Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16748 articles
Browse latest View live

கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2

$
0
0

அன்புள்ள நண்பர்களுக்கு ,

கோவையின் இரண்டாம் ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 25- 10- 2015 ( ஞாயிற்று கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. முகவரி மற்றும் தொடர்பு எண் இணைத்து உள்ளேன் .[இது வெண்முரசு நாவல் தொடரை வாசிக்கும் வாசகர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி.பிறர் தவிர்த்துவிடவும்]

Suriyan Solutions

93/1, 6th street extension ,
100 Feet road , near Kalyan jeweler,
Ganthipuram

வருகையை முன்னரே உறுதிசெய்யவும்
விஜய் சூரியன் -99658 46999
ராதா கிருஷ்ணன் – 7092501546


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்க்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சாகித்ய அக்காதமி விருது ?

$
0
0

1
ஜெயமோகன்

நேரடியாக ஒரு கேள்வி, உங்களுக்குச் சாகித்ய அக்காதமி விருது கிடைக்கவேண்டும் என்ற ஆசை உள்ளதா? எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? அதற்காகத்தான் இந்த சத்தமா என்று கேட்கமாட்டேன்

சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்,

நான் சாகித்ய அக்காதமி விருதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அவ்விருதின்மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை இதுவரை வைத்துள்ளேன். அதைப்பெறுவது மரியாதையாக இருக்காது.

ஆனால் இது அவ்விருது கிடைக்காது என்னும் எண்ணத்தால் வரும் துறப்பு அல்ல. வேண்டும் என்றால் அதைப்பெறுவது எனக்கு பெரிய விஷயம் அல்ல. எப்போதுமே. என் தீவிரவாசகர்கள் எல்லா மட்டத்திலும் உண்டு.

இதுவரை அது கிடைக்காததே நான் அதை ஏற்பதில்லை என முன்னரே அறிவித்திருந்தமையால்தான். ஒருமுறை கூட என் பெயர் சிபாரிசில் இல்லாமலிருந்ததில்லை. ஒருமுறைகூட இறுதிப்பரிசீலனைக்குச் சென்றதும் இல்லை

பலமுறை சாகித்ய அக்காதமியின் பொறுப்பிலிருந்தவர்கள் என்னிடம் நான் ஏற்றுக்கொள்வேன் என்றால் அம்முறை அதை அளிப்பதற்கு தயாராக இருப்பதாக பேசியிருக்கிறார்கள்.

ஒருமுறை டெல்லி விமானநிலையத்தில் சாகித்ய அக்காதமியின் பொறுப்பிலிருந்த ஒருவர் என்னைக் கண்டு ‘இந்த முறை உங்கபேருதான் வந்திச்சு.நான் சிபாரிசு பண்ணியிருக்கேன்” எனறு சொன்னார். “நீங்க என் பேரை ஆரம்பத்திலேயே தவிர்த்தது எனக்குத் தெரியும் சார்” என்றேன் சிரித்தபடி.

அவர் சீற்றமடைந்து “ஆமா, நான் இருக்கிற வரை நீங்க வாங்கமாட்டீங்க” என்றார். நான் அவர் கண்களைப்பார்த்து “சரி, நீங்களும் உங்க ஆட்களும் இந்த வருஷம் எனக்கு குடுக்கக்கூடாதுன்னு என்ன செய்யமுடியுமோ செய்ங்க. நான் இந்த வருஷம் சாகித்ய அக்காதமி விருத வாங்கறேன். வாங்கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?” என்றேன்

முகம் வெளிறி “நீங்க நெனைச்சா என்ன வேணுமானாலும் செய்யலாம். எல்லாம் மலையாளத்தானுங்க” என்று நகர்ந்துவிட்டார். சிரித்துவிட்டேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34

$
0
0

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 5

அர்ஜுனன் தேவாரண்யத்தின் எல்லை என அமைந்த பிரதிவாகினி என்னும் பெயருள்ள காட்டாற்றின் கரையை அடைந்து, வழுக்கும் பாறைகளில் மெல்ல காலடி எடுத்து வைத்து அவற்றின் கரிய வளைவுகளின் ஊடாக வெண்ணுரை எழ சிரித்துக் கொண்டிருந்த ஆற்றுக்குள் இறங்கி முழங்காலளவு நீரில் நின்றான். நீரை அள்ளிக் குடித்து முகம் கழுவி தோளிலும் முதுகிலும் விட்டுக் கொண்டான். நீண்ட வழிநடை வெம்மையை இழந்து அவன் உடல் சிலிர்ப்பு கொண்டது.

மறுபக்கக் காட்டில் இருந்து பறந்து அவனருகே வந்த சிறிய மண்நிறக் குருவி ஒன்று அவனைச் சூழ்ந்து அம்பு தீட்டும் ஒலியுடன் பேசியபடி சிறகடித்துப் பறந்தது. அவன் முன் இருந்த பாறைவளைவில் அமர்ந்து சிறகை பிரித்து அடுக்கி தலை அதிர ஒலியெழுப்பியது. விருட்டென்று எழுந்து காற்றின் அலைகளில் ஏறி இறங்கி மீண்டும் சுற்றி வந்தது. மேலாடையால் முகம் துடைத்து கை தாழ்த்தும் போது அவன் அப்பறவையின் சொற்களை புரிந்து கொண்டான். “வேண்டாம், திரும்பிவிடு” என்றது அப்பறவை.

“யார் நீ?” என்று அர்ஜுனன் கேட்டான். “என் பெயர் வர்ணபக்ஷன். இங்குள காட்டில் என் குலம் வசிக்கிறது. நீ அங்கு தொலைவில் வருகையிலேயே பார்த்துவிட்டேன். இளையோனே, அழகும் நல்லுணர்வும் கொண்டிருக்கிறாய். உனக்கென்றிலாது செயலாற்றுகிறாய். அறம் உனக்கு துணை செய்கிறது. இக்காடு உனக்குரியதல்ல. விலகி செல்!” என்றது. அர்ஜுனன் புன்னகைத்து “பிற மானுடர் அனைவரும் அஞ்சி விலகிச் செல்லும் எங்கோ ஒரு வாயிலுக்கு அப்பால் எனக்குள்ள அமுதம் உள்ளது என்று எண்ணுகிறேன். பாரதவர்ஷத்தின் மலைச்சரிவுகளிலும் காடுகளிலும் நான் அலைந்து திரிவது அதற்காகவே. நீ சொல்லும் இவ்விலக்குச் சொற்களே நான் உள்ளே நுழைய போதுமானவை” என்றபின் பாய்ந்து இன்னொரு பாறையில் கால் வைத்து உடல் நிகர்நிலை கொண்டு நின்றான்.

“இது பொருளிலாச் சொல்” என்றது பறவை. “உன்னுள் வாழும் ஆன்மாவும் அது கொண்டுள்ள அழியாத்தேடலும் இங்கு ஒரு பொருட்டே அல்ல. உன் உடலின் ஊன் மட்டுமே இங்கு பொருள்பெறும். இங்கு இறப்பு உனக்கு நிகழுமென்றால் உன் உடல் வெறும் உணவு என்றே ஆகி மறையும். அதை தன் ஊர்தியெனக் கொண்டு தெய்வங்கள் வெறும் வெளியில் பதைபதைத்து அலையும்” என்றது வர்ணபக்ஷன். “நான் அஞ்சுவேன் என்று எண்ணுகிறாயா?” என்றபடி இன்னொரு பாறை மேல் கால் வைத்தான் அர்ஜுனன்.

“அஞ்சமாட்டாய் என்றறிவேன். தொலைவிலிருந்து உன்னைக் கண்டபோது எது என்னைக் கவர்ந்ததென்று இச்சொற்களை நான் சொல்லும்போது உன் விழிகளைக் கண்டு அறிந்தேன். உனது நிகரற்ற அச்சமின்மை. ஆனால் அச்சமின்மை அறியாமை என்று ஆகிவிடக்கூடாது. பிரித்தறியும் நுண்மை உன்னில் செயல்பட வேண்டும்.” பிறிதொரு பாறை மேல் தாவியபடி அர்ஜுனன் “அழகிய சிறகுள்ளவனே, எண்ணும் பொறுப்பு வில்லுக்கு. எய்யப்பட்ட அம்புக்கு செல்லும் பணி மட்டுமே” என்றான்.

அவன் தாவிச்சென்று நின்ற பாறைமுன் சுற்றி வந்து சிறகடித்து அவன் முன் பிறிதொரு பாறையில் அமர்ந்தபடி “வீண்சொற்கள்… அணிகள் போல உண்மையை மறைக்கும் திறன் கொண்டவை பிறிதில்லை. இக்காட்டிலும் நீ காவியத்தலைவனாக இருந்தாக வேண்டுமா என்ன?” என்றது வர்ணபக்ஷன். பிறிதொரு பாறைமேல் தாவி “இங்கு வருவதற்கு முன்னரே எனக்கான கதை வடிவம் எழுதப்பட்டுவிட்டது. அதை நான் நடிக்கிறேன்” என்றபின் மேலும் தாவி மறு கரையை ஒட்டிய பாறைமேல் நின்று அப்பால் நோக்கினான் அர்ஜுனன்.
.
“நூற்றாண்டுகளாக மானுடக் காலடி படாத காடு இது. நச்சுக்கோப்பை போல் வஞ்சம் கரந்துள்ளது” என்றது வர்ணபக்ஷன். “ஆம், அழகியது. ஆழ்ந்து உள்ளே ஈர்ப்பது. பொருள் உள்ள அனைத்தும் கொள்ளும் பேரமைதி நிறைந்தது” என்றான் அர்ஜுனன். “இனி உன்னை விலக்க முடியுமென்று நான் எண்ணவில்லை” என்று அவனுக்கு மேல் சிறகடித்தது வர்ணபக்ஷன். மறுபக்கத்து மணல் விளிம்பை அடைந்து கால் நனைத்து மிதித்து மேலேறிய அர்ஜுனனுக்கு மேல் பறந்து முன்னால் உள்ள சிறு சல்லிக்கிளையில் அமர்ந்து மேலும் கீழும் ஆடியபடி “ஏன் இதைச் சொல்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நீ வெல்லவேண்டுமென்று என் உள்ளம் விழைகிறது. ஏனென்றால் நீ வீரன்” என்றது.

“அதற்கான வழிகளைச் சொல்” என்றான் அர்ஜுனன். “இக்காட்டில் ஐந்து சுனைகள் உள்ளன. ஐந்து ஆடிகள், ஐந்து விழிகள். இக்காட்டின் ஐந்து உள்ளங்கள். அவற்றை ஒவ்வொன்றாக நீ கடந்து செல்வாய்” என்றது. தன் வில்லை எடுத்து அதன் நாணை இழுத்து கொக்கியில் மாட்டி செவியளவு இழுத்துவிட்டு நாணொலி எழுப்பினான் அர்ஜுனன். “வில்லுக்கு இங்கு வேலை இல்லை. ஏனெனில் கொடிகளும் செடிகளும் பற்றிச்செறிந்த இப்பெருங்காடு தொலைவென்பதே அற்றது. உன் கை தொடும் அண்மையில் ஒவ்வொன்றும் உள்ளன. உன்னை கொல்ல வரும் யானையை அதன் துதிக்கை உன்மேல் பட்ட பிறகுதான் உன்னால் பார்க்கமுடியும். இங்கு ஒருவர் தன் உடலெனக் கொண்ட தோள்வல்லமை அன்றி பிற படைக்கலன்கள் எதுவும் பயன் தருவதில்லை.”

அர்ஜுனன் புன்னகைத்தபின் ஒருஅம்பை மட்டும் கையில் எடுத்துக் கொண்டான். வர்ணபக்ஷன் “அது நன்று. ஆனால் பாதாள நாகங்களின் நஞ்சை அந்நுனியில் நீ கொண்டிராவிட்டால் அதில் என்ன பயன்? எழுந்து மத்தகம் காட்டும் மதகளிற்றை அது வெல்லுமா?” என்றது. “ஒவ்வொரு உயிரும் தன் உடலில் நூற்றிஎட்டு நரம்பு முடிச்சுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு முடிச்சிலும் ஒரு துளி நஞ்சு உறைந்துள்ளது. அம்பு நுனியென்ன, இக்கைவிரல்நுனியால் அவற்றில் ஒரு துளியைத் தொட்டு எழுப்பிவிட்டாலே உயிர்களை கொல்ல முடியும். நம்புக, இச்சுட்டுவிரல் ஒன்றே எனக்குப் போதும்” என்றான்.

துடித்து மேலெழுந்து சற்றே சரிந்து வளைந்து ஒரு இலையில் அமர்ந்து எழுந்தாடி “அப்படியென்றால் எதற்கு அம்பு?” என்றது வர்ணபக்ஷன். “இளமையிலிருந்தே அம்பு நுனியை நோக்கி என் உள்ளம் குவிக்க கற்றுள்ளேன். போர் முனையில் என் சித்தம் அமர்ந்திருப்பது இந்நுனியிலேயே” என்ற அர்ஜுனன் “வருக! நீ சொன்ன அவ்வைந்து சுனைகளையும் எனக்கு காட்டுக!” என்றான்.

“இக்காடு உனை நோக்கி சொன்ன ஒரு சொல் மட்டும்தானா நான் என்று ஐயுறுகிறேன். அறியாது தெறித்து வெளிவந்து உன்னை சூழ்ந்துளேன்” என்றது வர்ணபக்ஷன். இடம் மாறி அமர்ந்து திரும்பி “காட்டின் ஒளிபுகா ஆழத்தை நோக்கி உன்னை விலக்க நான் வந்தேனா, அல்லது என்னை மீறிய விசைகளால் உன்னை ஈர்த்து உள்ளே கொண்டு வரும் சொற்களை சொன்னேனா என்று குழம்புகிறேன்” என்றது.

அர்ஜுனன் “இவ்வினாக்களுக்கு பொருளே இல்லை. பல்லாயிரம் கோடி முடிச்சுகளால் ஆனது இவ்வலை. அதில் என் உடல் தொடும் முடிச்சைப் பற்றி மட்டுமே நான் உளம் கூர்கிறேன். என் விழி தொடும் எல்லைக்குள் வருபவை, என் அம்பு சென்று தொடும் எல்லைக்குள் வருபவை மட்டுமே நான் அறியற்பாலவை. இவ்வெல்லையை அமைத்துக் கொண்டதனால் எனது தத்துவங்கள் கூரியவை, எளியவை” என்றான்.

வர்ணபக்ஷன் எழுந்து சிறகுகளை காற்றில் படபடக்கும் தளிரிலைகள் போல் அடித்தபடி முன்னால் சென்று “என்னைத் தொடர்ந்து வருக! அச்சுனைகளை உனக்குக் காட்டுகிறேன்” என்றது. அர்ஜுனன் அதை தொடர்ந்தான். வர்ணபக்ஷன் தன் சிறகுகளால் இலைகளை விலக்கி மலர்ப்பொடிகளை உதிரவைத்தும் கனிந்த பழங்களை சிதைய வைத்தும் கிளைகளை விலக்கி காட்டைக் கடந்து சென்றது. “இச்சதுப்பு மண்ணுக்கு அப்பால் சூழ்ந்த புதர் இலைகளை தன் உள்ளொளியால் ஒளிரவைக்கும் முதல் தடாகம் உள்ளது. அதற்கு அகஸ்தியம் என்று பெயர். அச்சுனையில் வாழ்கிறாள் வர்கை. விண்ணின் இந்திரனின் அவையில் வாழ்ந்த அரம்பை அவள். இங்கு தன் கீழியல்பால் விழுந்து ஒரு முதலை வடிவம் கொண்டு வாழ்கிறாள். இக்காட்டுக்குள் நுழைபவர் எவராயினும் முதலில் அவளுக்கு உணவாவது வழக்கம்” என்றது.

“சொல், அச்சுனையின் இயல்பென்ன?” என்றான் அர்ஜுனன். “நன்று. அவள் இயல்பென்ன என்று நீ கேட்கவில்லை” என்றது வர்ணபக்ஷன். “வீரனே! பிராணம் என்று இச்சுனை அழைக்கப்படுகிறது. இக்காட்டில் உள்ள அத்தனை நீரோடைகளும் வழிந்தோடி இங்கு வந்து சேர்கின்றன. இச்சுனை நிறைந்து பல்லாறுகளாக பெருகிப் பிரிந்து பாறைகளில் அலைத்தும் சரிவுகளில் சுழன்றிறங்கியும் ஓடி காட்டாறென மாறி காட்டை கடந்து செல்கிறது. சற்று முன் நீ இறங்கிய ஆறு அதுவே. இக்காட்டில் உள்ள எந்தச் சிற்றோடையை தொடுபவனும் இச்சுனையை தொட்டவனாகிறான். இந்தப் பெருங்காட்டின் உயிர்ப்பு இதுதான்.”

புதர்களினூடாக அர்ஜுனன் எச்சரிக்கையுடன் காலெடுத்து வைத்து முன்னால் சென்றான். “நோக்கு, ஈடிணையற்ற வல்லமை கொண்டது அந்த முதலை. தான் விரும்பும் உருவம் எடுக்கும் ஆற்றல் கொண்டது மட்டுமல்ல, நீ விரும்பும் உருவெடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. அது எவர் விருப்பென்று தெளியாத மயங்கலில் உன் உயிர் உண்டு தன் இருளுக்கு மீளும். எண்ணித் துணிக!” அர்ஜுனன் “சொற்களுக்கு நன்றி. இனி இச்சுனைக்கரையிலிருந்து விடை அறியாது என்னால் மீள முடியுமா?” என்றான். தன் வில்லை மரக்கிளையில் மாட்டிவிட்டு வலக்கையில் ஏந்திய சிற்றம்புடன் வழுக்கும் சேற்றில் நடந்து அச்சுனையை அடைந்தான்.

இருளை எதிரொளிக்கும் மந்தண ஆடி போல் சீரான வட்ட வடிவில் அமைந்திருந்தது அப்பெருஞ்சுனை. அதன் அலைகளே ஒளி அதிலிருப்பதை காட்டின. அணுகும்தோறும் அதன் குளிரெழுந்து அவன் காதுகளை தொட்டது. பின்பு மூக்கு நுனி உறைந்தது. உதடுகள் இறுகின. கால்கள் நடுங்கத்தொடங்கின. “கடுங்குளிர் கொண்டது அது. ஏனெனில் அடியிலா அதலம் வரை அதன் ஆழம் இருப்பதாக சொல்கிறார்கள். ஊறித்தேங்கிய முதற்கணம் முதல் இன்றுவரை இதில் கதிரொளி பட்டதில்லை. அதில் ஒரு துளி எடுத்து உன் மேல் வீசினால் துளைத்து தசைக்குள் புகும் என்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் குளிர்ந்து தன்னுள் தானென இறுகி பாதரசம் என்று ஆகிவிட்டிருக்கிறது அது” என்றது வர்ணபக்ஷன்.

பற்கள் கிட்டித்து கழுத்துத் தசைகள் நாணென பூட்டிக்கொள்ள வயிறை இறுக்கி ஒவ்வொரு காலடியையும் வைத்துப் பறித்து எடுத்து ஊன்றி முன் சென்று அச்சுனைக்கரையை அடைந்தான் அர்ஜுனன். விழிமயக்கா உளமயக்கா என்றறியாது அச்சுனை தன்னை நோக்கி அறிந்து கொண்டது என்ற ஓர் உணர்வை அடைந்தான். அசைவற்ற முதலையின் விழியசைவு அதை ஓர் உயிரெனக்காட்டுவதுபோல. அசையாது நின்று அச்சுனையை கூர்ந்து நோக்கினான். அச்சுனை தன்னை விழிகளில் குவித்து அவனை நோக்கிக் கொண்டிருந்தது. உடலெங்கும் அதன் நோக்கை உணர்ந்து அவ்வெடையை அனைத்து எண்ணங்களாலும் தாங்கியபடி மேலும் காலெடுத்து முன்னால் சென்றான்.

அதன் கரையிலெங்கும் அந்த முதலை தென்படவில்லை. பிறிதொரு உயிரும் அந்நீர்ப்பரப்பில் இல்லை என்று தெரிந்தது. அசைவின்மை இருளெனத்தேங்கிய ஆழத்தை நோக்கி மேலும் அணுகிச் சென்றான். இழைத்த மரப்பலகைப் பரப்பென தெரிந்த சேற்று வளைவில் எங்கும் ஒரு காலடித்தடம்கூட இருக்கவில்லை. வர்ணபக்ஷன் அப்பால் தேங்கி நின்றுவிட்டது. பறவைகள் கூடவா இச்சுனையை அணுகுவதில்லை என்று அர்ஜுனன் வியந்தான்.

நீர்ப்பரப்பை அணுகி குனிந்து இரு கைகளாலும் நீரை அள்ளினான். ஒரு கையில் அள்ளிய அந்நீரை அவனால் மேலே தூக்கமுடியவில்லை. இரும்பு உருளை என எடை கொண்டிருந்தது அவ்விசையில் அவன் புயங்களின் தசைகளும் தோள்களும் இழுபட்டு அதிர்ந்தன. முதுகெலும்பின் கொக்கிகள் உரசி பொறி கொண்டன. அள்ளிய நீரை விடுவதில்லை என்று தன் முழு ஆற்றலாலும் அவன் அதை மேலே தூக்குகையில் அவனுக்குப் பின்னால் இனிய குரலில் “அதை விட்டுவிடு மைந்தா” என்று குந்தி சொன்னதை கேட்டான்.

திடுக்கிட்டுத் திரும்பி தன் அருகே நின்ற அன்னையை நோக்கி “நீங்களா?” என்றான். “நானென்றே கொள். இது கொலை முதலை வாழும் சுனை. இங்கு உயிர் துறந்த பல்லாயிரம் பேரை நான் அறிவேன். இதன் ஆழத்தில் அவர்களின் நுண்வடிவுகள் சிறையுண்டுள்ளன. எக்காலத்துக்குமான இருளில் அவை பதைபதைத்துக் கூவுவதை கேட்கிறேன். அவற்றில் ஒன்றாக என் மைந்தன் ஆவதை நான் விரும்பவில்லை. விலகு” என்றாள். “நான் என்ன செய்வது?” என்றான் அர்ஜுனன். “விட்டேன் என்று அந்நீரை மீண்டும் அதிலேயே விட்டு திரும்பி விடு” என்றாள் குந்தி.

“நான் இச்சுனையில் இறந்தால்தான் என்ன? தங்களுக்கு நான்கு மைந்தர்கள் எஞ்சுகிறார்கள் அல்லவா?” என்றான் அர்ஜுனன். “நீ இறந்தால் பின் இப்புவியில் எனக்கு ஆண்களே இல்லை” என்றாள் குந்தி. திகைத்து “அன்னையே” என்றான் அர்ஜுனன். “அகலாது அணுகாது நான் காயும் அனல் நீ. உன் நெஞ்சறிந்த முதல் பெண் நான்” என்றாள் குந்தி. “ஆம். நீ இன்றி எங்ஙனம் நானில்லையோ அங்ஙனம் நான் இன்றி நீயில்லை. என் சொற்களை கேள். அந்நீரை விட்டு பின்னால் விலகு” என்றாள்.

ஒரு கணத்தின் ஆயிரத்தில் ஒரு பகுதியில் அர்ஜுனன் அந்த கை நீரை சற்றே தாழ்த்தினான். அது ஓர் எண்ணமென அறிந்த மறுகணம் அதை மேலே தூக்கி தன் தலை மேல் விட்டுக் கொண்டான். இருகைகளிலும் கூர் உகிர்கள் எழ முகம் நீண்டு வாய் பிளந்து வெண்பற்கள் தெரிய முதலை உருக்கொண்டு அவன் மேல் பாய்ந்து தள்ளி கீழே வீழ்த்தினாள் குந்தி. தன்னைவிட மும்மடங்கு பெரிய அம்முதலையின் இரு கைகளையும் இறுகப்பற்றி புரண்டு அதன் மேல் தன் முழு உடலையும் அமைத்து மண்ணோடு இறுக்கிக் கொண்டான் அர்ஜுனன்.

முதலை துள்ளி விழுந்தது. புரண்டு திமிறியது. அதன் பிளந்து திரும்பிய வாய்க்கும் சுழன்று சுழன்று அறைந்த வாலுக்கும் நடுவே நான்கு கால்களுக்கு இடையில் தன் முழு உடலையும் வைத்துக் கொண்டான். முதலை அவனை திருப்பி தான் மேலேறி அடிப்படுத்த முயன்றது. அதை அசைத்து மேலேற்றினான். பின்பு தன் ஒரு காலை ஊன்றி ஒரு கணத்தில் அதை இரு கைகளாலும் பற்றித் தூக்கிச் சுழற்றி சேற்றுக் கரைகளுக்கு அப்பால் புதர்களுக்குள் வீசினான். மரத்தடி விழும் ஓசையுடன் மண்ணை அறைந்து விழுந்த முதலை புதர்களுக்கு உள்ளே துடித்து புரண்டு மறைந்தது.

புதர்களின் இலைத் தழைப்பினுள் அதன் செதில்வால் நெளிந்து அமைவதை அர்ஜுனன் கண்டான். சேற்றில் வழுக்கும் கால்களுடன் சற்றே குனிந்து மேலேறி அவன் நோக்கும்போது அப்புதர்களுக்கு அப்பால் புரண்டு எழுந்து கால் மடித்து கையூன்றி குழல் சரிந்து தரையில் விழ கலைந்த இலைகள் கன்னத்திலும் தோள்களிலும் ஒட்டியிருக்க நீண்ட கரிய விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்த வர்கையைக் கண்டு “உன் பெயர் வர்கை என எண்ணுகிறேன்” என்றான்.

மூச்சிரைக்க உதடுகளை நாவால் ஈரம் செய்தபடி அவள் ஆமென தலையசைத்தாள். “இங்கிருந்து விலகி மேலெழ உனக்கு வேளை வந்துள்ளது” என்றான் அர்ஜுனன். “எதன் பொருட்டு இங்கு காத்திருந்தாயோ அது நிறைவேறிவிட்டது.” அவள் நீள்மூச்செறிந்து கால் மடித்து எழுந்து உலைந்த தன் ஆடைகளைத் திருத்தி குழலை அள்ளி தலைக்கு மேலிட்டு “ஆம்” என்றாள். “உன் விடையை அறிந்துவிட்டாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. என் வினா மறைந்துவிட்டது” என்றாள் அவள். “அவ்வண்ணமே ஆகுக!” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அச்சமற்றவன் ஒருவனால் நான் என் நீர்த்தளையிலிருந்து விடுபடுவேன் என்று எனக்கு சொல்லப்பட்டது. படைக்கலன்கள் முன், நோயின் முன், அவமதிப்பின் முன் அச்சமற்றிருப்பவன் வீரன். உண்மையின் முன் முற்றிலும் அச்சமற்றிருப்பவனே மாவீரன். நீ அத்தகையவன். இப்புவி உள்ள அளவும் உன் பெயர் நிலைக்கும். வீரமென்னும் சொல்லுக்கு நிகரென அது நூலோர் நெஞ்சில் வாழும்” என்றபின் இலைகளில் விழுந்த ஒளிக்கதிரென பரவி மெல்ல அலையடித்து மறைந்தாள் வர்கை.

புதர்களைக் கடந்து சென்ற அர்ஜுனனின் தோளில் வந்தமர்ந்து சிறகடித்து எம்பிப்பறந்து மீண்டும் வந்தமர்ந்த வர்ணபக்ஷன் சிறு செவ்வலகை விரித்து கைக்குழந்தையின் சிரிப்பென ஒலியெழுப்பியது. “நன்று நன்று. இவ்வெற்றி நிகழ்ந்ததும் அறிந்தேன், இதையே நான் எதிர்நோக்கினேன் என. இது நிகழ்ந்தாக வேண்டும். இல்லையேல் இக்கதைக்கு இனியதோர் முடிவு இல்லை.”

அர்ஜுனன் “நீ என்ன கண்டாய்?” என்றான். “நீர்பிளந்து எழுந்து உன்னைக் கவ்வ வந்த பெருமுதலையை முதலில் நீ காணவில்லை. அந்த ஒரு கணத்தில் நீ உடல் கிழிபட்டு குருதி வழிய அதற்கு உணவாவதை நான் கண்டுவிட்டேன். நல்லவேளை மறுகணம் நீ திரும்பி அதன் இரு கைகளையும் பற்றிக் கொண்டாய். சித்தத்திற்கு அப்பால் உன் தசைகளில் உள்ளது போர்ப்பயிற்சி. அஞ்சி அதன் நீண்ட வாயை நீ பற்றியிருந்தால் கைகளால் உன்னை கிழித்து எறிந்திருக்கும்” என்றது வர்ணபக்ஷன்.

“இப்போது வென்றது நானல்ல. எனக்கு போர்க்கலை பயிற்றுவித்த ஆசிரியர். அவர் பெயர் துரோணர். கற்று மறக்காத கலை வெறும் ஆணவம் மட்டுமே, முற்றிலும் பயனற்றது என்று அவர் சொல்வதுண்டு” என்றான் அர்ஜுனன். “வருக! இரண்டாவது சுனை இங்கு அருகில்தான். அதற்கு சௌஃபத்ரம் என்று பெயர். அங்கு வாழ்பவள் சௌரஃபேயி என்னும் தேவர் குலத்துப்பெண். பெருமுதலை என விழிநீர் உகுத்து காத்திருக்கிறாள்” என்றது வர்ணபக்ஷன். “அச்சுனையின் இயல்பென்ன?” என்று அர்ஜுனன் கேட்டான்.

“அதை அபானம் என்கிறார்கள்” என்றது வர்ணபக்ஷன். “அச்சுனையில் ஒரு துளி நீர் கூட வெளியிலிருந்து உள்ளே வருவதில்லை. ஒரு துளி நீர் கூட வெளியே வழிவதும் இல்லை. ஆனால் கரை விளிம்புகளை முற்றிலும் நிறைத்து எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கிறது அது. இக்காட்டிலுள்ள அத்தனை ஆறுகளின் அடியிலும் மண்ணுக்குள் கண்காணா ஆறுகள் ஓடுகின்றன என்கின்றனர் என் முன்னோர். அவ்வாறுகள் அனைத்தும் சென்று சேரும் மந்தண மையமே அச்சுனை. அங்கிருந்து மீண்டும் மண்ணுக்குள்ளேயே ஊறி அவை விலகிச் செல்கின்றன. முதற்சுனையின் மறு எல்லை அது.”

