Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16759 articles
Browse latest View live

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

$
0
0

kanasu_thumb4 [க.நா.சு]

அன்புள்ள ஜெ

திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்]

எஸ். மகாலிங்கம்

2 [புதுமைப்பித்தன்]

அன்புள்ள மகாலிங்கம்,

இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை தெளிவாகச் சொன்னாலும் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாதவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சார்புநிலைகள் மட்டுமே கொண்டவர்கள், ஆனால் எதையும் வாசிக்கும் வழக்கமில்லாதவர்கள், அதை நம்பி கூச்சலிட்டுக்கொண்டும் இருப்பார்கள்.

தமிழ்ச்சூழலில் இலக்கியத்தில் பல தரப்புகள் செயல்பட்டன. அவை இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு தங்களுக்கான வரையறைகள் கொண்டிருந்தன. அவற்றின் அடிப்படையில் இலக்கியமரபுகளை வகுத்துக்கொண்டிருந்தன. அவற்றை பொதுவாக நான்காகப் பிரிக்கலாம்.

ஒன்று வணிக-கேளிக்கை எழுத்தாளர்கள். வெகுஜன எழுத்துமுறை என அதை நாம் சொல்கிறோம். அவர்களுக்கு எழுத்து என்பது மக்களைக் கவர்ந்து அவர்களை வாசிக்கச்செய்யவேண்டும். ஆகவே அவர்களுக்குப் பிடித்தமானவற்றை பிடித்தமான முறையில் சொல்லவேண்டும். மக்களிடமுள்ள புகழே அளவுகோல்

இந்த தரப்பு வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை மு கோதைநாயகி அம்மாள், கல்கி, தேவன், சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, அகிலன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, வாசந்தி, இந்துமதி என ஒரு வரிசையை உருவாக்கியது. இவர்களை மட்டுமே இலக்கியவாதிகளாக முன்னிறுத்தியது. இவர்கள் இலக்கியவிருதுகள் அனைத்தையும் பெற்றார்கள். பல்கலை கழங்களில் இவர்களின் படைப்புகள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. ஒரு காலகட்டத்தில் இவ்வெழுத்தாளர்கள் திரைநட்சத்திரங்கள் போல வலம்வந்தனர். அவர்கள் பிற தரப்பினரை பொருட்படுத்தவில்லை. ஏன் அறிந்திருக்கவே இல்லை.

7 [தி ஜானகிராமன்]

இரண்டாவது தரப்பு இங்கிருந்த திராவிடஎழுத்தாளர்கள். அன்று மிகவலுவான ஒரு அரசியல் கட்சியாக எழுந்து வந்த வெகுஜன இயக்கத்தின் படைப்பாளிகள் இவர்கள். மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், சி.என்.அண்ணாத்துரை, ஈ.வே.கி.சம்பத்,மு.கருணாநிதி, எஸ்.எஸ்.தென்னரசு,புலவர் குழந்தை, வேழவேந்தன், முடியரசன், சுரதா என இவர்களுக்கும் ஒரு பட்டியல் இருந்தது.

இவர்களும் ஏராளமான பத்திரிகைகளை நடத்தினர். திராவிட இயக்கம் பின்னர் தமிழக ஆட்சியையே கைப்பற்றியது. இவ்வெழுத்தாளர்கள் அனைவரும் பட்டங்களை, பதவிகளைப் பெற்றனர். அனைத்துவகையான அரசுமுறை அங்கீகாரங்களும் கிடைத்தன.மாற்றுத்தரப்பில் முதலில் சொல்லப்பட்ட வணிக எழுத்தாளர்களை மட்டுமே இவர்கள் பொருட்படுத்தினர்.

மூன்றாவது தரப்பு முற்போக்கு எழுத்தாளர்கள். இவர்களுக்கும் வலுவான கட்சி அமைப்பும் பத்திரிகைகளும் இருந்தன. தொ.மு.சி.ரகுநாதன், கே.முத்தையா, செ.கணேசலிங்கன், டி .செல்வராஜ்,கு.சின்னப்பபாரதி, மேலாண்மைப் பொன்னுச்சாமி, ச.தமிழ்ச்செல்வன் என இவர்களுக்கும் ஒரு பட்டியல் இருந்தது. இடதுசாரிக் கட்சியும் பத்திரிகைகளும் அறிவுஜீவிகளும் இவ்வெழுத்தாளர்களை தொடர்ச்சியாகப்பிரச்சாரம் செய்தன.இவர்கள் தீவிர இலக்கியவாதிகளை மிகமிகக் கடுமையாக நிராகரித்தனர்.

நான்காம் தரப்புதான் தீவிர இலக்கியவாதிகள். ஓர் அடையாளமாக இச்சொல்லைக் கையாள்வது தமிழ்சூழலின் வழக்கம். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிருதம்,சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன் என ஒரு மரபு இவர்களுக்கு உள்ளது. இன்றும் வலுவாக அது நீடிக்கிறது

இவர்களுக்கு எந்தவகையான கட்சிப்பின்புலமும் இருக்கவில்லை. எந்த அரசியலமைப்பின் ஆதரவும் இருக்கவில்லை.பத்திரிகைகளின் ஆதரவு பிரமுகர்களின் சிபாரிசு அறவே இல்லை. கல்வித்துறைக்கு இவர்கள் இருப்பதே தெரியாது. பெரும்பாலும் தனிநபர்க்ளாகவே செயல்பட்டனர். ஆர்வமும் அர்ப்பணிப்பும் மட்டுமே இவர்களை செயல்படவைத்தன. எழுத்தின் வழியாக இவர்கள் அடைந்தவை ஏதுமில்லை. பணம், புகழ், அங்கீகாரம் ஏதுமில்லை

piramiL [பிரமிள்]

எழுதுவதற்கு ஊடகங்கள் இல்லாமல் இவர்களே சொந்தச்செலவில் ஆரம்பித்தவைதான் சிற்றிதழ்கள். தமிழ்ச்சிற்றிதழ் இயக்கமே இவர்களை அரைநூற்றாண்டுக்காலம் செயல்படச்செய்தது.அதிகமும் 300 பிரதிகள் வரை அச்சிடப்பட்டு மாதம் ஒருமுறையோ மூன்றுமாதங்களுக்கு ஒருமுறையோ வெளிவரும் சிற்றிதழ்களில் இவர்கள் எழுதினர். இருநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நூலை வெளியிட ஐந்தாண்டுகள் ஆகும் இவர்களுக்கு. பெரும்பாலும் தங்களுக்குள்ளேயே வாசித்துக்கொண்டார்கள். கடுமையாக தங்களைத்தாங்களே விமர்சனம் செய்துகொண்டார்கள்.

இவர்கள்தான் அனைத்துவகையான புதிய இலக்கியப் போக்குகளையும் கற்று இங்கே கொண்டுவந்தனர். மொழியாக்கங்கள் செய்தனர். அரசியல்,சமூகவியல் சிந்தனைகளை விவாதித்தனர்.நவீனக் கலைகளை இலக்கியத்துடன் இணைத்து அறிந்துகொள்ள முயன்றனர். மாறாக மேலே சொன்ன மூன்று தரப்புகளில் வணிகஎழுத்துக்கும் திராவிட இயக்க எழுத்துக்கும் சமகால சிந்தனைகளுடனும், கலைப்போக்குகளுடனும் சம்பந்தமே இருக்கவில்லை.

இன்று நீங்கள் திரும்பிப்பார்க்கலாம். தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் என்னும் இந்தச் சின்னஞ்சிறிய உலகின் உள்ளேதான் அத்தனை புதியவிஷயங்களும் நிகழ்ந்தன. தமிழில் நவீன ஓவியம் , நவீனத் திரைப்படம், நவீன மேற்கத்திய இசை என அனைத்துமே சென்றகாலங்களில் இந்தச்சிற்றிதழ் வட்டத்திற்குள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன.

சத்யஜித் ராயோ, இங்மார் பர்க்மானோ, பிக்காஸோவோ, குளோட் மோனேவோ, யான்னியோ பெயர் அச்சிடப்படுவதுகூட இந்தச்சிற்றிதழ்களில் மட்டும்தான். அண்டோனியோ கிராம்ஷியோ, மிகயீல் பக்தினோ, ஹரால்ட் ப்ளூமோ பிற இதழ்களுக்கு இன்றும்கூட அறியப்படாதவர்களே. இன்று நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் இங்கேதான் முளைவிட்டெழுந்தன.

சுந்தர ராமசாமி

தமிழின் உண்மையான அறிவார்ந்த மரபு என்று சொல்லத்தக்க இந்த வட்டம் அனைத்துவகையான புறக்கணிப்புகளுக்கும் உள்ளாகியது. இன்றும் அது அரசு, ஊடகம் சார்ந்த எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை. சமீபத்தில் இறந்த சுரதாவுக்குக்கூட இங்கே சிலை வைக்கப்பட்டுள்ளது. நவீனத் தமிழிலக்கியத்தின் தலைமகனாகிய புதுமைப்பித்தன் பெயரில் ஒரு சாலைகூட இங்கே இல்லை. புறக்கணிப்பு நிகழ்வது எங்கே?

காலம் கறாரான ஒரு அளவுகோலையே கொண்டிருக்கிறது. அரைநூற்றாண்டுக்காலம் கடந்தபோது இந்தச்சிற்றிதழ் சார்ந்த இலக்கியவாதிகளும் இலக்கியமரபும் மட்டுமே வாழும்தரப்பாக உள்ளன. மற்றவை வெறும் வரலாற்றுக்குறிப்புகளாக எஞ்சியிருக்கின்றன.

ஓர் உதாரணம் சொல்கிறேன். சிற்றிதழ்ச்சூழலில் புதுமைப்பித்தனை சிறுகதை மன்னன் என்று சொல்வது வழக்கம். இது அவருக்கு அவர் இறந்தபோது ஓர் அஞ்சலிக்கட்டுரையில் அளிக்கப்பட்ட பெயர். இப்பெயருக்குப் போட்டியாக வணிகக்கேளிக்கை எழுத்தியக்கத்தால் முன்வைக்கப்பட்டவர் அகிலன்.

திராவிட இயக்கத்தினரால் சிறுகதை மன்னன் என்று புகழப்பட்டவர் எஸ்.எஸ்,தென்னரசு. முற்போக்கு முகாம் புதுமைப்பித்தனை நசிவிலக்கியவாதி என்று சொல்லி நிராகரித்துவிட்டு விந்தனை சிறுகதையின் சாதனையாளர் என்றார்கள். அவர்களெல்லாம் எங்கே? இன்று ஒரு நுண்ணுணர்வுள்ள வாசகன் அவர்களை வாசிக்கமுடியுமா?

வணிக எழுத்துத் தரப்பால் தமிழ் நாவலின் சாதனையாளர் என்று சொல்லப்பட்டவர் கல்கி. திராவிட இயக்கத்தவர் தமிழின் தலைசிறந்த நாவலாசிரியராக முன்வைத்தது மு.கருணாநிதியை. முற்போக்கினர் செ.கணேசலிங்கனை. அவரது செவ்வானம் தமிழின் முதன்மை நாவல் என்று எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? அந்நூல்கள் இன்று எப்படிப்பார்க்கப்படுகின்றன?

1980 வாக்கில் பாவை சந்திரன் புதுமைப்பித்தனின் மனித யந்திரம் என்னும் கதையை குங்குமத்தில் மறுபிரசுரம் செய்திருந்தார். அதை வாசித்த நினைவுள்ளது. அதில் ‘இவர் பெயர் புதுமைப்பித்தன். தமிழில் சிறுகதைகள் எழுதியவர்’ என்று அறிமுகம் செய்திருந்தார். அந்த அளவுக்குத்தான் புதுமைப்பித்தன் அன்று பொது வாசகர்களுக்குத்தெரிந்திருந்தார். அன்றைய நட்சத்திரங்கள் சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்கள்.

g [அசோகமித்திரன்]

தொண்ணூறுகளில் நவீன இலக்கியம் சில தனிமனிதர்களின் முயற்சி மூலம் பரவலாக கொண்டுசெல்லப்பட்டது [ ஐராவதம் மகாதேவன், மாலன், வாசந்தி, கோமல் சுவாமிநாதன்] அதன்பின்னரே புதுமைப்பித்தன் மரபு பரவலாக அறியப்பட்டது. இணையம் வந்தது. புத்தகக் கண்காட்சிகள் வந்தன.

இன்று இந்த இலக்கிய மரபு பரவலாக அறியப்படுகிறது என்றால் இதன்மீதான அர்ப்பணிப்பினால் மட்டுமே திரும்பத்திரும்ப இதைப்பற்றி பேசி முன்னெடுத்த முன்னோடிகள்தான் காரணம். க.நா.சு,சி.சு.செல்லப்பா,வெங்கட் சாமிநாதன். சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் என ஒரு தொடர்ச்சி அதற்கும் உள்ளது.

நானும் அந்த மரபைச் சேர்ந்தவனே. இந்த ஒரே ஒரு இணையதளத்தை மட்டும் பாருங்கள். நவீனத்தமிழ் இலக்கிய முன்னோடிகளைப்பற்றி எத்தனை முறை எத்தனை விரிவாக எழுதப்பட்டுள்ளது என தெரியும். கிட்டத்தட்ட 600 கட்டுரைகள் உள்ளன. அச்சில் பல்லாயிரம் பக்கம் அளவுக்கு எழுதியிருக்கிறேன். என் உயிருள்ளளவும் எழுதிக்கொண்டும் இருப்பேன். இதனால் எனக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. இந்த மரபை நிலைநாட்ட நான் விழைகிறேன். இது என் அறிவுலகப்பணி

இந்த அளவுக்கு அர்ப்பணிப்புடனும் தீவிரத்துடனும் முன்னர் சொல்லப்பட்ட மூன்று மரபுகளைச்சேர்ந்த எவரைப்பற்றியும் எவராவது எழுதுகிறார்களா? ஏன்? ஏனென்றால் அவை அந்த அளவுக்கு பாதிப்பைச் செலுத்தவில்லை. இல்லை பாதிப்பைச்செலுத்தியிருக்கின்றன என்றால் அப்படிச் சொல்பவர்கள் இதேபோல எழுதி நிலைநாட்டலாமே?

ஓர் அரசியல் அலையை தொடங்கிவைத்த சி.என்.அண்ணாத்துரையைப்பற்றிக்கூட இன்று சொல்லும்படி ஏதும் எழுதப்படுவதில்லை. அவர்களுக்கெல்லாம் அரசு இருந்தது, அமைப்புகள் இருந்தன, இதழ்கள் இருந்தன. எங்கள் தரப்புக்கு இருப்பது தீவிரம், அர்ப்பணிப்பு மட்டுமே. அதுவே எங்கள் முன்னோடிகளை வாழச்செய்கிறது. இது அமைப்புகளுக்கு எதிரான அறிவியக்கத்தின் வேகம்.

இன்று இலக்கியத்திற்காகப் போடப்படும் புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, ராமாகிருதம் என நீளும் மரபுவரிசை க.நா.சு- வால் முன்வைக்கப்பட்டது. பல கோணங்களில் அது விவாதிக்கப்பட்டு திருத்தப்பட்டு இன்றும் பெரும்பாலும் வலுவாக நீடிக்கிறது. இதுவே இலக்கியமரபாக அறியப்படுகிறது. காரணம் இதன் தீவிரம். இதையொட்டிச் செயல்பட்ட அறிவியக்கம். இது இன்றும் செல்லுபடியாகக்கூடிய கலைத்தன்மை கொண்டிருப்பது.

3 [ஜி.நாகராஜன்]
அனால் சிற்றிதழ் சார்ந்த இலக்கியமரபு எப்போதும் அதன் அளவுகோல்களை துல்லியமாகவே வைத்துள்ளது. அதற்கு மனிதர்கள் முக்கியமல்ல ,படைப்புகள்தான்.முற்போக்கு முகாமைச்சேர்ந்த கு.சின்னப்பபாரதியின் படைப்பை இலக்கியமென அங்கீகரிக்க க.நா.சுவுக்கு தயக்கமில்லை. ஆனால் க.நா.சு பெயரைச் சொல்லவே அவர்கள் தயங்குவார்கள்.

மற்றமரபுகள் இவ்வியக்கத்தை முற்றிலும் புறக்கணித்தன. இது தன் உண்மைத்தன்மையால் அர்ப்பணிப்பால் செயல்பாட்டால் அறிவுலக வெற்றி அடைந்த ஓர் இயக்கம். மற்ற மரபுகள் இன்று காலாவதியாகிவிடடன. இந்த மரபு வாழ்கிறது .அந்த காலாவதியான மரபுகளைச் சேர்ந்தவர்கள் கிளம்பிவந்து இந்த இலக்கியமரபில் ஏன் தங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை, இதெல்லாம் அநீதி என்று கூச்சலிடுகிறார்கள்.

பாருங்கள் வைரமுத்துவை. அவர் தன்னை தமிழ்ச்சிறுகதை மரபின் வளமான தொடர்ச்சியில் தன்னை பொருத்திக்கொள்ள விரும்புகிறார். அவர் அதற்குப்போடும் பட்டியல் வணிக எழுத்துமரபோ, திராவிட இலக்கிய மரபோ, முற்போக்குமரபோ முன்வைத்த பட்டியல் அல்ல. க.நா.சு போட்ட இலக்கியப்பட்டியல். புதுமைப்பித்தனின் நீட்சியாகவே அவர் தன்னை எண்ணுகிறார். அகிலனின் நீட்சியாக அல்ல. எஸ்.எஸ்.தென்னரசுவின் நீட்சியாக அல்ல. விந்தனின் நீட்சியாக அல்ல.

அது இயல்பும்கூட. அவரது ரசனைக்கு அவரால் மேலே சொன்னவர்களை வாசிக்கமுடியாது. புதுமைப்பித்தனையே ரசிக்கமுடியும். ஆனால் அதன்பின் இந்தப்பட்டியலில் திராவிட இயக்கத்தவர் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஒரு பாட்டை எடுத்துவிடுகிறார். அது வெறும் அரசியல் விளையாட்டு.

அரசு அங்கீகாரங்களை, ஊடகப்புகழை, கல்வித்துறை ஆதரவைப் பெற்றவர்கள் இந்தச் சின்னவட்டத்தின் அங்கீகாரத்திற்காக துடிப்பதேகூட இதன் வெற்றிதான்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


வெங்கட் சாமிநாதன் –அஞ்சலிகள்

$
0
0

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 4

முதற்கதிர் மூடுபனித்திரையை ஒளிரச்செய்த காலையில் கதனும் அர்ஜுனனும் விடுதியிலிருந்து கிளம்பி வளைந்துசென்ற மலைப்பாதையில் நடந்தனர். முன்னரே கிளம்பிச் சென்ற பயணிகளின் குரல்கள் பனித்திரைக்கு அப்பால் நீருக்குள் என ஒலித்தன. அவர்களில் எவரோ குறுமுழவொன்றை மீட்டி பாடிக்கொண்டிருந்தனர். மீள மீள வரும் ஒரே தாளத்தில் அக்குரல் ஒன்றையே பாடிக்கொண்டிருந்தது, மன்றாட்டு போல, உறுதி ஏற்பு போல.

அனைத்துப் பாடல்களும் இன்னிசை கொள்கையில் தன்னந்தனிக் குரல் போல் ஒலிப்பதன் விந்தையை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அப்போது அருகே பிற மானுடர் எவரும் இல்லையென்று அவை உணர்கின்றன. இனிய இசைப்பாடல்கள் ஒருபோதும் உரையாடல்கள் ஆக முடியாது. கூற்றுகளும் ஆக முடியாது. அவை வெறும் வெளிப்பாடுகளே. இங்குளேன் என்றும் அங்குளாயா என்றும் துடிக்கும் இரு முனைகள். அல்லது பக்திப்பாடல்கள் மட்டும்தான் அப்படி உள்ளனவா? இப்பாடலின்றி இவர்களால் மலையேற முடியாதா?

கதன் சொன்னான் “இளைய பாண்டவரே, என்னை பலராமர் தேர்வு செய்தது அவர்கள் தரப்பில் ஆற்றப்பட்ட பெரும்பிழை. நான் இளைய யாதவரிடம் இணையற்ற அர்ப்பணிப்பு கொண்டவன். அதை அறிந்தவர்களல்ல வசுவும் தம்பியரும். பலராமர் அதையெல்லாம் உன்னும் நுட்பம் கொண்டவருமல்ல. உகந்த ஒருவரை அனுப்ப வேண்டுமென்று அவர் கோரியதும் என்னை அனுப்பலாமென்று அவருக்கு சொன்னவர் ஆனகர். அவர் என்னை அறிவார்.”

அர்ஜுனன் “அப்படியென்றால் இது அவரது திட்டம்” என்றான். “ஆம். பலராமர் என்னிடம் சொன்னார், முடிவெடுக்க வேண்டியவர் எந்தை. அதனால்தான் அவரைத் தேடி வந்தேன். அவரது சொல் பெற்றுவிட்டேன். இனி ஏதும் நோக்க வேண்டியதில்லை. அஸ்தினபுரிக்கு செல்க! துரியோதனனை முகம் கண்டு இவ்வண்ணம் ஒரு முடிவு யாதவப் பெருங்குலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்க! கதாயுதத்துடன் வந்து என் இளையவளை கைக்கொண்டு செல்லுதல் அவன் கடமை என்று உரைத்து மீள்க என்றார். நான் தலைவணங்கி ஆணை என்றேன்.” அர்ஜுனன் தலையசைத்தான். கதன் தொடர்ந்தான்.

பலராமர் என்னிடம் இந்திரப்பிரஸ்தம் சென்று அங்கு யுதிஷ்டிரரையும் பிற நால்வரையும் கண்டு இம்முடிவைக் கூறுக என்றதும் பின்னால் நின்ற வசு சற்றே அசைந்து “மைந்தா, இளைய பாண்டவர் அங்கில்லை. பிற நால்வரும் அவரிலாது முடிவெடுக்கத் தயங்குவர்” என்றார். “இல்லை, நான் இம்முடிவை எடுத்ததை அவர்கள் அறியவேண்டும். ஒளித்து எதையும் செய்ய நான் விரும்பவில்லை. கதாயுதப்போரில் பீமன் வந்துவிடலாகாது” என்றார் பலராமர்.

“அவ்வண்ணமெனில் அவர்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது” என்றார் வசு. “அவர்கள் துரியோதனன் சுபத்திரையை மணப்பதை விரும்பமாட்டார்கள். இன்று இரு தரப்பும் போர்முகம் கொண்டு நிற்கின்றன. இருசாராரும் தங்கள் ஆற்றலை துளித் துளியென சேர்த்து பெருக்கிக்கொள்ளும் தருணம். துலாத்தட்டுகளில் வேறுபாடாக இருக்கப்போவது யாதவர்களின் ஆதரவே.” சூரசேனரும் “ஆம், நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். பாஞ்சாலத்து அரசி எண்ணி எண்ணி படையும் கலமும் சேர்த்துக்கொண்டிருக்கிறாள் என்கின்றனர் ஒற்றர்” என்றார்.

பலராமர் “இல்லை, எவ்வண்ணமென்றாலும் எவரையும் ஏமாற்றி அச்செயலை ஆற்ற நான் ஒப்பமாட்டேன்” என்றபின் என்னிடம் “பீமனிடம் நான் சொன்னதாக சொல்க. இந்த மணநிகழ்வில் அவன் பங்கு கொள்ளலாகாது. இது என் தங்கையை அஸ்தினபுரியின் அரசனுக்கு அளிப்பதற்கு விழைந்து நான் நிகழ்த்தும் மணவிழா” என்றார். வசு குரல் தழைத்து “அப்படி ஓர் ஆணையை நாம் எப்படி பீமனுக்கு அளிக்கமுடியும்? மேலும் மணநிகழ்வுக்கு எவரையும் வரலாகாது என ஆணையிடும் முறைமையும் இங்கில்லை” என்றார்.

“இப்போது அம்முறை உருவாகட்டும், வேறென்ன? மறைத்தும் ஒளித்தும் நிகழ்த்துவது அரசமுறை என்றால் அதைவிட மேலான அரசமுறை இதுவே. பீமனிடம் என் விழைவை மட்டும் சொல்லுங்கள். அதன் பிறகு அவன் வரமாட்டான், நான் அவனை அறிவேன்” என்றார் பலராமர். ஆனகர் ஏதோ சொல்ல முயல “தந்தையே, நீங்களெல்லாம் படைக்கலம் கொண்டு பொருதுபவர்கள். உங்கள் சொற்களும் படைக்கலம் ஏந்தியவை. நானும் அவனும் வெறுந்தோள் கொண்டு மல்லிடுபவர்கள். எங்களுக்கு எல்லாமே தசையுடன் தசை உள்ளத்துடன் உள்ளம்தான்” என்றார் பலராமர்.

நான் தலைவணங்கி “ஆணையை சென்னிசூடுகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அஸ்தினபுரிக்குச் செல்லாமல் இந்திரப்பிரஸ்தத்துக்கே முதலில் சென்றேன். கட்டி முடிக்கப்படாத அப்பெருநகரில் அப்போதும் கற்பணி நடந்து கொண்டிருந்த மாபெரும் முகப்பு கோபுரத்தின் முற்றத்தில் யுதிஷ்டிரர் யவனச் சிற்பிகளுக்கு ஆணையிட்டு கொண்டிருந்தார். என்னை அங்குதான் அழைத்துச்சென்றனர் ஏவலர். தோளிலிருந்து காற்றில் நழுவிச் சரிந்த கலிங்கப்பட்டுச் சால்வையை எடுத்து மீண்டும் போர்த்தியபடி புருவங்கள் சுருங்க “என்ன?” என்றார்.

தவறாக எண்ணவேண்டாம், அங்கே நான் கண்டது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியை அல்ல. எளிய குடும்பத்தலைவர் ஒருவரைத்தான். என் உள்ளத்தை கரந்து “இந்திரப்பிரஸ்தமாளும் பாண்டவர்களுக்கு மதுவனத்து அரசர் சூரசேனரின் செய்தியுடன் வந்துள்ளேன். என் பெயர் கதன். விருஷ்ணிகுலத்தான். கிரௌஞ்ச குலத்துக் கரவீரரின் மைந்தன்” என்றேன். “சூரசேனரின் செய்தியா?” என்று கேட்டபின் “அச்செய்தி எனக்கு மட்டும் உரியதா? எங்கள் ஐவருக்குமா?” என்றார். “ஐவருக்கும்” என்றேன். “இளையவன் இங்கில்லை பிற மூவரையும் வரச்சொல்கிறேன். சிற்றவை கூடத்திற்கு வருக!” என்றார்.

தலைவணங்கி “அவ்வண்ணமே” என்று நான் திரும்பியதும் “என்ன செய்தி?” என்று என்னை கேட்டார். அவர் பெரும் சூழ்மதியாளர் என அப்போது உணர்ந்தேன். செய்தியை நான் அரசமுறையில் அவையில் சொல்லவேண்டும். தனிப்பட்ட முறையில் அங்கே அளிக்கவேண்டும். “அரசே, யாதவகுலத்தலைவரும் மதுராபுரியின் அரசருமான வசுதேவர் தன் பட்டத்தரசி ரோகிணியில் பெற்றெடுத்த இளவரசி சுபத்திரையை மணத்தன்னேற்பு அவை முன் நிறுத்த அவருடைய பிதாமகர் சூரசேனர் முடிவெடுத்துள்ளார். அதற்கு முறைப்படி தங்களுக்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன்” என்றேன்.

ஒரு கணத்தில் அவர் கண்களில் ஒரு அசைவு வந்து போவதை கண்டேன். “என்ன படைக்கலம் கொண்டு?” என்றார். அனைத்தையும் அவர் புரிந்துகொண்டதை உணர்ந்தேன். தாழ்ந்த குரலில் “கதாயுதம் கொண்டு” என்றேன். அவர் முகத்தில் ஏதும் தெரியவில்லை. முனகலாக “கதாயுதமா?” என்றார். “பீமனிடம் ஏதேனும் செய்தி சொல்லும்படி பணிக்கப்பட்டீரா?” நான் “ஆம்” என்றேன். “எவர் செய்தி? பலராமரா?” நான் “ஆம்” என்றதும் “அவைக்கூடத்துக்கு வருக!” என்று திரும்பிக் கொண்டார்.

சிற்றவைக்கூடத்திற்கு வெளியே நான் காத்து நின்றபோது உள்ளே பேரமைச்சர் சௌனகரும் துணையமைச்சர்களும் பேசும் ஒலிகளை கேட்டேன். சற்றுநேரம் கழித்து சௌனகர் கதவைத்திறந்து முகமன் சொல்லி வணங்கி என்னிடம் உள்ளே வரும்படி சொன்னார். உள்ளே சிற்றமைச்சர்கள் நின்றிருக்க பீடங்களில் நகுலனும் சகதேவனும் மட்டும் அமர்ந்திருந்தார்கள். நான் தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்தேன். என்னை அமரும்படி ஆணையிட்டனர். தலைவணங்கி அமர்ந்து கொண்டேன். ஆனால் சொல்லெடுக்கவில்லை.

சற்று நேரத்தில் மேலாடை மாற்றி அரசாடை அணிந்து குழல்திருத்தி யுதிஷ்டிரர் வந்தார். அவை எழுந்து அவருக்கு வாழ்த்துரைத்தது. அவரது அசைவுகள் இயல்பிலேயே ஒருவித தளர்வுடன் இருந்தன. தோள்கள் தொய்ந்திருப்பதனாலாக இருக்கலாம். கால்களை நீட்டி நீட்டி வைத்து கைகளை குறைவாக வீசி நடந்தார். அவர் தன் அரியணையில் அமர்ந்ததும்கூட தளர்வுகொண்டவர்களுக்குரிய எடை தாழ்த்தி இளைப்பாறும் பாவனைகள் கொண்டதாக இருந்தது. அவரது உடலின் தளர்வல்ல அது, உள்ளத்தின் தளர்வும் அல்ல. எண்ணங்களின் எடை அது என உணர்ந்தேன்.

அணிகளும் ஆடைகளும் காற்றில் ஒலிக்க மூச்சொலிகளும் இருமல்களும் எழுந்தமைய அவை காத்திருந்தது. அவர் பெருமூச்சுவிட்டு சற்றுநேரம் அமைதியாக இருந்தார். முகவாயை கைகளால் நீவிக்கொண்டு தன்னிலை மீண்டு “எங்கே மந்தன்?” என்றார். சௌனகர் “வந்துகொண்டிருக்கிறார்” என்றபின் துணையமைச்சர் ஒருவரை நோக்க அவர் தலைவணங்கி வெளியே சென்றார். சௌனகர் என்னை முறைப்படி அறிமுகம் செய்துவிட்டு என்னை நோக்கி செய்தியை சொல்லும்படி ஆணையிட்டார். நான் முகமன், வாழ்த்து, அரச குலமுறை ஏத்தல், என் குடிநிரை விளம்புதல் என மரபுப்படி விரித்துரைத்து செய்தியைச் சொல்லி தலைவணங்கினேன்.

அப்போதுதான் பீமன் உள்ளே வந்தார். அவரது பெருந்தோள்களின் அளவு இடுப்புக்குக் கீழே உடலை மிகச்சிறியதாக ஆக்கியிருந்தது. அத்தனை எடைகொண்ட ஒருவரின் வயிறு எட்டு பலகைகளாக இறுகியிருப்பதை நோக்கி வியந்தேன். அது சிற்பங்களில் மட்டுமே இயல்வது என்று தோன்றியது. மஞ்சள்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகச்சிறிய கண்கள் அவர் உற்றுநோக்கும்போது இரு நீர்த்துளிகளாக மாறி சுருங்கி உள்ளே ஒடுங்கின. கைகளைக் கட்டியபடி சுவரோரமாக நின்றார்.

என் செய்தியை மீண்டும் சொல்லும்படி தருமர் சொல்ல நான் பீமனுக்கு அதை சுருக்கி மீண்டும் சொன்னேன். அதுவே ஓர் உத்தி. ஒருசெய்தியைச் சொல்லும் தூதன் முதலில் விரிவான சொல்லாடலை அமைப்பான். உடனே மீண்டும் சொல்லச்சொன்னால் அவன் சலிப்புற்று அதன் சாரத்தை மட்டும் சொல்லிவிடுவான். அவன் அதைப்பற்றி பலமுறை எண்ணியிருப்பவன் என்பதனால் சரியான சொற்களில் சுருக்கமாகச் சொல்ல அவனால் முடியும். நான் சொல்லிமுடித்ததும் எல்லாம் அப்பட்டமாக திறந்து அவை முன் விரிந்து கிடந்தன.

பீமனின் விழிகளில் எந்த உணர்வுமாற்றத்தையும் நான் காணவில்லை. யுதிஷ்டிரர் என்னை நோக்கி “முறைமைசார் அழைப்புக்கு அப்பால் வேறு செய்தி எதையும் பலராமர் சொன்னாரா?” என்றார். ஆணையை புரிந்துகொண்டு நான் “ஆம்” என்றேன். “இப்போட்டியில் இரண்டாவது பாண்டவர் கலந்து கொள்ளலாகாது என்றார்” என்றேன். பீமன் கண்கள் மேலும் சுருங்க “ஏன்?” என்றார். “அவர் சுபத்திரையை அஸ்தினபுரியின் அரசர் மணக்கவேண்டுமென விழைகிறார்” என்றேன்.

அதை அப்படி மீண்டும் சொன்னதும் அவையில் ஓர் உடலசைவு ஏற்பட்டது. “அது அவரது விழைவாக இருக்கலாம்” என யுதிஷ்டிரர் தொடங்கியதுமே பீமன் கைகட்டி “இல்லை மூத்தவரே, அது அவரது ஆணை என்றே கொள்கிறேன்” என்றபின் என்னை நோக்கி “அவரது ஆணை என்றே அதை கொள்வதாக நான் சொன்னேன் என்று தெரிவியுங்கள்” என்று சொல்லி தலைவணங்கினார். அதைக்கேட்டு நகுலனும் சகதேவனும் முகம் மலர்வதை கண்டேன். யுதிஷ்டிரர் சரி போகட்டும் என்பதைப்போல கைகளை வீசியபின் ஏவலனிடம் ஏதோ கேட்க அவன் ஒரு துண்டு சுக்கை அவருக்கு எடுத்து அளித்தான். அதை வாயிலிட்டபின் கைகளை உரசிக்கொண்டார்.

நான் நால்வர் முகங்களையும் மாறி மாறி பார்த்தபின் சௌனகரை பார்த்தேன். சௌனகர் என்னிடம் “இச்செய்தியை எவரிடம் முதலில் சொல்லச் சொன்னார் பலராமர்?” என்றார். “அஸ்தினபுரிக்குச் சென்று துரியோதனரிடம் சொல்லச் சொன்னார். அங்கிருந்து இங்கு வரும்படி எனக்கு ஆணை” என்றேன். “நீர் வரிசை மாறிவிட்டீர் அல்லவா?” என்றார். “ஆம்” என்றேன். “ஏன்?” என்றார். நான் அவர் கண்களை நேராக நோக்கி “ஏனெனில் நான் இளைய யாதவரின் அடிமை” என்றேன். “முதலில் இங்கு வரவேண்டுமென்பது ஆனகரின் ஆணை. இளைய யாதவரின் ஆணை பெறுபவர் அவர்.”

என்னை சற்று கூர்ந்து நோக்கியபின் “இப்போரில் மந்தன் வந்தால் வெல்ல முடியும் என்று எண்ணுகிறீரா?” என்றார் யுதிஷ்டிரர். “வெல்ல முடியாது” என்றேன். “ஏனென்றால் கதைப்போரை அமைப்பவர் பலராமர். ஆனால் ஏதேனும் வழி இருக்கும். அதை இளைய பாண்டவர் கண்டறிய முடியும்.” யுதிஷ்டிரர் சிலகணங்களுக்குப்பின் “அர்ஜுனன் வந்தால்?” என்றார். நான் அவர் விழிகளை நோக்கி “அது வேறு கதை” என்றேன். “அப்படியென்றால் அதை நீர் இளைய பாண்டவரிடம்தான் சொல்ல வேண்டும்” என்றார் சௌனகர். “அவர் எங்கிருக்கிறார்?” என்று நான் கேட்டேன்.

“ஒற்றுச் செய்திகளின்படி இறுதியாக மணிபுரி நாட்டில் இருந்தார். அங்கு பப்ருவாகனன் என்னும் மைந்தனுக்கு தந்தையானார்” என்றார் சௌனகர். “அவன் எங்கிருக்கிறான் என்று அறிவது எளிதல்ல. அவனை மறைக்க முடியாதென்பதனால்.அவன் சென்ற தடத்தை தொடர முடியும். ஆனால் ஆற்றல் மிக்க சிறகு கொண்ட பறவை. எத்தனை தொலைவு சென்றிருக்கிறதென்று. உய்த்துணர்வது எளிதல்ல” என்றார் யுதிஷ்டிரர். “நான் என்ன செய்வது அரசே?” என்று கேட்டேன்.

“யாதவரே, இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை. இது பலராமரின் ஆணை என்றால் அது என்னையும் கட்டுப்படுத்துவதே” என்றார் யுதிஷ்டிரர். சௌனகர் “ஆனால் பலராமர் இளைய யாதவரின் தந்தையராலும் உடன்பிறந்தாராலும் திசை திருப்பப்பட்டிருக்கிறார். இதில் உள்ளது அவர்களின் வஞ்சம் மட்டுமே. இதன் இறுதி விளைவென்ன என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாதவ குலத்தின் வெற்றியும் பெருமையும் இந்திரப்பிரஸ்தத்துடன் இணை நிற்கையிலேயே உருவாகின்றன. இளைய பாண்டவரின் துணையின்றி இளைய யாதவர் வெற்றி கொள்வதும் எளிதல்ல. ஆகவே இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஒருபோதும் முறியத்தக்கதல்ல” என்றார்.

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஊழ்வினை இங்ஙனம் உறுகிறது என்றால் அவ்வண்ணமே ஆகுக” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “சுபத்திரை என் இளையவனால் மணக்கப்படுவாளானால் அது நன்று. ஆனால் எந்த மணஉறவும் முற்றிலும் அரசியல் அல்ல. அதை தெய்வங்கள் ஆடுகின்றன. ஆகவே மணவுறவுகள் எவையும் இன்றியமையாதவையும் அல்ல. நமது வெற்றியும் சிறப்பும் நம் அறத்திலேயே அமைந்துள்ளது. மேலும் நாம் படை திரட்டவில்லை. எந்நாடு மீதும் தண்டு கொண்டு செல்லப்போவதும் இல்லை.”

நான் பீமனை நோக்கினேன். “இதிலுள்ள அரசு சூழ்தல் எதையும் நான் எண்ணவிழையவில்லை. கதரே, பலராமரின் ஆணை அது. என் தந்தையின், ஆசிரியரின் ஆணைக்கு நிகர்” என்றபின் பீமன் தலை வணங்க யுதிஷ்டிரர் அவை நிறைவுக்காக எழுந்தார். வாழ்த்தொலிகள் எழ மெல்ல நடந்து நீங்கினார். பீமன் தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு சகதேவனிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்லிவிட்டுச் சென்றார். சௌனகர் “அவை நிறைவுற்றது கதரே. நீங்கள் தங்குவதற்கான அனைத்தையும் செய்கிறேன்” என்றார். “நான் அஸ்தினபுரிக்குச் செல்லவேண்டும்” என்றேன்.

நான் வெளியே வந்தபோது என்னுடன் சௌனகரும் வந்தார். நான் மெல்லிய குரலில் “நான் இனி என்ன செய்வது அமைச்சரே?” என்று அவரிடம் கேட்டேன். “அஸ்தினபுரிக்கே செல்லுங்கள். அங்கு துரியோதனரிடம் நீர் வந்த செய்தியை சொல்லுங்கள். உமது தூது முடியட்டும்” என்றார். நான் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினேன். “காலில் சரடுகட்டப்பட்டு பறக்கவிடப்பட்ட புறாக்கள் நாம்” என்றார் சௌனகர். “அதற்குள் நீர் என்ன செய்ய வேண்டுமென்பது தெரியவரும்.” “யாரிடமிருந்து?” என்றேன். “ஊழிடமிருந்து” என்று சொல்லி சிரித்தபின் என் தோளை மெல்ல தட்டியபடி அவர் திரும்பிச் சென்றார்.

