Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16742 articles
Browse latest View live

அறம் –மனிதரும் எதிரீடும்

$
0
0

Aram-Jeyamohan-1024x499

அன்புள்ள ஜெ

 

வணக்கம்.

 

அறம் சிறுகதைகள் மீண்டும் மீண்டும் வாசிப்பில் என்னுடன் தொடர்ந்து வரும் நேசிப்பிற்கு உரிய தொகுப்பாகும். ஒவ்வொருமுறையும் ஒரு நெகிழ்வை பரவச உணர்வை புதிய வழித்தடங்களை அது காட்சிப்படுத்துகிறது   இக்கடிதம் எழுதிய காரணம் அறம் தொகுப்பை சிறுகதைகளாக வாசிக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் பின்பு அதன் கதைமாந்தர்களின் நிஜபின்புலத்தை உணர்ந்து மீள்வாசிப்பு செய்யும் போதுஏற்படும்கிளர்ச்சி வேறுவகையான உணர்வை தரக்கூடியது. உங்கள் தளத்தை தொடந்து வாசிப்பவர்கள் அக் கதைமாந்தர்களை கண்டடைவர் அறம், யானை டாக்டர், நூறு நாற்காலிகள்,மெல்லியநூல்,போன்று சில கதைகளின் கதாபாத்திரங்களின் நிஜங்களை நான் கண்டுகொண்டேன்.
23-10-2016 தமிழ் இந்து நாளிதழ் இலக்கியம் பகுதியில் தி.ஜா அவர்களை பற்றி சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் மயில் கழுத்து சிறுகதை சுரா அவர்களையும் தி.ஜா அவர்களையும் கதாபாத்திரமாக்கியதைகண்டு கொண்டேன் மீண்டும் மயில் கழுத்தை வாசிக்கும் போது அது மிக நெருக்கமான உணர்வைதருகிறது.என் ஆவல் நீங்கள் அறம் தொகுப்பின் ஒவ்வொரு சிறுகதையின் நிஜ நாயகர்களை பற்றி விரிவாக. ஒரே பத்தியில்  எழுத வேண்டும் என்பது என் ஆவல்.அது புதிதாக அறத்தை வேறொரு  பரிணாமத்துக்கு என்னை போன்றவர்களை அழைத்துச்செல்லும்.
நன்றியுடன்

சக்தி.
குவைத்.

 

அன்புள்ள சக்தி

 

அறம் கதைகளின் நாயகர்களை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய வாய்ப்பிருந்தால் கதைக்குள்ளேயே சொல்லியிருப்பேன், பெருவலி போல

 

மற்றகதைகளில் அது வாசக ஊகமாகவே இருப்பதுதான் நல்லது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

அறம் சிறுகதைகளை இப்போதுதான் மீண்டும் வாசித்தேன். பலகதைகள் முதல் வாசிப்பில் ஒரு வகையில் கவந்தன. அவற்றிலிருக்கும் கதை உச்சமே அப்போது கவர்ந்தது. இப்போது அந்தக்கதைகளின் அமைப்புக்குள் உள்ள டெக்ஸ்ச்சர் மிகவும் கவர்கிறது. பொதுவான வாச்கர்கள் எளிதில் சென்றடைய முடியாத அந்த ஊடுபாவுகளை இலக்கியவிமர்சகர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் நம்மூரில் அப்படி ஏதேனும் ஒரு நல்ல படைப்பின் உள்ளோட்டங்களை கண்டு சொன்ன ஒரு புதியவிமர்சகனை நான் கண்டதே இல்லை. நமக்குக் கிடைப்பதுகூட அவ்ர்களுக்குக்கிடைப்பதில்லை. ஒன்றும் புரியாமல் கோட்பாடு கொள்கை என்று பேசிக்கொண்டிருப்பார்கள்

 

உதாரணமாக, இருப்பதிலேயே எளிமையான கதையாகிய யானை டாக்டர். அந்தக்கதையில் உள்ள யானை x  புழு என்னும் பைனரியை எவராவது சொல்லியிருக்கிறார்களா என்று நானும் தேடித்தேடிப்பார்த்தேன். யானைடாக்டருக்குப் புழுமேல் உள்ள ஈடுபாடு. யானை அவ்வளவு பெரியது. புழு அவ்வளவு சிறியது. ஆனால் புழு யானையை உண்கிறது கடைசியில். புழுவை அவர் காட்டின் குழந்தை என்று சொல்கிறார். யானைக்கும் புழுவுக்குமான அந்த பைனரி மிகமுக்கியமாக அக்கதையை அடுத்த இடத்துக்குக் கொண்டுபோகிறது. அதுநம்மவருக்குத்தெரியவில்லை

 

ஆனால் அது அந்தக்கதையில் அபடி தெளிவாகவே இருக்கிறது. யானைபற்றிய கதையில் ஒன்றரைப்பக்கம் எதற்கு புழுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று யோசித்தாலே தெரிந்துவிடும். அத்தனை கதைகளையும் மீண்டும் இந்தக்கோணத்திலே வாசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்

 

மனோகர்

 

 

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட, இறைவணக்கமே கொள்ளாத அவன் இமயமலையேறி கைலாயம் காண ஆசை கொள்கிறான்.

 

உடம்பு தாங்காது, உயரம் ஏற முடியாது என்று பதறும் உற்றார், உறவினர், நண்பர் சொல் உதிர்த்து புறப்பட்டுப் போகிறான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கடப்பாறை இடியாய் முதுகெலும்பில் இறங்குகிறது வலி. வலியோடு பல லட்சம் அடிகள் எடுத்து மலையேறி,
கயிலாயத்தை நெருங்கும் போது அவனுக்கு ஏற்படும் அனுபவம்,  கங்கை வார் சடை மலையை கண்டதும்  காணாமல் மறைந்த வலி, அங்கே நடந்த அனுபவம்… என மரணப் படுக்கையிலிருந்தவனின் (எழுத்தாளர் கோமல்) ஒரு உண்மை அனுபவத்தை கேட்டு உள்வாங்கி அற்புதமாய் தந்துவிட்டார் ஜெயமோகன்.
‘பெருவலி’ அற்புதமான உண்மைப் படைப்பு.
‘அறம்’ மிக அருமையான நூல். நூலை அனுப்பி வைத்த மலர்ச்சி மாணவர் கோவை பணப்பட்டி பொன்னுஸ்வாமிக்கு நன்றி!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து

http://www.paramanin.com/?p=701

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தொழிற்சங்கம் தேவையில்லையா?

$
0
0

திரு வி க

 

 

அன்புள்ள ஜெ,

 

நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஓராண்டுக்கும் மேலாக பணிசெய்து வந்தேன். அங்கே தொழிற்சங்கங்கள் என்று ஒன்றும் கிடையாது. பெருமுதலாளிகளின்கீழ் வேலைசெய்யும் HR, Manager போன்ற சிறு முதலாளிகள் வைத்ததுதான் அங்கு சட்டம். என் நண்பர்கள் அங்கு ஒருநாளைக்கு பதினான்கு மணி நேரம் உழைக்கிறார்கள். விடுமுறைதினங்களில்கூட உழைக்கிறார்கள். ஊதியம் என்பதும் ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாயை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது குறைவுதான். அவனுக்கு நேரமிருப்பதே உழைக்கவும், தூங்கவும்,சாப்பிடவும் மட்டும்தான். ஆண்-பெண் உறவுநிலை மேம்பாடு, சமகால அரசியல் எதுவும் அவனுக்குத் தெரியாது.

 

இதையேதான் தொழிற்சங்க ஆதரவுள்ள பொதுத்துறை நிறுவனங்களும் கடைபிடிக்கவேண்டுமென நினைக்கிறீர்களா? தொழிற்சங்கங்களை எல்லாம் நீக்கிவிட்டு அடிமைப்பணி செய்தல்தான் இதற்குத் தீர்வா? வங்கிகளில் உள்ள பிரச்சனைகள் அனைவரும் எதிர்கொள்வதே. அவர்களின் பணித்திறன் மேம்பாட்டிற்கு என்ன செய்யவேண்டுமென்பதை சிந்தித்தலுக்கு மாற்றாக தொழிற்சங்கங்களை குற்றம் சாட்டுவது சரியாகுமா? இந்தியாவை, முதலாளிகளின் அடிமைகளாய் வாழும் ஜனத்திரளாக மாற்றுவதுதான் இதற்கு ஒரே வழியா? உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கிற  இளைஞனான எனக்கு, தொழிற்சங்கம் குறித்த உங்கள் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. நான் தொழிற்சங்கமற்ற சூழலினால், மென்பொருள் துறை என்மேல் செலுத்திய அதிகாரத்தை அறிந்தவன். தனிமனித உணர்வுகளை குறைந்தபட்ச அளவிற்குக்கூட மதிக்காத சுயநலவாதிகள் அவர்கள். என் நண்பர்கள் அதிலிருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்கள். ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்திற்கும் எளிதில் மாறமுடியாது. அதற்கான திறன்களை நம் கல்விமுறை அளிப்பதில்லை. ஏதாவது ஒருவேலை கிடைத்தாலே போதும், எவ்வளவு உளவியல் பிரச்சனைகள் வந்தாலும் பரவாயில்லை என வாழ்கிறவர்கள் அவர்கள். அவர்களுக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லையா? முதலாளிகளைத் தவிர வேறெவரும் இங்கே வாழவேகூடாதா ஜெ?

அன்புடன்,
அகில் குமார்.

 

பி பி வாடியா

 

அன்புள்ள அகில்குமார்

 

ஏற்கனவே நீங்கள் பேசிய இந்த விஷயத்தைப்பற்றி இந்தத் தளத்தில் மிக விரிவான விவாதங்கள் நடந்துள்ளன. சுட்டிகளை கீழே கொடுத்துள்ளேன்

 

நான் தொழிற்சங்கத்தைப்பற்றி எந்நிலையிலும் எதிர்மறையாக ஏதும் சொன்னதில்லை. நான் அதில் இருபதாண்டுக்காலம் ஈடுபட்டிருந்தவன். இந்த தளத்திலேயே தொழிற்சங்கத்தின் அவசியம் குறித்து பத்துக்கும் மேற்பட்டமுறை எழுதியிருப்பேன். அனைத்து தொழில்துறைகளிலும் தொழிற்சங்கம் இன்றியமையாத தேவை என்றே நினைக்கிறேன்.

 

இந்தியா இன்னமும் நவீன முதலாளித்துவ மனநிலைக்குப் பழகாத தேசம். இங்கே நிலப்பிரபுத்துவ மனநிலைகளே தொழில்துறையை ஆள்கின்றன. முதலாளிகளும், நிர்வாகிகளும் ஊழியர்களை தங்கள் அடிமைகள் என நினைக்கிறார்கள். ஊழியர்களை தங்கள் வீட்டு வேலைக்கு அழைத்துச்செல்பவர்கள், தங்கள் மனைவிமக்களுக்கும் வேலைக்காரர்களாக ஆக்குபவர்கள் இங்கு பலர்.

 

இந்நிலையில் ஊழியரின் சுயமரியாதையைப் பாதுகாக்கவே வலுவான அமைப்பு தேவை. இன்றும்கூட வலுவான தொழிற்சங்க அமைப்பு உள்ள தொலைதொடர்புத்துறை ரயில்வே போன்ற துறைகளில் இருக்கும் மரியாதையை ஊழியர் தமிழக அரசு நிறுவனங்கள் பலவற்றில் பெற முடியாது. ஊழியர்களை தன் முன் அமரச்செய்யவே தயங்கும் அதிகாரிகள்தான் இங்கு அதிகம். பெண்கள் தன்மதிப்புடன் பணியாற்றும் சூழலை இங்கே கொண்டுவந்ததே தொழிற்சங்க இயக்கம்தான்.

 

தொழிற்சங்கமுன்னோடிகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். பி.பி.வாடியா, திருவிக, சிங்காரவேலர், வி.பி.சிந்தன்,கெ.டி.கெ.தங்கமணி, பார்வதி கிருஷ்ணன் போன்ற தமிழகத் தொழிற்சங்க முன்னோடிகளை நினைவுகூரும் கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன்

 

இதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. தொழிற்சங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குள், அந்த தொழிலுக்குரிய தனித்தன்மைகளைக் கருத்தில்கொண்டு அமையவேண்டியது. நிர்வாகத்துடன் முரண்பட்டு தொழிலாளரின் நலன்களைப் பேணவேண்டிய பொறுப்பு அதற்குண்டு. கூடவே அந்தத் தொழில் வெற்றிகரமாக நிகழும்பொருட்டு நிர்வாகத்துடன் ஒத்துழைக்கவேண்டியதும் அதன் கடமை

 

பலதொழில்துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக ஒற்றை அமைப்பாக இணையலாம். சேர்ந்து முடிவுகள் எடுக்கலாம். போராட்டங்களில் ஒத்துழைக்கலாம். ஆனால் அனைத்துத் தொழில்துறைகளையும் கட்டுப்படுத்தும் ஒற்றை அமைப்பு என்பது மிகமிக ஆபத்தான அதிகாரக்குவிப்பு

 

அந்த அமைப்பை அரசியல்கட்சி சார்ந்து உருவாக்கிக்கொள்வதென்பது மேலும் அபாயகரமானது. அந்த அரசியல்கட்சிக்கு தொழில்துறை முழுக்க ஒரு வகை எதிர்மறை ஆதிக்கத்தை அது உருவாக்கி அளிக்கிறது. நான் இடதுசாரிகள் தொழிற்சங்கத்துறையில் அளித்த பெரும்பங்களிப்பை வணங்குபவன். இன்றும் அவர்கள் இல்லையேல் தொழிற்சங்க இயக்கம் இல்லை என்பது உண்மை. ஆனால் தொழிற்சங்கங்களை கட்சியரசியலின் பகுதியாக ஆக்கியதன் மூலம் நீண்டகால அடிப்படையில் அவர்கள் தொழிற்சங்க இயக்கத்துக்கே தீங்கிழைத்தார்கள் என்பதே வரலாற்று உண்மை

 

தொடர்ந்து அத்தனை அரசியல்கட்சிகளும் தொழிற்சங்கங்கள் அமைத்து அவற்றை தொழில்துறைகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைத்து அதிகார அமைப்புகளாக ஆக்கிக்கொண்டன. இன்று தொழிற்சங்கம் மீது தொழிலாளர்களுக்குக்கூட எந்த கட்டுப்பாடும் இல்லை. அவை பல்வேறு அரசியல்கட்சிகளின் துணையமைப்புக்கள். அந்த அரசியல்கட்சியின் அரசியல்செயல்திட்டங்களையே அவை அமல்படுத்துகின்றன.

vpc

வி பி சிந்தன்

 

இன்று  தொழிற்சங்கம் என்பது அரசியல்கட்சிகள் தொழில்துறையை மிரட்டிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் பயன்படுத்தும் கருவி . தொழிலாளர் அந்தக் கருவியின் ஓர் உறுப்பு. எந்த நோக்கத்திற்காக தொழிற்சங்க அமைப்பு உருவானதோ அது பெரும்பாலும் இன்று  நடைமுறையில் இல்லை.

 

இன்று அரசியல்கட்சிகளுக்கும் தொழில்துறைக்குமான போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஆயுதமாகப் பயன்படுகின்றன, அந்த தொழிலே முழுமையாக அழிக்கப்பட்டாலும் தொழிற்சங்கங்களும்  அவற்றை கையாளும் அரசியல் கட்சிகளும் சற்றும் கவலைப்படுவதில்லை. கேரளத்தின் மிகப்பெரும்பாலான தொழில்கள் தொழிற்சங்கத்தின் அரசியலாடல்களால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லமுடியும்

 

அரசுத்துறைகளைப்பொறுத்தவரை இது இன்னமும் மோசமான சூழல். அரசுத்துறைகளின் ஊழியர்பிரச்சினைகள் பல. ஊழல் முதன்மையானது. மக்களை வெறும் சோற்றுப்பட்டாளமாக  நடத்தும் மேட்டிமை நோக்கு இன்னொன்று. எவ்வகையிலும் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் தேங்கியிருப்பது மூன்றாவதாக.

 

இக்காரணங்களால் அரசூழியர்கள் இன்று வரிகொடுக்கும் மக்களுக்கு மிகப்பெரிய சுமை. ஆனால் எந்த நிர்வாகியும் அரசூழியர்கள் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கமுடியாது. அவர்களுக்குத் தொழிற்சங்கப்பாதுகாப்பு உண்டு. ஆகவே நடைமுறையில் அயோக்கியத்தனத்தை, திமிரை, சோம்பலை தொழிற்சங்கம் பாதுகாக்கிறது. தொழிற்சங்கம் இல்லையேல் இந்த அளவுக்கு அரசுத்துறைகள் சீரழிந்திருக்காது என்பதே இன்றைய நிலைமை

 

என் அனுபவத்தில் ,பாரம்பரியமான இடதுசாரித் தொழிற்சங்கங்கள் எண்பதுகள் வரைக்கும்கூட தங்கள் ஊழியர்களை நிர்வாகத்தில் இருந்து பாதுகாக்கும்போதே அவர்களை ஓரளவு கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் முயன்றன. அன்று நேர்மையும் ,உண்மையான இலட்சியவாத நோக்கும் கொண்டவர்களே இடதுசாரித் தொழிற்சங்கங்களில் தலைவர்களாகவும் களப்பணியாளர்களாகவும் இருந்தனர்.

 

எண்பதுகளில்   நிலைமை மாறலாயிற்று.அனைத்துத் துறைகளிலும் இன்று அத்தனை கட்சிகளும் சங்கம் வைத்துள்ளன.சாதிசார்ந்த தொழிற்சங்கங்களும் ஏராளமாக உள்ளன. எனவே தொழிலாளரை ‘பிடித்துப்போட’ அத்தனை சங்கங்களும் முண்டியடிக்கின்றன.தொழிலாளர் என்ன செய்தாலும் சரிதான் தொழிற்சங்கம் அதை ஆதரிக்கும். நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது.

 

தொழிற்சங்கம் எந்த தவறையும் கண்டிக்காது.கண்டித்தால் தொழிலாளர் இன்னொரு சங்கத்துக்குச் சென்றுவிடுவார். சங்கத்திற்கு ஓர் ஊழியர் இழப்பு. பலசமயம் ஓரிரு ஊழியரின் ஓட்டு வேறுபாட்டால் அங்கீகாரத்தையே சங்கம் இழக்கவேண்டியிருக்கும்.

 

இந்நிலை உருவானதும் இதற்கேற்ற தொழிற்சங்கத்தலைமை உருவாகி வந்தது. தொழிலாளர்களை இலட்சியவாத நோக்குடன் அணுகிய, அவர்களை வழிநடத்திய தலைவர்கள் காலாவதியானார்கள். அவர்களுக்கு ‘வேண்டியதை’ செய்து அவர்களைத் திரட்டி அதிகாரத்தை உருவாக்கும் தலைவர்கள் வந்தனர். இன்றைய இடதுசாரிச் சங்கங்களின் நிலை இது. அவர்களை விட மோசம் மற்ற தொழிற்சங்கங்கள்.

 

இன்று நிகழ்வது நுணுக்கமான ஒரு பேரம். தொழிலாளரின் பொறுப்பின்மையையும் ஊழலையும் சங்கம் ஆதரிக்கும். பதிலுக்கு சங்கத்தின் அரசியல் விளையாட்டையும் உச்சநிலையில் நிகழும் பேரங்களையும் தொழிலாளர் அங்கீகரிப்பார்.

 

இச்சூழலில் மேலும் சிக்கலைச் சந்திப்பவை வங்கிகள் போல தனியார்த்துறையின் அறைகூவலைச் சமாளித்து வணிகரீதியாக வென்றாகவேண்டிய நிலையில் உள்ள நிறுவனங்கள். ஊழியர்களை எவ்வகையிலும் மாற்றியமைக்க முடியாது , திறன் மேம்படுத்த முடியாது. மூர்க்கமான ஒர் எதிர்ப்புதான் அவர்களிடமிருந்து எழும். வேலையைவிட்டு தூக்குவதை விடுங்கள், நடவடிக்கைகள்கூட எடுக்கமுடியாது

 

பல நிறுவனங்களில் மூத்துப்பழுத்த குடிகாரர்கள் வெளியே அதேவேலை செய்யும் ஒருவர் வாங்குவதைவிட மூன்றுமடங்கு சம்பளம் பெற்றபின் வேலை என்றே ஏதும் செய்யாமல் பல ஆண்டுகளாக இருந்துவருகிறார்கள். எப்போது வேலைக்கு நுழைந்தார்களோ அன்றே கற்றுக்கொள்வதை, ஏன் மூளைசார்ந்த அனைத்துச்செயல்பாடுகளையும் , முழுக்க நிறுத்திக்கொண்ட நடுவயதான பெண்கள் எந்த அக்கறையுமே இல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.

 

வணிகக்கட்டாயத்தால் இந்தக் கரும்பாறையில் மண்டையை முட்டிக்கொண்டிருக்கின்றது நிர்வாகம் . பயிற்சிமேல் பயிற்சி அளிக்கிறது. சலுகை ஊதியம் அளிக்கிறது. ஒன்றுமே நிகழ்வதில்லை. இதைக்குறிப்பிட்டு ஏதேனும் சொன்னால் உடனே ஜனநாயகம், சோஷலிசம், உழைப்பவர் உரிமை என்னும் கூச்சல்கள் எழுகின்றன

parvathi_1764449h

பார்வதி கிருஷ்ணன்

 

தன் தொழில்துறைமேல் அக்கறையும், இலட்சியவாத நோக்கும் இல்லாத  இன்றையதொழிற்சங்கங்களை அப்படிச் சொல்வதே சங்கடமானது. அவற்றை மிரட்டல்குழுக்கள் என்றே சொல்லவேண்டும். ஒருவகையான சிண்டிக்கேட்டுகள் அவை.

 

கணிப்பொறித்துறை போன்றவற்றில் சங்கம் தேவையா? கண்டிப்பாகத் தேவை என்பதே என் எண்ணம். அதைப்பற்றி நான் எழுதி பல எதிர்வினைகளுடன் நீண்ட விவாதம் இந்தத் தளத்தில் நடந்துள்ளது. தொழிற்சங்கம் இல்லாத சூழலில் பணிப்பாதுகாப்பு இல்லை. பணியறம் என்பது இன்னமும் வந்துசேராத நம் பழமைவாதச் சூழலில்  நிர்வாகிகளின் கருணைக்கு ஊழியர் விடப்பட்டால்  சுரண்டலும் அவமதிப்புமே எஞ்சும்.

 

இயல்பான நிலை என்பது திறமைக்கு மட்டுமே இடமிருக்கவேண்டும் என்பது. தேவையும் அளிப்பும் முரண்பட்டு உருவாகும் சமநிலை அனைத்தையும் தீர்மானிக்கவேண்டும் என்பது. அதுதான் சந்தையின் விதி. அதுதான் திறமை உடையவர்களுக்கு மேலும் வாய்ப்ப்பை அளிப்பதாகவும் பிறர் தங்களை திறமையானவர்களாக ஆக்கிக்கொள்ள கட்டாயப்படுத்துவதாகவும் இருக்கும்

 

ஆனால் இதெல்லாம் அசலான திறமைகொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்துபவை. பெரும்பாலான உழைப்புகள் அப்படி அல்ல. ஒருவருக்குப் பதிலாக அதே திறன் கொண்ட நூறுபேர் காத்திருக்கும் சூழல் இந்தியாவில் உள்ளது. அதைப் பயன்படுத்தி உழைப்புச்சுரண்டலும் உணர்வுரீதியான அவமதிப்புமே நிகழும். அங்குதான் தொழிற்சங்கம் தேவையாகிறது

 

ஆனால் அது இங்குள்ள பிறதுறைகளில் உள்ள தொழிற்சங்கம் போல ஆகுமென்றால் நாளடைவில்  கணிப்பொறித்துறையே அழியும். தொழிற்சங்கங்கள் வழியாக அரசியல்கட்சிகள் அத்தொழிலுக்குள் ஊடுருவி பிடுங்கித்தின்ன ஆரம்பிப்பார்கள். தங்கள் சுயநலத்திற்காக அத்துறைக்குள் ஊழலையும் திறமையின்மையையும் சாதியநோக்கையும் வளர்ப்பார்கள்.

 

திறமைக்குப்பதிலாக பணிக்காலம் மட்டும் அளவீடாகக் கொள்ளப்பட்டு பணியுயர்வு அளிக்கப்படும் சூழலை எண்ணிப்பாருங்கள். இன்னும் மோசமாக, திறமையற்றவர் அரசியல் அடாவடி வழியாக மெலே  செல்லக்கூடும் என்னும் நிலை என்றால் என்ன ஆகும்?

 

கணிப்பொறித்துறையிலும்  அரசுத்துறைகளைப்போல ஊழியர் வேலை செய்யாவிட்டாலும், வாடிக்கையாளரை வசைபாடினாலும், அலுவலக நிதியை கையாடல் செய்தாலும் எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலை வருமென்றால் என்ன ஆகும்?

 

ஆக, நான் தொழிற்சங்கம் தேவை என்கிறேன். தொழிற்சங்கம் என்னும்பேரால் இன்று நடக்கும் அரசியல் அடாவடியை எதிர்க்கிறேன். அது நம் அரசுத் துறைகளை, அரசுசார் தொழில்களை உள்ளிருந்து அழிக்கும் விதத்தைச் சுட்டிக்காட்டுகிறேன். அவ்வளவுதான்

 

ஜெ

 

உலகத்தொழிலாளர்களே

உயர்தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கம் தேவையா?

நவீன அடிமைமுறை

நவீன அடிமைமுறை கடிதம் 1

நவீன அடிமைமுறை கடிதம் 2

நவீன அடிமைமுறை கடிதம் 3

நவீன அடிமைமுறை கடிதம் 4

 

தொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16

$
0
0

[ 22 ]

மலைகளிலிருந்து இறங்கி சீர்நிலத்திற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் அவன் மேலே செல்லும்போது விட்டுச்சென்ற ஒவ்வொன்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான். அவன் கைவிட்டுச் சென்ற இடங்களிலேயே அவை அவனுக்காக கல்லென உறைந்து தவம் செய்தன. நெடுந்தொலைவிலேயே அவன் காலடி ஓசை கேட்டு விழியொளி கொண்டு உடலில் உவகை அசைவுகளுடன் எழுந்தன. அவனைக் கண்டதும் கைவிரித்தோடி வந்து பற்றிக் கொண்டன.

முதலில் வந்தவள் ஓநாயின் முகம் கொண்டவளாகிய ஜடரை. மெல்லிய முனகல் ஓசையுடன் எழுந்து காற்றென வந்து அவன் உடலைத் தழுவி அவனை முத்தமிடத்தொடங்கினாள். குளிர்ந்த மூக்கின் முத்தங்களால் அவன் உடல் சிலிர்த்துக் கூசியது. அவள் வாயிலிருந்து வெம்மைகலந்த மூச்சு ஊன் மணத்துடன் எழுந்தது. அனலென அவன் வாய்க்குள் புகுந்து வயிற்றில் குடிகொண்டாள். அவன் முன்னால் நடந்தபோது உடலெங்கும் அவள் எரிவதை உணர்ந்தான்.

மூவேளை பசியென  அவன் உடலில் அவள் எழுந்தாள். அவன்  வாழ்ந்தகாலத்தை மூன்றென பகுத்தாள். அவன் உடலை எரிவதும் அணைவதுமென இரு செயல் கொண்டதாக ஆக்கினாள்.  அவன் நோக்கிய அனைத்தையும் உண்ணத்தக்கதும் அல்லதுமாக பிரித்துக்காட்டினாள். அவன் கால்களில் ஆற்றலாகவும் கைகளில் விசையாகவும் எண்ணங்களில் ஒளியாகவும் ஆனாள்.

ஓநாயின் மங்கிய சிப்பிவிழிகள் கொண்டவள். இளநீல நீள்கூந்தல் பறக்கும் செந்நிற உடல்கொண்டவள். அவள் கொண்ட விழிகளை நோக்கி அவன் சொன்னான் “உன்னை விட்டுச்செல்லல் அரிது.” அவள் சிரித்து “ஆம், இளையோனே! நானே இங்குள பருப்பொருள் அனைத்திற்கும்  விழுப்பொருள் அளிக்கிறேன். பொருள் ஒவ்வொன்றும் சுவையென்றே முதன்முதலாக மனித நரம்புகளில் உணரப்படுகின்றன. அதன்படியே நன்று தீது அழகு அல்லது என ஆகின்றன. நானே முதலறிவை” என்றாள்.

“அன்னம் உடலென்றாகும்போது அதிலெழும் முதல் உணர்வு நானே. உடல் அன்னமென்றாகும்போது இறுதியாக மறைபவளும் நானே” என்றாள். “தேவி! நீ என்னுடன் இரு. இவ்வுலகனைத்தையும் சுவையென சமைத்து எனக்குப் பரிமாறு” என்றான் அர்ஜுனன். அவள் கனிந்த சிரிப்புடன் அவன் தலையை வருடி “நீ என்றும் எனக்கு இனிய மைந்தன்” என்றாள். “உன் நாவில் அஸ்தினபுரியின் மண்ணும் தேனும் கலந்த வடிவில் வந்து தொட்டு இனித்தபோதே நான் உணர்ந்தேன், உன்னை நான் கைவிடப்போவதில்லை என்று.”

பிறகு வந்தவள் காமினி. அன்று மாலையில் ஒரு மரத்தடியில் சருகு மெத்தையில்  அவன் துயின்று கொண்டிருந்தபோது  அவள் மெல்ல வந்து அவன் அருகே அமர்ந்தாள். உடலின் மெல்லிய வெம்மையையும் தோல்மணத்தையும் அவன் புலன்களுக்குள் வாழும் நுண்புலன் ஒன்று உணர்ந்தது. நன்கு உணர்ந்திருந்த அருகமைவு. ஆழ்குரலில் “நீயா?” என்று அவளிடம் கேட்டான். கையூன்றி அவள் அவன் மேல் மெல்ல குனிந்தாள். அவள் கருங்குழல்கற்றை அவன் முகத்தின்மீது சரிந்தது.  “நான் தளர்ந்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“உயிர்கொண்ட அனைத்திலும் எரிய என்னால் இயலும்” என்று அவள் சொன்னாள். அவளுடைய திரண்ட முலைக்குவைகள் அவன் முகத்தில் இரு வெம்மலர்மொட்டுகள் என அழுந்தின. குழந்தைவிரல்கள் போல முலைக்காம்புகள் அவன் இதழ்களை வருடின. காமம் கொண்ட உடலின் வெம்மணம். காமத்தில் உருகும் தசைகளின் ஊன் மணம். அவள் உடல்வளைவுகள் அவன் மேல் பதிந்து அவன் உடல் இறுக்கத்தை அடைந்து குழைவுகொண்டன. நெளிந்துபரவிய  கைகள் பதைப்புடனும் தவிப்புடனும் தேடித்தேடி அவனை வருடிச் சென்றன. பிறிதிலாதாகவேண்டுமென வெம்பல்கொண்ட கால்கள் அவன் கால்களை வளைத்துக் கொண்டன.

முதுமரம் முளைப்பசுமை சூடுவதுபோல தன் உடல் உயிர் கொள்வதை அவன் உணர்ந்தான்.  “நெடுநாளைக்குப் பின்…” என்று அவன் அவள் காதில் சொன்னான்.  “ஆம், நீண்ட நாளாகிறது. ஆனால் பெருமழை பெய்து குளிர்ந்து அணைந்த காட்டிலும் எங்கோ ஒரு மூங்கிலுக்குள் அனல் ஒளிந்திருக்கிறது” என அவள் அவன் செவிகடந்து நேராக சித்தத்துடன் உரையாடினாள். “ஆம்” என்று அவள் நெஞ்சிடம் முணுமுணுத்தான். அவள் முலைக்குவைக்குள் அழுந்திய உதடுகளின் அசைவு முத்தமென்றும் ஆகியது. முத்தத்தால் அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அவள் கைகள் அவன் உடலில் சீற்றம்கொண்ட இரு நாகங்கள் போல முத்தமிட்டுச் சென்றன. அவை தொட்ட இடத்தில் எல்லாம் அவன் உடல் தளிர்த்து அனலிதழ்கள் எழுந்தன. “உயிர்” என்றான். “என்ன?” என்றாள். “உயிரை இப்படி உணர்ந்ததே இல்லை.” அவள் சிரித்து “உடலை அது மீட்டெடுக்கிறது” என்றாள். “ஆம், அருவிபெய்வதுபோல வந்திறங்குகிறது…” என்றான். “வானிலிருந்து” என்றாள். அவன் “ஆம்” என முனகினான். முனை கொண்டது அவன் உடல். அங்கு சித்தம் சென்று குவிந்தது. பின் அவன் உடலே அம்முனையென ஆகியது. உள்ளம் ஒற்றைச் செயலென ஆயிற்று. அவளை உடலுடன் இறுக்கி, தான் என்றாக்கி அப்பெருக்கில் திளைக்கத் தொடங்கினான்.

அவளை உண்ண விழைபவன்போல இதழ்களை கன்னங்களை நீள்கழுத்தை தோள்களை முலைக்குவைகளை கவ்வினான். “நீ உண்ணத்தக்கவள் என்று என் உடல் ஏன் அறிகிறது?” என்றான்.  “நான் ஜடரையின் தங்கை” என்று அவள் சொன்னாள். வியப்புடன்  “நான் அறிந்ததில்லை” என்றான்.  “அவளை அறிந்த இதழ்கள் என்னையும் கண்டுகொள்கின்றன” என்று அவள் கூறினாள். மயங்கிச் சொல்லிழந்து சென்றுகொண்டே இருக்கும் அமிழ்வில் நெகிழ்ந்த குரலில் “இனியவளே, என்னுடன் இரு” என்று அர்ஜுனன் சொன்னான். “உடலணைவது வரை நரம்புகளில் வாழ்வேன். அங்கிருந்து மூலாதாரத்திற்குச் சென்று அனல்துளியென எஞ்சுவேன். தன்னுணர்வு இருக்கும் வரை  உன்னை நான் விட்டுச் செல்வதில்லை” என்று அவள் சொன்னாள்.

பிறகு வந்தவள் வாக்தேவி. தொலைவில் எழுந்த அடுமனைப்புகையால் ஊர் ஒன்றின் அணுக்கத்தை உணர்ந்து அவன் அதை நோக்கி சென்றான்.  எதிரே நீராடி ஈர உடையுடன் கையில் நீர்க்குடுவைகளுடன் இருவர் சொல்லாடிச் சென்றதை கேட்டுக்கொண்டே அவன் கடந்தான். அவர்கள் அங்கிருக்கும் குருநிலை எதிலோ கல்வி கற்கும் இளையவர். கற்றவற்றை தன்வயப்படுத்திக் கொள்வதற்கென மிகையாகப் பேசும் அகவை. ஒருவர் சொல்வதை மறுக்காவிடில் தன் இருப்பு நிறுவப்படுவதில்லை என்னும் வளர்நிலைக் காலம். அவர்கள் அவனை காணவில்லை, அவர்கள் உலகில் எவரும் சொல்லாகவே நுழையமுடிந்தது.

“வேதச் சொல் அழியாததென்று சொல்லும் நூல்களை ஐயுறுகிறேன். அதை அழிவற்றதென உணர்வது அழியும்  மானுடரின் தன்னிருப்பே” என்றான் ஒருவன். “மானுடன் பிறந்திறக்கிறான். இப்புவி பிறந்திறக்கிறது. ஆதித்யர்கள் பிறந்திறக்கிறார்கள். விண்ணகமே பிறந்தழிகிறது. அழியாததென்று ஒன்று எங்கேனும் எவ்வண்ணம் இங்கிருக்க முடியும்?” இன்னொருவன் “இவை அனைத்தும் அழிந்து மீண்டும் பிறப்பதே அவ்வழிவிற்கும் மறுபிறப்பிற்கும் நடுவே மாறாது ஒன்று உள்ளதென்பதற்கு சான்று. அதுவே பிரம்மம்” என்றான். “பிரம்மத்தின் ஒலியென்பது வேதம். பிரம்மம் அழிவற்றது என்றால் வேதமும் அழிவற்றதே.”

“அழிவற்றது இருக்கலாம் இல்லையென்றுமிருக்கலாம். அது அதற்கே தெரியாதென்கின்றன வேதங்கள். இளையோரே, அழிவின்மையை நாடும் மானுட உள்ளத்தின் தேவைதான் என்ன? தீமையிலிருந்து நன்மைக்கு இருளிலிருந்து ஒளிக்கு என ஏங்கும் உள்ளம் ஏன் இறப்பிலிருந்து அழிவின்மை நோக்கி எழுகிறது?” என்று அர்ஜுனன் கேட்டான். “முதலிரண்டும் உலகியல். மூன்றாவது எவ்வுலகுக்கான ஏக்கம்? அந்த மூன்றாம் வேண்டுதலுக்கான விடையென எழுந்ததா வேதம்?”

அவனை பித்தனென்று எண்ணியவர்கள்போல் விழி திருப்பாது அவர்கள் கடந்து சென்றனர்.  அர்ஜுனன் வியப்புடன் திரும்பி அவர்களைப் பார்த்தான். அவன் அவர்களிடம்  குரல்கொண்டு பேசவே இல்லை. சொல்லுக்கு எதிர்ச்சொல்லென எழுந்தது அவன் சித்தச்சுழிப்பே. அழிவென்பது ஒவ்வொரு கணமும் தன்னில் இருந்தும் சூழ்ந்த பிறவற்றில் இருந்தும் வந்தடைவதனாலா மானுடன் அழிவின்மையை எண்ணிக் கொண்டான்? கடையப்படுகிறது பாற்கடல். அதில் கரைந்துள்ளது அமுதம். இங்கு ஒவ்வொன்றிலும் இருக்கும் உவகைப்பெருக்கு.

எத்தனை சொற்கள்! பொருளாக ஆகும் பொருட்டல்ல, பிறந்து குமிழியிட்டு கொப்பளிப்பதன் பேரின்பத்திற்காகவே இச்சொற்கள். பிறந்து வாடும் மலருக்குள் மலரென்று ஒன்று அழியாதிருக்கலாகும். சுருங்கி விரியும் காலப்பெருக்குக்குள் காலமென்று தன்னை நிகழ்த்தும் ஒன்று அழியாதிருக்கலாம். பொருள் கொண்டு பொருள் அளித்து பிறந்து இறக்கும் சொல்லுக்குள் சொல்லென்று வாழும் தெய்வம் என்றுமிருக்கலாம். ஒரு கையில் மின்னல். மறு கையில் மாமலர். இரு கைகளில் இசையாழ். ஏடும் ஆணியும். விழிமணிமாலை எனும் காலப்பெருக்கு.

எண்ணியதுமே அருகிலிருந்த வெண்மலரில் இருந்து அவள் எழுந்து அவன் அருகே வந்தாள். வெண்கலையாடை அணிந்தவள். “வணங்குகிறேன், தேவி” என்று அவன் சொன்னான். “உன் சித்தப்பெருக்கை மீண்டும் கண்டடைந்தேன். அது இறுதியாக அணைந்தபோது நீ விட்டுச்சென்ற சொல் அமுது” என்றாள். “அச்சொல்லை ஏந்தியபடி இங்கு நான் உனக்காகக் காத்திருந்தேன்.” அவன் நினைவுகூர்ந்து “ஆம், அமுது” என்றான். அமுது அமுது என உள்ளம் சொல்லோட்டமாக மாறியது.

பிறந்த குழவி மண்படிந்து, வாய்குவித்து காற்றை உண்டு, தான் என அறிந்ததுமே வாய்திறந்து கூவி அழைப்பது அமுதுக்காக. அழிவின்மை அன்னையின் இருமுலைகளில் இருந்து ஊறி அதன் வாய்க்குள் சொட்டுகிறது. ஒவ்வொரு கணமும் என அழிவை அது உந்தி முன்னகர்த்துகிறது. ஆம், அதையே எண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வெண்ணத்துடன் இங்கொரு கல்லில் கால் தடுக்கி நிலைதடுமாறினேன். மீண்டபோது என்னிடம் சொற்சுழி இருக்கவில்லை. சொல்லிருந்த இடமெல்லாம் வெற்றுத் திசைவெளியே சூழ்ந்திருந்தது.

“அங்கிருந்து தொடங்குக!” என்று அவள் புன்னகைத்தாள். அர்ஜுனன் “அன்னையே, கைகால் நீள்கையில் தாய்முலைப்பால் நின்றுவிடுகிறது. பின்னர் உன் முலைப்பாலை மானுடன் அருந்தத் தொடங்குகிறான். உன் இரு ஊற்றுகளும் வற்றும்போதுதான் அழிவு வந்து அவனைத் தொடுகிறது. உள்ளத்தில் மூலையில் இருந்து இருள் எழுந்து தன்னுணர்வின் மேல் ஆணவத்தின் மேல் அறிவின் மேல் மெய்மையின் மேல் படரத்தொடங்குகிறது. அவன் விழிகள் ஒளி மங்குகின்றன. சொற்கள் கூரிழக்கின்றன. உடல் உள்ளத்தின் எடை தாளாது தளர்கிறது” என்றான் அர்ஜுனன். “முதிய மனிதர்களை பார்க்கிறேன். அவர்கள் சுமந்து செல்லும் எடை என்பது என்ன? தசைகளில் குடிகொண்ட இறப்பா? நனைந்து எடைமிகுந்த நினைவுகளா? வாழ்ந்து திரிந்த காலங்களில் சேர்த்த சொற்களின் பொருளின்மையா? அன்னையே! உன் ஒழியாத முலைப்பாலை வாழ்வெல்லாம் உண்டுகொண்டிருப்பவன் இறப்பை வெல்லலாம் அல்லவா?”

“உன் சொற்சுழலுக்குள் மீண்டு வந்துவிட்டாய்” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். “இனி நீ செல்லும் தொலைவு அதிகம்.”  அவன் பெருமூச்சுடன் “சொல்க, உன் முலைப்பால் வற்றுவது எப்போது? உன் காம்புகளில் வேப்பம்சாற்றை நீ தடவிக் கொள்வது எப்போது? நாவூற அருகணையும் மைந்தரைப் பற்றி மெல்ல விலக்கி நீ முகம் சுளிக்கத் தொடங்குவது எந்த வயதில்?” என்றான்.

அவள் “ஒருபோதும் இல்லை” என்றாள். “ஆனால் அருந்த அருந்த என் முலைப்பால் கொழுமை கொள்ளும். எலிப்பாலென நீர்மை கொண்டு இளமைந்தனின் நாவைத் தொடுவது யானைப்பாலென செறிவடைகிறது. உண்ட பால் செரிக்காமல் மறுபாலுக்கு பசியெழுவதில்லை. இளையவனே, பசியின்மையால் என்னை விட்டு விலகுகிறார்கள் மானுடர்.” அர்ஜுனன் “அன்னையே, என்னுடன் இரு! நானென என் சித்தம் உணரும் தருணம் வரை சொல்லென துணை வருக!” என்றான். அவள் அவன் நெற்றிமேல் வருடி “உன்னுடன் இருப்பேன். உன்னை நீ இழக்கும் கணத்திற்கு முன்பு வரை உன் நாவில் எழுவேன்” என்று சொன்னாள்.

பின்னர் எழுந்து வந்தாள் ஐஸ்வர்யை. அது சித்திரை மாதம். அச்சிற்றூரின் முகப்பிலேயே சரக்கொன்றை வடிவில் கிளிச்சிறைப்பொன் சூடி அவள் நின்றிருந்தாள். அச்சிற்றூரை அவன் கடந்து சென்றபோது கையில் வைத்திருந்த சிறுகொம்பை அங்கு வீசினான். அதன் கணுவொன்றிலிருந்து அவள் வேர் கொண்டாள். தொலைவிலேயே அவள் பூத்த மஞ்சள் ஒளியை அவன் கண்டான். முகம் மலர்ந்து விழிவிலக்காது நோக்கியபடி அவளை நோக்கி சென்றான்.

நாணச்சிரிப்புடன் அவள் எழுந்து அவனை நோக்கி தளர்நடையிட்டு வந்தாள். பொன்னிற ஆடை உலைந்தது. விழிகள் நிலம் நோக்க இதழ்களில் எழுந்த புன்னகையை அடக்கியபடி “வருக, இளையவரே!” என்றாள்.  “எப்படி உன்னை மறந்திருந்தேன்?” என்று அவன் கேட்டான். “வாழ விழைவுகொண்ட எவரும் என்னை மறப்பதில்லை” என்று அவள் சொன்னாள். “மனை துறந்து பொன் விலக்கி காடேகுபவர்களுக்குக்கூட அங்கே பசுமையென்றும் மலர்வண்ணமென்றும் முகிலொளி என்றும் காட்சியளித்து சூழ்ந்துகொள்வேன்.”

அவன் கைநீட்டி அவளுடைய மெல்விரல்களை தொட்டான். விரல்கள் பின்னியதும் அவள் உடல் விதிர்ப்பு கொண்டது. அவள் விழிதூக்கி அவன் விழிகளை சந்தித்தாள். “ஆண்டுதோறும் மலர்கொண்டு ஒவ்வொரு மலராக உதிர்த்து வெறுமை ஈட்டி மீண்டும் தவமிருந்தேன்” என்றபோது அவள் கண்களில் நீர்மை படர்ந்தது. முகம் சிவந்து கழுத்திலும் தோளிலும் நீல நரம்புகள் துடித்தன.  முலைக்கூம்புகள் எழுந்தமைய “கனிந்தபின் காத்திருப்பது பெருந்துயரம்” என்றாள்.

“இனி எப்போதும் என்னுடன் இரு” என்று அவன் சொன்னான். அவள் கண்ணீருடன் புன்னகைத்து முகம் தூக்கி “ஆம் இளவரசே, உங்களுக்காகக் காத்திருக்கின்றன அணிநகர்கள், நிறைகருவூலங்கள்,  மணிமுடிகள், குருதி தோய்ந்த வெற்றிக் கொடிகள். என்றும் உங்களுடன் இருப்பேன்” என்றாள். அவளை இடை வளைத்து அணைத்து தன் நெஞ்சுடன் பொருத்திக்கொண்டான். குனிந்து அவள் சிறிய இதழ்க்குமிழ்களில் முத்தமிட்டான். கை வளைத்து அவன் கழுத்தைத் தழுவி அவன் உடலுக்குள் புகுந்துவிடுபவள்போல ஒட்டிக்கொண்டாள். அவள் இதயத்துடிப்பை, உடலெங்கும் பரவிய குருதிக் குழாய்களின் அதிர்வை தன் உடலில் என அவன் உணர்ந்தான். அவளுள் ஓடும் ஒவ்வொரு சொல்லையும் அறிந்தான்.

“ஏழழகு என்று உன்னை ஏன் சொல்கிறார்கள் என்று இன்று அறிந்தேன்” என்றான். “ஏன்?” என்று சிரிப்புதெறித்த விழிகளுடன் அவள் கேட்டாள். “நீ சொல்! ஏன் உனக்கு ஏழு அழகு?” அவள் நாணத்துடன் “நான் அறியேன். கவிஞர் என்னை நிலமகள், நீர்மகள், பொன்மகள், மலர்மகள், வெற்றிமகள், கூலமகள், புலரிமகள் என கொண்டாடுகிறார்கள்” என்று அவள் சொன்னாள். அவன்  “ஏழுமுறையும் நீ வெற்றித்திருமகள். வெற்றி அன்றி மங்கலம் பிறிதொன்றில்லை” என்றான்.

சிரித்தபடி  “இதை உணர அந்த மலை அனைத்தையும் ஏறியாகவேண்டுமா?” என்றாள்.  “அரிதொன்றை உணர அதை ஒரு முறை முற்றும் துறந்து பார்ப்பது உகந்தது” என்று அவன் சொன்னான். சிரித்தபடி அவன் தோளை அறைந்து  “துறந்து சென்றீர்கள். அது பிறருக்கு அளிக்கும் துயரை ஒரு கணமேனும் எண்ணினீர்களா?” என்றாள்.  “அதுவும் நன்றெனத் தோன்றுகிறது. துயரால் நீ கனிந்திருப்பாய், பிரிவு நம்மை அகற்றி இணைக்கிறது” என்றான்.

அச்சிற்றூரிலேயே அன்றிரவு தங்கினான். நீராடி உணவருந்தி ஓய்வுகொண்டான். நள்ளிரவில் அவன் குடிலுக்கு வெளியே மெல்லிய பெண்குரல் விம்மலோசையை அவன் கேட்டான்.  எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தபோது இடப்பக்கம் சுவர் ஓரமாக ஒண்டி உடல்குறுக்கி அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான். கரிய உடையணிந்து கருங்குழல் மண்ணில் பரவி வேர்வலைபோல கிடக்க விழிகளின் மின்னால் தன்னைக் காட்டினாள். “யார் நீ?” என்றான். “தெற்கிலிருந்து வருபவள். உங்களுக்கு அணுக்கமானவள். என் பெயர் கிராதை” என்றாள்.

“நான் உன்னை அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “இளையவரே, நூறுநூறு தருணங்களில் உங்கள் அருகணைந்து நின்றவள் நான்” என்றாள். “என்னை அறியாது எவரும் இப்புவியில் வாழமுடியாது.” அவன் “உன் முகத்தை நான் கண்டதில்லை” என்றான். “என்னை முகமெடுத்து முகம்நோக்குபவர் மிக அரிது. விழிமூடி உங்கள் உடலின் இடப்பகுதியிடம் கேளுங்கள், என்னை அது அறிகிறதா என?” என்றாள்.

அவன் விழிமூடி தன் இடப்பகுதியை கூர்ந்தான். நன்கறிந்த ஒருத்தி என்றது தோள். திகைப்புடன் திறந்து “ஆம், அறிந்திருக்கிறேன்” என்றான். “எதை எண்ணினீர்கள்?” என்றாள். “ஒரு போர்த்தருணம்” என்று சொன்னபோது அவன் குரல் தணிந்திருந்தது. “சொல்க!” என்றாள். “நான் துருபதனை வென்று சிறுமைசெய்த தருணம்” என்றான். அவள் சிரித்தபடி எழுந்து “பேராற்றலை தோளில் அறிந்தது அப்போது அல்லவா? எந்த எல்லையையும் கடக்கமுடியுமென உங்களை உணர்ந்தீர்கள். அங்கிருந்தல்லவா தொடக்கம்? உங்கள் கையில் வில்லெழும்போதெல்லாம் அத்தருணம் உள்ளத்தில் மின்னிச்செல்வதுண்டு அல்லவா?” என்றாள்.

“ஆம்” என்றான். “அன்று உங்களை தழுவிக்கொண்டேன். உங்கள் விழிகளுக்கும் தோன்றினேன்.” அவள் மெல்ல முன்னகர்ந்தபோது சாளரம் வழியாக வந்த விளக்கொளி அவள்மேல் விழ அவள் முகத்தை நன்கு கண்டான். “ஆம், நான் மறக்காத முகம்” என்றான். “நீங்கள் அறிந்த முதல்பெண் நான் அல்லவா?” அவன் தலைகுனிந்து உடல்கூச “ஆம்” என்றான். “நான் பரத்தையர் தெருவில் அந்தச் சிற்றில்லத்தின் முன்னால் நின்று உங்களை அழைத்தேன். என் விழிகளை சந்தித்த கணம் உங்கள் உள்ளம் கூசியது. ஆனால் உடல் காமம் கொண்டு எழுந்தது. தடுமாறும் கால்களுடன் என் இல்லத்திற்குள் நுழைந்தீர்கள்.”

“போதும்” என்று அவன் சொன்னான். அவள் அதை கேட்காததுபோல் தொடர்ந்தாள் “என்னை தொடத் தயங்கி நின்றிருந்தீர்கள். நீங்கள் மிக இளையவர் அன்று. உங்களை அணுகி அன்னையென விழி கனிந்து உங்கள் தலையைத் தொட்டு குழலை வருடினேன். வேண்டாம் என்பதுபோல தலையை அசைத்தீர்கள். உங்கள் தோள்களை தழுவினேன். என் பெருத்தமுலைகளால் உங்கள் மார்பை அழுத்தினேன். உங்கள் தவிப்பு சினமென்றாகியது. ஆனால் உடல் காமம்கொண்டெழுந்தது.” அர்ஜுனன் “வேண்டாம்…” என்றான். “என்னைப் புணர்பவர்கள் தாளாவெறுப்பின் உச்சத்தில் அதை காமம் என ஆக்கிக்கொண்டவர்கள். ஆகவே ஆற்றல் மிக்கவர்கள்.” அவன் மேலும் குரலிறங்க “என்ன வேண்டும் உனக்கு?” என்றான்.

“நான் உங்களைத் தேடி காத்திருந்தேன். என்னை இங்கு விட்டுச்சென்றீர்கள்.” அவன் “இங்கா?” என்றான். “ஆம், இந்தச் சிற்றூர் வரும் வழியில் நின்று அங்கு பால்குடம் ஏந்திச்சென்ற ஆய்ச்சியிடம் பால் அளிக்கும்படி ஆணையிட்டீர்கள். அவள் அஞ்சி குடத்தை வைத்தாள்” அவள் சொன்னாள். “அந்த இடத்திலிருந்து நான் இவ்வூருக்குள் புகுந்துகொண்டேன். என்னால் மானுடருள்ள இடத்திலேயே வாழமுடியும்.”

அவன் அவளை நோக்கியபடி நின்றான். கொழுவிய கன்னங்கள், சிறிய கூர்விழிகள், குவிந்த உதடுகள், உருண்டபெருமுலைகளுடன் பருத்த தோள்கள். பசுபோன்ற பெண். அத்தனை ஆண்டுகளுக்குப்பின் அதே மாறாத்தோற்றத்துடன். “அவள் என்ன ஆனாள்?” என்றான். “இருக்கிறாள். முதுபரத்தையருக்குரிய வாழ்க்கை” என்றாள். “அன்றே அரசியின் படைகளால் அவள் அஸ்தினபுரியில் இருந்து துரத்தப்பட்டாள். அவளுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தை அணுக்கர் பிடுங்கிக்கொண்டனர். சிந்துவைக் கடந்து கூர்ஜரம் சென்றாள். அங்கு பரத்தைமையில் உழன்றாள். முதுமைகொண்டாள். நோயுற்றாள்.”

“அவளை அழகியெனக் காட்டியது என் மாயம். அது இன்று அவளை புண் என சீழ் என சிக்கு என அழுகல் என கெடுமணம் என சூழ்ந்திருக்கிறது. அங்கு ஒரு அழுக்கோடை அருகே  மட்கிய மரவுரியில் படுத்திருக்கிறாள். அவளுக்கு அருகிருக்கும் சண்டிகை ஆலயத்திலிருந்து உணவளிக்கிறார்கள்.” அவன் “போதும்!” என்றான். “அவள் உடலில் இருந்து சலமும் நீரும் வழிந்தோடுகின்றன. நீ மகிழ்ந்த அவள் முலைகள் அழுகி கிழிந்துள்ளன.” அவன் உரக்க “போதும்!” என்றான்.

“நீ தவிர்ப்பவற்றால் ஆனவள் நான்” என்றாள். “ஆனால் நான் இல்லாது உனக்கு போர்வெற்றிகள் இல்லை. இளையவனே, நானே ஆற்றல். என்னை அருகமைப்பவர்களே தங்கள் உள்ளமும் இப்புவியின் நெறிகளும் அமைக்கும் எல்லைகளை கடக்கமுடியும். வென்று தலைநிமிர்ந்து புதிய நெறிகளை அமைக்கமுடியும். அவர்களையே தெய்வமென்று வழிபடுகிறது மானுடம்.”  அர்ஜுனன் தலையை இல்லை என அசைத்தான்.

“பிற நால்வரையும் நீ அடையவேண்டுமென்றால் நான் உன்னுடன் இருந்தாகவேண்டும்” என்றாள் அவள். அவன் கைகள் ஓய்ந்து கிடக்க தோள்கள் தொய்ந்து நின்றிருந்தான். “சொல், தெரிவு உன்னுடையது” என்றாள் அவள். அவன் பெருமூச்சுவிட்டான். “முடிவு கொள்!” என்றாள். அவன் விழிகளைத் தாழ்த்தியபடி பதுமையென கைநீட்டி அவள் கைகளை பற்றிக்கொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்

ஓர் ஆவணப்படம் –என்னைப்பற்றி

$
0
0

சென்ற வருடம் எனக்கு கோவை ரோட்டரி அமைப்பு அவ்வருடத்தைய துறைச்சாதனையாளர் விருதை வழங்கியது. அப்போது அவ்விழாவில் காட்ட ஒரு 7 நிமிட பேட்டி ஒன்றை என்னைப்பற்றி எடுத்துக்கொடுக்கும்படிச் சொன்னார்கள். அவர்கள் அதற்கு அளித்த நிதியைக்கொண்டு ஒரு ஆவணப்படமே எடுக்கலாமே என்று நான் சொன்னேன்.

