதிர்ப்பைத்தெரிவிப்பதற்கான மிகச்சரியான இடம் அதுதான்//

மொத்த கட்டுரையில் நான் உடன்படும் ஒரே விஷயம் இது தான். ஆனால் குஜராத் இனப்படுகொலை முதல் ஈழப்படுகொலை வரை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் தான் விருதை திருப்பியளிப்பவர்களையும் ஆதரிக்கிறார்கள், திருப்பியளிப்பவர்களை இழிவுபடுத்துவதையும் எதிர்க்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

//இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில் மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல்கும்பல்தான் இது…

கூட்டம் கூடுவது, கோஷமிடுவது, சேர்ந்து செயல்படுவது, எல்லாரும் செய்வதற்கக ஒன்றைச்செய்வது, பொதுவான குரல்களை தானும் எதிரொலிப்பது போன்றவை எழுத்தாளனுக்குரிய செயல்கள் அல்ல என்பது என் எண்ணம்…//

ஒரே கட்டுரையில் உள்ள மேற்கண்ட இரு வாக்கியங்களுக்கும் உள்ள முரண்பாட்டை உணர முடியவில்லையா? எது பொதுவான குரல்? ஆட்டுமந்தைகளை போல மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஓட்டளித்து மதவெறியர்களையும் சாதிவெறியர்களையும் பதவியில் அமர்த்துவதா? அல்லது வெகு ஜன மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஒரு சில எழுத்தாளர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு விருதை திருப்பியளிப்பதா?

//எம்.டி.வாசுதேவன் நாயரோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, யு.ஏ.காதரோ, புனத்தில் குஞ்ஞப்துல்லாவோ எம்.முகுந்தனோ எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். சச்சிதானந்தனைச் சுட்டிக்காட்டி எம்.டி.வாசுதேவன் நாயரை எவரும் பிழைப்புவாதி என அங்கே வசைபாடவுமில்லை. நான் சொல்லவிழைவது அதை மட்டுமே//

எனக்கும் விருதை திருப்பியளிக்காத எழுத்தாளர்களை வசை பாடுவதில் உடன்பாடில்லை தான். ஆனால் திருப்பியளித்த எழுத்தாளர்களை ‘வெறும் அரசியல் கும்பல்’, ‘அண்டிப்பிழைத்தவர்கள் விசுவாசம் காட்டுகிறார்கள்’ என்று இழிவு படுத்துவது ஏன் என்பதே என் பிரதான கேள்வி ?

இப்படிக்கு
ராஜகோபால்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,

நான் தங்களை வசை பாடுவதாக நீங்கள் எழுதியிருந்ததாக நண்பர் சொன்னார். எந்த context இல் அப்படி சொன்னீர்கள் என தெரியவில்லை. தினமணி பத்தியே என் வாரம் முழுவதையும் எடுத்துக் கொள்கிறது. எப்போதாவது ஃபேஸ்புக்கில் தங்களின் எழுத்தரசியலின் காந்திய சமன்வய முரணியக்கத்தை கிண்டலடிப்பதைத் தாண்டி தங்கள் மீது வசை பாடுவதெல்லாம் இல்லை. ’இழிமகன்கள், தெருப்பொறுக்கிகள், குண்டர்கள் லும்பன்கள் ’ இத்யாதி அடைமொழிகள் கொண்ட காந்திய ஞானமரபுடன் உரையாடுவதிலோ அல்லது வசைபாடுவதிலோ என்ன சுவாரசியம் இருக்கமுடியும்? எனவே அவ்வப்போது வினவு கட்டுரைகளை கிண்டலடிப்பது போலவே தங்கள் காந்திய வினவு கட்டுரைகளையும். குறிப்பாக தங்கள் ‘இந்துத்துவ லும்பன்கள்’ குறித்த கட்டுரைகள். நன்றாகவே இருக்கின்றன.

பணிவுடன்
அநீ

ஜெமோ

ஈழப்போரின்போது திமுகவினர் ராஜினாமா செய்யவில்லை என்று எழுதிய நீவிர் செய்தது என்ன என்று அறியவிரும்புகிறேன். நீர் என்ன செய்தீர் என நாடறியும். வெட்கமாக இல்லையா?

கண்ணன்

**

அன்புள்ள நண்பர்களுக்கு,

இந்த அரசியல் விவகாரத்தில் என்ன நிகழும் என்பதர்கு மேலே குறிப்பிட்ட கடிதங்களே சான்று. பாருங்கள், முதல் கடிதம். பாரதிய ஜனதா இந்த எழுத்தாளர்களை எப்படிப் பார்க்கும் என்று நான் சொன்னதை நான் அந்த எழுத்தாளர்களை அப்படிப்பார்க்கிறேன் என்று ‘புரிந்துகொண்டு’ எழுதிப்பட்டிருக்கிறது.

மூன்றாம் கடிதம் இன்னும் சுத்தம். நான் ஈழப்போரில் என்ன சொல்கிறேன் செய்திருக்கிறேன் என்பதல்ல பிரச்சினை. உடலும் உள்ளமும் உருகிக்கொந்தளித்தவர்கள் திமுகவினர் . அவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதே கேள்வி. ராஜினாமாவும் திருப்பியளிப்பதும் எல்லாம் இலக்கியவாதிகளுக்கு மட்டும்தானா என்பதே கேள்வி

இந்த வகையில்தான் இங்கே விவாதங்கள் நிகழ்கின்றன. மாபெரும் வெட்டிவேலை. ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இங்கே நிகழ்வது தங்கள் சொந்தக்கணக்குகளைத் தீர்க்கும் அரிப்பு மட்டுமே. பாருங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அதிகராபூர்வ தரப்பு வெளியாகியிருக்கிறது, சாகித்ய அக்காதமி விருதுகளையோ பரிசுகளையோ திருப்பியளிக்கவேண்டியதில்லை என்று

அந்த அமைப்பின் அதிகராபூர்வ பொறுப்பில் இருக்கும் இரு ஆசாமிகள் கருப்பு கருணா, ஆதவன் தீட்சண்யா விருதை திருப்பியளிக்காத எழுத்தாளர்க்ளை கீழ்த்தரமாக வசைபாடுகிறார்கள். விருது ’வாங்கியவர்’கள், கோழைகள் என்கிறார்கள். அந்த அமைப்பு ஏன் பதில் சொல்வதில்லை

இவர்களின் இலக்கு முக்கியமாக இதே அமைப்பில் உள்ள இவர்கலின் ‘தோழரான’ சு.வெங்கடேசன். அவருக்கு விகடன் மூலமாக சமீபத்தில் [சந்திரஹாசம் என்னும் நூல் வழியாக] கிடைத்திருக்கும் பிராபல்யம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகள்தான் செயல்திட்டம். மேலாண்மை பொன்னுச்சாமி நோயுற்றிருக்கிறார். கட்சி நிதியுதவி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார் என்று கேள்வி. செய்யும் நிலையில் கட்சி இல்லை. லட்சரூபாய் பரிசை அவர் எங்கே திருப்பியளிக்கப்போகிறார்? டி செல்வராஜ் எப்படி திருப்பிக்கொடுக்கமுடியும் அவரது பொருளாதார நிலையில். அது தெரிந்தே போடப்படும் அடி இது. நோக்கம் உட்கட்சி அரசியல்.

இதையெல்லாம் ஏதோ தார்மீக எழுச்சி என்றெல்லாம் எவரேனும் நம்பினால் நம்பலாம். விரல்சூப்பும் ப்ழக்கம் ஒருவயதில் நின்றுவிடுவதே அழகு. அப்படியே தொடர்ந்தால் அது ஒரு மனநோய்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சஹ்யமலை மலர்களைத்தேடி -1

$
0
0

சென்ற ஆண்டு ஜூன்மாதம் கே.ஜே. அசோக் குமார் பூனாவுக்கு அழைத்திருந்தார். பூனா அருகிலிருக்கும் மலர்ச்சமவெளி பற்றி கிருஷ்ணன் இணையத்தில் தேடி சஹ்யாத்ரியில் உள்ள மலர்ச்சமவெளியை கண்டுபிடித்தார்.ஒரு பயணம் ஏற்பாடுசெய்யலாம் என்று எண்ணி பலவகையிலும் திட்டமிட்டோம். அதற்குள் நாட்கள் நகர வேறு பயணங்கள். இம்முறை கோடை முடிந்து பருவமழை தொடங்கியதுமே மீண்டும் மலர்ச்சமவெளிப்பயணம் பற்றிய திட்டம் மேலெழுந்தது. சட்டென்று முடிவுசெய்து கிளம்பிவிட்டோம்

நான் 13 ஆம் தேதியே கிளம்பி பெங்களூர் வந்துவிட்டேன். நண்பர் ஷிமோகா ரவி வீட்டில் தங்கியிருந்தேன். குழுமத்திலுள்ள நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். திருமூலநாதனும் கிருஷ்ணனும் கிருஷ்ணபிரபாவும் ஏ.வி .மணிகண்டனும் வந்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தோம். மாலையில் ஈரோடு கிருஷ்ணனும், திருப்பூர் ராஜமாணிக்கமும் திருப்பூர் கதிரும் கோவை ராதாகிருஷ்ணனும் ரயிலில் வந்தனர். சென்னை நண்பர் காந்திராமன் சற்று பிந்தி வந்தார். இரவு 11 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம்.

காலை ஐந்தரை மணிக்கு காரில் பூனா நோக்கி கிளம்பினோம். எங்கள் திட்டமென்பது காரில் செல்லும் வழியில் உள்ள முக்கியமான சில இடங்களை மட்டும் பார்த்துவிட்டு சதாரா சென்று அங்கிருந்து மலர்ச்சமவெளி. முதலில் சித்ரதுர்க்கா கோட்டையை அடைந்தோம். அசோகவனம் நாவலில் சித்ரதுர்க்கா ஒரு முக்கியமான இடம். ஆகவே இருமுறை முன்னரே வந்து பார்த்திருக்கிறேன்.