அர்ஜுனன் “ஆம், அதை நான் உய்த்துணர்ந்தேன்” என்றான். புதர்களைக் கடந்து செல்லும் தோறும் தன் இமைகளிலும் கன்னங்களிலும் வெம்மை வந்து படுவதை உணர்ந்தான். “அதை நான் அணுக முடியாது” என்றது வர்ணபக்ஷன். “உள்ளிருந்து கொப்பளித்தெழும் அனலால் நீரே தழலாகி அலையடித்துக்கொண்டிருக்கும் வேள்விக்குளம் அது. இன்னும் சற்று நேரத்தில் என் மென்தூவிகள் பொசுங்கத்தொடங்கிவிடும். நீயே முன் செல்க! இப்பெருமரத்தின் உச்சியில் இருந்து உன்னை நான் காண்கிறேன்” என்றது. “அவ்வண்ணமே ஆகுக!” என்றபின் அர்ஜுனன் தன் அம்பை முன்னால் நீட்டியபடி மெல்ல காலடி எடுத்து வைத்து சென்றான்.

அவனைச் சூழ்ந்திருந்த மரங்கள் இலை அனைத்தும் பொசுங்கிச் சுருண்டு இருப்பதை கண்டான். பாறைகள் அடுப்பிலேற்றப்பட்ட கருங்கலங்கள் போல் வெம்மை கொண்டிருந்தமையால் இலைகளிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் பாம்பு சீறும் ஒலி எழுப்பி ஆவியாயின. அவற்றுக்கிடையே இருந்த சேற்றுப்பரப்பில் கால் வைத்து அவன் நடந்து சென்றான். பின்னர் உருளியில் காய்ச்சி கொட்டப்பட்ட கூழ் போல சேறு கொதித்து குமிழி எழத்தொடங்கியது. சுற்றிலும் நோக்கியபின் ஒரு பட்ட மரத்தின் கிளைகளை ஒடித்து அவற்றின் கணுக்களில் தன் இரு கால்களையும் வைத்து மேல் நுனியை கையால் பற்றியபடி அச்சேற்றில் ஊன்றி அர்ஜுனன் நடந்து சென்றான்.

நூறு பெருநாகங்கள் உள்ளே உடல் வளைத்து போரிடுவது போல கொப்பளித்துக் கொண்டிருந்த அப்பெருஞ்சுனையின் நீர்ப்பரப்பை அணுகினான். ஒவ்வொரு கணமும் அது விழிமுன் பெருகி வருவதை கண்டான். வானிலிருந்து கண்காணா பெரும் பாறைகள் அதில் விழுவதைப்போல, உள்ளே இருந்து பெருவெடிப்புகள் நிகழ்ந்து நீர் சீறி எழுவதுபோல அது கொந்தளித்தது. சேற்று விளிம்பை அடைந்து அந்நீர் நோக்கி குனிந்தான். தன் விரலால் அதை தொட்டான். அமிலமென அவன் விரலை பொசுக்கியது.

பற்களை கிட்டித்து அவ்வலி உடல் முழுக்க பரவியபின் அதைக் கடந்து இரு கைகளையும் குவித்து அதை அள்ளினான். “மைந்தா” என்று குந்தியின் ஒலியை கேட்டான். “உன்னை பொசுக்கிவிடும் அவ்வெரிநீர். அதை விட்டு விடு” என்றாள் அவள். அவன் தலை திருப்பாது “தோற்பதற்கென நான் இங்கு வரவில்லை” என்றான். “நீ அதை தொட்டாய். அறிவாய் அது இப்புவியை எரித்து அழிக்கும் பேரனல்” என்றாள் குந்தி. “சின்னஞ்சிறு மகளாக அவ்வனலை நானும் கொண்டிருந்தேன், அன்னையாகி அதைக் கடந்து அணைந்தேன். இது அணையா அனல். வேண்டாம், விலகு” என்று அவள் சொன்னாள்.

“விலகு, விலகிச்செல்” என்றான் அர்ஜுனன். “உன்னை நான் அறிவேன், விலகு.” அவள் “ஆம், நீ அறிவாய் என் குளிர்ந்த ஆழத்தில் வந்திறங்கி என்னை அனல் வடிவாக்கிய கதிரவனை. இன்றும் என் ஆழத்தில் அவனையே நான் சூடியுள்ளேன். அவனன்றி பிறிதொருவன் என் ஆழத்தை அடைந்ததில்லை. இந்தச்சுனை ஏன் கொதிக்கிறது? இதனுள்ளும் கதிரவனே குடிகொள்கிறான்.” அர்ஜுனன் “சீ! விலகு” என்று சீறியபடி திரும்பினான்.

“நான் யாரென்று அறியமாட்டாயா?” என்றாள் குந்தி. “நான் உன்னை அறிவேன். விலகு!” என்று தன் முழங்கையால் அவள் கையை தட்டி அந்நீரை தன் தலை மேலும் தோள் மேலும் விட்டுக் கொண்டான். அக்கணமே முதலை என உருமாறி அவன் மேல் அவள் பாய்ந்தாள். ஒரு கையில் பற்றியிருந்த அவள் கையை வளைத்து முதலையின் பிளந்த வாய்க்குள் செலுத்தி முழு உடலால் உந்தி அவளைச்சரித்து அவள் மேல் விழுந்தான். தன் கையை தானே கவ்விய முதலை வால் துடிதுடிக்க மறு கையால் அவனை அடிக்க முயன்றது. அக்கையை பிறிதொரு கையால் பிடித்து முதலையின் கீழ்த்தாடை மேல் தன் இடுப்பை அமைத்து முழு எடையாலும் அதை அழுத்திக் கொண்டான்.

தன் கை கடிபடும் வலியில் வாலை சேற்றில் அடித்து துடித்தது முதலை. அதன் முழு ஆற்றலையும் தன் தசைகளாலும் ஈடு செய்தான். ஒவ்வொரு கணமென முதலை வலுக்குறைய இருவரும் நிகரென்றாயினர். பிறிதொரு கணம் பிறிதொரு கணம் என முதலை அடங்க அவன் மேலோங்கிய முதல் தருணத்தில் அதை சேற்றில் சுழற்றி இழுத்து மேலே இருந்த புல்வெளி நோக்கி வீசினான். அங்கு விழுந்து புரண்டு வாலை நிலத்தில் ஓங்கி அறைந்து இருகால்களில் எழுந்த முதலை சௌரஃபேயி ஆயிற்று. “என்னை வென்றீர் இளைய பாண்டவரே” என்றாள். “என் வினா உதிர்ந்து மறைந்தது. நிறைவுற்றேன்.” இலைகளில் விழுந்த அடிமரங்களின் நிழல் போல அலையடித்து வானிலேறி மறைந்தாள் சௌரஃபேயி.

தொடர்புடைய பதிவுகள்

சஹ்ய மலை மலர்களைத் தேடி 3

$
0
0

சதாரா அருகே காஸ் என்னும் இடத்தில் உள்ள இந்த மலர்வெளி தென்னகத்தின் மிகப்பெரிய மலர்ச்சமவெளி.காஸ் பத்தர் என்று இது அழைக்கப்படுகிறது. 1200 அடி உயரமுள்ள மலைமேல் ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு இந்த செடிவெளி விரிந்து கிடக்கிறது.

சேற்றுப்பாறையாலான மலை இது. பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் பூமி சூடாக இருந்தபோது இங்கே உருவான நீர் ஆவியாகி மேலெழுந்து விசும்பின் குளிரில் மழையென்றாகி மீண்டும் பொழிந்தது. பல்லாயிரமாண்டுக்காலம் பெய்த அந்த மழையால்தான் பூமி குளிர்ந்தது. உயிர்க்குலம் உருவாகியது.

Kaas_Pathar_Flowers-4578
அப்போது உருவான சேறு இறுகி உருவான இப்பாறையில் அன்று வாழ்ந்த நுண்ணுயிர்கள் வாழ்ந்த நுண்துளைகள் இதை ஒரு கடற்பஞ்சு போல ஆக்கிவிட்டிருக்கின்றன. வெட்டி வைக்கப்பட்ட தசை போன்ற பாறை இது. பாறைக்குரிய இறுக்கம் இல்லாதது

காலையில் அங்கே அருகே எங்கோ உள்ள வீரசைவ மடாலயத்திலிருந்து மானவர்களும் சாமியரகளும் வந்திருந்தனர். சிறிய பறக்கும் வாகனம் [ ட்ரோன்] வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க ஒருவர் சிலை ஒன்றை நிறுவி சடங்குபோல ஏதோ செய்துகொண்டிருந்தார்.

செந்நிறமான இந்தப்பாறைக்குமேல் முளைத்துள்ள உயரமில்லாத செடிகள் பருவமழைக்குப்பின் பூக்க்கின்றன. செப்டெம்பர் இறுதிவரைதான் மலர்ப்பருவம். நாங்கள் செல்லும்போது உண்மையில் மலர்ப்பருவம் முடிந்துவிட்டது.ஆகவே மலர்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் வானம் முகில்களற்று பளிச்சென்று இருந்தது

காலையில் ஐந்தரை மணிக்கே எழுந்து கிளம்பிவிட்டோம். டீ கொண்டுவரச்சொன்னால் தாமதமாகியது. ஆகவே டீகுடிக்காமலேயே கிளம்பினோம். காரில் சென்று மலர்வெளியின் அருகே நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். குளிர்ந்த காற்றில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை முழங்காலளவு உயரமான சிறிய இலைகள்கொண்ட செடிகள். பலவகையான புற்கள்.

மலர்வெளி என்னும்போது ஊட்டியின் மிகப்பெரிய பூக்கள் கொண்ட பளிச்சிடும் வண்ணம் கொண்ட பூக்களை நினைத்துக்கொள்ளவேண்டியதில்லை. பொதுவாக மங்கலான ஒளி கொண்ட குளிர்ப்பகுதிகளில் தான் பளிச்சிடும் வண்ணங்களும் பெரிய இதழ்களும் கொண்ட மலர்கள் வளர்கின்றன. நாம் இங்கே இன்று வளர்க்கும் அழகுமலர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலிருந்து வந்தவை.

நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் வெண்ணிற மலர்களே அதிகம்.சிறிய இதழ்கள் கொண்ட சின்னஞ்சிறிய மலர்களே பெரும்பான்மை. ஆனால் மலர்களின் வகைமைக்கு முடிவேயில்லை. இது மலையுச்சி என்பதனால் பெரியமலர்கள் இல்லை. மிகமிகச்சிறிய வெண்ணிறமலர்கள் செடிகளின் மேல் பனி படர்ந்திருப்பதுபோலத் தெரிந்தன. ஊதா, நீலம்.நீலச்செம்மை, இளஞ்செம்மை நிறத்தில் சிறிய மலர்கள்.


காலை ஆறுமணிமுதல் அந்த மலர்வெளியில் நடந்துகொண்டிருந்தோம்.கண்ணெதிரே மலர்கள் இளவெயில்பட்டு மெல்ல மலர்ந்துகொண்டிருந்தன. நடுவே ஒரு பெரிய குளம். அதில் வெண்ணிறமான நீர்மலர்கள். குளோட் மோனேயின் வாட்டர்லிலீஸ் ஓவியவரிசையை நினைவுறுத்தும் அழகு. வெண்மலர்கள் ஒளியில் நீர்த்துளிகள் மின்னுவது போலத்தெரிந்தன. வெயில் எழ மெல்ல அவையனைத்தும் விரிந்து சூரியனை நோக்கி நின்றன.

அங்கேயே வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கும் மோரும் கேழ்வரகு சப்பாத்தியும் கொண்டுவந்து விற்றனர் கிராமத்துப்பெண்கள். அந்தக்காலையில் நெடுந்தூரம் நடந்தமையின் களைப்புக்கு அவ்வுணவு இனியதாக இருந்தது.

திரும்பி விடுதிக்கு வந்து காலையுணவாக போகோ என்னும் தாளித்த அவலும் டீயும் சாப்பிட்டோம். குளித்துவிட்டுக்கிளம்பினோம். நேராக மகாபலேஸ்வர் வந்தோம். புனே அருகே இருந்த மகாபலேஸ்வர் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம். மும்பை பூனே அருகே இருப்பதனால் பயணிகள் நிறைய வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் விடுதிகள்.

பழைய மகாபலேஸ்வரில்தான் கிருஷ்ணா நதி உற்பத்தியாகிறது என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள ஐந்துநதிகளின் ஆலயம் முக்கியமானது. கல்லால் ஆன ஆலய வளைப்புக்கு நடுவே ஒருகுளம். அதில் ஐந்து ஊற்றுகளில் இருந்து ஐந்து நதிகள் ஊறி ஒரு கற்பசுவின் வாய் வழியாகக் கொட்டுகின்றன. கிருஷ்ணா தவிர காயத்ரி, வெண்ணா,சாவித்ரி,கொய்னா ஆகிய நதிகளும் இங்கே ஊறுகின்றன என்று சொல்லப்படுகிறது


இறுதிப்பகுதியில் பல கிலோமீட்டர் அகலத்திற்கு நீர் பெருகிப்பிரவாகமாகும் கிருஷ்ணையை ஒரு சிறு ஊற்றாகப் பார்ப்பது உத்வேகமளிக்கும் அனுபவமாக இருந்தது. காந்தியின் சிறுவயது புகைப்படத்தை பார்ப்பதுபோல என்று தோன்றியது. மகாபலேஸ்வரில் சேற்றுக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கொண்ட சிவன் கோயில்கள் இரண்டு உள்ளன. ஒரு கோயிலில் உள்ளது சுயம்பு லிங்கம். கல்லில் எழுந்த குவை வடிவம்.

பஞ்சகன் என்னும் பீடபூமியின் மேல் ஏறிச்சென்று சுற்றிலும் உள்ள மகாபலேஸ்வர் நகரத்தை பார்த்தோம். அந்தி இருட்டிக்கொண்டிருந்தது. நகரம் விளக்குகளாக மாறியது. அங்கே ஏராளமான குதிரைகள். அவற்றை விரைவாக ஓட்டி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். நம்மூர் வண்டிக்குதிரைகள் அல்ல, ஆறடிக்குமேல் முதுகு உயர்ந்த பெரிய மராத்தா குதிரைகள். குளம்படி ஓசை மண்ணை அதிரச்செய்தது. பயணிகள் ஏறி சவாரி செய்தனர்.

ஏனோ பூஞ்ச் வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தபோது ஒரு மாலைநேரத்தை மலையடிவார விடுதி ஒன்றில் செலவிட்ட நினைவு எழுந்தது. அன்று அப்புல்வெளி முழுக்க குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஊர்மக்கள் கூடி விளையாடிக்கூச்சலிட்டனர். குளிருடன் அந்தி சிவந்து கனத்துக்கொண்டிருந்தது. பயணங்கள் அதிகரிக்கும்போது ஓர் அனுபவம் இன்னொன்றுடன் இணைந்துகொள்கிறது. அது ஓர் மனஎழுச்சியை உருவாக்குகிறது. இத்தனை பயணங்களின் பெறுபயன் இதுதான். அற்புதமான கடந்தகால ஏக்கம்.

=================================================================================


மேலும் படங்கள்


Day 02 Flower Valley – Walk

Day 03 Flower Valley – Walk

Day 03 Flower Valley – Flowers


Day 03 Old Mahabaleshwar – Panchagni Temple

Day 03 Panchagni – Table Top View Point

https://plus.google.com/+ManikandanAV/posts/QVA7Db892yF

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜெயமோகன் மின்னூல்கள்

$
0
0

நண்பர்களே,

ஜெயமோகனின் புத்தகங்களை ஈபுக்குகளாக ஆக கொண்டுவந்திருக்கிறோம். அது சார்ந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் இதை NewsHunt ல் இருந்து ஆரம்பித்திருக்கிறோம். அதன் பின் படிப்படியாக iBook, (ஐட்யுண்), கூகுள் புக்ஸ் போன்றவற்றிக்கு விரிவுபடுத்த உத்தேசித்துள்ளோம்.

விற்பனை தள முகவரி http://bit.ly/1LbUmlB

NewsHunt ஒரு பெரிய நிறுவனமாக, 12 இந்திய மொழிகளில் புத்தகங்களும், செய்தி கட்டுரைகளுமாக வெளிவருகிறது. இன்று இருக்கும் ஈபுக் வெளியீட்டு நிறுவனங்களில் இந்தியாவில் இதுதான் பெரியது. வேண்டுமெனும்போது படிக்க கிடைக்கும் வசதி, ஜெயமோகன் புத்தகங்கள் கிடைக்காத இடங்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் வாங்குவதற்கான வசதி சார்ந்து இது முக்கியமானது.

இதுவரை கீழ்கண்ட 11 புத்தகங்களை ஈ-புத்தகங்களாக NewsHunt கொண்டுவந்திருக்கிறோம். இப்போது இந்த புத்தகங்கள் ~80% சலுகை விலையில் கிடைக்கிறது.

TITLE

அறம்

இரவு

கன்னிநிலம்

உலோகம்

அறிவியல் புனைகதை வரிசை (விசும்பு)

பொன்னிறப் பாதை

ஈராறுகால்கொண்டெழும் புரவி

புதிய வெளிச்சம்

மத்தகம்

அனல் காற்று

கிளிசொன்னகதை

மீதி புத்தகங்களையும் வெகுவிரைவில் கொண்டுவந்துவிடுவோம்.

இந்தியாவில் இருக்கும் வாசகர்கள் அவர்கள் ஸ்மார்ட் போன் மூலம் போன் அக்கவுண்ட் பாலன்சில் இருந்தே இந்த புத்தகங்களை வாங்கிவிடலாம். மிகவும் எளிமையானது. உங்களது கைபேசியில் இருந்து NEWSHUNT என்று டைப் செய்து 57333 என்ற நம்பருக்கு மெசேஜ் பன்னுவதன் மூலம் நியுஷ்ஹன்ட் மொபைல் ஆப் பெற்றுவிடலாம் அல்லது அவர்களது இணைய தளத்திற்கு www.newshunt.com சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின் jeyamohan என்று டைப் செய்து தேடினால் அனைத்து புத்தகங்களும் உங்களது ஒரு “கிளிக்கில்” உங்கள் போனுக்கு அல்லது ஐபாடுக்கு தரவிறக்கபட்டுவிடும்.

வெளிநாட்டு வாசகர்கள் அல்லது கிரெடிட் கார்ட் / டெபிட் கார்ட்/நெட் பாங்கின் மூலம் புத்தகங்களை வாங்க விரும்பும் வாசகர்கள் முதலில் கணினியில் NewsHunt தளத்தில் “லாக் இன்” செய்து குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிவிட்டு, பின் உங்கள் மொபைல் அல்லது ஐபாட் டில் நியூஸ்ஹன்ட் தளத்திற்கு சென்று வாங்கிய புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர்களின் போன் பேலன்சை பயன்படுத்தியும் புத்தகங்களை வாங்கலாம்.

ஒருவரது போன் அக்கவுண்ட் பாலன்சில் இருந்தே இந்த புத்தகங்களை வாங்கிவிடலாம் என்பது மிகவும் வசதியானது, எளிமையானது.

நண்பர்கள் வேண்டிய புத்தகங்களை தரவிறக்கம் செய்து, மேம்படுத்த, குறைநீக்க எதாவது யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். இந்த திட்டத்திற்கு உதவிய நியுஸ்ஹண்ட் நிறுவனத்தை சேர்ந்த இனிகோமார்க் மற்றும் உமா மகேஸ்வரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

http://bit.ly/1LbUmlB

நன்றி

சரவணன் விவேகானந்தன்

சிங்கப்பூர்.

saran76@gmail.com

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விளையாடல்

$
0
0

இந்தியப்பயணம் முடிந்து திரும்பியபின் கொஞ்சநாள் நினைவுகளை மீட்டுவதுதான் இன்பமாக இருந்தது. என்னசெய்திருக்கலாம் என்ன செய்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள், போன இடங்களில் பிறர் கவனிக்கத்தவறி தாங்கள் கவனித்த விஷயங்கள் பற்றிய வருணனைகள் என்று அதற்கு பல தளங்கள். தொலைபேசியில் பேசும்போது சிவா சொன்னார் ”ஒரு மனக்கொறைதான் கெடந்து உறுத்துது. அந்த பூசாரிப்பையனுக்கு ஒரு அம்பதுரூபா கையிலே கொடுத்திருக்கலாம்”

சிவா சொன்னது பன்னஹல்க அஜய்குமாரைப் பற்றி. நல்கொண்டா அருகே பன்னகல் என்ற ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே ஆந்திர தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் இருந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. காகதீய பாணியில் அமைந்த கன்னங்கரிய கடப்பைக்கல் ஆலயம். இந்தவகைக் கோயில்களில் நுட்பமான சிற்பங்கள் செறிந்த முகமண்டபங்கள் பேரழகு கொண்டவை. மழைபெய்துகொண்டிருந்த காலைநேரத்தில் யாருமே இல்லாத கோயிலின் உள்ளே சுற்றி வந்தோம்.

அப்பகுதியெங்கும் மானுட சலனமே இல்லை. மண்டபங்கள் ஒழுகிக்கொண்டிருந்தன. தூண்கள் ஈரக்கருமையில் மின்னின. கைமுட்டி அளவுள்ள யானைச்சிலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உருவான மண்டப விளிம்பின் நுட்பத்தை பார்த்தபடி கோயிலைச் சுற்றி நடந்தோம். கருவறைக்குள் ஒற்றை விளக்கொளியில் கரும்பளிங்கு லிங்கம் மௌனத்தில் அமர்ந்திருந்தது. வெளியே மண்ணில் புதைந்த காது உடைந்த கரிய நந்தி.

பன்னகல்க அஜய்குமார். 

கோயிலுக்குப்பின்னால் ஒரு திறந்தவெளி சிற்பக் காட்சியகம். அங்கே சிற்பங்கள் மழையில் நனைந்து தங்கள் நிரந்தரமான முகபாவனைகளுடன் நின்றன. அருகே இருந்த அருங்காட்சியகத்தில் வாட்ச்மேன் மட்டும்தான் இருந்தார். அவருக்கு தெலுகு மட்டுமே தெரியும். அவரிடம் தமிழில் விசாரித்து இன்னொரு கோயில் இருக்கும் விஷயத்தை தெரிந்துகொண்டோம். கிட்டத்தட்ட புதையல் ரகசியம் தெரிந்துகொள்ளும் அளவுக்கு சிரமப்பட்டோம்.

பார்ப்பவர்களிடமெல்லாம் அதை விசாரித்து விசாரித்துச் சென்றோம். எங்களுக்கு தெலுகு தெரியாதாகையால் வழிசொல்பவர் விரிவாக தெலுகுவில் சொல்வதையெல்லாம் தலையாட்டிக் கேட்போம். நன்றி சொல்லி பத்தடி முன்னால் சென்று அடுத்தவரிடம் விசாரிப்போம். முதலில் வழி சொன்னவர் புரியாமல் பின்பக்கம் பார்த்து நிற்பார்.

எல்லாரும் வயல் வெளியையே சொன்னார்கள். வழிதவறி விட்டது என்று பட்டது. சாரல் மழையில் நனைந்த கரும்புவயல்கள். சில இடங்களில் பசுமை அலையடித்த சோளவயல்கள். பல கிலோமீட்டர் தூரத்துக்கு மனிதர்களே கண்ணில் படவில்லை. பின்னர் பசுமையின் அலைகளுக்கு அப்பால் கடலில் கப்பலின் முகடு அலைபாய்ந்து தெரிவது போல ஒரு புராதன ஆலயத்தின் கோபுரம் தெரிந்தது.”அதோ”என்றார் செந்தில்.

கோயிலருகே வண்டி சென்றது. செம்மண் சேறு குழைந்த சாலையில் ஒரு சைக்கிளின் தடம் மட்டும் தெரிந்தது. நெருஞ்சி மண்டிய முற்றத்தில் இறங்கி கற்பாளங்கள் சரிந்துகிடந்த கோயில் முகப்பபை நோக்கிச் சென்றோம். இடிந்த கோயில் முகடு. ஆனால் மண்டபம் முழுமையாக, காகதீயக் கட்டிடக்கலைக்குரிய கச்சிதமான வளைவுகள் கொண்ட தூண்களுடன் ஒரு ராட்சத மலர் போல் இருந்தது. கோயிலுக்கு அருகே ஒரு பழைய சைக்கிள்.

கோயிலுக்குள் ஒரே ஒரு மனித ஆத்மா. பத்து வயதுப்பையன் ஒருவன் மேல்மூக்கில் குங்குமப்பொட்டுடன் சட்டை போடாத மெலிந்த உடல். பூணூல் இல்லை. பிராமணப்பையன் அல்ல. கழுத்தில் உருத்திராட்சம். வீரசைவமாக இருக்க வேண்டும். நம்மூர் வைராவிகள் போல.யாரது இங்கே என்று ஆச்சரியமாக எங்களைப் பார்த்தான். உள்ளே சென்றோம். அவன் பின்னால் வந்தான். சத்துக்குறைவின் விளைவான தேமல் கொண்ட உடல். கூடுகட்டிய மார்பு. அவன்தான் கோயில் பூசாரி. ஒன்பதாம் வகுப்பு மாணவன். உடல் அப்படிச் சொல்லவில்லை.

”இது என்ன கோயில்?”என்றார் வசந்தகுமார், மொண்ணையான தெலுங்கில். ”சாயா சோமேஸ்வர் குடி…”என்றான் பையன். ”பன்னகல்லில் இருக்கிற கோயில் எது?” அங்கே இருந்த வாட்ச்மேனுக்குகூட அது தெரிந்திருக்கவில்லை. ”அது பச்சன சோமேஸ்வர் குடி.”என்றான் பையன் இரண்டும் இரட்டைக் கோயில்களாம்.

கோயிலுக்குள் ஆசாரம் ஏதும் இல்லை. ஏனென்றால் அது தொல்பொருள்துறையின் பொறுப்பில் உள்ள கோயில். அஜய்குமார் அங்கே பரம்பரை பூசாரி. ஊரார் கொடுக்கும் சிறு ஊதியம் மட்டும்தான். எங்களை கருவறைக்குள்ளேயே கொண்டு போனான். லிங்கம் கருவறைக்குள் நான்கு படிகள் இறங்கிச்செல்லும் ஆழத்தில் இருந்தது. செம்பருத்திப்பூக்கள் போட்டு பூசை செய்து சிறு அகல்விளக்கும் கொளுத்தி வைத்திருந்தான்.

திரும்பி வெளியே வந்ததும் அஜய்குமார் ”இது சாயா சோமேஸ்வர். இந்த நிழல்தான் சுவாமி” என்று சொல்லி சிறிய விளக்கொன்றை ஏற்றினான். அந்த ஒளியில் லிங்கத்தின் நிழல் எதிரே தெரிந்த சுவரில் எழுந்து மெல்ல ஆடியது. அங்கே லிங்கத்தை வெளியே நிற்கும் பக்தர்கள் பார்க்க முடியாது. பூசைவும் வழிபாடும் நிழலுக்குத்தான். விசித்திரமான தத்துவ எண்ணங்களை உருவாக்கியது அதிர்ந்துகொண்டிருந்த நிழல்.

அஜய்குமார் நிழல் லிங்கத்துக்கு ஆரத்தி காட்டினான். பூ எடுத்து விபூதி பெற்றுக்கொண்டோம். அடுத்து சந்திராப்பூர் செல்ல வேண்டும். ஆகவே வெளியே சென்றோம். அஜய்குமார் பின்னால் வந்து கூச்சம் தெரிந்த முகத்துடன் ”சாமிக்கு எண்ணை வாங்க ஏதாவது கொடுங்க”என்றான். சிவா சட்டென்று கறாராக, ”இல்லை…”என்றார். அஜய்குமார் பின்வாங்கிவிட்டான்.நாங்கள் காரில் ஏறி திரும்பும்போது அஜய்குமார் பின்னால் வந்து வழியனுப்பினான். கோயில் பசுமைக்குள் மூழ்கிச்சென்றது.

”சார் நெனைக்கவே கேவலமா இருக்கு…அந்தப்பையன் முகம் கண்ணிலேருந்து மாறவே இல்லை. அவன் பொய் சொல்ற ஆளே கெடையாது. பிஸினஸிலே நாம் எத்தனை ஆளைப்பாக்கிறோம். அந்த கோயிலுக்கு எவனுமே வாற மாதிரி தெரியல்லை. அவன் ஒரு கடமைன்னு அதைச்செய்றான்…அவன் கேட்டப்ப ஒரு அம்பது ரூபாவ குடுத்திட்டு வரத்தோணல்ல… தரித்திரம் பேசிப்பேசி அதுவே வாயில வந்திட்டுது சார்” என்றார் சிவா. ”நெனைச்சா ஆறவே இல்ல”

காரணம் நாங்கள் பயணம் போகும் பாதை அது. எனவே செலவு எவ்வளவு ஆகும் என்ற ஊகங்களும் சிக்கனம் பற்றிய திட்டங்களுமாக இருந்தோம். ”இருபத்தஞ்சாயிரம் வரை ஓக்கே சார்” என்றார் செந்தில் ”அதுக்கு மேலேயே ஆகும்”என்றார் கிருஷ்ணன். ஆகவே போகும் வழியெல்லாம் வாயையும் வயிற்றையும் கட்டினோம். சத்திரங்களிலேயே தங்கினோம். எங்குமே காணிக்கை அன்பளிப்பு எதுவுமே அளிப்பதில்லை என்றிருந்தோம்.

ஆனால் கடைசியில் கணக்கு பார்த்தபோது திட்டமிட்டதில் பாதிகூட செலவாகவில்லை. ” பயந்து பயந்து கேனத்தனம் பண்ணிட்டோம் சார்” சிவா சொன்னார். ”இனிமே என்ன பண்றது?” நான் ”பேசாம அந்தப்பையனுக்கு கொஞ்சம் பணம் அனுப்பி வையுங்க”என்றேன். சிவா ”அட்ரஸ் தெரியல்லியே சார்” என்றார். ”தெரிஞ்ச அட்ரசுக்கு அனுப்புவோமே”என்றேன், ”கெடைக்கல்லேண்ணா திரும்பிவரும்ல?”

”ஒண்ணு சொல்றேன் ஜெயன், போஸ்டல் டிபார்ட்மென்ட் மாதிரி ஒழுங்கா இருக்கிற டிபார்ட்மெண்டே நம்ம நாட்டிலே கம்மி. அம்பதுபைசா கார்டு போட்டா அஸாமுக்கு போய் சேந்திரும். நம்மாளுக லெட்டர் போடாத தப்பை போஸ்டில தொலைஞ்சிட்டுதுன்னு சொல்லிச் சொல்லியே போஸ்டாபீஸ் மேலே பலருக்கும் தப்பு அபிப்பிராயம் இருக்கு. போஸ்டில் ஒரு லெட்டர் தொலையறதுக்கு பத்தாயிரத்தில ஒரு வாய்ப்பு கூட கெடையாது” என்றாள் போஸ்ட்மாஸ்டர் அருண்மொழி.