மறுநாளே அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்கு சென்றேன். என்னை அங்கு எதிர்பார்த்திருந்தார்கள் என்று அறிந்தேன். கோட்டைக் காவல் மாடத்திலேயே என்னைக் காத்து படைத்தலைவர் வஜ்ரதந்தர் நின்றிருந்தார். தேரில் என்னை அழைத்து நேராக கொண்டு சென்று விதுரர் முன் நிறுத்தினார். நான் நீராடவோ முறைமையுடை அணியவோ இல்லை. பீடத்திலிருந்து எழுந்து என்னை வரவேற்ற விதுரர் நான் முறைமைச்சொல் சொல்வதற்குள்ளாகவே “சூரசேனத்திலிருந்து நீர் கிளம்பி சில நாட்களாகின்றன” என்று என்னை கூர்ந்து நோக்கி சொன்னார்.

அவரது அமைச்சு மாளிகையில் மூன்று துணைஅமைச்சர்கள் என்னை கூர்ந்து நோக்கி நின்றனர். அவருக்குப் பின்னால் நின்ற அமைச்சர் கனகர் என் விழிகளை நோக்கிக் கொண்டிருந்தார். “ஆம்” என்றேன். அந்த அறை சுவடிகளாலும் எழுத்துப்பட்டுச் சுருள்களாலும் நிறைந்திருந்தது. சற்றும் மந்தணமின்றி அத்தனை பேர் முன்னிலையில் அவர் உரையாடியது வியப்பூட்டியது. “இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றீரோ?” என்றதுமே நான் உணர்ந்து கொண்டேன், அத்தனை விழிகள் என் மேல் நாட்டப்பட்டிருப்பது எதற்காக என்று. அவை என்னை சித்தம் குவிக்க முடியாது செய்தன. ஒன்றும் சொல்வதற்கின்றி நான் “ஆம், அமைச்சரே” என்றேன்.

“உம்மிடம் இட்ட ஆணையை அவ்வண்ணமே நிறைவேற்றிவிட்டீரா?” என்றார். நான் “இல்லை. இங்கு வந்து அங்கு செல்ல வேண்டுமென்பது ஆணை” என்றேன். அடுத்த வினாவைக் கேட்காது அவர் கடந்து சென்றார். “நீர் அஸ்தினபுரியின் அரசரை இன்று சந்திக்கலாம், அவையமர்வதற்கான ஒப்புதல் ஓலையை உம்மிடம் துணையமைச்சர் சமீகர் வழங்குவார்” என்றார். நான் தலைவணங்கி “ஆணை” என்றேன். “உமக்குரிய மாளிகையும் நீராட்டறையும் சித்தமாக உள்ளன.”

மாலையில்தான் நான் அரசப்பேரவையில் துரியோதனரை சந்திக்கச் செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குமுன்னரே துரியோதனரின் ஆணை வந்தது, அவரை நான் மந்தண அறையில் சந்திக்கலாம் என்று. அந்த உள்ளவைக்கு விதுரர் வரவில்லை. கனகரே என்னை அழைத்துச் சென்றார். அவர் என்னிடம் ஒன்றும் சொல்லாமல் எண்ணம் சுமந்தவர் போல வந்தார். அவரிடம் ஏதேனும் பேசலாமென எண்ணினேன். அஸ்தினபுரிக்கு யாதவரின் எண்ணங்கள் எந்த அளவுவரை தெரியும் என அறிய விழைந்தேன். விதுரருக்கு நான் எண்ணியதைவிட கூடுதலாகவே தெரியும் என அவரது சொற்கள் காட்டின. துரியோதனர் அறிந்திருப்பாரா? ஆனால் கனகர் சொல்லெடுக்கலாகாது என்னும் ஆணை பெற்றவர் போலிருந்தார்.

அஸ்தினபுரியின் மைய அரண்மனை அத்தனை பழமையானது என்பதை நான் எண்ணியிருக்கவில்லை. கதைகளில் அம்மாளிகையைப் பற்றி இளமை முதலே கேட்டிருந்தேன். என் கற்பனையில் வான் என உயர்ந்த கூரையும் அடிமரமென தூண்களும் வெண்பளிங்குத்தரையும் அனலெனப்பறக்கும் திரைச்சீலைகளும் கொண்டதாக இருந்தது அது. நேர்க்காட்சிக்கு எடைமிக்க தடிகளை அடுக்கிக் கட்டப்பட்ட உயரமற்ற கூரைகொண்ட பழமையான கட்டடம் கருமைகொண்டிருந்தது. அதன் பூண்களும் பட்டைகளுமெல்லாம் வெண்கலத்தால் ஆனவை. படிகளில் தோல்கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயதாகி முதிர்ந்த பேரரசரைப் போல தோன்றியது அது.

இடைநாழி வழியாக அழைத்துச்செல்லப்பட்டு எந்த முறைமைகளும் இல்லாமல் அறைக்கதவைக் கடந்து தம்பியருடன் தன் மந்தண அறையில் உரையாடிக் கொண்டிருந்த துரியோதனர் முன்பு நிறுத்தப்பட்டேன். அறைக்கு வெளியிலேயே அவர்களின் சிரிப்பொலியை கேட்டேன். அவர்கள் நூறு பேர் என்று அறிந்திருந்தேன். ஆயினும் உள்ளே பேரவைதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என எண்ணினேன். உள்ளே நுழைந்து தலைவணங்கியதும் ஒரே விழியில் அவர்களைப் பார்க்கையில் ஆடிப்பாவை முடிவின்றி பெருகியது போல் ஒரு விழிமயக்கெழுந்து திகைத்தேன்.

துரியோதனர் வெண்பட்டுக் கீழாடையும் செம்பட்டு மேலாடையும் அணிந்து எளிய பீடத்தில் தன் பெருந்தோள்களைச் சாய்த்து அமர்ந்திருந்தார். தலைப்பாகையோ மணிமுடியோ இல்லாமல் நீள் குழல் சரிந்து தோள்களில் கிடந்தது. அவரைப்பார்த்த அக்கணமே நினைவு பீமனை சென்று தொட்டது. அவர்கள் இருவரையும் சேர்த்தே எண்ணிக்கொள்ளமுடிகிறது, இக்கணம் வரை. உண்மையில் அவர்களுக்குள் பொதுவாக ஏதுமில்லை. நிறம் தோற்றம் எதுவும். ஆனால் இருவரும் ஆடிப்பாவைகள் போலிருந்தனர். எப்படி என்று எண்ணி என்ணி என் சித்தம் சலிக்கிறது. அப்படியென்றால் அங்கிருந்த நூற்றுவரில் ஒருவர்தான் பீமன். அவர் பாண்டவராகப் பிறந்த கௌரவர்.

தமையன் அருகே இருந்த துச்சாதனன் என்னிடம் “உமது செய்தியை கனகர் சொன்னார். மீண்டும் அச்செய்தியை சொல்மாறாது உரைக்கலாம்” என்றார். நான் சூரசேனரின் சொற்களையும் பலராமரின் சொற்களையும் அவ்வண்ணமே மீண்டும் சொன்னேன். துரியோதனர் தலையசைத்து “நன்று” என்றார். பின்னர் கனகரிடம் “பலராமரின் ஆணை. அது என்னையும் இந்நாட்டின் ஒவ்வொரு குடியையும் கட்டுப்படுத்துவது” என்றார். துச்சாதனர் “நீர் அஸ்தினபுரிக்கு வருவதற்கு முன் இந்திரப்பிரஸ்தத்துக்கு சென்றீர் என்றார் கனகர்” என்றார். “ஆம்” என்றேன். “ஏன்?” என்று அவர் கேட்டார்.

“நான் மதுவனத்தை விட்டு வெளியே வந்து பழக்கமற்றவன். இந்திரப்பிரஸ்தம் நான் வரும் வழியிலேயே இருந்தது. அங்கு சென்றுவிட்டு இங்கு வருவதே எளிய வழி என்று தோன்றியது” என்றேன். துச்சாதனர் என் விழிகளையே கூர்ந்து நோக்கினார். நான் அவர் விழிகளில் இருந்து நோக்கை விலக்கவில்லை. “பீமனிடம் என்ன சொன்னீர்?” என்றார் துச்சாதனர். “இம்மணத்தன்னேற்பில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று பலராமரின் ஆணை என்றேன்” என்றேன். துச்சாதனர் “மூத்தவர் அதற்கு என்ன சொன்னார்?” என்றார். “பலராமர் ஆணை அவரையும் கட்டுப்படுத்தும் என்றார். இளைய பாண்டவர் அங்கு இல்லை என்பதால் அவர் எண்ணத்தை அறியக்கூடவில்லை. பிற நால்வரும் பலராமர் ஆணைக்கு கட்டுப்படுவதாக சொன்னார்கள்” என்றேன்.

துச்சாதனன் “நீர் பாஞ்சால அரசியை சந்திக்கவில்லையா?” என்றார். அப்போதுதான் அதை முழுதுணர்ந்து “இல்லை”  என்றேன். துரியோதனர் “இளையோனே, மணத்தன்னேற்புச் செய்தியை பெண்களிடம் சொல்லும் வழக்கமில்லை” என்றார். “அறிவேன் மூத்தவரே. ஆனால் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வது பாஞ்சால அரசி. எச்சொல்லும் இறுதியில் அவளாலேயே முடிவெடுக்கப்படுகிறது” என்றார் துச்சாதனர். துரியோதனர் “அதை அவர்கள் சொல்லிக் கொள்ளட்டும்” என்றார். “ஒரு போதும் துவாரகை தன்னிடமிருந்து விலகிச்செல்வதை அவள் ஒப்பப்போவதில்லை. அவள் என்ன எண்ணுகிறாள் என்பதே முதன்மையனாது” என்றார் துச்சாதனர்.

“துவாரகை எங்கே விலகிச் செல்கிறது? மதுராவுடனான நம் உறவு துவாரகையை கட்டுப்படுத்தவேண்டுமென்பதில்லையே” என்றார் துரியோதனர். “அது அரசு சூழ்தலின் நோக்கு மூத்தவரே. ஆனால் இளைய யாதவர் தன் தங்கையை ஒரு தருணத்திலும் தன்னிலிருந்து விலக்கி நோக்க மாட்டார். தாங்கள் சுபத்திரையை மணந்தீரென்றால் இப்பிறவி முழுக்க உங்களிடமிருந்து ஒரு தருணத்திலும் துவாரகையின் தலைவர் அகலப்போவதில்லை” என்றார் துச்சாதனர்.

அவரை நோக்கி சில கணங்கள் மீசையை நீவியபடி அமர்ந்திருந்துவிட்டு என்னை நோக்கியபின் மீண்டும் அவரை நோக்கி “என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை” என்றார் துரியோதனர். “இவ்வளவுதான் சுருக்கம். எந்நிலையிலும் தன் தங்கையையோ இளைய பாண்டவரையோ இளைய யாதவர் விட்டுக் கொடுக்க மாட்டார். எனவே அவர்கள் மாற்றுத் தரப்பில் இருப்பதை விரும்பவும் மாட்டார். அவர்கள் இருவரும் மணம் புரிய வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருக்கும். அவ்வெண்ணத்தை உய்த்தறிந்துதான் அவர்மேல் அழுக்காறு கொண்ட அவரது குடிப்பிறந்தார் இம்மணத்தன்னேற்பை ஒருங்கு செய்திருக்கிறார்கள். அவர்கள் கையின் கருவி என்றே பலராமரை சொல்வேன்.”

“இம்மணத்தன்னேற்பு அவர்கள் எண்ணுவது போல அத்தனை எளிதில் நிகழாது. ஏனெனில் மறுதரப்பில் இருப்பது இளைய யாதவரின் விழைவு” என்றார் துச்சாதனர். துரியோதனர் “ஆனால் அவரும் தன் தமையனை மீற முடியாது” என்றார். கனகர் “அவ்வண்ணமே விதுரரும் எண்ணுகிறார்” என்றபின் என்னை நோக்கி “நீர் செல்லலாம்” என்றார். நான் தலைவணங்கி வெளியே சென்றேன்.

நான் அங்கே நின்றிருக்கையிலேயே அவ்வுரையாடலை அவர்கள் ஏன் நிகழ்த்தினார்களென்று வியந்தேன். அவைக்கூடத்திற்கு வெளியே கனகர் வெளிவருவதற்காக காத்து நின்றேன். அரைநாழிகைக்குப் பின் வெளியே வந்த கனகர் என்னிடம் “நீர் எங்கு திரும்பிச் செல்கிறீர்?” என்றார். “மதுவனத்திற்குத்தான். என் கடமை முடிந்தது” என்றேன். “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் கதாயுதம் கொண்டு மதுராவுக்கு வந்து சுபத்திரையை வெல்வார் என்று பலராமரிடம் சொல்லுங்கள்” என்றார். நான் தலைவணங்கினேன்.

அப்போது தெரிந்தது அங்கு நிகழ்ந்த உரையாடல் அனைத்தும் நான் சென்று பலராமரிடம் சொல்வதற்காகவே என. இளைய யாதவர் அம்மணத்தன்னேற்புக்கு எதிராக இருப்பார் என்பதை அங்கு பேசிக்கொண்டார்கள் என்பதை அவ்வண்ணம் பலராமர் அறிய நேருமென்று துச்சாதனர் எண்ணுகிறார். ஒரு கணம் நான் அஞ்சிவிட்டேன். இத்தனை கூரிய மதி விளையாடலில் எளிய யாதவனாகிய நான் என்ன செய்ய முடியும்? மீண்டும் என் கன்றுகளுடன் சென்று காடுகளுக்குள் புதைந்துவிட எண்ணினேன்.

“இளையபாண்டவரே, அப்போது நான் உணர்ந்த தனிமையை பிறகெப்போதும் உணர்ந்ததில்லை. நான் எளியவன், எளியவர்கள் வரலாற்றுப்பெருக்கில் அடித்துச்செல்லப்படவும் அதன் கொந்தளிப்பில் அலைக்கழியவும் விழைகிறார்கள். ஆனால் வரலாற்றில் கால் நிலைக்காத ஆழத்திற்குச் சென்றதுமே அங்கு வந்து சூழும் தன்னந்தனிமையில் பரிதவிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தெய்வங்களின் உலகில் சென்றுவிட்ட எளிய உயிரின் தனிமை அது” என்றான் கதன்.

தொடர்புடைய பதிவுகள்

சிற்றிதழ் என்பது…

$
0
0

The_Paris_Review_cover_issue_1

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும்.

இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக உள்ள அரசியல் செயல்பாடுகளின் பகுதியாக ஒலிக்கும் கூக்குரல் உற்பத்தி மட்டுமே. அவற்றுக்கு அப்பால் உள்ள இலக்கியம் சிந்தனை ஏதும் அவர்களுக்கு தெரிந்ததாகவே இருக்காது.

விதிவிலக்காக, மலேசியாவில் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு தொடக்கம் நிகழ்கிறது என்பதை பலவகையாகப் பதிவு செய்திருக்கிறேன். நவீன், யுவராஜ்,பாலமுருகன் என அதை முன்னெடுக்கும் ஊக்கமுள்ள இளைய படைப்பாளிகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர்களுடனான சந்திப்புகள் எனக்கு ஊக்கமூட்டுபவையாக இருந்துள்ளன

ஆகவேதான் இம்மாதத்தில் மலேசியாவிலிருந்து வரும் பறை இதழில் நவீன் எழுதியிருக்கும் சிற்றிதழ்களைப் பற்றிய கட்டுரை ஆழமான சோர்வை உருவாக்கியது. தமிழகத்தின் தகரடப்பா அரசியல் கோஷங்களால் நிறைந்துள்ள பறை மேலும் கீழிறங்கும் வாய்ப்புகளையே காட்டியது.

வழக்கமான ‘தமிழ் எழுத்தாளர்’களிடமிருந்து நவீன எழுத்தாளனை வேறுபடுத்தும் அம்சங்கள் சில உண்டு.

அவற்றில் முதன்மையானது அரசியலியக்கங்களின் எளிய வாய்ப்பாடுகளை எதிரொலிக்க பிடிவாதமாக மறுத்துவிடுவது. அரசியலியக்கங்கள் உருவாக்கும் வெறுப்புகளையும் விலக்குகளையும் நிராகரிப்பது

அடுத்தபடியாக எளிமையான சமூகப்புரிதல்களை,ஒற்றைப்படையான வாய்ப்பாடுகளை ஐயப்படுவது. ஒவ்வொன்றையும் தன் அனுபவத்தைக் கொண்டும் வரலாற்றைக் கொண்டும் விரிவாகவும், ஊடுபாவுகளுடனும் புரிந்துகொள்வது.

கடைசியாக பல்வேறு காரணங்களுக்காக வெறுப்பும் கசப்பும் ஊட்டப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொற்களை, முத்திரைகளை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது. அத்தகைய மிகையாவேச வசைகள் மண்டிய மொழியை நிராகரித்து விவாதமொழியை மேற்கொள்வது.

1

இவ்வியல்புகளை அடைந்த பின்னர்தான் ஒருவன் நவீன இலக்கியவாதியாகவே ஆகிறான். அவ்வியல்புகளை இழக்கையில் நவீன இலக்கியத்திலிருந்து விலகவும் தொடங்குகிறான்.

நவீன் எழுதியிருக்கும் கட்டுரையின் சாரம் இதுதான். தமிழில் முதல் சிற்றிதழ் என்று சி.சு.செல்லப்பாவின் எழுத்து சொல்லப்படுகிறது. ஆனால் எழுத்துக்கு முன்னரே ஏராளமான சிற்றிதழ்கள் வந்துள்ளன. திராவிட இயக்கம் பல சிறு பத்திரிகைகளை நடத்தியிருக்கிறது. தலித்துக்கள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் காணாமல் எழுத்துவை முதல் சிற்றிதழ் என்று சொல்வதற்கான காரணம் ‘பார்ப்பனியம்’ தான்.

நவீன இலக்கியத்தில் எதையும் வாசிக்காமல் பெரும்பாலும் செவிவழிச் செய்திகளை நம்பி சத்தம் போடுபவர்கள் சொல்லும் வாதம் இது. உள்ளே நுழையும் இளைஞர்கள் அதை ‘அட, நெஜம்தானே’ என்று நினைப்பதும் இயல்பே.

1

ஆனால் ஓரு நவீன இலக்கியவாதி முதலில் செய்யவேண்டியது இதைப் பற்றி முன்னரே ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதே. அதைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஒன்றே முக்காலணா சிந்தனை தன் அரியமூளைக்கு மட்டுமே தட்டுப்பட்டது என்று எண்ணி கூச்சலிடுபவர்களை அவன் ஐயப்படவேண்டும்.

பார்ப்பனன், காஃபிர், மிலேச்சன், துலுக்கன், இழிசினன், வந்தேறி போன்ற வெறுப்பு கக்கும் சொற்களைப் பயன்படுத்துபவர் எவராக இருந்தாலும் அவர் நவீன எழுத்தாளர் இல்லை. அவர் சொல்லும் எதையும் நவீன எழுத்தாளனின் , வாசகனின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. எளிமைப்படுத்துவதன் மூலம் வெறுப்பை பயிரிட்டு லாபம் பார்க்கும் எளிய தெருமுனை அரசியல்வாதி மட்டும்தான் அவர்.

அப்படியே அந்தக்கோணத்தில் நோக்கினாலும்கூட இத்தனை சல்லிசாக ஒரு ‘சதிவேலையை’ செய்யும் அளவுக்கெல்லாம் நவீன இலக்கியத்தில் செயல்படுபவர்கள் மக்குகளாக இருக்கமாட்டார்கள் என்றாவது ஒரு நவீன இலக்கியவாதி யோசிக்கவேண்டும்.

நவீனுக்காக வருத்தப்படுகிறேன். அவர் தமிழ் சூழலின் வெற்றி கொண்டான் ரக மேடைக் கக்கல்களை ரசித்து அவற்றுக்கு நீட்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றால் சிந்தனையின் சேற்றுக்குழி ஒன்றை நோக்கிச் செல்கிறார்.

1

சரி, சிற்றிதழ் என்றால் என்ன? அதன் மனநிலை என்ன? அதன் வரலாற்றுப்புலம் என்ன?

முதல் விஷயம் சிறிய இதழ் வேறு சிற்றிதழ் வேறு என்பதே. பலநூறு முறை சொன்ன இதை மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

அச்சுமுறை உருவாகியதும் முதலில் நூல்கள் வெளிவந்தன. தொடர்ந்து சிறிய அச்சிதழ்கள் வெளியாகின. அவை அனைத்தும் அமைப்பிலும் அளவிலும் இன்றைய சிற்றிதழ்கள் தான். ஆனால் அன்றுள்ள அச்சுமுறைப்படி அவ்வளவுதான் அச்சிட முடியும். அன்றுள்ள வினியோக முறைப்படி அவ்வளவு பேரையே சென்றடைய முடியும். அவை அனைத்துமே சிறிய இதழ்கள்.

தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதியவை ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இருமாத இதழ்களில்தான். டிக்கன்ஸும் தாக்கரேயும் எழுதியதே கூட சிறிய இதழ்களில்தான். ததாகூரும் காந்தியும் எழுதியவையும்கூட குறைவான பிரதிகள் மட்டுமே வெளியான இதழ்கள்தான். அன்றைய நாளிதழ்களே கூட வாரம் ஒருமுறை வந்தவைதான்.

இக்காலகட்டத்தில் அச்சு இதழ்கள் என்பவை அறிவுப் பரவலுக்கான ஊடகங்களாக மட்டுமே எண்ணப்பட்டன. அச்சும் வாசிப்பும் தொழிலாக எண்ணப்படவில்லை. கேளிக்கைக்காக பயன்படுத்தப்படவில்லை.

1

பின்னர் மூன்று மாறுதல்கள் நிகழ்ந்தன. அச்சுமுறை மின்சாரமயமாக்கப்பட்டது. ஆகவே ஏராளமாக அச்சிட முடிந்தது. தபால்முறையும் போக்குவரத்துமுறையும் நவீனமயமாயின. ஆகவே இதழ்களை விரிவாக வினியோகம் செய்ய முடிந்தது.அத்துடன் பொதுக்கல்விமுறை உருவாகி வந்தது. அனைவருக்கும் சீரான எழுத்தறிவு உருவானது. ஆகவே வாசகர்களின் எண்ணிக்கை பெருகியது

இதன்விளைவாக உருவாகி வந்தவைதான் பேரிதழ்கள். மிக விரைவிலேயே அவை அச்சு ஊடகத்துறையை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்டன. அச்சும் வாசிப்பும் வெகுஜனக் கேளிக்கையாக ஆகும் என்பது கண்டடையப்பட்டது. ஆகவே அவை பெருந்தொழிலாக ஆயின. இதழ்கள் பெருமளவில் அச்சிடப்பட்டு விரிவாக விற்பனை செய்யப்பட்டன.

பெருந்தொழில் என்பதனால் அதற்கு பெரிய அமைப்பு தேவைப்பட்டது. அவ்வமைப்பு லாபம் ஈட்டியாகவேண்டும். ஆகவே மக்கள் விரும்புவதை அளித்தாகவேண்டும். ஒரு தருணத்திலும் விற்பனை குறையவே கூடாது, குறைந்தால் நஷ்டம். ஆகவே புதியனவற்றை சோதனை செய்து பார்ப்பது, கடினமானவற்றை அளிப்பது ஆகியவை தவிர்க்கப்பட்டன.
2
இவ்வாறு பெருந்தொழிலாக மாறிய பேரிதழ்கள் சூழலை முழுமையாக நிறைத்திருந்தபோது அவற்றுக்கு எதிராக உருவானதே சிற்றிதழ் இயக்கம். அதாவது சிற்றிதழ் என்பது சிறியதாக இருக்கும் இதழ் அல்ல. வளர்ச்சி அடையாத இதழ் அல்ல. சிறியதாக தன்னை பிரகடனம் செய்துகொண்ட இதழ். சிறியதாகவே செயல்பட்டாகவேண்டிய இதழ். ஒரு மாற்று ஊடகம் அது.

முதன்மையாக அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் இது. ஏனென்றால் அங்குதான் பேரிதழ்கள் சூழலை முழுமையாகக் கைப்பற்றி வைத்திருந்தன. அச்சு ஊடக அரக்கர்களுக்கு எதிராக கருத்தியல் நிலைபாடு தேவைப்பட்டது. வீல்லியம் ஃபிலிப்ஸ், ஃபிலிப் ரெவ் ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு 1934 முதல் வெளிவரத்தொடங்கிய “பார்ட்டிஸன் ரிவ்யூ” என்னும் இதழைத்தான் அவ்வகையில் முதல் சிற்றிதழ் என்பது வழக்கம்.

ஸ்டீபன் ஸ்பெண்டர் 1953ல் ஆரம்பித்த என்கவுன்டர் உலகளாவிய கவனத்தைக் கவர்ந்த சிற்றிதழ். 1953ல் ஹெரால்ட் ஹ்யூம் மற்றும் பீட்டர் மாடிசன் ஆரம்பித்த பாரீஸ் ரிவியூ அமெரிக்காவிலும் உலகமெங்கும் குறிப்பிடத்தக்க வாசகர்களைக்கொண்ட முன்னுதாரணமான சிற்றிதழ்.

1

இவ்விதழ்கள் சில இலக்கணங்களைக் கொண்டிருந்தன. அட்டையிலேயே கட்டுரைகள் தொடங்கிவிடும். அட்டைப்படமே பெரும்பாலும் இருக்காது. கவர்ச்சியான வடிவமைப்பு இருக்காது. பெரும்பாலும் படிப்பதற்கான பக்கங்கள். தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே இருக்கும்.

இவ்விதழ்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்திலும் சிற்றிதழ் இயக்கம் 1950களில் உருவானது. தமிழில் அவ்வாறு சிற்றிதழ் என்னும் பிரக்ஞையுடன், திட்டத்துடன் தொடங்கப்பட்ட முதல் சிற்றிதழ் எழுத்துதான். ஆகவே அதை தமிழின் முதல் சிற்றிதழ் என்று சொல்கிறோம்.

இத்தகைய வரலாற்றுச் செய்திகள் பொதுவாக ஒருவகை பொதுப்புரிதல்கள் மட்டுமே. முதல் சிறுகதை முதல் நாவல் என்பதெல்லாம் கூட எப்போதும் விவாதத்திற்குரியவை. பி.எஸ்.ராமையா மணிக்கொடியை முற்றிலும் சிறுகதைக்காகவே கொஞ்சநாள் நடத்தினார். ஆகவே மணிக்கொடியின் பிற்காலத்தையே சிற்றிதழ் மரபின் தொடக்கம் என்று சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு. எழுத்து இதழில் இருந்த பிரகடனம் அதில் இருக்கவில்லை என்றாலும் அதுவே உத்தேசிக்கப்பட்டது என்பார்கள்.

க.நா.சு தொடங்கிய இலக்கியவட்டம், விஜயபாஸ்கரனின் சரஸ்வதி போன்றவை அதன்பின் வந்தவை. எழுத்து, கசடதபற, வானம்பாடி, கணையாழி, தீபம், காலச்சுவடு போன்றவை சிற்றிதழ் இயக்கத்தின் வெவ்வேறு காலகட்டத்தைப் பிரதிபலிப்பவை

எழுத்துவுக்கு முன்னரே பல சிறிய இதழ்கள் தமிழில் வந்துள்ளன. பாரதியாரின் இந்தியாவும் விஜயாவும் சிறிய இதழ்கள். மணிக்கொடியும் கிராம ஊழியனும் சிறிய இதழ்கள். ஆனால் அவை அன்றைய சூழலால் சிறிய அளவில் நடத்தப்பட்டவை மட்டுமே.

அதேபோல சிறிய அளவிலான பிரசுரங்கள் ஆய்வுக் குழுக்களுக்குள் வெளிவந்தன. பண்பாட்டாய்வு வரலாற்றாய்வு கல்வெட்டு போன்றவற்றுக்காக நடந்தவை அவை. உதாரணம் செந்தமிழ்ச்செல்வி போன்றவை. அவை அறிஞர்களுக்குள் மட்டும் புழங்கியவை. அவற்றை இதழ்கள் என சொல்வதில்லை. அவை தொடர் பிரசுரங்கள் [Chronicles] மட்டுமே.

1

எழுத்து முதல் இதழிலேயே தன்னை சிற்றிதழ் என்று அறிவித்துக்கொண்டது. ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது என்று அதன் கொள்கை. அட்டையிலேயே பொருளடக்கம் ஆரம்பித்திருக்கும். அந்த நிலைபாடுகள் தான் பின்னர் சிற்றிதழ்கள் அனைத்துக்கும் இருந்தன. ஆகவேதான் அவை சிற்றிதழ்கள். விற்பனை எண்ணிக்கையைப் பெருக்க முனைபவை சிற்றிதழ்கள் அல்ல.

ஏன்? விற்பனை எண்ணிக்கை பெருகினால் உற்பத்தி- நிர்வாக அமைப்பு உருவாகி வரும். அவ்வாறு உருவாகி வந்தால் அதற்கு ஊதியம் மற்றும் லாபம் தேவைப்படும். ஊதியமும் லாபமும் கட்டாயம் என்றால் அதன்பின் முதன்மைநோக்கம் அதுவாக ஆகிவிடும். புதியனவற்றுக்கு இடமிருக்காது.

சிற்றிதழ் என்பதும் ஓர் அமைப்புதான். ஆனால் அது வரையறுக்கப்பட்ட அமைப்பு. தன் செயல்பாட்டு எல்லையை பங்கேற்பாளர் எல்லையை தெளிவாக முன்னரே வரையறை செய்து கொண்டது அது.

எண்ணிக்கை குறைவான பலவகையான பிரசுரங்கள் உள்ளன. சிலவகை தொழில்நுட்ப இதழ்கள், சில குழுக்களின் தனிச்சுற்று இதழ்கள் . சில அமைப்புகளின் செய்திமடல்கள், சாதி மதக் குழுக்களின் தனிவட்ட இதழ்கள். அவையெல்லாம் சிற்றிதழ்கள் அல்ல. சிற்றிதழ் என்பது மேலே சொன்ன சிற்றிதழ் மனநிலையின் வெளிப்பாடாக அமையும் இதழ் மட்டுமே.

1

தமிழில் 1920களில்தான் பேரிதழ்கள் வேரூன்றத் தொடங்கின. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக ஆனமை அன்று அரசியலார்வத்தை மக்களிடையே உருவாக்கியது. அது அச்சு ஊடகம் உருவாவதற்கான சூழலை அமைத்தது.

1882ல் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன் பேரிதழாக மாறியது.1928ல் ஆனந்த விகடன். 1934ல் தினமணி. இவை மின்னச்சு முறையில் ஏராளமாக அச்சிடப்பட்டு அன்று வளர்ச்சி பெற்றிருந்த ரயில்பாதைகள் மூலம் நாடெங்கும் கொண்டுசெல்லப்பட்டன. இருபத்தைந்தாண்டுகளுக்குள் இவை பூதாகரமாக வளர்ந்தன. சுதேசமித்திரன் நின்றது. பல இதழ்கள் புதிதாக வந்தன

இந்த அலை வணிக எழுத்தை நிலைநாட்டியது. அவர்களை மட்டுமெ இலக்கியவாதிகளாக மக்கள் அறிந்தனர். சிந்தனை, கலை அனைத்துமே ‘மக்களுக்குப் பிடித்த’ வகையில் மட்டுமே எழுதப்படும் நிலை வந்தது. இந்த மைய ஓட்டத்திற்கு மாற்றாக எழுந்ததே சிற்றிதழ் இயக்கம். அதன் தொடக்கப்புள்ளியே எழுத்து.

நவீன் இவ்விஷயங்களை little magazines என விக்கிப்பீடியாவில் தேடினாலே தெரிந்துகொண்டிருக்கமுடியும். அவரைத் தடுப்பது எது? பார்ப்பனியம் என்ற அந்தச் சொல். அரசியல் மேடையிலிருந்து பொறுக்கிக்கொண்டது அது. அரசியல் மேடையின் வித்தாரப்பேச்சுக்கு அப்பால் இலக்கியமோ சிந்தனையோ அறியாதவர்களே அதைக் கையாளமுடியும்.

அந்த அறியாமை ஒரு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பிறர் முட்டாள்கள் என்றும் அவர்கள் அறியாத பல தனக்குத்தெரியும் என்றும் எண்ணச்செய்கிறது. பார்ப்பனச்சதி என்று சொன்னதுமே உள்ளம் கிளுகிளுக்கிறது. தரமான வாசகர் சிலராவது தன்னை வாசிக்கக்கூடும் என்ற எண்ணமே இல்லாமல் பேசச் செய்கிறது. அவர்களின் தரப்பிலிருந்து மறுப்போ திருத்தமோ வந்தால் கூட மூர்க்கமாக எதிர்வாதம் செய்யும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.

2

தமிழ்ச் சமூகத்தில் எந்த ஒரு விடலையும் வளரும் பருவத்தில் இந்த மொண்ணைப் பேச்சாளர்களிடம் தான் சென்று சேர்கிறான். அவர்களிடமிருந்து ஒற்றை வரிகளை, காழ்ப்புகளைக் கற்றுக்கொள்கிறான். அரசியலையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்வதாக கற்பனை செய்துகொள்கிறான்.

முதன்முதலாக அவன் ஒரு சிற்றிதழை கையில் எடுக்கும்போது அதற்கு மாற்றான ஓர் உலகத்தைக் சந்திக்கிறான். முதலில் அவனுக்கு புரியாமையும் அது அளிக்கும் எரிச்சலும் ஏற்படுகிறது. கலைச்சொற்கள் மிரளச் செய்கின்றன. நீண்ட விவாதங்களும் விரிவான கட்டுரைகளும் வெறும் பம்மாத்து என்று தோன்றுகின்றன. எல்லாம் எளிமையாக இருக்கும் ஓர் உலகிலிருந்து எல்லாமே சிக்கலாக இருக்கும் ஒர் உலகுக்கு வந்த பதற்றம் அது.

அதில் அவன் பொருந்தும்போது அனைத்தையும் வரலாறாக காண கற்றுக்கொள்கிறான். ஒவ்வொன்றுக்கும் மாற்றுத் தரப்பு உண்டு என அறிகிறான். எதுவுமே எளியவை அல்ல என்றும் பல்வேறு கூறுகள் சிக்கலாகப் பின்னிப் பிணைந்து உருவாகக்கூடியவை என்றும் புரிந்துகொள்கிறான். சிற்றிதழ் மனநிலை என்பது எளிமைப்படுத்தாமலிருப்பது என அறிகிறான். அதன்பின்னர்தான் அவன் சிற்றிதழ் வாசகன்.

சிற்றிதழ் வாசகன் எந்த கருத்தியலைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி, எந்த இலக்கியமுறைமையை நம்புபவனாக இருந்தாலும் சரி, அடிப்படையில் அவன் மேலே சொன்ன சில மனநிலைகளைக் கொண்டிருக்கிறான். அது அவனை வெளியே உள்ள பொது அரசியலின் கூச்சல்களில் இருந்து அன்னியப்படுத்துகிறது. வெகுஜன ரசனையில் இருந்து விலக்குகிறது. அவனுடைய மொழியை செறிவாக்குகிறது. அவனுடைய சிந்தனையின் தர்க்கத்தை நுட்பமும் சிக்கலும் கொன்டதாக ஆக்குகிறது. இந்த மனநிலையை உருவாக்கியதே சிற்றிதழ்களின் சாதனை.

yathra1982cover34-36a

இத்தனைக்கும் பின்னர் ஒன்றைச் சொல்லவேண்டும், சிற்றிதழியக்கம் என்பது ஓர் ‘உண்மையான’ அறிவியக்கம் அல்ல. அது ஓர் மாற்று அறிவியக்கம் மட்டும்தான். எவ்வகையிலேனும் பரந்துபட்ட மக்களைச் சென்றடைந்து விரிவான பாதிப்புகளை உருவாக்குபவை மட்டுமே அறிவியக்கம் ஆக முடியும். சிற்றிதழ் இயக்கம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு அல்லது ஒரு விதைநிலம், அவ்வளவுதான்.

ஆகவே சிற்றிதழ் என்பதை புனிதப்படுத்துவதும் சரி, சிற்றிதழ்கள் மீது கடந்தகால ஏக்கங்களை பூசிக்கொள்வதும் சரி, அதை ஒரு மதமாகக் கொண்டு அதன் மனநிலைகளை நிரந்தரமாக நீட்டிக்க முயல்வதும் சரி அசட்டுத்தனமானவை. சிற்றிதழ்களை அழிந்துவரும் அரிய உயிரினமாக கண்டு பேண நினைப்பதும் சரி, சிற்றிதழ்கள் செய்தவற்றை மீன்டும் அப்படியே செய்யவேண்டுமென நினைப்பதும் சரி, பழைய சிற்றிதழ்களை மீன்டும் நகல் செய்ய முயல்வதும் சரி பொருளற்றவை

சிற்றிதழ் இயக்கம் என்பது இலக்கியவரலாற்றின் ஒரு காலகட்டம் மட்டுமே. அதற்கான தேவை உருவானபோது எழுந்து அத்தேவை நிறைந்தபோது அது மறைந்தது. இன்று நாம் செய்யவேன்டியது சிற்றிதழ் உருவாக்கிய உத்வேகத்தை, அந்த மனநிலைகலை, அந்த அறிவுப் புலத்தை விரிவாக்கி முன்னெடுப்பது மட்டுமே.

அமெரிக்காவின் சிற்றிதழ் இயக்கத்தையே கூர்ந்து நோக்கலாம். ஐம்பதுகளில் வலுவாக எழுச்சிபெற்ற அது முப்பதாண்டுகளில் காலாவதியாகியது. அதில் எழுதியவர்கள் அனைவரும் மாற்று இலக்கிய சக்திகளாக எழுந்து வந்தனர். அடுத்த காலகட்டத்தில் இணையம் சிற்றிதழ் என்பதன் தேவையை இல்லாமலாக்கியது. வலுவான மாற்று ஊடகமாக அது நிலைகொண்டது. பொதுவாக இன்று சிற்றிதழ்களின் தேவை இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

மலையாளத்தில் சமீக்‌ஷா, வாக்கு, கேரளகவிதா போன்ற சிற்றிதழ்கள் ஐம்பதுகளில் வலுவான மாற்று சக்திகளாக இருந்தன. ஆனால் எழுபதுகளிலேயே அவை நடுவாந்தர இதழ்களை உருவாக்கி அங்கே தங்களை பொருத்திக்கொண்டன. மேலும் விரிவான செல்வாக்கைச் செலுத்தின. மாத்ருபூமி, பாஷாபோஷிணியிலேயே எந்தவகையான எழுத்தும் வெளிவரும் என்ற நிலையில் சிற்றிதழ்களுக்கான தேவை இருக்கவில்லை. இன்று சில தனிக்குழுக்களுக்கான சிற்றிதழ்களே அங்குள்ளன.

தமிழிலும் ஐம்பதுகளில் தொடங்கிய சிற்றிதழ் இயக்கம் எண்பதுகளிலேயே அதன் எல்லையை கண்டடையத் தொடங்கியது. எஸ்.வி ராஜதுரையின் இனி, தமிழவனின் இன்று, வசந்தகுமாரின் புதுயுகம் பிறக்கிறது போன்று அடுத்தகட்ட இதழ்களுக்கான முயற்சிகள் தொடங்கின. சுபமங்களா, தமிழ்மணி, இந்தியா டுடே போன்றவை சிற்றிதழ்களின் உள்ளடக்கத்தை விரிவான தளத்திற்கு கொண்டு சென்றன. அதன்பின்னரே காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, புதியபார்வை, அமிர்தா போன்ற நடுத்தர இதழ்கள் வெளிவந்தன.

11024

இன்று சரியான பொருளில் தமிழில் சிற்றிதழ்களின் தேவை இல்லை. இணையத்தின் வீச்சும் எளிமையும் சிற்றிதழ்களை பொருளற்றதாக்கிவிட்டன.நேற்று என்னென்ன காரணங்களுக்காக சிற்றிதழ்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ அவை எல்லாமே இணையத்தால் இல்லாமலாக்கப்பட்டுவிட்டன. சிற்றிதழ்களின் எழுத்துக்கள் கூட இணையம் வழியாகவே வாசிக்கப்படுகின்றன. தமிழ்ச்சிற்றிதழ்களின் காலகட்டம் என்பது எழுத்து முதல் நிகழ் வரையிலான நாற்பது வருடங்கள் மட்டுமே.

சிற்றிதழ்களில் எழுதப்படும் அனைத்தையும் வெளியிட சுபமங்களா முன்வந்த போதே அந்த தேவை மறைந்துவிட்டது. சமீபத்தில் ஒரு நண்பர் கடிதத்தில் கேட்டிருந்தார். கல்குதிரையிலும் ஆனந்தவிகடனிலும் ஃபேஸ்புக்கிலும் ஒரே கவிதை வெளியாகுமென்றால் கல்குதிரை எதற்காக என்று.