தென்னிந்தியாவில் வெல்லப்படவே முடியாத கோட்டை என்று சித்ரதுர்க்கா சொல்லப்படுகிறது.அசோகர்காலத்திலிருந்தே இந்த பெரும்பாறைகள் அடர்ந்த குன்று முக்கியமான ஓர் இடமாக இருந்துள்ளது. ஒரு பாறைமேல் புடைப்புச்சிற்பமாக வர்த்தமான மகாவீரரின் சிலை உள்ளது. சமணக் கல்வித்தலமாகா இருந்துள்ளது என்பதற்கு அருகே கிடைத்துள்ள சில கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. பின்னர் ராஷ்டிரகூடர்களும் கீழைச்சாளுக்கியர்களும் இக்குன்றின்மேல் காவலரண்களை நாட்டியிருந்தனர். இது ஒரு ராணுவமையமாகவே இருந்திருக்கிறது. மண்ணாலான கோட்டை ஒன்று இதன் மேல் இருந்துள்ளது.

விஜயநகரம் தென்னகத்தை முழுதும் ஆளத்தொடங்கியபோது அவர்களின் பாளையக்காரரான வால்மீகி குலத்தைச் சேர்ந்த திம்மண்ண நாயக்கர் என்ற சிற்றரசரால் சித்ரதுர்க்கா கோட்டை கட்டப்பட்டது. 1565 ல் தலைக்கோட்டை போரில் விஜயநகரம் வீழ்ச்சி அடைந்தபோது சித்ரதுர்க்கா நாயக்கர்கள் சுதந்திர அரசாக பிரகடனம் செய்துகொண்டனர். பின்னர் ஹைதர் அலியால் 1779ல் மதகரிநாயக்கர் தோற்கடிக்கப்பட்டு கோட்டை கைப்பற்றப்படும்வரை நாயக்கர் ஆட்சி இங்கே நீடித்தது. கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் நீடித்த நாயக்கர் ஆட்சியின் அடிப்படைக் காரணம் வெல்லமுடியாத இந்தக்கோட்டைதான்.

பல அடுக்குப் பாதுகாப்பு அமைப்பு கொண்டது சித்ரதுர்க்கா. இரு வெளிக்கோட்டைகள் மொத்த சித்ரதுர்க்கா நகரையும் சூழ்ந்து இருந்திருக்கின்றன. இன்று வாயில்கள் மட்டுமே உள்ளன. உள்ளே நான்கு சுற்றுகளாக வலுவான கற்கோட்டைச்சுவர்கள் உள்ளன. ஒவ்வொரு வாசலுக்கு முன்னாலும் ப வடிவில் கோட்டை மடிந்துசெல்கிறது. எந்தக்கோட்டைக்கதவையும் பத்தடி தூரத்திலிருந்தே அணுகமுடியும். எனவே யானைகளையோ தண்டுகளையோ கொண்டுவந்து மோதம்முடியாது.

உள்ளே செல்லும் பாதை மடிந்து மடிந்து செல்கிறது. இருபக்கமும் உள்ள கோட்டைச்சுவர்களின் இடுக்குகள் வழியாக அம்புகளும் குண்டுகளும் கொண்டு உள்ளே வரும் எதிரியைத் தாக்கமுடியும். கணிசமான இடங்களில் ஒருவர் ஒருவராகவே உள்ளே போகுமளவுக்கு சிறிய வழிகள் அமைந்துள்ளன. ஹைதர் அலி கோட்டையைத்தாக்கியபோது ஒபாவா என்ற தீரப்பெண்மணி உணவருந்தச் சென்ற தன் கணவனுக்காக அங்கே காவலிருந்தாள். அப்போது சிறிய பாறை இடைவெளி வழியாக ஹைதர் அலியின் படைகள் உள்ளே வருவதைக் கண்டு தன் கையில் இருந்த வேல்கம்பு போன்ற குச்சியால் தன்னந்தனியாக ஏராளமானவர்களைக் கொன்றாள். அவளுக்கு சித்ரதுர்க்கா நகர் நடுவே சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சித்ரதுர்க்கா ஒரு வரலாற்று மையம் என்றவகையில் கற்பனையைத் தூண்டக்கூடிய இடம். அத்துடன் அந்த நிலப்பகுதி நம்முல் கனவை எழுப்புவது. ஒருவகையான பிரமிப்பு நிலையிலேயே சித்ரதுர்க்கா கோட்டையை சுற்றிப்பார்க்க முடியும். கண்ணெட்டிய தொலைவு வரை எழுந்து எழுந்து நிற்கும் மாபெரும் பாறைகள். அவற்றைச் சுற்றி வளைத்துச்செல்லும் கற்கோட்டைகள். அவற்றுக்குமேல் மணிமுடி போல மண்டபங்கள்.

உள்ளே பல கோயில்கள் உள்ளன. வனசங்கரி ஆலயம் அவர்களின் போர்த்தெய்வம். குகைக்குள் உள்ள கருவறைக்குள் முகம் மட்டுமே ஆக நிறுவப்பட்டுள்ள ஏகவீர அன்னை நாயக்கர்களின் குடித்தெய்வம். படிகள் ஏறிச்சென்று ஒற்றைப்பாறைமேல் அமைந்த சிவன்கோயிலைப் பார்க்கமுடியும். லிங்காயத்துக்களின் புகழ்பெற்ற மடமான முருகராஜேந்திர மடாலயம் அங்கே இருந்துள்ளது. ஹைதர் அலி கோட்டையை கைப்பற்றும் வரை முக்கியமான கல்விநிலையமாகச் செயல்பட்டிருக்கிறது.

எந்தப்பக்கம் விழி திருப்பினாலும் கற்பாறைகளும் கோயில்களும் கோட்டைகளுமகாத் தெரியும் சித்ரதுர்க்கா ஒரு காலகட்டத்தின் பெருநகரம். மலையுச்சியில் உள்ள பறக்கும் நகரம் என்று சொல்லலாம். மண்ணால் ஆன அரண்மனைகளும் வீடுகளும் ஏராளமாக இருந்துள்ளன. பிரிட்டிஷார் இதைக்கைப்பற்றிய பிறகு கைவிடப்பட்டு மெல்ல இடிந்து அழிந்துவிட்டது. கற்கட்டுமானங்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன.

ஹவேரி என்னும் ஊரைக்கடந்து செல்லும்போது நகருக்குள்ளேயே இருந்த சித்தேஸ்வரா கோயிலைப் பார்த்தோம். அழகாகப் பராமரிக்கப்படும் இக்கோயில் சேதமில்லாமல் எஞ்சியிருக்கிறது. சிறிய அழகிய கட்டுமானம். சாளுக்கிய – ஹொய்ச்சாள கோயில்களுக்குரிய நகைபோன்ற வடிவம். கணுதோறும் நுணுக்கமான செதுக்குவேலைகள். 12 ஆம் நூற்றாண்டில் மேலைச்சாளுக்கியர்களால் கட்டப்பட்டது இது. சாளுக்கியர் கட்டிடக்கலைக்குரிய வட்டமான தட்டுகளை அடுக்கியதுபோன்ற தூண்கள் கொண்ட மண்டபகும் சித்திரச்செதுக்குகள் கொண்ட விதானமும் கொண்டது


இது வைணவக்கோயிலாக இருந்துள்ளது. பின்னர் சமணர்கள் இதை விரிவாக்கிக் கட்டியிருக்கிறார்கல். சமணர்களிடமிருந்து வீரசைவர்களால் எடுக்கப்பட்டு சிவன் கோயிலாக ஆக்கப்பட்டது. ஆனால் மூன்றுதெய்வங்களுமே ஒரே சமயம் வழிபாட்டில் இருந்திருக்கின்றன. இப்போது நரசிம்மரும் சிவனும் கருவறைகளில் இருக்கிறார்கள்.

மாக்கல்லால் ஆனது என்றாலும் இது ஹளபீடு கோயில்களில் உள்ளது போன்ற சிற்ப அற்புதங்கள் கொண்டது அல்ல. கோயிலின் கட்டமைப்பின் அழகே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. சித்தேஸ்வர ஆலயத்தின் விதானத்தில் உள்ள ஒன்பது அன்னையரின் சிலைத்தொகுதி அபூர்வமானது. அன்னையர் நடனமிட்டுக்கொண்டிருக்கின்றனர். நடனமிடும் பிராமியும் கௌமாரியும் வராஹியும் ஆச்சரியமூட்டினர்

சிர்ஸி செல்லும் வழியில் சகஸ்ரலிங்கம் என்னும் இடத்தை பார்த்தோம். 1678-1718 காலகட்டத்தில் சிர்ஸியை ஆண்ட சதாசிவராயர் என்னும் அரசரால் அமைக்கப்பட்டவை இவை. ஷால்மாலா ஆற்றின் நீர்ப்பெருக்கின் உள்ளே நூற்றுக்கணக்கான சில்வலிங்கங்களும் நந்திகளும் யானைகளும் நதிப்பாறைகளிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கன்னங்கரிய பாறைகள். முந்நூறாண்டுக்கால வெள்ளபெருக்கால் அவை பலவகையாக உடைந்தும் இடம்மாறியும் சிதறிப்பரந்து கிடக்கின்றன.

நீரில் இறங்கி குளித்தபடி சென்று அக்கற்சிலைத் தொகுதியை பார்த்தோம். மர்மமான ஓர் இடம் என்னும் உணர்வு ஏற்பட்டது. ஆற்றில் சிலவகையான சடங்குகள் செய்யப்பட்டிருக்கலாம். வீரசைவ மரபுக்குரிய ரகசியச்சடங்குகள். கம்போடியாவில் ஆங்கோர்வாட் அருகிலேயே சஹஸ்ரலிங்கா என்ற பேருள்ள ஓர் இடம் உள்ளது. அதுவும் இதேபோன்ற சிவலிங்கங்கள் நீருக்குள் செதுக்கப்பட்ட இடம்தான். வேறெங்கும் இந்த அமைப்பு இல்லை. இவற்றுக்கிடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராய்கிறார்கள்

இரவு ஒன்பது மணிக்கு ஹுப்ளி வந்து ஒரு விடுதியறையில் தங்கினோம். இன்று மிக நீண்ட பயணம். களைப்பூட்டுவதும்கூட. இதை எழுதும்போது கைகள் சோர்கின்றன.

