Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16948 articles
Browse latest View live

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85

$
0
0

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 4 

மலைச்சாரலில் நான் சந்தித்த அந்த முதிய சூதரின் பெயர் சௌம்யர். வெள்ளிமலை அடுக்குகள் வான் தொட எழுந்த வடக்குதிசைகொண்ட நிலத்தை சார்ந்தவர். கோமதி ஆறு இமையமலையிலிருந்து தரையிறங்கும் இடத்தில் அமைந்தது தன் சிற்றூர் என்று சொன்னார். மாகத குலத்தவர். என்னைப்போலவே இக்கதைகளில் தானும் சிக்கிக்கொண்டவர். கதையில் படிந்து, கதையென்று தானுமாகி, அதன் கருவி என்று தன்னை அளித்து, அதனால் இயக்கப்படுபவராக அலைந்துகொண்டிருந்தவர்.

தண்டகாரண்யத்தில் நீரூற்று ஒன்றின் அருகே எழுந்துநின்றிருந்த ஆலமரத்தின் அடியில் அந்தியில் சருகுகூட்டி தீயிட்டு அமர்ந்திருந்த அவர் அருகே நானும் அமர்ந்திருந்தேன். குளிர் சுற்றிக்கொண்டிருந்தது, அணுகவில்லை. அனலுக்கு விழிப்புகொண்ட பறவைகள் தலைக்குமேல் ஓசையிட்டன. சௌம்யர் அப்பத்திற்கான மாவு பிசைந்துகொண்டிருந்தார். நான் அவரிடம் “சௌம்யரே, நீங்கள் இளைய யாதவரை பார்த்தீரா?” என்று கேட்டேன். “ஆம், பார்த்தேன். அங்கிருந்துதான் கிளம்பி வந்துகொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.

“அவரை பார்த்ததில் எதை உணர்ந்தீர்?” என்று நான் கேட்டேன். “இன்னும் ஏழு நாட்களில் அவர் விண்புகுவார். மாகதர்களின் காலக்கணக்குகள் பிறழ்வதில்லை” என்றார். “எவ்வண்ணம் நீங்கள் இந்நிமித்தம் உரைக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். அவர் “முன்னோர்களின் வழி, சொல்கொண்டு உளத்துடன் விளையாடுவது, கணக்கு கொண்டு சொல்லுடன் விளையாடுவது” என்றார். “கணக்கை கைதொட்டு அறியவே களம். தொடும் கைகளினூடாக உள்ளம் கடந்த ஆழம் உலகை அறிகிறது.”

வடபுலத்து மாகதர்களுக்கு அவர்களுக்குரிய நிமித்தமுறைகள் உள்ளன. பன்னிரு இலைகளைப் பறித்து மண்ணில் வைத்து ஒன்றில் கையூன்றி ஊழ்கத்திலாழ்ந்து இலைகளை தொட்டுத் தொட்டு கை செலுத்தி விழி திறக்கையில் அமைந்திருக்கும் கையிலிருந்து அந்தக் கணிப்பை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். அது கணிப்பல்ல, அவர்கள் உள்ளத்திலிருந்து எழும் ஓர் கனவுதான். அக்கனவை மீட்டவே அப்பன்னிரு இலைகளையும் பயன்படுத்துகிறார்கள். பாலைநிலமெனில் பன்னிரு கற்களை, இல்லங்களுக்குள் எனில் பன்னிரு பொருட்களை.

பன்னிரண்டு என்று என் உள்ளத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். பன்னிரு களங்களை பன்னிரு முறைகளில் தொட்டு இணைகையில் உருவாகும் முடிவின்மையே ஊழின் களம். ஆனால் அது அறுதியாக பன்னிரண்டுக்கு கட்டுப்பட்டது என்பதனால் கைதொட்டுவிடவும் இயல்வது. “எவ்வண்ணமும் பகுத்துக்கொள்ளலாம். பன்னிரண்டு என்பது தொல்மூதாதையரின் எண், அவ்வளவுதான்” என்று அவர் சொன்னார்.

“ஆகவே எங்கள் கணக்குகளின்படி பன்னிரண்டு வகையான கதைகளே இப்புவியில் உள்ளன. பன்னிரண்டு வகையான தத்துவங்கள், பன்னிரண்டு வகையான உணர்ச்சிகள், பன்னிரண்டு வகையான மெய்மைகள். கதைகளினூடாக கதைகளைத் தொட்டு நான் செல்கிறேன். அறிந்த கதைகளிலிருந்து அறியாக் கதை எவ்வாறு எழ முடியும் என்று உணர்கிறேன். இங்கு நிகழ்ந்தவை அனைத்தும் கதையென்றால் நிகழ்பவையும் கதையே. இன்றுள்ளவை நேற்றைய நிகழ்வுகள். இன்றைய நிகழ்வுகள் நாளைய கதைகள். நாளைய நிகழ்வுகள் இன்றைய கதைகளும் இன்றைய நிகழ்வுகள் நேற்றைய கதைகளும் என பின்னால் செல்லவும் கூடும்” என்று அவர் கூறினார்.

“நீங்கள் இலை தொட்டு அறிந்ததென்ன?” என்று நான் கேட்டேன். “இளைய யாதவர் விண்புகுவார். அவருக்கு நிகழவிருப்பது வீரனுக்குரிய இறப்பல்ல, யோகியருக்குரிய இறப்பல்ல, பெருந்தந்தையருக்குரிய இறப்பும் அல்ல. அது எளியோருக்கும் சிறியோருக்குமான இறப்பு. இறப்பின் பொருளின்மையை அனைத்து கோணங்களிலும் வெளிப்படுத்தும் ஓர் இறப்பு” என்று அவர் கூறினார். “அவரை கதைகள் ஒரு நீலக்கொண்டை வானம்பாடி என்றே சொல்கின்றன. மின்னும் உடலும் இனிய இசையும் அழகிய கண்களும் எங்கும் நிலைகொள்ளா இயல்பும் கொண்டது. பறவைகளுக்குரிய இறப்பே அவருக்கும்” என்றார்.

நான் அதிர்ச்சியுடன் “ஏன்?” என்றேன். “அதை எவரும் அறியமுடியாது. ஆயிரம் பல்லாயிரம் தலைமுறைகளாக அதை எண்ணி எண்ணி வியப்பார்கள்” என்று அவர் சொன்னார். “ஏன்?” என்று நான் மீண்டும் திகைப்புடன் கேட்டேன். “ஏனெனில் ஒவ்வொரு செயலிலும் எல்லையில்லாத உட்பொருட்களை இயற்றி அறியமுடியாமையின் எல்லை வரை கொண்டு சென்றவர் அவர்” என்றார். “அதனால் என்ன?” என்று நான் மீண்டும் கேட்டேன். “அது அவ்வண்ணமே. தெய்வங்கள் மனிதனை நோக்கி புன்னகைக்கின்றன. தெய்வங்களை நோக்கி தெய்வங்களே வாய்விட்டு சிரிக்கின்றன” என்று அவர் கூறினார்.

நான் நெடுநேரம் அதை எண்ணிக்கொண்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். சுள்ளிகளை மேலும் சேர்த்து தீ பெருக்கி அதில் கோதுமை மாவை வாட்டி ஒருவகை அப்பமாக்கிய சௌம்யர் அதை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை எனக்களித்து “நலம் நிறைக, அன்னம் நிறைவடைக!” என்றார். நான் அதை வாங்கிக்கொண்டு “மாகதரே, அவ்வண்ணம் ஒரு பொருளிலா நிகழ்வு நடப்பதற்கு முன்நீட்சி என்றோ ஏது என்றோ ஒன்று இங்குண்டா?” என்றேன். “விளைவுகள் அனைத்தும் முன்நிகழ்வுகள் கொண்டவை. அனைத்துக்கும் முன்நீட்சி உண்டு என்பதனால் அவை நீண்டு நீண்டு முடிவிலி வரை செல்கின்றன.”

“மாகதரே கூறுக, இந்நிகழ்வுக்கான முன் நிகழ்வென்ன?” என்று நான் கேட்டேன். அவர் அங்கேயே பன்னிரு கூழாங்கற்களை அடுக்கி விரித்து கைதொட்டு ஊழ்கத்திலாழ்ந்து விழித்து தொட்ட கல்லை நோக்கி கணித்து ஒரு கதையை சொன்னார்.

 

முன்பு ஆசுரநிலத்தில் ஹிரண்யவாகா ஆற்றின் கரையில் அமைந்த ஹிரண்யபதம் என்னும் நாட்டை நிஷாதகுலத்தவனாகிய கருடகுலத்து ஹிரண்யதனுஸ் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் துணைவி சுவர்ணை. அவர்களின் மைந்தனாகப் பிறந்த பெருவில்லவனின் பெயர் ஏகலவ்யன் என்று மாகதர் சொல்லத்தொடங்கினார். அவனுக்கு முற்பிறப்பின் தொடர்ச்சியென விற்கலை வந்தது. அவன் குடியில் அவனுக்கு நிகரான வில்லவர் எவரும் எழுந்ததில்லை. அவனை அவர்கள் தங்கள் தொல்மூதாதையான ஹிரண்யகசிபுவின் மறுவடிவம் என வழிபட்டார்கள்.

ஹிரண்யதனுஸ் மகதத்திற்கு கப்பம் கட்டும் நிஷாத அரசர்களில் ஒருவர். நிஷாத குடியில் ‘நிலைகொள்க!’ எனும் ஆணையே வீரர்களில் திகழ்கிறது. ‘வென்று செல்க, விரிக!’ என்ற ஆணை அவர்களில் எழுவதில்லை. அந்த ஆணை எழுந்த உள்ளம் கொண்டவன் ஏகலவ்யன். விற்கலைகளில் தேர்ந்த ஆசிரியர் ஒருவரை தேரும் பொருட்டு அவன் சூதர்களிடமும் நிமித்திகர்களிடமும் உசாவினான். அவர்கள் துரோணரின் பெயரை கூறினார்கள். இளைய பாண்டவன் அர்ஜுனனும் பெருவில்லவனாகிய அஸ்வத்தாமனும் வில் பயிலும் களம் அது என்றனர்.

அங்கு செல்வதற்காக தந்தையிடம் விடைபெற்று ஏகலவ்யன் கிளம்பினான். அஸ்தினபுரியை அடைந்து துரோணரின் குருநிலைக்குச் சென்று உரிய காணிக்கைகளுடன் அவர் முன் பணிந்து “நான் நிஷாதன். ஆசுரநாட்டு கருடகுலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மைந்தன். என் பெயர் ஏகலவ்யன்” என்றான். “தங்கள் பாதங்களைப் பணியும் உரிமையை அளிக்கவேண்டும்” என்று கோரினான். ஆனால் தான் அஸ்தினபுரி அரசர்களுக்கு கட்டுப்பட்ட ஆசிரியர் என்றும், ஷத்ரியர்களுக்கு மட்டுமே விற்கலை அளிக்கவேண்டும் என்பது தனது நெறி என்றும் துரோணர் கூறினார்.

துரோணர் “நிஷாதனே, திறன் ஒவ்வொன்றும் கடன் நூறு கொண்டதே. ஷத்ரியர்கள் படைக்கலம் ஏந்துபவர்கள் என்பதனால் அவர்களுக்குரிய நெறிகளும் வரையறைகளும் நூல்களால் வகுக்கப்பட்டுள்ளன. அந்நெறிகளை ஏற்று அவ்வரையறைகளுக்குள் நிற்கும் வஞ்சினத்தை எடுத்துக்கொண்ட ஷத்ரியர்களுக்கே போர்க்கலை அளிக்கப்படவேண்டும். அவர்களை ஆளவும் வழிகாட்டவும் தண்டிக்கவும் வலுவான அரசு தேவை. இல்லையேல் வேங்கப்புலிக் கூட்டத்தை ஊருக்குள் உலவவிட்டதுபோல அழிவே மிகும். நிஷாதனாகிய உன்னுடைய குலநெறிகளும் அரசுமுறைகளும் வேறு. ஆகவே நான் உனக்கு கற்பிக்க இயலாது” என்றார்.

“நீ வேடன். விற்கலை தேர்ந்த வேடன் காட்டுவிலங்குகளை முற்றழித்துவிடக்கூடும். உன் குடி பல்லாயிரம் வேடர் குடிகளில் ஒன்று. முதன்மை விற்கலை பயின்றால் நீ பிற குடிகளை அழிக்கக்கூடும். பேரரசென திரண்டு எழுந்து ஷத்ரிய அரசுகளை வெல்லக்கூடும். வேதங்களுக்கு கட்டுப்படாத உனது வில் வேத எதிர்ப்பை கைக்கொள்ளக் கூடும். உபவேதங்களில் ஒன்றாகிய தனுர்வித்தையை வேத மறுப்பாளனுக்கு கற்றுக்கொடுக்கலாகாது என்பது அதன் முதல்நெறி என்று அறிக!” என்று துரோணர் சொன்னார்.

அவன் மீண்டும் மன்றாடி நின்றான். “நால்வேதத்தை ஏற்பாய் என்று இங்கே நிலம்தொட்டு ஆணையிடு, உனக்கு கலையளிக்கிறேன்” என்றார். “நான் என் குடிக்கும் குடிகாக்கும் அசுரவேதத்திற்கும் கட்டுப்பட்டவன், பிறிதொன்றை ஏற்கவியலாது” என்றான் ஏகலவ்யன். “எனில் நீ அசுரகுருவிடமே விற்கலை பயிலவேண்டும். சுக்ராச்சாரியாரின் கொடிவழி வந்த ஆசிரியர்களை தேடிச்செல்க!” என்றார் துரோணர். “நான் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவேன் என்று சொல்லளிக்கிறேன்” என்றான் ஏகலவ்யன். “நான் உன் வேதத்தைவிட உயர்ந்தவனா?” என்றார் துரோணர். “மண்ணில் புழுக்கள் என நாங்கள் எங்கள் வேதத்தில் முளைத்து அதில் திகழ்ந்து அதில் முடிபவர்கள்” என்றான். “எனில் நான் மற்றொன்று சொல்ல இயலாது” என்றார் துரோணர்.

ஏகலவ்யன் உளம்சோராமல் அக்குருநிலையின் தொலைவில் நின்ற ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து துரோணர் தன் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகளை அகன்றிருந்து கண்டு உளம்பதித்துக் கொண்டான். பின்னர் தானே அதை செய்து பயின்று தேர்ந்தவனானான். அவன் அர்ஜுனனுக்கு நிகரான வில் திறனை அடைந்துவிட்டான் என்று சொல் பரவியது. துரோணர் அவனை தேடிச்சென்றார். “உன் ஆசிரியர் யார்?” என்று கேட்டார். “நீங்களே. உங்களிடமே விற்தொழிலை கற்றுக்கொண்டேன்” என்று அவன் கூறினான்.

“எனில் எனக்கு ஆசிரியக்கொடை அளி” என்று அவர் கேட்டார். “எதுவும் கோருக!” என்று அவன் சொன்னான். “உனது கட்டைவிரல் வேண்டும்” என்று துரோணர் கேட்டார். அக்கணமே அதை வெட்டி அவன் ஆசிரியக்கொடை என அளித்தான். ஏகலவ்யனின் அன்னை சுவர்ணை மைந்தனின் துண்டான விரலை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக் கொண்டாள். “வெட்டுண்ட என் மைந்தனின் பொருட்டு” என்று கூவி அவள் துரோணருக்கும் அஸ்தினபுரிக்கும் தீச்சொல்லிட்டாள். அச்சொல்லை நிலைநிறுத்தும் பொருட்டு அக்கணமே தன் சங்கரிந்து விழுந்து உயிர்விட்டாள்.

“எந்த மைந்தனுக்காக நீர் இதை செய்தீரோ அந்த மைந்தனுக்காக புத்திரசோகத்தில் நீர் உயிர்துறப்பீர். எந்த மாணவனுக்காக இப்பழியை ஆற்றினீரோ அந்த மாணவனின் வில்திறத்தாலேயே நீர் இறப்பீர். ஷத்ரிய வீரருக்குரிய இறப்பை அடையும் நல்லூழும் உமக்கிருக்காது. வாழையடி வாழையாக வரும் தலைமுறைகளின் எள்ளும் நீரும் உமக்கு கிடைக்காது. உமது மைந்தன் சொற்களாலேயே நீர் பழிக்கப்படுவீர்” என்றாள் சுவர்ணை.

அவ்வண்ணமே துரோணர் தன் மைந்தனின் விழிமுன் தான் மைந்தனுக்கு மேலாக எண்ணிய மாணவனாலேயே கொல்லப்பட்டார். அவர் மைந்தன் சாவில்லாதவன் ஆனான், ஆகவே தலைமுறைகளென நீளும் நீர்க்கொடை பெறாதவராக ஆனார் துரோணர். அஸ்தினபுரியின் மைந்தர்கள் அனைவரும் களம்பட்டனர். எஞ்சிய ஒருவனோ வில் தொட ஆற்றல் இல்லாத வீண்பிறவியென அமைந்தான்.

சௌம்யர் தொடர்ந்து சொன்னார். குறைபட்ட கைகொண்ட ஏகலவ்யன் தன் குடிக்கு தலைமகன் என்றானான். தன் அன்னை சுவர்ணையின் நவகண்டச்சிலை முன் நின்று “இன்று முதல் இக்குலத்தின் அரசன் நான். அசுரகுலமாகிய நாம் மலரோ இலையோ கிளையோ தடியோ அல்ல, நாம் வேர். பறவையோ மிருகமோ மீனோ பாம்போ அல்ல. என்றுமழியாத புழுக்கள். இதோ என் ஆணை, இன்று முதல் நமது வில்வேதம் நான்கு விரல் கொண்டது. நம் குலத்துக்கு நானே குருநாதனுமாவேன்” என்றான்.

அவ்விரல் குறைந்த நிலையில் கடும்பயிற்சி எடுத்து மீண்டும் பெருவில்லவன் என்று மாறினான். வில்லவர்கள் என்று தன் குடியில் ஆயிரம் பேரை திரட்டிக்கொண்டான். அவர்கள் அனைவருமே வலக்கையின் கட்டை விரலை அகற்றிக்கொண்டனர். நான்கு விரல் அம்பெடுத்துத் தொடுக்கும் ஒரு கலை அது. சதுராங்குலி வித்தை என்றே அது அறியப்படலாயிற்று. அவ்வில்லவர்கள் ஒரே நாணில் ஏழு அம்புகளை தொடுக்கும் சப்தசரம் என்னும் விற்திறன் கொண்டவர்கள். நிகரற்ற பொறுமை கொண்டவர்கள். நிலத்தோடு நிலம் படிந்து படுத்து அந்நிலையிலேயே அம்பெய்யும் ஆற்றல் கொண்டவர்கள். ஆகவே அவர்களை மறு அம்பெய்து வீழ்த்துவது எளிதல்ல.

அவர்கள் புகழறிந்த மகத மன்னன் ஜராசந்தன் அவர்களை தன் படையில் சேர்த்துக்கொண்டான். ஹிரண்யதனுஸின் மைந்தனாகிய ஏகலவ்யன் ஜராசந்தனின் படையில் முதன்மைப் படைவீரன் ஆனான். அவன் ஜராசந்தனின் தாய் ஜரையுடன் குலமுறை உறவு கொண்டவன். அவனுடைய அத்தைமுறை கொண்டவள் கம்சரின் இரண்டாவது அரசியான பிராப்தி. அஸ்தினபுரிக்கும் யாதவர்களுக்கும் எதிராக ஏகலவ்யனின் சினத்தை தூண்டி நிலைநிறுத்த ஜராசந்தன் முயன்றான். ஆகவே இளைய யாதவரால் கம்சர் கொல்லப்பட்டபோது மதுராவை விட்டு நீங்கிய கம்சரின் அரசியரை வரவேற்க ஜராசந்தன் ஏகலவ்யனை அனுப்பினான். மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தையைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்து அங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்தான். அசுர அரசிகள் மகதத்தை அடைந்தபோது மறுபக்கம் ஏகலவ்யனின் படை நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டு மதுராவை தாக்கத் தொடங்கியது.

அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கும்வரை மதுராவை மகதம் தாக்காது என எண்ணியிருந்தார் இளைய யாதவர். ஆகவே யாதவர்கள் படைவல்லமையுடன் இருக்கவில்லை. ஏழு நாட்களில் மதுராவை ஏகலவ்யன் பிடித்துக்கொண்டான். வசுதேவர் தன் மனைவியருடன் யமுனைவழியாக தப்பி ஓடி மதுவனத்தை சென்றடைந்தார். ஏகலவ்யன் படைகள் பதினைந்து நாட்கள் மதுராவை சூறையாடின. ஏகலவ்யன் ஆயிரம் படகுகளுடன் இரு துறைமுகங்களையும் அழித்தான். கன்றுகளை எல்லாம் கொன்று அவன் படைகள் உண்டன. மதுராவின் அனைத்து வீடுகளையும் அவன் எரித்தான். அதற்கு மதுராவின் நெய்க்களஞ்சியத்தையே பயன்படுத்திக்கொண்டான்.

ஏழு நாட்கள் மதுரா நின்றெரிந்தது. மதுராவின் தெருக்களில் மக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தமையால் குதிரைகள்கூட நடக்கமுடியாமலாயின. மதுராவின் மண் ரத்தமும் சாம்பலும் கலந்து கருமைகொண்டது. மறுநாள் ஏகலவ்யனின் படைகள் ஆயிரம் படகுகளில் வந்து மதுவனத்தை தாக்கின. கொந்தளிக்கும் யமுனைப்பெருக்கில் அலைபாயும் படகுகளில் இருந்தபடி அம்புகளை எய்து கரையில் நிற்பவர்களின் கண்ணுக்குள் அம்பைச் செலுத்தும் வில்லாளிகள் அவர்கள். அலைபாயும் படகுகளில் நின்ற அவர்களை யாதவர்களின் அம்புகள் ஒன்றுகூட சென்று தொடவில்லை.

அன்று இளைய யாதவர் வடக்கே சாந்தீபனி குருநிலையில் கல்வி கற்கும் பொருட்டு சென்றிருந்தார். மதுராவிலிருந்த பலராமர் எஞ்சிய யாதவர்களைத் திரட்டி அனைத்துக் கன்றுகளையும் சேர்த்துக்கொண்டு மதுவனத்தின் மறுபக்கத்துக்கு காட்டுக்குள் சென்றார். அடர்ந்த காட்டுக்குள் செல்ல யாதவர்கள் கற்றிருக்கவில்லை. அவர்களின் ஆநிரைகளை பசுமையை மீறி கொண்டுசெல்வதும் கடினமாக இருந்தது. குழந்தைகளுடனும் உடைமைகளுடனும் அவர்கள் காட்டுமரங்கள் நடுவே திணறியும் விழுந்தும் அழுதபடி சென்றனர்.

ஏகலவ்யனின் படையினர் மதுவனத்தில் புகுந்து அத்தனை வீடுகளையும் எரியூட்டினர். அதைக் கண்டு யாதவர்கள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறி அழுதனர். முதியவர்களை மதுவனத்தில் விட்டுவிட்டு வந்திருந்தனர். போர்நெறிப்படி அவர்களை ஏகலவ்யனின் படைகள் ஒன்றும் செய்யாதென்று எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் எரியும் வீடுகளுக்குள் தூக்கி வீசிவிட்டன ஏகலவ்யனின் படைகள்.

யமுனைக்கரைக் காட்டைக் கடந்து தெற்குப் பெருநிலத்தின் காடுகளை அடைந்ததும் பலராமர் ஏழு தூதுவர்களை தொடர்ந்து வரும் ஏகலவ்யனிடம் அனுப்பி தீர்வு கோரி மன்றாடினார். யாதவர்களின் இறுதிக் குழந்தையையும் கொன்ற பின்னரே ஹிரண்யபதத்துக்கு மீளவிருப்பதாக ஏகலவ்யன் சொன்னான். தூது சென்றவர்களின் காதுகளையும் மூக்கையும் வெட்டிவிட்டு திருப்பியனுப்பினான். செய்வதறியாது யாதவர்கள் காடுகளுக்குள் திகைத்தனர்.

அப்போது தன்னந்தனியனாக இளைய யாதவர் அங்கே வந்து சேர்ந்தார். யாதவ குலமே அவரை நோக்கி தந்தைமுன் அஞ்சிய குழவி என கைநீட்டி பாய்ந்தோடியது. இளைய யாதவர் சொன்னார் ‘ஏகலவ்யனை நான் அறிந்துள்ளேன். அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான் என்றால் இறுதிக்குருதித் துளி எஞ்சுவதுவரை அதை நிறைவேற்றவே முயல்வான். மகதம் அணுகமுடியாத இடத்துக்குச் செல்வதே நாம் செய்யக்கூடுவது. முடிந்தவரை இந்நிலத்தை விலகிச்செல்வோம். யாதவர்களாகிய நமக்கு புல்லிருக்கும் நிலமெல்லாம் உணவிருக்கும்.’ அவ்வண்ணம் அவர்கள் அகன்று சென்று உருவாக்கியதே துவாரகை.

அஸ்தினபுரியின் வளர்ச்சி கண்டு பிரக்ஜ்யோதிஷத்தின் அரசனாகிய பகதத்தன் அச்சமும் பொறாமையும் கொண்டிருந்தான். அந்நகர் மீது படைகொண்டு செல்லவேண்டும் என்று விழைந்தான். ஆனால் அவன் குடிகளும் அவன் பதினெட்டு துணைநாடுகளும் அதற்கு ஒப்பவில்லை. துணைநாடுகளின் படைகொண்டு சென்றாலன்றி அஸ்தினபுரியை வெல்லவும் இயலாது. அவனுடைய அமைச்சர்களில் ஒருவனாகிய அசுரகுலத்து நிமலன் “அவர்களை நாம் படைகொண்டு தாக்க வேண்டுமென்றால் அவர்கள் நம்மை தாக்கவைப்பதே முதலில் செய்யவேண்டியது” என்று கூறினான். “அவர்களுக்கு சினமூட்ட வேண்டும். அவர்களே நம்மை தாக்கினார்கள் எனில் நாம் அவர்களை தாக்குவதும் வெல்வதும் முற்றழிப்பதும் அரசமுறை என்றாகிவிடும்” என்றான்.

பிரக்ஜ்யோதிஷத்தின் படைகள் கங்கையில் செல்லும் அஸ்தினபுரியின் படைகளை தடுக்கலாயின. அஸ்தினபுரியின் வணிகர்களை சிறைப்படுத்தி பொருட்களை கவர்ந்தன. ஓர் எல்லையில் பொறுமையிழந்து கர்ணனின் தலைமையில் அஸ்தினபுரியின் படை பிரக்ஜ்யோதிஷத்தின் படைநிலைகளுக்கு எதிராக எழவிருக்கிறது என்று தெரிந்தது. “கானுறைவு முடிந்து பாண்டவர்கள் மீண்டிருக்கும் பொழுது இது. இத்தருணத்தில் அர்ஜுனன் அஸ்தினபுரிக்கு உதவினால் நாம் அழிந்தோம். ” என்றான் நிமலன். “நம்மில் ஒரு கிளை யாதவர்களை தாக்கவேண்டும். அவர்களைக் காக்க அர்ஜுனன் சென்றே ஆகவேண்டும்” என்றான்

பிரக்ஜ்யோதிஷத்தின் ஆணை ஹிரண்யபதத்தின் அரசன் ஏகலவ்யனுக்கு அனுப்பப்பட்டது. ஏகலவ்யனை யாதவர் அதற்கு முன் எட்டு களங்களில் சந்தித்திருந்தனர். இறுதியாக பலராமரின் தலைமையில் எழுந்த மதுராவின் படை ஹிரண்யபதத்தை தாக்கியபோது ஏகலவ்யன் காட்டுக்குள் தப்பியோடியிருந்தான். அந்த வஞ்சினம் அவனில் எரிந்துகொண்டிருந்தது. அவன் தன் பெருவில்லவர் பன்னிரண்டாயிரம் பேரை திரட்டிக்கொண்டு மதுவனத்தை நோக்கி சென்றான். மதுவனத்தின் ஆயர்கள் அஞ்சி ஓடி காடுகளுக்குள் புகுந்தனர். அவர்களின் பசுக்குலங்களை கொன்றழித்தான். மதுவனத்தின் மீது எரி படரவிட்டான்.

அங்கிருந்த ஆயிரம் படகுகளில் அவன் வீரர்கள் மதுரா நோக்கி வந்தனர். அப்போது அங்கு பலராமர் இல்லை. ஏகலவ்யனை ஒடுக்கிவிட்டோம் என நம்பி அவர் தன் திசைப்பயணத்திற்காக வடபுலம் சென்றிருந்தார். மதுராவைத் தாக்கிய ஏகலவ்யன் அதன் கோட்டைகளை உடைத்தான். நகரத்திற்குள் அவன் அம்புகள் நச்சுப்பறவைகளென வந்து விழுந்து உயிர் குடித்தன. மதுரா நகர் எரியூட்டப்பட்டது. அதன் கருவூலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மதுராவின் ஏழாயிரம் படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.

அங்கிருந்து ஏகலவ்யன் துவாரகை நோக்கி சென்றான். முடிந்தவரை விரைவில் துவாரகை நோக்கி செல்லவேண்டும் என்றும், துவாரகையிலிருந்து வரும் இளைய யாதவரின் படையை நடுப்பாலையிலேயே சந்திக்கவேண்டும் என்றும், ஏகலவ்யனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது. உபப்லாவ்யத்தில் இருந்து அர்ஜுனனை தன்னை துரத்தி வரச்செய்து பாலைநிலத்தில் நெடுந்தொலைவு கொண்டுவந்து சிக்க வைக்கவேண்டும் என்றும் அஸ்தினபுரி தாக்கப்படும் செய்தி கேட்டாலும் பதினெட்டு நாட்கள் அவன் திரும்பிவரலாகாது என்றும் நிமலன் வகுத்திருந்தான்.

ஏகலவ்யனின் படை மதுராவை தாக்குவதை அறிந்து உபப்லாவ்யத்தில் இருந்து படைகளுடன் வந்த அர்ஜுனன் அங்கே எரியூட்டப்பட்ட நகரைக் கண்டு திகைத்தான். ஏகலவ்யன் மதுராவை அழித்துவிட்டு துவாரகை நோக்கி செல்வதை அறிந்து அவர்களை துரத்திச்சென்றான். ஆனால் ஏகலவ்யனை அர்ஜுனன் நெருங்குவதற்குள்ளாகவே இளைய யாதவர் எதிர்கொண்டார். அந்தப் போர் நடுப் பாலையில் நிகழ்ந்தது.

ஏகலவ்யனை எதிர்க்க துவாரகையிலிருந்து படை திரட்டிக்கொண்டு வந்து பாலைவனத்திற்குள் நிலைகொள்வது என்பது துவாரகையை கைவிடுவது போன்றது. கடல்படையெடுப்பாளர்கள் அந்நகரை சுற்றிவந்துகொண்டிருந்த காலம் துவாரகை அன்று அத்தனை எதிரிகளும் சூழ்ந்திருந்த இடர்நிலையில் இருந்தது. படைகளுடன் துவாரகையில் காத்திருந்து ஏகலவ்யனை அருகே வரவிடுவது என்பது துரத்திவரும் அர்ஜுனனை பாலையில் நெடுந்தொலைவு வரச்செய்து சிக்க வைப்பது. ஆகவே இளைய யாதவர் வெறும் நூறுபடைவீரர்களுடன் ஏகலவ்யனை எதிர்க்க கிளம்பினார்.

அவர்கள் பாலைநிலத்தில் கால்களில் அகலமான செயற்கைக்குளம்பு அணிந்த விரைவுப்புரவிகளில் வந்து ஏகலவ்யனின் படைவீரர்களை எதிர்கொண்டனர். இளைய யாதவர் செய்த ஒரு சூழ்ச்சியால் ஏகலவ்யன் பாலைநிலத்தில் சிக்கிக்கொண்டான். பாலைநிலத்தில் வரும் படைகள் நீர் நோக்கவும் திசையறியவும் பறவைகளை கூர்ந்து கணிக்கும் முறைமையை கடைப்பிடிப்பதே வழக்கம். அந்திப்பறவைகள் எத்திசையில் செல்கின்றனவோ அங்குதான் பாலைவனச்சோலைகள் அமைந்திருக்கும். இளைய யாதவர் துவாரகையிலிருந்து பயிற்றுவித்துக் கொண்டு வந்த பறவைகளை ஏகலவ்யனின் படைகளுக்கு குறுக்காக அனுப்பினார். அவை அவன் படைகளை தலைவழியாக கடந்து அப்பால் சென்று விழிமறைந்ததும் மண்ணிலிறங்கி மீண்டும் அங்கிருந்த துவாரகையின் படையினரின் கூண்டுகளுக்குள் சென்று நீரருந்தி உணவுகொண்டன.

பறவைகளின் செலவைக் கண்டு அத்திசையில் பாலைவனச்சோலை இருக்கிறதென்று வழிகாட்டிகள் கணிக்க ஏகலவ்யன் தன் படைகளைத் திருப்பி அங்கே கொண்டுசென்றான். இரவு எழும் வரை சென்றும் சோலையோ நீரோ தென்படாமல் அவன் படைகள் சோர்ந்தன. மறுநாள் புலரியில் அவர்கள் கிளம்பியபோது மீண்டும் அதேபோல பயிற்றுவிக்கப்பட்ட பறவைகள் திசைமாற்றி அழைத்துச்சென்றன. மூன்று நாட்கள் அவ்வண்ணம் திசைமாற்றி பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்ட ஏகலவ்யன் படைகள் தளர்ந்து செயலிழந்து மணலில் உழன்றன.

அவர்களை தான் விரும்பிய இடத்திற்கு இளைய யாதவர் அழைத்து வந்தார். அங்கு உரிய தருணத்திற்காக அவர் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்தது போலவே மணல்புயல் எழுந்து அவர்களை சூழ்ந்துகொண்டபோது அதை திரையென்றாக்கி அதனூடாக இளைய யாதவரின் நூறு வில்லவர்கள் நச்சு தடவிய அம்புகளுடன் ஏகலவ்யனின் படையை சூழ்ந்துகொண்டனர். விழி கட்டப்பட்டவர்களை கொன்று குவிப்பதுதான் அங்கே நிகழ்ந்தது. ஏகலவ்யனின் படைகள் முற்றழிந்தன.

புயல் தணிந்தபோது புண்பட்டு மண்ணில் புதைந்து கிடந்த ஏகலவ்யனை தேடிப்பிடித்து பின்கை கட்டி அழைத்து வந்தனர் இளைய யாதவரின் வீரர்கள். அவர்களுடன் நாற்பத்தெட்டு நிஷாத வீரர்களும் சிறையுண்டனர். ஏகலவ்யன் “நான் பிரக்ஜ்யோதிஷத்தின் படைத்தலைவன். அரசமுறைப்படி போர்புரிய படைகொண்டு வந்தவன். இங்கு நிகழ்ந்தது போரல்ல, சூழ்ச்சி மட்டுமே” என்றான். “எனினும் போர்த்தலைவனுக்குரிய நெறிமுறைகளை நாடுகிறேன். உரிய முறையில் நான் களப்பலியாக வேண்டும். இறுதிச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும்” என்றான்.

இளைய யாதவர் “உன் உடற்குறையை நீ உளக்குறையென்று ஆக்கிக்கொண்டாய். மதுராவிலும் மதுவனத்திலும் நீ செய்தது போரல்ல, உன் வஞ்சத்தை எளியவரிடம் தீர்த்துக்கொண்டாய். இதோ நெறிபிழைத்து தோற்கடிக்கப்பட்டாய் என்று உன் வாயால் சொன்னாய். அது இனிமேல் நீயும் உன் குடியும் நெறிகளை கடைப்பிடிக்க போவதில்லை என்பதற்கான அறிவிப்புதான். நாங்கள் முளைத்தெழும் குலம். தொடர்ந்து வரும் தாக்குதல்களால் எங்கள் இளம்பயிர் அழியலாகாது. எனவே இனி எவரும் எங்கள்மேல் படைகொண்டுவர எண்ணமுடியாதபடி உன் அழிவு நிகழவேண்டும்” என்றார்.

ஏகலவ்யன் “கொல்ல உங்களுக்கு உரிமை உண்டு யாதவரே, நான் மண்புகுவதை தடுக்கும் உரிமை இல்லை” என்றான். “நீ மண்புகக்கூடாது. மண்ணில் வேரென உறையும் உன் முன்னோருடன் நீ சேர நான் விடமாட்டேன்” என்றார். தன் வாளை உருவி அவன் தலையை வெட்டி வீழ்த்தினார். அந்தத் தலை தனியாக துவாரகைக்கு கொண்டுசெல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. உடல் பாலைநிலத்தில் பறவைகளுக்கு உணவாக அளிக்கப்பட்டது. ஒரு துளியும் மண்ணை அடையவில்லை. அச்செயல்கள் அனைத்தையும் நிஷாத வீரர்கள் பார்க்கும்படி செய்யப்பட்டனர். அவர்கள் அதை சென்று அறிவிக்கவேண்டும் என பாலைநிலத்தைக் கடந்து ஊர்திரும்பச் செய்யப்பட்டனர்.

“அக்கொலை அதற்கு முன் நிகழ்ந்தவற்றின் தொடர்ச்சி. அந்நிகழ்வுகள் அதற்கு முன் நிகழ்ந்தவற்றால் மூட்டப்பட்டவை. அது ஒரு நீள்சரடு. ஒருவேளை அதை இங்கு இவ்வண்ணம் முற்றறுத்து நிறுத்த அவர் விழைகிறார் போலும்” என்றார் சௌம்யர்.

தொடர்புடைய பதிவுகள்


தேவி, இணைவு- கடிதங்கள்

$
0
0

தேவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

தேவி கதையை யாதேவி முதல் ஒரு தொடர்ச்சியின் வடிவமாகவே வாசித்தேன். ‘தேவி உனக்கு எத்தனை முகங்கள்!”என்ற வியப்பைத்தான் யாதேவி முதல் தேவி வரை எல்லா கதைகளும் காட்டுகின்றன. லீலை கதையும் அந்தவகையானதே.

பெண்ணின் லீலைகள் என்று கொள்ளலாம். ஆனால் அதைவிட அடுத்த தலைமுறையை உருவாக்குவது சார்ந்த முழுப்பொறுப்பையும் பெண்மேல் சுமத்தியிருக்கிறது இங்கே இயற்கை. ஆகவே பெண் இத்தனை முகங்களையும் சுமக்கவேண்டியிருக்கிறது. கன்னியாக கவரவும் அன்னையாகி பிள்ளைகளை பெற்றுக் காக்கவும் சுயநலமே உருவாகி குடும்பம் காக்கவும் அவளுக்கு இத்தனை முகங்கள் தேவையாகின்றன. பல பறவைகள் இப்படி ஒவ்வொரு செயலுக்கு வேறுவேறு சிறகுகள் கொண்டு முழுக்கவே வேறு பறவைகளாக மாறிவிடுகின்றன. அதேபோலத்தான் பெண்ணும். இது பெண்ணின் ஜாலம் அல்ல. இயற்கையின் மாயம் என்றுதான் சொல்வேன்

கே.வெங்கட்

***.

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

தேவி சிறுகதையில் எனக்கு மிகவும் பிடித்தது,  ஒரு  காரியத்தை நிறைவேற்றுவதில்  நான்கைந்து பேரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அழகாகச் சொல்லியருப்பது.

அனந்தன் தான் நாடகத்தின் ஆசிரியன்.  இறுதியில் ஊர்மக்கள் எல்லாம் நாடகத்தை மிகவும் பாராட்டுகின்றனர்.  அனந்தனுக்கு மகிழ்ச்சி.

கதை,   அனந்தனுடைய சிந்தனை.  ஆனால், அந்த சிந்தனை மட்டுமே அந்த நாடகத்தை மக்களிடம் சேர்த்துவிடப்  போதுமானதாக இல்லை. லாரன்சு,  பெட்டி காதர், ஸ்ரீதேவி எல்லாரும் சேர்ந்துதான் அந்தத் தேர் நகர்ந்திருக்கிறது.

இதில் யாருடைய கருத்தையும் அனந்தன் முதலில் உடன்படவில்லை. பெட்டி காதர், 3 பெண்கள் நாடகத்தில் வேண்டும் என்கிறார்,  அனந்தன் முரண்படுகிறான்.  காதர் விடாப்பிடியாக இருந்து,  பின்பு  அனந்தன் புரிந்துகொண்டு ஒப்புக் கொள்கிறான்.ஸ்ரீதேவியை அனந்தன் வேண்டாம் என்கிறான், ஆனால் லாரன்சின் அழுத்தத்தால் ஸ்ரீதேவியை சேர்த்துக் கொள்கிறார்கள்.கடைசியில் பார்ததால்,  அந்த 3 பெண்பாத்திரங்களோ,  ஸ்ரீதேவியோ இல்லையென்றால்,  நாடகம் விழுந்திருக்கும்.    ஆனாலும் பாருங்கள், நாடகத்தின் உயிர்  அனந்தன் தான்.

ஆக, இங்கு யாரும் எதுவும் தனியாக எதையும் நிறைவேற்றிவிட முடியாது.   ஒருவர் உயிர் என்றால்,  தசை, எலும்பு, தோல் என்று மற்ற ஆட்கள் வேண்டியிருக்கிறது.  இல்லையென்றால், வெறும் உயிர், அது தலையாயதாக இருந்தாலும், பயனற்று இருந்துவிடுகிறது.

இன்னொரு கதையில் (வேரில் திகழ்வது), புலனாய்வு உயரதிகாரி இவ்வாறு சொல்லுவார்: “எந்த அளவுக்கு போலீஸ் என்ற அமைப்பில் நான் பொருந்திப் போகிறேனோ அந்த அளவுக்கு நான் வெற்றிபெறமுடியும். எத்தனை புத்திசாலியாக இருந்தாலும், மேதையாக இருந்தாலும், தனித்து செயல்பட்டால் ஒன்றும் சாதிக்கமுடியாது.”

அது நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
வி. நாராயணசாமி.