ஒரு சமீபகால உதாரணம். ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த போது புகலிட நாடுகளில் ஒரு சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கினர். அவை தங்களுக்கென சில தனித்தன்மைகளைக் கொண்டிருந்தன. பத்தாண்டுகளில் இணையம் அந்த இயக்கத்தின் தேவையை இல்லாமலாக்கியது. அவ்விதழ்கள் பெரும்பாலும் அனைத்தும் வரலாறாக மாறி மறைந்தன. இது ஓர் இயல்பான நிகழ்வு.

சிற்றிதழ்களை ஓர் அறிவார்ந்த ‘எதிர்இயக்கம்’ என்றும், அது ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் தேவையால் உருவான ஒன்று என்றும், அதற்குரிய மனநிலைகளும் உணர்வு நிலைகளும் அக்காலகட்டத்தால் வரையறை செய்யப்பட்டவை என்றும் புரிந்துகொள்ளுவதே சிறந்ததாகும்.

1

இன்றைய சூழலில் சிற்றிதழ் இயக்கம் இரு காரணங்களுக்காக முக்கியமாக எண்ணப்பட வேண்டும். ஒன்று, அது நம்முடைய வரலாற்றுப் பின்புலம். இணைய இதழான இந்த தளம் திரும்பத் திரும்ப தமிழ் சிற்றிதழ்மரபின் நீட்சியை நினைவூட்டிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.

இரண்டு, அது உருவாக்கிய விமர்சன மதிப்பீடுகள். இன்று நாம் இலக்கியத்தில் முன்வைக்கும் மதிப்பீடுகள் அனைத்தும் அந்த பின்புலத்தில் நிகழ்ந்த நீண்ட உரையாடலின் விளைவாக உருவாகி வந்தவை.

இந்தத்தளத்தில் அம்மதிப்பீடுகள் அதே சமரசமின்மையுடன் முன்வைக்கப்படுகின்றன. சொல்லப் போனால் இதில் நிகழும் எல்லா விவாதங்களும் இணையம் மூலம் வந்துசேர்ந்துகொண்டே இருக்கும் பரவலான பொதுவாசகர்களுக்கும் சிற்றிதழ்ச் சூழலில் திரண்டுவந்த விமர்சன அளவுகோல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளில் இருந்து உருவாகக்கூடியவை.

எது தவிர்க்கப்படவேண்டும் என்றால் சிற்றிதழ்கள் தங்கள் செயல்பாட்டுக்களத்தை குறுகலாக வரையறை செய்து கொண்டமை, தனிப்பட்ட மோதல்களை முன்னெடுத்தமை போன்றவை. சிற்றிதழ்கள் குறைவாகவே வெளியானமையால் குறைவாக எழுதும் பழக்கம் உருவானது. இணையம் அளிக்கும் வாய்ப்பு வந்த பின்னரும் அத்தகைய வழக்கங்களை எல்லாம் மதம் போல போற்றி வர வேண்டியதில்லை.

உண்மையான அறிவியக்கம் என்றால் பிரம்மசமாஜம், நாராயணகுருவின் இயக்கம், இடதுசாரி இயக்கம் போன்றவற்றையே சொல்வேன். தமிழில் அத்தகைய உண்மையான அறிவியக்கம் ஒன்று உருவாவதற்கான வாய்ப்பு இன்னும் இல்லை. ஆனால் இன்று கிடைக்கும் வாய்ப்புகளைக்கொண்டு அப்படி ஒன்றுக்கான அடித்தளத்தை அமைக்கமுடியும். விதைநிலத்தில் இருந்து பிடுங்கி நட்டு வயல்பெருக்க முடியும்.

தொடர்புடைய பதிவுகள்

சிங்கப்பூருக்கு…

$
0
0

lee kuan u 2015 03 18

அன்பு ஜெ,

வணக்கம். இரண்டு முறை சிங்கப்பூர் வந்திருக்கிறீர்கள். மூன்றாம் முறையாய் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு வருவதாகச் செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மூன்றாம் முறையும் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

இந்த நாட்டின் நவீன சிற்பியாய் இருந்த திரு லீ குவான் யூ மறைந்தபோது அவரைப்பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என நினைத்தேன். காரணம், தமிழக மாவட்டங்களிலும் இந்திய அரசிலும் சில அனுபவங்களை விதைத்துவிட்டுச்சென்றது மட்டுமல்லாமல், அறிந்தோ அறியாமலோ அவர் இந்தியஞான மரபின் வேர்த்தன்மையைக் கொண்டவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுகுறித்து தங்களது உள்ளுணர்வை அறிந்துகொள்ள ஆசை.

மக்களின் ஜனநாயக வாழ்க்கையை அடகு வைத்து பொருளாதார வளம் பெருகச்செய்தார் என்று வல்லினத்தில் திரு.அ.மார்க்ஸ் எழுதிய இக்கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவை இரண்டும் சமதளத்தில் இயங்க இயலுமா? உங்களது கருத்து என்ன? http://vallinam.com.my/version2/?p=2062

அன்புடன்

எம்.கே.குமார்
MK_KUMAR_SINGAPORE

அன்புள்ள குமார்,

மீண்டும் சிங்கப்பூர். நடுவே சிலமுறை மலேசியா வந்தேன், சிங்கப்பூருக்கு இது மூன்றாம் முறை. அருண்மொழியும் வருகிறாள். முதல்முறை வந்தபோது அவளும் வந்ததை நினைவுகூர்வீர்கள் என நினைக்கிறேன். இனிய நாட்கள். அந்தப்புகைப்படங்களில் இளமையாக இருக்கிறேன். சித்ரா அப்படியேதான் இருக்கிறார்கள்.

லீ குவான் யூ பற்றி சித்ரா எழுதிய ‘சிங்கப்பூரின் கதை’ நூலில்தான் விரிவாக வாசித்தேன். அவரை ஒரு நல்லெண்ணம்கொண்ட சர்வாதிகாரி என்று சொல்லலாம். Benevolent Nepotism என்பது எளிதில் வரையறைசெய்யக்கூடியது அல்ல. உள்முரண்கள் குறைவான சிங்கப்பூர் போன்ற மிகச்சிறிய வணிகநாட்டுக்கு அது நல்விளைவுகளை அளித்தது.

இந்த அளவுக்குமேல் சிங்கப்பூரைப்பற்றி எனக்கு உறுதியுடன் சொல்லும்படி ஏதும் தெரியாது. நான் நண்பர்களுடன் வந்து தங்கிய சிலநாட்களின் மனப்பதிவுகளும் சில நூல்களுமே ஆதராங்களாக உள்ளன. இந்தியாவின் நிலப்பகுதிகளை தொடர்ந்த ஆர்வத்துடன் பல்லாண்டுகளாகக் கவனிப்பதைப்போல நான் சிங்கப்பூரை கவனித்ததில்லை என்பதே உண்மை. ஆகவே நான் ஏதும் சொல்லவில்லை.

பட்டினியையும் தேக்கநிலையையும் அகற்றி பொருளியல் நிறைவை சிங்கப்பூருக்கு அளித்தமை லீ குவான் யூ அவர்களின் சாதனை. அரைநூற்றாண்டுக்காலமாக நீளும் இன ஒற்றுமையை உருவாக்கியதும் சாதனையே. இவ்வளவே என் மனப்பதிவு.

சமீபகாலமாக சிங்கப்பூர் அதன் ஜப்பானியபாணி அதிதீவிர நடைமுறைக்கல்வி முறையிலிருந்து விலகி அமெரிக்கபாணி கல்விமுறைக்குச் செல்வதும், நூல்வாசிப்பையும் சிந்தனையையும் பெருக்க பெரும்பணம் செலவிட்டு எடுக்கும் முயற்சிகளும் மிக முக்கியமான முன்னுதாரணங்கள். தென்கொரியாவும் அவ்வகையில் முக்கியமான பாய்ச்சல்களை நிகழ்த்தி வருகிறது என்கிறார்கள்

மீண்டும் சந்திப்போம்

ஜெ


சிங்கப்பூரில் சிலநாட்கள்

சிஙக்கப்பூர் கடிதங்கள்

சிஙப்பூர் வாசிப்பியக்கம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சொல்புதிது வெ.சா சிறப்பிதழ்

$
0
0

1

ஜெ,

நீங்கள் நடத்திய “சொல்புதிது” இதழின் வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழில் இருந்து உங்கள் அறிமுகம், வெ.சாவின் கட்டுரை மற்றும் வேதசகாய குமாரின் கட்டுரைகளை ஸ்கேன் செய்து பதிவேற்றி இருக்கின்றேன்.

Images –

Images – https://drive.google.com/open?id=0ByEEpeswRBmdbTZvcFJfbEM2SU0

Pdf - https://drive.google.com/open?id=0ByEEpeswRBmddGhOaTJNSzgxazQ

ஏ.வி.மணிகண்டன்

தொடர்புடைய பதிவுகள்

தமிழ் இந்துவுக்கு நன்றி

$
0
0

venk_2594320f

தொண்ணூறுகளில் இராம சம்பந்தம் தினமணியின் ஆசிரியராக இருந்தபோது அவருக்கு நான் இரு மலையாள நாளிதழ்களை அனுப்பி கூடவே ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தேன். மறைந்த மலையாள எழுத்தாளர் ஒருவருக்கு மனோரமா, மாத்ருபூமி இரு பத்திரிகைகளும் எழுதிய அஞ்சலித்தலையங்கங்கள் அவை.

முன்னர் ஒரு தமிழ் எழுத்தாளர் மறைந்தபோது தினமணி மிகச்சிறிய செய்தியை வெளியிட்டிருந்தது. அதே நாளிதழில் தினமணியில் பிழைதிருத்துநராக வேலைபார்க்கும் ஒருவரின் வயதான தந்தை மறைந்த செய்தி அதைவிடப்பெரிய செய்தியாக வெளிவந்திருந்தது. அதைச்சுட்டிக்காட்டி நான் எழுதியபோது ‘செய்திதானே வெளியிடமுடியும்?’ என்று சம்பந்தம் எனக்கு எழுதினார். அதற்கு நான் அளித்த பதில் அது.

மலையாள நாளிதழ் வெளியிட்ட செய்திகளும் தலையங்கங்களும் தினமணியின் மனநிலையை ஓரளவு மாற்றின. அதன்பின் எழுத்தாளர்கள் மறைந்தபோதெல்லாம் தினமணி அன்ஞ்லிக் கட்டுரைகளை வெளியிட்டது. சிலசமயம் நான் அஞ்சலிக்கட்டுரைகளை அன்றே எழுதி உள்ளூர் தினமணி நிருபரிடம் கொடுத்து மறுநாள் செய்தியுடன் அஞ்சலிக்கட்டுரையையும் வெளியிட ஏற்பாடு செய்தேன். அவை சூழலில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணின என்று பின்னர் பல வாசகர்களின் பேச்சுகள் காட்டின.

ஆனால் அப்போதுதான் ஒன்று தெரிந்தது, எழுத்தாளர் பற்றியும் இலக்கியம் பற்றியும் செய்திவெளியிட மிகப்பெரிய தடை அந்நாளிதழ்களில் வேலைபார்க்கும் துணைஆசிரியர்கள்தான். அவர்கள் பலவகை. பெரும்பாலானவர்கள் எதுவும் வாசிப்பதில்லை. ஆகவே எழுத்தாளர்கள் என்றால் யாரென்றே அவர்களுக்குத்தெரியாது. சிலர் தங்களை பெரிய எழுத்தாளர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் அழுக்காறுகொண்ட சோட்டாக்கள். சிலர் கொள்கைப்பிடிப்பு என்ற பேரில் வன்மங்களை சுமந்தலைபவர்கள். மாற்றுக்கொள்கைகளை அமுக்குவதை அறிவுலகப்பணி என நினைப்பவர்கள்.

இராம சம்பந்தம் விலகியபின் தினமணி மீண்டும் பழைய பாணிக்கே திரும்பியது. நிலையவித்வான்களின் பள்ளிகூட பாணி கட்டுரைகளால் நிறைந்துள்ளது அது. எப்போதாவது பார்க்கநேர்ந்தால் சலிப்புடன் தூக்கிவிசும் தரம்.

தமிழ் இந்து நாளிதன் இலக்கியம் கலைகள் சிந்தனை ஆகியவற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தமிழில் மிகப்பெரிய பாய்ச்சல் என நினைக்கிறேன். பிற ஊடகங்களுக்கும் இது ஒரு கட்டாயத்தை அளிக்கிறது. தமிழில் எழுதுபவர்கள் பரவலாக அறியப்பட வழிவகுக்கிறது

வெங்கட் சாமிநாதனுக்கு இன்று தமிழ் இந்து நாளித தலையங்கம் மூலவும் அவரது கட்டுரை ஒன்றை மறுபதிப்பு செய்வதன் மூலமும் செய்துள்ள அஞ்சலி நெகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது. சிந்தனைகளும் இலக்கியமும் மக்களுக்கு இயல்பான ஆர்வத்தை ஊட்டுவன அல்ல. அறிவார்ந்த தளத்தில் அவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டுமே அவை வாழும். ஆகவே ஊடகங்களுக்கு கலையிலக்கியங்களையும் சிந்தனைகளையும் முன்னிறுத்தும் பொறுப்பு உள்ளது. தமிழ் இந்து ஒரு மிகப்பெரிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.நன்றி

வெங்கட் சாமிநாதன் எனும் எதிர்ப்புக் குரல்!

காந்தியைப்பார்த்தேன் வெ சா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 5

கதன் சொன்னான் “அன்று பகல் முழுக்க என் மாளிகையின் உப்பரிகையில் நின்று அஸ்தினபுரியின் தொன்மையான தெருக்களையும் கருமை படிந்த கோட்டையையும் காவல் மாடங்களையும் பெருமுரசங்களையும் நோக்கிக் கொண்டிருந்தேன். பொழுதுமாறும் முரசொலியே என்னை பகலென உணரச்செய்தது. அன்றிரவு அங்கே துயின்றேன். நான் ஏன் வந்தேன், என்ன செய்யவிருக்கிறேன் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஒன்றுக்கும் பொருளில்லை என்பது மூக்கில் முட்டும் சுவர் போல தெரியும் சில தருணங்கள் வாழ்வில் உண்டல்லவா?”

புலரியில் கனகர் வந்து எனக்கு விடைகொடுத்தார். நான் கிளம்பும்போது அவர் முகத்தில் ஏதோ இருந்தது. தேரில் ஏறிக்கொண்டதும் என்னிடம் “அமைச்சர் விதுரர் ஒரு சொற்றொடரை சொல்லச்சொன்னார்” என்றார். என் உள்ளம் படபடத்தது. “ஆணைகளை ஏற்பவர்கள் காத்திருக்கவேண்டும். அவர்களின் செவிகள் திறந்திருக்கட்டும் என்றார்” என்றார் கனகர். நான் அச்சொற்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் என் உள்ளம் அமைதிகொண்டது.

கங்கைக்கரைப் படகுத்துறையை அடைந்து அங்கிருந்து யமுனை வழியாக நான் மதுவனத்தை அடைவதாக இருந்தது. எனக்கான ஐந்துபாய்ப் படகு காத்திருந்தது. அதில் ஏறி கங்கையில் பாய் விரித்தபோது அதுவரைக்கும் என்னிடமிருந்த பரபரப்பு அகன்று நீரோட்டத்தின் மென்மையான ஒழுக்கு என்னுள்ளும் நிறைந்தது. என் பரபரப்பை எண்ணி நானே புன்னகைத்துக் கொண்டேன். மரத்தில் அடிவிழுகையில் தூசித்துளிகள் எம்பிக் குதிப்பது போன்றதே அது. நானல்ல, நான் அமர்ந்திருக்கும் நிலம் கொள்ளும் அதிர்வுதான் அது.

இவை அனைத்தும் என்னைச் சூழ்ந்து செல்லும் இப்பெருவெள்ளம் போன்றவை என எண்ணினேன். இதன் திசைச்செலவுக்கு அப்பால் எதையும் ஆற்ற ஒண்ணாதவன் நான். இதிலொரு துளி. இதிலொரு அலை. ஆயினும் நான் என்று எண்ணவேண்டியிருந்தது. ஆகவே எதையோ ஆற்றவேண்டியிருந்தது. ஆற்றியதனாலேயே விளைவை விழையவேண்டியிருந்தது. விழைவு வெளியுலகின் இரும்புத்தன்மையை சந்திப்பதனால் பகற்கனவுகளை நெய்யவேண்டியிருந்தது. ஒவ்வொரு கணமும் கற்பனையில் என்னை மீட்டு மீட்டு மையத்தில் வைத்துக்கொள்கிறேன். ஆனால் அதன் வீண் உழைப்பை என் அகம் அறியும். ஆகவே இறுதியில் அது சோர்வையே அளிக்கிறது. வெற்றிகள் தற்காலிகமானவை. அச்சோர்வுதான் இறுதியானது.

படகுப்பயணம் உள்ளத்தை எளிதாக்குவது. இவ்வண்ணம் இங்கு எளிதாக ஒழுகிச்செல்வது போல் உகந்த ஏதுமில்லை என எண்ணிக்கொண்டேன். விரிந்துகொண்டிருப்பது ஒரு மாபெரும் வலை. அதில் நானும் ஒரு கண்ணி என எனக்கு மட்டுமே தெரியும். இருந்துகொண்டிருப்பதொன்றே நான் ஆற்றக்கூடியது. யானையின் உடலில் தொங்கும் உண்ணியும் யானையே. இப்படலத்தில் கொக்கிபோல பற்றிக்கொண்டு தொங்குவது மட்டுமே நான் செய்யவேண்டியது. ஒழுகு. ஒழுகிச்செல். ஒழுகிக்கொண்டே இரு.

அச்சொற்கள் என்னை ஆறுதல் படுத்தின. எவர் எவரை மணந்துகொண்டால் எனக்கு ஆவதென்ன? அஸ்தினபுரியின் வெற்றியோ இந்திரப்பிரஸ்தத்தின் புகழோ எனக்கு என்ன அளிக்கப்போகிறது? உண்மையில் அவ்வெண்ணம் கூட ஒரு உள நாடகமாக இருக்கலாம். நான் விழைவது நிகழும் வரை என்னை ஆறுதல் செய்து கொள்ள நான் அடைந்ததாக இருக்கலாம். ஆனால் அவ்வெண்ணம் என்னை துயில வைத்தது .படகின் அகல்வெளி முற்றத்தில் தூளிப்படுக்கையில் படுத்து நன்கு துயின்று விட்டேன்.

குகன் வந்து என்னை எழுப்பியபோது விழித்தேன். என்னை நோக்கி ஒரு சிறு படகு வருவதையும் அதில் இருந்த குகன் அணுகுவதற்கு ஒப்புதல் கோருவதையும் அவன் சொன்னான். “அணுகட்டும்” என்றேன். அப்போதே தெரிந்துவிட்டது. விதுரர் சொன்னது அதுவே. படகில் இருந்து இறங்கி வடத்தில் தொற்றி மேலே வந்தவர் துவாரகையிலிருந்து வந்த தூதுடன் இருந்தார். மதுராவில் அவரை நான் கண்டிருக்கிறேன். விருச்சிகர் என்று அவர் பெயர். அங்குள்ள துணை அமைச்சர்களில் ஒருவர். அவரை அரசர் வசுதேவருக்கு நெருக்கமானவர் என்றுதான் அதுவரை அறிந்திருந்தேன். இளைய யாதவருக்கு நெருக்கமானவர்கள் பாலில் நெய் என பாரதவர்ஷம் முழுக்க கலந்துளார்கள் என்று அப்போது எண்ணிக்கொண்டேன்.

”அவரை எதிர்கொண்டு அழைத்தேன். முகமனுக்குப்பின் அவர் என்னிடம் துவாரகையின் சங்கு சக்கர கருட முத்திரை பதித்த தோற்சுருளை அளித்தார். அதில் இளைய யாதவரின் ஆணை தெளிவாக இருந்தது. மந்தணச்சொற்களில் என்னை இங்குள்ள இந்த மலைச்சுனை நோக்கி வரும்படி கூறியிருந்தார். இங்கு வருதற்கான வழியையும் நாளையும் கணித்திருந்தார். அக்கணிப்பின்படி நான் நேற்றுமுன்னாள் இங்கு வந்து காத்திருந்தேன்” என்றான் கதன்.

அர்ஜுனன் அவனுடைய சொற்பெருக்கை கேட்டுக்கொண்டு விரியத்தொடங்கிய காலைவெயிலில் கண் ஓட்டியபடி நடந்தான்.  “தங்களை சந்தித்துவிட்டேன். எண்ணி சொல்லெடுத்துப் பேசவேண்டும் என தூதுமுறை சொல்லும். ஆனால் நீங்கள் என் நெஞ்சை ஆளும் இளைய யாதவரின் நேர்வடிவமென்றே தோன்றியது. நான் சொன்னவை அவரது செவிகளுக்காக” என்றான். “இங்கு என்னை சந்திக்க நேருமென்று சொல்லப்பட்டதா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கு நீங்கள் இருப்பீர்கள் என்றும் உங்களிடம் இச்செய்திகளை விரித்துரைக்கும்படியும் எனக்கு ஆணை” என்றான் கதன்.

அர்ஜுனன் “நீங்கள் மதுராவிலிருந்து கிளம்பி எவ்வளவு நாட்களாகின்றன?” என்று கேட்டான். “பன்னிருநாட்கள்” என்றான் கதன். அர்ஜுனன் “இத்திசை நோக்கி நான் திரும்ப முடிவெடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இங்கு நான் வருவேனென்று எப்படி கணக்கிட முடிந்தது?” என்றான். கதன் நகைத்து “பாரதவர்ஷத்தையே ஒரு பெரும் சூதுக் களமென கண்டு விளையாடுபவர் அவர் என்கிறார்கள். தன் உளம் நிறைந்த ஒருவரின் தடத்தை அறிவதா அவருக்கு கடினம்?” என்றான். அர்ஜுனன் சட்டென்று நகைத்து “ஆம்” என்றான்.

பிரபாசதீர்த்தத்தின் இறுதிப்பாதைவளைவில் இருந்தது சுகீர்த்தி என்னும் விடுதி. கற்தூண்களால் ஆன மண்டபத்தைச் சுற்றி நோன்புக்காலத்திற்காக போடப்பட்டிருந்த ஓலைக்கொட்டகைகளில் பயணிகள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். உச்சிவெயிலில் உடல் வியர்த்து வழிய கதன் “உணவு அருந்தி இளைப்பாறாமல் மேலும் செல்லமுடியாது” என்றான். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இனிமேல் தீர்த்தமுகம் அருகேதான் என நினைக்கிறேன்.”

அருகே சென்ற வணிகன் நின்று “வீரரே, நீர் ஓடும்புரவியில் ஏறும் பயிற்சி கொண்டவராகக்கூட இருக்கலாம். இனிமேல் இப்பாதையில் ஏறுவதற்கு ஒருவேளை அப்பயிற்சிகளும் போதாமலாகும்” என்றான். கதன் கவலையுடன் “செங்குத்தான பாதையோ?” என்றான். “பாதையே இல்லை. பன்னிரு இடங்களில் தொங்கவிடப்பட்ட கயிறுகள் வழியாக ஏறிச்செல்லவேண்டும். நான்கு பெரும்பாறைவெடிப்புகள் நடுவே கட்டப்பட்ட வடமே பாலமாக உள்ளன. அவற்றில் நடந்துசெல்லவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பலநூறுபேர் அங்கு விழுந்து மறைகிறார்கள்.”

கதன் அச்சத்துடன் “நான் படைப்பயிற்சி பெற்றவன் அல்ல” என்றான். “அஞ்சவேண்டாம், உம்மை அங்கு கொண்டுசென்று சேர்ப்பது என் பணி” என்றான் அர்ஜுனன். “உடல் வலிக்குமோ?” என்றான் கதன். “வலிக்காமல் செல்ல நான் ஆவனசெய்கிறேன். கவலைவிடுக!” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் அச்சத்துடன் மேலேறிச்சென்ற மலையடுக்குகளை நோக்கினான். மழையில் கருமைகொண்ட பெரிய உருளைப்பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றென ஏறி அமர்ந்து மாளா அமைதியில் மூழ்கியிருந்தன.

அவர்கள் விடுதியை அடைந்தனர். அங்கே பெரிய படகு ஒன்று வைக்கப்பட்டு அதில் குளிர்ந்த மோர் கலக்கி வைக்கப்பட்டிருந்தது. ஓலைத்தொன்னைகளிலும் கொப்பரைகளிலும் அதை அள்ளி அருந்திக்கொண்டிருந்தனர் பயணிகள். கரியதாடிகளில் வெண்ணிறமான நீர்மணிகள் உருண்டு வழிந்தன. “பெருங்கூட்டம் இருக்கும் போலிருக்கிறதே” என்றான் அர்ஜுனன். “வீரரே, சௌராஷ்டிர மண்ணை ஒரு செந்நிறக்கொடி என்கிறார்கள். அதில் பொறிக்கப்பட்ட முத்திரை இந்தப் பிரபாசம். இங்கு ஒருமுறை வந்துசென்றவனே அங்கு வீரன் என கருதப்படுகிறான்” என்றான் வணிகன்.

“அஷ்டசிரஸ் சௌராஷ்டிரத்தின் மணிமுடியின் உச்சி. அங்கு குடிகொள்கிறான் அறத்தேவனாகிய பிரபாசன். தர்மதேவனுக்கு பிரபாதை என்னும் மனைவியில் பிறந்தவன். பிறந்ததுமே தன் தந்தையிடம் அவன் கேட்டான், அவரது பணி என்ன என்று. இறப்பு என்று அவர் சொன்னார். ஏனென்றால் அழிவும் இறப்புமே அறத்தை நிலைநாட்டும் வழிகள். எந்தையே அழிவின்மையை அடையும் வழி என்ன என்று மைந்தன் கேட்டான். அழிவின்மை தேவர்களுக்குமட்டும் உரியது என்றார் தந்தை. உபதேவர்கள் கூட யுகமுடிவில் அழிபவர்களே என்றார். அதை நான் அடைவேன் என்றான் பிரபாசன்.”

“ஆயிரம் ஆண்டுகாலம் பிரபாசன் தவம்செய்தான். அவன் முன் தோன்றிய சிவனிடம் அழிவின்மை என்னும் வரம் கேட்டான். நீ அறத்தின் தேவன். ஐந்துகோடி வழக்குகளை உனக்கு அளிக்கிறேன். அனைத்திலும் அறம் பிழைக்காது தீர்ப்புரைத்தாயென்றால் நீ தேவன் எனப்படுவாய் என்றார் சிவன். நூறு யுகங்கள் அத்தனை வழக்குகளுக்கும் நல்ல தீர்ப்பை உரைத்தான். ஒருமுறைகூட துலாமுள் அசையவில்லை. அவனைப் பாராட்டிய சிவன் நீ எட்டு வசுக்களில் ஒருவனாக அழிவின்மை கொள்க என்றார். பிரஹஸ்பதியின் தங்கையாகிய வரையை மணந்து எட்டு வசுக்களில் ஒருவராக அமர்ந்தார் பிரபாசன். மண்ணிலும் விண்ணிலும் நீதிக்கு அவரே நிலையான சான்று.”

“இங்கே எட்டுகுன்றுச்சிகள் உள்ளன. எட்டாவது உச்சி இது. முதல் முடியில் தரன், இரண்டாவதில் துருவன். பின்னர் சோமன் கோயில்கொண்டிருக்கிறார்கள். அகஸ், அனிலன், அனஹன், பிரத்யூஷன் ஆகியோர் தொடர்ந்த மலைமுடிகளில் இருக்கிறார்கள். இறுதியான உயர்முடியில் பிரபாசனின் ஆலயம் உள்ளது. அங்குதான் அக்னிசரம் என்னும் அருவி மலையிடுக்குகளில் இருந்து கொட்டுகிறது. அது அனலுருவான புனல்” என்றான் வணிகன். “ஆகவே இங்கே நீராடுவது அக்னிஷ்டோம வேள்விசெய்த பயனை அளிக்கும்.”

“அந்த அருவியின் நீரை அருந்தினால் கள்மயக்கு ஏற்படும். ஏனென்றால் மலையுச்சியில் தேவர்களின் சோமம் ஊறும் சுனையில் எழுவது அது. ஆகவே அதற்கு சோமதீர்த்தம் என்றும் பெயர்உண்டு” என்றான் இன்னொருவன். “ஆகவே இந்திரனுக்கு மிக விருப்பமான நீர் இது என்கிறார்கள். இந்திரன் இம்மலைமுடிமேல் வந்திறங்கும்போது அவனுடைய அழகிய ஏழுவண்ண வில் இதன் மேல் எழுந்திருப்பதை காணலாம். இந்த நீரை அருந்தி நிலையழிந்து அதன் கரையிலேயே விழுந்து பலநாட்கள் துயின்றவர்கள் உண்டு. மிகையாக அருந்தினால் உயிருண்ணும் நஞ்சு அது.”

அனலில் சுட்ட அப்பங்களும் வஜ்ரதானியத்தையும் வெல்லத்தையும் போட்டு சமைத்த இன்கஞ்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. தொன்னைகளில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய ஏவலர் “பார்த்து… கொதிக்கிறது” என்றனர். “நாங்கள் அங்கே அனலில் நீராடவிருக்கிறோம்… இது என்ன?” என்றார் ஒருவர். “சொல்லாதீர் கர்க்கரே, என் உடல் கூசுகிறது” என்றார் அவர் அருகே இருந்த ஒருவர். “அனல் என்றால் அனலேதானா?” என்றார் ஒருவர். “பின்னர் என்ன நினைத்தீர்? புராணத்திலுள்ள அனல் உடலைச் சுடாது என்று நம்பிவிட்டீரோ?” என்றார் ஒருவர். சிலர் சிரித்தனர்.

சூடான கஞ்சியை உடல் வியர்த்துவழிய குடித்தபின் கதனும் அர்ஜுனனும் வந்து வெளியே விரிக்கப்பட்டிருந்த சருகுமெத்தைமேல் படுத்துக்கொண்டனர். மேலே விரிந்திருந்த தழைப்பரப்பு வழியாக ஊசிகளாக சூரியஒளி வந்து கண்மேல் விழுந்தது. அர்ஜுனன் கண்மயங்கினான். நீண்ட புரவிப்பாதையில் அவன் சென்றுகொண்டிருந்தான். அவனுக்காக புரவியோட்டிக் கொண்டிருந்தவன் இளைய யாதவன் என்று கண்டான். விரைவு விரைவு என அவன் கூவ தேரோட்டி திரும்பிப் பார்த்தபோதுதான் அது ஒரு பெண் எனத்தெரிந்தது. சுபத்திரை. “நீ ஏன் மயிற்பீலி சூடியிருக்கிறாய்?” என்று அவன் கேட்டான். “நான் அவர்தான்” என்று அவள் சொன்னாள்.

அவர்களை விடுதிக்காரர்களே கூவி எழுப்பினர். “கிளம்புங்கள். வெயில் சாய்ந்துவிட்டால் பின்னர் மலையேற முடியாது.” அர்ஜுனன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு கிளம்பினான். கதன் “நான் ஏன் பிரபாசதீர்த்தம் வரவேண்டும்? அங்கே நான் செய்யவேண்டிய பிழைபோக்குச் சடங்கு என ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் “எனக்கு உள்ளது” என்றான். “ஏன்?” என்றான் கதன். “அதைச்செய்தபின்னரே நான் என் மூத்தவர் முகத்தை ஏறிட்டு நோக்கமுடியும்.”

கதன் விழிகள் மாறின. “குருதிப்பிழை, வஞ்சப்பிழை, களவுப்பிழை, பெற்றோர்பிழை, ஆசிரியர்பிழை, பெண்பிழை, பிள்ளைப்பிழை என பிழைகள் ஏழு” என்றான். “நீர் எப்பிழை செய்தீர் என நான் கேட்கலாமா?” அர்ஜுனன் விழிகளை திருப்பி “பெண்பிழை” என்றான். கதன் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. நீண்டநேரம் கடந்த பின்னர் “நானும் நீராடியாகவேண்டும்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாதது கண்டு “இது தந்தைப்பிழை” என்றான். அர்ஜுனன் “அதில்லாத மானுடர் எவர்?” என்றான்.

மலைச்சரிவு செங்குத்தாக மேலேறிச்செல்லத் தொடங்கியது. நடப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலின் மொத்த எடையையும் முழங்கால் தசையில் முதலில் உணர்ந்தனர். பின்னர் நுரையீரலில் அவ்வெடை தெரிந்தது. பின்னர் அத்தனை எண்ணங்களிலும் அந்த எடை ஏறி அமர்ந்தது. தலைக்குள் குருதி வெம்மையாக கொப்பளிப்பதை உணர்ந்தனர். காதுமடல்கள் அனலாக எரிந்தன.

யானைவிலா போலத்தெரிந்த மலைப்பாறைமேல் ஒரு இரும்புச்சங்கிலியை சரிவாகப்போட்டதுபோல படிநிரை தெரிந்தது. படிகள் அல்ல, நான்கு விரற்கடை ஆழத்துக்கு பாறையில் குழிசெதுக்கப்பட்டிருந்தது. கைகளை ஊன்றி நடுங்கும்கால்களை தூக்கிவைத்து மேலே சென்றனர். பேச்சொலிகள் நின்று விட்டன. அஞ்சி திரும்பிவிட எண்ணியவர்கள் பின்னால் வருபவர்களின் நிரையைக் கண்டு திரும்பமுடியாதென்று உணர்ந்து மேலும் அஞ்சினர். “செல்க!” என பின்னால் வந்தவர்கள் அவர்களை ஊக்கினர்.

ஒருவன் நிலையழிந்து அலறியபடி சரிவில் உருண்டு கீழே செல்ல அவனைப்பிடிக்க அறியாமல் கைநீட்டிய பிறிதொருவனும் நிலையழிந்து அவனைத் தொடர்ந்தான். அவர்களின் அலறல்களில் அத்தனைபேரின் கால்களும் நடுங்கத்தொடங்கின. கதன் நிலையழிய அர்ஜுனன் அவன் தோளை மெல்லத்தொட்டான். அவன் நிலைகொண்டு நீள்மூச்சுவிட்டான்.

பாறைச்சரிவில் பிடிக்க ஏதுமிருக்கவில்லை. உருண்டு சென்று கீழே பிறிதொரு பாறைமேல் விழுந்து உடல்கள் உடைந்து துடித்து அமைந்தார்கள். முதல் வீழ்ச்சியை கண்ணால் பார்த்தபின் அத்தனை கால்களும் நடுங்கத்தொடங்கின. “பார்த்து பார்த்து” என்று கூவினர். “எங்கே பார்ப்பது?” என்று எவரோ சொல்ல எவரோ சிரித்தனர். இன்னொருவன் கால்தவறி விழ அவனைப் பிடிக்க இயல்பாக கைநீட்டிய இன்னொருவனும் தொடர்ந்தான். “இங்கே துணைவர்கள் இல்லாமல் நாம் செல்வதில்லை என்னும் ஆறுதல் எழுகிறது” என்றான் முதலில் வேடிக்கையாகப் பேசியவன். சிலர் சிரித்தனர். “சங்கரே, வாயைமூடும்” என்றான் ஒரு முதியவன்.

அடிக்கொரு முறை ஒவ்வொருவராக கால்தவறி அலறியபடி உதிர்ந்து விழத்தொடங்கினர். கதன் “என்னால் முடியாது இளைய பாண்டவரே” என்றான். “இங்கு பிறர் எவருமில்லை என்று எண்ணுங்கள்” என்றான் அர்ஜுனன். “மலையை பார்க்காதீர். எதிரே உள்ள ஒரே ஒரு படியை மட்டுமே பாருங்கள். அதைமட்டுமே எண்ணுங்கள்.”

“என்னால் முடியவில்லை” என்றான் கதன். “இங்குள்ள படிகள் உங்கள் அகநுண்சொல்நிரை. ஒவ்வொரு படியும் அதன் ஓர் ஒலிப்பு. அதை மட்டும் நெஞ்சுகுவித்து அறியுங்கள். காலம் விலகட்டும். திசைகள் அழியட்டும்” என்றான் அர்ஜுனன். கதன் “ஆம். வேறுவழியில்லை” என்றான். சற்றுதொலைவு சென்றதும் அர்ஜுனன் “இளைய யாதவரை பார்த்தீரா?” என்றான்.

“இங்கு எப்படி பேசுவது?” என்றான் கதன். “இங்கு வருவது வரை பேசிக்கொண்டிருந்தோமே. அப்போது கால்களை நெஞ்சுணர்ந்து வைத்தீரா என்ன? கால்கள் அறியும் நடையை நெஞ்சு அறியாது” என்றான். “போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் அறியவேண்டியவை கைகள்தான்.” கதன் “அங்கே நீர் வேறெதையாவது நினைப்பீரோ?” என்றான். “இல்லை, ஒன்றை மட்டும்தான்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி. “அதைச்செய்யும்போது களத்தையும் எண்ணிக்கொள்வதுண்டு.”

கதன் சிரித்தான். “சொல்லும்” என்றான் அர்ஜுனன். “அவரை சந்திக்கும்படி இளைய யாதவர் தங்களுக்கு ஆணையிட்டுள்ளார்” என்றான் கதன். “எங்கு?” என்றான் அர்ஜுனன். “ஆணையில் அது இல்லை. ஆகவே அது துவாரகையாக இருக்கலாம்” என்றான் கதன். “அல்ல, துவாரகையல்ல” என்றான் அர்ஜுனன். “துவாரகை என்றால் அதை சொல்லியிருப்பார்.” கதன் “ஏன்?” என்றான். “அவர் துவாரகையிலிருந்து இவ்வோலை அனுப்பப்பட்ட அன்றே கிளம்பியிருப்பார். மதுராவுக்கோ மதுவனத்துக்கோ. மிக அருகே எங்கோதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான்.

கதன் புன்னகைத்து “அவ்வண்ணமெனில் அவர் உள்ளத்தடத்தை தாங்கள் உய்த்துணர வேண்டுமென எண்ணுகிறார்” என்றான். “எங்கு நிகழ்கிறது இந்த மணத்தன்னேற்பு?” என்றான் அர்ஜுனன்.  “முறைமைப்படி அது மதுவனத்தில் சூரசேனரின் அவைக்களத்தில்தானே நிகழும்?” என்றான் கதன். அர்ஜுனன் “ஆம்” என்றபின் ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.

அத்தனைபேரும் கால்பழகிவிட்டமையால் இயல்பாக ஆகிவிட்டிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொள்ளத் தொடங்கினர். “சென்றவர்கள் ஆவியாக எழுந்து இந்நேரம் பிரபாசதீர்த்தத்தில் நீராடத் தொடங்கிவிட்டிருப்பார்கள். அவர்கள் சென்றதுதான் குறுக்குவழி” என்றான் சங்கன். “நீரும் அவ்வழியே செல்லவேண்டியதுதானே?” என்றான் ஒருவன். “செல்ல எண்ணினேன், ஆனால் ஆவியை நீர் நனைக்குமா என்ற ஐயம் வந்தது” என்றான் சங்கன். பலர் சிரித்தனர்.

“ஏன் சிரிக்கிறார்கள்?” என்றான் கதன். “அச்சத்தை வெல்ல முதலில் நகைத்தனர். இப்போது உண்மையான உவகையுடன் சிரிக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “மாண்டவர்கள் தோற்றார்கள். நான் வென்று இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன், இதுவே இங்குள்ள ஒவ்வொருவரின் உள்ளமும் கொள்ளும் எண்ணம். போர்க்களத்திலிருந்து மீளும் வீரர்கள் இறந்தவர்களை எண்ணி உவகை கொள்வதை கண்டிருக்கிறேன்.” கதன் “நான் அவ்வண்ணம் எண்ணவில்லை” என்றான். “முதியவர்களையும் நோயுற்றவர்களையும் நோக்குங்கள். பிறர் இறக்கும் செய்திகள் அவர்களுக்கு ஆறுதலையும் அகத்துள் உவகையையும்தான் அளிக்கின்றன.”