 

அஜிதனிடம் மணிரத்னம் கூறிய ஒன்றை அவன் அடிக்கடிச் சொல்வதுண்டு. சினிமாவைப் பயில அதன் அனைத்துத் துறைகளையும் தானே செய்து படங்களை எடுத்துப்பார்க்கவேண்டும் என்று. அதை இங்கே செயல்படுத்தலாம் என்று தோன்றியது. அவ்வாறுதான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது

 

இதன் சிறப்புகள் இவை. அஜிதனுக்குச் சொந்தமான ஒரு  5 டி காமிரா மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்ட கருவி. ஒலிப்பதிவும் அதில்தான். வேறு விளக்குகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. காமிரா முழுக்கமுழுக்க கையாலேயே கொண்டுசென்று இயக்கப்பட்டது. ஆகவே இதில் படப்பிடிப்புக் குழுவே இல்லை. நான் இதில் நடிகன், அஜிதன் படப்பிடிப்பு. வேறு எவருமே உடன் இல்லை

 

மொத்தப்படப்பிடிப்பும் இரண்டே நாளில் முடிந்தது. ஒருநாள் திருவரம்பும் பத்மநாபபுரமும். இன்னொருநாள் பார்வதிபுரம். அதற்குமேல் எனக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டேன். இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்களைக்கொண்டு அஜிதனே படத்தொகுப்பையும் ஒலிச்சேர்ப்பையும் செய்தான். எங்கும் பிற எவரும் பங்கேற்கவில்லை

 

படப்பிடிப்பு உட்பட இந்த ஆவணப்படத்தின் மொத்தச்செலவே 1800 ரூபாய்தான். அதாவது ஒருநாள் காருக்கு டீசல் போட்டதும் மதியம் சாப்பிட்டதும் மட்டும். ஆவணப்படம் எடுத்து முடிக்க ஆனது வெறும் ஆறுநாட்கள்.

 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஆவணப்படம், குறும்படம் எடுப்பது மிகமிக எளிதானதாக ஆகிவிட்டது. இந்த ஆவணப்படத்தில் சில குறைபாடுகள் உள்ளன. ஒலிப்பதிவுத்தரம் முக்கியமான குறை. தனியான ஒரு ஒலிப்பதிவுக்கருவி இருந்திருக்கலாம். அப்படி பல நுட்பமான குறைகளைச் சொல்லலாம். ஆனால் ஓர் ஆவணப்படம் எடுப்பது இத்தனை எளிது. ஆர்வமும் கொஞ்சம் பயிற்சியும் இருந்தால்போதும்

 

கவிஞர் ஞானக்கூத்தன் இறந்தபோது விஷ்ணுபுரம் விருது அளிக்கும் விழாவிற்காக நண்பர் கே.பி.வினோத் எடுத்த ஒரே ஒரு ஆவணப்படம் மட்டுமே அவரைப்பற்றி எஞ்சியது என்பதை உணர்ந்தோம். அதை எடுக்கவேண்டும் என்று தோன்றியமைக்காக மகிழ்ச்சி அடைந்தோம். குறைந்த செலவில் குறைந்தபட்ச தொழில்நுட்ப உதவியுடன் எடுத்த படம் அது.

 

இன்று ஒரு ஆப்பிள் செல்பேசியும் ஒரு கணிப்பொறியும் இருந்தால் நீங்கள் மாதம் ஒரு ஆவணப்படம் வீதம் எடுக்கமுடியும். யூடியூபில் பதிவிடவும் முடியும். நம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றி எத்தனை ஆவணப்படங்கள் எடுக்க முடியும் என எண்ணிப்பாருங்கள். இங்கே பெரும்பாலானவர்களைப்பற்றி எளிய அளவில்கூட பதிவுகள் இல்லை. கேட்டால் ‘ஃபண்ட் இல்லை’ என்பதே பதிலாக இருக்கும். பணமே தேவையில்லை என்பதே உண்மை

 

அரிய நிகழ்வுகள் பற்றி, ஆலயங்கள் பற்றி, முக்கியமான மனிதர்கள் பற்றி ஆவணப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கலாம். நாம் பதிவுசெய்ய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவையெல்லாம் நாளை முக்கியமான செல்வங்களாக ஆகிவிடும். இன்று நிறுவனங்கள் நிறுவன மனிதர்களை மட்டுமே  பொருட்படுத்துகின்றன. பிறரைப்பற்றி இதேபோன்ற தனியார் முயற்சிகள் தான் செய்யவேண்டும்.

 

https://www.youtube.com/watch?v=9JVjWxUD9e8

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17

$
0
0

[ 23 ]

முந்தையநாள் அந்தியில் தோளில் புரண்ட புழுதிபடிந்த திரிசடைகளும் செம்பித்து சடைக்கத்தொடங்கிய நீண்ட தாடியும் தன்னுள் ஆழ்ந்து நோக்கிழந்தவை போலிருந்த விழிகளும் சற்றே தளர்ந்த நடையுமாக தூமக்கிரகம் என்னும் அச்சிற்றூரின் முள்மரக்கோட்டை வாயிலில் வந்து நின்று “அயலவன் நான். ஒருநாள் தங்க ஒப்புதல் கோருகிறேன்” என்று கூறி நின்ற அர்ஜுனனுக்கும் அவர்கள் அளித்த எல்லைச்சிறுகுடிலில் காலையில் எழுந்து  வெளிவந்த அர்ஜுனனுக்கும் இருந்த வேறுபாட்டை அவனைக் கண்ட ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.

தருக்கி நிமிர்ந்த தலையும் எதிரே வருபவரை நோக்காமலேயே அளவிடும் பார்வையும் மறுத்துரை கேட்க விழையாத கூரிய சொற்களுமாக அவன் குருதிமேல் நடந்து அரியணை அமர்ந்து ஆளும் அரசன் போலிருந்தான். காலையில் அவனுக்கு இன்நீருடன் வந்த அச்சிற்றூரின் ஊர்ப்பணியாளனை தாழ்ந்த முழவொலிக் குரலால் அருகழைத்து  “நான் நீராடி முடிசீரமைக்க வேண்டும். நறுமண நீரும் முடிதிருத்துபவனும் சித்தமாக இருக்கட்டும்” என்று ஆணையிட்டான்.

ஆணைகளை இயல்பாக  இடுபவர் அதற்குரிய குரலை அடைந்துவிட்டவர். அக்குரலே பணியாளனை உடல் வளைத்து “ஆணை” என்று சொல்லவைத்தது. “விரைக!” என்று  அர்ஜுனன் சொன்னான்.   இன்நீரை அருகே வைத்துவிட்டு அவன் பாய்ந்து ஊர்த்தலைவரிடம் சென்று “நீராட நறுமணநீரும் முடிதிருத்துபவனும் சித்தமாக இருக்க ஆணையிட்டிருக்கிறார்” என்றான். ஊர்த்தலைவர் “யார்?” என்றார். “நேற்று வந்தவர். அவர் அரசர்” என்றான் பணியாளன். “எப்படி தெரியும் உனக்கு?’’ என்றபடி ஊர்த்தலைவர் எழுந்தார்.

ஊர்மன்றில் அவருடன் சொல்லாடிக் கொண்டிருந்த குலமூத்தவர்கள் மூவரும் உடன் எழுந்தனர். “ஐயமே இல்லை, அவர் பேரரசர். படைகளை சொற்களால் நடத்தக்கற்றவர்” என்றான் பணியாள். “நீ இதற்கு முன் பேரரசரை பார்த்திருக்கிறாயா?” என்றார் ஒருவர்.  “பார்த்ததில்லை. ஆனால் தன்னை குடிமகனாக உணரும் ஒவ்வொருவரும் பேரரசர்களை புரிந்துகொள்ள முடியும்” என்றான் பணியாளன். “சிம்மத்தின் குரலை மான்கள் அறியும் என்று ஒரு பழமொழி உண்டு” என்றார் ஒரு குலமூத்தார்.

ஊர்த்தலைவர் நீராட்டுக்கும் முடிதிருத்துவதற்கும் ஏற்பாடுசெய்ய தன் இளையோருக்கு ஆணையிட்ட பின் “அவருக்கு காலை உணவென  எது?” என்று கேட்டார். பணியாள் “அறியேன். எதுவாயினும் அது அரசர்களுக்குரிய உணவு” என்று சொல்லி  வெளியேறி கொல்லைநோக்கி  ஓடிச்சென்றான். “நாமே சென்று பார்த்துவிடுவோம். யார் என்று அவரிடமே கேட்போம்” என்றார் குலமூத்தார் ஒருவர்.

அவர்கள் விருந்தினர்குடிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த மூங்கில் ஒன்றை வெட்டி  கூர்த்து அம்புகளை செய்துகொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு தயங்கினர். அருகே ஒரு மரத்தில் மாட்டப்பட்டிருந்தது காண்டீபம்.  மெல்லிய குரலில் “நேற்று அவரைப் பார்த்தபோதே இந்த வில் அரிதானது என்று எண்ணினேன்” என்றார் குலத்தலைவர் ஒருவர். “எப்படி?” என்று இன்னொருவர் கேட்டார். “பார்வைக்கு பழைய மூங்கிலால் செய்யப்பட்ட எளிய வில் என்று தோன்றுகிறது. எந்த வேடனும் கைக்கொள்ளத்தக்கது. ஆனால் அதன் கணுக்களை பாருங்கள்! மும்மடங்கு பெரிதாக இழுத்து நீட்டுவதற்குரியது அது. மூங்கிலால் ஆனதல்ல. அரியதோர் உலோகத்தால் ஆனது.”

“இடக்கையில் எளிதாக அவர் அதை வைத்திருப்பதைப் பார்க்கையில் எடையற்றதென்று தோன்றியது. ஆனால் ஒருமுறை அதை மண்ணில் ஊன்றி அவர் எடுத்தபோது விழுந்த தடத்தைப் பார்த்தேன். நம்மால் இருகைகளாலும் தூக்கமுடியாத அளவுக்கு எடைகொண்டது.” அச்சத்துடன் “யார் அவர்?” என்றார் இன்னொருவர். “எனது எண்ணம் பிழையற்றதென்றால் காடுபுகுந்த பாண்டவர்களில் இளையவர்.”

பிற அனைவரும் அவரை நோக்கி திரும்பி “அர்ஜுனரா?” என்றனர். “ஆம்” என்றார். “அவரா நம் சிற்றூருக்கு வந்திருக்கிறார்?” என்று ஒருவர் வியந்தார். “மெல்ல” என்றார் இன்னொருவர். “நான் அவ்வாறு சொல்லவில்லை. ஒருவேளை அவர் அஸ்வத்தாமனாக இருக்கலாம். ஜயத்ரதனாகக்கூட இருக்கலாம். கர்ணன் அல்ல. அவர் மிக உயரமானவர் என்று கேட்டிருக்கிறேன்.”

“அர்ஜுனர்தான்” என்றார் குலத்தலைவர். “எப்படி தெரியும்?” என்று ஒருவர் கேட்டார்.  “நேற்று அவரை முதற்கணம் பார்த்தபோதே என் உள்ளத்தில் அவ்வெண்ணம் வந்து சென்றது. அது எவ்வாறு  இயலும் என்று அதை அப்போது  விலக்கித் தள்ளினேன். இப்போது உறுதியாயிற்று.”  அவர்கள் இணைந்து பெருமூச்சு விட்டனர். “அவர் அர்ஜுனர் என்றால் நம் ஊர் இனி எவரையும் அஞ்சுவதற்கில்லை. வில்லவர்கோன் கால் பட்ட மண்ணை பிறர் எண்ணவும் அஞ்சுவர்” என்றார் ஊர்த்தலைவர். “ஆம்” என்றனர் அவர்கள்.

அவர்கள் வணங்கியபடி அணுக அர்ஜுனன் திரும்பி “நான் இன்றே இச்சிற்றூரிலிருந்து கிளம்புகிறேன், மூத்தவர்களே. இங்கு எனக்கு அளிக்கப்பட்ட ஏற்புக்கு நன்றி” என்றான். “அது எங்கள் நல்லூழ்” என்றார் குலத்தலைவர். “பாண்டவகுலத்து இளவரசர் இச்சிற்றூரில் ஒருநாள் தங்கினார் என்பதை எங்கள் தலைமுறைகள் நினைவில் நிறுத்தும். இனி இந்தச் சிறுகுடில் எங்கள் ஆலயங்களில் ஒன்று.”

அர்ஜுனன் விழிகளில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அம்புகளை கூர் செதுக்கி அம்புத்தூளி நோக்கி எறிந்தபடி “ஆம். நான் இங்கு வர நேர்ந்தது” என்றான். “இங்கிருந்து தாங்கள்  செல்ல விழையும் இடம் எதுவோ? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை செய்கிறோம்” என்றார் குலத்தலைவர். “எங்கு செல்ல வேண்டுமென்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நான்கு திசைகளும் என்னைச் சுற்றி திறந்துள்ளன. நான்கையும் நான் வென்றாக வேண்டும். முதல் திசை எதுவென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

ஒருவர் “அதிலென்ன ஐயம்? தங்கள் தந்தையின் திசையாகிய கிழக்கு” என்றார். அர்ஜுனன் அவரை பொருளில்லா நோக்குடன் திரும்பி நோக்கிவிட்டு பிறிதொரு அம்பை கூர் தீட்டினான். இரண்டு இளைஞர்கள் வந்து வணங்கி “அரசே, இளவெந்நீர் காத்திருக்கிறது. நீராட்டுக்குரிய அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டோம். முடிதிருத்துபவன் காத்திருக்கிறான்” என்றனர். “நன்று” என்றபடி அர்ஜுனன் திரும்பி நடந்தான்.

குலமூத்தாரில் ஒருவர் “அந்த வில்லை ஒருமுறை தொட்டுப்பார்க்கவேண்டும் என்று என் விருப்பம்” என்றார். “எடுத்துப்பாருங்கள்! அதற்கென்ன?” என்றார் இன்னொருவர். “பிழையாக ஆகிவிடாதல்லவா?” என்றார் மூன்றாமவர். குலத்தலைவர் “மரத்திலிருந்து சரிந்தது என்று சொல்வோம். எடுத்துப்பாருங்கள், நாமும் அதை தொட்டோம் என்பதே நாளை நம் இளையோருக்கு கதையாக சொல்லத் தக்கதல்லவா?” என்றார்.

அவர்கள் ஆர்வமும் பதற்றமுமாக ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “அது ஒரு தெய்வம். இப்பாரதவர்ஷத்தை வென்று திசைதிருப்புவதற்கென்று மண்ணிலெழுந்தது என்கின்றனர் சூதர்.” ஒருவர் சென்று மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த அந்த வில்லைப்பற்றி தூக்க முயன்றார். அவர் கைகளிலும் கழுத்திலும் தசைநார்கள் இழுபட்டன. “என்ன?” என்றார் இன்னொருவர். “எடை, இத்தனை எடையிருக்கும் என்று எண்ணவேயில்லை” என்றார்.

“அது வேண்டுமென்றே தன் எடையை கூட்டிக் கொள்கிறதா?” என்று இன்னொருவர் சென்று அவருக்கு உதவினார். “எடை மாறிக்கொண்டே இருக்கிறதா?”  இருவரும் அதைத் தூக்கி அருகே வைத்தனர். நடன மங்கையென உடல் வளைத்து சிறுவிம்மலோசையுடன் அது நிமிர பிடித்திருந்த இருவரும் இருதிசைகளிலாக நிலைதடுமாறி விழுந்தனர். அவர்கள் மேல் சரிந்து விழுந்து அவ்விசையிலேயே துள்ளிப் புரண்டு அப்பால் சென்றது.

கையூன்றி எழுந்து “இது உயிருள்ளது” என்றார் ஒருவர். “இளம்புரவியென துள்ளுகிறது” என்றார் மற்றவர். “அதற்குள் நாமறியா தெய்வங்கள் குடிகொள்கின்றன” என்று குலத்தலைவர் சொல்ல ஒருவர் பின்னடைந்தபடி அஞ்சிய விழிகளுடன் “அது நம் சொற்களை கேட்டுக்கொண்டிருக்கிறது” என்றார்.

“அதில் வாழும் தெய்வங்கள் நாம் தொடுவதை விரும்பவில்லை போலும்” என்றார் ஊர்த்தலைவர். இளையவனொருவன் “அது கலிங்கச் சிற்பிகளின் நுண் பொறி. அதற்குள் நாமறியாத இழுவிற்கள் உள்ளன. அவற்றை அறியாதவர் அவ்வில்லை ஏந்த முடியாது” என்றான். “இதை யார் எடுத்து திரும்ப வைப்பது? நாம் அதைத் தொட்டதை அவர் அறிந்தால் சினம் கொள்வார்” என்றார்.

“அது விழுந்துவிட்டதென்றே இருக்கட்டும்” என்று ஒரு முதியவர் சொன்னார். “அவர் நீராடி வரட்டும். உணவருந்தட்டும். கிளம்புகையில் தலைவணங்கி விடைகொடுப்போம்” என்றார். பின் நிரையில் எவரோ “அவர் இன்றே கிளம்புகிறார் என்பது நன்று” என்றார். அனைவரும் அவரை நோக்கி திரும்பினர். “நான் அவர் விழிகளைப் பார்த்தபின் சொல்கிறேன். கொல்லவரும் புலியின் நோக்கு அவற்றில் உள்ளது. நம்மை அது அறிந்திருக்கும் என்று தெரியும். ஆனால் அவ்விழிகள் நம்மை நோக்காது” என்றார் அவர்.

அங்கிருந்த அனைவரிடமும் மெல்லிய அமைதியின்மை ஒன்று பரவியது.  “நாம் இம்மலைக்காட்டுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சிற்றூர்மாந்தர். பெரியவை எவற்றையும் நாம் அறிந்ததில்லை. நமது தெய்வங்களும் சிறியவையே. அஞ்சுவது ஒன்றே நாம் அறிந்தது. நாம் எதற்கு இதைப்பற்றியெல்லாம் பேசவேண்டும்?” என்று குலமுதியவர் ஒருவர் சொன்னார். “யானை கடந்து சென்றால் நாணல்கள் சரிவதில்லை.” பெருமூச்சுடன் “ஆம்” என்றார் ஊர்த்தலைவர்.

அர்ஜுனன்  சடைகளை வெட்டி அகற்றி, தாடி திருத்தி, மீசையை மெழுகிட்டு கூர்மைப்படுத்தி நீராடி புதிய மான் தோலாடை இடையில் அணிந்து ஊர்மன்றுக்கு வந்தபோது அங்கு அச்சிற்றூரின் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். குழந்தைகளை இடையிலேந்திய பெண்கள் உடல் நெருக்கி கைகளால் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒற்றை உடலென நின்றனர். அவர்களின் உள்ளமும் ஒற்றைப்பெருக்கென சென்றது.

அவன் உள்ளே நுழைந்ததுமே அத்தனை விழிகளும் சென்று அவன் உடல்மேல் பதிந்தன. உடல்கள் முறுக்கப்பட்டவைபோல அசைய பெருமூச்சுகள் ஒலித்தன. அவன் நடந்து மன்றுக்கு வந்து அங்கு போடப்பட்டிருந்த புதிய மரவுரி விரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும் ஒற்றை நீள்மூச்சு எழுந்து மெல்ல உடல் தளர்ந்தனர் பெண்டிர்.

அன்னையரின் உள்ளத்தை எவ்வண்ணமோ உணர்ந்து அவர்கள் இடையிலிருந்த ஆண் குழவிகள் ஓசையிட்டன. அன்னையரின் கன்னங்களைப் பிடித்து தங்களிடம் திருப்ப முயன்றன. இடைகளில் கால்களை உதைத்து எம்பிக் குதித்தன. அர்ஜுனனை நோக்கி கைநீட்டி நாதிருந்தாக் குரல் எழுப்பின.

அன்னையர் அவற்றை மெல்ல அடித்தும் இறுக்கிப் பிடித்தும் “ஓசையின்றி இரு” “அமைதி கொள்” என்று ஆழ்குரலில் அடக்கினர். அச்சொல்லிலும் தொடுகையிலும் இருந்த அயல்தன்மையால் குழந்தைகள் மேலும் சினம் கொண்டு ஓசையிட்டன. அன்னையர் அவற்றை அதட்டுவதும் கன்னியர் திரும்பி விழியுருட்டி அடக்குவதும் கலந்து பெண்கள் நிரையே கலைந்து ஒலித்தது.

குலமூத்தார் ஒருவர் திரும்பி “என்ன அங்கு ஓசை? அமைதி” என்றார். அனைவரும் குழவிகளை அவரை நோக்கித் திருப்பி “பார், தாத்தா உன்னை திட்டப்போகிறார்” என்று மிரட்டினர். குழந்தைகள் அவரை அரைக்கணம் நம்பிக்கையின்மையுடன் நோக்கியபின் மீண்டும் அர்ஜுனனையே பார்த்தன. அப்போதுதான் விழிஒளி கொண்ட குழந்தைக்குக் கூட அங்கு எவரை நோக்க வேண்டுமென்று தெரிந்திருந்தது.

அர்ஜுனனுக்கு இருபக்கமும் ஊரின் குலமூத்தார் நிரை வகுக்க அப்பால் இளைஞர்கள் கைகள் கட்டி நின்றனர். அர்ஜுனன் முன் உயரமற்ற பீடத்தில் மரவுரி விரிக்கப்பட்டிருந்தது. ஊர்த்தலைவர் “இன்னுணவு கொள்க, அரசே!” என்றார். அவன் தலையசைத்ததும் தட்டில் சுட்ட கிழங்கும் தேனும் எண்ணையில் பொரித்த ஊனும் இலையில் பொதிந்து ஆவியில் வேகவைக்கப்பட்ட அப்பங்களும் மூங்கில் குவளை நிறைய மஞ்சளிட்டு கொதிக்க வைக்கப்பட்ட பாலும் பரிமாறப்பட்டது.

“அருந்துங்கள், அரசே! எங்கள் இச்சிற்றூரில் பேரரசர்களுக்குகூட இவ்வெளிய உணவையே அளிக்க முடியும்” என்றார் ஊர்த்தலைவர். அர்ஜுனன் மறுமுகமன் சொல்லாமல் அதை உண்டான். அவன் உணவுண்பதை நோக்கியபடி அவர்கள் அசைவற்று நின்றனர்.  அவ்வப்போது வளையொலியும் ஆடையொலியும் மூச்சுக்கசங்கலும் மென்குரல் முனகல்களும் எழுந்துகொண்டிருந்தன.

ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒற்றை எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. இவன் இளைய பாண்டவன் அர்ஜுனன். இளமை நாள் முதல்  அவர்கள் கதைகளில் கேட்டறிந்தவன். சிம்மத்துடன் ஆடிய பரதனுக்கும் ரகுகுல ராமனுக்கும் அனல்குலத்து பரசுராமனுக்கும் துவாரகையின் இளைய யாதவனுக்கும் உரிய உலகில் வாழ்பவன். ராவணனும் இரணியனும் இவனுடன் வாழ்பவர்கள்.

அப்படியென்றால் கதைகளில் வாழ்பவர்கள் அனைவரும் உடல் கொண்டவர்களே! கால் கொண்டு நடந்து கை கொண்டு செயலாற்றி கண்முன் வந்து அமரத்தக்கவர்களே! அவை பொய்யல்ல, அவர்கள் ஆற்றிய குருதிப்பெருக்கெழும்  பெரும்போர்கள், விண்ணும் மண்ணும் வென்று கடந்துசெல்லும் மாயப்பயணங்கள் அனைத்தும் உண்மை. அவர்களின் எரியெழும் உளக்குமுறல்கள், வஞ்சங்கள், அழியாத்துயர்கள் அனைத்தும் நிகழத்தக்கவையே.  தேவர்களும் அசுரர்களும் மூன்று தெய்வங்களும் அனைத்தும் அந்த ஊர்மன்று போல் அங்கிட்ட பீடம் போல் உண்மையானவை.

அவற்றின் மேல் அமர்ந்திருக்கும் அந்த மனிதன் இருகைகளையும் விரித்துச் சிறகாக்கி விண்ணில் எழக்கூடும். வெண்புகையென காற்றில் பரவிச் செல்லக்கூடும். வெறுமொரு சொல்லென எண்ணமென ஆகி அங்கு எஞ்சவும் கூடும். தொல்கதைகளில் இருந்து ஊறிச்சொட்டி வந்து விழுந்திருக்கும் ஒரு துளி. இங்கிருந்து வளர்ந்து தொல்கதைகளுக்கு அது மீளும். எத்தனை நோக்கியும் அவன் எனும் விந்தை அழியவில்லை. எத்தனை விழிசிமிட்டிய பின்னரும் அவன் அங்குதான் இருந்தான்.

அவர்கள் அவனை தொட்டுப்பார்க்க விழைந்தனர். அவன் செல்லும்போது உடன் சென்றால் இளமையின் ஒளி பரவிய அத்தொல்கதைகளுக்குள் சென்றுவிடமுடியுமென்று எண்ணிக் கொண்டனர். அவன் வெற்றிகளை நினைவுகூர்ந்தனர் இளையோர். அவன் கொண்ட காதலிகளை நினைத்துப்பார்த்தனர் பெண்டிர். மெய்நாடி அவன் சென்ற பயணங்களில் எல்லாம் அலைந்து கொண்டிருந்தனர் முதியோர்.

பின்னர் அவர்கள் மெல்லிய ஏமாற்றம் ஒன்றை அடைந்தனர். இவன் மனிதன், அந்தக் கதைகளில் வாழும் சொற்தலைவர்களைப்போல் அல்ல, வெறும் மனிதன். அப்படியென்றால் இளைய யாதவரும் மனிதனே. ரகுராமனும் பரசுராமனும் மனிதனே. இந்திரனும் எமனும் இவர்களை போன்றவர்களே. மூன்று தெய்வங்களும்கூட மானுடத்தன்மை கொண்டவர்கள்தான்.

கதைகளை சொல்லிச் சொல்லி தாங்கள் களைந்திட்டது மானுடத்தன்மையை என்று அவர்கள் உணர்ந்தனர். அம்மானுடத்தன்மையே ஆகி வந்து அமர்ந்திருக்கும் அவனை மீண்டும் கதைகளுக்குள் செலுத்த விழைந்தனர். அங்கிருந்து அவன் காற்றின் திரை விலக்கி உள்ளே சென்று மறைந்துவிடவேண்டும். விண்ணிலிருந்து ஒளிச்சிறகுகளுடன் கந்தர்வர்கள் வந்து அவனை தூக்கிச் செல்லவேண்டும். அவனைச் சுமந்து செல்ல பொன்னிற வாருடன் புரவி வந்து நிற்க வேண்டும்.

உணவருந்தி அவன் எழுந்தவுடன் ஊர்த்தலைவர் “எங்கள் இளையோரை வாழ்த்துக. அரசே! தங்கள் வில்திறன் சற்றேனும் இங்கு திகழ்க!” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “குழந்தைகளை கொண்டுவாருங்கள்” என்று முதியவர் பெண்களை நோக்கி சொன்னவுடன் அவர்கள் கால் தளர்ந்து  நெஞ்சு படபடக்க பின்னடைந்தனர். “என்ன அங்கே? விரைந்து வாருங்கள். அவர் கிளம்பவிருக்கிறார்” என்றார் முதியவர்.

“செல்லடி” என்று ஒருத்தி இன்னொருத்தியை தள்ளினாள்.  “ஐயோ!” என்று அவள் பின்னடைந்தாள். “போடி” என்று இன்னொருத்தி முன்னால் வந்தாள். “என்னால் முடியாது” என்ற அவள் இருவரை ஊடுருவி பின்னால் சென்று ஒளிந்துகொண்டாள். ஒருவரோடொருவர் முட்டி மோதியபடி அவர்கள் அங்கேயே நின்று ததும்பினர். உள்ளங்கால் வியர்த்து வழுக்கிவிழுந்துவிடுவோம் என அஞ்சினர்.

இளம்பெண்ணொருத்தி அருகிருந்த இன்னொருத்தி வைத்திருந்த குழந்தையைப் பிடுங்கி தன் இடையில் எடுத்துக்கொண்டு உறுதியுடன் காலடி வைத்து முன்னால் சென்று அர்ஜுனன் முன் நின்றாள். “இது யார் குழந்தை?” என்றார் குலத்தலைவர் புருவங்களை சுருக்கியபடி. முந்தானையால் வியர்த்த முகம் துடைத்து உரத்த குரலில் “என் அக்காள் குழந்தை. எனவே என் குழந்தையேதான்” என்று அவள் சொன்னாள். அவளுடைய நிமிர்வையும் துடுக்கையும் கண்டு பிற பெண்கள் கூசி சிலிர்த்து தங்களுக்குள் சிரித்தனர். அவளாகி அங்கே அவர்களே நடித்தனர்.

அர்ஜுனன் அவள் கையிலிருந்து அம்மைந்தனை வாங்கி அவன் வலது கையை விரித்து அதில் தன் வலது கையை வைத்து “வில் சிறக்கட்டும்” என்று வாழ்த்தினான். குழவியை திருப்பி அளித்தபோது அவன் விரல்கள் அப்பெண்ணின் விரல்களை தொட்டன. அதுவரை அவள் நடித்துக் கொண்டிருந்த நிமிர்வும் துடுக்கும் அகல கால் தளர்ந்து மெய்குழைந்து அவள் தலைகுனிந்தாள். “செல்க, அடுத்த குழந்தை வரட்டும்” என்றார் ஊர் முதியவர்.

அவள் அவனைப் பார்த்தபடியே கால்களை பின்னெடுத்து வைத்து நின்றாள். மூக்கு நுனியும் மேலுதடும் வேர்க்க கழுத்து ஈரம் குளிர்ந்து பளபளக்க மூச்சில் முலைகள் எழுந்து அமர அங்கேயே நின்றாள். அவள் நிலையை தன் உடலால், உள்ளமைந்த ஆணெனும் சிறுதுளியால் உணர்ந்த குழவி இருகைகளால் அவளை முகத்தில் அடித்து கால்களை உதறி சிணுங்கியது. உடல் திருப்பி தன் அன்னையை நோக்கி கைநீட்டி “அம்மா! அம்மா!” என்றது. அவள் அங்கு நின்றே கைகளை நீட்டி “வா!” என்று அதை அழைக்க தாவியபடி அம்மா என்று வீறிட்டது. “செல்லடி! அடுத்தவர் வரட்டும்” என்றார் குலமுதியவர்.

அவள் தலைகுனிந்து கனவிலென மெல்ல நடந்து கூட்டத்திற்கு திரும்பினாள். குழவியை அதன் அன்னை அள்ளி எடுத்துக் கொண்டாள். சினத்துடன் திரும்பி தங்கையிடம் “என்ன துடுக்கு உனக்கு? உன்னைப்பற்றி இங்குள்ளவர்கள்  என்ன நினைப்பார்கள்?” என்றாள். அவள் அச்சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. பெருமூச்சு விட்டபடி சிவந்த கண்களுடன் வெம்மை தளதளத்த உதடுகளுடன் சற்றே திரும்பி அர்ஜுனனுக்கு தோள்காட்டி தொலைவை நோக்கி நின்றாள்.

அதன்பின் ஒவ்வொரு பெண்ணும் குழந்தையுடன் ஒருவரையொருவர் முந்தியும் தங்களுக்குள்  ஒட்டியும் அர்ஜுனனை நோக்கி சென்றனர். அவன் ஒவ்வொரு குழந்தையாக எடுத்து அவற்றின் வலக்கையில் தன் கையை வைத்து “வில் சூடுக!” என்று வாழ்த்தினான். குழந்தைகள் கையில் இல்லாத பெண்கள் குழந்தை ஏந்திய பெண்களின் தோளை அணைத்தபடி உடன் சென்றனர். அர்ஜுனன் முன் சென்று நின்று அவன் உடலை தங்கள் விழிகளால் முழுதும் தொட்டு நோக்கினர்.  அவன் உடலில் இருந்த வடுக்கள் பாலுறுப்பு என அவர்களை கிளரச் செய்தன.

பெண்கள் நிரை முடிந்ததும் இளையோரிடம் சென்று “படைக்கலம் கொள்க!” என்றார் குலமுதியவர். ஒரு கூடை நிறைய அம்புகளும் குறுவாட்களும் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அக்குலத்து இளையோர் சென்று அர்ஜுனன் முன் பணிந்து அவன் கால்களைத் தொட்டு சென்னி சூடினர். அவன் அம்பையோ குறுவாளையோ எடுத்து அவர்களிடம் கொடுத்து “வெற்றி திகழ்க!” என்று வாழ்த்தினான். அவன் கையில் இருந்து வாள் பெற்றவர்கள் அது எடை மிக்கது என்பது போல் தசை அதிரப் பெற்றனர். சிலர் உளம் பொங்கி விழிநீர் மல்கினர். சிலர் மீண்டும் ஒரு முறை குனிந்து அவன் கால்களைத் தொட்டு வணங்கினர். அவன் கைகள் தங்கள் கைகளில் பட்டபோது மெய்விதிர்ப்பு கொண்டனர்.

வாழ்த்துக்கள் முடிந்ததும் அர்ஜுனன் கைகூப்பி “நன்று திகழ்க! இச்சிற்றூரில் ஒருநாள் உணவருந்தியிருக்கிறேன். நானும் எங்கள் குலமும் உங்கள் ஊருக்கு கடன்பட்டவர்கள். நான் செல்கையில் இச்சிற்றூரின் வெளியே நிற்கும் கொன்றை மரத்தில் என் இலச்சினையை பொறித்துவிட்டுச் செல்வேன். இச்சிற்றூருக்குள் நுழையும் யாரும் இது எனது மண் என உணரவேண்டும். இனி இச்சிற்றூர் எவ்வரசுக்கும் திறை அளிக்கலாகாது. எனது ஆணை கொண்டு இங்கு அமர்ந்திருக்கும் இவ்வூர்த்தலைவரை மீறி இச்சிற்றூருக்குள் நுழைபவன் எவராயினும், இவர் விரும்பாததைச் செய்பவன் யாராயினும், இந்திரப்பிரஸ்தத்தின் பகைமையை ஈட்டிக்கொள்கிறான்.  அவனை வென்று குலமறுக்கும் என் சொல். என் குலத்தின் இறுதி மைந்தன் இருக்கும்வரை என் சொல் வாழும்” என்றான்.

குலத்தலைவர் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கி அடைத்த குரலில் “வெல்க! வெல்க பார்த்தன் புகழ்!” என்றார். உடனே உளம் உடைந்து தேம்பி அழத்தொடங்கினார். “எங்கள் குடி இனி வென்று பெருகும். தெய்வங்களே, இதற்குமேல் நாங்கள் ஈட்டுவதற்கேதுமில்லை. எங்கள் மூதாதையர் செய்த நல்லூழால் இது எய்தப்பெற்றது” என்றார் ஒருவர். முதியவர்களும் பெண்களும் விழிநீர் பெருக நெஞ்சில் கைவைத்து நின்றனர்.

அர்ஜுனன் மன்றிலிருந்து இறங்கி முற்றத்திற்கு வந்தபோது அவன்முன் முதலில் வந்துநின்ற பெண் கைதூக்கி உரத்த குரலில் “தென்றிசைக்குச் செல்க!” என்றாள். அவன் திரும்பி நோக்க அவள் விழிகள் உருள கைகள் விரைத்து உடலுடன் ஒட்டியிருக்க “தென்றிசையினை வெல்க!” என்றாள். அவள் கருவிழிகள் மேலேறியிருக்க கண்கள் வெண்ணிறப்புள்ளிகளாகத் தெரிந்தன.

“ராதை, என்ன இது?” என அவள் அன்னை அருகே கைநீட்டியபடி செல்ல அவள் “உம்” என்றாள். அவ்வொலியில் அன்னை திகைத்து பின்னடைந்தாள். அவளைச் சூழ்ந்து நின்ற அனைவரும் விலகி வழிவிட்டார்கள். அவள் இறுகிய கால்களுடன் படியிறங்கி வந்தாள். “மூதாதையரை வெல்லாதவனுக்கு புதிய வழிகள் இல்லை. குலம்பழிக்க வாழ்பவர்களுக்குரியது தெய்வங்களின் படைக்கலம்” என்றாள்.

அர்ஜுனன் அவளை நோக்கி நின்றான். அவள் சென்று காண்டீபத்தை இடக்கையால் எடுத்துவந்து அவனிடம் நீட்டி “கொள்க!” என்றாள். அவன் தலைவணங்கி அதை இருகைகளாலும் பெற்றுக்கொண்டான்.

பிரயாகை 13

பிரயாகை 14

தொடர்புடைய பதிவுகள்

காப்பன்

$
0
0

e7f3c017321cdfed3909750fa60ef284

 

மணி ரத்னத்தின் ஆணையை ஏற்று அனைத்தையும் தானே செய்து அஜிதன் எடுத்த குறும்படம் இது. ஆனால் அவனுக்குப்பிடித்தமான டெரன்ஸ் மாலிக் போல என்ன ஏது என்று தெரியாமல் படிமங்களாகவே இருக்கிறது. வழக்கமான குறும்பட, திரைப்பட ரசிகர்களுக்குரியது அல்ல. திரைப்படம் சிறுகதை, நாவல் ஆகியவற்றுக்கு நெருக்கமானது அல்ல அது நவீனக் கவிதைக்கு அணுக்கமான என்று எண்ணும் பள்ளி இது. இது ஒருவகை காட்சிக்கவிதை . நவீனக்கவிதைக்குரிய எதிர்மறை அழகியலும் அராஜகத்தன்மையும் இருண்மையும் கொண்டது.

 

மணிரத்னத்தை  இலக்காக்கி எடுக்கப்பட்டது இது. அவருக்கு கொண்டுபோய் போட்டுக்காட்டினான். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதோடு உலகைவென்ற நிறைவுடன் படம் தூக்கிப் போடப்பட்டது. நான் வற்புறுத்தி வலையேற்றச் செய்தேன்.

 

அஜிதனின் கல்லூரி நண்பன் தாமரை காமிரா பற்ற உதவினான். ஒரே ஒரு 5டி காமிரா அன்றி பிற கருவிகள் இல்லை. விளக்குகள் காமிராவை நகரச்செய்யும் கருவிகள் ஏதும் இல்லை.படப்ப்பிடிப்புக்குழு தாமரையும் அஜிதனும் மட்டுமே. ஒலிச்சேர்ப்பு, படத்தொகுப்பு உட்பட அனைத்துத் தொழில்நுட்பங்களும் இலவச மென்பொருட்களால் அஜிதனால் வீட்டிலேயே செய்யப்பட்டன. நடிகர்களுக்கான   ‘ஊதியம்’ உடபட மொத்தச்செலவும் ரூ 6000.

 

இதை வலையேற்றி இச்செலவையும் இதை எடுத்த முறையையும் ஏன் சொல்கிறேன் என்றால் நாம் மாற்றுத் திரைப்படங்களை அனேகமாக முற்றிலும் பணச்செலவில்லாமலேயே எடுத்துவிடமுடியும் என்பதற்காகத்தான். சிற்றிதழ் இயக்கம் போல சினிமா இயக்கமும் நிகழமுடியும். அது நமக்குரிய கலையாக அமையக்கூடும்

 

 

 

===========================================

 

ஜெயமோகன் நீர் நிலம் நெருப்பு ஆவணப்படம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கெய்ஷா [சிறுகதை ]

$
0
0

 

geisha-001

 

அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒருபெயர்போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை

கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் செல்லும்போதும் அனைத்து முனைகளிலும் ஆணின் அகங்காரத்தையும் நிறைவு செய்யப்பயின்றவர்கள். நமது குலப்பெண்கள் ஆணின் அகங்காரத்தை அலட்சியம் செய்வதற்கு ஓரிரு வருடங்களிலேயே பழகிவிடுகிறார்கள்.

கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கையில் பணத்துடன் ஜப்பானுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கனவு விதைக்கப்பட்டிருக்கும். அங்கு உயர்மட்டச் சுற்றுலா பயணிகளிடம் உள்ளூர் வழிகாட்டிகள் ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகிதப் பொம்மைக் கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான சுற்றுலாக்கவர்ச்சிகளைப் பற்றி சொல்லிச்செல்கையில் மிக இயல்பாக வழுக்கி கெய்ஷாக்களுக்குள் செல்வார்கள். கேட்பவன் தன் தனி ஆர்வத்தை கண்களில் காட்டாமல் இருக்க முயன்றாலும் அவர்கள் அதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வார்கள்.

பல வழக்கமான சொற்றொடர்களுக்குப் பிறகு “இப்போது இருக்கிறார்களா கெய்ஷாக்கள்?” என்று அவன் கேட்கால் இருக்க மாட்டான். “இருக்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாகவே…” என்று வழிகாட்டி பதில் சொல்வான். மீண்டும் பல சொற்றொடர்களில் சுற்றியபின் வேறெங்கோ நோக்கியபடி “ஒரு கெய்ஷாவை சந்திக்க முடியுமா?” என்று பயணி வரலாற்றுப்பண்பாட்டு ஆர்வத்துடன் கேட்பான். “கடினம்” என்பான் வழிகாட்டி. மீண்டும் சொற்றொடர்கள். மீண்டும் விழிச்சந்திப்புகள். அதன் பிறகு “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என்று பயணி சொல்லியாக வேண்டும்

கவலையுடன் “சற்று செலவேறியதுதான். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். விசாரித்துப்பார்க்கிறேன். ஒரு நாள் ஆகும். ஆனால் முழுமையாக உறுதி தரமுடியாது, மன்னிக்கவும்” என்று வழிகாட்டி சொல்வான். அவன் திரும்பிவரும்வரை நான் காத்திருந்தேன்

அந்த ஒரு முழுநாளும் அற்புதமானது. இணையத்திலும் வழிகாட்டி நூல்களிலும் சென்று கெய்ஷாக்களைப்பற்றி தேடி தெரிந்து கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரே விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் குறைவான தகவல்களிலிருந்து கற்பனைகளை விரித்தெடுக்கலாம்.

காமக்கலைகள்! காமத்தை எப்படி ஒரு கலையாக்க முடியும்? என்னதான் செய்தாலும் அடிப்படையில் அது அனைத்து விலங்குகளும் செய்யும் ஒரு செயல். சரியாகச் சொல்லப்போனால் மிருகத்தனமானது. அதிலிருக்கும் இன்பமே மிருகத்தனத்தின் களிப்புதான். மனிதர்கள் மனிதத்தன்மை என்று அவர்களுக்கு குழந்தையிலிருந்து கற்பிக்கப்பட்ட அத்தனையும் உதறிவிட்டு வெறும் மிருகங்களாக இருக்கும் அந்த சில நிமிடங்களுக்காகத்தான் அதன்மேல் அத்தனை பற்றுக் கொண்டிருக்கிறார்களா? உண்பதிலும் காமத்திலும்தான் வாய் அத்தனைமுக்கியத்துவம் பெற முடியும். ஏனென்றால் மனிதன் அப்போது விலங்கு

ஆனால் அந்த எளிய மிருகச் செயல்பாட்டின் மீதுதான் உலகத்தின் அத்தனை கவிதைகளையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அத்தனை கலைகளையும் அதைச் சார்ந்தேதான் நிகழ்த்துகிறார்கள். நினைத்துத் தீராத அத்தனை மெல்லுணர்வுகளையும் அதன் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து சென்று அந்த சில அப்பட்டமான நிமிடங்களை அடைய வேண்டும். எழுந்தவுடன் கழற்றி வைத்த ஆடைகளை அணியும் பரபரப்புடன் அத்தனை சொற்களையும் எடுத்து மேலே போட்டுக்கொள்ள வேண்டும். கெய்ஷாக்கள் கலை என்பது எதை? அணிவிப்பதையா? கழற்றுவதையா?

ஜப்பானிய தேநீர் கலையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் அப்படித்தான் வழக்கமாகத் தேநீர் அருந்துகிறார்கள் என்றால் அது தேநீரே அல்ல. அல்லது அவர்கள் மனநோயாளிகள். மிக சொகுசான, மிக அரியதான ஒன்றை அருந்துவதான பாவனை மட்டும்தான் அது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பழகி வைத்திருக்கும் ஒரு நாடகம், நாட்டியம் என்று சொல்ல வேண்டும். பீங்கான் குடுவையை எடுத்து நீர் நிரப்பி அனலில் வைப்பது தொடங்கி கிண்ணங்களை எடுத்து பரப்புவது, நிமிர்த்து வைப்பது, கால் மடித்து அமர்வது, உடல் வளைத்து வணங்குவது என்று அதன் அத்தனை அசைவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை.

ஜப்பானிய தேநீர் விருந்தில் தேநீரே தேவையில்லை. கெய்ஷாக்களின் காமவிருந்தில் கடைசியில் காமமே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ  என்று நினைத்தபோது என் விடுதி அறையில் படுத்திருந்தபடி சிரித்துக் கொண்டேன். காமம் என்று இருக்கும் வரைக்கும் ஒரு கலையென அது ஆகமுடியாது கலை என்பது ஒரு பொருளின் மேல் ஒரு வார்த்தையின்மேல் அல்லது செயலின்மேல் மேலும் மேலும் அர்த்தங்களை ஏற்றி வைப்பது. படிமங்கள் தான் கலை. ஒரு நாற்காலியை, மேசை விரிப்பை, மலர்க்கிண்ணத்தை எதை வேண்டுமானாலும் முடிவின்றி விரியும் அர்த்தம் கொண்டதாக ஆக்கும் போதுதான் அது கலை. காமத்தை அப்படி ஆக்கிவிட முடியுமா? எத்தனை அர்த்தங்களை ஏற்றினாலும் அது கடைசியில் இயற்கை அளித்த ஒற்றை அர்த்தத்தில்தானே வந்து நிற்கும்?

அதைக் கலையாக்குவதற்காகத்தானே அத்தனை வருடங்களாக கவிதையையும் கதைகளையும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். காதல் என்னும் வார்த்தையாக அதை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் காலம் தேவை. ஒன்றுடன் ஒன்று இணைந்த நூற்றுக்கணக்கான உணர்வுகளைத் தொடுத்து காமத்தைச் சுற்றி அமைத்து அதை அமரகாதலாக ஆக்குவதற்கு அதுவரைக்கும் மனித இனம் உருவாக்கிய அனைத்து நுண்கலைகளும் தேவை. கூடவே காமம் என்றால் என்னவென்றறியாத இளமை. காமம் சற்றே சலித்துப்போன நாற்பது வயதான பயணிக்கு சிலமணி நேரங்கள் உடன் தங்கிப்போகும் ஒரு பெண் காமத்தை எப்படி கலையாக ஆக்க முடியும்?

அவள் கெய்ஷா உடையில் வருவாளென்று நான் நினைத்திருந்தேன். நூல்களில் கெய்ஷாக்களின் பல்வேறு உடைகள் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் மெத்தைபோல எதையோ கட்டிக்கொண்டவர்கள். கால்வரைவழியும் பெரிய கிமோனாக்கள். பழைய பாணி ஜப்பானிய ஓவியங்களில் வெளிறிய வண்ணங்களில் வரைந்து மேலும் வெளிற வைப்பதற்காக லேசாக நீர் தெளித்து ஒற்றி எடுக்கப்பட்ட ஓவியங்கள். கண்ணாடியில் ஒளிஊடுருவும் தன்மையுடன் ஆடைகள்.

வந்தவள் சிறுமியோ என்று தோற்றமளிக்கும் சிறிய உடல் கொண்ட இளம்பெண். நவீன மேலை நாட்டுக் குட்டைப்பாவாடை அணிந்திருந்தாள். ஒரு பதின்பருவத்து சிறுவனைப்போல் இருந்தாள். சிறிய கண்கள் இரண்டு நீர்த்துளிகள் போல. சிமிழ் போன்ற மிகச்சிறிய உதடுகள். மாசுமருவற்ற மஞ்சள் நிறம். தோல்நிறத்தில் மஞ்சளுக்கு நிகரானது பிறிதொன்றில்லை. வெள்ளையர் தோல்கள் சுருக்கங்களும் புள்ளிகளும் நிறைந்தவை கரியதோல்கள் ஒளியற்றவை .மாநிறத்தோல் மட்டுமே இந்தியாவில் அழகு கொண்டது. ஆனால் மஞ்சள்நிறத்தோல்  தோலா உலோகமா என்றஅறியாத அளவுக்கு மெருகுகொண்டது

அவள் என்னை உடல் வளைத்து முறைப்படி வணங்கி முகமன் சொன்னாள். நான் அவளை வரவேற்றதும் பணிவுடன் நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பையை மேஜைமேல் வைத்தாள். வழிகாட்டி என்னிடம் தனியாக வந்து குனிந்து “புகழ்பெற்ற கெய்ஷா குடும்பத்தைச் சேர்ந்தவள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்கிறாள். இந்தியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார் என்றேன். அதை நம்பி வந்திருக்கிறாள். அந்த வார்த்தையை நீங்கள் வாய்தவறாமல் கொண்டு செல்லுங்கள்” என்றான்.

“நான் உண்மையிலேயே அரசகுடும்பத்தைச் சார்ந்தவன் தான்” என்றேன். அவன் கண்கள் ஐயத்துடன் சற்று மாற ”அப்படியானால் நன்று” என்றான். “இவள் கெய்ஷாவா? உண்மையிலேயே?” என்றேன். “ஆம், கெய்ஷாக்கள் என்பவர்கள் சில குடும்பங்களில் தொன்மையான மரபாக வருபவர்கள். காதற்கலையை அவர்கள் தங்கள் பாட்டிகளிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கலைதான் அவளைக் கெய்ஷாவாக்குகிறது. மற்றபடி அவளும் பிறரைப்போல இந்தக் காலத்தில் வாழ்பவள் தான். இந்தப்பெண் இங்கே டோக்கியோவில் ஒரு கல்லூரியில் படிக்கிறாள். படித்து முடித்தபின் எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் செல்வாள். குழந்தைகளை பெற்றுக் கொள்வாள். பிறரைப் போல் தான் அவள் வாழ்வு இருக்கும். ”

நான் “அதுவும் நன்று தான்” என்றேன். அவன் புன்னகையுடன் “அவர்கள் இரவில் மட்டும் தான் கெய்ஷாக்கள்” என்றான். நான் “நன்று” என்று சொல்லி அவன் தோளில் தட்டினேன். “இதற்கான பணத்தை நீங்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாம். அதை நான் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் அதை செலுத்த முடியும்” என்றான். “சரி” என்றேன்.

“அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே செலுத்திவிடலாம். நீங்கள் செலுத்தின தகவலை அவளுக்கு நான் அனுப்பின பிறகுதான் அவள் கெய்ஷாவாக மாறுவாள்” என்றான். அவன் சொல்வதை நான் புரிந்து கொண்டு மீண்டும் “சரி” என்றேன். “சற்றுப்பெரிய தொகை” என்று அவன் சொன்னான். “சரி நண்பா…” என்று அவன் தோளில் மீண்டும் தட்டினேன்

அவன் மும்முறை வணங்கி வெளியே சென்று கதவை மூடினான். நான் திரும்பி வரும்போது அவள் கண்ணாடித் திரையிடப்பட்ட பெரிய சாளரத்தின் அருகே நாற்காலியில் பள்ளிக்கூடப்பெண் போல கால்களை மடித்துக் கொண்டு கைகளைக் கட்டி அமர்ந்திருந்தாள் நான் வந்த போது இயல்பான பணிவுடன் எழுந்து நின்று புன்னகை செய்தாள். நான் அவள் அருகே அமர்ந்தேன். முதலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னர் சொற்களை தெரிவுசெய்தேன்

“நான் கெய்ஷா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே தான் உன்னை வரச்சொன்னேன்” என்றேன். “கெய்ஷா என்றால் இரவில் வாழ்பவள் என்று பொருள்” என்றாள். “அப்படியா? விக்கிப்பீடியாவில் அப்படி இல்லையே” என்றேன். “ஜப்பானிய சொற்களை எழுதும் முறையால் அர்த்தம் கொள்ளச்செய்யமுடியும். நாங்கள் கெய்கோ என்போம்” என்றாள். ”ஆம், அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

“இரவுகளில் மட்டும் ஒரு ஆளுமையை அணிந்து கொண்டு காலையில் கழற்றிவிடுபவர்கள் கெய்ஷாக்கள். உண்மையில் பகலில் சூரியன் எழுவதற்கு முன்பே அவர்கள் இறந்து விடுகிறார்கள்” என்றாள். நான் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.  கெய்ஷாப் பண்பாடு பற்றி ஒரு பேருரை ஆற்றப்போகிறாளா என்று சலிப்பு ஏற்பட்டது. “ஆகவே இரவில்பார்த்த கெய்கோவை பகலில்தேடக்கூடாது”  என்றாள். அதைச் சொல்லத்தானா என நினைத்துக்கொண்டு “நான் நாளை மாலை இங்கிருந்து இந்தியா கிளம்புகிறேன்” என்றேன்.

“கெய்ஷாக்கள் இரவில் அணியும் அனைத்தையும் பகலில் துறந்துவிடுவதனால் இரவில் செய்யும் எந்த பாவமும் அவர்களைத் தொடர்ந்து வருவதில்லை. தொல்பழங்காலத்தில் அரசர்களுக்காக கெய்ஷாக்கள் கொலைகளையும் செய்திருக்கிறார்கள்” என்றாள். நான் சிரித்தபடி, “எனது தொழில் போட்டியாளர்களால் நீ இங்கு அனுப்பப்படவில்லை அல்லவா?” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டு, “பெரும்பாலும் இல்லை” என்றாள். “ அய்யோ! பயமாக இருக்கிறதே. . ” என்று நான் நடித்தேன். இருவரும் சிரித்த போது சற்று அணுகினோம். இருவர் அணுகிவருவதற்கு நடிப்பு சிறந்த வழிமுறை

பின்னர் எளிய அறிமுகச்சொற்களை பேசிக்கொண்டோம். என்னைப்பற்றிச் சொன்னேன். நான் ஒரு நாளிதழின் ஆசிரியன், எட்டுநூல்களை எழுதியிருக்கிறேன் என்றதும் மெல்லிய புருவங்கள் வளைய வியப்புடன் “அப்படியா?” என்றாள். “என் சொந்தப் பத்திரிகை. என் தாத்தா தொடங்கியது” என்றேன். பத்திரிகையின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. “இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத்து நாளிதழ்” என்றேன். அவள் என் நூல்களைப்பற்றிக் கேட்டாள். ஆறுநூல்கள் அரசியல். இரண்டுநூல்கள் பயணம். “நாவல் எழுதும் எண்ணம் உண்டு” என்றேன்.

அவள் சிரித்தபடி “இதழாளர்கள் நாவல் எழுதுவதுதான் இப்போது பொதுப்போக்கு. பதிப்பாளர் விரும்புவார்கள்” என்றாள். நான் புருவத்தைச் சுருக்கி “ஏன்?” என்றேன். “மற்ற இதழாளர்கள் பாராட்டி மதிப்புரை எழுதுவார்கள்” என்றாள். சுரீலென்று கோபம்வந்தாலும் உடனே அதைக்கடந்து சிரித்துவிட்டேன். “உண்மை, ஆனால் என் நாவல் மற்ற பத்திரிகையாளர்களை விமர்சிப்பதாகவே இருக்கும். எல்லாரும் வசைபாடுவார்கள்” என்றபின் “நீ படிப்பாயா?” என்றேன். “எனக்கு இளமையிலேயே இலக்கியம் கற்பித்திருக்கிறார்கள்” என்றாள்.

அவள் மது அருந்துவாளா என்று கேட்டேன். ஒயின் மட்டும் என்றாள். நானும் அதையே விரும்புவதாகச் சொன்னேன். அவளே ஒயினைப் பரிமாறினாள். “ஒயின் பரிமாறுவதில் கெய்ஷா முறை என ஒன்றும் இல்லையா?” என்றேன். “கெய்ஷா சடங்குகள் விரிவானவை. ஆனால் கெய்ஷாமுறை என்பது அச்சடங்குகள் அல்ல” என்றாள்.

