Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17029 articles
Browse latest View live

படுகளம் -5 (நாவல்)

$
0
0

சுடலைப்பாண்டி மாமாவிடம் நான் கடன் வாங்கவிருக்கும் செய்தியைச் சொன்னேன். “அங்கதான் போகணும்போல இருக்கு.”

நாங்கள் டீ குடித்துக்கொண்டிருந்தோம். மாமா டீயை கையில் வைத்தபடி கண்களைச் சுருக்கி கேட்டார். “எவ்ளவு வேண்டியிருக்கும்?”

“இருபது”

“ஏலே, என்னல சொல்லுதே? இருபதா? ஏற்கனவே பதினஞ்சு இருக்கு…”

“ஆமா”

“அப்ப மொத்தம் முப்பத்தஞ்சு… வட்டி எவ்ளவு தெரியுமா? வருசத்துக்கு இருபத்தொண்ணு லட்சம். மாசம் கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் லட்சம்… ஏலே, இந்தக் கடைய வைச்சு மாசம் ரெண்டரலட்சமாவது நீ லாபம் பாத்தாகணும்… நடக்குத காரியமா?”

“லாபம் வரும்ணு நினைக்கேன்”

“நான் சொல்லுறதக் கேளு, வேண்டாம். செரிவராது”

“வேற வழியில்ல” என்றேன்.

“நான் சொல்லுறதச் சொல்லணும். இந்த கடைவீதியிலேயே எனக்குத்தெரிஞ்சு ஏளு பேர் செத்திருக்கானுக. அஞ்சுபேரு தற்கொலை. ரெண்டுபேரு கொலை… எல்லாம் இந்தமாதிரி அகலக்கால் வைச்சதனாலே வந்த வினை… “

“ஆனா நாம தொளிலுதானே செய்யப்போறம், வட்டியக் குடுத்திருதோம்”

“இங்கபாரு, தொளிலுன்னா என்ன? நாம போடுத கணக்கு. அது ஒருபக்கம், அந்தப்பக்கம் மார்க்கெட்டு போடுத கணக்கு இருக்கு. அது என்னதுன்னு நமக்குத் தெரியாது. இங்க ரெண்டு சர்க்காரு இருக்கு, வடக்க சர்க்காரையே நடத்துத பெரிய பெரிய வியாபார தெய்வங்கள்லாம் இருக்கு… அவனுகதான் மார்க்கெட்டு. அதப்பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாது. கண்ணமூடிட்டு பகடையிலே பணம் கட்டுத மாதிரி ஏவாரம் செய்யுதோம். கவர்மெண்டு ஒரு பாலிசிய மாத்தினா மொத்தமும் ஊத்திக்கிடும். ஏலே, இங்க பத்து வருசம் முன்னாடி சிடி விக்கக்கூடிய எட்டு கடை இருந்திச்சு… இப்பம் ஒண்ணுகூட இல்ல. டெக்னாலஜி மாறிப்போச்சு. ஆரு என்ன செய்ய முடியும்? கணக்கு தப்பினா நஷ்டம்… நஷ்டம் வந்தாலும் நாம நிக்கணும். நம்ம சொத்துக்கு உள்ளயே நம்ம முதலீடு இருந்தாகணும்… கப்பலு மூழ்கினா ஏறிப்போறதுக்கு ஒரு படகு இருக்கணும் பாத்துக்கோ.”

நான் நகங்களைப் பார்த்தபடி பேசாமலிருந்தேன்.

“மாமன் சொல்லுதத புரிஞ்சுக்கோ. அவனுகள்ட்ட வட்டிக்கு பணம் வாங்காம இருக்க முடியாது. ஆனா நம்ம நிஜலாபத்தை நாம அவனுகளுக்கு காட்டவே கூடாது. பாதிக்குப்பாதிதான் காட்டணும். அதில ஒரு பங்குதான் அவனுகளுக்கு நாம குடுக்குத வட்டீங்குதது. நான் என்ன கோட்டிக்காரன்னா நினைக்கே? எனக்கு நம்ம கடையிலே நாலு வினோலியம் ரேக்கு அடிச்சு, நியான் போர்டு வைச்சு, வெளக்கு போட்டு மினுக்கத் தெரியாதா? நம்ம லாபம் வெளியே தெரிஞ்சிரும்.அப்ப வந்து நிப்பான், அம்பது லெச்சம் கடன் வாங்கு, வட்டியக் கட்டுன்னு. இப்டியே இருந்தெடம் தெரியாம இருக்குததுதான் நமக்கு லாபம். எனக்கு இப்ப இருபது லச்சம்தான் கடன். அதுக்குண்டான வட்டிதான். சொத்து எல்லாம் சீவைகுண்டம், மெய்ஞானபுரம்னு வாங்கி போட்டிருக்கேன்… இவனுக கிட்ட சிக்கினா காட்டுநாய்கள் கிட்ட சிக்கினதுமாதிரி… காட்டிலே அதுக மானு மிளான்னு தின்னு போட்டிருக்கும் பாத்திருக்கியா? வெள்ளைவெள்ளெலும்பா கெடக்கும். ஒரு துளிச் சதை மிச்சமிருக்காது. வாலுமுடிகூட மிஞ்சாது… வேண்டாம்.”

“எனக்கு வேற வழி தெரியல்ல… இனி முன்னாடிப்போக மட்டும்தான் முடியும்”

“உன்னை மொத்தமா உறிஞ்சிப்பிடுவாங்க… சொல்லுதேன்னு தப்பா நினைக்காதே. சொத்து போனா பரவாயில்லை. உன் தங்கச்சிக்குட்டிகளை கண்ட கிரிமினலுங்களுக்கு கட்டிவைக்கச் சொல்லுவானுக. அம்புரோஸ் நாடாரு அப்டித்தான் குடும்பத்தோட செத்தாரு தெரிஞ்சுக்கோ.”

நான் நடுங்கிவிட்டேன். என் கையில் இருந்த செல்போனை கீழே வைத்தேன். விரல்கள் துடித்துக்கொண்டிருந்தன. ஆனால் இரு நிமிடங்களுக்குப்பின் செல்போனை திரும்ப எடுத்துக்கொண்டேன். “நான் முடிவெடுத்தாச்சு மாமா” என்றேன்.

அவர் சட்டென்று எழுந்து டீ டம்ப்ளரை வைத்துவிட்டு தன் கடைக்குச் சென்றார். நான் அவர் செல்வதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்.

வடிவேலு செட்டியாரும் என்னிடம் எதிர்ப்பு தெரிவித்தார். “தற்கொலை செய்றது மாதிரி… அகலக்கால் வைக்கவே கூடாது. அவனுகளுக்கு வியாபாரம் தெரியாது. இப்ப இருபது லச்சம் வாங்கிறீங்க. அப்ப இருபது லெச்சம் வாங்குற ஆள் ஆயிட்டீங்க. ஏவாரம் சரியாப்போகலேன்னா அத குறைக்க முடியாது. ஒத்துக்கிட மாட்டானுக. ஏமாத்துறீங்கன்னு நினைப்பானுக. அரிவாளோட வந்து நிப்பானுக. ஏவாரம் நம்ம கையிலே இல்ல… நாம நினைச்சது நடக்கணும்னு இல்ல”

“இனி யோசிக்க ஒண்ணுமில்லை”

“தெரியும், அப்டி மாறிரமாட்டீங்க. ஏன்னா இது விதி. ஜாதகத்தை பாத்தா சொல்லிப்போடலாம், ஏன் ஒருத்தருக்கு ஒரு நேரத்திலே ஒண்ணு தோணுதுன்னு ஆரும் சொல்லிக்கிட முடியாது… அவனவன் தலையிலே எளுதியிருக்கு…”

நான் சோதிடர்களைச் சென்று பார்க்கும்படி வடிவேலு செட்டியார் சொன்னார். எனக்கு பயம், அவர்கள் என்னை தடுத்துவிடுவார்கள் என்று. ஆகவே போகவில்லை. இரண்டு நாட்கள் தயங்கிக்கொண்டே இருந்தேன். உள்ளம் கொப்பளித்துக் கொண்டே இருந்தது. தற்கொலைக்கு முன்பு ஒருவனின் மனம் இப்படித்தான் இருக்குமா? இல்லை, இது தற்கொலை மனநிலை அல்ல. கொலை. கொலைக்குப்பின் ஒருவன் முன்பிருந்த நிலைக்குத் திரும்ப முடியாது. எப்போதைக்குமாக எல்லாமே மாறிவிடுகிறது. குதிப்பதுதான் அது. கீழே இருண்ட ஆழத்தில் என்ன இருக்கிறதென்றே சொல்ல முடியாது.

குதித்தாகவேண்டியதுதான். யோசித்து குதிக்க முடியாது. கண்மூடித்தனமாகக் குதிக்க வேண்டியதுதான். யோசித்துச் செய்யவேண்டும் என்று எல்லாரும்தான் சொல்கிறார்கள். ஆனால் எல்லா செயலிலும் ஒரு கண்மூடித்தனமான அம்சம் இருக்கிறது. படிப்பு, திருமணம் என எதுவானாலும் கொஞ்சம் அதிருஷ்டத்தை நம்பித்தான் செய்யவேண்டியிருக்கிறது. எல்லா முடிவுகளையும் அங்கே இங்கே முட்டி மோதி யோசித்து ஒரு கணத்தில் சட்டென்று யோசிக்காமல் எடுத்துவிடுகிறோம்.

ஒரு கட்டத்தில் அந்த முடிவைப்பற்றி நான் ஒன்றும் யோசிக்க வேண்டியிருக்கவில்லை நான் அங்கே சென்று, அவரிடம் பணத்தை வாங்குவேன் என்பது எனக்கே உறுதியாக ஆகிவிட்டிருந்தது. ஏற்கனவே நிகழ்ந்த ஒன்றைப்போல, மாற்றமுடியாததாக அது ஆகிவிட்டிருந்தது. ஒன்றைப்பற்றி நிறைய யோசித்தோம் என்றால் அந்த எண்ணம் நம் உடலின் ஒரு பகுதிபோல ஆகிவிடும். அதன்பின் அது நமக்கு அன்னியமல்ல. நமக்கு அது துணுக்குறலை, கவலையை, தயக்கத்தை அளிப்பதில்லை. தெரிந்த ஒருவரிடமென அதனுடன் உறவாடுகிறோம். நம்மை அது கைபற்றி அழைத்துச்செல்கிறது.

செவத்தபெருமாளை நானே தேடிச்சென்றேன். சாலையோரமாக நெஞ்சளவு சுற்றுச்சுவர் கொண்ட, இருபது முப்பது ஆண்டு பழைய, கான்கிரீட் வீடு. வீட்டுச்சுவர்மேல் காகிதப்பூச்செடி வளர்ந்து தழைந்திருந்தது. ஒரு சிவப்பு பொலிரோ வண்டி நின்றிருந்தது.

நான் இளங்காலையிலேயே சென்றுவிட்டேன். செவத்தபெருமாளின் மகள் வாசலில் நடந்தபடியே கல்லூரிப்பாடம் படித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் “ஆரு?” என்றாள்.

அவளுடைய கூந்தல் நுரைபோல இருந்தது. அதை ரப்பர்பாண்ட் போட்டு முடிச்சிட்டிருந்தாள், ஆனால் அது கொண்டைபோல தலைக்குப் பின்னால் நின்றது. கரிய நிறம், சற்று குண்டான பெண். ஆனால் கண்களும் சிரிப்பும் இளமையின் அழகுடன் இருந்தன.

“செவத்தபெருமாள் மாமா..”

“இங்கதான்…”

“அவரப் பாக்கணும்”

“அப்பா…” என அவள் உள்ளே போனாள். போகும்போது படியை துள்ளி தாவிக் கடந்தாள்.

நீளவாக்கினால வீடு. முகப்பில் ஜெயில்போல பெரிய கிரில். உள்ளே பெரிய சோபாக்கள் தெரிந்தன. பாலிஸ்டர் திரைச்சீலைகள் சன்னல்களிலும் உள்வாசலிலும் காற்றில் நெளிந்தன. முற்றத்தில் நன்றாக இலைதழைத்த ஒரு வேப்பமரம் நின்றிருந்தது. நெல்லையில் மிகப்பொலிவுடன் இருக்கும் தாவரம் வேப்பமரம்தான் என நினைத்துக்கொண்டேன்.

செவத்தபெருமாள் சட்டை இல்லாமல் ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு வந்தார். “வாங்க வாங்க, ஏது இந்தப்பக்கம்?” அவர் கொஞ்சம் குழம்பியிருப்பது கண்களில் தெரிந்தது.

“உங்கள ஒரு அவசர விசயமா பாக்கணும்.”

“உள்ள வாங்க.”

உள்ளே சோபாக்கள் மிகப்பெரியவையாக, மிகமிக அலங்காரமானவையாக, ஆனால் அமர்வதற்கு மிக அசௌகரியமானவையாக இருந்தன. நான் சாய்ந்து அமர விரும்பினேன். ஆனால் ஏழடி உயரமானவர்கள்தான் அப்படி அமர முடியும்.

“சொல்லுங்க தம்பி, டீ சாப்பிடுறிகளா?”

“காப்பி…”

“ஏ குட்டி, ஒரு டீயும் ஒரு காப்பியும் கொண்டா… எனக்க மகளாக்கும். கம்ப்யூட்டரு படிக்குதா.”

“ஓ” என்றேன். அந்த பெண் எட்டிப்பார்த்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்து “எஞ்சீனியரிங்கா?” என்றேன்.

“இல்ல, எம்சிஏ”

“நல்லது” என்றேன்.

அவள் புன்னகைத்து உள்ளே சென்றாள். சிறிய வரிசையான வெண்பற்கள், கரிய ஈறுகளுடன் அந்தச் சிரிப்பும் நெல்லைக்குரியது.

“சொல்லுங்க”

“கடைய விருத்தி பண்ணலாம்னு இருக்கேன்… கொஞ்சம் பணம் வேணும்”

“நல்லது, குடுக்கலாமே… நம்ம பணம். அது எங்க இருந்தா என்ன? ஏஜென்ஸி ரினியூ பண்ணுதிகளோ?”

“இல்ல, ரீடெயில் பண்ணலாம்னு இருக்கேன். அந்த எடம் அதுக்குண்டானது. ஏஜென்ஸி எடுத்தா பெரிய மேனேஜ்மெண்ட் சிஸ்டம் வேணும்… பெரிசாத்தான் பண்ணணும். அது இப்ப நமக்கு வாய்ப்பில்ல.”

“சரிதான்”

“கடைய எடுத்துக் கட்டணும். ஏஜென்ஸிக்காரனுகளுக்கு அட்வான்ஸ் குடுக்கணும்”

“எவ்ளவு தேவைப்படும்?”

“முப்பது” என்றேன்.

அவர் ஒருகணம் என்னை நிலைத்து பார்த்து “அதாவது பளைய பதினஞ்சோடு சேத்து முப்பது இல்லியா?”

“இல்ல, மேக்கொண்டு முப்பது. மொத்தம் நாப்பத்தஞ்சு… செரி, முப்பத்தஞ்சு. மொத்தம் அம்பதா இருக்கட்டும்”

அவர் என்னை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். பிறகு “வட்டிக்கணக்கெல்லாம் தெரியும்லா?” என்றார்.

“தெரியும்”

“மூணுமாசத்துக்குமேலே வட்டி நின்னா ஆளு வந்திரும்… மணி வருவான். இல்ல அதுக்கும் மேலே ஆளிருக்கு”

“குடுத்திருவேன்”

“வீட்டிலே பொட்டச்சிங்க மட்டும்தான் இருக்காளுக, யாவகம் இருக்குல்லா?”

அவர் அதை என்னைப் பார்க்காமல் தரையை பக்கவாட்டில் பார்த்துக்கொண்டு கேட்டார். கன்னங்கள் சற்றுக்கோணலாக இழுபட்டிருந்தன.

“ம்” என்றேன்.

“அம்பது வேண்டாம்… அஞ்சு குறைச்சுக்கிடுவோம். அம்பதுக்குமேலே போனா வேற குரூப்பாக்கும் இங்க குடுக்கல் வாங்கல். எல்லாம் ஒரே பணம்தான்னு வைங்க.”

“சரி”

நான் ஏன் அப்படி ஒரு தொகையைக் கேட்டேன் என ஒருபக்கம் என் அகம் வியந்தது. என்னவானால் என்ன, வாங்க முடிவெடுத்துவிட்டேன். முதலீடு பெரிதானால் லாபமும் பெரிதாக இருக்கலாம்.

அவர் “செக்கு குடுப்பேளா?” என்றார். “வீட்டுப்பத்திரம் அடமானத்திலே இருக்குன்னு தெரியும்”

“குடுத்திருதேன்.”

“ஏற்கனவே நாலு லீப்பு குடுத்திருக்கீக. இதுக்கு மேக்கொண்டு எட்டு குடுக்கணும். அதுக்குமேலே கொஞ்சம் டம்மி ரசீது இருக்கு. அதிலேயும் கையெளுத்து போட்டுக்குடுக்கணும்… நாம கோர்ட்டுக்கெல்லாம் போறதில்லை. அதுக்கு எங்க நேரம்? ஆண்டுக்கணக்கா இளுப்பான். ஆனா நடமொறை இதாக்கும்.”

“குடுத்திருதேன்”

நான் செக்லீப் கொண்டு சென்றிருந்தேன். கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தபோது அந்தப்பெண் காபி கொண்டுவந்தாள். நான் அவளைப் பார்த்து புன்னகைத்து “எந்த காலேஜ்?” என்றேன்.

“சேவியர்ஸ்”

“நானும் அங்க படிச்சிருக்கணும்… மெட்ராஸ் போயிட்டேன்.”

“மெட்ராஸிலே எங்க?”

“பாமால…”

“நானும் மெட்ராஸிலே படிக்கேன்னு சொன்னேன். எனக்கு அண்ணா யூனிவர்சிடியிலேயே கெடைச்சிருக்கும். அப்பாதான் வெளியூரு வேண்டாம்னுட்டாக.”

“பொட்டக்குட்டிக கண்முன்னாடி நிக்கணும்ங்க, காலம் கெட்டுக்கிடக்கு. என்னங்குதீக?” என்றார் செவத்த பெருமாள்.

“ஆமா” என்று செக் லீப்களை கொடுத்தேன்.

அவர் மகளிடம் நான் பேசியதுமே அவர் கொஞ்சம் இலகுவானதுபோல் இருந்தது. “தம்பி தொளில் எல்லாம் பாத்து எடுத்து செய்வீகன்னு நினைக்கேன். தொகை பெரிசு… வட்டியும் ஜாஸ்தி. நீங்க படிச்சவுக. உங்களுக்கு நான் ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல.”

“பாத்துக்கிடுதேன்”

“இந்த வட்டித்தொளிலும் நாத்தப்பிசினஸாக்கும். இந்தத் தொளிலிலே நீங்க யாரை கண்ணால பாக்குதிகளோ அவங்க ஒரு ஆளே இல்லேன்னு நினைங்க. நாங்க எங்க பணத்தை சுத்துக்கு விடலை. இது பெரிய பெரிய மொதலைங்களுக்க பணம். எனக்கு இதிலே ஒரு பர்சண்டேஜுதான். அதுக்குள்ள வசூலுக்கான செலவையும் களிச்சா அரப்பர்சண்டேஜு… நானும் இதிலே சிக்கிக்கிட்டிருக்கவந்தான். நான் இதவிட்டு வெளியே போகமுடியாது. வெளியே பலகோடி நிக்குது. அத மீக்கணுமானா மேக்கொண்டு உள்ள பணம் போட்டுக்கிட்டே இருக்கணும். புலிமேலே யாத்திரன்னு வைங்க. இறங்கினா புலி நம்மளத்தான் முதல்ல திங்கும்… புரியுதுல்ல?”

“ஆமா”

“அப்ப இதில நமக்கு உறவு ,சொந்தம், பந்தம் ,பாசம் ஒரு மயிரும் இல்ல. இது வேட்டக்காடாக்கும். கொல்லணும், இல்லேன்னா சாகணும். எரக்கம் பாக்குத ஓநாய் பட்டினி கெடந்து சாகும்னு எனக்கு தொளில் சொல்லிக்குடுத்த ராமசாமித் தேவரு அடிக்கடிச் சொல்லுவாரு… பதிமூணு வருசம் முன்னாடி குடும்பத்தோட ராமேஸ்வரம் போயி கடலிலே குதிச்சு செத்துட்டாரு. எதுக்குச் சொல்லுதேன்னா, இப்ப நாம பேசிக்கிட்டிருக்கிறதனாலே நமக்குள்ள ஒரு இசைவும் கெடையாது பாத்துக்கிடுங்க. உங்க சங்க அறுக்கணுமானா ஒரு நிமிசம் யோசிக்காம அறுக்கச் சொல்லிப்போடுவேன்…”

“புரியுது”

“அதுமட்டுமில்ல, உங்க தங்கச்சிங்கள புடிச்சு விக்கணுமானாலும் செய்வேன்.” அவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். குழிவிழுந்த கண்கள், ஒரு கண்வெள்ளையில் கரிய புள்ளி. நரைமுடி எழுந்து நின்ற புருவம்.

நான் தலையசைத்தேன்.

“அப்ப செரி, பாப்பம். செந்தூரான் அருள் இருக்கட்டும்.”

நான் கைகூப்பி எழுந்துகொண்டேன். அவரும் எழுந்து வாசல்வரை வந்தார். வேட்டியை அவிழ்த்து கட்டி செருகியபடி “நல்லது” என்றார்.

நான் சாலைக்கு வந்தபோது ஏனோ புன்னகைத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டி உடைந்து சீழெல்லாம் வெளியேறியது போல இருந்தது மூளை. செவி வழியாக குளிர்ந்த காற்று தலைக்குள் புகுந்து சுழல்வதுபோல் இருந்தது. வழியில் கிருஷ்ணப்ப கோனார் கடையில் புகுந்து ஒரு ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தேன். அங்கே கேட்டுக்கொண்டிருந்த ‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் நாணும் விழியிலே’ பாட்டுக்கு என்னையறியாமலேயே தாளமிட்டேன்.

இரண்டுநாட்கள் கழித்து சுடலைப்பாண்டி மாமா என்னிடம் “வாங்கிட்ட போல?” என்றார்.

“ம்” என்றேன்.

அவர் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. அன்று ஃபேப்ரிக்கேட்டர் வந்து கடையை அளவெடுத்தார். வடிவேலுச் செட்டியார் அதை வந்து பார்த்தார். ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார்.

நான் ஒருமாதகாலம் பெரும்பாலும் அலைந்துகொண்டிருந்தேன். நெல்லைக்குள், மதுரையில். பன்னிரண்டு ஏஜென்ஸிகளுக்கு முன்பணம் கொடுத்து சோப்பு, பவுடர், காஸ்மெட்டிக்ஸ், ஹார்லிக்ஸ் என எழுபது பொருட்கள் ‘சப்ளை’ எடுத்தேன். அவற்றை நான் முழுவிலை கொடுத்து வாங்கியதற்குச் சமம்தான். விற்றே ஆகவேண்டும். சும்மா ஃபோனில் விசாரித்ததுமே இருநூற்றைம்பது பொருட்களுக்கு சப்ளை கொடுத்துவிட்டனர். எந்தப் பொருளுக்குமே கிராக்கி இல்லை. சில பொருட்கள் விற்காதவற்றை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்னும் அடிப்படையில் கொடுக்கப்பட்டன, அவை எல்லாமே போலிப்பொருட்கள். அவற்றில்தான் பெரிய லாபம். பெரும்பாலான பொருட்கள் விற்கவில்லை என்றால் இருபது முப்பது சதவீதம் விலை குறைத்து திரும்ப எடுத்துக் கொள்வார்கள் என்னும் ஒப்பந்தம்.

கடையில் ரேக்குகள், வினைல் போர்டு, நியான் போர்டு எல்லா வேலையும் முடிய ஒரு மாதமாகியது. அதன்பின் சரக்குகள் வர ஆரம்பித்தன. மாரியுடன் இன்னொரு பையனையும் வேலைக்கு எடுத்தேன். விஜய் ரசிகனாகிய பரமசிவம் தன்னை ’விஜய்பரம்’ என அறிமுகம் செய்துகொண்டான். ஆனால் சூட்டிகையான பையன்.

கடை தொடக்கவிழாவை ஒரு வெள்ளிக்கிழமை கொஞ்சம் எளிமையாகவே நடத்தினேன். காலையில் சென்று காந்திமதி நெல்லையப்பரை கும்பிட்டுவிட்டு வந்தேன். என் அம்மாவும் தங்கைகளும் வந்திருந்தனர். சொந்தக்காரர்களாக சண்முகம் மாமாவும் கிருஷ்ணன் மாமாவும் மட்டும்தான் வந்திருந்தனர். அண்டையிலிருந்த கடைக்காரர்களை அழைத்திருந்தேன். ஆளுக்கொரு காபி, லட்டு, காரச்சேவு. கிருஷ்ணசாமி ஐயர் வந்து ஒரு சுருக்கமான கணபதி ஹோமம் செய்தார். என் அம்மா குத்துவிளக்கேற்றி கடையைத் திறந்துவைத்தார். எல்லாருமே கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தனர். என் தங்கைகள் மட்டும்தான் உற்சாகமாக இருந்தார்கள்.

செவத்தபெருமாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து நானும் பையன்களும் மட்டும் கடையில் அமர்ந்திருக்கையில் வந்தார். அப்போது சாயங்காலம் ஐந்து மணி. முதல் நாளே முப்பத்திரண்டாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருந்தது.

செவத்தபெருமாள் என்னிடம் “கொஞ்சம் லேட்டாய்ப்போட்டுது… ஒரு சோலியா போயிருந்தேன். மட்டுமில்ல, நம்மளப் பாத்தா இங்க உள்ளவனுக மூஞ்சி காட்டுவானுக… நாம என்ன சொல்லுதது? நல்லது நடக்கட்டும். என்னப்பன் செந்தூரான் துணை உண்டு” என்றார்.

“எல்லாம் பெரியவுங்க ஆசி” என்றேன்.

மறுநாள் கடையை மூடும்போது கணக்கிட்டபோது நாற்பத்தெட்டாயிரம் ரூபாய் விற்பனை. பாதிநாள் விற்பனை அது. விடுமுறைநாள்கூட அல்ல. தோராயமான கணக்கின்படி பத்துசதவீதம் நிகரலாபம் நிற்கும். அதாவது ஐந்தாயிரம். அப்படியென்றால் நன்றாக விற்றால் சாதாரணமாக ஒருநாளில் பத்தாயிரம் கூட லாபமே நிற்கும். வட்டிகட்டி மிச்சமும் கணிசமாக இருக்கும். கடைவீதியில் உண்மையில் எவர் எவரிடமிருந்து பிடுங்குகிறார்கள் என்பதே மர்மம்தான்.

