Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

புதியவர்களின் சந்திப்பு -2

$
0
0

நண்பர்களுக்கு

ஊட்டி புதியவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அறிவித்த நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இருபத்தெட்டுபேர் பதிவுசெய்துவிட்டனர். அதற்குமேல் என்றால் பெரிய ஏற்பாடுகள் தேவையாகும். . சற்று விரிவாக்கம் செய்து முப்பதாக்கியிருக்கிறோம். அதற்குமேல் போனால் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கவே அவகாசமிருக்காது.

அத்தனைபேரும் மிக இளையவர்கள். ஆகவே முந்தைய வாரம் அதாவது வரும்  பெப்ருவரி   5,6  ஆம் தேதிகளில் இன்னொரு சந்திப்பை ஈரோட்டில் என் நண்பர் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில் வைத்துக்கொள்ளலாமா என நினைக்கிறேன். ஊட்டிக்கு வராதவர்களுக்காக.

 

இருபதுபேர் அங்கே தங்கலாம். விருப்பமிருப்பவர்கள் எழுதலாம் jeyamohan.writer@gmail.com

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 4

கர்ணன் மீண்டும் தன் அறைக்குள் செல்ல சிவதர் உள்ளே வந்தார். “தந்தை சொல்வதிலும் உண்மை உள்ளது” என்றான் கர்ணன் தலைகுனிந்து நடந்தபடி. “உண்மையில் கருவுற்றவள் விருஷாலி. அச்செய்தியை இன்னும் அங்க நாடு அறியவில்லை.” சிவதர் “இல்லை அரசே, அச்செய்தியை முறைப்படி நமக்கு அறிவிக்க மறுத்தவர் அரசி. சொல்லப்போனால் இன்னும் கூட அரசியிடமிருந்து நமக்கு செய்தி வரவில்லை” என்றார். “ஆம், அது அவளது அறியாமை. அதை கடந்து சென்று அவளை நான் சந்தித்திருக்க வேண்டும்” என்றான் கர்ணன். “மைந்தர் பிறக்கவிருப்பதை முறைப்படி அங்க நாட்டுக்கு அறிவிப்பதும் என் கடனே.”

சிவதர் “அரசே, தான் கருவுற்றிருக்கும் செய்தியை கொழுநரிடம் அறிவிப்பது எப்பெண்ணுக்கும் பேருவகை அளிக்கும் தருணம். தன் அறியாமையால் அதை மறைத்துக்கொண்டவர் அரசி. தான் இழந்ததென்ன என்றுகூட அவர் இன்னும் உணரவில்லை. ஒருபோதும் உணரப்போவதும் இல்லை” என்றார். கர்ணன் நீள்மூச்சுடன் “அதைப் பற்றித்தான் நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்விரு நாட்களும் ஒரு தந்தையென நான் என்றும் நினைவுற வேண்டியவை. என் உள்ளத்தில் மைந்தர் நினைவு ஊறிப்பெருக வேண்டிய நேரம். ஆனால் சிதறிப் பறந்து எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது என் சித்தம். ஒருமுறை கூட பிறக்கவிருக்கும் என் மைந்தனைப்பற்றி நான் எண்ணவில்லை” என்றான்.

சிவதர் “ஹரிதர் நேற்று மூத்தஅரசியிடம் பேசிய நிமித்திகர்களை வரவழைத்து உசாவினார். மூத்தஅரசியின் குருதியில் பிறக்கும் மைந்தன் அங்க நாட்டை ஆள்வது உறுதி என்றார் அவர்” என்றார். கர்ணன் “அது எவ்வாறு? இளவரசென அவனுக்கு பட்டம் கட்டுவதே நிகழ வாய்ப்பில்லை” என்றான். “அது நமது கணிப்பு. நிமித்திகர் கணிப்பது நம் அரசியலை அல்ல. காலத்தை ஆளும் ஊழை” என்றார் சிவதர். “அப்படியென்றால்…” என்று கேட்டபடி கர்ணன் தன் பீடத்தில் எடையுடன் அமர்ந்தான். “பெருவீரர்கள் தடையற்றவர்கள். அங்க நாட்டின் அரசமுறைமை, நமது முடிவுகள், குடிவழக்கங்கள் என்னும் அனைத்து எல்லைகளையும் கடந்து இவ்வரியணையை தங்கள் மைந்தர் அடையக்கூடும்” என்றார் சிவதர்.

“அவ்வண்ணம் நிகழட்டும்” என்றான் கர்ணன். சிவதர் “நிமித்திகரின் அக்கூற்றைத்தான் இளைய அரசி அஞ்சுகிறார்” என்றார் சிவதர். “நிமித்திகர் அவளுக்கும் சில நாட்குறிகளை சொல்லியிருப்பார்களே?” “ஆம். அவர் பெறப்போகும் முதல் மைந்தர் அங்க நாட்டின் இளவரசராக பட்டம் சூட்டப்படுவார் என்று நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்” என்றார் சிவதர். “மணிமுடி சூட மாட்டானா?” என்றான் கர்ணன். “அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்கு மூன்று கண்டங்கள் உள்ளன என்கின்றனர் நிமித்திகர். அச்செய்தியால் இளைய அரசி உளம் கலங்கி இருக்கிறார்.” கர்ணன் “கண்டங்களா?” என்றான். சிவதர் “ஷத்ரியர் பிறக்கையில் முதலில் நோக்குவது முழுவாழ்நாள் உண்டா என்றே” என்றார்.

கர்ணன் “இவை அனைத்தையும் முன்னரே அறிந்து கொள்வதனால் என்ன நன்மை?” என்றான். “நிமித்த நூல் அறிவுறுத்துகிறது, எச்சரிக்கிறது, வழிகாட்டுகிறது. ஆனால் ஊழின் பல்லாயிரம் கைகள் நமது ஆட்டக்களத்தில் பகடைக் காய்கள் கொண்டு அமர்ந்திருக்கின்றன எனும்போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை” என்றான். “நிமித்த நூலை பொருட்டாக எண்ணலாகாதென்றே என் உள்ளம் சொல்கிறது. அது ஊழுக்கு அடிபணிவதாகும். நான் நிமித்திகருடன் உரைகொள்ள விழையவில்லை. என்னை இப்பெருக்குக்கு ஒப்படைத்துக் கொள்ளவே எண்ணுகிறேன்.”

சிவதர் “தோற்பதே முடிவு என்றாலும் ஊழுடன் ஆடுவதே வீரரும் அறிவரும் யோகியரும் ஏற்கும் செயல்” என்றார். கர்ணன் “ஆம், அது உண்மை” என்றான். பின்பு “பார்ப்போம்… நீங்கள் முன்பு சொன்னதைப்போல ஓர் அரசனாக நான் எனது அம்புகள் எட்டும் தொலைவுக்கு மேல் நோக்குவதை மறுக்கிறேன்” என்றான். சிவதர் “இத்தருணத்தில் அது நல்ல வழிமுறை என எண்ணுகிறேன். இரு அரசியரும் அவர்களின் ஆடலை முடிக்கட்டும். அதன்பின்னர் நாம் செய்வனவற்றை சூழலாம்” என்றார். “இரு துணைவியரின் கருவுறலையும் அறிவித்துவிட்டு நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம். அதற்கு அஸ்தினபுரியின் தூது ஒரு நல்ல தூண்டு.”

வாயிலில் ஏவலன் வந்து நின்று தலைவணங்கினான். சிவதர் திரும்பி புருவத்தை தூக்க அவன் “அமைச்சர் செய்தியனுப்பினார்” என்றான். கர்ணன் சொல்லும்படி கைகாட்டினான். “அமைச்சர் ஹரிதர் அஸ்தினபுரியின் இளவரசர் சுஜாதருடன் தங்களை சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்” என்றான். “வரச்சொல்” என்று சொன்னதுமே கர்ணன் முகம் மலர்ந்து “இளையவன் அழகன். அவனை ஒரு காலத்தில் என் ஒற்றைக்கையில் தூக்கி தலைமேல் வைத்து விளையாடியிருக்கிறேன்” என்றான். “அவர்கள் ஒவ்வொருவரும் மூத்தவரைப் போலவே உருக்கொண்டு வருவது விந்தை” என்றார் சிவதர். “வெவ்வேறு அன்னையருக்குப் பிறந்தவர்கள். ஆனால் ஒற்றை அச்சில் ஒற்றி எடுக்கப்பட்டவர்கள் போல் உள்ளனர்”

கர்ணன் “அது குருதியால் மட்டுமல்ல எண்ணங்களாலும் அமைவது” என்றான். “அவர்களில் வாழும் ஆன்மா மூத்தவர் சுயோதனரைப்போல் ஆகவேண்டுமென்றே விழைகிறது. அது உண்டு உயிர்த்து தன்னை அவ்விதம் ஆக்கிக் கொள்கிறது.” சிவதர் “இனியவர், தங்கள் மேல் பெருங்காதல் கொண்டவர். அவையில் அமர்ந்திருக்கையில் தங்களை அன்றி பிற எவரையும் சுஜாதர் நோக்கவில்லை என்பதை கண்டேன்” என்றார். கர்ணன் “ஆம், நானும் அவனையே நோக்கிக் கொண்டிருந்தேன். கண்களால் நூறுமுறை தோள் தழுவிக்கொண்டிருந்தேன்” என்றான். பின்னர் நகைத்து “துரியோதனரை எனக்காக சிற்றுருவாக்கிப்  படைத்துப் பரிமாறியதுபோல் உணர்கிறேன் சிவதரே” என்றான்.

வாயிலில் வந்து நின்ற ஏவலன் “அஸ்தினபுரியின் இளவரசர், குருகுலத்தோன்றல் சுஜாதர்! அமைச்சர் ஹரிதர்!” என்று அறிவித்தான். கர்ணன் எழுந்து கைகளை விரிக்க கதவைத் திறந்து தோன்றிய சுஜாதன் விரையும் காலடிகளுடன் ஓடி வந்து குனிந்து அவன் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான். கர்ணன் அவன் தோள்களைப் பற்றி தூக்கி நெஞ்சோடணைத்துக் கொண்டான். இறுக்கி நெரித்து அதுவும் போதாமல் அவனைத் தூக்கி பலமுறை சுழற்றி நிறுத்தினான். அவன் குழல் கற்றைகளைப் பற்றி தலையை இறுக்கி முகத்தருகே திருப்பி அவன் விழிகளை நோக்கி “வளர்ந்துவிட்டாய்” என்றான். கைகளால் அவன் கன்னங்களைத் தடவி “மென் மயிர் முளைத்துள்ளது… மீசை கூட” என்றான்.

“ஆம், ஒருவழியாக” என்றான் சுஜாதன். “எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் மூத்தவரே! தம்பியரில் எனக்கு மட்டும்தான் இன்னும் மீசை அமையவில்லை.” ஹரிதர் சிரித்தபடி “அங்க நாட்டை மிக விரும்புகிறார்” என்றார். கர்ணன் “எதையும் உண்டு அறிவதே கௌரவர் வழக்கம்” என்றான். ஹரிதர் “நான் சொன்னதும் அதையே” என்றார். சிவதர் சிரித்தபடி “இளையவர் ஊனுணவு மணத்துடன் இருக்கிறார்” என்றார். “இங்குள்ள முதலைகள் உணவுக்கு ஏற்றவை மூத்தவரே. மீன்போலவே வெண்ணிறமான ஊன். பளிங்கு அடுக்குகள் போல…” என்றான். “அல்லது தென்னங்குருத்து போல…” கர்ணன் “உணவைப் பற்றிப் பேசுகையில் கௌரவர்கள் கவிஞர்களும்கூட” என்றான்.

சிரித்தபடி ஹரிதர் “இங்கு சில நாள் தங்கிச் செல்லும்படி நான் சொன்னேன்” என்றான். “ஆம், நீ இங்கு சில நாள் இரு. உனக்கு வேண்டியதென்ன என்பதை ஹரிதர் இயற்றுவார்” என்றான் கர்ணன். “இல்லை மூத்தவரே, நான் தங்களுடன் வருகிறேன்” என்றான் சுஜாதன். “ஏன்?” என்றான் கர்ணன். “இந்நகரில் அழகிய பெண்களும் உள்ளனர் இளையோனே.” சுஜாதன் “ஆம், ஆனால் நான் உங்களுடன்தான் வருவேன்” என்றான். “அஸ்தினபுரிவிட்டு நீ வெளியே செல்வதே முதன் முறை அல்லவா?” என்றான் கர்ணன்.

“ஆம், மூத்தவரே. எல்லை கடந்தபின் கண்ட ஒவ்வொன்றும் என்னை எழுச்சி கொள்ளச் செய்தது. இந்நகரின் கோட்டை வாயிலைக் கண்டதும் நான் நெஞ்சு விம்மி அழுதுவிட்டேன். நான் காணும் முதல் அயலகக் கோட்டை இதுவே. ஆனால் எங்கள் அனைவருக்குமே அரசரும் நீங்களும் தோள் தழுவி அமர்ந்திருக்கும் காட்சி என்பது கருவறையமர்ந்த சிவனும் விண்ணுருவனும்போல. அதை நான் தவறவிடமாட்டேன். அஸ்தினபுரியில் நீங்கள் இருவரும் இருக்கும் அவையில் எங்கேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டிருப்பதையே விழைகிறேன்.”

சிவதர் அந்த உணர்ச்சியை எளிதாக்க “இவரும் கதாயுதம்தான் பயில்கிறாரா?” என்றார். சுஜாதன் திரும்பி “என் தோள்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?” என்றான். கர்ணன் அவன் தோள்களில் ஓங்கி அறைந்து “மூத்தவருக்கு இணையாக உண்கிறாய், அதில் ஐயமே இல்லை” என்றான். “ஆம், மூத்தவரே. கிட்டத்தட்ட அரசருக்கு இணையாக உண்கிறேன். ஒருமுறை அவரே என்னைப் பார்த்து நான் நன்கு உண்பதாக சொன்னார்” என்றான் சுஜாதன். “அதனால் நீ கதாயுதமேந்துபவன் என்று பொருள் வரவில்லை. முதன்மைக் கதையை ஒற்றைக் கையில் ஏந்த முடிகிறதா?” என்றான் கர்ணன். “அப்படியெல்லாம் கேட்டால்… இல்லை… கேட்கக்கூடாதென்றில்லை… ஆனால் அப்படி கேட்கப்போனால் உண்மையில் அப்படி முழுமையாக சொல்லிவிடமுடியாது” என்றான் சுஜாதன்.

“சிறந்த மறுமொழி” என்றார் சிவதர் சிரித்தபடி. “நான் பயிலும் முறையில்தான் பிழை என ஏதோ இருக்கிறது. கதாயுதத்தை தூக்கி அடிப்பது எளிது. ஆனால் பிறர் நம்மை அடிப்பதை அதைக் கொண்டு தடுப்பதுதான் சற்று கடினமாக இருக்கிறது. எல்லா பயிற்சியிலும் மூத்தவர் என்னை அடித்து வீழ்த்துகிறார். இருமுறை நான் அரசரின் பெருங்கதாயுதத்தை தலைக்கு மேல் தூக்கியிருக்கிறேன்” என்றான் சுஜாதன். “பிறகு…?” என்றான் கர்ணன். “மூன்றாவது முறை அது என் தலையையே அறைந்தது. இன்னும் சற்று தோள் பெருத்தபின் அதை தூக்கலாம் என்று விட்டுவிட்டேன்.”

ஹரிதர் “ஒரு மாறுதலுக்காக நீங்கள் ஏன் கதாயுதம் இல்லாமலேயே பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது?” என்றார். அவர் கண்களில் சிரிப்பை நோக்கிய கர்ணன் “அதைத்தான் செய்கிறானே. உண்பதும் கதாயுதப் பயிற்சியின் ஒரு பகுதியே” என்றான். “ஆம்” என்றான் சுஜாதன். “என்னிடம் அதை துரோணரும் சொன்னார்.” “வா, அமர்ந்து கொள்!” அவன் தோளை வளைத்துக்கொண்டு தன் பீடத்தருகே கொண்டுசென்றான் கர்ணன். சுஜாதன் பீடம் ஒன்றை இழுத்து கர்ணன் அருகே போட்டு அமர்ந்து அவன் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டு “மூத்தவரே, எத்தனை நாள் நான் கனவில் உங்கள் தோள்களை பார்த்திருக்கிறேன் தெரியுமா? ஆனால் இப்போது பார்க்கையில் உங்கள் தோள் அளவுக்கே என் தோள்களும் உள்ளன. என் கனவில் என்னுடையவை மிகச் சிறியனவாகவும் தங்கள் தோள்கள் யானையின் துதிக்கை அளவு பெரியவையாகவும் இருக்கின்றன” என்றான்.

பீடத்தில் அமர்ந்த ஹரிதர் பொதுவாகச் சொல்வதுபோல “கலிங்க இளவரசியை பார்த்தோம்” என்றார். “ஆம், பார்த்தோம்” என்று சொன்னான் சுஜாதன். “அங்கு அஸ்தினபுரியில் தங்களால் தூக்கி வரப்பட்டபோது எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள்” என்றான். “இன்னும் அவர்களின் சினம் போகவில்லை. என்னைப் பார்த்ததும் ஒரு கணம் நான் துரியோதனர் என்றே நினைத்துவிட்டார். பிறகுதான் இளையவன் என்று தெளிந்தார். சில கணங்கள் அவர் கண்கள் கனிந்ததை கண்டேன். தன் மூத்தவர் சுதர்சனை எவ்வண்ணம் உள்ளார் என்றார். தமக்கை பானுமதியுடன் மகிழ்ந்து விளையாடி அமைந்திருக்கிறார் என்றேன். நீள்மூச்சுடன் ஆம், அறிந்தேன் அவளுக்கு உகந்த கணவனை அடைந்திருக்கிறாள். அதற்கும் நல்லூழ் வேண்டும் என்றார்.”

கர்ணன் “நீ என்ன சொன்னாய்?” என்றான். “உண்மைதான் என்று சொன்னேன். ஏனென்றால் அவர்களுக்கு உங்களை சற்றும் பிடிக்கவில்லை என்று எனக்கு அப்போதே தெரியும். இப்போது அது மீண்டும் உறுதியாயிற்று. அவர்கள் கருவுற்றிருக்கிறார்கள் என்ற செய்தியை நான் செல்லும் வழியிலேயே எண்ணிக்கொண்டிருந்தேன். பிடிக்காமல் எப்படி கருவுற முடியும் என்று அமைச்சரிடம் கேட்டேன். என் தலையை அறைந்து இளையோரைப்போல் பேசும்படி சொன்னார். உண்மையில் நான் இன்னும் சற்று முதிர்ச்சியுடன்தான் பேசவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எண்ணிக் கொள்கிறேன். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது அத்தனை பேரும் சிரிக்கக்கூடிய ஒன்றை சொல்லிவிடுகிறேன்” என்றான் சுஜாதன்.

“நீ அப்படியே இன்னும் சில நாள் இரு” என்றான் கர்ணன். “கண்ணெதிரில் இளையோர் வளர்ந்து ஆண்மகன்களாவதை பார்ப்பதென்பது துயரளிப்பது. இனி உங்கள் நூற்றுவரில் எவரையுமே கையில் எடுத்துத் தூக்கி கொஞ்ச முடியாது என்று உன்னை முதலில் பார்த்தபோதே எண்ணினேன். அவ்விழப்பைக் கடப்பதற்கு நீங்கள் அனைவரும் ஆளுக்கு நூறு பேர் என்று மைந்தரை பெற வேண்டியுள்ளது” என்றான் கர்ணன். “பத்தாயிரம் கௌரவர்களா? கௌரவர்களால் ஆன ஒரு படையே அமைத்துவிடலாம் போலிருக்கிறதே!” என்றார் சிவதர். “ஏன்? அமைத்தால் என்ன? நாங்கள் ஆடிப்பாவைகள் என்கிறார்கள். முடிவின்றி பெருகுவோம்” என்றான் சுஜாதன்.

அந்த இயல்பான உரையாடலில் விடுபட்டுக்கொண்டே இருப்பதை உணர்ந்து “சுப்ரியை என்ன சொன்னாள்?” என்றான் கர்ணன். நேரடியாக அப்படி கேட்டிருக்கக்கூடாது என அவன் உணர்ந்த கணமே மேலும் நேரடியாக சுஜாதன் “அவர் என்னை அவமதிக்க விழைந்தார். என் முகம் நோக்கி ஒற்றைச் சொற்றொடரை மட்டுமே பேசினார். மற்ற ஐந்து சொற்றொடர்களையும் தன் செவிலிக்கும் சேடிக்கும் ஆணைகளிட்டபடி பேசினார். நான் அஸ்தினபுரியின் முறைமை வணக்கத்தை அவர்களுக்கு தெரிவித்தபோது நன்று என்று சொன்னதுமே மறுமுறைமைச் சொல் அளிக்காமல் திரும்பிக் கொண்டு அருகே நின்ற சேடியிடம் எதற்காகவோ சினந்தார்” என்றான்.

“இளையவனே” என கர்ணன் சொல்லத் தொடங்க “நீங்கள் அதை பெரிதாக எண்ண வேண்டியதில்லை மூத்தவரே. அவர்கள் என் மூத்தவரின் துணைவியல்லவா? என் அன்னையல்லவா?” என்றான் சுஜாதன். “ஆனால் நான் விடவில்லை. நேராக முகத்தை நோக்கி அரசி நீங்கள் எனக்கு முறைப்படி மறுமொழி அளிக்கவில்லை. நான் அஸ்தினபுரியின் தூதனாக வந்த அரசகுலத்தவன் என்றேன். அவர் இளக்காரமாக உதட்டைச் சுழித்து என்னை நோக்காமல் அப்படியா எனக்கு அது தோன்றவில்லை என்றார். சரி நீங்கள் எனக்கு விடையளித்ததாகவே எண்ணிக் கொள்கிறேன் என்ற பிறகு அவர் காலைத் தொட்டு சென்னி சூட முயன்றேன். காலை விலக்கி எழுந்துவிட்டார்.”

“கருவுற்றமையால் சற்று அஞ்சிக் கொண்டிருக்கிறாள். அது பெண்களின் இயல்பல்லவா?” என்று கர்ணன் சொன்னான். “மற்றபடி கௌரவர்கள் மேல் அவளுக்கு என்றும் அன்புதான். அவள் தமக்கைக் கொழுநரின் குடியினர் அல்லவா நீங்கள்?” “அதெல்லாமில்லை மூத்தவரே” என்றான் சுஜாதன். “அவருக்கு என்னை பிடிக்கவில்லை. நான் உங்களுடையவன் என எண்ணுகிறார். என்னை இழிவுபடுத்துவதுடன் அதை நான் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டுமென்பதிலும் பொறுப்புடன் செயல்பட்டார்” என்றான். கர்ணன் கைகளை விரித்தான்.

“நான் அஸ்தினபுரியின் பரிசில்களை அரசிக்கு அளித்தேன். பாண்டியநாட்டு அரிய முத்தாரம் ஒன்று. யவனப்பொன்னில் காப்பிரிநாட்டு மணிகள் பதிக்கப்பட்ட கைவளைகள். அவற்றை அவர் ஏறெடுத்தும் நோக்கவில்லை. சேடியிடம் எடுத்து உள்ளே வைக்கும்படி புருவத்தால் ஆணையிட்டார். அந்தச் சேடி, அவள் பெயர் சரபை என நினைக்கிறேன், அதை எடுத்து நோக்கி உதட்டைச் சுழித்து இப்போதெல்லாம் காப்பிரிநாட்டு மணிகள் மிக மலிந்துவிட்டன அரசி, கலிங்கத்தில் குதிரைகளுக்கு இனி நெற்றிமணிகள் அணிவிக்கவேண்டாம் என்று அரசர் ஆணையிட்டிருக்கிறார் என்றாள். நான் அறியாமல் குதிரைகளுக்கா என்று கேட்டுவிட்டேன். அவள் உதட்டைச் சுழித்தபடி திரும்பி நடந்தாள். அப்போதுதான் அது இழிவுபடுத்தல் என்பதே எனக்கு புரிந்தது. ஆனால் ஒன்றை அறிந்தேன். அவர்கள் இருவரும் உதட்டைச் சுழிப்பது ஒன்றுபோலிருக்கிறது.”

கர்ணன் மெல்ல அசைந்து “அந்தச் சேடி கலிங்கப் பெருமைகொண்டவள். அறிவிலி” என்றான். “ஆம், அணுக்கச்சேடிகள் சற்று அத்துமீறுவார்கள்” என்றார் ஹரிதர். பேச்சை மாற்றும்பொருட்டு சிரித்தபடி “இளையவர் இங்குதான் தன்னை ஆண்மகன் என உணர்கிறார். தன் முதல் தூதுச் செய்தி அங்கநாட்டு அவையில் சொல்லப்பட்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்” என்றார். சுஜாதன் “ஆம், மூத்தவரே, இங்கு வரும் வரை ஒவ்வொரு கணமும் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன். அவைநிகழ்வு என்பது ஒரு நாடகம் என்றார்கள். நான் என் மூத்தவரிடமே உளறுவேன்…” என்றான்.

“ஆனால் அனைத்தையும் விதுரர் சொல்லிக் கொடுத்திருந்தார். எப்படி நான் அவையில் எழுவது, என்னென்ன சொற்களை சொல்வது, கைகளை எப்படி அசைப்பது, எவருக்கு எப்படி தலைவணங்குவது அனைத்தையும். வரும் வழியில் வேடிக்கை பார்த்ததால் எல்லா சொற்களையும் மறந்துவிட்டேன். அங்க நாட்டு அவையில் வந்து அமர்ந்திருக்கும்போது எனக்கு சிறுநீர்தான் வந்து முட்டிக் கொண்டிருந்தது. எப்படியாவது எதையாவது சொல்லிவிட்டு வெளியே சென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மட்டும்தான் துடித்துக் கொண்டிருந்தேன். என் பெயரை அமைச்சர் அறிவித்ததும் எழுந்து வந்து அவை நடுவே நின்று வணங்கினேன். நான் அறியாமலேயே விதுரர் எனக்கு கற்றுக் கொடுத்த சொற்களை சரியாக சொல்லிவிட்டேன்.”

“அதை பயணம் முழுக்க உனக்கு நீயே பலமுறை சொல்லிக் கொண்டிருப்பாய்” என்றான் கர்ணன். “எப்படி தெரியும்? உண்மையிலேயே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சுஜாதன் சொன்னான். “அவை கலைந்த போதுதான் நான் முதன்முறையாக ஒரு அவையில் எழுந்து அரசுமுறைத் தூதை சொல்லியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். கைகளை விரித்துக் கூச்சலிட்டபடி துள்ளிக் குதிக்கவேண்டும் என்று எண்ணினேன். நல்லவேளை, அப்படி செய்திருப்பேன்.” “செய்திருக்கலாம்” என்றான் கர்ணன். “அவை நெடுநாள் அதை நினைவில் வைத்திருக்கும்.” சுஜாதன் “அப்படியா? அதெல்லாம் செய்யலாமா அவையில்?” என்று கேட்டான்.

ஹரிதர் “விளையாடாதீர்கள் அரசே. எது வேடிக்கை என்று இன்னும் தெரியாதவராக இருக்கிறார்” என்றார். அறை வாயிலில் ஏவலன் வந்து நின்றான். “யார்?” என்றார் ஹரிதர். “சரபை” என்று ஏவலன் சொன்னான். புருவம் சுருங்க “இவ்வேளையிலா…?” என்றார் ஹரிதர். புரியாமல் “ஏன்?” என்றான் கர்ணன். ஹரிதர் எழுந்து “தாங்கள் பேசிக் கொண்டிருங்கள் அரசே. நான் சென்று அவளிடம் என்னவென்று கேட்கிறேன்” என்றார். கர்ணன் “இல்லை. அவளை வரச்சொல்லுங்கள்” என்றான். ஹரிதர் திரும்பிப் பார்த்து கண்களில் அறிவுறுத்தலுடன் “வேண்டியதில்லை. இவ்வேளையில் அரசரின் அவையில் சேடியரும் செவிலியரும் வருவது முறையல்ல” என்றார்.

“இதிலென்ன உள்ளது? வரட்டும்” என்றான் கர்ணன். “இளையவனுக்கு முறைப்படி சொல்லளித்து பரிசிலுடன் விடைகொடுக்கவில்லை என்ற குற்றவுணர்வு சுப்ரியைக்கு எழுந்திருக்கலாம். பெரும்பாலும் ஏதேனும் பரிசுப்பொருட்களுடன் செவிலியை அனுப்பியிருப்பாள்” என்றபின் ஏவலனிடம் “வரச்சொல்” என்றான். ஹரிதர் சற்று நிலையழிந்தவராக நின்றார். சிவதர் ஹரிதரிடம் ஒன்றும் செய்வதற்கில்லை என்பது போல் புருவத்தை காட்டினார். சுஜாதன் “எனக்கு மணிகள் பதிக்கப்பட்ட நல்ல உடைவாள் உறை ஒன்று கொடுக்கப்பட்டால் நான் அதை விரும்பி வைத்திருப்பேன்” என்றான்.

கதவு திறக்க சரபை உள்ளே வந்தாள். இறுகிய முகமும் நிமிர்ந்த தலையுமாக வந்து சற்றே விழிசரித்து வணங்கி “அங்க நாட்டரசர் வசுஷேணருக்கு கலிங்க நாட்டு அரசியின் ஆணையுடன் வந்திருக்கிறேன்” என்றாள். திடுக்கிட்டு ஹரிதர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் மேலும் உரத்த குரலில் “அரசியை இன்றிரவு அங்க நாட்டரசர் சென்று சந்திக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை புலரியில் பெருங்கொடையாட்டு ஒன்றை நிகழ்த்தவும் பிறநாட்டு அரசர் அனைவருக்கும் முறைப்படி செய்தி அனுப்பவும் அரசி முடிவெடுத்திருக்கிறார். அதற்குரிய ஆணைகளை இன்றே பிறப்பிக்க வேண்டுமென்றும் அச்செய்தியை அரசரே கலிங்க நாட்டு அரசியிடம் அறிவிக்க வேண்டுமென்றும் கூறுகிறார்” என்றபின் தலைவணங்கி திரும்பி கதவைக் கடந்து வெளியே சென்றாள்.

