Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16764 articles
Browse latest View live

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26

$
0
0

[ 39 ]

தன்னுணர்வு கொண்டு விழியொளி பெற்றபோது அர்ஜுனன் வளைந்து மேலேறிச்சென்ற அவ்வெண்ணிறப் பாதையின் மறு எல்லையில் இருள் குழைத்துக் கட்டப்பட்டதுபோல வளைவுகளில் ஒளிமின்ன நின்றிருந்த இரும்புக் கோட்டையை பார்த்தான். எடையற்றவனாக தன்னை உணர்ந்து அதில் நடந்து சென்றபோது முன்பொருமுறையும் எவரும் கால் தொட்டிராதது அப்பாதை என்னும் எண்ணமெழுந்தது.

செல்லச் செல்ல அகல்வது போல விழிமாயம் காட்டி நின்றிருந்தது அக்கோட்டை. பின்பு எப்போதோ ஒரு புள்ளியில் பேருருக்கொண்டு அணுகத்தொடங்கியது. குளிர்ந்த முகில்நிரைபோல அது எழுந்து வந்து சூழ்ந்தது. நெருங்கிச் செல்லும்தோறும் அதன் சுவர் திசையாக மாறியது. அதன் பெயர் அயத்வாரம் என்று அவன் அறிந்திருந்தான். அதன்மேல் எழுந்த கொடிகள் கரிய பறவைகள் போல சிறகடித்தன.

அதன் மூடிய பெருவாயில் முன் நின்றபோது குமிழ்களும் முழைகளும் சட்டங்களும் கொண்ட அந்தக் கதவின் கீழ்ச் சட்டத்தின் அளவுக்கே அவன் உயரம் இருந்தது. பொன்னாலான அதன் தாழ் அவன் தலைக்குமேல் வானில் தொங்கியதுபோல் நின்றிருந்தது. கதவைத் தொட்டு அதன் தண்மையை உணர்ந்து சில கணங்கள் நெஞ்சு கூர்ந்து தன்னை தொகுத்துக் கொண்டான்.

கையை ஓங்கி அவ்விரும்புச் சட்டத்தில் தட்டி  “யாரங்கே? வாசல் திறவுங்கள்! வாசல் திறவுங்கள்!” என்று கூவினான். உருக்கிரும்பாலான சட்டம் அவன் கையை உணர்ந்ததாகவே தெரியவில்லை. முழு உடலாலும் அதன்மேல் உந்தியும் மலை என அசைவற்றிருந்தது. மீண்டும் மீண்டும் கைகளாலும் கால்களாலும் அதை உதைத்தான். அவன் செயல்களுக்கு மிக அப்பால் தன் காலமின்மையில் அது நிலைகொண்டிருந்தது.

உள்ளே எழுந்த சினஎழுச்சியுடன் அவன் நூறு காலடி எடுத்து பின்னால் வந்தான். முழு விரைவுடன் ஓடி தன் தலையால் அவ்விரும்புக் கதவை முட்டினான். அவன் தலையை ஒரு குளிர்நீர்ப்பரப்புதான் எதிர்கொண்டது.  அலையெழுந்து விலகி அவனை உள்ளிழுத்துக்கொண்டது அது. சுருண்டு விழுந்து கையூன்றி எழுந்தபோது அவன் முன் பேருருவ பூதம் ஒன்றின் இரு கால்களை கண்டான். அவன் தலை அதன் கணுக்கால் முழை அளவுக்கே இருந்தது.

விழிதூக்கிப் பார்த்தபோது பூதத்தின் முழங்கால் உருளைகள் மட்டும் வான்தொலைவில் தெரிந்தன. அதற்கப்பால் செறிந்திருந்த இருளிலிருந்து இடியென அதன் குரல் ஒலித்தது.  “யார் நீ?” அர்ஜுனன் தலைதூக்கி  “குபேரனைப் பார்க்க வந்தவன், என் பெயர் அர்ஜுனன். குருகுலத்து ஷத்ரியன்” என்றான்.

“மானுடர் இவ்வழி வந்ததே இல்லை” என்றது பூதம். “இவ்வாயிலை அஞ்சாது தட்டி அழைத்தமையால் உன்னை பாராட்டுகிறேன்.”  அர்ஜுனன் “வாயில் ஒன்று அமைவதே தட்டி திறப்பதற்காகத்தான்” என்றான். “என்றும் நான் அஞ்சியதில்லை. என்னை அஞ்சி நீர்தான் பேருருக்கொண்டிருக்கிறீர்.” பூதம் சினத்துடன் “எனக்கா? அச்சமா?” என்றது. “அஞ்சிய முட்பன்றிதான் முடிசிலிர்த்துப் பெரிதாகும்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“போதும்” என்றபடி தன் உடல் குறுக்கி அவன் முன் தோன்றியது பூதம். அதன் பெருத்த வயிறு அவன் முகத்திற்கு முன்னால் நின்றது. இரு கரிய கைகளையும் அவனுக்கு இருபுறமும் ஊன்றி மூச்சுக்காற்று அவன் மேல் மூடும்படி தலையைக் குனித்து அது சொன்னது  “என்னைக் கடந்து எவரும் செல்லலாகாது என்பது நெறி. இவ்வாயிலுக்கு அப்பால் நீ செல்ல முடியாது.”

“நான் வாயில்களை கடப்பவன். ஐயம் தேவையில்லை பேருருவரே, இவ்வழிகளைக் கடப்பேன். இதற்கப்பால் உள்ள அனைத்து வாயில்களையும் கடப்பேன்” என்றான்  அர்ஜுனன்.  அந்தத் துணிவை எதிர்பாராத பூதம் தன் இரு விலாவையும் சொறிந்துகொண்டு முனகியது. பின்னர் “அதெப்படி கடப்பாய்?” என்றது. “அரிதான ஒரு பாதை அரிதான ஒருவன் மட்டுமே கடப்பதற்கென்று அமைக்கப்பட்டது. இதைக்கூட அறியாதவரா நீர்?” என்றான் அர்ஜுனன்.

பூதம் “அப்படியா?” என்றது. தலையைத் தடவியபடி எண்ணங்களில் சிக்கி பின் விடுவித்துக்கொண்டு “என் பணியை நான் செய்வேன்” என்றது. அர்ஜுனன்  அண்ணாந்து பார்த்தபோது இருளில் பூதத்தின் இரு விழிகளும் வெண்பற்களும் மட்டும் தெரிந்தன. அது குழம்பியிருப்பதை அந்த விழியசைவே காட்டியது.

“என்னுடன் போர் புரிக! வென்றால் கடந்து செல்க!” என்று பூதம் சொன்னது.  “எங்கும் எவருடனும் போர் புரிவேன். களம்காண ஒரு கணமும் தயங்கியவனல்ல. உமது படைக்கலங்களை எடும்!” என்றான் அர்ஜுனன். உரக்க நகைத்தபடி பூதம் அவன் முன் அமர்ந்தது.  “பிழை கணித்துவிட்டாய், வீரனே! இது குபேரனின் கோட்டை. இங்கு போர்களும் பூசல்களும் அனைத்தும் பொருளின் பொருட்டே. நாம் ஒரு பொருளாடல் நிகழ்த்துவோம். என்னை இவ்வணிகத்தில் நீ வென்றால் கடந்து செல்லலாம்.”

“ஆம்” என்றான் அர்ஜுனன். அதன் முன் கால்மடித்து அமர்ந்தான். “நீ கொண்டுள்ள வில்வேதம் உதவாது பொருளாடலுக்கு” என்றது பூதம். “பேருருவரே, வில்வேதம் இலக்குக்கும் நம் திறனுக்குமான நிகர்ப்பாட்டைக் கற்பிக்கும் கலை. அனைத்து கலைகளும் அதுவே” என்றான் அர்ஜுனன்.

பூதம்  தன் சுட்டுவிரலால் தரையில் ஒரு களம் வரைந்தது.  “இக்களத்தில் நான் வைக்கும் பொருளுக்கு நிகரான ஒன்றை நீ வைக்கவேண்டும். எவரிடம் செல்வம் மிகுதி என்று பார்ப்போம்” என்றது. அர்ஜுனன் புன்னகைத்தான். “என்ன புன்னகை?” என்றது பூதம். “செல்வம் காப்பவர் அனைவரும் இந்த ஒரே ஆடலை அன்றி பிற எதையுமே அறிந்திருப்பதில்லை” என்றான் அர்ஜுனன். “அப்படியா?” என பூதம் தன் தலையை தடவிக்கொண்டது.

“ஆடுக!” என்றான் அர்ஜுனன். பூதம் தன் கையை நீட்டி அதில் பூனை விழியென சுடர் கொண்டிருந்த அருமணி ஒன்றை எடுத்து முதற்களத்தில் வைத்தது. “உனது மண்ணில் நூறு பேரரசுகளை விலைக்கு வாங்கும் வல்லமை கொண்டது இந்த மணி. நிகரானதொன்றை உன் களத்தில் வை” என்றது.

அர்ஜுனன் திரும்பி தன் அருகே கிடந்த கூழாங்கல் ஒன்றை எடுத்து  ஆடையால் துடைத்து தன் களத்தில் வைத்தான்.  “இதுவா அருமணிக்கு நிகரானது?” என்று பூதம் வியப்புடன் கேட்டது.  “ஆம். உமது மணிக்கு நீர் அளிப்பதே மதிப்பு. எதைக் கொடுத்தால் நீர் அதை கொடுப்பீர் என்பதல்லவா அதன் விலையாகிறது?  நான் என் கல்லுக்கு அதே மதிப்பை அளிக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

“அக்கல்லை நான் மதிக்கவில்லை” என்று பூதம் கூவியது. “அந்த மணியை நானும் மதிக்கவில்லை என்று சொல்கிறேன்” என்றான் அர்ஜுனன். பூதம் தன் தலையை தட்டிக்கொண்டு முனகி அசைந்து அமர்ந்தது. “பேருருவரே, அந்த மணி அளவுக்கே என் கல்லும் மதிப்புடையது என்றுதானே நான் இக்களத்தில் அதை வைத்துள்ளேன். அப்போதே அம்மதிப்பு உருவாகிவிட்டது அல்லவா?” என்றான் அர்ஜுனன்.

“எப்படி?” என்றது பூதம் குழப்பமாக தலையை அசைத்தபடி. “பொருளுக்கா மதிப்பு? அதற்குப்பின் அம்மதிப்பை உருவாக்குவதாக இருப்பதென்ன என்பதல்லவா? இக்கூழாங்கல்லுக்குப்பின் இருப்பவன் நான். அந்த அருமணியையோ நிகரானதையோ அளிக்காமல் இக்கூழாங்கல்லை எவரும் பெறமுடியாது. அவர்கள் அக்கணமே என் வில்லால் கொல்லப்படுவார்கள்” என்றான் அர்ஜுனன்.

பூதம் திகைத்து கைகளால் தரையை துழாவியது. பின்பு எழுந்து நின்று  “இது வணிகமல்ல. இது ஏதோ பிழை விளையாட்டு” என்று கூவியது.  “விடை சொல்ல எவரையேனும் வரவழையும்” என்றான் அர்ஜுனன். பூதம் திரும்பி அவனை தவிர்த்தபடி “இங்கு மதிப்புகாட்டும் துலா ஒன்று உள்ளது” என்றது. “அதில் வைத்து நோக்குவோம்… வருக!” என்றான் அர்ஜுனன்.

இருவரும் சென்று கோட்டைச்சுவர் மேல் பதிந்து நின்றிருந்த கந்தர்வனின் சிலையின் கையில் தொங்கிய ஒரு துலாவின் இரு தட்டுகளிலும் அந்த மணியையும் கல்லையும் வைத்தனர். நிகர் எடைகாட்டி முள் நிலைத்தது. பூதம் உறுமியது. தன் தலையையும் இடையையும் சொறிந்துகொண்டு முனகியது. “நிகர்” என்றான் அர்ஜுனன். சினந்து நிலையழிந்து கால்களை உதைத்தபடி சுற்றி வந்தது பூதம்.

“துலாவேந்திய தேவனே, மறுமொழி சொல்க! இக்கூழாங்கல்லின் மதிப்பென்ன?” என்று அர்ஜுனன் கேட்டான்.  “குபேரபுரியின் நெறிகளின்படி ஒன்று எவ்வண்ணம் விற்கப்படுகிறதோ , அல்லது விற்கப்பட இயலுமோ அதுவே அதன் மதிப்பு. இங்கிருப்போர் இருவரே. எனவே அந்தக்கூழாங்கல்லின். மதிப்பு அந்த அருமணிக்கு நிகர்” என்றான் துலாவை ஆண்ட கந்தர்வன்.

பூதம் எண்ணியிரா கணத்தில் அர்ஜுனன் கைநீட்டி அந்த அருமணியை எடுத்து  அப்பால் வீசினான். “அது வெறும் கூழாங்கல்” என்றான். பூதம் பதறி நோக்க தன் கூழாங்கல்லை எடுத்து இணையாக வீசினான். “அம்மதிப்பே இதற்கும்” என்றபின் எழுந்து “விலகும் பேருருவரே, ஆட்டம் முடிந்துவிட்டது” என்றான்.

பூதம் விலகி திகைப்புடன் நோக்கி நிற்க “திறவுங்கள் இந்தக் கோட்டைக் கதவை!” என்றான். பொற்தாழை விலக்கி பேரோசையுடன் இரும்புக்கதவை திறந்தது பூதம். அவன் அதனூடாக நடந்து மறுபக்கம் சென்றான்.

இரும்புக்கோட்டைக்குள் இருந்த தாம்ரவலயம் என்னும் செம்புக்கோட்டையை நோக்கிச் சென்ற பாதையில் வளைவுகளை மிதித்து மேலேறி அதன் வாயிலை அர்ஜுனன் அணுகினான். தொலைவிலேயே அதன் முன் வழிமறித்ததுபோல் கால்களைப் பரப்பி கைகளைக் கட்டி நின்ற அனல் வண்ண கந்தர்வனை அவன் கண்டான். அவன் விழிகளின் பச்சைநிற ஒளி அங்கிருந்த செவ்விருளில் மின்னித் தெரிந்தது.

தளரா நடையுடன் சென்று அவன் முன் நின்று  “வழி விடுக, கந்தர்வரே! என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தவன். குபேரனைக் கண்டு வென்று திரும்பும் பொருட்டு வந்துள்ளேன்” என்றான்.  கந்தர்வன் “ஆம், நீர் இரும்புக்கோட்டையைக் கடந்ததை நான் அறிந்தேன். ஒவ்வொரு முறையும் தன் எல்லையை தானே கடக்கும் ஆற்றல் கொண்டவர் நீர்” என்றான். “இவ்வாயிலைக் காப்பவன் நான். என் பெயர் அக்னிவர்ணன். என்னுடன் வணிகமாடி இதைக் கடந்து செல்க!” என்றான்.

“சொல்லும்” என்று சொல்லி அர்ஜுனன் நின்றான். தன் இடையில் இருந்த ஒரு ஓலையை எடுத்து அர்ஜுனனிடம் காட்டி “வீரரே, இச்செம்புக்கோட்டைக்கு அப்பால் பாதையின் இருமருங்கும் ஆழ்கலவறைகளில் பெருஞ்செல்வத்தை குவித்து வைத்துள்ளேன். அச்செல்வமனைத்தையும் இவ்வோலையினூடாக தங்களுக்கு அளிப்பேன். அதற்கு நிகரான விலை ஒன்றை எனக்களித்து இதைப் பெற்றுச் செல்லும்” என்றான்.

அர்ஜுனன் புன்னகையுடன் “நிகர் என்பதே செல்வத்தின் மறுபெயர்” என்றான். தன் கையில் இருந்த குருகுல முத்திரை கொண்ட கங்கணத்தைக் கழற்றி அவனிடம் நீட்டி “அச்செல்வத்தை நான் பெற்றதும் அவையனைத்தையும் உங்களுக்கே மீட்டளிப்பேன் என்று இக்கங்கணத்தால் உறுதி கூறுகிறேன். இதை பெற்றுக் கொள்க!” என்றான்.

ஒரு கணம் திகைத்தபின் கந்தர்வன் வாய்விட்டு நகைத்து “ஆம், இது வணிக முறைமையே” என்றான். “இரண்டும் நிகரானவை. பெற்றுக் கொண்டு வாயிலைத் திறவுங்கள், கந்தர்வரே” என்றான் அர்ஜுனன். கந்தர்வன் பறந்து எழுந்து சென்று அச்செம்பு வாயிலின் இருபுறத்திலுமிருந்த சக்கரங்களை தொட்டான். அவை சுழன்று கதவை ஓசையின்றித் திறந்து அர்ஜுனனை உள்ளே விட்டன.

மிகத் தொலைவில் ஒரு பேராறு உச்சிப்போதின் வெயில்பட்டு அலையிளகிக் கொந்தளிப்பதுபோல வெள்ளியாலான ரஜதவியூகம் என்னும் கோட்டை தெரிந்தது. அர்ஜுனன் கைகளால் கண்களை மூடியபடி அதை நோக்கி சென்றான். ஒளிபெய்து நிறைந்த விழிகள் நீர் பெருகி வழிந்தன.

அவன் அருகணைந்தபோது வெள்ளிக்கோட்டை முழுமையாகவே கண்களிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. அவன் தன் முடிக்கற்றைகளை எடுத்து முகத்தின்மேல் அடர்த்தியாகப் பரப்பி அதனூடாக அக்கோட்டையை பார்த்தான். உப்புக்குவியல் என, பனிமலைகளை வெட்டி அடுக்கியதென அது தோன்றியது.

அதன் வெள்ளிப்பெருங்கதவத்தை அணுகி நின்றான். நுணுக்கமான மலர்ச்செதுக்குகள் கொண்ட வாயிலின் தாழ் செம்பாலானதென்று தெரிந்தது. அதன் இருபக்கமும் சுடர்முடி சூடி கைகளில் செண்டாயுதத்துடன் நின்றிருந்த இரு இளஞ்சிறுவர்களின் வெள்ளிச்சிலைகளை அவன் நிமிர்ந்து நோக்கினான். அவர்களின் ஆடையின் கீழ்வளைவுகளின் அலைகளுக்குக் கீழே அவன் தலை இருந்தது.

இடப்பக்கச் சிலையின் கை தொலைவைச் சுட்டி “அணுகாதே” என்றது.  வலப்பக்கச் சிலையின் கை வெளிப்பக்கமாகச் சுட்டி “விலகிச்செல்” என்று சொன்னது. அர்ஜுனன்   பின்னால் நகர்ந்து அவர்களின் விழிகளை நோக்கினான். அவை உறுத்து விழித்தன. உதடுகள் குவிந்து “அகல்க!” என ஆணையிட்டன. மேலும் கூர்ந்து நோக்கியபோது அவை “அணுகுக!” என்றன. திடுக்கிட்டு அக்கைகளை நோக்கினான். இடச்சிலை “வருக!” என்றது. வலச்சிலை “அருகணைக!” என்றது.

அவன் அச்சிலை விழிகளை நோக்கிக்கொண்டு நின்றான். அவற்றில் ஒன்றில் மெல்ல நோக்கு திரண்டது. அவன் விழிகளை அவை சந்தித்தன. அவற்றில் ஒருவன் விழிவிலக்கிக்கொண்டான். பிறிதொருவன் விழிக்குள் மெல்லிய ஒளியென புன்னகை எழுந்தது. அர்ஜுனன் புன்னகையுடன் நோக்கி நின்றான். அவர்கள் இருவரும் ஒரே தருணத்தில் விழிதிருப்பி அவனை நோக்கினர். இருவர் முகத்திலும் சிரிப்பெழுந்தது.

சிரிப்பொலி வானிலென எழுந்தது. அர்ஜுனன் சிரித்தபடியே “வருக, இளையோரே! போதும் விளையாட்டு” என்றான். இருவரும் குதித்துக் கீழிறங்கி அவனை நோக்கி உருசுருக்கி அணுகினர். வெள்ளிக்குழம்பில் மூழ்கி எழுந்த இரு மைந்தர். இருவெள்ளி வண்டுகள் போலிருந்தனர். ஒருவன் “என் பெயர் சுஃப்ரன், இவன் தவளன். இந்த வாயிலின் காவலர். இதற்கப்பால் எவரையும் அனுப்ப எங்களுக்கு ஆணையில்லை” என்றான். “எங்களை மீறிச்செல்ல முயன்றவர்களை இச்செண்டாயுதத்தால் மெல்ல தட்டுவோம். அவர்கள் குளிர்ந்து அசைவிழந்து இச்சுவரில் ஒரு சிற்பமெனப் படிவார்கள்.”

அர்ஜுனன் அந்த வெள்ளிச்சுவரெங்கும் விழிகள் உயிர்கொண்டு பதிந்து நின்றிருந்த பல்லாயிரம் கந்தர்வர்களையும் தேவர்களையும் கண்டான். “மானுடர் எவரும் இல்லை. அவர்களால் முதல் வாயிலையே கடக்கமுடியாது” என்றான் தவளன். “தேவர்களுக்கு எதற்கு செல்வம்?” என்றான் அர்ஜுனன்.

“வீரரே, கந்தர்வ உலகிலும் தேவருலகிலும் அழகுகளும் இனிமைகளும் மதிப்புகளும் சிறப்புகளும்  அளவில்லாது நிறைந்துள்ளன. ஆனால் அவை எவருக்கும் உரிமையானதல்ல. எனவே அவை செல்வங்கள் அல்ல. செல்வமென்பது எவருக்கேனும் உரிமையானது. அச்செல்வத்திற்கு மட்டுமே எந்தை குபேரன் உடைமையாளர்” என்றான் சுஃப்ரன்.

“கந்தர்வர்களிலும் தேவர்களிலும் தானென்னும் உணர்வை அடைபவர் கோடியில் ஒருவர். அவர்களில் கோடியில் ஒருவர் தனக்கென்றே ஏதேனும் செல்வத்தை விழைகிறார்கள். இங்கு வருபவர்கள் அவர்களே” என்றான் தவளன். “அவர்கள் விழைவதே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பெருஞ்செல்வக்குவையில் ஒட்டி ஒன்றாகி அமர்ந்திருக்கிறார்கள்.” அர்ஜுனன் அவர்களின் விழிகளை நோக்கினான். எவற்றிலும் துயர் இல்லை. இனிய கனவு ஒன்றின் மயக்குதான் தெரிந்தது.

“மாயை!” என்று அர்ஜுனன் சொன்னான். “அழியாச்சிறை. மீளமுடியாத தளை.” தவளன் “அவர்கள் எவரும் மீள விரும்பவுமில்லை” என்றான். “செல்வத்தை விழைபவர் எவரும் சென்றடையும் இடம் வேறேது?” என்றான் சுஃப்ரன். “அவர்கள் செல்வத்தின் மேல் அமைந்திருக்க முடியும். செல்வமே ஆக முடியும். அந்தக் களிமயக்கில் காலத்தை கடக்க முடியும். வேறேது தேவை அவர்களுக்கு?” என்றான் தவளன்.

அர்ஜுனன் “ஆனால் அவர்கள் செயலற்றுவிட்டார்கள். அவர்களால் எதையும் நுகர முடியாது” என்றான். தவளன் குழப்பத்துடன் “அவர்கள் நுகர விழைகிறார்களா என்ன? அவ்வாறு விழைந்தால் இன்பத்தின் தெய்வங்களை நாடி அல்லவா சென்றிருப்பார்கள்? இங்கு ஏன் வருகிறார்கள்?” என்றான். திரும்பி சுஃப்ரனிடம் “அப்படியா அவர்கள் கோரினார்கள்? குழப்பமாக இருக்கிறதே?” என்றான்.

சுஃப்ரன் “ஆம், இங்கு வந்த எவரும் அவர்கள் விழைந்தது இன்பத்தை என்று சொன்னதில்லை. செல்வத்தைத்தான் கோரியிருக்கிறார்கள்” என்றான். தவளன் சிரித்தபடி “ஆம், உண்மை” என்றபின் திரும்பி “நீங்கள்தான் குழம்பியிருக்கிறீர்கள், இளைய பாண்டவரே. எங்களை குழப்பவேண்டாம்” என்றான். “நாங்கள் குழம்பினால் மிகவும் குழம்பிவிடுவோம். மீண்டு வர நெடுங்காலமாகும்” என்றான் சுஃப்ரன்.

“நான் செல்வத்தின்பொருட்டு வரவில்லை. குபேரனை கண்டுசெல்லவே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “எதன்பொருட்டு காணவேண்டும்?” என்று சுஃப்ரன் கேட்டான். “அவரிடம் கேட்கவேண்டிய அனைத்தையும் என்னிடம் கேட்கலாம் நீங்கள்.” அர்ஜுனன் “நான் அவரை வென்றுசெல்ல வந்துள்ளேன். எதையும் வெல்வது மட்டுமே என் விழைவு. என் ஆசிரியனிடமிருந்து அன்றி நான் கொள்வதற்கென ஏதுமில்லை” என்றான்.

“அப்படியென்றால் முதலில் என்னை வென்று செல்க!” என்றான் சுஃப்ரன். தவளன் அவனைப் பிடித்து பின்னால் இழுத்து “என்னை வென்று செல்க… என்னை” என்றான். “என்னை என்னை” என்று சுஃப்ரன் முண்டியடித்தான். “சரி, இருவரையும்… இருவரையும்” என்றான் அர்ஜுனன். “என்ன ஆட்டம்? இங்குள்ள ஆட்டமெல்லாம் செல்வத்தால் அல்லவா?”

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “ஆமாம், என்ன ஆட்டம்?” என்றான் சுஃப்ரன். “வழக்கமாக வருபவர்களிடம் இதோ இச்செல்வத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், எஞ்சியவற்றை குபேரனிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என்போம். ஓடிப்போய் இக்கோட்டையை தொடுவார்கள். பசையில் ஈ என ஒட்டிக்கொள்வார்கள். நீங்கள் இதை விரும்பவில்லை.” தவளன் “இருங்கள்… நாங்களே யோசித்துவிட்டு வருகிறோம்” என்றான்.

இருவரும் அப்பால் சென்று நின்று அவனை நோக்கியபடி மாறி மாறி பேசிக்கொண்டனர். சிறு பூசல் ஒன்று நிகழ்ந்து ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளிக்கொண்டனர். பின்னர் இருவரும் தோள் ஒட்டி நடந்து அவன் அருகே வந்தனர். “எங்களுக்குத் தேவை ஒரு செல்வம்” என்றான் சுஃப்ரன். “எங்களுக்கு குன்றாத ஆர்வமளிக்கும் செல்வமாக அது இருக்கவேண்டும். நாங்கள் அதை பேரார்வத்துடன் ஏற்கவேண்டும். எங்கள் ஆர்வம் ஒரு கணம் குறையுமென்றால் அப்போதே நீர் இச்சுவரில் சிற்பமெனப் பதிவீர்.”

“இங்கு இல்லாத செல்வம் இல்லை. ஆகவே நீங்கள் எதையளித்தாலும் எங்களுக்கு ஆர்வமில்லை என்று சொல்லிவிடுவோம்” என சொல்லி தவளன் கிளுகிளுத்து சிரித்தான். “பேசாதே, மூடா!” என அவனை சுஃப்ரன் கிள்ள “கிள்ளாதே” என்று தவளன் சீறினான். “எங்கே உங்கள் செல்வம்? எங்களையே கட்டிப்போடும் செல்வம்?” என்றான் சுஃப்ரன்.

“நீங்கள் இதுவரை அறியாத பெருஞ்செல்வம் ஒன்று உங்களிடமிருக்கிறது” என்றான் அர்ஜுனன். “கந்தர்வர்களே, நீங்கள் அழிவற்றவர்கள். ஆகவே முடிவிலாக் காலம் கொண்டவர்கள். அந்தக் காலம் ஒரு பெரும்செல்வம் அல்லவா?” சுஃப்ரன் தவளனை நோக்கிவிட்டு “காலமா? அதெப்படி செல்வமாகும்?” என்றான். தவளன் “எங்களை ஏமாற்றமுடியாது” என்றான். ஆர்வத்துடன் அருகே வந்து “எப்படி காலம் செல்வமாக ஆகும்?” என்றான்.

“செல்வம் என்பது என்ன? பிறிதொன்றுக்கு நிகர்வைக்கப்படும் ஒரு பொருள் அல்லவா அது? இன்பத்துக்கு, ஆற்றலுக்கு, மதிப்புக்கு பொன்னையோ வெள்ளியையோ  நிகர்வைக்கிறோம்.  மண்முத்திரைகளை,  எழுதப்பட்ட ஓலைகளை நிகர்வைக்கிறோம். இளையோரே, வெறும் சோழிகளைக்கூட நிகர்வைப்பதுண்டு.”  சுஃப்ரன் “ஆம், அதன் பெயர் பணம்” என்றான். தவளன் “செல்வத்தை அது ஓர் அடையாளமாக ஆக்கிவிடுகிறது. ஒரு சொல்லாக மாற்றி சுருக்கிவிடுகிறது” என்றான்.

“அதேபோல நீங்கள் காலத்துக்கு பொருளை நிகர்வைத்தால் எத்தனை பெருஞ்செல்வத்திற்கு உடைமையாகிறீர்கள் என்று அறிவீர்களா?” என்றான் அர்ஜுனன். “எனக்கு இரு வெள்ளி நாணயங்களை கடனாகக் கொடுங்கள். நீங்கள் கேட்கும் கணம் அவற்றை திருப்பியளிப்பேன்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு “இதோ” என இரு நாணயங்களை அவனிடம் அளித்தனர்.

அவன் அவற்றில் ஒன்றை சுஃப்ரனிடம் அளித்தான். “சுஃப்ரரே, இப்போது உங்களிடமிருக்கும் இந்த நாணயம் இக்கணத்திற்கு நிகரானது. இக்கணம் பெருகும்போது இதுவும் பெருகுகிறது எனக்கொள்வோம்” என்றான். சுஃப்ரன் புரியாமல்  தலையசைத்தான். “இதை நீங்கள் இவருக்கு கடனாக அளிக்கிறீர்கள். இவர் இதை திருப்பியளிக்கையில் இதன் காலத்தின் மதிப்பையும் சேர்த்து அளிக்கவேண்டும்” என்றான். தவளன் “ஆம்” என்றான்.

“இதோ, இது இரு நாணயங்களின் மதிப்பை பெற்றுவிட்டது. நான்கு நாணயங்களாக ஆகிறது. எட்டு நாணயங்களாக பெருகிக்கொண்டே இருக்கிறது” என்றான் அர்ஜுனன். சுஃப்ரன் விழிகள் மின்ன “ஆம்” என்றான். “என்னால் அதை உணரமுடிகிறது.” அர்ஜுனன் “உங்கள் முடிவிலாக் காலம் அவரால்தான் பிளக்கப்பட்டு அடுக்கி எண்ணப்பட்டு அளவைக்காலமாக உருவாக்கப்படுகிறது என்பதை மறக்கவேண்டாம். அவர் அளிப்பதே அதன் காலமதிப்பு. அந்த நாணயத்தை நீங்கள் உங்களிடம் வைத்திருந்தீர்கள் என்றால் அளவைக்காலம் நின்றுவிடுகிறது. நாணயம் தன் மதிப்பை இழந்துவிடுகிறது” என்றான்.

இன்னொரு நாணயத்தை தவளனிடம் கொடுத்தான். “இதோ, இந்நாணயம் உங்கள் காலம். அது அவரிடமிருக்கையில் மட்டும் வளர்வதாகும்”. தவளன் சுட்டுப்பழுத்த உலோகத்தை என அதை உடனே சுஃப்ரனிடம் கொடுத்தான். “என் செல்வம் அது…” என்று கைசுட்டிக் கூவினான். “எண்ணிக்கொண்டிருங்கள். உங்கள் செல்வம் ஒன்றின் மடங்குகளெனப் பெருகுவதை பார்ப்பீர்கள். நிகரற்ற பெருஞ்செல்வம் என்பது இதுவே. குபேரனின் செல்வத்திற்கு எல்லை உண்டு. இது காலம், முடிவிலி.”

சுஃப்ரன் “என்றேனும் நான் போதும், என் செல்வத்தை திருப்பிக்கொடு என கேட்டால் இவன் எப்படி அந்நாணயத்தின் பெருகிய மதிப்பை எனக்கு அளிப்பான்?” என்றான். அர்ஜுனன் “அவர் செல்வம் உங்களிடமிருக்கிறதல்லவா? இரு மதிப்பும் நிகரல்லவா? கைமாற்றிக்கொள்ளலாமே!” என்றான். அவன் அதை ஆராயத் தொடங்குவதற்குள் “ஆனால் காலம் முடிவிலாதது. அதை பாதியில் நிறுத்துவீர்களா என்ன?” என்றான். “மாட்டேன்” என்றான் தவளன் உரக்க. சுஃப்ரன் “கடினம்தான்” என்றான்.

“நான் பெற்றுக்கொண்ட நாணயத்தை திருப்பியளிக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன். “ஆட்டத்தை நிறுத்தி அந்த நாணயங்களை நீங்கள் எனக்கு திருப்பி அளிக்கையில் நான் கடனை அடைத்துவிடுகிறேன்.” சுஃப்ரன் “தேவையில்லை, நாங்கள் அளித்ததைத்தானே பெற்றுக்கொண்டோம்? கடன் நிகராயிற்று” என்றான். தவளன் “ஆம், ஆனால் அந்த நாணயம் வளர்ந்துவிட்டிருக்கிறது. அதில் உமக்கு பங்கில்லை” என்றான்.

“நன்று. நான் பங்கு கோரவில்லை. இவ்வாயிலைக் கடந்துசெல்ல விழைகிறேன். வழி அளிக்கவேண்டும்” என்றான். “அங்கே சென்று நின்று இவை வெறும் ஒளியின் அலைகளே, நான் அறிவேன் என்று மட்டும் சொல்லுங்கள். வாயில் திறக்கும்” என்றான் சுஃப்ரன். அவன் விழிகள் தவளனின் கையில் இருந்த நாணயத்தை நோக்கிக்கொண்டிருந்தன. தவளன் விழி நீக்காமல் சுஃப்ரனின் கையில் இருந்த தன் நாணயத்தை நோக்கியபடி “ஆம், நம்பி உறுதியுடன் சொன்னால் அலைகளாக மாறி வழிவிட்டாகவேண்டும் இக்கோட்டை” என்றான்.

அர்ஜுனன் “நன்றி, இளையோரே. நல்ல ஆடல் நிகழ்வதாக!” என்றபின் சென்று அக்கோட்டைவாயில் முன் நின்றான். “ஒளியலைகள் மட்டுமே” என்றான். ஒளியலையாக மாறிய அக்கதவினூடாக நடந்து அப்பால் சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்


விஷ்ணுபுரம்- அற்புதமான உலகம்

$
0
0

download (1)விஷ்ணுபுரம் வாசித்த பின் ஏற்படும் வெறுமை ,இத்தனை நாட்கள் உடன் வந்த நதியும்,கதைகளும்,பாதமும் எங்கே என்ற எண்ணமும் என்னில் இருந்துகொண்டே இருந்தது.

 

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -மோனிகா மாறன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் பற்றி-6

$
0
0

photo

சிறுகதைகள் வரிசையில் வந்திருக்கும் கதைகளில் சிவாகிருஷ்ணமூர்த்தி, செந்தில், கேஜேஅ, தூயன் ஆகியோரின் கதைகளை அவை வெளிவந்த சமயத்திலோ,பிறகோ படித்திருக்கிறேன்.

செந்திலண்ணனின் கதையில் வரும் நயன்தாரா இதுநம்மாளு போன்றவைகளில்  இது நம்ம ஆளை  அப்படியே வைத்து நயன்தாராவுக்குப் பதிலாக ஷோபனா ரசிகராக  மாற்றியிருந்தால் இன்னும் பொருந்தியிருக்கும் எனத் தோன்றியது.

சிவாகி அவர்களின் கதைகளில் அவர் எப்போதும் எடுக்கும் ‘மினி’ அல்லது ‘மைக்ரோ’ கும்பமுனி அவதார சாயல் இதிலும் இருந்தது. அவரது கதைகளில் சம்பத், வெகுளாமை, யாவரும் கேளிர் ஆகியவற்றிற்குப் பின் இதை வைக்கலாம். ( ஒருவேளை அதுக்கப்புறம்தான் இதைப் படிச்சேனோ)

பாம்பு வேட்டை கதையும் நாயகனின் ஏமாற்றமும்  எழுத்தில் சிறப்பானதாக இருந்தன. எலியை ராஜநாகம் தொடர்வது எலியைப் படிக்க அல்ல அது பாம்பு வேட்டை என்ற பஞ்ச் ம்..

தூயனின் தில்லையம்மா சிறுகதைகள் வாராந்தரிகளில் வரும் சிறுகதைகளின் சாயல் கொண்டிருந்த தது.  அவருக்கு நன்றி தெரிவித்து நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதிலளிக்கையில், அந்தக் கதை ஆறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார். தினமணிக் கதிரில் வந்திருக்கும் கதை என்பது அந்த லிங்க் மூலம் அறிந்து கொண்டது. அவர் சமீபத்திய சிறுகதை ஒன்றை அனுப்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

சுனிலின் கதை பற்றி பேசுகையில் ஷிமோகா ரவி அவர்கள் ‘ சுனில் ஆரம்ப எழுத்தாளர்கள் நிலையைக் கடந்து இரண்டு மூன்று படிகள் ஏறி விட்டார் என்றார்.’ அதுவே என் கருத்தும்..

இவர்கள் தவிர, இதுவரை நான் படித்திராத மாதவன் இளங்கோ வின் work pressure வழியாக சொல்லப்பட்ட கதையில் (ஐடி மக்கள் தினந்தோறும் காணும் )மேலதிகாரியின் மறுபக்கமும் இறுதிவரியும் ஓரளவு யூகிக்க முடிந்திருந்தாலும் அவரது எழுத்து நடையும் கதை சொல்லும் விதமும் கச்சிதமாக இருந்தன. மகேந்திரன் மற்றும் மோனிகா மாறனின் கதைகளும் அதுபோல மிகக் கச்சிதமான நடைகளே, மேலும் அவை கொண்ட கவித்துவம் இன்னும் அழகு. குறிப்பாக தச்சனின் கருணை.  தருணாதித்தனின் அங்கதமும் எள்ளலும் கொண்ட இரு கதைகளும் இந்த மொத்தச்  சிறுகதைகளிலுமே மிகவும் தனித்து நிற்கின்றன. அவைகளுக்கு முறையே ஒரு சலாமும் ஒரு சபாஷும் போட்டேன்

அன்புடன்
R.காளிப்ரஸாத்

 

 

அன்புள்ள ஜெ

 

கதைகளை வாசித்துக்கொண்டே இருந்தேன். அனேகமாக எல்லா கதைகளில்ம் உள்ள முக்கியமான குறை என்பது லௌகீகவாழ்க்கையின் ஒரு தருணத்தைக் கதையாக ஆக்குவது என்பதாகவே உள்ளது. லௌகீக வாழ்க்கை முக்கியம்தான். ஆனால் அது கதையை கீழேயே அமரவைத்துவிடும். அந்த  தருணத்தில் இருந்து மேலெ போய் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாசித்தெடுக்கும் வாய்ப்பு அந்தக்கதைமேல் அமையவேண்டும். அந்தக்கதை நமக்கு தத்துவார்த்தமாகவும் கவித்துவமாகவும் அர்த்தப்படவேண்டும். அது நிகழாத கதைகளை நாம் நினைவில் நிறுத்துவதில்லை

 

ஆர். கணேஷ்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யானைமேல் அமர்ந்திருப்பது…

$
0
0

download (1)

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இரு மாதங்களுக்கு முன் கேஜ்ரிவால் பற்றிய எனது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு முடித்திருந்தீர்கள்-

இன்று அதன் சரிவு எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிழைகளிலிருந்து அவ்வியக்கம் மீண்டுவரவேண்டும் என்று விரும்புகிறேன். அது அழியவேண்டுமென விரும்பவில்லை. அதன் அழிவை மகிழ்ந்து கொண்டாடுபவர்களுடனும் நான் இல்லை

ஆனால் நாளுக்குநாள் கேஜ்ரிவால் அவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம்மூர் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விட மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறதே?.முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வு ஊதியம் சம்பந்தமாக ஒரு ஓய்வுபெற்ற வீரர் தற்கொலை செய்துகொண்டதை வைத்து இவர் நடத்தும் நாடகங்கள் எல்லை மீறி செல்கின்றனவே? இவரும் சராசரி அரசியல்வாதி போல் உண்மை நிலையை பற்றி சற்றும் தெரிந்துகொள்ளாமல் மோதி அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு,அந்த வீரரின் உடல் இருக்கும் மருத்துவமனையில் அத்து மீறி பிரவேசித்து கைதாவதும், உடனே ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்கப்போவதாக அறிவிப்பதும் (அந்த வீரர் ஏற்கனவே மோதி அரசின் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம் ரூ.45,000/- வரை வாங்குவதாகவும், பின் தேதி இட்டு!தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு முன்னாலேயே! இறந்துவிட்டதாகவும் செய்திகள் உலவும் நிலையில்..) – ஒரு படித்த, அரசாங்கத்தில் உயர்பதவியில் முன்பு வேலைபார்த்தவரின் செயலாக இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறதே.

இதே போல் சில நாட்களுக்கு முன் பாக்கிஸ்தான் தீவீரவாதிகளுக்கு எதிராக நமது ராணுவம் நடத்திய “துல்லிய அடி”(Surgical Strike) பற்றிய காணொளி காட்சி ஆதாரத்தை வெளியிடவேண்டும் என்றும் JNU இல் நடைபெறும் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதும் உங்களுக்கு ஏற்புடையதாகத் தெரிகிறதா?.இவருக்கு தில்லி மக்கள் வழங்கிய அமோக ஆதரவை வீணடித்துக் கொண்டு வருவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?