”ஏன்?”என்றேன். அருண்மொழி ”இந்த டிபார்ட்மெண்டே கம்மியா சம்பளம் வாங்கிற கீழ்மட்ட ஊழியர்களினாலதான் ஓடிட்டிருக்கு. மொத்த ஊழியர்களிலே அவங்கதான் தொண்ணூறு சதவீதம். அவங்களுக்கு இந்தவேலை மேலே ரொம்ப மரியாதை இருக்கு. இந்த வேலையினாலே தங்களுக்கு கௌரவம் இருக்குன்னு நெனைக்கிறாங்க. எங்க போஸ்ட்மேன் ஒருநாளைக்கு இருபது கிலோமீட்டர் வரை அலையறார். அவருக்கு எக்ஸ்டிரா டிபார்ட்மெண்ட் ஆளுன்னு பேரு. அரை ஊழியரோட சம்பளம்தான். ஆனா அவருக்கு வேலையிலே பரம திருப்தி. இந்தவேலை இல்லேன்னா அவரு கூலிவேலைல்ல செய்யணும்? போஸ்ட்மேன்னா ஊரிலே தெரியாத ஆள் இல்லை. எவ்ளவு மரியாதை!” என்றாள்

நான் சிவாவிடம் ஒரு விலாசத்தை உருவாக்கிச் சொன்னேன்.

P. Ajaykumar,
Temple Priest,
Chaya Somesvar Temple,
Pannakal,
Via Nalkonda ,
Andhra Pradesh

சிவா ”மொதல்லே ஒரு நூறு ரூபா அனுப்புவோம் சார். கெடைக்குதான்னு பாப்போம்”என்றார். ரூபாய் அனுப்பியதாக நாலைந்து நாள் கழித்துச் சொன்னார்.

பின்பு சிவா ·போன்செய்தார். ”சார், பணம் கெடைச்சிட்டுது. ரசீது இப்பதான் வந்தது” நான் சற்று ஆச்சரியத்துடன் ”அப்டியா?”என்றேன். ”ஆமா சார். சீல் எல்லாம் செக் பண்ணிப்பாத்துட்டேன். நல்கொண்டா, பன்னகல் ரெண்டு சீலும் இருக்கு. சரிதான். தெலுங்கிலே தொகை எழுதியிருக்கு. அஜய்குமார் கையெழுத்து போட்டிருக்கான்…ஒண்ணும் பிரச்சினை கெடையாது” சிவா சொன்னார்”ஆறுதலா இருக்கு சார். ஒரு கடமை முடிஞ்சது. சொல்லப்போனா இப்பதான் நம்ம டிரிப்பே நிறைவா முடிஞ்சிருக்கு”

எனக்கும் ஆறுதலாக இருந்தது. ஆனால் பன்னகல்க அஜய்குமாருக்கு எங்கள் முகம், ஊர் எல்லாம் நினைவிருக்குமா என்று தெரியவில்லை. சாயா சோமேஸ்வரின் ஒரு திருவிளையாடலாக அதை எண்ணிக்கொண்டிருப்பான்

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Nov 15, 2008

இந்தியப் பயணம் 9 – நல்கொண்டா

தொடர்புடைய பதிவுகள்

என்றுமுள கண்ணீர்

$
0
0

Siluvaiyin Peyaral

கிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின் தெய்வம்.

எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன

என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட

ஜெ

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் சிலுவையின் பெயரால் நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35

$
0
0

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 6

தேவாரண்யம் சொற்கள் செறிந்து உருவான இருளால் ஆனதே என்று அர்ஜுனன் அறிந்தான். மண்ணில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள் எழுப்பிய ரீங்காரம். கிளைகளிலும் இலைகளிலும் செறிந்த பறவைகளின் ஓசையும், புதர்களை ஊடுருவி ஓடிய சிறு விலங்குகளின் சலசலப்பும், கிளை ஒடித்து மரம் விலக்கி செல்லும் களிறுகளின் காலடிகளும், புதர்களை துள்ளிக் கடக்கும் மான்களின் அமறலும், கொம்புகள் முட்டிக் கொள்ளும் காட்டெருமைகளின் முக்காரமும், முழவொலி எழுப்பும் கரடிகளும், குகைக்குள் உறுமிய புலிகளும் கிளைகளை உலைத்து பாய்ந்தமைந்து குமுறிய மந்திகளும் இலைகளுக்கு மேல் எழுந்து வானில் சிறகடித்துக் கூவி அமைந்த புட்களும் இலைசொட்டி ஒலை மேல் விழும் தாளமும் கொண்டு ஒரே சமயம் ஓராயிரம் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது அது. சொல் பெருகி சொல்லின்மையாகி செறிந்து நின்றது.

இரு கைகளையும் நீட்டி சொற்களை விலக்கி சொற்களில் முட்டிக் கொண்டும் சொற்களால் வருடப்பட்டும் சொற்களால் கீறப்பட்டும் சொற்களில் தடுக்கி சொற்களில் கால் வைத்தும் அவன் நடந்து கொண்டிருந்தான். இருள் காலத்தையும் இடத்தையும் மறைத்துவிடுவதை அறிந்தான். அவன் கால் நின்ற வெளிக்கு அப்பால் அவன் காலை ஏற்கும் வெளி அக்கால் சென்று பதியும் கணத்திலேயே நின்ற இடம் மடிந்து எழுந்து வந்தது. அவன் சென்றபின் நின்றவிடம் இல்லாமலாயிற்று. சென்று கொண்டே நின்ற இடத்தில் தொங்கிக் கிடப்பதென தோன்றியது. சூழ்ந்தொலித்த பல்லாயிரம் சொற்கள் திரண்டு ஒற்றை சொல்லாயின. பொருளின்மை கூர்ந்த அவ்வொற்றைச் சொல் பிளந்து பிளந்து பொருள் பெருகிய பலகோடி சொற்களாகிறது என்பதை உணர்ந்தான். ஒவ்வொரு சொற்பொருளிலும் இலைக் காம்பின் நுனியில் அது பிரிந்து உதிர்ந்ததன் வடு எஞ்சுவது போல் பொருளின்மை மிஞ்சியிருந்தது.

இருளுக்குள் மெல்லிய சிறகோசை மட்டுமென அவனைத் தொடர்ந்து சித்திரமென வந்த வர்ணபக்ஷன் “என்னைத் தொடர்க!” என்றது. “நானும் ஒரு சொல்லே.” அவ்வொற்றைச் சொல்லைத் தொட்டு பற்றியபடி அவன் இருளுக்குள் நடந்தான். முடிவிலி வரை நீட்டிக் கட்டிய வலையின் ஒற்றைச்சரடு வழி செல்லும் சிறு சிலந்தியென. “அச்சம் கொள்கிறாயா?” என்றது வர்ணபக்ஷன். “இல்லை” என்றான். “சிறு அச்சம் நன்று. இல்லையேல் உன் உடல் கொண்ட வடிவ எல்லைகள் கரைந்து இவ்விருளில் பரவி மறைந்து இருளாவாய்” என்றது வர்ணபக்ஷன். “நான் ஐயம் கொண்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

சிறகடித்துச் சுழன்று வந்து “அதுவும் நன்றே” என்ற வர்ணபக்ஷன் “வருக! இது மூன்றாவது சுனை. இதை பௌலோமம் என்கிறார்கள். இங்கு சமீசி என்னும் தேவதை முதலை வடிவு கொண்டு வாழ்கிறாள். முதலிரு சுனைகளிலும் தப்பி இங்கு எஞ்சும் உயிர்களை அவள் உண்கிறாள். கால் கொண்டவை முதற் சுனையில் மறைகின்றன. தாவி வருபவை இரண்டாம் சுனையில் உயிர் துறக்கின்றன. இது பறந்தலைபவர்களுக்கான சுனை” என்றது. அந்த இருளில் விழி புதைய “இதன் இயல்பென்ன?” என்றான் அர்ஜுனன்.

“இதை வியானம் என்கிறார்கள். இச்சுனையில் நிறைந்திருக்கும் நீர் எடையற்றது. ஆவி வடிவானது. இக்காடெங்கிலும் ஒவ்வொரு இலையிலும் பரவி குளிர்ந்து சொட்டி வெம்மையால் மீண்டும் ஆவியாகும் நீர் இங்கு வந்து சேர்கிறது. இங்கிருந்தபடியே இக்காடெங்கிலும் நிறைந்துள்ளது இது. ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு தளிரையும் இச்சுனை அறியும்” என்றது வர்ணபக்ஷன். அர்ஜுனன் வியானத்தின் கரையை அடைந்ததை தன்மேல் வந்து பட்ட நீராவியிலிருந்து அறிந்தான். முதல் மழைக்குமுன் அறைகளுக்குள் வரும் வெம்மை கொண்ட காற்றென தோன்றியது. அவன் உடல் வியர்த்து ஆடை நனைய முதுகோடை வழியே வழிந்தது.

உடல் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியபோது அந்த ஆவியும் மேலும் குளிர்ந்தது. பின்பு செவிமடல்களிலும் புருவங்களிலும் மூக்கு நுனியிலும் வியர்வை சொட்ட அருவியின் நீர்ப் புழுதிப் பரப்பை கடந்துசெல்வது போல அவன் அச்சுனையை அணுகினான். காற்றே நீரென்றாகியிருந்த போதிலும் தொண்டை விடாய் கொண்டு பரிதவித்தது. “இனி நான் வருவதற்கில்லை. சிறகுகள் நனைந்து என்னை மண்ணில் வீழ்த்திவிடும்” என்றது வர்ணபக்ஷன். “ஆம், நீ இங்கிரு” என்றபடி அர்ஜுனன் முன்னால் நடந்தான். நீராவி செறிந்து முகில் என்றாயிற்று. இரு கைகளாலும் அதைக் கலைத்து முன் செல்ல பட்டுத்திரை என்றாயிற்று. கையை வீசி அம்பால் அதைக்கிழித்து முன் சென்றான். குளிர்ந்த பிசினென ஆயிற்று. அதில் புதைந்திறங்கி வியானத்தின் சேற்றுப் பரப்பை அடைந்தான்.

விழிகூர்ந்து அந்த ஏரியின் நீர்விளிம்பை நோக்க முடிந்தது. மலைக்குவைக்குள் விழுந்து கிடக்கும் முகில்பிசிறு போல் தெரிந்தது. கால் எடுத்து வைத்து அதை அணுகி இரு கைகளாலும் அச்சுனை மேல் படர்ந்திருந்த ஆவிப்புகைப்படலத்தை விசிறி நகர்த்தினான். கருமைக்குள் இளங்கருமை வெண்மையென விழிமாயம் காட்டியதை வியந்தபடி குனிந்து நீர்ப்பரப்பை பார்த்தான். அள்ளி இரு கைகளிலும் கோரியபோது நீரின் தொடுகை உளதா இலதா என்று உளம் ஐயம் கொண்டது. “மைந்தா, அதை விலக்கு” என்று குந்தியின் குரலை அவன் கேட்டான். உடலின் தோல் செவிப்பறையென மாற பிடரி மெல்ல சிலிர்க்க அசையாது நின்றான்.

“நீ கொண்ட விழைவு முதிர்ந்து நான் எழுந்தேன். பெருவிழைவுடன் உன் கால் சுற்றிய நாகம் நான்” என்றாள் குந்தி. “இளையவனே, என் மேல் நான் கொண்ட ஐயமே உன்னை மூன்றாமவன் என விலக்கி நிறுத்தியது. ஆனால் ஒரு கணமும் உன் வில்லை நான் மறந்ததில்லை.” பெருமூச்சுடன் “ஆம், நான் அதை அறிவேன். என் வாழ்நாளெல்லாம் காடுகளில் அலைவதே ஊழ் என்று உணர்கிறேன்” என்றான். “அரண்மனையில் நீ இருக்கையில் உன்னை காடு நோக்கி விலக்குகிறேன். அரண்மனையில் என்னை விட்டு உன்னுடன் காடுகளில் நானும் அலைகிறேன்” என்றாள் குந்தி. “அறிவேன்” என்றான் அர்ஜுனன்.

“மைந்தா, நீ உரு நான் நிழல். உன் கால் தொட்டுச் சென்ற மண் அனைத்திலும் உடல் தொட்டுச் சென்றவள். சாயும் பொழுதுகளில் பேருருக்கொண்டு உச்சிப் பொழுதில் உன் காலடியில் மறைந்து என்றும் உன்னுடன் இருப்பவள். இதை விலக்கு. உன்னை உள்ளிழுத்து இங்கொரு நிழலென ஆக்கிவிடும் இச்சுனை” என்றாள். அவன் கண்மூடி தன்னை தொகுத்தான். தன் உடலை வாளென்றாக்கி பல்லாயிரம் வலைப்பின்னல்களை வெட்டிச்சென்றான். புன்னகைத்து “விலகிச் செல்! இன்னும் நூறாயிரம் அறைகளைத் திறந்து அங்கே இன்மையென உன்னை உணர்வதே என் ஊழ்” என்றபடி அந்நீரை தலையில் விட்டான். அக்கணமே முதலையெனப் பாய்ந்து அவனை பற்றிக் கொண்டாள் சமீசி.

முதலையின் வால் சுழன்று அவனை அறையவந்த கணத்தில் அதன் நுனியை தன் காலால் மிதித்து சேற்றுடன் இறுக்கி இரு முன்னங்கால்களையும் பற்றி உடலைச் சரித்து தலையால் அதன் நெஞ்சில் ஓங்கி முட்டி அதை அடிவயிறுகாட்டி விழச்செய்து அக்கணமே புரண்டு அதைத் தூக்கி புல்வெளி நோக்கி வீசினான். அங்கு நின்றிருந்த மரத்தில் மோதி பட்டையில் உரசும் ஒலியுடன் சரிந்து விழுந்து சில கணங்கள் நெளிந்து துடித்தபின் முன்காலை ஊன்றி பெண்ணென எழுந்தது. சமீசி “இக்கணம் என் தவம் நிறைவுற்றது. இவ்வாழம் வரை மானுடர் எவரும் வந்ததில்லை. இதை வெறும் அலையென மாற்றும் பேராழம் ஒன்று உனக்கு வாயில் திறப்பதாக!” என்று வாழ்த்தி முகில் பிசிறுகளாக காற்றில் படர்ந்து மறைந்தாள்.

எழுந்து சரிவில் ஏறி மேலே சென்றான். நீள்மூச்சுடன் காட்டுக்குள் நடந்தான். அவன் கால்கள் உடலை சுமக்கமுடியாமல் தள்ளாடின. சிறகடித்து அவன் தலைக்குமேல் பறந்து சுழன்று வந்து கிளைநுனியில் அமர்ந்து “பஞ்சதீர்த்தத்தின் நான்காவது சுனை இனிமேல்” என்றது வர்ணபக்ஷன். “நோக்கு!” அர்ஜுனனின் தலைமேல் வந்து சிறகடித்து கூவி அழைத்தது. “இதற்கு காரண்டமம் என்று பெயர். இதில் வாழ்கிறாள் பெருவல்லமை கொண்ட முதலையாகிய ஃபுல்புதை. முன்பு இங்கு முனிவரின் தீச்சொல்லால் வந்திறங்கிய ஐந்து தேவதைகளில் ஒருத்தி.” அர்ஜுனன் “அவள் எத்தகையவள்?” என்றான்.

“இளைய பாண்டவனே, இனியவையும் சிறந்தவையும் மட்டும் செறிந்து உருவானவர்கள் தேவர்கள். ஆனால் தீச்சொல்லால் தலைகீழாக திருப்பப்பட்டு இவ்வண்ணம் உருக்கொள்கையில் அவ்வினிமையும் நன்மையும் அதே அளவு பேருருக்கொண்ட தீமையாக மாறுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அடியில் அதன் இருண்ட புறமொன்று உள்ளது என்பர் என் குலத்துப் பாடகர். இங்கு நிலத்திழைந்து வரும் உயிர்களை உண்ணும் ஆறாப்பெரும் பசி கொண்டு ஃபுல்புதை வாழ்கிறாள். அவளை வெல்கையிலேயே முனிவர் சென்று நின்று திகைக்கும் கரிய பெரிய நதியின் கரையை அடைந்து பாய்ந்து நீந்தி நீ மறுகரை செல்கிறாய். அவ்வண்ணம் ஆகுக!”

அர்ஜுனன் “பெருந்தவத்தின் தருணத்தில் மாமுனிவர் காணும் அவ்விருள்கணத்தை நாணிழுத்து அம்பு பூட்டி குறி நோக்கி நின்று ஏவுவிரலை அசைப்பதற்கு முந்தைய கணம் வில்லாளியும் உணர்வதுண்டு” என்றான். “ஆம், அது ஒரு கணநேரத்தவமே” என்றது வர்ணபக்ஷன். “சிறகுளது என்றுணர்ந்து அன்னை அமைத்த கூட்டிற்கு வெளியே வந்து நின்று, விரிந்த வானை நோக்கி கழுத்து தூக்கி, அலகு திறந்து கூவி, பாய்ந்தெழுந்து காற்றில் மிதப்பதற்கு முந்தைய கணம் ஒவ்வொரு பறவையும் அதை உணர்ந்திருக்கும்.”

“இதன் பெயரென்ன?” என்றான் அர்ஜுனன். “இதை சமானம் என்கிறார்கள். இதுவரை நீ நோக்கிய மூன்று சுனைகளின் நீர் அளவுகள் இச்சுனையால் நிகர் செய்யப்படுகின்றன. அம்மூன்றுக்கும் நடுவில் அமைந்துள்ள இச்சுனை தன் பல்லாயிரம் நுண்ணிய துளை வழிகளால் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துள்ளது. இச்சுனை இருக்கும்வரை பிற மூன்றும் நீர் ஒழிந்து வெறுமை கொள்வதில்லை” என்றது வர்ணபக்ஷன். அர்ஜுனன் பறவையின் வழிகாட்டலில் நோக்கி கால்வைத்து மெல்ல நடந்தான். “இது ஒரு மாயவெளி என்கிறார்கள். இதன் எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் பால் திரிந்து உருமாறுகிறார்கள். இன்னும் சில கணங்களில் நீ அதை உணர்வாய்.”

அர்ஜுனன் “அது எனக்கு புதிதல்ல, மேலும் அதையே எதிர்பார்த்தேன்” என்றான். புதர்களை வகுந்து செல்லச் செல்ல இலைகளின் அடியில் வெண்ணிற ஒளி ததும்புவதை கண்டான். மரங்களின் மறுபாதிகளில் பால்வழிவது போல் ஒளிவழிந்தது. உருளைக்கற்கள் உடைந்த முட்டையின் பாதி ஓடு போல் தெரிந்தன. வழிந்தோடிய சிற்றோடைகள் வெண்பட்டு நாடா என நெளிந்தன. “வெண்பளிங்கு போன்றது இந்தச் சுனை” என்றது வர்ணபக்ஷன். “இவ்வெல்லையை நான் கடக்க விழையவில்லை. பெண்ணாக உணர்ந்தபின்பு என்னை நான் மீட்டுக் கொள்வேனா என்று எனக்கு ஐயம்.”

அர்ஜுனன் தன் கண்முன் மெல்லிய வெண்ணிற எல்லைக்கோடு போல் தெரிந்த ஒளிவட்டத்தைக் கடந்து அப்பால் சென்றான். அவ்வொளி பட்டு தன்னுடல் சற்றே குழைந்து நெளிந்தாடியதை அறிந்து மேலும் ஒரு அடிவைத்தபோது தன் இடைகுழைவதை தோள் நெகிழ்ந்துள்ளதை கைகள் நெளிவதை அறிந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் மாறிக் கொண்டிருந்தது. தோள்மறைய நீள்குழல் எழுந்தது. குமிழ் முலைகள் வளர்ந்தன. அணிகள் செறிந்த கைகள். நூபுரம் ஒலித்த கால்கள்.

இடை ஒசிய நடந்து சுனைச் சரிவில் இறங்கி சேற்றுப் பரப்பை அடைந்தான். பாற்கலம் என தெரிந்தது அப்பெருஞ்சுனை. அதை அணுகி குனிந்து அந்நீர்ப்பரப்பை நோக்கினான். அதில் தெரிந்த முகம் எங்கோ அவன் கண்டதாக இருந்தது. முழங்காலில் கையூன்றி மேலும் குனிந்து நோக்குகையில் சிறு வியப்பொலியுடன் அம்முகத்தை அடையாளம் கண்டான். அது இளம் குந்தியின் முகம். அவ்விழிகளை நோக்கி நின்றபோது அந்நீர்ப்பாவை பேசுவது போல் “திரும்பிச்செல் மைந்தா! இவ்வாழம் வரை நீ வந்ததே வெற்றிதான். பின்னால் ஏதுமில்லாத யோகியரின் பயணமிது. இல்வாழும் மானுடர்க்குரியதல்ல. அடைந்தடைந்து சென்று நிறைவுறுவது வாழ்க்கை. திறந்து திறந்து சென்று ஒடுங்குவது ஞானத்தின் பாதை” என்றது குரல்.

“என் மைந்தனல்லவா? என் மடியிலிட்டு நான் முலையூட்டிய செல்வனல்லவா? எவ்வன்னை தான் தன் மகன் துறந்து செல்வதை விழையமுடியும்? அவ்வண்ணம் அவன் துறப்பது முதலில் அவன் அன்னையை அல்லவா? என்னை விலக்கும் விழியொன்று உன்னில் அமைந்தால் அக்கணம் நான் இறந்தேன் என்றல்லவா பொருள்? இதோ இங்கு நிறைந்திருப்பது என் முலை நிறைந்த பாலென்று கொள்க. உனக்கு நான் ஊட்டியது சிறிதே. உனக்கென ஊறி நிறைந்தது இப்பெரும் வெள்ளம்.”

அர்ஜுனன் தன் அருகே அவள் அணுகுவதை உணர்ந்து “விலகு!” என்றான். “என் கண்ணீரைக் கடந்து வந்தாய். இம்முலைப்பாலை கடப்பாயா?” என்றாள் குந்தி. “விலகு!” என்றவன் திரும்ப அங்கு மணிமுடியும் பொற்கவசமும் மஞ்சள் பட்டாடையும் அணிந்து நின்ற பாண்டுவை கண்டான். “எந்தையே, நீங்களா?” என்றான். “இல்லை, நான் உன் அன்னை” என்றான் பாண்டு. “உன்னை ஆணென வந்து போர்முனையில் சந்திக்க விழைந்தவள். உன்னைக்கொல்லும் மைந்தனைக் கருவுற விழைந்தவள். உன்னுடன் நீந்திய ஆழத்தில் உன் விழிநோக்கி விண்ணின் சொல்லை கற்றவள்.”

“அன்னையே” என அவன் சொல்ல அச்சொல்லைமீறி நெஞ்சு முன்னால் பாய்ந்தது. அந்நீரை அள்ளி தலையில் விட்டான். அக்கையசைவு முடிவதற்குள் தன் மேல் பாய்ந்த முதலையை குனிந்து தலையால் முட்டி மறுபக்கம் சரித்து குனிந்து அதன் வாலைப்பற்றி மும்முறை சுழற்றி அப்பால் காட்டில் வீசினான். தொலைவில் ஒரு பாறை இடுக்கில் விழுந்து துடித்து புரண்டெழுந்து நின்றாள் ஃபுல்புதை.

“இளையோனே, இங்கு உயிர்கள் கருணையால் தளையிடப்பட்டுள்ளன. அதையும் வென்று செல்பவனே முமுமையை அடையும் தகுதி கொண்டவனாகிறான். உன் விழைவின், தேடலின் இரக்கமற்ற வாளால் இக்கருணையை வெட்டிச் சென்றாய். நான்காவது சிறையை உடைத்திருக்கிறாய். விண்ணிறைந்துள்ள அமுதத்தில் ஒரு கோப்பை என்றோ உனக்கும் அளிக்கப்படும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றுரைத்து வெண்புகைப்படலமென அலைவுற்று மறைந்தாள்.

காட்டில் அர்ஜுனன் நடக்கையில் மிகவும் களைத்திருந்தான். “ஐந்தாவது சுனையை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம்” என்றது வர்ணபக்ஷன். “இங்கொரு மண்குன்று மேல் அமைந்துள்ளது இச்சுனை. ஐந்தில் மிகச்சிறிய சுனை இதுவே. விண்ணிலிருந்து பெய்யும் நீர் மட்டுமே உள்ளே செல்லக்கூடியது. ஐந்தில் விண்கதிர் ஒளிபடும் ஒரே சுனையும் இதுதான். விண்மீன்களை சூடிப் பரந்திருக்கும் இவ்வாழத்தில் வாழ்கிறாள் லதை எனும் தேவதை. ஐவரில் நிகரற்ற அழகி அவளே என்கின்றன எங்கள் பாடல்கள். அவள் வாழும் இச்சுனையை ஒளியெழில் கண்டு மகிழ்ந்து சுப்ரசன்னம் என்றழைக்கின்றனர். ஒளியே நீரென அங்கு தேங்கியுள்ளது என்கிறார்கள்.”

“அங்கு செல்லும் வழியில் உன் விழிகள் விண்மீன்களென பூப்பதை உணர்வாய். அங்குள ஒவ்வொரு மரமும் மலரென மாறியிருக்கும். கற்பாறைகள் கனிகள் போல் தெரியும். காமம் கொண்ட பெண்ணுடலின் கதுப்புத் தசை போல் தரை துடிக்கும். நறுமணமும் இன்னிசையும் நிறைந்த காற்று வீசும். அச்சுனை மேல் நிலவு விழுகையில் மட்டுமே தேவாரண்யம் எனும் இக்காடு முற்றிலும் அமைதி பெறும்” என்றது வர்ணபக்ஷன். “செல்க! வென்று மீள்க!”

நீர்த்துளிகள் உதிரும் ஒலிகளும் மெல்ல தேய்ந்தமிழ இன்மையென்றே ஆகி பின் இருப்புணர்ந்து மீளும் முடிவிலி என நிறைந்த பேரமைதி. “அகல்வெளியில் காடும் இணைந்து மறையும் தருணம் இது. இது இங்கிருப்பதை அப்போது மட்டுமே விண்ணகம் அறியும்” என்றது வர்ணபக்ஷன். “இதன் இயல்பு யாது?” என்றான் அர்ஜுனன்.

“உத்தானம் என்று இதை சொல்கிறார்கள். மண்ணில் உள்ள நீரை விண் உறிஞ்சி உண்கிறது என்று அறிந்திருப்பாய். இக்காட்டில் ஊற்றென்றும் ஓடையென்றும் ஆவியென்றும் நீர்த்துளியென்றும் இளமழையென்றும் நிறைந்திருக்கும் நீரை வானம் அள்ளி எடுத்துக்கொள்வது இச்சுனையிலிருந்தே. புலரியில் கதிரவனின் முதல்கதிர் பட்டு ஒளி கொள்கிறது. பின்னர் உச்சியில் வெம்மை கொண்டு ஆவியாகிறது. அந்தி சரிந்தபின் விண்ணில் விண்மீன்கள் தெளியும்போது ஓசையின்றி நீர் மேலெழுந்து செல்வதை உணரமுடியும். தேவாரண்யத்தின் நெற்றிப்பொட்டில் அமைந்துள்ளது இச்சுனை.”

அர்ஜுனன் புதர்களை விலக்கி தன் முன் எழுந்த அச்சிறு குன்றை நோக்கி நின்றான். அதன் உச்சியில் ஓர் சுனை உண்டு என அங்கிருந்து எண்ணவும் முடியவில்லை. “அங்கு செல்வது உகந்ததல்ல இளைய பாண்டவனே. அது ஒருவழிப்பாதை. இவ்வெல்லை கடந்து அங்கு சென்றவை அனைத்தும் அங்கிருந்து விண்ணால் உறிஞ்சப்பட்டு மேலெழுந்து மறையும். முடிவிலியை அறிந்தவை அனைத்தும் முடிவிலி என்றாகும் என்றறிந்திருப்பாய். முடிவெனப்படுவதே உருவென்றாகிறது. உருக்களால் நிறைந்தது இப்புவி” என்றது வர்ணபக்ஷன்.

“இவ்வெல்லை வரை வந்ததே உன்னை இப்புவி கண்ட பெரும் யோகிகளில் ஒருவனாக்குகிறது. இதைக் கடந்து அப்பால் நீ செல்லவேண்டுமென்பதில்லை” என்றது வர்ணபக்ஷன். “நானறியேன், ஒருக்கால் இதுவே நான் தேடி வந்ததாக இருக்கலாம். நான் தேடுவது இங்கே மறைந்து அழிவதே என்றுகூட இருக்கலாம்” என்ற அர்ஜுனன் அவ்வெல்லையைக் கடந்து சிறு குன்றின் மேலேறினான். வியத்தகு காட்சி ஒன்றை பின்னரே அவன் கண்டான். அக்கூம்பு வடிவக்குன்றின் நான்கு திசைகளிலிருந்தும் காற்று மேல் நோக்கி எழுந்து கொண்டிருந்தது. மணலும் புழுதியும் மெல்ல மேல் நோக்கி ஒழுகி எழுந்தன. சற்று நடக்கையில் எழுவதா விழுவதா நிகழ்கிறது என்று அவன் விழிமயங்கியது.

அவனருகே வந்த வர்ணபக்ஷன் “இவ்வெல்லைக்கப்பால் கடக்க எனக்கு ஒப்புதல் இல்லை. வாழ்க!” என்று சொல்லி திரும்பி மறைந்தது. மேலே செல்லச் செல்ல கால்தசையின் விசையின்றியே அவனுடல் மேலே சென்று கொண்டிருந்தது. கண்காணா சரடொன்றால் கட்டி தூக்கப்படுவது போல் அவன் சென்று நின்ற முகடுக்கு நடுவே முழுவட்ட வடிவ சுனை ஒன்றிருந்தது. அதற்குள் ஒளி மட்டுமே நிறைந்திருந்தது. பின்னர்தான் அதை நீரென்று உணர்ந்தான். நீரென்று விழி நோக்குவது நீர்ப்பாவைகளின் பரப்பையே என்று கற்றிருந்தான். எதையும் எதிரொளிக்காத நீர் இன்மையென்றே இருந்தது.