மேலும் படங்கள் பார்க்க

Chitradurga Fort


Sirsi Sahasralinga

Haveri_Siddhesvara_Temple

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு

$
0
0

1

தமிழகக் கல்வி வளர்ச்சிக்கு உண்மையிலேயே பெரும்பாடுபட்டவர் நெ.து.சுந்தரவடிவேலு. அவரது கனவையும் உழைப்பையும்தான் காமராஜர் தன் ஆயுதமாகக் கொண்டிருந்தார். ஏதேதோ அரசியல்தலைவர்களின் , சாதித்தலைவர்களின், மதப்பரப்புநர்களின் பெயர்களைச் சொல்லி அவரில்லேன்னா நான்லாம் மாடும் மேச்சிட்டிருந்திருப்பேன் என்று சொல்லும் தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் அறியாத பெயர் அவருடையது.

தமிழகக் கல்வித்துறைச் செயலர் என்னும் உயர்பதவியில் இருந்த சுந்தரவடிவேலு ஐரோப்பாவின் சர்ச் ஸ்கூல் , கம்யூனிடி ஸ்கூல் போன்ற அமைப்புகளை நேரில் சென்று ஆராய்ந்து அந்த பாணியில் தமிழகத்தில் உருவாக்கிய பஞ்சாயத்துப் பள்ளிகளால்தான் இங்கே கல்விப்புரட்சி ஏற்பட்டது. அதற்காக தன் முழுவாழ்க்கையையும் அர்ப்பணித்தார். பின்னர் வந்த திராவிட ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மறைக்கவும்பட்டார்.

சுந்தரவடிவேலு குறித்து தொடர்ந்து எழுதிவந்துள்ளேன். அனைத்து பெருமைகளையும் அரசியல்வாதிகளுக்கு அளித்துவிடாமல் உண்மையிலேயே அரும்பணியாற்றிய அதிகாரிகள், அறிஞர்களை நினைவுகூரும்போதே நாம் அவர்களைப்போன்றவர்கள் உருவாக வாய்ப்பளிக்கிறோம்

சுந்தரவடிவேலு நினைவாக வழங்கப்படும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அவரது நினைவைப்போற்ற முன்வந்த விழாக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33

$
0
0

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 4

தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப் பரப்பி காம குரோத மோகம் என்னும் மூன்று பகடைக் காய்களை ஆடும் அந்த ஆட்டம் முற்றிலும் நிகர் நிலையில் முடியவேண்டும் என்பது அளகாபுரியின் தெய்வ ஆணை. அது குலையுமென்றால் நிகர்நிலையழியும் .

செந்நிறமும் கருநிறமும் பொன்நிறமும் கொண்ட காய்களை மாறி மாறி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கையில் சித்ரரேகை இறுதியாக உருட்டிய பகடையின் எண் மேலெழுந்து குபேரனை வென்றது. புன்னகையுடன் “அரசே, வென்றேன்” என்றபோது திகைத்து எழுந்து குனிந்து காய்களை பார்த்தான். “எங்கு பிழைத்தது நம் கணிப்பு?” என்று அறியாது திகைத்தான். “நானறியேன். என் வழக்கப்படி ஆடினேன்” என்றாள் அரசி.

காலமும் காலம் கடந்ததும் ஆகி எங்கும் நிற்கும் அனைத்துமான ஒன்றை அறிந்த நாரத முனிவரை அழைத்து வர ஆணையிட்டான் செல்வத்துக்கிறைவன். முனிவர் வந்து வணங்கி “அப்பகடைக் களத்தை காட்டுக!” என்றார். கூர்ந்து நோக்கி “அரசே, உங்கள் விழி தொடாத பிறிதொரு காய் ஒன்று இங்கு உருண்டுள்ளது” என்றார். “இது செல்வத்தின் களம். காம குரோத மோகம் என்னும் மூன்று காய்கள் மட்டுமே இங்கு உருள்பவை” என்றான் குபேரன்.

கையால் தொட்டு எடுத்துக்காட்டி “வண்ணமோ வடிவமோ அற்ற இந்தக் காய் உருண்டுள்ளது. இதன் எண்களும் கலந்து இதன் ஆட்டம் நிகழ்ந்துள்ளது” என்றார் நாரதர். ஒளியை வெட்டி செய்தது போலிருந்த அப்பளிங்குக் காயை நோக்கி “இது எதனால் ஆனது?” என்றான் குபேரன். “காமமும் குரோதமும் மோகமும் நிறைக்க ஒண்ணாத விடாய் ஒன்றால் ஆனது. அருந்தவ முனிவர் அடைந்து அருந்தும் அமுதம் மட்டுமே அணைக்கும் தழல் அது” என்றார். “இக்களத்தில் எங்ஙனம் வந்தது?” என்றார். அரசி திகைத்து “நான் ஒன்றும் அறியேன்” என்றாள்.

“முனிவரே, இது பொருள் விழைவுகளின் பெருவெளி மட்டுமே. பொருளெல்லாம் பொன்னால் அளவிடப்படுவதென்பதனால் பொன்னால் நிறைக்கப்படாத விழைவுகள் என இங்கு இருக்க முடியாது.” “பொன் தொடா விழைவென்பது மெய்மைக்கும் முழுமைக்குமானது அரசே” என்றார் நாரதர். “எவர் கொண்டுள்ளார் இங்கு அவ்விழைவை?” என்றான் குபேரன்.

நாரதர் “சூரியன் இல்லா உலகு இது. தன்னொளி கொண்டதுபோல் இங்குள்ள ஒவ்வொன்றும் சுடர் விடுபவை. எனவே நிழலற்றது அளகாபுரி என்று நீ அறிவாய். பொன்னொளி சென்று மறையும் ஆழமொன்றை தன்னுள்ளே கொண்டவர்கள் நிழல் சூடி இருப்பார்கள். அவர்களை தேடிக் கண்டடைய வேண்டும்” என்றார்.

தன் புஷ்பக விமானத்தில் ஏறி குபேரன் அளகாபுரியின் தெருக்கள்தோறும் ஊர்ந்தான். அங்கே பொற்தூண்கள் சூழ்ந்த பேரிசை மண்டபத்தில் பொன் முரசுகள் ஒலிக்க பொற்பட்டாடை அணிந்து நடனமிட்டுக் கொண்டிருந்தனர் கலைஞர்கள். சூழ்ந்து அமர்ந்து அதை நோக்கி மகிழ்ந்திருந்த தேவர்களின் நடுவே அவர்கள் அறியாது நுண் வடிவை நோக்கியபடி அவன் சுற்றிவந்தான். அங்கு தரையில் கரிய ஐந்து வடிவங்கள் கிடப்பதை கண்டான். அந்நிழல் வடிவங்கள் மேல் பொன்வடிவென அமர்ந்த ஐவரை அணுகி அவர்கள் முன் சினம் கொண்டு எரிந்த விழிகளுடன் தோன்றினான்.

“எங்கு வாழ்கிறீர்களோ அங்குள்ளவற்றால் நிறைவுறும் விழைவுகளே உண்மையானவை. இங்கு நீங்கள் கொண்டுள்ள விழைவு பொன்னால் நிரப்பப்படாதது என்பதனால் பொருந்தா இருப்பு கொண்டீர்…” என்றான். “இப்போதே என்னுலகிலிருந்து விலகுங்கள்!” அஞ்சி எழுந்து கைகூப்பி “இவ்விழைவு எங்களுள் ஊறுவது எங்கள் பிழையால் அல்ல. இவ்வண்ணம் இதை அமைத்த தெய்வங்களின் பிழை” என்றாள் வர்கை.

“ஆம்” என்று பெருமூச்செறிந்து குபேரன் சொன்னான் “பொருள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு துளி நீர் இருப்பதுபோல. பொருட்கள் தம் வடிவம் இழந்து நீர்மை கொள்ள விழைவது அதனால்தான். காலவெளியில் முடிவின்றி இருக்கவிடாமல் பொருள்களை அலைவுறச் செய்யும் அகம் அதுவே. அத்துளி எழுந்தபின் இங்கு நீங்கள் இருக்க இயலாது. உங்கள் உளம் விரும்புவது பிறிதொன்று. இவ்விழைவுடன் நீங்கள் எங்கு எழ வேண்டுமோ அங்கு செல்க!” என்றான்.

பொன்னின் தலைவனின் சொற்களைக் கேட்டு மறுமொழி உரைப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து ஐந்து எரியும் மீன்கள் என விழுந்து பாரத வர்ஷத்தின் தெற்கே மகாநதிக் கரையில் இருந்த தேவாரண்யம் என்னும் பசும் பெருங்காட்டில் இருந்த ஐந்து சுனைகளில் அலையெழுப்பி மூழ்கினர். குளிர்ந்து தேவகன்னியராக எழுந்தனர்.

ஐந்து தேவகன்னிகள் குளிர்ச்சுனைகளில் இருந்து எழுந்ததைக் கண்டு, அங்கு உலாவிய மான்கள் விழிசுடர்ந்தன. யானைகள் துதிக்கை நீட்டி நீள்மூச்செறிந்தன. பறவைகள் கலைந்து எழுந்து வாழ்த்தொலி கூவின. வான் நோக்கும் ஆடிகள் போன்ற அகஸ்தியம், சௌஃபத்திரம், பௌலோமம், காரண்டமம், சுப்ரசன்னம் என்னும் ஐந்து சுனைகள் ஆடி தன் பாவையை உமிழ்வது போல தம் பரப்பிலிருந்து அவர்களை ஈன்றன.

இலை செறிந்த மரக்கிளைகளால் முற்றிலும் வான் மறைக்கப்பட்ட தேவாரண்யம் பகலிலும் இருண்டு குளிர்ந்து தன்னுள் தான் மறைந்து கிடந்தது. அங்கு வாழ்ந்த விலங்குகள் தங்கள் விழியொளியாலேயே நோக்கின. தடாகங்கள் தங்கள் ஆழங்களிலிருந்தே ஒளியை கொண்டிருந்தன. உச்சிப்பொழுதில் அத்தடாகத்தின் உள்ளிருந்து எழுந்த தேவகன்னிகள் அது இரவென்றே எண்ணினர்.