***

 இணைவு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நான் வீரபாண்டிய கட்டப்பொம்மன், பூலித்தேவன், மருதுசகோதரர்கள் என்றெல்லாம் படிக்கும்போது யோசிப்பேன். இவர்கள் அத்தனைபேரையுமே வெள்ளைக்காரன் நசுக்கியிருக்கிறான். அவனும் பெரிய படை எதையும் கொண்டுவரவில்லை. இவர்களிடம் இருப்பதைவிட சிறிய படையுடன்தான் அவன் வந்து போரிட்டிருக்கிறான் அப்படியென்றால் அவன் இன்னும்பெரிய வீரன்தானே? நம்முடையவர்கள் என்பதனால் இவர்களை நாம் கொண்டாடுகிறோம். அது வெறும் இனப்பற்றுதானே? வீரம் என்ற வேல்யூ மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால் நாம் கொண்டாடவேண்டியது பானர்மானை தானே?

அந்தக்கேள்விக்கு பதில்சொல்கிறது இணைவு என்றகதை. வெள்ளையர்கள் வீரன் – வீரவழிபாடு என்ற இடத்தை கடந்தபிறகே அவர்கள் உலகை ஜெயித்தார்கள். அவர்கள் ஒரு பெரிய ராணுவம். ஒர் அரச அமைப்பு. ஒவ்வொருவனும் அதில் ஓர் உறுப்பு. ஓர் இயந்திரம் போன்றது அது. உறுப்பு அதன் பணியைச் செய்யவேண்டும். அது ஒட்டுமொத்தமாகவே செயல்படும். அதன் ரூல்ஸ்தான் அதற்கு முக்கியம்.தனிப்பட்ட வீரம் அல்ல. மாவீரன் என்றாலும் தனிப்பட்ட முறையில் ரூல்களை மீறினால் தண்டிக்கப்படுவார்கள். ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸும் எல்லாம் தண்டிக்கப்பட்டார்கள்.

அந்த அமைப்பு ஒரு நவீன ராணுவம். நம்மிடையே இருந்தது பழைய முறை ராணுவம். ஆகவே இது தோற்றுத்தான் ஆகவேண்டும். வேலுத்தம்பியின் 35000 பேர் நூறு வெள்ளையர்கள்கூட இல்லாத 2500 பேர்கொண்ட பிரிட்டிஷ் ராணுவத்திடம் தோற்றது அப்படித்தான். சேமர்ஸின் அந்த பெரிய தன்னுரையாடல் ஆழமான ஒன்று

விவேக்ராஜ்

****

அன்புள்ள ஜெ,

வரலாற்றில் வீரம், காதல் என்ற விழுமியங்கள் தொல்காலம் முதல் சிறப்பிக்கப்பட்டிருகிறது. வரலாறு முழு நீளம் மனிதர்கள் காதலுக்காகவும், அநீதிக்கு ஏதிராகவும், சுதந்திரத்திற்காகவும் தனியாகவும் பிறருடன் சேர்ந்தும் போரிட்டிருக்கிறார்கள்.

இரு தனி மனிதர்கள் போரிட்டால் அதன் விளைவுகளால் அவர்களும் அவர்களின் குடும்பம் மட்டும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அது மக்கள் இயக்கமாக மாறும் போது அதை நடத்தும் தலைவர்களின் பொறுப்பு விரிவடைகிறது. அத்தலைவர்கள் தன்னை பின்தொடரும் மக்கள் கூட்டத்தினரின் இறப்புக்கும் இன்னல்களுக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் தன்முனைப்பும் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வெறியும் சுயநலமும் அதற்கு இடம் அளிப்பது இல்லை.

ஆனால் உண்டும் உறங்கியும் இறந்து போகும் சாதாரண மக்களுக்கு இந்த சலிப்பு தரும் வாழ்க்கையில் இருந்து சற்று விடுபட சாகசங்களும் அது அளிக்கும் உள்ளக்கிளர்சியும் தேவைப்படுகிறது. ஆகவே நெருப்பை நாடிச் சென்று வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளைப்போல் இந்த வீரபுருக்ஷர்கள் என்று அழைக்கப்படுபவர்களை பின் தொடர்ந்து மாய்ந்து போகிறார்கள்.

சரித்திர புருஷர்களில் மகாத்மா காந்தி போன்ற ஒரு சிலரே இதற்கு விதி விலக்கு. மக்கள் கையில் துப்பாக்கிக்கு பதில் அஹிம்சை என்ற விழுமியத்தை அளித்தார்கள்.பேரழிவையும் உயிரழிவையும் தவிர்த்தார்கள். இவர்களே உண்மையான சரித்திர நாயகர்கள்.

நெல்சன்

****

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

நிழல்காகம், முதுநாவல் –கடிதங்கள்

$
0
0

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நிழற்காகம் கதையில் அந்த கவிதை வரி எதற்காக வருகிறது என்று சிந்தித்தேன். அது சாதாரணமாக வருகிறது – பனியைப்பற்றி. ஆனால் அப்படி ஒரு சாதாரணமான வரி அந்தமாதிரி கதையிலே வரமுடியாதே. அது சொல்வது பனியை போர்த்திக்கொண்டும் உதறியும் மரங்கள் விளையாடுவதை.

நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். gloom ஒருபக்கம் bliss இன்னொரு பக்கம். இரண்டையும் நாம் மாறிமாறி எடுத்துப் போர்த்திக்கொள்கிறோம். நம்முடைய சொந்த விளையாட்டு அது. அந்த விளையாட்டை கவனித்தால்போதும். அங்கிருந்துதான் அசிதர் அந்த காகத்துடன் விளையாட ஆரம்பிக்கிறார்

ஆர்.ராம்குமார்

***

அன்புள்ள ஜெ,

மூலம் – போலி, உண்மை – நாடகம், shake – drape, பொருள் – நிழல்.
அசிதரின் சந்ததி நெடுக காகம் அவர்களை கொத்துகின்றது. இது உண்மை. இது ஏன், எதற்கு நடைபெறுகிறது என்பதைக் கடந்து, இது நடக்கிறது, இதனை எப்படி எதிர்கொள்வோம் என நினைத்து, அசிதர் தன்னை அந்த செயலுக்குள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்படி அந்த கொத்தல் நிகழ்வு,கொத்தல் விளையாட்டாக மாறியது. ‘அது’ ‘தானா’கும் போது, அதிலிருந்து நாம் அதை கடந்து செல்கிறோம்.

இங்கே காலத்திற்கு காகத்தை உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நம் பூர்வ கால செயல்களின் வினை, காகம் கொத்துவது போல தொடர்ந்து வந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு அதனுடன் விளையாட பழகவில்லை என்றால் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்ற பொருளும் உள்ளது. ‘பொருள் அற்ற ஏற்றல்’ – என்ற தத்துவத்தை கூறுவதாகவும் ஒரு விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

அசிதர் எங்கு சென்றாலும், காகங்கள் அவரை கொத்துவது வியப்பாகவும் விந்தையாகவும் உள்ளது. ஆனால் உலகமே இவ்வாறு விந்தையான நிகழ்வுகள் கொண்டதே என்றே நான் நினைக்கிறேன். சில விந்தைகளை நாம் பகுத்தறிந்து பொருள் கொண்டோம். சிலவற்றை நம்மால் பொருள் கொள்ள முடியவில்லை அல்லது அதற்கு பொருள் ஏதும் இல்லை என விட்டு விட்டோம். ஒருவேளை நடப்பவை அனைத்திற்கும் பொருள்  ஏதும் இல்லை என்றே சில சமயம் தோன்றுகிறது. நாம் பொருள் கண்டவற்றிற்குக் கூட, நம் மனத்திருப்திக்காக பொருளை ஏற்று  கொண்டோம் என்றே நினைக்கிறேன். அல்லது நேர் மாறாக அனைத்திற்கும் பொருள் உள்ளதோ?

உலகில் உள்ள அனைத்து காகங்களும் அவரை அடையாளம் கண்டு கொத்துவது, அவை அனைத்தும் ஒரே மனதால் கோர்க்கப்படுவது போல உள்ளது. பல உயிர்கள் ஒரே மனம். அவைகள் ஏன் அவரை கொத்துது என அவைகளுக்கே தெரியாது. அல்லது அவைகளுக்கு தெரியும் என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தெரியாத, புரியாத ஒரு செயலை செய்வதில் ஏன் அதற்கு அப்படி ஒரு ஆவல். அச்செயல் அதன் கடமை. தன் கடமையை யாரோ ஆணையிட அது செய்து கொண்டே போகிறது. அப்படி அது செய்து கொண்டே போகும் வேளையில், அச்செயலை அவர் ஏற்றுக்கொண்ட போது, அவரைக்  கொத்தும் உக்கிரமும் குறைந்து அது ஒரு தொடும் விளையாட்டாக மாறிப்போகிறது. அது காகத்தின் கருணையாகவும் கொள்ளலாம். ‘ஏற்றுக்கொண்ட தண்டனைகள் அதன் பொருளை இழக்கிறது’. இங்கே அசிதர், காகங்கள் தன்னை தண்டிப்பதை ஏற்றுக்கொண்டதால்  அந்த செயலே காகத்திற்கு பொருள் அற்று போனது.

உலகில் அனைத்தும் காம வடிவமே. அனைத்து புலன்களும் காமத்தின் செயல்பாடுகள். இதில் ‘இன்பமும், துன்பமும்’, ‘ஆசையும், கோபமும்’ அனைத்தும் காமம். ஆனால் கலையின் காணும் காமம், நம்மை அந்த கலையின் ஊடே இட்டுச்சென்று புதிய  மலர்தலை அளிக்கிறது. அந்த மலர்தலில் நாம் அதனில் ஒன்றாக உள்ளோம், மனமே கலையாக, கலையே மனமாக.

மாறாக அதை முழுமையாக அறியாத மனம், கலையை தன்னுடன் பிரித்துப் பார்த்து அதனை அடைய முயன்று தோற்கிறது. ‘காமம்-பிரம்மம்’, இவை இரண்டிற்கும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு சிந்தனை வழிகள். பரதநாட்டியம் ஒரு காம நடிப்பு. அப்படி நாம் அதை நடிப்பதால் தான் அதிலிருந்து நாம் விடுபடுகிறோம். அந்த விடுதலை அளிப்பதாலேயே அது மிகப்பெரும் கலை ஆகிறது.  ‘மனதை விடுதலை செய்ய முடியாத எதுவும் கலை அல்ல’ என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அசிதரும்-காகமும் அந்த கொத்தல் விளையாட்டை விளையாடுவதும் ஒரு நடிப்பே.

மூலத்தை அறியவும் கடக்கவும் போலி உதவும் என்பதை யோசிக்க யோசிக்க மலைப்பாக இருக்கிறது. ஆனால் அறிந்து கடக்கிறோமா இல்லை அறியாமல் போகிறோமா என்பதே இங்கே முக்கியமானது. ‘அறிதல்’ நடக்குமிடத்திலே நாம் அதை கடக்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது.

அன்புடன்,

பிரவின்

தர்மபுரி

***

முதுநாவல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

முதுநாவல் போன்ற கதைகளை நான் நிறையவெ கேட்டிருக்கிறேன்.பெரிய ரவுடி, கொலைகாரன் திருந்தி ஞானி ஆனது. வால்மீகிதான் அதற்கு முதல் உதாரணம். திருமங்கையாழ்வார்போல பல கதைகள் உள்ளன. நம் சமகால வாழ்க்கையிலும் பல சித்தர்களை அப்படிச் சொல்வார்கள்.

அந்தக்கதையில் முக்கியமானது அவர்கள் இருவரும் நடந்த்திக் கொள்ளும் அந்தப் போர்தான். அதி உக்கிரமான போரை ஃபோக்குக்குள் கொண்டுபோய் சித்தரிக்கிறீர்கள். அது அசுர யுத்தம். அந்த போரில் காதரின் ஆணவமான தலைப்பாகை விழுகிறது. அதேசமயம் இடும்பனின் ஆணவமும் விழுந்திருக்கும்

இடும்பன் ஜெயித்தது அந்த தண்ணீரை பகிர்ந்துகொண்டதனால்தான் என்று நினைக்கிறேன். அது மேஜிக்கலான ஒரு கணம். அந்த இடத்தில் எவர் மேலே எழுகிறார் என்பது ஒரு பெரிய கணக்கு. ஜெயித்தவரும் தோற்றவரும் சமானமாகவே அடையும் ஒரு ஞானம் உண்டு இல்லையா?

சிலபறவைகள் அப்படித்தான் என்ற வரியால் கவிதையாக ஆகிறது கதை

செல்வன்.

***

வணக்கம் ஜெ

முதுநாவல் சிறுகதையை வாசித்தேன். காதரும் இடும்பனும் போரிடுவது இரு நிகராற்றல் போரிடுவதற்குச் சமம். தங்களின் உடலின் மீதான திமிர்வு ஆணவத்தை அளிக்கிறது. காதர் காமமும் வன்முறையும் நிறைந்தவன். இடும்பனோ உடலின் திமிர்வு அளிக்கும் ஆணவம் நிரன்பியவன். இருவருமே வேட்டை விலங்குகள் போல சித்திரிக்கப்படுகின்றனர். இரு நிகராற்றலும் ஒன்றையொன்று சமன்படுத்தி இருக்கும் போது பெரும் வெறுமை நிறைகிறது. அந்த வெறுமையை முதுநாவல் மரத்தில் அமர்ந்திருக்கும் முது பரதேசி மரத்தில் காய்த்துக் கனிந்து பறவைகளால் தீண்டப்படாமல் வண்டியேறி கூழாகக் கிடந்த நாவல் சாற்றின் சுவையை அளித்து இருக்கிறார்.

அரவின் குமார்

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

பா.செயப்பிரகாசம் பற்றி

$
0
0

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. இக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்ன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தென்.

தீவிர இடதுசாரி இயக்கங்களைப் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றுக்கு வந்த எதிர்வினை அது. நான் சிறுகதைகளை எழுதத் தொடங்கியமையால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த தொடர் முடிந்ததும் கடிதம் வெளியாகியது

வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும்

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவுறுத்த விரும்புகிறேன். ஒன்று நான் மிகமிக கடுமையாக கண்டிப்பது இந்த கண்டனத்தில் பா.செயப்பிரகாசம் அவர்கள் ஒரு பொருட்படுத்தத் தக்க சிறுகதையாசிரியர் என்று சந்தடி சாக்கில் சொல்லிவைத்திருப்பதைத்தான். அதை இதில் கையெழுத்திட்டிருக்கும் எழுத்தாளர்கள் எவரேனும் ஏற்பார்கள் என்றால் அவர்கள் மேற்கொண்டு இலக்கியம் பேசாமலிருப்பதே நன்று.

அத்தனை முற்போக்கு எழுத்தாளர்களையும் அங்கிகரித்து அவர்களின் எழுத்துக்களை கவனப்படுத்திய விமர்சகனாகிய என் பார்வையில் மிகச்செயற்கையான, மிகமிக மேலோட்டமான முதிரா எழுத்துக்கள் பா.செயப்பிரகாசம் எழுதியவை. வானம்பாடிக் கவிதைகளின் கதைவடிவம் என்று சொல்லலாம்.அவர் அவ்வெழுத்துக்களுடன் இன்று சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளுக்கான எதிர்பார்ப்புடன் முயல்கிறார் என்று கேள்விப்படுகிறேன். இந்த கண்டனக்கடிதத்தை அதற்கான முயற்சிகளில் ஒன்றாக, அணிதிரட்டலாக பயன்படுத்துகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது.

பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பு அமெரிக்க எதிர்ப்பு  ஒட்டுமொத்தமாக அரசுஎதிர்ப்பு. ஆனால் அரசின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார்.

அந்தக் கடிதத்தில் உள்ள நேரடியான அப்பட்டமான கேள்வி இதுதான். இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் என்ற அங்கீகாரத்துடன் அரசுப்பணியில் நுழைந்து மக்கள்தொடர்புத்துறையின் தலைமை அதிகாரியாக இருந்த அவர் எப்படி ஒரு தீவிர இடதுசாரிக் குழுவுக்கு தலைமைவகிக்கமுடியும் என்பது. அதிலுள்ள அபத்தம். அந்தக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் காவல்துறைச் சிக்கல்கள் உட்பட பல்வேறு வகையில் சீரழிந்தபோது இவர் எப்படி பாதுகாப்பாக இருந்தார் என்பது. அந்த மோசடியைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பா.செயப்பிரகாசத்தை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் ஒரு இடதுசாரி என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இடதுசாரி தீவிரக்குழுக்கள் முதல் அதிமுக வரை தொடர்புகள் கொண்ட  ‘லாபியிஸ்ட்’ மட்டுமே என்ற தெளிவை பின்னர் அடைந்தேன்.அரsசு உயரதிகாரியான இவரால் தலைமைதாங்கப்பட்ட பழைய  ‘நக்சலைட்’ குழுவில் சேர்ந்து வாழ்க்கையை இழந்து, போலீஸ் வழக்குகளில் சிக்கிய நண்பர்கள் சிலரின் மீள்வாழ்வுக்காக தொண்ணூறுகளில் நான் நிதிதிரட்டியிருக்கிறேன். நண்பர்களுக்குத் தெரியும். அவர்கள் வழியாக இவரையும் நன்றாகவே தெரியும்

தமிழக அரசில் மக்கள்தொடர்புத்துறை அதிகாரி என்பது முழுக்கமுழுக்க அரசியல் நியமனம். அதில் லாபியிஸ்ட் அல்லாத ஒருவர் பணிபெறமுடியுமா ? இதைக்கூட தெரியாமலிருக்கும் கள்ளம்கபடமற்றவர்களா நம்மூர் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்? அந்த பணியே லாபியிங் செய்வதற்கான சூழலை உருவாக்கும் கடமைகொண்டது.

பா.செயப்பிரகாசம் தான் சார்ந்த சாதியக் குழுக்களுடன் நெருக்கமானவர், அரசியல் சார்ந்து அவற்றை பயன்படுத்திக்கொண்டவர் அவர்மேல் பொதுவாக அனைவருமே முன்வைக்கும் குற்றச்சாட்டு. இந்த கையெழுத்தாளர் பட்டியலிலேயே சிலர் சொன்னதுண்டு- இப்போது அவர்கள் மறுக்கலாம். இப்போது இந்த சர்ச்சை வந்ததனால் தெளிவாகவே சொல்கிறேன் நான் பா.செயப்பிரகாசம் பற்றிய அக்குற்றச்சாட்டை உறுதியாக  நம்புகிறேன்.

அவருடைய சாதிய  ‘லாபியிங்குக்கு’ சிறந்த உதாரணம் ஜி.வி.மார்க்கண்டேயன்  [முன்னாள்  அ.தி.மு.க எம்.எல்.ஏ] என்பவரின் கண்டனம். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் பா.செயப்பிரகாசம் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை என்றுகூட தெரியவில்லை. ஆனால் ஆதரவுக்கு எழுகிறார். கண்டன அறிக்கை வருகிறது.

ஒரே ஒரு வரிக்காக உடனடியாக மிரட்டலுடன் எழும் இந்த ஆதரவுப் பின்புலம் வேறெந்த தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கிறது? இதற்குமுன் எந்த இலக்கியச் சர்ச்சைகளில் இவ்வாறு ஒரு குரல் எழுந்தது? இப்படி ஓர் ஆதரவுப்பின்புலத்துடன் செயல்படுபவர் எப்படி இடதுசாரியாக ஆவார்?எந்தப் பின்புலத்தில் இருந்து இந்தக் குரல் எழுகிறது என்று தெரியாத அளவு கள்ளமற்றவர்களா இங்கே பேசிக்கொண்டிருக்கும் நாம்? நான் சுட்டிக்காட்டுவது மிகச்சரியாக இதை மட்டுமே.

இப்படி நம்ப எனக்கு உரிமை உண்டா? இல்லை என்றால், அது அவதூறு என்றால் ஒன்றுதான் கேட்பேன். மௌனி முதல் அசோகமித்திரன் வரை அத்தனைபேர் மேலும் நீங்கள் எல்லாம் சாதியமுத்திரை குத்தி சென்ற ஆண்டுகளில் எழுதிக் குவித்த பக்கங்களுக்கு என்ன பொருள்? எத்தனை கீழ்மைநிறைந்த குற்றச்சாட்டுக்கள், எவ்வளவு வசைகள். அது தொற்றுநோய் இல்லையா? அப்போதெல்லாம் நீங்கள் என்ன ஆரோக்கியமாகவா இருந்தீர்கள்?

இந்த கண்டனங்களில் பெரும்பாலானவற்றில் ‘புளிச்சமாவு’ என்ற சொல் இருக்கிறது. தங்களை சமூகப்போராளிகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் வரிகளில்கூட. நான் எவரைப்பற்றியும் இப்படி ஒரு சொல்லை பயன்படுத்துவதில்லை. எவர் மீதான வன்முறையிலும் இப்படி மகிழ்வதுமில்லை. இவர்களின் நாகரீக அளவுகோல்கள் இவ்வளவுதான்

இதில் கையெழுத்துபோட்டுள்ள எழுத்தாளர்கள் எதிர்காலத்திலாவது இங்குள்ள இலக்கியமேதைகள் மீது சாதியக் காழ்ப்பு முத்திரைகள் குத்தப்படும்போது இதேபோல எதிர்வினைகள் ஆற்ற அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். இதுவரை மௌனமாக இருந்தார்கள், பரவாயில்லை, இப்போது மனம்திருந்தியிருக்கலாம்.

பா.செயப்பிரகாசம் என்ற போலி இலக்கியவாதி பற்றி நான்கு பத்திகள் என்னை எழுதவைத்ததும் கிட்டத்தட்ட ஐம்பது புதிய எழுத்தாள்ர்களின் பெயர்களை தெரிந்துகொள்ளச் செய்ததும் மட்டுமே இந்த அறிக்கைகளின் அறுதிவெற்றி

ஜெ

 

அன்புள்ள ஜெ

உங்களுக்கு வந்திருக்கும் கண்டன அறிக்கை பெருமாள் முருகன் முகப்பித்தக்கத்திலிருந்து

 

எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான ஜெயமோகனின் அவதூறுக்கு 

அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை.

 

தமிழின் முதுபெரும் எழுத்தாளர்  பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம்.  ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும்  இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர்.   சமீபத்திய‌ அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும்  செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை;  ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய    எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த    அடிநாதம்தான் பேசுபொருள்.  பொருளியல், வாழ்வியல்  ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.

1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில்  மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால்,  இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம்   குறித்த எழுத்துகளில்  சமரசம் இல்லாப் போராளி.  இலக்கியம்,  களப்போராட்டம் எனத் தொடர்ந்து  பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது  பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில்    தான் ஒரு பேசுபொருளாக  இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.

தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு   என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில்   கேடு பயப்பதும் கூட‌. ஜெயமோகனின்  சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல்,  மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப்  பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர்   மீதான வன்மம், அவதூறு  என்பவை நாம் அனைவரும் ஒன்று  சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று.   அது  சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள்,  இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால்      ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் எழுத்தாள‌ர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் :

 

எஸ்.வி. ராஜதுரை, எழுத்தாளர்

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்

தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

இரவிக்குமார்,எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,

ச. தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர், த.மு.எ.க.ச.

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

சு.ராமச்சந்திரன், மாநிலப்  பொருளாளர்,  த.மு.எ.க.ச.

சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர், க.இ.பெருமன்றம்,

இரா. காமராசு, பொதுச்செயலாளர், . க.இ. பெருமன்றம்

ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர், க.இ. பெருமன்றம்

எல்லை சிவகுமார், க.இ.பெருமன்றம், புதுச்சேரி,

பேராசிரியர் வீ.அரசு

மீ. தா. பாண்டியன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

பொதியவெற்பன், எழுத்தாளர்,

கண.குறிஞ்சி, சமூகச் செயற்பாட்டாளர்,

செ.சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கியவட்டம்

பொ.வேல்சாமி, ஆய்வாளர், எழுத்தாளர்

பேராசிரியர் சரஸ்வதி

பேராசிசிரியர்  கல்விமணி,  சமூகச்செயற்பாட்டாளர்

பேராசிரியர் சிவகுமார்

பேராசிரியர் கோச்சடை

பேராசிரியர் க. பஞ்சாங்கம்

பேராசிரியர் பிரேம்

பேராசிரியர் பா. மதிவாணன்

பேராசிரியர் அரச முருகுபாண்டியன்

பேராசிரியர் சு.மாதவன்

பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம்

யமுனா ராஜேந்திரன், விமர்சகர், எழுத்தாளர்

கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்

சைலஜா, வம்சி பதிப்பகம், எழுத்தாளர்

மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்,

பிரளயன், நாடகவியலாளர்

பேரா.பார்த்திப ராஜா, நாடகவியலாளர்

பெருமாள் முருகன், எழுத்தாளர்

நா. விச்வநாதன், எழுத்தாளர்

ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்

பசு. கவுதமன், எழுத்தாளர்

அமரந்தா, எழுத்தாளர்

சுகுமாரன், ஆசிரியர், காலச்சுவடு

களந்தை பீர்முகமது, இணை ஆசிரியர், காலச்சுவடு,

வி.முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே,

க.சந்திரசேகரன், பொறுப்பசிரியர், காக்கைச் சிறகினிலே,

இரா.எட்வின், எழுத்தாளர், காக்கைச் சிறகினிலே,

கவிஞர் அறிவுமதி

மயிலை பாலு, ஊடகவியலாளர்

பி.என்.எஸ். பாண்டியன்,  ஊடகவியலாளர்

மகேஷ், ஊடகவியலாளர்

மு.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர்,

புதுவைத் தமிழ்ச் சங்கம்.

அழகியபெரியவன், எழுத்தாளர்

அன்பாதவன், எழுத்தாளர்

எஸ்.வி.வேணுகோபால்,  சமூகச் செயற்பாட்டாளர்,

பி.எஸ். அஜிதா, வழக்குரைஞர்

வாசுகி பெரியார், சமூகச் செயற்பாட்டாளர்,

கவிஞர் மாலதிமைத்ரி

கவிஞர் சுகிர்தராணி,

கவின்மலர், எழுத்தாளர்

திருமிகு. மணிமொழி, எழுத்தாளர், வழக்குரைஞர்

ம. ஆ. சிநேகா, வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்

நவீனா, எழுத்தாளர்

ஜமாலன், எழுத்தாளர்

புஷ்பராணி, எழுத்தாளர்

இரா. முருகவேள், எழுத்தாளர்,

லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்

அப்பணசாமி, எழுத்தாளர்

இரா. மோகன்ராஜன், எழுத்தாளர்

பாட்டாளி, எழுத்தாளர்

சுதீர் செந்தில், ஆசிரியர் உயிர் எழுத்து

முகுந்தன் கந்தையா, எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,

சண். தவராஜா, எழுத்தாளர், சுவிட்சர்லாந்து,

குணா கவியழகன், எழுத்தாளர்,நெதர்லேந்து,

ரூபன் சிவராஜா, எழுத்தாளர், நோர்வே

கலா மோகன், எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,

கார்வண்ணன், எழுத்தாளர், பாரீஸ், பிரான்ஸ்,

ச. மிக்கேல்தாஸ்,

தென்மோடிக்  கூத்துக் கலைஞர்,கனடா,

ச.ஜெயராஜா, தென்மோடிக் கூத்துக் கலைஞர், நோர்வே,

கவிஞர்இரா.தெ. முத்து, எழுத்தாளர்

நாறும்பூநாதன், எழுத்தாளர்

மணிமாறன், எழுத்தாளர்

செங்கதிர், ஆசிரியர், மானுடம் வெல்லும்

மு.பிரகாஷ், ஆசிரியர், உழைப்பவர் உலகம்,

நீலகண்டன், கருப்புப் பிரதிகள்

பாரதிநாதன், எழுத்தாளர்

புலியூர் முருகேசன், எழுத்தாளர்

தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்

சுகுணா திவாகர், ஊடகவியலாளர்

மரு. ஆமினா இன்குலாப், இன்குலாப் அறக்கட்டளை

எஸ். கே. கங்கா, எழுத்தாளர்

கடங்கநேரியான், கவிஞர்

சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்

எச். பீர்முகம்மது, எழுத்தாளர்

வி. உ. இளவேனில், கவிஞர்

ஏர் மகராசன், எழுத்தாளர்

கருப்பு கருணா, எழுத்தாளர்,

கருப்பு அன்பரசன், எழுத்தாளர்,

சுந்தர், பதிப்பாளர்

லஷ்மி சிவக்குமார், எழுத்தாளர்

அண்டனூர் சுரா, எழுத்தாளர்

மு.சிவகுருநாதன், கல்வியாளர்,

அகிலா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்

களப்பிரன், கவிஞர்

துவாரகா சாமிநாதன், கவிஞர்

முஜிபுர் ரஹ்மான், எழுத்தாளர்

துரை குணா, எழுத்தாளர்

குமரன்தாஸ், எழுத்தாளர்

புதியமாதவி சங்கரன், எழுத்தாளர்

கதிர்நம்பி, தொ.ப வாசகர் வட்டம்

வே.சங்கர்ராம் , நாடகவியலாளர்.

கவிஞர் நந்தலாலா.

திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்

உமா மோகன், எழுத்தாளர்.

 

செ.சண்முகசுந்தரம்

வழியாக.

 

பி.ராஜீவ்

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

$
0
0

 

இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம்- குமரகுருபரன் நினைவு இலக்கியவிருது கவிஞர் வேணு வேட்ராயனுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது இளங்கவிஞர்களுக்குரியது.

கவிஞர் வேணு வேட்ராயன் தொழில்முறையாக மருத்துவர். தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். மானசீகமாக தேவதேவனுக்கு அணுக்கமானவர். தேவதேவனின் செல்வாக்கு கொண்ட கவிதைகள் அவருடையவை

விருட்சம் வெளியீடாக அவருடைய அலகில் அலகு என்னும் கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

பலவகையிலும் இன்றைய நவீனத்தமிழ்க் கவிதையின் பொதுப்போக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டு விலகிச்செல்லும் பாதை கொண்டவை வேணு வேட்ராயனின் கவிதைகள். இவ்விருது அந்த வேறுபட்ட பயணத்தை கவனப்படுத்தும் பொருட்டே.

இன்று எழுதப்படும் தமிழ்நவீனக் கவிதை பலரிலிருந்து  ஒலித்தாலும் அடிப்படையில் ஒற்றைக்குரல் கொண்டது. உலகியலைக் கொண்டாடுவது, அடிப்படை விழைவுகளைச் சார்ந்திருப்பது, கலகம் மீறல் ஆகியவற்றை கற்பனை செய்து கொள்வது, தனிமனித மனஅலைவுகளை மட்டுமே வெளிப்படுத்துவது , தத்துவ நிராகரிப்பு ஆகியவை அதன் பொதுக்குணங்கள்.

அந்த பொதுக்குணங்கள் அனைத்திலிருந்தும் விலகிச்செல்லும் வேணு வேட்ராயனின் கவிதைகள் முற்றிலும் உலகியல் மறுப்பு கொண்டவை, அடிப்படைவிழைவுகளுக்கு அப்பால் செல்ல முயல்பவை, பிரபஞ்சத்துடனான ஒத்திசைவை கற்பனைசெய்பவை, தனிமனிதனை கடந்த தத்துவத் தேடல்களை கொண்டவை. அதனாலேயே இங்கே பொதுவாக கவிதைகளை வாசித்து- பேசும் வட்டத்திற்கு வெளியே நிலைகொள்பவை.

தமிழ்க்கவிதைச் சூழலில் சென்றதலைமுறை வரை ஒற்றைக்குரலே ஒலித்ததில்லை. அபி ,ந.ஜயபாஸ்கரன் போன்ற அகவயமான தனித்தலையும் கவிஞர்களுக்கும் இடமிருந்தது. வேணு வேட்ராயன் அந்த கொடிவழியைச் சேர்ந்த கவிஞர். அலகில் அலகு பல அழகிய வரிகள் கொண்ட குறிப்பிடத்தக்க தொகுதி.

என் நண்பரும் இளவலுமாக இருந்த குமரகுருபரன் நினைவாக வழங்கப்படும் இவ்விருது இதற்கு முன்பு சபரிநாதன், கண்டராதித்தன்,ச.துரை ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரன் மறைந்து ஆண்டுகளாகின்றன. தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் அணுக்கமான நண்பராகவும் அந்தரங்கமான பித்துகள் கொண்ட கவிஞராகவும் திகழ்ந்தவர் அவருடைய ஞானம்நுரைக்கும் போத்தல் ஆகிய தொகுதிகளின் கவிதைகள் நாவில் திகழ்பவை.

குமரகுருபரன் நினைவுநாளான ஜூன் அன்று இவ்விழா கொண்டாடப்படுவது வழக்கம். இம்முறை கொரோனா நெருக்கடிகள் காரணமாக விழா நடைபெறாது. விருது நேரில் கவிஞருக்கு வழங்கப்படும் பின்னொருமுறை இவ்விழா நடத்தப்படும்

குமரகுருபரன் விருது – முழுப்பதிவுகள்

=======================================================

அலகில் அலகு மின்நூல் வாங்க

அலகில் அலகு நூல் வாங்க

வேணு வேட்ராயன் கட்டுரைகள் அரூ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–86

$
0
0

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 5

மலையன் சொன்னான். நான் மலையேறி இறங்கி சௌம்யர் சொன்ன அடையாளங்களினூடாகs சென்று தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே மண்மடிந்து மலைச்சரிவு என்றாகி இறங்கி வந்து வளைந்தெழுந்து மேலே செல்லும் கணவாயினூடாகs செல்லும் பாதை சென்றடையும் இடத்தில் அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரை அடைந்தேன். அங்கு இளைய யாதவர் தங்கியிருக்கிறாரா என்று உசாவினேன். அங்கு எவருக்கும் அவ்வண்ணம் எவரையுமே தெரியவில்லை. முதலில் நான் பெற்றது ஒரு பிழைச் செய்தியாக இருக்குமோ என்ற ஐயத்தை அடைந்தேன். பின்னர் அவ்வண்ணம் இருக்க வழியில்லை என்று உணர்ந்து மேலும் பல வினாக்களை கேட்டேன்.

அங்கிருந்த தயை என்னும் சிறுமி பாணர்களும் பிறரும் வந்து சந்தித்துச் செல்லும் முனிவர் ஒருவர் இங்கிருக்கிறார் என்றும், அவர் தவம் இயற்றுவதில்லை, மைந்தருடன் விளையாடி புற்குழலிசைத்தும் தனித்தமர்ந்தும் பொழுது கழிக்கிறார் என்றும் சொன்னாள். “அவர்தான்! அவரை சந்திக்கவே நான் வந்தேன்!” என்று சொன்னேன். ஒரு சிறுவன் “நான் அழைத்துச் செல்கிறேன்! நான் அழைத்துச் செல்கிறேன்!” என்று துள்ளினான். “என் பெயர் ருத்ரன், எனக்கு அவரை தெரியும்” என்றான். ஏராளமான குழந்தைகள் “நான் அழைத்துச் செல்கிறேன்” என்று கூச்சலிட்டார்கள். “சரி, எல்லோரும் சேர்ந்து அழைத்துச் செல்லுங்கள்!” என்று நான் சொன்னேன்.

அவர்கள் சிறு பறவைகள்போல கூச்சலிட்டபடி எனக்கு முன்னால் துள்ளித் துள்ளி ஓடினார்கள். பறவைச் சுழல்போல அவ்வூரின் நடுவிலிருந்த சிறிய புற்குடிலை வளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். “உள்ளே அவர் இல்லை!” என்று ஒருவன் கூறினான். “எனக்குத் தெரியும், அவர் காட்டுக்குள் இருக்கிறார். காட்டுக்குள் இருக்கும் இடம் எனக்குத் தெரியும்” என்று இன்னொரு சிறுவன் கூறினான். “நான் அழைத்துச் செல்கிறேன்! நான் அழைத்துச் செல்கிறேன்!” என்று நூறு குரல்கள் வெவ்வேறு சுதியில் கூவின.

நான் தொடர்வதற்குள்ளாகவே பலர் காட்டுக்குள் ஊடுருவி ஓடத்தொடங்கினர். “ஓட வேண்டாம், மெதுவாகச் செல்லுங்கள்” என்று நான் கூறினேன். அவர்களுக்கு இணையாக என்னால் புதர்களில் ஊடுருவிச்செல்ல இயலவில்லை. முன்னால் சென்றவர்கள் நின்று திரும்பி வந்தனர். பின்னால் சென்றவர்கள் முந்திச் செல்ல மீண்டும் அவர்கள் முன்னால் சென்றனர். அந்தி வானில் பறவைக்கூட்டம் பறக்கும் துகிலெனச் சுழல்வதைப்போல அவர்கள் அலைவுகொண்டனர். புதர்களினூடாக கீரிக்கூட்டம்போல ஊடுருவினர். புதர்களுக்குமேல் தவளைகள் என எழுந்து குதித்தனர்.

அந்தக் குறுங்காடே மலர்கள் பூத்துச் செறிந்து வண்ணம் கொண்டிருந்தது. அவ்வாறு முழுக் காடே மலர் எனப் பூப்பதை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. கடல் ஒன்று வண்ண நுரைகொண்டு அலைகொள்வதுபோல பூங்குலைகள் செறிந்த கிளைகள் உலைந்தன. பூம்பொடி உதிர்ந்து அக்காட்டின் தரையே பொன்னிற விரிப்பாகக் கிடந்தது. அதன் மேல் கால்வைப்பதே பிழையென்று தோன்றும் அளவுக்கு மென்மையான மலர்ப்பொடி பரவியிருந்தது. கால்வைத்த இடமெங்கும் சிறுபூச்சிகள் எழுந்து ரீங்கரித்து பறந்தன. பலநூறு சிறு பறவைகள் அமர்ந்தும் எழுந்தும் கொத்திக்கொண்டிருந்தன. எங்களைக் கண்டு காற்றில் சிறகடித்து எழுந்து மலர்களை மழைத்துளிகள்போல உதிரச்செய்தன.

தலைக்குமேல் குருதிச்செந்நிறமும் வெண்ணிறமும் பொன்னிறமும் என மலர்கள் பூத்த கிளைகள் தழைந்து சலிப்புற்று நின்றன. பொன்மஞ்சள் நிறமே ஓங்கியிருந்தமையால் செந்நிறமும் வெண்ணிறமும் அதன் வேறுவேறு நிலைகள் என்று ஆகி பேரோவியம் ஒன்று கண்முன் விரிந்தது. ஒரு சிறு காற்று கடந்து சென்றபோது மலர்களும் பொடிகளும் உதிர்ந்து அவ்வண்ணம் திரையென்றாகி என் முன் நெளிந்தது. குழந்தைகள் அம்மலர்ப்பொடியில் குதித்து விளையாடின. துள்ளி கிளைகளைப்பற்றி உலுக்கி மலர் உதிரச் செய்தன. அம்மலர்களிலிருந்து வண்டுகள் முழங்கி எழுந்தன.

ஒவ்வொரு மரமும் ஒரு யாழென்று தோன்றியது. தொட்டதும் நரம்பதிரும் இசையை தேக்கி வைத்த ஆழம் கொண்டவை. விரலுக்காக காத்திருப்பவை. இசைக்கு முந்தைய கணத்தில் இறுகி நின்றிருப்பவை. எனில் இந்தப் பாறைகள் அனைத்தும் முழவுகளா? தேன் உண்ணும் பறவைகள் காற்றில் சிறகடித்து நின்றன. அவற்றின் துளித்துளிப் பேச்சொலிகள். உலையும் கிளையிலிருந்து வண்டொலியுடன் உதிர்ந்த மலரொன்று ரீங்கரித்தபடி மண்சேர்ந்தது. அதிலிருந்து எழுந்த வண்டு மீண்டும் சென்று கிளையில் அமைந்தது.

வண்ணமும் ஒளியும் மணமும் இளங்காற்றின் தண்மையும் ஒன்றென்றே ஆன அச்சூழல் என்னை பித்தெழச் செய்தது. ஒரு கனவிலன்றி வேறெங்கும் அப்படி ஒரு நிலத்தை காண இயலாது. கற்பனையில் திளைத்து மெய்யுலகு மறைந்து வேறெங்கோ மொழி உருவாக்கிய நிலத்தில் வாழும் கவிஞனென்று என்னை உணர்ந்தேன். மெய்யாகவே அந்த மயக்கம் அப்போது உருவாயிற்று. அது ஒரு காடா அன்றி எதேனும் தொல்நூலின் அணிகொண்ட சொற்கள் சமைத்த கற்பனையில் நான் கடந்துவிட்டேனா? மரமெல்லாம் மலராகும் ஒரு நிலம் இப்புவியில் இருக்க இயலுமா என்ன?

அக்காடே ஒரு மாபெரும் மலரென்றாகிவிட்டது. ஒரு சிறுவண்டென அதற்குள் நுழைந்து திசை மறந்தேன். உடலெல்லாம் பூம்பொடி மூடியது. என் ஆடைகள், தலைமுடி, கைகால்கள் அனைத்திலும் செம்மஞ்சள்நிறப் பூச்சு. பொன்னென்றாகி பொன்னில் மூழ்கித் திளைத்து சென்றுகொண்டிருந்தேன். என் முன்னால் கடந்து சென்ற கீரியொன்று பூம்பொடியால் பொன்னென்றாகியிருந்தது. மரக்கிளை ஒன்றிலிருந்து தொங்கி இறங்கிய குரங்கு பொன்னிறப் பூம்பொடியால் மூடப்பட்டிருந்தது. பூம்பொடியின்மேல் பாம்புகள் சென்ற தடங்கள் பொன் வடுக்களாக தெரிந்தன.