திகைத்து எழுந்து கைசுட்டி “ஆணையா? அரசி அரசருக்கு ஆணை பிறப்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று உரக்க சொன்னான் சுஜாதன். “இல்லை, இது இங்குள்ள ஒரு சொல்லாட்சி மட்டுமே” என்றார் ஹரிதர். “உண்மையாகவா? மூத்தவரே, இது உண்மையா?” என்று சுஜாதன் திரும்பி கர்ணனை நோக்கி கேட்டான். கர்ணன் “ஆம்” என்றான். ஒரு கணம் கர்ணனின் விழிகளை சந்தித்ததும் சுஜாதன் அனைத்தையும் உணர்ந்துகொண்டான். அவன் முன்னால் சென்றபோது பீடம் காலில் முட்டி ஓசையுடன் உருண்டு பின்னால் விழுந்தது.

“கலிங்கத்து இழிமகள் என் மூத்தவரின் முகம் நோக்கி இச்சொற்களை சொன்னபின்னும் வாயில் கடக்க எப்படி விட்டீர்? இக்கணமே அவள் குருதியுடன் திரும்புகிறேன்” என்று வாயிலை நோக்கி சென்றான். “இளையோனே!” என்று கர்ணன் கூவினான். “தடுக்காதீர்கள் மூத்தவரே. உயிருடன் நான் இருக்கும் காலம் வரை என் மூத்தவர் முகம் நோக்கி எவரும் இழிசொல் சொல்ல நான் ஒப்பமாட்டேன். இது எனக்கு இறப்பின் தருணம். இத்தருணத்தை வீணாகக் கடந்து சென்றபின் என் மூத்தவரிடம் எச்சொல் எடுப்பேன்?” என்றான் சுஜாதன்.

“இளையோனே!” என்று உடைந்து தாழ்ந்த குரலில் கர்ணன் அழைத்தான். “இது என் ஆணை!” சுஜாதன் சிலகணங்கள் உறைந்து நின்றபின் அனைத்து தசைகளும் தளர தலைகுனிந்து “ஏன் இங்கு இவ்வண்ணம் இருக்கிறீர்கள் மூத்தவரே?” என்றான். கர்ணன் “இவ்வண்ணம் ஆயிற்று” என்றான். “ஏன், மூத்தவரே? அஸ்தினபுரியின் அரசராகிய என் தமையன் உங்கள் தோழர் மட்டுமல்ல. சுட்டுவிரல் சுட்டி நீங்கள் ஆணையிடத்தக்க ஏவலரும்கூட. அவரது ஆணைகளை குருதி கொடுத்து நிறைவேற்றும் தம்பியர் நூற்றுவர் நாங்கள் இருக்கிறோம். ஒரு சொல் சொல்லுங்கள்! கலிங்கத்தின் அரண்மனைக் கலசத்தைக் கொண்டு உங்கள் காலடியில் வைக்கிறோம். உங்கள் முன் நின்று ஒருத்தி சொல்லெடுக்க எப்படி நாங்கள் ஒப்ப முடியும்?” என்றான்.

கர்ணன் “இளையோனே, இங்கு நான் இவ்வண்ணம் இருக்க நேர்ந்துள்ளது” என்றான். “சேற்றில் சிக்கிய யானை என்று சூதர்கள் சொல்வார்கள். இப்போதுதான் அதை பார்க்கிறேன்” என்றான் சுஜாதன். கர்ணன் சட்டென்று கண்களில் துயருடன் உரக்க நகைத்தான். அதை திகைப்புடன் நோக்கிய சுஜாதன் ஒரு முடிவெடுத்தவனாக எழுந்து ஓசையெழ கதவைத் திறந்து வெளியே விரைந்தான். “எங்கு செல்கிறான்?” என்றான் கர்ணன் எழுந்து அவனைத் தொடர்ந்தபடி. சிவதர் அசையாமல் கண்களில் நீருடன் நின்றார். ஹரிதர் கர்ணனின் பின்னால் சென்றபடி “சரபையை தொடர்கிறார்…” என்றார். கைநீட்டி உரக்க “நில் இளையோனே!” என்றான் கர்ணன்.

அதை கேட்காமல் இடைநாழிக்குச் சென்று பாய்ந்த காலடிகளுடன் ஓடி படிக்கட்டின் மேல் நின்ற சுஜாதன் “யாரங்கே? அந்த கலிங்கப் பெண்ணை நிறுத்து!” என்றான். கீழே வீரர்கள் “நிற்கச் சொல்லுங்கள்… பிடியுங்கள்” என்று கூவினர். அவளை அவர்கள் இழுத்துவர முதற்படியில் நின்றபடி சுஜாதன் உரத்த குரலில் கைநீட்டி “இழிமகளே, என் தமையன் முன் நின்று நீ இன்று சொன்ன சொற்களுக்காக உன் தலைகொய்து அஸ்தினபுரிக்கு மீளவேண்டியவன் நான். தமையனின் ஆணைக்காக உன் உயிரை இப்போது அளிக்கிறேன். ஆனால் இனி ஒரு முறை நீயோ உன் அரசியோ ஒற்றை ஒருசொல் கீழ்மையுரைத்தால், அச்சொல் உங்கள் அரண்மனைக்குள் எழுந்ததே என்றாலும், அதற்காக குருதியாலும் தீயாலும் பழி தீர்ப்போம். இது அஸ்தினபுரியை ஆளும் கௌரவநூற்றுவரின் வஞ்சினம். குருகுலத்து மூதாதையர் மேல் ஆணை! எங்கள் குலதெய்வங்களின் ஆணை!” என்றான்.

27

அறியாமல் ஹரிதர் இருகைகளையும் தலைக்குமேல் கூப்பிவிட்டார். “சென்று சொல் உன் அரசியிடம்! இனி அவள் சொல்லும் ஒரேயொரு வீண்சொல்லுக்கு விலையாக கலிங்கத்து அரசகுலத்தின் இறுதிச்சொட்டுக் குருதிகூட எஞ்சாமல் கொன்று குவிப்போம். கலிங்கத்து நகர்களில் ஓர் இல்லம்கூட இல்லாமல் எரித்தழிப்போம். அந்த நகர்களில் ஒற்றைப் புல்லிதழும் எழாது செய்வோம். மேலும் பத்து தலைமுறைகளுக்கு கலிங்கம் மீது எங்கள் வஞ்சம் அணையாது நின்றிருக்கும். எண்ணியிருக்கட்டும் இனி அவள். எந்தையர் மேல் ஆணை! அறிக இங்குள்ள அனைத்து தெய்வங்களும்!”

அவன் சொற்களில் எழுந்த முழக்கம் அங்கிருந்த அத்தனை வீரர்களையும் கைகூப்பச் செய்தது. சரபை நிற்கமுடியாமல் கால்தளர்ந்து விழப்போனாள். ஒரு காவலன் அவளை பற்றிக்கொள்ள அவள் அவன் தோள்மேல் தலைசாய்த்து நினைவிழந்தாள். அவள் கீழே துவள இன்னொருவன் ஓடிவந்து பிடித்துக்கொண்டான். சுஜாதன் தன் கண்களில் வழிந்த கண்ணீரை இரு கைகளாலும் துடைத்துக்கொண்டு திரும்பி “என் சொற்கள் அங்கத்தின் அரசநெறியை மீறியவை என்றால் என்னை கழுவேற்றுக அரசே! ஆனால் இச்சொற்களை இங்கு சொல்லாமல் என் தமையன் முன் சென்று நின்றால் நான் பெரும்பழியில் அமர்ந்தவனாவேன்” என்றான்.

கர்ணன் கண்ணீரை அடக்கி உடைந்த குரலில் “நீ விழியற்ற பேரறத்தின் மைந்தன் இளையோனே. பிறிதொன்றை உன்னால் எண்ணமுடியாது” என்றபின் அறைக்குள் செல்ல திரும்பினான். “நான் நாளை புலரியில் அஸ்தினபுரிக்கு கிளம்புகிறேன் மூத்தவரே. இந்நகரில் இனி நான் இருக்கவியலாது” என்றான் சுஜாதன். “நானும் உன்னுடன் கிளம்புகிறேன் இளையோனே. நாம் சேர்ந்து செல்வோம்” என்றான் கர்ணன்.

தொடர்புடைய பதிவுகள்

குறள்முகம்

$
0
0

நண்பர் திருமூலநாதன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தைச் சேர்ந்தவர். குறியீட்டியலில் முனைவர் ஆய்வுசெய்கிறார்.. இளமையிலேயெ  திருக்குறள் கவனகம் மற்றும் அஷ்டாவதானம் செய்யும் பயிற்சி பெற்று பலநாடுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறார். சமீபத்தில் திருக்குறள் பரப்பும் தேசிய அமைப்பு ஒன்றில் பங்கெடுத்துவந்து எழுதிருக்கிறார்

1

அன்புள்ள ஜெயமோகன்,

திரு. தருண் விஜய் (உத்தரகண்டிலிருந்து தேர்வான ராஜ்யசபா உறுப்பினர்) திருக்குறளைப் பரப்பும் பணியில் (மோடி பதவியேற்ற காலம் முதல்) ஈடுபட்டு வருவதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். அவர் அண்மையில் திருக்குறளை முழுதும் படித்த 133 இளைஞர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டுவிழா நடத்த விருப்பம் தெரிவிக்க, சில வாரங்களுக்குமுன் மதுரையில் போட்டி நடந்தது. இன்று அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களை அறிவித்து மின்னஞ்சல் வந்திருந்தது. பட்டியலில் என் பெயர் முதலாவதாக இருப்பதால் தேர்வில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்று ஊகிக்கிறேன். வரும் 17ஆம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் பாராட்டுவிழா நிகழவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மின்னஞ்சலை இணைத்துள்ளேன்.

தங்கள் ஆசியைக் கோருகிறேன்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.

 

 

Thirukural-recitation-thirumulanathan

அன்புள்ள ஜெயமோகன்,

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி திருக்குறள் ஒப்பித்த 133 மாணவர்களுக்குப் பாராளுமன்றத்தில் பாராட்டுவிழா நிகழப்போவது குறித்து நான் அனுப்பிய கடிதம் உங்களுக்கு நினைவிருக்கலாம். 16ஆம் தேதி புதுதில்லி சென்று சேர்ந்தோம். அன்று மதியமே ஜனாதிபதி பிரணப் முகர்ஜியோடு போட்டோ எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ராஷ்டிரபதி பவனத்தை (அவசர அவசரமாக) சுற்றிப்பார்த்தபின் மொகலாயத்தோட்டத்தில் போட்டோ எடுத்துக்கொண்டோம். ஜனாதிபதி அரைநிமிஷ நேரமட்டில் வந்து போஸ் கொடுத்து ஓடிவிட்டார். அப்துல் கலாம் அங்கில்லையே என்று ஆதங்கப்பட்டோம். போட்டோவை இணைத்திருக்கிறேன்.

அன்று மாலை தில்லியில் கொஞ்சம் சுற்றிப்பார்த்தோம். அக்ஷர்தம் கோயிலுக்குச் சென்று ‘வாட்டர் ஷோ’ பார்த்தோம். லேசர் தொழில்நுட்பமும் வண்ணக்கலவைகளையும் இணைத்து கேனோபநிடதக் கதையொன்று நீர்விளையாட்டாகக் காட்டப்பட்டது. ஒரு சிறந்த ‘தியேட்டர் ஷோ’ என்று சொல்லலாம். ஏனோ கோயிலிலிருக்கும் உணர்வே இல்லை. நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தது என்றுமட்டும் சொல்லலாம்.

அடுத்தநாள் காலையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ளே நுழைந்தபோது லோக்சபாவில்தான் பாராட்டுவிழா என்று நம்பியிருந்த எங்களுக்கு அது நிகழவிருப்பது வளாகத்திலுள்ள வேறொரு ஹால் என்று தெரியவந்தபோது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. விழாவிற்குக் கிட்டத்தட்ட‌ 30 எம்பிக்கள் வந்தார்கள். வெவ்வேறு கட்சி எம்பிக்கள். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக போன்ற கட்சிகளின் எம்பிக்கள் இருந்தார்கள் (அதிமுக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது). தமிழக எம்பிக்களிலேயே து.ராஜா, டி.கெ.ரங்கராஜன், திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் இருந்தார்கள். அங்கும் கொஞ்சம் தமிழக அரசியல் மேடை போலவே சிலசொற்களை இவர்கள் பேசியபோது பீதியடைந்தேன். பின்பு பாஜகவின் வெங்கைய நாயுடு வழக்கமான இந்துத்துவ அரசியல் பேசியபோதுதான் பீதி பறந்து ஆசுவாசம் ஏற்பட்டது. வெளிநடப்பு செய்யவில்லை, குறுக்கே பேசவில்லை, ஆனால் ஒருவர்பின் ஒருவராக‌ அவரவர் அரசியலைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவழியாகப் புரிந்துகொண்டேன். தருண் விஜய் பேசும்போது “இந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரே மேடையில் அமர்ந்ததில்லை. திருக்குறள்தான் இதைச் சாதித்திருக்கிறது” என்று சொன்னபோது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தக் களேபரத்திற்கு நடுவில் நாங்களும் இரண்டு அதிகாரங்களை உரக்க ஒப்பித்தோம் (கடவுள் வாழ்த்து, நாடு). அதன்பிறகு பரிசளிப்பு விழாவில் முதலாவதாக அழைக்கப்பட்டேன் (போட்டியில் முதலிடம் ஆயிற்றே!). ஸ்மிருதி இரானியிடம் பரிசு வாங்கும்போது “நீ இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்சில் படிக்கிறாயா?” என்று விழிவிரிய வியப்போடு கேட்டார்கள் (ஓராண்டுக்கு முன்பு ‍‍‍stipend அதிகப்படுத்தவேண்டும் என்று எங்கள் instituteஇல் அவருக்கு எதிராகப் போராட்டம் நடந்தது). ஆமாம் என்று சொன்னவுடன் வலுவாகக் கைகுலுக்கினார்கள் (அப்பாடா!). 133 பேருக்கும் பரிசு கொடுக்கப்பட்டதன்பின்பு விழா இனிதே நிறைவுற்றது. தருண் விஜய் “ஹரித்வாரில் கங்கைக்கரையில் திருவள்ளுவருக்கு சிலைவைக்க அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது” என்று பலத்த கையொலிகளுக்கிடையில் அறிவித்தார்.

இன்னமும் இந்த நிகழ்ச்சியால் என்ன செய்ய முயன்றார்கள் என்பதில் எனக்குப் பிடிகிடைக்கவேயில்லை. இதையாவது செய்திருக்கிறார்கள் என்று மட்டும்தான் புரிந்துகொண்டிருக்கிறேன்!

நான் பெற்ற பரிசுக்கேடயத்தையும் இணைக்கிறேன்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.

 

WithRashtrapathi

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பண்பாட்டரசியலின் குரல்

$
0
0

1

 

ஜடாயு என்னும் பேரில் எழுதும் திரு சங்கரநாராயணன் சென்ற சில ஆண்டுகளில் தமிழ்ஹிந்து உள்ளிட்ட இணையதளங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. ஜடாயுவின் நிலைப்பாட்டை ’இந்துத்துவப் பண்பாட்டு அரசியல்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம். அந்நோக்கில் இன்றைய பண்பாட்டுச்சிக்கல்களை ஆராய்ந்து விரிவான ஆராய்ச்சிக்குறிப்புகளுடன் இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்

இன்றைய சூழலில் இந்து என்ற சொல்லே ஓரு வசைச்சொல்லாக ஆக்கப்பட்டுள்ளது அதன் வெறுப்பாளர்களால். இந்துத்துவம் என்னும் சொல் ஓர் அரசியல்நோக்கு. ஆனால் அதை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாத எதிர்த்தரப்பினர் அதன்மேல் வெறுப்பை மட்டுமே கொட்டி ஒரு பூதமாக அதைச் சித்தரிக்கிறார்கள். அந்த அறமற்ற, தர்க்கமற்ற பூதம்காட்டல் உண்மையில் தங்களை இந்துக்கள் என நம்பும் பெரும்பான்மையினரை இந்துத்துவ அரசியலை நோக்கித்தள்ளுவதன் வெற்றிகளை இந்துத்துவத் தரப்பினர் அடைந்து வருகிறார்கள்.

ஜடாயுவின் இக்கட்டுரைகள் இன்றைய அறிவுச்சூழலில் இந்த்துவத்தை ஒரு முக்கியமான தரப்பாக நிறுத்தும் ஆற்றல் கொண்டவை. அதை மறுத்துவிவாதிக்க விரும்பும் அறிவியக்கவாதிகளுக்கும் அதனால் அவை முக்கியமானவை. அவ்வரசியலின் ஏற்புகளும் கடும் நிராகரிப்புகளும் இவற்றில் நேரடியாக வெளிப்படுகின்றன. ஆனால் அவ்வரசியலின் நெறிப்பாடுகளும் பண்பாட்டு உள்ளடக்கமும் வரலாற்றுத்தன்மையும் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன. ஓர் அரசியல்தரப்பாக மட்டுமல்லாமல் அறிவுத்தரப்பாகவும் இந்துவத்தை விவாதிகக்காமல் நிராகரிக்க முடியாது என்பதற்கான சான்றாகவும் இந்நூல் உள்ளது

ஜடாயுவின் நோக்கு ஐந்து அடிப்படைகளால் ஆனது.

1. இந்தியா என்னும் இந்த தேசத்தின் பண்பாடும் அரசியல்கட்டுமானமும் இந்துமதம்சார்ந்த விழுமியங்களால் உருவாகி வந்தவை
2. அதன் அடிப்படை வேதப்பண்பாடு.
3. ஆனால் இந்தியாவில் உள்ள அத்தனை தொன்மையான பண்பாட்டுக்கூறுகளும் முக்கியமானவை.
4. வேதப்பண்பாடு அவற்றை தழுவி ஒன்றாக்கி வளர்த்தது, அந்த இணைவுநோக்கு அதன் வலிமை. அதுவே இந்தியாவை நிலைநிறுத்தும்விசை.
5. இந்தியாவின் பண்டைய பண்பாட்டுமேன்மை குறித்த உணர்வுதான் இந்தியாவை ஒன்றாக்கி நிறுத்தும் விசை. அதுவே சமகாலத்தில் இந்தியா சந்திக்கும் அறைகூவல்களை எதிர்கொள்ள ஒரே வழி

 

2
ஒட்டுமொத்தமாக இந்நூல் முழுக்க இத்தகைய கருத்துக்கள் வெவ்வேறு சொற்களில் வந்துகொண்டே இருக்கின்றன.ஜடாயுவின் இத்தொகுதியில் இருக்கும் இரு கட்டுரைகளை ஒரு தொடர்ச்சியாக அமைத்தால் அவரது நோக்கு குறியீட்டுரீதியாகவே புரியுமென நினைக்கிறேன்.

தலைப்புக்கட்டுரையான காலம்தோறும் நரசிங்கம் நரசிம்ம வழிபாட்டுக்கு இந்திய மரபில் உள்ள வேர்களை நோக்கிச் சென்று சிந்துசமவெளிப் பண்பாடு முதலே தொட்டுவந்து சமகாலம் வரை வருகிறது. ஓர் இறையுருவம் எப்படி பல்லாயிரமாண்டுகளாக மெல்லமெல்ல திரண்டு ஒரு தொன்மமாக ஆழ்படிமமாக ஆகி நம்மிடையே வந்து நின்றிருக்கிறது எனக்காட்டுகிறது.

இன்னொரு கட்டுரை அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும் நடராஜர் என்னும் சிலைவடிவம் இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில் எப்படி பிரபஞ்சநடனமாக, அலகிலாஆடல் என்னும் தத்துவத்தின் கலைவெளிப்பாடாக உலகுதழுவியதாக உள்ளது என விளக்குகிறது. இந்துப்பண்பாட்டின் தொன்மையின் மகத்துவமும் அதன் இன்றைய நாளைய பெறுமதியும் என இவ்விருகட்டுரைகளின் கூறுபொருளை மதிப்பிடலாம். ஜடாயுவின் நோக்கு அதுவே

நவீன அரசியலையும் இந்த மாபெரும் குறியீட்டுவெளியின் அலையாகவே ஜடாயு பார்க்கிறார். காந்தியின் கிராமராஜ்யம் குறித்த கட்டுரை எப்படி காந்தி ராமன் என்னும் அடையாளத்திலிருந்து தன் இலட்சியங்களை உருவாக்கிக்கொண்டார் என்றும் எப்படி அதை நேருவின் ஐரோப்பிய நோக்கு தோற்கடித்தது என்றும் ஆதங்கத்துடன் பேசுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்நூலை இந்து ஆழ்படிமங்களினூடாக ஒர் இந்தியக்கனவை உருவாக்கும் முயற்சி என்று சொல்லலாம். இரு உதாரணங்கள். ஒன்று திரௌபதி. அவளுடைய அறச்சீற்றத்தை ஒரு முக்கியப்படிமமாக முன்னெடுக்கிறார். இன்னொன்று ஐயப்பன். அதிலுள்ள சைவ வைணவ ஒருங்கிணைப்பை ஓர் முதன்மையாக படிமமாக முன்வைக்கிறார்

இந்தப்பார்வை குறைந்தது இருநூற்றாண்டுகளாக இந்தியாவில் பலபடிகளாக உருவாகி வந்த ஒன்று. இந்துமறுமலர்ச்சி இயக்கமான ஆரியசமாஜம் முதல் இந்திய தேசிய எழுச்சி வழியாக காந்தியம் வழியாக நவீன இந்து ஆன்மீக இயக்கங்கள் வரை அதற்கொரு வரலாற்றுப்பரிணாமம் உள்ளது. அதிலிருந்து கிளைத்து தனக்கென தீவிரநோக்குகளை உருவாக்கிக்கொண்டது இது.

ஜடாயுவின் மொழி ஆய்வாளருக்குரிய நிதானம் கொண்டது. அவரது பார்வையில் இந்துத் தொன்மைசார்ந்து மொத்த இந்தியப்பண்பாட்டையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் இணைக்கும் இயல்பே உள்ளது. எவ்வகையிலும் அதில் மேலாதிக்கத்தை உருவாக்கும் மூர்க்கமோ ஏற்றதாழ்வுகளை ஆதரிக்கும் பழமைநோக்கோ வெளிப்படவில்லை

அதேசமயம் அது பிரிவினை நோக்குகளுக்கு எதிரான அழுத்தமான நிலைப்பாடு எடுக்கிறது. ஆகவே சைவ ஆகமங்கள் வேதங்களுக்கு அயலானவை போன்ற ஆய்வடிப்படை அற்ற வெற்றுக்கூற்றுகளை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்

தனிப்பட்டமுறையில் லா.ச.ராவிலிருந்து தொடங்கி லலிதா சகஸ்ரநாமத்தை விவாதித்துச் செல்லும் சிறிய கட்டுரை முக்கியமான ஓர் அனுபவம் என எனக்குப்பட்டது.

இங்குள்ள அரசியல்சொல்லாடலில் எதிரி என ஒன்றை உருவகித்தால் அதை அனைத்து எதிர்க்குணங்களுக்கும் அடையாளமாக்கி வசைபாடுதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சமநிலையுடன் எதிர்தரப்பை நோக்குவதென்பது ஜனநாயக அரசியலின் அடிப்படைகளில் ஒன்று. ஜடாயுவின் இந்நூல் அத்தகைய நோக்கில் இந்த்துவ பண்பாட்டரசியலை நோக்குபவர்களின் விரிவான விவாதத்துக்குரியது.

இந்நூல்மீதான என் விமர்சனங்கள் என்ன?ஒன்று பரிசீலனை அற்ற கண்மூடித்தனமான பழமைவழிபாட்டின் வீழ்ச்சிகளை சந்தித்த ஒரு தேசம் நாம். அதன்மீதான கண்டனம் இந்நூலில் இல்லை.இந்துத்துவம் என்று இந்நூல் சொல்லும் நோக்கு பன்மைத்தன்மையை வலியுறுத்துவது. ஆனால் அரசியல்களத்தில் ஒற்றைப்படைக்குரலுக்காக எழும் மூர்க்கம் இத்தரப்பில் இன்றுள்ளது. அதையும் கணக்கில்கொள்ளாமல் இதை வாசிக்கமுடியாது.

இரண்டு, இஸ்லாமும் கிறித்தவமும் நவீன இந்தியாவின் நெசவின் ஊடுபாவுகளில் கலந்தவை. இந்நூல் அவற்றை அன்னியசக்திகளாக நிறுத்தி ஒரு விமர்சன கோணத்திலேயே அணுகிறது. சமண, பௌத்த மதங்கள் கூட இதில் பேசப்படவில்லை. இந்துமதத்தின் அனைத்துத் தரப்புகளையும் தழுவும் மனவிரிவு அதில் இந்த மதங்களை உள்ளடக்க மேலும் விரியவில்லை. மதங்கள் நம்பிக்கைகளால் ஆனவை.நம்பிக்கைகளை மறுப்பது அவற்றின் இருப்பை நிராகரிப்பதே.

அழகிய வடிவில் தெளிவான அச்சில் அமைக்கப்பட்டிருக்கிறது இச்சிறிய நூல்.

 

 

காலந்தோறும் நரசிங்கம். ஜடாயு. தடம் பிரசுரம். சென்னை

 

தொடர்புடைய பதிவுகள்

புதியவாசகர் சந்திப்புகள்,ஊட்டி,ஈரோடு

$
0
0

அன்புள்ள நண்பர்களுக்கு

புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இரு நிகழ்ச்சிகள். ஊட்டி, ஈரோடு

ஊட்டி

முதலில் கடிதம்போட்டவர்களுக்கான நிகழ்ச்சி ஊட்டியில் பிப்ரவரி 13, 14 [சனி ஞாயிறு] நாட்களில் நிகழும்.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும்.

இடம்

நாராயணகுருகுலம்
ஃபெர்ன் ஹில்
மஞ்சணகொரே கிராமம்
ஊட்டி

தொடர்புக்கு
நிர்மால்யா, 09486928998
விஜய்சூரியன் 9965846999

[ஊட்டியில் குளிர் இருக்குமென்பதனால் ஸ்வெட்டர் மப்ளர் போன்றவை கொண்டுவரவும். போர்வை, மெத்தை, ஹீட்டர் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இருந்தாலும் ஒரு சால்வையும் உடனிருப்பது நல்லது]

==========================================================================================

ஈரோடு

இரண்டாவதாக எழுதியவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஈரோடு சந்திப்பு நிகழ்ச்சி ஒருவராம் முன்னதாக பிப்ரவரி 6,7 [சனி ஞாயிறு] நாட்களில் நடக்கும்

சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும்.

இடம்

பெத்தாம்பாளையம்
காஞ்சிகோயில் அருகே
ஈரோடு

தொடர்புக்கு : கிருஷ்ணன் 9865916970

=========================================================================

இரு நிகழ்ச்சிகளுக்கும் வரவிருப்பவர்களுக்கு தனிப்பட்டமுறையில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்னஞ்சல்கள் கிடைக்காதவர்கள் b.meenambigai@gmail.com என்னும் மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளலாம்

கிடைத்தவர்கள் அம்மின்னஞ்சலில் வருகையை உறுதிசெய்து பதில் அளிக்கவேண்டும். இருநாட்களில் வருகையுறுதி செய்யப்படவில்லை என்றால் வராதவர் என்று கணக்கிடப்பட்டு அந்த இடம் பிறருக்கு அளிக்கப்படும்

========================================================================================

விதிகள்

1அழைக்கப்பட்டவர்களுக்கு தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. முன்னரே தெரிவிக்கப்பட்டு, அழைப்பு அனுப்பபடாதவர்களை உடனழைத்துவரக்கூடாது.

2 இலக்கியம் அறியாத நண்பர்களை இதில் சேர்த்துக்கொள்ளவேண்டாம். ஆர்வமற்ற நண்பர்கள் சந்திப்பில் பெரும் சிக்கல்களை உருவாக்குவார்கள்

3 சந்திப்பின் பொருட்டே இவ்வேற்பாடுகள். ஆகவே சந்திப்பின் எல்லா அமர்வுகளிலும் பங்கெடுத்தாகவேண்டும். சுற்றிப்பார்ப்பதெல்லாம் சந்திப்பு முடிந்தபின்னர் தனியாகச் செய்துகொள்ளலாம். [எங்கள் ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு ஓர் இன்பச்சுற்றுலாவாக இதை ஆக்குவது எங்களுக்குச் சங்கடம் அளிப்பது இல்லையா?]

4 முன்னரே வருகையுறுதிசெய்த பின்பு வராமலிருப்பதென்பது வரவிரும்பும் ஒருவரின் வாய்ப்பை பறிப்பதுடன் அதை கணக்கிட்டு நாங்கள் செய்துவைக்கும் ஏற்பாடுகளையும் வீணடித்து இழப்பு அளிப்பது. ஆகவேஒருமுறை வருகை தவறியவர்கள் எக்காரணம் கொண்டும் எங்கள் எந்த அமர்விலும் பின்னர் சேர்க்கப்படமாட்டார்கள் . உரிய காரணத்தால் வரமுடியவில்லை என்றால் முன்னரே அறிவிக்கவேண்டும்

5 அரங்கு நிகழும் இருநாட்களிலும் மது அருந்துவது அனுமதிக்கப்படமாட்டாது

6 அரங்கில் இறுக்கமான விதிகள் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள், சீண்டல்கள் அனுமதிக்கப்படாது

  1. உணவுக்கும்தங்குமிடத்துக்கும் பணம் அளிக்கவேண்டியதில்லை. நன்கொடையாக அளிக்கவிரும்புபவர்கள் அளிக்கலாம்.

8 எளிமையான வசதிகளே இருக்கும். சேர்ந்து தங்குவதுபோல. பெண்களுக்கு தனிவசதி உண்டு.

இது முறைப்படுத்தப்பட்ட அரங்கு அல்ல. ஆகவே தயாரிப்புக்கள் ஏதும் தேவையில்லை. சந்திப்பில் பொதுவான உரையாடல்களுக்கு மேலதிகமாக வருபவர்கள் தங்கள் இலக்கிய வாசிப்பை, இலக்கிய எழுத்துமுறைகளை முன்னெடுப்பதைப்பற்றி பேசலாம்.