தொடக்கத்தில் பிராண்டட் பொருட்களே அதிகம் விற்றன. மெல்ல மெல்ல விற்பனை வேரூன்றினால் மற்ற பொருட்களும், போலிப்பொருட்களும் நிறைய விற்கும் எனத் தெரிந்தது. அவற்றின் லாபம் இருபத்தைந்து சதவீதம் வரை. ஓராண்டில் ஒருநாளில் முப்பதாயிரம் வரைக்கும்கூட லாபம் பார்க்க முடியும். சுடலைப்பாண்டி மாமா விற்கும் உள்ளாடைகள் மிகமிகத் தரமற்றவை. பெரும்பாலும் கழிவுச்சரக்குகள். அவற்றை வாங்கி பளபளப்பாக பேக் செய்து, போலி பிராண்ட் முத்திரைகளுடன் விற்கும் நிறுவனங்கள் உள்ளன. பாதிக்குப் பாதி லாபம் அதில். என் கடையில் சாதாரணமான ஒரு பிளாஸ்டிக் பொருளுக்கு ஐநூறு ரூபாய் விலை இருந்தது. அடக்கவிலை முப்பதுரூபாய் கொண்ட சீனத்தயாரிப்பான பிளாஸ்டிக் பொம்மையை நூற்றியிருபது ரூபாய்க்கு விற்றேன். மூன்று நாட்கள்கூட அது உடையாமலிருக்காது, அந்தக் குழந்தைதான் அடிவாங்கும்.

அந்த முதற்சில நாட்களில் நான் அடைந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். கனவுகளில் இருந்து கனவுகள். என்னையே நான் பாராட்டிக்கொண்டேன்.

ஒருவாரம் கழித்து சுடலைப்பாண்டி மாமாவே என்னிடம் “நான் எனக்க ஏவாரத்தை வைச்சு சொன்னேண்டே… உனக்கு நல்லா எகிறி அடிக்குதுன்னு நினைக்கேன். நீ ஜெயிச்சா மாமாவுக்கு அதில சந்தோசம்தான்” என்றார்.

நடராஜ நாடார் “எடம் அப்டி… நானும் அப்பவே நினைச்சேன்… நல்ல முக்கு வளையுத எடம். நேராட்டு உள்ள ஏறிடுதான். உள்ள நிறைய நேரம் நின்னு அலசி ஆராய்ஞ்சு வாங்க நேரமில்ல. அதனாலே சட்டுன்னு வாங்கிட்டு போயிடுதான்…” என்றார்.

வடிவேலுச் செட்டியார் “ஒரு நாளுக்குள்ள முந்நூறுபேரு உள்ள வாறானுகன்னா உள்ள கணக்கிலே ஏவாரம் சுமார்னுதான் சொல்லணும்…ஆனா வாறவனுக என்னமாம் வாங்கிருதானுக. புள்ளகுட்டியோட வாறானுக. கிராமத்துப் பொம்புளைங்க ஜாஸ்தி. பெரும்பாலும் வெளியூரு… அவனுக அடுத்தாப்ல நெல்லையப்பன பாக்க வந்தா உண்டு இல்லேன்னா இல்ல. பொருளு எப்டி இருந்தாலும் கம்ப்ளெயிண்டு வராது” என்றார்.

கிருஷ்ணசாமி “வே, அப்ப தேர்த்திருளாவிலே புது வீடு கட்டீருவீருன்னு தோணுதே” என்றார்.

“வட்டிய ஒளுங்கா கட்டாதீரு… நீரு கொளிக்குதீருன்னு செவத்தபெருமாளு நினைச்சுக்கிடுவாரு… இளுத்தடிக்கணும். கண்ணாலே தண்ணி விடணும்… மூணு நாலு தவணையா மாசம் முளுக்க இளுத்து இளுத்து கட்டணும்…” என்று சுப்ரமணிய பிள்ளை சொன்னார். “நல்ல ஏவாரி லாபத்தை வெளியே காட்டமாட்டான்… எவன் ரொம்பப் புலம்புதானோ அவந்தான் சம்பாரிக்கான்னு அர்த்தம் கேட்டுக்கிடும்”

நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேன். ஆனால் மாதந்தோறும் வட்டியை சரியாக ஒன்றாம் தேதி கட்டிக்கொண்டே இருந்தேன். ஆறுமாதத்தில் மூன்று முறை நான் வாங்கிய பொருட்களை முழுமையாக விற்று புதிய பொருட்களை வாங்கி விட்டேன். அதன்பின் மீண்டும் செவத்தபெருமாளை போய் பார்த்தேன். இன்னும் ஒரு இருபது லட்சம் வாங்கினேன். அதை வைப்புநிதியாக கட்டி மேலும் பிராண்டட் பொருட்களை வாங்கினேன். அந்தப் பொருட்களை காட்டி பிராண்ட் இல்லாத பொருட்களை நூறுக்கும் மேற்பட்ட ஏஜென்ஸிகளில் இருந்து வாங்கினேன்.

என் கடை முழுக்க பொருட்கள். நடனமாடுவது போலத்தான் உள்ளே செல்லவேண்டும். ஒரு கம்ப்யூட்டர் வாங்கி டெய்ஸி என்னும் பெண்ணை வேலைக்கு வைத்து கணக்குகளை அதில் ஏற்றினேன். சாம் என்ற இன்னொரு பையனும் வேலைக்கு வந்தான். ஒரு கட்டத்தில் மதியமும் விற்பனை நடக்க ஆரம்பித்தது. காலை எட்டுக்கு கடைதிறக்க ஆரம்பித்தேன். பிறகு ஆறரைக்கே திறக்கலானேன். காலைப்பூஜை முடிந்து கோயிலில் இருந்து வருபவர்கள் என் கடைக்குள் நுழையலானார்கள். உச்சகட்டமாக ஒருநாளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகியது.

தேர்விழா நெருங்கிக்கொண்டிருந்தது. “தேர்த்திருளாலே நீ மீன்பிடிக்கவேண்டாம்டே, மீனு கூட்டம்கூட்டமா உன் வலைக்குள்ள வந்து விளும். அப்டியே நேரா அதுகளே சட்டிக்குள்ள போயிரும்” என்று சிவலிங்கம் சொன்னார்.

மொத்த கடைவீதியிலேயே என்னை அறியாத எவருமில்லை என்றாயிற்று. நான் தெருவில் சென்றால் பலர் வணக்கம் சொன்னார்கள். பலர் நின்று ஓரிரு வார்த்தை பேசினார்கள். பழுத்த கண்களுடன் நடராஜ நாடார் என் தோள்மேல் கைவைத்து சொன்னார் “நல்லா போகுதுன்னு சொன்னாங்க. சந்தோசம். அந்த எடம் அப்டியாக்கும். அப்பாகிட்ட நான் சொல்லிட்டே இருந்தேன், கொஞ்சம் பணத்த போட்டு விருத்தி பண்ணினா அள்ளிக்குடுக்கும்னு. கேக்கல்ல, இப்ப நீ ஜெயிச்சுட்டே.”

தேர்த்திருவிழா நாள் அறிவிக்கப்பட்டது. நான் எல்லா ஏஜென்ஸிகளிடமும் பேசி மேலும் பொருட்களை கொண்டுவந்து நிறைத்தேன். கடைக்குப்பின்னால் இருந்த பழைய வீட்டை வாடகைக்கு வாங்கி கதவுகளை கொஞ்சம் வலுப்படுத்தி கொடவுனாக ஆக்கிக்கொண்டேன். அங்கே ஒரு வாட்ச்மேனையும் நியமித்தேன். திருவிழாவில் விற்கத்தக்க மலிவான அழகுப்பொருட்களை வாங்கி கொடவுனை நிரப்பினேன்.

அந்நாட்களில் என் உடலே பரபரப்பாக இருந்தது. இரவு சென்று படுத்தால் தூக்கம் வராது. கணக்கு பார்க்காமல் தூங்க முடியாது. கணக்கு பார்த்தால் உள்ளம் கிளர்ச்சி அடைந்து தூக்கம் இல்லாமலாகும். திட்டங்கள் திட்டங்களாக மண்டை ஓடிக்கொண்டே இருக்கும். ரகசியமாக கொஞ்சம் குடிக்க ஆரம்பித்தேன். என் படுக்கையறையில் பீரோவுக்குள் வாங்கி வைத்திருந்தேன். பிளேக்லேபில் விஸ்கி. ஒரு லார்ஜ் தண்ணீர் விட்டு குடித்துவிட்டு படுத்தால் அப்படியே தூங்கிவிடமுடியும். அம்மாவுக்கு தெரியாமல் குடிக்க வேண்டும் என்பதனால் இரவு சாப்பிட்ட பிறகுதான் குடிப்பது.

ஆனால் காலையிலேயே எழுந்துவிடுவேன். ஐந்தரைக்கே விழிப்பு வந்துவிடும். குளித்து உடைமாற்றி பைக்கில் ஏறும்போது ஆறரை. ஏழுமணிக்கு கடையில் இருப்பேன். என் உடல் ஆறுமாதத்தில் ஏழு கிலோ கூடிவிட்டிருந்தது. தொப்பை, தாடையில் பை. தூக்கமின்மையால் கண்கள் தளர்ந்திருந்தன. கன்னத்தில் ஒரு கருமை பாசிபோல படிந்திருந்தது. கடைவீதியில் இருக்கும் அத்தனை வணிகர்களுக்கும் உரிய அதே முகம் அமைந்துவிட்டது.

ஒரு வெள்ளிக்கிழமை காலை நான் என் கடைக்கு வந்தபோது முதலில் ஒன்றுமே புரியவில்லை. என் கடை அங்கு இல்லை. அதெப்படி என ஒரு கணம் திகைத்த பின்புதான் புரிந்துகொண்டேன், ஒரு மாபெரும் விளம்பரத்தட்டி என் கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்தது. பூர்ணமங்கல்யா பட்டுமாளிகையின் விளம்பரத்தில் நான்கு நடிகைகள் விரித்த சிறகுபோல வண்ணப்பட்டாடைகளை வீசி சிரித்தபடி நின்றிருந்தனர். கடையை அந்த தட்டி முழுமையாகவே மூடியிருந்தது.

(மேலும்)


பாடலில் வரியா? இசையா?

$
0
0

அன்புள்ள ஜெ,

உங்கள் ராஜா- ரஹ்மான் கருத்துக்களை ஒட்டி வந்த விவாதங்கள், வசைகளைப் பார்த்திருப்பீர்கள். இதிலும் உங்களை பலபேர் சங்கி என்று சொல்லி வசைபாடியிருந்தார்கள். நான் உங்களிடம் அடுத்த சர்ச்சை பற்றிக் கேட்கவிரும்புகிறேன். ஒரு பாடலில் அடிப்படையாக இருப்பது இசை மட்டும்தானா? கவிதைக்குத்தானே இசை அமைக்கப்படுகிறது? கவிதைதானே நினைவில் நீடிக்கிறது?

ராம்குமார் மெய்யப்பன்

*

அன்புள்ள ராம்,

நான் இவ்விவாதம் சார்ந்து விரிவாக எழுதவிரும்புகிறேன். இத்தகைய தருணங்களில் நான் எழுதும் நீண்ட கட்டுரைகளைக் கண்டு முகநூலில் முப்பது வார்த்தை வாசிக்கும் கும்பல் வளவளவென்று இருக்கிறது, நீட்டி முழக்கியிருக்கிறார், சுருக்கமாகக் கருத்தைச் சொல்லலாமே என்றெல்லாம் சொல்வதை எனக்கும் அனுப்புவார்கள்.

எனக்கு இவர்களின் வெட்டிவிவாதங்களில் எந்த ஆர்வமும் இல்லை. இதில் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. நான் இந்த வகை விவாதங்களை எடுத்துக்கொள்வது ஒரே நோக்கத்துடன்தான் – இதன் வழியாக நான் இலக்கியம் சார்ந்து சிலவற்றைப் பேசுகிறேன். வரலாற்றைப் பேசுகிறேன். சில ஆளுமைகளைப் பற்றிச் சொல்கிறேன். அதற்கான சந்தர்ப்பம் இது.

இந்தவகை சர்ச்சைகளில் திளைக்கும் கூட்டத்தில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு இதெல்லாம் பொருட்டில்லை. ஆனால் இந்த விவாதம் வழியாக இக்குறிப்புகள் இலக்கியத்திற்குள் வர வாய்ப்புள்ள சிலநூறு பேரைச் சென்றடையும். அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்.

சங்கி வரிசையில் புதிய ‘ரெக்ரூட்மெண்ட்’டுகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கொஞ்சநாள் முன்னால் சமஸ் ’அட்மிட்’ செய்ய்டப்பட்டார். நான் அவருக்கு ‘வெல்கம்’ சொன்னேன். இப்போது ரஞ்சித் வந்திருக்கிறார். அவருக்கும் நல்வரவு. மோடியை புகழ்ந்து தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த மு.கருணாநிதி அவர்களோ, மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்த வைரமுத்துவோ சங்கி ஆகமுடியாது, அவர்களுக்கு சாதி இன்ஷ்யூரன்ஸும் அரசியல் காப்பீடும் இருக்கிறது. இதில் இருந்தே இது எவ்வளவு கடினமான தேர்வுமுறை என்பது புரிந்திருக்கும்.

*

பாடலுக்கு இசை எந்த வகையில் முக்கியம்? முதலில் பாடல்  என்பது பொத்தாம் பொதுவான ஒரு தலைப்பு. எந்த ஓர் அறிவார்ந்த விவாதத்தையும்போல பாடல் என்பதை பலவாறாகப் பிரித்துப் பார்க்கவேண்டும். நம் மரபில் பாடல் என்பது என்ன? எப்படி அது வளர்ந்து வந்தது?

பண்டைய இலக்கியத்தில் ‘செய்யுள்’ எனப்பட்ட எல்லாமே பாடல் அல்லது பாட்டு என்றே சொல்லப்பட்டன. ஏனென்றால் அவை எல்லாமே பாடப்பட்டன. சங்கப்பாடல்கள் எல்லாமே பாடப்பட்டவை. ஒவ்வொரு செய்யுள் வடிவுடனும் அதற்கான ஓசையும் வாத்தியமும் இணைந்திருந்தது. உதாரணமாக அகவற்பா அகவல் ஓசை கொண்டது. அதற்கான வாத்தியம் கிணைப்பறை.

செய்யுளில் அறைதலோசை அதாவது ஆணித்தரமாக கூறும் ஓசையும் அமைப்பும் கொண்டது வெண்பா.  அதற்கு தாளவாத்தியம் இல்லை. அதுகூட பாடல் அல்லது பாட்டு என்றே சொல்லப்பட்டது.

நாம் இன்று பார்க்கையில் சிலப்பதிகார காலகட்டத்தில்தான் செய்யுளில் உரை, பாட்டு என்னும் வேறுபாடு தெரியவருகிறது. சிலப்பதிகாரம் பாட்டு இடையிட்ட உரையுடைச் செய்யுள் (நாட்டுதும் நாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்) என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறது. அதாவது அது செய்யுளில் அமைந்தது. அச்செய்யுளில் உரையும் பாட்டும் உள்ளது. கானல்வரி முதலியவை பாட்டு. கதைசொல்லும் பகுதி உரை. ஏறத்தாழ இக்காலகட்டத்தில்தான் இறையனார் அகப்பொருள் போன்ற உரைநடைநூல்களும் உருவாயின.

ஆனால் சம்ஸ்கிருதத்தில் தொன்மையான காலகட்டத்தில்யே பாட்டு – உரைநடை என்னும் பிரிவினை இருந்துள்ளது. கத்யம் என்பது உரைநடை. பத்யம் என்பது செய்யுள். காவ்யம் என்பது கவிதைச் செய்யுள். கீதம் அல்லது கீதை அல்லது கீதிகை என்பது பாடல்.  கத்யம் என்பது அதற்கான ஒலியமைப்பு அதாவது சந்தம் (சந்தஸ்) கொண்டது. கீதம் இசையுடன் இணைந்தது. பகவத் கீதை இசைச்செய்யுள். அப்படி பல கீதைகள் உள்ளன. மிகத்தொல்காலத்திலேயே பழைய சம்ஸ்கிருதத்தில் உரைநடை முதன்மை மொழிவடிவமாக இருந்தது. உபநிடதங்களில் ஐதரேயம் முதலிய முதற்கட்ட நூல்கள் உரைநடையில் அமைந்தவை.

தமிழ் தொல்காலத்திலேயே பண்ணுடன் இணைந்தே இருந்தது.

கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து 

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் 

என்று திருவிளையாடற்புராணம் சொல்கிறது. நெற்றிக்கண்ணனாகிய சிவன் தமிழ்ச்சங்கங்களின் தலைமையாக அமர்ந்து உருவாக்கிய தமிழானது பண்ணுடன் சேர்ந்தே உருவாக்கப்பட்டது என்கிறது புராணம். இது தமிழின் ஒரு தனிச்சிறப்பாக முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பண்ணுடன் இசைந்த தன்மை என்பது தமிழின் ஒலியிசைவையே குறிக்கிறது.  ஆகவே தமிழில் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரும்பாலான பண்டைய இலக்கியங்களில் ஓர் இசைத்தன்மை உள்ளுறைந்துள்ளது. அதை பாணர்கள் பாடினர். விறலியர் அதற்கு ஆடவும் செய்தனர். ஆனால் அதை இன்றைய பொருளில் பாடல் என கொள்ளவேண்டியதில்லை. தாளத்துடன் சொல்லுதல் (chanting) அல்லது ஒரு குறிப்பிட்ட மெட்டில் சொல்லுதல் (reciting) என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதற்கப்பால் இசைத்தமிழ் என ஒன்று நமக்கிருந்தது. அது வரிப்பாடல் எனப்பட்டது. சிலப்பதிகாரத்தில் வரிப்பாடல் பாடியலைவதையே வாழ்வெனக் கொண்டவர்கள் ஒரு தனிச்சமூகமாக வாழ்ந்ததன் குறிப்பும் உள்ளது. கானல்வரி, வேட்டுவ வரி போன்ற பாடல்கள் சிலம்பில் உள்ளன. குரவை என்னும் பாடல் வடிவமும் உள்ளது (ஆய்ச்சியர் குரவை) அது வெறும் பாடல் அல்ல. கூத்துடன் சேர்ந்து இசைக்கவேண்டிய பாடல். அந்த கூத்து குரவைக்கூத்து எனப்பட்டது. இன்றைய வடிவங்களுடன் ஒப்பிட்டால் இன்று கீர்த்தனை என்று சொல்வது வரிப்பாடல். இன்று நடனத்துக்கான பதம் என்று சொல்லப்படுவது குரவை போன்ற பாடல்கள்.

இவை எப்படி எழுதப்பட்டிருக்கும்? இவற்றை எழுதியவரே இசையையும் அமைத்தார். அல்லது அமைத்த இசைக்கேற்ப எழுதினார். இசைமுன்னோடிகளான  முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளை. அவர்களுக்குப் பின் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள். அவர்களுக்கு பின் கோபாலகிருஷ்ண பாரதியார். இவர்களெல்லாருமே இசையையும் பாடலையும் சேர்த்தே உருவாக்கியவர்கள்.

நமக்கு மேலே சொன்ன கீர்த்தனை, பதம் என்னும் இரு வகைமையிலும் ஏராளமான பாடல்கள் கிடைக்கின்றன. கீர்த்தனைகள் அவற்றை உருவாக்கியவர்களின் மாணவர் மரபால் தொடர்ந்து பாடப்பட்டு காலத்தைக் கடந்து வந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சேறின. பதினேழாம் நூற்றாண்டு முதல் பிற் சதிர் என்னும் ஆடலுக்குரிய பதங்கள் பல நினைவில் நீடித்தன. பின்னாளில் பல பதிவுசெய்யப்பட்டு நூல்வடிவாயின. அவற்றை ஒட்டுமொத்தமாக இசைப்பாடல்கள் என்கிறோம்.

ஆனால் இங்கே புழங்கிய பதங்களில் மிகமிகச் சிலவே எஞ்சியுள்ளன. செவ்விலக்கியங்களைச் சேகரித்த உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை மரபும் சரி;  நாட்டார் இலக்கியங்களைச் சேகரித்த கி.வா. ஜகந்நாதன், மு. அருணாசலம் , நா. வானமாமலை மரபும் சரி இந்தப் பதங்களை ஏன் சேகரிக்கவில்லை?

காரணம், அவை சிற்றின்பம் மேலோங்கியவையாக இருந்தன என்பதுடன் அன்றிருந்த பரத்தமை வாழ்க்கை சார்ந்தவையாகவும் இருந்தன. (ஓர் உதாரணம் இந்தப்பதிவில் உள்ளது) சதிர் ருக்மிணி தேவி அருண்டேல் முயற்சியால் பரதநாட்டியமாக ஆனபோது அதில் இருந்து பரத்தமை முழுமையாக விலக்கப்பட்டது. பதங்களின் மனநிலை, சொல்லாட்சி ஆகியவை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டன. பதங்களை கீர்த்தனைகளின் வடிவுக்கு மாற்றினர். சிற்றின்பத்திற்குப் பதில் பக்தி முன்வைக்கப்பட்டது.

(என் பார்வையில் இந்த மாற்றம் சிறந்ததே. சதிரில் இருந்த பொது மனநிலையான பரத்தமை அன்றைய தாசிவாழ்க்கையின் வெளிப்பாடு. பெண்களை சுரண்டி, அடிமையாக்கி, சுரண்டி, இழிவு செய்யும் அமைப்பு அது. அதை களைந்தது பெரும் முன்னகர்வு. சிற்றின்பத்தை பக்தியுடன் கலந்தது அன்றைய சூழலுக்கு அந்நாட்டியத்திற்கு ஒரு மதிப்பை உருவாக்கி அளித்தது. பின்னாளில் அந்நாட்டியம் அதன் பழங்கால மனநிலைகளில் இருந்து மீண்டபின் காதல் அல்லது காமம் அதற்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம். அது பெரிதாக நிகழவில்லை)

அன்றைய செவ்வியல் மனநிலை கொண்டவர்களுக்கு பதங்கள் ஒழுக்கக்கேடாகப் பட்டன. அன்றைய இடதுசாரிகளுக்கு இவை ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகப் பட்டன. இருசாராரும் அவை காலத்தில் மறையவேண்டுமென விரும்பினர். என்.எஸ்.கிருஷ்ணன், சி.என்.அண்ணாத்துரை, ப. ஜீவானந்தம் என பலரும் இப்பாடல்க்ஜளுக்கு எதிராகக் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கின்றனர். மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் இப்பாடல்களை அருவருத்து எழுதியுள்ளார்.

ஆனால் இவற்றை சேகரிக்கவேண்டும் என்னும் கனவு கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோருக்கு இருந்தது. அவர்களின் கடிதங்களில் இவை பற்றிய குறிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.இவை ஒருவகையான பண்பாட்டு ஆவணங்கள் என்றும், இவை நம் பழையகால வாழ்க்கை என்பதனால் அருவருக்கவேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இத்துடன் நமக்கு ஒரு மிகப்பெரிய நாட்டார்ப்பாடல் (Folk) மரபு இருந்தது. அது மூன்றுவகை. ஒன்று, உழைப்புடனும் வெவ்வேறு சடங்குகளுடனும் தொடர்புகொண்ட தனிப்பாடல்கள். இரண்டு, கூத்துடன் இணைந்த பாடல்கள். மூன்று, நாட்டார்க்காவியங்களாக அமைந்த பாடல்கள். காவியங்களாக அமைந்த நாட்டார்ப்பாடல்கள் செய்யுள்போல தாளத்துடன் சொல்லப்பட்டவை என்றாலும் அவற்றில் பல இசைப்பாடல்களைப் போன்றவை (உதாரணம்: உலகுடையபெருமாள் கதை)

கீர்த்தனை, பதம், நாட்டார்ப்பாடல் என்னும் இந்த மூன்று வகை இசைப்பாடல்களில் இருந்து நம் நாடகப்பாடல்கள் உருவாயின. ஆனால் நாடகமுன்னோடியான சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பாடல்களை கீர்த்தனைகளை நோக்கிக் கொண்டு சென்றார். தமிழின் நாடகங்களில் பபூன், வேலைக்காரன் -வேலைக்காரி போன்ற கதாபாத்திரங்கள் நாட்டார்பாடல்களையும் தாசி போன்ற கதாபாத்திரங்கள் பதங்களையும் பாடினர்.

நாடகப்பாடல் காலத்திலும் பாடலாசிரியரே இசையமைப்பாளர். சங்கரதாஸ் சுவாமிகள் இசைக்குறிப்புடன் பாடலை எழுதுவார் என்று ஔவை டி.கே.ஷண்முகம் பதிவுசெய்கிறார் (எனது நாடகவாழ்க்கை). திரைப்படத்தில்தான் முதல்முறையாக சில பிரிவினைகள் வந்தன. ஒன்று பாடலுக்கு நடிகர் வாயசைக்க இன்னொருவர் பின்னணி பாடுவது. இரண்டு, ஒருவர் எழுதிய பாடலுக்கு இன்னொருவர் இசையமைப்பது.

தொடக்ககாலத்தில் பாடல்கள் எழுதப்பட்டு அவற்றுக்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர். 1950 களிலேயே தமிழில் மெட்டுக்கு எழுதும் வழக்கம் வந்துவிட்டது. ஆனால் அரிதாக வரிகளுக்கும் இசையமைக்கப்பட்டது. உதாரணமாக ஒன்றும் அறியாத பெண்ணோ பாடலுக்கு போடப்பட்ட இசை. நானறிய ஏ.ஆர்.ரஹ்மான்  பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடல் படத்தில் நெஞ்சுக்குள்ளே , மூங்கில் தோட்டம் பாடல்களுக்கு பின்னர்தான் இசையமைத்தார். அவை வைரமுத்து எழுதிய கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.

மலையாளத்தில் மிகப்பெரும்பாலான பாடல்கள் வரிகளுக்கு போடப்பட்ட இசை கொண்டவைதான். புகழ்பெற்ற பாடலாசிரியரான ஸ்ரீகுமாரன் தம்பி ஒரு முறைகூட மெட்டுக்கு இசையமைத்ததில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மலையாளத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சலீல் சௌதுரி மெட்டுக்குத்தான் பாடல் எழுதப்படவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பெரும்பாலான பாடல்கள் மெட்டுக்குப் போடப்பட்ட வரிகள்தான். இளையராஜா முழுமையாகவே மெட்டுக்குத்தான் பாடல் வாங்கியிருக்கிறார். மெட்டு அளிக்கப்பட்டால்தான் தனக்கு பாடலே தோன்றும் என்று என்னிடம் வாலி சொல்லியிருக்கிறார். அதை கண்ணதாசனும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஏன் மெட்டுக்கு இசையமைக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது என நான் இசையமைப்பாளர்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன பதில் இதுதான். பாடலை எழுதியபின் இசையமைத்தால் இசை சுதந்திரமாக புதிய சாத்தியங்களைப் பயன்படுத்த முடியாது. இசை தன்னியல்பாக நிகழ்ந்தபின் அதற்கு சொல்லமைப்பதே எளிதானது. பாடலை முன்னரே எழுதிவிட்டு இசையமைத்தால்கூட அந்தப் பாடலை இசைக்காக கொஞ்சம் மாற்றவேண்டியிருக்கும். ஆகவே பாடலை பிறகு எழுதுவதே வசதியானது.