“அங்கே! அங்கே!” என்று ருத்ரன் கூறினான். “எங்கே?” என்றேன். “அங்கே… அங்கே புல்லாங்குழல் கேட்கிறது! அங்கிருக்கிறார்!” என்றான் ருத்ரன். அவன் கைகாட்டியதும் அனைவரும் அமைதியாயினர். ஓசைகள் முற்றடங்கியபோது அங்கிருந்த கிளிக் கொஞ்சல்களும் வண்டு மிழற்றல்களும் கலந்து காற்றின் ஓசையின் மேல் ஏறி என்னைச் சூழ்ந்தன. அவை அனைத்தினூடாகவும் கலந்து அனைத்தையும் இணைத்து அடிப்படை சுதியென்றாகி ஒலித்துக்கொண்டிருந்த குழலிசையை நான் கேட்டேன். அங்கு நின்று செவியே உயிரென்றாகி அதை கேட்டுக்கொண்டிருந்தோம்.

அந்த ஓசை சுழன்று சுழன்று வந்தது. சிலந்தியின் பட்டுநூல் வலை என வடிவம்கொண்டு அசைந்தது. புகைச்சுருளா, தளிர்முனையா, நீர்த்துளி நடுக்கா? வழிந்து பொன் கம்பியென இழுபட்டது. வழுக்கி வழுக்கிச் சென்று சுருண்டெழுந்தது. உயிர் நாடகங்கள் அனைத்தையும் அவ்விசையில் பார்த்தேன். சிறுபுழுவென நெளிந்து நெளிந்து பின் அசைவிழந்து தன்னை தன்னாலேயே சிறையிட்டுக்கொண்டு தவமிருந்து சிறகு கொண்டு எழுந்து காற்றில் பறந்து அலைவு கொண்டு மறைந்து மீண்டும் எழுந்தது. முட்டை உடைத்து எழுந்து வந்தன விழிவெறித்த பல்லிகள். கருக்குடம் உடைந்து ஈரம் சிலிர்க்க எழுந்து நின்றன கன்றுகள். நீரில் சேற்றில் துடிதுடித்து திளைத்தன பல்லாயிரம்கோடி புழுக்கள்.

கருவறை கிழித்து வெளிவந்து கண் திறந்து உலகைப் பார்த்து திகைக்கும் கன்றின் மயங்கல். பெரும் பசி கொண்டு உடல் துள்ள அன்னை மடி தேடிய நாய்க்குட்டியின் துடிப்பு. சிறகு முளைத்த பின் கூண்டிலிருந்து தவிக்கும் குஞ்சின் தவிப்பு. புழுக்கள் வாய்கவ்வி நெளிந்தும் பூச்சிகள் சிறகிணைத்துப் பறந்தும், நாகங்கள் பிணைந்தும், நாரைகள் கழுத்து பிணைத்து ஆடியும், மான்கள் தழுவிக்கொண்டும், எருமைகள் கொம்புமுட்டியும், யானைகள் மலைப்பாறைகள் என மத்தகம் அறைந்துகொண்டும் இயற்றும் காதல். விழி மெல்ல சரியும் பறவையின் சாவு. வால்நுனி அணையும் நாகத்தின் மறைவு. மரத்தில் சாய்ந்து நின்றிருக்கும் யானையின் இறுதித் துதிக்கை அசைவு. விரல்கள் ஒவ்வொன்றாக விரிந்து விடுபடும் விலங்கின் விழிவெறிப்பு. எரிந்தெழுதல் அணைந்தமைதல். அலைகொள்ளல் அடங்கியமைதல். வீழ்தல் மறைந்து எழுதல். முடிவின்மை என நிகழும் தனிக்கணங்கள்.

என்ன நிகழவில்லை அங்கு என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இளைய பாண்டவரே, நான் கேட்டது இசைதானா என்றும் எனக்கு தெரியவில்லை. அது இங்கு இவையனைத்தையும் நிகழ்த்தும் ஒன்றின் செவியுணர் வெளிப்பாடு. இவையனைத்துமாகிய அது தானன்றி மாறி தன்னை தூய ஒலியென்றாக்கி காட்டுவது. ஒரு தருணம் உண்மையில் நான் கேட்டது ஒரு சிறு துளி மட்டும்தானா? அதை நான் செவிகளால் கேட்கவே இல்லையா? அலைகடலில், பேரருவியில், சுழற்காற்றில், எரிமலை வெடிப்பில் நிகழும் அதுவேதானா? அறியேன். அங்கு நான் கேட்டதை என்றோ ஒரு நாள் ஒரு காவியமென எழுதுவேன். அதன் சதுப்பில் ஒரு சிறு பட்டாம்பூச்சியெனச் சென்று பதிந்து தடமாகி மறைவேன்.

முடிவிலாது வெல்பவன் இசைக்கலைஞன். முடிவிலாது தோற்பவனே இசைஞானி. அங்கு விண்ணெழுந்து விண்ணெழுந்து சரியும் ஒரு கோடி கைகளை கண்டேன். தொட்டுத் தொட்டு நழுவும் நோக்குகளை கண்டேன். விண் விண் என சொல்லி அமையும் மண் பொருட்கள் அனைத்தையும் கண்டேன். தன்னை தானென உணர்ந்து தருக்கி, தானே என தனையுணர்ந்து இறங்கி ஊசலாடும் முடிவிலியை கண்டேன். இங்கு இவையென்றாகி நிறைந்திருப்பதும், இவையெங்கிலும் நிறைந்து எஞ்சுவதும், இவையனைத்திலும் படிய இயலாதாகி பிறிதொரு வெளியில் நின்றிருப்பதும், இங்கிருந்து எழுந்து சென்று தொடத் தக்கதும், இங்கிருக்கும் அனைத்தையும் துறந்தால் மட்டுமே அறியத் தக்கதும் ஆகிய ஒன்று.

இசை அகநிகழ்வு. அகம் புறத்தை மீட்டுவது. மீட்டப்பட்ட புறம் பெருகி அகத்தை ஆள்வது. அந்த இசை பொறியுணரும் சுவைகளனைத்துமாகி அங்கெல்லாம் நிறைந்தது. எரிந்தது, இருண்டது, நாறியது, கசந்தது, முழங்கியது. பின்பு குளிர்ந்தது, ஒளிர்ந்தது, இனித்தது, இசைத்தது. இசை அலையடிப்பது, நிலை கொள்ளாதது, சென்று மீள்வது, நிகழ்கையிலேயே இருப்பு கொள்வது. அங்கோ நிகழாது அமைந்திருக்கும் இசை ஒன்றை கண்டேன். அருமணி நிகழ்வும் இருப்பும் ஒன்றே என ஆவதுபோல. அங்கு இசையென தன்னை வெளிப்படுத்திய ஒன்று பிறிதொன்றை நோக்கி நீயும் நானே என்றது. ஆம், நானே நீ என்றது அது.

 

நான் என்னை உணர்ந்தபோது இசை அங்கு நின்றுவிட்டிருந்தது. என்னைச் சுற்றி அக்குழந்தைகள் அனைவரும் ஆங்காங்கே அசைவிலாது அமர்ந்திருந்தனர். ருத்ரன் தன்னிலை கொண்டு ‘அங்கே’ என்று கைகாட்டினான். ‘ஆம்’ என்று நான் தலையசைத்தேன். அவன் ‘வருக’ என்று கைகாட்டி என்னை மட்டும் அழைத்துச் சென்றான். பிற மைந்தர் அப்போதும் எஞ்சும் இசையில் அங்கேயே ஆழ்ந்திருந்தனர். நாங்கள் நடந்து அனலெனப் பூத்த சிறுபுதர்களை விலக்கி, மலர்களிலிருந்து மலர்களுக்குச் சென்று, மலர்களில் புதைந்து, மலர்களில் எழுந்து, மலர்களில் நீந்தி முன்னால் சென்றோம்.

சிற்றோடை ஒன்றை நோக்கிச் சரிந்த மலைச்சரிவில் சிறுமலர்ச்செடிகள் பூத்து பொன்னிறப் பெருவிரிப்பு என விரிந்திருந்தன. அதன்மேல் இளைய யாதவர் அந்தப் புற்குழலை தன் நெஞ்சில் வைத்து இரு கைகளையும் தலைக்குமேல் அணையென வைத்து மல்லாந்து படுத்திருப்பதை பார்த்தேன். அவர் தலையில் அம்மயிற்பீலி இளங்காற்றில் நலுங்கிக்கொண்டிருந்தது. அக்குழல் தன் இசை அனைத்தையும் வெளிப்படுத்திவிட்டதுபோல் மயங்கி அமைந்திருந்தது. அவர் உடலில் எங்கும் அசைவில்லை. இடது கால் பாதத்தை மட்டும் மெல்ல சுழற்றிக்கொண்டிருந்தார்.

அக்காலில் கட்டைவிரல் நகம் மட்டும் கருமை கொண்டிருப்பதை கண்டேன். குறையற்ற முழுமை கொண்ட அவர் உடலில் அது ஒன்றே குறையென்று தெய்வங்களால் அமைக்கப்பட்டதென்று முன்னரே அறிந்திருந்தேன். அத்தருணத்தில் அது அவர் அழகின் உச்சமென்று தோன்றியது. புற்சுவை உணர்ந்து தன்னில் மயங்கிய மானின் அரைவிழியென ஈரக்கரிய ஒளி கொண்டிருந்தது அது. ஒருகணம் நோக்குகையில் புதருக்குள் நின்று மேயும் மானொன்றின் விழியென்றே அது அசைந்தது.

எழுகதிரொளி அவர் தலைக்குப் பின்னால் இருந்தது. அங்கிருந்து மரங்களினூடாக வந்த வெளிச்சத்தில் அவருடைய நிழல் காலடி நிலத்தில் விழுந்து நுடங்கிக் கிடந்தது. அது முதலில் நிழலென்று தோன்றியது. பின்னர் அது ஓர் உருவென்று கண்டேன். இடையொடிந்து முற்றாக மடிந்த ஒரு மானுட உடல். முதியவர், அந்தணர். மின்னும் கண்கள் கொண்டவர். அவர் இளைய யாதவரைப் பார்த்தபடி அங்கே அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும் பேரழகு மிக்க ஊழ்கப் புன்னகை இருந்தது.

“அது யார்?” என்று நான் கேட்டேன். கைசுட்டி “அவர் காலடியில் அமர்ந்திருப்பவர்?” என்று மீண்டும் கேட்டேன். “அவர் நேற்று இங்கே வந்தார். இரண்டு சூதர்கள் அவரை ஒரு தாலத்தில் வைத்து கொண்டுவந்தனர். அவர் முனிவருடன் அக்குடிலிலேயே தங்கினார். அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபடி இதேபோல அமர்ந்திருந்தார்கள்” என்று ருத்ரன் சொன்னான். “இங்கே எப்படி வந்தார்?” என்றேன். ருத்ரன் “ஆம், எப்படி வந்தார்?” என்றான். “அவரிடம் சென்று வணங்க விழைகிறேன்” என்றேன். “ஆனால் அவ்வூழ்க நிறைவை நான் ஊடுருவலாமா என்று தயங்குகிறேன்.”

அச்சொற்களை நான் முடிப்பதற்குள் தொலைவிலிருந்து நீள்அம்பொன்று வந்து அவர் இடநெஞ்சில் பாய்ந்து தைத்து நின்றது. கண்விரைவால் கணமென அதை காணமுடிந்தது. சித்தமுணர்வதற்குள் அவர் உடலில் சிற்றலைபோல் மெல்லிய துடிப்பொன்று எழுந்து அடங்கியது. “என்ன? என்ன?” என்று நான் கேட்டேன். “அம்பு!” என்று ருத்ரன் சொன்னான். “அம்பா? யார்?” என்றேன். அவன் ஓடத்தொடங்கியிருந்தான். நானும் புதர்களை விலக்கி அவரை நோக்கி ஓடினேன். அணுகி அவ்விசையிலேயே விழுந்து மண்டியிட்டு அவரை தொட்டேன். அவர் உடலிலிருந்து உயிர் அகன்றிருந்தது.

அவர் முகத்தில் அனைத்தும் அறிந்ததுபோல் இளநகை குடிகொண்டிருந்தது. சிரித்துக்கொண்டே எழுந்து அனைத்தையும் களியாட்டென மாற்றிவிடுவார் என்பதுபோல். அந்த அம்பு அவர் விலாவின் நடுவே புகுந்து ஆழப் புதைந்து நெஞ்சக்குலையை தைத்திருந்தது. அது தைத்த அக்கணத்திலேயே அவர் உயிர்துறந்திருந்தார். சுடர் அணைவதுபோல், கனியுதிர்வதுபோல் மிகமிக எளிதான ஒரு நிகழ்வு. இருத்தலுக்கும் இன்மைக்கும் நடுவே காலம் என்று ஒன்று இல்லை என்று ஒரு தொல்கூற்று உண்டு. பாண்டவரே, காலமின்மையில் நிகழ்ந்தது அவரது இறப்பு.

அப்பாலிருந்து இரு வேடர்கள் ஓடிவந்தனர். அவர்மேல் அம்பு தொடுத்த முதிய வேடன் அருகணைந்து “மானுடன்!” என்றான். “யார்?” என்று பின்னால் வந்த இளைஞன் கேட்டான். “அது மானின் விழியல்ல, இங்கே ஒருவன் படுத்திருந்திருக்கிறான்!” என்று முதியவன் சொன்னான். நான் எழுந்ததும் அவர்கள் இருவரும் என்னை அம்பு எடுத்து குறிவைத்தனர். என் கையில் படைக்கலம் எதுவும் இல்லை என்று கண்டதும் “நாங்கள் மான்விழி என்று எண்ணினோம். மானுக்காகவே அம்பு தொடுத்தோம். மானுடர் என்று அறிந்திருக்கவில்லை” என்றான்.

இளையவன் “சிறுவன் உடனிருக்கிறான். இங்கே அருகே ஊர் இருக்கிறது. இங்கு நிற்கவேண்டாம், ஓடிவிடுவோம்” என்றான். இருவரும் திரும்பி விரைந்து அகன்று ஓடினர். அவர்கள் இருவருமே வலக்கையில் நான்கு விரல் மட்டுமே கொண்டிருந்தனர். நான் அவர்களை திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அவர்கள் புதர்களில் மீன்கள் நீரில் மூழ்குவதுபோல் மறைந்தனர். பின்னாலிருந்து சிறுவர்கள் ஓடிவந்தனர். “இறந்துவிட்டார்!” என்று ஒருவன் கூவினான். “நான் முதலிலேயே பார்த்தேன்… நான் முதலிலேயே பார்த்தேன்” என்றான் இன்னொருவன். “வேடர்கள் வருவதையே நான் பார்த்தேன்!” என்று இன்னொருவன் கூவினான். “நான் பார்த்தேன்! நான் பார்த்தேன்!” என்று கூச்சல்களுடன் அவர்கள் பூசலிட்டனர்.

“ஊருக்குள் சென்று கூறுக…” என்று நான் சொன்னேன். “நான் சொல்கிறேன்… நான் சொல்கிறேன்” என்று கூவியபடி அவர்கள் ஓடினர். இறுதியாக ஒரு சிறுவன் திரும்பி என்னிடம் மழலைக்குரலில் திக்கலுடன் “நான் நான் நான் போய் சொல்லுவேன்” என்று கைசுட்டி காட்டினான். அவனும் அவர்களைத் தொடர்ந்து ஓடினான். ருத்ரன் “அவர் இங்கே உயிர்விட வந்திருப்பதாக பலமுறை சொல்லியிருக்கிறார். ஆகவே எவருக்கும் இதில் திகைப்பில்லை” என்றான்.

நான் அப்போதுதான் உளமுணர்ந்து “அவர் எங்கே?” என்றேன். “இங்கிருந்த உடல்மடிந்த முதியவர்? எங்கே அவர்?” சுற்றிலும் திரும்பித் திரும்பி நோக்கி புதருக்குள் அவர் மல்லாந்து விழுந்திருப்பதை கண்டேன். அவர் அந்த அம்பு வந்ததைக் கண்ட அதிர்ச்சியில் உயிர்துறந்திருந்தார். கைகள் இருபுறமும் விலகி விரிந்திருக்க முகம் ஊழ்கப் புன்னகையுடனே உறைந்திருந்தது. நான் திரும்பி இளைய யாதவரை பார்த்தேன். இருவர் முகத்திலும் ஒரே புன்னகை இருப்பதாகத் தோன்றியது.

என் உளமயக்கா அது? ஆனால் ருத்ரன் “அம்பு படுவதற்கு முன்பு நான் ஒன்றை கண்டேன்” என்றான். நான் திரும்பிப் பார்த்தேன். “அந்த முதியவர் கரிய வண்டுபோல வந்து அவர் கட்டைவிரலின் கரிய நகத்தில் அமர்ந்து அப்படியே உள்ளே சென்று மறைந்தார். அதன்பின் அந்தக் கரிய நகம் மேலும் ஒளிவிட்டது” என்றான். நான் பொருள் விளங்கா வெறிப்புடன் அவனை நோக்கிக்கொண்டு நின்றேன். தொலைவில் மந்தரம் என்னும் அச்சிற்றூருக்குள் சங்கொலி எழுந்து இளைய யாதவரின் இறப்பை அறிவித்தது.

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகள் பற்றி- அந்திமழை

$
0
0

 

ஜெயமோகனின்   சிறுகதை நீளமாக இருந்தாலும் அது சலிப்பூட்டும்படி தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஓர் அனுபவமாக கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கதையின் தளம், பின்புலம், மாந்தர்கள் , உணர்வுகள் போன்றவை தனித்தன்மையோடு யாரும் எதிர்பாராத யாரும் தொடாத ஒன்றாகத் தெரிந்தன. ஒவ்வொரு கதையிலும் கதையைவிடக்  காலம், பின்புலம், மன உணர்வுச்சித்தரிப்புகள் போன்றவை புது திசையில், புது விசையில் விரிவதாக எனக்குத் தோன்றின.ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை. அவை எனக்குள் புதிய புதிய திறப்புகளை அளித்தன. ஒவ்வொரு கதையும் படித்து முடித்ததும் எனக்குள் இருந்த பூட்டுகள் ஒவ்வொன்றாக திறப்பது போல் உணர்ந்தேன். ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு சாவி உள்ளதாகப் படும். வாசிப்பின்பம் அளிக்கவும் தவறவில்லை.

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

லீலை,ஏதேன்,பலிக்கல்- கடிதங்கள்

$
0
0

 

அன்புள்ள ஜெ

நேற்று நண்பர்களுடன் இவ்விரு கதைகள் குறித்தும் விவாதித்தோம். அதை சாரமசப்படுத்தி இக்கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.

https://suneelwrites.blogspot.com/2020/05/blog-post_25.html

அன்புடன்
சுனில்

 

அன்புள்ள ஆசான்

பலிக்கல் கடிதத்தில் இதை எழுத விட்டுவிட்டேன்.

//இவை நேர்வாழ்க்கையில். கற்பனையில் இந்த உச்சங்களை அடைவதற்கான ஒரு வழி என இலக்கியத்தைச் சொல்லலாம். இலக்கியம் புறவாழ்க்கைக்கு நிகரான ஓர் அகவாழ்க்கையை வாழச்செய்கிறது. அதை நிகர்வாழ்வு எனலாம். அந்த வாழ்க்கை புறவாழ்க்கை போல இருக்க முடியாது. புறவாழ்க்கையின் நிதானமான, இயல்பான, சலிப்பூட்டும் வாழ்க்கையை மனிதன் அங்கே வாழமுடியாது. சொல்லப்போனால் அதிலிருந்து தப்பவே அவன் இலக்கியத்தை வாசிக்கவருகிறான்
//

இதை உங்கள் கட்டுரையில் தான் நான் ‘நிகர்வாழ்க்கை’ என்ற பதத்தை  கற்றேன்.

ஆச்சர்யமாக இந்த கட்டுரையின் தலைப்பு ‘பிறழ்வுகள்’

https://www.jeyamohan.in/66339/#.Xsop9TpKjOg

இந்த கட்டுரையை  படித்தபோது நான் அடைந்த உள்ளக் கிளர்ச்சி அபாரம். அதை விட பலமடங்கு அதிகமாக – பலிக்கல் போற்றியாக அழகியநம்பியாபிள்ளையாக மாறி – உண்டாக்கியது.

நன்றி ஆசானே
அன்புடன்
ஸ்ரீதர் 

 

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்


யாயும் ஞாயும் [சிறுகதை]- ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

$
0
0

[ 1 ]

“எங்க அப்பனுக்கு முப்பாட்டனாக்கும் அந்த முத்துப்பட்டன்” என்ற சபாபதி தாத்தாவை திகைப்பாகப் பார்த்தேன். வெற்றிலை குதப்பிய வாயோடு பற்களில் கரைகள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தார். கண்ணீருடன் புறவாசலில் உட்கார்ந்திருந்த என் பதட்ட நிலை அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

என் பக்கத்தில் படித்துறையில் நன்றாக சம்மணங்கால் போட்டு அமர்ந்தவரை பார்த்து, “முத்துப்பட்டனா அதாரு?” என்றேன்.

“ஏலே, பட்டவராயன தெரியாதா லே உனக்கு, சொரிமுத்து அய்யனார் கோவிலுல இருப்பாருல்லா?” என்றார்.

“ஆமா ஆமா. செருப்பு மாலை போடுவாகளே” என்றேன்.

“ஆமா அவருத்தான்”

“அவருக்கென்ன இப்போ?”

“அவரு கூட ரெண்டு பொண்ணுங்க இருக்கே அதாருன்னு தெரியுமா லே”.

“தெரியுமே திம்மக்கா, பொம்மக்கா” என்றேன்.

“அங்க தாம்லே சங்கதியே இருக்கு” என்றார். நான் அதிலென்ன என்பது போல் விழித்தேன்.

“ஆச்சி அழகு பொம்மீக்கு ஏழு பையனுகளாக்கும் அதில பாட்டன் நல்ல ஆஜானுபாகுவான ஆளு, மதங்கொண்ட யானைய ஒத்தக் கையில அடக்குவாரு. ஊர் திரண்டு வந்தாலும் ஒத்தையில நின்னு சண்ட போடுத ஆளாக்கும்” என்றார்.

“தாத்தா விஷயம் புரியாம ஏதேதோ பேசாதீக. நானே எரிச்சல்ல இருக்கேன்” என்றேன்.

“உங்க அப்பனாட்டம் அவசரக் குடுக்கயா பேசாத, விஷயமா தாம்லே சொல்லுதேன் கேளு மொத” என்றார்.

அவர் முன்னால் அழுது புலம்பக் கூடாது என வாய்க்காலை நோக்கி பார்வையை நிலைக்க வைத்து கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“என்னலே சொல்லிக்கிட்டிருந்தேன்?”.

“முத்துப்பட்டன் ஒத்தையில சண்ட போடுவாக” என்றேன்.

“ஆங், அதேதான் அவரு ஊர விட்டு ஓடிப் போய் கேரளாவுல உள்ள கொட்டாரக்கரை ராமராஜாவுக்கு பாதுகாவலனா இருந்தாரு.”

இவர் ஏன் இப்போது நிலைமை தெரியாமல் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்? இங்கிருந்து எழுந்து செல்லவே மனம் தவித்தது.

“அவரிக்க அம்மா அழகு பொம்மீ ஆச்சி இங்க சாவக் கெடக்க நெலையில பிள்ளைய கண்ணுல பாத்து அவனுக்கு ஒரு கல்யாணங் காட்சி கண்டாத்தான் சீவனடங்குன்னுட்டா. அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க பொண்ண தேடி திர்நெவேலி தெப்பங்குளந் தெரு சோமசுந்தரம் ஐயர் மகளப் பாத்து சம்பந்தம் பண்ணி ஆளத் தேடி ஆறு அண்ணனும் எட்டுத்திசைக்கும் திரிஞ்சாங்க. கடைசியா கொட்டாரக்கரயில ராஜாவோட படையாள் ஒருத்தன் மரத்திலேர்ந்து கீழ விழுற பூவ வாளால அறுப்பான்னு தெரிஞ்சு அவன்தான்னு கண்டுகிட்டு அங்க போய் கூட்டியாந்தாங்க.”

ஏற்கனவே கல்யாணம் என்ற சொல்லால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். நேரங்காலம் தெரியாமல் தாத்தா பழைய கதைகளைச் சொல்லி தாலியரறுப்பதில் எரிச்சல் முட்டிக் கொண்டு அழுகையாக மாறியது.

“நீ நினைக்கித மாதிரி கூட்டியாந்து கல்யாணம் பண்ணி வைக்கல, அப்படி பண்ணா ஏன் அங்கன சாமியா நிக்கிதாரு? உன்ன கணக்கா அழுதிட்டு போய் சேருற சவத்தில ஒன்னாலா ஆகிருப்பாரு” என்றார்.

தாத்தா இவ்வளவு தெளிவாக பேசக்கூடிய ஆள் இல்லை. ஏதோ பொழப்பத்து போய் நேரம் போக கதைகள் சொல்வார். நானும் நேரத்தைப் போக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்று அவர் பேச்சு கொஞ்சம் கவர்ந்தது. எனக்கான வழியை சொல்லுவார் எனத் தோன்றியது.

“ஏழு பேருமா திரும்ப வரும்போதே பாதி வழியில இருட்டிருச்சி, இங்கண அய்யங் கோயில் தாண்டி தனவாய்கொட்டகையில ஒரு பழய இடிஞ்சு கெடந்த சின்ன கோட்டையில தங்கிக்கலாம்னு முடிவு பண்ணி எல்லாரும் அங்கேயே படுத்துட்டாக. வந்த களைப்புல நம்ம முத்துப்பட்டனும் தூங்கிட்டாரு, நடு சாமத்தில திடீர்ன்னு கிளி கத்துற சத்தங்கேட்டு விழிச்சவரு, இந்நேரத்துல என்ன கிளி சத்தம்னு வெளிய போனா அது பாட்டு சத்தம்.”

“இந்திரனோ சந்திரனோ சந்திரனோ, அவன் ஈசனோட திருமகனோ திருமகனோ, மன்மதனோ மாயவனோ”ன்னு  மொத பாட்டு கேக்குது, “மன்மதனோ மாயவனோ, வனத்தில் வாழும் அகஸ்தியனோ, இன்னார் என்று தெரியவில்லை, என்ன செய்வேன் தோழி”னு  அதுக்கு எதிர்ப்பாட்டு. ரெண்டும் ஒண்ண ஒண்ணு விஞ்சிற குரலாக்கும். தேன்கிளியா இனிச்சிருக்கு. அங்கனையே மயக்கந் தான். ரெண்டு பேத்தையும் தொரத்திக்கிட்டே போயிருக்காரு. பின்னாடி இவர கண்டவளுக முள்ளுக்காட்டுல ஓட்டமா ஓடி அவளுக அப்பன் வாலப்பகடைட்ட போய் சொல்லிபுட்டாளுக.

சேதி கேட்டவன் அரிவாள எடுத்துக்கிட்டு, “அவன கண்டதுண்டமா வெட்டி காட்டு நரிக்கு எரையாக்குதேன்” ன்னுட்டு இவர வெட்ட ஓட்டமா ஓடியாந்தாரு. காணாதத கண்டவனுக்கு காமால நோயாக்கும்னு கணக்கா பாதி வழியிலயே பாட்டன் மூச்சிரைச்சு விழுந்துட்டாரு.

எதுக்க வந்த வாலப்பகடை விழுந்து கெடந்தவர தண்ணியூத்தி எழுப்பி “இங்க எம்பொண்ணுகள தொரத்திக்கிட்டு வந்தவன பாத்திகளா? தாயோளிய வெட்டாம விடமாட்டன். எங்காட்டிலயே வந்து எம்பொண்ணுகளயே தொரத்திட்டு வாரானா நாறத்தாயோளி” என்றவரை வணங்கி, “நான்தான் தொரத்தியது, கல்யாணங் கெட்டிக்கவாக்கும் வந்தது. ராத்திரியில வந்ததாலே தப்பா போயிருச்சி”னு பாட்டன் நடந்ததை சொன்னாரு.

அதை கேட்டு வாலப்பகடை விழுந்து விழுந்து சிரிச்சிருக்காரு. “போதையில வந்துட்டிகன்னு நினைக்கேன். வீடு போய் சேருங்க. பாக்க பிராமணப் பயலாட்டம் இருக்கீக. நாங்க ஆட்டையும், மாட்டையும் தோலுரிச்சி செருப்பு தைக்கிற பகடையராக்கும். ஒத்துவராது தம்பி, வீடு போய் சேருங்க. சொல்லுத வண்ணம் தான் சொல்ல முடியும் மீறியும் கேக்கலேனா வேற வழில தான் பேசணும்”ன்னு எக்காளாம சிரிச்சிருக்காரு.

“இல்ல கண்ணுல காதலோட நா பாத்து ஆசப்பட்ட மொதப் பொண்ணுங்க இவங்களாக்கும். கெட்டுனா இவங்களதான் கெட்டுவேன். அதுக்கு நீங்க என்ன கேட்டாலும் தாரேன்.”

“என்ன கேட்டாலும் தருவியா? செரிடே ஒரு மண்டலம் இங்கண பகடையனா இருந்துக்காட்டு. நான் எம் பொண்ணத் தாரேன். நீயே மாட்டுத் தோல உரிச்சி செருப்பு தச்சி வித்துக் கொண்டு வரணும். அப்படி செஞ்சா மறு பேச்சு பேசாம எம் பொண்ண கூட்டிட்டு போ.”

சவால்தான் நம்ம பாட்டனுக்கு இஷ்டமாச்சே? திரும்ப வந்து அண்ணனுங்கட்ட விஷயத்த சொல்ல ஆறு பேருந் திகைச்சி நிக்கிறாக ஒன்னும் பேசாம முத்துப்பட்டன் தூங்கவிட்டுப்போட்டு, “குலப் பெயர கெடுத்த பாவி நல்லாயிருப்பியா? இங்கயே செத்தொழி”னு  ஆறு பேரும் கல்லக் கொண்டு பட்டவராயன் மண்டையில அடிச்சி ஒடச்சி உயிரு போயிருச்சின்னு நினைச்சி அந்தப் பழைய கட்டிடத்தில வச்சி கல்லப் போட்டு மூடிட்டு போயிட்டாங்க.

நான் கதையினுள் மூழ்கியவானாக “அய்யயோ” என்றேன்.

“ஒக்கப்பனாட்டம்தான் நீயும் கொற பிரசவத்தில முந்திகிட்டு பொறந்த பய. சொல்லுதத முழுசா கேக்கணும். எடையில அய்யயோ கொய்யயோன்னா… என்ன சொல்ல வந்தேன்?” என்றார் தாத்தா.

“உயிர் போனதும் கட்டிடத்தில வச்சி கல்லப் போட்டு மூடிட்டாங்க” என்றேன்.

உசிரெல்லாம் போகல, மயக்கந்தான். லேசில சாவக்கூடிய சீவனா அது? மயக்கந் தெளிஞ்சவரு சுத்துமுத்தி கல்லப் போட்டு அடைச்சத கண்டுகிட்டாரு. கேட்டுக்கோ, சோதிக்கும் போதுதான் தெய்வம் கூடயிருக்கும். அத நாம கண்டுக்கிடணும். அவ்வளவுதான், வழி திறந்திரும். அந்தக் கோட்டையிலேயே ஒரு சொரங்கப்பாத இருந்திருக்கு. அதோட வந்து ஊருக்குள்ள போய் பூணூலையும், குடுமியையும் எடுத்திட்டு கட்டிவச்சிருந்த தங்கப் பல்ல வித்து காதுக்கு கல் கடுக்கனும், தோல் சட்ட, தோல் செருப்பெல்லாம் வாங்கினாரு. ஒரு மண்டலம் ஒக்காந்து செருப்பு தச்சி வித்து பணத்தோட நேரா வாலப்பகடை வீட்டுக்குப் போய், “இப்போ என்ன சொல்லுதேரு? திம்மக்காவையும், பொம்மக்காவையும் எனக்கு தாறேரா?”னு கேட்டாரு.

“கெட்டிக்க ராசா. இவளுக ஒனக்காக பொறந்தவளுகளாக்கும்” வாலப்பகடை சம்மதமும் கெடைச்சிருச்சி.

“பணிகாரம் சுட்டு, பந்தலிலை நட்டு, தோரணங்கள் சூழ, இந்திரனைப் போல வானவர்கள் வாழ்த்த தேவியர் கைக்கொள்ளும் விழவ” சுத்தி குரவ பாட முதுவள்ளுவன் வந்து கரம்பிடிச்சு வச்சதாக்கும்.

எனக்கு அவர் சொல்ல வருவது புரிந்தது. “இதெல்லாம் இப்ப ஏன் சொல்லுதேன்னா, அவளுகள பாத்த கணம் பாட்டன் முடிவு பண்ணிட்டான் இவளுகதான் எனக்குன்னு. அவளுகளுக்காக என்னமும் செயல்லாம்னு துணிஞ்சிப்புட்டாரு. அந்தக் காலத்தில பிராமணன் பகடையா மாறுறது லேசுபட்ட காரியமா? நிக்கணும் துணிஞ்சி நிக்கணும். அப்பதான் பொண்ணும் மண்ணும் நமக்குடே. இங்கண வந்து கோழப்பயலாட்டம் அழுதிட்டு கெடந்தா பட்டவராயன் ரெத்தம்ன்னு சொல்லுததுக்கே வெக்கக் கேடு” என்றார் தாத்தா.

“தாத்தா, எனக்கு புரியுது தாத்தா. ஆனா அப்பாவ எப்படி எதித்து பேசுறது? அவரு மொகத்துக்கு முன்னாடி போய் நின்னாலே தொடையெல்லாம் நடுங்குது. அவருட்ட பத்து ரூவா கேக்குறதுக்கே எட்டு தடவ யோசிப்பேன் ஒரு பொண்ண கெட்டிக்கப் போறேன்னு நான் எங்க போய் சொல்ல?” என்றேன்.

“சீதைக்கி சித்தப்பன் செவராமன்றியே. ஒருமணிநேரம் சொல்லி என்னல புண்ணியம்?” என்றவர் குரலைச் செருமி வாயினுள் மேலுதட்டில் ஒட்டியிருந்த வெற்றிலையை துப்பி மேலும் சொல்லத் தொடங்கினார்.

ரெண்டு பேத்தையும் கண்டப்பவே அவரு மனசால பகடையனா மாறிட்டாரு. கல்யாணம் முடிஞ்ச வீடு திரும்பி திம்மக்கா தலமாட்டுலயும், பொம்மக்கா கால்மாட்டுலயும் இருக்க இவரு படுத்திருந்திருக்காரு. வெளியே இருந்து ஓடியாந்த பகடைப் பய யாரோ நம்ம ஆட்டையும், மாட்டையும் கடத்திட்டு ஓடுதாவன்னு கத்திக்கிட்டே போயிருக்கான். விஷயங் கேட்டவரு கொதிச்சிட்டாரு.

“எங்காட்டில வந்து எவம்லே ஆட்டையும், மாட்டையும் திருடுதது?”ன்னு வாள எடுத்துக்கிட்டு போய் இருவது பேர் தலைய அறுத்துப்போட்டாரு. திரும்பி வாரப்ப ஆத்துல மொகத்தக் களுவ குனிஞ்சப்ப மறைஞ்சி நின்ன ஆள்காட்டிக்காரன் அவரு முதுகில குத்திப்புட்டான். மரிச்சவருக்காக ஊரே அழுதுச்சி. திம்மக்காவும், பொம்மக்காவும் மறுபேச்சி பேசாம உடங்கட்டை ஏறிட்டாளுக.

“அதாக்கும் அதோட பவரு. ஆம்பளன்னா முழுசா எறங்கி நிக்கணும், இப்படி பொண்டுச்சட்டியாட்டம் அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் பயந்திட்டு கெடந்தா வெளங்குமா?” என்றார்.

நான் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

“நான் உன்னாட்டம் இருக்கிறப்ப எங்க தாத்தா எனக்கு சொன்னதாக்கும். ஒடம்பெல்லாம் புல்லரிச்சுப் போச்சு. அப்படியே போய் உங்க ஆச்சிய தூக்கியாந்தேன்” என்றார்.

அந்த வரிகள் என்னுள் கிளர்ச்சி எழச் செய்தன, “தாத்தா சொல்லுதது நெசமாவா” என்றேன்.

“ஆமா, பின்ன பட்டவராயன் ரெத்தம்ன்னா சும்மாவா. ஒத்த தோளுல உன் ஆச்சிய தூக்கிட்டு மறு தோளுல மாட்டுவண்டிய ஓட்டியாந்தேன்” என்றார்.

எனக்கு இவையெல்லாம் இப்போது ஒரு புத்துணர்ச்சியை தந்தது.

“ஆமா, பட்டவராயன் பரம்பரைன்னா சும்மாவா, லேசுல விட்டா தெனமும் அதை நினைச்சில்லா செத்திருவேன்” என்றவர் பிறகு “எப்ப அவளுக்கு கல்யாணம்?” என்றார்.

“கல்யாணமில்ல, நிச்சியம்”

“என்னைக்கி?”

“நாளைக்கி” என்றேன்.

“இன்னும் முழுசா ஒரு நாள் இருக்கடே. போய் கூட்டியா. தாத்தா இருக்கேன் கூட” என்றார்.

“நெசமாதான் சொல்லுதியா தாத்தா?” என்றேன்.

“நெசத்துக்கும்தான். அவா என்ன ஆள்கள்?”

“கார்காத்தார்” என்றேன்.

“அடி சக்க. இந்திரனுக்கு பிணை நின்னவங்களாக்கும். போய் கூட்டியா. வருவா” என்றார்.

இப்போது எனக்கு நானே புது மனிதனாக தெரிந்தேன். ஓடிச் சென்று வாய்க்காலில் குதித்து குளித்துவிட்டு திரும்ப வரும் வரை தாத்தா அங்கேயே அமர்ந்திருந்து வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்துக் கொண்டிருந்தார். நேராக சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்.

“எப்படி கண்டுபிடிச்ச?” என்றேன்.

“அதாம்லே தாத்தா” என மீசையை முறுக்கினார்.

 

[ 2 ]

 

முன்பிருந்த எந்த பயமும், நடுக்கமும் என் மனதில் எழவில்லை. பட்டவராயன் பட்டதில் நூற்றில் ஒரு சிரமம்கூட எடுக்கவில்லையென்றால் நான் என்ன மனிதன்? செல் செல்லென ஏதோ ஒரு விசை என்னை தள்ளிக்கொண்டிருந்தது. நேராகச் சென்று திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி “யண்ணே, கல்லிடைக்குறிச்சி பஞ்சாயத்தாபிஸ் ஒண்ணு” என்றேன்.

ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். ஏதோ ஒரு புறவிசையால் உந்தப்பட்டுச் சென்று மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என்ற பயம் எழுந்தது. இல்லை இப்புறவிசையினுள் கூடிய அகவிசையும் ஒன்று உண்டு என்பதை மனம் நினைவு படுத்தியது. வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டேயிருந்தேன்.

நினைவுகளுக்குள் நினைவுகளாக மனம் ஒரு சுழற்சியில் சுற்றிக் கொண்டிருந்தது. மொத்த சுழற்சியும் ஒரு புள்ளியிலேயே சென்று அமர்ந்தது. ஏன் இத்தனை நினைவுகள் வாழ்வில் என்றாவது இப்படி ஒரு அகக் கொந்தளிப்பில் சிக்கியிருக்கிறேனா? இனி அங்கே போய் நான் செய்யக் கூடுவதென்ன, அதை யோசித்த கணமே உள்ளம் அதை மறக்கச் சொல்லியது.

தாத்தா ஒரு பாட்டு சொன்னாரே, “இந்திரனோ சந்திரனோ, அவன் ஈசனோட திருமகனோ…” இல்லை, வேறென்னவோ. நான் இந்திரனுமில்லை சந்திரனுமில்லை ஆனால் நான் போய் நேரில் நின்று பெண் கேட்க போகிறேன். அவர்கள் கவர்ந்திழுக்கும் பெண்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், நான் எனக்கான ஒருத்தியைத் தேடி விரைகிறேன். முதல் முறையாகக் கூட்டை விட்டு வெளியேறுகிறேன்.

அவள் எனக்காக காத்துக்கொண்டிருப்பாளா? நிச்சயமாக காத்திருப்பாள். அவள்தானே “நீங்க வாங்க, வந்து பொண்ணு கேளுங்க, உங்களப் பாத்தா படிச்ச பையன் நல்ல உத்தியோகம்னு மறுபேச்சு பேச மாட்டாக” என்றாள்.

அது வெறும் வாய்ச் சொல். அவளுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். பயந்தாங்கொள்ளி, கண்டிப்பாக வரமாட்டேன் என்றே நம்பியிருப்பாள். இனி என்னை நினைத்து ஏங்கி ஏங்கி வீணாகப் போகும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பாள். இப்போது அவள் முன் போய் நின்றால் பயத்தில் மயங்கி விழுந்தாலும் ஆச்சரியமில்லை.

எண்ணங்களின் ஓட்டம் அலாதியானது அதில் நமக்கு இன்பமும், நம்பிக்கையும் தரக் கூடிய இடங்களை மட்டுமே தேர்ந்தெடுப்போம். அதிலேயே திளைத்திருப்போம், “கல்லிடைக்குறிச்சி பஞ்சாயத்தாபிஸ்” என கண்டக்டர் சொன்னதும் நெஞ்சுள் கருக்கென்றது.

இறங்கி சாலையைக் கடந்து ஆதிவராகப் பெருமாள் கோவில் சாலையை நோக்கி நடந்தேன். மனம் காயத்ரி காயத்ரி என மந்திரம் ஜெபிப்பது போல் அவள் பெயரையே சொல்லிக்கொண்டிருந்தது.

கோவிலைக் கடந்து மூன்றாவது சந்தில் இரண்டாவது வீடு அவளுடையது. நினைவில் மங்காத சில விஷயங்கள் என்றுண்டு. அதில் இது முதன்மையானது. நிச்சயத்திற்காக வாசலில் சிறிதாக ஓலைப் பந்தலும் இட்டிருந்தனர்.

உடம்பில் ஒருவித நடுக்கம் பரவத் தொடங்கியது. எதையும் யோசிக்காமல் அவள் வீட்டினுள் சென்றேன். வீடு மொத்தமும் சுற்றம், சொந்தங்களால் சூழப்பட்டிருந்தது. முன் வாசலைக் கடந்து முகப்பறை தாண்டி பின்கட்டுக்கே சென்றுவிட்டேன். யாரும் என்னை தடுக்கவில்லையென்பதே என் பயத்தை போக்கியது.