தங்கள் எழுத்துக்களை விவாதிக்க விரும்புபவர்கள் அவற்றில் முக்கியமான மிகச்சிறிய படைப்புகளை ஓர் இருபது பிரதிகள் தட்டச்சுப்பிரதி எடுத்துக்கொண்டுவந்தால் நல்லது

வருக

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 5

அஸ்தினபுரியின் கோட்டை முகப்பின் காவல் மாடங்களில் பறந்த கொடிகள் தொலைவில் தெரிந்ததுமே உளக்கிளர்ச்சியுடன் தேர்த்தட்டில் எழுந்த கர்ணன் இரு கைகளையும் பறக்க விழையும் சிறகுகள் போல் விரித்தான். தேர்விரைவில் அவனது ஆடைகளும் குழலும் எழுந்து பறக்க அவன் பருந்து போல அக்கோட்டை நோக்கி மிதந்து செல்வதாக தோன்றியது. தேரோட்டி திரும்பி “இன்னும் தொலைவிருக்கிறது அரசே” என்றான். “ஆம், விரைந்து செல்” என்றான் கர்ணன்.

அவனுக்குப் பின்னால் பிறிதொரு தேரில் விரைந்து வந்த சுஜாதன் உரத்த குரலில் “அஸ்தினபுரி! அஸ்தினபுரி!” என்று கூவினான். கர்ணன் திரும்பி சிரித்தபடி “முதன் முறையாக பார்க்கிறாய் போல் உள்ளதே?” என்றான். அந்தப் பகடியை புரிந்து கொள்ளாமல் அவன் கை நீட்டி “ஆம் மூத்தவரே, முதன்முறையாக இந்நகரைவிட்டு வெளியேறி இன்னொரு நாட்டுக்குச் சென்று திரும்பி வருகிறேன். பிறிது எந்த ஊருக்குள் நுழைவதைவிடவும் உள்ளம் கிளர்கிறது. என் நகரம் !என் மூதாதையர் நகரம்!” என்றான்.

கர்ணன் சிரித்தபடி “மறுமுறையும் இந்நகரைவிட்டு நீ விலகப் போவதில்லையா?” என்றான். “இவ்வாறு திரும்பி வரும் உவகைக்காகவே இனி ஒவ்வொரு மாதமும் வெளியேறிச் செல்லலாம் என்று தோன்றுகிறது” என்றான் சுஜாதன். “அஸ்தினபுரியின் கோட்டை ஓர் அன்னைப்பன்றி போலிருக்கிறது. நாமெல்லாம் அதன் பிள்ளைகள்…” என்றான். “நல்ல ஒப்புமை. ஆனால் முன்னரே சூதர்கள் பாடிவிட்டார்கள்” என்றான். “பாடிவிட்டார்களா? நான் சொல்லப்போவதை முன்னரே அறிந்த ஞானிகள் அவர்கள்.”

இருபுறமும் குறுங்கிளை படர்மரங்கள் நிரைவகுத்து பின்னால் சென்றன. சகடங்கள் பட்டுத் தெறித்த சிறுகூழாங்கற்கள் பின்னால் வந்த தேரின் சகடங்களிலும் குடங்களிலும் பட்டு ஓசையெழுப்பின. குதிரை க்குளம்படிகளின் தாளம் இருபுறமும் கிளைகோத்துச் செறிந்திருந்த குறுங்காட்டின் மரங்களுக்குள் இருந்த இருண்ட ஆழத்தில் எதிரொலித்து வந்து சூழ்ந்தது. புலரியின் குளிர்க்காற்று மெல்லிய நீர்த்துளிகளுடன் வந்து உடலை சிலிர்க்க வைத்தது. அதில் இரவெல்லாம் இலைகள் மூச்சுவிட்டமையின் நீராவி இருந்தது.

அஸ்தினபுரியின் கோட்டைவிளிம்புக்கு அப்பால் வானத்தில் உள்ளொளி பரவத் தொடங்கியது. பறவைகள் முகில்கள் மீது ஏறி துழாவின. குறுங்காடுகளுக்குள் துயில் எழுந்த பறவைகள் தேனடையிலிருந்து தேனீக்கள் போல் எழுந்து வானில் சேர்ந்தோசையிட்டு சுழன்று இறங்கி மேலே எழுந்தமைந்தன. தொலைவில் எங்கோ இரு யானைகள் மாறி மாறி பிளிறிக் கொண்டன. சாலையை குறுநரி ஒன்று கடக்க முயன்று ஓசைகளைக் கேட்டு உடல்குறுக்கி பின்வாங்கியது. அஸ்தினபுரியின் கோட்டை மிதந்து அணுகி வந்தது.

புலரியில் கோட்டை முகவாயில் திறந்ததும் உள்ளே செல்வதற்காக நின்றிருந்த பொதிகலங்களின் நீண்ட நிரை சற்று முன்புதான் தலைபுகத் தொடங்கியிருந்தது. வால்நுனி நெளிந்தது. வண்டிக்காரர்கள் சவுக்கைச் சுழற்ற காளைகள் தலையசைத்தன. வண்டிகள் மணி குலுங்க குடங்களில் சகடங்கள் அறைபட உயிர்கொண்டு முனகி இழுபட்டு குளம்புகள் மிதிபடும் ஓசை சூழ கோட்டையின் திறந்த வாய்க்குள் நுழைந்தன. அத்திரிகள் பெருமூச்சுவிட்டு பிடரி சிலிர்த்தன. சாலையில் புதுச்சாணியும் சிறுநீரும் கலந்த தழைப்புமணம் நிறைந்திருந்தது.

கோட்டைவாயிலுக்குமேல் இருபுறமும் எழுந்த காவல்மாடங்களில் ஒன்றின் உச்சியில் இருந்த தொலைநோக்குக் காவலன் கர்ணனின் கொடியைக் கண்டு தன் கையிலிருந்த கொம்பை முழக்க கோட்டைக் காவல் முகடுகள் அனைத்தும் உயிர்கொண்டன. வலப்பக்கம் இருந்த பெருமுரசம் விம்மத்தொடங்கியது. கோட்டையின் கொடிமரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிக்கு இருபக்கமும் முன்னரே இருந்த திருதராஷ்டிரரின் யானைக்கொடிக்கும் துரியோதனனின் படவரவுக் கொடிக்கும் துச்சாதனனின் காகக்கொடிக்கும் அருகே கர்ணனின் யானைச்சங்கிலிக் கொடி படபடத்து மேலேறியது.

கூடிநின்றவர்கள் அனைவரும் அதைக் கண்டதுமே கர்ணன் வருவதை உணர்ந்துகொள்ள எட்டு நிரைகளாக நின்ற பொதிவண்டிகளும் அத்திரிகளும் பால்குடங்கள் ஏந்திய ஆயர்சிறுசாகாடுகளும் காவலர் புரவிநிரைகளும் பரபரப்பு கொண்டன. கர்ணன் அணுகுவதற்குள்ளாகவே கோட்டைமுகப்பெங்கும் வாழ்த்தொலிகள் பெருகிச் சூழ்ந்தன. “வெய்யோன் திருமகன் வாழ்க! வறனுறல் அறியா வார்தடக்கை வாழ்க! செந்திரு பொலிந்த செய்யோன் வாழ்க! மாமுனிவர் தொழும் மணிமுடியன் வாழ்க! அவன் பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் வாழ்க!” என்று குரல்கள் எழுந்து அலைந்த காற்றில் பட்டுத்திரை என நெளிந்தன.

இருபுறமும் சகடங்கள் விலகி வழிவிட நடுவே கர்ணனின் தேர் நுழைந்ததும் அவ்வாழ்த்தோசை பெருகி கோட்டைகளில் அறைபட்டு திரும்பி வந்தது. “கோட்டையே வாழ்த்துகிறது போலுள்ளது மூத்தவரே” என்று சுஜாதன் கூவினான். தேர்த்தட்டில் நிற்க அவனால் முடியவில்லை. இருகைகளையும் விரித்து குதித்து “வாழ்க! அங்க நாட்டரசர் வாழ்க! கௌரவமூத்தோன் வாழ்க!” என்று கூவினான். கர்ணன் திரும்பி “மூடா, நீ இளவரசன். நீ அவ்வண்ணம் வாழ்த்துரைக்கலாகாது” என்றான்.

“வாழ்த்துரைப்பேன். நான் இளவரசன் அல்ல, அஸ்தினபுரியின் குடிகளில் ஒருவன்” என்று கூவிய சுஜாதன் மேலும் பேரொலியுடன் “மூத்தவர் வாழ்க! அங்க நாட்டரசர் வாழ்க! கர்ணன் வாழ்க!” என்றான். கர்ணன் சலிப்புடன் தலையசைத்தபடி திரும்பிக் கொண்டான். சுஜாதன் சாலையோரமாக நின்றவர்களை நோக்கி கைவீசி “அங்கம் ஆளும் அரசர் வாழ்க! கலிங்கம்கொண்ட காவலன் வாழ்க!” என்று கூவி மேலும் கூவும்படி அவர்களிடம் கைகாட்டி துள்ளிக்குதித்தான்.

கோட்டையிலிருந்து முதன்மைக் காவலர் பத்ரசேனர் ஏழு படைவீரர்களுடன் வரவேற்கும் பொருட்டு வெண்புரவிகளில் ஏறி அவனை நோக்கி வந்தார். அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியேந்தி முதலில் வந்த வீரன் கர்ணனின் தேரை அணுகியதும் நின்று, கொடியை மண்நோக்கித் தாழ்த்தி தலைவணங்கி உரத்த குரலில் “அங்கநாட்டரசை அஸ்தினபுரி வணங்கி வரவேற்கிறது!” என்றான். கர்ணன் தலைவணங்க பின்னால் வந்த இரு வீரர்களும் கொம்புகளை முழக்கி அவனுக்கு வரவேற்பளித்தனர். பத்ரசேனர் “தங்கள் வருகை நகரை மகிழ்விக்கிறது. தங்களை இந்நகரின் கொடிகள் வாழ்த்துகின்றன” என்றார்.

இருபுறமும் அஸ்தினபுரியின் வீரர்கள் புரவிகளில் பெருநடையிட்டு வர கர்ணனின் தேர் அஸ்தினபுரியின் கோட்டைக்குள் நுழைந்தது. கோட்டை வீரர் அனைவரும் இருபுறமும் செறிந்து சிறு உப்பரிகைகளிலும் காவல் மாடங்களிலும் நெரித்து முண்டியடித்தனர். கைவீசி துள்ளி உரத்த குரலில் அவனை வாழ்த்தி ஆர்ப்பரித்தனர். மேலாடைகளை வீசியும் படைக்கலங்களை தூக்கி எறிந்து பற்றியும் களிக் குதித்தாடினர்.

அவன் நகருக்குள் நுழைந்ததும் பெரு முரசின் ஒலியாலேயே அவன் வருகையை அறிந்துகொண்டிருந்த நகர் மக்கள் சாலையின் இருபுறங்களிலும் கூடி அவனை வாழ்த்தி கூவினர். “கதிர்முகம் கொண்ட காவலன் வாழ்க! வெய்யோன் மைந்தன் வாழ்க! வெற்றித்திரு அமைந்த வில்லவன் வாழ்க! கொள்வதறியா கொடையன் வாழ்க! வெல்வோர் இல்லா வெம்மையன் வாழ்க!” வாழ்த்தொலிகளும் இருபுறமிருந்து அள்ளி வீசப்பட்ட மலர்களும் செம்மஞ்சள் அரிசியும் கலந்து உருவான மங்கலத்திரை ஒன்றை உடலால் கிழித்தபடி கர்ணன் முன் சென்றான்.

சுஜாதன் தேரை அருகே செலுத்தி திரும்பி கைவீசி பற்கள் ஒளிர கூச்சலிட்டான். “இந்நகரில் இத்தனை பெரிய வரவேற்பு எவருக்கும் அளிக்கப்படுவதில்லை மூத்தவரே. அரசர் கூட அடுத்தபடியாகவே மகிழ்ந்து ஏற்கப்படுகிறார்.” கர்ணன் “அது என் நல்லூழ் இளவலே” என்றான். இருபுறமும் நோக்கி மூத்தவரையும் முதுபெண்டிரையும் தலைவணங்கியும் இளையோரை நோக்கி புன்னகைத்து கைவீசியும் தேரில் சென்றான். எதிரே உப்பரிகை ஒன்றில் செறிந்து நின்ற முதியவர்களில் ஒருத்தி கைசுட்டி “பொற்கவசம்! பொலிமணிக் குண்டலம்!” என்றாள்.

அனைத்து விழிகளிலும் கண்ணீரும் பேருவகையும் நிறைந்திருந்தன. “மார்பணிக்கவசம்! மணியொளிக் குண்டலங்கள்! மண்ணில் இறங்கிய கதிரவன் மைந்தன்! தெய்வங்களே, விரிவான் போதாதென்று விழிகொண்டு மானுடனாக வந்தீர்கள்!” ஒரு முதியவர் “வீதியில் குலதெய்வமெழுந்தது போல்!” என்று கைவீசி கூவினார். அத்தனைபேரும் களியுவகையில் தெய்வமெழுந்தவர்கள் போலிருந்தனர். “வெய்யோனொளி அவன் மேனியின் விரிசோதியில் மறையக் கண்டேன். மையோ மரகதமோ மழைமுகிலோ அய்யோ இவன் உடல் என நின்று கலுழ்ந்தேன்.”

சாலை முகப்பில் நின்ற இளம்சூதன் மேலும் பாடினான் “அருணன் ஓட்டும் தேரில் நாளவன் எழுகின்றான்! இதோ ஒரு மானுடன் உடலொளியால் ஒளி கொள்கின்றது காலை. பொலிவுற்றன நமது பொல்லென்ற தெருக்கள்” அவனும் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தான்.. “நாட்டோரே நலத்தோரே கேளுங்கள் இதை! அவன் நகர்நுழைந்த நாள் கருக்கிருட்டுக்கு முன்னரே எழுந்தது கதிர். கண்ணிலாத இளம்சூதன் அவன் கவசகுண்டலங்களை கண்டான். அவன் காலடிபட்ட இடங்களில் மலர்கள் விரிந்தன. அவன் நிழல்கொண்டு சுனைகள் ஒளிகொண்டன.”

அரண்மனையின் உள்கோட்டை அருகே தேர்கள் நின்றபோது கர்ணன் இயல்பாக திரும்பிப் பார்க்க சுஜாதன் அழுதுகொண்டிருந்தான். “என்ன? இளையோனே, என்ன ஆயிற்று?” என்றான் கர்ணன். “மூத்தவரே, நாங்கள் எளியவர்கள். எங்கள் தந்தையைப் போலவே எங்கோ ஓர் விழியின்மை கொண்டவர்கள். இத்தனை எளியமாந்தர் எல்லாம் நோக்கும் அந்த மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் நாங்கள் காணக்கூடவில்லை. எங்கள் விழியின்மையால் மிகையென ஏதும் செய்து தங்கள் மாண்புக்கு பிழை இயற்றுவோமென்றால் எங்களை பொறுத்தருள்க!” என்றான்.

“மூடா” என்று கர்ணன் கையோங்கினான். “சூதர் பாடல்களால் ஆனது இப்பொதுமக்களின் உள்ளம். மக்களின் மிகையுணர்ச்சிப் பெருக்கு அத்தனை அரசர்களாலும் உருவாக்கி நிலை நிறுத்தப்படுவது. அரியணை அதன் மேல்தான் அமைந்துள்ளது. நீ அரசன். அவர்களில் ஒருவராக நின்று அவ்வுணர்ச்சிகளை நம்பவேண்டியவன் அல்ல.” சுஜாதன் விசும்பினான். “நீ என் இளவல். நாளை உன்னைப் பற்றியும் இதைப் போலவே புகழ்மொழிகள் எடுப்பார்கள். அதை நீயே நம்பத் தொடங்கினால் அங்கே உன் அழிவு தொடங்குகிறது” என்றான் கர்ணன். “மன்னனை மக்கள் தெய்வமென எண்ணவேண்டும். அவனோ தன்னை மானுடன் என்றே கொள்ளவேண்டும் என்பது நூல்நெறி.”

“இல்லை மூத்தவரே, அத்தனை விழிகளையும் மாறி மாறி நோக்கிக் கொண்டிருந்தேன். அவ்விழிகளில் ஒன்றை சில கணங்கள் பெற்றால் அந்தப் பொற்கவசத்தையும் குண்டலத்தையும் நான் பார்த்திருப்பேன் என்று எண்ணினேன். சின்னஞ்சிறுவனாக உங்கள் கால்களைப் பற்றி என்னை உங்கள் தோள்களில் தூக்க வேண்டுமென்று எண்ணியதெல்லாம் எனக்கு நினைவு உள்ளது. அன்று பெற்ற அணுக்கத்தால்தான் உங்களை அறியாதிருக்கிறேனா?” என்றான் சுஜாதன். கர்ணன் கனிந்து “மூடா, உன்னைவிட என்னை அறிந்தவர் யாருளார்?” என்றான். சுஜாதன் அழுகை நிறைந்த உதடுகளை இறுக்கியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.

கோட்டை முகப்பில் நின்றிருந்த சிற்றமைச்சர் ஸ்ரீகரர் இரு காவலர் தலைவர்கள் துணைவர வந்து அவனுக்கு தலைவணங்கி “வருக அங்க நாட்டரசே! தங்களுக்கு முழுமைப் படையணி அமைத்து வரவேற்பளிக்க வேண்டுமென்று அரசரின் ஆணை” என்றார். கர்ணன் “என்ன இதெல்லாம்?” என்றான். “இங்கிருந்து செல்கையில் தாங்கள் எங்கள் குடிமூத்தவர். திரும்பி வருகையில் அங்க நாட்டின் அரசர்” என்றார் அமைச்சர். கர்ணன் நகைத்து “இங்கிருந்து செல்லும்போது நீங்கள் அமைச்சர் கனகரின் மைந்தர். திரும்பி வரும்போது கோட்டைக் காவல் சிற்றமைச்சர்,  இல்லையா?” என்றான்.

ஸ்ரீகரர் இயல்படைந்து உரக்க நகைத்து “ஆமாம். இப்போது நான் மார்பாரமும் தலையணியும் சூடும் அமைச்சர். என்னாலே அதை அவ்வப்போது நம்பமுடியவில்லை மூத்தவரே” என்று தலைவணங்கி “என்னை வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றார். கர்ணன் அவர் தோளைப் பற்றி இழுத்து உலுக்கி “என் அறைக்கு வாரும்! அந்தத் தலைப்பாகையை எடுத்து வீசி தலையில் ஒரு அறைவிடுகிறேன். அதுதான் என் வாழ்த்து” என்றான். “அது என் நல்லூழ். தங்கள் அடிகளை வாங்கித்தான் நான் வளர்ந்தேன்” என்றபின் திரும்பி “இவர்கள் படைத்தலைவர்கள். இவர்களை தெரிகிறதா?” என்றார் ஸ்ரீகரர்.

கர்ணன் “ஆம், இவன் படைத்தலைவர் வஜ்ரசேனரின் மைந்தனல்லவா?” என்றான். “உக்ரசேனன்… வளர்ந்துவிட்டாய்.” உக்ரசேனன் “என்னை முன்பு போல் நாசிகன் என்றே அழையுங்கள்” என்றான். கர்ணன் அவன் மூக்கைப் பற்றி இழுத்து அருகே கொண்டு வந்து தன் நீள்கரங்களால் அவன் தோளை வளைத்து உடலுடன் சேர்த்துக் கொண்டான். “சிறு வயதில் இவன் மூக்கை பற்றி இழுக்காமல் ஒரு நாள் கூட சென்றதில்லை” என்றான். “இவன் தாய் கருவுற்றிருக்கையில் பறவைக்கரசர் ஆலயத்தில் அன்றாடம் வழிபட்டாள் என்பது சூதர் மொழி.”

இன்னொரு படைத்தலைவன் “என்னை நீங்கள் காலகன் என்று அழைப்பதுண்டு” என்றான். கர்ணன் நகைத்து “ஆம். ஆனால் ஒன்றரை வருடங்களில் உனது கரிய நிறம் சற்று மட்டுப்பட்டிருக்கிறது” என்றான். அமைச்சர் சிரித்து “மட்டுப்பட்டிருக்கும். ஏனெனில் இவனது துணைவி பொன்னிறம் கொண்டவள். இரும்பையும் பொன்னையும் உரசினால் இரும்பு சற்று ஒளி கொள்ளும் அல்லவா?” என்றார். கர்ணன் “துணைவி சற்று கருமை கொண்டிருக்கிறாளா?” என்றான்.

அவர் நகைத்து “கருவுற்றிருக்கிறாள்” என்றார். “நன்று! இளைய காலகன் ஒருவன் மண்ணுக்கு வரட்டும்” என்றான் கர்ணன். அவர்கள் மூவருமே கர்ணனின் உடலுடன் ஒட்டிக் கொண்டு நிற்க விழைந்தனர். இருவர் தோளில் கைகளை அவன் போட்டுக் கொண்டதும் அமைச்சர் அவன் கை விரல்களை தன் கைகளால் பற்றிக் கொண்டு “வருக, அரண்மனை சித்தமாக உள்ளது மூத்தவரே” என்றார். “ஆம், வரிசைமுறைமைகளை ஏற்றாகவேண்டும்” என்றான் சுஜாதன். “எனக்காகவும் வாள்கள் எழுந்தமையப் போகின்றன.” பேசியபடியே அவன் மிக இயல்பாக நாசிகனின் மேலிருந்த கையை விலக்கி தன்மேல் போட்டுக்கொண்டான்.

அரண்மனையின் விரிந்த முகமுற்றத்தில் பன்னிரு நீள்நிரைகளாக படைக்கலங்களை ஏந்திய அணிவீரர்கள் சீர்கொண்டு நின்றனர். நன்கு தீட்டப்பட்ட வாள்களும் வேல்முனைகளும் புலராத காலை ஒளியில் நீர்த்துளிகள் போல் ஒளிவிட்டன. கர்ணன் முற்றத்தை நோக்கி நடக்கத் தொடங்கியதும் முகப்பிலிருந்து முரசேந்திகளும் முழவுகூவிகளும் முறையிசை எழுப்ப படைவீரர்களின் நிரை ஆயிரங்காலட்டை போல சீராக நடந்து முன்னால் வந்தது.

ஒவ்வொரு நிரையிலும் பதினெட்டு வீரர்கள் இருந்தனர். முரசு எழுந்து உச்சிக்குச் சென்று அமைய அவர்கள் தங்கள் படைக்கலங்களை மண் நோக்கித் தாழ்த்தி கர்ணனை வணங்கினர். முன்னிரைத் தலைமையாக வந்த படைநிமித்திகன் “அங்கநாட்டரசை, அஸ்தினபுரியின் முதன்மைப்படைத்தலைவரை, தலைவணங்கி வரவேற்கிறது படை. வெல்க! வெல்க! வெல்க!” என்றான். படை ஒரே குரலில் “வெற்றி பொலிக!” என்றது.

அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி புன்னகைத்தபடி கர்ணன் நடுவே நடந்து சென்றான். பெரும்பாலானவர்கள் அவனை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தனர். ஒவ்வொரு விழியை சந்திக்கும்போதும் அவன் புன்னகையால் நலம் உசாவ அவர்கள் தங்கள் உவகையை அறிவித்தனர். அரண்மனைப் படிகளில் ஏறும்போது நாசிகனும் காலகனும் தலைவணங்கி “தாங்கள் ஓய்வெடுங்கள் மூத்தவரே. தாங்கள் ஆணையிட்டால் மாலை தங்கள் அறைக்கு வந்து சில கணங்கள் சொல்லாட விழைகிறோம்” என்றனர். “இதற்கென்ன ஒப்புதல்? எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம்” என்றபின் கர்ணன் காலகனிடம் “அடேய் கரியவனே, உன் துணைவியை அழைத்துக் கொண்டு வா” என்றான்.

“ஆம். அதற்காகத்தான் நான் கேட்டேன்” என்றான் காலகன். “நான் எப்போதும் தங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன் என அவளுக்கு வியப்பு. தங்களைப் பார்த்ததே இல்லை அவள். ஆகவே சற்று அச்சமும் கொண்டிருக்கிறாள். ஒருமுறை வந்து பார், அச்சமே தேவையில்லை. மலர்களில் மிகமென்மையானதுகூட கதிரவனுக்கு முகம்காட்டவே முண்டியடிக்கிறது என்றேன்” என்றான். கர்ணன் “சூதர்சொல் உன்னுள்ளும் புகுந்துவிட்டது…” என்றான். “இப்படியே போனால் நானே எனக்கு வாழ்த்துரை கூவத் தொடங்கிவிடுவேன் என அஞ்சுகிறேன்.” காலகன் “அப்படியில்லை அரசே. அவர்களென்ன அத்தனை பேரையுமா பாடிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான்.

நாசிகன் “எனக்கும் பெண் பார்த்திருக்கிறார்கள் மூத்தவரே” என்றான். “உனக்கா? இன்னமும் மீசையே முளைக்கவில்லையே?” என்றான். “அதற்கென்ன? இதோ ஸ்ரீகரர் இருக்கிறார். இப்பிறப்பில் இவருக்கு மீசையெனும் அணி இல்லை என்பது தெளிவு… மணம்கொண்டாரே?” என்றான் நாசிகன். “மூடா, அந்தணருக்கு பாயில் எழுந்தமர்கையிலேயே மணம் பேசிவிடுவார்கள்” என்றான் சுஜாதன். “மீசை நன்கு முளைத்த பின்னும் நான் இன்னும் மணம் புரிந்து கொள்ளவில்லை.”

“அதை நான் உன் தமையனிடம் சொல்கிறேன்” என்றான் கர்ணன். நாசிகன் “என் துணைவி சுதுத்ரியின் கரையை சார்ந்தவள். அங்கு ஊர்க்காவல் செய்யும் ஷத்ரிய குடியாகிய பஞ்சதண்டத்தில் பிறந்தவள். மீனுணவை சமைப்பதில் திறன் கொண்டவள் என்கிறார்கள்” என்றான். “பிறகென்ன? கங்கைக்கரையிலேயே உனக்கொரு காவல் மாடம் அமைக்கவேண்டியதுதான்” என்றபின் கர்ணன் அவன் முன்மயிரைப் பிடித்து தலையை நாலைந்துமுறை உலுக்கிவிட்டு உள்ளே சென்றான்.

சுஜாதன் அவன் பின்னால் ஏறிவந்து “மூத்தவரே, நான் அந்த முகங்களையே எண்ணிக் கொண்டிருக்கிறேன். அஸ்தினபுரியில் தங்கள் கவச குண்டலங்களைக் காணாத ஒரு விழி கூட இல்லை” என்றான். “உளறாதே” என்றான் கர்ணன். “ஆம், நான் பார்க்கிறேன். ஒவ்வொரு விழியும் உங்களைப் பார்த்ததுமே ஒளி கொள்கின்றன” என்றார் ஸ்ரீகரர். “உண்மையிலேயே படை வீரர்கள் தங்கள் கவசகுண்டலங்களை பார்த்ததாகச் சொல்கிறார்கள்.” கர்ணன் புன்னகை பூத்தபடி “அது நன்று” என்றான்.

அமைச்சர் கனகர் அமைச்சுமாளிகை முகப்பிலிருந்து அவனை நோக்கி விரைந்து வந்து தலைவணங்கி “பேரமைச்சர் விதுரர் தங்களுக்காக காத்திருக்கிறார் அங்கநாட்டரசே” என்றார். கர்ணன் “ஆம், நான் முதலில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னரே ஓய்வெடுக்க வேண்டும்” என்றான். “தாங்கள் முன்புலரியில் வரக்கூடும் என்று கருக்கிருட்டுக்கு முன்னாலேயே வந்து அமர்ந்திருக்கிறார்” என்றார் கனகர். “நான் வரும் செய்தியை பறவைத் தூதாக அனுப்பினேனே!” கனகர் “ஆம், வந்தது. பின்புலரியில்தான் வருவீர்கள் என்று உறுதியாக தெரியவும் செய்தது. ஆனால் அவரால் அங்கு தன் அறையில் இருக்க முடியவில்லை” என்றார். பேசியபடியே அவர் மகனை நோக்கி முறைக்க அவர் உடல்குன்றி தலைதாழ்த்தி பின்வாங்கி முற்றத்திற்கு சென்றார்.

கர்ணன் இடைநாழியில் நடந்து இரு பெரும் தூண்களால் தாங்கப்பட்ட அமைச்சு மாளிகையின் முகப்புக்கு சென்றான். அலுவல் கூடத்திற்குள் பீதர்களின் பளிங்கு உருளைகளுக்குள் நெய்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செவ்வொளி மரக்கூரையில் அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. சுவர்களில் நிழல்கள் நடனமிட்டன. கூடத்தில் அனைத்து இருக்கைகளும் ஒழிந்துகிடந்தன. ஒரு பீடத்தில் மட்டும் கனகரின் பட்டுச்சால்வை பாம்புச்சட்டைபோல பளபளத்துக் கிடந்தது.

தன் பீடத்தில் அமர்ந்து சுவடி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த விதுரர் நிமிர்ந்து அவனை நோக்கி அளவாக புன்னகைத்தார். அவனுடைய காலடிகளை அவர் முன்னரே கேட்டுவிட்டார் என்றும் இயல்பான தோற்றத்துக்காக சுவடிகளில் விழியோட்டுகிறார் என்றும் உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். அருகே சென்று குனிந்து விதுரரின் கால்களை வணங்கி “வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றான். “வெற்றியும் புகழும் சூழ்வதாக!” என்று தாழ்ந்த குரலில் இயல்பாக வாழ்த்திய விதுரர் பீடத்தை அமைக்கும்படி விழிகளால் கனகரிடம் சொன்னார்.

கனகர் சற்று இழுத்து போட்ட பெரிய பீடத்தில் அமர்ந்து கைகளை கட்டியபடி “அஸ்தினபுரிக்கு மீள்வது நிறைவளிக்கிறது. இங்கு நீரில் மீன் போல் உணர்கிறேன்” என்றான் கர்ணன். “நீங்கள் இல்லாததை ஒவ்வொரு கணமும் நான் உணர்ந்தேன்” என்றார் விதுரர். “ஆனால் இங்குள்ளதைப் போலவே ஒவ்வொரு நாளும் தோன்றிக்கொண்டும் இருந்தது” என்றபின் “கலிங்க நாட்டரசியும் மூத்த அரசியும் கருவுற்றிருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இருவரும் சேர்ந்தே கருவுறுவது ஒரு நல்லூழ். நன்று சூழ்க!” என்றார்.