அன்புடன்,

அ.சேஷகிரி

*

அன்புள்ள சேஷகிரி

பல சிக்கல்கள் எனக்குத் தோன்றுகின்றன. ஒன்று டெல்லி என்னும் சிக்கலான பிரம்மாண்டமான நகரத்தை விரும்பியபடி நடத்தவோ சீரமைக்கவோ தேவையான அதிகாரம் கேஜ்ரிவாலிடம் இல்லை. ஏனென்றால் அதன் பெரும்பகுதி மத்திய அரசின் கீழுள்ள துணைராணுவப்படைகளின் கீழ் உள்ளது. ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அதிகம். அவருக்கு காவல்துறைமேலேயே அதிகாரமில்லை

கேஜ்ரிவாலின் வெற்றி குறியீட்டு ரீதியாக மட்டுமே முக்கியமானது. அவருக்கு உண்மையான அதிகாரமேதும் கிடைக்கவில்லை. அதை இப்போதுதான் அவர் புரிந்துகொள்கிறார் என நினைக்கிறேன். ஆகவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோற்றுப்போன ஆட்சியாளர் என்னும் சித்திரம் தனக்கு வராமலிருக்க அவர் முயற்சி செய்கிறார். அது ஒன்றே அவரது அரசியல் எதிர்காலம் கருதி அவர் செய்யக்கூடுவது

அதற்கு மூர்க்கமான மத்திய அரசு எதிர்ப்பு அரசியலைச் செய்யவேண்டும் அவர். மத்திய அரசு எதிர்ப்பை மோடி எதிர்ப்பு என்னும் பேரில் செய்தால் மோடி எதிர்ப்பு – வெறுப்பு – தரப்புகளின் ஆதரவை திரட்டிக்கொள்ள முடியும். அதைத்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார். அது மெல்ல அத்துமீறிச் செல்கிறது

அவர் டெல்லியில் இருக்கிறார். டெல்லி நம் ஊடகங்களின் மையம். ஆகவே ஊடகம் முன்னால் நின்றுகொண்டிருப்பதே அவருடைய முதல் ஈடுபாடாக உள்ளது. அவர் உண்மையில் கோவா அல்லது பாண்டிச்சேரி போன்ற ஒரு சிறிய நிலப்பகுதியின் ஆட்சியாளர். ஆனால் அவருக்கு எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத முக்கியத்துவம் அவர் டெல்லியில் இருப்பதனாலேயே கிடைக்கிறது. அதில் அவர் திளைக்கிறார்

அதனால் அவருக்கு அரசியல் இலாபமும் உண்டு. அவர் ஒரு அரசியல் பிரமுகராக ஊடங்களால் நிலைநிறுத்தப்படுகிறார். அப்படி நின்றிருக்க அவருக்கு என்ன தகுதியிருக்கிறது, ஆட்சியாளராக அல்லது அரசியல்தலைவராக அவர் சாதித்தது என்ன என்னும் வினா எஞ்சியிருக்கையிலேயே அவர் ஊடகங்களில் பெருகிக்கொண்டே செல்கிறார்.

இதன் எதிர்விளைவுகளையும் அவர் அனுபவிக்கிறார். அவர் ஊடகங்களில் வளர வளர அவரது தோழர்கள் அதிருப்தி அடைகிறார்கள். ஏனென்றால் அவர் தொடங்கியது ஓர் இயக்கம், தனிநபர் பிரச்சார அமைப்பு அல்ல. அந்த இயக்கத்தின் முகமாக அவர் முன்னே எழ எழ பிறர் சலிப்புற்று விலகுகிறார்கள். அந்த அமைப்பு வீழ்ச்சி அடைகிறது

கேஜ்ரிவால் ஒரு நம்பிக்கை. ஒரு சாமானியன் மக்களை நோக்கிப் பேசமுடியும், அதன் வழியாக அதிகாரத்தை அடையமுடியும், அதற்கு ஜனநாயகத்தில் இடமிருக்கிறது என்ற நம்பிக்கை. அதை அவர் அழித்துக்கொண்டிருக்கிறார். தெருச்சண்டை அரசியல்வாதியாக, இன்னொரு  லல்லுப்பிரசாத் ஆக, மாறிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். லல்லு இதேபோல மாபெரும் நம்பிக்கையாக, சாமானியனின் வெற்றியாக அரசியலுக்கு வந்தவர்.

ஆனால் இத்தகைய சரிவுகள் நமக்குப் புதியவை அல்ல. வி.பி.சிங், சந்திரசேகர் அதற்கு முன்பு சரண்சிங் ராஜ்நாராயணன். எத்தனை முகங்கள். மனிதர்கள் வரலாற்றின் மேல் ஆரோகணிக்கும்போது தங்கள் எல்லைகளை மறந்துவிடுகிறார்கள். தங்கள் உடல் ஊதிப்பெருக்கக் காண்கிறார்கள். வெடித்து அழிகிறார்கள்.

இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பைப்பற்றி கேஜ்ரிவால் பேசியிருக்கும் அபத்தத்தைப் பார்க்கையில் பெரும் வருத்தம் எஞ்சுகிறது. எந்த ஆதாரமோ தர்க்கமோ இல்லாத வெற்றுக்கூச்சல். முட்டாள்களை, மோடி எதிர்ப்பு ஊடகங்களை மட்டுமே நம்பி செய்யும் கழைக்கூத்து

இந்த கோமாளி இப்படியே அரசியலில் இருந்து அழிந்தால் நாட்டுக்கு நல்லது. ராஜநாராயணன் போல இவருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்குமென்றால் அது தேசத்தின் தீயூழ்.மீண்டும் மீண்டும் இத்தகையவர்களால் ஜனநாயகத்தின் அடிப்படைநம்பிக்கைகள் அழிகின்றன.

யானைமேல் ஏறுவதைவிட அமர்ந்திருப்பது கடினம் என்று ஒரு பழமொழி உண்டு. வரலாற்றின் அலைமேல் சமநிலையுடன் நிற்பது எளிதல்ல

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27

$
0
0

[ 40 ]

பொன்னகரின் தெரு வழியாக அர்ஜுனன் நடந்துசென்றான். அங்கு மாளிகைகள், காவல்மாடங்கள் அனைத்தும் பொன்னென மின்னின. செடிகளும் மரங்களும் பொன்னென்றிருந்தன. முகில்கள் பொன். அவற்றை எதிரொளித்த சுனைநீர்ப்பரப்பும் பொன். அங்கே மிதந்தலைந்த கந்தர்வரும் கின்னரரும் தேவரும் பொன்னுருவர். அளகாபுரியின் காவல் வீரரும் ஏவலாளரும் பொன்னுடல்கொண்டிருந்தனர். பொன்னென்றாகியது தன் விழியோ என்று அவன் ஐயுற்றான்.

நகரின் எவ்விழிகளும் அவன் உள்நுழைந்ததையும் ஊடுருவி கடந்து செல்வதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொருவர் விழிகளையும் அவன் உற்று நோக்குகையில் அறியாத உணர்வொன்றால் அவர்கள் இமை சுருங்குவதையும் சிலர் உடல் சிலிர்த்து புது எண்ணம் ஒன்று எழ அருகில் நிற்பவரை திரும்பி நோக்குவதையும் கண்டான். அவர்கள் கொண்ட தடுமாற்றம் அவனை மலர்ந்து நகைக்கவைத்தது.

விந்தையான களியாட்ட உணர்வொன்றெழ தன் முன்னால் சென்றுகொண்டிருந்த கந்தர்வப் பெண்ணொருத்தியின் தோள்களை மெல்ல தொட்டான். திடுக்கிட்டுத் திரும்பி நோக்கி அருகே வந்துகொண்டிருந்த கந்தர்வனை அவள் பொய்ச்சினத்துடன் மெல்ல அடித்தாள். அது அவனுக்கு உளக்கொண்டாட்டத்தை அளித்தது. அவள் பின்குழைவை பற்றினான். அவள் படபடப்புடன் திரும்பி அந்த கந்தர்வனை நோக்க அவன் திகைத்து “என்ன?” என்றான். அவள் முகம் சிவந்து நோக்கை விலக்கிக்கொண்டாள்.

அந்நகரின் தெருக்களினூடாக பொன்வடிவ கந்தர்வர்களின் கால்களுக்கு நடுவே தன் கால்களைப் புகுத்தி நடை இடற வைத்தான். கன்னியரின் கூந்தலைப்பற்றி இழுத்து அவர்களை சினந்து திரும்ப வைத்தான். சிறு குழந்தைகள் முன் சென்று அவர்களின் விழிகளுக்குள் உற்று நோக்கி அஞ்சி அழவைத்தான். ஓடிவந்து எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சுற்றும் நோக்கிய அன்னையர் குழந்தைகளை முத்தமிட்டு ஆறுதல் உரைத்து அணைத்து கொண்டு சென்றனர்.

நகர் நடுவே கடற்பாறையில் சிப்பிகள் அடர்ந்திருப்பதுபோல பல்லாயிரம் உப்பரிகைகளுடன் ஓங்கி நின்றிருந்த அரண்மனை அமைந்திருந்த உள்கோட்டையை நோக்கி அவன் சென்றான். பொன்னாலான பெருஞ்சுவர் சூழ்ந்த அவ்வளாகத்தின் முகப்பில் இருந்த ஒற்றை வாயிலொன்றே உள்நுழைவதற்கும் வெளிவருவதற்கும் உரியதாக இருந்தது. இறுக மூடப்பட்டு மின்னும் கரிய இரும்பால் தாழிடப்பட்டிருந்தது.

அந்தத் தாழுக்கு இருபுறமும் பொன்னுடல்கொண்ட இரு காவலர் பொன்னாலான படைக்கலங்களுடன் நின்றிருந்தனர். அர்ஜுனன் அவர்களை நெருங்குகையில் அவன் வருவதை அவர்களும் பார்த்துவிட்டிருந்தனர். ஒருவன் சினத்துடன் தன் கைவேலை நீட்டியபடி முன்னால் வந்து “யார் நீ? மானுடனா? எங்ஙனம் இதற்குள் நுழைந்தாய்?” என்றான். பிறிதொருவன் “மானுடர் இதற்குள் நுழையும் வழியே இல்லை. நீ மானுட வடிவுகொண்டு வந்த அரக்கன்” என்றான்.

அர்ஜுனன் “நான் குருகுலத்து இளவல், பாண்டவன். என் பெயர் பார்த்தன். உங்கள் அரசரைக் கண்டு பொருள்விளையாடி வென்றுசெல்ல வந்தவன்” என்றான். இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். “வென்று செல்வதற்கென்று நீயே முடிவு கட்டிவிட்டாயா?” என்று ஒருவன் மீசையை நீவியபடி சினத்துடன் கேட்டான். “ஆம். வெல்லும்பொருட்டே எச்சமரிலும் இறங்குவது என் வழக்கம். இதுவரைக்கும் எக்களத்திலும் தோற்றதில்லை. தோற்றபின் வாழும் எண்ணமுமில்லை” என்றான்.

இன்னொருவன் “இக்கோட்டைக்குள் கந்தர்வர்களோ கின்னர கிம்புருடர்களோ வித்யாதரர்களோ தேவர்களோ இதுவரை நுழைய ஒப்பளிக்கப்பட்டதில்லை. மானுடன் நுழைவதை எண்ணியும் பார்க்க முடியாது” என்றான். “இங்கு ஒரு மானுடன் வந்து நின்று உங்கள் அரசனை சொல்லாடவும் பொருளாடவும் அறைகூவுகிறான் என்று அவனிடம் சென்று சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன்.

“எச்செயலையும் நாங்களேதான் செய்ய வேண்டும்” என்றான் காவலன். “நாங்கள் உள்ளே என்ன நிகழ்கிறதென்று அறிவதே இல்லை.” அர்ஜுனன் “எப்படியாயினும் இவ்வரணைக் கடந்து மறுபக்கம் நான் செல்வது உறுதி. சென்றபின் நீங்கள் வரவறிவிக்கவில்லை என்று உங்கள் அரசரிடம் சொல்வேன். அது பிழையென்றால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்” என்றான்.

இருவரும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். பின்னர் ஒருவன் “வீரரே! இவ்வாயிலை வெளியிலிருந்து எவரும் திறக்க முடியாது. இத்தாழின் திறவி என ஏதுமில்லை. பலநூறு முறை கந்தர்வர்கள் இதை திறக்க முயன்றிருக்கிறார்கள். அங்ஙனம் முயன்ற அனைவருமே நிழலுருக்களாக மாறி இப்பொன்னெயில் செதுக்குகளின் வளைவுகளில் படிந்து மறைந்துவிட்டார்கள். முடிந்தால் நீர் இதைத் திறந்து உள்ளே செல்லலாம்” என்றான்.

அர்ஜுனன் அந்தக் கதவை அணுகி தன் பொன்னுருவம் அதில் தெளிந்தெழுவதை ஒருகணம் நோக்கி நின்றான். அதிலிருந்த சித்திரச் செதுக்குகளால் அவ்வுரு சிதறிப்பரந்தும் உருவழிந்து நெளிந்தும் தோன்றியது. மலர்களும் தளிர்களும் கொடிகளுடன் பின்னிப் பிணைந்து உருவாகியிருந்த அதன் நுண்ணிய சிற்பச் செதுக்குகளுக்குள் பல்லாயிரம் கந்தர்வர்களும் கின்னரர்களும் முனிவரும் அரசரும் பெருவணிகரும் தெளிந்தும் மறைந்தும் முகம் காட்டினர். நோக்க நோக்க அவ்விழிகள் அனைத்தும் உயிர் கொண்டன. அறியா பெருங்களிப்பொன்றில் மூழ்கி அவை அமைந்திருந்தன. யோகத்தில் அமர்ந்த முனிவர்களுக்கு நிகர் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

அர்ஜுனன் திரும்பி காவலனிடம் “பூட்டு என்றால் அதற்கொரு திறவுகோல் இருந்தாகவேண்டும்” என்றான். “நாங்கள் இங்கு இக்கோட்டை உருவான முதற்கணம் முதல் காவல் இருக்கிறோம். எங்களுக்கு காலம் மடிப்புறுவதில்லை. இக்கணம் வரை இதற்கு ஒரு திறவி உண்டென்று அறிந்ததில்லை” என்றான். இன்னொருவன் “உள்நுழைய விரும்பும் ஒவ்வொருவரும் இதை வந்து நோக்கி இதன் திறவுமுறையை கணித்து திறவி செய்து கொண்டு வருகிறார்கள். இப்பூட்டு இதுவரை எதையும் ஏற்றுக்கொண்டதில்லை” என்றான்.

அர்ஜுனன் கல்லிரும்பு உருக்கி செய்யப்பட்ட அப்பெருந்தாழை கைகளால் தொட்டுப்பார்த்தான். அதன் பூட்டு ஒற்றை வாய் திறந்திருக்க எடை கொண்டு இரும்பு வளையத்தில் தொங்கியது. அப்பூட்டின் வளையத்திற்குள் கைவிட்டு காலால் கதவை உதைத்து இழுத்தான். “என்ன செய்கிறீர்?” என்று ஒருவன் கேட்டான். “அதை அகற்ற முயல்கிறீர்களா? அப்பெருந்தாழையா?” என்றான் இன்னொருவன். “மூடரே அதைச் செய்வர். அது பேரெடை கொண்ட இரும்புத்தாழ்.”

ஆனால் இரும்புத்தாழ் பொற்கதவிலிருந்து மெல்ல நெகிழ்ந்து ஆணிகள் பிழுதுகொண்டு பெயர்ந்து வந்தது. “வருகிறது” என்றான் ஒருவன் திகைப்புடன். இன்னொருவன் அருகே வந்து “தனியொருவனாகவா? நீர் யார்?” என்றான்.

முழு உடலும் நரம்புகள் புடைக்க தசைநார்கள் விம்மி விசைகொண்டு இறுகி நிற்க பற்களைக் கடித்து மூச்சனைத்தையும் திரட்டி இழுத்து அசைத்து அத்தாழைப் பிழுது கையிலெடுத்த அர்ஜுனன் அதன் எடை தாளாமல் சுழன்று மல்லாந்து கீழே விழுந்தான். எடையின் ஓசையுடன் செம்பொன்நிற மண்ணில் விழுந்து பாதி புதைந்தன தாழும் பூட்டும்.

அர்ஜுனன் கையூன்றி எழுந்து நின்று மூச்சிரைத்தபடி “இரும்புத்தாழை செம்பொன் தாளாது” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். “தூய பொன் மெழுகு போல் மென்மையானது, வீரர்களே” என்றபடி அக்கதவை ஓங்கி உதைத்துத் திறந்தான். ஓசையின்றி அது விலகித் திறக்க உள்ளே நிறைந்திருந்த ஒளிமிக்க பொன்நிற வெளியில் புதைபவன்போல் எழுந்து நடந்து சென்றான்.

குபேரனின் அரண்மனை வாயிலில் நின்ற பொன்னிழலுருவ வாயிற்காவலர் அவனைக்கண்டு திகைத்து விழிவிரித்தனர். அஞ்சியவர்கள் போல பின்னடைந்து பின் கூச்சலிட்டபடி பதறும் காலடிகளுடன் படைக்கலம் தூக்கி முன்னெட்டுவைத்தனர். சற்றும் அஞ்சாது அவன் அணுகியதும் சிலர் செய்தி சொல்ல உள்ளே ஓடினர். சிலர் அவனை நோக்கி ஓடிவந்து படைக்கலங்களைத் தூக்கி தாக்க முயன்றனர். “மூடர்களே, இத்தனை தடைகளைக் கடந்து வந்தவனால் உங்களையா வெல்ல முடியாது?” என்றான் அர்ஜுனன் கடுஞ்சினத்தோற்றத்துடன்.

உளம் தளர்ந்து அவர்களில் பலர் நின்றுவிட்டனர். படைக்கலங்கள் தாழ்ந்து நிலம் முட்டி ஒலியெழுப்பின. ஊக்கத்தின்பொருட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்க அவர்களில் சற்றேனும் துணிவுடையவர் எனத் தோன்றியவர்களை நோக்கி “மானுடனிடம் தோற்றபின் தெய்வகணங்களுக்கு மீட்பே இல்லை என்றறிக! விலகினால் தோல்வி தவிர்க்கப்படும்…” என்றான். அவர்கள் விழி தாழ்த்தி முகம் திருப்பிக்கொண்டனர்.

மேலும் எதிரே வந்தவர்களிடம் அவன் உரக்க “என்னை உள்ளே விடுபவர்களுக்கு அவர்கள் எண்ணியிராத பரிசுகள் அளிக்கப்படும்” என்றான். “அப்பரிசுகளை அவர்களுக்கு பிறர் அறியாமல் அளிக்கவும் நான் சித்தமே” என்று மெல்லிய குரலில் சொன்னான். விழிகள் நிலைகொள்ளாமல் உருள ஒருவரை ஒருவர் நோக்கியபடி அவர்கள் படைக்கலம் தாழ்த்தி தயங்கினர். “உங்கள் விழைவுகளுக்கேற்ப பரிசளிப்பேன்… இங்குள்ள பெருமதிப்புப் பொருட்கள். இங்கில்லாதவை…” என்றபடி அர்ஜுனன் அவர்களை நெருங்கி அந்தப் படைக்கலங்களை கைகளால் விலக்கி அப்பால் சென்றான்.

இடைநாழியில் அவன் காலடி வைத்ததும் அந்த மாளிகை எங்கும் பலநூறு எச்சரிக்கை மணிகள் ஒலிக்கலாயின. பொன்னாலானவை என்பதனால் அவை ஆழ்ந்த ஓசை எழுப்பவில்லை. அரண்மனையின் அறைகள், வழிகள், படிக்கட்டுகள் எங்கும் பொற்கலங்களும் மணிநிறைந்த பெட்டகங்களும் பிற அரும்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றினூடாக ஒற்றையடி வைத்து உடல்நெளித்துச் செல்லவே இடமிருந்தது. அவனை அஞ்சிய ஏவல்கணங்கள் அப்பால் நின்று கூச்சலிட்டன. துணிவுகொண்டு அணுக முயன்ற காவல்கணங்களை நோக்கி அவன் பொற்கலங்களை காலால் உதைத்து உருட்டிவிட்டான். அவை அச்செல்வத்தை மிதிப்பதற்கு அஞ்சி துள்ளிக்குதித்து விலகி ஓடின.

கதவுகளைத் திறந்து திறந்து சென்ற அர்ஜுனன் அரசவையில் கொலுவிருந்து செல்வப்பேருலகின் செய்திகளை கேட்டுக்கொண்டிருந்த குபேரனின் முன் சென்று நின்றான். பொற்தூண்கள் சூழ்ந்து நின்ற நீள்வட்ட வடிவ அரசவையில் ஏழுலகத்திலும் உள்ள செல்வங்களை ஆளும் தெய்வங்களும் தேவர்களும் அமர்ந்திருந்தனர். குபேரனின் இருபக்கத்திலும் அவன் தேவியரான ரீதியும் நிதியும் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் இளஞ்சூரியன் என அரசக்குடை எழுந்திருந்தது.

அரியணையின் இருபக்கங்களிலும் பொன்னிற சிம்மங்கள் வாய்திறந்து விழிஉருட்டி நின்றிருந்தன. அவன் ஊர்தியான வைரக்கொம்புகள் கொண்ட வெள்ளாடு வலப்பக்கம் நின்றிருந்தது. அர்ஜுனனின் வருகையை முதலில் உணர்ந்த வெள்ளாடு வெருண்டு செவிதூக்கி ஓசையிட்டது. சிம்மங்கள் திரும்பி அறைதலோசை எழுப்ப அவை திரும்பி நோக்கியது.

அர்ஜுனன் அத்துமீறலை அங்கே காவலர் அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால் செல்வத்தை அளாவிக்கொண்டிருந்த அவர்களின் நெஞ்சங்கள் அச்சொற்களை பொருள்கொள்ளவில்லை. குபேரனின் மைந்தர்களான நளகூபரனும் மணிக்கிரீவனும் அவனைக் கண்டபின்னரே காவலர் சொன்னதென்ன என்று உணர்ந்தனர். “பிடியுங்கள் அவனை… அவனை தடுத்து நிறுத்துங்கள்!” என்று கூவியபடி அவர்கள் வாள்களை உருவி கையில் எடுத்தபடி பின்னால் ஓடி தூண்களுக்குப்பின் ஒளிந்துகொண்டனர்.

அவையில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து ஒருவரோடொருவர் முட்டிமோதி கூச்சலிட்டபடி ததும்பினர். சிலர் கால்தடுக்கி கீழே விழுந்தனர். தூண்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு “பிடியுங்கள்… விடாதீர்கள்!” எனக் கூவினர். பலர் கைகளில் செல்வக்கிழிகள் இருந்தன. அவற்றை அவர்கள் அள்ளி எடுத்து உடலோடு அணைத்தபடி ஓடியமையால் கால்பின்னி பிறர்மேல் முட்டி நிலையழிந்தனர்.

அந்தக் குழப்பமே அர்ஜுனனுக்கு காப்பாக அமைந்தது. அவன் உரத்த குரலில் “எவரும் அஞ்சவேண்டாம்… எவரையும் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை” என்றான். அது அவர்களை மேலும் அச்சுறுத்தியது. குபேரனின் முடிக்குறியை தன் தலையணியில் சூடியிருந்த மணிக்கிரீவன் “நீ எப்படி உள்ளே வந்தாய்? எங்கே காவலர்கள்?” என்றான். “இளவரசே, பொன்னுக்குப் பணியாற்றுபவர்கள் எங்கும் போர்புரிவதில்லை” என்றான் அர்ஜுனன் அருகே வந்தபடி. “அணுகாதே… விலகு! கொன்றுவிடுவேன்” என்று நளகூபரன் அச்சத்தால் உடைந்த குரலில் கூவினான்.

“அவர்கள் நாள்தோறும் செல்வத்தை கண்டுகொண்டிருக்கிறார்கள். அதுவன்றி பிற ஏதும் அவர்களுக்கு பொருட்டல்ல. சிலர் அஞ்சினர். எஞ்சியவர்களுக்கு கையூட்டளித்தேன்” என்றான் அர்ஜுனன். திகைத்து முகம் காட்டி “கையூட்டா? எங்கள் காவலர்களா?” என்றான் நளகூபரன். “கருவூலக்காவலர் கையூட்டு பெறாத இடம் என ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை” என்றபடி அர்ஜுனன் அவை நடுவே வந்து நின்றான். “மூத்தவரே, அவரிடம் படைக்கலங்கள் இல்லை” என மணிக்கிரீவன் கூவ “வாயை மூடு, மூடா!” என்று நளகூபரன் கடிந்தான்.

அர்ஜுனன் “மேலும் உங்கள் வீரர் வைத்திருப்பவை அனைத்தும் பொன்னாலான படைக்கலங்கள். பொன் உலோகங்களில் தளிர் என்பார்கள். அது எவரையும் கொல்லாது” என்றான். மணிக்கிரீவன் “பொன்னே முதன்மையானது” என்றான். “பிற ஏதேனும் ஒன்றுக்கு நிகர்கொள்கையில் மட்டுமே அதற்கு மதிப்பு. தான்மட்டுமே இருக்கையில் பொன் பொருளற்ற மஞ்சள் ஒளி…” என்றான் அர்ஜுனன். “பொன்மட்டுமே உள்ள இப்பெருநகர் ஒரு நுரைக்குமிழி அளவுக்கே நொய்மையானது, இளவரசே!”

அவன் அவைநின்று நிமிர்ந்து நோக்கியபோது குபேரனின் அரியணை ஒழிந்து கிடந்தது. அவன் இரு தேவியரும் எழுந்து நின்றிருந்தனர். அரியணைக்குப் பின்னாலிருந்து குபேரன் மெல்ல எழுந்து நோக்குவதை அர்ஜுனன் கண்டான். அவன் நோக்கியதும் குபேரனின் மணிமுடி மறைந்தது. “அஞ்சவேண்டாம் என்று தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், இளவரசே” என்றான் அர்ஜுனன்.

அருகே முதிரா இளைஞனாகிய இளவரசன் மாயூரகன் கவிழ்ந்த பீடங்கள் நடுவே ஒன்றில் அமர்ந்து தேம்பி அழுதுகொண்டிருந்தான். அர்ஜுனன் அவனை நோக்கியதும் அவன் அஞ்சி கால்களை பீடம்மேல் எடுத்து வைத்துக்கொண்டு உடலைக் குறுக்கினான். “அஞ்சவேண்டாம், இளவரசே” என்று அர்ஜுனன் சொன்னதும் அவன் மேலும் கதறினான். மணிக்கிரீவன் “அழாதே, மூடா!” என்று அதட்டியதும் அலறியபடி எழுந்து தாயை நோக்கி ஓடினான்.

அரியணை அருகே உள்ளிருந்து வந்து நின்ற இளவரசி மீனாட்சி “நீங்கள் இளைய பாண்டவர் பார்த்தர் அல்லவா?” என்றாள். அர்ஜுனன் “ஆம், நீங்கள் குபேரன் மகள் என நினைக்கிறேன்” என்றபடி அவளை நோக்கி சென்றான். “இளைய பாண்டவரை வணங்குகிறேன். நீங்கள் எப்படி குபேரபுரிக்குள் நுழைந்தீர்கள் என்று நான் உசாவப்போவதில்லை. நீங்கள் கடந்த எல்லைகளை நான் நன்கறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “எல்லா பெண்களையும்போல நானும் அஸ்தினபுரியின் விஜயனின் புகழ் கேட்டே வளர்ந்தேன்” என அவள் புன்னகைத்தாள்.

“அவனுக்கு என்ன வேண்டும்? கேள்! எவ்வளவு பொன் வேண்டுமென்று கேள்” என்று அரியணைக்கு அப்பால் அமர்ந்திருந்த குபேரன் சொன்னான். அர்ஜுனன் “உங்கள் செல்வத்தில் ஒருதுளிகூட எனக்குத் தேவையில்லை, வடதிசைக்காவலரே. நான் உங்களை வெற்றிகொள்ளவே வந்தேன்” என்றான். “வெற்றி என்றால்? என்னை சிறைப்பிடிக்கப்போகிறாயா? மைந்தர்களே…” என்று குபேரன் கூவினான்.

“இல்லை, ஆடலையும் களத்தையும் நீங்களே முடிவு செய்யலாம். உங்களை வென்று உங்கள் அருள்கொண்டு மீள விரும்புகிறேன்.” குபேரன் எழுந்து “ஏன் என்னை வெல்லவேண்டும் நீ? திறன்கொண்டு எழும் ஒவ்வொருவரும் என்னை வெல்லக் கிளம்புவது ஏன்?” என்றான். அழுகை கலந்த குரலில் “அசுரரும் தேவருமாக என்னை வென்றவர்கள் ஒவ்வொருவரையும் நினைவுகூர்கிறேன். ஏன் எனக்கு இந்தத் துயர்?” என்றான். அர்ஜுனன் “பொருட்செல்வத்தைக் கடக்காமல் அருட்செல்வத்தை அடையமுடியாது அல்லவா?” என்றான்.

ஆடைகளை நீவி, முடியை சீரமைத்தபடி குபேரன் எழுந்து வந்து அரியணையில் அமர்ந்து “நீ என்னை சிறைப்பிடித்து இழுத்துச்செல்ல எண்ணவில்லை அல்லவா? முன்பு இரணியன் என்னை அவன் அரண்மனையில் கட்டிவைத்திருந்தான்” என்றான். “இல்லை, நான் உங்கள் தோழராகிய இந்திரனை முதற்றாதையாகக் கொண்டவன்” என்றான் அர்ஜுனன்.

“பாண்டவரே, தந்தை அறிந்த ஆடல் என்பது ஒன்றே. பொன்னும் மணியும் வைத்து நாற்களமாடுதல்… அதில் நீங்கள் அமரலாம். அவையொருக்க ஆணையிடுகிறேன்” என்றாள் மீனாட்சி. “நன்று… அவர் அக்களத்தில் அவரது அனைத்துச் செல்வங்களையும் வைத்தாடவேண்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். மீனாட்சி “ஆம், அதுவே நெறி” என்றாள்.

மணிக்கிரீவன் “ஆடலுக்கு வந்தமையால் நீ திரும்பிச்செல்கிறாய். படைகொண்டு வந்திருந்தால் எங்கள் படைக்கலங்களை சந்தித்திருப்பாய்” என்றான். நளகூபரன் “அசுரர்களுக்கு அஞ்சி அளகாபுரியை அமைத்தார் எந்தை. நாங்கள் இன்று அதை நூறுமடங்கு ஆற்றல்கொண்டதாக ஆக்கிவிட்டோம்” என்றான். கண்ணீர் வழிந்து ஈரமான முகத்துடன் மாயூரகன் அன்னையின் ஆடைக்கு அப்பாலிருந்து எழுந்து வந்து அர்ஜுனனை நோக்கி புன்னகை செய்தான்.

[ 41 ]

குபேரனின் அணிமண்டபத்தில் அவன் அவைமுதல்வர் சூழ்ந்திருக்க நடுவே அமைந்திருந்தது ஆட்டமேடை. அதன் வலப்பக்கம் குபேரனின் மைந்தர்களும் இடப்பக்கம் அவன் தேவியரும் மகளும் அமர்ந்திருந்தனர். அர்ஜுனன் அவைக்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து முகமன் உரைத்தனர். அவன் ஆட்டகளத்தில் இடப்பட்ட பொற்பீடத்தில் அமர்ந்தான்.

முரசம் குபேரனின் வருகையை அறிவித்தது. கொம்புகளும் குழல்களும் வாழ்த்தொலிகளும் சூழ கந்தர்வப்பெண்கள் மங்கலத்தாலங்களுடன் முன்னால் வர பொற்குடைக்கீழ் குபேரன் நடந்துவந்தான். அரசணிக்கோலத்தில் பொன்வண்டுபோல அவன் ஒளிவிட்டான். வாழ்த்தொலிகளைக் கேட்டு முதன்முறையாக அவற்றை செவியுறுபவன்போல மகிழ்ந்து பற்கள் தெரிய சிரித்து தலையாட்டினான். வணங்கியவர்களுக்கு கைதூக்கி வாழ்த்தளித்தான்.

குபேரன் வந்து அரியணை அமர்ந்ததும் அவை அவனுக்கு வாழ்த்துரைத்து அமர்ந்தது. நளகூபரன் எழுந்து அங்கு நிகழப்போகும் ஆடலை அறிவித்தான். நிகர்வைக்கும் ஆட்டம் என்ற சொல் செவியில் விழுந்ததும் அர்ஜுனன் மீனாட்சியின் விழிகளை நோக்க அவள் சிரிப்புடன் உதடுகளை மெல்ல அசைத்து “அதேதான்” என உச்சரித்தாள். மணிக்கிரீவன் குபேரனை அவனே வெல்லக்கூடிய ஆட்டத்திற்கு எழுந்தருளும்படி அழைத்தான்.

அவைநிறைத்து அமர்ந்திருந்த அவையினரை மணிக்கிரீவன் அர்ஜுனனுக்கு அறிமுகம் செய்தான். புதுத்தளிர்களின் தேவனாகிய கோமளன், புதுக்குழவிகளின் தேவனாகிய தருணன், மண்ணில் புதைந்துள்ள பொன்னின் அரசனாகிய கனகன், ஒளிவிடும் நகைகளின் தெய்வமாகிய சுவர்ணன், கருவூலங்களை ஆளும் தேவனாகிய காஞ்சனன், செம்முகில்களின் தேவனாகிய ஹிரண்யன், முலைப்பால்களை ஆளும் சுரபன், ஒன்பது மணிகளின் அரசனாகிய நவமுகன், விழிமணிகளை ஆளும் நேத்ரன் என ஆயிரத்தெட்டு தேவர்கள் அங்கிருந்தனர்.

குபேரனின் அருகே இருபக்கமும் அவனுடைய அழியா பெருஞ்செல்வத்தின் தெய்வங்களான பத்மை, மகாபத்மை, மகரை, கச்சபை, குமுதை, நந்தை, நீலை, பத்மினி, சங்கை ஆகியோர் வந்து அமர்ந்தனர். நளகூபரன் கைகாட்ட ஏவலர் இருவர் மூன்று களங்கள் கொண்ட ஆட்டப்பலகையை கொண்டுவந்து வைத்தனர். ஆடுகளம் நடுவே முள்மட்டுமே கொண்ட துலா நிறுவப்பட்டது.

முதற்களம் குபேரனுக்கும் அதற்கு எதிர்க்களம் அர்ஜுனனுக்கும் அளிக்கப்பட்டது. மூன்றாவது களம் ஊழுக்குரியது. “வீரரே, செல்வத்தைக்கொண்டு ஆடப்படும் எதிலும் கண்ணுக்குத் தெரியாத ஆட்டப்பங்காளியாக அமைந்துள்ளது ஊழ். மூவர் ஆடும் ஆடலில் எவர் வெல்லவேண்டும் என்பதை முடிவுசெய்வது ஊழே. இருவரும் ஒருவரை ஒருவர் வெல்வதற்காக ஆடுக! வெல்லப்படவேண்டியது ஊழே” என்றான் நளகூபரன். மணிக்கிரீவன் ஆட்டநெறிகளை முறைப்படி அறிவித்தான்.

அர்ஜுனன் “நிகர்வைக்கும் இவ்வாட்டத்தில் வைக்கும்பொருட்டு நான் ஒன்றையும் கொண்டுவரவில்லை. குபேரபுரிக்கு செல்வத்துடன் வருவது அறிவின்மை. குபேரனே எனக்கு ஒரு செல்வத்தை அருளட்டும். அதைக்கொண்டு ஆடுகிறேன்” என்றான். குனிந்து ஆட்டக்களத்தை நோக்கிக்கொண்டிருந்த குபேரன் அதைக் கேட்டு முகம் மலர்ந்து “ஆம், அளிக்கிறேன்” என்றான். “எனக்கு உங்கள் வலக்கை சுட்டுவிரல் கணையாழியை அளியுங்கள்” என்றான் அர்ஜுனன். “அவ்வாறே” என்று சொல்லி அக்கணையாழியை கழற்றி குபேரன் அவனுக்கு அளித்தான்.

அதை கண்ணில் ஒற்றி முதல் ஆட்டச்செயலாக களத்தில் வைத்தான் அர்ஜுனன். “நிகர்வையுங்கள், செல்வத்துக்கரசே” என்றான். குபேரன் அந்தக் கணையாழியை நோக்கி உருண்ட விழிகள் துருத்தி நிற்க சிலகணங்கள் எண்ணத்திலாடினான். குழம்பி தன் தேவியை நோக்கிவிட்டு தன் கைவிரல்களில் இருந்த கணையாழிகளை நோக்கினான். இடக்கை ஆழிவிரல் கணையாழியை தொட்டு அதைத் தவிர்த்து ஒவ்வொரு விரலாகக் கடந்து இடக்கை சிறுவிரல் கணையாழியை உருவி களத்தில் வைத்தான்.

துலாமுள் அர்ஜுனனை நோக்கி சாய்ந்தது. குபேரன் திகைத்து வாய் திறந்து ரீதியை பார்த்தான். அவள் புன்னகையுடன் நோக்கி நின்றாள். அவன் நிதியைப் பார்க்க அவள் “உங்களிடம் வைத்தாட முடிவிலாச் செல்வம் உள்ளது, அரசே. அஞ்சற்க!” என்றாள். “அந்தக் கணையாழியை நான் இழந்துவிட்டேனா?” என்றான் குபேரன் துயரத்துடன். “ஆம், ஆனால் நீங்கள் வென்றால் அதை மீட்டெடுக்கலாம்” என்றான் நளகூபரன். “ஆம், இதோ மீட்டெடுக்கிறேன்” என்று சினத்துடன் சொல்லி அர்ஜுனனிடம் “ஆடுக!” என கைகாட்டினான்.

அர்ஜுனன் இரு கணையாழிகளையும் களத்தில் வைத்தான். இரண்டையும் நோக்கியபின் அர்ஜுனனை வியப்புடன் ஏறிட்ட குபேரன் தன் கைவிரல்களை தொட்டுத்தொட்டுக் குழம்பி இடக்கை ஆழிவிரலில் இருந்தும் வலக்கை சிறுவிரலில் இருந்தும் கணையாழிகளை கழற்றி வைத்தான். துலாமுள் அர்ஜுனனை நோக்கி சாய்ந்தது.

“இவற்றையும் இழந்துவிட்டேனா?” என குபேரன் பெருந்துயருடன் கேட்டன். “ஆடி வெல்க, அரசே!” என்றாள் நிதி. “உங்கள் உள்ளத்தியல்பால் எடுக்கையில் குறைந்துவிடுகிறது, அரசே. மிகையாக எடுத்து வையுங்கள்” என்றாள் ரீதி. குபேரன் “நான் கணக்கிட்டே எடுக்கிறேன். நிகருக்கு மேலாக சென்றுவிடலாகாதென்று எச்சரிக்கை கொள்கிறேன்” என்றான். “உங்கள் கைவிரல்கள் குறுகியவை” என்றாள் ரீதி. “அதை நான் அறிவேன். நீ வாயை மூடு!” என்று குபேரன் சீறினான்.

அர்ஜுனன் தான் வென்ற அனைத்தையும் மீண்டும் மீண்டும் வைத்தாடினான். குபேரன் ஒவ்வொரு முறையும் அணுவிடைகுறைவாகவே நிகர்வைத்தான். “இவ்வாட்டத்தில் ஏதோ பிழை உள்ளது. அனைத்தும் எப்படி நிகர்பிறழக்கூடும்?” என்று குபேரன் கூவினான். “அரசே, ஆட்டமென்பது பொருள்களை முன்வைப்பதல்ல. நீங்கள் இருவருமே உங்களைத்தான் முன்வைக்கிறீர்கள். அவர் எல்லைகளை கடப்பவர். நீங்கள் புறத்தை அஞ்சி இந்நகரின் எல்லைகளுக்குள் அமர்ந்திருந்தவர்” என்றாள் மீனாட்சி.

“நான் அஞ்சுகிறேனா? நானா?” என்றான் குபேரன். “நீங்கள் அஞ்சுவது தோல்வியை அல்ல, பொருளிழப்பை. பொருள்பற்று கொண்டிருக்கும்வரை அவ்வச்சத்திலிருந்து மீளமுடியாது” என்றாள் மீனாட்சி. குபேரன் “இதோ நான் என் பெருநிதியை நிகர்க்களத்தில் வைக்கிறேன்… எனக்கு அச்சமில்லை. இவன் அதற்கு நிகரென எதையேனும் வைக்கட்டும்” என்றபடி சங்கினியை களத்தில் வைத்தான்.

அர்ஜுனன் சங்கினியை நோக்கி ஒருகணம் எண்ணத்திலாழ்ந்தபின் முதற்கணையாழியை எடுத்து களத்தில் வைத்தான். துலாமுள் அவன் பக்கம் சாய்ந்ததும் “இது எவ்வாறு? இது எம்முறை?” என குபேரன் கூவியபடி எழுந்துவிட்டான். “அரசே, அவர் வைத்தது கணையாழி. அதை ஓர் ஆண்மகன் அளித்ததும் இவள் நெஞ்சு அவனை ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்கணையாழி இவளுக்கு நிகர்மிகை” என்றாள் மீனாட்சி.

“இது ஊழின் ஆடல், தந்தையே. நீங்கள் ஆடலை முடித்துக்கொள்ளலாம்” என்றான் மணிக்கிரீவன். “முடித்துக்கொண்டால் நான் இழந்தவை இவனுக்குரியன ஆகிவிடும். மாட்டேன், என் பொருள் எதையும் இழக்கமாட்டேன், அனைத்தையும் வென்றமைவேன்” என்றபடி அவன் பிற செல்விகளை களத்தில் வைத்தான். அனைவரையும் அர்ஜுனன் வென்றெடுத்தான். “அவர்கள் ஒன்றின் ஒன்பது முகங்கள், தந்தையே. ஒன்று சென்றால் பிறிதும் தொடரும்” என்றாள் மீனாட்சி. “இது பொய்மை. இது ஏமாற்று” என்று குபேரன் கூவினான். கால்களை உதைத்து “அன்னையிடம் சொல்வேன்… அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என அழுதான்.

“போதும் தந்தையே, உங்களால் இவ்வாட்டத்தை வெல்லமுடியாது” என்றான் நளகூபரன். மீனாட்சி “ஆம். உங்களிடமிருக்கும் செல்வத்தைவிட இல்லாத செல்வம் பெரியதென்று எண்ணுகிறது உங்கள் உள்ளம்… அது செல்வர்களின் இயல்பு” என்றாள். “நான் ஆடுவேன்… நான் ஆடுவேன்…” என்று குபேரன் கதறி அழுதான். “இவன் என் செல்வங்களை கொண்டுசெல்ல விடமாட்டேன். நான் அன்னையிடம் சொல்வேன். எந்தையிடம் போய் சொல்வேன்.”

“சரி, ஆடுக!” என அர்ஜுனன் சொன்னான். ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தான் குபேரன். இழக்க இழக்க வெறிகொண்டு மேலும் மேலுமென செல்வத்தை களம்வைத்தான். செல்வத்தை வைக்க வைக்க உளம்சுருங்கினான். அவன் இழந்தவை பெரிதென்றாயின. அவ்வெண்ணத்தால் அவன் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டிருந்தான். முழுமையாகவே தோற்றபோது அவன் கனவில் என விழி வெறிக்க அமர்ந்திருந்தான்.

