Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16764 articles
Browse latest View live

வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு

$
0
0

venkat-saminathan

ஜெ,

சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன? அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா?

ராஜாராம்

nufman [எம் ஏ நுஃமான்]

அன்புள்ள்ள ராஜாராம்,

எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது.

வெங்கட் சாமிநாதன் எழுபது எண்பதுகளின் விமர்சகர். அன்று இலக்கியம் என்பது கருத்தியலின் வெளிப்பாடு மட்டுமே எனக் குறுக்கும் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இலக்கியத்தைப் படைக்கும் தனிமனித அகம் என்பதை நிராகரித்து அதை ஒரு சமூக உற்பத்தி என்று நோக்கும் பார்வைகள் மேலெழுந்தன. இலக்கியத்தின் அரசியல் -சமூகத்தள பயன்பாடு மட்டுமே முக்கியம் என்று வாதிடப்பட்டது

நா வானமாமலை

நா வானமாமலை

அப்போது கலையின் ஆழ்மனம்சார்ந்த இயக்கத்தை, தனிமனிதக் கனவு என்னும் இயல்பை, அதன் அழகியல் பண்பை வலியுறுத்தும் தரப்பு தேவைப்பட்டது. புதுமைப்பித்தனே அதை தொடங்கிவைத்தவர். க.நா.சு, சி.சு.செல்லப்பா அதை முன்னெடுத்தனர். அம்மரபின் ஒரு வன்மையான போர்க்குரல் வெங்கட் சாமிநாதன் — அதுதான் அவரது இடம். முன்னோடிகள் இலக்கியத்திற்குள் வைத்துப் பேசிய சிந்தனைகளை கலைகளையும் நாட்டாரியலையும் கணக்கில்கொண்டு மேலும் விரிவாக பேசியவர்.

தொடர்விவாதங்கள் வழியாக இலக்கியத்தின் கலைத்தன்மையை நிலைநாட்ட வெங்கட் சாமிநாதனால் முடிந்தது. ஆகவேதான் அவர் முக்கியமான விமர்சகர் ஆகிறார். அவரது பங்களிப்பு அது

கைலாசபதி

கைலாசபதி

சாமிநாதன் மட்டுமல்ல அவர் சார்ந்திருந்த கலைமையவாதத்தின் தரப்பே ஐரோப்பிய நவீனத்துவம் சார்ந்தது. பாலையும் வாழையும் உள்ளிட்ட ஆரம்பகால எழுத்துக்களில் அன்றைய ஐரோப்பிய நவீனத்துவத்தின் அடிப்படையான மூன்று நோக்குகளை அவர் முன்வைப்பதைக் காணலாம். 1வடிவ மையவாதம் 2 தனிமனிதமையவாதம் 3 இந்தியமரபின் மீதான அவநம்பிக்கை மற்றும் எதிர்ப்பு , அதே சமயம் ஐரோப்பிய மரபின் மீதான வழிபாட்டுணர்வு

பின்னர் கலைகள் வழியாக இந்தியாவின் மைய ஓட்ட மரபை அவர் ஏற்றுக்கொண்ட போதிலும் தமிழின் பேரிலக்கியமரபை தெரிந்துகொள்ள முயலாமலேயே நிராகரித்ததை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அவ்வகையில் அவரது முன்னோடிகளான சி.சு.செல்லப்பா, மௌனி, க.நா.சு ஆகியோரின் க.நா.சு கடைசிக்காலத்தில் தமிழ்ப்பேரிலக்கிய மரபை அறியமுயன்றார், ஏற்றுக்கொண்டார்

வெங்கட் சாமிநாதன் தமிழில் முன்னுதாரணப்படைப்புகளாக, படைப்பியக்கமாக முன்வைத்தவை பெரும்பாலும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் சாதனைகளையே. ஐரோப்பிய நவீனத்துவத்தின் அழகியல் அளவுகோலுக்குள் அடைபடும் இந்திய மரபையே அவர் அள்ள முயன்றார். இதே அணுகுமுறையை ஞானக்கூத்தனிடமும் நாம் காணலாம்

இந்திய மரபு சார்ந்த அழகியல் நோக்குக்கு அவர் மிகப்பிற்காலத்தில் நாட்டாரியல் வழியாகவே ஓரளவு வந்துசேர்ந்தார்.ஈழ இலக்கிய அழகியல்வாதியான மு.தளையசிங்கத்தின் சிந்தனகள் பெரிதும் உதவின

1 [மு தளையசிங்கம்]

நவீனத்துவம் அதன் சாதனைகளை விட்டுவிட்டு இன்று பின்னகர்ந்துவிட்டது. வெங்கட் சாமிநாதன் நவீனத்துவத்தின் அழகியல்வாதத்தை முன்வைத்த க.நா.சு மரபின் இறுதிப்புள்ளியாக தன் பங்களிப்பை ஆற்றி காலத்தில் மறைந்துவிட்டார்.

ஆனால் நவீனத்துவத்தைக் கடந்துவிட்ட இக்காலகட்டத்திலும் வெங்கட் சாமிநாதனின் ஓர் அம்சம் முக்கியமானதாக உள்ளது. அது அவர் சொன்ன டிரான்ஸ் என்னும் நிலை. அதை அதர்க்கத்தில், ஆழ்மனவெளியில், மொழியிலி நிலையில் அவர் வரையறை செய்கிறார். அதற்கு உண்மையில் நவீனத்துவத்தில் இடமில்லை.

அசோகமித்திரனை சுந்தர ராமசாமியை கிட்டத்தட்ட முழுமையாக நிராகரித்த வெ.சாமிநாதன் லா.ச.ராமாமிருதத்தையும் மௌனியையும் உச்சத்தில் தூக்கிவைத்தது இதனால்தான். விஷ்ணுபுரம் மீது அவர் கொண்ட பெரும் ஈடுபாடும் இதனால்தான்.

sublime என்று பின்நவீனத்துவம் இதை குறிப்பிடுகிறது. நவீனத்துவத்தை நிராகரிக்கும் எழுத்துக்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இது

[சிவத்தம்பி]

இந்த ஓர் அம்சத்தால் வெங்கட் சாமிநாதன் பிறநவீனத்துவர்களிடமிருந்து மாறுபடுகிறார். அவரை ஆதரித்தவர் எதிர்த்தவர் இருதரப்புமே முன்வைத்த நவீனத்துவநோக்கின் எல்லையிலிருந்து கடந்து இன்றும் நீடிக்கும் ஒரு முக்கியமான தரப்பாக மாறுகிறார்.

அவரது எதிர்த்தரப்பான கைலாசபதியிடம் இருந்து இன்றைக்கு எஞ்சுவது முரணியக்க வரலாற்று நோக்கு என்றால் வெங்கட் சாமிநாதனிடம் இருந்து இன்றைக்கு எஞ்சுவது கட்டற்ற படைப்பு அகம் குறித்த அவரது அவதானிப்புதான்.

இதுதான் அவரது இன்றைய மதிப்பு என்று எண்ணுகிறேன். அவர் அன்று மார்க்ஸியர்களை நிராகரித்ததும் பேசியதுமெல்லாம் காலாவதியாகலாம். அவர் எழுப்பிய இந்த வினா மேலும் விவாதிக்கப்படும்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அசோகமித்திரனின் காந்தி

$
0
0

ASOKAMITHTHIRAN-41

அன்புள்ள ஜெயமோகன்,

அசோகமித்திரனின் ‘காந்தி’ கதையை பல்வேறு இடைவெளிகளில் பலமுறை வாசித்திருக்கிறேன். இருந்தும் கதை பிடிபடாமலே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தில் ஒரு நாள் இந்தக் கதையைப் படித்தபோது கதை ‘பிடிபட்டு விட்டது’ என்றே தோன்றியது. அதைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது எழுதவே முடியவில்லை. ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று விட்டுவிட்டேன். ஆனால் அந்தக் கதை ஆழ் மனதில் வீற்றிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. சென்ற மாதத்தில் ஒரு நாள் ‘எப்படியோ’ அதைப் பற்றி எழுதிவிட்டேன்.

என்னைத் திணறடித்த இந்தக் கதை பற்றிய பதிவு
http://kesavamanitp.blogspot.in/2015/09/blog-post_24.html

அன்புடன்,
கேசமவணி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நீலம்

$
0
0

1

அன்புள்ள ஜெயமோகன்

நீலம் (சாதாரண பதிப்பு) வந்துவிட்டது. அதை http://www.nhm.in/shop/9789384149246.html இந்த சுட்டியில் வாங்கலாம்.

நீலம் செம்பதிப்பு இன்னும் சில நாள்களில் வந்துவிடும். வந்ததும் சொல்கிறேன்.

அன்புடன்
பிரசன்னா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 9

சௌராஷ்டிர அரைப்பாலை நிலத்திற்கு வணிகக்குழுக்கள் அரிதாகவே சென்றன. “அவர்கள் உடுப்பதற்கு மட்டுமே விழைகிறார்கள். உண்பதற்கு மட்டுமே விளைய வைக்கிறார்கள். பூண்வதற்கு விழைவதில்லை” என்றார் பாலைவணிகராகிய சப்தமர். அவரது பன்னிரண்டு பொதி வண்டிகளுடன் வழிக்காவலன் என அர்ஜுனனும் சென்றான். நீண்ட குழலை காட்டுக்கொடியால் கட்டி தோளில் புரளவிட்டு நுனி முடிச்சிட்ட தாடியை நீவியபடி அவர் பேசுவதைக்கேட்டு நடந்தான். அவன் தோளில் மூங்கில் வில்லும் நாணல் அம்புகள் குவிந்த அம்பறாத்தூணியும் இருந்தன.

“அங்கு அவர்கள் விரும்பும் பொருளென்ன?” என்றான் அர்ஜுனன். “வீரரே, எங்கும் மக்கள் விரும்புவது பட்டும் படைக்கலங்களும் பொன்னும் மணியுமே. சில ஊர்களில் மரவுரி, சில ஊர்களில் மெழுகு, சில ஊர்களில் அரக்கு, சில ஊர்களில் வண்ணங்கள், சில ஊர்களில் மரப்பொருட்கள் என தேவைகளும் விழைவுகளும் வெவ்வேறு. இவை எதுவும் இங்குள்ள மக்களால் விரும்பப்படுவதில்லை. இவர்கள் நறுமணப்பொருட்களையே விழைகிறார்கள். கோரோசனை, கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது, குங்கிலியம், சந்தனம் என நறுமணங்கள் அனைத்தும் இங்கு ஆண்டிற்கு மூன்று முறை கொண்டுவரப்படுகின்றன” என்றார் சப்தமர்.

அர்ஜுனன் வியந்து “பெரு நகரங்களுக்கு மட்டுமே நறுமணப்பொருட்கள் வணிகர்களால் கொண்டு செல்லப்படும் என்று கேட்டிருக்கிறேன்” என்றான். “ஆம். உண்டு நிறைந்து உவகை அமைந்தபின் அழகை விழையும் செல்வர்களுக்கும் அரசர்களுக்கும் உரியவை நறுமணப்பொருட்கள். மணிமகுடமென மாளிகைகளை சூடிய நகரங்களுக்கு அன்றி அவை தேவைப்படாது என்பார்கள். சௌராஷ்டிரம் அதற்கு விலக்கு. இங்கு வானுயர்ந்த மாளிகைகள் இல்லை. செல்வக்குவை கரந்த கோட்டைகள் ஏதுமில்லை. எளிய மக்கள்” என்றார் சப்தமர்.

அர்ஜுனன் சில கணங்கள் எண்ணிவிட்டு “இங்கு இவர்களின் வாழ்க்கைக்கு இது தேவையாகிறதா?” என்றான். “ஆம், இங்குள்ளவர் அனைவரும் அருகநெறிகொண்டவர்கள். பல்லாயிரம் வழிபாட்டிடங்கள் இங்குள்ளன. அவற்றிலெல்லாம் இரவும் பகலுமென நறுமணம் புகைக்கப்படுகிறது, தெளிக்கப்படுகிறது” என்று சப்தமர் சொன்னார். “பருப்பொருட்களில் நுண்வடிவாக நறுமணம் உறைவதுபோல இப்புடவியில் அருகர்களின் பெருங்கருணை நிறைந்துள்ளது என்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நறுமணம் என்பது இறையாற்றலின் உடல் அறியும் ஒரே வெளிப்பாடாகும்.” “பிற எவையும் இவர்களுக்கு தேவையில்லையா என்ன?” என்றான் அர்ஜுனன்.

சப்தமர் சொன்னார் “வீரரே, இப்பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்து வான் சூழ்ந்து கிடக்கிறது. வணிகப்பாதையின் தொப்புள் கொடியால் அவை பாரதவர்ஷமாக இணைக்கப்படுகின்றன. அதனூடாக வரும் பொருட்களைக் கொண்டு கனவுகளை நெய்து பாரதவர்ஷத்தை அறிகின்றன குமுகங்கள். கலிங்கம் பட்டாகவும், தமிழ் நிலம் முத்தாகவும், திருவிடம் மணியாகவும், வேசரம் சந்தனமாகவும், மாளவம் செம்பாகவும், வங்கம் மீனாகவும், கூர்ஜரம் உப்பாகவும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் நுழைகின்றன. உண்டும் உடுத்தும் சூடியும் நோக்கியும் அதை மானுடர் அறிகிறார்கள். சௌராஷ்டிரர்கள் பாரதவர்ஷத்தை மூக்கு அறியும் பெருவெளியென அடைகிறார்கள்.”

அர்ஜுனன் புன்னகைத்து “விந்தை” என்றான். “இவர்கள் உண்பதற்கும் வேட்டைக்கும் விழைவதில்லையா?சுவைமாறுபாடுகள் இவர்களுக்கில்லையா? களம் பல இவர்கள்முன் விரிவதில்லையா?” என்றான். “ஆம், நீங்கள் கூறுவது உண்மை. எங்கும் வணிகர்கள் பொன்கொள்வது மாறுபட்ட நாச்சுவையை விற்றே. நெஞ்சம் கொள்ளும் அச்சத்தை தூண்டியே அதைவிட பெரும் பொருள் கொள்கிறார்கள். அறியாதவற்றின் மேல் உள்ளம் கொள்ளும் ஆர்வத்தை வளர்த்து மேலும் பொருள் செய்கிறார்கள். சௌராஷ்டிரத்தின் மக்கள் இம்மூன்றையும் வென்றவர்கள்” என்றார் சப்தமர். அர்ஜுனன் “பெரு விந்தை” என்றான்.

“ஏனென்றால் இங்கு தொல்நெறியாகிய அருகம் வேரூன்றி உள்ளது. அந்நெறி பயிற்றுவித்த ஐம்புலன் அடக்கமும் அச்சத்தை கடத்தலும் அறிவில் அமைதலும் இம்மக்கள் அனைவரிலும் நிலை கொண்டுள்ளன” என்றார் சப்தமர். “அருகநெறி பற்றி வணிகர் வழியாக அறிந்துளேன்” என்றான் அர்ஜுனன். “அறியாத தொல்காலத்தில் ரிஷபர் என்னும் முதற்றாதையால் அமைக்கப்பட்ட நெறி அது. அனல் பட்டு அனல் எழுவதுபோல அவர்கள் அழியா தொடர்ச்சியாக உள்ளனர். ரிஷபர், அஜிதர், சம்பவர், அபிநந்தனர். சுமதிநாதர் என்னும் ஐவரையும் இன்று ஆலயங்களில் அமைத்து வழிபடுகிறார்கள். பத்மபிரபர், சுபார்ஸ்வர், சந்திரபிரபர், புஷ்பதந்தர், சீதாலர், சிரயோனஸர், வசுபூஜ்யர், விமலர், அனந்தர், தர்மர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனிஸுவிரதர், நமிநாதர் என அவர்களின் நிரை ஒன்று உருவாகியுள்ளது. அறியாத நிலங்களில் எல்லாம் அருகர்கள் எழுந்துகொண்டிருக்கிறார்கள்.”

சாலையோரத்தில் அருகநெறியினர் அமைத்திருந்த விடுதி ஒன்றில் அவர்கள் பொதியவிழ்த்திட்டு தங்கினர். உணவும் நீரும் அங்கு விலையில்லாமல் அளிக்கப்பட்டன. விலங்குகள் கால்மடித்து படுத்து அரைவிழி மூடி அசைபோட்டு இளைப்பாறின. நடைநலிந்த வணிகர் திறந்த மென்மணல் வெளியில் மெல்லிய ஆடையை முகம் மீது மூடியபடி படுத்து துயிலத் தொடங்கினர். அந்த மெல்லாடைமேல் பாலைநிலக்காற்று மணலை அள்ளி தூவிக்கொண்டிருந்தது. மூச்சில் இழுபட்டு குழிந்து எழுந்துகொண்டிருந்தன துணிகள். அர்ஜுனன் துயிலமையாமல் அமர்ந்து வானை நோக்கிக்கொண்டிருந்தான்.

பாலைவனத்து மக்கள்விழிகள் என்று பொருள்வரும் சொல்லால் வானத்தை குறிப்பிடுவார்கள் என்று அவன் கேட்டிருந்தான். மேற்கே அந்திச் செம்மை இருண்டு முகிற்குவைகள் எடைகொண்டு இருள, பல்லாயிரம் சிற்றலைகள் என படிந்த செம்மணல்வெளி உயிர்கொண்டு அசையும் மென் தசைப்பரப்பாக மாறி பின் விழிகளில் மட்டுமே அலைகளை எஞ்சவிட்டு மறைய, இரவு சூழ்ந்து கொண்டபோது வானில் ஒவ்வொன்றாக எழுந்து வந்த விழிப்பெருக்கை அவன் கண்டான். சில கணங்களில் ஒளிரும் வைரங்களை பரப்பிய மணல் வெளியென மாறியது வானம்.

அத்தனை அருகில் விண்மீன்கள் இறங்கிவருமென அவன் எண்ணவில்லை. அப்பால் தெரிந்த சிறு குன்றின்மேல் ஏறி நின்றால் அவற்றை கைவீசி அள்ளி மடிச்சீலைக்குள் கட்டிக்கொள்ளலாம் என்று தோன்றியது. கரும்பட்டுப் பரப்பிலிருந்து எக்கணமும் உதிர்ந்து விழுபவை போல அவை நின்று நின்று அதிர்ந்தன. முழங்காலைக் கட்டியபடி அமர்ந்து அவன் நோக்கிக்கொண்டிருந்தான். வேறெங்கும் அத்தனை பெரிய விண்மீன்களை அத்தனை அண்மையில் காணநேர்ந்ததில்லை என்று நினைத்தான். விண்மீன்களுக்கு மிக அருகே வாழ்பவர்கள் என எண்ணியதும் அவ்வெண்ணத்தை உணர்ந்து மெல்ல அசைந்து அமர்ந்தான்.

அவன் அசைவால் அவ்வெண்ணத்தை அறிந்ததுபோல சப்தமர் மெல்ல புரண்டு படுத்து மேலே நோக்கி “விழிகள்!” என்றார். “இங்குள்ள தொல்குடிகள் அவை மூதாதையர் நோக்குகளென எண்ணுகின்றனர். உறங்கும்போது உளம் கனிந்த அன்னையரும் தந்தையரும் விண்ணிலிருந்து தங்களை நோக்கி காவலிருப்பதாக நம்புகின்றனர். இங்கு வாழும் குடிகள் படைக்கலம் எடுப்பதில்லை. எனவே நிசஸ்திர மண்டலம் என்று இது அழைக்கப்படுகிறது. செந்நிற அலைமண் விரிந்த இந்நிலத்தின் எட்டு மலைகளால் சூழப்பட்ட எல்லைக்குள் எதன் பொருட்டேனும் படைக்கலம் தொட்டு எழுபவன் இக்குடிகளால் முற்றிலும் விலக்கப்படுவான். அவனை அழைத்துச் சென்று இங்குள்ள பவநாசினி என்னும் ஐந்து சுனைகளில் நீராடச்செய்து தலையை மொட்டையாக்கி புறந்தள்ளப்பட்டவனின் அடையாளமாகிய எதிர்த் திசை சுவஸ்திகத்தை அவன் நெற்றியில் பச்சை குத்தி எல்லை கடத்தி விட்டுவிடுவார்கள். பிறகு ஒருபோதும் அவன் இந்நிலத்திற்குள் நுழைய முடியாது” சப்தமர் தொடர்ந்தார்.

எனவே சொல்புழங்கும் காலம் முதல் இங்கு எவரும் படைக்கலம் ஏந்தியதில்லை. இவர்களின் முதுமூதாதை ரைவதகர் விண்நிறைந்த சித்திரை முழுநிலவு நாளில் அவர் காலடி பொறிக்கப்பட்ட கரும்பாறை அருகே நின்று இனிமேல் இந்நிலத்தில் படைக்கலங்கள் திகழத்தேவையில்லை என முடிவெடுத்தனராம்” என்றார் சப்தமர். “படைக்கலம் ஏந்தாதவர்கள் என்று இவர்கள் புகழ்பெறும் தோறும் இவர்கள் மேல் படைகொண்டு வருபவர்களும் இல்லாமலாயினர். ஏனென்றால் படைகொண்டு வந்து இவர்களை வென்று மீள்வதில் எப்பெருமையும் இல்லை. அத்துடன் இப்பெரும்பாலையை ஆளும் மணல் காற்றுகளின் மேல் இவர்களுக்கு ஆணை உள்ளது என்றொரு தொல்நம்பிக்கை உள்ளது. எனவே தலைமுறைகளென இவர்கள் போர்க்குருதி ஒரு துளியையேனும் கண்டதில்லை.

படைகொண்டு வருபவர் முன்னே வெறும்தலையுடன் சென்று நின்று குருதிகொடுத்து மடிவது இவர்களின் வழக்கம். அது படைகொண்டுவரும் மன்னனுக்கு தீரா பெரும்பழியையே கொண்டுவரும். மாளவத்தின் தொல்லரசன் பிரபாவர்த்தனன் இந்நிலத்தின்மேல் படைகொண்டு வந்தபோது அருகநெறி நிற்கும் படிவர் நூற்றெட்டுபேர் கூப்பிய கைகளுடன் அருகமந்திரங்களை உச்சரித்தபடி நிரையாக சென்று அவர்களை எதிர்கொண்டனர். அவர்களை விலகிச்செல்லும்படி அரசன் எச்சரித்தான். அவர்கள் அம்மொழியை கேட்டதாக தெரியவில்லை. சினந்த மன்னன் அவர்களின் தலைகளைக் கொய்து வீசிவிட்டு முன்செல்லும்படி ஆணையிட்டான்.

போர்க்கூச்சலுடன் முன்னால் பாய்ந்த படைமுதல்வர் முதலில் வந்த பன்னிரு அருகப்படிவரை வெட்டிவீழ்த்தினர். கைகூப்பியபடி ஓசையின்றி அவர்கள் இறந்து விழுந்தனர். முண்டனம் செய்த தலைகள் தேங்காய்கள் போல ஓசையிட்டு தரையில் விழுந்ததைக் கண்டு படைவீரர் நின்றுவிட்டனர். வெட்டுபட்ட தலையில் உதடுகள் மந்திரங்களை உச்சரித்தன. விழிகள் கனிவுடன் மலர்ந்திருந்தன. கைகள் கூப்பியபடி உடல்கள் மண்ணில் விழுந்து துடித்தன. முன்னால்சென்ற வீரன் திரும்பி “படைக்கலம் எடுக்காத படிவரை கொன்றபின் நான் மூதாதையர் உலகில் சென்று சொல்லும் விடை என்ன?” என்று கூவினான். “ஆம் ஆம்” என்றபடி படையினர் நின்றனர். “வெட்டி வீழ்த்துங்கள்… முன்னேறுங்கள்” என்று அரசன் கூவ “அரசே, அறமில செய்து எங்கள் குலமழிக்க மாட்டோம். திரும்புவோம்” என்றான் படைத்தலைவன். “கொல்லுங்கள். இல்லையேல் உங்களை கழுவேற்றுவேன்” என்றான் அரசன். “இதோ, நானே அவர்களை வெட்டிக்குவிப்பேன்… “

“அதைவிட உங்களை வெட்டுவது எங்களுக்கு நெறியாகும். நீங்கள் படைக்கலம் ஏந்தியிருக்கின்றீர்கள்” என்று அரசனின் மெய்க்காவலன் சொன்னான். பிரபாவர்த்தனன் நிலையழிந்து அவனை வெட்டப்போக அக்கணமே அரசனின் தலையை வெட்டினான் பின்னால் நின்ற தளபதி. திகைப்புடன் அரசன் சரிந்து புரவியிலிருந்து கீழே விழுந்தான். அரசனின் உடலுடன் மாளவத்தினர் திரும்பிச்சென்றனர். அவனுக்கு வீரக்கல் நாட்டி குருதிக்கொடை அளித்து நிறைவளித்தனர். அப்போது குலப்பாடகரில் எழுந்த மூதாதையர் “செல்லுமிடம் தெரியாத கால்கள் கொண்டவன் குலம் அழிக்கும் நச்சுவிதை. அவனை கொன்றது நாங்களே. அவ்வாளில் அன்று நாங்கள் எழுந்தருளியிருந்தோம்” என்றனர்.

ஆனால் அருகநெறியினரை கொன்றமையால் பன்னிரு ஆண்டுகாலம் மாளவத்தில் மழைபெய்யாது என்றனர் நிமித்திகர். அதற்கேற்ப ஈராண்டு மழை பொய்த்தது. ஊர்களிலிருந்து வேளாண் மக்கள் கிளம்பிச்செல்லத் தொடங்கினர். வணிகர் வராதாயினர். பிரபாவர்த்தனனின் மைந்தர் அஸ்வபாதர் அருகநெறியினர் ஆயிரத்தவரை தன் நாட்டுக்கு அழைத்துவந்து பாதபூசனை செய்து பழிதீர்த்தார். அவர்களின் ஆணைக்கிணங்க ஆயிரத்தெட்டு அன்னசாலைகளும் ஆயிரத்தெட்டு ஆதுரசாலைகளும் ஆயிரத்தெட்டு கல்விச்சாலைகளும் அமைத்தார். அதன்பின்னரே கருமுகில் மாளவத்திற்குள் நுழைந்தது. முதல்மழை பெய்து காய்ந்த நிலம் பெருமூச்சுவிட்டது. பசும்புல் முளை தூக்கியது. புள்ளொலி வானில் எழுந்தது.

“இங்கு அருகநெறியை நிறுவிய ரைவதகர் அரண்மனை முகப்பில் நின்றிருந்த தொன்மையான கூர்ஜ மரத்தின் அடியில் தன் கைகளால் மென்மரத்தில் செதுக்கப்பட்ட முதற்றாதை ரிஷபரின் வடிவை நிறுவினார். இன்று அது ஓர் ஆலயமாக எழுந்துள்ளது. அதைச் சுற்றி பிற நான்கு அருகத்தாதைகளும் அமைந்துள்ளனர்” என்றார் சப்தமர். “ரைவதகரும் இன்று அருகரென வழிபடப்படுகிறார். காலையிலும் மாலையிலும் சொல் எண்ணி தொழவேண்டிய மூதாதையரில் ஒருவர் என்று வைதிகரின் நூல்களிலும் அவர் வாழ்த்தப்படுகிறார்.”

“இங்குமட்டும் ஏன் அருகநெறி தழைத்துள்ளது?” என்று அர்ஜுனன் கேட்டான். “இங்குள்ள பாலிதான மகாமேரு என்னும் குன்றின் உச்சியில்தான் அருகர்களின் முதல்தாதை ரிஷபர் மெய்மையை அறிந்தார்” என்று சப்தமர் சொன்னார். “அன்றே இங்கு அருகமெய்மை விதைக்கப்பட்டுள்ளது. அருகநெறியை பாலைநிலத்தோர் புரிந்துகொள்வதுபோல பிறர் அறிவதில்லை. இங்கு எவரும் பிறர் கருணை இன்றி வாழமுடியாது. ஒவ்வொருவரும் பிறருக்கு முலையூட்டும் அன்னையும் பிறர் முலைகுடிக்கும் சேயுமென்றே இம்மண்ணில் வாழமுடியும் என்று தொல்பாடல் சொல்கிறது. அருகநெறியின் அடிப்படைச் சொல் என்பது கருணையே” சப்தமர் தொடர்ந்தார்.

அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த நாபி என்ற அரசருக்கும் அவரது பட்டத்தரசியாகிய மரூதேவிக்கும் மைந்தராகப் பிறந்தவர் அருகர்களின் முதல்வராகிய ரிஷபர். ஆடிமாதம் அமாவாசை நாள் முதல் மரூதேவி பதினாறு மங்கலக் கனவுகளைக் கண்டதாக அருகநெறிநூல்கள் கதைகள் சொல்கின்றன. அக்கனவுகளை அவள் தன் கணவரிடம் சொல்ல நூற்றிஎட்டு நிமித்திகர்கள் அவை கூடி அமைந்து நூலாய்ந்து குறிதேர்ந்து அவை விண்ணாளும் பெரு நெறி மண்ணுரைக்க வரும் முதல் ஞானி ஒருவரின் பிறப்பு நிகழவிருப்பதைக் குறிப்பன என்பதை முன்னுரைத்தனர்.

அயோத்தி நகரம் முழுதும் மைந்தனின் வருகைக்காக அணிக்கோலம் கொண்டது. விண்ணில் சென்ற தேவர்களும் கந்தர்வர்களும் வானிலிருந்து உதிர்ந்து கிடக்கும் பொன்னணி என்று அயோத்தி நகரத்தை எண்ணினர். அங்கிருந்து எழுந்த மங்கல இசையையும் நறுமணத்தையும் அறிந்து மகிழ்ந்து முகில்விட்டு இறங்கி வந்து மைந்தருடன் சேர்ந்து விளையாடினர். அரம்பையர் மகளிருடன் சேர்ந்து களியாடினர். கந்தர்வர்கள் தும்பிகளாக மலர்தேடி பறந்தலைந்தனர். தேவர்களின் குளிர்மழைக்குடையொன்று எந்நேரமும் அயோத்தியில் நின்றது. அதன்மேல் இந்திரனின் மணிவில் ஒன்று அழியாது அமர்ந்திருந்தது. இரவில் விண்ணிலிருந்து இறங்கி வந்த விண்மீன்கள் அயோத்தியின் தெருக்களெங்கும் கிடந்து அதிர்ந்தன.

அப்போது இரவெல்லாம் குயில்கள் பாடின என்கிறார்கள். குளிர்மழைக்கொண்டலைக் கண்டு பகலெல்லாம் மயில்கள் தோகை விரித்து நின்றன. அயோத்தியில் அன்று மக்கள் உண்ட அத்தனை உணவுகளும் தித்தித்தன. காற்று தொட்ட அனைத்து பொருட்களும் இசையெழுப்பின. அடுமனை புகைகூட குங்கிலியமென மணத்தது. பகலெங்கும் சிரித்து களித்தலைந்த மக்கள் இரவில் துயில்கையில் மேலும் உவகை கொண்டு முகம் மலர்ந்து கிடந்தனர்.

சித்திரை ஒன்பதாவது வளர்பிறையில் மரூதேவியின் மணிவயிறு திறந்து பிறந்தார் ரிஷபர். மூன்றுமுழம் நீளமிருந்த பெரிய குழந்தையைக் கண்டு வயற்றாட்டிகள் கைகூப்பி வாழ்த்தினர். வெண்காளை ஒன்று அன்று காலை அரண்மனை முகப்பில் வந்து நின்றதாக மூதன்னையர் உரைத்தனர். ஆகவே அவருக்கு ரிஷபதேவர் என்று பெயரிட்டனர். நிகரற்ற தோள்வலிமையும் மறுசொல்லற்ற அறிவும் சொல் கடந்து செல்லும் சித்தமும் கொண்டிருந்தார் காளையர். ஏழுவயதில் அந்நகரின் மாந்தர் அனைவரும் அண்ணாந்து நோக்கி பேசும் உயரம் கொண்டிருந்தார். துதிக்கைபோன்ற பெருங்கைகள் முழந்தாள் தோய விரிநெஞ்சும் சிறுவயிறும் உருண்ட தொடைகளும் என அவர் நின்றிருந்தபோது மானுட உடல் கொள்ளும் முழுமை அது என்று கண்டனர் நிமித்திகர்.

இளமை அமைந்ததும் சுனந்தை, சுமங்கலை என்னும் இரு இளவரசிகளை மணந்தார். சுமங்கலை பரதன் என்னும் மைந்தனையும் பிராமி என்னும் மகளையும் ஈன்றாள். சுனந்தை பாகுபலி என்னும் மைந்தனை பெற்றாள். இனிய இல்லறத்தால் நூறு மைந்தரை பெற்றார். செல்வமும் புகழும் வெற்றியும் அடைந்து நிகரிலா வெண்குடை ஒளியுடன் அயோத்தி நகரை ஆண்டார். பாரதவர்ஷத்தில் அத்தனை நாடுகளும் அயோத்திக்கு கடலுக்கு மலைகள் நதிகளை அளிப்பதுபோல் கனிந்து கப்பம் கொடுத்தன. அந்நகரின் கருவூலங்கள் குறைவறியாதவை என்பதனால் அவற்றை ஒருபோதும் காவலிட்டு பூட்டிவைக்கவில்லை என்கின்றன பாடல்கள்.

விண்முகில்களை கை சுட்டி அழைத்து நிறுத்தி மழைபெய்யவைக்கும் தவத்திறன் கொண்டிருந்தார் ரிஷபர். கிழக்கெழுந்து மேற்கில் அமையும் சூரியனின் கதிர்களை அவர் தன் சொல்லால் நிறுத்த முடிந்தது. துயரென்று ஒன்று அவர் அறிந்திருக்கவில்லை. தந்தையின் கைபற்றிச் செல்லும் மைந்தரின் களியாட்டு ஒவ்வொரு குடிமக்களிலும் நிகழ்ந்தது. அயோத்தி நகரில் முதற்புலரியில் கூவி எழும் கரிச்சான் அவர் பெயரை பாடியது. அந்தியில் செங்கதிர் மேற்கு வானில் மறையும்போது எழுந்து சிறகடிக்கும் வால்குருவி அவர் பெயரை வாழ்த்தியது.

மானுட துயரங்கள் ஏழு. இறப்பு, நோய், தனிமை, பிரிவு, வறுமை, அறியாமை, நிறைவின்மை. இவ்வேழும் ஏழு இருட்குகைகள். இப்புவியையும் அவ்விண்ணையுமே அள்ளித்திணித்தாலும் நிறையாத ஆழம் கொண்டவை. ஆனால் பேரறம் அவ்வேழு அடியிலா பெருந்துளைகளையும் நிறைக்குமென்பதை அயோத்தியில் ரிஷபதேவரின் ஆட்சியில் மக்கள் கண்டனர். அறத்திலமைந்த வெண்குடை நாளும் ஒளிகொள்ளுமென்பது தேவர்நெறி. ரிஷபரின் வெண்குடை இரவில் மண்ணில் ஒரு நிலவென தெளிந்திருந்தது.

விண்ணாளும் இந்திரன் அவைக்கு வந்த நாரதர் சொன்னார் “அதோ மண்ணில் பேரறம் திகழ்கிறது. ஆகவே இன்று முழுமை என்பது இங்கு அமராவதியில் இல்லை. தேவர்க்கரசே, உன் கடன் தன் மானுடவாழ்வின் எல்லையை அவ்வரசருக்கு அறிவிப்பது. அவர் மண் நிகழ்ந்தது இன்று நின்று ஒளிரும் எளிய அறம் ஒன்றைக்காட்டி விண்மீள்வதற்காக அல்ல. என்றும் நின்று ஒளிரும் அழியா அறம் ஒன்றை அங்கு நாட்டி சொல்லில் நிலை கொள்வதற்காக. அதனை அவருக்கு உணர்த்துக!”

இந்திரன் எழுந்து “நான் செய்ய வேண்டியதென்ன நாரதரே?” என்றான். “அவர் ஆற்றும் அறம் என்பது அன்றன்று மலரும் அழகின் மலர் என உணர்த்துக! மலராது வாடாது என்றுமுள்ள மலர் ஒன்றின் நறுமணத்தை அவர் தேடிக்கண்டடையட்டும்” என்றார் நாரதர்.

இந்திரன் தன் அவையில் இருந்த நடன அரம்பையான நீலாஞ்சனை என்னும் பேரழகியை பன்னிரு கந்தர்வர்களுடன் மண்ணுக்கு அனுப்பினான். சூதர்களாகவும் ஆட்டர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் புலவர்களாகவும் மாற்றுருக் கொண்டு அவர்கள் அயோத்தி நகர் அடைந்தனர். அங்குள்ள இசைச்சாவடியில் தங்கள் கலை நிகழ்வை அரங்கேற்றினர். மண்ணில் எவரும் நிகழ்த்தமுடியாத அவ்வருநிகழ்வைக் கண்டு அங்கு கூடிய நகரத்தினர் நெஞ்செழுந்தனர். இது அரசரின் அவையிலேயே நிகழ்த்தப்பட வேண்டுமென்று எண்ணினர்.

தன் அரண்மனை வாயிலில் வந்து கூடிய மக்கள் மலர்ந்த முகத்துடன் குரலெழுப்பி கூவி ஆர்த்து அழைப்பதைக்கண்டு வெளியே வந்த ரிஷபர் அவர்கள் நடுவே வந்த கலைஞர்களை கண்டார். கருநிற உடல் கொண்டவளாகிய நீலாஞ்சனை பொன்னிறமான கந்தர்வர்களின் நடுவே பொற்தாலத்தில் நீலமணி போல் ஒளிவிட்டாள். அவளை தன் அவைக்கு வரச்சொன்னார் ரிஷபர். அங்கு குடிகளும் அரண்மனைப் பெண்டிரும் குடித்தலைவர்களும் அமைச்சர்களும் சூழ இசை அவை கூட்டினார்.

அவைநடுவே ஆட்டர் சூழ செந்தாமரை நடுவே நீலம் மலர்ந்ததுபோல நீலாஞ்சனை வந்து நின்றாள். அவளைக் கண்டதுமே அவர் அவள் அழகால் அள்ளி எடுத்து குழலில் சூடப்பட்டார். இசைச்சூதர் பாட அவள் நடனமிட்டாள். தாளத்தில் இசை அமைந்து, இசையில் பாடல் அமைந்து, பாடலில் நாட்டியம் அமைந்து, நாட்டியத்தில் உணர்வுகள் எழுந்து, உணர்வென்றே எஞ்சும் பெருநிலை அங்கு நிகழ்ந்தது. கை சுழன்ற வழிக்கு கண், கண் சென்ற வழிக்கு கற்பனை, கால் சென்ற வழிக்கு தாளம், தாளம் சென்ற வழிக்கு அவையினர் நெஞ்சம் என்று நிகழ்ந்த ஆடலில் தன் உடல் விட்டு உள்ளம் எழுந்து நின்றாடுவதை அவர் உணர்ந்தார்.

இப்புவியில் தெய்வம் என்று ஒன்றிருந்தால் அது அழகே என்று அறிந்தார். ஓர் அழகு புவியில் உள்ள அனைத்து அழகுகளையும் துலக்கும் பேரழகு என ஆகும் மாயத்தை கண்டார். விழி தொட்ட அனைத்தும் எழில் கொண்டன. சித்திரத்தூண்கள், வளைந்த உத்தரங்கள், அவற்றின் மேலெழுந்த கூரையின் குவை முகடு, சாளரங்கள், திரைச்சீலைகள், சுடுகளிமண் பலகைகள் பாவிய செந்நிறத்தரை அனைத்தும் தங்கள் முழுமையெழிலில் மிளிர்ந்தன. சூழ்ந்திருந்த அவையினர், அங்கு மலர்ந்த விழிகள் எங்கும் அழகென்பதே ஒளிகொண்டிருந்தது. அழகென்பது விழியறியும் தெய்வம். பொருள் மேல் தன்னை தெய்வம் நிகழ்த்திக் கொள்ளுதல். உருவம் கொள்ள தெய்வத்திற்கு பிறிதொரு வழியில்லை. உருவெடுத்த மானுடனுக்கு அறியவரும் தெய்வமும் பிறிதில்லை.