அச்சொற்களில் இருந்து அனைத்தையும் அவர் அறிந்திருப்பதை உணர்ந்த கர்ணன் “ஆம், முறைப்படி செய்ய வேண்டியதை செய்துவிட்டுத்தான் வந்தேன்” என்றான். “அது நன்று. ஆற்ற வேண்டிய அனைத்தையும் ஆற்றுக! ஆற்றுவனவற்றிலிருந்து விலகியும் நிற்க! அதுவே அரசர்வழி” என்றார். கர்ணன் “அதைத்தான் செய்தேன் மூத்தவரே. அங்கு அனைத்தும் முறைப்படி நிகழ ஹரிதர் ஒருவரே போதும்” என்றான். “ஆம், அவர் திறனுடைய அந்தணர். தன்னை முழுதேற்கும் அந்தணரைப் பெற்ற அரசன் தோற்பதில்லை” என்றார்.

இடைநாழியில் எடைமிக்க காலடியோசை கேட்டது. அது யாரென்று உடனே உணர்ந்து கொண்டு கர்ணன் எழுந்தான். பேரோசையுடன் கதவைத் தள்ளி திறந்தபடி துரியோதனன் ஓடிவந்து “வந்துவிட்டீரா? நான் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றபடி இருகைகளையும் விரித்து அவன் தோள்களை அள்ளி தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான். தழுவும் மலைப்பாம்புபோல அவன் தசைகள் இறுக கர்ணனின் உடல் நெரிபட்டது. இருவரின் பெருமூச்சுகளும் விம்மல்களும் கலந்து ஒலித்தன. ஒன்றையொன்று விழுங்க முயலும் இருநாகங்கள்.

28

பிடியை சற்று விட்டு முகம் தூக்கி “ஒன்றரை வருடங்கள்! நான்…” என்று சொல்ல வந்ததுமே குரல் உடைய விழிகள் நிறைந்து கன்னத்தில் வழிய துரியோதனன் அழத்தொடங்கினான். “என்ன இது? அரசே நீங்கள் இந்நாட்டுக்கு அரசர்” என்றபோது கர்ணனின் குரலும் குழறியது. துச்சாதனன் துரியோதனனைத் தொடர்ந்து உள்ளே வந்து கண்களில் இருந்து நீர் வழிய சுவரோரம் தயங்கி நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த துச்சலன் கண்ணீருடன் நெஞ்சில் கைவைத்து நின்றான். துச்சகனும், ஜலகந்தனும், சமனும், விந்தனும், அனுவிந்தனும், சித்ரனும், சத்வனும், சலனும் கண்ணீர்வழியும் விழிகளுடன் அறைக்குள் வர அறையே அவர்களின் உடல்கருமையால் இருள்கொண்டது.

விதுரர் எழுந்து புன்னகையுடன் “இனி அங்கர் இங்கிருந்து விலக வேண்டியதில்லை” என்றார். “இல்லை. இனி அவர் எங்கும் செல்லப்போவதில்லை. நான் இருக்கும் காலமெல்லாம் என்னருகேதான் இருப்பார்” என்றான் துரியோதனன். “நான் முடிவுசெய்துவிட்டேன்… இனி மறுஎண்ணமே இல்லை.” கர்ணன் தன் மேலாடையால் கண்களை துடைத்தபடி “ஆம்” என்றான்.

“அங்கு எப்படி இருந்தீர்கள்?” என்றான் துரியோதனன். “இங்கு ஒருநாளும் நான் நிறைவாக உணரவில்லை. ஆனால் அங்கு ஓர் அரசனுக்குரிய குடையும் கோலும் என அமர்ந்திருக்கும் உங்களை இங்கு அழைக்கக்கூடாது என்று இருந்தேன். இப்போது ஒரு தருணம் வந்தது. அது நற்தருணம் என்று எண்ணியபிறகு என்னால் உங்களை அழைக்காமல் இருக்க இயலவில்லை.” “இங்கு வரவேண்டும் என்று எண்ணாத ஒரு நாளும் எனக்கில்லை சுயோதனரே” என்றான் கர்ணன். “ஆனால் என்னை நம்பி அளிக்கப்பட்ட அப்பொறுப்பை முழுமை செய்யாது வரக்கூடாது என்று எண்ணினேன்.”

இருவரும் அச்சொற்களின் வழியாக உள்ளத்தின் விம்மலை கடந்து சென்றனர். ஆனால் தங்கள் முகம் முழுக்க நனைந்திருந்த விழிநீரை துடைக்கவோ மறைக்கவோ முயலவில்லை. கர்ணன் விழிதூக்கி துச்சாதனனைப் பார்த்து “இளையோனே, மேலும் வளர்ந்துவிட்டாய்” என்றான். துச்சாதனன் எடைக்காலடிகள் ஒலிக்க ஓடிவந்து முழந்தாளிட்டு தன் நெற்றியை கர்ணனின் கால்களில் வைத்தான். “அருளுங்கள் மூத்தவரே. இனி ஒரு முறை தங்களை பிரியக்கூடாதென்று வாழ்த்துரை சொல்லுங்கள்” என்றான். கர்ணன் மீண்டும் விம்மியழுதபடி குனிந்து அவன் தோள்களைப்பற்றி தன் நெஞ்சோடணைத்தான்.

“என்ன இது? அரக்கர்கள் போலிருக்கிறீர்கள், இதுதானா உங்கள் ஆண்மை?” என்றான் கர்ணன் கண்ணீருடன் சிரித்தபடி. துச்சலன் வந்து கர்ணனின் முன் மடிந்து நெற்றியால் அவன் காலைத் தொட்டு விசும்பியழுதான். கர்ணன் அவனை குனிந்து தூக்கி மார்போடணைக்க கரியநதி அலைபெருகி வருவதுபோல் கௌரவர்கள் ஒவ்வொருவராக அருகே வந்து அவனை சூழ்ந்தனர். அனைவரும் சிறு விம்மலோசையுடன் அழுது கொண்டிருந்தனர். கர்ணன் “போதும்! இனிமேல் இங்கிருந்தால் நான் சிறுமழலையைப்போல் அழத்தொடங்கிவிடுவேன்” என்றான். விதுரர் “அரசே, அன்பிலூறும் விழிநீரைவிட தூயதென்று ஏதுமில்லை. தெய்வங்களுக்கு அளிப்பதற்கு அதைவிட பெரிய காணிக்கையும் இல்லை” என்றார்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு கலந்துரையாடல் -கோவை

$
0
0
செம்மணிக்கவசம்

செம்மணிக்கவசம்

 

நண்பர்களே ,
ஜனவரி மாத கோவை ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 24- 01- 2016 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இந்தமாதக் கலந்துரையாடல் சென்ற முறையே முடிவு செய்தபடி” வெண்முரசின் உவமானங்கள் ” என்னும் தலைப்பில் நடக்கும் . ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த குறைந்தது 5 உவமானங்கள் சொல்லி அது குறித்து உரையாடலாம் .

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

முகவரி மற்றும் தொடர்பு எண்

Suriyan Solutions
93/1, 6th street extension ,100 Feet road ,
near Kalyan jeweler, Ganthipuram, Coimbatore
99658 46999 , 7092501546

 

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்\

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

 

தொடர்புடைய பதிவுகள்

முகங்களின் தேசம் கடிதங்கள்

$
0
0

Mugam_Desam

 

ஜெ,
நலமா?..  இந்தியப் பயணம் மிக கம்பீரமாய் நெகிழ்வாய் தொடங்கியிருக்கிறது.வெகுஜன இதழில் மிக ஆழமான எழுத்தின் தேவை என்ன என்பதை அழுத்தமாய்  உணர்த்துகிறது. சாதவாகணர்களின் அரசு நானோகாட் கணவாய் என்று முதல் பகுதியே மிக அழகாக வந்திருக்கிறது.எப்பொழுதும் உங்கள் பயணக்கட்டுரைகளை மிகவும் ரசித்து வாசிப்பேன்.மிக இயல்பாகத் தொடங்கி நுட்பமாய் விவரங்களைச் சொல்லிச் செல்கிறீர்கள்.

அமுதசுரபி எனும் அறம் எளிய மனிதர்களிடமே  இருக்கிறது என்ற வரி என்னை நெருக்குகிறது எனலாம்.ஆம் அத்தகைய மனிதர்களை வாழ்வில் தரிசிப்பவர்களுக்கே அது புரியும்.இந்தியாவின் அடிப்படையே ஏன் மானுடத்தின் அடித்தளமே ஷிண்டே போன்றவர்கள்தான் என்பது தங்கள் எழுத்தின் மூலமாய் இன்னும் வலுப்படுகிறது.

என் இரண்டாவது குழந்தை கருவிலிருந்த போது புதிதாய் ஒரு பணி இடத்திற்கு மாறுதலில் வந்தேன்.எனக்கு அங்கு யாரையுமே தெரியாது.யாரென்றே நானறியாத, எந்த உறவுமற்ற சகோதரிகள் என்னை  புளிக்குழம்பும், கீரை மசியலும் மீன்குழம்புமாய் போஷித்திருக்கிறார்கள்.கருவுற்ற பெண்ணை தம் வீட்டு மகளாய் எண்ணி  அக்கரையாய் கவனித்த அவர்களெல்லாம் மிகச்சாதாரண நிலையிலிருப்பவர்களே.அதையெல்லாம் இன்றும் நினைத்தாலும் என்ன உறவு இவர்களுக்கும் நமக்கும் என்று என் மனம் எண்ணுகிறது.

எத்தனை கொடூரங்கள் நடந்தாலும் எத்தனை ஏமாற்று வேலைகள் நடந்தாலும் இத்தேசத்தை இன்னும் பிணைத்திருப்பது இவர்களைப் போன்றவர்களே.இப்படியான ஒட்டுமொத்த தரிசனங்களையே  உங்கள் எழுத்துகளில் நான் பெறுகிறேன்.
நன்றி
மோனிகா மாறன்.

 

அன்புள்ள மோனிகா

நன்றி

முகங்களின் வழியாக ஓர் இந்தியா. அது தொகுத்துப்பார்க்க அற்புதமான இன்னொரு பயண அனுபவமாக இருக்கிறது

ஜெ

 

அன்பில் ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.நீங்கள் குங்குமத்தில் எழுதி வரும்முகங்களின் தேசத்தில் (முன்பே எழுதியதுதான்) நானேகட் பற்றி கூறியிருந்தீர்கள் அந்த பாதை வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் வணிகப்பாதை என்றீர்கள் பழம் சங்க பாடல்களில் அகத்தில் கூட

.”விண்பொரு நெடுவரைஇயல்தேர் மோரியர்

பொன்புனை திகிரி திரிதரக்குறைத்த அறை இறந்து அகன்றனர்”

என்று மெளரியர் தென் திசை மீது போர் தொடுத்து வந்தார்கள் வடுகர்கள் உதவி செய்தனர்.மெளரியர் படை வரும் வழியில் வானளாவிய பனிபடர்ந்த மலை ஒன்று குறுக்கிட்டது.அவர்கள் செம்மையான பாதை ஒன்றை அமைத்தார்கள் என்றும் அந்த எல்லையில் மாபெரும் அறச்சாலைகள் இருந்தென என்கிறார்களே அந்த இடத்திற்க்கும் நானேகட்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

இப்படிக்கு

சுந்தர்ராஜ சோழன். .

 

அன்புள்ள சுந்தர்

ஆச்சரியமான பாடல். நான் கவனித்ததில்லை.  மிகச்சரியாக பொருந்துவதுபோலத் தெரிகிறது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியம் மானுடனை மாற்றுமா?

$
0
0

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் நலத்தினிலும் வளர்ச்சியிலும் மகிழ்ச்சியடையும் எண்ணற்ற தின வாசகர்களில் நானும் ஒருவன்.

ஒரு கேள்வி..

தீவிர வாசிப்பினால் அடிப்படை குணத்தில் மாற்றம் வருமா? இலக்கிய வாசிப்பில் ஒரு முழு வாழ்கையையும் அதில் வரும் கதாபாத்திரங்களின் மன நிலையையும் கூறு போட்டு சொல்லப்படுகிறதை நிதானமாக வாசிக்கிறோம்.மனித மனத்தை நுட்பமாகவும் ஆழமாகவும் சித்தரிக்கும் நல்ல இலக்கிய படைப்புக்களை வாசிக்கும்பொழுது நம்மை அந்த தருணத்தில் வைத்து யோசித்து பார்க்கிறோம் நம் மனம் கனக்கிறது அந்த படைப்பின் பாதிப்பு சில மணி நேரங்களோ அல்லது நாட்களோ இருக்கலாம். அந்த பாதிப்பு இருக்கும் காலத்திலோ அல்லது முடிந்த பின்னரோ இயல்புவாழ்க்கையில் நமது அடிப்படை குணத்தில் அந்த படைப்பின் பாதிப்பு இருக்குமா ?

அடிப்படை குணம் என்று நான் சொல்வது பொறாமை, தன்னைப்போல் பிறரை நினையாமை, துணிவின்மை, நேர்மையின்மை, அகங்காரம், பாரபட்சம்,மற்றும் பல. வாசிப்பின் விளைவாக நற்பணி குழுக்கள் உருவாகின்றன அனால் அதுவுமே அந்த குழுவினரிடம் இருக்கும் நல்ல குணத்தை வெளிபடுத்தவும் என்னத்தை செயல் ஆகவும் உதவிகின்றது. நற்குணங்களை படைத்த தீவிர வாசகர் ஒருவர் எதையும் வாசிக்காமல் இருந்தாலும் அவர் நற்குணங்களுடனேயே இருப்பார் அல்லவா ? மாறாக பேஸ்புக் நரம்பு புடைக்க காந்தியை பற்றி பேசியவர் மற்றும் வாசிப்பவர் நிஜ வாழ்வில் ஒரு பொது விடயத்தில் துணையாக இருக்ககூட பின்வாங்கியவரை நான் பார்த்திருக்கிறேன்.

நூற்றுகணக்கான நூல்களைபடித்த மேதைக்கு மனிதர்களை சமமாக பாவிக்கும் மனது இல்லை – அறிவில் சமமாக இல்லை என்றோ என்னமோ. அலுவலகத்தில் ஒருவரின் உடல்மொழிகூட அவரது மேலாளருக்கு ஒரு மாதிரியும் அவரின் கீழ் படிநிலையில் உள்ளவருக்கு வேறுமாதிரியாக தனிச்சையாக வரும். புதுமைபித்தனின் “தனி ஓருவனுக்கு” என்ற கதையில் ஒருவன் வயிற்று பிழைப்பிற்கு ஏமாற்றியதற்காக அவனை அடித்து உதைத்து ஊர்ரைவிட்டு துரத்தி அவன் செத்தும் போவான். அன்று இரவு ஊர்மக்கள் பின்வருமாறு என்று வரும்..

“அப்பொழுது எங்களூர் கோகலே ஹாலில் ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற பிரசங்கம். ஊர் பூராவாகவும் திரண்டு இருந்தது; அதைக் கேட்க அவ்வளவு உற்சாகம். முதலிலே ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாட்டை ஒரு நண்பர் வெகு உருக்கமாகப் பாடினார். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை யழித்திடுவோம்’ என்ற அடிகள் வந்தவுடன், என்ன உருக்கம்! என்ன கனிவு! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!

இலக்கியத்தின் பயனை பற்றியல்ல இந்த கேள்விகள். வாசிப்பிலிருந்து நாம் அறிவில் செழுமை அடைகிறோம் ஆனால் குணத்தில் கனிவடைகின்றோமா ?

நன்றி

கார்த்திகேயன் வெள்ளைசாமி

அன்புள்ள கார்த்திகேயன்

இலக்கியம் எழுதப்பட்ட காலம் முதலே இருந்துவரும் கேள்வி இது. ஆகவே முழுமையாக பதில்சொல்லிவிடமுடியாதது

இப்படிச் சொல்லலாம், ஒரு தனிமனிதனாக எடுத்துப்பார்த்தால் இலக்கியம் ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றி அவரது தனிக்குணங்களை தீர்மானித்திருப்பதை புறவயமாகப் பார்க்கமுடியாது

ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை, ஒரு காலகட்டத்தை எடுத்துப்பார்த்தால் அவர்களின் பண்படுதலில் இலக்கியம் பெரும்பங்களிப்பாற்றியிருப்பதைக் காணமுடியும். பண்பாடு இலக்கியத்தையும் இலக்கியம் பண்பாட்டையும் வளர்ப்பதையே வரலாறெங்கும் நாம் காண்கிறோம்.

மனிதவாழ்க்கையைத் தீர்மானிப்பது இங்குள்ள வாழ்க்கைப்போட்டியும் அதன் போராட்டக் கருவிகளாக உள்ள அடிப்படை இச்சைகளும்தான். இது ஒரு தரப்பு. அறம் என்றும் நீதி என்றும் கருணை என்றும் சொல்லப்படும் விழுமியங்கள் நேர்எதிர் தரப்பு. இரு தரப்பின் முரணியக்கமே வாழ்க்கையாக வரலாறாக உள்ளது

இதில் இரண்டாம்தரப்பை உருவாக்கி நிலைநிறுத்துவதே அடிப்படையில் இலக்கியம் என்னும் இயக்கத்தின் நோக்கம். எத்தனை நுணுக்கமாக ஆனாலும் இந்த அடிப்படை நோக்கம் இல்லாமலாவதில்லை

இந்த உலகை எடுத்துக்கொண்டால் அது அறத்திலும் நீதியிலும் படிப்படியாக முன்னேறி வந்துள்ளது என்பதையே காண்கிறோம். மனிதவரலாற்றில் இந்தக்காலகட்டம்போல் அறம் திகழ்ந்த பிறிதொரு காலகட்டம் இல்லை

இதுவரை நாம் வந்துசேர உதவியவை இலக்கியங்களும் தத்துவங்களும்தான். அவை பேசும் மெய்யியல்கள்தான். தோல்விகள் சரிவுகள் வரலாறெங்கும் உள்ளன, ஆனால் நேற்றைப்பற்றி கொஞ்சமேனும் அறிந்தவர்கள் மானுட இனம் முன்னேறுவதையே காண்பார்கள்

ஆகவே இலக்கியம் பெரும்பங்களிப்பாற்றுகிறது என்பதே உண்மை. நம் செயல்கள் என்பவை நம்மால் சிந்தித்து எடுக்கப்படுபவை அல்ல. நம் உள்ளுணர்வால், ஆழ்மனச்செயல்பாடுகளால் முடிவுசெய்யப்படுபவை அவை. இலக்கியத்தின் பாதிப்பு நிகழ்வது அங்குதான்,

ஆகவே இலக்கியம் வாசித்தவர்கள் ‘மறந்துவிட்டு’ இயல்பு வாழ்க்கைக்குச் செல்வதில்லை. ஆழ்மனதில் ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள். அது அவர்களின் ஆளுமையை மிக நுட்பமாக மறைமுகமாக வரையறைசெய்யவே செய்கிறது

தனிப்பட்ட உதாரணங்களை பெரும்பாலும் நாம் நம்முடைய முன்முடிவுகள் மற்றும் உணர்ச்சிகளைக்கொண்டே பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக நோக்கினால் பதில் தெளிவானதுதான்

என் இளமையில் இத்தகைய கேள்விகள் என்னை துரத்தியபோது தெளிவான பதில்களை எமர்சனிடமிருந்தே பெற்றேன். பின்னர் எழுதி வாசித்து இத்தனை காலமாகியும் நான் அவரையே ஆதர்சமாகக் கொள்கிறேன்

அவரே உங்களுக்கும் வழிகாட்டக்கூடும்

ஜெ

இலக்கியவாசிப்பின் பயன் என்ன?

இலக்கியம் என்பது எதற்காக

இலக்கியத்தின் பயன்சார்ந்து

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈரோடு சந்திப்பு -ஒருகடிதம்

$
0
0

1

ஜெ

ஊட்டிச் சந்திப்புக்கே வர விரும்பினேன். இடங்கள் முடிந்துவிட்டன என்றுதெரிந்ததும் சோர்வு அடைந்தேன். அதன்பின்னர் ஈரோடுச் சந்திப்பு. அதுவும் முழுமையடைந்துவிட்டது என்று வாசித்தேன். நான் வரவிரும்புகிறேன். இடமிருக்குமா?

கதிர்

 

அன்புள்ள கதிர்,

பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளை முடிவுசெய்வது மிகக்கடினம். என்ன சிக்கலென்றால் ஓர் இடத்தில் அதிகபட்சம் இவ்வளவுபேர் என முடிவுசெய்திருப்போம். அதைவிட சற்று அதிகமானவர்கள் வர விரும்பியதும் நிறுத்திக்கொள்வோம். ஆனால் வருவதாகச் சொன்னவர்களில் பலர் சில்லறைக் காரணங்களுக்காக வராமலிருந்துவிடுவார்கள். அது ஒரு தமிழ் மனநிலை. அதாவது ஆர்வம் இருக்கும் ஆனால் தீவிரம் மிகமிகக் குறைவாகவே இருக்கும். முடிந்தால்செய்யலாம் என்பதே பலருடைய இயல்பு.

தீவிரமில்லாமை என்பது எந்தத்தளத்திலும் பெரிய சோர்வு. அதை மாற்றவே இந்தவகையான சந்திப்புகளால முயலப்படுகிறது. பொதுவாக இளைஞர் , புதியவர்கள் என்னும்போது கடைசிநேரத்தில் ‘மழைபேஞ்சுதுசார். வரமுடியலை’ வகை சாக்குபோக்குகள் நிறையவே வரும் என நினைக்கிறேன். ஆகவே நீங்கள் வரலாம். இடமிருக்கும் என்றே நினைக்கிறேன்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 6

கௌரவநூற்றுவரில் சிலர் அப்போதும் அறைக்கு வெளியேதான் இருந்தனர். அறைவாயிலில் நெருக்கினர். சாளரங்கள் வழியாக எட்டிப்பார்த்தனர் சிலர். சிலர் பிறரை தொட்டுக்கொண்டு நுனிக்காலில் எம்பி நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் நெஞ்சு விம்மிக் கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் தழுவி ஓருடலாக ஆக விழைந்தனர். ஒற்றை உருவின் நூறு நிழல்களென பிரிந்திருந்தவர்கள் ஒரு நதிப்பெருக்கின் அலைகளென மாறினர்.

கர்ணனின் இடையாடையின் நுனியைப் பற்றியபடி “மூத்தவரே” என்று சுபாகு அழைத்தான். மறுபக்கம் அவன் கைகளை தொட்டபடி “அங்கரே, அங்கரே” என்றான் துச்சலன். “மூத்தவரே, சற்று மெலிந்து விட்டீர்கள்” என்றான் மகோதரன். “மூத்தவரே, நான் முன்னரே உங்களை பார்த்தேன்” என்று பின்நிரையில் நின்று எம்பி எம்பிக்கூவினான் சோமகீர்த்தி. “மூத்தவரே! மூத்தவரே!” என்று அவ்வறை முழுக்க குரல்கள் எழுந்தன.

ஒவ்வொருவரும் சொல்ல எண்ணுவதை அவர்களின் நா அறியவில்லை. கைகளால், சொற்களால் ஒருவரோடொருவர் முற்றிலும் ஒன்றாகத் துடித்து தவித்தனர். அவ்விழைவால் ஒவ்வொரு உடலும் ததும்ப அக்கூட்டம் தன்னைத்தானே நெரித்துக்கொண்டு நெளிந்தது. பொருளற்ற ஓசைகளும் குரல்களும் ஏங்கும் மூச்சொலிகளுமாக சுருண்டு இறுகி உருளைவடிவாக மாறவிழையும் கரியபெருநாகம் போல் அது முறுகியது.

பின்பு அவர்கள் தொடுகையினூடாகவே முற்றிலும் தொடர்புற்றனர். ஒற்றை உடலும் இருநூறு கால்களும் இருநூறு பெருந்தோள்களும் கொண்டு கர்ணனை சூழ்ந்தனர். ஓசைகள் அடங்கின. உடல்கள் அமைந்தன. உணர்வுகள் வெறும் விழிநீர் வழிதலாக மட்டும் வெளிப்பட்டன. உடல்வெம்மையே அவர்களைத் தொடுத்து ஒன்றென்றாக்கியது. அறைக்குள் ஆழ்ந்த அமைதி நிறைந்தது.

துரியோதனன் கர்ணனின் கைகளை தன் தோளிலிட்டு விலாவோடு சேர்த்து பற்றிக்கொண்டு தலையை அவன் தோளில் சாய்த்து எங்கிருக்கிறோம் என்று அறியாதவன் போல் விழிபுதைத்து நின்றான். அவன் இடக்கையை பற்றிய துச்சலன் அதை தன் தோளில் அமைத்தான். அக்கையின் விரல்களை தன் தலைமேல் வைத்து கனவிலென உறைந்திருந்தான் பீமவேகன். அவன் மார்புடன் சேர்ந்து தலைசாய்த்து நின்றான் துச்சாதனன். அவன் காலடியில் அமர்ந்திருந்தனர் அனூதரனும் திடஹஸ்தனும் துராதரனும் கவசியும். அவன் ஆடைநுனியைப் பற்றி கன்னத்துடன் சேர்த்திருந்தனர் மகாபாகுவும் துர்விமோசனனும் உபநந்தனும்.

அவன் முதுகில் கால்களில் எங்கும் அவர்களின் உடல்கள் தொட்டுக் கொண்டிருந்தன. தன்னுள் தான் நிறைந்து குளிர்ந்து அமைதிகொண்டது ஒற்றைக் கரும்பாறை. வெளியே நின்றிருந்த படைவீரர்களின் மெல்லிய பேச்சொலிகள், படைக்கலச் சிலம்பல்கள், தொலைவில் அரண்மனை முற்றத்தில் தேர்களின் சகடங்கள் எழுப்பிய அடிகள், குதிரைமூச்சுகள், குளம்படிச் சிதறல்கள், சாளரத்திரைச்சீலைச் சிறகடிப்புகள், குடுமிகளில் மெல்லத்திரும்பும் சிறுகதவுகளின் முனகல்கள். தெய்வங்கள் விண்விட்டு இறங்கிச் சூழ்வதன் ஒலியின்மை.

நெஞ்சுலைய நீள்மூச்செறிந்த விதுரர் அவ்வொலியை தானே கேட்டு திடுக்கிட்டார். பின்பு அடைத்த தொண்டையை சீரமைத்து “அரசே” என்றார். அப்போதுதான் தன் முகம் சிரித்து மலர்ந்து அவ்வண்ணமே உறைந்திருப்பதன் தசையிழுபடலை உணர்ந்து கைகளால் தொட்டு விழிநீரை அறிந்தார். சால்வையால் துடைத்தபடி “அரசே” என்றார். அவ்வொலி கருநீர் குளத்தில் விழுந்த கல்லென அத்தனை உடல்களையும் விதிர்க்க வைத்தது. “தெய்வங்களுக்குரிய தருணம் மைந்தர்களே” என்றார். “மூதாதையர் களிகொள்ளும் நேரம். இந்த அழியாத அவியை ஏற்று அவர்கள் அமரர்களென ஒளிகொள்ளட்டும்.”

பெருமூச்சுடன் கலைந்த கர்ணன் “அமைச்சரே” என்றான். அச்சொல்லின் பொருளின்மையை உணர்ந்து “அடிபணிகிறோம் தந்தையே” என்றான். விதுரர் தன் உதடுகளை இறுக்கியபடி விம்மலை அடக்கினார். தொண்டையை சீரமைத்து “இது அமைச்சு மாளிகை. நீங்கள் மேலே சென்று அரசரின் அவையில் அமைந்து உரையாடலாமே” என்றார். “அங்கே உங்கள் உண்டாட்டையும் சொல்லாடலையும் நிகழ்த்த இடமுள்ளது.”

துரியோதனன் கலைந்து “ஆம்” என்றபின் தன் சால்வையை இழுத்து சுற்றிக்கொண்டு “மேலே செல்வோம் இளையோரே. அங்கு நம் அறை சித்தமாக உள்ளது” என்றான். விதுரர் மேலும் “அங்கர் நெடுந்தூரம் பயணம் செய்து வந்திருக்கிறார். ஏதேனும் அருந்த விழைவார். அவர் சற்று ஓய்வும் எடுக்கவேண்டும்” என்றார். கர்ணன் “ஒன்றரை ஆண்டு காலத்துக்குரிய ஓய்வை இப்போது எடுத்துவிட்டேன் அமைச்சரே” என்று சிரித்தான். துச்சலன் “அவரை ஓய்வுக்குத்தான் நாங்கள் அழைத்துச்செல்கிறோம் தந்தையே. அவருடன் நாங்களும் ஓய்வெடுப்போம்…” என்றான். “ஆம், ஓய்வு!” என்றான் சுஷேணன். “ஓய்வு! ஓய்வு!” என உவகைக்குரல்கள் எழுந்தன.

“இவர்கள் ஓய்வு என எதைச் சொல்கிறார்கள்?” என்றார் விதுரர். கர்ணன் நகைத்தபடி “அவர்களுக்கு பயிற்சி ,ஓய்வு ,ஆட்சி, போர் எல்லாமே ஒன்றுதான்” என்றான். விதுரர் நகைத்தார். பீமவிக்ரன் “மேலே ஊனுணவு சித்தமாக உள்ளது!” என்று விதுரரிடம் சொன்னான். “செல்வோம்… ஓய்வுக்கு… ஊனுணவு” என அவர்கள் கூச்சலிட்டபடி திரும்பினர். அவர்கள் ஒற்றை உடற்பெருக்காக வழிந்து இடைநாழிகளில் நிறைந்து படிக்கட்டுகளில் மடிந்து மேலே சென்றனர்.

துரியோதனன் கர்ணனின் தோளைத்தட்டி “அங்கரே, எப்படி அவை முன் நின்று தூது சொன்னான் என் இளையோன்?” என்றான். “எங்கள் நூற்றுவரிலேயே அவன்தான் கற்றவன். அவன் கல்வியுள்ளவன் என்று துரோணரே சொன்னார்.” கர்ணன் திரும்பி பின்னால் வந்துகொண்டிருந்த சுஜாதனிடம் “அப்படியா சொன்னார்?” என்றான். “ஆம், இதற்குமேல் எனக்கு கல்வி வராது என்று அவரே சொல்லிவிட்டார்.” துச்சலன் மகிழ்ந்து நகைத்து “சிறப்பாகப் பேசுகிறான். மிகமிகச் சிறப்பாக!” என்றான். “அவன் பேசும் ஒரு சொல்கூட எனக்குப் புரிவதில்லை.”

“அப்படியென்றால் விதுரருக்குப் பின் அவனை அஸ்தினபுரியின் அமைச்சனாக்க வேண்டியதுதான்” என்றான் கர்ணன். துரியோதனன் உவகை தாளாமல் திரும்பி சுஜாதனை இழுத்து தன்னருகே கொண்டுவந்து அவன் தோள்தழுவி “உண்மையாகவா?” என்றான். துச்சகன் “நம்பமுடியவில்லை” என்றான். துரியோதனன் “கொன்றுவிடுவேன் உன்னை” என்று சீறினான். “அங்கரே சொல்கிறார்… என் இளையோன் அறிஞன்.”