ஆகவே, தமிழ் சினிமாவில் முக்கால்நூற்றாண்டாக பாடல் என்றால் அது மெட்டு மட்டுமே. மிக அரிதாகவே பாடல் என்றால் வரிகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணதாசன் காலம் வரைக்கும்கூட கண்ணதாசனிடம் இயக்குநரும் தயாரிப்பாளரும் கதை சொல்லி, சந்தர்ப்பங்களுக்கு பாட்டு எழுதி வாங்கும் வழக்கம் இருந்தது. இன்று பாடலாசிரியர் இசையமைப்பாளருக்கு பங்களிப்பாற்றுபவர் மட்டுமே. ஒலிப்பதிவாளர், இசைக்கருவிகளை இசைப்பவர், இசை நடத்துநர் போல ஒருவர். இன்று பாடல் என்பது மெட்டுக்குச் சொல் கோப்பது மட்டுமே. பாடலாசிரியர் கவிஞர் என்றால் கவித்துவத்தை சற்று உள்ளே கொண்டுவர முடியும், அவ்வளவுதான்.

சினிமாப்பாடல் கவிதையா? இல்லை. இசைப்பாடலின் எந்த வடிவமும் நேரடியாகக் கவிதை அல்ல. முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் , தியாகையர் பாடல்களானாலும் சரி. நாட்டியப்பதங்களானாலும் சரி. கண்ணதாசனோ வாலியோ வைரமுத்துவோ எழுதியதானாலும் சரி. அவை பாடல்கள்தான். பாடல்களில் கவித்துவக்கூறு இருக்கலாம், அவை கவிதைகள் அல்ல.

பாடல்களிலுள்ளது ‘எடுத்தாளப்பட்ட கவிதை’ (Applied Poetry) மட்டுமே. கவிதை கவிஞனில் தொடங்கி அவனில் நிறைவுற்று வாசகனின் மீண்டும் நிகழும் ஒன்று. பாடலில் முதலில் இருப்பது மெட்டுதான். (அல்லது ராகம் அல்லது பண் அல்லது பாடல்முறை) அதற்குத்தான் வரிகள் எழுதப்படுகின்றன. கவிதையின்  சொல்லொழுங்கு அதன் உணர்வாலும், பொருளாலும்தான் முடிவாகிறது. கவிதைக்குள் இருக்கும் இசைத்தன்மைகூட கவிஞனில் உருவாகும் உணர்வால் நிகழ்வதே. பாடலில் அதை முழுக்க முடிவுசெய்வது இசைதான்.

ஒரு மெட்டில் உள்ள இசையிலேயே அதன் உணர்வுநிலை உள்ளது. அதைத்தான் அந்த பாடலாசிரியன் வரிகளுக்கு அளிக்கமுடியும். அந்த மெட்டிலேயே அந்த பாடலின் சந்தர்ப்பமும் ஏறத்தாழ இருக்கும். ஆகவே அப்பாடலின் அர்த்தம் அல்லது உள்ளடக்கமும் ஏறத்தாழ மெட்டிலேயே உள்ளது. அதற்கு ஒரு சொல்வடிவை அளிப்பதையே பாடலாசிரியன் செய்கிறான். அவன் அங்கே சொற்களை மெட்டுக்கு சேர்ப்பதையே செய்கிறான். கவிதையை உருவாக்கவில்லை.

ஆனால், பாடலாசிரியன் கவிஞன் என்றால் அந்த வரிகளில் அவன் கவிதையை கொஞ்சம் கொண்டுவந்து சேர்க்கலாம். அவனுடைய கவிதையாக இருக்கலாம். அல்லது மரபிலுள்ள கவிதையாக இருக்கலாம். கண்ணதாசன் மரபுவரிகளை எடுத்தாள்வதுண்டு. வைரமுத்து நாட்டார் வரிகளை எடுத்தாள்வதுண்டு. அவ்வாறு எடுத்தாளப்பட்ட கவிதை அதில் இருப்பதனாலேயே அது நேரடியாகக் கவிதை அல்ல எனப்படுகிறது.

ஆகவே பாடலில் எது முக்கியம் என்ற கேள்விக்கே இடமில்லை. பாடலில் இசையே முதன்மையானது. இசைக்கு ஒரு மொழிப்பங்களிப்பை ஆற்றுவதை மட்டுமே பாடலாசிரியன் செய்கிறான். பாடலுக்கு அதேபோல அப்பாடகனும் தன் குரல், உச்சரிப்பு, உணர்ச்சிகரம் வழியாக பங்களிப்பை ஆற்றுகிறான். அப்படி பல பங்களிப்புகளுண்டு, அதிலொன்றே மொழிப்பங்களிப்பு. அவ்வளவுதான்.

திரைப்படம் என்பது கலவைக்கலை. இந்நூற்றாண்டின் கலை அது. ஆகவே அதற்கு மரபான இலக்கணங்கள் செல்லுபடியாகாது. ஒரு படைப்பின் ஆசிரியர் (author) யார் என்பது கதை, கவிதை எதிலும் சிக்கலான கேள்வி அல்ல. ஆனால் சினிமாவில் பல படைப்பாளிகள் உள்ளனர். அது நடிகரின் கலை. திரைக்கதை எழுத்தாளரின் கலை. ஒளிப்பதிவாளரின் கலை. படத்தொகுப்பாளரின் கலை. கலை இயக்குநர், நடன இயக்குநர் போன்ற பல கலைஞர்கள் அதிலுள்ளனர். பல படங்களில் பாடல், சண்டைக்காட்சிகளுக்கு வெவ்வேறு இயக்குநர்கள் உள்ளனர். ஹாலிவுட்டில்கூட அப்படித்தான். எனில் ஒரு சினிமாவின் ஆசிரியர் யார்?

அந்த வினா பலவாறாக விவாதிக்கப்பட்டது. த்ரூஃபோ (François Truffaut ) அதற்கு ஒரு விளக்கம் அளித்தார். முதலாசிரியர் கொள்கை (Auteur theory) என அது அழைக்கப்படுகிறது. ஒரு சினிமாவுக்கு ஆசிரியர் பலர் இருந்தாலும் அதை முழுமையாக ஒருங்கிணைத்து வடிவத்தை அளிக்கும் இயக்குநரே அதன் முதலாசிரியர் ( Auteur). எவர் எப்படிப் பங்களிப்பாற்றியிருந்தாலும் சினிமா இயக்குநருடையதுதான். இன்று உ ய்லகமெங்கும் அப்படித்தான் பார்க்கப்படுகிறது. ஒரு சினிமாவில் பங்களிப்பாற்றும் பிறர் இயக்குநருக்கு படைப்புரீதியாக உதவுபவர்கள். அவர்கள் தங்கள் ஊதியங்களைப் பெற்றுக்கொள்ளலாம் – தங்கள் பங்களிப்பை கூறலாம். ஒட்டுமொத்தப் படைப்பில் அவர்கள் உரிமைகோரக்கூடாது.

அதைப்போலத்தான் இசையமைப்பும். மேலைநாடுகளில் பாடல்களில் இசையமைப்பு- பாடல் எழுதுவது- பாடுவது மூன்றுமே ஒருவரால்தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. ஆகவே அதன் முதலாசிரியர் எவர் என்னும் வினா எழுவதில்லை. இந்தியச் சூழலில் இங்கே பாடலை அமைப்பவர் இசையமைப்பாளர்தான். அவருக்காகவே பாடல் சொல்சேர்க்கப்படுகிறது. பாடகர் பாடுகிறார். இசைக்கலைஞர்கள் இசைக்கிறார்கள். ஒலிப்பதிவுசெய்பவர்கள் பணியாற்றுகிறார்கள். அறுதியாக ஒரு பாடல் எப்படி இருக்கவேண்டும் என முடிவெடுப்பவரே அதன் முதலாசிரியர் அல்லது  Auteur. அது இசையமைப்பாளர் மட்டுமே. அப்பாடலில் பங்களிப்பாற்றிய பிறர் அதில் தாங்களும் படைப்பாளிகள் என சொல்ல முடியாது, கூடாது

இந்த தெளிவு கலை – விமர்சனத்துறையில் உருவாகி எழுபதாண்டுகள் கடந்துவிட்டன. நம் நீதிமன்றங்களில் இன்னும் இந்த வகையான புரிதல்கள் சென்று சேரவில்லை. Auteur என்பதையே அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதையே அங்கே நிகழும் விவாதங்கள் பற்றிய செய்திகள் காட்டுகின்றன

ஜெ

முதல்வாசல்

$
0
0

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

“கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” வியாசர் உடைந்து பேசிக்கொண்டிருக்கையில் சாத்தன் புன்னைகைத்தபடி மேலுள்ள வரிகளை கூறுவார். ஆழ்ந்த அமைதி என்னுள் ஊறியது.

முதற்கனல் வாசித்தேன். எட்டு மாதங்களுக்கு முன் வெண்முரசு வாசிக்கலாம் என முடிவு செய்து வாசித்து, தோல்வியுற்று அதை அப்படியே  ஒதுக்கி பின் வேறு நிறைய வாசிப்பு இடைபட்ட நாட்களில், பின் கடந்த மாதம்

எஸ். இலட்சுமணப்பெருமாள் அவர்களின் “ஆதிப்பழி” சிறுகதை வாசித்தேன். சகுனி தன் பெயரை அவையில் கூறிய கணம் கிளர்ச்சியடைந்து வெண்முரசு மீண்டும் முயற்ச்சிக்கலாம் என தோன்றியது. ஆனாலும் சிறு தயக்கம் அல்லது பயம். இந்த இரண்டு ஆண்டுகளில் என் உள்ளுணர்வை வெகுவாக நம்புகிறேன். அதனினூடாகவே அறிந்தேன் வெண்முரசு வாசிக்கும் தருணம் வந்துவிட்டதென. ஆசிரியரே வாசிப்பில் ஒரு படி முன்நகர்ந்திருக்கிறேன். லெளகீகத்திற்கு நடுவில் முதற்கனலை பதினைந்து நாட்களில் முடித்தேன் என்பது ஒருவித மாயவிசை.

வாசிப்பு அனுபவத்திற்கு வருகிறேன், ஜனமேஜயனிடம் ஆஸ்திகன் கூறுவது “இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை” அதுவரை ஜனமேஜயனின் பக்கம் அறம் இருப்பதாக நினைத்த என் எண்ணங்கள் உடைந்து, ஆஸ்திகனின் சொல்லுக்கு ஆம் என்றது, இச்சை இல்லாமல் படைப்பு இல்லை, ஆனாலும் அதை அப்படியே முழுமையாக உள்வாங்கி அதன்படி நடப்பதும் பிழை ஆகக்கூடும் எனும் தெளிவு என்னுள் இருந்தது. நீங்கள் கூறியதுதான் இச்சையை மட்டுமே பின்தொடர்பவன் எங்கேனும் தீங்கினை உண்டு செய்வான்.

வேள்விமுகத்திற்கு பின் பித்து நிலையிலேயே முதற்கனலை முடித்தேன். பீஷ்மர் முதல் படகோட்டி நிருதன் வரை ஒவ்வொருவரும் நினைவில் நீங்காமல் இருக்கிறார்கள். பீஷ்மருக்கும் சால்வ மன்னனுக்கும் நடக்கும் போரில் சால்வமன்னின் வீரம் கண்டு வியந்தேன் பீஷ்மரை போலவே, பின் அம்பையை புறக்கனித்த சால்வமன்னன் புழுவாக பட்டார், இல்லை அவர் தரப்பில் ஏதேனும் அறியப்படாத நியாயங்கள் எஞ்சியிருக்கும் என நினைத்தேன் இருப்பினும் சூதர்களின் பாடல்களுக்காக வாழும் அற்பன்  என்றே தோன்றியது. அதற்கினங்க அவன் வீழ்ச்சியும் இருந்ததை கண்கூட கண்டு நான் ஏன் மகிழ்ந்தேன் என தெரியவில்லை ‘அம்பை’ க்காக இருக்கலாம். ‘அம்பை’ நினைக்கும் போதே என் அகம் சோர்வடைகிறது. வாழ்ந்திட ஓரிடம் தேடி அலைந்தவளுக்கு கிடைத்தது வெறும் அநீதி தவிர வேறில்லை என்றாலும் அவளின் மூன்று தேவிகளும் அவளுடன் உரையாடி ஒவ்வொருவராக சென்றபின் எனக்குள் ஒரு உத்வேகம் ஆம் ஆம் பீஷ்மர் தான் என அகம் கொந்தளித்தது அதன்படி அம்பை கிளம்பியபோது ஒரு நம்பிக்கை அது வளரும் முன்னரே கருகியது. அம்பைக்காக கண் கலங்கினேன். பின் விசித்திரவீரியன்.

விசித்திரவீரியன். ஆரம்பகட்டம் முதலே அவரை பொருட்படுத்தாமலிருந்தேன். பீஷ்மரே அனைத்துமென்றேன். இவருக்காக இவர் ஏன் தீங்கு செய்து தீச்சொல் பெற வேண்டுமென்றெல்லாம் நினைத்தேன். ஓரு தருணம் அம்பைக்கு நடந்த அநீதிக்காக பீஷ்மர் முன் வாளுடன் நின்ற விசித்திரவீரியன் எனை சிறுமை செய்து விட்டார். வீரம் கட்டற்ற வீரம் என்றால் இதுவன்றி வேறென்ன? என்று தோன்றியது. பின் அம்பைக்காக கலங்கிய கண் வீசித்திரவீரியனுக்காக காது மடல்களை நனைத்தது. பத்து நிமிடம் அவரை நினைத்தால் எவருக்காயினும் கண் பொங்காமல் இருக்குமா?

பின் நிறைய குழப்பங்கள் இவர் யார்? எதற்கு இத்தனை கதாபாத்திரங்கள்? சிறு கதாபாத்திரங்களுக்கு கூட ஏன் இவ்வளவு விவரனைகள்? என தோன்றியபோது ஒன்றை அறிந்தேன் அவ்வாறு இல்லையென்றால் இதில் நிறைவு இருக்காதென.

நான் முன்பு அறிந்திருந்த நிறைய தத்துவங்கள் நிரம்பிருந்தன. புதியதாகவும் சில இடங்களை கண்டடைந்தேன். தீர்க்கசியாமர் கூறுகிறார் “வல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன.” இதை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனாலும் சரியாக பிடிபடாமலேயே இருந்தது. அறம் அன்பு என்பார்கள் மறுமுனையில் அவர்களின் வன்முறை கட்டற்றதாக இருக்கும். சொல்லப்போனால் என் கடந்தகாலத்தில் நானும் அப்படி இருந்திருக்கிறேன்.

விசித்திரவீரியன் அம்பிகையிடம் கூறுவார் “உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” …“பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.” இதை நான் வாழ்நாளில் சந்தித்த நூற்றில் தொன்னூற்றியொன்பது மனிதர்கள் செய்திருக்கிறார்கள். நானுமே. இதை ஒருவர் தெரிந்துகொண்டால் அவர் மனிதர்களை அணுகும் விதம் மாறுபடும்.

“உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்” இந்த இடங்களில் ஒரு வினாவின் பதில் என அமைந்தது, மாதங்கள் முன்னதாக ஒரு கடிதம் எழுதினேன் எனக்குள் எஞ்சியிருக்கும் வன்முறை என் குடும்பத்தாரின் வன்முறை இவற்றை எப்படி கையாள்வது என பெரிய கடிதம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழுதினேன், அனுப்பவில்லை இப்போது அதற்கான பதில் கிடைத்து மேலும் முன்நகர்கிறேன்.

முதற்கனல் ஒரு தொடக்கம் எனும் உணர்வே என்னிடமில்லை தனியொரு நாவலை வாசித்த அனுபவமே எஞ்சியுள்ளது எனினும் இதன் தொடர்ச்சி குறித்து ஆவலாக உள்ளேன் இது வரையியிலும் வாசித்தவற்றைக்கும் இப்போது நான் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அனைத்தும் இலவசமாக இருப்பதற்கு நன்றி.இணையத்தில் வாசித்தேன். புத்தக வடிவில் மீண்டும் ஒரு முறை வாசித்தே ஆக வேண்டுமென முடிவுடன் இருக்கிறேன். மறுவாசிப்பிற்கு பின் கடிதம் எழுதுவது குறிப்பு எடுப்பதை போல் ஆகிவிடும் என இப்போதிருக்கும் உணர்விலேயே எழுத வேண்டுமென எழுதுகிறேன். “நான் எழுதியது வெறும் கடலின் ஒரு துளி” அவ்வளவு இருக்கிறது முதற்கனலில் என்னால் சரிவர தொகுத்து எழுதமுடியவில்லை என நினைக்கிறேன். சிகண்டியும் பீஷ்மரும் சந்தித்துக்கொள்ளும் இடமொன்று……ஒருவித சலிப்பை உணர்ந்து பின் தெளிந்து “ஆம் அவ்வாறே ஆகுக” என முனகி புன்னகைத்தேன்.

மற்றும் வெண்முரசு துவங்கிய நாளிலிருந்து நான் என்னை வேறாக பார்க்கிறேன். நிறைய மாற்றங்கள் குறிப்பாக நிறைய முன்நகர்வுகள். நன்மைகளை உணர்கிறேன். அறம் வாசித்த கிளர்ச்சியில் உங்கள் முன் வந்து நின்றதைப்போல் இப்போது முதற்கனல் முடித்து உங்கள் முன் வந்து நிற்பதை கற்பனை செய்து கொள்கிறேன்.

அன்புள்ள ஆசிரியருக்கு நன்றி!

அன்புடன், பொன்சக்திவேல்.

நவீன மருத்துவம், கடிதம்

$
0
0

இனிய ஜெ,

வணக்கம்.

“உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” எனும் திருமூலரின் வாக்கிற்கேற்ப, ஆரோக்கியமான வாழ்விற்கான உடல் மற்றும் மனம் இடையே ஒருங்கிணைந்த நல்லிணக்கம் உருவாக கற்பிக்கப்படும் யோகம், தியானம், ஆயுர்வேத வகுப்புகளுக்குப்பிறகு, தங்களின் தளத்தில் நவீன மருத்துவம் பற்றிய அறிவிப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த பலரில் நானும் ஒருவன். டாக்டர் மாரிராஜ் அவர்களின் நவீன மருத்துவ வகுப்பு பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே விரைந்து பதிவு செய்ததன் மூலம் விளைந்த நற்பயனை தற்பொழுது முழுவதுமாக உணர்கிறேன்.

டாக்டர் மாரிராஜ் அவர்களின் முதல் வகுப்பு மருத்துவத்துறையின் வரலாற்றில் இருந்து ஆரம்பித்து பண்டைய கால கிரேக்க மருத்துவம், எகிப்திய மருத்துவம், ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் மேலெழுந்து வந்த அராபிய மருத்துவ முறைகள் பற்றியும் எளிதில் புரியும்படி விளக்கினார். மேலும் இந்திய பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத முறைகள், குறிப்பாக ஆன்மீக மற்றும் மத நம்பிக்கைகளை உள்ளடக்கிய நம்பிக்கை சிகிச்சை பற்றியும் விரிவான பார்வையை வழங்கினார்.

இன்றைய நவீன மருத்துவத்தின் பரவலான வெற்றிக்கான முக்கியக்காரணமாக சொல்லப்படுவது அதன் Inclusive தன்மை மற்றும் இதர அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல், இசை, சமூக அறிவியல் மற்றும் கிருமி நோய் மருத்துவம் போன்ற துறைகள் மருத்துவத்துறைக்கென ஆற்றிய பங்களிப்பும் ஆகும்.  நவீன மருத்துவம் அனைத்து நவீன அறிவியல் துறைகளையும் உள்வாங்கி அதன் வரையறைக்கு உட்பட்டதை தன்னில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதும், வரையறைக்கு உட்படாத அறிதல் வகை முறைகளையும், அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை (Pseudoscience) புறம் தள்ளும் விதமான Exclusive தன்மையும் கொண்டது என்று அற்புதமான நேர் வாழ்வின் உதாரணங்களுடன் மிக சிறப்பாக விளக்கினார்.

பண்டைய கிரேக்க மருத்துவத்தின் தந்தை என கருதப்படும் Hippocrates நோய்களுக்கான அறிவியல் காரணங்களை கண்டுபிடித்தார். அவரது மாணவர் Galen இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் இயங்கும் முறைகளை உடற்கூறியல் மூலம் பகுப்பாய்வு செய்து அவை எவ்வாறு இயங்குகிறது என்றும் நிரூபித்தார். இவையே இன்றும் நவீன மருத்துவ முறையின் அடித்தளமாக உள்ளது.

பண்டைய கால மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அராபியர்கள் இசையின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தனர். நோயை குணப்படுத்தும் நோக்கங்களுக்காக இசை மற்றும் பாடல்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். மருத்துவமனை நோயாளிகளில் தூக்கம் வராதவர்களுக்கு தூக்கம் வரவழைக்க கதை சொல்லிகள் இருந்திருக்கிறாகள்.

Sir Isaac Newton காலத்தில் இயற்பியல், கணித சமன்பாடுகள் துறையில் நடந்த அறிவியல் புரட்சியின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட Microscope மற்றும் அதன் மூலமாக நிகழ்ந்த கிருமி தொழில்நுட்பம், பாக்டீரியா, வைரஸ் பரவல், நோய் நிலைகளை துல்லியமாக இனம் காணவும், அதனை மிகச் சிறப்பாக தீர்க்கவும் மிகப் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

Dr Robert Koch என்பவர் முதன் முதலாக Tuberculosis நோய்க்கு காரணமான கிருமியை Microscope மூலம் கண்டறிகிறார். அதற்கான சிகிச்சை முறையையும் அவர் உலகுக்கு அறிவிக்கிறார். அவரின் சிகிச்சை தவறான அணுகுமுறை என்பதை ஆதாரபூர்வமாக தனது எழுத்தின் மூலம் நிரூபித்தவர் அவரது மிக நெருங்கிய நண்பரும், மருத்துவரும்,  பிரபல துப்பறியும் கதை எழுத்தாளருமான Sir Arthur Conan Doyle. இதற்காக அவர் எழுதிய துப்பறியும் புனைவு கதாபாத்திரமே Sherlock Holmes.

மருத்துவர் Auenbrugger தனது தந்தையின் ஒயின் தொழிற்சாலையில் ஒயின் பேரல்களை தட்டி ஒலியெழுப்பி அதில் வரும் ஒலியின் வித்தியாசத்தை வைத்து பேரலில் எந்த அளவு ஒயின் நிரம்பி உள்ளது என்பதை கண்டறியும் முறையை மருத்துவர் Laennec என்பவர் உள்வாங்கிக்கொண்டு இதேபோல இதயத்துடிப்பை கேட்கவும், நுரையீரல் சத்தங்களை கேட்கவும் உதவும் Stethoscope கருவியை கண்டுபிடிக்க பெரும் பங்காற்றியுள்ளார்.

இயற்பியல் கோட்பாடுகள், வேதியியல் சமன்பாடுகள், ஒலி, ஒளி, சவ்வூடு பரவுதல், இசை, இலக்கியம் (வெண்முரசு மேற்கோள்களும் உண்டு) மற்றும் பல அறிவியல் துறைகள், கண்டுபிடிப்புகள் மருத்துவத்துறையை செழுமைப்படுத்திய விதம் பற்றி டாக்டர் மாரிராஜ் விளக்கிய வகுப்புகள் ஒரு இனிய கற்றல் அனுபவத்தை வழங்கியது.

வகுப்பில் கலந்துகொண்ட அனைவரும் மிக ஆர்வத்துடன் டாக்டரிடம் கேள்விகள் கேட்டது, பலரும் டாக்டரின் கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதில் கூறி அவரிடமிருந்து சாக்லேட் பரிசு பெற்றது (என்னாலும் இரண்டு சாக்லேட் வெல்ல முடிந்தது) மற்றும் நேரடி வாழ்வியல் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் பகடி செய்தது போன்ற சுவாரசியங்கள் வகுப்பை மேலும் சிறப்பாக்கின.

எங்களின் உடல் மற்றும் மன நலன் மேம்பட யோகம், தியானம், ஆயுர்வேதம், நவீன மருத்துவம் பற்றிய அறிதலை கற்றுக்கொள்ள தளம் அமைத்துத்தரும் தங்களுக்கும், இனிய கற்றல் அனுபவத்தை வழங்கும் எங்களின் குரு மற்றும் ஆசிரியர்களுக்கும், விருந்தோம்பல் ஆசிரியர் மணி அண்ணா அவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகளும் வணக்கங்களும்.

நன்றி.

ஈரோடு அரசு.

புகைப்படம் : கிரேக்க மருத்துவத்தின் தந்தை Hippocrates (செடியின் மலர்கள் நிறைந்த பகுதி) மற்றும் அவரது மாணவர் Galen (செடியின் முட்கள் நிறைந்த பகுதி).

ஷேக் சின்ன மௌலா

$
0
0

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மானசீக ஆசிரியராகக்கொண்டவர் ஷேக் சின்னமௌலானா. தஞ்சைபாணி எனப்படும் நாதஸ்வர இசைமரபின் சிறந்த பிரதிநிதி. மரபை மீறாத இசையை முன்வைத்தாலும் உணர்வுபூர்வமான ஆலாபனையால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

ஷேக் சின்ன மௌலா

ஷேக் சின்ன மௌலா
ஷேக் சின்ன மௌலா – தமிழ் விக்கி

படுகளம் -6 (நாவல்)

$
0
0

நான் அந்த விசித்திரமான சிக்கலைப் புரிந்துகொள்ளவே உண்மையில் மதியம் வரை ஆகியது. முதலில் அது ஏதோ ஒரு வேடிக்கை என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. அது எப்படி ஒரு கடையை முழுமையாக மறைத்து ஒரு விளம்பரத்தட்டியை வைக்க முடியும்? ஏதோ முட்டாள் எதையும் யோசிக்காமல் செய்துவிட்டிருக்கிறான். சென்று ஒரு சத்தம் போட்டால் முடிந்துவிடும்.

நான் கடைவாசலுக்குச் சென்றபோது மாரி வந்துவிட்டான் “என்ன மொதலாளி இது? கடையயே கண்டுபிடிக்க முடியல்ல?”

“ஏய் இருடா” என்றேன். சுடலைப்பாண்டி மாமா வர நேரமாகும் என தோன்றியது. “முதல்ல கடைய திற… யோசிப்போம்.”

கடையை திறந்து அமர்ந்தோம். எவரிடம் பேசுவது, எங்கே சொல்வது என்று தெரியவில்லை. வெளியே வந்து அந்த போர்டை பார்த்தேன். தற்காலிகமான விளம்பரப்பலகை அல்ல. சாக்கடைக்குள் இரும்பு கால்கள் கான்கிரீட் போட்டு உறுதியாக நிறுத்தப்பட்டிருந்தன. உறுதியான இரும்புச்சட்டகம் மீது மிகப்பெரிதாக அந்த விளம்பரம் அமைந்திருந்தது. முன்பக்கம் சென்று பார்த்தேன். அதன் மேல் முழுப்பரப்பிலும் சீராக வெளிச்சம் தெரியும்படி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கள் கட்டிடத்தில் இருந்து மின்சாரமும் எடுக்கப்பட்டிருந்தது.