காலம் அழகை முடிவிலிக்கு நீட்டுகிறது. வெளி அதை தன் தாலத்தில் ஏந்தியிருக்கிறது. ஒளி அதை துலக்குகிறது. இருள் அதை காக்கிறது. இருப்பு அழகின் வெளிப்பாடு. இன்மை என்பது அழகின் நுண்வடிவம். அழகிலாதது என்று ஏது இங்கு? பேரழகு ஒன்று எங்கோ பெருகியுள்ளது. அதிலிருந்து ததும்பி கனிந்தூறி முழுத்துச் சொட்டி பரவுகின்றன பேரழகுத் துளிகள். புடவி எனும் அழகுக் கோலம் எந்த முற்றத்தில் வரையப்பட்டுள்ளது?

எண்ணங்கள் ஒன்றன்மேல் ஒன்றென விழுந்து அழுத்தி ஒவ்வொன்றையும் அசைவறச்செய்து அழகு என்னும் ஒற்றைச் சொல்லாய் எஞ்சின. பின் அழகை கை விரல்நுனிகள் அறிந்தன. காது மடல் நுனிகள் அறிந்தன. மூக்கு முனை அறிந்தது. நாநுனி தித்தித்தது. மயிர்க்கால்கள் தேனில் ஊறி நின்றன. உள்ளம் தேன் விழுதென ஒழுகியது. அச்சொல் மறைந்து அதுவென அங்கிருந்தார்.

அக்கணத்தில் இந்திரன் வானின் விழி திருப்பி அருகே நின்ற நாரதரை நோக்கினான். பின்பு புன்னகைத்து தலை அசைத்தான். சுழன்று நடனமேறி காற்றில் எழுந்த நீலாஞ்சனை உதிரும் மலர் போல் மண்ணில் விழுந்தாள். விண்ணில் பறந்தகன்ற நீலப்பறவையொன்றின் இறகு போல் தரையில் கிடக்கும் அவளை நோக்கி எங்கிருந்தோ அறுபட்டு அங்கு வந்து விழுந்து திகைத்து எழுந்தார் ரிஷபர்.

அவையினர் அதுவும் நடனமோ என்று மயங்கி அமர்ந்திருந்தனர். ஆழ்ந்த அமைதியில் சாளரத் திரைச்சீலைகள் துடித்தன. எவரோ “மூச்சின் அசைவில்லையே” என்ற மென்குரல் பேச்சை எழுப்ப அக்கணமே ஓசைகளாக பற்றிக்கொண்டது அவை. “ஆம் ஆம்” என்றனர். இருவர் ஓடிச் சென்று நீலாஞ்சனையின் தலை பற்றி மெல்ல தூக்கினர். அவள் முகம் உயிரசைவை இழந்திருந்தது. இரு மயில்பீலி விளிம்புகள் போல் இமைகள் மூடியிருந்தன. சேடி அவள் கன்னத்தை தட்டி “நீலாஞ்சனை! நீலாஞ்சனை” என்று அழைத்தாள். இன்னொருத்தி அவள் கையைப்பற்றி நான்கு விரல் அழுத்தி நாடி நோக்கினாள். பிறிதொருத்தி தன் ஆடை நுனியை எடுத்து அவள் மூக்கின் அருகே வைத்து மூச்சு கூர்ந்தாள்.

மூவரும் திகைக்க முதியவள் ஒருத்தி “ஆம், இறந்துவிட்டாள்” என்றாள். நான்கு புறமிருந்தும் அவையினர் ஈக்கள் போல கலைந்து ரீங்கரித்து வந்து மொய்த்தனர். “இறந்துவிட்டாள்! இறந்துவிட்டாள்!” என்று பொருளில்லாது கூவினர். “அது எப்படி?” என்று கூவினார் ரிஷபர். அச்சொல்லின் பொருளின்மையை தானே உணர்ந்து “ஏன்?” என்றார். அதன் பெரும்பொருளின்மையை மேலும் உணர்ந்து “என்ன நிகழ்கிறது இங்கு?” என்றார். அதன் முடிவிலா பொருளின்மையை உணர்ந்து “என்ன சொல்வேன்!” என்றார்.

“விலகுங்கள்” என்று மருத்துவர் கூறினார். கூட்டத்தை விலக்கி அருகே சென்றார். அவள் நெற்றியில் கை வைத்து “ஆம், இறந்துவிட்டாள்” என்று அறிவித்தார். அமைச்சர் “என்ன ஆயிற்று மருத்துவரே?” என்றார். “பிராணன் ஆட்டத்தில் முழுமை கொண்டு கூர்ந்த விழிகளினூடாக வெளியே சென்றுவிட்டது” என்றார் மருத்துவர். “ஆட்டப்பாவையை உச்சியில் கட்டிய சரடு என்று ஊர்த்துவனை சொல்வார்கள். அது அறுந்துள்ளது. ஆகவேதான் அவள் அக்கணமே விழுந்தாள். அவள் இங்கில்லை.”

இரு கைகளையும் தொங்கவிட்டு தன் குடியினர் நடுவே நெடுமரமென எழுந்து அசைவற்று நின்றார் ரிஷபதேவர். “இங்கில்லை! இங்கில்லை! இங்கில்லை!” என்று ஓலமிட்டது உள்ளம். அவ்வண்ணமெனில் இங்குளதென்ன? அதுவரை கண்டிருந்த நீல மென்மலர், நீள் விழிகள், நெடுங்கூந்தல், துவளும் இடை, நெளியும் கைகள், செங்கனி உதடுகள், இளமுலைக்குவைகள். இவைதான் இக்கணம் வரை இங்கு அழகு அழகு அழகென்று எழுந்து நின்றன. இப்போது இங்கிலாதது எது?

அவளை அள்ளி அவை விட்டு வெளியே கொண்டு சென்றனர். எவரிடமும் சொல்லெடுக்காமல் திரும்பி தன் மஞ்சத்தறை சென்று கைகளில் தலை தாங்கி அமர்ந்தார். அன்றிரவு முழுக்க ஒற்றைச் சொல் மேல் அமர்ந்திருந்தார். முட்டை என கூழாங்கல் மேல் சிறகை விரித்து அமர்ந்து அடைகாக்கும் அன்னைப்பறவை என.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

 

தொடர்புடைய பதிவுகள்

வெ.சாமிநாதன் -கடிதங்கள்

$
0
0

Ve.sa-front-page

அன்புள்ள ஜெயமோகன்,

//இதில் சேதுபதி அருணாசலத்தால் அவரது இலக்கியப் பங்களிப்பைப்பற்றி குறிப்பாக ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவரது விமர்சனங்களை அவர் வாசித்திருப்பதாகத் தெரியவில்லை.//

என்று எழுதியிருந்தீர்கள். வெ.சாவுடனான அறிமுகம் அவர் புத்தகங்களை வாசித்த பின்னரே எனக்கு ஏற்பட்டது. அவர் இலக்கியச் செயல்பாடுகள் குறித்த என் கருத்துகள், திலீப்குமார் வெ.சா குறித்துத் தொகுத்த ‘வாதங்களும், விவாதங்களும்’ புத்தகத்தில் ஒரு கட்டுரையாக இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அதுவும் கூட ஒரு முழுமையான கட்டுரை கிடையாது. இன்று அவர் பங்களிப்பின் நிறைகுறைகளைச் சீர்தூக்கி எழுதும் ஒரு புறவயமான மனநிலை எனக்கு இல்லை. என்றாவது ஏற்படும்போது நிச்சயம் எழுதுவேன்.

கோலப்பன் கேட்ட ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை மட்டுமே அவருக்கு மின்னஞ்சலில் சொல்லியிருந்தேன். அதுவும் கூட அவர் எழுதும் கட்டுரைக்குத் தேவைப்படும் தகவலாக இருக்கும் என்று நினைத்தே பதிலளித்தேன். அவர் என் ‘கருத்தாக’ அதை வெளியிடுவார் என்று எனக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், நாஞ்சில்நாடன், வண்ணநிலவன் போன்ற வெ.சா மீது பெருமதிப்பு வைத்திருக்கும் தமிழின் முதன்மையான படைப்பாளிகளைக் கேளுங்கள் என்றே சொல்லியிருப்பேன். அதுதான் சரியாக இருந்திருக்கும்.

அன்புடன்,
சேது

அன்புள்ள சேதுபதி,

நீங்கள் சொன்னதில் உள்ள ‘நேரடி அனுபவங்களை ஒட்டி எழுதவேண்டும் என வலியுறுத்தியவர்’ என்னும் வரி வெ.சாவுக்கு நியாயம் செய்வது அல்ல. ஒருவரின் அஞ்சலியுடன் வரும் இத்தகைய வரி சட்டென்று நின்றுவிடும். இனி அவரை அவ்வரியிலிருந்து மீட்பது எளிதல்ல. நான் மீண்டும் மீண்டும் அதை கடக்கவே எழுதிக்கொண்டிருக்கிறேன்

வெ.சாவின் பங்களிப்பு என்று ஒற்றை வரியாகச் சொல்லவேண்டும் என்றால் ‘கட்டற்ற ஆழ்மன எழுச்சியின் விளைவாகவே கலை உருவாகவேண்டும், அதற்கு கருத்தியல்கள் இல்லை என்பதை வலியுறுத்திய அழகியல் விமர்சகர்’ என்று சொல்லியிருக்கவேண்டும்

ஒற்றைவரியை உருவாக்கிக்கொள்வது எளிதல்லதான். ஆனால் நீண்ட தொடர்பும் தொடர்வாசிப்பும் அதற்கு உங்களுக்கு உதவியிருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன்.

கோலப்பனின் அறிக்கையில் ஒருபக்கம் வலுவாக அமைந்துவிட்டது குறித்த வருத்தம்தான் அது. தனிப்பட்ட முறையில் அல்ல.

புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்கவும். எதிர்காலத்தில் வெ சா குறித்து நீங்கள் விரிவாக எழுதவேண்டுமெனக் கோருகிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

கருத்தியல் ரீதியாக, செயற்கையாக ‘உருவாக்கப்படும்’ படைப்புகளைக் காட்டிலும், தன் கலைக்கு நேர்மையான, நியாயமான, சொந்த அனுபவங்களிலிருந்தோ, அக எழுச்சியிலிருந்தோ உருவாகும் கலை வடிவமே உண்மையானது என்று வெ.சா வலியுறுத்தி வந்தார் என்பதுதான் நான் எழுத நினைத்தது. ஆனால் அன்றைக்கு நான் இருந்த உறைமனநிலையில் இரண்டு மூன்று வரிகளை ஒரு மின்னஞ்சலாக அனுப்பினேன், அவ்வளவே.

வெறும் நேரடி அனுபவங்களை மட்டுமே எழுதவேண்டும் என்று வெ.சா வலியுறுத்தினார் என்று நான் எளிமையாக நான் சுருக்கிப் புரிந்துகொண்டிருந்தால் விஷ்ணுபுரத்தை அவர் கொண்டாடியதையே நான் புரிந்துகொள்ள முடியாமல் போயிருந்திருக்கும். நேரடி அனுபவங்களில் இருந்து வெளியே நிற்கும் தெருக்கூத்தின் சன்னத நிலையை ஆழ்மன எழுச்சியாகவும், அதன் வழியே பார்வையாளர்கள் அந்தப் பேரனுபவத்தில் இணைந்து கொள்வதை முக்கியமாகவும் வெ.சா வலியுறுத்தியது, நவீன கவிதைகளின், ஓவியங்களின் உன்னதங்களுக்குச் செல்லும் அழகியல் – போன்ற வெ.சாவின் பங்களிப்புகளைக் கண்டு திகைத்து நிற்க வேண்டியிருந்திருக்கும். மேலும் அவரை முதன்மையாக ஒரு இலக்கிய விமர்சகராக மட்டும் பார்க்காமல், ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் போன்ற அனைத்து கலைகளுக்கும் ஒருங்கிணைவான ஒரு உன்னதத்தைத் தேடிய ஒரு ஆளுமையாகத்தான் அவரை நான் பார்க்கிறேன். இப்படிப் பார்ப்பதே கூட ‘நேரடி அனுபவங்கள்’ என்ற எளிமையான வரிக்கு எதிரான ஒன்றுதான்.

நேரமும் மனமும் வாய்க்கையில் அவருடைய கலை, இலக்கிய பங்களிப்புகளைக் குறித்து முழுமையாக எழுத முயல்கிறேன்.

*

1

அன்புள்ள ஜெ,

உங்கள் எதிர்வினை கண்டேன். விடலை என்று நான் சுட்டிக் காட்டிய அந்தக் கடிதத்தில் வெ.சா மீது எந்த வகையான “விமர்சனம்” இருந்தது என்று தயவு செய்து கூற முடியுமா? (“அவர் இந்துத்துவ தளங்களில்தான் எழுதினார் என்று நண்பர்கள் சொன்னார்கள்… வெங்கட் சாமிநாதனையும் வாசிக்கவேண்டியதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்”)

“ஒற்றைப்படையான இந்துத்துவ பார்ப்பனிய வைதீக சொல்லாடலை முன்னெடுக்கும் நாவல். அந்த எழுத்தாளன் ஒரு ஆர் எஸ் எஸ் காக்கி டிரவுசர். புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் கடையில் அந்த நாவல் விற்கப் படுகிறது.. விஷ்ணுபுரத்தை வாசிக்க வேண்டியதில்லை என்று அப்போதே முடிவு செய்து விட்டேன்” – 1990களில், விஷ்ணுபுரத்தின் ஒரு பக்கத்தைக் கூட வாசிக்காமல் அதன் மீது முத்திரை குத்திய அதே போன்ற மனநிலை அல்லவா இதுவும்? இதை உங்கள் படைப்பின் மீதான “விமர்சனம்” என்று நீங்கள் எப்போது கருதியிருக்கிறீர்கள் ஜெ?

ஆனால் வெ.சா விஷயத்தில் இந்த மூர்க்கத் தனமான மனநிலையை இப்போது நீங்கள் ஒரு “தரப்பு” என்று உருவகிக்கிறீர்கள். நான் விடலை என்று அந்தத் “தரப்பை” வசைபாடுவதாக என்னை அடக்குகிறீர்கள். இது உண்மையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெ.சா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் எங்குமே எழுதவில்லையே. “தமிழின் மகத்தான கலை இலக்கிய மேதை” எனறு அடைமொழி கொடுக்கப் படுவதன் பொருள் அது தான் என்று நீங்கள் கருதுவது வினோதமாக இருக்கிறது. உங்களைக் குறித்தும் “தமிழின் மகத்தான படைப்பிலக்கிய ஆளுமை” என்று அடைமொழி கொடுத்துத் தான் நான் எழுதி வந்திருக்கிறேன். அதன் பொருள் விமர்சனம் எதுவுமில்லாமல் உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் என்பதல்ல. அந்த அடைமொழி ஒரு பெரிய ஆளுமையின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான குறிப்பு மட்டுமே.

அன்புடன்,
ஜடாயு

http://www.tamilhindu.com/author/jatayu/

அன்புள்ள ஜடாயு

நான் என் தரப்பைச் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இடதுசாரிகள் எப்போதும் அமைப்பு சார்ந்தவர்கள். ஆகவே எப்போது மறுதரப்பை ஏதேனும் அமைப்புசார்ந்தவர்களாகவே உருவகித்துக்கொள்வார்கள். அது அவர்களின் மனநிலை. அதை நாம் முடிவுசெய்யமுடியாது. வெங்கட் சாமிநாதன் விவாதித்தது அவர்களுடந்தான்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அவதார் –ஒரு வாக்குமூலம்

$
0
0

1988ல் மங்களூர் திரையரங்கு ஒன்றில் ராபர்ட் போல்ட் எழுதி ரோலண்ட் ஜோ·ப் இயக்கிய ‘த மிஷன்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். என்னுடைய சிந்தனையில் ஆழமான ஒது திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் அது. அதுவரை நான் கிறித்தவ மதத்தையும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மிகவும் விரிவாக்கியது. அதன்பின் நான் வாசித்த ஏராளமான நூல்களுக்கான தொடக்கம் அந்த திரைப்படம்தான்.

1750களில் தென்னமேரிக்க பழங்குடிகளின் நிலங்களை ஸ்பானிஷ் ஆக்ரமிப்பாளார்கள் கைப்பற்றி அவர்களை அடிமையாக்கி வணிகம் செய்ததின் சித்தரிப்பு இந்த திரைப்படம்.  திரையை விட்டு அரங்குக்குள் கொட்டுவதுபோல இகுவாழ்சு [ Iguazu ]  அருவியைக் கண்டதுமே நான் வேறு ஓர் உலகுக்குள் சென்றுவிட்டேன். ஒரு பாதிரியாரை அங்கே காட்டுக்குள் வாழக்கூடிய  குவாரன்னி [Guaranni] சிவப்பிந்தியர்கள் சிறைப்பிடித்து அந்த அருவில் போட்டு விடுகிறார்கள். அதுதான் படத்தொடக்கம்.

 

மீண்டும் ஒரு ஜேசு சபைப் பாதிரியார் அந்த பிரம்மாண்டமான அருவியின் விளிம்பில் வழுக்கும் பாறை வழியாக தொற்றி மேலே ஏறும் காட்சியுடன் படம் மீண்டும் ஆரம்பிக்கிறது. ·பாதர் கப்ரியேல் [ஜெர்மி அயன்ஸ்] அந்த காட்டுக்குள் சென்று சிவப்பிந்தியர் நடுவே அமர்ந்து தன் புல்லாங்குழலை இசைக்கிறார். அன்னியர் எவரையும் கொல்லக்கூடிய அந்த மக்கள் அந்த இசையால் மயங்கி அவரை தங்களுடன் வாழ அனுமதிக்கிறார்கள். சேவையால் அவர் அவர்களில் ஒருவராக ஆகிறார்.

ஒரு முறை ஸ்பெயினுக்கு வரும்போது தன் காதலியின் தோழனைக் கொன்ற குற்றவுணர்ச்சியில் இருக்கும் ரோட்டிரிகோ மெண்டாஸா [ராபர்ட் டி நீரோ] வைச் சந்திக்கும் ·பாதர் கப்ரியேல் அவனை தன்னுடன் வந்து சேவையாற்றி குற்றவுணர்ச்சியை தீர்க்கும்படி அழைக்கிறார். அவனும் அவருடன் செவ்விந்தியர்களின் காட்டுக்குள் வருகிறான்.

 

மெண்டாஸா ·பாதர் கப்ரியேலுடன் இணைந்து அந்தக் காட்டுக்குள் செவ்விந்தியர்களுக்குச் சேவை செய்கிறான். அந்த மக்களுக்கு கல்வி கற்பிப்பதே ·பாதர் கப்ரியேல்லின் பணி. கல்வி என அவர் சொல்வது ஸ்பானிஷ் மொழி பைபிளை வாசிக்கக் கற்றுக்கொடுப்பதைத்தான். இந்நிலையில் ஸ்பெயின் தன் நிலங்களை ஓர் போர் ஒப்பந்தம் மூலம் போர்ச்சுக்கலுக்கு அளிக்கிறது. செவ்விந்தியப் பழங்குடிகளை அடிமைகளாக ஆக்கி விற்பதற்கான அனுமதியுடன்.

செவ்விந்தியர்களை ஆன்மா இல்லாதவர்கள் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர்களை அடிமைகளாக விற்க கிறித்தவ அறவியல் அனுமதிக்கும். ஆகவே அவர்களை மதம் மாற்றுவதற்கு போர்ச்சுக்கல் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்த மக்கள் கிறித்தவர்கள் தான் , அவர்களால் ஜெபம்செய்யவும் பைபிளை புரிந்துகொள்ளவும் முடியும் என்று ·பாதர் கப்ரியேல் வாதிடுகிறார். அவர்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கத்தோலிக்க தேவாலயத்தின் உயர்பீடம் வரைச் சென்று மன்றாடுகிறார்

 

ஆனால் போர்ச்சுக்கல் அரசின் ஆதரவை இழக்க விரும்பாத கத்தோலிக்கத் திருச்சபை செவ்விந்தியர்கள் மனிதர்களல்ல, அவர்களை மதம் மாற்றியது செல்லாது என்று ஆணையிடுகிறது. போர்ச்சுக்கல் படைகள் குவாரன்னி மக்களை ஒடுக்கி சிறைப்பிடிக்க வருகின்றன. அருவியின் கீழே செவ்விந்தியர்களை அடிமைகளாக்கி பெரும் தோட்டங்களை நடத்தும் முதலாளிகளும் அவர்களுடன் கைகோர்த்துக்கொள்கிறார்கள். சிலுவையேந்தி கத்தோலிக்க பாதிரிகளும் உடன் வருகிறார்கள்.

 

படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் என் நெஞ்சை உலுக்கின. படைகளின் எதிரே குவாரென்னி இனத்து சிறுவர் சிறுமியர்களை அழைத்துக்கொண்டு ·பாதர் கப்ரியேல் வருகிறார். அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு கிறிஸ்துவின் நாமத்தைப் பாடியபடி வருகிறார்கள். அவர்களை கண்டு கொஞ்சமும் தயங்காத காலனியப்படைகள் அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். கூட்டம்கூட்டமாக அவர்கள் செத்து குவிகிறார்கள்.

 

·பாதர் கப்ரியேலின் வழிகளை நம்பாத மெண்டாஸா அம்மக்களை திரட்டி அம்புவில்லுடன்  ஆதிக்கவாதிகளுக்கு எதிராக போரிடுகிறார். கடுமையான போருக்குப்பின்னர் அவர்களும் கொல்லப்படுகிறார்கள். குவாரென்னி இனக்குழுவின் சில குழந்தைகள் மட்டுமே எஞ்சுகிறார்கள். அவர்கள் அந்தபப்டுகொலை நடந்த இடத்துக்கு வருகிறார்கள். அங்கிருந்து ·பாதர் கப்ரியேல்லின் வயலின் புல்லாங்குழல் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

 

அவர்கள் சிறிய படகில் ஏறி காட்டுக்குள் செல்லும் நீரோடை வழியாக தப்பி இன்னும் அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு மரச்சிலுவை, ·பாதர் கப்ரியேல் அவர்களுக்குக் கொடுத்த சிலுவை, கிடைக்கிறது. ஒரு பையன் அதை எடுத்துக்கொள்கிறான். அவர்கள் காட்டுக்குள் சென்று மறைகிறார்கள். அவர்கள் மறைந்தபின் அந்தக்காட்டை காட்டியபடி படம் முடிகிறது.

 

·பாதர் கப்ரியேல் உண்மையில் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டார். குவாரென்னி இனக்குழுவின் காட்டுக்குள் ஊடுவுவதற்கான ஒற்றராக அவரை அறியாமலேயே அவர் பயன்படுத்தப்பட்டார். அவர் காட்டுக்குள் செல்ல ஏற்பாடுகளைச் செய்தவர்கள் அடிமை வணிகம் செய்யும் தோட்டமுதலாளிகள் மற்றும் ராணுவத்தினர்தான். ஆனால் அவரது மனசாட்சி அவர்களுடன் இணைந்து  அவரை பலியாகச் செய்தது.

 

என்யோ மோரிகனின் [Ennio Morricone] அற்புதமான இசையை இன்னமும் நான் மறக்கவில்லை. அந்த கடைசிக்காட்சியின் இசை அவ்வப்போது என்னை வந்து தீண்டுவதுண்டு. சமீபத்தில் அமெரிக்கா சென்று மிஷனரிகளாலும் காலனியவாதிகளாலும் கலி·போர்னியாவில் கொன்றே அழிக்கப்பட்ட பூர்வகுடிகளின் நினைவுக்காக அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்த்தபடி இருந்தபோது ஒரு மெட்டு என் மனதில் ஓடியபடியே இருந்தது. அது எனியோ மோரிகோனின் அந்த  உச்சகட்ட இசைதான் என பின்னரே அறிந்தேன்.

 

***

நேற்று ஜேம்ஸ் கேமரோன் எழுதி இயக்கிய ‘அவதார்’ என்ற படத்தை குழந்தைகளுடன் பார்த்தேன். 2154ல் விண்வெளியில் உள்ள பாலி·பிமஸ் என்ற வாயுவாலான கிரகத்தின் நிலவாகிய பண்டோரா என்ற கோளத்தில் நிகழ்கிறது கதை. பூமியளவுக்கே பெரியது இந்த நிலவு. இங்கே நாவி என்ற மனிதவகையினர் வாழ்கிறார்கள். மனிதர்களை விட இருமடங்கு பெரிய, மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட, நீல நிறமான உயிரினங்கள் இவர்கள்.

 

பண்டோராவில் மனிதர்கள் குடியேறிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே ஆக்ரமிப்பாளர்களாகவே வந்திருக்கிறார்கள். தங்கள் உயர்தொழில்நுட்ப முகாமில் அனைத்து வகையான ஆயுதங்களுடனும் இருக்கும் மனிதர்கள் நாவிகளுக்கு ‘கல்வி’ கற்றுகொடுக்கிறார்கள். அவர்களை ‘முன்னேற்ற’ முயல்கிறார்கள். ஆனால் நாவிகள் இவர்களை நம்புவதோ ஏற்றுக்கொள்வதோ இல்லை. நாவிகளுடன் நிகழும் போர்களில் ஏராளமான மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். நாவிகள் ‘பண்படாத’வர்களாகவே இருக்கிறார்கள்

 

நாவிகள் அங்கிருக்கும் இயற்கையுடன் கலந்து அதன் ஒரு பகுதியாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இயற்கையை ஏய்யா என்ற தாய்தெய்வமாக வழிபடுகிறார்கள். அவர்களுக்கு இயற்கையுடனும் அதன் உயிர்களுடனும் உரையாடக்கூடிய நுண்ணறிவு  இருக்கிறது.ளந்த கிரகத்தின் அத்தனை மரங்களும் வேர்கள் பின்னி ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன, அந்தக்கிரகமே ஒரு மகத்தான மூளை!

பண்டோராவில் அபூர்வமான ஒரு தனிமம் கிடைக்கிறது. அதைக் கொள்ளையடிப்பதற்காகவே அங்கே மனிதர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நாவிகளை நெருங்க முடிவதில்லை. பண்டோராவில் மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் இல்லை. ஆகவே மனிதர்கள் கண்ணாடி அறைக்கு வெளியெ செல்ல முடியவில்லை. கடைசியில் அதற்காக ஒரு வழி கண்டுபிடிக்கப்படுகிறது. நாவிகளின் உடலின் மரபணுக்களையும் மனித மரபணுக்களையும் கலந்து நாவிகளை போலவே சில உடல்களை உருவாக்குகிறார்கள்

இந்த செயற்கை நாவிகளுக்கு மனம் இல்லை. அந்த மனம்  மனிதர்களில் ஒருவருடையது. அவர் ஒரு கருவிக்குள் படுத்துக்கொள்ளும்போது அவரது மூளையுடன் அந்த நாவியின் மூளை இணைப்பு பெறுகிறது. அந்த நாவியின் உடலில் தன் மனதுடன் அந்த மனிதர் வெளியே சென்று  உலாவி வரமுடியும்.  அந்த பயணம் ஒரு கனவு போல் இருக்கும்.

 

ஜாக் ஸல்லி போலியோ வந்து நடக்க முடியாமலிருக்கும் இளைஞன். அவனது சகோதரன் பண்டாரா கிரகத்தில் கொல்லப்பட்டதனால் அவனுக்குப் பதிலாக இவன் வருகிறான். அவனுடைய சகோதரனைப்போல ஜாக் ஒரு ஆராய்ச்சியாளன் அல்ல, படைவீரன். தன் சக்கர நாற்காலியில் இருந்தே அவனால் போரிட முடியும். அவனுக்கு கால்களை செய்து தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு ஜாக் கொண்டு  வரப் பட்டிருக்கிறான்.

அந்த முகாம் ராணுவ கர்னலான மைல்ஸ் குவாரிட்ச் ஜாக்கை ஏன் நாவிகளுக்குள் அனுப்புகிறார் என்பதை விளக்குகிறார். அவன் பணி அந்த நாவிக்குலத்திற்குள் ஒரு நாவியாக ஊடுருவுவது. அவர்களில் ஒருவனாக ஆவது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து எப்படியாவது அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டியடிப்பது. ஜாக் ஒப்புக்கொள்கிறான்.

 

மனப்பரிமாற்றம் செய்யும் கருவியில் படுத்து நாவியின் உடலுக்குள் புகுந்து விழித்துக்கொள்கிறான் ஜாக். பண்டோராவின் காட்டுக்குள் செல்பவன் அங்குள்ள அதிசயங்களில் மெய்மறக்கிறான். ஆபத்தில் சிக்கி வழிதவறுபவனை அங்குள்ள இளவரசி நெய்த்ரி காப்பாற்றுகிறாள். அவனை தன் அப்பாவாகிய அரசனிடம் இட்டுச்செல்கிறாள். ஜாக் மீது எப்படியோ நம்பிக்கை கொள்ளும் அந்த நாவிகள் குலம் அவனை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்கிறது. அக்குலத்துக்கு ஒம்மட்டிகாயா என்று பெயர்.

 

ஜாக் அவர்களை உளவறிந்து அந்த தகவல்களை குவாரிட்ச்சுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்கு ஒரு தாய்மரம் இருக்கிறது. அந்த மாபெரும் மரம் அவர்களுக்கு கடவுள் போன்றது. இயற்கையின் மையம் அது. அந்த மரத்தின் அடியில்தான் மனித ஆக்ரமிப்பாளர்கள் தேடிச்செல்லும் கனிமம் உள்ளது. அந்த மரத்தை நாவிகளை துரத்திவிட்டு அவர்கள் அழித்தாகவேண்டும். ஆனால் அந்த மரத்தை நாவிகள் எக்காரணம்கொண்டும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்கிறான் ஜாக்.

இளவரசி நெய்த்ரியுடன் ஜாக் மெல்ல மெல்ல காதல் கொள்கிறான். அவன் மனம் அந்த நாவிகளில் ஒன்றாக ஆகிறது. ஒருமுறை அவன் நாவிகளின் காட்டை அழிக்கவரும் பிரம்மாண்டமான புல்டோசரை செயலிழக்கச் செய்வதைக் கண்ட குவாரிட்ச் அவன் மனம் தடம் மாறிவிட்டதை உணர்ந்துகொள்கிறான். மேற்கொண்டு அவன் நாவிகளிடம் செல்லவேண்டாம் என தடுக்கிறான்.

 

ஆனால் அந்த முகாமில் இருந்து தப்பும் ஜாக்கும் அவன் நண்பர்களும் நாவிகளுக்கு ஆதரவாக போரிடுகிறார்கள். குவாரிட்ச் தன் பெரும் விமானபப்டையுடனும் வெடிப்பொருட்களுடனும் நாவிகளுடன் போர்புரிந்து அந்த தாய்மரத்தை அழிக்கிறான். நாவிகள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் வனம் சூறையாடப்படுகிறது.

 

அவர்கள் செயலிழந்து தங்கள் தாய்தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று கூடியிருக்கையில் அங்கே செல்லும் ஜாக் அவர்களிடம் உண்மைகளை சொல்கிறான். அவர்களை திரட்டி மனிதர்களுக்கு எதிரான பெரும்போரை நடத்துகிறான். மனித இனம் தோற்கடிக்கப்பட்டு சிறையிடப்பட்டு பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.

மனிதனாகிய ஜாக்கில் இருந்து அவன் ஆன்மாவை இயற்கையாகிய தாய் தெய்வத்தின் உதவியுடன் அவனுடைய நாவி உடலுக்கு மாற்றுகிறார்கள். நாவியாக மாறிய ஜாக் அவர்களுடனேயே இருந்துவிடுகிறான்.

 

*

அவதார் ஒரு பிரம்மாண்டமான படம். திரைத்தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டப்பாய்ச்சலுக்கான  முதற்புள்ளி இது. இதன் பெரும்பகுதி முழுக்க முழுக்க வரைவிய நுட்பத்தாலெயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த கதைச்சூழலே செயற்கையாக வடிவமைப்பட்டிருப்பது அனேகமாக உலகிலேயே இதுதான் முதல்முறை.  மையக்கதாபாத்திரங்கள், பல்லாயிரம் துணைக்கதாபாத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், மரங்கள், நிலம்,வானம் எல்லாமே வரைவியம் உருவாக்கியவை.

 

அந்த வரைவியப் பிம்பங்களின் ‘நடிப்பு’ மிகுந்த நுட்பத்துடனும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது ஒரு கட்டத்தில் என்னை இனிமேல் நடிப்பு என்றால் என்ன பொருள் என்றே எண்ணச்செய்துவிட்டது. இனி நடிப்பதற்கு மனிதர்களோ காட்டுவதற்கு நிலமோ தேவையில்லையா என்ன? அந்த விசித்திரமான குதிரைகளின் ஒவ்வொரு தசைச்சிலிர்ப்பும் துல்லியம்.  அந்த மாபெரும் வவ்வால்பறவைகளின் ஒவ்வொரு சிறசைப்பும் துல்லியம். ஒளிவிடும் தாவரங்கள் பறக்கும் மலர்கள் – அவதார் ஒரு மகத்தான கனவு.

திரும்பி வரும்போது சட்டென்று எனக்கு தி மிஷன் நினைவுக்கு வந்தது. இரண்டுமே ஒரே படங்கள் அல்லவா? உலகத்தைக் காலனியாக்கி முடித்த ஐரோப்பா வேறு கிரகங்களைக் காலனியாக்குகிறது.  அவதாரில் ஒரு வசனம் வருகிறது ‘நமக்கு வேண்டிய ஒன்று அவர்களிடம் இருக்கிறது என்பதற்காக அவர்களை எதிரிகளாக எண்ணுவது அநீதி’ ஆனால் ஐரோப்பா முந்நூறு வருடங்களாகச் செய்துகொண்டிருப்பது அதைத்தான்.

 

·பாதர் கப்ரியேலுக்கும் ஜாக்குக்கும் எத்தனை ஒற்றுமை. ஏதோ ஒரு வாக்குறுதியால் அந்த அன்னிய மனிதர்கள் நடுவே ஊடுருவ விடப்படுகிறார்கள் அவர்கள். உள்ளூர வெள்ளையர், வெளியே இன்னொருவர். அந்த  அன்னிய மனிதக்கூட்டத்திற்குள் செலுத்தப்பட்ட நுட்பமான உளவுப்படை அவர்.  அதை உணரும்போது அவரது மனசாட்சி அவரை திசை திருப்புகிறது.

 

இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளிலேயே பலர் அத்தகையவர்கள். உதாரணம், ஜி.யு.போப், ஹெர்மன் குண்டர்ட். ஆனால் பலர் அந்த உளவுத்தொழிலை தங்களை அறியாமலேயே செய்து இந்திய சமூகங்கள் மீது காலனியாதிக்கம் வேர்விட்டெழுவதற்குக் காரணமாக அமைந்தார்கள் என்பதே வரலாறு.

 

இந்த சினிமாவில் ஜாக் நாவிகளுக்குள் செல்வதை அப்படியே ஒத்திருக்கிறது சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ காட்டும் ஒரு நிகழ்வு.. பிறமலைக்கள்ளர்களை ஒடுக்கவோ வெல்லவோ முடியாத வெள்ளைய ஆட்சி பிறமலைக்கள்ளர்களில் இருந்து எடுத்து வளர்க்கபப்ட்டு கிறித்தவ பாதிரியாராக ஆக்கப்பட்ட ஒரு ஜேசுசபை உறுப்பினரை அனுப்புகிறது. அவருக்கு அந்த மக்கள் மீது பிரியம்தான்.  தன் சொந்த முன்னோர்களை அறியும் ஆர்வத்துடன்தான் அவர் அந்த மக்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆனால் அந்த ஆய்வேடு வெள்ளையர்களுக்கு மாபெரும் ஆயுதமாக ஆகிறது. பிறமலைக்கள்ளர்களின் எல்லா குலரகசியங்களும் அவர்களுக்கு தெரிந்துவிடுகின்றன. அவர்களை குற்றபரம்பரை என்று முத்திரை குத்தி வேருடன் கெல்லி எறிகிறார்கள்!

 

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ‘உலகைவெல்லும்’ இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்தன. உலகம் என்பது ஐரோப்பியனுக்கான புதையலை ஒளித்து வைத்திருக்கும் மர்மவெளி என்று சித்தரிக்கப்பட்டது. ‘புதியஉலகத்தின்’ ஆச்சரியங்கள் களியாட்டங்கள் அபாயங்கள் விதந்து எழுதப்பட்டன. அங்குள்ள ‘பண்படாத’ ‘மூர்க்கமான’ ‘மனிதத்தன்மை குறைவான’ மக்களுக்கு அங்குள்ள செல்வங்களால் பயனில்லை. அவர்களை வென்று, கொன்றழித்து, அச்செல்வங்களை எடுத்துக்கொள்வதே ஐரோப்பிய வெள்ளையனின் அறம். அவனுடைய சாகசத்திற்கான பரிசு அது.

பலநூறு ஹாலிவுட் படங்களில் இந்த புதையல்வேட்டை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இப்போது நினைவுக்கு வருவது ‘கிங் சாலமோன்ஸ் மைன்ஸ்’ என்ற மாபெரும் படம். இளமையில் நான் அதன் அகன்ற காட்சியமைப்புக்காக மீண்டும் மீண்டும் அதைப்பார்த்திருக்கிறேன். எச். ரைடர் ஹகார்ட் எழுதிய சாகச நாவல் இது. 1985 ல் இது படமாக வெளிவந்தது. புகழ்பெற்ற பெரும்பட இயக்குநரான லீ தாம்ஸன் இயக்கியது. ஏற்கனவே இந்த நாவல் மூன்று முறை படமாக வெளிவந்திருக்கிறது.  எம்.ஜி.எம் தயாரிப்பாக வந்த முந்தையபடம் நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி அரங்கில் அக்காலத்தில் ஐம்பதுநாள் ஓடியிருக்கிறது.

 

புதையலை பயன்படுத்த தெரியாத ‘காட்டுத்தனமான’ மக்கள் நடுவே அது இருக்கிறது. சாகசக்காரனான வெள்ளையன் அபாயங்கள் வழியாக அந்த புதையலை கண்டுபிடித்து எடுக்கிறான். அந்தப்பயணத்தில் அந்தக் காட்டுஜனங்களுக்கு உதவி அவர்களுக்கும் வேண்டியவனாக ஆகிறான் என்பதே இந்நாவலின் கதை. அந்த ஜனங்கள் மனிதர்கள் போல அல்லாமல் ஏதோ பூச்சிக்கூட்டம் போல பெரும்திரளாக காட்டப்படுகிறார்கள். எந்தவிதமான அறிவுக்கூர்மையும் இல்லாமல் விலங்குகள் போல  கதாநாயகனை துரத்தி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவனை பிடித்ததும் பெரிய பானையில் தக்காளி வெங்காயம் பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கப்போட்டுவிட்டு ஈட்டிகளை உன்றியபடி ஊகா ஊகா என்று ஒலியெழுப்பி நடனமாடுகிறார்கள். தெளிவாகவே ஐரோப்பா அல்லாத உலகத்தைப்பற்றிய ஐரோப்பிய மனச்சித்திரத்தைக் காட்டும் படம்.

மீண்டும் மீண்டும் நமக்கு வந்துசேரும் படக்கதைகளில் இந்தக்கதையின் வேறு வேறு வடிவங்களே உள்ளன. டார்ஜான், வேதாளர் போன்ற கதைகளில் இதன்  இன்னொரு நுட்பமான மறு வடிவம் உள்ளது. அந்த அறிவில்லாத காட்டு மக்களின் செல்வங்களைக் காப்பாற்றும் ரட்சகராக வெள்ளையர் இருக்கிறார். அவர்கள் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்.

 

ஐரோப்பிய சாகச நாவல்கள், திரைப்படங்கள் அனைத்துமே மனிதனை மையமாக்கியவை. மனிதன் என்றால் ஐரோப்பிய மனிதன். அவனுக்கு எதிரான தீய சக்திகளாகவே பிற  நாகரீங்கள், பிற மனிதர்கள், பிற உயிர்கள் காட்டப்படுகின்றன. அது ஆப்ரிக்க காட்டுமனிதர்களாக இருக்கலாம் அல்லது வேற்று கிரக உயிராக இருக்கலாம் அல்லது அனகோண்டா போல வேறு உயிராக இருக்கலாம். அவற்றை நோக்கி சடசடனெ குண்டு மழை பொழியும் ஐரோப்பியன் அந்தப்படங்களின் கதாநாயகன். அவனது வெறுப்பும் சினமும் பொங்கும் கடைசித் தாக்குதல் காட்சியே உச்சம். அதற்காக அந்த ‘மாற்று சக்தி’ படத்தில் தீமையின் வடிவமாக காட்டப்பட்டிருக்கும்.