உண்மையல்லவா அது என்பதுபோல சுஜாதன் பெருமிதப் புன்னகை பூத்தான். “மூத்தவர் பகடியாடுகிறார்” என்றான் சுவர்மன். “கௌரவருக்கு சொல் வராது என்பதை சூதர்களே பாடிவிட்டனர்.” குண்டபேதி “ஆகவே நாம் அதை மீறக்கூடாது” என்றான்.

கர்ணன் “நான் உண்மையாகவே சொல்கிறேன். அச்சமின்றி அவைநின்று தெளிவாக செய்தியை உரைத்தான்” என்றபின் “யவனமது என்னும்போது சற்றே நாவூறியதை தவிர்த்திருக்கலாம்” என்றான். சுஜாதனை படீர் படீர் என அறைந்தும் முடியைப்பற்றி உலுக்கியும் கௌரவர்கள் கூச்சலிட்டு உவகையாடினர். “என்ன ஒரு சொல்லாட்சி! என்ன ஒரு நிமிர்வு!” என்றான் கர்ணன். “உண்மையாகவா?” என்றான் துச்சலன் ஐயமாக. “சிம்மம்போல அவையில் நின்றான். அருகே கலைமகள்!” அவனை நோக்கியபின் “அப்படியென்றால் அவன் கௌரவன் அல்ல” என்றான் சுபாகு.

“எவரும் பேச வேண்டியதில்லை. நான் அவைமுன் நின்று பேசியதென்ன என்பதை வரலாறு அறியும்” என்றான் சுஜாதன். “வரலாறுக்கு எத்தனை பொன்பணம் செலவிட்டாய்?” என்றான் துச்சாதனன். “கூடவே சூதரை அழைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் எனக்கில்லை” என்றான் சுஜாதன். “அந்த வழக்கம் எனக்கிருக்கிறது என்று நினைத்தாயா?” என்றான் துச்சாதனன்.

“அப்படி நான் சொல்லவில்லை. சூதர்கள் தங்கள் பின் வருகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பகடிசெய்ய கதைகள் தேவைப்படுகின்றன.” துச்சாதனன் “என்னை அவர்கள் புகழ்ந்துதானே பாடுகிறார்கள்?” என்றான். “ஆம் மூத்தவரே, புகழ்ந்துதான் பாடுகிறார்கள்” என்றனர் கௌரவர் கூட்டமாக. ஐயத்துடன் துச்சாதனன் “மொழியறிந்தவர்களை அழைத்து கேட்கவேண்டும்” என்றான்.

“அதைக் கேட்கையில் அவை அடையும் மெய்ப்பாடுகள் என்னென்ன?” என்றான் கர்ணன். “சிரிப்பு!” என்றான் சுஜாதன். “முன்பு ஒருமுறை துச்சாதனவிலாசம் என்னும் கதையைக் கேட்டு மட்டும் அழுதார்கள்.” “ஏன்?” என்றான் கர்ணன். “நெடுநேரம் சிரித்து தொண்டை அடைத்துவிட்டது. அதன்பின் அழுகை” என்ற சுஜாதன் “ஆனால் மிக அதிகமாக பாடப்பட்டவர் உக்ராயுதரும் வாலகியும் பீமபலரும்தான்” என்றான். “அவர்கள்தான் சூதர்களுக்குரிய மடைப்பள்ளிப் பொறுப்பு. புதிய உணவுகளை உருவாக்கி அவற்றை சூதர்களுக்கு அளித்தபின்னரே ஷத்ரியர் உண்ணவேண்டும் என நினைக்கிறார்கள்.”

“அசுர இளவரசியை மணந்தவர் எப்படி இருக்கிறார்?” என்றான் கர்ணன். “அவனைத்தான் எந்தப்போரிலும் இனிமேல் முன் நிறுத்தப்போகிறோம். எத்தனை அடி விழுந்தாலும் தாங்கும் உடல் பெற்றிருக்கிறான்” என்றான் துச்சாதனன். கௌரவர்கள் கூவி நகைத்தனர். “நீங்கள் ஒவ்வொருவரும் உணவுண்ணும் விதத்தைப் பற்றி பாரதவர்ஷமே பேசிக் கொண்டிருக்கிறது” என்றான் கர்ணன். “அது சூதர்களின் பொய். நாங்கள் அளவுடனேயே உண்கிறோம். யானைகள் உண்பதையெல்லாம் எங்கள் கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள்” என்றான் துர்முகன். “ஆனால் உணவு பற்றிய பேச்சு எழுந்துவிட்டது. ஆகவே இனி நன்மதுவும் இனியஊனும் சற்றும் பொறுக்கக்கூடாது” என்று துச்சலன் கைகளைத்தூக்கி கூவினான்.

“எங்கே? ஏவலர்கள் எங்கே? அடுமனைக்கு நேற்றே ஆணையிட்டிருந்தேனே?” என்றான் துச்சாதனன். இடைநாழியில் தலைவணங்கி நின்ற ஏவலர்தலைவர் “அனைத்தும் சித்தமாக உள்ளன இளவரசே” என்றான். அங்கே நின்றிருந்த யுயுத்ஸுவை நோக்கிய கர்ணன் “மூடா… உன்னைத்தான் விழிதேடிக்கொண்டிருந்தேன்” என்றான். “நான் உங்களைப் பார்க்க வரவிருந்தேன் மூத்தவரே. தந்தை என்னை அவர் முன் அமரும்படி ஆணையிட்டார். ஒருவழியாக இப்போதுதான் கிளம்பிவந்தேன். எப்படியும் மேலே உணவுண்ண வருவீர்கள். அனைத்தும் சித்தமாக உள்ளனவா என்று பார்க்கலாமென எண்ணி இங்கே நின்றேன்.”

கர்ணன் “அவனை தூக்குங்கள்!” என்றான். அக்கணமே யுயுத்ஸு பல கைகளால் வானிலேற்றப்பட்டு அம்பென பீரிட்டு கர்ணன் மேல் வந்து விழுந்தான். அவனைப் பிடித்து சுழற்றி திரும்ப எறிந்தான் கர்ணன். துர்முகனும் பலவர்த்தனனும் அவனைப் பிடித்து திரும்ப வீசினர். “மூத்தவரே மூத்தவரே” என அவன் கூச்சலிட்டான். “இவன் ஒருவனுக்குத்தான் பேரரசரின் தோள்கள் இல்லை” என்றான் கர்ணன். “இறகுபோலிருக்கிறான்.” துரியோதனன் “அவனுக்குத்தான் காது இருக்கிறது என்கிறார் தந்தை. நாளும் அவருடன் அமர்ந்து இசைகேட்கிறான்” என்றான்.

“நம்மில் எவருக்குமே இசைச்சுவை அமையவில்லை” என்றான் ஜலகந்தன். “ஏனென்றே தெரியவில்லை.” சமன் “மூத்தவரே, அரசர் தந்தையை மகிழ்விக்கும்பொருட்டு இசைகற்றதை அறிவீரா?” என்றான். கௌரவர் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினர். “இது எப்போது?” என்றான் கர்ணன். “அதெல்லாம் இல்லை, வெறும் பகடி” என துரியோதனன் நாணினான். “இல்லை மூத்தவரே, உண்மை” என்றான் சுஜாதன். கீழே இறங்கி கர்ணனின் அருகே நின்று மூச்சிரைத்த யுயுத்ஸு “நான் சொல்கிறேன்… நான் உண்மையில் நடந்ததை சொல்கிறேன்” என்றான்.

“இவன் சொல்வதெல்லாம் பொய்…” என்று துரியோதனன் முகம் சிவக்க கூச்சலிட்டான். “அடேய்! அவனைப் பிடித்து அவன் வாயை மூடுங்கள்!” திடஷத்ரன் “அப்படியெல்லாம் செய்யக்கூடாது மூத்தவரே. சொல்லாத சொல்லை சரஸ்வதியின் அக்காள் கொண்டுசெல்வாள்” என்றபின் “தம்பி, என் அழகா, சொல் பார்ப்போம்” என்றான். யுயுத்ஸு “எட்டு தேர்ந்த இசைச்சூதரை அமர்த்தி அரசர் இசைகேட்டு பயிலத் தொடங்கினார். நான்குநாட்களில் அந்த நேரத்தை ஏன் வீணடிக்கவேண்டும் என எண்ணி அப்போது உணவுண்ணத் தொடங்கினார். உணவுண்ணும் அசைவுகளின் தாளத்துக்கு ஏற்ப சூதர்களின் பாடல்கள் மாறியபோது மகிழ்ந்தார்” என்றான்.

“பிறகு?” என்றான் கர்ணன் நகைத்துக்கொண்டே. “ஒருநாள் நான் அறைக்குள் செல்லப்போகிறேன். நூறுபேர் உணவுண்ணும் ஒலிகள். உறிஞ்சுதல்கள், மெல்லுதல்கள், கடித்தல்கள், நாசுழற்றல்கள்.” கர்ணன் “ஏன்?” என்றான். “சூதர்களின் இசையே உணவுண்ணும் ஒலிகளாக நாளடைவில் மாறிவிட்டிருந்தது.” கர்ணன் சிரித்தபடி துச்சலன் தோளில் ஓங்கி அறைந்தான். கௌரவர்கள் கூவிச்சிரித்தபடி அவனை சூழ்ந்துகொண்டனர். “நான் அரசர் யானையுடன் போட்டியிட்டு உணவுண்ட கதையை சொல்கிறேன்” என்றான் வாலகி பின்னால் நின்று எம்பி கைவீசி. “மூடா, நீ என்ன சூதனா? வாயைமூடு” என்றான் துரியோதனன். “மூடர்கள். சூதர்கள் எதைச் சொன்னாலும் இவர்களே அதை நம்பிவிடுகிறார்கள். இவர்களின் மனைவியரின் பெயரையே சூதர்களிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்கிறார்கள்.”

“உணவு சித்தமாக உள்ளது” என்றார் ஏவலர்தலைவர் கிருதசோமர். கைகளை வீசி பெரிய உடலை அசைத்து மெல்ல நடனமாடி “வருக! அனைத்தும் இங்கு வருக” என்றான் துச்சலன். “இன்று நாம் உண்ணும் உணவு அனைத்தும் அங்க நாட்டரசரை மகிழ்விப்பதற்காக” என்றான் துச்சாதனன். துச்சலன் “கலிங்கத்து அரசி கருவுற்றிருப்பதாக சொன்னார். அதற்காக நாம் இன்று மாலை உணவுண்கிறோம்” என்றான். “அதன் பின் மூத்த அரசி கருவுற்றிருப்பதற்காக நாளை காலை உணவுண்கிறோம்” என்றான் துச்சகன். “அதன்பிறகு வழக்கமாக உணவை உண்ணத்தொடங்க வேண்டியதுதான்” என்றான் சுஜாதன். “ஆம் ஆம்” என்று கௌரவர் கூவினர்.

அவர்கள் துரியோதனனின் தம்பியர் அவைகூடும் நீள்வட்டப் பெருங்கூடத்திற்குள் சென்றனர். ஓசைகளுடன் பீடங்களை இழுத்திட்டு மூத்த கௌரவர் அமர தரையிலேயே பிறர் அமர்ந்தனர். “உணவு உண்பது நன்று. மிகையாக உண்பவர்கள் தெய்வங்களுக்கு அணுக்கமானவர்கள்” என்று சுலோசனன் சொன்னான். “யார் அப்படி சொன்னது? எந்த நூலில்?” என்றான் சுபாகு. சுலோசனன் “நான் அப்படி சொல்கிறேன். நேற்று எனக்கு அப்படி தோன்றியது” என்றான். கர்ணனிடம் “என் தம்பியர் ஆழ்ந்து சொல்சூழ்கிறார்கள். உணவைப்பற்றித்தான் என்றாலும் சொல்சூழ்கை என்பது சிறப்புதானே…?” என்றான் துரியோதனன். “அன்னமே பிரம்மம்” என்ற துச்சாதனன் “அதற்குமேல் வேதங்களில் இருந்து கௌரவர்கள் தெரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை” என்றான்.

ஒவ்வொருவரும் அதுவரை இருந்த நெகிழ்வனைத்தையும் சிரிப்புகளால் உவகைக் கூச்சல்களால் கைகளை தட்டிக்கொள்ளும் ஓசைகளால் கடந்து சென்றார்கள். அந்த நீள்பெரும் கூடமே அவர்களின் குரல்களால் நிறைந்திருந்தது. கருந்தூண்களும் அவர்களுடன் இணைந்து களியாடுவதுபோல தோன்றியது. அணுக்கர்கள் நான்கு வாயில்கள் வழியாகவும் அவர்களுக்கு பலவகை ஊனுணவுகளையும் இன்கள் நிரையையும் கொண்டு வந்தனர். கயிறு சுற்றப்பட்ட பீதர் நாட்டுக் கலங்களில் இறுக மூடப்பட்ட தேறல் வந்தது. அதை உடைத்து கடலாமைக் கோப்பைகளிலும் மூங்கில் குவளைகளிலும் பரிமாறினர்.

அவர்களிடம் எப்போதுமே உணவுமுறைமைகள் ஏதுமிருப்பதில்லை. எரிதழலில் அவியிடுவதுபோலத்தான் உண்பார்கள். “இங்கே! மூடா இங்கே!” என்று துரியோதனன் கூச்சலிட்டான். “யவனமது எங்கே?” என்றான் துச்சலன். “ஊனுணவு… மேலும் ஊன்…” என்றான் சுபாகு. “சிறந்த ஊன்… இந்த மான் ஓடும்போதே கொல்லப்பட்டுள்ளது” என்றான் சித்ரகுண்டலன். “எப்படி தெரியும்?” என்று கர்ணன் கேட்டான். “இதன் கால்கள் நீண்டிருக்கின்றன” என்றான் சித்ரகுண்டலன். “நெய்யில் பொரிக்கும்போது அது ஓட முயன்றிருக்கும்” என்று கர்ணன் சிரிக்காமல் சொல்ல “ஆம், நெய் மிகச்சூடானது. என் கையில் ஒருமுறை விழுந்துள்ளது” என்றான் சித்ரகுண்டலன். கர்ணன் தன் சிரிப்பொலி மட்டும் தனித்து எழுவதை கேட்டான். உண்ணும் ஓசையும் குடிக்கும் ஓசையும் சூழ்ந்திருந்தன.

களிற்றுக்காளை இறைச்சியை எலும்பு முனையை பற்றித்தூக்கி கடித்து இழுத்து உரித்து மென்றபடி துச்சாதனன் “அங்கு உண்டாட்டு உண்டா மூத்தவரே?” என்றான். “இல்லை” என்றான் கர்ணன். “உண்பார்கள், ஆடுவார்கள். ஆனால் பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரியில் மட்டுமே உண்மையில் உண்டாட்டு நிகழ்கிறது. உண்டபிறகு அரண்மனையில் மட்டுமல்ல கலவறைகளில்கூட எதுவும் எஞ்சாமல் இருப்பதற்குப் பெயர்தான் உண்டாட்டு” என்றான். அதிலிருந்த நகையாடலை புரிந்து கொள்ளாமல் துச்சாதனன் “எஞ்சுகின்றதே? ஒவ்வொரு உண்டாட்டுக்குப் பின்னும் நான் அடுமனைக்குச் சென்று பார்ப்பேன். சில கலங்களில் உணவு எஞ்சியிருக்கும்” என்றான்.

“அதை அவர் உண்டுவிட்டு திரும்பி வருவார்” என்றான் பின்னணியில் இருந்த சுபாகு. “ஆம், எஞ்சும் உணவை வீணாக்கலாகாது” என்றபின் துச்சலன் எட்டி ஒரு பெரிய ஆட்டுக்காலை எடுத்து தன் பெரிய பற்களால் கடித்து உடைத்தான். “சிறந்த ஆடு” என்றான். “அது மேயும்போது கொல்லப்பட்டது” என்றான் யுயுத்ஸு. “எப்படி தெரியும்?” என துச்சலன் பெரிய கண்களை விழித்துக் கேட்டான். “ஆடுகள் எப்போதும் மேய்ந்துகொண்டுதானே இருக்கின்றன?” என்று சொல்லி கர்ணனை நோக்கி புன்னகை செய்தான் யுயுத்ஸு. கர்ணன் சிரிக்க “ஆம், அவை நல்லவை” என்று துச்சலன் சொன்னான். “உண்மை, அவை கடுமையாக உழைத்து நமக்காக ஊன்சேர்க்கின்றன” என்றான் சுபாகு. “ஆம்” என்று கருணையுடன் துச்சலன் தலையாட்டினான்.

கர்ணன் “தந்தை எப்படி இருக்கிறார்?” என்றான். யுயுத்ஸு “இன்று செம்பாலைப்பண் கேட்டார். கண்கலங்கி அழுதபடியே இருந்தார்” என்றான். “ஏன்?” என்றான் கர்ணன். “அவர் அரசியை மணம்கொள்ள காந்தாரநகரிக்கு சென்றதை நினைவுகூர்ந்தார். அன்று ஒரு மணற்புயல் அடித்ததாம். புயல் ஓய்ந்தபின் பார்த்தால் அவரது வலக்கையை விதுரரும் இடக்கையை அரசியும் பற்றியிருந்தனராம்.” கர்ணன் “ஆம், இன்றும் அவர்களின் பிடிதானே” என்றான். துரியோதனன் “சற்று தளர்ந்துவிட்டார்” என்றான். “ஏன்?’ என்றான் கர்ணன். துச்சாதனன் “இப்போதெல்லாம் எலும்புகளை மிச்சம் வைத்துவிடுகிறார்” என்றான். அவன் நகையாடுகிறானா என்று விழிகளை நோக்கிய கர்ணன் அப்படியில்லை என்று தெரிந்ததும் வெடித்து நகைத்தான்.

“இந்த உண்டாட்டில் அவரும் இருக்கவேண்டும்” என்றான் கர்ணன். “நமக்கெல்லாம் எலும்புகள்தான் கிடைக்கும்” என்றான் சுபாகு. “ஆமாம், அவர் உண்பதை நோக்கினால் அச்சமே எழும். ஆனாலும் மானுடர் அத்தனை பெருந்தீனி எடுக்கக்கூடாது… எத்தனை பேர் பசித்திருக்கையில் ஒருவரே அவ்வளவு உண்பது பெரும்பிழை” என்றான் துச்சலன். துரியோதனன் “இத்தனை புலரியில் அவர் உண்பதில்லை. இப்போது தன் பயிற்சிக்களத்தில் எடை தூக்கிக் கொண்டிருப்பார்” என்றான்.

“நீங்களெல்லாம் கதாயுதப்பயிற்சி எடுப்பதில்லையா?” என்று கர்ணன் கேட்டான். “பயிற்சியா? அதன் பெயர் அடிவாங்குதல்” என்றான் பின்னணியில் இருந்த நாகதத்தன். “மூத்தவர்கள் நால்வரும் பயிற்சி எடுக்கிறார்கள். நாங்கள் எதிர்முனையில் நின்று அடிவாங்கி விழுகிறோம். இது பல ஆண்டுகளாக நடந்து வருவதுதானே?” என்றான் நிஷங்கி. திரும்பி அணுக்கனிடம் “மானிறைச்சி எங்கே?” என்றான். அவன் கொண்டுவைத்த மரக்கூடையிலிருந்த மானின் பாதியை எடுத்து கடித்து இழுத்து மென்றபடி “நாங்கள் அடிவாங்குதலில் தேர்ச்சி பெற்றுள்ளோம்” என்றான். “அத்தனை அடிவாங்கியும் நீங்கள் பயிலவில்லையா?” என்றான் கர்ணன். “பயில்கிறோம் மூத்தவரே. ஆனால் நாங்கள் பயில்வதைவிட விரைவாக எங்களை அடிப்பதில் மூத்தவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.”

கர்ணன் சிரித்தபடி “நன்று. இனி உங்களுக்கு நான் விற்பயிற்சி கற்றுத் தருகிறேன்” என்றான். துரியோதனன் கைநீட்டி “மூடனைப்போல் பேசாதீர்! கதைப் பயிற்சியிலே கை பழகாத இந்தக் கூட்டமா வில்லேந்தப் போகிறது?” என்றான். எலும்பு ஒன்றை ஊன் தெறிக்க கடித்து உடைத்து சங்குபோல வாயில் வைத்து உறிஞ்சியபின் தலையாட்டி அதன் சுவையை ஒப்புக்கொண்டுவிட்டு “வில்லுக்கு கண்ணும் கையும் மட்டும் இருந்தால் போதாது. அவற்றுக்கு நடுவே ஒன்று வேண்டும்” என்றான். துச்சாதனன் பெரிய மண்குவளை நிறைய மதுவை ஊற்றி எடுத்து இரு மிடறுகள் அருந்தியபிறகு ஐயத்துடன் “என்ன அது?” என்றான். அதை “அறிவு என்று சொல்வார்கள்” என்றான் துரியோதனன்.

அவன் சொல்வது விளங்காமல் சில கணங்கள் நோக்கியபின்பு கர்ணனை நோக்கி “அறிவில்லாதவர்கள் வில்பயில முடியாதா மூத்தவரே?” என்றான் துச்சாதனன். “பார்த்தீரா…? அவனுக்கு தன்னைப்பற்றி ஐயமே இல்லை” என்றான் துரியோதனன். கர்ணன் சிரிக்க துச்சாதனன் “அறிவில்லாவிட்டால் அம்புகள் குறிதவறுமா?” என்றான். “தவற வாய்ப்பில்லை, ஆனால் தவறான குறிகளை தேர்வுசெய்வோம்” என்றான் கர்ணன். துச்சாதனன் ஏப்பம் விட்டபடி மதுக்குடுவையை கையில் எடுத்து தலையை மேலே தூக்கி வாயில் விடத்தொடங்கினான். “யானை நீர் அருந்தும் ஒலி என நினைத்து அம்புவிட்டான் தசரதன்” என்றான் சுபாகு. “அந்தக்கதை எது?” என்றான் துச்சலன். “சிரவணகுமாரன் கதை” என்று சுஜாதன் சொன்னான். “ஓ” என்று சற்றும் ஆர்வமில்லாமல் சொல்லி “அந்த மீன்களை இங்கே அனுப்பலாமே!” என்றான் துச்சலன்.

மறுபக்கம் வாயில் சற்றே திறந்து ஏவலன் வந்து நின்று “காசி நாட்டரசி” என்றான். உணவுண்ணும் கொண்டாட்டத்தில் தரையில் இறங்கி அமர்ந்திருந்த துரியோதனன் பாய்ந்து எழுந்து தன் வாயையும் கையையும் துடைத்தபடி “யார் அவளை இங்கு வரச்சொன்னது? இவர்கள் உண்பதைப் பார்த்தால்…” என்றபடி “யாரங்கே? எனக்கொரு பீடத்தை போடுங்கள்” என்றான். “மூத்தவரே, தாங்கள் இன்னும் உண்டு முடிக்கவில்லை” என்றான் துச்சாதனன். “நான் உண்ணவேயில்லை… இங்கு அமர்ந்து உணவுண்ணும் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றபடி தன் ஆடையில் இருந்த உணவுத் துணுக்குகளை உதறி மேலாடையை தலை மேல் சுழற்றி தோளிலிட்டு தலைப்பாகையை சீரமைத்தான்.

“ஏன்? உண்டாலென்ன?” என்று கர்ணன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பானுமதி உள்ளே வந்து அங்கு நூற்றுவரும் அமர்ந்து உண்டுகொண்டிருந்த காட்சியைப் பார்த்து திகைத்தவள் போல் நின்றாள். துச்சாதனன் “நாங்கள் உண்கிறோம் அரசி, மூத்தவர் உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றான். பானுமதி துரியோதனனைப் பார்த்து “இன்னும் புலரவேயில்லை” என்றாள். “ஆம், புலரவேயில்லை. ஆனால் இவர் புலர்வதற்குள் வந்துவிட்டார்” என்றான் துரியோதனன் தடுமாற்றத்துடன். பானுமதி கர்ணனிடம் “மூத்தவரே, இவர்கள்தான் உண்பதன்றி வேறேதுமறியாத கூட்டம் என்றால் உங்களுக்கு அறிவில்லையா? முதற்புலரி எழும் காலையில் நீங்களுமா இத்தனை ஊனையும் மதுவையும் உண்பது?” என்றாள்.

“இது உண்டாட்டு. நான் வருவதன் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டது” என்றான் கர்ணன். சுஜாதன் “முதல் உண்டாட்டு” என்றான். பானுமதி அவனை நோக்கி “வாயை மூடு… உன்னை பிறகு பார்த்துக்கொள்கிறேன்” என்று சீறியபின் “மூத்தவரே, ஓர் அரண்மனை என்றால் அதில் விடியல்பூசனைகளும் சடங்குகளும் என ஏராளமாக இருக்கும் என அறியாதவரா தாங்கள்? குலதெய்வங்களையும் மூதாதையரையும் வழிபடாமல் உணவுண்ணும் வழக்கம் கொண்ட அரசர்கள் பாரதவர்ஷத்தில் உண்டா?” என்றாள். “இல்லை” என்றான் சத்வன். சினத்துடன் அவனை நோக்கிய பானுமதி அவன் நகையாடவில்லை என உணர்ந்து சலிப்புடன் தலையில் அடித்து “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல்லிச் சொல்லி சலித்துவிட்டது” என்றாள்.

“நான் சொல்கிறேன் இவர்களுக்கு…” என்றான் கர்ணன். “ஆம், நீங்கள் சொல்லி இவர்கள் கேட்கிறார்கள்… மூத்தவரே, நீங்கள் இவர்களை மாற்றவில்லை. இவர்கள் உங்களை மாற்றிவிட்டார்கள்” என்றாள் பானுமதி. “ஆம், உண்மை” என்றான் சத்வன். “வாயை மூடு!” என்றாள் பானுமதி அவனிடம். பின் கர்ணனிடம் “மூத்தவரே, உண்டு முடித்து இவர்கள் அங்கங்கே விழுந்தபின் தாங்கள் என் அரண்மனைக்கு வாருங்கள். நாளை காலை சிந்து நாட்டின் அணிப்படைத் தொகுதி நகர் நுழைகிறது. இங்கு செய்ய வேண்டிய முறைமைகள் பல உள்ளன. அவற்றைப் பற்றி பேச வேண்டும்” என்றாள். “ஆம், இதோ வருகிறேன்” என்று கர்ணன் எழுந்தான். “அந்த ஊன் தடியை உண்டு முடித்துவிட்டு வந்தால் போதும்” என்றாள் அவள்.

அவள் திரும்பும்போது துரியோதனன் மெல்ல “உண்மையிலேயே நான் எதையும் உண்ணவில்லை பானு” என்றான். “உண்ணாமலா உடையெங்கும் ஊன் சிதறிக் கிடக்கிறது?” என்றாள் பானுமதி. “ஆம். நான் அப்போதே பார்த்தேன் மூத்தவரே, நீங்கள் சரியாக துடைத்துக் கொள்ளவில்லை” என்றான் சுபாகு. கர்ணன் பானுமதியின் கண்களை பார்த்தபின் சிரிப்பை அடக்க அவள் சிவந்த முகத்துடன் ஆடையை இழுத்துச் சுற்றிக்கொண்டு திரும்பிச் சென்றாள்.

“சினத்துடன் செல்கிறாள்” என்றான் துரியோதனன். “ஆம், நான் சீரமைத்துவிடுகிறேன்” என்றான் கர்ணன். “நீத்தவர்களுக்கான பூசனைகள் செய்யாது உணவுண்பது பெரும்பிழை… விதுரரும் சொல்லியிருக்கிறார்” என்றான் துரியோதனன். “அரசே, உங்கள் மூதாதையரும் உங்களைப்போன்று புலரியில் முழுப்பன்றியை உண்பவர்களாகவே இருந்திருப்பார்கள். துயர்வேண்டாம்” என்றான் கர்ணன். “ஆம், மாமன்னர் ஹஸ்தி வெறும் கைகளால் யானையை தூக்குவார்” என்றான் துச்சலன். துச்சாதனன் கள்மயக்கில் “யானையை எல்லாம் எவராலும் தூக்கி உண்ண முடியாது…” என்றான். சிவந்த விழிகள் மேல் சரிந்த இமைகளை தூக்கி “வேண்டுமென்றால் பன்றியை உண்ணலாம்” என்றான்.

“பொதுவாக அவள் இங்கு வருவதில்லை. இங்கு நீர் வந்திருப்பதை அறிந்து உம்மை பார்க்காமலிருக்க முடியாமல் ஆகித்தான் வந்திருக்கிறாள்” என்றான் துரியோதனன். பின்பு “நான் மிகை உணவால் பருத்தபடியே செல்வதாக சொல்கிறார்கள்” என்றான். “ஆம், நீங்கள் மிகவும் எடை பெற்றுவிட்டீர்கள்” என்றான் துச்சலன். சினத்துடன் திரும்பி “என்னைவிட மும்மடங்கு பெரியவனாக இருக்கிறாய். நீ என்னை சொல்ல வேண்டியதில்லை” என்றான் துரியோதனன். அவன் தலை மெல்ல ஆடியது. வாயைத் துடைத்தபடி “நான் தேரில் ஏறினால் குதிரைகள் சிறுநீர் கழிக்கின்றன… இழிபிறவிகள்” என்றான். “ஆம், நானே பார்த்தேன்” என்றான் சத்வன். துரியோதனன் அவனை சிவந்த விழிகளால் நோக்கியபோது அவன் சித்தம் செயல்படாதது தெரிந்தது. தேவையில்லாமல் துச்சலன் வெடித்துச் சிரித்தான்.

“நான் உண்மையை சொல்லவா?” என்றான் கர்ணன். “நீங்கள் அத்தனை பேரும் நான் சென்றபோதிருந்ததைவிட இருமடங்கு பெரியவர்களாகிவிட்டீர்கள். உண்மையில் ஒரு பெரிய படைப்பிரிவே என்னை சூழ்ந்தது போல் உணர்கிறேன்” என்றான். “ஆம், எங்களை அரக்கர் படைப்பிரிவு என்று சொல்கிறார்கள்” என்றபடி சுபாகு எழுந்து “எங்கே யவனமது? தீர்ந்துவிட்டதா?” என்றான். “தீரும் வரை உண்பது என்று ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அரசி என்ன, விண்ணிலிருந்து கொற்றவையே இறங்கி வந்தாலும் இவர்களை ஒழுங்குபடுத்த முடியாது” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், ஒழுங்குபடுத்தமுடியாது” என்றான் சமன்.