எங்கள் கடைக்கு வியாழன் விடுமுறை. புதன் இரவே வேலையை தொடங்கியிருக்கிறார்கள். நேற்று விடியலில்தான் வேலை முடிந்திருக்கும். சுடலைப்பாண்டி மாமாவுக்கு சனிக்கிழமைதான் விடுமுறை. அவர் இருந்திருக்கிறார். மற்ற அத்தனை கடைக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். எவரும் எந்த தகவலும் எனக்குச் சொல்லவில்லை. அத்தனை பேரும் சேர்ந்து செய்ததுபோலத்தான் அது.

அப்போதுதான் எனக்கு வயிற்றைப் பிசையத் தொடங்கியது. எனக்கெதிராக பெரிய ஒரு சதி நடக்கிறது என்று தோன்றியது. எவரிடம் எதைக் கேட்பது?

அந்த இடம் நகராட்சிக்குச் சொந்தமானது. அல்லது சாலைத்துறைக்குச் சொந்தமானதா? அவர்களிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கிறார்களா?

மீண்டும் சென்று அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். பூர்ணமங்கல்யா பட்டுமாளிகை எங்கள் கடைத்தெருவின் மறு எல்லையில் இருந்தது. ஐம்பதாண்டுகளாக இருக்கும் துணிக்கடை அது. அதை நடத்திவந்த கும்பலிங்கம் பிள்ளை மறைவுக்குப் பின் அவர் மகன் காசிலிங்கம் பொறுப்பேற்று அதை பெரிய துணிக்கடையாக மாற்றினார்.

காசி ஒரு பத்தாண்டுகள் கிடைக்கும் லாபத்தை முழுக்க விளம்பரத்துக்கே செலவிட்டார் என்பார்கள். நெல்லையில் அவ்வளவு பெரிதாக விளம்பரம் செய்த முதல் கடை அதுதான். மையமான இடம், அம்மனை தரிசனம் செய்து வெளியே வந்தால் கண்ணுக்கு முன் ஓங்கி நின்றிருக்கும் நாலடுக்குக் கட்டிடம். சரசரவென்று கடை வளர்ந்து மிகப்பெரிய நிறுவனம் ஆகிவிட்டது. சென்னையில்கூட கிளை திறந்துவிட்டார்கள்.

நூறுக்கும் மேல் ஊழியர்கள் வேலைபார்க்கிறார்கள். ஒருநாள் குறைந்தபட்ச வியாபாரமே முப்பது லட்சம் தாண்டும். நெல்லையின் முக்கியமான நபர்களில் ஒருவர் காசி. அத்தனை அரசியல்கட்சிகளுக்கும் அள்ளிக்கொடுப்பவர். தேர்த்திருவிழாவில் ஒருநாள் அவருடைய செலவுதான் என்பார்கள்.

உண்மையில் அவரை நினைக்க நினைக்க என் மனம் ஆறுதலடைந்துகொண்டே இருந்தது. அவரை நான் பார்த்திருக்கிறேன். அவர் பழைய பென்ஸ் கார் வைத்திருந்தார். தூய வெண்ணிற டர்க்கி டவல் விரிக்கப்பட்ட கார் மதியம் இரண்டு மணிக்குத்தான் கடைமுன் வந்து நிற்கும். மெல்ல இறங்கி உள்ளே செல்வார். கடைமேலாளர் வெளியே வந்து வணங்கி கூட்டிச்செல்வார். வெள்ளை கதர் சட்டை, வெள்ளை வேட்டி. கதர்ச்சட்டையில் காலர் மிக உயரமாக, விடைப்பாக இருக்கும். வெள்ளை வாட்ச், வெள்ளை செருப்பு. அவரும் நல்ல வெண்ணிறமாக இருப்பார். சாந்தமான நடை. எவரையும் பார்க்காமல், பொதுவாக முன்னால் பார்த்தபடி செல்வார். பலமுறை நான் அங்கே நின்று அவரைப் பார்த்ததுண்டு. அவரிடம் பேசமுடியும். ஏதோ பிழை நடந்துவிட்டது. அவ்வளவுதான்.

மதியத்துக்குள் நான் மிக இயல்பாக ஆகிவிட்டேன். முதலில் இதை அவர் வரைக்கும் கொண்டுசெல்ல வேண்டுமா என யோசித்தேன். அந்த விளம்பரத்தை வைத்த நிறுவனத்திடமே பேசிப்பார்க்கலாம். அதன் கீழேயே அவர்களின் பெயரும் எண்ணும் இருந்தது. கிருபா ஆர்ட்.

ஆனால் அந்த எண்ணை அழைத்தபோது யாரோ ஒருபெண் “முதலாளி இல்லியே இங்க” என்று சொன்னாள்.

அவர்களின் அலுவலகம் பாளையங்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே இருந்தது. நான் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றேன். அலுவலகத்தில் அதன் முதலாளி ரஃபீக் பாபு இல்லை. நான்கு வேலைக்காரர்கள் மட்டும்தான். ஒருவர் மானேஜர் போலிருந்தார். நீண்ட கழுத்தும் மெல்லிய கண்ணாடியும் கொண்ட ஆவுடையப்ப பிள்ளை.

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவர் நான் பேனர் ஆணை கொடுக்க வந்தவனல்ல என்றபோதே ஆர்வமிழந்து ஒரு பேரேட்டை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

“சன்னிதி தெருவிலே போர்டு வைச்சது நீங்கதானா? அதிலே நம்பர் பாத்து கூப்பிட்டேன். மொதலாளியப் பாக்கணும்… அதான் நேரே வந்தேன்” என்றேன்.

“நாங்க பேனர் செய்யுறதில்ல. நட்டு பராமரிக்கிறது மட்டும்தான் எங்க வேலை… அதுக்குண்டான பர்மிசன் வாங்கியிருக்கோம். வேண்டியத வேண்டியவங்களுக்கு பாத்துச் செய்வோம்… சிட்டி முளுக்க ரெண்டாயிரம் பேனர் எங்க பராமரிப்பிலே இருக்கு” என்று ஆவுடையப்ப பிள்ளை சொன்னார்.

“நம்ம கடைமுன்னாடி ஒரு பெரிய பேனர் கொண்டுவந்து வச்சிட்டாங்க பாத்துக்கிடுங்க. கடைய பாக்க முடியாது… கடை முளுசா மறைஞ்சிட்டுது.”

“ஓ” என்றார். “ஆனாக்க ஒரு வாரமா எடம் பாத்து முடிவு செஞ்சுதான் வைப்பாக… ஏன்னா அதை நட்டு வைக்கிறது சாமானிய வேலை இல்ல. ஒரு மூணுமாடி கெட்டிடம் அளவுக்கு ஹைட்டு. கெட்டிடம் மாதிரி சன்னலும் கெடையாது. அதனாலே மொத்தக் காத்தையும் வாங்கிட்டிருக்கும். நல்லா ஆழமா அஸ்திவாரம் போட்டு கான்கிரீட்டு ஊத்தி நடலேன்னா விளுந்திரும். கெட்டிடம் மேலே விளுந்தா நஷ்டஈடு குடுக்கணும். ஆளுமேலே விளுந்தா சொல்லவே வேண்டாம்… கோர்ட்டு கேஸுன்னு வாழ்க்கை வீணாயிடும். அதனாலே நல்லா யோசிச்சு கணக்கு போட்டுத்தான் நடுவாங்க… ”

“நான் ஒருநாள் இல்ல. கடை மூடியிருந்தது. இண்ணைக்கு காலம்பற வந்து பாத்தா இப்டி நட்டு வைச்சிருக்கு.”

“அதெப்டி? எடம் பாக்க போனவாரமே வந்திருப்பாகள்லா?”

எனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. என் அண்டைக்கடைக்காரர்கள் என் கடைமுன் இடம்பார்க்க ஒத்துழைத்திருக்கிறார்கள். அவர்களே இடம் காட்டிக் கொடுத்திருந்தால்கூட ஆச்சரியமில்லை. அவர்களின் கடையை பாதுகாக்க அப்படிச் செய்திருப்பார்கள்.

“அத கொஞ்சம் நீக்கி வைக்கணும்” என்றேன். “அதச்சொல்லத்தான் வந்தேன்.”

“அதெல்லாம் முதலாளிகிட்ட பேசிக்கிடுங்க… நான் வேலைக்கு இருக்கப்பட்டவன்”

நான் அங்கேயே இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். அவர் கூப்பிட்டுச் சொல்லியிருப்பார் போல. ரஃபீக் வந்ததுமே என்னிடம் “என்ன சார்?” என்று கொஞ்சம் விரோதமாகக் கேட்டார். ஏஸி கண்ணாடி அறைக்குள் மின்விசிறியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தபடி “வண்ணாரப்பேட்டையிலே நாலு பேனருக்கு எடம் பாக்கப்போயிருந்தேன்… சொல்லுங்க”

நான் சொல்வதை என்னை பார்க்காமல் ஒரு பென்சிலை சுழற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு “நான் இப்ப ஒண்ணும் செய்ய முடியாதே” என்றார்.

“அதெப்டி? இது என் வாழ்க்கையில்லா? கடையை மொத்தமா மூடியிருக்கீங்க.”

“சார், அங்க ஒரு பேனர் வைக்கணும்னு காசி சார் உத்தரவு. அது அப்டி ஒரு எடம்… திருளாவுக்கு முன்னாடி வைச்சுப்போடணும்னு கூப்பிட்டு சொல்லிட்டே இருந்தாரு. அதான் வைச்சது… ஒரு பேனருக்க செலவு என்னன்னு நினைக்கிறீக? ஒரு கட்டிடத்தோட செலவுக்கு பாதி வரும்னு வைங்க… அப்டி நினைச்சா எடுத்து மாத்த முடியாது.”

“அதெப்டி…?” என்று நான் சீற்றத்துடன் கத்த, அவர் கையமர்த்தி என்னை தடுத்தார்.

“மெரட்டுறதுக்கு வந்தீகன்னா மெரட்டிக்கிட்டு போய்ட்டே இருங்க… அதெல்லாம் இங்க நடக்காது.”

நான் தளர்ந்தேன். “சார், என் நெலைமையை நினைச்சுப்பாருங்க. இப்பதான் ஒருமாதிரி கடையிலே ஏவாரம் நடக்க ஆரம்பிச்சிருக்கு… லச்சக்கணக்கிலே வட்டிக்கு கடன் வாங்கியிருக்கேன். இப்ப இப்டி நடந்தா நான் அளிஞ்சிருவேன்.”

“அதெல்லாம் எல்லாரும் சொல்லுததுதான்… செரி, அங்க வைக்கல்ல. அந்த ஏரியாவிலே அந்த ஆங்கிளிலே வேற எங்க பேனர் வைக்குதது… நீங்க ஒரு எடம் கண்டுபிடிச்சு சொல்லுங்க”

“நானா?”

“ஆமா, ஏன்னா நாங்க அங்க ஒரு வாரம் அலைஞ்சோம். அங்க ஏற்கனவே நாப்பது பேனர் இருக்கு. கடைகளுக்க பேனரே எட்டு இருக்கு. வேற எடமே இல்ல. இந்த பேனர எங்க வைச்சாலும் யாராவது ஒருத்தன் கடைய மூடணும்… சரவணபவன மூடிருவோமா? இல்ல ஆனையப்ப பிள்ளை கடைய மூடிருவோமா? வேற வளி? நீங்களே கண்டுபிடிச்சுச் சொல்லுங்க.”

அங்கே வேறு இடமே இருக்காது என என் மனக்கண்ணிலேயே தெரிந்தது. நான் சற்று தழைந்து “அந்த பேனர நீங்க எடுத்திருங்க… அதுக்குண்டான நஷ்டத்தை குடுத்திருதேன்” என்றேன்.

“நஷ்ட ஈடா? ஒரு நாலுகோடி ஆவும், குடுப்பேரா?”

நான் என்னுள் எழுந்த ஆவேசத்தை அடக்க நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

“காசி சாரு நமக்கு ஆண்டுக்கு நாலுகோடி ரூவாய்க்கு பிஸினஸ் தாறார். மேலே சங்கர் நகர் முதல் இந்தப்பக்கம் வள்ளியூர் வரை நாங்கதான் பேனர் வைக்கிறது. இப்ப பேனரை வைக்க முடியல்லேன்னா பிஸினஸ் கைவிட்டு போயிரும். இந்த தொளில் அரசியல்வாதிங்களோட ஏரியா. அவனுங்களோட பினாமிங்கதான் செய்ய முடியும், எங்க அண்ணன் முனிசிப்பாலிட்டியிலே இருந்தப்ப எனக்கு செட் பண்ணி தந்தது. ஒருமாதிரி உருட்டிக்கிட்டு போய்ட்டிருக்கேன். நான் சொல்லுதது புரியுதல்லா?”

என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நான் இந்த பேனரை எடுத்தா உடனே நான் வைச்சுத்தாறேன்னு எட்டு பேரு அங்க போயி நிப்பான். அப்ப அவன் சாமர்த்தியசாலி, நான் மொக்கைன்னு ஆயிரும். பிசினஸை அந்தப் பக்கம் குடுத்திருவாரு… ஒரு பெரிய முதலாளி தொளிலை கைமாத்தினா சட்டுசட்டுன்னு அப்டியே மொத்தத் தொளிலும் கைய விட்டுப்போயிரும்… இந்த தொளிலிலே மெயிண்டனன்ஸ்தான் பெரிய ரிஸ்கு… கட்சிக்காரன் போஸ்டர ஒட்டிருவான். போறவாறவன்லாம் மாமூல் கேப்பான். லச்சக்கணக்கான ரூபா பொருள முச்சந்தியிலே நிக்க வைச்சிருக்கோம். கொளுத்திருவேன்னு சொல்லி நாலு ரவுடி காசு கேப்பானா மாட்டானா? அவன சமாளிக்கணுமானா போலீஸுக்கு காசு போகணும். நம்ம கிட்டயும் ஆளிருக்கணும்… இது மொரட்டுத்தனமான தொளிலு… அப்டித்தான் நடத்த முடியும்…“

சட்டென்று நான் உடைந்துவிட்டேன். “ப்ளீஸ்… எனக்கு இரக்கம் காட்டுங்க. நான் தொளிலுக்குப் புதிசு. இப்பதான் உள்ள வந்திருக்கேன்… அளிஞ்சிருவேன்… தங்கச்சிக இருக்கு… அப்பா செத்த பிறகு ஆதரவுக்கு ஆளில்ல.”

“புரியுது. ஆனா உங்களுக்கு இரக்கம் பாத்தா நான் அளிஞ்சிருவேன்.”

நான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். கைக்குட்டையை எடுத்து கண்களையும் மூக்கையும் அழுத்தி துடைத்தேன். வெளியே அந்த அலுவலகமே என்னை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

“நான் இப்ப என்ன செய்யணும்?” என்று இடறிய குரலில் கேட்டேன்.

“எனக்குத் தெரியல்ல. நான் ஒண்ணுமே செய்ய முடியாது… நீங்க முடிஞ்சதச் செய்யுங்க”

நான் சட்டென்று வெறிகொண்டு எழுந்தேன். “பாத்துக்கிடுதேன்ல… ஏல, நான் பாத்துக்கிடுதேன். என்னல நெனைச்சே? ஏய், வெட்டிப்போட்டுட்டு செயிலுக்கு போக தயங்கமாட்டேன்… இப்பவே இண்ணைக்கே அந்த பேனர தூக்கல்லேன்னா நீ இல்லலே. ஏலே, நீ இல்ல. செத்தேன்னு வைச்சுக்கோ. என்னைய அளிச்சுட்டு நீ வாள்ந்திருவியா? புள்ளக்குட்டியோட வாள்ந்திருவியாலே? அளிச்சிருவேன்… வேரோட அளிச்சிருவேன்ல…” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டேன்.

“ஆறதைச் செய்யும்வே, போவும்” என்று அவன் சொன்னான்.

இரண்டு சிப்பந்திகள் என் அருகே வந்தனர். நெட்டையானவன் என் தோளைப்பிடித்து “சார், இங்க சத்தம் போடக்கூடாது. வெளியே போங்க… போங்க வெளியே” என்றான்.

“கைய எடுலே… ” என்று நான் அவனை தட்டிவிட்டேன்.

“என் ஆபீஸ்ல நுளைஞ்சு கலாட்டா பண்ணுதே… சாட்சிங்க இருக்கு… சிசிடிவி இருக்கு… உள்ள தள்ளிப்போடுவேன்… பேசாம போ” என்று ரஃபீக் கூச்சலிட்டார்.

நான் ஒருகணம் செயலற்று நின்றபின் தலையை அசைத்து “பாத்துக்கிடுதேன்ல… அளிச்சிருவேன்ல” என்று சொன்னபின் திரும்பி வெளியே சென்று பைக்கை எடுத்தேன்.

எப்படி நான் விபத்தில் சிக்காமல் திரும்பினேன் என்றே தெரியவில்லை. வெயில் கொதித்துக்கொண்டிருந்தது. எதிரே பேருந்துகள் சீறியபடி வந்தன. என் உடல் நடுநடுங்கியது. எங்கே செல்கிறேன் என்றே தெரியவில்லை. மனம் போன போக்கில் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அம்மா “ஏம்லே?” என்றாள்.

“ஒண்ணுமில்லை” என்று படுக்கையறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன்

“மண்டையிடியாலே? சுக்குவெந்நி குடுக்குதியா?”

“வேண்டாம், பேசாம போறியா?” என்று கத்தினேன்.

“அப்பனுக்கு அப்டியே ஒரு பிள்ளை” என்று முணுமுணுத்தபடி அவள் சென்றாள்.

பெருமூச்சு விட்டபடி புரண்டு புரண்டு படுத்தேன். உடல் கொதித்துக் கொண்டிருந்தது. அப்போது எனக்குள் கொந்தளித்த வன்முறையை எண்ணி எண்ணி நானே வியந்திருக்கிறேன். என்னிடம் ஏதேனும் அதிகாரம் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்திருப்பேன். ஈவிரக்கமே இல்லாத கொலைவெறியனாகியிருப்பேன். ஆனால் அது கையாலாகாதவனின் கொந்தளிப்பு.

சற்று தூங்கியிருப்பேன். அந்த உச்சநிலையில் நெடுநேரம் நீடிக்க முடியாதென்பதனால்தான் அந்த தூக்கம். முறுகி முறுகி மூளை செயலற்று அப்படியே உதிரிச் சிந்தனைகளாக ஆகி என்னை மறந்து என் குறட்டையை நானே கேட்டு விழித்துக் கொண்டேன். இருபது நிமிடம்தான் தூங்கியிருப்பேன். அதற்குள் ஒரு கனவு. இனிய கனவு. என் படத்தின் எடிட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது டைரக்டர் வருவதாக செய்தி வந்தது. நான் என் உதவியாளர்களுடன் பாய்ந்து அவரை வரவேற்க வெளியே வந்தேன்…

எழுந்தபோது என் மனம் அமைதி அடைந்திருந்தது. அந்தக் கனவே அதன்பொருட்டு என் ஆழ்மனதால் உருவாக்கப்பட்டதுதான். அம்மாவை அழைத்து ஒரு டீ போடச்சொன்னேன். அதை உறிஞ்சியபடி அமர்ந்திருந்தேன். மணி மூன்றுதான் ஆகியிருந்தது. அந்த பேனர் சட்டவிரோதமானது என்பதில் ஐயமில்லை. அதை நகராட்சி மையத்திற்குச் சென்று முறையாக விசாரித்துக்கொள்ள வேண்டும். அதுதான் முதலில் செய்யவேண்டியது.

ஒரு குளியலைப் போட்டுவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு நகராட்சி அலுவலகம் சென்றேன். முதல்முறையாக அப்படி ஓர் அலுவலகத்திற்கு வருகிறேன். பழைய கட்டிடம். வெளியே ஏராளமான கூட்டம். யார் யாரோ என்னென்னவோ செய்துகொண்டிருந்தனர். மனு எழுதுபவர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றி சிறு சிறு குழுக்களாகக் கூடியிருந்தனர்.

வராந்தாவில் ஏறி அறைகளைப் பார்த்தபடி சுற்றி வந்தேன். ஒவ்வொரு மேஜைமுன்னாலும் நாலைந்துபேர் நின்றிருந்தனர். பெரிய பழைய மின்விசிறிகள் கறக் கறக் என சுழன்றுகொண்டிருந்தன. இரும்பு ரேக்குகளில் நுனி சுருண்ட பழைய தாள்கள் கொண்ட கோப்புகள் அடுக்கடுக்காக. முதுகுத்தண்டில் ஓட்டை கொண்டபெரிய ஃபோல்டர்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்து வெளிவருவதற்கு ஒரு பாதைகூட இல்லை என்று தோன்றும்படி எப்படி எப்படியோ நாற்காலிகளும் மரபீரோக்களும் போடப்பட்டிருந்தன.

அங்கே எவரிடம் கேட்பது என்று தெரியவில்லை. முதற்பார்வையில் அங்கிருந்த குழப்பங்களை கடக்கவேண்டும் என்றால் அமைதியாக சற்றுநேரம் நிற்பதுதான் வழி.

மனு எழுதும் ஒருவர் என்னிடம் “என்ன சார்? வீட்டுவரி குடிநீர்வரியா?” என்றார். நான் இல்லை என்று தலையசைத்ததும் “பிளாட் அப்ரூவல்னாக்க… ” என்றார்.

அதற்குள் நான் ஒருவரை தெரிவுசெய்துவிட்டேன். அவர் உள்ளே மேஜையில் இருந்து வேலை செய்துகொண்டிருந்தவர். முன்வழுக்கையும் காதில் நீளமான முடியும் கொண்டவர். தடித்த பெரிய கண்ணாடி. வெள்ளை வேட்டி, சட்டை. வெளியே வந்து அவர் ஒரு பொடிமட்டையை எடுத்ததும் நான் அவர் அருகே சென்றேன்.

அவர் என்னை ஆர்வத்துடன் பார்த்தார். என் தோற்றமே வியாபாரிக்குரியதாக இருந்தது. எடுத்த எடுப்பிலேயே “எனக்கொரு சகாயம் செய்யணும்… வேண்டியத செஞ்சிருவேன்” என்றேன்.

“சட்டத்த மீறி நான் ஒண்ணும் செய்ய முடியாது. நான் வெறும் கிளார்க்கு… ஆபீசர பாருங்க.”

“எனக்கு சில தகவல்கள்தான் தேவை… அது என்ன ஏதுன்னு சொன்னா போரும்”

“சொல்லுங்க”

“ஒரு டீ சாப்பிடுவோமே”

அருகே இருந்த தள்ளுவண்டி டீக்கடையில் ஒரு டீயை வாங்கிக்கொண்டு வாதா மரத்தடி நிழலில் சென்று நின்றோம். நான் நடந்தவற்றைச் சொன்னேன்.

அவர் ஒரு பீடியைப் பற்றவைத்து ஆழ இழுத்தார். பிறகு “நான் சொல்லுறத கவனமா கேட்டுக்கிடுங்க. இதுன்னு இல்ல, இங்க ரோட்ல நிக்குத பேனர்களிலே பெரும்பாலும் எதுக்கும் சட்டபூர்வமா அங்கீகாரம் கிடையாது. பெரும்பாலும் பொது எடத்திலேதான் நின்னுட்டிருக்கும். பெர்மிசன் இருக்குன்னு பேப்பர் எல்லாம் வச்சிருப்பானுக. அதுக்கெல்லாம் ஆதண்டிசிட்டி கெடையாது. பெர்மிசன் குடுக்குதவனுக்கு பெர்மிசன் குடுக்க அதிகாரம் இருக்காது. அஞ்சோ பத்தோ ரூபா பணத்த டிரசரியிலே கட்டிட்டு அனுமதி வாங்கியிருப்பான். ஒரு கம்ப்ளெயிண்டுக்கு நிக்காது ஒண்ணும்… ஆனா…”

நான் “சொல்லுங்க” என்றேன்.

“அப்டி பொது எடத்திலே ஆயிரம் ரெண்டாயிரம்னு பேனர் வைக்குதான்னா அவனுக்கு அதுக்குண்டான பேக்ரவுண்டு இருக்கும். எல்லா எடத்துக்கும் வேண்டியத செஞ்சிருப்பான். இங்கயும் மெட்ராசிலேயும் கோயம்புத்தூரிலேயுமெல்லாம் பேனர் முறிஞ்சு விளுந்து ஆளு செத்திருக்கு. என்ன ஆச்சு? ஒண்ணுமே ஆகாது. நாலுநாளு ஜனங்க சத்தம் போடுவானுக. அரசியல்கட்சிக்காரன் எவனும் சப்போட்டுக்கு வரமாட்டானுக. அதாக்கும் நாட்டு நடப்பு”

“அப்ப இந்த இடத்திலே இல்லீகலாத்தான் நட்டிருக்கானுக”

“ஆமா, சந்தேகமே இல்ல. கேட்டுப் பாத்தா ஏதாவது பேப்பர் வச்சிருப்பான். சிலசமயம் பேப்பர்ல காணுத எடம் பத்தடி தள்ளி இருக்கும்… ஆனா ஒண்ணும் செய்ய முடியாது.”

“ஏன்?”

“கம்ப்ளெயிண்டு செய்யலாம், கம்ப்ளெயிண்டு வாங்குதவனுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கும்?”

“கோர்ட்டுலே… ”

“சின்னப்பையனாட்டுல்ல இருக்கீக? கோர்ட்டுக்கு போயி எப்ப தீர்ப்ப வாங்கப் போறீக? பத்து வருசமாகும் முதல் ஹியரிங்கு வாறதுக்கு… பேனர நீக்கணும்னு தீர்ப்பு வரணுமானா இருவத்தஞ்சு வருசமாவும்…ஒரு இருவது லச்ச ரூவா வக்கீல்ஃபீஸு ஆவும்….செய்யுதீகளா?”

நான் பெருமூச்சு விட்டேன்.

“அங்க சமாதானமா போகமுடியுமான்னு பாருங்க. உங்களுக்கு ஏவாரி அசோசியேசன் இருக்கும்லா, அங்க சொல்லுங்க. அப்டி ஏதாவது வளி இருக்குமான்னு பாருங்க. என்னையக் கேட்டா சாச்சிக்காரன் காலிலே விளுதத காட்டிலும் சண்டக்காரன் காலிலே விளலாம்…”

நான் அவருக்கு ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தேன். திரும்ப என் கடைக்கு வரும்போது பல கிலோமீட்டர் வெயிலில் நடந்தது போல அவ்வளவு களைப்படைந்திருந்தேன்.

கடையில் மாரியும் பையன்களும் இருந்தனர். நான் கல்லாவில் அமர்ந்ததும் மாரி என்னிடம் “முதலாளி இன்னிக்கு இது வரை ஒரு போணிகூட ஆகல்லே” என்றான்.

என் நெஞ்சில் அறை விழுந்ததுபோல் இருந்தது. அந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவில்லை “ஒரு ரூபாய்க்குக்கூடவா?” என்றேன்.

“ஒரு ஆளு இது வரை உள்ள வரல்ல முதலாளி… பெரிய பேனர்ப் பின்பக்கமா ஆரும் நடக்கிறதில்ல. கம்பி கால தடுக்கும்லா? அப்டியே அந்தப்பக்கமா போயிடுதாங்க”

நான் சரி என தலையை அசைத்தேன். நாற்காலியில் பிணம் போல இருட்டுவது வரை அமர்ந்திருந்தேன். அன்று மாலை ஒரு ரூபாய்கூட கல்லாப்பெட்டியில் விழாமல் கடையை மூடினோம்.

