Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16791 articles
Browse latest View live

வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36

$
0
0

பகுதி 3 : மாகேந்திரம்

[ 1 ]

உணவருந்திவிட்டு ஜைமினியும் பைலனும் சுமந்துவும் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். “அன்னசாலை உணவுகள் இனியவை” என்றான் சுமந்து. “ஏனென்றால் உரிய பசியுடன் நாம் அவற்றை அணுகுகிறோம்.” பைலன் “வேதசாலை உணவுகள் ஆன்மாவுக்கானவை” என்றபின் ஜைமினியை நோக்கி புன்னகைசெய்தான். “நான் பெரும்பசியுடன் சென்றுகொண்டிருக்கிறேன். ஆகவே ஆசிரியர் சுவையானவராகவே இருப்பார் என நம்புகிறேன்” என்றான் சுமந்து.

“வியாசர் வாழ்வது தெற்கே என்று எவர் சொன்னார்கள் உம்மிடம்?” என்று பைலன் கேட்டான். “நான் அவரைப்பற்றி மட்டுமே கேட்டுக்கொண்டு செல்கிறேன். ஒவ்வொருவரும் அவரைப்பற்றி ஒவ்வொருசெய்தியை சொல்கிறார்கள். திரௌபதியை ஐவரும் மணம்புரிந்துகொண்டபோது அவர் பாஞ்சாலத்தில் தோன்றி ஐவரையும் ஒருத்தி மணப்பது பிழையல்ல என்று பாண்டவர்களுக்கு அறிவுறுத்தினார் என்று ஒரு சூதன் பாடினான். அஸ்தினபுரியின் அவைக்களத்தில் நாற்களமாடல் நிகழ்வதற்கு முன்னர் அவர் அங்கே சென்று அது கூடாதென்று வலியுறுத்திச் சொன்னார் என்கிறார்கள்.”

“ஆம், அத்தனை கதைகளிலும் அவர் உரிய தருணங்களில் எல்லாம் தோன்றி அறிவுரை சொல்கிறார்” என்றான் பைலன். “அதை உண்மையெனக்கொண்டால் அவர் அஸ்தினபுரியின் நிலவறை ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.” சுமந்து சிரித்துக்கொண்டு “ஆனால் அவர் காட்டில் பாண்டவர்கள் வாழ்ந்தபோதும் நேரில்தோன்றி செல்வழி சொல்லியிருக்கிறார்” என்றான். “உண்மையில் திருதராஷ்டிரரும் பாண்டுவும் பிறப்பதற்கு முன்னரே அவர் அஸ்தினபுரிவிட்டு விலகிச்சென்றுவிட்டார். அவருடைய நுண்ணறிவு நிகழ்வதனைத்தையும் காட்டியமையால் அவர் தனிமையிலமர்ந்து தவம்செய்யச் சென்றார் என்கிறார்கள்.”

“அல்லது குற்றவுணர்ச்சியாகவும் இருக்கலாம்” என்றான் பைலன். “இருக்கலாம். குற்றவுணர்ச்சியிலிருந்துதான் பெருங்காவியங்கள் தோன்றுகின்றன” என்று சுமந்து சொன்னான். “புற்றுறைமுனிவரின் குற்றவுணர்ச்சியே முதற்காவியம்” என்றான் ஜைமினி. “நான் அவருடைய காவியத்தின் பகுதிகளை இளமையிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். மொழியென நானறிந்ததே அவருடைய சொற்களைத்தான். அவரிடமன்றி எங்கும் என் சித்தம் அமையாதென்று தோன்றியது” என்றான் சுமந்து.

ஜைமினி “அது அவரென்று எவருக்குத்தெரியும்? பெருந்தவளை என அவர் நீருள் எங்கோ மூழ்கியிருக்கிறார் குமிழிகளென காவியங்கள் மட்டும் கிளம்பிவருகின்றன என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அனைத்தும் சூதர்சொல்லாகவும் இருக்கலாமே?” என்றான். “இல்லை, அது அவர் சொற்களே” என்றான் சுமந்து. “அவருடைய சொற்களை என்னால் பல்லாயிரம் சொற்களுக்கு நடுவே முதல்செவியிலேயே சொல்லிவிடமுடியும். அவரன்றி பிறர் அந்த உயரத்திற்கு செல்லமுடியாது. தோழரே, விண்ணிலிருந்து செம்பருந்து உதிர்க்கும் ஒற்றை இறகுபோதும், அது அங்கே அளாவிய முகிலையும் ஒளியையும் நாம் அறிவதற்கு.”

பைலன் சிரித்து “நீர் கவிஞர்” என்றான். “ஆம், நான் வியாசனின் மாணவன். தலைமுறைகள் என் சொற்களைப்பாடும், ஐயமே இல்லை அதில்” என்றான் சுமந்து. அந்தக்குரலில் எழுந்த நம்பிக்கையை உணர்ந்து பைலன் திரும்பி அவனைப்பார்த்தான். சுமந்துவின் முகம் அனல்கொண்டது போலிருந்தது. பைலன் பெருமூச்சுடன் “நீர் எவரென அறிந்திருக்கிறீர். நான் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

அவர்கள் கொட்டகையை அடைந்தபோது சண்டனின் முழவின் உறைமட்டும் இருந்தது. “சூதர் எங்கே?” என்றான் பைலன். “யார்?” என்று சுமந்து கேட்டான். “எங்களுடன் வந்தவர். சூதர்களில் அவர் ஒரு பிட்சாடனர்” என்றான் பைலன். “ஆசாரங்களில்லாதவர். எதையும் அத்துமீறி மட்டுமே நோக்கும் துடுக்கர். ஆனால் கற்றவர். சொல்தேர்ந்தவர்” என்றான் ஜைமினி. “கற்று சொல்தேர்ந்தவர் அப்படித்தான் இருக்கமுடியும் போலும்” என்று சுமந்து சிரித்தான். “ஏன் முறைமைகொண்டு ஒழுகும் முனிவர்கள் இல்லையா?” என்றான் ஜைமினி சினத்துடன். “ஓர் அமைப்பை ஒட்டி ஒழுகும் எவரும் முனிவர்கள் அல்ல” என்றான் சுமந்து. ஜைமினி அவனை சிலகணங்கள் நோக்கிவிட்டு விழிதிருப்பிக்கொண்டான்.

“அமைப்புகளை விரும்புபவர்கள் எளிய மனிதர்கள். அவர்கள் தெப்பத்தைப்பற்றிக்கொண்டு நீந்த விழையும் கைதளர்ந்தோர். அமைப்பை பொருள்படுத்திக்கொள்ள அமைப்புமனிதர்களை அவர்கள் முனிவர்களென ஆக்கிக்கொள்கிறார்கள்” என்றான் சுமந்து. “ஜைமின்யரே, இங்குள்ள ஒவ்வொரு வேதநிலையிலும் ஒரு முனிவர் இருக்கிறார். நெறிநின்று இயங்கும் ஓர் உடல். மரபில் பொருந்தி இருந்துகொண்டிருக்கும் ஓர் உள்ளம். அதற்கப்பால் அவர்கள் ஏதுமில்லை. வயது முதிர்ந்தால் நாம் எவரையும் முனிவர் என சொல்லத் தொடங்கிவிடலாம். நமக்கு முதுமைமீது இருக்கும் அச்சமும் கனிவுமே அவரை அப்படி காட்டத் தொடங்கிவிடும்.”

“அறிதலென்பது மீறலால் அன்றி நிகழமுடியாது. தனித்து அன்றி அதை கொள்ள முடியாது. தன் தனிமையைப் பகிர்பவரிடமன்றி அதை அளிக்கவும் முடியாது” என்றான் சுமந்து. பின்னாலிருந்து முழவுடன் வந்த சண்டன் “முழவின்தோலை அடுப்புநெருப்பில் காட்டி சற்று காயவைத்தேன்” என்றான். “நாளைக்காலைக்குள் காய்ந்துவிடுமே, ஏன் உடனே?” என்றான் பைலன். “இங்கே வணிகர்கள் இருக்கிறார்கள். என்னை பாடச்சொல்வார்கள். வேறுசூதர்களும் இல்லை என்பதை நோக்கினேன்” என்றபின் “இவர் யார்?” என்றான்.

சுமந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டதும் அவன் உரக்க நகைத்து “நன்று, ஓடைகள் நதிதேடிச்செல்லும் என்கின்றது தொல்மொழி” என்றான். “நதி ஓடி ஓடி உருவாக்கும் ஆழமென்பது ஓடைகளுக்கான பொறியே.” பைலன் “நாங்கள் அர்ஜுனனின் திசைவெற்றிகுறித்த கதைகளைத்தான் பேசிக்கொண்டே வந்தோம்” என்றான். ஜைமினி “அவை பெரும்பாலும் புனைவுகள். கவிஞர் தங்களுக்குத்தோன்றியதை சொல்லிவைக்கிறார்கள்” என்றான். சுமந்து “ஆம், நானும் அக்கதைகளைக் கேட்டபடியே வந்தேன். மேற்குக்கடற்கரையில் காண்டீபத்துடன் நின்றிருக்கும் பார்த்தனை எதிர்க்க வெண்ணிறப்பிடரிமயிர் கொண்ட பன்னிரண்டாயிரம் நீலப்புரவிகளிள் பெரும்படையுடன் வருணன் வந்த சித்திரம் எனக்கே பேரெழுச்சியை ஏற்படுத்தியது.” என்றான்.

“பிறகு?” என்றான் பைலன். “அலைகளின் முடிவின்மையால் வருணன் எதிர்க்க கரைமணல்களை அம்புகளாக்கி அர்ஜுனன் அவனுடன் போரிட்டான். அலைகள் வல்லமைமிக்கவை. ஆனால் மணல்களின் எண்ணிக்கைக்கும் ஒருமைக்கும் முன் அவை தோற்றே ஆகவேண்டும். வருணனை வென்று கயிற்றம்பைக் கொண்டு அர்ஜுனன் மீண்டான்” என்றான் சுமந்து. “ஆம், நல்ல கற்பனையே” என்றான் பைலன். “குபேரனை அவன் வென்றது எடைமிக்க கற்பாறைகளால் என்று அந்தக்கதையில் வந்தது. குபேரனின் படைக்கலங்களான பொன்னும் வெள்ளியும் இரும்பும் அழிபவை. அழிவற்ற கல்லை அவற்றால் வெல்லமுடியவில்லை” என்றான். சுமந்து.

பைலன் “யமனை எப்படி வென்றார்?” என்றான். “ஒரு புல்வேரை அவர் தன் படைக்கலமாக ஆக்கினாராம். யமன் இப்புவியில் எதை அழித்தாலும் புல்லை அழிக்கமுடியாது. புல்வேரின் முன் யமனின் அனைத்துப்படைக்கலங்களும் பொருளிழந்தன. அவருடைய தண்டத்தை அம்பெனக் கொண்டு அர்ஜுனன் புவிமீண்டான்” என்றான் சுமந்து. சண்டன் “நன்று, கவிஞர்கள் கற்பனைசெய்யத் தேறியிருக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனனின் வெற்றிக்கதையை கேட்டுக்கேட்டு மக்களுக்கு சலிக்கவில்லை” என்றான் ஜைமினி. “சூதர்களின் சொல்லில் வாழும் அர்ஜுனர்கள் பல்லாயிரம்பேர். அத்தனைபேரின் எடையையும் தாங்கி மண்ணில் வாழ்கிறான் அவ்வெளிய மனிதன்ர்” என்றான் சண்டன்ன்

வணிகர்களில் ஒருவன் “சூதரே, உங்களுக்காகவே காத்திருக்கிறோம்” என்றான். “முழவு நாகொண்டுவிட்டதல்லவா?” என்றான் இன்னொருவன். “நா தளர்ந்திருந்ததென்றால் சற்று யவன மதுவை அதன்மேல் பூசுக! நா துடித்து எழக்காண்பீர்” என்றான் பிறிதொருவன். அவர்கள் நகைத்தனர். உணவுக்குப்பின் அனைவருமே வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தனர். வெளியே மழைக்காற்று சுழன்று வீசியது. சிலர் மரக்கட்டில்களில் பொதிகளை தலைக்குவைத்துக்கொண்டு துயின்றுகொண்டிருந்தனர். சண்டன் எழுந்து அவர்களை அணுகி “என்ன கதைசொல்ல?” என்றான். “இளையபாண்டவரின் கதைதான். அவர் திசைவென்ற வரலாறு” என்றான் ஒருவன்.

“கேட்டுக்கேட்டு சலித்துவிட்டேன்… புதியகதை ஏதேனும் சொல்!” என்றான் முதியவணிகன் ஒருவன். “விருத்திராசுரனை இந்திரன் வென்றகதையைச் சொல்லும், சண்டரே” என்றான் பைலன். “விருத்திராசுரன் கதையா? அது மிகமிகத் தொன்மையானதல்லவா? ஏட்டுக்கல்விக்கு முன்னரே கேட்டறிந்தகதை” என்றான் ஒருவணிகன். “என்ன கதை கேட்டீர்கள்?” என்றான் சண்டன். “மாமுனிவராகிய காசியப பிரஜாபதிக்குப் பிறந்தவன் விருத்திரன். அவர் தனு என்னும் மனைவியில் பெற்றெடுத்த தானவர்களில் ஒருவன்” என்றார் ஒருவணிகர். “அல்ல, அவன் த்வஷ்டாவால் உருவாக்கப்பட்டவன்” என்றார் இன்னொருவணிகர்.

சண்டன் நகைத்து “ஊருக்கொரு கதை உண்டு, வணிகர்களே. விருத்திராசுரனை இந்திரன் கொன்றான் என்பதில் மட்டும் பிறிதொரு கருத்தில்லை” என்றான். “நீரே சொல்லும்” என்றான் ஒரு வணிகன். சண்டன் “கதை என்பது நீர் போல. நேற்று அருந்திய நதி இன்றுள்ளது அல்ல. நேற்றிருந்த விருத்திரன் அல்ல இன்று வாழ்பவன். சொல் நாளும் வளர்வது, வணிகர்களே” என்றான். “ஆகவே சொல்லை ஓம்புக! சொல் வேள்வியெரி போல. நெய்யும் அவியும் சமித்துமிட்டுப் பேணுபவர்களிடமே அது வாழும்.” வணிகர்களில் மூத்தவர் நகைத்து “எந்தக்கதையும் நாணய ஒலியில் இருந்தே தொடங்குமென நாங்கள் அறிவோம், சூதரே” என்றார்.

அவர்கள் அளித்த நாணயங்களை வாங்கி தன் மடிச்சீலையில் பொதிந்து செருகிக்கொண்டபின்னர் சண்டன் கதையை தொடங்கினான். “அழிக்கப்பட்ட ஒன்று அழிவற்றதாகும் விந்தை என்ன? வணிகர்களே, அழியாதுபேணி நெஞ்சோடு சேர்த்து மானுடம் கொண்டுசெல்வதுதான் என்ன? அழிவன சூழ்ந்தது இப்புவி. அழிவென அழிவென கூவிக்கொண்டிருக்கிறது காலம். சூழ்ந்து பறக்கும் பெருங்காற்று கற்பாறைகளை கரைத்துக்கொண்டிருக்கிறது. ஒளியற்ற வெம்மையற்ற நெருப்பொன்றில் எரிந்துகொண்டிருக்கின்றன அனைத்தும்.”

“இப்புவியில் முற்றழிவது எது? பிழையுணர்வு வளர்கிறது. தன்னிரக்கம் குமைகிறது. வெற்றிக்களிப்பு மிகுகிறது. வஞ்சம் கரந்து ஊறிப்பெருகுகிறது. அழிவதுதான் என்ன? அழிவின்மை என்பது நலனா தீதா? வணிகர்களே, இங்கு அழியாதது இருளா ஒளியா? அழிந்தழிந்து செல்லும் வாழ்வுக்குமேல் அழியாமல் நின்றிருக்கும் தெய்வங்களின் பிறப்புவாயில் என்ன? ஓடும்நதிமேல் படர்ந்த விண்முகில்களென தனிவழி சென்றுகொண்டிருக்கின்றன தெய்வங்கள். தெய்வங்களை வழிபடுக! அவை நம் அச்சங்களின் கூர். நம் ஐயங்களின் இருள். நம் வஞ்சங்களின் கசப்பு. நம் துயர்களின் எடை. அவை வாழ்க!”

[ 2 ]

பிரம்மகபாலம் என்னும் மலைப்பாறைக்குமேலிருந்த குகையொன்றில் ஒரு மழைக்குளிர்காலத்தில் மூவர் சந்தித்துக்கொண்டனர். ஒருவர் மெய்ச்சாம்பல்பூசி கரித்தோலுடுத்து மூவிழிதிறந்து முப்புரிவேல் ஏந்திய பெயரற்ற பிச்சாண்டவர். இன்னொருவர் தருப்பைச்சுருளும் துணிப்பொதியும் கைக்கோலும் கொண்டு அயலூர் செல்லும் வைதிகர். பிரசாந்தர் என்பது அவர் பெயர். மூன்றாமவன் முழவேந்தி கொம்பு இடைகட்டி கழியில் தொங்கும் பொதியுடன் வழிநடைசெல்லும் சூதன். அவன்பெயர் பிரசண்டன்.

குகைக்கு வெளியே இளமழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளே காட்டுவிறகை அடுக்கி எரிமூட்டி வெப்பத்தை நிறைத்தான் சூதன். வெளிக்குளிர் உள்ளே நுழையாமலிருக்க மரக்கிளைகளை வெட்டிச் சாய்த்து அதன்மேல் தழைகளை அடுக்கி கதவமைத்திருந்தனர். செவ்வொளியே குளிரை விரட்டியது. குகைச்சுவர்கள் அனல்கொண்டதும் அவர்களின் இறுகிய உடல்கள் தழைந்தன.

மெல்லிய சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டு தரைப்புழுதிமேல் தன் ஆடையை விரித்து படுத்துக்கொண்ட பிரசாந்தர் “இனியபொழுது. இவ்விரவில் தெய்வங்கள் நம்மைச்சூழ்ந்து நிற்பதாக!” என்றார். அச்சொல் முடிவதற்குள் கதவுத்திரையின் இடைவெளியினூடாக குகையின் ஆழங்களனைத்தும் ஒளிகொண்டதிர மின்னலொன்று வெட்டி அதிர்ந்து அணைந்தது. இடியோசை எழுந்து குகைக்குள் பெருமுழக்கமொன்று முழவின் ரீங்காரமென நீடித்தது.

பிரசாந்தர் திரும்பி நோக்கி “இக்குகை மேலும் பலகாதம் உள்ளே செல்கிறது போலும்” என்றார். “இது குகையல்ல அந்தணரே, பிலம். மண்ணுக்குள் ஓடும் பேர்விரிசல் இது. இதற்குள் ஆறுகள் ஓடக்கூடும். பலநூறு கிளைகளுடன் இது விரிந்து செல்லக்கூடும்.” பிறிதொரு மின்னல் அந்தணரை ஒளிர்தணையச்செய்தது. திரும்பிநோக்கி இடியோசைக்காக அவர் காத்திருந்தார். இடியெழுந்து அவ்வோசை இருளுக்குள் உருண்டோடிச்செல்வதை கண்டார். “நெடுந்தொலைவு” என்றார். “ஆம், இருளுக்குள் ஓசை சென்றுகொண்டே இருக்கிறது, மீளவில்லை” என்றான் சூதன்.

பிச்சாண்டவர் அங்கிலாதவர் போல அமர்ந்திருந்தார். அவர் கையில் சிவமூலிகை புகைந்துகொண்டிருந்தது. விழிகள் அதன் அனலுடன் இணைந்து கனன்றணைந்தன. “பாதாளம்வரை செல்லும்போல” என்று பிரசாந்தர் புன்னகைத்தார். “ஆம், பாதாளமூர்த்திகள் வெளியே வரும் வழியாக இருக்கலாம்” என்றான் சூதன். பிரசாந்தர் அச்சத்துடன் “வெறும்கதைகள்” என்றார். “பாதாளமென்று ஒன்று இருந்தால் அது வெளிவந்துதானே ஆகவேண்டும்?” என்றான் சூதன். அந்தணர் சரியாக புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றார்.

“அனைத்தும் புதைந்துகொண்டே இருக்கின்றன, அந்தணரே. புதைந்தவை சென்றடையும் ஆழம் ஒன்று இருக்கும். மிச்சமின்றிப்புதைபவை அங்கே முழுதமையக்கூடும். மிச்சமென சில கொண்டவை அவற்றை விதைமுளையெனக் கொண்டு மேலெழுந்துவரும்.”  பிரசாந்தர் விழிகள் அசைவிழந்திருக்க சூதனை நோக்கியபின் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். பிச்சாண்டவர் அங்கு நிகழ்ந்த சொற்களுடன் தொடர்பற்றவர்போல வெடித்து நகைத்து இருமி உடல்குலுங்கி அமைந்து மீண்டும் புகையை ஆழ இழுத்தார்.

மீண்டுமொரு மின்னல் எழுந்து குகைக்குள் தழைநிழல்களின் காடு ஒன்றை கூத்தாட வைத்து அணைந்தது. குகைச்சுவரில் பதிந்திருந்த கற்களின் மேல் மின்னலின் ஒளி சற்றுநேரம் எஞ்சி விழிகளென தெரிந்து அணைந்தது. பிரசாந்தர் “இந்திரனே, மருத்வானே, பிதௌஜஸே, பாகசாசனனே, விருத்தசிரவஸே, சுனாசீரனே, புருஹூதனே, புரந்தரனே, ஜிஷ்ணுவே, லேகர்ஷபனே, சக்ரனே, சதமன்யூவே, திவஸ்பதியே, சுத்ரமாவே, கோத்ரஃபித்துவே, வஜ்ரியே, வாசவனே உன்னை வணங்குகிறேன்” என்று சொல்லி தன் தலைமேல் கைகளால் மும்முறை குட்டிக்கொண்டார்.

இடி உறுமியது. மின்னல் கூர்வாள்கள் போல குகையிருளில் நீண்டு சுழன்றணைந்தன. மேலும் உரத்தகுரலில் “நீ விருதஹா, விருஷா, வாஸ்தோஷ்பதி, சுரபதி, வலராதி, சசீபதி, ஜம்பஃபேதி, ஹரிஹயன், ஸ்வராட், நமுசிசூதனன், சம்கிரந்தனன், துஞ்ச்யவனன். நீ வாழ்க!” என்றார். தலைக்குமேல் கைகளைக்கூப்பி “துராஷாடன் அல்லவா நீ? மேகவாகனனே ஆகண்டலனே சகஸ்ராக்‌ஷனே ருஃபுக்‌ஷாவே என்னை காத்தருள்க! எங்களுக்கு துணைநின்றருள்க!” என்றார்.

சூதன் “இந்திரநாமங்கள்” என்றான். “ஆம், இடிமின்னலில் இருந்து அவை நம்மை காக்கின்றன” என்றார் பிரசாந்தர். சூதன் நகைத்துக்கொண்டு “அஸ்தினபுரியின் குடிகள் இந்திரன் மைந்தனாகிய அர்ஜுனனின் பெயர்களை சொன்னால் போதுமென நினைக்கிறார்கள்” என்றான். அந்தணர் “பண்டு விருத்திராசுரனைக் கொன்று பிளந்த மின்படை அவன் கையிலுள்ளது. சூதரே, இதோ மின்னி அணைவது அதன் ஒளிதான்” என்றார்.

“இருளே உருவான அரக்கன். அவனைக் கொன்றது மின்னலெனும் வாள். அவன் இடியோசையென ஒலியெழுப்பி விழுந்தான். இருளுக்குள் கரைந்து மறைந்தான். இருள் செறியும் இடங்களில் அவன் எழுந்து வருகிறான். அப்போது விளக்கென வேள்விச்சுடரென இந்திரனை ஏற்றுவோம். அவன் நம்மை அவன் மடியில் வைத்துக் காப்பான்” என்றார் பிரசாந்தர்.

பிச்சாண்டவர் மீண்டும் உரக்க நகைத்து இருமினார். “இவர் துயில்வதே இல்லை. இந்த அனலை உண்டபடி எப்போதும் செவ்விழி திறந்து விழித்திருக்கிறார்” என்றார் அந்தணர். “அவர் மூன்றாம் விழி துயிலும்போலும்” என்றான் சூதன். மின்னுடன் இடியோசை எழ பிரசாந்தர் உடலை குறுக்கிக்கொண்டு “மழைக்கால இடிக்கு இத்தனை ஒலியிருக்காது. இன்று வான்கிழிவதுபோல முழங்குகிறது” என்றார்.

“அந்தணரே, விருத்திரனை வெல்ல ஒருபோதும் இந்திரனால் முடியாது என்று அறிக! அவர்கள் என்றுமிருப்பார்கள். அப்போர் முடிவடைவதேயில்லை” என்றான். “விருத்திரன் கொல்லப்பட்டான் என்பதே தொல்கதை” என்றார் பிரசாந்தர். “சொல்க, அக்கதை என்ன?” என்றான் சூதன். “முன்பு இப்புவியை ஆண்டிருந்த சித்ரகேது என்னும் ஷத்ரிய அரசனின் மறுபிறப்பே விருத்திரன்” என்றார் பிரசாந்தர். “சொல்க!” என்று சூதன் சொன்னான்.

“சித்ரபாகம் என்னும் நாட்டை அவன் ஆண்டுவந்தான். ஏழாண்டுகள் இல்லறம் கண்டபின்னரும் அவன் தேவி கிருத்யத்யூதி கருவுறவில்லை. கொடையும் நோன்பும் இயற்றியும் பயனிருக்கவில்லை. அவர்கள் மாமுனிவராகிய அங்கிரசரிடம் சென்று தங்களுக்கு மைந்தனை அளிக்கவேண்டுமென கோரினர். மைந்தன் இல்லாது தன் நாடும் குடியும் அழியுமென்றால் மூதாதையருக்கு பழிசேரும் என்றும் அதை தவிர்க்கும்பொருட்டு உயிர்துறந்து பேயென அலைவதே மேலென்று எண்ணுவதாகவும் சித்ரகேது கண்ணீருடன் சொன்னான்” அந்தணர் சொல்லலானார்.

அங்கிரசர் அவர்களிடம் சொன்னார் “மைந்தனை அளிப்பதும் எடுப்பதும் மானுடரால் இயல்வதல்ல. தெய்வங்களை கோருவோம். உயிருக்கு இறைவனை அழைக்கிறேன். அவனிடம் கேள்!” சித்ரகேது இயற்றிய பெருவேள்வியில் எழுந்த யமன் “நான் எடுப்பவன், அளிப்பவன் அல்ல. உயிரளிக்கும் ஆற்றல்கொண்டவர் ஒருவரே. படைப்பு முதல்வனாகிய பிரம்மனிடம் கோருக!” என்றான்.

வேள்வி தொடர்ந்தது. அவியுண்டு எழுந்த நெருப்பில் தோன்றிய பிரம்மன் “பிறப்பும் இறப்பும் துலாநிகர் கொண்டது, முனிவரே. அந்நெறிகளை பிரம்மனும் மீறமுடியாதென்றறிக! இவன் குருதியில் மைந்தர் பிறக்கமுடியாது. இவனது முற்பிறவிகளிலேயே அது வகுக்கப்பட்டுவிட்டது” என்றார். “மாட்டேன், மைந்தன் பிறக்காமல் அமையமாட்டேன். அருவேள்வி எதுவானாலும் செய்யுங்கள். என் இறுதிச்செல்வத்தையும் ஈடுவைக்கிறேன். கடுந்தவம் எதுவானாலும் என் இறுதிக்குருதிவரை அளிக்கிறேன்” என்று சித்ரகேது கூவினான்.

“வேறுவழியில்லை, அரசே” என்றார் அங்கிரசர். “அதை நானறியவேண்டியதில்லை. நான் விழைவது மைந்தனை” என்று அவன் சொன்னான். “விழைவுகளின் அரசன் இந்திரனே. வேள்விக்கு கட்டுப்பட்டவன். அவனிடம் கோரலாம்” என்றார் அங்கிரசர். வேள்விமரத்தில் மின்னெனப் பாய்ந்து எரியென எழுந்த இந்திரனிடம் அரசனின் விழைவை அவர் உரைத்தார். “தேவர்க்கரசே, அளிகொள்க! அரசனுக்கு அருள்க!” என்றார்.

“படைக்கப்படாததை உருவாக்க இயலாது என்னால்” என்றான் இந்திரன். “அளிகொள்க! அரசே, அளிகொள்க” என்று சித்ரகேது கூவியபடி மண்டியிட்டு கைநீட்டி இரந்தான். “விண்ணாளும் தேவர்களில் ஒருவனை இவன் மைந்தன் என மண்ணுக்கு அனுப்புகிறேன். இவன் தேவியிடம் அவன் ஊனுடல்கொண்டு பிறப்பான். மண்ணில் அறுபதாண்டுகாலம் வாழ்ந்து சிறந்து விண்மீள்வான்” என்றான் இந்திரன். “ஆனால் இவன் என் மைந்தன் என ஒருகணமும் நீங்கள் எண்ணலாகாது. எண்ணும் அக்கணம் அம்மைந்தன் உயிர்நீப்பான்.”

சித்ரகேது “ஆம், ஆணை! அவ்வாறே. ஆணை!” என்று கூவினான். அங்கிரசர் “எண்ணிச்செய்க, அரசே!” என்றார். “இல்லை, இது எனக்களிக்கப்படும் பேரருள்…” என்றான் சித்ரகேது. “அரசே, நாம் மைந்தர். தேவர்கள் அல்ல. அவர்களுடைய வாள்முனைகளின் உலகு” என்றார் அங்கிரசர். “ஆம், வாள்முனையில் எறும்பு ஊரும். அது அஞ்சவேண்டியதில்லை” என்றான் சித்ரகேது. “தேவர்க்கரசே, இதோ சொல்லளித்தேன். எனக்கு மைந்தனை அருள்க!” இந்திரன் “அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி மீண்டான்.

சித்ரகேதுவின் மனைவி கருவுற்று மைந்தன் ஒருவனை ஈன்றாள். சர்வஜித் என்று அவனுக்கு பெயரிட்டனர். பொன்னொளிகொண்ட உடலும் மணிவிழிகளும் கொண்ட அழகனாக இருந்தான் அம்மைந்தன். அவன் பிறந்த கணமே வயற்றாட்டியரால் அங்கிருந்து விலக்கப்பட்டான். அன்னைக்கு அவன் முகமே காட்டப்படவில்லை. அவனுக்கு அமுதூட்ட முலைததும்பும் செவிலியர் வெளியே காத்துநின்றிருந்தனர்.

அரசனும் தேவியும் அவனை ஒருபோதும் நேரில் பார்க்கவேயில்லை. ஒருகணமேனும் தன் மகன் அவன் என எண்ணிக்கொள்ளலாகாதென்பதை அவன் கருவில் இருந்தபோதே தங்களுக்குள் சொல்லி உறுதிகொண்டு அதையே தவமெனச் செய்து அகத்தை பயிற்றுவித்திருந்தனர். அம்மைந்தனைப்பற்றிய ஒருசெய்தியும் தங்கள் செவிக்கு வரக்கூடாதென்று அவர்கள் ஆணையிட்டிருந்தனர். அவன் அறியாமலும் அவர்களின் விழிமுன் சென்றுவிடக்கூடாதென்று அனைவரும் நெறிகொண்டிருந்தனர்.

மைந்தனை மறக்க அரசன் அரசப்பணிகளில் கணமிடைவெளியின்றி மூழ்கினான். மாலையில் களைத்து தளர்நடையிட்டுச்சென்று படுக்கையில் விழுந்து அக்கணமே துயின்றான். காலையில் அலுவல்செய்தியொன்றுடன் தன்னை எழுப்பவேண்டுமென அமைச்சர்களுக்கு அவன் ஆணையிட்டிருந்தான்.

மைந்தனை எண்ணாமல் கடக்க தேவி ஒருவழி கண்டுகொண்டாள். ஒரு மரப்பாவையை அவள் தன் மகன் என எண்ணினாள். அதற்கும் சர்வஜித் என்று பெயரிட்டாள். அந்தப் பாவையை நெஞ்சோடணைத்து அமுதூட்டினாள். கொஞ்சிக் கனிந்து குதலைபேசினாள். ஆடையும் அணியும் அணிவித்து மடியிருத்திக்கொண்டாள். அருகே படுக்கவைத்து துயின்றாள். அதையே கனவிலும் கண்டாள். பாவை அவளுக்குள் ஊறிய முலைப்பால் அனைத்தையும் உண்டது. அவள் உதடுகளில் எழுந்த முத்தங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டது. அவள் கனவிலும் அதுவே வந்தது. அவள் மெல்ல தன் மைந்தன் இருப்பையே மறந்தவளானாள்.

அகத்தளத்தில் அன்னையையும் தந்தையையும் அறியாமல் வளர்ந்தான் சர்வஜித். அவனுக்கு ஒருவயதானபோது ஒருநாள் சேடியொருத்தி அவனை கொற்றவை ஆலயத்திற்கு கொண்டுசென்றாள். அங்கே விளையாடிக்கொண்டிருந்த மைந்தன் அவ்வழி சென்ற நாயொன்றைக் கண்டு அதைத்துரத்தியபடி வெளியே சென்றான். மறுதிசையில் சேடியர் தேடிப்பதைத்து கூச்சலிட்டுக்கொண்டிருக்க மையச்சாலையில் இறங்கி அவன் கூட்டத்தில் கலந்தான். கூட்டத்தின் அலையால் உந்திச்செல்லப்பட்ட மைந்தன் அதில் மகிழ்ந்து துள்ளிக்கொண்டிருந்தான்.

அப்போது குலத்தாரின் அவைக்கூட்டம் முடித்து அவ்வழியே தேவியுடன் சென்ற சித்ரகேதுவின் தேர்முன் அவன் வந்தான். தேவி அறியாமல் பதறி எழுந்து “என் மகன்!” என்று கூவினாள். அவள் மடியிலிருந்த பாவை கீழே விழுந்தது. அதை காலால் தட்டி வீசிவிட்டு பாய்ந்து ஓடும் தேரிலிருந்து இறங்கி அவனை அள்ளி நெஞ்சோடணைத்து முத்தமிட்டு “என் மகன்! என்மகன்!” என்று அவள் அழுதாள். அருகே நின்ற சித்ரகேது கைகால்கள் பதற தேரை பற்றிக்கொண்டான்.

அன்றிரவே அம்மைந்தன் கடும்சுரம் கண்டு இறந்தான். அவன் சடலத்தருகே நெஞ்சறைந்து தலைமோதி கதறிக்கொண்டிருந்தாள் அன்னை. பித்தனைப்போல வெறித்து நின்றிருந்த சித்ரகேது ஒருகணத்தில் பாய்ந்து மைந்தனை கையிலெடுத்துக்கொண்டு ஓடினான். “அரசே! அரசே” என்று கூவியபடி அமைச்சரும் பிறரும் பின்னால் ஓடினர். தேரிலேறி “செலுத்துக, காட்டுக்கு!” என்று ஆணையிட்டான். “விரைக! விரைக!” என்று கூவிக்கொண்டே இருந்தான்.

தேர் சென்று அங்கிரசரின் குருநிலை முன் நின்றது. இறங்கி ஓடி மைந்தனின் உடலை முனிவர் முன் இட்டு அவன் கூவினான். “நான் ஒருகணமும் எண்ணவில்லை. ஒருகணமும் இவனை உரிமைகொள்ளவில்லை. இவன் உயிருடலை நான் தொடவே இல்லை.” அங்கிரசர் “ஆம்” என்றார். “என் துணைவிசெய்த பிழைக்கு என்னை ஏன் தண்டிக்கின்றான் தேவர்க்கிறைவன்? நான் எண்ணவில்லை. மைந்தன் என்று இவனை கொள்ளவே இல்லை.” நெஞ்சில் ஓங்கி அறைந்து அவன் கண்ணீருடன் அலறினான். “தெய்வங்கள் சொல்க! அறமென நின்றிருக்கும் மூதாதையர் சொல்க! தேவர்க்கரசன் அறமுள்ளவன் என்றால் இங்கெழுக… நான் எண்ணவே இல்லை.”

“ஆனால் அவள் உன் அறத்துணைவி. அவள் எண்ணியது நீ எண்ணியதேயாகும்” என்றார் அங்கிரசர். “அவ்வண்ணமென்றால் அவளை நான் நீங்குகிறேன். அவள் என் துணைவியல்ல என்று இப்போதே அறிவிக்கிறேன். இந்த அனல் சான்றாகுக! அவள் என் துணைவியல்ல என்று தெய்வங்கள் அறிக! அவள் என் துணைவி அல்ல என்று மூதாதையர் அறிக! அவள் என் துணைவியல்ல என்று குலமும் குடியும் சுற்றமும் அறிக! ஆம் ஆம் ஆம்” என்றான். நெருப்பு எழுந்து தழலாடி அதை ஏற்றது.

“தேவர்க்கரசே, இது உனக்கு ஏற்புடையதென்றால் இம்மைந்தன் எழுவானாக!” என்றார் அங்கிரசர். துயிலில் இருந்து என மைந்தன் எழுந்து தந்தையை நோக்கினான். அவனை நோக்காமல் திரும்பி அப்பால் சென்ற சித்ரகேது “அவனை அகத்தளத்திற்கு கொண்டுசெல்க!” என ஆணையிட்டார். “வேந்தே, நீ அரசமுனிவனாக ஆகமுடியுமென்று உன் பிறவிநூல் சொல்கிறது. பற்றறுத்து மீளாமல் உனக்கு அது இயல்வதல்ல என்பதனாலேயே இது நிகழ்ந்தது என்று கொள்க! பற்றுவனவற்றில் பெரும்பற்று மைந்தனே. அதை வென்றாய். இனி நீ அடைவன முடிவற்றவை. நீ வாழ்க!” என்றார் அங்கிரசர்.

“அங்கிரசரின் சொல் நிலைத்தது. அவன் முடிவின்மையை அடைந்தான்” என்றார்  பிரசாந்தர். “முடிவின்மை என்பது இப்பெரும் ஊசலின் இருபக்கங்களிலும் உள்ளது. அவன் ஒளிர்ந்து அதை அடையவில்லை. இருண்டு அடைந்தான். அவன் தேடியது திரண்டு அவன் தெய்வமாகவில்லை. அவன் கரந்தது கூர்ந்து அவன் அசுரன் ஆனான். அவனே விருத்திராசுரனாகப் பிறந்தான் என்கின்றனர் தொல்நூலோர்.”

தொடர்புடைய பதிவுகள்


சிறுகதை விமர்சனம் 13

$
0
0

6ஜெ

 

க.நா.சுவின் காலகட்டத்தில் எது சிறுகதை என்பதைப்பற்றி ஒரு தொடர்விவாதம் நடந்தது. அனைவருமே எழுதியிருக்கிறார்கள். அதன்பிறகு இப்போதுதான் இந்த விரிந்த அளவில் சிறுகதையின் வடிவம் பற்றியும் சிறுகதை எழுதுவதிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் ஒரு பொதுவிவாதம் நிகழ்கிறது என நினைக்கிறேன். மிகமிக முக்கியமான ஒரு இலக்கியநிகழ்வு இது

 

ஆனால் எத்தனைபேர் இதைக்கவனிக்கிறார்கள் என்று பார்த்தால் வருத்தம்தான். சிறுகதைகள் எழுதும் என் நண்பர்கள் பலர் உண்டு. எவருமே வாசிக்கவில்லை. ஆர்வமில்லை. நீளமாக இருக்கிறது என்கிறார்கள்:. ஃபேஸ்புக் போய் பார்த்தேன். ஒருவர் கூட இதைப்பற்றி எழுதவில்லை

 

முந்நூறு காப்பி அச்சிடும் இதழ்களில் எழுதியபோது க.நா.சுவுக்கு இன்னும் அதிகமான கவனிப்பு இருந்திருக்கும்போல

 

பாலசுப்ரமணியம். ஆ

 

அன்புள்ள ஜெ

 

வந்திருக்கும் சிறுகதைகளில் எவருடைய பாதிப்பெல்லாம் இருக்கிறது என்றுபார்த்தேன். தருணாதித்தன் கதைகளில் தி. ஜானகிராமன் பாதிப்பு இருக்கிறது. அதாவது மனிதகுணம் என்னும் கதை அப்படியே தி ஜா பாணி. மற்றபடி பெரும்பாலும் அசோகமித்திரனின் பாணி. மோனிகா மாறன் கதை பழைய உருவகக்கதைகளுக்குரிய மொழி. என் ஆர் தாசன் என்பவர் அப்படி எழுதிக்கொண்டிருந்தார். உரைவீச்சு என அதைப்பற்றி அவர் அன்றைக்குச் சொன்னார்.

 

கதைக்குரிய மொழி அல்ல அது. ஒரு வகையான வசனகவிதை. ஆனால் ரொம்பவே ரொமாண்டிக் ஆக உள்ளது. நேரடியான உணர்ச்சிகள் வெளிப்பட்டால் அப்படித்தான் இருக்கும். அவற்றை பிரைவேட் இமோஷன் ஆகவே வாசிக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மக்தலீனை அவர் சித்தரித்துக்காட்டவே இல்லை

 

மனோகர்

 

download

சிவா கிருஷ்ணமூர்த்தி

 

 

 

ஜெ

 

வெண்முரசு என்னும் பெரிய படைப்பை நாள் தோறும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கூடவே கருப்புப்பணம் பற்றிய சண்டையிலும் ஈடுபட்டு 20 பக்கத்துக்கு எழுதினீர்கள். [வாட்ஸப் வழியாக ஒருலட்சம் முறையாவது அது பரவியிருக்கும். என்னுடைய சாதாரணமான நண்பர்களும் உறவினர்களும் எல்லாருமே அதை வாசித்திருக்கிறார்கள்] நடுவே சிறுகதைகளை வாசித்து இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறீர்கள்

 

இந்த ஆறுதொகுதிகளில் உள்ள கதைகளில் அனோஜன் பாலகிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, தருணாதித்தன் ஆகிய மூவரும்தான் சிறந்த எழுத்தாளர்கள் என நினைக்கிறேன். சுவாரசியமாக எழுதுவதுதான் முதல் அடிப்படை. எதையும் சுவாரசியப்படுத்துவதும் சுவாரசியத்தை கண்டுகொள்வதும் எழுத்தாளனுக்கு அவசியம். பிற எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.

 

மேலே சொன்ன மூன்றுஎழுத்தாளர்களும் வாழ்க்கையிலுள்ள வேடிக்கையான அல்லது வேறுபட்ட அல்லது கவனம்தரவேண்டிய விசயங்களைத் தொட்டு எடுத்து சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் இந்த அம்சம் இல்லாவிட்டால் அது வாசகனுக்கு முக்கியமில்லை என நினைக்கிறேன்

 

சுனீல் கிருஷ்ணனின் கதை நுட்பமாக எழுத முயர்சிசெய்யப்பட்டது. அதேபோல மோனிகா மாரனின் கதையும். ரெண்டுமே சுவாரசியமான ஒரு விஷயத்தையும் சொல்ல முயலவில்லை. ஆசிரியன் எதை எண்ணி நெகிழ்கிறானோ சிரிக்கிறானோ அதைமட்டும் எழுத முயன்றாலே போதும் என நினைக்கிறேன்

ஆர். கிருஷ்ணமூர்த்தி

 

DSC_3424

சுனில் [நாஞ்சில்நாடனுடன்]

அன்புள்ள ஜெ

 

சிறுகதைகளை வாசித்தேன். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதையை உங்கள் குறிப்புக்குப்பின்னர்தான் வாசிக்கமுடிந்தது. முக்கியமான கதை என நினைக்கிறேன். அந்த முடிச்சு ஒரு வலுவான கலரில் இருப்பதனால் அதை மையமாகக்கொண்டு அந்தக்கதையை வாசித்து அது இனவாதம் பற்றிய கதை என்று எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அது அகதிகளின் அன்னியர்களின் அடாப்டேஷன் பிரச்சினைகளைப்பற்றிய கதை.

 

பிரிட்டிஷ்க் கலாச்சாரத்தில் இவர்கள் எதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்., எதை கவனிப்பதே இல்லை என்பதைப்பற்றிய கதை. அங்குள்ள முன்னேறும்வாய்ப்பான கல்வி அரசியல் எல்லாமெ தெரியும் கலாச்சாரம் அறிமுகமே இல்லை. அதைத்தான் இந்தக்கதை சொல்கிறதென நினைக்கிறேன்

 

முக்கியமான கதை. சிவா கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்துவாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்

 

செல்வா முருகேசன்

 

download (1)

அனோஜன் பாலகிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாளுக்கு ஒரு கதைவீதம். தருணாதித்தனின் கதைகள் நல்ல படைப்புகள். சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையும் நன்றாகவே உள்ளது.

 

இக்கதைகளின் பிரச்சினை எல்லாருமே சம்பிரதாயமாக எழுத முயற்சிசெய்திருக்கிறார்கள் என்பதுதான். கதைவடிவம் தமிழில் ஆனந்தவிகடன் பாணிக்கதைகளில் வரும் வழக்கமான ரூபத்திலேயே உள்ளது. எந்தப்பரிசோதனையும் செய்யப்படவில்லை. எந்தவகையிலும் கதைகள் மேம்படுத்தப்படவில்லை.

 

ஒருசிறுகதையைக் கொஞ்சநாள் வைத்திருந்து மேம்படுத்தவேண்டும். திரும்ப எழுதி கூர்மையாக ஆக்கவேண்டும். இன்றைய ஃபேஸ்புக் சூழலில் அதைச்செய்யாமல் அப்படியே வலையேற்றிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே ஒரு வகையான பிசிறுகள் இருக்கின்றன. சொல்லாட்சிகளும் நடையும் எல்லாமே பிசிறுகளுடன் மட்டுமே இருக்கின்றன.

 

நல்ல கதை நூறாண்டுக்காலம் நிற்பது. அதை போகிறபோக்கிலே எழுதிவிடக்கூடாது என இவர்கள் உணரவேண்டும். வாசகன் என்பவனை இவர்கள் இப்போதுதான் சந்திக்கிறார்கள். வாசகன் எப்படிக்குரூரமாக இருப்பான் என்பதைப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறே

 

சண்முகம்

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கருப்புப்பணம் -எதிர்வினைகள்

$
0
0
1

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 உங்கள் மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்”   பதிவுக்கான எனது எண்ணங்கள்.

 

# ”அது ஊடகங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு எடுக்க முடியும் என்றும், அரசியல் கட்சிகள் அதன் சேவகர்கள் மட்டுமே என்றும் உணர்கிறோம். அனைத்தையும் விட மேலாக அறிவுஜீவிகளை சல்லிவிலைக்கு அது வாங்கி அடியாட்களாக வைக்கும் என்றும் சமகாலம் நமக்குக் காட்டுகிறது.”

(உங்கள் கருத்தின்படி கீழ்கண்டவை நடைபெரும் என எதிர்பார்கலாம்)

*  இனிமேல் ஊடங்கள் அழிந்துவிடும் அல்லது தூய்மை அடைந்துவிடும். உண்மை செய்திகளை மட்டுமே அளிப்பார்கள்.

*  அறிவு ஜீவிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கருத்துகளை விலையில்லாமல் அளிப்பார்கள்.

 

#இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித்தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை.

  • நான் அறிந்த வரையில் அரசியல்கட்சித்தலைவர்கள், பொருளியலாளர்கள் கள்ளப்பணத்திற்கு (fake note) ஆதரவாக பேசவில்லை.
  • கருப்பு பணத்திற்க்கு ஆதரவகவும் பேச வில்லை அவர்க்ள் அரசு எடுத்த செயல் முறையை மட்டுமே விமர்ச்சித்து கொண்டு உள்ளார்கள்.

 

# அதிகம்போனால் ஆறுமாதம்

  • ஆரம்பித்தபொழுது இரண்டு நாட்கள் என்றார்கள் பிற்கு 50 நாட்களில் சரியாகும் என்றார்கள் இப்பொழுது 15 வருடம் தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்கிறார்கள்.

 

# நான் இந்தக்கட்டுரையை அன்று மறுபிரசுரம் செய்வேன்

  • தாரளமாக செய்யலாம் அது உங்கள் உரிமை அதையும் நங்கள் படிக்கத்தான் போகிறோம் உங்களுக்கு எதற்க்கு இந்த சூழுரை.

 

# நம் வரிவிதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள். நம் பொருளியலில் வங்கிவழிப் பணப்பரிமாற்றம் மிகமிகக் குறைவு. பெரும்பாலும் காகிதப்பணப் பரிமாற்றம்.

  • இந்த முயற்சியினால் அனைத்து பரிமாற்றமும் வங்கிவழியாக நடைபெறுமா? இதற்கான் கட்டமைப்பு இன்று உள்ளதா? கட்டமைப்பை வ்லுப்படுத்தாமல் இது எப்படி சாத்தியம். ஒரு நல்ல நிர்வாகி ஒரு திட்டத்தை செயல் படுத்துவதற்க்கு முன் அதன் செயல் முறை சிக்கல்களை களைந்துவிட்டு பிறகே செயல்ப்படுத்துவார். இன்று நடைமுறை என்ன? 85 % அதிக மதிப்புள்ள பணத்திற்க்கு 14% உள்ள குறைந்த மதிப்புள்ள பணத்தை வைத்து பரிவர்த்தனை செய்ய நினைத்து எவ்வளவு அறிவீனம்.

 

# சென்ற பத்தாண்டுகளாக கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்த லாபமே மறைமுக வட்டித்தொழிலாக

 

  • வட்டிதொழில் கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்தது என்பது உண்மையில் அறியாமையே. இதற்காக உங்களை நினைத்து வருந்துகிறேன். வட்டி தொழில் ஒவ்வொரு குக்கிராமத்திலும் நடைபெறும் முறைப்படுத்த படாத ஒரு வணிகம். இது நல்லதோ கெட்டதோ இங்கு இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இது இந்தியாவின் ஆன்மாவை அறிந்த அனைவரும் அறிவர். உங்களுக்கு இது தெரியாதது வருத்ததுக்குறியது.

 

# இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்ட ஒன்று என்பதை எவரும் உணரமுடியும். ஜன்தன் போன்ற திட்டங்கள் வழியாக  இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத் தொடங்கி ஓராண்டாகிறது.

 

  • கட்டாயமாக வங்கிக்கணக்கு என்பது முந்தய காங்கிரச் அரசுவின் திட்ட்ம இது எரிவாயு மானியத்திற்க்காக உருவாக்கப்பட்ட்து. இதை அப்பொழுது எதிர்த்து அரசியல் செய்தவர்கள் தான் இவர்கள். இது தினசரி செய்திதாள் படிக்கும் அனைவரும் அறிவர். வ்ங்கி கணக்கு தொடங்கினால் போதுமா அதை பயன் படுத்த ஏடிஎம் வேண்டாமா? தமிழகத்தில். 3040 நபர்களுக்கு ஒரு ஏடிஎம் இதுவே பீகாரில் 13525 நபர்களுக்கு ஒரு ஏடிஎம். இது தான் இன்றைய இந்தியாவின் நிலை.

 

# ஜிஎஸ்டி அவர்களுக்கு மிகப்பெரிய கட்டாயத்தை அளிக்கிறது.

  • இதுவும் முந்தய காங்கிரச் அரசுவின் திட்ட்ம் அப்பொழுது எதிர்த்தவர்க்ள் தான் இவர்க்ள். (என்னுடைய என்னப்படி இது அனைத்து பொருட்களுக்கும் இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை இது எப்படி கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும்)

 

# வரிகொடுக்கப்படாத கள்ளப்பணத்தில் 20 சதவீதமாவது வரிகொடுக்கப்பட்ட பணமாக ஆகலாம். அதுவே இன்றைய சூழலில் மிகப்பெரிய வெற்றி

 

  • இந்த 20% க்காக 126 கோடி மக்களை துன்புறுத்துவீர்களா?