“அரசே, மேலும் ஆட பொருள் இருக்கிறதா?” என்றான் அர்ஜுனன். “நான் ஆடுவேன்… நான் ஆடுவேன்” என்றான் குபேரன் பித்தனைப்போல தலையாட்டியபடி. “இனி ஆடுவதற்கு உங்களிடம் பொருள் இல்லை, தந்தையே” என்றாள் மீனாட்சி. குபேரன் அவர்களை மாறிமாறி பொருளில்லாது நோக்கினான். பின்னர் வீரிட்டழுதபடி அங்கேயே படுத்து உடலைச் சுருட்டிக்கொண்டு அழத்தொடங்கினான்.

“அரசே, தங்கள் செல்வம் எனக்குத் தேவையில்லை. அனைத்தையும் திரும்ப அளித்துவிடுகிறேன்” என்றான் அர்ஜுனன். திகைத்து எழுந்தமர்ந்து “அனைத்துமா? திரும்பவும் எனக்கா?” என்றான். “ஆம், திரும்ப உங்களுக்கே. நீங்கள் அரிதென எண்ணும் ஓர் அறிதலை எனக்கு அளியுங்கள். அதுபோதும்” என்றான் அர்ஜுனன். குபேரன் எழுந்தமர்ந்து “வெறும் அறிதலா?” என்றான். “அனைத்து அறிதல்களும் படைக்கலன்களே” என்றான் அர்ஜுனன்.

“வீரனே, நானறிந்த பிறர் அறியாத அறிதல் ஒன்றே. செல்வத்தை முழுக்க இழந்துவிட்டதாக கனவுகண்டு விழித்தெழுந்து செல்வம் சூழ்ந்திருப்பதை உணர்ந்தபின் ஆறுதலுடன் மீண்டும் விழிமயங்குவது போல இனிய துயில் பிறிதில்லை. அச்செல்வத்தை முழுக்க கள்வர் கொள்ளையடித்துச் சென்றாலும் அத்துயில் கலைவதில்லை” என்று குபேரன் சொன்னான். “இப்புடவியை ஆளும் செல்வத்தின் தெய்வங்கள் அனைத்தும் அத்துயிலால் வெல்லப்படத்தக்கவை. மண்ணிலுள்ள அரசர்கள் அனைவரும் அத்துயிலில் முற்றாழ்பவர்கள்.”

“அத்துயிலுக்குரிய தெய்வத்தை நான் என் இடக்கால் சிறுவிரலில் இரும்பாலான கணையாழியாக அணிந்திருக்கிறேன். அதை பிறர் காணாதபடி பொன்னணிகளால் மூடியிருக்கிறேன். பொருள்காத்து அமர்ந்திருக்கும் இவ்வாழ்வில் எனக்கு துயிலின் இன்பம் இல்லை. என்றேனும் அதை உணர்ந்து துயர்கொண்டால் அவளை எழுப்பி என் தலைமேல் சூடுவேன்” என்று குபேரன் தன் இடக்கால் சிறுவிரலை நீட்டி அதிலிருந்த இரும்பு ஆழியை எடுத்தான்.

அது ஒரு கருமுகில்நிறப் பெண்ணாக மாறி அவன் முன் நின்றது. அவளுக்கு முகத்தில் விழிகளோ வாயோ மூக்கோ இருக்கவில்லை. கரிய குழல் கால்வரை விழுந்து அலையடித்தது. நீண்ட கைகள் மெல்லிய விரல்களை கொண்டிருந்தன. அவளிடமிருந்து குளிரலை வீசி அவன் உடலை சிலிர்க்கவைத்தது.

“மிருத்யூ தேவிக்கும், நித்ரா தேவிக்கும், வியாதி தேவிக்கும் இளையவள் இவள். ஜேஷ்டை இவள் தோழி. சிதைச்சாம்பலில் விழுந்த பிரம்மனின் நிழலில் இருந்து உருவானவள். இவளை அந்தர்த்தானை என்று அழைக்கிறார்கள். இனியவள். விழியிமைகளை மெல்லத்தொட்டு ஆழ்துயில் அளிப்பவள்” என்றான் குபேரன். “என் அறிதலின் வடிவாக இவளை உனக்களிக்கிறேன். இவள் உன் துணையென்றாகுக!”

அர்ஜுனன் தலைவணங்கி குபேரன் அளித்த அந்த இரும்பாழியை வாங்கிக்கொண்டான். “உன் அம்புகளில் ஒன்றில் இவளை அணிந்துகொள்க! இவள் உன் படைக்கலமும் ஆகுக!” என்றான் குபேரன். அர்ஜுனன்  குபேரனின் கால்தொட்டு சென்னிசூடி  வாழ்த்துபெற்றான்.

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகள் கடிதங்கள் 7

$
0
0

 

அன்பின் ஜெ,

முதலிலேயே சுதாரித்திருக்க வேண்டும்.கிண்டலுக்குத்தான் சிறுகதைகள் சுட்டிகள்  வெளியிட்டிருக்கிறீர்கள்.ஆர்வத்தில் அனுப்பிவிட்டேன்.எழுதும் முயற்சியில் உருவான கதைகள் தான்.அரைகுறை தான் என்று எனக்கே தெரியும்.நீங்கள் வாசித்து நன்றாக விளாசுவீர்கள் என்றே எதிர்பார்த்தேன்.வாசிக்கவேயில்லை என்று ஒரே போடு போட்டுவிட்டீர்கள்.பரவாயில்லை.அதற்காக எதிரிகள் என்றெல்லாம் ஆகிவிடவில்லை.உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கும் எனக்கு  இதைக்கூடவா புரிந்து கொள்ள முடியாது.

 

காலையில் நன்றாகச் சிரித்தேன்.ஜெமோவிடம் சிறுகதை அனுப்பி நன்றாக வாங்கினேன் என்று.உண்மையில் புதியவர்களின் கதைகள் அறிமுகம் செய்கிறீர்கள் என்று  அதி தீவிரமாக நம்பி(!) அனுப்பிவிட்டேன்.
மலேசிய சர்ச்சை,வங்கிப்பணி போன்றவற்றில் ஏமாந்து கருத்து கூறாமல் தப்பித்து,சிறுகதையில் வந்து மாட்டிக்கொண்டேன்.வழக்கம்போல கடைசியில் தான் பகடி என்று உணர்ந்தேன்.ஆனால் அந்த தீவிர பாவனையை நினைத்து சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்.
நன்றி
மோனிகா.

 

அன்புள்ள மோனிகா

 

பகடி எல்லாம் இல்லை

கதைகளை வாசிப்பேன். என் கருத்தைச் சொல்வேன்

அதற்குமுன் வாசகர்கள் சொல்லட்டும் என நினைத்தேன், அவ்வளவுதான்

நாலுபேர் சொன்னபின்னர் நான் சொன்னால் பெரிய பகை வராது என ஒரு நம்பிக்கை

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருகிறேன். பல கதைகள் சாதாரணமான வார இதழ்ச்சிறுகதைகளாக உள்ளன. உங்கள் தளத்தை இவர்கள் வாசிக்கிறார்களா? வாசித்தார்கள் என்றால் கொஞ்சம்கூட  முதிர்ச்சியே இல்லாத குமுதவிகட நடையில் இவர்கள் ஏன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

நான் வாசித்தவரை அசங்கா வாசிக்க நன்றாக இருந்தது. ஆனால் இத்தகைய கதைகளே நிறைய எழுதப்பட்டுவிட்டன. முறைமீறிய உறவுக்கு சாட்சியாக ஆகும் குழந்தை. அதன் குறியீடாக ஒரு பொம்மை அல்லது பூனை. பூனையே பல கதைகளில் குறியீடாக வந்துவிட்டது.

 

ராஜாராமன்

 

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மேலும் சில கதைகளைப் பற்றி -

What a wonderful world

இன்றைய தினத்தில் இங்கிலாந்து பல இன மக்கள் சேர்ந்து வாழும் நாடாகத் திகழ்கிறது. இனப்பிரச்சினையை அருகில் அரிந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்; இன்னொருவர், இந்தியத் தமிழர். இடம்பெயர்ந்து, சிறுபான்மையினராக அயல் நாட்டில் வாழ்பவர்கள். பரந்த நோக்குடையவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கருப்பின மக்களைத் தாழ்மை படுத்தி (நக்கலாக இருந்தாலும்) பேசுகிறார்கள். It is so easy to do unto others what you do not want to be done unto you. இதுதான் கதைக் கூற வருவது என்றால் கதையின் தலைப்பு ஏளனம் செய்வது போல அமையும்.

ஆனால் கதையில் பேசப்படும் கால்வாய் போலக் கதை எங்கெங்கோ சுழல்கிறது. அவர்கள் பேசுவதிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் உள்ள முரண்பாடு மிக மங்கலாக உள்ளது – இன்னும் தெளிவாக்க வேண்டும். முதல் பாதியில் தேவையற்ற பல விவரணைகள். கதைக்கருவிற்கு உதவாததை நீக்கலாம் – உ. பையனைப் பற்றிய பகுதிகள். உரையாடல்களில் ஆழம் தேவை.

யாதும் காமமாகி நின்றாய்

இதைக் கதையென்று எப்படிச் சொல்ல. உணர்வுகளின் பதிவாகத்தான் இருக்கிறது. வர்ணனைகளைத் துப்பாக்கியிலிட்டு தாக்கியது போல உணர்கிறேன். குறைந்த பட்சம் எழுத்துப்பிழை திருத்தமாவது செய்யலாம். http://vaani.neechalkaran.com/.

இது “comment” தான், விமர்சனம் அல்ல. மன்னிக்கவும். கோபம் வருகிறது. எழுத்து இயல்பாக வருகையில் இன்னும் முயற்சிக்கலாம்.

தில்லையம்மா

நீங்கள் ஒருமுறை புனைவுகளின் உணர்வெழுச்சிகளை மெல்லுணர்வு, மிகைநாடகம், உணர்வெழுச்சி என்று மூன்று வகைகளாகப் பிரித்து எழுதியிருந்தீர்கள். தில்லையம்மா முதல் வகையைச் சேர்ந்த கதை. ஒற்றைப்படையான மனிதர்கள். கதையில் shades of grey தேவைப்படுகிறது.

இலக்கியம் இதே பிரச்சினையை வேறு கோணத்திலிருந்து, யதார்த்தத்துடன் அணுகும். உதாரணத்துக்கு இப்படி அணுகியிருக்கலாம் – பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, சுதந்திரத்தின் மீது மிகுந்த முக்கியத்துவத்தைக் குவித்திருக்கும் புதிய தலைமுறையினர், இத்தகைய எதிர்மறை நிலைப்பாடுகளால் சேர்ந்து வாழ்வதில் ஏற்படும் சிக்கல்.

ப்ரியம்வதா

அன்புள்ள ஜெ

யாவும் காமமாகி நின்றாய் என்னும் ஒரு கதையை வாசித்து மண்டையைப்பிய்த்துக்கொண்டேன். ஒரே பேச்சு. புலம்பல் என்று சொல்லவேண்டும். அர்த்தமில்லாத சொற்றொடர்கள். வாசகன் மேல் கருணை கொண்டு பத்தி பிரித்துப்போடுவதிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம்

மகேஷ்

 

=================================

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கெய்ஷா -கடிதம்

$
0
0

download (2)

 

ஜெயமோகன் சார்,

என் பெயர் இரா.அருள். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் (ஆங்கிலத்துறையில்) ஆய்வு மாணவனாக முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். கெய்ஷா கதையை உங்களுடைய வலைத்தளத்தில் வாசித்தேன். அதைப் பற்றி அதிகம் பேச வேண்டும் என்ற ஆவல் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தது. அதே போல் உங்களுடைய இருத்தலின் இனிமை பயணக் கட்டுரையையும் அதிகம் ரசித்து படித்தேன். அதைப் பற்றியும் ஏதாவது உங்களுக்கு எழுத வேண்டும் என்று இருந்தது. இரண்டையும் இந்த மின் அஞ்சல் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறேன். நான் யாருடனாவது பேசவேண்டும் என்று சந்தித்தால் மௌனத்தில் உரைந்து விடுவேன். அதே நேரத்தில் கடிதத்தில் எழுத்தின் மூலம் தொடர்பு கொள்ள பழக்கம் இல்லாத நவீன யுகத்தைச் சார்ந்தவன் நான். என் வாழ்நாளில் கடிதம் என்று எதுவும் நான் யாருக்கும் எழுதியது கிடையாது. எழுத்தாளர்களுடன் மாத்திரம் மற்றும் என் பேராசிரியர்களிடம் மாத்திரம் எழுத்தைப் பற்றிய கூச்சம் இன்றி எதையாவது எழுதிவிடுவேன். இப்போது உங்களுக்கும் எழுதிவிட்டேன். அதுவும் உரிமையின் பேரில். கெய்ஷா பற்றிய என் எண்ணங்களை இந்த மின் அஞ்சலுடன் pdfல் இனைத்திருக்கிறேன். நன்றி

இப்படிக்கு

இரா. அருள்

கெய்ஷா சிறுகதை

 

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு

ஜெயமோகனின் கெய்ஷா சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும். அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது. கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு. உண்மையில் அன்று காலை, வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை. நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது.

ஜெயமோகன் தன் கதைகளை எப்படி வேறு ஒரு நாட்டின் நிலப்பரப்பை கதைக்களமாக உருவாக்கி அங்கிருந்து நம்முடைய பிரச்சனைகளை பேசுகிறார் என்பதுதான் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. அவரது வெள்ளை யானை அயர்லாந்து தேசத்தில் இருந்து ஆரம்பிக்கும். கதையும் அயர்லாந்தின் எய்டனைக் நாயகனாக் கொண்டு அங்கிருந்து கதை நம் நாட்டிற்கு பயணிக்கும். நம்மைப் பற்றி அவர்களால் மாத்திரம் தான் பேச முடியுமா என்ன நம்முடைய படைப்பாளிகளால் அவர்களை பேசு பொருளாக வைத்து ஆராய முடியாதா என்ன என்ற அகங்காரம் இந்த இரண்டு கதைகளை வாசித்த போது ஏற்பட்டது.

பிரச்சனை நம்முடைய பிரச்சனை. நம்மலேயே ஜீரணிக்க முடியாத பிரச்சனை. மீறி பேசினால் எழுத்தாளனுக்கான சேதாரம் அதிகம். அவைகள் கெய்ஷா மூலமாக கொட்டித் தீர்க்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் படைப்பாளனின் அகங்காரம் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. அது எதனால் என்பது நமக்குத் தெறியாது. அதை படைப்பாளனும் வெளிப்படுத்தி பேசமாட்டான். அகங்காரம் ஏன் பாதிக்கப்பட்டது என்பதை எப்படி அவனால் கூற முடியும். அது அரசியல் சம்பந்தமாக இருக்கலாம். இலக்கிய சர்ச்சை சார்ந்ததாக இருக்கலாம். ஏதோ ஒருவிதத்தில் அகங்காரம் சேதமடைந்திருக்கிறது. அதனை ஈடுகட்டகூடிய ஒரே இடம் பெண்மை என்ற ஒரு புள்ளி மாத்திரமே. அதனை நம்மிடையே அவனால் ஈடுகட்டிக் கொள்ள முடியாது. நம்முடையது அல்லாது வேறொரு பெண்மை அவனுக்குத் தேவைப்படுகிறது. இதனாலேயே கதை ஜப்பானுத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கெய்ஷாவின் முன் தன் ஆணின் அகங்காரத்தை மீட்டெடுத்துக் கொள்கிறான். தன் அகங்காரம் எப்படி அந்தப் பெண்ணிடம் மீட்டெடுக்கப்பட முடியும் என்பதுதான் இப்போதைக்கான கேள்வி. ஆணின் அகங்காரம் அவனுடைய காமத்தில் நிலை கொண்டிருக்கிறது. அது ஒரு பெண்மையினால் மரியாதை செய்யப்பட வேண்டியிருக்கிறது. அது சாத்தியப்படுவது நிச்சயம் காமத்தை கலை நயத்துடன் அதன் ஆணின் இருப்பு நிலையை பார்க்க வைக்கக்கூடிய இந்த கெய்ஷாக்களால் மாத்திரமே.

ஆணின் காமத்தில் ஒடுங்கி இருக்கும் அகங்காரம் மிருகத்தனமானது. ஜப்பானிய அரசர்கள் அந்த மிருகத்தைக் கொண்டு அநேக பெண்களை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள். அதாவது எந்த பெண்மையும் அந்த அரசர்களின் அகங்காரத்தை மதிப்புக் கொடுத்து அதனுடைய இருப்பை மரியாதை செய்யவில்லை. ரஷ்ய மந்திரக் கதைகளில் வரும் Beauty and the Beast ஐ போன்று அதன் மிருகத்தனம் மீண்டும் அதனுடைய ஆண் என்ற நிலைக்குக் கொண்டுவராமல் மிருகமாகவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பெண்மையின் நிலை மாத்திரமே அதனை தன் உண்மை நிலைக்குக் கொண்டுவர முடியும்.

இந்தக் கெய்ஷாக்கள் காமத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று கலையாகக் கற்றறிந்தவர்கள். அவர்கள் அரசர்களை அவர்களுடைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மனிதர்களாக்கி இருக்கின்றனர். கதையில் வரும் பத்திரிக்கையாளன் இந்தக் கெய்ஷாவிடம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஜப்பானியப் பெண்ணுடன் ஓர் இரவு தங்கப் போகிறான். அவள் கெய்ஷா அல்ல என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கெய்ஷா இலக்கியம் படிக்கும் பெண். நகர வாழ்க்கைக்கு போதுமான பொருளாதாரத் தேவையை ஈடுகட்ட இந்தத் தொழில் அவளுக்கு அவசியப்பட்டிருக்கிறது.

அவள் கெய்ஷா இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு கெய்ஷா என்ற பெயரிலேயே அந்தப் பெண் தனக்கு அவசியப்பட்டவளாய் இருக்கிறாள். அவள் மாத்திரமே அவனுடைய தொலைந்து போன அசட்டை செய்யப்பட்ட அகங்காரத்தை மீட்டெடுக்கக் கூடியவள். கெய்ஷா என்ற பெண்ணிடம் அவன் கண்டடைவது அவனுடைய உண்மையான ஆண் என்ற முகத்தை. அது ஏதோ ஒரு விதத்தில் யாராலோ சிதைக்கப்பட்டிருகிறது. அல்லது தொலைக்கப்பட்டிருக்கிறது. தான் ஒரு பத்திரிக்கையாளன் புத்தகங்களை எழுதியிருக்கிறவன் என்ற இன்னும் பல தொலைக்கப்பட்ட தன்னுடைய முகத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அதனை நிச்சயம் ஒரு கெய்ஷாவால் மாத்திரமே மீட்டுத் தர முடியும். அவளுடைய இலக்கியப் பின்புலம் ஒருவாறு அவன் பேசும் புரிதலற்ற மொழியை புரிந்து கொள்ளச் செய்கிறது. மேலும் தான் கெய்ஷா அல்ல என்பதையும் அவள் கூறிவிடுகிறாள். அவர்கள் மத்தியில் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது.

தன்னை அவன் முழுவதுமாக கண்டடைந்த ஒரு இடம் அந்தக் கெய்ஷா என்கிற பெண்மையிடம் மாத்திரமே. அவள் பிறப்பால் கெய்ஷாவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கெய்ஷாவுக்கான தன் காமத்தின் கலையை நன்றாக அவனிடம் பிரயோகித்து விட்டாள். அதன் முழுமையில் அவனை அவள் முழுவதுமாக மீட்டெடுத்து விட்டாள்.

படைப்பாளிகள் தங்கள் சிதைக்கப்பட்ட முகத்தை அல்லது ஏதோ ஒரு குழப்படியில் தொலைத்து விட்ட முகத்தை கண்டடையும் இடம் இது போன்ற கதைகள் தான். இங்கே கதைகள் காமத்தில் உறைந்து விடுகின்றன. இந்த உறைபனி நிலையில் முழுவதுமாக கதைகூட எந்தவித ஓட்டமும் இன்றி ஒரே இடத்தில் உறைந்து விடுகிறது. இது போன்ற உறைந்த நிலையை நாம் Milan Kundera வின் கதைகளில் வாசிக்க முடியும். முக்கியமாக அவருடைய The Unbearable Lightness Of Being என்ற நாவலில் நாம் வாசிக்க முடியும்.

கதையில் நாகனின் இடையறாது பெண்களின் தேடல் தன்னுடைய தொலைந்து போன சுயத்தைத் பற்றியத் தேடலாகவே இருக்கும். அவன் தேடிய பெண்களின் எண்ணிக்கை கதை இருநூறு என்று பட்டியலிடும். இது வெறுமனே யதார்த்தக் கதைதானா? நிச்சயம் இருக்கவே முடியாது. கெய்ஷா என்பது உருவக நிலை. அங்கு ஒரு பெண்மை சித்தரிக்கப்படுகிறது. அதனை பெண் என்று மேலோட்டமாக கூறிவிட முடியாது. கதையே ஒரு உருவகம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. அதில் நடைபெறுவது வெறுமனே கதையாடல் மாத்திரம் அல்ல. கதை என்பது படைப்பாளி தன்னுடைய உள்ளக் குமுறலை வெளியேற்றும் சாதனம் அவ்வளவே. இதில் படைப்பாளிகள் பாக்கியசாலிகள். அவர்கள் தங்களில் இருக்கும் எல்லா குமுறல்கள் வேதனைகள் பொறாமைகள் எல்லாவற்றையும் மொழியின் மூலமாக வெளியாக்கி விடுகிறார்கள். இன்னும் அவைகளின் தீவிரம் அதிகரிக்கும் போது மொழி வெறுமனே மொழியின் நிலையில் நில்லாது கதைக்கான கதையாடலாக மாறிவிடுகிறது.

கதையின் மூலம் கிடைக்கப்பெறுகிற உண்மை என்ன என்பது ஆராய முடியாதது. அது படைப்பாளனின் உள்மனதின் எரிமலைச் சிதறளின் இரகசியம். அவனுக்கே கூட அதன் சுபாவன் தெரியாது. எனினும் வாசிப்புக்கு நல்ல கதை நமக்கு கிடைக்கிறது. கெய்ஷாவின் நாயகன் ஏறக்குறைய மிலன் குண்டேராவின் The Unbearable Lightness Of Being கதையின் நாயகனைப் போன்று தான் தொலைத்த அகங்காரத்தை பாரிசில் தேடியது போன்று இங்கு ஜப்பானிய தேசத்திற்கு வந்து தேடுகிறான்.

அருள் ஸ்காட்

 

கெய்ஷா சிறுகதை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நமது முகங்கள்…

$
0
0

சியார் பாபா அருவி

 

 

சென்ற 2016 அக்டோபர் ஏழாம்தேதி நாங்கள் ஒரு குழுவாக கேதாநாத் சென்றோம். பேசிக்கொண்டே இமயமலை இடுக்குகள் வழியாக வளைந்து ஒசிந்து செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தோம். காரில் கண்ணாடிக்கு வெளியே அலையலையாக எழுந்து அமைந்து கொண்டிருந்தன இமயமலை முடிகள். கூரிய உலோக முனை பளபளப்பது போல அவற்றில் பனிச்சிகரங்கள் முன்காலை ஒளியில் மின்னின. என் அருகே கல்லூரி இளங்கலை இறுதியாண்டு படிக்கும் என் மகள் சைதன்யா அமர்ந்திருந்தாள். இமயமலைமலைப்பகுதியில் அவளுடைய முதல் பயணமாகையால் விழிகளை விரித்து ஒருவித பரவசத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.

 

நான் சொன்னேன் ”அப்பாவின் எல்லாப்பயணங்களிலும் நீ சேர்ந்து கொள்ளவேண்டுமென்பதில்லை. மலை ஏறுவதற்கான குழுக்கள் உள்ளன. பெண்கள் மட்டுமான குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்” என்றேன். பின் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணபிரபா சற்றே சீற்றத்துடன் ”ஏன் பெண்கள் மட்டுமான குழு?” என்று கேட்டாள். நான் சொன்னேன் ”மலை ஏறுவதென்பது ஒருவகையான தனித்த பயணம். ஆண்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரியவில்லையே?”

 

கிருஷ்ணபிரபா ”நீங்கள் சொல்வது உண்மைதான். கேரள இளைஞர்களையோ தமிழக இளைஞர்களையோ நம்பி அப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக வட இந்திய இளைஞர்களை நம்பலாம். ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் பல மலையேற்றக் குழுக்களில் நான் உறுப்பினராக இருக்கிறேன். பலசமயம் குடில்களில் நெருக்கமாக தங்க வேண்டியிருக்கும். காட்டு ஓடைகளில் குளிக்க வேண்டி இருக்கும். மலைகளில் கைகளைப்பற்றிக் கொண்டு ஏற வேண்டியிருக்கும். எந்த இடத்திலுமே பெண் என்று உணர்ந்ததில்லை. பார்வையிலோ பேச்சிலோ ஒரு சிறிய சீண்டலையோ அவமதிப்பையோ உணர்ந்ததில்லை.”

 

”மலையாள இளைஞர்கள் அப்படி அல்ல. அவர்கள் பெண்களை வேட்டைப்பொருள் போல பார்க்கக்கூடியவர்கள். தமிழ் இளைஞர்கள் அதற்கும் பலபடி கீழே. பெண்களை மிகுந்த தாழ்வுணர்ச்சியுடன்தான் அவர்கள் அணுகுகிறார்கள். அவமதிக்கிறார்கள். சிறுமைப்படுத்துகிறார்கள். அதில்தான் அவர்களுடைய மகிழ்ச்சியே உள்ளது. அவர்களை நம்பி ஒரு பேருந்துப் பயணத்தைக்கூட செய்ய முடியாது.” என்றாள்

 

காருக்குள் அமைதி நிலவியது. எவருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை என்பது போல. ஏனென்றால் அது கிருஷ்ணாவின் நேரடி அனுபவத்திலிருந்து வந்தது என்பதனால் சும்மா ஒரு இதுக்காகக்கூட மறுத்துப்பேச முடியாது. நான் அவ்வப்போது டிவிட்டருக்குச் சென்று அங்கு இளைஞர்களுக்குள் நடக்கும் உரையாடல்களைப் பார்ப்பதுண்டு. தன் சொந்தப் பெயருடன் ஒரு பெண் டிவிட்டருக்கு வருவாளென்றால் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல நம் இளைஞர்கள் கூடி சீண்டி,வசைபாடி, இரட்டை அர்த்தத்தில் பேசி, அவமதித்து கும்மாளமிடுவதைப் பார்க்கலாம். அசாதாரணமான தைரியமும் எந்த எல்லைக்கும் போகும் தீவிரமும் கொண்ட பெண்கள் சிலரைத்தவிர எவரும் அங்கு நீடிக்க முடியாது.

 

இந்த இளைஞர்களின் பிரச்னைதான் என்ன என்பதை பெரும் பரிதாபத்துடன்தான் எண்ணிக் கொள்கிறேன். பிரச்சினை இருப்பது இவர்களின் அன்னையரிடம்தான். அவர்கள் தங்கள் தாழ்வுணர்ச்சியால் இவர்களை தலைக்குமேல் ஏற்றிவைக்கிறார்கள். ‘நீ ஆண், பெண்ணுக்கு நீ ஒருபடி மேல்’ என்று அவர்களைச் சொல்லி வளர்க்கிறார்கள். ஆகவே சிறிதளவாவது தன்னம்பிக்கையோ சுதந்திர உணர்வோ கொண்ட பெண்ணை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அத்துடன் இங்கு பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுடன் கலந்து விளையாடவோ பேசவோ பழகவோ வாய்ப்பில்லாமல் ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பாலியல் வரட்சி கொண்ட விசித்திரமான மிருகங்களாகவே தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள்.

 

தமிழகத்தின் சுற்றுலா மையங்கள் இம்மனநிலையின் மிக மோசமான வெளிப்பாடு உடையவை. தமிழகத்திலேயேமிக அபாயகரமான சுற்றுலாப்பகுதிகள் என்றால் என் அனுபவத்தில் இரண்டைச் சொல்வேன். ஒன்று தேனி அருகே உள்ள சுருளி அருவி. இன்னொன்று கோவை அருகே உள்ள திருமூர்த்தி அருவி.

 

பெண்களைச் சீண்டி, முடிந்தால் நேரடியாகவே  தாக்கும் நோக்கம் கொண்ட ஒரு பொறுக்கிக் கூட்டமே இந்தச் சுற்றுலா மையங்களைச் சுற்றி உள்ளது. சுருளி அருவிக்கரையில் பெண்களிடம் அத்துமீறும் பையன்களை பல முறை கண்டிருக்கிறேன். பலமுறை அவர்களிடம் சண்டையிட்டிருக்கிறேன். ஒரு முறை அவர்களால் தாக்கப்பட்ட அனுபவமும் எனக்கு உண்டு.

 

குற்றாலம் குடும்பத்துடன் செல்லும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பற்ற ஒரு சுற்றுலா மையமாக மாறிவிட்டது. ஒருமுறை குடித்து நிலையழிந்த நடுவயதான ஏழெட்டுப்பேர் உள்ளாடை மட்டும் அணிந்தபடி கூவி ஆர்ப்பரித்து குதித்தபடி அருவியைச் சுற்றிக் கும்மாளமிட்டனர். அவர்களை காவலர்கள் கெஞ்சி மன்றாடி விலக்குவதைப் பார்த்தேன். அத்தனை பேரும் ஒரு குழுவாக வந்த வழக்கறிஞர்கள். மறுநாள் அவர்களை போலீஸார் கைதுசெய்ததாக தினதந்தி செய்தி வெளியிட்டது.

 

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆபாசச் சைகைகளைச் செய்வதும், ஆபாசமாக பேசுவதும், ஊளையிடுவதும், குடித்தபின் புட்டிகளை பாறைகளை நோக்கி வீசி எறிவதும், எதிர்பாராத கணத்தில் உள்ளாடையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்பதும் குற்றாலத்தில் சாதாரணம். அருவி ஓங்கி விழும் பகுதிக்கு வெளியே வெற்றுக் கால்களை வைப்பது கூட ஆபத்தானது. உடைந்த மதுபுட்டிகள் சிதறிக்கிடக்கும். ஒவ்வொரு முறை குற்றாலத்துக்கு செல்லும் போதும் அவற்றால் கால் கிழிபட்டு குருதி வழியச் செல்லும் பயணிகளைப்பார்க்க நேரிடுகிறது.

 

ஒருமுறை மலேசியாவில் இருந்து வந்த என் நண்பர் ஒருவருடன் குற்றாலத்திற்கு சென்றேன். அங்கு ஆண்களும் பெண்களும் குளிப்பதற்காக மிகப்பெரிய தடுப்புகளை உருவாக்கி அருவியே இரண்டாக பிரித்திருப்பதைக் கண்டு அவர் அதிர்ந்தார். “என்ன இப்படி செய்திருக்கிறார்கள்? என்ன இப்படிச் செய்திருக்கிறார்கள்? கேவலமாக இருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த தடுப்புக்கு மேல் போலீஸ்காரர்கள் நீண்ட கழிகளுடன் நின்றுகொண்டு அதை ஏறிக் கடந்து ஏறி மறுபக்கம் பெண்களை நோக்கிப் போக முயன்றவர்களை ஓங்கி அறைந்தும் காலால் உதைத்தும் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

 

பருவ காலத்தில் காமம் மீதூறிய காட்டுவிலங்குகள் போல இளைஞர்கள் அந்தச்சுவரை நோக்கி முண்டியடித்தனர்.  போலீஸ்காரர்களிடம் அறைபட்டு ஒருவன் நிலத்தில் விழுந்தபோது அவனைச் சூழ்ந்து அவன் நண்பர்கள் ஊளையிட்டு ஆர்ப்பரித்தனர். அநேகமாக குற்றாலத்தில் உள்ள இந்தக் காட்சியை உலகெங்கும்     எந்த அருவியிலும் பார்க்க முடியாது. அந்தக்காட்சியை பிரசுரித்தால் உலகமே அதிர்ச்சி அடையக்கூடும். ஏன் அந்தத் தடுப்புச் சுவரின் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பிரசுரித்தாலே நாகரீக உலகம் வெட்கிக் கூசும்.

பீம்கர்

 

சென்ற ஜுலை 2014 அன்று நண்பர்களுடன் ஒரு காஷ்மீர் பயணத்தை மேற்கொண்டேன். ஜம்முவில் சென்றிறங்கி அங்கிருந்து கார் வழியாக ’பூஞ்ச்’சை சுற்றிக் கொண்டு ஸ்ரீநகருக்குள் நுழைந்து கார்கில் சென்று மீள்வது எங்கள் பயணத்திட்டம். செல்லும் வழியில் ரியாசி என்னும் ஊரில் ஒரு சர்தார்ஜியின் உணவு விடுதியில்             தங்கினோம். எங்களைத் தவிர அங்கே வேறு விருந்தினர் எவரும் இல்லை. பொதுவாக ஜம்மு ஒரு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு காஷ்மீர் என்று இருப்பதனாலேயே காஷ்மீர் பிரச்னை இங்கும் பாதிக்கும் என்று பயணிகள் அனேகமாக வருவதே இல்லை. அமர்நாத் பயணம் ஒன்றே இங்குள்ள விடுதிகளுக்கு ஓரளவாவது பயணிகளைக் கொண்டு வருகிறது.

1

காலையில் எழுந்தபோது நல்ல வெளிச்சம். அங்கே இரவு எட்டரைக்குத்தான் கோடை காலத்தில் ஒளி மறையும். காலை ஐந்துக்கே விடிந்துவிடும். ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் விடுதியின் உப்பரிகையில் நின்றபடி மலை அடிவாரத்தில் சீனாப் நதி பெருகி ஓடுவதைப்பார்த்தோம். மலையில் இருந்து செம்மண் பாதை வழியாக ஓடிவருவதனால்  செக்கச் சிவப்பாக குருதி வெள்ளம்போல் ஓடிக் கொண்டிருந்தது பெருக்கு.

 

ஜம்மு பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. எங்கும் பசுமை பசுமை அடர்ந்த மலைகள். குளிரற்ற நீராவி செறிந்த காற்று. இளம் வெயில் காலை நடையே மன எழுச்சி அளிப்பதாக இருந்தது. ரியாசுக்கு அருகே ஒரு அருவி இருப்பதாக கூகுள் சொன்னது. ஆனால் அதைப்பற்றி விசாரித்தபோது ஒவ்வொருவரும் என்ன என்று தெரியாமல் விழித்தார்கள். சரி, ஆற்றங்கரையிலேயே செல்வோம். அருவியைச் சென்று அடைவோம் என்று எண்ணிக் கொண்டோம்.

 

ஆறு மலையை சுற்றிக்கொண்டு சென்றது. ஏராளமான ஆற்றிடைக்குறைகள் கொண்ட ஆறு. மூன்றூ கிலோமீட்டர் அகலத்திற்கு விரிந்து, செந்நிற வெள்ளம் அலைத்துச் சுழித்து கொப்பளிக்க சென்று கொண்டிருந்தது. முதலில் வலப்பக்கமாக வந்து கொண்டிருந்தது பல ஆறுகளின் தொகை என்றேதான் நினைத்தேன்.

 

ஊர்களில் ஆங்காங்கே ராணுவ முகாம்களின் மாபெரும்  கம்பிகள்.மலை அடுக்குகளில் சில கட்டிடங்கள் தொங்கியதுபோல் நின்றன. கண்ணை நிறைக்கும் பசுமைக்குக் கீழே ஒரு செந்நிறப்பதாகை போல நதி சென்றது. தொலைவிலேயே அருவியை பார்த்துவிட்டோம். சியார் பாபா என்று அழைக்கப்படும் அந்த அருவி செங்குத்தாக மலையுச்சியிலிருந்து           ஒரு வெண்ணிற கோடுபோல விழுந்து சீனாப் நதியில் கலந்தது.

 

சாலையிலிருந்தே அந்த அருவியைப்பார்ப்பது ஒரு விழிவிரிய வைக்கும் அனுபவம். வானிலிருந்தே முகில் உருகி பெய்வது போல் இருந்தது. ஆனால் சிறிய அருவிதான். ஒரு ஓடை அளவுக்குதான் நீர். கிட்டத்தட்ட அறுநூறு அடி உயரத்திலிருந்து  விழுந்தது. கரிய மலை தோளில் சரியும் வெண்துகில் போல நல்லவேளையாக நேராகச் சென்றுவிடாமல் மலையை ஒட்டியே பாறைகளில் விழுந்து சிதறி சிதறி வந்தது. எனவே கீழிருந்து குளிக்க முடிந்தது.

 

அவ்வேளையில் அங்கே அதிகம் பயணிகள் இல்லை. மழைச்சாரல் இருந்ததனால் நாங்கள் ஏற்கனவே அருவியில் குளித்தது போல் நனைந்து விட்டிருந்தோம். காரிலேயே ஆடைகளைக் கழற்றி வைத்து உள்ளாடைகளுடன் அருவியை நோக்கிச் சென்றோம். அருவியில் இருபது முப்பது இளம்பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு பேருந்தில் வந்த கல்லூரி மாணவிகள்.

 

அனைவரும் இறுக்கமாக ஆடைகளையே அணிந்திருந்தனர். பொது இடங்களில் நமது பெண்களிடம் இருக்கும் எச்சரிக்கையும் குறுகலும் இல்லாமல் சுதந்திரமாகவும் களியாட்ட மனநிலையுடனும் இருந்தனர். ஒருவரையொருவர் பிடித்து அருவிக்கு முன்னால் இழுத்துக் கொண்டு சென்றனர். நீரில் நீளக்கூந்தல்களைச் சுழற்றி நீச்சல் அடித்து துளி தெறிக்க வைத்தனர். பாறைகளின் மேல் ஏறித் தாவி கீழிருந்த சுனையில் குதித்தனர்.  கூச்சல்கள் ஒளி கொண்டு மின்னும் பற்கள் .

 

மேலே இருந்து ஒரு இளைஞர் கும்பல் உற்சாகக் கூச்சலிட்டபடி வந்தது. இன்னொரு பேருந்து வந்திருந்தது. வந்ததுமே அவர்களும் நீருக்குள் பாய்ந்து அந்தப் பெண்களுடன் கலந்தனர். நீரில் அவர்கள் ஒருவர் பிடித்துத்தள்ளியும் அள்ளி இறைத்தும் விளையாடிக் களிப்பதைக் கண்டோம். சங்க காலத்து புதுப்புனலாட்டு விழவுகள் நினைவுக்கு வந்தன. ஆனால் அதில் சீண்டல் இருக்கவில்லை. எந்தப்பெண்ணும் அந்த ஆண்களின் கைகள் அத்துமீறியதாக உணர்வதாகத் தெரியவில்லை. சிறுபிள்ளை விளையாட்டு போலவே இருந்தது.

 

ஒருவேளை அவர்கள் ஒரே கல்லூரியைச் சார்ந்தவர்களாகவும் முன்னரே அறிமுகமானவர்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மாணவர்களைக் கவனிப்பதைக் கண்டதும் கிருஷ்ணன் ”இல்லை சார், அவர்கள் வேறு வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் இந்தியில் அறிமுகம் செய்து கொண்டார்கள்” என்றார். ”அப்படியா…!” என்று ஆச்சரியத்துடன் சொன்னேன்.

 

சற்று நேரத்தில் நீராடிக் களைத்த பெண்கள் அந்த ஆண்களிடம் விடை பெற்றுக் கொண்டு கரையேறி ஒவ்வொருவரையாக ஆடைகளைப் பிழிந்தபடி சென்றனர். இளைஞர்கள் தொடர்ந்து அருவியில் நீராடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். எவரும் மது அருந்தியிருப்பதாகத் தெரியவில்லை. எவரும் அத்துமீறவில்லை. கூழாங்கற்களில் கால் தடுக்க நான் நடந்து சென்ற போது துள்ளிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வழிவிட்டு புன்னகையுடன் உள்ளே செல்லும்படி கைகாட்டினார்கள்.

 

நாங்கள் நீராடி முடித்து மேலே வந்த போது அந்தப் பெண்கள் வந்த வண்டி சென்றுவிட்டிருந்தது. இன்னொரு பெரிய மார்வாடிக் குடும்பம் வண்டியில் வந்து இறங்கியது. இளைஞர்கள் அப்போதும் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

 

மிகப்பெரிய ஏக்கம் ஒன்று என் நெஞ்சில் எழுந்தது. இந்தப்பெண்களுக்கு இருக்கும் கொண்டாட்டமும் சுதந்திரமும் என் மகளுக்கு இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு ஆணைப்பற்றியும் எச்சரிக்கையாக இரு என்று சொல்லித்தான் அவளை வளர்க்கவேண்டியிருக்கிறது. என் இணைய தளத்தில் அவ்வனுபவத்தை 2014 ஜூலை 30 ல் இவ்வாறு எழுதினேன் ‘பொறுக்கியாக இருப்பதே ஆண்மை, நாகரிகம் என்ற எண்ணம் தமிழகத்தில் வேரூன்றியது எப்படி என்றே தெரியவில்லை. அத்தனை ஆண்கள் நீராடும் இடத்தில் பெண்கள் இயல்பாக இருந்த அச்சூழலை அடுத்த நூறாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கி விட முடியாது’

 

திரும்பவும் ரியாசிக்கு வந்து அருகிலிருந்த பீம்கர் என்ற மலைக் கோட்டையைப்பார்த்தோம். 17ம் நூற்றாண்டில் லோக்கி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையின் மேலேறி நின்று சூழ நிறைந்திருந்த பசுமையை பார்த்து கொண்டிருந்தபோதும் மனம் இதையே நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது. ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? ஏன் அதைப்பற்றி எளிய வெட்கம் கூட நம்மிடம் இல்லை? குற்றாலத்தில் நாம் கட்டி வைத்திருக்கும் அந்த சுவர், நமது நாகரிகத்தின் இழிவின் அடையாளம் என்றுகூட ஏன் நமக்குத் தோன்றவில்லை?

 

குங்குமம் ‘முகங்களின் தேசம்’

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28

$
0
0

[ 42 ]

“அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை மணந்து காதலாடியவை நவநிதி சர்க்கங்கள் என ஒற்றை பாதமாக அமைந்துள்ளன. அர்ஜுனனுக்கும் மீனாட்சிக்குமான காதல் ஏழு உட்பகுதிகள் கொண்ட ஒரு படலம். அவை உங்களைப்போன்ற சிற்றிளையோர் கேட்கத்தக்கவை அல்ல.”