(மேலும்)

வம்சம்

$
0
0

ஒரே ஒரு பூனை, அதன் இரண்டு கண்களும் இரண்டு வண்ணங்களில் இருக்கும். அது எப்படியோ எங்கள் வீட்டை தேர்வுசெய்து இங்கே தங்கலாமென முடிவெடுத்துவிட்டது. அதற்கு நாம் அனுமதி கொடுக்கவேண்டியதில்லை. பூனைகள் அதை எதிர்பார்ப்பதில்லை. அதன் வாரிசுகள் வழியாக இங்கே ஒரு வம்சவரலாற்றை அது உருவாக்கியிருக்கிறது. எல்லா பூனைகளுக்கும் இரண்டு கண்களும் இரண்டு நிறம். ஆச்சரியமென்னவென்றால் எல்லாமே பெண்கள்.

ஒரு கடுவன் அவ்வப்போது வந்து என்ன ஏது என்று பார்த்துவிட்டுப் போகும். அவன் ஒரு முதிய போர்வீரன். உடலில் தழும்புகள், ஒரு கண் உடைந்துவிட்டிருக்கும். எந்த வீட்டையும் சேர்ந்தவன் அல்ல. பெரும்பாலான நேரம் ரயில்வே தண்டவாளம் அருகே எதையாவது பிடித்து தின்றுவிட்டு மரத்தின்மேல் சிறுத்தைபோல கால்களை தொங்கவிட்டு ஓய்வெடுப்பவன்.

அவன் வந்தால் ஒரே சத்தமாக இருக்கும். மாறிமாறி இசைபாடுவதுபோல. அவனுடயது கார்வையுள்ள மியாவ். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் ங்க்கியாவ், வந்தால் இங்கிருக்கும் தீனிகளை தொடுவதில்லை. திடீரென பூனைத்தொகை சற்று கூடியிருக்கும். இது கூடவே படுத்து பிற பூனைகள் போலவே வெறித்துப் பார்த்து “என்னவே?” என்று கேட்கும். மறுநாள் காணாமலாகியிருக்கும்

இருபத்தைந்தாண்டுகளாகவே இங்கே பூனைகள் உண்டுதான். இந்த பகுதிகளில் அவை வாழும். இங்கே காலியிடங்களில், ஓடைகளில் எலிகளும் பிற உயிர்களுமுண்டு. ஆகவே தீனிக்குப் பஞ்சமில்லை. நாங்கள் வீடுகட்டிக் குடிவந்த நாளில் இங்கே முதல்முறையாக உள்ளே வந்து “புதுவீடா? குடிவந்தாச்சா?” என்று விசாரித்த வயதானபூனை கருவுற்றிருந்ததை நினைவுகூர்கிறேன்.

அதன்பின் ஹீரோ, டெட்டி என இரண்டு நாய்கள். டெட்டி டாபர்மான். அவை வந்தபின் வளைப்புக்குள் பூனை தரைமார்க்கமாக வர முடியாது. ஆனால் மரம் வழியாக , திறந்த சன்னலுக்குள் நுழைந்து வீட்டுக்குள் புகுந்து வேட்டையாடி திரும்பிச் செல்வதுண்டு. இரவில் ஓசை கேட்டு பார்த்தால் வாலைத் தூக்கி “ஒண்ணுமில்ல, நாந்தான்” என்று நிதானமாக நடந்து செல்லும்.

இந்த உலகில் பூனையை பிடிக்கும் ஆற்றல் கொண்ட நாய டாபர்மான் மட்டுமே. டெட்டி பறக்கும் காகத்தை தாவி காற்றிலேயே பிடிப்பவன். ஏழெட்டு பூனைகளை அவன் கொன்றதுண்டு. பூனை மதில்சுவரில் இருந்து காற்றுவழியாக எங்கள் இல்லத்துச் சாளரம் நோக்கித் தாவும்போது பிடித்துவிடுவான். கொண்டுவந்து வீட்டுமுன் போட்டுவிட்டு என்னை கூப்பிடுவான். அறைகூவல் மாதிரி ஒலி இருக்கும். போய்ப்பார்த்தால் செத்த பூனை.

நாயுலக நெறிப்படி அதன் மந்தைத்தலைவனான நான் அந்தப்பூனையின் ஈரலைத் தின்றுவிட்டு மிச்சத்தை டெடிக்கு கொடுக்கவேண்டும். நான் அதை குழிவெட்டிப்புதைப்பேன். டெட்டி அட முட்டாளே என எம்பி எம்பி தவிப்பான். ஹீரோவுக்கு பூனை அவன் மேலேயே ஏறிச்சென்றாலும் மாற்றுக்கருத்து இல்லை. அவன் ஒருவகையான புத்தர். ஆனால் டெட்டி மறைந்ததுமே மிகத்தீவிரமானவன் ஆகிவிட்டான்.

நாய்கள் இல்லா இடைவெளிகளில் இங்கே பூனைகள் பெருகுகின்றன. டெடி மறைந்து,ஓராண்டு கழித்து ஹீரோவும் மறைந்தபின் ஓராண்டுக்காலம் வீட்டு வளைப்பெங்கும் பூனைகள். அப்போதுதான் சிறுகுட்டியாக டோராவை கொண்டுவந்தோம். அவளை பூனை தூக்கிச் சென்றுவிடும் என வீட்டுக்குள்ளேயே வளர்த்தோம். அவள் வாழ்ந்த காலம் மீண்டும் பூனைகள் இல்லாநிலை. அவள் மறைந்தபின் இந்த பூனைவம்சம் வீட்டு வளைப்பை எடுத்துக்கொண்டது

பூனைகளை அருண்மொழி வளர்க்க ஒரே காரணம், அவை காருக்கு அடியிலும் துவைப்புயந்திரம் அடியிலும் தூங்குவது. அவற்றின் ’ஒயரிங்கு’களை எலி கடித்து பல முறை செலவு வந்துள்ளது. அடியில் வலையெல்லாம் வைத்தாலும் பயனில்லை. அந்த கணக்குக்கு பூனைக்கு வைக்கும் தீனி செலவு அல்ல.

சைதன்யா பூனைகள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருப்பாள். நாய்போல ஆவேசத்தீனி இல்லை. நாசூக்காக கனவான் தீனி. பூனைகள் சாப்பாட்டுக்காகச் சண்டை போடுவதில்லை. பெரிய பூனைகூட குட்டிகள் வந்தால் விலகிவிடும். ஒரு பூனை சாப்பிடுகையில் இன்னொன்று தலைநீட்டினால் முதல்பூனை விலகி இடம் அளிக்கும். கொறிப்பதுபோல் இருக்கும் அவை சாப்பிடுவது. சாப்பிடுவதை நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மை அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்து “நல்லாத்தானேய்  இருக்குங்கோய்” என ஓர் ஓசை.

அமேசானில் பூனைத்தீனி வாங்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பது அருண்மொழி வழக்கம். பூனைகளை வீட்டுக்குள் வரவழைப்பது, தொட்டுக் கொஞ்சுவது வழக்கமில்லை. அது நல்லதல்ல, பூனையின்  உடலிலுள்ள ஒரு வைரஸ் மனிதர்களிலும் வாழக்கூடியது, பலவகையான நரம்புச்சிக்கல்களை உருவாக்கக்கூடியது. வெளியேதான் சாப்பாடு வைப்பது.

அருண்மொழி இல்லாதபோது நான் தேடிப்பார்த்தால் பூனைத்தீனி இல்லை. சும்மா சோறெல்லாம் சாப்பிடாது. ஆகவே கடையில் கருவாடு வாங்கி வந்தேன். கருவாட்டை உடைத்து நீரில் கலந்து சோற்றுடன் கலந்து வைத்தால் சாப்பிடும். சோறு வைத்துவிட்டு சாப்பிடுகிறதா என்று பார்த்து நின்றேன். அம்மாப்பூனை என்னைப் பார்த்து “கண்ணுபோடுறியா பாவி, புள்ளை சாப்பிடுதுல்ல, அந்தாலே போ” என்றது.

சாயங்கால வெளிச்சத்தின் கவிதைகள்

$
0
0

வெ.நி.சூர்யா தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா

வே.நி. சூர்யாவின் “அந்தியில் திகழ்வது” தொகுதியை வாசித்தேன். தொகுப்பைப் பற்றி ஒருவாறாக எனக்குள் திரட்டிக்கொள்ள முடிந்தது.

அஸ்தமனங்களுக்கும் கடற்கரைகளுக்குமே தொகுதி சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பலதரப்பட்ட மனோநிலைகளைக் கிளர்த்தக்கூடியதாக அந்திகளும் கடற்கரைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.

எல்லாவற்றையும் மங்கலாக மாற்றி இன்னொன்றாக்கும் மாயமாக (கண்களும் வெற்றிடமும்), இல்லாமலாவதன் அழகாக (மறுபடியும் ஒரு மாலைப்பொழுது), தூரமும் அருகாமையும் குழம்பிப்போகும் பொழுதாக (ஒரு டிசம்பர் மாலைப்பொழுது), இயற்கையின் ஒருமையைக் கண்டடையும் தருணமாக (தியான மண்டபம்), வெடிவைத்துத் தகர்க்கப்படும் கட்டடமாக (உயரத்திலுள்ள வீடு), சுயம் கரையும் வெளியாக (மாபெரும் அஸ்தமனம்) என வேறுவேறு சாயங்காலங்களுக்குள் நம்மை இக்கவிதைகள் அழைத்துச்செல்கின்றன.

இன்னொருபுறம் கடற்கரைகளைக் குறித்த சித்திரங்கள். மிகத்தனிமையான அலைகளின் கடற்கரை (அலைகளை எண்ணுபவன்), இன்னொரு உலகத்து அலைகளின் கடற்கரை (யாராவது இருக்கிறீர்களா?) கல்சிங்கங்கள் மனிதனை வெறித்துப்பார்க்கின்ற கடற்கரை(சந்திப்பு), மெத்தை போலவும் தேநீர் மேசை போலவும் மாறுகிற கடற்கரை (ஒளி மனிதன்), பலவீன ரோஜாவின் கடற்கரை (பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா?), தீர்ந்துகொண்டிருக்கும் கடற்கரை (வெளியேற்றம்), மலரினினுள் இருக்கும் கடற்கரை (கப்பற்சேதங்கள், பவளப்பாறைகள்,வெண்சங்குகள்), காலடிச்சுவடுகளின் கடற்கரை (ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை) எனப் பல்வேறு மனோநிலைகளின் கடற்கரைகளைக் காண்கிறோம்.

மேலும் சீன செவ்வியல் கவிதைகளில் உள்ளதைப் போல இக்கவிதைகளில் பெரும்பாலும் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை.  ஒரேயொரு மனிதனும் இயற்கையின் பிரம்மாண்ட இருப்பும் மாத்திரமே. கற்பனாவாத காலகட்டக் கவிதைகளின் பேசுபொருட்கள் ஆனால் அவை மிகுந்த சமநிலையுடன் மொழியில் முன்வைக்கப்படுகின்றன. அதனால் ஒரு அமைதி தோன்றிவிடுகிறது. வேறொருவிதத்தில் தேவதேவனின் கவியுலகத்திற்கு அணுக்கமான கவிதைகள் எனலாம். தேவதேவனின் கவிதைகளில் உள்ள கனிந்த நோக்கை இக்கவிதைகளில் நம்மால் பார்க்கமுடிவதில்லை. மாறாக ஒரு மெளனமான அலைகழிதல் உள்ளது. ஒரு நபர் தொடர்ந்து அநேக கவிதைகளில் நடந்துகொண்டேயிருக்கிறார். பெரும்பாலும் இக்கவிதைகளின் அடிநாதமாக தனிமையும் விடுதலையுணர்ச்சியும் கூடவே ஒருவிதமான மெலன்கலியும் (Melancholy) இருக்கிறது.

**

பச்சிளங்குழந்தையைப் பார்த்து “நீ பிறந்துவிட்டாய் , இனி நிறைய வருத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே” என தனக்குள் பேசிக்கொள்ளும் “ஊற்று” எனும் உணர்ச்சிகரமான கவிதையும் இருக்கிறது.

ஊற்று

பிறந்து சில நாட்களேயான குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன்

சாவகாசமாகத் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது

உனக்கோ பெயரில்லை கரடுமுரடான நேற்றில்லை

நானும்தான் இருக்கிறேன்.. பார்த்தாயா?

இன்னும் எத்தனை எத்தனையோ கண்ணீர்த்துளிகள் வழியவிருக்கும்

அந்த சிறிய பஞ்சுக்கன்னத்தை

உலகத் துக்கம் அழுந்தத் தொடாத அந்த மிருதினை

தொட்டுப்பார்த்தேன்

பறக்கப் பழகாத கழுகுக் குஞ்சே

ஒரு பெரிய கதையின் முதல் எழுத்தே

எதுவும் எழுதப்படாத புது சிலேட்டே

எனக்குத் துக்கமாக இருக்கிறது.

இன்னொருபக்கம், பரவசத்தில்  துள்ளும் “கன்னியாகுமரியில்” கவிதையும் இருக்கிறது.

கன்னியாகுமரியில்

சூரியனுக்கு முந்தியே விழித்தெழுந்துவிட்டேன்

ஒரு புத்துணர்ச்சி நதிகளில் உள்ளதைப் போல

யாவும் மையம் கொண்டிருக்கின்றன ஓர் உண்மையில்

அந்தத் திருகாணிதான்

கோர்த்திருக்கிறது இவ்வளவையும் ஒன்றாக.

நாளைக்குத் தெரியவில்லை

இப்போது எனக்குத் தோன்றுகிறது

இங்கு எதுவுமே பொய்யில்லை

அழகின் வறுமை எதனிடமுமில்லை

கடல் பார்த்த இந்தச் சன்னலுக்கு வெளியே

ஒவ்வொன்றும் ஒரு புதிர் போலவே மின்னுகின்றன

அறுதியிட்டுச் சொல்லமுடியும்:

இது முடிவேயில்லாத கோடிட்ட இடங்களை நிரப்பும் பகுதி

ஆனந்தத்திலும் பிறகு இச்சையிலும்

என்னைக் கட்டியணைத்துக்கொள்கிறேன்

பாருங்களேன்

எவ்வளவு கொண்டாட்டம்

நான் இருக்கிறேன் என்று உணர்கையில்

ஓடிப்போய் அறையிலிருப்பவர்களை எழுப்புகிறேன்

மூழ்கும் படகில் இருப்பவன் என.

குழந்தைகளாகக் கண்விழித்து

மர்மத்தின் ஆயுதங்களாக எழுந்து நிற்கிறார்கள் நண்பர்கள்

மூன்று.. இரண்டு.. ஒன்று

எண்ணெய்ப் படலமெனக் கடலெங்கும் இளம் ஒளி

! தன் உள்ளங்கையை நீட்டுகிறது சூரிய உதயம்

நாங்கள் சத்தியம் செய்கிறோம்

ஒருபோதும் இதை மறக்க மாட்டோம் என.

ஒரு கவிதையின் தலைப்பே “ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை”.

ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை

மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள்

எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு

ஏற்கனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது

காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி

ஆழப் பதித்துப் பதித்து

நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை. .

இனி திரும்பிச்செல்வேன்

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம்

உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

இந்த மனநிலைதான் இக்கவிதைகளின் சாராம்சம் என்று நினைக்கிறேன். தொகுப்பின் ஆரம்பத்தில் ஜென் கவிஞர் கோபாயாஷி இசாவின் சிறுகவிதையொன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்வுலகில்

நாம் நடக்கிறோம் நரகத்தின் கூரைகளில்

மலர்களை வெறித்தபடியே

மிகவும்பொருத்தம். கொழுந்துவிட்டு எரியும்போது மலர்களைப் பார்ப்பது தப்பித்தல் அல்ல; அலட்சியமும் அல்ல. அது ஓர் ஆழமான நம்பிக்கை. எதுவும் நிரந்தரமாக முற்றுபெற்றுவிடாது என்பதில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை. ஒருவிதத்தில் நுட்பமான எதிர்வினையும் கூட.

செல்வராஜ்


படுகளம் -7 (நாவல்)

$
0
0

இக்கட்டுகளை சமாளிப்பதிலுள்ள மிகப்பெரிய பிரச்சினையே உதவாக்கரை திட்டங்களை தவிர்ப்பதுதான். ஆனால் கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட விலங்கு முட்டி மோதி பிராண்டி பரிதவிப்பதுபோல நம் அகம் நிலையழிந்துவிடுகிறது. என்னென்னவோ திட்டமிடுகிறோம், அவற்றை அப்படியே கற்பனையில் நிகழ்த்திப் பார்க்கிறோம், வெற்றிபெற்றதாக நினைத்துச் செருக்குகிறோம், ஏமாற்றப்பட்டதாக எண்ணி கொதிக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் நாம் செய்யும் பிழை என்பது எல்லாவற்றையும் நம்மை வைத்தே கற்பனை செய்வது. நம்மை நாமே மிகையாக்கிக் கொள்வது. தன்னை மிகையாக எண்ணிக்கொள்ளாத மனித உயிரே உலகில் இருக்க முடியாது. ‘என்னை உனக்கு தெரியாது’ ‘நான் யாருன்னு காட்டுறேன்’ என்றுதான் ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதெல்லாம் தன்னைத்தானே காட்டிக்கொள்ளும் முயற்சிகள். தன்னைத்தான் சற்றும் அறியாத மூடத்தனங்கள்.

நான் ரஃபீக்கிடம் அறைகூவியது முழுமையான மடத்தனத்தால். நான் ஒன்றுமே இல்லை என எனக்குத்தெரியும், அவருக்கும் அது தெரியுமென எனக்குத் தெரியும். எனக்கு இங்கே எந்த பின்புலமும் இல்லை. என் கடைவீதியின் வணிகர்கள்கூட சௌகரியமாக என்னை பலிகொடுத்துத் தப்பித்துக் கொண்டார்கள். பொறாமைகூட இருந்திருக்கலாம். பொறாமைதான் வணிகனின் சக்தி. அதுதான் அவனை சீண்டி ஓடவைக்கும் சவுக்கடி. நானே காசியின் மாபெரும் துணிக்கடையை  கண்டு பொறாமை கொள்ளவில்லையா என்ன?

“ஏம்ல? என்னாச்சு? ஏன் இப்டி இருக்கே?” என்று அம்மா கேட்டுக்கொண்டே இருந்தாள்.

“நீ சித்த சும்மா இருப்பியா… நொணநொணன்னுட்டு” என்று எரிந்து விழுந்தேன்.

அம்மாவுக்கு அது பழக்கம்தான். அப்பா அப்படித்தான் இருப்பார். சந்தேகமான முகத்துடன் விலகிச் சென்றாள். நான் அன்றிரவு நன்றாகவே குடித்தேன். நினைவழிந்து விழுந்து தூங்கினேன். விழித்துக்கொண்டபோது வியர்வை வழிய படுக்கையில் குப்புறக் கிடந்தேன். கடும் தாகத்தால் உடல் பரிதவித்தது.

எழுந்து சமையறைக்குச் சென்று தண்ணீர் பிடித்து குடித்தேன். வாசலில் ஏதோ கார் கடந்துசெல்வதன் முகப்புவெளிச்சம் ஒளியுடன் திரும்பியது. திண்ணையில் சென்று அமர்ந்தேன். பின்னிரவுக்குரிய குளிர். இரவின் ரீங்காரம். தெருவிளக்குகளின் மங்கலான வெளிச்சம். அதில் எதிர்வீட்டின் பச்சை கேட் நிழலுடன் சேர்ந்து விந்தையாக நின்றிருந்தது.

என்ன செய்வது என்று நான் யோசித்தேன். வணிகர்சங்கத்தில் முறையிடலாமா? முறைப்படி எழுதிக்கொடுத்தாக வேண்டும். அவர்கள் ஒன்றும் செய்ய முடியாமலிருக்கலாம். ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை என அவர்கள் சொல்லிவிடக்கூடாது. மாநகராட்சியில் ஒரு மனு கொடுத்து வைக்கலாம். எம்.எல்.ஏவிடமும் ஒரு மனு கொடுக்கலாம். கலெக்டரிடமும் கொடுக்கலாம். அவர்கள் என்ன செய்யமுடியும் என்று பார்க்கலாம். எல்லா முனையில் இருந்தும் தாக்குதல் வரும்போது அவர்கள் கொஞ்சம் அசையக்கூடும். ரஃபீக்கே ஒரே ஒரு சிறு பேனருக்காக அவ்வளவு பெரிய போரை நடத்த மாட்டார்.

அந்த எண்ணம் அளித்த நிம்மதியில் நான் விடிகாலையில் படுத்துத் தூங்கினேன். காலையில் பிந்தி எழுந்தபோது கடுமையான தலைவலி. குமட்டலும் நெஞ்செரிச்சலும் இருந்தது. அவ்வளவு குடித்து எனக்கு வழக்கமில்லை.

அம்மா “ஏம்ல, இது என்னத்த வழக்கம்?” என்றாள்.

“என்னது?”

“இந்த வாடையெல்லாம் எனக்கும் தெரியும் பாத்துக்கோ. உனக்க அப்பா கடைசிக்காலத்திலே இதிலதான் இருந்தாரு…”

அது எனக்கு புதிய செய்தி. ஆனால் அதில் ஆச்சரியமில்லை. அந்த வெற்றுக்கடையில் இருந்தபடி வாழ்க்கையைச் செலவிட குடிக்காமல் முடியாது.

நான் அன்று கடைக்குச் செல்லவில்லை. மாரியிடம் கடையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு நேராக நகராட்சி அலுவலகம் சென்றேன். மனு எழுதுபவரைக் கண்டு ஒரு புகார் எழுதி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொண்டுசென்று கொடுத்தேன். மனு எழுதியவர் சொன்னபடி அந்த புகாருக்கு எட்டு நகல் எடுத்து எட்டு வெவ்வேறு அதிகாரிகளுக்கு அனுப்பினேன். சம்பந்தமே இல்லாத அதிகாரிகள். ஆனால் ஒரே ஒரு மனு என்றால் புதைத்துவிடுவார்கள் என மனு எழுதுபவர் சொன்னார். சம்பந்தமில்லாத இடங்களுக்கெல்லாம் மனுவின் நகல்கள் அனுப்பினால் அவர்கள் முறைப்படி எண் போட்டு இவர்களுக்கு வழிதிருப்பி அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். நகல்பெறுநர் என போட்டு நாலைந்து விலாசங்கள் போட்டாலே எந்த மனுவும் புதைக்கப்படாது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்த பிறகு நேராக கடைக்கு வந்தேன். கடையில் ஒரே ஒரு சோப்பு விற்றிருந்தது. கடையில் அமர்ந்து வணிகர் சங்கத்திற்கு ஒரு மனு எழுதினேன்.

நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே சுடலைப்பாண்டி மாமா வந்தார். நான் அவரை ஏறிட்டுப்பார்த்து புன்னகையுடன் “வாங்க மாமா” என்றேன்.

அவர் குழம்பிவிட்டார் என்பது கண்களில் வந்த சிறு சுருக்கத்தால் தெரிந்தது “இங்க வந்து இத நடுறப்ப நான் இல்ல பாத்துக்க… நான் கொஞ்சம் பிந்தி வந்தேன். அதுக்குள்ள டிரில்லிங் மிசின வைச்சு பதினெட்டடிக்கு ஆளமா துளைச்சு கம்பிய எறக்கிட்டானுக… கான்கிரீட்டு ஜெல்லிய உள்ள விட்டுட்டு இருந்தானுக. எல்லாம் பெரிய கைகள்… நாம என்ன சொல்ல முடியும் சொல்லு? நான் உனக்கு தாக்கல் சொல்லி அனுப்பலாம். நானே சொன்னா அத வச்சு நம்மள வேட்டையாடுவானுக… என்ன செய்யுதது? போனிலே விளிச்சேன். நீ எடுக்கலை… அதுக்குள்ள நம்ம மச்சான் மருதையிலே இருந்து வந்திட்டான், அங்க அவனுக்கு ஒரு பேமிலி பிரச்சினை… நான் என்னன்ன பாக்குதது? ஒத்த ஒரு மனுசன், சொல்லு…”

“பரவால்ல… நான் வணிகர்சங்கத்துக்கு ஒரு புகார் கொடுக்கப்போறேன்.”

“நல்ல காரியமாக்கும். செய்யணும். அவனுக என்னமாம் செய்யலாம். ஆனா அவனுக எப்பவும் பெரியாளுங்களுக்கு சப்போட்டு. பெரியாளுங்கதான் மேலே இருக்கவனுக. எல்லாரும் கிளப்புலே ஒரே மேசையிலே இருந்து சீட்டுவெளையாடுத ஆளுக. ஏளை சொல்லு அம்பலமேறுமா?”

“பாப்போம்” என்றேன்.

“அதோடு ஒரு விசயம், உனக்கு தெரிஞ்சிருக்காது. இப்ப நம்ம கடை இருக்கப்பட்ட பாதி எடம் சட்டப்படி நம்முளுது இல்ல. அந்தக்காலத்திலே கடை அந்த எல்லை வரைத்தான் இருந்தது. மிச்சமெல்லாம் பிறவு நவுத்திக்கிட்டது. இது திருவாவடுதுறையோட எடம். பழங்காலத்திலே இங்க ஒரு கல்மண்டபம் இருந்திருக்கு. கோயிலுக்கு வாறவங்க மாட்டை கீட்ட அவுத்து விட்டுட்டு தங்கி சமைச்சு சாப்பிட, படுத்து கையக்கால நீட்ட ஒரு எடம்… மடத்திலே இருந்து வசதி செஞ்சு குடுத்திருக்காங்க. அதுக்கு வெட்டின ஒரு கிணறு அந்தா அந்த மூலையிலே இருந்திருக்கு…”

நான் அதை அறிந்திருக்கவில்லை.

சுடலைப்பாண்டி மாமா சொன்னார் “ஏதோ ஒரு கட்டளத்தம்புரான் காலத்திலே அவரோட தாய்மாமா காச வாங்கிட்டு இங்க திருவிளாவுக்கு கடைபோட அனுமதி குடுத்திட்டாங்க. அத நாகலிங்க மூப்பனார்னு ஒருத்தர் எடுத்து கடபோட்டிருந்தார். அவரோட மகன் சுப்பையா மூப்பனார் காலத்திலே மண்டபத்த உள்ளார வைச்சு சுத்தி ஒரு கட்டிடத்த கட்டிட்டாரு… அந்த கட்டிடத்த நல்லா நீட்டி முனிசிப்பல் எடத்தையும் உள்ள வளைச்சிட்டாரு… அப்றம் முப்பது வருசம் களிஞ்சு அவரோட மகன் நாகலிங்கம் மொத்தத்தையும் இடிச்சு இப்ப இருக்குத இந்த கட்டிடத்த கட்டி எட்டு கடையா வாடகைக்கு விட்டிருக்காரு… எதுக்குச் சொல்லுதேன்னா முனிசிப்பாலிட்டி நினைச்சா நம்ம கடைகளை பாதிவரை இடிச்சு நிலத்த மீட்டுக்க முடியும்.”