மலைமேல் மூக்கு என நீண்டிருந்த பாறைகளில் இருந்து முடிச்சுகள் போடப்பட்ட வடங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றைத் தொற்றி மேலே சென்றார்கள். மலைமுடிகளை இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றுப்பாலத்தை நீர்த்துளி கொடிச்சரடில் செல்வதுபோல கடந்தனர். “மெல்லமெல்ல கால்கள் பழகிவிட்டன போலும்” என்றான் கதன். “இல்லை, கால்களுக்கு நெஞ்சம் விடுதலைகொடுத்துவிட்டது” என்றான் அர்ஜுனன். “பயிற்சி என்பது உறுப்புகளிலிருந்து உள்ளத்தை விலக்கும் கலைமட்டுமே.”

பிரபாசதீர்த்தத்தை தொலைவிலேயே உணர முடிந்தது. அடுமனையிலிருந்து எழுவதுபோல கண்ணுக்குத் தெரியாத நீராவி வந்து முகத்தில் பரவியது. வெண்முகில்போல எழுந்து கிளைவிரித்து குடைசூடி வான்சரிவில் நின்றது. பாறைவளைவுகளில் வியர்த்து ஊறி நீர் வழிந்தது. இரு கரியபாறைகளின் இடுக்கு வழியாக உள்ளே நுழைந்தபோது பாறைகள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே ஆழமற்ற சுனை தெரிந்தது. அதிலிருந்து வெண்ணிற ஆவி எழுந்து வளைந்தாடியது. அதனூடாக மறுபக்கம் தெரிந்த கரியபாறை அலையடித்தது.

மலை மேலிருந்து மெல்லிய வெண்ணிறப் பட்டுத்துணிபோல சிறிய அருவி ஒன்று சுனைநீர் மேல் விழுந்துகொண்டிருந்தது. மிகுந்த உயரத்திலிருந்து விழுந்தமையால் காற்றில் அருவியின் கீழ்நுனி அலையடித்து சிதறிப்பறந்தது. நீர்விழுந்த இடத்தைச்சுற்றியிருந்த பாறைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டின. சுனை ஆழமற்றது எனத்தெரிந்தது. அடித்தளத்தின் கூழாங்கற்பரப்பு மிகமேலே எழுந்து தெரிந்தது. அங்கிருந்த வேறுபாட்டை அதன்பின்னர்தான் அர்ஜுனன் அறிந்தான். அப்பாறைகளில் எந்த வகையான செடிகளும், பாசிகளும் வளர்ந்திருக்கவில்லை. நீருக்குள் மீன்களோ தவளைகளோ நீர்ப்பூச்சிகளோ இல்லை.

“கனவில் விழும் அருவிபோலிருக்கிறது” என்றான் கதன். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “தெரியவில்லை. இது உயிரற்றது என்று தோன்றுகிறது. இருக்கமுடியாதது…” என்றான். “ஏனென்றால் இங்கே செடிகளோ உயிர்களோ இல்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், உண்மை” என்றான் கதன். “இதற்குள் நெருப்பு வாழ்கிறது என்கிறார்கள்…” அர்ஜுனன் “ஆம், கந்தகத்தின் நெடி அடிக்கிறது. மேலே எரிமலைவாய் இருக்கக்கூடும். அதிலிருந்து வரும் நீர் இது” என்றான்.

“கொதிக்கும் என நினைக்கிறேன்” என்றபடி குனிந்து சுனையைத்தொட்ட கதன் “குளிர்ந்திருக்கிறது” என்றான். அர்ஜுனனும் வியப்புடன் குனிந்து நீரைத்தொட்டான். சூழ்ந்து வந்தவர்கள் கைகளைக்கூப்பியபடி கண்ணீருடன் சுனைநீரில் இறங்கினர். “ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பிழைகள் செய்தவர்கள்…” என்றான் கதன். “வியப்பாக உள்ளது, இத்தனை கடுந்தொலைவு ஏறிவரும்படி பெரிய பிழைகளா அவை?”

அர்ஜுனன் “பிழைகள் பெரியவை அல்ல. இத்தனை தொலைவுக்குச் சென்று அவர்கள் அதை செய்திருக்கிறார்கள். அந்தத் தொலைவை அவர்கள் திரும்பக் கடந்தாகவேண்டும் அல்லவா?” என்றான். விம்மி அழுதபடியும் உடல்நடுங்கியபடியும் நீரிலிறங்கி அருவியை நோக்கி சென்றனர். அதன் கீழே நின்று நனைந்தபின் விலகினர். ஒருவன் “ஆ” என்று அலறியபடி விழுந்தான். நீர் புகைந்து மேலெழுந்தது. “ஏன் ஏன்?” என்றான் கதன்.

“பிழைசெய்தவர்கள் சிலரை இந்த அருவி தண்டிக்கும் வீரரே” என்றான் வணிகன். “எப்போது இதில் கொதிநீர் வருமென எவராலும் சொல்லமுடியாது. பிரபாசன் முடிவெடுப்பான் அதை.” அர்ஜுனன் புன்னகைத்து “இங்கு இத்தனை தொலைவுக்கு ஏன் வருகிறார்கள் என்று புரிகிறதல்லவா? தெய்வமே வந்து தண்டித்தாலொழிய இவர்களுக்கு நெஞ்சு ஆறாது” என்றான். கொதிநீர் விழுந்து சுட்டவனை இருவர் அள்ளி குளிர்நீரிலிட்டு ஆறச்செய்தனர். அவன் பற்களைக் கடித்து அலறலை தன்னுள் அடக்கிக்கொண்டான்.

கைகள் கூப்பியபடி அர்ஜுனன் சென்று அருவிக்குக் கீழே நின்றான். அவன்மேல் குளிர்நீர் கொட்டியது. அவன் பெருமூச்சுடன் திரும்பும் கணத்தில் கொதிநீரின் ஓர் அலை அவன் தோளை அறைந்தது. அவன் அருகே நின்றவன் அலறிவிழுந்தான். அவன் அசையாமல் நின்றபின் மெல்ல இறங்கி குளிர்நீருக்குள் மூழ்கினான். கதன் அருவியில் நீராடிவிட்டு சுனையில் பாய்ந்து அணுகி “அஞ்சிவிட்டேன்… உங்கள்மேல் கொதிநீர் விழுந்தது அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எரிகிறதா?” என்றான் கதன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நீர்விழுந்த கணத்தில் உணர்ந்தேன். துவாரகை அருகே உள்ள ரைவத மலையில்தான் இளைய யாதவர் இருக்கிறார். நான் அங்கு செல்ல வேண்டும்” என்றான் அர்ஜுனன். “எங்ஙனம் அறிந்தீர்?” என்றான் கதன். “அறிந்தேன். பின்னர் அதற்கான சொல்லூழ்கையை கண்டடைந்தேன். அவர் தனித்து வந்திருப்பார். அவரை அறியாத மாந்தர் உள்ள இடத்திலேயே தங்கியிருப்பார். ரைவத மலையின் தொல் குடிகளான சிசிரர் இளைய யாதவர் எவரென அறியாதவர். வெறும் ஒரு மலை வணிகராக முன்னர் அங்கு சென்று சின்னாள் தங்கிய வரலாறும் அவருக்குண்டு.”

கதன் “ஆம், சரியாகத்தான் தெரிகிறது” என்றான். “ரைவத மலையில் மக்கள் அவரை தங்களவர் என்று என்றும் வரவேற்பார்கள். மணத்தன்னேற்பு நிகழும் வரை அங்குதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் ஒற்றைப்பறவையின் இரு சிறகுகள் என்று சூதன் ஒரு முறை பாடினான். ஒரு சிறகசைவது பிறிதொரு சிறகுக்கு எப்படி தெரிகிறது என்று பறவையே அறியாது என்பார்கள்” என்றான்.

அர்ஜுனன் புன்னகைத்தான். சுனையிலிருந்து கைகூப்பியபடி ஏறி நீர் சொட்டும் உடையுடன் சென்று அங்கிருந்த பிரபாசனின் சிறிய ஆலயத்தை அணுகினர். கல்லால் ஆன பீடத்தின்மேல் வலக்கையில் துலாக்கோலுடன் இடக்கையில் அறிவுறுத்தும் சுட்டுவிரலுடன் அமர்ந்திருந்தான் பிரபாசன். இடது மேல்கையில் வஜ்ராயுதமும் வலதுமேல்கையில் தாமரையும் இருந்தன. அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். ஒரு கணம் எவரோ பிடரியை தொட்டதுபோலிருந்தது.

திடுக்கிட்டு விழித்து “ஆ” என்றான். “என்ன?” என்றான் கதன். “இந்த இடம்தான்” என்றான். “ஏன்?” என்றான் கதன். “இளைய யாதவரையும் மூத்த யாதவரையும் இங்கே கண்டேன்.” கதன் விளங்காமல் “இங்கா?” என்றான். “ஆம், இங்குதான். ஓர் உருவெளிக்காட்சி. அவர்கள் இருவரும் ஆடையில்லாமல் இங்கே நீராடுகிறார்கள். மலரூர்தி ஒன்று மேலிருந்து இறகுதிர்வதுபோல அவர்களை நோக்கி இறங்குகிறது. அதில் அவர்கள் இருவரும் ஏறிக்கொள்கிறார்கள்.”

கதன் திகைத்து சொல்லிழந்து வாய்திறந்து நின்றபின் “அப்படியென்றால்?” என்றான். “இங்குதான்” என்றான் அர்ஜுனன்.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்


கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2

$
0
0

1

அன்புள்ள நண்பர்களுக்கு ,

கோவையின் இரண்டாம் ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 25- 10- 2015 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. முகவரி மற்றும் தொடர்பு எண் இணைத்து உள்ளேன் .[இது வெண்முரசு நாவல் தொடரை வாசிக்கும் வாசகர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி.பிறர் தவிர்த்துவிடவும்]

Suriyan Solutions

93/1, 6th street extension ,
100 Feet road , near Kalyan jeweler,
Ganthipuram

வருகையை முன்னரே உறுதிசெய்யவும்
விஜய் சூரியன் -99658 46999
ராதா கிருஷ்ணன் – 7092501546


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்க்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெங்கட் சாமிநாதன் –கடிதங்கள்

$
0
0

venkat-saminathan

ஜெ,
வெசா பற்றிய அஞ்சலிகள்…எத்தனை முரண்கள் இருந்தாலும் அவர் ஆளுமையை அனைவருமே போற்றுகின்றனர்.அவரது கட்டுரைகள் நூல்கள் நிறைய வாசித்திருக்கிறேன்.நாட்டார் கலைகள் பற்றிய அவரது பதிவுகள் நான் விரும்பிப்படித்தவை.
நான் பகிர எண்ணுவது இதைத்தான்,இலக்கியவாதிகளின் மறைவு எனக்குள் சட்டென ஒரு மன வெறுமையை உண்டாக்கிவிடுகிறது.ஜெயகாந்தன் மறைவு ஏற்படுத்திய தாக்கம் குறைய எனக்கு நீண்ட நாள் ஆனது.வெசாவின் மறைவில் அவரைப் பற்றியே வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாக மரணங்களை நான் கடந்து சென்றுவிடுவேன்.நான் முன்பு மருத்துவத் துறையில் இருந்தது காரணமாயிருக்கலாம்.உறவுகள் நட்புகள் இடையிலான மரணங்கள் வருத்தமுறச் செய்யும்.அத்துடன் சரி. இந்த ஆண்டு துவக்கத்தில் என்னுடன் எட்டாண்டுகள் பணியாற்றும் தோழி ஒருவரின் கணவர் அகால மரணமடைந்தார்.என்னை விட இரண்டு வயதுதான் மூத்த தோழி அவர்.தினமும் ஒன்றாகவே உணவைப் பகிர்ந்து உண்போம்.அந்த மரணம் கூட எனக்கு மன வருத்தம் மட்டுமாகவே கடந்தது.நானே என் மனம் இத்தனை எளிதானதா என்று எண்ணினேன். ஆனால் ஜேகேயின் மறைவு அதை உடைத்தது.இரண்டு நாட்கள் எதுவுமே செய்யமுடியாமல் நிலையற்றிருந்தேன்.எப்பொழுதும் வாசிப்பு இலக்கியம் என்றே இருப்பதால் இவ்வாறு ஆகிறேனா?அவர்களின் படைப்புகள் விவாதங்கள் எப்பொழுதும் உடனிருப்பதால் உள்ளத்தில் அவர்கள் நம்முடனே இருப்பதாக எண்ணுகிறோமா.எழுத்துத் துறையைச் சார்ந்தவர்களின் இழப்புகள் என்னுள் உருவாக்கும் பாதிப்புகள் எதனால் என்று சிந்தித்தவாறே இருக்கிறேன்.என் மன விரிவுகளை எண்ணங்களை உருவாக்குபவர்கள் என்பதாலா.எவ்வாறாயினும் அவர்களின் எழுத்துகள் உண்டாக்கும் தாக்கங்கள் வாழ்வில் எதிரொலித்தவாறே இருக்கும்.

நன்றி
மோனிகா மாறன்.

1
ஜெ,

வெங்கட் சுவாமிநாதனை நான் சிலமுறை டெல்லியில் சந்தித்திருக்கிறேன். நான் இளைஞன் அப்போது. ஆகவே அணுகி பழக முடியவில்லை. அவருடன் நடந்த எல்லா சந்திப்புகளும் மிகவும் பயனுள்ளவை. ஒருமுறை கலஹாரி திரை ஓவியங்கள் பற்றி விரிவாகப்பேசினார். இன்னொரு முறை அலர்மேல்வள்ளி பற்றிய பேச்சு வந்தது. ஒருமுறை விஸ்வ வியாபி கணேஷா என்னும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பிள்ளையார் சிலைகளைப் பார்த்துக்கொண்டு சென்றபோது அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவரா என்றுகேட்டேன். இல்லை, நான் நாத்திகர் என்று சொன்னார். ஆனால் திமுக நாத்திகம் இல்லை, இந்து முறைப்படி வந்த நாத்திகம் என்றும் நாத்திகர் என்பதை விட ஜடவாதி என்று சொல்வதே சரி என்றும் சொன்னார். பெரியவர்கள் மறையும்போது நம்முடைய அன்றாட வாழ்க்கைச்சிக்கல்களை விட்டுவிட்டு அவர்களுடன் கொஞ்ச நேரத்தைச்செலவழித்திருக்கலாம் என்று தோன்றும். இப்போதும் அப்படித்தான் தொன்றுகிறது

சாரங்கன்
venkat_swaminathan_thumb46

ஜெ,

வெங்கட் சாமிநாதனைப்பற்றிய உங்கள் அஞ்சலிக்கட்டுரையின் கீழே இருந்த நீண்ட கட்டுரைகளை வாசித்தேன். உண்மையில் அவரைப்பற்றி என்க்கு பெரியதாக ஒன்றும் தெரியாது. இலக்கியத்தையே இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இலக்கியவிமர்சனத்தை ஏன் இப்போது வாசிக்கவேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் இந்துத்துவ தளங்களில்தான் எழுதினார் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதோடு என் ஆர்வம் போய்விட்டது. நடுநிலையுடன் எழுதப்படாத எழுத்துக்களை ஏன் கடுமையாக உழைத்து வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. குறிப்பாக விமர்சனம் என்பது தனிப்பட்ட ரசனை சார்ந்து வரவேண்டுமே ஒழிய ஏதாவது அமைப்பின் குரலாக இருக்கக்கூடாது. திகசியை நான் வாசித்ததில்லை. காரணம் இதுதான். வெங்கட் சாமிநாதனையும் வாசிக்கவேண்டியதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்

சிவராமன்

தொடர்புடைய பதிவுகள்

என்றும் இனிய முகம்

$
0
0

Lohi_9789384149284_KZK

மறைந்தபின் நம் நெஞ்சில் மேலும் வளரும் முகங்கள் சில உண்டு. லோகி அத்தகையவர் அவர் மறைந்த பின் இந்நாள்வரை ஒருமுறையேனும் அவர் பெயரைச் சொல்லாமல், நினைக்காமல் நாள் ஒன்று கடந்துசென்றதில்லை. ஏ.கே.லோஹிததாஸ் என்னும் பெயரை எந்த தொலைக்காட்சியில் கண்டாலும் நெஞ்சு அதிர்கிறது.

இத்தனைதூரம் அவர் என்னை ஆழமாக அணைத்திருக்கிறார் என லோகி அறிந்திருந்தாரா , நான் அதை அவரிடம் சொல்லியிருந்தேனா என்றே ஐயமாக இருக்கிறது. மலையாளிகளுக்கு அன்பை வெளிப்படுத்துவதில் ஒரு கூச்சம் உண்டு. லோகி அவ்வகையில் என் அண்ணனைப்போல. அண்ணனின் பார்வையும் ஆழ்ந்த குரலும்கூட அப்படியே அவருக்கிருந்தது.

என் சினிமா வாழ்க்கை தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. 2004 நவம்பரில் லோகி எனக்குத் தந்த 20000 ரூபாய்தான் சினிமாவில் நான் பெற்ற முதல் பணம். இன்றுவரை என் வங்கி கணக்கு குறைந்ததில்லை. அன்புடனும் கனிவுடனும் அவர் தந்தது ஒரு விஷு கைநீட்டம், ஓர் ஆசி என்று தோன்றுகிறது.

அன்று எனக்கு அலுவலகப் பணிச்சுமை கூடிக்கொண்டே இருந்தது. ஆனாலும் சினிமாவா எனத் தயங்கினேன். லோகி என் தோளில் தட்டி ‘சினிமாவில் நீ அடையும் சுதந்திரத்தை, செல்வத்தை, மரியாதையை வேறெங்கும் அடையமுடியாது. சினிமா உன்னை மேலும் பலமடங்கு எழுதவைக்கும். உன் அலுவலகம், உன் உறவினர் எவருமே நீ கலைஞன் என்று புரிந்துகொள்ளமாட்டார்கள். சினிமாவில் டீ கொண்டுவந்து தரும் பையனுக்குக்கூட அது தெரிந்திருப்பதை உணர்வாய். அவன் புன்னகையில் நீ எழுத்தாளன் என்னும் அங்கீகாரம் இருக்கும்” என்றார்

“ஏனென்றால் கலைமேல் கொண்ட தாகத்தால் மட்டுமே வந்துகூடிய ஒரு நாடோடிக்கூட்டம் இது. எழுத்தாளன் இருக்கவேண்டிய இடம் இது” என்றார் லோகி “வெற்று அரசியல்கூட்டம் இலக்கியம் இலக்கியம் என்று கூச்சலிடும். ஆனால் அவர்கள் இலக்கியவாதியை அடக்கிஆள நினைப்பவர்கள். மிகச்சாதாரண வணிகசினிமா எடுப்பவர்கள்கூட அவர்களை விட பலமடங்கு இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள். எழுத்தாளனை அறிந்தவர்கள்” .

இன்று அதன் ஒவ்வொரு எழுத்தும் உண்மை என உணர்கிறேன். என்னை இன்று ஓர் எழுத்தாளனாக வாழவைப்பது, இத்தனை எழுதச்செய்வது சினிமா. அது அளித்த பொருளியல்விடுதலை. அது அளிக்கும் நேரம். இது இல்லாவிட்டால் இன்று அலுவலகத்தில் நாளில் பத்துமணிநேரத்தை வெறும் எண்களுடன் செலவிட்டுச் சோர்ந்திருப்பேன். பணத்தை கணக்கிட்டுக் கணக்கிட்டு உள்ளம் வெளிறிப்போயிருப்பேன். லோகி என் வாழ்வின் மிகமுக்கியமான கட்டத்தில் என்னை ஆற்றுப்படுத்திய தேவன்.

ஒவ்வொரு தருணத்தையும் முன்னரே கண்டிருந்தார் லோகி. நான் மேலும் பயணம் செய்யமுடியும் என்றார். நான் என்னை மறந்து எழுத முடியும் என்றார். ‘உனக்கு மனத்தூண்டுதல் வந்தால் எதையும் யோசிக்காமல் எழுத அமர முடியும்” என்றார். அவரது ஆழ்ந்த குரலை இன்று நினைவுறும்போது இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் நெஞ்சு நெகிழ்கிறது

என் தமையனுக்கு, நீத்தார் உலகில் தெய்வமென அமர்ந்த என் தேவனுக்கு, இவ்வெளிய நூல். இதை முதலில் வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு என் அன்பு. மீண்டும் வெளியிடும் கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அசோகமித்திரனின் ’இன்று’

$
0
0

1

ஜெ,

அசோகமித்திரனின் “இன்று” படித்தேன்.

அசோகமித்திரனுக்கே உரிய மனிதர்கள், தீவிரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு இன்று கால் வலியை பற்றி பேசிக் கொண்டிருப்பவர், சுதந்திர போரட்ட வீரர்களின் ஒய்வில்லத்தை குடிக்கவும் பெண்களோடு இருக்கவும் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள், மூன்று குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட, வேலைக்கும் தினசரி சிக்கல்களுக்கும் நடுவே தடுமாறி குழந்தையின் ஒரு காலை இழக்கும் மனிதன், சாகும்பொழுதும் கொசுவத்தை இழுத்து முன்னால் விட்டு இறுக்கிக் கொள்ளும் பெண், அவள் கூட எல்லோரும் அவளை விபச்சாரி என்று அழைக்கும்படியான ஒரு வாழ்கை வாழ நேர்ந்தது (அவள் பெயர் “சீதா”) கடைசியில் எல்லாவற்றிலும் அர்த்தமே இல்லை என்று உணரும் இரண்டு நண்பர்கள், அதை விட வலியான, அவர்களை கல்யாணம் செய்து கொள்ளுங்கள், போலீசிடம் வம்புக்கு போகாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டு, விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும், தூக்கமே வராத அம்மா. இவர்கள் அனைவருமே அசோகமித்திரனுக்கே உரிய உலகில் இருந்து வருகிறார்கள், அதை விட அபாரம் இவர்களைக் கொண்டு இவர் டால்ஸ்டாய் மீது தொடுக்கும் பதில்தான்.

டால்ஸ்டாய் குறித்த உரையில் ஆரம்பிகிறது “இன்று”. அனைத்து அத்தியாயங்களுக்கும் டால்ஸ்டாயின் தலைப்புகளையே பயன்படுத்தியிருக்கிறார்.முதலில் டால்ஸ்டாயின் அமரத்துவம் (ஆன்மிகம்) பற்றி பேச துவங்கி பின்பு இன்று டால்ஸ்டாய்க்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று முடிகிறது முதல் அத்தியாயம். ஆனால் நாவல் முழுவதும் டால்ஸ்டாயின் தரிசனம் வேறு ஒரு பார்வையில் கிடைகிறது. நேர் எதிராக.

டால்ஸ்டாய் லட்சிய மனிதர்களின் லட்சிய உலகத்தை பற்றி, எளிய மனிதர்களின் அபத்த உலகை பற்றி பேசுகிறார். அவருக்கு எதிராக இவர் இந்த மனிதர்களை முன் வைக்கிறார். வரலாற்றின் மீதான சிரிப்பு டோல்ஸ்டோயின் போரும் அமைதியும் எனில், டால்ஸ்டாயின் மீதான அசோகமித்திரனின் சிரிப்பு “இன்று”. அந்த சிரிப்புக்கு பின் இருக்கும் வருத்தமே அவரை நவீனத்துவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. மாவு பொம்மையில் ஊசி குத்தும் மந்திரவாதியை போல போராட்டம், விடுதலை, இலட்சியம், காமம், அரசியல், தியாகம் என மனிதனை ஆட்டுவிக்கும், அல்லது மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் அனைத்து தரிசனங்களின் மீதும் தன் சிரிப்பை செருகி வைத்து போகிறார். அத்தனை துயரமான சிரிப்பு.

டால்ஸ்டாய் சாதாரண சம்பவங்களின் தொகுதியிலிருந்து ஒரு சாரத்தை காண்கிறார், எளிய நிகழ்வுகளிலிருந்து (தனி மனித) வாழ்க்கையின் நீள அகலத்திற்கு சென்று அங்கிருந்து காலத்திற்கு சென்று சேர்கிறார். அசோகமித்திரன் நேர் எதிர் திசையில் வந்த சேர்கிறார். ( போரும் அமைதியும் “காலமும் வாழ்க்கையும்” என்றே நினைவில் வருகிறது ) டால்ஸ்டாயின் தலையணை அளவுள்ள காலத்தின் நூலிலிருந்து ஒரு பக்கத்தை “இன்று” என பிரித்து எடுத்து வைக்கிறார். எதிர் எதிர் தரிசனங்கள் போல பட்டாலும் அசோகமித்திரனின் துளி டால்ஸ்டாயின் நதியிலிருந்து எடுக்கப்பட்டது என்பது இரண்டும் ஒன்றின் வேறு வேறு பார்வையே என்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் கண்ணுக்கு தெரியாத சாரமிருக்கிறது என டால்ஸ்டாய் கூறுகிறார், அசோகமித்திரனோ கண்ணுக்குத் தெரியதாதாலேயே, அப்படி ஏதுமில்லையே, இருந்தால் நல்லதுதான்னு நேக்கு தோன்றது என்று கூறுகிறார். முதல் அத்தியாயம் முடியும் பொழுது “டால்ஸ்டாய் குறித்த இரண்டு உரைகளையும் சேர்த்து படித்து பார்க்கும் பொழுது அவனுக்கு சிரிப்பாக வந்தது, சிரித்து முடித்ததும் வருத்தமாக இருந்தது” என்றும், வேறொரு இடத்தில வரும் “நான் இருக்கும் வரை காலமே அணு” என்று முடியும் கவிதையும் இதையே அவரது தரிசனமாக முன் வைக்கின்றன என்று தோன்றியது.

சுந்தர ராமசாமியிடம் நீங்கள் அவர் எழுதும் முறை குறித்து சொல்லிய பொழுது அவர், நீங்கள் சொன்னால் ஆச்சா? என்று கேட்டதாக “நினைவின் நதியில்” நூலில் ஓரிடத்தில் வருகிறது. “இன்று” அசோகமித்திரன் டால்ஸ்டாயிடம் அதே கேள்வியை கேட்கும் இடம். அசோகமித்திரனை உங்களுக்கு பிடித்ததில் ஆச்சரியமே இல்லை, டால்ஸ்டாய்க்கும் பிடித்திருக்கும்.

ஏ.வி மணிகண்டன்

INDRU

இன்று பற்றி கேசவமணி எழுதிய விமர்சனம்

அசோகமித்திரன் நேர்காணல்

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 41

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 6

துவாரகையில் இருந்து பன்னிரெண்டு நாள் நடை செல்லும் தொலைவில் இருந்தது தொன்மையான ஜனபதமாகிய கஜ்ஜயந்தம். நூற்றியெட்டு மலைக் குடிகள் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ஊர்களின் பெருந்தொகை அது. அதன் நடுவே அமைந்த மலை ஒன்றன் மேல் ஒன்றென மூன்று பெருங்குன்றுகளும் இரு இணைப்புக்குன்றுகளும் கொண்டது. கேஜ்ரி மரங்கள் மட்டுமே நின்றமையால் அது கஜ்ஜயந்தம் என்று பெயர் கொண்டிருந்தது. அம்மக்கள் கஜ்ஜர்கள் எனப்பட்டனர். அக்குன்றுகளை ஒன்றிணைத்து வேதங்களின் சௌனகபாடங்கள் உருவான காலகட்டத்தில் ஒரு தொல்நகரம் எழுந்தது. அதை கஜ்ஜயந்தபுரி என்றனர்.

விண்ணில் எழுந்து தங்கள் மண்ணை ஆளும் சூரியனே கஜ்ஜர்களின் தெய்வம். ஒவ்வொரு நாளும் முதற்கதிரை நோக்கி கைகூப்பி நின்று வழிபடுவது அவர்களின் குலவழக்கம். அவர்களின் பட்டிகளில் மூங்கில்மேல் எழுந்து காற்றில் துடிக்கும் வெண்கொடியில் சூரியனே பொறிக்கப்பட்டிருந்தான். அன்று அப்பகுதி வருடத்தில் ஏழுமழை மட்டுமே பெறும் நிலம் என்னும் பொருளில் சப்தவர்ஷம் என்று பெயர் பெற்றிருந்தது. மாடுகளை மேய்க்குமளவுக்கு அங்கே புல் செழிப்பதில்லை. ஆகவே ஆடுகளை மேய்க்கும் உபயாதவர்கள் அங்கே குடிகளை அமைத்து ஊர்களாக பெருகினர்.

ஆனால் அவர்களின் ஊர்கள் என்பவை நிலையானவை அல்ல. ஒவ்வொரு குடிக்கும் ஊர் என்று ஒன்றிருக்கும். அது அவர்களின் குடித்தெய்வங்களும் மூதாதையரும் கோயில்கொண்ட மரத்தடிகளும் பாறையடிகளும்தான். ஆண்டில் ஒன்பது மாதகாலம் அங்கே மானுடர்கள் இருப்பதில்லை. ஆட்டுப்பட்டிகளை அமைத்தபடி விரிந்த வெற்றுநிலத்தில் ஆயர்கள் ஆண்டுமுழுக்க அலைந்துகொண்டிருப்பார்கள். மழைபெய்ததும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிவந்து ஒன்றிணைந்து குடில்கட்டி குடிகொள்வார்கள். தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் ஆண்டுதிறை கொடுப்பார்கள். மூதாதையர் காலடியில் புதைத்திட்டுச்சென்ற மதுவை அகழ்ந்தெடுத்து மூத்த கருங்கிடாவை வெட்டி உடன் படைத்து வணங்குவார்கள்.

மழைக்காலத்தில் ஏழு உண்டாட்டுகள் நிகழும். ஆடலும் பாடலும் ஏறுதழுவுதலும் சிலம்பாட்டமும் மூதாதைசொல்கூர்தலுமாக அவர்கள் மகிழ்வார்கள். அஜபாலவிருத்தம் என்று சொல்லப்பட்ட ஆயர்குடிகளின் பேரவை அப்போதுதான் கூடும். நூற்றெட்டு குடிகளின் சொல்கொண்டார்களும் சப்தவர்ஷத்தின் அச்சு என ஓங்கி நின்றிருந்த கஜ்ஜயந்த மலையின் மீது கூடுவர். குடிவழக்குகள் பேசித்தீர்க்கப்படும். மேய்ச்சல் நிலங்கள் பங்கிடப்படும். பெண்கொண்டு பெண்கொடுப்பார்கள். அரிதாக மைந்தர்கொடையும் நிகழும். நோயுற்றோ பிறிதாலோ ஆடுகள் குறைந்த குடிகளுக்கு மிகை ஆடுகள் கொண்ட குடிகள் ஆட்டுக்குட்டிகளை அளிப்பார்கள். பத்துக்கு இரண்டு பெருக்கம் என்பது அதற்கான தொல்கணக்கு.

நூற்றெட்டு குடிகளும் பெருகப்பெருக அங்கே ஆண்டில் இருமுறையும் பின்னர் மும்முறையும் குடியவை கூடவேண்டியிருந்தது. நூற்றெட்டு குடிகளுக்கும் பொதுவாக குடித்தலைவர் ஒருவரை தேர்வுசெய்தனர். முதலில் சுழற்சிமுறையில் தலைமை தேர்வுசெய்யப்பட்டது. நூற்றெட்டு குடிகளுக்கும் அதில் நிறைவு எழாமையால் நூற்றெட்டு குடிகளுக்கும் பொதுவாக எக்குடியையும் சேராத தலைமைக்குடி ஒன்று உருவாக்கப்பட்டது. கஜ்ஜயந்தர்கள் என அக்குடிமரபு அழைக்கப்பட்டது.

நாளடைவில் கஜ்ஜர்கள் நிலைத்த ஊர்கள் கொண்டவராயினர். ஊர்களை இணைக்கும் பாதைகள் உருவாயின. அப்பாதைகளின் பொதுமுடிச்சில் இயல்பாக சிறிய சந்தைகள் தோன்றின. அச்சந்தைகளுக்கு புறநிலத்து வணிகர்கள் வந்து ஆட்டுத்தோலும் உலர்ந்த இறைச்சியும் கொண்டு செம்பு, வெண்கலப் பொருட்களையும் இரும்புப் படைக்கலங்களையும் உப்பையும் மரவுரியாடைகளையும் கொடுத்து மீண்டனர்.

சந்தைகள் விரிந்தபோது ஊர்களும் பெருகிப்பரந்தன. அவர்களிடம் வரிகொண்ட கஜ்ஜயந்தபுரி நகரமென்றாயிற்று. அங்கே வெண்கல் சுவர்கள் மேல் சுண்ணம் பூசிய வெண்குவடுகள் கொண்ட மாளிகைகள் எழுந்தன. கீழே நின்று நோக்குபவர்களுக்கு அது நூற்றுக்கணக்கான காளான்கள் முளைத்த மலைச்சரிவு என தோன்றியது. சத்ரகபுரி என அதை சற்று கேலியுடன் சொன்னார்கள் அயல்வணிகர். கஜ்ஜர்கள் அவர்களின் மொழியில் குஜ்ஜர்கள் என ஆனார்கள்.

அரைப்பாலை நிலத்தில் ஆடு மாடு மேய்த்து வாழ்ந்த மக்களிடம் அம்மழைக் காலத்தை கடப்பதற்கான உணவுக்கு அப்பால் எப்போதும் செல்வம் சேர்ந்ததில்லை. எனவே அங்கு அயலார் படைகொண்டு வருவதோ, கொள்ளை தேடி மலைவேடர் புகுதலோ நிகழ்ந்ததில்லை. மாதவிடாய் குருதி அன்றி பிறிதை அறியாதவர் என்று அப்பால் வெண்பாலையில் வாழும் மக்கள் அவர்களை இகழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். தொன்று நிகழ்ந்து நூலென மறைந்த அறியா நெறிகளைக்கூட ரைவதகத்தில் சென்று காணலாம் என்று பயணிகள் சொன்னார்கள். பிரம்மனிடம் இருந்து துயின்று எழா நல்ஊழ் பெற்று வந்த நாடு என்று சொன்னர்கள் சூதர்கள். எனவே பகையறியாது கோல்நாட்டி குடியாண்டனர் கஜ்ஜயந்தபுரியின் தலைவர்கள்.

கஜ்ஜயந்த குடியில் நூல்பயின்ற முதல் அரசர் ரைவதகர். நூல்கள் அறிந்த முதல் அரசரும் அவரே. அவரது புகழைப் பாடும் தொன்மையான நூல் ரைவதக வைபவம். தொன்மையான நூலாகிய ரைவதக வைபவத்தின் கூற்றுப்படி ரைவதகர் மகாளய அமாவசை அன்று நள்ளிரவு முகில் விலகி ஒரே ஒரு தனி விண்மீன் மட்டும் விண்ணில் எழுந்த நேரத்தில் பிறந்தவர். கஜ்ஜயந்தபுரியின் அறுபத்தெட்டாவது குடித்தலைவரான சுதமருக்கு மைந்தனாகப் பிறந்த அவர் முதல் மூன்று வாரங்கள் ஓசை எழுப்பவோ, உடலை அசைக்கவோ செய்யவில்லை. அன்னையிடம் முலை அருந்துவதையும், கழிப்பதையும் தவிர்த்தால் அச்சிறு உடலில் உயிர் இருப்பதற்கான சான்றுகளே தென்படவில்லை. மருத்துவர் வந்து நோக்கி “அம்மைந்தன் உயிர் பிழைக்க மாட்டான்” என்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் மைந்தனுக்காகக் காத்திருந்து தவம் இயற்றி அவனை ஈன்று எடுத்த அன்னையும் தந்தையும் இருபுறமும் அமர்ந்து விழிநீர் சிந்தினர்.

அந்நிலையில் அவ்வழி வந்த அருகநெறித் துறவி ஒருவர் மைந்தனை பார்க்கவேண்டும் என்று விழைந்தார். கஜ்ஜயந்தமலைக்கு அப்பால் பாலிதான மலையில் அமர்ந்த ரிஷபரின் வழிவந்த அவர்கள் விண்ணாடை அணிந்து மண்மேல் என்றிலாமல் உலவும் நெறியினர். கொல்லா நோன்பும் உவகை கொள்ளா உறுதியும் கொண்டவர்கள். மைந்தரையோ, பெண்களையோ விழிதூக்கி நோக்கும் வழக்கமில்லை என்பதால் அரசரும் அரசியும் வியந்தனர். அவரை அடிபணிந்து ஏத்தி அரண்மனைக்கு கொண்டுசென்று மைந்தனை அவர் கால்களில் வைத்தனர்.

குனிந்து அம்மைந்தனின் நெற்றிபொட்டை தன் விரல்களால் தொட்ட அருகர் “எட்டுவகை அசைவின்மைகளால் கட்டப்பட்டுள்ளது இச்சிறுவுடல். எட்டு முற்பிறவித் தளைகள் அவை. அவ்வெட்டையும் இன்று களைந்து எழுக!” என்றார். அக்கணமே குழந்தை கை கால்களை உதைத்துக் கொண்டு வாய் கோணலாகி வீறிட்டு அழத் தொடங்கியது. மெல்ல அதன் தலைதொட்டு வாழ்த்தி பின் ஒரு சொல்லும் சொல்லாமல் அருகர் திரும்பிச்சென்றார். நகைப்பும் அழுகையுமாக பாய்ந்து குழவியை எடுத்து தன் முலைகளோடு அழுத்திக்கொண்டாள் அரசி. அரசியின் கழுத்தில்கிடந்த பதக்கமாலையை தன் சிறுகைகளால் அது பற்றிக்கொண்டது.

மைந்தன் பிறந்த இருபத்தெட்டாவது நாள் இடையணி பூட்டி பெயரணிவிக்கும் நன்னாளில் வடக்கே சௌனகவனத்தில் இருந்து வந்த மகாவைதிகரான கிருபர் என்பவர் பிறந்திருப்பது ரைவத மனுவின் மானுட வடிவம் என்று தன் நுதல்விழியால் நோக்கி சொன்னார். முதன்மை மனுவாகிய சுயம்புமனு பெற்ற மைந்தர் இருவர் பெருவைதிகர்களான உத்தானபாதரும் பிரியவிரதரும். பிரியவிரதர் நான்குவேதங்களிலும் சொல்லெண்ணி கல்விகொண்டவர். பொருளுணர்ந்து இறுதிகண்டவர். அவர் ஸ்வரூபை, பர்கிஷ்மதி என்னும் இரு மனைவியரை கொண்டார். ஸ்வரூபை அக்னீத்ரன் முதலிய பத்து மைந்தர்களை பெற்றாள். பர்கிஷ்மதிக்கு உத்தரன், தாமசன், ரைவதன் என்னும் மூன்று மைந்தர் பிறந்தனர். காளிந்தி நதிக்கரையில் காமபீஜமந்திரம் கொண்டு தேவியை வழிபட்டு தன்னை அமரனாக்கிய ரைவதர் அறம் பிழைக்காது நாடாண்டார். ஆகவே அவர் மனு என்னும் தகுதி பெற்றார்.

மலைமேல் கேஜ்ரி மரத்தடியில் ரைவதரின் ஆலயம் ஒன்றை அமைத்து அங்கே மைந்தனை மலர்த்தாலத்தில் படுக்கவைத்து அவனுக்கு ரைவதகன் என்று பெயரிட்டார். அறச்செல்வனாகிய மனுவைப் பெற்ற சுதமரை மண்ணாளும் தகுதி பெற்ற அரசர் என்று அறிவித்து அரியணை அமர்த்தி மஞ்சளரிசியும் மலரும் பொன்னும் இட்டு மங்கலநீரூற்றி செங்கோல் கொடுத்து வெண்குடைசூடச்செய்தார். கஜ்ஜயந்த அரசகுலம் அவ்வாறு உருவானது. அவர்கள் கேஜ்ரி மரக்கிளையாலான செங்கோலும் அம்மலர்களைப்போன்று அணிகொண்ட மணிமுடியும் கொண்டனர்.

ஐந்து வயதில் வானில் சுழலும் புள்ளை கீழே அதன் நிழல் நோக்கி வீழ்த்தும் வில்திறன் கொண்டவரானார் ரைவதகர். பன்னிரு வயதில் புரவியில் நின்றபடி குன்றிறங்கிப் பாயும் திறன் கொண்டவரானார். கஜ்ஜயந்த குலத்தின் மாவீரன் என அவரை வாழ்த்தினர் குடிமூத்தார். அவர் பதினெட்டு வயதில் கஜ்ஜயந்தபுரியை விட்டு அயல்வணிகர் குழு ஒன்றுடன் கிளம்பிச் சென்று இரண்டாண்டுகள் கடந்து திரும்பி வந்தார். அப்போது செம்மொழியை நன்கு பேசவும் எழுதவும் கற்றிருந்தார். குஜ்ஜர்களின் தனிமொழியாகிய குர்ஜரியை செம்மொழி எழுத்துக்களில் எழுதவும் வாசிக்கவும் தன் மக்களுக்கு கற்பித்தார்.