நான் “கெய்ஷாக்களுக்கு காமத்தில் நுட்பமான பல கலைகள் தெரியும் என்கிறார்களே” என்றேன். “ஜப்பானிய தேநீர் விருந்து போல அது ஒரு பெரிய நடிப்பாக இருக்கும். அலங்கார உடைகளும் முறைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் சடங்குகளும் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்”

அவள் சிரித்தபடி, “அத்தனைக்கும் பிறகு நீங்கள் காமத்தில் ஈடுபட்டதாக வெறுமே கற்பனை செய்து கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பணத்தை அளிப்பீர்களா?” என்றாள். “பணத்தை அளித்த குறுஞ்செய்தி வந்துவிட்டதா?” என்று நான் கேட்டேன். அவள் முகம் சற்று மாறி “ஆமாம்” என்றாள். அதை மாற்றும்பொருட்டு நான் “காமத்தில் நீ புதிதாக எனக்கு எதைக் கற்றுத்தரப்போகிறாய்?” என்றேன்.

“உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் இணையத்தில் இல்லாததே இல்லை. எனது பாட்டி ஒருமுறை இணையத்தில் இந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இப்படியெல்லாமா இப்படியெல்லாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நாற்பது ஆண்டுகாலம் கெய்ஷாவாக வாழ்ந்த அனுபவம் உடையவள்” என்றாள்.

நான் சிரித்து “ஆம். மனித உடலில் இனி என்ன செய்வதற்கு உண்டென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “உனக்குத் தெரியுமா? தூக்கு போட்டுக் கொண்டு உறவு கொள்ளும் முறை ஒன்று உண்டு”

அவள் கண்கள் இடுங்கச் சிரித்தபடி ”தூக்குப்போட்டபடியா?” என்றாள். “ஆம். கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு பெண்ணுடன் குலாவுவார்கள். உச்சகட்டம் நெருங்கும்போது காலின் கீழ் இருக்கும் முக்காலியை உதைத்துவிடுவார்கள். கழுத்து இறுகி, மூச்சு நின்று மூளைக்கு ரத்தம் போவது குறையும் தருணத்தில் பலவகையான மாயக்காட்சிகள் தோன்றும். அப்போது காமத்தின் உச்சகணம் நிகழவேண்டும். மிகச் சரியான தருணத்தில் கயிறை அழுத்திக் கீழே விழவைத்து சுருக்கை விடுவித்து ஆக்சிஜனை கொடுத்து உயிரை மீட்டுவிடுவார்கள். காலம், இடம் எல்லாம் அழிந்து காமத்தின் உச்சம் மட்டுமே நிறைந்த ஒன்று அந்தக்கணம் என்கிறார்கள்”

“பாவம், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்படி தேடிச்செல்லத் தொடங்கினால் சாவுவரை செல்லமுடியும், அவ்வளவுதான்” என்று அவள் சொன்னாள். நான் “இப்படி செய்யப்பட்ட முயற்சியில் ஒருவர் இறந்து அதை போலீசார் புலன் விசாரணை செய்த போது தான் இப்படி ஒரு இணையக் குழுமம் இருப்பதே தெரியவந்தது” என்றேன். ““பலவகையான பைத்தியங்கள் இருக்கிறார்கள். உறவின்போது கேவலமாக வசை பாடிக் கொள்வது, கொடூரமாக வதைத்துக் கொள்வது, பலவகையான மாத்திரைகளை உண்பது, மூளைக்குள் அதிர்வுகளை அளிக்கும் ரசாயனங்களை உடலில் செலுத்திக் கொள்வது. உச்சகட்டம் நிகழும் போது சரியான தருணத்தில் தலையில் உடலிலும் மின்சார அதிர்ச்சி அளிக்கும் ஒரு முறை கூட உள்ளது. என்ன செய்தாலும் அதற்கு அடுத்த கட்டம் ஒன்று தேவைப்படுகிறது” என்றேன்.

அவள் சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்கிறேன் என்று பட்டது. “நாம் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நான் கேட்டேன். “நீங்கள் தான் இதை பேச விரும்புகிறீர்கள். இதைச் சுற்றி ஒரு மர்மத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “இருக்கலாம்… இதுசாதாரணமாக முடியக்கூடாது என ஆசைப்படுகிறேன்” என்றேன்.

அவள் “இங்கும் அதெல்லாம் இருந்தது. பழைய காலத்தில் ஜப்பனிய அரசர்கள் தங்கள் உறவுகொள்ளும் பெண்ணின் கழுத்தை பட்டு நூலால் இறுக்கியபடியே அதைச் செய்வார்கள். மூச்சு திணறி அவள் இறக்கும் அந்த கடைசித்துடிப்பு அவருடைய உச்ச கணமாக இணையும்போது அது மிகப்பெரிய இன்பத்தை அளிக்கிறது என்பார்கள்” என்றாள்.

நான் சிரித்தபடி “ஆம் , அடுத்தபடி சாவு அல்லது கொலை என்பதுவரை சென்றுவிட்டார்கள்” என்றேன். “உண்மையில் உடல் சார்ந்த எல்லாமே எனக்கும் சலித்துவிட்டன. விசித்திரம் என்பது எதுவரை என்று தெரிந்துவிட்டது. கற்பனையில் எதாவது புதிதாக நடக்குமா என்று பார்க்கிறேன். இந்த நிகழ்காலத்திலிருந்து முன்னோ, பின்னோ சென்று கொண்டிருக்கிறேன். விண்வெளியில் காமம் கொண்டாடலாம். அல்லது செவ்வாய் கிரகத்தில், அல்லது சோழர் காலத்தில் ஒரு பரத்தையுடன், அல்லது ஒரு கெய்ஷாவுடன்” என்றேன்.

அவள் சிரித்து, “இதை முன்னரே சொல்லியிருந்தால் என் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அங்கு இருநூறாண்டு பழைமையான அறைகள் இரண்டு உள்ளன. என் பாட்டி அணிந்த பழைய கெய்ஷா உடைகளும் நகைகளும் கூட இருக்கின்றன” என்றாள்.

“பரவாயில்லை இது ஒரு பாவனை தானே, நீ இப்போது இருநூறாண்டு முன்பிருக்கும் ஒரு கெய்ஷா. நான் இருநூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கு வியாபாரம் செய்யவந்த ஒரு கடல்வணிகன்”

அவள் ”நீங்கள் அரச குலத்தார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சிரித்தபடி “சரி அதுவும் ஒரு பாவனை தானே…” என்றாள். நான் உரக்க சிரித்துவிட்டேன். சிரிக்கச் சிரிக்க இருவரும் இயல்பான மனநிலைகொண்டோம். ஒயினும் இணைய ஒரு மெல்லிய மிதப்பு எங்களை ஆட்கொண்டது

“இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கெய்ஷாவாக நடிக்க வேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். கெய்ஷாவால் உபரிசிக்கப்படும் வணிகனாக நானும் நடிக்கிறேன்” என்றேன்.

அவள் எழுந்து பழைய ஜப்பானியய நடனஅசைவுகளுடன் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னாள். நான் சிரித்தபடி மெத்தையில் விழுந்துவிட்டேன். அவள் நிறுத்தி இடையில் கைவைத்து “ஏன்?” என்றாள்.

“கடந்து போனவை இந்த நிகழ்காலத்தில் அவை எல்லாம் கேலிப்பொருளாகத்தான் இருக்கும். இன்று டோக்கியோவின் தெருவில் ஒரு சாமுராயைப்பார்த்தால் மக்கள் அவருக்கு காசுகளை வீச ஆரம்பிப்பார்கள். அவர் தன் கடானாவால் முதுகைச் சொறிந்துகாட்டினால் அது அதற்கான கருவி என்று நம்புவார்கள்”

அவள் சிரித்தபடி பாய்ந்து மெத்தையில் விழுந்து என் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உதடுகளில் உதடு பதித்து ஆழ்ந்து முத்தமிட்டாள். பின்பு என் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்து தோள்களைப்பற்றி என் கண்களுக்குள் நோக்கியபடி “எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள். ” என்றாள்.

“ஆம் அதுதான் என்னுடைய பிரச்னை” என்றேன். அவள் “கிழித்து கிழித்து எங்கே செல்கிறோம். கடைசியில் கசப்பும் துயரமும் தான் இருக்கும். ” என்றாள். “யாருக்குமா?” என்று நான் கேட்டேன். “யாராக இருந்தாலும். கிழித்து சென்றால் விஷம்தான் மிஞ்சும்” என்று அவள் சொன்னாள்

ஒருவரை ஒருவர் கண்களுக்குள் நோக்கிக் கொண்டோம். நான் அவளை சுழற்றி கீழே படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து. அவள் உதடுகளை முத்தமிட்டேன். மிகச்சிறிய உதடுகள். “மிகச்சிறியவை. எனக்கு இவை போதாது” என்றேன். “கற்பனையில் வளர்த்துக்கொள்ளுங்கள் அப்படித்தானே காமத்தில் செய்யவேண்டும்” என்றாள் அவள். சிரித்தபடி இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்.

“நான் கெய்ஷா அல்ல, ஒர் எளிய பெண் என்று பாவனைசெய்வோம். நீங்களும் ஒரு எளிய பெண்ணை விரும்பி வந்த ஒருவர். இங்கு இப்படி உடலால் இணைந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கிறது. இதற்கப்பால் ஒன்றும் தேவையில்லை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் சொன்னாள்.

நான் அவள் காதில் “கெய்ஷாவின் காமக்கலை என்கிறார்களே? அது உண்மையில் என்ன?” என்றேன். “இதுதான்” என்று அவள் சொன்னாள். “அன்றைய அரசர்கள் அடுக்கடுக்காக ஏராளமான பட்டு ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பார்கள். உடைவாளையும் மணிமுடியையும் விலக்கவே மாட்டார்கள். பேசுவது எல்லாமே முறைமை சார்ந்த சொற்களைத்தான். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருமே அடிமைகளும், ஊழியர்களும், அவர்களுக்குச் சமானமான நிலை கொண்ட பிற அரசர்களும் தான். ஒவ்வொருவரிடமும் எப்படி பேசவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வகுக்கப்பட்ட நெறிகள் இருந்தன. ”

அவள் தொடர்ந்தாள். “அவர்கள் வாழ்வதில்லை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய காவியத்திற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பேசுவதும் செய்வதும் உடனடியாக கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டு நூல்களாக வெளிவருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். காதலுக்கும் காமத்துக்கும் அவர்கள் செல்வது கூட பலவகையான வசனங்களை மனப்பாடம் செய்து பயின்று, பலவகையான நடிப்புகளைப்பழகிக்கொண்டுதான். மனைவிகளும் காதலிகளும்கூட அவர்களுக்கு அடிமைகள். அடிமைப்பெண்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட விலங்குகள். செயற்கையான நாடக நடிப்பில் இருந்து தொடங்குவார்கள். அதன் மறு எல்லைக்குச் சென்று விலங்கு போல அந்தப்பெண்ணை கிழித்து கொன்று  காமம் அடைவார்கள். ”

“கெய்ஷாக்களிடம் வரும்போதும் அவர்கள் அந்த பாவனைகள் அனைத்தையும் கொண்டுதான் வருவார்கள். கெய்ஷா அவர்களின் அவர்களை அஞ்சாமலும் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும் அதேசமயம் அவர்களை கோபம்கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைகொண்டவள். அவர்கள் அணிந்துவரும் பாவனைகள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதனாக ஆக்கிவிடுவாள். அதன் பின் அவளுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் எளிய விலங்குகளாக இருப்பார்கள். அந்தச் சுதந்திரத்தை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் உண்மை உருவத்தை மீட்டு எடுக்கும் கலையைத்தான் கெய்ஷாக்கலை என்கிறார்கள். ”

”எனக்குள்ளிருந்து என் உண்மை உருவத்தை மீட்டெடு பார்ப்போம் என்று” நான் குறும்பாக சிரித்தபடி சொன்னேன். “கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். காலைக்குள் முழுமையாக வெளியே எடுத்து வைத்துவிடுவேன் போதுமா?” என்று அவள் சொல்லி “என்ன கேள்வி” என்று செல்லமாக என்னை அடித்தாள். என் மூக்கைப்பிடித்து இழுத்து “என்னவேண்டும் உங்களுக்கு?” என்றாள்

“நான் எங்கும் ஆடையின்றி நிற்கவே விரும்புவேன். ஆனால் ஆடையின்றி நிற்பதே கூட ஒரு பாவனைதான் என்று ஆகிவிடுகிறது” என்று நான் சொன்னேன். “ஆமாம். இங்கே வடக்கு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. ஆன்சென் என்பார்கள் அங்கு ரெய்க்கோன் எனப்படும் நிர்வாணமாக அனைவரும் சேர்ந்து குளிக்கும் குளியல்மையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் தெரியும் நிர்வாணமென்பதே ஒரு ஆடை மாதிரி. நிர்வாணத்தாலேயே நம் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளமுடியும்”

“ஆடையில்லாமை என்பதுமட்டும்தான் அது. அதற்கு அப்பால் ஏதாவது நிர்வாணம் உண்டா என்ன?” என்று நான் கேட்டேன். ”ஆமாம் அது புத்தர் சொன்ன நிர்வாணம்” என்றாள். “அடப்பாவி அதையா இப்போது எனக்கு அளிக்கப்போகிறாய்? அதற்கா அவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாய்?” என்று நான் செல்லமாக அலறினேன். “சரியான முட்டாள்” என்றபடி என் தோளை ஓங்கி அறைந்தாள். “அடிக்கிறாய்…” என்று சிணுங்கினேன்.

”கெய்ஷாக்கள் அடிப்பதும் உண்டு. வசைபாடுவதும் உண்டு. மன்னர்களுக்கு அது பிடிக்கும். அவர்களை வேறுயார் அடிக்கமுடியும்?” என்றாள். ”இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்றேன். “உங்களை கொஞ்சப்போகிறேன். நீங்கள் ஒரு ஆண். கொஞ்சி கொஞ்சி உங்களை ஒரு கைக்குழந்தையாக்குவேன். என் மடியில் போட்டுக் கொள்வேன். ” என்றாள். நான் அவள் காதில் “பால் கொடுப்பாயா…?” என்றேன். “சீ” என்று அவள் என் தலையில் கொட்டினாள்.

நுணுக்கமான கொஞ்சல்கள், பாவனைகள், பரிமாறுதல்கள் வழியாக எங்கள் உடல்களை ஒன்றை ஒன்று அறியச் செய்தோம். பின்னர் பேச்சு நின்றது. பின்னர் பார்வைகளும் இல்லாமல் ஆயின. உடல்கள் மட்டும் ஒன்றை ஒன்று அறிந்தன.

பிற எந்தக் காமத்தையும் போலத்தான் அது என்று ஒரு தருணமும், அது மிக விசேஷமானது என்று இன்னொரு தருணமும் தோன்றிக்கொண்டிருந்தது. எல்லாக் காம உறவைப்பற்றியும் அப்படித்தானே தோன்றும் என்றும் நினைத்துக் கொண்டேன். அவள் என் உடலுடன் ஒட்டிக் கொண்டு தன் முகத்தை என் தோளில் புதைத்து படுத்துக் கொண்டாள். மஞ்சள் இனத்தவருக்கே உரிய கரிய பளபளப்பு கொண்ட தலைமுடி. சிறிய காது. சற்றே உந்திய கன்ன எலும்புகள். மெலிந்த அவள் தோள்களை கைகளால் வருடிக் கொண்டு படுத்திருந்தேன்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லவா?” என்று கண்களை மூடியபடி சொன்னாள். “சொல்” என்றேன். “இதுவும் பிற எந்தக் காமத்தையும் போலத்தானே இதற்கா இவ்வளவு பெரிய தொகை…?” என்றாள். “பொய்” என்று நான் அவளை தட்டினேன். “இந்த தருணத்தில் பணத்தை பற்றி நினைக்கும் அளவுக்கு நான் கீழ்மையானவன் அல்ல” என்றேன்.

“நான் அப்படி சொல்லவில்லை. கெய்ஷா என்ற வார்த்தை அதைப்பற்றிய கதைகள் இதெல்லாம் உங்களுக்கு ஏமாற்றுவேலை என்று தோன்றிவிட்டது. அல்லவா?” என்றாள். “இல்லை இந்த ஒரு தருணத்தை அழகாக்க அவை எப்படியோ உதவியிருக்கின்றன. ” என்றேன். “என்ன சொன்னாலும் இது சாதாரணமானதுதான், அதை மறைக்கமுடியாது” என்றாள் அவள். “இல்லை” என்றபடி நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன்.

அவள் என் காதில் ”நான் ஒன்று சொல்லவா. . ?” என்றாள். “சொல்” என்றேன். “நான் கெய்ஷா இல்லை” என்றாள். “தெரியும்” என்று நான் சொன்னேன். “எப்படி?” என்றாள். “நீ உள்ளே வந்த போதே தெரியும். அல்லது அவன் உன்னை அழைக்க செல்லும்போதே தெரியும்” என்றேன்.

அவள் பெருமூச்சு விட்டாள். ”நன்றி” என்றாள். “ஏன்?” என்றேன். “நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வில் இருந்தேன். இப்போது அது இல்லை” என்றாள். நான் “என்னை அவ்வளவு எளிதாக யாரும் ஏமாற்ற முடியாது பல ஏமாற்றங்களையும் பார்த்து வருந்தி அழுது பழகியபடித்தான் தொழிலில் வேரூன்றினேன். ஊடகத்தொழில் இன்று அரசுடன் செய்யும்போர் போல” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவள் சொன்னாள்.

“நீ என்ன படிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “இலக்கியம்” என்றாள். “எந்த மொழி?” என்றேன். “ஜப்பானிய மொழி. ஆங்கில இலக்கியமும் இணைந்து தான் இங்கே பாடத்திட்டம்” என்றாள். நான் “இலக்கியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஒரு இலக்கியப் பேராசிரியனாகத்தான் என்னை சின்ன வயதில் கற்பனை செய்து கொண்டேன். ” என்றேன்

”நீங்கள் இலக்கியம் படித்தீர்களா?” என்றாள். “இல்லை நான் வணிகவியல் தான் படித்தேன். பெரிய இலக்கியவாதி ஆகிவிடவேண்டும் என்ற கனவு இருந்தது. கூடவே புகழ் பெற்ற பேராசிரியராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் இதழியல். அது என் குலத்தொழில்” என்றேன்.

“பேராசிரியராக இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா?” என்று அவள் கேட்டாள். ”இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது. இதழாளர்கள் இதழாளர்த்தொல்லை இல்லாத பிரமுகர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியும். ”  என்றேன்.  அவள் சிரித்தபடி ”அது சரிதான்” என்றபடி என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

அவள் மார்புகள் மிகச்சிறிதாக, இல்லையென்றே சொல்லத்தக்கவையாக இருந்தன. இடைக்குக்கீழே கூட சிறுவர்களுக்குரியவை போல வளராமல் இருந்தது. என் எண்ணத்தை புரிந்துகொண்டு அவள் ”உங்கள் ஊர்பெண்கள் கைகளும் இடைகளும் மிகப்பெரியவை அல்லவா?” என்றாள். “ஆம் இடுப்பும் மார்புகளும் கூடப்பெரியவை தான்” என்றேன்.

“ஆகவே தான் மாறுதலுக்காக கிழக்கு நோக்கி வருகிறார்கள் போல…” என்றாள். “இங்கிருந்து யாரும் அங்கே வருவதில்லையே” என்றேன். “ஆம் பயந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

இருவரும் மீண்டும் கொஞ்சம் உடல்குலவினோம். நான் அவளிடம் “யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நினைவுக்கு வந்தது” என்றேன். “நினைத்தேன். கெய்ஷாக்களைப்பற்றி அவருடைய பனிபூமி என்ற நாவலில் படித்திருப்பீர்கள். ” என்றாள். “ஆம் நீ இங்கு வருவதற்கு முன் அந்த நாவலைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ” என்றேன்.

என் கழுத்தை வளைத்து “இதற்குப் பிறகு ஏன் தூங்கும் அழகியை நினைத்தீர்கள்?” என்றாள். “அதில் வயதான ஒருவர் தன் உடலில் வற்றிக் கொண்டிருக்கும் உயிர்ச் சக்தியை மீட்டெடுத்து ஆயுளைக் கூட்டுவதற்காக இளம்பெண்களுடன் படுத்துக் கொள்ளும் வசதி செய்யும் ஒரு ரகசிய விடுதிக்கு வருகிறார் அல்லவா…?” என்றேன் “ஆம், வயதான எகுச்சி” என்று விழிகளில் சிரிப்பு எஞ்சியிருக்க அவள் சொன்னாள்.

”மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பெண்களை அவருடன் படுக்கவைக்கிறார்கள். இரு நிர்வாணப் பெண்களின் நடுவே எகுச்சி படுத்திருக்கிறார். அவர் உடலில் அவர்களின் உயிர் வந்து சேர்ந்து ஆண்மை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால் அதில் ஒரு பெண் மயக்கமருந்து மிகையாகி இறந்துவிட்டிருப்பாள். அன்று இரவு முழுக்க பிணத்துடன் தான் படுத்திருந்தார். ” என்றேன்

அவள் முகம் சிறுத்தது. தலை குனிந்து கைவிரல்களால் என் விலாவில் வருடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி குனிந்து “என்ன?” என்றேன். “ஒன்றுமில்லை” என்றாள். தலையாட்டியபோது முடிக்கற்றை சரிந்து விழிகளை மறைக்க அள்ளிப்பின்னுக்குப் போட்டுக்கொண்டாள். “இல்லை, உன் மனம் மாறிவிட்டது” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றே

என் கண்களைப்பார்த்து, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது” என்றாள். “நான் சாதாரணமாக நினைவுக்கு வந்த கதையைத்தானே சொன்னேன்” என்றேன். ஏன் அந்தக் கதை நினைவுக்கு வருகிறது?” என்றாள். “ஏன்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவள் அழுத்தமான குரலில் “பிணத்துடன் தூங்குதல்…” என்றாள்.

அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நான் அவளை இறுக அணைத்து “இல்லை, நான் அப்படி எதையும் உத்தேசிக்கவில்லை” என்றேன். “பரவாயில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை நான் உண்மையிலேயே அப்படி எதையும் எண்ணவில்லை” என்றேன். “இங்கு ஒரு சொல் உண்டு. விபச்சாரியுடன் உறவு கொள்வது பிணத்துடன் உறவு கொள்வது போல…” என்றாள். “நம்பு நான் அப்படி உத்தேசிக்கவில்லை” என்று அவளை இறுக அணைத்தேன். “சத்தியம்” என முத்தமிட்டேன்.

“நீங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்கள் உள்ளம் உணர்ந்தது” என்றாள். “இல்லை உண்மையிலேயே இல்லை” என்று அவள் கைகளைப்பற்றிச் சொன்னேன். “நான் எங்குவேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் உண்மையிலேயே இல்லை. இந்த இரவில் உன்னுடன் மிக நெருக்கமாகத்தான் உணர்ந்தேன். இவ்வளவு நெருக்கமாக எந்தப்பெண்ணிடமும் நான் உணர்ந்ததே இல்லை. ” என்றபோது என்குரல் சற்று உடைந்தது.

“இதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாடிக்கையாளன் விபச்சாரியை எந்த வகையிலும் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நான் உண்மையில் அப்படி எண்ணவில்லை நான் இதற்குமேல் எப்படி சொல்லவேண்டும்…?” என்று என்னை மீறி எழுந்த உணர்ச்சியுடன் சொன்னேன்.

அவள் “நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மறந்து விடுங்கள்” என்றாள். “இல்லை நீ அப்படி நினைக்கிறாய் என்பது எனக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. நான் அப்படி நினைக்கவே இல்லை. ” என்றேன்

அவள் அதைக்கேளாதவளாக குனிந்தே இருந்தாள். கரிய பளபளக்கும் முடியால் முகம் மூடியிருந்தது. சட்டென்று ஒரு விசும்பல் ஒலி. வேறெங்கோ எவரோ அழுவதுபோல அதைக்கேட்டேன். அவள் என் மனம் மார்பில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினாள்.

மேலும் சற்று நேரம் கழிந்து தான் அவள் அழுகிறாள் என்பதே புரிந்தது. அவளை விலக்கி “அழுகிறாயா? ஏன்?” என்றேன். புரண்டு தலையணையில் முகம் புதைத்து உடல்குலுங்க அழத்தொடங்கினாள். நான் அவளை திருப்பி “சொல் ஏன் அழுகிறாய் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் தவறாக சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றேன்.

“மன்னிப்பா? நீங்களா? நான்தான் மன்னிப்புகோரவேண்டும். நான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். கண்ணீர்த்துளிகள் நின்ற இமைகளுடன் “அவ்வளவு பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதிதான் எனக்கு வரும். ஆனாலும் என் கடமை. அவர்கள் என்னிடம் சொன்ன எதையும் நான் செய்யவில்லை”

“இல்லை” என்று ஏதோ சொல்லப்போனேன். “நான் கெய்ஷாவாக நடிக்கவில்லை. உங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை” என்றாள். “இல்லை அப்படி அல்ல” என்று நான் அவள் தோளைப்பற்றி உலுக்கி சொன்னேன். அவள் அழுகை சட்டென்று மேலும் வலுத்தது. உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு சிறுகுழந்தை போல அழுதாள்.

நான் அவள் தோளைத் திருப்பி முகத்தை பார்த்து ”இதற்கு மேல் நான் என்ன சொல்லவேண்டும். நான் உண்மையில் எதையும் நினைக்கவில்லை” என்றேன். “ஆம் பிணம்தான். அப்படித்தான் நான் எல்லாரிடமும் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற அனைவரும் பிணமென்று என்னை நினைக்க வேண்டும் என்றே உண்மை நினைப்பேன்.ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது என்னைப் புண்படுத்துகிறது”

முகத்தை துடைத்து கூந்தலை அள்ளி பின்னால் குவித்து கழற்றிவைத்த கிளிப்பை டீபாயிலிருந்து எடுத்து அணிந்துகொண்டாள். மெல்ல அமைதியானாள் “நீங்கள் என்னை பெண் என்று நினைக்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் என்னை பிணம் என்று நினைக்கிறீர்கள்…” என்றாள். “இல்லை இல்லை…. ” என்று அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டுச் சொன்னேன்.

“நான் மிகமிக ஏழை. நாங்கள் ஒன்பது பேர் ஒரே அறையில் வசிக்கிறோம். என் மூன்று இளையவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படிப்பை முடித்து ஒர் ஆசிரியர் வேலைக்கு சென்றால் இதிலிருந்தெல்லாம் மீள முடியும் என்று நினைத்தேன்” என்று அவள் சொன்னாள் “நாங்கள் கெய்ஷா குடும்பம் அல்ல. எனது மூதாதையர்கள் கிராமத்தில் விவசாயம் செய்தார்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தோம். இங்கே எல்லாமே விலை உயர்ந்தவை. உடலை நன்றகா விரித்து படுத்துக் கொள்வதற்கான ஒர் இடத்திற்காக மாதம் முழுக்க வேர்வை சிந்த வேண்டும்”

நான் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுதபோதிருந்ததை விட இப்போது மேலும் துயர்கொண்டிருந்தது அவள்முகம். சிறிய தந்தச்சிமிழ் போன்ற முகம். “அப்பா இருந்த வரைக்கும் நாங்கள் உழைத்து தான் வாழ்ந்தோம். அப்பா இறந்து அம்மாவுக்கும் குதிகால் வலி வந்து நிற்க முடியாமல் ஆனபோது அக்காவுக்கும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் எனக்கு கொடுப்பது மிகச்சிறிய தொகைதான். அதற்கு அவ்வளவு அவமானம்…” கண்களைத் துடைத்துக் கொண்டு “இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. சொன்னேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னைத் தண்டிப்பார்கள்” என்றாள்.

“இல்லை நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. ” என்றேன். அவள் பெருமூச்சுடன் “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் இதைச் சொன்னதில்லை இந்தக் கெய்ஷாவின் வீட்டுக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஐந்து நிமிடம் அங்கே இருக்க உங்களால் முடியாது. ஒரே அறையில் எட்டு பேர் வாழும்போது அது பன்றித் தொழுவம் போல் ஆகிவிடுகிறது.” என்றாள்.

”என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி அவள் இடையை வளைத்து “நான் இதெல்லாம் ஓரளவுக்கு இப்படித்தான் என்று ஊகித்திருந்தேன். ஆனால் எங்கோ எனக்கு ஒர் அகங்காரம் இருந்திருக்கிறது. உன் தோரணையைப் பார்த்தபோது உன்னை உடைத்து உன்னை அழவைக்க வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கிறது. நீ மனமுடைந்து அழுவதைப் பார்த்தபோது எனக்கு எவ்வளவு நிறைவு வருகிறது என்று கவனித்தேன். அப்போதுதான் என்னைப்பற்றி நானே தெரிந்து கொண்டேன். என்னையே நான் வெறுத்தேன்” என்றேன்.

அவள் என்னை அணைத்துக் கொண்டு ”பரவாயில்லை ஆண்களின் இயல்பு தானே அது? வலிக்க வைக்காத ஆண் என்று உலகத்தில் யாரும் இல்லை என்று என் அம்மா சொல்வார்கள்” என்றாள். பின்பு என் கண்களைப்பார்த்து ”ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். “சொல்” என்றேன். “நான் பிணமில்லை” என்றாள். ”நான் அப்படி சொல்லவில்லை” என்றபடி நான் அவளை முத்தமிடத்தொடங்கினேன்.

என் கைகளில் அவள் உருகித் திரவமாக ஆகப்போகிறவள் போல குழைந்தாள். “நான் பெண். . நான் பெண். . ” என்று முனகிக் கொண்டிருந்தாள். அம்முறை முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருந்தேன். முதல் பெண்ணிடம் போல. பூமியில் மனிதர்களே இல்லாத போது தனித்து விடப்பட்ட இருவரைப்போல. அடுத்த கணம் இறந்து விடப்போகிறவர்களைப்போல.

பின்பு தழுவியபடி படுத்திருக்கும்போது அவள் இமைகளில் கண்ணீர் படிந்திருந்தது. மூடிய இமைகளின் விளிம்பில் மயிர் வெண்ணிறப்பீங்கான்மேல் மயிற்பீலி விளிம்பு போல படிந்திருந்தது. அதை என் கைகளால் தொட்டு வருடியபோது அதிலிருந்த ஈரம் தெரியவந்தது. “மீண்டும் அழுதாயா?” என்றேன். “இல்லை” என்றாள். “கண்ணீர் இருக்கிறது” என்றேன். “அழுதால்தான் கண்ணீர் வருமா…?” என்றாள். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

“இல்லை” என்றபின் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் காதில் “நானும் அழுதேன்” என்றேன். ”உண்மையாகவா…?” என்றாள். “ஆம், நான் அழுதே நிறைய வருடங்கள் ஆகிறது” என்றேன். என் காதில் என் உடலுக்குள் இருந்தே பேசுவதுபோல “எத்தனை வருடங்கள். . ?” ஒரு கணம் தாளமுடியாத அழுத்தத்தில் திளைத்து மெல்ல விடுபட்டு “இருபது வருடங்கள்” என்றேன்.

“உங்கள் மனைவி இருக்கிறார்களா. . ?” என்று கேட்டாள். “பிரிந்து போய்விட்டாள்” என்றேன். “மன்னிக்கவேண்டும் நான் அதைக் கேட்டிருக்ககூடாது” என்றாள். “இல்லை, பரவாயில்லை, நீ அறியவிரும்புவதைக்கேள்” என்று நான் சொன்னேன். “வேண்டாம், உங்களுக்கு அது துயரளிக்கிறது” என்றாள். “இல்லை நான் எவரிடமும் சொன்னதில்லை. உன்னிடம் சொல்லியாக வேண்டும்” என்றேன்.

“வேண்டாமே. நாம் ஓர் உயரத்தில் இருக்கிறோம். அதிலிருந்து ஏன் கீழிறங்க வேண்டும்?” என்றாள். “இது கீழிறங்கல் அல்ல. இந்தச் சுமைகளை இறக்காவிட்டால் நான் எப்போதும் மண்ணில் தான் நின்று கொண்டிருப்பேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்று என்னை அணைத்து என் தலைமயிரை வருடத்தொடங்கினாள்.

நான் என் அப்பாவின் பங்குதாரரின் மகளை இளமையிலேயே மணக்கவேண்டியிருந்தது. ஒரு ஆடம்பரமான அசட்டு நாடகம் போல நடந்த எங்கள் திருமணம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்த மனக்கசப்புகள். சிறுமைசெய்யப்பட்டபோது நான் அடைந்த வன்முறை வெறி. நான் வணிகத்தில் வெற்றி பெறும் தோறும் என் மனைவி அடைந்த ஏமாற்றம். அவள் தன் அடிமையாகவே என்னை வைத்திருக்க வேண்டுமென்று அவள் எடுத்த முயற்சிகள். இறுதியில் ஒரு குழந்தையுடன் அவள் பிரிந்து சென்றது. அதற்குப்பிந்தைய ஆழ்ந்த மனக்கசப்பு

“பெண்கள்மீதான கடும் கசப்பாலேயே நான் காமத்தில் திளைத்தேன்” என்றேன். “ஆம், பலர் அப்படித்தான்” என்றாள். “நான் செய்தவை எல்லாம் அவளுக்கு எதிரானவை. எதற்கு எதிராக செயல்பட்டாலும் சரி எதிர்மறைச்செயல்பாடு கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சவைக்கிறது” அவள் என்னை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒருவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று அறிந்திருந்தாள்.

நான் பெருமூச்சுவிட்டு மெல்ல கண்களை மூடி தளர்ந்தேன். என் இமைகள் நனைந்திருந்ததை அவள் தன் விரல்களால் தொட்டு “ஈரம்” என்றாள். “ஆம்” என்றேன். “தூங்குங்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபடி அவள் தோளில் முகம் புதைத்துக்கொண்டேன்

உறக்கம் வந்து என் எண்ணங்களை நனைந்து படியச் செய்வதற்கு முன்பு “நீ என்னுடன் இரு” என்றேன். என் உதடுகள் அவள் தோளில் கசங்கியமையால் குரல் போதையிலென ஒலித்தது. “சரி” என்று அவள் சொன்னாள். “என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். நீ என்னுடன் இருந்தால் போதும்” அவள் என் கனவுக்குள் என “சரி” என்றாள்.

என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. கண்ணீர் அவள் தோள்களில் கழுத்தில் விழுந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டேன். அடைத்த தொண்டையைச் செருமி “நீ என்னுடன் இருக்கவேண்டும்…” என்றேன். “ம்” என்றபோது அவள்குரலும் அடைத்திருந்ததை உணர்ந்தேன். முத்தமிட்டபோது அவள் கண்ணீர் என் முகத்தில் படிந்தது

“நான் இன்னொரு மனித உயிருடன் இத்தனை நெருக்கமாக ஆவேன் என்று நம்பவே இல்லை. எனக்கு யாருமில்லை. நீ என்னுடன் இருந்தே ஆகவேண்டும்” என்றேன். அவள் மூச்சொலிபோல் “இருப்பேன்” என்றாள். ”இறுதி வரை…?” என்ரேன். ”இறுதி வரை” என்றாள்.

அவளது அணைப்பில் முத்தங்களுடன் நான் துயின்றேன். காலையில் எழுந்தபோது எனது ஆடைகள் அருகே குறுமேடைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. கைக்குட்டைகள் குறுந்துவாலைகள் எல்லாமே சீராக அடுக்கப்பட்டிருந்தன. காலைச்செய்தித்தாள் காத்திருந்தது.  ஒரு பெண் வந்து போனதற்கு தடயமே இல்லாமல் சீராக இருந்தது அறை.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18

$
0
0

[ 24 ]

அர்ஜுனன் மலைகள் இடப்பக்கம் நிரைவகுத்த பாதையில் தென்றிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவனுக்குப் பின்னால் ஓடிவந்த  முதிய அந்தணன் ஒருவன் உரத்த குரலில் “இளைய பாண்டவரே, தங்களை நாடி வந்தேன். தங்களுக்காகவே வந்தேன்” என்றான். அர்ஜுனன் நின்று “யார் நீங்கள்?” என்றான். மூச்சிரைக்க அணுகி “என் பெயர் ஜாதவேதன். வேதம் புரக்கும் தொல்குடியில் பிறந்தவன். என் ஒன்பதாவது மைந்தனை தென்றிசையரசனுக்கு பறிகொடுத்துவிட்டு வாழ்வை முடிக்கக் கிளம்பியவன்” என்றான். “நான் உங்கள் வில்லுக்கு அடைக்கலம். என்னை துறக்காதீர், பாண்டவரே.”

அர்ஜுனன் “உம்” என்றபடி காண்டீபத்தை கைமாற்றிக்கொண்டான். “இனி வாழ்வில்லை என மலையேறும்பொருட்டு இவ்வழி சென்றேன். இங்கு நீங்கள் இருப்பதை அவ்வூர் இளையோன் ஒருவன் கூவியதிலிருந்து அறிந்தேன். அங்கு சென்றபோது நீங்கள் ஊர் நீங்கிவிட்டீர்கள். உயிரைச் சுமந்து பின்னால் ஓடிவந்தேன்” என்று அவன் சொன்னான். “என் நல்லூழ், நான் விழைந்தவரை கண்டுவிட்டேன். தெய்வங்கள் என்னுடன் உள்ளன.”

சொல்லும்படி அர்ஜுனன் கையசைத்தான். அவன் “நான் வாழவேண்டுமா என்பது தங்கள் கையிலேயே உள்ளது, இளவரசே” என்றான். “என்ன நிகழ்ந்தது?” என்று அர்ஜுனன் கேட்டான். “சாண்டில்ய குலக்குழுவைச்சேர்ந்த சாமவைதிகன் நான். உத்தர கூர்ஜரத்தில் வறண்ட மலைநிலத்தில் பீதாக்ரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த  எந்தை வேதமொன்றே முதலறம் எனக்கொண்டிருந்தார். நூறு மாணவர்கள் அவரிடம் அழியாச்சொல் கற்றனர். வைரங்களின் கூர்மையுடன் அவரில் வேதச்சொல் விளங்கியமையால் வஜ்ரகண்டன் என்று அழைக்கப்பட்டார். வேதமன்றி பிறதெய்வமறியாது வாழ்ந்தார்.”

நூறு பசுக்களைப் பேணி நெய்யும் பாலும் கொண்டு வேதச்சொல்லை எரியாக்கியவர் எந்தை. பெரும்பஞ்சம் எழுந்து நூறுபசுக்களும் பசித்து நோய்கொண்டு இறந்தன. எஞ்சியது ஒரு வெண்பசு. அதற்கு கற்றாழையை வெயிலில் வாட்டி உணவளித்தனர். மானுடர் கொட்டிக்கிழங்கை புளிச்செடி இலையுடன் சேர்த்து வேகச்செய்து ஒருநாள் விட்டு ஒருநாள் உண்டு உயிர்வாழ்ந்தனர். ஆயினும் பால்கொண்டு வேள்வி செய்வதை நிறுத்தவில்லை. வேள்விக்குளத்தில் துளி நெய்யேனும் விடாது எரியணைய ஒப்பவில்லை.

ஒருநாள் எந்தை  வேள்விக்கு பால் கொள்ள பசுவை அணுகினார். அதன் அகிடில் ஐந்துபிடிப் பால் மட்டுமே இருந்தது. புல்லின்றி பசித்துத் தளர்ந்திருந்தது பசு. பாலில் ஊறிய கற்றாழை நச்சால் நோயுற்று விழுந்துவிட்டிருந்தது அதன் கன்று. தொழுவக்காவலன் கைகூப்பி “அந்தணரே, இத்தருணத்தில் கன்றுக்குப் பால்விடுவதே முறை என்று சொன்னான். கன்று பிழைக்காதென்பது உறுதி என்றாலும் அது இறுதியாக விழையும் பால்சுவையை அதற்களிக்கவேண்டியதே அறம்” என்றான்.

எந்தை ஐயமற்ற உள்ளம் கொண்டவர். வேதமறிந்தது முதல் ஒருநாளும் வேள்விச்செயலுக்கு பிந்தாதவர். அவ்வூரில் பிறிதெங்கும் பால் இல்லை என்னும் நிலையை அறிந்திருந்தார். வேள்விக்கு பசுவை பலிகொடுப்பதும் இருந்தது முன்பு. வேள்வியே முதன்மையானது, என் கடன் அதுவே என்று உரைத்து அப்பாலைக் கறந்து கொடுக்கச்சொல்லி பெற்றுக்கொண்டு சென்று தன் வேள்விச்செயலை நிறைவேற்றினார்.

கன்று விழிகள் வழிய தலைசாய்த்துக் கிடந்து மூச்சிழுத்தது. நாக்கு நீண்டு வெளியே சரிய வால் குழைந்து புரள வயிறு விம்மி விம்மி அமைய இறுதியாக ‘அன்னையே’ என்று அழைத்து உயிர்விட்டது. கன்றின் இறப்பைக் கண்டு அன்னை பெருமூச்சு விட்டபடி தலை தாழ்த்தி நின்றது. அதன் கண் பழுத்து நீர் வழிந்தது. உணவும் நீரும் மறுத்து மூன்றுநாள் நின்று நான்காம் நாள் விழுந்து மூச்சிளைத்து விழிவறண்டு இறந்தது. இறப்பதற்கு முந்தைய கணம் அதன் அகிடுகளிலிருந்து பால் சுரந்து வழிந்தது. அது செங்குருதித்துளியாகி சொட்டி நின்று உறைந்தது.

அன்று வேள்வியில் கையில் அனல்கரண்டியுடன் இருந்த எந்தையின் முன் அழலுக்குள் இருந்து எமன் எழுந்து வந்தான். கரிய உடலும் நீலமணிவிழிகளும் கொண்டிருந்த அவனை அறிந்து எந்தை கைகூப்பினார். “வைதிகனே, அன்பில்லாச் சடங்கு என்பது தெய்வங்களுக்கு எதிரானது என்று நீ உணர்ந்திருக்கவில்லை. மைந்தர்துயர் என்ன என்று நீயும் உன் குடியினரும் அறிவீர்கள்” என்று தீச்சொல்லிட்டு அமைந்தான். எந்தை அஞ்சி எழுந்து ஓடிவந்து தன் ஏழு மைந்தரை அள்ளி மார்போடணைத்தபடி கதறி அழுதார்.

KIRATHAM_EPI_18

எந்தை தன் வேததெய்வங்களை அழைத்து கூவினார். அவர் முன் காற்றில் எழுந்த அனலோன் “நீ ஆற்றியது இழிசெயலே. அச்செயலால் இறப்பிற்கிறைவனின் சொல்லுக்கு பொருள் அளித்தாய். நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றான். “நான் என் வேள்விச்செயலில் ஒரு பிழையும் ஆற்றவில்லை” என்றார் எந்தை. “பிழையற்றது உயிரற்றது. உயிர்கள் உகந்தபடி பிழைகொள்ளவே  உருக்கொண்டு வந்துள்ளன. அளியின்பொருட்டும் அறத்தின்பொருட்டும் வளையாதவன் மானுடன் அல்ல” என்றான் அனலோன்.

எந்தையின் ஏழு மைந்தரில் அறுவரும் அவ்வருடமே நோய்கொண்டும் நாகம் கடித்தும் மலையிலிருந்து விழுந்தும் யானையால் முட்டப்பட்டும் உயிரிழந்தனர். நான் ஒருவனே எஞ்சினேன். ஒவ்வொரு இறப்புக்கும் எந்தை துயர் இரட்டிப்பாகி நைந்து உளமுடைந்து பித்தனாகி கற்ற சொல்லனைத்தும் மறந்து மைந்தர் பெயரை மட்டும் சொல்லிச் சொல்லி கண்ணீர்விட்டபடி  இறந்தார். அவருக்கு நீர்க்கடன் செய்தபின் மைந்தர்துயரை அஞ்சி எனக்கு மணவுறவே இல்லை என்று நான் முடிவுசெய்தேன்.

ஏழாண்டுகாலம் தனியனாக வேள்விச்செயலாற்றி வாழ்ந்தேன். ஒருமுறை நான் அரசனொருவனுக்காக மைந்தர்விழைவு வேள்வி இயற்ற அரணிக்கட்டையை உரசியபோது நெருப்பெழவில்லை. பன்னிரண்டு முறையும் நெருப்பெழாமையால் என்னை பழியன் என்று எழுந்து விலகும்படி ஆணையிட்டார் வேள்வித்தலைவர். நான் பழிநிகர் செய்து மீளும்படி என் குலம் கூறியது.

நிமித்திகரை அழைத்து குறிச்சொல் கேட்டேன். எந்தையர் நிரை என் மேல் முனிந்திருப்பதைச் சொன்னார்கள். அவர்களுக்கு என் வாழ்க்கைக்குப்பின் நீரும் அன்னமும் அளிக்கப்படாதென அவர்கள் அஞ்சுவதாக அறிந்தேன். மைந்தரின் முதற்கடன் நீத்தாருக்கே. அதைச் செய்யாதவன் தெய்வம் விருந்து உறவு தான் என பிற நால்வருக்கும் நன்னயம் செய்ய ஒண்ணாதான் என்றனர் நிமித்திகர். நான் கைகூப்பி தந்தையரே, உங்களுக்காக அப்பெருந்துயரை நான் ஏற்கிறேன் என்று சொன்னேன்.

அதன்பின் நான் மணம்கொண்டேன்.  கௌண்டின்ய குலக்குழுவின் மகளாகிய என் மனைவியிடம் என் குலத்தின் மீதுள்ள தீச்சொல்லை நான் சொல்லவில்லை. முதல் மைந்தன் பொற்துளி என வந்து என் கைகளில் விழுந்தபோது கடுந்துயரில் என் நெஞ்சு குழைந்தது. என் விழிநீர் அவன் மேல் விழுந்தது. என்ன என்ன என்று என் மனைவி கேட்டாள். உவகை என்று நான் சொன்னேன். ஆம் ஆம் என அவள் கண்ணீர்விட்டாள். அழுதபடி நான் பேற்றறை விட்டு வெளியே ஓடினேன்.

பன்னிரண்டாம் நாளில் பால் விக்கி என் மகன் இறந்தான். கன்றிழந்த பசுவின் துயரை அன்று கண்டேன். என் மனைவியின் முலைகளிலிருந்து பால் ஊறி வழிந்துகொண்டே இருந்தது. மண்ணில் அவள் அதை பீய்ச்சிவிட்டபோது உடன் விழித்துளிகளும் உதிர்ந்தன. மண்ணில் நூறு வாய்கள் திறந்து  புதைக்கப்பட்ட மைந்தர்கள் அந்த அமுதை உண்பதாகத் தோன்றியது. பித்துப்பிடித்தவன்போல நான் அலைந்தேன். தெய்வங்கள் முன் சென்று நின்று நெஞ்சில் அறைந்து அழுதேன். விழுந்து தலையால் மண்ணில் அடித்து மன்றாடினேன்.

பிறிதொரு மைந்தன் தேவையில்லை என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால் மெலிந்து உருக்குலைந்த என் மனைவியைக் கண்டதும் இன்னொரு குழவியால் மட்டுமே அவளை மீட்கமுடியும் என்று உணர்ந்தேன். எனக்கும் அந்த விழைவு உள்ளில் எழுந்து வளர்ந்தது. முதற்குழவியே மாற்றுருக்கொண்டு மீண்டுவரும் என நினைத்தேன். மெல்ல அவ்வெண்ணம் வலுப்பெற்றது. அது மீண்டால் போதும் அனைத்தையும் மறந்துவிடுவேன் என எண்ணினேன். போதிய மைந்தர்துயரை அடைந்துவிட்டேன். என் தெய்வங்கள் என்னை கைவிடமாட்டார்கள்.

அவள் மீண்டும் கருவுற்றாள். ஒவ்வொருநாளும் உவகை வளர்ந்தது. அதன் நிழல் என பலமடங்கு நீளத்துடன் அச்சம் உடன் எழுந்தது. அந்த அலைக்கழிப்பு முன்பிருந்த பெருந்துயரைவிட மும்மடங்கு பெரிய கொடுமை. என் மனைவி மெல்ல மலர்ந்து உவகையில் எழுந்து கொழுந்துவிட்டு ஆடக்கண்டேன். அவளைப் பார்க்கையில் என் உள்ளம் அழிந்தது. பெரும்பிழை ஆற்றியிருக்கிறேன் என்று எண்ணி எண்ணி கலுழ்ந்தேன்.

மைந்தன் அதே முகத்துடன் அதே துடிப்புடன் பிறந்தான். அவனை கையால் தொடவும் என்னால் முடியவில்லை. “நம் மைந்தன். நம்மை விட்டுச்சென்றவன். நம் பிழைபொறுத்து மீண்டு வந்துவிட்டான்” என்று என் மனைவி கண்ணீருடன் கூவினாள். நான் அழுதபடியே சென்று என் குடித்தெய்வத்தின் காலடியில் படுத்துவிட்டேன்.

என் மனைவி பித்துகொண்டவளாக ஆனாள். குழவியை கையிலிருந்து இறக்கவே மறுத்தாள். “கையிலேயே வைத்திருக்கக்கூடாது, அன்னையே. குழந்தை உடல் தேம்பிப்போய்விடும்” என்றாள் மருத்துவச்சி. கீழே வைத்தால் எவரோ குழவியை கொண்டுசென்றுவிடுவார்கள் என்று அவள் அஞ்சியதுபோல் தோன்றியது. தன் உடலுடன் இணைந்த ஒன்றாகவே அவள் அதைச் சூடியிருந்தாள்.

மூன்றாம் மாதம் ஒரு காய்ச்சலில் குழந்தை மறைந்தது. தொட்டிலில் குழந்தையைத் துயிலவிட்டு அருகே அவள் துயின்றாள். இரவில் ஒரு கரிய குழல் பறக்கும் பெண்மணி உள்ளே வந்து குழந்தையை எடுப்பதுபோல கனவுகண்டாள். அவளை நோக்கி அலறியபடி கைநீட்டி எழுந்தபோது அவள் விழிகள் அனலென எரியக்கண்டாள். எழுந்தமர்ந்து குழந்தையை நோக்கியபோது அது மேலிருந்து விழுந்ததுபோல கிடந்தது. எடுத்து நோக்கியபோது அதன் தலை முன்பக்கம் சரிந்தது.

என் மனைவி பல மாதங்கள் எங்கிருக்கிறாள் என்றே தெரியாமலிருந்தாள். நான் என் வீட்டிலிருந்த அத்தனை தெய்வங்களையும் உடைத்து வீசினேன். ஆலயக்கருவறைகளில் வெறித்து அமர்ந்திருந்த வீண்சிலைகளை நோக்கி கற்களை எடுத்து எறிந்தேன். என்னை பித்தன் என எண்ணி பல இடங்களில் பிடித்து கட்டிவைத்து அடித்தனர்.

மீண்டும் சில மாதங்களில் மைந்தனுக்கான விழைவு கூடியது. வெளியூர் நிமித்திகர் ஒருவர் என் முகம்நோக்கி குறித்து நான் மைந்தரைப் பெற்றாகவேண்டும் என்றார். மறுமுறை நீண்ட வாழ்வுள்ள மைந்தன் பிறப்பான் என்று நம்பிக்கையும் அளித்தார். அவர் சொன்ன வேள்விச்செயல்களை இயற்றினேன். அவர் அளித்த நுண்சொல்லை பன்னிரண்டு லட்சம் முறை உருவிட்டேன்.

ஆனால் என் மனைவி மைந்தரைப் பெற மறுத்துவிட்டாள்.  “இனி இல்லை, இனி பெற்று மறலிக்கு கொடுப்பதில்லை. பிறந்து உலகறியாது இறக்கும் மைந்தரின் பழியெல்லாம் என் விழைவினால்தான்” என்றாள். அவளிடம் பேசி மன்றாடினேன். அழுது புலம்பினேன். அவள் இளகவில்லை. “இனியில்லை… இனியில்லை” என்றே சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஆனால் அவளுக்குள் இருந்து கனவொன்று முளைத்தது. அதில் வந்த இளமைந்தன் தவழ்ந்து ஒரு படியிலிருந்து கீழிறங்கத் தவித்தான். விழித்துக்கொண்டு அவள் சிரிப்பும் அழுகையுமாக என்னை நோக்கி ஓடிவந்தாள். “நம் மைந்தன்… நான் இப்போது கண்டேன். அவன் மண்ணுக்கு கிளம்பிவிட்டான். இறக்கிவிடுவதொன்றே நம் பணி. அது நம் கடன்” என்றாள்.

அம்மைந்தன் பிறந்து ஒரு வயதுவரை வாழ்ந்தான். கண்தெளிந்து முகம்நோக்கி சிரித்தான். வாய்வழிய  அம்மா என்று குதலைச்சொல் சொன்னான். எப்போதும் வாய்குவித்து பாலருந்த விழைந்தான். பசி கண்டதுமே கைகளை அறைந்து முட்டிசுருட்டி அசைத்து முகம் சிவந்து கதறி அழுதான். அவன் பால்குடிக்கையில்  அவ்வொலி கேட்டு பதைப்புடன் அமர்ந்திருப்பேன். உலகை உண்ணுகிறான். அப்பெரும்பசி வாழ்வாசை அல்லவா? அந்த விழைவு அவனை வாழச்செய்யாதா?

அவன் கவிழ்ந்தான். கையால் தரையை தட்டியபடி தவழத்துடித்தான்.  காலம் முந்தியே தவழலானான். ஒரு கையை ஊன்றி வாயில் எச்சில் வழிந்து மார்பை நனைக்க ஊ ஊ ஊ என ஓசையிட்டபடி அரைமணி ஒலிக்க தண்டை இழுபட்டோசையிட இல்லத்தை சுற்றிவந்தான். காகத்தை கைசுட்டி கா என்றான். பூனையைச் சுட்டி ஞா என்றான். என் காலடியோசை கேட்டதுமே கைவீசி ந்தை ந்தை என்று குதித்தான்.

ஒவ்வொரு கணமும் அவன் மேல் ஒளிவிழியும் உளவிழியும் தொடுத்து உடனிருந்தாள் அவன் அன்னை. ஒருநாள் அடுப்பிலிட்ட அன்னத்தை எடுக்க அவள் அடுமனைக்குள் நுழைந்த கணம் அவன் எம்பி குடிநீர் பிடித்து வைத்திருந்த கலத்திற்குள் குப்புற விழுந்தான். அவள் திரும்பி வந்தபோது மைந்தனைக் காணவில்லை. இயல்பாக எழுந்த அச்சத்தால் அவள் வெளியே ஓடிச்சென்று முற்றத்திலும் சாலையிலும் தேடினாள். திரும்பி வந்து உள்ளே நுழைந்தபோதுதான் கலத்திற்குமேல் இரு கால்களைக் கண்டாள்.

மிகச் சிறிய கலம் அது. அதில் ஒரு குழந்தை விழுந்து இறந்தது என்றால் எவரும் நம்பமுடியாது. அக்கலம் சற்று சரிந்திருந்தால் அவன் கால்களை மேலும் உதைத்திருந்தால் வாழ்ந்திருப்பான். நான் அவனுடைய விரைத்த உடலையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். மாற்றமில்லா நெறி என இப்புடவியைச் சூழ்ந்திருப்பது மறலியின் சரடு ஒன்றே என்று அன்று அறிந்தேன்.

விழிநீர் ஓய்ந்து என் மனைவி சொல்லெடுக்கத் தொடங்கியபோது அவளிடம் சொன்னேன், என் குடிமேல் விழுந்த தீச்சொல் அது என. “இனி நமக்கு மைந்தர் தேவையில்லை. என்னுடன் எழுக! காடுசேர்ந்து தவம்செய்து இப்பிறவியை நிறைவுசெய்வோம்” என்றேன். “என் பழிக்கு உன் மடியை இழுக்கடையச்செய்தவன் நான். என்னை நீ என்ன முனிந்தாலும் தகும்” என்று அழுதேன்.

நான் எண்ணியதற்கு மாறாக அவள் கடும்சினத்துடன் கண்களில் விழிநீர் எரிய எழுந்தாள். “அன்னைமடி நோக்கி தீச்சொல்லிட்ட தெய்வம் எது? அந்த தெய்வத்தின் முகத்தில் உமிழ்கிறேன்” என்று கூவினாள். தன் வயிற்றை ஓங்கி அறைந்தபடி “இதோ உள்ளது என் வயிறு. இம்மண்ணில் கருவறைகொண்டு பிறந்தவள் என்பதனாலேயே பெற்றுக்குவிக்க வேண்டியவள் நான். அனைத்தையும் மறலி கொண்டுசென்றாலும் சரி  என் வயிறு ஒழியும்வரை பெற்றிடுவேன்” என்றாள்.