“டாக்குமெண்டு இருக்கா அதுக்கெல்லாம்?”

“முனிசிப்பல் டாக்குமெண்டு வெள்ளக்காரன் காலத்து சர்வேல்லா? பக்காவா இருக்கு… பத்து வருசம் முன்னாடி அப்பாவு நாடார் கமிசனரா இருந்தப்ப வந்து அளந்து மார்க் பண்ணினாரு. அப்பதான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டோம். எல்லாருமா சேந்து ஆளுக்கொரு தொகை போட்டு கொண்டுபோயி குடுத்து செட்டில் பண்ணினோம். ஆனா இந்த ரெக்காடெல்லாம் அங்க இருக்கத்தானே செய்யும்?”

“இப்ப என்னங்குதீக?”

“இல்ல, நாம இப்ப கம்ப்ளெயிண்டு பண்ணினா முனிசிப்பல்காரன் என்ன சொல்லுவான்? பேனர் இருக்குத எடத்துக்கும் உன் சொத்துக்கும் நடுவே எட்டர அடி இடவெளி இருக்குல்லாவே, இடிச்சு வளி போட்டுக்கோன்னு சொல்லுவான்… இடிக்க வந்துட்டான்னா அது எல்லாருக்கும் தீம்பு பாத்துக்க.”

நான் சலித்துப்போய் தலையை அசைத்தேன்.

“இப்ப வணிகர் சங்கத்துக்கு போனாக்கூட அதான் சொல்லப்போறான்… இந்த எடமே உன்னுதில்லடான்னு சொல்லுவான்… அதையும் நாம பாக்கணும்லா?”

“அப்ப நான் என்னதான் பண்ணணும்னு சொல்லுதீக?”

“நான் என்ன சொல்லுதது? இப்ப பூர்ணமங்கல்யா கடையே அல்லாப்பிச்சை ராவுத்தர்னு ஒருத்தரோடதுதான். இவரு ஆக்ரமிச்சு வச்சிருக்காரு.. அவருகிட்ட எவனாம் கேப்பானா? அவரக்கண்டாக்க துண்ட எடுத்து இடுப்பிலே கட்டிக்கிட்டு நிப்பான்… நம்ம கிட்ட மீசையை விட்டு கைய எடுக்காம பேசுவான்… இங்க ஆனைகள் சண்டை போடுது. நாம சின்ன எலி மாதிரி… இங்க நாம யாருக்கும் தெரியாம இருந்திட்டிருக்குதது மட்டும்தான் நமக்கு நல்லது… நாம நாலுபேரு கண்ணுக்குப் பட்டாலே தீம்புதான்… கம்ப்ளெயிண்டு குடுத்தா நீ பெரியாளுங்க கிட்ட மோதுறேன்னு எடுத்துக்கிடுவாங்க. நமக்கு சட்டமும் தொணை இல்ல. சாத்திரமும் தொணையில்ல. சாமிதுணையும் இல்ல… செரி, பாத்துக்க.”

அவர் சென்றபிறகு எனக்கு எல்லாமே தெளிவாகி விட்டது. அவர் பொய் சொல்லவில்லை, அப்படி ஒரு பொய்யைச் சொல்ல அவரால் முடியாது. வணிகர் சங்கம் என்ன சொல்லவேண்டும் என ஏற்கனவே முடிவெடுத்திருக்கிறார்கள்.

செய்ய ஒன்று மட்டும்தான் இருந்தது, மீண்டும் ரஃபீக்கை போய்ப் பார்ப்பது. அவர் காலிலேயே விழுந்துவிடுவது. அவர் என்னை காப்பாற்ற முடியும். முழுக்கச் சரணடைந்துவிட்டால் அவர் எனக்கு உதவக்கூடும்.

ரஃபீக்கின் இல்லம் எங்கிருக்கிறது என்று அன்றே விசாரித்துவிட்டேன். மறுநாள் அதிகாலையிலேயே கிளம்பி ரஃபீக்கின் இல்லத்துக்குச் சென்றேன். பச்சைநிறமான பெயிண்ட் அடித்த பெரிய கிரில் கேட் கொண்ட வீட்டில் சாலைக்குமேல் உந்தி நிற்கும் பால்கனியில் ஒரு சூரல் ஊஞ்சல் தொங்கியது. கேட்டுக்கு வெளியே ஒரு மட்டடோர் வேன் நின்றிருந்தது.

நான் கேட்டைப்பிடித்து அசைத்தேன். “சார், சார்” என்று அழைத்தேன்.

உள்ளிருந்து பனியன் போட்ட ஒரு பதினாறு வயதுப் பையன் வந்து எட்டி பார்த்து “ஆரு?” என்றான்.

“ரஃபீக் சாரைப் பாக்கணும்.”

“இருங்க” என்று அவன் அப்படியே உள்ளே சென்றான்.

சற்றுநேரத்தில் ரஃபீக் வந்து எட்டிப்பார்த்தார். முகம் மாறி, “இங்க எதுக்கு வந்தீக? பிசினஸ் எல்லாம் ஆபீஸ்ல” என்றார்.

“நான் பிசினஸ் பேச வரல்ல… நான் உங்க காலைப் பிடிக்க வந்தேன்… என் வாழ்க்கையை அழிச்சிராதீங்க… நீங்க கும்பிடுத அல்லா பேரிலே கேட்டுக்கிடுதேன்.”

“நான் யார் வாழ்க்கையையும் அழிக்கல்ல… நான் தொழில் செய்யுதவன்… இது என் தொழிலு… இத நான் அழிச்சிக்கிட்டா என் குடும்பம் தெருவிலே நிக்கும். நான் அழிஞ்சா எங்க போயி நிப்பேன்?”

“அந்த பேனர மாத்தினா நீங்க அழிய மாட்டீங்க…”

“இல்ல, நேத்து முனிசிப்பாலிட்டியிலே பிராது குடுத்திட்டீங்க. உடனே அங்க உள்ளவனுக அத எடுத்துக்கிட்டு இங்க வந்து பணம் கேட்டானுக… ஐயாயிரம் ரூபா குடுத்து சமாதானம் செஞ்சு அனுப்பினேன். ஆனா ஒரு ஆபீசரு நேரா காசி சார் கிட்டே போயி பேசிட்டான். அவனுக்கு அவரு பத்தாயிரம் ரூவா குடுத்திட்டு ராத்திரி என்னைய கூப்பிட்டாரு. என்ன பாய், தொளில் நடத்த உனக்குத் தெரியாதா? பேனருக்கு பேனர் நான் இனி பணம் குடுக்கணுமான்னு கேக்குதாரு… இல்லைய்யா இல்லைய்யான்னு சொல்லி காலைப்பிடிச்சு சமாதானம் செஞ்சேன்… நீ எங்கிட்ட அளுவுதே, நான் அங்க அளுதேன்… பொளைப்புல்லா?”

நான் “ரஃபீக் சார், எனக்கு வேற ஆருமில்லை” என்றேன். என் குரல் உடைந்தது.

“இங்க பாரும், இந்த ஒரு பேனர மாத்தினா பிலுபிலுன்னு கெளம்பிருவானுக. எல்லா பேனரையும் மாத்துன்னு சொல்லி பிராது குடுத்துட்டு வந்து காசு கேப்பானுக… அவ்ளவுதான். நேத்துள்ள நிலைமை வேற. இப்ப இபிலீஸே நேரிலே வந்தாலும் இந்த பேனர மாத்தமுடியாது… மாத்தமாட்டேன்னு நான் காட்டியாகணும். காட்டினாத்தான் எனக்கு இனி தொளிலு… புரியுதா?”

நான் பிரமைபிடித்தவன் போல நின்றேன்.

“பொறவு ஒரு விசயம், நீ என்ன அதிகாரத்திலே கலெக்டர்கிட்ட கம்ப்ளெயிண்டு குடுக்கே? அந்த எடமே உன்னுதில்ல. அந்த கட்டிடம் பாதி முனிசிப்பல் எடத்திலே இருக்கு. அதுக்கு ரெக்காடு இருக்கு. முனிசிப்பாலிட்டிக்காரன் கிட்ட கேட்டா எடுத்து கையிலே குடுப்பான்… நீ எங்கிட்ட போட்ட சவாலுக்கு நான் அதுக்குமேலே ஒரு கம்ப்ளெயிண்டு குடுத்து உன்னைய மாட்ட வச்சிருக்க முடியும். நான் அதைச் செய்யல. நான் அல்லாவுக்குப் பயந்தவன். இன்னொருத்தனை அளிச்சு எனக்கு வாழ்க்கை வேண்டாம், கேட்டியா?”

“நான் என்ன செய்யணும்?”

“எனக்கு என்ன தெரியும்… நான் சொல்லவேண்டியதச் சொல்லியாச்சு, அம்பிடுதான், இனி என்னைய தொந்தரவு செய்யாதே…” அவர் உள்ளே போய் கதவைச் சாத்திக்கொண்டார்.

திகைத்தவனாக அங்கே நின்றிருந்தேன். கிட்டத்தட்ட அரைமணிநேரம். அதன்பின் பைக்கில் ஏறி அர்த்தமில்லாமல் ஓட்டி புதியபேருந்து நிலையம் சென்றேன். ஜங்ஷன் சென்றேன். ஒரு கட்டத்தில் வண்ணாரப்பேட்டையில் இருப்பதை உணர்ந்தேன். அங்கே ஏன் வந்தேன்? மீண்டும் கடைக்கு வந்தேன். இருநூறு ரூபாய்க்கு விற்பனை ஆகியிருந்தது… இருபது ரூபாய் லாபம்.

அந்த பேனர் தெருவையே முழுமையாக மறைத்திருந்தமையால் நான் ஏதோ ஓர் இருண்ட சிறைக்குள் இருப்பதுபோல் இருந்தது. ஓசைகள்கூட மிகத்தொலைவில் கேட்டன.

நடராஜ நாடார் என்னை தேடி வந்தார். “இங்கதான் இருக்குதியா? வெளியே போனாப்ல தெரிஞ்சுது.”

“இப்பதான் வந்தேன்”

“என்னா வெக்கை… தேர்த்திருளாவிலேதான் இனி கொஞ்சம் மளை விளணும்” என்றபடி அமர்ந்துகொண்டார். “பின்ன எப்டி போவுது?”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

“விசயங்கள் கேள்விப்பட்டேன். உள்ளதச் சொல்லணும்லா, அவனுககிட்ட நம்மாலே மோத முடியாது. நாம சின்ன ஆளுங்க. நம்ம சைசு நமக்கு தெரியணும்… நீ என் இளையமகன் சுப்ரமணியத்துக்க பிராயமாக்கும். அதான் சொல்லுதேன். புரிஞ்சுதா?”

நான் தலையை அசைத்தேன்.

“இவனுக பேனரை வச்சிருக்குத விதத்தப் பாத்தா இத எடுத்து மாத்த மாட்டானுக… ஏன்னா இது இருக்குத கோணம் அப்டி… கண்ண எப்டி திருப்பினாலும் இதான் முன்னாலே வந்து நிக்கும்… உன் கடைக்கு கூட்டம் வந்ததும் அதனாலேதான்…”

அதற்கும் நான் தலையை அசைத்தேன்.

“இனி இங்க தொளில் செய்ய முடியாது… ஒரு நாலஞ்சு வருசமாவது ஆவும், இந்த பேனரு போறதுக்கு. இந்த எடத்த குடோனா வேணுமானா வச்சுக்கிடலாம்…”

நான் பேசாமலிருந்தேன்.

“இப்ப நீ செய்யவேண்டியது ஒண்ணுதான், மாமன் சொல்லுதது அனுபவஸ்தன் பேச்சுன்னு வச்சுக்கோ. சரக்குகளையும் கடையையும் ஒட்டுமொத்தமா கைமாத்தி விட்டிரு. நேராப்போயி கடனை அடைச்சிரு… மிச்சமிருக்க பைசாவுக்கு ஒரு புது கேரண்டி குடுத்துட்டு மொள்ளமா வீட்டை விக்குத வளியப்பாரு… கடன் முளுசா அடைஞ்சுட்டுதுன்னா அப்டியே மெட்றாஸுக்கு கெளம்பீரு… இங்க உனக்கு இனி சரிப்பட்டு வராது.”

அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் தன் புள்ளிக்கு வந்தார் “அப்ப ரெண்டு லெச்சம்னு கேட்டேன். இப்ப நீ கஷ்டத்திலே இருக்கே… நாம மூணுக்கு முடிச்சுப் போடலாம்…  சரக்குக்கு உண்டான வெலையையும் குடுத்திடுதேன்… மூணு தவணையாட்டு பணம் உன் கைக்கு வந்திரும்… ஒரு மாசத்திலே நீ தலையை உருவிட்டு கெளம்பிரலாம்… என்ன சொல்லுதே?”

“நான் வந்து பேசுதேன் மாமா… அம்மைகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுதேன்.”

“செரி, செரி… கேட்டுச் சொல்லு. நான் கேட்டத மனசிலே வைச்சுக்கோ. இதைக் கேட்டா இங்க உள்ளவனுக கலைச்சுப்போடுவானுக… ஏன்னா கடைக்கு உனக்கு உரிமை இல்லல்ல… பொறாமக்காரப்பய முனிசிப்பாலிடியிலே ஏதாவது எளுதிப் போடுவான். இல்லே எனக்கும் ரைட்டு இருக்குன்னு வந்து நிப்பான்… சரியா? மனசிலே வச்சுக்க. காதும் காதும் வச்சமாதிரி கமுக்கமா முடிச்சிடலாம்… வரட்டா?”

அவர் செல்வதை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு புள்ளியை அர்த்தமில்லாமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருப்பது என் வழக்கமாக ஆகிவிட்டிருந்தது.

மதியம் வரை கடையிலேயே இருந்தேன். என்ன செய்வது? ஒருவேளை செவத்தபெருமாளால் ஏதாவது செய்யமுடியுமா? அவர் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அவர் ஒரு கிளைதான். கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்கு அடியில் இருக்கும் அந்த பெரிய அமைப்பு ஏதாவது உதவ முடியும். குறைந்தபட்சம் அவர்கள் எனக்களித்த பணத்தை மீட்பதற்காவது ஏதாவது செய்தாகவேண்டும்.

நான் பைக்கை எடுத்துக்கொண்டு செவத்தபெருமாளை தேடிச்சென்றேன். அவர் வீட்டை அடைந்தபோது எதிரில் வந்த ஆட்டோவில் இருந்து அவர் மகள் இறங்கினாள். என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

“காலேஜ் இப்ப முடிஞ்சுதா?” என்றேன்.

“ஆமா, பிராஜக்ட் வர்க் இருந்திச்சு… வாங்க” என்று அவள் உள்ளே நடந்தாள்.

“உங்க பேரு?” என்றேன்.

“சாந்தி, அப்பா அன்னிக்குச் சொன்னாரே.”

“ஓ, நான் கவனிக்கல்லை”

“உக்காருங்க” என்று சோபாவை காட்டிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

செவத்தபெருமாள் வந்தபோது முகத்தில் அந்த நட்புச்சாயல் இல்லை. “வாங்க” என்றபின் அமர்ந்தார்.

“ஒரு பிரச்சினை…” என்றேன்.

“தெரியும்” என்று சுருக்கமாகச் சொன்னார். “வட்டியக் குறைச்சுகிடுதது எல்லாம் நம்ம கையிலே இல்ல. வட்டி கட்டல்லேன்னா வட்டிக்கு வட்டி ஆயிடும்…”

“நான் அதுக்காக வரல்ல…” என்றேன். “நீங்க சொல்லி அந்த பேனரை எடுத்து மாத்த முடியுமா? பேனர் இல்லேன்னா ஆறுமாசத்திலே ஏவாரம் பலமடங்காயிரும்… உங்க பணமும் அதிலே இருக்கு.”

“எங்க பணம் உங்க கையிலே இருக்கு தம்பி… நாங்க ஏவாரத்திலே முதலீடு பண்ணல. உங்களுக்கு தனிப்பட்ட மொறையிலே கடன் குடுத்திருக்கோம். எங்களுக்கு லாபத்திலே பங்கு இல்லை, குடுத்த காசுக்கு வட்டி மட்டும்தான்.”

“ஆமா, ஆனா உங்க பணம் அதிலேதான் இருக்கு. என் கடை நொடிச்சா நான் பணத்தை குடுக்க முடியாம ஆகும்… அதனாலே…”

“தம்பி நாங்க தொளில் செய்யுறதுன்னா நேரடியாவே செய்வோம். இல்லே, உங்ககிட்ட பங்காளியாச் சேரணுமானாலும் அதைச் செய்வோம். அது தெரியாமலா வட்டிக்குக் குடுக்கோம்? எங்களுக்கு வட்டி மட்டும்தான் முக்கியம். மத்த எதிலேயும் தலையிட மாட்டோம்.”

“நீங்க உங்க மேலிடத்திலே சொன்னா…”

“மேலிடமா…” என்று கோணலாகச் சிரித்தார். “அது இந்த போர்ல தண்ணி வாறது மாதிரியாக்கும். மிசின் போட்டா வருது. அங்க என்ன இருக்குன்னே தெரியாது. யாரு குடுக்காகன்னும் தெரியாது… யாரோ குடுக்காங்க. அவங்ககிட்ட நான் போயி ஒரு உதவிக்கும் நிக்க முடியாது. எல்லாம் நானே செய்யணும்… ஒரு கொலை விளுந்தாக்கூட நான்தான் பணம் செலவிறக்கி போலீஸுக்கும் கோர்ட்டுக்கும் போகணும்… திரும்பிப் பாக்கமாட்டாங்க…”

“எனக்கு உதவி செய்யுங்க… எனக்கு ஆருமில்லை. நான்…” நான் கைகூப்பி மன்றாடினேன்.

“தம்பி உன்னைய விட மோசமா மாட்டிக்கிட்டு இருக்குதவன் நான்… நான் ஒண்ணும் செய்ய முடியாது”

“மணிய வைச்சு…”

“மணி மாதிரி எட்டுபேரு இருக்கானுக… அவனுகளுக்கு நான் பணம் குடுக்கணும்… சாதாரணப் பணம் இல்ல பாத்துக்கோ. அதும் இந்த ரெண்டு பர்செண்டேஜ் மார்ஜின்ல இருந்து குடுக்கணும். கேஸு வந்தா மொத்தமா நக்கிட்டுப் போயிரும்… நீ சொல்லுதேன்னு நான் ரஃபீக் பாய் கிட்ட சண்டைக்குப்போனா அவன் சும்மா இருப்பானா? அவன் ஆளு வைச்சிருக்க மாட்டானா? மாறிமாறி அடிச்சே அழிஞ்சிருவோம், ரெண்டுபேருமே மிஞ்ச மாட்டோம்…”

“அப்ப நான் அழிஞ்சா பணத்த எப்டி எடுப்பீங்க? நான் போயி சாகுதேன்… என்ன செய்வீங்க?”

“உனக்கு வீடு இருக்குல்லா? சொத்து சிலது உண்டுல்லா? ரெண்டு தங்கச்சிக்காரிக கெடக்காளுகள்லா? காட்சிக்கு நல்ல குட்டிகளுக்கு நல்ல டிமாண்டு உண்டு… என் காசு வந்திரும்.”

நான் இரு கைகளையும் கோத்து நெற்றியை அதில் சேர்த்து உடல்குறுக்கி அமர்ந்திருந்தேன்.

சாந்தி வந்து “காப்பி” என்றாள்.

நிமிர்ந்தபோது என் கண்கள் கலங்கியிருந்திருப்பதைக் கண்டு அவள் இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள். நான் காபி எடுத்துக்கொண்டு “தாங்க்ஸ்” என்றேன்.

அதன்பின் மிக நிதானமாக காபியை குடித்தேன். செவத்தபெருமாளிடம் ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றேன். அத்தனை வெறுமையாக இருந்தது என் உள்ளம். ஒரு சொல்கூட இல்லாமல் நான் என் மனதை அதற்கு முன் உணர்ந்ததே இல்லை.

(மேலும்)

ஆ.வே. இராமசாமியார்

$
0
0

ஆ.வே. இராமசாமியார் திருக்குறளை தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் தொண்டுகளைச் செய்தார். திருக்குறள் சார்ந்த பதின்மூன்று நூல்களை எழுதினார். குறளன்பன் என இலக்கிய உலகில் அறியப்பட்டார். இலக்கியத்திறனாய்வு நூல்கள், தன்வரலாற்று நூல்கள், பயணக்கட்டுரை நூல்கள் எழுதினார். இவரின் வாழ்வை சிவ. முத்துக்குமாரசாமி நூலாக எழுதினார்.

ஆ.வே. இராமசாமியார்

தருநிழல்

$
0
0

வைக்கம் முகமது பஷீர் ஒரு மங்கோஸ்டைன் மரத்தின் அடியில் பகலில் பெரும்பாலான நேரம் அமர்ந்திருப்பார். அங்கேயே நாற்காலி, டீபாய், பிளாஸ்கில் சுலைமானி, ரேடியோகிராம், புத்தகங்கள் எல்லாம் இருக்கும். அவருடைய வரவேற்பறை அதுதான்.

நான் சந்திக்கும்போது கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய மனைவிவழியாக கிடைத்த பாரம்பரிய வீட்டின் முகப்பில் நின்றிருந்த பெரிய மரமல்லி மரத்தின் அடியில்தான் இருப்பார். இரவிலும் அங்கேதான். அதில் விளக்குகள் அமைத்திருந்தார். கீழே அவருக்கான எல்லாமே இருக்கும். பிரம்பு நாற்காலிகள், பிரம்பு டீபாய், நாளிதழ்கள்…

கேரளத்தில் மரநிழல் மேல் அந்த மோகம் உருவாவதற்கு ஒரு காரணம் உண்டு, அங்கே அப்படி மரநிழலில் இருப்பதற்கான வாய்ப்பு ஆண்டில் நூறுநாட்கள்தான். மிச்சநாட்களெல்லாம் நசநசவென மழை பெய்துகொண்டிருக்கும். தமிழகத்தில் பழையகாலத்தில் ஆண்டில் முந்நூறுநாட்கள் மரநிழலில் வாழ்பவர்களே மிகுதி. ஆனால் இன்று எல்லாருமே வீடுகளுக்குள்தான். காரணம் தொலைகாட்சி.

ஒரு மரநிழல் எனக்கும் இருக்கவேண்டும் என்னும் ஆசை இருந்தது. என் இளமையில் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு மரம் இருந்தது. பெரிய வேப்பமரம். அதனடியில் ஒரு குளிர்ந்த பெரிய கல். அதிலமர்ந்து வாசிப்பேன். என்னைச்சுற்றி காகங்கள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும். அதன் பின் எங்கும் ஒரு மரம் அமையவில்லை. இப்போது என் இல்லத்தில் உள்ள மஞ்சள்மலர் மரம் எனக்கு இனியது. ஆனால் அதன்கீழ் அமர்வதற்கான வசதி இல்லை

எங்கள் மலைத்தங்குமிடத்தில் உள்ள இந்த மரம் அதை நான் பார்த்த முதற்கணமே என் மரமாக ஆகிவிட்டது. தோதகத்தி மரம். ஈட்டியின் ஒரு காட்டுவகை. மிகப்பெரிய மரம், அதை வெட்டிய அடிமரத்தில் இருந்து முளைத்து செறிந்து அழகிய பசுங்குடை என ஆகியிருக்கிறது. அதன் கீழே இரண்டு குளிர்ந்த பாறைகள். எந்நிலையிலும் அங்கே வெயில் படுவதில்லை. மலைப்பிளவை நோக்கிய இடம் என்பதனால் காற்று எப்போதுமே பெருகிச்சென்றபடி இருக்கும்.

எனக்கான மரம், ஞானவிருட்சம் என்று வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம். என் உளம்கவர்ந்த பல நூல்களை அங்கே அமர்ந்து வாசித்திருக்கிறேன். பிரியமானவர்களுடன் அங்கே அமர்ந்து உரையாடியிருக்கிறேன். நானும் ஒரு நாயும் நாள் முழுக்க தன்னந்தனியாக அங்கே இருந்திருக்கிறோம். அங்குவைத்து மிகநுட்பமான தத்துவக்குறிப்புகளை எடுத்திருக்கிறேன். 

ஒரு மரத்தின் அடியில் வழக்கமாகச் சென்றமரத் தொடங்கினால் அந்த மரம் நமக்கு அணுக்கமாக ஆகிவிடுகிறது. தனியாக இருக்கையில் அந்த மரத்தின் இருப்பை நாம் உணர்கிறோம். உடலிருப்பை மட்டுமல்ல ஆன்மாவின் இருப்பையும்கூட. அந்த மரத்துடன் ஆழமான ஓர் உரையாடல் தொடங்கிவிடுகிறது. நான் மிக அணுக்கமாக உரையாடும் மரம் இது. என் கனவில் அடிக்கடி வருவதும்கூட – எந்த மனிதர்களை விடவும் கூடுதலாக.

தட்சிணாமூர்த்தி சிலைகளில் பின்பக்கம் இருக்கும் மரம் செறிந்த இலைகிளைகளுடன் ஒரு குடை போல செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கையில் அது ஓர் அலங்காரவடிவம் என்றே எண்ணியிருக்கிறேன். இந்த மரம் மெய்யாகவே அப்படிப்பட்டது. மிக அழகிய ஒரு குடை.

மரத்தடியில் அமர்கையில் நாம் வான்கீழும் அமர்கிறோம். எந்தக் கூரையின்கீழும் அந்த அமைவு நமக்கு கிடைப்பதில்லை. மரம் கூரையை அளிப்பதில்லை. வானைத்தான் அளிக்கிறது.

ஆலயங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

$
0
0

ஏன் ஆலயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? வழிபாடுக்காக, கலையறிதலுக்காக. நம் இறந்தகாலத்தை நாம் அறிய. நம்மையே நாம் அறிய. நம் பண்பாடு கல்வடிவில் நம் கண்முன் நிற்பதுதான் ஆலயங்கள்.

வல்லினம்

$
0
0

மே 2024 வல்லினம் பதிவேற்றம் கண்டது.குமரகுருபரன் விருது பெற்றுள்ள வே.நி.சூர்யா கவிதைகள், நூல் விமர்சனம், சிறுகதைகள், லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் குறித்த இலக்கியக் கட்டுரை, எஸ்.எம்.ஷாகீரின் மொழிப்பெயர்ப்புச் சிறுகதை, வல்லினம் விமர்சன முகாமின் பதிவுகள் எனப் பலவும் உள்ளன.