 

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற மம்மி படவரிசைகளில் புதையலைக் காக்கும் மம்மிகளும் பூதகணங்களும் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன? கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைன்ஸ்-ல் ஆப்ரிக்கப் பழங்குடிகள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றனவ் அப்படியேதான். அதே காட்சிப்பிம்பங்கள்தான். காதலியுடன் புதையலிருக்கும் அன்னிய நிலத்தில் அலையும் சாகசக்காரனான கதாநாயகன்!

 

அந்த வழக்கமான சித்தரிப்பை தலைகீழாக்குகிறது என்பதே அவதாரின் மிகமுக்கியமான தனித்தன்மை. இங்கே மனிதர்கள் பேராசையின் அழிவின் தீமையின் வடிவங்களாகக் காட்டப்படுகிறார்கள். கதை அவர்களின் கோணத்தில் சொல்லப்படாமல் அவர்கள் சுரண்டி அழிக்க விரும்பும் தரப்பின் கோணத்தில் சொல்லப்படுகிறது. அந்த மக்கள் இயற்கையின் மடியில் வாழும் வாழ்க்கையின் சுதந்திரமும் அழகும் சித்தரிக்கப்பட்டு அதற்கு நேர்மாறாக தனக்குத்தானே கட்டிக்கொண்ட கண்ணாடிக்கூண்டுக்குள் கொலையந்திரங்கள் சூழ வாழும் மனிதர்கள் காட்டப்படுகிறார்கள். இந்தப்படம் முழுக்க காட்சிரீதியாகவே இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறது. பேரழகு கொண்ட பண்டோராவின் நிலக்காட்சி முடிந்த கணத்தில் பளபளக்கும் இயந்திரங்கள் நிறைந்த இடுங்கலான ராணுவ முகாம் காட்டப்படுகிறது.

 

பேராசையால் வளங்களை சுரண்டுவது அப்படிச் சுரண்டுவதற்கு தேவையான ராணுவத்தை உருவாக்குவது அந்த ராணுவத்திற்கு தீனிபோட மேலும் உலகை சுரண்டுவது என்ற ஐரோப்பிய வாழ்க்கைமுறையை திட்டவட்டமாகச் சித்தரிக்கிறது அவதார். ராணுவவெறியும் அறிவியலும் கைகோர்த்துக்கொள்வதை பிற உலகத்தை முழுக்க அவர்கள் துச்சமாக நினைப்பதை காட்டுகிறது. அந்த கூட்டணி நடத்தும் தாக்குதல்களில் தெரியும் ஆணவமும் கண்மூடித்தனமான அழிவு மோகமும் மனதை பெரிதும் பாதிக்கின்றன.

 

குறிப்பாக அந்த அதிபிரம்மாண்டமான தாய்மரம் வேருடன் சரியும் காட்சி மகத்தானதோர் குறியீடு போல் உள்ளது. சென்ற இருநூறு வருடங்களில் ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகமெங்கும் உள்ள இயற்கைச்செல்வங்களில் முக்கால்பகுதியை அழித்திருக்கிறது என்ற பிரக்ஞையுடன் பார்க்கும் ஒருவருக்கு நெஞ்சடைக்கச் செய்யும் தருணம் அது. பறவைகள் பறந்து தவிக்க உயிரினங்கள் சிதற நாவிகள் கதறி அழ அது சரிவது ஒரு முதுமூதாதையின் மரணம் போலிருக்கிறது.

 

உலகம் முழுக்க இருந்த பன்மைத்தன்மை கொண்ட பண்பாடுகளில் நாமறியாத எத்தனையோ வாழ்க்கைச் சாத்தியங்கள் ஞானங்கள் இருந்தன, மூர்க்கமான ஒற்றைப்படையாக்கும் போக்கால் அவற்றை அழித்துவிட்டோம் என்ற உணர்வை அடைந்துவரும் நவீன ஐரோப்பிய மனத்தின் வெளிப்பாடாக அமைந்த திரைப்படம் இது. அமெரிக்கா சென்றபோது அங்குள்ள அருங்காட்சியகங்களில் வரலாற்று மையங்களில் ஐரோப்பிய மிஷனரிகளும் ஆக்ரமிப்பாளர்களும் அங்கு இருந்த நாகரீகத்தை முற்றாக அழித்ததை எந்தவிதமான மழுப்பல்களும் இல்லாமல் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டேன்.  அந்த வெளிப்படைத்தன்மை அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அறவுணர்ச்சியை ஊட்டும் என்பது உறுதி

 

பலநுறு நூல்கள் வழியாக பேசப்பட்ட விஷயம்தான். எஞ்சும் உலகையாவது ஐரோப்பியமைய லாபவெறியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற  பதற்றம் உலகமெங்கும் இன்றுள்ளது. அவதார் போன்ற ஒரு மகத்தான கேளிக்கைப்படம் இளம் மனங்களில் அந்தச் சித்திரத்தை ஆழமாக நிலைநாட்டுமென்றால் அது மானுடத்திற்கு லாபமாக அமையும்.

 

ஆனாலும் இந்த எளிய திரைப்படத்திலும் ஓர் ஐரோப்பியமையவாதம் உள்ளது. அந்த நாவிகளில் ஒருவருக்குக் கூட மனிதர்களை எதிர்க்கும் நுண்ணிய  அறிவு வாய்க்கவில்லை. தங்கள் அனைத்து சக்திகளுடன் அவர்களும் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள். ஆப்ரிக்க மனிதர்களைப்பற்றி பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியன் என்ன வகையான மனச்ச்சித்திரத்தை வைத்திருந்தானோ அதுதான் நாவிகளைப்பற்றி இந்தப்படத்திலும் உள்ளது.  ஆம் கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைனிலும் தி மிஷனிலும் பழங்குடிகள் காட்டப்படுவதுபோல, மம்மியில் வேதாளாபப்டை காட்டப்படுவதுபோல இதில் நாவிகள் காட்டப்படுகிறார்கள்! முகமற்ற பெருந்திரளாக. மூர்க்கமான உடல்கூட்டமாக.

 

அவர்களை காப்பாற்ற வெள்ளை மனிதன் உருமாறிச் செல்லவேண்டியிருக்கிறது. இன்னொரு டார்ஜான்! ஆனால் இந்த டார்ஜான் தன் வெள்ளைய அடையாளத்தை இழந்து அந்த மனிதர்களில் ஒருவனாக ஆகிறான். அந்தவரைக்கும் ஐரோப்பியமைய உலகநோக்கு முன்னகர்ந்திருப்பதே ஆச்சரியமளிப்பதுதான்.

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Dec 26, 2009

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 45

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 10

நீலாஞ்சனையின் இறப்பு அரண்மனையை ஆழ்ந்த அமைதியில் ஆழ்த்தியது. அவைநடுவே தன் கலையின் உச்சகணத்தில் அவள் மறைந்தது நல்லூழ் என ஒரு சாராரும் அவைநடுவே ஓர் இறப்பு நிகழ்ந்தது தீயதேதோ தொடர்வதற்கான அறிவிப்பு என இன்னொரு சாராரும் பேசிக்கொண்டனர். ஏதோ நிகழவிருக்கிறது என அனைவரும் அறிந்திருந்தனர். தன் மஞ்சத்தறையில் நாட்டிய சிலை என அரசர் அமர்ந்திருப்பதை நகரமே அறியலாயிற்று. அவரை அணுக அஞ்சி அரசியும் இளையோரும் அவரது அணுக்கச்சேவகனும் அறைவாயிலிலேயே காத்திருந்தனர்.

மறுநாள் துவாதசி. அன்று கன்னியை சிதையேற்றுவது முறையல்ல என்றனர் நிமித்திகர். அதற்கு மறுநாள் தெற்குக்காட்டில் அவளுக்கு சிதை ஒருக்கப்பட்ட செய்தியை வந்து அவரிடம் சொன்னார்கள். மஞ்சத்தில் அமர்ந்த நிலையிலேயே கை மேல் தலை வைத்து கண்கள் குத்தி நிற்க அசையாதிருந்த ரிஷபர் எழுந்து “எரியீடு எப்போது?” என்றார். “உச்சிக்கு ஒரு பொழுது முன்பு” என்றார் அமைச்சர். மீண்டும் “எரியீடு எப்போது?” என்றார். அமைச்சர் விழிமாறாமல் அதை சொன்னார். “இப்போது நேரமென்ன?” என்றார். “நெருங்குகிறது” என்றார் அமைச்சர்.

நீள்மூச்சுடன் “நன்று” என தன் சால்வைக்கென கைநீட்டினார். “தாங்கள் செல்லவேண்டுமென்பதில்லை அரசே” என்று தன்னைத் தொடர்ந்து வந்த அமைச்சரின் சொற்களைக் கேளாமல் படியிறங்கி அரண்மனை முற்றத்திற்கு வந்து ஒற்றைக் குதிரை தேரிலேறி “செல்க!” என்றார். அவன் அறிந்திருந்தான் அவர் செல்லுமிடம் ஏதென்று. புரவிகள் நெஞ்சின் தாளமென குளம்பு பதிய சாலையில் ஓடின.

தெற்குக்காட்டில் சிதை ஒருக்கப்பட்டிருந்தது. அங்கு நீலாஞ்சனையுடன் வந்த பன்னிருவரும் துயர் தாங்கி நின்றிருந்தனர். கூடி இருந்த நகர்மக்களோ இருநாள் துயிலழிந்த முகங்கள் வீங்கி விழிகள் நனைந்து ஊறியிருக்க, கைபிணைத்து தலை குனிந்து நின்றனர். அவர் வந்ததும் மெல்லிய குரலில் வாழ்த்தொலிகள் எழுந்தன. தேர் விட்டிறங்கி சிதை அருகே மலர் வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்த நீலாஞ்சனையின் உடல் நோக்கி சென்றார். மலர்மணமும் பல்வகை பொருள்மணமும் கலந்து அவள் உடலில் இருந்து எழுந்த அனைத்து மணங்களின் அடுக்குகளையும் கலைத்து வெளிவந்தது சதை அழுகும் நாற்றம்.

வெண்மலர்களும் செம்மலர்களும் கொண்டு மூடப்பட்டிருந்த அவள் உடலருகே நெருங்கும் தோறும் அஞ்சும் விலங்கென அவர் உள்ளம் திமிறி இழுத்துக்கொண்டு பின்னால் சென்றது. இதுவல்ல இதுவல்ல என்று தவித்தது. அருகே சென்று நின்று அம்முகத்தை நோக்கியதும் திடுக்கிட்டு “ஆ!” என்று மெல்லொலி எழுப்பினார். அங்கு கிடந்தது பிறிதொரு சதையும் உடலும். மெழுகென உயிர் அழிந்த தோல். வீங்கிய இமைகள். நீலமோடிய இதழ்கள். உப்பி சற்றே வளைந்து உறைந்திருந்த கன்னங்கள். “யாரிது?” என்று அறியாது அமைச்சரிடம் வினவி உடனே விழி திருப்பிக்கொண்டார். அமைச்சர் மறுமொழி உரைக்கவில்லை. பின்னால் நின்ற தலைமை ஏவலர் “மலரீடு செய்யுங்கள் அரசே” என்றார். “ஆம்” என்றபின் மும்முறை மலரள்ளி அவள் மேல் இட்டபின் தலை குனிந்து விலகினார். அவள் விரிந்த இதழ்களின் மேல் தேனீக்கள் அமர்ந்திருந்தன.

அவள் உடலை சிதைக் காவலர் தூக்கி சந்தன விறகடுக்கின் மேல் வைப்பதை கண்டார். மென்விறகிட்டு உடல் மூடப்பட்டது. அவள் துணைவனாக வந்த கந்தர்வன் நெஞ்சில் நெருப்பிட்டான். சருகில் பற்றி சற்றே தயங்கி சிறு சுள்ளியை வெடிக்கச் செய்து சிவந்தெழுந்து இதழ் இதழாக மலர்ந்து விரிந்து தடிகளை வளைத்துச் சுழன்று மேலெழுந்தது செந்நெருப்பு. உள்ளே அவள் உடல் வெந்து உருகி வழிவதை அவரால் விழியின்றி நோக்க முடிந்தது. தோல் இழுபட்டு கருகி வழிந்து விலகி உள்ளிருந்த நிணம் உருகிச் சொட்ட ஊன்நெய் ஊறிக் கொதித்தபடி வழிந்து விறகில் விழுந்து நீலமாகி எரிந்தது. அங்கு எழுந்த நெருப்பின் நாக்கு அதை ஆவல்கொண்டு உண்டது.

எரியாத முகம் உருகி வழிந்து பற்களுடன் மூக்கின் வெள்ளெலும்பு மூடிய துணிப்பரப்பில் புடைத்து எழும் மரப்பாவை போல் தெரிய, மென் முலைகள் அழன்று வழிந்தபின் வெள்ளெலும்பு நிரை எழுந்து வர, உள்அமைந்த நுரையீரல் சலம் சிதற மெல்ல வெடித்தது. சிதைக் காவலன் நீண்ட கவைக்கழியால் அந்நெஞ்சை அறைந்து உடைத்து உள்ளே சிறைப்பட்ட காற்றை வெளியேறச் செய்தான். இடையெழுந்த தசை உருகி பற்றிக்கொள்ள மேலும் காலமெடுத்தது. நீள் கழியால் அதை அறைந்து உடலை மெல்ல உள்மடித்து மேலும் விறகை எடுத்து வைத்தான். உடல் நீரை அனல் உண்டதும் ஊன் கொழுப்பு தானே நெருப்பாயிற்று.

விழியசைக்காது ஏன் இதை நோக்கி நிற்கிறோம் என்று வியந்தார். நோக்குவது உள்ளமல்ல உடலே என்று உணர்ந்தார். திரும்புக திரும்புக என்று அதற்கு ஆணையிட்டார். விரைக என கடிவாளத்தை பிடித்திழுக்க இழுக்க அது கற்குதிரை என்று உணரும் கனவு போலிருந்தது அக்கணம். “செல்வோம் அரசே” என்றார் அமைச்சர். “ஆம்” என்று உரைத்து திரும்பி நடந்தார். தேரில் கால் வைக்கும்போது தலை சுழன்றது. வாயில் நிறைந்திருந்த உமிழ் நீரை துப்பியபின் ஏறுவதற்காக உன்னும் கணத்தில் இரும்பு கதாயுதத்தால் பிடரியில் அறையுண்டது போல் உள்ளம் திறந்தது. அவரது நா அறிந்தது ஊன் சுவை!

அடுமனையில் உணவாகும் ஊன்மணம் அது. ஊன். ஊனை அறியும் கணம். அவரது உடல் குத்துண்ட குதிரை என விதிர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது. “அரசே” என்று அமைச்சர் அழைத்தது கேட்கவில்லை. பின்னால் நின்ற முதியஏவலர் “செல்வோம் அரசே” என்று அவர் தோளைத் தொட்டபோது உடல் நிலையழிய கால் தளர்ந்து விழப்போனார். அவர் தோளை பற்றிக்கொண்டார் ஏவலர். மானுடர் எவருக்கும் இல்லாத நிகரற்ற எடை கொண்ட உடல் என்பதால் அவரால் ரிஷபரை நிறுத்த முடியவில்லை. சரிந்து கற்சிலையென மண்ணை அறைந்து விழுந்து அவ்வண்ணமே கிடந்தார்.

பாதி புதைந்ததுபோல் மண்ணுடன் மண்ணென கிடக்கும் தொல்காலத்துச் சிற்பம் போல் அசைவிழந்திருந்தார். அதுவரை அவர் முகத்தில் இல்லாத நெடுநரம்பொன்று மூக்கு நோக்கி இறங்கி கிளைபுடைத்து நீலமாகி நின்று துடிப்பதை ஏவலர் கண்டார். குனிந்து அவர் கைகளை பற்றியபோது அவர் உடலின் அனைத்துத் தசைகளும் கோல்கொண்ட முரசுத் தோலென அதிர்ந்து கொண்டிருப்பதை அறிந்தார். “அரசே அரசே” என்று அழைத்தார். அமைச்சர் கைவீசி பிற ஏவலரை அழைத்து அவரைத் தூக்க ஆணையிட்டார்.

அவர்கள் அருகே வந்தபோது தலைமை ஏவலர் கைகாட்டி நிறுத்தி விலகும்படி சொன்னார். சில கணங்களுக்குப் பின் மெல்லிய விசும்பல் ஒலி ரிஷபரிடமிருந்து எழுந்தது. சிறுகுழந்தை போல் உடல் குறுக்கி தோள் ஒடுக்கி மண்ணில் கிடந்தார். கண்ணில் இருந்து வழிந்த நீர் காது நுனியில் சொட்டி விழுந்தது. உதடுகள் அதிர கேவல்கள் வெடித்தன. அழும்தோறும் அழுகை எழுந்தெழுந்து வலுத்தது. பின்னர் இரு கைகளையும் ஊன்றி எழுந்து அமர்ந்தார். மூன்று நீள்மூச்சுகளுக்குப் பின் கண்களைத் துடைத்து எவர் இவர் என தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கினார்.

முற்றிலும் அறியாதவரென அவரது விழிகள் மாறியிருந்ததை அணுக்கனாகிய முதியஏவலர் கண்டார். “அரசே” என விளித்து ஏதோ சொல்ல வந்த அமைச்சரை அவர் கை நீட்டி தடுத்தார். எழுந்து விண் சூடிய தலையுடன் நின்ற ரிஷபர் தன் வலக்கையால் நெற்றியில் சரிந்த குழல் கற்றையை பற்றிச் சுருட்டி இழுத்து பிடுங்கினார்.

இருகைகளாலும் தன் தலை மயிர் அனைத்தையும் பிழுது அவர் வீசுவதை உடல் விதிர்க்க கெட்டித்த பற்களுடன் சுற்றம் நோக்கி நின்றது. குருதி வழிய முண்டனமாகியது தலை. மீசையையும் தாடியையும் அவ்வண்ணமே பிடுங்கி வீசினார். இடை சுற்றிய பட்டாடையை, மணிக்கச்சையை, கழுத்தணி ஆரத்தை, கங்கணங்களை, தோள்வளைகளை, கழலை களைந்தார். அக்கணம் கருவறைக்குள் இருந்து வெளிவந்தது போல் குருதி வழிந்த தலையுடன் முழுதுடலுடன் தெற்கு நோக்கி நடந்தார்.

அவரைத் தொடர்ந்து கண்ணீருடன் சென்றனர் அயோத்தி மக்கள். செய்தி அறிந்து அவரது இரு மைந்தரும் தொடர்ந்து ஓடி வந்தனர். அவரை பின் நின்று அழைக்க அல்லது முன் சென்று தடுக்க அவர்களுக்கு துணிவு கைகூடவில்லை. அயோத்தியின் எல்லை வரை குடிகளும் படைகளும் மைந்தரும் அவரை தொடர்ந்தனர். ஒருகணமும் திரும்பாமல் உடல் களைந்து விண்ணேகும் உயிர் என நடந்து காட்டின் விளிம்பை அடைந்தார். எவனோ ஒரு சூதன் தன்னை மறந்து “முகில் ஏறி மறையும் தேவன்” என்றான். அச்சொல் கேட்டு நீர் விழுந்த குளம்போல் அலையெழுந்து அடங்கியது கூட்டம். புதர்களுக்குள் ரிஷபர் மறைந்தார்.

இருபத்தியெட்டு ஆண்டுகாலம் ரிஷபர் அருந்தவம் இயற்றினார் என்கின்றன நூல்கள். வெண்பனி அனலென உடலை எரிக்கும் இமயமலை உச்சியில், நதிகளுக்கு பித்துபிடித்த தாழ்வரைகளில் சூரியனின் அடுமனை என கொதிக்கும் பெரும் பாலைகளில். ஆறு ஞானமரபுகளை அவர் கடந்தார். ஏழுவகை ஊழ்க முறைகளை பயின்றார். இறுதியில் நீர்விடாய் கொண்ட யானை துதிக்கை நீட்டி ஊற்று தேடி செல்வது போல் கீழ்த்திசை வந்தார். சௌராஷ்டிர மண்ணில் அமைந்த பாலிதானம் என்னும் இப்பெருங்குன்றின் மேலேறினார்.

அன்று மானுடர் எவரும் செல்லாத பெருமலை அடுக்கமாக அமைந்திருந்தது அது. அங்குள்ள இன்நீர்ச் சுனை ஒன்றில் புலியும் இளமான் குட்டியும் இணைந்து நீரருந்துவதை கண்டார். இவ்விடமே என்று கண்டு அங்குள்ள பேரால மரத்தடியில் அமர்ந்தார். எண்வகை இருத்தல்களை உதறினார். ஐவகை நிலைகளை அடைந்தார். சித்திரை முழுநிலவு நாளில் அவர் சித்தத்தில் முழுமை நிறைந்தது.

கருணை என்னும் சொல்லுடன் காலமில்லா பெருவெளி கடந்து வந்து கண்விழித்தார். முழுநிலவு அப்போதும் புவியை தழுவி இருந்தது. பெருங்கருணை கரும்பாறைகளில் வழிந்தது, இலைகளில் ஒளிர்ந்து சொட்டியது. கருணையில் நெளிந்தன புழுக்கள். கருணை ஒளியை சிறகெனச் சூடி பறந்தன பூச்சிகள். கருணையில் விழி கனிந்து நின்றன மான்கள். கருணையில் சிறகு துழாவி திளைத்தன பறவைகள். கருணையை கவ்வியபடி சுழன்றது வானத்தில் வெண் பருந்து. கருணையுடன் புழுவை கொத்தி உண்டது புறா. கருணையுடன் தவளையை விழுங்கியது பாம்பு. கருணையுடன் கிழித்த மானின் ஈரலை சுவைத்தது புலி. கருணையுடன் மாமலைகளை நெரித்துக் கொண்டிருந்தது காலம்.

“இரு கைகளையும் விரித்து வான் நோக்கி நின்றபின் ரிஷபர் மலை இறங்கினார். இப்புவிக்கு அவர் ஒன்றும் சொல்ல தேவை இருக்கவில்லை. பொருள் மயக்கமின்றி உரைக்கப்பட்ட ஒற்றை மந்திரச்சொல் என இருந்தது அவர் தோற்றம். சென்ற இடத்திலெங்கும் கருணை என நின்றது அவரது நெறி. இளையவரே, இம்மண்ணை அணைத்து கொல்லாமை என்னும் நெறியை நாட்டியது அவர் கொண்ட அப்பெருஞ்சொல். அதில் எழுந்த அருகர்களை இங்கு நாங்கள் வழிபடுகிறோம்” என்றார் சப்தமர்.

“ரிஷபர் பால்குன மாதம் வளர்பிறை பதினொன்றாம்நாள் நிறைவடைந்தார். வடதிசைக்கேகி அஷ்டபதம் என்னும் எட்டு குன்றுகளைக் கடந்து கயிலை மலைமுடியை அடைந்தார். அங்கு திகழ்ந்த பேரொளியில் கலந்து விண்உருக்கொண்டார். இன்று பாரதவர்ஷமெங்கும் நரம்புவலைப் பின்னலென விரிந்துள வணிகப்பாதை வழியாக ஊறிப்பரவிக் கொண்டிருக்கிறது அருகநெறி. அதன் ஒரு துளியையேனும் அறியாத மானுடர் எவரும் இன்று இங்கில்லை. சௌராஷ்டிரமென்னும் மலைச்சுனையில் இருந்தே அது ஊறித் ததும்பி பெருகுகிறது. இப்பெருநிலத்திற்கு கோட்டை என்றும் காவலென்றும் இருப்பது அருகநெறியே” என்றார் சப்தமர்.

வெள்ளிமுளைத்ததும் அவர்கள் கிளம்பினர். துயிலெழுந்த விலங்குகள் புத்துணர்வுடன் நடப்பது இருளுக்குள் அவற்றின் காலடியோசையிலேயே தெரிந்தது. தொலைவில் இருளுக்குள் நின்ற மலைப்பாறைகளில் அவற்றின் காலடியோசை எதிரொலித்தது. “இவர்களின் ஊர்கள் வெயில் வந்தபின்னரே விழித்தெழுகின்றன. இருள் வந்தவுடன் அடங்கிவிடுகின்றன. இருளில் விழித்திருக்கலாகாது என்னும் கொள்கை கொண்டவர்கள்” என்று சப்தமர் சொன்னார்.

முதல்கதிர் எழுந்தபோது அவர்கள் சௌராஷ்டிரத்தின் சிற்றூர்களை கடந்துசென்றனர். ஊருக்குள் பிரிந்துசெல்லும் அனைத்து சாலைமுகப்புகளிலும் சிறிய அருகர் ஆலயங்கள் இருந்தன. ஒவ்வொரு அருகர் ஆலயத்தின் அருகிலும் காரையிலை சேர்த்து அவித்த அப்பங்களும் குடிநீருமாக சிறியதோர் அன்னசாலையும் இருந்தது. விலங்குகள் அருந்த மரம் குடைந்த படகுகளில் நீர் நிறைத்துவைக்கப்பட்டிருந்தது.

அர்ஜுனன் “இங்கு கொள்ளையர் அணுகவில்லை என்றால் அது ஒரு விந்தையே” என்றான். “தங்களுக்குத் தேவையானவற்றுக்கு மேல் சேர்த்து வைப்பவர்களை கொள்ளையர்கள் அணுகுகின்றனர். எறும்புப் புற்றுக்கும் தேன் கூடுக்கும் தேடி வரும் கைகள் உண்டு. பறவைக் கூடுகளை எவரும் தொடுவதில்லை” என்றார் சப்தமர். “விண்ணில் பறக்கும் பறவைகள் அறிந்துள்ளன இம்மண்ணை. ஆகவேதான் அடுத்த வேளை உணவை அவை சேர்த்து வைப்பதில்லை. மண்ணில் துளையிட்டு உழலும் எலிகள் விண்ணை அறிந்ததில்லை. ஆகவேதான் உண்ணும் மணிக்கு நிகரான நெல்மணிகளை அவை சேர்த்து வைக்கின்றன.”

கஜ்ஜயந்தபுரியில் வணிகம் பெரிதும் ஈச்சமரத்தில் இறக்கி காய்ச்சி எடுத்த வெல்லமாக இருப்பதை சாலையோரமாக குவித்து வணிகத்திற்கு வைக்கப்பட்டிருந்த வெல்லக் குவைகளிலிருந்து அவன் அறிந்துகொண்டான். ஆடுமேய்க்கும் சிற்றாயர்குலம் படிப்படியாக அத்தொழிலை விட்டு இனிப்பு சமைப்பவர்களாக மாறியிருந்தனர். “ஆடுகளை கொல்லாமல் வளர்க்க இயலாது என்று அறிந்ததும் நடந்த மாற்றம் இது. ஊனோ தோலோ வணிகம் செய்ய இயலாதபோது பாலை நிலத்தில் ஈச்சை மரங்களை பயிரிடலாமென்று ரைவதகுலத்து மன்னர் வஜ்ரசேனர் கண்டடைந்தார். அவர் காலத்தில்தான் இங்கு இத்தொழில் தொடங்கி வளர்ந்தது.”

தொலைமேற்கின் பெரும்பாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்டை ஓலைகளும் முள்சூழ்ந்த கரிய உடலும் கொண்ட ஈச்சை மரங்கள் அரைப்பாலை நிலங்களில் நீள்வரிசையாக நடப்பட்டிருந்தன. ஒன்றுடன் ஒன்று இணைத்து மூங்கில்களை கட்டி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு நடந்து சென்றே பாளைகளை சீவும்படி அமைக்கப்பட்டிருந்தது. ஈச்சமரப்பாளைகளின் முலைநுனிகளை மெல்லச்சீவி கலங்களுக்குள் விட்டு ஊறிச் சொட்டி நிறையவைக்கப்பட்டிருந்த இன்நீரை மரமேறிகள் மரக்குடுவைகளில் சேர்த்து சகடைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் கட்டி இறக்கினர்.

இன்நீர் இறக்கியவர்கள் தங்களுக்குள் மயிலகவல் போல ஒலியெழுப்பி பேசிக்கொண்டது வானிலிருந்து வழியும் குரல்களென கேட்டுக்கொண்டிருந்தது. ததும்பும் குடங்களை தோளிலேற்றியபடி வியர்த்த உடல்களில் தசைகள் இறுகி அதிர மரமேறிகள் ஓட்டமும் நடையுமாக வந்தனர். மூச்சும் பேச்சுமென “உம் உம் “ என அவர்கள் வழிகோரி எழுப்பிய ஓசைகள் சாலைதோறும் ஒலித்தன. “காஜுர் மரங்கள் பிற ஊர்களிலெல்லாம் கள்ளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன. இங்கு கள் உண்பது கொலைக்கு நிகரான குற்றம்” என்றார் சப்தமர். “இங்குள்ள பெருந்தண்டனை என்பது ஊர்நீக்கம். இங்கு திறந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிற ஊர்களில் வாழ முடியாது. எனவே அது இறப்புக்கு நிகர்தான்.”

பாலைகளில் செறிந்திருந்த சிறிய முள் மரங்களை வெட்டி விறகாக்கி சுமந்துகொண்டு வந்தனர் சிறுவர். அவற்றை எரித்து வாயகன்ற கலங்களில் இன்நீரைக் காய்ச்சி பதநீராக்கிக் கொண்டிருந்தனர் பெண்கள். ஒரு சிற்றூரில் அர்ஜுனன் சென்று அருகமர்ந்து அவர்கள் அதை காய்ச்சுவதை நோக்கினான். அங்கிருந்த மூதாட்டி முன்னெழுந்து பிரிந்து நின்ற பற்களைக் காட்டி நகைத்தபடி “இப்போதுதான் பார்க்கிறீர்கள் போலும், இன்நீர் இப்படித்தான் வெல்லமாகிறது” என்றாள். “இப்புவியை ககன வெளியிலிருந்து இப்படித்தான் தெய்வங்கள் காய்ச்சி உருட்டி எடுத்தன என்று என் மூதன்னை ஒரு முறை சொன்னாள்.”

அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “இது மெய்ஞானம் திரளும் முறை என நான் எண்ணினேன்” என்றான். அவள் சிரித்தபடி “நாங்கள் எதையும் அறியோம். நினைவறிந்த நாள்முதல் இன்நீரில் இனிப்பு திரட்டுவதை மட்டுமே செய்துவருகிறோம்” என்றாள். அர்ஜுனன் “இதன் வழியை அறிந்தால் அருவம் உருவமாவதை அறியமுடியும் அல்லவா?” என்றான்.

அவள் “இதில் எட்டு பதங்கள் உள்ளன வீரரே. வெண்பால் என நுரைகொண்டு நிற்கும் இன்நீரை நுரைப்பதம் என்கிறார்கள். கலத்திற்கு அடியில் அனல் பட்டு அசைவு கொண்டதுமே நிறம் மாறி தேன்பதமாகிறது. பின்பு குமிழிகள் எழுந்து மீன்கண்பதம் ஆகிறது. குமிழிகள் நீராவியுடன் உடைந்து தெறிப்பதை பாகுபதம் என்கிறோம். குமிழித் துளைகள் விழுவது சேற்று பதம். துடுப்பு சிக்கிக் கொள்ளும்போது அதை அரக்கு பதம் என்போம்.”

“அரக்கு பதம் அமைந்ததும் துடுப்பால் இடைவிடாது இதை கிளறவேண்டும். இல்லையேல் பாகு இறுதி வரை பசை என்றே இருக்கும். பாகு அறுத்தல் என்று இதை சொல்கிறோம். துடுப்பில் அள்ளி உதிர்க்கப்படும் பாகு கம்பி என நீளாமல் பிரிந்து அறுந்து விழவேண்டும். அதை தேனடை பதமென்கிறோம். அனலை நிறுத்தி பாகை ஆற விடும்போது மேலே மெல்லிய பொருக்குப் படலம் எழவேண்டும். அது தோல் பதம்” என்றாள் முதியவள். “தோல் பதம் அமைந்தால் வெல்லம் அமைந்ததென்றே பொருள். உறைந்தபின் அள்ளி இக்குழிகளில் விட்டு அரை உருளைகளாக்கி எடுப்போம்.”

முதியவள் அங்கே குவிந்துகிடந்த வெல்லக்குவைகளை சுட்டி “எங்கள் வெல்லம் பாரதவர்ஷத்தின் பதினேழு நாடுகளுக்கு செல்கிறது. சுவை அறிந்த அடுமனையாளர்கள் சௌராஷ்டிர வெல்லம் வேண்டுமென்று கோரிப் பெறுகிறார்கள்” என்றாள். “இங்குள மண்ணின் சுவையா அது?” என்றான் அர்ஜுனன். “அல்ல. இங்குள்ள வெயிலின் சுவை” என்றாள் மூதாட்டி. “இன்நீர் வேரில் ஊறி தடியில் எழுந்து பாளையில் சொட்டி பானையில் திரளவேண்டும். மழையோ பனியோ அதில் ஊறலாகாது. இங்கு மழையில்லை என்பதனால் இந்நீர் நறுஞ்சுவை உடையதாகிறது.”

“இங்கும் கூட நீரற்ற மேட்டுநிலத்து மரங்களின் இனிமை ஊற்றருகே நிற்கும் மரங்களுக்கு வருவதில்லை” என்றார் சப்தமர். “மேட்டுநிலத்தில் நிற்கும் மரம் எப்போதும் தனித்தது. ஆழ வேர் செல்வது. காற்றை தனித்து எதிர்கொள்வதனால் நெடிதோங்கி நிற்பது. அதை நோன்பு கொண்டு நிற்கும் மரம் என்பார்கள். அதன் நீரை காய்ச்சி எடுக்கப்படும் வெல்லம் அருகர்களுக்கு உகந்தது என இவர்கள் எண்ணுகிறார்கள்.”

முதியவள் அளித்த வெல்லத்தை அர்ஜுனன் கைகளில் வைத்து உடைத்து வாயிலிட்டான். “சௌராஷ்டிரத்தின் இனிமை” என்றான். சப்தமர் “ஆறு சுவைகளும் மண்ணுக்குரியவை. மண்ணிலிருந்து இவ்வினிமையை மட்டும் வேர்களால் அள்ளித் திரட்டி நமக்களிக்கும் காஜுர் மரங்கள் அன்னையருக்கு நிகரானவை என்கிறார்கள் இவர்கள். நமக்கென முலை கனிபவை. கரிய உடலுடன் குறுகிய இலைகளுடன் காற்றென்றும் மழையென்றும் வெயிலென்றும் பாராது கருணை சுரந்து இங்கு நின்றிருக்கின்றன.”

கஜ்ஜயந்தபுரிக்கு செல்லும் பாதையெங்கும் ஈச்ச மரங்கள் நிறைந்திருந்தன. இல்லங்களின் கூரைகள் ஈச்ச ஓலைகள் முடைந்து செய்யப்பட்ட தட்டிகளால் ஆகியிருந்தன. ஈச்சமரத்தின் நார்களை பின்னி செய்யப்பட்ட கூடைகள். ஈச்சமட்டைகளால் ஆன பீடங்கள். இளையோர் அணிந்திருந்த ஆடைகள்கூட ஈச்சையோலைகளை நுணுக்கமாகக் கீறி பின்னப்பட்டிருந்தன. “ஊர்களின் பெயர்கள்கூட ஈச்சைமரங்களை ஒட்டித்தான்” என்றார் சப்தமர்.

வெயில் வெம்மை கொண்டபோது ஈச்சைச்சிறகு என்னும் ஊரின் முகப்பிலிருந்த பெரிய ஈச்சைக்காட்டின் நடுவே இருந்த அடுத்த விடுதியில் தங்கினர். அங்கிருந்த சிறிய சுனை மலைக்கற்களால் விளிம்பு கட்டப்பட்டு குளிர்ந்த கரிய நீர் நிறைந்து ஈச்சஓலைகளின் நிழலசைவுடன் கிடந்தது. பொதிவிலங்குகளை அவிழ்த்து ஆங்காங்கே கட்டியபின் கொட்டகைகளில் இளைப்பாறினர். சப்தமர் “வெயில் தாழ்ந்தபின் கிளம்பினால் முன்னிரவாகும்போது ரைவதமலையை சென்றடையமுடியும்” என்றார்.

சாவடிக்கு அப்பால் ஊருக்குள் செல்ல திரும்பும் பாதையின் தொடக்கத்தில் இருந்த செம்மண் மேட்டின்மீது இரு கரிய பாறைகளின் நடுவே மிகப்பெரிய ஈச்சை மரம் ஒன்று சிறகுகள் விரித்து எழுந்து நின்றது. அதன் அருகே மரத்தில் செதுக்கப்பட்ட ரிஷபரின் சிலை நின்றிருந்தது. நான்கு ஆள் உயரம். அதன் தலைக்குமேல் முகிலற்ற நீலவானம் வெளித்திருந்தது.

அர்ஜுனன் அருகே சென்று அதை நோக்கி நின்றான். ஆடையற்ற பேருடல். மானுட உடல் அடையும் தசைவடிவத்தின் உச்சம். பெருந்தோள்கள். தாளில் படிந்த கைகள். ஒட்டிய வயிறு. விரிந்த மார்பு. சுருள்நுரையென படிந்த குழல். மண்ணில் எதையும் நோக்காத பார்வை. தன்னுள் ஊறிய மகிழ்வு துளித்து நின்றிருக்கும் இதழ்கள்.

அவன் நெடுநேரம் அதன் முன் நின்றிருந்தான். பின்பு கைகூப்பி அச்சிலையின் அடிகளை தொட்டு சென்னிசூடியபின் திரும்பினான். வெயில் விரிந்த நிலம் போல நான்குதிசைகளும் திறந்து அமைதியே அதுவென இருந்தது உள்ளம். சப்தமர் “ஓய்வெடுங்கள் வீரரே” என்றார். “ஆம்” என்றபடி சென்று தனக்காக இளவணிகன் ஒருவன் விரித்துவைத்திருந்த சருகுப்படுக்கையில் படுத்தான். தலைக்குமேல் கைகளைக் கோத்து கண்களை மூடிக்கொண்டான். காலைமுதல் கேட்ட சொற்களும் குழம்பிக்கொண்டிருந்தன. கொதித்து குமிழியிட்டு கடைந்து திரட்டி…

எவரோ அருகே இருந்து மெல்ல சொன்ன சொற்றொடர் போல ஓர் எண்ணம் அவனுள் எழுந்தது. அந்த முகத்தை அவன் நன்கறிந்திருந்தான். அந்த விழிகளுடனும் இதழ்களுடனும் உரையாடியிருந்தான். “ஆம்” என்று சொல்லிக்கொண்டான். ஆனால் எங்கே? அவன் சித்தம் துழாவிக்கொண்டே இருந்தது. கண்டடையாமலேயே துயிலில் ஆழ்ந்தது.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

இதழாசிரியர்கள் -ஒரு கடிதம்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன் சார்

வணக்கம். தமிழ் இந்துவுக்கு நன்றி கட்டுரை வாசித்தேன்.

உங்கள் அவதானிப்பு மிகச் சரி. தினமணியில் ஒரு பத்தாண்டுக் காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன்.

தலைமை குழுவின் தன்முனைப்பு, எழுத்தாளர் பற்றி தெரியாத துணை ஆசிரியர் குழுவின் அறியாமை காரணமாக சிறந்த எழுத்தாளர் பற்றிய செய்திகள் அதில் நிராகரிக்கப்படுகின்றன.