ரைவதகரின் இருபத்திரண்டாவது வயதில் தந்தை உயிர் நீக்க கஜ்ஜயந்தபுரியின் செங்கோலை தான் ஏற்றுக்கொண்டார். கஜ்ஜயந்த குலத்து மன்னர்களில் மிக இளம் வயதில் அரியணை அமர்ந்தவர் இவரே என்றனர் குலப்பாடகர்கள். வாலுக குடியின் கூர்மரின் மகளாகிய சைந்தவியையும் அவளுடைய இரு தங்கையரையும் மணந்துகொண்டார். அம்மூவரிலாக எட்டு குழந்தைகளுக்கு தந்தையானார். அவர்களில் மூத்தவராகிய பத்ரபானுவை தனக்குப் பின் முடிசூட்ட வேண்டிய பட்டத்து இளவரசனாக அறிவித்தார்.

ஒன்று போல் பிறிதொரு நாளென்று என்றும் நிகழ்வதே நிகழ்ந்து காலம் கடந்தபோது நூல் ஆய்ந்து, கானாடி, மைந்தர் கொண்டாடி மகிழ்ந்திருந்த ரைவதகரின் வாழ்வில் ஒரு அருநிகழ்வு நிலையழிவு கொணர்ந்தது. குஜ்ஜர குடிகள் வாழ்ந்த விரிநிலத்திற்குத் தெற்கே மாளவத்தின் எல்லையில் இருந்த முட்புதர்க் காடுகளிலிருந்து கிளம்பி வந்த கண்டர்கள் என்னும் மலைவேடர்கள் அவர்களின் ஊர்களுக்குள் புகுந்து ஆடுகளையும், கூலக்குவைகளையும், உலோகப்பொருட்களையும் கவர்ந்து செல்லத் தொடங்கினர். அவர்கள் புகுந்த சிற்றூர்களில் இருந்த ஆண்களை வெட்டி வீழ்த்தி, பெண்களை சிறைகொண்டனர். இல்லங்களுக்குள் செல்வங்களை குவித்திருக்கின்றனர் என்று ஐயமுற்று அடித்தளம் வரை தோண்டி அனைத்தையும் புரட்டிப்போட்டு எரித்து சாம்பல்மேடாக ஊர்களை விட்டுச்சென்றனர்.

ஆடுகளை இழந்து, குடி அழிந்து, கன்னியரை அளித்து மாளாக் கண்ணீருடன் குஜ்ஜர குல மக்கள் குன்றுநகர் நோக்கி வந்தனர். ஒவ்வொரு நாளும் தன் அரண்மனை வாயிலில் வந்து நின்று நெஞ்சறைந்து கதறிய மக்களை நோக்கி ரைவதகர் சினந்தார், கண்ணீர்விட்டார், செய்வதறியாது பதைத்தார். விரிந்த சப்தவர்ஷநிலத்தை முழுமையாக எல்லை வளைத்துக் காக்கும் படைவல்லமை அவருக்கிருக்கவில்லை. அப்படி ஓர் அறைகூவல் அதற்கு முன்பு வந்ததே இல்லை.

அம்மலைக் குடிகளை ஒடுக்காமல் விடுவது அரசமுறை அல்ல என்று துணிந்தார். ஆனால் அவர் நாட்டில் போரும் படைக்கலமும் பயின்ற சிலரே இருந்தனர். தன் மெய்க்காவலர்களையும், அரண்மனைக் காவலர்களையும் திரட்டி சிறுபடை ஒன்றை அமைத்துக் கொண்டு எல்லைப்புறச் சிற்றூர் ஒன்றில் குடிகளென மாறுவேடமிட்டு தங்கியிருந்தார் ரைவதகர். பன்னிரெண்டு நாட்கள் அங்கே அவர்கள் இருந்தனர். மலைக்குடிகளை கவரும்பொருட்டு கொழுத்த கன்றுகளை எல்லைப்புறத்தே மேயவிட்டனர். வரப்போகும் எதிரிக்காக ஒவ்வொரு கணமும் நூறு சூழ்கைகளை உள்ளத்தில் சமைத்து அழித்தபடி காத்திருந்தனர்.

எண்ணியதுபோலவே ஒருநாள் தொலைவில் புழுதி முகில் எழுந்து நிற்கக் கண்டான் பாறைமேலிருந்த கண்நோக்குக் காவலன். குறுமுழவை அவன் மீட்ட ரைவதகர் “கிளம்புக!” என்று ஆணையிட்டார். “இது நம் முதல் வெற்றி. நம் மண்ணையும் மைந்தரையும் காப்போம். எழுக!” அவர்கள் தங்கள் விற்கலன்களையும் வாள்களையும் எடுத்துக்கொண்டு போர்க்குரல் எழுப்பி எழுந்தனர். தொலைவில் அடிவானைத் தாங்கி நிற்பதுபோல் தெரிந்த செம்மண் குன்றுகளின் மேல் உருண்டு நின்ற பெரிய கரும்பாறைகளில் குதிரைகளின் குளம்பொலிகள் எதிரொலிக்கத் தொடங்கின. பின்னர் தென்கிழக்கே தொலைவில் சுழிக்காற்று அணுகுவதைப்போல மலைவேடரின் குளம்படிகள் கிளப்பிய புழுதி எழுவதை ரைவதகர் கண்டார்.

தென்கிழக்குத் திசையில் இருந்து செம்பட்டுக்குள் இருந்து பாசிமணி மாலையை உருவி நீட்டியதுபோல ஒன்றன் பின் ஒன்றென வந்தகொண்டிருந்த கண்டர்களின் புரவிப் படையை மலைப் பாறையின் உச்சியில் இருந்து நோக்கி ரைவதகர் திகைத்தார். “இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலா வருகிறார்கள்?” என்று அருகில் இருந்த குடித்தலைவரிடம் கேட்டார். “ஆம், அரசே. அவர்கள் அங்கு முள்நிறைந்த மலைக்காடுகளுக்குள் உண்ணிகள் போல பெருகி வாழ்கிறார்கள். சிறகு கொண்டு அவை காற்றிலேறி சூழ்வதுபோல முடிவிலாது வந்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார் அவர்.

“வெறும் கன்றுகளை கொண்டு செல்லவா வருகிறார்கள்?” என்றார் ரைவதகர். “கன்றுகளுக்காக அல்ல, பெண்களுக்காக” என்றார் இன்னொருவர். “அவர்கள் குடியில் பெண்கள் அரிது. அவர்கள் கரியதோற்றமும் பேருருவும் கொண்டவர்கள். இனிய மண் நிறமும் சிற்றுருவும் கொண்ட எங்கள் பெண்கள்மேல் பெரும் காமம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவர்ந்து செல்லும் நமது பெண்கள் அவர்களுக்கு அஞ்சி உடல் நலிந்து செல்லும் வழியிலேயே உயிர் துறக்கிறார்கள். இறந்தவர்களை செல்லும் வழியோரம் பாறைகளிலேயே வீசிவிட்டுச் செல்கிறார்கள். இங்கிருந்து அவர்களின் முட்காடுகளின் பாதைகளின் இருபுறமும் வெள்ளெலும்புகள் என நமது பெண்கள் கிடப்பதை காணலாம்” என்றார் குடித்தலைவர்.

இளையோன் ஒருவன் “அஞ்சி உயிர் துறந்த பெண்களை அப்போதும் விடாமல் சடலங்களுடன் உறவு கொள்கின்றனர் என்கிறார்கள் சிலர்” என்றான். “ஆனால் அங்குசென்று வாழும் நம்குடிப்பெண்களுக்குப் பிறக்கும் செந்நிறக்குழவிகளை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அக்குழவிகளை தங்கள் தெய்வங்களுக்கு உகந்தவை என எண்ணி மலர்சூட்டி விழவு கொள்கிறார்கள்” என்றான் இன்னொருவன். “செந்நிறமே தெய்வங்களுக்குரியது என்று அவர்களின் குடித்தெய்வம் பூசகரின் உடலில் எழுந்து சொன்னதாம். செந்நிறக்குழந்தைகளை தெய்வங்களின் மலர்கள் என்கிறார்கள்.”

ரைவதகர் எழுந்து “நாம் அவர்களை எதிர்கொள்வோம்” என்றார். வில்லெடுத்து வளைத்து அம்பு தொடுத்து காத்துநின்றார். புரவிக் குளம்பொலிகள் அவர்களைச் சூழ்ந்திருந்த மலைகளுக்குமேல் உருண்டு அசைவற்று நின்ற பாறைகளில் முட்டிப் பெருகி திசைகளென மாறி சூழ்ந்துகொண்டன. “ஒலிகளை கேட்காதீர்கள். முற்றிலும் செவிகளை மூடிக்கொள்ளுங்கள். அவை சித்தத்தை மயக்குகின்றன. அக்குதிரைகளை மட்டுமே பாருங்கள். ஆணைகளுக்கு என் கைகளை நோக்குங்கள்” என்று ரைவதகர் ஆணையிட்டார். தன் கையில் செவ்வண்ணக்கொடி ஒன்றை சுற்றிக்கட்டிக்கொண்டார்.

“நமது அம்புகள் குறுகிய தொலைவு மட்டுமே செல்லக்கூடியவை. நாம் சிறு பறவைகளை மட்டுமே வேட்டையாடி வாழும் இளம்பாலை நிலத்து மக்கள். இங்கிருந்து அவர்களை வீழ்த்த முடியாது. நம் எல்லைக்குள் அவர்கள் நுழைவதுவரை காத்திருப்போம். அதோ இரு விரல்களென விரிந்துள்ள அப்பாறைகளுக்கிடையே இருக்கும் இடுக்கு வழியே நமது ஊருக்குள் நுழைவதற்கான சிறிய வாயில். அவர்கள் எத்தனைபேரானாலும் ஒவ்வொருவராக சற்று தயங்கியே உள் நுழைய முடியும். அதுவே நமது இலக்கு என்று இருக்கட்டும்” என்றார் ரைவதகர்.

அவரது ஆணைப்படி குஜ்ஜர்களும் காவலர்களும் தங்கள் விற்களை நாணேற்றி அவ்வூரைச் சூழந்து நின்ற சிறு குன்றுகளின் உருளைப்பாறைகளுக்கு பின்னால் பதுங்கிக்கொண்டனர். அனைவரும் விழிகளிலிருந்து மறைய அந்தப் பாறைகள் கோல்படக் காத்திருக்கும் பெருமுரசுகளின் தோல்பரப்புகள் என விம்மி நின்றன. ரைவதகரின் ஆணைப்படி அவ்வூரின் அனைத்துப் பெண்களும், குழந்தைகளும் ஊரிலிருந்து பின்வாங்கி அப்பால் விரிந்து கிடந்த முட்புதர் வெளியின் ஊடாகச்சென்ற பாதையில் சென்று தொலைவில் ஏழு மாபெரும் உருளைப் பாறைகள் அமர்ந்த மொட்டைக்குன்றை அடைந்து அங்குள்ள மடம்புகளிலும், குழிகளிலும் பதுங்கிக்கொண்டனர்.

அத்தனை மலைப்பாறைகளும் முரசுகள் என ஒலி எழுப்பத் தொடங்கியபோது கண்டர்களில் முதல்வீரன் பிளவுபட்ட பாறையின் இடைவெளி வழியாக எல்லைக்குள் நுழைந்தான். அக்கணமே நெஞ்சில் தைத்த அம்புடன் புரவியிலிருந்து வீழ்ந்தான். அவன் அலறல் ஒலி கேட்டதுமே அவனைத் தொடர்ந்து வந்த வீரன் கடிவாளத்தை இழுப்பதற்குள் அவனும் வீழ்ந்தான். “பின்னால் செல்லுங்கள்! பின்னால் செல்லுங்கள்!” என்று அங்கு எவரோ கூவுவது கேட்டது. ஆனால் இறுதியில் வந்துகொண்டிருந்த வீரன் வரை அவ்வாணை சென்றடையாததால் அணை கட்டி தேக்கப்பட்ட ஓடை போல புரவிநிரை தேங்கி ஒன்றுடன் ஒன்று முட்டி சுழலத் தொடங்கியது. அவர்களில் தலைவனை அடையாளம் கண்டு அவனை அம்பால் வீழ்த்தினார் ரைவதகர். அவன் விழுந்ததும் சூழ நின்றவர்கள் கல்பட்ட நீர் அலைவளையங்களாகி விரிவதுபோல விலகினர்.

“அணுகுங்கள்… விடாது அம்புசெலுத்துங்கள்” என்று கையசைத்துக்கொண்டே பாறை மறைவிலிருந்து பாறை மறைவிற்கு ஓடி அவர்கள் மேல் அம்பு செலுத்தினார் ரைவதகர். ஒவ்வொருவரும் கைகாட்டி பிறருக்கு ஆணையை அறிவித்தபடி பாறையிலிருந்து பாறைக்குச் சென்று அணுகி ஒளிந்தபடி அம்பு எழுப்பினர். ரைவதகரின் அம்புகள் மட்டுமே அத்தனை தொலைவு செல்லக்கூடியவையாக இருந்தன. குஜ்ஜர்களின் பிற அம்புகள் கண்டர்களை சென்றடையவில்லை. ஆனால் மறைவிடத்திலிருந்து வந்த தாக்குதலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்பாறைவழி அத்தனை சிறியதென்பதையும் கணித்திருக்கவில்லை. அஞ்சியும் குழம்பியும் கூச்சலிட்டனர். அம்பு பட்டு விழுந்துகொண்டே இருந்த கண்டர்களைக் கண்டு அஞ்சி பின்னால் சென்றனர்.

அதற்குள் அவர்களுக்குரிய அடுத்த தலைவன் உருவாகியிருந்தான். அப்படையை வழிநடத்தி வந்த முதியவனின் இடத்தை தன் ஆணைத்திறனாலேயே எடுத்துக்கொண்ட இளையவன், மேலும் பல மடங்கு திறன் கொண்டவனாக இருந்தான். புரவிகளை பின்னால் நகரச் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தான். கணங்களுக்குள் முடிவெடுத்து ஒற்றைச்சரடென வந்த புரவிப்படையின் முன்னால் வந்த புரவிகளை இரு நிரைகளாக மாற்றி பிளந்து இருபக்கமும் சுழன்று திரும்பி பின்னால் வரச்செய்தான். அவர்கள் பின்னால் சென்று தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஒவ்வொரு புரவிவீரனிடமும் நிற்கும்படி ஆணைகூவ அதற்குப் பின்னால் வந்த புரவி வீரனிடம் அவன் ஆணைகூவ ஆணை பாம்பின் உடலுக்குள் இரை நகர்வதுபோல செல்வதை கண்கூடாகக் காணமுடிந்தது. புரவிகள் மண்ணில் குளம்பூன்றி நின்றன. பாம்பு அசைவிழந்தபின் பின்பக்கமாக வளைந்து செல்லத்தொடங்கியது.

உளைசேற்றிலிருந்து பின்கால் எடுத்து வைத்து மெல்ல கரையேறும் விலங்குபோல தன் புரவிப் படையை அச்சிறு இடுக்கிலிருந்து மீட்டெடுத்தான். அவனுடன் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு அம்புபட்டு வீழ்ந்து கிடந்தனர். அவர்கள் கிடந்த வகையிலிருந்து அம்புகள் படாத எல்லை ஒன்று உண்டு என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அவ்வெல்லைக்கு அப்பால் தன் படையை முழுமையாக விலக்கிக்கொண்டு அந்நிலப்பகுதியை ஆராய்ந்தான். உயரமற்ற குன்றுகளால் சூழப்பட்ட அந்தச்சிற்றூரின் காவல் என்பது மலைப்பாறைகளே என அறிந்தான். அவற்றுக்குப்பின்னால்தான் வில்லவர் ஒளிந்திருக்கிறார்கள் என்று கணித்தான். எதிரிகள் தாங்கள் ஒளிந்திருந்த மலைச்சரிவுகளிலிருந்து வெட்டவெளிக்கு வரமாட்டார்கள் என்பதை தெளிந்தான்.

மேலும் மேலும் பின்னகர்ந்து தனது புரவிப் படையை மூன்றாக பிரித்தான் கண்டர்களின் இளந்தலைவன். இரு பக்கங்களிலும் இரு பிரிவுகளை கைகளாக நீளசெய்தான். அவை வலையென விரிந்து அவ்வூரையும் சூழ்ந்த குன்றுகளையும் ஒட்டுமொத்தமாக வளைக்கத் தொடங்கின. நடுவே இருந்த சிறு வளைவில் மலைச்சரிவுகளில் உருண்டு வந்து நின்றிருந்த பெரும்பாறைக்குப்பின்னால் தன் சிறுபடையை அணிவகுத்து நிற்கச் சொல்லி அசைவின்றி காத்திருந்தான்.

ரைவதகர் கண்டர்களின் படை பின்வாங்குவதைக் கண்டார். அச்செயலில் இருந்த முழுமையான ஒழுங்கு அங்கு ஒரு சிறந்த தலைவன் உருவாகியிருப்பதை அவருக்குக் காட்டியது. கிண்ணத்தில் ஊற்றப்படும் நீர்த்தாரையென அந்தப்பாறையில் முட்டி இரண்டாகப் பிரிந்து வளைந்து பின் நகர்ந்து சென்ற புரவிப்படையை கண்டபோது அதற்கிணையான சூழ்கை ஒன்றை தன்னாலும் வகுக்கமுடியாதென்று எண்ணினார். குதிரைகள் பின்வாங்கிச் சென்றபின் செம்புழுதியில் அவர்கள் முற்றிலும் மறைந்தனர். அவ்வப்போது வால்களின் அசைவுகளும் படைக்கலங்களின் மின்னல்களும் மழுங்கிய குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன.

“பின்வாங்குகிறார்கள்” என்று ஒருவன் கூவினான். இல்லை என்று ரைவதகர் தலை அசைத்தார். பின்பு செவிமேல் கைவைத்து கண்மூடி புரவிகளின் குளம்பொலி ஒசைகளில் வந்த மாறுதலை அறிந்தார். “அவர்கள் நம் ஊரை சூழ்ந்துகொள்கிறார்கள்” என்றார். “எப்படி?” என்றார் அருகே நின்ற குலத்தலைவர். “இம்மலைகளுடன் சேர்த்து நம்மை சூழ்ந்துகொள்கிறார்கள்” என்றார். “அது எப்படி? அவ்வளவு…” என்று அவர் சொல்வதற்குள் ஒருவன் புரிந்துகொண்டு “ஆம், அதுவே அவர்கள் செய்யக்கூடுவது. இன்னும் சில கணங்களில் நமக்கு பின்னால் வந்துவிடுவார்கள்” என்றான்.

ரைவதகர் “இப்பாறை மறைவுகளில் இருந்தால் நாம் வீழ்ந்தோம்” என்றார். “நாம் போரிடுவோம்… நம்மால் போரிடமுடியுமென காட்டியிருக்கிறோம். இப்போது பின்வாங்கினால் பின்பு நாம் எழுவதே அரிது” என்றார் மூத்தகுடித்தலைவர். “அவர்களை எதிர்கொள்ள நம்மால் முடியாது. நாம் மிகச்சிலரே. நாம் பின்வாங்கிச் செல்வோம். உகந்த இடமும் சூழலுமின்றி போரிடுதல் தற்கொலையாகும். நம் இளையோரை நாம் காக்கவேண்டும்” என்றார் ரைவதகர். அவரது ஆணைப்படி பாறை மறைவை விட்டு ஒவ்வொருவராக பின்னால் சென்றனர்.

“பின்னால் செல்லும்போதும் ஒரு பாறை மறைவிலிருந்து இன்னொரு பாறை மறைவிற்குச் செல்லுங்கள். ஒருபோதும் வெட்டவெளிக்குச் செல்லாதீர்கள்” என்று ரைவதகர் ஆணையிட்டார். அவர்கள் ஒளிந்து ஒளிந்து பின்வாங்கிச் செல்லும்போது எதிர்கொண்ட சிறுபாறை ஒன்றின் மேல் ஏறி ஒருவன் மறுபக்கம் குதித்தான். வானிலேயே நெஞ்சில் பாய்ந்த அம்புடன் அலறி கைகால் உதறி பாறையிடுக்குக்குள் விழுந்தான். போர்க்கலை பயிலாத குஜ்ஜர்கள் இருவர் அறியாது கூச்சலிட்டபடி அவனை நோக்கி எழுந்ததுமே அம்பு பட்டு வீழ்ந்தனர். பிறிதொருவன் பாறை மேல் ஏறி “நம்மைச் சூழ்ந்துள்ளார்கள்” என்று கூவினான். அவன் கழுத்தை தைத்த அம்பு அவன் குரலை துண்டாக்கியது.

குஜ்ஜர்கள் அதன் பின் எங்கு இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்று உணரவில்லை. கூச்சலிட்டு அலறியபடி ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய இடங்களை நோக்கி ஓடத்தொடங்கினர். வெட்ட வெளிக்கு வந்த அனைவரும் அக்கணமே கொல்லப்பட்டனர். “ஒளிந்து கொள்ளுங்கள். வெளியே வராதீர்கள்” என்று ரைவதகர் கூவிக்கொண்டு இருந்தார். ஆனால் வேட்டையோ, போரோ தெரியாத அம்மக்களால் ஒளிந்திருக்கும் அளவுக்கு பொறுமையை அமைக்க முடியவில்லை. “மூடர்களே, அமர்ந்திருங்கள். பொறுமை” என்று கூவியபடி அவர் எழுந்து கைவீசியதும் அவரது தோளைத் தாக்கிய பெரிய அம்பு ஒன்று அவரை அள்ளி பாறைவெடிப்பு ஒன்றுக்குள் வீசியது.

முதலைவாய் என திறந்திருந்த ஆழ்ந்த வெடிப்புக்குள் அவர் சறுக்கி உள்ளே சென்றார். அதன் இறுகிய கூர்முனையில் அவரது உடல் சிக்கிக்கொண்டது. கைகளால் உந்தி எழமுயல குருதியிலேயே வழுக்கி வழுக்கி உள்ளே சென்று மேலும் இறுகிக்கொண்டார். அவரது குருதி அவர்மேலேயே வழிந்தது. இடக்கையும் இடக்காலும் இரும்பால் ஆனவை போல எடை கொண்டிருந்தன. கழுத்துத் தசையும் வலக்கால் தொடைத் தசையும் வெட்டுண்டு விழுந்த விலங்கின் தசைபோல் துடித்துக்கொண்டிருந்தன.

“என்குடியே, என் மூதாதையரே, நான் என்ன செய்வேன்?” என்று ரைவதகர் நெஞ்சுக்குள் ஓலமிட்டார். “என் பெண்கள். என் மைந்தர். என் மூத்தோர்” என்று அவரது அகக்குகைகள் எதிரொலித்தன. “நீ ரைவதகன்” என ஒரு குரல் எங்கோ இருளில் முணுமுணுப்பதை இறுதியாக கேட்டார்.

தொடர்புடைய பதிவுகள்

ஆலயம் தொழுதல்

$
0
0

1

நகைச்சுவை

தமிழ்நாடு ஆஸ்திக மண்டலி மற்றும் இருபத்தேழு [ஏழும் இரண்டும் ஒன்பது] துணை அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஆலயவழிபாடு, அருமையும் பெருமையும் வழிமுறைகளும் சடங்காசாரங்களும் இன்னபிறவும்‘ என்ற தலைப்பில் அமைந்த சின்னஞ்சிறு பிரசுரம் ஆத்திகர்களுக்கு மிகமிக உதவிகரமானதாகையால் அதை இங்கே அளிக்கிறோம். சுருக்கமாக. ஆத்திகத்துக்குரிய அடாசு மொழி சற்றே நவீனப்படுத்தப்பட்டிருப்பதை ஆத்திக அன்பர்கள் மனமுவந்து மன்னிக்கவேண்டும்.

ஆலயம் என்பது இந்துப்பண்பாட்டின் அடிப்படையான அமைப்பாகும். ஆ+லயம் என்ற சொல்லாடியே ஆலயமானது என்று புராணகதாசாகரம் லட்சுமிகிருஷ்ணமாச்சாரியாரவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கே எடுத்துரைக்கிறோம். ஆ என்று வாய்திறந்து லயித்து நிற்பதற்குரிய இடமென பொருள்படும் . இ·து. கோவில் என்றும் சொல்வதுண்டு. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அறிவுரை உள்ளதல்லவா? “go with will என்ற ஆங்கிலச் சொல்லாட்சியே அப்படி மருவிற்றென்று சிவநெறிக்காவலர் சிவ.வல.குழ.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் ஓருரையில் குறிப்பிட்டார்கள்.

ஆகவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று. நன்றே செய்க அதுவும் இன்றே செய்க. தீதும் நன்றும் பிறர்தர வாரா. நன்றுக்கும் தீதுக்கும் அ·தே துணை. [நினைவுக்கு வரும் இன்னவையன்ன பிற சொல்லாட்சிகளைச் சேர்த்துக்கொள்க. ஆசிரியர் குழு] ஆலயத்துக்குச் செல்லும்போது செய்யவேண்டிய சமயக்குறிப்புகளை இனி கானலாம்.

குளித்து கும்பிடுதல் நமது மரபு. ஆலயம் சென்று அங்குள்ள திருக்குளத்தில் நீராடி நீறோ மண்ணோ அணிந்து கைகூப்பி பக்தி மேலிட இறைநாமங்களைச் சொல்லியபடி ஆலயம்புகுதல் முறை. சுகாதாரம் கருதி ஆலயக்குளத்தில் நீராடுவதை தவிர்க்கலாமென்பது ஆஸ்திகமண்டலியின் கருத்து. ஆயினும் முறைவழுவலாகாது என்பதனால் வெளியே ரூ.இருபதுக்கு விற்கப்படும் குடிநீர்குப்பி ஒன்றைவாங்கிக் கொண்டு உள்ளே சென்று ஆலயக்குளத்தில் மெல்லமெல்ல வழுக்காமல் காலெடுத்து வைத்து இறங்கி கால்நகங்களைமட்டும் நனைத்து அக்கணமே மேலேறி குடிநீர் குப்பி திறந்து நல்லநீரால் கால்களை கழுவிக்கொள்ளவும்.அவ்வாறு கழுவாமல் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்பதையே ‘அசுத்தம்செய்யாதீர்’ என்று ஆலய நிர்வாகிகள் அங்கே எழுதிவைத்திருக்கிறார்கள்.

ஆயினும் நம் சடங்குகளைக் கைவிடலாகாது. ஆங்கே பெரிய சாக்குப்பைகளில் வைத்து விற்கப்படும் பொரி சிலநாழி வாங்கி ஆலயக்குளத்தில் பக்தியுடன் கொட்ட வேண்டும். குளத்து மீன்கள் பலவருடம் முன்னரே இறந்துவிட்டிருக்குமென்றாலும் அவற்றின் ஆவிகளுக்கு நாம் தர்ப்பணம் செய்தாக வேண்டியிருக்கிறது. கைவசம் கொண்டுவந்த வீட்டிலுள்ள பழைய பூசனைப்பொருட்களான வாடிய மாலைகள் காகிதப்பூக்கள் எலிப்ப்புழுக்கை கலந்த மிஞ்சிய பொரிசுண்டல்கள் இன்னபிறவற்றையும் ஆலயக்குளத்தில் வீசலாம்.

அதன்பின்னர் நாம் ஆலயமுகப்புக்குள் செல்கிறோம். இங்கே கருங்கல் தரையில் பலவகையான மாந்தர் கால்களை நீட்டியும், குந்தியும், குடும்பமாகவும், குடும்பங்களை வெறித்துப் பார்க்கும் தனியர்களாகவும், பல கோணங்களில் நிரம்பி அமர்ந்திருக்கக் காணலாம். இவர்கள் நடுவே குழந்தைகள் வாழைப்பழம், தேங்காய், பொங்கல், சுண்டல் முதலியவற்றை தின்றும் அள்ளி இறைத்தும் மலசலம் கழித்தும் களித்து விளையாடுகின்றதைப் பார்க்கலாம். இங்குள்ள பெண்கள் சரம்சரமாக பூச்சூடி உரக்கப்பேசி ‘ய்யக்காவ்’ என்று அகவி  பிறரை அழைத்து தத்தம் இருப்பை நிறுவிக்கொண்டிருப்பார்கள்.இவர்களினூடாக ஐம்புலன்களையும் குவித்து நடந்து உள்ளே செல்வதென்பது ஒரு வகை தியானமாகும்.

நுழையும்போதுள்ள மண்டபங்களில் பெரிய தூண்களில் ஏராளமான கருங்கற்சிலைகள் பல அடி உயரத்துக்கு நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். யாளிகளின் குறிகளை பார்க்கும் இளம்பெண்கள் கிளுகிளுத்து சிரித்து தோழிகளை கிள்ளுவதில் தவறில்லையென்றாலும் குலமாதர் தத்தம் கணவர்களை அழுத்தமாக கிள்ளியோ நகம் இல்லாவிட்டால் ஊசியால் குத்தியோ கவன ஈர்ப்பு செய்து பளபளக்கும் உருண்டைமுலைகளில் இருந்து மீட்டு உள்ளே கொண்டுசெல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படி இருந்தும் கையெட்டும் உயரத்துச் சிலைகளில் முலைகள் தனி வழவழப்புடன் இருப்பதை ஆராய்ந்த மாதல்ல நாராயணையா கமிட்டி அவற்றில் இடமுலைகள் மேலும் எண்ணைப்பிசுக்குடனிருப்பதை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான தமிழர்கள் வலதுகையர்கள் என்ற முதற்கட்ட முடிவுக்கு வந்திருக்கிறது.

இப்பகுதியின் தூணிடுக்குகளுக்கும் சிற்ப இடைவெளிகளுக்கும் பலவகை பயன்கள் உண்டு. கோயில்பணியாளர்களின் செருப்புகள் மஞ்சள்பைகள் போன்றவற்றை இறுக்கி வைத்துவிட்டு போவதற்கும் வெற்றிலை எச்சில் துப்புவதற்கும் பிரசாதப்பொட்டலங்களைப் போடுவதற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம். தாம்பூலப்பழக்கம் உள்ளவர்கள் சற்று கவனித்தால் எந்தச்சிலைமீது சுண்ணாம்பு தடவுதல் அங்கே மரபென்பதை அறிந்துகொள்ளலாம்.

கொடிமரத்தை அணுகியதுமே ஆண்கள் கரசரணங்களை அங்குள்ள புழுதித்தரையில் அழுந்தப்பதித்து விழுந்து கும்பிடுதல் நன்று. பெண்கள் முழந்தாளிடலாம். குண்டு மாமிகள் முழந்தாளிடுவது எப்படி என்று தனி கைப்பிரசுரம் எங்களிடம் கிடைக்கும். சில எளிய செய்முறைகள் இதோ. முதலில் மெல்ல சரிந்து இடக்கையை தரையில் ஊன்றவும். அதன் பின் இடது காலை மெல்ல மடித்து பகவானே என்ற கூக்குரலுடன் மெல்லமெல்லச் சரிந்து அதன்பின் வலக்காலையும் மடிக்கவும். பின்பு இரு கைகளையும் தரையில் ஊன்றி தலையை நிலம் சேர்த்து வணங்கும்போது பின்னல் தரையில் வீழ்ந்து பிறரால் மிதிபடாமலிருக்கவும் நந்தியென எண்ணி பிறபக்தர் காதில் குறைகள் சொல்ல வராமலிருக்கவும் கவனம் கொள்ளவும். எழுந்திருப்பது எப்படியானாலும் உங்கள் கையில் இல்லை, காலிலும். கூடவே வலுவான துணை கொண்டு செல்லவும்.

கொடிமரத்தில் இருந்து வலம் வந்து ஆலயபிராகாரத்தை சுற்றிவரல் வேண்டும். மருமகளையும் பக்கத்து வீட்டுக்காரியையும் வைவது, பிறபெண்டிர் நகைகளை நோக்கி நொடிப்பது, சீரியல் விவாதம் போன்றவை இத்தருணத்தில் உகந்தவை. இளம்பெண்கள் தலையையும் கைகளையும் பலமாக ஆட்டி ஆனால் குரல் எழாமல் பேசிக்கொண்டு செல்லலாம். ஆண்கள் செல்போனை காதில் ஒட்டிவைத்து ”ஆ? ஆ? அப்டியா? ஆ? ஏ? ஓ! அதுசரி ! அஹ்ஹஹ்ஹா!!!” என்று கூவியபடி சுற்றிவரலாம். நடுவே கல்மேடாக எதைக் கண்டாலும் கவனம் நில்லாமலேயே கன்னத்தில் போட்டு கும்பிட்டுச் செல்லவேண்டும், சற்று பழகினால் தண்டுவடமே இதைச்செய்ய ஆரம்பித்துவிடும்.

சிவன் கோயிலில் இடப்பக்கம் சண்டிகேஸ்வரர் சன்னிதி கோயில் கருவறைச்சுவரை நோக்கி நெருக்கமாக இருக்கும். உள்ளேசெல்லும்போது ஆப்புபோல அவ்விடைவெளியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கும் என்பதனால் எடையர்கள் நின்றுவிடுதல் நன்று. சண்டிகேஸ்வரரை கைதட்டிக் கும்பிடுதல் வேண்டும்–நம்முடைய கையை. அது ஆட்டோ ரிக்ஷாவைக் கூப்பிடுதலாகவும் அமையலாகாது.பொதுக்கூட்டத்தில் தட்டுவதாகவும் அமையலாகாது.நடுவாந்தரமாக மென்மையாக அமையலாம். மிக்சர் பொரி சாப்பிட்டுவிட்டு கைகளை தட்டுவது போல.

அர்த்தமண்டபத்தில் பல வகையான சிலைகள். அவை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான நோக்கம் உண்டு. சில சிலைகளின் மீது மிஞ்சிய குங்குமம் விபூதியை நாம் போடவேண்டும். சில சிலைகள் மீது வேட்டி, புடவை நுனிகளை பிய்த்து நூலைப்போட வேண்டும். சில சிலகளைப் பிடித்துக்கொண்டு எம்பி கருவறையைப் பார்க்கலாம். சிலசிலைகள் மீது நாம் கொண்டுபோகும் சிறு பைகளை தொங்கவிடலாம். அவற்றுக்கான அடையாளங்கள் அச்சிலைகள் இருப்பதை அவதானித்து அவற்றைச் செய்தல் நலம். புதுவேட்டி, புதுப்புடவை என்பதற்காக உள்ளாடைகளை வெளியே எடுத்து நூல் பிய்ப்பது மாண்பல்ல.

கோயில்கருவறைக்கு இருபக்கமும் இரு பெரும் சிலைகளைக் காணலாம். இவை துவாரபாலகர்கள் என்று சொல்லப்படுகின்றன. ‘ஒருரூபாய்’ என்று ஒரு சிலையும் ‘உள்ளே கொடுங்கள்’ என்று இன்னொரு சிலையும் கைகாட்டி மிரட்டி உறுத்து நோக்கி நம்மிடம் சொல்கின்றன. உள்ளே அர்ச்சகர்கள் இருபபர்கள். இவர்கள் கட்டுக்குடுமியை தளர்வாக கட்டி தோளில் தவிட்டுநிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் ஒரு நூல் அணிந்திருப்பார்கள். இவர்களை நூல்கள் நூலோர் என்று சொல்கையில் அவர்கள் தங்களை மேலோர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பத்துநாள் தாடி, காவிப்பல், கைதூக்கி அக்குள் சொறியும் பழக்கம், உடம்பெங்கும் தேமல் போன்றவை இவர்களின் தோற்ற இலக்கணங்கள்.சிவாச்சாரியார்களுக்கு பூச்சுத்தேமலும் பட்டர்களுக்கு பட்டைத்தேமலும் காணப்படும்.

கருவறைக்கு நேரெதிராக இருபக்கமும் இரு எவர்சில்வர் குழாய்கள் மாட்டப்பட்டு இடம் பிரிக்கப்பட்டிருக்கும். இறைச்சன்னிதி முன் பெண்டிரின் கற்பு காப்பாற்றவேண்டுமென்பதே நோக்கம். பெண்டிரை ஆண்கள் நேர்நின்று நோக்கும் வசதிக்கெனவும் ஆகமக்குறிப்பு உண்டு. கருவறைக்குள் இருட்டு நிறைந்திருக்கும். சிவாலயங்களில் தாழ்வான சிவலிங்கம் காணப்படும். அதனைச் சுற்றி வெள்ளியாலான வட்டம் அமைந்திருக்கும். இருபக்கமும் விளக்குகள் தொங்கி ஆடும். வைணவ ஆலயங்களில் கரியசிலைகள் நின்றோ படுத்தோ இருக்கையில் முன்னால் வெண்கலச்சிலைகள் அலங்காரங்களுடன் இருக்கும். அவையே கும்பிடுவதற்குரியவை. அவற்றைப்பற்றிய விவரணைகளுக்குள் செல்ல இங்கே இடமில்லை.

கருவறைக்குள் புகுதல் ஆகமமுறைப்படி வகுக்கப்பட்டுள்ளது. நூலோர் தவிர எலி, கரப்பாம்பூச்சி, பாம்பு, பல்லி, பூரான் போன்றவை உள்ளே அனுமதிக்கப்படலாம் எனினும் பெருச்சாளியே முதன்மையானது. பறப்பனவற்றில் வௌவாலுக்கு முதலிடம். இறை வழிபாட்டை மனமொன்றி செய்தல்வேண்டும். சாமிமீது கரப்பாம்பூச்சி ஊர்ந்து ஏறும்போது அங்கே கவனம் திரும்புதல் கூடாது. ”அம்மா சாமி மேலே கரப்பாம்பூச்சி…அம்மா பாத்தியா சாமி மேலே கரப்பாம்பூச்சி…அம்மா”என்று கத்தி நம் புடவையைபிடித்திழுக்கும் சிறு குழந்தைகளை மண்டையில் குட்டி அழச்செய்து வாயடைய வைக்க ஆகம அனுமதி உண்டு.

பொதுவாகவே குழந்தைகளை ஆலயங்களில் கண்டிப்பாக கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தடுப்புக் கம்பிகளில் ஏறி விளையாடுதல், சக குழந்தைகளை நோக்கி உதடுகளைக் கோட்டிக் காட்டுதல், கையில் உள்ள பொருட்களை உண்டியல் துளையில் போடுதல், நந்தியை அடையாளம் தெரியாமல் ”பண்ணி பாத்தியா ப்ப்ப்பண்ணி படுத்திருக்கு ” என்று சொல்லி சுட்டிக்காட்டுதல் போன்றவை மன்னிக்கப்படலாமென்றாலும் சயனப்பெருமாளை நோக்கி ”சாமிக்கு ஜொரமா? படுத்தே கெடக்கு?” என்றும், நடராசரைப்பார்த்து ”இந்த சாமிக்கு காலிலே முள்ளு குத்திச்சு ..பாவம்” என்றும் சொல்லும் குழந்தைகள் ஆகமவிதிகளை மீறுகின்றன என்று உணரல் வேண்டும். குழந்தைகளை கட்டுப்படுத்த செவி என்ற உறுப்பை உருவாக்கிய வாஸ்துதேவனை நாம் இங்கே நினைவில் கொண்டு வழுத்துவோமாக.

அர்ச்சகர் ஒரு பெரிய தட்டில் கற்பூரச்சுடர், பூக்கள் போன்றவற்றுடன் வருவதைக் கண்டு உடலில் உள்ள எல்லா சட்டைப்பைகளுக்குள்ளும் கையை விட்டு துழாவ ஆரம்பித்தல் பிழை. கோடுபோட்ட அண்டர்வேரை வெளியே எடுத்து பணம் எடுப்பது பாவம். பெண்கள் முந்தானை விலக்கி ஜாக்கெட்டுக்குள் இருந்து எடுப்பதில் பிழையில்லை.

எனினும் முன்னரே சில்லறை மாற்றி வைத்தல் நன்று. போடுவது ஒருரூபாய்க்கு குறைவல்ல என்று உறுதிசெய்யவே அவர் அவ்விளக்கை வைத்திருக்கிறார் என்றும் பேருந்து நடத்துனர் சீட்டு அளிப்பதுபோல மலர் அளிக்கிறார் என்றும் எண்ணற்க. பெருமாள் ஆலயங்களில் அளிக்கப்படும் துளசி தீர்த்தத்தை உதடுகளின் வைத்து உடனே எடுத்துவிடுதல் உடலாரோக்கியத்துக்கு நன்று. அமீபாசுரன் தூணிலும் துரும்பிலும் இருக்கும் மாயாவியென்க. கர்ப்பூரச்சுடரை தொட்டு கும்பிடும்போது அணைத்து வசைபெறல் உகந்ததல்ல.