உண்மையில் கருப்பு பணம் வைத்து உள்ளவர்களை சாதரன மக்களால் அறிந்து கொள்ள் முடிகின்ற பொழுது அரசால் முடியாதா

 

# எத்தனை கோடிரூபாய் நேரடியாகக் கணக்குக்குள் வந்துகொண்டிருக்கிறது

 

  • இந்த பணம் மாற்றுவதற்க்காக வ்ந்து கொண்டு இருக்கிறது வரி கட்டப்பட்ட பணம் தான் இப்பொழுது வந்து கொண்டு உள்ளது. இந்த பணம் வங்கியில் இருந்து விரைவில் எடுக்கப்பட்டு விடும் இதை செலுத்துபவர்கள் வைப்பு நிதியில் போடுவதில்லை சேமீப்பு கணக்கிலேயே வைக்கப்படுகிரது ஏடிம் வழக்கம்போல் இயக்கத்துக்கு வரும்போழுது இவை மீண்டும் வீடுகளுக்கே சென்றுவிடும்.

 

#  ‘அய்யோ பாவம், ஏடிஎம் வாசலில் நிற்கும் நிலை உனக்கு வந்துவிட்டதே’ என இவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்

 

  • இதை அவர்கள் சொல்லுகிறார்கள் என்பதை விட அங்கு போய் நிர்ப்பவர்களை கேளுங்கள். முத்ல் இரண்டு நாட்கள் இருந்த ஆதரவு பின்னர் இல்லாமல் போனது எதனால் இதனால் தான்.

 

# மூன்று சாரார். கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் வசைபாடுவது இயல்பு. இன்னொருசாரார் வெறும் மோடி எதிர்ப்பாளர்கள். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருக்கிறது இன்று. மூன்றாமவர் வரிசையில் இரண்டுநாள் நிற்கநேர்ந்தமையாலேயே சலித்துக்கொள்ளும் நடுத்தரவர்க்கக்காரர்.

 

  • நான் இந்த மூன்று வகையிலும் சேராதவன்.கள்ள பணம் சேரவே வாய்ப்பு இல்லதவன். மோடியியை எதிர்க்க வேண்டிய அவசியம் அற்றவன். (தமிழக அரசியலில் மோடிக்கு இடம் இல்லை). என்னிடம் இருந்த சில செல்லாத பணம் என் தந்தையால் மாற்றி தரப்பட்டது. நான் இனைய பணபரிவர்த்தைனை செய்பவன். ஆனால் நான் அழுவலகம் வரும் பொழுதும் (வ்ங்கி வாசலில்) மாலை வீடு திரும்பொழுதும் (ஏடிஎம் வாசலில்) மக்கள் படும் துயறம் அறிந்தவன்.

இந்த நிலை தொடர்ந்தால் நானும் நேரடியான பாதிப்பை அடைவேன். சிறு மற்றும் குறு வியபாரிகள் தான் நம் நாட்டின் இயங்கு சக்தியாக பார்ப்பவன். நீங்கள் நம்பும் டாடாவை விட நான் இவர்களை தான் சாதரன மக்களின் தோழனாக பார்கிறேன். ஆனால் இன்றய சூழல் தொடர்ந்தால் நானும் இவர்களுக்கு விரோதமான் முடிவையே எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவேன். (உலவர் ச்ந்தை தெருமுனை கடைகளில் காய்கறி பழ்ம் வாங்குபவன். சில்லரை தட்டுப்பாட்டால் நானும் வங்கி அட்டை மூலம் வாணிபம் செய்பவர்க்ளை நோக்கி செல்ல வேண்டும் இதனால் எனக்கு சிரிய அளவில் பண்ம் நஸ்டம் ஆனால் அந்த வியபாரிக்கு வியபாரமே நஸ்டம் இதை யார் ஈடு செய்வார்கள்).

# ஐம்பதாண்டுகளாக வரிகட்டாமல் இயங்கிவரும் இந்தப்பெருச்சாளி உலகைக் கலைத்து அவர்களில் ஒருசாராரையாவது வரிகட்டக் கட்டாயப்படுத்தும் அரசு செய்வது தவறா?

  • இவர்களை உங்களால் வேறு முறையில் தடுக்க முடியாதது இந்த மக்கள் செய்த குற்றமா?

 

# ஏடிஎம் இயந்திரங்களின் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கான தட்டுகளை அகற்றிவிட்டு மாற்றி அமைப்பதா? அவற்றைச் செய்தபின் இந்நடவடிக்கையைச் செய்தால் என்ன பயன்?

 

அரசு போதிய அளவு 100 அல்லது 500 புதிய நோட்டுகளை உருவக்கிவிட்டு செய்திருந்தால் என்ன ஆகிறுக்கும். கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் நாட்டை விட்டா ஓடி இருப்பார்கள்.

 

# மறுநாளே 2000 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்தேன். 45 நிமிடமாயிற்று. இன்று மீண்டும் 2500 எடுத்தேன். இன்று எட்டுபேர் இருந்தனர் வரிசையில். ஐந்து நிமிடம் ஆகியது. என் செலவு அவ்வளவுதான்.

  • இன்று வங்கிகளில் பணமே இல்லையே இதற்க்கு யார் பொருப்பு.

# தேசம் முழுக்க கிட்டத்தட்ட ஒருகோடிபேராவது ஏடிஎம்மில் நின்றிருப்பார்கள். அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு வந்தால்கூட அது அரசுப்படுகொலை!

  • அரசுவின் வேலை மக்கள் அனைவரையும் காப்பது தான். அழிப்பது அல்லவே.

 

# ஒரு பத்தி வாசித்ததுமே கீழே பார்ப்பேன். எழுதியவர் எவர் என. இஸ்லாமியப் பெயர் இருக்கும். பொருளாதாரநிபுணர், அரசியல் ஆய்வாளர், இதழாளர், எழுத்தாளர், வாசகர் என பல அடையாளங்கள். ஆனால் கருத்தும் உணர்ச்சியும் ஒன்றே

 

  • இது போன்ற பார்வை பரதிய ஜனதா ஆதரவாளர்களிடம் மட்டுமே காணப்படும் ஒரு கருத்து. எங்களின் பார்வையில் அப்படி தெறிவது இல்லை மேலும் இஸ்லாமியர்கள் மோடியை எதிர்ப்பது இயல்பானது. எப்படி பிராமனர்கள் திக வை ஆதரிப்பது இல்லையோ அது போன்றது தான் இதுவும்.

 

# ஒரு பொருளியல் விஷயத்தில் ஆயிரம்பேரில் நாலுபேருக்காவது மாற்றுக்கருத்து இருக்காதா என்ன

 

  • * உங்களுக்கு 1000 பேருடைய கருத்தும் கிடைத்த்தாக நினைகின்றீர்களா அப்படி என்றால் அது தவறு. அத்தனை கருத்துக்கள் உங்களுக்கு கிடைத்து இருந்தால் ஏடிம் ல் கூட்டமே இல்லை என்று சொல்லி இருக்கமாட்டீர்கள்.

 

# அது பலன் தரலாம், தோல்விகூட அடையலாம்.

 

  • பலன் தராமல் போக கூடிய வாய்ப்பு உள்ள ஒரு திட்ட்த்தை செயல் படுத்துகிற அரசை எந்த அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிரீர்கள். மேலும்  மக்களை பாதிக்காத பல வழிமுறைக்ள் உள்ளதாக கருதபடுக்கின்ற திட்ட்த்தை 120 கோடி மக்களையும் பாதிக்கினற வகையில் இப்போழுதே அமுல்படுத்த வேண்டிய கட்டயம் மோடிக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஏன்?

 

என்றும் அன்புடன்

ம.உமாசங்கர்.

 

அன்புள்ள ஜெ

நேற்று கட்டுரையில் மல்லையா தொடர்பான வாதங்களில் நிறைய விடுபடல்கள் இருப்பது  படிக்கும்பொழுதே உணர முடிந்தது…

நாம் ஒரு பொழுதும் அறிய முடிய கருப்பு பக்கங்கள் நிறைய உண்டு அவர்களிடம்.. நிச்சயம் மல்லையா ஏமாளியோ / பரிதாபப்பட வேண்டிய நபரோ அல்ல.. நமது வாதங்களையும் மீறி, அவர்களின் தில்லுமுல்லுகள் சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்…

மல்லயாவிற்கும் / கார்ப்பரேட்டுகளுக்கும் வாதாடினால்,  அதையே சிறு வியாபாரிகளும் கேட்பார்கள்.. இந்த கட்டுரையின் அடிநாதமே கேள்விக்கு உள்ளாகலாம்…

நன்றி…

பிரசாத்..

அன்புள்ள ஜெ

தங்களின் மோடி,கருப்பு பண ஒழிப்பு, ஊடகங்கள் படித்தேன்.  ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கும் இடதுசாரித்தத்துவம் என்பதை ஐய்யகோ ஏழைகள் ஏடிஎம்மில் நிற்கிறார்களே என தொலைக்காட்சி விவாதங்களில் உணர்ச்சிவசப்பட்டு  ஷோ முடிந்த கையோடு இம்போர்ட்டட் காரில் ப்ராண்டட் ஷர்டோடு கேப்பிடலிசத்தை பின்பற்றும் இடதுசாரிகள் மற்றும் தாங்களே குறிப்பிட்ட தன் தலையில் தான் சுமையை ஏற்றுகிறார்கள் என்று புரியாத  உடன் சேர்ந்து சலிக்கும் மாத சம்பளக்காரர்கள் என எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது.

நாங்கள் பதில் சொன்னால் பக்தாஸ் என முத்திரை குத்தப்படும். தங்களுக்கும் அந்த முத்திரை குத்தப்படப்போவது தெரிந்தும் தங்களை போன்ற ஒருவர் உண்மை நிலையை பேச முன்வருவது அளப்பரியா ஆனந்தம்.

இதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களுக்கு எப்போதுமே எதோ ஒருவகையில் அப்பாவி திராவிடரை நலிவுறுத்தி பார்ப்பதில் க்ரூர சந்தோஷம் என்று ஒரு பிரச்சாரமும் எப்போதும் போல தொடங்கியாகி விட்டது.
ட்ரம்பின் வெற்றியையே பார்ப்பன பிரச்சாரத்தின் வீரியம் என சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.

இது போல ஒரு வலுவான அறிவிப்பை பார்த்தறியாத எதிர்ப்பார்க்காத அரசியல்வாதிகளும் கருப்புப்பண முதலைகளும் எப்போதும் போலவே முதல் நாள் ஆதரித்து அறிக்கை விட்டு மக்களை ஆழம் பார்த்து எப்படி சொன்னால் எப்படி மக்களை ஏமாற்றலாம் என இலக்கணம் மாறாமல் செய்கிறார்கள். முதல் நாள் திகைத்து பிறகு அணி சேர்ந்து விஷம பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இன்னமும் அந்த மூன்றாவது சாராருக்கு தன் தலையில் தான் சுமை ஏற்றப்படுகிறது என்றே புரியாமல் ஊரார் விமர்சனத்தை கேட்டு கழுதை மேல் ஏறாமல் கழுதையை தலையில் சுமந்து வந்த தந்தையின் மகனுமாகவே இருப்பதும் அவர்களை அப்படியே வைத்திருக்கும் ஊடகங்களின் சாமர்த்தியமும்  தான் வியப்பாக இருக்கிறது.

ப்ரியமுடன்
ஸ்ரீப்ரியா

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.

மோடிகருப்புப்பண ஒழிப்புஊடகங்கள் கட்டுரையை படித்தபிறகு ‘நிலைகொள்ளாமல் ‘அலைந்து கொண்டிருக்கிறேன்’,உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தையில்லை,அப்படியே பொங்கிவிட்டீர்கள்!.ஒரு உண்மையான எழுத்தாளனின் சமூகப்பங்களிப்பை மிகச் சரியான நேரத்தில் நமது தேசத்திற்காக நிலைநாட்டி விட்டீர்கள்!.கடந்த 12 நாட்களாக பெரும்பாலான காட்சி ஊடகத்திலும், செய்தித்தாள்களிலும் மோதி அவர்களின் இந்த துணிச்சலான நடவடிக்கையை கொஞ்சம்கூட நாக்கூசாமல் கள்ளத்தனமாக குறைகூறி அதை பார்த்து படித்து மனம் வெதும்பி வரும் நிலையில் உங்களின் கட்டுரை அருமருந்தாக உள்ளது.கீழ் கண்டவர்களின் ஆஷாடபூதித்தனத்தை சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

 
முதலில் இடதுசாரிகள், மோதியை எதிர்ப்பதென்றால் எந்தவித கீழான நடவடிக்கைக்கும் செல்வார்கள் என்பது,இது ஒரு மிக அதிர்ச்சி அளிக்கும் அவலநிலை!அடுத்து செய்தியாளர்கள் சமஸ் போன்றவர்கள் மோதியின் தாயார் அவர்கள் வங்கிக்கு சென்று பணம் எடுத்ததைக்கூட மோதிக்கு எதிராக ‘கொச்சையாக’விமரிசித்து இருந்தார்கள்(எப்பேர்ப்பட்ட பத்திரிகையாளர்கள்!).அடுத்து ஹிந்து போன்ற “தேசிய நாளிதழ்!” தண்ணிக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு தவிப்பதுபோல் ATM க்காக மக்கள் தவிப்பது மாதிரி கருத்துக் படமும்,என்றும் இல்லாத விதத்தில் இது சம்பந்தமாக துணுக்கு தோரணங்களும் வெளியிட்டு தங்களின் ‘கோணப்பார்வைகளை பறைசாற்றினர்.அடுத்து முன்னாள் நிதியமைச்சர் தனது பதவிக்காலத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட வக்கிலாதவர் இதனால் ரூ.400 கோடி அளவுக்குத்தான் பலன் இருக்கும் என்று கூசாமல் புளுகினார்.இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் நமது உச்சமன்ற தலைமைநீதிபதி இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது இதனால் பொதுமக்களால் கலவரங்கள் கூட வெடிக்கலாம் என்று அருள்வாக்கு அருளினார்!(மறுநாள் எல்லாப் செய்தித்தாள்களிலும் இதுதான் தலைப்பு செய்தி.எப்பேர்ப்பட்ட தேச சேவை!) இது நீங்கள் சரியாக குறிப்பிட்டபடி “பெரிய அறவீழ்ச்சி” தான்.
 
இறுதியாக இக் கட்டுரையில் நீங்கள் மாய்ந்து மாய்ந்து ஒவ்வொருவரின் சுயரூபங்களை நேர்மையாகவும் சரியாகவும் தோலுரித்துக்காட்டினாலும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒருமித்த குரலில் “விஜய்மல்லையாவை போன்றவர்களை” நீங்கள் தூக்கிப்பிடிப்பதாக நாளைக்கு உங்களுக்கு எதிராக கூறப்போகும் ‘வசைகள்’ இன்றே இப்போதே என் காதில் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.
அன்புடன்,
அ.சேஷகிரி.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,நான் தங்களின் சமீபகால வாசகன்.  உங்கள் இணையப் பக்கத்தில் வாசித்து ரசித்து விட்டு மௌனமாக இருந்து விடுவது என் இயல்பு.  பொதுவாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை.  ஆனால் உங்களது மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை பற்றிய கட்டுரையை படித்த பிறகு நான் உங்களுக்கு எழுதியாகவேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.  என் நன்றியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரு நற்செயலை – கருப்புப்பண ஒழிப்பு நல்லது என்றும் மனம் அறிந்தும் கூட ஆதரித்து எழுத ஊடங்களுள் நேர்மையாளர் ஒருவர் கூட இல்லையே என்ற வேதனை ஒருசில நாட்களாக என்னை வதைத்துக் கொண்டிருந்தது.  ஊடகங்கள் மக்களின் சில அசௌரியங்களை மிகவும் மிகைப்படுத்தி நாடகங்கள் நடத்துவத்திலே குறியாக இருகின்றன  என்பதும் அவற்றில் சில நேரடி திருடர்கள், மற்றவர்கள் ஊழல்வாதிகளிடம் காசு வாங்கிக்கொண்டு செயல்படுவோர் என்பதும் புரிந்தே இருக்கிறது.  சில நூறு உறுப்பினர்களை கொண்ட மகஇக அமைப்பு பற்றி ஒரு நண்பன் வாயிலாக சற்று அறிந்திருந்தேன். அவன் அந்த அமைப்பில் உறுப்பினர் அல்ல – அவர்களது பேசுக்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் அறிந்து கொள்பவன்.  “அவர்கள் தான் உண்மையான கம்யூனிசவாதிகள்.  மற்றபடி இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்மையிலே கம்யூனிஸ்ட்களே அல்ல போலி கம்யூனிஸ்ட்கள்” என்பான்.  இப்போது அவனும் கூட மகஇக-வினரின் பரிதவிப்பு கண்டு அதிர்ந்து போயுள்ளான்.  “பரவாயில்லை…..நீ ஒன்றும் நஷ்டப்படவில்லை…அவர்கள் ஒன்றும் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல….நீ ஒன்றும் களம் புகுந்து காயங்கள் படவில்லை.  வெறும் பேச்சு தானே” என்று அமைதிப்படுத்தினேன்.  இன்று ஒரிசா மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சரண்டைந்தனர் என்பது செய்தி.  காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது என்றும் செய்தி.  எல்லாமே கருப்புப் பணம் – ஊழல் ஆகியவை கொண்டே நடைபெற்று வந்தன போலும்.  இதில் நகைப்புக்குரியது என்னவென்றால் “மக்களால் கியூவில் நிற்பதால்” மிகவும் கவலைப்படும் இவர்கள் மாபெரும் வர்க்கப்போர் புரிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு கொண்டுவர பாடுபடுவதாக காட்டிக்கொள்வதுதான்.  ஊருக்கு முன்னால் நடிப்பது சரி…தங்கள் மனசாட்சியின் முன்பும் நடிப்பார்களா? “தன் நெஞ்சறிவது பொய்யற்க” என்பது?  அதுசரி அவர்களைப் பொறுத்தவரை மனசாட்சி உயிர் ஆத்மா என்பதெல்லாம் கிடையாதே.  வெறும் வெற்று அகங்காரங்களான, நேர்மையாளர்கள் போல் நடித்துவரும் இவர்களை தமிழ்மக்கள் மதிக்காமல் இருப்பது முற்றிலும் சரி.  உங்களுக்கு மீண்டும் என் நன்றி.விக்ரம்,
கோவை
இனிய ஜெயம்,
கடலூரில் பிரபலமான வணிகக் கடை  அது.   நிறைய பெண்கள் வேலை செய்வார்கள்.  பக்கத்து பெரிய துணிக் கடைகள் ஏஜண்டுகள் வழியே பேரம் பேசி, வேறு கடை பெண்களை அக் கடை வேலையை உதற வைத்து இக் கடையில் சேர்த்துக் கொள்வார்கள்.  ஒருநாள் வணிகக் கடை முதலாளி  தனது கடையில் இருக்கும் இருபத்து இரண்டு பெண்களையும் ஒரு விடுமறை நாளன்று சினிமாவுக்கு அழைத்து சென்றார். பெண்களுக்கு நம்ப முதலாளியா இப்படி என ஒரே ஆச்சர்யம்.   அவர் அழைத்து சென்ற படம்,   அங்காடித் தெரு.
மறுநாள் காலை முதலாளி அப் பெண்கள் வசம் அக்கறையாக சொன்னார் ”பொண்ணுங்களா பாத்துக்கங்க அவன் சொன்னான் இவன் சொன்னான்னு  துணிக்கடைக்கு வேலைக்கு போய்டாதீங்க, பாத்தீங்க இல்ல அதுதான் உள்ள நிலவரம்” என்றார்.   அத்தகைய முதலாளி   இரண்டு நாள் முன்பு  ”கவர்மெண்ட்டு சரியானதும்தான் சம்பளம் தரமுடியும்” என்று  ஒரு இரவு கடை சாத்தும்போது அறிவித்து விட்டு  அத்தனை பெண்களையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.
கடலூர் லான்ச்சடியில்  எப்போதுமே தலைமுறை தலைமுறையாக நடக்கும் வட்டித் தொழில். ஒருவர் வருவார் பைக் சைடு பாக்ஸில் லட்சங்கள் கிடக்கும்.  உள்ளூர்கூ டைக்கார பெண்கள் நூற்றுக்கணக்கில்  அவரிடம் ”ஒரு நாள் கடன்” வாங்குவார்கள். காலையில் வாங்கிய ஆயிரத்தை மாலை ஆயிரத்து நாற்பதாக தந்துவிட வேண்டும்.   லாஞ்சில் வந்து இறங்கும் லோடை அப்படியே ஒருவர் பேரம் பேசி அங்கேயே லாஞ்சுக்கு பணம் தந்து லோடை இறக்குவார். அவர் வசம் இந்த கூடைப் பெண்கள்  சில்லறைக்கு  மீன்  வியாபாரம் செய்ய  வாங்கிச் செல்வார்கள்.  கடந்த நான்கு நாட்களாக அங்கே எவரும் இல்லை.
அதிகாலை நான்கு முதல் ஆறு வரை  நடக்கும்  உழவர் சந்தை [இப்போது அது மொத்தமாக வேறு வணிகர்கள் கையில் கிடக்கிறது]  பூக்கடை வணிகங்கள் நான்கில் ஒன்றாக வந்து நிற்கிறது.  எதிர் கறிக்கடை பாய்,  ஆடுகள் கிடைக்காமல்  கடையை விடுமுறை விட்டு விட்டார்.   எங்கள் தெருவில் அடுத்தடுத்து மூன்று சாவு.  தெருமக்கள் கூடிப் பேசி  எங்கள் நகர் கோவில் உண்டியலை திறந்து, அந்த நாட்களை தாண்டினோம். கடலூரின் எந்த திரை அரங்கிலும் கட்டணம் நபருக்கு சாதாரண நாளில் நூறு ரூபாய்.  நட்சத்திரங்களின் நாளில்  பொதுமக்கள் வேட்கையை பொறுத்தது. கடந்து ஐந்து வருடங்களாக  எந்த அரங்கின் டிகட்டிலும் நகராட்சி முத்திரை காணக் கிடைக்காது. திரை அரங்க முதலாளிகளுடன் இணைந்து ஹோட்டல் முதலாளிகள் தாவங்கட்டையில் கை தாங்கி அமர்ந்திருக்கிறார்கள்.
தென்  மாவட்டங்களில்  தேங்காய் முதல்  மிளகாப்பத்தை வரை  விவசாயிகள்  விளைவிக்கும் எதற்கும் ஒற்றுமை என்றும் பலமாம்  எனும் கொள்கையில் ஒன்றிணைந்து அடிமாட்டு விலைக்கு அவற்றை வாங்கி, அதை பதுக்கி விற்றே பழகிய பிஸ்னஸ் மாக்னட்டுகள்  மண்டையை சொறிந்துக்கொண்டு நிற்கிறார்கள்.
நல்லதும் கெட்டதுமாக வெளிப்படப் போகிற  நாட்டுக்குத் தேவையான அதிரடி மாற்றம்தான்.  ஆனால் ஒவ்வொரு இடரிலும் காணாமல் போகும் ஒரு கூட்டம் உண்டு. கடலூரின் கைத்தறி விசை குடும்பங்கள் முன்னூறு. தானே புயலுக்குப் பின் ஒருவர் கூட மீள வில்லை.  வங்கிக் கட்டுப்பாட்டில் வராத அத்தனை வணிகமும்  அரசை கவிழ்க்கும் வணிகம் அல்ல.  திருட்டு டிவிடி விற்பவனும். எங்கள் கடல் கூடைக்கரப் பெண்ணும் ஒன்றல்ல.
இந்த மங்கள்யான் காலத்திலும் கடலூர் திரை அரங்கில், காக்காவ ககூஸ்ல போ என்று விளம்பரம் வழியே அரசு  போதிக்கிறது. எனில்  வங்கியின் பொருளாதார அலகுக்குள் வராத  ”பண்படாத சிவிலியன் ” வசம்  ஒரு மூன்று வருடமாவது  பிரச்சாரமாக  வங்கிப் பொருளாதாரம் குறித்து அரசு பேசி இருக்க வேண்டும்.     நமது பணி இடங்களின்  சுமட்டுத் தனங்களை  கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.   தமிழ்நாட்டைப் போல பரக்காவெட்டி மக்கள் உலகிலேயே வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். மைல் நீள யேடேஎம்  வரிசையில், கடைசியில் நிற்கும் பென்ஷன் முதியவர் பற்றி கவலையே இன்றி, முந்தி நுழைந்தவர்  நான்கு ஐந்து கார்டுகளை செருகி  மெஷினை காலி செய்தது வெளியேறுகிறான்.
என்தரப்பு என சொல்வதற்கு ஏதும் இல்லை. நாளைய பொன்னுலகம் அது நாளை மலரட்டும். ஆனால்   குடிக்கார கணவன், பள்ளி செல்லும் மகள்களுடன்  அதனை பேரையும் தாங்கும் ”பொருளாதாரப் பண்பாடற்ற” கூடைக்கரப் பெண், இந்த பாரத விரி நிலத்தில்  அதன் சாரத்தை கண்டடைய  அலையும், எதோ ஒரு  மண்ணில்  முடங்கிய ஏடிஎம்  முன் நிற்கும் ஒரு பயணி . நான் அவர்கள் பின்னே நிற்கிறேன்.  எல்லாம் கொஞ்ச நாளில் சீர்பெற்று விடும்  என அவர்களுக்கு மானசீகமாக சொல்கிறேன்.
கடலூர் சீனு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. நீண்ட நாட்களுக்கு பின் இந்த கடிதம்..

தங்கள் மோடி, கருப்பு பண ஊழல் ஒழிப்பு, ஊடகங்கள் பதிவை படித்ததும் இக்கடிதத்தை எழுதுகிறேன். பொருளாதாரம் தங்கள் துறை இல்லை என்று முன்பு கூறியிருந்தாலும், மிக கறாராக, விவரமாக எழுதியுள்ளீர்கள். ( கட்டுரை ஆரம்பத்தில், நீங்கள் மோடியின் இந்த முடிவை எதிர்ப்பீர்களோ என வியந்தேன்..).. என் எண்ணங்கள் சிலவற்றை பகிற்கிறேன்..

இன்று ATM இல் பணம் எடுக்கும் போது நீங்கள் கூறியது போல் 15 நிமிடங்கள் தான் ஆகியது, என் வீடு அருகே உள்ள ATM மையங்கள் அனேகமாக, நான் பார்க்கும் போதெல்லாம், அதிகப்படியாக 15 பேர்தான் காத்திருக்கிறார்கள்..இன்னும் சில நாட்களில் அதுவும் இன்னும் குறையும் கண்டிப்பாக.

சிந்தித்து பார்த்தால், இப்போது உள்ள தட்டுப்பாடும், அனேக மக்களின் தேவையற்ற பயத்தினால் தானோ என தோன்றுகிறது. இன்று வரிசையில் காத்திருந்து பணம் எடுக்கும் எத்தனை பேருக்கு பணம் கட்டாயமாக அன்றாடம் தேவை பட வாய்ப்புள்ளது ?. தினம் 2000 என்பது அனேகம் மக்களுக்கு தேவை இருக்காது என்றே தோன்றுகிறது. அதுவும், இத்தகைய தருணத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவமான செயலை வெற்றி பெற செய்ய, நாம் நம் செலவுகளை மேலும் கறாராக பரிசீலித்து செலவை குறைத்தால் ATM இல் பணம், உண்மையிலேயே தேவை படுபவர்களுக்கு கிடைக்க பெறும்..

ஆம் கண்டிப்பாக, சிறு வணிக, வியாபாரிகள் சில்லறை பணம் இல்லாததால் கஷ்ட படுகிறார்கள். மொத்த வியாபாரிகளிடம் எப்போதும் வாங்கும் சில்லறை வியாபாரிகள், கணக்கில் வைத்து வாங்க முடியும். ஆனால், பல பொருட்கள், சில்லறை வியாபாரிகளிடமே வாங்க முடிகிறது என்றும் அச்சமையத்தில் கணக்கில் வாங்குவது சிரமம் என்றும் அறிந்தேன்.. ஆனால் யாரும் வெறுப்பை உதிர்க்கவில்லை. ‘ புதிய 500, 1000 நோட்டுக்கள் அடித்து கொண்டு வந்தால், தேவையான நோட்டுக்கள் கொண்டு வர இன்னும் 7, 8 மாதங்கள் ஆகும் என்பதால், அரசு புத்திசாலித்தனமாக 2000 நோட்டை வெளியிட்டுள்ளது ‘ என்று கூலித் தொழிளாளி ஒருவர் வரிசையில் நிற்கும் போது கூறுவது கேட்கும் போது, மோடியின் இந்த அதிரடிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

செய்தி வந்த சில நாட்களிலேயே, ‘அரசுக்கு நெருக்கமான பெரு முதலாளிகள், ஏற்கனவே விஷயம் தெரிந்து அவர்களின் ரூபாய் நோட்டுக்கள் யாவற்றையும் மாற்றி விட்டார்கள், அம்பானியின் ஜியோ திட்டம், இந்த பிரச்சினையில் இருந்து தப்பத்தான், என்று பல செய்திகள், வதந்திகள்..யோசிக்காமல், ஆராயாமல் பரப்பப்படும் வதந்திகள்…

மிக வருத்தமான நிகழ்வு, இதை பயன்படுத்தி உருவாகி உள்ள பணத்தரகர்கள்.. 10, 20 % கமிஷனுக்கு, கருப்பு பணத்தை ஏழை, வங்கி கணக்கு உள்ள அடித்தள மக்களை பயன் படுத்தி வங்கியில் போட்டு எடுத்து கொடுப்பது, ஊழியர்களுக்கு 3 மாதம் ஊதிய முன்பணம் அளிப்பது, வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு அடையாள ஆதாரங்களை வைத்து அனுமதிக்கபட்ட அளவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது என்று மீண்டும் system ஐ ஏமாற்ற கிளம்பி விட்டார்கள்.. ஒரு விதி அல்லது கட்டளை விதிக்கப்பட்டால், அதை மதிப்பதை விட அதை எப்படி எல்லாம் உடைக்கலாம் என்றுதான் மக்கள் முனைப்பு காட்டுகிறார்கள்..

திரு மோடியின் இந்த அதிரடியை உடைக்க நூறு வழிகளை ஏமாற்றுபவர்கள் கண்டு பிடித்தாலும், 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அடியோடு அழித்ததிலும், வருமான வரி கட்டாமல் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்ததிலும், பங்கு சந்தையை விட பல மடங்கு பெரிதான இந்தியாவின் unorganized பொருளாதார உலகை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிலும், இந்த அரசுக்கு பெரிய வெற்றியே…

தங்கள் சிங்கப்பூர் அனுபவத்தை பற்றியும் ( சிங்கை இலக்கியம் பற்றி நீங்கள் எழுதியது தவிர), நீங்கள் எடுத்து பங்களித்த கல்வித்திட்டத்தை பற்றிய தங்கள் அனுபவம், கருத்து பற்றி அறிய ஆவல்.. அதை பற்றிய கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளதா ?

அன்புடன்

வெண்ணி

 

 

அன்புள்ள ஜெ,

 

கருப்புப்பணம் குறித்த தங்கள் பதிவை பார்த்தேன். ஆழமான வருத்தம் ஒன்றே ஏற்பட்டது. ஏற்கனவே இந்த ஊடக வெள்ளத்திற்குப்பின் நான் மதிக்கும் சில நண்பர்கள் கூட மோடி எதிர்ப்பு டெம்ப்ளேட் மனநிலைக்கு சென்றடைந்ததால் அவர்களுடன் விவாதித்து சோர்ந்திருந்தேன். வேறென்ன சொல்ல, சாமானியனுக்காக கண்ணீர் விடும் புரட்சியாளர்கள் நாள்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

இந்த எதிர்மனநிலைக்கு ஊடகங்கள் மட்டும் காரணமாக நினைக்கவில்லை. பொதுவாக இந்தியாவில் வரி என்பதே கொடுங்கோலன் ஒருவன் தன் சுகபோகத்துக்காக மக்களிடம் (குறிப்பாக அன்றாடங் காய்ச்சிகளிடம்!) அடித்து பிடுங்கப்படும் ஒன்றாகவே  பெரும்பாலானவர்கள் நம்ப விரும்புகிறார்கள். இந்நிலையில் எவ்வித கண்காணிப்புமற்ற பொருளியலையும் ஊழலையும் தன் அன்றாட வாழ்முறையாக கொண்ட நம் மக்களுக்கு, இந்நடவடிக்கை ‘தன் ஊழலுக்கும்’ எதிராகத்தான் என்பதை அவர்களின் ஆழம் ஏதோ ஒரு புள்ளியில் உணர்கிறது. அதை மறைக்கவே ஊடகச் செய்திகளை பற்றுகோலாக கொள்கிறார்கள்.

 

இரண்டாயிரத்தை வாடகையாகக் கொடுத்துவிட்டு அதை எட்டாயிரமாக HRA வில் கணக்கு காட்டும் ஒருவன், ரசீதில்லாமல் கைபேசி வாங்குவதற்கு சில நூறுகளை லஞ்சமாக பெற்றுக் கொள்ளும் ஒருவன் பேஸ்புக்கில் அம்பானி குறித்து கேள்வி எழுப்பாவிடடால் தன் நேர்மையை வேறெப்படித்தான் நிறுவிக்கொள்வது?

 

இன்று கருப்புப்பணத்திற்காக குரல் கொடுக்கும் சாமானியர்கள் அனைவரும் இத்தனைநாள் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் வியாபாரிகளிடமும், தேர்தலின்போது அரசியல்வாதிகளிடமும் வாங்கிய லஞ்சப்ப பணத்திற்கு விசுவாசமாக குரல்கொடுக்கிறார்கள், அவ்வளவுதான். ஒருவேளை இந்நடவடிக்கையால் எதிர்காலத்திலும் தான் நியாயமாக ‘அனுபவிக்க வேண்டிய இச்சலுகைகள்’ பாதிக்கப்படுமா என்ற ஐயமே அவர்களை நிலையழிய செய்கிறது.

 

இது எவரிடமோ உள்ள கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையாக பலரும் நினைக்கவில்லை. ஓவ்வொருவரும் உள்ளூர தெளிவாகவே உணர்வார்கள் தன்னிடமுள்ள கருப்பு பணத்தைப் பற்றி. அளவில் சிறியதாக இருப்பதாலேயே எதுவும் செய்யாமலே அப்பணத்தை இந்நடவடிக்கையிலிருந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் பயப்படுவது வேறொன்றை குறித்து. தன் எதிர்கால பகற்கனவுகளில் அவர்கள் குவிக்க நினைக்கும் பெரும்பணத்தில் சிறுபகுதியை வரியாக கட்ட நேரிடலாம் என்பதே இவர்களுக்கு அச்சமாகவும்  சீண்டலாகவும் உள்ளது.

 

ஆனால் மோடிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்வதில் பெரும்வசதி உள்ளது. இதுவரை தான் அன்றாடம் ஈடுபட்டுவந்த ஊழல்குறித்த குற்றவுணர்வு கொள்வதோ அதற்கான பிழையீடு செய்வதோ தேவையில்லை. மாறாக அனைத்து பாரத்தையும் கடவுளிடம் இறக்கிவைப்பதை போல மொத்த பழியையும் மோடி, அம்பானி, அதானி வரிசைமேல் போட்டுவிட்டால் நிம்மதியாக உறங்கலாம். மேலும் டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து அல்லாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்காக குரல் கொடுக்கும் புரட்சியாள பிம்பமும் சுயதிருப்தியும் கிடைக்கிறது. வேறென்ன வேண்டும்?

இப்படிக்கு,

தே.அ.பாரி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தற்பிரிந்து அருள்புரி தருமம்

$
0
0

DSC_2043

 

அவள் முழுமையானவள். துயரற்றவள். அனைத்தையும் காண்பவள். கடந்து சென்றவள். அமைந்தவள். அவள் ராமன் மீது சினம் கொள்ளவில்லை என்பதே அவள் ராமனைக் கடந்து விடுகிறாள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று. இதற்குப் பிறகு அவள் கம்பனில் பேசவே இல்லை. மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அருள் புரியும் பேரரசியாக அவள் இருக்கிறாள். தருமனும் அவ்வாறே. தற்பிரிந்து அருள் புரி தருமம் அவ்வாறுதான் இருக்க முடியும்.

தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன் சொல்வளர்காடு குறித்து

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்

$
0
0

einstein1_7

 

அன்புள்ள ஜெ.

பி நாகராஜன் படங்கள் குறித்தும் புராணங்களை அதன் தத்துவ அம்சனங்களை களைந்து எளிய குடும்ப பிரச்சனை சார்ந்த கதைகளாக மாற்றும் படங்களை குறித்து சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால் இதுபோன்ற படங்களால், சிந்தனைகளால் ஒரு வித பின்னடைவும் ஏற்பட்டுள்ளதோ என அஞ்சுகிறேன். தான் சமூகத்தின் ஒரு பகுதி, தனக்கென அடையாளம் இல்லை என வாழ்ந்த மக்கள் திரளிடையே மதம், நம்பிக்கைகள் என்பதெல்லாம் வேண்டாம்.. உன்னை நம்பு, நீ என்பது உன் சிந்தனைதான் என நாத்திகம் சொல்லிக்கொடுத்தது… பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் இது குறித்து நிறைய பேசி ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்கினார்கள்.. ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என அண்ணா அந்த சிந்தனையை அழகாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அவருக்குப்பின் பகுத்தறிவு சிந்தனையில் மிகப்பெரிய தேக்கம் நிலவுகிறதோ என தோன்றுகிறது.

ஏபி நாகராஜன் வகை படங்களைப் பார்த்து விட்டு, அதையே ஆன்மிகம் என நினைத்துக்க்கொண்டு, அதற்கு பதில் சொல்வதுதான் “பகுத்தறிவு” என நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்களோ, அதனால்தான் நாத்திக சிந்தனை பரிணாம வளர்ச்சி காணவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது

உலகை காக்கும் கடவுள் குடும்பத்தில் ஏன் குழப்பங்கள்? சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்கள் சில விபத்துக்குள்ளாவதை கடவுள் ஏன் தடுக்கவில்லை…? சரஸ்வதிதேவி சிலர் நாவில் வசிப்பதாக சொல்கிறார்கள். அவள் எங்கு டாய்லெட் போவாள் என்பது போன்ற வெகு எளிய கேள்விகளையே மிகப்பெரிய சிந்தனைகளாக இன்றும் சிலர் நினைப்பது வருத்தம் அளிக்கிறது.. அந்த காலத்தில் இப்படி கேட்ட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றும் அதே கேள்விகள் என்றால் என்ன செய்வது..

ஆனால் ஆன்மீகம் பேசுபவர்கள் வெகுவாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதை பார்க்க முடிகிறது.. கடவுள் என தனியாக ஒருவர் இல்லை கடவுள் தன்மை என்றுதான் உண்டு என்றெல்லாம் பேசுகிறார்கள்

இதற்கு நிகராக எதிர் விசையாக வளர்ந்திருக்க வேண்டிய நாத்திக வாதம் வளராமைக்கு திருவிளையாடல் போன்ற படங்களின் செல்வாக்குதான் காரணமா.. அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா

அன்புடன்

பிச்சைக்காரன்

*

NORWAY DALAI LAMA

அன்புள்ள பிச்சைக்காரன்,

நாத்திகம் ஆத்திகம் இரண்டுக்கும் இரண்டுவகையான அறிவுத்தளங்கள் உள்ளன. அடிப்படையில் நாத்திகன் இப்பிரபஞ்ச இயக்கத்தை அதைச்சார்ந்த புறவயமான விதிகளாகத் தொகுத்துக்கொள்ள விழைகிறான். ஆத்திகன் பிரபஞ்சத்தை தன்னைவைத்து அகவயமான அறிதல்களாகத் தொகுத்துக் கொள்கிறான். அவன் சொல்லும் கடவுள் என்பது அவனுடைய அகவயமான ஓர் அறிதல் மட்டுமே. அவன் அறியும் பிரபஞ்சத்தின் காரணமும் மையமும் செயல்விசையும் ஆக அது இருக்கிறது.

ஆகவேதான் நாத்திகமும் ஆத்திகமும் எப்போதும் மோதிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவற்றுக்கு நடுவே உரையாடலும் நிகழமுடியாமலிருக்கிறது. அகவயமான தன் அறிதலை ஆத்திகன் சொல்லும்போது அதை புறவயமாக நிரூபித்துக்காட்டும்படி நாத்திகன் அறைகூவுகிறான். நாத்திகன் கூறும் புறவயத்தர்க்கத்தின் இடைவெளிகளை சுட்டிக்காட்டி அவன் அணுகுமுறையையே ஆத்திகன் நிராகரிக்கிறான்.

ஆத்திகம் அகவய அறிதல் என்பதனாலேயே அதற்கு படிமங்களே முக்கியமான ஊடகங்கள். பண்பாட்டின் தொடக்கம் முதலே மானுட உள்ளத்தை நிறைத்திருக்கும் ஆழ்படிமங்களை அவன் தன் அகவய அறிதல்களைச் சொல்ல பயன்படுத்துகிறான். அவற்றை சட்டகமாக கொண்டு மேலும் மேலும் படிமங்களை உருவாக்கியபடியே செல்கிறான்.

சூரியனோ சந்திரனோ கடலோ மின்னலோ அவ்வாறுதான் படிமங்களாகின்றன. ஆலமரமோ, நாகமோ அவ்வாறுதான் அந்த அகவய உலகுக்கு வெளிப்பாடு ஆகின்றன. படிமங்கள் தங்களுக்குள் இணைந்து ஒரு வலையாக ஆகின்றன. அதைத்தான் நாம் புராணங்கள் என்கிறோம். எல்லாப் பழங்குடிகளிடமும் அவர்களுக்கான மெய்யியல் புராணவடிவிலேதான் இருக்கும். பெரிய தொல்பண்பாடுகளில் அந்தப்புராணம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்திருக்கும்.

நாத்திகர்களில் அறிவார்ந்தவர்கள் ஆத்திகர்களின் இந்தப்புராணவெளியை குறியீடுகளின் ஊடுபாவாகவே காண்பார்கள். சமூகவியல், வரலாறு, உளவியலைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ள முயல்வார்கள். ஜோசஃப் கேம்பல் முதல் டி. டி. கோசாம்பி வரையிலான ஆய்வாளர்களின் வழி அது. அவர்கள் அகவய அறிதல் முறையை எள்ளி நகையாடி நிராகரிக்க மாட்டார்கள், புரிந்துகொள்ள முயல்வார்கள்.

எளிய நாத்திகர்கள், அதாவது அறிவுத்துறை சார்ந்த பயிற்சியோ நுண்ணறிவோ அற்றவர்கள் ஆத்திகர்களின் அகவய அறிதல்களை, அவை வெளிப்படும் படிமவெளியை தங்கள் எளிய அன்றாடப் புத்தியைக்கொண்டு அணுகுவார்கள். அவற்றை வெறும் ‘மூடநம்பிக்கைகள்’ என வாதிடுவார்கள். நாம் இங்கே நாத்திகர்கள் என்று அறிபவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்டவர்கள்.

ஒரு கணக்குப்பிள்ளை கவிதையை ஆராய்ச்சி செய்தால் என்ன ஆகும். அதேதான் நிகழ்கிறது. நீங்கள் சொன்னதுபோல சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் எப்படிப் பிள்ளை பிறக்கமுடியும் போன்ற ‘அறிவியல்’ கேள்விகளை கேட்பவர்கள் இவர்கள்தான். கோசாம்பியோ கே.தாமோதரனோ அதைக் கேட்பதில்லை.

நம் துரதிருஷ்டம் நமக்கு வாய்த்தது திராவிடர் கழகம்தான். அவர்களுக்கு எளிய தரைதட்டி நாத்திகம் மட்டுமே தெரியும். அவர்களிடம் அறிவார்ந்த ஆய்வுமுறைமைகள் ஏதுமில்லை.

வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராயும் மாபெரும் அறிவுக்கருவியாகிய மார்க்ஸியத்தைக் கையில் வைத்திருக்கும் இடதுசாரிகள் இங்கு திராவிடர் கழகத்தைவிட கீழிறங்கி பேசுகிறார்கள். ஒருமுறை ச.தமிழ்ச்செல்வன் உரை கேட்டேன். அதற்கு திருச்சி செல்வேந்திரன் எவ்வளவோ மேல்.

எளிய ஆத்திகர்கள் எளிய நாத்திகர்களைப்போலவே உலகியலை, அன்றாடத்தை மட்டுமே அறிந்தவர்கள். கெட்டகாலம் வந்தால் சனீஸ்வரனுக்கு விளக்குபோடவேண்டும் என்ற அளவில் மட்டும் ஆத்திகத்தை அறிந்து வைத்திருப்பவர்கள். எளிய பக்தியாக மட்டுமே ஆன்மீகத்தை கொண்டிருப்பவர்கள்.

அவர்களுக்கும் நாத்திகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்மைச்சூழ்ந்திருக்கும் இப்புவி புறவய உலகை தர்க்கபூர்வமாக அணுகியவர்களால் உருவாக்கப்பட்டது. முதல் சக்கரத்தை வடிவமைத்தவன் முதல் கணிப்பொறியை அமைத்தவன் வரை புறவுலகை நோக்கியவர்கள்தான்.

அறிவியலாளர்களின் தனிப்பட்ட நம்பிக்கை எதுவாக இருப்பினும் அறிவியல் தன்னளவில் நாத்திகத்தைச் சார்ந்தது. அதில் அறிதல்கள் புறவயமான விதிகள் கொண்டவை. புறவயமாக அவை தொகுக்கப்பட்டு ஒற்றைப்பேருருவாக ஆக்கப்படுகின்றன. அதில் அறியப்படாதவை முடிவிலாதிருக்கலாம். அறியப்பட்டவையே அதன் வெற்றிக்குச் சான்றாகும்

ஆனால் எளிய ஆத்திகர்கள் ஒட்டுமொத்தமாக நாத்திகத்தைப் புறந்தள்ளுவார்கள். அறிவியலின் சாதனைகளைப் பயன்படுத்தியபடியே அறிவியலை குறைத்துப்பேசுவார்கள். அறிவியல் இன்னமும் அறியாதவற்றைச் சுட்டிக்காட்டி அறிவியலின் இயக்கத்தையே சிறுமைசெய்வார்கள். அறிவியல் தன்னை அனைத்தும் அறிந்தது என்று சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அது அறியமுடியும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கையை மானுடனுக்கு அளிப்பது.

ஆத்திகத்தின் கேவலமான கீழெல்லை என்பது அறிவியலின் அடிப்படையே புறவயவிதிகள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அறிவியலை ஆத்திகத்துக்குச் சாட்சிசொல்ல அழைப்பதுதான். தன் அகவய அறிதலுக்கு ஒருவன் புறவய அறிவுத்துறையின் விதிகளைப் பயன்படுத்தத் தொடங்கும்போதே தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான் என்பதை அவர்கள் அறிவதில்லை

நாத்திகமும் ஆத்திகமும் இணைய முடியாது, அவற்றின் அணுகுமுறைகளே வேறு வேறு என்பதனால் விவாதிக்கவும் முடியாது. நாத்திகம் ஆத்திகத்தையும் ஆத்திகம் நாத்திகத்தையும் மறுக்கும், அவற்றின் இயல்பு அது. ஆனால் அவை ஒன்றை ஒன்று பொய்யென்றும் பிழையென்றும் நிரூபிக்க முடியாது.

பல ஆண்டுகளுக்குமுன் ஃப்ரிஜோ காப்ராவின் டாவோ ஆஃப் பிஸிக்ஸ் என்னும் நூலை நிராகரித்து நித்ய சைதன்ய யதி எழுதிய கட்டுரையிலும் உரையிலும் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். அந்நூல் அறிவியலைக்கொண்டு ஆன்மிகத்தின் அகவய உருவகங்களை ‘நிரூபிக்க’ முயலும் முயற்சி என நித்யா சொன்னார்.

ஆன்மிக தத்துவத்தின் கொள்கைகளும் உருவகங்களும் அறிவியலுக்குள் எந்த மதிப்பையும் பெறமுடியாது. அவற்றின் அகவயமதிப்பை முழுமையாக அழித்து தர்க்கப்படுத்தாமல் அவற்றை நாம் அறிவியல் கொள்கைகளாக ஆக்கமுடியாது. அது சுத்தியலாக சிற்பத்தைப் பயன்படுத்துவதுபோல. செய்யலாம், அதன் மதிப்பு அதுவல்ல.

ஆனால் ஆத்திகம் ஆத்திகத்தின் அணுகுமுறையைக் கொண்டே நாத்திகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அறிவியலின் அறிதல்களை ஓர் ஆத்திகன் பயன்படுத்திக்கொண்டு அவற்றில் மேலேறிச்சென்று தன் அகவய அறிதல்களை கூர்மைப்படுத்திக்கொள்ள முடியும். நடராஜ குருவும், நித்ய சைதன்ய யதியும் நிலவியலும் உளவியலும் பயின்ற அறிவியலாளர்களே. அவர்கள் ஆத்திகர்களும்கூட

அதேபோலவே நாத்திகம் தன் புறவயத்தருக்கத்தின் விதிகளைக்கொண்டே ஆத்திகம் செயல்படும் அகவயமான நுண்தளங்களை மதிப்பிடமுடியும். படிமங்களை, அதீத உளவியலை நுணுகி ஆராயமுடியும்.

தமிழ்நாட்டில் அடிப்படை நாத்திகம் ஆத்திகத்தின் மேல் தொடுத்தத் தாக்குதல் காரணமாக ஒரு சிறுபான்மையினர் ஆத்திகத்தின் அறிவார்ந்த தளம் நோக்கிச் சென்றனர். அவர்களுக்குரிய ஆசிரியர்களும் நூல்களும் உருவாகி வந்தன. ஆன்மீகத்தை தத்துவமாகவும் கலையாகவும் மீஉளவியலாகவும் பார்க்கும் பார்வைகள் எழுந்தன

ஆனால் மறுபக்கம் நம் நாத்திகம் அறிவியல்துறைகளை உள்ளடக்கி விரிவடையவே இல்லை. அது ஒருவகைத் தெருப்பூசலாகவே நின்றுவிட்டது. திராவிட இயக்கம் நிரூபணவாதத்தை, தொழில்நுட்பத்தை மட்டும் அறிவியலாகக் கருதும் பாமரப்பார்வை கொண்டது. தன் அதி உச்ச நிலையிலேயே கூட தொ. பரமசிவம் போன்ற எளிய காழ்ப்புகள் மட்டும் கொண்ட அப்பாவியைத்தான் அதனால் உருவாக்கமுடியும்

ஆனால் அறிவியலின் அனைத்துத்துறைகளையும் தழுவி விரியும் பார்வை கொண்டது மார்க்ஸியம். வரலாற்றையும் பண்பாட்டையும் புறவயமாக அதனால் வகுத்தறிய முடியும். நமக்கு மார்க்ஸியம் கற்ற நாத்திகர்கள் இருந்தனர், அவர்கள் முன்னிலைப்படவில்லை.

அறிவியல் அதன் முழுமையான வீச்சுடன் முன்வைக்கப்படுவதே உண்மையான நாத்திகம். அறிவியல் இங்கே கற்றுக் கொடுக்கப்படுவதே இல்லை. இங்கு பாடங்கள்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன, அறிதல்முறை அல்ல. ஆகவேதான் நாத்திகம் இத்தனை சூம்பிப் போயிருக்கிறது.

பல ஆண்டுகளுக்குமுன் நான் இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் என்னும் நூலை எழுதினேன். அதற்கு நான் சொன்ன முதன்மைக்காரணமே இந்துமரபிலுள்ள நாத்திக தரிசனங்கள் மேலெழுந்து இணையாக வந்து நிற்கவேண்டும் என்பதுதான். இல்லையேல் ஆத்திகமும் சூம்பிப்போகும்

இன்று அறிவார்ந்த நாத்திகத்திற்கான தேவை உச்சத்தில் இருக்கிறது இங்கு. நாத்திகம் என இங்கே பேசப்படுவது எளிய சாதிக்காழ்ப்பும் மொழிவெறியும் இனப்பற்றும்தான். அறிவியல் நோக்கில் அவை மதப்பற்றைவிடக் கீழானவையாகவே கருதப்படும். மெய்யான அறிவியல் என்னைப் பொறுத்தவரை மெய்யான ஆன்மீகம் அளவுக்கே புனிதமானது

இளமையில் நான் ‘படு சீரியஸாக’ இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்த போது நித்யா சொன்னார். “இறுகப்பிடித்தால் நழுவக்கூடிய ஒன்று இது. மெய்யியலில் சிரிக்காமல் சொல்லப்படும் அனைத்தும் பொய்யே”

ஜெ

 

இந்துமதமும் நாத்திகமும் 

நாத்திகமும் தத்துவமும் 

இங்கிருந்து தொடங்குவோம்

கடவுள் குழந்தைகள் ஒருவினா

மதங்களின் தொகுப்புத்தன்மை

கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 1

கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 2

கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 3

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஏன் பதறுகிறார்கள்?