29

அவனை நோக்கி ஏதோ சொல்ல முயன்றபின் அச்சொல்லை மறந்து ஏப்பம் விட்டான் துரியோதனன். “ஆமாம். அதற்கு முயல்வதைவிட நாம் இன்னும் சற்று உணவருந்துவது உகந்ததாக இருக்கும்” என்றான் கர்ணன். “அதைத்தான் நானும் எண்ணினேன்” என்றபடி துரியோதனன் அமர்ந்து “அந்த மானிறைச்சிக் கூடையை இங்கு எடு” என்று ஆணையிட்டான்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

தொடர்புடைய பதிவுகள்

தான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா

$
0
0

tanzania

 

ஒரு நாள் எனது நிறுவனத்தின் தலைவர் அழைத்தார். அவர் தான்ஸானியாவில் வாழும் மூன்றாம் தலைமுறை குஜராத்தி. என்றால் கோபித்துக் கொள்வார். சௌராஷ்ட்ரர். தேர்தல் நிகழ்வுகள் கவலையூட்டுகின்றன. எனவே, மனிதவள மேம்பாட்டுத் துறையை அழைத்து, அனவருக்கும் சம்பளத்தை 20 தேதியே கொடுத்து விடு என்று சொன்னார். அதை நீயே அவர்களை அழைத்துச் சொல்லிவிடு என்றார்

 

அருண் மதுரா தான்சானியா பற்றி எழுதிய கட்டுரை

 

தொடர்புடைய பதிவுகள்

சங்கரர் உரை -கடிதம் 8

$
0
0

 

1

அன்புடன்  ஆசிரியருக்கு

கிட்டத்தட்ட  நடுங்கும்  மனநிலையோடே  தட்டச்சு  செய்து  கொண்டிருக்கிறேன்.  சங்கரர்  பற்றிய  உரையை  தற்போது கேட்டு  முடித்த  உடனே  எழுதுகிறேன்.  நேற்று  முன்தினம்  நண்பர்  பிரபு  மேற்குலகினைப்  பற்றி ஏதோ பேசிக்  கொண்டிருக்கும்  போது  மேலைச் சிந்தனைக்கும்  இந்திய  சிந்தனைக்கும்  என்ன  வித்தியாசம்  இருக்க  முடியுமென்ற  கேள்வி  எழுந்தது.

அக்கேள்வியை எதிர்கொள்ளக் கூட  என் தகுதி  வளர்ச்சியடையவில்லை என்றெனக்குத்  தெரியும்.  இருந்தும்  உடனே  நான்  சொன்னது  “பைபிள்  முதல் வரியிலிருந்தே  பிரிக்கத் தொடங்கி விடுவது  போல்  மேலைச் சிந்தனையும்  ஒவ்வொன்றையும்  பிரித்து  விளக்க  முயல்கிறது. இந்தியச் சிந்தனை அனைத்தும்  நானே என்பது போல் இணைத்து விளக்க  முயல்கிறது” என்பதே.

இப்படி  ஏன் சொன்னோம் என ஐயப்பட்டேன். ஆனால்  சங்கரர்  குறித்த உரை  முடிகையில்  எனக்குப்  புரிந்தது  அதைச்  சொல்ல  வைத்தது  உங்கள்  எழுத்துக்களும்  நீங்கள்  அளித்த  புதுவிதமான  வரலாற்று நோக்குமே. அவரிடம்  சங்கரர்  உரையை  கேட்கச்  சொன்னால்  கேட்டுவிட்டு நிச்சயம்  அவ்வுரையை கேட்ட பிறகே நான் அவ்வாறு  சொன்னதாகச் சொல்வார். நிச்சயம்  நீங்கள்  சொல்வதுபோல்  எங்களால்  அத்வைதம்  என்ற  மிக  உன்னதமான  மிகப் பிரம்மாண்டமான  கருணை மிக்க கருதுகோளை மேற்குலகில்  வலுவாக  வளர்த்தெடுக்கப்பட்ட சிந்தனைகளுக்கு  இணையாக  முன்  வைக்க  முடியாமலிருக்கலாம். ஆனால்  அத்வைதம்  தன் வழிகளை  அடையும்  என்று  நம்புகிறேன் .

விஜயநகர அரசு குறித்த தகவல் தவிர்த்து இவ்வுரையில் சொல்லப்பட்ட  பல வரலாற்றுத் தகவல்கள்  உங்கள்  இணையதளத்தில்  சங்கரப்புரட்சி தொடங்கி  கிடைக்கும்  சங்கரர்  குறித்த  பதிவுகளில்  இடம்  பெற்றிருந்தாலும்  அனைத்தையும்  முழுமையாக  தொகுத்துக்  கொள்ள இவ்வுரை  உதவியது. அத்வைதம்  குறித்து  எந்த  முதல்  நூலையும்  நான்  கற்றது  கிடையாது.  குறைந்தது  அத்வைதம்  என்ற  வார்த்தையை  சென்ற  வருடம்  உங்கள்  கட்டுரைகளை  படித்த  பின்னே  அறிந்தேன்.  ஒன்றே  அதற்கெதிரான இன்னொன்றாகும் நிலையை  அம்பை பீஷ்மரின்  இறுதி  சந்திப்பில்  அறிய  முடிகிறது. அகத்தியர்  விசித்திர  வீரியனின் அறையில்  தேடியதும் பிரம்மத்தின் எண்ணிலடங்கா இணைகளில் ஒன்றைத்தானோ?

ஒரு குடும்பப்  பண்டிகையில் கூட  பொருளாதார அடிப்படையில்  ஒரே  தரத்தினராக இருப்பவர்களே  ஒன்றி நிற்பார்கள்.  அவர்கள்  அனைவரையும்  ஒன்றிணைத்து  அப்பண்டிகையை  அனைவருக்கும்  உரித்தானதாக  மாற்றும்  ஒருவரை  அனைவரும்  விரும்புவோம். இந்த  வேறுபாடுகளின் இணைவு  தொடர்ந்து  ஈர்ப்புமிக்கதாக இருப்பது  மறைமுகமாக  அத்வைதம்  நம் சிந்தனையில்  ஊறியிருப்பதனால்  போலும். உணர்வுப்பூர்வமாக  அன்றி  அறிவுப்பூர்வமாக  மட்டுமே  அத்வைதத்தை அணுகிய  மாமனிதர்  சங்கரர் என்பது  மறுக்க  முடியாத விவாதப்  பொருளாகும். இன்னொருவனை குறை  சொல்லி தப்பிக்க  முடியாத ஆழமான  குற்றவுணர்வினை அடைகிறேன்.  இப்போதாவது அறிந்தேனே என்ற  மகிழ்ச்சியும் மறுபக்கம். உளறிக்  கொட்டுகிறேன்.
நன்றி

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

 

அன்புள்ள ஜெ

சங்கரர் உரையை நாலைந்துமுறை கேட்டுவிட்டு இதை எழுதுகிறேன் அது புரிய ஒரு கோணம் என்பதனால் என்னால் தொகுத்துக்கொள்ள பலநாட்கள் ஆகியது. ஆனால் மிகச்சிறந்த ஒரு பயிற்சியாக இருந்தது

சங்கரர் பௌத்தர்களுடனான விவாதத்தில் அவர்கள் கேட்ட மேலதிகத் தத்துவக்கேள்விகளுக்கு அவர்களின் நியாய சாஸ்திரத்தைக்கொண்டே உரிய பதில் சொல்லி அவர்களை வென்று வேதாந்தத்தை ஸ்தாபனம் செய்தார்

ஆறுமதங்களையும் ஒன்றாகக் கருதும் ஷன்மதம் அமைப்பை உருவாக்கினார். அதைப்பரப்ப ஏகதண்டிகள் என்னும் குருமரபை உருவாக்கினார்.

ஆனால் அவரது சிந்தனைகள் ஒரு சிறிய ஞானவட்டத்துக்குள்ளேயே இருந்தன. அவற்றுக்கு பெரிய அளவிலான ஸ்தாபன மதிப்பு இருக்கவில்லை.

பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் இந்து மதம் தன்னை தொகுத்துக்கொள்ளவேண்டிய அரசியல்கட்டாயம் உருவானபோது சங்கரர் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டார்

வித்யாரண்யர் அவரை ஒரு பேரரசின் பின்னணி கொண்டவராக ஆனார். அவரே சங்கரர் பேரால் ஸ்மார்த்தர் என்னும் அமைப்பை உருவாக்கினார். அது அன்றிருந்த ஆறுமதங்களிலும் உள்ல பூசகர்களை ஒன்றாக ஆக்கிய ஒரு முறை

அந்தமுறை இந்துமதத்தைக் காப்பாற்றியது. ஸ்மார்த்தர்கள் தங்கள் வரலாற்றுப்பங்கை ஆற்றினர்கள். ஆலால் அவர்கள் மாற்றத்துக்கு எதிரான நிலைச்சக்தி

இப்படி சங்கரர் பேரால் ஆறுமதம் இணைக்கப்பட்டபோது சங்கரர் ஆறுமதங்களுக்கும் பொதுவான பக்திமார்க்கத்தலைவராக ஆனார். ஆகவே அவர் பேரில் ஆறுதெய்வங்களையும் பாடும் தோத்திரநூல்கள் பிறந்தன

இந்தக்கவசத்தை பதினெட்டாம் நூறாண்ண்டில் வேதாந்தம் கழற்றியது. சங்கரர் மீண்டும் புதிதாகப்பிறந்தார். அதுவே ராமகிருஷ்ண மடம் போன்றவை

நான் சுருக்கிக்கொண்டது சரியா?

வேத்பிரகாஷ்

 

தொடர்புடைய பதிவுகள்

ராஜாவின் எதிரிகள்

$
0
0

Kollywood-news-7093

 

இளையராஜா மீதான தாக்குதலின் அடுத்த ரவுண்ட் ஆரம்பித்திருக்கிறது.ஒவ்வொரு பதிவையும் கவனியுங்கள்.சாதி எத்தனை வலிமையானது என்பது புரியும்

ஜெ,

இது ரவிக்குமாரின் டிவீட் வரி. இளையராஜா நம் சூழலில் செயல்படும் ஒரு கலைஞர். அவர்மீதான விமர்சனங்களை இப்படி சாதிமுத்திரை குத்திப் பாதுகாக்கவேண்டுமா என்ன?
சங்கர்

அன்புள்ள சங்கர்

இளையராஜாவின் இசைமீதான விமர்சனங்கள் நிறையவே வரலாம். பல பொருட்படுத்தியாகவேண்டிய கூரிய விமர்சனங்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பரவலாக எழுபவை காழ்ப்புகளும் நக்கல்களுமே. விமர்சனங்கள் அல்ல. சொல்லப்போனால் நல்ல விமர்சனத்தை நான் இதுவரை அச்சில் பார்த்ததே இல்லை.

முக்கியமான இசைவிமர்சகர்கள் அவர் இசைமேல் நேர்ப்பேச்சில் முன்வைத்த பல விமர்சனங்களை நானே தொகுத்து எழுதியும் வைத்திருக்கிறேன். ஆனால் ராஜா அநீதியாகத் தாக்கப்படுபவர் என அவர்கள் எண்ணுவதனால் அவ்விமர்சனங்களை அவர்கள் பதிவுசெய்ததில்லை.

ராஜா மீதான விமர்சனங்கள் மூன்றுவகை. ஒன்று, அவரது பின்புலம் காரணமாக அவர் தங்கள் எளிய அரசியல்கூச்சல்களுடன் இணைந்து கொடிபிடிக்க வரவேண்டும் என எண்ணும் தரப்பினருடையது. அவர் அவற்றைக் கடந்து பலதளங்களுக்கு அப்பாலிருப்பவர் என அவர்களுக்குப் புரியவில்லை.

அவர் ஓர் இந்துவாக, சைவத்தின் சாரத்தைத் தொட்டறிந்தவராக இருப்பது இந்த அரசியலாளர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை அளிக்கிறது. அவரது தோற்றமே அவர்கள் சொல்லும் பல கோட்பாடுகளுக்கு வலுவான பதில். ஆகவே அவரை அவர்கள் வெறுக்கிறார்கள். இதில் மாற்றுமதக் காழ்ப்பாளர்களும் கலந்துகொள்கிறார்கள்

இன்னொருதரப்பு இன்னும் நுட்பமானது. இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் ஆகி மேலும் பலபடிகளுக்கு உயரும்போது உருவாகும் பொருமல் இது. கண்டிப்பாக இது சாதிக்காழ்ப்புதான். விவேகானந்தரும் அரவிந்தருமே இவர்களின் கண்ணுக்கு பெரிதாகப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.

இதைக் கடந்துசெல்வது எளிதல்ல. பெரும்சுயவதை மனநிலையுடன் தன்னைக் கிழித்து உதறிவிட்டு முன்செல்லவேண்டும். தன் பின்னணியை, அகங்காரத்தை, ஏன் சிலசமயம் அதுவரை திரட்டிக்கொண்டிருக்கும் தன்னிலையையே கூட கடந்துசெல்லவேண்டும். அப்படிக் கடந்த பலநூறுபேரை நான் அறிவேன். ஆனால் கடக்கமுடியாத எளியவர்களின் குரலே ஓங்கி ஒலிக்கிறது

மூன்றாவதாக இன்னொன்று உண்டு. ஒரு கலைஞராக ராஜா தன் இசைக்குறிப்புகளுடன் ஒதுங்கித் தனித்திருக்கையில் மட்டுமே மகிழ்ச்சியாக நிறைவாக இருக்கிறார். வெளியே வந்ததுமே அவரிடமிருப்பது எரிச்சல்தான். என் மேல் மிகுந்த மதிப்பு கொண்டவர். எப்போதும் முகமலர்ந்து வரவேற்பவர். எந்தத்தடையுமில்லாமல் அவரிடம் பழகுபவன் நான். ஆனால் நான்கூட மிகமிகக் கவனமாகவே அவருடன் இருப்பேன். எண்ணி எண்ணியே சொல்லெடுப்பேன்.

அபாரமான தன்னம்பிக்கையும், அதேசமயம் பிரம்மாண்டமான ஒன்றை அணுகியறிவதால் உருவாகும் ஆழமான தன்னடக்கமும், சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றில் அளைந்துகொண்டே இருப்பதனால் மொழியில் பலவகையான சிடுக்குகளும் கொண்டவராகவே நான் ராஜாவை அறிந்திருக்கிறேன். நாம் சென்று பழகும் ராஜா இசையினூடாக நாமறிந்தவர் அல்ல. அது உட்கார்ந்திருக்கும் பறவை. விண்ணளக்கையிலேயே அது உண்மையான பறவை

இந்த இயல்பை நான் அசோகமித்திரனிடமும் தேவதேவனிடமும்கூட கண்டிருக்கிறேன். அவர்களின் கலைச்சூழலுக்குவெளியே அவர்கள் நிலையற்றிருக்கிறார்கள். பிறழல்களும் பிசிறுகளும் மட்டுமே அவர்களுக்குத் தெரிகின்றன. தேவதேவன் என் மூத்தசகோதரர் போல. ஆனால் முள்ளை உடலெங்கும் ஏந்தியவராகவே எனக்குத்தெரிவார். எண்ணி எண்ணி அஞ்சி அஞ்சித்தான் பேசுவேன். ஏன் என்றால் அது அப்படித்தான்.

அசோகமித்திரனும் தேவதேவனும் எளிய வாழ்க்கை வாழும் கலைஞர்கள்.ராஜா ஒரு பெரும் பிம்பம். வெற்றிபெற்ற மனிதர். புகழ் பணம் உடையவர். ஆகவே அவரது இவ்வியல்பு கலைஞன் என்னும் ஆளுமையை அறியாத, மனிதர்களை எப்போதும் சந்தையிலேயே சந்திக்கவிரும்புகிற, எளியவர்களை சீண்டுகிறது

இவர்கள் உருவாக்கும் கசப்புகள் விமர்சனங்கள் அல்ல. ராஜாவை நாளை நல்ல இசைத்தொகுப்பாளர்கள் தொகுத்து பகுத்து ஒரு இசைக்கட்டுமானமாக நமக்கு அளிக்கக்கூடும். அதில் நாட்டுப்புற இசையின் களியாட்டும் மரபிசையின் தவமும் வெளிப்படும் எல்லைகளை அவர்கள் தொட்டுக்காட்டக்கூடும். அதன் குறைகளையும் எல்லைகளையும் அவர்களே நமக்குச் சுட்டிக்காட்டவும் செய்வார்கள். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான்

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

அஞ்சலி: கே.ஏ.குணசேகரன்

$
0
0

1

 

நாட்டரியல் ஆய்வாளரும் , நாடக ஆசிரியரும், நடிகருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் இன்று பாண்டிச்சேரியில் அவரது இல்லத்தில் காலமானார் என்று அறிந்தேன். அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லை. அவரது நாடகமான பலியாடுகளை வாசித்திருக்கிறேன். தமிகத்து தலித் இயக்கத்தின் முக்கியமான பிரச்சாரகர்களில் ஒருவர். தீவிரமாக அத்தரப்பை முன்வைக்கும் நாடகம் அது.

 

இருமுறை நிகழ்ச்சிகளில் சந்தித்து ஓரிரு மரியாதைச் சொற்கள் பரிமாறியிருக்கிறோம்.என் நூறுநாற்காலிகள் கதை வெளிவந்தபோது தொலைபேசியில் அழைத்து பேசிக்கொண்டிருந்தார். உரத்த சிரிப்பொலிகளுடன் பேசும் அவரது குரலை நினைவுறுகிறேன்

 

அஞ்சலி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30

$
0
0

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 7

முதற்பறவைக் குரல் எழுவதற்கு முன்னரே எழுந்து நீராடி, ஆலய வழிபாட்டுக்குரிய வெண்பருத்தி ஆடை சுற்றி ஒற்றை முத்துமாலையும் கங்கணங்களும் அணிந்து, கதிர்க்குறி நெற்றியிலிட்டு கர்ணன் சித்தமாகிக் கொண்டிருந்தபோது கீழே குழந்தைகளின் ஒலி கேட்டது. முதலில் அவன் அதை கலைந்த பறவைத்திரளின் ஒலி என்று எண்ணினான். மறுகணமே குழந்தைகளின் குரல் என்று தெரிந்ததும் முகம் மலர அறையைத் திறந்து இடைநாழிக்கு வந்தான்.

மறுஎல்லையில் படிகளில் இளைய கௌரவர்கள் காடுநிறைத்து முட்டிக்கொந்தளித்து வழிந்திறங்கி வரும் பன்றிக்குட்டிகள் போல கரியதிரள்பெருக்கு என கூச்சலிட்டபடி அவனை நோக்கி வந்தனர். அவர்களில் மூத்தவனுக்கே ஐந்து வயதுதான். ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் வயதுக்குமேல் வளர்ந்திருந்தனர். முதலில் வந்த கூர்மன் முழு விரைவில் தலையை குனித்தபடி துள்ளி ஓடி வந்து அவன் தொடையை வலுவாக முட்டி பின்னால் தள்ளினான்.

அதை எதிர்பார்த்திருந்த கர்ணன் ஒரு அடி பின்னால் வைத்து சிரித்தபடி அவனை பற்றித் தூக்கி பின்னால் இட்டான். தொடர்ந்து வந்த இளையவர்களும் தங்கள் தலைகளால் அவன் மேல் முட்டினார்கள். கூச்சலிட்டவர்களாக படிக்கட்டை நிறைத்து ஏறி சிதறிப்பரந்து அவனை சூழ்ந்துகொண்டே இருந்தனர்.

“பெரியதந்தையே பெரியதந்தையே” என அவனைச் சுற்றி கூச்சலிட்டபடி துள்ளிக் குதித்தனர். “பெரீந்தையே! பெரீந்தையே!” என நா திருந்தாத சின்னஞ்சிறு மழலைகள் கைதூக்கி எம்பிக் குதித்தன. ஒவ்வொன்றும் கரிய குட்டித்தோள்களுடன் அடுப்பிலிருந்து இறக்கிய கலங்கள் போல கொழுத்திருந்தன. பளிங்கில் ஆணியால் கிறீச்சிடுவதுபோன்ற குரல்கள்.

சிலர் ஒருவர் தோளில் ஒருவர் கால் வைத்து எழுந்து அவன் தோள்களை பற்றிக்கொண்டு தலையில் ஏற முயன்றனர். சற்று நேரத்தில் அவன் உடலெங்கும் உணவை மொய்த்து முழுக்க மூடும் எலிகளைப்போல் அவர்கள் தொற்றி நிரம்பியிருந்தனர். கைகளிலும் கால்களிலும் தோளிலும் தலையிலும் இளமைந்தர்களுடன் உரக்க நகைத்தபடி கர்ணன் சுழன்றான்.

கீழிருந்து மேலும் மேலும் இளையகௌரவர்கள் வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து வந்த ஏவலன் ஒருவன் “ஒன்றாகத் திரண்டுவிட்டால் இவர்களை எதுவுமே கட்டுப்படுத்த முடியாது அரசே” என்றான். “ஏன் நீ கட்டுப்படுத்துகிறாய்? அவர்களுக்கு தங்களுக்குரிய நெறிகள் உள்ளன” என்றான் கர்ணன்.

30

அவன் முழங்காலுக்கு கீழே நின்றிருந்த சிறுமண்டையுடன் சுதமன் இருகைகளையும் விரித்து “பெரீந்தையே பெரீந்தையே பெரீந்தையே” என மூச்சில்லாது தொடர்ச்சியாக அழைத்தான். கர்ணன் குனிந்தபோது தலையிலிருந்து தூமன் முன்னால் சரிந்து கீழே நின்றிருந்தவர்கள் மேல் விழுந்தான். அவன் புரண்டு எழுந்து “என் கதாயுதம்! அதை நான் கீழே வைத்திருக்கிறேன்” என்று கீழே ஓடப்போக கீழிருந்து வந்தவர்களால் தடுக்கப்பட்டு மீண்டும் திரும்பி வந்தான்.

சுதமன் “பெரீந்தையே பெரீந்தையே பெரீந்தையே” என அழைத்தபடி கர்ணனின் முழங்காலை உலுக்கினான். “என்ன வேண்டும் மைந்தா?” என்றான் கர்ணன். “நான் நான் நான்” என்று அவன் சொல்லி கைதூக்கி “நான் ஒரு யானையை கொன்றேன்” என்றான். “ஆமாம், கொன்றான்… இவன் கொன்றான்” என்று அவனுக்குப் பின்னால் நின்ற மேலும் சிறியவனாகிய சுகீர்த்தி சொன்னான். “அவன் உன் சான்றுசொல்லியா?” என்றான் கர்ணன். சுதமன் “ஆம்” என்று பெருமையுடன் தலையசைத்தான். பின்னால் எவரோ “யானையை எப்படிக் கொல்லமுடியும்? மூடன்” என்றான். இன்னொருவன் “பெரியதந்தை பீமன் யானையை கொன்றார்” என்றான்.

சற்றுநேரத்தில் அந்த இடைநாழி முழுக்க குழந்தைக் கௌரவர்களால் நிறைந்தது. கரிய உடலும் பெரிய பற்களும் கொண்டிருந்த துர்விநீதன் உரத்த குரலில் “நான் புரவியேறப் பயின்றுவிட்டேன். நான் புரவியில் ஏறி இந்த நகரை மும்முறை சுற்றி வந்தேன்” என்றான். “மும்முறை” என்று அவன் அருகே இருந்த இளையோன் துர்கரன் சொன்னான். “மூன்று முறை!” “ஆமாம், மூன்று முறை” என்று பல குரல்கள் எழுந்தன. ஒருவன் எம்பிக்குதித்து “பெரியகுதிரை!” என்றான். இன்னொருவன் “ஆமாம், யானைபோன்ற குதிரை” என்றான். “சிவப்பு” என்று ஒருவன் வேறெதையோ ஒப்புக்கொள்ள அப்பால் ஒருவன் “மிகவும் இனிப்பு!” என்று மகிழ்ந்தான்.

கர்ணனால் எந்த முகத்தையும் தனியாக பிரித்தறிய முடியவில்லை. விழித்த வெண்பளிங்குருளைக் கண்கள், ஒளிவிடும் உப்புப்பரல்பற்கள், உவகையன்றி பிறிதொன்றும் அறியாத இளைய உடல்கள். யானைக்குட்டிகள், எருமைக்கன்றுகள், பன்றிக்குருளைகள், எலிக்குஞ்சுகள். துள்ளுவதற்கென்றே உருவான கால்கள். அணைப்பதற்கென்றே எழுந்த தளிர்க்கைகள்.. செவிப்பறைகளை கீறிச்செல்லும் குரல்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். “பெரீந்தையே” என அவன் காலுக்கு கீழே ஒரு குரல் கேட்டபோது அடிவைத்துப் பழகிக்கொண்டிருக்கும் சிறிய குழந்தையை கண்டான். “ஆ, இத்தனை சிறியவனா?” என்றபடி கர்ணன் அவனை ஒற்றைக்கையால் எடுத்தான். “அவன் நேற்றுதான் பிறந்தான்… மிகச்சிறியவன்” என்று சொன்னவனும் அப்போதுதான் பேசக் கற்றிருந்தான். எச்சில் வழிந்து மார்பில் வழிந்திருந்தது.

கர்ணனின் அறைவாயிலில் நின்றிருந்த சிவதர் “எண்ணவே முடியாது போல் தோன்றுகிறதே” என்றார். கர்ணன் “எண்ணூற்றைம்பதுபேர் என்பது முறையான கணக்கு என நினைக்கிறேன்” என்றான். “இல்லை அரசே, ஆயிரம் கடந்துவிட்டது. நாள்தோறும் ஒன்றிரண்டு பிறக்கிறது” என்றான் ஏவலன். “இளையவர் கவசீக்கு மட்டும் பன்னிரு துணைவியர். அத்தனைபேரும் அரக்கர்குலம். பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.” கர்ணன் தன்னைச்சுற்றி திரும்பித்திரும்பி நோக்கி சிரித்தபடி “அத்தனை பேரும் துரியோதனன் போல் இருக்கிறார்கள்” என்றான். “என் நண்பன் நல்லூழ் கொண்டவன். இப்புவியில் அவனைப்போல் இத்தனை பல்கிப் பெருக பிறிது எவராலும் இயலவில்லை.”

சரசரவென்று பெருந்தூண் ஒன்றின்மேல் ஏறிய ஒருவன் “பெரியதந்தையே, நான் இங்கிருந்து குதிக்கவா?” என்றான். சிரித்தபடி “சரி, குதி” என்று சொல்லி கர்ணன் திரும்புவதற்குள் அவன் பேரோசையுடன் வந்து மரப்பலகையில் விழுந்தான். “அடடா…” என்று கர்ணன் ஓடிச்சென்று அவனை அள்ள முயல இருவர் அவன் தோள்மேல் தாவி ஏற கால் தடுமாறி நின்றான். கீழே விழுந்தவன் கையை ஊன்றி எழுந்து “எனக்கொன்றுமே ஆகவில்லை” என்றான். ஆனால் அவன் கால்களில் அடிபட்டிருப்பது தெரிந்தது. சிவதர் “இவர்களுக்கு சொல் என்றால் அக்கணமே செயல்போலும்” என்றார்.

ஏவலன் “அவர்களை நாம் நோக்கவேகூடாது அரசே… இதெல்லாம் அவர்களுக்கு அன்றாடச்செயல்” என்றான். “பெரீந்தையே” என அழைத்த ஒருவன் தன் கையிலிருந்த ஒரு கலத்தைக் காட்டி “இன்னீர்…” என்றான். “நான் முழுமையாக குடித்துவிட்டேன்.” கர்ணன் “என்ன உண்டீர்கள்?” என்றான். ஏதேதோ சொல்லிக் கூவிய நூற்றுக்கணக்கான குரல்கள் சூழ ஒலித்தன. “என்ன உண்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்” என்றார் சிவதர்.

“கேட்கவே வேண்டியதில்லை. எது உள்ளதோ அதை கொண்டு வைத்தால் போதும். உண்பதில் தந்தையரை ஒவ்வொருவரும் மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது” என்றான் கர்ணன். “எனக்கு யானை… யானை வேண்டும்” என்றான் ஒருவன் காலுக்கு அடியில். அவனை ஒற்றைக்கையில் தூக்கி “எதற்கு?” என்றான் கர்ணன். “நான் யானையை தின்பேன்.”

கீழிருந்து படியேறிவந்த சுஜாதனிடம் “எங்கே சென்றிருந்தாய்?” என்றான் கர்ணன். “நானும் இவர்களுடன் வந்தேன் பெரியதந்தையே” என்றான் அவன். அப்போதுதான் அவன் குரல் வேறு என கர்ணன் உணர்ந்து “நீ யார்?” என்றான். “பெரியதந்தையே, நான் லட்சுமணன்… மறந்துவிட்டீர்களா?” கர்ணன் உரக்க நகைத்து “அருகே வா அறிவிலி… நான் செல்லும்போது நீ சிறுவனாக இருந்தாய். சுஜாதன் உன்னைப்போலிருந்தான்” என்றான் கர்ணன்.

அவனை திகைத்து நோக்கிய சிவதரிடம் “அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசன் லட்சுமணன். சுயோதனனின் முதல்மைந்தன்…” என்றான் கர்ணன். சிவதர் “ஆம், நாம் செல்லும்போது மிகச்சிறியவர். மும்மடங்கு வளர்ந்துவிட்டார்” என்றார். ”இன்று அத்தையும் சிந்து நாட்டரசரும் வருகிறார்கள்” என்றான் லட்சுமணன். அவனுக்கு இளையவனாகிய உதானன் “நான் சிந்துநாட்டரசரை கதைப்போருக்கு அழைத்துள்ளேன்” என்றான். குழந்தைகளை நோக்கி “நீங்களெல்லாம் அதற்கென்று அணிசெய்து கொள்ளவில்லையா?” என்றான் கர்ணன்.

“நாங்கள் புலரியிலேயே அணிசெய்துவிட்டோம். அதன் பிறகு இவன் என்னை அடித்துவிட்டு ஓடினான். நான் அவனை துரத்திச்சென்று…” என்று துர்தசன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தசகர்ணன் அவன் மேல் தாவி அவனை மறித்து “இருவரும் சண்டை போட்டார்கள். புழுதியிலே புரண்டு… அப்படியே புரண்டு…” என்றான். கஜபாகு “யானைக் கொட்டில் வரைக்கும் நாங்கள் ஓடினோம்” என்றான்.