இறை வழிபாட்டை மனமொன்றி செய்தல் வேண்டும்.ஆகவே கையில் உள்ள குப்பைகளை எங்குபோடுவதென்று அலைமோதலாகாது. அங்கேயே அபப்டியே போட்டுவிடுதல் நலம். அப்போது நினைவுக்கு வந்த பக்திப்பாடல்களை முன்னால் நிற்பவரின் செவி அதிரும்படி கதறுவது நெறியாகும். வரிகள் தெரியாதவர்கள் சிவசிவா என்றோ சம்போ மகாதேவா என்றோ நாராயணா பெருமாளே என்றோ கூப்பாடு போடலாம்.

கோயிலுக்கு நாம் என்ன செய்தாலும் அதை சாமி அறிந்து கொள்வதுடன் அவர் மறக்காமலும் இருக்க வேண்டும். ஆகவே நாம் அளிக்கும் பொருட்களில் நம் பெயரை குறித்து வைக்க வேண்டும். ஏழு ரூபாய் குண்டுபல்ப் வாங்கிக் கொடுத்தாலும் கூட ‘பல்ப் சுப . வல. அருணாச்சலம் செட்டியார் வகையறா உபயம்’ என்று எழுதி வைப்பது நல்லது. கோயிலை அத்தனை பெரிதாகக் கட்டிய பாண்டியர்களும் சோழர்களும் எழுதி வைக்காத காரணத்தால் எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் பார்த்தீர்கள் அல்லவா?

கருவறைக்கு முன் நாம் குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும். ”மஞ்சூ அம்மா கையை புடிச்சுக்கோ…டேய் ராகவ், தண்டக்கருமாந்தரமே எங்க போற…ஏண்டி அவனை புடிச்சுக்கச் சொன்னா அங்க என்ன செய்து எழவெடுக்கிறே” என்று கூவி நிலைமையை நம் கட்டுக்குள் கொண்டுவரலாம். ”வந்து தொலையேண்டி சனியனே”என்று மனைவியை அழைத்து அடுத்த சன்னிதிக்குச் செல்வது தொல் தமிழ் மரபு

மிஞ்சிய விபூதிகுங்குமத்தை சிலைமீது கொட்டிவிட்டு வெளியே செல்லும்போதே பேசி நிறுத்திய மிச்சத்தை தொடரலாம். வெளியே வெவ்வேறு இடங்களில் பலவகையான நூலோர் நின்று பலவகையான வழிபாடுகளைச் சொல்லி நம்மை ஈர்ப்பதைக் காணலாம். இவ்வாறு ஆலயங்களில் நாள்தோறும் புதுப்புது வழிபாட்டுமுறைகள் உருவாகி வருகின்றன. அவற்றை கணக்கிலெடுத்து ஆகமங்களை திருத்தியமைப்பதறகாக கமிட்டி ஒன்று செயல்படுகிறது. சராசரியாக நாள்தோறும் பதினேழு புதிய சடங்குகள் உருவாகி வருகின்றன என்பது கணக்கு. சிலவற்றை ஈண்டு பட்டியலிடுவாம்

ஆஞ்சனேயருக்கு வடைமாலை சார்த்துதல். காகிதத்தில் ராமஜெயம் எழுதி மாலையாகக் கட்டி அவர் கழுத்திலணிவித்தல். ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட் போன்றவையும் ஆகலாம் என்றானபின் கோடிராமநாமம் வழக்கமாக உள்ளது. நாநூறுகோடி ராமநாமத்தை சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் அச்செடுத்து சமர்ப்பிக்கும் ஒரு வேள்விகூட இப்போது நிகழ்ந்தது. நிறைய அனுமன்கள் தேவைபப்டுவதனால் சில இடங்களில் சுக்ரீவன், வாலி, அங்கதன் போன்ற சிலைகளுக்கும் இதேவழிபாடு செய்யப்படுகிறது.

காலபைரவன் காளி போன்ற சிலைகள் மீது வெண்ணையை ‘பொச்சக்’ என்று தூக்கி வீசுவது. அதே வெண்ணை வழித்தெடுக்கப்பட்டு மீண்டும் உருட்டி விற்கப்படுவதால் நாற்றம் குமட்டும் என்பதனால் கையில் வாங்கியதுமே சிலையை நோக்கி ஓடுவோர் முந்தையோர் இட்ட வெண்ணையில் வழுக்கி விழுதல் நிகழ்வதுண்டு. பெருமாள் சிலைகளுக்கு மேலே சந்தனத்தை வீசுவதும் பிள்ளையார் மீது நாணயங்களை வீசுவதும் காணப்படுகிறது. நெல்லைமாவட்டத்தில் ஒரு ஆலயத்தில் ஆனாய நாயனார் மீது செல்பேசியை வீசும் மரபு இருப்பதாகச் சொல்லபப்டுகிறது.  ஆனால் குறிபார்ப்பதற்காக பலமுறை பொருட்களை சாமி முன்பு முன்னும் பின்னும் ஆட்டுவதும் ஒரு கண்ணைமூடிக்கொள்வதும் சம்பிரதாய விரோதமாகும்.

முஞ்சூறு சிலைகளுக்கு பூசை செய்து எலித்தொல்லை நீங்கப்பெறுதல். கோயில் சுவர்களில் உள்ள பல்லிசிலைகளுக்கு குங்குமம் சார்த்தி பூசை செய்தல். இதனால் பல்லிவிழுந்த தோஷம் நீங்கும் என்று புது ஐதீகம். ஒரு கோயிலில் தேள்கடித்த தோஷம் தீர அங்கே தேள்சிலைக்கு வெண்னைசாத்தும் வழக்கம் சூடுபிடித்தபோது ஆய்வுக்குழு சென்று நோக்கி அது தேளல்ல பத்து கை கொண்ட ராவணனே என்று நிறுவியபோது பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அந்த நிரூபணம் கைவிடப்பட்டது. 

மூலமூர்த்திக்கு அபிடேகம் செய்த எண்ணையை ஒரு குழியில் சேமித்து அந்த எண்ணையை அள்ளி நல்மருந்தென வணிகம்செய்தல். எண்ணைத்தேவை அதிகரிக்க அதிகரிக்க வடை மற்றும் அதிரசம் சுட்ட எண்ணையும் அதில் கலக்கப்பட்டது. கன்னங்கரேலென இருப்பதனால் அதை குரூடாயில் என்று இந்திய எண்ணை சுத்திகரிப்பகத்துக்கு சிலர் செய்த புகார் தவறானது.

கோயில் கிணற்றில் சில்லறைகளை வீசுவது முறையென்றாலும் வீட்டிலெஞ்சிய செல்லாத சில்லறைகளை கொண்டுவந்து போடவேண்டிய இடமென அவ்விடத்தை எண்ணுதல் முறையன்று. பொதுவாக மூலச்சிலை அன்றி அத்தனை சிலைகளை நோக்கியும் சில்லரைகளை வீசியெறியலாம். திருப்பி நம்மை சாமி பணத்தால் அடிப்பார் என்பது ஆகம விதி. அதே மாதிரி சில்லறையால்தான் அடிக்கிறார், நோட்டைக் காணோமே என்றால் அது அவரவர் விதி.

செவிசாய்த்த நந்தியின் காதில் புருஷனைப்பற்றிய குறைகளைச் சொல்லலாம் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. ஒரு காதின் துளை வழியாக குச்சிவிட்டால் மறுகாதில் வெளிவரும் யாளியின் காதில் சொல்வது கணவனிடம் பேசும் இன்பத்தை சில பெண்டிருக்கு அளிப்பதனால் அதுவும் இப்போது மரபாகி வருகிறது. அந்த யாளி தன் வாய்க்குள் துப்பவோ விழுங்கவோ முடியாத கல்லுருளையுடன் நிற்குமென்றால் மேலும் விரும்பப்படுகிறது.

சிற்பக்கலையை ரசிப்பதற்கான எளியவழிகள் இப்போது அங்கீகாரம் பெற்றுள்ளன. தூண்களை சிறு கல்லால் தட்டிப்பார்த்து ஏழிசைக் கற்கள் என்று சொல்வது பல இடங்களில் உண்டென்றாலும் சில இடங்களில் நக்கிப்பார்த்து நவரசத்தூண்கள் என்று சொல்ல ஆரம்பித்திருப்பதை இன்னும் ஆகமக் கமிட்டி அங்கீகரிக்கவில்லை. பொதுவாக சிற்பங்களை கொட்டியும் தட்டியும் பார்த்து நல்ல ஓசை வரக்கூடிய சிற்பமெ சிறந்தது என்ற முடிவுக்கு வருதல் எளிய வழி.  

இதைத்தவிர அர்ச்சனை சார்ந்த சில புதிய சடங்குகளும் உள்ளன. சிவலிங்கத்துக்கு அழுக்குத் துண்டால் இடைக்கச்சை கட்டி விடுதல், கல்லிலேயே அலங்கார உடையணிந்த அம்மனுக்கு அதற்குமேல் நாலரை ரூபாய் சீட்டிப்பாவாடையை எண்ணைபிசுக்குடன் கட்டிவிடுதல், கால்தூக்கி நின்றாடும் ஆடவல்லானுக்கு பஞ்சக்கச்சம் கட்டுதல், போர்கோலம் கொண்ட வீரபத்ரனுக்கு கோவணம் கட்டிவிடுதல் போன்றவை இப்போது பரவலாக கடைப்பிடிக்கப்படுகின்றன. திருவிடைநல்லூர் பக்கம் ஒரு கோயில்யானைக்கு ஜட்டி தைத்துபோட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவை ஆராயப்பட்டு முறைப்படி ஆகமங்களில் சேர்க்கப்படும்.

ஆகமம் என்பது மாறாத விதி அல்ல. இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பதைப்போலவேதான் இதுவும். ‘Ah! Come! Come! ” என்ற சொல்லில் இருந்தே ஆகமம் வந்தது என்பதை தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளையவர்கள் ஒரு மேடையிலே அழகுற விளக்கினார் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.’நாலுபேருக்கு நல்லது செஞ்சா தப்பேயில்லை’ என்று சைதாபேட்டை பாலகுமாரசுவாமிகள் அருளிச்செய்ததும் நினைக்கற்பாலது.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 28, 2008

தொடர்புடைய பதிவுகள்

ஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்

$
0
0

1

ஜெ

வெங்கட் சாமிநாதனின் இறப்பைப்பற்றி தமிழ் இந்து வெளியிட்ட செய்தியை பாராட்டியிருந்தீர்கள். நஞ்சைக்கக்கும் விதத்தில் ஆங்கில இந்து வெளியிட்ட செய்தியைப் பார்த்தீர்களா? அதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

ராஜாராம்

அ.கா பெருமாள்

அ.கா பெருமாள்

அன்புள்ள ராஜாராம்

நான் ஆங்கில இந்து வாசிப்பதில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாதான். [எனக்குச் செய்திகளில் கொஞ்சம் நடுநிலைமை இருப்பது பிடிக்கும்] ஆகவே உங்கள் கடிதம் கண்ட பின்னரே இந்துவின் செய்தியை பார்த்தேன்.

வெங்கட் சாமிநாதன் பற்றிய இந்துவின் செய்திக் குறிப்பில் எந்தப்பிழையும் இருப்பதுபோலத் தெரியவில்லை. தமிழ் இந்து வெளியிட்டது தலையங்கம். அது அவர்களின் தரப்பு. ஆங்கில இந்து வெளியிட்டது செய்தி. அவர்களின் ஒரு நிருபரின் பெயரால் அது வெளியாகியிருக்கிறது. [பி.கோலப்பன்]

தமிழ்க் கருத்துச்சூழலில் உள்ள வேறுபட்ட தரப்புகளைக் கேட்டு வெளியிட்டிருக்கிறார்கள். அது இயல்பானதே. குறிப்பாக கடுமையான விவாதங்களை உருவாக்கிய ஓரு விமர்சகரைப்பற்றி அவ்வாறு பலதரப்பையும் கேட்டு எழுதுவதில் பிழையில்லை. ஏனென்றால் அவர் உருவாக்கிய விவாதங்கள்தான் தொடரவேண்டும்.

வெங்கட் சாமிநாதனின் தரப்பாக சாமிநாதனுக்காக யாத்ரா இதழை நடத்தியவரும் சாமிநாதனால் பாதிப்பு கொண்டு நாட்டாரியலாய்வில் நுழைந்தவருமான அ.கா.பெருமாள், சாமிநாதனின் படைப்புகளை அதிகமாக வெளியிட்ட சொல்வனம் இணையதளத்தின் ஆசிரியரான சேதுபதி அருணாச்சலம் ஆகியோரின் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதில் சேதுபதி அருணாச்சலத்தால் அவரது இலக்கியப் பங்களிப்பைப்பற்றி குறிப்பாக ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவரது விமர்சனங்களை அவர் வாசித்திருப்பதாகத் தெரியவில்லை.

2

மறுதரப்பாக ரவிக்குமாரின் தரப்பு கோரப்பட்டிருக்கிறது. ரவிக்குமார் சாமிநாதன் மேல் முன்வைக்கும் விமர்சனம் இடதுசாரிகளிடம் எப்போதும் உள்ளதுதான்.கைலாசபதி,சிவத்தம்பி, நா.வானமாமலை, நிர்மலா நித்யானந்தம், தோத்தாத்ரி, எம்.ஏ.நுஃமான் என நீளும் ஒரு வலுவான எதிர்த்தரப்பின் குரல் அது

ரவிக்குமார் சாமிநாதனை படித்து எதிர்விமர்சனமும் எழுதிவந்தவர். நான் எழுதி, வெங்கட் சாமிநாதன் இறந்தபோது மறுபிரசுரம் செய்யப்பட்ட கட்டுரையில்கூட ரவிக்குமார் சொல்லும் விமர்சனங்கள் என் கோணத்தில் சுட்டப்பட்டிருக்கின்றன.

தமிழின் பெருமைமிக்க செவ்வியல் மரபை சாமிநாதன் பொருட்படுத்தவில்லை. சங்க இலக்கியத்தையும் கம்பராமாயணத்தையும் கூட. தமிழ் இலக்கிய- பண்பாட்டுச்சூழலை ஒரு பாலைவனமாகவே அவர் உருவகித்தார். ஆகவே நவீன இலக்கியத்தை அவர் பாரதி என்னும் அந்தரப்புள்ளியிலிருந்து தொடங்குகிறார். பாரதியிலிருந்து தொடங்கி உ.வே.சமிநாதய்யர், மௌனி லா.சரா, தி.ஜானகிராமன் என ஒருசில ‘ஒளிப்புள்ளிகளை’ மட்டுமே சுட்டிக்காட்டுகிறார்.அதை ரவிக்குமார் விமர்சிக்கிறார்

சாமிநாதனின் பார்வை படைப்புகளைச் சார்ந்தது அல்ல. அவர் படைப்பாளியைத்தான் எப்போதுமே பார்க்கிறார். படைப்பாளியின் தனிப்பட்ட நேர்மை முக்கியமானது, அது அவர்களைப்பற்றிய செய்திகள் வழியாக தனக்கு நிறைவூட்டும்படி தெரியவந்திருக்கவேண்டும் என நினைக்கிறார். கணிசமான படைப்பாளிகளை நேர்மைக்குறைவானவர்கள் என அவர் முத்திரையிட்டிருக்கிறார். இது விமர்சன அணுகுமுறை அல்ல என்பது என் எண்ணம்

kanasu_thumb4

அவர் படைப்பாளியின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அவரது புனைவுலகை கருதுபவர்.ஒரு படைப்பாளி அவருக்கு பிடிக்காதவர் என்றால் அவரது எந்தப்படைப்பையும் அவர் பொருட்படுத்துவதில்லை. இதை அவரது விமர்சனங்களில் காணலாம். ஒட்டுமொத்தமான மூர்க்கமான நிராகரிப்பையே மேற்கொள்வார். விவாதங்களை உருவாக்கிய அவரால் எதிர்த்தரப்பை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.கடும் சினம் கொள்வார்.

உதாரணமாக அசோகமித்திரன் அவருக்கு ஒவ்வாதவர். எப்போதும் எந்நிலையிலும் அசோகமித்திரனை அவர் கேலியாக நிராகரித்தே பேசியிருக்கிறார். அசோகமித்திரனை எனக்குப்பிடிக்கும் என்பதனால் நான் எப்போதெல்லாம் வெங்கட் சாமிநாதனைச் சந்தித்தேனோ அப்போதெல்லாம் முதலிரு சொற்றொடர்களிலேயே அசோகமித்திரனை கடுமையாக நிராகரித்துப்பேசத் தொடங்கிவிடுவார். நான் எதையுமே எதிர்வாதமாக வைக்கமுடியாது. புன்னகையுடன் பேசாமலிருந்து விடுவேன்.

ஞானக்கூத்தன்,சா.கந்தசாமி என அவரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டவர்கள்தான். ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் செய்தியை அவரிடம் சொன்னதே நான் அவரிடம் கடைசியாகப்பேசியது. மிகக்கடுமையாக வெ.சா ஞானக்கூத்தனை நிராகரித்துப்பேசியதை நினைவுறுகிறேன்

வெங்கட் சாமிநாதன் விமர்சனத்துக்குரிய மொழிநடையை இறுதிவரை உருவாக்கிக்கொள்ளவே இல்லை. பலதிசைகளிலாக பிரிந்துசெல்லும் கட்டற்ற தனிப்பேச்சு போலிருக்கும் அவரது கட்டுரைகள் அவ்வப்போது திசைதிரும்பி மிகக்கடுமையாக அவரது கசப்புகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பவை. அந்த நிதானமின்மை காரணமாக அவரை எதிர்தரப்பினர் வசைபாடுபவர் என அடையாளப்படுத்தினர்.

kai [கைலாசபதி]

இவை அவரது குறைபாடுகள். ஆனால் வெங்கட் சாமிநாதனின் சாதனைகள் தமிழுக்கு மிகமுக்கியமானவை. நான் எப்போதுமே அவற்றைச் சுட்டிக்காட்டுபவன்.

1. அவர் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஓவியம், சினிமா, நாட்டார்கலைகள் மற்றும் கோயில்மரபுகள் போன்றவற்றுடனான உறவை பேசிப்பேசி உருவாக்கியவர். அவ்வகையில் ஒரு முழுமையான கலைநோக்குக்காக வாதிட்டவர்

2 இலக்கியம் தனிப்பட்ட முறையிலான வளர்ச்சியை அடையமுடியாது. அன்னியத்தூண்டல்கள் மேலான இலக்கியத்தை உருவாக்கமுடியாது, அதற்கு மரபும் சூழலும் முக்கியம் என வாதிட்டவர்.

3 இலக்கியத்தில் தன்னிச்சையான அகஎழுச்சியின் இடத்தை முன்னிறுத்தியவர். டிரான்ஸ் என அவர் குறிப்பிட்ட கட்டற்ற பித்துநிலையே உன்னதமான கலையின் பிறப்பிடம் என்றவர்

4 இலக்கியம் ஒரு கலை என்பதை எப்போதும் வலியுறுத்தியவர். அதற்குக் கருத்தியல்களுடன் உறவில்லை என்று வாதிட்டவர்.

தமிழிலக்கியம் வெறும் அரசியல் பிரச்சாரமாக, கேளிக்கையாக சுருங்கிவிடகூடிய கெடுபிடி நிலை இருந்த ஒரு காலகட்டத்தில் அவர் அதை மீட்டு கலையைநோக்கி செலுத்தினார். அது ஒரு தனிப்பட்ட சாதனையேதான்.

நா வானமாமலை

நா வானமாமலை

அதேசமயம் அவரது விமர்சன நோக்கின் எல்லைகளும் முக்கியமானவை. அவர் நவீனப் பேரிலக்கியங்களை வாசித்தமைக்கான தடையங்கள் அவரது விமர்சனத்தில் இல்லை. உலகு கொண்டாடிய பேரிலக்கியவாதிகளான தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, ஜாய்ஸ், தாமஸ் மன் போன்றவர்களைப்பற்றியெல்லாம் அவர் பொருட்படுத்தி ஏதும் எழுதவில்லை.

இந்தியப்பேரிலக்கியவாதிகளைக்கூட அவர் வாசித்தமைக்கு ஆதாரங்கள் இல்லை. தாராசங்கர் பானர்ஜி, மாணிக் பந்தியோபாத்யாய, சிவராம காரந்த் போன்றவர்களை அவர் அணுகி அறிந்திருக்கவில்லை. ஆகவேதான் மோகமுள் இந்தியாவின் மிகச்சிறந்த நாவல் என அவரால் எழுதமுடிந்தது.

ரசனை ரீதியாக அவருக்குச் செவ்வியல் பிடிகிடைக்கவில்லை. செவ்வியலின் நிதானமும் சமநிலையும் அவருக்குச் சலிப்பூட்டின. செவ்வியல்கலை என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே என்னும் எண்ணம் இருந்தது.கற்பனாவாதத்தையே அவர் இலக்கியமாகக் கொண்டார். நாட்டாரியலில் உள்ள கட்டற்ற வேகம் அவரைக் கவர்ந்தது.

வெங்கட் சாமிநாதன் ஒரு விமர்சகர். விவாதங்களை உருவாக்கியவர். அவரை முன்வைத்து விவாதங்களை முன்னெடுப்பதே மிகச்சிறநத அஞ்சலியாக அமையும். விமர்சன அணுகுமுறையே வெங்கட் சாமிநாதன் உருவாக்கிய சிற்றிதழ்சார்ந்த இலக்கியமரபு இதுவரை பேணி முன்னெடுத்த மனநிலையாகும். வெறும் கண்ணீரஞ்சலிகளுக்கு இங்கே இடமில்லை.

தமிழ் ஹிந்து வெளியிட்டது ஓர் அஞ்சலி. ஆங்கில இந்து வெளியிட்டது தமிழில் சாமிநாதன் எப்படிப் பார்க்கப்படுகிறார் என்னும் செய்தி. இரண்டுமே முக்கியமானவைதான்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அப்துல் ரகுமான் –பவள விழா

$
0
0

வானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன்

கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்.

தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக அமைந்த கவிஞர்களை வைத்து இச்சரடுகளை மதிப்பிட்டால் முதன்மையானது டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், எமிலி டிக்கன்ஸன் போன்றவர்களை முன்னோடிகளாகக் கண்ட மரபு. இவர்களுக்கு படிமவியல் முக்கியமான அழகியல்நோக்காக இருந்தது. க.நா.சுவும் செல்லப்பாவும் இதை முன்னெடுத்தனர்.

சி.மணி, பிரமிள்,தி.சொ.வேணுகோபாலன், நகுலன், சுந்தர ராமசாமி [பசுவய்யா] ஞானக்கூத்தன் தேவதச்சன் தேவதேவன் என நீளும் ஒரு கவிமரபு இது. செறிவான மொழி, வாசக இடைவெளிகள் மிகுந்த வடிவம், படிமங்கள் மூலம் எழுதப்பட்டவை இவை. எழுத்து, கசடதபற போன்ற சிற்றிதழ்களில் இது வலுவான இயக்கமாக ஆகியது.

இரண்டாவது கவிமரபை வால்ட் விட்மன், பாப்லோ நெரூதா , ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுந்தது என்று சொல்லலாம். உணர்ச்சிகரம், சொற்பெருக்கு, நேரடியான உரையாடல் அல்லது உரைநிகழ்த்தல் வடிவம், சொல்லணிகள் ஆகியவை கொண்ட கவிதைகள் இவை. வானம்பாடி என்னும் சிற்றிதழ் இக்கவிமரபை முன்னெடுத்தது. ஆகவே இவர்களை பொதுவாக வானம்பாடிகள் என்று சொல்கிறார்கள்

கங்கைகொண்டான், நா.காமராசன், மு.மேத்தா, சிற்பி,மீரா, ஈரோடு தமிழன்பன், புவியரசு போன்றவர்களை இம்மரபின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் என்று சொல்லலாம். கோவை ஞானி இவர்களின் கோட்பாட்டாளராக இருந்தார். இவர்களுடையது அரசியல் நோக்கம் கொண்ட கவிதை. சமூகக் கோபங்களையும் கவலைகளையும் நேரடியாக வெளிப்படுத்தியது. ஆகவே மக்களிடம் நேரடியாகப்பேச முயன்றது. எனவே இவற்றுக்கு ஒரு மேடைத்தன்மை உருவாகி வந்தது. ஆனால் தமிழில் இவர்களே அன்றைய புகழ்பெற்ற கவிஞர்கள்.

மூன்றாவது கவிமரபு ஒன்றை சொல்லலாம் என்றால் அப்துல் ரகுமானைக் குறிப்பிடலாம். ரூமி, கலீல் கிப்ரான் ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டது இது. வானம்பாடிக் கவிஞர்களில் இருந்த அரசியல், சமூகமாற்றம் சார்ந்த உள்ளடக்கத்துக்குப் பதில் மதம்சாராத ஓர் ஆன்மீகத்திற்கான தேடல் கொண்ட கவிதைகள் இவை. அப்துல் ரகுமானும் வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவராகவே பொதுவாகக் கருதப்படுகிறார்

அப்துல் ரகுமான் கவிதைகள் கஸல் போன்ற இசைப்பாடல்களின் வடிவத்தை உரைநடையில் அடைய முயல்பவை. ஆகவே நேரடியான நெகிழ்வையும் உணர்வெழுச்சிகளையும் கண்டடைதலின் பரவசத்தையும் அவை வெளிப்படுத்துகின்றன. தமிழில் எழுதப்பட்ட நவீன சூஃபி கவிதைகள் என அவரது கவிதைகளை பொதுவாக வரையறை செய்யலாம்.

தமிழ்ப்புதுக்கவிதை செயல்பட்ட இரு தளங்கள் ஒன்று எழுத்து பாணி கவிதைகளின் அந்தரங்க அலைச்சல்களும் அறிதல்களும். இன்னொன்று வானம்பாடிகளின் அரசியல் சமூகக் கவலைகளும் கோபங்களும். அப்துல் ரகுமான் முன்வைத்த சூஃபி மெய்ஞானம் சார்ந்த எழுச்சிகளுக்கு இங்கு வாசிப்புத்தளம் இருக்கவில்லை. ஆகவே அவரே ஜூனியர் விகடன் இதழில் பலவருடங்களுக்கு முன்பு தன் கவிதைகளின் அழகியல் – ஆன்மீகப் பின்புலத்தை விளக்கும்பொருட்டு தொடர்கட்டுரைகளை எழுதினார். அதில் அவர் சார்ந்துள்ள மரபின் முன்னோடிக் கவிஞர்களை அறிமுகம் செய்தார்

அப்துல்ரகுமான் கவிதைகளை இந்தத் தளத்தில் வைத்து விவாதிப்பதை நான் எங்கும் பார்த்ததில்லை. அவரது பவளவிழாவை ஒட்டி இது நிகழுமென்றால் நன்று. அவரை வழக்கமான அரசியல் வரிகளையோ அடுக்குமொழிகளையோ பொறுக்கி வைத்து வழக்கமான புகழ்மாலைகளில் குளிப்பாட்டாமலிருப்பார்களாக.

அப்துல் ரகுமான் கவிதைகளின் அழகியல் குறைபாடுகளாக நான் எண்ணுவன இரண்டு. ஒன்று, சூஃபி மெய்ஞானம் சார்ந்து முன்னரே கவிதைகளில் வெளிப்பட்டுள்ள அக எழுச்சிகளின் நகல்வடிவங்களே அவரில் வெளிப்படுகின்றன. அவை சூஃபி எழுதிய கவிதைகள் அல்ல, சூஃபி மெய்ஞானத்தைக் கற்றறிந்தவர் எழுதிய கவிதைகள்

சூஃபி மெய்ஞானம் நுண்மையானது, அருவமானது. அதைச் சொல்ல வெறுமே மொழியழகினால் மட்டுமே நிலைகொள்ளும் கவித்துவம் தேவை. பொருளின்மையைக்கூடச் சென்று தொடும் அழகாக அது இருக்கவேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களில் பல இடங்களில் எளிமையான சொல்லடுக்கில் அது நிகழ்கிறது

அப்துல் ரகுமானின் கவிமொழி அந்த உச்சத்தை நோக்கிச் செல்வதில்லை. அவர் வசனகவிதையை தேர்ந்தெடுத்தது சரியானதா என்னும் ஐயமே உருவாகிறது. அவர் இசைப்பாடல்களை, செய்யுட்களை எழுதியிருந்தால் அந்த ஓசைநயமும் இசையொழுங்கும் இணைந்து அது நிகழ்ந்திருக்கலாம். சூஃபி கவிதைகளை ஆங்கில மொழியாக்கம் வழியாக வாசிக்கையில் அவற்றின் அர்த்தம் மட்டும் வந்துசேர்கிறது. அந்த அர்த்தத்தின் தமிழ் வடிவங்களாக உள்ளன அவரது கவிதைகள்

தமிழில் ஒரு தனித்துவமான கவிதைவட்டத்தை உருவாக்க முடிந்தவர் அப்துல் ரகுமான். சூஃபி மெய்ஞானம் என்பது ஒரு நுட்பமான சமநிலை. இங்கிருக்கையிலேயே வானுடன் தொடர்புகொண்டுள்ள அமைதி. அதைத் தொட்டுக்காட்டும் பல வரிகளை அப்துல் ரகுமானில் காணலாம்.அதைப்பற்றிய ஒரு கவனம் இன்று தொடங்கட்டும்

பெரியவருக்கு என் வணக்கங்கள்

*



கதவு

அப்துல் ரகுமான்

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்

கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்

*
1

உதிரும் சிறகுகள்

அப்துல் ரகுமான்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம

காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து –

ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.


கவிக்கோ இணையதளம்

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 7

எப்போதுமே தாக்குதலில் வெறிகொள்ளும் கண்டர்கள் அன்று தங்கள் தரப்பின் இறப்புகளால் பித்துநிலையில் இருந்தனர். எல்லைமீறிய எதுவும் களியாட்டமாகவே வெளிப்படுகிறது. உரக்க நகைத்தும் படைக்கலங்களைத் தூக்கியபடி நடனமிட்டும் அவர்கள் அவ்வூர் முழுக்க சுற்றிவந்தனர். இல்லங்களின் அடித்தளங்களை உடைத்து, அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தவற்றை சூறையாடினர்.

திண்ணைகளில் கைவிடப்பட்டிருந்த நடக்கமுடியாத முதியவர்களின் தலைகளை துண்டித்து தூக்கிவீசி கால்களால் பந்தாடி கூச்சலிட்டனர். வெட்டுக்கழுத்துகளைத் தூக்கி செந்நீரை பிறர் மேல் பீய்ச்சியடித்து சிரித்தாடினர். வயிற்றைக் கிழித்து குடல்களை இழுத்து குதிரைக்கால்களில் சிக்கவைத்து தெருநீள இழுத்துச்சென்றனர். பின்னர் இல்லங்களை தீவைத்துக்கொளுத்தி புகைக்குள் துள்ளிக்குதித்து வெறியாட்டமாடினர்.

ரைவதகர் எண்ணியதுபோல அன்று பாலைக்காற்று வீசவில்லை. எனவே கண்டர்களில் ஒருவன் முட்புதர்மண்டிய பாலை மென்மணலில் குளம்புகளும் காலடிகளும் பதிந்துசென்ற திசையை கண்டடைந்தான். வாள்சுட்டி “இவ்வழியே சென்றுள்ளார்கள்” என்று அவன் கூற, வெறிக்குரல்களுடன் கண்டர்கள் அச்சுவடுப்பாதையை தொடர்ந்தனர். சற்று கடந்ததும் குளம்புகளும் காலடிகளும் தனித்தனியாக பிரிநது போவதை கண்டனர். புரவிகளை நிறுத்திவிட்டு கைகளில் விற்களும் வாள்களுமாக அக்காலடிகளை தொடர்ந்து சென்றனர்.

“ஆடுகளை பிறகு கொள்வோம். பெண்களையும் பின்னர் கொள்வோம். இப்போது தேவை வெங்குருதி” என்றான் தலைவன். “ஆம்! ஆம்!” என்று அவர்கள் கூச்சலிட்டனர். மலையடுக்குகளுக்கு அப்பால் ஒரு பெரிய பள்ளத்தில் ஆடுகள் பட்டியடித்து கட்டப்பட்டிருந்தன. அவை ஓசையிடாமலிருக்க அவற்றின் மேல் ஈரப்புழுதி பரப்பப்பட்டிருந்தது. அவர்கள் பாறைகள் செறிந்த குன்றின்மேல் ஏறிச்சென்றனர். மடம்புகளில் குழவியரை முலைமேல் அணைத்தபடி ஒண்டியிருந்த கஜ்ஜர்கள் காலடியோசைகளை கேட்டு நடுநடுங்கினர். குழந்தைகளை மார்போடு அணைத்து அமர்ந்திருந்த அன்னையர் அஞ்சி மூச்சு விடும் ஒலியே புற்றுக்குள் இருக்கும் அரவ ஒலியென கேட்டது. தேனடைகளை தேடிக் கண்டடையும் வேடர்கள்போல பாறைகளில் தாவித் தாவி அவர்களை கண்டடைந்தனர்.

சிறு பள்ளங்களில் ஒளிந்திருந்த அவர்களை கிழங்கு பிடுங்குவதுபோல் கொத்துக்களாக அள்ளி தூக்கி எடுத்தனர் கண்டர்கள். அன்னையர் இடையில் இருந்த குழந்தைகளை தலைமயிரைப் பற்றி இழுத்து வெளியே எடுத்தனர். கருவறைக்குள் இருந்து வருவதுபோல அழுதபடி வந்த குழந்தைகளைத் தூக்கி குறிகளை நோக்கினர். ஆண் குழந்தைகளைத் தூக்கி மேலே வீசி வாள்முனையில் விழச்செய்தனர். கால்சுழற்றி பாறைகளில் அறைந்து சிதறடித்தனர். தூக்கி உச்சிப்பாறைகளிலிருந்து கீழே இருந்த பாறைகள்மேல் வீசினர். பேறுக்கு வழியற்ற முதுபெண்டிரை கூந்தல் பற்றி இழுத்து தலைவெட்டி நின்றாடிய உடலை உதைத்துச் சரித்தனர். கூந்தலைப்பற்றி தலையைச் சுழற்றி தொலைவுக்கு விட்டெறிந்தனர்.

பெண் குழந்தைகளின் கைகளை பின்னால் சேர்த்து தோல்நாடாக்களால் கட்டி புரவிகளுக்கு இருபுறமும் தொங்கவிட்டனர். பெண்களை கூந்தல் பற்றி இழுத்துச் சென்று ஆடைகளைந்து வெட்டவெளியில் அங்கேயே உடல்நுகர்ந்தனர். தெய்வங்களை அழைத்து அவர்கள் அலறிய குரல் விண்ணில் பட்டு கசங்கியது. பாலைக்காற்று சிதறி மறைந்தது. அதன்பின்னர் ஆடுகளை அவிழ்த்து ஒன்றோடொன்று சேர்த்துக்கட்டி இழுத்தபடி புழுதித்தடம் நீள பாலையில் சென்று மறைந்தனர்.

மூன்றாவது நாள் விடியற்காலையில் காலைப்பனி பாறையில் பட்டு குளிர்ந்து துளித்து உதிர்ந்த நீர்த் துளிகள் முகத்தில் விழ ரைவதகர் தன்னுணர்வு பெற்றார். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தபின்பு அனல் சுட்டதுபோல் எழுந்து உடல் புரட்டி மேலெழ முயன்றார். தன் உடல் குருதிப்பசை ஒட்டி உலர்ந்த ஆடைகளுடன் இறுகியிருப்பதை அறிந்தார். உடலெங்கும் விடாய் எரிந்தது. முகத்தில் விழுந்த நீர்த்துளிக்கு வாய் காட்டி நீட்டிய நாவில் விழச்செய்து நக்கி நக்கி தொண்டையின் வறட்சியை போக்கினார். எளிய நீர்த்துளி கருந்திரிக்கு நெய் என உடலினுள் ஒடுங்கிய உயிரை தளிர்க்கச் செய்ததை உணர்ந்தார். குருதி உலர்ந்து பொருக்காய் இருந்த உடலில் சிற்றெறும்புகளும் வண்டுகளும் மொய்த்து அவர் அசைவில் எழுந்து பறந்து சுழன்றன.

அவர் விழுந்து கிடந்த பாறைப்பிளவின் மேல் விளிம்பில் இரு ஓநாய்கள் நின்று அவரைநோக்கி முனகி காலால் பாறையை பிராண்டியும் மெல்ல குரைத்தும் மூக்கு தாழ்த்தி நாநீட்டி வாய்விளிம்பை நக்கியும் தவித்தன. அவரது ஒரு கையும் காலும் செயலற்று இருந்தன. இன்னொரு கையை பாறை விளிம்பில் ஊன்றி மறுபாறையில் தோளை அழுத்தி கணுக்கணுவாக மேலே எழுந்து வந்தார். அவர் அசைவை அறிந்து அவரை நோக்கி உறுமி தலை தாழ்த்தி வால் நீட்டி பின்னடைந்தபின் பழுத்த விழிகளால் கூர்ந்து நோக்கி துணிவுகொண்டு மெல்ல மூக்கால் அணுகிய ஓநாயை பாராததுபோல் மேலே எழுந்தார்.

ஒரு ஓநாய் மேலும் துணிவுகொண்டு அவரை அணுகியது. மேலும் மேலும் அதை அணுக விட்டார். கையருகே திறந்த வாய்க்குள் வெண்பற்கள் வளைந்து தெரிந்தன. கடைவாயில் அரக்கு உருகியதுபோல உதடுகளின் பிசிறுகள் எச்சில் ஊறி சொட்டி வெளியே மலர்ந்திருந்தன. அதன் வாய் கையருகே வருவது வரை காத்திருந்துவிட்டு ஒரே கணத்தில் அம்பால் அதன் கண்ணை குத்தினார். கண்ணில் இறங்கிய அம்புடன் சில்லென்ற ஒலி எழுப்பி அலறி மறுபக்கம் பாய்ந்து பாறைச் சரிவுகளில் விழுந்து எழுந்து மீண்டும் அலறி ஓடியது ஓநாய். அதன் தோழியும் பின்னால் பாய்ந்து தொடர்ந்தது.

இரு ஓநாய்களும் வால் சுழற்றி ஊளையிட்டபடி ஓடுவதை கேட்டார். தலைசுழன்று கீழே விழுந்துகொண்டே இருப்பதுபோல உளமயக்கு ஏற்பட்டது. பற்களைக் கடித்து சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் தோளையும் கையையும் உந்தி மேலே வந்து புரண்டு படுத்து உருண்டு பெரிய பாறையின் மேல் ஏறி கையூன்றி எழுந்து கால்கள் தள்ளாட நின்றார். பின்னர் கண்களைத் திறந்து வானைநோக்கினார். முகிலற்ற நீலவானின் அமைதி அவரது உள்ளத்தை படியச்செய்தது. ஏனென்றிலாத மெல்லிய உவகையை உணர்ந்தார். அது உயிருடனிருப்பதன் இன்பம் என்று அறிந்தார்.

பாறைச் சரிவுகளில் சறுக்கி, கீழிறங்கி, செம்புழுதியில் கால்வைத்தார். தரைத்தளத்திற்கு வந்ததும் உடலின் எடை சற்று குறைந்ததுபோல் இருந்தது. புழுதியில் உடைந்து கிடந்த வில் ஒன்றைக் கண்டு அதை எடுத்து ஊன்றுகோலாக்கி, காலை இழுத்து புழுதியில் கோடு நீட்டியபடி நடந்து அவ்வூரை அடைந்தார். அங்கு ஓநாய்கள் கிழித்துக் குதறிய மனித உடல்கள் கிடந்தன. புழுதியில் இழுபட்டு துணிச்சுருள்கள் போல சிறுபூச்சிகள் ரீங்கரிக்க கிடந்த குடல்கள் காலில் சிக்கின. உருண்டு கிடந்த தலைகளில் விழிகள் வியந்தும் துயர்கொண்டும் அஞ்சியும் விழித்திருக்க தேய்ந்த கூழாங்கல்நிறப் பற்கள் சிரித்தன.