பின்னால் அவள் கைகளுக்கு மருதாணி வைத்துக்கொண்டிருந்தாள். அருகே சென்று, “காயத்ரி” என்றேன். அவள் பயந்து எழுந்துவிட்டாள்.

“என்ன கட்டிக்கிடுதியா?” என்றேன். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“சொல்லுடீ, என்ன கட்டிக்கிடுதியா?” என்றேன். அதற்குள் வீடு கலவரம் கொள்ளத் தொடங்கியது.

காயத்ரியின் அம்மா, “யாருலே நீ, எங்க வந்து எங்க வீட்டுப்பிள்ளய என்ன கேட்டுக்கிட்டிருக்க? நாளைக்கு அவளுக்கு நிச்சியம். போ வெளிய… என்னங்க… என்னங்க…” என கத்தினார்.

நான், “அத்த, என்னத் தெரியலையா? சின்ன வயசில சீனி மிட்டாய் வாங்கிக் குடுப்பீகளே. சண்முவம்த்தே. இவக் கூட ஒன்னாப் படிச்ச சண்முகம்” என்றேன்.

அவள் முகம் மலர்ந்தது. “எடே, நீயா? எம்மாம் பெருசு வளந்துட்ட! ஆள் அடையாளமே தெரியல. ஒனக்கு எப்பவும் விளாட்டுத்தான். ஒத்த நிமிஷம் எவனோன்னு வந்து பிள்ளையக் கேட்டதும் பதறியே போயிட்டேன்” என்றாள்.

வெளியே நின்ற காயத்ரியின் அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா, பக்கத்து வீட்டார் என ஊர் மொத்தமும் என்னைச் சுற்றி நின்றது. மனம் பயங்கொள்ளும் போதெல்லாம் “முத்துப்பட்டன், முத்துப்பட்டன்” என சொல்லிக்கொண்டேன். ஊரே சேர்ந்து மண்டைய உடைச்சாலும் வாங்கிக்கணும். எதுனாலும் எதித்து நிக்கணும். நிக்கிறவனுக்குதான் பொண்ணும், மண்ணும்.

“விளாட்டில்லத்தே, நெசத்துக்குந் தான் கேக்கேன். உங்க பொண்ண எனக்கு கெட்டித் தாரீகளா?” என்றேன்.

அத்தை அதிர்ச்சியில் உறைந்து திரும்பி காயத்ரியை பார்த்தாள்.

“அவள பாக்காதீக. அவளுக்கும் இஷ்டம்தான். ரெண்டு பேரும் ஒரே சின்ன வயசில யிருந்து ஒன்னாத் தான் பழகினோம். ரெண்டு மனசும் பிடிச்சுப் போச்சு அதான் நேர்லயே கேக்கலாம்ன்னு வந்தேன்.”

பின்னாலிருந்து என்னை அடிக்க வருவதுபோல் முன் வந்த மாமாவிடம் திரும்பி “மாமா, உங்க பொண்ணுக்கு இஷ்டமில்லேன்னா என்ன இங்கனயே வெட்டிப்புடுங்க. அவளுக்கும் என் மேல இஷ்டமாக்கும். எனக்காக வேண்டாம் உங்க பொண்ணுக்காக யோசிங்க” என்றேன்.

சுற்றியிருந்த அனைவரும் எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் ஸ்தம்பித்திருந்தனர்.

 

[ 3 ]

 

எல்லாம் கனவுபோல் நிகழ்ந்து முடிந்தது. அவள் வீட்டில் உடனே கூடிப் பேசி சட்டென ஒத்துக்கொள்வார்கள் என நினைத்துப் பார்க்கவில்லை. தாத்தாவிடம் வந்து நடந்தது அனைத்தையும் கூறினேன்.

“அடி சக்க… நீ ஆம்பிள” என்றார்.

“தாத்தா அவ எதாச்சும் நினைச்சிருப்பாளோ” என்றேன்.

“ஆமா, ஒன்ன மொத மொறையா ஆம்பிளன்னு நினைச்சிருப்பா, இனி உன் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டாப் பாரு” என்றார்.

“தாத்தா அப்பாட்ட எப்படி சொல்லுதது?” என்றேன்.

“இவ்ளோ செஞ்சேல்லா, இதையும் செய் போ. பட்டவராயன் குடும்பத்தையே விட்டிட்டுதான் ரெண்டு பேர் கையயும் புடிச்சான்” என்றார்.

அது சரிதான் என வீட்டினுள் சென்றேன். முன்னறையில் நாற்காலியில் அமர்ந்து அப்பா பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தார். அப்பாவிடம் கல்லிடைக்குறிச்சி போய் வந்த விஷயத்தை சொன்னேன்.

அவர், “ஓகோ… தொர அவ்ளோ பெரியாளாயிட்டேகளோ?” என்றார்.

என் பக்கம் மௌனம். அதற்குள் அம்மாவும் அடுக்களையிலிருந்து வந்து நின்றாள்.

பின்னாடி திரும்பி அம்மாவிடம், “கேட்டியாட்டி சங்கதிய? தொர அவருக்கு அவரே போய் பொண்ணு பாத்திட்டு வந்திருக்காரு” என்றார்.

“இல்ல… பொண்ணு பாக்கல. இஷ்டத்த சொன்னேன்” என இழுத்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து பளாரென என் கன்னத்தில் ஒன்று விழுந்தது. “அப்படி ஜாதி கெட்டுப் போறதுன்னா அப்படியே போயிரு” என்றார்.

“நான் கிளம்பறேன். அவள என்னால ஏமாத்த முடியாது. ஒங்க சம்மதம் வேணும்ன்னு தான் வந்தேன். என் முடிவில எந்த மாற்றமுமில்ல” என்றேன்.

அப்பா அதிர்ந்துவிட்டார், அவ்வளவு தெளிவாக நான் பேசி அவர் பார்த்ததில்லை, நானே கூட.

அந்தப் புள்ளியை நான் கண்டடைந்துவிட்டேன். “செரி நான் கெளம்புறேன்” என்று உள்ளறைக்குச் சென்று என் துணிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது அப்பா ரகசியக் குரலில் அம்மாவிடம் பேசுவது கேட்டது.

அம்மா உள்ளே வந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது, “அஷ்டமி, நவமியெல்லாம் கழியட்டும், அடுத்த வாரம் நல்ல நாளாப் பாத்து போய் பேசுவோம்ன்னு உங்க அப்பா சொல்லுதாக. அதுவரையும் பொறுமையா இரி” என்றாள். நான் பதிலேதும் சொல்லவில்லை அவள் அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இனி அவள் என்றும் என்னை நெருக்கமாக உணரப் போவதில்லை என மனம் சொல்லியது.

அவளை நோக்கி மெல்ல புன்னகைத்தேன்.

அடுத்த சுபமுகூர்த்தத்திலேயே எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. கல்யாண நாள் முழுவதும் பரபரப்பில்லாமல் நிதானமாகவே இருந்தேன். அவள் முகத்தில் அத்தனை புன்னகை படர்ந்திருந்தது. பாசிக் கோர்த்து தாலியாக அவள் கழுத்தில் கட்டிய கையோடு சென்று தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அவர் அருள்புரியும் புன்னகையுடன் ஆசிர்வதித்தார். கல்யாணம், நலுங்கெல்லாம் முடிந்து எண்ணெய் வைத்து என்னை ஒரு அறையின் கட்டிலில் அமரச் செய்தனர்.

இந்த நாளின் ஒவ்வொரு நொடியையும் மீட்டுக் கொண்டிருந்தேன். அன்று மட்டும் தாத்தா வரவில்லையென்றால் என் வாழ்க்கை எப்படித் திரும்பி போயிருக்கும்! பட்டவராயனுக்கும், தாத்தாவுக்கும் மனதில் கோடி முறை நன்றி சொல்லிக்கொண்டேன்.

மெதுவாக அவள் அறையினுள் வரும் சத்தம் கேட்டது. வந்து மெல்ல என் அருகில் நின்றாள். எழுந்து நின்று அவளை நோக்கி புன்னகைத்தேன். அவள் குனிந்து வெட்கித்திருந்தாள், மெல்ல அவள் கீழ் தாடையை மேலிழுத்து “எப்படி தூக்கியாந்தேன் பாத்தியா?” என்றேன்.

“பாத்தேன், பாத்தேன்” என்றாள் ஒரு சடவோடு.

“என்ன…? நான் வரமாட்டேன் தப்பிச்சோம்ன்னுதானே நீ நினைச்ச? வந்து நின்னு கேட்டேனா இல்லையா?” என்றேன்.

“ஆமா, நானே அசந்துட்டேன். நீங்க வந்து கட்டிக்கிறியானப்ப அய்யயோ வந்துட்டீகளான்னு, அதுமட்டும் பாவி மனசு ஒரு வழியா ஆயிருச்சி. ஆமா எப்படி வந்தீங்க?” என்றாள்.

நான் நடந்ததை ஒன்றுவிடாமல் அவளிடம் கூறினேன். “முத்துபட்டன் பரம்பரைன்னா சும்மாயில்ல” என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், “மரமண்ட, முத்துப்பட்டன்தான் கல்யாணம் ஆன அன்னைக்கே குடும்பத்தோட செத்துட்டாரே. அப்பறம் நீங்க எப்படி அவரு வாரிசு?” என்றாள்.

ஆமாம்… இதை நான் யோசிக்கவேயில்லையே? என்னுள் தாத்தா வேகமாக மாட்டு வண்டியை இட்டு வரும் காட்சி எழுந்தது. என்னையறியாமல் எனக்கு சிரிப்பாக வந்தது.

“நீங்க ஏன் உங்களப் பாத்தே சிரிக்கிறீக?” என்றாள்.

“இல்ல… இந்தக் கதைய கேட்டுத்தான் என் தாத்தா பாட்டிய தூக்கியாந்தாரு” என்றேன்.

என்றும் நீ அறிந்திராத ஒன்றுண்டு, அந்த கணம் என்னுளெழுந்த விசையது என எழுந்த சொற்கள் மேலேறாமல் மனதிலேயே நின்றன. பிறகு நாங்கள் அதைப்பற்றி எப்போதும் பேசிக் கொண்டதில்லை.

 

                                                      ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசும் தமிழும்

$
0
0

 

அன்புள்ள ஜெ,

 

சீண்டலாகவோ உங்கள் பணியைச் சிறுமை செய்யும் எண்ணத்துடனோ இதைக் கேட்கவில்லை. என் வயது 32. தமிழ் மீடியம் படித்தவன் அல்ல. ஆங்கிலம் மீடியம் கல்வியில் தமிழும் படித்தேன். நான் அவ்வப்போது தமிழிலும் வாசிப்பேன். இப்போது ஒரு வருசமாக தமிழில் நிறைய படிக்கிறேன். கல்கி ,சுஜாதா படித்து இப்போது ஜானகிராமன், சுந்தர ராமசாமி படிக்கிறேன். வெண்முரசு படிக்க ஆரம்பித்தேன். முதற்கனல் படித்து முடிக்க முடியவில்லை. அந்த மொழியே புரியவில்லை. அவ்வளவு சிக்கலாக இருக்கிறது. மிகவும் பழைய சொற்கள். தனித்தமிழில் எழுதியிருக்கிறீர்கள்

இன்றைக்கு தனித்தமிழ் என்று பேசுகிறார்களே ஒழிய எங்கேயுமே தனித்தமிழ் கிடையாது. எல்லாரும் கலப்பாகத்தான் எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் மட்டும்தான் இந்த தனித்தமிழ் obsession இருக்கிற ஒரே எழுத்தாளர். இன்றைக்கு மேலும் அதிகமாக மக்கள் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். நிறையபேருக்கு தமிழே சரியாகத் தெரியவில்லை.  Practical ஆ ஒரு தமிழ் இன்றைக்கு இருக்கிறது. அத்தனைபேரும் பேசுவதும் எழுதுவதும் அதில்தான். இன்றைக்கு இப்படி ஒரு தமிழில் இதை எழுதினால் என்ன பயன்? இதை எதிர்காலத்தில் யார் படிக்கப்போகிறார்கள்?

 

எஸ்.கார்த்திக் ராஜ்

 

அன்புள்ள கார்த்திக்,

நீங்கள் சொல்வது உண்மை. தனித்தமிழ் சார்ந்த ஒரு பற்று எனக்கு தொடக்கம் முதலே உண்டு. நான் எழுதவந்தபோதே கட்டுரைகளை கூடுமானவரை தூயதமிழில் எழுதினேன். அதற்கான கலைச்சொற்களை தேடிக் கண்டடைந்தேன், இல்லையென்றால் உருவாக்கிக் கொண்டேன். தூயதமிழில் கொற்றவை என்னும் நாவலை எழுதியிருக்கிறேன். அதன் நீட்சியே வெண்முரசு. அதை அப்படித்தான் உருவாக்கிக்கொள்ள முடிந்தது. எழுத எழுத ஏற்கனவே இருந்த ஓரிரு வடமொழிச் சொற்களும் இல்லாமலாயின.

நீங்கள் சொல்வது போல புதிய இலக்கியத்தில் பெரும்பாலும் நான் மட்டுமே இன்று இப்படித் தனித்தமிழில் எழுதுகிறேன். தமிழ்க்கூச்சல் இங்கே இருந்தாலும் இந்தத் தமிழை தொடர்ந்து படிக்க பெரும்பாலானவர்களால் இயலாது. அந்த தடை இளம் வாசகர்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த மொழி என் அகத்துக்கு உகந்தது- ஆகவே  இதுவே என் மொழி. வெண்முரசின் மொழி என் பிற எழுத்துக்களிலும் வந்துவிட்டிருக்கிறது

எந்த படைப்பை எழுதும்போதும் இதை நாளை எவரேனும் படிப்பார்களா என எந்தப் படைப்பாளியும் எண்ணுவதில்லை. இன்று எவரேனும் படிப்பார்களா என்றுகூட எண்ணுவதில்லை. எழுதும்போது ஒரு கனவுலகப் பயணம் இருக்கிறது. எழுத்தினூடாக நம்மை நாமே கண்டடையும் தொகுத்துக்கொள்ளும் தருணங்கள் அமைகின்றன. அவைதான் எழுத்துக்கான தூண்டுகோல். அவ்வாறு இருந்தால் மட்டுமே சலிக்காமல் தொடர்ந்து எழுதவும் முடியும்.

இல்லையேல் தமிழ்ச்சூழலில் மிக எளிதில் சோர்வு உருவாகிவிடும். எவரும் படிக்காவிட்டால் ஒரு விலக்கம் ஏற்படும், பலர் படித்தார்கள் என்றால் காழ்ப்பு கொண்டவர்களின் பழிப்புக் காட்டல்கள் உருவாக்கும், சோர்வு  எழும். வெண்முரசுக்கு இருப்பது இரண்டாவது தடைதான்.

வெண்முரசு எழுதும்போது ஐம்பது வாசகர்கள் போதுமென நினைத்தேன். அவ்வாறு நான் முடிவுசெய்த  ஐம்பதுபேரும் தெரிந்தவர்கள். அதற்கு ஆயிரம் மடங்கு வாசகர்கள் இன்றிருக்கிறார்கள். தமிழில் எந்த இலக்கிய ஆக்கத்திற்கும் அமையாதது இந்த வாசிப்பு. இச்சூழலில் இதைவிட நான் விழைவுகொள்ளலாகாது, அறமல்ல.

இதை வாசிப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முப்பது அகவைக்கு உட்பட்ட இளைஞர்கள், ஆங்கிலவழிக் கல்வி கொண்டவர்கள். இந்நாவல் வந்தபின் என் வாசகர்ப்பரப்பில் இளைஞர்கள் மிகுந்திருப்பதை எவரும் காணலாம்.சென்ற அரசன் மகாபாரதம் விழாவிற்கு ஓரு வாசககர் வந்தார், எட்டாம் வகுப்பு மாணவர், பிரயாகை வரை படித்துவிட்டிருந்தார். பதினாறு அகவைக்குள் உள்ள வெண்முரசு வாசகர்கள் எட்டுபேரை எனக்கே நேரில் தெரியும்

வெண்முரசின் நடை முதற்கனலில் பெரும்பாலும் தூயதமிழ், அவ்வப்போது மட்டும், தவிர்க்கவே முடியாதபடி சில வடமொழிச் சொற்கள் இருந்தன. பின்னர் வந்த நாவல்களில் முழுக்க முழுக்க தனித்தமிழ் மட்டுமே பயின்று வருகிறது.

இதற்கு ஒரு நெறியை கைக்கொண்டேன்.  சம்ஸ்கிருதச் சொற்களை அடையாளம் கண்டு தவிர்த்தேன். நாம் தமிழ்ச்சொற்கள் என நினைக்கும் பல சொற்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. அதேசமயம் நாம் சம்ஸ்கிருதம் என நினைக்கும் பலசொற்கள் தமிழில் வேர் உடையவை. பல சொற்கள் தமிழ் சம்ஸ்கிருதம் இரண்டுக்குமே பொதுவான வேர்கொண்டவை. சம்ஸ்கிருத வேர்கொண்ட சம்ஸ்கிருதச் சொற்களே தவிர்க்கப்பட்டுள்ளன

உங்கள் கேள்வி இயல்பானது. ஆனால் தமிழ்ப் புத்திலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆகப்போகும் நிலையில்தான் சிலப்பதிகாரத்திலுள்ள சம்ஸ்கிருதச் சொற்களைக்கூட தவிர்த்து கொற்றவை வெளிவந்தது. இத்தனைபெரிய நாவல்தொடராக வெண்முரசு வந்துள்ளது.

ஏற்கனவே சொன்னதுபோல, இவற்றுக்கு இளைய தலைமுறை வாசகர்களே மிகுதி. சென்ற தலைமுறை வாசகர்களே பொதுவாக மொழிநடை தனித்தமிழாக இருப்பதைப் பற்றி குறைசொல்கிறார்கள். அவர்கள் ஏதேனும் எழுத்துமுறைக்கு பழகிப்போய் நின்றுவிட்டவர்கள்.  வெண்முரசை ஓர் அகராதியின் துணைகொண்டு முதல் நாவலை படித்துவிட்டீர்கள் என்றால் அந்த மொழியை வாசிப்பதற்கான பயிற்சியை அதுவே அளிக்கும்.

அப்படித்தான் அது இன்று இந்த அளவுக்கு வாசிக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்திருக்காது, வெண்முரசு நாவல் வரிசைக்கு சிவகாசி அச்சில் திருட்டு மலிவுவிலைப் பதிப்பே சந்தையில் கிடைக்கிறது. தமிழில் தீவிர இலக்கிய தளத்தில் எந்தநூலுக்கும் இப்படி நடந்ததில்லை.அந்த அளவுக்கு அதற்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்கிறேன். அது மகாபாரதம் உருவாக்கும் ஈர்ப்பு

வெண்முரசில் நானே உருவாக்கிய நூற்றுக்கணக்கான சொற்கள் இன்று பொதுப்புழக்கத்திற்கு வந்துவிட்டிருக்கின்றன. தினத்தந்தியில்கூட அவ்வப்போது அவற்றைப் பார்ப்பதுண்டு. இன்றுகூட ஒரு சொல்லைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். வெண்முரசில் இருந்து விக்ஸனரி போன்ற தளங்களுக்குச் சென்று பொதுப்புழக்க மொழியில் கலந்துவிடுகின்றன.

இந்த மொழியை என்னுடைய மாறாத மொழியாக கொள்ளவில்லை. கொற்றவையில் ஒருவகை தனித்தமிழ் இருந்தது. இதில் இன்னொருவகை தனித்தமிழ். நான் இந்த மொழியிலிருந்து சிறுகதைகள் வழியாக வெளிவந்துகொண்டிருக்கிறேன். பேச்சுமொழிக்கு அணுக்கமான சொற்றொடரமைப்பை, சொற்களையே நான் பயன்படுத்துகிறேன்.ஒஆனால் கட்டுரைகளில் கூடுமானவரை தனித்தமிழையே எழுத முயல்வேன்

வெண்முரசு அனைவருக்கும் உரிய நூல்நிரை அல்ல. எப்போதுமே அது ஒரு சிறுவட்டத்தினருக்கு உரியதாகவே இருக்கும். அதன் வாசகர்கள் அடிப்படை அறிவுத்திறனும் மொழித்திறனும் கொண்டவர்கள், தொடர் வாசிப்பில் ஈடுபாடுகொண்டவர்கள், அதன்பொருட்டு நேரத்தையும் உழைப்பையும் அளிப்பவர்கள், புதியன கற்க முயல்பவர்கள். தமிழிலக்கியத்தின் தலைசிறந்த வாசகர்களுக்கு மட்டுமே உரிய படைப்பு இது

அவர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால்ற்அவர்களே பண்பாட்டின் மையம் என அமைபவர்கள். அவர்கள் இன்றிருக்கிறார்கள். நாளை இருப்பார்களா என்றால் நான் அறியேன். இருக்கவேண்டும் என விழைகிறேன். இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

நீங்கள் சொல்கிறீர்கள், வரும் காலத்தில் தமிழில் வாசிக்க எவரும் இருக்க மாட்டார்கள் என. அதாவது தமிழில் இலக்கியத்தேர்ச்சி கொண்டவர்கள் இல்லாமலாவார்கள் என. அப்படி ஆகுமென்றால் , தமிழின் மகத்தான இலக்கியச் செல்வங்கள் எல்லாம் வாசிக்கப்படாமல் போகுமென்றால் , வெண்முரசும்  உடன் செல்லட்டுமே.  அவை தாங்கள் உருவாகி வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லட்டும்.

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்- ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இல்லாத தமிழ்

 

[தண்டியலங்காரம்]

 

ஜெ


ஏன் தமிழ்ச்சொற்கள்?

வெண்முரசும் நவீனத்துவமும்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலையரசி [சிறுகதை]

$
0
0

கௌரி பார்வதி பாய்

பார்வதி பாய் அரசரின் அரண்மனையை அடைந்தபோது வாசலில் மார்த்தாண்ட வர்மா நின்றிருந்தார். மஞ்சலில் இருந்து இறங்கிய அவளை நோக்கி ஓடிவந்து வணங்கினார். “எப்படி இருக்கிறார்?”என்று பார்வதி பாய் கேட்டாள்.

“நான் அவரை பார்க்கவில்லை” என்று மார்த்தாண்ட வர்மா சொன்னார்

“ஏன்?”என்று பார்வதி பாய் கேட்டாள்

“இளையம்மைக்கு தெரியும், என்னால் அவரை நெருங்கவே முடிந்ததில்லை. அதிலும் சென்ற ஓராண்டாக அவர் என்னிடம் முகம்கொடுத்தே பேசுவதில்லை” என்று மார்த்தாண்ட வர்மா சொன்னார். “இன்று காலையில் அவர் வழக்கம்போல முதற்காலையில் தூங்கி எழவில்லை.பத்மநாபசாமி கோயிலில் இருந்து ஸ்தானிகர் வந்து காத்து நின்றிருந்தார். அவர் எழவில்லை என்று சேவகன் என்னிடம் வந்து சொன்னான். நான் உடனே கிளம்பிப்போய் பத்மநாப சாமி ஆலயத்தின் வாள்கொள்ளும் சடங்கை முடித்துவிட்டு திரும்பி வந்தேன். அப்போதும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போதிருந்தே நான் வாசலில் நின்றிருக்கிறேன். அவரை எழுப்ப எனக்கு தைரியமில்லை”

“சேவகன் யாரையாவது அனுப்பவேண்டியதுதானே?”

“தனிச்சேவகன் அனந்தன் நாயரும் கொட்டாரம் காரியஸ்தன் சுப்பா பிள்ளையும் நாலைந்துமுறை சன்னல் வழியாகப் பார்த்துவிட்டு வந்தார்கள். அவர் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்”

“இரவு அபின் எடுத்துக்கொண்டாரா?”

மார்த்தாண்ட வர்மா தயங்கி “இப்போது நோய் காரணமாக மருந்துடன் சற்று அபின் எடுத்துக்கொள்வது உண்டு” என்றார்

“ம்” என்றபடி பார்வதி பாய் உள்ளே சென்றாள். காவல்நாயர்களும் சேவகர்களும் வணங்கி நின்றார்கள். அவள் உள்ளே சென்றபடியே கொட்டாரம் காரியஸ்தன் சுப்பா பிள்ளை தன்னுடன் வரவேண்டும் என்று கைகாட்டினாள். அதை உணர்ந்த மார்த்தாண்ட வர்மா நின்றுவிட்டார்

“நேற்று என்ன சாப்பிட்டார்?”என்று பார்வதி பாய் கேட்டாள்

“வழக்கம்போல மிகக்கொஞ்சமாக பால்விட்ட கஞ்சி… அதன்பின் வழக்கமான மருந்துகள்…”

“அபின்?”

“மருந்தில் உள்ள அளவுதான்”

“எப்போது தூங்கினார்?”

“இரவில் நெடுநேரம் இருமிக்கொண்டே இருந்தார். பிறகு எழுந்து வீணையை கொண்டுவரச்சொன்னார். ஆனால் வாசிக்கவில்லை. வெறுமே விரலால் தந்திகளை நீவிக்கொண்டிருந்தார். நீண்டநேரம். விடியற்காலை குளிர் தொடங்கியபோது நான் பார்த்தேன். வீணைமேலேயே விழுந்து தூங்கிக்கொண்டிருந்தார். நான் தரையில் காலால் தட்டி ஓசை எழுப்பினேன். எழுந்து பீடத்தில் கையூன்றி படுக்கையை அடைந்து படுத்துக்கொண்டார்” என்றார் சுப்பா பிள்ளை

“நேற்று காலைமுதல் என்ன செய்தார்?”

“பத்மநாபசாமி கோயிலுக்கு போய்விட்டு வந்தார். கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார். அதன்பிறகு வீணையைச் சுண்டிக்கொண்டிருந்தார். மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை”

“யாராவது வந்தார்களா?”

“அம்மை மகாராணி அறியாதது அல்ல. அவர் ஓராண்டாக எவரையுமே பார்க்க விரும்பவில்லை. இளையவர் அவரைச் சந்திக்க ஐம்பதுமுறைக்குமேல் அனுமதி கேட்டிருக்கிறார், ஒப்புக்கொண்டதில்லை. சென்ற ஆறுமாதத்தில் நான்குமுறை தாங்கள் சந்தித்திருக்கிறீர்கள். ஏழுமுறை திவான் பார்வதி பாய் சந்தித்திருக்கிறார். ஒரே ஒருமுறை பேஷ்கார் . அவ்வளவுதான்…”

“பகலெல்லாம் என்னதான் செய்தார்?”

“அவர் புதிதாக கீர்த்தனைகள் எழுதியிருக்கிறார். அதை திரும்பத் திரும்ப  ஸ்வரப்படுத்திக் கொண்டிருந்தார்”

“சங்கீதக்காரர்கள் யாராவது வந்தார்களா?”

“யாரையுமே சந்திக்க அவர் விரும்பவில்லை. வடிவேலு, சின்னையா, பொன்னையா, சிவானந்தன் நால்வருமே பலமுறை சந்திக்க விரும்பி சொல்லியனுப்பினார்கள். மறுத்துவிட்டார்”

“அப்படியென்றால் அவர் சங்கீதம்கூட கேட்பதில்லையா?”

“இல்லை அம்மைமகாராணி, அவரே பாடிக்கொள்வதுடன் சரி” சுப்பா பிள்ளை  சொன்னார்.

ராமவர்மாவின் அறைவாசலில் ஏவலர்கள் நால்வர் நின்றிருந்தனர். அவள் வருகையை கண்டதும் தலைவணங்கினர்

பார்வதி பாய் கதவின் முன் சென்றுநின்று ஒரு கணம் தயங்கியபின் தட்டினாள். “ராமா, ராமா, இது நான்… இளையம்மை வந்திருக்கிறேன். ராமா, கதவைத் திற… ராமா”

உள்ளிருந்து ஓசை ஏதும் எழவில்லை. பார்வதி பாய் மீண்டும் வலுவாகத் தட்டினாள்

சன்னல்வழியாக பார்த்துக்கொண்டிருந்த மார்த்தாண்ட வர்மா மெல்ல “கண்விழித்தார்” என்றார்

பார்வதி பாய் மீண்டும் தட்டினாள். “ராமா, கதவைத் திற… கதவைத்திற…”

மார்த்தாண்ட வர்மா “எழுந்துவிட்டார்” என்று ஆறுதலுடன் சொல்லி சன்னலில் இருந்து விலகினார். உள்ளே காலடியோசை கேட்டது. கதவு திறக்கப்பட்டது.

பார்வதி பாய் உள்ளே நின்றிருந்த ராமவர்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு “என்ன ராமா? உடம்புசரியில்லையா? என்ன ஆயிற்று?” என்றாள்

“தூங்கிவிட்டேன்” என்று ராமவர்மா சொன்னார். திரும்பி மார்த்தாண்ட வர்மாவையும் கூட்டத்தையும் பார்த்து “என்ன இது? யார் இவர்கள்?” என்றார்

“நீ கதவைத் திறக்காமல் தூங்கியதனால் என்னை அழைத்தார்கள்…” என்றபின் அவர்கள் போகலாம் என்று கையை அசைத்தாள். அவர்கள் விலகிச் சென்றார்கள். சுப்பா பிள்ளை  மட்டும் அவளுக்குப் பின்னால் நின்றார்.

“நீ நன்றாக இருக்கிறாயா ராமா?”

“இளையம்மை, ஸ்ரீ பத்மநாபதாச, வஞ்சிபால, ராமவர்ம குலசேகர கிரீடபதி ஸ்வாதித்திருநாள் மகாராஜாவாகிய அடியேன் முழுதாக சேதாரமில்லாமல் இருக்கிறேன்” என்றார் “போதுமா இல்லை மிச்சத்தையும் சொல்லவா, பிள்ளே சொல் பார்ப்போம்”

சுப்பா பிள்ளை “ஸ்ரீ பத்மநாபதாச, வஞ்சிபால,ராமவர்ம குலசேகர கிரீடபதி ஸ்வாதித்திருநாள் மகாராஜா ராமராஜா மன்னை சுல்தான் மஹாராஜராஜ பகதூர்ஷா ஷாஷேர் ஜங் மகாராஜா சவிதம்” என்றார்

“போதுமா?”என்று ராம வர்மா புன்னகைத்தார்

‘விளையாடாதே ராமா, நீ களைத்திருக்கிறாய்”

“நான் நேற்று சரியாகத் தூங்கவில்லை” என்று சொல்லிக்கொண்டே காலெடுத்து வைத்த ராமவர்மா தள்ளாடி விழப்போனார். சுப்பா பிள்ளை  பாய்ந்து அவர் தோளைப் பற்றிக்கொண்டார்

சீற்றத்துடன் அவர் கையை தள்ளிவிட்டு உரத்தகுரலில் “என்னிடம் விளையாட வருகிறீர்களா?நான் இன்னும் நோயாளியாகவில்லை…போங்கள்” என்றார். சுப்பா பிள்ளை  மெல்ல கையை விட்டார்

தள்ளாடும் கால்களுடன் சென்று மீண்டும் படுக்கையிலேயே அமர்ந்துகொண்டார் ராமவர்மா.

பார்வதி பாய் “நீ சூடாக ஏதாவது குடிக்கலாம்…” என்றபின் சுப்பா பிள்ளை யிடம் “பிள்ளே…” என்றார்

“இதோ என்று அவர் வெளியே ஓடினார்

பார்வதி பாய் தோலுறையிட்ட சிறிய டச்சு நாற்காலியில் அமர்ந்தாள். “ராமா உன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. நான் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை” என்றாள்

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார் ராமவர்மா

“நான் நீ வழக்கம்போல சங்கீதத்தில் மூழ்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றார்கள். உன் உடல்நிலை எப்போதுமே மோசமாகத்தான் இருந்தது என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் பார்வதி பாய். “நான் உன்னை வந்து பார்ப்பதே உனக்குப் பிடிக்கவில்லை. சென்றமுறை வந்தபோது மிகவும் கொந்தளித்துவிட்டாய்.ஆகவே நான் வராமலிருந்தேன்…”

ராமவர்மா கட்டில்மேல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டார்

“மிகமிக மெலிந்துவிட்டாய்.உன் கைகளும் கால்களும் சுள்ளிபோலிருக்கின்றன” என்று பார்வதி பாய் சொன்னாள். “நான் உன்னை அப்படியே விட்டிருக்கக்கூடாது…”

“நீங்கள் கவலைப்படவேண்டாம் இளையம்மை”

“நான் கவலைப்படாமல் யார் கவலைப்படுவார்கள்? நான் என் அக்கச்சிக்கு கொடுத்த வாக்கு… அக்கச்சி என்னை மன்னிக்கமாட்டார்”

“அக்கச்சி அக்கச்சி… வேறு பேச்சே இல்லையா? உங்கள் வாழ்க்கையே உங்கள் அக்கச்சிக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும்தானா?”

நிதானமாக “ஆம், அந்த வாக்குறுதி மட்டும்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள். “ஆகவேதான் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்தேன். என் ரத்தத்தில் இருந்து அவர்கள் பிறந்தால் அதிகார ஆசை கொண்டிருப்பார்கள் என்று சந்தேகப்பட்டேன். வைத்தியர்களிடம் கேட்டு குழந்தையில்லாமல் ஆக்கிக்கொண்டேன். ராகவ வர்மா கோயில்தம்புரானுக்கும் இது தெரியும். திசைதிரும்பாத அம்புதான் ஆற்றல் கொண்டது, அதுவே இலக்கடையும் என்று என் ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்”

“வெறும் இலக்கு, அவ்வளவுதானா வாழ்க்கை?”

“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்லவேண்டிய ஒன்றுதான் அது….அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்”

“அவ்வளவுதான் வாழ்க்கை என்றால் அதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை. அதை ஏன் வாழ்ந்து தொலைக்கவேண்டும்?” என்று தலைகுனிந்து ராமவர்மா முணுமுணுத்தார்

“சரி, வாழ்க்கை என்றால் என்ன? நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?”

“தெரியவில்லை இளையம்மை. ஆனால் நான் வாழ்க்கை பற்றி கனவுகண்டுகொண்டே இருக்கிறேன். சிலசமயம் காலத்தால் அழியாத கீர்த்தனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றும்போதே உலகமெங்கும் செல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு என்னவேண்டும் என்று உண்மையாகவே தெரியவில்லை. ஆனால் கனவுகாணாத நாளே இல்லை. என் வாழ்க்கையே கனவுகளால் கழிந்துவிட்டது”

“என்ன பேச்சு இது? உன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. அரசர்கள் பொதுவாக பட்டத்திற்கு வரும் வயது இது…” என்றாள் பார்வதி பாய்.

“எனக்கு சலித்துவிட்டது. பதினேழு ஆண்டுகள் இந்த கூண்டுக்குள் அடைபட்டு திணறிக்கொண்டிருக்கிறேன்… நேற்று நினைத்துக்கொண்டேன், என் சிறகுகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இப்போது இந்தக்கூண்டை திறந்துவிட்டால்கூட என்னால் பறக்கமுடியாது”

ஸ்வாதித் திருநாள் ராமவர்மா

“இந்தமாதிரிப் பேச்சுக்களை நான் வெறுக்கிறேன். எல்லார் மனதிலும் ஊக்கமும் சோர்வும் நம்பிக்கையும் கசப்பும் விதைகளாக உள்ளன. அதில் நமக்கு வேண்டியதை பேசிப்பேசி வளர்த்துக்கொள்கிறோம். உன்னுடைய சோர்வையையும் கசப்பையும் வளர்த்துக்கொள்வதை தவிர வேறென்ன பயன்?”

“இளையம்மை, நான் இந்த பதினேழு வருடங்களில் ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேனா?”

“அது உன்னுடைய சிக்கல்… நீ ஒரு நாட்டின் அரசன். அந்தக் கடமையை நீ ஒழுங்காகச் செய்திருந்தால் அத்தனை மகிழ்ச்சிகளும் உன்னைத் தேடி வந்திருக்கும். உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்யவில்லை. ஆகவே ஒவ்வொன்றும் சிக்கலாகி உன்னை சுற்றிக்கொண்டன”

“நான் என் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் ரெஸிடென்ட் கல்லன் என்னை போற்றி மடிமேல் வைத்து கொஞ்சியிருப்பாரா?”

“இல்லை, நீ அவரை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பாய்” என்று பார்வதி பாய் சொன்னாள். “அரசாட்சி என்பது ஒரு போர், ஒரு விளையாட்டு. அதில் எதிரிகள் உண்டு. நம் ஆட்டத்தை தீர்மானிப்பவர்கள் எதிரிகள்தான்”

ராம வர்மா தலையை பொறுமையின்றி அசைத்தார்

“நான் என் அக்கச்சியிடமிருந்து இந்த நாட்டின் ரீஜண்ட் மகாராணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எனக்கு வயது பதிமூன்று. அன்று இங்கே ரெஸிடெண்டாக இருந்தவர் கர்னல் மன்றோ… இன்றுகூட திருவிதாங்கூரில் அவர் பெயரைச் சொன்னால் அச்சமும் வெறுப்பும் பக்தியும் கலந்து உருவாகிறது. அவர் பத்து கர்னல் கல்லன்களுக்கு சமம்” என்று பார்வதிபாய் தொடர்ந்தாள்

“கர்னல் மெக்காலே வேலுத்தம்பி தளவாயை ஒடுக்கியவர். அவருக்கு திறமை போதவில்லை என்று சொல்லி மலபாரில் இருந்து கர்னல் மன்றோவை இங்கே அனுப்பினார்கள். அவரை இங்கே இரும்புச்செக்கு என்று சொல்வார்கள். திருவிதாங்கூரை பிழிந்து கடைசித்துளிவரை கொண்டுசெல்வதற்காகவே கம்பெனி அவரை அனுப்பியது.ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானை வென்று மைசூரை ஆட்சிசெய்தவர் அவர். மராத்தா போர்களில் பங்கெடுத்தவர். ரெஸிடென்ட் கல்லன் அவருடன் ஒப்பிடுகையில் ஒரு வயதால் குழம்பிப்போன கிழவர் மட்டும்தான்”

“என் அக்கச்சியின் காலத்திலேயே கர்னல் மன்றோ நேரடியாகவே திருவிதாங்கூரின் திவானாக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கு என் அக்கச்சி மன்றாடி விண்ணப்பிப்பதாக ஒரு கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டார். நான் ரீஜண்ட் ஆக வந்தபோது அவர்தான் ரெஸிடென்டும் திவானும் எல்லாமே… பாப்பு ராவ் என்று ஒரு அடிமையை வைத்து எல்லாவற்றையும் அவரே செய்தார். நான் உலகம் தெரியாத சின்னப்பெண். உன்னைப்போல ஆங்கிலக் கல்வி உடையவள் அல்ல. என் துணைக்கு யாருமே இல்லை” பார்வதி பாய் தொடர்ந்தாள்

“ஒரு சின்ன பிழை செய்தால்போதும் நாட்டை வெள்ளைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள். மிகமிகக் கவனமாக நான் செயல்பட்டேன். கர்னல் மன்றோவை எனக்கான எதிரியாக அல்ல, என் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான களமாகவே நான் எடுத்துக்கொண்டேன்”

“முதலில் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் அவருக்கு எதிரி யார் என்பதை ஒற்றர்கள் வழியாக அடையாளம் கண்டேன். அந்த எதிரிகளின் காதில் அவரைப்பற்றிய எதிர்மறைச் செய்திகளை போட்டுக்கொண்டே இருந்தேன். கர்னல் மன்றோ இங்கே திவானாக இருந்து தனிப்பட்ட லாபம் சம்பாதிக்கிறார் என்று கெட்டபெயரை உருவாக்கினேன்”

“உண்மையைச் சொல்வதற்கு என்ன, கர்னல் மன்றோ மிகமிகமிக நேர்மையானவர். ஈவிரக்கமற்றவர், ஆனால் ஊழலே இல்லாதவர். ஆனால் அவரை ஊழல்செய்கிறார் என்று முத்திரைகுத்தினேன். ஒரு நேர்மையாளன் நேர்மையற்றவன் என்று சொல்லப்படும்போது சமநிலை இழக்கிறான். கர்னல் மன்றோ அவருக்கு கவர்னர் எழுதிய கடிதங்களுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். மெட்ராஸ் கவர்னர் கர்னல் மன்றோமேல் ஒரு விசாரணையை ஆணையிட்டார். அவர் திவான் பதவியிலிருந்து விலகினார்” பார்வதி பாய் சொன்னாள்

“நான் மேலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தேன். அவருடைய மகன் இங்கே காப்டன் பதவியில் இருந்தான், அவர் அவனுக்காக நெறிகளை மீறுகிறார் என்று பழிகிளப்பிவிட்டேன். கர்னல் மன்றோ மெல்லமெல்ல இங்கிருந்து விலக்கப்பட்டார். ஆயிரத்தி எண்ணூற்றி பதினெட்டில் அவர் லண்டன் திரும்பும்போதுகூட அவர் அவமானமடைந்து இங்கிருந்து சென்றதற்கு நானே காரணம் என்று அறிந்திருக்கவில்லை. அதுதான் ராஜதந்திரம்”

“அதை நான் என் சொந்தலாபத்திற்காகச் செய்யவில்லை. அவருக்குப்பின் வந்த ரெஸிடென்ட் மோரிசன் எனக்கு உகந்தவராக இருந்தார். கர்னல் மன்றோவைப்போல அவர் திருவிதாங்கூரை கறவைப் பசுவாக மட்டும் நினைக்கவில்லை. ஆகவேதான் நான் மலைக்குடியேற்றங்களை வளர்க்கமுடிந்தது. கடலோரச்சந்தைகளை உருவாக்க முடிந்தது. திருவிதாங்கூரை கடனில் இருந்து மீட்டேன். இன்று நீ காணும் கல்விவளர்ச்சி, பட்டினியில்லா நிலைமை இரண்டுமே அப்படித்தான் உருவாகி வந்தன” என்றாள் பார்வதி பாய்.