சுனை விளிம்பில் மெல்ல நடந்திறங்கி மெல்ல நீர்விரிவை அடைந்தான். குனிந்து அதில் ஒரு கையை அள்ளினான். ஒளியை கையால் அள்ள முடியுமென்று கண்டு குழந்தைக்குரிய களியில் பொங்கியது அவன் உள்ளம். அருகே அவன் உள்ளத்தால் எதிர்நோக்கிய குந்தியின் உருவம் எழுந்தது. “மைந்தா, வேண்டாம். இதைத் தொட்டபின் அங்கு யாதொன்றும் எப்பொருளும் கொள்வதில்லை. பொருளனைத்தையும் ஊடுருவிச்செல்லும் நோக்கு ஒருவனுக்கு இருக்குமென்றால் பொருளென புவியில் எவை எஞ்சும்? பொருளென்பவை விழிக்கு அவை அளிக்கும் தடையால் ஆனவை அல்லவா? விலகு!” என்று அவள் ஒலியின்றி சொன்னாள்.

“உன் விழைவுக்கு நிகர்விழைவு கொண்டு எதிரே நிற்கும் ஆடிப்பாவையென என்னை நீ இதுவரை கண்டதில்லை” என்றாள் குந்தி. அர்ஜுனனின் தோள்களும் கைகளும் நடுங்கின. “சொல்லுக்குச் சொல் தோளுக்குத் தோள். வில்லுக்கு என் வில்லும் நிகர் நிற்கும். உன் அம்பின் கூர்முனையை என் அம்புமுனை சந்திக்கும்.” அவன் மெல்லிய குரலில் “விலகு!” என்றான். மீண்டும் தன் உள்ளத்தின் அடியாழத்தில் எங்கோ சொன்னான். விலகு விலகு விலகு என்று அவன் ஆழத்தின் ஆயிரம் குகைகள் அச்சொல்லை எதிரொலித்தன.

“ஒரு கணத்தின் பல்லாயிரம் கோடியில் ஒன்றென ஆகிய தேவகணத்தால் மட்டுமே நீ என்னை வெல்ல முடியும். உன் அம்பு நுனியின் புள்ளியில் அமைந்த மாநகரத்தின் நடுவே அமைந்த மாளிகையின் குவைமுகடின் உச்சிக் கொடிமர நுனியில் பறக்கும் ஒரு கொடி. அதுவே உன் அறிதல் என இருக்கக்கூடும். இங்கு அதைத் தொட்டபின் அதை அறிய நீ மீள்வதில்லை” என்றாள் குந்தி. “விலகு!” என்றான் அர்ஜுனன். அவன் மேல் கவிந்திருந்த வானம் பல்லாயிரம் இடி முழக்கங்களை எதிரொலித்தது.

“மூடா, ஒன்றை விட்டு விட்டு இங்கு வந்துளாய். திரும்பு! அதை அடைந்து மீள்!” என்றாள் குந்தி. அர்ஜுனன் “எதை?” என்று எண்ணிய கணமே அறியாது அவன் விழி திரும்பி அந்நீர்வெளியை நோக்கியது. அதிலொரு பெண் முகம் எழுந்து புன்னகைக்கக் கண்டான். அவன் கையிலிருந்த நீர் மீண்டும் அச்சுனையில் விழுந்ததுமே முதலையென்று உருமாறி லதை அவன் மேல் பாய்ந்தாள். பயின்று தேர்ந்த உடலால் அவளை விலக்கி அவளை நிலையழிந்து மறுபக்கம் சென்று விழச்செய்தான். பாய்ந்து அவள் மேல் விழுந்து இரு கால்களாலும் கைகளாலும் அவளை பற்றிக்கொண்டான்.

அவள் வால் அலைந்து துடிக்க எம்பி விழுந்து துள்ள தன் புயவல்லமையால் அவளைப் பற்றி பன்னிருமுறை புரண்டு சுனை எல்லைக்கு வெளியே வந்து மறுபக்கச் சரிவில் உருட்டி வீசினான். புழுதியில் விழுந்து உருண்டுருண்டு சென்று நிலையழிந்து மூழ்கி நின்று மேலெழுந்து வந்த புழுதியால் உடல் மூடப்பட்டு கிடந்த லதை தன்னுரு மீண்டு அப்புழுதிக்குள் மண்சிலை என பெண் உடல் அமைந்து அவனை நோக்கினாள். “மீள்க! நீ வென்று வர இன்னும் ஒரு களம் உள்ளது. இச்சுனை உனக்கென காத்திருக்கும்” என்றாள். அர்ஜுனன் “அவள் யார்?” என்றான். “அவள் பெயர் சுபத்திரை” என்றாள் லதை. அர்ஜுனன் நீள் மூச்சுடன் “ஆகுக!” என்றான். புழுதி என கலைந்து பரவி லதை விண் மீண்டாள். அர்ஜுனன் தோளில் சிறகடித்து வந்தமர்ந்து “மீள்க!” என்றது வர்ணபக்ஷன்.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்க்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்


தஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்

$
0
0

3

அன்பின் ஜெ,

நலம் தானே?

நான் உங்களுக்கு அலைபேசியில் தெரிவித்தபடி, என் வசம் இருக்கும் மலையாளப் புத்தகங்களின் பட்டியலை விரைவில் அனுப்புகிறேன்.
ஒரு நாயர் நண்பர் இந்த வார இறுதியில் பெயர் விவரங்களைப் படித்து சொல்ல வருகிறார்.
உங்களுக்கு வேண்டியதை அனுப்பி வைக்கிறேன்.

அண்மையில் நாகர்கோவிலைக் கடந்து திருவட்டார் செல்லும் போது உங்களை சந்திக்காமல் வந்தது நான் தவற விட்ட வாய்ப்பு.
உள்மனசில் நீங்கள் தான் விஸ்வரூபமாய் இருந்தீர்கள். உள்ளே ஆதிகேசவன் புரண்டுவிடுவாரோ என்று தான் எதிர்பார்த்தேன்!
தக்கலை டெலிபோன் ஆபீசைக் கடந்த போது உங்கள் டீக்கடையைத் தேடினேன்.
என்றோ ஒரு நாள் சந்திப்போம்.

ஒரு பழைய மின்னஞ்சலைத் தேடிக் கொண்டிருந்தபோது, ஏப்ரல் 2011ல் உங்களுக்கு நாவல் கோட்பாடு பற்றி நான் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சல் கண்ணில் பட்டது.
கீழே அதை மீண்டும் அனுப்பியிருக்கிறேன்.
என் அன்பை சகோதரி அருண்மொழி நங்கைக்கு சொல்லவும்.
முதுகுவலி இப்போது தேவலையா?

மோகன்ஜி
ஹைதராபாத்

ஹெப்ஸிபா ஜேசுதாசன்

ஹெப்ஸிபா ஜேசுதாசன்

ப்ரிய ஜெ,

நலமா? நீங்கள் சொன்னது போல் நான் மொழிபெயர்த்து அனுப்பிய ‘நம் வாயிற்படியிலே நாம்’ கன்னட சிறுகதையை நீங்கள் பாராட்டியிருந்தீர்கள். நன்றி.

உங்கள் ‘நாவல் கோட்பாடு’ இப்போதே படித்து முடித்தேன்.. மிக ஆச்சர்யமாய் இருக்கிறது ஜே… எவ்வளவு கச்சிதமான திறனாய்வு?
‘வாசக இடைவெளி ‘ எனும் உங்கள் கொள்கை இன்று ஒரு கோட்பாடாக அனிச்சையாய் நாவல் உலகில் மாறிவருவதாய்த் தான் தோன்றுகிறது..

ஜெ, இந்த திறனாய்வு வெகுவாய் விவாதிக்கப் பட்டதோ அறியேன். உங்கள் மேதைமையின் முக்கிய வெளிப்பாடு இது.
தலைமுறைகள் கடந்து நாவல் இலக்கியத்துக்கு ஒரு வழிகாட்டுதலாய் நிற்கப்போகும் ஒரு இன்றியமையாத பதிப்பு உங்கள் நாவல் கோட்பாடு.

1992 வாகில் அல்லவா இந்த திறனாய்வை செய்தீர்கள்? இந்த இருபது ஆண்டுகளில் தமிழில் வந்த சில படைப்புகளையும் கருத்தில் கொண்டு ‘நாவல் கோட்பாட்டை’
மீள்நோக்கவும், இன்னமும் விரிவாக்கவும் தேவை இருக்கிறது எனத் தோன்றுகிறது.

இந்த இருபதாண்டு கால படைப்புகளை மீள்நோக்கி அலசுவது நேரம்பிடிக்கும் செயல்.
உங்களின் பல பணிகளுக்கிடையில் இதற்கு நேரம் ஒதுக்க இயலுமோ எனும் ஐயப்பாடு நியாயமான ஒன்று.

ஒன்று செய்யலாம்.. இந்த அலசலுக்கு தகுதியுடைய நாவல்களை நீங்களே தெரிவு செய்து, அதை உங்களின் தவறாத (unfailing)
தீவிர படைப்பூக்கமிக்க வாசகர்வட்ட நண்பர்கள்களுக்கு அந்த நாவல்களை பங்கிட்டு ஆய்வு செய்விக்கலாம்.
அந்த ஆய்வுக்கான விதிமுறைகளை நீங்களே விதித்து வழிகாட்டலாம்.
அந்த விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்ட ஆய்வுகளை நீங்கள் நேர்செய்து தொகுப்பது எளிதானது தானே?

ஜெ, நான் சொன்னது நடைமுறையில் சாத்தியம் என்று நம்புகிறேன். உங்கள் எழுத்து உங்களைப் போல யோசிக்கவல்ல நிறைய ஜெயமோகன்களை அல்லவா உருவாக்கியிருக்கிறது ?

ஜெ, ஜெயமோகன் எனும் தனிப்பட்ட படைப்பாளி ஒரு இலக்கிய இயக்கமாய் மாறி நாள்பல ஆகிறது. சந்தோஷமாய் இருக்கிறது ஜே!

8888888888

வணக்கம் ஜெ..

ஜி நாகராஜன் குறித்த கட்டுரை படித்தேன்.. அது “ஒரு கும்பல்” ஜி நாகராஜனை ஃபேக் என சொல்கிறது என்ற வார்த்தை வருத்தம் அளித்தது… காமராஜர் அணியை கிண்டல் செய்ய காந்தி பயன்படுத்திய தொனியில் இந்த வார்த்தை அமைந்திருந்தது..

ஜி நாகராஜனை இப்போது புதிதாக யாரும் ஃபேக் என சொல்லவில்லை… அந்த காலத்தில் இருந்தே அப்படி சொல்பவர்கள் இருக்கிறார்கள்..

ஜி நாகராஜன் எழுத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது என சிலர் கொன்டாடியதால்தான் , அப்படி இல்லை.. அவர் எழுத்துக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற அடிப்படையில் அவரை ஃபேக் என்றார்கள்… கிட்டத்தட்ட உங்க்கள் கருத்தும் அதுவாகவே இருக்கும் என கருதுகிறேன்..

பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது என்பதெல்லாம் மனதில் பதியும்படி எழுதப்படவே இல்லை..

வெண் முரசு நாவலில் பாலியல் தொழிலாளியுடன் நேரம் செல்விட்ட அர்ச்சுனன் அவளை கொல்ல நினைப்பதை படிக்கும்போது அந்த மன நிலை புரிகிறது,… ஆனால் ஜி நாகராஜன் எழுத்தில் அதெல்லாம் வெகு பலவீனமாகவே இருக்கிறது..

அதுபோல தஞ்ச்சை பிரகாஷ் எழுத்தை ஒரேயடியாக சரோஜா தேவி எழுத்தாளர் என சுருக்குவது கண்டிப்பாக ஏற்க முடியாத ஒன்று.. உங்க்கள் அளவுகோலின்படி பார்த்தாலுமேகூட அவரது பல சிறுகதைகளை உங்களால்கூட புறக்கணிக்க முடியாது…

ஒரு சராசரி வாசகன் உங்க்கள் கட்டுரையை படித்து அவரை தவற விட்டு விடக்கூடாதே என அஞ்சுகிறேன்…

என்றெப்றும் அன்புடன்
பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்,

அது நீங்கள்தானா? சரி கும்பல் இல்லை. தனியாள்தான். மன்னித்துவிடுங்கள்.

ஜி.நாகராஜன் போலி எழுத்தாளர் என எவரும் சொன்னதில்லை. அவர் எழுத்து உண்மையானதல்ல என்ற பேச்சே எழுந்ததில்லை. ஏனென்றால் அது உண்மை என அன்றைய சிறிய சிற்றிதழ் வட்டத்தில் அனைவருக்குமே தெரியும். தங்கத்தை தனிப்பட்டமுறையில் தெரிந்தவர்களே உண்டு. [முதல் பதிப்பின் பின்னுரையில் அதை குறிப்பு எழுதியவர் கோடி காட்டியிருப்பார். நெல்லையில் தங்கியிருந்தபோது ஜி.என் ஒரு விபச்சாரியை திருமணம் செய்ய முயன்றார் என. குறத்தி முடுக்கு நெல்லை தேரடியிலிருந்த ஒரு தெருதான்]

ஆனால் அவரது பார்வைக்கோணத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் இருவகை. ஒன்று ஜி.என் விபச்சாரிகளின் வாழ்விலுள்ள சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றைப்பற்றி பொருட்படுத்தாமல் பாட்டாளிவர்க்கப்பார்வையை முன்வைக்காமல் எழுதியிருக்கிறார் என்பது. இதை முன்வைத்தவர்கள் கட்சி சார்ந்த இடதுசாரிகள். இன்னொரு விமர்சனம் அவரது கோணம் ஆண்மைய நோக்கு கொண்டது என்பது.

நான் அவரை விமர்சனம் செய்தது அவர் ‘தூய’ நவீனத்துவ எழுத்தாளர் என்பதனால்தான். அவ்வெழுத்துமுறையின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி உடைக்கவேண்டிய அவசியம் எனக்கிருந்தது. அது வாழ்க்கையின் சில பக்கங்களை மட்டுமே தொடுகிறது. அடிப்படையில் தனிமனிதநோக்கும் எதிர்மறை அணுகுமுறையும் கொண்டது. ஆகவே கசந்த அங்கதம் நோக்கி மட்டுமே செல்கிறது. பரவசம், பித்து, முழுமைநோக்கு ஆகியவற்றைத் தவறவிட்டுவிடுகிறது, மொழி கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது, ஆகவே அறிவார்த்தம் மேலோங்கியிருக்கிறது, கவித்துவம் குறைந்துள்ளது- இதெல்லாம் என் குற்றச்சாட்டுகள்

ஆனால் இவையெல்லாமே ஒரு இலக்கிய முன்னோடியை, ஒரு குறிப்பிட்ட எழுத்துமுறையை தொடங்கிவைத்த மேதையை அணுகும் முறைகள். இவையெல்லாமே சரிதான். இவையெல்லாமே ஒரு சில கோணங்கள்தான். ஜி.என். போலி என்று சொல்லும் குரல் அப்படி அல்ல. அது அவரை அறிவதை தடுத்துவிடுகிறது. சுந்தர ராமசாமி போன்றவர்களின் நவீனத்துவத்தை நிராகரித்து நான் எழுதவந்தேன். ஆனால் அவர்களை நான் நிராகரிக்கிறேன் என பொருளில்லை.

தஞ்சை பிரகாஷை நான் நிராகரித்ததில்லை.அறிமுக வாசகனுக்கான என் இலக்கியப்பட்டியல்களில் அவர் உண்டு. ஆரம்பத்தில் ஒரு கரிசனத்துடன் அவரது எழுத்துமுறையை நான் வாசித்திருக்கிறேன். எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஆரம்பத்தில் அந்தக்கரிசனப்பார்வையை அளிக்கவேண்டும் என்பதே என் எண்ணம், அவரது எழுத்து சம்பிரதாய மற்றும் முற்போக்கு ஒழுக்கவியல்களால் நிராகரிக்கப்பட்டபோது அதை முன்வைத்தேன்.

ஆனால் அது அதன் மீறலுக்காக மட்டுமே இலக்கியம் என எண்ணப்படும் சூழலில் இலக்கியம் என்றால் என்ன என்பதைச் சொல்ல அது வெறும் எல்லைமீறல் மட்டுமே, அத்தகைய மீறல்கள் அவை எழுதப்பட்ட அந்த ஐந்து ஆறு வருடங்களுக்கு மட்டுமே பொருட்படுத்தத் தக்கவை என சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. அவரது சிறுகதைகளை நானே குறிப்பிட்டிருக்கிறேன்.

மற்றபடி இலக்கியத்தில் எப்போதும் மாற்றுப்பார்வைகளுக்கு இடமுண்டு. உங்க்ள் குரல் உங்களுடைய நோக்கை காட்டுகிறது.

ஜெ

1

அன்புள்ள ஜெ

இன்று தளத்தில் வந்த தஞ்சைப் பிரகாஷ் பற்றிய கேள்வியும் உங்கள் பதிலும் படித்தேன்.வியப்படைந்தேன்.இது குறித்து ஒரு விவாதம் நிகழ (த்த) வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்கிறேன். இப்போதைக்கு இது பற்றி உங்களிடம் ஒரு விளக்கம் கேட்கலாமென்று தோன்றியது.உங்களின் தமிழின் சிறந்த நாவல்கள்-விமரிசகனின் பரிந்துரை என்ற ஒரு பட்டியலில் மார்ச் 2001 நீங்கள் எழுதியது.கீழே.

கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.

// கலைத்துப் போடப் பட்ட வாழ்க்கைச் சித்திரங்களும் சம்பவக் குதறல்களும் நிரம்பிய இந்த ‘முதிராத ‘ நாவல் ஒரு அம்சத்தால் முக்கியமாகிறது தமிழ் மனதின் அகக் கோணலை, (பெர்வர்ஷன்) கூற முயன்றமையால்.//

ஆனால் இன்று வந்த அந்த பதிலில் இவ்வாறு இருக்கிறது //தஞ்சை பிரகாஷ் அவ்வகையில் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே//

இந்த மதிப்பீடுகளில் உள்ள வேறுபாடு அல்லது.நகர்வு எதனால்?. ஒரு மறு மதிப்பீடு என்று கொள்ளலாமா?.

அன்புடன்

சுரேஷ் கோவை.

அன்புள்ள சுரேஷ்,

ஆம் கண்டிப்பாக மாற்றுப்பார்வைதான். என் இலக்கிய அளவுகோல்கள் இன்னும் சற்று கறாராக ஆகியிருக்கின்றன.

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலின் பட்டியலைப்பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன். அது தமிழிலக்கியத்தை வாசிக்கவரும் ஒரு வாசகனுக்கான பொது அறிமுகம். எவ்வகையிலேனும் தமிழிலக்கியத்தில் பொருட்படுத்தத்தக்க அனைத்து எழுத்துக்களையும், அனைத்துத் தரப்புகளையும் அறிமுகம் செய்து வாசித்துப்பார் என்று சொல்வதே அதன் இலக்கு.

ஆகவே அது கறாரான இலக்கிய விமர்சன நிலைபாடு அல்ல. ‘இவர் இன்ன காரணத்தால் முக்கியமானவர், இன்னின்ன குறைபாடுகளை பொதுவாகச் சொல்லலாம், வாசித்துப்பாருங்கள்’ என்பதே அதன் குரல். அந்த விமர்சனக்கருத்துக்கள் கூட பொதுவாகத் தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலில் எழுந்தவையே. ஏனென்றால் அந்த ஏற்பையும் மறுப்பையும் அந்நூலுக்குள் விவாதித்து நிறுவ இடமில்லை.

அந்நூலில் அளித்த பட்டியலை வைத்து அந்த அத்தனை படைப்பாளிகளையும் விமர்சகனாக நான் ஏற்றுக்கொள்கிறேன், கொண்டாடுகிறேன் என்று பொருள் இல்லை. ஏனென்றால் அதில் கிட்டத்தட்ட அத்தனை பேரும் சொல்லப்பட்டிருப்பார்கள். அந்தச் சிபாரிசிலேயே மாற்றுக்கருத்தும் சொல்லப்பட்டிருக்கும் என்பதைக் காணலாம்.

தமிழ்ச்சிற்றிதழ் இலக்கியம் பொதுவாசகனுக்கு அறிமுகம் செய்யப்பட்ட காலகட்டத்தில் ஓர் ஒட்டுமொத்த இயக்கமாக அதை அவனுக்குக் காட்டவேண்டியதிருந்தது. வணிக எழுத்தில் இருந்து வேறுபடுத்தி அதன் சிறப்புகளைச் சுட்டிக்காட்டவேண்டியிருந்தது. அதை வாசிக்கவேண்டிய மனநிலைகளை உருவாக்கவேண்டியிருந்தது. ஆகவே எவரையும் விடவில்லை.

ஆனால் விமர்சன அணுகுமுறை அப்படி பரந்துபட்டதாக இருக்கமுடியாது. விமர்சனக்கருத்து அந்த அறிமுகம் வழியாக வாசித்து உள்ளே வந்துவிட்ட வாசகனிடம் பேசுகிறது. அவனிடம் விமர்சிக்கிறது.

என் மதிப்பீட்டில் வெறுமே வணிக இலக்கியத்துடனான வேறுபாடு காரணமாக மட்டுமே முன்வைக்கப்பட்ட ஹெப்ஸிபா ஜேசுதாசன் போன்றவர்கள் வெகுவாகப் பின்தங்கிவிட்டார்கள். அக்காலகட்டத்தில் அதிர்வுகளை உருவாக்கியவர்கள் தஞ்சை பிரகாஷ், எம்.ஜி.சுரேஷ் போன்றவர்களும் பொருளிழந்துவிட்டார்கள்.

அதேசமயம் வணிக எழுத்தில் பிரபலமாக இருந்தமையாலேயே இன்று இலக்கியச்சூழலால் கவனிக்கப்படாது போன சில எழுத்துக்கள் ஓர் எல்லைவரை முக்கியமானவை என்று தோன்றத்தொடங்கியிருக்கின்றன. உதாரணம் பி.வி.ஆர் எழுதிய ‘மிலாட்’ ‘கூந்தலிலே ஒருமலர்’போன்ற நாவல்கள். மகரிஷியின் ‘பனிமலை’ போன்ற நாவல்கள்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சஹ்யமலை மலர்களைத்தேடி -4

$
0
0

நேற்று மதியம் பூனாவிலிருந்து கே.ஜே.அசோக்குமாரும் காமராஜ் மணியும் வந்தனர்.. மகாபலேஸ்வரில் இரவு அவர்களும் எங்களுடன் தங்கினர். காமராஜ் மணி மருத்துவத்துறையில் ஆராய்ச்சி செய்கிறார். அசோக் குமார் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். சொல்புதிது குழுமத்தில் இருக்கிறார்.

மகாபலேஸ்வர் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம். ஆனால் பருவமழையை ஒட்டித்தான் சுற்றுலா. பருவமழை பொய்த்தமையால் பெரும்பாலான விடுதிகள் காலியாகக் கிடந்தன. ஆகவே அடித்துப்பேசி இரண்டாயிரத்தைநூறு ரூபாய்க்கு பதினொருபேர் தங்குவதற்கு ஓர் விடுதியை அமர்த்திக்கொண்டோம். நான் என் கட்டுரையை எழுதிவிட்டு உடனே தூங்கிவிட்டேன்.
1
காலையில் கிளம்பி பெரும்பாலும் காரிலேயே பயணம்செய்தோம். பேச்சு நடந்தது. வழியில் தோஸிகர் என்னும் அருவியைப்பார்த்தது மட்டும்தான் இன்றைய சுற்றுலா. சதாராவிலிருந்து 20 கிமி தொலைவிலுள்ளது தோஸிகர். வழக்கமாக பெய்யும் ஜூன் முதல் செப்டெம்பர் வரையிலான பெருமழைக்காலத்திற்குப்பின் இங்கே ஏழு பேரருவிகள் விழுவது வழக்கம். இம்முறை நான்கு அருவிகள். நான்குமே குறைவான நீருடன் விழுந்தன.

தோஸிகர் அருவி ஒரு பெரிய மலைப்பள்ளத்துக்கு அப்பால் எழுந்த செங்குத்தான மலைவிளிம்பில் இருந்து பள்ளத்துக்குள் விழுந்தது. அருகே நெருங்க முடியாது. மலைவிளிம்பில் கட்டப்பட்ட பல காட்சிமேடைகளில் நின்று அருவிகளைப் பார்க்கலாம். மிக உயரத்திலிருந்து விழும் அருவி ஜோக் நீர்வீழ்ச்சியையும் நம்மூர் கொல்லி அருவியையும் நினைவுறுத்தியது. வெண்ணிற இறகுகள் போல அலை அலையாக விழுந்தது.

தோசிகரிலிருந்து நேராக கர்நாடக எல்லையிலிருந்த அம்போலிகாட் என்னும் இடத்தை அடைந்தோம். இன்றைய நாள் பெரும்பாலும் காருக்குள்தான்

மகாராஷ்டிராவின் சிற்றூர்கள் வழியாக வந்தோம். மழைக்குப்பின் புல்லடர்ந்து பசுமையலைகளாக எழுந்த மலைகளின் மடிப்புகளில் அரைத்தூக்கத்தில் கிடந்தன கிராமங்கள். சித்திரங்களில் வரையப்படும் அமைதியான விவசாய வாழ்க்கை. பெரும்பாலும் ஆங்காங்கே சும்மா அமர்ந்திருந்தனர். மாடுகள் அசைவற்றதுபோல மேய்ந்துகொண்டிருந்தன.

மலையுச்சிகளில் பெரிய மின்னுற்பத்திக் காற்றாடிகள் தூக்கத்திலென சுழன்றன. இங்குள்ள மலைகள் நம்மூர் மலைகள் போல கூம்புகள் போன்றவை அல்ல.உயர்ந்த தட்டுகள் போல விளிம்புதெரிய நிற்பவை. சரிவுகள் முழுக்க புற்கள் கதிர்விட்டும் பூத்தும் நின்றன. வெயிலே இல்லை. ஆனால் மழையும் இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட ஒளியில் தெரியும் பசுமை போல உள்ளத்தை குளிரச்செய்யும் காட்சி இல்லை

அம்போலிகாட் அருகே ஒரு மலைச்சரிவில் காரிலிருந்து இறங்கி செழித்துகிடந்த புல்வழியாக நடந்து மேலேறி நின்று நோக்கினோம். பச்சைத்தழை கால்பட்டு கசங்கும் வாசனையில் மாலை மயங்குவதைக் கண்டோம்.

அம்போலிகாட் கோவா அருகே உள்ள ஒரு மலைக்கிராமம். குறைவாகச் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். மாலை ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம். வழிநெடுக மழை தூறல்விட்டு விளையாடிக்கொண்டிருந்தது. அம்ப்போலி காட்டில் அறை எடுத்து தங்கியதும் உடைந்து கொட்டத்தொடங்கியது.

மேலும் படங்கள்

Thoseghar Falls

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முன் சென்ற வடுக்கள்

$
0
0

Munsuvadugal copy

பாதை என்பது முன்னால் சென்றவர்களின் சுவடுகள் இணைந்து உருவான ஒற்றைச்சுவடு. பலசமயம் அவற்றை நம் விழிகள் பிரித்தறிகின்றன. அவற்றை விட்டுச்சென்ற மனிதர்களைக் காண்கிறோம். அவர்களின் முகங்கள் அளவுக்கே துல்லியமானவை காலடிச்சுவடுகள்

சந்திக்கநேர்ந்த வெவ்வேறு ஆளுமைகளைப்பற்றிய நினைவுக்குறிப்புகள் இவை. உதிரி நினைவுகளாக இல்லாமல் புனைவெழுத்தாளனின் மொழியாளுமையுடன் கதைபோல சித்தரிக்கப்பட்டவை. ஆகவேதான் நெகிழ்வும் எழுச்சியும் அளிக்கும் தருணங்களால் ஆனவையாக உள்ளன இவை.

வரலாற்றை மனிதர்களாக காணும் அரிய அனுபவத்தை அளிப்பவை இப்படைப்புகள். இவற்றை முதலில் தொகுப்பாக வெளியிட்ட உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி. மீண்டும் வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கு அன்பு

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 1

மாலினி தன் படுக்கை அறையில் மான்தோல் மஞ்சத்தில் அமர்ந்திருக்க அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்த சுஜயன் எழுந்து அமர்ந்து “அதன் பின் அந்த ஐந்து தேவதைகளும் எங்கு போனார்கள்?” என்றான். “அவர்களுக்கு இங்கிருந்து விடுதலை கிடைத்தது. விண்ணில் ஏறி தேவர் உலகான அமராவதிக்குச் சென்றார்கள்” என்றாள் மாலினி.

“அமராவதியிலிருந்து?” என்று சுஜயன் கேட்டான். “அமராவதிதானே அவர்கள் இடம்?” என்றாள் மாலினி. “அவர்கள் அமராவதியிலிருந்து எங்கு செல்வார்கள்?” என்று சுஜயன் மீண்டும் அவளை உலுக்கி கேட்டான். “அமராவதியில்தானே அவர்கள் இருந்தாக வேண்டும்? அங்கேதான் அவர்களுக்கு இடமிருக்கிறது” என்றாள் மாலினி. “எவ்வளவு நாள்?” என்று சுஜயன் தலை சரித்து கேட்டான். “எவ்வளவு நாள் என்றால்?” என்றாள் மாலினி. “இறந்துபோவது வரையா?” என்று அவன் கேட்டான்.

“அவர்கள் தேவதைகள். அவர்களுக்கு இறப்பே இல்லை.” அவன் திகைப்புடன் “இறப்பே இல்லையா?” என்றான். “ஆம். இறப்பே இல்லை.” அவன் “ஆனால்… ஆனால்…” என்று திக்கி “அப்படியென்றால் அவர்கள் அங்கே எத்தனை நாள் இருப்பார்கள்?” என்றான். “இருந்துகொண்டே இருப்பார்கள்” என்றாள் மாலினி. அவன் உள்ளம் சென்று தொட்டு திகைக்கும் இடம் என்ன என்று அவளுக்கு மெல்ல புரியத்தொடங்கியது.

“அவர்கள் எப்போதும் மாறாமல் அங்கே இருந்துகொண்டே இருப்பார்கள்” என்றாள். “எங்குமே செல்ல மாட்டார்கள் அல்லவா?” என்று சொன்னபடி அவன் மீண்டும் படுத்துக்கொண்டான். அவன் தலையை வருடிக்கொண்டிருக்கும்போது முதுகெலும்பில் ஒரு குளிர் தொடுகையை போல அவளுக்கு அவ்வெண்ணம் உறைத்தது. “ஆம்” என்றாள். பின் அவன் இடையை வளைத்து தன்னருகே இழுத்துக்கொண்டு “ஆனால் அவர்களுடைய உள்ளம் அங்கிருந்து ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு முறை வெளியே கிளம்பும். பாதாள உலகங்களிலும் விண்ணுலகங்களிலும் உலாவும். புதிய மனிதர்களையும் தேவர்களையும் நாகங்களையும் பேய்களையும் பார்க்கும்” என்றாள்.