சாம்பல்குவைகளாக மாறியிருந்த இல்லங்கள் கொண்ட ஊரை கடந்துசென்ற பாதையில் குதிரைக் குளம்புகள் குதறிப் போட்டிருந்த பாலை மணலில் உலர்ந்த குருதித்துளிகள் கரிய பொருக்குகளென கிடந்தன. அங்கே கண்டர்கள் கொன்று வீசியிருந்த இளமைந்தர்கள் ஓநாயால் பாதி உண்ணப்பட்டு வானிலிருந்து விழுந்தவர்கள் போல புழுதி மண்ணில் சற்றே புதைந்து சிதறிக் கிடந்தனர். சிறு கால்களையும், தளிர்க்கைகளையும் மட்டும் பார்த்தபோது மென்மரவுரிச்சேக்கையில் அன்னை தாலாட்டுகேட்டு அவர்கள் துயில்வதுபோல தெரிந்தது. சிறிய ஈக்கள் பறந்து சுழன்று ரீங்கரித்து மொய்த்த விழிகள் உறைந்த தேன்துளிகள் போல் இருந்தன.

காற்று ஓசையுடன் வந்து எழுந்து ஊரைச்சூழ்ந்த பாறைகளால் சீவப்பட்டு கீற்றுகளாகக் கிழிபட்டு வெவ்வேறு திசைகளில் சுழன்று மாறி மாறி வீசியது. அவரது ஆடை முன்னும் பின்னுமாக எழுந்து பறந்தது. அங்கு நிகழ்ந்தவற்றை அவரது உள்ளம் முன்னரே உய்த்துக்கொண்டிருந்தமையால் அதிர்ச்சி ஏற்படவில்லை. சித்தம் கற்பாறையாலானது போலிருந்தது. ஆனால் தனியாகக்கிடந்த ஒரு சிறு கையில் வளையல்களைக் கண்டதும் அவருள் ஓர் உடைவு நிகழ்ந்தது. “தெய்வங்களே” என்று அங்கு அமர்ந்து ஓலமிட்டார்.

நெஞ்சில் அறைந்தபடி விலங்குபோல கூவினார். என்னசெய்கிறோம் என்றறியாமல் மண்ணை அள்ளி அள்ளி தன் தலைமேல் போட்டுக்கொண்டார். “தெய்வங்களே, இங்கு என் குடிகளின் நடுவே சிறுமை கொண்டு நிற்கின்றேன். விண்ணில் இருந்து நோக்கும் என் மூதாதையர் விழிகளுக்கு முன் கீழ்மைகொண்டு நிற்கின்றேன். இனி உயிர் வாழேன்” என்றார். வாளைத் தூக்கி தன் கழுத்தில் வைத்தவர் “இல்லை, மூத்தாரே உங்கள் உலகுக்கு வந்துசேர்கிறேன். உங்கள் காலடியில் விழுந்து பிழைபொறுக்க இரக்கிறேன்” என்றார்.

அங்கேயே கால்மடித்து ஊழ்க முறையில் அமர்ந்து, கைகளை மடியில் வைத்து கண்மூடி “கொள்க! இவ்வுயிர் கொள்க!” என்று சொல்லி தன் உளம் அடைத்து அமர்ந்தார். பாறைகளால் சிதறடிக்கப்பட்ட நூறு காற்றுகள் அவரைச் சூழ்ந்து அலையடித்தன. அக்காற்றுகள் அள்ளிப்பறக்கவிட்ட மென்மணல் அலையலையாக அவர் மேல் பொழிந்து தலையிலும் தோளிலும் வழிந்து மடியில் கொட்டிக்கொண்டிருந்தது.

மேற்குத் திசையை ஆளும் வாயுதேவனின் மைந்தர்களாகிய பதினெட்டு மருத்துக்கள் அக்காற்றுகள் வழியாக களியாடினர். ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளி, குழல் பற்றி இழுத்துத் தழுவி மண்ணில் புரண்டனர். விண்ணில் தாவி ஏறிச் சுழன்று அமைந்தனர். அவர்கள் கூவிக் களித்த ஓசை முட்கிளைகளில் பாம்புச்சீறலாகவும் பாறைப்பிளவுகளில் யானையின் உறுமலாகவும் இலைக்கற்றைகளில் சிறகடிப்புகள் போலவும் ஒலித்தது. செம்புழுதி மண்ணில் கிடந்த சடலங்கள் மேல் பொழிந்து ஆடையாக்கி புதுவடிவங்கள் சமைத்தது.

அவர்களில் இளம் குழவியாகிய மந்தன் என்னும் மருத்தன் தன் சிறு கால்களை வைத்து தவழ்ந்து ஓடி தமையன்களை பற்ற முனைந்தான். அவர்களின் கால்களின் நடுவே ஓடி அவற்றால் தட்டி வீழ்த்தப்பட்டு புரண்டு எழுந்து “நானும்! நானும்!” என்று கைநீட்டி கூவினான். மூத்தவர் ஆடலில் அவனுக்கு இடமே இருக்கவில்லை. “நான் விளையாடுவேன்! நான் விளையாடுவேன்” என்று அவன் கூவிக்கொணடு இருந்தான். “விலகு” என்று அவனை தள்ளிவிட்டு மீண்டும் ஓடினான் மூத்தவனாகிய பீஷ்மகன்.

மந்தன் பீஷ்மகனின் நீண்ட ஆடையை அள்ளி பற்றிக்கொண்டான். அவன் கையைப் பற்றி விலக்கி “போடா” என்று தள்ளிவிட்டு தமையன் ஓட புழுதியில் விழுந்து கையூன்றி எழுந்து “நான் புயலாக வந்து உன்னை கொல்வேன்!” என்றபடி அமர்ந்தான். “நாளைக்கு நான் வளர்ந்து பெரிய புயலாக ஆவேன்.” அவன் சினம் கொண்டு மண்ணை அள்ளி நான்குபக்கமும் தூற்றினான். அது அலையலையாக விழுவதைக் கண்டு நின்று நோக்கி மகிழ்ந்து “ஆடை” என்றபின் மீண்டும் அள்ளி வீசத்தொடங்கினான்.

மந்தன் தன்னருகே உருவான அழகிய செம்பட்டாடைகளின் மடிப்புகள் மேல் சுட்டு விரல் ஓட்டினான். அந்த மென்மையான ஏட்டுப்பரப்பில் தன் பெயரை எழுதி வைக்க முயன்றான். அப்போது அதன் உள்ளே அமைந்த புழுதி மெல்ல பறந்து அங்கு ஒரு சிறு குழி உருவாவதை கண்டான். ஆவலுற்று அக்குழியில் கைவைத்தபோது அக்குழியிலிருந்து மெல்லிய நீராவி காற்று ஒன்று எழுந்தது. வியந்து முகம் அணைத்து உதடுகுவித்து மெல்ல ஊதி அக்குழி மணணை விலக்க உள்ளே ஒரு முகம் எழுந்தது.

ஊழ்கத்தில் இருந்த ஒருவரின் மூச்சுக்காற்று என்று உணர்ந்தபோது மந்தன் வியந்து தன் சிறகுகளால் வீசி அப்புழுதி மூடலை விலக்கினான். உள்ளே அமர்ந்திருந்த அரசனை அறிந்து அவன் நெற்றிப்பொட்டில் கைவைத்து “விழித்தெழுக!” என்றான். விழிமலர்ந்த அவரிடம் “என் பெயர் மந்தன். நான் மாருதியின் மைந்தன். என்னால் பார்க்கப்படும் பேறு பெற்ற நீ யார்?” என்றான். “என் குடிகளைக் காக்க முடியாமலானபோது வடக்கிருந்து உயிர் துறக்கும் நோன்பு கொண்டுள்ளேன். நான் கஜ்ஜயந்தபுரியை ஆளும் அரசன் ரைவதகன்” என்றார் ரைவதகர்.

“உன் நகரோ, உன் குலமோ, உன் குடியோ அழிந்துபட்டதா?” என்றான் மந்தன். ரைவதகர் “என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் என் குலமே, என் குடியே” என்றார். “அவர்களை காக்கும்பொருட்டு மணிமுடி சூடி வாள் ஏந்தியவன் நான்.” கண்கலுழ்ந்து நெஞ்சு விம்மி “அதில் நான் தோற்றபின் உயிர் துறப்பதே முறை” என்றார்.  மந்தன் என்ன நிகழ்ந்தது என சுற்றிப் பார்த்தான். அப்பால் காவலருடைய சிறு வாள் ஒன்று விழுந்து கிடந்தது. அதைச்சுட்டிக்காட்டி “என் உடைவாள் அது. அது உன்னிடம் இருக்கட்டும். நீ விழைகையில் அதை மும்முறை வீசு. அது எழுப்பும் சீறல் ஒலி கேட்டால் அங்கு நான் எழுவேன். இனி இம்மண்ணில் உன் முன் எவரும் படைக்கலன் ஏந்தி நிற்கப்போவதில்லை” என்றான்.

ரைவதகர் தலைவணங்கி “நல்வாழ்த்து பெற்றேன். என் குடிசிறக்க உங்கள் அருள் என்றென்றும் இருக்கட்டும்” என்றார். விழி திறந்தபோது தனக்கு முன்னால் பெரியதொரு வாள் போல் விழுந்துகிடந்த காற்றின் அலைவடிவத்தை கண்டார். எழுந்து அது எவ்வண்ணம் உருவாகியது என்று சுற்றி நோக்கினார். கனவென்றோ, தொல்நினைவென்றோ நிகழ்ந்தவை நெஞ்சில் நின்றன. பெருமூச்சுடன் காலை இழுத்து நடந்து வேறொரு மலைக்கு வந்தார். அங்கிருந்து நோக்கியதும்தான் அது மாபெரும் வாள் வடிவம் என அறிந்தார். தன் கையிலிருந்த வாளை மெல்ல வீசியபோது அந்த மாபெரும் மணல்வாள் எழுந்து சுழல்வதைக் கண்டு விம்மியபடி நிலத்தில் அமர்ந்தார்.

அருகிலிருந்த கமனபதம் என்னும் ஆயர்குடியை அவர் அடைந்தார். அங்கிருந்து கஜ்ஜயந்தபுரிக்கு அவரை கொண்டுசென்றனர். உடல்நலம் கொண்டதும் அவர் பிறிதொருவர் என தோன்றினார். அவர் காற்றுவெளியுடன் பேசத்தொடங்கியதை குஜ்ஜர்கள் உணர்ந்தனர். அவருக்கு தேவர்கள் காட்சிகொடுப்பதாக எண்ணத்தலைப்பட்டனர். அவர் பேராற்றல் மிக்கவரென தோன்றினார். குன்றுகள் போல் பேருடல் கொண்டு மானுடரை குனிந்து நோக்கும் பார்வை விழிகளில் எழுந்திருந்தது.

எல்லையில் அமைந்த தவணம் என்னும் சிற்றூரில் மீண்டும் கண்டர்களின் தாக்குதல் நிகழக்கூடும் என்று ஒற்றர் செய்தி வந்தது. தனது சிறு படையுடன் அங்கு சென்று காத்திருந்தார் ரைவதகர். கண்டர்களை கவரும்பொருட்டு எல்லையில் கொழுத்த கன்றுகளை உலாவவிட்டனர். எட்டு நாள் கழித்து குன்றில் மேல் அமர்ந்து காத்திருந்த அவரது ஒற்றனின் கண்ணில் தொலைவில் செம்புழுதி பறக்கும் தாழ்வரையில் குதிரைப் படை ஒன்று நதிநீரோட்டமென வருவது தெரிந்தது. அவன் குறுமுழவை ஒலிக்க கஜ்ஜர்கள் விற்களுடன் எழுந்தனர். ஆனால் எவரிடமும் துணிவிருக்கவில்லை. மகளிர் கதறி அழுதபடி மைந்தரை அணைத்துக்கொண்டனர். அனைத்து விழிகளும் ரைவதகரை நோக்கின. அவரோ அங்கில்லாதவர் போலிருந்தார்.

தொலைவில் வந்து கொண்டிருந்த புரவிநிரை சொடுக்கப்பட்ட சாட்டை ஒன்றின் நெளிவைப்போல் தெரிந்தது. சாட்டையின் கைப்பிடியென வந்துகொண்டிருந்தது தலைவனின் கொடியேந்திய முதற்புரவி. முந்தைய தாக்குதலுக்குப் பிறகு மேலும் இருமடங்கு வீரர்களுடன் தாக்கும் வழக்கத்தை கண்டர்கள் கொண்டிருந்தனர். அத்துடன் படைமுகப்பில் இருபக்கமும் பக்கவாட்டிலும் பின்நோக்கியும் புரவியில் அமர்ந்து சூழலை உற்றுநோக்கும் கண்காணிப்பாளர்களையும் அமர்த்தியிருந்தனர். அவர்களின் படை பறவைகளைப்போல ஆறுதிசைகளிலும் நோக்கு கொண்டிருந்தது.

அப்படையின் எண்ணிக்கையைப் பார்த்ததும் கஜ்ஜர்கள் அஞ்சி உடல் குறுக்கினர். அத்தனை விழிகளும் ரைவதகரையே நோக்கின. கண்மூடி நெற்றிப்பொட்டில் சித்தம் குவித்து நின்று “மந்தனே, இங்கு எழுந்தருள்க!” என்றார். இடையிலிருந்து அவன் அளித்த வாளை உருவி நீட்டினார். எதிரே இருந்த பாறையிலிருந்து புழுதியும் சருகும் எழுந்து அவர் மேல் பொழிந்தன. குழந்தைச் சிரிப்பொலியுடன் அவரைச் சூழ்ந்த மந்தன் “வந்துவிட்டேன்” என்றான். “என் குலத்தை காத்தருள்க!” என்றார். “உன் வாளில் நான் எழுகிறேன்” என்றான் மந்தன்.

“ஆம், ஆணை” என்றார் ரைவதகர். விழி திறந்தபோது செம்மண் குன்று ஒன்றின் மேலிருந்து அலையாக புழுதிக்காற்று இறங்கி வந்து படிவதை கண்டார். நெடுந்தூரம் வாளென வளைந்து கிடந்தது அது. தன் கையிலிருந்த குறுவாளை அவர் அசைத்தபோது அதுவும் அசைந்தது. தன் படைகளை நோக்கி. “அங்கு செல்வோம்” என்றார். “நாம் தப்பி ஓடுகிறோமா அரசே?” என்றார் படைத்தலைவர். “ஒரு முறை ஓடினால் பின் எங்கும் நிற்க இயலாது. இவர்கள் கஜ்ஜயந்தகக் குன்று வரை வந்துவிடுவார்கள்.”

ரைவதகர் “இல்லை, இன்று நான் இளமருத்தனின் வாளால் போரிடப்போகிறேன்” என்றார். வியந்து நின்ற படைகளிடம் தன்னை பின்தொடரும்படி கை வீசிவிட்டு, ரைவதகர் தன் புரவியில் ஏறி அந்தச் செம்புழுதி வாளின் விளிம்பு வழியாக புரவியில் விரைந்து சென்றார். மண்ணில் ஒரு மலர்மலைபோல் விழுந்த அவரது புரவிச்சுவடை நோக்கி தயங்கிவிட்டு, பின் அங்கிருந்து அவரைத் தொடர்ந்தார்கள். அவர்கள் அம்மண்மேட்டைக் கடந்து மறுபக்கம் சென்று, அங்கிருந்த உதிரிப் பாறைகளுக்கு அப்பால் மறைந்தனர்.

அவர்கள் இருந்த இடத்திற்கு மேல் பாறைகள் செறிந்த சரிவில் எழுந்த கண்டர்கள் அப்பாதச் சுவடுகளைக் கண்டு உரக்க நகைத்தபடி நின்றனர். அவர்களின் தலைவன் கை சுட்டி “அவர்களின் புரவிகளை உயிருடன் பிடியுங்கள். ஒரு தலைகூட கழுத்தில் நிற்கலாகாது” என்றபடி தன் புரவியைத் தட்டி தங்கள் குலக்கொடி பறக்க குன்றின் மணல்சரிவில் இறங்கி அச்சுவடுகளை தொடர்ந்தான். அவன் படையினர் அவனை தொடர்ந்தனர். இடியை எதிரொலிக்கும் முகில்குவைகளாயின மலைப்பாறைகள். அவர்களைச் சூழ்ந்திருந்த பாறைகளின் உச்சியில் இருந்து புழுதிகளும் சருகுகளும் பறந்து அவர்கள் மேல் விழுந்தன. அந்த செம்மண் வளைவை அவர்கள் கடப்பதற்குள் கடலில் எழுந்த பேரலைபோல் மணல்வரி வளைந்து எழுந்தது. அவர்கள் திரும்பி நோக்குவதற்குள் செம்முகில்போல் அவர்களை முற்றிலும் மூடி சூழ்ந்துகொண்டது. விழி இழந்து கடிவாளத்தை இழுத்து ஒருவரோடு ஒருவர் முட்டி கூச்சலிட்டபடி அவர்கள் சுழன்றனர்.

பெரும் சுழிபோல் அவர்களை சுற்றிச் சூழ்ந்து அலைக்கழித்தது புழுதிப் புயல். மூச்சடைத்து குதிரைகளின் கழுத்தில் முகம் புதைத்து அமர்ந்திருந்தனர். மேலும் மேலும் என புழுதி எழுந்துகொண்டே இருந்தது. அவர்கள் ஒருவரோடொருவர் முட்டி நிலையழிந்து மண்ணில் விழ புரவிகள் கனைத்தபடி அவர்களை மிதித்துத் துவைத்தன. தொலைவில் இருந்து ரைவதகர் தன் குறுவாளை சுழற்றிக்கொண்டிருந்தார். செம்புழுதிச் சுழலுக்குள் மின்னிய வாள் மின்னல்களையும், புரவி வால்களின் நெளிவையும் கண்டார். ஒன்றுடன் ஓன்று கலந்து ஒலித்த அலறல்களையும் உலோகமுட்டல்களையும் கேட்டார்.

“கொல்லுங்கள்” என்றபடி பாறையில் வில்லுடன் எழுந்து அப்புழுதிப் படலத்தை நோக்கி அம்புகளை எய்தார். இலக்கின்றி அவர்கள் விட்ட அம்புகள் அனைத்தும் பார்வையின்றி தவித்த கண்டர்களை தாக்கின. ஆரவாரங்கள் அனைத்தும் ஒழியும்வரை அவர்கள் அம்பெய்து கொண்டே இருந்தனர். பின்னர் செம்புழுதிச் சுழி உச்சி குவிந்து கூர்மைகொண்டது. குடுமிபோல் ஆகி வானில் எழுந்து அலைக்கழிந்து வடமேற்கு நோக்கி சரிந்து இழுபட்டு மறைந்தது. அதன் அகன்ற கீழ்வட்டம் மண்ணிலிருந்து எழுந்து வலைபோல வானில் தெரிந்து மெல்ல மறைந்தது.

செந்நிற இறகுகள் கொண்ட மாபெரும் கழுகுபோல் அப்புழுதிக் கூம்பு வானில் எழுந்து செம்மணல் பரப்பில் முகில்நிழல் போல் கறைபடியச் செய்தபடி சென்று மறைந்தது. நெடுந்தொலைவில் வளைந்து கீழ் இறங்கி அங்கு இருந்த முட்புதர் காட்டில் புழுதி மழையென பொழிந்து பரவி இலைகளை செம்மண் சில்லுகளென மாற்றியது. பாறைகளை செம்மண் திரையால் மூடியது. புதர்களை மூடிய செந்திரைக்குள் இருந்து கூர்முட்கள் வெளிவந்து சிலிர்த்தன. செம்புழுதி படிந்த சிறகுகளை உலைத்து எழுந்த பறவைகள் விடிகாலை என எண்ணி காற்றில் சுழன்று கூச்சலிட்டன.

அவர்கள் எச்சரிக்கையுடன் வில்லேந்தியபடி சென்று நோக்கினர். முற்றிலும் செம்புழுதித் திரையால் மூடப்பட்டிருந்த தரையில் ஒருவர்கூட எஞ்சாமல் அத்தனை கண்டர்களும் அம்பு பட்டு விழுந்துகிடந்தனர். புழுதிப் போர்வையை இழுத்துத் தள்ளி கால்களை உதைத்து துடித்தன புரவிகள். எச்சரிக்கையுடன் கைகளில் அம்புகளும் வாள்களும் ஏந்தி மெல்ல அணி சூழ்ந்தனர் குஜ்ஜர்கள். “ஒருவர்கூட எஞ்சவில்லை” என்றார் படைத்தலைவர். “ஒற்றைக்கையால் பாலைநிலம் அவர்களை நசுக்கி அழித்துவிட்டது.” ஒரு முதியவீரன் நடுங்கும் குரலில் “நம் அன்னை இந்நிலம். இக்காற்று நம் மூதாதையர்” என்றான்.

“என்ன நிகழ்ந்தது அரசே?” என்றார் குடித்தலைவர். “இப்பாலையின் தெய்வமான கைக்குழந்தை ஒன்றால் விளையாட்டுப் பாவையென ஆடப்பட்டு அழிந்தனர் இவர்கள்” என்றார் ரைவதகர். படைத்தலைவர் விழுந்துகிடந்த கண்டன் ஒருவனின் தலையை ஓங்கி உதைத்தார். “வேண்டாம். இவர்கள் எளிய மானுடர்கள். பசித்து வரும் ஓநாய்களும் உயிர் கொடுக்கும் ஆடும் இப்பெருங்களத்தில் இரு காய்கள் மட்டுமே” என்றார் ரைவதகர். செம்புழுதியில் குருதி ஊறிப்பரவி நனைந்த தடங்கள் தெரியத் தொடங்கின. முனகலுடன் துடித்துக் கொண்டிருந்த கண்டர்கள் ஒவ்வொருவராக மூச்செறிந்து உயிர் துறந்து சிலைத்தனர்.

“தாங்கள் அடைந்தது என்ன?” என்றார் படைத்தலைவர். “இப்பெரும் பாலையை ஆளும் மருத்தன் எனக்களித்த வாள் இது” என்றார் ரைவதகர். தன் வாளைத்தூக்கி “இனி எம்மை வெல்ல எவருமில்லை இப்புவியில்” என்றார். திகைத்து நோக்கி நின்ற படைவீரர் ஒரே தருணத்தில் குரலெழுப்பி “குஜ்ஜர்குலம் வாழ்க! கஜ்ஜயந்தம் வாழ்க!” என கூச்சலிட்டனர்.

தொடர்புடைய பதிவுகள்

வெங்கட் சாமிநாதனும் சிற்றிதழ் மரபும்

$
0
0

vesa-closeup-004

அன்புள்ள ஜெ,

வாசக விடலை ஒருவர் [சிவராமன்] எழுதியிருக்கும் கடிதத்தை ஒரு சிறு எதிர்வினை கூட இல்லாமல் நீங்கள் வெளியிட்டிருப்பது ஏமாற்றமும் வருத்தமும் வேதனையும் அளிக்கிறது – பொதுவாக இது உங்களது பாணி அல்ல என்று நான் கருதுவதால்.

.”நண்பர்கள் சொன்னார்கள்” என்பது என்ன வகையான கருத்து? இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி கடிதம் எழுதும் ஆள், இணையத்தில் கொஞ்சம் தேடினாலே வெ.சா எங்கெங்கு என்ன எழுதியிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்குமே.. வெ.சா சொல்வனம், திண்ணை, தமிழ்ஹிந்து, வல்லமை, தமிழ்ஸ்டுடியோ, சிஃபி.காம் எனப் பற்பல இணைய தளங்களில் தன் வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அதுபோக, மின்தமிழ் போன்ற கூகிள் குழுமங்களிலும். 80 வயதுக்கு மேல் தள்ளாத முதுமையிலும் தொழில்நுட்பம் தரும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி உரையாடல்களில் ஈடுபட்டு வந்தவர் அவர்.

இதில் கணிசமான தளங்கள், சாதாரணமான பொழுதுபோக்கு, வணிக எழுத்துக்கள் உட்பட சகல விதமானவற்றையும் எந்த பாகுபாடும் இன்றி பதிப்பித்து வருபவை – இவற்றுக்கு நடுவில் தான் அவரது கட்டுரைகளும் வந்தன. உண்மையில், இதில் “இந்துத்துவ தளங்கள்” என்ற கறாரான அடைமொழிக்கு தமிழ்ஹிந்து மட்டுமே பொருந்தும்.. சரி, இருக்கட்டும். அப்போதும் ஒரு உண்மையான வாசகன் வெ.சா அங்கு என்ன எழுதியிருக்கிறார் என்று அல்லவா பார்க்க வேண்டும்?

தி ஜானகிராமனுடன் வெ சா

அந்த தளத்தில் எழுதினார் என்பதை வைத்து “தனிப்பட்ட ரசனை சார்ந்து வரவேண்டுமே ஒழிய ஏதாவது அமைப்பின் குரலாக இருக்கக்கூடாது” என்று பொத்தாம் பொதுவாகப் பேசுவது எந்த மாதிரியான வாசக அறம்? இத்தகைய மனநிலை ஒரு உண்மையான இலக்கிய வாசகனுக்கு உகந்ததா என்ன? காலச்சுவடு பதிப்பதுக்கும் நடுநிலைக்கும் உள்ள தூரம் நன்கறிந்தது. அதைவைத்து அவர்கள் வெளியிட்ட சித்திர பாரதி, ஒரு புளியமரத்தின் கதை, பொய்த்தேவு, வாசவேஸ்வரம் போன்ற நூல்களையெல்லாம் தவிர்ப்பேன் என்பது போல இது.

செல்லப்பாவுடன் வெ சா

இதோ வெ.சா தமிழ்ஹிந்து தளத்தில் எழுதிய கட்டுரைகள் – http://www.tamilhindu.com/author/vesa/ “தலித்துகளும் தமிழ் இலக்கியமும்” உட்பட பல முக்கியமான கட்டுரைகள் உள்ளது. இதில் எந்தக் கட்டுரையில் எந்த சித்தாந்தத்தின் அமைப்பின் குரல் ஒலிக்கிறது என்று அந்த வாசகர் கண்டுபிடிக்கட்டும். வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதிய சே.ராமானுஜம் பற்றிய கட்டுரையும் இதில் உள்ளது.

தமிழின் மகத்தான கலை இலக்கிய மேதை, விமர்சன பிதாமகர் வெ.சா. அவரது மறைவின் பின்னணியில், அநியாயமாக அவரை முத்திரை குத்தும் அவசரம் அந்தக் கடிதத்தில் தெரிகிறது. இது அருவருப்பானது, கண்டனத்திற்குரியது. அதை விட அதிக வருத்தம் எதுவும் சொல்லாமல் மௌனமாக அதை நீங்கள் வெளியிட்டது.

அன்புடன்,

ஜடாயு

1
அன்புள்ள ஜடாயு

அக்கடிதத்திற்கு நான் எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. வாசகர்கடிதங்கள் அனைத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதுமில்லை. என் தரப்பை தெளிவாகவே எழுதியிருக்கிறேன். வெங்கட் சாமிநாதனை முற்றாக வாசித்து புரிந்துகொண்டு விவாதித்து மதிப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை எல்லாவகையான எதிர்வினைகளுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆகவே அக்கடிதத்தை வெளியிட்டேன்.

எதிர்வினை ஆற்றவேண்டியது உங்கள் கடிதத்திற்குத்தான். வெங்கட் சாமிநாதன் தமிழின் சிற்றிதழ் மரபில் வந்தவர். கறாரான விமர்சனம் வழியாகவே உருவாகி வந்தது அம்மரபு. விமர்சனம் இல்லாமல் அது நீடிக்கவும் முடியாது. விமர்சனம் என்பது எத்தனை மூர்க்கமாக நிகழ்ந்தாலும்சரி அது உண்மையில் எதிர்தரப்பை நிராகரிப்பதில்லை. எதிர்தரப்பை உள்ளிழுத்துச் செழுமைகொள்ளவே செய்கிறது

நா வானமாமலை

நா வானமாமலை

நான் எழுதிய அனைத்து அஞ்சலிக் கட்டுரைகளிலும் அந்த ஆளுமையை மிகக்கறாராக மதிப்பிடவே முயன்றிருக்கிறேன். சுந்தர ராமசாமி, கமலா தாஸ் முதல் ஜெயகாந்தன் வரை. அவர்களின் சாதனைகளையும் சரிவுகளையும் என் நோக்கில் முன்வைத்துத்தான் அஞ்சலிக்கட்டுரையை எழுதுவேன்.

ஏனென்றால் எழுத்தாளன் இறந்ததும் அவனுடைய ஒட்டுமொத்த எழுத்துக்களும் இணைந்து ஒற்றைபிரதியாக ஆகிவிடுகின்றன. அவனை முழுமையாக அணுகுவதற்கான தொடக்கப்புள்ளி அது. எழுத்தாளன் இறந்ததும் பிறரைப்போல இரங்கல்குறிப்புகளுடன் வரலாற்றுக்கு அனுப்பப்படுவதில்லை. மறுபரிசீலனைக்கே ஆளாகிறான்.

[வேதசகாயகுமார்]

பலசமயம் பொதுவாசகர் இந்த கறாரான மதிப்பீடுகளைப்பற்றி அதிர்ச்சியோ வருத்தமோ அடைகிறார்கள். ஒருவர் இறந்ததும் அவரை உணர்ச்சிகரமாக ஏத்துவது நம் மரபு. அவரை அடைமொழிகளுடன் புகழ்வது, அவர் இழப்பை பெரிதாக்குவது , அவருடனான தனிப்பட்ட உறவையும் துயரையும் விதந்துசொல்வது வழக்கம்

சிற்றிதழ்கள் வழியாக உருவாகி வந்துள்ள நவீன இலக்கியத்தில் இம்மனநிலைகளுக்கு இடமில்லை. சுந்தர ராமசாமி க.நா.சு குறித்து எழுதியதையோ அல்லது நான் சுந்தர ராமசாமி பற்றி எழுதியதையோ நீங்கள் பார்க்கலாம்

[சிவத்தம்பி]

தமிழின் மகத்தான கலை இலக்கிய மேதை என்றெல்லாம் வெங்கட் சாமிநாதனை அடையாளப்படுத்தி நீங்கள் எடுக்கும் நிலைபாடுகள் சிற்றிதழ்மனநிலையைச் சேர்ந்தவை அல்ல. அத்தகைய உணர்வுநிலைகள் விவாதங்களை மறுப்பவை. மறுதரப்பே ஒலிக்காத முழுமையான புகழ்மாலைகள் வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகருக்கு எழுவதும் சாத்தியமல்ல

உங்கள் ஆவேச நிலைபாடுகள்தான் ஒரு குறிப்பிட்ட கருத்துத் தரப்பின் குரலாக அவரை ஆக்கி உணர்ச்சிகரமாகத் தூக்கிப்பிடிக்கும் தன்மை கொண்டவை. எதிர்தரப்புகளை விடலை என எளிதாக முத்திரைகுத்தக்கூடியவை. வெங்கட் சாமிநாதனை அவரது சாதனைகளை மிக எளிதாக மறைத்து ஓர் எளிய தரப்பாக மாற்றுபவை இவைதான்.

கைலாசபதி

கைலாசபதி

எழுதவந்த காலம் முதல் சாமிநாதனின் கருத்துக்களுக்கு மிகமிக வலுவான எதிர்ப்புக்குரல் இருந்துள்ளது. அந்தத் தரப்பு சிற்றிதழ்ச்சூழலில் மிக முக்கியமானது. பொதுவாக இத்தகைய கருத்துக்களை அவற்றின் மறுதரப்பையும் சேர்த்து ஒரு விவாதமாகப்புரிந்துகொள்வதே உகந்தது. இதை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்

நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். கைலாசபதி,சிவத்தம்பி, நா.வானமாமலை, நிர்மலா நித்யானந்தம், தோத்தாத்ரி, பிரமிள், எம்.ஏ.நுஃமான் என நீளும் ஒரு பெரிய மறுதரப்பே உண்டு. வெங்கட் சாமிநாதனின் தரப்பு எத்தனை முக்கியமானதோ அதற்கிணையானது அந்த எதிர்தரப்பு. சாமிநாதனின் தரப்பையே நான் சார்ந்திருக்கிறேன், அதற்காக இத்தனை ஆண்டுகளாக பேசிவந்திருக்கிறேன். ஆனால் மறுதரப்பை எப்போதும் எதிர்முகமாகச் சார்ந்தும் இருக்கிறேன்

நுஃமான்

நுஃமான்

அந்த மறுதரப்பையும் சேர்த்தே சாமிநாதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதை என் விமர்சனக்கட்டுரைகள் அனைத்திலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆகவே அவரைப்பற்றி எழும் ஐயங்கள் நிராகரிப்புகள் எல்லாமே முக்கியமானவை. அருவருப்பு கண்டனம் அல்ல அதன் வழி. விவாதம் மட்டுமே. நான் எவரையும் எதையும் வாதிட்டுத் தூக்கி நிறுத்தும் பொறுப்பு உடையவன் அல்ல. முடிந்தவரை கறாராக வரையறுத்துப் புரிந்துகொள்ளவே முயல்கிறேன்.

வெங்கட் சாமிநாதனை நிராகரித்த வேதசகாய குமார் போன்றவர்கள் அவரிடம் வந்திருக்கிறார்கள். அவரை ஏற்றுக்கொண்ட ராஜ் கௌதமன் போன்றவர்கள் முழுநிராகரிப்பை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். இந்த உலகின் விவாதம் சார்ந்த அறிதல்முறை இது. உங்கள் உணர்வுநிலைகளுக்கு இதில் பங்கில்லை. ஆகவே தயவுசெய்து கொஞ்சம் விலகியிருங்கள். அவ்வளவே நான் சொல்வதற்கிருக்கிறது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

குறைத்துரைத்தலின் அழகியல்

$
0
0

1

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய இக்குறிப்பை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இது ஒரு சிறுகதைபோல உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அ.மார்க்ஸின் தமிழ்நடை எனக்குப் பிடித்தமானது. இதையும் மிகச்சுருக்கமாக, மிகையுணர்ச்சிகள் விளையாமல் எழுதியிருக்கிறார்.

மினிமலிசம் [குறைத்துரைத்தல்முறை] இத்தகைய தீவிரமான உண்மைநிகழ்வுகளுக்குத்தான் பொருத்தமானது. ஏனென்றால் நிகழ்வுகளின் அடுக்குகளுக்குள் உண்மையான அனல் உள்ளது.

இந்த உண்மை நிகழ்வில் அந்தக்குடும்பம் கொண்டுள்ள ஒரு தலைமுறைக்காலம் முழுக்க நீண்டுவரும் தேடல், அவ்விளைஞருக்கு என்ன ஆகியிருக்கும் என்னும் ஊகம். அவ்வுணர்வுகளை தாங்கும் மறுமுனையாக உள்ள அ.மார்க்ஸ் ஆகிய எல்லா தரப்புகளிலுமே நெடுந்தூரம் செல்ல வழிகள் உள்ளுறைந்துள்ளன.

இத்தகைய உண்மையான அனுபவங்கள், தீவிரமான அனுபவங்களை குறைத்துரைத்தல் முறைப்படி எழுதும்போதே ஆழமான உணர்வுநிலைகள் உருவாகின்றன. அன்றாடநிகழ்வுகள், உணர்வுச்செறிவற்ற நிகழ்வுகள் ஒருபோதும் குறைத்துரைத்தல் முறைப்படி எழுதப்படலாகாது.

சமீபகாலமாக ஃபேஸ்புக் வந்தபின் சரசரவென்று எதையாவது குறித்திடும் எழுத்துமுறை அனைவருக்கும் கைவந்துள்ளது . அப்படியே நீட்டி கதையோ நாவலோ ஆக்கிவிடுகிறார்கள். அத்தகைய எழுத்துக்கள்தான் தட்டையாக உள்ளன. நுண்சித்தரிப்பாக அமையாமல், நிகர்வாழ்வனுபவத்தை அளிக்காமல் சலிப்பூட்டுகின்றன.

குறைத்துரைத்தல்முறை என்பது எத்தனை கூறினாலும் குறையாத உணர்வுகள் செறிந்த அனுபவங்களுக்கு மட்டுமே உரியது. அதாவது அது நீரல்ல, அனல். அள்ள அள்ளக் குறையாது கூடும் தன்மை கொண்டது

1

நானும் அவரும்: ஒரு அற்புத அனுபவம்” அ.மார்க்ஸ்

சுமார் ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். ஆனந்த விகடனில் எனது விரிவான நேர்காணல் ஒன்று வெளிவந்திருந்தது. படங்களுடன். எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள் குறித்த ரொம்பவும் ரொமாண்டிக்கான நேர்காணல் அது. நான் சொன்னதைக் காட்டிலும் ரொமாண்டிக்காக அதைச் செய்திருந்தனர் நண்பர்கள் அருள் எழிலனும் தளவாய் சுந்தரமும்.

இரண்டு நாட்களுக்குப் பின் எனது இயற்பியல் துறைத்தலைவர் டாக்டர் பாண்டி என்னைச் சந்தித்தபோது, “சார் உங்களைப் பத்தி யாரோ ஒருவர் கரூரிலிருந்து ரொம்ப விசாரிச்சாங்க. துருவித் துருவி விசாரிச்சாங்க” என்றார். நான் அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் இருந்தேன்.

நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாராவது உளவுத் துறையினராக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் விசாரித்த பெண்மணி என் பிறந்த தேதி, மதம் முதலான விவரங்களை எல்லாம் விசாாித்தார்கள் என்பது வியப்பாக இருந்தது. சிலநாட்களுக்குப் பின் தளவாயைச் சந்தித்தபோது அவரும் இப்படிச் சொன்னார். யாரோ கரூரிலிருந்து ஆனந்தவிகடன் ஆபீசுக்குப் போன் செய்து என் விவரங்கள், போன் நம்பர், கல்லூரி, துறை எல்லாம் கேட்டதாகச் சொன்னார்.

சில நாட்களுக்குப் பின் அந்தப் பெண்மணியே என்னிடம் பேசினார். மிக்க மரியாதையுடன் அந்த நேர்காணல் குறித்துப் பேசியவர் கொஞ்சம் கொஞ்சமாக நான் பி றந்த ஊர், என் குடும்பம், நான் படித்த பள்ளி, என் உடன் பிறப்புகள் குறித்தெல்லாம் விசாரித்து முடித்தார். நானும் பொறுமையாக எல்லாவற்றையும் சொன்னேன்.

பிறகு அவர் அடிக்கடிப் பேசுவார். பேச்சு முதலில் அப்போது வெளிவந்த எனது கட்டுரையில் தொடங்கி இறுதியில் சொந்த விசாரிப்புகளில் முடியும் அல்லது பொதுவாக நக்சல்பாரி இயக்கம் தொடர்பான உசாவலாகத் தொடங்கி என்னைப் பற்றிய விசாரிப்புகளாக முடியும்.

ஒருமுறை நான் ஒரு பத்து நாட்கள் ஏதோ ஒரு வெளிநாட்டுக்குச் சென்றிருந்தேன். என் செல் போன் இணைப்பு நிறுத்தப்பட்டிருந்தது. நான் போகுமுன் அந்தக் குடும்பத்தாரிடம் சொல்லிச் செல்லவில்லை. அப்போது நான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.ஊருக்குத் திரும்பியவுடன்தான் அறிந்தேன். அவர்கள் பதறிப்போய் பலருக்கும் போன் செய்து விசாரிக்க முனைந்திருக்கின்றனர், நான் ஓய்வு பெற்றுவிட்டதால் எனது துறைத் தலைவர் பாண்டியாலும் விவரம் சொல்ல இயலவில்லை. பிறகு கல்லூரியில் எனது நண்பராக இருந்த முனைவர் மணிவண்ணனிடம் எல்லாம் விசாரித்துள்ளனர். கேள்விப்பட்ட நான், பிறகு தொடர்பு கொண்டு என் பயண விவரங்களைச் சொன்னேன்.

அதன்பின் எங்கு சென்றாலும் அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வேன்.

இந்தப் பின்னணியில்தான் ஒரு நாள் நாமக்கல் மாவட்டம் கந்தசாமிக் கண்டர் கல்லூரிக்கு ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றேன். அதைத் தெரிந்த அந்தப் பெண்மணி அவரது சகோதரர்கள் இருவரை அங்கு அனுப்பியிருந்தார். அவர்கள் வந்து என்னை வேலாயுதம்பாளையத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் அங்கு கூடி இருந்தனர். சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தபோதுதான் அந்தப் பாசமிகு குடும்பத்தின் தேடுதலின் பின்னணியிலிருந்த சோகக் கதை விளங்கியது.

1951 ஜனவரியில் பிறந்தவர் தோழர் அ. ருக்மாங்கதன். பள்ளியில் படிக்கும்போது முதல் மாணவர். மாணவர் சங்கத் தலைவர். சிறந்த பேச்சாளர். ஸ்போர்ட்ஸ்மன். பள்ளிப் பிரச்சினைகளில் மாணவர்களைத் திரட்டிப் போராடுபவர். அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்த, மதிக்கப்பட்ட இளைஞர்.