$
0
0

Passengers gives 500 rupees for train ticket

 

ஜெ

 

இடதுசாரிகளின் அரசியல் பற்றி எழுதியிருந்தீர்கள். கேரளத்தின் கோ ஆபரேட்டிவ் வங்கிகள் பணம் பெற்றுக்கொண்டு புதிய ரூபாய்நோட்டுக்களை அளிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தடைசெய்திருக்கிறது. இதற்கு எதிராக அவர்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். அதை மோடி ஏழைகளுக்குச் செய்த மிகப்பெரிய அநீதியாக இங்கேகூட பிரச்சாரம் செய்கிறார்கள்

 

இந்தச்செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்

  1. இந்த வங்கிகள் எப்போதுமே கள்ளப்பணத்தை வைப்புத்தொகையாக எடுத்துக்கொள்பவை. டிடிஎஸ் பிடித்தம் இல்லை. பேன் கார்டே கேட்பது இல்லை. வருமானவழி பற்றிய தகவலே இல்லை
  2. ஆகவே இவை கேரளத்தின்ஸ்விஸ் வங்கி என அழைக்கப்படுகின்றன
  3. 2009 முதலே இந்த வங்கிகளைப்பற்றி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது
  4. நோட்டு மாற்றம் பற்றிய செய்திவந்ததுமே பழையநோட்டுக்கள் கோடிக்கணக்கில் பின்தேதியிடப்பட்டு டெபாசிட்டுகளாக இந்த வங்கிகளில் பெறப்பட்டன.2500 கோடி ரூபாய் அளவுக்கு பெறப்பட்டிருக்கும் எனச்செய்தி. அதுவும் ஓரிருநாட்களில். அதன்பின்னர்தான் ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளைஅடையாளம் கண்டுகொண்டு இவர்கள் பழையநோட்டு மாற்றுவதைதடைசெய்தது. புதியநோட்டுகளை அனுப்புவதையும் நிறுத்தியது
  5. அசாதாரணமாக இரண்டுநாளில் 2500 கோடியை வெள்ளையாக ஆக்கியவர்கள் யார்?
  6. இவர்கள் இன்னமும் கணிப்பொறியை பயன்படுத்துவதில்லை. இவ்வளவுபெரியதொகைகள் இன்னும் கையால் எழுதப்படும் பேரேடுகளிலேயே எழுதி பெறப்படுகின்றன
  7. இவர்களிடம் கள்ளநோட்டு அடையாளம் காணும் இயந்திரங்கள் இல்லை
  8. இவர்களின் ஊழியர்கள் வங்கிப்பணிப்பயிற்சிபெற்றவர்கள் அல்ல
  9. இந்த வங்கிகள் 90 சதவீதம் இடதுசாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.
  10. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாமலேயே இவை ஒரு சமாந்தர வங்கி இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறக் கடன்கொடுக்கும் நிறுவனங்கள்தான் கூட்டுறவு வங்கிகள். ஆனால் கேரளத்தில் மட்டும் இவை பலகோடி ரூபாய்க்கு வைப்புநிதி வைத்துள்ளன

இதனால்தான் இந்த எதிர்ப்பு. அந்த மாநில முதல்வரே தெருவில் நின்றுபோராடுகிறார். டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரிடம் கோரிக்கைவைக்கிறார். ஏழைகளுக்கு எதிரான போர் என்கிறார்.இவர்கள் ஏன் கத்துகிறார்கள் என்று இன்னுமா புரியவில்லை?

 

 

மகாதேவன்

 

Kerala will bear the biggest brunt of demonetisation: Cooperative banks gasping for breath

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37

$
0
0

[ 3 ]

பிரம்மகபாலமென்னும் ஊரில் மின்னும் இடியும் சூழ்ந்த மலைக்குகைக்குள் அமர்ந்து பிரசாந்தர் என்னும் அந்தணர் சொன்னார் “சர்வஜித் வளர்ந்து பதினெட்டாண்டு திகைந்து முடிகொண்டு அரியணை அமர்வதுவரை நூலாய்ந்தும் நெறிதேர்ந்தும் அரசமுனிவர் என ஆட்சி செய்தார் சித்ரகேது. அவரை குடிகள் தந்தையென கொண்டாடினர். பற்றற்றவன் செய்யும் உலகியல்செயல்கள் தவமென்றாகின்றன. அவற்றின்மேல் ஊழின் துலாமுள் அசைவற்று நிற்கிறது. அவை வைரமுனைகொண்ட வாட்கள். அளியின்றி அளிப்பவை. சினமின்றிக் கொல்பவை.”

சித்ரகேது தன் ஆட்சிக்காலம் முழுக்க தன் பேச்சிலும் எண்ணத்திலும் இரு சொற்களை முற்றிலும் இழந்திருந்தார்.  ‘என்’ என்றோ ‘மகன்’ என்றோ அவர் நா உரைப்பதில்லை. அவர்முன் அச்சொற்களை சொல்லலாகாதென்று ஆணையிருந்தது. அமைச்சர்கள் நூறுமுறை பயிற்றுவித்த பின்னரே அவர் முன் அயலாரை அனுப்பினர். மைந்தனுக்கு பதினெட்டு அகவை நிறைந்ததும் அவனுக்கு முடியளித்துவிட்டு மரவுரி அணிந்து காடேகி தவம் செய்யலானார். தன்னுள் உறைந்த சொற்கள் அனைத்தையும் அகழ்ந்தெடுத்து அருகிலோடிய ஆற்றுப்பெருக்கிலிட்டு சொல்லின்மையை சென்றடைந்தார்.

தவம் கனிந்து அவர் முற்றிலும் சொல்லிழந்தவராக ஆனார். ஓணான்கள் அவர் தலைமேல் தாவின. எலிகள் அவர் கால்மடிப்புகளில் ஒடுங்கிக்கொண்டன. அவர்மேல் சாரைப்பாம்பு சுழன்றேறி மேலே சென்றது. அதைத் தொடர்ந்து அரசநாகம்  ஏறிச்சென்று கவ்வி விழுங்கியது. மரங்கள்போல் பாறைபோல் அவர் ஆனார். அவ்வெறும்வெளியில் யாழிசையுடன் நாரதர் தோன்றி பிரம்மனுக்குரிய நுண்சொல்லை அவர் செவியில் உரைத்தார்.

அச்சொல்லை தவம்செய்து பெருக்கி மொழியென்றாக்கினார். அம்மொழியின் கனிவில் பிரம்மன் அவர் முன் தோன்றினார். “மைந்தா, நீ வேண்டுவதென்ன?” என்றார் பிரம்மன். “மானுடன் அறிவதன் உச்சமென ஒன்றுண்டு எனில் அது” என்றார் சித்ரகேது. “மைந்தா, நீ கோரியது அருளல்ல, உன் ஆணவநிறைவை மட்டுமே. அது உனக்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார்.

உடலே தான் என்னும் உணர்விலிருந்து சித்ரகேது விடுபட்டார். அக்கணமே விரும்பிய உடல்கொள்ளும் ஆற்றல்கொண்டவராக ஆனார். நீரென ஒழுகவும் நெருப்பென எழுந்தாடவும் காற்றென பரக்கவும் ஒளியென விரியவும் முகிலெனத் தவழவும் அவரால் இயன்றது.  ஊனுணர்வழிந்தவன் உள்ளிருப்பையும் துறக்கிறான். அவர் இருப்பும் இன்மையும் என இருநிலையும் கொண்டவராக ஆனார். விண்வாழும் கந்தர்வர்களைப்போல எங்குமிருந்தார். அவர் உடல் அங்கே கிடந்து மட்கி எலும்புக்கூடாக மாறி மறைந்தது.

அவ்வாறு விண்ணில் செல்கையில் ஒருமுறை காட்டில் ஒரு வேடனும் அவன் துணைவியும் ஒரு சுனைக்கரையில் காதலாடுவதைக் கண்டார். அவர்கள் சிவனும் உமையுமென தெரிந்ததும் விண்ணிலிருந்து இறங்கி அங்கு மலர்ந்திருந்த நீலம் ஒன்றில் விழிகொண்டு அவர்களை கூர்ந்து நோக்கினார். உமையை அள்ளி தன் மடியிலமர்த்திய ஈசன் “இவள் என்னவள்” என்று எண்ணி முகம் மலர்ந்த கணம் சித்ரகேது வெடித்துச் சிரித்தார்.

அச்சிரிப்பொலியைக் கேட்டு சினம்கொண்டு எழுந்து நோக்கிய உமை “யார் நீ? உருக்கொண்டு எழு! நீ எதனால் சிரித்தாய் என்று சொல்!” என்று சீறினாள். சித்ரகேது எழுந்து “உலகளந்து புரப்பவனுக்கும் எனது என்னும் எண்ணத்தை கடக்கமுடியவில்லை என்றால் மானுடர் எங்ஙனம் அதை வெல்வது?” என்றார். தேவி மூச்சில் முலைகளெழுந்தமைய கண்களில் ஈரம் மின்ன “இழிந்தோனே, தன் உடைமை என தெய்வங்கள் எண்ணுவதனால்தான் அவர்கள் மானுடருக்கென இறங்கிவருகிறார்கள். மானுடர் அவ்வாறு எண்ணும்போது தெய்வநிலையை இழக்கிறார்கள்” என்றாள்.

“நான் தெய்வநிலையை இழந்தேன். என் மைந்தனை நான் தீண்டியதுகூட இல்லை” என்றார் சித்ரகேது சினத்துடன். “ஆம், இதுவரை உன்னுள்ளத்தில் கரந்து எஞ்சிய நஞ்சு பெருகி உன்னை வென்றுவிட்டது. நஞ்சென நீ வளர்க!” என்றாள் உமை. நீரில் ஒரு குமிழியென ஆகி மறைந்த சித்ரகேது மீண்டும் தன் தவச்சாலைக்கு வந்தார். அங்கே வெள்ளெலும்புக்குவையெனக் கிடந்த தன் உடலை நோக்கி ஏங்கியபடி சுற்றிவந்தார். அப்பகுதியிலேயே காற்றென குளிரென கெடுநாற்றமென செவிமாயச்சொல் என நின்றிருந்தார்.

“என் மகன் என் மகன் என்று சித்ரகேது சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொல்லே மொழியாக அதில் திளைத்தார். நீண்டநெடுங்காலம் அங்கே அவர் காத்திருந்தார்” என்றார் அந்தணர். “காத்திருக்கப்படுபவை எய்தப்படும் என்று சொல்கின்றன தொல்மொழிகள். தேயும் காத்திருப்புகளை காலம் உருமாற்றி வெற்று நினைவுகளும் ஏக்கங்களுமாக ஆக்குகிறது. வளரும் காத்திருப்புகள் காலத்தையே தங்கள் விழைவுக்கான படைக்கலமாகக் கொள்கின்றன.”

சித்ரகேது காத்திருந்த அந்தக் குடிலுக்கு ஒரு நாளிரவு சுசரிதன் என்னும் அந்தணன் ஒருவன் பசித்து மழையில் நனைந்து வந்துசேர்ந்தான். இடிந்த குடிலை தொலைவிலேயே கண்ட அவன் அதை அணுகி உள்ளே பார்த்தபோது வெள்ளெலும்புகளைக் கண்டான். ஆயினும் அந்த மழைக்குளிரில் வெளியே செல்ல அவனால் இயலவில்லை. ஆகவே உள்ளே நுழைந்து அமர்ந்து அங்கிருந்த கற்களை உரசி நெருப்பெழச்செய்து அந்தக் குடிலின் தூண்களையும் சட்டங்களையும் எரித்து அனலாக்கி அதில் தன் உடலை காயச்செய்தான். கையுடன் கொண்டுவந்திருந்த கிழங்குகளை அதில் சுட்டு உண்டான்.

அவனைக் கண்டதும் அக்குடிலுக்கு மேலே காஞ்சிரமரத்தில் கசந்துத் திரண்ட காய்களாக குடிகொண்டிருந்த சித்ரகேது ஒரு கரும்பூனையாக மாறி உள்ளே வந்தார். பூனையின் குரலைக் கேட்டதும் சுசரிதன் திரும்பிப்பார்த்தான். அதன் கண்களின் ஒளி அவனை அச்சுறுத்தியது. அவன் தன் உபவீதத்தைப் பற்றியபடி வேதச்சொல்லெடுத்து இந்திரனை வாழ்த்தலானான். அஞ்சிய பூனை அருகே வந்து அவனை நோக்கி விழிசுடர்ந்தபடி அமர்ந்தது.

“இந்திரனே, இது உன் படைக்கலம். இது உன் கையில் இருக்கிறது. இதுவே எனக்குக் காவல்” என்று கூவியபடி அந்தணன் ஒரு கழியை எடுத்து தன்னருகே வைத்துக்கொண்டான். பூனை சித்ரகேதுவின் குரலில் “அந்தணனே, அஞ்சாதே. நான் உன்னை ஒன்றும் செய்யமுடியாது. இந்திரன்சொல் உன்னிடமுள்ளது. ஆனால் அழியாப்பெருவிழைவுடன் நான் இங்கு காத்திருக்கிறேன். இங்கு எவரும் வருவதில்லை. இந்த வெள்ளெலும்புகள் என் முந்தைய பிறவிக்குரியவை. இவற்றை விட்டுவிட்டு நான் செல்லமுடியாது” என்றது.

“எது உன் துயர்?” என்றான் சுசரிதன். பூனை தன் கதையை சொன்னது. “ஆம், உன் துயர் எனக்குப் புரிகிறது. விழைவுகள் அனல்துளி. அவற்றின்மேலிட்டு மூடும் மூத்தோர்சொற்கள் உலர்சருகுகள். கற்றோர்சொற்கள் பச்சை இலைகள். அனல் அனைத்தையும் உண்ணும்” என்றான் சுசரிதன். “நான் உருக்கொண்டெழ விழைகிறேன். என்னில் எஞ்சிய அனைத்தும் நுரைத்தெழுந்து பேருருக்கொண்டு ஆடாமல் நான் மீளமுடியாது” என்றது பூனை. “ஆம், துளியென இருப்பது எதுவும் பெருகும் விழைவுகொண்டதே” என்றான் சுசரிதன்.

“அந்தணனே, அணுகுவோர் எவராயினும் துயர்சொல்லி வழிகோருபவர்களுக்கு அந்தணன் சொல்லளித்தாகவேண்டும். அச்சொல்லால் அவனும் அவன் குடியும் அழியுமென்றாலும் அது அவன் கடன் என்கின்றன நெறிநூல்கள். நூலறிந்து உபவீதமணிந்த அந்தணன் எந்நிலையிலும் மானுடருக்கு அமைச்சனே. இன்று உன்னை என் சொல்வலன் எனக்கொள்கிறேன். நான் செய்வதற்குரியதென்ன?” என்றது. சுசரிதன் “ஆம், அது உண்மை. உனக்கு உதவியாகவேண்டியது என் பொறுப்பே” என்றான். “இது ஒரு நிமித்தம் போலும். நான் சற்றுமுன் கேட்டுவந்த கதையே உனக்குரிய விடையென ஆகிறது. அதை சொல்கிறேன்.”

பிரம்மனின் சொல்கனிந்து உருவான மைந்தராகிய கசியப பிரஜாபதி உடலும் உள்ளமும் வளர்ந்து  இளமையின் ஒளிகொண்ட இளைஞராக ஆனபோது வான்கீழ் கைவிரித்து நின்று இறைஞ்சினார் “எந்தையே, நான் கொள்ளவேண்டிய துணைவி யார்? எங்குள்ளாள்?” விண்ணில் தோன்றிய பிரம்மன் சொன்னார் “மைந்தா, ஆண் பிறக்கும்போதே பெண் அவனுள் பிறந்துவிட்டிருக்கிறாள். அவன் கொள்ளும் விழைவும் கனவும்தான் திரண்டு பின்னர் ஊனுருக்கொண்டு கருவறையில் திகழ்கின்றன. விழையாத பெண்ணை எவரும் அடைவதில்லை. உள்விழைந்த பெண்ணை எவரும் அடையாதுபோனதுமில்லை. நீ விழையும் பெண் எவள்? அவளை முகமெனத் திரட்டு. அம்முகத்தை கண்டடை.”

கசியபர் தன்னுள் தேடி தவமிருந்தார். தன் சிற்றிளமையிலேயே காமம் ஊசிமுனையால் தொட்டு உட்செலுத்திய நஞ்சென குருதியில் நுழைந்து நுரைத்து ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்நுரையில் ஒளிக்குமிழியென எழுந்த முகமொன்றைக் கண்டார். கண்விழித்து “தந்தையே, ஒளிதவழ் முகம் கொண்டவள். இனியவள். அவளை இன்று கண்டேன்” என்றார். பிரம்மன் புன்னகைத்து “தட்சப்பிரஜாபதியின் மகளாகிய அவள் பெயர் அதிதி. அவளை கொள்க!” என்றார்.

அதிதியை மணந்து பன்னிரு ஆதித்யர்களுக்கு தந்தையானார் கசியபர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களும் விண்ணில் ஒளியுடன் திகழலாயினர். ஒளிகொண்ட மைந்தரை எண்ணி மகிழ்ந்து வாழ்ந்த கசியபர் அம்மகிழ்ச்சியில் பளிங்கில் மயிரிழைவிரிசல்போல மெல்லிய குறையொன்று ஓடுவதைக் கண்டு முதலில் வியந்தார். பின்னர் அதையே எண்ணிக்கொண்டிருந்தார். பின் அது என்னவென எண்ணப்புகுந்தார். பின்னர் அதை கண்டுகொண்டார்.

துயருடன் தனித்து நின்றிருந்த கசியபர் மேல் முகிலென எழுந்த பிரம்மன் கேட்டார் “சொல்க, உன் துயர் என்ன?” கசியபர் சொன்னார் “எந்தையே, என்னை எண்ணி நாணுகிறேன். ஒளியையும் இன்சுவையையும் நறுமணத்தையும் நுகர்ந்து என் உள்ளம் சலித்துவிட்டது. இருளையும்  எரிசுவையையும் கெடுமணத்தையும் நாடுகிறது. அவையே சுவையென்று எண்ணுகிறது.” பிரம்மன் புன்னகைத்து “நீ நாணவேண்டியதில்லை. உன்னுள் குருதியில் வாழும் மைந்தரின் விழைவு அது. அவர்கள் உன் உடல்திறந்து வெளிவரட்டும். உன் விழைவைத் தொடர்ந்து செல்க!”

தன் உள்ளோடிய இருள்குமிழிகளைத் தேடி காசியபர் கண்டடைந்த முகம் தட்சப்பிரஜாபதியின் இரண்டாவது மகள் திதி என்றார் பிரம்மன். அவளை மணந்த கசியபர் தைத்யர்களை பெற்றெடுத்தார். இருளின் பேராற்றலை திதியில் அறிந்த கசியபர் அவள் கைகளால் முற்றிலும் வளைக்கப்பட்டு பிறிதொன்றுமறியாது நெடுங்காலம் வாழ்ந்தார். கரிய பேருருவும் கட்டற்ற சினமும் சினமளிக்கும் பேராற்றலும் கொண்டிருந்தனர் அவரது மைந்தர். ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்‌ஷன், சிம்ஹிகை என்னும் மூவரிலிருந்து தைத்யர்களின் குலம் பெருகியது.

பின்னர் இருளின் தழுவலுக்குள் தன் தனிமையை உணர்ந்த கசியபர் தான் விழைவது வெல்லும் பெண்ணை அல்ல தான் வென்றாளும் பெண்ணையே என்று உணர்ந்தார். பிரம்மனிடம் அதை சொன்னார். “மைந்தா, அன்னையெனப் பெண்ணை விழைவதும் பின்னர் தோழியென பிறிதொருத்திமேல் மையல்கொள்வதும் ஆண்களின் இயல்பே. உன் உள்ளில் எழுந்த மகள் தட்சனின் மகள் தனு. அவளை கொள்க!” என்றார்.

தனுவை மணந்து மீண்டும் இளமைந்தனென்றாகி ஐவகை நிலங்களிலும் விளையாடி காதல்கொண்டாடினார் கசியபர். த்விமூர்த்தா, சம்பரன், அயோமுகன், சங்குசிரஸ், கபிலன், சங்கரன், ஏகசக்ரன், மகாபாகு, தாரகன், மகாபலன், ஸ்வர்பானு, ருஷபர்வா, புலோமன், விப்ரசித்தி  போன்ற தானவர் அவர்களுக்குப் பிறந்தனர். ஆதித்யர்களின் ஒளியையும் தைத்யர்களின் இருளையும் கலந்து அமைந்த அகம் கொண்டிருந்தனர் அவர்கள்.

மீண்டும் மீண்டும் தன்னுள்ளிருந்து பெண்களை கண்டெடுத்தார் கசியபர். அரிஷ்டை, சுரசை, கஸை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு என்னும் தட்சமகளிரை மணந்தார். பின்னர் முனி, புலோமை, காலகை, நதை, தனாயுஸ், சிம்ஹிகை, பிராதை, விஸ்வை, கபிலை என்னும் மகளிரையும் மணந்து பெருங்குலங்களைப் படைத்து முதற்றாதையாக அமர்ந்திருந்தார். அக்குலங்கள் வாழ்ந்த ஊர்மன்றுகளில் கல்லில் எழுந்து மலரும் நீரும் படையலும் கொண்டார். அவர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் விழியானார். அவர்களின் வேண்டுதல்களுக்கு செவியானார்.

தைத்யர்களான ஹிரண்யகசிபுவையும் ஹிரண்யாக்‌ஷனையும் விண்ணளந்தோன் வென்று அழித்த கதையை கசியபர் கேட்டார். தைத்யர் குலத்தை இந்திரன் அழித்துக்கொண்டிருக்கும் செய்திகள் நாளும் வந்தவண்ணமிருந்தன. வஞ்சம் எரிய அவர் சுக்ரமுனிவரை வரவழைத்து அவரிடம் கோரினார் “என் மைந்தர் தோற்பது எங்கே? அவர்களின் வஞ்சம் நிறைவேறும் வழி என்ன?” சுக்ரர் சொன்னார் “முனிவரே, தைத்யர்கள் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். அவர்களை தேவர்கள் வெல்வது எளிது.”

“ஆதித்யர்களை நான் ஏவுகிறேன். அவர்கள் வென்றுவரட்டும் தேவர்களை” என்றார் கசியபர். “அவர்கள் நெறிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். வேதச்சொல் அவர்களை வடமெனப் பிணைக்கும்” என்றார் சுக்ரர். “என்ன செய்வது?” என்றார் கசியபர். “ஒன்றே வழி. ஆதித்யர்களின் ஒளியும் தைத்யர்களின் இருளும் கொண்ட தானவர்களில் தெய்வங்களையும் தேவர்களையும் வெல்லும் மைந்தர்கள் எழுவதாக!”  மகிழ்ந்து “ஆம், அவ்வாறே” என்றார் கசியபர்.

கசியபர் பெருவஞ்சம் எரியும் உள்ளத்துடன் தன் துணைவியாகிய தனுவைப் புணர்ந்து பெற்ற மைந்தன் பலன் என்றழைக்கப்பட்டான். மைந்தன் பிறந்ததும்  அவன் நெற்றியில் கைவைத்து “உன் மூத்தவர்களின் குருதிக்கு நிகர் கேள், மைந்தா!” என்று வாழ்த்தளித்து மீண்டார் கசியபர். அவனுக்கு படைத்துணையாக விக்‌ஷரன், வீரன் என்னும் இரு மைந்தரையும் தனு பெற்றாள். தம்பியருடன் பலன் இளைஞனாக வளர்ந்தபோது அவன் பிறப்புநோக்கத்தை தனு சொன்னாள். வஞ்சினம் உரைத்து பலன் கிளம்பிச்சென்றான்.

விண்ணை வெல்லும்பொருட்டு தம்பியரை உடனழைத்துக்கொண்டு சென்ற பலன் வழியில் கடல்விளிம்பில் நின்று அந்திவணக்கம் செய்துகொண்டிருந்தான். அருகே அவன் தம்பியரும் அந்திவணக்கம் புரிந்தனர்.  பிறபொழுதுகளில் விக்‌ஷரன் நான்கு திசைகளையும் வீரன் விண்ணையும் நோக்கி மூத்தவனை காவல்புரிவது வழக்கம். அந்திவணக்கமென்பதனால் மூவரும் விழிமூடியிருந்தனர்.

விண்ணில் வெள்ளையானைமேல் எழுந்தருளிச் சென்றுகொண்டிருந்த இந்திரன் அவர்களைப் பார்த்தான். புலித்தோலாடை அணிந்து ஒளிவிடும் தண்டுப்படைக்கலத்துடன் நின்றிருந்த அந்தத் தானவர்கள் விண்புகும் ஆற்றல்கொண்டவர்கள் என அக்கணமே உணர்ந்தான். மறு எண்ணம் நிகழ வாய்ப்பளிக்காமல் தன் மின்கதிர் வாளெடுத்து பலனை இரு துண்டுகளாக வெட்டினான். திகைத்து விழிதிறந்த இளையோரின் தலைவெட்டி இட்டான். அவர்களின் குருதிகலந்து கடல் சிவந்தது.

மைந்தர் கொல்லப்பட்ட செய்தி கேட்டார் கசியபர். சினம்கொண்டு கொந்தளித்தபடி சுக்ரரை நாடிச்சென்றார். “என்ன நிகழ்ந்தது? குறி நோக்கிச் சொல்க! என் மைந்தர் எப்படி அழிந்தனர்?” என்றார். சுக்ரர் ஏழுவகை குறிநோக்கியபின் சொன்னார் “அவர்கள் அன்னையின் முலைப்பால் உண்டவர்கள். முலைப்பாலே குருதியென்றாகிறது. தேவர்கள் குருதியற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் பிறப்பதில்லை, ஒளிபோல எண்ணம்போல வெளியில் தோன்றி நிற்பவர்கள். அவ்வாறு தோன்றும் ஒருவனே இந்திரனுடன் எதிர்நிற்க முடியும்.” “அவ்வண்ண்ணம் ஒருவன் தோன்றுக! அவன் என்னிலிருந்தே தோன்றுக!” என்று கசியபர் கூவினார். “அது நிகழும். அதற்குரிய தருணம் வரும்” என்றார் சுக்ரர்.

“அரசே, கேள்! உன் வஞ்சம் பருவுடல்கொண்ட ஒருவனில் படர்ந்தெழவேண்டும். நீ கசியபரின் மைந்தனாகப் பிறக்கவேண்டும்” என்றான் சுசரிதன். “எவ்வண்ணம்?” என்று பூனை கேட்டது. “உன் எலும்புகளில் ஒன்றை நான் எடுத்துக்கொள்கிறேன். அதைத் தொடர்ந்து என்னுடன் வருக! நான் கசியபரின் குருநிலைக்குச் சென்று அவரை வணங்கி அவருடைய வேள்விநெருப்பில் அதை இடுவேன். அங்கு நீ எழுக!” என்றான் சுசரிதன். “நன்று அந்தணனே, நான் உனக்கு பொருளேதும் அளிக்கமுடியாதவன். உடல்கொண்டெழுந்ததும் உன் குடித்தோன்றல்கள் எவரேனும் என்னைத் தேடி வரட்டும். உரிய பொருளை அவர்களுக்கு அளிப்பேன்” என்றார் சித்ரகேது.

அந்தணன் வணங்கி “அவ்வாறே ஆகுக, அரசே!” என்றான். “ஆனால் அன்று நான் உயிருடனிருக்கமாட்டேன். என் வாழ்நாள் இன்னமும் ஏழு மாதங்கள் மட்டுமே. இப்போது இச்சொல்லை உரைத்தமையால் இந்திரன் என்னிடம் முனிந்திருக்கிறான். அவன் மின்னிடி விழுந்து நான் கருகி இறப்பேன். அதை அறிந்தபின்னரே உங்களுக்கு செல்வழி சொன்னேன்” என்றான். “நம் இருவருக்கும் வேறு வழியில்லை. அந்தணனே, உங்கள் கொடிவழியினர் மார்ஜார ரகசியம் என்னும் குறிச்சொல்லைச் சொன்னால் அவர்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்” என்றார் சித்ரகேது.

சித்ரகேதுவின் எலும்புத்துண்டு ஒன்றுடன் சுசரிதன் அங்கிருந்து கிளம்பி கசியபரின் வேள்விச்சாலைக்கு சென்றான். உடன் கரிய பூனையும் சென்றது. கசியபரின் மாணவர்கள் அவனை  முகமனும் பூசனையும் செய்து அழைத்துச்சென்றனர். நீராடச் செய்து உணவளித்தனர். அவன் சென்று கசியபர் செய்துகொண்டிருந்த மகாஉத்தீபன வேள்வியில் ஹோதாவாக அமர்ந்தான். தன் விரல்களுக்கு நடுவே எலும்புத்துண்டை வைத்திருந்தான். கரிய பூனை வேள்விக்குடில்மேல் ஏறி கூரையில் அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது.

கசியபர் சுபவேள்வியைத்தான் இயற்றிக்கொண்டிருந்தார். தன் உள்ளம் கொண்டிருந்த வஞ்சத்தை இனிய வேதச்சொற்களால் மூடிமறைத்திருந்தார். வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்தபோது அவியிடுவதாக கைநீட்டிய சுசரிதன் அந்த எலும்புத்துண்டை எரியிலிட்டான். எலும்பு எரியும் கெடுமணம் எழுந்ததும் ஹோதாக்கள் அஞ்சிக்கூவியபடி எழுந்தனர். அக்கணமொரு பூனையின் குரலையும் அவர்கள் கேட்டனர்.

கெடுமணம் முகர்ந்ததும் கசியபருக்குள் இருந்து  அவ்வஞ்சம் உளம்மீறி எழுந்தது. வேள்வியில் அவர் உரைத்துவந்த வேதச்சொல் மாறுபட்டது. இருண்ட தொல்வேதச் சொல்லை ஓதியபடி தன் இடப்பக்கச் சடைத்திரி ஒன்றைப் பற்றி அறுத்தெடுத்து எரியிலிட்டார். “எழுக, என் வஞ்சமே! எழுக இருளே! எழுக என் நஞ்சே!” என்று  கூவினார். அவிகொண்டு எழுந்த அனலில் இருந்து கரிய உடல் ஒளிர அசுரப்பேருரு ஒன்று எழுந்து வந்தது.

KIRATHAM_EPI_37

இடத்தோளில் வைத்த தண்டமும் வலக்கையில் ஒளிரும் வாளுமாகத் தோன்றிய காருருவன் இடியோசை எழுப்பி கேட்டான் “தந்தையே, என்னிடம் எதை விழைகிறீர்கள்? எதன்பொருட்டு நான் இப்புவியிலெழுந்தேன்?” கசியபர் அவன் கொடுந்தோற்றம் கண்டு அஞ்சி பின்னடைந்தார். அவன் கூர்வாட்கள் போன்ற வளையெயிறுகளும்  ஈட்டிமுனைபோன்ற உகிர்களும் கொண்டிருந்தான். “எந்தையே, ஆணையிடுங்கள். நான் உங்கள் மைந்தன்” என்றான் அவன்.

“நீ என்னுள் இருந்தாயா? இல்லை. இது என் விழிமாயை. இவ்விருளை நான் இத்தனைநாள் சூடியிருக்க இயலாது” என்றார் கசியபர். “மைந்தரைக் கண்டு இவ்வண்ணம் சொல்லாத தந்தை உண்டா?” என்றான் விருத்திரன். “நீ என் மைந்தன் என்பதற்கு சான்று ஒன்று சொல்க” என்றார் கசியபர். “உங்கள் துணைவியரில் ஒருத்தியை அழைத்து வினவுக! என்னை அவள் அறிவாளா என்று” என்றான் விருத்திரன்.

தன் ஒளிமிக்க தேவியாகிய அதிதியை அழைத்துவரும்படி ஆணையிட்டார் கசியபர். வேதநிலைக்குள் நுழைந்த அதிதி விருத்திரனின் இருளுருவைத்தான் முதலில் கண்டாள். “ஏன் இவ்வுருக் கொண்டீர்கள்? எங்கே செல்லவிருக்கிறீர்கள்?” என்று கேட்டபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். விருத்திரன் உரக்க நகைத்து “அன்னையே, நான் உங்கள் கொழுநனல்ல, அவர் உருக்கொண்ட மைந்தன்” என்றான்.

கசியபர் “எப்படி நீ இவனை நான் என எண்ணினாய்?” என்று கேட்டார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “பெருஞ்சினம்கொள்கையில் உங்களை இத்தோற்றத்தில் பலமுறை கண்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். உடல்தளர்ந்த கசியபர் “ஆம், நீ நானேதான்” என விருத்திரனிடம் சொன்னார். “என் பணியென்ன, தந்தையே?” என்றான் விருத்திரன்.

“மைந்தா, என் மைந்தர்களை வஞ்சத்தால் கொன்ற இந்திரனை நீ பழிதீர்க்கவேண்டும். அவனை வென்று இழுத்துவந்து இந்த வேள்விச்சாலை கம்பத்தில் கட்டவேண்டும். அவன் உளம் வருந்தி என் மைந்தருக்கு அன்னம் அளிக்கவேண்டும்” என்றார் கசியபர். “ஆணை!” என்று சொல்லி விருத்திரன் தலைவணங்கினான்.

பிரம்மகபாலம் என்னும் ஊரின் குகைக்குள் அனல்வெம்மைக்கு உடல்கூட்டி அமர்ந்திருந்த பிரசாந்தர் என்னும் அந்தணர் தன் முன் அமர்ந்திருந்த பிரசண்டன் என்னும் சூதனிடம் சொன்னார் “விருத்திராசுரன் உருக்கொண்ட கதை இது என்கின்றது விக்ரமேந்திரம் என்னும் தொல்காவியம். அந்தணர் ஏற்கும் நூல் இதுவேயாகும்.”

வெளியே மழை நிலைத்துப் பெய்துகொண்டிருந்தது. நீர்த்திரைக்குள் மின்னல்கள் அடங்கி ஒளிதுடித்து அணைந்தன. இடி போர்த்தப்பட்டதென ஒலித்தது. கபாலர் இன்னொரு சிவமூலிச்சுருளை பற்றவைத்துக்கொண்டு உடலை ஒருக்களித்துக்கொண்டார். பிரசண்டன் “கதைகள் வாள்களையும் கதைகளையும் போல. மின்னும் இடியும் எழ அவை மோதிக்கொண்டே இருக்கின்றன இப்பாரதவர்ஷத்தில்” என்றான். “சொல்க, உமது கதையை!” என்றார் பிரசாந்தர்.

“அந்தணரே, ஏழாண்டுகளுக்கு முன்பு நான் கராளம் என்னும் மலைச்சிற்றூருக்குச் சென்றிருந்தேன். இரு பெருமலையடுக்குகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் அவ்வூர் சுழன்று ஏறி மீண்டும் அதேயளவு இறங்கும் ஒற்றையடிப்பாதை ஒன்றில் பன்னிருநாட்கள் நடந்தாலன்றி அணுகமுடியாதது. அவ்வூரிலிருந்து ஆண்டுக்கொருமுறை ஒரு வணிகர்குழு கிளம்பி காட்டுக்கு வெளியே இருக்கும் சதவிருட்சம் என்னும் ஊரின் சந்தைக்கு வந்து உப்பும் பிறபொருளும் வாங்கிக்கொண்டு மீளும். பிறர் வேற்றுநிலத்தை அறிவதே இல்லை.”

“அவ்வண்ணம் சென்ற வணிகர்குழு ஒன்றுடன் நானும் சென்றேன்” என்று பிரசண்டன் சொன்னான். “அவர்களுக்கு நான் பாடிய பாடல் பிடித்திருந்தது. ஏழு நாட்களில் அவர்களின் மொழியைக்கற்று அம்மொழியிலேயே பாடத்தொடங்கினேன். அவர்கள் என்னை தங்களுடன் வந்துவிடும்படி கோரினர். அவ்வூர் முற்றிலும் குகைகளால் ஆனது. நூற்றெட்டு பெருங்குகைகள். அவற்றின் முன் பட்டைக்கற்களை அடுக்கி உருவாக்கிய சிறுகுகைகளும் இருந்தன.”

“அங்கிருந்த மக்களுடன் நானும் உடன்கலந்தேன். இனிய இரு மாதரை மணந்தேன். ஊனும் தேனும் கிழங்கும் கனியும் உண்டேன். மலச்சுனை பெருகி விழுந்த அருவியில் நீராடினேன். கனவென அவ்வாழ்க்கையில் மகிழ்ந்திருந்தேன்” என்று பிரசண்டன் சொன்னான். “மூன்றாண்டுகள் அங்கு வாழ்ந்தேன். ஓராண்டு முடிந்தபின்னரே அவர்கள் வழிபடும் தெய்வத்தை மலையேறிச்சென்று கண்டேன். யானைவிலாவென எழுந்த கற்பாறையில் ஒட்டிக் கீழிறங்கிய கொடிகளைப் பற்றிக்கொண்டு விரிசல்களில் கால்வைத்து மேலேறிச் செல்லவேண்டும். திறன்மிக்க இளையோர் மட்டுமே அங்கு சென்றடையமுடியும்.”

“ஆண்டுக்கொருமுறை அவ்வாண்டு பிறந்த இளமைந்தரை தங்கள் தோள்களில் கட்டிக்கொண்டு மலையேறுவர். முதுபூசகரான கபாலர் இளையோரை மிஞ்சும் விரைவுடன் எழுந்து மேலே செல்வதைக் கண்டேன். விட்டில்களென ஏறிச்செல்லும் அவர்களை உயிரச்சத்துடன் நான் தொடர்ந்துசென்றேன். மேலே பாறைகள் மேலும் மேலுமென ஏறி வான் நோக்கி சென்றன. கரிய உடலில் திறந்த வாய் என அங்கு ஒரு குகை திறந்திருக்கக் கண்டேன்.”

“இதைப்போன்ற குகைவாயில் அது. உள்ளே ஏழு கிளைகளாக பிலவழி விரிந்து செல்கிறது. கைகூப்பியபடி இருளுக்குள் துயிலும் மூதாதையரை விழித்தெழக் கோரியபடி பூசகர் குகைக்குள் நுழைந்தார். பூசனைப்பொருட்களுடன் பிறர் தொடர்ந்துசென்றனர். பந்தங்களுடன் சென்றவர்களுக்குப் பின்னால் நானும் இருந்தேன். ஈரம் வழியும் தொல்குகைச்சுவர். அதில் கல்லோவியம் என அவர்களின் தொல்தெய்வம் நின்றிருக்கக் கண்டேன்.”

“ஒரு கையில் ஓங்கிய தண்டு. மறுகையில் வாள். வளைதேற்றை, கூருகிர், கொடுங்கண். சடைசரிந்த பெரும்பிடரி. அவர்கள் விருத்திரன் என்னும் மூதாதை என அத்தெய்வத்தை சொன்னார்கள்” என்றான் பிரசண்டன்.

தொடர்புடைய பதிவுகள்

நந்தன் ஸ்ரீதரனின் உடும்பு

$
0
0

q

இனிய ஜெயம்,

இந்த பதினைந்தாம் தேதி ஜன்னல் இதழில் கண்ணக்கரை தம்புராட்டிகள் கதை வாசித்தேன். இந்த தொடரில் வந்த கதைகளில் மிகுந்த அல்லலை அளித்த கதை. அடுத்ததடுத்து அவர்களை வந்து சாய்க்கும் துயரம். எந்த காரண காரியத்துக்குள்ளும் அடங்காத துயரப் பெருக்கு. ஊழ் என்று அதனை வகுப்பது எத்தனை பலவீனமான யத்தனம். அதனை வகுக்க இயலா மானுடம் எத்தனை பரிதாபமானது.

சருமத்தில் வெயில் படாமல் வாழும் சகோதரிகள் முதலில் பார்க்கும் வெளிக் காட்சியே கொடும் காடு. அதற்குள் ஊடுருவி அவர்கள் காண்பது, தங்கள் சகோதர சடலங்களை. செத்துக் அழுகிக் கிடக்கும் வளர்ப்பு ஜீவன்கள், மட்கிப் புதையும் இல்லம், துர்க்கனவுக்கு இணையான படிமங்கள்.

”கெட்டது எதுவும் அண்டாம இருக்கட்டும்” பதிட்டை செய்யப்பட்ட சகோதரிகள் வசம் வேண்டுதல். பிறரை அண்டும் அளவு கூட எஞ்சாமல், அத்தனை துயரங்களையும் சுமந்தவர்கள் வசம் வைக்கப் பட வேண்டிய சரியான வேண்டுதல்தான்.

அதே இதழில், நந்தன் ஸ்ரீதர் எழுதிய, என் அறையில் ஒரு உடும்பு இருக்கிறது கதை வாசித்தேன். சோறு மட்டும் போட்டு, போடாத சோற்றுக்கும், தராத சம்பளத்துக்கும் சேர்த்து வேலை வாங்கும் சீரியல் தயாரிப்பாளர்.

முன்பு அவரது அறையில் தங்கி எழுத்து வேலை பார்த்தவன். உருவெளித் தோற்ற மன நோய் முற்றி இறக்கிறான். [மன நோய் முற்றியவன் என்பது கூட சொரணையில் விழாமல் வேலை வாங்குபவர் அந்த சீரியல் தயாரிப்பாளர்] அந்த அறையும் வேலையும் கதை சொல்லிக்கு கிடைக்கிறது.

பால்யம் துவங்கி, இந்த நாள் வரை பசியை மட்டுமே அறிந்தவன். குறைந்த பக்ஷம் சோறு உத்திரவாதம் என்ற நிலையில் இந்த வேலைக்கு வருகிறான்.

முதலாளி முதல் மாரடைப்பு பார்த்தவர். எந்த ஊர்வனவும் அவருக்கு ஒவ்வாது. இவன் வேலைக்கு நுழையும் அன்று முதலாளி அறையில் இருந்து ஒரு பல்லி வேட்டையாடப் பட்டு பெருக்கி வெளியே தள்ளப் படுகிறது. ”ஐயையோ படபடன்னு வந்துருச்சி” என்றபடி வேர்த்து ஒழுகி நிற்கும் முதலாளிதான் அவனுள் விழும் முதல் சித்திரம்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாள் , அவனது அறைக்குள் ஐந்தடி நீள உடும்பு ஒன்றினை பார்க்கிறான். கீழே காவாலாளி வசம் சொல்கிறான். காவலாளி சிரித்தபடி ”அந்த அறையோட ராசி அது, இப்பவே நல்ல டாக்டரா பாருங்க” என்கிறான்.

நாட்கள் செல்ல ஒரு மாதிரி உடும்பும் அவனும் சகஜம் ஆகிறார்கள். சரியான நேரத்துக்கு அவன் அரை வழியே எங்கோ கடந்து செல்கிறது உடும்பு.

மாதக் கடைசியில் இவன் இடத்தை இடம் பெயர்க்க, இவனை விட ”மேலானவன்” வர இவன் வேலை போகிறது. வெளியே வருகிறான். வாசலில் வைத்து அறிகிறான். பக்கத்துக்கு முறைசாரா வைத்திய சாலையில் இருந்து மருந்துக்கென கொண்டுவந்திருந்த உடும்புதான் தப்பி ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறது.

காவலாளி இப்போது பௌவ்யத்துடன் ”தம்பி நிஜமா நம்ப ரூம்ல உடும்பு பாத்தீங்களா?” வினவ,

அவனுக்கு பல்லிக்கே பதறும் முதலாளி முகம் நினைவில் எழுகிறது.

பசி குறித்த ஹான்டிங்க்கான வர்ணனைகள். இரக்கமே அற்ற அத்தை வசம் வளர அனுப்பப் படுகிறான். அத்தை சொத்து சொத்தென்று சாதம் போடுகிறாள்.

”ஏன்னா முழிக்கிற, இவ்ளோதான் சோறு, வேணும்ன்னா தின்னு, உனக்கு ஆக்கிப் போட்டே சொத்தெல்லாம் அழியுது,”

”சனியன் வெறுஞ்சோத்தயே என்னாவா திங்கிது பாரு, இருடா கொளம்பு ஊத்துறேன் பெனஞ்சு தின்னு”

பசித்த யானையைக் கொண்டு பிச்சை எடுப்பதைப் போல, இந்த வாழ்வு. பசி வந்தால் எது வேண்டுமானாலும் செய்வோம். பிச்சை கூட எடுப்போம் என்கிறான் கதை சொல்லி.

கண்ணீரின் உள் உறையும் வெம்மை போல, வயிற்றின் உள்ளே உறையும் பசி. பசியின் ஏழாவது நாளில் அவரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வருகிறது.

பசி என்னவெல்லாம் செய்யும் என வளர்ந்து, அப்படிபட்ட பசி எந்த நிலையிலும் எதை செய்யாது என்ற புள்ளியில் நிறையும் கதை. இக் கதையின் எந்த அலகும் வாசகனின் கேளிக்கைக்காக உருவாக்கப் பட்டத்தல்ல. இந்தக் கதை அக்கருவுடன் ஆழத்தில் ஆசிரியர் கொண்டுள்ள உறவாலும், மொழியாலும் வடிவத்தாலும் இலக்கியமாகிறது. இதில் உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஆனால் வாழ்க்கைக்கு உரிய உட்சிக்கல் இல்லை. மறை பிரதி ஏதுமற்ற நேரடியான கதை.

”எனக்குள்ளும் ஓயாமல் உறுமிக் கொண்டிருக்கும் புலி இருக்கிறது. ஆனால் இந்தப் புலி பசித்தாலும் மனிதர்களைக் கொல்லாது” என்ற இறுதி வரியில் எல்லாமே சொல்லப் பட்டு விடுகிறது. ஆனால் இதில் உள்ள உண்மையும் தீவிரமும் இக் கதையை குறிப்பிடத்தக்க கதையாக உயர்த்திப் பிடிக்கிறது.

ஒரு மனிதனை அவன் வாழ்வின் இறுதி நொடி வரை அவனது அகத்தில்காலப் பழமையின் கல்லறை வாசம் படியாமல் வைத்திருக்கும் தகுதி ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே உண்டு. அது இலக்கியம். தினம் தினம் புதிய வாழ்க்கை ஒன்றுக்குள் விழித்தெழும் ஆசீர்வாதம் கொண்ட மனிதன் இலக்கிய வாசகன் மட்டுமே. இன்றைய நாளையும் புதிதாக்கி விட்டார் நந்தன் ஸ்ரீதர்.

கடலூர் சீனு

*

அன்புள்ள சீனு

நான் நீங்கள் சுட்டியபின்னரே அக்கதையை வாசித்தேன். நல்ல சிறுகதை. சில கதைகள் வாசித்தவுடன் அவற்றின் உட்குறிப்புகளால், வாசக இடைவெளிகளால் வளர்வதில்லை. அவை நம்முள் உருவாக்கும் அனுபவப்பதிவுகளால், எழுப்பும் நினைவலைகளால் வளர்கின்றன. அத்தகைய கதைகளுக்கும் முக்கியமான இலக்கிய இடம் உண்டு. இது அத்தகையது. எல்லாமே சொல்லப்பட்டுவிட்ட கதை, ஆனாலும் உடன் வருகிறது

நேரடியாக உணர்ச்சிகளைச் சொல்வதில் பெரிய கலைச்சிதறல் வந்துவிடும். மிகையாகச் சொல்லவேண்டியிருக்கும். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு மொழி இல்லை. மொழியை அங்கே கொண்டுசென்று சேர்ப்பது எளிதல்ல. மொழி திகையாதபோது மிகைநாடுகிறோம். எளிய குறிப்புணர்த்தல்கள் வழியாகச் சொல்லிவிடும்போது அரிய அனுபவங்கள் சல்லிசாகிவிடக்கூடும்

அந்த இடரை இக்கதையில் நந்தன் ஸ்ரீதரன் கடந்திருக்கிறார்

ஜெ

 

நந்தன் ஸ்ரீதரன் சிறுகதைகள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை”பற்றிய பதிவுகள் –மேலும்)

$
0
0

SR

அன்புள்ள ஜெ.,

கி.ரா. அவர்களின் “கன்னிமை” கதையை முதல்முறை படித்தபோது அது என்னை அவ்வளவாக கவரவில்லை. கதையின் முதல் பகுதியில் கன்னிகாக்கும் நாச்சியாரின் அருளொளி அவள் அண்ணனின் கண்கள் மூலம் நம்மை வந்தடைகிறது. அது அழகின், அறத்தின் உச்சமாக அவனுக்கும் நமக்கும் வெளிப்படுகிறது. நாச்சியார் அவள் அண்ணன் கண்ணுக்கு ஒரு குறுந்தெய்வமாக தெரிகிறாள். ஆனால் அடுத்த பகுதியில் நாச்சியாரின் கணவன் ரங்கய்யா, அருள்வடிவ குமரியாக வீடு புகுந்த தன் மனைவி, சில வருடங்களில் பிள்ளைபேறுகள் கண்டு, இல்லறத்தில் மூழ்கி வேறொருவளாக மாறிவிட்டாளே என்று வருத்தப்படுகிறான். அவன் ஆராதித்த கன்னி எங்கே என்று அவன் ஏங்குகிறான். அவள் ஏன் மறைந்து போனாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அண்ணன், கணவன் என்று அந்த கதை முழுக்க முழுக்க ஆண்பார்வையில் கட்டமைக்கப்பட்டதாக அப்போது எனக்கு தோன்றியது. எனக்கு மாமா முறையில் ஒரு உறவுக்காரர் இப்படி சொல்லிக் கேட்டுள்ளேன்: பெண்களுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். அப்போது தான் அந்த வயதிற்க்கே உரிய எழிலும் இனிமையும் பூரிப்புமாக அவள் மணமேடையில் திகழ்வாள், அதை பார்ப்பதே ஒரு அனுபவம், என்று. அதெல்லாம் சரி, நீங்கள் பார்த்து மகிழத்தான் மற்றவர்கள் மணம் செய்துகொள்ளவேண்டுமா என்று கேட்க தோன்றியது.

அதே போல், இந்த கதையில், ஆணுக்கு பெண்ணின் கன்னிமை அளிக்கும் உவகையும் இன்பமும் சுட்டிக்காட்டப்படுகிறதே தவிர, நாச்சியாரின் உளவியலையோ, அவளது கன்னிப்பருவ உணர்வுநிலைகளையோ, அவள் கன்னிமை அழிந்து, தலைசொறிந்து கணக்குப்பார்க்கும் பெண்ணாகும் பேருருமாற்றத்தையோ, அப்படிப்பட்ட உருமாற்றைத்தை நம் மனிதர்கள் மீது திணித்து, அதை தவிர வேறெதுவும் அவர்களிடம் எதிர்பார்க்காத (ரங்கய்யாவும் பங்கு வகிக்கும்) நமது குரூரமான சமூக கட்டமைப்பையோ சுட்டவில்லை என தோன்றியது.

கிட்டத்தட்ட ஒரு அழகான காட்சிப்பொருளாக எழுதப்பட்ட நாச்சியாரின் கதாபாத்திரத்திடம் நித்தியகன்னிமையை எதிர்பார்க்கும் ரங்கைய்யாவை பார்க்க எரிச்சலாக இருந்தது. கதையில் அவளது கன்னிமையும் அதன் அருளும் கூட fetish செய்யப்பட்டதாக தோன்றியது.