“குபேரபுரியில் அர்ஜுனன் நூற்றெட்டு ஆண்டுகாலம் மகளிருடன் மகிழ்ந்து வாழ்ந்தான்” என்றான் சண்டன். “காமம் முடிந்ததும் காமம் எழுந்தமையால் அவனால் சித்தம் மீளவே முடியவில்லை. ஒருநாள் பத்து துணைவியருடன் அளகாபுரியிலுள்ள பிரமோதம் என்னும் வேனில்காட்டில் மலர்மரங்களுக்கு நடுவே விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த சிறிய நீர்க்குட்டை ஒன்றில் பொற்துகள்போல ஓர் எறும்பு நீந்திக்கொண்டிருப்பதை கண்டான். குனிந்து அந்த எறும்பை சுட்டுவிரலால் தள்ளி கரையேற்ற முயல்கையில் அவன் காதில் அவ்வெறும்பு வேண்டிக்கொண்ட ஓசை விழுந்தது.”

இருகைகளையும் கூப்பி எறும்பு கூவியது “பேராழிகளின் தலைவனாகிய வருணனே, இக்கடலை நான் கடக்க எனக்கு உதவுக!” திகைப்புடன் அவன் சுட்டுவிரலால் ஒற்றி அந்த எறும்பை மேலெடுத்தான். அதன் விழிகளை தன் விழிகளால் தொட்டு “நீ சென்றுகொண்டிருந்தது கடலென எவர் சொன்னது?” என்றான். “என் மூதாதையரின் அறிதல், என் விழிகளின் காட்சி இரண்டையும் என் நுண்ணறிவின் வழியாக இணைத்துக்கொண்டேன்” என்று எறும்பு சொன்னது. “அலையடிப்பது, திசைகள் அற்ற எல்லைகொண்டது, சென்றடையமுடியாத ஆழம் கொண்டது.”

அர்ஜுனன் அவ்வெறும்பை கீழே விட்டுவிட்டு எண்ணத்திலாழ்ந்தான். அவனருகே சிரித்தபடி ஓடிவந்து அமர்ந்து மூச்சிரைத்த மீனாட்சி அவன் முகம் மாறிவிட்டிருப்பதைக் கண்டு “என்ன?” என்றாள். “நான் செல்லவேண்டிய திசை ஒன்று எஞ்சியுள்ளது” என்றான். அவள் விழிகள் மாறுபட்டன. “செல்கிறீர்களா?” என்றாள். “நான் சென்றாகவேண்டியவன் என்று நீ அறிவாய்” என்றான். “ஆம், ஆயினும் உள்ளம் மாயைகளையே விழைகிறது” என்றாள்.

அவளைத் துரத்தி ஓடிவந்த ஒன்பது கன்னியரும் கூட்டுச்சிரிப்போசையுடன் அருகே அமர்ந்தனர். பதுமை “நெடுந்தூரம் ஓடிமீண்டோம் இன்று” என்றாள். சங்கினி “ஆம், மறு எல்லையில் அந்தப் பொன்முகில்வரை” என்றாள். அவர்கள் இருவரும் இருந்த நிலையைக் கண்டு பிறர் சிரிப்பழிந்தனர். நந்தை “என்ன ஆயிற்று?” என்றாள். “கிளம்புகிறார்” என்றாள் மீனாட்சி. அனைவர் முகங்களும் வாட விழிகள் நீரொளி கொண்டன.

“நான் வருணனை வென்றாகவேண்டும்” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்து நான் செல்லவேண்டிய திசை அதுவே.” அவர்கள் விழிதாழ்த்தி துயரெடை கொண்டனர். “கடந்துசென்றுகொண்டே இருப்பவன் நான், என் இயல்பை நீங்கள் முன்னரே அறிந்திருப்பீர்கள். என் மேல் சினம்கொள்ளவேண்டாம்” என்றான் அர்ஜுனன். “ஆண்களுக்கு கடந்துசெல்லலையும் பெண்களுக்கு நிலைகொள்ளலையும் வகுத்த நெறியை அன்றி எதையும் குறைசொல்ல விழையவில்லை” என்றாள் மீனாட்சி.

“நாளை காலை நான் இங்கிருந்து மீள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “வீரரே, இங்கு நீங்கள் வந்து மானுட ஆண்டு நூற்றெட்டு கடந்துவிட்டது. ஆனால் உங்களை நீங்கள் இவ்வுலகுக்குள் புகுந்தகணத்தின் மறுகணத்தில் கொண்டு சென்று அமர்த்துகிறேன்” என்று மீனாட்சி சொன்னாள். “இங்கிருந்து நீங்கள் விழையும் செல்வம் அனைத்தையும் கொண்டு செல்லலாம்” என்றாள் நந்தை. “வடக்கின் அரசன் அளித்த அம்பு அன்றி வேறேதும் கொண்டுசெல்லப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.

“வீரரே, நீரின் தலைவனை வென்றுகடக்கும்பொருட்டு கிளம்புகிறீர்கள்.  நீரின் உண்மை இரண்டு. ஒளிப்பரப்பாக அலையடிக்கும் மேல்தளம் அதன் முகம். இருண்டு இருண்டு செல்லும் அசைவற்ற ஆழம் அதன் அகம்” என்றாள் மீனாட்சி. “நீர்முகத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகளின் தேவி பதுமை. நீராழத்தில் படிந்திருக்கும் சங்குகளின் அரசி சங்கினி. சங்கு ஆழத்து வெண்தாமரை. வெண்தாமரை அலைமேல் மலர்ந்த சங்கு.”

“சங்கும் தாமரையும் ஏந்திய வருணன்” என்றாள் மீனாட்சி. “அவனை மூன்று முதல்தெய்வங்களன்றி எவரும் முழுமையாகக் கண்டதில்லை. கதிரவனுக்குரிய ஒளிமலரென அவனைக் கண்டவர்கள் சங்கிலமர்ந்து குளிர்ந்த அவனை கண்டதில்லை. சங்கிலெழும் ஆழிப்பேரோசையாக அவனை அறிந்தவர்கள் ஓசையற்ற மலர்வென அவனை உணர்ந்ததில்லை. மலர்நாடி வருபவருக்கு ஆழத்தையும் சங்கென எண்ணுபவர்களுக்கு மலர்ந்த வெண்நகைப்பையும் அளிப்பது அவன் ஆடல்.”

“இவர்கள் இருவரும் உங்களுடன் வரட்டும்” என்றாள் மீனாட்சி. “உங்கள் இரு கைகளின் கட்டைவிரல்களிலும் மலர் வடிவிலும் சங்குவடிவிலும் வரிச்சுழியாக அமைந்திருப்பார்கள். தேவையானபோது உங்கள் அருகே எழுந்து வழிகாட்டுவார்கள்.” அர்ஜுனன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டான். அங்குள்ள சுனை ஒன்றில் அவர்கள் அவனை இறங்கிச்செல்லும்படி சொன்னார்கள். நீரில் மூழ்கிய அவன் அலைகளுக்கு அப்பால் அவர்களின் உருவங்கள் வண்ணங்களாகி நெளிந்து கரைவதைக் கண்டான்.

“விழித்தெழுந்தபோது அவன் குபேரதீர்த்தத்தின் அருகே இருந்தான். எழுந்து அமர்ந்து எண்ணிநோக்கியபோது அனைத்தும் கனவென்றே இருந்தது. நினைவுகூர்ந்து அருகே கிடந்த தன் ஆவநாழியை எடுத்து நோக்கினான். அதில் இரும்புவளையம் கொண்ட அம்பு ஒன்று இருப்பதைக் கண்டான். அதைத் தடவிநோக்கியபடி நீள்மூச்சுவிட்டான்” என்றான் சண்டன்.

அவர்கள் தண்டகாரண்யத்தின் காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருந்தார்கள். பைலன் “குபேரனின் படைக்கலம் அர்ஜுனனுக்கு உதவக்கூடும். அந்தர்த்தானையைவிட பெரிய துயில்தெய்வம் ஒன்றுண்டு. வேள்விகளில் துயிலும் வைதிகரிடம் கேட்டு அவரது எதிரிகள் பெற்றுக்கொண்டு விடக்கூடும்…” என்றான். சண்டன் உரக்க நகைத்தான். ஜைமினி “இது வீண் கேலி. வேள்விகளில் எவர் துயிலமுடியும்?” என்றான். “ஆம், புகை ஒரு பெரிய தொல்லையே” என்றான் பைலன்.

“பைலரே, இது அத்துமீறல். வேள்விக்களத்தில் அவிபெறும்பொருட்டு தெய்வங்கள் வந்து சூழ்ந்துள்ளன. அவற்றின் அருகே அமர்ந்திருக்கும் வைதிகர் அனலெழும் காட்டில் நாணல்கள் போன்றவர்கள்…” என்றான் ஜைமினி. பைலன் “அப்படியென்றால் அவி கொள்ளும்பொருட்டு அந்தர்த்தானையும் நித்ரையும் வந்திருக்கக்கூடுமோ?” என்றான். ஜைமினியின் கண்கள் நனைந்தன. தொண்டை ஏறி இறங்கியது. அவன் “நான் தனித்துச்செல்கிறேன்…” என்று முன்னகர்ந்தான்.

“சரி, இல்லை. சினம் கொள்ளாதீர்” என்று அவன் கையை எட்டிப்பற்றினான் பைலன். “இதற்கெல்லாம் சினம் கொள்ளக்கூடுமா? இது எளிய சொல்லாடல் அல்லவா?” ஜைமினி “எனக்கு வேதம் எளிய சொல் அல்ல” என்றான். “ஆம், அது புகையின் எடைகொண்டது” என்றான் சண்டன். “சண்டரே, போதும்” என்றான் பைலன். ஜைமினி தலைகுனிந்து நடந்தான்.

அவர்கள் பிறகு நெடுநேரம் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்போது சண்டன் பைலனின் கண்களை சந்தித்தபோது அவற்றில் புன்னகையின் ஒளி இருந்தது. ஜைமினி நின்று “நீர்” என்றான். சண்டன் தன் குடுவையை எடுத்து தலைகீழாகக் காட்டி “தீர்ந்துவிட்டது” என்றான். ஜைமினி பதற்றத்துடன் “இந்நிலம் வறண்டிருக்கிறது. குரங்குக்குரல்களும் குறைந்திருக்கின்றன. நீர்மரங்களும் கண்ணுக்குப்படவில்லை” என்றான். “ஆம், இன்னும் நெடுந்தொலைவுக்கு நீரூற்று என ஏதுமிருக்க வாய்ப்பில்லை” என்றான் சண்டன். “என்ன செய்வது?” என்று ஜைமினி பதறியபடி கேட்டான். “அந்தணரே, நீங்கள் வருணனை வேதம்கூவி அழைத்து நீர்பொழியக் கோரலாமே?” என்றான் சண்டன்.

“தன்னலத்திற்காக வேதம் ஓதுபவன் கீழ்மகன்” என்றான் ஜைமினி. “நான் இக்காட்டில் நீரில்லாது விடாய்கொண்டு இறப்பதாக இருந்தாலும் இறுதித்தருணம் வரை எனக்கென வருணனை வேண்டமாட்டேன்.” அவன் உறுதியைக் கண்ட சண்டன் புன்னகைத்து “நன்று. தொல்வேதகாலத்தின் அதே உணர்வுடன் அந்தணர் சிலர் இன்னுமிருப்பதனால் வருணன் மானுடருக்கு கட்டுப்பட்டவனே” என்றான்.

பைலன் “மானுடருக்கு தேவர்கள் எப்படி கட்டுப்படமுடியும்?” என்றான். ஜைமினி “தேவர்களில் மானுடனின் ஆணைக்கேற்ப அமையவேண்டிய பொறுப்புள்ளவன் வருணனே. முனிவர், வேதியர், கற்புடைப்பெண்டிர், சொல்தூய்மைகொண்ட கவிதை, இலக்கண முழுமைகொண்ட இசை ஆகிய ஐந்து அழைப்புக்கும் அவன் வந்தாகவேண்டும். மழைக்குருவி, வேழாம்பல், தவளை ஆகிய மூன்றின் அழைப்பையும் ஏற்றாகவேண்டும். வருணன் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருக்கும் வரைதான் இங்கே வாழ்க்கை. அவன் தன் விடுதலையை அடைந்தானென்றால் மண் வறண்டு உயிர்கள் அழியும்” என்றான்.

அவன் ஊக்கம்கொண்டு மேலே சொல்லிக்கொண்டே சென்றான். “அறிந்திருப்பீர் பைலரே, எங்கள் ஜைமினிய குருமுறை மிகமிகத் தொன்மையானது. வேதங்கள் எழுந்து செறிந்த காலகட்டத்தை மூன்றென வகுப்பதுண்டு. முதல் கட்டத்தில் வருணனே முழுமுதற்தெய்வம். பின்னர் இந்திரன் தெய்வமானான். இன்று பிற தெய்வங்கள் முதன்மைகொண்டு எழுந்து வருகின்றன. எங்கள் குடி வாருணவேதம் இங்கு திகழ்ந்த அக்காலத்திலேயே வேதமுதன்மைகொண்டிருந்தது.”

அவன் விழிகளை பைலன் நோக்கிக்கொண்டிருந்தான். அவை சிறுவருடையவை என பளபளத்தன. “அன்று இருந்த வாருணவேதத்தின் ஒரு கைப்பிடி அளவே நாலென வகுக்கப்பட்ட வேதத்தில் உள்ளது என்பார்கள் எங்கள் குலமூதாதையர். அன்று தந்தை தன் மடியில் மைந்தனை வைத்திருப்பதுபோல வருணன் தன் நீரால் மண்ணை வளைத்து அருள்செய்திருந்தான். வருணனுக்கான பாடல்களை மட்டும் ஜைமினிய குருமுறைமையில் தனியாகத் தொகுத்து வைத்திருக்கிறோம். அவற்றை நாங்கள் பாடி மழை வரவழைப்பதுண்டு.”

“மேற்கே சோனகநாட்டு பெருமணல்உலகை நோக்கிச் செல்லும் வழிகளினூடாகச் சென்றால் வறண்ட மலையடுக்குகள் வரத்தொடங்குகின்றன. கூர்முட்களையே இலைகளாகக்கொண்ட குட்டைப்புதர்களும் எலிகளும் கீரிகளும் மட்டும் வாழும் அம்மலைகளில் தொன்மையான வாருணக்குடிகள் வாழ்கின்றனர். அனல்சுட்ட கல் என செந்நிற மக்கள். குழல் செந்நிறம். விழிகள் பச்சைக்கற்கள்போன்றவை. அவர்களின் ஆலயங்களில் தவளைகள் சூழ வருணன் அமர்ந்து அருள்புரிகிறான்” என்றான் சண்டன்.

“புழுதியின் நிலம். பெருங்காற்றுகளின் நிலம். செடிகளுக்கு கசப்பும் விலங்குகளுக்கு நஞ்சும் மானுடருக்கு சினமும் மிகுதி அங்கு. அணுகமுடியாத முட்புதர்கள் என அம்மக்களைச் சுட்டுவர் வணிகர். ஆண்டுக்கு மூன்று மழை என்பதே அங்குள்ள கணக்கு. பன்னிரு மாதங்களும் அந்த நீர்த்துளிகளைக்கொண்டே அவர்கள் வாழவேண்டும். அவர்களின் பாடல்கள் அனைத்தும் வான் நோக்கிய மன்றாட்டுகளே” என்று சண்டன் சொன்னான். “தொல்வேதம் வாருணத்தை அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டது.”

ஜைமினி சினத்துடன் “வேதம் அந்த அசுரகுடிகளிடமிருந்து எழுந்ததா? என்ன சொல்கிறீர்?” என்று சீறினான். “அந்தணரே, தொல்வேதத்தின் தெய்வங்கள் அனைத்தும் அசுரர்களிடமிருந்து பிறந்தவர்களே. குபேரன் ஓர் அசுரன் என்றே சொல்கின்றன நூல்கள். இலங்கையாண்ட ராவணனும் உடன்பிறந்தாரும் அவன் இணைக்குருதியினர். வருணனும் அசுரபிறப்பு கொண்டவன் என்று வேதம் சொல்கிறது. வேதம்கேட்டும் அவிகொண்டும் அவன் தேவர்களுக்கு தெய்வமாக ஆனான் என்கின்றன. நீர் வேதம் கற்றிருக்கிறீர், முழுதாக அல்ல.”

அந்தக் குரலில் இருந்த கூர்மை ஜைமினியை சொல்லமையச் செய்தது. அவன் விழிகளில் சீற்றம் தெரிந்தது. அதுவரை இருந்த எள்ளல்முகம் மறைய சண்டனின் குரல் மன்றமர்ந்து மெய்யுசாவும் ஆசிரியனுக்குரியதாக மாறியது. “வருணன் அசுரன் என்று கூறும் ரிக்வேதப்பாடல்கள் பல உள்ளன. அசுரர்களின் தலைவன், அசுரருக்கு அருளும் தெய்வம். விருத்திரனை அழிக்க இந்திரன் எழுந்தபோது இந்திரனுக்குத் துணைநின்றமையால் வருணன் தேவர்களுக்கும் தெய்வமாக ஆனான்.”

ஜைமினி நெடுநேரம்  தலைகுனிந்து ஒன்றும் சொல்லாமல் வந்தான். பின்பு தொண்டையைச் செருமியபடி “வருணனும், மித்ரனும், அர்யமானும், பகனும், அம்சனும் அதிதிதேவிக்கு பிறந்தவர்கள். அவர்களை ஆதித்யர்கள் என்று கொள்வது வேதமரபு. வேதங்களில் பகனுக்கும் அம்சனுக்கும் வாழ்த்தும் இறைஞ்சலும்  இல்லை. மித்ரனும் வருணனும் இணைந்தே தெய்வங்களாக சொல்லப்படுகிறார்கள். அவ்வப்போது அர்யமானும் சேர்த்துக்கொள்ளப்படுவதுண்டு” என்றான்.

அவன் தான் கற்றவற்றை சொல்ல விழைகிறான் என உணர்ந்த பைலன் சண்டனை நோக்கினான். புதியதாக கேட்பவனைப்போல அவன் விழிகூர்ந்தான். அந்தக் கூர்தலே அவனை அறிஞனாக்குகிறது என பைலன் எண்ணிக்கொண்டான். “மண்ணில் உள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் கொண்ட பேருருவன் என்பதனால்தான் வருணன் அசுரன் என்று சொல்லப்படுகிறான். வேதச்சொல் அறிந்து நுண்மைகொண்டவன் என்பதனால் கவிதமன் என்றும் விண்வடிவாக எழுபவன் என்பதனால் மாயாவான் என்றும் அவனை சொல்கிறார்கள். மண்ணிலுள்ளவர்களுக்கு அரசன் என்றும் விண்ணவர் வணங்கும் தேவன் என்றும் அவனைச் சொல்கின்றனர் முன்னோர்.”

“மித்ரனும் வருணனும் வேதங்களில் நரர்கள் என்று சுட்டப்படுவதுண்டு என அறிந்திருக்கிறீரா?” என்றான் சண்டன். “ஆம்” என்றான் ஜைமினி. “அவர்கள் மண்ணில் வாழ்ந்த அரசர்கள். விண்புகுந்தபின் தெய்வமானவர்கள். அவர்கள் அரசர்கள் என்றால் எவருடைய அரசர்கள்?” என்று சண்டன் கேட்டான். ஜைமினி அவன் மேலே பேசட்டும் என காத்திருந்தான். “மேற்குமலைக்குடிகள் கடலோரம் வாழ்ந்தவர்கள். மூதாதையரை கடலில் விடும் வழக்கம் கொண்டவர்கள்.  உயிருடன் கொந்தளிக்கும் கடல் அவர்களின் மூதாதையரின் உயிரின் பெருந்தொகை என அவர்கள் எண்ணுகிறார்கள். மழையை கடல்தேவனின் ஆடை என்கிறார்கள். வரமளிப்பவனாகையால் அத்தேவன் வருணன்.”

“பருவம் தவறாது மழைபொழிவதும் பனிஎழுவதும் வெயில் விளைந்து மூத்து கனிவதும் இப்புடவியின் தாளம் என்று அவர்களின் தொல்பாடல்கள் சொல்கின்றன. அதை அவர்கள் ருதம் என்கின்றனர்” என்றான் சண்டன். “ஆம். அச்சொல் வேதங்களில் அறமென்னும் பொருளில் அமைந்துள்ளது” என்றான் பைலன். “ருதத்தைக் காப்பவன் வருணன் என்று வேதங்களும் சொல்கின்றன. ஓயா தாளம் திகழும் கடலே நிலத்தின் உயிர்களிலும் விசைகளிலும் திகழும் தாளங்கள் அனைத்துக்கும் அடிப்படை.”

“வருணனை வேதம் போற்றுகிறது” என்றான் சண்டன். “நெறிகளின் தலைவன். பலிவிலங்கின் தோல் என புவியை வான் நோக்கி விரித்தவன். ஆதித்யர்கள் புவியை சுற்றிவரும்படி அமைத்தான். சூரியனால் பூமியை அளக்கிறான். அவன் செல்ல பாதையை அமைத்தளிக்கிறான். ஆண்டு, மாதம், நாள், பகல், இரவு  என அதை பகுத்தான். யக்ஞம் ரிக் என அதை செலுத்தினான். மரங்கள் மேல் வெளியை கவித்தவன். குதிரைக்கால்களில் ஆற்றலையும் பசுக்களில் பாலெனும் கனிவையும் உள்ளங்களில் ஊக்கத்தையும் நீரில் நெருப்பையும் வானில் கதிர்களையும் மலைமுகடுகளில் ஊற்றுக்களையும் அமைத்தவன்.”

“மழை பெய்வதும் பயிர் வளர்வதும் அவனால். வருணனின் ருதத்தின்படியே நதிகள் தேங்காமல் ஓடுகின்றன. ஆற்றுநீர் கடலை நிரப்புவதில்லை. வருணன் எல்லைகளை காக்கிறான்” என்று ஜைமினி தொடர்ந்து பாடினான். “பிறர் பிழைகள் எங்கள் மேல் படராதொழிக! மூதாதையர் பிழைகளுக்கும் நாங்கள் பொறுப்புகொள்ளாமல் ஆகுக!” என்றான் பைலன். ஜைமினி புன்னகை செய்தான். “மித்ரனும் வருணனும் எளியோனை அறிவனாக்குகிறார்கள். அறிவனை மெய்மையுணரச் செய்கின்றனர். வழிகாட்டி அழைத்துச்செல்கிறார்கள்.”

“ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் சண்டன்.   பைலன் “இத்தனைக்கும் பிறகு நமக்கு நீரூற்றை காட்டியாகவேண்டும் வருணன்” என்றான். சண்டன் புன்னகைத்து “அணுகிக்கொண்டிருக்கிறோம்” என்றான். “எப்படி சொல்கிறீர்கள்?” என்றான் ஜைமினி. “கருங்குரங்கின் ஓசை…” என்று சொல்லி சண்டன் சிரித்தான். “வருணனின் முழவல்லவா அது?”

[ 43 ]

இமயப்பனிமலைகளில் இருந்து மேற்கே சென்று புழுதிபடிந்து குளிர்ந்து உயிரசைவின்றிக் கிடந்த அரைப்பாலை நிலத்தில் இறங்குவதற்கு வணிகப்பாதை ஒன்றிருந்தது. வேனிலில் கீழ் நிலத்தில் இருந்து உப்புவணிகர்கள் படைக்கலங்களும், மரவுரியும், உலோகப்பொருட்களும் பிறவும் சுமக்கும் அத்திரிகளையும் கழுதைகளையும் ஓட்டியபடி மேலேறி வருவார்கள். மலைக்கம்பளியும், அருமணிகளும் கொண்டு கீழிறங்கிச் செல்வார்கள். சுழன்று காற்றிலிறங்கும் கருமணிமாலை என அவர்களின் குழுக்கள் தோற்றமளிக்கும். அவர்களுடன் வரும் சூதர்களின் பாடலோசையும் முழவொலியும் அந்த மணிகளை இணைக்கும் பொற்பட்டுநூல் என தோன்றும்.

மலைவணிகர்களுடன் அர்ஜுனன் கீழிறங்கிச் சென்றான். அவன் வில்லவன் என்று அறிந்ததுமே வழிப்பணமும் உணவும் அளித்து காவலுக்கு அமர்த்திக்கொண்டனர் வணிகர். ஒருமுறை மலையிடுக்கு ஒன்றிலிருந்து தொல்குடிக் கள்வர் சிலர் தலையெடுத்ததும் அர்ஜுனன் தன் நாணொலியை எழுப்பினான். அக்கணமே அவர்கள் அஞ்சிச் சிதறி ஓடி மறைந்தனர். “வெந்நீரில் எறும்புகள் போல ஓடுகிறார்கள். எதைக் கண்டனர் இவர்கள்?” என்றான் பெருவணிகன் மார்த்தாண்டன். “நான் தேர்ந்த வில்லவன் என அவர்கள் உணர்ந்திருப்பார்கள். அச்சம் அனைத்தையும் எளிதில் புரியவைக்கும் ஆற்றல்கொண்டது” என்றான் அர்ஜுனன்.

“வீரரே, நீங்கள் பாண்டவனாகிய அர்ஜுனனை அறிவீரா?” என்றான் நிகும்பன் என்னும் இளவணிகன். “அவர் இப்போது விண்ணுலகில் உலவிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.” அர்ஜுனன் புன்னகை செய்தான். “அவர் வில்லின் புகழ்கேட்டே இங்கே இளமைந்தர் வளர்கிறார்கள்” என்றார் முதுவணிகனாகிய கருணன். “அறத்தின்பொருட்டு கானேகியவர்கள். வெற்றியின்பொருட்டு விண்ணேகியிருக்கிறார்கள்” என்றான் நிகும்பன். “விண்ணேகிய பின் அங்கிருந்து அம்புகளையா பெற்று மீளவேண்டும்?” என்றான் மார்த்தாண்டன்.

“வில் என்பது உள்ளம். அம்பென்பது எண்ணம். கூரிய அம்பென்பது ஆற்றல்கொண்ட எண்ணம். மாபெரும் அம்புகள் மெய்யறிதல்களேயாகும்” என்றார் கருணன். “இறுகியும் வளைந்தும் நாணொலித்தும் தளர்ந்தும் அம்புகளை ஏவிக்கொண்டே இருக்கும் உள்ளம் இடைவிடாது வானத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறது என்பார்கள் கவிஞர்கள்.” நிகும்பன் “அவர் மெய்யறிந்து முனிவராகவே மீண்டு வருவார்” என்றான்.

மலையிறங்கி புழுதிக்குளம்போலிருந்த சிற்றூர் ஒன்றுக்கு அவர்கள் வந்தனர். பிங்கலம் என்னும் அச்சிற்றூரில் இருபது குடில்களே இருந்தன. அவையும் மலைக்காற்றில் வந்த சருகுகளும் புழுதியும் மூடி தொலைவிலிருந்து நோக்கினால் இல்லங்களென்று தெரியாதபடி தோன்றின. ஊர்முகப்பில் நாட்டப்பட்ட பெரிய மூங்கிலில் பறந்த பச்சைநிறமான கொடி ஒன்றே அங்கு மானுடர் இருப்பதற்கான சான்றாக இருந்தது.

அத்திரிகளின் குளம்போசை கேட்டதும் அவ்வூரிலிருந்து கூச்சலிட்டபடி ஏழெட்டுபேர் அவர்களை நோக்கி ஓடிவந்தனர். புழுதியடர்ந்த கம்பளியாடை அணிந்து கம்பளியாலான தலையுறையும் அணிந்திருந்தமையால் காட்டுக்கழுதைகள் என்றே அவர்கள் தோன்றினர். பொதிவண்டிகளை அணுகி அவற்றின் கடிவாளங்களை பற்றிக்கொள்ள முண்டியடித்தனர். “பெருவணிகர்களே, இனிய நீரும் வெம்மையான படுக்கையும்” என்று ஒருவன் கூவினான். “தளரா இளமுலைகொண்ட பெண்கள். இன்னுணவு” என்று இன்னொருவன் சொன்னான்.

“விலகுங்கள்! அகலுங்கள்!” என்று வணிகர்கள் அவர்களை தள்ளிவிட்டனர். “வணிகர்களே, நான் முதலில் வந்தேன். நானே முதலில் அழைத்தேன்” என்றான் ஒருவன். “என் இன்னுணவை வணிகர் விரும்புகிறார். வணிகரே, மலையணிலை உயிருடன் வைத்திருக்கிறேன். நீங்கள் நோக்கியபின் அதை சுடுவேன்” என்றான் இன்னொருவன். “இனிய கீரி… உடும்பு” என்று ஒருவன் அர்ஜுனனின் கையை பற்றினான். “வெம்மையான தோள்கள் கொண்டவள் என் மனைவி. இனிய சொல்லாடல் கற்றவள்.” மேலும் மேலும் ஊரிலிருந்து மக்கள் வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் ஊரை அணுகியதும் பெண்களும் குழந்தைகளும் ஓடி வெளியே வந்துவிட்டார்கள். பெண்கள் குளம்போசை கேட்டதுமே முகம் கழுவி குழல் திருத்தி ஆடை மாற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. அங்கிருந்த பாறைகள்போல செம்மஞ்சள் நிறமான தோல். சிறிய நீலப்பச்சை விழிகள். விழிகளைச் சூழ்ந்தும் வாயைச் சுற்றியும் சுருக்கங்கள் செறிந்திருந்தன. மிகச்சிறிய உதடுகள் உள்ளிழுத்துக்கொண்டவை போலிருந்தன.

வணிகர்கள் பெண்களை தழுவிக்கொண்டார்கள். அவர்களை அப்பெண்கள் தோள்வளைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். பணியாளர் அத்திரிகளையும் கழுதைகளையும் அழைத்துச்சென்று ஊர்மன்றில் நிறுத்தி பொதிகளைக் கழற்றி கீழிறக்கினர். அவற்றை மையத்தில் ஒன்றாகக் குவித்து கயிறு செலுத்தி சேர்த்துக்கட்டினர். அத்திரிகளை அங்கிருந்தவர்கள் அழைத்துச்சென்று மரத்தொட்டிகளிலிருந்த நீரை அளித்தனர். பெருமூச்சுவிட்டு உடல்சிலிர்த்தபடி அவை நீர் அருந்தும் ஒலி கேட்டது.

“நம்மவர் ஒரு காவலர் இங்கிருந்தால் போதும், வீரரே” என்றார் கருணன். “இவர்களே காவல் நோக்குவர். இவர்களில் விழைவுகொண்ட சிலர் இருக்கக்கூடும் என்பதனால் நாமும் ஒரு நோக்கு கொண்டிருக்கவேண்டும், அவ்வளவுதான்.” அர்ஜுனன் “நான் இங்கிருக்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை. நீங்கள் இளைப்பாறலாம். இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமானவை” என்றான் வாகுகன் என்னும் இளவணிகன். “தாழ்வில்லை. நான் இங்கேயே இளைப்பாற முடியும்” என்றான் அர்ஜுனன்.

“நானும் உடனிருக்கிறேன்” என்றான் வாகுகன். பிறர் நீர் அருந்தவும் இளைப்பாறவும் அங்கிருந்த சிற்றில்களுக்குள் சென்றனர். குழந்தைகள் அவர்களைச் சூழ்ந்து நின்று வேடிக்கை நோக்கின. மூக்கு கூர்ந்த குழந்தைகள் செந்நிற உருளைக் கற்கள் போலிருந்தன. அவற்றின் நீலவிழிகளை நோக்கிய அர்ஜுனன் “இவர்கள் யவனரா?” என்றான். “யவனரும் இவர்களும் ஒரே குலம் என்கிறார்கள். ஆனால் இவர்களை பிங்கலர் என்பதே வழக்கு.”

அச்சிற்றூரின் மேற்கு மூலையில் இருந்த சிறிய தெய்வப்பதிட்டையை அர்ஜுனன் கண்டான். அருகே சென்று அதை நோக்கினான். நீளமான சப்பைக்கல் மேல் செந்நிறத்தில் ஒரு குத்துக்கல் நிறுத்தப்பட்டு விழிகள் வரையப்பட்டிருந்தன. அருகே பிறிதொரு விழிதிறந்த கல். “இது வருணன். துணைவி வருணையுடன்” என்றான் வாகுகன். வருணன் அணிந்திருந்த மாலையை அர்ஜுனன் குனிந்து நோக்கினான். “முதலைப் பல்லால் ஆன மாலை” என்றான் வாகுகன். “வருணை சங்குமாலை அணிந்திருக்கிறாள்.”

“இங்கு மழைபெய்வதுண்டா?” என்றான். “பெய்வதுண்டு, ஆனால் மழைக்காலம் என்று ஒன்றில்லை. மேலே பனிமலைகளில் என்ன நிகழ்கிறதென்பதே மழையை வருவிக்கிறது” என்றான் வாகுகன். “இவர்களே அதை நோக்கி சொல்வார்கள். மேலே வடமேற்குமூலையில் புகை எழுந்தால் மழை வரும் என்பார்கள்.” அர்ஜுனன் “வடமேற்கிலா?” என்றான். “ஆம், இவர்களின் மழை என்பது தென்கிழக்கில் இருந்து வந்து மலைமேல் சுழன்று இங்கே இறங்குவது” என்றான் வாகுகன்.

பிங்கலமுதியவர் ஒருவர் அருகே வந்து “வருணனின் அருள் உண்டு” என்றார். அர்ஜுனன் “எப்போது?” என்றான். “நேற்று முன்நாள் என்மேல் ஏறிவந்து அவன் தன் வருகையை சொல்லிவிட்டான். நாளையோ மறுநாளோ மழை விழும்” என்றார் அவர். “அகிபீனா இவர்களின் உணவுபோல. இவர்களின் உள்ளம் இயங்குவதே அக்களிமயக்கில்தான்” என்றான் வாகுகன்.

அர்ஜுனன் “மழைபெய்வதை உறுதியாகச் சொல்வீரா?” என்றான். “வருணன் நெறிகளுக்கு கட்டுப்பட்டவன். இங்கு வீசும் ஒவ்வொரு காற்றும் அவன் தாளத்தின்படியே” என்றார் பிங்கலமுதியவர். அர்ஜுனன் அவரை சிலகணங்கள் நோக்கியபின் “பொதிகளை தோலுறையால் நன்கு மூடுவோம்” என்றான். “இவர் அகிபீனா மயக்கில் பேசுகிறார். இப்போது மழையெழும் குறியே இல்லை” என்றான் வாகுகன். “இவ்வூரில் எவருமே நம்மை எச்சரிக்கவில்லை.”

“நாம் பொதிகளை மூடுவோம். நான் இவரை நம்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “தங்கள் ஆணை!” என்றான் வாகுகன். அவர்கள் மெழுகுபூசப்பட்ட தோலுறையை எடுத்து பொதிகளை நன்றாக மூடி மழைநீர் புகாதபடி செருகினர். அவ்வழியாக கையில் மதுக்குடுவையுடன் சென்ற கருணன் “மழைபெய்யப்போகிறதா என்ன? அகிபீனா அருந்திவிட்டீர்களா அதற்குள்?” என்றபடி சென்றார். “மழை வரும்” என்றார் பிங்கலமுதியவர்.

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகள் விமர்சனம்- 8

$
0
0

14523112_1115341355218551_1996447982702617932_n

அன்புள்ள ஜெ,

நீங்கள் சுட்டி கொடுத்திருக்கிற கதைகளை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு இருக்கிறேன். இதற்குமேல் கதை வேண்டாம் என்று சொல்கிற அளவிற்கு சூழலில் சிறுகதை எழுத்தாளர்கள் பெருகி விட்டார்கள் என்பது ஆச்சரியம்தான். எல்லோருக்கும் ஒரு கவனிப்பு தேவைப்படுவதும் உண்மைதான். அதற்கு நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிற வாய்ப்புக்கு நன்றி. கதைகளைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட பார்வையை பகிர்ந்துகொள்கிறேன்.
******
ராம்செந்திலின் மடத்துவீடு:

இளம்பெண் இருக்கும் வீட்டிற்குப் போகும் இளைஞர்கள் காமம் சார்ந்து பேசுகிறார்கள். அந்தப் பெண் அதை வெட்கப்பட்டு ரசிக்கிறாள். ஆனால் அவளுடைய அப்பாவிற்கு காமம் சார்ந்த ஆசை வருகிறபொழுது அவள் அதை எதிர்க்கிறாள். இங்கே அவளுடைய எதிர்ப்பிற்கு இரு காரணங்களே இருக்க முடியும். ஒன்று அவளது சுயம் அவளது அப்பாவின் செயல்பாடால் சுற்றத்தாரால் காயப்படுத்தப்படுகிறது அல்லது அவளுக்கு இருபத்தி ஐந்து வயதாகியும் கிடைக்காத காமம் பற்றி கவலைகொள்ளாத அப்பா மீது கோபம் வருகிறது. இதுதான் கதை பேசும் விஷயம். ஆனால் கதையை எப்படியாவது முடிக்கவேண்டும் என்பதால் இளைஞர்கள் மனந்திருந்துகிறாற்போல் முடிப்பதில் எனக்கு உவப்பில்லை.

சித்தாந்தனின் புத்தனின் கண்ணீர்:

போர் அதிகாரங்களுக்கிடையிலானது, மக்களுக்கு இடையிலானது அல்ல என சொல்லும் கதை.விரித்தெழுதும் சாத்தியக்கூறுகளைப் புறக்கணித்து சம்பவ விவரிப்பாக மட்டும் நின்றுவிடுகிறது. சோகம் ஏற்படுத்தும் செய்திக்குறிப்பாக போய்விட்டது.

காளி பிரசாத்தின் விடிவு:

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ஒரு பக்கம் குழப்ப ,மறுபக்கம் கதை சொல்லல்முறை தெளிவின்றிப் போகிறது. மிகச்சாதாரணமான கதை.

சுனீல் கிருஷ்ணனின் ருசி:

தன்னுடைய பணத்தை ஏமாற்றியவனை பிடிக்க ரயிலில்போகும் நாயகன் தனக்குப் பிடித்த உணவுப்பண்டத்தை ஒரு நிலையத்தில் வாங்கிப் பையில் வைக்கிறான். அதை உண்ணாலாமென்றால் எதிரே இரு குழந்தைகள். உண்மையில் நாயகன் அந்த உணவுப்பண்டம் முழுவதுமாய் தனக்கு வேண்டுமென நினைக்கிறான். அதை அவன் யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. அதற்காய் அவன் பல வழிகளை முயல்கிறான். முடிவில் நாயகன்,  பணம் பறித்தவனை தன்னிடத்தில் வைத்து, தன்னையே பணம் பறித்தவனாக உருவகம் செய்கிறான். நாயகனுக்கு உணவின் ருசி. பணம் பறித்தவனுக்கு பண ருசி. இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். கதையின் முடிவில் நாயகனில் ஏற்படும் மாற்றம் அதனாலென்றே நினைக்கிறேன். நல்ல கதை. நல்ல நடை.

மாதவன் இளங்கோவின் முடி:

சமகாலப் பிரச்சனையைப் பேசியிருக்கிறார். மென்பொருள் துறையிலிருக்கும் என் நண்பர்களும் முடிப் பிரச்சனையால் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் மன அழுத்தமாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். சுவாரசியமான கதை சொல்லல் முறை. பாஸ் ,நாயகனை தனது மனைவியின் பிம்பமாக நினைக்கிறார், மனைவியின் மீதான கோபத்தை, மனைவியின் பிரச்சனையை சரி செய்ய முடியாத வெறுப்பை, ஏறக்குறைய அதே குறையுள்ள நாயகன் மீது காட்டுகிறார் எனக் கொள்ளலாம். மற்றபடி எதுவும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

சிவா கிருஷ்ணமூர்த்தியின் What a wonderful world:

ஐந்தாம் வகுப்பில் கார்த்திக்கு பிடித்த சைக்கிள் ஏழாம் வகுப்பில் பிடிக்கவில்லை. உணவு உண்ணும்போது கார்த்தி அவன் அப்பாவை சத்தம்போடாமல் சாப்பிட சொல்கிறான். ஆக சிறுவயதிலேயே சூழலைப் பார்த்து எழும் மாற்றங்கள் விவரிக்கப்பட்டு அதன் விளைவுகளில் ஒன்றாக கார்த்தியின் ஓட்டம் சுட்டப்படுகிறது. எல்வினின் ஓட்டத்தையும், கறுப்பின மனிதர் பாடும் பாட்டின் வரிகளையும் ” அவங்க இன்னும் மாறலைல” எனும் செல்வேந்திரனின் வரியோடு ஒப்பிடும்போது கதை சொல்லும் விஷயம் புலப்படுகிறது. நில விவரணையும், நடையும் ,கதை சொல்லலும் சிறப்பு. இவரிடமிருந்து சிறந்த கதைகள் வெளிப்பட்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகத் தெளிவாகத் தெரிகிறது

கே.ஜே அசோக்குமாரின் பாம்புவேட்டை:

கதையின் ஆரம்பம் ஏற்படுத்தும் சுவாரசியம் இரண்டாவது பத்தியிலேயே போய்விடுகிறது. கதையாகாமல் வெறும் சம்பவ விவரிப்பாகப் போய்விட்டது. மனித இயல்பைப் பற்றி கதை பேசும் விஷயமும் மிகவும் பழையது, சாதாரணமானது.

மகேந்திரனின் யாதும் காமமாகி நின்றாய்:

காதல் பித்து பிடித்தவராய் இருப்பார் போலிருக்கிறது. கதையா, கவிதையா எனும் சந்தேகம் வந்துவிடுகிறது. வருணனைகளை இட்டு நிரப்பிய சம்பவ விவரிப்பு. தபுசங்கரின் கவிதைகள் போல் ஒரு கதை. ஆனால் கதையாகவே இல்லை. மிகச்சாதாரணமான கரு. காதல் கவிஞராகும் வாய்ப்புகள் ஏராளம்.

தூயனின் தில்லையம்மா:

இந்தக் கதையை தூயன் ஏன் அனுப்பினாரென்றே தெரியவில்லை. தூயனின் மிகவும் துவக்ககால கதை. மிக மிகச் சாதாரணமான கதை. இன்றைக்கு தூயன் இதைவிட எவ்வளவோ நன்றாக எழுதுகிறார். ஆனால் இந்தக்கதை குடும்பமலர் தரத்திலான கதை.