உதாரணமாக எழுத்தாளர் சுஜாதா காலமான நாள் அன்று நான் இரவுப் பணியில் இருந்தேன். அச் செய்தியை முதல் பக்கத்திற்கு கொண்டு வர “எல்லாம்” தெரிந்த இரவு பொறுப்பாளரிடம் போராட வேண்டியதானது. “சார் சுஜாதா நிறைய நாவல், சிறுகதைகள், கட்டுரை எழுதியுள்ளார்…ஆனந்த விகடனில் தொடரெல்லாம் எழுதியிருக்கிறார். தமிழில் முக்கியமான ஆளுமை, சினிமாவுக்கு கதை, வசனம் எழுதியவர் என்றெல்லாம் கூறி அவரை சமாதானம் செய்தபோதும் நான் சொல்லி செய்வதா என்ற கர்வம் தடுத்தது. நாளைக்கு எல்லோரும் செய்தி வெளியிடுவார்கள். நாம் போடாவிட்டால் அவமானம் என்று சொன்ன பிறகே முதல் பக்கத்திற்கு வந்தது… அதுவும் ஒரு சிறிய படம் வைத்து பாயிண்டர் செய்தியாக….(விரிவான செய்தி உள்ளே)

இலக்கியத்தை பொறுத்த வரை அதன் தலைமைக்கு ஓர் அளவுகோல் உள்ளது. அந்த அளவுகோலில் நானறிந்தவரை நவீன எழுத்தாளர்கள் வருவதில்லை. அதை ஆட்சேபிக்கும் அல்லது எதிர்க்கும் உதவி, துணை ஆசிரியரால் அங்கே இருக்க முடியாது. அல்லது வெளியேறிவிடுவர். ஒரு முதிரா வாசகனுக்குரிய எளிய வாசிப்புப் புலமோ அல்லது இலக்கியம் பற்றிய உணர்வோ கூட இல்லாதவருக்கும், அப்படி என்றால் என்னவென்று தெரியாதவருக்குமே அங்கு இடம்.

இலக்கிய நுண்ணுணர்வு உள்ளவருக்கு அங்கு மட்டும் அல்ல எந்த நாளிதழிலும் இடம் இல்லை. ஆசிரியர் குழாமில் வெற்று சில்லறை அலுவலக அரசியல் செய்து சொம்பு தூக்கும் குருவி மண்டைகளுடன் போராடிக் கொண்டு மனத்தாங்கலுடனும் சொல்லவொணா துயரத்துடனும் ஓரளவேனும் இலக்கிய வாசிப்புடன் நுண்ணுணர்வுடைய ஒருவன் அதில் பணியாற்றுகிறான் என்றால் அது முற்ற முழுதாக தவிர்க்கவியலாத அவன் வயிற்றுப்பாட்டின் காரணமாகவே இருக்கும்.

கொள்கை வேறுபாடுகள் நிலவிய போது கூட ராஜமார்த்தாண்டன் போன்ற ஆளுமை அதில் நிலைக்க முடிந்தது. ஆனால் இப்போது அது நிலைய வித்வான்கள் மட்டுமல்ல அரசவை கட்டுரையாளர்களால், பக்க வாத்தியங்களால் செலுத்தப்படுகிறது.

மேலும் இது போன்ற செய்தியையோ கட்டுரையையோ முடிவு செய்வதும் குழாம் அல்ல. அது அங்கு தனியுடைமை.
முதிரா வெகுஜன ரசனையுடைய எதேச்சதிகார மையப்படுத்தப்பட்ட தலைமையிடம் நவீன எழுத்தாளருக்காக வாதிடுவதற்கு ஒன்றுமில்லை.

அப்படியே வாதிட நேர்ந்தாலும் புகழ்பெற்ற ஒருவருக்கு எதற்கு விளம்பரம்? என்ற பதிலை நான் கேட்டிருக்கிறேன். அதில் தனது எல்லைக்குட்பட்ட தனித்துவம் இல்லாதவர்களையே விதந்தோதும் எழுதப்படாத கொள்கை அடங்கியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

2012 டிசம்பர் 22 என்று நினைக்கிறேன். கோவையில் அன்றிரவு உங்களுடனான உரையாடலின்போது ஒரு குறிப்பிட்ட கட்டுரையாளரின் பெயரைக் கூறி எப்படி இதெல்லாம் போடறாங்க என்று நீங்கள் கேட்டதற்கு அதையெல்லாம் முடிவு செய்யும் அதிகாரம் எங்களிடம் இல்லை சார்…என நாங்கள் கூறியது நினைவு வருகிறது.

எனவே ஒரு சிறிய சதவீதத்தினர் தவிர பொதுவாக துணையாசிரியர்கள் அதிகபட்சமாக ஆனந்த விகடன், ஜூனியர் விகடனுக்கு மேல் வாசிப்பு உடையவர்கள் அல்ல. நுண்ணிய, நவீன வாசிப்பு கொண்டவர்களும் அல்ல. இதில் அதிகாரத்தாலோ அல்லது செய்தி சேகரித்த அனுபவத்தாலோ பொறுப்பிற்கு வந்த தலைமைகளும் விதிவிலக்கல்ல.

நான் ஓரளவுக்கு நூல்கள் மட்டுமே வாசிக்கத் தெரிந்தவன் என்பதாலும் எந்தவொரு பக்க வாத்தியமும் வாசிக்கத் தெரியாதவன் என்பதாலும் அதிலிருந்து விலகிவிட்டேன்.

நன்றி

க.ரகுநாதன்
ஊத்துக்குளி, திருப்பூர்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வனம்புகுதல்

$
0
0

ஐயா வணக்கம்,

அறுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் தனிக்கட்டையாக வாழ்ந்து தற்போது அமைதியற்று வாழும் நிலையில் அமைதி தேடி, நீங்கள் எழுதியது போல் பரதேசியாக, இந்திய யாத்திரை செல்ல எண்ணியுள்ளேன். காசிக்கு சென்று அங்கே இருந்து விடவும் எண்ணம்.உங்கள் உதவியை வேண்டுகிறேன்.பண உதவி அல்ல.செல்வது, தங்குவது போன்ற….நன்றி

 

எம்

dscn5154

 

அன்புள்ள எம் அவர்களுக்கு

 

உங்களை புரிந்து கொள்ள உங்கள் குறைவான வரிகள் போதுமானவையாக இல்லை. ஆனால் வசதிகளைப் பற்றிய உங்கள் கேள்வி ஒருவாறு உங்களை அடையாளம் காட்டுகிறது.

 

காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்ய ஷேத்ரம்  என்ற தெளிவு, இருக்கவேண்டும்.

 

அந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம் பொருளை அதில் காண முடியும் என்பது போலத் தான் அதுவும்.

அல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்க வேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.

இந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.

 

ஏனென்றால் நாம் நம் அறுபது வயது வரை வாழும் வாழ்க்கை நம்மை மிகவும் பழகி விடுகிறது. சுவைகள், வசதிகள் பழகி விடுகின்றன. எது நல்லது, எது தேவையானது, எது அழகானது என்பதில் எல்லாம் உறுதியான அபிப்பிராயங்கள் உருவாகி விடுகின்றன. பழகாத ஓர் இடத்துக்குச் சென்றால் அங்கே நாம் விரும்பாத விஷயங்களே அதிகம் இருக்கும்.

 

அத்துடன் உண்மையிலேயே காசி வசதியான அழகான ஊர் அல்ல. அங்கே வரும் மக்களிடம் ததும்பும் காலாதீதமான ஓர் உணர்வெழுச்சி உண்டு.  கங்கையின் கம்பீரம் உண்டு. இவ்விரு அம்சங்களையும் கவனிக்கும் கண் கொண்டவர்களுக்கு காசி கண்ணுக்குத்தெரியும். அல்லாதவர்களுக்கு காசி வெறும் அழுக்கான நெரிசலான படித்துறைகள் மட்டுமே.

 

மேலும் காசியின் வெயிலும் குளிரும் தென்னிந்தியர்களாகிய நமக்கு ஒவ்வாதவை. காசி நம்மை எளிதில் நோய்வயப்படச் செய்துவிடும். ஆகவே ஒரு எளிய மன எழுச்சிக்கு ஆட்பட்டு காசிக்கோ இமயமலைக்கோ செல்வீர்கள் என்றால் அது தவறான முடிவாகவே ஆகிவிடும்.

 

பொதுவாக துறந்து செல்வது என்பது சொல்வதைப் போல  செய்வதற்கு எளிய விஷயமே அல்ல. துறந்தவற்றை நினைவுகளாக, ஏக்கங்களாக, கசப்புகளாகச் சுமந்து செல்வீர்கள் என்றால் அவை அகத்தில் இன்னமும் பிரம்மாண்டமாக வளர்ந்து பெரும் சுமையாக அழுத்தி விடும்.

 

மேலும் மனிதர்கள் யாராக இருந்தாலும் தனியாக வாழ முடியாதவர்கள். தனியாக வாழ்வதற்கு அபாரமான ஆன்ம பலம் தேவையாகும். அது இல்லையேல் தனிமை விரைவிலேயே ஆழமான சோர்வுக்கும் சலிப்புக்கும் கொண்டுசெல்லும். அப்படி பலரை நானே கண்டிருக்கிறேன்.

 

அனைத்தையும் விட முக்கியமான ஒன்று உண்டு, செயலின்மை. மனிதன் செயலுக்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரம். அவன் உடல் ஒன்றும்செய்யாவிட்டாலும் மனம் செயலாற்றியபடியே உள்ளது. மனம் செயலாற்ற உடல் சும்மா இருக்குமென்றால் அது மாபெரும் சலிப்பாக ஆகிவிடும். மனம் செயலற்ற நிலையை அடைவது யோகம் மூலம் தியானம் மூலம் அடையப்படுவது. அவர்கள் ‘சும்மா’ இருக்கலாம். [‘சிந்தையற சும்மா இருப்பதே சுகம்’ என்கிறார் தாயுமானவர். சிந்தையற்றபின்னரே சும்மா இருக்க வேண்டும்] மற்றவர்கள் எங்காவது சும்மா இருந்தால் அதுவே நரகம்.

 

ஆகவே உங்களுக்கு என்ன தேவை, உங்கள் மனநிலை என்ன என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு இடமாறுதல் தேவையா? அதற்குக் காரணம் இப்போது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் மாற்றமில்லாத சலிப்பா? பயணம் செய்ய விரும்புகிறீர்களா? வேறு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க விரும்புகிறீர்களா? இந்தக்கேள்விகளுக்கு திட்டவட்டமான ஒரு பதிலை தேடியபின்னர் மேலே முடிவெடுங்கள்.

 

அன்றாட வாழ்க்கையின் சலிப்புதான் என்றால் பயணம் செய்வது மிகச்சிறந்த வழிதான். வேறு யாருடனாவது இணைந்து பயணம் செய்ய முடியுமென்றால் அப்படிச் செய்யலாம். தனித்துச்செல்ல விருப்பம் என்றால் அதை தேர்வு செய்யலாம். காசி ஓர் இலக்குதான். இந்தியா முழுக்கவே புண்ணியஸ்தலங்கள்தான். [நாங்கள் சென்ற பாதை ஒன்று என் இணையதளத்திலேயே உள்ளது]

 

இடமாற்றம் தேவை என்றால் அது உங்கள் உடல்நலத்துக்கு ஒத்துப்போகக்கூடிய, உங்களால் சமாளிக்கக்கூடிய,இப்போது உங்களுக்கு இருக்கும் சலிப்பை வெல்லக்கூடிய ஓர் இடமாக இருந்தால் நல்லது. நீங்கள் ஒரு தமிழக நகரில் இருந்தால் ஏன் ஒரு சிறு கிராமத்துக்கு செல்லக்கூடாது?  ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ ஒரு புத்தம்புது நிலத்தை நோக்கிச் செல்ல்லக்கூடாது? அங்கே சட்டென்று ஒரு புதுவாழ்க்கை தோன்றுவது போல உணர முடியும். அது உற்சாகத்தை அளிக்கும்.

 

ஆனால் எங்கே சென்றாலும் அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அங்கே ஏதேனும் செயலில் நீங்கள் உங்களை மூழ்கடித்துக்கொண்டாகவேண்டும். எதையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்த இடமும் சலிப்பு தருவதே. கர்மம் செய்வாயாக என்றே நம் முதனூல் நமக்குச் சொல்கிறது. கர்மத்தை தாண்டிய விபூதிநிலையும் கர்மம் வழியாக கைவருவதே

 

ஒருமுறை நெல்லை அருகே கயத்தாறுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த கோயிலின் அர்ச்சகரிடம் பேச நேர்ந்தது. நீதித்துறையில் உயர்நிலையில் இருந்தவர். சட்டென்று கிளம்பி அங்கே வந்து தங்கி அந்த ஆலயத்திருப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது வாழ்க்கையின் இன்னொரு தொடக்கம் அது. வாழ்க்கை இன்னமும் மிச்சமிருக்கிறது என்ற உணர்வை அது உருவாக்குகிறது.

 

அப்படி பலரை நான் அறிவேன். கிராமங்களுக்குச் சென்று இயற்கை வேளாண்மையை ஆரம்பித்தவர்கள். பெரிய மொழிபெயர்ப்புப் பணிகளை ஆரம்பித்தவர்கள். ஹோமியோ மருத்துவமனை தொடங்கியவர்கள்.  அனைவரும் மீண்டும் ஒரு வாழ்க்கையைக் கண்டு கொண்டார்கள். உற்சாகத்துடன் நெடுநாள் வாழ அது அவர்களுக்கு உதவியது.

 

எந்த மனிதராக இருந்தாலும் வாழ்க்கையில் மூன்று தொடக்கங்கள் தேவை. முதல் தொடக்கம் கல்வி. எந்தக்கல்வி என்று தேர்ந்தெடுப்பது. அது சமூகத்துக்காக. இரண்டாவது தொடக்கம் வேலையும் குடும்பமும். இது தன்னைச் சார்ந்தவர்களுக்காக. மூன்றாவது தொடக்கம் முதுமையில். இது தனக்காக மட்டுமே. தனக்கு மனநிறைவு அளிக்கக்கூடியதை மட்டுமே செய்தல். இந்த மூன்றாவது தொடக்கம் நிகழாதவருக்கு முதுமை என்பது சலிப்பும் சோர்வும் மட்டுமே உடைய ஒரு காலகட்டம்தான்.

 

முதுமைக்காக ஒரு தனி வாழ்க்கையை, அதுவரையிலான வாழ்க்கையில் இருந்து முற்றாக அறுத்துக்கொண்டு புத்தம் புதிதாக ஒன்றை, தொடங்கியாக வேண்டும். அதை ஈராயிரம் வருடங்களாக நம் மரபு சொல்லிவருகிறது. அதற்கு வானப்பிரஸ்தம் என்று பெயர். அதன்பின் அதுவரையிலான வாழ்க்கையுடன் உணர்வு ரீதியான தொடர்பு கொண்டிருக்கக் கூடாது. மகளுக்கு பணக்கஷ்டம் பேத்திக்கு படிப்பு வரவில்லை போன்ற விஷயங்களில் இருந்து முற்றாக விலகிவிடவேண்டும். அதுவே வானப்பிரஸ்தம்.

 

நீங்கள் தனிக்கட்டை என்றீர்கள். ஒருவகையில் அது முதுமையில் ஒரு விடுதலைதான். உங்களுக்கு தேவையாக இருப்பது ஒரு செயல்தளம் என்றே எனக்குப்படுகிறது.

 

உங்களுக்கு எது உகந்தது, எதைச் செய்தால் நீங்கள் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்று நீங்கள்தான் சொல்லமுடியும். ஒருவருடைய விடைகள் இன்னொருவருக்குச் சரியாக இருப்பதில்லை. அனைவருக்கும் உரிய பொதுவான இடமோ வழியோ ஏதும் இல்லை.

 

சிந்தித்து முடிவெடுங்கள்.

 

அன்புடன்

 

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 29, 2009

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்

$
0
0

குறைத்துரைத்தலின் அழகியல் வாசித்தேன். எழுபது எண்பதுகளில் வீட்டை விட்டு வெளியேறி நக்சலைட் இயக்கத்தில் சேர்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது. என் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் விஜயகாந்த் படம் வந்தால் கண்ணீரோடு பார்ப்பார். விஜயகாந்த் படத்தில் அழுவதற்கு என்ன இருக்கிறது என்று ஒரு நாள் கேட்டேன். ஏறக்குறைய அ.மார்க்ஸ் சொன்னது தான். இருபது வ்யது- கம்யுனிஸ பிடிப்பு காணாமல் போகுதல் – ஒரே ஒரு நாள் மின்னல் சந்திப்பு மீண்டும் காணாமல் போய்விடுதல் . விஜயகாந்தைப் பார்த்தால் காணாமல் போன எங்க அண்ணன் மாறியே இருக்கு என்று அவர் சொன்ன பின் தான் அது புரிந்தது. அதன் வலி குறைத்துரைத்தலின் அழகியல் படித்த பின்புதான் முழுவதுமாக உணர முடிகிறது.

என் நண்பன் ஒருவன் வீட்டில் எத்தனை பேர் என்று கேட்டால் எப்பொழுதும் மூவர் என்றுதான் சொல்வான். அவர்கள் வீட்டில் அவனது அம்மாசொன்ன போதுதான் தெரிந்தது முதல் அண்ணன் இதே போல் காணாமல் போய் நக்ச்லைட் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகக் கடிதம் வந்திருக்கிறது. அவனது அம்மாவைத் தவிர பிறர் காணாமல் போன அண்ணனைக் குடும்ப எண்ணிக்கையில்சேர்ப்பதில்லை.

இன்னொரு ஒற்றுமையும் இவர்களிருக்கும் தாய்மொழி தெலுங்கு. அ.மார்க்ஸ் குறிப்பிடும் குடும்பமும் தெலுங்கு போலத்தான் தெரிகிறது. ஏன் இப்படி ?

அன்புடன்

பூபதி

*

ஆலயம் தொழுதல் வாசித்தேன். ரத்தத்திலேயே ஊறின கொழுப்பும் குசும்பும். பிறகு ஏன் பஸ்ஸில் போகிறவன் அடிக்க மாட்டான்?

எப்படி இருக்கிறீர்கள் எழுத்தாளரே?

முட்டி மோதி இந்திர நீலம் வந்து விட்டேன். எப்படி, சாதனை தானே?

அன்புடன்

சிவா

*

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 46

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 11

கஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை அள்ளி அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோற்கூடாரங்களின் மீது பொழிந்தது. அதற்குள் மரவுரி போர்த்தி உடல் ஒடுக்கி படுத்திருந்தவர்கள் அவ்வொலியைக் கேட்டு துயிலுக்குள் குளிர்மழையில் நனைந்தனர்.

பொதிவண்டிகளை அவிழ்த்து அத்திரிகளையும் காளைகளையும் அங்கு அறையப்பட்டிருந்த தறிகளில் கட்டிக் கொண்டிருந்த வணிகர்கள் எழுப்பும் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. பொதிகளை விடிந்தபிறகே எண்ணி இறக்குவது அங்குள்ள வழக்கமென்பதால் ஓரிரு காவலர்களை அங்கு நிறுத்திவிட்டு வணிகர்கள் கூடாரங்களுக்குள் எங்கேனும் படுத்துக்கொள்ள இடமிருக்குமா என்று தேடிச் சென்றனர். சிலர் அணைந்துவிட்டிருந்த கணப்பை ஊதி விறகு இட்டு அனலெழுப்பினர்.

சப்தமர் “சற்று நேரம் துயிலுங்கள் வில்லவரே. விடிந்தபின் இங்கு துயில முடியாது. கஜ்ஜயந்தபுரியின் முகப்பு இந்த அங்காடி. பகல் முழுக்க இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். கோடை காலமாதலால் வெளிச்சமும் புழுதியும் நிறைந்திருக்கும். பகலில் துயில்வது இங்கு அரிது” என்றார். அர்ஜுனன் “துயில் வரும்போது படுத்துக் கொள்கிறேன்” என்றபின் நடந்து சென்று கஜ்ஜயந்தபுரியின் நெடுங்குன்றை நோக்கி நின்றான். தொலைதூரத்தில் எல்லா குன்றுகளும் வான் திரையில் எழுதப்பட்டவை போல செங்குத்தாக நிற்பதாக தோன்றும். அணுகும்போதுதான் அவற்றின் சரிவு தெரியும். ரைவதமலை அணுகியபின்னரும் அவ்வண்ணமே வானில் எழுந்து நின்றது.

மலைப்பாறைகளினூடாக வளைந்து சென்ற பாதையில் கற்தூண்கள் நிறைந்த எண்ணெய் விளக்குகளின் சுடர்கள் விண்ணிலிருந்து விண்மீன் சரமொன்று சரிந்தது போல் தெரிந்தன. மேலே மாடங்களில் எரிந்த விளக்குகள் விண்மீன்களுடன் கலந்துவிட்டிருந்தன. முற்றான அமைதி அங்கே நிலவியது. முரசுகள் கொம்புகள் விலங்குகளின் ஓசைகள் எவையும் எழவில்லை. அங்கு மானுடர் வாழ்வது போலவே தோன்றவில்லை.

அவனருகே வந்து நின்ற சப்தமர் “ஏழு முறை இங்கு வந்துள்ளேன் வில்லவரே. ஒவ்வொரு முறையும் இதை முதலில் பார்க்கையில் விந்தையால் சொல்லிழந்துவிடுகிறேன்” என்றார். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “இப்பெரு நகரம் முற்றிலும் காவலற்றது” என்றார் சப்தமர். அர்ஜுனன் திகைப்புடன் “முற்றிலுமா?” என்றான். “ஆம், ரைவத குலத்தின் எழுபத்தியெட்டாவது அரசர் பிங்கலர் இங்கு ஆள்கிறார். அவருக்கு மெய்க்காவலர்கள் இல்லை. அணுக்கர்களாக நூற்றியெட்டு சேவகர்கள் உள்ளனர். எவரிடமும் படைக்கலங்கள் இருப்பதில்லை. அரசர் தன் வாழ்நாளில் எப்போதும் படைக்கலங்களை தொட்டதில்லை.”

அர்ஜுனன் “நான் கேட்டதேயில்லை” என்றான். “நீங்களே நோக்கமுடியும். இந்நகரைச் சுற்றி கோட்டைகள் இல்லை. காவல்மாடங்களோ கண்காணிப்பு அமைப்புகளோ ஏதுமில்லை. மேலே அரண்மனைகளின் வாயில்கள் அனைத்தும் மரவுரித் திரைச்சீலைகளால் ஆனவை. கருவூலம் அற்ற மாநகர் இது என்று சூதர்கள் பாடுகிறார்கள். ஏழு நாட்களுக்குத் தேவையான உணவும் நீரும் மட்டுமே இப்பெருநகரில் சேர்த்து வைக்கப்படும்.” அர்ஜுனன் “மழைபொய்த்தால்?” என்றான். “மானுடர் வாழவேண்டும் என மழை விரும்பவில்லை என்று பொருள். மழையுடன் போரிடலாகாது என்பதே இவர்களின் கொள்கை.”

அர்ஜுனன் முற்றிலும் நம்பமுடியாத புராணநூல் ஒன்றை படிக்கக் கேட்பது போல உணர்ந்தான். “பாரதவர்ஷம் எங்கும் குருதி விழுந்து கொண்டிருக்கிறது. எரிபரந்தெடுத்தலின் புகை எழாது ஒரு தலைமுறையை எந்நகரமும் கடப்பதில்லை என்கிறார்கள். இங்கு இவ்வண்ணம் ஒரு நகரம் எழுந்தது பெருவிந்தை!” என்றான். “அது ஒருபக்க உண்மையே” என்றார் சப்தமர். “மறுபுறம் ஒன்றுண்டு. என் முதுமூதாதையர் காலத்தில் பாரதவர்ஷத்தின் பெருநிலமெங்கும் பல்லாயிரம் பழங்குடியினர் ஒவ்வொரு கணமும் பிற குடியினரை கொன்றபடி இருந்தனர். அணுக முடியாத மலை மடிப்புகளும் தொலைதூரத் தாழ்வரைகளும் அயலவர் குழுமிய கடற்கரையுமாக சிதறிக்கிடந்தது ஜம்புத்வீபம். இன்று வணிகர் செல்லாத ஊர்கள் மிகச்சிலவே.”

“எவ்வணிகரும் பெரும் காவல் படைகளை கொண்டு செல்வதில்லை. படைக்கலமேந்தி எம்மக்களையும் அணுகுவதுமில்லை. மிகச்சில ஊர்களைத் தவிர்த்தால் கொள்ளையர் தொல்லை மிக அரிது. கொல்லாமை எனும் எண்ணம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வேர்ப்பரவலாக இப்பெரு நிலமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் விதை ஊன்றப்பட்டது இங்குதான்” என்றார் சப்தமர். “அருகர்களின் சொல் பேராலமரமாக தலைக்கு மேல் எழுந்து கிளை விரித்து நிழல்பரப்புகிறது இளையவரே. இப்பெரு நிலத்தில் குடிப்போரால் குலங்கள் அமைக்கப்பட்டன. பெரும்போர்களால் நாடுகள் அமைக்கப்பட்டன. இன்று போரின்மையால் இந்த விரிநிலம் ஒன்றாக்கப்படுகின்றது.”

“உடைவாளும் மணிமுடியும் உடலெங்கும் போர்க்கவசமும் அணிந்த மன்னர் ஒருபக்கம். புழுதி ஒன்றையே ஆடையாக அணிந்த எங்கள் அருகர்கள் இன்னொரு பக்கம். துலாவில் எங்கள் தட்டு எடை கொண்டுள்ளது. அது வெல்வதை ஒவ்வொரு ஊரிலும் பார்க்கிறேன். நூறாயிரம் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளன இக்குலங்கள். அனைவருக்கும் விளங்கும் ஒரு மொழி உள்ளது. கருணை எனும் மொழி. பசித்தவனுக்கு உணவாக, பிணியாளனுக்கு மருந்தாக, அஞ்சுபவனுக்கு அடைக்கலமாக, தனித்தவனுக்கு துணையாக, அறியாதவனுக்கு கல்வியாக அது அவனை சென்றணைகிறது. அந்த மொழி புரியாத மானுடர் எவருமில்லை.”

“மத்தகம் தாழ்த்தும் மதகரிகள் வணங்கும் மொழி அது. அம்மொழியால் ஒவ்வொரு கணமும் முடிச்சிடப்பட்டு கட்டி எழுப்பப்படுகிறது பாரதவர்ஷம் எனும் இப்பெருங்கம்பளம்” என்றார் சப்தமர். “வாள்கள் பொருளிழந்து போகும் ஒரு காலம் வரும். குருதி என்பது வியர்வையென்றும் கருணையின் விழிநீர் என்றும் மட்டுமே வெளிப்படும் ஒரு காலம். அருகரின் சொற்கள் நூறுமேனி விளையும் விதைகள். அவை சென்று தொட்ட மண்ணில் எல்லாம் அருகர்களும் படிவர்களும் முளைத்தெழுந்து கொண்டிருக்கிறார்கள்.”

அர்ஜுனன் “நன்று நிகழ்க!” என்றான். “துயில்கொள்ளவில்லையா?” என்றார் சப்தமர். “என் விழிகள் தாழ்கின்றன.” அர்ஜுனன் “நான் நாளில் இருநாழிகைநேரம் மட்டுமே துயில்வது வழக்கம்” என்றான். சப்தமர் கூடாரம் ஒன்றுக்குள் சென்று மறைந்தார். அவரது குறடுகள் மணலில் பதியும் ஒலி கேட்டது. கூடாரத்திற்குள் அவர் படுத்துக்கொள்ளும் முனகல். அருகநாமத்தைச் சொன்னபடி அவர் உடல் நீட்டிக்கொள்ளும் ஒலி.

பாலையிலிருந்து வந்த காற்றை உடலால் அறிந்தபடி அர்ஜுனன் அசையாமல் நின்றிருந்தான். பாலைக்காற்றிலிருந்த மணமாறுபாடுகளை மெல்ல உணரத்தொடங்கினான். தென்மேற்குக்காற்றில் மெல்லிய நீராவியும் நீர்மணமும் கலந்திருந்தது. வடகிழக்குக் காற்றில் இளங்குளிரும் தழைமணமும். தெற்குக்காற்று எடைமிக்கதாக இருந்தது. வடக்கிலிருந்து காற்று வரவில்லை. காற்றலைகள் நின்றபோது அந்த இடைவெளியில் குளிரின் அழுத்தமான அமைதியாக வடக்கை உணரமுடிந்தது.

விழியில்லாதபோது ஓசைகளாக உலகு தன்னை விரித்துக்காட்டுகிறது. ஓசைகளுமில்லாதபோது மணங்கள். எவற்றிலிருந்தும் எழும் புவி ஒன்றே. மானுட உள்ளம் மண்ணை எப்போதும் அறிந்தபடியேதான் இருக்கிறது. மண்ணே காற்றும் நீரும் கனலும் வானுமாக உள்ளது. அல்லது அவை அனைத்தும் ஒன்றே. காற்றிலேறி அலைகிறது மண். என்னைச்சூழ்ந்து எழும் காற்றின் பாடல். தனிமையில் மட்டுமே பொருள்கொண்டதாக ஆகிறது அது. தனியர்களை மட்டும் தொட்டுத்தழுவும் காற்றுகள் இவ்வெளியில் உறைந்துள்ளன.

தனிமை. தனிமை தாளாமல் இங்கு வந்தேன். இங்கு நான் அவனை தோள்தழுவிக்கொள்ளமுடியும். என் தனிமையை கலைப்பவன் அவன் ஒருவனே. ஆனால் இன்று இங்கே நின்றிருக்கையில் என் தனிமையின் தேன்துளியை தக்கவைக்கவே என் அகம் விழைகிறது. அவனை நான் ஏன் அத்தனை நாடுகிறேன்? பசித்தவன் அன்னையை என, நோயுற்றவன் மருத்துவனை என, அஞ்சுபவன் காவலனை என, இருளில் அலைபவன் சுடரை என. ஆனால் என் ஆணவம் அவனைவிட்டு விலகியோடச் சொல்கிறது. ஓடி ஓடி அவனிடம் மீள்கிறேன்.

பூனை எலியை கால் உடைத்து தன் முன் போட்டுக்கொண்டு நகைக்கும் விழிகளுடன் அமர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது. ஓடு என்கிறது. இழுத்து இழுத்து எல்லைகடக்கையில் மெல்லத் தட்டி உள்ளே வீழ்த்துகிறது. அதன் நாக்கில் சுவைநீர் ஊறுகிறது. உண்பதற்கு முந்தைய ஆடலில் அது அச்சுவையை கொண்டாடுகிறது. மூச்சு சீற நாபறக்க இரையை தழுவி அணைக்கிறது மலைப்பாம்பு. அதற்கிணையான பெருங்காதல் பிறிதில்லை.

வானம் செம்மைகொள்ளத் தொடங்கியது. பறவையொலிகள் எழுந்து வானை நிறைத்தன. ஆனால் முதற்கதிர் ரைவத மலையின் மறுபக்கம் எழுவதுவரை நகரம் உறங்கியே கிடந்தது. ஒளி விரிந்ததும் கஜ்ஜயந்தபுரியின் தாழ்வான கூம்பு முகடுகள் தெளிந்து எழுந்தன. கூர்தீட்டிய் ஆவநாழிக்குள் இருக்கும் அம்பு முனைகள் என்று அர்ஜுனன் எண்ணினான். மறுகணமே அவ்வெண்ணத்தின் பொருத்தமின்மையை உணர்ந்து புன்னகைத்தான். ஒளி எழுந்தோறும் குன்று தெளிவடைந்தபடியே வந்தது. உருண்டு நின்ற பெரும்பாறைகளை ஒட்டி மலைக் கற்களை அடுக்கி மூங்கில் படல்களாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட சிறிய வீடுகளால் ஆனதாக இருந்தது அந்நகர். காவல் மாடங்களோ முரசு மேடைகளோ தென்படவில்லை. நகரைச்சுற்றி எளிய முள்வேலி கூட இருக்கவில்லை.

புலரி எழுவதற்கு முன்னரே அங்காடியின் கூடாரங்களிலிருந்து எழுந்து அருகே இருந்த சுனைக்கு காலைக்கடன் கழிக்கச் சென்ற மக்கள் பேசியபடி வந்து குழுமும் ஒலி அவனை வந்து சூழ்ந்து நிறைத்தது. அத்திரிகளும் காளைகளும் துயில் கலைந்து கழுத்துகளை திருப்பி கயிறை இழுத்து குரல் கொடுத்தன. புதுச்சாணி மணம் அவற்றின் சிறுநீர் வாடையுடன் கலந்து எழுந்தது. தொலைவில் இருந்த குறும்புதர்க்காட்டுக்குள் இருந்து எழுந்த சிறு பறவைகள் வானில் வட்டமடித்து சரிந்திறங்கி மணலில் பதிந்து சிற்றடி எடுத்து வைத்து கூர் அலகுகளால் மண்ணைக் கொத்தி காலடி ஓசைக்கு எழுந்து சிறகடித்து அப்பால் எழுந்தமர்ந்தன. மென் புழுதி படிந்த தரையில் நூற்றுக்கணக்கான சிறு குழிகள் விழுந்து கண்காணா காற்றில் மெல்ல சுழன்று கொண்டிருந்தன. அவற்றுக்குள் வாழும் சிற்றுயிர்களை அப்பறவைகள் கொத்தி உண்டு கூவிப்பேசியபடி எழுந்தன.

அங்காடிகளில் இருந்து பாற்குடங்களும் நெய்க்குடங்களும் காய்கறிகளும் கனிகளும் கிழங்குகளும் சுமந்த சிறுவணிகர்கள் கஜ்ஜயந்தபுரியின் கற்படிகளில் ஏறிச்சென்றனர். உடல் அலுப்பை வெல்லும்பொருட்டு அவர்கள் பாடிச்சென்ற குஜ்ஜர்மொழிப் பாடல்களின் சொற்கள் முயங்கி வெறும் ரீங்காரமென ஆகி பாறைகளில் முட்டி பெருகி வந்து கொண்டிருந்தன. இளம் வணிகனாகிய சபரன் அவனிடம் வந்து “தாங்கள் உடல் தூய்மை செய்து சித்தமாகவில்லையா வில்லவரே?” என்றான்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “சப்தமர் எங்கே?”  “அவர் காலையிலேயே சித்தமாகி கடைக்குச் சென்றுவிட்டார்” என்றான் அவன். அர்ஜுனன் புன்னகை செய்தான் “உங்கள் புன்னகை புரிகிறது வில்லவரே. அவர் முதலும் முடிவுமாக வணிகர். அருகநெறியை கற்றறிந்திருக்கிறார். செல்லுமிடமெங்கும் அதைப்பரப்ப முயல்கிறார். நெறிகளில் வணிகர்களுக்கு பொருள்செய்ய உதவுவது அருகமே என அவர் அறிந்திருக்கிறார்.”

அர்ஜுனன் சிரித்து “ஆம், வணிகர்கள் என்றும் போருக்கு எதிரானவர்களே” என்றான். “இந்நகரைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க வணிகர்கள் உருவாக்கியிருக்கும் கதைகளை இவர்கள் அறிந்தால் திகைத்துப்போவார்கள். அதன்பின் இம்மண்ணில் கால்வைக்கக் கூசி திசையாடையர்களைப்போல உறிகட்டி அமரத்தொடங்கிவிடுவார்கள்” என்றான் சபரன். “நீரும் வணிகர் அல்லவா?” என்றான் அர்ஜுனன்.

“ஆம், ஆனால் என் கையில் பொருள் இல்லை. ஆகவே கொடைசெய்வதில்லை. ஆகையால் கொடையளிக்கும் ஆணவத்தை பெருங்கருணை என விளக்கும் தத்துவங்கள் எனக்குத் தேவையாகவில்லை” என்றபின் திரும்பி செல்லப்போன சபரன் நின்று புன்னகையுடன் “இன்னும் சற்றுநாளில் என் மடிச்சீலையும் நிறைந்து குலுங்கும். அப்போது நானும் ஐந்தவித்து எட்டைத் துறந்து முழுவெறுமையில் நிற்பதன் மாண்பு குறித்து சொல்விளக்கிப் பேசுவேன்” என்றான்.

“இன்று நான் இக்குன்றின் மேல் சென்று இந்நகரை காண விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். இளைஞன் “இந்நகரில் ஐந்து அருகர்களின் ஆலயம் உள்ளது. அரண்மனை முகப்பில் ரைவதரின் கல் ஆலயமும் உள்ளது. நகருக்கு நீரளிக்கும் பன்னிரு ஊற்றுகள் அங்குள்ள மூன்று சுனைகளில் தேக்கப்படுகின்றன. நகர் நடுவே உள்ள அரசரின் அரண்மனை தொன்மையானது. பிறிதெதுவும் இங்கு நோக்குவதற்கில்லை” என்றான்.

அவனுடன் சென்று நீராடி குப்பைமேனிக் கீரைசேர்த்து சமைத்த வஜ்ரதானிய கஞ்சியை காலையுணவாக அருந்தி தன் படைக்கலங்களை அங்கிருந்த முள் மரமொன்றில் மாட்டியபின் அர்ஜுனன் ரைவத மலைமேல் ஏறி சென்றான். உருளைக்கற்களை ஒழுங்கின்றி அடுக்கிக் கட்டப்பட்ட தொன்மையான படிக்கட்டுகள் அவை. பெரிய பாறைகளின் இடைவெளிகள் வழியாக வளைந்து மேலே சென்றன. சற்று நேரம் நடந்த பின்னர்தான் அவை மேலிருந்து நெடுங்காலமாக வழிந்த இயற்கையான மழைநீர் ஓடையால் உருவாக்கப்பட்ட உருளைப்பாறைகளின் தடம் என அவன் அறிந்தான்.

மழை உருட்டிக்கொண்டு வந்து அடுக்கிய உருளைப் பாறைகளை நன்கு இறுக்கி அமைத்து படிக்கட்டுகள் போல் ஆக்கியிருந்தார்கள். மேலும் அவ்வழியாக நீர்வராமல் பிறிதொரு வழியை அமைத்து ஓடையாக்கியிருந்தனர். நீர் அமைத்த படிக்கட்டென்பதால் மானுட உழைப்பு தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால் பாறைகள் நன்கு தேய்ந்து வழுக்கும்படியாக இருந்தன. பன்றிமுதுகுகள் என ஆமையோடுகள் என சுரைக்காய்குடுக்கைகள் என தெரிந்த பாறைகள் மேல் தாவி அவன் மேலே சென்றான். அங்கு ஏறிச்சென்ற சிறு வணிகரும் சிற்றாயர் குடியினரும் அவ்வழி கால்களுக்கு நன்கு பழகியவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் குனிந்து நோக்கவே இல்லை. மூச்சிரைப்புடன் சேர்ந்து ஒலித்த குரலில் நிலைக்காது பேசியபடி மேலே சென்றனர்.

பெரிதும் சிறிதுமென உருளைப்பாறைகளை சிட்டுக்குருவிபோல தாவிக் கடந்து செல்லும்போது அர்ஜுனன் செம்மொழியும் தொல்மொழியும் கலந்த சொற்கள் சேர்த்து அமைக்கப்பட்ட சொற்றொடர்களால் ஆன நூலொன்றில் விழியோட்டிச் செல்வது போல் உணர்ந்தான். மணிமிடைபவள மொழியை வாசிக்கையில் புதிய சொற்றொடர் பழைய சொற்றொடரை முற்றிலும் மறக்கச்செய்துவிடும். அத்தனை சொற்றொடர்களையும் கடந்துவந்துவிட்டோம் என்னும் தன்மகிழ்வு மட்டிலுமே எஞ்சியிருக்கும்.

பஞ்சுத்துகள் பறந்துசெல்வதுபோல் பாறைகள் மேல் கால்கள் பதிகின்றனவா என்னும்படி சென்றுகொண்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த அருகநெறிப் படிவர் ஒருவரைக் கடந்து செல்லும்போது “அடிபணிகிறேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “தாங்கள் செல்லும் விரைவு பொருளற்றது வீரரே. நெடுநேரம் அப்படி தாவிச்செல்ல முடியாது. பாதையை கால்களுக்கு விட்டுக்கொடுங்கள். செல்வதறியாது செல்லும் பாதையே பொருளுடையது” என்றார்.

“நான் இதேபோன்று இன்னும் மூன்றுமலைகளை தாவிக்கடப்பேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “முப்பது மலைகள் என்றால்?” என்றார் அவர். அர்ஜுனன் நின்றுவிட்டான். “நான் முப்பதுமலைகளிலும் இதே விரைவில் ஏறிச்சென்றுவிடமுடியும் அல்லவா?” என்று அவர் புன்னகைசெய்தார். அர்ஜுனன் சிலகணங்களுக்குப்பின் “ஆம்” என்றான். “நான் எப்படி நடக்கவேண்டுமென நீங்கள் சொல்லுங்கள்.” “அடிகள் சீராக இருக்கட்டும். கால்களே அனைத்தையும் புரிந்துகொண்டு முடிவெடுக்கட்டும். மெதுவாகச்செல்லும் பாதைகளே இறுதியை சென்றடைகின்றன.”