வல்லினம் – மே- இதழ்

படுகளம் -8 (நாவல்)

$
0
0

எதை நான் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேனோ அதை நெருங்கிவிட்டேன் என்று மறுநாள் காலையில் உணர்ந்தேன். அன்று மிக விடியலிலேயே விழித்துக்கொண்டேன். மனம் மிக அமைதியாக இருந்தது. ஒரு தொடர்பும் இல்லாமல் டைரக்டரின் பெயர் மனதில் நின்றது. ஆனால் அவரை நான் நினைத்தே பல நாட்கள் ஆகியிருந்தது. ஏன் அவர் நினைவிலெழுந்தார்? நான் என்னை விடுவித்துக்கொள்ள உள்ளூர ஆசைப்பட்டிருக்கிறேன். என்னை அமைதியாக்கும் ஒரு நினைவை தேடி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

எழுந்து சென்று திண்ணையில் அமர்ந்து விடியற்காலையின் மெல்லிய குளிர் பரவிய சாலையை பார்த்துக்கொண்டிருந்தேன். திண்ணையை ஒட்டி, எரவாணத்துக்கு அடியில் படுத்திருந்த தெருநாய் எழுந்து என்னை மோப்பம் பிடித்தபின் மெல்ல முனகியது. அப்பால் இன்னொரு நாய் படுத்திருப்பது ஓசையில் தெரிந்தது. பனி ஏதுமில்லை. ஆனால் அவ்வப்போது ஓரிரு இலைகள் உதிர்வது பனிசொட்டுவதுபோன்ற பிரமையை எழுப்பியது.

நான் பூர்ணமங்கல்யா உரிமையாளர் காசிலிங்கத்தைச் சந்தித்தாகவேண்டும். அவர் நினைத்தால் மட்டும்தான் இது முடியும். உண்மையில் அவர் விரும்பினால் ஐந்தே நிமிடத்தில் முடிந்துவிடும். அவர் எனக்காக அதைச் செய்ய மாட்டார் என்று எந்தக் காரணமும் இல்லை. அவருடைய பெருமைக்கு அந்த உதவி மேலும் பெருமை சேர்க்கும். நான் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். அதை ஊகிக்குமளவுக்கு அவர் நுட்பமானவர்தான். என்னை அழித்து அவர் அடையவேண்டிய ஒன்றும் இல்லை. அவருடைய தொழிலில்கூட நான் இல்லை.

அப்படியென்றால் ஏன் அவரிடம் செல்லாமலிருந்தேன்? எத்தனை யோசித்தாலும் உறுதியான காரணம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் புதிய புதிய காரணங்கள் என்னுள் உருவாகிக்கொண்டும் இருந்தன. அதை கடைசி வாய்ப்பாக வைத்திருந்தேன். அந்த வாய்ப்பு முதலிலேயே இல்லாமலாகிவிட்டிருந்தால் நான் மற்ற எந்த முயற்சியையும் செய்துபார்த்திருக்க மாட்டேன். அவர் வரைக்கும் அந்த சிறு கோரிக்கையுடன் செல்ல விரும்பவில்லை.

அப்போதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன், நான் அவரை என்னையறியாமலேயே அகத்தே வழிபட்டுக்கொண்டிருந்தேன். நான் வழிபட்ட ஆளுமை என் டைரக்டர்தான். காசிக்கு நேர் எதிரானவர். அவர் கடும் நிற உடைகளை அணிபவர், இவர் வெண்மையையே அணிபவர். ஆனால் இருவரையும் நான் வழிபட்டிருந்தேன். ஒருவரை வெளிப்படையாக, ஒவ்வொருநாளும் வணங்கினேன். இன்னொருவர்மேல் எனக்கு மதிப்புண்டு என்னும் தகவலையே நான் அறிந்திருக்கவில்லை.

நான் என் இளமையில் என் வாழ்க்கையின் வெற்றி பற்றிய பகற்கனவுகளிலெல்லாம் ஒருநாள் காசிலிங்கம் முன் சென்று நிற்பதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன். என் வெற்றி சினிமாவில்தான் என நினைக்க ஆரம்பித்தபின் அவர் விலகிச்சென்றுவிட்டார். ஆனால் சென்னையில் அவருடைய கடையின் விளம்பரத்தைக் காணும்போதெல்லாம் நின்று பார்க்காமல் இருந்ததில்லை. எங்களூர் கடை என அக்கடையின் வரலாற்றை நண்பர்களிடம் சொல்லாமல் இருந்ததில்லை.

அவரை என் அப்பாதான் எனக்கு சுட்டிக்காட்டினார். “எம்.ஏ படிச்சவரு. காலேஜ்லே வாத்தியாரா போக வேண்டிய ஆளு அப்டியே ஏவாரத்துக்கு வந்திட்டாரு… பேசவே மாட்டாரு. குனிஞ்ச தலை நிமுரறதுமில்ல. இங்க எந்த விசயத்திலயும் வந்து கலந்துக்கிட மாட்டாரு… ஆனா நினைச்சதைச் செஞ்சுட்டாரு” என்றார். அப்பாவிடமிருந்து அந்த வியப்பு எனக்கு வந்திருக்கலாம். என் அப்பா வியந்து பாராட்டும் ஒருவர். ஆனால் அதெல்லாம்கூட காரணமில்லை. வேறேதோ ஒன்று. அல்லது எந்தக் காரணமும் இல்லாத ஒரு ஈர்ப்பு. நிறைய ஈர்ப்புகள் அப்படித்தான்.

அதுவரை பேனர் விஷயமாக நான் சென்று சந்தித்த எவர்மேலும் எனக்கு உண்மையில் எந்த மதிப்பும் இல்லை. நான் என் நிலைமைக்காகக் கண்கலங்கி மன்றாடினேன். ஆனால் அவர்களுக்கு எப்படியோ என் மதிப்பின்மை தெரிந்திருக்கும். மனிதன் இன்னொரு மனிதனில் உடனடியாகக் கண்டுகொள்வது அதுதான். ஆனால் நான் காசிலிங்கம் மீது கிட்டத்தட்ட பக்தியே கொண்டிருக்கிறேன். தந்தை, ஆசிரியர், தலைவர் என எல்லாமாகவும் எண்ணியிருக்கிறேன். அவர் முன் சென்று நின்றால் உடனே அவருக்கு தெரிந்துவிடும். நான் கேட்கக்கூட வேண்டாம்.

துடிப்பான ஓர் இளைஞன். அவரைப் போலவே திட்டமிட்டு வெற்றியை அடைந்தவன். அவரை முன்னுதாரணமாக நினைப்பவன். அந்தத் தெருவில்தான் அவரும் வளர்ந்தார். என்னை சிறுவனாக அவரும் பார்த்திருக்கலாம். என் அப்பாவைத் தெரிந்திருக்கலாம். இந்த பேனர் மிகமிக எளிய விஷயம். இன்றோடு முடிந்து போகும் விஷயம். நான் இதுவரை தயங்கியதுதான் பிரச்சினை. நான் அவருடன் போட்டியிலும் இருக்கிறேன். அவர் என்னை வியந்து பார்க்கவேண்டும் என விரும்பியிருக்கிறேன். முதற்தோல்வியுடன் சென்று அவர்முன் நிற்க விரும்பவில்லை. இந்த உதவிக்குப்பின் நான் அடையும் எல்லா வெற்றியும் அவர் எனக்கு அளித்ததாக ஆகிவிடும். நான் ஒருபோதும் அவருக்குச் சமானமாக ஆக முடியாது. ஆகவேதான் தயங்கியிருக்கிறேன்.

அன்று காலை கோயிலுக்குப் போகத் தோன்றியது. அதிகாலையில் அம்மனையும் நெல்லையப்பனையும் தரிசித்துவிட்டு வந்தேன். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்து கொண்டேன். பூர்ணமங்கல்யா கடை எட்டுமணிக்குத்தான் திறக்கும். திறந்ததுமே ஒவ்வொரு நாளும் ஒரு சிறு கணபதி ஹோமம் நடக்கும். ஒன்பது மணிக்கு வாடிக்கையாளர்கள் உள்ளே போகலாம். காசிலிங்கம் மதியம் தாண்டித்தான் வருவார். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை. அவர் கடைக்கு சனிக்கிழமைதான் விடுமுறை. ஞாயிறன்று அவர் காலை கணபதிபூஜைக்கே வந்துவிடுவார்.

நான் ஒன்பதரை மணி வரை என் வீட்டிலேயே காத்திருந்தேன்.  அதன்பின் ஓர் ஆட்டோ வரவழைத்து சன்னிதித் தெருவுக்குப் போனேன். வேட்டி கட்டியிருந்ததனால் பைக்கை எடுக்கவில்லை. கடைமுன் பெரிய கூட்டம் இல்லை. ஞாயிறன்று காலை பத்து மணிக்குமேல்தான் கூட்டம் வரத்தொடங்கும். மாலையில் கடும் நெரிசலாகவே இருக்கும். கடைமுன் இறங்கியபோது என் மனம் அமைதியாக இருந்தது. உண்மையில் நான் புன்னகை செய்துகொண்டிருந்தேன். கையால் அழுத்தி கிராப் கலையாமல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன்.

கடைமேலாளர் ராமலிங்கம் செட்டியார் இருந்தார். எனக்கு அவரை முன்னரே தெரியும், பலமுறை அம்மன் சன்னிதியில் அவருடன் சேர்ந்து கும்பிட்டிருக்கிறேன். அவருக்கு என்னை நினைவிருக்க வாய்ப்பில்லை. அவர் கல்லாவில் அமர்ந்திருந்தார். நாளிதழை கவனமில்லாமல் வாசித்துக் கொண்டிருந்தார். நான் அவர் அருகே சென்று “வணக்கம் மாமா” என்று சொன்னேன்.

நினைத்ததுபோலவே அவருடைய முகத்தில் எந்த அறிமுக உணர்வும் தென்படவில்லை. “யாரு?” என்றார்.

“நான், என்பேரு…” என்று தயங்கி “என் பேரு செந்தில்ராஜ். எஸ்.ஆறுமுகச்சாமி நாடார் அண்ட் கோ ஓனர் பரமசிவம் நாடாரோட மகன்…” என்றேன்.

“ஓ” என்றார். அவருக்கு கடைவீதியிலேயே எவரையும் தெரியாது என்று புரிந்தது. அவரை மாதிரி ஆட்கள்தான் எந்த வியாபாரத்துக்கும் பெரும் சொத்து. அந்த கடையிலேயே வாழ்வார்கள். வேறொன்றிலும் ஈடுபடவே முடியாது. குடும்பம் கூட அவர்களுக்கு அந்நியம்தான். கடையில்தான் அவர்களின் அடையாளம், அதிகாரம் எல்லாமே. அதில் திளைப்பார்கள். அதை நுட்பமாக ஆடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்துவிடவேண்டும். சம்பளம்கூட தேவையில்லை. அவர்களை நம்பி வியாபாரத்தை விட்டுவிடலாம்.

“நான் முதலாளியப் பாக்கணும்” என்றேன்.

“அப்பாயின்மெண்டு வாங்கினீகளா?”

“இல்ல. ஆனா ஒரு அஞ்சு நிமிசம்போரும்… பர்சனல்”

“ஒரு காயிதத்திலே எளுதிக்குடுங்க. அவர்கிட்ட குடுக்கேன். அவரு கூப்பிட்டா போயிப்பாருங்க… எவ்ளவு நேரம் வேணும்னும் எளுதுங்க.”

நான் சுருக்கமாக என் பெயர், கடைப்பெயர் எழுதி ஐந்து நிமிடம் சந்திக்கவேண்டும் என்று குறித்தேன். அவர் உள்ளே சென்றபின் திரும்பி வந்து “கூப்பிடுதாரு. ஆனா அஞ்சே அஞ்சு நிமிசம்தான்னு கண்டிசனா சொல்லிட்டாரு… போங்க” என்றார்.

நான் மிகுந்த அமைதியும் தன்னம்பிக்கையும் அடைந்திருந்தேன். அந்தச் சந்திப்பு அப்படி நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது. அது நிகழப்போகிறது. இப்போது அவருக்குத் தெரியாது. ஆனால் பின்னால் அவர் புன்னகையுடன் நினைத்துக் கொள்வார். நாங்கள் சந்திப்புகளில் அதைப்பற்றிப் பேசிச் சிரிப்போம்.

நான் அவருடைய அறைக்கு வெளியே நின்றேன். வெண்ணிறமான வினைல் தட்டியாலும், தேய்க்கப்பட்ட கண்ணாடியாலும், அலுமினியத்தாலும் ஆன தடுப்பால் உருவாக்கப்பட்ட அறை. வாசலில் நின்றிருந்தவன் கட்டுமஸ்தாக இருந்தான். என்னை தலைவணங்கி வரவேற்று உள்ளே போகும்படி கைகாட்டினான். நான் உள்ளே சென்றதும் என் கூடவே வந்து எனக்குப் பின்னால் கதவருகே நின்றுகொண்டான்.

காசிலிங்கம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் அகன்ற திரையில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய விளிம்பில்லாத மெல்லிய கண்ணாடிப்பரப்பில் தெரிந்த ஒளியின் வழியாக அது ஓர் எக்ஸெல் ஷீட் என்று புரிந்தது. மீசையில்லாத மேலுதடும் சிவந்த கீழுதடுமாக அவர் பீங்கானால் ஆன மிகமென்மையான பொருள் என்னும் உணர்வு ஏற்பட்டது. சில ஒயின்கோப்பைகள் அப்படி தோன்றும். அவற்றின் அழகிய மென்மை எச்சரிக்கை உணர்வையும் கிளர்ச்சியையும் ஒருங்கே அளிக்கும்.

நான் “வணக்கம் சார்” என்றேன்.

அவர் என்னை அமரும்படிச் சொல்லவில்லை. நிமிர்ந்து நேராக என்னைப் பார்த்து புன்னகை இல்லாமல் “வணக்கம்” என்றார். சொல்லு என்பதுபோன்ற பாவனை. அவர் கண்ணாடியில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனின் வண்ணம் சட்டென்று மாறியது.

“என் பேரு…”

“எழுதிக் குடுத்திட்டீங்க” என்றார். பின்னர் கம்ப்யூட்டரின் கீபோர்டை மிக மென்மையாகத் தொட்டார். அவர் கண்ணாடியில் வண்ணம் மாறி மாறிச் சென்றது.

“என்…” சட்டென்று நான் உடைந்தேன். “சார், நான் உங்கள என்னோட ஆதர்சமனுஷரா நெனைச்சு வளந்தவன்… ரோட்ல உங்களப் பாக்க வந்து நின்னுட்டிருப்பேன்… நான்…” என்றதுமே தொண்டை அடைத்து கண்ணீர் மல்கிவிட்டேன்.

ஆனால் எனக்குள் இன்னொரு பக்கம் பெரும் கூச்சமும் உருவாகியது. நான் சொன்னது உண்மையான உணர்வு. ஆனால் அந்த இடத்தில், அந்தத் தருணத்தில் அது வெறுமொரு காரியப்பசப்பாகவே தெரிந்தது. அது எனக்கே அருவருப்பூட்டுமளவுக்கு இருந்தது.

“சொல்லுங்க” என்று அவர் கண்களில் எந்த உணர்வும் இல்லாமல் சொன்னார்.

நான் என் சட்டையின் பட்டன்பட்டையை இழுத்து விட்டேன். “உண்மையிலேயே உங்க மேலே அப்டி ஒரு மரியாதை வச்சிருக்கேன் சார்… சொந்த அப்பா மாதிரி, குரு மாதிரி…”

அதில் இருந்த உண்மையிலேயே என்ற சொல் மேலும் அசந்தர்ப்பமானது என அதைச்சொன்னதுமே தோன்ற நான் முற்றிலுமாக நிலைகுலைந்து போனேன். சொல்லிச் சொல்லி பழகி சேர்த்து வைத்திருந்த சொற்கள் அனைத்தும் செத்து உள்ளே கிடந்தன.

“என்ன விஷயம், அதச்சொல்லுங்க.”

“சார், என்னோட கடை… அது முன்னாடி உங்க பேனர்… இப்பதான் சார் ஆரம்பிச்சேன். ஏகப்பட்ட பணம் வட்டிக்கு வாங்கிப் போட்டிருக்கேன்… அஞ்சுவட்டி சார்… அழிஞ்சிருவேன். தயவுபண்ணுங்க சார்… உங்க மகனா நினைச்சு… சார்.”

உடைந்த சொற்களில் சொல்லச் சொல்ல நான் தழுதழுத்து கண்ணீர்விட ஆரம்பித்தேன்.

அவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். சுட்டுவிரலால் கீபோர்டை கொஞ்சம் வேகமாகத் தொட அவர் கண்ணாடியில் கம்ப்யூட்டர் திரை அணைந்தது. அவர் முகத்தின் ஒளி மறைந்து அவர் இன்னொரு தோற்றம் கொண்டார்.

“லுக், அதெல்லாம் பாக்க எனக்கு நேரமில்லை. எனக்கு அந்த எடம் வேணும். அதான் ஐடியல் ஸ்பேஸ்னு ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்சோம். ஸோ, அதை விட முடியாது. அது முடிஞ்சுபோச்சு…”

“என் கடைய மறைச்சிருது சார்… மொத்தமாவே வெளியே தெரியல்ல.”

“மே பி… ஆனா அங்க எங்க பேனர் வைச்சாலும் ஏதாவது கடைய மறைக்கத்தான் செய்யும்…”

“சார், என் தொழிலே அழிஞ்சிரும்…”

“இட் ஈஸ் கம்ப்ளீட்லி லீகல்… உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குன்னா நீங்க அதாரிட்டீஸ் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்… திஸ் இஸ் நாட் த ப்ளேஸ்… யூ மே லீவ்.”

மீண்டும் அவர் கீபோர்டை தொட அவர் கண்ணாடிச்சில்லுகள் ஒளிர்ந்தன. அவர் முகம் நீலமாக, சிவப்பாக, மீண்டும் நீலமாக மாற ஆரம்பித்தது.

“நான் சட்டம்பேச வரலை சார், சட்டம் பேசுற நெலைமையிலே நான் இல்லை. நான் உங்கள நம்பி வந்தேன்.”

“யூ மே லீவ்… த மீட்டிங் இஸ் ஓவர்” என்று கம்ப்யூட்டர்த் திரையை பார்த்தபடி அவர் சொன்னார்.

“ப்ளீஸ் சார், உங்க காலிலே விழுந்து கேக்கிறதா நினைச்சுக்கிடுங்க.”

சட்டென்று அவர் கடும்கோபத்துடன் நிமிர்ந்தார். முகம் ரத்தம் மாதிரி சிவந்திருந்தது. “ஆம்புளதானே நீ? இப்டி கெஞ்சுறே? கெஞ்சாதே… நீ என்ன பிச்சக்காரனா? வெளியே போ.”

நான் என்ன நடக்கிறதென்றே தெரியாதபடி அந்தக் கணத்தில் இருந்தேன். பிரமையுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“கிருஷ்ணா…” என்றார்.

அந்த நெட்டை ஆள் வந்து தன் பெரிய கையை என் தோளில் வைத்தான். நான் சற்றுத் தள்ளாடினேன். விழுந்திருப்பேன் என்று தோன்றியது. அவன் கைமேல் என் கையை வைத்து நிலைப்படுத்திக்கொண்டேன். அவன் என்னை மெல்ல தள்ளினான்.

வெளியே வந்ததும் என் மேல் குளிர்காற்று வந்து மோதியதுபோல் இருந்தது. அத்தனை நீண்டநேரம் இருட்டறையில், காற்றில்லாமல் இருந்தவன் போல மூச்சை இழுத்து இழுத்து விட்டேன். உடனே ஒரு காபி குடிக்கவேண்டும் என்றுதான் எண்ணம் ஓடியது. ஒரு காபி, ஒரு காபி, ஒரு காபி… வேறெந்த சொல்லும் மனதில் இல்லை.

வெளியே நடந்தேன். அந்த நிலையிலும் மேலாளரிடம் “வரேன் சார்” என்று சொன்னேன். நாம் நெருக்கடிகளில் இரண்டாகப் பிரிந்துவிடுகிறோம். அகம் உச்சநிலையில் இருப்பதனால் வெளிநிகழ்வுகள் தன்னிச்சையாக, பழக்கம் வழியாக நிகழ்கின்றன. ஆகவே மிகச்சரியாக நடந்துவிடுகின்றன.

வெளிவந்து அங்கே சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி, சரவண பவனுக்கு செல்ல ஆணையிட்டேன். இறங்கி பணம் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே சென்று  கணேசையரிடம் ஒரு ஃபில்டர் காபிக்குச் சொன்னேன். காபி வரும் வரை அங்கே அமர்ந்திருந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டிருந்தேன். காபியை குடித்த பின்னரும் அப்படியே அமர்ந்திருந்தேன்.

“என்ன வேணும் சார்?” என்று கணேசையர் கேட்டார்.

“இல்லை” என்று தலையசைத்தேன். எழுந்து வெளியே வந்தேன். நடந்தே என் கடைக்குச் சென்றேன். மாரி மட்டும்தான் இருந்தான். மற்ற பையன்கள் வரவில்லை. கடை அப்படியே மாற்றமில்லாமல் இருந்தது.

“முதலாளி, என்னமாம் செய்யணும். தேர்த்திருளா வரப்போகுது பாத்துக்கிடுங்க.”

நான் தலையசைத்தேன். கடையில் கால்நீட்டி கைகளை நெஞ்சில் கோத்து வைத்தபடி, அமர்ந்திருந்தேன்.

சுடலைப்பாண்டி மாமா வந்தார். “காலம்பற கோயிலுக்குப் போனியோ?” என்றார்.

“ஆமா”

“பாத்தேன்…” என்றபடி அமர்ந்தார்.  “நல்லதுதான். நமக்கு அம்மையில்லாம தொணை யாரு?”

நான் அவருடைய செவிகளின் முடியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மாரியிடம் “ஏவாரம் எப்டிடே போகுது?” என்றார்.

அவன் ஒன்றும் சொல்லவில்லை.அவன் அங்கே வெறுமே இருந்தான்.

அவர் என்னிடம் “நேத்து நடராஜன் என்ன கேட்டாரு?” என்றார்.

நான் “வெல பேசினாரு” என்றேன்.

“அவரு மலமுளுங்கியாக்கும். விட்டிராதே… அவரு சொல்லுத ரேட்டுக்கு மேலே கண்டிப்பா போகும்… நான் வித்துக் குடுக்குதேன் உனக்கு. நம்ம கிட்ட ஆளிருக்கு…”

“ஓ”

“நேத்தே ரெண்டுபேரு கேட்டுட்டானுக. முடிச்சுவிடுங்கண்ணேன்னாக. சரீன்னு சொல்லியிருக்கேன். அவசரப்படவேண்டாம்… பாத்துக்கிடுவோம்… நல்லா போகும் பாத்துக்க. உனக்கு பொருளுக்கு முக்காவெலை கிடைச்சாக்கூட நல்லது, அப்டியே தலைய வெளிய எடுத்திரலாம்ல…”

“நான் சொல்லுதேன் மாமா.”

“ஆமா, இப்பம் அவசரமில்ல. அவசரம்னு காட்டிக்காம இரு… பாத்துக்கிடலாம்” என்றவர். “நமக்கு இதிலே கமிசன் ஒண்ணும் இல்லடே” என்றார்.

நான் புன்னகைத்தேன். ஒரு கணம் அவரும் அறியாமல் புன்னகைத்தார். உடனே எச்சரிக்கையாகி “நீ நம்ம பய. உன் அப்பாவை நான் எப்பவும் அண்ணாச்சீன்னுதான் கூப்பிடுதது… அதுக்குண்டான உதவிய நான் செய்யணும்லா? வாறேண்டே” என்றார்.

அவர் சென்றபின் நான் எழுந்து “நான் வாறேன் மாரி” என்றபடி வெளியே சென்று ஓர் ஆட்டோவை அழைத்தேன்.

வீட்டுக்குச் சென்று  சட்டையை கழற்றி மாட்டினேன். வேட்டியை அவிழ்த்து லுங்கியைக் கட்டிக்கொண்டேன். உடல் அவ்வளவு எடைகொண்டிருந்தது. அவ்வளவு பெரிய களைப்பு எப்படி வந்தது என்று தெரியவில்லை. நிற்கவோ உட்காரவோ கூட முடியவில்லை. படுத்தாகவேண்டும் என உடல் துவண்டது.

“மதியம் இங்க சாப்பிடுதியாலே?” என்று அம்மா கேட்டாள்.

“ஆமா” என்றேன்.

“சின்னவளுக்கு இண்ணைக்கு மத்தியான்னத்துக்கு மேலே பரீச்சை. அவளும் இங்கதான் சாப்பிடுதா… கீர வாங்கியிருக்கேன். சாம்பார் வைச்சிருதேன்.”

நான் கட்டிலில் படுத்துக்கொண்டேன். என் உடல் மெத்தைமேல் முழுமையாக படிந்தது. மெல்லிய சல்லாத்துணிபோல. உடல் இருப்பதையே உணரமுடியவில்லை. தலையணையில் முகத்தை அழுத்திக்கொண்டேன்.

எந்த அர்த்தமும் இல்லாமல் அப்பால் அம்மா ஓடவிட்டிருந்த டிவியில் இருந்து கேட்ட சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். “இப்ப பளிச்சிடுமே வெண்மை! உங்களுக்கு முழுமையான சலுகைகள்! ஆமாம்!”

ஓரிரு நிமிடங்களில் உடல் வலிக்க ஆரம்பித்தது. தசைகளை இறுக்கியா வைத்திருக்கிறேன்? புரண்டு படுத்தேன். கைகளை தலைக்குமேல் கட்டிக்கொண்டு உத்தரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். “அப்ப சரவணன் சொன்னது தப்பா? நான் அவன நம்பினதுதான் என்னோட தப்பா? சொல்லு மாணிக்கம்… நான் உன்னை நம்புறேன்…” என்ன வசனம் இது. யார் யாரிடம் சொல்வது? “அம்மா, உன் செல்போன் எங்க?” என்று சின்னவள் கேட்டாள். “ஆனா, நான் மனசாட்சிய நம்புறேன். கடவுள நம்புறேன்… எது எப்டி போனாலும் நான் சொன்னமாதிரி சுதா திங்கக்கிழம வந்திருவா.”

என்ன இது என சட்டென்று திடுக்கிட்டேன். என்ன சிந்தனை செய்துகொண்டிருக்கிறேன்? என்ன ஆயிற்று எனக்கு? என் சித்தம் பேதலித்துவிட்டதா? என் வாழ்க்கை அழிந்துவிட்டிருக்கிறது. மிச்சமே இல்லாமல். ஆனால் நான் ஏதேதோ நினைத்துக்கொண்டிருக்கிறேன். மடையன்போல.

சட்டென்று நான் விசும்பியதை நானே கேட்டேன். அந்த ஓசை என் எல்லாத் தடைகளையும் உடைத்தது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கேவிக்கேவி அழத்தொடங்கினேன். அழுந்தோறும் என் அழுகை மேலும் விசைகொண்டது. விசும்பல்களில் என் உடல் குலுங்கி அதிர்ந்தது. இடதுகால் மெல்லிய வலிப்பு வந்ததுபோல துடித்தது. உதிரிச் சொற்றொடர்கள் என் வாயில் இருந்து தெறித்தன. “அம்மா! அம்மா! என் அம்மா… செத்திருவேன்… செத்திருவேன்.”

(மேலும்)

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்

$
0
0

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்திலே, நித்ய பூஜைகள் ஏதும் இன்றி, இந்த சமாதி அமைந்துள்ளது.