ஏவலன் “இளவரசர்கள் என்கிறார்கள். இவர்கள் அணிந்திருப்பதெல்லாம் பொன்னும் மணியும் முத்தும் பவளமும். ஆனால் புழுதியின்றி இவர்களை இந்நகர் மக்கள் எவரும் பார்த்ததில்லை” என்றான். “அது அஸ்தினபுரியின் புழுதி” என்றான் கர்ணன். அவர்களை கைநீட்டி அள்ளியபடி “வாருங்கள், அறைக்குள் செல்வோம்” என்றான்.

சிவதர் “அறைக்குள் இத்தனை பேரை விடமுடியாது அரசே. இங்கேயே இருக்கலாம்” என்றார். “பீடம்?” என்றான் கர்ணன். “பீடமெதற்கு? இத்தனை பேர் ஏறினால் எந்தப் பீடமும் உடைந்துவிடும். இங்கேயே தரையில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்றார் சிவதர். லட்சுமணன் சிரித்து “பெரியகூட்டம்… எவருக்கும் எந்த ஒழுங்கும் கிடையாது… எதையும் செய்வார்கள்” என்றான்.

அவனைச் சுற்றி நீர்ப்பெருக்கில் கொப்பரைகள் போல மண்டைகள் அலையடித்தன. சிரித்தபடி. கர்ணன் அவர்களில் ஒவ்வொருவரையாக தூக்கி வானில் எறிந்து பிடித்தான். “என்னை! பெரீந்தையே என்னை! என்னை!” என்று பலநூறு கைகள் எழுந்தன. இறுதியாக படிகளில் ஏறிவந்த ஒரு வயதான சுப்ரஜன் தன் ஆடை அனைத்தையும் சுருட்டி கையில் எடுத்துக்கொண்டு அழுதபடி அணுகினான்.

“யாரவன்?” என்றான் கர்ணன். “யார் நீங்கள் இளவரசே?” என ஏவலன் அவனிடம் கேட்க சுப்ரஜன் அழுதபடியே “என் ஆடை கிழிந்துவிட்டது” என்றான். “அவமதிக்கப்பட்டுவிட்டார். ஆகவே அனைத்து ஆடைகளையும் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வருகிறார்” என்றார் சிவதர். “அவனைத் தூக்கி இங்கு வீசு” என்றான் கர்ணன்.

ஏவலன் சுப்ரஜனைத் தூக்கி கர்ணனை நோக்கி எறிய ஒற்றைக்கையால் அவனைப் பிடித்து சுழற்றித் தன் தோளில் அமரவைத்து “எப்படி கிழிந்தது ஆடை?” என்றான். “நான் வாளை எடுத்து ஆடைக்கு கொடுத்தேன். அதுவே கிழித்துக்கொண்டது” என்றான் அவன். “வாளா? இவனிடம் யார் வாளை கொடுத்தது?” என்றான் கர்ணன். “என்ன செய்வது? நகரெங்கும் படைக்கலங்கள்தான். நாளுக்கு ஒருவர் குருதிக் காயத்துடன் ஆதுரசாலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஏவலன். “இப்போது அங்கே பதினெட்டுபேர் படுத்திருக்கிறார்கள்…”

“இரண்டு வாரங்களுக்கு முன் மூவர் சென்று கைவிடுபடை ஒன்றை இயக்கி விட்டனர். நூற்றிஎழுபது அம்புகள் வானில் எழுந்து காற்றில் இறங்கின. நல்லூழாக அது நள்ளிரவு. இல்லையேல் பல வீரர்களின் உயிர் அழிந்திருக்கும்” என்றான் இன்னொரு ஏவலன். “அரண்மனை எப்படி தாங்குகிறது இவர்களை?” என்று சிவதர் கேட்டார்.

“இவர்களை அவைநிகழும் இடங்களுக்கெங்கும் வர விடுவதில்லை. அஸ்தினபுரியின் மேற்கே ஏரிக்கரையில் இவர்களுக்கென்று மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. அன்னையரும் ஏவலருமாக இவர்கள் அங்குதான் வாழ்கிறார்கள். இவர்கள் வெளிவராமல் இருக்க சுற்றி உயரமான கோட்டை கட்டி ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்றான் ஏவலன். ”இவர்களை எவர் காவல் காப்பது?” என்றான் கர்ணன்.

பேரொலியுடன் அவனுக்குப் பின்னால் இருந்த சாளரக்கதவு நான்கு இளைய கௌரவர்களுடன் மண்ணில் விழுந்ததைக் கேட்டு திடுக்கிட்டான். சிவதர் திரும்பிப் பார்த்து “ஐயையோ” என்றார். ஏவலன் “அவர்களுக்கு அடியேதும் படாது. பட்டாலும் அன்றிரவுதான் அது வெளியே தெரியும். பொதுவாக நடமாடும் நிலையில் இருக்கும் இளவரசர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. இவர்களில் கால்முளைத்தவர்களை அரணெல்லாம் கட்டுப்படுத்த முடியாது” என்றான்.

“ஆம், ஐம்பதுபேருக்கு மேல் பத்து வயதை கடந்தவர்கள். அவர்கள் அங்கிருக்கும் அணித்தோட்டத்து மரங்களில் ஏறி கோட்டைக்கு மேல் உலவக்கூடியவர்கள். அங்கிருந்தே களிறுகளின் முதுகில் தாவவும் கற்றிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேலானவர்களுக்கு நான்குவயது கடந்துவிட்டது. அதற்கும்கீழே உள்ளவர்களே மிகுதி. கோட்டை என்பது இவரைப் போன்ற நடை நன்கு பழகாத சிறுவர்களுக்காகத்தான்.”

ஏவலன் சுட்டிக்காட்டிய சிறுவன் அழிப்பரப்பில் தொற்றி ஏற முயன்றுகொண்டிருந்தான். தன் கையில் இருந்த குறுவாளால் தரைப்பலகையை குத்திப் பெயர்த்து எடுத்த இளைய கௌரவன் ஒருவன் உள்ளே காலை விட்டு “மூத்தவரே, இதன் வழியாக நாம் கீழ்த்தளத்தில் குதித்து விடமுடியும்” என்றான்.

ஆவலுடன் “எங்கே?” என்று கேட்டபடி ஏழெட்டு பேர் அந்தப் பலகை இடைவெளியை நோக்கி சென்றார்கள். பெயர்த்தவன் அந்த இடைவெளி வழியாக தன் உடலை நுழைக்க பாதி நுழைந்தபின் மேலும் கீழே செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டான். சிவதர் “ஐயையோ… தூக்குங்கள் அவரை” என்று பதற “இல்லை சிவதரே. இதிலெல்லாம் நாங்கள் தலையிட முடியாது. அவர்களே ஏதேனும் வழி கண்டுபிடிப்பார்கள். மேலும் இப்படி எவரேனும் ஒருவர் சிக்கி ஓரிரு நாழிகைகள் செல்லுமென்றால் நான் சற்று ஓய்வெடுக்க முடியும்” என்றான் ஏவலன்.

இன்னொருவன் “கீழே நால்வர் காவல்மாடத்தில் ஏறி இறங்கமுடியாமலிருக்கிறார்கள்” என்றான். கீழே மாளிகைமுற்றத்தில் கொம்பு ஒலி கேட்டது. இளைய கௌரவர்களில் ஒருவன் “தந்தையர் வருகிறார்கள்” என்றான். “தந்தையர்! தந்தையர்!” என கூச்சல்கள் கிளம்பின. பேரொலியுடன் இளவரசர்களில் ஒரு பகுதி பிரிந்து படிகளில் உருண்டு பொழிந்து கீழ்க் கூடத்தை நிறைத்து வாயிலை நோக்கி ஓடியது.

தொடர்ந்து ஓடிய குட்டிக்கால்கொண்ட இளவரசர்கள் நாலைந்து பேர் உருண்டு விழுந்து புரண்டபடியே கீழே சென்றார்கள். சிலர் படிகளின் கைப்பிடிகளைத் தொற்றி தொங்கி கீழே குதித்தனர். மேலிருந்த கைப்பிடி மீது ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சமயத்தில் ஏற மரம் முறியும் ஒலி கேட்டது.

“கைப்பிடிச்சுவர் உடைகிறது” என்றார் சிவதர். “ஆம், உடைகிறது” என்றான் ஏவலன் இயல்பாக. “பிடியுங்கள்! விழப்போகிறார்கள்” என்றார் சிவதர். “ஐம்பது பேரை பிடிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை” என்ற ஏவலன் “ஒன்றும் ஆகாது சிவதரே” என்று சிரித்தான். கைப்பிடி உடைந்து சரிய மொத்தமாக அத்தனை பேரும் கீழிருந்த பலகையில் விழும் ஒலி கேட்டது. யாரோ அலறும் ஒலி.

“யாருக்கோ அடிபட்டிருக்கிறது” என்றார் சிவதர் ஓடிச்சென்று நோக்கியபடி. “அவர்கள் எழுந்தோடிய பிறகு யார் எஞ்சியிருக்கிறார்களோ அவர்களுக்கு அடிபட்டிருக்கிறது என்று சொல்லமுடியும்” என்றான் ஏவலன். அவர்களின் ஓசையை அந்த மாளிகையின் அத்தனை வாயில்களும் வாயாக மாறி முழங்கின.

கர்ணன் சென்று பார்த்தபோது அங்கு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இறுதியாக எழுந்து ஓடிய ஒருவன் மட்டும் காலை சற்று நீட்டி நீட்டிச் சென்றதுபோல் தோன்றியது. வாயிலைக் கடந்து துச்சலனும் துர்முகனும் சுபாகுவும் ஜலகந்தனும் சித்ரகுண்டலனும் உடலெங்கும் மைந்தர்கள் தொற்றியிருக்க தள்ளாடி நடந்தபடி வந்தனர். அவர்களைச் சூழ்ந்து கூச்சலிட்டபடி வந்தனர் இளைய கௌரவர். சுபாகு அங்கிருந்தபடியே வெடிக்குரலில் “மூத்தவரே, இன்றுதான் சிந்து நாட்டரசர் நகர் புகுகிறார். நாம் சென்று நகர் வாயிலிலேயே அவரை வரவேற்க வேண்டியுள்ளது” என்றான்.

சிவதர் “இந்த எண்ணூறு பேரையும் அழைத்துக்கொண்டா நாம் செல்லவிருக்கிறோம்?” என்றார். “ஆம், அரச முறைப்படி இவர்கள் சென்றாக வேண்டுமல்லவா?” என்றான் சுபாகு. “சிந்து நாட்டரசர் இவர்களை இதற்குமுன் பார்த்திருக்கிறாரா?” என்றான் கர்ணன். சிவதர் “கேள்விப்பட்டிருப்பார். இதற்குள்ளாகவே இவர்களைப் பற்றி ஏழெட்டு குறுங்காவியங்கள் சூதர்களால் பாடப்பட்டிருக்காதா என்ன?” என்றார்.

பேரொலியுடன் துச்சலனின் பின்னாலிருந்த கதவு பித்தளைக் கீலிலிருந்து கழன்று சரிந்தது. அவன் ஒற்றைக்கையால் அதை பிடித்துக்கொண்டு அதில் தொங்கியிருந்த கௌரவர்களை உலுக்கி கீழே வீழ்த்தினான். அவர்கள் அதை ஓரு விளையாட்டாக ஆக்கி கூச்சலிட்டனர். கதவைப்பிடுங்கி சாற்றி வைத்துவிட்டு “நம் அரண்மனையில் கதவுகள் மிகவும் மெலிதாக பொருத்தப்பட்டுள்ளன மூத்தவரே” என்றான்.

கர்ணன் படிகளில் இறங்கி வந்தபடி “ஆம், அஸ்தினபுரி நகரமே மிக மெல்லிய பொருட்களால் கட்டப்பட்டுள்ளது இளையோனே. அனேகமாக இந்த மாளிகையை நாளை திரும்பக் கட்டவேண்டியிருக்கும்” என்றான். அறைக்குள் படாரென்ற ஒலி கேட்டது. சிவதர் திரும்பி “கலம்” என்றார். உடனே இன்னொரு ஒலி கேட்டது. கர்ணன் நோக்க “தங்கள் மஞ்சம் இரண்டாக உடைந்துள்ளது என்று நினைக்கிறேன்” என்றார்.

வெளியே புரவி உரக்க கனைத்தது. “அதை யார் என்ன செய்தது?” என்று கேட்டான் கர்ணன். “புரவிகளில் ஏற முயல்கிறார்கள்” என்று வாயிலில் நின்ற பணியாள் சொன்னான். கர்ணன் “நாம் பேரரசரை பார்க்கப் போகிறோமல்லவா?” என்றான். “அவர் நீராடி அணிபுனைந்து அவைக்குச் சென்றுவிட்டார். அரசரும் பிற தம்பியரும் அவையில் இருப்பார்கள் . நாம் சென்று ஜயத்ரதரை வரவேற்று அவை சேர்ப்போம். குழந்தைக்கு மாமனாகிய தாங்களும் நகர வாயிலிலேயே வரவேற்க வேண்டுமென்பது முறைமை.”

கர்ணன் “ஆம், இளவரசன் முதலில் நகர்நுழையும் தருணம்” என்றான். துச்சலன் உரக்க “பழைய முறைமை என்றால் மூத்தவருக்குப்பின் அரசாளவேண்டியவர் ஜயத்ரதனின் மைந்தர்தான். தந்தையின் மணிமுடி மைந்தனுக்கு என்பது பழைய காலத்தில் இல்லை” என்றான்.

துர்முகன் “சௌனக குருமுறையின் நெறிகளின்படிதான் இப்போது தந்தையின் மணிமுடி மைந்தனுக்கு வருகிறது அல்லவா? அதற்கு முன் உத்தாலக நீதியின்படி தாய்க்கு தமையனே அரசாளும் முறை இருந்தது” என்றான். கர்ணன் “அரச முறைகளை பேசுவதற்கான இடமா இது?” என்றான். “சிறந்த நெறிகளை களத்திலேயே உரைக்கவேண்டுமென்பது சூதர் சொல்” என்றார் சிவதர்.

அவர்களைச் சுற்றி போர்க்களமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த மாளிகையின் பின்பக்கத்துக்குச் சென்ற இளைய கௌரவர்கள் அங்கிருந்த சேடியர் அறைகளுக்குள் புகுந்துவிட்டிருப்பதை பெண்களின் கூச்சல்களும் உலோகப்பாத்திரங்களின் ஒலியும் காட்டின. “உண்கிறார்கள்” என்றான் துர்முகன்.

துச்சலன் “ஏன் இப்படி உண்கிறார்கள் என்றே தெரியவில்லை. நாங்களெல்லாம் இளமையில் இவ்வாறெல்லாம் உண்டதில்லை” என்றான். “நீ எப்படி உண்டாய் என்று எனக்குத் தெரியும்” என்றான் கர்ணன். “இவர்களைத் திரட்டி எப்படி அரண்மனை முகப்புக்கு கொண்டு செல்வது?” என்று சிவதர் கேட்டார். “அத்தனை பேரையும் கொண்டு செல்வது நடவாது. நான்கு வயதுக்கு மேற்பட்ட இளவரசர்களை மட்டும் கொண்டு செல்வோம்” என்றான் கர்ணன்.

“அப்படியெல்லாம் எந்தக் கணக்கையும் எடுக்க முடியாது. அதற்கு இவர்களை முதலில் எண்ணவேண்டும். அப்பணிக்குரிய கணக்குநாயகங்கள் அமைச்சுப்பணியில் இருக்கிறார்கள்” என்றான் துர்முகன்.

“நான் வருவேன்! நான் வருவேன்! நான் வருவேன்!” என்று கர்ணனின் முழங்கால் உயரமிருந்த சுதீபன் கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தான். அவனைவிட சிறியவனாகிய சம்பு “நான் கதாயுதத்தை கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். அவன் கையில் சிறிய மரத்தாலான கதாயுதம் ஒன்று இருந்தது. “நான் அவனை போருக்கு அழைப்பேன்” என்றான்.

கர்ணன் குனிந்து “யாரை?” என்றான். “சிந்து நாட்டு இளவரசனை.” சிரிப்புடன் “ஏன்?” என்றான் கர்ணன். “அவன் என் தங்கையை மணமுடிப்பான் என்று சொன்னார்கள்” என்றான் அவன் முகம் சுளித்து. “இவனுக்கு தங்கை இருக்கிறாளா?” என்று கர்ணன் கேட்டான்.

துச்சலன் சிறுவனை குனிந்து நோக்கி “முதலில் இவன் யார்?” என்றான். “உங்கள் நூற்றுவரில் ஒருவருடைய மைந்தன்” என்றான் கர்ணன். “ஆம், அது தெரிகிறது. ஆனால் எவர் மைந்தன்?” முழங்கால் வரைக்குனிந்து “அடேய், உன் தந்தை பெயரென்ன?” என்றான் கர்ணன். அவன் “அனுமன்” என்று சொன்னான். “அனுமனா?” என்றபின் கர்ணன் சிரிப்பை அடக்கியபடி “எந்த அனுமன்?” என்று கேட்டான்.

அவன் கையை விரித்து எம்பிக்குதித்து “பெரிய அனுமன்… இலங்கைக்கு அப்படியே தாவி” என்றபின் அவன் தன் பின்பக்கத்தை தொட்டு அங்கே இருந்த கற்பனை வாலை இழுத்துக் காட்டி “இவ்வளவு பெரிய வால்! அதில் தீயை வைத்து…” என சொல்லத்தொடங்கி உளவிரைவால் திணறினான். சிவதர் “சரிதான். விளையும் பயிர் முளையிலே! இப்போதே தீ வைக்க எண்ணுகிறான்” என்றான்.

துர்மதன் வெளியே இருந்து வந்து “மூத்தவரே, நாம் செல்வோம். பொழுது விடிந்து கொண்டிருக்கிறது” என்றான். “இவர்கள் யாருடைய மைந்தர்கள் என்று எப்படி அறிவீர்கள்?” என்றான் கர்ணன். துச்சலன் “உண்மையில் எனக்கு ஏழு மைந்தர்கள் இருக்கிறார்கள். இரு புதல்வியர். புதல்வியரை மட்டும்தான் என்னால் அடையாளம் காணமுடியும். அது இருவருக்குமே என்னை தனித்தறிய முடியும் என்பதால்தான். மைந்தரை அடையாளம் காணமுடியாது.”

“ஆனால் அடையாளம் கண்டு ஆவதொன்றுமில்லை மூத்தவரே. எண்ணூற்றுவரும் ஒரே முகமும் ஒரே பண்பு நலன்களும் கொண்டிருக்கிறார்கள்” என்றான் துச்சகன். சிவதர் ஐயமாக “பண்பு என்ற சொல்லை இதற்கெல்லாம் பயன்படுத்தலாகுமா?” என்றார்.

அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் துச்சலன் “ஆம், அதைத்தான் நானும் சொல்கிறேன். இவர்களை எல்லாம் துரோணரிடம் கல்வி கற்க அனுப்பலாம் என்று எண்ணமிருக்கிறது” என்றான். கர்ணன் வெடித்துச் சிரித்தபடி “அதை நான் வழிமொழிகிறேன். துரோணர் அவரது குருகுலத்திலிருந்து என்னை அவமதித்து துரத்திவிட்டார். அதற்கு இப்படித்தான் நாம் பழிதீர்க்க வேண்டும்” என்றான்.

துச்சலன் “ஏன்?” என்றான். கர்ணன் “இல்லை, துரோணர் மிகச்சிறந்த ஆசிரியர் என்று சொல்லவந்தேன்” என்றான். துச்சலன் குனிந்து தவழ்ந்து சென்ற ஒருவனைப் பார்த்து “இவன் இன்னும் நடக்கவே தொடங்கவில்லை. இவன் எப்படி வந்தான்?” என்றான்.

“யாராவது தமையன்கள் தூக்கிக்கொண்டு வந்திருப்பார்கள்” என்றார் சிவதர். “எப்போதும் இப்படித்தான். மொத்தமாக ஓர் அலைபோல இவர்கள் கிளம்பிச்சென்ற பிறகு ஏழெட்டு குழந்தைகள் அப்பகுதியில் உதிர்ந்துகிடந்து தவழ்ந்து கொண்டிருக்கும். அவற்றை பொறுக்கி திருப்பி அரண்மனைக்கு கொண்டு சேர்ப்போம்” என்றான் ஏவலன்.

துச்சலன் ஒற்றைக்கையால் அதை தூக்கி அதன் முகத்தை பார்த்தான். “இதைப் பார்த்தால் தம்பி விருந்தாரகனின் முகம் போலுள்ளது” என்றான். முகத்தருகே கொண்டுவந்து “அடேய், உன் தந்தை பெயரென்ன?” என்றான். அவன் தன் இடக்கையை வாய்க்குள் திணித்து இரு கால்களை உதறி சிணுங்கினான்.

“மிகச்சிறுவன்” என்று துச்சலன் கர்ணனிடம் சொன்னான். “பேச்சு வரவில்லை. அதற்குள் கிளம்பிவிட்டான்.” கர்ணன் “விருந்தாரகனுக்கு எத்தனை மனைவியர்?” என்றான். “மொத்தம் நான்கு எனநினைக்கிறேன்..அவன் மத்ர நாட்டுக்கு மேலே இமயச்சாரலுக்குச் சென்று அங்குள்ள சம்பரர் என்னும் அரக்கர் குடியிலிருந்து ஒரு பெண்ணை தூக்கி வந்தான். அவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஆனால் இன்றுவரை கொழுநனும் துணைவியும் பேசிக்கொண்டதில்லை” என்றான் சுபாகு. “ஏன்?” என்றான் கர்ணன். “மொழி தெரியவில்லை” என்று சுபாகு சொல்ல கர்ணன் வெடித்துச் சிரித்தான்.

சிறுவன் உரத்த குரலில் ஏதோ சொன்னான். “இது அரக்கர் மொழிதான். அப்படியென்றால் இவன் விருந்தாரகனின் மைந்தன்தான்.” குழந்தையை அருகே கொண்டு வந்து அதன் கன்னத்தில் முத்தமிட்டான். சிறுவன் ஆவலுடன் பார்த்து இரு கைகளாலும் துச்சலனின் தலையை அள்ளிப்பிடித்து கன்னத்தை இறுகக் கடித்தான்.

“ஸ்ஸ்” என கூவியபடி அவனைப் பிய்த்து தூக்கி தலைக்கு மேல் நிறுத்தி “இவன் பலவர்தனனின் மைந்தன்… அவன் சிறுவயதில் இதைப்போலவே என்னைக் கடித்திருக்கிறான்” என்றான். சிறுவனை ஆட்டியபடி “பேன் போலிருக்கிறான்” என்றான். கைகளையும் கால்களையும் பிடிபட்ட பேன் போலவே நெளித்தபடி சிறுவன் கூச்சலிட்டான்.

“அரிய பற்கள்… முழுக்க முளைத்தபின் அஸ்தினபுரியின் அஞ்சத்தக்க படைக்கலமாக அவை இருக்கக்கூடும்” என்றபடி அவனை கீழே விட்டான். அவன் கைதூக்கி ஏதோ கூவியபடி ஓடினான். “ஆ, அது அரக்கர் மொழி அல்ல” என்றான் துச்சலன். சுபாகு “ஆம், அது நம் மொழியின் கெட்டவார்த்தை. சற்று மழுங்கியிருக்கிறது. அதை நானே சொல்லவேண்டாமென நினைத்தேன்” என்றான். வெளியே இருந்து சித்ராயுதன் வந்து “மூத்தவரே, அனைத்தும் சித்தமாகிவிட்டன. நாம் கிளம்புவோம்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

புதியவர்களின் கடிதங்கள்-1

$
0
0

IMG_20160103_181332

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். நான் சென்னயில் பணிபுரிகிறேன் . சொந்த ஊர் கும்பகோணம். புதியவர்களுக்கான சந்திப்பின் அறிவிப்பை பார்த்தேன். நிச்சயம் இந்த முறை கலந்துகொள்ள வேண்டுமென ஆவல் கொண்டுள்ளேன். சென்னையில் சில கூட்டங்களில் கூட்டத்தோடு கூட்டமாக உங்களோடு உரையாடியுள்ளேன். தனிப்பட்ட அறிமுகம் நிகழ வாய்க்கவில்லை.

ஒரு வகையான ஆன்மீக தேடலில் அலைந்துகொண்டிருந்த பொழுதே உங்களை வந்தடைந்தேன் . உங்கள் இணையத்தில் எதேச்சையாக நுழைந்து நான் அறியாத ஒரு அறிவு உலகத்தோடு அறிமுகம் கொண்டேன் . உங்கள் இணையத்தில் பல பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்துகொண்டிருந்த நாட்கள் அவை. அந்த நாட்கள் என்னில் பெரும் மாற்றத்தை விளைவித்தது. உண்மையான ஆன்மீகத்தை அதற்கு பின்பே அறிந்துகொண்டேன். அதற்கு முன்பு சுஜாதா, பாலகுமாரன் , வைரமுத்து இவர்களை வாசித்திருந்தாலும் தீவிரமான இலக்கிய உலகோடு எந்த வித அறிமுகமும் பெற்றிருக்கவில்லை. உங்களிடம் வந்து சேர்ந்த பின்பே என்னுடைய வாசிப்பு, தேடல் எல்லாம் மேம்பட்டது. உங்களை மட்டுமே வாசித்திருந்த நாட்கள் இன்று நினைக்கையில் ஏக்கத்தை உருவாக்குகிறது. வண்ணநிலவன், தேவதேவன், மனுஷ்யபுத்திரன், பிரமிள், ஆத்மநாம், எஸ்.ராமகிருஷ்ணன், ஞானக்கூத்தன், சுந்தரராமாசாமி, நித்ய சைதன்ய யதி, தேவதச்சன் ..எல்லோரும் உங்கள் மூலம்தான் எனக்கு அறிமுகமானார்கள். இன்று நான் அனுபவிக்கும் வாசிப்பின்  பேரின்பத்திற்கு நீங்களே காரணம்.

அறம், ரப்பர்,  உங்கள் குறுநாவல்கள் தொகுப்பு, கன்னியாகுமாரி, ஈராறு கால் கொண்டெழும் புரவி, முள் சுவடுகள் , பண்படுதல், இயற்கையை அறிதல்  ஆகிய நூல்களை முழுமையாய் வாசித்துள்ளேன். விஷ்ணுபுரம் பாதிவரை வாசித்திருக்கிறேன். வெண்முரசில் உங்களோடு நீலம் வரை தொடர்ந்து பயணித்தேன். பிரயாகையிலிருந்து தொடரமுடியாமல் போய்விட்டது. மீண்டும் உங்களை வந்து பிடிக்க வேண்டும்.

புதியவர்களுக்கான சந்திப்பு நிகழ்ந்தால் அதில் கலந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். சென்னையில் நடந்தால் மிகவும் வசதி. உதகை என்றாலும் நிச்சயம் முயல்கிறேன்.

நன்றி

உமாரமணன்

 

அன்புள்ள உமாரமணன்

நன்றி

எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு ஓர் அந்தரங்கமான தளத்தில் நிகழ்வது. அகங்காரம் கொஞ்சநேரம் திரைவிலகுவது. அது ஓர் உன்னதத்தருணம். அதைநானும் உணர்ந்திருக்கிறேன். நம்மிடையே மேலும் தீவிரமான உரையாடல்கள் நிகழட்டும்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

“நீ வாழ்வது வீணல்ல,கீழே விழுந்த ஒரு சிட்டுக்குருவியை அதன் கூட்டுக்கு மீட்க உதவினாலே” ,இந்த வரியை வாசிக்கும் போது இருபத்தி ஓர் வயது,அந்த வரியின் வீரியம் புரியும் போது முப்பத்து ஆறு. உணர வைத்ததற்கு நன்றி.

சார் ,நான் ஒட்டுமொத்தமாக ஒரு வீணடிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன். அறியாமை,வறட்டு ஆணவம்,செயலின்மை என்னும் கள்ளசாராய போதை,அனைத்தும் கலந்த ஆனால் மிகப்பிரமாண்டமான கனவினை வைத்துக்கொண்டு அதற்காக ஒரு துளி அரப்பணிப்போ,தைரியமோ இல்லாமல் பதினைந்து வருட வாழ்க்கையை வீணடிப்பது என்பது எவ்வளவு பயங்கரம்.

எனது துறையில் நான் ஒரு ஜீரோ என எனக்கு மூன்று வருடங்களுக்கு முன் தெரிந்தது. ஈவு இரக்கம் இன்றி சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் வந்தது ,ஆனால் எப்படி ? யார்மூலம் எதுவும் தெரியவில்லை.உங்கள் எழுத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் என்னை அடைந்தது,உங்களை  எனக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் தெரியும்.விஷ்ணுபுரம் வாசித்திருக்கிறேன், ரப்பர்,காடு,ஏழாம் உலகம் அனைத்தும் பாக்கெட் நாவல்களைப்போல் வாசித்து அப்படியே எறிந்திருக்கிறேன்.நீங்கள் காட்டிய உலகம் அதன் மூலம் இந்த மானுடம்,அதன் இயங்குமுறை,வாழ்வின் பொருள் எதுவும் புரியாமல் அறியாமல் உங்களை  கடந்திருக்கிறேன்.

ஆனால் நான் அனாதை. வேர் இல்லாமல் இருக்கும்போது எத்தனை கொம்புகளைக்கொண்டு என்னை நிமிர்த்தியிருக்கவேண்டும்? அனைத்தையும் வறட்டு அகங்காரத்தினால் அறியாமையினால்  ஒடித்து எரிந்து விட்டு பிறக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பதென்பது எவ்வளவு பயங்கரம்.