அவருடன் அர்ஜுனன் நடந்தான். ஒவ்வொரு பாறையிலும் அவர் மெல்ல கால் எடுத்துவைத்து சீராக ஏறிச்சென்றார். “தாங்கள் சென்றது குட்டிக்குதிரையின் பாதை. நான் செல்வது காளையின் பாதை. காளை களைப்படைவதில்லை” என்றார் படிவர். “ரிஷப பதம் என்று எங்கள் நெறியில் இதை சொல்கிறார்கள். நடக்கும்போதும் விழிமூடி அசைபோட்டுக்கொண்டு செல்லும் எருதுபோல எங்கும் எப்போதும் அசைபோட அருகநாமம் உள்ளே இருக்கவேண்டும் என்பது என் ஆசிரியர்களின் வழிகாட்டல்.”

“மேலே செல்ல குதிரைப் பாதை ஏதுமில்லையா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. ரைவதமலை மேல் விலங்குகளின் மீது பொதியேற்றிச் செல்ல தடை உள்ளது. ஊனுணவும் உயிர்களை வதைப்பதும் இங்கு பாவமென கொள்ளப்படுகிறது.” அர்ஜுனன் புன்னகைத்து “இம்மானுடர் பொதி சுமந்து ஏகலாமோ?” என்றான். “ஆம், ஏனெனில் பொதி சுமக்க முடியாது என்னும் முடிவெடுக்கும் அறிவும் உரிமையும் அம்மானுடருக்கு உள்ளதல்லவா?” என்றார் அவர்.

அர்ஜுனன் சிரிக்க “அருகநெறியின் ஐந்து கொள்கைகள் இங்குள அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. கொல்லாமை, பொய்யாமை, களவாமை, புலனடக்கம், உடைமைகொள்ளாமை என்னும் நெறிகள் அவர்களை சீரான பாதையில் நிறுத்துகின்றன. இருளில் அறியாது சிற்றுயிர்களை மிதித்து கொல்லலாகாது என்பதனால் இங்கு எவரும் கதிர் அணைந்தபின் உணவோ நீரோ உண்பதில்லை. ஒளி எழுந்த பின்னரே விழித்தெழுவர். சொல்லாலோ செயலாலோ எண்ணத்தாலோ எவருக்கும் வன்முறை இழைப்பதில்லை. வெண்காளை வேந்தரின் சொல் விளங்கும் மண் இது.”

“இங்குள்ள விலங்குகள் ஊன் உண்பதில்லையா?” என்றான் அர்ஜுனன். அவன் முகத்தில் இளநகையைக் கண்டும் படிவர் விழிகள் மாறுதல் கொள்ளவில்லை. “ஆம். அவை ஊன் உண்கின்றன. ஏனெனில் ஊன் உண்ணவேண்டியதில்லை என்று முடிவெடுக்கும் அறிவு அவற்றுக்கில்லை. முடிவெடுத்தபின் வாழும் முறைமையும் அவற்றுக்கில்லை” என்றார். “அகிம்சை என்பது உடலைப் பழக்குவதல்ல, உள்ளத்தை அமைப்பதுதான்.”

அர்ஜுனன் சற்று வியப்புடன் அவர் விழிகளை நோக்கி பின் விலக்கிக்கொண்டான். படிவர் “எங்கள் நெறி முன்வைக்கும் பவசக்கரம் என்னும் கருத்தை அறிந்திருந்தால் இவ்வினாவை எழுப்பியிருக்க மாட்டீர். இப்புவி ஒரு மாபெரும் ஆழி. இது அமைந்திருக்கும் புடவி பிறிதொரு பேராழி. அது அமைந்திருக்கும் காலமும் ஆழியே. இவை ஒன்று பிறிதை என முற்றிலும் வகுத்துள்ளன. அந்நெறிகளே இங்கு உறவென முறையென வழியென வாழ்வென விளங்குகின்றன. எறும்பும் யானையும் அப்பேராழியின் சுழலில் ஒன்றோடொன்று முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளன” என்றார்.

“ஒரு தனி எறும்பின் வாழ்வு இப்புவியில் உள்ள பிற அனைத்து உயிர்களாலும் முடிவு செய்யப்படுவதைத்தான் நாங்கள் ஊழ் என்கிறோம். ஊழின் வழி அல்லது ஒழுக உயிர்கள் எவற்றுக்கும் ஆணையில்லை என்றறிக! கொல்வதும் கொல்லப்படுவதும் ஊழெனும் பேராழி ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள் மட்டிலுமே. வீரரே, இங்குள்ள உயிர்க்குலங்களில் அவ்வூழைக் காணும் விழி கொண்ட உயிர் மானுடன். ஆகவே அவ்வூழில் நன்று தேறவும் தீது விலக்கவும் கடமைப்பட்டவன். அதை நாங்கள் சீலம் என்கிறோம். ஐந்து நல்வழிகளை சென்னி சூடி இங்கு முழு வாழ்க்கை வாழ்ந்து முடிப்பவன் இப்பேராழியின் முடிவிலா பெருஞ்சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதையே நாங்கள் முக்தி என்கிறோம்.”

“இச்சுழற்சிக்கு அப்பால் மாறாது என்றுமிருக்கும் ஒன்று என ஆவதே விடுதலை. இதிலிருந்து விடுபடுவதே வீடுபேறு. இங்குள ஒவ்வொரு உயிருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளது அது. ஓருயிர் கொண்ட எறும்பும் தன் பவசக்கரத்தின் விளிம்பில் இருந்து எழுந்து ஈருயிர் கொண்ட நெளியும் உயிராகிறது. மூன்றுயிரும் நான்குயிரும் கொள்கிறது. ஏழுயிர் கொண்ட மனிதனாகையில் முழுதறிவை அடையும் வாயில் அதற்கு திறக்கிறது. பிறந்திறந்து முன் நகரும் இச்சரடின் எல்லை அவ்வழியில் முடிகிறது. அதை திறப்பதும் திரும்பி மீண்டும் முதல்முனை சென்று ஓரறிவுள்ள உயிரென ஆவதைத் தேர்வதும் மானுடரின் தேர்வு மட்டுமே.”

“இங்குள அறிவர் ஒவ்வொருவரும் தங்கள் பிறவிச்சரடு முடித்து ஊழ்ச்சுழல் விட்டு உதிர்ந்து மெய்முழுமை கண்டு பிறிதிலாது அமைவதை இலக்கென கொண்டு ஊழ்கம் இயற்றுகிறார்கள். இதோ இந்நகரின் பாறைப்பிளவுகளுக்குள் இன்று ஆயிரத்திற்கும் மேல் அருகப்படிவர்கள் அருந்தவம் இயற்றுகிறார்கள். நூறு தலைமுறைகளில் பல்லாயிரம் பேர் இங்கு உடல் உதிர்த்து உய்ந்திருக்கிறார்கள். அவர்களின் தூய கால்கள் இங்குள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் முன்சென்றோர் வழியை காலடிச்சுவடுகளைக்கொண்டு கணித்தே நாம் செல்லவேண்டும்.”

“அவ்வடிகளை தொட்டு சென்னி சூடி தங்களுக்கும் அப்பேறு வாய்த்திட வேண்டுமென்று வேண்டி மானுடர் ஒவ்வொரு நாளும் இப்படிகளினூடாக ஏறி மேலே செல்கிறார்கள். தாங்களும் செல்லலாம். அதற்கு முன் தாங்கள் தங்கள் தோளே என்றாகியுள்ள அவ்வில்லையும் அம்பறாத்தூணியையும் துறக்க வேண்டும்.” அர்ஜுனன் “நான் துறந்துவிட்டே மலையேறினேன்” என்றான். “உடல் துறந்தால் ஆயிற்றா? நினைவு துறக்கவேண்டும். அத்தோள்களின் தசைகள் மறக்கவேண்டும்” என்றார் படிவர். “ஒவ்வொன்றையும் அக்கணமே துறந்துசெல்கிறீர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். துறந்தீர், ஆனால் ஒவ்வொன்றாலும் நீர் உருமாறிவிடுகிறீர். அவ்வுருமாற்றத்தையும் துறந்தால் அல்லவா கடந்துசெல்வதாக பொருள்?”

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “ஆணென்றும் பெண்ணென்றும் ஆனீர். அனைத்து அறிதல்களையும் தொட்டு எடுத்து சூடிக்கொண்டீர். இளைய வீரரே, உம்முள் நிறைந்துள்ள அச்சத்தை அறுக்காமல் நீர் அடையப்போவது ஏதுமில்லை.” அர்ஜுனன் மூண்டெழுந்த சினத்துடன் “அச்சமா?” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்று சொன்னபோது அவனுக்கு மூச்சிளைத்தது. “ஆம், அச்சமே. படைக்கலமேந்திய எவரும் அச்சம் கொண்டவரே. எப்படைக்கலம் ஆயினும் சரி. உலோகப் படைக்கலம். கைகள் கொள்ளும் பயிற்சி என்னும் படைக்கலம். தேர்ந்த சொல் எனும் படைக்கலம். கூர்மதி என்னும் படைக்கலம். நானென எண்ணும் நிலை என்னும் படைக்கலம்.”

“நான் அஞ்சுவது எதை?” என்றான் அர்ஜுனன். “பிறப்பித்த ஒன்றை. உடன்பிறந்த ஒன்றை. உடன் தொடரும் ஒன்றை. அதைத் தொடரும் பிறிதொன்றை” என்றார் அருகர். அர்ஜுனன் உடல் தளர்ந்தது. “என்ன சொல்கிறீர்கள் உத்தமரே?” என்றான். “எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் நீர். அதை வாசிக்கிறேன்” என்றார் படிவர். “அச்சத்தை நான் எப்படி கடந்து செல்வேன்?” என்று அர்ஜுனன் கேட்டான்.

“அச்சங்கள் எவையாயினும் கண்ணொடு கண் நோக்காது வெல்வது அரிது” என்றார் படிவர். “ஒரு களம் வரும். உமது அச்சங்கள் பேருருக்கொண்டு பெரும்படையென முன்னால் திரண்டு நிற்கும். அவற்றை நீர் கண்நோக்கி நின்று பொருதி வெல்வீர். அக்களத்தைக் கடந்தபின்னரே உமக்கு மெய்மை ஓதப்படும். வீரரே, மெய்மையை அஞ்சாது எதிர்கொள்பவனே வீரன். நீர் அதுவாக ஆவீர். அதற்கென இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீர்.” அர்ஜுனனின் பிடரி குளிர்நீர் விழுந்ததுபோல சிலிர்த்தது. “அழியாப்பாடல் ஒன்றை கேட்கும் பேறு பெற்றவர் ரைவதர். நீரும் அக்கீதையை கேட்பீர்.”

“தங்கள் சொல் விளங்கட்டும் படிவரே” என அர்ஜுனன் வணங்கினான். “இன்று தொட்டு ஏழாம் நாள் இங்கு ரைவதர் மந்தரமலையில் அழியாப் பேரிசையைக் கேட்ட நாள். விழவென கொண்டாடப்படுகிறது. இங்கு இருங்கள். ரைவதர் கேட்ட இசையின் ஓர் அதிர்வை அன்று நீங்கள் கேட்கமுடியும். பாலாழியின் ஒரு துளி” என்று படிவர் சொன்னார். “நான் எவரென்று அறிவீரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “எவராயின் என்ன? துயர்கொண்டவர், தனித்தவர், தேடி அலைபவர்” என்றார் படிவர்.

தொடர்புடைய பதிவுகள்

பத்து சட்டைகள்

$
0
0

1

அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும் ஒரு கடை அது. நான் அந்தமாதிரி கடைகளுக்குச் செல்வதில்லை. என்னுடைய துணிக்கடை என்பது ரூ 99 க்கு கீழே விற்கக்கூடிய கடையாகவே இருக்கும்.

அந்தக்கடையில் என்ன எடுப்பது என்றே எனக்குத்தெரியவில்லை. ”சார் ஒரு நல்ல ஜீண்ஸ் -டி ஷர்ட் எடுங்க” என்றார் வசந்தபாலன். நான் ஜீன்ஸ் போட்டது பத்துவருடம் முன்பு. அப்போது சின்னப்பையனாக இருந்தேன் என்று நினைப்பு. இலக்கிய உலகை திருத்திவிடலாம் என்ற திட்டமெல்லாம்கூட இருந்தது என்றால் கண்டிப்பாக சின்னப்பையன்தான் இல்லையா?

”சீச்சீ நானா ஜீண்ஸா?” என்றேன். ”இல்லை ஒண்ணு இருக்கட்டும்” என்று சொல்லி கட்டாயப்படுத்தி வாங்கி போட்டுக்கொண்டுவரச்சொன்னார்.நான் உள்ளே போய் ஒரு குட்டிஅறைக்குள் நின்றுகொண்டு உடைமாற்றினேன். சட்டென்று தூக்கிவாரிப்போட்டது. கண்ணாடிப்பிம்பம் என்னை வேடிக்கை பார்த்தது. வேறு அன்னியனுடன் இருப்பது போல.

வெளியே வந்து ”வசந்தபாலன், இது வேண்டாம். இது வேறென்னவோ போல இருக்கிறது” என்றேன்.  ”ஏன் சார்?” ”இதைபோட்டா நான் ஜெயமோகன் மாதிரி இல்லை” என்றேன். ”சார் இதை போட்டுக்கிட்டா நீங்க வேற ஜெயமோகன். அந்த வழக்கமான சட்டையில் நீங்க பேங்க் ஆபீசர் மாதிரி இருக்கீங்க… எங்க, லோன் வேணுமான்னு கேட்டிருவிங்களோன்னு பயமா இருக்கு”

வேறுவழியில்லாமல் ஜீன்ஸையும் சட்டைகளையும் அமெரிக்கா கொண்டுபோனேன். ஆனால் வழக்கமான முழுக்கை சட்டையில்தான் நான்போனேன். அமெரிக்காவில் முதல்முறையாக பாஸ்டனில் பாஸ்டன்பாலாவுடன் உலவச்சென்றபோது  ஒன்றைக்கவனித்தேன். அந்த நகரத்திலேயே நான் மட்டும்தான் அப்படி சம்பிரதாய உடை அணிந்திருந்தேன். மற்றபடி ஆண் பெண் எல்லாருமே டி ஷர்ட் தான். பாஸ்டன் பாலா சாயம்போன ஒரு டி ஷர்ட்டை அணிந்திருந்தார்.

”இங்கெல்லாம் ஹாலிடேன்னா எவருமே வழக்கமான டிரெஸ் போட்டுக்க மாட்டாங்க சார்…டி ஷர்ட் ஷார்ட்ஸ் தான்” என்றார் பாஸ்டன் பாலா.ஆனால் அங்கே யாரும் நம்மை கவனிப்பதில்லை. இருந்தாலும் எனக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் என்னிடம் இருந்தது இரண்டே டி ஷர்ட்டுகளும் ஒரு ஜீன்ஸ¤ம்தான். ஆகவே அடிக்கடி மாற்ற முடியாது.

ஆகவே ஒன்று செய்தேன், முழுமையான சுற்றுலா இடங்களுக்குப் போகும்போது அந்த டி ஷர்ட்டுகளை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டேன். கண்ணாடிச்சன்னல்களில் பார்ப்பதை தவிர்த்தேன். வேறு ஒரு ஜெயமோகன் அமெரிக்காவைப் பார்ப்பதற்கா நான் கஷ்டப்பட்டு வந்தேன்?

நலைந்துநாளில் பழகிவிட்டது. அப்போதுதான் நான் ஒன்றைக்கவனித்தேன், டி ஷர்ட் போட்ட அந்த ஜெயமோகன் கொஞ்சம் வேறு மாதிரியான ஆள். கொஞ்சம் சல்லிசாக இருக்கிறார். அதிகமாக யோசிப்பதில்லை. சின்ன விஷயங்களில் அவருக்கு அடிக்கடி மனம் ஈடுபடுகிறது.

ஒன்று கண்ணில்பட்டது, விடுமுறையின்போது ஒரு பூங்காவில் அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் இளநீலநிறத்தில் முழுசூட் உடை அணிந்துசென்றுகொண்டிருந்தார். அப்பழுக்கில்லாத கனவான் உடைகள். தொப்பி பூட்ஸ். நான் பாஸ்டன் பாலாவிடம் கேட்டேன். ”அவர்களின் உடை வழக்கம் இது. வெச்சால் குடுமி சிரைச்சால் மொட்டை. ஒன்று கலர்கலராக சட்டை பளபளக்கும் பாண்ட் இரும்புச்சங்கிலிகள் என்று இருப்பார்கள். இல்லாவிட்டால் இப்படி இருப்பார்கள்” என்றார் ”அந்த உடைக்கு எதிர்வினை இந்த உடை. இந்த உடைக்கு எதிர்வினை அந்த உடை. அவர்கள் எதையுமே எதிர்வினையாகத்தான் செய்வார்கள். இந்த நாட்டில் அவர்களின் உளவியல் அப்படிப்பட்ட்து”

உடைகள் வழியாக எதை தேடுகிறோம்? எதைச் சொல்கிறோம்? எதை முன்வைத்துக்கொண்டே இருக்கிறோம்?  நான் நெடுநாள் கையில்லாத சட்டையே போட்டதில்லை. பதினொராம் வகுப்பு படிக்கும்போது போட்டிருக்கிறேன். அதன்பின் முழுக்கைச் சட்டைதான். ஆனால் ஒருமுறை நண்பன் தண்டபாணி என் வீட்டுக்கு வந்திருந்தான். உங்களுக்கு தெரிந்த ஆசாமிதான். யுவன் சந்திரசேகர் கதைகளில் கிருஷ்ணனுக்கு மாயமந்திர ‘மாற்றுமெய்மை’ கிலிகளை மூட்டும் சுகவனம் கிட்டத்தட்ட அவன்தான். அவன் ஒரு கோடுபோட்ட அரைக்கை சட்டை வைத்திருந்தான். ”டேய் இதை போடுடா” என்றான்

போட்டுப்பார்த்தால் எனக்கு பாதி உடல் நிர்வாணமாக இருப்பது போல் இருந்தது. இரு கைகளும் இரு அன்னியர்கள் இருபக்கமும் நெருக்கிக்கொண்டு நிற்பது போல  இருந்தன. ”அய்யய்யே” என்றேன். ”நல்லா இருக்குடா’ என்று இழுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான். அந்த சட்டையை எனக்கே கொடுத்துவிட்டான். அதன்பின் நான் அடிக்கடி கையில்லாத சட்டை போட ஆரம்பித்தேன். அது என்னைகொஞ்சம் இலகுவாக்குகிறது என்று பட்டது.

‘ஆடைகள் ஒருவனின் சருமங்கள்’ என்று மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதையில் சொல்கிறார். இறந்தவனின் சட்டைகள் என்ற கவிதை. இறந்து போனவனின் சட்டைகளை என்ன செய்வது? அவற்றை  எப்படி எரிக்க முடியும்? இறந்தவனை மீண்டும் கொல்வதா? இன்னொருவருக்குக் கொடுத்து விடலாமா?  இறந்தவன் நம் எதிரே திடீரென்று வந்து திடுக்கிட வைப்பானே…என்ன செய்வது? எதுவுமே செய்யமுடியாது, இறந்தவனை என்ன செய்கிறோம்?

ஆடைகள் உடலுக்காகவே அளவிவிடப்படுகின்றன என்று தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியா? அடிப்படை அளவுகள் மட்டும்தானே உடலுக்குரியவை. பிற எல்லா அளவுகளும் மனதின் அளவுகள் தானே? நிறங்கள் வடிவங்கள்  அடையாளங்கள் எல்லாமே மனத்தின் அளவுகளுக்குப் பொருந்துபவை அல்லவா?

அப்படியானால் ஆடைகள் யாருடைய சருமம்? அவை நம் அகத்தின் புறச்சருமம் அல்லவா? நாம் நம்மை ஆடைகள் வழியாக முன்வைக்கிறோம். நான் சம்பிரதாயமானவன் நான் நேர்த்தியானவன் நான் எளிதானவன். நாம் ஆடைகள் வழியாக நம் சமூகசுயத்தை உருவாக்கிக்கொள்கிறோம்.

ஆனால் நாம் அதுவா? இல்லை நம் விருப்பங்கள்தாமா அவை? அந்த ஆடைகள் வழியாக நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆடைகளுக்குள் நாம் ஒளிந்துகொண்டிருக்கிறோம். என் ஆடைகளுடன் பேசு என எதிரில் இருப்பவர்களிடம் சொல்கிறோம்.

நான் தனிப்பட்ட முறையில் ஆடைகளை எப்படித்தேர்வுசெய்கிறேன்? என்னுடைய முதல் எண்ணமே வித்தியாசமாக தெரியக்கூடாது என்பதே. என்னை எவரும் தனியாகக் கவனிக்கக் கூடாது. சாலையில் ஒருவர் தூக்கிய புருவத்துடன் என்னைப்பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி ஏற்படுகிறது. எதுவோ தப்பாக ஆகிவிட்டது என்ற எண்ணம் எழுகிறது

நான் சாதாரணமாக இருக்கவேண்டும். அதற்காகவே உடை. அந்த உடை எனக்கு இச்சமூகத்தில் ஓர் இடத்தை உருவாக்கி அளிக்கிறது. நான் என் அலுவலகத்தில் பெரும்பாலும் பழைய மிகச்சாதாரண உடைகளையே அணிவேன். ஏனென்றால் நான் ஒரு இடைநிலை ஊழியன், குமாஸ்தா. என்னைப்போன்றவர்கள் எந்த உடை அணிகிறார்களோ அதுவே எனக்கும். அதிகாரிகள் அணிவதுபோல நான் அணிவதில்லை. என் இருபத்தைந்தாண்டுக்கால அலுவலக வாழ்க்கையில் சட்டையை உள்ளே விட்டு பான்ட் போட்டுக்கொண்டு நான் அலுவலகம்சென்றதே இல்லை.

ஓரளவுக்கு நேர்த்தியான ஆடைகளை வெளியே செல்லும்போது அணிகிறேன். ஒரு நடுத்தர வர்க்கத்து அரசூழியன் என என்னை அவர்கள் எண்ணட்டும். நல்ல கணவன்,நல்ல அப்பா,நல்ல குடிமகன். வம்புதும்பு கிடையாது. தப்பாக எதுவுமே செய்துவிட மாட்டேன். டீஏ அரியர்ஸ், சம்பளக் கமிழ்ஷன், ரியல் எஸ்டேட் விலை, சூர்யா விஜய் அஜித் ஜெயலிதா ஸ்டாலின் தவிர எதையுமே பேசாதவன். அதாவது ரொம்ப ரொம்ப நார்மலானவன். அதற்குள் எனக்கு வசதியாக ஒளிந்துகொள்ள இடமிருக்கிறது. நல்லது.

ஆனால் அதற்குள் நான் இருக்கிறேன். அந்தச் சட்டைகள் அச்சையும் உயிர் என்னுடையது. என்னுடைய உற்சாகங்களையும் தயக்கங்களையும்தானே அந்த சட்டைகள் நடிக்கின்றன? நீங்கள் அவற்றை பார்த்தால் என்னை பார்க்கிறீர்கள்.

நண்பர்களே இந்தபத்து நூல்களும் பத்து சட்டைகள். மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பத்து என்னை நான் காட்டியிருக்கிறேன். அரசியல் தத்துவம் ஆன்மீகம் இலக்கியம்…இவற்றுக்குள் நான் இருக்கிறேன்.  ஆனால் ஒளிந்திருக்கிறேன்.

கேரளத்துக் கோயில்களில்  உள்ளே நுழைய சட்டைகளைக் கழற்ற வேண்டும். யாழ்ப்பாணத்திலும் அந்த வழக்கம் உண்டு என்பார்கள். ஒரு கதை உண்டு. இதயம்பேசுகிறது மணியன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்றபோது சட்டையைக் கழற்ற தயங்கினாராம். அப்போது அங்கே இருந்த சாது அப்பாத்துரை [ இவரைப்பற்றி பிரமிள் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். சாது அப்பாத்துரையின் தியானதாரா ] ”ஏம்பா இந்தச் சட்டையைக் கழட்டவே இந்த மாதிரி கஷ்டப்படுறியே. அங்க போறப்ப அந்தச் சட்டைய எப்டி கழட்டுவே?” என்று கேட்டாராம்.

அனைத்துச் சட்டைகளையும் கழட்டிவிட்டு செல்லவேண்டிய சில சன்னிதிகள் உண்டு. சட்டைக்கு மெய்ப்பை என்று ஒரு சொல் உண்டு. மெய்யே ஒரு பைதான். பையை தூக்கிப்போட்டுவிட்டு மெய்யை மட்டுமே அது எடுத்துக்கொள்கிறது.

நான் சட்டைகளைக் கழற்றும் இடம் ஒன்று உண்டு. மெய்யாகவே நானிருக்கும் இடம். அங்கே எல்லா ஆடைகளையும் கழற்றிவிடுவேன். சருமத்தையும் சதைகளையும் எலும்புகளையும். ஆம், என் புனைகதைகளில் நான் என்னை நிர்வாணமாக்கிக் கொள்கிறேன். நான் அவற்றை எழுதுவதே அதற்காகத்தான்.

ஒருவன் நிர்வாணமாக கையில் வேட்டியுடன் சாலையில் சென்றானாம். பிடித்து விசாரித்த போலீஸ்காரரிடம் ”அய்யா நான் உடைமாற்றிக்கொள்ள ஒரு மறைவிடம் தேடி அலைகிறேன்” என்றானாம். புனைவிலக்கியம் எழுத அமரும்போது நான் பலசமயம் அப்படி உணர்வதுண்டு. நிர்வாணமாக வந்தமர்ந்து கொண்டு நான் ஆடைகளை அணிய ஆரம்பிக்கிறேன்.

ஏனென்றால் அந்த நிர்வாணத்தை அத்தனை பேரும் பார்க்க நான் விரும்பவில்லை. நான் உடை களையும் நடனம் ஆடுபவன் அல்ல.  அது யோகியின் நிர்வாணம். அங்கே என்னை வந்து பார்க்கவேண்டுமானால் நீங்களும் சட்டைகளை கழற்ற வேண்டும். எனது நிர்வாணத்தை உங்கள் நிர்வாணத்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

அதற்காகவே இத்தனை மொழியாக பெரிய ஒரு சுழல்பாதையை அமைக்கிறேன்.  வாழ்க்கையின் அத்தனை அம்சங்களாலும்  ஆக்கபப்ட்ட ஒரு வட்டப்பாதை அது. அன்பு பாசம் காதல் துரோகம் வெறுப்பு என எல்லா உணர்ச்சிகளாலும் ஆனது. எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் அரசியலும் பேசப்படுவது.

ஒவ்வொரு விஷயமும் ஒரு முள். ஒவ்வொன்றிலும் சிக்கி நீங்கள் உங்கள் உடைகளை இழந்தால் ஒழிய அந்த இடத்திற்கு வர முடியாது. அவ்வாறன்றி நான் அறிவுஜீவி நான் அரசியல்ஜீவி நான் இலக்கியஜீவி என்று அவரவர் சட்டைகளுடன் அந்தப்பாதையின் ஏதோ ஒரு வழியில் நின்று சுழன்றுகொண்டிருப்பவர்களை தினமும் பார்க்கிறேன்.

அந்த எல்லைகளைக் கடந்து என் அந்தரங்கமான கருவறைக்குள் வந்தீர்கள் என்றால் என் நிர்வாணம் ஏன் என்று உங்களுக்குத்தெரியும். நான் கருவறைக்குள் இருக்கிறேன். இன்னமும் நான் உருவாகவே இல்லை.

அவ்வாறு வரும் வாசகன் கண்டடையும் அந்த ஜெயமோகன் யார்? அது அந்த வாசகனின் ஓர் அந்தரங்கமான ஆடிப்பிம்பமாக இருக்கும் என்று நான் ஊகிக்கிறேன்.

ஆகவே இந்த பத்து வாசல்களை உங்களுக்காக திறந்து வைக்கிறேன். வருக

[19 -12- 2009 அன்று சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் ஆற்றிய உரையின் முன்வரைவு]

மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

சிங்கப்பூர் -கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் சிங்கப்பூர் வருகை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை தங்களைக் காணவும், தங்களிடம் உரையாடவும் நல்ல வாய்ப்பு. சென்ற முறை, திருக்குறள் குறித்து நாம் பேசியது இன்றும் பசுமையாக நினைவில் எழுகிறது. பேர்லாகர் க்விஸ்ட் முதல் ஹெமிங்வே வரை பேசியது மறக்கமுடியாதது. ஹெமிங்வேயை ஏன் இலக்கியவாதியாக ஏற்க மறுக்கிறேன் என்ற உங்கள் விளக்கமும், இலக்கியத்தில் கனவைக் கட்டி எழுப்புதல் பற்றிய உங்கள் எண்ணமும் எனக்குள் மிகுந்த தெளிவை உண்டாக்கின.சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

பணிவுடன்,
கணேஷ் பாபு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிங்கப்பூரில் தங்களை மீண்டும் சந்திக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ நூல் பற்றித் தங்களிடம் பேச நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

திரு.லீ குவான் யூ பற்றிய உங்கள் பதிவு பற்றியது இது. உண்மைதான். காற்றைத தவிர அனைத்திற்கும் மற்ற நாடுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய ஒரு நிலையில் உருவானது சிங்கப்பூர். கலை, எழுத்து, கேளிக்கைகள் முதலியன உணவும் வேலையும் கிடைத்தபின்னர் தாமாகவே உருவாகும் என்பதில் திரு.லீ அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தகரக் கொட்டகைகளில் வாழ்ந்து வந்த மக்களை வானுயர் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்களாக்கினார் லீ.

தேசத்தின் ஒவ்வொரு நகர்வையும் ஆழ்ந்து ஆலோசனை செய்து பின்னர் செயல்படுத்தினார். இதனால் இரண்டே தலை முறையில் மூன்றாம் தர நாட்டின் நிலையில் இருந்து முதல் தரத்திற்கு உயர்த்தினார். இவையும், லீயின் தொலை நோக்குப் பார்வையும் தேச நிர்மானத்திற்கும் உலக சம நிலைக்கும் எவ்வாறு உதவின என்பதை அவரது மூன்று நூல்களைப படித்து மூன்று பதிவுகளாக எழுதியிருந்தேன். அவை தங்கள் பார்வைக்கு.

Sage of Singapore – Three Part Series.

http://amaruvi.in/2013/08/03/the-sage-of-singapore/

http://amaruvi.in/2013/08/08/the-sage-of-singapore-part-2/

http://amaruvi.in/2013/08/10/the-sage-of-singapore-part-3/

இத்துடன் ‘பழைய கணக்கு’ என்னும் என் முதல் நூலையும் தங்களுக்கு அனுப்பியிருந்தேன். அது பற்றியும் உங்கள் ஆற்றுப்படுத்தலைக் கோருகிறேன்.

நன்றி
ஆமருவி தேவநாதன்
www.amaruvi.com

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வண்டியிலே

$
0
0

சர்தார்ஜி ரயிலில் அழுதுகொண்டிருந்தாராம். அவருக்கு ஆறுதல் சொல்லி ஒருவர் கேட்டார் “என நடந்தது?”

“நண்பன் பட்டாளத்தில் இருந்து லீவுக்கு வந்தான். பார்த்து நீண்டநாள் ஆகிறது. ஆகவே நண்பர்கள் சேர்ந்து அவனை உபசரித்தோம்”

“அப்புறம்?”

“வழியனுப்ப வந்த இடத்தில் பேசிப்பேசித்தீரவில்லை. ரயில் மணியடித்து பச்சைக்கொடி காட்டியும் பேசிக்கொண்டிருந்தோம். கட்டிப்பிடித்து ஒரே அழுகை”

“இருக்குமே?”

“ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. பிடி பிடி என்று சொல்லி எல்லாருமாக துரத்தி ஓடிவந்தோம்”

“அப்புறம்?’

“பயங்கர ஆவேசமாக ஓடிவந்தோம். நான் பாய்ந்து ஏறிவிட்டேன்”

“அதுதான் ஏறிவிட்டீர்களே?”

“சார் நான் வழியனுப்ப வந்தவன். நானெல்லாம் சாயங்காலம் வீட்டுக்குப் போகவேண்டியவன். ஊருக்குப் போகவேண்டியவன் ஏறவே இல்லை”

*

நண்பர் அருண்மொழி ஏழாவது மனிதனுக்காக பெற்ற தேசியவிருதை துறப்பதாக உணர்ச்சிவசப்பட்டு அறிவிக்க, மதசார்பின்மையர் அதை கண்ணீர் மல்கி கொண்டாடி முதல் மனிதன் என்னும் பட்டம் அளிக்க, ஞானி ஏழாவது மனிதனுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் விருதே பெறவில்லை என்றும் வெளிப்படுத்த, உணர்ச்சிவசப்பட்டு வண்டியில் ஏறிக்கொண்டதாக அருண்மொழி சொல்ல—

சர்தார்ஜிகள் அமரர். வேறென்ன சொல்ல?

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 12

ரைவதமலை உச்சியில் அமைந்த அரண்மனைக்குச் செல்லும் உருளைப்பாறைப் படிக்கட்டால் ஆன பாதையின் இரு புறங்களிலும் பிரிந்து சென்று நூற்றுக்கணக்கான கொடிவழிப் பாதைகள் ஒவ்வொன்றும் ஓர் அருகர் ஆலயத்தையோ அடிகள் பொறிக்கப்பட்ட ஊழ்கப்பாறையையோ சென்றடைந்தன. அருகர் ஆலயங்கள் கற்பாறைகளை அடுக்கி மேலே மரப்பட்டைக்கூரையுடன் அமைக்கப்பட்டிருந்தன. கூம்புவடிவக்கூரையின் முகப்பில் அந்த அருகருக்குரிய அடையாளம் பொறிக்கப்பட்ட வெண்கொடி பறந்தது. அருகர்அடிகள் அமைந்த பாறைகளின் அருகே சுவஸ்திகம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்தன. அருகே அப்பாறையிலேயே செதுக்கப்பட்ட சிற்றகல்களில் நெய்யிட்டு சிறுதிரியில் சுடரேற்றி இருந்தனர். எங்கும் மண் கலங்களில் குங்கிலியமும் அகிலும் புகைந்தது.

அந்த மெல்லொளி எழுந்த காலையில் வெண்புகை முகில்படலமென குன்றை சூழ்ந்திருந்தது. அக்குன்றே ஒரு புகையும் குங்கிலியக் கட்டி என தோன்றியது. ஆலயங்களுக்குள் இருந்து ஆழ்ந்த இன்குரலில் அருக மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். வெண்ணிற ஆடை அணிந்து வாய்களில் துணித்திரை கட்டிய அருகநெறியினர் கைகளில் மலர்க்குடலைகளும் நறுமணப்பொருட்களுமாக சென்றுகொண்டிருந்தனர். மலையெங்கும் பலவகையான நறுமணப் பொருட்கள் மணத்தன. எதிர்வரும் ஒவ்வொருவர் உடலிலும் மணமிருந்தது. பாதையோரம் நின்றிருந்த பசுக்களின் உடம்பிலிருந்தும் நறுமணப்பொருட்கள் கமழ்ந்தன. பல்வேறு வகையான மணங்களை படிக்கட்டுகளாக மிதித்து மேலேறிச் செல்வதாக அர்ஜுனன் உணர்ந்தான்.

பிற நகரங்கள் அனைத்திலும் இருந்த படிநிலை ஆட்சிமுறை அங்கில்லையென்று தோன்றியது. ஈச்ச ஓலை வேயப்பட்ட சிற்றில்லங்களும் மரப்பட்டை கூரையிட்ட சிறு மாளிகைகளும் தங்கள் போக்கில் முளைத்தெழுந்தவை போல கலந்து மலைச்சரிவை நிறைத்திருந்தன. எதிர்ப்படும் முகங்கள் ஒவ்வொன்றையும் நோக்கியபடி அவன் நடந்தான். அவன் மகிழ்வுநிறைந்த நகரங்கள் பலவற்றை கண்டிருந்தான். விழவு எழுந்த நகரங்களில் கட்டற்று பெருகும் களிவெறியையும். அங்காடிகளில் பொருள் நுகர்வுக்கென எழும் உவகைத்திளைப்பையும் போர்வெற்றிச் செய்தி வருகையில் வரும் கொண்டாட்டத்தையும் கண்டிருக்கிறான். போருக்கென எழுகையில் பற்றிக்கொள்ளும் கொலையெழுச்சியும் கடும்சினமும் கொண்டாட்டங்களே. போரில் கொடி வீழும்போது பெருகும் துயரும் அழுகையும் கூட ஒருவகை களியாட்டமாக ஆகக்கூடும். ஆனால் ஒரு துளி குறையாது ஒரு துளி ததும்பாது நிறைந்த பாற்குடங்கள் போன்ற முகங்களை அங்கு மட்டுமே கண்டான்.

எதிரே வந்த ஒருவனிடம் “அரண்மனையில் அரசர் முகம் காட்டும் நேரம் எது?” என்று கேட்டான். அவன் இனிய புன்னகையுடன் “நீங்கள் அயலவர் என்று எண்ணுகிறேன் இங்கு அவ்வண்ணம் அரசர் உப்பரிகையில் எழுந்து முகம் காட்டும் தருணம் என்று எதுவுமில்லை. இங்குள்ள மாளிகைகள் எதற்கும் கதவுகள் இல்லை என்பதை கண்டிருப்பீர். அரண்மனைக்கும் அவ்வாறே. எப்போது நீர் விழைந்தாலும் அரண்மனைக்குள் நுழைந்து அரசரைப் பார்த்து வணங்கி, சொல்லாட முடியும். இந்நகரில் காவலும் தடையும் கண்காணிப்பும் ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் தலைவணங்கி “நன்று” என்ற பின் அவ்வெண்ணத்தை வியப்புடன் தன்னுள் மீட்டியபடி சென்றான்.

இலைநுனியில் ததும்பிச் சொட்ட காத்திருக்கும் துளி என அந்நகர் தோன்றியது. நீலவான் எதிரொளிக்கும் ஒளி அழியா முத்து என அதை காட்டுகிறது. அதன் ஒவ்வொரு கண நடுக்கலும் ஒரு யுகமே. அல்லது இதுவேதான் அழிவின்மையா? அறம் கொண்டும், மறம்கொண்டும், சொல் கொண்டும், படை கொண்டும் அரசியல் சூழ்ச்சி கொண்டும், நூல்நெறி கொண்டும் காக்கப்பட்ட பெருநகர்கள் என்னாயின? இக்ஷுவாகு குலத்து ராமன் ஆண்ட அயோத்தி எங்கே? தொல்புகழ் மாகிஷ்மதி எங்கே? அரக்கர்கோன் ஆண்ட தென்னிலங்கை எங்கே? எந்நகர்தான் இலைநுனி நீர்த்துளி என நிலையற்றதாக இல்லாமல் இருக்கிறது? விண்ணில் எழுந்த விண்மீன் போல் என்றுமுளதென தோன்றுகிறது? இங்கு சூழ்ந்திருக்கும் உவகை மானுடர் விழையும் பெருநிலை என்றால், இதுவே இவர்களுக்கு காவலென ஆகவேண்டும் அல்லவா?