தலைகுனிந்து அமர்ந்திருந்த ராமவர்மாவை பார்த்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள் “கர்னல் மன்றோ இரக்கமற்றவர், ஆகவே நானும் இரக்கமற்றவள் ஆனேன். ஏனென்றால் கூரிய வாளை கூரியவாளால்தான் எதிர்க்கமுடியும். அதுதான் அரசாட்சி” மெல்லிய சிரிப்புடன் “நீ என்ன நினைத்தாய், உன் ஆட்சியை உனக்கு தட்டில் வைத்து பரிமாறுவார்கள் என்றா? எந்த அரசாவது எவருக்காவது அப்படி அளிக்கப்பட்டிருக்கிறதா?” என்றாள்

ராமவர்மா பெருமூச்சுவிட்டார். “நான் அரசனாக ஆகும்போது எத்தனையோ கனவுகளுடன் இருந்தேன். கீழ்மட்ட ஊழலை முழுக்க நீக்கம் செய்யவேண்டும், அத்தனைபேருக்கும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வரும்படி நீதி முறையை கொண்டு வரவேண்டும், வணிகப்பாதைகளை முழுக்கமுழுக்க பாதுகாப்பாக அமைக்கவேண்டும்… எத்தனையோ திட்டங்கள் வகுத்தேன்”

“அதற்கு நீ என்ன செய்தாய்?”என்று பார்வதி பாய் கேட்டாள். “உனக்கு ஆசிரியராக இருந்த சுப்பா ராவை திவானாக ஆக்கவேண்டும் என்று நினைத்தாய். ஏனென்றால் அவரிடம் உன் கனவுகளை எல்லாம் சொல்லியிருந்தாய். அவர் அவற்றையெல்லாம் ஆதரித்தார். நானும் ரெஸிடென்ட் மோரிசனும்  அதை எதிர்த்தோம். ஏனென்றால் எங்களுக்கு சுப்பாராவ் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் ரெஸிடென்ட் மோரிசன் மாறுதலாகிப் போனதுமே நீ நான் நியமித்த திவான் வெங்கிட்டராவை பதவிநீக்கம் செய்தாய். உன் ஆசிரியர் சுப்பாராவை திவானாக ஆக்கினாய்.அவர் சொன்னார் என்று கொச்சு சங்கரப்பிள்ளையை திவான் பேஷ்காராக நியமித்தாய்…”

“ஆமாம், நான் அரசன். என் அரசை நான் உருவாக்கவேண்டும் என்று நினைத்தேன்”

“உண்மை, ஆனால் உன் கனவுகளை நிறைவேற்றும் தகுதி நீ நியமித்த அமைச்சருக்கு இருக்கிறதா என்று பார்த்தாயா? அவர் வெறும் ஆசிரியர். ஒரு நிர்வாகி கீழிருந்து படிப்படியாக மேலேறி வரவேண்டும். பலமுறை இதை நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். திவான் என்பவர் அரசின் முக்கியமான எல்லா துறைகளிலும் சில ஆண்டுகளாவது வேலைசெய்திருக்கவேண்டும்… ” என்றாள் பார்வதி பாய்

“சுப்பாராவ் முயற்சி செய்தார்” என்று ராமவர்மா சொன்னார்

“சுப்பராவ் அத்தனை செயல்களையும் அரைகுறையாகவே செய்தார். உன் எண்ணங்களை எல்லாம் வெறும் ஆணைகளாகவே பிறப்பித்துக்கொண்டிருந்தாய். மாதம் ஐந்தாறு அரசாணைகள்… அந்த ஆணைகள் நிறைவேறினவா என்று நீ பார்க்கவில்லை. அவை என்ன விளைவை உருவாக்கின என்று நீ கவனிக்கவில்லை. அவை வெறும் சந்தைப்பேச்சுக்களாகவே நீடித்தன..” என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.

“பதினேழு ஆண்டுக்குமுன் நான் உன்னிடம் சொன்னேன். ஒன்றை நினைப்பதும் சொல்வதும் அல்ல அதை செய்வதுதான் அரசாட்சியில் முக்கியம். நினைக்கையிலும் சொல்லும்போதும் நம்முன் எவருமே இல்லை. செய்ய ஆரம்பிக்கும்போது அதற்கு எதிரான எல்லா சக்திகளும் எழுந்து வருகின்றன. அவற்றை கையாளத்தெரியவேண்டும்”

“அதாவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என்றால் அதிகாரிகளின் தரப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் இல்லையா?” என்று ராமவர்மா உரக்க கேட்டார்

“இல்லை. ஆனால் நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்… ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது” என்றாள் பார்வதி பாய்  “ஆமாம், நாம்தான் இந்நாட்டை ஆட்சி செய்கிறோம். ஆனால் நம் ஆணைகளை இந்த நாடு ஏற்றுக்கொண்டால்மட்டுமே ஆட்சி நடக்கும். ஆணைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவைப்பதில்தான் அரசனின் ஆட்சித்திறனே இருக்கிறது”

“எனக்கு புரியவில்லை இளையம்மை… நான் எல்லா இடங்களிலும் தோற்றுவிட்டேன்”

“ரெஸிடென்ட் கல்லனை இரண்டு ஆண்டுகளாக நீ ஏன் சந்திக்கவில்லை? நான் உன்னிடம் பலமுறை சொன்னேன்”

“நான் சொன்னேனே, அவருக்கு செவி கேட்கவில்லை. என்னால் கத்திப்பேசமுடியவில்லை. என் நெஞ்சு வலிக்கிறது”

“அசட்டுத்தனமாகப் பேசாதே” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“அவருடைய காதில் கொஞ்சம் செவிக்குறைவு உண்டு. ஆனால் அவர் அதை என்னிடம் கூடுதலாக நடிக்கிறார். என்னை கூச்சலிடச்செய்கிறார்”

“சரி, நீ ஏன் அதிகாரிகளைச் சந்திப்பதில்லை? ஏன் திவானைக்கூட சந்திப்பதில்லை?”

“ஏன் சந்திக்கவேண்டும்? இங்கே நான் சொல்வது நடக்கிறதா என்ன? இளையம்மை உங்களுக்கு தெரியும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ரெஸிடென்ட் கல்லன் எல்லா மனுக்களையும் அவர் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்று ஆணையிட்டுவிட்டார். எல்லா ஆணைகளையும் அவரே போடுகிறார். நான் அவருடைய ஆணைகளை ஏற்று கைச்சாத்திடவேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் எதற்கு?”

“சரி ,அதைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். நீ சென்ற ஆண்டு நாஞ்சில்நாடு போனாய். அங்கே பதினெட்டு பிடாகைக்காரர்களும் உன்னை பார்க்க விரும்பினார்கள். இந்த திருவிதாங்கூரே நாஞ்சில்நாட்டின் அன்னத்தை உண்டு வாழ்வது.நம்முடைய சோற்றுக்கலம் அது. நமக்கு முழுக்கமுழுக்க விசுவாசமானவர்கள் நாஞ்சில்நாட்டு பிள்ளைமார். நீ அவர்களுக்கு சந்திப்பு அளிக்க மறுத்தாய்”

“நான் கன்யாகுமாரிக்கு போய்க்கொண்டிருந்தேன். அங்கே தனியாக இருக்க நினைத்தேன்”

பொறுமையை தருவித்துக்கொண்டு “நீ என்னதான் நினைக்கிறாய்? உனக்கு என்னவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.

“நான் அரசன்… அரசனாக நான் பணியாற்றவேண்டும்… அதற்கான உரிமையும் சுதந்திரமும் எனக்கு வேண்டும்”

“அதை நீதான் ஈட்டிக்கொள்ளவேண்டும். அதைத்தான் உன் இளமைநாட்கள் முதல் நான் உன்னிடம் சொல்கிறேன். உன்னை அதற்காக பயிற்சிகொடுக்கத்தான் நான் முயன்றேன். நீ அதையெல்லாம் சித்திரவதைகளாக நினைத்தாய்…”

“இளையம்மை, நீங்கள் அளித்த எல்லா பயிற்சிகளையும் நான் அடைந்தேன். என்னால் ஆயுதப்பயிற்சி பெறமுடியவில்லை. என் மனம் அதில் நிற்கவில்லை.”

“அரசன் முதலில் பயிலவேண்டியது ஆயுதங்களைத்தான். போர்க்கலை வழியாகத்தான் மற்ற கலைகளை புரிந்துகொள்ளவேண்டும்”

ராமவர்மா வெடித்துச் சிரித்து “சங்கீதத்தைக்கூடவா?”என்றார்.பார்வதி பாய்யின் முகம் சிவப்பதைக் கண்டு “இல்லை, சிரிக்கவில்லை. வேடிக்கையாக இருந்தது, அவ்வளவுதான்” என்றார்

“நீ ஒருபோதும் என் சொற்களை செவிகொண்டதில்லை” என்றார் பார்வதி பாய்

“இளையம்மை அப்படிச் சொன்னால் நான் என்ன செய்ய? நான் திருமணம் செய்துகொண்டதுகூட உங்கள் ஆணைப்படி. என் ஆசை வேறு என்று உங்களுக்கே தெரியும்…”

“ஆமாம், நீ விரும்பிய மாவேலிக்கரை ராமனாமடத்தில் ஓமனத் தங்கச்சியை திருமணம் செய்துகொண்டால் அரசனாக உனக்கு என்ன நன்மை? திருமணம் வழியாக நீ நாஞ்சில்நாட்டின் முழு ஆதரவையும் பெற்றிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நாயரும் வேளாளரும் உன்னுடன் நின்றிருக்கவேண்டும். அப்போதுதான் நாடே உன் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவேதான் திருவட்டார் அம்மச்சி வீட்டில் நாராயணிப்பிள்ளையையும் நீலம்மைப்பிள்ளையையும் உனக்கு மணமகள்களாக்கினேன். வேளாளர்களில் வடசேரி அம்மவீட்டில் சுந்தரலட்சுமிப்பிள்ளையை உனக்கு தேர்வுசெய்தேன்…”

“தெரிவுசெய்து வாக்கு கொடுத்தபின் எனக்குச் சொன்னீர்கள். உரியநாளில் சென்று நான் பட்டும் கச்சையும் கொடுத்தேன். அவ்வளவு சுதந்திரத்துடன் இருந்திருக்கிறேன்” என்று ராமவர்மா புன்னகைத்தார்

“சுதந்திரம் என்பது ஆற்றலால் வருவது. நான் சொன்னபடி அவர்களை நீ கூடவே வைத்திருந்தால் உன்னைப்பார்த்து ரெஸிடென்ட் கல்லன் பயந்திருப்பார்.”

“அதைவிட நான் இந்த மூன்று பெண்களையும் பார்த்து பயந்தேன் இளையம்மை” என்று ராமவர்மா சொன்னார்

“என்ன பயம்? அவர்களை நீ ஏறெடுத்தும் பார்க்கவில்லை”

“அவர்கள் தைரியமானவர்கள், உலகியல் கணக்கு ஊறியவர்கள், உங்களைப்போல” என்று ராமவர்மா சொன்னார் “பாடத்தெரியாத பெண்ணுடன் ஒரு வார்த்தைகூட என்னால் பேசமுடியாது”

பார்வதி பாய் பெருமூச்சுவிட்டாள். “எல்லாவற்றையும் நீயே சீரழித்துக்கொண்டாய். உன் மனம் சங்கீதத்தில் மூழ்கிகிடந்தது. அரசனுக்கு சங்கீதம் வேண்டும், அது குளியல்போல. நீ இரவுபகலாக குளத்திலேயே ஊறிக்கிடந்தாய்…”

ராமவர்மா மெல்ல அவருக்கு எப்போதுமிருந்த எரிச்சலை அடையலானார். “இளையம்மா, இப்போது நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்னை வழிநடத்தவா? என்னை சீர்திருத்த நினைக்கிறீர்களா?”

“இல்லை, உன்னை வழிநடத்த எட்டு ஆண்டுகள் முயன்றேன். உன்னை சீர்திருத்த மேலும் பல ஆண்டுகள். அதனால் பயனில்லை என்று புரிந்துகொண்டேன்”

“ஆகவேதான் என் இளையவனை வழிகாட்டி வளர்த்தீர்கள் இல்லையா?”என்று ராமவர்மா ஏளனத்துடன் கேட்டார்

“ஆமாம், அவனை நான் நினைத்தவாறு வளர்த்தேன். அவன் யானைத்தந்தம்போல உறுதியானவன்”

ராமவர்மா கசப்புடன் சிரித்து “நீங்கள் சொல்வது என்ன என்று புரிகிறது, என்னை எப்போதுமே வாழைத்தண்டு என்றுதான் சொல்லிவந்தீர்கள்”

“ஆமாம், நீ வாழைத்தண்டேதான். குளிர்ந்தவன், உன் உடலில் எப்போதும் பெண்பிள்ளைகளைப்போல மென்மையும் குளிர்ச்சியும். உன் குரல்கூட மென்மையானது…” அவள் உதடுகளைச் சுழித்து “அதனால்தான் உன் பெண்களுக்கு கூட உன்மேல் மதிப்பில்லாமல் ஆயிற்று”

“தெரியும்… அவர்களும் என்னை வாழைத்தண்டு என்றுதான் சொன்னார்கள். வடசேரிக்காரி என்னை ஏளனமாக குயில் என்று சொல்வாள்”

பார்வதி பாய் சலிப்புடன் தலையசைத்து “நாம் பேசியது போதும், நீ இப்படி இனிமேலும் நீடிக்கமுடியாது. நீ அரசவிவகாரங்களில் ஏதேனும் வகையில் தலையிட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன”

“எனக்கு எல்லாம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது”

“என்னதெரியும்? சொல், இப்போது நம்முடைய திவான் யார்?”

“கிருஷ்ணராவ்தானே? ரெஸிடென்ட் கல்லன் தஞ்சாவூரிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த அந்தக் குள்ளன்?” என்றார் ராமவர்மா “அவன் இங்கே வந்தபோது ஒருநாள் பேச்சுவாக்கில் சுப்பாராவ் சொன்னார், அவன் வெள்ளைச்சிலந்தி என்று.வந்த முதல்நாளே அமைதியாக வலையைக் கட்ட ஆரம்பித்துவிட்டான். வலை இந்த அரண்மனையையும் திருவிதாங்கூர் நாட்டையும் முழுமையாக மூடிக்கொள்வது வரை நமக்குத்தெரியவில்லை. ஒவ்வொருவரையாக கட்டித்தழுவி நஞ்சூட்டினான். ஒவ்வொருவரையாக குருதி உறிஞ்சி குடித்து வளர்ந்தான்”

“வந்த அன்றே அவனை நான் அடையாளம் கண்டேன். அவன் ரெஸிடென்டின் நிழலில் வளர்ந்தான். அவனை திவானாக ஆக்கவேண்டும் என்று ரெஸிடென்ட் மெட்ராஸுக்கு எழுதினார். அவனை திவானாக ஆக்கக்கூடாது என்று நான் மெட்ராஸ் கவர்னரிடம் மன்றாடினேன். ஜார்ஜ் ஹே துரை என் கோரிக்கையை அப்படியே ரெஸிடென்ட் கல்லனுக்கு அனுப்பினார். இங்கே வேறு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்று ரெஸிடென்ட் கல்லன் ஜார்ஜ் ஹே துரைக்கு எழுதினார்….” என்றார் ராமவர்மா

உளக்கொதிப்பால் ராமவர்மா எழுந்துவிட்டார் “அதற்கும் நான் ஈடுசெய்தேன். கர்னல் மன்றோ இங்கே கொண்டுவந்தவர் முன்னாள் திவான் வெங்கிட்ட ராவ். பிரிட்டிஷாருக்கு வேண்டியவர், அவருக்கு தகுதியில்லை என்று பிரிட்டிஷார் சொல்லவே முடியாது. அவர் மெட்ராஸில் பிரிட்டிஷ் சர்வீஸில் இருந்தார். அவரை வரவழைத்து திவானாக்கினேன். கிருஷ்ணராவை திவான்பேஷ்கார் பதவியில் நியமித்து அவருக்கு கீழே துணை திவான்பேஷ்கார் பதவி ஒன்றை உருவாக்கினேன். எல்லா அதிகாரத்தையும் துணைதிவான் பேஷ்காரிடமே ஒப்படைத்தேன்”

சலிப்பும் துயரமுமாக பார்வதி பாய் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எனக்கும் அரசியல் விளையாட்டு தெரியும். ஜார்ஜ் ஹே துரை தற்காலிகமாக லண்டன் போனபோது ஹென்றி டிக்கின்ஸன் மெட்ராஸின் ஆக்டிங் கவர்னர் ஆனார். உடனே அவருக்கு ஒரு பரிசை அளித்து கிருஷ்ணராவை பதவிநீக்கம் செய்ய அனுமதி பெற்றேன். அவரை திருவனந்தபுரத்திலிருந்தே துரத்தினேன்” என்றார் ராமவர்மா

பார்வதி பாய் புன்னகைத்து, “ஒரு சிறுவெற்றி. சரி,அதனால் என்ன ஆயிற்று?. ரெஸிடென்ட் கல்லன் அது அவருக்கு எதிரான நடவடிக்கை என்று எடுத்துக்கொண்டார். அதற்கு பதிலடியாக உன் ஆசிரியர் சுப்பாராவை வெளியேற்றுவதற்கு அவர் முயன்றார். மீண்டும் கார்ஜ் ஹே மெட்ராஸ் கவர்னராக வந்தார். கர்னல் அவரிடம் பேசி சுப்பாராவை டிஸ்மிஸ் செய்யவைத்தா. அவரை திருவனந்தபுரத்தில் இருந்து துரத்தினார். உன் அவைக்கு வந்து கதறி அழுத சுப்பாராவை உன்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தஞ்சாவூருக்கு போனார்”

“ஆமாம், ஆனால் அவரை மீண்டும் அழைத்துக்கொண்டேன்” என்றார் ராமவர்மா

“எப்படி? ஒன்றரை ஆண்டுகள் கழித்து.ஜார்ஜ் ஹேக்கு பதினெட்டு கடிதங்கள் அனுப்பினாய். தனிப்பட்ட பரிசாக மட்டும் பல ஆயிரம்ரூபாய் கொடுத்தாய். கடைசியில் வெற்றி கிடைத்தது. சுப்பாராவ் இங்கே வந்தார். மதிப்பில்லாத ஓர் அரசப்பதவியில் அமர்ந்தார்… இந்த மொத்த அரசியலுக்கும் நீ செலவிட்டது மூன்று ஆண்டுகள்…” என்றார் பார்வதி பாய்

ராமவர்மாவின் உடலில் ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்தது. அவள் அவருக்கு எதையாவது கற்பிக்கமுயலும்போதெல்லாம் எழும் அசைவு அது. உடலில் விழுந்த நீர்த்துளியை உதறுவதுபோல.அவளைச் சினமூட்டும் ஒரு சொல் போல.

அவள் குரல் ஓங்கியது. “அந்த மூன்றாண்டும் இங்கே என்னென்ன நிகழ்ந்தது என்று உனக்கு தெரியுமா? அங்கே மெட்ராஸ் ராஜதானியில் மீண்டும் பஞ்சம் தலைகாட்டத் தொடங்கியது. இங்கே பல்லாயிரம்பேர் ஒவ்வொருநாளும் பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்து ஆரல்வாய்மொழி கணவாயில் குவிந்து கிடந்தனர். அவர்களுக்கு மலைப்பகுதிகளில் நிலம்கொடுத்து குடியேற்றவேண்டிய அதிகாரிகள் அந்தப் பஞ்சப்பரதேசிகளிடமே லஞ்சம் வாங்கினார்கள். சிலர் அவர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு சென்று தூத்துக்குடியில் விற்பவர்களிடம் கூட்டு சேர்ந்துகொண்டார்கள்

“இங்கே நம் மண்ணுக்குள் அடிமைமுறை பத்மநாபசாமிக்கு எதிரான குற்றம். நான் இட்ட ஆணை அது. ஆனால் நாகர்கோயிலில் இருந்தும் பத்மநாபபுரத்தில் இருந்தும்கூட பஞ்சம்பிழைக்க வந்த மக்களை ஆசைகாட்டியும் பிடித்துகட்டியும் கொண்டுசென்று விற்றார்கள் நம் அதிகாரிகளான நாயர்கள். நம் கடல்முழுக்க போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தலாயினர். நமக்கு விசுவாசமாக இருந்த மீனவக்குடிகள் போர்ச்சுக்கலுக்கு கப்பம்கட்டி நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம் சந்தைகள் அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் கூட்டங்கள் உருவாயின. போர்ச்சுக்கல்காரர்கள் தாக்கியதனால் மணக்குடி முதல் ஆலப்புழை வரை துறைமுகங்கள் பொலிவிழந்தன”

“மூன்றே ஆண்டுகளில் நான் பத்தாண்டுகளில் உருவாக்கிய செல்வத்தை அழித்துவிட்டாய். ராமா, இந்த திருவிதாங்கூரின் செல்வம் இரண்டே ஊற்றுக்களில் இருந்துதான்.மலைக்குடியேற்றக்காரர்கள் அளிக்கும் தீர்வை, சந்தைகளும் துறைமுகங்களும் அளிக்கும் சுங்கம். மலைக்குடியேற்றக்காரர்கள் உருவாக்கும் விளைபொருட்கள் ஆறுகள் வழி சந்தைகளில் வந்துசேரவேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை இந்தப்பாதை பாதுகாக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாம் அழிவோம்…. நான் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் கண்விழித்து கணக்கிட்டு காத்து உருவாக்கிய பயிர் இது, உன்னால் அது கருகியது” என்றாள் பார்வதி பாய்

“நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் திவானை நியமிக்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு நம்பிக்கை இல்லாத ஒருவரை நீக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பணிந்து போகவேண்டுமா?” சட்டென்று ராமவர்மா ஆவேசம் கொண்டார். “கண்முன் விஷவிருட்சம் வளர்கிறது. அதை வெட்டிவீச நம்மால் முடியவில்லை என்றால் நாம் ஏன் அரசாங்கம் என்று சொல்லிக்கொள்ளவேண்டும்? இந்த வெற்றுவேஷம்தான் அரசனின் அடையாளமா? அந்த கிரீடமும் செங்கோலும் உடைவாளும் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் வைத்திருந்தது. அதை தொடுவதற்கே எனக்கு தகுதி இல்லை”

“அந்த தகுதியை ஈட்டிக்கொள், நான் சொல்லவந்தது அதைத்தான்”  என்று பார்வதி பாய் சொன்னாள்

“நான் சும்மா இருந்திருக்கவேண்டுமா? கிருஷ்ணராவை அப்படியே இந்த நாட்டை ஆளவிட்டிருக்கவேண்டுமா?”

“வேண்டாம், ஆனால் இதைவைத்துக்கொண்டு சதுரங்கம் விளையாடியிருக்கக்கூடாது. அந்த கிருஷ்ணராவ்தான் பிரச்சினையா? அவன் சிக்கலானவன் என்று தோன்றினால் அவனை அப்போதே கொன்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே?”

“அய்யோ” என்று ராம வர்மா தலையை பிடித்துக்கொண்டார்

“பிரம்மஹத்தியை பயப்படுகிறாயா? பத்துபணம் கொடுத்தால் இன்னொரு நியோகி பிராமணன் இவனை கொன்றிருப்பானே” என்றாள் பார்வதி பாய் “அவன் செத்த அன்று அவன் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அவன் விதவைக்கு ஒரு பென்ஷனையும் அறிவித்துவிட்டு ரெஸிடென்ட் கல்லனைக் கண்டு நம் துயரத்தையும் தெரிவித்திருந்தால் விஷயம் அங்கேயே முடிந்தது”

“நான் நீங்களல்ல இளையம்மே”

“நீ வேறு, அதனால்தான் சொன்னேன். நானாக இருந்திருந்தால் இந்த மொத்த விஷயத்துக்கே ஐந்துநாட்களுக்குமேல் செலவிட்டிருக்கமாட்டேன். சுப்பாராவையே கொல்ல ஆணையிடுவேன். அவரைக் கொன்றது ரெஸிடென்ட் கல்லன்தான் என்று பழிசுமத்தி அவரை இந்நேரம் லண்டனுக்கு அனுப்பியிருப்பேன்… அடுத்து வரும் ரெஸிடென்ட் இங்கே என் சொல்லே வாழும் என்று தெரிந்துகொண்டுதான் திருவிதாங்கூரில் காலெடுத்துவைப்பான்”

“அய்யோ….அய்யோ!” என்றார் ராமவர்மா அவர் உடல்நடுங்கியது. கைகளை கும்பிடுபவர் போல நெஞ்சுடன் சேர்த்து வைத்துக்கொண்டார்

“நான் ராணியாக ஆனது இந்த அரசியலாட்டத்திற்காக அல்ல. தெரியுமா, அங்கே வங்காளத்தில் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே மெட்ராஸ் ராஜதானியில் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் எண்ணிக்கொள், இதெல்லாம் பஞ்சமே இல்லை. மிகப்பெரிய பஞ்சம் வரப்போகிறது. பல்லாயிரம்பேர், பல லட்சம்பேர் செத்துக்குவியப்போகிறார்கள். இப்படி வெள்ளையர் நாட்டுராஜ்யங்களை அழித்து விதைநெல்லை கொள்ளையடித்துச் சென்றால் ஒரு மழை பொய்த்தால் போதும் லட்சக்கணக்கானவர்கள் செத்து விழுவார்கள்.  இந்த வெள்ளையர் அப்போதும் கப்பமும் கட்டணமும் அபராதமும் வசூலிப்பதை நிறுத்தப்போவதில்லை”

“சொல்லப்போனால் பஞ்சத்தை அவர்கள் ஊக்குவிப்பார்கள். அதைப்பயன்படுத்தி இங்கிருந்து கூலிகளை உலகமெங்கும் கொண்டுசெல்வார்கள். கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே ஆப்ரிக்கா வரை கொண்டுசென்று குவிப்பார்கள். செல்பவர்களில் முக்கால்வாசிப்பேர் அங்குள்ள புதியநோய்களில் செத்து அழிவார்கள். சாகுந்தோறும் இவர்கள் மேலும் கொண்டுசென்று நிரப்புவார்கள். இரக்கமே காட்டமாட்டார்கள்” என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்

“ஏனென்றால் நாமெல்லாம் அவர்களுக்கு மனிதர்களே அல்ல. ஒருவகை விலங்குகள். அவர்கள் தென்னமேரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒட்டுமொத்த மக்களையும் கொன்றே அழித்தவர்கள். ஆப்ரிக்காவில் அத்தனை மக்களையும் அடிமைகளாக்கியவர்கள். மக்களின் சாவு அவர்களுக்கு வெறும் கணக்குதான். அவர்களில் ஒருவர் கூட வருத்தப்படப் போவதில்லை. அவர்களின் பணிக்குறிப்புகளில் பட்டினிபற்றியும் பஞ்சம் பற்றியும் ஒரு வரிகூட இருக்காது. போர்வெற்றிகளும் கப்பம்கொண்ட கணக்குகளும்தான் இருக்கும்” என்று பார்வதி பாய் சொன்னாள்.

ராமவர்மா திகைத்துப்போய் அமர்ந்திருந்தார்.

“இந்தியாவெங்கும் உள்ள ஏழை மக்களைப் பார்க்கிறேன். புழுப்பூச்சிகளைப்போல சாகிறார்கள். கூட்டம்கூட்டமாக செத்து அழியப்போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் கேட்க யாருமில்லை. இங்கே திருவிதாங்கூரில் நான் இருக்கிறேன். என் மக்கள் தாயில்லா பிள்ளைகள் அல்ல”

நெஞ்சில் கைவைத்து பார்வதிபாய் தொடர்ந்தாள் “சென்றமுறை மெட்ராஸ் ராஜதானியில் பஞ்சம் வந்தபோது என் நாட்டில் ஒருவர் கூட சாகாமல் நான் பார்த்துக்கொண்டேன். ஒருவர் கூட அடிமையாக அன்னியநாட்டுக்கு போகாமல் நான் பேணினேன். இனிமேலும் காப்பேன், நான் உயிருடன் இருப்பதுவரை எனக்கு வேறெந்த லட்சியமும் இல்லை….அதற்குமுன் எனக்கு எந்த மனிதர்களும் பொருட்டில்லை”

ராமவர்மா உடல் அதிர அப்படியே சரிந்து படுக்கையில் சுருண்டதுபோல படுத்துக்கொண்டார்.அவர் தோள்கள் குலுங்கின

“கடைசியாக ஒன்றைக் கேட்கிறேன் ராமா, ஸ்ரீனிவாச ராவ் திவான் பொறுப்பிலிருந்து விலகியபோது மீண்டும் நீயே தானே கிருஷ்ணராவை அழைத்து திவானாக ஆக்கினாய்”

“ஆமாம், என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ரெஸிடென்ட் கல்லனிடம் போரிட என்னால் முடியாது. நான் சலித்துவிட்டேன்”

“அதாவது நீ அரசனான பிறகு செய்த ஒரே போராட்டத்தையும் கைவிட்டுவிட்டாய்”

“ஆமாம்”

“ஆனால் நீ பணத்தை மண்ணையும் கல்லையும்போல செலவழிக்கிறாய். ஆண்டுக்கு அரண்மனைக்கு பட்டு வெல்வெட் துணிகள் வாங்குவதற்காக மட்டும் மூன்றுலட்சம் ரூபாய் செலவழித்தாய். அரண்மனையில் ஓவியங்கள் வாங்குவதற்கு மட்டும் அறுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இசைக்கலைஞர்களுக்கான செலவுமட்டும் எழுபத்தாறாயிரம் ரூபாய்… அவர்களுக்கான பரிசுகள், ஊதியங்கள், இசைவிழாக்கள்…”

ராமவர்மா ஒன்றும் சொல்லவில்லை

“ராமா நீ எப்படி அரசனாக ஆனாய் தெரியுமா?”

ராமவர்மா திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார்

“நீ உன் அம்மாவின் கருவில் உருவானபோது திருவிதாங்கூரை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சேர்க்கும் எண்ணம் சென்னை கவர்னருக்கு இருந்தது. ஜார்ஜ் பர்லோ அதற்காக எல்லாவற்றையும் செய்தார். ஆகவே நீ கருவிலிருக்கையிலேயே உனக்கு முடிசூட்டினோம். அரசன் என்று எல்லா ஆவணங்களிலும் உன்பெயரை சேர்த்தோம். அரசன் இருந்த நாடு ஆதலால் திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படவில்லை”

“ஆனால் இன்று நீ நோயுற்றிருக்கிறாய் என்றும் திருவிதாங்கூரின் ஆட்சி சீர்குலைந்திருக்கிறது என்றும் ரெஸிடென்ட் கல்லன் மெட்ராஸ் கவர்னருக்கு செய்தி அனுப்பமுடியும். உன்னால் நாட்டை ஆட்சிசெய்து உரியமுறையில் கப்பம் கட்டமுடியாது என்று ஒரு வார்த்தை அவர் எழுதினால் போதும், மெட்ராஸ் கவர்னர் நம் நாட்டை இணைத்துக்கொண்டுவிடுவார். பூதம் வாய்திறந்து காத்திருக்கிறது” என்றார் பார்வதி பாய்

“அதற்கான எல்லா ஆதாரங்களும் இங்கிருக்கின்றன. நீ ரெஸிடெண்டை சந்தித்தே இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர் உன்னைச் சந்திக்கவேண்டும் என்று கோரி எழுதிய பதினேழு கடிதங்களுக்கு நீ பதில் அளிக்கவில்லை. ரெஸிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த நாநூற்றுக்கும்மேல் கடிதங்களுக்கு உன்னிடமிருந்து பதிலே போகவில்லை” என்று பார்வதி பாய் சொன்னாள்

“சென்ற ஆண்டு தெற்குத்திருவிதாங்கூரில் புயலடித்தது. தேங்காய்ப்பட்டினமும் மணக்குடியும் முழுமையாக அழிந்தன. கடுக்கரையிலும் பறக்கையிலும் ஏரிகள் கரையிடிந்து வெள்ளம் பெருகியது. பிடாகைக்காரர்கள் உன்னை சந்திக்க விரும்பினர். நீ சந்திக்கவில்லை. மக்களுக்கு தேவையான எந்த உதவியும் செய்யப்படவில்லை. அடுத்த பூவுக்கு விதைநெல் கேட்டு நாஞ்சில்நாட்டிலிருந்து தூதுவந்தனர். அழிந்த தோட்டங்களை மறுபடியும் அமைப்பதற்காக உதவிகோரி மக்கள் கோயில்கள் தோறும் கூடி குரலெழுப்பினார்கள். ரெஸிடென்ட் அது தன் வேலை இல்லை என்று தவிர்த்துவிட்டார். நீ கண்டுகொள்ளவே இல்லை. என் தனிப்பட்ட சொத்துக்களையும் நிதியையும் கொண்டு குறைந்தபட்ச உதவிகளை நான் செய்தேன்” என்றாள் பார்வதி பாய்

ராம வர்மா அவளை கேட்காதவர் போல சுருண்டே கிடந்தார்

“நீ ரெஸிடென்ட் கல்லனை ஏதோ தனிப்பட்ட எதிரிபோல நினைக்கிறாய். உன்னுடைய அத்தனை சிக்கல்களும் அங்கிருந்துதான் தொடங்கின. பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன் ,ரெஸிடென்ட் துரை நம் எதிரி அல்ல, நாம் அவரை பயன்படுத்திக்கொள்கிறோம்” என்றாள் பார்வதி பாய் “நான் ஆட்சிக்கு வந்தபோது என் ஆட்சியில் ஏதாவது குறைகண்டு திருவிதாங்கூரை நேரடியாக கைப்பற்ற மெட்ராஸ் கவர்னர் இறுதிமுடிவு செய்திருந்தார். ஒவ்வொருநாளும் அங்கிருந்து குறைசொல்லும் கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன”

“கர்னல் மன்றோ அப்படி வரும் கடிதங்களுக்கு பதில் எழுதும்போது அப்படி திருவிதாங்கூரின் ஆட்சி சீரழிந்திருப்பது உண்மை என்றாலும் விரைவிலேயே மீட்டுவிடமுடியும் என்றே எழுதுவார். அவருடைய மனம் எனக்கு மெல்ல புரிந்தது. திருவிதாங்கூர் மெட்ராஸுடன் சேர்க்கப்பட்டால் அவர் ரெஸிடென்ட் அல்லாமலாவார். அதை அவர் விரும்பவில்லை. அதை நான் புரிந்துகொண்டேன். மெட்ராஸ் கவர்னர்களிடமிருந்து இந்நாட்டைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வழி என்பது பிரிட்டிஷ் ரெஸிடென்ட்களை ஆதரிப்பது என்று நான் புரிந்துகொண்டேன். இங்கே ரெஸிடென்ட்கள் மெட்ராஸ் கவர்னர்களின் நேரடிக் கட்டுப்பாடில்லாமல் தனியாட்சி செலுத்துகிறார்கள். அந்த அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள்” பார்வதி பாய் சொன்னாள்

“மெட்ராஸ் கவர்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயப் பிரபுக்கள். இந்த ரெஸிடென்ட்கள் போர்வீரர்கள். ஆகவே இவர்களை புகழ்ந்து, இவர்களை அரசர்களைப்போல நடத்தி, தேவையென்றால் லஞ்சம் கொடுத்து திருவிதாங்க்குரின் ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டேன். திருவிதாங்கூர் இதுவரை சுதந்திரமாக இருப்பது தொடர்ச்சியாக இங்கே வந்த ரெஸிடென்ட்கள் இதன் சுதந்திரத்தை ஆதரிப்பதனால்தான். இப்போதுகூட ரெஸிடென்ட் கல்லன் திருவிதாங்கூர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார். ஏனென்றால் அப்போதுதான் அவர் ஆட்சிசெய்யமுடியும்” என்றாள் பார்வதி பாய்.

“ஆகவே அவருடைய அதிகார ஆசையை நாம் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று பார்வதிபாய் தொடர்ந்தாள். “சொல்லப்போனால் அதிகார ஆசையில்லாத ரெஸிடென்டுக்கு அதை உருவாக்கவேண்டும். ஆனால் மெய்யாகவே அவருடைய அதிகாரம் நம்மை பாதிக்கும் என்றால் அவரைத் தோற்கடிக்கவேண்டும்” என்றாள் பார்வதி பாய் “இந்த வெள்ளையரை நம்மால் வேறெந்தவகையிலும் தோற்கடிக்கமுடியாது. இவர்கள் தன்முனைப்பு கொண்டவர்கள், அதை அடிக்கவேண்டும். அவர்களின் கௌரவத்தைக் குலைக்கவேண்டும். அவர்களை அவதூறு செய்து மனமுடையச் செய்யவேண்டும். அவர்களே இங்கிருந்து ஓடவைக்கவேண்டும்”

“அது மிக எளிது. ஏனென்றால் இவர்கள் தங்கள் படைவீரம்வழியாக புகழும் பதவியும் ஈட்டிக்கொண்ட போர்வீரர்கள். இவர்கள் கீழ்க்குடியினர், ஆகவே கௌரவமானவர்கள் அல்ல என்ற எண்ணம் பிரிட்டனின் பிரபுக்களிடையே இயல்பாகவே உண்டு. ஆகவே இவர்கள்மேல் எழும் எந்த அவதூறையும் அவர்கள் நம்புவார்கள். இவர்களை அவமானப்படுத்தும் எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடமாட்டார்கள்”

“ஆனால் அதை நாம் நேரடியாகச் செய்யக்கூடாது. நாம் அதன்பின் இருப்பதையே அவர்கள் அறியக்கூடாது. ஒரு ரெஸிடென்டைப்பற்றி நாம் நம் கையால் ஒருபோதும் எதிர்மறையாக ஒரு வரிகூட கவர்னருக்கு எழுதக்கூடாது. ஏனென்றால் அந்த ரெஸிடென்டுக்கு எங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத்தெரியாது. அதோடு பொதுவாக வெள்ளையர்கள் அவர்களைப் பற்றி கறுப்பர்கள் புகார்செய்வதை விரும்புவதில்லை. அவர்களைப் பற்றிய புகார்கள் தன்னிச்சையாக எழுவதை நாம் திட்டமிட்டு அமைக்கவேண்டும்… அது மிக எளிது. அதற்குரியவர்களை தேடிக்கண்டுபிடிக்கலாம்… நீ செய்ததெல்லாம் வெறும் சிறுபிள்ளைவிளையாட்டு” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“இளையம்மை, இதெல்லாம் எதற்காக?” என்று முனகலாக ராம வர்மா கேட்டார்

“சுதந்திரத்திற்காக.யோசித்துப்பார்,கோழிக்கோடு சாமூதிரியிடமிருந்து நாடு பறிக்கப்பட்டது.இன்று மலபார் பிரிட்டிஷ் அரசின் பகுதி. இப்போது மக்கள் கூட்டம்கூட்டமாக மலபாரிலிருந்து பஞ்சம்பிழைக்கச் செல்கிறார்கள். அங்கே கொத்துக்கொத்தாகப் பட்டினி மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால் திருவிதாங்கூருக்கு பஞ்சம்பிழைக்க மக்கள் தேடி வந்துகொண்டிருக்கிறார்கள். இங்கே சோறிருக்கிறது . அந்த வேறுபாடே காட்டும், எதற்காக நான் போராடுகிறேன் என்று. ஏன் இதையெல்லாம் செய்கிறேன் என்று” என்றாள் பார்வதிபாய்.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்

பார்வதி பாய் “ராமா நான் உன்னிடம் கேட்கவந்தது ஒன்றே. இதை கேட்கும் சந்தர்ப்பத்தை எண்ணி எண்ணி தவிர்த்தேன். என்னால் இதை உன்னிடம் கேட்கமுடியாது. நீ என் முதல்மகன் போல. உன்னை மடியிலிட்டு வளர்த்திருக்கிறேன்… என் அரசியல்வாழ்க்கையில் நான் எதற்குமே தயங்கியவள் அல்ல, இதற்காக தயங்கினேன்

“நீங்கள் என்னிடம் எதையும் கேட்கலாம் இளையம்மை” என்றார் ராம வர்மா

“நீ அரசனாக நீடிக்கவேண்டுமா?”

ராமவர்மா திடுக்கிட்டவர்போல பார்த்தார். அவருடைய நெஞ்சு துடிப்பது தெரிந்தது. கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் அதிர்ந்தன

“வரவிருக்கும் காலம் கொடுமையானது ராமா. நீ உன் செயலின்மையால் பல்லாயிரம்பேரை பட்டினிச்சாவு நோக்கி தள்ளிவிடுவாய்”

“இளையம்மை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் நடுங்கும் குரலில் கேட்டார்.

“நீ உன் இளையவனை அரசனாக்கிவிட்டு மருத்துவம் செய்துகொள்வதற்காக லண்டனுக்கு போ. உன் நோய் அங்கே குணமாகும். அங்கே நீ விரும்பிய இசையை முழுமையாக கற்கவும் முடியும்…”

ராமவர்மா பெருமூச்சுவிட்டு தளர்ந்தார்

“நீ மென்மையானவன்” என்றாள் பார்வதி பாய். “முன்பெல்லாம் இங்கே வீடுகளின் கதவுகள் எடைமிக்கவை. அந்தக் கதவுகளை நிறுத்தும் இடத்தில் ஒரு நிலைக்கல்லை வைப்பார்கள். அந்தக்கல்லை கல்லாசாரிகள் தேடிப்பிடித்துக் கொண்டுவருவார்கள். நெய்க்கருப்பன் கல் என்று அதைச் சொல்வார்கள். அது இரும்பைவிட உறுதியானது. உடையாது, எளிதில்தேயாது. அதில் எடைமிக்க கதவு ஒருநாளுக்கு நூறு இருநூறுமுறை சுழலவேண்டியிருக்கிறது…”

“அரசன் நெய்க்கருப்பன் கல்லாக இருக்கவேண்டும். நீ மென்மையான மாக்கல். அதில் சிற்பங்கள் செய்யலாம். நிலைக்கல்லாக அமையமுடியாது. நெய்க்கருப்பங்கல்லில் சிற்பம் வடிக்கமுடியாது, அது உளியை உடைத்துவிடும். அது நிலைக்கல்லாக வைக்க மட்டுமே உதவும்… உன் இளையவன் அப்படிப்பட்டவன்” அவள் அவனை நோக்கி குனிந்து “உன்னை நீயே மதிப்பிட்டுக்கொள்” என்றாள்.