அவன் விழிகள் உருளத் தொடங்கின. “எவரும் அதை கட்டுப்படுத்த முடியாது” என்றாள் மாலினி. “ஏன் அவர்கள் அப்படி ஒளிந்து செல்கிறார்கள்?” என்றான் சுஜயன். “ஏனென்றால், அப்படி செல்லாவிட்டால் ஒரே இடத்தில் வாழ வேண்டும் அல்லவா? ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்படி செய்தால் எல்லா நாளும் ஒன்றே ஆகிவிடும். எவராவது ஒருநாள் மட்டும் வாழ விரும்புவார்களா?” என்று மாலினி கேட்டாள். “ஆம்” என்றபடி அவன் கண்களை மூடி ஒருக்களித்து இருகைகளையும் தொடையின் நடுவே வைத்து உடலை குறுக்கிக்கொண்டான்.

“தூங்கு என் அரசே” என்று சொல்லி அவள் அவன் தலையை தன் விரலால் மெல்ல வருடிக்கொண்டிருந்தாள். அவன் மூச்சு சீராக ஒலிக்கத் தொடங்கியதும் மெல்ல அவனை தூக்கிக் கொண்டுசென்று அருகிருந்த மூங்கில் மஞ்சத்தின் மேல் விரிக்கப்பட்ட புலித்தோல் விரிப்பில் மெல்ல படுக்க வைத்தாள். ஆடை திருத்தி திரும்பிச்செல்ல முனையும்போது அவன் வாயைத் திறந்து காற்றில் தேடி சப்புவதுபோல் ஓசைக்கேட்டாள்.

அவள் மெல்ல திரும்பி வாயிலை பார்த்தபின்பு ஓசையின்றி நடந்துசென்று மூங்கில் படலை மூடிவிட்டு வந்து அவனருகே மண்டியிட்டாள். தன் மேல்கச்சையை நெகிழ்த்தி கனிந்த காம்பை அவன் வாயருகே வைத்தாள். ஆனால் வாய்க்குள் அதை செலுத்த அவளால் முடியவில்லை. குளிர் வியர்வை கொண்டு அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த அறை முழுக்க அவள் நெஞ்சின் ஓசையே ஒலித்தது. பல்லாயிரம் காலம் விரைந்து ஓடுவதுபோல மூச்சிரைக்க அவன் வாய்க்கும் முலைக்காம்புக்குமான மிகச்சிறிய தொலைவை அவள் கடந்தாள். அவள் உடல் அவள் மனத்தை கனவுக்குள் அறைந்தது. மேலும் அருகே சென்றாள்.

அவன் மூச்சு முலைமுகப்பில் தொட்டுச் செல்லும்போது அவள் பற்களை இறுக கடித்துக்கொண்டாள். அதற்குமேல் அவளால் முன்னகர முடியவில்லை. அவன் அவள் வாசனையை முகர்ந்ததுபோல மூக்கை சுளித்தான். மாயச்சரடு ஒன்றால் இழுக்கப்பட்டவன்போல தன் செவ்விதழ்களை குவித்து நீட்டி அவள் காம்புகளை வாயால் கவ்விக்கொண்டான். தன் கைகளால் அவன் தலையை தோளில் பற்றி சற்றே ஏந்தி தன் முலைகளை அவனுக்களித்தாள். வியர்த்த உடலை இறுக்கி சற்றே குனிந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். மேலும் சற்று நேரம் கழித்து தன் பற்கள் கிட்டித்து கைகள் சுருண்டு இறுகியிருப்பதை உணர்ந்தாள். மூச்சை இழுத்து விட்டு உடலை மெல்ல தளர்த்தினாள்.

அவள் உடலிலிருந்து இளம் சூடாக குருதி ஓடை ஒன்று ஒழுகி வெளியேறுவதுபோல் தோன்றியது. இனிய களைப்பால் கைகளும் கால்களும் தசைக்கட்டுகளை அவிழ்த்து தோய்ந்தன. இமைகள் சரிந்து மூடிக்கொண்டன. வியர்வை கழுத்திலும் தோள்களிலும் குளிரத் தொடங்கியது. சுஜயனின் வாயை அகற்றி இன்னொரு முலைக்காம்பை அவன் இதழ்களுக்குள் வைத்தாள். அவன் தலையை தடவிக்கொண்டிருந்த கைகளில் நடுக்கம் அகன்று சீரான தாளம் கூடியது.

அவன் விழிகள் சிறு சிறு இமைகள் அழகான இரு அரை வட்டங்களாக படிந்திருக்க, இமைக்குள் கருவிழி ஓடும் அசைவு தெரிந்தது.

கண்ணுறங்குக கண்ணே, என் அரசே,
இப்புவியாள வந்த தேவன் அல்லவா?
இன்று என்னை ஆள வந்த தலைவன் அல்லவா?
உயிருண்ண வந்த மைந்தன் அல்லவா?
என் இமைகள் உனக்கு சாமரங்கள்
இறைவா என் கைகள் உன் கழுத்து மாலை
என் மூச்சு உனக்கு தூபம்
இறைவா என் விழிகள் உன் ஆலயத்துச் சுடர்கள்
என் நெஞ்சே பறை, என் கண்ணீர் உனக்கு நீராட்டு
எழுந்தருள்க விண்ணளந்தோனே
நீயளக்கும் நிலம் நான்

தான் பாடிக்கொண்டிருக்கும் வரிகளை உணர்ந்தபோது நின்றுவிட்டாள். அவ்வரிகளை எங்கு படித்தோம் என்று நெஞ்சுக்குள் துழாவினாள். மதங்கர் எழுதிய எட்டு காண்டங்கள் கொண்ட சுப்ரதீபம் என்னும் காவியத்தில் வரும் தாலாட்டு இது என்று உணர்ந்தாள். அதை முதிரா இளமையில் அவள் கற்று அகச்சொல் ஆக்கியிருந்தாள். அன்று துள்ளி அலையும் சிறு பெண். காமமோ, இல்லறமோ கனவென்றுகூட நெஞ்சில் இருந்ததில்லை. ஆயினும் குழந்தைகளை பெரிதும் விரும்பியிருந்தாள். கொஞ்சாது முத்தமிடாது ஒரு மழலையைக் கூட கடந்து செல்ல அவளால் முடிந்ததில்லை. அப்பாடலை எத்தனையோ முறை ஏதேதோ குழந்தைகளிடம் பாடியிருப்பதை நினைவுகூர்ந்து புன்னகை செய்தாள்.

ஆனால் அர்ஜுனனுக்கு அதை பாடியதில்லை. அவனுக்கான பாடல்களை அரண்மனைக்கவிஞர் எழுதிக்கொண்டுவந்து அவளுக்களிப்பார்கள். விறலியர் இசையமைத்து பாடிப்பயிற்றுவிப்பார்கள். அவற்றையே பாடவேண்டுமென குந்தியின் ஆணை இருந்தது. அவள் ஒருநாளும் அவள் நெஞ்சிலெழுந்த வரிகளை பாடியதில்லை. அவன் இளவரசனாகவே பிறந்தான், அவ்வண்ணமே வளர்ந்தான். குழவியோ மைந்தனா சிறுவனோ ஆக இருக்கவேயில்லை.

பெருமூச்சுடன் சுஜயனிடமிருந்து தன்னை விலக்கி அவனின் ஈரம் படிந்த தன் முலைக்காம்புகளை பார்த்தாள். அவை சுட்டுவிரல்கள் போல கருமைகொண்டு திரண்டு நின்றன. ஆடை சீரமைத்து எழுந்து கூந்தலை கோதிக்கொண்டு மெதுவாக கால் எடுத்து வைத்து வெளியே சென்று கதவுப்படலை மூடிக்கொண்டு வெளியே இறங்கி சிறு திண்ணையில் அமர்ந்தாள். தலையை இரு கைகளிலும் தாங்கி விண்மீன்கள் செறிந்த வானை நோக்கிக்கொண்டு அசையாது இருந்தாள். புலருவதுவரை அங்கு இருக்க வேண்டும் என்று தோன்றியது.

விண்மீன்கள் அவளை நோக்கியபடி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தன. கங்கையிலிருந்து வந்த காற்றின் நீராவியை கன்னங்களிலும் காதுமடல்களிலும் உணரமுடிந்தது. காடு எழுப்பிய ஒலிகள் இணைந்து ஒற்றைப் பெரும் ரீங்காரமாகி காற்றில் பரந்து சுழன்றுகொண்டிருந்தன. ஒன்றின் மீது ஒன்றென வந்த பெருமூச்சுகளை வெளியேற்றியபடி நெஞ்சின் எடை முற்றிலும் இல்லாமல் ஆகியது. காய்ச்சல் வந்து மீண்டது போல் உடலெங்கும் வந்த குடைச்சலை கைகளையும் கால்களையும் நீட்டி இனிதென அறிந்தாள். கண்கள் அனல்காற்றுபட்டு எரிபவைபோல தோன்றின. உதடுகள் உலர்ந்து தோலெனத் தெரிந்தன. எழுந்து சென்று நீர் அருந்த வேண்டும் என்று விழைந்தாள். ஆனால் எண்ணத்தாலோ உயிராலோ உடலை சற்றும் அசைத்து எழ முடியாது என்று தோன்றியது.

அஸ்தினபுரியில் அவள் இருந்த நாட்களில் அப்படி ஒருபோதும் இரவெல்லாம் அமர முடிந்ததில்லை. நினைவு அறிந்த நாள் முதல் விழித்திருக்கும் கணம் முழுக்க வேலை இருந்து கொண்டிருந்தது. அங்கு ஒவ்வொருவரும் பிறரை வேலை செய்ய வைத்தனர். “இங்கு மட்டும்தானடி அன்பும் ஒரு வேலை” என்று அவள் தோழி சிம்ஹிகை சொல்வதுண்டு. ஆனால் வேலை செய்து பழகியமையால் வெறும் கணங்களை இனிதென காணும் ஆற்றலையே அனைவரும் இழந்திருந்தனர். அரை நாழிகை வெறுமனே இருக்கும் வாய்ப்பு ஏதேனும் நன்னாட்களில் அமையும் என்றால்கூட அப்போது வேலை ஒன்றை நோக்கி செல்லவே அவர்கள் கைகளும் கால்களும் பரபரத்தன.

ஒருநாள் நள்ளிரவில் இனி எதையும் செய்ய முடியாது என்று அவள் உணர்ந்தாள். அன்று காலை அர்ஜுனன் தன் உடன்பிறந்தாரோடும் அன்னையோடும் வாராணவதத்திற்கு கிளம்பிச் சென்றிருந்தான். அன்று காலை செவிலியர் மாளிகையில் அவளை அவன் காண வந்தபோது நீராடிய ஈரம் குழலிலிருந்து தோளில் விழுந்து சொட்டிக் கொண்டிருந்தது. நெற்றியில் இட்ட மஞ்சள் குறி காய்ந்துகொண்டிருந்தது. எப்போதுமென அவள் இரு விழிகள் அவன் இரு தோள்களையும் தொட்டுத் தழுவி மீண்டன. “இன்று நாங்கள் கிளம்புகிறோம் அன்னையே” என்றான். “நன்று நிகழ்க!” என்று அவள் அவன் விழிகளை நோக்கி புன்னகையுடன் சொன்னாள்.

கை நீட்டி அவன் தோள்களை தொட விழைந்தாள். அது முறையா என்று அறியாததால் தன்னை நிறுத்திக்கொண்டாள். அதை உணர்ந்தவன் போல அவள் அருகே வந்து அவள் வலக்கையைப் பற்றி தன் இரு கைகளுக்குள் வைத்தபடி “இந்நகரை சற்று பிரிந்திருப்பது எவ்வகையிலும் எங்களுக்கு உதவுவதே என்று மூத்தவர் எண்ணுகிறார்” என்றான். “ஆம், நானும் அவ்வாறே எண்ணுகிறேன். அண்மை பகைமையை உணர்கிறது. சேய்மை உள்ளங்களை அணுகச் செய்கிறது என்பது மூதாதையர் சொல்” என்றாள்.

“ஆம் அன்னையே, உண்மை” என அவன் இயல்பாக அவள் கைகளை தோள்களில் வைத்தான். “எங்கிருந்தாலும் உன் இக்கைகளை எண்ணிக்கொண்டிருப்பேன்” என்றாள். அவள் கைகள் அவன் தோளைத் தொட்டதும் உடல் மெல்ல நெகிழ்ந்தது. தோளிலிருந்து பெரு நரம்பு புடைத்து இழிந்த இறுகிய புயங்களை வருடி வந்தது அவள் வலக்கை. இன்னொரு கையால் அவன் விரிதோளை தொட்டு வருடியபடி “சில தருணங்களில் உன்னை இளமகவென்று எண்ணுவேன். சில தருணங்களில் உன்னை என் கை தொட அஞ்சும் காளை என்றும் உணர்கிறேன்” என்றாள்.

அர்ஜுனன் “இங்கு வரும்போது நான் இளைஞன். மீள்கையில் மைந்தன்” என்றான். அவன் முகத்தில் எழுந்த புன்னகையைக் கண்டு அவள் உள்ளத்தில் ஒரு குளிர் பரவியது. “என்ன எண்ணுகிறீர்கள்?” என்றான். “உன் புன்னகை! இப்புவியில் இதற்கு இணையான அழகிய புன்னகை கொண்ட பிறிதொரு ஆண்மகன் இருப்பான் என எண்ணவில்லை. இன்றல்ல, இப்பாரதவர்ஷம் உள்ளளவும் உன்னை எண்ணி இங்கு பெண்கள் கனவு காணப் போகிறார்கள்” என்றாள். சிறுவனைப்போல சற்றே தலைசரித்து அவன் நகைத்தான்.

“உன் வாய்க்குள் சிறு பற்கள் எழுந்த நாட்களை நினைவு கூர்ந்தேன். இங்குள்ள அத்தனை சேடியரும் உன்னிடம் கடிபட்டவர்கள். பல் முளைத்த குழந்தைகள் விரல் பற்றி கடிக்கும். நீ முலைகளைத்தேடி கடிப்பாய். இங்குள்ள அனைத்து முலைக்கண்களும் உன்னால் புண்பட்டு இருக்கின்றன” என்றாள் மாலினி. அர்ஜுனன் நகைத்து “பெரும் தேடலில் இருந்திருக்கிறேன்” என்றான்.

அவள் “சென்றுவா மைந்தா. உளம் மறையத் துயிலாமல் இருப்பது உன் இயல்பு என்று அறிவேன். ஆனால் என் மைந்தன் அனைத்தையும் மறந்து துயிலக் காண்பதே எனக்கு பிடித்தமானது. எங்கிருந்தாலும் அங்கு துயில்கொள்” என்றாள். “அன்னையே, இப்பிறவியில் எனக்கு துயில் அளிக்கப்படவில்லை. வில்லேந்தி ரகுகுல ராமனைத் தொடர்ந்த இளையவனைப் போன்றவன் நான்” என்றபின் குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கி “தங்கள் நற்சொல் என் உடன் வரட்டும்” என்றான். அவள் “தெய்வங்கள் துணை வரட்டும்” என்றாள்.

நெஞ்சைப் பற்றி அவன் செல்வதை நோக்கி நின்றாள். இடைநாழி கடந்து அவன் படி இறங்கும் ஓசையைக் கேட்டதும், ஓடிவந்து கைபிடிக்குமிழ்களை பற்றியபடி நின்று நோக்கினாள். முகப்புக் கூடத்திற்குள் அவன் மறைந்ததும் ஓடி சாளரக் கதவைத் திறந்து முற்றத்தில் எட்டி அவனை பார்த்தாள். அங்கு நின்ற புரவியில் ஏறி காவல் மாடத்தைக் கடந்து அவன் சென்றபோது விழி எட்டி நுனிக்காலில் நின்று அவனை நோக்கினாள். பின்பு திரும்பி தன் மஞ்சத்தில் அமர்ந்தாள். கண்கள் மூடி நீள்மூச்சு விட்டு ஏங்கினாள்.

அரண்மனை முகப்பில் இருந்து பாண்டவர்கள் கிளம்பிச் சென்றனர். அவள் அங்கு செல்லவில்லை. அஸ்தினபுரியின் நீண்ட தெருக்களினூடாக அவர்கள் செல்வதை, மக்களின் ஓலங்கள் சூழ கோட்டை முகப்பை கடப்பதை, கங்கை நோக்கி செல்லும் பாதையில் அவர்களது தேர்ச்சகடங்கள் உருள்வதை ஒவ்வொரு கணமும் நோக்கிக்கொண்டிருந்தாள். அன்று முழுக்க அவள் எழவில்லை. தன் சிற்றறையின் மஞ்சத்தில் குளிர் கண்டவள் போல போர்வையை எடுத்து தலைக்குமேல் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள்.

இளஞ்செவிலி ஒருத்தி அவள் போர்வையை விலக்கி காலைத் தொட்டு “அன்னையே, சற்று இன்கூழ் அருந்துங்கள்” என்றபோது உள்ளிருந்தே “வாய் கசக்கிறதடி, வேண்டாம்” என்றாள். பிறிதொரு முறை அவள் கேட்டபோது “வேண்டியதில்லை மகளே. செல்” என்று உறுதிபட சொன்னாள். மேலும் மேலும் போர்த்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. வெளியே ஓசையுடன் காற்று சுழன்றது. ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை அறுத்துவிட வேண்டும் என்பதுபோல உடலை நன்கு இறுக்கி போர்வையைச் சுற்றி செருகிக்கொண்டாள்.

உள்ளிருந்த இருள் அவள் வியர்வையும் வெப்பமும் கொண்டு மென்சதைக் கதுப்புபோல ஆகி அவளை பொதிந்தது. ஒரு கருவறை. ஒரு முத்துச்சிப்பி. போர்வை குருதிமணம் கொண்டிருந்தது. உயிர்த் துடிப்பு நிறைந்திருந்தது. அதனுள் மயங்கி துயின்று எங்கோ எழுந்தாள். அங்கு இளையோனாகிய அர்ஜுனனுடன் தென்திசை காடுகள் எங்கும் நடந்துகொண்டிருந்தாள். “உங்களுக்காக என் குருதியை, அரசை, மண்ணை உதறி வந்திருக்கிறேன் அன்னையே” என்றான். “நீ வென்றெடுப்பதற்கு மண் இங்குள்ளது” என்றாள். அவன் கைபற்றி “வா, தென் திசையில் அதை காட்டுகிறேன்” என்றாள்.

விழித்துக்கொண்டு தன் உடல் வியர்த்து வெம்மை கொண்டிருப்பதை உணர்ந்து உடலை நீட்டி போர்வை ஓரத்தை விலக்கி சற்றே காற்றை உள்ளிட்டாள். அவ்வண்ணமே துயில்கொண்டு மறுபடியும் கனவில் ஆழ்ந்தாள். அலைகடல் எழுந்த பரப்பில் ஒரு தனித்தீவில் அவள் மட்டும் அமர்ந்திருந்தாள். நீரில் அவன் கைகள் மாறி மாறி விழுந்து துழாவுவதை கண்டாள். அலைகளில் எழுந்து எழுந்து அவன் அணுகிக்கொண்டிருந்தான். கனவோட்டமா சொல்லோட்டமா என்று மயங்கிய துயில்விழிப்பில் அன்று பகல் முழுக்க அங்கே கிடந்தாள்.

அந்தியின் ஒலி கேட்டபோது ஒருநாள் கடந்துவிட்டதை உணர்ந்தாள். அன்று முழுக்க ஒன்றும் செய்யவில்லை என்ற உணர்வெழ போர்வையை விலக்கி எழுந்தாள். கால்கள் தளர்ந்து அவள் சிற்றறை நீரில் மிதக்கும் கொப்பரை என ஆகியது. மஞ்சத்தின் விளிம்பைப் பற்றியபடி மீண்டும் அமர்ந்தாள். கண்களை மூடி உள்ளே சுழித்த குருதிச் செவ்வலைகளை நோக்கி இருந்தாள். பின்பு மீண்டும் படுத்து போர்வையை தலைக்கு மேலே இழுத்து சுருண்டுகொண்டாள்.

அவள் தன்னை உணர்ந்தபோது அரண்மனையும் செவிலியர் மாளிகையும் துயின்று கொண்டிருந்தன. காவலரின் குறடுகளின் ஒலிகளும், படைக்கலங்கள் முட்டிக்கொள்ளும் குலுங்கல் ஓசையும், காற்று சாளரங்களை அசைத்து கடந்து செல்லும் கிரீச்சிடல்களும், பலகைகளின் முட்டல்களும் மட்டும் கேட்டன. அவள் அறையைச் சூழ்ந்திருந்த சிற்றறைகளிலும் கூடத்திலும் துயின்ற சேடியரும் செவிலியரும் விட்ட சீர்மூச்சுகள் பல நூறு நாகங்கள் எழுந்து இருளில் நெளிவதைப்போல் தெரிந்தன.

ஓசையின்றி எழுந்து மெல்ல நடந்து வெளிவந்தாள். படி இறங்கி கூடத்தைக் கடந்து பின்பக்கத் திண்ணையை அடைந்தாள். அங்கு தெற்கிலிருந்து வந்த காற்று இசைத்துக்கொண்டிருந்தது. தெற்கில் வரும் காற்றில் சற்று கூர்ந்தால் எப்போதுமே சிதைப் புகை மணத்தை அறிய முடியும். ஆகவே அவள் அங்கு அமர்வதேயில்லை. அவள் விழையும் காற்று மேற்குத் திண்ணையிலே இருந்தது. அதில் எப்போதும் ஏரிநீர்வெக்கை இருக்கும். பாசிமணம் கலந்திருக்கும். அலைகளின் ஓசையைக்கூட கேட்கமுடியும். ஆனால் அன்று அங்கு இருக்க விரும்பினாள்.

கால் நீட்டி அமர்ந்துகொண்டு, விண்மீன்கள் செறிந்த வானை நோக்கிக்கொண்டிருந்தாள். ஒன்றும் செய்யாமல் இருக்கிறோம் என்ற உணர்வு கொண்டாள். ஒருபோதும் அப்படி அமர்ந்ததில்லை. வாள் என ஓர் எண்ணம் வந்து தன்னினைவுப்பெருக்கின் சரடை துண்டித்தது. முனைகள் நெளிந்து தவித்து துடித்தன. ஏன் கூடாது என்றாள். இனி செயலென எதற்கு? இனி ஆற்றுவதற்கு ஒன்றுமில்லை. அறிவதற்கும் ஒன்றுமில்லை. இனி வெறுமனே இருக்க வேண்டும். எஞ்சிய நாள் முழுக்க ஏதும் ஆற்றாமல் இவ்வண்ணமே விரிந்த விண்மீன் வெளியை நோக்கி உடல் ஓய்ந்து அமரவேண்டும். கைகளும் கால்களும் மண்ணில் கிடக்கவேண்டும். எதையும் கண்டடையாமல், எதையும் கடந்து செல்லாமல், எதையும் இழக்காமல் நெஞ்சு காலத்தில் படிந்திருக்கவேண்டும்.

விடிந்தபோது அவள் எழுந்து முகம் கழுவி பொட்டும் பூவும் அணிந்து வெண்ணிற ஆடை சுற்றி பேரரசி காந்தாரியின் அவைக்குச் சென்றாள். புஷ்பகோஷ்டத்தில் காந்தார அரசியரின் மாளிகையில் எப்போதும் சேடியரும் செவிலியரும் ஏவலரும் காவலரும் செறிந்து ஓசை நிறைந்து இருக்கும். பத்து அரசியர்கள் பலநூறு பணியாட்களை வைத்திருந்தனர். கலைந்து இடந்தேரும் பறவைகளைப்போல அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி கூவிக்கொண்டிருப்பார்கள். அங்கு எப்போதும் ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆனால் எதுவும் எண்ணியபடி நிகழாது.

அறைகளை ஒவ்வொன்றாகக் கடந்து பேரரசியின் சிறு மஞ்சத்தறையை அடையும்போது அத்தனை ஓசைகளும் பின்னகர்ந்து மையமென குவிந்திருக்கும் அமைதியை உணர முடியும். தன் மஞ்சத்தில் காந்தாரி கண்களை மூடிக் கட்டிய நீலப்பட்டுத் துணியுடன் அசைவற்றவள் என அமர்ந்திருப்பாள். அவள் அருகே அமர்ந்து சேடிகளும் தூதர்களும் மெல்லிய குரலில் பேசுவார்கள். அல்லது விறலியும் பெண்பாற்புலவரும் அவளுக்கு மட்டும் கேட்பதுபோல் கதைசொல்வார்கள். காந்தாரியின் குருதிச்சிவப்புகொண்ட சிறு உதடுகள் அசைவதும் நாவு இதழ்களை தீண்டிச் செல்வதும் ஓசையென கேட்கும் அமைதி அங்கு இருக்கும்.

வாயிலுக்கு அவள் வருவதற்கு முன்னரே அவள் காலடியை காந்தாரி அறிந்திருந்தாள். அவளுக்காக நூல் மிடற்றிக்கொண்டிருந்த பெண்பாற்புலவரை நோக்கி கையசைத்து “வெளியே மாலினி நின்றிருக்கிறாள் வரச்சொல்” என்றாள். சுவர் ஓரமாக நின்றிருந்த சேடி “ஆணை” என்று சொல்லி வெளியே வந்து மாலினியிடம் “உள்ளே வருக!” என்றாள். காவல்பெண்டு கதவைத் திறந்து தர மாலினி உள்ளே சென்று தலைவணங்கி முகமன் உரைத்தபின் அரசியருகே தரையில் அமர்ந்தாள்.

காந்தாரி ஒன்றும் சொல்லாது தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். வெண்பளிங்குப் பேருடல், உருண்ட துதிக்கை புயங்கள், சின்னஞ்சிறு மணிக்கட்டு அமைந்த, மிகச்சிறிய விரல்கள் கொண்ட அவள் கைககள் சிவந்த தாமரை மொட்டுக்களென குவிந்திருந்தன. சிவந்த சிறிய கால்கள். உள்ளங்கால்கள் இத்தனை சிவந்து மென்மையாக இருக்கலாகும் என்று அவள் அறிந்ததில்லை. நடை பழகா கைக்குழந்தையின் கால்கள் எனத் தோன்றின.

காந்தாரி ஒரு சொல்லும் எடுக்கவில்லை என்பதை உணர்ந்ததும், மாலினி மெல்ல கை நீட்டி அவள் கால்களைத் தொட்டு தன் தலைமேல் சூடி “பேரரசி என் உள்ளத்தை உணரவேண்டும். இனி ஏதும் எஞ்சவில்லை என உணர்கிறேன். எனக்கு விடைகொடுங்கள்” என்றாள். “ஏன்?” என்றாள் காந்தாரி. “இங்கு இருக்க விழையவில்லை. காடு செல்ல வேண்டுகிறேன்” என்றாள் மாலினி. “காட்டில் என்ன செய்யப் போகிறாய்?” என்றாள். அதுவரை அதை சொல்லாக வடித்திராத மாலினி சிலகணங்கள் தவித்து “விண்மீன்களை எண்ணுவேன்” என்றாள்.

காந்தாரியின் இதழ்கள் புன்னகை கொண்டன. “பகலில்?” என்றாள். “அவ்வீண்மீன்களை நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றாள். “நன்று” என்றாள் காந்தாரி. “இனிதாக உதிர்வதற்கு நிகர் என ஏதுமில்லை. அவ்வண்ணமே ஆகுக! இப்போதே உனக்கு அது நிகழ்ந்தமை கண்டு நான் பொறாமை கொள்கிறேன்.” மாலினி “தங்கள் நல்வாழ்த்து துணை இருக்கட்டும் அன்னையே” என்று சொல்லி மீண்டும் அவள் காலைத் தொட்டு தன் தலையில் சூடினாள்.

“நீ வாழ்வதற்குரிய அனைத்தையும் கொடுக்க நான் ஆணையிடுகிறேன்” என்றாள் பேரரசி. மாலினி “தங்கள் கருணை தெய்வங்களின் சொற்களுக்கு நிகர்” என்றதும் பேரரசி சிறிய உள்ளங்கையை ஊன்றி தடித்த புயங்கள் அசைய எழுந்து நின்றாள். “உன் இளையோன் இன்று உன்னிடம் விடைபெற்றுச்சென்றான் அல்லவா?” அவள் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கு வந்து என்னிடமும் விடைபெற்றுச் சென்றனர். ஐவரும் வந்து இச்சிற்றறையை நிரப்பி நின்றபோது அவர்கள் என் மடியில் அமர்ந்து என் முலையுண்ட நாட்களைத்தான் எண்ணிக்கொண்டேன்” என்றாள் காந்தாரி.

“ஆம் அன்னையே, இங்குள்ள அனைவரும் தங்களுக்கு மைந்தர்களே” என்றாள் மாலினி. “மூத்தவனிடம் மட்டுமே நான் பேசினேன். அவனை தோள் வளைத்து பழுதற்ற பேரறம் கொண்டவன் நீ. என்றும் அதுவே உன்னுடன் இருக்கும் என்றேன். பெண் என்றும் அன்னை என்றும் என் பேதை மனம் எதையோ விழையலாம். மைந்தா, தொல்குடி காந்தாரத்து அரசி என நான் விழைவது ஒன்றே. அறம் வெல்ல வேண்டும் என்றேன். ஆம் அது வெல்லும் என்றான். அச்சொற்களையே வாழ்த்து எனச் சொல்லி அனுப்பினேன், அறம் உங்களுக்கு துணை நிற்கும் என்று” என்றாள்.

மாலினி மீண்டும் ஒருமுறை தலை வணங்கி ஓசையின்றி கதவைத் திறந்து வெளியேறினாள். அன்று மாலை அவளுக்கென காடு ஒருங்கிவிட்டது என்று விதுரர் அனுப்பிய செய்தியை அமைச்சர் கனகர் வந்து சொன்னார். அவளுக்கான ஊர்தி காத்திருந்தது. எவரிடமும் விடை சொல்லாமல் தனக்கென எதையும் எடுத்துக்கொள்ளாது மரவுரிச் சுருள் ஒன்றைச் சுருட்டி கைகளில் எடுத்துக்கொண்டு அவ்வூர்தியில் அவள் ஏறி அமர்ந்தாள். அவள் ஒன்றும் சொல்லாமல் இருப்பதைக் கண்டு “செல்வோமா செவிலியே?” என்றான் தேர்ப்பாகன். “ஆம்” என்றாள் அவள்.