அரண்மனை முகப்பில் இருந்த ஐந்து அருகர்களின் ஆலயத்தின் முன் சென்று நின்றான். நீண்ட கற்பீடத்தில் நடுவே பெருந்தோள்களுடன் வெற்றுடலுடன் நின்றார் ரிஷபர். கைகள் இரண்டும் கால்முட்டின் மேல் படிந்திருந்தன. விழிகள் முடிவிலியை நோக்கி மலர்ந்திருந்தன. காலடியில் திமில் எழுந்த மாக்காளையின் சிறிய உருவம் இருந்தது. வலப்பக்கம் அடியில் யானைச்சிலை அமைந்த அஜிதரின் சிலை நின்றது. அப்பால் குதிரை பொறிக்கப்பட்ட சம்பவநாதரின் சிலை. இடப்பக்கம் குரங்கு பொறிக்கப்பட்ட அபிநந்தனரின் சிலையும் காட்டுவாத்து பொறிக்கப்பட்ட சுமதிநாதரின் சிலையும் இருந்தன. நன்கு தீட்டப்பட்ட கரிய கல்மேனிகள்மீது ஆலயவாயிலுக்கு அப்பால் தெரிந்த ஒளியசைவுகள் நீர்த்துளியில் என எதிரொளித்துக் கொண்டிருந்தன. அவை சிலைகள் என்று தோன்றவில்லை. இப்புடவிச் சித்திரம் வரையப்பட்ட பெருந்திரையொன்றில் அவ்வடிவங்கள் வெட்டப்பட்டு துளை என தெரிவதாக விழி மயக்கெழுந்தது. அப்பால் ஓர் ஒளியுலகம் அசைந்து கொண்டிருந்தது.

சிறுவர்க்குரிய கற்பனை என்று எண்ணியபடி அவனே புன்னகைத்தபடி அர்ஜுனன் ஆலயத்துக்குள் சென்றான். மஞ்சளரிசியில் முடிவிலிச் சக்கரம் வரைந்து வழிபட்டுக் கொண்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த அருகநெறியினரின் அருகே சென்று அமர்ந்தான். உள்ளே ரிஷபரின் காலடியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை மலர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் அளித்தார் பூசகர். கண் மூடி கை கூப்பிய பின்னர் அதை தன் குழலில் சூடினான். இரு கைகளையும் மடியில் வைத்து விழிகளை ரிஷபரின் நின்ற சிலைக்கு கீழிருந்த பீடத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெருங்காளையின் கண்களை நோக்கி குவித்தான்.

அவ்வாலயத்தின் சுவரிலிருந்த கற்கள் அக்கணம் நீரூற்றில் இருந்து எடுக்கப்பட்டவை போல் குளிர்ந்திருந்தன. அங்கிருந்த அமைதியில் அக்குளுமை பரவி அதை எடை மிக்கதாக்கியது. உள்ளத்தில் எழுந்த அத்தனை சொற்களும் குளிர்ந்த ஈரம் கொண்டு மெல்ல சித்தத்தின் மேல் படிந்து அசைவிழந்தன. வெண்கல மணி அடித்த ஒலி கேட்டு அவன் விழித்துக் கொண்டான். எழுந்து நீள்மூச்சுடன் அவ்வாலயச் சூழலை நோக்கியபின் பிறிதொருமுறை தலைவணங்கி வெளிவந்தான். கண்ணில் எஞ்சிய ஐந்து சிலைகளும் ஐந்து கருவிழி மணிகளென தோன்றின. அவற்றில் ஆடும் காட்சித் துளிகள். சாலையை அடைந்தபின் திரும்பி அச்சிலைகளை நோக்கியபோது அவை ஐந்து கரியவிதைகளென தோன்றின.

அரண்மனை முற்றம் வரை அவன் விழிகளுக்குள் அச்சிலைகள் இருந்துகொண்டிருந்தன. அரண்மனை முற்றத்தை அடைந்து அங்கு நின்ற ஏவலனை நோக்கி தலைவணங்கி “நான் ரைவத குலத்து அரசரை காண விழைகிறேன். அயல் வணிகருக்கு காவலனாக வந்தவன்” என்றான். “என் பெயர் ஃபால்குனன். வடக்கே அஸ்தினபுரி என் ஊர். ஷத்ரிய குலத்தவன்.” “தங்கள் நெறி என்ன?” என்றான் ஏவலன். “இங்கு ஊனுணவு உண்பவர்களுக்கு மட்டும் சில இடங்களில் விலக்குள்ளது.” அர்ஜுனன் “நான் வைதிகநெறியினன்” என்றான். ஏவலன் “அந்த பெரிய வளைவுவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அரசவைக்கூடம் உள்ளது. அங்கு இப்போது அரசமன்று கூடியுள்ளது” என்றான். அர்ஜுனன் “அங்கு…” என்று தயங்க “தாங்கள் தங்களை அறிவித்துக்கொண்டு உள்ளே செல்லலாம். இங்கே எந்த விலக்குகளும் எவருக்குமில்லை” என்றான் ஏவலன்.

மென்புழுதியும் கூழாங்கற்களும் பரவிய விரிந்த முற்றத்தில் மரக்குறடு ஒலி எழுப்ப நடந்தான். காட்டு மரங்களை கற்பாறைகள் மீது நாட்டி அதன் மீது மரப்பலகை தளம் அமைத்து எழுப்பப்பட்டது அம்மாளிகை. அதன் நீள்சதுர முகப்பிற்கு அப்பால் மூன்று வாயில்கள் திறந்திருந்தன. முகப்பு வாயிலில் ரைவத குலத்தின் புதிய அடையாளமான அன்னப்பறவை பொறிக்கப்பட்ட செந்நிறத்திரை தொங்கி காற்றில் நெளிந்து கொண்டிருந்தது. மாளிகையின் கூம்பு வடிவக்கூரையின் உச்சியில் ஊழ்கத்தில் அமர்ந்த அருகரின் மரச்சிலை பொன் வண்ணம் பூசப்பட்டு காலைவெயிலில் மின்னியபடி மணிமுடி என அமர்ந்திருந்தது.

படிகளில் ஏறி மாளிகை முகப்பை அடைந்து ஒருகணம் தயங்கி நின்றான். உள்ளிருந்து வந்த ஏவலன் அவனைக்கண்டு தலைவணங்கி முகமன் கூறி அகன்றான். திரையை மெல்ல விலக்கி உள்ளே சென்று இடைநாழியை அடைந்தான். கையில் இன்நீருடன் அவனைக் கடந்து சென்ற நான்கு ஏவலர் முகமன் கூறி வாழ்த்தி புன்னகைத்துச் சென்றனர். எவரென எவ்விழியும் வினவவில்லை. விலக்கும் முகம் எதுவும் எதிர்வரவில்லை. அங்கு அயலவர் இயல்பாக வருவார்கள் போலும். அப்பால் எங்கோ யாழிசை கேட்டுக்கொண்டிருந்தது. அவன் அதை இலக்காக்கி நடந்தான். அரண்மனைக்கூடங்கள் அமைதியில் ஆழ்ந்து கிடந்தன. அரக்கு பூசப்பட்ட தூண்களில் அவன் பாவை வளைந்தும் நெகிழ்ந்தும் உடன் வந்தது.

உள்கூடத்தை அடைந்து அதற்கு அப்பால் சிறுவாயிலில் தொங்கிய வண்ணத் திரைச்சீலையைத் தொட்டு ஒரு கணம் தயங்கி “வணங்குகிறேன்” என்று கூறியபடி விலக்கி உள்ளே சென்றான். அங்கு தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரி மீது கால் மடித்து அமர்ந்திருந்தார் ரைவத குலத்து அரசரான பிங்கலர். தலையில் அணிந்திருந்த கொடித்தளிர் வடிவமான மெல்லிய பொன்முடிதான் அவரை அரசரென காட்டியது. அவருக்கு முன்னால் நான்கு அயல்நாட்டுச் சூதர்கள் அமர்ந்து மகரயாழை குறுமுழவுடன் இணைத்து இசைத்தனர். சூழ்ந்திருந்த அவையில் குடித்தலைவர்களும் அயல்வணிகர்களும் எளிய குடிகளும் கலந்திருந்தனர்.

காலடியோசை கேட்டு திரும்பிய பிங்கலர் புன்னகையுடன் அர்ஜுனனை நோக்கி தலைவணங்கி அமரும்படி கைகாட்டினார். முகமன் சொல்லி வாழ்த்த நாவெடுத்த அர்ஜுனன் அங்கிருந்த இசையமைதியை கலைக்க வேண்டியதில்லை என எண்ணி அவையின் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டான். இன்நீர் கொண்டு வந்த ஏவலன் அங்கிருந்த அவையின் ஓரத்திலிருந்து தொடங்கி மண்குவளைகளில் அதை அளித்தான். முதலில் அரசருக்கு அளிக்கும் முறைமையை அங்கு காணமுடியவில்லை. பிறருக்கு அளித்த இன்நீர்க் குவளைகளில் ஒன்றையே அரசருக்கும் கொடுத்தான். அவர் இசையில் ஆழ்ந்தபடி அதை அருந்தினார்.

தன் கையில் வந்த குவளையிலிருந்த இன்நீரை அருந்தியபடி அர்ஜுனன் அரசரை நோக்கினான். எளிய பருத்தி ஆடையை அணிந்து பிறிதொரு பருத்தி ஆடையை உடலுக்கு குறுக்காக சுற்றியிருந்தார். அரசணி என்பது காதில் அணிந்திருந்த மணிக்குண்டலங்கள் மட்டுமே. அங்கிருந்த எவரும் அரசருக்கு முன் தலை வணங்கி நிற்கவில்லை. அவர்கள் அமர்ந்திருந்த முறைமையிலேயே விடுதலை தெரிந்தது. ஒருவரை நோக்கி பிங்கலர் புன்னகைக்க அவர் கையை இயல்பாக அசைத்து அந்த இசைத்தாவலை தானும் விரும்பியதை அறிவித்தார்.

இசை முடிந்து யாழ் விம்மி அமைந்தது. இசைச்சூதர் வணங்கியதும் பிங்கலர் அவர்களை திரும்ப வணங்கினார். அருகே வந்த தாலமேந்திய ஏவலனிடமிருந்து சிறு பட்டுக்கிழியொன்றை எடுத்து பரிசிலாக சூதருக்கு வழங்கினார். அவர்கள் வந்து அரசரை வணங்கி அதைப் பெற்றுக்கொண்டனர். பிங்கலர் திரும்பி அர்ஜுனனை நோக்கி “தாங்கள் இளைய பாண்டவரென்று எண்ணுகிறேன்” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “இளைய யாதவர் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று செய்தி அறிவித்தார். தங்களுக்காக இந்நகர் காத்திருக்கிறது. இன்றிரவு இளையவர் இங்கு வரக்கூடுமென்று தெரிகிறது” என்றார்.

அர்ஜுனன் வியப்புடன் “தன்னை எவரென்று அறியாத மக்களுடன் தான் இங்கு தங்குவதாகவே என்னிடம் இளைய யாதவர் சொல்லியிருந்தார்” என்றான். “எவரென அறியத்தலைப்படாத மக்கள் என்று சொல்லவேண்டும்” என்றார் பிங்கலர். அவை புன்னகை செய்தது. “தாங்கள் இன்று இங்கு எங்கள் விருந்தினர் இல்லத்தில் தங்கி இளைப்பாறலாம். மாலையில் அவைக்கு வாருங்கள்” என்றார் பிங்கலர். “ஆவனசெய்யும்படி ஏவலருக்கு ஆணையிட்டிருக்கிறேன்.” அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்றான்.

இளைய யாதவரைப் பற்றிய உரையாடல் எழும் என அர்ஜுனன் எண்ணினான். ஆனால் அவர்கள் இசைபற்றி பேசத்தொடங்கினர். பிங்கலர் திரும்பி அர்ஜுனனிடம் “நாளை மறுநாள் இங்கு எங்கள் குலமூதாதை ரைவதகர் விண்ணேறிய நன்னாள். ரைவதமலை கொண்டாடும் ஏழு விழவுகளில் ஒன்று அது. அவ்விழவுக்கு யாதவகுடியினர் துவாரகையிலிருந்து திரண்டுவரும் வழக்கம் உண்டு. இளைய யாதவர் வருவதும் அதற்காகவே. தாங்களும் அவ்விழவில் பங்கெடுக்கவேண்டும்” என்றார். அர்ஜுனன் “ஆம், அது என் நல்லூழ்” என்றான்.

ஏவலன் அவனை விருந்தினர் இல்லம் நோக்கி கொண்டுசென்றான். அரண்மனையை ஒட்டியிருந்த அந்த மாளிகை மூங்கில்களாலும் ஈச்சமரத்தின் ஓலை முடைந்தமைத்த தட்டிகளாலும் கட்டப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட உட்சுவர்கள் கரிய வண்டின் உடல் போல் ஒளி கொண்டிருந்தன. இழுத்துக் கட்டப்பட்ட கொடிகளால் ஆன மஞ்சத்தில் மரவுரிப் படுக்கையில் படுத்து அர்ஜுனன் துயின்றான். புழுதிக் காற்று கூரையின் மேல் மழையென கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் மழை அவனை நனைக்க தொலைதூரத்துக் காடு ஒன்றுக்குள் சென்றுகொண்டிருந்தான். தன் மேல் விழுந்த மழைத்துளிகள் வெம்மையாக இருக்கக் கண்டு நிமிர்ந்து நோக்கினான். இலைகளென அவன் தலைக்கு மேல் நிறைந்து நின்றவை பசி கொண்ட ஓநாய்களின் சிவந்த நாக்குகள் என்று கண்டான். அவை சொட்டிய உமிழ் நீர் அவன் உடலை நனைத்து தரையில் வழிந்து கால்களை வழுக்கச்செய்தது.

மூன்றாம் முறை வழுக்கியபோது அவன் விழித்துக் கொண்டான். அறைக்கு வெளியே அவன் விழிப்பதைக் காத்து நின்ற ஏவலன் “தங்களை அவைக்கு அழைத்து வரும்படி அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “விருந்தினர் வந்துவிட்டார்களா?” என்று கேட்டான் அர்ஜுனன். “ஆம்” என்றான் ஏவலன். அர்ஜுனன் எழுந்து தன் ஆடையை சுற்றிக் கொண்டான். “அவர் இளைய யாதவரா?” என்றான். ஏவலன் “யாதவர் எனத்தெரிகிறது” என்றான். அதற்கு மேல் அவனிடம் கேட்டறிய ஏதுமில்லை என்பதால் அர்ஜுனன் அவன் செல்லலாம் என தலையசைத்தான். “நீராட நன்னீரும் புத்தாடையும் சித்தமாக உள்ளன” என்றான் அவன். “நன்று” என்றான் அர்ஜுனன்.

நீராடி அங்கு அளிக்கப்பட்ட எளிய மரவுரி ஆடை அணிந்து நீர் சொட்டும் நீள் குழலை தோளில் விரித்திட்டு அர்ஜுனன் அவை நோக்கி சென்றான். முகமன் சொல்லி வரவேற்கவும் வருகை அறிவித்து அவை புகுத்தவும் எவரும் இல்லாததனால் அவன் உடல் தத்தளித்தபடியே இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கணம் தயங்கி பின் நினைவுகூர்ந்து முன் நடந்தான். எதிரே வந்த ஏவலனிடம் “அரசர் எங்குள்ளார்?” என்றான். “உள்ளே தன் தனியறையில் இரு யாதவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்” என்றான் ஏவலன்.

அர்ஜுனனின் உள்ளத்தில் எழுந்த வியப்பு விழிகளில் வெளிப்படவில்லை. “இரு யாதவர்களா? எவர் அவர்?” என்றான். “இங்கு வருபவர்கள்தான். அவர்களில் ஒருவன் நன்கு குழலிசைப்பான்” என்றான். “ஆம்” என்றுரைத்து அர்ஜுனன் படிகளில் ஏறி மாடியின் சிறிய இடைநாழி வழியாக நடந்து அரசரின் தனியறைக்கு சென்றான். அங்கும் கதவுகள் இல்லை என்பது அத்தனை பார்த்தபின்னரும் அவனை வியப்பிலாழ்த்தியது. வெளியே நின்று தன் பாதக்குறடுகளை அசைத்து ஒலி எழுப்பினான். “வருக” என்றார் அரசர்.

உள்ளே நுழைந்து அரசருக்கு தலைவணங்கியபின் அவர் எதிரே பீடங்களில் அமர்ந்திருந்த இளைய யாதவரையும் அருகே அமர்ந்திருந்த சாத்யகியையும் நோக்கி புன்னகையுடன் தலை வணங்கினான். இளைய யாதவர் எப்போதும்போல ஒரு பெரும் நகையாட்டு சற்றுமுன் முடிந்ததுபோல புன்னகை விழிகளில் எஞ்சியிருக்க “நீண்ட தாடி உங்களை துறவி என காட்டுகிறது பார்த்தரே” என்றார். “பெண்கள் விரும்பும் தாடி இது.”

அர்ஜுனன் புன்னகைத்தான். இளைய யாதவர் கண்களில் சிரிப்புடன் “ஒவ்வொரு ஊரையும் உறவையும் துறந்து முன் செல்வதால் இது பொருத்தமுடையதுதான்” என்றார். “இன்னும் சில நாளைக்கு இத்தோற்றம் இருக்கட்டும்.” அர்ஜுனன் அருகே அமர்ந்துகொண்டான். “நான் இங்கு முன்னரே வந்தது என் உடன்பிறந்தவராகிய அரிஷ்டநேமி அவர்களை பார்ப்பதற்காக” என்றார் இளைய யாதவர். “இங்குதான் அருகர்களுடன் குகை ஒன்றில் நோன்பாளராக அவர் தங்கியிருக்கிறார். அவரை என்னுடன் அழைத்துச்செல்லவே வந்தேன்.”

அர்ஜுனன் வியப்புடன் நோக்க “அறியப்படாத ஓர் உறவு அது. தென்மதுராபுரி என அழைக்கப்பட்ட யாதவப்பெருநகரை ஆண்ட சத்வத குலத்து கிரிராஜரின் எட்டாவது மைந்தர் வீரசேனரில் இருந்து அந்தக குலம் உருவானதை அறிந்திருப்பீர். என் தந்தைவழி முப்பாட்டனார் விருஷ்ணியின் உடன்பிறந்தவராகிய சக்ரசேனர் அந்தகக்குடியில் மணமுடித்து அந்தகவிருஷ்ணிகுலம் என்னும் குலத்தை அமைத்தார். அவரது கொடிவழியில் பிறந்தவர் அஸ்வசேனர். அவரது மைந்தர் சமுத்ரவிஜயர் சௌரிபுரம் என அழைக்கப்பட்ட தட்சிணமதுராபுரியை ஆண்டார். அவருக்கும் யாதவ அரசியான சிவைதேவிக்கும் பிறந்த இறுதி மைந்தர்தான் அரிஷ்டநேமி. கொடிவழியில் சமுத்ரவிஜயர் என் சிறிய தந்தை. இவர் எனக்கும் என் தமையன் பலராமருக்கும் மூத்தவர்.”

“நான் என் தமையனை சந்தித்து ஓராண்டு ஆகிறது. சென்றமுறை ரைவதகரின் விண்ணேற்ற விழவு நிகழ்ந்தபோது அவரும் நானும் இங்கு வந்தோம். நான் துவாரகைக்கு திரும்பியபோது அவர் வரமறுத்து இங்கேயே தங்கிவிட்டார். ஓரிரு மாதங்களில் திரும்பி வருவார் என நான் எண்ணினேன். வராததனால் என் தந்தையும் தமையனும் கவலைகொண்டிருக்கிறார்கள். அவரை எவ்வண்ணமேனும் அழைத்துவரவேண்டும் என்பது என் தந்தையின் ஆணை” என்றார் இளைய யாதவர். “மறைந்த உக்ரசேனரின் ஏழாவது அரசியின் மகளான ராஜமதியை இவருக்கு மணம்செய்விக்கவேண்டுமென அரசர் எண்ணுகிறார். கம்சரின் கொலையால் உளப்பிரிவுகொண்டுள்ள உக்ரசேனரின் உறவினரை யாதவகுடிகளில் இணைத்துக்கொள்ள இம்மணம் இன்றியமையாதது என நானும் எண்ணுகிறேன்.”

அர்ஜுனன் அரசரை நோக்கியபின் “நோன்பு கொள்பவரை மீட்பது முறையல்ல என்பார்கள்” என்றான். “ஆம், ஆனால் தந்தையின் ஆணை இது. அவரது சகோதரரான சமுத்ரவிஜயர் நேரில் மதுராவுக்கு வந்து கண்ணீருடன் மன்றாடியிருக்கிறார். இவருக்காக குடிகளும் உற்றாரும் தந்தையும் தாயும் அங்கே காத்திருக்கின்றனர். மூதாதையருக்கான நீர்க்கடன்களை கழிக்கும் பொறுப்புள்ளவன் துறவுபூணக்கூடாது என நெறிநூல்கள் சொல்கின்றன. ஆகவே அவரை மீட்டுக்கொண்டுசெல்வதில் பிழையில்லை” என்றார் இளைய யாதவர். “நமக்கு வேறுவழியில்லை. நான் தந்தைக்கு வாக்களித்த பின்னரே துவாரகையிலிருந்து வந்திருக்கிறேன்.”

அர்ஜுனன் திரும்பி பிங்கலரை நோக்கினான். “அதைச் செய்வதில் பிழையில்லை. அவரது துறவு உண்மையானதா என தெய்வங்கள் பரிசீலித்தறிவதற்கான நிகழ்வாகவும் இது அமையலாமே” என்று அவர் சொன்னார். அர்ஜுனன் “ஆம், அவ்வண்ணமும் கொள்ளலாம்” என்றான். “முறைமைச்சொல் சொல்லமுடியாத இடங்களில் அரசகுடியினர் தடுமாறத்தொடங்கிவிடுகின்றனர்” என்று இளைய யாதவர் சிரித்தார். அர்ஜுனன் புன்னகைத்தான். “குலமுறைப்படி அரிஷ்டநேமி எனக்கு தமையனின் இடம் உள்ளவர். துவாரகையிலும் மதுராவிலும் மதுவனத்திலும் அவரை தந்தையென்றே நான் நடத்துவது வழக்கம். சௌராஷ்டிரத்தின் எல்லையைக் கடந்ததும் தோள்தழுவும் தோழர்களாகிவிடுவோம்” என்றார் இளைய யாதவர். “நான் துவாரகையில் அவரைப் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அனைத்து வகையிலும் அவர் யாதவர்களிடமிருந்து வேறுபட்டவர். யாதவர்கள் எவருக்கும் இல்லாத உயரமான உடல் கொண்டவர். என் தமையன் பலராமரே அவரை தலைதூக்கி நோக்கித்தான் பேசவேண்டும். அவரை ஒரே கையால் தூக்கி தோளில் ஏற்றிக்கொள்ளும் அளவுக்கு புயவல்லமை கொண்டவர். வெறும் கைகளால் பலகைகளை அறைந்து உடைப்பார். தலையால் முட்டி பாறைகளை பிளப்பார். களிற்றை கொம்புகளைப்பற்றி அசையாமல் நிறுத்த அவரால் முடியும். இளமையில் அவரை மண்ணுக்கு வந்த அரக்கன் என்றே அவர் குடியினர் எண்ணினர். ஆனால் நிமித்திகர் அவர் பிறந்தநாள் பெருமையுடையது என்றனர். சிரவணமாதம் சுக்லபஞ்சமி. அவர் யாதவர்குலம் ஒளிகொள்ளப்பிறந்த முழுநிலவு என்று கவிஞர் பாடினர்.”

“இளமையில் அவரை படைக்கலப்பயிற்சிக்கு அனுப்பினார்கள். முதல்நாள் ஆசிரியரை வணங்கி மலர்கொண்டு பிற மாணவர்களுடன் நிரையாகச் சென்று படைக்கலமேடை முன் நின்றார். அங்கு வில்லும் வேலும் வாளும் கதையும் வைக்கப்பட்டிருந்தன. இளையோர் அறியாது எடுக்கும் படைக்கலம் எது என்று பார்க்கும் சடங்கு அது. அவர் கதாயுதத்தை எடுப்பார் என அனைவரும் எண்ணினர். அவர் அங்கிருந்த வெண்மலர் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார். திகைத்த ஆசிரியர் பலவகையிலும் அவரிடம் படைக்கலம் ஒன்றை எடுக்கும்படி சொன்னார். உறுதியாக அவர் மறுத்துவிட்டார். எப்போதும் எந்தப் படைக்கலத்தையும் அவர் தொட்டதில்லை” இளைய யாதவர் சொன்னார்.

“சொல்முளைத்ததுமே தமையனார் யாதவபுரியிலிருந்து நீங்கிவிட்டார். அவரை அறநூல்களே கவர்ந்தன. தட்சிணமதுராவிலும் பின்பு மதுராவிலும் குருகுலங்களில் பயின்றபின் மேலும் கல்வி கற்கும்பொருட்டு வடதிசைக்கு சென்றார். அங்கு சௌனக குருமரபில் இணைந்து வேதங்களை கற்றார். சாந்தோக்ய குருமரபைச் சேர்ந்த கோர அங்கிரசரிடம் வேதமுடிவையும் கற்றறிந்தார். ரிஷிகேசத்தில் அமைந்த வசிஷ்ட குருகுலத்தில் நீதிநூல்களையும் யோகநூல்களையும் கற்றார். யாதவகுடியில் அவரே அனைத்தும் கற்ற அறிஞர் என்கிறார்கள்.”

அர்ஜுனன் இனிய மெல்லிய புன்னகையுடன் “கற்று நிறைந்து திரும்பிய எவரையும் நான் இதுவரை கண்டதில்லை” என்றான். “ஆம், கற்று எவரும் நிறைவதில்லை. எதுவரை கற்பது இயல்வது என்று அறிந்து மீள்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “கற்றதன் பயன் அவ்வண்ணம் வாழ்வது. எங்கோ ஓரிடத்தில் கல்வியை நிறுத்திவிடாவிட்டால் வாழ்வதற்கு காலம் இருக்காது அல்லவா?” என்றான் அர்ஜுனன். “வாழும்போதே கற்பவற்றை என்ன செய்வது?” என்றார் பிங்கலர். இளைய யாதவர் “கற்றவற்றின்படி நிற்கும் மாணவர் எவரும் இதுவரை மண்ணில் பிறக்கவில்லை. கற்பது அறிவு. வாழ்வது திருஷ்ணை” என்றார்.

“ஒருவர் கூடவா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றார் இளைய யாதவர். “அயோத்தியை ஆண்ட ரகுகுலத்து ராமன் கூடவா?” என்றான் அர்ஜுனன். “அவனை நான் அறிவேன். நானன்றி அவனை முழுதுணர்ந்தவர்கள் இல்லை” என்றார் இளைய யாதவர். அச்சொற்களின் துணையென அவன் கண்களில் எழுந்த ஒளியைக் கண்டு குழம்பிவிட்டு பிங்கலரை நோக்கிவிட்டு அர்ஜுனன் ஏதோ சொல்ல வாயெடுத்து சொல் உருவாகாமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டான்.

பின்பு அந்த உளநிலையை மாற்ற விழைந்து “இங்கு தாங்கள் அடிக்கடி தங்குவது உண்டென்று அறிந்திருக்கிறேன். இது மலைக்குடிகள் வாழும் மண் என்று சொன்னீர்கள். இங்கு எவருக்கும் உங்களை தெரியாது என்றீர்கள். ரிஷபரின் சொல் நின்று வாழும் நிலம் என்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான். “நான் பிறிதென்ன சொன்னேன்? இங்கு மலைக்குடிகள் வாழ்கிறார்கள், அவர்கள் நான் யாரென்று அறியாதவர்கள். இவ்வரண்மனையிலும் சிலரே என் குலத்தையேனும் அறிந்தவர்கள்” என்றார் இளைய யாதவர். “முடிவற்ற பெருங்காவியம் ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன். அதன் ஒரு ஏட்டிலிருந்து பிறிதொன்றுக்கு தப்புவதே அங்கு எனக்கு இயல்வது. இங்கு வருகையில் காவியத்தின் எல்லைகளைக் கடந்து எளிய மானுடனாகிறேன். பார்த்தரே, மேலும் கீழும் எவரும் இன்றி இருக்கையிலேயே தான் யாரென மானுடன் அறிகிறான். இப்புவியில் அதற்கான இடங்கள் மிக அரியவை.”

“தாங்கள் இங்கிருப்பீர்கள் என்று எப்படி உணர்ந்தேன் என்றே தெரியவில்லை. ஆனால் தெளிவாக அதை கண்டேன்” என்றான் அர்ஜுனன். “உண்மையில் இங்கு வரும் திட்டம் ஏதும் இருக்கவில்லை” என்றார் இளைய யாதவர். “மதுவனத்தில் தங்கையின் மணத்தன்னேற்புக்கான ஒருக்கங்கள் நிகழ்கின்றன. அங்கு நானிருந்தாக வேண்டும். ஆனால் தந்தையின் ஆணை நேற்று முந்நாள்தான் எனக்கு வந்தது. ஆனால் கிளம்பும்போதே நீர் இங்கு வருவதை என் சித்தம் அறிந்தது” என்றார். பிங்கலர் உரக்க நகைத்து “நீங்கள் இருவரும் பாம்பின் வாலும் தலையும் போல என்று யாதவர் சொல்கிறார்கள். தலை எண்ணுவது வாலில் அசைவாக வெளிப்படுகிறது” என்றார். அவர் அருகே இருந்த அமைச்சர் “ஆம், ஆனால் வாலும் தலையும் பிரித்தறியமுடியாத விரியன் பாம்பு” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்


சினிமா: கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன்,

அவதார்- ஒரு வாக்குமுலம் வாசித்தேன். சமிபத்தில் ஒரு திரைப்படம் சார்ந்த, அது கூரும் அரசியல் அதிகார பின்புலம் பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்திய இதுபோன்ற ஒரு பதிவை வாசித்ததில்லை. நன்றி…

ஜெயமோகன்.காம் ஐ நான் ஒரு அறிவு பெட்டகமாகவே என்னளவில் எண்ணுவதுண்டு. இந்திய இலக்கியம், மதம், கலை, அரசியல் போன்ற தளங்களில் ஏதேனும் குறிப்பிட்ட ஒன்றினை பற்றி அறிய நேர்ந்தால் உங்கள் தளத்தில் ஏதேனும் அதுசார்ந்த பதிவு உள்ளதா எனப் பார்ப்பதே என் முதல் வேலை.

மறுபிரசுரம் செய்தமைக்கு மீண்டும் நன்றி…

அன்புடன்,
பாலாஜி

அன்புள்ள ஜெ

சினிமா பற்றிய கட்டுரைகளில் இல்லாதது எது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சினிமாவைப்பற்றி அதன் அரசியல் மற்றும் பண்பாட்டு பின்னணியிலே வைத்துப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் அந்தச்சினிமாவை அப்படியே ஒரு தகவலக எடுத்துக்கொண்டு கதைச்சூழலை எழுதிவைப்பத்தான் என்று நினைக்கிறேன். அவதார் பற்றிய உங்கள் கட்டுரை ஒரு நல்ல திறப்பாக இருந்தது. இந்த டிரெஷர் ஹண்ட் சினிமாக்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் பார்க்க வைக்கிறீர்கள். மிகச்சிறந்த கட்டுரை. மெக்கன்னாஸ் கோல்ட் நாவலையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் செவ்விந்தியர்களைச் சுட்டுச் சுட்டு வீழ்த்தி பொன்னை எடுப்பதை [அது அவர்களின் பொன்] இப்போது வேறுகோணத்தில் பார்க்கிறேன்

சரவணன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பின் தூறல்

$
0
0

images

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன‌. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். ஒன்றிற்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. பல முறை எழுத ஆரம்பித்து பின்பு விட்டு விடுவேன். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று.

மின்னஞ்சல்களின் மூலமும் அவள் பற்றிய என் கணிப்பின் மூலமும் அவள் இன்னும் என்னை  மறக்கவில்லை (அல்லது மறக்க முடியவில்லை) என்றே நினைக்கிறேன். எனக்கு திருமணமானதை என் வலைப்பூ அல்லது ஆர்குட் வழியாக தெரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். வாழ்த்து அனுப்பியிருந்தாள். அதற்கும் நான் பதில் அனுப்பவில்லை. என் வலைப்பூவில் பதிவுகளை படித்து விட்டு என்னைப் பாராட்டுகிறாள். நான் அவளது மின்னஞ்சல்களை படிப்பதில்லை என்று கருதியோ எனக்கு பிடிக்காது என்றோ இவையனைத்தும் ஓரிரு வரிகளில் மட்டுமே உள்ளன‌.

மூன்று வருட உணர்வுகளை மூன்று பத்திகளில் சொல்ல முடியவில்லை. மனநல மருத்துவர்கள் சொல்வதைப் போல பேசி சுமூகமாகப் போகக் கூடிய விஷயமாக நான் நினைக்கவில்லை. நீங்கள் கூறிய ‘காம குரோத மோகம்’, இவை மூர்றும் என்னுள் ஊறித் திளைத்து, துளைத்தெடுக்கிறது.

தற்போது என் திருமண புகைப்படம் ஒன்றை கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாள். என் எண்ணமெல்லாம் இதுதான். அவள் ஏன் இப்படி தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டும். ஓரிரு ‘பொதுவான’ மின்னஞ்சல்களை நான் அனுப்பினால் அது அவளுக்கு நன்மை பயக்குமா?

நிறைய எழுதி உங்கள் ஆஸ்திரேலிய பயண வேலைகளை தடை செய்ய விரும்பவில்லை. உங்கள் எண்ணங்களை பகிர முடியும் தருணத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

‍-‍‍ ஜெ

 

 

பி.கு.: இதை தங்கள் வலைப்பதிவில் வெளியிடும் பட்சத்தில் என் பெயர், இணையதள முகவரி இவற்றை தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்அன்புள்ள ஜெ

 

உங்கள் கடிதம்.

 

உங்கள் கடிதத்தில் சொல்லியிருக்கும் உறவின் சிக்கல் மிக சாதாரணமான ஒன்று. இதை நாம் எல்லா விஷயங்களிலும் பார்க்கலாம். நீங்கள் ஒன்றை மறுத்துவிட்டால் மீண்டும் கொஞ்சநேரம் அந்த விஷயம் உங்கள் மனதுக்குள் எஞ்சியிருக்கும். தொலைக்காட்சியை அணைத்தபின் எஞ்சும் பிம்பம் போல.

 

உதாரணமாக உங்களுக்கு ஒரு வேலைக்கு அழைப்பு வருகிறது. நீங்கள் அதை மறுத்துவிடுகிறீர்கள். ஆனால் உங்கள் மனம் சிலநாட்கள் அந்தவேலையை நீங்கள் செய்வதுபோலவே கற்பனைசெய்துகொள்ளும். அந்தவேலையில் நீங்கள் கண்ட குறைகள் உண்மையில் இல்லை என்று எண்ணிக்கொள்ளும். அதில் வெற்றிகளைக் கற்பனைசெய்துகொள்ளும். நீங்களாகவே மறுத்த ஒன்றைப்பற்றிய ஏக்கமே உங்களை விட்டுச்செல்ல கொஞ்ச நாள் பிடிக்கும். அது மனதின் மாயை

 

ஏன்? மனம் என்பது ஆசையால் ஆனது. பௌத்த மரபில் அதை திருஷ்ணை என்கிறார்கள். இருப்பதற்கான ஆசை, நுகர்வதற்கான ஆசை, வெல்வதற்கான ஆசை என அதை பௌத்த மரபு வகைபிரிக்கிறது. நாம் இருநாற்காலிகளைக் கண்டால் ஒன்றில் அமர்கிறோம். நம் மனம் இரண்டிலும் அமர்ந்து பார்க்கிறது. மனிதனுக்கு உலகையே வென்றாலும் இச்சை நிறைவுறாது. மனிதன் கோருவது இப்பிரபஞ்சத்தையே என்று சொல்லலாம். 

 

நம் ஆசைகளுடன் எப்போதுமே அகங்காரமும் இணைந்து கொள்கிறது. நீங்கள் மறுத்த வேலையை இன்னொருவன் செய்தால் அவன் சரியாகச்செய்யக் கூடாதென உங்கள் மனம் விழையும். அது தீய எண்ணத்தால் அல்ல. மாறாக அவ்வேலையை இன்னொருவன் திறம்படச்செய்வதென்பது உங்கள் இருப்பை மறுப்பதாகும். மனிதர்கள் ஒவ்வொரு கணமும் விழைவது தங்கள் இருப்பை. தங்கள் இருப்பின் இன்றியமையாமையை.

 

ஆரோக்ய நிகேதனம் நாவலில் கதாநாயகனாகிய ஜீவன் சிறுவயதில் மஞ்சரி என்னும் பெண்ணை மணம்புரிய விழைகிறான். அவள் பூபேன் என்னும் ஒரு ஜமீன்தார் மகளை மணந்துகொள்கிறாள். ஜீவனுக்கு அது பெரும் அவமானமாக ஆகிறது.  அவளை அடைவதல்ல அவன் பிரச்சினை, அந்த நிராகரிப்பைதாண்டிச்செல்வது என்பதே. அந்தப்பெண்ணால் நிராகரிக்கத்தக்க ஒருவனா நான் என்ற அகங்காரத்தின் எரிதலே அவனை நிம்மதியற்றவனாக ஆக்குகிறது

 

ஜீவன் மணம்செய்துகொள்கிறான். மஞ்சரியைவிட பேரழகியான ஆத்தர்பௌ எனும் பெண்ணை. அவளை நகையால் மூடி கொண்டுபோய் மஞ்சரிமுன் காட்டவேண்டும் என்பதே அவன் கனவு. ஆனால் மஞ்சரி ஊரைவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த விஷயம் ஆத்தர் பௌவிற்கு தெரிகிறது. அவள் மனம் ஆழமாகப் புண்படுகிறது. இன்னொருத்தியின் நிழலாக வாழ நேரும்போது ஏற்படும் அகங்கார அடி அது. அவர்கள் வாழ்க்கை அரைநூற்றாண்டுக்காலம் நீளும் சித்திரவதையாக ஆகிறது.

 

தோல்வியடைந்த உறவுகளில் உள்ள முக்கியமான பிரச்சினை இழப்பு அல்ல. இழப்பை மனிதன் தாங்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் வாழ்க்கை என்பதே ஒரு தொடர் இழப்புதான். நிராகரிப்பு மூலம் அகங்காரம் புண்படுவதே முக்கியமான பிரச்சினை. நிராகரிக்கத்தக்கவனா நான் என்னும் கொந்தளிப்பு. அதை எளிதில் தாண்டிவிடமுடியாது.

 

உங்கள் தோழியின் சிக்கல் இதுவே. அவளால் உங்களை இழக்க முடியும். ஆனால் அவள் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது அளிக்கும் அகங்காரக் காயத்தை தாங்க முடியவில்லை. அதை அன்பென்றும், மிஞ்சும் பாசம் என்றும் மனம் கற்பனைசெய்துகொள்ளும். ஏனென்றால் நாம் எப்போதுமே நம் உணர்ச்சிகளை சிறந்தவை என்றுதான் கற்பனைசெய்துகொள்ள விரும்புவோம்.

 

தூரம் ஒன்றே அந்த அகங்காரச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். காலம் இடம் இரண்டுமே தூரத்தை உண்டு பண்ணுபவை. நம்மை எரியச்செய்யும் ஓர் உணர்வு சற்றே விலகியதும் இல்லாமலாகிவிடும். அந்தப் பெண்ணைப்பொறுத்தவரை உங்களிடமிருந்து விலகுவது மட்டுமே இப்போது  அவளுக்கு விடுதலை அளிக்கும். ஒரு புள்ளியில் நீங்கள் சிறியதாகி கடந்த காலத்துக்குள் புதைந்து மறைவீர்கள்.

 

ஆகவே உங்களைச் சந்திக்காமல் இருப்பதும் தொடர்பு கொள்ளாமலிருப்பதுமே அவளுக்கு நல்லது. மனிதவாழ்க்கை எப்போதும் முன்பக்கம்தான் இருக்கிறது. பின்பக்கம் இருப்பது வாழ்க்கையின் எச்சங்கள் மட்டுமே. உடல் அளவில் நாம் நம்மை ஒருவரிடமிருந்து விலக்கிக் கொண்டோமென்றால் பெரும்பாலும் நாம் மன அளவிலும் விலக முடியும். இது மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆசி. மனிதன் ஒரு மந்தைமிருகம். எந்த மந்தையில் இருக்கிறதோ அதற்கேற்ப மாறும் மனம் கொண்டவன்.

 

அந்தப்பெண் தனக்குரிய இடத்தையும் சூழலையும் வேறெங்காவது கண்டடைய வேண்டும். அதுவே முறையானது. நீங்கள் அவளிடமிருந்து முழுக்க முழுக்க சொல்லாலும் நினைவாலும் விலகிவிட முயலவேண்டும். அதுவே ஒரே வழி. இயல்பான வழி.