மோனிகா மாறனின் தச்சன்:

பிம்பங்களின் பின்னாலிருக்கும் வாழ்வை சொல்ல முயலுகிறது. நேசத்திற்கும், கடவுளின் அழைப்பிற்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் இயேசு. கதை சொல்லப்பட்ட சூழலைத் தவிர்த்துவிட்டால் கதைக்கரு சாதாரணமானது. பெரிய தாக்கம் எதுவுமில்லை.

தருணாதித்தனின் பருவமழை:

ஆரம்பத்தில் பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கிய கதை .ராமசந்தரின் ராஜினாமாவுக்குப் பிறகு கதை சொல்லும் முறையே மாறுகிறது. எந்த உரையாடலும் இன்றி வெகுவேகமாக சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. வித்தியாசமான கரு என்றாலும் இலக்கியத் தரத்தில் இல்லை. ஷங்கரின் படம் பார்ப்பதுபோல் இருக்கிறது.சுஜாதா ரக கதை.

தருணாதித்தனின் மனிதக்குணம்:

மிகச்சாதாரணமான கதை. தலைப்பை நியாயப்படுத்த இப்படியொரு முடிவா என்று கேள்வி எழுகிறது. காசியைப் பற்றி சொல்லியிருக்கும் இடங்களைத் தவிர கதையில் பெரிதாக ஒன்றுமில்லை.

அனோஜனின் அசங்கா:

ஒவ்வொரு கல்லாக வைத்து வீட்டைக் கட்டமைப்பதுபோல் ஒரு கதையிலும் சரியான வார்த்தைகளை இட்டு நிரப்பி கட்டமைக்க வேண்டும். கட்டுவது ஓட்டு வீடா, மாடி வீடா என்பதைவிட அது எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது முக்கியம். மோசமாக கட்டப்பட்டது மாடி வீடாகவே இருந்தாலும் அதைக் காணச் சகிக்காது. அனோஜனின் இந்தக் கதை அழகாக கட்டப்பட்ட மாடிவீடு. ஒருவரியிலிருந்து இன்னொரு வரிக்கு கதையை எடுத்துச்செல்வதில் அனோஜன் பெருவெற்றிபெறுகிறார். எல்லாமே ஏற்கனவே பேசப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் பேசியதையே பேசவேண்டி இருந்தாலும் அதை எப்படிச் சொல்லவேண்டும் என மிகத் தெளிவாக அனோஜனுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் நான் முன்னர் படித்த பச்சை நரம்பு கதையும், இந்தக் கதையும் காமம்தான் பேசுகிறது. காமம் தவிர்த்த மற்ற வகைபாடுகளில் அனோஜனின் கதைகளைப் படிக்க ஆர்வமாயிருக்கிறேன்.

சதீஷ் ராஜமோகனின் 10.5 நொடிகள்:

எந்த லாஜிக்கையும் யோசிக்காமல் எழுதப்பட்ட வணிகக்கதை. அறிவியல் கட்டுரையாக எழுதியிருந்திருக்கலாம். எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாத மிகச் சாதாரணமான கதை.

கலைச்செல்வியின் மஞ்சுக்குட்டி:

முறையற்ற காமமாக சமூகத்தால் வரையறுக்கப்பட்டவை பற்றிய கதை. இதைப்போல் எத்தனை கதை படிப்பது? கடைசியில் வழக்கம்போல ஒரு மனந்திருந்தல் அல்லது தியாகம். ஏற்கனவே பலமுறை எழுதப்பட்ட கதை.

***************
சிறுகதை எழுதியிருக்கும் அத்தனைபேருமே பாராட்டுக்குரியவர்கள்தான். அவர்கள் எழுதுவதற்கான முயற்சிகளை செய்திருக்கிற வகையில். நானும் ஒரு கதை எழுதிவிட்டு எழுதும்கலை கை வந்துவிட்டதாகவே நினைத்துக்கொள்வேன்.அதன்மேல் எழும் விமர்சனங்களுக்கும் கடும்கோபம் வரும். ஆனால் பிறகு அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் விமர்சனத்தில் குறைந்தபட்ச உண்மையிருந்தாலும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. அதிலிருந்து நல்ல கதை சொல்லல் நோக்கி நாம் நகர்வோம். நல்ல விமர்சகன் எப்போதும் நல்ல கலையை எதிர்பார்ப்பதாலே விமர்சிக்கிறான் என்ற புரிதலே தேவையானது என நினைக்கிறேன். என் படைப்பின் மேலான உண்மையான விமர்சனங்களுக்கு நான் அதைத்தான் என் மனதிடம் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்,
அகில் குமார்.

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மேலும் சில கதைகளைப் பற்றி -

What a wonderful world

இன்றைய தினத்தில் இங்கிலாந்து பல இன மக்கள் சேர்ந்து வாழும் நாடாகத் திகழ்கிறது. இனப்பிரச்சினையை அருகில் அரிந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்; இன்னொருவர், இந்தியத் தமிழர். இடம்பெயர்ந்து, சிறுபான்மையினராக அயல் நாட்டில் வாழ்பவர்கள். பரந்த நோக்குடையவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கருப்பின மக்களைத் தாழ்மை படுத்தி (நக்கலாக இருந்தாலும்) பேசுகிறார்கள். It is so easy to do unto others what you do not want to be done unto you. இதுதான் கதைக் கூற வருவது என்றால் கதையின் தலைப்பு ஏளனம் செய்வது போல அமையும்.

ஆனால் கதையில் பேசப்படும் கால்வாய் போலக் கதை எங்கெங்கோ சுழல்கிறது. அவர்கள் பேசுவதிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் உள்ள முரண்பாடு மிக மங்கலாக உள்ளது – இன்னும் தெளிவாக்க வேண்டும். முதல் பாதியில் தேவையற்ற பல விவரணைகள். கதைக்கருவிற்கு உதவாததை நீக்கலாம் – உ. பையனைப் பற்றிய பகுதிகள். உரையாடல்களில் ஆழம் தேவை.

யாதும் காமமாகி நின்றாய்

இதைக் கதையென்று எப்படிச் சொல்ல. உணர்வுகளின் பதிவாகத்தான் இருக்கிறது. வர்ணனைகளைத் துப்பாக்கியிலிட்டு தாக்கியது போல உணர்கிறேன். குறைந்த பட்சம் எழுத்துப்பிழை திருத்தமாவது செய்யலாம். http://vaani.neechalkaran.com/.

இது “comment” தான், விமர்சனம் அல்ல. மன்னிக்கவும். கோபம் வருகிறது. எழுத்து இயல்பாக வருகையில் இன்னும் முயற்சிக்கலாம்.

தில்லையம்மா

நீங்கள் ஒருமுறை புனைவுகளின் உணர்வெழுச்சிகளை மெல்லுணர்வு, மிகைநாடகம், உணர்வெழுச்சி என்று மூன்று வகைகளாகப் பிரித்து எழுதியிருந்தீர்கள். தில்லையம்மா முதல் வகையைச் சேர்ந்த கதை. ஒற்றைப்படையான மனிதர்கள். கதையில் shades of grey தேவைப்படுகிறது.

இலக்கியம் இதே பிரச்சினையை வேறு கோணத்திலிருந்து, யதார்த்தத்துடன் அணுகும். உதாரணத்துக்கு இப்படி அணுகியிருக்கலாம் – பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, சுதந்திரத்தின் மீது மிகுந்த முக்கியத்துவத்தைக் குவித்திருக்கும் புதிய தலைமுறையினர், இத்தகைய எதிர்மறை நிலைப்பாடுகளால் சேர்ந்து வாழ்வதில் ஏற்படும் சிக்கல்.

ப்ரியம்வதா

 

=================================

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அப்பா, இயற்கைவேளாண்மை -கடிதங்கள்

$
0
0

wpid-wp-1475573515092.jpeg

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆண்மையின் தனிமை கட்டுரையில் வினயன் அவர்கள் இந்திய இளைஞர்களின் உளச்சிக்கல் தந்தையைப் பெற்றுக்கொள்ளுதல் என்று கூறியதை எழுதியிருந்தீர்கள். “அங்கே அப்பா காத்திருக்கிறார்” பதிவில் “வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது” என்ற வாக்கியத்தை படித்ததையும் அது எவ்வளவு ஆழமான உண்மை என்பதையும் கூறியிருந்தீர்கள். இந்த இரு கட்டுரைகளை படிக்கும்போது வெறும் தகவலாக மூளையில் ஏற்றி கடந்துவிட்டேன்.

திடீரென்று ஒரு நாள் நான் நின்று கொண்டிருந்த பாவனை என் அப்பாவை போல் இருப்பதை கவனித்தேன். ஆச்சர்யம் அன்றிலிருந்து சிற்சில விஷயங்களில் நான் ஏற்கனவே என் அப்பா ஆகியிருப்பதை உணர்ந்தேன். இன்னும் காலம் செல்ல செல்ல நான் மேலும் மேலும் அப்பா ஆகலாம். இது உண்மையிலேயே ஒரு திறப்பு. அந்த சிற்சில நொடிகளில் நான் பூமியில் வாழும் ஒரு தனித்துவமான உயிர் அல்ல, நான் ஒரு அறுபடாத பிரதி, ஒரு தொடர்ச்சி அவ்வளவே என்பதை உணர்ந்த போது அதிர்ச்சி அடைந்தேன்.

இப்பொழுது என் ஐயமே சாதியையும் நான் பெற்றுக்கொள்வேனா என்பது தான். இந்த பெற்றுக்கொள்ளுதல் நாளுக்கு நாள் விரிவடைவது போல் தோன்றுகிறது. இப்போது இல்லையென்றாலும் இன்னும் ஐந்து பத்து வருடங்களில் என் அப்பா சாதியைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தாரோ அதே இடத்திற்கு சென்று சேர்ந்திருப்பேனா? விஜயனின் கதை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட மகன் மூதாதையரோடு நலமாக இரு என்பதாக தன் துயரத்தை கடந்து போவதையும் எழுதியிருந்தீர்கள்.  நம் முன்னோர்களின் தொடர்ச்சியாக நம்மை எண்ணிக்கொள்வதும் ஒரு வகையில் நாம் நம் தந்தையை பெற்றுக்கொள்வதும் நம் குழந்தைகளிடம் நம்மை கண்டடைவதும் தானே. நம் முன்னோர் அல்லது நம் வரலாறு என்றால் அது சாதி தானே. இது உண்மையெனில் சாதி அழிவதென்பது ஒரு வேளை பொது தளத்தில் நடந்தாலும் மனதினில் எப்போதும் இருக்குமோ?

நன்றியுடன்,

முருகன்.

*

அன்புள்ள முருகன்

பரிணாமத்தின் போக்கிலேயே உள்ள விஷயம் ஒன்றுண்டு, நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை. தேவையானவற்றை மட்டுமே மேலே கொண்டுசெல்கிறோம்

ஆகவே விமர்சனமில்லாமல் கடந்தகாலத்தை ‘அப்படியே’ ஏற்றுக்கொள்வது எவராலும் இயல்வதில்லை.

நான் பாகுலேயன்பிள்ளையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறேன். என் முகமே அவராக ஆகிக்கொண்டிருக்கிறது

ஆனால் நான் அவரில்லை. அவருடைய திருந்திய பதிப்புதான்

ஜெ

***

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தாருக்கும் நலம் விழைக பார்த்திக்கின்றேன்.

முன்னோர்கள், பெற்றோர்கள், குடும்பத்தார்கள், உயர்வான எண்ணமுடையவர்களின் ஆசிர்வாதங்கள் என்றும் அவசியம் அவை நம்மை காக்கும் வல்லமை கொண்டவை என்பது என் எண்ணம்.

இயற்கை, வேளான்மை கொள்கை விதை வித்திட்ட எழுத்துக்கள் திரு.ஆர்.எஸ். நாராயணன் (சொல்வனம் கட்டுரைகள்) அவர்களுடையது இந்த எண்ணங்களுக்கு உங்கள் எழுத்துக்கள் வழியாகவே நீர் ஊற்றி இன்று வேர் பிடித்துள்ளது. இங்கு தெய்வத்திரு நம்மாழ்வார் அவர்களையும் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த வந்த வருடங்களில் மன வல்லமை பெற்று, ஆரோக்கிய உணவு மற்றும் இயற்கையுடன் இணைந்து வாழ்க்கை முறை என்ற பிரதான நோக்கங்களை அடுத்த தலைமுறைக்கு சாத்தியப்படுத்திவிட வேண்டும் என்ற உறுதியோடு ஆரம்பத் திட்டங்களை வகுத்துவிட்டோம். என் தந்தையின் அனைத்து ஆதரவுடன் அவரே முன்னின்று செயல்படுகிறார்.

திரு.ஆர்.எஸ்.நாராயணன் அவர்களை சந்தித்து அவர்களிடம் தோட்ட மேன்பாடு அறிவுரைகள் பெற்று, அடுத்தாக வங்கி கடன் பெற அலைச்சல் ஆரம்பம் ஆயிற்று. பெரியவர்களின் ஆசிகள் நம்மை வழிநடத்தட்டும் என்ற எண்ணத்தில் முதல் வேலையாக தரிசான நிலம் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பித்துவிட்டோம். ஆறடுக்கு பணிகள்,

  1. சுத்தம் செய்தல்
  2. நிலத்தை மட்டப்படுத்துதல்3
  3. வேளி இடுதல்
  4. ஆழ்துளை கிணறு அமைத்தல்
  5. சிறுகுடில், மின்சாரம் (இலவசம் சாத்தியமில்லை, வேளாண் வகை சாத்தியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்)
  6. ஆரம்ப காடு அமைத்தல் (திரு.ஆர்.எஸ்.நாராயணன் அவர்களின் அறிவுரை) மற்றும் வரப்புகள் அமைத்து அதில் தென்னை (போன்ற) மரம் நடுதல்

வருகையில் அனைத்தும் சேர்ந்தே வரும் என்பது போல இதே நேரத்தில்,

பிரபஞ்ச சக்தி, மரபான இல்லம், புவிசார்ந்த இல்லம் என்ற விதை வித்திட்ட உங்கள் எழுத்துக்கள், தொடர்ந்த வாசிப்பகள் வாயிலாகவே மணவல்லமை பெற்று, இந்த மாத இறுதில் முதல் அடி சாத்தியக்கூறுகள் கலத்துரையாடல் திட்டம். ஆம், திரு. பிஜு பாஸ்கரன் அவர்களோடு உரையாடி நேரில் சந்திப்பற்கு முடிவாகியுள்ளது.

இவை இரண்டும் பிரஞ்ச அருளாள் நல்ல விதமாக முடியவேண்டும். தங்களின் ஆசிர்வாதங்கள் வேண்டுகிறேன்.

தங்களின் ஆசிர்வாதங்கள் வேண்டுகிறேன்.

நாராயணன் மெய்யப்பன்

***

அன்புள்ள நாராயணன் மெய்யப்பன்,

சென்னையில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் கனவுகள் நனவாகட்டும்

இன்றைய நிலையில் இயற்கைவேளாண்மை ஒரு தொழில் அல்ல. ஒருவகை இலட்சியவாதச் செயல்பாடுதான். அந்நினைவும் உடனிருக்கட்டும்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மொழியாக்கச் சிக்கல்களும் தமிழும்

$
0
0

A-R-Venkatachalapathy

 

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய்யப்பட்டு செல்லும் படைப்புகள் ஏன் பெரும்பாலும் மதிக்கப்படுவதில்லை என்று பலமுறை எழுதியிருக்கிறேன். நமக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்பதே முதன்மையான காரணம். பலமுறை நான் சொன்ன உதாரணம்தான், ஹெமிங்வேயின் நாவலை மு.வரதராசனார் மொழியாக்கம் செய்தால் நம்மால் அதை வாசிக்கமுடியுமா? இலக்கணப்பிழை இருக்காதுதான். கூடவே நவீன புனைவுமொழியின் அழகும் இருக்காது. சிமெண்டில் செய்த ஆப்பிள் மாதிரி இருக்கும். நம் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும்போது நிகழ்வதும் இதுவே.

 

சமீபத்தில் சிங்கப்பூரில் ஓர் ஆங்கிலப்பதிப்பாளரை என்னைச் சந்திக்க கவிஞர் கனகலதா கூட்டிவந்தார். சிங்கப்பூர், மலேசிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட அவர் திட்டமிட்டிருந்தார். அவரிடம் நான் இதைத்தான் விரிவாக விவாதித்தேன். எந்த ஒரு மொழிக்கும் பொதுவாக நவீனப் புனைவுமொழி ஒன்று உள்ளது. பத்தாண்டுகளுக்குள் தெளிவாக அடையாளம் காணும்படியாக மாற்றமடைந்துவிடுவது அது. அந்த மாற்றத்தை உருவாக்குபவை புனைவெழுத்துக்கள்.  அந்தப்புனைவுமொழியை தொடர்ந்த புனைவுவாசிப்பு வழியாக நன்கறிந்தவர்களே புனைவுகளை அம்மொழிக்கு மொழியாக்கம் செய்துகொண்டுசெல்ல முடியும். மொழியை இலக்கணசுத்தமாகக் கற்ற பேராசிரியர்களுக்கு அந்த தனிமொழி தெரிய வாய்ப்பில்லை.

 

இன்னொன்று, எல்லா மொழிகளுமே  தங்களுக்குரிய நுட்பமான ஒலிநயமும் சொல்நயமும் கொண்டவை. அது இலக்கணம் வழியாக உருவாவதில்லை. அதை அகராதிகள், கலைக்களஞ்சியங்களில் தேடமுடியாது. அது மக்கள் அம்மொழியை தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதன் வழியாக உருவாவது. மொழி அனைத்து வாழ்க்கைத்தளங்களிலும் பயன்படுத்தப்படும்போது [ யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சொற்களில் use and abuse செய்யப்படும்போது]  உருவாகி வருவது. அதைப் பயில அம்மொழிச் சூழலில் வாழ்வது அவசியம். மக்களின் பேச்சுமொழியை தொட்டு எடுத்துச் சேர்த்துக்கொள்ளும் மொழிநுண்ணுணர்வு அவசியம்

 

ஆகவே சிங்கப்பூர், மலேசியப்படைப்புகளை தமிழோ மலாய்மொழியோ தெரிந்த ஒருவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தபின் ஆங்கிலச்சூழலில் வாழும், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட, ஆங்கிலப்புனைவிலக்கியம் எழுதும்திறன் கொண்ட இன்னொருவரைக்கொண்டு முழுமையாக மீண்டும் எழுதவைக்கவேண்டும் என நான் அந்தச் சிங்கப்பூர் பிரசுரகர்த்தரிடம் சொன்னேன். அப்போதுதான் அது ஆங்கிலம் மட்டும் அறிந்த வாசகனால் வாசிக்கும்படியாக இருக்கும்

 

நடைமுறையில் அது பெரிய சவாலும் அல்ல. லண்டனிலோ நியூயார்க்கிலோ எழுத்தாளர் ஆக விரும்பி முயன்றுகொண்டிருக்கும் இளைஞர்கள் பலநூறுபேர் உண்டு. அவர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியம் அளித்தாலே தரமான மறுமொழியாக்கத்தைச் செய்துவிடமுடியும். அவர்களுக்கு பயிற்சியாகவும், முயற்சிக்காலகட்டத்தில் வருமானவழியாகவும் அது அமையும்.

 

தமிழ் தெரிந்த, கூடவே ஆங்கில நவீனப்புனைவுமொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளர் நமக்கு இல்லை என்னும் சிக்கலை இப்படிக் கடக்கமுடியும் என்றேன். பதிப்பாளர் மிகுந்த உற்சாகத்துடன் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். இந்தியப்பதிப்பாளர்களும் இதைச் செய்யலாம். ஆனால் இங்குள்ள பதிப்பாளர்கள் பல்வேறு கல்விநிலையங்களை உத்தேசித்தே மொழியாக்கங்களைச் செய்கிறார்கள். அவை அனேகமாக வாசிக்கப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை

 

ஆ.இரா. வேங்கடாச்சலபதி செய்த ஜே.ஜே. சிலகுறிப்புகளின் ஆங்கில மொழியாக்கம் பற்றி ஆங்கிலக் கவிஞர் ஜெர்ரி பிண்டோ எழுதிய விமர்சனக் குறிப்பை ஒத்திசைவு ராமசாமி சுட்டி கொடுத்திருந்ததன் வழியாக வாசித்தேன். எனக்கே கூச்சமாகத்தான் இருந்தது, ஆங்கிலமொழிநுட்பங்கள் அவ்வளவாக எனக்குப் பிடிகிடைப்பதில்லை என்றாலும். சுட்டிக்காட்டப்பட்டிருந்த வரிகளை அபத்தமான மொழியாக்கம் என்றே சொல்லமுடியும். பாவம் சுந்தர ராமசாமி, இந்த மொழியாக்கத்தைப்பற்றி அவர் புளகாங்கிதத்துடன் பேசியதை நினைவுகூர்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் எத்தனைபெரிய ஏக்கத்துடன் எவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறார்கள்!

 

ஆ.இரா.வேங்கடாச்சலபதியின் பிரச்சினை முதலில் அவருக்கு புனைவுமொழி  – எந்தமொழியிலும் – பழக்கமில்லை என்பதே. ஆகவே பேராசிரியர்களுக்குரிய இயந்திரத்தனமான மொழியாக்கம் அவரிடமிருந்து வந்திருக்கிறது. அதைவிட முக்கியமாகச் சுட்டவேண்டியது, அவரது அந்த அசட்டுத்தனமான சொற்றொடரமைப்புகளும் சொல்லாட்சிகளும் தமிழின் நடையமைதியை அப்படியே சொல்லுக்குச் சொல் ஆங்கிலமாக ஆக்கியதன் விளைவாக வருபவை. ஜே.ஜே.சில குறிப்புகள் போன்ற நடைவிளையாட்டுக்கள் கொண்ட நாவலை மொழியாக்கம் செய்யும்போதுதான் இந்த அபத்தம் மேலும் அதிகரிக்கிறது.

 

என்னைக்கேட்டால் தமிழ்ப்படைப்புக்கள் மொழியாக்கம் செய்யப்படாமலேயே இருப்பது மேல். இத்தகைய ஏளனப்பேச்சுக்களுக்கு ஆளாவது இந்தியச்சூழலில் தமிழிலக்கியம் மீதே அவநம்பிக்கையை உருவாக்கிவிடக்கூடும்

 

ஒத்திசைவு ராமசாமியின் குறிப்பு

 

இந்து நாளிதழில்  ஜெர்ரி பிண்டோவின் விமர்சனம்\

ஒத்திசைவு ராமசாமி ஜே ஜே சிலகுறிப்புகள் மொழியாக்கம் பற்றி

 

===========================================================

 

மொழியாக்கம் பற்றிய பழைய கட்டுரைகள்

 

மொழியாக்கம் பற்றி…

முள்வில்லில் பனித்துளி அம்புகள் -நாகார்ச்சுனனின் மொழியாக்கம் பற்றி

ஒளியை நிழல்பெயர்த்தல்

 

மொழியாக்கம் கடிதங்கள்

மொழியாக்கம் கடிதங்கள் 2

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29

$
0
0

[ 44 ]

இருள் பரவத்தொடங்கியதும் அச்சிற்றூரில் இருந்த அனைத்துக் குடில்களும் உருவழிந்து கரைந்து மறைந்தன. புழுதிக்காற்று அவற்றின் புற்கூரைகளை அலைத்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெயில் எழுந்த சற்றுநேரத்திலேயே சூரியன் நெடுமலைகளுக்கு அப்பால் இறங்கி மறைந்து விட்டிருந்தான். கதிர் சரியத்தொடங்கியதுமே மலையுச்சிகளில் இருந்து குளிர் ஓசையின்றி இறங்கி ஊரை மூடிச் சூழ்ந்தது. உடல் நடுங்கத் தொடங்கியதும் அர்ஜுனன் தோலாடைகளை இறுக்கி அணிந்து தலை உறையை போர்த்திக்கொண்டான்.

இருளெழத் தொடங்கியதும் ஓசைகள் மேலும் ஆழம் கொண்டன. அவ்வூரார் இருளிலேயே நோக்குதுலங்கப் பழகிவிட்டிருந்தனர். இளையோர் ஐவர் விறகுகளைக் கொண்டு வந்து கூம்பாகக் குவித்து தீ எழுப்பினர். அதைச் சூழ்ந்து உடல்குறுக்கி அமர்ந்து தழலில் காட்டிச்சுட்ட மலைக்கிழங்குகளையும் பொறிவைத்து பிடிக்கப்பட்ட சிற்றுயிர்களையும் பறவைகளையும் ஏவலரும் பிறரும் உணடனர்.

அனைத்துச் சிறு விலங்குகளும் அவர்களுக்கு உணவாக இருந்தன. மலைகளில் எலிகளும் கீரிகளும் உடும்புகளுமே பெரும்பாலும் கிடைத்தன. சுடுவதன்றி வேறு சமையல்முறைகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. “முயல்கள் இல்லையா?” என்று அர்ஜுனன் ஒருவனிடம் கேட்டான். “இங்கில்லை. நெடுந்தூரம் சென்றால் மலைச்சரிவு இன்னும் சற்று பசுமை கொண்டிருக்கும். அங்கு முயல்கள் உண்டு. ஆனால் அங்கு செல்ல பன்னிரண்டு நாட்களாகும்” என்றான் ஒருவன்.

இருள் அடரும் தோறும் குளிரும் கூடிவந்தது. அனைவரும் உடல்களை தோலாடைக்குள் ஒடுக்கிக் கொண்டு நெருப்பை மேலும் மேலும் அணுகி அமர்ந்தனர். குடில்களுக்குள் எவற்றிலும் விளக்குகள் இல்லை. அங்கு இல்லங்களில் விளக்கேற்றும் வழக்கமே இல்லை. குடில்களுக்குள் மதுவும் அகிபீனாவும் மயக்கேற்ற களிகொண்ட வணிகர் குழறிப்பேசியும் வெடித்துச்சிரித்தும் ஓசையிட்டனர். அவர்களுடன் சிரித்தும் கொஞ்சியும் குலவினர் பெண்டிர்.

அவர்களின் ஆண்களெல்லாம் முற்றத்தில்தான் இருந்தனர். துள்ளும் ஓசையில் விரைந்த சொற்களுடன் பேசிக்கொண்டனர். அவர்கள் வணிகர்களின் வரவால் உளக்கிளர்ச்சி அடைந்திருப்பது தெரிந்தது. அகிபீனாக் களியை சிறு உருளைகளாக வாயில் அதக்கிக் கொண்டிருந்தனர். மெல்ல மயக்குகொண்டு நாக்குழறினர். அனல் அவிந்ததும் அதைச் சூழ்ந்து படுத்து ஒவ்வொருவராக துயிலத்தொடங்கினர்.

குறட்டை ஓசைகளைக் கேட்டபடி அர்ஜுனன் முழங்காலில் கைகட்டி விண்மீனை நோக்கியபடி அமர்ந்திருந்தான். வான் முழுக்க அதிர்வொளிப்புள்ளிகள் செறிந்து பரவியிருந்தன. சற்றும் முகில்களே இல்லை என்று அதற்குப்பொருள். ஆனால் மழை உண்டு என்று பிங்கல முதியவர் அழுத்தி பலமுறை கூறியிருந்தார். அவர்களின் குலத்து இளையோர்கூட அதை நம்பவில்லை. வணிகர்கள் அவர் சொன்னதை தட்டவில்லை.

மறுநாள் காலை அவரிடம் ஏன் மழை வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வார் என்று எண்ணிக்கொண்டான். தெய்வங்கள் பொய்ப்பதில்லை. நாளை என்று தெய்வங்கள் சொன்னது அதற்கு அடுத்த நாளைத்தான் என்று சொல்லக்கூடும். அவரது நம்பிக்கை மாறாது. மானுடத்தை சற்றும் கருதாது பேருருக்கொண்டு சூழ்ந்த அமைதிமலைகளை, நெடுந்தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் விசைகொண்டகாற்றை, அனல் சுமந்த புழுதிஅலைகளை நம்பி வாழும் இச்சிறு வாழ்க்கையில் தெய்வங்களே அனைத்தையும் முடிவு செய்கின்றன. அவற்றை நம்பாமல் வேறுவழியில்லை.

அறிய முடியாதவற்றை நம்பி வாழ்வதில் அழகு ஒன்று உள்ளது என்று அவன் நினைத்துக் கொண்டான். அறிதலுக்கான பெருந்தவிப்பிலிருந்து அது விடுதலை. அறிய விழைபவர்கள் வாழுமிடத்திலிருந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். சித்தம் அமைந்த இடத்திலிருந்து மீண்டும் மீண்டும் மேலும் மேலும் என நகர்ந்துகொண்டே இருக்கிறது. நம்பிக்கையே நிலைக்க வைக்கிறது. அமையச் செய்கிறது. பிறிதிலாது துய்க்க வைக்கிறது. எஞ்சாது கடந்து போகச் சொல்கிறது.

விண்மீன்களை அவன் விழியிமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான். அவற்றின் நடுக்கம் கூடி வருவது போலத் தோன்றியது. கண்காணா சரடொன்றில் தொற்றியபடி அவை இறங்கி இறங்கி மிக அருகே வருவது போலிருந்தது. பின்பு அவன் தன் கனவுக்குள் விண்மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான்.

விண்மீன்கள் அவனைச் சுற்றி அதிர்ந்து கொண்டிருந்தன. கை நீட்டினால் ஒவ்வொரு விண்மீனையாக பற்றி எடுத்து விழிமுன் கொண்டு வந்து உறுத்து நோக்கலாம் என்பது போல இரு விண்மீன்கள் அதிர்வதை அவன் கேட்டான். அதிர்வதை எப்படி கேட்க முடியும் என்று அவன் சித்தம் வியந்தபோது அது தவளைக் குரல் என்று தெளிந்தான். தவளைக்குரலா? கங்கைக்கரையிலா இருக்கிறோம்? புரவியை எங்கு கட்டினோம்?

கங்கைப்பெருக்கிலிருந்து வந்த குளிர் காற்று அவன் உடலை நடுங்க வைத்தது. ஆடையை எடுக்க கைநீட்டி அவ்வசைவிலேயே விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தபோது தொலைவிலிருந்து வந்து அறைந்து இரு குடில்களுக்கு இடையே பீரிட்டு வந்த காற்றில் அனல் உயிர்கொண்டு சீறிக்கொண்டிருந்தது. செம்பொறிகள் எழுந்து மறுதிசை நோக்கி பெருகிச் சென்றன. குடில்களின் கூரைகள் எழுந்து படபடத்தன. தவளைக்குரல்களை அவன் தெளிவாகக் கேட்டான். நெடுந்தொலைவிலென ஒரு முறையும் மிக அருகிலென மறுமுறையும். ஒற்றை ஓசையென ஒலித்து பின் தனித்தனி குரல்களாக மாறிச்சூழ்ந்தன.

அண்ணாந்து வானைப் பார்த்தபோது ஒரு விண்மீன்கூட இல்லையென்பதை உணர்ந்தான். படுத்திருந்தவர்களை எழுப்ப வேண்டுமென்று தோன்றியது. மறுகணம் தவிர்த்து புன்னகையுடன் கைகட்டியபடி நோக்கி நின்றான். ஒரு மின்னலில் அனைவரும் படுத்திருந்த காட்சி துடிதுடித்து அணைந்தது. இருண்ட வானில் விழியொளி அதிர்ந்தது. மறுகணம் தெற்குச்சரிவு இடியோசை எழுப்பியது. மீண்டும் ஒரு மின்னல் அதிர்ந்து வான் நிறைத்திருந்த பெருமுகில் மலைகளை நடுநடுங்க காட்டிச் சென்றது.

மின்னல்களின் கொடிபடர்வு. இடியோசை உருண்டு செல்ல மின்கதிரால் விரிசல் விட்டது வானம். இடி செவி ரீங்கரிக்க மீண்டும் வலுத்து ஒலித்தது. அச்சிற்றூரின் அனைத்து கூழாங்கற்களும் ஒளிபெற அனைத்து புற்கூரை பிசிறுகளும் பொன்னொளி கொண்டெரிய மின்காட்சி தெரிந்து மறைந்தது. மீண்டும் ஒரு இடியில் துயின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பாய்ந்து எழுந்தனர். ஒருவன் “இடி!” என்றான். வாகுகன் புரண்டு படுத்து. “முரசு” என்றான்.

மின்னல் அனைத்துப் பகுதிகளையும் ஒளியால் நிரப்பி விழியை முற்றிலும் பறித்துச் சென்றது. செம்மை குருதியென குமிழிகளென இமைக்குள் அதிர செவிகள் முற்றிலும் அடைந்து தலைக்குள் உலோக ரீங்காரம் நிறையும்படி பேரிடி எழுந்தது. வாகுகன் பாய்ந்தெழுந்து “என்ன? எங்கு?” என்றான். “மழை வருகிறது” என்றான் அர்ஜுனன். “இங்கா? மழையா?” என்று அவன் கேட்டான். மின்னல்கள் அதிர்ந்து அதிர்ந்து முகில் கணங்களைக் காட்டியதைப்பார்த்துவிட்டு எழுந்து நின்று கைவிரித்துச் சுழன்று “முற்றிலும் வான் நிறைந்துள்ளது, வீரரே!” என்றான்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “இத்தனை விரைவாகவா முகில் வந்து நிறையமுடியும்?” என்றான் வாகுகன். “அந்தப் பிங்கல முதியவர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். இங்கு மழை வான் வழியாக தவழ்ந்து வருவதில்லை.. மலைகளினூடாக வந்து உச்சிப்பிளவுகள் வழியாக பிதுங்கி ஒழுகுகிறது” என்றான் அர்ஜுனன்.

இடியோசையும் மின்னல்களும் எழுந்து சூழ ஆடைபறக்க குழல் சிதறி அலைபாய நின்றிருந்தபோது நெடுந்தொலைவிலிருந்து வெந்த புழுதியின் மணத்துடன் காற்று வந்து சுழன்று சென்றது. அதில் சருகுத் திவலைகளும் புழுதியும் இருந்தன. “ஈரப்புழுதி” என்றான் வாகுகன். “அங்கே மழை இறங்கிவிட்டது” என்றான் பிறிதொருவன். “மழை! மழை!” என கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர் பிறர். அகிபீனாவின் மயக்கிலிருந்து எழுந்து “யார்?” என்றும் “என்ன?” என்றும் சிலர் கூவினர்.

குடில்களின் கதவுகளைத் திறந்தபடி அச்சிற்றூரின் இளையோர் வெளியே ஓடி வந்தனர். குழந்தைகள் கூச்சலிட்டபடி வெளியே வந்து “மழை மழை மழை” என குதிக்கத் தொடங்கின. தொடர்ந்து ஆடைகளை அள்ளி அணிந்தபடி பெண்களும் வணிகர்களும் வெளியே வந்தனர். அவர்களின் ஆடைகளை இழுத்து உப்பி அதிரச்செய்தது காற்று. குழல்களைச் சுழற்றி பறக்க வைத்தது. முகில்கள் சுடர் கொண்டெரிந்தன. இடியோசையில் முகில்கள் அதிர்வதுபோல விழிமயக்கெழுந்தது

வடமேற்கு மலைகளுக்கு அப்பால் இருந்து எழுந்து பல்லாயிரம் முகில் படிக்கட்டுகளில் உருண்டுருண்டு சென்று கீழ்த்திசையில் உறுமி மறைந்தது பேரிடித்தொடர் ஒன்று. நெடுந்தொலைவில் புரவிக்குளம்படிகள் பெருகி எழுவது போன்ற ஓசையை அர்ஜுனன் கேட்டான். ’புரவிகளா!’ என்று வியந்த மறுகணம் அது மழையெனத் தெளிந்து அவ்வுணர்வால் உடல் சிலிர்க்கப்பெற்றான். மறுகணம் பேரோசையுடன் நிலம் அறைந்து அணுகி ஊரை முழுக்க மூடி கடந்து சென்றது மழை. ஓரிரு கணங்களிலேயே அங்கிருந்த அனைவரும் முழுமையாக நனைந்துவிட்டனர்.

இளைஞன் ஒருவன் இரு கைகளையும் விரித்து தொண்டை அதிரும் கூச்சலுடன் ஓடிச் சுழன்றான். உடனே அங்கிருந்த இளையோரும் பெண்களும் கைகளை விரித்தபடி கூவி ஆர்ப்பரித்து மழையில் சுழன்றாடினர். ஒருவரையொருவர் தழுவியும் சிறுமைந்தரை தூக்கி எறிந்து பற்றியும் களியாடினர். கரைந்து வழிந்தோடிய மென்புழுதியின் சேற்றில் விழுந்து புரண்டனர். சேற்றை அள்ளி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். மழை அவர்களின் களியாட்டை தான் வாங்கிக் கொண்டது போல காற்றுடன் கலந்து சுழன்று சுழன்று அடித்தது. வெறி ஒவ்வொரு கணமும் ஏற அவர்கள் கூத்தாடினர்.

மெல்ல ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்குள் எதையோ முனகலாகப் பாடியபடி கைகளை விரித்து தள்ளாடும் கால்களுடன் மெல்ல சுழன்றனர். நிலை தடுமாறி நீரில் விழுந்து சேற்றில் புரண்டு மழையை முகத்திலும் மார்பிலும் வாங்கியபடி துயர் கொண்டவர்கள் போல படுத்தனர். சிலர் அழுதனர். சிலர் தெய்வங்களை நோக்கி மன்றாடினர். சிலர் தங்கள் உள்ளமைந்திருந்த சொற்கள் சிலவற்றை வழிபாடு போல சொல்லிக்கொண்டிருந்தனர்.

KIRATHAM_EPI_29

இரு கைகளையும் மார்பில் கட்டி, மழையின் அம்புப்பெருக்கை உடல் முழுக்க வாங்கியபடி அர்ஜுனன் அவர்களை நோக்கி நின்றான். கூத்தாடியவர்களுடன் வணிகர்களும் ஏவலர்களும் கலந்துவிட்டிருந்தனர். முதியவர்கள் குழந்தைகள் என ஒருவர்கூட மீதமில்லை. மெல்ல ஒவ்வொருவராக விழுந்து விழுந்து அவன் மட்டும் எஞ்சினான். தன்னைச் சூழ்ந்து உயிரற்றவர்கள் போல கிடந்தவர்களை அவன் நோக்கிக் கொண்டு நின்றான். குளிரில் அவன் இடக்கால் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நெஞ்சில் ஒற்றைச் சொல் ஒன்று இரு பெரும்பாறைகளால் இறுகக் கவ்விப்பற்றப்பட்டிருந்தது.

[ 45 ]

மறுநாள் கதிர் எழவே இல்லை. மலைகளுக்கு அப்பால் இருந்து ஒளிமட்டும் கசிந்து மழைத்தாரைகளினூடாக பரவியது. மழையலையுடன் இணைந்து குடில்கள் நிழல்கள் போல் ஆடின. மழைக்குள் விழுந்தவர்கள் அப்படியே துயில் கொள்பவர்கள் போல, ஊழ்கத்தில் உடல் உதிர்த்தவர்கள் போல முழுநாளும் அசையாது கிடப்பதை அர்ஜுனன் வியப்புடன் கண்டான். அவன் கால்கள் குளிரில் நடுங்கி இறுகி முழங்கால் தசை உருண்டு வலிகொண்டு நின்றது. தாடை அசைவிழந்து ஒட்டிக்கொண்டது. பற்கள் உரசி அரைபட்டன. ஆயினும் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொள்வதற்கு அவனால் இயலவில்லை.

இரவிலேயே வணிகர்கள் மட்டும் குடில்களுக்குள் சென்று ஆடைகளைக் களைந்து உடல் துடைத்துக் கொண்டனர். சிலர் உள்ளேயே கற்செதுக்குக் கலங்களில் நெருப்பிட்டு அமர்ந்தனர். இப்போது தணியும், இதோ அலை இறங்குகிறது, இதோ ஓசை மயங்குகிறது என்று பலமுறை மாயம் காட்டி மீண்டும் மீண்டும் எழுந்து பெய்துகொண்டே இருந்தது மழை. உச்சிப் பொழுதுக்கு முன்னரே கதிரொளி மறைந்து மீண்டும் முற்றிருளாகியது. மீண்டும் இருள் வந்து மூடிக்கொண்டது

எண்ணியிராத தருணத்தில் மழை ஓயத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே தெற்கிலிருந்து வந்த காற்று மழையை திரைச்சீலையென சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது. மீண்டும் வந்த காற்றில் துளிச்சிதர்கள் இருந்தன. மீண்டும் வீசிய காற்றில் தொலைதூரத்துப் புழுதி வெந்த மணம் இருந்தது. கூரைகள் நீரைச்சொட்டி உதறி எழுந்து மீண்டும் பறக்கலாயின. வானில் விண்மீன்கள் சில மெல்ல பிதுங்கி எழுந்து வந்தன.

இரவு முழுக்க தெற்கிலிருந்து அலையலையென காற்று வந்து ஊரைச்சூழ்ந்து சுழன்று கடந்து சென்றது. மழையில் கிடந்தவர்கள் ஒவ்வொருவராக விழித்து கையூன்றி தவழ்ந்தபடி குடில்களுக்குள் சென்றனர். அங்கே ஈரத்துணியுடனே படுத்து துயிலலாயினர். சிலர் மண்ணில் முகம் புதைத்து நெஞ்சுகலுழ்ந்தவர்கள் போல அழுதபடி ஏதோ முனகினர். சிலர் கைகூப்பியபடி மல்லாந்துகிடந்து அரற்றிக்கொண்டிருந்தனர்.

அர்ஜுனன் அருகிருந்த குடிலொன்றுக்குள் நுழைந்து தன் தோலாடையை அகற்றி மரவுரி அணிந்துகொண்டான். குடில் நடுவே இரும்பு யானத்தில் அனல் வைத்து அதைச்சூழ்ந்து வணிகர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவன் சற்று இடம் விட்டு “அமருங்கள், வீரரே!” என்றான். அர்ஜுனன் அமர்ந்து கைகளை அனல் மேல் நீட்டி அவ்வெம்மையை உடல் முழுக்க வாங்கி நிரப்பிக்கொண்டான். குருதியில் வெம்மை படர்ந்து செல்லச் செல்ல அவன் உடல் சிலிர்த்தபடியே இருந்தது.