தற்கொலையின் விளிம்பில் நிற்கும்போது நீங்கள்  மீட்சியை அளிக்கும் வாக்குத்தத்தங்களை ,தரிசனங்களை,வாழ்வின் ,உறவின் ,சுயத்தின்  பொருளை எனக்கு அளித்தீர்கள் உங்கள் வலைத்தளத்தின் மூலம். வெண்முரசு எனது கீதை எனது வாழ்வின் வரைபடம் .உங்கள் அனுபவங்கள்,உங்கள் கட்டுரைகள் வாழ்க்கையின் போக்கு ,மனிதர்களின் இயல்பு , நான் செய்யவேண்டிய அனைத்தையும்  எனக்கு காட்டியது. வெறும் லோகாதாய வாழ்வு மட்டும் சிறுவயதில் இருந்தே ஒப்பவில்லை( பீதியினால் கூட இருக்கலாம்) .இன்று உலகம் அவ்வளவு சுவையாக இருக்கிறது. சலிப்பற்ற வாழ்க்கை,உடலை பலவீனமாக்கும் எந்த பழக்கவழக்கங்களும் இல்லாமை தெளிவான எண்ணங்கள்,தமிழகத்தின் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் சில நண்பர்கள்,அவர்கள் எனது கனவினை நனவாக மாற்ற அளிக்கும் நம்பிக்கைகள் என எந்நேரமும்  எங்கோ ஓர் ஆனந்தம் உள்ளில் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆம் கீழே விழுந்த சிட்டுக்குருவியினை அதன் கூட்டுக்கு மீட்டிருக்கிறீர்கள். இனி என்னால் லட்சியவாதியாக ஆக முடியும் என்றெல்லாம் தோணவில்லை. இன்று  எனது மனதில் ஓடுவதெல்லாம்  ஒரு ரஜோகுணம் கொண்டவனாக சாங்கிய யோகத்தின் மூலம் கர்மத்தை செய்து  கூட்டிலிருந்து பறந்து எழுந்து இந்த உலகில் வாழ்வது. பரிபூரணமாக.

நான் உங்களுக்கு என்ன பண்ண முடியும் ? துச்சளைக்கு கொற்றவை ஆலயத்தை அமைக்கும் கர்ணனைப்போல் எனக்குள் நீங்கள்.புத்துயிர்ப்பு நாவலை தல்ஸ்த்தோய்  டூகோர்ஸ்களுக்காக எழுதினார் என வாசித்திருக்கிறேன். நீங்கள் எழுதிய அனைத்தும் எனக்காக.எனக்காக மட்டும்.

ஸ்டீஃபன் ராஜ்

 

அன்புள்ள ஸ்டீபன்

நலம்தானே?

பொதுவாக நம் சூழல் ஒருவகையான இலட்சியவாதமின்மையை உருவாக்கி அளிக்கிறது. அரசியல் இலட்சியங்கள் பொருளிழந்துவிட்டன. ஒரு தனிமனித இலட்சியவாதத்தை உருவாக்கியளிக்கவேண்டிய வேலை எழுத்துக்கு உள்ளது என நினைக்கிறேன்

அறவுணர்ச்சியும் ரசனையும் கொண்ட ஒருவர் சற்றேனும் இலட்சியவாதம் இல்லாமல் வாழமுடியாது. நானே கண்டுகொண்ட ஒன்றே உங்களிடம் என் எழுத்துவழியாக வந்துள்ளது

வாழ்த்துக்கள்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கெட்டவார்த்தைகள்

$
0
0

 1

அன்புள்ள ஜெ.  வணக்கம் …

பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள்.

நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..

இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படித்தபோது தாயைப் பழிக்கும் சொல்லால் பெரும்பாலும் யாரும் யாரையும் திட்டுவதில்லை. ஆனால் இங்கோ வெகு சகஜமாக “தா…..ளி”  இந்த வார்த்தைதான் பிரயோகிக்க படுகிறது.. அது குறித்த ஒரு சின்ன அருவருப்பு கூட திட்டுபவரிடமோ திட்டு வாங்குபவரிடமோ இல்லையே.. ?

மேலும் வசைச்சொற்கள் பெரும்பாலும் பிறப்பையே இழித்துக் கூறுவதாகவே உள்ளன. இங்கு நாமும் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லையே.?

நம் மண்ணில் மட்டும் ஏன் இப்படி.? எதனால் இது சகஜமாக இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது?  மேலும் ஒரு விசித்திரமான வசை, நண்பன் ஒருவன் தூரத்தில் வருவதைபார்த்து மற்றொருவன் சொல்கிறான் ” லேய் மக்கா முத்துச் சாமிக்க மூத்த கொள்ளி வாறாம்ல…”பிற இடங்களைப் பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் நெருடலாக உள்ளது .எதனால் இங்கு இப்படி என்று நீங்கள் நினைத்ததுண்டா?

அன்புடன்
K.ராஜேஷ் குமார்

 

அன்புள்ள ராஜேஷ் குமார்

இதில் நெருடலுக்கு எந்த இடமும் இல்லை. கெட்டவார்த்தைகளைப் பற்றி நம்முடைய மனப்பதிவுகள் நம் பெற்றோரால் சிறுவயதில் ஒழுக்க நடத்தை சார்ந்து கற்றுக்கொடுக்கப்பட்ட நிலையில் உள்ளன. சமூக உளவியலைக் கொஞ்சம் கவனித்து அவற்றைப்பற்றி ஆராய்ந்தால் மேலும் பலவகையான புரிதல்களை நோக்கி நம்மால் செல்ல முடியும். ஒரு சமூகத்தில் கெட்டவார்த்தைகள் எப்படி உருவாகின்றன, ஏன் நீடிக்கின்றன?

என் நேரடி மனப்பதிவுகளை மட்டுமே நம்பி இதை விவாதிக்க விரும்புகிறேன். நடைமுறையில் கெட்டவார்த்தைகள் இரண்டு தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, கோபம், வெறுப்பு, கசப்பு முதலியவற்றை வெளிக்காட்டுவதற்காக. இரண்டு, கிண்டல், கேலி, நகைச்சுவைக்காக. இரண்டிலும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. கெட்டவார்த்தைகள் எப்போதுமே நேர்நிலையான ஒரு சமூகநிலைக்கு எதிரான எதிர்மறை வெளிப்பாடாக உள்ளன.

சமூகத்தின் எந்த ஒரு இயக்கத்தையும் நேர் எதிர் சக்திகளின் முரணியக்கமாக புரிந்துகொள்வது ஒரு உபயோகமான கருவி. சமூக இயக்கத்தின் நேர்சக்தி என்பது அறம், ஒழுக்கம், விழுமியம் என்றெல்லாம் சொல்லப்படும் சீரமைக்கும் முறை. அதற்கு எதிரான மீறல் அதற்கு எதிர்சக்தியாகச் செயல்படுகிறது. நேர்ச்சக்தி இருந்தால் எதிர்சக்தி இருந்தே தீரும். அது இயற்கையான இயக்கவியல்.

சமூகச் சீராக்கம் என்னும் நேர்ச்சக்தியின் அழுத்தம் எப்போதுமே வன்முறை கலந்தது. அந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் எதிர்ச்சக்தி தன் வன்முறையை சொல்லில் ஏற்றிக்கொள்கிறது. கெட்டவார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் சீர்முறையின் மீறல் என்பதே கெட்டவார்த்தையாக உருவம் கொள்கிறது என்பதைக் காணலாம்.

உதாரணமாக கேரளத்தில் மயிர் என்றால் கெட்ட வார்த்தை. அந்தரங்கமயிரை இது குறிக்கும். முடி என்றால் நல்ல வார்த்தை. ஆக, உடலில் ஒருபகுதியை வெளியே காட்டக்கூடாது, அதைப்பற்றிப் பேசக்கூடாது என்ற சமூகச் சீராக்கத்தின் விதிக்கு எதிரான ஒரு மீறலே இங்கே கெட்டவார்த்தையாக ஆகிறது.

நூற்றுக்கு தொண்ணூறு கெட்டவார்த்தைகள் வரைமீறிய பாலுறவைச் சார்ந்தவை. நம் சமூகசீராக்கத்தின் மிகமுக்கியமான, மிகக் கடுமையான விதி என்பது தாயுடனான பாலுறவை தடைசெய்தல்தான். ஆகவே கெட்டவார்த்தைகளில் தாயோளி போன்ற வார்த்தைகள் பெரிதும் புழங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக அக்கா தொடர்பானவை. தாயின் அந்தரங்க உறுப்புகள் தொடர்பான சொற்கள் கெடவார்த்தையாக ஆவது அவற்றை எண்ணவும் பேசவும் சமூகத்தடை இருக்கிறது என்பதனாலேயே.

தந்தைவழிச் சமூகம் உருவானபோது தாயின் கற்பு முக்கியமான ஒரு சமூக நெறியாகியது. அதைத்தொடர்ந்தே முறையான தந்தை இல்லாதவன் என்ற வசை கடுமையான ஒன்றாக ஆகியது.  புராதன தாய்வழிச்சமூகமான கேரளத்தைப்பற்றி ஆராய வந்த மேலைநாட்டவரான எட்கார் தர்ஸ்டன் அங்குள்ள மக்கள் ‘பாஸ்டர்ட்ஸ்’ என்றார். அவர் அதை வசையாகக் கண்டாலும் அந்த மண்ணில் அது வசையாக இல்லை. அங்கே ஒருவரின் அடையாளம் தாய் வழியாகவே. தந்தை பெயர் தெரியாமல் இருப்பது ஒரு தவறே அல்ல. தாயின் குடும்பவழியின் பெயர் தெரியாமல் இருந்தால்தான் கேவலத்திலும் கேவலம். ‘தறவாடித்தம்’ இல்லாமை.

ருஷ்ய இலக்கியம் ‘போரும் அமைதியும்’ நாவலை மொழியாக்கம் செய்தபோது டி.எஸ்.சொக்கலிங்கம் ‘சோரபுத்திரன்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். பியரி அவன் அப்பாவுக்கு சோரபுத்திரன். ஆனால் அங்கே அது வசை அல்ல. அவன் ஒரு பிரபு முறையாக கல்யாணம் செய்யாத பெண்ணுக்குப் பிறந்தவன், அவ்வளவுதான். ஆனால் தமிழ்நாடு போன்ற தந்தைவழிச் சமூகத்தில் அது கொலைக்குக் காரணமாக அமையும் கெட்டவார்த்தை.

பலசொற்கள் எப்படி கெட்டவார்த்தை ஆகின்றன என்பது ஆச்சரியம் அளிப்பது. ‘பொறுக்கி’ என்பது ஒரு கெட்டவார்த்தை. உற்பத்திசெய்யாமல் திரட்டி உண்ணும் வாழ்க்கை மேல் உள்ள இழிவுணர்ச்சியின் வெளிப்பாடு. ‘செற்றை’ என்பது குமரிமாவட்டத்தமிழின் கெட்டவார்த்தை. அதன் பொருள் ஓலைவேய்ந்த குடில். அதாவது அஸ்திவாரம் அற்றவன். வீடற்றவன். பண்பாடு அற்றவன். ‘எரப்பாளி’ என்பதும் கெட்டவார்த்தை. இரப்பவன்.

‘போடா புல்லே’ என்று  கெட்டவார்த்தை உண்டு குமரி மண்ணில். கொஞ்சம் அசந்தால் புல்வந்து மூடும் மண்ணில் அது ஒரு வசை. ஆனால் தன்னை புல் என்று சொல்லிக்கொள்வது குஜராத்தில் ஒரு பெருமை. திருணமூல் காங்கிரஸ் என்றால் புல்வேர் காங்கிரஸ் என்று பொருள். தமிழகத்தில் இப்போதுகூட ஒரு உயர்சாதிக்காரனை கீழ்சாதிப்பெயர் சொல்லி வசைபாடினால் அது கெட்ட வார்த்தையாகவே கருதப்படும். சாதியே கெட்டவார்த்தை ஆகிறது இங்கு.

வடிவேலு தமிழில் புகழ்பெறச்செய்த கெட்டவார்த்தைகள் பல. நாதாரி என்றால் மதுரைப்பக்கம் பன்றிமேய்க்கும் போயர்களைக்குறிக்கும் சொல். அவர்கள் புகார்செய்ததை அடுத்து அதை தணிக்கைத்துறை தடைசெய்தது. எடுபட்ட பயல் என்றால் பேதிநோய் வந்து பொட்டலமாகக் கட்டி எடுக்கப்பட்ட சடலம் என்று பொருள்.

கொடூரமான நோய்கள் வேட்டையாடிய காலத்தில் நோய்கள் சார்த கெட்டவார்த்தைகள் உருவாயின. குமரிமாவட்டத்தில் நீக்கம்பு [நீர்+ கம்பம் ] , குரு [விதை – வசூரி] என்னும் கெட்டவார்த்தைகள் முறையே காலரா மற்றும் சின்னமையைக் குறிக்கின்றன. பேதிலபோவான், கழிச்சிலிலே போவான் போன்ற வசைகள் தமிழ்நாட்டில் பிரபலம். பிளேக் பற்றிய கெட்டவார்த்தைகள் தமிழில் இல்லை

நாம் கெட்டவார்த்தையாக நினைக்கும் பல சொற்கள் பலதளங்களில் புழங்கிய சொற்களே. உவத்தல் [மகிழ்தல்] என்ற தூய தமிழ்ச்சொல்  ”ஒத்தா” ஆக சென்னைத்தெருக்களில் தினமும் அடிபடுகிறது. அடையாளம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் புண்டை. அது பெண்குறியையும்  சுட்டுகிறது. எஸ்.வையாபுரிப்பிள்ளை அதற்கு அவரது பேரகராதியில்  அர்த்தமும் கொடுத்திருக்கிறார். அதாவது வைத்தியம் முதலியவற்றின் புழங்கிய சாதாரண சொல் அது. இப்போது கெட்டவார்த்தையாக ஆகிவிட்டது. புண்டரம் என்றால் விபூதி ,குங்குமத்தால் போடப்படும் திலகம். ஊர்த்துவபுண்டரம் என்றால் நாமம். திரிபுண்டரம் என்றால் முப்பட்டை விபூதி. புண்டரீகம் என்றால் தாமரை. புண்டரிகை என்றால் மகாலட்சுமி.

நாயே என்றால் ஒரு இனிய,. அற்புதமான மிருகத்தின் பெயர். ஆனால் சிலருக்கு அது வசை. இந்துக்களுக்கு பன்றி விஷ்ணு அவதாரம். இஸ்லாமியர்களுக்கு அந்த மிருகத்தின் பெயரே ஒரு கெட்டவாத்தை. ஆங்கிலத்தில் பிருஷ்டம் மலம் போன்ற சொற்கள் கெட்டவாத்தையாக உள்ளன. சம்ஸ்கிருதத்தில் கெட்டவார்த்தையே இல்லை. ஏனென்றால் அதை மக்கள் பேசவில்லை. எல்லாவற்றுக்கும் அங்கே வார்த்தைகள் உள்ளன. ஆனால் அவற்றை வசைபாட பயன்படுத்தும்போதே அவை கெட்ட்வார்த்தை ஆகின்றன

சமூக வரைமுறைகளை மீறுவது ஒழுக்கக் கேடு. அது சொற்கள் மூலமானாலும். எனவே கெட்டவார்த்தைகள் ஒரு நாகரீக சமூகத்தில் எப்போதும் தடுக்கப்பட்டே இருக்கும். ஆனால் கெட்டவார்த்தைகளை முழுக்க தடுக்க முடியாது. ஓர் எல்லைவரை அனுமதித்தும் ஆகவேண்டும். வசைகள் மூலம் எவ்வளவோ அழுத்தங்கள் சமன்செய்யப்பட்டுவிடுகின்றன.

கெட்டவார்த்தைகள் நகைச்சுவையுடன் கையாளப்படுவது இதன் அடுத்த கட்ட நீட்சி. அதுவும் வரைமுறைகளை மீறும் ஒருசெயல்தான். அதன்மூலம் ஒருவகையான சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. சமூக அதிகாரத்தின் அழுத்தம் உடைக்கப்படுகிறது. எந்தெந்த மனிதர்களிடம் கெட்டவார்த்தைகள் வேடிக்கையாக அதிகம் புழங்குகின்றன என்று பார்த்தால் தெரியும். கடுமையான உடலுழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் வேலைசெய்ய நேரும் மக்கள். மற்றும் பெரியவர்களின் கண்காணிப்பை சற்றே தவிர்க்க ஆரம்பிக்கும் இளைஞர்கள். நீங்களும் நானும் பதினைந்து வயதில் கெட்டவார்த்தைகளை பிறர் சொல்ல கேட்டு சிரிக்க ஆரம்பித்திருப்போம்.

குமரி நெல்லை மாவட்டங்களில் கிண்டலாகவும் நக்கலாகவும் கெட்டவார்த்தைகளை போடுவது சாதாரணம். காரணம் இங்குள்ள அன்றாட உரையாடலில் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும் கிண்டல்தான். இந்தக் கிண்டல் வழியாகத்தான் பலவகையான சமூக அகழிகள் தாண்டப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் சாதிப்பிரிவினை உண்டு. ஆனால் கிண்டல் நக்கல் வழியாக அதை தாண்டிச்செல்வதைக் காணலாம். புலையர்கள் இங்கே சாதாரணமாக நாயர்களையும் நாடார்களையும் கிண்டல்செய்வார்கள். சின்னப்பையன்கள் அருகே நின்றால் முகம் சிவந்துபோகும்.

நெல்லையில் நாயக்கர்களுக்கும் ராவுத்தர்களுக்கும் இடையேயான உறவும் இதைப்போலத்தான் என்பதைக் கவனித்திருக்கிறேன். கிண்டல்செய்து கண் பிதுங்கவைப்பார்கள். நாயக்கர்களும் ராவுத்தர்களும் மாறி மாறி மாமா முறை போட்டு கூப்பிடுவதைக் கவனித்திருக்கிறேன். அதன் பின் ”…வாரும்வே முக்காலி ” என்று நாயக்கர் கூப்பிடுவார். ”நம்ம தங்கச்சி நாமக்காரி எப்டிவே இருக்கா” என்பார் ராவுத்தர். நாமம் என்றால் குறியீட்டுப்பொருள். நாயக்கர்களும் முஸ்லீம்களும் முந்நூறு வருடம் போரிட்டுவந்தவர்கள் என்ற பின்னணியில் இந்த உரையாடலில் உள்ளது மிக ஆக்கபூர்வமான ஒரு வரம்புமீறல்.

இத்தகைய நகைச்சுவை இல்லாத வடமாவட்டங்களில் உக்கிரமான நேரடியான சாதிக்காழ்ப்புகள் இருப்பதை நான் தர்மபுரியில் இருக்கும்போது கண்டிருக்கிறேன். நட்பார்ந்த கிண்டலும் நக்கலும் ஒரு சமூகம் வரலாற்றில் இருந்து பெற்றுக்கொண்ட பிளவுகளை மழுங்கடிக்க மிகவும் இன்றியமையாதவை.

சமூக ஒழுங்குகள் எப்படி பாரம்பரியமாக கைமாறப்பட்டு நெறிகளாக முன்வைக்கப்படுகின்றனவோ அதேபோலத்தான் இத்தகைய சாதி-சமயக் காழ்ப்புகளும் வரலாற்றில் உருவாகி கைமாறபப்ட்டு நெறிகள்போலவே அளிக்கப்படுகின்றன. ஆகவே காழ்ப்புகளை மீறிச்செல்லும்போது கூடவே நெறிகளும் மீறப்படுகின்றன.

குமரிமாவட்டத்திலும் நெல்லையிலும் மொத்த தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத ஒரு சமூக நட்புணர்வு இருந்து வந்தது — சாதி மத அரசியல் தலையெடுக்கும் காலம் வரை. அந்த நட்புணர்வும் சமத்துவமும் உருவானதும் நீடித்ததும் ‘கெட்ட வார்த்தைகள்’ வழியாகத்தான். ஆகவே சாதிமத அரசியல் அளவுக்கு ஆபாசமானதாக நான் கெட்ட வார்த்தைகளைக் கருதவில்லை.

மேலும் கெட்டவார்த்தைகள் எல்லா சமூகங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிபந்தனையுடன் — சொல்லிச்சொல்லி அவை தேய்ந்துபோயிருக்க வேண்டும்! கேட்டால் அது கெட்டவார்த்தையாகவே காதுக்குப் படக்கூடாது. பலவருடங்கள் முன்பு நானும் நண்பரும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஒரு படம் பார்த்தோம். அதில் ஸ்டாலோன் ‘ஃபக்’ என்ற வார்த்தையை தவிர்த்து நாலைந்து வார்த்தைகள் மட்டுமே சொல்கிறார். ”ஹாலிவுட் படமுல்லா மச்சான்..உலகம் முழுக்க போகணுமில்லா…அதனாலதான் உலகம் முழுக்க தெரிஞ்ச டைலாக்க மட்டும் வச்சிருக்கான்”என்றார் நண்பர்

ஒரு நண்பர் மொழியாக்கம் செய்த சிறுகதையில் அடிக்கடி ”காளைச்சாணம்” என்று வந்தது. அவருக்கு சந்தேகம் தனியாக ஷிட் என்று வரும் இடத்தில் என்ன எழுதுவது. ”பீ” என்று போடலாம் என்றேன் நான். ”அதெப்படி முதல் வரியில் புல் ஷிட்டென்று வருகிறதே”’ என்று அவர் கவலைபப்ட்டார். கதையில் ”இந்த வேலையும் போய்விட்டதா?” ” காளைச்சாணி”  ”என்ன செய்யப்போகிறாய்? ”சாணி” — இப்படி ஓர் உரையாடல் போவது பற்றி அவருக்கு புகாரே இல்லை.

எங்களூர் இயக்குநர் ஒருவர் உண்டு. அவருக்கு கமா என்ற எழுத்துக்கான ஒலி தாயளி தான். அது மருவி தாளி. ”எங்கப்பா என்னமாதிரி மேடையிலே பேசுவார்னு நெனைக்கிறீங்க…சைவசித்தாந்தம் பத்தி பேசினா தாளி கொன்னு எடுத்திருவார்” கெட்டவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமரும் இடங்களும் உண்டு

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009

 

  

தொடர்புடைய பதிவுகள்

பீப்

$
0
0

9kon1

ஜெ,

பெரும்புகழ்பெற்ற பீப் பாடலைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லவே இல்லை. நான் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று பெட் கட்டியிருந்தேன்
செல்வகுமார்

அன்புள்ள செல்வா

பீப் பாடலை மட்டுமல்ல எந்தப்பாடலை தடைசெய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் அதை நாம் கேட்காமலாவதில்லை. பாடலும் பரபரப்பு தடையும் பரபரப்பு என்பதனால் தமிழ்க்கலையுள்ளங்கள் மேலும் கேளிக்கையை அடைகின்றன. பெண்ணியர் கட்டுரை தேற்றிக்கொள்கிறார்கள். முகப்புத்தங்கள் புன்னகைக்கின்றன.

ஆனால் நெல்லை மற்றும் குமரிமாவட்டத்தினராகிய என் நண்பர் சுகா மற்றும் நான் மனமுருகிச் சொல்லிக்கொள்ள ஒன்றுள்ளது. அதாவது பாடலை தடைசெய்த உற்சாகத்தில் அச்சொல்லையே  தடைசெய்துவிட்டால் என்னாவது என்னும் அச்சமும் பரிதவிப்பும்தான் அது

மேற்படிச் சொல் எங்களூர் மொழியில் வெண்டைக்காய் போல பொரியல், கூட்டு ,சாம்பார் ,தேங்காய்க்குழம்பு, பிரட்டல் என பலவகையில் பயன்படும் ஓர் அன்றாட விஷயம். நாற, ஊற,வக்கா,ஆச்சி,பேப் என பலவகை துணையுச்சரிப்புகளுடனும் இல்லாமலும் தினப்படிப் புழக்கத்தில் உள்ளது. வண்டி ஆரன் போல அதைக்கேட்காமல் இங்கே எவரும் வாழ முடியாது

அதைத்தடைசெய்தால் எங்களூர்ப்பக்கம் பொதுவாகப் பேச்சே நின்றுவிடும். பொது இடங்களில் பரவாயில்லை, வீட்டிலும் அப்பன் பிள்ளை பேச்சுகள் அற்றுவிடும் என்பது ஓர் நடைமுறை யதார்த்தம். மேன்மக்களெல்லாம் பேசிக்கொண்டிருக்க நாங்கள் சைகையால் வாழவேண்டும் என்பதெல்லாம் ஒடுக்குமுறை

மேலும் இச்சொல்லை சைகையால் சொல்ல ஆரம்பித்தால் அது ஆபாசமாக இராதோ என்னும் ஐயமும் வாட்டுகிறது

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புதியவர்களின் கடிதங்கள் 2

$
0
0

1

அன்புடன்  ஆசிரியருக்கு

  சந்திப்பு  குறித்த  பதிமூன்றாம் தேதி பதிவினை  பார்த்ததும்  உடனே  “நான்  வருகிறேன்” என சொல்லத்  தோன்றியது.  ஆனால்  எப்போதும்  குறுக்கே  நிற்கும்  தயக்கம்  தடுத்துவிட்டது. உங்களிடம்  சொல்ல  என்னிடம்  ஒன்றுமில்லை.  கேட்க  நிறையவே  இருக்கிறது.  ஈரோடு சந்திப்பு  நடைபெறும்  நாட்களில்  அலுவலக தணிக்கை  நடைபெறலாம்.  நான்  வேலை  செய்யும்  துறையில்  நானே  முதற்பொறுப்பாளன் என்பதால்  அந்நாட்களில்  இல்லாமல்  போனால் சில  எளிமையான  சிக்கல்களுக்கு  கூட  என்னை  அழைத்துக்  கொண்டே  இருப்பார்கள். மேலும்  காடு  வெள்ளையானை ஏழாம் உலகம் இந்து  ஞான  மரபில்  ஆறு  தரிசனங்கள்  ஆகிய  நூல்களை  நான் இன்னும்  வாசிக்கவில்லை.  அதற்கு  முன்  சந்தித்தாலும்  நீங்கள்  நூல்களில் விளக்கியவற்றையே  பற்றியே  கேட்டுக்  கொண்டிருப்பேன். அதனோடு விவாதம்  எனும்  முரணியக்கம் முரண்படும்  தரப்புகள்  ஆகிய  பதிவுகளை  நேற்றுதான்  படித்தேன். சைகை  ஒலி  மொழி பண்பாடு  சிந்தனை தேடல் அறிவு  என்ற  வரிசை  குறித்த  பிரம்மாண்டமான  தவறுகளுக்கு  வாய்ப்பற்ற  ஒரு  பெருஞ்சித்திரம் உங்களுள்  உருவாகி வந்திருப்பதை  உணர  முடிகிறது.

உலகின்  அத்தனை  பெருஞ் சிந்தனைகளுக்குள்ளும் நுழைய  நினைக்கும்  உத்வேகத்தை வாசகனுக்கு  உங்கள்  எழுத்துக்கள்  அளிக்கின்றன  எனப்  புரிகிறது. நேரடியாக  எந்தெந்த  புத்தகங்களை  படித்து  சிந்தனை  உலகில்  நுழையலாம்  என்பது  போன்ற  அபத்தமான  கேள்விகளுக்கு  மென்  நகைப்பு மட்டுமே  உங்கள்  பதிலாக  இருக்கும். அந்த வகை அபத்தம் நிறைந்த கேள்விகளே  என்னிடம் நிறைய இருக்கும் என நினைக்கிறேன். இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் படித்தபின்பு காண்டீபம்   வரை  ஒரு  கவனமான  மீள்  வாசிப்பு  மற்றும்  உங்களுடைய  மற்ற  நூல்களை  வாசித்தபின்பே உங்களை  அணுக  நினைக்கிறேன்.  நேற்று  என் பிறந்த தினம்.  இந்த  வருடம்  வித்தியாசத்தை மிகத்  தெளிவாக உணர்ந்தேன். நிறைய  பேர்  வாழ்த்தினார்கள்.  அதற்கு  என்  பழகும்  முறையில்  ஏற்பட்ட  மாற்றமே காரணம்.  அம்மாற்றத்திற்கு உங்கள்  எழுத்துக்களே காரணம்.  பொங்கல்  வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்

நன்றி நேரில் சந்திப்போம். இத்தகைய கடிதங்களில் உள்ளது ஒரு தனிப்பட்ட நெகிழ்ச்சி. அதை தனிப்பட்டமுறையில் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அவை வெளியாவது பிறருக்கு சமானமானவர்களை அடையாளம் காண, நேரில் சந்திக்கையில் உரையாட உதவும் என்று தோன்றியது பின்பு

கேள்விகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அபத்தமானவை என ஏதுமில்லை. நான் கேட்காத அபத்தமான கேள்விகளா? என்னைப்பார்த்தும் சுந்தர ராமசாமியும் பி கே பாலகிருஷ்ணனும் ஆற்றூர் ரவிவர்மாவும் நித்யாவும் சிரித்திருக்கிறார்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

காடு பற்றி பேசுவதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய உள்ளது .எனவே ஊட்டி சந்திப்பில் கலந்து கொள்ள நானும் ஆவலாக உள்ளேன். கூடலும் கூடல் நிமித்தமும் என்று திணையும் பொருந்தியே வருகிறது.   எனது பெயரையும் பதிவு செய்யும்படி கோருகிறேன். உங்களோடு கதைக்கவும் எனக்கான நண்பர்களை நான் கண்டுகொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.

அன்புடன்,

ஜானகிராம்

 

அன்புள்ளள ஜானகிராம்

வருக பேசுவோம்

பொதுவாக பேசுவது என்பது நம் கருத்துக்களை நாமே தொகுத்துக்கொள்ள, நம்மை நாமே கண்டுகொள்ள உதவுவது. அதைச்செம்மையாகச் செய்வதென்பது சிந்திப்பதன் முதல்படி. அதற்காகவே இச்சந்திப்புகள்

ஜெ

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,

தங்களுடைய எழுத்துக்களுக்கு நான் அறிமுகம் ஆனது மூன்றே மாதங்களுக்கு முன்பு தான். அவை அளித்த அனுபவமும் திறப்பும் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை. இந்த இனிய துன்பத்தை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். தங்களை நேரில் சந்திக்கக்கூடிய பொன்னான நாளை நான் கனவுகளில் கண்டு உங்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறேன். உங்களுடைய வலைப்பூவில் புதிய வாசகர்களை சந்திக்க விரும்பும் உங்கள் அறிவிப்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஈரோடு வாசகர் சந்திப்பில் உங்களைக் காணும் ஆவலில் காத்திருக்கிறேன். என்னுடைய விண்ணப்பத்தை தயை கூர்ந்து பரிசீலிக்கவும்.

அன்புடன்
இ. மாரிராஜ்

 

அன்புள்ள மாரிராஜ்

வருக, சந்திப்போம். பொதுவாக நம் சூழலில் என்னிடம் பழக ஒரு தயக்கம் உள்ளது. ஓங்கிப்பேசும் குரல்வழியாக நானே அதை உருவாக்கிக்கொண்டேன் என நினைக்கிறேன். அதைக் கடந்துசெல்லவும் இச்சந்திப்புகள் உதவலாம்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16754 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>