“என்ன சொல்கிறாய் நீ? சித்தம் கலங்கிவிட்டதா உனக்கு?” என்றேன். “நூறு மைந்தரைப் பெற்று இங்கு பரப்புகிறேன். தின்று நிறையட்டும் தென்றிசைத்தெய்வம். என் குருதி வற்றி சேறாகட்டும். உடல் மட்கி அழியட்டும். நான் இருக்கும்வரை பெற்றுக்கொண்டுதான் இருப்பேன்” என்று கூவினாள். அவளை எதிர்கொண்டு நோக்கவே என்னால் இயலவில்லை. மானுடரில் வாழும் தெய்வம் மானுடத்தைக் கிழித்து வெளிவந்து நின்றாடும் சில தருணங்களுண்டு என அப்போது அறிந்தேன்.

அதன்பின் அவள் பெற்றுக்கொண்டே இருந்தாள். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் நான் எண்ணி எண்ணி ஏங்கினேன்.  ஒவ்வொரு இறப்பின்போதும் உளமுடைந்து அழிந்தேன். மீண்டும் நம்பிக்கை முளைத்தெழ மைந்தனுக்காக காத்திருந்தேன். அந்த ஏக்கத்திலிருந்து என்னால் விடுபடவே முடியாதென்று அறிந்து அதன்பொருட்டே உளமுருகி அழுதேன்.

ஆனால் அவள் அவ்வுணர்ச்சிகளை கடந்துவிட்டிருந்தாள். அவள் கண்களை நோக்கும் எவரும் விழிதாழ்த்தி அஞ்சி விலகிவிடுவர். அவள் சொல்லெடுப்பதையே நிறுத்திவிட்டாள். அவள் குரலையே நான் மறந்தேன். வெறியாட்டெழுந்த தெய்வமென உடல்மீறிய ஆற்றலுடன் இல்லப்பணிகளை ஆற்றுவாள். எஞ்சியபொழுதில் தொடுவான் நோக்கியபடி ஊன்சிலை என அமர்ந்திருப்பாள்.

அவள் கருவறை ஆணையிடும் நாளில் இரவில் பசித்த ஓநாய் இரைதேடிவருவதுபோல் என்னிடம் கைகளையும் கால்களையும் ஊன்றி புரண்டு வருவாள். என் உடலை ஆட்கொண்டு கருவைப்பெற்று மீள்வாள். அப்போதும் பேசுவதில்லை. ஆணையிடும் உறுமல்கள். அடைந்தபின் மீண்டுமொரு உறுமல். என் உயிர் உண்டு செல்லும் கொலைத்தெய்வம் போலிருந்தாள்.

ஒவ்வொரு முறை மைந்தன் எழுகையிலும் பேராவலுடன் கண்ணீர் வார சென்று கையிலெடுப்பேன். அருகே அவள் வெறித்த பேய்விழிப் பார்வையுடன் படுத்திருப்பாள். “நம் மைந்தன்… இவன் வாழ்வான்… இவன் வாழ்வான். தெய்வங்கள் இம்முறை கனியும்” என்பேன். சொல் அவளைச் சென்று சேர்வதே இல்லை. குழந்தையை கையிலெடுப்பதில்லை. கொஞ்சி முத்தமிடுவதுமில்லை. ஆனால் முலைப்பால் பெருகிக்கொண்டிருந்தது. குழந்தையின் வாய் நிறைத்து முகம் நனைத்து சேக்கைப்பரப்பில் ஊறிப்பரவும் ஊற்றுப்பெருக்கு அது.

குழவியர் இறக்கையிலும் அவள் அதே வெறிவிழிகளுடன் அப்பால் இருந்தாள். ஊன் துண்டென குளிர்ந்துகிடக்கும் மகவை தாதியர் கொண்டுசெல்கையில் விழிதிருப்பி நோக்குவதுமில்லை. ஆனால் அன்றே முலை வறண்டுவிடும். அடுத்த கருநிலவுநாளிலேயே அவள் பிறப்பறை அழைப்பு கொள்ளும்.

எட்டாவது மைந்தன் இறந்தபோது நான் உடலோய்ந்திருந்தேன். நடைப்பிணமென்று வேள்வித்தொழிலுக்குச் சென்று மீண்டேன். பரத்வாஜ குருநிலையில் பெருவேள்வி ஒன்றுக்கு சென்றிருந்தேன். வேள்விக்குப்பின் அன்னம் பகிர்கையில் எனக்கும் அளித்த பரத்வாஜர் “நன்மைந்தர் பெற்று நிறைவு கொள்வதற்காக!” என்றார். நான் கையை இழுத்துக்கொண்டேன். “என்ன?” என்று அவர் விழிசுருக்கி கேட்டார். “தங்கள் சொல் பொய்க்கலாகாது. ஊழின்நெறிப்படி என் மைந்தர் வாழ்வதில்லை” என்றேன்.

மறுசொல் கேட்காமல் அவர் சொன்னார் “நான் உளம்நிறைந்து சொல்லும் வாழ்த்து. வேதம் ஓதிக் கனிந்த நாவால் உரைக்கப்படுவது. வேதம் மெய்யே. உண்ணுக இந்த அவியுணவை! உன் மைந்தன் பிறந்து நூறாண்டு வாழ்வான்.” நான் அதை வாங்கி உண்டேன். அதன்பின்னரே என் கதையை சொன்னேன். “ஆம், ஆவின் பழி பெரும்பழியே. ஆனால் தன்னலம் மறந்து வேதமோதிய அந்தணன் மூன்று தெய்வங்களுக்கும் ஆணையிட முடியும். இது என் ஆணை” என்று அவர் சொன்னார்.

அம்முறை என் மைந்தன் வாழ்வான் என்றே எண்ணினேன். மைந்தர் பிறந்து என் கையில் நெளிந்தபோதெல்லாம் அவ்வுயிர்நெளிவை என் உடல் அச்சத்துடன் ஏற்று அகவிதிர்ப்பு கொள்வதுண்டு. அம்முறை அவன் அசைவுகள் என்னில் உவகைப்பெருக்கை நிறைத்தன. எந்தையரின் உடலில் ஓடிய உயிர். என் உடலாகி நின்றிருப்பது. என்னிலிருந்து எரிந்து இதில் பற்றிக்கொண்டுவிட்டிருக்கிறது. இது காலத்தைக் கடந்துசெல்லும். நான் எண்ணியிருக்கவும் இயலாத எதிர்காலத்தில் என் முகம்கொண்ட மைந்தரில் எண்ணமென உணர்வென மெய்மையென நின்றிருக்கும்.

அன்று நான் அடைந்த உளநெகிழ்வே என் வாழ்வின் உச்சம். கண்ணீர்வழிந்து குழவிமேல் சொட்டிக்கொண்டே இருந்தது. விம்மி விம்மி அழுதபடி குழவியின் செந்நிறக்கால்களில் முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன். அப்பால் என் மனைவி சிலைச்செதுக்கு போன்ற விழிகளுடன் என்னை நோக்கிக்கிடந்தாள். அவள் முலைகளிலிருந்து வெண்ணிறநூல்கள் போல முலைப்பால் ஊறி பீரிட்டு வளைந்து சொட்டியது. அதன் இனிய ஊன்மணம் அப்பேற்றறையை நிறைத்திருந்தது.

ஏழு மாதம் அம்மைந்தனை நெஞ்சிலிட்டு வளர்த்தேன். அச்சமோ பதற்றமோ இல்லாமல் ஒரு மைந்தனை கையிலெடுப்பதன் கொண்டாட்டத்தில் நாள் என குடியென குலமென ஊர் என ஏதுமில்லாதிருந்தேன். அன்றுவரை நான் மைந்தரை தொட்டதே இல்லையென்று அப்போதுதான் அறிந்தேன். நான் முன்பு அறிந்ததெல்லாம் என் அச்சத்தை மட்டுமே. அச்சத்தால் அவனை என் உடலின் உறுப்பென்றே உணர்ந்தேன். அச்சமின்மையால் அவன் பிறிதொரு உடலென உயிரென ஆத்மா என இருந்தான். கையளவே இருந்த சின்னஞ்சிறு உடலுக்குள் ஒரு முழுமானுடனை உணர்வதென்பதே குழந்தையை கொஞ்சியறிதல்.

ஏழாம் மாதம் அவனுக்கு காய்ச்சல் ஒன்று வந்தது. முன்பெல்லாம் எளிய நீர்க்கோள் என்றாலும் பதறி மருத்துவரிடம் செல்வேன். இரவுபகல் விழித்து அருகமர்ந்திருப்பேன். அவன் வாழ்வான் என்பதில் ஐயமே தோன்றவில்லை. தேனில் மருந்து கரைத்து நாவில் கொடுத்து அவன் சற்று களைத்து துயில்கொண்டபோது நானும் விழியயர்ந்தேன்.

ஓர் எருமையின் முக்காரி கேட்டு கண்விழித்தேன். அறைக்குள் ஒருவன் நின்றிருக்கக் கண்டேன். கரியபேருருவம். கையிலொரு வடச்சுருள். அவன் என் மைந்தனை குனிந்து நோக்கிக்கொண்டிருந்தான். நான் வெறுமனே எவருடையதோ நிகழ்வு என நோக்கி படுத்திருந்தேன். அவன் வெளியே சென்று மறைந்தான். நாய் ஒன்றின் ஊளை எழுந்தது. தொடர்ந்து நாய்கள் ஊளையிட்டன. பறவைகள் கலைந்து பறந்தன.

நான் எழுந்து கைகால்கள் உதறித்தவிக்க என் மைந்தனை நோக்கி ஓடினேன். அவன் முகம் துயில்வதுபோலத்தான் இருந்தது, ஆனால் உயிரில்லை என நோக்கிலேயே தெரிந்தது. நான் உயிரற்ற குழந்தைகளைக் கண்டு பழகிவிட்டிருந்தேன். என் மேல் நோக்கை உணர்ந்து திரும்பி மனைவியை நோக்கினேன். அவள் என் மேல் விழிநட்டுக் கிடந்தாள்.

சிலகணங்கள் எங்கிருந்தேன் என்ன நிகழ்ந்ததென்று என்னால் சொல்லமுடியவில்லை. நினைவறிந்தபோது தெருவிலிறங்கி ஓடிக்கொண்டிருந்தேன். பரத்வாஜ குருநிலையில் சென்று நின்றேன். மூச்சிரைக்க நெஞ்சில் அறைந்தபடி கதறினேன். “ஆசிரியரே, வேதம் பிழைத்தது. என் மைந்தனை மறன் கொண்டுசென்றான்…”

பரத்வாஜர் வெளியே வந்து என்னை நோக்கினார். அழுதபடி அவர் கால்களில் சென்று விழுந்தேன். “என் மகன் மறைந்தான். வேதம் அழிந்தது. இனி நான் பற்ற கொழுகொம்பு இங்கில்லை, ஆசிரியரே” என்றேன். அவர் முகம் உறுதிகொண்டது. “அவன் இறக்கலாகாது. இறந்தால் வேதம் அழிந்தது என்றே பொருள். செல், அவனை மறனுலகிலிருந்து மீட்டுக்கொண்டுவரும் வீரன் ஒருவனை தேடிக் கண்டடை. நாற்பத்தொரு நாட்கள். அவன் உடலை நான் பேணுகிறேன். ஒரு காலச்சுழி அது. அதற்குள் உயிர் மீளமுடியும் என்கின்றன நூல்கள். உன் மைந்தனை வேதம் மீட்டுக்கொண்டுவரும்.”

“அவ்வண்ணம் கொண்டுவரவில்லை என்றால் நான் நாவில் சூடிய வேதம் பொய் என்றே பொருள். அதன் பின் நான் உயிர்வாழமாட்டேன். நாற்பத்தொன்றாம் நாள் நான் சிதைமேல் அமர்வேன். அறிக தெய்வங்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். நான் எழுந்து கண்ணீரைத் துடைத்தபின் அவர் முகத்தை நோக்கினேன். அதிலிருந்த உறுதி எனக்கு நம்பிக்கையளித்தது. அங்கிருந்து இறங்கி ஓடினேன்.

காலனை வெல்பவன் என்று நானறிந்தவர் ஒருவரே. அவரை தேடிச் சென்றேன். நல்லூழாக என் இல்லத்தருகே சப்தஃபலமென்னும் யாதவச்சிற்றூரில்தான் அவர் வாழ்கிறார் என்று அறிந்தேன். அவரது அணுக்கர்கள் நான் அவரைப் பார்க்க ஒப்பவில்லை. அவர் கோட்டைவாயிலில் மூன்றுநாள் நீரும் உணவுமின்றி அமர்ந்தேன். என்னை உள்ளே அழைத்துச்சென்றனர்.

நான் அரண்மனைக்கூடம் ஒன்றுக்கு அழைத்துச்செல்லப்படுவேன் என்றே எண்ணினேன். என்னை புழக்கடையில் இருந்த மரத்தடி ஒன்றுக்கு கொண்டுசென்றனர். அங்கே புழுதியும் சருகும் குவித்திட்டு அதன்மேல் அமர்ந்திருந்தவர் இளைய யாதவர் என்று முதலில் என்னால் உணரக்கூடவில்லை. உணர்ந்ததும் திகைத்து கைகூப்பி நின்றுவிட்டேன். சடைமுடியும் மண்படிந்த மேனியும் வெறிவிழிகளும் கொண்டு சிவப்பித்தரெனத் தெரிந்தார்.

“என்ன?” என்று பன்றி உறுமும் ஒலியில் அவர் கேட்டார். நான் சொல்லத்தொடங்கும்போதே கைநீட்டி “அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “என் மைந்தனை உயிர்ப்பிக்கவேண்டும். தாங்கள் தென்றிசைத்தலைவன் நகருக்குச் சென்று அவனை மீட்டுக் கொண்டுவரவேண்டும்” என்றேன். முகம் சுளித்து வெறுப்புடன் “நீர் வேதம் கற்றவர்தானே? வீண்கதை கேட்டு மயங்கிய மூடரைப்போல் பேசுகிறீர். மாண்டவர் மீள்வதா? எங்காவது முன்பு கேட்டிருக்கிறீரா?” என்று சீறினார்.

“ஆம், அரிதே அது. ஆனால் தன்னலமற்ற மாவீரர் ஊழையும் மறலியையும் வெல்லலாகும் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றேன். “அது சூதர்களின் கதை. இறந்தவர் மீளமுடியாது. மீளலாகாது. சென்று உன் மைந்தன் உடலை சிதையேற்று. நீராடி நினைப்பொழிந்து மறுசெயல் ஆற்று” என்றார். “என் குடிமேல் விழுந்த தீச்சொல் இது, யாதவரே” என்று சொன்னபோது கண்கலங்கி குரல் உடைய அழுதுவிட்டேன்

“அவ்வண்ணமென்றால் பெற்றுப் பெற்று மறலிக்கு ஊட்டு. காட்டுப்பன்றிகள் அதைத்தான் செய்கின்றன. செல்!” என்றபடி அவர் உரக்க நகைத்தார். “செத்தவர்க்காக அழுகிறாயா? வாழ்வதற்காக அழுகிறாயா? ஊருக்கு முன் உன் அழுகையைக் காட்டி என்ன பயன்? நீயும் செத்து எமனுக்குக் காட்டு அக்கண்ணீரை.” மீண்டும் அந்த வெறிநகைப்பு. உடனே சினமெழ “செல்… இங்கு உன் இழிமுகத்துடன் நின்றால் உன் தலையை அடித்து உடைப்பேன். அடேய், இவனை இழுத்து வெளியே வீசு…” என்றார்.

ஏவலன் அருகே வந்து செல்லும்படி விழிகாட்டினான். “இவன் இடையாடையைக் களைந்து இழுத்துச்செல். ஒன்பது முளைஎழுந்த வேரை ஊரார் காணட்டும்…” தொடையில் அறைந்து நகைத்த அச்சிறுமகனை நோக்கி தீச்சொல்லிட எழுந்த என் நாவை அடக்கினேன். அவரில் அமர்ந்து அச்சொல்லிடும் தெய்வமேதென்று அறிந்திலேன் என சொல்லிக்கொண்டேன்.

அங்கிருந்து கிளம்பும்போது இனி புவியில் எனக்கென படைக்கலமேந்தும் வீரன் என எவருமில்லை என்று எண்ணிக்கொண்டேன். தளர்ந்த காலடிகளுடன் வெளியே நடந்து தெருவுக்கு வந்தேன். மண்சாலையில் அச்சிற்றூரை விட்டு நீங்கினேன். அப்போது சாலையோரத்து வயலொன்றில் புல்லறுத்துக்கொண்டிருந்த முதுமகள் ஒருத்தி நிமிர்ந்து என்னை நோக்கினாள்.

என் அழுகையை அவள் கண்டாள். “ஏன் அழுகிறாய்?” என்றாள். “நான் அடைக்கலமென்று யாதவப் பேரரசரை தேடி வந்தவன். அவரோ புகைசூழ் சுடரென இருண்டிருக்கிறார், அன்னையே” என்றேன். “அவர் இல்லையென்றால் அடுத்துச் செல்லவேண்டிய இடம் பாண்டவக் குடியின் இளையவன் அல்லவா? அங்கு செல்க! அவன் வில் உனக்குத் துணைவரும்” என்றாள்.

“அச்சொற்களை நான் நம்பினேன். ஏன் என்று அறியேன், அது தெய்வக்குரலென்றே என் நெஞ்சு சொன்னது. அங்கிருந்து கிளம்பினேன். உங்களை எங்கு தேடிக் கண்டடைவதென்று அறியாமல் தவித்து காடுகளில் அலைந்து இங்கு வந்தேன். ஆணையிட்ட அந்த தெய்வமே உங்களை என் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதென்று உணர்கிறேன்” என்றான் அந்தணன். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்


சிறுகதைகள் -கடிதங்கள்

$
0
0

IMG_0063

அன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் அறம் சிறுகதை படித்தேன். உங்களின் வாசகனானேன். முதலில் என்னைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லிவிடுகிறேன். என்னைவிட நீங்கள் 2 மாதங்கள் மூத்தவர். உங்களைப்போலவே என்னையும் ஆளாக்கியது எங்கள் ஊர் லைப்ரரிதான். டால்ஸ்டாய், ராகுலை சாங்கிருத்தியாயன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஜேகே, ஓஷோ மற்றும் பலர்தான் என்னையும் என் மனசாட்சியையும் உருவாக்கியவர்கள்.

ஆனால் நான் உங்களைப்போல அதிர்ஷ்டசாலி அல்லன். அதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்று சொல்லலாம். என்னுடைய கவலை எல்லாம் அடுத்த தலைமுறையைப் பற்றித்தான். எனக்கும் புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆசை மிகவே உண்டு. சமுதாயத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கிறது.

உங்களின் வீடியோ சிலவற்றை youtube பார்த்தேன். மிகவும் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய வடிவமாக நீங்கள் இருக்கிறீர்கள. என்றாவது ஆண்டவன் அருள இருந்தால் சந்திக்கலாம்.

நன்றி,

வணக்கம்.

தாமோதரன் கே

***

அன்புள்ள தாமோதரன்,

எழுதுவது பிறருக்காக இல்லை என்றாலும் தனக்கே நல்லது. அது நம்மை தொகுத்துக்கொள்ள, பயனுள்ளவற்றில் ஈடுபடுகிறோம் என நிறைவடைய உதவக்கூடியது

தொடர்ச்சியாக எழுதவும். எழுதுவதற்கிணையாகவே வாசிக்கவும். ஒவ்வொரு எழுத்தினூடாகவும் மேலே சென்றுகொண்டே இருக்கவேண்டும்.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் வழக்கம் போல் உங்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபமாக இருமுகன் படம் பார்த்தேன். படத்தில் தீயவர்கள் அனைவரும் Adrenaline உட்கொண்டு சிறுது நேரம் உக்கிரமாக சண்டையிட்டு பின் நினைவிழப்பார்கள். அதைப்பார்த்ததும் உங்களின் “உற்று நோக்கும் பறவை” சிறுகதையில் துவாத்மர்கள் பற்றி எழுதியது ஞாபகம் வர அதை மறுமுறை படித்துப் பார்க்க உங்கள் தளத்தில் தேடினேன். அந்த கதையின் தலைப்பு “த்வாத்மர்கள்” என்று என் மூளையில் எப்படியோ பதிந்துவிட்டிருக்க அந்த எழுத்துப் பிழையான வார்த்தைக் கொண்டு உங்கள் தளத்தில் தேட கிடைக்கவில்லை. பின் அந்த கதையில் கிளி பற்றி ஒரு வாசகம் வரும் என்று நினைவிற்கு வர கிளி என்று தேடி கண்டுபிடித்தேன். மறுமுறை “உற்று நோக்கும் பறவை” படித்தேன்.

உண்மையில் மறுமுறை அதை கண்டுபிடித்து படிக்கும் வரை அது ஒரு கட்டுரை என்றே நினைத்திருந்தேன். மறுமுறை படித்த போது தான் சிறுகதை என்பதை அறிந்தேன். அது ஏன் சிறுகதை என்று எனக்கு பிடிபடவில்லை. உடனே உங்களிடம் கடிதம் எழுத அமர்ந்தேன். பின் உங்கள் தளத்திலேயே சிறுகதைகள் பற்றி எழுதி இருப்பீர்கள் அதை தேடாமல் கடிதம் எழுதுவது தவறு என்று புரிந்துகொண்டு சிறுகதை என்னும் சுட்டி கொண்டு தேடி படிக்க ஆரம்பித்தேன். அது நான் படிக்காத பல கதைகளுக்கு எடுத்துச்செல்ல எதற்காக தேடினேன் என்பதை மறந்து அடுத்தடுத்த கதைகள் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

முதிராக்குரல்கள் கட்டுரையில் சிறுகதை இலக்கணம் பற்றி நீங்கள் எழுதியதை படித்தவுடன் மறுபடியும் உற்று நோக்கும் பறவை வாசித்தேன். “உற்று நோக்கும் பறவையில்” ஒரு உண்மை வரலாற்று நிகழ்வையும் அதை நோக்கிய உங்கள் தேடலையும் எழுதியிருந்தீர்கள். அது எப்படி சிறுகதையாகிறது என்று விளக்க வேண்டுகிறேன். அறம் கதைகள் படித்த போதே எனக்கு அந்த சந்தேகம் எழுந்தது. ஆனால் அறம் கதைகளில் உண்மை மனிதர்களின் வாழ்கையினூடே நீங்கள் ஒரு புனைவை பின்னியிருப்பது தெரிந்ததால் அது கதையாகியது என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் உற்று நோக்கும் பறவை ஏன் சிறுகதை சட்டகத்திற்குள் பொருந்துகிறது என்று விளக்க வேண்டுகிறேன்.

பின்குறிப்பு: நான் ஒரு புதிய வாசகன். நீங்கள் பலமுறை பலவற்றை பற்றி எழுதியதை அறியாமல் சில கேள்விகள் கேட்கலாம். உங்கள் நேரம் மிக பொன்னானது என்பதையும் அறிவேன். என் கேள்விகள் மிகவும் தொடக்க நிலையில் இருந்தால் மன்னிக்கவும்.

நன்றியுடன்,

முருகன்.

***

அன்புள்ள முருகன்

சிறுகதைக்கு என சட்டகம் ஏதும் இல்லை. அதற்குத்தேவை ஒர் இயல்பு மட்டுமே, சொல்லப்படுவதற்கு மேலாக வாசகன் செல்லும் வழித்திறப்பு. கதை முடிந்தபின்னரும் தொடரும், புதிதாகத் திறக்கும் இயல்பு

அது அந்தக்கதையில் உள்ளது என்றே நினைக்கிறேன். அது ஒரு வரலாற்றுக்குறிப்பு போல தன்னை பாவித்துக்கொள்கிறது. அது கதையின் உத்தி. அவ்வளவுதான்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மபொசி,காமராஜ், ராஜாஜி..

$
0
0

அன்புள்ள ஜெ,

இந்தக்கருத்தை உங்கள் மீதான மாற்றுக்கருத்தாக முன்வைக்கவில்லை. எனக்கு தமிழக அரசியலில் அந்த அளவுக்கு பழக்கம் இல்லை. நான் பிறந்ததே எண்பத்திரண்டில்தான். ஆனால் வழக்கமாக கேள்விப் படும் சில விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். திராவிட இயக்கத்தவரின் மேடைகளில் சொல்லப் படும் கருத்துக்கள்தான்.

அதாவது தமிழகத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் ராஜாஜியும் காமராஜும் தோல்வியடைந்து விட்டார்கள். காமராஜ் கவனக் குறைவாக இருந்த காரணத்தால்தான் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகள் பறிபோயின. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. ராஜாஜி திருப்பதியை தமிழகத்தில் இருந்து பிரிக்க விட்டார். வட வேங்கடம் என்று சொல்லப் படும் தமிழக எல்லை இதனால் இல்லாமலாகியது. திராவிட இயக்கத் தலைவர்களான மபொசியும் பெரியாரும் சேர்ந்து போராடியதனால்தான் தமிழக எல்லைகள் இந்த அளவுக்காவது மீட்கப் பட்டன. இதெல்லாம் பரவலாகச் சொல்லப் படுகிறது.

அதேபோல ராஜாஜி பதவி வெறி கொண்டு தமிழகத்தில் கட்சிமாறல்களையும் ஊழலையும் அறிமுகம் செய்தார் என்கிறார்கள். ராஜாஜி தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்து தகப்பனின் தொழிலையே மகனும் செய்தால் போதும் என்றார் என்கிறார்கள். ராஜாஜியின் ஆட்சி உண்மையில் அப்படிப்பட்டதா என்ன? உங்களுடைய கருத்து என்ன?

கெ.செல்வம்

அன்புள்ள செல்வம்

இதே கேள்விக்கு மூன்றாவது முறையாக பதில் அளிக்கிறேன் என நினைக்கிறேன். இந்த இணையதளத்திலேயே சுருக்கமான பதில்கள் உள்ளன. இன்னொரு நண்பருக்கு எழுதிய விரிவான கடிதத்தை உங்களுக்காக மீண்டும் அளிக்கிறேன். நீங்கள் சொல்லும் இந்த வரலாற்றுத்திரிபுகள் தொடர்ந்து பல்லாண்டுக்காலமாகச் சொல்லிச் சொல்லி நிலைநாட்டப்பட்டுள்ளன. அவற்றை எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் தரப்புக்கு அக்கறையோ குரலோ இல்லை.

முதலில் ஒரு எளிய தகவல். மபொசி திராவிட இயக்கத்தவர் அல்ல.அவர் காங்கிரஸ்காரர். நாற்பதுகளில் திராவிட இயக்கத்தின் மேடைத் தமிழ்முழக்கத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் தரப்பில் உருவாக்கப்பட்டவர். திராவிட இயக்கத்தின் தேசிய-ஆன்மீக எதிர்ப்புக்கு மேடைமேடையாகப் பதிலடிகொடுத்தவர். அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தமிழ்ப்பெருமிதமும் தமிழ்த்தேசியம் பற்றிய ஆர்வமும் ஆரம்பமாகிவிட்டது. காங்கிரஸுக்குள்ளேயே அதற்கு ஆதரவிருந்தது. இளைஞர்களை அது கவர்ந்தும் வந்தது. ஆகவே காங்கிரஸ் தன்னுடைய தேசியப்பார்வையை கைவிடாமல் தமிழ்ப்பெருமிதத்தை கையாள நினைத்தது. தமிழ்த்தேசியத்தை இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க நினைத்தது. இதன் பொருட்டே ம.பொ.சியின் தமிழரசுக்கழகம் 1946ல் தொடங்கப்பட்டது.

அதற்கு அரசியலதிகாரம் சார்ந்த ஒரு நோக்கும் உண்டு. அன்றைய அதாவது ஒருங்கிணைந்த சென்னைமாகாண [Madras Presidency] நிர்வாகத்தில் ஆந்திரர் ஆதிக்கம் அதிகமிருந்தது. கேரளர்களின் ஆதிக்கமும் இருந்தது. அதற்குக் காரணம் சென்னைமாகாணத்தின் அதிகமான நிலப்பரப்பு ஆந்திராவிலேயே கிடந்தது. மக்கள்தொகையும் அங்கேதான் அதிகம். வரிவசூலும் அங்கேதான் அதிகம். ஒரிசாவரைக்குமான கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் முழுக்க சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவை.

ஆகவே சுதந்திரத்தை ஒட்டி உருவாகிவந்த அரசியல் அதிகார ஆட்டத்தில் ஆந்திரர்களை வெல்லவேண்டிய தேவை காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. அவர்கள் தேசியவாதிகளாகையால் நேரடியாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் பேச முடியாது. ஆகவே உருவாகி வந்த அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்.

ம.பொசி என்ற மனிதரும் அவரது இயக்கமும் தெலுங்கு ஆதிக்கத்துக்கு எதிராக சத்யமூர்த்தியாலும் பின்னர் ராஜாஜியாலும் முன்வைக்கப்பட்டவர்கள் என்பதே நானறிந்த வரலாறு. சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது எல்லைப்பிரச்சினைகளில் காங்கிரஸ் நேரடியாக தலையிடக்கூடாது என்பதற்காக தமிழகரசுக்கழகம் காங்கிரஸின் குரலாக ஒலித்தது. மத்திக்கு பதில்சொல்ல தேவையில்லாதவராக இருந்த ம.பொ.சி மொழிப்பிரச்சினையை மேடைகளில் உக்கிரமாக நிகழ்த்தினார்.அது காங்கிரஸின் அரசியல் ராஜதந்திரமும் கூட. அந்தக்குரல் திராவிட இயக்கத்தினரின் குரல்களைவிட ஓங்கி ஒலித்தது

ம.பொ.சிக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்ததில்லை. அவர் ஒரு மேடைக்குரல் மட்டுமே. அவரது ஆதரவு வட்டம் காங்கிரஸால் ஆனது. திருத்தணி-சென்னை ஆகியவற்றை ஆந்திரர்களிடமிருந்து பெற்று தமிழகத்துடன் இணைப்பதற்காக தமிழக காங்கிரஸ் நடத்திய பதிலிப் போரின் முக அடையாளம் அவர், அவ்வளவுதான். அவர் முன்னிறுத்தப்பட்டமைக்கு காரணம் அப்போது பக்கத்து மாநிலங்களிலும் காங்கிரஸே பதவியில் இருந்தது என்பதுதான்.

இதேபோல குமரியில் திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற தனி அமைப்பு நேசமணி தலைமையில் உருவாக்கப்பட்டு ‘காங்கிரஸின் கட்டளையை மீறி’ கேரளகாங்கிரஸுடன் எல்லைக்காகப் போராடியது. அவர்கள் தமிழகக் காங்கிரஸால் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் குமரிமாவட்டம் பிரிந்து வந்து தமிழகம் உருவானதும் பத்திரமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸில் வந்து காமராஜின்கீழே சேர்ந்துகொண்டனர். நேசமணி பின்னர் காங்கிரஸில் பல தலைமைப்பொறுப்புகளை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினரும் ஆனார்.

உண்மையில் தமிழகத்தின் இன்றைய எல்லையை உருவாக்கியவர்கள் ராஜாஜியும் காமராஜரும்தான். அதில் காமராஜரின் இந்த ‘பதிலிப்போர்’ பெரிய வெற்றி பெற்றது. அந்த தந்திரம் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது கேரளம் திருவிதாங்கூர் -கொச்சி- மலபார் எனமூன்று பகுதிகளாக இருந்தது. ஒட்டுமொத்த கேரளத்திற்குமான தலைவர்களும் அரசியலும் இருக்கவுமில்லை. கேரளம் ஒருங்கிணைந்த கேரளமாக ஆகி, ஒரு மாநிலஅடையாளம் பெற்றதே 1956ல் வந்த மாநில மறுசீரமைப்புப் சட்டத்துக்குப் [ States Reorganization Act of 1956] பின்னர் தான்.

ஆகவே காமராஜ் கிட்டத்தட்ட ஒருதலைபட்சமான வெற்றிகளைப் பெற்றார் என்பதே உண்மை. வேறெந்த தலைவரும் வேறெந்த அரசியல் சூழலிலும் எல்லைப்பிரச்சினைகளில் காமராஜ் அடைந்த ராஜதந்திர வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. தமிழகத்தில் அதற்குப்பின் வந்த எந்த தலைவரும் பக்கத்துமநிலங்களிடம் பேச்சுவார்த்தைமூலம் எந்த வெற்றியும் பெற்றதாக வரலாறே இல்லை. இழந்தவை எண்ணற்றவை.

மொழிவாரி பிரிவினைக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்ட அளவுகோல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் அதிகமாக தொன்றுதொட்டு வாழ்ந்துவந்தார்கள் என்றால் அந்த நிலப்பகுதிகளை இணைத்து ஒரு மாநிலம் என்பதே. அந்த அளவுகோலின்படி சிக்கலாக அமைந்தவை தமிழ்-மலையாளம் இருமொழிகளும் ஏறத்தாழ சம அளவில் பேசப்பட்ட கன்யாகுமரி, செங்கோட்டை, பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்.

பேச்சுவார்த்தையில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு போன்றபகுதிகளை விட்டுக்கொடுத்துத்தான் கன்யாகுமரிமாவட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பெற்றார் காமராஜ். நான்கு பெரிய அணைகள், பதினெட்டு சிறிய அணைகள், மூன்று மீன்பிடித்துறைமுகங்கள் மூன்று மழைக்காலம், 60சதவீத நிலம் மழைக்காடுகள் கொண்ட மாவட்டம் இது. ஒட்டுமொத்த தமிழக நிதிவருவாயில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அளிக்கும் மாவட்டம்.

இதில் மலையாளம் பேசும் பெரும்பான்மையினரைக் கொண்ட பகுதிகள், அதாவது தர்க்கபூர்வமாக பார்த்தால் கேரளத்துக்குச் சொந்தமான பகுதிகள், 40 சதவீதம். இன்றைய விளவங்கோடு கல்குளம் வட்டங்கள். அப்பகுதிகளிலேயே அணைகள் அமைந்திருந்தன. அந்த அணைகளை தமிழகத்தில் இருந்து விட காமராஜ் விரும்பவில்லை. ஆகவே காமராஜ் அப்பகுதிகளுக்காகவும் போராடினார். பாலக்காட்டைச்சேர்ந்த இருமேனன்கள் அன்று மத்தியஅரசின் மையப்பொறுப்புகளில் இருந்தார்கள் .தங்கள் மாநிலம் கேரளத்தில் சேரவேண்டுமென்ற அவர்களின் தனிப்பட்ட ஆசையை காமராஜ் பயன்படுத்திக்கொண்டார்.

கேரளத்தில் இருந்து தமிழகம் செங்கோட்டையை பெற்றது. அதேபோல ஊட்டி மேற்குமலைச்சரிவை. இந்த நிலங்கள் மழைப்பிடிப்புபகுதிகள் என அன்று காமராஜுடன் இருந்தவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்விரு பகுதிகள் இங்கே வந்தமையால்தான் தாமிரவருணியின் அணைகளும், குந்தா போன்ற அணைகளும் நமக்குச் சாத்தியமாகின. முல்லைப்பெரியாறு அணைப்பகுதி ஏன் தமிழகத்துடன் வரமுடியாது என்றால் அந்த அணையின் நீர்ப்பிடிப்புபகுதி, நீர் வழியும்பகுதி முழுக்கமுழுக்க மலையாளிகள் வாழும் கேரளநிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் தமிழர் எண்ணிக்கை 05 சதவீதம் மட்டுமே. எந்த அடிப்படையில் அதைக்கோருவது?

எந்த நிலங்களை கேரளத்துக்கு விட்டுக்கொடுத்தார்களோ அந்நிலங்களை கேரளத்துடன் பேசி ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்டு முற்றிலும் கேரளத்தில் பெய்யும் மழைநீரை அப்படியே தமிழகம் எடுத்துக் கொள்ளும் பரம்பிக்குளம் -ஆளியார் அணைக்கட்டுகளை உருவாக்கினார்கள் ஆர்வியும் சி. சுப்ரமணியமும். பரம்பிக்குளம் அணை கேரளத்தில் தமிழகத்தால் கட்டப்பட்டது. அதேபோல கேரள மன்னரிடம் பேசி முழுக்க முழுக்க கேரளநிலத்தில் ஓடும் நெய்யாற்றில் இருந்து குமரிக்கு நீர்கொண்டு வந்தார் காமராஜ். இதெல்லாம்தான் உண்மையான ராஜதந்திரம்.

எந்த ஒரு அரசியல்பேரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும், இன்று காமராஜ் சில இடங்களை விட்டுக்கொடுத்ததை ஏதோ கையாலாகாத்தனம்போலவும், கிடைத்தவை முழுக்க இங்கே மீடியாவில் சத்தம்போட்ட சிலரின் தனிப்பட்ட சாதனைபோலவும் பேசும் ஒரு அரசியலை திராவிட இயக்கம் உருவாக்கிவருகிறது. இவையே நம் பொதுஅரசியல் வரலாறாக இன்று உள்ளது. பொய்களையே சொல்லி அதன்மேலேயே உருவாகி வந்த ஓர் இயக்கத்தின் சாதனை இந்த பிரச்சார வரலாறு

மீண்டும் ம.பொ.சி. ஆந்திர எல்லைப்பிரச்சினையின்போதுதான் ம.பொ.சியின் புகழ் உச்சத்தில் இருந்தது. அன்று தமிழக அரசியலில் இருந்த இரு மாபெரும் அரசியல் சூதாட்டக்காரர்களின் கையில் அப்பாவிக் காயாக கிடந்து அலைமோதினார். ம.பொ.சி. ராஜாஜி காமராஜுக்கு எதிராக ம.பொ.சியை கொண்டுவர திட்டமிட்டார். காமராஜ் நாடார். ம.பொ.சி நாடார்களுக்கு நிகரான கிராமணி சாதி. காமராஜ் எப்படி விடுவார்? ம.பொ.சியின் காற்று பிடுங்கப்பட்டது. 1954ல் காமராஜ் ஆட்சிக்கு வந்தபோது அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். 1967 தேர்தலில் திராவிட முன்னேற்றகழக ஆதரவுடன் அவர் சட்டச்சபைக்கு சென்றாலும் எஞ்சிய வாழ்நாள் முழுக்க அரசியல் அனாதையாக ஆனார். இதுவே வரலாறு

*

ராஜாஜி ஊழலாட்சி செய்தார் என குற்றம்சாட்டுவது யார்? திராவிட இயக்கமா? திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஊழல் ஆரம்பித்துவிட்டது என்பதல்லவா வரலாறு? சர்க்காரியா கமிஷன் முதல் ஸ்பெக்ட்ரம் வரையிலான அதன் வரலாற்றை மேலோட்டமாகவாவது அறிந்த எவர் இந்த வரிகளை நம்ப முடியும்?

இந்தியச் சுதந்திரப்போரில் ஈடுபட்டு சிறைசென்றவர் ராஜாஜி எனபதாவது தெரியுமா? இன்றைய சிறையல்ல, வெள்ளையனின் சிறை. அந்தச்சிறையில் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை காண தி.செ.சௌ ராஜன், க.சந்தானம், சட்டநாதக்கரையாளர் என யாராவது ஒருவரின் சுயசரிதையை வாசிக்கலாம். பெரும்புகழும் பணமும் தந்தை தொழிலை உதறி காந்தியஆசிரமம் அமைத்து அதிலேயும் சிறைக்குச் சமானமான எளிய வாழ்க்கையைவாழ்ந்தவர் அவர்.

பதவிப்பித்து பிடித்து ராஜாஜி என்ன செய்தார்? பிள்ளையை பதவியில் அமரச்செய்தாரா? வாரிசுகளை தொழிலதிபர்களாக, கோடீஸ்வரராக ஆக்கினாரா? இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அடிப்படைக் கட்டுமானங்களை ராஜாஜிதான் திட்டமிட்டு அமைத்தார். அதன் பலன்களையே இன்றும் தமிழகம் அனுபவிக்கிறது. ஓசூர் தொழிற்பேட்டை அவரது கனவு. சென்னை துறைமுகவிரிவாக்கம் அவரது சாதனை. இன்றுவரை அவரது தனிப்பட்ட நேர்மைமீது எந்த ஒருவரும் ஆதாரபூர்வமான சிறு குறையைக்கூட சுட்டிக்காட்டமுடிந்ததில்லை.

முக்கியமான வரலாற்றுத்திரிபு என்பது சென்னையை மீட்ட சாதனையை முழுக்கமுழுக்க ம.பொ.சிக்கு விட்டுக்கொடுத்து ராஜாஜியை வில்லனாக ஆக்குவது. ராஜாஜி இல்லையேல் சென்னை தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே வரலாற்று உண்மை. இங்கே சில ஊர்களில் கோஷமிட்ட ம.பொ.சியைப்பார்த்து பயந்துபோய் ஆந்திரர்கள் சென்னையை விட்டுக்கொடுக்கவில்லை. அப்போது தமிழகத்தின் முதல்வராக ராஜாஜி இருந்தார். பேச்சுவார்த்தைகளில் இம்மிகூட அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 1953ல் ஆந்திரமாநிலம் உருவானபோது சென்னையையும் திருத்தணியையும் உள்ளிட்ட இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.

1952ல் ஆந்திர சுதந்திரப்போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ்மனதே என்ற போராட்டத்தின் உச்சமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவே கொந்தளித்தது. அதற்கிணையான எந்த அலையும் இங்கே உருவாகவில்லை. மபொசியை காங்கிரஸ் கிளப்பிவிட்டும்கூட பெரிதாக ஒன்றும் நிகழவில்லை, சில கூட்டங்களைத்தவிர. நேரு ஆந்திர காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாகவேண்டிய நிலை. காரணம் ஆந்திராவுக்கு தேசிய அரசியலில் பங்கு மிக அதிகம். அது மாபெரும் மாநிலம்.

ஆனால் ராஜாஜி நேருவை உதாசீனம்செய்தார். பொட்டிஸ்ரீராமுலு உயிர்துறந்த டிசம்பர் 15 ஆம் தேதி நேரு பலமுறை கூப்பிட்டும் ராஜாஜி நேருவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவர் தொலைபேசியை எடுத்திருந்தால் சென்னை கைவிட்டுப்போயிருக்கும் என்று எம்.ஓ.மத்தாய் சொல்லியிருக்கிறார். விளைவாக ஆந்திரா எரிந்தது, ராஜாஜி பிடிவாதமாக இருந்தார். அந்த ஒருசெயலால்ராஜாஜி சென்னையை மீட்டார். அவரது அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக அழித்தும் கொண்டார். பின்னர் சீனப்படையெடுப்பின்போது வலியச்சென்று நேருவுக்கு உதவ முன்வந்தார் ராஜாஜி. நேரு அப்போதும் அவரிடம் முகம்கொடுத்துப் பேச தயாராக இருக்கவில்லை.

ராஜாஜியின் கல்விக்கொள்கையை குலக்கல்வி என்று சொல்லிச் சொல்லி வரலாற்று நினைவாக ஆக்கிவிட்டார்கள். ஒரு திட்டத்தை அதன் எதிரிகள் எப்படி வசைபாடினார்களோ அந்த பெயரிலேயே வரலாற்றில் இடம்பெறச்செய்வதுபோல மாபெரும் அரசியல் மோசடி ஒன்றில்லை. ராஜாஜி அதை குலக்கல்வி என்று சொல்லவில்லை. அந்த திட்டத்தில் எங்கும் அப்பெயர் இல்லை. ஆனால் அதை நீங்கள் விக்கிபீடியாவில் தேடினால்கூட Hereditary Education Policy என்ற பேரிலேயே கிடைக்கும். அந்த திட்டத்தை இப்படி திரிக்காமல் இருந்தால் இன்றையதலைமுறைக்கு அதில் எந்த பிழையும் கண்ணுக்குப்படாது. அவதூறுசெய்தால் மட்டுமே அதை எதிர்க்கமுடிகிறதென்பதே அந்த திட்டத்தின் நேர்மைக்குச் சான்றாகும்

இணையத்திலேயே கிடைக்கும் ராஜாஜியின் பகுதிநேரக்கல்வித்திட்டத்தின் முன்வரைவை இன்று வாசிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்தால் அது தோற்கடிக்கப்பட்டது என்பதே புரியவில்லை. அன்றைய சூழலை நாம் ஓரளவாவது கவனிக்கவேண்டும். இந்தியா மாபெரும் நிதி நெருக்கடியுடன் சுதந்திரம் பெற்றது. தேசப்பிரிவினையால் வட இந்தியா கிட்டத்தச்ச சின்னாபின்னமாகிக் கிடந்தது. அடிப்படைத்திட்டங்களுக்கே பணமில்லாத நிலை நிலவியது. 1951ல் பிகார், மத்தியபிரதேசத்தை மாபெரும் பஞ்சம் ஒன்று தாக்கியது. 1785 முதல் வட இந்தியாவை தாக்கி வந்த பெரும் பஞ்சங்களின் நீட்சி அது.

1873 பஞ்சத்தில் பிகாரில் லட்சக்கணக்கானவர்கள் செத்தார்கள். ஆனால் 1951ல் நேருவின் அரசு உலகமெங்கும் பிச்சை எடுத்து பிகாரில் பட்டினிச்சாவு இல்லாமல் பார்த்துக்கொண்டது. [அதில் அமெரிக்கா அளித்த பங்கு மிக முக்கியமானது, அது சோவியத் ஆதரவு அரசியலால் பின்னர் மறக்கப்பட்டுவிட்டது] இப்பஞ்சத்தில் பிகாரில் மாபெரும் கஞ்சித்தொட்டி இயக்கத்தை ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இன்றும் அம்மக்களால் காந்திக்கு நிகராக கொண்டாடப்படுகிறார்.

இச்சூழலில் ராஜாஜி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தின் நிதிச்சுமையை அவரால் சமாளிக்க இயலவில்லை. கிராமப்பொருளாதாரம் குடிப்பழக்கத்தால் அழிந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தமையால் மதுவிலக்கை கறாராக அமல்படுத்தினார். தமிழக அரசின் முக்கியமான வரவினமே மதுமீதான வரி என்பதனால் அவர் கடுமையான பொருளியல் நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது

 

ராஜாஜியின் தரப்பு ஒருவகையான ஆழ்ந்த நேர்மை கொண்டது. வட இந்தியா பஞ்சத்தில் சாகும்போது தென்னிந்தியா உதவித்தான் ஆகவேண்டும் என்று அவர் நம்பினார். ஆகவே செலவினங்களை குறைத்தார். அவரது கடுமையான நடவடிக்கைகளை மக்கள் எந்த அளவுக்கு புரிந்துகொள்வார்கள் என அவர் எண்ணவேயில்லை.

அவருக்கு நேர் மாறாக அன்று திராவிட இயக்கம், சி. என் அண்ணாத்துரை தலைமையில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று பிரச்சாரம் செய்தது. தமிழகத்தில் நிலவிய தானியத்தட்டுப்பாட்டுக்குக் காரணமே வடக்கு தெற்கை சுரண்டி கொழுப்பதுதான் என்றது. ‘தமிழகத்தில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி. அத்தனையும் கொணர்ந்து மக்களின் வாட்டத்தை போக்குவோம்’என்றார்கள். காங்கிரஸ் அரசு அன்று சந்தித்த பொருளியல் சிக்கல்களை அறியாத அன்றைய எளிய மக்கள் அந்த போலியுரைகளை நம்பினார்கள்.

பொருளியல் சிக்கல்களில் இருந்து உருவானதே ராஜாஜியின் கல்விச்சீர்த்திருத்த முறை. பள்ளிகளின் அளவை அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. ஆசிரியர்களையும் உடனடியாக அதிகரிக்கமுடியாது. அன்றைய கல்வி எப்படி இருந்தது என அவர் ஆராய்ந்தபோது பெரும்பாலான கல்விநிலையங்கள் ஓர் ஆசிரியரை மட்டும் கொண்டவையாக, அத்தனை பிள்ளைகளையும் கூட்டமாக ஒரே இடத்தில் அமரச்செய்பவையாக இருந்தன. தினம் ஒருமணிநேரம்கூட பிள்ளைகள் கற்கவில்லை – இன்றும் தமிழகத்தில் கணிசமான மலைக்கிராமப் பள்ளிகள் அப்படித்தான் உள்ளன

பிள்ளைகளை அதிகளவில் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் அளவை அதிகரிக்கமுடியாது என்பதனால் ராஜாஜி கல்வியை நேரம் பிரித்த்தார். அதாவது சாதாரணமான ஷிஃப்ட் முறை. அவ்வளவுதான் அவர் செய்த சீர்திருத்தம். அதுவும் நிதிநிலை சரியாகும் வரை. ஒரேபள்ளியில் காலையில் ஒருவகுப்பு. மதியம் ஒருவகுப்பு. ஆரம்பப்பள்ளிகளுக்கு 3 மணி நேரம் மட்டும் கல்வி. ஆனால் ஆசிரியர் முழுநேரமும் கல்வி கற்பிக்கவேண்டும். பாடத்திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை.

மூன்று மணிநேரக் கல்வி தவிர மிச்சநேரம் பிள்ளைகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு சாதாரணமான ஒரு பேட்டியில் ‘அவர்கள் பெற்றோருக்கு வேலையில் உதவலாம்’ என்று சொல்லப்பட்டது. மதியத்துக்கு மேலே பிள்ளைகள் இன்ன வேலைதான் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கல்விகக்ழகத்தால் முன்வைக்கப்படவில்லை. சாதியம் சார்ந்த எந்த குறிப்பும் எங்கும் இல்லை.

பிள்ளைகள் பெற்றோருக்கு உதவலாமே என்ற ஒருவரியை சமத்காரமாக பிடித்துக்கொண்டு குலக்கல்வி என்று சொல்ல ஆரம்பித்தார்கள் திராவிட இயக்கத்தவர். அண்ணாத்துரை அந்த அவதூறை ஆரம்பித்தார். திராவிட இயக்கத்தின் உச்சகட்ட பரப்புரைக்கு பதில்சொல்லும் திராணி காங்கிரஸுக்கு இருக்கவில்லை. இந்த விஷயத்தில் விஷயம் தெரிந்த கம்யூனிஸ்டுகள் மௌனம் சாதித்தார்கள். காமராஜ் ராஜாஜிக்கு எதிரி என்பதனால் அன்றைய காங்கிரசும் அவருக்கு உதவவில்லை. அந்த திட்டத்தைப் பயன்படுத்தி தன் அரசியலெதிரியான ராஜாஜியை வீழ்த்தினார் காமராஜ். அடுத்த முதல்வராக ஆனார்.

ராஜாஜியின் திட்டத்துக்கு அன்று உருவான எதிர்ப்புக்கும் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். இன்று எண்பது வயதான ஆசிரியர் ஒருவரே அதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அந்த திட்டம் ஆசிரியர்களின் பணிநேரத்தையும் சுமையையும் அதிகரித்தது. அவர்கள் ஒருநாளில் 5 மணி நேரத்திற்குப் பதில் 6 மணி நேரம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஐந்துநாள் வேலை ஆறுநாள் வேலையாக அதிகரிக்கப்பட்டது.

அன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சிறு கிராமங்களில் தங்கும் வசதி இருப்பதில்லை. அதைவிட பிறசாதியினர் நடுவே தங்குவது அன்று எவராலும் விரும்பப்படவில்லை. என்னிடம் பேசியவர் கோயில்பட்டியில் இருந்து இருபத்த்தைந்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று ஓர் இடைய கிராமத்தில் எழுபது பிள்ளைகளுக்கு ஒரேயாளாக பாடம் நடத்தினார். அவர் வேளாளர். இடையர் கிராமத்தில் அவர் தண்ணீர்கூட குடிப்பதில்லை.அவர் அங்கே சென்று சேர பத்து மணி ஆகிவிடும். மதியமே திரும்பி விடுவார்.

இந்த நிலையை ராஜாஜியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் பெருந்திரளான மாணவர்களுக்கு சில மணி நேரம் மட்டுமே கல்வி கற்பிக்கிறார்கள், அதனால் எந்த பயனும் இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காகச்செலவிடப்படும் பணம் பெரும்பாலும் வீணாகிறது என்கிறது. ஆகவே அது ஆசிரியர்கள்மேல் சவுக்கை சுழற்றுகிறது. அவர்கள் எட்டு மணிக்கே பள்ளியில் இருந்தாகவேண்டும். மாலை ஐந்துக்கு கிளம்பவேண்டும். ஆசிரியர்கள் கொந்தளித்தது இயல்பே. அந்த கசப்பை ஈவேராவும்  அண்ணாத்துரையும் அவர்களின் இயக்கமும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டனர்.அது வெறும் அரசியல். உங்கள் அரசியல் அதுவாக இருந்தால் சொல்லிக்கொண்டிருக்கலாம் – வரலாறு அது அல்ல

ராஜாஜியின் இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் காலகட்டத்தில் பல பகுதிகளில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு விளைவுகளை காட்டிய ஒன்றே. அதை விரிவாக தமிழகம் முழுக்க கொண்டுவர முயன்றதே ராஜாஜியின் திட்டம். அவரது சாதியை இதில் பிணைப்பதற்காகத்தான் தந்திரமாக இது அவரே உருவாக்கிய திட்டம் என்று சொல்கிறார்கள்.

அத்துடன் இந்தத் திட்டமே கூட அன்று உலகில் பல நாடுகளில் நடைமுறையில் இருந்ததை ‘காப்பி’ அடித்து உருவாக்கப்பட்டதுதான். உலகமெங்கும் குடும்பத்தொழிலை பிள்ளைகள் செய்வது நடைமுறையில் இருந்த காலம். பிள்ளைகளை அப்படி சட்டென்று கல்விக்காக வெளியே எடுக்கமுடியாது. ஆகவே அவர்கள் பாதிநாள் கற்றால்போதும் என்னும் நிலை அன்று இருந்தது. மூன்றுமணிநேரம் சரியானபடி கற்பித்தாலே போதும் என ராஜாஜி வாதாடினார். நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆசிரியர் நாளெல்லாம் கூட்டி வைப்பதற்குப்பதில் பாதிப்பாதியாக மூன்றுமணி நேரம் கற்பிப்பதுதான் அவரது திட்டம்.

ராஜாஜியின் பள்ளித்திட்டத்தில் எங்காவது தகப்பன் தொழிலை மகன் செய்தாகவேண்டும் என்று உள்ளதா என்ன? ஒருவரி? அப்படியானால் கல்வியே தேவை இல்லையே. பள்ளிக்கூடமே திறக்கவேண்டாமே. ஏற்கனவே பிள்ளைகள் அதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள்? அவர் அடித்தட்டு மக்கள் பிள்ளைகளை கவர்ந்து பள்ளிக்கு கொண்டுவரவே அதைச் சொன்னார். உங்களுக்கு பிள்ளைகள் சம்பாதித்துக்கொடுப்பார்கள், மிச்சநேரத்தில் அவர்கள் பள்ளிக்கு வரட்டும் என்றுத தந்தையரிடம் சொன்னார். அரை நூறாண்டு கழித்து இன்றும் கூட, இத்தனை கல்வி வளர்ச்சிக்குப் பின்னரும்கூட, இது தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஒரு உத்தியே.