குளிருக்கு வெம்மையையும் வெம்மையில் குளிரையும் உணர்வதுபோல் உடலறியும் பேரின்பம் பிறிதில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். உடல் அறியும் இன்பதுன்பங்களே புறவயமானவை. மறுக்கமுடியாதவை. ஆகவே அவை மட்டுமே இன்பங்களும் துன்பங்களும். பிற அனைத்தும் உளமயக்குகள். ஆம். அகிபீனா இழுத்தால் என்ன? வேண்டியதில்லை, இப்போதே சித்தம் பித்துகொண்டிருக்கிறது. மழை மனிதர்களை பித்தாக்க முடியுமா? முடியும். அதற்கு பதினொருமாதம் அனலில் காயவேண்டும். வெந்து உருகவேண்டும். மழை இன்னும் பெய்கிறதா? இல்லை, இது காற்று.

அமர்ந்தபடியே துயிலத்தொடங்கி கையூன்றி விழுந்து வெறுந்தரையிலேயே ஆழ்ந்துறங்கினான். காலையில் ஊரின் ஓசைகளைக் கேட்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சற்று பிந்தி எழுந்தது. தொடர்பயணங்களில் இட உணர்வு முற்றிலும் அகன்றுவிட்டிருந்தமையால் அவன் அப்போது மிதிலையின் உணவு விடுதி ஒன்றில் துயின்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். விழித்துக்கொண்டு தன்னைச் சுற்றி எவரும் இல்லை என்று கண்டபின் ஆடை திருத்தி எழுந்து நின்றான்.

குனிந்து குடில் வாயில் வழியாக வெளியே வந்தபோது அங்கு மழை பொழிந்ததன் எந்தத் தடயமும் எஞ்சியிருக்கவில்லை என்று கண்டான். தரையின் ஈரம்கூட காய்ந்துவிட்டிருந்தது. அங்கு வந்தபோது எழுந்து பறந்துகொண்டிருந்த புழுதி பல்லாயிரம் கால்தடங்களும் குளம்புத்தடங்களுமாக படிந்திருப்பதைக் கொண்டே பெய்து நனைந்த மழையை நினைவுகூர முடிந்தது. வான் நிரப்பிச் சென்றுகொண்டிருந்த காற்றில் நீர்த்துளிகள் இல்லை, ஆனால் நீர் என அது மணத்தது.

ஏவலர்கள் பொதிகளைப் பிரித்து அத்திரிகளின் முதுகில் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஓய்வும் உணவும் கொண்டு புத்துயிர் பெற்றிருந்த அத்திரிகள் கழுத்து மணியை அசைத்தபடி கடிவாளத்தை மென்று காதுகளைத் திருப்பி ஓசைகளைக் கூர்ந்தன. ஒற்றைக்கால் தூக்கி மூன்றுகாலில் நின்றன. அவற்றின் வால்சுழற்சிகளும் செருக்கடிப்பொலிகளும் பசுஞ்சாண மணமும் சிறுநீர் வீச்சமும் குடில் சூழ்ந்த அந்நடுமுற்றத்தில் நிறைந்திருந்தன.

“நாம் கிளம்புகிறோம், வீரரே!” என்றான் வாகுகன். “நம் வரவு இவர்களுக்கு நல்லூழைக் கொணர்ந்தது என்று சொல்கிறார்கள்.” அர்ஜுனன் “இவர்கள் வேளாண்மை செய்வதுண்டா?” என்றான். “இங்கு அவ்வாறு எதையும் செய்ய முடியாது. இங்குள்ள புழுதியும் காற்றும் அப்படிப்பட்டவை. இந்த மழை இவர்களின் முட்காடுகளை தளிர்க்கச் செய்யும். அதை உண்ணும் சிற்றுயிர்கள் பெருகும். இன்னும் பலமாதங்களுக்கு இங்கு ஊனுயிர்களுக்கு குறைவிருக்காது. இவர்கள் இவ்வழிசெல்லும் வணிகர்களையும் அவ்வப்போது பெய்யும் மழையையும் நம்பி வாழ்பவர்கள்.”

ஊரே அமைதியாக இருப்பதைக் கண்டு “அவர்கள் எங்கே?” என்று அர்ஜுனன் கேட்டான். கருணர் “மழை பெய்துவிட்டதால் அவர்கள் பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. இது ஈசல்கள் எழும் பொழுது. அவர்களுக்கு இது அறுவடைக்காலம் போல. வெயிலில் உலரச்செய்து பானைகளில் நிறைத்து மூடியை களிமண் கொண்டு பொருத்தி காற்றிலாது மூடி புதைத்து வைத்தால் நான்குமாதம் வரை இருக்கும். ஈசல்வலைகளுடன் விடிவதற்குள்ளாகவே அனைவரும் காடுகளுக்குள் சென்றுவிட்டார்கள்” என்றார்.

அர்ஜுனன் முகம் கழுவி வாகுகன் அளித்த ஊன் உணவை உண்டு புறப்படுவதற்கு சித்தமாக வில்லுடன் வந்து நின்றான். “வருணனை வணங்கி கிளம்புவோம். அளியிலாப் பெரும்பாலையை இம்முறை எளிதில் கடப்போம் என்று எண்ணுகிறோம்” என்று கருணர் சொன்னார். “வருணன் சினம் கொண்டவன். அவன் அளி பாலைமழைபோல இனியது” என்றார் ஒரு வணிகர்.

அவர்கள் ஊர் மூலையில் அமைந்திருந்த வருணனின் சிறு பதிட்டை நோக்கி சென்றனர். புலரிக்கு முன்பாகவே ஊனுணவையும் காட்டுமலர்களையும் வருணனுக்குப் படைத்து பூசனை செய்திருந்தனர் ஊர்மக்கள். அவர்கள் வருணனை வணங்கினர். வருணன் காலடியில் இருந்த சிறு கிண்ணத்தில் இருந்து செம்மண் எடுத்து நெற்றியில் அணிந்து அருள் பெற்றனர். அர்ஜுனன் அந்தக் கல்லில் விழித்த விழிகளை நோக்கினான். முந்தைய நாளின் இடிமின்னலும் மழைக்குளிரும் நினைவிலெழுந்தமைந்தன.

“கிளம்புவோம்” என்றார் வணிகத்தலைவர். ஊருக்கு புறம்காட்டாமல் பின்காலடி எடுத்து வைத்து வாயிலினூடாக ஏழு சுவடுகள் பின்சென்று குனிந்து தரைதொட்டு சென்னி சூடி வணங்கி அவர் திரும்பி நடக்க அத்திரிகளும் ஏவலருமாக வணிகர்குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. அர்ஜுனன் ஆளில்லாது கைவிடப்பட்ட குருவிக்கூடுகள்போல நின்ற ஊரை இறுதியாக திரும்பிப்பார்த்தான்.

செல்லும் வழி முழுக்க புழுதி அடங்கி, வானம் குளிர்ந்த ஒளி கொண்டு, காற்றில் நீர்த்துளிகள் பரவி, இனிய மண்மணத்துடன் பயணம் இனிதாக இருந்தது. சூதரின் பாடலொன்று தொலைவில் கேட்டது. முன்பே செல்லும் வணிகர் குழுவில் மெலிந்து எலும்புகள் புடைத்த கழுத்தும் சற்றே கூன் கொண்ட முதுகும் தசைகள் இறுகிய வயிறும் கால்களும் கொண்ட முதிய சூதர் இருப்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். சீவிடு போல சிற்றுடலிலிருந்து எழும் பெருங்குரல் கொண்டவர். அவர்கள் அக்குழுவை நடைவிசையால் அணுகும்போதெல்லாம் அவர் பாடல் காற்றில் எழுந்து வந்துகொண்டிருந்தது.

வாகுகன் “வருணனைப் பாடுகிறார்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “வருணனின் நகரம் மேற்கே அலையற்ற கடலுக்கு அப்பால் உள்ளது. உப்பால் ஆன கோட்டை சூழ்ந்தது அந்நகர்” என்றான் வாகுகன். “எப்படி தெரியும்?” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “ஒவ்வொருமுறை இவ்வழிசெல்லும்போதும் அந்நகர் பற்றி எவரேனும் சொல்கிறார்கள். இன்று மழை பெய்ததனால் வருணனை புகழ்ந்து பாடுகிறார்கள். மழையின்றி புழுதி அனலென சுழன்று கடந்துசெல்லும் பொழுதில் நடக்கும்போது வருணனை வேண்டிப்பாடுகிறோம். வருணனை நினைக்காது இப்பாதையை எவரும் கடக்க முடியாது” என்றான் நிகும்பன்

“வருணனின் பெருநகர் மூன்று பெருங்கோட்டைகளால் ஆனது” என்று கருணர் சொன்னார். “கதிரொளியில் கண் கூசவைக்கும் வெண்மை கொண்ட உப்புக்கோட்டை. அதற்கப்பால் அசைவற்ற நீலநிற நீரால் ஆன பெருங்கோட்டை. அதற்கப்பால் வெண் சங்கும் சிப்பிகளும் சேர்த்தடுக்கிக் கட்டப்பட்ட அரண்மனைக்கோட்டை. அவன் அரண்மனை நீருக்கடியில் அமைந்துள்ளது. நீர்ப்பாசிகளைப் பின்னி கட்டப்பட்டது அது என்று ஒரு கவிஞன் சொன்னான். நீரலைகளுக்கு ஏற்ப நூற்றியெட்டு அடுக்கு கொண்ட பெருமாளிகையில் நெளிந்து கொண்டிருக்கும் அதன் சுவர்கள் வளைவுகள் அனைத்தும் அலைந்தாடும்.”

“வருணன் சிறகுகள்கொண்ட மீன்தேவியராலும் நீருள் பறக்கும் நாகங்களாலும் காக்கப்படுகிறான். நீலவைரங்களால் அடுக்கிக் கட்டப்பட்டது அவன் அரண்மனைக்கூடம். அதற்குள் நீர்மணிகளால் ஆன அரியணையில் அமர்ந்து அவன் புவிநீரை எல்லாம் ஆள்கிறான்.”

“வருணனை சென்று காண்பது எப்படி?” என்று அர்ஜுனன் கேட்டான். சிரித்துக்கொண்டு “ஏன்? நீங்கள் சென்று காண எண்ணியுள்ளீரா?” என்றான் நிகும்பன். அவன் விழிளை நோக்கியபடி “ஆம்” என்றான் அர்ஜுனன். வாகுகன் அவன் கையைப்பற்றி “அர்ஜுனன் திசைத்தேவர்களைச் சென்று வென்று கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வருணனை அவர் சென்று கண்டிருப்பாரா?” என்று கேட்டான். “காணச் சென்றுகொண்டிருக்கிறான் போலும்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி.

“இவர்கள் இதை கதையென எண்ணுகிறார்கள் ஆனால் செல்லவும் காணவும் முடியுமென்றே நான் எண்ணுகிறேன்” என்றான் வாகுகன். கருணர் சிரித்துக்கொண்டு “நீராழத்தில் சென்று நீரரமகளிரைக் கவர்ந்து நீர் நாகங்களைக் கடந்து வாய்திறந்து விழுங்க வரும் கவந்தமச்சர்களை வென்று வருணனைக் காணவேண்டும். அப்படி சென்று கண்டு உமக்கு வரப்போவதென்ன?” என்றார். “மெய்மை” என்றான் அர்ஜுனன்.

“அத்தனை தொலைவில்தான் அது இருக்குமா?” என்றான் வாகுகன். “இங்கு நம்முடன் அது இயல்பாக இல்லையென்பதனால் அதற்கு அப்பால் மேலும் துலங்கி இருக்கும் என்பதுதானே பொருள்?” என்றான் அர்ஜுனன். “இதென்ன கூறுமுறை என்று எனக்கு விளங்கவில்லை” என்று கருணர் நகைத்தார். “சொல்லுங்கள், வீரரே! வருணனிடம் நீர் கோரப்போகும் மெய்மை என்ன?” என்றார்.

“ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை” என்றான் அர்ஜுனன். “இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்கு செல்ல முடியாது என்று தோன்றுகிறது.”

கருணர் “இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை சொல்லல் என்பது இனிது. அது இங்குள்ள இறுகிய புடவிநெறிகளை மீறிச்செல்லும் கனவு. கல்லை கையில் அள்ளி அருந்தலாம். வானை அள்ளி குடத்தில் நிறைக்கலாம். ஆனால் அது அழகிய சிலந்தி வலை ஒன்றில் நாம் சென்று சிக்கிக்கொள்வது போல. திமிறும்தோறும் மேலும் சூழும். அனைத்துக் கதைகளுக்கும் நடுவே விஷக்கொடுக்குடன் சிலந்தி அமர்ந்திருக்கும். அதற்கு நம் உயிரை அளித்தாக வேண்டும்” என்றார்.

அவனருகே வந்து “கதைகளல்ல வாழ்க்கை. இங்கு இவ்வாறு இருப்பதுதான் இளைஞனே வாழ்க்கை. உவத்தல் அன்றி இப்புவியில் வாழ்வுக்கு பொருளொன்றும் இல்லை. மகிழ்வன்றி மெய்மை என்று ஒன்றில்லை” என்றார். “அவ்வாறு எண்ணுவது பிறிதொரு சிலந்தி வலை” என்று அர்ஜுனன் சொன்னான். கருணர் உரக்க நகைத்து “ஆம், இருக்கலாம்” என்றார். “இளமையிலே நான் இதில் சிக்கிவிட்டேன்.”

“நான் இங்குள்ளதே முழுமை என எண்ணிக் களியாடினேன். அக்களியாட்டு முடிந்ததுமே அவ்வாறல்ல என்று உணர்ந்து கிளம்பினேன். இங்குளதில் முழுதமைந்திருப்பவன் அங்கு என்னும் சொல்லையே அறிந்திராதவன். அங்குளதை உணர்ந்தபின் இங்கமைபவன் இயல்பானவன் அல்ல. அவன் அதைச் சொல்லிச் சொல்லி தன்னுள் நிலைநாட்டிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன்.

கருணர் திகைப்புடன் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். நிகும்பன் “வருணனிடம் நெளியும் மெய்மையை நெளிந்தபடி அடையுங்கள் வீரரே, அப்போதுதான் அது நிலையான உண்மையாகும்” என்றான். சூழ்ந்திருந்தவர்கள் நகைத்தனர்.

தொடர்புடைய பதிவுகள்

மேலும் இரு சிறுகதைகளைப் பற்றி…

$
0
0

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மேலும் இரு கதைகளைப் பற்றி –

பாம்பு வேட்டை

மற்றொருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சிதறுவதைப் பற்றிப் பேசும் கதை. விஷயங்கள் நமக்கு சொல்லப்படுகின்றன. கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகள் நமக்கு சொல்லப்படுகின்றன. ஆனால் வாசகராக நம்மால் அதே போல உணர முடியவில்லை.பாஸ்கருக்கும் அவன் முதலாளிக்கும் இடையே மரியாதையும், சார்புநிலையும் ஏன் உருவாகின்றன என்பது தெளிவாக இல்லை. அதே போல அவை முறியும் காரணமும் (விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான இயலாமை) பலவீனமாக இருக்கிறது.

மேலும் இந்த அனுபவத்தின் மூலம் பாஸ்கர் அடைந்தது என்ன? ஏமாற்றம் என்பது உடனடியான உணர்வெழுச்சி. கதை இங்கு முடிவடையாமல் சென்றிருக்க வேண்டும்.

உடனடி சலனத்தைத் தாண்டி அந்த அனுபவம் அவன் குணச்சித்திரத்தின் மீது அல்லது வாழ்க்கை நோக்கின் மீது விளைவிக்கும் மாற்றத்தை முன்வைக்க வேண்டும். அதுவே இலக்கியப் படைப்பு என நினைக்கிறேன். (உங்கள் அலை அறிந்தது கதையின் கபீர் பாய் நினைவிற்கு எழுகிறார்).

தச்சன்

ஆராயத்தக்கக் கருத்தை முன்வைக்கிறது தச்சன். எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் (தெய்வமே ஆனாலும்) தனிப்பட்ட அன்பிற்கான தேடல் அணைவதில்லை. (தனி மனிதனைச் சாராத பொதுப்படையான அன்பைக் கையாளக்கூடியவர்கள் துறவிகள் மட்டும் தானா? தெய்வங்களுக்குக் கூட அப்பாற்பட்ட விந்தை போலும்). கிறித்துவ/பைபிள் சார்ந்த படிமங்களுக்கும் கதைகளுக்கும் எனது அறிமுகம் மிகக் குறைவே. அதனால் இதைச் சற்று தயக்கத்துடன் முன்வைக்கிறேன் – தச்சன் சிறுகதையின் முழு வடிவம் பெறவில்லை. பேசப்பட்ட விஷயத்தை புதிய வடிவில் அளித்தது போல தோன்றுகிறது.

ஒரு ஆலோசனை – இருவருடைய கோணத்திலிருந்து கதை நமக்கு அளிக்கப்படுகின்றது – மக்தலீன் மற்றும் தச்சன். பக்தனின் கோணம் அறியப்பட்டதே. அதனால் மக்தலீன் மூலம் கதை முன்னகர்வதைத் தவிர்க்கலாம் (அந்தப் பகுதிகள் கதையைக் காட்டிலும் வழிபாடாக வெளிவருகின்றன).

தச்சனின் கோணத்திலிருந்து மட்டும் அணுகினால் கதைக்கரு மேலும் வலுவடையும். புனைவுக்கு இன்னும் இடம்கொடுத்து அணுக முடியாத ஒருவருக்கு அருகே கொண்டு செல்லும். It could produce a good balance between the mystical and the human.

ப்ரியம்வதா

 

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கெய்ஷா -கடிதங்கள் 3

$
0
0

17

 

ஜெ

கெய்ஷாக்களைப்பற்றி தமிழிலேயே ஒரு நாவல் வந்துள்ளது. இது அதைப்பற்றிய பதிவு

கெய்ஷாவின் நினைவுகள்

ஆனால் உங்கள் சிறுகதை வேறுவகையானது. மேலே சொல்லப்பட்ட நாவல் நம்பகமான ஒரு பதிவு மட்டும்தான். இந்தச் சிறுகதையில் உண்மையில் கெய்ஷா வந்தாளா இவனே விக்கிபீடியா பக்கம் வழியாக வாசித்துக் கற்பனை செய்துகொண்டதா என்று தெரியாத மயக்கம் உள்ளது

வருபவள் கெய்ஷாவா இல்லையா என்பது இன்னொரு மயக்கம். அவள் இவனுக்குப் பிடித்தமானவள். இவன் விரும்பும்படி இலக்கியமெல்லாம் பேசுபவள். இவனுக்கு இவனுக்கு உண்மையில் என்ன தேவை என்று சொல்லிவிட்டுச்செல்கிறாள்.

அவளுடைய அந்த மாறுவேடங்கள்தான் இந்தக்கதையின் அற்புதம். கெய்ஷாவாக இருக்கிறாள். அது அவனுக்குப்பிடிக்கும். அவள் கெய்ஷா அல்ல என்று ஒரு சோகக்கதை சொல்கிறாள். அதுவும் அவனுக்குப் பிடிக்கும். கெய்ஷாவாக இருக்கிறாள். அதுவும் பிடிக்கும். கோபம் அடைகிறாள் அதுவும் அவனுக்கான நாடகம். தன்னிரக்கம் கொள்கிறாள் அதுவும் அவனுக்காக

மாறிமாறி நடிக்கிறாள். அப்படியே அவனை வெளியே இழுத்துப்போட்டு அவனுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். கெய்ஷா ஒரு யக்‌ஷி என்று நீங்கள் எழுதியிருந்தாலும் சரியாகத்தான் இருந்திருக்கும். தெய்வம் வந்து மனுஷனுடன் ஆடிவிட்டுச்செல்வதுபோல இருக்கிறது

சாரதி

***

ஜெ

கெய்ஷாவைப்பற்றி எழுதக்கூடாது, என்ன வருகிறது என்று பார்ப்போம் என்று நினைத்தேன். வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள் பல வாசகர்கள் பல கோணங்களில் நுட்பமாக வாசித்திருப்பதைக் காட்டுகின்றன. எனக்கு பல திறப்புகள் வந்தன

முக்கியமான விஷயம், ஆண் பெண் உறவு பற்றித்தான். இத்தனைக்குப்பின்னரும் ஆண் பெண் உறவு சலிக்குமா என்பதுதான்

ரொம்பநாளைக்கு முன்னால் தாஜ்மகால் போனேன். அப்போது ஒரு அலுவலக நண்பரும் உடனிருந்தார். ஷாஜகானுக்கு மும்தாஜ் பல மனைவிகளில் ஒருத்திதான். மொகலாய அரசர்கள் காமத்தில் ஆடிச்சலித்திருப்பார்கள். அப்படியென்றால் அவளிடம் என்னதான் கண்டார்?

அவர்கள் அனைவரும் கொடுக்கமுடியாத ஒன்றை. அதுதான் உண்மையான காமம். காமம் காமத்தைவிட மேலான ஒன்றின் அடையாளமாக ஆகவேண்டும். அதைத்தான் கெய்ஷா அவனுக்குச் சுட்டிக்காட்டிவிட்டுச் செல்கிறாள்

சாரங்கன்

 

கெய்ஷா கதை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைகள் –என் மதிப்பீடு -1

$
0
0
Siththanthan-2

உதயன் சித்தாந்தன்

 

எழுத்தை விமர்சனம் செய்தால் எதிரிகளாகி விடுகிறார்கள் என்று ஒருகடிதத்தில் சொன்னது வேடிக்கைக்காகத்தான். அதற்காகவெல்லாம் விமர்சனம் செய்யாமல் இருந்துவிட முடியாது. எந்த ஒரு இலக்கியவாதிக்கும் அவனுடைய படைப்பின் உள்மடிப்புகளை உண்மையிலேயே தொட்டு அறிந்த ஒரு வாசகனின் எதிர்மறை விமர்சனமும் கூட உள்ளூற இனிதாகவே இருக்கும். கடுமையான விமர்சனங்கள்கூட அப்புனைவை எழுதியவனை விட ஒருபடி மேலே நின்றிருக்கும் வாசகனால் சொல்லப்படும்போது ஒருவகை ரகசிய வரவேற்பையே பெறுகின்றன

சென்ற காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் மிகக் கடுமையான விமர்சனங்களின் ஒரு களம் இருந்தது. சுந்தர ராமசாமியின் மொட்டைமாடிக்கூட்டம் அல்லது தேவதச்சனின் நகைக்கடை அல்லது ஞானக்கூத்தனின் திருவல்லிக்கேணி கடற்கரைச் சந்திப்பு என படைப்புகளை உரசிப்பார்க்கும் மையங்கள் பல அன்று இருந்தன. அவையே பயிற்சிக்களங்களாகவும் இருந்தன. இன்று எழுதும் எழுத்தாளர்களை இந்தக் களங்களில் எவற்றிலிருந்து வந்தவர் என்பதை வைத்தே அடையாளப்படுத்தமுடியும்

நான் எழுத வந்த காலகட்டத்தில் எனது கதைகளை தேவதச்சனும் சுந்தர ராமசாமியும் மிகக் கறாராகவே அணுகியிருக்கிறார்கள். ’மௌனி எழுதிய பிறகு தமிழில் இந்தக்கதைக்கு என்ன தேவை?’ என்று என்னிடம் தேவதச்சன் கேட்டதை நான் நினைவு கூர்கிறேன். தேவதச்சனின் நகைக்கடையில் உள்ள ஒரு மரநாற்காலியை மின்சார நாற்காலியென்றே வேடிக்கையாகச் சொல்வது வழக்கம். கதையோ கவிதையோ எழுதியவர்களை அன்புடன் வரவேற்று அதில் அமரவைத்து சோடாபுட்டிக் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி ’ஆரம்பிக்கலாமா?’ என்று தேவதச்சன் தலையாட்டியபடி கேட்கும் காட்சியை நினைவு கூர்கிறேன். கண்ணீர் மல்க எழுந்து செல்லும் இளம் எழுத்தாளர் மசால் தோசை காபி வாங்கிக் கொடுத்து ஆறுதல் செய்யப்படுகிறார்.

ஆனால் கறாரான விமர்சனம் என்பது கலையின் அடிப்படைகள் சார்ந்த புரிதலில் இருந்து வெளிவரவேண்டும். அதற்குப்பின் பரந்த வாசிப்பும் உண்மையான அக்கறையும் ரசனையும் இருக்கவேண்டும். அப்படைப்பு வெளிப்படுத்தும் அனைத்து தளங்களையும் தொட்டெடுத்தபின் மேலே செல்ல விழைவதாகவும் இருக்க வேண்டும். ஒற்றை வரி நிராகரிப்புகள் வெறும் வசைகள் ஆகியவற்றால் எந்தப்பயனும் இல்லை. அவை இலக்கியவாதிகளை சோர்வுறவும் எரிச்சலூட்டவுமே செய்யும்.

ஒருவகையில் இணையம் பெரிய சமத்துவ வெளி ஒன்றை உருவாக்கியது. அங்கு மேல் கீழ் இல்லை. முன்பு குறிப்பிட்ட சபைகளில் சுந்தர ராமசாமியோ தேவதச்சனோ ஞானக்கூத்தனோ அவர்களுக்குரிய பீடம் ஒன்றில் அமர்ந்துதான் அந்தக் கருத்துக்களைச் சொன்னார்கள். அதற்கான படைப்பு பின்புலமும் இலக்கிய வரலாற்று இடமும் அவர்களுக்கு இருந்தது. சமத்துவம் என்ற பெயரில் இந்த இடங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு நேற்று வாசிக்க வந்த ஒருவன் கருத்துக்கு நிகராகவே ஒரு தலைமுறையை வடிவமைத்த இலக்கிய விமர்சகனின் கருத்தும் கொள்ளப்படும்போதுதான் விமர்சனம் உண்மையில் அழிந்து போயிற்று.

முதலில் இந்த சமத்துவ வெளி எவரும் பேசலாம். எதையும் பேசலாம் என்ற அளவில் கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் சாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அந்தச் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு அதுவரைக்குமான மேல் கீழ் அடுக்குமுறையால் கட்டுப்படுத்தப்பட்ட புதிய குரல்களோ புதிய கருத்துக்களோ எழுந்து வரவும் இல்லை. மாறாக பொறுப்பற்ற ஒற்றை வரிகளும் வசைகளுமே வந்தன. அக்கறையற்ற வாசிப்பே அமைந்தது

ஆகவே மெல்ல மெல்ல இணைய வெளியின் மொத்தக் கருத்துக்களையுமே எழுத்தாளர்கள் புறந்தள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைக் கவனிக்காமல் ஆனபோது அவையும் மெல்ல இல்லாமல் ஆயின. எழுத்தாளர்கள் கவனிப்பது அவர்களுடைய முகநூல் நட்பு வட்டத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்களைத்தான் என்றாயிற்று. இச்சூழலில் நேற்று வெறும் ஆயிரம் பேர் வாசித்துக் கொண்டிருந்த சிற்றிதழ்களில் எழுதிய எழுத்தாளனுக்கு இருந்த எதிர்வினையும் விவாத வாய்ப்புகளும் இணையத்தில் இன்று எழுதும் எழுத்தாளர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

அதனால்தான் இணையத்தில் பத்து வருடம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர் கூட எதையும் கற்றுக் கொள்ளவோ எழுத்தின் பயணத்தில் முன்னகரவோ முடியாமல் இருக்கிறது. ஐம்பது கதைகளை எழுதியபின்னரும்கூட அவர் எழுத்தில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடிவதில்லை.

இன்றுகூட ஒரு புனை கதையை அச்சு ஊடகம் ஒன்றுக்கு அனுப்புவது ஒரு எழுத்தாளன் அது சம்பந்தமான குறைந்தபட்ச ஒரு மதிப்பீட்டு நோக்கைப் பெறுவதற்கான ஒரே வாய்ப்பாக இருக்கிறது. காலச்சுவடுக்கோ உயிர்மைக்கோ ஒருகதையை அனுப்பும்போது அந்தக் கதையை அங்கு வாசிப்பதற்கு எவரோ ஒருவர் இருக்கிறார் அவர் ஏற்கவோ மறுக்கவோ செய்கிறார் என்னும் ஒரு எதிர்பார்ப்பு எழுத்தாளனிடம் இருக்கிறது. அதன் வழியாக தன் எழுத்தைப்பற்றி தான் இரு புறவயமான மதிப்பை பெற முடியும் என்று அவன் நினைக்கிறான்.

இவ்விதழ்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கதையைத்தான் பிரசுரிக்க முடியும் என்ற கட்டாயம் இருப்பதனால் தான் இந்த மதிப்பீடு அங்கே இருக்கிறது. எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் பிரசுரிக்க முடியும் என்னும் வசதி இருக்கும் இணைய இதழ்களில் இப்படிப்பட்ட மதிப்பீடே இருப்பதில்லை. ஆகவே இணைய இதழ்களில் வரும் கதைகள் இன்றைய சூழலில் அனேகமாக முழுமையாகவே கவனிக்கப்படுவதில்லை.

ஆகவே இந்த சூழலுக்கு வெளியே ஒரு விவாதத்தை உருவாக்கலாம் என்பதே இக்கதைகளை சுட்டி கொடுத்ததன் நோக்கம். சிங்கப்பூர் கதைகளைப்பற்றிய விவாதத்தின்போது பலரும் தமிழில் இவ்வாறு செய்யலாம் என்று கோரினார்கள்

எனக்குப்பிடித்த கதைகளை மட்டுமே சுட்டி கொடுக்கும் வழக்கம் எனக்கு இருந்தது. ஆனால் சிறுகதைகளைப்பற்றி ஒரு பொதுவான விவாதத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே எனக்கு வந்த ஏறத்தாழ அனைத்து கதைகளையும் சுட்டி கொடுத்தேன். சாதகமும் பாதகமுமான விமர்சனங்கள் வரலாம் என்று எண்ணினேன்.

சென்ற முறை இவ்வாறு புதியவர்களின் கதைகளை விமர்சனம் செய்து எழுதிய காலகட்டத்தில் அவற்றின் மிக மென்மையான விமர்சனங்கள் செய்யப்பட்டவர்கள் கூட இரண்டு வருடங்கள் கழிந்து தாங்கள் புண்பட்டிருக்கும் தகவலை நண்பர்கள் வழியாக தெரிவித்தனர். அவர்களின் நண்பர்களும் ‘நீ ஒரு போட்டிப் பேரிலக்கியவாதியாக எழுந்து வரக்கூடாது என்று என்பதற்காக சொல்லப்பட்ட சதிகாரக் கருத்து இது’ என்று அவர்களை உசுப்பி விட்டார்கள். பலவகை கசப்புகள். ஒருவகையில் அதுவும் நன்று தாழ்வுணர்ச்சியைவிட மேட்டிமை உணர்ச்சி எழுத்தாளனுக்கு உதவக்கூடியது என்பது தான் என்னுடைய எண்ணம். அது உண்மையாக இருந்தால்போதும்.

இணைய வெளியில் பீடங்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பீடங்களை நோக்கி கண்களை மூடிக்கொள்கிறார்கள். எத்துறையிலும் பீடங்கள் இருந்தே தீரும் அவற்றில் அமர்பவர்கள் சிலர் இருப்பார்கள். ஒவ்வொரு அடியிலும் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு சரிவிலிருந்தும் மீண்டும் நெடுங்கால பயணம் வழியாகவே அவர்கள் அங்கு வந்து சேர்ந்திருப்பார்கள். புதிய பீடங்கள் உருவாகவேண்டும் என்றும் புதியவர்கள் அங்கு அமரவேண்டுமென்றும் விரும்புகிறேன்.

*

முதல் இரு சிறுகதைகள் ராம் செந்தில் எழுதிய மடத்து வீடு, உதயன் சித்தாந்தன் எழுதிய புத்தரின் கண்ணீர்.

ராம் செந்திலின் கதை சிறப்பு இயல்பென்பது வெறுமே நடத்தைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் உள்ளம் வெளிப்படும் தருணங்களை அவரால் சொல்ல முடிகிறது என்பது தான். தொடர்ந்து எழுதுவாரென்றால் ஒரு எழுத்தாளராக அவருடைய திறன் வெளிப்படும் புள்ளியும் இதுவாக இருக்கும். மனிதர்கள் எத்தனை நுட்பமாக சீட்டாடுபவர் ஒரு சீட்டை எடுத்து வைக்கும் பெரும் திட்டத்துடன் சொற்களை முன்வைக்கிறார்கள், அவற்றை எதிர்கொள்பவர்கள் என்னென்ன பாவனைகள் வழியாக அவற்றை பெற்றுக் கொள்ளவோ கடந்து செல்லவோ செய்கிறார்கள் என்பதை இக்கதையினூடாக பார்க்க முடிகிறது.

இளம் பெண்கள் மட்டுமே இருக்கும் ஒரு இல்லத்திற்கு செல்லும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நடந்து கொள்ளும் நுட்பமான வேறுபாடு இக்கதையில் உள்ளது. பாலியல் புழக்கங்களில் மானசீகமாக நமது சமூகம் வகுத்த ஓர் எல்லைக்கோடு உள்ளது. ஆண் இவ்வளவுதான் செல்லலாம். பெண் இவ்வளவுதான் வரலாம் என்று. அந்த எல்லைக்கோட்டை முட்டிக் கொண்டிருப்பதில் உள்ளம் ஒரு ரகசியக் கிளுகிளுப்பை அடைகிறது. அதைக் கடந்து சென்று ஓரிரு சொற்றொடர்களைப் போட்டு விட்டு மீண்டு வந்து ஒளிந்து நின்று அச்சொற்றொடர் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று பார்ப்பதில் இருக்கும் கிளர்ச்சி இக்கதையில் இருப்பதனாலேயே இது ஒரு வாசிக்கத்தக்க கதை என்று நான் நினைக்கிறேன்.

வண்ணதாசனின் பல கதைகளில் இதன் வெவ்வேறு முகங்கள் பதிவாகியிருக்கின்றன. ஒரு உரையாடல் அந்த உரையாடலின் பொருட்டன்றி அந்த உரையாடலால் மறைக்கப்பட்ட உணர்வுகளின் பொருட்டு நிகழ்வதை இக்கதையில் காணமுடிகிறது. பெண்கள் மட்டும் இருக்கும் இல்லத்திற்குள் சென்றதே அந்தப்பையன்களை நிலையிழக்கச்செய்கிறது. அவர்கள் வழக்கமாக நடந்து கொள்ளும் முறையல்ல அங்கு நடந்து கொள்வது. அந்தப்பெண்கள் அவற்றைப்பெற்றுக் கொண்டு மெல்ல ஊக்கப்படுத்தி ஆனால் தவிர்த்துச் செல்லும் நுட்பம் அங்கு வரும் அத்தனை பேரும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள், தொடர்ந்து அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மனநிலை அது என்பதைக்காட்டுகிறது.

ஒரு சிற்றூரில் தையலோ பிற தொழில்களோ செய்து தங்கள் உழைப்பில் வாழும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய இக்கட்டு இது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் மாயக்காம உறுப்புகளை மாட்டிக் கொண்டு ஓயாது உரசிக் கொண்டிருக்கும் ஜென்மங்களை எதிர்கொள்வது. ஒரு மேல்மட்டத்தில் இதை எதிர் கொள்வதற்கான பயிற்சியை அவர்கள் அடைந்து மிகத் திறமையாக அதை கையாளவும் செய்கிறார்கள். ஆனால் உள்ளூர அவர்களின் பெண்மை எந்த அளவுக்கு சீண்டப்பட்டிருக்கிறது என்பது அவர்களின் தந்தையிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் தெரிகிறது.

ஒரு விரிந்த கோணத்தில் உடல் தளர்ந்து கை தளர்ந்து உளம் தளர்ந்த ஒரு முதியவர் மனிதர்களை, பெண்களைப் பார்க்க விரும்புவதில் பிழை ஒன்றும் இல்லை. ஒரு வேளை அது அவரை வாழ்க்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் கொள்ளக்கூட செய்யலாம். திருமணமாகி குழந்தைகளுடன் இயல்பான இல்லற வாழ்க்கையில் இருக்கும் பெண் ஒருவேளை சற்று உற்சாகமாகக்கூட அதை புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் இப்பெண்கள் எதிர்வினை ஆற்றுவதில் இருக்கும் மூர்க்கம் அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் ஆண் என்னும் அடையாளத்திற்கெதிரானதாக இருக்கிறது. அது உடனடியாக அவ்விளைஞர்களுக்கு புரியவும் செய்கிறது.

இந்த ஒரு தருணத்தை சென்று தொட்டிருப்பதனால் குறிப்பிடத்தக்க சிறுகதை என்று இதை சொல்ல முடியும் சிறுகதையின் அமைப்பிலும் இயல்பான ஒரு தருணம் வழியாக உச்சம் ஒன்று வெளிப்படும் திருப்பம் அமைந்திருக்கிறது.

ஆனால் இச்சிறுகதையின் வடிவ சிதைவுகள் இதை வாசகர்கள் முறையாக வாசிப்பதை தடை செய்யக்கூடும். ஒன்று மடத்துவீடு என்ற தலைப்பும் கதையின் தொடக்கத்தில் வரும் மடத்துவீடு பற்றிய விரிவான வர்ணனையும். இக்கதை உருவாக்கும் உலகத்திற்கும் அது சென்று முடியும் உளவியல் புள்ளிக்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைக்குள் எவ்வகையிலும் அது ஒரு குறியீடாக ஆகவில்லை.

மடத்து வீடு அத்தனை தூரம் கதையில் சொல்லப்பட வேண்டுமென்றால் கதையின் உச்சம் அந்த மடத்துவீடு சார்ந்ததாகவே இருந்தாக வேண்டும். வெறும் ஒரு வரலாற்று பின்னணிக்காகவோ கதையைத் தொடங்குவதற்காகவோ அவ்வளவு நீண்ட விவரணையை அளிப்பது வாசகனை சோர்வுறச்செய்யும்.

இக்கதையின் மையம் என்பது அப்பெண்கள் ஆண்களை எதிர்கொள்வதும் அவர்களின் உள் ஆழம் கொள்ளும் நேர் எதிர் திசையிலான நகர்வும் தான். அந்த பெண்களிடமிருந்தே கதையைத் தொடங்கியிருக்க வேண்டும் அவர்களைப்பார்க்கும் இளைஞர்களிடம் இருந்து கதை வளர்ந்து அவர்களுக்குள்ளாகவே முடிந்திருக்கவேண்டும். பிற அனைத்துமே குறைந்த பட்ச குறிப்புகளாகக் கதைக்குள் வந்திருந்தால் போதுமானது.

சிறுகதை என்பது கூர் தீட்டப்பட்ட வடிவம் எழுதப்பட்டுவிட்டதனாலேயே எத்தனை நுணுக்கமான விஷயமாக இருந்தாலும் சிறுகதைக்குள் அது இருந்தாக வேண்டுமென்பதில்லை. தன் கதையை தானே வெட்டிக் கூர்திருத்திக் கொள்ளும் வழக்கமே நல்ல சிறுகதையை உருவாக்குகிறது.

புத்தரின் கண்ணீர் மூன்று வகையில் எதிர்மறையாக என்னில் விளைவுகளை உருவாக்கியது. ஒன்று புத்தரின் கண்ணீர் என்னும் தலைப்பு. புத்தரின் சிரிப்பு என்று ஒரு போர் நடவடிக்கை சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு எதிர்வினையாகத்தான் இத்தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நூற்றுக்கணக்கான தலைப்புகள் கதைகளாகவும் சினிமாக்களாகவும் வந்துவிட்டன. ஒரு சிறுகதையின் தலைப்பு தன்னளவிலேயே ஒரு தேய்வழக்காக இருப்பது மிகவும் சோர்வுறுத்தக்கூடியது.

இரண்டாவதாக இச்சிறுகதையின் கதைக்கரு என்பது போர்க்கொடுமைகளில் ஈடுபடும் சிங்கள வீரனொருவனை அவன் குடும்பம் எப்படிப் பார்க்கும் என்ற ஒரு பொதுப்பார்வையின் அடிப்படையில் அமைந்துள்ளது அவன் குடும்பத்தால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றோ அவன் வீட்டுக்குள் பெண்கள் அவனை கற்பழிப்பவனாகத்தான் பார்ப்பார்கள் என்றோ உடனடியாகத் தோன்றும். இதுவே பொது வழிப்பார்வை எனப்படுவது

உண்மையில் அப்படித்தானா? குற்றவியல் வழக்கறிஞர்களான நண்பர் செந்தில், கிருஷ்ணன், செல்வராணி மூவருமே ஒன்றைச் சொன்னார்கள். பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் கற்பழித்துக் கைதான கணவனுக்காக வழக்கறிஞரை அமர்த்துவதும், அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பதும் அவனுடைய மனைவியாகவோ தாயாகவோ தான் இருக்கிறார்கள்.

மனித இயல்பு நம்மவர் பிறர் என்று பிரியும்போது அதற்கு அடிப்படையில் அறம் சாதகமாக இருப்பதில்லை. ஒரு சிங்களப்பெண்ணை கற்பழித்த சிங்கள இளைஞனை கொடுமையாளனாக பார்க்கும் அதே சிங்கள மனம் தமிழ்ப் பெண்ணை போரில் கற்பழித்த சிங்களனை வீரனாகப் பார்க்கவும் கூடும். சட்டம் இல்லாத, சமூகக்கட்டுப்பாடு இல்லாத தருணங்களில் மனித மனம் கொள்ளும் கட்டின்மையையும், திரிபையும் அது செல்லும் இருட்டின் உச்சத்தையும்தான் கலைமனம் கூர்ந்து கவனிக்கவேண்டும். அதற்கு அந்த சிங்கள சிப்பாயாக தான் மாறி நின்று நோக்குவது ஒரு வழி

உண்மையில் அப்போது என்ன நிகழ்கிறது? கலாச்சாரம் பண்பாடு போன்றவை அளிக்கும் பலவகையான தடைகளை கடந்து வெறும் மிருகமாக,மனிதனாக நிற்பதின் களியாட்டு அவனை ஆட்கொள்கிறது. சிங்கள ராணுவமாயினும் இந்திய ராணுவமாயினும் விடுதலைப்புலிகளின் ராணுவமாயினும் தமிழகக் காவல் துறையாயினும் சீருடை அணிந்த படைகள் அனைத்தும் ஒரே மனநிலையைத்தான் கொண்டுள்ளன. சட்டபூர்வமாக குற்றங்களை அவர்களால் செய்ய முடியும். அந்த வாய்ப்பு வரும்போது குற்றங்கள் செய்வதின் ஆதி மிருக உவகையில் அவர்கள் ஈடுபடுகிறார்களே ஒழிய நம்மவர் பிறர் என்று பார்ப்பதில்லை.