தேர் உருண்டு கிளம்பிய பிறகு ஒரு கணம் திரும்பி தன் மாளிகையை நோக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது. பல நூறு சேடியரும் செவிலியரும் அங்கு விழிகளாகி நிற்பதை அவள் அறிந்தாள். ஆயிரம் விழிகள் கொண்ட மாளிகையை தன் முதுகில் உணர்ந்தபடி ஒருமுறையும் திரும்பி நோக்காமல் அம்முற்றத்தை கடந்தாள். விழி தூக்கி அஸ்தினபுரியின் மாளிகையையோ தெருவையோ கோட்டையையோ மானுட முகங்களையோ விளக்குகளையோ அவள் நோக்கவில்லை. பெருங்கோட்டை வாயில் அவளை விட்டு பின்னால் உதிர்ந்தபோதும் திரும்பவில்லை.

தொடர்புடைய பதிவுகள்

சஹ்யமலை மலர்களைத்தேடி -5

$
0
0

அம்போலிகாட்டில் காலையில் மழையில் நனைந்த தெருவில் இறங்கி குளிருக்கு கைகளை மார்பில் இறுக்கியபடி டீ குடிக்கச்சென்றோம். பெரும்பாலான டீக்கடைகள் நீலநிற பிளாஸ்டிக் படுதாவால் பொட்டலமாகக் கட்டப்பட்டிருந்தன. ஒரு டீக்கடையில் பால் அப்போதுதான் கொதிக்க ஆரம்பித்திருந்தது. டீ குடித்தபடி முந்தையநாள் பெய்த மழையை நினைவுகூர்ந்தோம். களைப்பில் தலைக்குமேல் தகரக்கூரையில் விழுந்த அதன் ஓலத்தையும் மீறி தூங்கிவிட்டிருந்தோம்

Amboli-4690

எனக்கு அவசரமாக ஒரு சினிமா வேலை. தவிர்ப்பதற்கு பயணம் முழுக்க முயன்றுகொண்டிருந்தேன். பதினேழாம் தேதியிலிருந்து இருபதாம் தேதிக்கு ஒருவழியாக ஒத்திப்போட்டேன். அதற்குமேல் தாங்காது. கோவாவில் இருந்து சென்னை திரும்ப டிக்கெட் போட்டேன். என்னை கோவாவுக்கு கொண்டு சென்று ஏற்றிவிட்டுவிட்டு அவர்கள் கார்வார் வழியாக உடுப்பி சென்று பெங்களூர் மீள்வதாகத் திட்டம்.

காலையில் அம்போலிகாட்டில் இருந்த ஓர் அருவியைச்சென்று பார்த்தோம். சாலையோரமாக கொஞ்சமாக நீர் கொட்டிக்கொண்டிருந்தது. சாலையோரமாக மறுபக்கம் இறங்கிய மலைச்சரிவையும் விரிந்து கிடந்த காட்டுவெளியையும் பார்ப்பதற்கான பார்வைமாடங்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் நின்று பச்சைமரக்கூட்டங்கள் மீது இளவெயில் பரவுவதை நோக்கிக்கொண்டிருந்தோம்

அங்கே காலையுணவே இல்லை. பாவ்பாஜி வடாபாவ் இரண்டும்தான். பொரித்த பச்சைமிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டால் நான்குநாட்களுக்கு காந்தல் இருக்கும். நான் இரவில் பழங்கள் என்பதனால் காலையில் கொலைப்பசி இருக்கும். குரலே கீழே சென்றுவிடும். ஆகவே அதைச்சாப்பிட்டுவைத்தோம்.

பதினொருமணிக்குக் கிளம்பி கோவா வந்தோம். செயிண்ட் சேவியர் கதீட்ரலையும் அருகிலிருந்த போம் ஜீஸஸின் பஸிலிக்காவையும் பார்த்தோம். நான் மூன்றாவது முறையாக இங்கு வருகிறேன். எனக்கு மிகமிகப்பிடித்தமானவை இந்த இரு தேவாலயங்களும். ஒரு சிறு கூழாங்கல் என்னும் தலைப்பில் இங்கு வந்த அனுபவத்தை முன்பு ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். நானும் சண்முகமும் வசந்தகுமாரும் நாஞ்சில்நாடனும் 2007ல் இங்கே வந்தோம். அதன்பின்னர் இப்போதுதான் வருகிறேன்.

போம் ஜீஸஸ் தேவாலயம் இப்பகுதியிலுள்ள சிவந்த சேற்றுமணல்பாறையை வெட்டி அடுக்கிக் கட்டப்பட்டது. அதன் அற்புதமான செம்மண் நிறம் பார்க்கப்பார்க்க பரவசம் அளிக்கக்கூடியது. உள்ளே இருக்கும் ஆல்டர் இந்தியாவின் மிக அழகிய மரச்சிற்பங்களில் ஒன்று. மிகமிக நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் மேல் தங்கரேக்கு பூசப்பட்டது. மனிதனை சிறுமைகொள்ளச்செய்து கிருமியென உணரச்செய்யும் மகத்தான உயரம்.1605ல் கட்டி முடிக்கப்பட்டது இந்தப்பேராலயம்.

போம் ஜீஸஸ் பஸிலிக்காவில்தான் செயிண்ட் சேவியரின் உடல் பேணப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பொதுத்தரிசனத்திற்காக அது வைக்கப்படும். அதன் புகைப்படங்களைப் பார்க்கமுடியும். பழங்காலத்தில் முதுமக்கள்தாழியில் வைக்கப்பட்ட தொன்மையான தந்தைகளைப்போல ஓர் உடல். அந்த கல்லறை ஃப்ளாரன்ஸின் சிற்பியான கியோவன்னி பட்டிஸ்டா ஃபோகினியால் வடிவமைக்கப்பட்டது.

மதிய உணவுக்குப்பின் மூன்று மணிக்கு விமானநிலையம் வந்துவிட்டேன். இன்னும் ஒருநாள்தான் பயணம் நிறைவுற என்றாலும் பாதியிலிலேயே நண்பர்களை விட்டுவிட்டுக் கிளம்பியது சோர்வளித்தது. ஆனால் எல்லா பயணங்களின் முடிவிலும் அடுத்த பயணம் பற்றிய கனவு வந்துவிடுகிறது. அது நிறைவளித்தது.

Goa


Amboli Ghat

தொடர்புடைய பதிவுகள்

இன்றில் எஞ்சிவை

$
0
0

Indru Petravai

அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பதுபோல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல் காற்றில் கலந்து மறையக்கூடும் அனுபவங்கள் மொழியில் கல்வெட்டாக மாறுகின்றன.

சமகாலப் பதிவுகள் இவை. எண்ணங்கள் , எதிர்வினைகள். சென்ற சில ஆண்டுகளின் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் அவற்றில் திறக்கும் புதிய கோணங்களையும் காட்டுபவை என்பதனால் முக்கியமானவை. இவற்றை முதலில் தொகுப்பாக வெளியிட்ட உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி. மீண்டும் வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கு அன்பு

ஜெ

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் இன்றுபெற்றவை மறுபதிப்புக்கான முன்னுரை

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 2

மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள். இருளுக்குள் மிதப்பவள்போல் வந்து சுபகை அவளை நோக்கி ஒரு கணம் நின்று பின்பு மெல்ல முழங்கால் மடக்கி அவள் அருகே அமர்ந்தாள். தடித்த உடல் கொண்டிருந்தபோதும் மெல்லிய ஓசையுடன் அவள் நடப்பதை மாலினி விந்தையுடன் எண்ணிக்கொண்டாள்.

சுபகையின் கையில் மூங்கில் குவளையில் சூடு தெரியும் இன்நீர் இருந்தது. “அருந்துங்கள்” என்று அதை நீட்டினாள். அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு அதன் நறுமணத்தை உணர்ந்தபோதுதான் நெடுநேரமாக அதற்காகவே தன்னுள் நா தவித்துக்கொண்டிருப்பதை மாலினி உணர்ந்தாள். புன்னகையுடன் “துயிலவில்லையா?” என்றாள். “இல்லை.” “ஏன்?” என்றாள் மாலினி. “என்ன விந்தையான கதை அது!” என்றாள் சுபகை.

அவள் சொல்வதை புரிந்துகொண்டு மாலினி இருளுக்குள் தலை அசைத்தாள். “ஐந்து முகங்கள்” என்றாள் சுபகை. “ஒவ்வொன்றையும் திருப்பிப் திருப்பிப் போட்டு உளம்மீட்டிக்கொண்டிருக்கையில் ஐந்து பெண்ணுருவங்களும் ஐந்து முகங்களை அணிந்த ஒரு முகம் என்றும் ஐந்துபெண்களின் ஒரே முகம் என்றும் தோன்றியது.” மாலினி “செல்லுமிடமெல்லாம் முகம் தேடி அலைபவன் என்கிறாயா?” என்றாள்.

சுபகை “நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.”

“நீரென ஒளியென எங்கும் சூழலுக்கேற்ப முற்றிலும் உருமாறிக் கொள்ள அவனால் முடியும். எதுவும் எஞ்சாது விட்டுச் செல்லவும் முடியும்” என்றாள் மாலினி. “ஆம்” என்றாள் சுபகை. “இந்த நூல்கள் அனைத்தும் அவரை புனைந்து காட்டுகின்றன. இப்புனைவுகளில் எவை விடப்பட்டிருக்கிறதோ அவற்றைக் கொண்டு நாம் புனைவதே அவருக்கு இன்னும் அணுக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.” மாலினி “அவ்வண்ணம் ஆயிரம்பேர் இயற்றும் ஆயிரம் புனைவுகளுக்கு அப்பாலும் ஒன்று மிஞ்சியிருக்கும்” என்றாள். “அதை அறிந்தவள் தான் மட்டுமே என நம்பும் ஆயிரம் பெண்கள் இருப்பார்கள்.”

“இப்புடவி சமைத்த பிரம்மன் தன் துணைவியை நோக்கி புன்னகைத்து இதைவிட பெரிதொன்றை உன்னால் ஆக்கமுடியுமா என்றார். முடியும் என்று அவள் தன் கையிலிருந்த விழிமணிமாலையின் ஒரு மணியை எடுத்து புனைவெனும் ஒளியாடையை உருவாக்கி புடவியை அதில் ஏழுமுறை சுற்றி அவன் முன் வைத்தாள் என்று கதைகள் சொல்கின்றன. அதன் பின் தன் படைப்பை தான் அறிவதற்கு பிரம்மன் வெண்கலைச் செல்வியின் ஏடுகளை நாடுகிறான் என்கிறார்கள்” என்றாள் மாலினி. “சூதர்களின் தன்முனைப்புக்கு அளவேயில்லை” என்று சொல்லி சுபகை சிரித்தாள்.

உள்ளே சுஜயன் “குதிரை” என்றான். “இளவரசர் போரில் இருக்கிறார்” என்றாள் சுபகை. “போர்நிறுத்தத்தில்தான் அவன் புரவிகளை எண்ணுகிறான்” என்றாள் மாலினி. “நேற்று முழுக்க கேட்டுக்கொண்டிருந்தார்” என்றாள் சுபகை. “சித்ராங்கதையும் அர்ஜுனரும் ஏன் வாள் போர் புரியவில்லை என்று. நான் அவர்கள் மணம் கொண்டதும் போர் தொடங்கிவிட்டிருக்கும் என்றேன்” என்றாள். “ஏனடி இளவரசரிடம் இதையெல்லாம் சொல்கிறாய்?” என்றாள் மாலினி. “அவர் வாயை மூட வேறு வழி இல்லை. சிறுசித்தம் சென்று சிக்கும் ஒன்றை சொல்லிவிட்டால் விழிகள் பொருளற்றதாகி தலை சரியும். பின் நெடுநேரம் வினா எதும் எழாது.”

“இன்று என்னிடம் கேட்டான், விண் மீண்ட ஐந்து தேவதைகளும் அங்கிருந்து எங்கு செல்வார்கள் என்று. ஒரே வினாவில் என் உள்ளத்தை கலங்கச் செய்துவிட்டான்” என்றாள் மாலினி. சுபகை சற்று நேரம் கழித்து “ஆம், அது முதன்மையான வினா. காத்திருப்பதற்கு ஏதும் இன்றி பெண்ணால் வாழ முடியுமா என்ன?” என்றாள். “விண்கன்னியர் என்ன செய்வார்கள் என்று அறியமுடியவில்லை. மீண்டும் ஒரு தீச்சொல் பெற்று எழுவாள். மீண்டும் ஒரு புவியில் சென்று பிறப்பாள். கடலை அடைந்த நீர் அங்கிருப்பதில்லை. ஆவியாகி முகிலாகி மழையாகி நதியென ஓடி சலித்தால் மட்டுமே அதற்கு நிறைவு” என்று மாலினி சொன்னாள்.

மாலினி கை நீட்டி சுபகையின் கைகளை பற்றிக்கொண்டு “மீண்டும் இளைய பாண்டவனை அடைவதை நீ கனவு காண்கிறாயா?” என்று கேட்டாள். “நான் அங்கு விட்டுவந்த இளைய பாண்டவர் சென்ற காலத்தில் எங்கோ இருக்கிறார். அங்கு மீண்டு அவரை அடைவது இயல்வதல்ல. எதிர்காலத்திற்குச் சென்று அவரை அடையும்போது நான் உருமாறியிருப்பேன்” என்றாள் சுபகை. “இளைய பாண்டவரை நான் அறிவேன். அவர் மீண்டும் புதியவளாக என்னை அடையக்கூடும். என்னிடம் மீண்டுவர அவரால் இயலாது.”

மாலினி அவள் கையை பற்றி “எண்ணி இருக்கவும் காத்திருக்கவும் ஓர் உருவகம். அதற்கப்பால் என்ன?” என்றாள். “அவ்வண்ணமே இருக்கட்டுமே. இவ்வாழ்க்கையை அப்படி ஓட்டிச்சென்று அந்தியணைவதன்றி வேறென்ன செய்வதற்குள்ளது?” என்றாள் சுபகை. “அவன் மீளமீளச் சென்றடைந்தபடியே இருப்பவள் ஒருத்திதான்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி, சுபத்திரை. அலை கரையை தழுவுவதுபோல அவள் மேல் அவன் அணைந்தபடி இருக்கிறான் என்கின்றனர் சூதர்.” சுபகை “ஏன்?” என்றாள். “ஏனென்றால் அவள் அவனுக்காக ஒரு கணமும் காத்திருப்பதில்லை. அவள் நெஞ்சின் ஆண்மகன் அவன் அல்ல.”

சுபகை “அவள் இளைய யாதவரின் தங்கை” என்றாள். “நிகரற்ற தமையனைக் கொண்டவள், நினைவறிந்த நாள் முதல் அவன் தங்கை என்றே தன்னை உணர்ந்தவள். இப்புவியில் பிற ஆண்கள் அவளுக்கொரு பொருட்டே அல்ல” என்று சொன்ன மாலினி “ஊழ் சமைக்கும் தெய்வங்கள் எண்ணி எண்ணி நகைக்கும் ஒரு இடம் இது” என்று சிரித்தாள். “கிள்ளி எடுப்பதற்கிருந்தால் அதை மலையென மாற்றி நிறுத்திவிடுவார்கள் சூதர்கள்” என்றாள் சுபகை. “ஆணும் பெண்ணும் கொள்ளும் ஆடலை பிறர் அறிய முடியாது என்பார்கள். ஆனால் அதை இம்மண்ணிலுள்ள அத்தனை ஆண்களும் பெண்களும் அறியமுடியும்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி என்று அவளை முதலில் சொன்னவர் எவராயினும் அத்தெய்வங்கள் அவர் நாவில் அத்தருணம் அமர்ந்திருந்தன.”

“யாதவகுலத்திலிருந்து அஸ்தினபுரியின் அரசகுடிக்கு வந்த இரண்டாவது யாதவ இளவரசி சுபத்திரை. இளவயது குந்திதேவியைப்போலவே வில்சூடி போரிடவும் வாள்ஏந்தி எதிர்நிற்கவும் கற்றவள். கதாயுதம் கொண்டு போரிடும் பெண்கள் அரசகுலத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே என்கிறார்கள் சூதர்கள்” என்றாள் மாலினி. “ஆம், நானும் அறிவேன்” என்றாள் சுபகை. மாலினி “கால்களை பின் எட்டு எடுத்து வைத்து முற்பிறவிகளில் விட்டுச் சென்றவற்றை தொட்டு எடுக்க இளைய பாண்டவருக்கு நல்லூழ் அமைந்துள்ளது.”

“சதபதத்தின் ஐந்தாவது காண்டம் சுபத்ரா அபஹரணம்” என்று சுபகை சொன்னாள். “காண்டங்களில் அதுவே பெரியது. ஏழாயிரம் செய்யுட்கள். ஏழு சர்க்கங்கள்” என்றாள் மாலினி. “அதில் யாதவர்களின் குலவரிசையும் உறவுமுறைமைகளும்தான் முதல் மூன்று சர்க்கங்கள். பழைய யாதவபுராணங்களில் இருந்து எடுத்துத் தொகுத்திருக்கிறார் புலவர். ஆனால் மொத்த வரலாறும் முழுமையாக திருப்பி எழுதப்பட்டுள்ளது. இது விருஷ்ணிகுலத்தை யாதவர் எனும் பேராலமரத்தின் அடிமரமும் வேருமாக காட்டுகிறது. கார்த்தவீரியரின் கதையிலிருந்து நேராக சூரசேனருக்கு வந்துவிடுகிறது, கம்சர் மறைந்துவிட்டார்.”

“வென்றவர்களுடையதே வரலாறு” என்றாள் சுபகை. “என் கண்ணெதிரிலேயே அஸ்தினபுரியின் வரலாற்றிலிருந்து சித்ராங்கதர் உதிர்ந்து மறைவதை கண்டேன்” என்றாள் மாலினி. “அதற்கு முன்னர் தேவாபியும் பால்ஹிகரும் மறைவதை கண்டிருக்கிறேன். அவ்வண்ணம் மறைந்தவர்கள் சென்றுசேரும் ஓர் இருண்ட வெளி உள்ளது” என்றபின் சிரித்து “எனக்கு காவியம் கற்றுத்தந்த மூதன்னை பிருஹதை சொல்வதுண்டு, காவியங்கள் எழுதப்பட்ட ஏட்டை வெளிச்சத்தில் சரித்துப்பிடித்து இருண்ட மூலைகளில் ஒளி செலுத்திப்பார்த்தால் அங்கே மறைந்த காவியங்களின் தலைவர்கள் கண்ணீருடன் நின்றிருப்பதை காணமுடியும் என்று.”

“மறைந்த காவியங்கள் உதிரும் இலைகள். அவை மட்கி சூதர்களின் வேருக்கு உரமாகின்றன. புதிய தளிர்கள் எழுகின்றன” என்று சுபகை சொன்னாள். மாலினி “இனி பாரதவர்ஷத்தின் வரலாறே யாதவர்களால்தான் எழுதப்படும். வரலாறு ஒரு எளிய பசு. அதை ஓட்டிச்செல்லும் கலையறிந்த ஆயன் இளைய யாதவன்.” சுபகை “சுபத்திரை கவர்தலை மீண்டும் வாசிக்க விழைகிறேன்” என்றாள். “எடுத்து வா” என்றாள் மாலினி.

ஏட்டுச்சுவடியையும் நெய்ச்சுடர் எரிந்த அகல்விளக்கையும் கொண்டு சுபகை அருகே வந்து அமர்ந்தாள். “இளைய பாண்டவன் பிரபாச தீர்த்தம் நோக்கிச் செல்லும் விவரணையிலிருந்து தொடங்கு” என்றாள் மாலினி. “பிரபாச தீர்த்தத்திற்கு அவர் ஏன் சென்றார்?” என்றாள் சுபகை ஏட்டை புரட்டிக்கொண்டே. “சித்ராங்கதையின் மைந்தன் பப்ருவாகனன் எட்டுவசுக்களில் ஒருவனாகிய பிரபாசனின் மானுடவடிவம் என்று நிமித்திகர் கூறினர்.. தருமதேவனுக்கும் பாதாளதேவதையாகிய பிரபாதைக்கும் பிறந்த மைந்தனாகிய பிரபாசன் இளமையில் பாதாளத்தின் இருளை உடலில் கொண்டிருந்தான். அவன் கொண்ட மறுவை அகற்ற மண்ணில் ஒளியே நீரெனத் தேங்கிய சுனை ஒன்றை தருமதேவன் கண்டுகொண்டான். அது பிரபாச தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது” என்றாள் மாலினி.

“ஏழு தண்டகாரண்யத்திற்கும் சூரியநிலத்திற்கும் நடுவே இருக்கும் பிரபாச தீர்த்தத்திற்குச் சென்று தன் மைந்தனுக்காக வேண்டுதல் செய்ய அர்ஜுனன் விழைந்தான்” என்று சுபகை வாசித்தாள். “தேவாரண்யத்தில் இருந்து கிளம்பி தண்டகாரண்யத்திற்குள் சென்று அங்கே முனிவர்களையும் சூதர்களையும் சந்தித்தான். பிரபாச தீர்த்தம் பற்றி அவர்களிடமிருந்து கேட்டறிந்துகொண்டு அத்திசை நோக்கி சென்றான்.”

பிரபாச தீர்த்தம் அஷ்டசிரஸ் என்னும் மலையின் உச்சியில் நூற்றெட்டு மலைவளைவுப் பாதைகள் சென்றடையும் இறுதியில் இருந்தது. வசந்தகாலத்தில் மட்டுமே அங்கு பயணிகள் செல்வது வழக்கம். நாற்பத்தியோரு நாட்கள் நோன்பு எடுத்து உடல் வருத்தி கால்பயின்று அம்மலை வளைவுகளில் ஏறி அங்கு சென்று தூநீர் ஆடி மீள்வது வேசரத்தில் புகழ்பெற்ற வழக்கம். முன்பு ஷத்ரியர்களைக் கொன்ற பழி தீர்ப்பதற்காக அனல் குலத்து அந்தணனாகிய பரசுராமன் வந்து நீராடிச் சென்ற நூற்றெட்டு நறுஞ்சுனைகளில் ஒன்று அது என்று புராணங்கள் கூறின. கொலைப்பழி வஞ்சப்பழி பெண்பழி பிள்ளைப்பழி தீர அங்கு சென்று நீராடுவது உகந்தது என்றன மூதாதையர் சொற்கள்.

இளவேனில் தொடக்கத்தில் சிறுசிறு குழுக்களாக வழியில் உண்ணவேண்டிய உணவு ஒரு முடியும் அங்கே சுனைக்கரையில் அமர்ந்த பிரபாசனுக்கு அளிக்கவேண்டிய பூசனைப்பொருட்கள் மறுமுடியும் என இருமுடிகட்டி தலையில் ஏற்றி நடந்து சென்றார்கள் நீராடுநர். அவர்கள் தங்குவதற்காக ஏழு வளைவுகளுக்கு ஒருமுறை கல்மண்டபங்களை கட்டியிருந்தனர் அருகநெறியினராகிய வணிகர். விழாக்காலம் ஆகையால் அவற்றைச் சுற்றி மூங்கில்தூண்களின் மேல் ஈச்சமர ஓலைகளை வேய்ந்து கொட்டகைகள் போட்டிருந்தனர். அங்கே பயணிகளுக்கு உணவும் இந்நீரும் அளிக்க முறை செய்திருந்தனர்.

பிரபாச தீர்த்தத்திற்கான வழியில் வசந்தகாலத்திலும் பின்மாலைதோறும் மூடுபனி இறங்கி காடு முற்றிலும் மூடி குளிர் எழுந்து தோல் நடுங்கும். முதல் கதிர் மண்ணில் பட்டதுமே கிளம்பி கதிர் மறையும் நேரம்வரை நடந்தபின்பு அருகே இருக்கும் சத்திரத்தை அடைந்து அங்கு ஓய்வெடுத்து மீண்டும் பயணம் தொடருவதே நீராடுநரின் வழக்கம். இரவில் மலையிறங்கி வரும் கொலைவிலங்குகளாலும் கந்தர்வர்களாலும் பாதாளதெய்வங்களாலும் மானுடருக்கு அரியதென ஆகும் அக்காடு.

நீண்ட தாடியும், தோளில் புரண்ட குழலுமாக வேடர்களுக்குரிய மூங்கில் வில்லும், நாணல் அம்புகளும் ஏந்தி இடையே புலித்தோல் ஆடை சுற்றி முதல் விடுதியாகிய ஸ்ரீதுர்க்கத்திற்கு அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது மூடுபனி நன்கு சரிந்துவிட்டிருந்தது. தொலைவில் விடுதியின் பந்த ஒளி எழுந்து பனித்திரைக்கு அப்பால் செந்நிற மை ஊறி நீரில் கலங்கியது போல் தெரிந்தது. பல நூறு துணிகளால் மூடப்பட்டு ஒலிப்பதுபோல் பேச்சுக்குரல்கள் கேட்டன. விழியும் செவியும் கூர்ந்து பாம்புகளுக்கு எச்சரிக்கையாக நீள் கால் எடுத்து வைத்து நடந்து அவ்விடுதியை அடைந்தபோது பனி பட்டு அவன் உடல் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது.

குளிரில் துடித்த தோள்தசைகளுடன் கிட்டித்த பற்களுடன் “ஐயன்மீர், வடதிசையில் இருந்து வரும் ஷத்ரியன் நான். பிரபாச தீர்த்தம் செல்லும் பயணி. இங்கு நான் தங்க இடம் உண்டா?” என்று மூடுபனி திரை நோக்கி வினவினான். அப்பால் கலைந்து ஒலித்துக் கொண்டிருந்த பேச்சுக்குரல்கள் அமைந்தன. ஒரு குரல் “யாரோ கூவுகிறார்கள்” என்றது. “இந்நேரத்திலா? அவன் மானுடன் அல்ல, கந்தர்வனின் சூழ்ச்சி அது” என்றது பிறிதொரு குரல். “யார் அது?” என்ற குரல் அணுகி வந்தது. “நான் வடதிசை ஷத்ரியன். பிரபாச தீர்த்தப் பயணி. இங்கு தங்க விரும்புகிறேன்” என மீண்டும் சொன்னான் அர்ஜுனன்.

ஒர் அகல் விளக்குச் சுடர் ஒளிகொண்ட முகில் ஒன்றை தன்னைச் சுற்றி சூடியபடி எழுந்து மூடுபனியில் அசைந்து நாற்புறமும் விரிந்தபடி அவனை நோக்கி வந்தது. அதற்கு அப்பால் எழுந்த முதிய முகத்தில் கீழிருந்து ஒளி விழுந்தமையால் கண்கள் நிழல்கொண்டிருந்தன. “உங்கள் பெயர் என்ன வீரரே?” என்று அவர் கேட்டார். “பாரதன் என்று என்னை அழைக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “தனியாக எவரும் பிரபாச தீர்த்தம் வரை செல்வதில்லை” என்றார் முதியவர். “எவ்வழியிலும் தனியே செல்வதே என் வழக்கம்” என்று அர்ஜுனன் சொன்னான். புன்னகைத்து “தலைமை ஏற்பவரே தனியாக செல்கிறார்கள். நீர் வீரர் அல்ல, அரசர் என்று உணர்கிறேன். எவரென்று நான் வினவப்போவதில்லை, வருக!” என்றார் முதியவர்.

நடந்தபடி “என் பெயர் ஸ்ரீமுதன். பெரு வணிகர் சந்திரப்பிரபரின் செல்வம் பெற்று இங்கு இந்த விடுதியை நடத்துகிறேன். இப்போது பிரபாச தீர்த்தம் நோக்கி செல்லும் பயணம் தொடங்கி இருப்பதால் பன்னிரு ஏவலர்களுடன் இங்கிருக்கிறேன்” என்றார். “பிறநாட்களில் நானும் என் மனைவியும் மட்டிலுமே இருப்போம். வாரத்திற்கு ஒருநாள்கூட பயணி என எவரும் வருவதில்லை.” அர்ஜுனன் “நான் உணவுண்டு ஒரு நாள் ஆகிறது” என்றான். “நல்லுணவு இங்கு உண்டு. ஆனால் ஷத்ரியருக்குள்ள ஊனுணவு அளிக்கும் முறை இல்லை. இங்கு உணவளிப்பவர்கள் அருக நெறி நிற்கும் வணிகர்கள். இங்குள்ளது அவர்களின் உணவே” என்றார்.

“ஆம். அதை முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். கிழவரைத் தொடர்ந்து கல்மண்டபத்துக் கூடத்திற்குள் நுழைந்த அர்ஜுனனை நோக்கி அங்கிருந்தோர் விழிகள் திரும்பின. கரிய கம்பளிகளைப் போர்த்தி மரவுரி விரிப்பு விரித்து அதன் மேல் உடல் குவித்து அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். “இவர் இங்கு தங்க வந்த ஷத்ரியர்” என்றார் ஸ்ரீமுதர். “பிரபாச நோன்பு நோற்காமல் மேலே செல்வது வழக்கமில்லை” என்று ஒருவர் சொன்னார். “நானும் அந்நோன்பிலே இருப்பவன்தான்” என்று சொன்னான் அர்ஜுனன்.

“ஒருவேளை உணவு. அணிகலன் அணியலாகாது, வண்ண ஆடைகள் துறத்தல் வேண்டும். நாற்பத்தொரு நாள் மகளிருடன் கூடுவதும் மறுக்கப்பட்டுள்ளது” என்றார் இன்னொருவர். புன்னகைத்து “ஆறு மாதங்களாக அந்நோன்பிலே இருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “பிரபாச தீர்த்தத்தை எங்ஙனம் அறிந்தீர்?” என்றான் ஒருவன். “இங்கு கீழே உள்ள சகரபதம் என்னும் ஆயர் சிற்றூரை அடைந்தேன். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். அவ்வழியாக செல்லும் பயணிகளின் பாடலைக் கேட்டேன். பிரபாச தீர்த்தத்திற்கு செல்கிறோம் என்றார்கள். நானும் அங்கு செல்லலாம் என்று எண்ணினேன்.”