ராமவர்மா நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்

“திருவிதாங்கூரின் நலம் மட்டுமே என் நோக்கம். நீ அதை எண்ணிப்பார்”

“இளையம்மை, மென்மையான அரசன் ஒருவன் இருக்கமுடியாதா? கலைகளையும் இலக்கியத்தையும் அறிந்தவன், நெறிகளில் நம்பிக்கைகொண்டவன் அரசனாக ஆளவே முடியாதா?”

“ராமா, புராணங்களில்கூட அப்படிப்பட்ட ஓர் அரசரைப்பற்றிய செய்திகள் இல்லையே” என்றாள் பார்வதி பாய்

“ம்” என்றார் ராமவர்மா

“அலக்ஸாண்டர் சக்கரவர்த்தி புல்லாங்குழல் வாசித்தபோது அவர் தந்தை வந்து பிடுங்கி வீசிவிட்டு அவர் வாயில் சூடுபோட்டார் என்று உன் ஆங்கில ஆசிரியர் சொன்னார், நினைவிருக்கிறதா?” என்று பார்வதிபாய் சொன்னாள் “புல்லாங்குழல் இசைப்பவனால் கொல்லமுடியாது. கொல்லாதவன் அரசன் அல்ல”

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்

“ஒட்டுமொத்தப் பெருங்கருணையால் ஒவ்வொன்றிலும் கருணையே இல்லாமலிருப்பவனே அரசன் என்று ஸ்மிருதிகள் சொல்கின்றன” என்று பார்வதிபாய் சொன்னாள்

ராம வர்மா தலைதாழ்த்தி அமர்ந்திருந்தார்.

“நீ சாப்பிட்டு ஓய்வெடு… நான் மாலையில் வந்து உன்னைப்பார்க்கிறேன்” என்று பார்வதிபாய் எழுந்தாள்.

சுப்பா பிள்ளை  வந்து வாசலில் நின்றார். ராமவர்மா கையூன்றி எழுந்தார். அவர் தள்ளாடி கட்டிலுக்கு கீழே நிலத்தில் விழுந்தார். பார்வதி பாய் அதை பார்க்காதவர்போல சீரான நடையுடன் விலகிச் சென்றுவிட்டார்

“பிள்ளே,  வந்து என்னை பிடி” என்றார் ராமவர்மா

சுப்பா பிள்ளை  அவரை அள்ளி தூக்கி கொண்டுசென்றார்.

 

பார்வதி பாய் அந்தியில் அரண்மனை முன்னால் மஞ்சலில் வந்திறங்கியபோது மார்த்தாண்ட வர்மா அங்கே வாசலிலேயே அவளைக் காத்திருந்தார். அவள் விழிகாட்டியதும் மற்றவர்கள் அகன்றனர். அவள் தாழ்ந்தகுரலில் “என்ன ஆயிற்று?”என்றாள்

“அவரைச் சந்திக்க காலைமுதல் பத்துமுறைக்குமேல் வந்தேன். பார்க்கமுடியவில்லை. உடல்நிலை சீரடையாமலேயே இருக்கிறது. எழுந்து சங்கீத அறைக்குப்போய் அங்கே தம்பூராவுடன் பகல் முழுக்க அமர்ந்திருந்தார். சற்றுமுன்புதான் படுக்கையாயறைக்கு சென்றார்.ரெஸிடென்ட் கல்லனின் தூதுதான் பேஷ்கார் அண்ணாவிப்பிள்ளை வந்தார். அவரையும் சந்திக்கவில்லை

“டாக்டர் பென்ஸன் வந்தாரா?”

“இங்குதான் பகல்முழுக்க இருந்தார். பலமுறை சந்திக்க ஒப்புதல் கேட்டு ஆளனுப்பப்பட்டது. மறுத்துவிட்டார். இளையம்மே இரண்டு ஆண்டுகளில் அவர் ஒரு வெள்ளைக்காரரைக் கூட சந்திக்கவில்லை. வெள்ளை என்ற வார்த்தையையே இழிவாகத்தான் உச்சரிக்கிறார். அவருடைய முன்னால் எவரும் வெள்ளை என்ற சொல்லையே கூறக்கூடாது என்று ஆணை”

“ம்”என்றாள் பார்வதி பாய்

“ஆனால் அந்த தஞ்சாவூர்க்காரர்களை வரவழைத்தார். அவர்களுடன் பகல் முழுக்க இருந்தார்”

பார்வதி பாய் “நான் பார்க்கிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள். மார்த்தாண்ட வர்மா வாசலேயே நின்றுவிட்டார்.

பார்வதி பாய் சீரான நடையில் உள்ளே செல்ல சுப்பா பிள்ளை  வந்து வணங்கினார். விழிகளால் சொல் என்று அவள் ஆணையிட்டாள்

“மதியம் பால்கஞ்சியும் அதன்பின் இருமுறை பழச்சாறும் அருந்தினார். காய்ச்சல் சற்று இருக்கிறது. வயிற்றுவலியும் இருக்கிறது என நினைக்கிறேன்”

“பகல் முழுக்க என்ன செய்தார்?”

“சங்கீத அறையில் இருந்தார்” என்று சுப்பா பிள்ளை  சொன்னார். “வடிவேலு, பொன்னையா ,சின்னையா, சிவானந்தம் நால்வருமே வந்தார்கள். சேர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். வடிவேலு முன்பு இங்கே காணிக்கை வைத்த வெள்ளைக்கார தோள்வீணையை எடுத்துவரச்சொல்லி ஆணை…”

“வயலினா?”

“ஆமாம்… அதை எடுத்துவந்தோம். அதை அவர்கள் சேர்ந்து வாசித்தனர். அவர்கள் சென்று ஒரு நாழிகைகூட ஆகவில்லை”

பார்வதி பாய் தலையசைத்தாள். அவர் வணங்கி பின்னகர்ந்தார்.

பார்வதிபாய் சென்று நிற்க சேவகன் அனந்தன் நாயர் உள்ளே சென்று ராமவர்மாவை பார்த்துவிட்டு வெளிவந்து உள்ளே செல்லலாம் என்று காட்டுவதுபோல தலைவணங்கினார்.

பார்வதி பாய் உள்ளே சென்றபோது ராமவர்மா தன் கட்டில்மேலேயே அமர்ந்திருந்தார். காலையில் அவள் விட்டுச்சென்றதுபோலவே தோன்றுவதாக அவள் நினைத்தாள்.

ராமவர்மா முகமலர்ச்சியுடன்  “இளையம்மை உட்காருங்கள்” என்றார்

பார்வதி பாய் அமர்ந்தாள்

“நான் ஒன்பது கீர்த்தனங்கள் எழுதியிருக்கிறேன்” என்று அவர் உற்சாத்துடன் தொடங்கினார் “ஆறு கீர்த்தனங்கள் முன்னரே எழுதி ஸ்வரப்படுத்தி முடித்தவை. மற்றவற்றை இன்றைக்குத்தான் முடித்தேன். வடிவேலுவையும் சகோதரர்களையும் வரவழைத்து சுவரகுறை எல்லாம் தீர்த்துவிட்டேன். மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன”

அவர் ஒரு கத்தை தாள்களை எடுத்துக்காட்டி மேலும் உற்சாகத்துடன் சொன்னார். “ஒன்பது ராகங்களில் ஒன்பது கீர்த்தனைகள். தேவி ஜகஜனனி கீர்த்தனைக்கு சங்கராபரணம்… சங்கராபரணம் ராஜராகம் இளையம்மை.முதலில் பாடப்பட்டால் அரங்குக்குள் யானை நுழைந்ததுபோலிருக்கும். அடுத்த பாடல் பாகிமாம் வாகீஸ்வரி கல்யாணியில். கல்யாணி என்றால் அலங்காரமான ராகம். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம் போல ஓர் உணர்வு வரும். தேவி பாவனே, இந்தக் கீர்த்தனையை சாவேரியில் அவைத்திருக்கிறேன். இது மங்கலமான ராகம். சுமங்கலையான பெண்கள் தாலமெடுத்து வருவதுபோல இருக்கும்”

“தோடியில் அடுத்த கீர்த்தனை. தோடி மலர்மழை பொழிவிக்கும் ராகம் அல்லவா?. பாரதி மாமவ என்னும் கீர்த்தனம்” என்று பேசியபடியே மனம் பொங்கி ராமவர்மா எழுந்து நின்றார் “ஜனனி மாமவமேயே கீர்த்தனையை  பைரவியில் அமைத்தேன். அது நடனத்திற்குரியது. மயில்களாடும் லாஸ்ய நடனம். மாயூர கதி. அல்லது இளங்காற்றில் கொடிகள் ஆடுவதுபோல. அடுத்தபாடல் தென்றல் மலர்மணத்துடன் வீசுவதுபோன்ற சாவேரியில். ஜனனி பாகிசுதா”

“அடுத்தது  சின்னக் குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடுவதுபோன்ற ராகம் நாட்டைக்குறிஞ்சி. தொன்மையான பண் அது. ஏராளமான நாதஸ்வரப்பிடிகள் கொண்டது. சாப்பு தாளத்தில் அமைத்தேன். பாகி ஜனனி சந்ததம் என்ற கீர்த்தனை அது. இறுதியாக  பாகி பார்வத நந்தினி என்ற கீர்த்தனையை ஆரபியில் அமைத்திருக்கிறேன். அது தீயின் நடனம் போன்ற ராகம். இளையம்மை, ஆரபி என்றால் தீயின் தழல்தான்” அவர் முகமே தழல்கொண்டது போலிருந்தது.

கைகளை நீட்டி அவரே பாடினார், “பாகி பர்வத நந்தினி…” முகம் மலர  “இந்தப்பாடலை எழுதும்போது கல்கத்தாவிலிருந்து நான் நிறுவிய மிருககாட்சி சாலைக்கு கொண்டுவந்த வேங்கைப்புலியை நினைத்துக்கொண்டேன். இளையம்மை, அன்றிருந்த திவான் ஸ்ரீனிவாச ராவ் உங்கள் பெயரை அதற்கு போடலாம் என்றபோது நான் சிரித்துக்கொண்டே ஆம், அதுதான் சரி என்று சொன்னேன்” என்றார்

“ஆனால் பார்வதி என்றபெயரையே  மிருககாட்சி சாலையில் எவரும் சொல்வதில்லை.ராணி என்றுதான் சொல்கிறார்கள்”

“நான் என்ன நினைத்தேன் என்று சொல்லவில்லையே” என்று உற்சாகத்தால் உடைந்த குரலில் ராம வர்மா சொன்னார் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி மூன்றுகுட்டிகளை போட்டதே, அப்போது நான் பார்க்கச் சென்றிருந்தேன். அதன் கூண்டை ஒட்டிய காட்டுக்குள் அது தன் குட்டியை கவ்வி எடுத்துக்கொண்டு போவதைக் கண்டு அலறிவிட்டேன். குட்டியை கொன்றுவிட்டது என்று கூவினேன். காவலர்கள் ஓடிவந்தனர், இல்லை அது குட்டியை அப்படித்தான் தூக்கிக்கொண்டு செல்லும் என்றார்கள். குட்டி அதன் வாயில் ஒரு துணிபோல துவண்டு தொங்கிக்கிடந்தது. இன்றைக்கு அது எட்டடி வேங்கையாக வளர்ந்துவிட்டது”

“இளையம்மை, அதன்பிறகு ஓரு மாதம் கழித்து அதிலொரு குட்டி நோயுற்று எழமுடியாமல் இருந்தது. நான் மேலே நின்று பார்த்தபோது அந்தப்புலி ஒரு குட்டியை கவ்விக்கொண்டு போவதைக் கண்டேன். எங்கே கொண்டுசெல்கிறது என்று கேட்டேன். அது குட்டியை எங்கோ கொண்டு செல்கிறது என்றார்கள். ஆனால் கொண்டுசென்று  குதறிகொன்று புதருக்குள் போட்டுவிட்டு திரும்பிவந்தது. நோய் மற்றகுடிக்கு பரவாமலிருக்க அப்படிச் செய்திருக்கிறது என்றார்கள்… இரண்டு கவ்வுதல்களும் பார்க்க எந்த வேறுபாடுமில்லை”

பார்வதி பாய் கீழே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்

“அது தேவியின் லீலை அல்லவா? தேவி பாகவதத்தில் ஒரு வரி வருகிறது, அலகில்லாத கருணையும் அலகில்லாத குரூரமும் கொண்டவள் பராசக்தி என்று” என்றார் ராமவர்மா “இங்கே நாம் நவராத்திரி பூஜையை அரண்மனைக்குள் கொலுவைத்து கொண்டாடுகிறோம். வரும் ஆண்டுமுதல் நவராத்திரியை இங்கே பெரிய விழாவாகக் கொண்டாடவேண்டும். அன்னையின் ஒன்பது முகங்களையும் சிலைகளாக நிறுவி மக்கள் அனைவரும் வந்து வழிபடவேண்டும். இந்த ஒன்பது கீர்த்தனைகளையும் ஒன்பதுநாளும் இங்கே பாடவேண்டும்….இது அன்னையரின் மண். இந்த பெண்மலையாளத்தில் போற்றிவணங்கவேண்டியது அன்னையரைத்தான்”

“இதெல்லாம் இப்போது பேசவேண்டியவை அல்ல” என்று பார்வதி பாய் எரிச்சலுடன் சொன்னாள்

“இன்று காலை பேசும்போது சொன்னீர்களே, மொத்த இந்தியாவும் தாயில்லா பிள்ளை ,இந்த திருவிதாங்கூருக்கு தாய் இருக்கிறாள். என்று… அப்போது எனக்கு மெய்சிலிர்த்தது. அதன்பின் என்னால் எதையுமே யோசிக்கமுடியவில்லை. நீங்கள் சென்றபின் நான் தனிமையில் அமர்ந்து அழுதேன். அம்மா இருக்கும்போது எவர் அனாதையாக முடியும்? அம்மா இருக்கும்போது வேறு தெய்வங்கள் எதற்கு? பர்வதநந்தினீ, தேவி, என் குடிகளுக்கெல்லாம் தாயாக இருந்து காத்துகொள்ளவேண்டும் என்று தொழுதேன்” ராமவர்மா கண்கள் கலங்க விரல்களால் அழுத்தியபடி குனிந்துகொண்டார்

பார்வதி பாய் அசௌகரியத்துடன் மெல்ல அசைந்து அமர்ந்து “ரெஸிடென்ட் கல்லனின் செய்தியுடன் பேஷ்கார் வந்திருந்தார், நீ சந்திக்கவில்லை. நான் கல்லன் துரைக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தேன், அது உண்மையா என்று விசாசிக்கத்தான் அவர் வந்தார். நீ அவரை நேரில் சந்தித்து பேசு. முடிந்தால் கல்லன் துரையிடமே பேசு. அல்லது ஒரு கடிதமாவது அவருக்குக் கொடு. மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் ஹே நம் மீது கரிசனம் கொண்டவர். இங்கே அவர் வந்தபோது நாம் நல்லெண்ணத்தை உருவாக்கியிருக்கிறோம். அவர் இங்கே சகோதரப்போர் நடக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது” என்றாள்

ராம வர்மா அதைக் கேட்காதவர் போல காகிதங்களை அடுக்கி வைத்தார்.

“அப்படி ஏதேனும் ஒரு சந்தேகம் வந்தால்கூட திருவிதாங்கூர் மெட்ராஸ் ராஜதானியின் பகுதியாக ஆகிவிடும். இங்குள்ள மொத்த செல்வமும் அந்த கடலில் போய் கரைந்துவிடும். இங்கும் பட்டினிச்சாவும் இடப்பெயர்வும் தொடங்கும்” என்றாள் பார்வதி பாய்.

“இங்கே நவராத்திரியை எப்படி கொண்டாடவேண்டும் என்று நான் விரிவாக எழுதிப் பதிவுசெய்திருக்கிறேன். வடிவேலு சகோதரர்ளிடமும் சொல்லியிருக்கிறேன்” என்று ராம வர்மா சொன்னார்.

“நீ கடிதத்தை எப்போது கொடுப்பாய்?”

“பாகிமாம் பர்வத நந்தினி” என்று ராமவர்மா சிரித்தார்

“எனக்கு பாடல்களில் ஆர்வமில்லை…” என்று எரிச்சலைக் காட்டி பார்வதிபாய் சொன்னாள்

“இல்லை, ஆர்வமுண்டு. எனக்குத்தெரியும். இளமையில் என் அம்மாவும் நீங்களும் இசை கற்றுக்கொண்டீர்கள். இருவரில் நீங்கள்தான் நல்ல பாடகி. நான் பிறந்த அன்றுகூட எனக்காக ‘ஓமனத்திங்கள் கிடாவோ’ பாட்டை பாடினீர்கள்… எனக்குத்தெரியும்”

“ஆமாம்,ஆனால் நான் எல்லாவற்றையும் உதறிவிட்டேன். ஒரு துளிகூட மிச்சமில்லாமல்” என்றாள் பார்வதிபாய். “இரும்பில் இருக்கும் மண்ணும் சேறும் அதை உருக்கி வாளாக ஆக்கும்போது அகன்றுவிடும்”

“ஆனால் தங்கமிருந்தால் உருகி கலந்துவிடும்” என்றார் ராமவர்மா “பழமொழிகள் எனக்கும் தெரியும். உங்களுக்குள் கொஞ்சம் சங்கீதம் மிச்சமிருக்கும்… கொஞ்சம் இருக்கவேண்டும். எனக்காக. என் இளையம்மை நான் இயற்றிய இந்த ஒன்பது பாட்டையும் கேட்கவேண்டும். இப்போது என் குரலில் கடைசிப் பாடலையாவது கேட்கவேண்டும்”

“ராமா உன் நோய் என்ன என்று உனக்குத்தெரியாது”

“எனக்குத்தெரியும், காசநோய்” என்றார் ராம வர்மா

“அது எவ்வளவு கொடியது என்று தெரியாது” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“தெரியும், என் நுரையீரல்கள் அழிந்துவிட்டன… என் மூச்சு மறைந்து வருகிறது. நான் உயிர்வாழமாட்டேன்”

“இல்லை, லண்டனில் அதற்கு நல்ல மருந்துகள் உள்ளன. நான் டாக்டர்களிடம் கேட்டேன்”

“இளையம்மை, நான் பட்டும் நகைகளும் வாங்கினேன். ஓவியம் வாங்கினேன். ஏன் தெரியுமா? எனக்குள் வண்ணங்கள் குறைந்துகொண்டே வருவதுபோலிருந்தது. வெளியே இருந்து வண்ணங்களை அள்ளி அள்ளி உள்ளே நிறைத்தேன். அழகானவற்றை மட்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். எனக்கு வேண்டியது அதுதான். வண்ணங்கள், இசை”

“நீ முழுமையாகவே குணமாகமுடியும் ராமா” என்றாள் பார்வதி பாய்

“நான் பாடுகிறேனே” என்று ராமவர்மா சொன்னார் “என் பொன்னு இளையம்மை அல்லவா? என் செல்ல இளையம்மை அல்லவா? கொஞ்சம் கேளுங்கள்”

பார்வதி பாய் பொறுமையில்லாமல் தலையை அசைத்தாள். “நீ கடிதம் கொடுப்பாயா மாட்டாயா?” என்றாள்

“நாளையே கடிதம் கொடுக்கிறேன். ரெஸிடென்ட் கல்லன் துரையை வணங்குகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் என் பாட்டை இப்போது கேட்கவேண்டும்” என்றார் ராம வர்மா

“ராமா உன் உடல்நிலை மோசமாக இருக்கிறது. உன் குரலே உடைந்திருக்கிறது”

“ஆமாம். ஆனால் என் அம்மாவுக்காக பாடவேண்டாமா? தாயே பர்வதநந்தினி, மகாகாளி, இதைக் கேட்டு அருளவேண்டும்…” என்று ராமவர்மா சொன்னர் “சாக்கியார் இதோ மேடையேறி கதை சொல்கிறார்!” கைகளை விரித்து சாக்கியார் போல காட்டி, சாக்கியார் கூத்தின் நீண்ட உச்சரிப்புடன் “முன்பொருநாள் வங்கத்து வேங்கை ஒன்றின் பாலை ஒரு சின்ன பூனைக்குட்டி குடித்து வளர்ந்தது. அந்த பூனை மியாவ் மியாவ் என்றபோது புலி உறுமியது, தன் உறுமலைக் கற்பிக்க முயன்றது. பூனையால் அதைக் கற்கவே முடியவில்லை” என்றார் “தேவீ மகாகாளீ, ரக்தபானப் ப்ரியே, அந்த பூனைக்கும் அருளவேண்டும்”

“சரி பசப்பாதே பாடு” என்றாள் பார்வதி பாய்

“நானும் ரத்தபானம் செய்தவன்தான்… ஏனென்றால் உங்கள் முலைகுடித்தவன் நான்… எனக்கு நினைவிருக்கிறது இளையம்மை. அந்தமுலைகளில் கொஞ்சமாக மெல்லிய தித்திப்பு ஊறும். அது ஊறுவதுவரை நான் குடித்துக்கொண்டே இருப்பேன். நீங்கள் அரசியல்நடத்திக்கொண்டே இருப்பீர்கள். உங்களை அறியாமலேயே ஊறும்…அதில் ரத்தச்சுவை இருக்கும். அது ரத்தமணம் என்று பிறகுதான் அறிந்தேன்”

பார்வதி பாய் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்

“பாடட்டுமா?”

“பாடு”

தொடையில் மெல்ல தாளமிட்டு நடனத்துக்குரிய சீரான விசையில் ராமவர்மா பாடினார்.

பாகி பர்வதநந்தினி

மாமயி பார்வணேந்து சமவதனே!

வாஹினி தட நிவாசினி!

கேசரி வாஹனே!

திதிஜாளி விதாரணே!”

ராமவர்மாவின் குரலும் மூச்சும் பாட்டுக்கு எழமுடியவில்லை. பாடி முடித்து மூச்சுவாங்க அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். பார்வதி பாய் எழுந்து ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றாள். வெளிக்கூடத்தில் மார்த்தாண்ட வர்மா எழுந்து நின்றார். அவரிடம் முகம் காட்டாமல் சென்று மஞ்சலில் ஏறிக்கொண்டாள்

மறுநாள் காலையில் பார்வதி பாய் மஞ்சலில் அரண்மனை முற்றத்திற்கு வந்து நின்றபோது அரண்மனை வளாகமே பரபரப்பாக இருந்தது. உள்ளிருந்து கண்ணீரோடு தன்னை நோக்கி ஓடிவந்த மார்த்தாண்ட வர்மாவைப் பார்த்ததுமே அவளுக்கு தான் கேள்விப்பட்டது உண்மை என உறுதியாயிற்று.

மஞ்சலில் இருந்து நிமிர்ந்த தலையுடன் இறங்கி இயல்பான இறுகிய முகத்துடன் நடந்தாள். அவளுடன் நடந்தபடி விம்மலோசை கலந்து ஏதோ சொல்ல முயன்ற மார்த்தாண்ட வர்மாவிடம் போதும் என்று கைகாட்டி விலக்கி உள்ளே சென்றாள்.

திவான் கிருஷ்ண ராவ் அருகே வந்து வணங்கினார். “ரெஸிடென்ட் கல்லனுக்கு செய்தியை முறைப்படி அறிவிக்கவேண்டும். ஜோசியர்கள் வந்து உரியநேரம் குறித்து தந்தபின் அந்த நேரத்தை மக்களுக்கு அறிவிக்கவேண்டும்…” என்று மெல்லிய குரலில் ஆணைகளை இட்டபடி நடந்தாள்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85

$
0
0

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 4 

மலைச்சாரலில் நான் சந்தித்த அந்த முதிய சூதரின் பெயர் சௌம்யர். வெள்ளிமலை அடுக்குகள் வான் தொட எழுந்த வடக்குதிசைகொண்ட நிலத்தை சார்ந்தவர். கோமதி ஆறு இமையமலையிலிருந்து தரையிறங்கும் இடத்தில் அமைந்தது தன் சிற்றூர் என்று சொன்னார். மாகத குலத்தவர். என்னைப்போலவே இக்கதைகளில் தானும் சிக்கிக்கொண்டவர். கதையில் படிந்து, கதையென்று தானுமாகி, அதன் கருவி என்று தன்னை அளித்து, அதனால் இயக்கப்படுபவராக அலைந்துகொண்டிருந்தவர்.

தண்டகாரண்யத்தில் நீரூற்று ஒன்றின் அருகே எழுந்துநின்றிருந்த ஆலமரத்தின் அடியில் அந்தியில் சருகுகூட்டி தீயிட்டு அமர்ந்திருந்த அவர் அருகே நானும் அமர்ந்திருந்தேன். குளிர் சுற்றிக்கொண்டிருந்தது, அணுகவில்லை. அனலுக்கு விழிப்புகொண்ட பறவைகள் தலைக்குமேல் ஓசையிட்டன. சௌம்யர் அப்பத்திற்கான மாவு பிசைந்துகொண்டிருந்தார். நான் அவரிடம் “சௌம்யரே, நீங்கள் இளைய யாதவரை பார்த்தீரா?” என்று கேட்டேன். “ஆம், பார்த்தேன். அங்கிருந்துதான் கிளம்பி வந்துகொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.

“அவரை பார்த்ததில் எதை உணர்ந்தீர்?” என்று நான் கேட்டேன். “இன்னும் ஏழு நாட்களில் அவர் விண்புகுவார். மாகதர்களின் காலக்கணக்குகள் பிறழ்வதில்லை” என்றார். “எவ்வண்ணம் நீங்கள் இந்நிமித்தம் உரைக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். அவர் “முன்னோர்களின் வழி, சொல்கொண்டு உளத்துடன் விளையாடுவது, கணக்கு கொண்டு சொல்லுடன் விளையாடுவது” என்றார். “கணக்கை கைதொட்டு அறியவே களம். தொடும் கைகளினூடாக உள்ளம் கடந்த ஆழம் உலகை அறிகிறது.”

வடபுலத்து மாகதர்களுக்கு அவர்களுக்குரிய நிமித்தமுறைகள் உள்ளன. பன்னிரு இலைகளைப் பறித்து மண்ணில் வைத்து ஒன்றில் கையூன்றி ஊழ்கத்திலாழ்ந்து இலைகளை தொட்டுத் தொட்டு கை செலுத்தி விழி திறக்கையில் அமைந்திருக்கும் கையிலிருந்து அந்தக் கணிப்பை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். அது கணிப்பல்ல, அவர்கள் உள்ளத்திலிருந்து எழும் ஓர் கனவுதான். அக்கனவை மீட்டவே அப்பன்னிரு இலைகளையும் பயன்படுத்துகிறார்கள். பாலைநிலமெனில் பன்னிரு கற்களை, இல்லங்களுக்குள் எனில் பன்னிரு பொருட்களை.

பன்னிரண்டு என்று என் உள்ளத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். பன்னிரு களங்களை பன்னிரு முறைகளில் தொட்டு இணைகையில் உருவாகும் முடிவின்மையே ஊழின் களம். ஆனால் அது அறுதியாக பன்னிரண்டுக்கு கட்டுப்பட்டது என்பதனால் கைதொட்டுவிடவும் இயல்வது. “எவ்வண்ணமும் பகுத்துக்கொள்ளலாம். பன்னிரண்டு என்பது தொல்மூதாதையரின் எண், அவ்வளவுதான்” என்று அவர் சொன்னார்.

“ஆகவே எங்கள் கணக்குகளின்படி பன்னிரண்டு வகையான கதைகளே இப்புவியில் உள்ளன. பன்னிரண்டு வகையான தத்துவங்கள், பன்னிரண்டு வகையான உணர்ச்சிகள், பன்னிரண்டு வகையான மெய்மைகள். கதைகளினூடாக கதைகளைத் தொட்டு நான் செல்கிறேன். அறிந்த கதைகளிலிருந்து அறியாக் கதை எவ்வாறு எழ முடியும் என்று உணர்கிறேன். இங்கு நிகழ்ந்தவை அனைத்தும் கதையென்றால் நிகழ்பவையும் கதையே. இன்றுள்ளவை நேற்றைய நிகழ்வுகள். இன்றைய நிகழ்வுகள் நாளைய கதைகள். நாளைய நிகழ்வுகள் இன்றைய கதைகளும் இன்றைய நிகழ்வுகள் நேற்றைய கதைகளும் என பின்னால் செல்லவும் கூடும்” என்று அவர் கூறினார்.

“நீங்கள் இலை தொட்டு அறிந்ததென்ன?” என்று நான் கேட்டேன். “இளைய யாதவர் விண்புகுவார். அவருக்கு நிகழவிருப்பது வீரனுக்குரிய இறப்பல்ல, யோகியருக்குரிய இறப்பல்ல, பெருந்தந்தையருக்குரிய இறப்பும் அல்ல. அது எளியோருக்கும் சிறியோருக்குமான இறப்பு. இறப்பின் பொருளின்மையை அனைத்து கோணங்களிலும் வெளிப்படுத்தும் ஓர் இறப்பு” என்று அவர் கூறினார். “அவரை கதைகள் ஒரு நீலக்கொண்டை வானம்பாடி என்றே சொல்கின்றன. மின்னும் உடலும் இனிய இசையும் அழகிய கண்களும் எங்கும் நிலைகொள்ளா இயல்பும் கொண்டது. பறவைகளுக்குரிய இறப்பே அவருக்கும்” என்றார்.

நான் அதிர்ச்சியுடன் “ஏன்?” என்றேன். “அதை எவரும் அறியமுடியாது. ஆயிரம் பல்லாயிரம் தலைமுறைகளாக அதை எண்ணி எண்ணி வியப்பார்கள்” என்று அவர் சொன்னார். “ஏன்?” என்று நான் மீண்டும் திகைப்புடன் கேட்டேன். “ஏனெனில் ஒவ்வொரு செயலிலும் எல்லையில்லாத உட்பொருட்களை இயற்றி அறியமுடியாமையின் எல்லை வரை கொண்டு சென்றவர் அவர்” என்றார். “அதனால் என்ன?” என்று நான் மீண்டும் கேட்டேன். “அது அவ்வண்ணமே. தெய்வங்கள் மனிதனை நோக்கி புன்னகைக்கின்றன. தெய்வங்களை நோக்கி தெய்வங்களே வாய்விட்டு சிரிக்கின்றன” என்று அவர் கூறினார்.

நான் நெடுநேரம் அதை எண்ணிக்கொண்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். சுள்ளிகளை மேலும் சேர்த்து தீ பெருக்கி அதில் கோதுமை மாவை வாட்டி ஒருவகை அப்பமாக்கிய சௌம்யர் அதை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை எனக்களித்து “நலம் நிறைக, அன்னம் நிறைவடைக!” என்றார். நான் அதை வாங்கிக்கொண்டு “மாகதரே, அவ்வண்ணம் ஒரு பொருளிலா நிகழ்வு நடப்பதற்கு முன்நீட்சி என்றோ ஏது என்றோ ஒன்று இங்குண்டா?” என்றேன். “விளைவுகள் அனைத்தும் முன்நிகழ்வுகள் கொண்டவை. அனைத்துக்கும் முன்நீட்சி உண்டு என்பதனால் அவை நீண்டு நீண்டு முடிவிலி வரை செல்கின்றன.”

“மாகதரே கூறுக, இந்நிகழ்வுக்கான முன் நிகழ்வென்ன?” என்று நான் கேட்டேன். அவர் அங்கேயே பன்னிரு கூழாங்கற்களை அடுக்கி விரித்து கைதொட்டு ஊழ்கத்திலாழ்ந்து விழித்து தொட்ட கல்லை நோக்கி கணித்து ஒரு கதையை சொன்னார்.

முன்பு ஆசுரநிலத்தில் ஹிரண்யவாகா ஆற்றின் கரையில் அமைந்த ஹிரண்யபதம் என்னும் நாட்டை நிஷாதகுலத்தவனாகிய கருடகுலத்து ஹிரண்யதனுஸ் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் துணைவி சுவர்ணை. அவர்களின் மைந்தனாகப் பிறந்த பெருவில்லவனின் பெயர் ஏகலவ்யன் என்று மாகதர் சொல்லத்தொடங்கினார். அவனுக்கு முற்பிறப்பின் தொடர்ச்சியென விற்கலை வந்தது. அவன் குடியில் அவனுக்கு நிகரான வில்லவர் எவரும் எழுந்ததில்லை. அவனை அவர்கள் தங்கள் தொல்மூதாதையான ஹிரண்யகசிபுவின் மறுவடிவம் என வழிபட்டார்கள்.

ஹிரண்யதனுஸ் மகதத்திற்கு கப்பம் கட்டும் நிஷாத அரசர்களில் ஒருவர். நிஷாத குடியில் ‘நிலைகொள்க!’ எனும் ஆணையே வீரர்களில் திகழ்கிறது. ‘வென்று செல்க, விரிக!’ என்ற ஆணை அவர்களில் எழுவதில்லை. அந்த ஆணை எழுந்த உள்ளம் கொண்டவன் ஏகலவ்யன். விற்கலைகளில் தேர்ந்த ஆசிரியர் ஒருவரை தேரும் பொருட்டு அவன் சூதர்களிடமும் நிமித்திகர்களிடமும் உசாவினான். அவர்கள் துரோணரின் பெயரை கூறினார்கள். இளைய பாண்டவன் அர்ஜுனனும் பெருவில்லவனாகிய அஸ்வத்தாமனும் வில் பயிலும் களம் அது என்றனர்.

அங்கு செல்வதற்காக தந்தையிடம் விடைபெற்று ஏகலவ்யன் கிளம்பினான். அஸ்தினபுரியை அடைந்து துரோணரின் குருநிலைக்குச் சென்று உரிய காணிக்கைகளுடன் அவர் முன் பணிந்து “நான் நிஷாதன். ஆசுரநாட்டு கருடகுலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மைந்தன். என் பெயர் ஏகலவ்யன்” என்றான். “தங்கள் பாதங்களைப் பணியும் உரிமையை அளிக்கவேண்டும்” என்று கோரினான். ஆனால் தான் அஸ்தினபுரி அரசர்களுக்கு கட்டுப்பட்ட ஆசிரியர் என்றும், ஷத்ரியர்களுக்கு மட்டுமே விற்கலை அளிக்கவேண்டும் என்பது தனது நெறி என்றும் துரோணர் கூறினார்.

துரோணர் “நிஷாதனே, திறன் ஒவ்வொன்றும் கடன் நூறு கொண்டதே. ஷத்ரியர்கள் படைக்கலம் ஏந்துபவர்கள் என்பதனால் அவர்களுக்குரிய நெறிகளும் வரையறைகளும் நூல்களால் வகுக்கப்பட்டுள்ளன. அந்நெறிகளை ஏற்று அவ்வரையறைகளுக்குள் நிற்கும் வஞ்சினத்தை எடுத்துக்கொண்ட ஷத்ரியர்களுக்கே போர்க்கலை அளிக்கப்படவேண்டும். அவர்களை ஆளவும் வழிகாட்டவும் தண்டிக்கவும் வலுவான அரசு தேவை. இல்லையேல் வேங்கப்புலிக் கூட்டத்தை ஊருக்குள் உலவவிட்டதுபோல அழிவே மிகும். நிஷாதனாகிய உன்னுடைய குலநெறிகளும் அரசுமுறைகளும் வேறு. ஆகவே நான் உனக்கு கற்பிக்க இயலாது” என்றார்.

“நீ வேடன். விற்கலை தேர்ந்த வேடன் காட்டுவிலங்குகளை முற்றழித்துவிடக்கூடும். உன் குடி பல்லாயிரம் வேடர் குடிகளில் ஒன்று. முதன்மை விற்கலை பயின்றால் நீ பிற குடிகளை அழிக்கக்கூடும். பேரரசென திரண்டு எழுந்து ஷத்ரிய அரசுகளை வெல்லக்கூடும். வேதங்களுக்கு கட்டுப்படாத உனது வில் வேத எதிர்ப்பை கைக்கொள்ளக் கூடும். உபவேதங்களில் ஒன்றாகிய தனுர்வித்தையை வேத மறுப்பாளனுக்கு கற்றுக்கொடுக்கலாகாது என்பது அதன் முதல்நெறி என்று அறிக!” என்று துரோணர் சொன்னார்.

அவன் மீண்டும் மன்றாடி நின்றான். “நால்வேதத்தை ஏற்பாய் என்று இங்கே நிலம்தொட்டு ஆணையிடு, உனக்கு கலையளிக்கிறேன்” என்றார். “நான் என் குடிக்கும் குடிகாக்கும் அசுரவேதத்திற்கும் கட்டுப்பட்டவன், பிறிதொன்றை ஏற்கவியலாது” என்றான் ஏகலவ்யன். “எனில் நீ அசுரகுருவிடமே விற்கலை பயிலவேண்டும். சுக்ராச்சாரியாரின் கொடிவழி வந்த ஆசிரியர்களை தேடிச்செல்க!” என்றார் துரோணர். “நான் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவேன் என்று சொல்லளிக்கிறேன்” என்றான் ஏகலவ்யன். “நான் உன் வேதத்தைவிட உயர்ந்தவனா?” என்றார் துரோணர். “மண்ணில் புழுக்கள் என நாங்கள் எங்கள் வேதத்தில் முளைத்து அதில் திகழ்ந்து அதில் முடிபவர்கள்” என்றான். “எனில் நான் மற்றொன்று சொல்ல இயலாது” என்றார் துரோணர்.

ஏகலவ்யன் உளம்சோராமல் அக்குருநிலையின் தொலைவில் நின்ற ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து துரோணர் தன் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகளை அகன்றிருந்து கண்டு உளம்பதித்துக் கொண்டான். பின்னர் தானே அதை செய்து பயின்று தேர்ந்தவனானான். அவன் அர்ஜுனனுக்கு நிகரான வில் திறனை அடைந்துவிட்டான் என்று சொல் பரவியது. துரோணர் அவனை தேடிச்சென்றார். “உன் ஆசிரியர் யார்?” என்று கேட்டார். “நீங்களே. உங்களிடமே விற்தொழிலை கற்றுக்கொண்டேன்” என்று அவன் கூறினான்.

“எனில் எனக்கு ஆசிரியக்கொடை அளி” என்று அவர் கேட்டார். “எதுவும் கோருக!” என்று அவன் சொன்னான். “உனது கட்டைவிரல் வேண்டும்” என்று துரோணர் கேட்டார். அக்கணமே அதை வெட்டி அவன் ஆசிரியக்கொடை என அளித்தான். ஏகலவ்யனின் அன்னை சுவர்ணை மைந்தனின் துண்டான விரலை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக் கொண்டாள். “வெட்டுண்ட என் மைந்தனின் பொருட்டு” என்று கூவி அவள் துரோணருக்கும் அஸ்தினபுரிக்கும் தீச்சொல்லிட்டாள். அச்சொல்லை நிலைநிறுத்தும் பொருட்டு அக்கணமே தன் சங்கரிந்து விழுந்து உயிர்விட்டாள்.

“எந்த மைந்தனுக்காக நீர் இதை செய்தீரோ அந்த மைந்தனுக்காக புத்திரசோகத்தில் நீர் உயிர்துறப்பீர். எந்த மாணவனுக்காக இப்பழியை ஆற்றினீரோ அந்த மாணவனின் வில்திறத்தாலேயே நீர் இறப்பீர். ஷத்ரிய வீரருக்குரிய இறப்பை அடையும் நல்லூழும் உமக்கிருக்காது. வாழையடி வாழையாக வரும் தலைமுறைகளின் எள்ளும் நீரும் உமக்கு கிடைக்காது. உமது மைந்தன் சொற்களாலேயே நீர் பழிக்கப்படுவீர்” என்றாள் சுவர்ணை.

அவ்வண்ணமே துரோணர் தன் மைந்தனின் விழிமுன் தான் மைந்தனுக்கு மேலாக எண்ணிய மாணவனாலேயே கொல்லப்பட்டார். அவர் மைந்தன் சாவில்லாதவன் ஆனான், ஆகவே தலைமுறைகளென நீளும் நீர்க்கொடை பெறாதவராக ஆனார் துரோணர். அஸ்தினபுரியின் மைந்தர்கள் அனைவரும் களம்பட்டனர். எஞ்சிய ஒருவனோ வில் தொட ஆற்றல் இல்லாத வீண்பிறவியென அமைந்தான்.

சௌம்யர் தொடர்ந்து சொன்னார். குறைபட்ட கைகொண்ட ஏகலவ்யன் தன் குடிக்கு தலைமகன் என்றானான். தன் அன்னை சுவர்ணையின் நவகண்டச்சிலை முன் நின்று “இன்று முதல் இக்குலத்தின் அரசன் நான். அசுரகுலமாகிய நாம் மலரோ இலையோ கிளையோ தடியோ அல்ல, நாம் வேர். பறவையோ மிருகமோ மீனோ பாம்போ அல்ல. என்றுமழியாத புழுக்கள். இதோ என் ஆணை, இன்று முதல் நமது வில்வேதம் நான்கு விரல் கொண்டது. நம் குலத்துக்கு நானே குருநாதனுமாவேன்” என்றான்.

அவ்விரல் குறைந்த நிலையில் கடும்பயிற்சி எடுத்து மீண்டும் பெருவில்லவன் என்று மாறினான். வில்லவர்கள் என்று தன் குடியில் ஆயிரம் பேரை திரட்டிக்கொண்டான். அவர்கள் அனைவருமே வலக்கையின் கட்டை விரலை அகற்றிக்கொண்டனர். நான்கு விரல் அம்பெடுத்துத் தொடுக்கும் ஒரு கலை அது. சதுராங்குலி வித்தை என்றே அது அறியப்படலாயிற்று. அவ்வில்லவர்கள் ஒரே நாணில் ஏழு அம்புகளை தொடுக்கும் சப்தசரம் என்னும் விற்திறன் கொண்டவர்கள். நிகரற்ற பொறுமை கொண்டவர்கள். நிலத்தோடு நிலம் படிந்து படுத்து அந்நிலையிலேயே அம்பெய்யும் ஆற்றல் கொண்டவர்கள். ஆகவே அவர்களை மறு அம்பெய்து வீழ்த்துவது எளிதல்ல.