 

இம்மாதிரி தருணங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. நம் மனதுக்கு துயரங்களை வளர்த்துக்கொள்ளும் ஒரு வழக்கம் உண்டு. முள்ளைத்தின்ற ஒட்டகம் தன் ரத்தத்தையே சுவைக்க ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள் அதுபோல. துன்பங்களை வளர்த்துக்கொண்டு, மனமுருக்கும் பகற்கனவுகளில் மூழ்கி, விதவிதமான தன்னிரக்கநிலைகளை அடைந்து அதில் ரசிப்பது. பெண்களுக்கு அந்த மனநிலை மேல் ஒரு மோகம் உண்டு 

 

அந்த மனநிலை வாழ்க்கை மீது இருளைப் பரவச்செய்துவிடும். அதிலிருந்து விடுபட ஒரே வழி அதை நேருக்குநேராக பார்ப்பதுதான். இதோ நான் என் துயரங்களை மிகைப்படுத்திக்கொள்கிறேன், இது தேவையில்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதன் மூலமே நாம் வெளிவந்துவிட முடியும்.

 

மேலான உறவுகளை நேர்மையான உணர்வுகளால், நம்பிக்கையால், சமநிலையான கொடுக்கல்வாங்கலால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். கற்பனைகள், நெகிழ்வுகள் மூலம் உண்மையான உறவுகளை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ள முடியாது

 

 

ஜெ

தாரா சங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம்

- Show quoted text -

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 21, 2009

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 13

இளைய யாதவருடன் அரண்மனையிலிருந்து பிரிந்துசென்ற இடைநாழியில் நடக்கையில் அர்ஜுனன் அவர் சுபத்திரையைப் பற்றி பேசுவார் என எதிர்பார்த்தான். ஆனால் அவர் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாக தோன்றியது. அத்தருணத்தில் அது மிகச்சிறிய, பொருளற்ற செயலென தோன்றியது. உடனே ஓர் எண்ணம் வந்தது. அரசியலுக்காகத்தான் அந்த மணம் என்றால் ஏன் நகுலனோ சகதேவனோ சுபத்திரையை கைகொள்ளக் கூடாது? அவளுடைய வயதும் அவர்களுக்குத்தான் பொருத்தமானது. அதையே சொல்லலாம் என அவன் எண்ணியபோது இளைய யாதவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குவதுபோல் பேசினார்.

“இளமையில் நானும் தமையனார் அரிஷ்டநேமியும் சேர்ந்துதான் வடபுலத்து குருகுலங்களுக்கு கல்வி பயிலச்சென்றோம். முரண்படுவனவற்றை மட்டுமே காணும் விழிகள் எனக்கு. இயைபனவற்றை மட்டுமே காணும் விழிகள் அவருக்கு. அத்தனை குருகுலங்களிலும் ஆசிரியருக்கு அணுக்கமானவராக அவர் இருந்தார். ஆசிரியரால் முதலில் புறந்தள்ளப்படுபவனாக நான் இருந்தேன். கற்பனவற்றை கடந்து சென்று அவர் அடுத்த குருவை கண்டடைந்தார். நானோ கற்பனவற்றை தவிர்த்து பிறிதொன்றை கண்டடைந்தேன். நூற்றியெட்டு குருநாதர்களால் வாழ்த்தப்பட்டவராக அவர் இருந்தார். மானுடர் எவரையும் ஆசிரியராக ஏற்காதவனாக இருந்தேன் நான். எட்டு கைகளாலும் திசைகளை அள்ளி தன்னுள் நிறைத்துக் கொண்டார் அவர். என்னுள் எஞ்சியனவற்றை அள்ளி வெளியே இட்டேன் நான். ஆற்றுவனவற்றுக்கு முடிவிலாதிருந்தன எனக்கு. அவரோ செயலின்மையை ஊழ்கமென கொண்டிருந்தார்.”

“நான் அவரை விட்டு விலகினேன். நெடுநாட்களுக்குப் பின்பு துவாரகை எழுந்து கொண்டிருந்தபோது ஒருநாள் நான் அறிந்தேன் என் நகர் வாயிலில் வெள்ளுடை அணிந்த இளைஞரொருவர் வந்து நிற்கிறார் என. என்னை கண்ணன் என்று பெயர் சொல்லி அவர் அழைத்தது வாயிற்காவலர்களை வியப்புறச் செய்தது. எந்நகரத்தவர் என்று கேட்டமைக்கு நவதுவாரகை என்று அவர் மறுமொழி சொன்னார். அச்செய்தி கேட்டதுமே உள்ளுணர்வால் நான் அறிந்தேன், அவர் யாரென்று. படிகளில் இறங்கி முற்றத்திற்கு ஓடி “என் புரவியை வரச்சொல்லுங்கள்” என்று கூவினேன். ஓடிச்சென்று புரவியில் ஏறி “அரச வெண்புரவி என் பின்னால் வரட்டும்” என்று ஆணையிட்டபடி விரைந்து சென்றேன். அரண்மனை வாயிலில் முழுதணிக்கோலத்தில் எப்போதும் சித்தமாக இருக்கும் அரச வெண்புரவி கடிவாளங்களை முதுகில் சுமந்தபடி வெற்றுச்சேணத்துடன் என்னைத் தொடர்ந்து ஓடி வந்தது.

நகரின் சுழல்பாதைகளில் விரைந்திறங்கி அரசநெடும்பாதையில் புழுதி தெறிக்க ஓடி நகர் வாயிலை அடைந்தேன். என் புரவியை கண்டு நகர் மாந்தர் திகைப்பதை ஓரவிழிகளால் கண்டேன். காலை ஒளி ஊறிநின்ற புழுதித்திரைக்கு அப்பால் தொலைவிலேயே கண்டுகொண்டேன், என் ஆடிப்பாவை என அவர் அங்கே நின்றார். பார்த்தா, அவருக்கும் எனக்கும் தோற்றத்தில் எந்தப் பொதுமையும் இல்லை. என்னை விட இருமடங்கு பெரிய உடல் கொண்டவர். இளமையிலேயே அவரை அண்ணாந்து பார்த்து விண்சூழ்ந்த முகத்தைக் கண்டு உரையாடுவதே என் வழக்கமாக இருந்தது. இரு கைகளையும் விரித்து அவர் தோள்களை நான் தழுவிக்கொள்வதுண்டு. விளையாட்டுப் போர்களில் என்னை ஒற்றைக்கையால் தூக்கிச் சுழற்றி தன் தோளில் வைத்து எம்பிக்குதித்து மண்ணில் இறங்குவார்.

படைக்கலம் பயிலாவிட்டாலும் ஆற்றல்மிக்க ஆடல்களில் எப்போதுமிருந்தார். கரைபுரளும் யமுனையில் ஒரு கரையில் இறங்கி மறுகரை நோக்கி நீந்தி கரையேறாமல் திரும்பி வருவார். நாளில் நூற்றெட்டு முறை யமுனையைக் கடந்து நீந்துவதுண்டு. பன்னிரு மல்லர் உண்ணும் உணவை தனி ஒருவராக உண்டு கையூன்றாமல் எழுவார். தோள் வல்லமையில் முதற்தாதையாகிய அருகரின் மைந்தர் பாகுபலிக்கு நிகரானவர் இவர் என்று யாதவகுடிகளில் புகழ் பெற்றிருந்தார். செந்தாமரை வண்ணம் கொண்டவர். என்னுள் எழுந்த எதையும் தானறியாதவர். ஆயினும் என் முதிரா இளமையில் முதன் முதல் இவரைக் கண்டபோதே நான் இவரே என்று உணர்ந்தேன்.

மாமனை வென்று மதுராவை கொண்டபின் தமையனுடனும் தந்தையுடனும் சௌரிபுரம் சென்றிருந்தபோது முதன்முதலாக இவரைக் கண்டதை நினைவுறுகிறேன். தேர் சௌரிபுரத்தின் கோட்டை முகப்பை அணுகியபோது அங்கு கொடிகளும் பாவட்டாக்களும் மலர்த்தோரணங்களும் சூழ மங்கலங்கள் ஏந்திய சேடியர் முன்னிற்க இன்னிசைக் குழுவும் வாழ்த்துரைக்கும் மூத்தோரும் இருபக்கம் நின்றிருக்க சௌரிபுரியின் அரசர் சமுத்ரவிஜயர் எங்களைக்காத்து நின்றிருந்தார். தேர் இறங்கியதும் வைதிகர் கங்கை நீர் தெளித்து வேதச்சொல் உரைத்து எங்களை வரவேற்றனர்.

சூதர் இசையும் வாழ்த்தொலிகளும் சூழ சென்று எந்தை அரசரின் கைகளைப்பற்றிக் கொண்டு முகமன் உரைத்தார். இருவரும் தோள் தழுவிக் கொண்டனர். தந்தைக்குப் பின்னால் தலைதூக்கி நின்றிருந்த இவரைக் கண்டு மலைத்த என் தமையன் என் கைகளைப்பற்றி “மானுடத்தில் இப்படி ஒரு பேருடல் உண்டென்று எவர் எண்ண முடியும்? பிதாமகர் பீஷ்மரும் பால்ஹிகரும் கூட இவரை விட சிறியவர்களே” என்றார். “யாரிவர்?” என்றேன். “சௌரிபுரத்து அரசர் சமுத்ரவிஜயரின் எட்டாவது மைந்தர் இவர். அரிஷ்டநேமி என்று இவரை அழைக்கின்றனர்” என்றார்.

நான் இவரது இறுகிய இடையையும் இரு கிளை விரிந்த ஆலமரத்தடி என தெரிந்த தோள்களையும் நோக்கினேன். தலை தூக்கி மேலே வானில் நின்று புன்னகைக்கும் நீண்ட விழிகளைக் கண்டு புன்னகைத்தேன். தமையனிடம் “மூத்தவரே, இவர் என்னைப் போன்றே உள்ளார்” என்றேன். “மூடா, உளறாதே” என்று சொல்லி என் தலையை தட்டினார். “இல்லை, நான் இவரென இருக்கிறேன்” என்றேன். “கனவில் இருந்திருப்பாய். யாதவகுடியின் தோள் சூம்பிய குழந்தைகள் அனைத்துமே இவரைத்தான் கனவுகாண்கின்றன என்கிறார்கள்” என்றார் தமையன். “இவர் கதைபயின்றால் பின்னர் பாரதவர்ஷத்தில் எவரும் கதை ஏந்தவேண்டியதில்லை. வாலுடன் அஞ்சனைமைந்தர் எழுந்து வரவேண்டியதுதான்.”

அரசர் திரும்பி எங்களை நோக்கி “கம்சர் என் தோழர். அவரை வென்று மதுராவை மீட்ட யாதவ இளவரசர்கள் எனும்போது பேருருக்கொண்ட இளைஞர்களை எண்ணியிருந்தேன். விளையாட்டு மாறாத சிறுவர்களாக இருக்கிறீர்கள்” என்றபடி கைநீட்டினார். இருவரும் சென்று அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினோம். இருகைகளாலும் எங்கள் தோள்களை அணைத்து உடலோடு சேர்த்து திரும்பி தன் மைந்தரிடம் “உனது இளையோர் இவர். என்றும் உன் அருளுக்குரியவர்” என்றார். மூத்தவர் அவரை நோக்கி “கதாயுதம் பயில்கிறீரா மூத்தவரே?” என்றார். அரசர் சலிப்புடன் “இவன் எப்படைக்கலத்தையும் தொடுவதில்லை. உண்பதும் யமுனையில் நீந்துவதும் அன்றி வேறெதையும் செய்வதும் இல்லை” என்றார்.

அக்கணத்தை கடப்பதற்காக என் தந்தை “நெறி நூல்களில் வல்லவர் என்றனர் அமைச்சர்” என்றார். அரசர் “ஆம், ஏழு மொழிகளில் நூல் பயின்றான். நாடாளவிருக்கும் இந்நாட்டு அரசனுக்கு வாளெடுத்து துணைநிற்கவேண்டியவன் இவன். வீரனுக்கு நூல்கள் எதற்கு? அமைச்சுப் பணியாற்றும் அந்தணர்க்குரியவற்றை எல்லாம் கற்று இவன் அடையப்போவதுதான் என்ன?” என்றார். பெருமூச்சுடன் “ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல் கேட்கா தொலைவில் இவன் தலை எழுந்துவிட்டது” என்றபின் என்னை நோக்கி புன்னகைத்து “வருக!” என்று தோள்தொட்டு அழைத்துச் சென்றார்.

இரு அரசர்களும் முன்னால் சென்றபின் அரிஷ்டநேமி என் கைகளை பற்றிக்கொண்டு “இளையவனே, தொலைவிலேயே உன்னைக்கண்டேன். உன் புகழ் என்னை சூதர்சொல்லென குலப்பாடகர் இசையென வந்தடையத் தொடங்கி பல்லாண்டுகளாகின்றன. என் நெஞ்சிலிருந்த நீ பேருருவம் கொண்டவன். கரிய சிற்றுடலாக உன்னைக் கண்டபோது நான் ஏமாற்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் விந்தையான ஓர் உணர்வு எனக்கேற்பட்டது. நான் நீயே என எண்ணிக்கொண்டேன்” என்றார். அவரது இருகைகளையும் பற்றிக்கொண்டு “நானும் அவ்வண்ணமே எண்ணினேன் மூத்தவரே” என்றேன். சிரித்தபடி இருகைகளாலும் என் புயங்களைப்பற்றி பட்டுச்சால்வையென தூக்கிச் சுழற்றி தன் தோளில் ஏற்றிக் கொண்டார். வெண்யானை மேல் ஏறிச் செல்லும் இந்திரன்போல் அவர் தோள்களில் அமர்ந்து அந்நகரின் தெருக்களில் சென்றேன். எங்கள் உறவு அன்று தொடங்கியது.

அன்று துவாரகையில் என் வாயிலில் வந்து இவர் நின்றபோது கடுந்தவமியற்றி கற்ற கல்வியால் உடல் மெலிந்து தோள் சிறுத்திருந்தார். ஆயினும் வெண்கல்லில் கலிங்கச் சிற்பி செதுக்கி எடுத்த சிற்பம் போல் தோன்றினார். அருகே சென்று தாள்பணிந்து “என் நகருக்கு வருக மூத்தவரே! இது உங்கள் நிலம். உங்கள் சொல் இங்கு திகழ்வதாக!” என்றேன். என் தோள்களை அள்ளி தன் பெரிய நெஞ்சோடு அணைத்து “உன் நகர் குறித்த செய்திகளை சில ஆண்டுகளாக கேட்டேன் இளையவனே. ஆனால் மண்ணில் இப்படி ஒரு விந்தையை நீ நிகழ்த்தி இருப்பாய் என்று எண்ணவில்லை. ஆனால் நீ நிகழ்த்தி இருப்பதைக்கண்டு எவ்வகையிலும் நான் வியக்கவும் இல்லை” என்றார். “ஏனெனில் என் கனவுகளில் இந்நகரை நானே அமைத்திருந்தேன். இதோ இப்பெருந்தோரணவாயில், நீண்டு செல்லும் இச்செம்மண் பாதை, இருபக்கத்திலும் கீழே கதிர் பட்டு மின்னும் மாளிகை முகடுகள். ஒவ்வொன்றும் நான் முன்பு கண்டது போல் இருக்கின்றன. இவற்றை நானே சமைத்தேன் என்று சித்தம் மயங்குகிறது” என்றார்.

“அவ்வண்ணமே ஆகுக மூத்தவரே. தாங்கள் இதை அமைத்தவரென்றே இருக்கட்டும்” என்றேன். அவரை அணிப்புரவியில் ஏறச்செய்து என் அவைக்கு கொண்டு சென்றேன். என் அரசுச்சுற்றமும் படைத்தலைமையும் அவரை அடிபணிந்து வரவேற்றனர். அவை எழுந்து அவருக்கு முறைமை செய்தது. என் மாளிகை நிறைந்திருந்தார். பார்த்தா, எப்போதும் இவரை நிகரற்ற வல்லமை கொண்ட வெண்காளை என்றே எண்ணுவதுண்டு. சிம்மமல்ல, வேங்கை அல்ல, மதவேழமும் அல்ல. தடைகள் எதையும் கடந்து செல்லும் பெருவல்லமை உடலில் உறைகையில் ஒவ்வொரு அசைவிலும் அமைதி நிறைந்த ஏறு. வாணாளில் ஒருமுறையேனும் சிற்றுயிரையேனும் அது கொல்லாது. அதன் ஆற்றலென்பது மாபெரும் கண்டாமணிக்குள் உறையும் இசை போன்றது.

சின்னாட்களிலேயே துவாரகைக்கு அரசரென இவர் ஆவதைக் கண்டேன். செல்லும் இடமெல்லாம் பிறிதொன்றிலாத பணிவையே அவர் பெற்றார். அவரை மண் நிகழ்ந்த விண்ணவன் என்றே மக்கள் எண்ணினர். அவர் சொல்லெல்லாம் ஆணை என்றாயிற்று. அயல் வணிகர் வந்து என் அவை பணிந்த பின்னர் ஒரு முறை அவர் முகமும் பார்த்துச் செல்ல வேண்டும் என்று விழைந்தனர். அந்தகவிருஷ்ணிகள் அவரையே தங்கள் அரசர் என்று எண்ணத்தலைப்பட்டனர். பின்னர் அந்தகர்களுக்கும் அவரே தலைவரென்றானார்.

அவரைப்பற்றி ஒவ்வொருநாளும் ஒரு புகழ்ச்செய்தி வந்து அரண்மனையில் ஒலிக்க மெல்ல சத்யபாமா அவர்மேல் காழ்ப்பு கொண்டாள். “அந்தகர்களுக்கும் அவருக்கும் என்ன உறவு? அந்தகர்களுக்கு தனிக்குலவரிசையும் பெருமுறைமைகளும் உள்ளன” என்றாள். “மக்கள் கண்ணெதிரே காண விழைகிறார்கள்” என்றேன். “அப்படி எதை காண்கிறார்கள் மக்கள்? இரண்டடி உயரம் மிகுதி. அதை ஒரு மாண்பென்று கொள்கிறார்களா?” என்றாள். “அவரது மென்மையும் அமைதியும் அவர்களுக்குத் தெரிகின்றன” என்றேன். “மிகையான உயரம் கொண்டவர்கள் அனைவருமே மந்தமானவர்கள்… இதை எங்கும் காணலாம்” என்றாள். “நீ அவரை உனக்குப் போட்டியென எண்ணுகிறாயா?” என்றேன். “அவர் எனக்குப் போட்டியா? அந்தககுலத்திற்கு நான் அரசி. அதை இக்கணம் வரை எவரும் எதுவும் மாற்றவில்லை” என்று சீறினாள். அவளுடைய சிவந்த முகம் மூச்சிரைப்பதை வியர்ப்பு கொள்வதை நோக்கி புன்னகைசெய்தேன்.

அரக்கன் என்றுதான் சத்யபாமா அவரை சொல்வாள். அவர் வேண்டுமென்றே தன் புகழை உருவாக்குகிறார் என்றாள். “அவருக்கு தெளிவான நோக்கங்கள் உள்ளன. துவாரகையை தான் அடையவேண்டுமென எண்ணுகிறார். ஐயமே இல்லை” என்றாள். “உலகை முழுக்க நோக்கும் கண்கள் கொண்டிருக்கிறீர்கள். நின்றிருக்கும் காலடிகள் தெரியாத அளவுக்கு உங்கள் தலை மேலே சென்றுவிட்டது.” நான் அவளிடம் விவாதிக்கவில்லை. அனைத்தையும் விரும்பிய வண்ணம் காட்டும் மாயக்கண்ணாடியை நாம் மனம் என்கிறோம். “அவரது திட்டங்களை நான் ஒப்பப்போவதில்லை. வெறுமனே தசைகளைக் காட்டி எவரும் இப்பெருநகரை வெல்ல எண்ணவேண்டியதில்லை. இது அந்தககுலத்தின் அரசியான என் கனவு கல்லில் எழுந்த நகரம்” என்றாள்.

துவாரகையின் அரசவைக்கு மூத்தவர் அரிஷ்டநேமி வருவதில்லை. அவருக்கு அரச அவைகள் உகக்கவில்லை. அரச முறைமைகளும் முகமன் சொற்களும் சொல்சூழ்தலும் செய்திநுணுக்கங்களும் சலிப்பூட்டின. “ஐந்து சொற்களில் சொல்லப்பட வேண்டியவற்றை ஐந்தாயிரம் சொற்களில் மடித்து மடித்து உரைத்தல்தான் அரசு சூழ்தல்” என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். “அவ்வைந்து சொற்களின் அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டு உரைப்பதுதான் அது” என்று நான் மறுமொழி சொன்னேன். “ஐந்துகோடிச் சொற்களை எடுத்தாலும் ஒரு சொல்லின் பின் விளைவை சொல்லிவிட முடியுமா இளையோனே?” என்றார். புன்னகைத்தேன்.

“அவைக்கு வருக மூத்தவரே!” என்று ஒவ்வொரு முறையும் அழைக்கும்போதும் “இந்த அவை எனக்குரியதல்ல இளையோனே” என்று சொல்லி விலகிச் சென்றுவிடுவார். துவாரகையின் கடற்கரையோரமாக அமைந்த கல் மண்டபங்கள் ஏதேனும் ஒன்றில் கால் மடித்து கைமலர்த்தி ஊழ்கத்தில் அமர்ந்து அலைகளை நோக்கி இருப்பதையே அவர் விழைந்தார். அன்று அவரை அவைக்கு நான் அழைத்து வரச்சொன்னபோது வந்தே ஆகவேண்டும் என்று நான் உரைப்பதாக மேலும் ஒரு சொல்லை சேர்த்து அனுப்பினேன். அச்சொல்லின் அழுத்தத்தை உணர்ந்து அவைக்கு வந்தார்.

அவை நிகழும் நேரத்தை மறந்திருப்பார் என்றும் இறுதிக்கணத்தில் எப்போதோ நினைவு கூர்ந்து கிளம்பி வந்தார் என்றும் தோன்றியது. எளிய அரையாடையுடன் தோளில் நழுவிய வெண்ணிற மேலாடை அணிந்து விரைந்த காலடிகளுடன் அவைக்குள் நுழைந்தார். பேருடல் கொண்டவராதலால் இடைநாழியில் அவருடைய காலடி ஓசைகளைக் கேட்டே அது அவர்தான் என உணர்ந்தேன். அவைக்கு அவர் வருவதை எவரும் முன்னரே எண்ணியிருக்கவில்லை. எனவே காவலன் உள்ளே வந்து அவரது அவை நுழைவை அறிவித்தபோது அனைவரும் வியப்புடன் வாயிலை நோக்கினர்.

திறந்த வாயிலினூடாக பெரிய வெண்தோள்களும் தாள் தோயும் நீண்ட கைகளுமாக உள்ளே வந்தார். கூடியிருந்த ஐங்குலங்களையும் எட்டு பேரவைகளையும் சார்ந்தவர்களைப் பார்த்து திகைத்து திரும்பி விடுபவர் போல ஓர் உடலசைவைக்காட்டி ததும்பியபடி அங்கு நின்றார். நான் எழுந்து “வருக மூத்தவரே! இந்த அவை தங்களுக்காக காத்துள்ளது” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார், முகமனை திருப்பி உரைக்கவில்லை. காவலன் அவரது குடிமுறைமையை அறிவித்து பீடம் கொள்ளும்படி கோரினான். அவை அவருக்கு தலை வணங்கியது. அவர் வந்து என் முன்னால் ஓசையெழ பீடத்தில் அமர்ந்தார். பெரிய கைகளை மடித்து மடிமேல் வைத்துக்கொண்டார். முதியவேழத்தின் மிகப்பெரிய தந்தங்கள் போன்றவை அவரது கைகள் என எண்ணிக்கொண்டேன். அவை ஆண்மையும் அழகும் கொண்டவை. ஆனால் அத்தனை பெரும்படைக்கலத்தால் ஆற்றவேண்டிய பணிகளென ஏதுமில்லை. ஆகவே எப்போதும் அவை செய்வதறியாமல் ததும்பிக்கொண்டிருக்கின்றன.

என் அரியணைக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்த சத்யபாமையின் உடலில் எழுந்த மெல்லிய அணிகளின் ஓசையை நான் கேட்டேன். அது ஒரு சொல் என நான் அறிந்தேன். அவள் ஒரு கணமும் விழிதூக்கி அவரை நோக்கவில்லை. அவள் உடலின் அணிகலன்கள் அனைத்தும் விழிகளாக மாறி அவரை நோக்கிக் கொண்டிருந்தன. அன்றைய அரச முடிவுகளை ஆராயும் ஆணையை அமைச்சருக்கு விடுத்தேன். அக்ரூரர் என்னை நோக்கியபின் குழப்பத்துடன் மூத்தவரையும் நோக்கி பின்பு முடிவு செய்து இயல்பாக உடலைத் தளர்த்தி தன் இருக்கையில் அமர்ந்தார். அமைச்சர் அரச முறைமைப்படி ஒவ்வொரு செய்தியாக சொல்லி அவற்றின் வருகைகளையும் செல்கைகளையும் விளக்கினார். குடியவையில் சிலர் ஐயங்கள் கேட்டனர். சிலர் திருத்தங்கள் கூறினர். அதன்பின் அனைவரும் கைகளைத்தூக்கி அம்முடிவுகளை ஒப்பினர். முழு ஒப்புதல் பெறப்பட்ட முடிவுகளை ஓலை நாயகங்கள் எழுதிக்கொண்டனர்.

ஒவ்வொரு முடிவாக அவை கடந்து செல்லச் செல்ல அவையிலிருந்தவர்களே மூத்தவர் அங்கு வந்திருப்பதை மறக்கத்தொடங்கினர். அம்முடிவுகளையும் விளைவுகளையும் எல்லைகளையும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தலைப்பட்டனர். அக்ரூரரும் சத்யபாமையும் மட்டுமே சற்று நிலையழிந்த உள்ளத்துடன், அந்நிலையழிவு கையசைவிலும் கால்விரல் சுழற்றலிலும் தெரியும்படியாக அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரைத் தவிர பிறரை என் விழிகளால் நோக்கினேன். அவர்கள் இருவரையும் உள்ளத்தால் உற்று நோக்கிக்கொண்டும் இருந்தேன்.

முடிவுகள் அனைத்தும் அமைந்ததும் அமைச்சர் என்னை நோக்கி “இவற்றை அரசாணைகளாக பிறப்பிக்க தங்கள் கைச்சாத்து கோருகிறேன்” என்றார். நான் எழுந்து முறைமைப்படி என் முத்திரை மோதிரத்தை அவரிடம் கொடுத்து “இப்பதினெட்டு ஆணைகளுக்கும் இதனால் நான் கைச்சாத்திடுகிறேன்” என்றேன். அவை “ஆம் அவ்வாறே ஆகுக!” என்றது. அங்கு நிகழ்வது எதையும் உணராதவர் போல கைகளை மடிமேல் வைத்து நெடிது ஓங்கிய உடலை நிமிர அமர்த்தி அரைவிழி மூடி அமர்ந்திருந்தார் மூத்தவர். ஓங்கிய உடல் அவரை அயலவனாக்கியது. அவரை பிறர் வியக்கவும் மதிக்கவும் செய்தது. அதுவே அவரை விலக்கியும் வைத்தது. அவர் அங்கு ஒரு தூண் என மாற அவருக்குக் கீழே அனைத்தும் தங்கள் இயல்பில் நடந்துகொண்டிருந்தன.

அவை முடிந்ததும் நான் அவரிடம் “மூத்தவரே, உங்களைப்பற்றி ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த அவையில் அதைப்பற்றி விசாரிக்க வேண்டுமென்று என்னிடம் கோரப்பட்டது. ஆகவேதான் இந்த அவைக்கு தாங்கள் அழைக்கப்பட்டீர்” என்றேன். அவரது விழிகளில் ஒரு கணம் வந்து சென்ற வினாவை கண்டேன். பதற்றமோ ஐயமோ இல்லை, எளியதொரு வினா மட்டுமே. என் சொற்கள் அவையை உறைய வைத்தன. குலமூத்தார் ஒருவர் ஏதோ சொல்வதற்கு என கைதூக்கி எழுந்தபின் தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்துகொண்டார்.

அக்ரூரர் எழுந்து கைகூப்பி “நம் குலத்தின் கொடி அடையாளம் என்று சொல்லப்படுபவர் தங்கள் மூத்தவராகிய அரிஷ்டநேமி. அவர்மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன என்பதை அறிய இவ்வவை காத்துள்ளது” என்றார். நான் “என் குற்றச்சாட்டு அல்ல. அத்தகைய எச்சொற்களையும் என் உள்ளம் ஒரு போதும் எண்ணாது. துவாரகையின் மக்களில் ஒரு சாரார் இதை சொல்கிறார்கள். அந்திக்கு சேக்கேறும் பறவைகளில் சில பறவைகள் இறுதிக்கணம் வரை கிளைகளில் அமைவதில்லை. அத்தகைய இறுதிப் பறவைகளின் குரல் இது என்று கொள்க!“ என்றேன். “ஆனால் அரசன் என அனைத்துக்குரல்களையும் நான் கேட்டு உசாவியாகவேண்டும்.”

“அவையோரே, துவாரகை அந்தககுலத்தாராலும் விருஷ்ணி குலத்தவராலும் கட்டப்பட்டது என்று அறிவீர். இருகுலத்து மூத்தவரோ அல்லது அவர்களில் வல்லவரோ இந்நகருக்கு அரசனாக முறையுடையவர். இன்று அந்தககுலத்திற்கும் விருஷ்ணி குலத்திற்கும் ஆற்றல்மிக்கத் தோன்றலாக இருப்பவர் சௌரிபுரத்து இளவரசர் அரிஷ்டநேமி அவர்களே. தோள் வல்லமைக்கு நிகராக தவ வல்லமையிலும் முதிர்ந்தவர். ஆகவே அவரே இவ்வரியணை அமர தகுதி வாய்ந்தவர். முறைமை மீறி இங்கு நான் அமர்ந்திருப்பதனால் வானம் பொய்க்கவும் காற்று சினக்கவும் கடல் எல்லை மீறவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்” என்றேன்.

“இப்படி ஒரு சொல்லை இதுவரை கேட்டதில்லை” என்றார் அக்ரூரர். “நான் கேட்டேன்” என்றேன். “அவ்வாறு சில வீணர் அலர் உரைத்தால் அதில் இவரது பிழை என்ன?” என்றார் குலமூத்தார். “ஆம், அறிவீனர்களின் சொற்களுக்கு எவ்வகையில் நம் மூத்த இளவரசர் பொறுப்பாவார்?” என்றார் அக்ரூரர். நான் புன்னகைத்து “அறிவின்மையாயினும் அது விதையின்றி முளைப்பதில்லை அல்லவா? அந்த விதை எதுவென்பதை இந்த அவை முடிவெடுக்க வேண்டியுள்ளது” என்றேன். “என்ன சொல்கிறீர்கள் அரசே? அவ்வெண்ணத்தை மக்களிடம் நம் மூத்த இளவரசர் உருவாக்குகிறார் என்கிறீர்களா?” என்றார் அக்ரூரர் பதற்றத்துடன்.

“இல்லை, அவர் எண்ணி அதை உருவாக்கவில்லை. எண்ணாது அவ்விழைவை அவர் தன் சொற்களாலோ செயல்களாலோ வெளிப்படுத்தவும் இல்லை. அதை நான் அறிவேன். ஆனால் அவ்வெண்ணத்தை அவரது உடல் உருவாக்குகிறது. அவையோரே, உள்ளம் தன் ஆழத்தில் ஒளியுடனும் உடல் இருளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இப்புவியில் அனைத்து விழைவுகளும் உடலால் மட்டுமே உணரப்படுகின்றன, வெளிப்படுத்தப்படுகின்றன. அதை மறைப்பதற்கும் திசை மாற்றுவதற்குமே சொற்கள் துணை சேர்க்கின்றன” என்றேன்.

என் குற்றச்சாட்டு தெளிவடைந்ததும் சொல்லடங்கி அவையினர் அமர்ந்திருந்தனர். நான் சொன்ன எச்சொல்லையும் கேட்காதவர் போல் ஒளிரும் புன்னகையும் ஊழ்கநிழல் படிந்த விழிகளுமாக அரிஷ்டநேமி அமர்ந்திருந்தார். “தங்கள் பேருடல், திரண்ட தோள்கள் அவைதாம் இச்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றன மூத்தவரே. இந்நகரம் தங்களுக்குள்ளது என்று எளியோர் நம்புதல் அதனால்தான்” என்றேன். “நான் என்ன செய்யவேண்டும்?” என்று அவர் மென்மையான குரலில் கேட்டார். “நெறிகளில் முதன்மையானது காட்டுநெறியே என்கின்றன தொன்மையான ஸ்மிருதிகள். எது யானைகளுக்கும் சிம்மங்களுக்கும் உரியதோ அதுவே இங்கு திகழ்க! நான் தங்களை மற்போருக்கு அழைக்கிறேன். இம்மக்கள் நடுவே நாம் தோள்பொருதுவோம். வென்றீர்களென்றால் இந்நகரை நீங்கள் கொள்ளுங்கள்” என்றேன்.

“நான் போர்புரிவதேயில்லை இளையோனே. போர்க்கலை என எதையும் கற்றதுமில்லை” என்றார் அரிஷ்டநேமி. “அப்படியென்றால் அதை இந்நகர் அறியட்டும். இங்கு எம் குலத்தோர் மத்தியில் உங்களை நான் வென்றேன் என்றால் இவ்வரியணைக்குரியவன் என்பதை ஐயம்திரிபற நிறுவியவனாவேன். பிறிதொரு சொல் எழாது இத்தொடக்கத்திலேயே அனைத்தையும் முடித்துவைக்க முடியும்” என்றேன். “போரிடுதல் என் உள்ளம் கொண்ட உண்மைக்கு ஒவ்வாதது இளையோனே” என்றார் அரிஷ்டநேமி. “தாங்கள் போரிட்டே ஆகவேண்டும். ஏனெனில் தங்கள் உடல் அவ்வறைகூவலை விடுத்துவிட்டது. அதை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன்” என்றேன்.

அக்ரூரர் “ஆம், அப்படி ஒரு சொல் எழுந்தபிறகு அதை நிலை நாட்டுவதே அரசுக்கு நல்லது” என்றபின் திரும்பி கை தொழுது “மூத்த இளவரசே, துவாரகையில் ஐயச்சொல் எழாது முழுமை நிகழ்வதற்காக தாங்கள் இவ்வறைகூவலை ஏற்றாக வேண்டும்” என்றார். சிலகணங்கள் எண்ணியபின் “எனக்கு அதில் எவ்வேறுபாடும் இல்லை. அவ்வண்ணமே ஆகுக!” என்றார் அரிஷ்டநேமி. அவையில் ஒரு கலைந்த அமைதியின்மை பரவுவதை உணர்ந்தேன். நான் வெல்வது அரிது என்னும் எண்ணம் ஒருபுறம். ஆனால் மூத்தவர் போர்க்கலை அறியாதவர் அல்லவா என்னும் ஆறுதல் மறுபுறம். சத்யபாமையின் விழிகள் எப்படி அலைபாய்ந்து கொண்டிருக்கும் என எண்ணி புன்னகைத்தபடி அவற்றை நோக்காமல் அவை கலையும்படி கையசைத்து ஆணையிட்டேன்.

தொடர்புடைய பதிவுகள்

கார்ல் சகன், ‘தொடர்பு’

$
0
0

1

முடிவின்மையின் தொடர்பு

‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் ஆளாகவில்லை. அவளது தேடல் அவளை வானவியல் ஆய்வாளராக ஆக்கியது.

அமெரிக்காவில் உள்ள ப்ரொஜெக்ட் அர்கஸ் வானவியல் ஆய்வு நிறுவனத்தில் எல்லி ஆய்வாளராக ஆகிறாள். பிரமாண்டமான தொலை ஆடிகள் மூலம் வானத்தை இடைவிடாது கவனித்துக் கொண்டிருக்கிறது ப்ரொஜெக்ட் அர்கஸ் ஆய்வு நிலையம். வானத்தை நோக்கி பலவிதமான நுண்கதிர்கள் மூலம் செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. அச்செய்தி மன எல்லைக்கெட்டா தொலைவுவரை, காலமுடிவுவரை, சென்றபடியே இருக்கும். அங்கே நம்மால் அறியமுடியாத பெருவெளியில் வாழும் நம்மைவிட மேலான உயிர்கள் அத்தகைய செய்திக்காக அங்கிருந்து வானத்தை துழாவிக் கொண்டிருக்கக்கூடும், அல்லது அவர்களுடைய செய்தி வலையில் அச்செய்தி தற்செயலாகக் சென்று விழக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.

 

அது மிக எளிய செய்தி, சீரான அதிர்வொழுங்கு மட்டும்தான் அது. அது எவராலோ செயற்கையாக உண்டு பண்ணப்பட்டது என அதைப் பெறுபவர்கள் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. அவை அவர்கள் பெற்று திருப்பி தொடர்பு கொள்வார்கள் என்று நம்பப்பட்டது. எங்கோ இருக்கும் எவருக்காகவோ அந்தச்செய்தி சென்றுகொண்டே இருந்தது. ஒவ்வொரு கணமும்.

 

ஆனால் பல வருடங்களாகியும் அதற்குப் பதில் வரவில்லை. ஒருவேளை அங்கு யாருமே இல்லாமல் இருக்கலாம். பிரபஞ்சத்தில் நாம் உண்மையிலேயே தன்னந்தனியர்களாக இருக்கலாம். பருப்பொருளில் நிகழ்ந்த ஒரு தற்செயலால் உருவான மீண்டும் நிகழவே நிகழாதுபோன, அபூர்வமான ஒன்றுதான் பூமியில் உள்ள உயிர் என்பது உண்மையாக இருக்கலாம் அல்லது நமக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே உடைக்க முடியாத ஒரு இடைவெளி இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மற்ற மாபெரும் சிருஷ்டிகள் நம்மை இம்மியும் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

மெல்ல ஆரம்பகால ஆர்வங்கள் இல்லாமலாகி, மற்றவர்களுக்கு வானத்துக்குச் செய்தி அனுப்புவது ஒரு வெற்றுச் சடங்காக மாறிவிட்டது. அதை அனேகமாக எவருமே கவனிப்பதில்லை. வீணாகிப்போன ஒரு பிரார்த்தனை மாதிரி அந்த செய்தி வானில் மறைந்துகொண்டே இருந்தது. ஆனால் எல்லி அரோவேயைப் பொறுத்தவரை அப்படியல்ல. அவளுக்கு நம்பிக்கை இருந்தது, வானம் என்றாவது பதில் சொல்லும் என. இல்லையேல் அந்த ஆதாரமான கற்பனையே மனித மனத்தில் வந்திருக்காதே.

 

வானம் பதில் அனுப்பியது. ஒருநாள் இரவில் அதிர்வைப் பெறும் கருவிகள் அதிர்ந்தன. கதிர்ப் பதிவிகளை வந்தடைந்தது சீரான மறுக்க முடியாத ஓர் அதிர்வு. செய்தி கிடைத்த தகவல் உலகமெங்கும் பரவியது. உலகில் அது பலவிதமான பதற்றமான விவாதங்களைக் கிளப்பியது. பிரபஞ்சமே சட்டென்று இன்னொன்றாக மாறிவிட்டது. வானத்தின் பொருள் சட்டென்று பலமடங்கு அழுத்தம் கொண்டு விட்டது. பிரபஞ்சத்தில் நாம் தனியல்ல என்னும் போது இயற்கை, மனிதமனம், வரலாறு எல்லாமே புதிய ஒளியில் தெரிய ஆரம்பித்தன.

 

அரசியல் சமூகவியல், ஆன்மீக தளங்களில் சிக்கலான கேள்விகள் எழுந்தன. அறியாத சக்திகளுக்கு அப்படி பூமியை அடையாளம் காட்ட அமெரிக்க அரசுக்கு உரிமை உண்டா? பூமியில் மனிதனை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளில் அச்செய்தி மூலம் உருவாகும் மாறுதல்கள் எப்படிப்பட்டவை? பூமி இனிமேல் பிரபஞ்சத்தின் வேறு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்குமென்றால் இங்குள்ள மதங்களுக்கு என்ன பொருள்? கடைசியாக, தொடர்பு கொள்வது கடவுளா, சாத்தானா?