இன்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் வேலைக்கனுப்பாதீர் என்று கோடிக்கணக்கில் செலவிட்டு பிரச்சாரம்செய்கிறது தமிழக அரசு. இன்றும் கூட கால்வாசிப்பிள்ளைகள் படிப்பு நிறுத்தப்பட்டு குலத்தொழிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாட யதார்த்ததில் இருந்து உருவான திட்டம் அது. இங்கே 90 சதவீதம்பேர் குலத்தொழில் செய்பவர்கள் அன்று. அவர்களின் தொழிலில் பிள்ளைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அவர்களை வேலையைவிட்டு நிறுத்தி பள்ளிக்கனுப்புவது என்பது அக்குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமை. ஆகவேதான் அவர்கள் வேலையைச்செய்துகொண்டே படிக்கலாம் என்றார் ராஜாஜி. அந்தத் திட்டம் நீடித்திருந்தால் தமிழகக் கல்வியில் இன்னும் பெரிய பாய்ச்சல் நிகழ்ந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

சரி, காமராஜ் எப்படி முழுமையான ஆரம்பக்கல்வியை அளிக்க ஆரம்பித்தார்? 1954ல் அவர் ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழக அரசின் நிதிநிலை பலபடிகள் முன்னேறியிருந்தது. [ அதற்குக் காரணமும் ராஜாஜிதான். அவரது மறைமுக வரிகள் ]  அரசு நிதியை அதிகம் செலவிடாமல் பெரும்பாலும் தனியார்நிதிகளைக்கொண்டே பள்ளிகளை நடத்தும் புதுமையான திட்டம் நெ.து.சுந்தரவடிவேலுவால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இன்று திரிபுகளுக்கு அளவே இல்லை. 6000 பள்ளிகளை மூடும்படி ராஜாஜி உத்தரவிட்டார் என்று தி.க பிரசுரங்களில் பார்த்தேன். நண்பர்கள் மூலம் முறையாக விசாரித்தேன். ’அதெப்படி சுதந்திர இந்தியாவில் அப்படி ஒரு சட்டம்போட முடியும் உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்றார்கள். இன்றும்கூட அப்படி பள்ளிகள் மூடப்பட்டமைக்கான அரசாணையை எவராவது ஆதாரம் காட்டவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்..

ராஜாஜி முதல்முறை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, 1937ல், சென்னைமாகாணம் கடுமையான நிதிச்சுமையை சந்தித்தது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம். பிரிட்டிஷ் அரசு வரிச்சுமையால் இந்தியாவை கசக்கிக்கொண்டிருந்த நிலை. பிரிட்டிஷ் அரசின் மைய நிதி ஆதாரம் குடிவணிகம். ராஜாஜி மதுவிலக்கை கொண்டுவந்தார். பிரிட்ட்ஷாருக்கு கட்டவேண்டிய வரியை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே பல துறைகளில் அவர் சிக்கன நடவடிக்கையை கொண்டுவந்தார்

அன்று தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் குடிப்பள்ளிக்கூடம் போன்ற கிராமிய அமைப்புகளுக்கு அரசு நிதி அளிக்கும் வழக்கம் இருந்தது. இந்த நிதி பெரும்பாலும் முறைகேடாக, பயனற்று செலவாகிறது என ராஜாஜி கருதினார். அவற்றை முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். இந்த ஆணைமூலம் ஆந்திராவில் பல குடிப்பள்ளிகளை மூடவேண்டியிருக்கும் என ஜஸ்டிஸ் கட்சி எதிர்த்தது. அதை பிரதிபலித்து ஈவேரா அவர்கள் தமிழகத்திலும் 6000 பள்ளிகள் மூட நேரலாம் என்று சொன்னார். இந்த வரியைத்தான் இன்று வரை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை வைத்து ராஜாஜி 1952லும் 6000 பள்ளிகளை மூடினார் என்கிறார்கள்.

அதீதமான காழ்ப்புடன் எதிர்கொள்ளப்பட்ட மனிதர் ராஜாஜி. அவர்மேல் இன்று, இத்தனை காழ்ப்பிருந்தபோதும்கூட இம்மாதிரி பொய்களையும் சில்லறைக்குற்றச்சாட்டுகளையும் மட்டுமே சொல்லமுடிகிறது என்பதே ராஜாஜி யார் என்பதைக் காட்ட போதுமான ஆதாரம்

*

ஆனால் ராஜாஜி என் உதாரணமனிதர் அல்ல. அவரில் நான் பல குறைகளை காண்கிறேன். ஒன்று, அவர் ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் அல்ல. பேச்சுவன்மை அற்றவர். அதிகாரம் மூலம் பலவற்றைச் செய்யலாமென நினைத்தார்.ஆகவே பலவிஷயங்களில் மக்களின் உள்ளுணர்வை அவரால் கணிக்கமுடியவில்லை. அவர் பழையகால டாக்டர்களைப்போல. நோயாளிக்கு என்ன தெரியும்,நான் கொடுப்பதே மருந்து என நம்பியவர் அவர். இந்த அம்சமே அவரை மக்களிடமிருந்து அன்னியமாக்கியது. மெல்ல மெல்ல அரசியல்சூழ்ச்சியாளராக ஆக்கியது.

ஜனநாயக நம்பிக்கை இல்லாதவராதலால் ராஜாஜி ஒரு நவீன ஜனநாயக அரசை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அரசு என்பது ஒரு தொட்ர்சமரசம் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. பல்வேறுவகையான மனிதர்களை இணைத்துக்கொண்டுசெல்ல அவரால் இயலவில்லை. அவரது தனிப்பட்ட ஆணவமும் முசுட்டுக்குணமும் அவரிடமிருந்து திறமையானவர்களை பிரித்தன. ஒருகட்டத்தில் அரசியலில் அவருக்கு நண்பர்களே இருக்கவில்லை.

ராஜாஜி கட்சிக்குள் மக்கள் செல்வாக்கினால் நிலைநிற்கவில்லை. அதிகார விளையாட்டுகள் மூலமே நிலைநின்றார். அன்று மக்கள்செல்வாக்கு காமராஜுக்கே இருந்தது. கடைசியாக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மைய அரசியல் பெருவெள்ளம் போல் உருவாகி வந்தபோது அந்த அரசியலுக்கு எதிராக நின்ற கடைசித் தடை ராஜாஜி.ஆகவே அவர் அவதூறுகள், திரிபுகள், வசைகள் மூலமே ஒழித்துக்கட்டப்பட்டார்.

1952ல் ராஜாஜி கட்சித்தாவலை உருவாக்கி ஆட்சிக்கு வந்தது அறமில்லாத செயல் என்றே எண்ணுகிறேன். ஆனால் ராஜாஜிக்கு அதற்கான நோக்கங்கள் இருந்தன. சுதந்திரம் கிடைத்த உடனே ஆட்சி கைவிட்டுச்செல்வதை அவர் விரும்பவில்லை.அவர் கனவுகண்ட நிர்மாணத்திட்டங்கள் பலவற்றை தொடங்க விரும்பினார். பலவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டினார். ஆனால் என்ன விளக்கம் கொடுத்தாலும் அது சரியானது அல்ல.

அவரது அரசை கவிழ்க்க காமராஜ் செய்த உள்வேலையும் கௌரவமானது அல்ல. அதன் விளைவாக உருவான கசப்புகளே தமிழகத்தில் காங்கிரஸ் செய்த எல்லா சாதனைகளையும் மீறி அதை அழித்தது. காமராஜ் மீது கொண்டகசப்பால் திராவிடமுன்னேற்றகழகத்தை ஆதரித்து பதவிக்குக் கொண்டுவர ராஜாஜி முன்வந்தது மாபெரும் அரசியல் தவறு. ஒருபோதும் அதற்காக அவருக்கு மன்னிப்பு இல்லை.

அதேபோல் ராஜாஜியின் இலக்கிய ஆர்வம் நேர்மையானதென்றாலும் இலக்கிய நோக்கு பழமையானது. நீதி சொல்வதே இலக்கியம் என நம்பினார். அவ்வகை இலக்கியத்தையே அவர் வளர்த்தெடுத்தார். மாறான நவீன இலக்கியத்தை அவர் பொருட்படுத்தவில்லை.ஆகவே தமிழில் நல்ல இலக்கியம் உருவாக அவரது அதிகாரம் தடையாக ஆகியது.

அவரது பொருளியல் கொள்கைகள் அன்று பெரும் கசப்பை உருவாக்கின. நாடே சோஷலிச மோகத்தில் திளைத்தபோது சுதந்திரச் சந்தையையும் போட்டிமுதலாளித்துவத்தையும் ஒரேவழியாக அவர் கண்டார். ‘சோஷலிசம் மனிதனின் இலட்சியவாதத்தை நம்பி ஒரு பொருளியல் கட்டுமானத்தை உருவாக்குவதாகும். மனிதன் அப்படி இலட்சியங்களால் ஆனவன் அல்ல. அவன் சுயநலத்தால் ஆனவன்.

லாபநோக்கமும் நுகர்வுமே பொருளியலின் அடிப்படைகளாக இருக்க முடியும்.மனிதனின் இலட்சியவாதத்தை நம்பி சோஷலிசத்தை நோக்கி சென்றால் ஊழல்தான் பெருகும். லாபநோக்குகளுக்குள் போட்டியை உருவாக்கும் முதலாளித்துவமே சிறந்தது’ என்பது ராஜாஜியின் எண்ணம்.

மகாலானோபிஸுக்கு எழுதிய கடிதத்தில் ராஜாஜி சோஷலிசப் பொருளியல் அரசாங்கத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் என்கிறார். இந்திய அரசு அமைப்பு முழுக்கமுழுக்க பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரபோருக்கு எதிராக அது இருப்பதற்காக அதற்கு ஊழல்செய்ய சுதந்திரம் அளித்திருந்தார்கள். அதே அதிகார அமைப்பை வைத்துக்கொண்டு சோஷலிசத்தை கொண்டுவந்தால் ஊழலே பெருகும் என்கிறார் ராஜாஜி. நேரு மனிதனை நம்பினார். ராஜாஜி மனிதனை நம்பவில்லை. நேரு இலட்சியவாதி, ராஜாஜி யதார்த்தவாதி.ராஜாஜிதான் சரியாகச் சொன்னார் என்று ஐம்பதாண்டுக்கால அரசியல் நிரூபித்தது!

சமீபத்தில் ராகச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்திய அரசியல் என்ற நூலை வாசித்துவிட்டு என்னிடம் ஒரு நண்பர் பேசினார். ‘சார் அப்ப ராஜாஜி ரொம்ப தெளிவாத்தானே பேசியிருக்கார்? வரிப்பணத்தைக் கொட்டி பொதுத்துறைய வளத்தா அது தனியார்த்துறையிலே திறமையின்மையை உருவாக்கும். ஊழலை வளர்க்கும்னு சரியா சொல்லியிருக்காரே. இன்னிக்கு எல்லாருமே அதைத்தானே சொல்றாங்க’ என்றார். ‘அதைச்சொன்னதுக்காக அன்னைக்கு அவரை கழுவேத்த துடிச்சாங்க’ என்றேன்.

அன்று சோஷலிசக்கனவு இருந்தது. பொதுத்துறைகளை ஒருவகை மினி சோஷலிசமாக கண்டார் நேரு. தனியார்துறை என்பது முதலாளித்துவ மாயை என்று நினைத்தார்கள். ‘அப்டி இல்லை சார். பொதுத்துறையிலே காதும் காதும் வச்சதுமாதிரி ஊழல் செய்யலாம் அது மட்டும்தான் காரணம். ராஜாஜி நேர்மையாச் சொல்லியிருக்கார்’ என்றார் இளம் நண்பர். ஆச்சரியமாக இருந்தது.

ஜெ

https://en.wikipedia.org/wiki/Modified_Scheme_of_Elementary_education_1953

http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm

http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm

http://en.wikipedia.org/wiki/Hereditary_education_policy

 

=====================

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 27, 2010

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19

$
0
0

[ 25 ]

“நான் உறுதியளிக்கிறேன். காலபுரி புகுந்து உம் மைந்தனை மீட்டுத் திரும்புவேன்” என்று அந்தணனின் கைதொட்டு ஆணையிட்டு அர்ஜுனன் கிளம்பினான். தெற்குநோக்கி நான்கு நாட்கள் நடந்துசென்ற அவன் எதிரே சடைமகுடத்தில் பன்றிப்பல் பிறைசூடி புலித்தோல் உடுத்து நீறாடி சிவப்புகை இழுத்து பித்துகொண்டு ஆடிவந்த இருளெதிர்வரை கண்டான். “நில்லும்!” என்று தன் காண்டீபத்தைக் காட்டி ஆணையிட்டான். “சொல்லும், நான் தென்றிசையாளும் தலைவனைச் சென்று காண விழைகிறேன். அவனை அடையும் வழி எது?”

“நன்று நன்று” என அவர் நகைத்தார். “வாழும் வழிதான் மானுடருக்கு தெரிவதில்லை என்று இதுகாறும் எண்ணினேன். நீத்துச்செல்லும் வழியுமா தெரியாமலாகிவிட்டது? அந்தப் பள்ளத்தில் குதி. அதோ, அந்த நாகத்தின் முன் கைநீட்டு. அந்த நச்சுச்செடியை உண். எத்தனை வழிகள்!” அர்ஜுனன் “நான் அவனை காலரூபனாக கண்முன் காணவிழைகிறேன்” என்றான். அவர் கண்கள் இமைப்பதை நிறுத்தின. “ஏன்?” என்றார்.

“அவனை வென்று ஓர் இளமைந்தனை மீட்டுக்கொண்டுவர விழைகிறேன்.” அவர் கண்களில் புன்னகையின் ஒளி எழுந்தது. “நன்று, அவ்வாறு மானுடர் கிளம்பியாகவேண்டும். நன்று!” என்றார். “வீரனே, காலனை வெல்ல ஒரே வழி மகாகாலனை வழிபடுவதே. மார்க்கண்டன் கண்ட முறை அது. இதோ, அவன் மூச்சென மணக்கும் புகை. இழு. இருத்தலும் இன்மையும் மறையும். காலன் வந்து திகைத்து அங்கே நின்றுவிடுவான்” என்று சிவப்புகை சிலும்பியை நீட்டினார்.

“நான் கேட்டது அவனை அணுகும் வழி. அதை நீங்கள் அறிவீர்கள். ஒருமுறை இறந்துபிறக்காமல் எவரும் இருளெதிர்வர் ஆகமுடியாதென்று அறிந்திருக்கிறேன். நீர் இறந்தது எப்படி? மீண்டது எப்படி?” என்றான். அவர் “காளாமுக மெய்மையை பிறர் அறியமுடியாது, மூடா!” என்றார். செல்க என கையசைத்தபடி முன்னால் நடந்தார். “சொல்க, நான் செல்லும் வழி எது?” என்றான் அர்ஜுனன். “செல், மூடா!” என அவர் தன் கையிலிருந்த முப்புரிவேலை ஓங்கி அவனை அடித்தார்.

அவன் அதை தன் கையால் பற்றித்தடுத்தான். அவர் எழுவதற்குள் அவர் கால்களை அடித்து நிலையழியச்செய்து தன் தோள்மேல் சுழற்றி வீசி நிலத்திலறைந்தான். அவர் அவனை அறைந்து திமிற முயல சற்றுநேரத்திலேயே அவரை அடக்கி மார்பின் மேல் காலூனின்றி அமர்ந்து “சொல்க…” என்றான். அவர் தன் இடக்கையைத் தூக்கி “என் கையிலுள்ள சிதைச்சாம்பலால் உன்னை அழிக்கமுடியும்” என்றார். “நான் அழிவதற்கு அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன்.

“நீ யார்?” என்று அவர் கேட்டார். “என் பெயர் அர்ஜுனன். பாண்டவன்” என்றான். அவர் விழிகள் மாறுபட்டன. “ஆம், நீ என எனக்கு ஒருகணம் தோன்றியது. பிறர் என்னை வெல்லமுடியாது. என்னை அஞ்சாது விழிநோக்கவும் முடியாது.” அர்ஜுனன் “சொல்க!” என்றான். “நன்று, காலனை தேடிச்செல்பவர் இருளெதிர்வர் காணும் காலகாலனைக் கண்டே அடங்குவர். அச்சமில்லாதவர் செல்லும் பாதை அது” என்றார் அவர்.

“நான் சென்ற பாதையை மட்டும் சொல்கிறேன்” என்றார் காளாமுகர். அர்ஜுனன் காலை எடுக்க அவர் எழுந்தார். “நான் பிறப்பால் அசுரன். சர்மாவதி ஓடும் சாம்பபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். எந்தை அந்நிலத்தின் அரசர். நான் அவர் நோற்றுப்பெற்ற மைந்தன். என் குருதியின் இயல்பால் அச்சமற்றவனாக இருந்தேன். அச்சமின்மை என்பது கட்டின்மையே. அச்சமே மானுடன் எனும் ஒழுக்கின் கரை. பகையை, பழியை, இறப்பை, ஊழை அஞ்சாதவன் அறத்தையும் அஞ்சாதவனே.”

நான் ஆற்றியவை அனைத்தும் மானுடமீறல்களே. குலத்தின், நிலத்தின் எல்லைகளை மீறிச்சென்றேன். ஒவ்வொரு மீறலுக்குப் பின்னரும் புதியவற்றை நோக்கி விழிதூக்கினேன். உண்டு கொண்டு புணர்ந்து கொன்று அடையும் அனைத்து உவகைகளையும் அடைந்தபின் வெறுமை எஞ்சுவதைக் கண்டு மேலும் வெறிகொண்டேன்.

அன்றொருநாள் தனியாக புரவியில் யமுனைக்கரையினூடாகச் சென்றேன். இருள்பரவி விண்மீன் ஒளியில் கரிய ஆறு மின்னிக்கொண்டிருந்தது. மீன் ஒன்று செல்லும் ஒலி கேட்டது. அது ஒரு தோணி எனத் தெளிந்தேன். ஓர் இளம்பெண் தனியாகச் செல்வதைக் கண்டேன். இளங்கருமை கொண்டிருந்த வானப்பின்புலத்தில் அவள் உடல்கோடு பேரழகி என அவளைக் காட்டியது. என்னில் காமம் எழுந்தது. காமம் கொண்ட மறுகணமே அப்பெண்ணை அடைவது அன்று என் வழக்கம்.

நீரில் பாய்ந்து நீந்தி அவளை அணுகினேன். அவள் அஞ்சி எழுந்து கூவுவாள் என எண்ணினேன். ஆனால் எட்டு கை எழுந்த கொற்றவைபோல் படகில் அவள் நின்று என்னை துடுப்பால் அடித்தாள். என் மண்டையோடு உடையும் ஒலியை உள்ளே கேட்டேன். விழிகளுக்குள் ஒளி சிதறியது. குருதி வழிந்து என் வாய்க்குள் சுவைத்தது. ஆனால் அவள் சினம்கண்டு மேலும் வெறிகொண்டேன்.

கையூன்றி அத்தோணியில் ஏறிக் குதித்து குருதிவழிய அவளை பற்றிக்கொண்டேன். அவள் என்னைத் தூக்கிச் சுழற்றி அறைந்தாள். ஆனால் என் வெறி எனக்கு மேலும் மேலும் வல்லமையை அளித்தது. அவளை வென்று கீழ்ப்படுத்தி மேலே பரவி அவள் முகத்தை அணுக்கமாகக் கண்டேன்.

அத்தருணத்தில் எனக்குப் பின்னால் ஒரு சிறு தோணியை கண்டேன். அதில் முழுதுடலுடன் அமர்ந்திருந்தவள் நான் கண்டவரிலேயே பேரழகி. கன்னங்கரிய நிறம். கொழுங்கன்னங்களில், ஏந்திய இளமுலைகள் மேல் ஒளி வளைந்து வழிந்திருந்தது. ஒவ்வொன்றும் முழுமைகொண்டிருந்த உடல். அவளை நோக்கி திகைத்து நின்ற என்னை கையசைத்து அழைத்தாள். அந்தத் தோணிமேல் தாவி ஏறி அவளை பற்றிக்கொண்டேன்.

ஆனால் அக்கணமே தோணி விசைகொள்ளத் தொடங்கியது. கரைப்பச்சை வண்ணப்பெருக்காகி கண்ணிலிருந்தே மறைந்தது. அவ்விரைவு இயல்பானதல்ல என்று அறிந்திருந்தேன் என்றாலும் அச்சமின்மையாலேயே அவளை அள்ளி அணைக்க முயன்றேன். அவள் சிரித்து என்னை சுழற்றியடித்தாள். அவள் உடல்தொட்டபோது நான் மேலும் வெறிகொண்டேன். அள்ள அள்ள மீனென நழுவியது அவள் உடல். மானுட உடலுக்குரிய வெம்மை அதில் இல்லை. மீன்குளிர். அவள் விழிகளை அப்போது கண்டேன். மீனென இமைப்பற்ற மணிக்கண்கள். அவள் வாயின் பற்களைக் கண்டேன். மீனின் கூர்முள்வெண்மை.

“யார் நீ?” என்றேன். “என் பெயர் யமி. சூரியனுக்கு சம்க்ஞை என்னும் கன்னியில் பிறந்தவள். விஸ்வகர்மன் என் மூதாதை” என்றாள். என் கையிலிருந்து நழுவி நீரிலெழுந்த பெருஞ்சுழியின் மையத்தில் குதித்தாள். அவளைச் சூழ்ந்து நீர் பறந்தது. என்னை நோக்கி கை நீட்டி அழைத்தாள். பிறிதொன்றும் எண்ணாமல் நான் அவளைத் தொடர்ந்து குதித்தேன்.

நீர்க்கதவுகள் திறந்தன. நீர்த்திரைகள் விலகின. நீர்ப்பாதைகள் நீண்டெழுந்தன. அங்கே அவளை மீண்டும் கண்டேன். விடாது அவளைத் தொடர்ந்து சென்றேன். மீன் என்றும் மங்கையென்றும் என்னை அவள் அழைத்துச்சென்றாள். ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து நீளிருங்குகைப் பாதையொன்றினூடாக ஏழு அடுக்குகளாக அமைந்த ஆழுலகை கடந்து சென்றோம்.

“அங்கே நான் யமனைக் கண்டேன்” என்றார் காளாமுகர். “சினம்கொண்ட விழிகளுடன் என்னை நோக்கி எழுந்தது காலப்பெருந்தோற்றம். கைப்பெருக்கு கால்பெருக்கு விழிப்பெருக்கு இருளலைப்பெரும்பெருக்கு. நான் அதன் முன் விழியிமைக்காமல் நின்றேன். அச்சமின்மை கண்டு கனிந்தது இறப்பு. என் அருகே வந்து நான் விழைவதைக் கேட்டது.”

“நான் கேட்டதென்ன அவர் அளித்ததென்ன என்று உனக்கு சொல்லமாட்டேன். நான் கண்டதும் பிறிதொருவரிடம் சொல்லிவிடமுடியாதது. உணர்வு மீண்டெழுந்து இருளுக்குமேல் வந்தபோது யமுனையின் கரையில் கிடந்தேன். என் உடலெங்கும் நீர்ப்பாசி படிந்திருந்தது. என் தோல் மீன் போல மின்னியது. என்னைக் கண்ட செம்படவர் அஞ்சி விலகி ஓடினர். எழுந்து முழுதுடலுடன் நடந்தேன். மீண்டு ஊர்செல்லவில்லை. என் வழி சிவமொழுகும் ஆறென்றாகியது.”

“ஆம், யமுனை என உருக்கொண்டு மண்ணில் ஓடுபவள் ஆழிருளின் தெய்வமான யமியே என்று தொல்கதைகள் சொல்கின்றன” என்று அர்ஜுனன் சொன்னான். அவர் “ஆம், கதைகளை நான் பின்னர் அறிந்துகொண்டேன்” என்றார். “பரம்பொருளில் இருந்து பிறந்த பிரம்மனின் மைந்தர் மரீசி. அவரது மைந்தர் காசியபப் பிரஜாபதி. காசியபருக்கு அதிதியில் பிறந்தவன் சூரியன்.”

“சூரியனின் மனைவியர் இருவர். சம்க்ஞை மூத்தவள். சாயை இளையவள். நோக்கும் விழிகளால் ஒளிகொள்பவள் மூத்தவள். ஒளிகொள்பவை அனைத்தையும் தொடர்பவள் இளையோள். ஒளிர்நிறம் கொண்ட சம்க்ஞையின் கருமைவடிவம் சாயை. ஓசையற்றவள். விழியொளி சூடியவள். சூரியனுக்கு சம்க்ஞையில் பிறந்தவர் மூவர். மனு, யமன், யமி. மூத்தவனாகிய மனு மானுடரை படைத்தான். யமன் அவர்களின் உயிர்கவர்ந்தான். யமி இறப்பின் தோழியானாள்.”

“பேரொளிகொண்ட விண்ணுலாவிக்கு மூத்தவளைவிட இளையவளே இனியவள் என்பது தொல்கதையின் கூற்று. இளையவளுக்கு சூரியனின் குருதியில் ஆறு மைந்தர் பிறந்தனர். அவர்களில் ஒருத்தியான ஃபயை அச்சத்தின் தேவி. அவளை ஹேதி என்னும் இருளரக்கன் மணந்தான். அவனே நோய்களுக்கு முதல்வன். அவன் உடன்பிறந்தாரான அஸ்வினிதேவர்களே அந்நோய்களுக்கு மருந்தாகி வருபவர்கள்.”

“ஃபயை யமியின் முதன்மைத்தோழி.” என்றார் இருளெதிர்வர். “அவளை அஞ்சாதவர் முன்பு மட்டுமே யமி தோன்றுவாள். தனக்கு உகந்தவர்களை தன் மூத்தவரிடம் அழைத்துச்செல்வாள்.” அர்ஜுனன் “நான் அவளை காண்கிறேன்” என்றான். “நன்று சூழ்க!” என்றார். அவன் அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.

“இளையவனே, ஃபயைக்கு தனக்குரிய வடிவமென ஏதுமில்லை. உன்னுள் ஆழத்தில் உறையும் அச்சத்தின் முகத்தையே அவள் தானும் கொண்டு வருவாள்” என்றார். “உங்கள் முன் எழுந்த முகம் எது, இருளெதிர்வரே?” என்றான் அர்ஜுனன். “நான் எண்ணியிராதது” என்றபின் அவர் புன்னகைத்தார்.

 [ 26 ]

யமுனை மீது சென்ற படகில் அர்ஜுனன் தனித்து அமர்ந்திருந்தான். அவன் கையிலிருந்த துடுப்பில் இருளென ஓடிய நீர்ப்பரப்பு நெளிந்து ஒளிகொண்டது. தொலைவில் பெருவிழியென எழுந்த அந்தச் சுழியை கண்டான். அவன் சென்ற படகை அச்சுழியின் எதிரலை வந்து பின்னுக்குத் தள்ளியது. சுழி அளிக்கும் இறுதி வாய்ப்பு அது என எண்ணிக்கொண்டான். உந்தி படகை அச்சுழியின் விளிம்பில் பொருத்திக்கொண்டான்.

அவன் படகை அள்ளித் தூக்கிச் சுழற்றிக்கொண்டது சுழி. வானும் கரைகளும் அழிந்தன. நீரே இன்மையென்றாகியது. சுழிமையமென நின்றிருந்த கருமையொளிர்புள்ளி மட்டும் அசையாதிருந்தது. அவன் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தான். அதன் விழிமணிக்குள் மின்னிய நுண்கருமைத் துளிக்குள் ஒரு சிறு வாயில். அதனுள் குளிர்ந்து செறிந்து நுழைந்து அவன் இருளுக்குள் விழுந்தான். இருளுக்குள் வெளிக்காலமிருக்கவில்லை. எனவே தொலைவும் இருக்கவில்லை. சித்தமிருந்தது. அது அறிந்த அகக்காலம் முடிவிலியென சென்றுகொண்டிருந்தது.

அவன் இடச்செவியில் ஒரு சிரிப்பொலி கேட்டது. புருவமையத்தில் ஒரு ஒளிப்புள்ளி என வெடித்தது அந்தச் சிரிப்பு. ஒளி வெடித்து துளிகளாகச் சிதறிப் பரவி இருண்டு பிறிதொரு துளி. தோல் எரியும் மணம். சீழ்மணம். தீப்பற்றிக் கருகும் உலர்மலம். முடிகருகும் வாடை. பெருமுரசின் தோல்கிழியும் ஒலி. வாள் ஒன்று வாளைக்கிழிக்கும் ஓசை. உடல் விதிர்த்து பற்கள் கிட்டித்து கைவிரல்கள் மரத்து அவன் விழுந்துகொண்டிருந்தான். அதிர்ந்து அதிர்ந்து அடங்கிய அவன் உடலுக்குள் இருந்து குமிழிகள் வெடித்து வெளியேறிக்கொண்டிருந்தன.

மெல்லிய பெண்குரலொன்று அவன் காதில் “வருக!” என்றது. “யார்?” என்றான். “வருக!” என்றது குரல். எரியும் தீயின் ஓசை. பெருமரம் பிளந்துவிழும் ஓசை. பாறைமேல் கொப்பரையை உரசும் ஓசை. பளிங்கில் துடிக்கும் ஒரு புழு. வலையில் சிக்கி அதிரும் பூச்சி. மெல்லமெல்ல கிழிபட்டுக்கொண்டிருந்தான். மென்மையாக. குருதி இனிதாக வழிந்து வழிந்து அகல கிழிந்து இரண்டானான். இரு பக்கமும் தசைக்கிழிசல்கள் கைநீட்டித் தவித்தன. நரம்புமுனைகள் புழுக்களென நெளிந்தன. இரு விழிகளும் ஒன்றை ஒன்று நோக்கின. வருக வருக வருக என காலம் ஒலித்துக்கொண்டிருந்தது. “யார்?” என்றான். வருக வருக வருக!

“யார்?” என அவன் கூவினான். “நான் ஃபயை. உன் அச்சம்” என்றது பெண் குரல். “எழுக… என் முன் எழுக!” அவள் நகைத்து “அஞ்சுவது அஞ்சுக, இளவரசே!” என்றாள். “வருக!” என்று அவன் கூவினான். “வருக வருக வருக” என்று கூவிக்கொண்டிருந்தான். இரண்டு பேர். ஒருவன் இன்னொருவனை நக்கி நக்கி குருதியுண்டான். சுவையில் சொக்கியிருந்தது ஒற்றைவிழி. “வருக! என் முன் வருக!”

அவன் முன் அவள் வந்து நின்றாள். ஆழிவெண்சங்கு ஏந்தியிருந்தாள். நீலமணியுடல் மிளிர, விழிகள் நீண்டு ஒளி சூடியிருக்க, இதழ்களில் புன்னகையுடன் ஒசிந்து நின்றாள். அவன் அவளை விழித்து நோக்கி மிதந்தான். “தெரிகிறதா?” என்றாள். அவன் கனவிலென “மோகினி” என்றான். அவன் மேல் குனிந்து மாலினி சொன்னாள் “என்ன சொல்கிறீர்கள், இளவரசே?” அவன் மீண்டும் “மோகினி” என்றான். மாலினி சிரிப்புடன் “முளைவிடும் செடியிலேயே கனிமணம் இருக்கும்” என்றாள். யாரோ நகைத்தனர்.

அவள் அவனருகே வந்து கையைப் பிடித்து “வருக!” என்றாள். அவன் நீள்மூச்சுடன் “நீ யார்?” என்றான். “ஃபயை. என் தோழி உங்களுக்காக அங்கே காத்திருக்கிறாள்.” அவள் கைகள் குளிர்ந்திருந்தன. அவன் அவளுடன் நடந்தபோது காலடிகளின் ஒலி எழவில்லை. ஆனால் சூழ்ந்திருந்த இருட்டின் நீர்மை அதிர்வுகொண்டது.

வெளியே ஒரு தேர் நின்றிருந்தது. இருளுருகியமைந்த மெல்லிய மின் கொண்டது. அதனருகே நின்றிருந்தவள் அவனை நோக்கி வந்தாள். அவள் புன்னகையின் வெண்மையும் விழிகளின் ஒளியும் அணுகி வந்தன. “வருக!” என்றாள். “என் தமையனின் நகருக்குள் உங்களை அழைத்துச்செல்லவிருக்கிறேன்.”

அர்ஜுனன் அந்தத் தேரில் ஏறிக்கொண்டான். அது காற்றின்மேல் என சென்றது. இருள் கிழிந்து கிழிந்து வழி கொடுத்தது. ஒளியால் நோக்கிய விழிகள் இருளால் உருவறியும்படி ஆகிவிட்டிருக்கின்றனவா என்ன? இருபக்கமும் இருண்டு எழுந்து நின்றிருந்தன பெரும்பாறை அடுக்குகள். கூர்ந்து நோக்கியபோது அவை முகங்களாயின. ஊழ்கத்தில் இருந்தன. புன்னகைத்தன. கூர்ந்து நோக்கின. சொல்லெடுக்கும் கணத்தில் நின்றன. நோக்க நோக்க விழி தெளிந்து வருந்தோறும் முகங்கள் முகங்களென சூழல் விரிந்தது.

பின்னர் அவன் தரையை பார்த்தான். மண்டையோடுகள் உருளைப்பாறைகளாக பரவியிருந்தன. அப்பாதை சென்று இணைந்த கோட்டை முகங்களைக்கொண்டு கட்டப்பட்டிருந்தது. அதன் திறந்தவாயிலுக்கு இருபக்கமும் பனிநிலவுகள் என முரசுத் தோற்பரப்புகள் தெரிந்தன. “அவைமுதல்வனையும் படைமுதல்வனையும் அவரே சென்று அழைத்துவரவேண்டுமென்பது நெறி. அவர் உருவினள் என்பதனால் நானே வந்தேன்” என்றாள் யமி.

காலபுரியின் கோட்டைமேல் காகக்கொடி பறந்துகொண்டிருந்தது. அதற்கு கதவுகள் இருக்கவில்லை. அவர்கள் நெருங்கியதும் முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. உள்ளே இருந்து நால்வர் விழிகள் மின்னும் கரிய எருமைகள் மேல் ஏறி அருகணைந்தனர். பன்றித்தலைகொண்ட முதல்வன் “நான் சண்டாமிருகன். யமபுரியின் முதன்மைக் காவலன். இழிகுணம் கொண்டவர்களை அழைத்துவரும் பொறுப்பு கொண்டவன். எங்கள் நகருக்கு வருக!” என்றான்.

KIRATHAM_EPI_19

சிங்கத்தலைகொண்ட இரண்டாமவன் “என்பெயர் சார்த்தூலன். களம் நின்று சமராடும் வீரரை அழைத்துவருபவன். தங்கள் வருகைக்கு மகிழ்கிறேன்” என்றான். கழுதைத்தலை கொண்டிருந்த மூன்றாமவன் “என் பெயர் ஔதும்பரன். பொருள் சுமந்து வாழ்ந்து அமைந்தவருக்கு இறுதிசொல்லச் செல்பவன்… வருக, பாண்டவரே” என்றான். மானின் தலைகொண்டிருந்த நான்காமவன் “என் பெயர் சம்பரன். அறிவிலமைந்தவரின் இறுதித்துணை நான். தங்களை வாழ்த்துகிறேன்” என்றான்.

அவர்கள் அந்தத் தேரைச் சூழ்ந்து கருமுகிலெருமைமேல் மிதந்துவந்தனர். நகரின் இல்லங்கள் அனைத்தும் மண்டையோட்டுக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. நின்ற உடல்கள் தூண்களாயின. கிடந்தவை படிகள். தாங்கப்பட்டவை உத்தரங்கள். மணிகளென ஒளிவிட்டுக்கொண்டிருந்தன விழிகளும் பற்களும். மூச்சுக்காற்றால் அறைகளின் திரைச்சீலைகள் அசைந்தன.

“ஆயிரம் கோடி யமகணங்களின் வசிப்பிடம் இது” என்றாள் யமி. “அவை ஓசையற்றவை. காற்றிலேறிச்செல்லும் கால்கள் கொண்டவை.” அவன் அங்கு இருளுக்குள் நிழல்களென அசைந்த யமகணங்களை நோக்கிக்கொண்டு சென்றான். அவை ஒன்றன் மேல் ஒன்றென இறகிறகாக அடுக்கப்பட்டு ஒற்றைப்பறவையாக மாறி விண்ணில் பறந்தெழுந்தன. கால்களாகி செவிகளாகி தலையாகி வாலாகி எருதாகி நடந்தன. கரைந்து நீண்டு உருகி வழிந்து உருக்கொண்டு எழுந்து புன்னகைத்து நோக்கின.

“இவர்களை நான் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், வில்லேந்திய எவரும் கொலைக்களத்திலாடி குருதிகழுவி மதுவுண்டு துயில்கையில் இவர்களையே காண்கிறார்கள்” என்றாள் யமி. “உடல் தைக்காது மண்ணில் உதிர்ந்த அம்புகளை எடுத்து இவர்கள் வீசி விளையாடுகிறார்கள். தசையில் விழாத வாள்வெட்டுகளை கைகளால் பற்றிக்கொண்டு சிரிக்கிறார்கள். களம்புகுந்து களியாடுவதையே இவர்கள் விரும்புகிறார்கள்.”

அர்ஜுனன் அவர்களை நோக்கிக்கொண்டு சென்றான். “அரசர்களின் கனவுகளுக்குள் புகுந்து பலிகொடு என்று மன்றாடுவார்கள். நிமித்திகர் சோழிகளுக்கு நடுவே புகுந்து ஊழின் திசைமாற்றவும் இவர்களால் முடியும். முதியோர் விழிகளை மங்கச்செய்கிறார்கள். நோய்கொண்டவர் நெஞ்சை குளிர்க்கரங்களால் வருடி வருக என்று அழைப்பார்கள்.” அர்ஜுனன் “ஆம், இந்நகரில் நான் கேட்கும் ஒலியெல்லாம் வருக வருக என்றே உள்ளது” என்றான்.

“வீரரே, இங்குள்ள யமகணங்கள் அனைத்தும் சொல்வது அந்த ஒற்றைச் சொல்லையே. பாறைகளென சுவர்களென எழுந்த முகங்களின் உதடுகள் அதையே சொல்லிக்கொண்டிருக்கின்றன. இந்நகரின் சொல் என்பது அதுவே. ஈரேழு உலகங்களிலும் கனிந்து கைநீட்டி அருகழைப்பது இதுமட்டுமே.”

அவன் அந்நிழலுருக்களை நோக்கி “அச்சுறுத்தும் இருளலைகள்” என்றான். “ஆம், ஆனால் உற்றாரின் இறப்புக்குப்பின் எஞ்சுபவர்களுக்கு இவர்களே தோழர்கள். துயர்சலித்து அவர்கள் மயங்கும்போது இறந்தகால ஒளிர்நினைவுகளை அள்ளிக்கொண்டுவந்து கனவுகளில் பரப்புபவர்கள். உற்றவர்களின் முகங்களாக எழுந்து வாழ்வது இனிது என்பவர்கள். மைந்தரை இழந்த அன்னையின் முலைப்பாலை உறிஞ்சி உண்டு அவை உருமீள வைப்பவர்கள். அன்னையை இழந்த குழவியின் கட்டைவிரலை முலைக்காம்பாக ஆக்குபவர்கள்.”

“இழப்புகளை நினைவுகளாக சமைப்பவர்கள். நினைவுகள் கனிந்து இனிக்கச் செய்பவர்கள். இவர்கள் இல்லையேல் உயிர்கள் வாழமுடியாதென்று அறிக!” என்றாள் யமி. “இவர்கள் ஏன் இங்கு சொல்லின்றி இருக்கிறார்கள் என்றால் உயிர்கள் வாழும் அவ்வுலகில் புழங்கும் அத்தனை சொற்களும் அவர்களுக்குரியவையே. அவையனைத்தையும் கொண்டு மூடியும் உருமாற்றியும் எரித்தும் செரித்துமே இறப்பை கடக்கின்றனர் மானுடர்.”

நகர்நடுவே எழுந்தது நூறடுக்கு மாளிகை. அதன் அனைத்துச் சாளரங்களும் விழிகளென ஒளிகொண்டிருந்தன. அவர்களின் தேர் சென்று அதன் வட்டமான முற்றத்தில் நின்றதும் உள்ளிருந்து வெளிர்நிறத்தில் மிதந்தெழுவதுபோல வந்த அந்தணன் “வருக!” என்றார். “இவர் சித்ரபுத்திரர். இந்த நகரின் அமைச்சர்” என்றாள். அர்ஜுனன் தேரில் இருந்து இறங்கி அவருடன் நடந்தான்.

இருபுறமும் எழுந்து வந்த தூண்களாக நின்றிருந்த உடல்கள் உயிர்ப்பும் உடலுணர்வும் கொண்டிருந்தன. கொடித்தோரணங்கள் என செவிகளும் கைவிரல்களும் ஆடின. மலர்மாலைகளாக தொடுக்கப்பட்டிருந்தன இமைகளும் நாவுகளும். மணிமாலைகளென நகங்களும் பற்களும். காலடியில் அழுந்தியது வாழும் தசை.

“உயிருள்ளவை” என்று அவன் சொன்னான். “இளவரசே” என அவன் அருகே மூச்சுவெம்மையுடன் குனிந்து தலையைத் தொட்டு மாலினி அழைத்தாள். “விழி திறவுங்கள்… இளவரசே!” வேறு ஒரு முதியகுரல் “வெம்மை இறங்க நாளை காலையாகும். மருந்து உடலில் ஊறவேண்டும்” என்றது. “இரவெல்லாம் நெற்றியை குளிரவைத்துக்கொண்டிருங்கள்.” அவன் “வாழ்பவை…” என்றான். அவன் நெற்றியில் ஈரப்பஞ்சு குளிராகத் தொட்டது.

எதிரே சுவரென அமைந்த உயிர்த்தோல்பரப்பில் வரையப்பட்ட ஓவியத்தை தலைதூக்கி நோக்கி அவன் நின்றான். வலக்கையில் வாளும் இடக்கையில் கலமும் தோளில் விழிமணி மாலையுமாக புன்னகைக்கும் முகத்துடன் வேதாளத்தின்மேல் அமர்ந்திருந்தான் அந்த தேவன். தலையில் மலர்முடி. அவன் காலடியில் ஒரு நாய் படுத்திருந்தது. அவன் ஆண்குறி எழுந்து நீண்டிருந்தது.

அவன் முகத்தை அடையாளம் கண்டதுமே அவன் திரும்பிப்பார்த்தான். யமி புன்னகைத்து “என் முகம்” என்றாள். “இவர்தானா?” என்றான். “இவர் மனு. எங்கள் முதல்மூத்தவர்” என்றாள். “மானுடரைப் படைத்த விதை.” நேர் எதிரில் அதேமுகம் கொண்ட பிறிதொரு தேவன் துயர்முகத்துடன் அமர்ந்திருந்தான். “அவர் எதிர்மனு. எங்கள் தந்தைக்கு சாயையில் பிறந்தவர். மனுதேவரின் நிழலுரு” என்றாள் அவள்.

நீலப்புகையாலான வாயிலைத் திறந்து இரு காவலர் தலைவணங்கினர். “வருக இளவரசே, அரசர் தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றார் சித்ரபுத்திரர். அவன் காலெடுத்து வைத்து உள்ளே சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்

அறத்தின் எதிர்முகம் : கச்சர் கோச்சர் மற்றும் தேவகி சித்தியின் டைரி

$
0
0

literature-main  சமீபத்தில் விவேக் ஷான்பாகின் கச்சர் கோச்சர் என்ற குறு நாவலைப் படித்தேன் (ஆங்கிலமொழியாக்கம் ஸ்ரீநாத் பேரூர். தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டதாக தெரியவில்லை).   சாதாரண கூட்டுக்குடும்பத்தின் அன்றாட
வாழ்க்கையையும் காலப் போக்கில் அவ்வாழ்க்கையில் ஏற்படும் பரிணாமத்தையும் அசாதாரண துல்லியத்துடன் முன்வைக்கும் கதை. மொழி மற்றும்மொழி நடையில் தழைக்கும் எளிமையில் புதைந்துள்ளது வாழ்க்கையைப் பற்றிய ஆழமானபுரிதல்கள்.   குடும்பக் கதைகள் பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலிருந்து பேசப்படுவதைத்தான்காண்கிறோம். மாறாக, கச்சர் கோச்சர் அக்குடும்பத்தின் ஆண்மகனின் கோணத்திலிருந்துசொல்லப்பட்டுள்ளது என்னைக் கவர்ந்தது. செயற்கையான பெண்ணிய கருத்துக்களுக்குசிறிதளவும் இடம் கொடுக்காமல், ஆழ்நோக்குடனும் நேர்மையுடனும் எழுதுகிறார் விவேக்.   திருமணத்திற்கு முன்பும், திருமணமாகிய முதல் சில நாட்களிலும் நிகழும் உணர்வெழுச்சியை மொழிநடையின் மாற்றம் உயர்த்திக் காட்டுகிறது. இப்பகுதியில் மட்டுமே மொழி எளிமையை உதறி கவித்துவம் பெறுகிறது. பெரும்பாலும் ஆண்களின் காதல் அனிச்சையானது. ஏன் எதற்கு என்றெல்லாம் ஆராய்வதில்லை. வாழ்க்கையின் ஒரு நிகழ்பாடாக பரிசீலனையின்றி அவர்களால் ஒப்புக் கொள்ள முடியும். அனீதாவின் கணவனும் அப்படித்தான். ஆனால் பெண்களின் காதல் சற்று அறிவுப்பூர்வமானது. ஆணின் குணங்களை (உ. திறமை, தன்னம்பிக்கை, சுதந்திரமான நோக்கு)மதிப்பிட்டே அது வளர்கிறது. In that sense, their love is conditional. அனீதா அத்தகைய பெண்.   இது காதலைப் பற்றிய கதை அல்ல. ஆனால் அதை ஆராய்வதன் மூலம் ஷான்பாக் கதாப்பாத்திரங்களுக்கு மேலும் அருகே நம்மைக் கொண்டு செல்கிறார்.   நாவலில் இரு முக்கியமான மைய ஓட்டங்கள் பிணைக்கப்பட்டுள்ளன:   (1) கூட்டுக்குடும்பத்திற்குள் திருமணமாகி வரும் ஒரு பெண்ணின் பார்வையிலும் அக்குடும்பத்தில்பிறந்து வளர்ந்த அவளுடைய கணவனின் பார்வையிலும் ஈடுசெய்ய முடியாத வேறுபாடுமுளைக்கின்றது. அவர் அவர் கோணத்தில் அவை சரியான பார்வையாக இருந்தும், இணை கோடுகள்போலத் தனித்து நிற்கின்றன.   அனீதா கறாரான நோக்குடன் குடும்பத்தினர்களின் “இன்றைய” நடத்தையை மதிப்பிடுகிறாள்.அவர்களுடைய குணாதிசயங்கள் அவளுக்கு அசையா குளம்போல. அவனுக்கோ அவை பாயும் நதிபோல – ஊற்றுண்டு, முன்னும் பின்னும் உண்டு, விசை உண்டு, அசைவுண்டு. எனவேஅவர்களிடமிருக்கும் குறைகளை அவனால் இயல்பாகக் கடந்து செல்ல முடிகிறது. அனீதாவுக்கு அவைபாறைப்போல் கனத்து உறைந்து நிற்கின்றன. இதில் சரியான / தவறான பார்வை என்று எதுவும்இல்லை.   “It’s natural to ask, I suppose, why the six of us should live together. As natural as it is for families to pretend that they desire what is thrust upon them as inevitability. It’s one of their strengths”   காலப்போக்கில் கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பே செயற்கையான வடிவமாக மாறிவிட்டது.செயற்கையான அமைப்பினால் ஏற்படும் முரண்பாடுகளையும், அந்த அமைப்பு மாறி வரும் திருப்புமுனையில் சிக்கிக்கொண்டுள்ள தலைமுறையின்  தத்தளிப்புகளையும் நுட்பமாகச் சித்தரிக்கின்றதுகச்சர் கோச்சர்.   (2) பொருளாதார வளர்ச்சி குடும்ப வாழ்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் பின்தொடரும் கதை. புறவயமான மாற்றம், ஒரு குடும்பத்தின் விழுமியங்களை, முன்னுரிமை தரப்படும் விஷயங்களை, உறவுகளை உருமாற்றுகின்றது. பணம் வீட்டிற்குள் வர, குடும்பத்தில்இறுக்கம் தோன்ற ஆரம்பிக்கிறது. புதிதாகக் கண்டடைந்த வாழ்வுவளத்தை அச்சுருத்தும் எதையும் நசுக்கி அழிக்கும் இயல்பு கொண்டவர்களாக மாறுகின்றனர். வீட்டுக்குள் வரும் எறும்புகளுடன் தொடுக்கும் போர் அற உணர்ச்சியின் படியிறக்கத்துக்கு உவமையாக திகழ்கிறது.   “We still had ants.   We had no compunction towards our enemies and took to increasingly desperate and violent means of dealing with them. We’d flatten them with our hands or feet or books when we saw them. If we noticed that they’d laid siege to a snack, we might trap them in a circle drawn with water and take away whatever they were eating. Then watch them scurry about in confusion before wiping them off with a wet cloth. I took pleasure in seeing them shrivel into black points when burning coals were rolled over a group of them. When they attacked an unwashed vessel or cup they’d soon be mercilessly drowned. I suppose initially we did these things only when we were alone, but in time we began to be openly cruel to ants. We saw them as demons come to swallow our home and became a family that took satisfaction in the destruction of ants”   இந்த இரண்டு கதைக்கருக்களுமே “தேவகி சித்தியின் டைரி” சிறுகதையை நினைவூட்டியது.   -அதிலும் குடும்பம் சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகிவரும், தனித்துவத்திற்கு ஏங்கும் தலைமுறையின் சிக்கல் பேசப்படுகின்றது.   -அதுவும் ஒரு சராசரி குடும்பத்தின் மீது சமூக பொருளாதார மாற்றங்களின் தாக்கம் மற்றும் அத்தாக்கம் எழுப்பும் எதிரொலியை அவதானிக்கும் கதை.   இரண்டு கதையிலுமே அயல் உறுப்பினரின் (மருமகளின்) நுழைவு / இருப்பு, நவீன வாழ்க்கையுடன் மோதும் தருணங்களை விரைவுபடுத்துகிறது. புதிய எண்ணங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் குடும்ப உறுப்பினர்களுள் உள்ள insecurity-யையும், தாழ்வு மனப்பான்மையையும் சிறுமையையும் வெளிகொணர்கிறது.   இத்தகைய தருணங்களில் உண்மை நோக்கி அறம் வழுவாமல் செயல்படுபவர்கள் மூலமே சமூகம் முன்னகரும். அக்கோணத்தில் பார்த்தால் “தேவகி சித்தியின் டைரி” மற்றும் “கச்சர் கோச்சர்”, “அறம்” வரிசைக் கதைகளின் எதிர்முகம் எனலாம். அவை அற வீழ்ச்சியைப்ப்ற்றிப் பேசும் கதைகள்.   இரண்டு கதையிலுமே ”சிறிய” நிகழ்வுகள் மிகையான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. முதல் முறை படிக்கையில் எழுத்து முறையில் பிழைபோல தென்பட்டது. சீரான பின்னலின் கடைசி இழையில் மட்டும் தங்கிய பிசிறு போல. மருவாசிப்பில் அது பிழையல்ல நிஜம் என்று தோன்றியது. கதையில் பேசப்படும் தருணங்கள் சீட்டு மாளிகையின் அஸ்திவாரத்தை உலுக்கும் அந்த கடைசி அட்டை; பணிந்து செல்பவரை மிருகமாக்கும் கடைசி அடி.   விவேக் ஷான்பாக், நாவலில் சொல்வது போல (பழைய காதலியை பற்று பேசுகையில்) “She worked for a women’s welfare organisation, and would gradually grow incensed as she told me about her day. The things she said about men I took as applying to myself. I could only sit there mute, feeling vaguely guilty. She might say, ‘How could you break her arm simply because the tea was not to your taste?’ Or, ‘Do you kill your wife because she forgot to leave the key with the neighbour?’ I knew that tea shouldn’t lead to a broken arm or a forgotten key to murder. It wasn’t about the tea or the key: the last strands of a relationship can break from a single glance or a moment of silence. But how was I to explain this to her?”   கச்சர் கோச்சர் ஆணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டது போல “தேவகி சித்தியின் டைரி” சிறுவனின் கோணத்திலிருந்து சொல்லப்படுவது கதைக்கு முக்கியத்துவத்தை கூட்டுகிறது. சிறுவனாக இருப்பதனால் ஒருவரையும் சாராமல் அவதானிப்புகளை மட்டுமே முன்வைக்கிறான்.(சிறுவனின் “cuteness” மட்டும் சற்று மிகையாகத் தோன்றியது. எழுதியது – ஒப்பு நோக்குகையில் – இளைய ஜெயமோகன் என்று நினைவூட்டியது).   இரண்டுமே ஆழம்மிக்க, வலிமையான கதைகள்.   ப்ரியம்வதா

 

    மீண்டும் புதியவர்களின் கதைகள் – பிரியம்வதா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

என்னைப்பற்றிய ஆவணப்படம் -கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன்

நலம்தானே . நேற்று தங்களின் ஆவணப்படம் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. அஜிதனுக்கு வாழ்த்துக்கள். அஜிதன் டெர்ரென்ஸ் மாலிக்கின் ரசிகர் என்று முன்பு எழுதியிருக்கிறீர்கள். இந்தியாவிற்கு ஒரு டெர்ரென்ஸ் மாலிக் கிடைப்பாராக. அலுவகத்தில் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். அந்த சத்தம் உங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.

தத்தா

 

 

அன்புள்ள ஜெ\\

ஆவணப்படம் கண்டேன்

 

சில வரிகளுக்கு சிரித்துவிட்டேன்

அப்ப நான்லாம் விவேகானந்தர் ஆகமுடியாதா? சிக்காகோவிலே உரையாற்றலாம்னா விடமாட்டாங்க போல

அப்ப ஒரு டால்ஸ்டாய் ஆனா போதும் இல்லியா?

ஒரு லவ்டெட்டர காச்சி விட்டேன்

அந்த உரையாடல்தான் இந்த ஆவணப்படத்தின் டாப் மேட்டர்

 

சிவா

 

அன்புள்ள ஜெ ,

 

நலம் தானே?

 

எங்கள் இந்தியப் பயணத்தின் போது இது பற்றி அருணா அக்காவிடம் கேட்டோம். அஜிதனின் கணினியில் இருப்பதாகச் சொன்னார்கள். விரைவில் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி.

 

ஆவணப்படத்தின் நேரடித்தன்மை மிகவும் கவர்ந்தது. வழக்கமான ஆவணப் படங்களில் உள்ள பின்னணி வர்ணனையோ, படத்தின் மைய ஆளுமை குறித்த பிறரின் சொல்லாடல்களோ இல்லாதது மிகப்பெரிய நேரடித்தன்மையை அளித்து. உங்களுக்கும் எங்களுக்கும் இடையே குறுக்கீடாய் எவருமில்லை. ‘புறப்பாடு’ பகுதிகளை காட்சிப்படுத்த நேர்ந்தால்  இந்த வடிவம் கச்சிதமாய் பொருந்துமென்று நினைத்துக்கொண்டேன்.

 

உங்களின் நேரடி அறிமுகமில்லாதவர்கள் நகைச்சுவை நீங்கலான உங்கள் எழுத்துக்களைப் படித்து, உங்கள் மேடை உரைகளைக் கேட்டு அவற்றின் நுண்ணிய தீவிரத் தன்மையால் தங்களையும் மிகத் தீவிரமான, ஆசிரிய வடிவில் காணும் வாய்ப்புகள் அதிகம். உங்களின் குறும்பும், நகைச்சுவையம் மிக்க பக்கத்தைக் காணும் வாய்ப்பு தங்களின் நண்பர்களுக்கும், நேரடியாய் உரையாடியோருக்கு மட்டுமே கிடைத்திருக்கும். படத்தில் நீங்கள் அஜிதனின் அருகில் காலை மடித்தமர்ந்து குறும்பும் தீவிரமும் நுணுக்கமும் கலந்து பேசும்போது பலரும் அந்த இன்னொரு முகத்தையும் பார்த்திருக்க முடியும். எந்த பூச்சுக்களும் அலங்காரங்களும் இல்லாத நிர்மால்ய வடிவம்!

 

இந்த முறை பார்வதிபுரம் வந்திருந்தது, அருணா அக்காவை சந்தித்தது மறக்க முடியாத தருணம். அதுவும் உங்களின் புத்தக அலமாரிகளை, அமர்ந்து எழுதும் மாடி அறையை, அசோகாமித்ரன் படத்தை, நடை போகும் பாதையை, பாதையோரத்து அல்லி குளத்தை, கூடவே தொடரும் வேளி மலையை, செல்ல டோராவை அருகிருந்து பருவடிவில் கண்டது ஆனந்தம். அருணா அக்காவுடன் உங்களுக்கு அணுக்கமான திருவட்டார் கோவிலுக்குச் சென்றது உணர்வெழுச்சி மிக்க தருணம். ‘திருமுகப்பில்’, ‘மத்தகம்’ கதைகளின் மற்றும் பல கட்டுரைகளின் கதை மாந்தர்களும், நீங்களும் உலவிய இடம். கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் அன்னத்திற்கு அபிநயம் பிடித்த அந்தக் கதகளி மண்டபம். உங்களைப் பார்க்க முடியாததில் ஏமாற்றம். ஆனால் நீங்கள் பார்த்த உங்களுக்கு அணுக்கமான இடங்களை அருணா அக்காவுடன் பார்க்க முடிந்ததில் ஆனந்தம். ஆவணப் படம் அதே நேரடியனுபவத்தை அளித்தது. அதுவும் உங்களுக்கே உரிய கவித்துவமான ஊகிக்க முடியாத படிமங்களுடன். நோயுற்ற யானையாய் சரிந்து கிடந்த அந்தப் பெரிய கல்லுரல் மனதில் காட்சியாய் விரிந்தது.