அனால் அடுத்த முறை வாசிக்கையில், ஏனோ ரங்கய்யா மீது பரிதாபமே மீறியது. பாவம், அவனுக்கு என்ன தெரியும்? வெள்ளந்தி விவசாயி அவன். ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டதென்று மட்டும் அவனுக்கு தெரிகிறது, ஆனால் அதற்கு மேல் அவனுக்கு புரியவில்லை. ஒரு படி மேலே சென்று யோசித்தால், அந்த மாற்றத்தை நாச்சியாராலும் விளக்க முடியுமா என்று நமக்கு தெரியாது. அதை விளக்க அவளுக்கு வார்த்தைகள் இல்லை, இருந்தாலும் அவை அவளுக்கு கற்றுத் தரப்படவில்லை. இது கதையில் நுணுக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஸ்ரீதேவி விலகி மூதேவி வசிக்கும் வீடாக மாறும் அந்தச் சூழலை உருவகித்த காரணிகளை வாசகரின் அனுபவம் சார்ந்த ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் ஆசிரியர். நான்கே கோடுகளில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வரும் மினிமலிஸ்ட் சித்திரம் போல இந்த கதையில் விடுபட்டவையே கதையை பூர்த்தி செய்வதாக எனக்குத் தோன்றியது. நம் வாழ்விலும் கூட இதே இடங்கள் தான் விடுபட்டு நூல்நூலாக பிரிந்து தொங்குவதாக தோன்றுகிறது.

நாச்சியார் இழந்தாளே, அது என்ன?

நாச்சியாரின் அண்ணனும், ரங்கய்யாவும் புரியாமல் விழித்து மகிழ்ந்து போற்றிய கன்னிமை ஒரு வெளித்தோற்றம் மட்டுமே. நான் வாழும் பகுதியில் இலையுதிர் காலத்தில் நிறம் மாறி பவளமும் பொன்னுமாக ஒளிரும் சருகுகளை போல, அது ஒரு பிரபஞ்ச ரகசியத்தின் வெளிகுறி மட்டுமே. பனிக்காலத்தில் ஏதோ பெரும் நோன்பு நோற்க தயாராகும் மரங்கள் தங்கள் அணிகளை கழற்றி தன்னில் அடங்கி அந்த ஆனந்தத்தில் திளைப்பவையாக எனக்கு தோன்றும். அதே போலத்தான் கன்னி வயது பெண்ணும். அவள் ஆனந்தத்தின் ஊற்றை அவளே அறிவாள். அந்த ஊற்றின் கரையில் அவள் தன்னில் திளைத்து தன்னளவில் முழுமை அடைகிறாள். அதன் சிறு சிதறலே கன்னிமையின் வெளித்தோற்றம். அது யார் பார்வைக்கும் நடத்தப்படும் நாடகம் அல்ல. பார்வையாளர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் அரங்கேறி இரவெல்லாம் ஆடும் நாடகம் அது. இலை உதிர்வது போல இயல்பான கால நியதி.

என் சிறுவயதில் என் அம்மா எனக்கு சொன்ன கதை ஒன்று. அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஒரு கன்னிகாஸ்திரீ சொன்ன கதை. கதை பெயர் “நடனமாடும் பன்னிரண்டு இளவரசிகள்”. ஒரு நாட்டின் அரசன், அவனுக்கு பன்னிரண்டு பெண் குழந்தைகள். எல்லோரும் பேரெழில் கன்னிகள். கன்னிகள் வலம்வந்த நாட்டில் ஆறுகள் பொங்கின, காடுகள் பூத்தன, பயிர்கள் கொழுத்தன. மக்கள் செல்வமும் செழிப்புமாக வாழ்ந்தனர். அரசனையும் குமாரிகளையும் போற்றினர். ஆனால் அரசனுக்கு ஒரு வினோதமான பிரச்சனை. ஒவ்வொரு நாள் காலையிலும் தன் மகள்கள் அனைவரும் அணிந்த செருப்புகள் தேய்ந்து நைந்து போயிருக்கும். கால்களை ஊன்றி ஊன்றி நடப்பார்கள். அவர் உடனே செருப்புத்தைப்பவரை அழைத்து புது செருப்புகள் செய்து கொடுப்பார். ஆனால் அடுத்த நாள் காலையிலும் அதே கதை. அந்தப்பெண்களுக்கு அதை பற்றி எதுவும் தெரியாதென்று சாதித்தார்கள். இந்த நிலை பல மாதங்களாக தொடர்ந்தது. அந்த நாட்டின் செருப்புத்தொழிலாளிகள் செழித்தனர்; அரசன் கவலையில் மெலிந்தான்.

இரவு வரை சீர்நிலையில் இருந்த அவர்களின் செருப்புக்கள் எப்படி காலையில் தேய்ந்து கிழிந்து நூல்நூலாக தொங்குகின்றன என்ற மர்மத்தை கண்டறிய பல மாந்திரீகர்களை வரவழைத்தான். ஒன்றும் தட்டுப்படவில்லை. இரவெல்லாம் விழித்து இளவரசிகளின் செருப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஒற்றர்கள் எப்படியோ தூங்கி, காலையில் அரசனின் சினத்துக்கு ஆளாகி கழுவேற்றப்பட்டனர். செருப்புகள் கிழிந்தபடியே இருந்தன. அப்போது ஒரு நாள் பழைய அரச பரம்பரையை சேர்ந்த பரதேசி ஏழை இளைஞன் ஒருவன், இந்த முடிச்சை நான் அவிழ்க்கிறேன் என்று தைரியமாக முன்வந்தான். அன்று இரவு உணவு அருந்த மறுத்த அவனை அந்த கன்னிகளில் மிகவும் இளையவள் அணுகி, எங்கள் நாட்டின் விருந்ததையும் உபசாரத்தையும் நிராகரித்துவிட்டீர்கள், இந்த பாலையாவது பருகங்கள் என்று மந்திரப்புன்னகையுடன் ஒரு கோப்பையை நீட்டினாள். அதற்கென்ன, என்று முறுவி இளவரசன் அதை பருகினான். ஆனால் அவன் எச்சரிக்கை மிக்கவன்: அதை விழுங்காமல், அவள் சென்றவுடன் துப்பிவிட்டான்.

அன்றிரவு தூங்குவது போல் நடித்தான். “அவன் தூங்கிவிட்டான்,” என்று இளையவள் அவன் அறையில் எட்டிப்பார்த்து தன் சகோதரிகளிடம் சொன்னதை அவன் கேட்டான். அவள் சென்றவுடன், அவன் குடும்பத் சொத்தாக அவனிடம் இருந்த, மற்றவர்களின் கண்களிலிருந்து தன்னை மறைக்கும்படி நெய்யப்பட்ட மாய அங்கியை அணிந்து இளவரசிகளை பின்தொடர்ந்தான். அவர்கள் அரண்மனையின் பழுதடைந்த அறையொன்றினுள் சென்று, தரையில் ஒரு கல்லை மேலிழுத்து, கீழே செல்லும் படிகளில் இறங்கினர். அந்த பாதையில் அவனும் பின்தொடர்ந்தான். வெகுதூரம் சென்று முழுநிலவின் வெள்ளியாலேயே வடிக்கப்பட்டிருந்தது போல் இருந்த ஓர் ஏரியின் கரைக்கு வந்தனர்.

அங்கு நின்ற படகுகளில் ஏறிக்கொண்டு துடுப்புகளால் வெள்ளிநீர்விலக்கி மறுகரையில் ஒரு மாயக்காட்டை வந்தடைந்தனர். அங்கு அவர்களைப் போலவே வந்திருந்த நூறு கன்னியரோடு இரவெல்லாம் நிலவொளியில் கூத்தாடினர். அந்த இளைஞன் அவன் அங்கியின் மறைவிலிருந்து அந்த கட்சியை கண்டு நின்றான். பொழுது விடிந்ததும் அரசனிடம் சென்று அவன் கண்டதை கூற, அரசன் அவன் அரசில் பாதியும் கொடுத்து, தன பெண்களை அந்த இளைஞனுக்கே திருமணமும் செய்து வைத்தான். பழைய அரசனும் புதிய அரசனும் சேர்ந்து அந்த ரகசிய பாதையை இடித்து மூடி, ஏரியை வடித்து, காடை அழித்து, இரவு கூத்துக்களை ஒழித்தனர். அதன் பிறகு இளவரசிகளின் செருப்புகள் கொஞ்சமும் தேயாமல் என்றும் புதியது போலவே இருந்தன.

இந்தக் கதையின் பெரும் வன்முறை சிறுவயதில் புரியவில்லை. என் மனதில் இன்றும் குழந்தையாக கண்ட அந்த வெள்ளிநிலவும், மரங்களின் கையசைவும், அந்த அக்காக்களின் களியும் கூத்தும், அவர்களின் தனிமையும் அப்படியே நிற்கின்றன. நான் கேட்ட கதைகளிலே வரும் இடங்களில் மிகவும் அழகான இடம் அது என்று அப்போது எனக்குத் தோன்றும். என்றாவது ஒரு நாள் நானும் அங்கு ஆட வேண்டும் என்று தோன்றும். அந்த கனவாட்டமே அந்த கன்னிகளின் அழகின் ஊற்று என்றும் தோன்றும்.

ஆனால் வளர வளர எனக்கும் புரிந்தது, அந்த ஆட்டமெல்லாம் சிலகாலத்துக்கு தான். ஒரு அழகான இளமகன் குதிரை ஏறி வந்து அவர்களை தூக்கிச்செல்வான். அவர்களும் மகிழ்ச்சியாக, அவனுக்காகவே காத்திருந்ததை போல அவனுடன் செல்வார்கள். அவன் அவர்களின் கனவுலகத்தை குரூரமாக அழிப்பான் அவனுக்கு அந்த உலகத்தில் இடமில்லை என்று அவன் அறிகிறான். அவர்களும் அதை பெரிதும் கண்டுகொள்ளாதவர்களை போல இருப்பார்கள். சமூகமும் கதைகளும் அதுவே இயல்பு, அதுவே உத்தமம் என்று நமக்கு போதிக்கின்றது. எவ்வளவு பெரிய வன்முறை, எவ்வளவு இயல்பாக கடந்து சென்று விடுகிறோம்!

நடைமுறையில் பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆட்டங்களை மறந்து, தங்கள் ஊற்றுகள் வற்றி பாசி படிய விட்டு விடுகிறார்கள். அவளுக்கு வீடும் கணவனும் பேறும் இருந்தாலும் அவள் வற்றி வாடிவிடுகிறாள். அவள் வாழ்க்கை முழுவதும் இழந்த ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறாள். நியாயமாக பார்த்தால் அவள் வாழ்க்கை முழுவதும் அந்த ஊற்றைப் பேண வேண்டும். அது தான் அவளுக்கே அவள் அளிக்கக்கூடிய அதிகபட்ச அன்பும் மரியாதையும். அந்த மனநிலையில் வாழும் பெண் ஆணோடு வாழ்ந்தாலும் ஆணை சார்ந்து வாழ மாட்டாள். எந்தவயதிலும் நடுநிசியில் நிலவொளியில் நடனமாடுவாள். தன்னில் நிறைவாள். அவள் நித்தியகன்னி. நாச்சியார் இழந்ததும் அதைத்தான்.


 666

கன்னிமையின் வெளித்தோற்றத்தை சிலாகித்து கோயிலெழுப்பி எழுதும் பெரும்பான்மையான கதாசிரியர்கள் அந்த ‘ஊற்றை’ நெருங்குவதே இல்லை. அதை நெருங்கும்போது அவள் பெண், கன்னி, மனிதி என்ற அடையாளங்களை எல்லாம் தாண்டிவிடுகிறாள் என்று கூட தோன்றுகிறது. ஒரு பெண் தன் ஊற்றை, அதாவது, தன் தேடலை, தன் படைப்பூக்கத்தை, தன் சுயத்தை, தன் முக்தியை, கண்டடையும் பயணத்தின் சித்திரம் நவீன இலக்கியத்தில் வேறெங்கும் அதிகம் பேசப்பட்டதாக எனது வாசிப்பனுபவத்தில் தெரியவில்லை. “கொற்றவை” அதைப் பேசுகிறது. பேசப்படாமல் பாசி படிந்து கிடக்கும் உணர்ச்சிகளுக்கு சொல்லமைத்து குரல் கொடுக்கிறது. என் பார்வையில் “கொற்றவை”யின் முதல் முக்கியத்துவம் இதுவே.

பில்லிஸ் வீட்லீ (Phyllis Wheatley) என்ற கறுப்பின கவிஞரை சமீபத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். 1700களில் ஆப்ரிக்காவிலிருந்து கப்பலில் அடிமையாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட பெண். அவளது முதலாளிகள் அவளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்து அவள் இலக்கிய ஆர்வத்தை தூண்டுகிறார்கள். அவள் பல கவிதைகள் எழுதி பிரசுரிக்கிறாள்; புகழும் பெறுகிறாள். ஆனால் வாழ்நாளில் பெரும்பங்கு அடிமையாகவே வாழ்கிறாள். வறுமையில் பிள்ளைகள் இறக்க, தானும் இறக்கிறாள். அவளுக்கு சொந்தமாக பெயர் கூட கிடையாது – தான் அமெரிக்காவிற்கு வந்த கப்பலின் பெயரையே அவளுக்கு சூட்டுகிறார்கள்.

இப்படி எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், கறுப்பினப் பெண்ணாக, அடிமையாக, அரை மனிதியாக வாழ்ந்த பில்லிஸ் வீட்லீயின் கவிதைகளெல்லாம் பறக்கின்றன. ஒளியால் நிரம்புகின்றன. சுதந்திரமாக பூவலம் வருகின்றன. மனிதனை நேசிக்கின்றன. அவ்வளவு வியப்பு – அந்த ஒளியும் இலகுவும் இவளுக்கு எப்படி? ஆனால் அவள் எழுதுகிறாள். விர்ஜினியா வூல்ப் சொன்னது போல படைக்க தனியறை வேண்டும் தான், ஆனால் தனியறை உள்ளவர்களெல்லாம் படைப்பூக்கம் கொள்கிறார்களா? வருமானம், உரிமை, நேரம் எல்லாத்தையும் மீறி படைப்பூக்கத்திற்கு ஒரு சுயம் முக்கியம், அதை பேணி பாதுகாத்து ஆராதிப்பது அவசியம். மேலும் சிந்தித்தால் படைப்பு கூட தேவையில்லை, அது ஒரு விளைவு தான். அந்த ஊக்கமே, அந்த ஊற்றே போதும்.

நிலவில் ஆடும் இளவரசிகளின் கதையை “கொற்றவை”யில் நீலி சொல்லியிருக்கக்கூடும். நீலியின் கதைகள் எல்லாமே அந்த தனித்தன்மையை, சுய கண்டடைதலையே முன்னிறுத்துகின்றன. அது பல்வேறு வண்ணங்களில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு வண்ணத்திலும் ஆயிரம் வாய்வழிக்கதைகள் நாம் முன்னால் எங்கோ கேட்ட உணர்வு வாசிக்கையில் மேலோங்குகிறது.

நீலியை நாம் முதன் முதலில் கண்ணகியின் பிம்பத்திலேயே காண்கிறோம். அவளது மங்கள முகமும் பேய் முகமும் கண்ணகியின் மறுமுகங்களே என்று நாம் துணுக்குற புரிந்துகொள்கிறோம். அதுவரை கண்ணகி ஒரு நாடகத்தில் வேடம்கட்டியவளைப்போல, நாடகாசிரியர் சொல்லிக்கொடுத்த வசனத்தை பேசுகிறாள். கோவலன் நீங்கி அவள் ஆற்றியிருக்கும்போதும், அவன் திரும்பி வந்து மன்னிப்புக் கோரும்போதும், காலங்கள் தோறும் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் பிரபஞ்ச நாடகம் ஒன்றில் தன் பங்கை ஆற்றுபவளாக அவள் உணர்கிறாள். நீலியை கண்டடைகையில் அவள் ஊற்றை முதல் முறை காணுகிறாள். அந்த வெற்றுச் சுழற்சியை விட்டு முதல் முறை வெளிவருகிறாள். பயம் கடந்து அவள் தன்னை தானாக தன்னளவில் ஏற்றுக்கொள்கிறாள். நாடு காண்கிறாள், தன்னையும் காண்கிறாள். அவள் கேட்டுக் கடக்கும் கதைகளின் வழியே அவள் அவளை கண்டடைகிறாள்.

தேவந்தி அவளுக்குச் சொன்ன கதைகள், தன் ஆண்மகனை பிரிந்து, ஆற்றி, துயர்ப்படும் பெண்களின் கதைகள். ஆதிமந்தியும் நக்கண்ணையும் மாற்பித்தியும் இளவெயினியும் துயரமும் அலைக்கழிப்புமே வடிவானவர்கள். அதன் பொருட்டே இறைவியாக்கப் படுகின்றனர். அவர்களின் சந்நிதிகளில் கண்ணகி ஆத்மார்த்தமாக தொழுகிறாள், ஆனால் நீலியின் கதைகள் மூலம் அவர்களை கடக்கிறாள்.

நீலியின் கதையில் வரும் பெண்கள் பெரும்பாலும் தனித்தவர்கள், அவர்களின் தன்னிறைவே அவர்களை பிரித்துக்காட்டுகின்றது. சிலர் அநீதி இழைக்கப்பட்டவர்கள் – வெண்ணியூம் மருதியும் குமரியன்னையும் வள்ளியையும் போல, ஆனால் அவர்களின் கதைகள் சென்று முடியும் இடம் அவர்கள் வகுத்துக்கொண்டது. ஆதிமந்தி, மாற்பித்தி போன்ற பெண்களின் துக்கம் ஒரு வகை என்றால் மாஞ்சாடி விதைகளைக்கொண்டு சரம்சரமாக பவளமாலைகள் அணிந்த முத்தாரம்மன்களின் பெருந்துக்கம் வேறு வகை.

நப்பின்னையின் வேய்குழலிசையால் வேய்ந்த துக்கம் வேறு வகை. அனைத்து துக்கங்களை களைந்து நிமிர்வோடு நின்று, துறப்பதற்கு வீடு விட்டு இறங்க வேண்டியதில்லையே என்று ஒரே சொல்லில் அனைத்தையும் கடந்துசெல்லும் மகதி இவர்களுக்கெல்லாம் உச்சம்.

கண்ணகிக்கு அவளுக்கு வகுக்கப்பட்ட நெறிகளை கேள்விகேட்க தூண்டுகிறாள் நீலி. நீரரமகளிர் நிலவு பூத்த இரவுகளில் கடலில் ஆடி முயங்குவதையும், அவர்கள் ரகசிய முத்துக்களை அவ்வூர் பெண்களுக்கு கண்டெடுத்துக்கொடுத்ததையும், நாகர்களின் தலைகீழ் வாழ்க்கைமுறைகளும் கண்ணகியை எது கற்பு, எது பரத்தைமை என்று கேள்வி கேட்க வைக்கிறது. இக்கேள்விகளை அவள் நடந்து சென்ற ஒட்டுமொத்த கதைப்பரப்பில் பொருத்தியே கண்ணகி தன் உண்மையை கண்டடைகிறாள்.

புகார் விட்டு இறங்கின கண்ணகியல்ல மதுரை வந்து சேர்ந்தவள். இதை கோவலனும் உணர்கிறான், நம்பமறுக்கிறான். அவளுக்கு அறவுணர்ச்சி என்று ஒன்று முன்னமே இருந்திருந்தாலும், அவள் பயணத்தில் அது தீட்டப்பட்டு, அச்சம், மடம் எல்லாம் விலகி, அறம் வீழுமிடத்தில் சிறிதும் சிந்திக்காமல் குரல்கொடுக்கிறாள். அதுவரை மனை அடங்கிய சதியாக வாழ்ந்த அவள் நீதிகோரியது கோவலனுக்காக மட்டும் அல்ல, அந்நாட்டு மக்களுக்காகவும். ஊருக்கு தீயிட்டு முலையறுத்து மேற்குமலை நோக்கி நடக்கிறாள். அதன் பிறகு அனைத்திற்கும் உச்சமாக விரதமிருந்து, நோன்பு நோற்று, தன்னையே வெல்கிறாள். அங்கு முழுமை அடைகிறாள்.

தனிப்பட்ட உறவுகள் சார்ந்து துக்கமடைந்த பெண்களையும், சமூகம் சார்ந்து துக்கம் கொண்ட பெண்களையும் கண்ணகி, மகதியை போல, கடந்துவிடுகிறாள். அவள் தன்னுள் ஆழ்ந்து, துக்கம், காழ்ப்பு, வெறுப்பு, பழிவாங்குதல் என்ற எதிர்மறை சிந்தனைகள் அனைத்திலிருந்தும் விடுதலை ஆகிறாள். அந்நிலையிலேயே வாழ்ந்து நிறைவு காண்கிறாள். இதுவே “கொற்றவை” வைக்கும் பெண்மையின் சித்தரிப்பின் சாராம்சமாக எனக்குப் புரிந்தது.

இந்தச்சித்திரத்திற்கு கன்னியின் இனிமையும் தனிமையும் முழுமையும் உவமை. கலைமான் மீதமர்ந்து வரும் ஆதி கன்னியிடம் இருக்கும் கம்பீரம் கடல் சூழ தென்கோடியில் மென்னகையுடன் நிற்கும் குமரிக்கும் உள்ளது; கதை நம்மை அந்த புள்ளி நோக்கியே இழுக்கிறது. நம் மரபில் அகல்யா, தாரா, மண்டோதரி, குந்தி, திரௌபதி ஆகியோர் கன்னிகளென்றே அழைக்கபடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பொது அந்த கம்பீரம், அந்த தனிமை, அந்தக் கனிவு. நடைமுறை கற்பு காக்காதவர்கள் என்றாலும், அவர்களை நாம் கன்னிகள் என்கிறோம் எவ்வளவு அழகான உவமை! கண்ணகி இவர்களின் மரபில் வந்தவள், இந்த கன்னிமையை கண்டடைகிறாள். “கொற்றவை”, கன்னிமையின், அதை கண்டடைதலின் சித்திரம்.

இதற்கு நேர்மாறானவள் மாதவி – பரத்தை நெறியில் பிறந்திருந்தாலும் அவள் சாவித்திரியும் தமயந்தியையும் போல சதி. கோவலனை சார்ந்து வாழ்ந்தவள். அவன் இறந்தாலும், அவன் தகப்பனென்றும் தான் தாய் என்றும் வாழ்ந்தவள். ஆனால் அவர்களுக்குப் பிறந்த மணிமேகலை, சுவரோவியத்தில் தன் முகம் கண்டு வியந்த மணிமேகலை, அதை கன்னியின் முகமென்று கண்டுகொள்கிறாள். அவளுள் கன்னிமை விழித்திருப்பதாகவே தோன்றுகிறது.

“கொற்றவை” வாசிப்பில் என்னை வெகுவாக கவர்ந்த பகுதிகள் இரண்டுமே பயணங்கள்; முதலில், கண்ணகியின் பயணம், இரண்டாவது, இளங்கோ அடிகளின் தலைகீழ் பயணம். வரலாற்றை அவர் கண் முன்னால் கதைகள் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்; அக்கதைகள் மூலமாக அவர் தேடல் அவர்க்கு முழுமையாகிறது. அதன் உச்சம் கன்னியாகுமரியில், கடல் நடுவில் நிற்கும் கன்னிப்பாறையில். பலநூறாண்டுகள் பிறகு வந்த ஓர் இளைஞனை போல, ஒரு எழுச்சியில் கடலில் குதித்தது நீந்தி பாறையை அடைகிறார், மூன்று நாட்கள் ஊழ்கத்தில் மூழ்கி விழிக்கையில் ஆயிரம் சூரியன்களை காண்கிறார். அந்த இடத்தை வாசிக்கையில் – இப்போது எழுதுகையில் – என்னை உணர்வுப்பூர்வமாக பாதிக்கிறது. மனிதனுக்குள் மட்டும் எவ்வளவு உன்னதம் – அதை நமக்கு அருளிய கருணை எவ்வளவு மகத்தானது!

எல்லா விலங்கினங்களிலும், மற்ற விலங்குகளை அடக்கும் வல்லமை கொண்டு வெல்லும் விலங்கே தாட்டான் (ஆல்பா) ஆகிறது. அதை பயத்தால், குரூரத்தால், வன்மத்தால் சாதிக்கிறது. மனித இனத்தில் மட்டும், தன்னைதானே அடக்கி, தன் பயத்தை, வன்மத்தை களைந்து, தன்னையே வெல்லும் வல்லமை கொண்டவனே மனித சாத்தியங்களில் உச்சத்தை அடைகிறான். மனித இனத்தில், மற்றவனை வென்றவன் அரசனாகிறான். தன்னை வென்றவன்(ள்) தெய்வமாகிறான்(ள்).

 

சுசித்ரா ராமச்சந்திரன்

நமது பிரச்சினை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல

கொற்றவையின் தொன்மங்கள் சுசித்ரா ராமச்சந்திரன்

தாயார் பாதமும் அறமும் சுசித்ரா ராமச்சந்திரன்

வெள்ளையானையும் கொற்றவையும் சுசித்ரா ராமச்சந்திரன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் என் மதிப்பீடு -5

$
0
0
8

பார் லகர்க்விஸ்ட்

 

 

எழுதும் பயிற்சியின் தொடக்க காலத்தில்  கதைக்கருக்களை கையாளும்போது எப்போதும் வரும் இடர் ஒன்று உண்டு. அந்தக் கதை யார் பார்வையில் சொல்லப்பட வேண்டும்? எல்லாக் கதைகளிலுமே ஆசிரியனின் கண்கள் சென்று அமரும் ஒருமுகம் உண்டு. நாவல்களில் அது ஒன்றுக்கு மேற்பட்ட முகமாக இருக்கலாம். மிகத் தெளிவாக வாசகனுக்குத் தெரிவதாக இருக்கலாம். அல்லது ஆசிரியனால் மிக நுணுக்கமாக அது மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அக்கதைக்குள் ஆசிரியன் இருந்தாக வேண்டும்.

 

முற்றிலும் ஆசிரியனிடம் இருந்து விலகி கதை நிகழ முடியுமா? ,முடியும்,அது வேறு ஒரு கலைப்போக்கு. அத்தகைய கதைகளை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். பூமணி எழுதியிருக்கிறார். இரண்டு வகையான அழகியல் கொண்டவை அவை.

 

அசோகமித்திரன் கதை யதார்த்தபாணி கதை என்றும் பூமணி எழுதுவது இயல்புவாதக் கதை என்றும் சொல்லலாம். கறாரான யதார்த்தவாதம் என்பது எது நிகழ்கிறது, அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதை மட்டுமே சொல்லி கதையை நிறுவிச்செல்லும். அசோகமித்திரனின் தூய யதார்த்தவாதக் கதைகளில் ஆசிரியன் கூடுமானவரை கதைக்கு வெளியே முற்றிலும் பங்களிப்பற்றவனாக ,பற்றற்றவனாக இருப்பான்.

 

ஆனால் யதார்த்தவாதக் கதைகளில்  மிக அரிதாகவே வெற்றி பெறும் உத்தி இது. ஏனென்றால் யதார்த்தவாதக்கதை புறவய யதார்த்தத்துடன் நின்றுவிடுவதல்ல. அக யதார்த்தத்தையும் சொல்வது. நிகழ்வுகள் மட்டும் அல்ல எதிர்வினைகளும் அதில் முக்கியமானது. தகவல்கள் மட்டும் அல்ல உணர்வுகளும் முதன்மையானவை

 

அசோகமித்திரனின் கணிசமான கதைகளில் ’நான்’ என்று அசோகமித்திரன் குறிப்பிடும் கதாபாத்திரம் கதைக்குள் வருவதைப்பார்க்கலாம் உதாரணமாக  புலிக்கலைஞன். அந்த ’நானை’ கூடுமானவரை நிறங்கள் அற்றவராக உணர்ச்சிகள் அற்றவராக அமைத்து யதார்த்தவாதத்தின் பற்றற்ற அமைதியை அசோகமித்திரன் உருவாக்குகிறார்.

 

பூமணி புறவயமான தகவல்களை மட்டுமே சொல்லி உருவாக்கும் கதையில் ஆசிரியனுடைய இருப்பை  மிக எளிதாக வெளியே கொண்டு சென்று விடுகிறார். ஆசிரியன் அங்கு ஒரு புகைப்படக்கருவியின் பணியை மட்டுமே ஆற்றுகிறான். அக்கதைக்கு உரிய களத்தை தெரிவு செய்வது கதை மாந்தரை விவரிப்பது நிகழ்வுகளை வரிசைப்படுத்துவது ஆகிய மூன்றில் மட்டுமே ஆசிரியரின் இருப்பு அக்கறை கொள்கிறது. மற்றபடி கதைக்குள் ஆசிரியரின் குரலோ எண்ணமோ உணர்வோ வெளிப்படுவதில்லை.

 

இத்தகைய இருவகைக் கதைகளுமே பொதுவாக சிறுகதை என்ற வடிவில் ஒரு பகுதியை மட்டுமே சார்ந்தவை. ஏனெனில் சிறுகதை என்ற வடிவமே தன்னளவில் விமர்சனத்தன்மை கொண்டது. விமர்சனத்தின் பொருட்டு உருவானது என்று கூடச் சொல்லலாம். வாழ்க்கையின் முரண்பாடுகளை, அன்றாட கணங்களில் எழும் பேருணர்வுகளை, எளிய நிகழ்வுகளின் உள்ளுறைந்த புதிரை என அது தொட்டுக்காட்ட விரும்பும் ஒரு மையம் உண்டு அந்த மையத்தை யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது.

 

ஆசிரியன் முற்றிலும் கதைக்கு வெளியே நின்று விடும்போது பல சமயம் அந்த மையம் கதைக்குள் தெளிவடையாமலேயே போய்விடக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆகவே யதார்த்தவாதக் கதையாயினும் கூட கதைக்குள் ஆசிரியனின் பார்வையைக் கொண்டு ஒரு கதாபாத்திரம் இருப்பதே உகந்தது. அப்பார்வையை, அக்கதைகட்டமைப்பை ஒருங்கிணைப்பதில் அந்த மையம் இன்றியமையாதது என்று சொல்லலாம்.

 

தத்துவ தரிசனங்களையோ அசாதாரணமான உணர்ச்சிகளையோ வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் கொண்ட படைப்புகளில் அந்தப்பார்வைக்கோணம் இன்னும் துலக்கமாகவே கதைக்குள் இருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் புறவயமான தத்துவம் என ஒன்றில்லை. எவருடைய பார்வையில் அத்தத்துவநோக்கு திரள்கிறது என்பது அத்தத்துவநோக்கை மதிப்பிடுவதற்கே முக்கியமானது

 

காரணம் இலக்கியத்தில் கதைக்கு வெளியே செல்லுபடியாகும் புறவயமான தத்துவம் ஒன்று திரண்டு வர முடியாது. ஒரு சிறுகதையின் வரி எத்தனை கூரியதாயினும் மேற்கோள் ஆக முடியாது, ஏனென்றல் அதைச் சொல்வது ஆசிரியன் அல்ல, கதாபாத்திரம். ஆகவே இலக்கியம் உருவாக்கும் தத்துவத்திற்கு தத்துவ மதிப்பேதும் கிடையாது. எந்தக்கதையில் எவர் வாயிலாக வெளிப்படுகிறது என்பதை ஒட்டி மட்டுமே அத்தத்துவத்திற்கு மதிப்புண்டு.

 

மர்க்சிம் கார்க்கியின் தாய் நாவலில் பாவல் சொல்லும் ஒரு  வரிக்கு பாவலின் குணச்சித்திரம் சார்ந்துதான் மதிப்பு. இவான் துர்கனேவின் தந்தையும்தனயர்களும் நாவலில் மருத்துவனாகிய பஸரோவ் சொல்லும் ஒரு வரி அந்நாவல் உருவாக்கும் விவாதம், அதில்      பஸரோவின் குணச்சித்திரம் ஆகியவற்றைச்ச் சார்ந்தே முக்கியத்துவம் பெறுகிறது.முறையே புரட்சிகர சிந்தனையென்றோ ,முழுமறுப்புச் சிந்தனை என்றோ அதை வரையறுத்துவிட முடியாது.

 

ஆகவே தத்துவார்த்தமான கதைகளை எழுதும்போது சூழல் மற்றும் கதாபாத்திரம் இரண்டையும் ஒட்டி அது தத்துவம் வெளிப்படுவது மிக அவசியமானது.  அது எவருடைய நோக்கு என்பது கதைக்குள் மிகத்தெளிவாகவே வெளிப்பட்டாகவேண்டும்.

kazantzakis_nikos

நிகாஸ் கஸன்ஸகிஸ்

 

மோனிகா மாறன் எழுதியிருக்கும் தச்சன் என்னும் கதை மேரி மக்தலீனின் பார்வையில் யேசுவைச் சொல்ல முற்படுகிறது இக்கதையின் மிக முக்கியமான குறை என்னவென்றால் எங்கோ ஒரு இடத்தில் அது மயங்கி யேசுவின் பார்வையை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது என்பதுதான். மக்தலீனின் நோக்கு கதையின் கோணமாக இல்லை.

 

யேசு அவருடைய மாணவர்களுக்கு எப்படி பொருள்படுகிறாரோ, அவரிடம் அருள் பெற வந்தவர்களுக்கும் நோய் குணமாக வந்தவர்களுக்கும் எப்படி பொருள் படுகிறாரோ ,அதற்கு அப்பால் மிக அந்தரங்கமான ஒரு பொருளை மக்தலீனாவுக்கு அளிக்கிறார் என்பதுதான் இந்தக் கதையாக இருக்க முடியும் அப்படி இருக்கையில்  மக்தலீனாவின் எண்ண அலைகள், உணர்வுகள், நோக்கு வழியாக மட்டுமே அவர் வெளிப்பட முடியும்.

 

அதற்கு முதலில் மக்தலீனாவை கதை சரியாக வரையறை செய்யவேண்டும். அவளுடைய சூழல் ,அவளுடைய தோற்றம் ,அவளுடைய எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவை இக்கதைக்குள் விரிவாகவே விளக்கப்பட்டிருக்கவேண்டும். அவளுடைய பார்வை வழியாக வரும் யேசு அவளையும் யேசுவையும் ஒருங்கே காட்டும் கதாபாத்திரமாக   கதைக்குள் வந்தாக வேண்டும். யேசு என்ன எண்ணுகிறார் என்பது இக்கதைக்கு உரியதல்ல.

 

இதன் நடை ஒரு கதைச்சித்தரிப்புக்கு உரியதாக இல்லாமல் வசனகவிதையின் தன்மையுடன் இருக்கிறது. ஆகவே நேரடியாக உணர்வுகளைச் சொல்லும் பாணி இதற்கு அமைந்துள்ளது.  இந்த வகையான நேரடிக்கூற்று உண்மையில் அகவயமான சில சொற்றொடர்களை உருவாக்குமே ஒழிய அந்த உணர்வுகள் உருவான விளைநிலத்தை, ஆழ்மனதை கதைக்குள் கொண்டுவர முடியாது.

 

ஆழ்மனம் வெளிப்படுவதே கலை. ஆழ்மனம் நேரடியாக வெளிப்படமுடியாதென்பதே கலையின் சவால். ஆகவேதான் அது குறிப்புணர்த்துகிறது. மறைமுகமாகச் சொல்கிறது. படிமங்களையும் அணிகளையும் பயன்படுத்துகிறது.

 

மக்தலீனா எங்கே இருந்தாள்? அவளுடைய அன்றாட வாழ்க்கை எப்படிப்பட்டது? தன்னைப்பற்றி, விபச்சாரியான தன் உடலைப்பற்றி அவள் என்ன நினைத்தாள்? பைபிள் அவள் யேசுவின் கால்களை நறுமணத்தைலத்தால் கழுவித் தன் கூந்தலில் துடைத்தாள் என்று சொல்கிறது. அந்த ஒரு செயலில் தன் உடலைப்பற்றி அவளுக்கு இருந்த இழிவுணர்ச்சி வெளிப்படுகிறது.

 

தண்ணீர்  பிடிப்பதற்காக ஊற்றுக்கு போகும்போது யேசுவைக்காணும் இடத்தில் அவளுடைய உணர்வு என்ன என்பது மிக முக்கியமானது. அது ஓர் ஒற்றைப்படையான உளக்கொந்தளிப்பா? அத்தகைய தருணங்களில் உள்ளம் முன்னும்பின்னும் அல்லவா ஆடும்? தயக்கமும் ஆர்வமும் இழிவுணர்வும் உள எழுச்சியும் மாறி மாறி அல்லவா வெளிப்படும்? இந்த சிறுகதையில் அவ்வுணர்வு மிக சம்பிரதாயமான முறையில் வெளிப்படுகிறது.

 

மக்தலீனா யேசுவைக்கண்டு உருகினாள் .பாதங்களில் விழுந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினாள். அவர் சொற்களால் பாவமன்னிப்பு பெற்றாள் – இது பைபிள் வாசித்த அனைவரும் அறிந்ததே. அதை மீண்டும் ஒரு சொற்சித்திரமாக ஆக்குவதற்கு நவீனச் சிறுகதை ஆசிரியர் தேவையில்லை

 

இக்கதைக்குள் மோனிகா மாறன் தன்னை எங்கு பொருத்திக் கொள்கிறார். மக்தலீனாவின் கண்ணில் முகத்தில் மோனிகாவின் கண் பதிந்திருக்க வேண்டும் மக்தலீனாவாக மோனிகா மாறன் மாறியிருக்க வேண்டும்

 

மக்தலீனா தொன்மத்திலிருந்து நமக்கு வரும் ஒரு கதாபாத்திரம். அவளுடைய தனித்தன்மைகள் அனைத்துமே மூலப்பிரதியால் வரையறுக்கப்பட்டுள்ளன. பலநூற்றாண்டுகளாக மதத்தால் அது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு உணர்வு ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் ஒரு ஆசிரியை அதே உணர்வுகளுடன் அதே சித்திரத்துடன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

 

தொன்மத்தை மறு ஆக்கம் செய்யும் ஒரு எழுத்தாளனிடம் வாசகன் எதிர்பார்ப்பது தான் என்ன? நவீன இலக்கியம்  என்பது மரபிலக்கியத்தின் தொடர்ச்சி மட்டுமல்ல எதிர்போக்கும் கூட. மரபிலக்கியம் என்று நாம் சொல்வது பல்லாயிரம் ஆண்டு பழமை கொண்ட ஒரு பெரும் இலக்கியப் பெருக்கு. நவீன இலக்கியம் ஏதோ ஒரு புள்ளியில் மானுடம் நின்று திரும்பி அதை ஒட்டு மொத்தமாக விமர்சனத்துடன் பார்க்கும்போது ஆரம்பித்தது. அதுவரைக்குமான மரபை மறுபரிசீலனை செய்வது, மறுவரையரை செய்வது, மறு ஆக்கம் செய்வது என்பது நவின இலக்கியத்தின் பண்புகளில் ஒன்று.

 

இலக்கியம் எப்போதும் மறுஆக்கத்தில் ஈடுபட்டுள்ளது. கம்பராமாயணத்திலிருந்து பின்னோக்கிச் சென்று வால்மீகி ராமாயணத்தை பார்க்கும் போது கம்பன் வால்மீகியை மறுக்கவில்லை, மறுபரிசீலனை செய்யவும் இல்லை , விரிவாக்கம் மட்டுமே செய்தான் என்பது தெரிகிறது. ஆனால் பாஞ்சாலி சபதத்தை பார்க்கும்போது வில்லிப்புத்தூராரில் இருந்து பாரதி நேரெதிர் திசைக்குத் திரும்பிச் செல்வதை பார்க்க முடியும். புதுமைப்பித்தனின் தொன்ம மறுஉருவாக்க கதைகளான சாபவிமோசனம் அகலிகை போன்றவை இன்னும் தீவிரமாக மரபை மறுபரிசீலனை செய்கின்றன.

emili

எமிலி ஸோலா

 

நவீன இலக்கியத்திலுள்ள இந்த மீறல் அல்லது துடுக்குத்தனம் அதன் அடிப்படைகளில் ஒன்று. எப்போதுமே மரபார்ந்த பார்வை கொண்டவர்கள் நவீன இலக்கியத்தால் சீண்டப்படுகிறார்கள்.  ‘இவர் யார் இதை சொல்வதற்கு? இவர் எப்படி இதை மறுஆக்கம் செய்யலாம்?’ என்று சினந்தபடியே தான் இருப்பார்கள். புதுமைப்பித்தனைப்பற்றி ராஜாஜி அப்படிக் கேட்டதாக சொல்வார்கள்.

 

மிக எளிய நிலையில் அந்த எதிர்ப்பு வரும், ராஜாஜியைப்போல தேர்ந்த அறிவார்ந்த தளத்திலிருந்தும் அது வரும். அப்படி வருவதே அப்படைப்பு நவீன இலக்கியமென்பதற்கான சான்று என்றே கொள்ளலாம். இந்த மறுப்பும் மறுஆக்கமும் இன்றி புனைவிலக்கியம் தொன்மத்தைக் கையாளும்போது நவீனஇலக்கியத்தின் இயல்பை இழந்து அது ஒரு உபன்யாசமாக சுருங்கிவிடுகிறது.

 

மறுஆக்கம் எப்படி நிகழும்? இரு தளங்களில் அதைப்பார்க்கலாம். ஒன்று மதங்கள் உருவான வரலாறு ,சென்ற ஈராயிரம் வருடங்களாக மக்தலினா பற்றிச் சொல்லப்பட்ட வரலாறு, இன்று நவீன சமூகவியல் –பொருளியல்- அழகியல் சூழலில் மக்தலினாவை நாம் மீண்டும் நோக்கும் விதம் ஆகியவற்றை கருத்தைக் கொண்டு அக்கதாபாத்திரத்தை மறுஆக்கம் செய்யலாம். அது ஆசிரியன் வரலாற்ராய்வாளனாக, ஒட்டுமொத்த நோக்குள்ளவனாக தன்னை நிறுத்திச் செய்யும் பயணம்

 

இன்னும் கூரிய, நேரடியான வழி என்பது மக்தலீனாவாக நாம் மாறுவது. மோனிகா மாறன் வாழ்வது இந்தக் காலகட்டத்தில், இன்றைய உறவுச் சிக்கல்களுக்குள், இன்றைய உணர்வுநிலைகளுக்குள், இன்றைய அறவியலுக்குள். இங்கு நின்றபடி அவர் தன்னை மக்தலீனாவாக வைத்துக் கொண்டு யேசுவைப் பார்க்க ஆரம்பித்திருந்தால் இந்தக் கதையிலிருப்பது போல மக்தலீனாவின் சம்பிரதாயமான  உணர்வுகள் மட்டும் வெளிப்படக்கூடிய கதையாக இருந்திருக்காது. அது மோனிகாவின் உணர்வாகவும் இருந்திருக்கும். அது மாற்றில்லாத ஒரு தனித்தன்மையாக வெளிப்பட்டிருக்கும்

 

மக்தலீனா யேசுவை எப்படிப் பார்த்தாள்? மீட்பராகவா? ஓர் ஆண்மகனாகவா? மீட்பர் ஏன் ஆண்மகனாக இருக்கவேண்டும்? அவருடைய கருணைக்கு அவள் ஏங்குவது ஒரு காதலனின் பார்வைக்காக ஏங்குவது போலத்தானா? அது அவளுக்குக் கிடைத்ததா? பக்திவழியாகவும் கல்வி வழியாகவும் அவன் மாணவர்கள் சென்று தொடமுடியாத இடத்தை காதல்வழியாக அவள் சென்று தொட்டாளா?

 

த்விதீயன் –இரண்டாமன் – என்று சொல்லப்பட்ட யூதாஸ் அவனை நிராகரித்தான் .தாமஸ் சந்தேகப்பட்டான். பிறர் மறுதலித்தனர் . ஆனால் அவள் அவன் சடலத்தை தன் கைகளில் ஏற்றுவாங்கினாள். அந்த முழுமையான அர்ப்பணம் அவள் கொண்ட காதலால் அமைந்ததா? பல வினாக்கள் . அவ்வினாக்களெல்லாம்தான் நவீன இலக்கியத்தை அமைப்பவை.

 

பல எழுத்துக்களை உதாரண்மாகச் சுட்டலாம். பேர்லாகர்க்விஸ்டின் பரபாஸ் [ தமிழில் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது]  எமிலி ஜோலாவின் பரபாஸ், நிகாஸ் கசந்ஸகீஸின் The last temptation of Christ போன்றவை முக்கியமான உதாரணங்கள்.

 

இவை அனைத்துமே யேசுவைப்பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறதோ அதை திரும்பச் சொல்லும் படைப்புகள் அல்ல. பைபிளிலிருந்து அத்தொன்மத்தை எடுத்துக்கொண்டு நவீன காலகட்டத்திற்குரிய ஆன்மீகம் ஒன்றைக்கண்டடைவது  அவற்றின் இலக்கு. அது நிகழாததனாலேயே இத்தொன்ம மறுஆக்கம் நவீன இலக்கியத்தின் இன்றியமையாத இலக்கை தவறவிட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஒரு சமகால எழுத்தாளனாக இந்தக் கதைக்குள் இருக்கும்பல சாத்தியங்களை காண்கிறேன். தன்னை தூயவளல்ல என்று எண்ணிய மக்தலீனா ஏன் யேசுவின் கால்களை தூய்மைப்படுத்தினாள்? பின்னாளில் யேசுவின் சடலத்தை சிலுவையிலிருந்து இறக்கி அச்சடலத்தை தூய்மைப்படுத்தும்போது அவள் இருந்தாள். அதற்கான முன்னோட்டமாக தன்னறியாமல் அவள் அதைச் செய்தாளா என்ன?

 

மக்தலீனாவுக்கும் மேரிக்குமான உறவு என்ன? மேரியைப்பார்த்து ஸ்த்ரீயே உனக்கும் எனக்கும் என்ன உறவு என்று கேட்ட யேசு ஏன் மக்தலினாவிடம் கேட்கவில்லை? மேரி தன்னை உலகியலில் கட்டிவிடக்கூடும் என்று நினைத்தவர். மக்தலீனைப்பற்றி எண்ணவில்லை? அவள் கண்ணில் இருந்த காதல் அவருக்குத் தெரியவில்லையா?

 

இவ்வாறு அந்த தருணத்தின் மீது பல திறப்புகளை உருவாக்கிக் கொள்வதன் வழியாகத்தான் நவீன இலக்கியம் எழுதப்பட முடியுமே ஒழிய வழி வழியாக வந்த ஒரு தருணத்தை உணர்ச்சிகரமான திரும்ப சொல்வது வழியாக அல்ல.இந்தக் கதையில் எங்கும் ஆசிரியரின் தனித்தன்மை கொண்ட பார்வை வெளிப்படாததனால் இதை ஒரு நல்ல கதை என சொல்லத் தயங்குகிறேன்

ip

இந்திரா பார்த்தசாரதி

 

*

 

தருணாதித்தனின் பருவமழை இந்திராபார்த்தசாரதி, ஆதவன் ஆகியோர் டெல்லியை மையமாக்கி எழுதிய              அரசியல் அங்கதக்கதைகளை நினைவூட்டுகிறது. தமிழில் குறிப்பிடத்தகுந்த பல கதைகள் இந்த வகைமைக்குள் வந்துள்ளன. ஆனால் அறுபட்டு விட்ட மரபாக இது நிற்கிறது. தருணாதித்தன் அந்த தொடர்ச்சியில் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

இக்கதையின் வலிமை என்னவென்றால் அங்கதக் கதைகளுக்கு அவசியமான அதிகம் விவரிக்காமல் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்லும் தன்மை அமைந்துள்ளதுதான். ஓர் அங்கதக் கதை யதார்த்தக் கதை அல்லது இயல்புவாதக் கதை போல விரிவான தகவலை அளிக்கும்போது அத்தகவல் அனைத்தும் சேர்ந்து அங்கதத்தை மறைத்துவிடுவதைப்பார்க்கலாம்.  மினிமலிசம் என்று சொல்லப்படுகிற குறைவான தகவல் தேவைப்படுகிற எழுத்தை இந்திரா பார்த்தசாரதியும் ஆதவனும்  தங்கள் அங்கதக்கதைகளில்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

 

இக்கதை விரிவான சித்திரங்களை அளிக்காமல் குணச்சித்திரங்க்ள் மற்றும் அங்கத நிகழ்வுகளை மட்டுமே தொட்டுக் கொண்டு செல்கிறது. ராமச்சந்திராவின் கதாபாத்திரம் தயக்கமும் சம்பிரதாயத்தன்மையும் கொண்ட தென்னிந்திய அதிகாரியின் இயல்புடன் உள்ளது. உண்மையில் பெரும்பாலான தென்னிந்திய பிராமண உயரதிகாரிகள் இந்த குணச்சித்திரத்துக்குள் அடங்குவர். அவர்கள் அளவுக்கு அறிவோ திறமையோ இல்லாமல் இருந்தாலும் கூட இந்தி சரளமாக பேசுவது ,எங்கும் முண்டியடித்து நுழைவது என்னும் குணங்களினால் பஞ்சாபி மற்றும் வங்காளி அதிகாரிகள் டெல்லியில் அதிகார இருக்கைகளை மிக எளிதில் அடைவது ஓர் நடைமுறை உண்மை.

 

இந்தக் கதையின் மையம் அதுவல்ல என்றாலும் அந்த சமூக உண்மை  மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. பிரதமர் அழைத்து பேசுகிறார் என்ற ஒரு தருணத்தை பயன்படுத்திக் கொண்டு சஞ்சீவ் மிக எளிதாக ராமச்சந்திராவை ஒரு தள்ளு தள்ளி முன்னால் சென்றுவிடுகிறார். அந்த இடம் எதார்த்தமாகவும் வேடிக்கையாகவும் அமைந்துள்ளது. பிரதமர் கோரும்போது வழக்கமான பொய்யான தகவல் ஒன்றை அளித்து முந்தி மேலே செல்லாமல் உண்மையைத் தொட்டுச்சொல்லமுயன்று, தோற்று சுருங்கி தன் சிற்றூருக்குப் பின்வாங்கும் ராமச்சந்திரா வேறொரு வகையில் விஸ்வரூபம் எடுப்பதும் மென்மையான அங்கதம் தான்.

 

உண்மையில் இதுவும் தென்னிந்திய பிராமணர்களுக்கு உள்ள ஒரு குணமே. அறிவியலில் இருந்து மிக எளிதாக மதத்திற்குள்ளோ, சோதிடத்திற்குள்ளோ அவர்களால் எளிதாக வர முடிகிறது. விண்வெளி அறிவியலில் நாற்பதாண்டுகள் இருந்துவிட்டு வேத அலைகளைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை நான் அறிவேன். அறிவியலில் அவர்கள் எப்படி கறாரான முறைமையை எப்படி நம்பினார்களோ அதே போன்று ஒரு முறைமையை இந்த நம்பிக்கைசார்ந்த விஷயங்களிலும் கடைப்பிடிப்பார்கள்

 

இக்கதையின் மிகநுணுக்கமான அங்கதமே ராமச்சந்திரா எவ்வளவு எளிதாகச் சோதிடராக ஆகிறார் என்பதுதான். இந்தக் கதையின் பகடிகள் வெளிப்படையாக அல்லாமல் பலவகையிலும் புதைந்துள்ளன. அறிவியலை நம்பிச் செயல்பட்டபோது ஒர் ஊகத்தை முன்வைப்பதற்குத் தயங்கிய ராமச்சந்திரா முழுக்க முழுக்க ஊகங்களால் ஆன சோதிடத்தைக் கையில் எடுக்கிறார். ஒரு நம்பிக்கையையோ ஊக்கத்தையோ கொடுப்பதற்குதய்ங்கியதனாலேயே பதவியை இழந்தவர் அதையே தொழிலாகக் கொண்டு சோதிடராக              வெற்றி பெறுகிறார்.