1968ல் திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியில் பி.யூ.சி முடித்துள்ளார். பின் கோவை சி.ஐ.டி கல்லூரியில் கெமிகல் எஞ்சினீரிங் படித்துக் கொண்டிருந்தபோது அன்று பெரும் நம்பிக்கைகளுடன் மேலெழுந்து வந்த நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 1972. பி.ஈ இறுதி ஆண்டு படிக்கும் போது அவர் தலைமறைவானார்.

அதற்குப்பின் இந்த 43 ஆண்டுகளில் அவர் பற்றி அந்தக் குடும்பத்துக்கு இன்றுவரை ஏதும் தெரியாது.

ஒருமுறை ஒரு பேருந்தில் ஏறும்போது அவரது அப்பா அவரைப் பார்த்துவிட்டு “ருக்மாங்கதா” எனப் பதறிக் கூவியவுடன் திரும்பிப் பார்த்த அவர் நகர்ந்த பஸ்சிலிருந்து குதித்து ஓடி விட்டதாகச் சொல்கிறார்கள்.

தோழர் ருக்மாங்கதனுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். அவர்களில் இளையவர்தான் படத்தில் என்னருகே வெள்ளை உடையில் அமர்ந்திருப்பவர். மூத்த சகோதரிக்கு வாசுகி என ஒரு மகள். கார்த்திகேயன் என்றொரு மகன். வாசுகிதான் என்னைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தவர். என்னிடம் தொடர்ந்து பேசியவர். இரண்டாவது சகோதரிக்கு இரண்டு மகன்கள், பார்த்திபன் மற்றும் குகன்.

தோழர் ருக்மாங்கதன் 1951 தொடக்கத்தில் பிறந்தவர். நான் 1949 இறுதியில் பிறந்தவன். கிட்டத்தட்ட சம வயது. மூன்றாண்டுகளுக்கு முன் நான் இரண்டாம் முறை அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது ருக்மாங்கதனின் புகைப்படம் ஒன்றைக் காட்டினார்கள். கருப்பு வெள்ளைப் புகைப்படம். அப்போது அவருக்கு வயது சுமார் 20 வயது. அந்த வயதில் நானும் அப்படித்தான், அவரைப் போலத்தான் இருந்தேன்.

நான் அவரில்லை என அவர்களை முழுமையாக அறிய வைப்பதற்கு ரொம்ப நாளாகியது.

இப்போது அவர்கள் அதை உணர்ந்து விட்டனர். இருந்தாலும் அவர்கள் என்னில் அவர்களின் ருக்மாங்கதனைக் காண விரும்புகின்றனர்.

ஆகா, நான் பாக்கியம் செய்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ருக்மாங்கதன் அளவிற்கு எனக்குத் தகுதியில்லை அம்மா என மனதுக்குள் சொல்லிக் கொள்வேன்.

ஒருமுறை பார்த்திபன் போன் செய்தார். பேசியவர் அம்மாவிடம் பேசுங்கள் என போனைக் கொடுத்தார். “அம்மா, எப்டி இருக்கீங்க?” எனப் பேச்சைத் தொடங்கினேன். “அக்கான்னு சொல்லுப்பா..” என்றார்கள். “அக்கா..” என்றபோது என் நா தழுதழுத்தது. கண்கள் கலங்கின.

அவர்களின் பிள்ளைகள் என்னை மாமா என்றுதான் கூப்பிடுகிறார்கள்.

இன்று இந்தப் புகைப்படங்களை எடுக்கும்போது என் மூத்த சகோதரி புகைப்படம் எடுக்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். சொன்ன காரணம் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அழுகை வந்துவிடுமாம்.

சென்ற வாரம் நான் திருவனந்தபுரத்தில் இருந்தபோது அவர்களிடமிருந்து போன் வந்தது. வாசுகியின் கணவர் மாரடைப்பில் இறந்து போன துயரச் செய்தி கிடைத்தது.

இன்றுதான் அவர்களின் இல்லம் செல்ல வாய்த்தது.என் வருகை அறிந்து எல்லோரும் மூத்த சகோதரியின் வீட்டில் கூடியிருந்தனர்.

கனத்த மனத்துடன் ஊருக்குத் திரும்பும் போது பேருந்துப் பயணத்தின் ஊடே இந்த அன்பு வரலாற்றைப் பதிவு செய்கிறேன்..

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 43

$
0
0

பகுதி ஐந்து : தேரோட்டி – 8

எல்லைப்புற ஊரில் நிகழ்ந்த அப்பெரும்போர் கஜ்ஜயந்தத்தில் குலப்பாடகர்களால் ரைவதகவிஜயம் என்ற பெயரால் குறுங்காவியமாக பாடப்பட்டது. இளையோர் மொழியறியும் நாளிலே அதை கற்றனர். வருடம்தோறும் அவ்வெற்றியின் நாள் மூதாதையருக்கு திறைகொடுத்து சொல்பணியும் விழாவாக எடுக்கப்பட்டது. பாலைப் பெருங்காற்றின் வாளை கையில் ஏந்தியவர் என்று ரைவதகர் புகழ் பெற்றார். கஜ்ஜயந்த குடிகளின் அச்சம் ஒழிந்தது. மேலும் மூன்று களங்களில் அவர்கள் படைகொண்டுவந்த கண்டர்களை முழுமையாக வென்றனர்.

புறச்சூதர்கள் வழியாக அச்செய்தி புறநாடுகளுக்கும் பரவியபோது கஜ்ஜயந்தத்தின் மீது எவரும் படைகொண்டுவரத் துணியவில்லை. விண்தொடும் பெருவாளை கையிலேந்தி முகில்களைச் சூடி நிற்கும் ரைவதகரின் ஓவியங்கள் இல்லச் சுவர்களில் வரையப்பட்டன. அவருக்கு ஏழு சிறகுகள் கொண்ட மருத்தனாகிய மந்தன் உடைவாளை அளிக்கும் காட்சி நாடகமாக நடிக்கப்பட்டது. காற்றின் உடைவாளைச் சூடி களம் சென்று வெல்வதை அக்குலத்து இளையோர் கனவு கண்டனர். கன்னியர் அவர்களை எண்ணி உவகை கொண்டனர்.

இருபத்தியெட்டு ஆண்டுகாலம் எதிர்ப்பவர் எவருமின்றி கஜ்ஜயந்தபுரியை ஆண்டார் ரைவதகர். அவர் சொன்ன சொல் ஒவ்வொன்றும் சட்டமென கொள்ளப்பட்டது. அவர் செய்கைகள் அக்கணமே புராணங்களாயின. மண்ணில் இருக்கையிலேயே விண்வாழும் முதியவர்களில் ஒருவராக அவர் போற்றப்பட்டார். அவரது மைந்தர்களான சஜ்ஜனரும் பிரபரும் குமாரரும் சுஜரரும் சுந்தரரும் நூலும் வேலும் பயின்று தோள் திரண்டனர். அவர்களுக்கு குஜ்ஜர் குலத்துப் பெண்களை மணம்செய்து வைத்தார். எல்லைப்பகுதிகளை அவர்கள் காத்தனர்.

கஜ்ஜயந்தபுரி அமைதியும் செல்வமும் கொண்டது. அங்கு கலைகளும் கல்வியும் செழித்தன. அயல்நாட்டு வணிகரும் சூதரும் அதை அறிந்து அங்கு வந்தனர். எல்லைகளிலெல்லாம் அங்காடிகள் எழுந்தன. கஜ்ஜயந்தகிரியின் அடிவாரத்தில் பேரங்காடி ஒன்று உருவானது. அங்கு பாலைவணிகர் வந்து தங்கி விற்று கொண்டு மீண்டனர். ரைவதகர் அவர்களில் நூலறிந்த அனைவரையும் தன்னிடம் வரச்சொல்லி புதியன கூறக்கேட்டு கற்றறிந்தார்.

அவர்கள் அயோத்தியில் மண்நிகழ்ந்து கயிலையில் விண்திகழ்ந்த ரிஷபரின் அணையாச்சுடரை அவருக்கு சொன்னார்கள். கொல்லாமை என்னும் பெரும்படைக்கலத்தை ஏந்திய அம்மாவீரரின் செய்தி அவரை அகம் திகைக்கச் செய்தது. ஒவ்வொரு நாளும் கீழ்த்திசையில் கதிர் எழும்போது அவர் தன் உள்ளம் தனித்துவிடப்பட்டிருப்பதை உணர்ந்தார். அந்தியில் அத்தனிமை ஆழ்ந்த துயரமாக கனிந்திருந்தது. அவர் சொல்லவிந்து செயல் நிறைந்து ஒரு பெருஞ்சிலை என ஆவதை அவரது குடியும் குலமும் கண்டது. “கனி முழுத்துவிட்டது. உள்ளே இனிமை ஊறிச் சிவக்கிறது” என்றார் முதுநிமித்திகராகிய ரூபிணர்.

ஒருநாள் அவர் கீழ்வான் நோக்கி நின்றிருக்கையில் அவர் அருகே வந்து பணிந்த அமைச்சர் அயல்நாட்டுச் சூதர் இசையவைக்கு வந்திருப்பதை சொன்னார். எண்ணங்கள் அப்போதும் செம்பொன்கோபுரத்திலேயே படிந்திருக்க சொல்லில்லாமல் ரைவதகர் இசையவைக்குச் சென்று வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் ஏற்று அரியணை அமர்ந்தார். அயல்சூதர் முதியவர். தன் நந்துனியை மீட்டி அவர் மந்தர மலையைப் பற்றி பாடத்தொடங்கினார். தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்து அமுது எடுத்த மத்து. தேவர்களுக்கு அமுது அளிக்கப்பட்டதும் மானுடருக்கு அந்த மலையை அளிக்க உளம்கொண்டார் ஈசன். மண்ணில் வந்து விழுந்தது மந்தரமலை.

அமுதம் படிந்தமையால் அம்மலையின் ஒவ்வொரு உயிரும் இறப்பின்மையை அடைந்தது. அம்மலைமேல் முளைக்கும் செடிகளில் இலைகள் உதிர்வதில்லை. மலர்கள் வாடுவதில்லை. அங்கு வாழும் பூச்சிகளும் இறப்பதில்லை. அமுதிலாடி நிற்கும் அவ்வுயிர்களுக்கு அந்தமென இங்கு ஏதுமில்லை. அச்செடிகளை வருடி வரும் காற்றும் அமுதமே. தீராநோயாளிகள் அக்காற்று பெற்று உயிர் ஊறப்பெற்றனர். அதற்காக உற்றாரையும் ஊரையும் விடுத்து வழிதேர்ந்து நடந்து அதன் சாரலை அடைந்தனர். மந்தரமலையில் முளைக்கும் செடிகளனைத்தும் மூலிகைகளே. அவற்றை மருத்துவர் தேடிச்சேர்த்து அருமருந்துகள் கூட்டினர்.

தொல்கதைகளில் கேட்டிருந்த அம்மலையை பார்க்க வேண்டுமென்பது ரைவதகர் சிறுவனாக இருந்தபோது கொண்ட கனவு. அந்நாளில் அவர் அவைக்கு வந்த வடபுலத்துப் பாணன் ஒருவன் குறுயாழை மீட்டி மந்தரமலையின் உச்சியில் பொன்னொளிர் முகில் வந்து அமரும் அழகை பாடினான். முகில் கீற்றுகளில் தேவதைகள் தோன்றி அம்மலை மேல் இறங்குவதை தேன்தட்டில் தேன் துளிப்பதுபோல என்று அவன் சொன்ன வரியை அவர் ஒருபோதும் மறக்கவில்லை. பின்னர் வணிகருடன் வெளியேறி இரண்டாண்டு காலம் அலைந்தபோது மந்தரமலைக்கு ஒருமுறை செல்வதென்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. வழி தேர்ந்து மந்தரமலைக்கு கிளம்புகையில்தான் தந்தை உடல்நலமின்றி இருக்கும் செய்தி வந்தது. அக்கணமே திரும்பி வர முடிவெடுத்தார். பின்பு குடிகாக்கும் பொறுப்பும் அரச கடமைகளும் அவரை அவ்வூரிலேயே சிறை வைத்தன.

காலத்தில் அவ்வெண்ணம் கரைந்து அழிந்து ஆழத்தில் மறைந்தது. மந்தரமலை என்னும் சொல்லை முதுசூதர் பாடியதுமே கோல்பட்ட முரசின் தூசுத்துளிகள் நடனமிடுவது போல அவருள்ளத்தில் சொற்கள் கொந்தளித்தன. பின்பு அச்சொல் மட்டும் எஞ்சியது. கஜ்ஜயந்தகுடியினர் எல்லை தாண்டி போகும் வழக்கமில்லை என்பதால் பயணத்துக்குரிய முறைமைகள் ஏதும் அந்நாட்டில் இருக்கவில்லை. எனவே வெறும் விழைவென்றே அது அவருள் எஞ்சியது. ஆனால் எவ்வண்ணமோ நாளில் ஒருமுறையேனும் மந்தரமலையென்னும் எண்ணம் நெஞ்சில் எழத் தொடங்கியது. எச்சொல்லிலிருந்தும் அதற்கு சென்று சேரும் ஆழ் உள்ளத்து வழி ஒன்று அவருக்கு இருந்தது.

அரசவையில் மந்தணம் சூழ்ந்து கொண்டிருக்கும்போதே அகத்தில் அவ்வழி திறந்து அவர் அங்கு செல்லத்தொடங்குவார். அவரது விழிகள் அணைவதை உடல் அங்கிருக்க உள்ளம் மறைவதை அறியும் அவையினர் அவர் செவிகளை ஈர்ப்பதற்கென உரக்க பேசுவர். அப்போதும் அவர் விழிதிரும்பவில்லையென்றால் எளிய வீண்பேச்சுகளுக்கு செல்வார்கள். எண்ணி இருந்த நாட்களில் ஒரு முறை உப்பரிகையின் தனிமையில் இருளுக்குள் நிலவை நோக்கி இருந்தபோது எங்கோ எவரோ சொல்லி நினைவில் எழுந்ததுபோல ஒரு சொல் அவர் உள்ளத்தில் எழுந்தது. ‘இனியில்லை’.

திடுக்கிட்டு யார் அதை சொன்னது என்று நோக்கினார். எவ்வண்ணம் அச்சொல் தன் உள்ளத்தில் எழுந்தது என்று வியந்தார். எவரோ தலைக்குப் பின்னால் நின்று காதுகளுக்கு மட்டும் கேட்பதுபோல அச்சொல்லை சொல்லி சென்றார்கள். இனியில்லை இனியில்லை இனியில்லை என்று பல்லாயிரம் முறை அச்சொற்களை சொல்லி நிலைகொள்ளாமல் அம்மாளிகையில் அலைந்தார். காவலனும் துயின்று காற்றும் அடங்கிவிட்ட மாளிகையில் பாதகுறடுகள் ஒலிக்க தலை குனிந்து நடந்தார். நீள்மூச்சுடன் எங்குளோம் என உணர்ந்தபோது உள்ளம் சென்ற நெடுந்தொலைவு காலுக்கு சில அடிகளே என அறிந்து தலையசைத்துக்கொண்டார்.

விடியலில் துயில் மறந்து சோர்ந்த விழிகளுடன் வந்து அவை அமர்ந்தார். தன் மைந்தர்களை வரச்சொன்னார். அமைச்சரும் குடித்தலைவர்களும் படைத்தலைவர்களும் சூழ்ந்த அவையில் தன் மணிமுடியை இளவரசர் சஜ்ஜனரிடம் அளித்து அரசு துறந்து வெளியேறவிருப்பதை அறிவித்தார். எவ்வண்ணமோ அப்படி ஒன்று நிகழும் என்பதை அவை முன்னரே அறிந்திருந்தது. அவரது முகக்குறிகள் அங்கு காட்டுவது என்ன என்பதை நிமித்திகர் உய்த்து அமைச்சருக்கு உணர்த்தியிருந்தனர். ஆயினும் அச்சொற்கள் அவர் வாயிலிருந்து நேரடியாக எழக்கேட்டபோது ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தலைமை அமைச்சர் “அரசே, தாங்களின்றி…” என்று சொல்லத் தொடங்கியதும் கையமர்த்தி “தங்கள் உணர்ச்சிகளை அறிவேன். இவ்வவை சொல்லப்போகும் அத்தனை சொற்களையும் ஓராயிரம் முறை முன்னரே என் உள்ளத்தால் கேட்டுவிட்டேன். என் இறுதிச் சொற்கள் இவை. இன்றேனும் இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் இனியில்லை என்றே என் உள்ளம் உணர்கிறது என் மைந்தன் தோள் பெருத்து விழிகூர்ந்து அரசனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுவிட்டான். அவனுக்குத் தகுதியான இளையோர் அவன் தோள்வரை எழுந்துவிட்டனர். அவனுக்குரியது இம்மணிமுடி” என்றார்.

“குடியீரே, இனி இவன் கோல் கீழ் இந்நாடு பொலிவுறட்டும். என் மக்கள் இவனை என் மூதாதையர் வடிவென கொள்ளட்டும். என் மனைவியருக்கு இவன் காவலனாகட்டும். தெய்வங்கள் இனி எனக்கான பலிக் கொடைகளை இவன் கைகளில் இருந்து பெறட்டும். அவ்வாறே ஆகுக!” என்றபின் எழுந்து தன் மணிமுடியை இருகைகளாலும் கழற்றி அருகிலிருந்த பீடத்தில் வைத்தார். செங்கோலையும் கங்கணத்தையும் அதன் அருகே வைத்தபின் “என் மூதாதையர் மேல் கவிந்து என் குடியை குளிர்நிழலில் நிறுத்திய இவ்வெண்குடை இதன் மேல் கவியட்டும்” என்று ஆணையிட்டார். குடைக்காவலன் வெண்குடையை மணிமுடி மேல் குவிக்க அரியணையிலிருந்து படியிறங்கிவந்து அவை நடுவே நின்று அனைவரையும் தலைமேல் கைகுவித்து மும்முறை வணங்கி விலகி வெளியே சென்றார்.

அவர் செல்வதை நோக்கிநின்ற அவையினர் ஏங்கி கண்ணீர் உகுத்தனர். அவர் மைந்தர்கள் விழிநிறைய சொல்மறந்து நின்றனர். மகளிரறைக்குச் சென்று தன் துணைவியர் ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொல்லில் விடைபெற்றார். அவரது பட்டத்தரசி சுஜயை “இறுதி வரை உடனிருப்பேன் என்று சொல்லி என் கைபற்றினீர்கள் அரசே” என்றாள். “இவ்வுலகில் நான் கொண்டவை அனைத்துக்கும் இறுதி வரை நீ உடனிருந்தாய். ஆனால் காடு உனக்கானதல்ல. மைந்தருடன் கூடி மகிழ்ந்திருந்தால் மட்டுமே உன் உள்ளம் விண்ணேகும். இங்கிரு. நான் சென்றுவிட்ட செய்தி கிடைக்கும்போது என் மங்கலங்களைத் துறந்து எனக்காக நோற்றிரு. அங்கு உனக்காக நான் காத்திருப்பேன். அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.

அன்று பின்மாலை கஜ்ஜயந்தபுரியின் மலைப்பாதை சரிந்திறங்கிய குன்றில் இறங்கி விரிநிலம் வந்தார். குன்று முழுக்க பரவியிருந்த அந்நகரின் மாந்தர் அனைவரும் வந்து மலைப்பாதையின் இருமருங்கிலும் கூடி அவரை வாழ்த்தி குரலெழுப்பி விடை கொடுத்தனர். பெண்கள் விம்மி அழுதனர். அவருக்காக அரசமணித்தேர் காத்திருந்தது. அதில் அவர் ஏறிக்கொண்டதும் பாகன் அவர் சொல்லுக்காக காத்திருந்தான். அவர் அங்கில்லையென்றிருந்தார். அவனே குதிரையை சொடுக்கி அதை விரையச்செய்தான். சிறுவர்கள் அவர் சென்ற தேருக்குப் பின்னால் அழுதபடி கை நீட்டி ஓடினர். ஒருவரையும் திரும்பி நோக்காமல் எல்லை கடந்து விரிநிலத்தில் வளைந்து சென்ற செம்புழுதி எழும் சாலையில் மறைந்தார்.

கஜ்ஜயந்தநாட்டு எல்லையை அடைந்ததும் ரைவதகர் மெல்லிய உறுமலால் தேரை நிறுத்திவிட்டு இறங்கி தன் அரச ஆடைகளைக் களைந்து அதுவரை தன்னுடன் வந்த அணுக்கச் சேவகனிடம் அளித்தார். அமைச்சர் தேரில் வைத்திருந்த மரவுரியும் மரக்குறடும் அணிந்து கையில் கோலும் துணிமூட்டையில் மாற்றுடையும் கொண்டு பாலையில் நடக்கத் தொடங்கினார். அவர் சென்று மறைவதுவரை அவன் அங்கே நோக்கி நின்றான். பெருமூச்சுடன் திரும்பி தேரின் பின்நீட்சியில் ஏறிக்கொண்டான். தேர் திரும்பும்போது பீடத்தில் இன்மையென அவர் இருப்பதாக அவன் எண்ணினான்.

நாடுநீங்கிய முதல்நாள் நாடுநீங்கிய மன்னராக இருந்தார் ரைவதகர். இரண்டாம் நாள் விடுதலை அடைந்த குடிமகனாக ஆனார். மூன்றாம் நாள் வழிதேறும் பயணியாக இருந்தார். நான்காம் நாள் எண்ணங்களை துழாவிச்செல்லும் தனியனாக இருந்தார். ஐந்தாம் நாள் எங்கும் செல்லாது தன்னுள் உழலும் அயலவன் என தோன்றினார். ஆறாம் நாள் அவரது விழி பதைக்கும் பித்தனென்று மாறினார். வெறுமனே சென்றுகொண்டிருந்தார். பதினெட்டாவது நாள் வழிகள் பொருட்டற்ற துறவியாக மாறியிருந்தார். நூற்றியெட்டு நாட்களுக்குப் பிறகு நீண்ட தாடியும் சடைத்திரிகள் தொங்கும் முதுகும் ஒளிரும் வெண்பளிங்கு விழிகளுமாக மந்தரமலை நோக்கிச் செல்லும் பாதையை அடைந்தார்.

மந்தரமலை வரைக்கும் பாடும் மந்தார வழிநடைப்பாடல் நூலில் எழுதப்படாமல் அத்தனை யாதவ குடிகளிடமும் புழங்கியது. ஆண்டில் ஒருமுறை சித்திரை முழுநிலவு நாளில் யாதவர்கள் சிலர் நோன்பு கொண்டு இருமுடி கட்டி செல்வதுண்டு. ஆவளம் பெருக பால் நிறைய தெய்வங்களை வேண்டி அக்காட்டின் முதல்விளிம்பில் எருமையேறிய அறச்செல்வராகிய வசுதேவர் என்னும் தெய்வம் நின்றிருந்த ஆலயத்தில் அமுதும் மலரும் நீரும் படைத்து வணங்கி மீள்வார்கள். அப்பாலிருந்த காட்டுக்குள் சித்தம் தெளிந்த யோகியரே செல்லமுடியும் என்று சொல்லப்பட்டது.

அருகநெறியினருக்கு அவ்வாலயம் அவர்களின் பனிரெண்டாவது தீர்த்தங்கரரான வசுபூஜ்யரின் பதிட்டை. ஆஷாட மாத முழுநிலவு நாளில் அருக நெறி நிற்கும் வணிகர்கள் தங்கள் குடிச் செலவுகளை நிறைவு செய்தபின் அங்கு வந்து அரிசி விரித்து அழியாசுழற்சியை விரல் தொட்டு வரைந்து அருக நாமத்தை பாடி வழிபட்டு மீண்டனர்.

இக்ஷ்வாகு வம்சத்தில் அங்க நாட்டுத் தலைநகர் சம்பாபுரியில் வாசுதேவருக்கும் ஜெயதேவிக்கும் மைந்தனாகப் பிறந்து இளமையிலேயே ஐம்புலனறுத்து அறிபுலன் பெருக்கி அலைந்தார். சித்தக்கடல் கடைந்து அமுதெடுத்தார். அதை நிரப்பி தானென எஞ்ச உரிய இடம் தேடி அலைந்தார். காட்டில் கண்ட காட்டெருமை ஒன்று அவரை அறிந்து கரிய பேருடல் ஒடுக்கி தலை வணங்கி தாள் பணிந்தது. அதன் மேல் ஏறி பன்னிரு நாட்கள் பயணம் செய்து மந்தரமலையை வந்தடைந்தார் ஆஷாட மாதத்தின் பதினான்காவது முழுநிலவு நாளில் தன்னந்தனியாக மந்தர மலை சரிவில் ஏறி சென்று உருளைப் பாறையின் அடிவாரத்தை அடைந்தார்.

முகில்கள் விலகி முழுநிலவு மந்தரமலைக்கு மேல் நின்றபோது உருவான நிலவொளிப்பாதை வழியாக நூற்றெட்டு தேவர்கள் இறங்கி மந்தரமலை சிகரத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் எழுப்பிய அமரப்பேரிசையை கேட்டார். தன் ஊனுடலை அங்கொழித்து இசைகலந்து மேலேறி அவர்களை சென்றடைந்தார். அவ்விசையின் வழியாக தேவர்கள் வாழும் விண்ணுலகை அடைந்தார். அங்கு அழியா புகழுடன் நிலை கொண்டார். அம்மலைவிளிம்பில் கற்சிலையமைத்து வழிபட்டனர். அவர் காலடியில் கொம்பு சரித்து நின்றது மோட்டெருமை.

அப்பால் எழுந்த பசுங்காடு பச்சைப்பிசின் என செறிந்து வழியின்மையாகியது. அதன் நடுவே கரிய தனிமையின் வடிவென எழுந்து விண்தொடும் விரல் என நின்றிருக்கும் மந்தரமலை. காட்டின் விளிம்பில் நின்று நோக்கியதன்றி எவரும் அறிந்ததில்லை. அங்கு செல்ல காலடிப்பாதைகள் இல்லை. அங்கு செல்பவர்கள் தங்களுக்கான பாதையை தாங்களே கண்டடைந்தனர். சென்றவர்கள் எவரும் மீண்டதில்லை என்பதனால் சொல்லில் வழி இருக்கவில்லை.

வசுபூஜ்யரின் கோயில் கடந்து காட்டில் நுழைந்த ரைவதகர் அங்கே ஒவ்வொரு இலையும் பொய்யுரைத்து வழிதிருப்புவதை உணர்ந்தார். ஒவ்வொரு முள்ளும் படைக்கலமாகி எதிர்கொண்டது. ஒவ்வொரு வேரும் கால்பின்னி தடுத்தது. நூறுநாட்கள் அக்காட்டில் தவித்தலைந்து தளர்ந்து விழுந்தார். பசி எரிந்து பின் அணைந்த உடலில் உயிர் இறுதிச்சரடில் நின்று தவித்தது. சிதையென ஆன தசைகளில் விடாய் நின்று தழலாடியது.

கைகளை ஊன்றி கால்களை மடித்து எழுந்தார். ஒவ்வொரு தசையாக இயக்கி உடலை நகர்த்தி சுற்றிலும் நோக்கினார். உலர்ந்த நாக்கு வந்து இதழ்களை நக்கி நக்கி மீண்டது. ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு குழியும் நீரில்லை என்னும் பொருள் மட்டுமே கொண்டிருந்தது. அவர் உடல் நீர்விழைவு என்பதாக இருந்தது. விடாய் என இம்முனையும் இல்லை என மறுமுனையும் இணைவிசைகளுடன் முட்டிக்கொண்டு அசைவிழந்து காலம் மறந்தன. கண்களில் காடு நீர்ப்பாவையென அலையடித்தது. காதுகளில் ஓசைகள் தொலைவிலெங்கோ என ஒலித்தன. மூழ்கிக் கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்திருந்த காற்று நீரென்றாகி அவரை மூழ்கடித்து தன் ஆழத்துக்கு கொண்டுசென்றது.

பற்றுதேடித் தவித்த சித்தத்தின் பல்லாயிரம் கைகள் சொற்களை அள்ளி அள்ளி பற்றிக்கொண்டன. அன்னை, தந்தை, குடி, குலம், நகர், பொருள், இன்பம், வெற்றி, புகழ், அறிவு, மீட்பு, முழுமை என ஒவ்வொரு கொடியும் அவர் எடைதாளாது அறுபட்டது. அறுந்து துடிக்கும் கொடிகளில் ஒன்றென மந்தரமலை இருப்பதைக் கண்டதும் உடல் ஒருமுறை சொடுக்கிக்கொண்டது. கைநீட்டிப் பற்றிய கொடி ஒன்று அவரை தாங்கியது. அது ஒரு செவிவடிவில் இருந்தது. அச்செவியில் நீராவி பட்டு பனித்திருந்தது. இடக்காது. அவர் இடப்பக்கம் நகர்ந்தார். எஞ்சியிருந்த ஒற்றைக்கை ஒரு நாகமென மாறி நெளிந்து மண்ணை உந்தி அவரை தூக்கிச்சென்றது.

தொலைவிலேயே நீரை அறிந்துவிட்டார். அசைவற்ற எருமைவிழி என அது அங்கே கிடந்தது. அதை அணுகி படுத்தபடியே நீரை அள்ளி அள்ளி விழுங்கியபோது உடல் அறிந்தது அது அமுதம் என. கண்மூடி அங்கே கிடந்தார். மெல்லிய முக்காரம் கேட்டு கண்விழித்தபோது மிக அருகே நின்ற கரிய எருமையின் கண்களை கண்டார். அவர் கைநீட்டியபோது அந்தக் காட்டெருமை கரிய பேருடல் ஒடுக்கி தலை வணங்கியது. அதன் மேல் ஏறி பன்னிரு நாட்கள் பயணம் செய்து மந்தர மலையை வந்தடைந்தார். அவர் செல்லும் வழியெல்லாம் முட்கள் சுட்டுவிரல்களாகி வழிகாட்டின. இலைகள் வாழ்த்துகூவின.

அது ஆஷாட மாதத்தின் பதினான்காவது முழுநிலவு நாள். விண்ணில் பொற்பெருங்கலமென எழுந்து நின்றது குளிர்நிலவு. காடு குளிர்ந்து ஒளிசொட்டும் இலைநுனிகளுடன் அசைவிழந்து மோனத்திலாழ்ந்திருந்தது. குவிந்த செம்மண்பீடத்தின் மேல் ஊழ்கத்திலமர்ந்த கரிய ஒற்றைப்பெரும்பாறையே மந்தரமலை. ரைவதகர் அங்கு வந்தபோது அங்கே உயிரசைவே இருக்கவில்லை. நிலவொளியே பருவெளியென்றானது போல் தெரிந்த மலைச்சரிவில் தனித்து ஏறிச் சென்று உருளைப் பாறையின் அடிவாரத்தை அடைந்தார். விண்ணில் தொங்குவது போல நின்றது அது. அங்கிருந்து எவரோ மண்ணை கடைவதுபோல.

ரைவதகர் நிலவொளி தழுவி பளபளத்து எழுந்து நின்ற மந்தரமலையின் கரிய பேருடலை பார்த்தார். கிளம்பிய நாள் முதல் அவர் சித்தத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த பாற்கடலை கலக்கியது எதுவென்றறிந்தார். கன்னங்கரியது. அமுதை உடல் பூசி அழியாமை கொண்டு என்றும் நின்றிருப்பது. விண்ணைத்தொடுவது. மண்ணில் வேரூன்றி இருப்பது. மாநாகங்களும் வானவரும் தங்களதென்று உணர்வது. இதுவே இதுவே இதுவே என்று நெஞ்சு உரைக்க சிறிய பாறை ஒன்றின் மேலமர்ந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார். அதன் மேலிருந்த முகில்கள் ஒளிகொள்வதை கண்டார். வெளிகடைந்த மத்து. அழியாத்தவம் கொண்டு யுகங்கள் தோறும் விண்ணில் பறந்தலைந்த பயணம் மண்ணில் இங்கு நிலை கொள்வதற்காகதானா?

கண்களை மூடி ஊழ்கத்தில் அமர்ந்தார். அவர் நெற்றிப்பொட்டில் எழுந்து சித்தத்தில் சுழன்று கொண்டிருந்தது மந்தரமலை. இறுகி நஞ்சு துப்பியது பாதாள நாகம். பற்றி எரிந்தன புரங்கள். அனல் என உணர்ந்த தருணம். அமுது என உணர்ந்த ஓசை. அமுது என்று நுரைத்த உள்ளம். அமுது என எஞ்சிய சித்தம். அமுது என்று திரண்ட பித்தம். பின் அமுதென்று அங்கிருந்தார். விழிதிறந்தபோது முழு நிலவு மந்தரமலைக்கு நேர் உச்சியில் நின்றிருந்தது. விண்ணையும் மண்ணையும் முழுக்காட்டும் பேரிசையொன்று சூழ்ந்திருந்தது.

செவிகள் தொட முடியாத இசை. ஒவ்வொரு மயிர்க்காலும் அறிந்து தித்திப்பில் விரைத்து நிற்கும் இன்னிசை. கரைகளின் வெண்ணுரை எழுப்பி அலை அலையெனக் கிளர்ந்து அவரை அள்ளி எற்றி எற்றி எற்றிச் சென்றது அவ்விசை. இசையினூடாக நடக்க முடியும் என்று கண்டார். இசையை அள்ளி பற்ற முடியும். இசையில் கால் துழாவி கைவீசி நீந்தி திளைக்க முடியும். இசை அவரை மந்தரமலையின் உச்சிக்கு கொண்டுசென்றது. தன்னருகே மலைப்பாறையின் பளபளக்கும் கருமை எருமைத்தோல் என உயிர்கொண்டு அசைந்ததை அவர் கண்டார். அதன் மடம்புகளிலும் மடிப்புகளிலும் முளைத்த சிறுமுட்செடிகள் முடிகளென சிலிர்த்திருந்தன.

மலையுச்சியில் கால்தொடாது சென்று நின்றார். அது ஒரு முழுவட்டச் சதுக்கமென தெரிந்தது. அதன் மையத்து விளக்கென பொன்னிலவு. அந்நிலவை நோக்கி நின்றிருக்கையில் அதை தன் மேல் சூடிய மாபெரும் நிலவு ஒன்று விண்ணிலெழக்கண்டார். குளிர்நீல நிலவு. அப்பெருநிலவு மழலையை மடியில் வைத்த அன்னையென நிறைந்திருந்தது. அதிலிருந்து வழிந்தோடி இறங்கிய நீலப்பளிங்குப்பாதை வழியாக ஒளிச்சிறகுகளுடன் கந்தர்வர்கள் இறங்கி வந்தனர். நிலவொளியில் சுழன்று நடனமிட்டுக் களித்தபடி வந்து அங்கே நிலவொளித்துளிகளென கிடந்த பாறைகளில் அமர்ந்தனர்.

நூற்றெட்டு கந்தர்வர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் அமர்ந்து இசைமீட்டினர். அவர்கள் தொட்டு மீட்டிய இசைக்கருவிகள் நிலவொளியால் ஆனவையாக இருந்தன. இசையும் ஒளியென்றே அலையடித்தது. அதில் அவர் உடல் உருகி பரந்து திளைத்து மெல்லிய அலைவாக இருந்தது. அவர்கள் அவரை அறியவில்லை. அவர் அணுகிச் சென்றபோதும் அணுகாமல் அவர்கள் அங்கே இருந்தனர். அவர்களில் ஒருவன் விழிதிருப்பியபோது ஒரு கணம் அவன் நோக்கு அவரை அறிந்தது. அக்கணமே விழித்துக்கொண்டார்.

அப்போது அவரது தலைக்கு மேல் இளஞ்சூரியன் எழுந்திருந்தது. பொன்னொளிர் வெயில்பட்டு மந்தரமலை விண்மகள் அணிந்த தாலியின் குண்டு போல சுடர்விட்டது. விழிநீர் வார்ந்து செவிகள் நிறைய அங்கு பார்த்தபடி கிடந்தார். நேற்றிரவு கேட்ட இசை வெறும் உளமயக்கா என்று தோன்றியது. எழுந்து அமர்ந்தபோது தன் இடையில் ஆடை இல்லையென்பதை கண்டார். இசை ஏறிச்சென்று மந்தரமலை உச்சியில் கரைந்து நடமிட்டபொழுது தன் ஆடை கழன்று காற்றில் பறந்து மறைவதை கண்டிருந்தார். எழுந்து அங்கெங்கேனும் தன் ஆடை கிடக்கிறதா என்று பார்த்தார். இல்லையென்று அறிந்ததும் “ஆம், நான் கேட்டேன்! நான் இருந்தேன்! நான் அடைந்தேன்! நான் எஞ்சுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டார்.

கஜ்ஜயந்தபுரியின் எல்லைக்குள் மீண்டும் ரைவதகர் நுழைந்தபோது அவர் புழுதிபடிந்த வெற்றுடல் கொண்டவராக இருந்தார். குழல் வளர்ந்து தோளில் தொங்கியது. சடை கட்டிய தாடி மார்பில் விழுந்திருந்தது. புழுதி படிந்த மேனி தொன்மையான மரம் ஒன்றின் வேர் போன்றிருந்தது. சொல்லற்று புன்னகை ஒன்றே மொழி என கொண்டிருந்தார். உற்றவர் எவரையும் அவர் தனித்தறியவில்லை. மானுடரையும் விலங்குகளையும் பறவைகளையும் வேறுபடுத்தி நோக்கவில்லை. விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மூதாதையரின் விழிகள் அவை என்றனர் குலப்பாடகர்.

எல்லையிலிருந்து பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து ஊருக்குள் கொண்டுவந்தது. அவருக்குப் பின்னால் குலப்பாடகர் இசைமீட்டி வந்தனர். “அருகர் தாள் வாழ்க!” என்று கூவிய குடிமூத்தார் உடன் வந்தனர். தன் அரண்மனை மாளிகை முகப்பில் வந்து நின்று அவர் கைகளை நீட்டினார். செய்தியறிந்து ஓடிவந்த அவரது துணைவி சுஜயை அவரைக் கண்டு நெஞ்சை அழுத்தி நிலைபற்றி நின்று கண்ணீர் விட்டாள். “அன்னையே, இரவலருக்கு உணவளியுங்கள்” என்றாள் முதியசேடி. விம்மும் இதழ்களை இறுக்கியபடி அவள் அவரது நீட்டிய வெறும் கையில் அன்னமிட்டாள். மும்முறை அதை உண்டபின் அவர் திரும்பிச்சென்றார்.

பன்னிரெண்டு ஆண்டுகாலம் ரைவதகர் கஜ்ஜயந்தநாட்டின் ஊர்களில் அலைந்தார். எங்கும் எவரிடமும் எச்சொல்லும் சொல்லவில்லை. அவர் சென்றவிடத்தில் எல்லாம் அவர் சித்தமுணர்ந்ததை மக்கள் அறிந்தனர். சித்திரை வளர்நிலவு இரண்டாம் நாளில் ரைவதக மலைமேல் ஏறிச்சென்ற அவர் அங்குள்ள மலைப்பாறை ஒன்றில் வடக்கு நோக்கி அமர்ந்து பன்னிரண்டுநாட்கள் உண்ணாநோன்பிருந்தார். அரண்மனையில் தன் மஞ்சத்தில் அவர் துணைவி சுஜயையும் உண்ணாநோன்பிருந்தாள். அவள் முழுநிலவுக்கு முந்தையநாள் உடல்துறந்தாள். முழுநிலவு எழுந்த நாளில் அவர் முழுமைகொண்டார்.

ரைவதகரின் காலடி அங்குள்ள சேற்றுப்பரப்பில் படிந்திருந்தது. அவரது மைந்தர் சஜ்ஜனர் சிற்பிகளைக்கொண்டு அளவிட்டு அவர் அமர்ந்திருந்த பாறையில் செதுக்கிவைத்தார். அங்கு குஜ்ஜர்கள் நாள்தோறும் சென்று அரிசிப்பரப்பில் அருகமந்திரத்தை எழுதி மலரிட்டு வணங்கலாயினர். கஜ்ஜயந்த மலை ரைவத மலை என பெயர் கொண்டது. அவர் குலம் ரைவதகம் என அழைக்கப்படலாயிற்று. கஜ்ஜயந்தம் என்னும் பெயரே நினைவில் மறைந்து நூல்களில் எஞ்சியது.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16759 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>