“அது பழி தீர்க்கும் சுனை என்று அறிவீரா?” என்றான் ஒருவன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “பெரும்பழி செய்தவரோ?” என்றான் அவன். அவன் விழிகளை நேர் நோக்கி “இல்லை பிழையென எதையும் ஆற்றவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் இனி பிழையாற்றக்கூடும் அல்லவா?” ஸ்ரீமுதர் “ஆம், செய்த பிழை மட்டுமல்ல, செய்யா பிழையும் பழிகொள்வதே” என்றார். “அவை எண்ணப்பிழை எனப்படுகின்றன. ஆயிரம் பிழைகளின் தலைவாயிலில் நின்று ஏங்கி தயங்கி மீள்வதே மானுட இயல்பு. அப்பழிகளும் அவனைச் சூழ்ந்து உயிர் இருக்கும் கணம் வரை வருகின்றன.”

“இச்சுனை அனைத்தையும் களைந்து கருவறை விட்டு எழும் புதுமகவுபோல் நீராடுபவரை மாற்றுகிறது” என்றார் ஒரு கிழவர். அர்ஜுனன் புன்னகைத்து “இங்கிருந்து தவழ்ந்து திரும்பிச் செல்ல விழைகிறேன்” என்றான். அங்கிருந்த பலர் நகைத்தனர். முதியவர்கள் அவர்களை திரும்பி நோக்கி விழிகளால் அதட்டி அமையச்செய்தார்கள்.

“வீரரே, வந்து உணவு உண்ணுங்கள்” என்றார் ஸ்ரீமுதர். அவர் கையின் அகல் ஒளியைத் தொடர்ந்து பின்கட்டுக்குச் சென்று அங்கு விரிக்கப்பட்டிருந்த நாணல் பாயில் அர்ஜுனன் அமர்ந்துகொண்டான். “நீராடிய பின்னரே மலை ஏறத் தொடங்கியிருப்பீர். குளிரில் பிறிதொரு நீராட்டு தேவையில்லை” என்றார். பெரிய கொப்பரையில் இளவெந்நீர் கொண்டு வந்து வைத்தார். அவரது ஏவலன் ஒருவன் “அப்பங்கள் கொண்டுவரலாமா?” என்றான். ஸ்ரீமுதர் “கீரை அப்பங்கள். அருகரின் உணவென்பதில் நறுமணப்பொருட்களும், மண்ணுக்கு அடியில் விளையும் பொருட்களும், விலங்கோ நுண்ணுயிரோ பேணும் பொருட்களும் இருப்பதில்லை” என்றார்.

கீரைகளை வஜ்ரதானியத்துடன் அரைத்து வாழைப்பழம் கலந்து வாழை இலையில் பொதிந்து ஆவியில் வேகவைத்த அப்பங்கள் இனிதாகவே இருந்தன. அர்ஜுனன் உண்ணுவதை நோக்கி முகம் மலர்ந்த ஸ்ரீமுதர் “இங்கு வரும் அனைவருமே பெரும் பசியுடன்தான் அணுகுகின்றனர். ஆனால் இப்படி உண்ணும் எவரையும் கண்டதில்லை” என்றார்.

அர்ஜுனன் விழி தூக்கி “என்ன?” என்றான். “உண்ணுகையில் தங்கள் சித்தம் முற்றிலும் அதில் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். “ஐம்பதாண்டுகளாக உணவு உண்பவர்களை நோக்கி வருகிறேன். உண்ணும்போது மட்டுமே மானுடன் பலவாக பிரிகிறான். எண்ணங்கள் சிதறி அலைய கையால் அள்ளி வாயால் உண்டு நாவால் அறிகிறான். நெஞ்சம் நினைவுகளுடன் சேர்த்து சுவைக்கிறது. உளங்குவிந்து உண்ணும் கலை சிறு மைந்தருக்கே வாய்க்கிறது.”

அர்ஜுனன் கைகளை கழுவியபடி “எச்செயலிலும் அத்தருணத்தில் முழுமையுடன் இருப்பதென்று நான் வெறிகொண்டுள்ளேன்” என்றான். “நன்று, அதுவே யோகம் என்பது” என்றார் ஸ்ரீமுதர். “தாங்கள் எளிய வீரர் அல்ல என்று உங்கள் நோக்கிலேயே அறிந்தேன். இங்கு வரும் மானுடரை அறிந்தே இப்புடவியை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.”

“நான் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம். தற்போது துயிலுங்கள். முதல் பறவை குரல் எழுப்புகையில் எழுந்து நீராட வேண்டும். முதற்கதிர் எழுகையில் மலையேறத் தொடங்குங்கள். மிகவும் செங்குத்தான மலை. கொடிகளைப் பற்றி பாறைகளில் குதித்து மலை ஏற வேண்டும். மரங்களில் கட்டப்பட்ட வடங்களைப் பற்றி ஏற வேண்டிய இடங்களும் பல உள்ளன. வெயிலின் ஒளி மறைவதற்குள் இந்நாளில் நீங்கள் செல்லவேண்டிய தொலைவில் முக்கால் பங்கை கடந்துவிட்டீர்கள் என்றால்தான் கணக்கு சரியாக வரும். வெயில் எழுந்த பின் குறைவாகவே முன் செல்ல முடியும். வெயில் அணையும்போது உடல் களைத்துவிடும்.”

“அவ்வாறே” என்றான் அர்ஜுனன். கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி “இங்கு படுக்க இடம் உள்ளதல்லவா?” என்றான். “மரவுரிச் சுருள்கள் போதிய அளவில் உள்ளன. இங்கு முன்னிரவிலேயே குளிர் மிகுதியாக இருக்கும். பின்னிரவில் மரங்களின் நீராவி எழுந்து இளவெம்மை கூடும். வருக!” என்று அழைத்துச் சென்றார் ஸ்ரீமுதர்.

கல்மண்டபத்தின் உள் அறைகள் நிறைந்து விட்டிருந்தன. வெளியே போடப்பட்ட கொட்டகைக்குள் இருளுக்குள் பயணிகள் துயின்று கொண்டிருந்தனர். “அதோ, அவ்வெல்லையில் தாங்கள் மரவுரியை விரிக்க இடம் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். அவரைத் தொடர்ந்து வந்த ஏவலர் அளித்த எடைமிக்க மரவுரியை கையில் வாங்கிக்கொண்ட அர்ஜுனனிடம் “தங்களிடம் பொதி என ஏதும் இல்லையோ?” என்றார் ஸ்ரீமுதர். “இல்லை” என்றான் அர்ஜுனன். புன்னகைத்து “அதுவும் நன்றே” என்றபின் தலைவணங்கி அவர் விடைபெற்றார்.

கொட்டகையின் எல்லையில் எஞ்சியிருந்த இடத்தில் தன் மரவுரியை விரித்து, தலையணையாக அளிக்கப்பட்ட மென்மரக்கட்டையை வைத்து உடல் விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டான் அர்ஜுனன். மூடுபனி குளிர்ந்து கூரைகளில் ஊறி விளிம்பிலிருந்து மழைபோல சொட்டிக்கொண்டிருந்தது. அலை அலையாக உள்ளே வந்த காற்று வாடிய தழைமணமும், காட்டெருமைச் சாணியின் மணமும் கொண்டிருந்தது. நீர்த்தாளம் சித்தத்தை ஒழுங்கமைத்தது.

துயில் அவன் கால்கள் மேல் பரவுவதை உணர முடிந்தது. உடலின் ஒவ்வொரு தசையையும் அது அவிழ்த்து விட்டது. புல்வெளிக்குள் நுழைந்த மந்தை மெல்ல கன்றுகளாக கலைவதுபோல அவன் விரிந்து கொண்டிருந்தான். எவரோ எங்கோ “நல்ல தருணம் இது” என்றார்கள். “நீர் பெருகிச் செல்கிறது” என்றார் இன்னொருவர். துயிலணையும்போது வரும் இக்குரல்கள் எங்குள்ளன? “பட்டத்துயானை” என்றது யாரோ உரைத்த ஒலி. “சூரியனின் மைந்தன்… அவன் விற்கள் கதிர்களே” என்றது மிக ஆழத்தில் ஒரு குரல் இறுதியாக. பெண்குரல், மிக அணுக்கமாக அறிந்த குரல். இருமுகங்கள் பேசும் ஒரு குரல்.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்


இலக்கியவாதிகளும் அமைப்புகளும்

$
0
0

ஜெ

என் நண்பருடன் ஒரு இலக்கிய அரட்டையில் ஒருவிஷயம் பேச்சுவந்தது. அதை உங்களிடம் எழுதிக்கேட்காமல் இருக்கமுடியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய பேச்சு வந்தபோது வந்தது இது என்பதையும் சொல்லவேண்டும். அதாவது முன்பிருந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் , க.நா.சுப்ரமணியம் போன்றவர்களெல்லாம் தனியர்களாக நின்று போராடினார்கள் என்றும் இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் அமைப்புகளை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் இதெல்லாம் ஒரு வீழ்ச்சி என்றும் நண்பன் சொன்னான். ஓர் இளம்கவிஞர் எங்கோ எழுதியதை அவன் சுட்டிக்காட்டினான். இப்படிச் சொல்வது உண்மையா? இதை வீழ்ச்சி என்று நினைக்கிறீர்களா என்ன?

சத்யா

baaradhi2

அன்புள்ள சத்யா,

பொதுவாக இலக்கியவிவாதங்களில் இத்தகைய கூற்றுக்களை அடிக்கடி கேட்கலாம். இதைச்சொல்பவர்கள் வருடத்திற்கு ஒரு கதை எழுதுபவர்களாக இருப்பார்கள். ஆகவே வருடத்திற்கு ஒரு கதை எழுதுபவனே நல்ல இலக்கியவாதி என்பார்கள். அவர்கள் சாயங்காலமானால் குடிப்பவர்களாக இருப்பார்கள். ஆகவே குடிகாரனே நல்ல கவிஞன் என்பார்கள். அவர்களால் நூறுபக்க நாவல் எழுதத்தான் முடியும்.ஆகவே நூறுபக்கத்துக்குமேல் நல்ல நாவலை எழுதமுடியாது என்பார்கள்

இவர்கள் இப்படிப் பேசும்போது சரி, அப்படியென்றால் உலக இலக்கியத்தில் வருடம் நூறு கதை எழுதிய எழுத்தாளர்கள் அனைவரையும் நிராகரிக்கிறாயா, குடிக்காதவர்களை எல்லாம் மறுக்கிறாயா, பெரியநாவல்களை எல்லாம் நிராகரிக்கிறாயா என்று மடக்கிக் கேட்டு அவ்வாறான இலக்கியமேதைகளின் ஒரு பட்டியலைக் கொடுக்கும் ஆற்றல் கொண்ட ஒருவர் அருகே இருந்தால் இவர்களால் பேசமுடியாது. ஆனால் நம்சூழலில் அது மிக அபூர்வம். ஆகவேதான் இத்தகைய குரல்கள் எழுகின்றன.

இலக்கியத்தில் இப்படி எந்த நிபந்தனைகளும் எப்போதும் செல்லுபடியாகாது என உணர கொஞ்சம் வாசித்தாலே போதும். அவ்வப்போது எழுதியமேதைகள் உண்டு. எழுதிக்குவித்தமேதைகளும் உண்டு. அரசியலற்ற மேதைகள் உண்டு, முழுக்கமுழுக்க அரசியலையே பேசிய இலக்கியமேதைகளும் உண்டு. அமைப்புகளை உருவாக்கி நடத்திய இலக்கியவாதிகள் உண்டு. அமைப்புகளுக்கு வெளியே நின்றவர்களும் உண்டு. எவரும் ஒருவரை விட ஒருவர் இக்காரணங்களால் மேல் அல்ல. அவர்களின் புனைவுலகு என்பது அவர்களின் ஆளுமையின் வெளிப்பாடு மட்டுமே.

pupi

மேலேசொன்ன கூற்று தமிழிலக்கியவரலாற்றை அறிந்தவர்களால் லேசான கிண்டல்புன்னகையுடன் கடந்துசெல்லத்தக்கது மட்டுமே. நவீனத் தமிழிலக்கிய முன்னோடியான பாரதி இலக்கியத்திற்கான பெரிய அமைப்புகளை உருவாக்கும் கனவை திரும்பத்திரும்ப எழுதினார். தன் நூல்களை கொண்டுசென்று மக்களிடம் சேர்க்கும் அமைப்பை உருவாக்க நிதிகோரி வேண்டுகோள் விடுத்தார். அவரது முயற்சிகள் பயனளிக்கவில்லை.

புதுமைப்பித்தன் வாழ்நாள் முழுக்க இலக்கிய அமைப்புகளை மட்டுமல்ல இலக்கியத்திற்கு அப்பால் சென்று அரசியல் -பண்பாட்டு அமைப்புகளையும் உருவாக்கும் கனவுகொண்டவராகவே இருந்தார். ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாற்றை வாசித்தாலே தெரியும்

அன்று சற்றும் சாதகமான சூழல் இல்லாமலிருந்தபோதும்கூட புதுமைப்பித்தன் தினமணியிலிருந்து வெளியேறி நண்பர்களுடன் இணைந்து தினசரி என்ற நாளிதழை [ஆம் இலக்கிய இதழைக்கூட அல்ல, நாளிதழை ]உருவாக்க முயன்றார். அதில் பெரும்பொருளை இழந்தார். அந்நாளிதழின் பகுதியாக அவர்கள் தொடங்கிய பிரசுரத்திலிருந்து வந்தவையே ஃபாஸிஸ்ட் ஜடாமுனி, ஸ்டாலினுக்குத்தெரியும் போன்ற நூல்கள். அது உலகப்போர்க்காலகட்டம். சிறிய அரசியல் நூல்கள் அதிகம் விற்றன அன்று. அந்நூல்கள் மூலம் தங்கள் அமைப்பு வலுவாக வேரூன்றும் என அவர் எண்ணினார்.

அந்த எண்ணங்கள் ஈடேறவில்லை. உண்மையில் அத்திட்டம் சிறந்ததுதான், அது மிகச்சிறந்த காலகட்டம். இந்தியாவின் முக்கியமான பல ஊடகங்கள் உருவாகி ஆழவேரூன்றியது அப்போதுதான்.ஆனால் அவர்களால் ஓர் அமைப்பை வெற்றிகரமாக நிர்வாகம்செய்ய முடியவில்லை. குறிப்பாக நிதி நினைத்தபடி கிடைக்கவில்லை.

ரகுநாதன், மீ.ப.சோமு, போன்றவர்கள் அப்போது புதுமைப்பித்தனின் ‘அல்லக்கைகள்’ என்று பிறரால் கேலிசெய்யப்பட்டனர் . அவர்களெல்லாருமே பின்னர் சாதனையாளர்களாக மாறினார்கள்.ஆனால் ரகுநாதனே பின்னர் புதுமைப்பித்தன் பர்வதவர்த்தினி சினி புரடக்‌ஷன்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தபோது உடன் கூடியவர்களை சில்லுண்டிகள் என தன் நூலில் கேலிசெய்கிறார்.

கையில் ஒரு பைசா இல்லாத நிலையில் சினிமாத்தயாரிப்பாளர் மூன்றாம் வகுப்பில் செல்லக்கூடாது என்பதற்காக புதுமைப்பித்தனுக்கு அவரது அணுக்கர்கள் அங்கே இங்கே கடன்வாங்கி முதல்வகுப்பில் திருவனந்தபுரத்திற்கு டிக்கெட் போட்ட வேடிக்கையை ரகுநாதன் விரிவாக எழுதுகிறார். தந்தைவழிச் சொத்தை அதில் முழுமையாகவே இழந்தார் புதுமைப்பித்தன். ஆனால் ஒரு கலைப்பட இயக்கத்தைத் தொடங்கிவைக்கும் கனவு அவருக்கிருந்தது. அது அழிந்தது

ka.na.su

க.நா.சு ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ என்னும் நூலுக்காகவே சாகித்ய அக்காதமி விருது பெற்றார். ஓர் அமைப்பை அல்ல ஊருக்கு ஊர் கிளைகள் கொண்ட ஒரு பெரிய அமைப்பை உருவாக்கவே அவர் கனவுகண்டார். அவர் உருவாக்கிய இலக்கியவட்டம் என்னும் அமைப்பின் நோக்கம் அதுவே. இலக்கியவட்டம் என்னும் இதழும் அதற்காகவே தொடங்கப்பட்டது. அதில் க.நா.சு தன் தந்தைவழிச் சொத்தை இழந்தார். கடைசிவரை அந்த கனவு அவருக்கிருந்தது.

சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்பது ஒரு சிற்றிதழ் மட்டும் அல்ல. அது ஓர் இயக்கம்.ஓர் அமைப்பு. அவர் இலக்கியக்கூட்டங்களை நடத்தினார்.பதிப்பகம் அமைத்தார். நண்பர்களைத் திரட்டி கருத்தரங்குகளைக்கூட ஒருங்கிணைத்தார். இலக்கியத்திற்கு வலுவான மாற்றுஅமைப்புகள் உருவாகவேண்டியதன் தேவைபற்றி செல்லப்பா மீண்டும் மீண்டும் பேசுவதை நாம் எழுத்தில் காண்கிறோம்

ஜெயகாந்தன் இடதுசாரித்தோழர்களுடன் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் ஒரளவாவது வெற்றியை ஈட்டியது. அவரது உன்னைப்போல் ஒருவன் தமிழின் முதல்கலைப்படம். அன்றைய ஊடகச்சூழல் அப்படத்தை மறைத்திருக்காவிட்டால் மலையாளம் போலவே இங்கும் ஒரு மாற்றுசினிமா இயக்கம் தொடங்கியிருக்கும். நிமாய் கோஷ், ஜித்தன் பானர்ஜி, எம்.பி.ஸ்ரீனிவாசன்,விஜயன் போன்ற பலர் அடங்கிய அவ்வமைப்பு ஐந்தாண்டுக்காலம் சிறப்பாகவே செயல்பட்டது

g.nagaraajan

தமிழின் தனியர்கள், கலகக்காரர்கள் என்றெல்லாம் பின்னாளில் அறியப்பட்ட ஜி.நாகராஜனும் பிரமிளும்கூட அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட திட்டமிட்டு முயன்றவர்களே. ஜி.நாகராஜன் பித்தன்பட்டறை என்றபேரில் ஒரு மாற்றுப்பிரசுர இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டு பலரிடம் நிதிவசூல் செய்தார். தன் கைப்பணத்தையும் செலவழித்தார். ஐரோப்பிய மார்க்ஸிய சிந்தனையாளர்கள் அன்று தமிழில் பெரிதும் அறிமுகமற்றவர்கள். அவர்களை தமிழில் அறிமுகம் செய்வதே அவரது எண்ணம்.

அந்த அமைப்புக்காக அவர் கார்ல்மார்க்ஸ் பற்றி ஒரு ஆங்கிலநூலையும் தமிழ் நூலையும் எழுதினார்.யூகோஸ்லாவாகிய மார்க்ஸியவாதியான மிலான் ஜிலாஸ் [ Milovan Đilas ] எழுதிய நூல் ஒன்றை மொழியாக்கம் செய்தார். மேலும் சில ஆங்கிலநூல்களையும் ஒருசிலபகுதிகள் எழுதினார். நினைத்தது எதுவும் கைகூடாமல் அம்முயற்சி மறைந்தது. அந்தக் கைப்பிரதிகள் நிதியளித்த நண்பர்களிடம் எஞ்சியிருந்தன. சுந்தர ராமசாமி அம்முயற்சிகளைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

piramil

பிரமிள் Inner Image Workshop என்ற பேரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். அதற்கு பலரிடம் நிதியுதவிபெற்றார். ராஜமார்த்தாண்டனின் ஊரான சந்தையடியில் அது முதலில் தொடங்கப்பட்டது. ஓவியம், சிற்பம், இலக்கியம்,நவீனஆன்மிகம், சோதிடம் ஆகியவற்றை ஒன்றாக பயிலவும் முன்னிறுத்தவும் செயலாற்றும் ஓர் அமைப்பு அது என்பது அவரது திட்ட்டம். அதற்கான விரிவான திட்டங்களைப் போட்டு கடிதங்களை அனுப்பியிருக்கிறார்.

பிரமிள் பலமுறை இந்த அமைப்பை மீண்டும் தொடங்கியிருக்கிறார். பலரை உள்ளே இழுத்து நிறுவன அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அன்றைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. குறிப்பாக பணம் இல்லை. தொடர்புகளே மிகவும் குறைவு.

ஏன் இதை இவ்வெழுத்தாளர்கள் செய்தார்கள்? ஏனென்றால் இன்று வரலாறு தெரியாமல் சிலர் புரிந்துகொள்வதுபோல தன் சொந்தவாழ்க்கையை ஒட்டி சில எளிய அறிதல்களையோ உணர்ச்சிகளையோ எழுதி எங்காவது வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் சோனி எழுத்தாளர்கள் அல்ல இவர்கள். இவ்வளவுபோதும் என்றோ நமக்கு இவ்வளவுதான் முடியும் என்றோ ஒதுங்கிக்கொண்டவர்கள் அல்ல.

அவர்கள் சிற்றிதழ்களை உருவாக்கியதும் அவற்றில் எழுதியதும் அவை போதும் என்பதற்காக அல்ல, அவையே அன்று உச்சகட்ட சாத்தியம் என்பதனால்தான். அவர்கள் அறியப்படாமலிருந்தது அவர்கள் ஒதுங்கி வாழ்ந்ததனால் அல்ல, அவர்கள் ஒதுக்கப்பட்டதனால்தான்.முற்றிலும் தனித்தவர் என்று அறியப்பட்ட நகுலன் கூட தொகைநூல்கள், கருத்தரங்குகள் என பலவகையிலும் தீவிரமாகச் செயல்பட்டவர்தான்.

இவர்கள் அனைவருமே தங்கள் சூழலை நோக்கிப் பேசியவர்கள், அதன்மேல் வலுவான செல்வாக்கை நிகழ்த்த, அதை மாற்றியமைக்க விழைந்தவர்கள். அவர்களின் படைப்புவேகம் என்பது அந்த விழைவிலிருந்து வந்ததுதான். ஆகவே முழுமூச்சாக தங்கள் படைப்புகளையும் எண்ணங்களையும் கொண்டுசென்று சேர்க்க முனைந்தனர். அதற்காகவே இணைமனங்களின் கூட்டுகளை, அமைப்புகளை உருவாக்க முற்பட்டனர். விமர்சனங்களை முன்வைத்தனர். விவாதங்களை எழுப்பினர்.தங்கள் தரப்பு ஒலிக்கச் சாத்தியமான அனைத்து ஊடகங்களையும் கைப்பற்றிச் செயல்பட்டனர்.

அன்றையசூழல் முற்றிலும் எதிர்மறையானது. எனவே அம்முயற்சிகளெல்லாம் பெரும்பாலும் தோல்விகளே. ஆயினும் அவர்கள் முடிந்தவரை இந்தப் பாறையில் தங்கள் தலையால் முட்டி உடைத்து நகர்த்தவே முயன்றனர். அவர்கள் உருவாக்கிய பாதிப்புகள் அந்த பெரும்முயற்சியால் விளைந்தவை. அன்றி, தன்னை தனிமனிதன் என நிறுத்திக்கொண்டு செயலின்மையை கொண்டாடியதனால் நிகழ்ந்தவை அல்ல. செயலின்மைக்கும் ஆற்றலின்மைக்கும் துணையாக அவர்களின் பெயர்களை இழுப்பது அவர்களுக்கிழைக்கப்படும் மிகப்பெரிய அவமதிப்பு.

இன்று நிலைமை மிகச்சிறிதே மாறியிருக்கிறது. அன்று இலக்கியமுன்னோடிகள் கண்ட கனவில் மிகச்சிறிய பகுதியை நடைமுறையாக்கும் வாய்ப்பு. அதற்குக் காரணம் இணையத்தொழில்நுட்பம் மூலம் உருவான தொடர்புகள். புத்தகக் கண்காட்சிகள் மற்றும் சில புதிய இதழ்கள் வழியாக உருவான சற்று மேம்பட்ட இலக்கியவாசிப்பு .

ஆயினும் தமிழ்ச்சூழலின் இன்றைய நிலையை வைத்துப்பார்த்தால் இன்று நிகழும் அமைப்புசார்ந்த முயற்சிகளுக்கும் க.நா.சுவின் இலக்கியவட்டத்திற்கும் பெரியவேறுபாடு ஏதும் இல்லை. இன்றும் இருட்டைநோக்கி அடிவயிற்றை எக்கி கூக்குரலிடுவதாகவே இது உள்ளது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

$
0
0

vesa-closeup-004

நேற்று மதியம் சென்னையில் வெங்கட் சாமிநாதனைப்பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது மூர்க்கமான பேரன்பு பற்றி. மூன்றுமுறை வெ.சாவிடம் என் நண்பர்களுக்கு வேலை கிடைக்க, பொருளியல் இக்கட்டை சமாளிக்க உதவும்படி கோரியிருக்கிறேன். ஒருவர் அவரை மோசமாக விமர்சித்து எழுதியவர். பிற இருவரையும் அவருக்கு எவரென்றே தெரியாது.

ஆனால் வெ.சா இறங்கிப் பணியாற்றி அவர்களுக்கு உதவினார். அவர்கள் வாழ்க்கையின் திருப்புமுனைகளுக்குக் காரணமாக அமைந்தார். ஏனென்றால் வெ.சாவை குருபீடத்தில் வைத்துள்ள பலர் உண்டு. அவருடன் மிக அணுக்கமான உறவுள்ளவர்கள் நிறையபேர். உதவிபெற்றவர்கள் ஒருசில மாதங்களில் அதை முற்றாக மறந்தனர், அவரை நிராகரிக்கவும் முயன்றனர். அது மானுட இயல்பு.

அதையும் வெ.சா அறிந்திருந்தார். வெடிச்சிரிப்புடன் ‘மனுஷன் வேற மாதிரி இருந்தா தெய்வங்கள்ளாம் கோவிச்சுகும்ல?” என்றார். அதிகாலையில் குறுஞ்செய்தி வெ.சா இறப்பை அறிவித்தபோது நான் அவரது அந்த சிரிப்பை நினைத்துக்கொண்டேன். சிறிய கண்கள் குறும்பாக இடுங்க சன்னமாக ஓசையிட்டபடி உடல் குலுங்கச் சிரிக்கும் அந்த முகம்.

=====================================================================================

வெங்கட் சாமிநாதன் இன்று காலை 3 25 அளவில் இதய அடைப்புக்கு ஆளானார். மருத்துவமனைக்குச்செல்லும் வழியில் உயிரிழந்தார். உடல் பெங்களூரில் அவரது இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது

address

110 lake Breeze Apartment
3 rd Main Road
Coffee Board
Layout Kempapura
Hebbal Flyover
[Towards Airport. Take the road,adjacent to eastern Mall]
Bangalore

==========================================================================================

வெங்கட் சாமிநாதன் நூல் வெளீயீட்டுவிழா உரை

====================================================================================

வெ.சாமிநாதன் ஒரு காலகட்டத்தின் குரல் 1

வெ.சாமிநாதன் ஒரு காலகட்டத்தின் குரல் 2

வெ.சாமிநாதன் ஒரு காலகட்டத்தின் குரல் 3

வெ.சாமிநாதன் ஒரு காலகட்டத்தின் குரல் 4

=================================================================================


க நா சுவும் வெங்கட் சாமிநாதனும்


அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்

தி.ஜா ,வெ.சா, சுஜாதா

தொடர்புடைய பதிவுகள்

வெ.சாமிநாதன் சில பக்கங்கள்

$
0
0
செல்லப்பாவும் சாமிநாதனும்

செல்லப்பாவும் சாமிநாதனும்

திகசி பற்றி வெ.சாமிநாதன்

வெ.சாமிநாதன் தமிழமுதம் பேட்டி

தமிழ் நாட்டார் கலைகள் வீழ்ச்சியடைவது பற்றி வெ சாமிநாதன்

தமிழ் இசைமரபு வெ சாமிநாதன்


தமிழ் இலக்கியம் ஐம்பது வருட மாற்றமும் வளர்ச்சியும்


பாலையும் வாழையும் நூலுக்கு செல்லப்பா எழுதிய முன்னுரை

பயணத்தின் அடுத்த கட்டம்

வியப்பளிக்கும் ஆளுமை சாமிநாதன் நேர்காணல்ச திருமலைராஜன்
பகுதி இரண்டு பகுதி மூன்று

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 3

பின்னிரவில் இருளுக்குள் விழித்துக்கொண்டபோதுதான் துயின்றிருப்பதையே அர்ஜுனன் அறிந்தான். அவனை எழுப்பியது மிக அருகே கேட்ட யானையின் பிளிறல். கை நீட்டி தன் வில்லைத் தொட்டதுமே எழுந்து கொட்டகையின் சிறு சாளரம் வழியாகவே வெளியே நோக்கினான். யானை மிக அருகில் இருப்பதை மூக்கால் அறிந்தான். மட்கிய தழையை கொதிக்கச்செய்வதுபோன்ற மணம். உடன் கலந்த உப்புச்சிறுநீர் மணம்.

ஆனால் இருளில் அதன் உரு தெரியவில்லை. கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும்போது யானை மிக அருகே மீண்டும் பிளிறியதை கேட்டான். அவன் நோக்குவதை அது அறிந்துவிட்டது என்பதை உணர்ந்தான். அதன் காலடியோசை கேட்கவில்லை. இருளுக்குள் முகில்குவை போல அது மிதந்து அலைகிறது போலும்.

அதன் கரிய நிழல் உருவம் இருளுக்குள் இருளென சென்றபோதுதான் அது அத்தனை அருகில் இல்லை என அறிந்தான். பெரிய பிடியானை. அதற்குப் பின்னால் அதன் பின்னங்காலை தன் சிறிய துதிக்கையால் தொட்டு விளையாடிச் செல்லும் யானைக் குழவியைக் கண்டான். குழவி இருக்கிறதென்றால் அது சற்று பெரிய மந்தைதான். அப்பால் இருந்து இரு பெரும் தந்தங்கள் மட்டும் இருள் கிழித்து வந்தன. களிறு இருக்கிறது, அப்படியென்றால் கருக்கொண்ட யானைகளும் உள்ளன.

அவன் விழிகள் மென்மையான தூரிகை புழுதிப்படலத்தை விலக்குவதுபோல இருளை நீவி நீவி அகற்றின. இருளின் மைப்படலத்திற்குள் துழாவிச்சென்று களிறின் வான்விளிம்புக்கோட்டை தொட்டு வரைந்தெடுத்தன. துதிக்கை நீட்டி வந்த களிறு குட்டியின் முதுகைத் தொட்டு சற்று முன்னால் தள்ளியது. மூச்சு சீறிய துதிக்கையை அவனை நோக்கி வளைத்து அவன் அங்கே நின்றிருப்பதன் மணத்தை அறிந்து வயிற்றுக்குள் மெல்ல உறுமியது.