தங்கள் விழியொளியால் அக்காட்டை நோக்கியபடி அதில் ஒழுகி அலைந்தனர். இலை நுனிகளைத் தொட்டு அசையவைத்தனர். விம்மி காற்றில் நின்ற மலர்களைத் தொட்டு மலர வைத்தனர். உள்ளிருந்து அதிர்ந்த முட்டைகளைத் தட்டி விரிசல் விட வைத்தனர். ஈரச்சிறகுகளுடன் கோதுமை அலகுடன் வெளிவந்து மலர்க்காம்புக் கால்களை எடுத்து வைத்து தள்ளாடி உடல் சிலிர்த்த குஞ்சுகளின் மென்தூவிகளை விரல்களால் நீவி காயவைத்தனர். கிளைகளை உலுக்கி காற்றில் விளையாடினர். உதிரும் மலர்களை அள்ளி வழிந்த நீரோடைகளில் இட்டு நூலில்லா மாலையாக்கி மகிழ்ந்தனர்.

பின்பு பூத்த சரக்கொன்றை ஒன்றின் கீழ் பொன்மலர் பாயில் படுத்து இளைப்பாறினர். துயிலில் அவர்கள் அமராவதியின் ஒளி மிகுந்த தெருக்களை கண்டனர். அங்கு அவர்கள் கண்ட அத்தனை தேவர் விழிகளும் இமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் இதழ்கள் அனைத்திலும் விழைவு ஒரு சொல்லென ஓடிக் கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் பார்க்காத கணத்தில் அவர்களின் கால்கள் மண்ணை தொட்டன.

நடுவே உயர்ந்த மாளிகை உப்பரிகையில் அமர்ந்து தன் துணைவியுடன் நாற்களமாடிய இந்திரனின் அருகே இருபுறமும் இரு தெய்வங்கள் நின்றிருந்தன. சங்கும் சக்கரமும் ஏந்திய தெய்வம் வெண்ணிற ஒளி கொண்டிருந்தது. மான் மழுவேந்தி மறுபக்கம் நின்றிருந்தவனோ இருண்டிருந்தான்.

தேவியின் இருபுறமும் கரிய ஆடையுடுத்து விழிமணிமாலையும் தாமரையுமென ஒருத்தி நின்றாள். வெண்கலை உடுத்தி பொற்றாமரைகள் ஏந்தி நின்றிருந்தாள் ஒருத்தி. அவர்களின் களத்தில் பாம்புகளும் பறவைகளும் கருக்களாக அமைந்திருந்தன. அவற்றினூடாக சிற்றுருவம் கொண்டு தேவர்களும் மானுடரும் ஊர்ந்து கொண்டிருந்தனர்.

இனிய இசையொன்று கேட்டு அவர்கள் எழுந்தபோது காடு நிலவொளியில் ஊறி பளபளத்துக் கொண்டிருப்பதை வர்கை கண்டாள். “எடீ, எழுந்திருங்களடி!” என்று தன் தோழியரை தட்டி எழுப்பினாள். ஒவ்வொருவரும் எழுந்து “அமராவதிக்கு மீண்டுவிட்டோமா?” என்றார்கள். “ஆம், இது அமராவதியே” என்றாள் சமீசி.

“இல்லையடி, நிலவெழுந்துள்ளது” என்றாள் லதை. “ஒரு நிலவு இத்தனை ஒளியை உருவாக்குமா என்ன?” என்றாள் சௌரஃபேயி. “நிலவொளியென்றால் நிழல் விழவேண்டுமே! இங்கு ஒவ்வொன்றும் பளிங்கென மாறியுள்ளது. ஊன்விழி காணும் ஒளியல்ல இது” என்றாள் ஃபுல்புதை.

வர்கை “இங்குள ஒவ்வொன்றும் தன்னுளிருந்தே அவ்வொளியை கொண்டுள்ளது. தன்னொளி கொண்டவை மட்டுமே நிழலின்றி நிற்கமுடியும். எழுக! அது என்னவென்று பார்ப்போம்” என்றாள். அக்காட்டினூடாக விழி துழாவி அவர்கள் நடந்தனர். ஒளி கொண்டிருந்தன மரக்கிளைகள். பளபளத்தன இலைகள். சுடர்ந்தன மான் விழிகள். வெண் நெருப்பென அலைந்தன புரவிகளின் பிடரி மயிர்கள்.

தன்னருகே அதிர்ந்த இலையொன்றை சுட்டி “இவ்விலை ஒரு நாவென மாறி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறது” என்றாள் லதை. வர்கை அவ்விலையை நோக்கி தன் விழியை காதாக்கினாள். “அது காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொண்டுள்ளது” என்றாள். அக்கணமே அவர்கள் அனைவரும் அங்குள்ள அனைத்தும் அம்மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டனர்.

“காட்டின் கோடி நாக்குகளுக்கும் காயத்ரியை கற்றுத்தந்த முனிவர் எவர்?” என்றாள் வர்கை. “அங்கு எங்கோ அவர் எழுந்தருளியுள்ளார்” என்றாள் ஒருத்தி. மான் விழியொன்றை நோக்கி “இவை ஒரு திசை நோக்கி நிலைத்துள்ளன” என்றாள் வர்கை. “இங்குள விழிகள் அனைத்தும் அத்திசையை நோக்குகின்றன. ஆதலினால் அங்குளார் அம்முனிவர்.” அவ்விழிகள் சுட்டிய திசை நோக்கி தென்றல் சுமந்த புகைச்சுருள்களென அவர்கள் சென்றனர்.

அங்கே ஆலமரத்தின் அடியில் இலைச்சருகுகளால் கட்டபட்ட சிறு தவக்குடில் ஒன்றை கண்டனர். தொலைவிலிருந்து அதை நோக்கி கணித்தனர். தன் விழி மூடி அறிந்து மீண்ட வர்கை “அவர் பெயர் பூர்ணர். காசியப குலத்துதித்த அருந்தவ முனிவர். நூறாண்டு காலம் இங்கு தவம் செய்து தன் அரவுப்புற்றில் இருந்து நாகமணியை நெற்றிப்பொட்டிற்கு எடுத்து ஆயிரம் இதழ் அலரச்செய்தவர். இங்குள தண்ணொளி அவரது சகஸ்ரத்தில் எழுந்த பெருநிலவின் ஒளியே” என்றாள். “நான் அச்சம் கொள்கிறேனடி. சென்றுவிடுவோம்” என்றாள் லதை.

“இல்லையடி. நாம் தீரா விடாய் ஒன்றினால் இங்கு வந்துளோம். அதைத் தீர்க்கும் சொல் இவரிடமே உள்ளது போலும். இல்லையேல் நாம் இங்கு எழ வாய்ப்பில்லை” என்றாள் வர்கை. “வருக! அதை அவரிடமே கேட்போம்” என்று நால்வரும் எழ கை நீட்டி அவர்களை தடுத்தாள் வர்கை. “விழைவற்று எஞ்சாது முழுமைகொண்ட உள்ளத்தால் இவ்வொளியை அடைந்துள்ளார் இம்முனிவர். இவரை வென்று அச்சொல்லை அடைவது எளிதல்ல” என்றாள்.

“என்னடி செய்வது?” என்றாள் லதை. “நிகர் உலகொன்றை படைத்து திரிசங்குவை அங்கு அமர்த்தும் தவவலிமை கொண்டிருந்த விஸ்வாமித்திரரே நம்மவள் ஒருத்தி முன் காமம் கொண்டு அடிபணிந்த கதைகளை நாமறிவோம். மெய்த்தேடிகளென இவரை வெல்ல நெடுநாளாகும். காமினிகளென இவரை வளைக்க ஒரு நொடியே போதும்” என்றாள் வர்கை. “அத்தனை கதைகளிலும் அரும்படிவர் தவம் கலைந்தது நிகழ்ந்துள்ளது. ஆனால் தவம் கலைத்தவள் எதையும் பெற்றதில்லை” என்றாள் சௌரஃபேயி. “ஆம். இவர் தவம் கலைத்து நாம் அடைவதொன்றில்லை” என்றாள் சமீசி.

“இல்லையடி, முற்றிலும் சொல்லின்மை கொண்ட ஒருவர் அடையும் முழுமை இவர் கொண்டுள்ளது. இவர் வாய்திறந்து நமக்கு அருளவேண்டுமென்றால் இந்த இறைநிலை கலைந்தே ஆகவேண்டும். நமக்கு வேறு வழியில்லை” என்றாள் வர்கை. எண்ணி குழம்பியபின் வர்கையின் சொல்லை அவர்கள் ஐவரும் நோக்கினர். வர்கை “என்ன செய்வதென்று அறியேன். கடலென தவப்பேராற்றல் கொண்ட இவரை எங்ஙனம் வெல்வேன்?” என்று ஏங்கினாள். கண்மூடி நெஞ்சில் கைவைத்து “விண் உலாவியாகிய நாரதரே, உங்கள் அடிபணிந்து இதை கோருகிறேன். அருள்க!” என்றாள்.

இசை முழங்க அங்கு ஒரு மலர்மேல் தோன்றிய நாரதர் “சொல்க கன்னியே!” என்றார். “இவ்வருந்தவத்தோனை எப்படி வெல்வேன்?” என்றாள் வர்கை. “தவம் முதிரும்தோறும் முனிவரை வெல்வது எளிதென்று உணர்க! பேராவல் கொண்டு தவம் நாடி வரும் இளைஞன் ஒருவனை வெல்ல உன்னால் இயலாது. அவன் விழைவதனைத்தும் காலத்துக்கு முன்னாலெங்கோ உள்ளன என்பதால் ஒரு கணமும் பின்னால் திரும்பிப் பார்க்க மாட்டான்” நாரதர் சொன்னார்.