 

மறுபக்கம் அறிவியலாளனிடம் சோதிடத்தை எதிர்பார்த்த பிரதமர் சோதிடனிடம் ஒரு அறிவியல் பூர்வமான விடைக்காக வந்து நிற்கிறார். நமது இந்திய அரசியல் செய்ல்படும் முறையை ,அதில் அதிகார எந்திரம் கலந்து கொள்ளும் விதத்தை சிறந்த பகடி மூலம் சொல்லும் கதை இது. அங்கதக் கதைகளில் சமீபத்தில் தமிழில் நான் பார்த்த முக்கியமான ஆக்கம் இது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

0

தி ஜானகிராமன்

 

 

இக்கதையின் எதிர்மறை அம்சங்கள் என்னவென்றால் ராமச்சந்திரா சிற்றூருக்குச் சென்று தன்னை சோதிடனாக மாற்றிக் கொள்ளும் நிகழுவ்களை சிறு குறிப்புகளாக தாவிச் சென்று சொல்லும்விதம்தான். அதில் இத்தகைய கதைகளில் வரும் தேய்வழக்குகளே அமைந்துள்ளன. அவற்றையும் மெல்லிய அங்கதத்துடன் நவீனச்சொல்லாட்சிகளுடன் சொல்லியிருந்தால் இது தமிழின் முக்கியமான கதையாக அமைந்திருக்கும்

 

தருணாதித்தனின் மனிதகுணம் என்னும் கதை இயல்பாக விரியும் ஒரு குணச்சித்திரத்தைக் காட்டுகிறது. தடையற்ற நடையில் வாசகன் இறுதி வரை வாசித்துச் செல்லும் கதையாக இக்கதை அமைந்துள்ளது. கதையின் மையக்கதாபாத்திரமாகிய பெரியவர் , அவர் ஒரு சத்திரமாக நடத்திக் கொண்டிருக்கும் இல்லம், அவருடைய வாழ்க்கை முறை ,அவருடைய பேச்சு முறை அனைத்துமே எளிதாக வாசகனின் கண்முன் வந்துவிடுகின்றன

 

இக்கதை ஒரு சுவாரசியமான வாசிப்புக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் நவீன இலக்கியத்தின் பார்வையில் இக்கதையில் போதாமைகள் சில உள்ளன. நடையும் கூறுமுறையும்  ஐம்பது வருடம் முந்தைய  கதை போன்றிருக்கிறது.. கதைக்குள் ஒருவர் கதை சொல்வதென்பது மிகவும் வழக்கொழிந்த வடிவம். கல்யாணவீட்டிலோ அல்லது வேறு ஏதேனும் அரட்டைக் கச்சேரியிலோ சுவாரசியமான கதை ஒன்றை அவிழ்த்துவிடுவது என்ற பாணியில் ஜானகிராமன் உட்பட பலரும் எழுதிவிட்டார்கள். நவீன கதை மீண்டும் அதை சொல்ல ஆரம்பிக்கும் போது இன்றைய வாசகனுக்கு ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

 

இரண்டாவதாக கதையின் தலைப்பும் சரி ,முடிவும் சரி, இன்னும் சம்பிரதாயமான ஒரு பார்வையை வெளிப்படுத்துகின்றன. ஒரு அசாதரணமான உறுதியை மேற்கொண்ட ஒருவர் உண்மையில் அதை கடைப்பிடிக்க முடிவதில்லை. ஏனெனில் மனித குணம் அப்படித்தான் என்று ஆசிரியர் சொல்வது போல் கதை அமைந்திருக்கிறது. அது உண்மையும் கூட. ஒரு லௌகீகமான பொதுப்புத்தியிலிருந்து அந்த நோக்கு வருகிறது. அதை இலக்கியத்தில் ஏன் வைக்கவெண்டும்? என்ன தேவை அதற்கு இன்று?

 

ஜானகிராமனின் பல கதைகளின் தொடர்ச்சி இக்கதையில் தெரிகிறது என எனக்குத் தோண்றுகிறது. மனித இயல்பில் உள்ள மீற முடியாத சிறுமையையோ தன்னியல்பான அற்பத்தனத்தையோ கதைகளில் சுட்டிக் காட்டிவிடுவதென்பது ஜானகிராமனின் பார்வையில் ஒன்று.  ஜானகிராமனின் காலத்தில் அந்த வகையான கதைகளுக்கு மதிப்பிருந்தது. ஏனென்றால் உயர் லட்சியங்களை அதிகமாக எழுதிய காலகட்டத்துக்கு பிறகு வந்தவர் அவர். அவற்றை தலைகீழாக ஆக்கி மனிதன் என்னும் அன்றாட வாழ்க்கை வாழும் எளிய பிறவியை கதைக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

 

ஆனால் இன்றைய  வாசகனுக்கு இத்தகைய கதைகளே பழகிவிட்டிருக்கின்றன. கதை முக்கால் பங்கு செல்லும்போதே இரண்டுவகையான ஊகங்களுக்கு அவன் வருவான். ஒன்று அந்தபெரியவர் பொய் சொல்கிறார். அல்லது அந்த பெரியவருக்கு ஏதோ நோய் இருக்கிறது.ஆகவே கதையின் முடிவைப்படிக்கும்போது சரிதான் என்ற எளிமையான ஒப்புக்கொள்ளலை மட்டுமே அவன் இச்சிறுகதைக்கு அளிக்கிறான்.

 

ஒரு நவீனச் சிறுகதை வாசகனை அதிர்வடையச்செய்யவேண்டும், சீண்டவேண்டும், அவனுடைய முன் முடிவுகளை கடக்க வைக்க வேண்டும். அந்தத் தருணம் இந்தக் கதையில் எங்கும் நிகழவில்லை. பலவகையிலும் இத்தகைய கதைகள் வார இதழ்களில் அதிகமாக வெளிவருகின்றன. இலக்கியத்திற்குள் ஒரு கதை நுழையும்போது இருந்தாக வேண்டிய புதுமை என்ற அம்சம் பார்வையில், வெளிப்பாட்டில் இந்தக் கதையில் இல்லை.

 

எழுதும் முறை இதுவரைக்கும் சொல்லப்படாத ஒன்றா என்று நவீன எழுத்தாளன் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய வகையில் ஒரு கதையை  வலிந்து சொல்ல வேண்டியதில்லை. புதியவைகளை சொல்வதற்கென்று கதையை உருவாக்க வேண்டியதும் இல்லை. அத்தகைய உத்திகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடமேதும் இல்லை.  ஆனால் ஒரு கதைக்கரு வரும்போது அதை புதிதாகச் சொல்ல முடியுமா என்று இயல்பாக ஒரு பார்வையை அவன் அடைய வேண்டும்.

 

எழுத்து இயல்பாக வெளிப்படும்போது தன்னிச்சையாகவே அது பழகிய வடிவங்களுக்குத் தான் செல்லும் .முன்னதாகவே அதற்கெதிரான ஒரு மனத்தடையை வளர்த்துக் கொண்டால் பழகிய வடிவங்கள் வராது. பழகிய வடிவங்களை தவிர்த்துவிடும்போது புதிய ஒரு வாய்ப்பை கண்டடைய வேண்டிய  கட்டாயம் ஆசிரியனுக்கு ஏற்படுகிறது. அது கண்டிப்பாக புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் செய்யும்.

aathavan10

ஆதவன்

 

இந்தக் கதையில் ஒரு  சிறுகதை ஆசிரியனாக எனக்கு  மேலதிக சாத்தியங்கள் பல தோன்றுகின்றன.இது ஓரு  விமர்சகனின் அத்துமீறல் என்றாலும் இது ஓர் இலக்கிய உரையாடல் என்பதனால் இதைச் சொல்கிறேன். ஒருவர் ஒரு சத்திரம் நடத்துகிறார் ,அங்கு மறுமுறை அவரைச் சந்திக்க வாய்ப்பில்லாத பலர் வந்து செல்கிறார்கள், அவர் அங்கே கதைகள் வழியாக தன்னைப்புனைந்துகொண்டே இருக்கிறார் என்பது மிகமிக கற்பனையைத் தூண்டும் ஒரு தருணம்.

 

கைலாசத்துக்குச் சென்றது, காசிக்குச் சென்றதென்று வித விதமான கதைகள் வழியாக தன்னுடைய ஆளுமையை ஒவ்வோருநாளும் கலைடாஸ்கோப்பை திருப்புவது போல விதவிதமாக புனைந்து காட்டுகிறார். இங்கு அத்தனைபேரும் அப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மனிதன் என்பவன் அப்படி வெளிப்படுபவன் மட்டும்தானா? அல்லது வெளிப்படுத்தப்பட்ட இந்த முகங்கள் அனைத்திற்கும் சாரமாக அவருடைய முகம் ஒன்று எங்கோ இருக்கிறதா? இவ்வினாக்களை வாசகன் எழுப்பும் வாய்ப்பு இக்கதைக்கு இருந்திருந்தால் இது மேலும் மேலும் விரியும் புனைவாக இருந்திருக்கும்

 

மனிதர்கள் தங்களை முன் வைக்கிறார்களே ஒழிய தாங்களாக ஒரு போதும் இருப்பதில்லை என்பது ஒரு யதார்த்தம். குரூரமானவனாக, அன்பானவனாக ,கணக்குப்பார்ப்பவனாக, தாராளமானவனாக, ஒருமனிதனில் பல்வேறு ஆளுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் சித்திரத்தைக் காட்டமுடியும் இக்கதையில். விதவிதமான நிலக்காட்சிகளில் விதவிதமாக வெளிப்படும் ஒரு மனிதன் ஒரு புள்ளியில் இருந்து கொண்டு தன்னை புனைந்து கொள்வதில் உள்ள மர்மத்தை இக்கதை என்னுள் எழுப்பியது.

 

ஆனால்  மிக இயல்பாகச் சென்று அவர் ஒரு பொய்யைத்தான் சொல்லியிருக்கிறார், அவரால் அந்த விரதத்தைக் காத்துக் கொள்ள முடியவில்லை என்று முடியும்போது இக்கதை அது எழவேண்டிய உயரத்திலிருந்து மிகவும் கீழிறங்கிவிட்டதாக தோன்றுகிறது.

 

தருணாதித்தனின் இரு கதைகளுமே பயிற்சிகொண்ட நடையுடன் இயல்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. சிறுகதை எழுதும்போது ஒரு இலகுத் தன்மை உள்ளத்தில் இருப்பது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். செயற்கையான இறுக்கங்களோ மிகையான உணர்ச்சிகளோ வராமல் அது தடுத்துவிடும். இயல்பாகக் கதை சொல்வதென்பது  ஜானகிராமன் ,அழகிரிசாமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி , அ.முத்துலிங்கம் போன்ற பலரிடம் நாம் காணும் ஒரு பண்பு

 

தருணாதித்தனின் தனித்திறனாக அது அமைந்திருப்பது மிக நல்ல விஷயம். அந்த இலகுத் தன்மையின் எதிர்மறை அம்சம் என்னவென்றால் மிகச் சாதாரணமான கதைக்கருக்களை எடுத்து கதையாக ஆக்கிவிடும் அபாயம். அதை தனக்குத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வு மட்டும் இருந்தால் எதிர்காலத்தில் மேலும் வீச்சுள்ள புதிய கதைகளை உருவாக்கும் எழுத்தாளராக அவர் ஆக முடியும். வாழ்த்துக்கள்

==========================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38

$
0
0

[ 4 ]

பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு  கனல் கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியின் குகைச் சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல் துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து முகம் குனித்து ஆழ இழுத்தார் பிச்சாண்டவர். நெஞ்சு நிறைத்த புகையை உடலெங்கும் பரவவிட்டு மேலும் மேலுமென உடல் குறுக்கி ஒடுங்கினார். சடைப்புரிகள் சரிந்துவிழுந்து நிழலுடன் ஆடி முகம் மறைக்க அமர்ந்த பிச்சாடனரின் இருபக்கமும் அமர்ந்து அந்தணரும் சூதனும் கதையாடினர்.

பிரசாந்தர் “சொல்க சூதரே, நீங்கள் அந்த மலைச்சிற்றூருக்குள்  கண்ட விருத்திரன் யார்? எவ்வண்ணம் அவர்களின் குலத்தலைவன் ஆனான்? அவனை ஈன்றவர் யார்? இந்திரன் அவனை வென்ற கதை எது?” என்றார். பிரசண்டன் “அவர்கள் சொன்ன கதையை நான் இன்று சொல்லமுடியாது. அக்கதையை அன்று என்னுள் இருந்த ஒரு கதைசொல்லி உள்வாங்கினான். அந்தணரே, சூதனுள்   கதைகள் விதைகளெனச் சென்று விழுகின்றன. அக்கதையை நான் நூறு சந்தைகளில் பாடியிருப்பேன். அது ஒரு கவிஞர் நாவில் விழுந்து என்னிடமே மீண்டு வந்தது. விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை நான் சந்தை ஒன்றில் சூக்தன் என்னும் சூதன் பாடக்கேட்டேன்” என்றான்.

“கதை நின்றுகொண்டிருப்பதில்லை. அது நீரோடை, பேராறு, அலைகடல். கதைக்குள் கதைமாந்தர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சொற்கள் ஒவ்வொன்றும் உரசிக்கொண்டிருக்கின்றன” என்றான் பிரசண்டன். பிரசாந்தர்  ”கதையில் எது வளர்கிறதோ அதுவே உண்மை என்று எனது ஆசிரியர் சொன்னதுண்டு. சூதர் சொல்லில் மெய்யே வளரும் என்று எண்ணுகின்றேன்” என்றார்  ”வளர்வதேதும் மெய்யே என்று கொள்வதன்றி மானுடருக்கு வேறுவழியில்லை” என்றான் பிரசண்டன்.

அந்தணரே, நான் கண்ட அந்த மலைக்குகைக்குள் வளைந்து எழுந்த மென்பாறைச்  சுவர்ப்பரப்பில்  கூரிய கற்களால் அடித்து கீறி வடுவாக்கி வரையப்பட்ட ஈராளுயர ஓவியமாக நின்றிருந்தான் விருத்திரன். நீர்ப்பாசி படிந்த அச்சுவரில் அவ்வோவியத்தை காண்பதற்கு விழி பழகவேண்டும். பள்ளக்கோடுகளென செல்லும் அவ்வோவியத்தின் மீது விழிகள் பரவி துழாவி வடிவொன்றை அள்ள முயல்கின்றன. நழுவி மேலும் விழைவு கொண்டு தவிக்கும் ஒரு கணத்தில் மின்னென அம்முகம் தெரிகிறது. அதன் பின் அம்முகமன்றி பிறிதொன்று தெரிவதில்லை.

தொல்முகம் அது.  நாமறிந்த மரங்கள் முளைத்திருக்கவில்லை. நாம் காணும் நகரங்களும் விதைகளுக்குள் இருந்தன. யாரறிவார்? அன்று  மலைகள்கூட சிறியவையாக இருந்திருக்கும். நதிகள் இவ்வண்ணம் திரண்டிருக்காது. யார்முகம் அது? இங்கு எழுந்த அனைத்தையும் கண்டு திகைத்து நின்றிருக்கும் மூதாதை முகம். இல்லை, இங்கெல்லாம் நிறைந்துபெருகியிருக்கும் தன் முகம் கண்டு புன்னகைத்து நிற்கும் தந்தைமுகம். விரிந்த தோள்களில் மலர்கள். சடைத்திரிகள் தொங்கிய பிடரி. ஒருகையில் வாள். பிறிதொன்றில் அமுதகலம். விரிந்த அருள்விழிகள். இதழ்களின் இருபுறமும் எழுந்த வளைதேற்றைகள்.

இந்நாள் வரை இங்கு நிறுவப்பட்ட எந்தப்பேராலயத்திலும் நாம் அம்முகத்தை கண்டதில்லை. என் மைந்தரென சுற்றும்பெருகியிருக்கும் இன்முகம். என் மூதாதையர் என தெற்கில் பெருகியிருக்கும் கிராத முகம். நான் என் கனவால் அதை கண்டுகொண்டேன். அதிலிருந்தேன். விருத்திரன் என்ற சொல்லை என் சித்தம் தொட்டெடுத்ததே  பின்னர்தான். பந்தம் கொளுத்தி வைத்து பச்சையூன் படைத்து மூதாதையை வழிபட்டனர் அவர்கள். மைந்தர்களை அவர் காலடியில் கிடத்தி வணங்கி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஒவ்வொரு பந்தத்தையாக அணைத்து இருளுக்குள் அவரை அமைத்துவிட்டு  வணங்கி புறம்காட்டாமல் வெளியேறினர். “தந்தையே மூத்தவரே, விருத்திரனே  மீண்டும் எங்கள் இளமைந்தருடன் வருகிறோம். எங்கள் குலம் பெருகட்டும். எங்கள் உணவு செழிக்கட்டும். எங்கள் சொற்களில் கனிவு நிறைந்திருக்கட்டும். எங்கள் அம்புகளில் கூர் திகழட்டும். அருள்க!”  என்றார் முதுபூசகர் கபாலர். அப்போதுதான் அச்சொல் என்னுள் உறைத்தது. விருத்திரனா? தொல்கதைகள் சொல்லும் அசுரர்தலைவனா?

திரும்பும்போது கேட்டேன் “என்ன சொன்னீர், விருத்திரனா?” கபாலர் “ஆம், எங்கள் குலம் அவரால்தான் விருத்திர குலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார். என்னுள் அலையென வந்தடித்து பலநூறு கதைகளிலிருந்து நான் விடுபட நெடுநேரமாகியது. வழுக்கும் பாறைகளினூடாக கொடி பற்றி இறங்கி மீண்டும் குகை இல்லங்களுக்கு வந்து குளிர்ந்த பாறையொன்றில் அமர்ந்து நீரருந்தினோம். என்னருகே கபாலர் படுத்துக்கொண்டார்.

விருத்திரன் வாழ்ந்த கதையை அப்பூசகரிடம் நான் கேட்டேன். அவர்களின் தொல்கதையை அவர் சொன்னார். “இப்புவி உளிஓயா பெருந்தச்சன் ஒருவனால் கற்பாறையில் செதுக்கப்பட்டது, பாடகரே. அவனே மலைகளையும் தாழ்வரைகளையும் ஆறுகளையும் நிலவிரிவுகளையும் உருவாக்கியவன். அலைக்கும் கடல்களை அமைத்தவன். அவனை தச்சன் என்று வழிபட்டனர் என் முன்னோர். அந்த முதற்சிற்பி தன் வடிவில் படைத்தவனே பெருந்தச்சனாகிய விஸ்வகன். அவனே இங்கு எழுந்துவரும் ஒவ்வொன்றையும் படைப்பவன். தன்கூட்டை தன்னைச்சுற்றி கட்டிக்கொள்ளும் புழுவென இவையனைத்துக்கும் அடியில் அவன் குடியிருக்கிறான். அவன் மைந்தன் கர்மகன். அவனிடமிருந்தே எங்கள் குடி எழுந்தது.”

பிரசாந்தர் சற்று உளஎழுச்சி கொண்டு கையூன்றி “விஸ்வகர்மன்! அவர்கள் வழிபடுவது விஸ்வகர்மனை” என்றார். “விஸ்வகர்மனை அசுரன் என்றும் அவர் பெற்ற நான்கு மைந்தர்களை மகாருத்ரர்கள் என்றும் பராசரரின் புராணமாலிகை சொல்கிறது.” பிரசண்டன் “கதைகளை கதைகளைக்கொண்டே அறியமுடியும், அந்தணரே. கதைகள் கதைகளுக்கு மட்டுமே பொருள்சேர்க்கின்றன” என்று புன்னகையுடன் சொன்னான்.

கற்பாறையின் தண்மைமேல் முதுகமைத்து மல்லாந்து படுத்து வானை நோக்கியபடி கபாலர் சொன்னார்  “மண்ணுக்குள் புதைந்த சிறுவிதைகளிலிருந்து எழுந்தவை. ஒவ்வொரு கணமும் மண் பிளந்து எழுந்துகொண்டே இருக்கின்றன கோடானுகோடி மரங்களும் செடிகளும். பல்லாயிரம் கோடி துளைகளிலிருந்து விதை கொண்டு வெளிவருகின்றன சிற்றுயிர்கள். இருண்ட வளைகளிலிருந்து மின்னும் கண்களுடன் சுருண்டெழுந்து வருகின்றன நாகங்கள். நாம் நின்றிருக்கும் இம்மண்ணுக்கு அடியில் அனைத்தையும் முளைத்தெழச்செய்யும் பெரும்பரப்பு ஒன்றுள்ளது.”

முதலில் உள்ளது சமூலம். அதை விதைகளினாலான உலகம் என்றனர் என் முன்னோர். அவ்வுலகுக்கு அடியில் சிற்றுயிர் முட்டைகள் செழித்த ஆழுலகொன்று உள்ளது. அதை தாதம் என்றனர். அதற்கும் அடியில் உள்ள பெருநாகங்கள் பின்னி மேலும் பிறிதொரு உலகு. அதை ஜாதம் என்றனர்.  பாடகனே, அதற்கும் அடியில் உள்ளது இப்பெரும்பாறைகளுக்கும் மலைகளுக்கும் ஆணிவேரென்றான ஓர் உலகம். அதன் பெயர் பீஜம். அவ்வுலகுக்கும் அடியில் உள்ள ரேதம் என்னும் உலகில் வாழ்கிறார்கள் மண்மறைந்த நம் மூதாதையர்.

அவர்கள் சென்றடைவது முதுதாதை ஒருவனின் மடியை. அனலுருவ உடல்கொண்ட அவனை விஸ்வகன் என்கின்றனர். அவ்வுலகு ரேதம். அவன் மண்விரிவின் ஆழத்தை முழுக்கநிரப்பும் பேருடலன். அவன் அருகே அவனுடன் நிகரென உடல் பின்னிப் படுத்திருக்கிறாள் மூதன்னையாகிய ஜலை. நீரே உடலென்றானவள். அவர்களுக்கு அடியிலிருப்பது அனலம். தீயும் நீரும் ஒன்றென அலையடிக்கும் முடிவிலி அது. அதன் மேற்பரப்பே அன்னையும் தாதையும் கொண்ட மஞ்சம்.

முதலன்னையும் முதுதந்தையும் பிரிக்கமுடியாத உடலிணைவில் என்றுமுள்ளனர். அவர்கள் பிரியாமலிருப்பதனால் அடியிலுள்ள அனல் வேலியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் தழுவலில் ஒருகணம் நெகிழ்வு விழுந்தால் அனல் பொங்கி எழுந்து உலகைமூடும். அன்னை தன் விரிந்த அல்குலால் தந்தையின் எழுந்த குறியை தழுவிஇணைந்திருக்கிறாள். அவன் உடலில் இருந்து விதைப்பெருக்கு நீள்கொடியினூடாக சாறு என அவள் வயிற்றுக்குள் சென்று குருதியில் கலந்துகொண்டே இருக்கிறது. அவள் உடலின் வியர்வைத்துளைகள் அனைத்தும் கருவாய்களென திறக்க அவற்றிலிருந்து தெய்வங்களும் தந்தையரும் அன்னையரும் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்.

பாடகனே, அறிக! ஒவ்வொரு கணமும் ஓராயிரம் கோடி தெய்வங்கள் அவளிடமிருந்து மண்ணுக்கு எழுந்து வருகின்றன. அவற்றின் வடிவங்களும் முடிவற்றவை. ஈயென எறும்பென கொசுவென குளவியென பாம்பென பல்லியென மான்என குரங்கென களிறென சிம்மமென தெய்வங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அன்னை வாயிலிருந்து பிறந்த பெரும் குமிழி ஒன்று மேலெழுந்து வந்தது. மண்ணில் காலூன்றி தோள்பெருத்த தந்தை என எழுந்ததும் அவன் குனிந்து ஆழத்தை நோக்கி தன் அன்னையிடம் கேட்டான் “அன்னையே, நான் செய்யவேண்டியதென்ன?”

“நீ தச்சன். உன் கைகளில் இருந்து பிறிதொரு உலகு முளைப்பதாக!” என்று அன்னை சொன்னாள். அவனுக்கு கர்மகன் என்று பெயரிட்டான் தந்தை. கர்மகன் நிலத்தை வயல்களென்றாக்கினான். ஆறுகளை ஏரிகளாக்கினான். குகைகளை இல்லங்களாக மாற்றினான். கால்தடங்களை சாலைகளாக்கினான். எரியை அடுப்பிலும் நீரை கலத்திலும் நிற்கும்படி செய்தான். கல்லை தெய்வமாக்கினான்.

அவன் கைகள் பெருகிக்கொண்டிருந்தன. துயிலிலும் அவன் கைகள் பணியாற்றிக்கொண்டிருந்தன. நான்குபக்கமும் பதினெட்டு கைகள் எழுந்ததும் அவனால் படுத்துறங்க முடியாமலாகியது. தன்கைகளை பகிர்ந்தளிக்கும்பொருட்டு அவன் மைந்தர்களைப் பெற எண்ணினான். தனக்குரிய துணைவியைத்தேடி அவன்  காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் யா என்னும் காட்டுமகளைக் கண்டான். அவள் உடலில் நூறு பேற்றுவாய்கள் விரிந்திருந்தன. இவளே என்று முடிவுசெய்து அவளை அணுகி “நீ மைந்தரால் நிறைவாய்” என்றான்.

முதல்தச்சனுக்கு யா என்னும் அன்னையில் ஆயிரத்தெட்டு மைந்தர் பிறந்தனர். அவர்களில் முதல்வர் நால்வர். முதல்மைந்தன் நான்கு கைகளில் உளியும் கூடமும் முழக்கோலும் சரடும் கொண்டு பிறந்தான். “தந்தையே, நான் யார்?” என்றான். “அஜைகபாத் என்று நீ அறியப்படுவாய். நீ கற்சிற்பி. பாறைகள் உன் கைக்கு நெகிழும்” என்றான் தந்தை. நான்குகைகளுடன் உளியும் கூடமும் துருத்தியும் அனலூதியும் கொண்டு எழுந்தான் இரண்டாமவன். “தந்தையே, நான் செய்யவேண்டியதென்ன?” என்றான். “நீ கொல்லன். உன்னை அஹிர்புத்தன்யன் என்பர். நீ படைக்கலங்களை இயற்றுக!” என்றான் தந்தை.

மூன்றாமவன் வணங்கி நின்றான். அவன் கைகளில் துலாவும் ஊதுகுழாயும் கிடுக்கியும் சிற்றுளியும் இருந்தன. “நீ த்வஷ்டா. உன் கனவுகளை பொன்னில் எழுப்புக!” என்றார் தந்தை. இறுதியாக நான்கு கைகளும் அனலென உருகிப்பறக்க வந்த மைந்தனிடம் “நீ ருத்ரன். அனலே உன் ஊடகம். வேள்விக்குளங்களை அமைத்து கணமொரு சிற்பமென சமைப்பாயாக!” என்றான் கர்மகன்.

பாடகனே, நான்கு தச்சர்களால் உருவானவை மண்ணில் எழுந்ததே மானுடம் கொண்ட செல்வங்கள் அனைத்தும். அவர்கள் கோட்டை சூழ் நகரங்களை செய்தார்கள். கொடியென சாலைகள் நெளிந்தன அங்கு. கூரை கவிழ்ந்த மாடங்கள் அமைந்தன. பொற்சூடிய அரண்மனைகள் எழுந்தன . முட்களும் உகிர்களும் அலகுகளும் படைக்கலங்களாக மாறின. நான்கு திசைகளையும் நால்வர் ஆண்டனர். கிழக்கே பொற்தச்சன் த்வஷ்டா நின்றான். மேற்கே இரும்புத்தச்சன் அஹிர்புத்ன்யன் இருந்தான். வடக்கை ஆண்டவன் கல்தச்சனாகிய அஜைகபாத். மூதாதையர் எரிந்தணையும் தெற்கில் வாழ்ந்தான் ருத்ரன்.

[ 5 ]

“பிரதீகம் என்னும் சிற்றூரில் ஒரு சந்தையில் நான்  நின்றிருக்கையில் அங்கு இளம்சூதன் ஒருவன் பாடிய பாடலைக் கேட்டு வியந்து அருகணைந்தேன்” என்றான் பிரசண்டன்.  “அவன் என் சொற்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். சென்று நின்று செவிகொடுத்தபோது கேட்டேன், அவை என் சொற்களல்ல. என் சொற்கள் ஒன்றுநூறென முளைத்து காவியமாகிவிட்டிருந்தன.”

“குப்த சந்திரசூடர் என்னும் கவிஞர் யாத்த விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை அன்றுதான் நான் முதல்முறையாகக் கேட்டேன். பன்னிரண்டு பாதங்களிலாக நூற்றிருபது பாடல்கள் கொண்டது அது. விருத்திராசுரனின் மும்மூதாதையரின் கதையிலிருந்து தொடங்கி அவன் விண்மேவியது வரை பாடியது. அதை விழிமின்ன கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் தொல்குடி அசுரர் என்று கண்டேன். அவர்கள் அதற்கு தங்கள் மடிச்சீலையில் எஞ்சும் நாணயங்களைக்கூட கொடுப்பார்கள். எனவே அக்கதை ஒருபோதும் அழியாதென்று தெளிந்தேன்.”

“அன்றுபாடிக்கொண்டிருந்தவன் பெயர் குணதன். அவனை அன்றிரவு அந்தியில் ஊருக்கு வெளியே ஆற்றங்கரையிலிருந்த விடுதியில் சந்தித்தேன். அக்காவியத்தை எனக்காக முழுமையாகப்பாடும்படிச் சொல்லி நினைவில் நிறுத்திக்கொண்டேன். அன்றிரவு முழுநிலவு. ஆற்றுநீர் மின்னிக்கொண்டிருந்தது. தென்றலை ஒளியலைகளாக பார்த்துக்கொண்டிருந்தேன். “முழுநிலவின் ஒளியில் தன் மைந்தரின் படைப்புலகை நோக்கி உவகைமயக்கில் இருந்த கர்மகனின் தோற்றத்தை அவன் பாடினான்” என்றான் பிரசண்டன்.

“நான் நான் என மானுடன் தருக்கி எழும்  தருணங்கள் இரண்டு. தன் கலைகண்டு நெஞ்சு எழுகையில். தன் மைந்தர் செயல்கண்டு வயிறு மலர்கையில். இரண்டும் நிகழ்ந்தன கர்மகனுக்கு அப்போது. நான்கு கைகளையும் விரித்து நான்கு மைந்தரையும் நெஞ்சோடணைத்து விழிநனைந்தான். விம்மி விம்மி எழும் உள்ளத்தால் நிலைகொள்ளாது தவித்தான். உச்சகணங்களை நிற்க இடமில்லாது ஊசிக்கூர்களாகப் படைத்த தெய்வங்கள் மானுடனுடன் விளையாடுகின்றன” என்று குணதன் பாடினான்.

ஒளியலைகளாக தன்னைச்சூழ்ந்த தெய்வங்களை நோக்கி கர்மகன் கேட்டான் “தெய்வங்களே சொல்க, இப்புவியில் நிகரற்றவன் யார்?” தெய்வங்கள் அமைதிகொண்டிருந்தன. “சொல்க, யார்?” என்று அவன் கூவினான். தெய்வங்களின் ஒலியெழாதிருக்கவே “காண்பீர்கள். மாற்றுச்சொல் இல்லாது நீங்களே ஏற்பீர்கள்” என்றான்.

பெருந்தச்சனாகிய கர்மகன் தன் மைந்தரிடம் “உங்களில் முதல்வர் எவர் என்றறிய விழைகிறேன், மைந்தர்களே. உங்களால் இயன்ற உச்சங்களை சமைத்து அளியுங்கள்” என்றான். “ஆணை” என்று நான்கு மைந்தரும் அவனைப் பணிந்தனர். “அறிக, அவை தெய்வங்கள் அஞ்சும் முழுமை கொண்டிருக்கவேண்டும். அம்முழுமைக்குமேல் ஒன்று எண்ணற்கும் அரிதாக இருக்கவேண்டும்.” மைந்தர் “அவ்வாறே” என்றனர். “படிப்படியாக வெல்வது மானுடர் வழக்கம். தன்னை எரித்து பெருகியெழுவதே ஆசுரம். அவ்வழியே உங்களுக்கு” என்றான் கர்மகன்.

மைந்தர் ஆணைபெற்றுக்கிளம்பினர்.  கற்தச்சனாகிய அஜைகபாத் ஒரு யானை வடிவம் கொண்டு துதிக்கைதூக்கிப் பிளிறியபடி காட்டுக்குள் புகுந்தான். அவனுடைய பிளிறல் கேட்டு பதினெட்டாயிரம் காட்டுயானைகள் துதிசுழற்றி சின்னம் விளித்து அவனைப் பணிந்தன. அந்த யானைகளை அழைத்துவந்து மலைப்பாறைகளைல் உருட்டி அவன் ஒரு கோட்டையைக் கட்டினான். இரையைச் சுற்றி இறுக்கிய மலைப்பாம்பு போல மகாவீர்யம் என்னும் மலையை ஏழுமுறை சுற்றியிருந்தது அந்தக்கோட்டை.

இரும்புக்கொல்லனாகிய அஹிர்புத்தன்யன் ஒரு செங்கழுகாக மாறி பறவைக்குலங்களை அறைகூவினான். வேழாம்பலின் அலகுகள் வாள்களாயின. பருந்துகளின் அலகுகள் வேல்களாயின. கழுகுகளின் உகிர்கள் அம்புகளாயின. அந்தப்பெருங்கோட்டை வெல்லமுடியாத படைக்கலங்களால் நிறைந்தது.

அனைத்து உலோகங்களும் முனைகொண்டமையால் அது முள்செறிந்த மலையுச்சி மரம்போலவும் சினந்த முள்ளம்பன்றிபோலவும் சீறிநின்றது. தெய்வங்களும் அதை அணுக அஞ்சி வளைந்து பறந்தன. அதற்குள் புகுந்த காற்று பல்லாயிரம் சீறல்களாக கிழிபட்டது. அங்கு நீட்டிநின்றிருந்த கூர்களில் ஒளி நீர்த்துளியெனச் சொட்டி நின்றது. அவற்றின் நிழல்களால் நிலம் நாளும் மும்முறை சீவித்தூய்மையாக்கப்பட்டது. அக்கோட்டைக்குள் பறவைகள் நுழையவில்லை. பூச்சிகளும் அங்குசெல்ல அஞ்சின.

த்வஷ்டா ஒரு மாபெரும் தவளை வடிவை எடுத்தான். கங்கை ஆறு காலையிளவெயிலில் பொன்னிறமாக ஓடும் கணத்தில் நீருக்குள் குதித்து மூழ்கி வாயைக்குவித்து ஊதி நுரையெழுப்பலானான். அந்நுரைக்குமிழிகள் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து பெருமாளிகையென்றாயின. தன்னைத்தானே பெருக்கிக்கொண்டமையால் அம்மாளிகை முழுமுதல்தெய்வத்தின் உள்ளத்தில் வாழ்ந்த அந்த முதல்மாளிகையைப்போலவே தானும் அமைந்தது.

படைப்பின் குறை என்பது படைப்பாளியின் எல்லை. தன்னைத்தான் உருவாக்கும் படைப்பு படைப்பவனிடமிருந்து விடுதலைகொண்டுவிடுகிறது. சூதரே, அனைத்து வடிவங்களும் தங்கள் முழுமையை சென்றடையும் உள்விருப்பாலேயே செயலூக்கம் கொள்கின்றன. முழுமைமுழுமை எனத்துடிக்கும் வடிவங்களையே நாம் கலை எனக்கொள்கிறோம்.

அணிமாளிகை விண்முட்ட குவிந்து உயர்ந்து பதினெட்டாயிரம் முகடுகளுடன் இருபத்தெட்டாயிரம் உப்பரிகைகளுடன் முப்பத்தெட்டாயிரம் பலகணிகளுடன் நின்றது. அதன் அழகைக்காண தெய்வங்கள் விண்ணிலும் மண்ணிலும் நிறைந்து நெரித்தனர். தெற்கே கடல்சூழ்ந்த நிலங்களில் இருந்தும் வடக்கே பனிசூழ்ந்த உச்சிகளில் இருந்தும் மேற்கே பெரும்பாலைகளில் இருந்தும் கிழக்கே எழுந்த பசுங்காட்டுவெளிகளில் இருந்தும் பன்னிரண்டாயிரத்து எட்டு பழங்குலங்களைச் சேர்ந்தவர்களும் தேடிவந்தனர். அவர்களின் பாணர்கள் அதை பாடல்களாகப் பாடினர்.

பாட்டில் அந்த மாளிகை நெய்யுண்ட எரியென மேலும் வளர்ந்தது. அதைப்பாடியவர்களெல்லாம் அதில் ஒரு மாடத்தைக் கட்டினர். அதைக் கேட்டவர்களெல்லாம் ஒர் உப்பரிகையை இணைத்தனர். நினைவுகூர்ந்தவர்களெல்லாம் ஒரு பலகணியை திறந்தனர். பெருகிப்பெருகிச்சென்ற மாளிகை விண்முகில்கள் நடுவே பொன்னிற ஒளியுடன் எழுந்து நின்றது. மழைமுகில்கள் அதில் முதுகுரசிக்கொண்டன. அவை அதன் தண்மையால் எடைபெற்று அங்கேயே நின்றமையால் தேங்கிக் குளிர்ந்து சுனையென்றாயின. சுனையின் அடிப்படலம் கிழிய மழையெனப்பொழிந்தன. அதன் பொன்மாடங்கள் மேல் எப்போதும் மழைபொழிந்துகொண்டிருந்தது. அதன் கூரைமடிப்புகளிலிருந்து அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன.

சிறந்தவை தங்கள் இருப்பாலேயே அறைகூவலென்றாகின்றன.  விண்ணுலாவியாகிய நாரதர் ஒருநாள் முகில்களினூடாகச் செல்லும்போது கூட்டம்கூட்டமாக அசுரதெய்வங்கள் செல்வதைக் கண்டார். “எங்குசெல்கிறீர்கள், தெய்வங்களே? உங்களை ஆளும் பெருந்தெய்வமொன்று மீண்டும் எழுந்துள்ளதா?” என்றார். “ஆம், அத்தெய்வத்தின் மாளிகை எழுந்துள்ளது அங்கே” என்றார்கள் அவர்கள்.

அவர் மேலும் செல்லும்போது கந்தர்வர்கள் ஒளிரும் மணிமுடிகளும் வெண்சிறகுகளுமாக வண்ணத்துப்பூச்சிகளின் பெருக்கென சென்றுகொண்டிருப்பதைக் கண்டார். “எங்குசெல்கிறீர்கள், கந்தர்வர்களே?” என்றார். “பேரழகு எங்களை ஈர்க்கிறது. பிறிதெங்கும் நிலைக்கமுடியவில்லை” என்றனர்.

மேலும் செல்லும்போது கின்னரர்கள் செல்வதைக் கண்டார். “அழகிய பொருட்களில் இசைநிறைந்துள்ளது, நாரதரே” என்றனர். மேலும் சென்றபோது வித்யாதரர்களைக் கண்டார். “மெய்மை என்பது முழுமை. முழுமையே அழகென விழிகளால் அறியப்படுகிறது” என்றனர்.

இறுதியாக அவர் தேவர்களைக் கண்டார். அவர்கள் பித்தெழுந்த விழிகளுடன் விண்ணில் ஒளிக்கீற்றுகளாக வழிந்துசென்றுகொண்டிருந்தனர். “எங்குசெல்கிறீர்கள், தேவர்களே?” என்றார். “நாங்கள் வெற்றியை நாடுபவர்கள். உடல்மேல் உள்ளம் கொண்ட வெற்றியே ஆற்றல். பொருள்மேல் ஆற்றல்கொண்ட வெற்றியே செல்வம். செல்வத்தின்மேல் கனவு கொண்டவெற்றியே அழகு. அழகின்மேல் மானுடன் கொள்ளும் வெற்றியே கலை. முழுமைகொண்ட கலை  மெய்மையின் பருவடிவு.  மெய்மையே மானுடனை தெய்வமாக்குகிறது. அதை ஒருவன் அடைந்துள்ளான். அவனைக் காணச்செல்கிறோம்” என்றனர்.

நாரதர் அமராவதிக்குச் சென்று அங்கே வைஜயந்தத்தில் இந்திராணியுடன் அமர்ந்திருந்த இந்திரனைப் பார்த்தார். அவனைச்சூழ்ந்திருந்தன முழுமைகொண்டவை அனைத்தும். நீர்மலர்களில் தாமரை. கிளைமலர்களில் பாரிஜாதம். கொடிமலர்களில் முல்லை. பறப்பனவற்றில் செங்கழுகு. தவழ்வனவற்றில் அன்னம். பாடுவனவற்றில் குயில். பேசுவனவற்றில் பசுங்கிளி. ஆடுவனவற்றில் மயில். தாவுவனவற்றில் புள்ளிமான். தயங்குவனவற்றில் வரிப்புலி. முக்கனிகள் காய்த்த மரங்கள். முலைகனிந்த காமதேனு. நிழல் விரித்த கல்பமரம். துதிக்கை அசைத்தபடி ஐராவதம்.

வணங்கி அருகமர்ந்த நாரதர் “முழுமையைத் தோற்கடிப்பது தெய்வங்களின் ஆடல்போலும்” என்று பெருமூச்சுடன் சொன்னார். இந்திரன் வினாவெழுந்த புருவங்களுடன் நோக்க “தெய்வங்கள் அழகிலும் சிறப்பிலும் முழுமையை அடைந்ததுமே நிறைவின்மைகொள்கின்றன. ஏனென்றால் முழுமைக்கு அப்பால் நின்றிருப்பவை அவை. மேலுமொரு முழுமையை அவை படைக்கின்றன. முந்தைய முழுமையை குறையென ஆக்கி விளையாடுகின்றன” என்றார்.

அவரை நன்குணர்ந்திருந்த அவன் அவர் சொல்லவருவதை உய்த்தறிந்தான். “சொல்க, இங்கு நீங்கள் கண்ட குறை என்ன?” என்றான் இந்திரன். “நான் காணவில்லை. இங்குள்ள தேவர்கள் காண்கிறார்கள்போலும். மண்ணில் அசுரசிற்பியின் மைந்தர் நால்வர் அமைத்த மகாவீர்யம் என்னும் பெருநகர் அனைத்திலும் முழுமைகொண்டிருக்கிறதென்கிறார்கள். பெருஞ்சிற்பியின் நான்கு மைந்தர்களான ருத்ரர்களில் த்வஷ்டா அமைத்த மணிமாளிகை  விண்முகில்களையே ஆடையென அணிந்து நின்றிருக்கிறது.”

“அங்கு சென்று சூழ்ந்திருக்கின்றன அவர்களின் தெய்வங்கள். உடன் நம் தேவர்களும் நெருக்கியடிக்கிறார்கள். இங்கு வரும்போது பார்த்தேன், இலையுதிர்காலத்து பொன்னிறச்சருகுகள் என தேவர்கள் அமராவதியிலிருந்து உதிர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். இப்பெருநகரின் அனைத்து வீதிகளும் ஒழிந்துகிடக்கின்றன. அமுதமுண்ணவும் இங்கு தேவரில்லாமலாகும் நிலைவருமோ என எண்ணிக்கொண்டேன்” என்றார் இசைமுனிவர்.

வினைமுடித்து நாரதர் கிளம்பும்போது இந்திரன் முகம் சுருங்கி இதழ்கள் இறுகி கைவிரல்களால் வெளியை சுழித்துக்கொண்டிருந்தான். அவர் சென்றபின் வியோமயானம் மீதேறி விண்வழி ஊர்ந்தான். கீழே மண்மகளின் மணிமுடி என எழுந்து நின்ற மாளிகையைக் கண்டான். அவன் உடல் பதறத்தொடங்கியது. யானைமேலிருந்து வழுக்கி விழுபவன்போல தடுமாறினான்.

உடல் எரிய திரும்பி அமராவதிக்கு வந்தான். அவனுக்கு காய்ச்சல் கண்டிருக்கிறதென எண்ணி அவன் தேவி அவனை ஆறுதல்படுத்த வந்தபோது சினந்து கையோங்கி அவளை அடிக்கப்போனான். கொந்தளிப்பு தாளமுடியாமல் சுற்றிச்சுற்றிவந்தான். அருகே வந்து உசாவிய வசிட்டரிடம் நிகழ்ந்ததை சொன்னான். “முதல்வனாக அன்றி நான் இருக்கவியலாதென்பதே என் நெறி. முதன்மை என்பது கணம்தோறும் நூறு குரல்களால் அறைகூவப்படுவது” என்றான். “வெற்றிகளால் ஆனதே என் காலம். இவ்வரியணை முந்தைய கணம் வரை நான் வெல்லப்படவில்லை என்பதன் சான்றுமட்டுமே” என்று உறுமினான். “நான் வென்றாகவேண்டும். எவ்வகையிலாயினும் வென்றாகவேண்டும்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகள் கடிதங்கள் -14

$
0
0

[தருணாதித்தன்]

அன்புள்ள ஜெயமோகன்,

 

நன்றி. ஒவ்வோரு நாளும் இவ்வளவு எழுதிக் கொண்டு, இவ்வளவு படித்துக் கொண்டு, நண்பர்கள் வட்டம், பிரயாணங்கள் எல்லாவற்றுக்கும் நடுவே, புதிய எழுத்தாளர்களை ஆழ்ந்து படித்து , அவற்றைப் பற்றி விரிவான மதிப்பீடுகளுக்கு.

 

என்னுடைய கதைகளைப் பற்றி மிகத்துல்லியமாக எழுதி இருக்கிறீர்கள். குறைகளை மிகச் சரியாக காட்டி இருக்கிறீர்கள், அதே சமயம் எப்படி திருத்தினால் இன்னும் மேம்படும் என்ற குறிப்புகளுடன். அதுதான் எனக்கு முக்கியம். நீங்கள் சொல்லி இருக்கிற மாபெரும் முன்னோடிகள்தான் என்னுடைய குரு பரம்பரை. மிகச் சரியான கணிப்பு.

 

மேலும் என் கருத்துக்களை இப்போதே எழுத விருப்பம்,  ஆனால் வார நாளில், அதுவும் காலையில் இயலாது..

 

நன்றிகள் பலகோடி நூறாயிரம்.

 

தருணாதித்தன்

 

அன்புள்ள தருணாதித்தன்,

 

உங்கள் மொழிநடைக்குள் இருக்கும் இயல்பான நகைச்சுவை பெருகுக

 

ஜெ

தருணாதித்தன் சிறுகதைகள்

p[மகேந்திரன்]

அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம் என்று எண்ணுகிறேன்.
கொஞ்ச நாட்களாகவே கடிதம்  எழுதவேண்டும் என்று  நினைத்திருந்தேன் விஷ்ணுபுரம் பற்றி, உங்களை என்  வீட்டுக்கு அழைப்பதைப் பற்றி,ஆன்மிகம் பற்றி ….. வேலைப் பளுவால்  முடியவில்லை.

இருபது நாட்களுக்கு அப்புறம், உங்கள்  தளத்தை இப்போதுதான்  பார்க்கமுடிந்தது. என்னுடைய  புகைப்படம் இருப்பதைப் பார்த்து  ஆச்சரியப்பட்டேன்.அப்புறம் கொஞ்ச  நேரம் எடுத்துப் படித்த போதுதான் எல்லாவற்றையும்புரிந்துகொள்ள  முடிந்தது.

நீங்கள் என்னுடைய கதையை படித்து  விட்டு அதற்கான விமர்சனம் சொன்னீர்கள் என்பதே பெரிய விசயம்  என்று நான் நினைக்கிறேன்.உங்களுக்கு இருக்கும் வேலைப் பளுவில்  இதையேல்லாம் செய்யவேண்டிய அவசியம் இல்லை ஆனாலும்  செய்திருப்பது உங்கள்  பெருந்தன்மையையும்,புதிய  எழுத்தாளரின் வளர்ச்சியைப் பற்றிய  அக்கறையையும் தான்காட்டுகிறது.  மகிழ்ச்சி.

விமர்சனம் செய்வது என்பது கூட  எளிதான காரியம் இல்லை போலும். உங்கள் விமர்சனம் மிகக் கச்சிதமாக  இருக்கிறது. எடுத்துக்காட்டாய் நான் கதை என்று சொல்லிக்கொள்ளும்  ஒன்றுக்கு நீங்கள் எழுதிய விமர்சனம். சிறுகதைக்கான முதல் பத்தியை மட்டும் விரித்து எழுதப்பட்டது போல உள்ளது. இதற்கு மேல் கூர்மையாகவும், கச்சிதமாகவும் சொல்ல முடியும்என்று தோன்றவில்லை.

இது என் மிக ஆரம்பக் கால கதை என்று சொல்லுவதை விட நான் இன்னும தொடங்கவே இல்லை என்பதே உண்மை. எப்படிச் சிறு குழந்தை “அ” போட்டு நம்மிடம் காட்டினால் இருக்கும் அது  போல இருக்கிறது. அது “அ” இல்லை என்றாலும், குழந்தை வளர, வளர அது  கச்சிதமானதாய் மாறும்.அது போலத்தான் நான் எழுதிய கதையும்,  சிறுகதைக்கான வடிவத்தையோ, தொழில்நுட்பத்தையோ இன்று  கொண்டிருக்கவில்லை. எல்லா விமர்சனங்களையும் நான் மதிக்கிறேன். காரணம், என் கதைக்கானஉண்மை  நிலையையே பிரதிபலிப்பதாய் உள்ளது.

எத்தனை முறை ஜெ அவர்கள்  சிறுகதையைப் பற்றி சொல்லி  இருக்கிறார்,இருந்தும் இது போன்ற  கதையை எழுதி அனுப்பியதற்காக  வருத்தம் அடைகிறேன். குறைந்தது வடிவ  ஒழுங்காவது இருந்திருக்க வேண்டும். சிறுகதை பற்றி எனக்குத் தெரிந்தாலும் அது ஜெவின் கருத்துக்களாக என்னுள் இருக்கிறது. என்றைக்கு அது  என் எண்ணங்களாக ஆகிறதோ அன்று நல்ல கதை எழுதவருமென  நினைக்கிறேன். என்ன.. அது கோரும் உழைப்பையும், நேரத்தையும் தர  முடியாத நிலையில் இருக்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான்  எழுதியது சிறுகதையே இல்லை என்பதும் உண்மை. ஆனால் வரும்  நாட்களில் நல்ல சிறுகதைகளை எழுதுவேன் என்பதும் உண்மை.

நான் இரண்டு நபர்களுக்கு நன்றி  சொல்லியே ஆக வேண்டும்.
ஒன்று மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு. திடீரென நிர்வாணமாய் ஆகாயத்தின் முன் நிறுத்திவிட்டார்.  எப்படி கீழே உட்க்காந்திருப்பவனை, மேடையில் வந்து பேச சொன்னால்  இருக்குமோ அதைப் போல. நான எவ்வளவு மோசமாய் கதை எழுதுவேன என்று எல்லோருக்கும்தெரிந்துவிட்டது, இனி பயமில்லை. சிறுகதையை நோக்கி நான் நகரும்ஒவ்வொரு முயற்சியும் என் வெற்றிதான் என்று நினைக்கிறேன்.  அந்தவகையில் அவருக்கு நன்றி.
மற்றொரு நன்றி எழுத்துப்பிழையைச்  சரி செய்ய. இணையதளத்தைக்காட்டியதற்காக அந்தச் சகோதரிக்கு. புதிய எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெ அவர்களே நீங்கள் சென்னைக்கு
வருகின்ற நாட்களில், எதாவது ஒருநாள் மதிய உணவுக்கு எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். பக்கத்தில் புராதனசிவன் கோயில் இருக்கிறது சென்றுவிட்டு மாலைவேளையே நீங்கள் திரும்பிவிடலாம்.

நன்றி,
மகேந்திரன்.

 

அன்புள்ள மகேந்திரன்

 

இளமையில் கடுமையான விமர்சனங்கள் நல்லவை. அவை சீண்டுகின்றன. நம் உள்ளாற்றல் நமக்குத்தெரியும் என்பதனால் விமர்சனங்களைப் பார்க்கையில், இல்லை நான் இவ்வளவல்ல, நான் இதற்கும் மேலே என்று நம் உள்ளம் சொல்கிறது. அந்த அறைகூவலை நாம் நமக்கே விட்டுக்கொள்ளவேண்டும்\

 

வாழ்த்துக்கள்

 

ஜெ

download (1)[கெ ஜே அசோக்குமார் ]

 

அன்புள்ள ஜெ.

வணக்கம். முன்பு வாசலில் நின்ற உருவம் கதை வந்தபோது சொன்ன கருத்துகளைக் கொண்டு என் எழுதும் முறையை மாற்றி எழுத ஆரம்பித்திருந்தேன். இந்தபாம்புவேட்டை கதையின் உங்கள் கருத்துக்களை படித்ததும் இன்னும் என் மனதில்
மாற்றம் நிகழவில்லையோ என்று அச்சம் தோன்றுகிறது.