அவர்கள் புகழறிந்த மகத மன்னன் ஜராசந்தன் அவர்களை தன் படையில் சேர்த்துக்கொண்டான். ஹிரண்யதனுஸின் மைந்தனாகிய ஏகலவ்யன் ஜராசந்தனின் படையில் முதன்மைப் படைவீரன் ஆனான். அவன் ஜராசந்தனின் தாய் ஜரையுடன் குலமுறை உறவு கொண்டவன். அவனுடைய அத்தைமுறை கொண்டவள் கம்சரின் இரண்டாவது அரசியான பிராப்தி. அஸ்தினபுரிக்கும் யாதவர்களுக்கும் எதிராக ஏகலவ்யனின் சினத்தை தூண்டி நிலைநிறுத்த ஜராசந்தன் முயன்றான். ஆகவே இளைய யாதவரால் கம்சர் கொல்லப்பட்டபோது மதுராவை விட்டு நீங்கிய கம்சரின் அரசியரை வரவேற்க ஜராசந்தன் ஏகலவ்யனை அனுப்பினான். மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தையைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்து அங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்தான். அசுர அரசிகள் மகதத்தை அடைந்தபோது மறுபக்கம் ஏகலவ்யனின் படை நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டு மதுராவை தாக்கத் தொடங்கியது.

அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கும்வரை மதுராவை மகதம் தாக்காது என எண்ணியிருந்தார் இளைய யாதவர். ஆகவே யாதவர்கள் படைவல்லமையுடன் இருக்கவில்லை. ஏழு நாட்களில் மதுராவை ஏகலவ்யன் பிடித்துக்கொண்டான். வசுதேவர் தன் மனைவியருடன் யமுனைவழியாக தப்பி ஓடி மதுவனத்தை சென்றடைந்தார். ஏகலவ்யன் படைகள் பதினைந்து நாட்கள் மதுராவை சூறையாடின. ஏகலவ்யன் ஆயிரம் படகுகளுடன் இரு துறைமுகங்களையும் அழித்தான். கன்றுகளை எல்லாம் கொன்று அவன் படைகள் உண்டன. மதுராவின் அனைத்து வீடுகளையும் அவன் எரித்தான். அதற்கு மதுராவின் நெய்க்களஞ்சியத்தையே பயன்படுத்திக்கொண்டான்.

ஏழு நாட்கள் மதுரா நின்றெரிந்தது. மதுராவின் தெருக்களில் மக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தமையால் குதிரைகள்கூட நடக்கமுடியாமலாயின. மதுராவின் மண் ரத்தமும் சாம்பலும் கலந்து கருமைகொண்டது. மறுநாள் ஏகலவ்யனின் படைகள் ஆயிரம் படகுகளில் வந்து மதுவனத்தை தாக்கின. கொந்தளிக்கும் யமுனைப்பெருக்கில் அலைபாயும் படகுகளில் இருந்தபடி அம்புகளை எய்து கரையில் நிற்பவர்களின் கண்ணுக்குள் அம்பைச் செலுத்தும் வில்லாளிகள் அவர்கள். அலைபாயும் படகுகளில் நின்ற அவர்களை யாதவர்களின் அம்புகள் ஒன்றுகூட சென்று தொடவில்லை.

அன்று இளைய யாதவர் வடக்கே சாந்தீபனி குருநிலையில் கல்வி கற்கும் பொருட்டு சென்றிருந்தார். மதுராவிலிருந்த பலராமர் எஞ்சிய யாதவர்களைத் திரட்டி அனைத்துக் கன்றுகளையும் சேர்த்துக்கொண்டு மதுவனத்தின் மறுபக்கத்துக்கு காட்டுக்குள் சென்றார். அடர்ந்த காட்டுக்குள் செல்ல யாதவர்கள் கற்றிருக்கவில்லை. அவர்களின் ஆநிரைகளை பசுமையை மீறி கொண்டுசெல்வதும் கடினமாக இருந்தது. குழந்தைகளுடனும் உடைமைகளுடனும் அவர்கள் காட்டுமரங்கள் நடுவே திணறியும் விழுந்தும் அழுதபடி சென்றனர்.

ஏகலவ்யனின் படையினர் மதுவனத்தில் புகுந்து அத்தனை வீடுகளையும் எரியூட்டினர். அதைக் கண்டு யாதவர்கள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறி அழுதனர். முதியவர்களை மதுவனத்தில் விட்டுவிட்டு வந்திருந்தனர். போர்நெறிப்படி அவர்களை ஏகலவ்யனின் படைகள் ஒன்றும் செய்யாதென்று எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் எரியும் வீடுகளுக்குள் தூக்கி வீசிவிட்டன ஏகலவ்யனின் படைகள்.

யமுனைக்கரைக் காட்டைக் கடந்து தெற்குப் பெருநிலத்தின் காடுகளை அடைந்ததும் பலராமர் ஏழு தூதுவர்களை தொடர்ந்து வரும் ஏகலவ்யனிடம் அனுப்பி தீர்வு கோரி மன்றாடினார். யாதவர்களின் இறுதிக் குழந்தையையும் கொன்ற பின்னரே ஹிரண்யபதத்துக்கு மீளவிருப்பதாக ஏகலவ்யன் சொன்னான். தூது சென்றவர்களின் காதுகளையும் மூக்கையும் வெட்டிவிட்டு திருப்பியனுப்பினான். செய்வதறியாது யாதவர்கள் காடுகளுக்குள் திகைத்தனர்.

அப்போது தன்னந்தனியனாக இளைய யாதவர் அங்கே வந்து சேர்ந்தார். யாதவ குலமே அவரை நோக்கி தந்தைமுன் அஞ்சிய குழவி என கைநீட்டி பாய்ந்தோடியது. இளைய யாதவர் சொன்னார் ‘ஏகலவ்யனை நான் அறிந்துள்ளேன். அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான் என்றால் இறுதிக்குருதித் துளி எஞ்சுவதுவரை அதை நிறைவேற்றவே முயல்வான். மகதம் அணுகமுடியாத இடத்துக்குச் செல்வதே நாம் செய்யக்கூடுவது. முடிந்தவரை இந்நிலத்தை விலகிச்செல்வோம். யாதவர்களாகிய நமக்கு புல்லிருக்கும் நிலமெல்லாம் உணவிருக்கும்.’ அவ்வண்ணம் அவர்கள் அகன்று சென்று உருவாக்கியதே துவாரகை.

அஸ்தினபுரியின் வளர்ச்சி கண்டு பிரக்ஜ்யோதிஷத்தின் அரசனாகிய பகதத்தன் அச்சமும் பொறாமையும் கொண்டிருந்தான். அந்நகர் மீது படைகொண்டு செல்லவேண்டும் என்று விழைந்தான். ஆனால் அவன் குடிகளும் அவன் பதினெட்டு துணைநாடுகளும் அதற்கு ஒப்பவில்லை. துணைநாடுகளின் படைகொண்டு சென்றாலன்றி அஸ்தினபுரியை வெல்லவும் இயலாது. அவனுடைய அமைச்சர்களில் ஒருவனாகிய நிமலன் “அவர்களை நாம் படைகொண்டு தாக்க வேண்டுமென்றால் அவர்கள் நம்மை தாக்கவைப்பதே முதலில் செய்யவேண்டியது” என்று கூறினான். “அவர்களுக்கு சினமூட்ட வேண்டும். அவர்களே நம்மை தாக்கினார்கள் எனில் நாம் அவர்களை தாக்குவதும் வெல்வதும் முற்றழிப்பதும் அரசமுறை என்றாகிவிடும்” என்றான்.

பிரக்ஜ்யோதிஷத்தின் படைகள் கங்கையில் செல்லும் அஸ்தினபுரியின் படைகளை தடுக்கலாயின. அஸ்தினபுரியின் வணிகர்களை சிறைப்படுத்தி பொருட்களை கவர்ந்தன. ஓர் எல்லையில் பொறுமையிழந்து கர்ணனின் தலைமையில் அஸ்தினபுரியின் படை பிரக்ஜ்யோதிஷத்தின் படைநிலைகளுக்கு எதிராக எழவிருக்கிறது என்று தெரிந்தது. “கானுறைவு முடிந்து பாண்டவர்கள் மீண்டிருக்கும் பொழுது இது. இத்தருணத்தில் அர்ஜுனன் அஸ்தினபுரிக்கு உதவினால் நாம் அழிந்தோம். ” என்றான் நிமலன். “நம்மில் ஒரு கிளை யாதவர்களை தாக்கவேண்டும். அவர்களைக் காக்க அர்ஜுனன் சென்றே ஆகவேண்டும்” என்றான்

பிரக்ஜ்யோதிஷத்தின் ஆணை ஹிரண்யபதத்தின் அரசன் ஏகலவ்யனுக்கு அனுப்பப்பட்டது. ஏகலவ்யனை யாதவர் அதற்கு முன் எட்டு களங்களில் சந்தித்திருந்தனர். இறுதியாக பலராமரின் தலைமையில் எழுந்த மதுராவின் படை ஹிரண்யபதத்தை தாக்கியபோது ஏகலவ்யன் காட்டுக்குள் தப்பியோடியிருந்தான். அந்த வஞ்சினம் அவனில் எரிந்துகொண்டிருந்தது. அவன் தன் பெருவில்லவர் பன்னிரண்டாயிரம் பேரை திரட்டிக்கொண்டு மதுவனத்தை நோக்கி சென்றான். மதுவனத்தின் ஆயர்கள் அஞ்சி ஓடி காடுகளுக்குள் புகுந்தனர். அவர்களின் பசுக்குலங்களை கொன்றழித்தான். மதுவனத்தின் மீது எரி படரவிட்டான்.

அங்கிருந்த ஆயிரம் படகுகளில் அவன் வீரர்கள் மதுரா நோக்கி வந்தனர். அப்போது அங்கு பலராமர் இல்லை. ஏகலவ்யனை ஒடுக்கிவிட்டோம் என நம்பி அவர் தன் திசைப்பயணத்திற்காக வடபுலம் சென்றிருந்தார். மதுராவைத் தாக்கிய ஏகலவ்யன் அதன் கோட்டைகளை உடைத்தான். நகரத்திற்குள் அவன் அம்புகள் நச்சுப்பறவைகளென வந்து விழுந்து உயிர் குடித்தன. மதுரா நகர் எரியூட்டப்பட்டது. அதன் கருவூலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மதுராவின் ஏழாயிரம் படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.

அங்கிருந்து ஏகலவ்யன் துவாரகை நோக்கி சென்றான். முடிந்தவரை விரைவில் துவாரகை நோக்கி செல்லவேண்டும் என்றும், துவாரகையிலிருந்து வரும் இளைய யாதவரின் படையை நடுப்பாலையிலேயே சந்திக்கவேண்டும் என்றும், ஏகலவ்யனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது. உபப்லாவ்யத்தில் இருந்து அர்ஜுனனை தன்னை துரத்தி வரச்செய்து பாலைநிலத்தில் நெடுந்தொலைவு கொண்டுவந்து சிக்க வைக்கவேண்டும் என்றும் அஸ்தினபுரி தாக்கப்படும் செய்தி கேட்டாலும் பதினெட்டு நாட்கள் அவன் திரும்பிவரலாகாது என்றும் நிமலன் வகுத்திருந்தான்.

ஏகலவ்யனின் படை மதுராவை தாக்குவதை அறிந்து உபப்லாவ்யத்தில் இருந்து படைகளுடன் வந்த அர்ஜுனன் அங்கே எரியூட்டப்பட்ட நகரைக் கண்டு திகைத்தான். ஏகலவ்யன் மதுராவை அழித்துவிட்டு துவாரகை நோக்கி செல்வதை அறிந்து அவர்களை துரத்திச்சென்றான். ஆனால் ஏகலவ்யனை அர்ஜுனன் நெருங்குவதற்குள்ளாகவே இளைய யாதவர் எதிர்கொண்டார். அந்தப் போர் நடுப் பாலையில் நிகழ்ந்தது.

ஏகலவ்யனை எதிர்க்க துவாரகையிலிருந்து படை திரட்டிக்கொண்டு வந்து பாலைவனத்திற்குள் நிலைகொள்வது என்பது துவாரகையை கைவிடுவது போன்றது. கடல்படையெடுப்பாளர்கள் அந்நகரை சுற்றிவந்துகொண்டிருந்த காலம் துவாரகை அன்று அத்தனை எதிரிகளும் சூழ்ந்திருந்த இடர்நிலையில் இருந்தது. படைகளுடன் துவாரகையில் காத்திருந்து ஏகலவ்யனை அருகே வரவிடுவது என்பது துரத்திவரும் அர்ஜுனனை பாலையில் நெடுந்தொலைவு வரச்செய்து சிக்க வைப்பது. ஆகவே இளைய யாதவர் வெறும் நூறுபடைவீரர்களுடன் ஏகலவ்யனை எதிர்க்க கிளம்பினார்.

அவர்கள் பாலைநிலத்தில் கால்களில் அகலமான செயற்கைக்குளம்பு அணிந்த விரைவுப்புரவிகளில் வந்து ஏகலவ்யனின் படைவீரர்களை எதிர்கொண்டனர். இளைய யாதவர் செய்த ஒரு சூழ்ச்சியால் ஏகலவ்யன் பாலைநிலத்தில் சிக்கிக்கொண்டான். பாலைநிலத்தில் வரும் படைகள் நீர் நோக்கவும் திசையறியவும் பறவைகளை கூர்ந்து கணிக்கும் முறைமையை கடைப்பிடிப்பதே வழக்கம். அந்திப்பறவைகள் எத்திசையில் செல்கின்றனவோ அங்குதான் பாலைவனச்சோலைகள் அமைந்திருக்கும். இளைய யாதவர் துவாரகையிலிருந்து பயிற்றுவித்துக் கொண்டு வந்த பறவைகளை ஏகலவ்யனின் படைகளுக்கு குறுக்காக அனுப்பினார். அவை அவன் படைகளை தலைவழியாக கடந்து அப்பால் சென்று விழிமறைந்ததும் மண்ணிலிறங்கி மீண்டும் அங்கிருந்த துவாரகையின் படையினரின் கூண்டுகளுக்குள் சென்று நீரருந்தி உணவுகொண்டன.

பறவைகளின் செலவைக் கண்டு அத்திசையில் பாலைவனச்சோலை இருக்கிறதென்று வழிகாட்டிகள் கணிக்க ஏகலவ்யன் தன் படைகளைத் திருப்பி அங்கே கொண்டுசென்றான். இரவு எழும் வரை சென்றும் சோலையோ நீரோ தென்படாமல் அவன் படைகள் சோர்ந்தன. மறுநாள் புலரியில் அவர்கள் கிளம்பியபோது மீண்டும் அதேபோல பயிற்றுவிக்கப்பட்ட பறவைகள் திசைமாற்றி அழைத்துச்சென்றன. மூன்று நாட்கள் அவ்வண்ணம் திசைமாற்றி பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்ட ஏகலவ்யன் படைகள் தளர்ந்து செயலிழந்து மணலில் உழன்றன.

அவர்களை தான் விரும்பிய இடத்திற்கு இளைய யாதவர் அழைத்து வந்தார். அங்கு உரிய தருணத்திற்காக அவர் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்தது போலவே மணல்புயல் எழுந்து அவர்களை சூழ்ந்துகொண்டபோது அதை திரையென்றாக்கி அதனூடாக இளைய யாதவரின் நூறு வில்லவர்கள் நச்சு தடவிய அம்புகளுடன் ஏகலவ்யனின் படையை சூழ்ந்துகொண்டனர். விழி கட்டப்பட்டவர்களை கொன்று குவிப்பதுதான் அங்கே நிகழ்ந்தது. ஏகலவ்யனின் படைகள் முற்றழிந்தன.

புயல் தணிந்தபோது புண்பட்டு மண்ணில் புதைந்து கிடந்த ஏகலவ்யனை தேடிப்பிடித்து பின்கை கட்டி அழைத்து வந்தனர் இளைய யாதவரின் வீரர்கள். அவர்களுடன் நாற்பத்தெட்டு நிஷாத வீரர்களும் சிறையுண்டனர். ஏகலவ்யன் “நான் பிரக்ஜ்யோதிஷத்தின் படைத்தலைவன். அரசமுறைப்படி போர்புரிய படைகொண்டு வந்தவன். இங்கு நிகழ்ந்தது போரல்ல, சூழ்ச்சி மட்டுமே” என்றான். “எனினும் போர்த்தலைவனுக்குரிய நெறிமுறைகளை நாடுகிறேன். உரிய முறையில் நான் களப்பலியாக வேண்டும். இறுதிச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும்” என்றான்.

இளைய யாதவர் “உன் உடற்குறையை நீ உளக்குறையென்று ஆக்கிக்கொண்டாய். மதுராவிலும் மதுவனத்திலும் நீ செய்தது போரல்ல, உன் வஞ்சத்தை எளியவரிடம் தீர்த்துக்கொண்டாய். இதோ நெறிபிழைத்து தோற்கடிக்கப்பட்டாய் என்று உன் வாயால் சொன்னாய். அது இனிமேல் நீயும் உன் குடியும் நெறிகளை கடைப்பிடிக்க போவதில்லை என்பதற்கான அறிவிப்புதான். நாங்கள் முளைத்தெழும் குலம். தொடர்ந்து வரும் தாக்குதல்களால் எங்கள் இளம்பயிர் அழியலாகாது. எனவே இனி எவரும் எங்கள்மேல் படைகொண்டுவர எண்ணமுடியாதபடி உன் அழிவு நிகழவேண்டும்” என்றார்.

ஏகலவ்யன் “கொல்ல உங்களுக்கு உரிமை உண்டு யாதவரே, நான் மண்புகுவதை தடுக்கும் உரிமை இல்லை” என்றான். இளைய யாதவர் “நீ மண்புகக்கூடாது. மண்ணில் வேரென உறையும் உன் முன்னோருடன் நீ சேர நான் விடமாட்டேன்” என்றார். தன் வாளை உருவி அவன் தலையை வெட்டி வீழ்த்தினார். அந்தத் தலை தனியாக துவாரகைக்கு கொண்டுசெல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. உடல் பாலைநிலத்தில் பறவைகளுக்கு உணவாக அளிக்கப்பட்டது. ஒரு துளியும் மண்ணை அடையவில்லை. அச்செயல்கள் அனைத்தையும் நிஷாத வீரர்கள் பார்க்கும்படி செய்யப்பட்டனர். அவர்கள் அதை சென்று அறிவிக்கவேண்டும் என பாலைநிலத்தைக் கடந்து ஊர்திரும்பச் செய்யப்பட்டனர்.

“அக்கொலை அதற்கு முன் நிகழ்ந்தவற்றின் தொடர்ச்சி. அந்நிகழ்வுகள் அதற்கு முன் நிகழ்ந்தவற்றால் மூட்டப்பட்டவை. அது ஒரு நீள்சரடு. ஒருவேளை அதை இங்கு இவ்வண்ணம் முற்றறுத்து நிறுத்த அவர் விழைகிறார் போலும்” என்றார் சௌம்யர்.

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–87

$
0
0

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 6

மலையன் சொன்னான். அரசே, இளைய யாதவரின் விண்புகுதல் செய்தியை புறவுலகுக்குச் சொல்லும் கடமையை ஊழ் எனக்கு அளித்தது. சான்றாக அவருடைய காதில் கிடந்த குண்டலங்களையும் கையிலிருந்த கணையாழியையும் எடுத்துக்கொண்டேன். அவற்றிலிருந்த அருமணிகள் அனைத்திலும் உள்ளே சங்கும் ஆழியும் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்ணெதிரில் தூக்கிப்பார்க்கும் எவருக்கும் அது எவருடையதென்பது ஐயமில்லாது தெரியும்.

செல்லும் வழியெங்கும் நான் சூதரிடமும் வணிகரிடமும் அச்செய்தியை உரைத்துக்கொண்டே இருந்தேன். ஆகவே ஒற்றர்கள் வழியாக நான் செல்லும் இடத்திற்கெல்லாம் அச்செய்தி முன்னரே சென்று சேர்ந்திருந்தது. நான் சான்று காட்டி அதை உறுதிப்படுத்த மட்டுமே வேண்டியிருந்தது. என்னை யாதவ ஒற்றர்கள் பிடித்துக்கொண்டு படகினூடாக மதுரா நகருக்கு கொண்டு சென்றனர்.

யமுனையில் படகிறங்கி நகர்புகுந்து தெருக்களினூடாக வருகையில் அங்கு துயரம் நிறைந்திருப்பதை கண்டேன். ஆனால் பொன்றாப் பெருந்துயர் அல்ல அது. எதிர்பார்த்திருந்த ஒன்று நிகழ்கையில் எழும் நிறைவு கலந்த துயர். அது அசைவில்லாதது, மற்ற துயர்களைப்போல ஓங்கி தணிந்து அலைகொள்வதில்லை. இல்லத்து மாமுதியவர்கள் விழுகையில் அதை கண்டதுண்டு. மங்கலச் சாவு என்று அதை சொல்வார்கள்.

அது அவ்வண்ணமே நிகழும் என வாழ்வை அறிந்தமைந்தமையால் எழுவது. அல்லது நெடுங்காலம் தங்களைச் சூழ்ந்திருந்த ஒன்று அகல்கையில் ஏற்படும் விடுதலை உணர்வு. உண்மையில் சாவல்ல மனிதர்களை அலைக்கழிப்பது, சாவின் பொருளின்மைதான். இளமையில் நிகழும் சாவு துணுக்குறச் செய்கிறது. அது ஒரு பொருளில்லா விடுகதை. முதுமைச்சாவு தன் பொருளை தானே விளக்குவது. ஆகவே முடிவுகொண்ட பாடல் போன்றது.

நான் செல்கையில் மதுராவின் அரண்மனையின் சிற்றவையில் நிஷதன் தன் இளையோருடன் அமர்ந்திருந்தார். அவையில் என்னை கொண்டுசென்ற ஒற்றன் என் வருகையை அறிவித்தான். நான் உள்ளே சென்று என் ஊரையும் குலத்தையும் பெயரையும் அறிவித்து நிகழ்ந்தனவற்றை சுருக்கமான சொற்களால் கூறினேன். கூறிக் கூறி ஒரு செய்யுள்போல் அதை யாத்திருந்தேன். அவை முறைமைப்படி “இளைய யாதவர் விண்புகுக! வெல்க விருஷ்ணி குலம்! வெல்க யாதவப் பெருங்குலம்!” என்று ஓசையிட்டது.

ஆனால் நிஷதனும் உல்முகனும் இயல்பாகவே இருந்தனர். இருவர் முகங்களிலும் அதிர்ச்சியோ துயரோ தென்படவில்லை. நிஷதன் சற்று அசைந்து அமர்ந்து “தெய்வங்களும் மூதாதையரும் அருள்க! இதை இந்த அவை பல நாட்களாக எதிர்பார்த்திருந்தது” என்றார். “துயரத்திற்குரியது, எனினும் இயன்றே ஆவது. இவ்வண்ணம் இது நிகழவேண்டும் என்பதே ஊழ் எனில் அவ்வாறே.”

அமைச்சர் ஒருவர் “முறைப்படி இதை நகருக்கு அறிவிக்கலாமல்லவா?” என்றார். “நகர் முன்னரே அறிந்திருக்கிறது. நாம் அளிக்க வேண்டியது அரச உறுதிப்பாட்டை மட்டுமே. அரசமுறையாக பதினாறு நாள் துயரத்திற்கும், நாற்பத்தியோராவது நாள் விண்ணேற்றச் சடங்குகளுக்கும் ஆணையிடுக! அனைத்தையும் ஒருங்கு செய்க!” என்றார் நிஷதன். “ஆணை” என்று அமைச்சர் தலைவணங்கினார்.

பின்னர் அங்கு நிகழ்ந்ததெல்லாம் அரசுசூழ்தல் மட்டுமே. எவ்வண்ணம் அத்துயர் அறிவிக்கப்படவேண்டும், அரசகுடியினரில் எவருக்கெல்லாம் அத்துயர் அறிவிக்கப்படவேண்டும், அதற்கான சொற்கள் மற்றும் முறைமைகள் என்னென்ன, விருஷ்ணி குலத்தில் எவரெவருக்கெல்லாம் செய்திகள் செல்லவேண்டும், எந்த அடுக்கில் அனுப்பப்படவேண்டும் என்பவை பேசப்பட்டன. நான் சிறு பீடத்தில் கைகளைக் கட்டி அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தேன். முதலில் என் உள்ளம் எரிந்தது, கொந்தளித்தது, பின் அடங்கியது, இறுதியில் நான் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.

“மதுராவிலிருந்து இளைய யாதவரின் எட்டு அரசியருக்கும் முறைப்படி செய்தி அறிவிக்கப்படவேண்டும்” என்று நிஷதன் கூறினார். “அவர்கள் முன்னரே அறிந்திருப்பார்கள் எனினும் உறுதிப்பாட்டை அறிவிக்க விருஷ்ணி குலத்தவராகிய நாம் கடமைகொண்டுள்ளோம். அவருடைய கொடிவழியில் இனி எஞ்சியிருப்பவர்கள் நாங்கள் இருவருமே. மைந்தரென நீர்க்கடன் செய்யவேண்டியவர்களும் நாங்களே” என்றார்.

நான் அங்கிருந்து அஸ்தினபுரிக்குச் செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மதுராவிலிருந்தே அஸ்தினபுரிக்கு அமைச்சர் ஒருவர் செய்தியுடன் அனுப்பப்பட்டார். எட்டு அரசியரையும் தனித்தனியாக சென்று பார்த்து செய்தி சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இருந்தது. அதற்கான தேவையும் இல்லை என்று தெரிந்தது. எனது பணி அறிவித்தல் அல்ல, உறுதிப்படுத்தலே. அதை நான் செய்துவிட்டேன்.

இளைய யாதவரின் கணையாழியையும் குண்டலங்களையும் நிஷதனின் அவையில் ஒப்படைத்துவிட்டு அன்றே அங்கிருந்து கிளம்பினேன். இனியென்ன என்ற எண்ணம் எழுந்து சலிப்புற்றேன். மதுராவின் தெருக்களில் வருகையில் ஏதோ சூதன் ‘வில்லேந்திய விஜயனும் தேரோட்டியாகிய கிருஷ்ணனும்’ என்ற சொல்லை பாடினான். அக்கணம் எனக்கு தெரிந்தது, என் ஊழ் என்னை செலுத்துவது எங்கே என்று. உங்களைக் கண்டு இச்செய்தியை சொல்லவேண்டும் என்ற முடிவை அப்போதுதான் எடுத்தேன். அங்கிருந்து நேராக இங்கு வந்தேன்.

நான் வரும் வழியிலேயே தொடர்ந்த செய்திகள் வந்தடைந்தன. இளைய யாதவரின் எட்டு அரசியரும் நீர் புகுந்தும் எரிபுகுந்தும் உயிர் துறந்தனர். ஷத்ரிய அரசியரான ருக்மிணியும், நக்னஜித்தியும், லக்ஷ்மணையும், மித்ரவிந்தையும், பத்ரையும் தங்கள் நகர்களில் ஷத்ரிய முறைப்படி எரிபுகுந்தனர். தென்புலத்தில் சிதைகூட்டி, எரி எழச்செய்து, மங்கலத்தோற்றத்துடன் மலர் மாலை சூடி கைகூப்பி எரிபுகுந்து விண் எழுந்தனர்.

முறைப்படி அவர்களின் ஆடைகளும் அவர்கள் தங்கள் கொழுநருடையதென்று கொண்டிருந்த நினைவுப்பொருட்களும் அச்சிதையிலேயே வைக்கப்பட்டன. “சதி அன்னை விண்புகுந்தார்!” என்று சூழ்ந்திருந்த வீரர்களும் குடியினரும் புகழொலி எழுப்பினர். அனல் அணைந்த பின்னர் அவர்கள் அணிந்திருந்த மாலைகள் வாடாமல் சிதையில் எஞ்சின. அவர்கள் அணிந்திருந்த பொற்கலங்கள் உருகாமல் ஒளிகொண்டு கண்டெடுக்கப்பட்டன. அச்சிதையின் கன்னிமூலையில் சதிக்கல் நாட்டப்பட்டு அங்கே அவை கொண்டுசென்று வைக்கப்பட்டன.

அவர்களின் நகரிலிருந்து பெருந்திரளென குடிகள் சென்று எரிபுகுந்த அன்னையரை வணங்கி வாழ்த்து கொண்டனர். சிறுமியரை அன்னையர் கொண்டுவந்து அங்கு பணிந்து வணங்கச்செய்து அச்சிதையிலிருந்து எடுத்த சாம்பலை நெற்றியிலும் வகிடிலும் அணிவித்து நெறிச்சூளுரை கொண்டனர். அரசகுடிப் பெண்டிர் அனைவரும் வந்து அங்கே முழுநாள் உண்ணாநோன்பிருந்து வழிபட்டனர்.

ஏழு நாட்கள் விண் நீங்கிய அன்னைக்கு பூசனையும் வழிபாடும் நடந்தது. ஏழாம் நாள் பேருண்டாட்டும் களியாட்டும் ஆணையிடப்பட்டது. அங்கே துயர் மறைந்து கொண்டாட்டம் எழுந்தது. வண்ணக் கொடிகளும் தோரணங்களும் மங்கல இசையும் சிரிப்பொலிகளும் பெருகி நகரங்கள் அதிரத் தொடங்கின. ருக்மிணியின் விதர்ப்பத்திலும், நக்னஜித்தியின் கோசலத்திலும், மித்ரவிந்தையின் அவந்தியிலும், லக்ஷ்மணையின் மத்ரநாட்டிலும், பத்ரையின் கேகயத்திலும் நாடெங்கும் அவ்விழா கொண்டாடப்பட்டது.

நீர்புகும் மரபு கொண்ட தொல்குடிகளின் அரசியராகிய யாதவகுலத்து சத்யபாமையும், களிந்தமச்சர் குலத்து காளிந்தியும் யமுனையிலும், நிஷாதகுலத்து அரசி ஜாம்பவதி கங்கையிலும் மூழ்கி உயிர்நீத்தனர். தொல்முறைப்படி எளிய வெண்ணிற ஆடை அணிந்து, மங்கல அணிகள் சூடி, மலர்மாலைகள் அணிந்து கைகூப்பியபடி அவர்கள் நீரில் இறங்கி மூழ்கி மறைந்தனர். அப்போது அவர்களின் அணுக்கச்சேடியர் மட்டுமே உடன் சென்றனர். நீர்மறைந்தவர் பெருக்கில் குமிழிகளாக மறைந்த பின்னர் கரையில் நின்றவர்கள் தங்கள் கையிலிருந்த கலங்களை முழக்கி ஓசை எழுப்பினர். அதை கேட்ட அவர்களின் குடியினர் தங்கள் கலங்களை முழக்கியபடி “நீர்மகள் விண்புகுக! மூதன்னையர் அருள்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

அவ்வோசை யாதவ நகர்கள் தோறும் பரவிச்சென்றது. யமுனையின் இரு கரைகளும் அவ்வாழ்த்தொலியால் முழங்கின. ஏழு நாட்கள் அங்கு துயர் கொண்டாடப்பட்டது. அன்னையர் நீர்புகுந்த இடங்களில் ஆற்றுக்கரையோரம் அவர்களுக்கு நடுகல் நிறுவப்பட்டு அருகே ஆலமரக்கன்று நடப்பட்டது. குடிப்பெண்கள் வந்து ஏழு நாட்கள் நீரும் அன்னமும் அளித்து மலரிட்டு வணங்கினார்கள்.

ஏழாவது நாள் அவர்களின் விண்ணேற்றத்திற்கான சடங்குகள் நிகழ்ந்தன. யாதவகுடிப் பெண்கள் அன்றுவரை ஒருவேளை உணவுண்ணும் நோன்பு கொண்டிருந்தனர். ஏழாம் நாள் இன்னுணவு உண்டு மலர் மாலை சூடி புத்தாடை அணிந்து தெருக்களில் இறங்கி கொண்டாடினர். “உடன்நீத்த அன்னையர் வாழ்க! விண்புகுக மூதன்னையர்!” என்று யாதவநிலம்தோறும் வாழ்த்தொலிகள் எழுந்தன.

இளைய யாதவருக்கான நாற்பத்தொன்றாவது நாள் நீர்ச்சடங்கு யாதவ ஊர்கள்தோறும் அறிவிக்கப்பட்டது. நாற்பத்தொரு நாளும் ஆண்களுக்கு ஒருவேளை நோன்பு என மரபு. ஆனால் அவரது குடியாகிய விருஷ்ணிகள் அன்றி எவரும் அதை முறையாக கடைபிடிக்கவில்லை என்று அறிந்தேன். போஜர்களும் ஹேகயர்களும் அந்தகர்களும் அவரை தங்களவர் என்றே எண்ணவில்லை. ஒரு வெற்றுச்சடங்காகவே அந்நோன்பு நிகழ்ந்தது.

இளைய யாதவர் அரசியல் நீத்ததுமே பெரும்பாலானவர்கள் அவரை மறந்துவிட்டிருந்தனர். அவர் இறந்துவிட்டார் எனும் செய்தி மீள மீள பல முறை வந்து அவர்களின் உணர்வுகளை பழக்கிவிட்டிருந்தமையால் மெய்யாகவே உயிர்நீத்தார் என்ற செய்தி எவரிலுமே எத்துயரையுமே உருவாக்கவில்லை. நீரில் ஒரு குமிழி உடைந்து மறைவதுபோல் அவர் குடிகளின் நினைவிலிருந்து அகன்றுவிட்டிருந்தார். பல ஊர்களில் திருமணநிகழ்வுகளும் பிற மங்கலநிகழ்வுகளும் இயல்பாக நடைபெற்றன.

நான் சூதர்களிடமிருந்து செய்திகளை பெற்றுக்கொண்டு கிழக்கு நோக்கி வந்துகொண்டிருந்தேன். பின்னர் கிழக்கில் தங்கியிருக்கையில் நகர்களினூடாக வந்த வணிகனொருவனை கண்டேன். அவன் இளைய யாதவர் மறைந்த செய்தி மக்களால் ஏற்கெனவே மறக்கப்பட்டுவிட்டது என்று கூறினான். இன்று தொல்கதைகளில் இருக்கும் ஒரு தெய்வ உருவகம் என்பதற்கப்பால் எவருக்கும் அவரைப்பற்றி ஏதேனும் தெரிந்திருக்குமா என்பதே ஐயம்தான் என்றான்.

“இளையோருக்கு அவர் வெறும் கதை மட்டுமே. முதியவருக்கோ அவர் மீது உளக்குறைகளும் கசப்புகளும் இருந்தன. மக்கள் குருக்ஷேத்ரப் பெரும்போரை உருவாக்கி, பல்லாயிரவரை கொன்றழித்து, பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களை ஆற்றலிழக்கச் செய்து, தன் குடியை நிலைநிறுத்த முயன்ற ஒரு யாதவ அரசன் என்பதற்கு அப்பால் அவரைப்பற்றி எக்கருத்தும் கொண்டிருக்கவில்லை. அவர் செய்த அப்பழியால் தெய்வங்கள் முனிந்து அவர் குலத்தை முற்றழித்தன என்று முதியவர் ஒருவர் ஊர்மன்றில் கூறியபோது அங்கிருந்த பிற முதியவர் அனைவரும் அதை ஏற்பதை கண்டேன்” என்று அந்த வணிகன் சொன்னான்.

இன்று அவரைப்பற்றி பாரதவர்ஷம் அவ்வாறே எண்ணிக்கொள்கிறது என்று தோன்றுகிறது. அவர் உரைத்த நூல் ஒன்று வேதமுடிபுக்கொள்கை கொண்டோர் நடுவே புழங்குகிறது என்றார்கள். வேதமுடிபுக் கொள்கையுடையவர்கள் அவ்வண்ணம் பல நூல்களை கொண்டிருக்கிறார்கள். ‘தன்னளவே உயரமாக சுவடிகளை அடுக்கி அவற்றை பயின்று முடிப்பவனே முதல் வேதமுடிபுக்கொள்கையினன். அவற்றை ஒட்டி தானே ஒன்று எழுதி முடிப்பவன் அக்கொள்கையை கடந்தவனாகிறான்’ என்று சூதரிடையே இளிவரல் உண்டு. அந்த நூலடுக்குகளில் ஒன்றென அவருடைய வேதமும் மறைந்துவிட்டிருக்கக் கூடும். எஞ்சுவது ஒன்றுமில்லை.

“ஆம் அரசே, எஞ்சுவது ஒரு துளியுமில்லை. எஞ்சுவது என்பது எப்போதும்போல் ஒரு நினைவு. அந்நினைவோ நினைக்கப்படுபவரால் நினைக்க நினைக்க புனையப்படுவதன்றி மெய்யல்ல. இப்புவியில் மெய்யென திகழ்வதெல்லாம் பொய்யென புரிந்துகொள்ளப்படுகின்றன. கண்முன் இருந்து மெய் மறைந்த பிறகு பொய் எஞ்சியிருக்கிறது” என்று மலையன் கூறினான்.

அர்ஜுனன் கூப்பிய கைகளுடன் அதைக் கேட்டு அமர்ந்திருந்தான். அவன் விழிநீர்விடவில்லை. அவன் உடல் மெய்ப்பாடென எதையும் காட்டவில்லை. விழிகள் தழைந்து நிலம்நோக்கி இருந்தன. ஒருசொல்லும் உரைக்கவில்லை. பின்னர் நீள்மூச்சுடன் நிமிர்ந்து விண்ணை நோக்கி வலக்கை சுட்டுவிரலால் மண்ணைத் தொட்டு “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

 

நாக நிலத்தின் எல்லையிலிருந்து அர்ஜுனன் நேராக அஸ்தினபுரி நோக்கி கிளம்பினான். கிளம்பிய பின் மெல்லிய ஓர் அமைதியின்மை என அச்செய்தி அவனில் வேரோடியது. மெல்லமெல்ல அவனை ஆட்கொண்டது. பித்தனென்றாக்கியது. செல்லச் செல்ல அவன் உள்ளம் கொந்தளிப்படைந்தது.

முதல் சில நாட்கள் எங்கும் நிற்கவோ அமரவோ படுக்கவோ முடியாதபடி அவன் உணர்வுகள் அலைகொண்டன. ‘எவ்வாறு! எவ்வாறு! எவ்வாறு! எவ்வாறு!’ என்று அவன் ஆழம் கரைகளில் வந்து அலையறைந்து கொண்டிருந்தது. எவ்வாறு நிகழக்கூடும்! எவ்வாறு அது இயலக்கூடும்! எவ்வாறு அது மறையக்கூடும்! மறையுமெனில் நிகழ்ந்தவை முற்றிலும் பொருளற்றவை. ஒவ்வொன்றும் பொருளற்றவை.

பின்னர் மெல்ல அவன் உள்ளம் அடங்கலானான். நீண்ட பயணத்தின் சலிப்பே உள்ளத்தையும் அமையச்செய்தது. ஆழ்ந்த துயரை சென்றடைந்தது அவன் அகம். ‘அவ்வண்ணமே! ஆம், அவ்வண்ணமே! அவ்வண்ணமே!’ என்று அவன் உள்ளம் மாறியது. இங்கு வந்த அனைவரும் அவ்வண்ணமே ஆயினர். ராகவராமனின் வெற்றி தொல்கவிஞனின் கவிப்பொருள் என்றாகியது. அவன் காவியத்தலைவன் என்று சொல்லில் நின்றிருக்கிறான். அன்றி இங்கெதுவும் நிலைகொள்வதில்லை.

எனில் எதற்கு எழுகிறார்கள்? ஏன் அனல் பெருக்கி பேருருக் கொள்கிறார்கள்? அலை நிகழ்த்துகிறார்கள், விண் வெடித்துச் சென்று மறைகிறார்கள். பேருருவர்கள் எழுந்து எழுந்து மறைய இப்புவி இவ்வண்ணமே இருக்குமெனில் அவர்கள் பேருருவர்கள்தானா? அலைகடலில் ஆயிரம் பல்லாயிரம் அலைகளுக்கு ஒருமுறை பேரலை எழுந்து வரும் என்பார்கள். கரைநிற்பவரின் அச்சமே சிற்றலையிலிருந்து பேரலையை பெரிதாக்கி காண்கிறது. கடலுக்கு அனைத்தும் ஒன்றே.

பின்னர் அவன் தெளிவுற்றான். ‘இனி! இனி! இனி!’ என்று அவன் உளம் மாறியது. சென்று இயற்றவேண்டிய பணியை அது குறிக்கிறது. வென்று ஒரு நாட்டை இளைய யாதவர் தனக்களித்தது ஒருவேளை இதற்காக இருக்கலாம். ஐந்தாவது வேதம் நிலைகொள்ள வேண்டும். புதுநெறி புவி தழைக்க வேண்டும். அதற்கு எழவேண்டும் அஸ்தினபுரியின் செங்கோல். அதற்கென்றே நான் திரும்பிச்செல்கிறேன். ஆணையிடும் பொருட்டு, நிறுவும் பொருட்டு.

ஆனால் அப்போது அச்சமூட்டும் ஓர் எண்ணமாக உணர்ந்தான், இளைய யாதவரின் ஐந்தாம் வேதத்தின் ஒரு சொல்கூட அவன் நினைவுக்கு வரவில்லை. பதற்றத்துடன் துழாவுந்தோறும் சொற்கள் முற்றகன்று சென்றன. மீண்டும் மீண்டும் உள்ளத்தின் அடுக்குகளைத் துழாவி, சலித்து, கண்ணீருடன் அவன் பின்னடைந்தான். ஒரு சொல்கூட எஞ்சவில்லை. முற்றாக தானும் மறைந்துவிட்டிருந்தது.