“ஆனால் இங்கு அமர்ந்து விழைவுகளை ஒவ்வொன்றாக உதிர்த்து தவத்தின் முடியேறி அமர்ந்திருக்கையில் இவர் இழந்ததே மிகுதி. எனவே ஒராயிரம் அழைப்புகளாக அவரது கடந்த காலம் பின்னால் விரிந்துள்ளது. கன்னியே, முள்முனையில் நெல்லிக்கனி என்று முழுமை கொண்ட தவத்தை சொல்கிறார்கள். அதைத் தொட்டு உருட்டுவது மிக எளிது. நீ சென்று அழைத்தால் திரும்பாமலிருக்க அவரால் இயலாது” என்றார் நாரதர்.

“அது முறையோ?” என்றாள் வர்கை. “இப்புவியில் தன் இயல்பான விழைவொன்றை தொடர்ந்து வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இங்குள்ள அனைத்தும் நுகர்கனிகளும் விளையாட்டுப் பொருட்களும்தான். பாதையில் துணைவரும் தோழமைகள் அவை. ஆனால் தன்னை ஒறுத்து தவநிலை கொண்டு இறையளித்த எல்லையைக் கடக்க உன்னும் ஒருவர் தெய்வங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். அவருக்கு இங்குள்ள அனைத்தும் எதிரிகள் என்றே ஆகும். விண்ணும் மண்ணும் அளிக்கும் அமுதங்கள் அனைத்தும் நஞ்சாகும்” என்றார் நாரதர்.

“அறிக! முழுமைதேடும் தவ முனிவர்கள் முன் நஞ்சு கொண்டெழ நாகங்களுக்கு ஒப்புதல் உள்ளது. விழைவை ஏந்திவந்து சூழ தேவர்களுக்கு ஆணை உள்ளது. காமம் சுமந்து முன் சென்று நிற்க தேவகன்னியர் கடமை கொண்டுள்ளார்கள். தெய்வங்களுக்கு உகந்ததையே நீ செய்கிறாய். செல்க!” என்றார். தலைவணங்கி “அவ்வண்ணமே” என்று சொல்லி அவள் ஒசிந்து நடந்து தன் நான்கு தோழியருடன் முனிவர் வாழ்ந்த தவக்குடிலுக்குள் நுழைந்தாள்.

அப்போது பூர்ணர் தன் உள்ளே எழுந்த ஒளிப்பெருவிழியின் நடுவே ஊசி முனையால் தொட்டு எடுக்கும் அளவுக்கு சின்னஞ்சிறிய கரும்புள்ளி ஒன்றைக் கண்டு அதை நெருங்கிக் கொண்டிருந்தார். அணுகும்தோறும் அது ஒரு பெரும் சுழியின் மையம் என்பதை உணர்ந்தார். சுழிமையத்தை நேர்கோட்டில் அணுக முடியாது. பல்லாயிரம் கோடி காதங்கள் அதற்கு சுற்றும் வளைந்து சென்றன. அகலத்தில் தொலைவும் அணுக்கத்தில் விரைவும் என்றான புரிசுழல் பாதையில் தானெனக் கொண்ட அனைத்தும் தெறித்து விலகி பின்னெங்கோ சென்று மறைய தனித்து பின் தனித்து பின் தனித்து தனித்திருப்பதென்பதும் பறக்க அவர் சென்று கொண்டிருந்தபோது மிகத்தொலைவில் எங்கோ ஐந்து விண்மீன்களை கண்டார்.

அவை மேலும் மேலும் என ஒளி கொண்டு அணுகி வந்தன. தன் போதத்தின் துளி ஒன்றைத் தெறித்து புரிசுழல்பாதையில் பின்னுக்கு அனுப்பி விழிகள் என்றாக்கி அவ்வெரிவிண்மீன்களை நோக்கவிட்டு முன்சுழல் பாதையில் தொடர்ந்தார். விழி திறந்த பூர்ணரைக் கண்டு வணங்கி நின்ற வர்கை “அருந்தவ முனிவரின் அடிகளை வணங்கினேன். இக்காட்டில் எழுந்த ஐந்து அரம்பையர்கள் நாங்கள்” என்றாள். “இத்தவக்குடிலில் உங்களுக்கென்ன வேலை? வெளியேறுங்கள்!” என்றார் பூர்ணர். “ஆலமர்ந்துள்ளதால் தங்களை ஆசிரியரெனக் கொண்டோம். தங்கள் அடி பணிந்து எங்கள் ஐயம் ஒன்றை தீர்க்கும் பொருட்டு வந்தோம்” என்றாள்.

“விலகுங்கள்! நான் புலன்ஒறுத்து அகம் அவித்து முதல்முழுமை நோக்கி சென்று கொண்டிருப்பவன்” என்றார் பூர்ணர். “அருளறிவு தேடி வரும் மாணாக்கர்களை விலக்குவது ஆசிரியருக்கு அழகல்ல. எங்கள் வினாக்களை எதிர் கொள்ளுங்கள்” என்றாள். “அதற்குரிய நேரம் இதல்ல. இது என் முழுமையின் தருணம்” என்றார் பூர்ணர். “தங்கள் முழுமை எங்கள் சொல்லால் கலையுமென்றால் அது அத்தனை நொய்மையானதா?” என்றாள் லதை.

“சொல்லெடுக்காதீர்கள். விலகுங்கள்…” என்று சினந்தார் பூர்ணர். “அவ்வண்ணமே விலகுகிறோம். ஆனால் எங்கள் ஐயங்களை இங்கு விட்டுச் செல்கிறோம். இங்கு அவை விளையாடட்டும்” என்று சொல்லி தன் குழல்சூடிய வெண்முல்லை மலர்களை அள்ளி தரையிலிட்டுவிட்டு திரும்பி தன் தோழியரை நோக்கி “வாங்களடி” என்றபடி தவக்குடிலை விட்டு வெளியே சென்றாள் வர்கை. பிறரும் தாங்கள் சூடிய மலர்களை உதிர்த்துவிட்டுச்சென்றனர்.

அம்மலர்களிலிருந்து அவர்கள் முளைத்தெழுந்தனர். ஐவரும் ஐநூற்றுவர் ஆயினர். காமம் கனன்ற விழிகள் விரிந்து அவரை நோக்கின. செவ்விதழ்கள் களியாடின. மென்முலைகள் எழுந்தமைந்து மூச்செறிந்தன. திகைத்த பூர்ணர் “உள்ளே வருக!” என்று அவளை அழைத்தார். அவள் சிரித்தபடி வந்து நின்றாள். “உங்கள் வினாக்களை கேளுங்கள்” என்றார் பூர்ணர்.

வர்கை தலைவணங்கி “தங்கள் அருள் கொள்ளும் நல்லூழ் கொண்டவளானேன். இது முதல் வினா” என்றாள். அவர் தலையசைக்க “முதல்நிறைவின்மை என்பது எது? எனென்றால் அதுவே வாழ்வைச் செலுத்தும் முதல் வினா” என்றாள். பூர்ணர் சினம் மின்னிய விழிகளுடன் திரும்பி அருகே நின்ற சௌரஃபேயியை நோக்க அவள் புன்னகையுடன் வணங்கி “எவ்வினாவின் முன் ஒருவன் தன் இறுதியை காண்கிறான்?” என்றாள்.

பூர்ணரின் நிலையழிவைக் கண்டு புன்னகைத்த சமீசி “எவ்விடையில் அவன் முதல்நிறைவை காண்கிறான்?” என்றாள். ஃபுல்புதை “எவ்விடையில் ஒருவன் வினாவென்பது பொய் என உணர்கிறான்?” என்றாள். லதை “எவ்வினாவுக்கு தன்னையே விடையென்று நிகர்வைக்கிறான்?” என்றாள்.

சினந்தெழுந்து “வெளியேறுங்கள்! இதை வினவவா இங்கு வந்தீர்கள்?” என்று பூர்ணர் கூவினார். இடை ஒசிந்து பற்களில் இளநகை கூட்டி நாவால் இதழ் நீவி வர்கை சொன்னாள் “எங்களை இங்கு கொண்டு வந்தமை வினாக்களே. இவ்வினாக்களை நிறைக்காமல் எங்கும் செல்லவியலாது நீங்கள்.”

கோடி யோஜனை தொலைவிலிருந்து எரிந்து வந்து விழுந்து அதிர்ந்து விழித்து உடல் விதிர்த்து அங்கு நின்றார் பூர்ணர். கடந்து வந்த வழி தோறும் மீண்டும் நடந்து சென்றாலொழிய அவ்வினாக்களுக்கு விடை அளிக்க முடியாதென்று உணர்ந்தார். கால் தளர்ந்து மீண்டும் ஆலமரத்து வேர்க்குவையில் அமர்ந்தார். வேர் பின்னி நிறைந்தது போல் வழிந்த சடை முடிக்கற்றையை அள்ளி தன் வெற்றுடலை மறைத்து கால் மடித்து அமர்ந்தார். பெருமூச்சுடன் கண்களை மூடி ஏங்கினார்.

பின்பு சீற்றம் கொண்டு பாதாள நாகமென அனல்சீறி விழி கனன்று “நீங்கள் அறிந்து இதை நிகழ்த்தவில்லை. என் முழுமைக்கு முன் வந்த தடைக்கற்கள் நீங்கள். ஆயினும் நீங்கள் இழைத்த பிழைக்கு ஈடு செய்தே ஆகவேண்டும். அகல்க! ஐவரும் ஐந்து முதலைகளென மாறி இங்குள ஐந்து தடாகங்களில் வாழுங்கள். காலம் உங்களை காற்று பாறையை என கடந்து செல்லட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

திகைத்த வர்கை “முனிவரே, உங்கள் தவம் கலைத்து எங்களுடன் களியாட்டுக்கு அழைக்கவே விழைந்தோம். களியாட்டன்றி பிறிதொன்றும் அறியாத தேவகன்னிகைகள் நாங்கள். பெரும்பிழை செய்துவிட்டோம்” என்றாள். “அகல்க! நீங்கள் விழைந்த வினாவிற்கு விடையுடன் எவன் வருகிறானோ அவனிடமிருந்து பெற்று மீள்க!” என்றார் பூர்ணர். “தேவ…” என்று லதை கை கூப்ப “இனி ஒரு சொல் தேவையில்லை” என்றார் பூர்ணர்.