வாச்சாத்தியில் கற்பழித்த காவலர்கள் அவர்கள் குடும்பத்தாரால் புறந்தள்ளப்படவில்லை. தர்மபுரியில் கல்பனா சுமதி என்னும் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட்ட போது அவர்களைச் சூழ்ந்து நின்று அவர்களின் பெண்குழந்தைகளும் மனைவியரும் அன்னையரும் கதறி அழுத காட்சியை ஒளிப்பதிவில் நாம் பார்த்தோம்.

அந்த அசாதாரண எதிர்வினைகளை நோக்கித்தான் கலைஞனின் கவனம் செல்லுமே ஒழிய ஒரு பொத்தாம் பொதுவான பார்வையை வைப்பதல்ல அவன் இயல்பு. அந்தப் பொதுப்பார்வை வாசகனை சோர்வுறச்செய்கிறது. ஏனென்றால் அவன் அதை ஏற்கனவே அறிவான். அவன் எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பாதையில் கலைஞனும் சென்று ஒரு சாதாரணமான முடிவை முன்வைக்கும்போது தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அவன் உணர்கிறான்.

மானுடனின் மிருக இயல்புக்கு அப்பால் சென்று தான் பிறர் என்னும் பேதத்தைக் கடந்து அறத்தை நோக்கக்கூடியவர்கள் இருப்பார்களா? இருக்கலாம். இருந்தால் அது வேறு கதை. ஆனால் இக்கதை சமரசிங்காவில் தொடங்குகிறது. புத்தனுக்கு அணுக்கமானவன் என்பதில் ஒரு குறிப்பிருக்கிறது. சிங்கள இனவாதத்திற்கு மேல் எழுந்து நிற்கும் ஒரு புத்தரை அவன் கண்டுவிட்டான் என்றால் அது கதைக்குள் வந்திருக்க வேண்டும். கதை அவனுடையதாக இருக்கவேண்டும். அவனில் அறத்தின் உச்சம் நிகழ்ந்திருக்கவேண்டும்.

ஆனால் சமரசிங்காவிலிருந்து அவனுடைய மகனுக்கு கதை செல்கிறது. அதன் பிறகு மீண்டும் அவனுடைய மகள்களுக்கு வருகிறது. அவனுடைய மனைவிக்கு வருகிறது. ஒரு பொதுவான உண்மையை ஒரு சூழலில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும்படியாக முன்வைக்கிறது இந்தக்கதை. கதையை மிக நேரடியானதாக ஆக்குவது அந்தப்பையன் கற்பழித்த புகைப்படங்களை அனைவரும் பார்ப்பதுதான். அவன் அந்த ராணுவத்தின் செயல்களுக்கான கூட்டுப்பொறுப்பாளி என அம்மக்கள் நினைத்திருந்தால் கதையின் வீரியம் மேலும் கூடியிருக்காதா?

சமரசிங்காவின் மகனுக்குமான கதையாக அமைந்திருக்கலாம். அல்லது சமரசிங்காவிலிருந்து கற்பழிப்பாளனாக மாறி விலகிச்சென்ற அவன் மைந்தனின் கதையாக இருந்திருக்கலாம். அது அவனுக்கும் அவன் மைந்தனுக்கும் இடையே இருக்கும் அவன் பெண்களின் கதையாக இருந்திருக்கலாம். எப்படியும் அந்தக்குவி மையம் முக்கியமானது. அது சிதறிவிட்டிருக்கிறது

ஒருவேளை இக்கதை சொல்வது ஓர் அன்றாட உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அப்படியென்றாலும் கூட அனைவரும் அறிந்த பொது உண்மை அது. சாமான்ய மனம் செல்லும் பொதுவழிப்பாதை. அதுவல்ல நவின இலக்கியத்திற்கான வழி. நவீன இலக்கியம் ஒருவகை சீண்டலை ஆதாரமாகக்கொண்டது. வாசகனை அமைதியிழக்கவைப்பது. அதில் மீறல் ஒரு அவசியத்தேவை.

மூன்றாவதாக இக்கதை சிங்கள வாழ்க்கைக்குள் செல்லும்போது எந்தவிதமான நுண் தகவல்களையும் முன்வைக்காமல் சிங்கள வாழ்க்கையைப்பற்றிய ஒரு தமிழனின் பொதுப்புரிதலை சித்தரிப்பதாகவே அமைந்துள்ளது. அவர்கள் இல்லம் எப்படி இருக்கும், அவர்கள் உறவுகள் எப்படி அமைந்திருக்கும், அவர்களின் சமையல் என்ன அவர்களின் கூடம் எப்படி அமைந்திருக்கும், அவர்களின் உறவுகள் எந்த வகையானவை? அனைத்தையும் கதைக்குள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இயல்பாக வந்திருக்கவேண்டும்

ஒரு திரைப்பட இயக்குநர் தான் இயக்கும் திரைச்சூழலைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் காட்சியில் அவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக வரும் சிறு தகவல் வழியாக அவருக்கு முழுமையாகத் தெரியும் என்ற நம்பிக்கையை ரசிகனிடம் அவர் முன் வைக்க முடியும் என்பார்கள். ஒரு சிங்கள வாழ்க்கைச் சூழல் இயல்பாகவே சரியாக வந்திருந்தால் மிகக்குறைவான தகவல்களுடனேயே வாசகர்களிடம் ஒரு நம்பிக்கையை உருவாக்கியிருக்க முடியும்.

இம்மூன்று காரணங்களினால் இக்கதை மிகவும் குறைப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கப்பால் சென்று கதையில் சிறப்பென கொள்ளக்கூடியது ஒன்றே. சிங்கள -தமிழ் இனவாதம் மிகபெரிய முரண்பாடாக வளர்ந்து அதை உண்டு மிக எளிய வெறுப்பை திருப்பிக் கக்கும் எழுத்தாளர்கள் மலிந்துள்ள ஒரு சூழலில் அதைத் தாண்டி சென்று ஒரு மனிதத்தை தேடும் பார்வை இக்கதையில் உள்ளது.

இலங்கை எழுத்தின் மிகப்பெரிய சிக்கலே அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் அரசியல் சூழலுக்கப்பால் சென்று ஒரு துளியேனும் மானுட உண்மையைப்பார்க்கும் எழுத்தாளர்கள் அங்கு பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான். அரசியல் பிரச்சாரத்தை மீண்டும் செய்ய எழுத்தாளன் எதற்கு? இலங்கை இனப்பிரிவினைப்போராட்டத்தின்போது உச்சகட்ட வெறுப்பு அறப்பூச்சுடன் அங்கே முன்வைக்கப்பட்டு பிரச்சார எழுத்துக்கள் குபிந்தன. இன்று மீண்டும் ஒரு பிரச்சார அலைதான் அங்கு நடந்துகொண்டிருக்கிறது.

அந்த பொதுச்சூழலில் இருக்கும் வைரஸைக் கடந்து சென்று ஒரு உண்மையை தொட முயன்றதற்காக இக்கதை குறிப்பிடத்தகுந்தது என்று நினைக்கிறேன்.

=================================

 

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

 

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கலந்துரையாடல் –மார்க் லின்லே

$
0
0

unnamed

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த கணத்தில் எங்கள் வாழ்வினை திரும்பி பார்க்கும் போது ,காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் கிடைத்த தரிசனங்கள் உங்களின் எழுத்துக்களின் வழியே தான் முதன்மையாக கண்டடைந்தோம்.

யானை தன் குட்டிகளுக்கு தாகம் எடுத்தால் தண்ணீர் எங்கு கிடைக்கும், பசி எடுத்தால் உணவு எங்கு கிடைக்கும் என்பதற்கான அறிவை அதன் சிறு வயது முதலே மனதில் பதிய வைத்துவிடும். அத்தோடு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த அறிவை கடத்திக்கொண்டே இருக்கும். அதுபோலதான் காந்தியத்தையும் சமதர்மத்தையும், இயற்கை பேணுதலையும், இறையை கண்டடைதலையும் நாங்கள் குழந்தை யானை போல குக்கூவின் தும்பிக்கையை பிடித்தே கற்றுக்கொண்டிருக்கிறோம்.

நல் அதிர்வுகளின் ஒத்திசைவிலும், தோழமைகளின் வழிகாட்டுதளிலும், தாய்மையின் அரவணைப்பிலும் நாங்கள் இத்தருணத்தில் எங்கள் தாகத்திற்காக கண்டடைந்த நீரூற்றுதான் மார்க்ஸ் லிண்ட்லே.

காந்தியத்தையும் அதன் முழு ஆன்மீகத்தையும் வாழ்வில் நிதர்சனமாய் உணர்ந்த ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகளை கற்றுணர்ந்து உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக்கொண்டிருப்பவர் மார்க்ஸ் லிண்ட்லே.

மதுரையில் உள்ள காந்தி நினைவகத்தில் மார்க்ஸ் லிண்ட்லே அவர்களுடனான சந்திப்பும் நம்மாழ்வார் அய்யாவை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சூழலுக்கு ஏதுவாக தம் பணிகளை அமைத்துக்கொண்டு வாழ்வை சத்தியத்தை நோக்கி திசைதிருப்பி பயணித்துக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்களையும் கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெறுகின்றது.

நம்மில் ஏற்பட்ட மாறுதல்களை நம் சொந்தங்களுடன் பறிமாறிக்கொள்ளவும் மேலும் நம் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் தோழமைகள் அனைவரையும் அழைக்கின்றோம்.

ஆதிநிலம் - பனை – நூற்பு

தொடர்புக்கு 9787978700

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 30

$
0
0

[ 46 ]

நெடுவெளி வளைக்க விரிந்து மேலும் விரிந்து எனக்கிடந்த ஏழு பெரும்பாலை நிலங்களைக் கடந்து அர்ஜுனன் இருபத்தியாறு மாதங்களில் வாருணம் என்றழைக்கப்பட்ட அறியாத் தொல்நிலத்தை சென்றடைந்தான். வருணனின் நிலம் அது என்றன அவன் சென்றவழியில் கேட்டறிந்த கதைகள். மழைக்கலங்கல் நீரின் நிறமுடைய பிங்கலத்தைக் கடந்ததும் தன்னை அழைத்துவந்த பனிமலை வணிகர்களிடம் விடைபெற்றுக்கொண்டான். அவர்கள் “நன்று சூழ்க, வீரரே… அறியா நிலம் நோக்கி செல்கிறீர்கள். அங்கு அறிந்த தெய்வங்கள் துணை வரட்டும்” என வாழ்த்தி விடைகொடுத்தனர்.

முள்ளூற்று என்று பாலைநில மக்களின் மொழியில் அழைக்கப்பட்ட தொன்மையான சிற்றூரில் ஏழு நாட்கள் அவன் தங்கியிருந்தான். புழுதி ஓடும் நதி என பாலை வளைந்து கிடந்தது அப்பாதை. விண்வடிவத் தெய்வம் ஒன்று சாட்டையால் அறைந்து பூமி மார்பில் இட்ட குருதித் தழும்புபோல் இருந்தது அது. எங்கிருந்தோ எவரோ மறுகணம் வரக் காத்திருப்பதென ஒருமுறையும் எவரோ முந்தைய கணம் சென்று மறைந்தது என மறுமுறையும் தோன்றச்செய்யும் வெறுமைகொண்டிருந்தது.

ஏழு நாட்கள் அங்கிருந்த மதுவிடுதி ஒன்றின் வெளித்திண்ணையில் அமர்ந்து அப்பாதையையே நோக்கிக்கொண்டிருந்தான். பாதை என்பதே பெரும்கிளர்ச்சியை அளித்த இளமைக்காலத்தை எண்ணிக்கொண்டான். பின்னர் பாதைகள் அச்சத்தை அளிப்பவையாக மாறிவிட்டிருந்தன. அவற்றின் முடிவின்மை அளிக்கும் அச்சம். முடிவின்மை நோக்கி செல்லும் பாதை என்பது உருவாக்கும் பொருளின்மை குறித்த அச்சம்.

அங்கிருந்து எழுந்து மீண்டும் அஸ்தினபுரிக்கு திரும்பிவிடவேண்டும் என்று உள்ளம் விரும்பியது. உடனே கசப்புடன், அஸ்தினபுரிக்கு சென்று என்ன செய்வதென்று எண்ணிக்கொண்டான். அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குள் நுழையலாம். மஞ்சத்தில் புரளலாம். அன்னையின் கருப்பைக்குள் மீளலாம். அங்கிருந்து பார்த்திவப் பரமாணுவுக்கு குறுகிச் செல்லலாம். அங்கிருந்து மீண்டும் கடுவெளிக்கு விரிந்தெழலாம். இப்பாதையும் அங்குதான் செல்கிறது என்று எண்ணியபோது உரக்க நகைத்தான்.

நீண்ட சடைமுடியும் தோள்களில் சரிந்துகிடந்த சடைப்புரிகளும் பித்தெழுந்த விழிகளுமாக இருந்த அவனது நகைப்பு மதுக்கடைக்குள் இருந்த காப்பிரிநாட்டுத் தொலைவணிகர் மூவரை திரும்பிப்பார்க்க வைத்தது. பெரியஉதடுகளும் எருமைவிழிகளும் மின்னும் கருநிறமும் கொண்ட ஒரு வணிகன் வெளியே வந்து “புளித்த மது அருந்துகிறீர்களா, பாரதரே?” என்று கேட்டான். அர்ஜுனன் “ஆம்” என்று உள்ளே சென்று மதுவை வாங்கி அருந்தினான். அழுகல் மணத்துடன் எழுந்த ஏப்பத்தை சற்று உடல் உலுக்க குமட்டி வெளிவிட்டபடி மீண்டும் திண்ணைக்கு வந்து அமர்ந்தான்.

“அங்கு வெயிலின் அனலடிக்கிறதே? இங்குள்ள இருள் குளுமையாக இருக்கிறதே!” என்றான் இன்னொருவன். அவனை நோக்கி மறுமொழி எடுக்க எண்ணி சொல் நாவில் எழாது அர்ஜுனன் தலையசைத்தான். “இன்னும் சில நாட்களில் வடபுலத்திலிருந்து பீதர்நாட்டு வணிகர்கள் வருவார்கள். ஆயிரம் ஒட்டகங்களுக்கு மேல் அவர்களுடன் வரும். அது ஒரு நகரும் சிற்றூர். கூடாரங்களும் உணவும் நீரும் அவர்களிடம் இருக்கும். பாடகர்களும் பெண்களும்கூட இருப்பார்கள். அவர்களின் நாட்டிலிருந்து பாலையைக் கடந்து யவன நாட்டை அடைய அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும்” என்றான் ஒருவன்.

“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.

“ஆம், உண்மை” என்றான் காப்பிரிவணிகன். “அமர்ந்த இடத்திலிருந்து பொன் குவிப்பதைப் பற்றி கனவு காணும் இளவணிகன் எவனாவது உள்ளானா? தொலைவில் மேலும் தொலைவில் எங்கோ பொன் குவிந்துள்ளது என்றல்லவா அவன் எண்ணுகிறான்? தொடுவான் முட்டும் நெடும்பாதையைப்போல வணிகனை கிளர்ச்சியுறச் செய்வது எதுவுமில்லை. ஆம், பொன்கூட இல்லை” என்றார் முதியவர். காப்பிரி வணிகன் “உண்மைதான்” என்றான்.

முதிய வணிகன் மதுக்கோப்பையை வைத்துவிட்டு வாயை அழுந்தத் துடைத்தான். “வீரர்களின் வெற்றிக்கதைகளை சூதர்கள் பாடுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் பெயர்கள் சொல்லில் பதிந்து நீடிக்கின்றன. வணிகர்களை எவரும் பாடுவதில்லை. வணிகர்கள் பொன் கொடுத்தால்கூட அவர் புகழை பாடவேண்டுமென்று சூதர்கள் நினைப்பதில்லை. ஆனால், இளையோரே! நாம் காணும் இப்புவி என்பது வணிகர்களால் உருவாக்கப்பட்டது. ஆம், நாம் உருவாக்கியிருக்கிறோம் இதை.”

“ஒவ்வொரு முறையும் தன் மூதாதையர் வகுத்த எல்லையொன்றை மீறி ஒரு காலடி எடுத்து வைக்கும் வணிகன் விராட வடிவம் கொண்டு இப்புவியில் நிறைந்திருக்கும் மானுடத்தின் ஒரு புதிய தளிராக எழுகிறான். அவனில் அப்போது கூடும் தெய்வமே மானுடர்க்கு அருளும் தெய்வங்களில் முதன்மையானது. அதை இவ்வெளிய மக்கள் உணர்வதில்லை. பொருள்வயின் அலையும் வணிகன் பொருளையும் அடைவதில்லை, தோழரே. வணிகம் எனும் பேரின்பத்தை அறிந்தவனே அவ்வின்பநாட்ட விசையை பொருளாக மாற்றிக்கொள்கிறான்” என்றார் முதியவர். “நீர் என்ன சொல்கிறீர், வீரரே?” என்று அழுக்கான தோலாடை அணிந்து தலையில் மேலும் அழுக்கான தலையுறையுடன் தரையில் கால்மடித்து அமர்ந்திருந்த மதுக்கடை ஏவலன் அர்ஜுனனை நோக்கி சிரித்தபடி கேட்டான். மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி அவனை நோக்கிக்கொண்டு பேசாமல் இருந்தான் அர்ஜுனன். அவன் பேசப்போவதில்லை என்று உணர்ந்தபின் ஏவலன் விழி திருப்பிக்கொண்டான்.

“அவரும் எல்லை கடந்து செல்பவரே. அவரால் வணிகர்களை புரிந்துகொள்ள முடியும்” என்றான் மெல்லிய உடல்கொண்ட ஒருவன். முகத்தைப் பாராதவர்கள் அவனை சிறுவன் என்றே சொல்லிவிடுவார்கள். “வீரர் செய்வதும் வணிகமே. அவர்கள் வெல்வது பணமல்ல, புகழ்.” முதிய வணிகன் “புகழ் அல்ல, வெற்றி. தன்மீதான வெற்றி. அது அளிக்கும் மெய்மை” என்றார். அர்ஜுனன் மெல்ல அச்சூழலில் இருந்து நழுவி மீண்டும் பாதைமேல் படர்ந்த சித்தம் மட்டுமென்றானான்.

[ 47 ]

ஏழாவது நாள், தொலைவில் குருதி ஒற்றிஎடுத்த பஞ்சுத் திவலை போல செம்புகை எழுவதை மதுக்கடைக்காரன் கண்டான். உடல் அனல்பட்டதுபோல துடிக்க “வருகிறார்கள்! அதோ!” என்று கூவியபடி கொம்பு ஒன்றை எடுத்து கவிழ்த்துப் போடப்பட்ட மரத்தொட்டி மேல் ஏறிநின்று அவன் மும்முறை முழங்கியதும் அச்சிற்றூரிலிருந்து ஆண்களும் பெண்களும் இல்லங்களில் இருந்து புதரிலிருந்து சிறுபறவைகள் என கிளம்பி பாதையை நோக்கி கூச்சலிட்டபடி ஓடி வந்தனர்.

ஒவ்வொருவரும் தங்கள் கையில் பலவண்ணக் கொடிகளை எந்தியிருந்தனர். பச்சைக் கொடி உணவையும் ஓய்விடத்தையும் குறித்தது. நீலநிறக் கொடி உணவுடன் பெண்டிரும் உண்டென்பதை குறித்தது. நீலச்சிவப்புக் கொடி அங்கு சூதாட்டம் நிகழும் என்பதை காட்டியது. மஞ்சள்நிறக் கொடி குளியல்சேவை உண்டு என்று சொன்னது. செம்பச்சைநிறக் கொடி பொருள் மாற்று வணிகத்திற்கு அழைப்பு விடுத்தது. காற்றில் துடிதுடித்து அவை எழுந்து பறந்து அவ்வணிகக்குழு நோக்கி செல்லத் தவித்தன.

அர்ஜுனன் எழுந்து அங்கிருந்த முள்மரத்தின் அடியில் மார்பில் கைகளைக் கட்டியபடி நோக்கி நின்றான். வணிகர்குழுவில் முதன்மையாக குருதிநிறப் பெருங்கொடி ஒன்று பறந்தது. அதில் வாய்பிளந்து சுருண்டு பறக்கும் முதலைச்சிம்மம் துடித்தது. அதன் நா அனல்சுருளாக எழுந்திருக்க பெரிய உருண்டைவிழிகள் பசிகொண்டிருந்தன. “பீதர்கள்!” என்றான் ஒருவன். “பீதர்கள்! பீதர்கள்!” என்று குரல்கள் எழுந்தன. “பீதர்கள்” என்றபடி ஒருவன் குடில்களை நோக்கி ஓடினான்.

வணிகக்குழு மிக மெதுவாக உருவம் கொண்டு பெருகி வளர்ந்து அணுகுவதை அர்ஜுனன் நோக்கி நின்றான். அவர்களுக்கு மேல் புழுதி எழுந்து செந்நிறக் குடைபோல் நின்றது. அனல் என படபடத்த கொடிக்குப் பின்னால் படைக்கலங்களை ஏந்தியவர்கள் சீர்நடையிட்டு வந்தனர். இரும்புப்பட்டைகள் தைக்கப்பட்ட தோற்கவசங்களும் மெழுகிட்டு துலக்கப்பட்ட தோல் காலணிகளும் தீட்டப்பட்ட இடைப்பட்டைகளும் மின்னின. பாதரசக் குமிழென ஒளிவிட்டன தலைக்கவசங்கள். வேல்முனைகளும் வாள்முனைகளும் வெயிலில் நீர் அலைவளைவுகள் என ஒளி வீசின.

இரு நிரைகளாக ஒட்டகைகள் இரட்டைப்பொதி சுமந்து நீரில் ஆடும் கலங்களைப்போல அசைந்து வந்தன. ஒட்டகைகளின் நிரைக்கு இருபுறமும் படைக்கலங்களை ஏந்திய வீரர்கள் காவல் வர தொடர்ந்து செந்நிறமான தலைப்பை அணிந்த பீதவணிகர்களும் நடந்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஏவலர்களும் சுமையர்களும் நான்கு நிரைகளாக வந்தனர்.

ஒட்டகைகளின் மீது இருபுறமும் தொங்கும்படியாக பொதிகள் ஏற்றப்பட்டிருந்தன. தோலுறைகளால் பொதியப்பட்டவை. அவற்றுக்குள் பட்டும் புல்லேட்டுக் கட்டுகளும் இருக்கும் என அவன் அறிந்திருந்தான். தேய்ந்த கூழாங்கற்பற்கள் தெரிய தாடையை தொங்கவிட்டு அசைபோட்டபடியும், கடிவாளத்தை மென்றபடியும், அண்ணாந்து கழுத்தை வளைத்து எடை மிக்க குளம்புகளை எறிந்து எறிந்து எடுப்பவை மணல் எழுந்து தெறிக்க வைத்து ஒட்டகைகள் அணுகின.

பீதவணிகர்களில் பெரும்பாலானவர்கள் குருதிநிற ஆடை அணிந்து உயரமான தோல் காலணிகள் அணிந்திருந்தனர். அவர்களின் செந்நிற ஆடைகள் பாலைக்காற்றில் படபடக்க அனல் எழுந்து தழலாடுவதுபோல அவர்கள் நிரை நெளிந்தது. தொடர்ந்து வந்த அத்திரிகளில் முதிய பெருவணிகர்கள் அமர்ந்திருந்தனர். பொன்பட்டுநூல் பின்னிய தலையணிகளை அணிந்திருந்தனர். அவர்களுக்கு இருபுறமும் நாணேற்றப்பட்ட விற்களுடனும் அம்புகள் நிறைந்த தூளிகளுடனும் வில்லவர்கள் வந்தார்கள். தொடர்ந்து காவலரால் சூழப்பட்ட அத்திரிகள் உணவுப்பொதிகளையும் நீர் நிறைந்த தோற்பைகளையும் சுமந்தபடி வந்தன. இறுதியாக மீண்டும் வில்லவர்கள் வந்தனர். அவர்கள் தொலைவை தொடு பெருவிற்களும் நீண்ட அம்புகளும் கொண்டிருந்தனர்.

கொடியுடன் வந்த முதல் காவலன் விடுதிக்கு முன்பிருந்த முற்றத்தை அடைந்தபோதும் பின்நிரை வந்துகொண்டிருந்தது. பள்ளத்தில் இறங்கித்தேங்கும் நீரோடைபோல அந்தப் பெருநிரை முற்றத்தில் வளைந்து சுழலத்தொடங்கியது. பெருவணிகர்கள் தனியாகப் பிரிந்து அவர்களை ஓடிச்சென்று வரவேற்ற அவ்வூர் மக்களை விழிசுருங்கச் சிரித்தபடி எதிர்கொண்டனர். கைகளை விரித்து பெண்களை தழுவிக்கொண்டார்கள். ஊரார் கொடிகளைத் தாழ்த்தி கைகளைத் தூக்கி தங்கள் மொழியில் உரக்க வாழ்த்துரைத்தனர்.

அத்திரிகளிலிருந்து பெருவணிகர்கள் இறங்கியதும் அவர்களின் கால்களைத் தொட்டு சென்னி சூடி தங்கள் இல்லங்களுக்கு வரும்படி அழைத்தனர். கூச்சல்களும் சிரிப்பொலிகளும் வாழ்த்தொலிகளும் நிறைந்திருந்தன. சிறு குழந்தைகள் நடுவே கூச்சலிட்டபடி ஓடி வணிகர்களின் ஆடைகளைத் தொட்டு பணம் கேட்டன. அவர்கள் செம்புநாணயங்களை அவர்களுக்கு அளித்தனர். உணவைச் சூழ்ந்து கூச்சலிடும் காகங்கள்போல குழந்தைகள் அவர்களை மொய்த்தன.

காவலர்கள் படைக்கலங்களைத் தாழ்த்திவிட்டு கவசங்களையும் காலணிகளையும் கழற்றினர். சிலர் களைப்புடன் அப்படியே அமர்ந்து கைகளைத் தூக்கி சோம்பல் அகற்றினர். ஏவலர்கள் ஒட்டகைகளை கடிவாளம் அகற்றி விட்டுவிட்டு அத்திரிகளை நாடாவைப்பற்றி முதுகில் கையால் அடித்து அதட்டி அழைத்துச் சென்றனர். ஒட்டகைகள் கால்மடித்து விழுவதுபோல நிலத்தில் நெஞ்சுபட அமர்ந்து ஒருக்களித்துக்கொண்டன. அத்திரிகள் கனைத்து தங்கள் தோழர்களை அழைத்தன. பொதி அகன்றதும் முதுகை நீட்டி இளைப்பாறலுடன் சாணியுருளைகளை உதிர்த்தன. பச்சைக்குழம்பாக சிறுநீர் கழித்து வால்சுழற்றி துளிவிசிறின.

ஏவலர் பொதிகளைச் சரித்து இறக்கி இழுத்துச்சென்று ஒன்றுடன் ஒன்று சேர்த்து சிறு குன்றுகள்போல அடுக்கினர். ஒட்டகைகள் நாணொலி எழுப்புவதுபோல ஒலி எழுப்பின. தும்மல் ஓசையிட்டபடி தலைகளை குலுக்கின. அருகிலிருந்து ஓர் ஒட்டகை கண்களை நோக்கியபோது விழி திறந்தபடி அது துயிலில் இருப்பதுபோல் அர்ஜுனனுக்குத் தோன்றியது. அவற்றின் குளம்புகளில் லாடங்கள் தேய்ந்திருந்தன. குறியவாலை பட் பட் என அவை அறைந்து அவ்வோசையால் பேசிக்கொண்டன.

அத்திரிகளை நீண்ட மரத்தொட்டிகளில் ஊற்றப்பட்ட நீரை அருந்துவதற்காக கொண்டுசென்றனர். கழுத்து மணி குலுங்க ஆவலுடன் நீரருகே சென்று மூழ்கி மூக்கு மயிர்களில் துளிகள் சிதற தலைதூக்கி செவிகளை அடித்தபடி சிலுப்பிக்கொண்டு அவை நீரருந்தின. நீரின் தண்மை அவற்றின் உடலின் அனலை அவிப்பதை வால் சுழலும் துள்ளலிலிருந்து அறியமுடிந்தது.

ஒட்டகைகள் நீருக்கென தவிப்பெதையும் வெளிப்படுத்தவில்லை. ஓர் ஒட்டகை படுத்தபடியே மல்லாந்து நான்கு கால்களையும் மேலே தூக்கி உதைத்து கனைத்தது. பிற ஒட்டகைகள் ஆர்வமில்லாது அதை நோக்கின. அவற்றின் கண்ணிமைகள் பாதி மூடியிருந்தன. தேர்ந்த கைகளுடன் ஏவலர்கள் பொதிகளை அமைத்து அவற்றின் மேல் தோலுறையிட்டு மூடி இறுகக்கட்டினர். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட புளித்த மாவுக்கள்ளை மரக்குடுவைகளில் வாங்கி அருந்தினர்.

நீரை வாயிலெடுத்ததும் விழுங்காமல் வாய்க்குள்ளேயே பலமுறை சுழற்றி அவற்றின் குளுமையை உணர்ந்து துளித்துளியாக விழுங்கியபின் மீண்டும் பணியாற்றி போதுமான இடைவெளிவிட்டு இன்னொரு மிடறை அருந்தினர். அனைத்துப் பொதிகளையும் இறக்கிவைத்து அனைத்து அத்திரிகளையும் நீர்காட்டி முடித்தபிறகுதான் அவர்கள் புளித்த மதுவை அருந்தி முடித்திருந்தனர். அதன் பின்னரே ஒட்டகைகளுக்கு நீர் அளிக்கப்பட்டது.

நீரருந்தும்பொருட்டு எழுந்து தொட்டிகளை நோக்கிச் செல்ல ஒட்டகைகள் விரும்பவில்லை. எனவே மூங்கில்களில் நீர்த்தொட்டிகளை கயிற்றால் கட்டி இருவர் இருவராக தூக்கிக்கொண்டு வந்து அவற்றின் முன் வைத்து அவற்றை நீரருந்தச் செய்தனர். ஒட்டகைகளும் ஏவலரும் அத்திரிகளும் காவல்வீரரும் புழுதியால் மூடப்பட்டிருந்தனர். அம்முற்றத்தில் வந்து தங்கள் ஆடைகளை உதறிக்கொண்டபோது எழுந்த புழுதியே அவர்களை மறைக்கும் திரையாக மாறியது.

மதுவிடுதியின் அனைத்து இருக்கைகளிலும் தரையிலும் மரப்பெட்டிகளிலும் வணிகர்கள் செறிந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் பேச்சொலிகளும் சிரிப்போசையும் வாயில் வழியாகத் தெறித்தன. குள்ளனான மதுக்கடை ஏவலன் வெளியே வந்து குடில்களை நோக்கி ஓடினான். நான்குபேர் பெரிய மதுப்பீப்பாயை உருட்டியபடி உள்ளே சென்றார்கள். உள்ளிருந்து இரு வணிகர் சிரித்தபடி ஓடிவந்து அதை தாங்களும் சேர்ந்து உருட்டிச்சென்றனர்.

ஏவலரும் காவல் வீரர்களும் மதுவிடுதிக்குள் நுழைய ஒப்புதல் இருக்கவில்லை. அவர்கள் பொதிகளைச் சூழ்ந்து முற்றத்திலேயே நீள்வட்டமாக அமர்ந்து கொண்டனர். கால்களை வளைத்து மடிக்காமல் முழங்காலை ஊன்றி குதிகால் மேல் பின்பக்கத்தை வைத்து அமரும் அவர்களின் முறையும் பெரிய கைகள் கொண்ட உடையும் அவர்களை பறவைகள் போலக் காட்டின.

அவர்களின் உடல்கள் மிகச் சிறியவையாகவும் தோள்கள் முன்நோக்கி வளைந்து குறுகியதாகவும் இருந்தன. உடலோடு ஒப்பிடுகையில் அவர்களின் கைகள் மிகப் பெரியவை என்பதை அர்ஜுனன் கண்டான். கடும் உழைப்பின் விளைவாக அவை தோல் காய்ந்து மரத்தாலானவைபோல் தோன்றின. தொடர் அனல் காற்றால் அரிக்கப்பட்ட சுண்ணப்பாறைகள்போல மஞ்சள் முகங்கள் சுருக்கங்கள் மண்டி நிறம் கன்றிப்போயிருந்தன. கண்கள் சேற்று வெடிப்புக்குள் தெரியும் நீர்த்துளிகள்போல. வாய்கள் கத்தியால் கீறப்பட்ட புண்கள்போல.

குறுவில்லை கையால் மீட்டியது போன்ற விரைவொலியுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பூனைகளின் பூசல்போல மறுகணம் தோன்றியது. விடுதிக்காவலன் வந்து அர்ஜுனனை வணங்கி “பெருவணிகர் தங்களைப் பார்க்க விரும்புகிறார். தாங்கள் விரும்பினால் அவரிடம் வில்லவராக சேர்ந்துகொள்ளலாம்” என்றான். “நன்று” என்றபடி அர்ஜுனன் அவனுடன் சென்றான்.

விடுதிக்குப் பின்புறம் பிறைவடிவில் இருந்த மரப்பட்டைக்கூரைகொண்ட சிற்றில்களில் பெருவணிகர் பலர் உடைகளைக் கழற்றி இளைப்பாறத் தொடங்கியிருந்தனர். உடலில் படிந்த கூரிய மணல்பருக்களை அகற்றும்பொருட்டு பெரிய தோல் துருத்தியால் காற்றை விசையுடன் வீசி அவர்களின் உடலை தூய்மை செய்தபின் பெரியமரக்குடைவுக் கலங்களில் வெந்நீர் கொண்டுவந்து அதில் துணியை முக்கி அவர்களின் உடலை மெல்ல ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தனர் பெண்கள். அதிலிடப்பட்ட நறுமணத் தைலத்தின் ஆவி அங்கே சூழ்ந்திருந்தது. உடலெங்கும் பரவியிருந்த தோல்வெடிப்புகளில் நீர் பட்டபோது வணிகர்கள் முனகினர். சிலர் அப்பெண்களை கையால் அடித்துத் தள்ளினர்.

அவர்களின் ஆடைகளை கழிகளில் தொங்கவிட்டு மென்மையான குச்சிகளால் அடித்தும் தூரிகைகளால் வருடியும் மணலையும் அழுக்கையும் போக்கிக்கொண்டிருந்தனர் இளைஞர். உடல் தூய்மை செய்துகொண்டிருக்கும்போதே ஒரு கையில் மதுக்கிண்ணத்துடன் மெல்ல விழிசொக்கி உடல் தளர்ந்து இளைப்பாறினார்கள் வணிகர்கள் சிலர். சிலர் ஏனென்றறியாமல் அழுதுகொண்டிருந்தனர்.

அரைவட்ட வடிவ குடில்நிரையாலான ஊரின் மையமாக இருந்த பெரிய குடிலின் முன் விரிபலகையில் பீதர்குலத்து முதுவணிகர் படுத்திருந்தார். அவருடைய நீண்ட கூந்தல் பெண்களின் பின்னல் போல இடையையும் தாண்டி பின்னி கரிய நாகம்போல வளைந்து கிடந்தது. மெழுகு பூசி திரிக்கப்பட்ட அதன் புரிகளை கீழிருந்து ஒரு பெண் பிரித்துக்கொண்டிருந்தாள். முகவாயிலிருந்து மட்டும் ஓரிரு மயிர்கள் நீண்டு நின்ற தாடியும் கீறி நீட்டப்பட்ட காதுகளும் சுருக்கங்களுக்குள் புதைந்து மறைந்த சிறிய விழிகளும் கொண்டிருந்தார்.

இடையில் தோலாடை மட்டும் அணிந்து படுத்திருக்க அவர் உடலில் துருத்தியால் ஊதப்பட்ட காற்றுடன் வெந்நீரைக் கலந்து மென்துளிகளாக்கி புகைபோல பாய்ச்சிக்கொண்டிருந்தனர்  இரு பெண்கள். ஒரு சிறு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த அவரது காலை இரு பெண்கள் வெந்நீரால் கழுவிக்கொண்டிருந்தனர். ஒருத்தி மென்மையான கல்லால் காலை உரசிக் கழுவ இன்னொருத்தி சிறிய மர ஊசியால் நகங்களுக்கிடையே இருந்த மணலை எடுத்துக்கொண்டிருந்தாள். அவர் கைகளையும் இருவர் கழுவி நகங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர்.

பெருவணிகர் அருகே நின்றிருந்த இரு கணக்கர்கள் புல்லால் ஆன பட்டுச் சுருளை விரித்து அவற்றிலிருந்து அவரது மொழியில் எதையோ வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க அவர் ஒவ்வொரு சொற்றொடருக்கும் தலையசைத்து ஒப்பு அளித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். அர்ஜுனன் அருகே சென்றதும் விடுதித்தலைவர் அவனைப் பற்றி அவரிடம் சொன்னார். பீதவணிகரின் முதிய விழிகள் ஆர்வமற்றவைபோல அர்ஜுனனை பார்த்தன. இல்லையோ என்பது போன்று தெரிந்த உதடுகள் மெல்ல அசைய செம்மொழியில் “இமயமலையைச் சார்ந்தவரா?” என்றார்.

“அங்கிருந்தேன். ஆனால் பாரதவர்ஷத்தின் வடபுலத்து அரசகுடியினன். க்ஷத்ரியன்” என்றான் அர்ஜுனன். அவரது கண்கள் சற்று சுருங்கின. “உங்கள் பெயரென்ன? அதையல்லவா முதலில் சொல்ல வேண்டும்?” என்றார். “எங்கள் ஊரின் வரிசை வேறு வகையில்” என்றபின் அர்ஜுனன் “என் பெயர் விரஜன்” என்றான். அவர் சிறிய வாய் மேலும் குவிய “நன்று” என்றபடி “நீர் வில்லவர் என்பதை கைகள் காட்டுகின்றன” என்றார்.

அர்ஜுனன் தலையசைத்தான். அவர் திரும்பி ஒரு வீரனைப் பார்த்து அவரது மொழியில் அவனிடம் ஒரு வில்லை கொடுக்கும்படி சொன்னார். அவன் தன் கையிலிருந்த வில்லையும் அம்பறாத்தூணியையும் கொடுத்தான். அர்ஜுனன் அவற்றை வாங்கி கையில் அணிந்து தோளில் எடுத்துக்கொண்டான். “உமது திறமைகளில் ஒன்றைக் காட்டுக!” என்றார்.

அர்ஜுனன் திரும்பி தொலைவில் ஒரு குடிலுக்குள் இருந்து எழுந்துகொண்டிருந்த புகைச்சுருளைப் பார்த்து தன் அம்பு ஒன்றை எய்தான். வெண்பட்டாலான மரம்போல எழுந்து விரிந்து கொண்டிருந்த புகையை அம்பு இரண்டென கிழித்தது. பெருவணிகர் வியப்புடன் எழுந்து அதைப் பார்த்தார். அந்த அம்பு கீழே விழுவதற்குள் அடுத்த அம்பு அதைத் தைத்து மேலே தூக்கியது. மூன்றாவது அதை மேலும் தூக்கியது. தொடர் அம்புகளால் முதல் அம்பு வளைந்து வானத்தில் எழுந்தது.

கீழிருந்து மேலெழுவதுபோல் சென்ற அம்புகளால் அந்த முதல் அம்பு திருப்பி உந்தப்பட்டு அர்ஜுனனை நோக்கி வந்தது. அவன் அதைப் பற்றி மீண்டும் அம்பறாத்தூணிக்குள் போட்டான். பிற அம்புகள் வரிசையாக மண்ணில் தைத்து சாய்ந்து நின்று அசைந்தன. அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து அந்த அம்புகள் அனைத்தும் நேர் கோட்டில் ஒரே கோணத்தில் சாய்ந்து நாணல்கள் போல நின்று பீலி சிலிர்த்தன.

KIRATHAM_EPI_30

சொல்லழிந்து அமர்ந்திருந்த பெருவணிகர் கைகளை இழுத்துக்கொண்டு நீர்க்குடுவைகள் சரிய எழுந்து பதறும் குரலில் “வீரரே, நீங்கள் அஸ்தினபுரியின் விஜயரா?” என்றார். “ஆம், வேறு எவருமில்லை. கர்ணனல்ல. பரசுராமனல்ல. அப்படியென்றால் நீங்கள் அர்ஜுனனேதான்.” அர்ஜுனன் “ஆம்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!

$
0
0

 

SR

 

 

 

அன்புள்ள ஜெ.,

 

நமது முகங்கள் வாசித்தேன்

நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல. அது ஒரு விளைவு. சில நகரப்பள்ளி-கல்லூரிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற எல்லா கல்விநிலையங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உருவகமாக, சில இடங்களில் உண்மையாகவே ஒரு தடுப்புச்சுவர் போடப்படுகிறது, அதை ஒழித்தாலொழிய இதை ஒழிக்க முடியாது.

ஆணும் பெண்ணும் ஒரே இருக்கையில் அமரக்கூடாது, ஆண் ஏறும் படிக்கட்டில் பெண் ஏறக்கூடாது, ஆண்விடுதி நோக்கி சாளரம் திறக்கும் பெண்விடுதி அறைகளில் ஜன்னலை மூடித்தான் வைக்கவேண்டும், இப்படி பல விதிகள் – என்ன தீட்டு படுமோ தெரியவில்லை. ஆணும் பெண்ணும் பேசி பிடிபட்டால் அம்மாணவர்களின் நடத்தையை வசைபாடி, பெற்றோரை கூட்டி வரச்சொல்லி, “என்ன புள்ள வளத்து வெச்சிருக்கீங்க, ஒழுக்கங்கெட்டத்தனமா,” என்று அறிவித்து, அபராதம் கட்டவைத்து, கல்லூரியில் ஒழுக்கம் நிலைநாட்டும் வரை விடமாட்டார்கள் நம் கல்வித்தந்தையர்

இதில் “ஒழுக்கம்” என்பதன் பொருள் – “வேற்று சாதி ஆண்மகனை காதலித்து விடாதே,” அவ்வளவே. சமூகத்தில் பலர், தங்கள் மகள் பொதுவெளியில் சாதாரணமாக சந்திக்கும் வன்முறைக்கு இணையான (அல்லது அதற்கும் மேலான) ஒரு அசம்பாவிதமாகவே இந்த “ஒழுக்கக்கேட்டை” பார்க்கிறார்கள். திருமணமாகாத ஒரு சராசரி தமிழ்ப்பெண் எதிர்நோக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு இந்த புள்ளியில் தொடங்கி இதிலேயே முழுமைபெறுவதாக எனக்குத் தோன்றுகிறது. என்னதான் படித்தாலும், வேலை பார்த்தாலும், பயணம் செய்தாலும் அவள் போய்ச்சேரும் புள்ளி என்பது “நல்ல” மாப்பிளையுடன் திருமணம், மனை, குழந்தைகள் – இந்த பாடம் தொடர்ந்து அவள் காதுகளில் ஓதப்படுகிறது. அதற்கு வழிவகுக்காத எதுவும் அவளுக்கு அவசியமில்லை; அது ஆதரிக்கப்படுவதில்லை.