முதலில் கதை எழுதித் தேர்ந்த கையால எழுதியது என்று தொடங்கி, முடிவில் கதை நிகழ‌வில்லை என்றே முடித்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதில் வருத்தமில்லை. கற்றுக்கொள்ள இடம் இருக்கிறது என்ற புரிதலை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் எழுத்துமுறைமீது ஒரு சந்தேகம் வந்துவிட்டது.
இதற்கு முன்பு இக்கதையை பலர் பாராட்டி பேசி எழுதியபோதும் அதில்நிகழாததைப் பற்றி ஒருவர்கூட சொல்லவில்லை என்பது என் குழப்பத்தை அதிகரிக்கிறது. உண்மையில் நீங்கள் சொன்னதை நினைவில்வைத்து எழுதும்போது கவனம் கொண்டு எழுதியிருந்தேன். அந்த நினைவுகள்/நிகழ்வுகள் இந்த கதையில் சரியான தளத்தில் தான் இருக்கிறது என்றே நினைத்திருந்தேன்.

 

மிக்க நன்றி.
கே.ஜே.அசோக்குமார்.

 

அன்புள்ள அசோக் குமார்

 

குழப்பம் நல்லதுதான். நீங்களே உங்களைக் கண்டுகொள்ளமுடியும்

 

ஜெ

 

கே ஜே அசோக்குமார் படைப்புக்கள்

 

 

===================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு

$
0
0

C360_2016-05-06-12-37-25-417

 

காமம் குரோதம் மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது. மோகமோ புறவுலகைச் சார்ந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிறைந்திருப்பது குரோதமேயாகும். குரோதம் அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பு. எரிதலின் பேரின்பம் அது. எரிதலின் உச்சம் அணைதலே. குரோதம் தன்னைத் தானழித்துக்கொள்கையிலேயே முழுமை கொள்கிறது

மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு [வெண்முரசு நாவல் குறித்து உரையாடல்]

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தனிமையும் பயணமும்

$
0
0

IMG_2463

அன்புள்ள ஜெயமோகன்,

வீடு துறந்தவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பிரமிப்பும் பொறாமையும் ஏற்படும். எத்தனையோ முறை அவர்களை ஏக்கத்தோடு கடந்து சென்றிருக்கிறேன். இதில் வாழ்க்கைச் சூழ்நிலைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு சாரர் இருந்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் தன்னை அறியும் தேடலுக்காக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளத் துணிந்தவர்களே.

உங்களின் புறப்பாடுஅனுபவங்களைப் படித்தேன். இலக்கற்ற பயத்தில் கிடைக்கும் சுதந்திரம் ஒரு Planned Tour-ல் கிடைப்பதில்லை. இலக்கை நிர்ணயித்து ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வர வேண்டும் என எண்ணும் தருணத்திலிருந்தே அதில் ஒரு செயற்கைத் தன்மையும் மனச் சோர்வும் ஏற்பட்டுவிடுகிறதாக கருதுகிறேன். நாம் அந்த இடத்திற்கு ஸ்தூலமாக செல்லும் முன்பே மனம் அங்கு தன் பயணத்தை தொடங்கி விடுகிறது செல்லுமிடம் நிர்ணயிக்கப்படுதில் இருக்கும் சிக்கலாக இதைப் பார்க்கிறேன்.

புறப்பாடுகால பயண அனுபவங்களுக்கும் தற்போதய தங்களின் பயணங்களுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? குழுவாக செல்லும் போது சூழ்நிலைகளால் உங்களின் தனியுலகம் சுருக்கப்படாமலிருக்க என்ன செய்வீர்கள்? பராரியாக சுற்றித்திரிந்த பயணம் போய் இப்போது உடை முதல் இருப்பிடம் வரை முன்னேற்பாடு செய்து செல்வது சுமையாக இல்லையா? என் அறிதலுக்காக தங்களின் தற்போதய பாணி பயண முன்னேற்பாடுகளையும் அனுபவங்களையும் பகிறவும்.

காவியுடை அணிந்த தங்களின் புறப்பாடு அனுபவங்களையும் படிக்க ஆவலுருகிறேன்.

ஜெ. விஜய்.

ஜெய்சல்மர், ராஜஸ்தான்.

wpid-wp-1475575107835.jpeg

அன்புள்ள விஜய்,

வீடுதுறத்தலும் அலைதலும் ஒரு பருவத்திற்குரியவை. அந்தப்பருவத்தில் நாம் பிருடைய வீட்டில் இருக்கிறோம். நம்முடைய வீட்டை நாம் உருவாக்கிக்கொண்ட பின் அந்நிலைமை வேறு. நான் என் வீட்டுக்குத் திரும்பி வந்தவன். நிரந்தரமாக வீடுதுறக்க வேண்டுமென்றால் முழுமையான துறவை நோக்கிச் செல்லவேண்டும்.

இப்போதைய பயணங்கள் எவையும் முழுமையாகத் திட்டமிட்டுச் செய்யப்படுபவை அல்ல. நாங்கள் கிளம்புவதும் திரும்புவதுமே திட்டமிடப்பட்டிருக்கும். செல்லும் ஊர்களைப்பற்றிய மிகக்குறைவான தகவல்களே எங்களிடம் இருக்கும். ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஊர்களின் பக்கத்து ஊர்களிலேயே அந்த ஊர்களைப்பற்றி ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்

உதாரணமாக இப்போது வேலூர் அருகே அருகர்மலைக்குச் சென்றிருந்தோம். அந்த ஊரைத்தேடிச்செல்லவே பலமணிநேரம் ஆகியது. ஆடுமேய்ப்பவர்தான் வழிகாட்டினார். அங்கு என்ன இருக்கும் என்று தெரியாது. அப்படிச் சென்று கண்டடைவது ஒரு பெரிய அற்புதம், ஒரு ஊர் அப்போது பிறந்ததுபோல நம் முன் எழுந்து வருவது. அதுதான் பயணத்தின் முதல்பேரின்பம்

புதிய ஊர்களில் சென்று இறங்கி தங்க இடம் தேடுவது இன்னொரு மகிழ்ச்சி. அன்றிரவு எங்கு தங்குவோம் என்பது அக்கணத்திலேயே முடிவாகும். அறியப்படாத ஊர்களில் காலை எழுந்து அன்றைய நாளைத் தொடங்குவது ஒரு பெரிய கொண்டாட்டம். இன்றும் அப்படியே நீடிக்கிறது

தனிமை ஓரு காலத்தில் ஒருவகையான வதையாக, ஒரு பயிற்சியாக நீடித்தது. இன்று அது ஓர் இயல்பான நிலை. இன்று அத்தனிமைக்குள் வாழவும் அதேசமயம் சமூகமனிதனாகவும் இருக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலையே என்னுடைய முதல் இலக்கு.

ஆனால் உள்ளூர நான் எப்போதுமே தனியன். வீட்டில் எழுதும்போது முழுமையான தனிமைதான். தனித்திருத்தல் சற்றே சலிக்கும்போதுதான் பயணம். உடன் அத்தனிமைக்குள் நான் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டும்தான். அது வேறுவகையான அனுபவம்

மேலும் இன்று எனக்குப் பயணம் தேவைப்படுவதே நான் தனித்து அலையும் புனைவுவெளியில் இருந்து வெளிவருவதற்காகத்தான். எழுதும்போதிருக்கும் அந்த உச்சநிலையை அப்படியே நீட்டித்துக்கொள்வதற்கு. நிலக்காட்சிகளை உள்ளே நிறைத்துக்கொள்வதற்கு. தொலைந்துபோவதற்கு அல்ல. அதற்கு மொழிநிலம் இருக்கிறது

நண்பர்களுடன் சேர்ந்து போவதில் உள்ள மிகப்பெரிய வசதி சாப்பாடு தங்குமிடம் போன்ற அன்றாடச்செயல்களை முழுக்க அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நாம் நம் அந்தரங்க உலகில் திளைக்கமுடியும் என்பது

தனித்தும் பயணம் செய்வதுண்டு. அப்பயணங்களைப்பற்றி அதிகம் எழுதுவதில்லை, தனிமை கலையக்கூடாதென்பதற்காக.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39

$
0
0

[ 6 ]

ஏழுமாத காலம் எண்ணி எண்ணி ஏங்கி வெந்து சுருங்கிய இந்திரனிடம் இந்திராணி சொன்னாள் “அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால் இவ்வஞ்சம் அணையக்கூடும்.” இந்திரன் சினத்துடன் உறுமினான்.

“கரந்தமையும் எண்ணம் எதுவும் நஞ்சு. வஞ்சம் வீண் எண்ணங்களை உணவெனக்கொண்டு பெருகுவது. நீங்கள் எண்ணுபவன் அல்ல அவ்வசுரன் என்றிருக்கலாம். உங்கள் சொல்கேட்டு நண்பனென்றும் ஆகலாம். சென்று பாருங்கள். நல்லவை நிகழுமென நம்புங்கள்” என்றாள் இந்திராணி. எண்ணி இருநாட்கள் இருந்தபின் “ஆம், அவன் முகம் எனக்கு வேண்டும். வெறுப்பதற்கேனும். அவன் வல்லமையை நான் அறியவேண்டும். என்னுள் போர்புரிந்துகொள்வதற்கேனும்” என்றான் இந்திரன்.

ஒரு வெண்புறாவாக மாறி பறந்து மகாவீரியத்தின் முகடு ஒன்றின்மேல் இறங்கினான் முதல் அமரன். முதிய அந்தணனாக உருக்கொண்டு கழியூன்றி நடந்து சென்று நான்கு ருத்ரர்களை சந்திக்க  ஒப்புதல் கேட்டான். முதல் ருத்ரன் மலைப்பாறைகளை தேடிச் சென்றிருந்தான். இரண்டவது ருத்ரன் இரும்பு அகழ மண்ணுக்குள் துளைத்துச் சென்றிருந்தான். நான்காம் ருத்ரன் வேள்விச்சாலையில் மட்டுமே  இருப்பவன்.

இந்திரனை மூன்றாவது ருத்ரனாகிய த்வஷ்டாவின் முன் கொண்டுசென்று நிறுத்தினர் அசுரகுலக் காவலர். “அரசே, அளப்பரிய ஆற்றல்கொண்டிருக்கிறாய். நீ அமைத்த நகர்தான் இதுவரை மண்மேல் எழுந்தவற்றிலேயே முதன்மையானது. அதைப் பார்த்து வாழ்த்திச் செல்லவே வந்தேன். நீ வாழ்க! உன் நகர் நீடூழி வாழ்க!” என்றான்.

நற்சொல் கேட்டு மகிழ்ந்த த்வஷ்டா “அந்தணரே, நீர் விரும்பும் பரிசு எது? சொல்லுங்கள், இப்போதே அளிக்கிறேன்” என்றான். “நான் பரிசில்பெற வரவில்லை, ஒரு சொல்லுரைத்துச் செல்லவே வந்தேன். அரசே, முழுமையான செல்வத்தையும் அழகையும் இன்பத்தையும் மானுடரோ அசுரரோ நாடிச் செல்லலாகாது. முழுமையைத் தேடும் இன்பமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையில் அமர்வது அவர்களுக்கு பெருந்துன்பமே ஆகும்” என்றார் அந்தணர்.

“அரசே, முழுமையை நாடி மலர்களுக்கு தேனீக்கள் என தெய்வங்கள் வந்துகொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் இப்பெருநகரை அடையவிரும்பினால்கூட நீ அத்தெய்வத்துடன் சமராடவேண்டியிருக்கும். அது உன்னை அழிவுக்கே கொண்டுசெல்லும். மானுடர் பெற்றுப்பெருகுபவர். அன்னத்தில் முளைக்கும் எதுவும் அன்னத்தின் கட்டுக்குள் அடங்கியதே. அன்னம் மிகுவதில்லை குறைவதுமில்லை. அன்னம் அழிந்தே அன்னம் பிறக்கமுடியும். அன்னம் எரிந்தே அன்னம் வாழமுடியும்.”

“வேந்தே, தெய்வங்கள் எண்ணத்தில் பிறப்பவர்கள். எண்ண எண்ணப் பெருகுபவர்கள். ஆகவே தெய்வங்களை மானுடரோ அசுரரோ வெல்லவே முடியாது. தேவர்கள் எண்ணங்களை உருவாக்குகிறார்கள். எண்ணங்கள் வேள்விகளாக ஆகுதியாகின்றன. செயல்களாக பெருகுகின்றன. வேள்வியும் செயலும் தேவர்களை பெருக்குகின்றன. ஆம், நீ வல்லவன். தெய்வங்களை எதிர்த்து நிற்பவன். ஆனால் அச்சமர் புயல்காற்றில் மலர்மரம் என உன் உள்ளத்தை ஆக்கும். ஒருகணமும் நீ உவகைசூடி  அமைய முடியாது.”

“ஆகவே முழுமைக்கு முன்னரே நின்றுவிடுவதே இன்பத்தில் என்றும் வாழும் வழி. உலகோருக்கு என முன்னோர் நெறியொன்று அமைத்துள்ளனர். அணிகொள்கையில் ஒரு குறை வை.  அன்னமுண்ணும்போது ஒரு துளி கசப்பும் இலையில் வை. செல்வக்குவையில் ஒரு பிடி அள்ளி பிறருக்கு அளி. அரசே, இல்லத்தில் ஒரு சாளரக்கதவை எப்போதும் மூடி வை. அகல்களில் ஒன்றில் சுடரில்லாமலிருக்கட்டும். அதுவே வாழ்நெறி” என்றார் அந்தணர்.

“வெறுமையும் முழுமைகொள்ளலாகாது என்றறிக! எனவே நீர் சேந்தும்போது ஒரு குவளை மிச்சம் வை. மலர்கொய்யும்போது ஒரு மலர் மிஞ்சியிருக்கட்டும். மைந்தரைக் கொஞ்சும்போது ஒரு சொல் உள்ளத்திலேயே எஞ்சட்டும்” என்றார் அவர். “பெருக்கத்தில் பணிவென்று மூதாதையர் சொன்னது இதையே. செல்வம் இன்பமென மாறும்போதே பொருள்கொள்கிறது. ஆணவமென இருக்கையில் அது நோய்க்கட்டியே ஆகும்.”

எண்ணம் திரள நோக்கிக்கொண்டிருந்த ருத்ரனிடம் “இப்பெருநகர் முழுமைகொண்டிருக்கிறது. இதன் அனைத்து முகடுகளும் பழுதற்ற வடிவுடன் உள்ளன. அனைத்து உப்பரிகைகளும் கொடிகள் பறக்க ஒளிகொண்டுள்ளன. இதன் அனைத்துச் சாளரங்களும் வாயில்களும் விரியத் திறந்துள்ளன. இது தெய்வங்களுக்கு விடப்படும் அறைகூவல். உன் நலம்நாடியே இதை சொல்கிறேன். இப்பன்னிரண்டாயிரம் முகடுகளில் ஒன்றை இடித்துவிடு. அந்தக் குறை இந்நகரை வாழச்செய்யும்” என்றார் அந்தண முதியவர்.

சினந்தெழுந்து கைகளை தட்டியபடி த்வஷ்டா கூவினான் “ஒளி வளருமென்றால் இருளும் உடன்வளருமென்றறிக, அந்தணரே! மலைகளைவிடப் பெரிது மலைநிழல் என்று உணர்க! முழுமையை வென்றபின் நான் மானுடனல்ல, அசுரனுமல்ல. நானே தெய்வம்.” அந்தணர் முகம் சுளித்து “தருக்கி நிமிரலாகாது, அரசே. தெய்வமென்று தன்னை உணர்தலைப்போல மானுடன் தெய்வங்களுக்கு இழைக்கும் பிழை பிறிதொன்றில்லை” என்றார்.

“ஆம், தெய்வங்களைப்போல வெல்வது என்றால் அது பிழை. தண்டிப்பதென்றால் பெரும்பிழை. அடைவதென்றால் பிழையினும் பிழை. ஆனால் படைப்பதென்பது பிழையல்ல. படைத்து திரும்பி நோக்கி இது நான் என்றுணர்பவனை தெய்வமென்றாக்குவது தெய்வங்களைப் படைத்த வல்லமை” என்றான் த்வஷ்டா. “ஆம், உன்னால் படைக்கமுடியும் என்று உணர்ந்துவிட்டாய். வென்றவனென்று உன்னை உணர்ந்துவிட்டாய். இனி நீ ஓர் அடி எடுத்து பின்னால் வைக்கலாம். ஒரு முகடை இடி. ஓர் உப்பரிகையையாவது அழி” என்றார் அந்தணர்.

“அதை எந்தக் கலைஞனாலும் செய்யமுடியாது, அந்தணரே. அந்தக் குறையின் சிறுபுள்ளியிலேயே சென்று மோதிக்கொண்டிருக்கும் அவன் சித்தமெல்லாம். அதை வெல்லாமல் அடுத்த படைப்பை அவன் ஆக்கமுடியாது. அறிந்து ஒரு படைப்பில் குறைவைத்த கலைஞன் வாளெடுத்து தன் கைகளை தானே அறுத்தெறிந்தவன். இதை வென்றபின் இனிமேல் என்ன என்றே நான் எழமுடியும்” என்றான் பொற்சிற்பி.

அந்தணர் தன் உருமாற்றி மணிமுடியும் ஒளிர்படையும் கொண்டு எழுந்தார். பெருங்குரலில் இந்திரன் சொன்னான் “நான் தேவர்க்கரசன். எனக்கிணையாக ஒன்றை நான் ஒப்பக்கூடாதென்பதே தெய்வங்கள் எனக்கிட்ட ஆணை. இம்மணிமாளிகையை நான் அழித்தாகவேண்டும். அதை அழிக்க வேண்டாமென்றுதான் நானே உன்னிடம் வந்தேன்.” அவன் எவரென உணர்ந்ததும் மேலும் சினம்கொண்டு “இது போருக்கான அறைகூவல். இதை எதிர்கொள்ளவேண்டியவர் என் உடன்பிறந்தார் இருவர்” என்றான் த்வஷ்டா.

“ருத்ரனே கேள், என்னை எதிர்த்து எவரும் இன்றுவரை வாழ்ந்ததில்லை. அழியவேண்டாம் என்று உன்னிடம் கோருகிறேன்” என்றான் இந்திரன். “படைக்கப்பட்டுவிட்ட ஒன்று அழிவதில்லை. அது பிறிதொரு படைப்புக்குள் தன்னை செலுத்திக்கொண்டுவிடும்” என்றான் த்வஷ்டா. சினந்து தன் வாளை நீட்டியபடி அவனை அணுகி இந்திரன் கூவினான் “இக்கணம் உன்னிடம் எச்சரிக்கிறேன்.  அந்த மாடங்களில் ஒன்றை இடி. அந்த உப்பரிகைகளில் ஒன்றையேனும் உடை!”

“இயலாது, இந்திரனை இங்கு வரவழைத்தது அது என்று உணரும்போது அதை ஆக்கியவன் என்று என் உள்ளம் உவகையே கொள்கிறது” என்றான் த்வஷ்டா. “தணிந்து கேட்கிறேன், அதன் வாயில்களில் ஒன்றையேனும் மூடி வை” என்றான் இந்திரன். “நான் இக்கலைவடிவை அழித்தேன் என பெயர்கொள்ள விழையவில்லை. எண்ணிச்சொல்!” த்வஷ்டா “எண்ணவே வேண்டியதில்லை, இது இங்கு இவ்வாறே இருக்கும்” என்றான். “ஒரு அகல்சுடரையாவது அணைத்து வை” என்றான் இந்திரன். “ஒரு துளி குங்குமம்கூட அந்நிலத்தில் விழுந்து கறையாகாது” என்றான் த்வஷ்டா.

சினத்தால் உடல் ததும்ப நின்று நோக்கியபின் மீண்டும் ஒரு புறாவென மாறி தேவர்க்கிறைவன் மறைந்தான். அவன் செல்வதை நோக்கி நின்ற த்வஷ்டாவிடம் அவன் மூத்தவர் இருவரும் வந்தனர். “எல்லைகடந்து ஒரு புறா நகருக்குள் வந்தது என்று அறிந்தேன்” என்றான் அஜைகபாத்.  “என் கூர்முனைகள் அதை கிழிக்கவில்லை என்று கண்டேன்” என்றான் அஹிர்புத்ன்யன். “வந்தவன் இந்திரன். நம் நகர்முழுமை கண்டு நெஞ்சழிந்து மீள்கிறான்” என்றான் த்வஷ்டா.

[ 7 ]

மகாவீரியமென்னும் அசுரர்பெருநகரை வெல்ல எண்ணிய இந்திரன் தன் படைத்தலைவர்களை அழைத்து அவர்களிடம் படைகொண்டு செல்வதைப்பற்றி கேட்டான். அவர்கள் ஒற்றைக்குரலில் அஜைகபாத் அமைத்த ஏழு கோட்டைகளைக் கடந்து எவரும் செல்லமுடியாது என்றனர். அஹிர்புத்ன்யனின் ஆயிரம்கோடிக் கூர்முனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் தேவர்களுக்கும் இல்லை என்றனர்.

இந்திரன் துயருடன் தன் அரண்மனையில் உலவினான். தொலைப்பயணியான நாரதரை அழைத்துவரும்படி சொல்லி அவரிடம் ஆவதென்ன என்று கேட்டான். “அரசே, போர் பயனற்றபோது சூழ்ச்சி பயனளிப்பது. சூழ்ச்சியும் பயனற்றுப் போகும்போது தவம் பயனளிப்பது. சூழ்ச்சி வழியாகவே அசுரர்களின் பெருநகரை வெல்லமுடியும்” என்றார் நாரதர். “அதற்கான வழிகளை சொல்க!” என்றான் இந்திரன்.

“சூழ்ச்சிகளில் தலையாயவை எட்டு. காமத்தால் அறிவிழக்கசெய்தல், பெருவிழைவால் நிலையழியச்செய்தல், தன் வல்லமையை மிகையென எண்ணச்செய்தல், தன் வல்லமையை குறைவென எண்ணி அஞ்சவைத்தல், அணுக்கர்களை நம்பிக்கையிழக்க வைத்தல், ஏவலர்களை நேர்மையிழக்கச்செய்தல், பொய்யிலக்குகளை நோக்கி திருப்பிவிடுதல், நட்புகளுக்குள் பகை உருவாக்கல்” என்றார் நாரதர். “அறம் வெற்றியால் மட்டுமே நிலைக்குமென்றால் அறத்தின்பொருட்டு இவற்றை ஆற்றலாம் என்கின்றன நூல்கள்.”

“இவை ஒவ்வொன்றுக்கும் உரியவர்கள் உள்ளனர். எதிரியரசு ஒற்றையொருவனை நம்பியிருக்குமென்றால் காமமும் பெருவிழைவும் கொண்டு அவனை வெல்வது உகந்த வழி. வெற்றிமேல் வெற்றிகொண்டெழும் நாட்டை மிகைநம்பிக்கை கொள்ளச்செய்யலாம். பல்லாண்டுகளாக போரிலீடுபடாத நாட்டை குறைநம்பிக்கை கொள்ளச்செய்யலாம். அடித்தளத்திலிருந்து மேல் தளம் மிக அகன்றுபோகுமளவுக்கு பெரிய நாட்டை அணுக்கர்களை சோர்வுறச்செய்தும் ஏவலரை திரிபடையச்செய்தும் வெல்லலாம். உரிய அமைச்சர்கள் இல்லாதவர்களை திசைதிருப்பிவிடலாம்” என்று நாரதர் சொன்னார். “ஆனால் எங்கும் எப்போதும் வெல்லும் வழி என்பது நட்புத்திரிபு என்னும் சூழ்ச்சியே.”

இந்திரன்  “ஆம்” என்று தலையசைத்தான். “திரிபுகொள்ளச் செய்யத்தக்கவர் இருவகை. அரசின் உச்சியிலிருப்பவர் மேலும் உச்சிநோக்கி செல்லும் தகுதிபடைத்தவர் தாங்கள் என எண்ணியிருப்பார்கள். அவர்களிடம் அவர்களின் வல்லமையும் கொடையும் உரியமுறையில் மதிக்கப்படவில்லை என்று சொல்லி உளத்திரிபடையச் செய்வது எளிது. மிகஅடித்தளத்தில் உள்ளவர்களிடம் அவர்கள் வெளியேதெரிவதில்லை என்னும் உளக்குறை இருப்பதனால் அவர்களை வெல்வதும் எளிது” என்றார் நாரதர்.

“நடுவிலிருப்பவர்களை திரிபடையச் செய்வது கடினம். அவர்களுக்கு மேலே வாய்ப்புகள் நிறைந்துள்ளன. கீழே அச்சுறுத்தும் வீழ்ச்சிகளும் தென்படுகின்றன. ஆகவே நிலைவிட்டு ஓர் அடியும் எடுத்துவைக்க அஞ்சுவார்கள்” என நாரதர் தொடர்ந்தார். “ஆனால் எவராயினும் அவர்களுக்கு எதிரியென ஒருவன் சுட்டிக்காட்டப்படவேண்டும். அவர்கள் இழந்ததை எல்லாம் பெறும் ஒருவன். அவர்கள் செல்லவேண்டிய இடங்களில் முந்திச்செல்பவன். அவர்களுக்கு என்றும் தடைக்கல்லாகி நிற்பவன்.”

“அவ்வெதிரி திரிபுக்குரியவனுக்கு மிகவும் கீழிருப்பவனாக இருக்கலாகாது. அவனை அவர்கள் திறனற்றவன் என்றே உள்ளூர எண்ணுவர். மிக மேலே இருப்பவனாகவும் எண்ணக்கூடாது. மேலிருப்பவர்களை அவர்கள் உள்ளூர அஞ்சுவர். அவனுக்கு நிகரானவனாக அவன் எண்ணுபவனாகவே எதிரி இருக்கவேண்டும். அத்தகைய ஒருவன் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இருப்பான். அவன் மேல் நம் இலக்குக்குஉரியவன் கொள்ளும் உள்ளுறை அச்சத்தை நாம் தொட்டறியவேண்டும். தூண்டி வளர்க்கவேண்டும்.”

“அரசே, ஐந்து வகையினர் எளிதில் திரிபடையக்கூடியவர். அச்சம் கொண்டவன் திரிபடைவான். அவன் அஞ்சுவதை எளிதில் பெரிதாக்கிக் காட்டலாம். விழைவு கொண்டவன் திரிபடைவான். அவனுக்கு நாம் வாக்குறுதிகளை அளிக்கலாம். அன்பு கொண்டவர் திரிபடைவர். அவர்கள் அன்புகொண்டுள்ளவற்றின் பொருட்டு பணிவார்கள். ஆணவம் கொண்டவர்கள் திரிபடைவார்கள். அவர்களின் ஆணவத்தை புண்படச்செய்யலாம். அரசே, வீணே இருப்பவனைப்போல திரிபடையச் செய்ய எளிதானவன் எவனுமில்லை. அவனை மூச்சுக்காற்றால் ஊதிப்பறக்கவிடலாம்.”

மகாவீரியத்தைத் தாங்கி நின்றிருந்தவை நான்கு ஆமைகள். அவை ஆழுலகத்தின் அன்னையின் கைநகங்களிலிருந்து உருவானவை. கிழக்கே மஞ்சள் நிறம்கொண்ட கனகன், மேற்கே சிவப்பு நிறம் கொண்ட சோனன், தெற்கே நீலநிறமான சியாமன்,  வடக்கே பச்சை வண்ணம் கொண்ட ஹரிதன். அவை ஒன்றையொன்று நோக்கமுடியாத கோணத்தில் திரும்பி நின்று ஆழ்துயிலில் இருந்தன. ஒவ்வொன்றும் அந்நகரை அதுமட்டுமே தாங்குவதாக எண்ணியிருந்தது. அவ்வெண்ணம் அவற்றுக்குள் செரிக்காத ஊனுணவென கிடந்தது. அதன் சுமையால் அவை இனிய புன்னகையுடன் கண்சொக்கி அமைந்திருந்தன.

அப்பால் நின்று அவற்றை நோக்கியதுமே அவற்றின் உள்ளக்கிடக்கையை அரசன் புரிந்துகொண்டான். சிற்றறிவுகொண்டவர்கள் அருகருகே இருந்தால் ஒற்றை எண்ணத்தையே கொண்டிருப்பர். அவர்கள் சிற்றறிவுகொண்டவர்கள் என்பதனால் மாறாமலிருப்பர். மாறாமலிருப்பவற்றுக்கு இருக்கும் உறுதியினால் அவர்கள் மேல் பெருஞ்சுமைகள் ஏற்றப்பட்டிருக்கும். சிற்றறிவுகொண்டவர்கள் அனைத்தையும் தாங்கி அடித்தளமாவது என்பது பெரும்பிழை. மேலும் செல்லும் அறிவுகொண்டவர்கள் அனைத்தையும் தாங்கி அடித்தளமாக அமைந்து அறியப்படாமலிருக்க ஒப்பமாட்டார்கள்.

மானுடரின் இக்கட்டுகளை எண்ணி நகைத்தபடி இந்திரன் ஒரு பொற்சரடென ஒளிவிடும் நாகமென மாறி நெளிந்து அந்த ஆமைகளின் அருகே சென்றான்.  தெற்கை ஆளும் திசையாமையாகிய நீலனின் கழுத்தில் சுற்றிக்கொண்டான். “மகாபலரே, பேரெடைசுமப்பவரே, அழியாதவரே, வாழ்க! உங்களை நம்பி இப்புவியின் பெருநகர் ஒன்று அமைந்துள்ளது. எண்ண எண்ண பெருமை கொள்ளவேண்டியது இது” என்றது நாகம்.

“என் பெயர் சுவர்ணை. பொன்னொளியுடன் நான் பிறந்தபோது என்னை சிறு ஆரம்போலிருக்கிறாள் என்றனர் என் குலத்து மூத்தோர். இவள் எந்தக் கழுத்திற்கு அணி என்று வியந்தனர். என் ஊழ்நெறி நோக்கிய நிமித்திகர் நான் இப்புவியிலேயே பேராற்றல்கொண்ட ஒருவரின்  அணிகலன் ஆகும்பொருட்டு பிறந்தவள் என்றனர். என்னைச் சூடுபவரை தெய்வங்கள் தங்களுக்கு நிகரென ஏற்கும்.”

“ஆற்றல்மிக்கவரைத் தேடி நான் அலைந்தேன். புவிதாங்கும் ஆமைகள் என் மூதாதையர். வாசுகியும் சேடனும் என் குலமூத்தார். மண்மேல் எழுந்தபோது இந்நகரைக் கண்டேன். இந்நகரின் எடைதாங்கும் உங்களைப்பற்றி அறிந்தேன். உங்கள் நால்வரையும் இங்கு வந்து கண்டேன். நால்வரில் எவர் ஆற்றல் மிக்கவர் என்று அறிந்து உங்களை அணுகினேன். என்னை ஏற்று என் பிறப்புக்கு ஒரு பொருள் தருக!” என்றது நாகம்.

“ஆம், நீ எனக்கு இனியவள். என் ஆற்றலை அறிவிக்கும் அடையாளமும் கூட” என்றது நீலன். மகிழ்ச்சியுடன் நீலனின் முதுகுமேல் வளைந்தேறி நின்று “கண்டேன் புவியிலேயே ஆற்றல்மிக்கவரை. நிகரற்றவரின் துணைவி ஆனேன். நானும் நிகரற்றவளானேன்” என்றது நாகம். சினத்துடன் திரும்பிய வடக்குதிசையின் ஆமையாகிய ஹரிதன் “எவ்வாறு சொல்கிறாய், இவனே நிகரற்றவன் என்று?” என்று கேட்டது.

நாணத்துடன் விழிசரித்து “வடவரே, நால்வரில் நீங்களே செல்வர். இந்நகரின் செல்வம் அனைத்தும் குவிக்கப்பட்ட கருவூலம் குபேரமூலையிலேயே உள்ளது. அதைத் தாங்குபவர் நீங்கள். இவர்களனைவரும் உங்கள் அளிநிழல்கீழ் வாழ்பவர்களே” என்றது நாகம். “அப்படியென்றால் நான்?” என்று சீறிக்கேட்டது கீழ்த்திசையின் கனகன். நாணம் கொண்டதென நெளிந்து “நீங்களே நால்வரில் அழகர். புலரிப்பொன்னொளி கொண்டவர்” என்றது நாகம்.

மேற்குத்திசையின் சோனன் கால்களை உதைத்து திரும்பிநோக்கி “என்னை நீ அறியமாட்டாய்” என்றது. வேட்கையுடன் மூச்செறிந்து “உங்களை அறியாதோர் எவர்? நீர் நகரின் நீர்நிலைகள் அனைத்துக்கும் தலைவர் அல்லவா?” என்றது நாகம். “நாள்தோறும் பெருகும் நீர்நிலைகளை சுமப்பவன் நான். என்னைவிட எடைதாங்குபவனா இவன்?” என்றது சோனன். “தெற்குத்திசையில் மூதாதையர் அமைந்திருக்கிறார்கள். அவர்களே நாள்தோறும் பெருகும் எடைகொண்டவர்கள்” என்றது நாகம்.

“பெண்ணே நீ அறியமாட்டாய், இந்நகரின் கருவூலம்போல கணம்தோறும் பெருகும் பிறிதொன்றில்லை” என்றது ஹரிதன். “எவர் சொன்னார்? நானறிவேன், இங்கு பெருகும் ஒளியின் எடையை” என்றது கனகன். “உயிருக்கு நிகரான பிறிதேதுள்ளது?” என்றது தெற்கின்  ஆமை. அவர்களின் சொல்லாடல் பூசலாகியது. ஆமைகள் மாறிமாறி காலால் உதைத்துக்கொண்டன. அவை தலைகளால்முட்டி போரிடத்தொடங்கியபோது நாகம் வழிந்து கீழிறங்கி மறைந்தது.

நகர் அதிரத்தொடங்கியதை முதலில் உணர்ந்தவன் முதற்சிற்பியாகிய கர்மகனே. அவனுடைய கணையாழியில் இருந்த சின்னஞ்சிறு நீலமணிக்குள் ஒளிநலுங்குவதை அவன் கண்டான். “நகர் நிலையழிகிறது… கிளம்புக! அனைவரும் கூரைமீதிருந்து அகல்க!” என்று கூவினான். அவன் வெளியே வந்து அச்செய்தியை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே நகரில் வாழ்ந்த கூண்டுக்கிளிகள் நிலையழிந்து ஒலியெழுப்பலாயின. பசுக்கள் தொடர்ந்து குரலெழுப்பின. நாய்கள் ஊளையிட்டபடி வெளியே ஓடின.

அனைவரும் வெளியேறிவிடும்படி அறைகூவி நகரின் பெருமுரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அவ்வொலி கேட்டு அஞ்சியும் கூவியும் அசுரர்குலம் தெருக்களுக்கு வந்தது. கூரையிலிருந்து தூசுப்பொருக்குகள் உதிர்ந்தன. மரங்கள் திடுக்கிட்டு சருகுதிர்த்தன. பின்னர் அடிபீடம் ஆட தூண்கள் நடுங்கத் தொடங்கின. வெண்முட்டையோடுபோன்ற சுவர்களில் நீர்வரிபோல விரிசல்கள் ஓடி கொடிப்பரப்பென கிளைவிட்டுப் பரவின. கூரைப்பரப்பு பிளந்து வெண்ணிற வானம் தெரிந்தது.

பாறை பிளக்கும் ஒலியுடன் காவல்மாடமொன்று உடைந்து சரிந்தது. அந்த அதிர்வில் இரு சிறுமாடங்கள் சரியலாயின. மெல்ல கரைந்து நதிநீரில் விழும் கரைமணல்குவை என அரசமாளிகையின் முகடுகளில் ஒன்று சரிவதைக்கண்டு மக்கள் அஞ்சி கூச்சலிட்டார்கள். அடுக்குகள் வெடித்து கற்கள் சரிய அடிபட்டுப்புரளும் மலைப்பாம்பு போல  கோட்டை புரண்டுவிழுந்தது. மெல்ல நிலையழிந்து காலிடறுவதுபோல தடுமாறி மண்ணை பேரெடையுடன் அறைந்து விழுந்தது முரசுமேடை.

உயர்ந்தவை ஒவ்வொன்றாக சரியலாயின. “வெளியேறுக! வெளியேறுக!” என முரசுகள் கூவின. மக்கள் கூவியும் அலறியும் மைந்தரையும் பெற்றோரையும் அள்ளி தோளிலேற்றிக்கொண்டு நீரலைத்திரளென கோட்டையின் நான்கு வாயில்களையும் நோக்கி முண்டியடித்தனர். அவர்கள் வெளியேறும்பொருட்டு பொறிகளால் இயக்கப்பட்ட பெருவாயில்கள் திறக்கப்பட்டன. அவர்கள் மதகுமீறிய வெள்ளமென வெளியே பீரிட்டனர்.

அப்போது விட்டில்கூட்டம் மண்ணிலிறங்குவதுபோல தேவர்கள் விரித்த சிறகுகளும் கைகளில் நாணேற்றப்பட்ட அம்புகளுமாக கோட்டையைச் சூழ்ந்துகொண்டு தாக்கத்தொடங்கினர். அசுரர்கள் கூட்டம்கூட்டமாக இறந்துவிழுந்தனர். தங்கள் மக்களே கட்டுப்பாடிழந்து தெருக்களில் நிறைந்தமையால் சேற்றில் சிக்கிக்கொண்ட யானைபோலாயினர் நகரின் அசுரப்படையினர். விரைவிலேயே அவர்கள் அனைவரும் கொன்றழிக்கப்பட்டனர். ருத்ரர் நால்வரும் அரண்மனைக்குள் அமைந்த கரவுப்பாதை வழியாகத் தப்பி மண்ணுக்கு அடியில் அமைந்திருந்த கரளாகம் என்னும் சுரங்கமாளிகைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.

இந்திரன் அந்நகரை முற்றாக இடித்தழித்தான். அதன் மக்களையும் படைகளையும் அவன் படைக்கலங்கள் கொன்று குவித்தன. அச்சடலங்களை இடிந்திடிந்து விழுந்த நகரின் மாளிகைகளே அடக்கம் செய்தன. மகாவீரியம் ஒரு பெரும் இடுகுழியாக மாறியது. அதன் பெருமாளிகை சரிந்த புழுதி விண்ணில் பெரிய குமிழி என எழுந்தது. அதில் முகில்தொட்டதும் குளிர்ந்து மழையென்றாகியது. அப்புழுதியில் அசுரர்களின் குருதியும் கலந்திருந்தது. சுற்றிலுமிருந்த காடுகள் அனைத்திலும் குருதிமழை பெய்தது.

கான்மக்கள் கைநீட்டி மழையைத் தொட்டபோது ஒட்டும்பசையென குருதியில் கைநனையக்கண்டு அஞ்சி குகைகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். அந்தணர் வேள்வித்தீ மூட்டி அவியளித்து இந்திரனைப் போற்றி வேதம் பெருக்கினர். இடிந்தழிந்த நகர்மேல் ஏழு வண்ணத்தில் இந்திரவில் எழுந்து நிற்பதை உயிர் எஞ்சிய சிலரே கண்டனர். அவ்வில்லைக்கண்டு அந்தணர் தங்கள் வேள்விச்சாலைகளிலிருந்து வெளியே ஓடிவந்து கைகூப்பி வாழ்த்து கூவினர்.

தன் குடியுடன் கரவறையில் ஒளிந்துகொண்டு த்வஷ்டா கண்ணீர் விட்டான். “நான் படைத்தவை அழிவதைக் கண்டேன். மைந்தர்துயருக்கு நூறுமடங்கு பெரிய துயர் இது” எனச் சொல்லி ஏங்கினான். அவன் அளித்த அவியை ஏற்க முன்னோர் அனலிலும் புனலிலும் எழவில்லை. கனவுகளில் அவர்களின் முனகலோசைகளை இருளுக்குள் கேட்டான். திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவனை அவன் துணைவியாகிய சுபகை தேற்றினாள். “அனைத்தையும் மறப்போம்” என்றாள்.

“மறப்பதற்கு நிறையவே உள்ளன தேவி” என்றான் த்வஷ்டா. பொன்மாளிகையின் ஒவ்வொரு தூணையும் ஒவ்வொரு சிற்பத்தையும் மறந்தாகவேண்டும். மறக்கமுனைகையில் அவை மேலும் ஒளிகொண்டெழுந்து வந்தன. கண்மூடினால் அங்கே சென்றுலாவ முடிந்தது. “நான் சென்று மீளும் அந்நகர் எங்குள்ளது, இளையோனே?” என்று அவன் தன் தம்பியாகிய ருத்ரனிடம் கேட்டான். “அவை உங்களால் பொன்னில் செதுக்கப்படுவதற்கு முந்தைய வடிவில் உள்ளன, மூத்தவரே. பொருளில் எழாத கலையின் உலகொன்று உள்ளது. அது மண்ணுள் வாழும் விஸ்வகரின் கனவு என்கின்றனர்.”

“என் ஆணவத்தால் நால்வரையும் தோல்வியுறச் செய்தேன். என் குடியை முற்றழித்தேன்” என்று த்வஷ்டா சொன்னான். இளையோனாகிய ருத்ரன் சொன்னான் “மூத்தவரே, ஆணவம் அழிந்த சிற்பியின் கைகள் வெறும் தசைக்கொடிகள். அவன் விரல்களில் குடிகொள்ளும் தெய்வங்களுக்குரிய இன்னமுதென்பது அவன்கொள்ளும் கனவுகளே. கனவுகள் ஆணவம் செழிக்கும் வயல்கள். கனவுநிறையட்டும் உங்களுக்குள்.”

“ஆம்” என்றான் த்வஷ்டா. “நான் மீண்டு எழுந்தாகவேண்டும். என் உள்ளத்தின் அனல் முளைக்கவேண்டும்.”  ருத்ரன் “மூத்தவரே, அந்நகரிலிருந்து ஒரு கல்லை எடுத்துவரச் சொல்லுங்கள். அதை என் அனலில் இட்டு உங்கள் வஞ்சத்தை எழுப்புக! அதுவே உங்கள் படைப்புக்கு விதையாகட்டும்” என்றான். “நான் இனிமேல் படைப்பதென்றால் இந்திரனை வென்றபின்னரே அது நிகழமுடியும். இவ்வஞ்சம் நஞ்சென்று என்னுள் இருக்கையில் இனி நான் சிற்பியே அல்ல” என்றான் த்வஷ்டா.

அசுரர்கள் வெளியே சென்றால் கொன்றழிப்பதற்காக அத்தனை நீர்க்குமிழிகளிலும் விழிகளை நிறுத்தியிருந்தனர் தேவர். த்வஷ்டாவின் மைந்தர்களில் ஒருவனாகிய நளன் என்னும் குரங்கு அவர்களை ஏமாற்றி இடிந்து சரிந்த நகருக்குள் சென்றது. அங்கே சடலங்கள் வெள்ளெலும்பாகக் கிடந்தன. மண்டைகளின் சிரிப்பைக் கண்டு அஞ்சி அது கண்களை மூடிக்கொண்டது. கைநீட்டி சிக்கிய  அங்கிருந்த முதற்கல்லை எடுத்துக்கொண்டு துள்ளிவிலகித் திரும்பி ஓடிவந்தது.

அந்தக் கல்லை கையில் வாங்கிப்பார்த்தான் த்வஷ்டா. அது மூன்றுதலைகொண்ட சிம்மம். மகாவீரியத்தின் காவல்மாடங்களில் ஒன்றின் முகப்பிலிருந்த முத்திரைக்கல். “ஆம், இது ஒரு செய்தி” என்று சொல்லிக்கொண்டான். “இதுவே எஞ்சவேண்டுமென்பது ஊழ்.” ஒருமுறையேனும் அவன் அந்நகரில் அதை பார்த்திருக்கவில்லை. ஆனால் உயரத்திலமைந்து அந்நகரை அது பார்த்துக்கொண்டிருந்தது என்று உணர்ந்தான்.

அதை அவன் ருத்ரனின் வேள்வித்தீயிலிட்டான். தழலில் அலையலையென எழுந்து கரைந்து சென்றன முகங்கள். அவற்றில் மும்முகம் கொண்ட மைந்தன் ஒருவனை அவன் கண்டான். “ஆம், அவன்தான். அவன் பெயர் திரிமுகன். அவனே என் மைந்தன்” என்று கூவினான். “என் ஆற்றலெல்லாம் அம்மைந்தன் ஆகுக! பேருருக்கொண்டு அவன் எழுக! அவன் வெல்லட்டும் இந்திரனை” என்று வஞ்சினம் உரைத்தான்.

தொடர்புடைய பதிவுகள்


கன்யாகுமரி வாசிப்பனுபவம்

$
0
0

 

untitled

 

அன்புடன் ஆசிரியருக்கு

தற்போது கன்னியாகுமரி வாசித்து முடித்தவுடன் எழுதுகிறேன் கூடவே கெய்ஷா சிறுகதை குறித்து வெளியாகி இருக்கும் வாசகர் கடிதங்களையும். சில நாட்களுக்கு முன்பு அனல்காற்று வாசத்தேன். அதற்கு சில நாட்கள் கழித்து கெய்ஷா.

டால்ஸ்டாயின் எழுத்துக்களில் என்னை ஈர்க்கும் ஒரு அம்சம் மேற்சொன்ன உங்களது புனைவுகளில் உக்கிரமாக வெளிப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. பாவனைகளைக் களைந்து கொண்டே செல்லுதல். வெண்முரசு வரலாற்றின் மீதான நம்பிக்கைகளின் மீதான பாவனைகளைக் களைந்து கொண்டே செல்கிறது.

அது போலவே காமத்தின் மீதான பாவனைகளையும் உங்கள் புனைவுகள் களைந்து செல்கின்றன. இன்று மாலை  திருச்சியில் இருந்து திரும்பி வருகையில் கன்னியாகுமரி படிக்கத் தொடங்கினேன். அரை நாளில் வெகு தூரம் கடந்து வந்து விட்டது போன்ற உணர்வு. மனம் மொத்தமாக கலைந்து கிடக்கிறது. தன்னுணர்வின் அடியாழங்களை சோதிக்கும் விவாதங்கள். உங்களை எப்படி பெண்ணிய எதிர்ப்பாளர் என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை. கொற்றவையின் கண்ணகியுடன் என்னால் விமலாவை இணைத்துப் பார்க்க முடிகிறது. கொற்றவையும் அலை புரளும் கன்னியாகுமரியில் வந்து முடியும் காப்பியமே. நாவலின் பல இடங்கள் கொற்றவையை நினைவுறுத்திய வண்ணம் இருந்தன. மேலு‌ம்பளிங்கறை பிம்பங்களும் ( http://www.jeyamohan.in/26472#.WCYkAMtX7qA) நினைவில் எழுந்தது. ஒவ்வொரு பாவனையாக உரித்து உரித்து வைக்கிறான் ரவி. என்னால் இறுதிவரை விமலாவின் தெளிவையும் நிமிர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கோ ஒரு விரிசல் துணுக்குறல் என ஏங்கிக் கொண்டு தான் இருந்தது மனம்.

ஆனால் பெண்மையை அது எதிர் கொள்ளும் உச்ச எதிர்ப்புகள் வரை கொண்டு செல்லத் துடிக்கும் ஆணின் அகங்காரத்தை நினைத்து உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு கோபமென எதுவுமே எழவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குள் நடந்து முடிந்து விடும் கதை. பெரும்பாலும் கடற்கரையும் விடுதி அறைகளுமே கதைக்களம். கடை வீதிகளிலும் அறைகளிலும் கடற்பாறையிலும் ரவியின் மனதில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாகப் பின் தொடர முடிந்தது. மிக சுருக்கமான ஒரு காலத்தை எடுத்துக் கொண்டு ஒரு இந்திய மனத்தில் எழும் பண்பாட்டுச் சிக்கலை நுட்பமாக ஆராய்கிறது. ஸ்தாணுமால்யனுக்காக காத்திருக்கும் கன்னி எனும் ஐதீகத் தன்மையை தலைகீழாக பிரதிபலிக்கிறது நாவல். பிரவீணா தன்னை “கன்னி” எனச் சொல்லும் இடம் மறுக்க முடியாததாக முகத்தில் அறைகிறது. கொற்றவையிலும் கண்ணகியைப் பார்த்து “கன்னி கன்னி” எனச் சொல்லும் பறவைகள்.

ரவி ஒரு கலைஞன் என்பதே இரு நாட்களை ஒரு வாழ்வாக விரித்துப் போடுகிறது. ஒட்டு மொத்தத்தில் அவனுடைய வீழ்ச்சியின் சித்திரமாக இந்நாவல் பாவனை செய்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதையும் மீறி ஏதோவொன்று தீண்டப்படாத ஒன்று அவனுள் இருக்க வேண்டும் என்று தான் மனம் கற்பனை செய்கிறது. மிகக் குறுகிய கால அளவும் கூர்மையான விவாதங்களும் கொந்தளிக்கச் செய்கின்றன. மனம் தெளிவடைந்த பிறகு தான் யோசிக்க வேண்டும்.

இந்நாவலின் சிக்கல்களையும் உள்ளோட்டங்களையும் கண்டு கொள்ள எனக்கு நாட்கள் தேவைப்படலாம். ஆனால் அவை என்னுள்ளும் உள்ளன என்று மட்டும் புரிகிறது.

அன்புடன்

சுரேஷ் ப்ரதீப்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்தியா குறித்த ஏளனம் –பதில் 2

$
0
0

 

10-new-delhi

 

அன்புள்ள ஜெ எம்

இந்தியா குறித்த ஏளனம் கடிதமும் [இந்தியா குறித்த ஏளனம்] அதன் எதிர்வினைகளும் வாசித்தேன் [ மாதவன் இளங்கோ பதில்]

இந்த தலைப்பில் திரு மாதவன் இளங்கோ கூறியுள்ள கருத்துக்களை நான் உறுதியாக பின் மொழிகிறேன்.

ஓரளவு படித்த வெள்ளையர்கள் இந்த ஏளனம் செய்வதில்லை. நம் உணவை வெறுப்பதில்லை. நம் உணவில் உள்ள காரம் கொஞ்சம் அவர்களை அஞ்ச வைக்கும். அனால் நம் உணவைப் பழகி விட்டால், அவர்கள் சுவைக்கு அடிமை. தீபாவளி சமயம் என் அமெரிக்க நம்பர்கள் 30 பேருக்கு நான் விருந்து கொடுக்கிறேன். நம் உணவுதான் நல்ல காரம் சேர்த்து. எல்லாவற்றையும் காலி செய்து விடுவார்கள்.

திரு பிரகாஷ் கூறியது போல் நம் நாடு குறித்தான ஏளன எண்ணம் இருக்குமானால் நாமும் காரணம். பல இந்தியர்கள் நம் நாட்டைப் பற்றி மிக கேவலமான விமர்சனங்களையும் பிம்பங்களையும் வெள்ளையர் முன் வைப்பதுதான். தான் ஒரு ஹிந்து என்று சொல்லக் கூட வெட்கப்படும் பலரை நான் கண்டு வெட்கி நொந்து இருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த நாடு கேவலம், ஆனால் நான் அப்படி இல்லை, உயர்ந்து வளர்ந்து உங்களுக்கு சமம் ஆகி விட்டேன்” என்று சொல்லாமல் சொல்லி அவர்களிடம் இருந்து அங்கீகாரம் பெற ஒரு புழுத்த முயற்சி.

சரி, இந்த மக்கள் இந்தியர்கள் நடுவில் இருக்கும்போது என்ன சொல்கிறார்கள்? வெள்ளைக்காரன் உணவு கற்காலத்திய உணவு. ஒழுக்கம் இல்லாதவன், பெண்கள் எல்லாரும் சோரம் போனவர்கள் என்று.

இவர்கள் ஒரு பெரிய கூட்டம் இங்கே இப்படி தனித்து இருக்கிறது. இந்த மனப்பான்மையே இவர்களை இந்த நாட்டில் அந்நியமாக்கி வைத்து உள்ளது. தங்களை தாமே அந்நியமாக்கி விட்டு வெள்ளையனை குறை சொல்வது தவறு.