ஐவரும் அழுத விழிகளுடன் தளர்ந்த காலடிகளுடன் திரும்பினர். “நீரிலும் இன்றி நிலத்திலும் இன்றி இனி எத்தனை யுகங்களடி!” என்றாள் சௌரஃபேயி. “எண்ணி எண்ணி விழிநீர் வழிய காத்திருப்பொன்றே வாழ்தல் என எஞ்சும் போலும்” என்றாள் சமீசி. நடந்து செல்கையிலேயே ஐவரும் முழந்தாளிட்டு மண்ணில் அமர்ந்து கை பரப்பி கால் பரப்பி முதலைகள் என ஆனார்கள். சிப்பியடுக்கியதுபோல் செதில் எழுந்து காரைப்பழம்போல் விழி உறுத்து வெண்பற்கள் எழுந்த விரிவாய் திறந்து தவழ்ந்து வால் திளைக்க சென்று அத்தடாகங்களில் இறங்கினர்.

அகத்தியத்தில் வர்கை இறங்கினாள் சௌஃபத்ரத்தில் சௌரஃபேயியும் பௌலோமத்தில் சமீசியும் காரண்டமத்தில் ஃபுல்புதையும் சுப்ரசன்னத்தில் லதையும் முதலைகள் ஆனார்கள். தவம் கலைந்த பூர்ணர் தன் தவக்குடில் விட்டிறங்கி தன் கைகளாலேயே சடை முடிகற்றைகளை பறித்து வீசி அருகில் இருந்த சுனையில் நீராடி எழுந்து தேவாரண்யத்தை விட்டு விலகிச் சென்றார். வடமலைக்கு சரிவில் ஏறி பனிமுடிகளை அடைந்து அங்கு தன் உடல் நீத்து பிறிதொரு பிறப்பெடுத்து அவர் தவம் தொடர்ந்தார்.

தேவாரண்யத்தின் இருண்ட காட்டில் வேட்டைக்கு வந்த வேடர்களையும் கானாட வந்த இளவரசர்களையும் தவம் கொள்ள வந்த முனிவரையும் அங்கு ஐந்து சுனைகளில் வாழும் பெரு முதலைகள் கவ்வி இழுத்து நீராழத்திற்கு கொண்டு சென்று உண்டன. கண்ணுக்குத் தெரிந்தும் காட்சியிலிருந்து மறைந்தும் விளையாடி உயிர் கொள்ளும் அந்த முதலைகளின் கதைகள் பரவியபோது தேவாரண்யத்தின் திசைக்கே எவரும் செல்லாமலாயினர். நூற்றாண்டுகளில் முட்புதர்களும் தழையும் வளர்ந்து தேவாரண்யம் ஒற்றைப் பெரும் பரப்பாக மாறி மூடியது.

பின்பு அக்கதைகளும் மறைந்தன. கதைகளால் மட்டுமே நினைவில் நிறுத்தப்படுபவை நிலங்கள் என்பதால் அந்நிலத்தையும் எவரும் அறியாதாயினர். அறியா நிலங்களைத் தேடி எவரும் வருவதில்லை என்பதனால் அந்நிலம் இல்லாமலாயிற்று. எங்கோ எவரோ தன் ஆழ் கனவில் மட்டும் கண்டு அஞ்சுவதாக மாறியது. ஐந்து விழிகளென குளிர்ச்சுனைகள். அந்நீர்பரப்பில் வால் அளைந்து கரை எழுந்து வாய் திறந்து நிற்கும் பெரு முதலைகள். ஒவ்வொரு கணமும் எண்ணி எண்ணி அவை விழி நீர் உகுத்துக் கொண்டிருந்தன.

மணிபூரக நாட்டிலிருந்து மலை வணிகர் குழாமுடன் இறங்கி பிரம்மபுத்ரையின் பெரும்பெருக்குக்கு வந்து படகிலேறி வங்க நாட்டை அடைந்து கலிங்கம் புகுந்து மகாநதியில் ஒழுகிய அம்பிகளில் ஏறி தண்டகாரண்யத்தைக் கடந்து பதினெட்டு ஆயர் சிற்றூர்களில் வாழ்ந்து வேசரநாடு செல்லும் பொருட்டு அவ்வழி வந்தான் இளைய பாண்டவன். நெஞ்சில் விழுந்த நீள்தாடியும், புறா அலகு போல் எழுந்த நகங்களும், தோளில் புரண்ட சுரிகுழல் கற்றைகளும் நூறுமுறை தீட்டிய அம்பு நுனி போன்ற விழிகளுமாக வேங்கை என நடந்து அவன் வந்தான்.

வேசர நாட்டுக்குச் செல்லும் பாதை எது என்று வணிகரிடம் வினவினான். அவர்கள் சுட்டிய வழியில் சற்று நடந்தபோது தன் தலைக்கு மேல் வட திசையிலிருந்து தென் திசைக்கு வலசை போகும் பறவைகள் செல்லும் நேர் வழி ஒன்றைக் கண்டான். “அவ்வழியே நாம் ஏன் செல்லக்கூடாது?” என்று வணிகரிடம் கேட்டான். “அதை யாமறியோம். இதுவே வழி என்று எம் முன்னோர் சொல்லிலும் நினைவிலும் நாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்” என்றனர் வணிகர். “அது வணிகரின் வழி. வீரரின் வழி என்றும் புதியது” என்றான் அர்ஜுனன். “இந்தப் பாதை எதையோ கரந்து செல்கிறது. பிறர் அறியாத ஒன்றை. ஒரு வேளை அதை அறிவதற்கென்றே எனது இப்பயணம் அமைந்திருக்கலாம்.”

“வீரரே… வானாளும் புள்ளின் வழியல்ல மண் தொட்டு நடக்கும் மானுடரின் வழி. இது யானை செல்லும் பாதை. இதுவே உறுதியானது” என்றார் வணிகர். “எனது வழி காற்றில் மிதக்கும் அம்புகளுக்குரியது. அம்புகளும் பறவைகளே” என்று புன்னகைத்து வலசைப் பறவைகளின் நிழல் தொட்டுச் சென்ற பாதையில் அர்ஜுனன் நடந்தான். பன்னிரு நாட்கள் புதர்களை ஊடுருவிக் கடந்தான். புதர்களில் தாவி மறிந்து அவன் தேவாரண்யத்தின் கரையை அடைந்தான். அங்கு அவனுக்கென காத்திருந்தன ஐந்து சுனை முதலைகள்.

தொடர்புடைய பதிவுகள்

அழியாத சாட்சி

$
0
0

Saatchi Mozhi

அரசியல் விவகாரங்களில் உடனடியாகக் கருத்து சொல்லக்கூடாது என்பது எனக்கு நானே இட்டுக்கொண்ட விதி. ஏனென்றால் அவ்விவாதம் சூடாக இருக்கையில் கருத்துக்கள் பல்லாயிரம் எதிர்கருத்துக்களை மட்டுமே உருவாக்குகின்றன. பிற எதையும் பேசமுடியாமலாகிறது. நம்மூரில் அரசியல் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓயாது நிகழ்கின்றன

​ஓர் அரசியல்நிகழ்வில் அதன் உடனடிப்பெறுமானத்திற்கும் அப்பால் சென்று எப்போதைக்குமென சொல்வதற்கு ஏதேனும் உள்ளது என்றால், எழுத்தாளனாக பிறர் குறிப்பிடாத எதையாவது என்னால் சொல்லமுடியும் என உணர்ந்தால் மட்டுமே நான் கருத்துச் சொல்லியிருக்கிறேன்

என்னை ஓர் அரசியல் தரப்பாக நிறுத்திக்கொள்ளலாகாது என்பதே என் எண்ணம். சாதாரண மக்களின் எண்ணங்களுக்கு நெருக்கமாகச் செல்பவனாக நிறுத்திக்கொள்ள முயல்கிறேன். அழகுணர்வும் நீதியுணர்வும் இலக்கியத்தின் இரு அடிப்படைகள். அந்நிலையில் நின்றபடி எதைச் சொல்லமுடியும் என பார்க்கிறேன். ஆகவே என்னை ஒரு சாட்சி மட்டுமாக நிறுத்திக்கொள்கிறேன்.

அந்த சாட்சியின் சொற்கள் இவை. அரசியல் என்றும் சமகாலத்தன்மை கொண்டது. ஆனால் எழுத்து காலம்கடந்தது. எழுத்தாளனும் காலம்கடந்தவனே. அவ்வகையில் இவை அழியாத சாட்சிமொழிகள் என உணர்கிறேன்

ஜெ
கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் சாட்சிமொழி நூலின் மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரை

தொடர்புடைய பதிவுகள்

வாசகர்கள் அளிப்பது…

$
0
0

என் நினைவறிந்த நாள் முதல் விவாதங்களின் மையத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். நான் மதித்த எழுத்தாளர்களான எம்.கோவிந்தன், க.நா.சு, பி.கே.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி , ஜெயகாந்தன்போல. விவாதங்களை உருவாக்குவதென்பது எழுத்தின் அவசியங்களில் ஒன்று. அவை அறிவார்ந்த தளத்தில் நிகழ்கையில் ஒட்டுமொத்த விளைவு எப்போதும் பண்பாட்டுக்குச் சாதகமானதே.

ஆகவே ஒரு விவாதம் அவசியமான எங்கும் அதை உருவாக்க முயல்கிறேன். அதை வெறுமே அபிப்பிராயமாக இல்லாமல் இலக்கிய- பண்பாட்டு -வரலாற்றுப் பின்புலம் சார்ந்த ஒரு பார்வைக்கோணமாக வைக்கிறேன். அவற்றை விவாதிப்பவர்கள் ஏற்றோ மறுத்தோ அந்த பின்புலத்தை விவாதிக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். அவர்கள் தங்கள் தர்க்கங்களுக்கு ஏற்ப அவற்றை மறு அடுக்கு செய்து காட்டலாம்.