 

படத்தில் காட்சிகள் கோர்க்கப்பட்டிருந்தது தொய்வின்றி இருந்தது. பின்னணி இசையின்றியும் உணர்ச்சி பூர்வமாய் இருந்தது. பின்னணி இசையின்றி பறவைகளின் ஓசையும், இலைகளின் சலசலப்பும் என்னளவில் இப்படத்தின் பலமே. நீங்கள் படிக்கட்டில் நீர்பரப்பை பார்த்தபடி அமர்ந்திருக்கும் காட்சிகள் கச்சிதம். நீரை விட சிறப்பாய் அனைத்தையும் எதிரொளிக்க எதனால் முடியும்? முப்பது நிமிடங்கள் போவது தெரியவில்லை. நிற்காமல் ஒழுகிச்செல்லும் நதி போன்ற உங்கள் வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ‘நிலம், நீர், நெருப்பு’ ஒரு நாள் காற்றாய் வானம் வரை நிறைக்க எனது வேண்டுகோள். அஜிதனுக்கு எங்களது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். அருணா அக்காவிற்கும் சைதன்யாவிற்கும் எங்கள் அன்பு.

 

அன்புடன்,

பழனி & மஹேஸ்வரி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்றே யூடியூபில் உங்களின் ஆவணப்படம் பார்த்துவிட்டேன் . நண்பர்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார்கள். மிக நெருக்கமாக நேரடியாக உரையாடுவதுபோல் இருந்தது அதற்கு காரணம் அஜிதனின் நுட்பமான படப்பிடிப்பே.    5 டி காமிரா மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது. ஆச்சர்யம்தான். இங்கு குறும்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் ஆகும் கால  விரயங்களை ஒப்பிட்டுப்பார்க்கிறேன்.

ஒலிப்பதிவுத்தரம் முக்கியமான குறையாகப் படவில்லை. சில இடங்களில் மட்டுமே அக்குறை தோன்றுகிறது. வெறும் ஆவணமாகக் காட்டிவிடாமல் கலைத்தன்மை கூடியிருப்பதே இதன் வெற்றி.  அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
தூயன்.

 

அன்பு ஜெயமோகன்,

 

அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப்  பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

 

ஏன் இந்த ஆவணப்படத்தை இன்னும் நீங்கள் உங்களுடைய தளத்தில் பகிரவில்லை?

 

“ஜெயமோகன் – நீர், நிலம், நெருப்பு”

……………………………………………………………….

 

ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.

 

அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற்றைப் பற்றியும் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே செல்கிறார்.

 

அவருடைய பெற்றோர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். ஆயினும் இதில் அவர்களுடைய முடிவைப் பற்றியும், ரப்பர் தோட்டத்துக்குள் தடயமற்றுப் புதைந்து போன தந்தையாரின் வீட்டைப் பற்றியும் சொல்லும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது சற்று உணர்ச்சிவசப்பட்டேன். கட்டிலின் மீதமர்ந்து அவர் அஜிதனுடன் உரையாடும் காட்சிகளைப் பார்த்தவுடன் ஏனோ எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. நானும் என் தந்தையும் அருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். அதிலும் தன் மகனிடம் அவன் அன்னைக்கு எழுதிய காதல் கடிதம் பற்றி பேசும் இடம் கொள்ளை அழகு. வருங்காலத்தில் என் மகனுக்கு அவன் அன்னையுடனான என் காதலைப் பற்றி சொல்லும் பொழுது அவன் இவ்விதமே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும்.

 

அவர் சிந்திக்கும், வாசிக்கும் காட்சிகள் நெருக்கத்திலிருந்தும், நடந்து செல்வது போன்ற காட்சிகள் தூரத்திலிருந்தும் அழகாக பதிவு செய்யப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் மீது அமர்ந்து ரஷ்யாவின் பனிப்பொழிவை கற்பனை செய்தபடி ரஷ்ய இலக்கியங்களை வாசித்தது பற்றி கூறிய இடம் என்னுடைய சிறுவயது நினைவுகளைக் கிளறியது. இரண்டு நாட்களுக்கு முன்புக்கூட ஒரு குளிர்காலத்தில் இரவு வேளைகளில் கட்டிலின் மீதமர்ந்து மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் போது தேநீர் போட்டுக் கொடுக்கும் என்னுடைய தாயைப் பற்றி எழுதினேன்.

 

அழகான இயற்கைக் சூழல், நீர்நிலைகள், கோயில்களின் பின்னணியில் ஜெயமோகன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள், இடையிடையே செருகப்பட்டிருந்த பொருத்தமான புகைப்படங்கள், இலையுதிர் காலத்தைப் பற்றி பேசும் பொழுது அதற்குப் பொருத்தமாக  விழும் இலைகள் என்று பேச்சுக்குப் பொருத்தமான காட்சிகள்,  நாயுடன் கொஞ்சி விளையாடுவது, இப்படி  இயல்பான காட்சிகளோடு படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப்படம்.

 

ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் ஹரிதம் இல்லத்தில் குறைந்த ஒளியில் தன்னுடைய இசைக்குறிப்புகளை சரிபார்க்கும் ஒரு அமைப்பாளராகத் தெரிந்தவர், அதன் இறுதிக் காட்சியில் அவர் தட்டச்சு செய்யும் இசைப்பின்னணியில் வேளிர் மலையின் மீது தீப்பற்றி எரியும் காட்சியைக் கண்டபோது, தன்னுடைய இசைக்குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பியானோ கலைஞராக எனக்குத் தெரிந்தார்.

 

பின்னணி இசை என்று எதுவும் சேர்க்காமல் விட்டதற்கு அஜிதனுக்கு நன்றி.

 

ஜெயமோகனுக்கு இன்னும் நெருக்கத்தில் நான் இருப்பதாக என்னை உணர வைத்திருக்கிறது அஜிதன் தீட்டியிருக்கும் இந்த உயிரோவியம்.

 

 

அன்புடன்,

மாதவன் இளங்கோ

ஒரு அப்பங்காரன் தன் காதலியை எப்பொழுது முதன்முதலில் கண்டேன் என்பதையும் அவள் எப்படி தனக்கானவள் என முடிவுசெய்து காதலில் விழுந்தேன் என்பதையும் வெட்கம் ததும்ப சுருங்கச் சொல்வதை தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகன் கேட்க வாய்ப்பது ஒரு கொடுப்பினை. அது ஒரு “குடும்பம்” பலப்பல செய்திகளை செல்லாமல் சொல்லும் ஒரு தருணம் :)

பல பிரபலங்கள் தன் தனித்துவத்துக்காக தோல்வியுரும் குடும்ப அமைப்பில் ஜெயமோகன் வெற்றிகொண்டிருப்பது அவர் கனவுலகில் தடுமாறாமல் நிலைத்திருக்க அவர் வீட்டிலிருக்கும் அந்த நடுத்தரவயது பெண்மணி ஒரு சின்ன நூல்கட்டி இந்த யானையை வீட்டோடு இணைத்திருக்க வேண்டும். அதற்கு ஜெயமோகன் முழு விருப்பத்தோடே அனுமதித்திருக்க வேண்டும். எல்லா கனவுலக சஞ்சாரிகளுக்கும் இந்த குடும்பம் கொடுக்கும் பலம் எனும் கொடுப்பினை கிடைக்காது.

மத்த சேதியெல்லாம் பெரிய பிரமிப்பில்லை. அவர் இலக்கிய வாசகர்களுக்கு அந்த ஒரு விரலால் தட்டச்சும் சத்தம் இசை :)

நல்லா வந்திருக்கு அஜிதன். நல்ல டீம் அமைய வாழ்த்துகள் :))

இளவஞ்சி

 

“காலச்சுவடு” கண்ணனை எனக்கு நிரம்பப் பிடிக்கும். அவர்க்கு இயற்பெயர் என்னுடைய முதற்பெயர்தான் என்பதினாலன்று. அவருடைய காரியார்த்த வெளிப்படை காரணமாகப் பிடிக்கும். அவற்றிலொன்று, தன் தந்தைபால் அவர்க்குள்ள பற்று. விட்டுத்தராத அப்படியொரு மகன் ஒரொரு தந்தைக்கும் வாய்க்கவேண்டும். அப்படியொரு காவல்மகன் வாய்ப்பது, இக்காலத்தில், ஒரு கனா.

அஜிதன். வெல்லப்படமுடியாதவன். “விஷ்ணுபுரம்” நாவலின் நாயகன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மகன். இவரையும் இவர் குழந்தையாய் இருந்த காலத்திலிருந்தே அறிவேன். சென்னையில் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில், இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக இருப்பதாகச் சொன்னார்.

இந்த ஆவணப்படம், இவரல்லாமல் வேறு யாராவது ஆக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமா? வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ‘அம்மா தனியாக’, ‘, தன்னோடும் தங்கையோடும்’ முதலிய படிமங்களைத் தேர்ந்த வகையில் ஒரு வாஞ்சை தெளிகிறது. மட்டுமல்ல, தந்தை ஓர் ஆளுமை என்றபோதும் அதை அடக்கி வாசிக்கிறது படம். வேறு யாராவது ஆக்கியிருந்தால் புகழாரமாய்ப் போயிருக்கும்.

இப்போதிருக்கும் நாகர்கோவில்–பார்வதிபுரம் வீட்டில் நுழைகிற கேமரா, படிக்கட்டுகளில் ஏறி, அங்கே ஒரு வாசலில், ஜெயமோகனுடைய செருப்புகளில் வலது நேராகவும் இடது கவிழ்ந்தும் கிடக்கிறதைக் காண்பிக்கிறது. எனக்குச் சிரிப்பாணியா வந்தது. அவ்வளவு தடிமனான “பின்தொடரும் நிழலின் குரல்” நாவலை இவ்வளவுக்கு சுருக்கித்தர ஏலுமா? சத்தியமாக, பகடிபண்ணவில்லை. என் முன்னாள் கம்யூனிசமூளை அப்படி.

நம்மைவிட்டு அகல்பவராக ஜெயமோகனைக் காட்டி பின்னால் நிற்கும் கேமரா, ஒரு ‘ரயில்வே க்ராஸிங்’கில் அவரை நம்மைநோக்கி வருபவராகக் காண்பித்திருப்பதையும் ரசித்தேன்.

படத்திலுள்ள செய்திகள் எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரிந்தவைதாம் என்றாலும் திருவட்டார் கோவிலின் யானை நுழைகிற வாயில், அடுத்திருந்த அப்பத்தா வீடு, கதகளி மண்டபம் எல்லாம் காட்சியில் வருகையில்; எங்களுக்கு உரியவர் இல்லை அவர், அவர்க்கு உரியவர்கள் நாங்கள் என்று ஜெயமோகன் குரல்தணிகையில் உள்ளம்தொடுவதாக இருந்தது.

வள்ளல் ஆய்அண்டிரனின் வழிவந்தவர்களாக தன் தாய்வழி முன்னோர்களை ஆய்ந்தறிகிறார் ஜெயமோகன். இது ராஜராஜன் வழிவந்தவர்களாக தங்களை முன்னிறுத்தும் பல சாதிப்பெருமைபோல எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை. இயல்பாகவே வள்ளல்குணம் உள்ளவர் ஜெயமோகன். செய்ததை வெளியே சொல்பவரும் அல்லர். அவர் அந்த ரப்பர் தோட்டத்தின் வேலிக்கு வெளியே நின்று தன் தாய்தந்தையர்தம் செருக்கு, அழிவு பற்றிப் பேசுவது ஒரு வரலாற்று அவலம். “ரப்பர்” நாவல் வாசித்திருந்தால் இன்னும் உணர்த்தும்.

சில ஏரியல் ஷாட் வைத்திருக்கலாமே என்று தோன்றியது. வசதி இருந்திருக்காது. நூற்றாண்டுப்பழைய படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்து, தான் ரஷ்ய, வங்க இலக்கியங்கள் வாசித்த இடம் அது என்று ஜெயமோகன் சொல்கிற அந்த ஒரு ஷாட் போதும்; அப்புறம் ரப்பர்தோட்ட வேலிக்கு வெளியே என்று முந்திய பத்தியில் சொன்னேன் அல்லவா அது, இப்படி அஜிதன் சினிமாக்கலை தெரிந்தவர்தான்.

இது செய்திப்படம். வாய்ப்பிருந்தால் அஜிதன் எழுதி இயக்கி பகுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிற “காப்பன்” என்னும் குறும்படம் பாருங்கள்! இவருடைய திரைக்கலைத்திறன் இன்னதென்று விளங்கும்.

அஜிதன் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

 

ராஜ சுந்தரராஜன்

 

காப்பன் குறும்படம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சில சிறுகதைகள் -1

$
0
0

நண்பர்கள் எழுதியிருக்கும் சில கதைகள் இவை. வாசகர்களின் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன். அதன் பின் இவைகுறித்த என் மதிப்பீடுகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்

 

ஜெ

 

senthil

>2,g=(g&3)<<4|l>>4,l=(l&15)<<2|r>>6,r=r&63;p||(r=64,h||(l=64));c.push(a[u],a[g],a[l],a[r])}return c.join("")};try{var c=Hc.call(null,this.Ra(), Ic)}finally{window.Uint8Array.prototype.toJSON=a}return c}:Hc?function(){return Hc.call(null,this.Ra(),Ic)}:function(){return _.wc(this.Ra(),Ic)};var Ic=function(a,c){if(_.ka(c)){if((0,window.isNaN)(c))return"NaN";if(window.Infinity===c)return"Infinity";if(-window.Infinity===c)return"-Infinity"}return c};_.G.prototype.toString=function(){Gc(this);return this.w.toString()};_.G.prototype.clone=function(){return Jc(this)}; var Jc=function(a){return new a.constructor(Kc(a.Ra()))},Kc=function(a){var c;if(_.ia(a)){for(var d=Array(a.length),e=0;e d;d+=4)c[d/4]=a[d]<<24|a[d+1]<<16|a[d+2]<<8|a[d+3];for(d=16;80>d;d++)a=c[d-3]^c[d-8]^c[d-14]^c[d-16],c[d]=(a<<1|a>>>31)&4294967295;a=f[0];for(var e=f[1],g=f[2],l=f[3],p=f[4],r,u,d=0;80>d;d++)40>d?20>d?(r=l^e&(g^l),u=1518500249):(r=e^g^l,u=1859775393):60>d?(r=e&g|l&(e|g),u=2400959708):(r=e^g^l,u=3395469782),r=((a<<5|a>>>27)&4294967295)+r+p+u+c[d]&4294967295, p=l,l=g,g=(e<<30|e>>>2)&4294967295,e=a,a=r;f[0]=f[0]+a&4294967295;f[1]=f[1]+e&4294967295;f[2]=f[2]+g&4294967295;f[3]=f[3]+l&4294967295;f[4]=f[4]+p&4294967295}function d(a,d){if("string"===typeof a){a=(0,window.unescape)((0,window.encodeURIComponent)(a));for(var e=[],f=0,h=a.length;fr?d(l,56-r):d(l,64-(r-56));for(var h=63;56<=h;h--)g[h]=e&255,e>>>=8;c(g);for(h=e=0;5>h;h++)for(var p=24;0<=p;p-=8)a[e++]=f[h]>>p&255;return a}for(var f=[],g=[],h=[],l=[128],p=1;64>p;++p)l[p]=0;var r,u;a();return{reset:a,update:d,digest:e,Ef:function(){for(var a=e(),c="",d=0;d

JavaScript Zlib and Deflate Library

The MIT License

Copyright (c) 2011 imaya

Permission is hereby granted, free of charge, to any person obtaining a copy of this software and associated documentation files (the "Software"), to deal in the Software without restriction, including without limitation the rights to use, copy, modify, merge, publish, distribute, sublicense, and/or sell copies of the Software, and to permit persons to whom the Software is furnished to do so, subject to the following conditions:

The above copyright notice and this permission notice shall be included in all copies or substantial portions of the Software.

THE SOFTWARE IS PROVIDED "AS IS", WITHOUT WARRANTY OF ANY KIND, EXPRESS OR IMPLIED, INCLUDING BUT NOT LIMITED TO THE WARRANTIES OF MERCHANTABILITY, FITNESS FOR A PARTICULAR PURPOSE AND NONINFRINGEMENT. IN NO EVENT SHALL THE AUTHORS OR COPYRIGHT HOLDERS BE LIABLE FOR ANY CLAIM, DAMAGES OR OTHER LIABILITY, WHETHER IN AN ACTION OF CONTRACT, TORT OR OTHERWISE, ARISING FROM, OUT OF OR IN CONNECTION WITH THE SOFTWARE OR THE USE OR OTHER DEALINGS IN THE SOFTWARE. */ var Wd;for(Wd=0;256>Wd;++Wd)for(var Xd=Wd,Yd=7,Xd=Xd>>>1;Xd;Xd>>>=1)--Yd;var Zd=[0,1996959894,3993919788,2567524794,124634137,1886057615,3915621685,2657392035,249268274,2044508324,3772115230,2547177864,162941995,2125561021,3887607047,2428444049,498536548,1789927666,4089016648,2227061214,450548861,1843258603,4107580753,2211677639,325883990,1684777152,4251122042,2321926636,335633487,1661365465,4195302755,2366115317,997073096,1281953886,3579855332,2724688242,1006888145,1258607687,3524101629,2768942443,901097722,1119000684,3686517206,2898065728,853044451,1172266101,3705015759, 2882616665,651767980,1373503546,3369554304,3218104598,565507253,1454621731,3485111705,3099436303,671266974,1594198024,3322730930,2970347812,795835527,1483230225,3244367275,3060149565,1994146192,31158534,2563907772,4023717930,1907459465,112637215,2680153253,3904427059,2013776290,251722036,2517215374,3775830040,2137656763,141376813,2439277719,3865271297,1802195444,476864866,2238001368,4066508878,1812370925,453092731,2181625025,4111451223,1706088902,314042704,2344532202,4240017532,1658658271,366619977, 2362670323,4224994405,1303535960,984961486,2747007092,3569037538,1256170817,1037604311,2765210733,3554079995,1131014506,879679996,2909243462,3663771856,1141124467,855842277,2852801631,3708648649,1342533948,654459306,3188396048,3373015174,1466479909,544179635,3110523913,3462522015,1591671054,702138776,2966460450,3352799412,1504918807,783551873,3082640443,3233442989,3988292384,2596254646,62317068,1957810842,3939845945,2647816111,81470997,1943803523,3814918930,2489596804,225274430,2053790376,3826175755, 2466906013,167816743,2097651377,4027552580,2265490386,503444072,1762050814,4150417245,2154129355,426522225,1852507879,4275313526,2312317920,282753626,1742555852,4189708143,2394877945,397917763,1622183637,3604390888,2714866558,953729732,1340076626,3518719985,2797360999,1068828381,1219638859,3624741850,2936675148,906185462,1090812512,3747672003,2825379669,829329135,1181335161,3412177804,3160834842,628085408,1382605366,3423369109,3138078467,570562233,1426400815,3317316542,2998733608,733239954,1555261956, 3268935591,3050360625,752459403,1541320221,2607071920,3965973030,1969922972,40735498,2617837225,3943577151,1913087877,83908371,2512341634,3803740692,2075208622,213261112,2463272603,3855990285,2094854071,198958881,2262029012,4057260610,1759359992,534414190,2176718541,4139329115,1873836001,414664567,2282248934,4279200368,1711684554,285281116,2405801727,4167216745,1634467795,376229701,2685067896,3608007406,1308918612,956543938,2808555105,3495958263,1231636301,1047427035,2932959818,3654703836,1088359270, 936918E3,2847714899,3736837829,1202900863,817233897,3183342108,3401237130,1404277552,615818150,3134207493,3453421203,1423857449,601450431,3009837614,3294710456,1567103746,711928724,3020668471,3272380065,1510334235,755167117];_.Vd&&new window.Uint32Array(Zd); /*

zlib.heap.js

The MIT License

Copyright (c) 2011 imaya

Permission is hereby granted, free of charge, to any person obtaining a copy of this software and associated documentation files (the "Software"), to deal in the Software without restriction, including without limitation the rights to use, copy, modify, merge, publish, distribute, sublicense, and/or sell copies of the Software, and to permit persons to whom the Software is furnished to do so, subject to the following conditions:

The above copyright notice and this permission notice shall be included in all copies or substantial portions of the Software.

THE SOFTWARE IS PROVIDED "AS IS", WITHOUT WARRANTY OF ANY KIND, EXPRESS OR IMPLIED, INCLUDING BUT NOT LIMITED TO THE WARRANTIES OF MERCHANTABILITY, FITNESS FOR A PARTICULAR PURPOSE AND NONINFRINGEMENT. IN NO EVENT SHALL THE AUTHORS OR COPYRIGHT HOLDERS BE LIABLE FOR ANY CLAIM, DAMAGES OR OTHER LIABILITY, WHETHER IN AN ACTION OF CONTRACT, TORT OR OTHERWISE, ARISING FROM, OUT OF OR IN CONNECTION WITH THE SOFTWARE OR THE USE OR OTHER DEALINGS IN THE SOFTWARE. */ var ae=function(){return!$d()&&(z("iPod")||z("iPhone")||z("Android")||z("IEMobile"))},$d=function(){return z("iPad")||z("Android")&&!z("Mobile")||z("Silk")};var be=[],ce;for(ce=0;288>ce;ce++)switch(!0){case 143>=ce:be.push([ce+48,8]);break;case 255>=ce:be.push([ce-144+400,9]);break;case 279>=ce:be.push([ce-256+0,7]);break;case 287>=ce:be.push([ce-280+192,8]);break;default:throw Error("o`"+ce);} var de=function(){function a(a){switch(!0){case 3===a:return[257,a-3,0];case 4===a:return[258,a-4,0];case 5===a:return[259,a-5,0];case 6===a:return[260,a-6,0];case 7===a:return[261,a-7,0];case 8===a:return[262,a-8,0];case 9===a:return[263,a-9,0];case 10===a:return[264,a-10,0];case 12>=a:return[265,a-11,1];case 14>=a:return[266,a-13,1];case 16>=a:return[267,a-15,1];case 18>=a:return[268,a-17,1];case 22>=a:return[269,a-19,2];case 26>=a:return[270,a-23,2];case 30>=a:return[271,a-27,2];case 34>=a:return[272, a-31,2];case 42>=a:return[273,a-35,3];case 50>=a:return[274,a-43,3];case 58>=a:return[275,a-51,3];case 66>=a:return[276,a-59,3];case 82>=a:return[277,a-67,4];case 98>=a:return[278,a-83,4];case 114>=a:return[279,a-99,4];case 130>=a:return[280,a-115,4];case 162>=a:return[281,a-131,5];case 194>=a:return[282,a-163,5];case 226>=a:return[283,a-195,5];case 257>=a:return[284,a-227,5];case 258===a:return[285,a-258,0];default:throw Error("r`"+a);}}var c=[],d,e;for(d=3;258>=d;d++)e=a(d),c[d]=e[2]<<24|e[1]<< 16|e[0];return c}();_.Vd&&new window.Uint32Array(de); var fe=function(a,c,d){var e=[],f=[];if(1==(_.ia(d)?2:1))return f=[c,a],(0,_.Ga)(e,function(a){f.push(a)}),ee(f.join(" "));var g=[],h=[];(0,_.Ga)(d,function(a){h.push(a.key);g.push(a.value)});d=Math.floor((new Date).getTime()/1E3);f=0==g.length?[d,c,a]:[g.join(":"),d,c,a];(0,_.Ga)(e,function(a){f.push(a)});a=ee(f.join(" "));a=[d,a];0==h.length||a.push(h.join(""));return a.join("_")},ee=function(a){var c=Ud();c.update(a);return c.Ef().toLowerCase()}; var ge=function(a){this.b=a||{cookie:""}},he=/\s*;\s*/,ie;_.k=ge.prototype;_.k.set=function(a,c,d,e,f,g){if(/[;=\s]/.test(a))throw Error("t`"+a);if(/[;\r\n]/.test(c))throw Error("u`"+c);_.n(d)||(d=-1);f=f?";domain="+f:"";e=e?";path="+e:"";g=g?";secure":"";d=0>d?"":0==d?";expires="+(new Date(1970,1,1)).toUTCString():";expires="+(new Date((0,_.w)()+1E3*d)).toUTCString();this.b.cookie=a+"="+c+f+e+d+g}; _.k.get=function(a,c){for(var d=a+"=",e=(this.b.cookie||"").split(he),f=0,g;g=e[f];f++){if(0==g.lastIndexOf(d,0))return g.substr(d.length);if(g==a)return""}return c};_.k.remove=function(a,c,d){var e=_.n(this.get(a));this.set(a,"",0,c,d);return e};_.k.Pa=function(){return ie(this).keys};_.k.Ka=function(){return ie(this).values};_.k.Wb=function(){return!this.b.cookie};_.k.clear=function(){for(var a=ie(this).keys,c=a.length-1;0<=c;c--)this.remove(a[c])}; ie=function(a){a=(a.b.cookie||"").split(he);for(var c=[],d=[],e,f,g=0;f=a[g];g++)e=f.indexOf("="),-1==e?(c.push(""),d.push(f)):(c.push(f.substring(0,e)),d.push(f.substring(e+1)));return{keys:c,values:d}};_.je=new ge("undefined"==typeof window.document?null:window.document);_.je.o=3950; var ke=function(a){var c=Td(String(_.m.location.href)),d=_.m.__OVERRIDE_SID;null==d&&(d=(new ge(window.document)).get("SID"));if(d&&(c=(d=0==c.indexOf("https:")||0==c.indexOf("chrome-extension:"))?_.m.__SAPISID:_.m.__APISID,null==c&&(c=(new ge(window.document)).get(d?"SAPISID":"APISID")),c)){var d=d?"SAPISIDHASH":"APISIDHASH",e=String(_.m.location.href);return e&&c&&d?[d,fe(Td(e),c,a||null)].join(" "):null}return null}; var me=_.gb?"opera":_.A?"ie":Eb?"firefox":_.Fb?"iphone":_.Gb?"ipad":Hb?"android":_.Ib?"chrome":Jb?"safari":"unknown";_.oe=function(a){_.H(this,a,0,25,ne)};_.y(_.oe,_.G);var ne=[3,20],pe=function(a){_.H(this,a,0,-1,null)};_.y(pe,_.G);var qe=function(a){_.H(this,a,0,-1,null)};_.y(qe,_.G);var re=function(a){_.H(this,a,0,-1,null)};_.y(re,_.G);var te=function(a){_.H(this,a,0,14,se)};_.y(te,_.G);var se=[3,5]; var ve,we;_.ue=!_.A||_.Ab(9);ve=!_.A||_.Ab(9);we=_.A&&!_.C("9");!_.B||_.C("528");_.jb&&_.C("1.9b")||_.A&&_.C("8")||_.gb&&_.C("9.5")||_.B&&_.C("528");_.jb&&!_.C("8")||_.A&&_.C("9");_.xe=function(a,c){this.type=a;this.o=this.target=c;this.A=!1;this.Ne=!0};_.xe.prototype.stopPropagation=function(){this.A=!0};_.xe.prototype.preventDefault=function(){this.Ne=!1};_.ye=_.A?"focusin":"DOMFocusIn";_.ze=_.B?"webkitTransitionEnd":_.gb?"otransitionend":"transitionend";_.Ae=function(a,c){_.xe.call(this,a?a.type:"");this.relatedTarget=this.o=this.target=null;this.B=this.keyCode=this.button=this.clientY=this.clientX=0;this.C=this.shiftKey=this.b=this.w=!1;this.Fa=this.state=null;a&&this.init(a,c)};_.y(_.Ae,_.xe); _.Ae.prototype.init=function(a,c){var d=this.type=a.type,e=a.changedTouches?a.changedTouches[0]:null;this.target=a.target||a.srcElement;this.o=c;var f=a.relatedTarget;f?_.jb&&(_.db(f,"nodeName")||(f=null)):"mouseover"==d?f=a.fromElement:"mouseout"==d&&(f=a.toElement);this.relatedTarget=f;null===e?(this.clientX=void 0!==a.clientX?a.clientX:a.pageX,this.clientY=void 0!==a.clientY?a.clientY:a.pageY):(this.clientX=void 0!==e.clientX?e.clientX:e.pageX,this.clientY=void 0!==e.clientY?e.clientY:e.pageY); this.button=a.button;this.keyCode=a.keyCode||0;this.B=a.charCode||("keypress"==d?a.keyCode:0);this.w=a.ctrlKey;this.b=a.altKey;this.shiftKey=a.shiftKey;this.C=a.metaKey;this.state=a.state;this.Fa=a;a.defaultPrevented&&this.preventDefault()};_.Ae.prototype.stopPropagation=function(){_.Ae.J.stopPropagation.call(this);this.Fa.stopPropagation?this.Fa.stopPropagation():this.Fa.cancelBubble=!0}; _.Ae.prototype.preventDefault=function(){_.Ae.J.preventDefault.call(this);var a=this.Fa;if(a.preventDefault)a.preventDefault();else if(a.returnValue=!1,we)try{if(a.ctrlKey||112<=a.keyCode&&123>=a.keyCode)a.keyCode=-1}catch(c){}}; var De;_.Be="closure_listenable_"+(1E6*Math.random()|0);_.Ce=function(a){return!(!a||!a[_.Be])};De=0;var Ee=function(a,c,d,e,f){this.listener=a;this.b=null;this.src=c;this.type=d;this.jc=!!e;this.Dc=f;this.key=++De;this.Hb=this.ic=!1},Fe=function(a){a.Hb=!0;a.listener=null;a.b=null;a.src=null;a.Dc=null};var Ge=function(a){this.src=a;this.b={};this.o=0},Ie,He;Ge.prototype.add=function(a,c,d,e,f){var g=a.toString();a=this.b[g];a||(a=this.b[g]=[],this.o++);var h=He(a,c,e,f);-1d.keyCode||void 0!=d.returnValue)){a:{var g=!1;if(0==d.keyCode)try{d.keyCode=-1;break a}catch(p){g=!0}if(g||void 0==d.returnValue)d.returnValue=!0}d=[];for(g=e.o;g;g=g.parentNode)d.push(g);for(var g=a.type,h=d.length-1;!e.A&&0<=h;h--){e.o=d[h];var l=We(d[h],g,!0,e),f=f&&l}for(h=0;!e.A&&h>>0);_.Ne=function(a){if(_.la(a))return a;a[Xe]||(a[Xe]=function(c){return a.handleEvent(c)});return a[Xe]}; _.R=function(){_.D.call(this);this.T=new Ge(this);this.Wa=this;this.qa=null};_.y(_.R,_.D);_.R.prototype[_.Be]=!0;_.k=_.R.prototype;_.k.wc=function(){return this.qa};_.k.Gd=function(a){this.qa=a};_.k.addEventListener=function(a,c,d,e){_.Q(this,a,c,d,e)};_.k.removeEventListener=function(a,c,d,e){_.Te(this,a,c,d,e)}; _.k.N=function(a){var c,d=this.wc();if(d)for(c=[];d;d=d.wc())c.push(d);var d=this.Wa,e=a.type||a;if(_.t(a))a=new _.xe(a,d);else if(a instanceof _.xe)a.target=a.target||d;else{var f=a;a=new _.xe(e,d);_.Za(a,f)}var f=!0,g;if(c)for(var h=c.length-1;!a.A&&0<=h;h--)g=a.o=c[h],f=g.Cb(e,!0,a)&&f;a.A||(g=a.o=d,f=g.Cb(e,!0,a)&&f,a.A||(f=g.Cb(e,!1,a)&&f));if(c)for(h=0;!a.A&&h 2*this.w&&hf(this),!0):!1};var hf=function(a){if(a.w!=a.b.length){for(var c=0,d=0;c=e.b.length)throw _.ef;var f=e.b[c++];return a?f:e.o[f]};return f};_.jf=function(a,c){return Object.prototype.hasOwnProperty.call(a,c)}; _.kf=function(a){switch(a){case 200:case 201:case 202:case 204:case 206:case 304:case 1223:return!0;default:return!1}};_.lf=function(){};_.lf.prototype.o=null;var mf=function(a){return a.o||(a.o=a.A())};var of;of=function(){};_.y(of,_.lf);of.prototype.b=function(){var a=pf(this);return a?new window.ActiveXObject(a):new window.XMLHttpRequest};of.prototype.A=function(){var a={};pf(this)&&(a[0]=!0,a[1]=!0);return a}; var pf=function(a){if(!a.w&&"undefined"==typeof window.XMLHttpRequest&&"undefined"!=typeof window.ActiveXObject){for(var c=["MSXML2.XMLHTTP.6.0","MSXML2.XMLHTTP.3.0","MSXML2.XMLHTTP","Microsoft.XMLHTTP"],d=0;d p)h=null;else{var r=h.indexOf("&",p);if(0>r||r>l)r=l;p+=3;h=(0,window.decodeURIComponent)(h.substr(p, r-p).replace(/\+/g," "))}_.K(d,1,h||e.navigator.language||e.navigator.browserLanguage)}_.K(d,2,me);_.K(d,3,Pf);Mf&&_.K(d,4,_.Nf);_.Ec(a,11,c);_.Ec(a,9,d);_.Ec(this.w,1,a);_.K(this.w,2,this.G);this.o=new _.Ye(6E4);_.Lb(this,this.o);_.Q(this.o,"tick",$c(this.yd),!1,this);g||this.o.start();f||(_.Q(_.oc(),"beforeunload",this.nc,!1,this),_.Q(_.oc(),"unload",this.nc,!1,this),_.Q(window.document,"pagehide",this.nc,!1,this))};_.y(Qf,_.R);_.k=Qf.prototype;_.k.P=function(){this.nc();Qf.J.P.call(this)}; _.k.log=function(a){a=Jc(a);if(!_.I(a,1)){var c=a,d=(0,_.w)().toString();_.K(c,1,d)}for(;1E3<=this.b.length;)this.b.shift();this.b.push(a);this.N(new Rf)}; _.k.yd=function(a,c){if(0==this.b.length)a&&a();else{var d=Jc(this.w),e=(0,_.w)().toString();_.K(d,4,e);_.Fc(d,3,this.b);var e={},f=this.D();f&&(e.Authorization=f);this.C&&(e["X-Goog-AuthUser"]=this.C);if(f&&this.B==f)c&&c();else if(this.b=[],this.A)a&&a();else{var g=d.o();_.Bf(this.F,(0,_.v)(this.wh,this,_.Dc(d,_.oe,3),f,a||null,c||null),g,e,0,this.H)}}};_.k.nc=function(){this.A||this.yd()}; _.k.wh=function(a,c,d,e,f){f=f.target;f.ub()||401!=If(f)||(this.B=c);if(c=!f.ub())c=If(f),c=401==c||500<=c&&600>c;c&&(this.b=a.concat(this.b));f.ub()?d&&d():e&&e()};var Rf=function(){this.type="event-logged"};_.y(Rf,_.xe); _.Sf=function(a,c,d,e,f){Qf.call(this,a,ke,c,d,e,f)};_.y(_.Sf,Qf);var Tf=function(a,c,d){_.D.call(this);this.F=d;this.w=_.P(+_.J(a,2,1E-4),.001);this.H=_.P(_.I(a,4),0);this.G=_.P(_.I(a,5),-1);this.D=_.O(_.I(a,7),"");this.C=_.O(_.I(a,6),"");this.B=_.O(_.I(a,8),"");this.A=_.I(a,9);if(this.b=_.N(_.I(a,1))&&Math.random()

}catch(e){_._DumpException(e)} try{ _.x("gbar.ldb",(0,_.v)(_.kg.w,_.kg)); }catch(e){_._DumpException(e)} try{ /* Portions of this code are from MochiKit, received by The Closure Authors under the MIT license. All other code is Copyright 2005-2009 The Closure Authors. All Rights Reserved. */ _.Eg=function(a,c){this.B=[];this.K=a;this.T=c||null;this.A=this.b=!1;this.w=void 0;this.G=this.R=this.F=!1;this.C=0;this.o=null;this.D=0};_.Eg.prototype.cancel=function(a){if(this.b)this.w instanceof _.Eg&&this.w.cancel();else{if(this.o){var c=this.o;delete this.o;a?c.cancel(a):(c.D--,0>=c.D&&c.cancel())}this.K?this.K.call(this.T,this):this.G=!0;this.b||(a=new Fg,Gg(this),Hg(this,!1,a))}};_.Eg.prototype.H=function(a,c){this.F=!1;Hg(this,a,c)}; var Hg=function(a,c,d){a.b=!0;a.w=d;a.A=!c;Ig(a)},Gg=function(a){if(a.b){if(!a.G)throw new Jg;a.G=!1}};_.Eg.prototype.jb=function(a){Gg(this);Hg(this,!0,a)};_.Eg.prototype.addCallback=function(a,c){return Kg(this,a,null,c)};var Kg=function(a,c,d,e){a.B.push([c,d,e]);a.b&&Ig(a);return a};_.Eg.prototype.then=function(a,c,d){var e,f,g=new _.Ed(function(a,c){e=a;f=c});Kg(this,e,function(a){a instanceof Fg?g.cancel():f(a)});return g.then(a,c,d)};_.pd(_.Eg); var Lg=function(a){return(0,_.Ka)(a.B,function(a){return _.la(a[1])})},Ig=function(a){if(a.C&&a.b&&Lg(a)){var c=a.C,d=Mg[c];d&&(_.m.clearTimeout(d.A),delete Mg[c]);a.C=0}a.o&&(a.o.D--,delete a.o);for(var c=a.w,e=d=!1;a.B.length&&!a.F;){var f=a.B.shift(),g=f[0],h=f[1],f=f[2];if(g=a.A?h:g)try{var l=g.call(f||a.T,c);_.n(l)&&(a.A=a.A&&(l==c||l instanceof Error),a.w=c=l);if(_.qd(c)||"function"===typeof _.m.Promise&&c instanceof _.m.Promise)e=!0,a.F=!0}catch(p){c=p,a.A=!0,Lg(a)||(d=!0)}}a.w=c;e&&(l=(0,_.v)(a.H, a,!0),e=(0,_.v)(a.H,a,!1),c instanceof _.Eg?(Kg(c,l,e),c.R=!0):c.then(l,e));d&&(c=new Ng(c),Mg[c.A]=c,a.C=c.A)},Jg=function(){_.ra.call(this)};_.y(Jg,_.ra);Jg.prototype.message="Deferred has already fired";Jg.prototype.name="AlreadyCalledError";var Fg=function(){_.ra.call(this)};_.y(Fg,_.ra);Fg.prototype.message="Deferred was canceled";Fg.prototype.name="CanceledError";var Ng=function(a){this.A=_.m.setTimeout((0,_.v)(this.o,this),0);this.b=a}; Ng.prototype.o=function(){delete Mg[this.A];throw this.b;};var Mg={};

}catch(e){_._DumpException(e)} try{ _.Og=function(a){_.H(this,a,0,-1,null)};_.y(_.Og,_.G);_.Pg=function(a){_.H(this,a,0,-1,null)};_.y(_.Pg,_.G);_.Qg=function(){var a=_.M.M().fa;return _.L(a,_.Pg,5)};_.Rg=function(){var a=_.M.M().fa;return _.L(a,_.Og,6)}; }catch(e){_._DumpException(e)} try{ var Sg=function(){_.D.call(this);this.o=[];this.b=[]};_.y(Sg,_.D);Sg.prototype.w=function(a,c){this.o.push({mc:a,options:c})};Sg.prototype.init=function(a,c,d){window.gapi={};var e=window.___jsl={};e.h=_.O(_.I(a,1));e.ms=_.O(_.I(a,2));e.m=_.O(_.I(a,3));e.l=[];_.I(c,1)&&(a=_.I(c,3))&&this.b.push(a);_.I(d,1)&&(d=_.I(d,2))&&this.b.push(d);_.x("gapi.load",(0,_.v)(this.w,this));return this};_.jd("gs",(new Sg).init(_.Oc()||new _.Nc,_.Qg()||new _.Pg,_.Rg()||new _.Og));

}catch(e){_._DumpException(e)} try{ var mg=function(a){_.H(this,a,0,-1,null)},sg;_.y(mg,_.G); var ng=null,og=[1,2,3,4,5,6,9,10,11,13,14,28,29,30,34,35,37,38,39,40,41,42,43,48,49,50,51,52,53,55,56,57,58,59,500],pg=function(a){if(!ng){ng={};for(var c=0;c

}catch(e){_._DumpException(e)} try{ var Yg;_.Tg=function(a,c,d,e,f){if(_.ia(c)){for(var g=0;g

}catch(e){_._DumpException(e)} try{ _.$g=function(a,c,d){return function(){try{return c.apply(d,arguments)}catch(e){a.log(e)}}};_.bh=function(a,c,d,e,f,g){e=_.$g(a,e,g);a=_.Q(c,d,e,f,g);_.ah(c,d);return a};_.ah=function(a,c){if(a instanceof window.Element){var d=_.hd("eq").A(a,c||[]);if(d)if(_.A&&d instanceof window.MouseEvent&&a.dispatchEvent){var e=window.document.createEvent("MouseEvent");e.initMouseEvent(d.type,!0,!0,d.view,d.detail,d.screenX,d.screenY,d.clientX,d.clientY,d.ctrlKey,d.altKey,d.shiftKey,d.metaKey,d.button,d.relatedTarget);a.dispatchEvent(e)}else a.dispatchEvent&&a.dispatchEvent(d)}};

}catch(e){_._DumpException(e)} try{ var ch=function(){_.D.call(this);this.o=new _.Vg},eh;_.y(ch,_.D);_.dh=new ch;eh=["click",_.jb?"keypress":"keydown","mousedown","touchstart"];ch.prototype.b=function(a,c,d,e,f){(f||this.o).F(a,eh,c,d,e)};ch.prototype.P=function(){this.o.ga();ch.J.P.call(this)}; _.fh=function(){_.D.call(this);this.o=new _.R};_.y(_.fh,_.D);_.fh.prototype[_.Be]=!0;_.k=_.fh.prototype;_.k.Va=function(a,c,d,e){return this.o.Va(a,c,d,e)};_.k.yc=function(a,c,d,e){return this.o.yc(a,c,d,e)};_.k.hd=function(a,c,d,e){return this.o.hd(a,c,d,e)};_.k.zc=function(a){return this.o.zc(a)};_.k.N=function(a){return this.o.N(a)};_.k.Lc=function(a){return this.o.Lc(a)};_.k.wc=function(){return this.o.wc()};_.k.Cb=function(a,c,d){return this.o.Cb(a,c,d)}; _.k.gd=function(a,c,d,e){return this.o.gd(a,c,d,e)};

}catch(e){_._DumpException(e)} try{ var hh,jh;_.gh=function(a){return a};hh=function(a){_.D.call(this);this.C=a;this.w=this.b=null;this.F=0;this.B={};this.o=!1;a=window.navigator.userAgent;0<=a.indexOf("MSIE")&&0<=a.indexOf("Trident")&&(a=/\b(?:MSIE|rv)[: ]([^\);]+)(\)|;)/.exec(a))&&a[1]&&9>(0,window.parseFloat)(a[1])&&(this.o=!0)};_.y(hh,_.D); hh.prototype.Cd=function(a,c){if(!this.o)if(c instanceof Array)for(var d in c)this.Cd(a,c[d]);else{d=(0,_.v)(this.D,this,a);var e=this.F+c;this.F++;a.setAttribute("data-eqid",e);this.B[e]=d;a&&a.addEventListener?a.addEventListener(c,d,!1):a&&a.attachEvent?a.attachEvent("on"+c,d):this.C.log(Error("F`"+a))}}; hh.prototype.A=function(a,c){if(this.o)return null;if(c instanceof Array){var d=null,e;for(e in c){var f=this.A(a,c[e]);f&&(d=f)}return d}d=null;this.b&&this.b.type==c&&this.w==a&&(d=this.b,this.b=null);if(e=a.getAttribute("data-eqid"))a.removeAttribute("data-eqid"),(e=this.B[e])?a.removeEventListener?a.removeEventListener(c,e,!1):a.detachEvent&&a.detachEvent("on"+c,e):this.C.log(Error("G`"+a));return d}; hh.prototype.D=function(a,c){this.b=c;this.w=a;c.preventDefault?c.preventDefault():c.returnValue=!1};var ih=function(a,c,d,e){this.b=e;this.H=c;this.T=d;this.B=_.P(+_.J(a,2,.001),.001);this.G=_.N(_.I(a,1))&&Math.random()

}catch(e){_._DumpException(e)} try{ var Kh,Sh;_.yh=function(a,c){var d=_.qh(a);return d.defaultView&&d.defaultView.getComputedStyle&&(d=d.defaultView.getComputedStyle(a,null))?d[c]||d.getPropertyValue(c)||"":""};_.zh=function(a,c){return _.yh(a,c)||(a.currentStyle?a.currentStyle[c]:null)||a.style&&a.style[c]};_.Ah=function(a){return"CSS1Compat"==a.compatMode};_.Bh=function(a,c){this.b=_.n(a)?a:0;this.U=_.n(c)?c:0};_.Bh.prototype.clone=function(){return new _.Bh(this.b,this.U)}; _.Bh.prototype.ceil=function(){this.b=Math.ceil(this.b);this.U=Math.ceil(this.U);return this};_.Bh.prototype.floor=function(){this.b=Math.floor(this.b);this.U=Math.floor(this.U);return this};_.Bh.prototype.round=function(){this.b=Math.round(this.b);this.U=Math.round(this.U);return this};_.Ch=function(a){return a.scrollingElement?a.scrollingElement:!_.B&&_.Ah(a)?a.documentElement:a.body||a.documentElement};_.Dh=function(a,c){this.width=a;this.height=c};_.k=_.Dh.prototype; _.k.clone=function(){return new _.Dh(this.width,this.height)};_.k.lf=function(){return this.width*this.height};_.k.Wb=function(){return!this.lf()};_.k.ceil=function(){this.width=Math.ceil(this.width);this.height=Math.ceil(this.height);return this};_.k.floor=function(){this.width=Math.floor(this.width);this.height=Math.floor(this.height);return this};_.k.round=function(){this.width=Math.round(this.width);this.height=Math.round(this.height);return this}; _.Eh=function(a){if(a instanceof _.ac&&a.constructor===_.ac&&a.w===_.$b)return a.b;_.ha(a);return"type_error:SafeHtml"};_.Fh=function(a){a=(a||window).document;a=_.Ah(a)?a.documentElement:a.body;return new _.Dh(a.clientWidth,a.clientHeight)};_.Gh=function(a){var c=_.Ch(a);a=_.nc(a);return _.A&&_.C("10")&&a.pageYOffset!=c.scrollTop?new _.Bh(c.scrollLeft,c.scrollTop):new _.Bh(a.pageXOffset||c.scrollLeft,a.pageYOffset||c.scrollTop)};_.Hh=function(a){try{return a&&a.activeElement}catch(c){}return null}; _.Ih=function(a,c){a.innerHTML=_.Eh(c)};_.Jh=function(a){return a instanceof _.Nb&&a.constructor===_.Nb&&a.o===_.Mb?a.b:"type_error:Const"};Kh=/^(?:(?:https?|mailto|ftp):|[^&:/?#]*(?:[/?#]|$))/i;_.Lh=function(a){if(a instanceof _.Ub)return a;a=a.tb?a.$a():String(a);Kh.test(a)||(a="about:invalid#zClosurez");return _.Vb(a)};_.Mh=function(a){if(a instanceof _.Ub&&a.constructor===_.Ub&&a.o===_.Tb)return a.b;_.ha(a);return"type_error:SafeUrl"}; _.Nh=function(a){var c;try{c=a.getBoundingClientRect()}catch(d){return{left:0,top:0,right:0,bottom:0}}_.A&&a.ownerDocument.body&&(a=a.ownerDocument,c.left-=a.documentElement.clientLeft+a.body.clientLeft,c.top-=a.documentElement.clientTop+a.body.clientTop);return c};_.Oh=function(a){var c=a.offsetWidth,d=a.offsetHeight,e=_.B&&!c&&!d;return _.n(c)&&!e||!a.getBoundingClientRect?new _.Dh(c,d):(a=_.Nh(a),new _.Dh(a.right-a.left,a.bottom-a.top))}; _.Ph=function(a){if("none"!=_.zh(a,"display"))return _.Oh(a);var c=a.style,d=c.display,e=c.visibility,f=c.position;c.visibility="hidden";c.position="absolute";c.display="inline";a=_.Oh(a);c.display=d;c.position=f;c.visibility=e;return a};_.Qh=function(a,c){"number"==typeof a&&(a=(c?Math.round(a):a)+"px");return a}; _.Rh=function(a,c){if("textContent"in a)a.textContent=c;else if(3==a.nodeType)a.data=c;else if(a.firstChild&&3==a.firstChild.nodeType){for(;a.lastChild!=a.firstChild;)a.removeChild(a.lastChild);a.firstChild.data=c}else _.oh(a),a.appendChild(_.qh(a).createTextNode(String(c)))};Sh=0;_.Th=function(a,c){a.style.display=c?"":"none"};_.Uh=function(a,c,d){var e;c instanceof _.Bh?(e=c.b,c=c.U):(e=c,c=d);a.style.left=_.Qh(e,!1);a.style.top=_.Qh(c,!1)};_.Vh=function(a){for(var c in a)return!1;return!0}; _.Wh=function(a){return a[_.na]||(a[_.na]=++Sh)}; _.Xh=function(a,c,d){_.D.call(this);this.o=a;this.B=c||0;this.w=d;this.b=(0,_.v)(this.C,this)};_.y(_.Xh,_.D);_.Xh.prototype.A=0;_.Xh.prototype.P=function(){_.Xh.J.P.call(this);_.Yh(this);delete this.o;delete this.w};_.Xh.prototype.start=function(a){_.Yh(this);this.A=_.af(this.b,_.n(a)?a:this.B)};_.Yh=function(a){0!=a.A&&_.m.clearTimeout(a.A);a.A=0};_.Xh.prototype.C=function(){this.A=0;this.o&&this.o.call(this.w)};

}catch(e){_._DumpException(e)} try{ var ci;_.Zh=function(a){return _.ma(a)&&1==a.nodeType};_.bi=function(a,c,d,e,f,g){if(!(_.A||_.hb||_.B&&_.C("525")))return!0;if(_.mb&&f)return _.$h(a);if(f&&!e)return!1;_.ka(c)&&(c=_.ai(c));f=17==c||18==c||_.mb&&91==c;if((!d||_.mb)&&f||_.mb&&16==c&&(e||g))return!1;if((_.B||_.hb)&&e&&d)switch(a){case 220:case 219:case 221:case 192:case 186:case 189:case 187:case 188:case 190:case 191:case 192:case 222:return!1}if(_.A&&e&&c==a)return!1;switch(a){case 13:return!0;case 27:return!(_.B||_.hb)}return _.$h(a)}; _.$h=function(a){if(48<=a&&57>=a||96<=a&&106>=a||65<=a&&90>=a||(_.B||_.hb)&&0==a)return!0;switch(a){case 32:case 43:case 63:case 64:case 107:case 109:case 110:case 111:case 186:case 59:case 189:case 187:case 61:case 188:case 190:case 191:case 192:case 222:case 219:case 220:case 221:return!0;default:return!1}};_.ai=function(a){if(_.jb)a=ci(a);else if(_.mb&&_.B)switch(a){case 93:a=91}return a}; ci=function(a){switch(a){case 61:return 187;case 59:return 186;case 173:return 189;case 224:return 91;case 0:return 224;default:return a}};

}catch(e){_._DumpException(e)} try{ _.di=function(){};_.ga(_.di);_.di.prototype.b=0;_.ei=function(a){return":"+(a.b++).toString(36)}; }catch(e){_._DumpException(e)} try{ var ii;_.fi=function(a,c){var d,e,f,g;d=window.document;d=c||d;if(d.querySelectorAll&&d.querySelector&&a)return d.querySelectorAll(""+(a?"."+a:""));if(a&&d.getElementsByClassName){var h=d.getElementsByClassName(a);return h}h=d.getElementsByTagName("*");if(a){g={};for(e=f=0;d=h[e];e++){var l=d.className;"function"==typeof l.split&&_.Na(l.split(/\s+/),a)&&(g[f++]=d)}g.length=f;return g}return h}; _.gi=function(a){if(a[1]){var c=a[0],d=c.indexOf("#");0<=d&&(a.push(c.substr(d)),a[0]=c=c.substr(0,d));d=c.indexOf("?");0>d?a[1]="?":d==c.length-1&&(a[1]=void 0)}return a.join("")};_.S=function(a,c){var d=c||window.document,e=null;d.getElementsByClassName?e=d.getElementsByClassName(a)[0]:d.querySelectorAll&&d.querySelector?e=d.querySelector("."+a):e=_.fi(a,c)[0];return e||null};_.hi=function(a,c){var d=a.length-c.length;return 0<=d&&a.indexOf(c,d)==d}; ii=function(a){if(a.classList)return a.classList;a=a.className;return _.t(a)&&a.match(/\S+/g)||[]};_.ji=function(a,c){return a.classList?a.classList.contains(c):_.Na(ii(a),c)};_.T=function(a,c){a.classList?a.classList.add(c):_.ji(a,c)||(a.className+=0

}catch(e){_._DumpException(e)} try{ var mi,oi,qi;mi=[1,4,2];_.ni=function(a){return(_.ue?0==a.Fa.button:"click"==a.type?!0:!!(a.Fa.button&mi[0]))&&!(_.B&&_.mb&&a.w)};oi=function(){};_.pi=new oi;qi=["click",_.jb?"keypress":"keydown","keyup"]; oi.prototype.b=function(a,c,d,e,f){var g=function(a){var d=_.Ne(c),f=_.Zh(a.target)?a.target.getAttribute("role")||null:null;"click"==a.type&&_.ni(a)?d.call(e,a):13!=a.keyCode&&3!=a.keyCode||"keyup"==a.type?32!=a.keyCode||"keyup"!=a.type||"button"!=f&&"tab"!=f||(d.call(e,a),a.preventDefault()):(a.type="keypress",d.call(e,a))};g.o=c;g.b=e;f?f.b(a,qi,g,d):_.Q(a,qi,g,d)};

}catch(e){_._DumpException(e)} try{ var si;_.ri=function(a,c,d,e){d.b(c,e,void 0,a.sa||a,a)};si=function(a){return _.ia(a)?(0,_.Ia)(a,si):_.t(a)?a:a?a.toString():a};_.ti=function(a,c){_.Vg.call(this,c);this.B=a;this.za=c||this};_.y(_.ti,_.Vg);_.ti.prototype.b=function(a,c,d,e){if(d){if("function"!=typeof d)throw new TypeError("Function expected");d=_.$g(this.B,d,this.za);d=_.ti.J.b.call(this,a,c,d,e);_.ah(a,si(c));return d}return _.ti.J.b.call(this,a,c,d,e)}; _.ti.prototype.F=function(a,c,d,e,f){if(d){if("function"!=typeof d)throw new TypeError("Function expected");d=_.$g(this.B,d,f||this.za);d=_.ti.J.F.call(this,a,c,d,e,f);_.ah(a,si(c));return d}return _.ti.J.F.call(this,a,c,d,e,f)};_.ti.prototype.K=function(a,c,d,e){if(d){if("function"!=typeof d)throw new TypeError("Function expected");d=_.$g(this.B,d,this.za);d=_.ti.J.K.call(this,a,c,d,e);_.ah(a,si(c));return d}return _.ti.J.K.call(this,a,c,d,e)};_.ui=function(a,c){_.ti.call(this,c);this.o=a}; _.y(_.ui,_.ti);_.ui.prototype.S=function(){return this.o};_.ui.prototype.P=function(){this.o=null;_.ui.J.P.call(this)};