யாதும் ஊரே யாவரும் கேளிர் – இன்னும் நடை முறை ஆகவில்லை.

சிவா சக்திவேல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் என் மதிப்பீடு -6

$
0
0
download (1)

அனோஜன்

 

எழுத தொடங்குபவர்களின் முக்கியமான சிக்கல்களில் இறுதியாக ஒன்றைச்சொல்லவேண்டும். ஒரு சூழல் உருவாக்கி நிலைநிறுத்தி வைத்திருக்கும் பொதுவான உணர்வு நிலைகளுக்குள், அழகியலுக்குள், கருத்தியலுக்குள், வடிவங்களுக்குள் சென்று விழுவது அது. இது விகடன் குமுதம் போன்ற பெரிய இதழ்களில் மட்டுமல்ல, காலச்சுவடு, உயிர்மை போன்ற சிற்றிதழ்களுக்கும் பொருந்தும்.

இதழ்கள் இருவகையில் பொதுப்போக்கை உருவாக்குகின்றன. ஒன்று, சமூகத்தில் இன்றிருக்கும் பொதுவான உணர்வுநிலைகளும் கருத்துநிலைகளும் இவற்றினூடாக இயல்பாக வெளிப்படும் இன்னொன்று இவ்விதழ்களுக்கு இருக்கும் தேர்வுமுறையினால் பொதுவான சில போக்குகள் இவ்விதழ்கள் வழியாக வெளிப்பட்டு அவையே இன்றையபோக்கு என நிலைநிறுத்தப்படும்.

எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்து கொண்டிருந்த கணையாழி சிற்றிதழின் கதைகளை இப்போது எடுத்துப்பார்த்தால் தொண்ணூற்றொன்பது விழுக்காடு கதைகள் கணையாழிக் கதைகள் என்ற அடையாளத்திற்குள் நிற்பதைப் பார்க்கலாம். அவற்றின் பொது அம்சங்களை இப்படிச் சொல்லலாம். பெரும்பாலும் அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டவை அவை. நகர்ப்புற நடுத்தர வர்க்கம் அவற்றின் கதைப்புலமாக இருக்கும். அன்றாட வாழ்க்கை சார்ந்த ஒரு கதைக்கருவைக் கொண்டிருக்கும். உணர்வுகளை குறைத்து சொல்ல முயன்றிருக்கும். புறவயமான அறிக்கையிடும் நடை கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் சைக்கிள் தொலைந்து போவது திரும்பிக்கிடைப்பது போன்ற விஷயங்களை எழுதும் கதைகளாக கணையாழி நிரம்பி வழிந்தது.

கணையாழியில் இருபதாண்டு காலத்தில் எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்றை போட்டால் ஐந்தாறு எழுத்தாளர்கள் மட்டுமே அந்த பொதுப்பரப்பிலிருந்து எழுந்து மேலதிகமாக எதையாவது அடைந்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இன்று பெயர் சொல்ல முடிந்த எழுத்தாளர்களாக நீடிக்கிறார்கள். அவ்வாறு எழுத்தாளராக நீடிக்கும் அனைவருமே ஒருவகையில் கணையாழியின் பொதுப்போக்கை நிராகரித்து தங்களுக்கான எழுத்துமுறையை உருவாக்கிக் கொண்டார்கள்.

இன்று உயிர்மைக்கு என்று ஒரு எழுத்து முறை உருவாகி வந்துள்ளது. கொஞ்சம் தளர்வாக உயிர்மைக்கதைகள் என்றே அவற்றை வரையறுக்கலாம். சற்று கற்பனாவாதம் கலந்த காமச்சித்தரிப்பு, அன்றாட வாழ்க்கையைப்பற்றிய ஒழுக்கஎதிர்ப்பு நோக்கு, உச்சம் என எதுவும் நிகழாது சித்தரிப்பாகவே சென்று முடியும் வடிவம் அல்லது உருவகத்தன்மை ஆகியவை இந்தக்கதைகளின் மாதிரிவடிவங்கள். உண்மையில் இக்கதைகளை உயிர்மையே உருவாக்கி எடுத்தது என்று எண்ணத் தோன்றுகிறது. தொடக்க காலத்தில் அதில் எழுதிய ஜே.பி.சாணக்யா போன்ற படைப்பாளிகள் இதற்கான முன்வடிவை அவ்விதழ்களுக்கு அளித்தார்கள். பின்பு அந்தப்பாணியில் எழுதும் கதைகளையே அவர்கள் தொடர்ந்து பிரசுரித்து அதையே மேலும் எழுத்தாளர்கள் எழுதச்செய்தனர்.

அச்சில் வெளிவரும், வாசிக்கப்படும் என்பதனாலேயே இளமெழுத்தாளர்கள் அதை எழுதினர். இன்று இளம் எழுத்தாளர்கள் சென்று ஒட்டிக் கொள்ளும் ஒரு பிசினாக அது அமைந்துள்ளது. அவ்வாறு வெளிவரும் கதைகளில் மிகச்சில கதைகளுக்கே ஏதேனும் இலக்கிய மதிப்பு உள்ளது. முன்பு தீவிரமான அரசியல் செய்திகளை வெளியிடும் நான்மடிப்பு இதழ்களில் கூடவே பாலியல்சுவை கொண்ட ஒரு கதையை வெளியிடும் வழக்கமிருந்தது. உயிர்மை சிறுகதை வடிவை அதற்காக பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் இன்றைய வாசகனுக்கு எழலாம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் கூட இந்த வகையான எழுத்து முறை ஒரு பொதுப்போக்காக எழுந்து வந்துள்ளது. இதற்கான காரணங்கள் பல இருக்கலாம். உண்மையிலேயே இன்றைய இளைய தலைமுறைக்கு பாலியல் சித்தரிப்பும் ஒழுக்கமீறல் நோக்கும் அணுக்கமானதாக இருக்கலாம். ஆண் பெண் உறவுக்கப்பால் அவர்களுக்கு சொல்வதற்கோ தேடுவதற்கோ எதுவும் இல்லாமல் இருக்கலாம். இதற்கப்பால் ஒர் அரசியல் காரணத்தைக் கூட அதற்கு யோசித்துப்பார்க்கலாம். 1990- களுடன் இடதுசாரிக் கருத்தியல் மீதான அறிவுத்தள நம்பிக்கை சரிந்ததன் வெற்றிடம் இப்போக்கை உருவாக்கியதா என்ன்ன?

அதுவரைக்கும் தமிழிலக்கியத்தின் புறவயப்பார்வையை, பொதுவான அரசியல்நோக்கை தீர்மானித்திருந்தது இடது சாரி அணுகுமுறைதான். சமூகச்சித்தரிப்பை, வாழ்க்கையின் அன்றாடத் தருணங்களை சித்தரிப்பதனூடாக அமைப்பை ஏழைகளுக்கு மேலும் நீதி கிடைக்கும் ஓர் இடம் நோக்கி நகர்த்த முயலும் ஒருவனாகவே எழுத்தாளன் அன்றிருந்தான். சோவியத் ருஷ்யா என்னும் தொன்மம் 1990களில் சரிந்ததுமே அதுவரை நம்சூழலில் மிகப்பெரிய ஒருபொதுப்போக்காக இருந்து வந்த முற்போக்கு எழுத்து கரைந்து வடிவிழக்கத் தொடங்கியது.முன்னோடியான முற்போக்கு எழுத்தாளர்கள் கூட அகவய உலகத்திற்குள்ளும் உறவுச் சிக்கல்களுக்குள்ளும் சென்றனர். கந்தர்வன், சா.தமிழ்செல்வன், பவா.செல்லத்துரை போன்றவர்கள் அதில் குறிப்பிடப்படும் வெற்றியையும் அடைந்தனர்.

இப்போக்கின் அடுத்த கட்டமே உருவாகி வந்த இளம் எழுத்தாளர்கள் அகத்துறை சார்ந்த எழுத்துக்களை மட்டுமே எழுதுவதாக மாறியிருக்கலாம். அகத்துறை எழுத்து இயல்பாக ஒழுக்கம் சார்ந்த வினாக்களை எழுப்பும். ஒழுக்கமில்லா உளநிலை ஒன்றை நோக்கி கொண்டு செல்கிறது இன்றைய உலகமயமாக்கக் காலம். இவற்றுக்கான எல்லா சமூகவியல், அரசியல், உளவியல் விளக்கங்களை அளிக்கும் போது கூட தனம்மெனத் தனியாளுமை கொண்ட எழுத்தாளன் இப்பொதுப்போக்கின் ஒரு பகுதியாக ஒலிக்கமாட்டான் என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எச்சூழலிலும் எது அனைவராலும் எழுதப்படுகிறதோ எது அனைவராலும் விரும்பப்படுகிறதோ தை எழுதாமல் தனக்கென ஒரு குரலும் பாதையும் கொண்டு எழும் எழுத்தாளனே அடுத்த கட்டத்தை முடிவு செய்கிறான். எண்பதுகளில் ஆழ்ந்த புறவய எதார்த்தவாதம் ஓங்கி நின்றிருந்த சூழலில் கட்டற்ற கற்பனாவாதத்தையும், நாட்டுப்புற அழகியலையும் முன்வைத்த கதைகளை நானும் கோணங்கியும் எழுதினோம். அவை உண்மையில் அன்றிருந்த ஒருவகையான தேக்க நிலையை உடைக்கும் வழியாக மேலதிக வரவேற்பையே பெற்றன. எழுத்தாளர்களாக் எங்களை முன்னால் கொண்டு வந்து நிறுத்தவும் செய்தன.

இன்றைய இளம் எழுத்தாளர்களைப் பார்க்கையில் பொதுப்போக்கிலிருந்து எவரது தலை ஒரு அடியேனும் மேலெழுந்து நிற்கிறது என்பதே என் முதல் தேடலாக இருக்கிறது. கவிதையில் முகுந்த் நாகராஜன், இசை, குமரகுருபரன்,இளங்கோ கிருஷ்ணன் போல ஒரு புதிய குரலைப்பார்ப்பது அடிக்கடி சாத்தியமாகிறது. சிறுகதையில் அப்படி நிகழவில்லை என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு முறை ஒரு சிறுகதை தொகுப்பை எடுக்கும்போதும் ஓரிரு கதைகளுக்குள்ளேயே அவை எந்த பொதுப்போக்கில் இணைந்து கொள்கின்றன என்பதைக் கண்டு மெல்லிய சலிப்பையே அடைய வேண்டியிருக்கிறது. பொதுப்போக்கிலிருந்து முயற்சி செய்யாமலேயே வெளியே நின்று எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்பொதுப்போக்கையே அதிகமாக அறியாதவர்களாகவும் முற்றிலும் வேறுபட்ட ஒரு பண்பாட்டுத்தளத்திலிருந்தோ மொழித்தளத்திலிருந்தோ இலக்கியத்துக்குள் வரக்கூடியவர்களாகவும் இருப்பர். உதாரணம் ஜோடி குரூஸ். அதற்கு முன் தோப்பில் முகம்மது மீரான். அப்பொதுச்சூழலில் பலகாலமாக நீச்சலடித்துக் கொண்டிருப்பவர்கள் விழைந்து அடைய முடியாத முக்கியத்துவத்தையும் தனித்துவமான கலைவெற்றியையும் அவர்கள் அடைந்து கடந்து செல்கிறார்கள். காரணம் அவர்களிடம் பொதுச்சூழலின் தேய்வழக்குகளேதும் இல்லை

 

index

கோணங்கி

 

அப்பொதுச்சூழலை உண்மையான படைப்பு நோக்கம் கொண்ட ஒரு எழுத்தாளன் சந்திக்கும்போது அவனில் ஓர் ஒவ்வாமை தான் எழும் என்று நான் நினைக்கிறேன். இது அல்ல, இது அல்லஎன்றே அவன் உள்ளம் தொட்டுச் செல்லும். ஒரு வேளை ஒரு பயிற்சிக்காக ஓரிரு கதைகளை அப்பொதுப்போக்கு சார்ந்து அவன் எழுதியிருந்தாலும் கூட அவற்றை நிராகரித்து முன்செல்லவே அவன் விரும்புவான். தன்னுடைய அனுபவத்தின் தனித்தன்மைகளை, தனது உள்ள மொழியின் இயல்பான ஓட்டத்தை முதலில் கவனித்து அதை எழுதவேண்டும் என்று நினைக்கும் எழுத்தாளன் பொதுப்போக்கின் ஒரு பகுதியாக தன்னியல்பாகவே இருக்க மாட்டான்.

அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய அசங்கா என்னும் சிறுகதையை முதிராத பயிற்சி எழுத்து என்று சொல்லிவிட முடியாது. சரளமான இயல்பான மொழிநடை இக்கதைக்கு அமைந்துள்ளது. புறவய நிகழ்வுகளையும் எதிர்வினையாளனின் இயல்புகளையும் பின்னி கதைப்படைப்பை முடைந்து செல்லும் தேர்ச்சி உள்ளது. இக்காரணத்தால் ஆர்வமூட்டும் வாசிப்பு அனுபவத்தை அளிக்கக்கூடியதாக அசங்கா உள்ளது. அத்துடன் நாம் அறியாத ஒரு வாழ்க்கைச் சூழல் பலவகையிலும் பொது வாசகனுக்கு ஆர்வமூட்டுவது

இணைய தளங்களிலும் அச்சிதழ்களிலும் வந்துகொண்டிருக்கும் சிறுகதைகளின் பொதுத் தளத்தை வைத்துப்பார்க்கும்போது ஒரு படி மேலாகவே இச்சிறுகதை இருக்கிறது என்று சொல்லலாம். அத்துடன் ஒரு உணர்வு பூர்வமான உறவு முடிச்சை சொல்வதனால் இக்கதை வாசகன் மேலதிகமாக ஊகித்துச் செல்லவும் இடமளிக்கிறது. அந்தப் பூனை பலவகையிலும் அவன் கற்பனையில் அர்த்தம் கொள்ளக்கூடும். பதுங்கியிருக்கும், விழி ஒளிரும், நகங்களை ஒளித்திருக்கும், ஓசையற்று உலா வரும் பூனை மறைமுக உறவின், அதுசார்ந்தெழும் வெளித்தெரியா உணர்வுநிலைகளின் மிகச்சிறந்த உருவகமே

அப்பூனையிலிருந்து வாசகனின் கற்பனை திரும்பி அசங்காவுக்கும் கதைசொல்லிக்குமான உறவையும் அவ்வுறவின் நடுவில் சிக்கிக் கொள்ளும் அக்குழந்தையின் உளவியலையும்சென்று தொடுவதற்கான வாய்ப்பு இக்கதையில் உள்ளது அவ்வகையில் இதை ஒரு குறிப்பிடத்தகுந்த கதை என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

அப்படியென்றால் இக்கதையின் குறைகள் என்ன? முதன்மையாக இக்கதையை தமிழில் எழுதப்படும் பொதுப்போக்குக்குள் முற்றிலும் அடங்கியுள்ளது. தமிழில் இன்று எழுதும் எந்த எழுத்தாளரும் இந்தக் அக்தையை எழுதியிருக்கக்கூடும். அனோஜன் என்னும் எழுத்தாளனின் முத்திரை இதில் இல்லை. ஏறத்தாழ இதே வயதில் நான் எழுதிய படுகை, போதி, மாடன்மோட்சம் போன்றகதைகளை இன்றுவரை பிறிதொருவர் முயலவில்லை. அதில் என் தேடலும் என் கண்டடைதல்களும் உள்ளன. இதையே கோணங்கியின் மதினிமார்கள் கதைக்கோ கருப்பன் போனபாதைக்கோ மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டத்திற்கோ சொல்லமுடியும்

இன்றைய சிற்றிதழ் வாசகனைனே ஆர்வத்துடன் வாசிக்க வைக்கும் பாலியல் சித்தரிப்பும், சற்றே அவனை இலக்கிய கற்பனை நோக்கி நகர்த்தும் ஓர் உருவகமும் மிகக்கச்சிதமாகவே இன்றையப் பொதுப்போக்கின் இலக்கணங்களுக்குள் பொருந்துகிறது இக்கதை. இந்த ஒரு காரணத்தினாலேயே வளர்ந்து எதிர்காலத்தில் முதன்மையான கதையை எழுதக்கூடும் என்று நான் நினைக்கும் இளம் எழுத்தாளர் இதை எழுதியிருப்பதை நான் நிராகரிக்கிறேன்.

வடிவ ரீதியாக இக்கதைக்கு இரண்டு முதன்மையான பலவீனங்கள் உள்ளன. ஒன்று இக்கதை அசங்கா என்ற பெண்ணுக்கும் கதை சொல்லிக்குமான உறவை, அது குழந்தையில் அவள் குழந்தையில் உருவாக்கும் உளவியல் நெருக்கடியை சொல்லிச்செல்கிறது. ஆனால் அக்கதைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாமல் நீண்ட நிலக்காட்சி வர்ணனையும் மழைவர்ணனையும் கதைக்குமுன் வருகின்றன. ஒரு நாவலின் அத்தியாயம் இவ்வாறு தொடங்கியிருந்தால் அது இயல்பானது. ஏனெனில் நாவல் நிலக்காட்சியின் ஒருபகுதியாக நிகழ்கிறது. நேர்மாறாக சிறுகதையில் நிகழ்வுகளின் ஒரு மறைமுகப்புலமாகவே நிலக்காட்சி இருக்க முடியும். அவ்வாறில்லையென்றால் அந்நிலக்காட்சி அக்கதையை தீர்மானிக்கும் மிக முக்கியமான புள்ளியாக இருக்கவேண்டும்.

இக்கதை கதை சொல்லி ஒரு பலாக்காயுடன் அசங்காவின் வீட்டுக்குப்போகும்போதுதான் உண்மையில் தொடங்குகிறது. அதுவரைக்குமான பத்திகளை சொல்லப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் அதற்கு பிந்தைய கதையோட்டத்திற்குள் ஆங்காங்கே குறிப்புணர்த்தி கொடுக்கமுடியும் என்பதே ஆசிரியர் உணரவேண்டிய வடிவப்பயிற்சி.ஒரு வெற்றிகரமான சிறுகதை கதையின் மைய ஓட்டத்திற்குள் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக வாசகனை இழுப்பதாகும். மைய முடிச்சை அவன் உள்ளத்தில் ஆழ நிறுவுவதற்கு இரண்டு பத்திகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது ஒர் இலக்கணம். இக்கதையின் முதல் பல பத்திகளில் அசங்கா என்ற பேருக்கு அப்பால் ஏதோ வாசகனுக்கு கிடைப்பது ஏதுமில்லை

இவ்வியல்பு கதைமுழுக்க உள்ளது. இக்கதை முழுக்கவே கதை எதை நோக்கி செல்கிறதோ அதனுடன் தொடர்பற்ற தகவல்களும் வர்ணனைகளும் ஏராளமாக உள்ளன. ஒரு மறுசீரமைப்பில் ஆசிரியனே வெட்டி அகற்ற வேண்டிய பகுதிகள் என்று அவற்றைச் சொல்லலாம். இக்கதையில் அசங்காவுக்கும் கதை சொல்லிக்குமான பாலியல் உறவும் சரி, அசங்காவின் மகள் அந்த பூனையை எடுத்து வளர்க்கும் தகவலும் சரி, அப்பூனையின் சித்தரிப்பும் சரி சற்று அதிகமாகவே சொல்லப்பட்டுள்ளன.

இக்கதை பலவகையிலும் வண்ணதாசன் உலகத்தைச் சார்ந்தது. வண்ணதாசன் பூடகமாக சொல்லப்படும் கதைக்கருக்களை கையாள்வதில் நிபுணர். அவரது திறன் என்பது எவ்வளவு தேவையோ அதற்குமேல் ஒரு சொல்லும் சொல்லாமல் இருக்கும் நாவடக்கம். இக்கதையை வண்ணதாசன் எழுதியிருந்தால் அசங்காவுக்கும் கதைசொல்லிக்குமான உறவையோ அல்லது அந்தக் குழந்தையின் நோக்கில் அவர்களிடையே உறவுச் சிக்கலையோ சொல்லியிருப்பார். மற்றவை பின்புலத்தில் ஊகிக்கக்கூடியவையாக நிறுத்தப்பட்டிருக்கும்.

அல்லது ஒருவேளை கதை அந்த பூனையைப்ற்றி மட்டுமானதாக நிறுத்தி மற்ற அனைத்தையும் வெறும் உதிரிக்குறிப்புகளாக கதைக்குள் தூவியிருப்பார். எதுவாக இருந்தாலும் அந்த மைய சித்திரம் மிக உயிரோட்டமான மெல்லிய கோட்டோவியமாக இருக்கும். அந்த ஓவியத்துக்குள்ளே பிற கதைகள் வாசகனால் நுட்பமாக ஊகிக்க கூடிய விதத்தில் மறைக்கப்ப்ட்டிருக்கும்.

கதைமுடிவில் பூனையை ஒரு குறியீடாக்கும்பொருட்டு ஆசிரியர் அளித்திருக்கும் உணர்ச்சிகரமான அழுத்தம் கதையின் கலைக்குறைபாட்டை உருவாக்குகிறது. அக்குழந்தையின் இறப்பு வரைக்கும் கதை செல்லும்போது நெடுந்தொலைவுக்கு முன்னரே முழுக்கதையையும் பெற்றுக் கொண்ட வாசகன் சற்று சலிப்புடனே அதைத் தொடர்கிறான்.

இக்கதையின் அடுத்த மிகப்பெரிய குறை என்பது அதன் மையப்படிமமேதான். ஒரு படிமம் முதலில் பயன்படுத்தப்படும்போது கலை. மறுபடியும் பயன்படுத்தப்படும்போது நகல்.மூன்றாம் முறை பயன்படுத்தப்படும்போது அது தேய்வழக்கு. பூனையை பாலியலுடன் தொடர்புறுத்தும் தேய்வழக்கிலிருந்து எழுத்தாளர்கள் வெளிவரலாம் என்று தோன்றுகிறது.

இக்கதை உரையாடல்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும். இலங்கை வட்டார வழக்கின் இயல்ப்பான உரையாடல்களாக அவை அமைந்துள்ளன. உரையாடல்கள் கதைக்குள் மூன்று வகையில் வெளிப்படலாம். பூமணி அல்லது இமயம் வகையான இயல்புவாத எழுத்தில் எவ்வித நுட்பமோ அழகோ இல்லாத தட்டையான் உரையாடல்கள் மட்டுமே இருக்கும். உரையாடல்கள் உண்மையில் அப்படித்தான் நிஜவாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. புகைப்படத்தன்மை என்பது அவ்வழகியலின் இயல்பு.

லா.சா.ரா அல்லது மௌனி எழுதும் வகையான கதைகள் எங்கும் எவரும் பேசாத அசாதாரணமான கவித்துவம் வாய்ந்த உரையாடல்கள் கொண்டவை. அவ்வழகியலின் ஒட்டுமொத்த உணர்வுநிலையில் ததும்பும் கவித்துவமே முக்கியம். அசங்கா போன்ற கதைக்ஜளின் அழகியல் யதார்த்த தளத்தில் நின்றுகொண்டு கவித்துவத்தை உட்குறிப்பாக அடையமுயல்வது. வெறும் யதார்த்த உரையாடல்களில் கதையின் குறியிட்டுத்தன்மை அழிந்து உணர்வுநிலைகள் வெளிப்படாமல் போகும். நேரடியாகக் கவித்துவமாக அமையுமென்றால் கதை உருவாக்கும் யதார்த்தம் மறுக்கப்படுகிறது. அந்நிலையில் யதார்த்தமாகத் தோன்றும்போதே கவித்துவக் குறிப்புடன் உரையாடல்கள் அமையுமென்றால் மட்டுமே அவை கதையை செறிவுள்ளவையாக ஆக்கும்.

அசங்காவுக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் எந்த வகையிலும் கவித்துவமான மேலதிக உட்குறிப்புகள் இல்லை. கவித்துவம் என்பது இங்கு கற்பனாவாதம் சார்ந்ததாக சொல்லவில்லை. நவீன கவிதை அடைந்த புறவயமான எதார்த்தத்திற்குள்ள சாதிக்கப்படும் ஒரு புறவயமான னகவித்துவம் உண்டு. அக்கவித்துவமே இக்கதையை வலுவானதாக அமைக்கும்.

நிமினி என்ற அக்குழந்தையே இக்கதையின் மையம். அவளுடைய தோற்றம் இக்கதைக்கு மிக முக்கியமானது. அசங்காவின் தோற்றத்தைக் கூர்மையாக வர்ணிக்கும் கதை நிமினியின் தோற்றத்தை சொல்லாமல் விட்டுவிட்டது ஒரு குறையே. கதை முடியும்போது நிமினியின் ஆளுமைக்கும் பூனைக்குமான நுட்பமான மயக்கம் இக்கதையில் வந்திருக்கலாம். மாறாக நிமினியும் பூனையும் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட ஓர் இணைப்பை மட்டுமே இக்கதைக்குள் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக இக்கதையின் ஒட்டுமொத்தமான நீளம் குறிப்பிடத்தகுந்தது. சிறுகதைக்கு நீளம் ஒரு பொருட்டல்ல. அச்சில் முப்பது பக்கம் வரக்கூடிய சிறுகதை கூட மேற்கில் எழுதப்படுகின்றன. ஆனால் அந்நீளம் கதைக்கருவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். கூர்மையாக, நுட்பமாக ஒன்றை மட்டுமே உணர்த்தி நிற்கக்கூடிய கதை நீளமாக பலபடிகளாகச் செல்ல முடியாது. ஒரு உணர்வு நிலையை அல்லது கருத்து நிலையை பல படிகளுக்கு வளர்த்துச் செல்லும் கதைகளுக்கு மட்டுமே நீளம் ஒப்புதல்.

அனோஜன் பாலகிருஷ்ணனின் அசங்கா நிமினி அப்பூனையென கதை சொல்லியின் உள்ளத்தில் உருவெடுக்கும் ஒரு கணத்தை மட்டுமே தன் கதைப் புள்ளியாகக் கொண்டுள்ளது. அப்புள்ளியைக் கண்டடைவதற்கு இத்தனை சொற்களை கடந்து வருவது வாச்கனுக்கு ஆயாசமூட்டுவது. உருவக்ககதைகள், குறிப்புணர்த்தும் கதைகள் ஒரு வாள் வீச்சு போல ஒரே உணர்வு நிலையில் வாசித்து முடிக்கப்படுபவையாகவும்,ஒரே கணத்தில் ஒட்டுமொத்தமாக நினைவில் மீட்டெடுக்கக் கூடியவையாகவும் அமையவேண்டும். வடிவ கூர்மையே அவற்றின் அழகெனக் கொள்ளப்படும்.

 

ஐசக் அசிமோவ்

 

அறிவி

அறிவியல் சிறுகதைகள் என்பவை என்ன, அவை ஏன் எழுதப்படவேண்டும்? இவ்வாறு சொல்லலாம். கதை என்பது மனிதஅனுபவத்தின் அனைத்துச் சாத்தியங்களையும் தன்வடிவில் எடுத்துக்கொள்ளும் ஒன்று. வரலாற்றை, சமூகசித்திரங்களை, அரசியலை எல்லாம் அது எடுத்துச்சொல்கிறது. ஆகவே அறிவியலும் அதற்குள் வரலாம். ஆனால் அறிவியலை பேசுபொருளாகக் கொண்டது அறிவியல் புனைவு அல்ல. அறிவியலை தன் கருவியாகப்பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையைப் பேசுவதுதான் அறிவியல் சிறுகதை.

அடிப்படை வினாக்கள், புனைவுத் தருணங்கள், உணர்வுநிலைகள் இவை மூன்றையும் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையின் தருணங்களிலிருந்தே நாம் இலக்கியத்திற்குள் எடுத்துக்கொள்கிறோம். அதுவே வாசகன் இயல்பாக அடையாளம் காணக்கூடியது. ஆனால் சில கருக்களுக்கு அதுபோதாது. ஒரு தத்துவத்தை,ஒரு தரிசனத்தை முழுவாழ்க்கைக்கும் பொருத்திப்பார்க்கவேண்டும் என்றால் அன்றாடவாழ்க்கை அதற்கு உதவாது. ஆகவே வரலாற்றுக்கும் தொன்மத்திற்கும் செல்கிறோம். ஷாஜகாரை ஔரங்கசீப் சிறையிட்டது ஒரு வாழ்க்கைநிகழ்வு மட்டும் அல்ல, ஒரு குறியீடு. ராமன் வில்லை முறித்தது ஓரு படிமம்.

அந்த வாய்ப்புக்காகவே அறிவியலுக்குள்ளும் புனைவு நுழைகிறது. அடிப்படை வினாக்கள், புனைவுத் தருணங்கள், உணர்வுநிலைகள் இவை மூன்றையும் அறிவியல் புலத்திலிருந்து ஒரு கதை எடுத்துக் கொண்டதென்றால் அதை அறிவியல் சிறுகதை என்று சொல்லலாம்

இலக்கியத்தின் அடிப்படை நோக்கமென்பது வாழ்க்கை சார்ந்த ஆதாரமான வினாக்களை எழுப்பிக் கொள்வதும், வாழ்க்கையின் உச்சங்களையும் சரிவுகளையும் சித்தரித்துக் காட்டுவதும், வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதும்தான். அறிவியலை களமாகக் கொண்டு அறிவியல் புனைகதை செய்வதும் அதையே. பத்தாயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு செவ்வாய்க்கிரகத்தில் நிகழும் ஒரு நிகழ்வை அறிவியல் சிறுகதை எழுதலாம். வைரஸ்களின் உலகுக்குள்ளேயே ஒரு கதை நிகழ்ந்து முடியலாம். எதுவாயினும் அக்கதை எழுதி வாசிக்கும் மனித குலத்தின் வாழ்க்கையைத்தான் பேசிக் கொண்டிருக்கும்.

ஆக, எத்தனை விலகிச் சென்றாலும் அறிவியல் புனைகதையின் பேசுதளம் சமகாலவாசகனே. வாசகனை அக்கதையுடன் தொடர்பு படுத்துவது ஒன்றுதான், சமகால வாழ்க்கை.சமகாலத்தின் அறச்சிக்கலை, ஒழுக்கப்பிரச்சினையை, ஆன்மீகத்தேடலைத்தான் அனைத்து அறிவியல் கதைகளும் பேசிக் கொண்டிருக்கும்.

இதற்கும் அப்பால் அறிவியல் புனைகதைகளுக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பு அவற்றின் அன்றாட வாழ்க்கையைக் கடந்த மீபுனைவுத் தன்மைதான். அன்றாட வாழ்க்கையை புனைகதைகளில் மிகக்குறைவாகத்தான் எழுதியிருக்கிறார்கள் என்பது இரண்டாயிரம் வருடக்கதைகளை எடுத்து பார்த்தால் அறிய முடியும். அன்றாட வாழ்க்கையில் உள்ள உலகியலின் இரும்பு விதிக்ள் எழுத்தாளனின் கற்பனையை கட்டிப்போடுகின்றன.

கதை கவித்துவமாகக் கூர்மை கொள்ள வேண்டுமென்றால் அதிலுள்ள செய்திகள் அனைத்தும் உருவகமாக வேண்டும். மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மீன்வாங்கப்போகும் அன்றாட நிகழ்வை கவித்துவ உருவகமாக்குவது கடினம். கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு செங்குத்தான பாறையில் இறங்கி தேனை எடுப்பதை உருவகமாக்க முடியும் ஆகவே கலை எப்போதும் அசாதாரணமான நிகழ்வுகளை உக்கிரமான தருணங்களையும் நோக்கிச் செல்கிறது.

அவை அன்றாட வாழ்க்கையில் அதிகம் இல்லை என்பதனால்தான் சென்ற காலங்களில் புராணம் என்னும் வடிவமே உருவாகிவந்தது. அதில் மனிதர்களுடன் அரக்கர்களும் அசுரர்களும் பங்கெடுக்கிறார்கள். விலங்குகள் பேசுகின்றன. மலைகள் மிதந்தலைகின்றன. ஓர் அன்றாடக்கதையிலிருந்து புராணத்துக்குச் செல்லும் போது அதன் ஒவ்வொரு வரியும் கவிதையாகவும் ஒவ்வொரு தருணமும் உருவகமாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

மனித குலத்தின் ஈராயிரம் ஆண்டு இலக்கியப்பாரம்பரியத்தில் பத்தில் ஒன்று கூட யதார்த்த வாழ்வுடன் தொடர்பு கொண்ட நேரடி இலக்கியம் அல்ல. தமிழ் மரபை நாம் எடுத்துக் கொண்டால் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் புனைகதை என்பதே சிலப்பதிகாரம் தான் ஆனால் அதிலும் உச்சம் புராணத்தன்மை வழியாகவே அடையப்படுகிறது. நவீன இலக்கியம் தோன்றியதும் அது அன்றாட வாழ்க்கைச் சித்தரிப்பை நோக்கி தன் கவனத்தை செலுத்தியது.

அன்றாட வாழ்க்கையை எழுதும் யதார்த்தவாதமும் இயல்புவாதமும் நேரடியான உருவகத்தன்மையை விடுத்து மறைமுகமான குறிப்புணர்த்தும் தன்மையை கையாள்கின்றன. கதைநிகழ்வுகளில் வாசக இடைவெளிகளை உருவாக்கி அவற்றை வாசகனே நிரப்பிக் கொள்ள வைக்கின்றன. கதைக்குள் உருவகங்களை பயன்படுத்துவதை விடுத்து அக்கதைநிகழ்வையே ஒரு பிரதிநிதித்துவத் தன்மையுடன் மொத்த வாழ்க்கைக்கும் பொருத்திப்பார்க்கும் வாய்ப்பை வாசகனுக்கு அது அளித்தது.

ஆனால் மிக விரைவிலேயே இலக்கியத்துக்கு அது போதாது என்பதை கதை கண்டுகொண்டது. ஆகவே யதார்த்தக் கதைகளுக்குள்ளேயே நவீன உருவகங்கள் வரத்தொடங்கின. தங்களை யதார்த்த தளத்திலேயே நிறுத்திக் கொண்டிருக்கும்போதுகூட மேலதிக அர்த்தங்களை சுமந்து நிற்கும் தன்மை அவற்றுக்கு உண்டு. அசோகமித்திரனின் புலிக்கலைஞன் ஓர் அன்றாட நிகழ்வுச்சித்தரிப்பே. ஆனால் புலி என்பது ஒரு புராண உருவகம் அளவுக்கு அழுத்தமானது. தி.ஜானகிராமனின் பரதேசி வந்தான் கதையில் அனைத்து நிகழ்வுகளும் அன்றாட வாழ்க்கையைச் சார்ந்தவையாயினும் அப்பரதேசியின் தோற்றத்தில் தொன்மையான பிக்ஷாடனரின் புராண தன்மையை மேலதிகமாக ஏற்றி தி.ஜானகிராமனால் காட்ட முடிகிறது

மேலும் மேலும் யதார்த்த கதைகள் எழுதப்படும்போது ஒரு பக்கம் எழுத்தாளனின் உள்ளம் சலிப்புறத்தொடங்குகிறது. கட்டற்ற கற்பனைக்காகவும், கணம் தோறும் பொருள் விரிவு கொள்ளும் உருவகங்களுக்காகவும் அவ்வுள்ளம் ஏங்குகிறது. இருவகையில் அவன் தன் பாதைகளை அமைத்துக் கொள்கிறான். ஒன்று திரும்பி தொன்மங்களுக்கும் புராணங்களுக்கும் செல்வது. அவற்றைக் கொண்டு புதிய புனைவுகளை உருவாக்குவது. இன்னொன்று முன்னால் சென்று அறிவியலின் சாத்தியங்களை கற்பனைவிரிவை கண்டடைவது.

index

சோ தருமன்

 

அறிவியல் புனைகதைகள் இந்நூற்றாண்டுக்கு முக்கியமான புனைவுவகையாக ஆனதற்குக் காரணம் அவற்றில் உள்ள அன்றாடம் கடந்த தன்மைதான். ஒருவகையில் அவை தொன்மங்களுக்கு மிக அணுக்கமாக இருப்பதைப்பார்க்கலாம். அறிவியல் புனைகதைகள் என்பதே அறிவியல் தருக்கத்துடன் சொல்லப்பட்ட புராணங்கள் என்று கூட பல சமயம் வரையறுக்க முடிவதில்லை. ஐசக் அசிமோவின் கதைகளில் வரும் எந்திர மனிதர்களுக்கும் இந்தியத் தொன்மங்களில் அசுரர்களுக்குமான ஒப்புமையை ஒருவன் பார்த்தால் போதும் அதை உணரலாம்

இன்றைய அறிவியல்புனைகதையுலகம் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அசாதாரண உளவியலையும் ஏன் அன்றாட வாழ்வின் உறவுச் சிக்கல்களையும்கூட அறிவியல் உருவகங்களின் மூலம் மிக விரிவாகச் சொல்லும் பல கதைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் அனைத்திலும் பொதுவாக இருக்கும் அம்சம் அன்றாட வாழ்க்கையின் எல்லைகடந்த அந்த வியப்புக்கற்பனைதான். ஒருகதையில் அந்த அம்சம் உருவாக்கும் மன எழுச்சி இல்லையேல் அறிவியல் புனைக்தைகள் என்னும் வடிவம் அளிக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பை ஆசிரியர் நழுவ விட்டதாகவே நா,ம் கொள்ளவேண்டும்.

ஐசக் அசிமோவின் கதையில் வரும் ஒரு எந்திர மனிதன் ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல, அவன் குறியீடும் கூட. அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லும், அவனுடைய ஒவ்வொரு அசைவும் வெவ்வேறு வகையில் அர்த்த விரிவாக்கம் பெற்று வாசிப்பை விரியச் செய்யும். அவ்வாறு அர்த்தங்கள் உருவாக்கும் ஒருவகை ‘மூளைவிழிப்பு’ நிலையை அந்த மிகைக்கற்பனை உலக நமக்குள் உருவாக்குகிறது. அது அறிவியல் கதையில் முதல் தேவைகளில் ஒன்று.

சதீஷ்குமார் எழுதிய அறிவியல் புனைகதை 10.5 முதன்மையாகத் தவறவிட்டிருப்பது அந்த விந்தை அம்சத்தைதான். எடுத்துக் கொண்டிருக்கும் கருவுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு மிக விரிவான ஒரு அன்றாட வாழ்க்கைச் சித்தரிப்பை இக்கதை அளிக்கிறது. ஓட்டப்பந்தய வீராங்கனை நிஷாவின் வாழ்க்கை, அவளுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சியாளனின் வாழ்க்கை, ஒழுங்கின்மைக்கோட்பாடு பற்றி ஆய்வு செய்யும் ஒரு ஆய்வாளனின் வாழ்க்கை என பல வாழ்க்கைகள் தனித்தனியாக சொல்லப்படுகின்றன. மிக விரிவான நிகழ்வுத் தொடர்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அறிவியல் புனை கதைகளை வாசிக்கும் வாசகன் ஆரம்பத்திலேயே பல வகைகளில் உருவகங்களும் கவித்துவங்களும் நிறைந்த ஒரு சூழலை எதிர்பார்ப்பான். கதை கற்பனையின் எல்லைகளை நோக்கிச் செல்லவேண்டும் என, தன் உள்ளத்தை அதன் பரவசத்தில் நிறுத்தவேண்டும் என எதிர்பார்ப்பான். ஆனால் பலபக்கங்களுக்கு அவன் சோர்வூட்டும் தக்கையான அன்றாடச்சித்தரிப்பையே இக்கதையில் காண்பான். முதன்மையாக இது அறிவியல் சிறுகதையின் தளத்திலிருந்து நழுவிவிடுவது இந்த அம்சத்தினால்தான்.

நிஷா ஓட்டப்பந்தய வீராங்கனை என்றால் அவளுடைய இலக்கோ அறிவியல் ஆர்வமோ தான் இக்கதையின் தொடக்கமாக அமைந்திருக்க வேண்டும். அவளுடைய பயிற்சியாளன் இக்கதைக்குள் எவ்வகையில் முக்கியமானவனல்ல. அவன் அளிக்கும் அழுத்தம் அவள் உணரும் அளவிலேயே கதைக்குள் இருந்தால் போதுமானது. அதற்குள் ஒரு அறிவியலாளர் வந்து ஒழுங்கின்மைக்கோட்பாடுபற்றி நேரடியாக இவ்வளவு பெரிய விவரணையை சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஒருபத்திக்குள் கதையில் அது நிஷா அறிந்துகொள்ளும் அளவிலேயே வந்திருந்தால் போதுமானது.

இன்னும் சொல்லப்போனால் இந்தச் சிறுகதை நிஷா அந்த ஓட்டப்பந்தயத்தில் துப்பாக்கிக் குண்டின் ஒலிக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் கணத்தில் தொடங்கி வென்று முடியும்போது முடிந்து விட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒரு சிறுகதையின் மிகச்சிறந்த தொடக்கம் என்பது முடிவுக்கு மிக நெருங்கியிருக்கும் ஒரு புள்ளிதான். அந்தப்புள்ளியை நோக்கி நெடுந்தொலைவிலிருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களின்வழியாக ஓடி வருகிறது இந்தக் கதை. அம்மையப்புள்ளிக்கு எவ்வகையிலும் சம்மந்தமில்லாத ஏராளமான தகவல்களையும் உரையாடல்களையும் சொல்லி அலைக்கழிகிறது. இம்முடிவு வரை வரும் வாசகன் பெருமளவுக்கு சலிப்பை அடைகிறான்.

அறிவியல் புனைகதைகளுக்குள்ள சுவாரசியம் என்ற அம்சத்தை எவ்வகையிலும் அடையாததால் முழுமையாக தோல்வியடைந்த கதை என்று சொல்லலாம். இதிலுள்ள அறிவியல் அம்சம் என்பது ஒன்றே. அதுவும் மிகப்புகைமூட்டமாக இக்கதைக்குள் சொல்லப்பட்டிருக்கீறது. வாழ்க்கையை தீர்மானிப்பதின் ஊகிக்கக் கூடிய விதிகளுக்கு அப்பால் செயல்படும் விசைகள் சில உண்டு. அவற்றைச் சொல்வதற்கு இந்த ஒழுங்கின்மைக் கொள்கையோ அதன் உட்சிக்கல்களோ எதற்கு? இது அறிவியல் சிறுகதை அல்ல. மிகச்சாதாரணமான ஒரு நிகழ்வுக்குள் ஓர் அறிவியல் கொள்கையை பேசியிருக்கும் ஒரு சாதாரணமான கதை மட்டுமே [ http://sathish-story.blogspot.in/ ]

 

 

 

IMG_1206

கலைச்செல்வி

 

கலைச்செல்வியின் மஞ்சுக்குட்டி வழக்கமாக பெண்கள் எழுதும் குடும்பச்சித்திரத்தை, அல்லது பெண்ணியக் கொள்கைகளையோ நோக்கிச் செல்லாமல் சற்று அசாதாரணமான ஒரு வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு என்று நினைக்கிறேன். ஜி.நாகராஜன் முதல் இமயம் வரை எழுதிக்காட்டிய அடித்தள மக்களின் வாழ்க்கை. அங்கு செயல்படும் இச்சை,வன்முறை. அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாடு.

பலவகையிலும் இயல்பான மொழிநடையுடன் ,அயர்ச்சி தெரியாது எழுதப்பட்டுள்ளது இக்கதை .தமிழில் வழ்க்கமாக இத்தளத்தில் எழுதப்படும் கதைகளில் இருக்கும் வலிந்த சித்திரங்களும் இல்லை. சுப்ரபாரதிமணியன் பாவண்ணன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் அடைந்த இயல்பான தொடக்கம், சரளமான உரையாடல், நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்கு சென்று மீண்டும் வருதல் என்னும் ஊசலாட்டம் ஆகியவை சிறப்பாக இக்கதையில் அமைந்துள்ளன், நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதையில் நிகழ்ந்துள்ளது

மஞ்சுவின் சித்திரம் ஆரம்பத்திலிருந்து நுணூக்கமாகச் சித்தரிக்கபப்ட்டு எழுந்துவந்து இயல்பான அறவெளிப்பாடொன்றில் திருப்பம் கொள்கிறது. சிறுகதையின் வடிவத்தில் சரியாகக் கதை அடைந்திருப்பதைக் காட்டுகிறது இது. மனைவியை விட்டு காதலியுடன் வந்தவன் உள்ளத்தின் ஆழத்தில் அம்மனைவி குடிகொள்வதும், அந்த நெருக்கடியின் குற்றஉணர்வு அவனை நோயென பீடிப்பதும் ,அந்த நோயுற்ற நிலையிலும் காதலி மேல் கொண்ட மோகம் அவனை ஆட்டுவிப்பதும் கதையில் தன்னியல்பாகவே நிகழ்கிறது. அனைத்து இழிவுகளையும் அவளுக்காக அவன் தாங்கிக் கொள்கிறான். மலம் நடுவே தூங்கும் நிலை வரை.

ஒரு கட்டத்தில் அந்த மோகம் கரைந்துவிட்டதென்பதை காதலி காண்கிறாள். அதன்பிறகு அவனை இயக்குவது அவளை அழைத்து வந்துவிட்டோம் என்ற பொறுப்புணர்வு தான். மனைவியை விட்டு வந்தவன் காதலியைக் கைவிட்டுச் செல்ல தயங்குகிறான். எங்கோ ஓரிடத்தில் அதை அக்காதலி உணருகிறாள் . அவனுள் வாழும் மனைவியின் சித்திரத்தை உணர்ந்ததும் அவனை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள். கதைப்பரப்புக்குள் பேசப்படாத ஒரு நுண்ணிய உளநகர்வு இக்கதைக்குள் நிகழ்ந்திருப்பதால் இதை ஒரு நல்ல கதை என்று சொல்லலாம்.

இக்தையை மேலும் கூர்மைபடுத்துவது என்றால் சிலவற்றைச் சொல்லலாம். காந்திமதியின் சித்திரம் இத்தனை அழுத்தமாக கதைக்குள் வந்திருக்க வேண்டியதில்லை. மீண்டும்மீண்டும் அவள் வருவதும் மஞ்சுவின் முன்னால் நின்று பூசலிடுவதுமான சித்திரங்கள் சற்று வழக்கப்படி உள்ளவை. அவன் கிளம்பி வரும்போது அமைந்திருந்த அதே சித்திரத்தில், ஆழமான அமைதியுடன் உறைந்திருப்பதுபோல அப்படியே விட்டிருந்தால் மேலும் அழுத்தம் நிகழ்ந்திருக்கும். அந்த அழுத்தத்தை நோக்கி அவன் திரும்பிச் செல்வதாகத் தோன்றும்

மஞ்சுவின் குணச்சித்திரத்தில் இருக்கும் ஒரு கட்டற்ற தன்மை ஆரம்பம் முதலே சரியாக வந்திருக்கிறது. அவள் குமாரை மணம் செய்ய முடிவெடுக்கிறாள். அந்தக் குமார் கதைக்குள் இன்னும் தெளிவான ஒரு முகத்துடன் வந்திருக்கலாம். மனைவி இன்னொருவனுடன் இருக்கையில் அவனுக்காகவும் சேர்த்து பிரியாணி வாங்கிச்செல்லும் அவனுடைய உளவியல் சொல்லப்படாது, குறிப்பும் உணர்த்தப்படாது விட்ப்படுகிறது.

இக்கதையில் முடிவுக்குப்பின் நீளும் அடுத்த கட்டமென ஒன்றில்லை என்பதே முக்கியமான குறையென தோன்றுகிறது. மஞ்சுவின் மனதில் நிகழும் அந்த மெல்லிய மாற்றத்திற்கு அப்பால் இக்கதை நமக்குணர்த்தும் வாழ்க்கைஉண்மை என்பது எதும் இல்லை. அதேசமயம் இத்தருணத்தையே வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்துக்கான ஒரு பிரதிநிதித்துவ நிகழ்வாகக் கொள்ளவும் முடியவில்லை. அக்காரணத்தாலேயே வாழ்க்கையின் ஒருதருணத்தை நோக்கி வெளிச்சம் காட்டும் சிறுகதை என்ற அளவிலேயே இது நின்றுவிடுகிறது.

இத்தகைய கதைகளை தமிழ் முன்னோடி எழுத்தாளர்கள் பலகோணங்களில் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பது இக்கதையை ஒருபடி கீழிறக்கும் அம்சம். இலக்கியப் படைப்புக்கு இருந்தாகவேண்டிய பிறிதொன்றிலாத தன்மை இதிலில்லை. இக்கதையை படிக்கும்போதே குறைந்தது பத்துபதினைந்து வெவ்வேறு கதைகளின் நினைவில் எழுந்து மறைகின்றன. இரண்டாவது பெண் என்பதும் சரி ,அடித்தள வாழ்க்கையைச் சேர்ந்த பெண்ணின் அறம் என்பதும் சரி ,மிகச் சம்பிரதாயமாக சொல்லி செய்து வந்த கதைக்கருக்கள். அது ஒன்றே இக்கதையின் குறைபாடென்று நினைக்கிறேன்.

 

 

imayam

இமையம்

 

 

இந்த ஆறு தொகுதிகளாக வந்த சிறுகதைகளை படிக்கும்போது ஒட்டுமொத்தமாக தோன்றும் சித்திரங்கள் சில உண்டு. ஒன்று, எக்கதையும் அசாதாரணமான கதைக்கருக்களில் எழுதப்படவில்லை. புதிய ஒர் எழுத்தாளர் இலக்கியச் சூழலுக்குள்நுழையும்போது சொல்லப்படாத கதைக்கருக்களின் ஒரு ரகசியத் தொகை அவனிடம் இருக்கும். இமையமோ சோ.தருமனோ எழுந்தவந்தபோதுகூட அந்த கவன ஈர்ப்பு அம்சம் அவர்களின் கதைக்கருக்களில் இருந்தது.

இக்கதைகள் அனைத்துமே தமிழ்ச் சூழலில் ஏற்கனவே எழுதப்பட்ட கதைக்கருக்கள். இங்கு வந்து வாசித்து இவை பலராலும் எழுதப்படுவதைப்பார்த்து இவற்றை தானும் எழுத முடியுமே என்று எண்ணி முயன்றவை போலுள்ளன. பலகதைகளுக்கு வேறுகதைகளே முன்தூண்டலாக இருந்திருக்கும். நேரடி வாழ்க்கை அல்ல. இந்த ஆறு தொகுதிகளில் மிகச் சிறந்த கதையாகிய சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதை கூட முன்னரே இச்சூழலில் எழுதப்பட்ட கதைகளிலிருந்து உருவானது என்றே சொல்லத் தோன்றுகிறது. கதைகளின் மிக முக்கியமான குறைபாடு இதுவே

இரண்டாவதாக, தங்கள் கதைவடிவம் முன்னரே பலராலும் எழுதப்பட்டு பழகிப்போன ஒன்றா என்ற வினாவும் அப்படி ஆகி விடக்கூடாதென்ற எச்சரிக்கையும் இவ்வெழுத்தாளர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே அனேகமாக எல்லாக் கதைகளும் வெவ்வேறு வகையில் முன்னரே எழுதப்பட்டு பழகிவிட்ட கதைவடிவில் அமைந்துள்ளன. ஆகவே வாசகனின் ரசனைசார்ந்த கவனம் இக்கதைகளில் நிலைக்கவில்லை. நல்ல கதை ரசனையைச் சீண்டி ஒரு சவாலை அளிப்பதாக அமையும் – மூளையின் பொறியியல்திறனுக்கு அல்ல.ஆகவே இவற்றில் பெரும்பாலான கதைகள் ஓரிரு பத்திகள் படித்தபின் தாவிச்சென்று ஆங்காங்கே படைத்து முடிவுக்கு வந்ததால் எதுவும் இழக்கப்படுவதில்லை.

மூன்றாவதாக, கதைகளின் நடை. பெரும்பாலாலும் எல்லா எழுத்துக்களிலும் பிரபல வணிக எழுத்துக்களின் செல்வாக்கே அதிகமாக இருக்கின்றது என்பது எனக்குப் பெரும் ஆச்சரியம். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதை மட்டுமே சற்றேனும் விதிவிலக்கு என்று சொல்வேன். மற்ற கதைகளில் எல்லாவற்றிலுமே தமிழ் வார இதழ்களின் தேய்வழக்குகள் நிறைந்துள்ளன.