விவாதங்கள் வெறுப்பையே பெரும்பாலும் உருவாக்குமென அறிவேன். ஏனென்றால் கருத்தை உடன்பாடு மறுப்பு என்பதன்றி விருப்பு வெறுப்பு என எதிர்கொள்ளவே பழகியிருக்கிறோம். கருத்தியல்சார்புள்ளவர்களோ உச்சகட்ட வெறுப்பையே உமிழ்கிறார்கள்.அதை பின் தொடரும் நிழலின் குரலில் மிக விரிவாகவே ஆராய்ந்திருக்கிறேன்

ஆனாலும் நெருக்கமானவர்களாக இருந்தவர்கள் சட்டென்று வசைபாடும்போது அவமதிக்கும்போது ஆழமாக மனம் புண்படுகிறது. அதிலும் காலைவேளையில் வரும் கடிதங்களும், சுட்டிகளும். அவற்றை தவிர்க்கமுடிவதில்லை

ஒருநாள் கூட தவறாமல் சென்ற இருபதாண்டுக்கலாமாக எனக்கு வாசகர் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. விஷ்ணுபுரம் வெளிவந்த நாள்முதல் கடிதங்கள் குறைந்ததே இல்லை. வாசகர்கடிதங்களில் பாதியைக்கூட பிரசுரிப்பதில்லை, வாசகர்களுக்கு மனத்தடைகள் பல உண்டு. அத்தனை கடிதங்கள் வந்தும் ஒவ்வொரு கடிதமும் முக்கியமானதென்றே படுகிறது

அதிலும் சற்றே சலிப்புற்று இருந்த ஒரு காலையில் வந்த இக்கடிதங்கள் அளித்த ஊக்கம் அளப்பரியது. மீண்டு சிலகணங்களிலேயே எழமுடிந்தது. மீண்டும் எழுதத்தொடங்கமுடிந்தது.

*

IMG-20151009-WA0017

அன்புள்ள ஜெயமோகன்,

பள்ளிநாட்களில் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி அவர் கையொப்பம் அச்சிட்ட புகைப்படம் கிடைத்தபோது மிகவும் பரவசமடைந்தேன். அதை எல்லோருக்கும் காண்பித்து பெருமை பீத்தல் வேறு.
சரியோ தவறோ, அன்றைய முதிராச் சிறுவனின் அந்தப் பரவசம் நிஜம்.

அதே நிஜமான பரவசம் இன்றும். தங்கள் கையெழுத்துடன் கூடிய “வெண்முகில் நகரம்” செம்பதிப்பு இன்று கைக்கு வந்தது.என் பெயரை உங்கள் கையெழுத்தில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், யாருக்கும் இதைக் காட்டக்கூடாதென்றும், இது ஒரு அந்தரங்கமான விஷயம் என்றும் இப்பொழுது தோன்றுகிறது. என் மகளுக்குக் காட்ட வேண்டும். அவளுக்குத்தான் குறை, முந்தைய செம்பதிப்புகளில் என் பெயரில் நீங்கள் கையெழுத்திடவில்லையென. (அவற்றை என் மனைவியின் பெயரில் வாங்கினேன். )

இந்திர நீலத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம், அது அவள் பெயரில் கேட்டிருக்கிறாள்

நன்றி ஜெயமோகன், இன்றைய இனிய நாளுக்காக.

என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு

*

IMG-20151009-WA0016
அன்புள்ள ஜெயமோகன்.

வணக்கம்.

வெண்முகில் நகரம் வரும் என்று எதிர்பார்த்தவாறே பகுதி பகுதியாக முந்தைய வெண்முரசு வரிசைகளை படித்தவாறு இருந்தேன்.

வெள்ளி காலை வெண்முகில் நகரம் வந்து சேர்ந்தது .

சென்ற முறை சந்தோஷ் குமார் என்று கையொப்பம்.
என்னை அறிந்தவர்கள் சந்தோஷ் என்று தான் அழைப்பார்கள் நீங்கள் இந்த முறை சந்தோஷ் என்றே கையொப்பமிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

கிழக்கு பதிப்பகத்தை சார்ந்தவரிடம் கையெழுத்திட வேண்டும் என்றல்லாம் கட்டாயமில்லை ஆனாலும் என்று சென்ற முறை ஒரு பத்து நிமிடம் பேசினேன் இந்த முறை அப்படி எதுவும் பேசவில்லை அவர் புரிந்து கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது.

என்னால் ஏனோ இணையத்தை பயன்படுத்தி இது போன்ற பெரும் படைப்புகளை வாசிக்க முடிவதில்லை .(இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உங்களின் விஷ்ணுபுர விருது விழாவில் நாஞ்சில் சொன்னாரே கையால் எழுதி முடித்த இறுதி தமிழ் எழுத்தாளனாகவே விருப்பம் என்று அப்படி இந்த பெரிய நூலை கையில் தாங்கி வாசிக்கவே பிரியப்படும் வாசகன் நான் ).

இப்போது திரௌபதியும் பாண்டவர்களும் நெருங்கி அறியும் பகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன் குறிப்பாக பீமன் தன்னிலை அழிந்து திரௌபதியிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் மீண்ட நிலை அறிந்து சகாதேவனும் அர்ஜுனனும் பேசும் கட்சியை மீள மீள நினைத்து கொண்டிருந்தேன் .

உங்கள் பாத்திரங்களை நீங்கள் சில நேரங்களில் கொஞ்சி விட்டுத்தான் எழுதுவீர்களோ என்று தோன்றியது.

கிட்டத்தட்ட இலக்கிய விமர்சனம் என்கிற ஒன்றை செயலிழக்க வைத்து விட்டீர்களோ என்றும் தோன்றியது (ஞானி போன்றவர்கள் இதையும் தாண்டி கருத்து சொல்லலாம் ) அதே போல வாசகனாக என்னுடைய எல்லைகளை நான் அறிகிற அதே வேளையில் அவை பெரிதும் விரிவடைவதையும் என்னால் அவதானிக்க முடிகிறது.

இப்படியே இருந்து விடத்தான் ஆசை.

படைப்புகளில் நெருங்கி அறிகிற உங்களை நேரில் நான் சந்திக்கிற போதெல்லாம் அவை உளறலில் முடிவதை அதிர்ச்சியோடு கவனித்திருக்கிறேன் இதுவும் உளறல்தான் ஆனால் வேறு வகையில்.

நான் உங்களுக்கு கடிதம் எழுத வரும் வழியில் ராகவேந்திர மடத்தில் ஒரு சுவரொட்டியை பார்த்தேன், அம்மன் சத்தியநாதன் என்கிற ஒருவர் ராமாயணம் எழுதியிருக்கிறார், வாசித்து முடித்த ஒன்பதே நாட்களில் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் காணலாமாம் (இவர் முன்பே ராகவேந்திர மகிமை எழுதி பிரபலமானவர் என் குடியிருப்பு பெரியவர் நான் கைகளில் உங்களை வைத்திருப்பதை பார்த்து விட்டு முன்பே சிபாரிசு செய்தவர் முகத்தை இப்போதுதான் பார்கிறேன்) .

சிரித்துக் கொண்டே முடிக்கிறேன்.

மனம் நிறைந்த வணக்கங்களுடன்
சந்தோஷ்.

*
IMG-20151009-WA0014

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு நெகிழ்ச்சியான மனநிலையில் இந்தக் கடிதம். எவ்வித உள்ளடக்கமும் தொடர்பும் இல்லாமல் திடீரென்று அனுப்பப்படும் இந்தக் கடிதத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நூலகத்திலிருந்து எடுத்து வந்த உங்களின் ”பண்படுதல்’ கட்டுரை தொகுப்பு நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு தருணங்களில் உங்களின் இணையதளத்தில் ஏற்கெனவே வாசித்தவைதான். ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கும் போது அந்த நூல் தரும் மனவெழுச்சியும் புதிய அக வெளிச்சங்களும் தகவல்களும் பிரமிக்க வைக்கின்றன. எந்தவொரு சமகால சிக்கல்களையும் விஷயங்களையும் ஒட்டுமொத்த வரலாற்றின் பின்னணியை வைத்துப் பார்க்கும் கற்றலை உங்களிடமிருந்துதான் அறிகிறேன். என்னை அதிகவும் பாதித்த சமகால கலையாளுமைகளில் ஒருவராக உங்களை என்னால் துணிச்சலுடன் குறிப்பட முடியும்.

வேறெந்த தமிழ் எழுத்தாளரையும் விட அதிக அளவில் ஆனால் சமமாக பாராட்டுக்களையும் வசைகளையும் பெற்று வருபவர் நீங்கள். வசைகளையும் எதிர்மறையான எதிர்வினைகளையும் கண்டு சோர்ந்து போகும் நபரல்ல நீங்கள். என்றாலும் அவ்வாறு ஒருவேளை சோர்வூட்டும் தருணங்களில் வாசகர்களின் நன்றிக் கடிதங்களில் மூலம் நீங்கள் அந்த மனநிலையிலிருந்து மீண்டுவரக்கூடும். அந்த நோக்கில் இந்தக் கடிதமும் ஒரு துளியாக பயன்படக்கூடும் என்கிற என் சுய யூகத்தில் இதை அனுப்புகிறேன்.

உங்களின் படைப்பாற்றலின் மூலம் என்னைப் போன்று பல வாசகர்கள் அதிக வெளிச்சம் பெறுவார்கள். எனவே அதை அளித்துக் கொண்டேயிருங்கள் என்பதே எளிய வாசகனாக என் வேண்டுகோள்.

சுரேஷ் கண்ணன்

http://pitchaipathiram.blogspot.in/

*

மதிப்புமிக்க ஜெவுக்கு ஈரோட்டிலிருந்து வீரா எழுதுவது.

நலம். நலமறிய ஆவல்.

என் மகள் நந்தினியிடம் (6 ம் வகுப்பு படிக்கிறாள்) சமீபமாக காந்தி குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

இன்று உங்களின் ‘மாட்டிறைச்சி, கள், காந்தி முடிவாக…’ என்ற கட்டுரையை அவளைப் படிக்க வைத்தேன்.