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்
அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் – தமிழ் விக்கி

முகங்களின் வழியே…

$
0
0

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலில் ஒரு வரி உண்டு, ‘நமது புகைப்படம் அழகாகத் தெரியவேண்டும் என்றால் நமக்குக் கொஞ்சம் வயதாகவேண்டியிருக்கிறது’ பெண்களுக்கு அது ரொம்பப் பொருந்தும். புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டாலும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. குறைபாடு நோக்கியே அவர்களின் கண் செல்லும். முதல் அபிப்பிராயம் ‘குண்டா தெரியுறேன்’ என்று. ஏனென்றால் அவர்களின் உள்ளத்தில் அவர்கள் குண்டு அல்ல. அதன்பின் பல கருத்துக்கள். புடவை நன்றாக இல்லை, கை சரியாக வைக்கவில்லை. முழிக்கிறேன்…

ஆனால் பத்தாண்டுகள் கழித்தால் “அப்பல்லாம் எப்டி இருந்தேன் இல்ல?” என கருத்து உருவாகிறது. கடந்தகால ஏக்கம் வந்தமைகிறது. பெண்கள் ஆண்களை விட தங்கள் உடலுக்குள் நீண்டதொலைவு செல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் உடலில் இருந்து வேறு உடல்கள் உருவாகின்றன. அவர்களின் புரோட்டீனையும் கால்ஷியத்தையும் உண்டு வளர்கின்றன. ஆகவே அவர்கள் இழப்பவை மிக அதிகம். பெண்கள் தங்கள் உடல்களை இழந்தபடியே இருக்கிறார்கள்.

1998 ல் இந்தியா டுடே இதழுக்காக என்னைச் சில புகைப்படங்கள் எடுப்பதற்காக சினேகிதன் என்னும் புகைப்பட நிபுணர் பத்மநாபபுரம் இல்லத்துக்கு வந்தார். அவரிடம் அருண்மொழியைச் சில படங்கள் எடுத்துத் தரும்படி கோரினேன். அன்று அருண்மொழி மெலிந்து, விரிந்த கண்களுடன் தேவதை போலிருந்தாள். அவர் மிக உற்சாகமாக படங்களை எடுத்தார். அச்சிட்டு அனுப்பித் தந்தார்.

எனக்கு அப்படங்கள் மிகவும் பிடித்திருந்தன. திரும்பத் திரும்ப நான் பார்க்கும் படங்கள் அவை. ஆனால் அவை அருண்மொழிக்குப் பிடிக்கவில்லை. “கிராமத்துக்காரி மாதிரி இருக்கேன்” என ஒரு கருத்து. புடவை கண்டாங்கி போல் இருக்கிறது என இன்னொரு கருத்து. அந்தப் படங்களை தூக்கி ‘அந்தாலே’ போட்டதுதான் திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் அவ்வப்போது அவை நல்ல படங்கள் என்றாலும் ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’ என ஓர் உதட்டுச்சுழிப்பு

இப்போது அந்த படங்களை மீண்டும் எடுத்துப் பார்க்கிறேன். அவற்றில் இருக்கும் அருண்மொழியின் முகத்தில் அந்த காலகட்டத்தில் இருந்த கள்ளமின்மையும், கனவுச்சாயலும் இருக்கிறது. அப்போதே அவைதான் எனக்கு அவளிடம் பிடித்தவை. இன்று அவள் வெவ்வேறு முகங்கள் வழியாக வந்துவிட்டிருக்கிறாள்ள் . அவ்வகையில் அவள் ஓர் அதிருஷ்டசாலி. அவள் முகத்தின் அழகு மறையவில்லை. வெவ்வேறு வகையில் மாறிக்கொண்டிருந்தாலும் அழகென அவளில் இருந்தது அவ்வாறே நீடிக்கிறது.

நம் முகம் நம்மை அறியாமலேயே நாம் வாழும் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. அக்காலகட்டத்தை உணரும் நம் உள்ளத்தின் வெளிப்பாடாக ஆகிவிட்டிருக்கிறது. பத்மநாபபுரம் அழகான காலகட்டம். சைதன்யாவுக்கு இரண்டு வயது. அஜிக்கு ஐந்து. அவர்களின் குழந்தைப்பருவத்தை கொண்டாடுவதற்கு உரிய இடவசதி கொண்ட இல்லம். அருகே அலுவலகம். நான் என் தீவிர இலக்கிய ஆக்க மனநிலையில் இருந்தேன். அருண்மொழி மேல் பெரும் பித்தும் கொண்டிருந்தேன். அவை அந்த முகத்தில் தெரிகின்றன.

அருண்மொழி எதை தன் நல்ல படம் என்று சொல்கிறாள் என கவனித்திருக்கிறேன். நன்றாகச் சிவப்பாகத் தெரியவேண்டும். நன்றாக ஆடை அணிந்து நேர்த்தியாக ஒளியில் நின்றிருக்கவேண்டும். அவள் விரும்புவது அவளுடைய பொம்மையைத்தான் என்று தோன்றுகிறது.

இன்று இந்தப்படங்களைப் பார்த்தால் என்ன சொல்வாள். அவள் வாழ்ந்து கடந்து வந்த ஒரு காலகட்டத்தை உணரக்கூடுமா?

இரண்டு இணையப்பக்கங்கள்

$
0
0

நாங்கள் நடத்தி வரும் கலை மற்றும் தத்துவ வகுப்புகளை இப்போது ஒரு பொதுவான அமைப்பாக ஒருங்கிணைத்துள்ளோம். முழுமையறிவு என்று பெயர். எங்கள் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை விரிவாகக் கொண்டு செல்லும் பொருட்டு காணொளிகளையும் நான் வெளியிட்டு வருகிறேன். விரைவில் பிற பயிற்றுநர்களின் காணொளிகளும் வெளியிடப்படும்.

இரு இணையப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றன . இவற்றின் இந்நிகழ்வுகள் பற்றிய செய்திகளும், பொதுவான கட்டுரைகளும் வெளியாகின்றன.

தமிழ்  இணையப்பக்கம்

www.unifiedwisdom.guru 

ஆங்கிலம்

unifiedwisdom.today 

கிறிஸ்தவ ஆன்மிகம், தத்துவம், வரலாறு –அறிமுக வகுப்புகள்

$
0
0

சிறில் அலெக்ஸ் நடத்திய முந்தைய பைபிள் வகுப்பு பற்றி வந்த எதிர்வினைகள் மூன்று கோணங்களில் இருந்தன. பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வு அது. எதிர்வினைகளும் இளைஞர்களிடமிருந்தே

  1. பைபிள் வகுப்பு மிகமிக உணர்ச்சிகரமானதாக இருந்தது. பல இடங்கள் நெகிழ்வில் கண்ணீர் வருமளவுக்கு கவித்துவமும் ஆன்மிகமுமான எழுச்சி கொண்டிருந்தன. மதம் என்னும் சொல்லையே இன்னொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.  நாம் வேறுமதத்தைச் சார்ந்தவர் என்றாலும் அந்த மதத்தை புதியதாக பார்க்க ஆரம்பிப்போம். தத்துவார்த்தமான புதிய கோணம் உருவாகியது.
  2. பைபிள் என்பது மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த பண்பாட்டு வரலாறும் அடங்கியது என்று புரிந்தது. பைபிளின் அடிப்படைத்தத்துவ அறிமுகமில்லாமல் ஐரோப்பிய சினிமாக்களைப் பார்ப்பது வீண். அவற்றை புரிந்துகொண்டோம் என நினைப்பது அசட்டுத்தனம். ஐரோப்பிய இசை,ஐரோப்பிய இலக்கியம் எல்லாவற்றையுமே பைபிள் வழியாகவே சரியாகப்புரிந்துகொள்ள முடியும்
  3. பைபிள் அறிமுகம் என்பது என் தொழிலுக்கு முக்கியமானது என்று தெரிந்தது. என் தொழிலில் என்னுடன் தொடர்புகொள்ளும் ஐரோப்பியர், அமெரிக்கர் பலர் கிறிஸ்தவர்கள். அவர்களின் மதக்கொள்கை என்ன என்றே தெரியாமல் இருப்பது என்னை முட்டாளாகக் காட்டிவிடும் என புரிந்தது. ஏனென்றால் என் மதம் பற்றி அவர்கள் கொஞ்சம் தெரிந்துகொண்டே வருகிறார்கள்.

முறைப்படி கிறிஸ்தவ இறையியல் பயின்றவரான நண்பர் சிறில் அலெக்ஸ் நவீன வாசகர்களுக்காக பைபிளின் ஆன்மிகத்தையும் அழகியலையும் வரலாற்றையும் கற்பிக்கிறார். இவ்வாறு பைபிள் அறிவார்ந்து மட்டுமே கற்பிக்கப்படும் இன்னொரு இடம் இல்லை.

ஆன்மிகமாக பைபிளைச் சென்றடைவது ஓர் ஆழ்ந்த பயணம். எந்த ஆன்மிகப்பயணிக்கும் இன்றியமையாதது. ஆனால் இது மதக்கல்வி அல்ல. இதனுடன் வழிபாடோ பிரார்த்தனையோ இணைக்கப்படுவதில்லை. ஒருவர் ஆன்மிகமான தன் பயணம் வழியாக பைபிளை அறிவதற்கான கல்வி மட்டுமே.அத்துடன் பிற மெய்யியல்களுடன் இணைத்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை, அகவிரிவை அடைவதற்கான பயிற்சியும்கூட

ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

=============================================

குரு நித்யா ஆய்வரங்கம்

குரு நித்ய சைதன்ய யதி தமிழகத்தில் ஓர் இலக்கிய இயக்கத்தை உருவாக்க எண்ணம் கொண்டிருந்தார். அதற்கான சில முயற்சிகளிலும் ஈடுபட்டார். ஆன்மிகமும் தத்துவமும் தமிழ் உள்ளத்தில் கலையிலக்கியம் வழியாகச் செல்வதே இயல்பானது என அவர் எண்ணினார். ஏனென்றால் தமிழகம் மாபெரும் பக்தி இயக்கம் நிகழ்ந்த மண், கலைகளின் இலக்கியத்தின் மண் என கருதினார்.

நித்யா எடுத்த முந்தைய முயற்சிகள் பலன் தராத நிலையில் 1992ல் ஜெயமோகன் அவரைச் சந்தித்தார். நித்யா கூறியமைக்கேற்ப அவ்வாண்டே தமிழ்க் கவிஞர்களின் சந்திப்பு ஒன்றை ஊட்டி ஃபெர்ன் ஹில் நாராயண குருகுலத்தில் தொடங்கினார். ஊட்டி குருகுலத்தில் நித்யா முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய உரையாடல்கள் நிகழ்ந்தன. பெரும்பாலும் கவிஞர்களுடனான உரையாடலாகவே அது அமைந்தது

1999 ல் நித்யா மறைவுக்குப் பின் அந்த சந்திப்பு குரு நித்யா காவிய முகாம் என பெயர் பெற்றது. குற்றாலம், கொடைக்கானல், ஏற்காடு, ஹொகேனேக்கல் போன்ற ஊர்களிலும் சந்திப்புகள் நிகழ்ந்தன. 2010 முதல் முறையாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்த கூடுகை நிகழ்ந்து வருகிறது.

இது இன்று ஓர் இலக்கிய உரையாடல் அரங்கு. இலக்கியத்தின் பிரிவுகளான சிறுகதை, நாவல், கவிதை மற்றும் இலக்கிய விமர்சனம் ஆகிய தளங்களில் அமர்வுகள் நிகழும். பங்கேற்பாளர்களும் இலக்கியவாதிகளும் உரையாடும்வண்ணம் இவை அமைந்திருக்கும்.

மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இந்த இலக்கிய விழா நிகழ்கிறது. ஈரோடு அருகே, மலைத்தங்குமிடத்தில். (இந்த இலக்கிய அரங்கு அடிப்படை நெறிகள் சில கொண்டது. மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட தாக்குதல்கள் அனுமதிக்கப்படுவதில்லை)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

சுனில் கிருஷ்ணன

ஆயுர்வேத அறிமுக வகுப்புகள்

சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். புகழ்பெற்ற எழுத்தாளர். ஆயுர்வேத முறைகளை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர் நடத்திய இரண்டு வகுப்புகள் பலருக்கும் மிக உதவியானவையாக இருந்தன.

ஆயுர்வேதம் ஏன் அறிமுகம் செய்துகொள்ளப்படவேண்டும்? நவீன மருத்துவம் நம் உடற்கூறு, நோய்கள், மருத்துவம் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது. ஆனால் ஆயுர்வேதம்தான் நம் வாழ்க்கைமுறையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் உணவுமுறை, நம் சூழல் ஆகியவை ஆயுர்வேதத்துக்குத்தான் அணுக்கமானவை. இவற்றைப் பற்றி நாம் ஏராளமான செவிவழிச்செய்திகளை அறிந்து பலவகையான பிழையான புரிதல்களைக் கொண்டிருப்போம். உண்மைநிலையை அறிய ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை அறியவேண்டும். எளிய முறையில் அதை கற்பிக்கும் நிகழ்வு இது.

சென்ற இரு வகுப்புகளில் பயின்றவர்கள் இவ்வகுப்புகள் பெரும் கற்றல் அனுபவமாகவும், கூடவே மகிழ்வான தருணமாகவும் அமைந்தன என்று கூறி எழுதியிருந்தார்கள். நம் உடல் செயல்படும் விதம், நம் சூழலுக்கு நம் உடல் எதிர்வினையாற்றும் விதம் ஆகியவற்றுடன் நம் உள்ளமும் உடலும் கொண்டுள்ள இசைவு ஆகியவற்றை ஆசிரியர் கற்பிப்பார்.

தியானம் அல்லது யோகம் பயிலும் ஒருவர் ஆயுர்வேத அறிவு இன்றி அக்கல்வியை முழுமைசெய்ய முடியாது

வரும் மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

ராஜகோபாலன்

வைணவ இலக்கிய அறிமுக முகாம்

நாலாயிரத் திவ்யபிரபந்தமே வைணவ தத்துவம் தோன்றிய விளைநிலம். அதை அறிவார்ந்து அணுகுவதும், அதன் தமிழ்ச்சுவையை அறிவதும் இன்றைய தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கு மிக இன்றியமையாதது. அறியாதவர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிட முடியும். இதற்கு முன் நான்கு வகுப்புகள் வைணவ இலக்கிய அறிமுக முகாம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொன்றும் மிகப்பெரிய அறிதலாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றே கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

 

 

பௌத்த மெய்யியல்  – விபாசனா தியான முகாம்

வி.அமலன் ஸ்டேன்லி

தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர், நாவலாசிரியர் வி.அமலன் ஸ்டேன்லி. உயிரித்தொழில்நுட்பத்தில் உயர் அறிவியலறிஞராக பணியாற்றுபவர்.

2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத்  தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.

இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்

யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.

பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.

வி.அமலன் ஸ்டேன்லி இதுவரை உயர்தொழில்நுட்பம் சார்ந்து பணியாற்றுபவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்த இந்த பயிற்சிகளை எங்கள் கோரிக்கைக்கு ஏற்ப நடத்த முன்வருகிறார்.

நாள் ஜூலை 5,6  மற்றும் 7  (வெள்ளி, சனி ,ஞாயிறு)

 

இஸ்லாமிய மெய்யியல் – இலக்கிய அறிமுகம்

நிஷா மன்ஸூர்

கவிஞர், இஸ்லாமிய ஆய்வாளர் நிஷா மன்ஸூர் நடத்தும் இவ்வகுப்பில் இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பின்னணி, அதன் மெய்யியல், அதன் உலகளாவிய சூஃபி மரபு, தமிழ் சூஃபி இலக்கியம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

அபுனைவு வாசிப்புப் பயிற்சி

மே மாதம் நிகழ்த்தும் வாசிப்புப் பயிற்சிக்கு பலர் கோரியும் இடமளிக்க இயலவில்லை. எண்ணிக்கை நிறைவு அடைந்துவிட்டது. ஆகவே மீண்டும் நடத்தப்படுகிறது. ஒரு தீவிரமான கட்டுரைநூலை (தத்துவம், அரசியல், கோட்பாடு, சட்டம் எதுவானாலும்) எப்படிப் படிப்பது, தொகுத்துக்கொள்வது என்பதற்கான பயிற்சி இது. அதற்கொரு முறைமை உள்ளது. அம்முறைமை கற்பிக்கப்படும்.

ஜெயமோகன் வகுப்பை நடத்துவார்

ஜூலை 19 மற்றும் 20 தேதிகள். (வெள்ளி, சனி)

குருபூர்ணிமா – வெண்முரசு நாள்

ஜூலை 21 ஞாயிறு குருபூர்ணிமா நாள். அதை வெண்முரசு நாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

அனைவரும் பங்கேற்கலாம்

அடிப்படை யோகப்பயிற்சி முகாம்

யோக ஆசிரியர் சௌந்தர் நடத்தும் அடிப்படை யோகப்பயிற்சி முகாம். இது யோகத்தை அறிமுகம் செய்துகொள்பவர்களுக்கும், ஓரளவு தெரிந்து முறையாகச் செய்ய விரும்புபவர்களுக்கும் உரியது. சௌந்தர் சிவானந்த யோக மரபைச் சேர்ந்தவர். முறையான பயிற்சிபெற்றவர்கள். சத்யானந்த யோக மையம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் மரபான முறையில் யோகப்பயிற்சிகள் அளிக்கிறார்

இரு சாராருக்கு இந்தப்பயிற்சிகள் மிக உதவியானவை என நாங்கள் கண்டடைந்துள்ளமையால் இவற்றை முன்வைக்கிறோம்.

தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் வாழ்க்கை காரணமாகவும், உள்ளறை வாழ்க்கையின் சலிப்பு காரணமாகவும் உடல் இறுக்கமடைந்து, பலவகையான உடல்வலிகள் மற்றும் துயில்நீக்கம் அடைந்து சிக்கலுக்குள்ளாகும் இளைய தலைமுறையினருக்கு இவை விடுதலையை அளிக்கின்றன.
முதுமையின் வழக்கமான உடல்நலிவை மிக ஓய்வான வாழ்க்கை மற்றும் உளச்சலிப்பு காரணமாக பலவகையான உடல்வலிகள், துயில்நீக்கம் போன்றவற்றை அடைந்தவர்கள்.

இவ்விரு சாராருக்கும் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனித்தனியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஒரு முகாமில் பங்கேற்பு அமையும். ஆகவே ஆசிரியருடன் நேரடித்தொடர்பு, உரையாடலுக்கு வழி அமையும். யோக ஆசிரியர் வாழ்க்கைமுறை அனைத்துக்கும் குரு என்னும் நிலையிலிருந்து வழிகாட்டவேண்டும் என்பது மரபு.

இப்பயிற்சிகள் இந்து மரபைச் சேர்ந்தவை என்றாலும் நாங்கள் இவற்றை மதம்கடந்தவையாகவே முன்வைக்கிறோம். இப்பயிற்சிகளுடன் எந்த மதநம்பிக்கையும், மதச்சடங்கும் கலந்துகொள்ளப்படுவதில்லை. எல்லா மதத்தவரும் நாத்திகர்களும் கலந்துகொள்ளலாம்

 

=======================================================

எங்கள் இணையப்பக்கம்

முழுமையறிவு

மருத்துவம் கடிதம்

$
0
0

அன்புள்ள அப்பாவிற்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குக்கூ நிலத்தின் அன்பும் பிரார்த்தனைகளும்.

நவீன மருத்துவ வகுப்பிற்கு உங்கள் அன்பு கட்டளையை ஸ்டாலின் அண்ணா கூறியதும் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று மிக மிக ஆர்வமுடன் சென்று சேர்ந்தோம். ஆனால் வகுப்பில் எதை கற்க போகிறோம், நமக்கு எவ்வாறு பயன்படும் என்ற வினா இருந்து கொண்டே இருந்தது. வகுப்பு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அந்த கேள்வி எழாமல் பார்த்துக் கொண்டார் மாரி சார்.

மருத்துவ வரலாறு தொடங்கி அது எப்படி வளர்ச்சி பெற்றது என்று படிப்படியாக சுவாரஸ்யமாக கற்கத் தொடங்கினோம். Aesculapius, Hygiea, Panacea, Hippocrates, Galen, Robert Koch போன்ற மாபெரும் பங்களிப்பாளர்களை அவர்களின் பங்களிப்போடு அறிந்து கொண்டோம். நவீன மருத்துவத்தின் இன்றைய வளர்ச்சி, அதனால் மனித குலம் அடைந்துள்ள நன்மைகள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொரு மருந்திற்கும் பக்க விளைவு உண்டு ஆனால் மிகப்பெரிய அளவில் உயிர் காப்பது நவீன மருத்துவம் என்பது புரிந்தது.

உடலின் செல்கள் தொடங்கி உடலின் அனைத்து உறுப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் மிக மிக தெளிவாக புரியும் வகையில் சாக்லேட் கலந்த நகைச்சுவையுடன் அள்ளி அள்ளி கொடுத்தார் எங்கள் ஆசிரியர்.

இதில் வேதியியல், உயிரியல் இவ்வளவு சுவாரஸ்யமாகவும், ஆர்வமாகவும், எளிதாகவும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை(பள்ளியில் எனக்கு அறிவியல் பாடமே பிடிக்காது(புரியாது). அதனால் தான் பதினொன்றாம் வகுப்பில் கணிதம் கணினி பாட துறையை தேர்ந்தெடுத்தேன். அப்பொழுதும் இயற்பியல் வேதியியலில் தான் மிக மிக குறைந்த மதிப்பெண். என்னால் மனப்பாடம் செய்யவே இயலாது. இன்று வரை பிடிக்காது/புரியாது என்றிருந்தேன்) ஒரு ஆசிரியரின் கற்பித்தல் முறை எவ்வளவு முக்கியம் அப்பா.

நான் ஐந்து மாதங்களாக குழந்தை பிறப்பு பயிற்றுனர் படிப்பு பயின்று வருகிறேன் அப்பா. அதற்கு இந்த வகுப்பு மிக மிக முக்கியமான நம் உடலைப் பற்றிய அடிப்படை அறிவை கொடுத்துள்ளது. ஆசிரியரும் குழந்தை பிறப்பு பற்றி நிறைய விவரங்களை கூறினார். என் படிப்பு சார்ந்து நிறைய கேள்விகளை கேட்டு தெளிவு பெற்றேன்.

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு வகுப்பு ஒவ்வொரு நொடியும் தொய்வில்லாமல், சலிப்பில்லாமல் உற்சாகமாக சென்றது. வகுப்பைத் தாண்டி நிறைய உரையாடல்கள்  நிகழ்ந்தது. என் மூளையின் சிந்திக்கும் எல்லைத் தாண்டிய கேள்விகள் எழத் தொடங்கியது. அதையும் ஆசிரியரிடம் தயக்கமில்லாமல் உரையாட முடிந்தது. கற்றல் சார்ந்த அறிவியக்க உரையாடலும் வெகு நாட்களுக்குப் பிறகு நடந்தது மிகவும் உற்சாகத்தை கொடுத்தது.

வகுப்பில் எந்தத் தகவலை சொல்ல வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக வகுப்பை கொண்டு சென்றார் எங்கள் மாரி சார். குறைவான உணவும், உடற்பயிற்சியும் தான் நம் ஆரோக்கிய வாழ்விற்கு இன்றியமையாதது, It’s the trust that you have in your doctor that cures என்று கூறி வகுப்பை நிறைவு செய்தார். மனமில்லாமல் விடைபெற்றோம்.

இதை ஒருங்கிணைத்து, எங்களுடன் வகுப்பிலும் கலந்து கொண்ட அந்தியூர் மணி அண்ணாவிற்கு அன்பும் நன்றிகளும். நிச்சயம் இது போன்ற வகுப்பில் அனைவரும் பங்கேற்று நம் உடலை பற்றி நாம் கட்டாயம்

அருண்மொழி அம்மாவை சந்தித்ததும், அவர் அனைத்துக் கொண்டதும் அத்துணை பேரின்பம் அப்பா. இந்த வாய்ப்பு கொடுத்த தங்களுக்கும், ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

நன்றியுடன்,
மைவிழி செல்வி

அமெரிக்க இளையதலைமுறையில் இருந்து…

$
0
0

அன்புள்ள ஜெ,

நலமே நாடுகிறேன்.

சகோதரிகள் மேகனா, சஹானா இருவரும் முக்கியமான இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ந்து தங்கள் யுட்யூப் சானலில் விவாதித்தும், மதிப்புரைகள் அளித்தும் வருகின்றனர். அவர்களைக் குறித்து உங்கள் தளத்தில் கூட எழுதியிருந்தீர்கள். இலக்கிய ஆக்கங்களை அவர்கள் அணுகும் விதத்தின் மீதும், அவற்றைக் குறித்த தங்கள் பார்வையை அவர்கள் உறுதியாக எடுத்துரைப்பதின் மீதும் எனக்கும் எப்போதும் மிகுந்த மதிப்புண்டு. அவர்கள் இப்போது A Fine Thread and Other Stories குறித்த ஒரு விரிவான மதிப்புரையை இந்தக் காணொலியில் வழங்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக நிழல் காகத்தையும், இறுதி யந்திரத்தையும் குறித்த தங்கள் பார்வையை அளித்துள்ளார்கள். எந்தப் பெரிய சிரமமுமின்றி கதையின் மையத்தை அவர்களால் எளிதில் தொட்டு விட முடிகிறது. நிழல் காகத்தின் அசிதருக்கு உண்மையில் நிகழ்வது பிராயசித்தம் செய்து நிவர்த்தித்துக் கொள்ள வேண்டிய பாவமல்ல, அறிந்து தெளிந்து கொள்ள வேண்டிய தத்துவச் சிக்கலே என்று ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி சொல்வதைக் கேட்கையில் சற்று திகைப்பாகத்தான் இருந்தது. இரு பெண்களும் அத்வைத வேதாந்த மாணவர்கள் என்று அறிந்த பின், தத்துவப் பின்புலம் இலக்கியத்தை ஆழமாக அணுகும் வல்லமையை இயல்பாகவே அளித்து விடும் என்று புரிந்து கொண்டேன்.
பின் தொடரும் நிழலின் குரல் என்ற கொந்தளிப்பான நாவலுக்குள் வரும் இறுதி யந்திரம் என்ற சிறுகதை தரும் அலைக்கழிப்பை, அந்த நாவலை வாசிக்காமலேயே வெறும் நாலு பக்க சிறுகதையை வாசித்தே அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்தக் கதையில் வரலாற்றைத் தன் எண்ணப்படி உருவாக்க ஆவல் கொள்ளும் அதிபர், “வரலாறு ஓர் அதிகார வெளி. அதிகாரம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.” என்பார். அப்படிச் சொல்லும் போது அவர் ஒரு கணம் மனிதனானார் என்றிருக்கும். (For a moment, he appeared to be human.). இதை வாசித்த போது தன்னால் அந்த அதிபரைப் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்கிறார்கள். அதிகாரம் கைவிட்டுச் சென்று விடலாம் என்னும் அச்சம் அவரை மனிதனாக ஆக்குகிறது.
மிகக் கூர்மையான, நுண்மையான, ஆழமான அவதானிப்புகள். இந்தப் பெண்கள் நாளை எழுதப் போகும் இலக்கிய ஆக்கங்களுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
Viewing all 17029 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>