விழிகள் மேலும் மேலும் தெளிய யானைக்கூட்டத்தை நன்கு கண்டான். பன்னிரெண்டு யானைகள் இருந்தன. எட்டு பிடியானைகள். ஒரு களிறு. எஞ்சியவை கன்றுகள். அப்பகுதி எங்கும் செறிந்து கிடந்த உயரமான தாளிப்புற்களை துதிக்கை சுழற்றி பிடுங்கி கால்தூக்கி அடித்து வேர்மண்களைந்து வாயில் செருகி தொங்குதாடை ஊறிவழிய செவிப்பள்ளம் அசைய மென்றன. சருகு அரைபடுவதுபோல அந்த ஒலியை கேட்கமுடிந்தது. மண்பற்று நின்ற வேர்ப்பகுதியை வாய்நுனியாலேயே நறுக்கி கீழே உதிர்த்தன.

இரண்டு யானைகள் கொட்டகையின் பின்புறம் அடுமனைச் சாம்பல் குவிந்திருப்பதை அறிந்து துதிக்கையால் அவற்றை அளைந்து அள்ளி தங்கள் மேல் போட்டுக்கொண்டன. கொட்டப்பட்ட எஞ்சிய உணவிலிருந்த குப்பையை துதிக்கையால் கிளறி அதிலிருந்த உப்பை மண்ணுடன் அள்ளி வாய்க்குள் வைத்தன இரு யானைகள். குட்டிகள் முண்டியடித்து அந்தச் சாம்பலை அன்னையரின் துதிக்கையிலிருந்தே வாங்க முயன்றன.

அவன் யானைகளை நோக்கி நின்றிருந்தான். அவை தன்னுள் நிறைந்திருந்த இருளுக்குள் எங்கோ இருந்து எழுந்து வந்தவை போல, இருளுருவாக உள்ளே உறைவனவற்றின் பருவடிவம் போல. ஆனால் அப்படி நோக்கி நின்றுகொண்டிருந்தபோது வெகு நாட்களுக்குப் பின் தன் இருப்பு தித்தித்திருப்பதை உணர்ந்தான். அக்காட்சி எதனுடனும் தொடர்புகொள்ளவில்லை. எனவே எப்பொருளும் கொள்ளவில்லை. முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா?

ஆம். இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்று உணர்வதே. உயிரின் முதல் பேறு. காற்றில் எழுந்து களியாடும் சிறு புட்கள், கிளைகள்தோறும் தாவும் குரங்குகள், சிறகு ஒளிர சுடரும் ஈக்கள், நெளிந்து துவளும் புழுக்கள் என ஒவ்வொன்றும் அதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை அவை இவ்வெண்ணங்களை அடையாமல் இருக்கலாம். அல்லது அவை அடையவில்லை என்று எவர் கண்டார்?

இருக்கிறேன் என்ற உணர்வை தித்திப்பு என்று அவன் தன் வலது தோளில், பின்பு நெற்றியில், பின்பு புறங்கழுத்தில் உணர்ந்தான். அதை நோக்கி சித்தம்குவிக்க உடல் ஒரு நாவென மாறி அந்த இன்சுவையை உணர்வதுபோல் இருந்தது. உடல் அதில் நெளிந்து துழாவியது. தித்திப்பு. அச்சொல்லுடன் அவன் சித்ராங்கதையை நினைவுகூர்ந்தான். நுரையடங்குவதுபோல் உவகை அணைந்து நெஞ்சு இனிய ஏக்கம் ஒன்றால் நிறைந்தது.

ஏன் என்று எண்ணினான். வேட்கையா? இழப்புணர்வா? இக்கணமே எழுந்து கிளம்பி அங்கு திரும்பிச் சென்றால் என்ன? இல்லை… நான் பார்த்தன். மிச்சமின்றி விட்டுச் செல்வதால் மட்டுமே புதியவற்றை அடைய முடியும் என்று அறிந்தவன். எக்கணமும் என் முன் பேருருக் கொண்டு எழப்போகும் முழுதறிவை பெறுவதற்காக என் கலங்களை ஒவ்வொரு கணமும் கழுவி தூய்மைப்படுத்தி வைப்பவன்.

பெருமூச்சுடன் அவன் மீண்டும் வந்து தன் மரவுரி இருக்கைமேல் அமர்ந்துகொண்டான். கம்பளியை போர்த்தி கண் மூடி சூழக் கேட்கும் மூச்சொலிகளில் சித்தம் நிலைக்க விட்டான். அருகே இருந்த மரவுரிப் படுக்கையில் மெல்லிய அசைவொன்று கேட்டது. ஓர் ஒலி குரல் போலவே பொருள்கொண்டதாக ஆவதன் விந்தையை அர்ஜுனன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். மீண்டும் மஞ்சம் தெளிவான ஒரு சொல்லை பேசியது. அர்ஜுனன் திரும்பவில்லை.

எழுந்து அமர்ந்த அப்பயணி “யானைகளா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இம்மலை முழுக்க யானைகள்தான். இங்கு குன்றாது மழைபெய்வதனால் அவற்றுக்கு உணவுக்கு குறைவில்லை.” ஓர் உரையாடலை தொடங்குவதற்கான வெற்றுப்பேச்சு அது என்று உணர்ந்து, கண்களை மூடி விழிகளை திருப்பிக்கொண்டான் அர்ஜுனன். “இம்மலை பற்றி என்னிடம் சொன்னவர்கள் யானையைத்தான் திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்கள். அங்கே எங்களூரில் யானைகள் படைகளில்தான் இருக்கின்றன. இப்படி மந்தைகள்போல் சுற்றித் திரிவதில்லை.”

அதற்கும் அர்ஜுனன் மறுமொழி சொல்லவில்லை. “இங்கே காட்டு மாடுகள் போல் யானைகள் சுற்றித் திரிகின்றன. இம்மலையில் கன்று வளர்ப்பது எளிதல்ல. அதனால்தான் இம்மலையில் யாதவர்கள் இல்லைபோலும்” என்றபின் அவன் மஞ்சம் ஓசையிட எழுந்து சாளரம் வழியாக வெளியே பார்த்தான். “பெரிய யானைகள். கங்கைக் கரைக் காடுகளிலும், யமுனைக்கரைக் காடுகளிலும் சில உள்பகுதிகளில் யானைகள் உள்ளன. ஆனால் அவை இவ்வளவு பெரியவை அல்ல. அவற்றின் முகத்தில் இத்தனை செம்புள்ளிகளும் இருப்பதில்லை.”

தன்னை அறியாது எழுந்த ஆர்வத்துடன் “உங்கள் ஊர் எது?” என்று வினவினான் அர்ஜுனன். அவன் தன்னை உரையாடலுக்குள் இழுத்துவிட்டதை உணர்ந்ததும் அவன் கூர்மதியாளன் என எண்ணிக்கொண்டான். “நான் மதுவனத்தை சேர்ந்தவன். துவாரகையின் இளைய யாதவருக்கு உறவினன்” என்றான். “நீர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் கதன்.” அர்ஜுனன் வியப்புடன் இருளுக்குள் அவனை நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் இயல்பாக “அப்படியா?” என்றான்.

“மதுவனத்தை இப்போது இளைய யாதவரின் தந்தைவழிப் பாட்டனார் சூரசேனர்தான் பிதாமகராக அமர்ந்து ஆண்டு வருகிறார் என்று அறிந்திருப்பீர்கள். அவருக்கு வயது முதிர்ந்துவிட்டது. காதுகளும் நன்றாக கேட்பதில்லை. அவரது மைந்தர் வசுதேவர்தான் யாதவர்களின் தொல்நகரகான மதுராவை ஆள்கிறார். அறிந்திருப்பீர்” என்றான் கதன். ”ஆம்” என்றான் அர்ஜுனன். கதனின் கண்களை சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டான்.

“உண்மையில் வசுதேவரின் உடன்பிறந்தவர்களால் ஆளப்படுகிறது மதுவனம்” என்றான் கதன். அவனே மெல்ல சிரித்து “ஆள்வதற்கு அங்கு என்ன நாடா இருக்கிறது? வெறும் காடு. அதில் கன்று மேய்க்கும் ஆயர்குழுக்கள்” என்றான். அர்ஜுனன் “நான் பார்த்ததில்லை” என்றான். “அவர்கள் அறிந்ததெல்லாம் புணர்வதும் பூசலிடுவதும்தான். ஒன்றாகவே மேயும் கன்றுகளை கண்டு கண்டு யாதவர்கள் பிளவுறக் கற்றிருக்கிறார்கள்.” “ஏன்?” என்றான் அர்ஜுனன்.

“அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதேயில்லை. கன்றின் கால்களில் இருக்கிறது அவர்களது பாதை. மழைக்காலத்தில் மட்டும் ஓரிடத்தில் கூடுவது அவர்களின் வழக்கம். மழைமாதங்கள் நான்கும் முடிவதுவரை கொட்டகைகளில் கூடி அமர்ந்து வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள். முதல் மாதம் முழுக்க ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, வசைபாடி, பூசலிடுவார்கள். இரண்டாம் மாதத்தில் கதைகள் சொல்லிக்கொள்வார்கள். மூன்றாம் மாதத்தில் உறவுகள் அமையும். நான்காம் மாதம் முழுக்க மதுமயக்கு மட்டுமே. எங்கிருக்கிறோம் என்றே அறியாதிருப்பர். மழைவிட்டு வசந்தம் வந்திருப்பதே மாடுகளை விட்டு முட்டி அவர்களை எழுப்பினால்தான் தெரியும்.”

அர்ஜுனன் புன்னகைத்தான். கதன் “நான் நினைவறிந்த நாள் முதல் மதுவனத்திற்கு வெளியே சென்றதில்லை. சென்ற மாதம் மூத்த இளவரசர் வசு என்னை அழைத்தார். எங்கள் மூதரசர் சூரசேனருக்கு லவண குலத்து இளவரசி மரீஷைக்கு பிறந்த மைந்தர்கள் பதின்மர் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். வசு, தேவபாகர், தேவசிரவஸ், ஆனகர், சிருஞ்சயர், காகனீகர், சியாமகர், வத்ஸகர், காவுகர், வசுதேவர். இளவரசி பிருதை மார்த்திகாவதியின் குந்திபோஜருக்கு மகளாகிச் சென்று குந்திதேவியாக அஸ்தினபுரியை ஆள்கிறார்.”

“சூரசேனம் மைந்தரால் பொலிவு கொண்டது. அனைவருமே கன்றுபெருக்கிய பெருங்குடி யாதவரே. அவர்களுள் கன்று மேய்க்க மறுத்து கல்வி கற்கச் சென்றவர் வசுதேவர். அவர் மதுராவை ஆண்ட உக்ரசேனரின் அமைச்சரானார். மதுராவின் இளவரசர் கம்சரின் தோழரானார். கம்சரின் தங்கை தேவகியை மணந்து இளைய யாதவரை பெற்றார்” என்றான் கதன். “அவரது முதல் மனைவி ரோகிணியின் மைந்தர் பலராமர் இன்று யாதவர்களின் தலைவர். சூரசேனரின் முதல் மைந்தர் வசுவே தந்தைக்கு நிகரென அமர்ந்து இன்று மதுவனத்தை ஆள்கிறார்.”

“வசுவை அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், காடு விட்டு ஊருக்குள் வருவதை வெறுக்கக்கூடியவர் அவர். அரசமுறைகளோ செம்மொழியோ அவருக்குத் தெரியாது. அவரது துணைவியரான கிருபையும் சுபையும் சத்ரையும் கணவதியும் காட்டில் கன்றோட்டும் எளிய யாதவப்பெண்கள். ஆகவே இளைய யாதவர்தான் மதுவனத்தை தன் சொல்லை அனுப்பி ஆள்கிறார். அவரது ஆணைகளைப் பெற்று இளையோர் சியாமகரும் வத்ஸகரும் காவுகரும் மதுவனத்தை நடத்துகிறார்கள்” என்றான் கதன்.

“நீங்கள் எண்ணுவது சரிதான். இளையோராகிய வத்ஸகரும் காவுகரும் இளைய யாதவருக்கே அணுக்கமானவர்கள்” என்று கதன் தொடர்ந்தான். “ஆனால் மூத்தவர்களின் நோக்கில் இளைய யாதவர் யாதவகுலத்தை போருக்கும் பூசல்களுக்கும் இட்டுச்சென்று அழிவை அழைப்பவர். கார்த்தவீரியருக்கு நிகழ்ந்ததே இளைய யாதவருக்கும் நிகழப்போகிறது, பிறிதொரு முற்றழிவை மதுராவும் யாதவரும் சந்திக்கவிருக்கிறார்கள் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் நடுவே நீருக்குள் சுழலோட்டம் போல தெரிந்தும் தெரியாமலும் ஏதோ ஒன்று எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.”

“எனவே மூதரசர் சூரசேனரை சந்திக்கும்படி எனக்கு இளவரசர் வசுவின் ஆணை வந்தபோது அதை இளைய யாதவரின் ஆணையா மூத்தவர்களின் ஆணையா என்றறியாமல் குழம்பினேன். உத்தரவனத்தில் என் குடும்பத்துடனும் மந்தையுடனும் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிளம்பி காட்டில் மூன்று நாள் பயணம் செய்து மதுவனத்திற்கு வந்தேன்” என்றான் கதன். “மதுவனத்தின் இளவரசர்கள் அனைவருமே அப்போது அங்கே வந்திருந்தனர். அவர்களின் குடும்பங்களும் அங்கிருந்தன.”

என் அன்னையின் குடிலுக்குச் சென்று நீராடி உடை மாற்றி மையமாளிகைக்குச் சென்றபோது வாயிலிலே ஆனகர் என்னை அணுகி மெல்லிய குரலில் “மதுராவிலிருந்து பலராமர் வந்துள்ளார், அவரே உம்மை சந்திக்க அழைத்தவர்” என்றார். “பலராமரா? ஏன்?” என்றேன். “அதை நான் அறியேன்” என்றார். தயக்கத்துடன் “இச்சந்திப்பு இளைய யாதவரின் ஆணைப்படியா?” என்றேன். “அதையும் நான் சொல்லலாகாது” என்றார். நான் “எவ்வண்ணம் எனினும் என் குடித்தலைவர் சூரசேனரே. அவரது சொல்லுக்கு நான் கட்டுப்பட்டவன்” என்றேன். ஆனகர் “இளைய யாதவரும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டவரே” என்றார்.

நான் உள்ளே சென்று அங்கே அங்கணத்தில் போடப்பட்ட மரப்பீடங்களில் அமர்ந்திருந்த பலராமரையும் சூரசேனரையும் வணங்கி நின்றேன். வசுவும், தேவபாகரும், தேவசிரவஸும் தந்தைக்குப் பின் போடப்பட்டிருந்த பீடங்களில் அமர்ந்திருந்தனர். பலராமர் என்னிடம் “இவனா? இவனைப் பார்த்தால் அறிவுள்ளவன்போல் தோன்றவில்லையே!” என்றார். எனக்கு சினம் எழுந்தது என்றாலும் அடக்கிக்கொண்டு சூரசேனரை நோக்கினேன். சூரசேனர் “நம்மில் செம்மொழி நன்கு பேசக்கூடியவன் இவன் ஒருவனே” என்றார்.

பின்பு என்னை நோக்கி “இளையோனே, இவன் ஒரு மங்கலச் செய்தியுடன் வந்துள்ளான்” என்றார். நான் “நன்மங்கலம் என்றும் உள்ளதல்லவா?” என்றேன். “தேவகியின் மகள் சுபத்திரைக்கு மணம் நிகழ்த்த குடிகூடி முடிவு எடுத்துள்ளனர். நாள் முடிவுசெய்ததும் நீ சென்று அச்செய்தியை அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் முறைப்படி அறிவிக்க வேண்டும்” என்றார். நான் தலைவணங்கி “ஆணை” என்றேன். ஆனால் என் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அவர்களே அந்த மணவினைச் செய்தியின் விரிவை சொல்லக்கூடும் என்று நான் எண்ணினேன்.

“ஷத்ரிய அரசமுறைப்படி மணத்தன்னேற்பை நிகழ்த்த வேண்டும் என பலராமன் எண்ணுகிறான். ஆனால் அதில் அஸ்தினபுரியின் அரசனும், இவனது முதல் மாணவனுமாகிய துரியோதனன் வெல்ல வேண்டும் என்றும் விழைகிறான். எனவே கதைப் போரையே தேர்வு முறை செய்யலாம் என்று கருதுகிறான்” என்றார் சூரசேனர். நான் திகைத்துப்போனேன்.

“ஏன்?” என்றான் அர்ஜுனன். “கதைகளை கேட்டிருந்தால் நீர் அறிந்திருப்பீர். மழைக்கால அருகம்புல் என பெருகிக் கொண்டிருக்கிறது யாதவர் குலம். செல்வமும் புகழும் வெற்றிகளும் சேர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இன்று எங்கள் குலத்தின் மையங்களென சூரசேனரும் வசுதேவரும் ஆகியுள்ளனர். சூரசேனரின் பத்து மைந்தர்களில் மூத்த ஒன்பதுபேரும் யாதவக்குடிகளிலேயே மணம் புரிந்து எண்பத்தேழு இளவரசர்களை பெற்றுள்ளனர். அவர்களெல்லாம் இன்று தோள் பெருத்த இளையோராகியிருக்கிறார்கள்” என்று கதன் சொன்னான்.

வசுதேவர் எங்கள் குலத்தில் உதித்த பெரும்சான்றோர்களில் ஒருவர். குலப்பாடகர்கள் அவரை முதற் பிரஜாபதியாகிய கசியபரின் மானுட வடிவம் என்கிறார்கள். கசியபரின் துணைவியாகிய அதிதியும் சுரசையும்தான் இப்புவியில் ரோகிணியும் தேவகியுமாக பிறந்து அவருக்கு துணைவியரானார்கள் என்பது எங்கள் குலப்பாடகர்களின் சொல். வசுதேவரின் முதல் துணைவியாகிய ரோகிணி எங்கள் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர். பௌரவ குடியில் பிறந்தவர். சுஷமம் என்னும் யாதவர்பாடியை ஆளும் உத்தவரின் மகள்.

பௌரவியாகிய அவருக்கு சாரணர், துர்த்தனர், தாமர், பிண்டாரகர், மஹாஹனு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுக்குப் பின் பிறந்தவர் பெரும் தோள் கொண்டவரான பலராமர். முதல் அறுவரும் பௌரவ குடிக்கு உரியவர்கள் என்பதால் அவர்கள் ரோகிணியின் தந்தை உத்தவரின் பொறுப்பில் சுஷமத்திலேயே வளர்க்கப்பட்டார்கள். அவர்கள் உத்தவருக்கு நீர்க்கடன் செலுத்தும் முறைகொண்டவர்கள் என்பதனால் அவர்களுக்குப்பின் பிறந்த பலராமரே வைதிகமுறைப்படி வசுதேவரின் முதல் மைந்தர். உத்தவரின் வைதிக மைந்தர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பசுக்களுக்கு உரிமையானவர்களாக காடுகளில் நிறைவுற்றிருக்கிறார்கள்.

ஏழாவது மைந்தர் பலராமர் இளைய யாதவரின் தோழராகவும் காவலராகவும் கோகுலத்தில் வளரவேண்டும் என்பது கம்சரின் சிறையில் இருந்த வசுதேவரின் ஆணை. அவ்வண்ணமே ரோகிணி மதுவனத்தில் இருந்து கிளம்பி கோகுலத்திற்குச் சென்று வாழ்ந்தார். இளையோர் இருவரும் சென்று கம்சரைக் கொன்று மதுராவை வென்றபோதுதான் அவர் தன் துணைவருடன் மீண்டும் இணைந்தார்.

வசுதேவர் உக்ரசேனரின் இளையவர் தேவகரின் மகளும் கம்சரின் தங்கையுமான தேவகியை மணந்ததை அறிந்திருப்பீர். அவரது வயிற்றில் பிறந்த எட்டு குழந்தைகளில் இறுதியானவர் இளைய யாதவர். மதுராவை மீட்டு வசுதேவர் அரசராக ஆனபோது பட்டத்தரசியாக ரோகிணியும் இளைய அரசியாக தேவகியும் அமர்ந்தனர். முடிசூடியமர்ந்தபின் ரோகிணிக்குப் பிறந்தவர் சுபத்திரை. தேவகிக்கு விஜயர், ரோஜமானர், வர்த்தமானர், தேவலர் என்னும் மைந்தர்கள் பிறந்தனர்.

வசுதேவர் அதன் பிறகு மேலையாதவ குடியான ஸீதர்களின் இளவரசி விருகாதேவியை மணந்து அகாவாதர், மந்தகர் என்னும் இரு மைந்தரை பெற்றார். கீழ்யாதவ குடியான சப்தமர்களை வென்றபோது அவர்களின் இளவரசியாகிய சப்தமி தேவியை மணந்தார். அவளுக்குப் பிறந்தவர் ரேவதர். பின்னர் வனவணிகர் குலத்து உதித்த செராத்தாதேவி என்னும் பெண்ணை மணந்து கௌசிகன் என்னும் இளவரசனை பெற்றார்.

“இறுதியாக அங்க நாட்டு இளவரசி சுதந்தரையை மணந்து கபிலரையும் வேசர நாட்டு இளவரசி ஜனாவை மணந்து சௌபத்ரர், அஃபவர் என்னும் இரு மைந்தரையும் வசுதேவர் பெற்றார். வீரரே, இன்று நிகரற்ற வீரர்களால் நிறைந்துள்ளது மதுராபுரி” என்றான் கதன். “இத்தனை மைந்தர் யாதவர்களில் இதுவரை பெருகியதில்லை. இவர்கள் அனைவருமே போர்க்கலை பயின்றவர்கள். நாடாளும் விருப்புள்ளவர்கள்.”

“இளவரசர் பெருகுவது காட்டில் புலிபெருகுவதுபோல” என்று கதன் தொடர்ந்தான். “அவை ஒன்றை ஒன்று எதிரி என கொள்ளும். மதுராவிலும் மதுவனத்திலும் வலுவான உளப்பூசல் என்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. வசுதேவரின் மைந்தர்கள் இளைய யாதவரை தங்கள் உடன்பிறந்தோர் என்று மட்டும் எண்ணவில்லை, தங்களுக்குரிய புகழையும் தான் சூடிக்கொள்பவர் என்றும் எண்ணுகின்றனர். மதுவனத்தின் இளவரசர்களும் மைந்தர்களும் இளைய யாதவருடன் உளப்பிரிவு கொண்டிருக்கிறார்கள். எங்கும் இது வெளித்தெரிவதில்லை. யாதவராகிய நாங்கள் அறிவோம்” என்றான் கதன்.

பிறருக்கு பூசல் ஏதும் தெரியாது. ஒரு குடியவையில் மிகச்சிறிய செவிச்செய்தியாக அது வெளிப்படும். அது மிகச் சிறிய செய்தி என்பதாலேயே அனைவராலும் கூர்ந்து நோக்கப்படும். கூர்ந்து நோக்கப்படும் என்பதாலேயே உள்ளங்களில் பெருகி என்றும் நினைவில் வாழும். ஒன்று பிறிதொன்றை வளர்க்கும். பகைமைக்கு மட்டும் ஒரு பண்புள்ளது. அது தனக்குத்துணையாக பிறிதொன்றை கண்டுகொள்ளும். தன்னைத்தானே மாலையென தொகுத்து இறுகி கோட்டையென வளர்ந்து சூழும்.

சென்ற முறை யமுனை நதிக்கரையின் பெருவிருந்தின்போது சூரசேனர் மந்தர மலைக்கு படைத்த பலியுணவை தன் மைந்தர்களுக்கு பகிர்ந்தளித்தபோது ஏழில் ஒரு பங்கை வசுதேவர் பெற்றார். அதில் பதினெட்டில் ஒன்றை ஒவ்வொரு இளவரசரும் பெற்றனர். இளைய யாதவருக்கு பதினாறாவதாக அது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைவரும் அவ்வுணவைப் பெற்ற பின்னர்தான் இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டது.

புன்னகையுடன் அதை வாங்கி மும்முறை சென்னி சூடியபின் அவர் உண்டார். அங்கே சூழ்ந்த அமைதியில் அவர் உண்ணும் ஒலியை கேட்டபடி யாதவர்கள் அனைவரும் வேறெங்கோ விழி திருப்பி அமர்ந்திருந்தனர். இளவரசர் சிலர் ஒருவரை ஒருவர் விழிநோக்கி புன்னகைத்தனர். அதைக்கண்டு என் நெஞ்சு நடுங்கியது. “என்ன நிகழ்கிறது இங்கு?” என்று அருகே நின்ற ஆனகரிடம் கேட்டேன். “யாதவர்களை பிறர் வெல்ல முடியாது. அவர்களே தங்களை தோற்கடித்துக் கொள்வார்கள்” என்றார். “ஒவ்வொருவரும் இன்று இளையவருடன் உள்ளூர போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”

“ஏன்? இங்குள்ள ஒவ்வொருவரும் அறிவோம், நம் குலத்து உதித்த நிகரற்ற மாவீரர்களில் ஒருவர் இளைய யாதவர் என்று” என்றேன். “ஆம். அவரை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறோம். அதுவே இவ்வுணர்வுகளை எழுப்புகிறது” என்றார். “எனக்கு விளங்கவில்லை இளவரசே” என்றேன். “என் இனிய கதா, அன்புக்கும் சினத்துக்கும் இணையாக மானுடனை என்றும் ஆட்டிவைப்பது பொறாமை” என்றபின் ஆனகர் அகன்றார்.

“அன்றே என் உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது, ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று. சுபத்திரையை அஸ்தினபுரி அரசருக்கு கொடுக்கப் போவது என்பது யாதவ குடிகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிறுமையின் வஞ்சத்தின் அறிகுறியே என்று உணர்ந்தேன்” என்றான் கதன்.

அர்ஜுனன் “அதை ஏன் பலராமர் செய்கிறார்?” என்றான். “வீரரே, அவர் உடலைப்போல் உள்ளமும் வெண்மையானது. அவருக்கு துரியோதனன் மேல் பற்று மிகுதி. அப்பெரும்பற்றால் அவர் துரியோதனனின் நற்பண்புகளை மட்டுமே அறிந்திருக்கிறார். துரியோதனன் என்றும் பாண்டவருக்கு பகைவர் என்பதை, அப்பகை தெய்வங்களின் ஆடல் என்பதை அனைவரும் அறிவர். தெரிந்தேதான் சூரசேனரும் இளவரசர்களும் வசுதேவரின் மைந்தர்களும் கூடி பலராமரை அத்திசை நோக்கி கொண்டு செல்கிறார்கள்” என்றான் கதன்.

“இளைய யாதவரின் விருப்பத்திற்குரிய இளையவளை துரியோதனர் மணப்பதென்பது அவருக்கு பெரும் தோல்வி என்பதை அவர்கள் அறிவார்கள். தன் உயிர்த் தோழர் அர்ஜுனனை முழுமையாக ஆதரிக்க முடியாத இக்கட்டில் அவர் சிக்கிக்கொள்வார் என திட்டமிடுகிறார்கள்” கதன் சொன்னான். “இச்சிறிய வெற்றி அவர்களுக்கு எளிய ஆணவநிறைவை மட்டுமே அளிக்கப்போகிறது. ஆனாலும் அவர்கள் அதில் மகிழ்ந்து திளைக்கிறார்கள்.”

“வீரரே, என்றேனும் கௌரவர்களும் பாண்டவர்களும் போர்முனையில் எதிரெதிர் நிற்பது உறுதி. பாரதவர்ஷமெங்கும் நிமித்திகரும் பூசகர்களில் எழும் தெய்வங்களும் அதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அப்போரில் பாண்டவர்களுக்கு எதிராக இளைய யாதவர் நிற்கவேண்டியிருக்கும். தன் அன்புக்குரிய பார்த்தனையே அவர் களத்தில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்களின் திட்டம் அதற்காகவே” என்று கதன் சொன்னான்.

அர்ஜுனன் நீண்டநேரம் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். ஓர் எண்ணம் அவனில் எழுந்தபோது உடல் அறியாமல் அசைந்து அவன் அமர்ந்திருந்த மஞ்சம் அதை சொல்லென ஒலித்தது. “எப்போது மணநாள்?” என்றான். “வரும் நிறைநிலவு நாள்” என்றான் கதன். அர்ஜுனன் “நெடுநாட்களில்லை” என்றான். “ஆம், இன்னும் இருபதுநாட்கள்” என்றான் கதன். அர்ஜுனன் “கதரே, நான் யார் என்று அறிவீரா?” என்றான். “உங்கள் குரல் கேட்டபோதே அறிந்தேன்” என்றான் கதன்.

வெளியே பெருங்களிறு ஆழ்ந்த குரலில் பிளிறியது. அதன் மந்தை தொடர்ந்து சென்று மறையும் ஒலிகள் கேட்டன. காட்டுமரக்கிளைகள் மெல்ல ஒடியும் ஒலி. பறவைகள் எழுந்து கலைந்து கூவியமரும் ஒலி. பின் காடு அமைதியடைந்தது. மீன்கள் ஆழ்ந்திறங்கி மறைந்த சுனை என. ஆழத்தில் மீன்கள் நீராக மாறிவிடுகின்றன என்று இளவயதில் கதைகளில் அவன் கேட்டிருந்தான். ஆழம் அலைவடிவுகொண்டு விழிபூண்டு எழுந்து மீனாகி வந்து வானையும் உலகையும் நோக்கி மீள்கிறது.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

ரப்பர் எனும் வாழ்க்கை

$
0
0

1

ஆரோக்கிய நிகேதனம் வாசித்து முடித்த அன்று உட்லேண்ஸ் வட்டார நூலகத்தில் உலவிக்கொண்டிருந்த பொழுது ரப்பர் நாவலை எடுத்து வந்தேன். பலபேர் வாசித்துள்ளதை நூலின் அட்டைப் படம் காட்டியது. ஆனால் இந்த 170 பக்கத்தைக் கடக்க வாசகன் எவ்வளவு பாடுபடவேண்டி உள்ளது!

இப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை – என்று சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பார். ஆம். பெருவட்டர், கண்டன் காணி, தங்கம், சிறிய பெருவட்டத்தி, பிரான்ஸிஸ். குஞ்சி, ஏபி என்று பலதரப்பட்ட மனிதர்களை இதில் பார்க்கும்போது மேற்கண்ட குறிப்புதான் நினைவிற்கு வந்தது.

ரப்பர் நாவல் பற்றி பாண்டியன் ராமையாவின் வாசகப்பதிவு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16748 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>