ஒப்புநோக்க நல்ல கதை என்று சொல்லக்கூடிய தருணாதித்தன் கதைகளில் கூட விகடனின் பொதுவான மொழிவழக்குகளைக் காணும்போது இவ்வெழுத்தாளர்களின் முதன்மை ஈடுபாடு வணிகக்கதைகள் தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவற்றுக்கு வெளியே எப்போதும் நின்றிருக்கும் எனக்கு அதில் மிகப்பெரிய மனச்சோர்வு என்பதைச் சொல்லாமலிருக்கமுடியாது.

ஆனால் அவர்களின் இளமைப்பருவத்தில் வாசித்த அந்தக் கதைககளின் செல்வாக்கு அவர்களில் தீவிரமாக இருக்கலாம். அவற்றில் இருந்து விடுபடும் அளவுக்கு பின்னர் அவர்க்ள் தீவிரமான இலக்கிய வாசிப்புக்கு வரவில்லை என்றே ஊகிக்கிறேன். இன்று உழைப்பு, குடும்பம் என்னும் சூழலில் ஓரளவே வாசிக்கிறார்கள். ஆழமான மொழிப்பாதிப்பைச் செலுத்துமளவுக்கு அவ்வாசிப்பு விரிவானது அல்ல. இதுதான் பிரச்சினையாக இருக்குமெனத் தோன்றுகிறது

கடைசியாக இலக்கியம் அல்லாத ஒரு சிக்கல். இணைய தளத்தில் இக்கதைகளைப்படிப்பது மிகவும் தொல்லை தரும் அனுபவமாக இருந்தது. உதாரணமாக, அனோஜன் பாலகிருஷ்ணனின் கதை. இஅவை சரிவர பத்தி பிரிக்கப்படாமல், சகட்டு மேனிக்கு பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றன. இணைய தளத்தில் பத்தி என்பது இரட்டை இடைவெளி விட்டு தான் வெளியிடப்படவேண்டும். அச்சில் அப்படி அல்ல, ஒற்றைவரி இடைவெளி போதும்.

மின்னஞ்சலில் வரும் ஒரு பிரதியை அப்படியே இணையத்தில் ஏற்றும்போது பத்திகளுக்கு இடையே உள்ள இடைவெளி பதிப்பாளர்களால் பிரிக்கப்படாவிட்டால் மொத்தையான எழுத்துப்பரப்பாக ஆகிவிடும். இணையதளத்தின் பக்கத்தில் நாம் பக்கத்தை உருட்டி மேலேற்றி வாசிப்பதனால் பத்திகளுக்கான இடைவெளியும் சரி வரிகளுக்கான இடைவெளியும் சரி தெளிவாக விழுந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத இக்கதைகளில் பலவற்றை இணையத்தில் வாசிப்பது மிகவும் துன்பம் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஒப்பு நோக்க சொல்வனம் ஒன்று ம்மட்டுமே இவ்விஷயத்தில் கவனம் செலுத்துகிறது மற்ற இணைய தளங்கள் வரும் கதைகளை அப்படியே வெட்டி ஒட்டிவிடுகின்றன என்ற எண்ணம் ஏற்படுகின்றது. வாசகன் என்பவனுடைய இருப்பைப்பற்றி எவ்வளவு தூரம் அவர்கள் கவனம் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்ச் சூழலில் எப்போதுமில்லாதவரை அனைத்து கதைகளும் பிரசுரமாகும் வாய்ப்பு இன்று வந்துள்ளது. கைப்பிரதியாக ஒன்று தங்கிவிடும் நிலையே இன்றில்லை. இது ஒரு நல்ல விஷயம் என்றாலும் மறுபக்கமென்பது பிரசுரிக்கப்படும் படைப்புகளில் மிகப்பெரும்பாலும் எவராலும் படிக்கப்படுவதில்லை என்பது. தன்னை வாசகனிடம் கொண்டு சேர்ப்பதே எழுத்தாளனின் கடமையாக மாறிவிடுகிறது. இது எழுத்தாளனை மிகநுட்பமாகத் திரிபடையச் செய்து முகநூலில் கழிசுற்றவைக்கிறது. கதைகளுக்குள் குரலெழுப்பவைக்கிறது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட புதிய நம்பிக்கை என்னும் இதழில் நான் எழுதிய மாடன் மோட்சம் என்னும் கதை அன்று பதினைந்து முறைகளுக்கு மேல் மறுபிரசுரமாகியது. அதற்கு அன்றே நூற்றியிருபது கடிதங்கள் வந்தன. சேர்த்து ஒரு கோப்பு வைத்திருந்தேன். அது இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுகிற்து. அத்தகைய ஒரு வாசக கவனத்தை இன்றைய சூழலில் கதைகள்  தன்னியல்பாக பெற வாய்ப்பே இல்லை என்பது மிக துரதிருஷ்டவசமானது.

இன்று ஒருகதை அதன் பேசுபொருளின் இணையப்பரபரப்பால் மட்டுமே சற்றேனும் கவனிக்கப்படும் என்று எண்ணுகிறேன். உயிர்மை கால்ச்சுவடு போன்ற இதழ்களில் வரும் கதைகளுக்கு வாசகர்கள் இருக்கிறார்களா என்றே ஐயம் எழுகிறது. இந்நிலையில் வலுவான கதைகள் மட்டுமே எழுதி வெளியிடும் ஒரு எழுத்தாளன் மட்டுமே தன்மீது தொடர்கவனத்தை நிலைநிறுத்த முடியும். ஆகவே சிறந்தகதைகள் மட்டுமே தன் பெயரில் வெளியாகவேண்டும், எழுத்துப்பயிற்சிகளை அச்சிலோ இணையத்திலோ பெருக்கிவிடக்க்கூடதென்பது முக்கியமானது.

இன்று பல எழுத்தாளர்கள் மூன்று நான்கு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விட்டார்கள். ஆனால் வாசகச் சூழலில் அவர்களின் எந்தச் சிறுகதையுமே தனித்து பேசப்படுவதோ, இயல்பாக நினைவுகூரப்படுவதோ இல்லை என்னும் நிலை இப்போது இருக்கிறது. காரணம் கதைகளுக்கென்று ஒரு தனித்துவத்தை அவர்களால் அடைய முடிவதில்லை. கதை வாசகனிடம் ஒரு பாதிப்பை செலுத்தி அவன் சிந்தனையின் ஒரு பகுதியாக நீடிக்க முடியவில்லை. இந்த எழுத்தாளர்கள் இன்றைய சூழலின் இச்சவால்களை சந்தித்து மேலேறவேண்டுமென விரும்புகிறேன். வாழ்த்துக்கள்

===================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40

$
0
0

[ 8 ]

பிரம்மகபாலத்தின் மழைசூழ்ந்த குகையறைக்குள் இருந்து பிரசண்டன் சொன்னான் “மும்முகன் பிறந்த கதையை நான் விருத்திரர்களின் தொல்லூரில் கேட்டேன். அந்தணரே, அங்கே காட்டுக்குள் அமைந்த பாறையொன்றின்மேல்  மூன்று பெருங்கற்களை மூன்று திசைநோக்கி முதுகிணைய நிறுத்திவைத்து விழிகளும் வாயும் வரைந்து அவர்கள் வழிபடுகிறார்கள். மும்முகனின் ஒரு முகம் கனிந்த தந்தை. அதன் காலடியில் மலரும் நீரும் மாவுணவும் படைத்து வழிபட்டனர். இரண்டாவது முகத்தின் அடியில் கள்ளும் குருதியும் படைத்தனர். மூன்றாம் முகத்தின் முன்பு ஊழ்கநுண்சொல்லன்றி எதையும் படைப்பதில்லை.”

“முதல் முகத்தை முழுநிலவிலும் இரண்டாம் முகத்தை கருநிலவிலும் வழிபட்டனர். மூன்றாம் முகத்தை ஆண்டுக்கொருமுறை இளவேனில் தொடங்கும் நாளில் பூசகர் மட்டுமே சென்று வணங்கினர்” என்றான் பிரசண்டன். “மும்முகனின் கதையை எனக்கு கபாலர் சொன்னார். இடிந்தழிந்த மகாவீரியத்திலிருந்து ஒரு சிறுகல்லை எடுத்துவரச் சொன்னான் த்வஷ்டா. அதை கொண்டுசென்று காட்டுக்குள் நட்டான். ஒவ்வொரு நாளும் அதனருகே அமர்ந்து விழிநீர் சிந்தி அழுதான். அவனுடைய கண்ணீர்பட்டு அக்கல் முளைத்தது. பேருருவம் கொண்டு ஒரு மலையென எழுந்து வளர்ந்தது. மூன்றுமுகம் கொண்டு எழுந்து நின்றிருந்த அந்த மலையை த்வஷ்டா தன் முதற்றாதையின் மண்வடிவமென எண்ணினான். அதற்கு விஸ்வரூபன் என்று பெயரிட்டான்.”

மும்முகம் கொண்ட மலையைப்பற்றி தொல்லசுரர்குடியின் பாடகர்கள் பாடியலைந்தனர். அதைக் கேட்டு அசுரர்குடியினர் ஒவ்வொரு கோடையிலும் இருமுடிகட்டு சுமந்து அங்கே வந்துசேர்ந்தனர். ஒருமுடிச்சில் உணவும் உடையும். மறுமுடிச்சில் மலைவடிவனுக்கான பூசனைப்பொருட்கள். பதினெட்டு நாட்கள் காடுகளுக்குள் ஓடைக்கரையிலும் பாறையுச்சியிலும் தங்கி வறண்ட ஓடையின்  நீர்வழிந்த தடம்கொண்ட பாறைகளினூடாக ஏறி மேலே சென்று அவனை நோக்கினர். அசுரர்களில் ஹிரண்யர்கள் அவன் தந்தைமுகத்தை மட்டுமே காணமுடிந்தது. அவன் சினமுகத்தைக் கண்டனர் மகிடர். அவன் நுண்முகத்தைக் காணும் வழி மேலும் அடர்ந்த காட்டுக்குள் வாழ்ந்திருந்த சண்டர் என்னும் குடிக்கு மட்டுமே இருந்தது.

மும்முகப் பெருமலை தொல்குடிகள் அளித்த பலிகொடைகளைப் பெற்று பேருருவம் கொண்டு வளர்ந்தது. அதன் முடிகள் எழுந்து முகில்களை தொட்டன. அதன் குளிர்ந்த முடியிலிருந்து நூற்றெட்டு அருவிகள் பொழிந்தன. அவை ஒழுகிய பாதைகளிலெல்லாம் அசுரர்களின் ஊர்கள் எழுந்தன. அந்நீரை உண்டு அவர்களின் குடிகள் செழித்தன. தந்தைமுகத்தைக் கண்ட அசுரர்கள் வேளாண்தொழில் செய்து செழித்தனர். சினமுகம் கண்டவர் வேட்டுவராயினர். நுண்முகம் கண்டவர்களோ அருங்காட்டுக்குள் வாழ்ந்தனர். அவர்கள் மட்டுமே பிற இருகுலங்களுக்கும் முதன்மைப்பூசகர் என்று கருதப்பட்டனர்.

பிற இருமுகங்களையும் அறிந்திருந்தனர் சண்டர்குடிப் பூசகர். அறம்பிழைத்த வேட்டுவரை அருட்தந்தையிடம் அனுப்பி பன்னிருநாட்கள் உணவொழித்து நோன்புகொண்டு மீளச்செய்தனர். அறம் கடந்த வேளிரை கொடுந்தந்தையிடம் சென்று குருதிசிந்தி பிழைபொறுக்கக் கோரி மீளவைத்தனர். இரு தந்தையருக்கும் அப்பால் இருவரின் குடிகளையும் நோக்கியபடி ஊழ்கத்தில் இருந்தான் இருள்தந்தை. அவன் விழிகளுக்கு முன் தழைத்து செறிந்து அணுகமுடியாத மந்தணம் இருளெனச் சூழ்ந்து கிடந்தது பெருங்காடு.

அங்கிருந்துதான் கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் கொண்டு உயிர்கள் வந்தன. கொலைமதவேழங்கள் அங்கே பிடிகளுடன் புணர்ந்து குட்டிகளை ஈன்றன. புலிகளும் சிம்மங்களும் அதன் வாயில் திறந்து ஒளிரும் விழிகளுடன் வளையெயிறும் கூருகிருமாக வந்து எச்சரித்துச் சென்றன. இரவில் அங்கிருந்து குளிர்ந்த மூலிகைத்தென்றல் வீசி  நோயுற்ற உடல்களை ஆற்றியது. எப்போதும் மழைதிகழும் அந்த வானையே அவர்களால் பார்க்கமுடிந்தது. அங்கே எழும் இடியோசையையும் களிறோசையையுமே அதன் குரலென அவர்கள் அறிந்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும்  வளர்ந்த மும்முகனின் புகழ் விண்ணை அடைந்தது. அவன் குளிர்முடியை நோக்க விண்ணவர் வந்துசெல்வதை தேவர்க்கரசன் அறிந்தான். “இக்கணமே அதை அழிக்கிறேன்” என்று அவன் கிளம்பினான். மலைமேல் முகிலில் தோன்றி தன் மின்படைக்கலத்தை செலுத்தினான். பன்னிரண்டாயிரம் முறை மின்னல்கள் மலையைத் தாக்கின. திசைமறைத்த பெருமுகம் புன்னகையும் சிரிப்புமாக மின்னி மின்னி அணைந்ததே ஒழிய ஒரு சிறுபாறைகூட அதிலிருந்து உதிரவில்லை.

அசுரர்களின் குடிகளில் மக்கள் ஒரு மாதம் தொடர்ந்து  இரவிலும் பகலிலும் மலைமுடிமேல் சுழன்றடித்த மின்னல்களைக் கண்டனர். “இந்திரன் எழுந்துவிட்டான்” என்று பூசகர்கள் அஞ்சிக்கூவினர். தங்கள் முற்றங்களில் சோரும் பெருமழைக்கு தலையில் காமணங்களைப் போட்டு உடல்குறுக்கி நின்று அவர்கள் அந்தப் போரை நோக்கினர். முகில்முழக்கமாக இந்திரன் போர்க்குரலெழுப்பினான். அடர்காட்டுக்குள் அவ்வொலியை எதிரொலியாக எழுப்பி மறுமொழி அளித்தான் மும்முகன்.

இறுதியில் சோர்ந்து இந்திரன் திரும்பியபோது முகில்பரப்பு விரிசலிட்டு வான்புன்னகை எழுந்தது. காடெங்கும் இலைகளில் ஒளிநகை விரிந்தது. காற்று சுழன்றடிக்க காடு கூச்சலிட்டது. பறவைகள் வானிலெழுந்து சிறகுலைத்து நீர்த்துளி சிதறின. அசுரகுடிகள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டபடி துளிவிழுந்த சேற்றுமுற்றங்களில் கூத்தாடினர். கொம்பும் குழலும் விளித்து வெற்றியறைந்தனர். இன்னுணவும் கள்ளும் உண்டு களியாடினர். “வெல்லற்கரியவன் குன்றுமுகன்” என்றனர் பூசகர்.

ஆற்றாமையும் கண்ணீருமாக தன் அரண்மனையில் ஒடுங்கிக்கிடந்தான் இந்திரன். இந்திராணியாலும் அவனை தேற்றமுடியவில்லை. தேவர்கள் நாரதரைத் தேடி அழைத்துவந்தனர். அவனைத் தேடிவந்த நாரதரிடம் “தோற்று திரும்பினேன், நாரதரே. ஒவ்வொருமுறை தோற்கையிலும் என் அரியணையின் கால் ஒன்று புதைகிறது. ஏழு தோல்விகளுக்குப்பின் நான் இந்திரனென அமையமுடியாது என்பது நெறி. அரியணை என்றும் இருக்கும். அமராவதியும் இருக்கும். இங்குள்ள செல்வமனைத்தும் இவ்வண்ணமே இருக்கும். இந்திராணியும் மாற்றமின்றி நீடிப்பாள். நான் ஒருவனே மறைவேன். இன்மையுள் கரைவேன்” என்றான்.

“போரின் ஒரு தருணத்தில் அப்பேருருவனை வெல்ல என்னால் ஆகாது என்ற எண்ணம் எழுந்துவிட்டது. என் மின்படைகள் அவனை வெண்ணிறஇறகென வருடிச் செல்வதையே கண்டேன். அதிரும் ஒளியில் அவன் முகத்தில் எழுந்த பெரும்புன்னகை என்னுள் ஆழத்தில் உறைந்த ஒன்றை அதிர வைத்தது. அது நான் என்னைப்பற்றி என் கனவுகளில் மட்டுமே உணர்ந்த ஓர் உண்மை. இசைமுனிவரே, நான் ஒரு துலாமுள்ளன்றி வேறல்ல. அசுரரும் தேவருமென பிரிந்து பிறிதொன்று ஆடும் களத்தில் நான் ஓர் அடையாளம் மட்டுமே.”

“கை தளர்ந்த மறுகணமே கால் பின்னடைந்தது. என் அச்சத்தை ஐராவதம் உணர்ந்ததும் அது திரும்பி ஓடியது” என்றான் இந்திரன். “எப்படைக்கலமும் இனி என்னை சினந்தெழச் செய்யாதென்று உணர்ந்தேன். நான் மறையும் தருணம் அணுகிவருகிறது.” நாரதர் புன்னகைத்து  “இந்திரனே, மகாவீரியத்தை நீ வென்றது எப்படி?” என்றார்.  “வஞ்சத்தால், இரக்கமற்ற பெருவிசையால்” என்றான்.  “ஆம், நுண்கலையை எப்போதும் வெல்வது குருட்டுப்பெருவிசையே. கலையை அழிப்பது காட்டாளருக்கே எளிது. கலை தன்னை அறிபவனின் விரிவை தன் பாதையெனக்கொண்டு எழுவது. நுண்மைகொண்டவனில் அது நுண்மை. கனவுநிறைந்தவனில் அது கனவு. அரசே, தெய்வங்களில் அது தெய்வத்தன்மை. வீணரிடமும் வெறிகொண்டவரிடமும் அது வீண்” என்றார் நாரதர்.

“மலர்பூத்த மரத்தை மோதும் மலைவேழமெனச் சென்று நீ மகாவீரியத்தை அழித்தாய். அதுவே முறை. பிறிதெவ்வகையிலும் அதை வெல்ல முடியாது. ஒலி கேளாதவனே யாழை உடைக்கமுடியும். விழியில்லாதவன் மட்டுமே ஓவியத்தை அழிக்கிறான். சுவை உணராதவனே  தேன் கலத்தை கவிழ்க்கும் ஆற்றல்கொண்டவன்” என்றார் நாரதர். “உன்னை வெல்ல எழுந்த கலையை உணராத மூடனாகச்சென்று வென்றாய். அதுவே போர்வீரனின் வழி. அதன்பின் அந்நகரை உன்  நகருக்குள் அமைத்துக்கொண்டாய். அதுவே அரசர்களின் வழி.”

இந்திரன் நீள்மூச்சுவிட்டான். “இங்கு உன்னை அறைகூவி நிற்பது பொருளில்லாப் பேருரு. இதன் மடம்புகளிலும் முகடுகளிலும் கரவுகளிலும் சரிவுகளிலும் ஒழுங்கென்று ஒன்றுமில்லை. இதில் உள்ளவை அனைத்தும் விசை என்ற பொருள்மட்டுமே கொண்டவை. அரசே, பெருமலையின் ஒவ்வொரு கூழாங்கல்லும் சிற்பத்துக்கு எதிரானது. அதன் ஒவ்வொரு இருப்பிலும் கலையின் மறுப்பு திகழ்கிறது” என்றார் நாரதர். “கலை தன்னைத் திறந்துவைத்து தன்னை அணுகுபவனுக்காக காத்திருக்கிறது. கலைப்பொருளில் முழுமை கூடுவது அதை அறிந்து உணர்பவன் உடனுறைகையில் மட்டுமே. அதன்முன் அதை மறுத்து நின்றிருந்தபோது நீ அதன் முழுமையை சிதைத்தாய். அதை வென்றாய்.”

“இது முழுமைகூடிய இருப்பு. தன்முன் இருக்கும் எவரையும் இது அறிவதில்லை. எவரும் இதில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. எதைக்கொண்டும் இதை மறைக்கவோ திரிக்கவோ இயலாது. எச்சொல்லாலும் இதை விளக்கவோ விரிக்கவோ இயலாது. பொருண்மையின் நெகிழ்வற்ற அறியாமையைச் சூடி நின்றிருக்கிறது மும்முக மாமலை. இதை வெல்ல உன் குருட்டுவிசை உதவாது என்று அறிக!” என்று நாரதர் சொன்னார். “கலையை இழந்த சிற்பியின் கட்டற்ற வஞ்சப்பெருக்கு பொருண்மை கொண்டெழுந்தது இம்மலை.”

“இதன் விழியின்மை முன் உன் மின்னொளி செல்லாது. இதன் செவியின்மை முன் உன் இடி ஒலிக்காது. இதன் அசைவின்மை முன் உன் ஆற்றல் இயங்காது” என்றார் நாரதர். “இதை நான் வெல்வது எப்படி?” என்றான் இந்திரன். நாரதர் அவன் தோளில் கைவைத்து “வெல்லும் வழி ஒன்றே” என்றார். “இவ்வசைவின்மையை கலை அசைவுள்ளதாக்கும். இவ்விழியின்மையை கலை ஒளி அறிவதாக ஆக்கும். இச்செவியின்மையில் கலை இசை நிறைக்கும். உன் அரசவையின் பெருந்தச்சனை அங்கு அனுப்பு. வானிடிக்கு கரையாத மலை கலைஞனின் சிற்றுளிக்கு நெகிழ்வதை நீ காண்பாய்.”

முகம் மலர்ந்த இந்திரன் “ஆம், அவ்வாறே!” என்றான். தனது அரசவையின் முதன்மை சிற்பியாகிய காம்யகனை அழைத்து “மும்முகனை வென்று வருக!” என்று ஆணையிட்டான். காம்யகன்  ஆயிரம் கைகள் விரித்தெழும் வல்லமை கொண்டவன். “தேவசிற்பியே, சென்று அவனை ஒரு சிற்பமாக்குக! பகைகண்டு அஞ்சும் கண்ணும் படைக்கலத்திற்கு முன்நிற்கும் உடலும் அவனில் எழுவதாக!” என்றார் நாரதர்.

காம்யகன் ஆயிரம் கைகளில் உளிகளும் கூடங்களும் அளவுகோல்களும் அளவைக் கயிறுகளும் நீர்நிகரிகளும் கொண்டு எழுந்து மண்ணிறங்கி மும்முகன் முன் சென்று நின்றான். அவன் நோக்கு தன்மேல் பட்டதுமே மும்முகன் மகிழ்ந்து குனிந்து நோக்கினான். “உன்னை மூடியிருக்கும் பொருளின்மையை செதுக்கி எடுப்பேன். உன்னுள் உறங்கும் பொருள் துலங்கச்செய்வேன்” என்றான் காம்யகன். “நீ என் கைகளுக்கும் கருவிகளுக்கும் முன் வெறும் முதற்பொருள் மட்டுமே.”

அவன் முன் சிறு மைந்தனென மகிழ்ந்து வளைந்து நின்றான் பேருருவன். அவன் காலடியில் இருந்த பாறை ஒன்றில் சிற்றுளியை வைத்து மெல்ல தட்டி கல்நுனியை உடைத்து வீசினான் சிற்பி. “உன்னிலிருந்து விலகிச்செல்லும் இந்தக் கற்சில்லைப் பார். பொருளற்றது என நீயே காண்பாய். பொருள்கொண்ட ஒன்றிலிருந்து பொருளின்மை எப்படி விலகிச்செல்லமுடியும்? அப்படியென்றால் அது உன்னுடையதல்ல என்றே பொருள்” என்றான் சிற்பி. செதுக்கிச் செதுக்கி அப்பாறையை சுட்டுவிரல் நகமென்றாக்கினான்.

குனிந்து தன் காலை நோக்கிய மும்முகன் திகைத்து “எங்கிருந்தது இது?” என்றான். “உன்னுள். நீயல்லாத அனைத்தையும் விலக்குகையில் நீ மீள்வாய்” என்றான் காம்யகன். “ஆம், விலக்குக!” என்றான் மும்முகன். அவன் தலைமேல் கூடுகட்டியிருந்த பறவைகள் கூவின. மூதாதைமுகம் கொண்ட தலைமேல் வாழ்ந்த கௌதாரிகள் “எந்தையே, எண்ணித் துணிக! தன்னை பிறிதொன்றாக ஆக்குவது இறப்பேயாகும்” என்று கூவின. முனிந்த முகம்கொண்ட தலைமேலிருந்த சிட்டுக்குருவிகள் “முகம்கொண்டபின் நீங்கள் முடிவிலியை தலைசூட முடியாது, தந்தையே” என்று சிலம்பியபடி எழுந்துபறந்து சுழன்றன. சொல்லின்மையில் அமைந்த மலையில் வாழ்ந்த மைனாக்கள் “தாதையே, விழிகொண்டபின் ஒளியின்மையை நோக்கமுடியாதவர் ஆவீர்” என்றன.

ஆனால் தன்னைத்தான் நோக்கி உவகையிலாடி நின்றது மலை. கல்திரை விலக்கி எழும் அந்த உருவம் தன்னுள் ஒளிந்திருந்தது என்று எண்ணியது. “மலையரே, அது அச்சிற்பியின் உள்ளத்திலுள்ள உருவம்” என்றன கௌதாரிகள். “அவன் அகற்றுவனவற்றில் எஞ்சுவதைக்கொண்டே நீர் அவனை வெல்லமுடியும்” என்றன சிட்டுக்குருவிகள். “பேருருவரே கேளுங்கள், உருவின்மையே தெய்வங்கள் விரும்பும் உருவம்” என்றன மைனாக்கள். எச்சொல்லையும் அவன் செவிகொள்ளவில்லை. சிற்பி முதுமரத்தைக் கொத்தும் மரங்கொத்திபோல கற்பாறைகளில் தொற்றி ஏறி செதுக்கினான். அவன் கோரும் வகையிலெல்லாம் வளைந்து திரும்பி உதவியது மும்முகம்.

முற்றுருக்கொண்டு மும்முகன் எழுந்தபோது சிற்பி திரும்பி “அரசே, இதோ என் பணி முடிந்தது” என்றான். விண்ணில் ஐராவதம் தோன்றியது. அதிலிருந்த இந்திரன் தன் மின்படையைச் சுழற்றி மும்முகனை மூன்றாகப் பிளந்து வீழ்த்தினான். அவன் தலைகளை வெட்டி அகற்றினான் காம்யகன். மழையிரவின் இருளுக்குள் இடியோசை கேட்டு குடில்களுக்குள் இருந்த அசுரகுடிகள் எழுந்தோடி வந்து நோக்கினர். மின்னல்கள் வெட்டி அணைந்துகொண்டிருந்தன. பூசகன் ஒருவன் கைசுட்டி “அதோ” என்றான். மறுமின்னலில் அவன் சுட்டியதென்ன என்று அவர்கள் கண்டுகொண்டனர். அங்கே பேருருவ முகம் மறைந்துவிட்டிருந்தது.

மறுநாள் விடிந்தபோது அவர்கள் அது விழிமயக்கல்ல என்று உறுதிகொண்டனர். கூட்டம்கூட்டமாக கண்ணீர்விட்டுக் கதறியபடியும் முழவுமீட்டி மும்முகனின் கதையைப் பாடியபடியும் அவர்கள் காட்டுக்குள் புகுந்து மும்முகனின் அடிநிலத்தை சென்றடைந்தனர். அங்கே பெருமுகமென அவர்கள் அன்றுவரை கண்டிருந்த தோற்றம் பாறைக்குவியலென சிதைந்து பரந்திருப்பதைக் கண்டனர். அதனருகே அமர்ந்து கண்ணீர்விட்டனர். மலரும் ஊன்படையலும் அளித்து மண்விழுந்த மூத்தோனை வணங்கி தங்கள் இல்லங்களுக்கு மீண்டனர்.

மும்முகனின் முதற்தலையிலிருந்து எழுந்த   கௌதாரிகள் தொல்வேதச் சொல்லுரைத்து காட்டை நிறைத்தன.  களிமயக்கின் முகத்திலிருந்து எழுந்த சிட்டுக்குருவிகள் விழைவின் பாடல்களை பாடின. ஊழ்கமுகத்திலிருந்து எழுந்த மைனாக்கள் நுண்சொற்களை உரைத்தன. அவற்றைக் கலந்து அவர்கள் உருவாக்கிய பாடலின் சொற்களில் மும்முகன் வாழ்ந்தான்.

“இந்திரன் மும்முகனை வென்ற கதையை ஒளிரும் ஆற்றங்கரையில் இளஞ்சூதனாகிய குணதன் சொல்லக்கேட்டேன். நிலவலைகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்” என்றான் பிரசண்டன். “அவன் பாடிமுடித்ததும் நான் விருத்திரர்களின் மலைக்குடியில் என்னிடம் முதற்பூசகன் சொன்ன கதையை சொன்னேன். இருகதைகளும் நீர்ப்பரப்பில் இரு நெற்றுகள்போல மிதந்துசென்றன. அணுகி அகன்று மீண்டும் அணுகி அவை செல்வதை உணர்ந்தபோது நான் அலைகளைத்தான் எண்ணிக்கொண்டேன். அவனும் அதை எண்ணி அக்கணத்தில் அலைகள் என்று சொன்னான்.”

“திரிசிரஸை இந்திரன் வென்ற கதையை நான் பிறிதொரு வடிவில் கேட்டுள்ளேன்” என்றார் பிரசாந்தர். “த்வஷ்டாவின் மைந்தராக அசுரகுலமகள் வாகாவின் வயிற்றில் பிறந்து தன் தவத்தால் முழுமைகொண்டு இந்திரநிலை தேடிய முனிவர் அவர். ஒரு தலையால் வேதமும் மறு தலையால் ஊழ்கமும் பயின்றார். மூன்றாவது தலையை களிமயக்குக்கு அளித்திருந்தார். ஒவ்வொரு கணமும் வைதிகரும் ஊழ்கப்படிவரும் எதிர்கொண்டு போராடும்  விழைவனைத்தையும் தனியாகப் பிரித்து ஒரு தலைக்கு அளித்தமையால் அவர் வேதம் தூய்மைகொண்டது. ஊழ்கம் முழுமைகொண்டது.”

“இந்திரன் படைக்கலத்துடன் எழுந்துவந்து அவரை வென்றபோது வேதமுகத்திலிருந்து மரங்கள் பற்றி எரியும் அனலெழுந்தது. களிமயக்கின் முகத்திலிருந்து நீர்நிலைகள் சுருண்டெழும் புயலெழுந்தது. ஊழ்கமுகத்திலிருந்து மலைகளை நுரைக்குமிழிகளென உடைக்கும் ஓங்காரம் எழுந்தது. இந்திரன் அஞ்சி ஓடி தன் அமராவதியில் ஒளிந்துகொண்டான். நாரதர் அவனிடம் சொன்னார், திரிசிரஸின் வெற்றி அவரது ஒரு முகம் பிறிதொன்றுக்குத் தெரியாதென்பதே.  இந்திரன் வெண்முகிலொன்றை மாபெரும் ஆடியென்றாக்கினான். அதில் களிமுகத்தை வேதமுகத்திற்குக் காட்டினான். வேதமுகத்தை ஊழ்கமுகத்திற்குக் காட்டினான். ஊழ்கமுகத்தை களிமுகம் கண்டது.”

“களிமுகம் கண்ட வேதமுகம் தன் கரந்துறைந்த விழைவைக் கண்டறிந்து சொல்தவறியது. வேதம் பிழைக்கவே அதன் ஆற்றல் அழிந்தது. வேதமுகம் கண்ட ஊழ்கமுகத்தின் அமைதிக்குள் அறிவின் வினா எழுந்தது. ஊழ்கம் கலைந்தது. ஊழ்கமுகம் கண்ட விழைவுமுகம் தன்னுள் உறைந்த பிறிதொன்று களியாட்டை அறிவதேயில்லை என்று உணர்ந்து திகைத்தமைந்தது. மும்முகமும் செயலிழக்க அத்தருணத்தில் இந்திரன் அவற்றை மூன்றென வகுந்திட்டான்.”

“அத்தலைகளை தேவசிற்பி ஒருவன் வெட்டிக்கொண்டுசென்றான். அமராவதியின் மூன்று வாயில்களையும் அம்முகங்கள் அணிசெய்தன. ஒரு வாயில் இளங்காலையில் வேதமோதும்படி அமரர்களை அழைத்தது. மற்றொன்று அந்தியில் கொண்டாடி மகிழும்படி கூவியது. பிறிதொன்று இரவின் அமைதியில் முழுதடங்கி உள்ளுணரும்படி சொன்னது” என்றார் பிரசாந்தர்.

[ 9 ]

கைமுழவை மீட்டி மெல்ல நடனமிட்டுச் சுழன்று நின்ற சண்டன் சொன்னான் “அமராவதிக்குள் நுழையும் வேதியர் களிமயக்கில் நின்றிருக்கும் முகத்தினூடாகவே செல்லவேண்டும் என்று நெறியுள்ளது. விழைவாடுபவர் ஊழ்கப்படிவரின் முகத்தினூடாக நுழையவேண்டும். வணிகர்களே, ஊழ்கப்படிவர் நுழைந்தால் வேதமுகம்கொண்ட வாயிலே காட்டப்படும்.” கைகளால் விரைந்து தாளமிட்டு நிறுத்தி “ஏனென்றால் ஒவ்வொருவரும் தாங்கள் விழைந்தவற்றின் வடிவில்தான் விழைவுக்கரசின் அணிநகருள் புகமுடியும். இழந்ததென்ன என்று அறிந்தாலே விழைந்தது என்ன என்று அறிவதுதான் அல்லவா?” என்றான்.

வணிகர்கள் உரக்க நகைத்தனர். சிலர் வெள்ளி நாணயங்களை சண்டனை நோக்கி வீச அவன் குனிந்து அவற்றைப் பொறுக்கி தன் மடிச்சீலையில் முடிந்துகொண்டான். “வெள்ளியும் பொன்னும் துள்ளிவருவதைப்போல் அழகிய காட்சியென புவியிலேதும் இல்லை. வணிகர்களே, கங்கைப்பரப்பில் மீன் துள்ளுவதைப்போல் இங்கு செல்வம் துள்ளட்டும். உடனெழுந்து துள்ளும் என் சொல்” என்றான்.

“விருத்திரனை இந்திரன் வென்ற கதையை சொல்லவந்தாய், சூதனே” என்றார் முதிய வணிகர். “ஆம் அக்கதையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கதைகளுக்குள் கதைகள் புகுந்துகொள்கின்றன. கதைகளிலிருந்து கதைகளை பிரித்தெடுத்து நீட்டுகையில் கதைகளுடன் அவை பின்னிக்கொள்கின்றன. வணிகர்களே, மண்ணுக்கு மேலே கிளையென கொடியென தண்டென பின்னிய கதைகளை நாம் காண்கிறோம். காணா ஆழத்தில் வேரெனப் பின்னிய கதைகளை அறிவதே இல்லை.” முழவை மும்முறை மீட்டி “ஒரு மிடறு இனிய கள் ஒருவேளை அக்கதைகளை மீட்டுக்கொண்டுவரக்கூடும்” என்றான்.

“இது கள்ளருந்தும் தருணம் அல்ல. கதை இருந்தால் சொல்க!” என்றார் முதிய வணிகர். “ஆம், மேலெழுந்த கதைகளைச் சொல்கிறேன். கரந்துறையும் கதைகளை உங்கள் கரந்துறையும் காதுகள் கேட்பதாக!” என்று சொல்லி முழவை மீட்டி மெல்ல ஆடினான் சண்டன். ஜைமினி பைலனிடம் “இவர் சொல்பவை எந்நூலில் உள்ள கதைகளென்றே தெரியவில்லை” என்றான். “நூலில் இடம்பெறப்போகும் கதைகள்” என்றான்  பைலன். சுமந்து சிரித்தபடி “நூலில் இருந்து உதிர்ந்த கதைகளும் உண்டு எனத் தோன்றுகிறது” என்றான்.

“மும்முகனின் குருதி ஊறிப்பெருகி ஓர் அலையென எழுந்து விண்ணை அறைந்தது. அமராவதியில் தன் உப்பரிகையில் நின்று நோக்கிய இந்திரன் தொலைவில் அந்திவானம் வழக்கத்தைவிட சிவந்திருப்பதைக் கண்டான். அச்சிவப்பு பெருகிவருவதை உணர்ந்ததும் அச்சம் கொண்டான். அது ஒரு குருதிப்பேரலையென எழுந்து வந்து அமராவதியின் நகர்முகத்தை அறைந்தது. கோட்டையைக் கடந்து தெருக்களை நிறைத்தது. சுழியும் நுரையுமெனப் பெருகி வந்தது” சண்டன் சொன்னான்.

இரு கைகளையும் விரித்து அக்குருதிமுன் நின்று இந்திரன் சொன்னான் “முனிவனைக் கொன்ற பழி என்னைச் சூழ்க! என் நகரை விட்டொழிக!” குருதியில் ஒரு முகம் மூக்கும் வாயும் கொண்டு எழுந்தது. “மூன்று பழிகளால் சூழப்பட்டாய், இந்திரனே. ஊழ்கத்திலமர்ந்த முனிவனைக் கொன்றமையால் நீ பழிகொண்டாய். வேதமோதிய வைதிகனைக் கொன்றமையால் இருமடங்கு பழிகொண்டாய். காமக்களிமயக்கில் இருந்தவனைக் கொன்றமையால் மும்மடங்கு பழிகொண்டாய்.”

“இப்பழிக்கு உன் நகரும் நாடும் கொடியும் முடியும் குலமும் சுற்றமும் குருதியும் போதாது” என்றது குருதிவடிவம். “இப்பெருநகரை நூறுமுறை உண்டாலும் தீராது என் பழி” என்று கூவியது. துயருடன் “அப்பெரும்பழிக்கு நிகரென நான் கொடுப்பதேது?” என்றான் இந்திரன். குருதிகண்டு அங்கே ஓடிவந்த நாரதர் சொன்னார் “இக்கணத்தில் கொடுப்பதென்றால் இந்திரபுரியும் மிகச்சிறிது. ஆனால் எதையும் முடிவிலிவரை நீட்டினால் மிகப்பெரிதே. இப்பழியை காலத்தில் நீட்டிச்செல்க!” குருதிவடிவன் “ஆம், அவ்வாறு என் பழி நிகர்செய்யப்பட்டாலும் நன்றே” என்றான்.

“இந்திரனுக்கென இப்பழியை உயிர்கள் சுமக்கட்டும். அவன் முகிலருளால் வாழ்பவை அனைத்தும் இங்கு வருக!” என்றார் நாரதர். மண்ணிலுள்ள அனைத்துக்கும் தேவருலகில் உள்ள  நிகர்வடிவங்கள் வந்து அவர்கள் முன் நிரைவகுத்தன. “இந்திரனை வேண்டி அருள்கொள்வனவற்றில் முதன்மையானவை இவை” என்றார் நாரதர். “நிலம் மழை கொள்கிறது, நீர் மின் கொள்கிறது, மரம் இடி கொள்கிறது, பெண் அவன் ஆண்துளியை கொள்கிறாள்.    அவர்கள் இப்பழியை ஊழிமுடிவுவரை சுமக்கட்டும்” என்றார்.

“என்பொருட்டு இதை சுமப்பவர்களுக்கு நற்சொல்லொன்றை அளிப்பேன். அப்பழி சுமக்கும் நாள்வரைக்கும் அக்கொடையும் உடனிருக்கும்” என்றான் இந்திரன். “அவ்வாறே ஆகுக!” என்றனர் நிலமும் நீரும் மரமும் மங்கையும். குழிகையில் நிறைக என அருளி அப்பழியை நிலத்திற்கு அளித்தான் இந்திரன். இணைகையில் வளர்க என்று நீர் அப்பழியை சூடிக்கொண்டது. முறிந்தாலும் இறப்பில்லை என்னும் நற்சொல்லுடன் பழிசூடியது மரம். விழைவு அடங்காதெரிக என்னும் வாழ்த்துடன் அதைப் பெற்றாள் பெண். நிலத்தில் களரூற்றாக செங்குழம்பெழுந்து குமிழியிடுவது அப்பழியே. நீரில் குமிழிகளென நுரைகொள்வது அக்குருதி. மரத்தில் அது செவ்வரக்கு. பெண்களில் அது மாதவிடாய்.

“வணிகர்களே, தாதவனம் என்னும் ஊரின் பெருவழிச் சந்திப்பில் நான் பிரசாந்தரைக் கண்டேன்.  இந்திரன் அவனுக்கு வேள்வியில் பலிகொடுக்கப்படும் பசுவின் தலை காம்யகன் என்னும் தச்சனுக்கு செல்லவேண்டும் என்று அறிவித்ததாக சொன்னார். வேள்வியில் கழுத்துக்குழாய் வெட்டி குருதிசொரிந்து அனலெழுப்பியபின் துண்டுபடுத்தி அகற்றி இலைத்தாலம்மீது பசுவின் தலை வலக்கொம்பு கீழே சரிந்த நிலையில் வைக்கப்படும்போது பொன்னிறச் சிறகுகள் கொண்ட ஈயெனப் பறந்துவந்து அப்பலியை கொள்பவன் அவனே என்றார்” என்று சண்டன் தொடர்ந்தான்.

“பின்னர் குத்ஸிதம் என்னும் மலைக்குடியில் நான் பிரசண்டரைக் கண்டேன்” என்றான் சண்டன். “முதிய சூதர் சடைமுடிக்கற்றைகள் தோளில் சரிய செவ்விழிகளில் கள்ளின் பித்து வெறித்திருக்க என்னிடம் சொன்னார், தொல்குடி அசுரர் தங்கள் குடியிலிருந்த அத்தனை தச்சர்களின் கட்டைவிரல்களையும் வெட்டி வீசினர். அவர்கள் கல்வெட்டி சுவர் எழுப்புவதில்லை என்றும் மரம்வெட்டி கூரைவேய்வதில்லை என்றும் உறுதிகொண்டனர். அதன்பின்னரே உள்காடுகளுக்குள் புகுந்து கற்குகைகளை இல்லங்களாகக் கொள்ளலாயினர்.”

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகள் கடிதங்கள் -15

$
0
0

 

images

 

அன்புள்ள ஜெ

 

இந்தச்சிறுகதை விவாதத்தின் உச்சம் என்பது பிரியம்வதா எழுதிய விரிவான வாசகர்குறிப்புகள்தான். இத்தகைய வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்பது தமிழில் எழுதும் அத்தனைபேருக்கும் எச்சரிக்கைபோல.மிகக்கூர்மையான அவதானிப்புகள். பிரியம்வதா தமிழில் நிறைய எழுதவேண்டும் [அதேபோல கொற்றவை பற்றி எழுதியிருந்த சுசித்ரா. என்ன ஒரு தெளிவான நடை. ஆழமான பார்வை!]

 

சுவாமி

 

சுசித்ரா கடிதங்கள்

பிரியம்வதா விமர்சனங்கள்

*

 

அன்புள்ள ஜெ

சிறுகதைகளைப்பற்றிய  உங்கள் மதிப்பீடுகளை வாசித்தேன். அவற்றின் விரிவான விவாதத்தன்மை அசரவைத்தது. விவாதங்களை உண்டுபண்ணுகிறார், பிரபலம் அடைவதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்று முகநூலில் ஒருகும்பல் கத்திக்கொண்டே இருக்கும். நான் அவர்களிடம் சொல்வதெல்லாம் அவர் உருவாக்கும் விரிவான விவாதங்களைப் பாருங்கள். அவர் என்னென்ன கேள்விகளை எழுப்புகிறார் என்பதைக் கவனியுங்கள் என்பதுதான். அவர் எழுதுவதிலுள்ள பொறுப்புணர்ச்சியும் கவனமும் உழைப்பும் பத்துசதவீதமேனும் இருந்தால் குறைசொல்லுங்கள். இல்லாவிட்டால் அவர் சொல்வதைக் கவனித்து சொல்வதற்கு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றுதான்.

இந்தக்கட்டுரைகளில் அனேகமாகச் சிறுகதை எழுதுவதைப்பற்றிய எல்லா விஷயங்களுமே பேசப்பட்டுவிட்டன. இருகோணங்களில் சிறுகதை விவாதம் விரிந்தது. ஒன்று சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைநிறைகள். இன்னொன்று பொதுவாகச் சிறுகதை என்னும் வடிவத்தின் சாத்தியக்கூறுகள் பிரச்சிப்பாடுகள். சமீபத்தில் சிறுகதைபற்றி இவ்வளவுபெரிய ஒருவிவாதம்நடந்ததே இல்லை.

வாழ்த்துக்கள் ஜெ.

 

சத்தியமூர்த்தி

 

*

அன்புள்ள ஜெமோ

 

ஒரு கட்டுரையில் நீங்கள் இலங்கையின் நாவலாசிரியரான சயந்தனின் ஆதிரை நல்ல நாவல் என்று சொன்னீர்கள். அங்கே ஒருகூட்டம் அவரை பின்னி எடுத்தது. அவர் உடனே உங்களை திட்டி ஒரு பதிவுபோட்டு நான் ஜெயமோகனுக்குக் கடிதம்கூட அனுப்பியதில்லை என்று மன்றாட ஆரம்பித்துவிட்டார். இதுதான் சூழல். விரிவாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். அதிலுள்ள பொறுப்பும் அக்கறையும் பிரமிக்கவைக்கின்றன. ஆனால் எத்தனைபேர் உங்கள் நேர்மையான எண்ணத்தைக் கருத்தில்கொள்வார்கள் என்று தெரியவில்லை

 

ஜெயராஜ்

 

*

 

அன்பின் ஜெயமோகன்,
இத்தனை வேலைகளின் நடுவில் சிறுகதைகள் பற்றிய உங்களின் மதிப்பீடுகள் பிரமிக்க வைக்கின்றன.
தனிப்பட்ட ஓர் இழப்பில் இருந்ததால் சில நாட்களாக இணையத்திற்கு வரவில்லை.இன்று தான் என் சிறுகதை பற்றிய உங்கள் விமர்சனத்தையும்  ,சிறுகதைகள் பற்றி நீங்கள் அறிமுக எழுத்தாளர்களுக்கு அளிக்கும் வழிகாட்டுதல்களையும் வாசித்தேன்.
சிறுகதைகள் பற்றிய இத்தனை விரிவான இலக்கிய மதிப்பீடுகள் சமீபத்தில் இதுதான் என்று எண்ணுகிறேன்.உங்களின் குறிப்புகள் எனக்கு எழுதுவதை பற்றிய தெளிவைத் தருகின்றன.மிக்க நன்றி.
எனது கதையையும் இத்தளத்தில் இத்தனை விரிவாக நுணுக்கமாக விமர்சித்தது எனக்கு உண்மையில் மகிழ்வாக உள்ளது.நீங்கள் குறிப்பிட்டது போல வாசக எதிர்வினைகள் அற்ற சூழலில் ஒரு முக்கிய இலக்கியவாதி என் கதையை முழுமையாக வாசித்து அதன் நடை,மற்றும் குறைகளை விமர்சித்திருப்பது எனக்கு இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.
உண்மையில் அந்த சுட்டியை அனுப்பிய பிறகே வேறு கதைகளை அனுப்பியிருக்கலாம் என்றே எண்ணினேன்.கடைசியாக வெளிவந்த சிறுகதை என்பதால் அனுப்பிவிட்டேன்.இத்தனை விரிவான விமர்சனங்கள் வரும் என்று தெரியவில்லை.யோசித்து வேறு கதையை அனுப்பியிருப்பேன்

 

தச்சன் கதை எதோ ஒரு உணர்வில் எழுதியது.தொன்மங்களை மறு ஆக்கங்கள் செய்வது பற்றிய உங்கள் கருத்துகளை முழுமையாக நான் ஏற்கிறேன்.அக்கதை எங்கு விலகிச்சென்றது என்றும் தெரிகிறது.மக்தலீன் பார்வையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.இன்னும் சரியாக,விரிவாக சில உணர்வுகள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.முழுமையடையாத கதை என்று தெரிகிறது.இது பற்றியெல்லாம் நீங்கள் எழுதியதால் தெளிவான பார்வை எனக்கும் கிடைக்கிறது.நன்றி.

 

இக்கதை பற்றி குறிப்பிட்டு எழுதிய அனைவருக்கும் நன்றி.எல்லா விமர்சனங்களும் எப்படி எழுதக்கூடாது என்பதை பற்றிய நல்ல கோணத்தை தருகின்றன.
சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் விரிவான விளக்கங்கள் எனக்கு நிறைய தெளிவைத் தருகின்றன.
நன்றி
மோனிகா மாறன்.
*

 

ஜெயமோகன் அவர்களுக்கு

 

கதைகளை முழுமையாக வாசித்தேன். முதிர்ச்சியில்லாத எழுத்து என்று எனக்குத் தோன்றும் கதைகள் இவை. . சதீஷ்குமாரின் 10.5. அவர் சயன்ஸ்ஃபிக்‌ஷன் என்றால் சுஜாதக்கதை என நினைக்கிறார். கொஞ்சம்கூட சுவாரசியமே இல்லை. மாறிமாறி அவன் இவன் என்று கதாபாத்திரங்கள் வெவ்வேறுகோணத்தில் ஒரு சின்ன விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதைச் சொல்கிறார்

 

மகேந்திரனின் யாதும் காமமாகி ஒருவகையிலும் எழுத்தில் சேர்த்தி இல்லை. முதலில் நல்ல கதைகளை அவர் வாசிக்கவேண்டும். அத்துடன் கதை என்றால் அது கதைதான் என்பதைப்புரிந்துகொள்ளவேண்டும். நினைப்பதை எல்லாம் எழுதினால் அது கதை அல்ல

 

மு.தூயன் எழுதியது சாதாரணமான முடிச்சுக்கதை. இந்தமாதிரி கதைவாசகர்களை நான் முடிச்சவிக்கிகள் என்ரு சொல்வதுண்டு. இதையெல்லாம் எழுதக்கூடாது என்று அறிவதற்கு ஒரு மெச்சூரிட்டி தேவை. அதைவிட வாசிப்பவன் அறிவுள்ளவன் என்னும் மரியாதையும் தேவை.

 

ஆனந்த்குமார்

 

ஜெ

இந்த வரிசையில் தரமான கதைகள் 2 தான். அதாவது வடிவமும் நடையும் கூடிவந்த கதைகள். வாசகனுக்கு ஒரு புதிய அனுபவம் அளித்தவை

  1. வாட் எ வண்டர்புல் வேர்ல்ட் – சிவா கிருஷ்ணமூர்த்தி
  2. பருவமழை-தருணாதித்தன்

சுமாரான கதைகள்

1 அசங்கா – அனோஜன் பாலகிருஷ்ணன்

2 மஞ்சுக்குட்டி -கலைச்செல்வி

 

பலவீனமான கதைகள். அதாவது சரியான கரு அமையாமல் சாதாரணமாக ஆகிவிட்ட கதைகள்.

 

  1. மனிதகுணம்- தருணாதித்தன்
  2. ருசி- சுனீல்கிருஷ்ணன்
  3. தச்சன் மோனிகா மாறன்

4  விடிவு – காளிப்பிரசாத்

5 மடத்துவீடு- ராம்செந்தில்

 

எழுதவே தெரியாமல் சொதப்பிய கதைகள்

 

  1. 10.5 சதீஷ்குமார்

2  யாதும் காமமாகி – மகேந்திரன்

3  தில்லையம்மா- தூயன்

4  பாம்புவேட்டை கே ஜே அசோக்குமார்

 

இரண்டு கதைகளை எங்கும் செல்லாமல் நடுவே நின்று போனவை என்று சொல்லலாம்

1 முடி – மாதவன் இளங்கோ

2 புத்தரின் கண்ணீர் – உதயன் சித்தாந்தன்

 

ரமேஷ்

 

 

===================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16791 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>