அனேகமாக அவளுக்கு உங்களை நான் அறிமுகம் செய்துவைத்தது இதன் மூலமாகத்தான் என்று நினைக்கிறேன்.

மிக எளிமையான ஆழமான கட்டுரை. நன்றி.

மிக்க அன்புடன்
-வீரா

*

அன்புள்ள ஜெயமோகன்,

எனக்கு சிறு வயதில் பள்ளி நூலகம் மூலமாக தான் புத்தக அறிமுகம் கிடைத்தது, அதன் பிறகு கல்லூரி நாட்களிலும் பிறகு வேலை தேடிய நாட்களிலும் ,வேலை கிடைத்த பிறகும் பெரியதாக இலக்கிய அறிமுகம் இல்லை. தற்போது 35 வயது , கடந்த 3 -4 வருடங்களாக உங்களை வலைத்தளம் மூலமாக அறிவேன். என்னுடைய பல கேள்விகளுக்கு தங்கள் வலைத்தளத்தில் பதில் கிடைத்தது ஆனால் மேலும் பல கேள்விகள் தோன்றின விடை தேடுகிறேன் என்னுள். நான் பேச வந்தது சமீபத்தில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாசித்தேன் . ஒரு கேள்வி , யோகத்தை மதவழிபாடுகளில் இருந்து பிரித்து அதன் தூய நிலையில் நிறுவ ஜே.கிருஷ்ணமூர்த்தி ,ஓஷோ போன்றவர்கள் முயன்றது போன்ற தோற்றம் உள்ளது. நான் அறிந்த வரையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி எந்த ஒரு கோட்பாடுஉடனும் தன்னை இணைத்து கொள்ளாதவர் . இதை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
மேலும் ,இந்த விடுமுறையில் இந்தியா வந்தபோது உங்களுடைய ரப்பர் , காடு , ஊமைச்செந்நாய் போன்ற புத்தகங்களை வாங்கி வந்தேன். விஷ்ணுபுரம் போன வருடம் வாங்கினாலும் , அது இப்போது என் அக்காவின் வீட்டில் உள்ளது. இந்த டிசம்பரில் படிக்க ஆசை , பார்க்கலாம்
காடு நாவல் மிகுந்த நுட்பமான விவரணைகள் கொண்டது சிறப்பான வாசிப்பு அனுபவத்தை எனக்கு அளித்தது . கடந்த சில நாட்களாக காட்டை பற்றி என் மனைவிடம் பேசிகொண்டே இருகிறேன், பல மரங்களின் பெயரும்,வித்தியாசமான அனுபவங்களை கொண்ட குட்டபனை நான் வியந்தேன்,மேரி , ரொசலம்,அய்யர் , அம்பிகா அக்கா, மாமா ,இருவர்கள் என பல வித்தியாசமான கதை மாந்தர்கள் . மலையத்தி அழகை கற்பனையில் கொண்டுவந்தாலும் , அவள் முகம் என் நினைவில் இல்லை..
அடுத்தக படிக்க “பிறகு” எடுத்து வைத்து இருகிறேன். காடு மறு படியும் ஒரு முறை வாசிக்க ஆசை , பார்க்கலாம்.

நன்றி
உலகநாதன்

*

சார்,
இவங்க உங்க வெண்முரசின் இளம் வாசகி :))
சுந்தரவடிவேலனின் குழந்தை , வெண்முகில் நகரம் நாவலை வைத்திருக்கிறாள் …

ராதாகிருஷ்ணன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சஹ்யமலை மலர்களைத்தேடி…

$
0
0

ஹூப்ளியில் இருந்து காலை ஐந்தரைக்கே கிளம்ப எண்ணியிருந்தோம். கிளம்பும்போது ஏழரை மணி. இன்று முழுக்க பயணம் மட்டுமே. நேராக சதாரா அருகே உள்ள மலர்வெளிக்குச் செல்லவேண்டும். எனென்றால் எங்களுக்கு அங்கே தங்குவதற்கு வெள்ளிக்கிழமைதான் இடம் கிடைத்திருந்தது. பகல் முழுக்கப் பயணம் செய்து மதியம் ஒருமணிக்குள் சென்றுசேரலாம் என்ற திட்டம்.

ஆனால் செல்லும்வழியில் முதலில் வண்டியின் டயர் ஓட்டை ஆகியது. அதை கழற்றி மாற்றிவிட்டு பெல்காம் எல்லைக்குள் சென்று ஓட்டையை அடைத்து வைத்துக்கொண்டோம். அதற்கு ஒரு மணிநேரம் ஆகியது. அதன்பின் மகாராஷ்டிர எல்லைக்குள் நுழைய உரிய ’கப்பங்களை’ கட்டி மேலே செல்ல ஒருமணிநேரம் ஆகியது. ஆகவே ஒருவழியாக நாங்கள் சதாராவை அடையவே நான்கு மணி ஆகியது.

இந்தமுறை மழை இருக்கும் என்று எண்ணி மழைச்சட்டையும் குடையும் எல்லாம் கொண்டுவந்திருந்தோம். ஆனால் மழை இல்லை. இந்தமுறை தென்மேற்குப்பருவமழை மிகமிககுறைவு என்றார்கள். ஆகவே பருப்பு தானிய உற்பத்தி மிகக்குறையும் பொருளியல் சரிவு நிகழும் என்றார்கள். மலர்வெளியிலேயே மலர்கள் அதிகமிருக்காது என்று இணையத்தில் வாசித்தோம். ஆனால் பருவமழைக்குப் பிந்தைய காலம் என்பதனால் எங்கும் பசுமை நிறைந்திருந்தது.

ஐந்து மணிக்கு சதாராவுக்கு முன்னரே திரும்பி கிராமச்சாலைகளில் பயணம் செய்து மலர்வெளிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியில் பைகளை வைத்துவிட்டு மலர்வெளிக்குச் சென்றோம். மேகங்கள் அதிகம் இல்லாததனால் நல்ல வெளிச்சம் இருந்தது. மலர்வெளி சஹ்யாத்ரி மலையின் உச்சி. கடினமான சேற்றுப்பாறை அடியில் இருப்பதனால் மரங்கள் முளைக்கமுடியாது. ஆகவே புல்லும் மலர்ச்செடிகளும் மண்டிய பெரிய சமவெளியாக உள்ளது இது. பலவகையிலும் வாகமண் புல்வெளியை நினைவூட்டியது.

நான்குபக்கமும் வானம் சரிந்திருக்க மண் முழுக்கமுழுக்க பூத்த புல்லாலும் சிறிய செடிகளாலும் மூடப்பட்டிருந்தது. வெண்ணிறமான சிறிய பூக்கள். புல்வெளிக்குள் மக்கள் நடமாடாமல் இருப்பதற்காக யுனெஸ்கோ உதவியுடன் சிமிட்டி தூண்களை நாட்டி வேலியிட்டிருக்கிறார்கள். உள்ளே நடக்க பாதை உள்ளது. உள்ளே சென்றபின் புல்வெளிக்குள் நுழையமுடியும். புல்வெளிக்குள் செல்வது அளிக்கும் விடுதலை உணர்வு தனித்துவம் மிக்கது. அது காட்டில் அமைவதில்லை. நம்மை அறியாமலேயே பறக்க விழைவது போல கைகளை விரித்துக்கொண்டிருப்போம்.

சிறிய பறவைகள் புல்லுக்குள் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்தன. வானில் சிறகசையாமல் நிற்கும் பருந்துகள் கட்டித்தொங்கவிடப்பட்டவை போல மிதந்தன. புல் பச்சை வண்ணம். ஆனால் பச்சை என ஒரு வண்ணம் இல்லை. அது வண்ணங்களின் தொகை. பலவகையான பச்சைகளால் ஆன ஓவியம் அந்தக்காட்சி. இத்தகைய இயற்கைகாட்சிகளில் மனம் கொள்ளும் உணர்வு என்ன என்பது நோக்க நோக்க ஆச்சரியமானது. மனம் குவிவதில்லை. சிதறிப்பரக்கிறது. ஒரு முனை ஆன்மீகமான ஓர் இன்பத்தில் திளைக்கிறது. அது சொல்லற்றது. மறுமுனை அன்றாட எண்ணங்களை அளைகிறது. சொற்களைப் பெருக்கிக்கொள்கிறது

‘வால் கண்ணெழுதிய மகர நிலாவில் மாம்பூ மணம் ஒழுகீ’ என்ற பாட்டு எனக்குள் நிறைந்திருந்தது. மிண்டும் மீண்டும் அந்த பாடல். ஆனந்த பைரவி ராகம். மறுபக்கம் மனம் பிசினில் சிக்கியதுபோல அசைவற்றிருந்தது. சோம்பல். தூக்கம். தனிமை. அல்லது இன்மையின் ஒரு விளிம்பு நிலை. வானில் செக்கச்சிவந்த பெரிய சூரியன் முகில்குவையில் இருந்து உருகிச் சொட்டி கீழே அமிழ்ந்தது. நிறம் மாறிக்கொண்டே இருந்தது புல்வெளி. அதன்மேல் ஒரு நீலவண்ணத்திரை விழுந்து மூடுவது போல. மிக அப்பால் பச்சைக்காடு இருண்டு அமிழத்தொடங்கியது

இரவில் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம் ஆன்மிகம் பற்றி. இரண்டிலும் தனித்தன்மையும் அர்ப்பணிப்பும் எவ்வகையில் பங்களிப்பாற்றுகின்றன என்பதைப்பற்றி. அர்ப்பணிப்பு இன்றி கல்வி இல்லை. தனித்தன்மை இல்லாமல் சிந்தனை இல்லை. இரண்டும் ஒரு சரியான கலவையில் அமையவேண்டியிருக்கிறது. இத்தகைய சிந்தனைகளுக்கும் இந்த இடத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பது தனியாகச் சிந்திக்கவேண்டிய விஷயம்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16742 articles
Browse latest View live