இந்த எண்ணம் இல்லாமல் அன்பும், அரவணைப்பும் மட்டுமே பெற்றோரிடம் மேலோங்கினாலும், அவள் பாதுகாப்பற்றவள், பாதுகாப்பாக இருக்க வேண்டும், எந்த வம்பையும் நாடாமல் இருந்தால் நல்லது என்று எப்போதும் எச்சரிக்கை சூழலிலேயே அந்தப்பெண் சிறுவயது முதல் வளர்க்கப்படுகிறாள். “ஆறு மணி ஆகிவிட்டது, வெளியே வராதே,” “அங்கெல்லாம் தனியாக போகாதே” என்று அவள் பாதுகாப்பை கருதி போடப்படும் கட்டுப்பாடுகளின் பலனாக சில நேரங்களும், சில இடங்களும், அவளுக்கற்ற ஒன்றாக அடையாளம் கொள்கிறது. அவள் உடல்மொழி, அவள் இயங்கக்கூடிய வெளி, அவள் சிந்தனைக்களம் என்று எல்லாமே போன்சாய் மரங்கள் போல குறுக்கப்படுகின்றன.

இதன் விளைவுகள் இரண்டு. ஒன்று, பொது இடங்களில் ஒப்பீட்டளவில் அதிகம் பெண்கள் காணப்படுவதில்லை. இதனாலேயே அது பெண்களுக்கான வெளி அல்ல என்று மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. இரண்டு, இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால், பொதுவெளிகளெல்லாம் ஆண்களுக்குச் சொந்தம், பெண்கள் அங்கு அந்நியர்கள் என்ற எண்ணம் பொதுவாக ஆண்மனதில் வேரூன்றுகிறது. அப்படி அவள் அங்கு வந்தாலும், அந்த இடத்தை போல, அவன் அருந்தக்கூடிய மதுவைப்போல, அவனை மகிழ்விக்கவே படைக்கப்பட்டு அவள் அங்கு வந்ததாக எண்ணிக்கொள்கிறான். அவள் அங்கு இருப்பதையே ஒரு மீறலாக அவன் மனம் கணக்கிடுகிறது.

பெண் ஒரு மனிதி, மனிதர்கள் மற்றவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தங்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமே சில செயல்களை செய்யக்கூடும் என்ற புரிதல், அப்படிப்பட்டவன் மனதில் இருப்பதாக தெரியவில்லை. அவளது விடுதலையுணர்வு அவனை சீண்டுகின்றது. நீங்கள் சொல்வது போல அவன் தாழ்வு மனப்பான்மை நிறைந்தவன்; அவளைச் சீண்டி தன்னை அந்த இடத்தில் தாட்டான் குரங்காக தனக்கே நிறுவ முயல்கிறான். பொதுவெளியில் ஆண்துணை இல்லாமல் வரக்கூடிய பெண்களை ஒழுக்கம் சார்ந்து விமர்சிப்பதும், அவர்களின் நடத்தையை பற்றி மனதளவிலாவது ஒரு சித்திரம் கொள்வதும் நம் சமூகத்தில் மிக இயல்பான ஒன்று, அதுவும் தாழ்வுமனப்பான்மையுடன் சம்பந்தம் உடையது தான். இந்த மனத்திரிபுகளை குணப்படுத்தாமல் குற்றாலத் தடுப்புச்சுவரை நீக்கமுடியாது.

ஆணுக்கு இந்த தாழ்வுமனப்பான்மை இருக்கும் வரை பெண் பாலியல் துன்புறுத்தலை பற்றியோ வன்புணர்வை பற்றியோ உயிரை பற்றியோ பயம் இல்லாமல் இயல்பாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் என் பார்வையில், பெண் அந்த பயத்தை மீறி அவள் அளவில் அவள் முழுமை பெறுவது முக்கியமான, சமரசம் செய்யக்கூடாத ஒன்று. அது ஒரு உரிமை, ஒரு கடமையும் கூட.

மதுரையை சுற்றியுள்ள மலைகளுக்குச் செல்ல எனக்குப் பிடிக்கும். அந்த மலைகளின் அமைதியை தேடியே அங்கு செல்வேன், பெரும்பாலும் வீட்டுக்குத் தெரியாமல். தனியாக. பகலில் சிறு குழுக்களாக ஆண்கள் அமர்ந்து சீட்டாடுவதும், சில நேரங்களில் மது அருந்துவதும், போதை பொருட்கள் உட்கொள்வதுமாக அங்கே காண முடியும். பெரும்பாலும் எதுவும் நடந்ததில்லை என்றாலும், ஒரு ஓரக்கண் பார்வையை உணர்ந்தபடி மட்டுமே அங்கு உலாவ முடியும். இயல்பாக இருக்க முடியாது. ஓரிருமுறை கேள்விகள் வரும் – தனியா வந்திருக்கியா? லவ் பைலியரா? படம் எடுக்கப்போறீங்களா? என்னா ரேட்டு?

கல்லூரி படிக்கும் போது பயமே இல்லாமல் வாராவாரம் தனியாக மலைகளை நாடிச்செல்வேன். அந்த வயதில் அக்குறும்பயணங்களின் வழியே, அந்தத் தனிமையின் வழியே, அம்மலைகளின் வழியே, நான் அடைந்தவை ஏராளம். ஒரு மழைநாளில் மாடாக்குளம் கபாலிமலை மேல் நின்று காலுக்கடியில் மேகங்களை கண்டேன். சமண குகைகளும் மரங்களும் மலைகளும் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று எண்ணி விளையாடுவேன். மலை மேல் அமர்ந்து இசைகேட்பது, ஒருமலை மேலிருந்து இன்னொரு மலையை பார்ப்பது எல்லாம் பேரனுபவங்கள். நண்பர்கள் ஓரிருவரோடு சேர்ந்து சென்று மலைப்படிகளில் அமர்ந்து கதை பேசுவோம். நான் அந்த மலைகளிடம் கற்றுக்கொண்டது அதிகம். அந்தப்பாடங்களை கற்காமல் போனவர்களை நினைத்தால் ஒருவித அனுதாபம் கலந்த வியப்பு வருகிறது, அதில் என் சகவயது பெண்கள் நிறைய.

இப்போது நினைத்தால் அதிசயமாக இருக்கிறது, அந்நாட்களில் எனக்கு பெரும்பாலும் பயம் இல்லை. ஆனால் காலப்போக்கில் உடலில் எச்சரிக்கை உணர்வும் பயமும் எப்படியோ புகுந்துவிடுகிறது. புகட்டப்படுகிறது. இந்தியாவிற்குள் தனியாகவோ, ஓரிரு தோழிகளுடனோ பயணங்கள் மேற்கொள்ளும் போது பல எச்சரிக்கை உணர்வுகள். கையில் இருக்கும் காசை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்; அந்த ஊரில் தெரிந்தவர்களின் தொலைபேசி எண்களை கைவசம் வைத்த்துக்கொள்ள வேண்டும்; ஒரு நண்பரிடம் எங்கு இருக்கிறோம் என்று தொடர்ந்து ‘அப்டேட்’ செய்துகொண்டே செல்லவேண்டும்; கைபேசியில் ‘சார்ஜ்’ தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; டாக்சி, கார் எண்களை யாருக்காவது வாட்ஸாப்பில் அனுப்பவேண்டும் என்று தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

தனியாக பயணம் செய்தால், குறிப்பாக நகரங்களை தாண்டி எங்கு சென்றாலும், நாம் அணிந்திருக்கக்கூடிய உடை அந்த சூழலுக்கு ஏற்றதா என்று என்ன பெண்ணிய சிந்தனை வாசித்திருந்தாலும் ஒரு நிமிடம் மனம் யோசிக்கும். தங்கும் விடுதி அறைகளில் ஒழித்து வைக்கப்பட்ட காமரா இருக்குமோ என்று கண் தேடும். வட இந்தியா, தென்னிந்தியா என்று பாரபட்சமே இல்லாமல் தனியாக பயணம் செய்தாலோ, தோழியோடு இணைந்து பயணம் மேற்கொண்டாலோ, “தனியாகவா?” என்ற கேள்வி வரும்போது மனம் எச்சரிக்கை அடைகிறது. வெளிநாட்டு பயணங்களில் இந்த வகையான பயம் இருப்பதில்லை – திருட்டு பயம் உண்டு, ஆனால் அது உயிர் பயம் பெரும்பாலும் இருப்பதில்லை. மெல்ல மெல்ல அந்த பயத்தை ஓரளவாவது போக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் அந்த பயம் பயணங்களின் கட்டற்ற விடுதலையுணர்வுக்கு முதல் எதிரி அல்லவா?

கடற்கரையையோ அருவியையோ கண்டவுடன் இறங்கி குளித்து குதூகலிக்க கோருவது மனித இயல்பு. பெண்கள் அந்த இயற்ககை உணர்ச்சியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி, கண்ணுக்குப்படாத ஏதேதோ கண்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள விழைவதை நான் சென்ற நீர்நிலைகளில் எல்லாம் கண்டுள்ளேன் (குடும்பத்தோடு பெருங்குழுவாக செல்லும்போது மட்டும் விதிவிலக்கு). என் அம்மாவிடம் அந்த இயல்பை நான் பார்த்துள்ளேன். கடலில் இறங்கும் போது புடவையை கணுக்கால் வரை மட்டுமே தூக்கி அலைவிளும்பில் நிற்பார்கள், பிறகு குதூகலம் கூட முன்னுக்கு வந்து முட்டிவரை புடவையை தூக்கிவிட்டுக்கொண்டு அலைவர ‘ஊ’ என்று கத்துவார்கள், இரண்டு நிமிடங்களில் ஏதோ எல்லையை மீறியதாக உணர்ந்து பின்வாங்கி புடவையை இறக்கிவிட்டுக்கொண்டு, “ஆடினது போதும், வா,” என்று உச்சுக்கொட்டி கூட்டிச்செல்வார்கள்.

நான் இன்று அம்மாவிடமிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன், இருந்தாலும் எங்களுக்குள் இருக்கும் இடைவெளி கூடவில்லை, குறைந்துவிட்டது. இப்போது நான் காணும் மலைகளையும் அருவிகளும் நகரங்களையும் பேருந்துகளையும் என் அம்மா என் கண்களின் மூலம் காண்கிறாள். என் அனுபவங்களை அவள் வாழ்கிறாள், அவள் வாழ்வதை நான் வாழ்கிறேன். அவர்களது தலைமுறை எனக்கு ஈன்ற பயத்தையும் ஐயத்தையும் தாண்டிச்செல்ல நான் முயற்சித்துக்கொண்டும் இருக்கிறேன்.

உண்மையில் நான் சென்ற பயணங்களில் மக்கள் பெரும்பாலானோர் அன்பானவர்கள் என்ற எண்ணமே வலுத்துள்ளது. ஓரிரு கசப்பான அனுபவங்களினால் எச்சரிக்கை எண்ணம் இருக்கத்தான் செய்கிறது, இருந்தாலும் பயணம் தேவைப்படுகிறது. “ஜாக்கிரதை, பார்த்துப்போ, போன் பண்ணு” என்று எல்லா எச்சரிக்கைகளை சொன்னாலும் இப்போது என் பெற்றோருக்கு எனக்கு பயணங்களில் கிடைப்பது என்ன என்று புரிந்துள்ளது, ஆத்மார்த்தமாக அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் எச்சரிக்கை உணர்வு இருக்கத்தான் செய்யும், அது போக நம் சமூகத்தில் உள்ள பல தடுப்புச்சுவர்கள் முதலில் இடிந்துடைய வேண்டும். என் தலைமுறையில் நடந்தால் நல்லது.

சுசித்ரா ராமச்சந்திரன்

 

கொற்றவையின் தொன்மங்கள் சுசித்ரா ராமச்சந்திரன்

தாயார் பாதமும் அறமும் சுசித்ரா ராமச்சந்திரன்

வெள்ளையானையும் கொற்றவையும் சுசித்ரா ராமச்சந்திரன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்தியாமீதான ஏளனம் -கடிதம்

$
0
0

Madhavan_Elango

 

அன்பு ஜெயமோகன்

‘இந்தியா குறித்த ஏளனம்..’ கடிதத்தைப் பார்த்தேன். பிரகாஷ் எந்த நாட்டில் வசிக்கிறார் என்று தெரியவில்லை. ஐரோப்பிய பின்னணியிலிருந்து என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் கூறியதில் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், சீனர்-ஜப்பானியர்களைக் குறித்த பார்வை எனக்கு சரியெனத் தோன்றவில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்தான். இவர்கள் நல்ல வெளிநாட்டுக்காரன் கெட்ட வெளிநாட்டுக்காரன் என்றெல்லாம் பார்ப்பதாய்த் தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பார்த்தாலும் அதற்குக் காரணம் சீனர்கள் நடந்துகொள்ளும் விதம் காரணமாக இருக்கலாமே ஒழிய, பிறிதொரு காரணம் இருப்பதாய்த் தெரியவில்லை.

மேலும், இந்திய உணவைப் பார்க்கும்போது அவர்கள் அருவெறுப்படைவது பற்றி எழுதியிருந்தார். அதை நான் என்னுடைய அனுபவத்திலிருந்து முற்றிலும் மறுக்கிறேன். எனக்கு உள்ளூர் நண்பர்கள் அதிகம். முதல் முறையாக இந்திய உணவை சுவைப்பதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள். அதற்கு காரணம் இந்திய உணவு சற்று காரசாரமாக இருக்கும் என்று அவர்கள் அறிந்து வைத்திருப்பதால்தானே தவிர வேறெந்த அருவருப்பு உணர்வும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுவும் வாசனைத் திரவியங்களைத் தெளித்துக்கொள்வதையெல்லாம் நான் நிச்சயமாகக் கண்டதில்லை. எனக்கே முதன்முதலில் ஐரோப்பிய உணவுகளை பார்ப்பதற்கு, “என்னடா சாப்பாடு இது?” என்று தோன்றும். ஆரம்ப நாட்களில் விருந்துக்குச் செல்லும்போதெல்லாம் என் மனைவியிடம் வீட்டுக்கு வந்து இன்னொருமுறை சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறேன். இதெல்லாம் உணவு பழக்கப்படும் வரைதான்.

என் அநுபவத்தில் ஒருமுறை இந்திய உணவை சுவைத்தவர்கள் யாரும் மறுமுறை அப்படி முகம் சுழிப்பதில்லை. என்னுடைய நண்பர்களில் இந்திய உணவின் சுவைக்கு அடிமையானவர்கள் அதிகம். பல நேரங்களில் இரண்டு டப்பர்வேர்களில் மதிய உணவு எடுத்துச் சென்றிருக்கிறேன். உணவுக்காகவே என் வீட்டுக்கு வருபவர்களும் உண்டு. கேட்டன் என்றொரு நண்பன் இருக்கிறான். புதன்கிழமையன்று அவர்கள் வீட்டில் ப்ரியா சமைக்கும் உணவுதான். கடந்த எட்டு மாதங்களாக ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டுக்கு வந்து உணவு வாங்கிச் செல்கிறான். அதற்கு பணமும் தந்து ப்ரியாவின் உணவுக்கு வாடிக்கையாளராகவே மாறிவிட்டான். கடந்த மாதம் கூட என்னுடைய அணியிடம் எங்கு விருந்துக்கு செல்லலாம் என்று கேட்டபோது அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் ‘ஹிமாலயன் உணவகம்’.

பெல்ஜியத்தில் எந்த இந்திய உணவகங்களுக்குச் சென்றாலும் அங்கு இந்தியர்களை உள்ளூர் கூட்டம்தான் நிரம்பி வழிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புகூட வைரத்துக்குப் பெயர் போன ஆன்ட்வெர்ப் நகரத்துக்கு நண்பனின் திருமணத்துக்கு உடை வாங்குவதற்காக சென்றிருந்த போது, இரவு உணவுக்கு ‘ஆகார்’ உணவகத்துக்குச் சென்றிருந்தோம். உணவகத்தில் அமர இடமே இல்லை. நாங்கள் மட்டுமே இந்தியர்கள். நீங்கள் பெல்ஜியம் வரும்போது நிச்சயம் உங்களை அங்கு அழைத்துக்கொண்டு சென்று காட்டுகிறேன். அவ்வளவு ஏன், பல சமயங்களில் நாங்கள் அவர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று இந்திய உணவைச் சமைத்திருக்கிறோம். நேற்று என் நண்பர் ஒருவருக்கு இந்தியாவில் திருமணம். அவருடைய பெல்ஜியம் பெண் நண்பர்கள் இந்திய திருமணத்தைப் பார்க்கவும், திருமண விருந்து உண்ணவும் இந்தியா சென்றிருக்கிறார்கள்.

உங்களுடைய பதிலில் பல விஷயங்களை ஆழமாக அணுகி பேசியிருக்கிறீர்கள்.

“பொதுவாக இன்னொரு நாட்டைப்பற்றி எந்த நாட்டிலும் இருக்கும் பாதிப்பங்கு மனப்பதிவு தவறானதாகவே இருக்கும்.”, “ஏன் நாடுகளைப் பார்க்கவேண்டும். மலையாளிகள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?” – இவற்றை எல்லாம் நானே எழுதியது போலவே உணர்கிறேன். என்னுடைய கருத்தும் அஃதே. இன்றைய மிகை ஊடகச் சூழல் நிலைமையை இன்னும் மோசமாக்கிக்கொண்டிருக்கிறது. Peak Negativity.

உங்கள் கட்டுரையில் நான் பார்த்தவுடன் திடுக்கிட வைத்தது, நீங்கள் “வெள்ளையனின் பொறுப்பு” (Whiteman’s Burden) பற்றி எழுதியிருந்த பகுதி. நீங்கள் டாக்டர்.யூவல் நோவா ஹராரி எழுதிய ‘Sapiens – A Brief History of Humankind’ புத்தகம் வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் மூன்று பத்திகளில் குறிப்பிட்டிருந்ததை அப்படியே எழுதியிருக்கிறார், நீங்கள் குறிப்பிட்டிருந்த ருட்யார்டு கிப்ளிங் வரிகளோடு. அதற்கு மேலும் சென்று, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு வங்காளம் எவ்வளவு வளமான பகுதியாக இருந்தது என்பதில் ஆரம்பித்து, பிறகு அவரிகளுடைய பொருளாதாரக் கொள்கைகள் எப்படி வங்காள பஞ்சத்துக்கு வித்திட்டது என்பதை வரை எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பை 2011-இல் ஹீப்ரு மொழியிலும், ஆங்கிலத்தில் 2014-இலும் வெளியிட்டிருக்கிறார்கள். உங்களின் ‘இந்தியா குறித்த ஏளனம்..’ பதிவை 2010-இல் எழுதியுள்ளீர்கள். ஆனால், ‘Sapiens was a top ten bestseller’. ஒரு மில்லியன் பிரதிகளாவது இதுவரை விற்கப்பட்டிருக்கும். சாரு நிவேதிதா அவர்களின் அறச்சீற்றத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. பேசாமல் நீங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிக்கலாம். தமிழர்களின் தமிழ் மொழி மீதான தாழ்வு மனப்பான்மையும், ஆங்கில மோகமும், வாசிப்பில் நாட்டமின்மையும் பெரும் சோர்வைத் தருகிறது. உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ‘வாசியுங்கள்.. வாசியுங்கள்..” என்று கூறி சலிப்படைந்துவிட்டேன்.

பிரகாஷ் கூறியவற்றுக்குப் பின்னால் வேறொரு காரணமம் இருக்கிறது. அது நம்முடைய இந்தியர்கள் பழகும் விதம்.

மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் மற்றும் மதப்பரப்புநர்கள் உருவாக்கியதாக சித்திரங்களை பற்றி விளக்கியிருந்தீர்கள். ஆனால் இன்றைக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலும் கணிசமான அளவு இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் அவர்களது பங்கு என்ன? அவர்களால் இந்த சித்திரத்தை மாற்றி அமைக்க முடியாதா? அதற்கான பொறுப்பு என் போன்றவர்களுக்கு இருக்கிறதல்லவா?

தற்சயலாக நிகழ்ந்த ஒன்று. மூன்று நாட்களுக்கு முன்புதான் இதுபற்றி எழுதியிருந்தேன். வெளிநாடுகளுக்கு குறைந்த காலமோ, நீண்ட காலமோ பெரும் இந்தியர்களுக்கு நான் எழுதிய உதவிக்குறிப்புகள் இவை. நம் மீதான விமர்சனத்தையும் உள்ளடக்கியது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இனி.. நான் எழுதியது:

வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு.. சில வார்த்தைகள்.. சில சிந்தனைகள்..

எனக்குள் மானுடப்பற்று பெருகிய நாளிலிருந்தே தேசப்பற்று அருகிவிட்டது. திறந்த மனத்துடனான பரந்த வாசிப்பும் அதற்கு ஒரு காரணம். “மானுடமா? தேசமா?” என்று கேட்பதெல்லாம் சிறு குழந்தையிடம், “உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?” என்று கேட்டு அதன் கற்பைப் பரிசோதிக்கும் சிறுபிள்ளைத்தனம். ‘வசுதைவ குடும்பகம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற ஒருலகச் சிந்தனைகள் எல்லாம் கற்பனாவாதம் என்றால், தேச எல்லைகள் மட்டும் இயற்கையிலேயே அமைந்தவையா என்ன? சிரியாவைச் சேர்ந்த ஐயாயிரத்து ஐநூறு குடும்பங்களுக்கு பெல்ஜியத்துக்கு வருவதற்கு கடந்த வெள்ளியன்று விசா கிடைத்திருக்கிறது. கட்டிப்பிடித்து முத்தமிடவேண்டும் போலிருக்கிறது இந்த அரசாங்கத்தை. முகத்தில் குருதி வழிய அதிர்ச்சியும், குழப்பமும், பயமும் கலந்த முகத்துடன் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து நெஞ்சம் படபடத்து கண்ணீர் விடுவதற்கு நான் சிரிய தேசத்தவனாக இருக்கவேண்டுமா என்ன? எனக்குள் இருக்கும் தந்தையுணர்வே போதுமானது.

தேசங்களைப் பற்றிய என்னுடைய பார்வை ஒருபுறமிருந்தாலும், அதே சமயம், வெளிநாடுகளில் வாழும் என் போன்றவர்களின் தவறுகளுக்காக எங்கள் மீது எறியப்படும் கல், நான் சார்ந்த தேசத்தில் வாழும் அனைவரின் மீதும் விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இதுகுறித்து என்னுடைய சிந்தனைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பணியிலும் வெளியிலும் இவற்றை கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம்:

தாழ்வு மனப்பான்மையை ஒழியுங்கள்..

பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான காரணம் உங்கள் அறிவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதற்காகவே. தேவை அவர்களுக்குத்தான். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உங்களுடைய தீர்வுகள் தேவை. பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எனவே உங்கள் மீதும் உங்கள் அறிவின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீதே நம்பிக்கை வைக்காமல், உலகத்தின் எந்தக் கடவுளை நீங்கள் வழிபட்டாலும் அதனால் துளி உபயோகமில்லை. ஏதோ அவர்கள் தயவில் நீங்கள் இங்கு வந்து வாழ்வது போல் நடந்துகொள்வதைப் பார்க்கும்போதெல்லாம் சற்று வருத்தமாக இருக்கிறது.

விவாதம் புரியுங்கள்..

“இந்தியர்கள் ஏன் ஆமாம் சாமிகளாக இருக்கிறார்கள்?” என்றும், உடனே “ஆனால் நீ அப்படியில்லை.” (எல்லோரிடமும் இப்படித்தான் சொல்வார்களாக இருக்கும்) என்று இங்குள்ளவர்கள் கூறும்போதெல்லாம், “இதற்கு முன்பு எத்தனை இந்தியர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். சென்னைக்குச் சென்று நீங்கள் கூறும் விலைக்கு ஆமாம் சாமி போடும் ஆட்டோக்காரர்களை முதலில் எனக்குக் காட்டுங்கள். அதற்குப் பிறகு நாம் பேசலாம். இங்கு வருபவர்களெல்லாம் பெருநிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள். எனவே நீங்கள் கூறுவதெல்லாம், அந்தப் பெருநிறுவனங்களுக்கான குணாதிசயமாகத்தான் இருக்கவேண்டும். நான் அப்படி இல்லை என்று நீங்கள் கூறும்போதே இந்தியாவில் அப்படி இல்லாமல் இருப்பதற்கும் சாத்தியமிருக்கிறது என்பதை நம்புங்கள்” என்று விவாதித்திருக்கிறேன். மேலும் இது நான் இதற்கு முன்பு நான் கூறிய தாழ்வு மனப்பான்மையையும், தன்னம்பிக்கையும் சார்ந்த விஷயம் என்பதை உணருங்கள்.

பெரும்பாலான இந்திய நிறுவனங்களில் காணப்படும் அதிகாரப் படிநிலை அமைப்பு என்பது இந்தியச் சிந்தனையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இலக்கியத்தை வாசித்தால் நம்முடைய பேராசான்கள் துணிவையே பேசியிருக்கிறார்கள். நம் பெரியவர்கள் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றுதானே நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு என் தந்தை எந்தக் காலத்திலும் யாருக்கும் அடங்கி நடந்து நான் பார்த்ததில்லை. தனக்கு எது சரி, நியாயம் என்று படுகிறதோ அதைத்தான் செய்திருக்கிறார். அதனால் அவர் இழந்ததுதான் அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்காக அவர் கவலைப்பட்டும் நான் பார்த்ததில்லை. நானுமே அவருடனான விவாதங்களின்போது அவரின் இது பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறேன். எங்களுடைய விவாதங்களையெல்லாம் பார்த்தீர்களேயானால் மிரண்டு விடுவீர்கள். இப்படியெல்லாம் தந்தையும் மகனும் விவாதம் செய்ய முடியுமா என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் மனதுக்குள் அவரை ரசிக்கவே செய்திருக்கிறேன். இவரைப் போன்றவர்கள் வெளிநாடுகளுக்குச் வந்து பணி புரியவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எல்லா இந்தியனும் தலையாட்டுபவனில்லை என்று அப்போதாவது இவர்களுக்கும் புரியட்டுமே.

நான் சொல்ல வந்த செய்தி இதுதான். விவாதியுங்கள். அடக்கமாக நடந்து கொள்வதற்கும், அடங்கிப் போவதற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளுங்கள். பெரும்பாலும் நான் காண்பது அடக்கத்தையல்ல, அடங்கிப்போவதையே. ஒருவேளை இந்தத் தலைமுறைக்கே உரிய தாழ்வு மனப்பான்மையையும் பிற பலவீனங்களையும் இந்தப் பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றனவோ என்னவோ. நிறுவனங்கள் மட்டுமல்ல. அதிகாரப் படிநிலை அமைப்பில் உங்களுக்கு மேல் ஒரு தன்னம்பிக்கையற்றவர் தலைவராக, மேலாளராக அமர்ந்திருப்பார். அவரின் ஒரே பலமே உங்களின் இந்த பலவீனமாகதான் இருக்கும். அவர் அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வார். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்முடைய பலவீனம் இன்னொருவனுக்கு பலம். ஆனால் அதுபற்றி பயம் கொள்ளவேண்டாம். தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். துணிவு தானாக பிறக்கும். (பலமுறை சொல்லிவிட்டேன். இருந்தாலும் இன்னொருமுறை வேண்டிக்கொள்கிறேன், ‘புத்தகங்கள் வாசியுங்கள்’. அது எல்லா இடத்திலும் உங்களுக்கு கைக்கொடுக்கும்.)

புன்னகையை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்..

யாரென்றே தெரியவில்லை என்றாலும்கூட, உள்ளூர்க்காரர்கள் ‘eye contact’ ஏற்பட்டுவிட்டால் உடனே புன்னகைப்பார்கள். அந்த சமயங்களில் இந்தியர்கள் தலையைத் திருப்பிக்கொள்வதை கவனித்திருக்கிறேன். இதனால் இந்தியர்கள் இறுக்கமானவர்கள் என்கிற பார்வை வந்துவிடும். Smile is contagious. So, Please practice it.

கம்பீரமாக நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்..

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் திமிர்ந்த ஞானச் செருக்கு” – இவற்றையெல்லாம் மாதர்களுக்கு மட்டும் சொல்லவில்லை பாரதி. எல்லா மாந்தர்களுக்கும்தான்.

மீண்டும், விவாதம் புரியுங்கள்…

எனக்குச் சற்றும் பிடிக்காத இன்னொரு விஷயம். இந்தியாவைப் பற்றிய விவாதங்களில் அவர்களுக்குப் பக்க வாத்தியம் வாசிப்பது. இந்தியாவில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. அதற்கு ஆயிரம் காரணங்களும் இருக்கிறது. நானுமே இந்தியாவைப் பற்றிய விவாதங்களில் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைச் சொல்லி வருந்தி இருக்கிறேன். ஆனால் அதற்கான காரணங்களாக நான் அறிந்திருப்பதையும் அவர்களுக்கு எடுத்துரைப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். அதே சமயம் அவர்கள் தேசத்தில் இருக்கும் பிரச்சினைகளையும் துணிவுடன் எடுத்துரையுங்கள். உதாரணத்துக்கு, இங்குள்ள சமூக பாதுகாப்பு அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால் அதே சமயம், இந்தியாவில் சமூகப் பாதுகாப்பே இல்லை என்று இவர்கள் கூறும்போதெல்லாம், இந்தியாவின் குடும்ப அமைப்பைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லி, இங்கு அம்மாவையும் அக்காவையும் சந்திப்பதற்குக்கூட ஒப்பந்தம் செய்துக்கொள்ளவேண்டியதன் அவலத்தையும் விமர்சியுங்கள்.

விவாதியுங்கள். விவாதிப்பதற்கு சில சிந்தனைகள். இப்படித்தான் நான் அவர்களுடன் விவாதிக்கிறேன்:

இந்தியாவில் வசதியான சகோதரன், தன்னைவிட வசதி குறைந்த சகோதரனுக்கு வேண்டியதைச் செய்து உதவுகிறான். உதவியே ஆக வேண்டும்!! அதையேத்தானே இங்குள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்பு செய்கிறது? அரசாங்கத்துக்கு மட்டும் இவற்றையெல்லாம் செய்வதற்கான வசதி வானிலிருந்தா விழுகிறது. நீங்கள் முகமறியாதவர்களுக்கு செய்கிறீர்கள். இந்தியாவில் உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் செய்துகொள்கிறார்கள். இங்கே அது விதியாக இருப்பதால் அதற்குட்பட்டு நடக்கிறீர்கள். அங்கே அது அடிப்படை அறமாக இருப்பதால் அறத்துக்குட்பட்டு நடக்கிறார்கள். எது சரியென்பதைக் காலம்தான் எடுத்துச் செல்லும். எத்தனை காலத்துக்கு அரசாங்கம் இவற்றை செய்ய முடியும்? கிரீஸில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? நம்முடன் என்றைக்கும் துணை வரப்போவது மானுடம் மட்டுமே. அரசாங்கங்கள் அல்ல. எனவேதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நான் அரசாங்கங்களும், தேசங்களையும்விட மானுடத்தை மதிக்கிறேன்.

கலாச்சார ஒற்றுமைகளைக் காணுங்கள்..

ஐரோப்பாவிற்கு வந்த புதிதில், இங்கிருக்கும் இந்தியர்களும் சரி, ஐரோப்பியர்களும் சரி அடிக்கடி பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை காண முடிந்தது. அது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபற்றி என்னுடைய புத்தக முன்னுரையில்கூட எழுதியிருக்கிறேன். சமீபத்தில் பெல்ஜியத்தின் புகழ்மிக்க கல்லூரி ஒன்றில் உரை நிகழ்த்தியபோது கூட இதைப் பற்றி மாணவர்களிடம் பேசினேன்.

“பண்பாடு என்பது ஒரு வெங்காயம்; பனிப்பாறை என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் முதன்முதலாக பெல்ஜியத்திற்கு 2005-ஆம் ஆண்டு வந்தபோது, என் முன்னே ஒரு பெரிய வெங்காயத்தைக் கண்டேன். பண்பாட்டு வேறுபாடுகளை பல்லடுக்களாகக் கொண்ட ஒரு வெங்காயம். மேற்புற அடுக்காக இருந்தது இவர்களின் வெள்ளைத்தோல். தோலை உரித்து எடுத்தேன். அடுத்த அடுக்கில் மொழி தெரிந்தது. அதையும் உரித்து எடுத்தேன். இப்படி ஒவ்வொரு அடுக்கில் ஒவ்வொரு வேறுபாடு என்று ஒன்றடுத்து ஒன்றாக வந்து கொண்டேயிருந்தது. நான் விடாமல் உரித்துக் கொண்டே சென்றேன். இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. பண்பாடு என்பது ஒரு வெங்காயம் என்பது அப்போதுதான் புரிந்தது. பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பது மனிதர்களை மேலும் பிரிக்கவே செய்யும். வெங்காயமாவது, பனிப்பாறையாவது.. கண்ணுக்குத் தெரியும் வேறுபாடுகளைவிட, மறைந்திருக்கும் ஒற்றுமைகள் மூலமாகவே சக மனிதர்களிடம் நம்மை இணைத்துக் கொள்ள முடியும், அவர்கள் எந்த தேசத்தவர்களாயினும்.”

என்னுடைய உரை முடிந்த பிறகு மாணவர்களிடம், அவர்கள் இந்த உரையிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன என்று கேட்ட போது, பெரும்பாலான மாணவர்கள் “Cultural Similarities instead of Cultural Differences” மற்றும் “Cultural Surprises instead of Cultural Shocks” போன்றவை புதிய சிந்தனைகள். கேள்விப்பட்டதில்லை. அவற்றையே எடுத்துச் செல்ல விரும்புகிறோம் என்று கூறினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த ஒட்டுமொத்த உரையிலும் அந்தப் பகுதி மட்டுமே என்னுடைய சுய சிந்தனை. நான் கண்டடைந்த தரிசனம்.

உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்..

குறிப்பாக ஐரோப்பாவிற்கு வருபவர்கள் நிச்சயம் செய்ய வேண்டியதொரு விஷயம். இந்த தேசத்துக்குச் செல்கிறீர்களா, அந்த தேசத்து மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்களோடு எளிதில் இணைத்துக்கொள்ளவும், அந்தச் சமூகத்தில் விரைவில் ஒரு அங்கமாகவும் இது மிகவும் உதவும். இன்னும் சொல்லப்போனால் உங்கள் வியாபாரத்துக்கும் அது மிகவும் அவசியம். இந்தியாவில்தான் ஆங்கிலம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. ஆங்கில மோகமும், தம் மொழியின் மீதான தாழ்வு மனப்பான்மையும் எல்லா இந்திய மொழிகளையும் கொன்றழித்துக்கொண்டிருக்கிறது.

இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை. என்னதான் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் நீங்கள் இரண்டாம் தர குடிமகன்தான். அதுவும் நான் வசிக்கும் பெல்ஜியத்தில் மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரியாமல் குடியுரிமை கூடப் பெறமுடியாது. எப்படியிருந்தாலும் அயல் மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே. என் மகனின் டச்சு மொழிப்புலமைப் புலமை பற்றி இங்குள்ள ஆசிரியர்களே வியக்கிறார்கள். நான் அவனுடைய தமிழாசிரியர் என்கிற முறையில், பிற்காலத்தில் அவன் தமிழ் மொழிப புத்தகங்களை டச்சு மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவனும் உறுதியளித்திருக்கிறான். நம்மைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவைக்கக்கூட அவர்கள் மொழியை நாம் கற்றாக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. என் அணியில் உள்ள நண்பர்கள் அவ்வப்போது வந்து தமிழ் மொழி வார்த்தைகளைக் கேட்டுது தெரிந்துகொள்கிறார்கள். இது நான் அவர்கள் மொழியின் மீது காட்டும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது.

உள்ளூர் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..

வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும், தங்களுக்கு வேண்டிய இந்தியாவை தாங்களே அங்கு உருவாக்கிக்கொள்வார்கள். இந்தியக் குழு மற்றும் அதற்குள் தமிழர்கள், தெலுங்கர்கள், வட இந்தியர்கள், என்று உப குழுக்களை உருவாக்கிக்கொள்வார்கள். அதில் தவறில்லை. நம் தேசத்தை விட்டு வெகுதொலைவு வந்து வேறோர் தேசத்தில் இருக்கும்போது இன்னொரு இந்தியனைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்கத்தான் செய்யும். எனக்கும் அப்படியே. அப்படித்தான் பல புதிய இந்திய நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டேன். இன்றைக்கு என்னுடனிருக்கும் நெருங்கிய இந்திய நண்பர்களை அவ்வாறே பெற்றேன். ஆனால், பெரும்பாலான இந்தியர்களுக்கு அதைத் தாண்டி வேறெதுவும் இருக்காது.

உதாரணத்துக்கு உள்ளூர் செய்தித்தாள்களைக்கூட வாசிக்கவே மாட்டார்கள். உள்ளூர் நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே உள்ளூர்க்காரர்களை வீட்டுக்கு அழைத்தால், பெரும்பாலும் அவர்கள் வாடிக்கையாளர்களாகவோ, வியாபார காரணங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட நட்புகளாகவோ இருப்பார்கள். உள்ளூர் நண்பர்களுடன் பழகி, அவர்களைப் பற்றியும் அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளவும், இணைத்துக்கொள்ளவும் பெரும்பாலும் முயல்வதே இல்லை.

இங்கு ‘பெரும்பாலான’ என்கிற பதத்தை அடிக்கடி உபயோகிக்கிறேன். அதற்குக் காரணம் எவற்றையும் பொதுமைப்படுத்த நான் விரும்புவதில்லை. எதிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறார்கள்.

சிக்கனத்துக்கும் கஞ்சத்தனக்குமான எல்லைகளை உணருங்கள்..

‘இந்தியர்கள் கஞ்சர்களா?’ என்று ஒருமுறை என் நண்பனொருவன் கேட்டான். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. இத்தனைக்கும் உண்மையில் இவர்கள்தான் சிக்கனமானவர்கள். அவ்வளவு எளிதாகச் செலவு செய்துவிட மாட்டார்கள். அது நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஒன்றுகூட. ஆனால் அவன் அப்படிக் கேட்டதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் ஆடம்பரங்களுக்கெல்லாம் வாரி இறைத்துச் செலவு செய்யும் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வந்தால் மட்டும் திடீரென்று சிக்கன சிகாமணிகளாகி, அத்தியாவசிய செலவு செய்வதற்குக்கூட ஐந்து முறை யோசிப்பார்கள். சிக்கனமாக இருப்பது நல்லதுதான்.

ஆனால் இந்தியாவில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பவர்கள்கூட இங்கு வந்தால் ஐந்து யூரோ (400 ரூபாய்) போன் ரீசார்ஜ் அட்டையை வாங்குவதற்குத் தயங்குவதைப் பார்த்திருக்கிறேன். ஏனிந்த முரண்? எனக்கு நெருங்கிய இந்திய நண்பர் ஒருவர் இங்கு வந்திருந்தபோது தினமும் உணவகத்துக்குச் சென்று செலவழிப்பதைக் நையாண்டி செய்து அவரை அவமானப்படுத்திவிட்டார்கள். பிறகு அவரும் டிராகுலா கடித்த கதையாக மாறிவிட்டார். எனவே சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்குமான எல்லைகளை உணருங்கள்.

முக்கியமாக சாலை விதிகளை கடைப்பிடியுங்கள்..

அந்நியர்களை எப்பொழுதுமே ஆறு கண்கள் அதிகமாகவே நோட்டமிடும் அறிக. இது எந்த நாட்டிலும் நடப்பதுதான். எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் பெரிதுபடுத்தப்படுவதை தவிர்க்க முடியாது. அப்போதெல்லாம் “யாரிந்த மனிதன் இப்படி எல்லாம் நடந்துகொள்கிறான்” என்று யாரும் நினைக்கப் போவதில்லை. “இந்த இந்தியர்களே இப்படித்தான்” என்றுதான் பேசுவார்கள். ஏனெனில் சாலைகளைப் பொறுத்தமட்டிலும் நமக்கிருக்கும் குடிமை உணர்வை உலகமே அறியும். அதை உலகமே கிண்டல் செய்துகொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்குச் சென்று திரும்பும் இந்த ஊர் மனிதர்கள் சாலைகளில் நம்முடைய ஒழுங்கைப் பற்றிச் சொல்லி கிண்டல் செய்யும்போதும், நான் நாணிக் குறுகவே செய்கிறேன். அந்த சமயத்தில் என்னால் அதிகம் விவாதிக்கவே முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றி நமக்கென்ன கவலை. நமக்கு தேசப்பற்று என்றால் தேசியகீதத்தை அவமானப்படுத்தாமல் கேட்டுக்கொண்டு தேசியக்கொடிக்கு முன்பு விறைப்பாக நின்று வணக்கம் செலுத்தவேண்டும். அதுபோதும்.

இவையெல்லாம் என்னுடைய அறிவுரைகளல்ல. உதவிக்குறிப்புகள் மட்டுமே. உதவக்கூடும் என்று நினைத்தால், நடைமுறைப்படுத்துங்கள். இன்னும் சில முக்கியமான உதவிக்குறிப்புகளும் இருக்கின்றன. விரைவில் இரண்டாம் பாகம் வெளியிடுகிறேன்.

இறுதியாக, இன்னொரு முக்கியமான விஷயம். இவற்றையெல்லாம் வெளிநாட்டில் மட்டுமல்ல. எங்கிருந்தாலும் பின்பற்ற முயற்சிக்கவும்.

அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்ஜியம்

 

 

மா அரங்கநாதன் கதைகலைப்பற்றி மாதவன் இளங்கோ

டின்னிடஸ் கடிதங்கள்

டின்னிடஸ் மேலும் கடிதங்கள்

டின்னிடஸ் மாதவன் இளங்கோ

பெல்ஜியத்திலிருந்து மாதவன் இளங்கோ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16764 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>