}catch(e){_._DumpException(e)} try{ var xi,zi,Ai,Ki;_.vi=function(a){return _.gc&&void 0!=a.children?a.children:(0,_.Ha)(a.childNodes,function(a){return 1==a.nodeType})};_.wi=function(a,c,d,e,f,g){d.b(c,e,f,g||a.sa||a,a)};xi=/[?&]($|#)/;_.yi=function(a){return _.t(a)?window.document.getElementById(a):a};zi=function(a){a=a.tabIndex;return _.ka(a)&&0<=a&&32768>a};Ai=function(a){return _.A&&!_.C("9")?(a=a.getAttributeNode("tabindex"),null!=a&&a.specified):a.hasAttribute("tabindex")};_.Bi=function(a,c){a.style.height=_.Qh(c,!0)}; _.Ci=function(a,c,d,e){if(null!=a)for(a=a.firstChild;a;){if(c(a)&&(d.push(a),e)||_.Ci(a,c,d,e))return!0;a=a.nextSibling}return!1};_.Di=function(a,c){for(;a&&1!=a.nodeType;)a=c?a.nextSibling:a.previousSibling;return a};_.Ei=function(a,c){var d;d=c instanceof _.Ub?c:_.Lh(c);a.href=_.Mh(d)};_.Fi=function(a,c,d){d?_.T(a,c):_.U(a,c)};_.Gi=function(a,c,d){if(c instanceof _.Dh)d=c.height,c=c.width;else if(void 0==d)throw Error("H");a.style.width=_.Qh(c,!0);_.Bi(a,d)}; _.Hi=function(a,c,d){for(var e=a.search(_.wf),f=0,g,h=[];0<=(g=_.vf(a,f,c,e));)h.push(a.substring(f,g)),f=Math.min(a.indexOf("&",g)+1||e,e);h.push(a.substr(f));a=[h.join("").replace(xi,"$1"),"&",c];null!=d&&a.push("=",(0,window.encodeURIComponent)(String(d)));return _.gi(a)};_.Ii=function(a,c,d){for(var e=0;a&&(null==d||e<=d);){if(c(a))return a;a=a.parentNode;e++}return null}; _.Ji=function(a){var c;if((c="A"==a.tagName||"INPUT"==a.tagName||"TEXTAREA"==a.tagName||"SELECT"==a.tagName||"BUTTON"==a.tagName?!a.disabled&&(!Ai(a)||zi(a)):Ai(a)&&zi(a))&&_.A){var d;!_.la(a.getBoundingClientRect)||_.A&&null==a.parentElement?d={height:a.offsetHeight,width:a.offsetWidth}:d=a.getBoundingClientRect();a=null!=d&&0

}catch(e){_._DumpException(e)} try{ _.Ui=_.m.document&&_.m.document.documentElement&&!!_.m.document.documentElement.setCapture&&!!_.m.document.releaseCapture; }catch(e){_._DumpException(e)} try{ var Yi;_.Vi=function(a){return"rtl"==_.zh(a,"direction")};_.Wi=function(a,c,d,e){this.top=a;this.right=c;this.bottom=d;this.left=e};_.k=_.Wi.prototype;_.k.getHeight=function(){return this.bottom-this.top};_.k.clone=function(){return new _.Wi(this.top,this.right,this.bottom,this.left)}; _.k.contains=function(a){return this&&a?"undefined"!=typeof _.Wi&&a instanceof _.Wi?a.left>=this.left&&a.right<=this.right&&a.top>=this.top&&a.bottom<=this.bottom:a.b>=this.left&&a.b<=this.right&&a.U>=this.top&&a.U<=this.bottom:!1};_.k.expand=function(a,c,d,e){_.ma(a)?(this.top-=a.top,this.right+=a.right,this.bottom+=a.bottom,this.left-=a.left):(this.top-=a,this.right+=Number(c),this.bottom+=Number(d),this.left-=Number(e));return this}; _.k.ceil=function(){this.top=Math.ceil(this.top);this.right=Math.ceil(this.right);this.bottom=Math.ceil(this.bottom);this.left=Math.ceil(this.left);return this};_.k.floor=function(){this.top=Math.floor(this.top);this.right=Math.floor(this.right);this.bottom=Math.floor(this.bottom);this.left=Math.floor(this.left);return this};_.k.round=function(){this.top=Math.round(this.top);this.right=Math.round(this.right);this.bottom=Math.round(this.bottom);this.left=Math.round(this.left);return this}; _.Xi=function(a,c){if(/^\d+px?$/.test(c))return(0,window.parseInt)(c,10);var d=a.style.left,e=a.runtimeStyle.left;a.runtimeStyle.left=a.currentStyle.left;a.style.left=c;var f=a.style.pixelLeft;a.style.left=d;a.runtimeStyle.left=e;return f};Yi=function(a,c){var d=a.currentStyle?a.currentStyle[c]:null;return d?_.Xi(a,d):0}; _.Zi=function(a,c){if(_.A){var d=Yi(a,c+"Left"),e=Yi(a,c+"Right"),f=Yi(a,c+"Top"),g=Yi(a,c+"Bottom");return new _.Wi(f,e,g,d)}d=_.yh(a,c+"Left");e=_.yh(a,c+"Right");f=_.yh(a,c+"Top");g=_.yh(a,c+"Bottom");return new _.Wi((0,window.parseFloat)(f),(0,window.parseFloat)(e),(0,window.parseFloat)(g),(0,window.parseFloat)(d))};_.$i=function(a,c){return a==c?!0:a&&c?a.width==c.width&&a.height==c.height:!1};_.aj=function(a,c,d,e){this.left=a;this.top=c;this.width=d;this.height=e};_.k=_.aj.prototype; _.k.clone=function(){return new _.aj(this.left,this.top,this.width,this.height)};_.k.contains=function(a){return a instanceof _.Bh?a.b>=this.left&&a.b<=this.left+this.width&&a.U>=this.top&&a.U<=this.top+this.height:this.left<=a.left&&this.left+this.width>=a.left+a.width&&this.top<=a.top&&this.top+this.height>=a.top+a.height};_.k.ceil=function(){this.left=Math.ceil(this.left);this.top=Math.ceil(this.top);this.width=Math.ceil(this.width);this.height=Math.ceil(this.height);return this}; _.k.floor=function(){this.left=Math.floor(this.left);this.top=Math.floor(this.top);this.width=Math.floor(this.width);this.height=Math.floor(this.height);return this};_.k.round=function(){this.left=Math.round(this.left);this.top=Math.round(this.top);this.width=Math.round(this.width);this.height=Math.round(this.height);return this}; _.bj=function(a){var c=_.qh(a),d=new _.Bh(0,0),e;e=c?_.qh(c):window.document;e=!_.A||_.Ab(9)||_.Ah(_.sh(e).b)?e.documentElement:e.body;if(a==e)return d;a=_.Nh(a);c=_.Gh(_.sh(c).b);d.b=a.left+c.b;d.U=a.top+c.U;return d};_.cj=function(a){a=_.Nh(a);return new _.Bh(a.left,a.top)};_.dj=function(a){_.R.call(this);this.b=a;a=_.A?"focusout":"blur";this.o=_.Q(this.b,_.A?"focusin":"focus",this,!_.A);this.w=_.Q(this.b,a,this,!_.A)};_.y(_.dj,_.R); _.dj.prototype.handleEvent=function(a){var c=new _.Ae(a.Fa);c.type="focusin"==a.type||"focus"==a.type?"focusin":"focusout";this.N(c)};_.dj.prototype.P=function(){_.dj.J.P.call(this);_.Ue(this.o);_.Ue(this.w);delete this.b}; var fj,hj;_.ej={};fj=null;_.gj=function(a){a=_.Wh(a);delete _.ej[a];_.Vh(_.ej)&&fj&&_.Yh(fj)};_.ij=function(){fj||(fj=new _.Xh(function(){hj()},20));var a=fj;0!=a.A||a.start()};hj=function(){var a=(0,_.w)();_.Ua(_.ej,function(c){_.jj(c,a)});_.Vh(_.ej)||_.ij()}; _.jj=function(a,c){c

}catch(e){_._DumpException(e)} try{ _.lj=_.A||_.hb||_.B&&_.C("525");_.mj=_.mb&&_.jb; }catch(e){_._DumpException(e)} try{ var nj,oj,rj,yj,Aj,Kj,Bj,Dj,Cj,Gj,Ej,zj,Lj;nj={IMG:" ",BR:"\n"};oj={SCRIPT:1,STYLE:1,HEAD:1,IFRAME:1,OBJECT:1};_.pj=function(a,c,d){if(!(a.nodeName in oj))if(3==a.nodeType)d?c.push(String(a.nodeValue).replace(/(\r\n|\r|\n)/g,"")):c.push(a.nodeValue);else if(a.nodeName in nj)c.push(nj[a.nodeName]);else for(a=a.firstChild;a;)_.pj(a,c,d),a=a.nextSibling};_.qj=function(a){return Array.prototype.concat.apply(Array.prototype,arguments)}; rj=function(a,c){if(a)for(var d=a.split("&"),e=0;ec)throw Error("O`"+c);a.C=c}else a.C=null;return a};_.wj=function(a,c,d){a.D=d?yj(c,!0):c;return a};_.xj=function(a,c,d){c instanceof zj?(a.b=c,Fj(a.b,a.o)):(d||(c=Aj(c,Gj)),a.b=new zj(c,0,a.o));return a};_.Ij=function(a,c,d){a.b.set(c,d);return a}; _.Jj=function(a){return a instanceof _.sj?a.clone():new _.sj(a,void 0)};yj=function(a,c){return a?c?(0,window.decodeURI)(a.replace(/%25/g,"%2525")):(0,window.decodeURIComponent)(a):""};Aj=function(a,c,d){return _.t(a)?(a=(0,window.encodeURI)(a).replace(c,Kj),d&&(a=a.replace(/%25([0-9a-fA-F]{2})/g,"%$1")),a):null};Kj=function(a){a=a.charCodeAt(0);return"%"+(a>>4&15).toString(16)+(a&15).toString(16)};Bj=/[#\/\?@]/g;Dj=/[\#\?:]/g;Cj=/[\#\?]/g;Gj=/[\#\?@]/g;Ej=/#/g; zj=function(a,c,d){this.o=this.b=null;this.w=a||null;this.A=!!d};Lj=function(a){a.b||(a.b=new _.gf,a.o=0,a.w&&rj(a.w,function(c,d){a.add((0,window.decodeURIComponent)(c.replace(/\+/g," ")),d)}))};zj.prototype.add=function(a,c){Lj(this);this.w=null;a=Mj(this,a);var d=this.b.get(a);d||this.b.set(a,d=[]);d.push(c);this.o+=1;return this};zj.prototype.remove=function(a){Lj(this);a=Mj(this,a);return _.jf(this.b.o,a)?(this.w=null,this.o-=this.b.get(a).length,this.b.remove(a)):!1}; zj.prototype.clear=function(){this.b=this.w=null;this.o=0};zj.prototype.Wb=function(){Lj(this);return 0==this.o};var Nj=function(a,c){Lj(a);c=Mj(a,c);return _.jf(a.b.o,c)};_.k=zj.prototype;_.k.Pa=function(){Lj(this);for(var a=this.b.Ka(),c=this.b.Pa(),d=[],e=0;e

}catch(e){_._DumpException(e)} try{ var Sj;_.Oj=function(a){a=_.uf([],a);a[0]="";return a.join("")};_.Rj=function(a,c,d){return _.Pj("POST",a,c,d).then(function(a){return _.Qj(a.responseText,d)})}; _.Pj=function(a,c,d,e){return new _.Ed(function(f,g){var h=e||{},l,p=h.Mh?h.Mh.b():_.nf.b();try{p.open(a,c,!0)}catch(F){g(new Sj("Error opening XHR: "+F.message,c))}p.onreadystatechange=function(){if(4==p.readyState){_.m.clearTimeout(l);var a;!(a=_.kf(p.status))&&(a=0===p.status)&&(a=_.sf(c),a=!("http"==a||"https"==a||""==a));a?f(p):g(new _.Tj(p.status,c))}};p.onerror=function(){g(new Sj("Network error",c))};var r;if(h.headers){for(var u in h.headers)r=h.headers[u],null!=r&&p.setRequestHeader(u,r); r=h.headers["Content-Type"]}u=_.m.FormData&&d instanceof _.m.FormData;"POST"!=a||void 0!==r||u||p.setRequestHeader("Content-Type","application/x-www-form-urlencoded;charset=utf-8");h.withCredentials&&(p.withCredentials=h.withCredentials);h.responseType&&(p.responseType=h.responseType);h.Wg&&p.overrideMimeType(h.Wg);0c||c>_.mk(this))throw Error("Y");this.H&&this.C||(this.H={},this.C=[]);if(a.o==this){var e=a.getId();this.H[e]=a;_.Oa(this.C,a)}else{var e=this.H,f=a.getId();if(null!==e&&f in e)throw Error("a`"+f);e[f]=a}ik(a,this);ek(this.C,c,0,a);a.na&&this.na&&a.o==this?(d=this.b,c=d.childNodes[c]||null,c!=a.S()&&d.insertBefore(a.S(),c)):d?(this.b||this.ob(),c=_.nk(this,c+1),jk(a,this.b,c?c.b:null)):this.na&&!a.na&&a.b&&a.b.parentNode&&1==a.b.parentNode.nodeType&& a.oa()};_.mk=function(a){return a.C?a.C.length:0};_.nk=function(a,c){return a.C?a.C[c]||null:null};_.lk=function(a,c,d){a.C&&(0,_.Ga)(a.C,c,d)};_.W.prototype.removeChild=function(a,c){if(a){var d=_.t(a)?a:a.getId();a=this.H&&d?fk(this.H,d)||null:null;if(d&&a){var e=this.H;d in e&&delete e[d];_.Oa(this.C,a);c&&(a.wa(),a.b&&_.nh(a.b));ik(a,null)}}if(!a)throw Error("Z");return a};

}catch(e){_._DumpException(e)} try{ if(_.A&&_.A)try{new window.ActiveXObject("MSXML2.DOMDocument")}catch(a){};_.jb||_.B&&_.C(532);_.B||_.A||_.hb||_.jb&&_.C("1.9");var ok=function(a,c){this.b=[];this.o=c;for(var d=!0,e=a.length-1;0<=e;e--){var f=a[e]|0;d&&f==c||(this.b[e]=f,d=!1)}},pk={},qk=function(a){if(-128<=a&&128>a){var c=pk[a];if(c)return c}c=new ok([a|0],0>a?-1:0);-128<=a&&128>a&&(pk[a]=c);return c},tk=function(a){if((0,window.isNaN)(a)||!(0,window.isFinite)(a))return rk;if(0>a)return sk(tk(-a));for(var c=[],d=1,e=0;a>=d;e++)c[e]=a/d|0,d*=4294967296;return new ok(c,0)},rk=qk(0),uk=qk(1),vk=qk(16777216),wk=function(a){if(-1==a.o)return-wk(sk(a));for(var c= 0,d=1,e=0;ea||36>>0).toString(a),d=f;if(yk(d))return g+e;for(;6>g.length;)g="0"+g;e=""+g+e}}; var xk=function(a,c){return 0>c?0:c>>16)+(xk(this,f)>>>16)+(xk(a,f)>>>16),e=h>>>16,g=g&65535,h=h&65535;d[f]=h<<16|g}return new ok(d,d[d.length-1]&-2147483648?-1:0)}; var Ak=function(a,c){return a.add(sk(c))},Bk=function(a,c){if(yk(a)||yk(c))return rk;if(-1==a.o)return-1==c.o?Bk(sk(a),sk(c)):sk(Bk(sk(a),c));if(-1==c.o)return sk(Bk(a,sk(c)));if(0>Ck(a,vk)&&0>Ck(c,vk))return tk(wk(a)*wk(c));for(var d=a.b.length+c.b.length,e=[],f=0;f<2*d;f++)e[f]=0;for(f=0;f>>16,l=xk(a,f)&65535,p=xk(c,g)>>>16,r=xk(c,g)&65535;e[2*f+2*g]+=l*r;Dk(e,2*f+2*g);e[2*f+2*g+1]+=h*r;Dk(e,2*f+2*g+1);e[2*f+2*g+1]+=l*p;Dk(e,2*f+2*g+1); e[2*f+2*g+2]+=h*p;Dk(e,2*f+2*g+2)}for(f=0;f>>16,a[c]&=65535,c++},zk=function(a,c){if(yk(c))throw Error("ba");if(yk(a))return rk;if(-1==a.o)return-1==c.o?zk(sk(a),sk(c)):sk(zk(sk(a),c));if(-1==c.o)return sk(zk(a,sk(c)));if(30=Ck(e,a);)d=Ek(d,1),e=Ek(e,1);for(var f=Fk(d,1),g=Fk(e,1),h,e=Fk(e,2),d=Fk(d, 2);!yk(e);)h=g.add(e),0>=Ck(h,a)&&(f=f.add(d),g=h),e=Fk(e,1),d=Fk(d,1);return f}d=rk;for(e=a;0<=Ck(e,c);){f=Math.max(1,Math.floor(wk(e)/wk(c)));g=Math.ceil(Math.log(f)/Math.LN2);g=48>=g?1:Math.pow(2,g-48);h=tk(f);for(var l=Bk(h,c);-1==l.o||0>5,e=c%32,f=a.b.length+d+(0>>32-e:xk(a,h-d);return new ok(g,a.o)},Fk=function(a,c){for(var d=c>> 5,e=c%32,f=a.b.length-d,g=[],h=0;h>>e|xk(a,h+d+1)<<32-e:xk(a,h+d);return new ok(g,a.o)}; var Gk=function(a){_.D.call(this);a||_.sh()};_.y(Gk,_.D);var Hk=function(a,c){Gk.call(this,c);this.o=a;this.o.b();this.o.b();this.b=[]},Ik;_.y(Hk,Gk);Hk.prototype.w=0;Hk.prototype.A=!1;Hk.prototype.send=function(a,c){var d=a+":"+c;if(!_.A||3800>=c.length)this.b.push("|"+d);else for(var e=c.length,f=Math.ceil(e/3800),g=0,h=1;ga-Ik?10:100)},Hk); var Lk=window.location.hash;if(Lk){"#"==Lk.charAt(0)&&(Lk=Lk.substring(1));var Mk=Lk.indexOf("|"),Nk=Lk.substring(0,Mk).split(","),Ok=Nk[0],Pk=2==Nk.length?Nk[1]:null,Qk=Lk.substring(Mk+1),Rk;Pk?Rk=window.parent.frames[Pk]:Rk=window.parent.parent;try{Rk.xpcRelay(Ok,Qk)}catch(a){}}; new _.R;if(window.location&&(1==window.location.hash.indexOf("xdrp")||1==window.location.search.indexOf("xdrp")))if(_.ib)window.document.execCommand("Stop");else if(_.jb)window.stop();else throw Error("ca");_.A&&_.C("11");Ak(Ek(uk,32),uk);qk(65535);Ak(Ek(uk,128),uk);(function(){var a="";if(_.A){var c=function(a){try{return new window.ActiveXObject(a),!0}catch(e){return!1}};c("AcroPDF.PDF.1")?a="7":c("PDF.PdfCtrl.6")&&(a="6")}else window.navigator.mimeTypes&&0

}catch(e){_._DumpException(e)} try{ (function(){for(var a=["ms","moz","webkit","o"],c=0,d;d=a[c]&&!_.m.requestAnimationFrame;++c)_.m.requestAnimationFrame=_.m[d+"RequestAnimationFrame"],_.m.cancelAnimationFrame=_.m[d+"CancelAnimationFrame"]||_.m[d+"CancelRequestAnimationFrame"];if(!_.m.requestAnimationFrame){var e=0;_.m.requestAnimationFrame=function(a){var c=(new Date).getTime(),d=Math.max(0,16-(c-e));e=c+d;return _.m.setTimeout(function(){a(c+d)},d)};_.m.cancelAnimationFrame||(_.m.cancelAnimationFrame=function(a){(0,window.clearTimeout)(a)})}})();

}catch(e){_._DumpException(e)} try{ _.Uk=!_.A; }catch(e){_._DumpException(e)} try{ var Vk=function(){_.kg.w(_.fg)},Wk=function(a,c){var d=_.kh(),d=_.$g(d,Vk);a.addEventListener?a.addEventListener(c,d):a.attachEvent&&a.attachEvent("on"+c,d)},Xk=[1,2],Yk=function(a){_.H(this,a,0,-1,Xk)};_.y(Yk,_.G);var Zk=function(){var a=_.M.M().fa;return _.L(a,Yk,17)},$k=function(a,c){a.__PVT=c}; (function(){var a;window.gbar&&window.gbar._LDD?a=window.gbar._LDD:a=[];var c=_.hg();$k(window,_.O(_.I(c,8)));var c=_.gg(),d=_.kh();a=new _.bg(c,Zk()||new Yk,a,d,_.tg());_.jd("m",a);var e=function(){_.x("gbar.qm",(0,_.v)(function(a){try{a()}catch(g){d.log(g)}},this));_.hd("api").Sa()};_.N(_.I(c,18),!0)?a.C(e):(c=_.P(_.I(c,19),200),c=(0,_.v)(a.C,a,e,c),_.lg(c))})();Wk(window.document,"DOMContentLoaded");Wk(window,"load"); _.x("gbar.mls",function(){});var al=new function(){this.b=_.L(_.gg(),_.Qc,8)||new _.Qc};_.x("gbar.bv",{n:_.P(_.I(al.b,2)),r:_.O(_.I(al.b,4)),f:_.O(_.I(al.b,3)),e:_.O(_.I(al.b,5)),m:_.P(_.J(al.b,1,1),1)});_.x("gbar.kn",function(){return!0});_.x("gbar.sb",function(){return!1}); }catch(e){_._DumpException(e)} try{ var vg=function(a,c){a.B.push(c)},wg=function(a,c,d){this.A=a;this.o=!1;this.b=c;this.w=d};wg.prototype.Sa=function(a){if(this.o)throw Error("D`"+this.b);try{a.apply(this.A,this.w),this.o=!0}catch(c){}};var xg=function(a){_.D.call(this);this.w=a;this.b=[];this.o={}};_.y(xg,_.D);xg.prototype.A=function(a){var c=(0,_.v)(function(){this.b.push(new wg(this.w,a,Array.prototype.slice.call(arguments)))},this);return this.o[a]=c}; xg.prototype.Sa=function(){for(var a=this.b.length,c=this.b,d=[],e=0;e=c.right?f=c.right>a.left?c.right:a.left:d=c.bottom?h=c.bottom>a.top?c.bottom:a.top:eMath.abs(h-e)?h=null:f=null),null!==f?f<=d?a.left=f:a.right=f:null!==h&&(h<=e?a.top=h:a.bottom=h);this.D=10<=(a.right-a.left)*(a.bottom-a.top)?this.o:null}}};_.k.Re=function(){return!1}; _.k.Ud=function(a){for(var c=0,d;d=this.L[c];c++)if(a.target==d.b){var e=d.B-d.b.scrollTop,f=d.A-d.b.scrollLeft;d.B=d.b.scrollTop;d.A=d.b.scrollLeft;this.o&&this.D==this.o&&(0-d?0:d+e)h--,d++;e=c.children[h]}}return 0== d&&a.A[f]?new Cl(a.A[f],h):null},Bl=function(a,c){for(var d=-1,e=0;e

}catch(e){_._DumpException(e)} try{ _.Tr=function(a){_.H(this,a,0,-1,null)};_.y(_.Tr,_.G);_.Ur=function(){var a=_.M.M().fa;return _.L(a,_.Tr,15)}; }catch(e){_._DumpException(e)} try{ var Vr=function(a){_.H(this,a,0,-1,null)};_.y(Vr,_.G);var Wr=function(a){var c=window.document.getElementById("gbqld");c&&(c.style.display=a?"none":"block",c=window.document.getElementById("gbql"))&&(c.style.display=a?"block":"none")},Xr=["gbq1","gbq2","gbqfbwa"],Yr=function(a,c){var d={};d._sn=["v.gas",c].join(".");_.fg(a,d)},Zr=function(a,c,d){this.o=a;this.w=c;this.b=d||_.m},$r=function(){this.b=[]};$r.prototype.o=function(a,c,d){this.B(a,c,d);this.b.push(new Zr(a,c,d))}; $r.prototype.B=function(a,c,d){d=d||_.m;for(var e=0,f=this.b.length;ec&&(c=0);a.b.style.width=c+"px";d=a.b.offsetWidth-d;a.b.style.width=d+"px";return d-e},ns=function(a){var c=a.b.style.width;a.b.style.width="";return c}; var rs=function(a,c,d){var e;void 0==e&&(e=-1);return{className:a,mb:{Bc:c||0,Oc:d||0,Ob:e}}},ss={className:"gb_we",items:[rs("gb_Rb"),rs("gb_Pe"),rs("gb_se",0,2),rs("gb_Qe"),rs("gb_ib",1,1)],kb:[{className:"gb_ib",items:[rs("gb_hf",0,1),rs("gb_ic",0,1)],kb:[function(a){a=a.gb_hf;var c;if(a)c=a.S();else{c=window.document.querySelector(".gb_hf");if(!c)return null;a=new ks(c)}c=c.querySelectorAll(".gb_Q");for(var d=0;d

}catch(e){_._DumpException(e)} try{ var rz=[3,5],sz=function(a){_.H(this,a,0,-1,rz)};_.y(sz,_.G);var tz=function(a){return a.w?a.w.b:"f"},uz=function(){var a=_.M.M().fa;return _.L(a,sz,16)},vz=function(a){this.w=_.vs.M();this.o=a};vz.prototype.b=function(a,c){"t"==tz(this.w)?(_.T(a,"gb_V"),c?(_.U(a,"gb_eb"),_.T(a,"gb_kf")):(_.U(a,"gb_kf"),_.T(a,"gb_eb"))):_.li(a,["gb_V","gb_eb","gb_kf"])};_.x("gbar.sos",function(){return window.document.querySelectorAll(".gb_Oe")});_.x("gbar.si",function(){return window.document.querySelector(".gb_Ne")}); _.lg(function(){if(uz()){var a=window.document.querySelector(".gb_ib"),c=uz()||new sz,c=_.N(_.I(c,1),!1),c=new vz(c);a&&c.o&&c.b(a,!1)}});var xz=function(a,c,d,e){_.ui.call(this,a,d);this.Y=e;this.A=new vz(_.N(_.I(c,1),!1));this.R=_.vs.M();this.C=_.S("gb_ic",this.o);this.A.o&&(this.w=!1,_.es()&&(_.U(this.o,"gb_eb"),_.ki(this.o,["gb_qf","gb_V","gb_kf"]),this.L=_.yh(this.o,"width"),this.X=_.yh(this.C,"width"),d=this.o,_.U(d,"gb_kf"),_.T(d,"gb_eb"),this.V=_.yh(this.o,"width"),this.Z=_.yh(this.C,"width"),_.li(this.o,["gb_qf","gb_V","gb_eb"])),wz(this),d=this.R,d.w&&d.w.o("catc",this.fg,this),this.b(_.S("gb_mf",this.o),"click",this.Xf), this.b(_.S("gb_nf",this.o),"click",this.ug));this.G=_.N(_.I(c,2),!1);this.H=_.N(_.I(c,4),!1);this.T=null;this.G&&(this.T=_.I(c,3));if(this.G||this.H)this.K(a,["mouseover","touchstart"],this.se),a=new _.dj(a),this.K(a,"focusin",this.se);(a=_.S("gb_Ne",this.o))&&_.wi(this,a,_.pi,this.zg,!1,this)};_.y(xz,_.ui);_.k=xz.prototype;_.k.zg=function(){this.Y.log(9,{l:"i"})};_.k.fg=function(){wz(this)};_.k.Xf=function(){0!=this.w&&(this.w=!1,wz(this,!0))};_.k.ug=function(){1!=this.w&&(this.w=!0,wz(this,!0))}; _.k.se=function(){if(this.G){var a=this.T;_.bg.M().Ic(a,void 0)}this.H&&this.o.setAttribute("activated","1")};var wz=function(a,c){var d=c&&_.es();"t"==tz(a.A.w)?d?(_.ki(a.o,["gb_pf","gb_gb"]),_.js(a.o),a.K(a.o,_.ze,a.O),a.D(!0),(0,window.setTimeout)((0,_.v)(a.A.b,a.A,a.o,a.w),0),(0,window.setTimeout)((0,_.v)(a.D,a,!1),0)):(a.A.b(a.o,a.w),_.es()&&a.D(!1)):(_.U(a.o,"gb_pf"),a.A.b(a.o,a.w),yz(a.o,""),yz(a.C,""),a.R.Ta(!0))}; xz.prototype.D=function(a){a=this.w?!a:a;yz(this.o,a?this.L:this.V);yz(this.C,a?this.X:this.Z)};xz.prototype.O=function(){_.U(this.o,"gb_gb")};var yz=function(a,c){a.style.minWidth=a.style.maxWidth=c}; _.lg(function(){var a=uz()||new sz,c=_.S("gb_ib");if(a&&c){var d=_.kh(),e=_.tg();new xz(c,a,d,e);_.I(a,4)&&(d=function(){var c=_.I(a,5);_.dg(_.bg.M(),c,void 0)},"1"==c.getAttribute("activated")?d():(_.Tg(c,["mouseover","touchstart"],d),c=new _.dj(c),_.Tg(c,"focusin",d)))}});

}catch(e){_._DumpException(e)} try{ var hr=function(a){_.D.call(this);this.C=a;this.A=this.b=null;this.o={};this.B={};this.w={}};_.y(hr,_.D);_.k=hr.prototype;_.k.Pe=function(a){a&&this.b&&a!=this.b&&this.b.close();this.b=a};_.k.Be=function(a){a=this.w[a]||a;return this.b==a};_.k.Ch=function(a){this.A=a};_.k.Ae=function(a){return this.A==a};_.k.$c=function(){this.b&&this.b.close();this.b=null};_.k.pf=function(a){this.b&&this.b.getId()==a&&this.$c()};_.k.Nb=function(a,c,d){this.o[a]=this.o[a]||{};this.o[a][c]=this.o[a][c]||[];this.o[a][c].push(d)}; _.k.Yc=function(a,c){var d=c.getId();if(this.o[a]&&this.o[a][d])for(var e=0;e

}catch(e){_._DumpException(e)} try{ var El=window.document.querySelector(".gb_ea"),Fl=/(\s+|^)gb_Ke(\s+|$)/;El&&!Fl.test(El.className)&&_.lh("gb_ea"); }catch(e){_._DumpException(e)} try{ _.lh("gb_fb"); }catch(e){_._DumpException(e)} try{ _.lh("gb_Se"); }catch(e){_._DumpException(e)} })(this.gbar_); // Google Inc.

//# sourceURL=http://og/initial.js // ]]>

 

செந்தில்குமார்

 

Siththanthan-2

மிக அன்புடன் ஜெயமோகன் அவா்களுக்கு
வணக்கம்
எப்படியிருக்கிறீா்கள்.
நீண்ட நாட்களின் பின் தொடா்புகொள்கின்றேன்.
எனது சிறுகதை ஒன்றினை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். அது பற்றிய உங்களின் கருத்தினை அறிய ஆவலாக இருக்கின்றேன். முடிந்தால் அது பற்றி உங்கள் கருத்தை தெரித்துக்கொள்ளுங்கள்.
கதையின் இணைப்பு- எனது வலைப் பக்கத்தில் பதிவேற்றியிருக்கின்றேன்.
நட்புடன்
உதயன் சித்தாந்தன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20

$
0
0

[ 27 ]

காலத்தின் இருள் தேங்கிய கரிய அரண்மனையின் அறைகளினூடாக விதிர்ப்புகொண்டு அசைந்த உயிர்த்தசைகளினாலான தரைமேல் கால்வைத்து உயிர்ப்புக் காற்றின் அலைகளால் குழலும் ஆடையும் அசைய அர்ஜுனன் நடந்தான். சித்ரபுத்திரர் அவனுக்கு வழிகாட்ட யமி துணைவர பின்னால் ஔதும்பரனும் சண்டாமிருகனும் சம்பரனும் சார்த்தூலனும் உடன்வர இருளில் புதைந்து புதைந்து அவ்வறைகளைக் கடந்து அரச மண்டபத்தின் முகப்புக்கு வந்து நின்றான்.

அங்கிருந்த காவலர் அவனை வணங்கி வாயில் திறந்து உள்ளே கொண்டு சென்றனர். பெருந்திரளென எழுந்து குவிந்து வளைந்து கூரையாகி சூழ்ந்திருந்த மானுட உடல்களால் ஆன மண்டபத்திற்கு நடுவே விண்ணிலென நின்றது ஒரு துலா. அதன் நடுவே முள் என அசையாதிருந்தது கூரிய வாள். அதன் கீழே அமைந்த அரச மேடையில் தன் தேவி தூமார்ணை இடம் அமர்ந்திருக்க முகங்கள் விழிதிறந்து இதழ்களில் நுண்சொல் உறைந்திருக்க பதிந்த ஏழடுக்கு மணிமுடி சூடி காலதேவன் அரியணை வீற்றிருந்தான்.

அனல் ஒளிரும் விழிகளும் எருமைக்கொம்பு போன்ற மீசையும் , புலிவிழிகளும் மான்விழிகளும் கொண்டு கோத்த இளநீலமணியாரங்கள் பரவிய மார்பும், பல்கோத்து அமைத்த வெண்மணியாரம் சுற்றிய பெருங்கைகளும், இருள்நெய்த ஆடையும், குருதியொளி கொண்டிருந்த கழல்கள் வளைத்த கால்களும் கொண்ட காலதேவன் அவனை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவனுக்குக் கீழே நிழலுருவ கணதேவர்கள் தரையில் படிந்தும் சுவரில் மடிந்தும் நின்றிருந்தனர். அவன் விழிதிரும்பியதும் உடல்கொண்டெழுந்து வணங்கி ஏவல் காத்தனர்.

அர்ஜுனன் அவன் முன் சென்று வணங்கினான். “அஸ்தினபுரியின் குருகுலத்து பாண்டுவின் மைந்தன் அர்ஜுனன் நான். தென்திசை ஆளும் அரசனை பார்க்க வந்துள்ளேன்” என்றான்.  மீசையை நீவியபடி விழிகளில் புன்னகையுடன் காலன் கேட்டான் “நான் பிறிதொரு அரசன் என்கின்றீர் அல்லவா?” அவன் விழிகளை சந்தித்து அர்ஜுனன் சொன்னான் “ஆம்.” “நன்று, அவ்வெண்ணம் போற்றற்குரியது” என்றபின் திரும்பி “அவருக்கொரு பீடம் அளியுங்கள், அமைச்சரே” என்று சித்ரபுத்திரரிடம் சொன்னான்.

அவர் ஒருகணம் தயங்க “ஆம், இங்கு இதற்கு முன் ஒருவர்  என் முன் பீடத்தில் அமர்ந்ததில்லை. ஆனால் இவர் அதை கோரிப்பெற்றிருக்கிறார்” என்றான். கணத்தோர் இருவர் நிழல் புடைத்து எழுந்து அமைத்துச் சென்ற பீடம் மழலைக் குழந்தைகளை கைகளையும் கால்களையும் ஒன்றுடன் ஒன்று பின்னி முடைந்து அமைத்ததாக இருந்தது. இளமார்புகள் மூச்சில் எழுந்தமைந்தன. குழைந்த வயிறுகள். தொப்புள்கள். பால்திரை மாறா கண்கள். சுவைதேடும் சிற்றுதடுகள். அர்ஜுனன் கையால் தொட்டு அவற்றின் மென்மையை உணர்ந்தபின் அமர்ந்து கைகளை பக்கவாட்டில் வைத்து நன்கு சாய்ந்து கொண்டான்.

“அவர்கள் உங்கள் குலத்தில் வாழ்வு முற்றாதிருந்த மைந்தர்கள்” என்றான் காலன். அர்ஜுனன் “இவ்வுடல்கள் அல்ல அவர்கள்” என்றான். காலன் “இவ்வுடல்களில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் உதிர்த்துச் சென்ற பொருட்கள் இவை. இவற்றில் எஞ்சியிருப்பது எதுவென்றாலும் அவர்களுக்கு உகந்ததல்ல என்றே கொள்வேன். என் மூதாதையர் அறம் பிழைக்காத கோல் கொண்ட அரசர்கள் அளித்த அன்னத்தாலும் நீராலும் விண்ணில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு அறமீறல் ஒன்றுக்காகவே துயர்கொள்வார்கள்.”

காலன் அவனை நோக்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் “இன் நீர் அருந்துக!” என்றான். “ஆகுக!” என்றான் அர்ஜுனன். ஒரு கணத்தவன் கொண்டுவந்த தாலத்தில் இருந்த தலையைப்பார்த்து அர்ஜுனன் விழிசுருக்கினான். யுதிஷ்டிரரின் விழிகள் அவனை துயருடன் நோக்கிக்கொண்டிருந்தன. அவர் இதழ்கள் அசைந்தன. வெட்டி வைக்கப்பட்ட அந்தத்தலையைத் தூக்கி கீழே ஒழுகிய குருதியை பொன்னாலான கிண்ணத்தில் ஊற்றி அவனிடம் நீட்டினான் கணத்தான். “பார்த்தா, அது என் துயர்” என்றார் யுதிஷ்டிரர்.

காலன் நகைத்து “அது விழிமயக்கல்ல. இங்கு நாங்கள் உண்பது கீழே வாழ்பவர்களின் குருதியைத்தான். மானுட உடல்களில் கணம் ஒழியாது ஊறும் குருதி எங்கு செல்கிறதென்று எண்ணுகிறீர்?” என்றான். “ஆம், அவற்றை காலம் உண்கின்றது என்றே உயிர்வேதம் சொல்கிறது” என்றபடி அவன் அக்குவளையை எடுத்தான். யுதிஷ்டிரர் “பார்த்தா அது என் தனிமை” என்றார். அவன் அதை அருந்தியதுமே சோர்வெல்லாம் மறைந்து புத்துணர்வடைந்தான். “சுவையானது” என்றான் யமன். “ஆம், என் சுவை” என்றான் அர்ஜுனன்.

“சொல்க, நீர் வந்த நோக்கம் எது?” என்று எமன் கேட்டான். “அதை முன்னரே அறிந்திருப்பீர்கள், காலரே. மண்ணில் ஒன்பது மைந்தர்களை பறிகொடுத்த ஜாதவேதன் என்னும் அந்தணனுக்கு சொல்லுறுதி அளித்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன். அவன் இறுதி மைந்தனை உயிருடன் பெற்ற பின்னரே மீள்வேன்” என்றான் அர்ஜுனன். “அது இன்றுவரை புவியில் நடந்ததில்லை என்று அறிய மாட்டீரா? பிறப்பும் இறப்பும் நிகர் செய்யப்பட்ட அவ்வுலகில் ஒருதுளி சொட்டி நீர் உதிர்வதன் நெறியும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்ட ஒன்று. நானல்ல, பிற திசைத்தேவர்கள் அல்ல, மூன்று முதல்வர்கள் அல்ல, முழுமுதல் பிரம்மமே எண்ணினாலும் அதை மாற்றமுடியாது” என்றான் காலன்.

“ஆம் அவ்வாறே எனக்கு சொல்லப்பட்டது. ஆனாலும் வாக்களித்த ஒன்றின் பொருட்டு  தன்னை முழுதளிப்பது வீரனின் கடமை” என்றான் அர்ஜுனன். காலன் தொடைதட்டி உரக்க நகைத்து “நீர் முன்னரே உயிர் துறந்துவிட்டீர், பாரும்” என்று இடப்பக்கம் கை நீட்டினான். அங்கு தன் உடல் ஒரு பீடமென போடப்பட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். இரு கைகளையும் கால்களையும் ஊன்றி மல்லாந்து வளைந்து வயிறு மேலே பரந்திருக்க  நின்றிருந்த அவன் உடல் மேல் தூமக்கலம் இருந்து புகைந்துகொண்டிருந்தது.  ”யமுனைக்கரையின் புதர்க்காடு ஒன்றுக்குள் உம் சடலத்தின் மீது காகங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று அறத்தோன் சொன்னான். “அவை என்னை உண்ணட்டும்” என்றான் அர்ஜுனன்.

“இறப்புக்கு என்றே எழுந்தேன். இறந்து இங்கு வந்திருக்கிறேன். இங்கு ஏதேனும் நான் இழப்பதற்கு இருந்தால் அதையும் கூறுக! இழந்து இழந்து சென்று எல்லையில் பெற்றுக்கொள்கிறேன் நான் விழைவதை” என்றான் அர்ஜுனன். “ஒரு சொல்லின்பொருட்டு வந்துள்ளேன். அது ஒன்றே நான் நிலைகொள்வது.”  யமன் “இங்கு நீர் இழப்பது  மறத்தால் அறத்தால் அளியால் நீர் ஈட்டிய விண்ணுலகங்களைத்தான். இந்நற்செயலுக்கென உமக்கு வந்தமையும் அருட்கொடையையும் நீர் இழப்பீர். உம் மைந்தர் அளிக்கும் அன்னமும் நீரும் இங்கு வந்து சேர்வதில்லை. முடிவிலி வரை இங்கு ஒளி எழுவதில்லை.”

“இளைய பாண்டவரே, முடிவிலியில் வாழ்வதென்பதே நரகம். அங்கு செல்வதற்கு மட்டுமே பாதை உள்ளது” என்று யமன் தொடர்ந்தான். “நரர்களினால் ஆனது அது. நீர் வெறுப்பவர்கள் மட்டுமே சூழ்ந்திருக்கும் முடிவிலா இருள்வெளி.” அர்ஜுனன் விழிமாறாது “அவ்வாறே ஆகுக!” என்றான். “நான் கடந்து வரவேண்டிய இடங்கள் அவை என்றே கொள்கிறேன். என் எல்லை எதுவென அறியும் வாய்ப்பு இது. எழுந்துவரும் ஒவ்வொரு எல்லையையும் கடக்கிறேன். கடக்க முடியாத எல்லையில் அழிகிறேன். எங்கும் நின்றிருக்க மாட்டேன்.”

“நீர் அஞ்சவில்லையா?” என்றான் யமன். “நான் எனக்கென என்றும் அஞ்சியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான் “என் சொல்லை நெஞ்சில் அணிந்து அங்கொரு அந்தணன் எனக்காகக் காத்திருக்கிறான். இங்கு நான் தோற்பேன் என்றால் உங்களில் ஒரு கணத்தோன் சென்று அவனிடம் சொல்லட்டும். வீழ்ந்தான் இளைய பாண்டவன் என்று.” காலன் திகைப்புடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தான் அவனைச்சூழ்ந்து பல்லாயிரம் திகைத்த விழிகளாக நரகம் அவனை நோக்கியிருந்தது.

“இளையவரே, எதன் பொருட்டு இங்கு நீர் வந்தீர்? மண்ணில் நிகரற்ற வீரன் என்ற சொல்லை நிலை நிறுத்தவா? அதன் பொருட்டா இந்நரகங்களை எதிர்கொள்கிறீர்?”  என்றான் காலன். “இல்லை. காலம் என்பது சித்தம் சென்று தொடாப்பெருக்கு. இன்று இவ்வுலகில் நிகரற்றவனாக இருந்தென்ன பொருள்? நாளை எழும் காலத்தின் அலைகளில் எத்தனையோ மாவீரர்கள் எழுவார்கள். அவர்களில் ஒருவனாகவே நான் நின்றிருப்பேன். எனவே ஒருபோதும் அச்சொல் என்னை தருக்கி நிமிரவைத்ததில்லை”  என்றான் அர்ஜுனன்.

“பிறகென்ன? உம் தோழனால் அவ்வந்தணன் புறக்கணிக்கப்பட்டான் என்பதனாலா? அவனுக்கெதிராகவா இங்கு கிளம்பி வந்தீர்?” என்றான் யமன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவனில் கூடியிருக்கும் தெய்வமேதென்று அறியேன். அது இறங்கியபின் அவ்வந்தணனைப் பழித்து துரத்தியமைக்காக அவன் நாணக்கூடும். அன்று அவன் காலடியில் அமர்ந்து அவன் தவறியவற்றை ஆற்றும் பொறுப்பில் நான் இருந்தேன் என்று அப்போது அவனிடம் சொல்லவேண்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். “காலத்திற்கிறையே அவனை வென்று செல்வதற்காக அல்ல அவன் விட்டுச் சென்றதை நிறைவேற்றவே வந்தேன்.”

அரியணைவிட்டு எழுந்து ஓர் அடி வைத்து முன்னால் வந்து குனிந்து விழி கூர்ந்து நோக்கி யமன் கேட்டான் “காலத்தின் மறுமுனையையும் காண விழிகொண்டவன் நான். ஒருநாள் அவனை நீர் மறுதலிப்பீர். உம் நாவால் அவனைப் பழிப்பீர். உளம் வெறுத்து அவனிடமிருந்து விலகிச் செல்வீர். அதை அறிவீரா?” சித்திரபுத்திரர் நீள்மூச்செறிந்தார்.

“ஆம், அறிவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “தன் முழு விடுதலையை தன்னந்தனியாகவே எவரும் ஏறிக்கடந்து அடையவேண்டும். அத்தனிமையில் கற்றதும் உற்றதும் முற்பிறப்பில் பெற்றதும் உடனிருக்காதென்று நூல்கள் சொல்கின்றன.” காலன் பெருமூச்சுடன் திரும்பி அமர்ந்துகொண்டான். “இன்று நீ வெல்ல வந்தது எவற்றை என்றறிவீரா? இருபத்திஎட்டு நரகங்களால் ஆனது இவ்வுலகம். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு ததும்பிச் சொட்டும் மானுடர்கள் இறுதி ஆழத்தில் இருக்கும் இருளுலகில் சென்றமைகிறார்கள். அவ்வுலகங்களை வென்று வருபவன் இறப்பை வென்று நின்று சொல்கோரமுடியும்.”

“இக்கணமே எழுகிறேன். நான் வந்தது அதற்காகவே” என்றான் அர்ஜுனன். பெருமூச்சுடன் கால்களைத் தளர்த்தி அமர்ந்து “இன்றுவரை இப்படி நிகழ்ந்ததில்லை. எனவே நிகழப்போவது என்னவென்று நான் அறியேன். உமக்கென என் உள்ளம் துயர்கொள்கிறது” என்றான் காலதேவன்.

[ 28 ]

அறத்துக்கிறைவனின் நான்கு உதவியாளர்களும் வந்து அர்ஜுனனின் அருகே நின்றனர். சித்திரபுத்திரர் தலைவணங்கி “வருக, இளைய பாண்டவரே! தங்கள் வழியை காட்டுகிறேன்” என்றார்.  அவன் திரும்பியதும் யமி அவன் கையைப் பற்றி “வேண்டாம், இளையவரே. அது மீளமுடியாத பாதை” என்றாள். அர்ஜுனன் “அனைத்துப்பாதைகளும் மீளமுடியாதவைதான், இளையவளே. மீளுதலென்பது ஓரு நம்பிக்கையன்றி வேறல்ல” என்றான். அவள் விழிநீருடன் “எதற்காக இது?” என்றாள். “நான் வீரன் என்பதற்காக. என் உள்ளிருக்கும் பிறப்பியல்பு இதைச் சொல்கிறது என்பதற்காக” என்றபின் புன்னகையுடன் அவள் தோளைத் தொட்டுவிட்டு திரும்பி நடந்தான்.

“இளையவரே…” என அவள் அழைத்தாள். அவன் அக்குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். “நான்தான்” என்றாள் கரியபேரழகி. அவன் உளம் விம்ம திரும்ப அவளை நோக்கி நடந்தான். அவள் பின்னால் விலகவில்லை என்றாலும் நடுவே இருந்த தொலைவு குறையவில்லை. “நான்தான்” என அவள் சொன்னபோது கரியஒளிகொண்ட முலைக்குவைகள் எழுந்தமைந்தன. அவற்றின் கூர்காம்புகளில் விழிநோக்கிருந்தது. “நான்தான். என்றும் உங்கள் காமம் நின்றிருந்தது என்மீதுதான்.”

“நீ என்னை விரும்பியதில்லை” என்று அவன் சொன்னான். “உன்னை அணுகும்போதெல்லாம் குறையாத இடைவெளியையே உணர்ந்தேன்.” அவள் புன்னகைத்து “மண்ணிலுள்ள எவருடனும் அவ்விடைவெளி எனக்கு உள்ளது” என்றாள்.  அவன் மேலும் முன்னகர அவள் அதே தொலைவுக்கு அப்பால் ஒரு குளிர்ந்த நீர்த்துளி என இருளின் ஒளி சூடி நின்றாள். “நான் அளிக்க விழைந்தேன். வெல்லபப்டுவதை அல்ல” என்றாள். “வெல்லாது ஒன்றைக் கொள்வது எனக்குப் பழக்கமில்லை.” அவள் நீள்மூச்சுடன் “ஆம், இரு ஊசல்களில் நாம் ஆடிக்கொண்டிருந்தோம். தொட்டுத் தொட்டு விலகினோம்” என்றாள்.

“நீ என்னை விலக்கினாய். அணுக்கத்தின் உச்சத்தில் ஆண்மட்டுமே உணரத்தக்க ஒரு விலக்கம் அது” என்றான் அர்ஜுனன். “அவ்விலக்கத்தை நீ பிறருக்கு அளித்தாயா? உண்மையைச் சொல்!” அவள் விழிதிருப்பி “இல்லை” என்றாள். அவன் நெஞ்சு எழுந்தமைந்தது. “ஒருவருடன் என் கல்வி கலந்தது. பிறிதொருவரிடம் என் உடல் கலந்தது. இருவரிடம் இருமுலைகள். அவற்றுக்குத் தடைகள் இல்லை.” அவள் நெஞ்சக்குமிழிகள் விம்மித்தளர்ந்து மீண்டும் விம்முவதை அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.

“உங்கள் முன் வந்து நின்றது என் இருத்தல். ஆணவமென்றும் உணர்வுக்குழம்பல் என்றும் மாற்றுருக்கொண்டு ஆடியது அது. அறிவீர் இளையவரே,  இருத்தலை அறிதல் எவருக்கும் இயலாது. அறிதல் என்பது ஆதல், கடந்துசெல்லல். அமைதலே இருத்தல். பாறையை காற்று அறியமுடியாது.” அவள் குரல் தழைந்தது. “நான் கொந்தளித்துக்கொண்டிருந்தேன், இளையவரே. அணுக்கத்தில் அகற்றியும் அகன்றபின் எண்ணி ஏங்கியும். அரசியென்றும் தேவியென்றும். வாளென்றும்  வெண்பட்டென்றும் ஒளி மாறிக்கொண்டிருந்தேன்.”

அவன் பெருமூச்சு விட்டு “ஆம், அதை நானும் எங்கோ உணர்ந்திருந்தேன்” என்றான். “கரியநதி யமுனை. அது இந்திரன் நகரைச் சூழ்ந்தோடுகிறது. அதற்குமேல் நான் சொல்வதற்கேதுமில்லை.” அவன் அவளை நோக்கி மீண்டும் ஓர் அடி வைத்தான். சித்திரபுத்திரர் அவன் தோளைத் தொட்டு “திரும்புகிறீர்களா, பாண்டவரே?” என்றார். “இல்லை, நான் திரும்புவதில்லை” என்றபின் அவன் அவள் விழிகளை விலக்கி முன்னால் சென்றான்.

உகிரெழுந்த கால்களுடன் ஆடி நடந்த சிம்ம முகம் கொண்ட சார்த்தூலன் திரும்பி “களம்பட்டு நீங்கள் விழுந்தால் மண் உங்களை அணைக்கையில் உயிர்கொண்டு செல்ல வரவேண்டியவன் நான். நூறு களங்களில் உங்களுக்கு வலப்பக்கம் நின்றிருக்கிறேன். உங்கள் கைத்திறனும் விழித்திறனும் உளக்கூர்மையும் நன்கறிந்தவன். வேண்டாம், பாண்டவரே! இருபத்தெட்டு பெரு நரகங்களைக் கடந்து வருவது எவருக்கும் இயலாது. ஏனெனில் ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு நழுவி கீழே மட்டுமே செல்ல முடியும். அம்முடிவிலி ஆழத்திலிருந்து மேலே வரும் பாதையென ஏதுமில்லை. இப்புடவி அமைக்கப்பட்டபோதே அவ்வாறுதான் உருவாகியுள்ளது” என்றான். அவனை நோக்கி புன்னகைசெய்து “நான் ஒற்றை இலக்கை மட்டுமே எப்போதும் நோக்கக் கற்றவன்” என்றான் அர்ஜுனன்.

மான்தலையுடன் அவன் அருகே வந்த சம்பரன் விழிகளில் ஈரம் மின்ன “உங்களுக்கு வில்தொட்டு அளித்த ஆசிரியர்களை விண்ணேற்றம் செய்ய கடமை கொண்டவன் நான். இது துரோணரின் சொல்லெனக் கொள்க! இது ஒழியாப்பெருநரகம். விண்ணுளோர் கொண்ட மாட்சிக்கெல்லாம் நிகரான கீழ்மைவெளி. என் மன்றாட்டு இது. பாண்டவரே, இக்கணமே மீள்க!” என்றான். “துரோணர் இச்சொல்லை ஒருபோதும் சொல்லமாட்டார். இலக்கு என்பது எப்போதும் ஒன்றே என்று கற்பித்தவர் அவர்” என்றான் அர்ஜுனன்.

அவனுக்குப்பின்னால் வந்த ஔதும்பரன் “எண்ணித்துணிக, பாண்டவரே. சொல்லளிக்கையில் இவற்றை நீங்கள் எண்ணியிருக்கவில்லை போலும்” என்றான். “இதனால் நீங்கள் அடைவதென்ன? இப்பெருந்துயருக்கு நிகராக ஏழு விண்ணுலகங்களை ஏழு முறை அளித்தாலும் துலாக்கோல் நிகர் காட்டுமா என்ன? இப்புடவியில் அனைத்தும் நிகர்கொண்டவை. அளித்துப் பெறப்படாதவை எங்கோ நின்று தவிக்கின்றன. நம்மை அவை வந்தடையாது இச்சுழல் முடிவுறுவதில்லை.”

“இது வணிகமல்ல,  ஔதும்பரரே. வீரத்தில் கணக்குகளில்லை” என்றான் அர்ஜுனன். “விளைவெண்ணிப் போரிடுபவன் வில்லெடுத்து ஓர் அம்புகூட எய்வதில்லை.”  ஔதும்பரன் “கணிக்கப்படாது கடந்துசெல்லும் ஒரு காலத்துளியும் இல்லை, பாண்டவரே” என்றான். “ஆம், ஆனால் துலாக்கோல் அல்ல வில். இதன் கணிப்புகள் வேறு” என்றான் அர்ஜுனன்.

சண்டாமிருதன் கழுதைத்தலையுடன் அணுகி அவன் தோளைத் தொட்டு சிறிய விழிகளால் நோக்கி “பிறருக்காக வாழ்பவன் கையகப்படுவது ஏதுமில்லை. அந்த அந்தணன் எவருடைய படைக்கலம் என்று அறிவீர்களா? உங்களை இவ்விருள் உலகுக்கு அனுப்பி புவியை வெல்ல துரியோதனன் செய்த சூதல்ல அது என்று சொல்லலாகுமா? இல்லை, துவாரகையின் தலைவன் பொருட்டு வந்த வஞ்சகனல்ல அவன் என்று உறுதி கொள்வீரா?” என்றான்.

“ஐயம் கொள்பவன் வீரனல்ல. அரசுசூழ்பவன் களம் நிற்க முடியாது” என்றான் அர்ஜுனன். “வீரர்கள் ஆடற்களத்தில் வீரத்தையே முன்வைக்கிறார்கள். சிறுமதியை அல்ல. பெருவழியே அவர்களின் பாதை. விலகுக!” “ஆனால் வஞ்சத்தால் வீழ்ந்த வீரர் பலர் உண்டு” என்றான் சண்டாமிருகன். “ஆம், ஆனால் அவர்களுக்கே புகழுலுகுக்கான எளிய வழி அமைகிறது. அவர்களை விண்ணேற்ற தேவர்கள் வருகிறார்கள்” என்றான் அர்ஜுனன்.

அவர்கள் இருபத்தெட்டு வாயில்கள் கொண்ட பெரிய அறை ஒன்றை வந்தடைந்தனர். அவ்வாயில்கள் அனைத்தும் உள்ளிருந்து உந்தப்பட்டவைபோல விம்மி அதிர்ந்துகொண்டிருந்தன.  சித்திரபுத்திரர் புன்னகைத்து “இருபத்தெட்டு நரகங்களுக்கும் இங்கிருந்து வழியுள்ளது. இதன் பெயர் பரிச்சேதம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அதை வென்றுகடந்து மட்டுமே செல்லமுடியும். இங்கு நீங்கள் உங்கள் வழியை தெரிவுசெய்யலாம்” என்றார்.