 

இந்நாவல் சாரம் நுட்பமான கவித்துவத்துடன் வெளிவரும் பகுதி இதன் துவக்கத்திலேயே வருகிறது. எல்லி அரேவே தன் காரில் அடர்ந்த காட்டு வழியாகச் செல்லும் போது ஒரு முயல் கூட்டம் எதிர்ப்படுகிறது. ஒளிரும் கண்களுடன் துடிதுடிக்கும் வால்களுடன் அந்தக் கூட்டம் அப்படியே பிரமித்து நிற்கிறது. அவை அதற்கு முன்பு காரையோ அத்தனை பெரிய ஒளியையோ கண்டிருக்க வாய்ப்பில்லை. அது அவ்வுயிரினங்களுக்கு ஒரு மாபெரும் ஆன்மீக அனுபவமாக இருக்கலாம் என எல்லி எண்ணிக் கொள்கிறாள்.

 

மனிதன் என்ற சின்னஞ்சிறு உயிரினம் இந்தப் பிரபஞ்ச வெளியில் அதைவிட பிரமாண்டமான சக்திகளால் எதிர்கொள்ளப்படுவதும் இதேபோன்ற ஓர் அனுபவம்தான். மனிதன் தனக்குத் தெரியாத விஷயங்கள் மீதான பெருவியப்பை கற்பனையால் மனதை விரித்து அள்ள முயலும்போது அவனுக்கு வேறு ஒரு பிரபஞ்சம் உருவாகிறது. ஆன்மீகம் என்பது அதுதானா?

 

செய்தி தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அறிவியல் நிபுணர்களின் குழு அந்தச் செய்தியை பிரித்தறிய முயன்றது. பலநாள் ஆய்வுக்குப் பிறகு அந்த சமிக்ஞைகளைப் புரிந்துகொண்டு பதில் அனுப்பினார்கள். அதன்பிறகு செய்தி விரிவடைய ஆரம்பித்தது. அது பிரமாண்டமான ஒரு இயந்திரத்தின் வரைபடம். அந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டல்கள் அதைத் தொடர்ந்து வந்தன. பூமிக்கு வெகுவாக விலகி நமது பால்வழிக்கு வெளியிலுள்ள வேகா (Vega) என்ற நட்சத்திரத்தில் இருந்து அந்த சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன என்று தெரியவந்தது.

 

அது ஒரு பொறியா? அல்லது வரமா? அதை அனுப்புகிறவர்கள் யார், அவர்கள் நோக்கம் என்ன என்ற சந்தேகங்களால் பூமி அதிர்கிறது. அத்தனை தூரத்தில் இருந்து அதைப்பெற்று நமக்குப் பதில் அனுப்புபவர்கள் நம்மைவிட பலமடங்கு மேலானவர்கள். ஒருவேளை அவர்கள்தான் கடவுள். அதையொட்டி மிக விரிவான தத்துவப் பிரச்சினைகள் முளைக்கின்றன. மதங்களின் அடிப்படைகள் உலுக்கப்படுகின்றன.

 

பல்வேறு மதங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அறிவின் மூலம் இந்த நிகழ்ச்சியைப் புரிந்து வகுத்துக் கொள்ள முயல்வதன் விரிவான சித்திரத்தை அளிக்கிறது நாவல். அன்பு, பாசம் என்ற எளிய எல்லைகளிலிருந்து விரிய முடியாமல்  சிறிய பிரபஞ்ச தரிசனத்துடன் கிறித்துவம் தடுமாறுகிறது. ஆனால் பாமர் ஜோஸ் எனும் ஒரேயொரு கிறித்துவ மத போதகர் மட்டும் தன் சுயமான ஆன்மீக வல்லமையால் அந்தச் சவாலைத் தாண்டிச் சென்று தன் பிரபஞ்ச தரிசனத்தின் அடிப்படையாக கிறித்துவம் கொண்டுள்ள பிரபஞ்சம் தழுவிய பேரன்பை அறிந்து கொள்கிறார். பௌத்தமும் இந்துமரபும் தன் முரணியக்க தத்துவக்கோட்பாடுகளினாலும், எல்லைகள் இல்லாமல் விரிவடையச் சாத்தியமானதுமான தரிசன அடிப்படையாலும் இச்சவாலை சந்திக்கின்றன.

 

இயந்திரம் எல்லாத் தடைகளையும் மீறிக் கட்டி எழுப்பப்படுகிறது. அது மிகப் பெரிய மிக விசித்திரமான இயந்திரம்தான். ஆனால் அது பல்லாயிரம் ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ள வேகாவுக்கு எப்படி இட்டுச் செல்ல முடியும் என யாருக்கும் புரியவில்லை.  அதற்குத் தேவையான எரிபொருள் என்ன? அங்கு சென்று சேரும் மிகமிக நீண்ட கால அளவுவரை யார் உயிர்வாழ முடியும்? ஆனால் வேறு வழியில்லை. அந்தச் சோதனைக்கு மனிதன் ஆட்பட்டே ஆகவேண்டும். ஒருபோதும் தவறவிடக்கூடாத ஒரு வாய்ப்பு அது.

 

குறிப்பிட்ட நாளில் இயந்திரத்திற்குள் புகுந்து மூடிக் கொள்கிறார்கள். வெளியே நிற்பவர்களுக்குத் தெரிவது இயந்திரம் இயங்குவதும் அதிர்வதும் மட்டும்தான். உள்ளே இருப்பவர்கள் ஒரு நிலைகுலைவை உணர்கிறார்கள். மயக்கம்போல இருக்கிறது. இயந்திரத்தின் உள்ளே இருந்த வாகனம் வான்வெளியைத் தாண்டி பிரபஞ்சத்தின் மறுபகுதிக்குச் சென்றுவிட்டது. சற்றும் காலமே தேவைப்படாமல்.

 

அந்தப் பயணம் குறித்து நாவல் இவ்வாறு விளக்குகிறது. பிரபஞ்சம் ஒரு ஆப்பிள் என்றால் அதில் புழுத்துளைகள்போல சில காலக் கொப்புளங்கள் இருக்கின்றன. அவை பிரபஞ்சத்தில் காலத்திலும் இடத்திலும் உள்ள ஒருவகை சுரங்கப்பாதைகள். அவற்றின் வழியாக காலமே இல்லாமல் பிரபஞ்சத்தின் மறுபக்கத்துக்குச் சென்றுவிடமுடியும். எல்லியும் மற்ற ஆய்வாளர் குழுவும் அவ்வாறுதான் செல்கிறார்கள், பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இன்னும் கிரகங்களாக உருமாறாத விண்கற்களாலான ஒரு புதிய நட்சத்திரக் கூட்டத்திற்கு. அங்கே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த பிரபஞ்ச உயிர்கள் விட்டுச்சென்ற காலியான கிரகங்களைக் காணமுடிகிறது. அவர்கள் மேலும் வளர்ச்சியடைந்து அடுத்த கட்ட வாழ்க்கைக்குச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

புதிய பிரபஞ்சத்தின் வியப்பூட்டும் பிரமாண்டமான காட்சிகளுக்குப் பிறகு அவர்களை அங்கு அழைத்த அந்த சக்திகளை அவர்கள் சந்திக்கிறார்கள். எல்லி சென்றிறங்குவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிலப்பரப்பில். அது அவள் சிறுமியாகத் தன் தந்தையுடன் கோடையில் நீந்தி விளையாடிய அழகிய ஒளிமிக்க கடற்கரை. அது கனவா பிரமையா என அவளால் நிதானிக்க முடியவில்லை. அங்கே அவள் தந்தை அவரது கனிவான பாசம் பொங்கும் சிரிப்புடன் அவளை சந்திக்கிறார். அவளுடன் உரையாடுகிறார். பிறகு அவளுக்குத் தெளிவாகிறது. அந்த நிலம் அவளுடைய அந்தரங்கத்திலிருந்து அவர்களால் அறிந்து கொள்ளப்பட்டு அவளுக்கென உருவாக்கப்பட்டது. அவளை வந்து சந்திப்பது சுயமான உடல்வடிவம் இல்லாத, விரும்பிய உடலை எடுக்கும் வல்லமை கொண்ட, புற யதார்த்ததை விரும்பியபடி உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட மனம் மட்டுமேயான அந்த பிரபஞ்ச மனிதர்களில் ஒருவர்தான்!

 

அவருடனான உரையாடலில் எல்லிக்குக் கிடைக்கும் பிரபஞ்சச் சித்திரம் அவளை கற்பனையின் அதிகபட்ச எல்லைக்கு அப்பால் தூக்கி வீசுகிறது. அந்த இடம் பூமி இருக்கும் நட்சத்திர மண்டலத்திற்குரிய பால்வழிக்கு வெகுதூரத்தில், 600 மில்லியன் ஒளி வருடங்களுக்கு அப்பால் சிக்னஸ்ஏ (Cygntus A) என்ற, சூரியனைவிட பல லட்சம் மடங்கு சக்தியை உருவாக்கும் நட்சத்திரத்தின் அருகே இருப்பது. கருந்துளைக்குள் பருப்பொருளைக் கொட்டி அவற்றை சிக்னஸ் ஏ எனப்படும் நட்சத்திரமாக ‘கட்டிக்’ கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் பிரபஞ்சத்தின் பொறியாளர்கள், கட்டுமான நிபுணர்கள். அது ஒரு நட்சத்திர மண்டலவாசிகளின் கூட்டு முயற்சி என்கிறார் அவர்.

 

‘கேலக்ஸிகளுக்கிடையே கூட்டுத் திட்டமா?’ அவள் கேட்டாள். ‘எத்தனையோ கேலக்ஸிகள். ஒவ்வொரு கேலக்ஸியிலும் பல லட்சம் நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றுக்கு பொதுவான மையத்தலைமை அமைப்புகள் உள்ளனவா? அந்த மையத் தலைமைகள் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றனவா? பல லட்சம் சூரியன்களைப் பெய்து இந்த சென்டாரஸை. . . இல்லை-சிக்னஸ் ஏ ஐ உருவாக்குவதற்காகவா? மன்னிக்கவேண்டும். . . இந்த பிரமாண்டமான அளவுகளால் நான் பதறிப்போய்விட்டேன். எதற்காக இதைச் செய்கிறீர்கள்? ஏன்?’

 

‘பிரபஞ்சம் பண்படுத்தப்படாத ஒன்றென்று நீ எண்ணக் கூடாது. குறைந்தபட்சம் பலகோடி வருடங்களாக அது அப்படி இல்லை. அதை இப்படி யோசித்துப்பார்-இது விளைவிக்கப்பட்டு உருவான ஒன்றுதான்.’

 

பிரபஞ்சத்தின் விரிவுக்கேற்ப பருப்பொருள் போதுமானதாக இல்லை என்பதால் அதை சிருஷ்டித்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த மாபெரும் பிரபஞ்ச ஆளுமைகள். யார் அவர்கள்? பால்வழியில் உள்ள எண்ணற்ற உலகங்களில் இருந்து வளர்ந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் வரும்போதே பிரபஞ்சம் கட்டப்பட்டிருந்தது. பிரபஞ்ச ஊடுபாதைகளுக்கான காலச் சுரங்கங்கள், தங்குமிடங்கள் எல்லாம் சிறிய பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு பயன்படுத்தப்படத்தக்க விதத்தில் கட்டி உபயோகிக்கப்பட்ட பின்பு கைவிடப்பட்டிருந்தன. அவற்றைக் கட்டியவர்கள் மேலும் வளர்ச்சி பெற்று மேலும் தாண்டிச் சென்று விட்டிருந்தார்கள். ”இல்லை. நாங்கள் வெறும் பொறுப்பாளர்கள் மட்டுமே’ அவர் சொன்னார். ‘ஒருவேளை அவர்கள் திரும்பி வரக்கூடும்’

 

அவர்களிடமிருந்து அவள் பிரபஞ்சத்தின் அமைப்பில் எங்குமே மாறாமலிருக்கும் எண்ணான பையின் ரகசியத்தை அறிகிறாள். அதன் வழியாக கணித மொழியில் பிரபஞ்சம் நம்முடன் உரையாடுகிறது என்று அவளுக்குத் தெளிவாகிறது.  அந்த பயணம் முடிந்து அவர்கள் திரும்பி வருகிறார்கள். ஆனால் பூமியில் அவர்களை வழியனுப்பியவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். காரணம் அவர்கள் சிலமணி நேரத்திலேயே திரும்பிவிட்டார்கள். அந்த இயந்திரமோ அங்கிருந்து கிளம்பவேயில்லை. அவர்கள் சொன்ன எதையும் எவருமே நம்பவில்லை. நம்ப வாய்ப்பும் இல்லை என அவள் அறிகிறாள்.

 

ஆனால் வாழ்க்கையின் சாரமான ஒன்றை அவள் கண்டடைந்தாள். இந்த எல்லையற்ற பிரபஞ்சப் பெருவெளியில் மனிதனின் இடமென்ன, அவனுடைய கடமை என்ன என்று.

 

வாழ்நாள் முழுக்க அவள் பிரபஞ்சத்தை ஆராய்ந்தாள். ஆனால் அதன் தெள்ளத் தெளிவான செய்தியை அவள் கவனிக்கத் தவறிவிட்டிருந்தாள். சின்னஞ்சிறு உயிர்களான நம்மைப் பொறுத்தவரை இப்பிரமாண்டம் ஒரே ஒரு வகையில் மட்டுமே தாங்கிக் கொள்ளக்கூடியது. அன்பின்மூலம்.

 

”. . .அது ஏற்கனவே இங்கிருக்கிறது. அது அனைத்திலும் உள்ளடங்கியுள்ளது. அதைக் காண நாம் இந்த பூமியை விட்டு வெளியே போகவேண்டுமென்ற அவசியமில்லை. பெருவெளியின் பின்னால். பருப்பொருளின் இயல்பினுள், மாபெரும் கலைப்படைப்பின் மூலையில் இருப்பதைப் போல மிகச் சிறியதாக பொறிக்கப்பட்ட கலைஞனின் கையெழுத்து உள்ளது. மனிதர்களுக்கும் கடவுள்களுக்கும் அதீதமாக, பிரபஞ்சத்தைவிட  காலத்தால் முந்தைய ஓர் ஞானம் உள்ளது.

 

வட்டம் முடிவுற்றது.

 

அவள் தான் தேடியதைக் கண்டடைந்தாள்.”

 

என்று முடிகிறது கார்ல் சகனின் புக்ழ்பெற்ற நாவலான தொடர்பு

 

*

 

வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட அனைத்தையும், வாழ்க்கைக்கு அதீதமான அனைத்தையும் வானத்துடன் தொடர்புபடுத்தி வந்திருக்கிறான் மனிதன். ஐம்பெரும் பூதங்களும் வானத்தில் அடக்கம் என்று வகுத்தது புராதன இந்திய உருவக மரபு. கடவுளர்கள் அனைவருமே வானில்தான் வாழ்கிறார்கள், அனைத்து மதங்களிலும்.

 

 

வானவியல் மனிதனுக்கு வானைப்பற்றி இருந்த பிரமிப்பை மேலும் மேலும் வளர்க்கவே செய்தது. கோளங்களும் விண்மீன் கூட்டங்களும், கற்பனைகூடச் சென்று தொட்டுவிட முடியாத எல்லைவரை விரிந்து சென்றபடியே இருக்கும் அண்டவெளி பற்றிய ஒரு சித்திரத்தை மெல்ல மெல்ல வானவியல் சாதாரண மனிதனின் மனத்திலும் எழுப்புகிறது. அவனது வாழ்க்கை பற்றிய உருவகங்களில் எல்லாம் அது இடம் பெற்று தீர்மானிக்கும் சக்தியாக ஆயிற்று. இந்த ஐம்பது வருடத்தில் எழுதப்பட்ட கவிதைகளை மட்டும் எடுத்து பார்த்தால் இதை வியப்புடன் காணலாம். இருத்தலுடன் இணைந்த பெருவெளியின் சித்திரமும் நவீனக் கவிஞன் மனதில் எப்போதும் எழுகிறது.

 

வானவெளியில் பூமியின் தனிமை மனிதனை எப்போதுமே வாட்டியிருந்தது போலும். முப்பத்து முக்கோடி தேவர்கள் சேர்ந்தாலும் அந்தத் தனிமையுணர்வைத் தீர்க்க முடிந்திருக்காது. வானவியல் ஐதீகக் கற்பனைகளை உடைத்தபோது வானம் காலியாகவில்லை, அங்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்தார்கள். வேறு கிரகங்களில் இருந்து மனிதனை கண்காணிக்கக்கூடிய, பேணிக்காக்கக்கூடிய சக பிரபஞ்சவாசிகள் கற்பனை செய்யப்பட்டனர். கூடவே படையெடுத்துவந்து அழிக்கும், நோயையும் தீமையையும் பரப்பும் வேற்று உயிரினங்களும் கற்பனையில் பிறந்து வந்தன. ஆம், மீண்டும் தேவர்களும் அசுரர்களும் நிரம்பியதாக ஆயிற்று வானம்.

 

கடந்த ஐம்பது வருடங்களாகவே பிரபலப் புனைவுகளில் பறக்கும் தட்டுகளும், வேற்று உயிரினங்களும்தான் அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. வெலிகோவ்ஸ்கி போன்ற அறிஞர்கள் மனிதனின் கலாச்சாரமே வேற்றுகிரக வாசிகளின் தலையீடு மூலம் உருவானது என்ற கொள்கையைக்கூட முன்வைத்துள்ளார்கள். தன் தேடலின் பல்வேறு மன இயக்கங்களை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துத் தந்துள்ளார். ‘இங்குள்ளதை விட அது மாறுபட்டது’ என்ற அடிப்படையே பெரும்பாலும் வேற்றுகிரகம் குறித்த உருவகங்களுக்கு ஆதாரமானதாக இருந்து வந்துள்ளது. பலவகையான ஆழ்மன ஆசைகள், பலவிதமான அச்சங்கள் இது குறித்த கற்பனைகளில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. உதாரணமாக நம் பிரச்சினைகளைத் தீர்க்க வெளியே இருந்து ஒரு மீட்பு சக்தி வரும், நாம் பேணப்படும் இனம் என்ற விருப்பக் கற்பனை; அதேபோல நமது தவறுகளுக்காக நாம் தண்டிக்கப்படவேண்டும் என்ற எதிர்மறை விருப்பம் போன்றவை.

 

கார்ல் சகனின் ‘தொடர்பு’ அனைத்து வகையிலும் ஓர் அறிவியல் புனைவு. அறிவியல் புனைவு என்பதை நாம் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பொதுவான கதையில் அறிவியல்கூறுகள் சில சேர்க்கப்பட்டால் அது ஒருபோதும் அறிவியல் கதை அல்ல. ஒரு சாகசக் கதையில் சிறிதளவுக்கு சரித்திரம் சேர்க்கப்பட்டால் அது சரித்திரக் கதையல்ல என்று சொல்வதற்கு சமானமான கூற்றுத்தான் இதுவும். அக்கதையின் மையக்கரு அறவியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது ஓர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக அமைவது அறிவியல் ஊகங்கள் (Hypothesis). அப்படி ஒரு அசலான அறிவியல் ஊகமானது நிரூபணத் தர்க்கத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக புனைவாக்கம் நோக்கி வந்தால் மட்டுமே அது அறிவியல் புனைவாகும் (வரலாறு குறித்த ஒரு அசலான கொள்கை புனைவாக்கம் பெற்றால் மட்டுமே அது வரலாற்றுப் புனைவு).

 

பிரபஞ்சத்தின் வயதை வைத்துப் பார்க்கும்போது மனித இனம் மிக குழந்தை நிலையில் இருக்கும் ஒரு சிருஷ்டி என்றும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற சிருஷ்டிகள் மனிதனை இன்று கட்டுப்படுத்தும் பல எல்லைகளைத் தாண்டிவிட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கிறது தொடர்பு நாவல். தூரம், காலம், மரணம், உடல் என்ற பரு வடிவம் மற்றும் அதன் தேவைகள், தனிமனமாகவே செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை அவை தாண்டி யிருக்கலாம் என்ற ஊகத்திலிருந்து தொடங்குகிறது நாவலின் தரிசனம்.

 

*

கார்ல் சகன்

கார்ல் சகன் என்ற பெயர் எந்த அளவுக்கு உலக அளவில் புகழ்பெற்றதோ அதற்கு நேர் எதிரான அளவுக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் இல்லாதது. (தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது முதல் கட்டுரை 2000த்தில் சொல்புதிது இதழில் வந்ததுதான்) அறிவியல் கண்ணோட்டம் என்று கூறப்படும் புறவயமான அறிதல் முறையை ஊடகங்களின் மூலம் பரப்புவதில் பெரும் பங்கு வகித்தவர் கார்ல் சகன் (Carl Edward Sagan).

 

வானவியல் பேராசிரியராக கார்னெல் பல்கலையில் பணியாற்றிய சகன் பிரபஞ்ச ஆய்வுக் கலங்களாகிய மரைனர், வைகிங், வாயேஜா ஆகியவற்றின் ஆக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இதற்காக சிறந்த அறிவியல் சேவைக்கான நாசா விருதுகளை இருமுறை பெற்றவர். மரபணுவியல் துறையிலும் ஆர்வம் கொண்ட சகன் நோபல் பரிசு பெற்ற உயிரியலாளரான ஹெச்.ஜெ.முல்லரிடம் ஆய்வுத் துணைவராகப் பணியாற்றியவர். அமெரிக்க விண்ணியல் ஆய்வுக்கழகத்தின் மசூர்ஸ்கி விருது பெற்றார்.

 

அவரது தொலைக்காட்சித் தொடர்கள் புகழ்பெற்றவை. ஏதனின் டிராகன்கள் (Dragons of Eden) புரோக்காவின் மூளை (Broca’s Brain) பெருவெளி (Cosmos) போன்ற அவரது அறிவியல் விளக்க நூல்கள் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை. அவரது முதல் நாவலான தொடர்பு  (Contact) இலக்கிய வாசகர்களாலும், விமரிசகர்களாலும், அங்கீகரிக்கப்பட்டதுடன் பெரு வாசக வரவேற்பையும் அடைந்தது. திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.

 

 

கார்ல் சகனின் இந்த நாவலின் முக்கியமான சிறப்பம்சம் என்ன என்பது இக்கதைச் சுருக்கத்தின் மூலமே புரிந்து கொள்ள முடியும். இது ஏதேனும் அறிவியல் விந்தையோ, அறிவியலின் எதிர்கால சாத்தியங்களையோ சித்தரிக்கும் நாவல் அல்ல. எல்லாப் பேரியலக்கியங்களுக்கும் அடிப்படையாக உள்ள ஆதாரமான மானுடத் தேடலையே இதுவும் தன் கருவாகக் கொண்டுள்ளது. அந்தத் தேடலை அது மனித வாழ்க்கையின் பின்னல்களின் வழியாகத் தேடவில்லை. மாறாக அறிவியல் கொள்கைகள் மூலம் தேடுகிறது அவ்வளவுதான்.

 

கலைரீதியாக இந்நாவலின் வலிமை இது கலைப்படைப்புக்கு எப்போதுமே முதல் அடிப்படையாக இருக்க வேண்டிய புதுமையை தன்னகத்தே கொண்டுள்ளது. என்பது தான் அறிவியல் ஆய்வுகளில் உள்ள விந்தை அம்சத்தை வாசக அனுபவமாக மாற்ற கார்ல் சகனால் முடிந்துள்ளது. ஆகவே நட்சத்திரங்கள் மண்டிய வானை நிமிர்ந்து பார்த்து நாம் அடையும் ஆழமான மனநகர்வை, கனவை இந்நாவலும் அளிக்கிறது. மனித சிந்தனையின் பல்வேறு அலைகளை விரிவாக அதேசமயம் அலுப்பில்லாதபடி விவாதித்திருப்பது நாவலுக்கு ஆழமான தத்துவார்த்த கனத்தை அளிக்கிறது.

 

அதேசமயம் ஆங்கில பரபரப்பு நாவல்களின் அழுத்தமான சாயல் இந்நாவலின் முக்கியமான கலைக்குறைபாடு என்று எனக்குப்படுகிறது. ஆங்கில பரபரப்பு நாவல்களில் செயற்கையான உச்சநிலைகள் உருவாக்கப்படுவதற்கு ஒரு முறைமை உள்ளது. அதற்கு ஏற்ப முரண்படும் கதாபாத்திரங்கள், மோதல் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுவதை இந்நாவலில் காணலாம். வேகாவிலிருந்து செய்தி வருவதை நம்பாமல், பிடிவாதமாக மறுக்கும் ஆர்கஸ் நிலையத் தலைவர் போன்ற கதாபாத்திரத்தை நாம் மேற்கத்தியப் புனைவுகளில் சாதாரணமாக நிறையவே கண்டிருப்போம். செய்திவரும் விதம் பரபரப்பு நாவல்களுக்குரிய விதத்தில் இருப்பதால் பிறகு சிந்தனை உலகத்தின் எதிர்வினைகள் விரிவாகப் பேசப்படும்போது பரபரப்பு கீழேவந்து சற்று அலுப்பேற்படுகிறது.

 

இந்நாவலை எளிதாக எதுவும் குறையாமல் சுருக்கியிருக்க முடியுமென பல இடங்கள் சொல்கின்றன. நல்ல கதை சொல்லி எல்லியின் இளமைப்பருவத்தை இந்த அளவுக்கு நீட்டாமல் கவித்துவப் படிமங்களும் நினைவோட்டங்களுமாக மேலும் அழகாகச் சொல்லமுடியும். விவாதங்களில் கிறித்தவ மரபுடனான விவாதம் நாவலுக்கு வெளியே போகுமளவுக்கு நீண்டுவிட்டது.

 

நாவலில் உச்சமான பிரபஞ்ச சிருஷ்டிகளுடனான சந்திப்பு, அற்புதமான கவித்துவத்துடன் உள்ளது. அதை அறிவியலில் தேடாமல் மனித மன ஆழத்தில் தேடியிருப்பதனாலேயே சகன் முக்கியமான படைப்பாளியாக ஆகிறார். பிரபஞ்ச விரிவு குறித்த மனிதனின் கனவில் அவனது சுயத்துக்கு அதில் என்ன இடம் என்ற ஆழமான ஏக்கம் எப்போதுமே கலந்துள்ளது. தொடர்பு நாவல் பெருவெளியின் பிரமாண்ட சித்திரத்தை அளித்து விட்டு மனித மனம் அங்கும் ஒரு சுயத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்கிறது. பிரபஞ்ச சிருஷ்டிகளான அந்த மாபெரும் ஆளுமைகளுக்குக் கூட மனிதமனத்தின் கனவில் ஆர்வமூட்டக்கூடியதான, புதிதான பலவிஷயங்கள் இருக்கின்றன என்று நாவலில் வரும் இடம் உண்மையிலேயே அறிவியலாளன் கலைஞனாக மாறும் மகத்தான பரிணாமப் புள்ளிதான்.

 

ஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் உருவாக்கிய அனைத்து மன விரிவுகளையும் எதிர்த் திசைக்கு திருப்பிவிட்டு ஒற்றைப்புள்ளியில் குவிப்பதாக மாறிவிடுகிறது. அதாவது அந்த மாபெரும் பயணமே தேவை இல்லை என்பதுபோல அது அர்த்தப்படுகிறது. அறிவுக்கு எதிரானதாக அன்பை வைத்துப் பேசிய கிறித்தவ மரபின் குரலையே அங்கு நாம் கார்ல் சகனில் காண்கிறோம். இந்நாவலின் மிகப்பெரிய பலவீனம் இந்த திரும்பிச் செல்லல்தான்.

 

ஆனால் ஏன் நாம் பிரபஞ்ச பிரமாண்டத்தை அதன் உக்கிரத்துடன் உள்வாங்க முடியாது? ஏன் நாம் நமது ‘எளிய’ அன்புக்குத் திரும்பவேண்டும்? எளிய அன்பை சின்னஞ்சிறு உலகியல் விஷயமாக ஆக்கி நம்மை மேலெழச் செய்து பிரபஞ்சம் எந்த முழுமையின் சமநிலையில் அமைந்திருக்கிறதோ அந்த பிரம்மாண்டத்துடன் நமது ஆளுமையை அமைத்துக்கொள்ளக்கூடாது? நமது சித்தர்கள் அமர்ந்திருந்த பீடம் அல்லவா அது?

 

கீழை மரபுகளில் அறிதல் உள்ள ஒருவர் இங்குள்ள தத்துவ தரிசனங்களில் கார்ல் சகன் அடைந்த அந்த உச்சத்திலிருந்தே இருந்தே மேலே செல்லும் பயணம் சகஜமாக இருப்பதை உணர்ந்திருப்பார். அறிதலின் உச்சம் முரண்பாடுகளற்ற முழுமையை, அதன் விளைவான கனிவை சாத்தியமாக்குமென்றும் அதுவே புத்த நிலை (நிப்பானம்) என்றும் பௌத்த தரிசனங்கள் ஆழ்ந்த கவித்துவத்துடன் பேசுகின்றன.

 

கார்ல் சகன் திரும்பியது ஏன்? அறிவுக்கு அப்பால் என்ன என்ற பயம் ஏன் அவரை அறிவுக்கு இப்பால் உள்ள உணர்வுகளை நோக்கி இட்டு வந்தது? ஒரு கீழைநாட்டு வாசகனுக்கு ‘தொடர்பு’ எழுப்பும் முக்கியமான வினா இதுதான்.

 

(CONTACT -Novel by Carl Sagan.]

 

[199l சொல்புதிதில் வெளிவந்த கட்டுரை]

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Dec 13, 2009

 

 

 

http://solvanam.com/?p=4728 தாராசுரம் கோயிலில் கார்ல் சாகன்

 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=401111812&format=html

கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40606231&format=html

அபத்தம் அறியும் நுண்கலை – 1
தமிழாக்கம் : புதுவை ஞானம் கார்ல் சாகன்

கார்ல் சாகன் இந்து மதம் பற்றி  http://ezhila.blogspot.com/2007/02/blog-post_11.html

தொடர்புடைய பதிவுகள்

விருதரசியல்

$
0
0

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

சினிமா பிரபலங்கள் ஒரு பக்கம் ,அறிவியல் விஞ்ஞானிகள்,கலைஞர்கள் மறு பக்கம் என்று ஆளுக்கு ஆள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க முற்பட்டுள்ளார்களே அந்த அளவுக்கா ‘மோதியின்’ ஆட்சி இவ்வளவு சீக்கிரத்தில் மோசமாக போய்விட்டது?.கடந்த காலத்திலும் இது போன்ற பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தபோது சற்றும் “வாளா இருந்தவர்கள்” இப்போது இப்படி துடிப்பது எல்லாம் சற்று அதிகம் என்று தங்களுக்கு தோன்றவில்லையா?.இது பற்றி தங்கள் கருத்து என்னவென்று சொல்ல முடியுமா?

பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க விஞ்ஞானி பி.எம்.பார்கவா முடிவு: நாட்டின் எதிர்காலம் கவலையளிப்பதாக கருத்து

எஃப்.டி.ஐ.ஐ. போராட்டம்: 10 சினிமா படைப்பாளிகள் தேசிய விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவிப்பு

அன்புடன்,

அ.சேஷகிரி

1

அன்புள்ள சேஷகிரி,

ஆரம்பம் முதல் என்னுடைய மனச்சித்திரம் ஒன்றே. அவற்றை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்

1. சென்ற ஐம்பதாண்டுக்காலமாக இந்திய அரசு [பா.ஜ.க ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த காலத்தையும் சேர்த்து] ஒரு குறிப்பிட்டவகையான பண்பாட்டு அரசியல் சூழலை பேணி வளர்த்து வந்துள்ளது. அது நேருவின் பண்பாட்டு ஆலோசகர்களான பி.என்.ஹக்ஸர் போன்றவர்களின் காலம் முதல் வாழையடி வாழையாக வரும் மரபு. அதன் பொதுவான இயல்பு என்பது இந்திய மரபு, இந்து மெய்யியல் போன்றவற்றை எதிர்மறையாகப் பார்க்கும் இடதுசாரிப் பார்வை. பாரதிய ஜனதா வந்தபின் இவர்களின் இடம் காலியாகிறது. அந்த எதிர்ப்பே இவ்வகையில் திரண்டுள்ளது.

2 இது தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அது தாங்கள் விரும்பிய மாற்றத்துக்கான வாக்கு என அவர்கள் எடுத்துக்கொள்வதே இயல்பானது. தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபின் காங்கிரஸ் பின்னணி கொண்ட அனைத்துச் சிந்தனையாளர்களும் தவிர்க்கப்பட்டு திராவிட இயக்கப்பின்னணி கொண்டவர்கள் பாடப்புத்தகங்களில் பாடமானதை, பாடப்புத்தகங்கள் எழுதியதை நாம் காண்கிறோம். இன்று தமிழகத்தில் முச்சந்தியில் உள்ள சிலைகள் எல்லாம் அவர்களுடையதே. இதை ஏற்றுக்கொள்பவர்கள் அதை மறுப்பதில் பொருளில்லை.

3 ஆகவே இந்த எதிர்ப்பு அரசியல்பின்னணி கொண்ட எழுத்தாளர்களின் எதிர்வினை மட்டுமே. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே பாரதிய ஜனதாக்கட்சி மீதான எதிர்ப்பரசியலில் ஈடுபட்டவர்கள். ஆகவே இது ஒரு கட்சியரசியல். இதில் இலக்கியவாதிக்கு இடம் ஏதுமில்லை. அரசியல் இருந்தால் ஈடுபடலாம். தவறில்லை. ஈடுபடாமலிருப்பவர்கள் அரசியலில் ஆர்வமற்றவர்கள், அவ்வளவுதான்

4 விருது மறுத்த எழுத்தாளர்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த படைப்பாளிகள். காத்திரமான படைப்பாளிகள் என நான் நம்புபவர்களில் விருது பெற்றவர்கள் நூறுபேராவது இந்தியாவில் இன்றுள்ளனர். அவர்கள் எவரும் விருதைத் திருப்பியளிக்கவில்லை. அவர்கள் இவ்விவாதத்திற்கு அப்பால் நிற்கவே விரும்புகிறார்கள்.

5.விருதினை திருப்பியனுப்பும் எழுத்தாளர்களுக்கு பெரிய அளவில் நாடளாவிய விளம்பரத்தை அளிக்கும் ஊடகங்கள் அந்தப்போக்கை ஊக்குவித்து இதை ஓர் அரசியல் அலையாக ஆக்க முயல்கிறார்கள்.

6 விருதுகளை திருப்பியனுப்புவர்களை புகழ்ந்து ஏத்தி ‘மனசாட்சியுள்ளவர்கள்’ என அடையாளப்படுத்தி விருதை மறுக்காத எழுத்தாளர்களை ‘கோழைகள்’ ‘சந்தர்ப்பவாதிகள் ‘விருதுகளை வாங்கியவர்கள்’ என்றெல்லாம் அவமதித்து அவர்கள் மேல் நிர்ப்பந்தத்தை அளிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

7 விருதுகளை திருப்பியனுப்பாதவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் அல்ல. இந்தவகையான கெடுபிடி அரசியலுக்குள் எழுத்தாளர்களை இழுப்பது மிகமிக ஆபத்தானது. நாலாந்தர கட்சி அரசியல்வாதிகளின் சரடுகளுக்கு எழுத்தாளர்கள் ஆடும் நிலை இதனால் ஏற்படும். அரசியல்வாதிகள் எப்போதுமே நாடு எரிந்துகொண்டிருப்பதுபோன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்குகிறார்கள். அதைப்பற்றி மட்டுமே அனைவரும் பேசவேண்டும் என்னும் கெடுபிடியை உருவாக்குகிறார்கள். அதற்கு உடன்படுவது எழுத்தாளனின் தற்கொலைக்கு நிகர். எழுத்தாளன் எதை எழுதவேண்டும் எதை பெரியதாக நினைக்கவேண்டும் என அவன் மனம் முடிவுசெய்யவேண்டும். சமகால கட்சியரசியல் சூழல் அல்ல.

8 எழுத்தாளர்களுக்கிடையே கட்சியரசியல் சார்ந்து ஒரு நிரந்தரமான பிளவு ஏற்படவே இந்த வகையான போராட்டம் உதவும். இன்று விருதுகளை திருப்பியனுப்புபவர்கள் அடுத்த ஐந்தாண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதன்மை பெறுவார்கள். மற்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இலக்கியத்தில் இன்றுள்ள ஓரளவு நடுநிலைமையும் அரசியலற்ற தன்மையும் கூட அழியவே இது வழி வகுக்கும்.

9 சிலவகையான பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசின் உதவியில்லாமல் நிகழவே முடியாது. அரசு எதிர்ப்புச் செயல்பாடுகளுக்குக் கூட உதவியாக வேண்டிய கட்டாயத்தில் ஜனநாயக அரசுகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது கலையிலக்கியத் தளத்திலுள்ள அனைவரும் உலகமெங்கும் செய்வது தான். உண்மையில் பெரிய முயற்சிகளுக்கு அரசுநிதி மறைமுகமாகவேனும் தேவை. இந்த ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு அரசு சார்ந்த அமைப்புகள் அனைத்தையும் கலையிலக்கியம் சாராத அரசியல்வாதிகள் கையடக்கிக்கொள்ள உதவக்கூடும். அரசு சார்ந்து செயல்படுபவர்கள் அனைவரும் அரசு ஆதரவாளர்கள் அல்ல என்னும் எளிய உண்மையை நாம் மறந்துவிடுகிறோம்.

10. ஆனால் சமீபமாக விருதுகளைப் புறக்கணிக்கும் கணேஷ் டெவி போன்றவர்கள் என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.கணேஷ் டெவி நான் மிக மதிக்கும் சிந்தனையாளர். உண்மையில் இந்த அரசு சிந்தனையாளர்களிடம் இலக்கியவாதிகளிடம் அவநம்பிக்கையை வலுவாக உருவாக்கியிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்படுகிறது.குறிப்பாக மாட்டிறைச்சி அரசியல் போன்ற அற்பமான அடிப்படைவாதங்கள் தூண்டிவிடப்படுவதும் சில்லறைத்தனமான அரசியல்வாதிகள் அன்றாடம் ஊடகங்களில் அமர்ந்து வெறுப்பைக் கக்கும் விதமாகப் பேசுவதுமே இதற்கான காரணங்கள். அரசு அந்தக் கவலையைப் போக்க நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும்.

11 அரசு சார்பிலும் பாரதிய ஜனதா சார்பிலும் இப்பிரச்சினையை மிக மூர்க்கமாகவே எதிர்கொள்கிறார்கள். கட்சியரசியலை முன்னெடுக்க கண்மூடித்தனமான பற்றும் மூர்க்கமும் கொண்டவர்கள் தேவையாக இருக்கலாம். அரசை நடத்த சமநிலையும் சொல்லடக்கமும் கொண்டவர்களையே முன்னிறுத்தவேண்டும். சமரசங்கள் மூலமே அரசு முன்னகர முடியும். பாரதிய ஜனதா இப்பிரச்சினையை மிகப்பிழையாகவே கையாள்கிறது. அதன் தரப்பில் பேசுபவர்கள் எதிர்தரப்பை இழிவுசெய்ய மட்டுமே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

12 இப்பிரச்சினை பாரதிய ஜனதாவுக்கோ அரசுக்கோ பெரும் நெருக்கடி ஏதும் அளிக்கப்போவதில்லை. வாக்கரசியலில் கூட மாற்றத்தை உருவாக்கப்போவதில்லை. ஆனால் அரசு மீதான நம்பிக்கை படித்தவர்கள் நடுவே படிப்படியாகச் சரிந்துவருகிறது. பாரதிய ஜனதா இனியேனும் இந்த சில்லறை தெருமுனை அரசியலை நிறுத்தி, அதைப்பேசும் உதிரிகளின் வாயை அடைத்து, அவர்கள் வாக்களித்த வளர்ச்சி அரசியலில் ஈடுபடவேண்டும்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16764 articles
Browse latest View live