இனி வாழ்வதில் பயனில்லை என்று தோன்றியது. அங்கேயே ஏதாவது குகையில் அமர்ந்து உயிர்விடவேண்டும். அதுவே இனி உகந்த செயல். அறியப்படாதவனாக, எஞ்சாதவனாக. எஞ்சுவதைப் பற்றிய எண்ணங்கள் எல்லாமே பொய்யானவை. எஞ்சாதொழிவதிலேயே இன்றிமையாத ஒழுங்கு உள்ளது. அவன் தனக்குரிய குகையொன்றைத் தேடி அந்த வறண்ட காட்டில் அலைந்தான். பின்னர் மலையுச்சியில் நின்று வௌவால்கள் அந்தியில் எழும் திசையை கண்டான். அதை நோக்கிச் சென்று அங்கே ஒரு சுண்ணக்கல் குகையை கண்டடைந்தான்.

குகைக்குள் சென்று, அதன் இருட்டில் தவழ்ந்து, தனக்கென்றே அமைக்கப்பட்டிருந்த சிறு பீடமொன்றில் அமர்ந்தான். கைகளை மடிமேல் முழுவிடுகை முத்திரையில் வைத்து, மூக்கு நுனியில் விழி சேர்த்து, உளம் குவித்து அமர்ந்தான். உணவும் நீரும் ஒழிந்தமையால் ஏழு நாட்களில் தன் உயிர் பிரியுமென்று எண்ணிக்கொண்டான். ஏழு நாட்களில் என் அலைகள் ஓய்ந்து நான் விடுபடுவேன் எனில் விண்புகுவேன்.

உணவை ஒழிப்பதுபோல் எண்ணம் ஒழிவதற்கு சிறந்த வழி வேறில்லை. அது அடுப்பிலிருந்து விறகை விலக்குவதுபோல. உண்ணா நோன்பிருந்தவர்கள் உளம் அடங்கி விண் ஏகுவதை அவன் கண்டிருந்தான். என்னால் இயலவேண்டும். இயன்றாகவேண்டும். இனி வெல்வதற்கென எஞ்சுவது அது மட்டுமே. அதில் தோற்றால் அடைந்தவை எல்லாம் தோல்விகளே.

அந்த எண்ணமே தன் இயலாமை குறித்த பதற்றமாக, துயராக எழுந்தது. அவன் மூன்று நாட்கள் அங்கு அமர்ந்திருந்தான். மூன்று நாளும் உள்ளம் முழு விழிப்புநிலையிலேயே இருந்தது. மூன்றாவது நாள் வெளியே பேச்சுக்குரல்களை கேட்டான். கொடியேணியை உச்சிப்பாறையிலிருந்து கட்டித்தொங்கவிட்டு அதனூடாக இறங்கி வந்து மலைத்தேன் எடுத்துக்கொண்டிருந்த நிஷாதர்களின் பேச்சு அது என உணர்ந்தான்.

மெல்லிய சொற்கசங்கல்களாக அவர்களின் உரையாடல் கேட்டது. அவர்களில் ஒருவன் கூறினான். “அஞ்சுவதற்கு என்ன உள்ளது இங்கே? மறம் ஓங்கி அறம் அழிகையில் நான் நிகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பரம்பொருள் மானுடனுக்கு ஒரு சொல்லளித்திருக்கிறது அல்லவா?”

மேலிருந்து அறுந்து மண்ணில் வந்து அறைந்து விழுந்ததுபோல் அர்ஜுனன் விழித்துக்கொண்டான். எழுந்து இருளில் தடுக்கி விழுந்து எழுந்து ஓடி குகையிலிருந்து வெளிவந்து அவ்வேடர்களை பார்த்தான். இருவரும் இளையவர்கள். “என்ன சொன்னீர்கள்?” என்று கூவினான். “சற்று முன் ஒரு பாடல்வரியை சொன்னீர்கள்… அது என்ன?”

அவர்களில் மூத்தவன் “முனிவரே, நீங்கள் யார்? இக்குகைக்குள்ளா இருந்தீர்கள்?” என்றான். “சற்றுமுன் நீங்கள் கூறியதென்ன? அவ்வரியை எங்கு பெற்றீர்கள்?” என்றான். “இது எங்கோ சூதர் ஒருவரால் கூறப்பட்டது. எங்கள் முதியவர்கள் இதை அடிக்கடி கூறுவதுண்டு” என்றான் முதியவன்.

அர்ஜுனன் “இது ஒரு புது வேதத்தின் வரி என்பதை அறிவீர்களா?” என்றான். “ஆம், இதன் ஒரு வரியையேனும் அறியாத எவரும் இங்கில்லை. யாரோ பாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் இது பாடுவதற்கு எளியது, இனியது. நானே ஒவ்வொரு நாளும் கடமையை செய்க, பயனை அளிப்பது படைத்தவனின் கடன் என்று கூறிக்கொள்வதுண்டு” என்றான் முதியவன்.

அர்ஜுனன் ஒரு கணத்தில் ஐந்தாம் வேதத்தின் ஒவ்வொரு சொல்லையும், ஒலியையும் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்துக்கொண்டான். இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி கண்ணீருடன் அங்கிருந்து திரும்பி நடந்தான். சிரித்துக்கொண்டும் தலையசைத்து தனக்குத்தானே பேசிக்கொண்டும் நடந்து அருகிருந்த சிறு நகரின் விடுதியை அடைந்தான். அங்கு கிடைத்த உணவை உண்டு அதன் ஓரமாக மரவுரியை விரித்து படுத்துக்கொண்டான்.

அங்கு வணிகர்கள் கூடி அமர்ந்தனர். நடுவே விழியிலாத சூதன் ஒருவன் அமர்ந்து புற்குழல் இசைக்கத் தொடங்கினான். முதற்சுருள் எழுந்தபோதே அர்ஜுனன் திகைத்து எழுந்து அமர்ந்தான். அவன் அசைவைக் கண்டு அனைவரும் திரும்பிப்பார்த்தனர். சூதன் குழல் தாழ்த்தி “கூறுக, முனிவரே!” என்றான். “இதை எங்கு கற்றீர்?” என்றான். “இது என் ஆசிரியராகிய முதுசூதர் பாசர் பயணியாகிய சூதர் ஒருவரிடமிருந்து கற்றது” என்றான் சூதன்.

“அவர் எங்கு கற்றார்? இந்த இசை நான் நன்கு அறிந்தது. இங்கு அனைத்தையும் நிகழ்த்திய இசை இது” என்றான் அர்ஜுனன். “என் ஆசிரியரின் ஆசிரியர் இதை விழியிழந்த இளங்குமரன் ஒருவனிடம் இருந்து கற்றார். நாவும் செவியும் விழியும் அற்றவன். இசையொன்றினால் மட்டுமே உலகுடன் பேசுபவன். அவன் பெயர் முரளி. யாதவ அரசகுடியில் பிறந்தவன், யமுனைக்கரையில் புற்குடிலொன்றில் தனிமையில் தங்கியிருக்கிறான். அவனைத் தேடி சூதர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவனிடமிருந்து அந்த இசை எங்கும் பரவுகிறது” என்றான் சூதன்.

“சூதரே, நீங்கள் எங்கிருந்து இதை கற்றீர்?” என்று அர்ஜுனன் கேட்டான். “நான் தென்திசையைச் சேர்ந்தவன். என் பெயர் கந்தன். இதை மேற்குப்புலத்தைச் சார்ந்த யவனச்சூதராகிய பாசரிடமிருந்து கற்றேன்” என்று அவன் சொன்னான். “இவன் என் மாணவன்” என்று அருகிருந்தவனை சுட்டிக்காட்டி “இவன் கிழக்கு நிலத்தை சேர்ந்தவன்” என்றான்.

இசைக்குமாறு கைகாட்டி அர்ஜுனன் மல்லாந்து படுத்தான். அவனைச் சூழ்ந்து குழலிசை எழுந்து பரவியது. அது ஐந்தாம் வேதத்தின் சொற்களில் பரவியிருப்பதை அவன் அறிந்தான். அவ்விசையில் ஐந்தாம் வேதத்தின் சொற்கள் ஊடுருவியிருந்தன. கண்ணீர் வழிய புன்னகைத்தபடி அவன் அதை கேட்டுக்கொண்டிருந்தான். பெருநதியில் சிறு துரும்பென அதில் மிதந்து சென்றுகொண்டிருந்தான்.

[கல்பொருசிறுநுரை நிறைவு]

தொடர்புடைய பதிவுகள்

ஒன்பது கதைகள் -கடிதங்கள்

$
0
0

ம.நவீன்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நீங்கள் கொடுத்த ஒன்பது கதைகளையும் படித்தேன். நவீனத்தமிழிலக்கியத்தில் இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு குறுக்குவெட்டாக காட்டிய கதைகள். இடம்பெயர்வு- பண்பாட்டுப்பெயர்வு ஆகியவையே கருப்பொருளாக இருக்கின்றன. சித்துராஜ் பொன்ராஜின் உஷ்ணம், அனோஜன் பாலகிருஷ்ணனின் உதிரம், ரா செந்தில்குமாரின் இசூமியின் நறுமணம் உமையாழின் கிருமி ஆகியவை இதுவரை தமிழில் இல்லாத பண்பாட்டுச் சிக்கல்களைப் பற்றிப் பேசுகின்றன.

செந்தில்குமார்i

இந்தக்கதைகளில் உள்ள பொதுத்தன்மையை பேசவேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இவை மூன்றிலுமே காமமும் பெற்றோரும் சந்திக்கும் புள்ளி இருக்கிறது. பெற்றோர் என்பதை இங்கே பாரம்பரியம் என்று வைப்போம். உஷ்ணம் கதையின் கதாநாயகிக்கு அவள் அம்மாதான் பாரம்பரியம். அவளுடைய கண்டனம் பின்பக்கம் சாட்டை மாதிரி சொடுக்கிக்கொண்டே இருக்கிறது. அவளிடமிருந்து தப்பி ஆனால் சமையலறைக்குள் அவளை வைத்துக்கொண்டு வாழ்கிராள்

அகரமுதல்வன்

உதிரம் கதையில் அம்மாவின் காமத்தை அம்மாவின் உதிரத்துடன் இணைத்து புரிந்துகொள்கையில் விடுதலை அடைகிறான் மகன். இசூமியின்நறுமணம் இன்னொரு வகையில் அந்த ‘ரத்தமணம்’ பற்றிய கதை. ஆனால் அது இயற்கையின் அழகான அம்சமாக அதைப்பார்க்கிறது. அதேபோன்ற ஒரு கதைதான் கிருமி. அதிலும் அப்பாவை பற்றிய நினைவுதான் கதை.

தெய்வீகனின் அவனை எனக்குத் தெரியாது கதை புலம்பெயர்வு மனிதனை அடையாளமற்றவனாக ஆக்குவதைப் பற்றிய கதை – ஆனால் அது வெளியே. அவன் அடையாளம் கொண்டவனாகவே அகத்தில் இருக்கிறான்

தெய்வீகன்

எம்.கே.மணியின் கவி இன்று எழுதப்படும் நகர்ப்புற அடித்தள வாழ்க்கைக்கும் தனாவின் வில்வண்டி கிராமத்துக் கதைக்கும் உதாரணம். இரண்டுமே ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் தொடர்ச்சியாக, இன்னும் சரியான வடிவம் நோக்கிச் செல்பவையாக அமைந்துள்ளன. உருவகக் கதையான நெடுநிலத்துள் ரத்தத்தின் கதை

இந்தக்கதைகளின் வழியாக இன்றைக்கு என்னென்ன கதைக்கருக்களில் என்னென்ன வடிவங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அனோஜன் பாலகிருஷ்ணன்

ஆனால் ஒரு சின்ன சந்தேகம். நான் தமிழிலே நிறைய படிப்பவன் அல்ல. தேடியபோது இவர்களில் நவீன்,தெய்வீகன், அனோஜன், உமையாழ்,அகரமுதல்வன்,சித்துராஜ் பொன்ராஜ் ஆகிய ஆறுபேரும் இந்தியத்தமிழர்கள் இல்லை.தமிழ்நாட்டுச்சூழலை வைத்து எழுதவுமில்லை. எம்.கே.மணி, தனா, ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள். இந்த சரிவீதம் இன்றைக்கு உள்ள எழுத்திலும் இருக்கிறதா?

எஸ்.கிருஷ்ணன்

மணி.எம்.கே,மணி

ஜெ,

69 முடிவுக்கு பின் ஒரு வாரமாக நிறுத்தி கொண்டு, கிருஷ்ணனின் இறப்பிற்கு தயாராகி , நேற்று  நீர்புகுதல் படித்து அயர்ந்து கிடந்தது மனம். இடையில் சில கதைகளை படித்தாலும் உள்ளே செல்லவில்லை. ஏன்? மழைக்கு பின் ஒடும் ஒடை என உங்களின் கதை செல்லும் முறைக்கு போதை ஆகி விட்டது என தோன்றியது.

உங்களின் எல்லா கதைகளும் உள்ளே இழுத்து கொள்ளும் வேகம் அதிகமானது. புதிய கதைகளில் , வில்லுவண்டி – இறுக்கமாக முடைந்து செய்யப்பட்ட மூப்பின் பாரம் பற்றிய கதை.  நீரை விசிறி சேலையை போர்த்திவிடும் போதே அவரின் சடவு தெரிந்துவிட்டது. ஆனால்  அழுத்தமாக – உணர்ச்சியாக – அயர்ச்சியாக அந்த எடை குறித்து சொல்லாமல், இறுதியில் உடைந்து அழும் போது வண்டியின் பாரம் மனதில் சுமையாகி போனது.

சித்துராஜ் பொன்ராஜ்

ஒற்றை சக்கரம் இற்று மண் அண்டி கிடக்க, ஒடும் சக்கரம் தனியே சென்று விட்டது. சரியான இடத்தில், ஆஸ்பத்திரி செல்லும் முன் சக்கரம் விற்பது ஒரு சாங்கித காட்சியாக தெரிகிறது. வண்டியில் வந்து ஏறிக்கோ  என அரிவாளுடன் சொன்ன செந்தட்டிக்கு இன்று முடியவில்லை. முக்கியமாக, அவரால் தன்னை தாங்கி கொள்ள முடிந்ததனால், விறுட்டென கிளம்பி விட முடிந்தது.

கிழவி எனும் பெண்ணுக்கு ஆறு தான் இறுதி வழியா? இருவரும் நீருள் இறங்கி இருந்தால் அது கனவின் லட்சியவாத முடிவு. இது தான் நடைமுறை எதார்த்தமா? மிக சரியான அளவில் கதை சொல்லும் முறை. எளிதில் கோர்த்து செல்லும் வகையில் தெரிந்த மண் வாசனை சரடாக பாஷையும், பெயர்களும். உணர்ச்சி தருணங்கள் எதுவும் வெடித்து தெறிக்காமல், சீரான நதி ஒட்டம் போல கதையின் நகர்வு.

உமையாழ்

மூப்பிற்கு வானவில்லின் வண்ணவகை எதற்கு என்று விட்டு விட்டார் போல. எடிட்டிங் வகை காட்சி மாற்றங்கள் மிக சரியாக அமைத்து இருந்தார். அந்த கோவிலில் நடந்த கல்யாண காட்சிக்கு பின் விரபாண்டி ஆறு செல்வது  நொடி என ஒரு வாழ்வு முடிந்து போன ஒரு  மின்னல். அந்த கடைசி வரியாக ஆற்றிலோடுங்குதல் படித்ததும் ஒரு திடுக்கிடலாக படர்ந்தது… பல தடவை காதில் விழுந்த  “ எங்காவது ஆறு கொளத்தில விழுந்து செத்து போறேன் “ என்கிறதான அடிக்கடி பெரிசுகளின் வாயில் விழும் வார்தைகள். ஒரு வேளை பல தலைமுறைகளுக்கு முன் அது தான் அன்று கண்ணுக்கு தெரியாமல் நிகழ்ந்து வந்த ஒரு கூடு உதிர் முறையோ?

உஷ்ணம் – ஒரு சிறு கிளர்ச்சி என அந்த பெண்ணின் கூடல் குறித்தான விவரணை கதையை செலுத்தி செல்வதாக பட்டது. மிக அழகாக மொழி பெயர்க்கப்பட்ட வேறு நாட்டின் சிறுகதையில் , அதன் நுண்ணிய விவரப்பில் ஒட்டாமல் இருப்பது என அந்த தமிழ் அம்மாவும் அந்த அறிவுறுத்தல்களும் மாரியம்மன் திருவிழா போன்றவையும் அந்நியம் போல இருந்தது, அந்த உஷ்ணமே கதை.

தனசேகர்

அப்படிதான் அந்நியமாக வெளியில் இருந்தாலும் அவரவர் உலகம் அவரவரின் நாடு, ஊர், இன்ன பிற பதிவுகள் உள் அகம் என இருக்க, வெளியில் வேறு வகை என புறம் இருக்க, இயைதல் இல்லாமல் உரசி உரசி உஷ்ணம். சிறுகசிறுக சேர்த்த பெரிய வீடு சுருங்கி போனது போல தான் எல்லாமும்.  அணியும் உடையை கழற்ற விடாத பழைய பிடித்தல்கள், விட முடியாத அல்லாடகள் எல்லாம் மெளனமாக அவளுள்.

வில்லுவண்டியில் இருவரும் இறுதி வரை இழுத்து முடித்து முடியாமல் இயல்பாக அழுது விட்டு பிரியும் வகை எனில், இதில் தேவை தீர்ந்து பிரிந்து செல்லும் வாடகை உறவுகளும் , தொடர்ந்து இருக்கும் உள் உஷ்ணம்.,, உறவுகள் எனும் ஒரு வரியில் இணைத்து கொள்கிறேன் இந்த இரண்டு கதைகளையும்.

அன்புகளுடன்,

லிங்கராஜ்

9. கிருமி [சிறுகதை] உமையாழ்

8. நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

7. உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

6. வில்லுவண்டி[ சிறுகதை] தனா

5. உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

4. கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

3. இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

2. அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

1. கன்னி- [சிறுகதை] ம.நவீன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குருவி சிறுகதை பற்றி- காளிப்பிரசாத்

$
0
0

குருவி [சிறுகதை]

குருவி கதை பற்றி எழுத்தாளர் காளிப்பிரசாத் எழுதியிருக்கும் கட்டுரை

எழுத்தாளர் ஜெயமோகன் -தனிமையின் புனைவுக் களியாட்டு- 1) குருவி – காளிப்பிரசாத்

 

 


69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குரைத்தல்வாதம்

$
0
0

 

அன்புள்ள ஜெ

போகன் சங்கர் இப்படி எழுதியிருந்தார்.

பாரதி கேரளத்தைப் பற்றி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.ஏறக்குறைய இந்த பொருளில். “மலையாளத்தில் நாய்கள் குரைப்பதில்லை.மலையாளிகள் பற்றி அப்படிச் சொல்லமுடியாது’

இது உண்மையா?

செந்தில்ராஜ்

அன்புள்ள செந்தில்ராஜ்

கேள்வி தெளிவாக இல்லை. மேலே சொன்னதில் மூன்று செய்திகள் உள்ளன. ஒன்று மலையாளத்தில் நாய்கள் குரைப்பதில்லை. இது உண்மை, அவை சம்ஸ்கிருதத்தில் “ஃபவ!” என்று குரைக்கின்றன.

இரண்டு, மலையாளிகள் குரைப்பதில்லை என்று சொல்லமுடியாது. அதுவும் உண்மை. அது பலருக்கு தெரியாது. ஏனென்றால் மலையாளம் மெல்லினம் மிகுந்த மொழி. மெல்லியலோருக்கு ஏற்றது. குரைத்தால் அது மியாவ் ஓசையாகவே வெளியே கேட்கும்

பாரதி சொல்லியிருக்கிறாரா? இருக்கலாம், அவர் திருவனந்தபுரம் வந்து அங்கே சைவப்பிரகாச சபையில் உரையாற்றியிருக்கிறார்.

ஆனால் நானறிந்தவரை பாரதி நாயர்களைப் பற்றித்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார். அதை முழுமலையாளிகளையும் குறிப்பதாக ஆக்கிவிட்டிருக்கிறார் போகன் என நினைக்கிறேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விண் வரை…

$
0
0

 

வெண்முரசின் இருபத்தி ஐந்தாவது நாவலான கல்பொருசிறுநுரையை ஜூன் எட்டாம் தேதி பின்னிரவு ஒன்றரை மணிக்கு எழுதி முடித்தேன்.

இந்நாவல் பலவகையிலும் எனக்கு முக்கியமானது. இந்நாவல்நிரையில் இளைய யாதவனாகிய கிருஷ்ணன் பிறந்து கம்சனைக் கொல்லும் வரையிலான பகுதிகள் நீலம் என்னும் நாவலாக ஆகஸ்ட் 2014ல்  வெளிவந்தன. மிகப்பெரிய கொந்தளிப்புடன் பித்துடன் நான் இருந்த நாட்கள் அவை. மொழியினூடாக மட்டுமே சென்று யாதவனை தொட்ட பயணம். அங்கே சிந்தனைக்கே இடமில்லை. வெறும் உணர்ச்சி, வெறும் அழகு, வெறும் உளஎழுச்சி. இந்நாவலில் அந்த இளைய யாதவனின் விண்புகுதல் நிகழ்ந்திருக்கிறது.

இந்நாவல் அதைநோக்கியே செல்லும் என நான் அறிந்திருந்தேன். எனினும் சென்றடைவது என்பது எளிதாக இருக்கவில்லை. இந்நாவலின் தொடக்கப்பகுதிகள் அதன் இன்றியமையாமையை எல்லா வகையிலும் சிறுகச்சிறுக நிறுவுபவை. அரசியல், ஆணவமோதல்கள் , அவற்றை ஆளும் ஊழ் ஆகியவற்றின் கதை.

சென்ற ஒருவாரமாகவே இந்த முடிவை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்.இங்கு மொழியினூடாக அன்றி புனைவினூடாகச் சென்றேன். இவ்வுலகில் வேறேதும் பொருட்டே அல்ல என்பதுபோல வாயில்களை மூடிக்கொண்டிருந்தேன்.இந்த வெறுமையின் நிறைவிலிருந்து கிழித்து வெளிவந்தே ஆகவேண்டும், இல்லையேல் செயலின்மையில் சென்று அமைந்துவிடக்கூடும்.

இன்னும் ஒரு நாவலுடன் வெண்முரசு நிறைவுறும். அடுத்த நாவல் ‘முதலாவிண்’ பாண்டவர்களின் விண்புகுதலைப் பற்றியது. சிறிய அந்நாவல் ஜூலை மாதம் 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் இறுதியில் முடியும் என நினைக்கிறேன். ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து எடுத்துநீட்டிக்கொண்ட சொல்லாட்சி. பிறக்காத, தோற்றமே அற்ற வானம் என்று பொருள்.முதற்கனல் என்னும் தலைப்பின் மறு எல்லை.

இந்நாவலை தொடங்கும்போது இளையராஜா அவர்களைச் சந்தித்து கால்தொட்டு வணங்கி ஆசிபெற்றேன். அப்போது அகத்தில் ஓர் அச்சம் இருந்தது, வெவ்வேறு வகையில் நாஞ்சில்நாடனும் அதைச் சொல்லியிருந்தார். தமிழில் பாரதம் எழுதி முழுமைசெய்ய எவராலும் முடிந்ததில்லை. இது முடிவதுவரை வாழ்வு வேண்டும் என்றுதான் குருவடிவான ராஜாவிடம் வேண்டிக்கொண்டேன். உண்மையில் அந்த ஒரு எண்ணம் மட்டுமே எனக்குள் அப்போது இருந்தது.இப்போதும் அதுவே வேண்டுகோள். ஒரு வாழும் குரு எல்லா குருநாதர்களின் வடிவமும்தான்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சட்ட நடவடிக்கை

$
0
0

பா.செயப்பிரகாசம் பற்றி

இணையத்தில் திரு.செயப்பிரகாசம் அவர்கள் என் மேல் அவதூறும் வசையும் பொழிந்து எழுதியிருக்கும் பக்கங்களை நகல் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆதரவாக ஒரு கண்டன அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அச்சு ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. நேரடியான கீழ்த்தரமான அவதூறு என்பது அந்தக் கண்டன அறிக்கையில் உள்ள என்னைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள்தான். ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்னவேண்டுமென்றாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்பமுடியும் என்பதுதான் அவதூறுநடவடிக்கை.

என் வழக்கறிஞர் நண்பர்கள் ஈரோட்டில் கூடிப்பேசியதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.திரு.செயப்பிரகாசம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். அந்தக் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் முக்கியமான அனைவர் மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும். குறிப்பாக அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது அவதூறுவழக்கும் துறைரீதியான புகார்களும் அளிக்கப்படும். அவர்கள் செயப்பிரகாசம் வழக்கிலும் சாட்சியாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் மொழியைக்கொண்டே வழக்கை நடத்துகிறோம்

இதைச் செய்யவேண்டிய கட்டாயம் இன்று உருவாகிவிட்டது. நான் எப்போதுமே வசைகளையும் அவதூறுகளையும் பொருட்டாக நினைத்தவன் அல்ல. யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் நேரடியாகப் பெயர்சுட்டி எழுதிக்கொண்டிருக்கும் சாக்கடைப் பதிவுகளைக்கூட கருத்தில் கொண்டதில்லை.

ஏனென்றால் கருத்துச்செயல்பாட்டில் தன்னிச்சையான வெளிப்பாடு என்பது ஓர் அம்சம். நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்க கருத்துக்களையே கருத்துவிவாதங்களில் சொல்லவேண்டும் என்றால் அதன்பின் கருத்துவிவாதமே இல்லை.சென்ற சில ஆண்டுகளாகவே இடதுசாரிகள் என்பவர்கள் கும்பல்கூடி இந்தப்போக்கை முன்னெடுத்து நீதிமன்றத்தை ஒரு மிரட்டல்கருவியாக மாற்றி அறிவியக்கத்தைச் சீரழித்துவருகிறார்கள்.

அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று முத்திரைகுத்தப்படும் எவரும் இங்கே நீதிமன்றத்தை அணுகியதில்லை. அமைப்புக்கு எதிரான புரட்சியாளர்களாக தங்களை சொல்லிக்கொண்டு அத்தனைபேர் மீதும் அவதூறு கக்குபவர்கள்தான் அவர்கள்மேல் சிறு விமர்சனம் வந்தால்கூட நீதிமன்றத்தை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்தால் இங்கே எழுதும்போதே எச்சரிக்கை உணர்வு உருவாகும். கைகள் தயங்கும். அது நிகழக்கூடாது.

முறையான நடவடிக்கைகளுக்கு சென்னையிலும் நண்பர்குழு ஒன்று கூடுவதாக உள்ளோம்.

ஜெயமோகன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சட்டநடவடிக்கை பற்றி…

$
0
0

சட்ட நடவடிக்கை-1

சில நண்பர்கள் என்னுடைய சட்ட நடவடிக்கை என்னும் கட்டுரைக்கு மறுப்பும் வருத்தமும் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள்.  ‘இது கருத்தியல் செயல்பாட்டை முடக்கும் செயல்’ என்று ஒருவர் எழுதியிருந்தார்.

அதேதான் என் கருத்தும். நீதிமன்றங்களில் இலக்கியச் செயல்பாடுகள், கருத்துச்செயல்பாடுகள் தீர்த்துக்கொள்ளப்படும் என்றால் இங்கே எதுவுமே பேசமுடியாது. எதையுமே நீதிமன்றம்கொண்டுசெல்லலாம், இழுத்தடிக்கலாம், எதற்குமே தீர்வுபெறமுடியாது.

இது கருத்தியல்செயல்பாட்டை முடக்கும் செயல் என்று சொல்லும் நண்பர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்திருக்கவேண்டியது பா.செயப்பிரகாசம் அவர்கள் தன் வழக்கறிஞர் அஜிதா என்பவர் வழியாக அனுப்பிய வக்கீல்நோட்டீஸுக்கு. என் தளத்தில் வந்த ஒற்றைவரிக்காக அந்த சட்டநடவடிக்கை அவர்களால் எடுக்கப்பட்டது.

அவருக்கும் சட்டநடவடிக்கை வேண்டும் என்று அவரை தூண்டிவிட்டவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும். அதை எவரும் செய்யவில்லை. நான் திருப்பி நடவடிக்கை எடுக்கும்போது என்னிடம் பேச ஓடிவருகிறார்கள்.

திரு எஸ்.வி.ராஜதுரை அவர்கள் என்மேல் அவதூறு வழக்கு தொடுத்தார். அது ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. எஸ்.வி.ராஜதுரை அவர்கள் இதுவரை ஒருமுறைகூட நீதிமன்றம் வரவில்லை. நாற்பது முறை சம்மன் சென்றும்கூட. ஆகவே வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அப்போதே எஸ்.வி.ராஜதுரைமேல் அவர் எனக்கு அனுப்பிய அந்தக் கீழ்த்தரமான வக்கீல்நோட்டீஸின் பேரில் ஒரு வழக்கு தொடுக்கும்படிச் சொன்னார்கள். அதற்கு அவர் நீதிமன்றம் வந்திருக்கவேண்டியிருக்கும். ஆனால் அதை நான் செய்யவில்லை. எனக்கு அவருடைய பங்களிப்பு, நேர்மை மேல் நம்பிக்கை உண்டு. அதை திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன்.

அவர்மேல் நான் முன்வைத்த குற்றச்சாட்டு என்பது தமிழ் கருத்துலகச் செயல்பாட்டில் அன்னிய நிதி ஊடுருவல் சம்பந்தமானது.அவருடைய ஆளுமை மீது அல்ல.ஆனால் பா.செயப்பிரகாசம் மீது ஓர் எழுத்தாளர், கருத்துச்செயல்பாட்டாளர் என்ற எந்த மரியாதையும் இல்லை.

இப்போதும் சொல்கிறேன், ஒரு நாளில் சராசரியாக பத்து அவதூறுகளும் வசைகளும் என்மேல் பதிவாகின்றன.கவலையே இல்லை. தாராளமாகவே நடக்கட்டும். உண்மையிலேயே எவர்மேலும் புகாரோ வருத்தமோ இல்லை. அப்படி எழுதியவர்கள் அனைவரிடமும் எல்லா தனிச்சந்திப்புகளிலும் அன்புடனேயே இருந்திருக்கிறேன். அவர்களில் பலர் என்னை தங்கள் தனிப்பட்ட சிக்கல்களின்போது சந்தித்து உதவிகோரியபோது உதவியிருக்கிறேன்.

இன்னமும் அப்படித்தான். எழுதுங்கள் பிரச்சினையே இல்லை. நீங்கள் என்ன எழுதினாலும் சரி நீங்கள் ஒரு நல்ல படைப்பை எழுதுவீர்கள் என்றால், ஒரு நல்ல கட்டுரையை எழுதிவீர்கள் என்றால் என் மதிப்புக்குரியவர்தான் நீங்கள். ஒருபோதும் எவரிடமும் தனிப்பட்ட வஞ்சங்கள் இல்லை.

ஆனால் இங்கே இப்போது நிகழ்வது ஒரு சிறுகுழு சில வக்கீல்களை துணைகொண்டு எழுத்தாளர்களை மிரட்டுவது. இதை இப்படியே விட்டால் இவர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் எழுத்தாளர்களுக்கு ஆணையிடுவார்கள். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் நாளை ஆபத்தானதே. என்னை வசைபாடும் வெறுப்புகக்கும் எழுத்தாளர்களுக்கும் கூட

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யாயும் ஞாயும் –கடிதங்கள்

$
0
0

 

யாயும் ஞாயும் [சிறுகதை]- ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

அன்புள்ள ஜெ

ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் யாயும் ஞாயும் அழகான கதை. புதிய கதையாசிரியர்கள் வழக்கமாக ‘வலுவான’ கதை வேண்டும் என்று உக்கிரமான சம்பவங்களை எழுதுவார்கள். அல்லது அவர்களை எழுதவைப்பதே அந்தவகையான சம்பவங்களாக இருக்கும். சம்பவ வலிமையால் அக்கதைகள் நிற்கும். மிக இயல்பான சம்பவங்களால் கதைசொல்லியிருக்கும் easiness தான் இந்தக்கதையின் அழகு என நினைக்கிறேன்

கதைக்கும் மனிதர்களுக்குமான உறவு என்ற தளம் சொல்லப்படாமலேயே கிடக்கிறது. தொன்மக்கதை ஒரு பெரிய பின்புலம். அதற்கும் யதார்த்தத்துக்குமான உறவு என்பது ஒரு உருவகம்தான். ஒரு மானசீகமான தொடர்ச்சி மட்டும்தான். அதிலிருந்து ஆற்றலும் நம்பிக்கையும் வரும் என்றால் அது உண்மைதான். அதற்கு லாஜிக் என்று ஒன்றும் இல்லை.

யாயும் ஞாயும் என்ற தலைப்பு அருமை. நம் முன்னோர்கள் இப்படித்தான் மரபை தன்வயப்படுத்திக்கொண்டார்கள். ஊர் ஊராக ராமனும் சீதையும் பாண்டவர்களும் வந்த கதை இருப்பதை இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்

 

ராஜசேகர்

அன்புள்ள ஜெ

யாயும் ஞாயும் அழகான கதை. உற்சாகமான கதை. ஒரு புன்னகையுடன் வாசித்து முடிக்கமுடிந்தது. யாயும் ஞாயும் என்ற தலைப்பு எதைக்குறிக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். அது முத்துப்பட்டனையும் அவருடைய மனைவிகளையும்தான் குறிக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள் உறவு ‘என் முப்பாட்டன்டா அவன்” என்று நாமே எண்ணிக்கொள்வதிலேதான் உள்ளது

அர்விந்த்

அன்புள்ள ஜெ

ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் யாயும் ஞாயும் சிறுகதையை தளத்தில் வாசித்தேன். கதை தொடக்கத்திலேயே முத்துப்பட்டன் என்ற பெயரை கேட்டதும் ஒரு கிளர்ச்சி, உற்சாகம். பள்ளிக் காலத்தில் முன்பு ஒருமுறை ஆனந்த விகடனில் (?) முத்துப்பட்டன் கதையை படித்திருக்கிறேன். இப்போது பெரிதாக எதுவும் நினைவில்லையெனினும் மங்கலாக ஒரு கீற்று போல் தோன்றி மறைந்தது.

யாயும் ஞாயும் வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே என்னை உள்ளிழுத்து கொண்டது. அந்த கதைச்சொல்லி போலவே உணர்ச்சி வேகம் கொண்டு விட்டேன். இறுதியாக, காயத்ரி,”மரமண்ட, முத்துப்பட்டன் தான் கல்யாணமான அன்னைக்கே குடும்பத்தோட செத்துட்டாரே… அப்புறம் எப்டி நீங்க அவரு வாரிசு ?” என்ற கேள்வி தூங்கினவன் முகத்தில் நீருற்றியது போல் இருந்தது. பின் கதைச்சொல்லிக்கு அவன் தாத்தாவின் நினைவு தந்த சிரிப்பு எனக்கும் அதே.

கதை படித்து முடித்ததும் சிறிது நேரம் நினைக்க நினைக்க உவப்பும் வியப்புமாய் இருந்தது. அந்த புன்னகையிலேயே சிறிது நேரம் அமிழ்ந்திருந்தேன். பின்னர் மெல்ல சிந்தனை தொடங்கியது.

அவனுக்கு கதை சொன்ன தாத்தாவை யோசித்துப் பார்க்கிறேன். அந்த தாத்தா அவன் வீட்டில் மட்டுமல்ல நம் ஒவ்வொரு வீடுகளிலுமே உள்ளவர். என் குடும்பத்திலேயே பல பாட்டன் காலத்து வீரக் கதைகள் உண்டு. என் அப்பா சொல்ல எனக்கு கேள்வி அவை. ஆனால் அவருக்கு அவர் தாத்தா சொல்லியது அவை. இது மட்டுமா இப்போதும் நினைத்து பார்க்கிறேன் என் ஆயா சொல்லியவை, தாத்தா சொல்லியவை என எவ்வளவு கதைகள். எல்லாமே ஏதோ ஒருவகையில் வீரத்தை, வலிவை, மாண்பை உள்ளே கொண்டவை. ஆறு புலிகள், நான்கு சிங்கங்கள் பலப்பல வீரக்கதைகள் உண்டு.

இந்த கதைகள் எல்லாம் எதற்காக ? வழிவழியாக மேலும் மேலும் பெரிதென உரு கொள்வது எதற்காக ? தலைமுறை தோறும் கடத்தப்படுவது எதன் பொருட்டு ? என்ற கேள்விகளை எழுப்புவதன் ஊடாக, அவற்றின் பதில்களை நோக்கி செலுத்துவதன் ஊடாகத்தான் யாயும் ஞாயும் தன் தரிசனத்தை முன்வைக்கிறது.

முத்துப்பட்டனின் கதையும் அவனின் குருதி வழி தான் என்பதும் அல்லவா கதைச்சொல்லிக்கு தன் காதலை அடைய அத்தனை உத்வேகம் அளிக்கிறது. அது ஏன் ? முத்துப்பட்டனின் குருதி வழி தான் என் கொள்ளும் போது அவன் தன்னை ஒரு மாபெரும் எரிமலையின் நுனி என்றல்லவா கருதி கொள்கிறான். அப்போது திரளும் ஆற்றல் அளப்பரியதாய் உள்ளது. தான் ஒரு உதிர்ந்து சரியும் இலை என்பதிலிருந்து பேராலத்தின் விழுது என்பதை அல்லவா இக்கதைகள் சொல்லிச் சொல்லி நிலை நிறுத்துகின்றன. தன் சிறு தனிமையை, வலிமையின்மையை மரபு என்னும் பேராற்றலை உருவகிப்பதன் மூலம் வென்றெடுக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பாக தங்களுடைய,”மரபை விருப்பதும் வெறுப்பதும் எப்படி ?” என்ற யூடியூப் காணொளியை கேட்டிருந்தேன். அவ்வுரையோடு இக்கதையை பொருத்தி பார்க்கும் போது மேலும் வெளிச்சம் பாய்கிறது எனக்கு. அதில் நீங்கள் தனியன்,”மனிதனுக்கு தேவை அல்டிமேட்டாக இரு சிறகுகள். கோடியில் ஒருவருக்கே சிறகு முளைக்கிறது. மீதம் பேர் என்ன செய்வது அவர்களின் தனிமையை போக்கி கொள்வதற்கு ? அவர்கள் மலையிலிருந்து சரிந்து வீழ்ந்து விடாமல் இருக்க பற்றிக் கொள்ளும் கொடி தான் மரபு.” என்று. இந்த கதையும் அதே தான். தான் ஒரு தனியன் என்பதிலிருந்து முத்துப்பட்டனின் பரம்பரை என்னும் போது வரும் துணிவு மிகப்பெரியது. அது தான் நுனி இலையல்ல மரமே தானேன உணர்வது.

இத்தனைக்கும் பிறகு யாயும் ஞாயும் என்ற தலைப்பை நோக்கினேன். அதன் பொருள் கதை குறித்த என் புரிதலில் மேலும் வெளிச்சத்தை ஏற்படுத்தக் கூடும் என்றெண்ணி இணையத்தில் தேடினேன்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிவதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

என்ற குறுந்தொகை பாடலும் அதன் விளக்கத்தையும் தெரிந்து கொண்டேன். முழுப் பாடலையும் கதையோடு இணைத்து கொண்டால் இன்னோரு கோணத்தில்  சிந்திக்க உதவுகிறது. யாயும் ஞாயும் என்பதே முத்துப்பட்டனுக்கும் கதைச்சொல்லிக்கும் என்ன உறவு ? என்பதையே கேட்கிறது. நேரடியாக குருதியுறவு என ஏதுமில்லை. இருவருக்கும் இருக்கும் நோக்கத்தை தவிர. ஆனால் குருதி உறவு என்ற அந்த பின்னல் ஏன் அப்படியொரு விசை எழுவதற்கு இன்றியமையாததாய் உள்ளது ? உடலும் உள்ளமும் விசை கொண்டெழ வேண்டுமென்றால் அப்படிப்பட்ட ஒருவரின் வழி வந்தவன் நான் என்ற எண்ணம் வேண்டி இருக்கிறது.அதன் பொருட்டு தான் நாம் இப்படி புனைந்து உருவாக்கிறோமா !(?)
“மரபு நமக்கு சமைக்கப்பட்ட உணவாக தரப்படுவது அல்ல, நாம் தான் ஒவ்வொரு முறையும் நம் தேவைக்கேற்ப அறுவடை செய்கிறோம்.” என்ற உங்கள் சொற்கள் தான் நினைவில் எழுகிறது ஜெ.

ஜெ உங்களுக்கும் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
சக்திவேல்

அன்புள்ள ஜெ,

சட்டென்று வந்து செம்பருத்திப் பூவில் தேனை குடித்துவிட்டு விருட்டென மறையும் தேன்சிட்டை பார்த்த பரவசம் ஏற்பட்டது.  நவீன் கச்சிதமாக எழுதியிருக்கிறார்.
தமிழ் உள்ளத்தில் பதிந்த அந்த சங்கப்பாடல் தொடர் முற்றிலும் புதிய கோணத்தில் உயிர்பெறுகிறது. ஆழ்படிமம் ஒன்றை இன்னொரு தளத்தில் வைத்துப் பார்க்கும் கலைமுயற்சி. என்று தோன்றியது.

ஸ்ரீனிவாசன்

 

அன்புள்ள ஜெ

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் ஒரு புதிய எழுத்தாளர் என நினைக்கிறேன். புதிய எழுத்தாளர் என்றாலும் சரளமாக உரையாடல்களை எழுதியிருக்கிறார். இந்த தளத்தில் முன்பு வெளிவந்த புதிய எழுத்தாளரான கோகுலரமணனின் கதையும் நேர்த்தியாக இருந்தது. இருவரும் தொடர்ச்சியாக எழுதவேண்டும்

சுவாமி

பழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16948 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>