மூடிய அந்த வாயில்களின் தாழ்கள் பொன்னாலானதாக இருந்தன. அர்ஜுனன் அதை நோக்குவதைக்கண்ட சித்திரபுத்திரர் “நரகங்களின் தாழ்கள் அனைத்துமே பொன்தான்” என்றார். “வாயில்களைத் தெரிவுசெய்யும் உரிமை நரகுசெல்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக இருபத்தெட்டு வழிகள்.”

ஏழு அடிக்கு அப்பால் இருந்தன அவ்வாயில்கள் அனைத்தும். “ஏழுமுறை எண்ண உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது, இளைய பாண்டவரே. உங்கள் தொல்குலத்தை, உடன்பிறந்தவரை, மைந்தரை, நற்பெயரை, வரும்புகழை, மூதாதையரை, விண்ணுலகை ஒவ்வொரு அடிக்கும் எண்ணிக் கொள்ளுங்கள். ஒன்று தடுத்தால்கூட பின்னடி எடுத்து வைக்க வாய்ப்புள்ளது” என்றார் சித்ரபுத்திரர். “எண்ணத்தால் ஓர் அடி பின்னால் வைத்தால்கூட அங்கே யமுனைக்கரை நாணல்கள் நடுவே விழித்தெழுவீர்கள்.”

அர்ஜுனன் அவற்றில் ஒரு வாயிலை நோக்கி கால்களை எடுத்து வைத்து “என் குலத்தை இதோ கடக்கிறேன். என் உடன்பிறந்தாரை மிதித்து இதோ கடக்கிறேன். என் மைந்தரை இதோ கடந்து செல்கிறேன். என் நற்பெயரை இதோ உதறுகிறேன் என் வருபுகழை வீசுகிறேன். என் மூதாதையரை மறுப்புரைக்கிறேன். இதோ விண்ணகங்கள் அனைத்தையும் விலக்குகிறேன்” என்று அணுகி பொற்தாழில் கைவைத்து அதைத் திறந்தான்.

ஊன் உண்ணும் விலங்கொன்றின் வாய்திறந்தது போல் கெடுநாற்றம் எழுந்து கணத்தோரையே  மூக்கு பொத்தி முகம் சுளிக்க வைத்தது. “அது தாமிஸ்ரம் என்னும் உலகு” என்றார் சித்ரபுத்திரர். “ஒவ்வொருவரும் தங்கள் உள்ளாழத்தில் தங்களுக்குரியதை அறிந்திருப்பார்கள். எண்ணிக் குழம்பியோ எண்ணாது முந்தியோ அவர்கள் தெரிவுசெய்வதே அவர்களுக்கு உரியதாக முன்னரே இங்கு வகுக்கப்பட்டிருக்கும்.”

KIRATHAM_EPI_20

”தாமிஸ்ரம் பிறர் குழந்தையை கொன்றவர்களுக்குரியது” என்றார் சித்ரபுத்திரர். “கொன்ற மைந்தரை எண்ணுக! அவர்களின் அன்னையர் விழிநீர் சொரிந்து சொன்ன தீச்சொற்கள் நிறைந்தது அவ்விருள்வெளி.” இருளுக்கு அப்பால் நோக்கிய அர்ஜுனன் பல்லாயிரம் எலிகள் முட்டி மோதும் ஓர் ஆழத்தைக் கண்டான். “எலிகள்!” அவன் மேல் குனிந்து முத்தமிட்டது மாலினியின் மூச்சு. “துயில்க இளவரசே, அது வெறும் கனவு.” அவன் இருமுறை விதும்பி “மிகப்பெரியவை. மின்னும் கண்கள்” என்றான். “நினைப்பொழிக! அது கனவு. காலையில் விழித்துக்கொள்வீர்கள்.”  நினைப்பளவும் தயங்காமல் அதற்குள் பாய்ந்தான்.

தொடர்புடைய பதிவுகள்


தீபாவளி, கடிதங்கள்

$
0
0

 

index

ஜெ

கீழ்க்கண்ட வரிகள் என்னை மிகமிக ஆழ்ந்து யோசிக்க வைத்தன. சமீபத்தில் இப்படி ஒரு திறப்பு அமைந்ததில்லை

வைணவத்தொன்மத்தின்படி திருமாலின் பன்றி அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை அழிவுசக்தி என உருவகிக்கும் வைணவம் தெய்வத்தின் மகன் என்றும் சொல்வதைக் கவனிக்கவேண்டும். பூமியிலிருந்து எழுந்தவன் என்பதும் குறியீட்டுரீதியாக முக்கியமானது. நோய் அல்லது பீடை குறித்த மிகத்தொன்மையான பழங்குடி உருவகத்தின் வைணவ இறையியல் விளக்கம் இது.பன்றியால் மண்ணிலிருந்து உருவாவது. ஆனால் வைணவம் அழிவையும் திருமாலின் லீலையாகக் கொள்வது. அந்தத்தத்துவமே இப்புராணமாக ஆகிவிட்டிருக்கிறது.

உண்மையில் நரகாசுரனை எப்படி வைணவம் [அல்லது இந்துமதம்] பார்க்கிறது என்பதற்குரிய சரியான விளக்கம் இது. நரகாசுரன் தற்செயலாக உருவாகி வந்த அழிவுச்சக்தி. ஆனால் அதுவும் கடவுளின் படைப்பே. ஆகவே புனிதமானதே. அதைக் கடவுளே அழித்தார். அதைக் கொண்டாடுகிறோம்.

நரகாசுரனை வில்லனாகக் காட்டுகிறார்கள் என்று ஒரு கும்பல் கூப்பாடு போடுகிறது. அவன் பூமிதேவிக்கு விஷ்ணுவில் பிறந்த மைந்தன் என்றுதான் வைணவம் சொல்கிறது என்று அறிந்தபோது ஒரு பரபரப்பே ஏற்பட்டது. வைணவனாக அதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லாம் கடவுளின் லீலை என்றுதான் வைணவன் சொல்வான். ஆக்கமும் அழிவும் ரெண்டுமே.

ரமேஷ்

***

அன்புள்ள ஜெ

தொ.பரமசிவம் என்பவரின் ஒரு நூலின் குறிப்பு இணையத்திலே சுற்றிக்கொண்டிருக்கிறது. அவர்தான் திராவிட இயக்கத்தின் உச்சகட்ட சிந்தனையாளராம். அரசியலோ வரலாறோ தொன்மமோ அறியாத ஒரு அப்பாவி என்ற எண்ணம்தான் ஏற்பட்டது

வர்த்தமானர் இறந்த நாளாம் தீபாவளி. அவரது சாவைத்தான் விளக்கேற்றி இந்துக்கள் கொண்டாடுகிறார்களாம். சரி ,அதை ஏன் விளக்கேற்றி சமணர்கள் கொண்டாடுகிறார்கள்? அவர்களுடன் இந்துக்களும் சேர்ந்துகொண்டார்கள் என்றால் என்ன தப்பு? நரகாசுரன் கதை மகாபாரதத்தில் உள்ளது. அதற்கும் முன்னரே உள்ள தொன்மம் அது. அப்போது சமணம் தீபாவளியைக் கொண்டாடிக்கொடு இருந்ததா? அப்போது வர்த்தமானர் இருந்தாரா?

இப்படி பொதுவெளியில் வந்து சொல்வதற்கு ஏதேனும் ஒரு நூலில் ஏதேனும் ஒரு புராணத்தில் ஆதாரம் உண்டா? இந்துப்புராணங்களிலோ சமணப்புராணங்களிலோ? இங்கே சமணமதம் இருந்திருக்கிறது. நூல்கள் பல உள்ளன. எந்த நூலில் இங்கே சமணர் தீபாவளி கொண்டாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது? அவர்கள் வடநாட்டில் இப்போது கொண்டாடுகிறார்கள், அவ்வளவுதான்.

வர்த்தமானரை அரக்கன் என்றோ தீயவர் என்றோ எந்த இந்து நூலாவது சொல்கிறதா? எந்த புராணத்திலாவது அப்படிக் குறிப்பு உள்ளதா? தென்னகத்தின் சைவ நூல்களில் சமண மறுப்பு உள்ளது. அக்காலத்தில் மதம் சார்ந்து பூசல்கள் நடந்ததை சில நூல்கள் காட்டுகின்றன. ஆனால் சமணர்கள் மேல் இந்துக்கள் போரிட்டதற்கு எங்கே ஆதாரம்? எட்டாம் நூற்றாண்டில் ஒருசில சமணரை சைவ நாயன்மார்கள் வாதங்களில் தோற்கடித்து கழுவேற்றியதாக பதினாறாம் நூற்றாண்டில் ஒரு சில சைவர்கள் சொன்னார்கள் என்பதைத்தவிர?

வடநாட்டில் வைணவமும் சமணமும் கிட்டத்தட்ட ஒரேமதம்போலவே இணைந்தவை. வைணவக்கோயில்களில் அருகர் இருப்பார். அருகர்கோயில்களில் கிருஷ்ணர் இருப்பார். என்ன அபத்தம் இதெல்லாம் .எந்த ஆய்வாளனாவது இப்படி சும்மா இருந்தபோது என் மண்டையில் உதித்தது என்று ஒரு முடிவைச் சொல்வானா? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் வந்து வாய்க்கிறார்கள்?

ரமணன்

தீபாவளி யாருடையது?

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மடத்துவீடு, புத்தரின் கண்ணீர் –விமர்சனங்கள்

$
0
0

 

senthil

ராம் செந்தில்

 

அன்புள்ள ஜெ

நீங்கள் சுட்டி காட்டி இருந்த இரண்டு சிறுகதைகளையும் வாசித்தேன் .(http://www.jeyamohan.in/91963#.WCCXgNV96M8) .நான் கூற விரும்புவதை மிக சுருக்கமாக கீழே எழுதியுள்ளேன் .

1.ராம் செந்திலின் மடத்து வீடு: சிறுகதையின் ஆரம்பத்தில் இருந்தே சீர்கேடு வீழ்ச்சி தொடர்பான படிமங்களும் ,குறியீடுகளும் காணக்கிடைக்கின்றன .இடிந்த வீடு ,வீழ்ச்சி அடைந்த குடும்பம் ,நொறுங்கி போன சமையலறை ,வாழ்க்கையோடு தன்மானத்தை இழக்காமல் போராடும் மூன்று திருமணமாகாத பெண்கள் ,அவர்களை போக பொருளாக ,அதுவும் எளிதில் கிடைக்கும் ,கேட்பாரற்ற போக பொருளாக கருதும் மூன்று இளைஞர்கள் ,கைகால் பேச்சு எல்லாம் இல்லாமல் போனாலும் குளிக்கும் பெண்களை பார்க்க விரும்பும் கிழ தந்தை ….இவை இணைந்து சொல்லும் விஷயம் மிகவும் நுட்பமானது .அந்த பெண்கள் விகல்பமில்லாமல் பழகுகின்றனர் .ஒரு வேளை அருணை தங்கள் பாது காவலனாக கூட அவர்கள் கருதி இருக்க கூடும் .அனால் அருணோ அவனது நண்பர்களோ அவ்வாறு எண்ணவில்லை .பிரசாத்துக்கு மட்டும் தான் சிறிதளவாவது குற்ற உணர்ச்சி இருக்கிறது .

 

இந்நிலையில் ராவ் வாசலுக்கு போக வேண்டும் என ஆடம் பிடிப்பது தான் கதையின் முக்கிய பகுதி .மூன்று இளைஞர்களுக்கும் ஒரு வித anagnorisis வரும் பகுதி .”எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்..”    என்னும் வார்த்தைகளை கேட்டதும் அவர்கள் மூன்று பேர்களுக்கும் தங்களை தாங்களே ஒரு உடைந்த கண்ணாடியில் பார்த்தது போல் இருந்திருக்கும் .அவர்களது கீழ்மை முகத்தில் அடித்திருக்கும் .இந்த தருணம்  தான் இக்கதையை ஒரு சிறந்த சிறுகதையாக மாற்றுகிறது என எண்ணுகிறேன் .

 

இன்னொரு விஷயமும் இருக்கிறது .சமீப காலங்களில் சிறுகதைகளில் பிராமணர்களை ,குறிப்பாக ப்ராஹ்மண மகிளிரை ஒரு வித fetish உடன் தான் பலரும்(அந்த சமூகத்தை சார்ந்த எழுத்தாளர்கள் உட்பட ) சித்தரித்து வந்தனர் .ஆனால் இக்கதை அப்படி இல்லை .ஆசிரியர் மொழி மற்றும் வடிவத்தை சிறிது செம்மை செய்ய வேண்டும் என எண்ணுகிறேன் .மொத்தத்தில் உங்கள் வழியாக மற்றொரு நம்பிக்கை நட்சத்திரத்தை )) கண்டு கொண்டதாக எண்ணுகிறேன்

 

 

2.புத்தரின் கண்ணீரை பொறுத்த வரையில் எதிர் தரப்பை கருத்தில் கொண்டு எழுத பட்டிருப்பது தான் ஒரே சிறப்பு .ஆனால் எளிய நீதி கதையாக முடிந்து விட்டதோ என தோன்றுகிறது .குறிப்பாக பவுத்தத்தில் அதுவும் சிங்கள பவுத்தத்தில் இருந்து ஒரு  எளிய விவசாயி தமக்கான அறத்தை உருவாக்கி இருக்க முடியுமா எனக்கு தெரியவில்லை .பவுத்த பிக்ஷுக்கள் தற்கொலை படையாக மாறிய வரலாறு அங்கு உண்டு .எனவே புத்தரின் கண்ணீரை அதன் அரசியல் சரிக்காக ,அன்பின் மீது மானுடத்தின் மீது உள்ள நம்பிக்கைக்காக போற்றலாமே தவிர்த்து இலக்கிய ரீதியாக கொண்டாட முடியாது என்று தோன்றுகிறது .

உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன்

அனிஷ் க்ருஷ்ணன்

 

Siththanthan-2

திரு. ஜெ,

உங்கள் வலைதளத்தில் கொடுத்த சொடுக்கியின் படி, இரண்டு சிறு கதைகளையும் படித்தேன்,

மடத்துவீடு :

கதை எந்த மையமும் இல்லாமல் சுற்றி வருவதாக படுகிறது. கதை மாந்தர்கள்
உரையாடல் ஒரு சீர் இல்லாமல் இருக்கிறது. தேவைக்கு அதிகமாக வீட்டின் உள்
விவரணைகள் உள்ளது. வீட்டின் முன்னால் உள்ள பெண்கள் சிலையையும் அந்த
வீட்டின்  பெண்களுக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த போதுமான  முயற்சி
செய்யப்படவில்லை.

இது திரு செந்தில் அவர்களின் முதல் கதை எனில் முயற்சியை  பாராட்டலாம்,
நல்ல எழுத்தாளர் ஆக கதையில் இன்னும் செறிவு, கதை மாந்தர் இயல்புகள், நுண்
தகவல்கள் அவசியம். கதையின் மையச்சரடு இன்னும் சற்று தெளிவாக பின்ன
பட்டிருக்க வேண்டும்.

புத்தரின் கண்ணீர்:

கதையில் சம்பவங்களில் சற்று நாடக தன்மை உள்ளது, பெரும் பகுதி சம்பவங்கள்
வெறும் உரைநடையாக வருகிறது. நான் என் நண்பரிடம் கேட்டு அறிந்தது வரை
பேசப்படும் தமிழ் சிங்களருக்கானது அல்ல, அது வலிந்து திணிக்க
பட்டிருப்பதாக படுகிறது.

கதையில் பல  இடங்களில்  முரண்பாடுகள் தென்பட்டாலும், கதையின் நடையினை
மாற்றி உயிரோட்டம் கூட்டி இருக்கலாம்.

திரு ஜெ, என்னுடைய விமரிசன நோக்கு சரியா எந தெரியவில்லை ,  தங்களை
மட்டுமே பல மாதங்களாக வாசிப்பதனால் உண்மையில் சற்று அதிகப்படியாக எதிர்
பார்த்து  விட்டேனா ?

நன்றி,

அன்புடன்,

இப்ராஹிம் அலி பாதுஷா

 

 

இனிய ஜெயம்,

 

புத்தரின் கண்ணீர்.

 

”மூளைக்குள் ஒரு முள்மரம் முளைத்து வளர்வதைப் போல” என்றொரு வர்ணனை வருகிறது,தந்தையின் தவிப்புக்கு நேரான வர்ணனை.  இந்த வர்ணனை தவிர்த்து  கதையின் எந்த எல்லையிலும், அப்பாவின் தவிப்போ, மகனின் குற்ற உணர்வோ, தாய் தங்கையின் தகிப்போ வாசகனுக்கு  உணர்வாக கடத்தப் படாமல் தகவலாக சொல்லிச் செல்லப் படுகிறது.

அதுவும் மிக மிக எளிமையாக, மிக மிக நேரடியாக,  மகன் எனும் எதிர்கால நம்பிக்கை, மானுட வீழ்ச்சியின் பெருக்கில் ஒரு துளியாக அந்த நம்பிக்கை சிதறும் நிலையை எதிர்கொள்ளும் தந்தை.  ஆழமான கரு. ஆனால் அதில் ஒரு  இம்மியும் திரளாத கதை.   தேய் வழக்கான தலைப்பு உட்பட இதில்  என்ன எழுதப் பட்டிருக்கிறதோ அதை மட்டும் வாசித்துக் கொண்டால் போதும். அனைத்தையும் அதுவே சொல்லி விடுகிறது.

 

 

மடத்து வீடு.

 

 

வறுமைக்கு எதிராகப் போராடி வாழும் மூன்று இளம் பெண்கள், உடல் இயலாத நிலையிலும் அவர்களை வேலை வாங்கும், தினமும் சோடா குடிக்கும் சொகுசு வாழ்க்கை வாழும், அவர்களின் உழைப்பை சுரண்டி எஞ்சும் தந்தை.  அந்த பெண்களை நுகர அவர்களின் வீட்டு ஹால் வரை வரும் மூன்று யுவன்கள்.  இந்த மூன்று  யுவதிகளும்  ”தாங்கள் நினைத்தவர்கள்” போன்றவர்கள் அல்ல என மூன்று  இளைஞ்ர்களும்  ”உணரும்” தருணம்.   இக் கதை  மிக பலவீனமான கதைத் தருணம் காரணமாக கலையாகத் திரளவில்லை.

 

மிக இயல்பாக மூவராலும் அந்த வீட்டுக்குள் நுழைய முடிகிறது.  ராஜேஷின் இரட்டை அர்த்த பேச்சுக்கு ராஜ்ஜியின்  எதிர்வினை, வித்யா  அரைகுறை ஆடையுடன் எந்த சலனமும் இன்றி அவர்களை கடந்து செல்வது, இலக்கை நோக்கி மட்டுமே பேசும் ராஜேஷ்க்கு  வித்யா தண்ணீர் எல்லாம் கொடுத்து உபசரிப்பது, என இக் கதையின் உள்ளடக்கத்தை உருவாக்கும் இந்த க்ரே ஏரியா  மிக மிக பலவீனமாக உருவாகி வந்திருக்கிறது. ஆகவே இக் கதை முடிகையில் வாசகனுக்கு  மானுட அகம் எனும்  விசித்திர வெளியில்  சில பகுதிகளை கண்ட துணுக்கு ஏற்ப்படாமல்  இலக்கிய வடிவுக்குள் சொல்லப்பட்ட ஒரு சமூக நன்னெறிக் கதை  வாசித்த உணர்வே மிஞ்சுகிறது.

 

கடலூர் சீனு

 

இனிய ஜெயம்,

 

இதுவரை நான் நமது நண்பர்கள் யாருடைய கதையையும் விமர்சித்ததில்லை. செந்தில் ஜி  ஏதேனும் வருத்தம் கொள்வார் எனில், கடிதத்தில் என் பெயரை எச்சி தொட்டு அழித்து விடவும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சில சிறுகதைகள் 2

$
0
0

photo

அன்புள்ள சார்,

நான் சிறுகதை எழுத முயற்சித்தேன். சொல்வனத்தில் வெளிவந்துள்ளது.

http://solvanam.com/?p=46758

இது நான் கடந்து வந்த சம்பவம்தான். பாதிக்கும் குறைவாகவே புனைவு கலந்துள்ளேன்.  மொத்தத்தையும் மாற்றி எழுதும் கலை கைவரவில்லை. களத்தை கிராமபுறமாக்கி ஜாதீய நோக்கில்  எடுத்துச்செல்லாமே என சிவாகிருஷ்ணமூர்த்தி அவர்களும் பரிந்துரைத்தார். ஆனால் அது யோசிக்கையிலேயே சரியாக வடிவம் பெறவில்லை. ஆகவே மேற்கொண்டு  முயற்சிக்கவில்லை.

உங்களுடைய அறிவுரைகளை வேண்டுகிறேன்.

அன்புடன்,
R. காளிப்ரஸாத்

DSC_3424

அன்புள்ள ஜெ,
நலமா..சிங்கப்பூரில் இருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.
ஒரு சிறுகதை முயன்றேன்…நேரமிருக்கும் போது வாசித்துவிட்டு ஏதாவது சொல்லவும்..

http://padhaakai.com/2014/03/02/ruchi-2/

 

சுனீல் கிருஷ்ணன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21

$
0
0

[ 29 ]

இருள் நூற்றுக்கணக்கான கைகளாக அர்ஜுனனை ஏந்தி நழுவவிட்டு கீழே செலுத்தியது. கருங்குவியலென கூடி மொய்த்து எழுந்தமைந்த  எலிகளின் அலை விரிந்து சிதற அவன் உள்ளே விழுந்தான். அவனைப்புதைத்து மூடி கொப்பளித்தது எலிப்பரப்பு. விலக்கி எழுந்து விழுந்து மூழ்கி மீண்டும் எழுந்து நீந்திச்செல்லும்போது அவன் முகங்களை கண்டான். ஒவ்வொரு முகமும் அவனை உடல் விதிர்க்கச் செய்தது. ‘இவரா? இவரா?’ என்று பதைத்து மூழ்கி எழுந்தான். ‘இவர்கள் இங்கென்றால்?’ என்று கொந்தளித்தான்.

எலிகள் கிழித்துண்ட உடலின் தசைகள் தொங்க பெருவலியால் சுளித்த முகத்துடன் கம்சன் தன் படைவீரர்களுடன் ஓர் எலியலைமேல் ஏறி அவன் முன் எழுந்து வந்தான். “இளைய பாண்டவரே, கை! ஒருகை அளியுங்கள்” என்று கூவினான். “அடைந்தவை போதும். உங்கள் அறத்தில் ஒருதுளியால் என்னை மீட்டெடுங்கள்.” அவன் கைகளை உதறித் தள்ளி அர்ஜுனன் நீந்திக் கடந்து அப்பெருக்கின் மறு எல்லையாகத் தெரிந்த பொற்தாழிட்ட வாசலை நோக்கி சென்றான்.

அவன் பின் குரலெழுந்தது.பீஷ்மர் “மைந்தா!” என்று நெஞ்சுடையக் கதறினார். “மைந்தா… என்னை மீட்டெடு. மைந்தா, இத்தருணத்திற்காக இருள்யுகங்களை கடந்துவந்துள்ளேன்.” “யார் நீங்கள்?” என்றான் அர்ஜுனன். “நான் சந்தனு. காமத்தின்பொருட்டு மைந்தரைக் கொல்ல ஒப்புக்கொண்டு விழிமூடிப் படுத்திருந்தவன்.”  அவர் எம்பி அர்ஜுனனின் கால்களை பற்றிக்கொண்டார். அவன் அவர் கைகளை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு எம்பி அந்தப் படிகளின் விளிம்பைப்பற்றி மேலேறினான்.

யானைத்தோலால் ஆன வாயிலை ஓங்கித் திறந்து மறுபக்கம் பார்த்தான். கரிய வண்டுகள் கொப்பளிக்கும் ஆழம் தெரிந்தது. பிறிதொன்று எண்ணாமல் அதில் குதித்தான். வண்டுகளின் நீர்மை  அவனை சூழ்ந்துகொண்டது. வஞ்சகர்களுக்கான அந்ததாம்த்ஸ்ரம். வண்டுச்சிறகுகளின் ரீங்காரம் இணைந்த பெருமுழக்கத்துடன் உடல்கள் அரித்தரித்து உண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. தசைகளில் புகுந்து நரம்புகளைக் கடித்து இழுத்தன. செவிகளுக்குள் புகுந்து விழிகளினூடாக வெளிவந்தன. குடல்களில் ஓடி தோல்கிழித்துத் தோன்றின.

கண்ணீருடன் எழுந்து கைகூப்பியவள் தேவயானி. ஒளிரும் மணிமுடி சூடியிருந்தாள். “மைந்தா, நான் உன் மூதன்னை” என்று அவள் சொன்னாள். அவள் முகம் அவன் அறிந்தது. அவள் குருதியின் துளிகூட புவியிலில்லை. எப்படி முகம் மட்டும் எஞ்சியது? எவர் முகம்? முகமல்ல, அசைவு. தசையல்ல உணர்வு. அவளாகி அவனறிந்த எவர்? “மைந்தா, நான் உன் கால்களை பற்றுகிறேன். இதோ வண்டுகளால் உண்ணப்பட்டு அழிகிறேன். மாற்றில்லாத பெருவலியில் துடிக்கிறேன், அளிகூர்க!”

தன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்தாள். “வண்டுகள்… வண்டுகள் உண்கின்றன என் மூளையை.” வண்டுத் தொகையாகிவிட்டிருந்தது அவள் உடல். “இளமைந்தே, என் குலத்து தலைவன் நீ. மீட்டேன் என்று ஒரு சொல் சொல். உன் அறம் என்னை மேலே கொண்டு செல்லும்” என்றாள். “விலகு!” என்றான் அர்ஜுனன். அவள் அவன் கைகளை அள்ளிப்பற்றினாள். அதை உதறி வண்டுகளின் மேல் விழுந்து நீந்தி அதற்கப்பால் தெரிந்த இருண்ட வாயிலை நோக்கி சென்றான்.

இனி எவர், இனி எவர் என்றே அவன் நெஞ்சு பதைத்தது. நச்சுப்பாம்புகள் பின்னி நெளிந்த ரௌரவத்தில் விழுந்தான். கொன்று மகிழ்ந்தவரின் நரகத்தில் அவனறிந்த முகங்களாக பெருகிக்கிடந்தனர் படைவீரர்.  அவர்களை இறுக்கி நெரித்தன மல்லர்கைகளைப்போன்ற பாம்புகள். பிதுங்கி மூச்சினூடாக குடல் வழிய வாயில் நாக்கு வெளிவந்து நெளிந்தாட அவர்கள் கூவினர். புவி ஆண்டு திளைத்த அரசர்கள். குருதியெழ பலிகொண்டு கூத்தாடியவர்கள். “நான் பரதன்” “நான் மாவலி” “நான் ஹிரண்யன்” முகங்களின் அலைகளுக்கு அப்பால் மேலும் முகங்கள் கார்த்தவீரியன், ராவணன்… எவர் முகங்கள் இவை?

பெருநாகங்கள் வேர்க்குவைகள் போலிருந்தது மகாரௌரவம். “நான் கொன்றதில்லை, பாண்டவரே. கொல்ல விழைந்து வாழ்ந்தமையால் இங்கு வந்தேன்.” முனிவர், அந்தணர், அன்னையர். வேதச்சொல் விளங்கிய நாவுகள் எப்படி இங்கே வந்தமைந்தன? புழுக்கள் நெளிந்த கும்பீபாகம். அங்கே புழுக்களென மக்கள். புழுக்களை உண்டன புழுக்கள். புழுக்களைக் கிழித்து வெளிவந்தன புழுக்கள். உண்டுகொழுத்த அந்தணர்கள் அரசர்கள் வணிகர். “பிறர் பசித்திருக்க உண்டோம். பிறிதொன்றும் அறிந்திலோம்.”  உண்டவை அனைத்தும் வந்தடையும் பெருங்குடல்பரப்பு இது. உண்ணப்படாதவை புழுக்கின்றன. உண்ணப்படாதவையென உண்டவை ஆவது எப்போது?

நஞ்சூட்டியவர்களின் காலசூத்ரம் எனும் நரகம். “வேதம் புரப்பதாக மயங்கினோம், பாண்டவரே. உணவைப்பகுக்காமல் உண்ட அவிமிச்சமே அமுதல்ல நஞ்சென்று இங்கு கண்டோம்.” அசிபத்ரத்தில் குலம்பிழைத்தவர் எரிந்து உருகினர். அரசமுறை பிழைத்தவர்களுக்கான சூகரமுகத்தில் அவன்  கேட்டறிந்த பேரரசர்கள் அனைவரையும் கண்டான். எரிகந்தகத்தில் விழுந்து வழன்ற உடல்கள். முட்களால் கிழிக்கப்பட்டு நார்களெனத் தொங்கின தசைகள். உதிர்ந்த நகங்கள் மிதிபட்டன.

அந்தணர்க்கு பிழையிழைத்தவர்களுக்கான அந்தகூபத்தில் பொங்கி எழுந்து கைநீட்டி அலறி அமைந்தனர் மக்கள். அதைவிட மும்மடங்கு முறைமீறிய அந்தணர்களை வழிபட்டவர்களுக்கான கிருமிபோஜனத்தில் வதைபட்டனர். தப்தமூர்த்தியில், சால்மலியில், வஜ்ரகுண்டகசாலியில் முகங்களென அவன் கண்டவர்களுக்கு அப்பால் முகங்களே இல்லையோ என்று அவன் சித்தம் பேதலித்தது. முன்னோர்கள் அறவோர்கள் நூலோர்கள் வைதிகர்கள் அன்னையர் அனைவரும் இங்கென்றால் மண்ணுலகென்பது இங்கு வந்தடைவதற்கான பெருவழி மட்டும்தானா?

எரிதல், தழல்தல், புகைதல், உருகுதல். குருதியும் சலமும் வழிய அழுகி உதிர்தல். தசைகளை அடித்துக்கிழித்தனர் நிழலுருவர். கொக்கிகளில் தொங்கவிட்டனர். இருநுனியிலும் பற்றிக் கிழித்தனர். பற்களைப் பிடுங்கினர். கண்களை ஊசிகளால் துளைத்தனர். முட்பந்துகளை வாயில் திணித்து ஊட்டினர். கொக்கிகளை உள்ளே செலுத்தி குதம்வழியாக குடலை உருவி எடுத்தனர்.

உடலென்பதே வலியுருவாக்கும்பொருட்டு படைக்கப்பட்ட ஒன்றா? இவ்வுடல்சூடி இங்கு வராதிருந்தால் உயிர்கள் வலியென்று எதையும் அறிந்திராதா? உடலென்பது இன்பம் வந்தடையும் வழியென்று நம்பியிருக்கிறது பேதைஉயிர். நரம்புகளில் மட்டும் கொட்டும் பூச்சிகள் நிறைந்த பிராணரோதம். தோல் உரிந்து அகலும் விசசனம். எரிதழலையே ஆடையாக அணியவேண்டிய சாரமேயாசனம்.

மலம் அழுகி நொதித்த பூயோதகம். அதில் புழுக்களென நெளிந்தனர் கீழ்மக்கள். உறவுகொண்டு அறம்வழுவியோர். அங்கு நெளிந்தனர் தன்னை அறியாது பிறனென்று உணர்ந்து சிறுமைகொண்டோர். சிறுநீரும் சீழும் பெருகிய அயஃபானம். உடலென்பது கழிவுப்பெருக்காகியது. உடலை உண்டு உடலில் வாழும் புழுக்களின் உலகு. நெடுநாள்புண் என க்‌ஷாரகர்த்தமம்.  அழுகிய ஊன் மண்டிய ரக்‌ஷோபக்‌ஷம். குருதி அழுகி நொதித்த சூலப்ரோதம். எண்ணங்கள் உணர்வுகள் கொதித்த குருதி. கனவுகள் கரைந்த குருதி. குலமூத்தாரின் சொல்வாழும் குருதி. பலிமிருகத்தின் உடலில் ஓடும் தூய்மை.  தெய்வங்களின் நல்லுணவு. திரிந்து நஞ்சென்றாகிய எரிவு.

புளித்து நாறி  பெருந்துயரெனச் சூழும் இவையனைத்தும் உடலின் இருளுலகுகள். எரியும் முடியாலான அவீசி. பல்லழுகிய வாய் என நாறும் தந்தசூகம். அமிலவாந்தியாலான வடரோதம். அழுகிய உணவாலான பர்யாவர்த்தனகம். கீழ்மை  அனைத்தும் எழும் மையம் இவ்வுடல். அக்கணம் அவன் ஒன்றை அறிந்தான், அங்கு புதியன எவையுமில்லை. அனைத்தையும் அவன் முன்பே அறிந்திருந்தான். அவன் வாழ்ந்த மண்ணிலேயே. நரகங்களையும் நூல்களென்றாக்கி  ஊடுபாவென ஓட்டி நெய்யப்பட்டது அவ்வுலகம்.  அங்கு கண்டபோது அரைக்கணம்கூட கண்நிலைக்காமல் கடந்துவந்த அனைத்தாலும் ஆனவை இவை.

செம்பட்டுத்திரை மூடிய நுழைவாயிலுக்கு அப்பால் ஒளியிருந்தது. இனியநறுமணம் எழுந்தது. மென்மயிர்ப்பரப்பு போல புல்பரவிய தரை. பூத்த மலர்மரங்கள். இன்குரல் கொண்ட பறவைகள். இளந்தென்றல். இளவேனில் நின்ற நகரத்தெருக்களினூடாக அவன் நடந்தான். முழுதுடல்கொண்ட கன்னியர் விழிதீட்டி இதழ்ச்செம்மைகூட்டி சிலம்புகள் ஒலிக்க மேகலைகள் நெகிழ ஆடைகள் எழுந்தமைந்து பறக்க ஒல்கி உடலசைய நடந்தனர். சிரிப்பில் ஒளிவிட்டன பற்கள். சிலம்பின வெள்ளிமணிகள். விழிமுனைகள் வந்து அவனை தொட்டுச்சென்றன.

“மைந்தா, நான் யயாதி” என்றது முதுமூதாதையின் குரல். “அளிகூர்க, இங்கிருந்து என்னை மீட்டுக்கொண்டுசெல்க! நான் உன் தந்தையரின் தந்தை.” நரைத்த தலைமுடியும் தாடியுமாக உலைந்தாடிய உடலுடன் அவனை நோக்கி வந்த அவரை பற்றிக்கொண்டனர் ஈரப்பொன்னுடல் கொண்ட இருமகளிர். “இது எந்த இடம்?” என்று அவன் கேட்டான். “காமம் அணையாது உயிர்நீத்தவர்களின் நரகம். இதை லாலாபக்‌ஷம் என்கிறார்கள்” என்றார் அருகே ஓடிவந்து நின்ற ஒருவர். நீண்ட தாடி கொண்ட முதியவர் “நான் ரகுகுலத்து தசரதன்” என்றார்.

“மைந்தா, இங்கு அணையாது காமத்தை எழுப்பும் அனைத்தும் உண்டு. ஒருதுளியும் அதை நுகர முடியாது வெறுமைகொண்டிருக்கும் நம் உடல்” என்று யயாதி சொன்னார். “இது துயரம். துயர்களில் இதுவே உச்சம்.” அவரை அவர்கள் கொண்டுசென்றனர். எதிரே வந்த கௌதமமுனிவர் கூவினார் “விரைந்தகல்க! ஒருகணம் ஒருபெண்ணில் உன் காமம் எழுந்தாலும் நீ இப்பாதையை கடக்கவியலாதென்றறிக!”

குறிவிரைத்த முனிவர்கள் உடல் தளர்ந்து விழுந்துகிடந்த தெருக்கள். ததும்பும் முலைகள், எழுந்து குலுங்கும் பின்னெழுச்சிகள், இளந்தோள்கள். மான்குளம்புகள், ஞமலிநாவுகள், அரவுப்படங்கள், அகல்சுடர்கள், எழுந்த மீன்கள், நின்றவிழிகள். கடந்துசெல். கடந்துசெல். அழைப்புகள். பெண்ணுடலென்பதே அழைப்புதானா? குறிப்புகள். உணர்த்தல்கள். பெண்ணென வந்தது எதன் குறிப்பு? “மைந்தா…” ஒருகணம் அவன் நெஞ்சு உருகியது. அது என் குருதியிலுள்ள தவிப்பின் ஊற்று அல்லவா? அக்கணமே அதைவெட்டி அவன் எல்லைகடந்து சென்றான்.

அவன் சென்றுநின்ற நதிக்கரையில் பன்றிமயிர்களே நாணல் என எலிமயிர்கள் புல் என வௌவால் மயிர்கள் பூசணம் என செறிந்திருந்தன. உடல் அதிரும் கெடுமணம் எழுந்து அவனைச்சூழ்ந்தது. சிறுநீர், சலநீர், மலம், கெடுகுருதி பெருகி நீரென அதில் ஓடிக்கொண்டிருந்தது. முடி பாசியாக நகங்கள் சிப்பிகளாக எலும்புகள் தக்கைகளாக மிதந்துசென்றன. அழுகிய ஊனும் கொழுப்பும் சேறென படர்ந்திருந்தன.

அதன் கரையில் அவன் உடல் ஓய்ந்து நின்றான். “கடந்துசெல்க… இனி ஓர் உலகம் மட்டுமே எஞ்சியிருக்கிறது” என்றது அங்கு அமர்ந்திருந்த தவளை. அவன் குனிந்து அதை நோக்கினான். “இதன் பெயர் வைதரணி. தன்னலம் பேணிய அரசர்களுக்குரியது இது. இதைக்கடக்காமல் அவர்களுக்கு மீட்பில்லை. இதைக்கடந்தவர் எவருமில்லை.” அவன் “நீங்கள் யார்?” என்றான். “என்னை உன் முன்னோன் என்பார்கள். என்பெயர் துஷ்யந்தன்.”

“நீங்கள் இதை நீந்திக்கடக்கலாகாதா?” என்றான் அர்ஜுன்ன். “காலத்தொலைவில் நான் இதில் குதித்தேன். ஆனால் இப்பெருக்கின் இனிமையில் திளைக்கலானேன். மெல்ல ஒரு நீர்த்தவளை உருக்கொண்டு இங்கு அமர்ந்திருக்கிறேன். இதைக் கடக்க நான் விழையவில்லை. இதற்கு அப்பால் ஓர் இனிமை வேறில்லை என்பதில் ஐயம்கொள்ளவில்லை நான்.”

அவன் ஏறிட்டு நோக்கிவிட்டு குமட்டலுடன் குனிந்து “இங்கா?” என்றான். “இதுவேதான். உன் உடல் இனிதென்றால் இதுவும் இனிதே. மூடா, மைந்தன் என்று அள்ளிக்கொஞ்சுகையில் மனைவி என முகர்ந்து மகிழ்கையில் எத்தனை மகிழ்வளிக்கிறது மலமும்நீரும் சீழும்பீளையும் கொண்ட உடல்?” அவன் குமட்டியபடி விலகினான். “குமட்டுவதெல்லாம் ஒருநாள் இனித்ததுதான்” என இளித்தது தவளை.

மறுசொல்லின்றி அவன் மலப்பெருக்கில் பாய்ந்தான். கை ஓய நீந்தி கடக்கமுயன்றபோது பின்னால் மூச்சிளைக்கும் குரலுடன் எழுந்தார்கள் அவன் அறிந்த பேரரசர்கள். “மைந்தா!” என்று கூவினர். “இதோ யுகங்களாக நான் இக்கழிவில் நீந்துகிறேன். ஒரு கை என்னைப்பிடி…” என்றார் ஒருவர். “யார் நீங்கள்?” என்று அவன் கேட்டான். “நான் உபரிசிரவஸு… உன் குலமூதாதை.” அவன் அவரை உந்தி மேலெழுந்து நீந்தினான். அவர் அவன் கால்களை அள்ளிப்பற்ற மூழ்கி அந்நீருக்குள் சென்றான்.

பலகோடி மீன்கள். அவை அச்சீழ்நீரை அள்ளி அள்ளி உண்டு வால்திளைக்க செதில் வீசி மகிழ்ந்தாடிக்கொண்டிருந்தன. அவற்றின் விழிகள் அனைத்தையும் அவன் அறிந்திருந்தான். “இது ஹஸ்தி. இது பிரதீபன். இவன் குரு.” அவன் அவர்களை கைகளால் அள்ளிவிலக்கி மேலெழுந்தான். தொலைவில் நின்றாடியது மறுகரை. எது அறம்? தன்னலம் என்பது அறத்திற்கு எதிரானதென்றால் அறம்பேணுவதனால் அடையப்படுவதுதான் என்ன? அரசர்கள் அனைவரும் அங்கிருந்து இங்கு வருவதில்லை, இங்கிருந்து அங்கு செல்கிறார்கள்.

மறுகரையில் அவன் ஏறி நின்று நடுங்கியபோது காவலர்மூவர் வந்து அவன் முன் நின்றனர்.. “வருக” என்று அவனிடம் சொன்னார் பிரார்த்தர்.  ”இது எந்த இடம்?” என்று அவன் கேட்டான். “இதன்பெயர் சூசீமுகம்” என்றார் சஞ்சிதர். “தன் நெஞ்சுரைக்கும் சொல் விலக்கி அறம் உசாவி உளம் குழம்பி செயல்முனையில் நின்றுதவித்து வாழ்வந்தவர்களுக்குரியது” என்றார் ஆகாமியர். அவன் அதை நோக்கி சென்றான். இருண்டவானில் அங்கிருந்த பல்லாயிரம் கூர்முனை வேல்கள் விழிகளென மின்னிக்கொண்டிருந்தன. அவற்றில் உடல்குத்தி அமர்ந்து சுழன்றனர் முனிவரும் அறிஞரும் அரசரும்.

அவன் நோக்கி நின்றான். அங்கே அமர்ந்திருந்த ஒருவர் திரும்பி அவனை நோக்கினார். அவன் திகைப்புடன் கால்களை எடுத்துவைத்து அவரை அணுக அவர் திரும்பிக்கொண்டார். “நானா?” என்றான். “அவர் சரத்வான். வில்தேர்முனிவர்” என்றான் ஒரு காவலன். பிறிதொருவரைக் கண்டு அவன் மீண்டும் திகைத்தான். உரத்தகுரலில் “மூத்தவர்!” என்றான். “ஆம், தேவாபி என்று அவரை அழைக்கிறார்கள்” என்றார் சஞ்சிதர். “இம்முள்முனைகளில் கால்வைத்து கடந்துசெல்க!”

அவை நதிக்கரை நாணல்கள் என ஆடின. “செல்க!” என்று தேவாபி திரும்பி நின்று கூவினார். “நீ வந்தவற்றில் கெடுநரகமென்பது இதுவே. கடக்கவியலாதது இது. நோக்குக, இவை ஒருபோதும் நிலைகொள்வதில்லை!” அவன் குனிந்து பார்த்தபோது அந்த வேல்முனைகள் அனைத்தும் இருதட்டுகள்கொண்ட துலாவின் நடுமுட்கள் என்று கண்டான். “இங்கு காத்திருக்கிறோம், அவை நின்று காட்டும் என. யுகயுகங்கள். காலப்பெருக்கு.”

அக்கணமே தாவி ஆடும்  முள்முனைகள்மேல் கால்வைத்துப் பாய்ந்து கடந்தான். மறுஎல்லையில் இருந்த பெருந்துலாவின் நடுமுள் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவன் ஒருகணமும் எண்ணாமல் அதன் மேல் குதித்து உடல்குத்தி சுழன்றுகீழிறங்கினான்.

KIRATHAM_EPI_21

இதுவே இறுதிப்புள்ளி என்றது சித்தம். சோர்ந்து இறுதி விசையும் அழிய அவன் கீழிறங்கியபடி சென்றான். அக்கரையில் எழுந்த அன்னைமுகத்தை அவன் அதுவரை கண்டிருக்கவில்லை. கன்னங்கரிய பேருடல். காதுகள் வடிந்து நீண்டிருந்தன. கோரைப்பல்லும் கொடுமூக்கும் கூர்விழியும் கொண்டிருந்தாள். உடலெங்கும் முலைகனத்து வேர்ப்பலவின் முதுமரம்போலிருந்தாள். அவள் ஆடையெங்கும் சிற்றுயிர்கள் என நுண்குழந்தைகள் அள்ளிப்பற்றி செறிந்திருந்தன. “அன்னையே…” என்று அவன் அழைத்தான். அவள் கையைநீட்டி அவனைப் பற்றி இழுத்து மேலெடுத்தாள்.

முள்ளில் சிக்கிய ஆடையிலிருந்து உடலை மீட்பதுபோல கழுவேறிய அவ்வுடலில் இருந்து தன்னை விடுவித்து எழுந்தான்.  “அன்னையே…” என்று அலறியபடி அவள் காலடியில் சரிந்துவிழுந்து வணங்கினான். “வருக!” என்று அவள் சொன்னாள். அவனை இடக்கையில் இழுத்துக்கொண்டு அப்பால் தெரிந்த பெருவாயில் நோக்கி சென்றாள்.

[ 30 ]

கீழ்மையின் கெடுகனவு முடிந்ததென அவன் விழித்தெழுந்தான்.  எதிரே  யமபுரியின் இருண்ட பாதைகளின் பின்னலை கண்டான். அங்கே உயிர்க்கும் உடல்தூண்கள், விதிர்க்கும் தசைச்சுவர்கள், அதிரும் தோல்தரைப்பரப்பில் சிலிர்த்த மென்மயிர்ப்புற்கள். “அன்னையே” என்று அவன் திரும்பி அவளை நோக்கி கைகூப்பினான். “என்னை மீட்டுக் காத்தீர்கள். என்றும் உடனிருங்கள்.”

அவள் புன்னகைத்தபோது வெண்பற்கள் ஒளிர முகம் பேரழகு கொண்டது. “நீ என்றும் எனக்கு உகந்தவன், மைந்தா” என்றாள். “அத்து மீறும் மைந்தரின் குறும்புகளில் அன்னையர் மகிழ்கிறார்கள். ஆண்மைகொண்டெழும் இளையோரை விரும்புவதென்பது அன்னையரின் கருவியல்பு. உன்மேல் நான்கொண்ட பேரன்பையே உனைச்சூழ்ந்த பெண்டிரில் நீ கண்டாய்.”

அவன் அவளை நோக்கி “நான் உங்களை அறிந்ததில்லையே?” என்றான். “என்னை திருணமூலி என்பார்கள். என்னை முழுதும் காண நீயும் முழுமையடையவேண்டும். அறிக, மண்ணுறங்கும் புல்வேர்களில் வாழ்பவள் நான்!” அவள் அவன் தலையை தொட்டாள். “செல்க, நீ வெல்ல இன்னும் ஒரு களம் உள்ளது!”

அவன் “இனி எக்களத்திலும் நானே வெல்வேன், அதை உங்கள் அருகே நின்றிருக்கையில் உணர்கிறேன்” என்றான். அவள் தன் முலைகளில் ஒன்றைப்பற்றிப் பிடுங்கி “இதைக்கொள்க, இது உன் படைக்கலமாகுக!” என்றாள். அவன் அதைப்பெற்றுக்கொண்டதும் அது ஒரு தண்டாயுதமாக ஆகியது. அவள் கால்தொட்டு சென்னி சூடி அவன் யமபுரியின் மண்ணில் இறங்கினான்.

அவனைநோக்கி சித்ரபுத்திரர் ஔதும்பரனும் சம்பரனும்  சார்த்தூலனும் சண்டாமிருகனும் சூழ புன்னகையுடன் வந்தார். “வருக இளையவரே, உங்களுக்காக காத்திருந்தோம்” என்றார். “நான் வருவேன் என நினைத்தீர்களா?” என்று அர்ஜுனன் கேட்டான். “இல்லை, ஆனால் காத்திருப்பது எங்கள் பணி” என்றார் சித்ரபுத்திரர். “மீண்டுவந்த முதல்மானுடர் நீங்கள்.”

காலப்பேரரசனின் அரண்மனை மண்டபத்தில் வலப்பக்கம் யமி நிற்க இடப்பக்கம் தூமார்ணை அமர்ந்திருக்க அவன் அரியணை வீற்றிருந்தான். அவனைக் கண்டதும் சினத்துடன் எழுந்து படியிறங்கி கீழே வந்தான். “இன்றுவரை இது நிகழ்ந்ததில்லை. இவ்வுலகின் நெறிகளனைத்தும் இன்று சீர்கெட்டன” என்றான். அர்ஜுனன் “பிறிதொன்று எண்ணா பெருவீரன் எவனும் இங்கு வந்ததில்லை போலும்” என்றான்.

“இளையவரே, அறிக! இவ்வுலகின் நெறிகள் எதையும் நான் மீறலாகாது. எதன்பொருட்டும் இறந்தவனை திருப்பி அனுப்பவும் கூடாது” என்று யமன் சொன்னான். “முடிவிலியிலிருந்து நீட்டி நின்றிருக்கும் இலைநுனி ஒன்றுண்டு. அதில் துளித்துச் சொட்டிக்கொண்டே இருக்கின்றனர் யமதேவன்கள். நான் அதிலொருவனே. எனக்கென இயல்பொன்றுமில்லை.”

“நான் உங்களால் அளிக்கப்பட்டு அவ்வுயிரை மீட்டுச்செல்ல விரும்பவில்லை. உங்களை நான் வென்றுசெல்வேன் என்றால்  உங்கள் நெறியை நீங்கள் மீறவில்லை என்றே பொருள்.” யமன் கையசைத்து “வீண்சொல். என்னை மண்ணில் எவரும் வெல்லமுடியாது” என்றான். “ஏனென்றால் இறப்புக்கு இறைவன் நான். மண்ணில் கடக்கப்படாதது அதுவே.”

அர்ஜுனன் “வீரர்கள் தெரிவுசெய்வது வெல்லற்குரிய போர்களை அல்ல. நிகழ்த்தற்குரிய போர்களையே. வருக!” என்று கூவியபடி தன் கையிலிருந்த  தண்டத்தை சுழற்றிக்கொண்டு யமன் மேல் பாய்ந்தான். தன் கதாயுதத்தை வீசி அதைத்தடுத்தபடி யமன் அவனை எதிர்கொண்டான். இருள் அலைத்த அப்பெருங்கூடத்தில் அவர்களின் விசைமிகுந்த போர் நிகழ்ந்தது. அடிக்கும் ஒலியில் அதிர்ந்தன தூண்கள். இமைப்பழிந்து நோக்கி நின்றன அம்மண்டபத்தின் கண்கள்.

காலுக்குக் காலசைய கைகளுக்குக் கைகள் அசைய நோக்குடன் நோக்கு கோக்க மூச்சுக்கு மூச்சு எதிர்நிற்க நடந்தது பெரும்போர். கதையும் தண்டமும் மோதி அனலுமிழ்ந்தன. யமியும் தூமார்ணையும் எழுந்து அருகணைந்தனர். போர்கண்டு மகிழ்ந்த அவர்களின் முகங்கள் மெல்ல அச்சம் கொண்டன. பதற்றத்தில் கைகள் பின்னி நிலையழியலாயின. யமபுரியின் காவலர் நெருங்கி வந்தனர். சித்ரபுத்திரரை நோக்கி போதும் போதும் என உதடுகளை அசைத்து தூமார்ணை மன்றாடினாள். ஔதும்பரனும் சம்பரனும் தவிக்கலாயினர். சண்டாமிருகனும் சார்த்தூலனும் நிலையழிந்து கை நீட்டி தடுக்கச்சென்றனர். அவர்கள் தோள்தொட்டு தடுத்தார் சித்ரபுத்திரர்.

நிகர்நிலையில் நின்று கணம் கணமெனச் சென்ற அப்போரின் ஒரு கணம் முன்னெழ அர்ஜுனன் தன் தண்டாயுதத்தால் அறைந்து யமனின் கதாயுதத்தை தெறிக்கச்செய்தான். திகைத்துச்செயலிழந்து அவன் நின்ற அக்கணத்தில் பாய்ந்து அவன் நெஞ்சை அறைந்து வீழ்த்தி மார்பை மிதித்து “வென்றேன், காலரே. இதோ அக்குழந்தையை மீட்டுச்செல்கிறேன்” என்றான். சொல்லின்றி அங்கே கிடந்தான் அறத்தோன்.

திரும்பி சித்ரபுத்திரரிடம் “அக்குழவியின் வினைக்கணக்கை அழியுங்கள். அவனை இக்கணமே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று அர்ஜுனன் ஆணையிட்டான். காலன் “இளையவனே, உனக்கு நான் நீ விழையும் அனைத்தையும் அளிப்பேன். பொன்றாப்புகழும் மண்ணில் எவரும் அணுகாத வீரமும் நிகரற்ற செல்வமும். இறப்பின் நெறிகளை மீறாதே” என்றான். “இலக்கு ஒன்றே என்பதே என் வேதம்” என்றான் அர்ஜுனன்.

“சித்ரபுத்திரரே, அரசநெறிப்படி இன்று இப்புரியின் தலைவன் நானே. கொண்டுவருக!” என்றான். அவர் யமனை நோக்கி விழிகளால் ஆணைபெற்று திரும்பி “அவனிருக்கும் அறை அது… அங்குசென்று அவனைக்கொள்க!” என்றார். அர்ஜுனன் அந்த அறைநோக்கி ஓடி அணுகியதும் திகைத்து நின்றான். அங்கே அறைக்கதவென நின்றிருந்தது யமகணம் ஒன்று. தளர்ந்த விழிகளுடன் “இளையோனே” என்று அவனை அழைத்தார் யுதிஷ்டிரர். “ஆம், நானேதான். இது என் உலகு.”

மறுகணமே அர்ஜுனன் தண்டத்தால் அவரை அறைந்து சிதறடித்தான். துண்டுகளாகச் சிதறி குருதியுடன் விழுந்து துடித்த உடலில்  இருந்து விழிகள் மீன்கள் என துள்ளித்துள்ளி விழுந்தன. உதடுகள் “இளையோனே, நான் உன் மூத்தவன்” என்றன. கால்களால் அவற்றை மிதித்து அவன் உள்ளே சென்று துலாத்தட்டு ஒன்றில் கிடந்த இளமைந்தனை நோக்கி சென்றான்.

சுவரென அங்கிருந்த முகம் மட்டுமேயான கால பூதம் ஒன்று இளித்து “அவனை எடுக்கும் இடத்தில் நிகரென ஒன்றை வை” என்றது. “என் குருதி, என் ஊன்” என்று கூவியபடி அர்ஜுனன் அக்குழந்தையை எடுத்தான். அது இருந்த இடத்தில் அவன் மைந்தனின் முகம் கொண்ட குழவி ஒன்று படுத்திருக்கக் கண்டான். பேரோசையுடன் நகைத்தது பூதம் “ஆம், அதுவே நெறி” என்றது. “அவ்வாறே ஆகுக!” என்று கூறி அவன் வெளியே பாய்ந்தான்.

எதிரே இரும்புக்கவசங்கள் அணிந்து நான்கு கைகளில் தண்டமும் பாசமும் குடாரமும் சுரிகையும் கொண்டு எருமைமேல் அமர்ந்து தோன்றிய யமன் புன்னகையுடன் “இளையவனே, நீ தெற்கை வென்றாய்! உன் அறம் என்றும் உடனிருக்கட்டும்” என்றான். “என்னை வென்றது அம்முலைப்பால். இறப்பை வெல்லும் அமுதத்தையே படைக்கலமாகக் கொண்டாய். அதுவே உன் கையில் இனி ஒரு அம்பெனத் திகழட்டும்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு 18வது கலந்துரையாடல்,சென்னை

$
0
0
KIRATHAM_EPI_09
அன்புள்ள நண்பர்களுக்கு,
சென்னை வெண்முரசு 18வது கலந்துரையாடல், வருகிற 13/11/2016 , ஞாயிறுக்கிழமை மாலை 4 மணிக்கு  நடைபெறுகிறது. இதில் கடலூர் சீனு ”வண்ணக்கடல் ” நாவலில் இருந்து பேசவிருக்கிறார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .
இடம்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
அழைக்க:- 9952965505
Thanks & Regards
SOUNDAR.G

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16742 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>